15.12.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். எனவே, உங்கள் சொந்தச் சரீரங்கள் உட்பட, உங்களுடைய சரீர உறவினர்கள் அனைவரையும் மறந்து விடுங்கள்;; சதா என்னை மட்டும் நினைவுசெய்து தூய்மையாகுங்கள்.

கேள்வி:
ஆத்மாக்களுடன் தொடர்புபட்ட எந்தச் சூட்சுமமான விடயங்களைச் சீர்திருத்தமான புத்தியைக் கொண்டுள்ளவர்களால் மட்டும் புரிந்துகொள்ள முடியும்?

பதில்:
1. ஊசியைப் போன்று ஆத்மாக்கள் படிப்படியாகத் துருவினால் மூடப்பட்டுள்ளார்கள். அந்தத் துரு, நினைவில் நிலைத்திருப்பதனால் மட்டுமே நீக்கப்பட முடியும். துரு நீக்கப்பட்டால் மட்டுமே, அதாவது, ஆத்மா தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகும்பொழுது மட்டுமே, தந்தையின் ஈர்ப்பு ஏற்படுவதுடன், ஆத்மாக்களால் தந்தையுடன் வீடு திரும்பிச் செல்ல முடியும். 2. எந்தளவிற்குத் துரு நீக்கப்படுகிறதோ, அதற்கேற்ப, உங்களுடைய விளக்கம் மற்றவர்களை ஈர்க்கும். இவை மேலோட்டமான புத்தியைக் கொண்டவர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாத, மிக ஆழமான, சூட்சுமமான விடயங்கள.

ஓம் சாந்தி.
கடவுள் பேசுகிறார். உங்கள் புத்தியில் வந்தார் யார்? ஏனைய கீதைப் பாடசாலைகளில் ‘கடவுள் பேசுகிறார்’ என்று கூறும்பொழுது, கிருஷ்ணரை மட்டுமே அவர்களின் புத்தியில் கொண்டிருக்கின்றார்;கள். இங்கு, குழந்தைகளாகிய நீங்கள் அதிமேலான தந்தையை நினைவு செய்கிறீர்கள். இவ் வேளையே, நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்ற, சங்கமயுகமாகும். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, சரீரங்களின் உறவுமுறைகள் அனைத்தையும் துண்டித்து, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இது மிகவும் அத்தியாவசியமானது. சங்கமயுகத்தில் மட்டுமே தந்தை இதனை விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்களே தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். ஆத்மாக்கள் இப்பொழுது தூய்மையானவர்களாகி, வீடு திரும்ப வேண்டும். மக்கள் தூய்மையாக்குபவரை நினைவுசெய்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. பாரத மக்கள் காரிருளில் இருக்கிறார்கள். பக்தி இரவாகவும், ஞானம் பகலாகவும் உள்ளது. இரவில் இருளும், பகலில் ஒளியும் உள்ளன. சத்தியயுகம் பகலாகவும், கலியுகம் இரவாகவும் உள்ளது. நீங்கள் இப்பொழுது கலியுகத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்ல வேண்டும். தூய உலகில் எவரும் தூய்மையற்றவர்களாக இருக்கின்ற கேள்வியே இல்லை. நீங்கள் தூய்மையற்றவர் ஆகும்பொழுது மாத்திரமே, தூய்மையாகுகின்ற கேள்வி எழுகிறது. நீங்கள் தூய்மையானவர்களாக இருக்கும்பொழுது, தூய்மையற்ற உலகை நினைவுசெய்வதுமில்லை. இப்பொழுது உலகம் தூய்மையற்றதாக இருப்பதனால், நீங்கள் தூய உலகை நினைவுசெய்கிறீர்கள். சக்கரத்தின் இரண்டாவது பாதி தூய்மையற்ற உலகமாகும், முதற் பாதி தூய உலகம் ஆகும். அங்கு தூய்மையற்றவர்கள் எவரும் இருக்க முடியாது. தூய்மையாக இருந்தவர்கள் இப்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டார்கள். பேசப்படுகின்ற 84 பிறவிகள் அவர்களையே குறிக்கின்றன. இவை மிக