04.12.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எல்லையற்ற தந்தை, குழந்தைகளாகிய உங்களை ஞானத்தினால் அலங்கரிக்க வந்துள்ளார். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால் சதா அலங்கரிக்கப்பட்டவர்களாக இருங்கள்.

கேள்வி:
எந்தக் குழந்தைகளைக் காணும்போது எல்லையற்ற தந்தை மிகவும் பூரிப்படைகின்றார்?

பதில்:
தந்தை எப்போதும் சேவைக்குத் தயாராக இருப்பவர்களையும், லௌகீக, அலௌகீகத் தந்தையர் இருவரையும் முழுமையாகப் பின்பற்றுபவர்களையும் தங்கள் ஆத்மாக்களை ஞானத்தினாலும் யோகத்தினாலும் அலங்கரிப்பவர்களையும் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கும் சேவை செய்பவர்களுமாகிய குழந்தைகளைப் பார்க்கையில் மிகவும் பூரிப்படைகின்றார். குழந்தைகள் முயற்சி செய்து உயர்ந்த அந்தஸ்தைக் கோர வேண்டும் என்பதே தந்தையின் ஆசையாகும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, எவ்வாறு ஓர் லௌகீகத் தந்தை, தனது குழந்தைகளின் மீது அன்பு செலுத்துகின்றாரோ, அதேபோன்று, எல்லையற்ற தந்தையும் தனது எல்லையற்ற குழந்தைகளின் மீது அன்பு செலுத்துகின்றார். ஒரு தந்தை அவரது குழந்தைகளுக்குக் கற்பித்தல்களைக் கொடுப்பதுடன், அவர்கள் உயர்ந்த அந்தஸ்தையும் கோரவேண்டுமென எச்சரிக்கின்றார். அதுவே ஒரு தந்தையின் ஆசையாகும். எல்லையற்ற தந்தையின் ஆசையும் அதுவேயாகும். அவர் குழந்தைகளாகிய உங்களை ஞானம், யோகம் என்ற ஆபரணங்களால் அலங்கரிக்கின்றார். இரண்டு தந்தையரும் உங்களை மிக நன்றாக அலங்கரிக்கின்றனர். அதனால் நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியும். அலௌகீகத் தந்தையும் சந்தோஷம் அடைகின்றார், பரலோகத் தந்தையும் சந்தோஷம் அடைகின்றார். மிக நன்றாக முயற்சி செய்பவர்களே, தந்தையைப் பின்பற்றுபவர்கள் என நினைவுகூரப்படுகின்றது. எனவே நீங்கள் இருவரையும் பின்பற்ற வேண்டும். ஒருவர் ஆன்மீகத் தந்தையும், மற்றவர் இந்த அலௌகீகத் தந்தையும் ஆவார். ஆகையினால், நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் பத்தியில் இருந்தபோது கிரீடத்துடன் உங்கள் அனைவரது புகைப்படமும் எடுக்கப்பட்டது. ஒளிக்கிரீடம் எனும் ஒன்று இல்லை எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். அது உங்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட தூய்மையின் அடையாளமாகும். உண்மையில் வெள்ளை ஒளி கிரீடம் அங்கு இருப்பதில்லை. அது தூய்மையின் அடையாளமாகக் காட்டப்பட்டுள்ளது. முதலில் நீங்கள் சத்தியயுகத்தில் வசிக்கின்றீர்கள். நீங்கள் மாத்திரமே அங்கு இருக்கின்றீர்;கள். தந்தையும் கூறுகின்றார்: ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்டகாலம் பிரிந்திருக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்களே முதலில் வருபவர்கள், நீங்களே, முதலில் திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முக்திதாமத்திற்கான வாயில்களைத் திறக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களை அலங்கரிக்கின்றார். ஒருவர் பெற்றோரின் வீட்டில் வாழும் போது எளிமையாக