13.12.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.03.87 Om Shanti Madhuban
உண்மையான ஆன்மீகக் காதலிகளின் அடையாளங்கள்.
இன்று, ஆன்மீக அதியன்பிற்குரியவர் தனது ஆன்மீகக் காதலிகளான ஆத்மாக்களான உங்களைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். கல்பம் முழுவதிலும் இந்த வேளையில் மட்டுமே ஆன்மீக அதியன்பிற்குரியவரினதும் ஆன்மீகக் காதலிகளினதும் சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன. பாப்தாதா, தனது காதலிகளான ஒவ்வோர் ஆத்மாவும் ஆன்மீகக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, தனது உண்மையான அதியன்பிற்குரியவரை இனங்கண்டு, அவரை அடைந்துள்ளதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறார். தொலைந்து போன காதலிகளான உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் உங்களின் சரியான இலக்கை மீண்டும் ஒருமுறை வந்தடைந்துள்ளீர்கள் என்பதைப் பார்த்ததும் அதியன்பிற்குரியவர் மகிழ்ச்சி அடைகிறார். சகல பேறுகளையும் நீங்கள் அனுபவம் பெறச் செய்யும் வேறெந்த அதியன்பிற்குரியரையும் உங்களால் காண முடியாது. ஆன்மீக அதியன்பிற்குரியவர் தனது ஆன்மீகக் காதலிகளைச் சந்திப்பதற்காக எங்கே வந்திருக்கிறார்? காதலிகளான நீங்களும் அதியன்பிற்குரியவரும் மேன்மையானவர்களாக இருப்பதைப் போல், அவர் உங்களை மேன்மையான இடத்தில் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். நீங்கள் சந்திப்பைக் கொண்டாடும் இந்த இடம் என்ன? இந்த இடத்தை நீங்கள் விரும்பிய எந்தப் பெயராலும் அழைக்க முடியும். பொதுவாகச் சொன்னால், அனைவராலும் விரும்பப்படும் சிறந்த சந்திப்பிற்கான இடம் என்ன? சந்திப்பு ஒரு பூந்தோட்டத்தில் அல்லது கடற்கரையில் இடம்பெறும். எனவே, நீங்கள் இப்போது எங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? நீங்கள் ஞானக்கடலின் கரையில், ஓர் ஆன்மீக சந்திப்பு இடம்பெறும் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். இது ஆன்மீக, இறை பூந்தோட்டம். நீங்கள் பல வகையான தோட்டங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்தத் தோட்டத்திலே ஒவ்வொரு பூவும் மற்றவர்களைவிட அதிகமாக மலர்ந்திருப்பதுடன், ஒவ்வொருவரும் தனக்கேயுரிய மிக அழகான நறுமணத்தைக் கொடுக்கிறார்கள். இந்தக் கடற்கரையிலேயே அதியன்பிற்குரியவரான பாப்தாதா, தனது காதலிகளைச் சந்திப்பதற்காக வருகிறார். நீங்கள் அந்தக் கடற்கரைகளைக் கண்டிருப்பீர்கள். அவை பல உள்ளன. ஆனால், ஞானக்கடலின் வெவ்வேறு அலைகளான அன்பு, சக்தி அலைகளும் வேறு அலைகளும் சதா உங்களைப் புத்துணர்ச்சியாக்கும் கடற்கரையை நீங்கள் எப்போதாவது கண்டுள்ளீர்களா? நீங்கள் இந்த இடத்தை விரும்புகிறீர்கள், இல்லையா? சுத்தமும், களிப்பும் உள்ளன. இங்கு அழகும் உள்ளது. அத்துடன் பல பேறுகளும் கிடைக்கின்றன. அதியன்பிற்குரியவர் காதலிகளான உங்களுக்கு இத்தகைய களிப்பூட்டும் விசேடமான இடத்தை உருவாக்கியுள்ளார். இங்கு அன்பின் எல்லைக்குள் வந்தவுடனேயே, நீங்கள் பல வகையான முயற்சிகளில் இருந்து விடுபடுகிறீர்கள். இயல்பான நினைவெனும் மகத்தான முயற்சி மிக இலகுவாக இருப்பதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் வேறெந்த முயற்சிகளில் இருந்து விடுபட்டுள்ளீர்கள்? நீங்கள் உங்களின் லௌகீகத் தொழில்களில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். நீங்கள் சமைப்பதில் இருந்தும் விடுபட்டுள்ளீர்கள். உங்களுக்கு அனைத்தும் தயார் நிலையில் கிடைக்கிறது, இல்லையா? நீங்கள் நினைவையும் இயல்பானதாக அனுபவம் செய்கிறீர்கள். உங்களின் மடிகளும் ஞான இரத்தினங்களால் நிரம்புகின்றன. நீங்கள் முயற்சி செய்வதில் இருந்து விடுபட்டிருக்கும், அன்பிலே திளைத்திருக்கும் ஓரிடத்திற்கு வந்துள்ளீர்கள்.
