19.12.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இச் சத்தியத்தைச் செய்தீர்கள்;: நீங்கள் வரும்போது எங்களை உங்களுக்கு அர்ப்பணிப்போம். இந்தச் சத்தியத்தை நினைவுபடுத்துவதற்குத் தந்தை இப்பொழுது வந்துள்ளார்.கேள்வி:
எந்தப் பிரதான சிறப்பியல்பினால், தேவர்கள் மாத்திரமே பூஜிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்களெனக் கருதப்படுகின்றனர்?பதில்:
எவரையும் நினைவு செய்யாத சிறப்பியல்பைத் தேவர்கள் மாத்திரமே கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தந்தையையும் நினைவு செய்வதில்லை. வேறெந்த உருவங்களையேனும் அவர்கள் நினைவு செய்வதுமில்லை. இதனாலேயே அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது. அங்கே சந்தோஷத்தைத் தவிர வேறெதுவுமில்லை. இதனாலேயே வேறு எவரையும் நினைவு செய்ய வேண்டிய தேவையும் இல்லை. இப்பொழுது ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்வதன் மூலம் நீங்கள் அதிதூய்மையானவராகி பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதனால், நீங்கள் பிற்காலத்தில் எவரையும் நினைவு செய்ய வேண்டிய தேவை இருக்காது.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, உங்களை ஆன்மீக ஆத்மாக்கள் என அழைக்க முடியாது. உயிர் அல்லது ஆத்மா இரண்டும் ஒன்றேயாகும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். முன்னர் பரமாத்மாவாகிய பரமதந்தை ஆத்மாக்களுக்கு என்றுமே ஞானத்தை வழங்கியதில்லை. தந்தையே கூறுகின்றார்: நான் சக்கரத்தில் ஒரு முறை மாத்திரமே அதிமேன்மையான சங்கமயுகத்தில், வருகிறேன். வேறெவரும் இதைக் கூறமுடியாது. சக்கரத்தின் சங்கமயுகத்தைத் தவிர்ந்த வேறெந்த நேரத்திலும் தந்தை வருவதில்லை. பக்தி முடிவுக்கு வருகின்றபோது, சங்கமயுகத்திலேயே தந்தை வருகின்றார். தந்தை இங்கு அமர்ந்திருந்து இந்த ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். சில குழந்தைகளுக்கு இது மிகவும் கடினமாக உள்ளது. இது மிக இலகுவாக இருந்தாலும், அது அவர்களின் புத்தியில் நன்றாகப் பதிவதில்லை. இதனாலேயே பாபா அவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகின்றார். அவர்களுக்கு விளங்கப்படுத்திய போதிலும் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. ஒரு பாடசாலையில் ஓர் ஆசிரியரினால் 12 மாதங்களுக்கு கற்பிக்கப்பட்டாலும் சில மாணவர்கள் சித்தியடைவதில்லை. இந்த எல்லையற்ற தந்தை தினமும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இருப்பினும் சிலரால் மாத்திரமே கிரகித்துக் கொள்ள முடிகின்றது. ஏனையோர் மறந்துவிடுகின்றார்கள். உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ள பிரதான விடயம்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையே கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். எந்தவொரு மனிதராலும் இவ்வாறு கூறமுடியாது. தந்தை கூறுகின்றார்: நான் ஒரு தடவையே வருகிறேன். நான் ஒரு