இருக்கின்றார். இந்நேரத்தில் நீங்களும் ஆடம்பரமாகவோ, அல்லது அதி எளிமையாகவோ அல்லாது மிகவும் சாதாரணமாக இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நானும் ஒரு சாதாரண சரீரத்திலேயே பிரவேசிக்கின்றேன். எந்தச் சரீரதாரியையும் கடவுள் என அழைக்க முடியாது. மனிதர்களால் மனிதர்களுக்குச் சற்கதியை அருள முடியாது. ஒரு குருவால் மாத்திரமே சற்கதி அருளமுடியும். மக்கள் 60வது வயதில் ஓய்வுஸ்திதிக்குச் செல்லும்போது ஒரு குருவை ஏற்றுக் கொள்கின்றார்கள். அந்த வழக்கம் இந் நேரத்திலேயே ஆரம்பமாகுகின்றது. அது பின்னர் பக்தி மார்க்கத்தில் தொடர்கின்றது. இந்நாட்களில் அவர்கள் இளம் குழந்தைகளையும் ஒரு குருவை ஏற்றுக் கொள்ளுமாறு செய்கின்றார்கள். அவர்கள் தங்களது ஓய்வு ஸ்திதியில் இல்லாத போதிலும், எவருக்கும் சடுதியான மரணம் ஏற்படலாம். இதனாலேயே அவர்கள் சிறு குழந்தைகளையும் ஒரு குருவை ஏற்றுக் கொள்ளுமாறு செய்கின்றார்கள். நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் என்றும், உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு, உங்கள் அனைவருக்கும் ஓர் உரிமை உள்ளது என்றும் எவ்வாறு தந்தை கூறுகின்றாரோ, அவ்வாறே ஒரு குரு இல்லாது நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறமுடியாதென, அதாவது, நீங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலக்க முடியாதென அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் இரண்டறக் கலக்க விரும்புவதில்லை. அந்த முறை பக்தி மார்க்கத்திற்கு உரியதாகும். ஓர் ஆத்மா நட்சத்திரம் போன்று, புள்ளிவடிவானவர். தந்தையும் புள்ளி வடிவானவர். அந்தப் புள்ளி ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். நீங்களும் சின்னஞ்சிறிய ஆத்மாக்கள், ஞானம் அனைத்தும் அந்தப் புள்ளியில் பதிந்துள்ளது. நீங்கள் முழு ஞானத்தையும் எடுக்கின்றீர்கள். நீங்கள் திறமைச்சித்தி எய்துகின்றீர்கள். அவர் சிவலிங்கம் போன்று மிகப்பெரிதானவர் அல்லர். பரமாத்மாவும் ஆத்மாவைப் போன்று அதே அளவுடையவரே. ஆத்மா பரந்தாமத்திலிருந்து தனது பாகத்தை நடிப்பதற்காக வருகின்றார். தந்தை கூறுகின்றார்: நானும் அங்கிருந்தே வருகின்றேன், ஆனால் எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. நான் ரூப்பும் பசந்துமாவேன். பரமாத்மா ரூப்பும், அத்துடன் அவர் அனைத்து ஞானத்தினாலும் நிறைந்துள்ளார். அவர் ஞானத்தைப் பொழிகின்றார். அதனால் மனிதர்கள் பாவாத்மாக்களிலிருந்து புண்ணிய ஆத்மாக்களாக மாறுகின்றார்கள். தந்தை முக்தி, சற்கதி இரண்டையும் அருள்கின்றார். நீங்கள் சற்கதிக்குச் செல்ல, மீதி அனைவரும் முக்திக்குச் செல்கின்றார்கள், அதாவது, அவர்களுடைய வீட்டிற்குச் செல்கின்றார்கள். அதுவே இனிய வீடாகும். ஆத்மாவே இச் செவிகளின் மூலம் செவிமடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும், இனிமையான, அன்பிற்குரிய, நீண்டகாலம் தொலைந்து, இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக இருக்க வேண்டும். வேறு எவருமன்றி தூய ஆத்மாக்களாலேயே வீடு திரும்ப