16.12.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் பாவச் சுமையை இலேசாக்கிக் கொள்வதற்கு, உங்கள் கடந்த காலச் செயல்களின் வரலாற்றை எழுதி, அதைத் தந்தைக்குக் கொடுப்பதில் நம்பிக்கை நிறைந்தவராகவும், நேர்மையானவராகவும் இருங்கள், அப்பொழுது நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்.

கேள்வி:
இப்பொழுது சங்கமயுகத்தில் குழந்தைகளான நீங்கள் எந்த விதையை விதைக்கக்கூடாது?

பதில்:
சரீர உணர்வு எனும் விதையாகும். இவ்விதையிலிருந்தே விகாரங்களின் முழு விருட்சமும் வளர்கிறது. தற்சமயம், ஐந்து விகாரங்களினதும் இவ்விருட்சம் உலகம் முழுவதிலும் வளர்ந்துள்ளது. அனைவரும் தொடர்ந்தும் காமம், கோபம் எனும் விதைகளை விதைக்கிறார்கள். உங்களுக்கான தந்தையின் வழிகாட்டல்கள்: குழந்தைகளே, யோக சக்தி மூலம் தூய்மையாகுங்கள், அந்த விதையை விதைப்பதை நிறுத்தி விடுங்கள்.

பாடல்:
உங்களை அடைந்ததால், நாங்கள் முழு உலகையும் அடைந்து விட்டோம்!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். தற்சமயம், உங்களிற் சிலரே இருக்கிறீர்கள். விரைவில், பல குழந்தைகள் இருப்பார்கள். இப்பொழுது உங்களிற் சிலர் மாத்திரமே நடைமுறையில் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகியுள்ளபொழுதிலும், அனைவருக்கும் அவரைத் தெரியும். அவர் மக்களின் தந்தையாகிய, பிரம்மா என அழைக்கப்படுகிறார். மக்கள் பலர் இருக்கிறார்கள். சகல சமயத்தவர்களும் நிச்சயமாக அவரை ஏற்றுக்கொள்வார்கள். அவரின் மூலமாகவே மனிதர்கள் உருவாக்கப்பட்டார்கள். பௌதீகத் தந்தையர்களும் எல்லைக்குட்பட்ட பிரம்மாக்களே, ஏனெனில் அவர்களின் மூலமும் வம்வாவளி விருட்சங்கள் உருவாக்கப்படுகின்றன என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். முதற்பெயரின் (ளரசயெஅந) அடிப்படையிலேயே ஒரு வம்சாவளி விருட்சம் தொடர்கிறது. அவர்கள் எல்லைக்குட்பட்ட தந்தையர்கள்; இவர் (பிரம்மா) ஓர் எல்லையற்ற தந்தையாவார். இவருடைய பெயர் பிரஜாபிதா ஆகும். பௌதீகத் தந்தையர்கள் எல்லைக்குட்பட்ட குடும்பங்களை உருவாக்குகிறார்கள். சிலர் ஒரு குடும்பத்தையேனும் உருவாக்குவதில்லை. இவர் நிச்சயமாக ஒருவரை உருவாக்குகிறார். பிரஜாபிதா பிரம்மாவுக்குக் குழந்தைகள் இல்லை எனக் கூறுகின்ற எவராவது இருப்பார்களா? முழு உலக மக்களும் அவருடைய குழந்தைகளே. பிரஜாபிதா பிரம்மாவே முதன்மையானவர். முஸ்லீம்களும் ஆதாமையும் பீபியையும் நினைவுசெய்கிறார்கள், ஆகவே அவர்கள் நிச்சயமாகவே சிலரைக் குறிப்பிடுகிறார்கள். ஆதிதேவனும், ஆதிதேவியுமாகிய, ஆதாமும் ஏவாளும் பற்றி அவர்கள் பேசும்பொழுது, பிரஜாபிதா பிரம்மாவையே குறிப்பிடுகிறார்கள். சகல சமயத்தவர்களும் அவரில் நம்பிக்கை கொள்வார்கள். உண்மையில், ஒருவர் எல்லைக்குட்பட்ட தந்தையும், மற்றவர் எல்லையற்ற தந்தையும் ஆவார்கள். அந்த எல்லையற்ற தந்தையே எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுப்பவர். நீங்கள் சுவர்க்கத்தின் எல்லையற்ற சந்தோஷத்தை அடைவதற்கே முயற்சி செய்கிறீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சந்தோஷம் என்னும் உங்கள் ஆஸ்தியை அடைவதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். சுவர்க்கத்தில் எல்லையற்ற சந்தோஷம் உள்ளது எனவும், நரகத்தில் எல்லையற்ற துன்பமே உள்ளது எனவும் கூறப்பட முடியும். பெருமளவு