சக்கரத்தின் பின்னர் சங்கமயுகத்தில் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகிறேன். நீங்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். வேறு எவரும் இதனைப் பெறுவதில்லை. பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான நீங்களே இந்த ஞானத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். சென்ற கல்பத்தின் சங்கமயுகத்தில் தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிராமணர்களாகிய உங்களுக்கே இந்தப் பாகம் உண்டு. நிச்சயமாக நீங்கள் இக்குலங்களினூடாகச் செல்ல வேண்டும். ஏனைய சமயத்தவர்கள் இக்குலங்களினூடாகச் செல்வதில்லை. பாரத மக்கள் மாத்திரமே இக்குலங்களினூடாகச் செல்கின்றனர். பிராமணர்களே பாரதவாசிகள் ஆகுகின்றார்கள். இதனாலேயே தந்தை பாரதத்திற்கு வரவேண்டியுள்ளது. பிராமணர்களாகிய நீங்களே பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள்;. பிராமணர்களுக்குப் பின்;, நீங்கள் தேவர்கள் ஆகிய பின்னர் ஷத்திரியர்கள் ஆகுவீர்கள். வேறு எவருமே ஷத்திரியர் ஆக்கப்படுவதில்லை. நீங்கள் பிராமணர்களாக்கப்பட்டு பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். அதே தேவர்களின் கலைகள் குறைவடையும்போது அவர்கள் ஷத்திரியர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் இயல்பாகவே ஷத்திரியர்கள் ஆகுகிறார்கள். தந்தை வந்து உங்களைப் பிராமணர்கள் ஆக்குகிறார். பின்னர் நீங்கள் பிராமணர்களிலிருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள். பின்னர் அதே தேவர்கள் ஷத்திரியர்கள் ஆகுகிறார்கள். இந்த நேரத்திலேயே தந்தை மூன்று மதங்களையும் ஸ்தாபிக்கின்றார். அவர் மீண்டும் சத்திய, திரேதா யுகங்களில் வருவார் என்றில்லை. மக்கள் இதனைப் புரிந்துகொள்ளாததால், அவர் சத்திய திரேதா யுகங்களிலும் வருவார் என்று கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. நான் சக்கரத்தில் ஒரு தடவை மாத்திரம் சங்கமயுகத்தில் வருகிறேன். பிரஜாபிதா பிரம்மா மூலம் நானே உங்களைப் பிராமணர்கள் ஆக்குகிறேன். நான் பரந்தாமத்திலிருந்து வருகிறேன். அச்சா. அவ்வாறாயின் பிரம்மா எங்கிருந்து வந்தார்? பிரம்மா 84 பிறவிகளை எடுக்கின்றார், நான் எடுப்பதில்லை. பிரம்மாவும் சரஸ்வதியும் விஷ்ணு ஆகுகின்றனர். அவரது இரட்டை வடிவம் இலக்ஷ்மியும், நாராயணனும் ஆகும். அவர் 84 பிறவிகளை எடுக்கின்றார். பின்னர் அவரது பல பிறவிகளின் இறுதியில் நான் அவரில் பிரவேசித்து அவரை பிரம்மா ஆக்குகிறேன். நான் அவருக்கு பிரம்மா எனப் பெயரிடுகிறேன். இவரது பெயர் அவரால் தெரிவு செய்யப்படுவதில்லை. ஒரு குழந்தை பிறந்த பின்னர் அவரது ஜாதகத்திற்கு ஏற்ப 6ம் நாள் பெயர் சூட்டுவிழா செய்யப்படுகின்றது. அவர்கள் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள் ஜாதகத்திற்கேற்ப இவரது பெயர் லேக்ராஜ் என்பதாகும். பிறந்த நாள் முதல் இதுவே அவரது பெயராக இருந்தது. சங்கமயுகத்தில் தந்தை அவரில் பிரவேசித்ததும் அவரது பெயர் மாற்றப்பட்டது. இவர் தனது ஓய்வு ஸ்திதியில் இருக்கும்போதே தந்தை இவரது பெயரை மாற்றுகிறார். அந்தச் சந்நியாசிகள் வீட்டை விட்டுச் செல்லும்போது