முடியும். நான் அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். ஆத்மாக்கள் சிவனின் ஊர்வலத்திலுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சிவபாபா இப்பொழுது சிவாலயத்தை ஸ்தாபிக்கின்றார். பின்னர் இராவணன் வந்து விலைமாந்தர் இல்லத்தை ஸ்தாபிக்கின்றான். பாவப்பாதையே விலைமாந்தர் இல்லம் என அழைக்கப்படுகின்றது. திருமணத்தின் பின்னரும் தூய்மையாக இருக்கின்ற பல குழந்தைகள் பாபாவுக்கு உள்ளார்கள். அவ்வாறு இருவரும் ஒன்றாக வாழ்வது சாத்தியமற்றது எனச் சந்நியாசிகள் கூறுகின்றனர். இங்கே, அதில் அதிகளவு வருமானம் உள்ளது என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையாக இருப்பதனால் 21 பிறவிகளுக்கு நீங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். ஆகையினால் ஒரு பிறவிக்குத் தூய்மையாக இருப்பது பெரிய விடயமல்ல. தந்தை கூறுகின்றார்: காமச்சிதையில் அமர்ந்ததால் நீங்கள் முற்றிலும் அவலட்சணமாகி விட்டீர்கள். கிருஷ்ணர் அவலட்சணமானவரும் அழகானவரும், என, அதாவது, சியாம்சுந்தர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கம் இந்த நேரத்திற்கானதாகும். காமச்சிதையில் அமர்ந்ததனால், ஆத்மா அவலட்சணமானவர் ஆகிவிட்டார். அவர் பின்னர் கிராமத்துச் சிறுவன் என அழைக்கப்படுகின்றார். அவர் உண்மையில் அவ்வாறாகவே இருந்தார். கிருஷ்ணர் அவ்வாறு இருக்க முடியாது. அவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் தந்தை அவரினுள் பிரவேசித்து, அவரை அழகானவர் ஆக்குகின்றார். நீங்கள் இப்பொழுது ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். பாபா நீங்கள் மிக இனிமையானவர்! நீங்கள் அவ்வாறான இனிய ஆஸ்தியை எங்களுக்குக் கொடுக்கின்றீர்கள்;. நீங்கள் எங்களைச் சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாற்றி, எங்களை ஓர் ஆலயத்தில் வீற்றிருக்கத் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்குகின்றீர்கள். இவ்வாறு உங்களுடன் பேசுங்கள். நீங்கள் உங்கள் உதடுகளினால் எதையும் கூறத் தேவையில்லை. பக்தி மார்க்கத்தில் அன்பிற்கினியவரை நீங்கள் அதிகளவு நினைவுசெய்தீர்கள். நீங்கள் இப்பொழுது வந்து எங்களைச் சந்தித்துள்ளீர்கள்! பாபா நீங்களே அனைவரிலும் மிக இனிமையானவர்! நாங்கள் ஏன் உங்களை நினைவு செய்யக்கூடாது? நீங்களே அன்புக்கடலும், அமைதிக்கடலும் என அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் மாத்திரமே எங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றீர்கள்; தூண்டுதல் மூலம் எதையுமே பெறமுடியாது. தந்தை இங்கு நேரடியாகவே வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது ஒரு பாடசாலையாகும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். இது இராஜயோகம். நீங்கள் இப்பொழுது அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம் பற்றியும், எவ்வாறு சின்னஞ்சிறிய ஆத்மா அவருடைய பாகத்தை நடிக்கின்றார் என்பதையும் அறிவீர்கள். இது நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். இது அநாதியான, அழிவற்ற உலக நாடகம் என அழைக்கப்படுகின்றது. இந்த நாடகம் தொடர்ந்தும் சுழல்கின்றது; இது பற்றி சந்தேகத்துக்கான எந்தக் கேள்வியுமில்லை. தந்தை உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி இறுதி பற்றிய இரகசியங்களைக் கூறுகின்றார். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள். முழுச் சக்கரமும் தொடர்ந்தும் உங்கள் புத்தியில் சுழல்வதால், அதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், கிருஷ்ணர் சக்கரத்தைச் சுற்றுவதனால் எந்த வன்முறையையும் செய்யவில்லை. அங்கே வன்முறையான யுத்தமோ, காமவாளோ இருக்க மாட்டாது. அவர்கள் இரட்டை அகிம்சாவாதிகளாவர். இந்நேரத்தில் உங்களுடைய யுத்தம் ஐந்து விகாரங்களுடனாகும். வேறு எந்த யுத்தம் பற்றிய கேள்வியும் இல்லை. தந்தை அதிமேலானவர், அவர் உங்களை இலக்ஷ்மி, நாராயணன் போன்று மேன்மையானவர்கள் ஆக்குகின்ற, அதிமேலான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். நீங்கள் அதிகளவு முயற்சி செய்கின்ற போது, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் அதே கல்வியே இருக்கும். நீங்கள் இப்பொழுது நன்றாக முயற்சி செய்தால், கல்பம்கல்பமாகத் தொடர்ந்தும் அதையே செய்வீர்கள். இந்த ஆன்மீகக் கல்வியின் மூலம் நீங்கள் பெறுகின்ற உயர்ந்த அந்தஸ்து போன்று, லௌகீகக் கல்வியில் நீங்கள் பெறமுடியாது. இலக்ஷ்மி, நாராயணனே அதிமேலானவர்கள் ஆகுகின்றார்கள். அவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்ததால், தேவர்கள் என அழைக்கப்படுகின்றனர். எவ்வாறாயினும் எட்டில் முதல் பத்து வரையான கைகளுடன் எந்த ஒரு மனிதனும் இருப்பதில்லை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் ஒரு காட்சியைக் காண்கின்றபோது, அவர்கள் பெருமளவு அழுகின்றார்கள். அவர்கள் சந்தோஷமற்றவர்களாகி அதிகளவு கண்ணீர் விடுகின்றார்கள். இங்கே, தந்தை கூறுகின்றார்: நீங்கள் கண்ணீர் விட்டால் தோல்வியடைகின்றீர்கள். உங்களின் தாயார் மரணித்;தாலும் நீங்கள் அல்வா சாப்பிட வேண்டும். இந்நாட்களில் பம்பாயிலும் கூட ஒருவர் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது மரணித்;தாலோ வந்து அவர்களுக்கு அமைதியைக் கொடுக்குமாறு அவர்கள் பிரம்மகுமாரிகளை அழைக்கின்றார்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுத்துள்ளார், அதனால் உங்களுக்கு என்ன என்று நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அழுவதனால் என்ன நன்மை இருக்கின்றது? அவர் மரணத்தால் எடுத்துச் செல்லப்பட்டார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறான விடயங்கள் எதுவும் இடம்பெறுவதில்லை. ஒவ்வொரு ஆத்மாவும் இயல்பாகவே அவரது சரீரத்தை நீக்குகின்றார். ஓர் ஆத்மா தனக்குரிய நேரத்தில் சரீரத்தை விட்டு ஓடி விடுகின்றார். எவ்வாறாயினும் மரணம் போன்ற எதுவுமில்லை. சத்தியயுகத்தில் கருப்பை ஒரு மாளிகை போன்று உள்ளது; அங்கே தண்டனை என்ற கேள்வியில்லை. அங்கே, உங்கள் செயல்கள் நடுநிலையானவை. அங்கே மாயை இல்லாததனால் அங்கே பாவச்செயல்கள் செய்யப்படுவதில்லை. நீங்கள் பாவச்செயல்களை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். முதலில் பாவச்செயல்களை