துன்பம் வரவுள்ளது. விரக்திக் கூக்குரல்கள் இருக்கும். தந்தை உங்களுக்கு முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் தனிப்பட்ட முறையில் அவரின் முன்னிலையில் அமர்ந்திருப்பதுடன், முயற்சியும் செய்கிறீர்கள். அவர் தாயும், தந்தையுமாகிய இருவரும் ஆவார். பல்வேறு குழந்தைகள் இருக்கிறார்கள்! எவருக்கும் எல்லையற்ற தாயிடமும், தந்தையிடமும் விரோதம் இருப்பதில்லை. நீங்கள் தாய், தந்தையிடமிருந்து அதிகளவு சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். மக்கள் பாடுகிறார்கள்: நீங்களே தாயும், தந்தையும்…. இவ்விடயம் குழந்தைகளால் மாத்திரமே புரிந்துகொள்ளப்பட முடியும். ஏனைய சமயத்தவர்கள் தந்தையை மாத்திரமே கூவியழைக்கிறார்கள்; அவர்;கள் “தாயையும், தந்தையையும்” பற்றிப் பேசுவதில்லை. “நீங்களே தாயும், தந்தையும்” என இங்கு மாத்திரமே நீங்கள் பாடுகிறீர்கள். கற்பதனால், நாங்கள் முட்களிலிருந்து மலர்களாக, சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தையே படகோட்டியும், பூந்தோட்டக்காரரும் ஆவார். பிராமணர்களாகிய நீங்கள் அனைவரும் பல்வேறு வகையான பூந்தோட்டக்காரர்கள் ஆவீர்கள். முகல் தோட்டங்களுக்கான பூந்தோட்டக்காரரும் இருக்கிறார். அவருடைய சம்பளம் மிகவும் அதிகமானது. பூந்தோட்டக்காரர்களும் வரிசைக்கிரமமானவர்கள். சில பூந்தோட்டக்காரர்கள் அத்தகைய அழகான மலர்களை வளர்க்கிறார்கள். மலர்களின் மத்தியில் இராஜ மலர்களும் உள்ளன. சத்திய யுகத்தில் இராஜா, இராணி மலர்கள் உள்ளன. இப்பொழுது சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியும் இருந்தாலும், அவர்கள் மலர்களைப் போன்றவர்கள் அல்லர். தூய்மையற்றவர்கள் ஆகுவதால், அவர்கள் முட்கள் ஆகுகிறார்கள். முன்னேறிச் செல்லும்பொழுது, அவர்கள் உங்களை முட்களைப் போன்று குத்திவிட்டு, ஓடிவிடுகிறார்கள். அவர்கள் அஜாமில் என அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் அதிக பக்தி செய்கிறீர்கள். அவர்கள் எவ்வாறு பாவப் பாதையில் சீரழிவுக்குரிய அழுக்கான உருவங்களை உருவாக்கியுள்ளனர் எனப் பாருங்கள்! அவர்கள் தேவர்களின் உருவங்களைச் சித்தரிக்கிறார்கள், ஆனால் அவை பாவப் பாதையின் உருவங்கள் ஆகும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். நாங்கள் விகாரங்களிலிருந்து மிக, மிகத் தொலைவுக்குச் செல்கிறோம். பிராமணர்களின் மத்தியில், ஒரு சகோதரரும், சகோதரியும் விகாரத்தில் ஈடுபடுவது மிகப் பெரிய குற்றத் தாக்குதல் ஆகும். அவர்களின் பெயர் பாழாகிவிடுகிறது. இதனாலேயே பாபா கூறுகிறார்: நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து செய்துள்ள அழுக்கான செயல்கள் அனைத்தையும் பாபாவுக்குக் கூறுவதனால், அரைவாசி மன்னிக்கப்படும். நீங்கள் எந்நேரங்களில் அழுக்கான செயல்களைச் செய்தீர்கள் என்பதை நினைவுகூருகிறீர்கள், இல்லையா? அவற்றை எழுதி, பாபாவுக்குக் கொடுங்கள். மிகவும் நம்பிக்கை நிறைந்தவர்களும், நேர்மையானவர்களும் எழுதுவார்கள்: “பாபா, நான் இத்தீய செயல்களைச் செய்தேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்!” தந்தை கூறுகிறார்: உங்களை மன்னிக்க முடியாது! எவ்வாறாயினும், நீங்கள் உண்மையைக் கூறியுள்ளதனால், உங்களின் சுமை இலேசாக்கப்படும். நீங்கள் அவற்றை மறந்துவிட முடியும் என்பதல்ல் உங்களால் அவற்றை மறக்க