அவர்களது பெயர் மாற்றப்படுகிறது. இவர் வீட்டிலேயே வசிக்கிறார். பிராமணர்கள் தேவைப்படுவதால் நான் அவருக்குப் பிரம்மா எனப் பெயர்சூட்டினேன். நான் உங்களை எனக்குரியவர்கள் ஆக்கி உங்களைத் தூய பிராமணர்கள் ஆக்குகிறேன். நீங்கள் தூய்மையாக்கப்படுகிறீர்கள். நீங்கள் பிறப்பிலிருந்தே தூய்மையானவர்கள் என்றில்லை. நீங்கள் தூய்மையாகுவதற்கான கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். பிரதான விடயம் எவ்வாறு தூய்மையாகுவது என்பதாகும். பக்திமார்க்கத்தில் உள்ள ஒருவரேனும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இல்லை. குருமார் போன்றவர்கள் தங்கள் வீடுகளைத் துறந்து தூய்மையாகுவதால் மக்கள் அவர்கள் முன்னிலையில் தலை வணங்குகிறார்கள். ஆனாலும் அவர்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கூறமுடியாது. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் எவரையும் நினைவுசெய்வதில்லை. சந்நியாசிகள் பிரம்ம தத்துவத்தை நினைவுசெய்து வணங்குகிறார்கள். சத்தியயுகத்து மக்கள் எவரையும் நினைவு செய்வதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது அந்த ஒரேயொருவரையே நினைவு செய்ய வேண்டும். அது பக்தி மார்க்கம். ஆத்மாக்களாகிய நீங்கள் மறைமுகமானவர்கள். எவருக்கும் ஆத்மாவை மிகச் சரியாகத் தெரியாது. சத்திய திரேதா யுகங்களிலும் சரீரதாரிகள் தமது பெயர்களைக் கொண்டே தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள். ஒரு பெயர் இல்லாமல் நடிகர்கள் இருக்க முடியாது. நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சரீரத்திற்கு நிச்சயமாக ஒரு பெயர் இருக்க வேண்டும். பெயரில்லாமல் உங்கள் பாகத்தை எவ்வாறு நீங்கள் நடிப்பீர்கள்? தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: பக்தி மார்க்கத்தில் நீங்கள் பாடுவதுண்டு: நீங்கள் வரும்போது வேறு எவரையும் அன்றி உங்களையே எனக்குரியவர் ஆக்குவேன். நான் உங்களுக்கு மாத்திரமே உரியவன். ஆத்மாவே இதைக் கூறுகிறார். பக்தி மார்க்கத்தில் பெயர் வழங்கப்பட்டிருக்கும் எந்த சரீரதாரிகளையும் நாங்கள் வழிபடமாட்டோம். நீங்கள் வரும்போது எங்களை உங்களுக்கே அர்ப்பணிப்போம்! அவர் எப்போது வருவார் என்பதும் உங்களுக்குத் தெரியாது. பல பெயர்களைக் கொண்ட எத்தனையோ சரீரதாரிகளை மக்கள் தொடர்ந்தும் வழிபடுகின்றனர். சக்கரத்தின் இரண்டாவது அரைப்பகுதியின் பின்னர், பக்தி முடிவுறும்போது தந்தை வருகிறார். அவர் கூறுகிறார்: நீங்கள் பிறவி பிறவியாகக் கூறி வந்தீர்கள்: உங்களைத் தவிர வேறு எவரையும் நினைவுசெய்ய மாட்டேன். எனது சொந்த சரீரத்தையேனும் நான் நினைவுசெய்ய மாட்டேன். எவ்வாறாயினும் என்னை உங்களுக்குத் தெரியாது. எனவே எவ்வாறு என்னை நினைவுசெய்வீர்கள்? தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். அவரை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையாகவும்;, சதோபிரதானாகவும் ஆகுவீர்கள். சத்திய திரேதா யுகங்களில் பக்தி என்பது இல்லை. நீங்கள் தந்தையையோ வேறு எந்த உருவங்களையோ நினைவு செய்வதில்லை. அங்கு