வென்றவர்களின் காலம் உள்ளது. பின்னர் பக்தி மார்க்கம் ஆரம்பமாகி, (விகர்மா ஸ்ரீ பாவச்செயல்) அரசன் விக்கிரமனின் ஆட்சி இருக்கின்றது. இந்நேரத்தில் நீங்கள் செய்த பாவச்செயல்களை வெற்றி கொள்கின்றீர்கள். “பாவச்செயல்களை வென்றவர்கள்” (விகர்மாஜீத்- பாவச்செயல்களை வென்றவர்) என்ற பெயர் கொடுக்கப்படுகின்றது. பின்னர் துவாபரயுகத்தில் அரசன் விக்கிரமன் இருக்கின்றார்; பாவம் தொடர்ந்தும் செய்யப்படுகின்றது. ஊசியில் கறையிருக்கும் போது காந்தத்தால் அதைக் கவரமுடியாது. எந்தளவிற்குப் பாவக்கறை அகற்றப்படுகின்றதோ, அந்தளவிற்கு அதிகமாகக் காந்தத்தால் ஊசியைக் கவரமுடியும். தந்தை முற்றிலும் தூய்மையானவர். அவர் யோகசக்தியினால் உங்களையும் தூய்மையாக்குகின்றார். ஒரு லௌகீகத் தந்தை அவரது குழந்தைகளைப் பார்க்கையில் பூரிப்படைகின்றார். எல்லையற்ற தந்தையும் குழந்தைகள் செய்கின்ற சேவையைப் பார்த்துப் பூரிப்படைகின்றார். குழந்தைகள் பெருமளவு முயற்சி செய்கின்றார்கள். நீங்கள் எப்போதும் சேவைக்குத் தயாராக இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற கடவுளின் பணியகத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள்; எல்லையற்ற தந்தையும், சகோதர, சகோதரிகளாகிய நீங்கள் அனைவரும் உள்ளீர்கள். வேறெந்த உறவுமுறையும் இல்லை. முக்திதாமத்தில் தந்தையும், சகோதரர்களான ஆத்மாக்களாகிய நீங்களும் இருக்கின்றீர்கள். நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்கின்ற போது, அங்கே ஒரு புத்திரனும், ஒரு புத்திரியும் மாத்திரமே இருப்பார்கள். இங்கே தாய்வழி மாமன், தந்தைவழி மாமன் போன்று பல உறவுமுறைகள் உள்ளன. முக்திதாமமாகிய அசரீரி உலகமே இனிய வீடாகும். மனிதர்கள் யாகங்கள் வளர்த்து, அதற்காகத் தபஸ்யா போன்றவற்றையும் செய்கின்றார்கள், ஆனால் எவராலும் வீடுதிரும்ப முடியாது. அவர்கள் தொடர்ந்தும் பல பொய்யான கதைகளைக் கூறுகின்றனர். அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஒரேயொருவரே அன்றி, வேறு எவரும் அல்லர். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் உள்ளீர்கள். இங்கே பல மனிதர்கள் இருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் வெகுசிலரே இருக்கின்றார்கள். ஸ்தாபனையும் விநாசமும் இருக்கின்றன. இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் இருப்பதால், அதிகளவு குழப்பம் இருக்கின்றது. நீங்கள் 100வீதம் செழிப்பானவர்களாக இருந்தீர்கள், 84 பிறவிகள் எடுத்ததினால் நீங்கள் 100வீதம் கடனாளிகள் ஆகிவிட்டீர்கள். தந்தை இப்பொழுது அனைவரையும் விழித்தெழச் செய்வதற்கு வந்துள்ளார். இப்பொழுது விழித்தெழுங்கள்! சத்தியயுகம் வருகின்றது! சத்தியமான தந்தை மாத்திரமே உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். பாரதம் மாத்திரமே சத்தியபூமியாக ஆகுகின்றது. தந்தை சத்தியபூமியை ஸ்தாபிக்கின்றார்; பின்னர் யார் பொய்மைப் பூமியை உருவாக்குகிறார்? ஐந்து விகாரங்களான இராவணன். அவர்கள் இராவணனின் பெரிய கொடும்பாவியைச் செய்து, பின்னர் எரிக்கின்றார்கள், ஏனெனில் அவனே