முடியாது. எதிர்காலத்தில் அத்தகைய செயல்கள் எதனையும் செய்யாதிருக்குமாறு நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள். எவ்வாறாயினும், நிச்சயமாக உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்துகிறது. அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் அஜாமிலைப் போன்றவர்களாக இருந்;தோம். இது தற்போதைய பிறவியையே குறிக்கிறது. நீங்கள் எப்பொழுது பாவப் பாதையில் சென்று பாவாத்மாக்கள் ஆகினீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இப்பொழுது தந்தை எங்களைப் புண்ணியாத்மாக்களாக ஆக்குகிறார். புண்ணியாத்மாக்களின் உலகம் வேறானது. உலகம் ஒன்றேயாயினும், அது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஒன்று சுவர்க்கம் என அழைக்கப்படுகின்ற புண்ணியாத்மாக்களின் உலகமும், மற்றையது துன்ப தாமம் அல்லது நரகம் என அழைக்கப்படுகின்ற பாவாத்மாக்களின் உலகமும் ஆகும். சந்தோஷ உலகமும், துன்ப உலகமும் உள்ளன. துன்ப தாமத்தில், அனைவரும் தங்களை விடுதலையாக்கி வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூவி அழைக்கிறார்கள். நீங்கள் வீட்டுக்குச் சென்று அமரப் போவதில்லை என்பதையும், ஆனால் நீங்கள் கீழிறங்கி வந்து மீண்டும் உங்கள் பாகங்களை நடிக்க வேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தற்சமயம், முழு உலகமும் தூய்மையற்றுள்ளது. நீங்கள் இப்பொழுது தந்தையால் தூய்மையாக்கப்படுகிறீர்கள். இலக்கும், இலட்சியமும் உங்களின் முன்னிலையில் உள்ளன. வேறு எவருக்கும் இந்த இலக்கும், இலட்சியமும் இல்லை: நாங்கள் இவ்வாறு ஆகுகிறோம். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் இவ்வாறு இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அவ்வாறு இல்லை. நீங்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது வழிபடுபவர்கள் ஆகிவிட்டீர்கள். மீண்டும் வழிபடத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதற்கு முயற்சி தேவைப்படுகிறது. தந்தை உங்களை அத்தகைய சிறந்த முயற்சியைச் செய்யுமாறு தூண்டுகிறார். தான் ஓர் இளவரசர் ஆகுவார் என இந்த பாபா புரிந்துகொள்கிறார். இவர் முதலாம் இலக்கத்தவர், இருப்பினும் அவரால் நிலையான நினைவில் நிலைத்திருக்க முடிவதில்லை; அவர் மறந்து விடுகிறார். ஒருவர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அவரால் தற்சமயம் அந்த ஸ்திதியை அடைய இயலாதுள்ளது. யுத்த காலத்திலேயே கர்மாதீத ஸ்திதி அடையப்படும். அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இவரும் முயற்சி செய்ய வேண்டும். அவர்களை வினவுங்கள்: பாபா படத்தில் எங்கே காட்டப்பட்டுள்ளார்? அவர் தூய்மையற்ற உலகில் சரியாக விருட்சத்தின் உச்சியில் நின்று கொண்டிருப்பதுடன், விருட்சத்தின் அடியில் தபஸ்யாவும் செய்கிறார். அது அத்தகையதோர் எளிமையான வழியில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தையால் இவ் விடயங்கள் அனைத்தும் விளங்;கப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் இவ்விடயங்களை அறிந்திருக்கவில்லை. தந்தை ஞானம் நிறைந்தவர். அவரையே அனைவரும் நினைவுசெய்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே, வந்து எங்களைத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள்! பிரம்மா, விஷ்ணு, சங்கரர் தேவர்கள் ஆவார்கள். அசரீரி