சந்தோஷத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் எந்தளவிற்கு நெருக்கமாக வருகின்றீர்களோ, அந்தளவிற்கு கர்மாதீத ஸ்திதியை நெருங்கி வருவீர்கள். சத்தியயுகத்தில் புதிய உலகிலும், ஒரு புதிய இல்லத்திலும் இருப்பதனால் அங்கு சந்தோஷம் அதிகளவு இருக்கும். பின்னர் அது 25 வீதம் பழைமையானதாகும்போது நீங்கள் சுவர்க்கத்தையே மறந்தது போலாகிவிடும். எனவே தந்தை கூறுகின்றார்: நீங்கள் பாடியதுண்டு: நாங்கள் உங்களுக்கு மாத்திரமே உரியவர்கள், நாங்கள் உங்களை மாத்திரமே செவிமடுப்போம். ஆத்மாக்கள் தந்தையைப் பரமாத்மா எனக் குறிப்பிடுகின்றனர். ஆத்மாக்கள் மிகச் சின்னஞ் சிறிய சூட்சுமமான புள்ளிகள். ஓர் ஆத்மாவைப் பார்ப்பதற்கு தெய்வீகப் பார்வை தேவை. உங்களால் ஓர் ஆத்மாவின் மீது மனதை ஒருமுகப்படுத்த முடிவதில்லை. உங்களை அத்தகைய ஒரு சின்னஞ்சிறிய புள்ளியாகிய ஓர் ஆத்மா எனக் கருதித் தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி தேவை. ஆத்மாவின் காட்சியைப் பெறுவதற்கு மக்கள் முயற்சி செய்வதில்லை. பரமாத்மா ஆயிரம் சூரியன்களின் ஒளியிலும் பார்க்க பிரகாசமானவர் என அவர்கள் கேள்விப்பட்டிருப்பதால் பரமாத்மாவின் காட்சியைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஒருவர் ஒரு காட்சியைப் பெற்றதும் அது மிகவும் பிரகாசமாக இருந்தது என அவர் கூறுவார். ஏனெனில் அவர் அவ்வாறே கேள்விப்பட்டிருக்கிறார். மக்கள் எவரைத் தீவிரமாக வழிபடுகிறார்களோ, அவரது காட்சியே அவர்களுக்குக் கிடைக்கும். இல்லையேல் அவர்கள் நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: அவர்கள் ஓர் ஆத்மாவைக் காண முடியாவிடின் அவர்களால் எவ்வாறு பரமாத்மாவைக் காண முடியும்? அவர்கள் ஓர் ஆத்மாவையேனும் எவ்வாறு காண முடியும்? மனிதர்களுக்கு சரீரங்களின் உருவங்கள் உள்ளன. அவர்களுக்குப் பெயர்கள் உண்டு. ஆனால் ஆத்மா ஒரு புள்ளியே. மிக மிகச் சின்னஞ் சிறிய புள்ளி. அதை எவ்வாறு கண்டுகொள்ள முடியும்? அவர்கள் பெருமளவு முயற்சி செய்த போதிலும் இக்கண்களால் ஆத்மாவைக் காணமுடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் சூட்சுமமான ஞானக்கண்ணைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வளவு சின்னஞ் சிறியவர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாவாகிய என்னிலே பதியப்பட்ட 84 பிறவிகளின் பாகத்தை மீண்டும் மீண்டும் நான் நடிக்க வேண்டும். நீங்கள் உங்களை மேன்மையாவர்களாக ஆக்குவதற்கு தந்தையின் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். ஆகவே நீங்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். தெய்வீகக் குணங்களையும் நீங்கள் கிரகிக்கவேண்டும். உங்கள் உணவும், பானமும் இராஜரீகமாக இருக்க வேண்டும். நீங்கள் தேவர்கள் ஆகுவதால் உங்கள் நடத்தை இராஜரீகமானதாக இருக்க வேண்டும். தேவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள். அவர்கள் ஒருபோதும் எவரையும் வழிபடுவதில்லை. அவர்கள் இரட்டைக் கிரீடம் உடையவர்கள். அவர்கள் ஒருபோதும் எவரையும் வழிபடுவதில்லை. ஆகையால் அவர்கள் வழி;படத் தகுதிவாய்ந்தவர்கள். சத்திய