ஆழமான விடயங்கள், இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அரைக்கல்பமாகப் பக்தி செய்து வந்ததனால், உங்களால் அதனை அந்தளவு விரைவாக நிறுத்த முடியாது. மனிதர்கள் காரிருளில் இருக்கிறார்கள். பல மில்லியன் கணக்கானோரில் கைப்பிடியளவினர் மட்டுமே வெளிப்படுகின்றார்;கள். இந்த ஞானம் அரிதாகவே எவருடைய புத்தியிலும் தங்குகிறது. தந்தை கூறுகிறார்: சகல சரீர உறவினர்கள் அனைவரையும்; மறந்து, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்வதே பிரதான விடயம். ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள், அவர்கள் தூய்மையாக வேண்டும். தந்தை மட்டுமே இந்த விளக்கத்தை வழங்குகிறார், ஏனெனில் இந்தத் தந்தையே அதிபரும், பொற்கொல்லரும், வைத்தியரும், சட்டத்தரணியும், அனைவரும் ஆவார். இந்தப் பெயர்கள் அங்கு இருக்காது. இந்தக் கல்வி கூட அங்கிருக்காது. தொழில் ஒன்றைப் பெறுவதற்காக மக்கள் இங்கு கற்கிறார்கள். முன்னைய நாட்களில் பெண்கள் அதிகளவில் கற்கவில்லை. அவர்கள் இவை அனைத்தையும் பின்னரே கற்றார்கள். கணவர் மரணித்தால் வீட்டை யார் பராமரிப்பார்;கள்? இதனாலேயே பெண்கள் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டிய இத்தகைய விடயங்கள் சத்தியயுகத்தில் இருக்காது. இங்கு, அவர்கள் அத்தகைய நேரத்திற்காகப் பணத்தைச் சேமித்து வைக்கின்றார்கள். அங்கு, நீங்கள் கவலைப்படுகின்ற இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை மிகவும் செல்வந்தர்கள் ஆக்குகிறார். சுவர்க்கத்தில் உங்களிடம் பல பொக்கிஷங்கள் இருக்கின்றன. வைரங்கள், இரத்தினங்களின் சுரங்கங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இங்கு, நிலம் வரட்சி அடைந்து வளமற்றுப் போய் விட்டது. அங்கிருக்கும் மலர்களுக்கும் இங்கிருக்கும் மலர்களுக்கும் இடையில் பகலிற்கும் இரவிற்கும் இடையிலான வேறுபாடு காணப்படுகிறது. இங்கு, அனைத்தினதும் சக்தி முழுவதும் முடிவடைந்து விட்டது. அவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து விதைகளை இறக்குமதி செய்தாலும், அவை எவற்றிலும் எவ்விதமான சக்தியும் கிடையாது. நீங்கள் பெருமளவில் முயற்சி செய்ய வேண்டியதாகவே நிலம் உள்ளது. அங்கு, அனைத்தும் சதோபிரதானாக இருக்கின்றது. தத்துவங்களும் சதோபிரதானாக இருப்பதனால், ஏனைய அனைத்தும் சதோபிரதானாகவே உள்ளது. இங்கு, அனைத்தும் தமோபிரதானாக உள்ளது. எதிலும் எவ்விதச் சக்தியும் இல்லை. நீங்கள் மட்டுமே இவ் வேறுபாட்டைப் புரிந்துகொள்கிறீர்கள். இப்பொழுது திரான்ஸில் மட்டுமே உங்களால் சதோபிரதான் விடயங்களைக் காண முடியும். அங்கிருக்கும் மலர்கள் மிக அழகானவை. அங்கிருக்கும் தானியங்களை உங்களால் இப்பொழுது காண முடிவது சாத்தியமே. உங்கள் புத்தி மூலம் உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கு, அனைத்திலும் அதிகளவு சக்தி உள்ளது. புதிய உலகம் எவரின் புத்தியிலும் புகுவதில்லை. இந்தப் பழைய உலகைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! மனிதர்கள் அனைவரையும் முழுமையான காருளில் உறக்கத்தில் ஆழ்த்துவதற்கான அத்தகைய கட்டுக்கதைகள் கூறப்பட்டுள்ளன. மிகச்சிறிதளவு