உலகில் வசிக்கின்ற ஆத்மாக்களைத் தேவர்கள் என அழைப்பதில்லை. தந்தை பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் இரகசியங்களையும் விளங்கப்படுத்தியுள்ளார். இங்கேயே பிரம்மாவும், இலக்ஷ்மியும் நாராயணனும் இருக்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே சூட்சும லோகத்தின் காட்சிகளைப் பெறுகிறீர்கள். இந்த பாபாவும் ஒரு தேவதை ஆகுகிறார். ஏணியின் உச்சியில் நிற்பவரே, அத்திவாரத்தில் தபஸ்யா செய்பவரும் என்பது குழந்தைகளுக்குத் தெரியும்; அது படத்தில் மிகவும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இவர் தன்னைக் கடவுள் என அழைப்பதில்லை. இவர் கூறுகிறார்: நான் ஒரு சதப் பெறுமதி வாய்ந்தவராகவும் இருக்கவில்லை, உங்களுக்கும் அதுவே பொருந்துகின்றது. நான் இப்பொழுது ஒரு பவுண்ட் பெறுமதி வாய்ந்தவராக ஆகுகிறேன், உங்களுக்கும் அதுவே பொருந்துகின்றது. இவ்விடயங்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவானவை. எவராவது எதிர்த்தால், அவர் கலியுகத்தின் இறுதியில் நிற்கிறார் என அவருக்குக் கூறுங்கள். தந்தை கூறுகிறார்: இவர் தனது ஓய்வுபெறும் ஸ்திதியில், வயோதிப ஸ்திதியை அடைந்துள்ளபொழுதே, நான் இவரில் பிரவேசிக்கிறேன். இவர் இப்பொழுது இராஜயோக தபஸ்யா செய்கிறார். ஒருவர் தபஸ்யா செய்யும்பொழுது, நீங்கள் எவ்வாறு அவரை ஒரு தேவர் என அழைக்க முடியும்? இராஜயோகத்தைக் கற்ற பின்னரே அவர் அவ்வாறு ஆகுகிறார். குழந்தைகளாகிய நீங்களும் கிரீடங்களை அணிபவர்கள் ஆக்கப்படுகிறீர்கள்; நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் அனைவரும் அவ்வாறு ஆகுகிறீர்கள் எனக் காட்டுவதற்கு நீங்கள் 10 முதல் 20 குழந்தைகளின் படங்களை அச்சிட முடியும். முன்னர், ஒவ்வொருவரும் இதைப் போன்று ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்கள். இவ்விடயம் விளங்கப்படுத்தப்பட வேண்டும். ஒருபுறத்தில், அவர்கள் எளிமையானவர்களும், மறுபுறத்தில் அவர்கள் இரட்டைக் கிரீடம் அணிந்தவர்களும் ஆவர். நீங்கள் அவ்வாறு ஆகுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். இரேகை தெளிவாக உள்ளவர்களே அவ்வாறு ஆகுவார்கள். நீங்கள் மிகவும் இனிமையானவர்களாகவும் ஆகவேண்டும். தற்சமயம், மனிதர்களில் காமத்தினதும், கோபத்தினதும் விதைகள் அதிகளவு அதிகரித்துள்ளன. அவர்கள் அனைவரிலும் ஐந்து விகாரங்களின் விருட்சம் வெளித்தோன்றியுள்ளது. தந்தை கூறுகிறார்: இப்பொழுது அத்தகைய விதைகளை விதைக்காதீர்கள்! நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் சரீர உணர்வு எனும் விதையை விதைக்கக்கூடாது. நீங்கள் காமத்தின் விதையை விதைக்கக்கூடாது. இராவணன் அரைக் கல்பத்துக்கு இருக்க மாட்டான். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளுக்கு ஒவ்வொரு விடயத்தையும் விளங்கப்படுத்துகிறார். பிரதான விடயம்: ‘மன்மனாபவ!’ தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள்! இவர் பின்னாலும், அத்துடன் முன்னாலும் இருக்கிறார். நீங்கள் யோக சக்தி மூலம் மிகவும் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். ஆரம்பத்தில், குழந்தைகளிற் சிலர் பல காட்சிகளைக் காண்பது வழக்கமாகும். பக்தி மார்க்கத்தில், ஒருவர் தீவிர பக்தி செய்த பின்னர், ஒரு காட்சியைப் பெறுகிறார். இங்கு, நீங்கள் வெறுமனே அமர்ந்திருந்து இலகுவில் திரான்ஸிற்குச் செல்வது வழக்கமாகும். இது மந்திரவித்தை எனக் கருதப்பட்டது; இது முதற்தர மந்திரவித்தையாகும். மீரா பெருமளவு தபஸ்யா செய்து, தனது நேரத்தைச் சாதுக்களினதும், புனிதர்களினதும் சகவாசத்தில் கழித்தார். இங்கு புனிதர்கள் இல்லை. இவர் தந்தையாவார். சிவபாபாவே அனைவருடைய தந்தையும் ஆவார். மக்கள் குருவைச் சந்திப்பதற்கு வினவுகிறார்கள். எவ்வாறாயினும், இங்கு குரு இல்லை. சிவபாபா அசரீரியானவர், ஆகவே, அவர்கள் யாரைச் சந்திப்பதற்கு விரும்புகிறார்கள்;? அவர்கள் அந்தக் குருமார்களுக்கு வெகுமதிகளை அர்ப்பணிக்கிறார்கள். தந்தை எல்லையற்றதன் அதிபதியாவார். அவருக்கு எதையும் அர்ப்பணிப்பதற்கான கேள்வியே இல்லை. அவர் பணத்தின் மூலம் என்ன செய்வார்? தான் உலக அதிபதியாகப் போகிறார் என்பதை பிரம்மா புரிந்துகொள்கிறார். குழந்தைகள் பணம் போன்றவற்றைக் கொடுத்தாலும், அது அவர்களுக்காகக் கட்டடங்களை உருவாக்குவதற்கே பயன்படுத்தப்படுகிறது. சிவபாபாவுக்கோ அல்லது பிரம்மபாபாவுக்கோ பணத்தால் பயனில்லை. இக்கட்டடங்கள் குழந்தைகள் வந்து தங்குவதற்கே கட்டப்பட்டுள்ளன. சில குழந்தைகள் ஏழைகள், சிலர் செல்வந்தர்கள், சிலர் இரண்டு ரூபாய்களைக் கூட அனுப்பி பாபாவுக்குக் கூறுகிறார்கள்: பாபா, எனது பெயரில் ஒரு செங்கல்லை இடுங்கள். சிலர் ஆயிரம் ரூபாய்களை அனுப்புகிறார்கள். இருவருடைய உள்நோக்கங்களும் ஒன்றே. ஆகவே, அது அவர்கள் இருவர் குறித்தும் சமமாகுகின்றது. பின்னர் குழந்தைகள் வந்து அவர்கள் விரும்புமிடத்தில் தங்க முடியும். கட்டடங்களைக் கட்டுவித்தவர் வரும்பொழுது, அவருக்குப் பெருமளவு உபசாரம் செய்யப்படுகிறது. சிலர் அப்பொழுது கூறுகிறார்கள்: பாபா அவர்களுக்குச் சலுகை கொடுக்கிறார். கண்டிப்பாக, அவர்களுக்கு அது நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டும். அனைத்து வகையினரும் உள்ளார்கள். சிலர் எங்கே வேண்டுமானாலும் தங்குவார்கள். ஏனையோர் மிகவும் சௌகரியத்தை நாடுபவர்கள். வெளிநாட்டவர்கள் மிகப் பெரிய மாளிகைகளில் தங்குகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் பல செல்வந்தர்கள் வெளிப்படுகிறார்கள். ஆகவே, அவர்களுக்காக, அத்தகைய கட்டடங்களைக் கட்ட வேண்டும். பாருங்கள், இங்கே பல குழந்தைகள் வருகிறார்கள்! வேறெந்தத் தந்தைக்கும் அத்தகைய எண்ணங்கள் இருக்க மாட்டாது. அதிகமாக வேண்டுமானால், ஒருவருக்கு 10, 12 அல்லது 20 பேரக் குழந்தைகள் இருப்பார்கள். அச்சா, சிலருக்கு 200 தொடக்கம் 500 வரையான பேரக் குழந்தைகளும் இருப்பார்கள், ஆனால் அதனை விட அதிகமான பேரக் குழந்தைகள் எவருக்கும் இருக்க மாட்டார்கள். பாபாவின் இக்குடும்பம் மிகவும் பெரியது, அது மேலும் பெருமளவுக்கு வளரும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. தந்தையின் குடும்பம் எவ்வளவு பெரியது, பிரஜாபிதா பிரம்மாவின் குடும்பம் எவ்வளவு பெரியது! ஒவ்வொரு கல்பத்திலும் அவர் வரும்பொழுது மாத்திரமே, நீங்கள் இத்தகைய அற்புதமான விடயங்களைச் செவிமடுக்கிறீர்கள். தந்தையையிட்டுக் கூறப்படுகிறது: ஓ, பிரபு! உங்கள் வழிமுறைகள் தனித்துவமானவை. இது தற்காலத்தையே குறிக்கிறது. பக்திக்கும், ஞானத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்ல விரும்பினால், தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் இப்பொழுது