யுகத்தில் எவரையும் வழிபடவேண்டிய தேவையில்லை. எனினும் நிச்சயமாக அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவார்கள். ஒருவருக்குத் தலைவணங்குவது என்பது மரியாதை செலுத்துவதாகும். ஒருவரை உங்கள் இதயத்தில் வைத்திருக்க வேண்டும் என்றில்லை. மரியாதை அளிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஜனாதிபதி உயர்ந்த பதவியில் இருப்பதால் அனைவரும் அவருக்கு மரியாதை அளிக்கிறார்கள். நீங்கள் எவருக்கும் தலைவணங்கத் தேவையில்லை. எனவே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்த ஞானமார்க்கம் முற்றிலும் வேறுபட்டதொன்றாகும். இங்கு நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும். இதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். நீங்கள் சரீரத்தின் பெயரை நினைவு செய்கிறீர்கள். ஒரு பெயரைக் கொண்டே அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது. ஒரு பெயர் இல்லாமல் ஒருவரை எவ்வாறு அழைப்பீர்கள்? நீங்கள் உங்கள் பாகங்களை நடிக்கும் சரீரதாரிகளாயிருந்தாலும்,உங்கள் புத்தியில் சிவபாபாவைக் கொண்டிருக்க வேண்டும். கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணரை மாத்திரமே நினைவு செய்யவேண்டும் என நம்புகின்றனர். தாங்கள் எதைப் பார்த்தாலும் கிருஷ்ணரையே காண்பதாகக் கூறுவார்கள். அவர்கள் நானும் கிருஷ்ணர், நீங்களும் கிருஷ்ணர் என்றே நம்புகின்றனர். ஓ ஆனால், உங்கள் பெயர் அவரின் பெயரிலிருந்து வேறுபட்டது. எனவே அனைவரும் எவ்வாறு கிருஷ்ணராகலாம்? அனைவரும் கிருஷ்ணர் என்ற பெயரைக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் மனம் போன போக்கிற்குப் பேசுகிறார்கள். தந்தை இப்போது கூறுகிறார்;: பக்தி மார்க்கத்தின் உருவங்கள் அனைத்தையும் மறந்து ஒரேயொரு தந்தையையே நினைவு செய்யுங்கள். அந்த உருவங்களை நீங்கள் தூய்மையாக்குபவர் என அழைப்பதில்லை. அனுமனும் ஏனையோரும் தூய்மையாக்குபவரல்ல. பல உருவங்கள் உள்ளன. ஆனால் அவை எதுவும் தூய்மையாக்குபவர் அல்ல, சரீரதாரிகளான அப்பெண் தெய்வங்கள் எவரும் தூய்மையாக்குபவராக முடியாது. தங்கள் புத்திக்கேற்ப மனிதர்கள் 6 முதல் 8 வரையான புயங்களுடன் பெண் தெய்வங்களை உருவாக்குகிறார்கள். அவர்;கள் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தூய்மையாக்குபவரான தந்தையின் உதவியாளர்களான குழந்தைகளே. எவருக்கும் இது தெரியாது. உங்கள் புறத்தோற்றம் சாதாரணமானதே. அந்தச் சரீரங்கள் அழிக்கப்படும். உங்கள் உருவங்கள் போன்றவை நிலைத்திருக்கும் என்றில்லை. அவை யாவும் முடிவடைந்துவிடும். உண்மையில் நீங்கள் பெண் தெய்வங்களே. குறிப்பிடப்பட்ட பெயர்கள்: பெண் தெய்வம் சீதா, பெண் தெய்வம் இன்னார் இன்னார். அவர்கள் ராம தேவர் என்று ஒருபோதும் கூறுவதில்லை. அவர்கள் பெண் தெய்வம் அல்லது ஸ்ரீமதி இன்னார் என்று கூறுவார்கள். எவ்வாறாயினும், அதுவும் பிழையாகும். இப்பொழுது நீங்கள் தூய்மையாகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் கூறுகின்றீர்கள்: வந்து எங்களைத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக்குங்கள்! எங்களை இலக்ஷ்மி நாராயணன் ஆக்குங்கள் என நீங்கள் கூறுவதில்லை. தந்தை மாத்திரமே தூய்மையற்ற உங்களைத் தூய்மையாக மாற்றுகின்றார். அவரே உங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாற்றுகி;ன்றார். அம்மக்கள் அசரீரியான ஒரேயொருவரையே தூய்மையாக்குபவர் என அழைக்கின்றனர். அவர்கள் வேறொருவரையே சத்திய நாராயணனின் கதையைக் கூறியதாகச் சித்தரித்துள்ளனர். அவர்கள் கூறுவதில்லை: பாபா, எங்களுக்கு சத்திய நாராயணனின் கதையைக் கூறி எங்களை அமரத்துவமானவர்கள் ஆக்குங்கள். அல்லது எங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக்குங்கள்! அவர்கள் கூறுகிறார்கள்:வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். பாபாவே உங்களுக்கு சத்திய நாராயணனின் கதையைக் கூறி உங்களைத் தூய்மையாக்குகின்றார். நீங்கள் பின்னர் அவ் உண்மைக் கதையை மற்றவர்களுக்குக் கூறுகின்றீர்கள். இதை வேறு எவருமே அறிந்திருக்க முடியாது. உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். வீட்டில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள் போன்றோர் இருந்தாலும் அவர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை மேன்மையானவர் ஆக்குவதற்கு, தந்தையிடமிருந்து நீங்கள் பெறும் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். உங்கள் உணவும், பானமும், நடத்தையும் மிகவும் இராஜரீகமாக இருக்கவேண்டும்.
2. ஒருவரையொருவர் நினைவு செய்யாதீர்கள், ஆனால் நிச்சயமாக மதிப்புக் கொடுங்கள். தூய்மையாகுவதற்கு முயற்சி செய்வதுடன், ஏனையோரையும் அவ்வாறு ஆகுவதற்குத் தூண்டுங்கள்.ஆசீர்வாதம்:
உங்களுடைய பொக்கிஷங்களை சரியான நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் சந்தோஷ பாக்கியத்தையும் சதா சந்தோஷத்தையும் அனுபவம் செய்கின்றதோர் ஆத்மா ஆகுவீர்களாக.உங்கள் பிராமண பிறவியை எடுத்தவுடனேயே, நாள் முழுவதற்குமான பல மேன்மையான பொக்கிஷங்களை பாப்தாதாவிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆகையாலேயே இன்றும் கூட, உங்கள் பெயரை கேட்ட மாத்திரத்திலேயே பக்தர்கள் தற்காலிகமாக சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள். உங்கள் உயிரற்ற விக்கிரகங்களை பார்த்தவுடனே அவர்கள் சந்தோஷ நடனம் ஆட ஆரம்பிக்கின்றார்கள். அவ்வாறே, நீங்கள் அனைவரும் பல பொக்கிஷங்களைப் பெற்றிருப்பதால், சந்தோஷ பாக்கியத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது அவற்றை சரியான நேரத்தில் பயன்படுத்துங்கள். அவற்றின் திறவுகோலை எப்பொழுதும் உங்கள் முன்னிலையிலேயே வைத்திருங்கள், அதாவது, இவற்றை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்து, அந்த விழிப்புணர்வை நடைமுறை வடிவில் இட்டால், நீங்கள் சதா தொடர்ந்தும் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள்.
சுலோகம்:
தந்தையின் மேன்மையான எதிர்பார்ப்புகள் என்ற விளக்கை ஏற்றுபவர்கள், குல விளக்குகள் (தீபங்கள்) ஆவார்கள்.