காலமே எஞ்சியுள்ளது என நீங்கள் அவர்களுக்குக் கூறும்பொழுது, அவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். உண்மையில் தங்களைப் பிராமணர்களாகக் கருதுபவர்கள் மட்டுமே இதனைப் புரிந்துகொள்வார்கள். இது ஒரு புதிய மொழியும், ஓர் ஆன்மீகக் கல்வியுமாகும். ஆன்மீகத் தந்தை வரும்வரை, எவரும் எதனையும் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீகத் தந்தையை அறிவீர்கள். அம்மக்கள் யோகம் போன்றவற்றைக் கற்பிக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு யார் கற்பித்தது? ஆன்மீகத் தந்தை அவர்களுக்குக் கற்பித்தார் எனக் கூற முடியாது. தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே கற்பிக்கிறார். சங்கம யுகத்திற்குரிய பிராமணர்கள் மட்டுமே இதனைப் புரிந்துகொள்கின்றார்;கள். ஆதி சனாதன தேவ தர்மத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பிராமணர்கள் ஆகுவார்கள். பிராமணர்களாகிய நீங்கள் வெகு சிலரே இருக்கிறீர்கள்! உலகில் பல்வேறுபட்ட ஜாதி, சமயங்கள் உள்ளன. முழு உலகிலும், எத்தனை வகையான மதங்கள், உள்ளன என்றும், எத்தனை மொழிகள் உள்ளன என்றும் நீங்கள் கண்டறியக்கூடியதாக ஒரு புத்தகம் நிச்சயமாக இருக்க வேண்டும். இவற்றில் எதுவும் நிலைத்திருக்காது என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் ஒரு தர்மமும், ஒரு மொழியுமே இருந்தன. நீங்கள் இப்பொழுது உலகச் சக்கரத்தை அறிவீர்கள். இந்த மொழிகளில் எதுவும் இருக்காது என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உலகச் சக்கரத்தின் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். மக்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்தினாலும் அவர்கள் இதனைப் புரிந்துகொள்வதில்லை. திறப்பு விழாவிற்கு நீங்கள் முக்கியஸ்தர்களை அழைக்கிறீர்கள், ஏனெனில் அவர்கள் பிரபல்யமானவர்கள், அத்துடன் “அற்புதம்! திறப்புவிழா ஜனாதிபதியால் அல்லது பிரதம மந்திரியால் நிகழ்த்தப்பட்டது” என்ற ஒலியும் பரவும், இந்த பாபா இதனைச் செய்தால், பரமாத்மா பரமதந்தையே இதனைத் திறந்து வைத்தவர் என்பதை மக்கள் நம்ப மாட்டார்கள். கமிஷனர் (ஊழஅஅளைளழைநெச) போன்ற முக்கியஸ்தர்கள் இங்கு வரும்பொழுது, ஏனையோர் அவர்களுக்குப் பின்னால் ஓடி வருகின்றார்கள். இவருக்குப் பின்னால் எவரும் ஓடி வர மாட்டார்கள். இப்பொழுது பிராமணக் குழந்தைகளாகிய உங்களில் வெகு சிலரே இருக்கிறீர்கள். நீங்கள் பெரும்பான்மையானோராக இருக்கும்பொழுது மட்டுமே அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் இப்பொழுது அதனைப் புரிந்துகொண்டால், அவர்கள் தந்தையிடம் ஓடி வருவார்கள். யாரோ ஒருவர் புதல்விகளில் ஒருவருக்கு இவ்வாறு கூறினார்: உங்களுக்குக் கற்பித்தவரிடம் நாம் நேரடியாகச் செல்ல விரும்புகிறோம். எவ்வாறாயினும், ஊசி துருப்பிடித்திருந்தால், எவ்வாறு அது காந்தத்தால் கவரப்பட முடியும்? துரு நீக்கப்படும்பொழுது மாத்திரமே காந்தத்தால் ஊசியைக் கவர முடியும். ஊசியின் சிறிதளவு பாகமேனும் துருப்பிடித்திருந்தால், அதனை அந்தளவிற்குக் கவர முடியாது. நீங்கள் இறுதியிலேயே முற்றிலும் துரு நீங்கியவர்கள் ஆகுவீர்கள். பின்னர் நீங்கள் தந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் தமோபிரதானாகித் துருப்பிடித்திருக்கிறீர்கள் என்பதே இப்பொழுது உங்களுக்குள்ள அக்கறை ஆகும். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நினைவில் நிலைத்திருக்கிறீர்களோ, அந்தளவிற்குத் துரு நீங்கும். எவ்வாறு துரு படிப்படியாகச் சேர்கின்றதோ, அவ்வாறே அது தொடர்ந்தும் படிப்படியாக நீக்கப்படும். அதே முறையில் அது நீக்கப்படும். எவ்வாறு துரு சேர்கிறதோ, அவ்வாறே அது நீக்கப்படவும் வேண்டும், அதற்கு நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். சிலருடைய துரு நினைவில் இருப்பதன் மூலம் பெருமளவில் நீக்கப்படுகிறது, ஆனால் ஏனையோரின் துரு சிறிதளவு மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. எந்தளவிற்கு அதிகமாக ஒருவரின் துரு நீக்கப்படுகிறதோ, அந்தளவிற்கு அதிகமாக அவரால் மற்றவர்களைத் தனது விளக்கத்தினால் ஈர்க்க முடியும். இவை மிகவும் சீர்திருத்தமான விடயங்கள். மேலோட்டமான புத்தியைக் கொண்டவர்களால் இவ் விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக நாளுக்கு நாள், பல்வேறு வழிமுறைகள் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. முன்னர், கண்காட்சிகளையும், அருங்காட்சியங்கள் போன்றவற்றையும் நீங்கள் நடாத்துவீர்கள் என உங்களுக்குத் தெரியாது. நீங்கள் மேற்கொண்டு முன்னேறுகையில், வேறு ஏதாவது ஏற்படுவதற்கான சாத்தியமும் உள்ளது. ஸ்தாபனை இடம்பெறுவதற்கு முன்னர் இப்பொழுது இன்னமும் நேரம் உள்ளது. நீங்கள் இதயந்தளரக்;கூடாது. உங்களால் உங்களுடைய பௌதீக அங்கங்களைக் கட்டுப்படுத்த முடியாவிடின், நீங்கள் வீழ்கின்றீர்கள். நீங்கள் விகாரத்தில் வீழ்ந்தால், ஊசி மிகவும் துருப்பிடித்து விடும். விகாரங்களினூடாகப் பெருமளவு துரு சேமிக்கப்பட்டுள்ளது. சத்திய, திரேதா யுகங்களில், அநேகமாக, மிகச்சிறிதளவு துருவே சேர்கின்றது, பின்பு, அரைக்கல்பத்தின் பின்னர், விரைவாகத் துருப் பிடிக்கின்றது. நீங்கள் வீழ்வதனாலேயே விகாரமற்றவர்களும், விகாரமானவர்களும் எனக் கூறப்படுகிறது. விகாரமற்ற தேவர்களின் அடையாளங்கள் உள்ளன. தந்தை கூறுகிறார்: தேவ தர்மம் மறைந்து விட்டது. ஆனால் அதன் அடையாளங்கள் இன்னமும் உள்ளன. இந்தப் படமே மிகச்சிறந்த அடையாளம். நீங்கள் இந்த இலக்ஷ்மி, நாராயணன் படத்தை உங்களுடன் எடுத்துச் செல்லலாம், ஏனெனில் நீங்கள் அவ்வாறு ஆகுகிறீர்கள். இராவண இராச்சியம் அழிக்கப்பட்டு, இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. இது இராம இராச்சியமும், அது இராவண இராச்சியமும் ஆகும்;; இது சங்கம யுகமாகும். பல கருத்துக்கள் உள்ளன. வைத்தியர்கள் தங்களின் புத்திகளில் பல்வேறு வகையான மருந்துகளைக் கொண்டிருக்கின்றார்கள். சட்டநிபுணர் ஒருவர் தனது புத்தியில் பல்வேறு கருத்துக்களை வைத்திருக்கின்றார்;. பல்வேறுபட்ட தலைப்புக்களில் மிக நல்லதொரு புத்தகம் எழுதப்படலாம். பின்னர், நீங்கள் சொற்பொழிவு ஆற்றச் செல்லும்பொழுது, உங்களால் அந்தக் கருத்துக்களைப் பார்த்துச் செல்ல முடியும். கூர்மையான புத்தியைக் கொண்டவர்கள் அவற்றை விரைவாக ஒரு