முட்களைப் போல் உள்ளீர்கள். அவர்கள் தொடர்ந்தும் பாடுகிறார்கள்: நான் தெய்வீகக் குணங்கள் அற்றவன். எவ்வாறாயினும், இராவண இராச்சியத்தில் ஐந்து விகாரங்கள் எனும் குறைபாடுகள் உள்ளன. நீங்கள் இப்பொழுது அத்தகைய சிறந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள்! அந்த ஞானம் உங்களுக்கு இந்த ஞானத்தைப் போன்று அதிகளவு சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் மேலே அசரீரி உலகில் வசிக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகில் இருக்கிறார்கள். அதுவும் காட்சிகளுக்கான நோக்கத்திற்காகவே உள்ளது. இங்கேயே பிரம்மா உள்ளார், ஆகவே இலக்ஷ்மியும் நாராயணனும் இங்கேயே இருக்கிறார்கள். அவர்களின் காட்சி மாத்திரமே உள்ளது. எவ்வாறு பௌதீக பிரம்மா, தேவதையான சூட்சும உலகின் பிரம்மா ஆகுகின்றார் என்பதையே அது அடையாளப்படுத்துகிறது. இல்லாவிட்டால், அதைப் போன்று எதுவும் இருக்க மாட்டாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் புரிந்துகொள்வதுடன், அனைத்தையும் கிரகிக்கின்றீர்கள். இவ்விடயங்கள் புதியன அல்ல. நீங்கள் பல தடவைகள் தேவர்கள் ஆகியுள்ளீர்கள். தேவ இராச்சியம் இருந்தது. இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. அந்நாடகங்கள் அழியக்கூடியவையும், ஆனால் இதுவோ ஓர் அநாதியான, அழிவற்ற நாடகமும் ஆகும். உங்களைத் தவிர எவருடைய புத்தியிலும் இது இல்லை. தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அது தொன்றுதொட்ட காலத்திலிருந்து தொடர்ந்துள்ளது என்பதல்ல. தந்தை கூறுகிறார்: இப்பொழுது நான் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறேன், அது பின்னர் மறைந்துவிடும். சத்தியயுகத்தில் நீங்கள் உங்களுடைய இராஜ அந்தஸ்தை அடைந்ததும், இந்த ஞானம் இருக்க மாட்டாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் எனும் விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். ஆகவே, விகாரங்களிலிருந்து மிகத் தொலைவில் இருங்கள். என்றுமே குற்றத் தாக்குதல் இல்லாதிருக்கட்டும். தந்தையிடம் மிகவும் நேர்மையானவராகவும், நம்பிக்கை நிறைந்தவராகவும், இருங்கள்.

2. இரட்டைக் கிரீடம் அணிந்த அரசர்கள் ஆகுவதற்கு, மிகவும் இனிமையானவர்களாகி, உங்கள் புத்தியின் இரேகையைத் தெளிவாக வைத்திருங்கள். இராஜயோக தபஸ்யா செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இறை போதையைக் கொண்டிருந்து, பேறுகள் அனைத்தினாலும் நிரம்பியவர் ஆகுவதால், பழைய உலகை மறப்பீர்களாக.

ஏனைய போதை உங்களை அனைத்தையும் மறக்கச் செய்வதைப் போன்று, அதேவிதமாக, இறை போதையானது உங்களை இலகுவில் துன்ப உலகை மறக்குமாறு செய்கின்றது. அந்தப் போதை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீங்கள் பெருமளவு அருந்துவதனால் உங்களையே கொன்று விட முடியும், ஆனால் இந்தப் போதை உங்களை அழிவற்றவர்கள் ஆக்குகின்றது. இறை போதையால் சதா போதையுற்றிருப்பவர்களே பேறுகள் அனைத்தினாலும் நிரம்பியவர்கள் ஆகுகின்றார்கள். வேறு எவருக்கும் அன்றி, ஒரே தந்தைக்கு உரியவர்களாக இருக்கின்ற விழிப்புணர்வு உங்கள் போதையை அதிகரிக்கின்றது. இவ்விழிப்புணர்வு மூலம் உங்கள் சக்தியானது அதிகரிக்கின்றது.

சுலோகம்:
ஒருவரையொருவர் பிரதி செய்வதற்குப் பதிலாக, தந்தையைப் பிரதி செய்யுங்கள்.