முதல் இலக்க எதிரியாவான். மக்கள் எப்போது இராவண இராச்சியம் ஆரம்பமாகியது என அறியார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அரைக்கல்பத்திற்கு இராம இராச்சியமும், மற்றைய அரைக்கல்பத்திற்கு இராவண இராச்சியமும் உள்ளன. எவ்வாறாயினும், கொல்வதற்கு இராவணன் ஒரு மனிதனல்ல. இந்நேரத்தில் முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது. தந்தை வந்து இராம இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார், பின்னர் வெற்றி முழக்கம் இருக்கும். அங்கே, அவர்கள் சதா சந்தோஷத்தில் இருக்கின்றார்கள். அது சந்தோஷதாமமாகும். இது அதிமேன்மையான சங்கமயுகம் என அழைக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: இந்த முயற்சியைச் செய்வதன் மூலம் நீங்கள் இவ்வாறாக ஆகுவீர்கள். உங்களுடைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பலர் வந்து இந்த ஞானத்தைச் செவிமடுத்து, அதை மற்றவர்களுக்கும்; கூறியபின்னர், ஓடி விட்டார்கள். தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். தந்தையும், ஆசிரியரும் உங்களை விரும்புகின்றார்கள்; குருவும் உங்களை விரும்புகின்றார். சற்குருவை அவதூறு செய்பவர்களால், உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. உங்கள் இலக்கும், இலட்சியமும் உங்களின் முன்னால் உள்ளது. அந்தக் குருமார் எந்த இலக்கையும் இலட்சியத்தையும் கொண்டிருப்பதில்லை. அது ஒரு கல்வியல்ல் இது ஒரு கல்வியாகும். இது நீங்கள் என்றென்றும் சுகதேகியாகவும் செல்வந்தராகவும் ஆகுகின்ற பல்கலைக்கழகமும் வைத்தியசாலையும் என அழைக்கப்படுகின்றது. இங்கே (கலியுகத்தில்) அனைத்தும் போலியானவையாகும். மாயையும் பொய்யானது, சரீரமும் பொய்யானது, முழு உலகமும் பொய்யானது என அவர்கள் பாடுகின்றார்கள். சத்தியயுகமே உண்மையான பூமியாகும். அங்கே மாளிகைகள் வைரங்களாலும், இரத்தினங்களாலும் பதிக்கப்பட்டுள்ளன. சோமநாதர் ஆலயம் பக்தி மார்க்கத்திலேயே உருவாக்கப்பட்டது. அங்கே அதிகளவு செல்வம் இருந்தது; முஸ்லீம்கள் வந்து அதைக் கொள்ளையடித்துச் சென்று, பெரிய மசூதிகளைக் கட்டுவதற்கு அதைப் பயன்படுத்தினார்கள். தந்தை உங்களுக்கு எல்லையற்ற பொக்கிஷங்களைக் கொடுக்கின்றார். நீங்கள் இவைகளின் காட்சியை ஆரம்பத்திலிருந்து பெறுகின்றீர்கள். பாபா அல்லா அலாவுதீன் ஆவார். (அவல் - முதல், டீன்- மதம்) அவர் தேவதர்மமாகிய முதல் தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். இப்பொழுது இல்லாத அந்தத் தர்மம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. புராதன சத்தியயுகத்தில் அவர்களுடைய இராச்சியம் இருந்ததை அனைவரும் அறிவார்கள். அவர்களைத் தவிர மேலானவர்கள் எவருமில்லை. தேவ இராச்சியமே வைகுந்தம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது இதை அறிவீர்கள், இதை மற்றவர்களுக்கும் நீங்கள் கூறவேண்டும். பின்னர் எவருமே தங்களுக்குத் தெரியாது என முறையிட முடியாதவாறு எவ்வாறு அனைவரும் அறிந்துகொள்ள முடியும்? நீங்கள் அனைருக்கும் கூறுகின்றீர்கள், இருப்பினும் சிலர் தந்தையை நீங்கிச் செல்கின்றார்கள். இந்த வரலாறு மீண்டும் மீண்டும் நடைபெற வேண்டும். நீங்கள் பாபாவிடம் வருகின்ற போது, ‘நாங்கள் முன்னர் சந்தித்துள்ளோமா?’ என பாபா உங்களிடம் கேட்கின்றார். ‘ஆம், பாபா நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும்; உங்களைச் சந்திக்க வந்தோம்’ என நீங்கள் பதில் அளிக்கின்றீர்கள். நாங்கள் எங்களது எல்லையற்ற ஆஸ்தியைக் கோர வந்தோம். சிலர் வந்து இதைச் செவிமடுக்கின்றார்கள், சிலர் பிரம்மாவின் காட்சியைக் காண்கின்றபோது இவை அனைத்தையம் நினைவுசெய்கின்றார்கள். பின்னர் அவர்கள் அதே உருவத்தை முன்னரும் கண்டதாகக் கூறுகின்றனர். தந்தையும் குழந்தைகளைக் காண்கையில் பூரிப்படைகின்றார். உங்களுடைய புத்தி அழிவற்ற ஞான இரத்தினங்களால் நிரப்பப்படுகின்றது. இது ஒரு கல்வியாகும். நீங்கள் ஏழுநாட் பாடநெறியைப் பெற்று, பின்னர் எங்கிருந்தாலும் முரளியின் அடிப்படையில் தொடர முடியும். ஏழு நாட்களில் நீங்கள் முரளியைப் புரிந்துகொள்ளும் வகையில் உங்களுக்கு அதிகளவில் விளங்கப்படுத்தப்படுகின்றது. தந்தை தொடர்ந்தும் குழந்தைகளுக்கு இரகசியங்கள் அனைத்தையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். அச்சா.

இனிமையிலும், இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றி, உங்கள் பாவங்களை எரியுங்கள். இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்பதனால் உங்கள் அந்தஸ்தை மேன்மையானதாக்குங்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒருபோதும் கண்ணீர் சிந்தாதீர்கள்.

2. ஓய்வுஸ்திதியில் இருப்பதற்கான நேரம் இதுவாகும். ஆகவே, அதிஉயர்வாகவோ அல்லது அதிதாழ்வாகவோ இல்லாமல் மிகவும் எளிமையாகவும், சாதாரணமான முறையிலும் வாழுங்கள். வீடு திரும்புவதற்கு ஆத்மா முற்றிலும் தூய்மையாக வேண்டும்.

ஆசீர்வாதம்:
கடைதல் சக்தியினூடாக உங்கள் புத்;தியை சக்திமிக்கதாக ஆக்கி, மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகுவீர்களாக.

கடைதல் சக்தியானது தெய்வீக புத்திக்கு போஷாக்கை வழங்குகின்றது. பக்;தி மார்க்கத்தில் மக்கள் நினைவுசெய்யும் பயிற்சியை கொண்டிருப்பதைப் போன்றே, ஞானத்தில், விழிப்புணர்வு சக்தி உள்ளது. இந்த சக்தியினூடாக மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுங்கள். ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையின் போது, உங்களுடைய பட்டங்களில் ஒன்றை உங்கள் விழிப்புணர்வில் கொண்டு வந்து தொடர்ந்தும் கடையுங்கள். அதன் பின்னர், கடைவதால், உங்கள் புத்தியானது சக்திமிக்கதாக இருக்கும். மாயையினால் ஒரு சக்திமிக்க புத்தியை தாக்க முடியாது. அது ஆதிக்கத்திற்கு உள்ளாக மாட்டாது, ஏனெனில் அனைத்திற்கும் முதலில் மாயை தெய்வீகப் புத்தியை வீணான எண்ணங்கள் என்ற அம்பினாலேயே தாக்குகிறாள். இந்த பலவீனத்திலிருந்து உங்களை பாதுகாப்பதற்கு கடைதல் சக்தியே வழியாகும்.

சுலோகம்:
கீழ்ப்படிவான குழந்தைகள் ஆசீர்வாதங்கள் பெறுவதற்குத் தகுதியானவர்கள், ஆசீர்வாதங்களின் ஆதிக்கம் உங்கள் இதயத்தை சதா திருப்தியடையச் செய்கின்றது.