விநாடியில் பார்த்து விடுவார்கள். அனைத்திற்கும் முதலில், நீங்கள் எதனை விளங்கப்படுத்தப் போகின்றீர்கள் என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் நீங்கள் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் விடயங்களை நினைவுசெய்கிறீர்கள்: ‘நான் இதனை விளங்கப்படுத்தியிருந்தால், நன்றாக இருந்திருக்கும்’. இந்தக் கருத்துக்களை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதன் மூலம், அவை உங்கள் புத்தியிலும் தங்கியிருக்கும். தலைப்புக்களின் பட்டியல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு தலைப்பினைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்குள் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தி அல்லது அதனை எழுதி, உங்களால் சகல கருத்துக்களையும் எழுத முடிந்ததா என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். எவ்வளவிற்கு அதிகமாக நீங்கள் இதனைச் செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அது சிறப்பாக வரும். இன்னார் ஒரு நல்ல சத்திரசிகிச்சையாளர், அவருடைய புத்தியில் பல கருத்துக்கள் உள்ளன என்பதைத் தந்தை புரிந்துகொள்கிறார். நீங்கள் உங்களை நிறைத்துக் கொண்டு இங்கிருந்து செல்லும்பொழுது, சேவை செய்யாமல் உங்களால் களிப்படைய முடியாது. கண்காட்சிகளை நீங்கள் நடாத்தும்பொழுது, சிலவேளைகளில் இரண்டு முதல் நான்கு பேர் வரை வெளிப்படுகின்றார்கள், சிலவேளைகளில், ஆறு முதல் எட்டுப் பேர்வரை வெளிப்படுகின்றார்;கள். சிலவேளைகளில் ஒரு நபர் கூட வெளிப்படுவதில்லை. ஆயிரக்கணக்கானோர் கண்காட்சிகளைப் பார்த்திருப்பார்கள், ஆனால் அவற்றிலிருந்து வெகு சிலரே வெளிப்படுகின்றார்கள். இதனாலேயே, நீங்கள் இப்பொழுது மிகப்பெரிய படங்களைத் தொடர்ந்தும் உருவாக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் திறமைசாலிகள் ஆகுகிறீர்கள். முக்கிய நபர்களின் நிலைமை எவ்வாறுள்ளது என்பதையும் உங்களால் பார்க்க முடியும். யாருக்கு இந்த ஞானத்தை வழங்க வேண்டும் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். எனது பக்தர்களின் நாடித்துடிப்பை நீங்கள் உணர வேண்டும். கீதையைக் கற்பவர்களுக்கு ஒரு பிரதான விடயத்தை விளங்கப்படுத்துங்கள்: அதிமேலான ஒரேயொருவரே கடவுள் என்றழைக்கப்படுகிறார். அவர் அசரீரியானவர். சரீரதாரிகளைக் கடவுள் என்றழைக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முழுமையான புரிந்துணர்வினைப் பெற்றுள்ளீர்கள். சந்நியாசிகள் தங்கள் வீட்டைத் துறந்து ஓடுகிறார்கள். சிலர் பிரம்மச்சாரிகளாக இருக்கும்பொழுது தங்கள் குழந்தைப் பருவத்திலேயே ஓடிவிடுகிறார்கள். பின்னர் அவர்களுடைய அடுத்த பிறவியிலும் அவ்வாறே இருக்கும்;; அவர்கள் நிச்சயமாக ஒரு தாயின் கருப்பை மூலம் பிறப்பெடுக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்யும்வரை பந்தனத்திலிருந்து விடுபட்டிருப்பதால், அவர்கள் தங்கள் உறவினர்கள் போன்றோரை அதிகளவில் நினைவுசெய்வதில்லை. அவர்கள் திருமணம் செய்யும்பொழுது, தங்கள் உறவினர்கள் அனைவரையும் நினைவுசெய்கிறார்கள். அதற்கு நேரம் எடுக்கின்றது; அவர்களால் மிக விரைவாகப் பந்தனத்தில் இருந்து விடுபட முடியாது. அனைவரும் தங்கள் வாழ்க்கைச் சுயசரிதையை அறிவார்கள். சந்நியாசிகளும் தாங்கள் முன்னர் இல்லறத்தவர்களாக இருந்து, பின்னர் துறவறத்தை மேற்கொண்டார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். உங்களுடைய துறவறம் மகத்தானது, இதனாலேயே இதற்கு முயற்சி தேவைப்படுகிறது. அந்தச் சந்நியாசிகள் தம் மீது சாம்பலைப் பூசிக் கொண்டு, தங்கள் தலைகளை மொட்டை அடித்து, தங்கள் ஆடைகளை மாற்றி விடுகிறார்கள். நீங்கள் அதனைப் போன்ற எதனையும் செய்ய வேண்டிய தேவை இல்லை. இங்கு, உங்கள் ஆடையை மாற்றுகின்ற கேள்வி கூட கிடையாது. நீங்கள் ஒரு வெள்ளைச் சேலையை அணியாவிட்டாலும் பரவாயில்லை. இந்த ஞானம் புத்திக்குரியது. ‘நான் ஓர் ஆத்மா, நான் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதனூடாகவே துரு நீக்கப்பட்டு, நான் சதோபிரதான் ஆகுவேன்’. அனைவரும் வீடு திரும்ப வேண்டும். சிலர் யோக சக்தியால் தூய்மையாகுவார்கள், சிலர் வீடு திரும்புவதற்கு முன்னர் தண்டனையை அனுபவிப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள் துருவை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும், இதனாலேயே யோக அக்கினி நினைவுகூரப்படுகிறது. அக்கினியில் பாவங்கள் எரிகின்றன. பின்னர் நீங்கள் தூய்மையாகுவீர்கள். காமச் சிதையும் அக்கினி என்று அழைக்கப்படுகிறது. காமச் சிதையில் எரிந்ததனால் நீங்கள் முற்றிலும் அவலட்சணமானவர்கள் ஆகிவிட்டீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது அழகானவர்கள் ஆகுங்கள்! இந்த விடயங்கள் பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு எவரின் புத்தியிலும் தங்காது. இவை தனித்துவமான விடயங்கள். நீங்கள் சமயநூல்களை நம்புவதில்லை, நீங்கள் நாஸ்திகர்கள் ஆகிவிட்டீர்கள் என மக்கள் உங்களுக்குக் கூறும்பொழுது, அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் சமயநூல்களைக் கற்றோம், ஆனால் இப்பொழுது தந்தை எங்களுக்கு இந்த ஞானத்தை வழங்கியுள்ளார். ஞானத்தினூடாகவே சற்கதி ஏற்படுகிறது. கடவுள் பேசுகிறார்: எவராலும் வேதங்களை அல்லது உபநிடதங்களைக் கற்பதனாலோ, தானங்கள் வழங்குவதன் மூலமோ அல்லது புண்ணியம் செய்வதன் மூலமோ என்னை அடைய முடியாது. என் மூலமே உங்களால் என்னை அடைய முடியும். தந்தை மட்டுமே வந்து உங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். ஓர் ஆத்மா துருப்பிடித்தவர் போன்று ஆகும்பொழுது, வந்து தன்னைத் தூய்மையாக்கும்படி அவர் தந்தையைக் கூவியழைக்கிறார். தமோபிரதான் ஆகியுள்ள ஆத்மாக்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகவேண்டும். தமோபிரதானிலிருந்து, ஆத்மாக்கள் தமோ, ரஜோ, சதோ, பின்னர் சதோபிரதானாக வேண்டும். இடையில் ஏதாவது தவறாகப் போனால், மேலும் துரு சேமிக்கப்படுகின்றது. தந்தை எங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகிறார். எனவே, அந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். மக்கள் பெரும் சந்தோஷத்தில் கற்பதற்கு வெளிநாடு செல்கிறார்கள். நீங்கள் இப்பொழுது மிகவும் விவேகிகள் ஆகுகின்றீர்கள். கலியுகத்தில் நீங்கள் மிகவும் தமோபிரதானாகவும், விவேகமற்றவர்களாகவும் ஆகியுள்ளீர்கள். நீங்கள் எவ்வளவிற்கு அதிகமாக அன்பு கொண்டிருக்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக அவர்கள் உங்களை எதிர்க்கிறார்கள். உங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நன்றாகக் கற்று, நினைவில் நிலைத்திருப்பவர்கள் நல்லதோர் அந்தஸ்தை அடைவார்கள். பாரதத்திலே மரக்கன்று நாட்டப்படுகிறது. நாளுக்கு நாள், உங்கள் பெயர் பத்திரிகைகளின் மூலம் போற்றப்படுகிறது. பத்திரிகைகள் எங்கும் அனுப்பப்படுகின்றன. அதே பத்திரிகையாளர்கள் சிலவேளைகளில் நல்ல விடயங்களை எழுதுகிறார்கள், சிலவேளைகளில் தீய விடயங்களை எழுதுகிறார்கள், ஏனெனில் அவர்கள் தாங்கள் கேள்விப்படும் விடயங்களிலேயே தங்கியிருக்கிறார்கள். யாராவதொருவர் அவர்களுக்குக் கூறும் விடயங்களையே அவர்கள் எழுதுகிறார்கள். பலர் தாங்கள் கேள்விப்படும் விடயங்களிலேயே பெருமளவு தங்கியிருக்கிறார்கள். அது மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுவது எனப்படுகிறது. மற்றவர்களின் கட்டளைகள் அசுர கட்டளைகளாகும். தந்தை மேன்மையான வழிகாட்டல்களை வழங்குகிறார். யாராவதொருவர் அவர்களுக்கு எதிரான எதனையாவது கூறும்பொழுது, அவர்கள் வருவதை நிறுத்தி விடுகிறார்கள். சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைத்தையும் அறிந்திருக்கின்றார்கள். நீங்கள் இங்கு என்ன சேவை செய்தாலும், அது உங்கள் முதல் இலக்கச் சேவையாகும். நீங்கள் இங்கு சேவை செய்து, அங்கு அதன் பலனைப் பெற்றுக் கொள்கிறீர்;கள். நீங்கள் அனைத்தையும் இங்கு தந்தையுடன் செய்கிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மா எனும் ஊசி துருப்பிடித்து விட்டது. யோக சக்தியால் துருவை நீக்கி முயற்சி செய்து, சதோபிரதான் ஆகுங்கள். பிறர் உங்களுக்குக் கூறுபவற்றைச் செவிமடுப்பதால், ஒருபொழுதும் கற்பதை நிறுத்தாதீர்கள்.

2. உங்கள் புத்தியை ஞானக் கருத்துக்களால் நிறைத்து, சேவை செய்யுங்கள். அவர்களின் நாடித் துடிப்பை உணர்ந்த பின்னர், ஞானத்தை வழங்குங்கள். மிகவும் கூர்மையான புத்தியைக் கொண்டவர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய சுயத்தின் ஆதி தர்மத்தை ஏற்றுக் கொண்டு, உங்கள் ஆதியும் அநாதியுமான ரூபத்தின் விழிப்புணர்வு மூலம் தூய்மையானவர்களாகவும், யோகிகளாகவும் ஆகுவீர்களாக.

பிராமணர்களின் ஆதி தர்மம் தூய்மையாகும், தூய்மையின்மையோ வெளிப்புறமான தர்மம் ஆகும். மக்கள் கடைப்பிடிப்பதற்குச் சிரமப்படுகின்ற தூய்மையானது குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் இலகுவாக உள்ளது, ஏனெனில் தூய்மையே எப்பொழுதும் ஆத்மாக்களாகிய உங்களின் உண்மையான ரூபம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் ஆநாதி ரூபம் தூய்மையான ஆத்மாவிற்;குரியதும், உங்கள் ஆதி ரூபம் ஒரு தூய தேவருக்குரியதும் ஆகும். தற்சமயத்து இறுதிப் பிறவியும் ஒரு தூய பிராமண வாழ்வே ஆகையால், தூய்மையே பிராமண வாழ்வின் ஆளுமை ஆகும். தூய்மையானவர்களே யோகிகள் ஆவர்.

சுலோகம்:
உங்களை ஓர் இலகு யோகி என அழைப்பதனால் கவனயீனத்தை ஏற்படுத்தாதீர்கள், ஆனால் ஒரு சக்தி ரூபம் ஆகுங்கள்.