பொதுவாக, அன்பின் விசேடமான அடையாளம் என்னவென்றால், இரண்டு என்பது இரண்டாக இருக்காது. ஆனால், இரண்டு ஒன்றுகலந்து ஒன்றாகிவிடும். இதுவே அமிழ்தல் எனப்படுகிறது. அன்பிலே திளைத்திருக்கும் இந்த ஸ்திதியைப் பக்தர்கள் அமிழ்தல் அல்லது ஒன்றுகலத்தல் எனக் கருதுகிறார்கள். அன்பிலே தன்னை மறந்திருப்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அன்பிலே அமிழ்ந்து போகும் ஸ்திதி உள்ளது. ஆனால், ஆத்மாக்கள் எல்லா வேளைக்குமாக இல்லாமல் போய்விடுகின்றன என அவர்கள் கருதுகிறார்கள். அமிழ்ந்து போகுதல் என்றால் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் தந்தையையும் ஆன்மீக அதியன்பிற்குரியவரையும் சந்திக்கும்போது, அன்பிலே உங்களை மறந்திருந்தால், நீங்கள் தந்தைக்குச் சமமாக இருப்பதை அனுபவம் செய்வீர்கள். அதாவது, அவரில் அமிழ்ந்து போவதை அனுபவம் செய்வீர்கள். பக்தர்கள் இந்த ஸ்திதியை அமிழ்ந்து போவதாகக் குறிப்பிடுகிறார்கள். நீங்கள் அன்பில் திளைத்திருக்கிறீர்கள் அத்துடன் அமிழ்ந்திருக்கிறீர்கள். எவ்வாறாயினும், இது அவரைச் சந்திக்கும்போது அன்பிலே தன்னை மறந்திருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வதாகும். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, பாப்தாதா தனது காதலிகளைப் பார்க்கிறார்.
உண்மையான காதலி என்றால், சதா காதலியாகவும் இயல்பான காதலியாகவும் இருப்பவர் என்று அர்த்தம். உண்மையான காதலிகளின் சிறப்பியல்புகளையும் நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், அவர்களின் பிரதானமான அடையாளங்கள்:
முதலாவது அடையாளம்: காலத்திற்கேற்ப சகல உறவுமுறைகளையும் ஒரேயொரு அதியன்பிற்குரியவருடன் அனுபவம் செய்தல். அதியன்பிற்குரியவர் ஒரேயொருவரே. ஆனால், நீங்கள் அந்த ஒருவருடன் சகல உறவுமுறைகளையும் வைத்திருப்பீர்கள். உங்களுக்கு என்ன உறவுமுறை தேவைப்பட்டாலும், எந்தவொரு குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு என்ன உறவுமுறை தேவைப்படுகிறதோ, உங்களால் அந்த உறவுமுறையை அன்பின் பொறுப்பை நிறைவேற்றுவதன் மூலம் அனுபவம் செய்ய முடியும். எனவே, சகல உறவுமுறைகளையும் அனுபவம் செய்வதே முதலாவது அடையாளம் ஆகும். ஓர் உறவுமுறை மட்டுமல்ல. ‘சகல’ என்ற வார்த்தையைக் கீழ்க்கோடிடுங்கள். சில குறும்புக்காரக் காதலிகள் தாங்கள் அவருடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்தியுள்ளதாக நம்புகிறார்கள். ஆனால், அவர்களின் சகல உறவுமுறைகளும் அவருடனேயா இருக்கிறது? இரண்டாவதாக, தேவைப்படும்போது உங்களால் அந்த உறவுமுறையை அனுபவம் செய்ய முடிகிறதா? உங்களின் உறவுமுறை ஞானத்தின் அடிப்படையில் உள்ளதா அல்லது உங்களின் இதயத்தின் அனுபவத்தின் அடிப்படையில் உள்ளதா? பாப்தாதா நேர்மையான இதயங்களையிட்டுக் களிப்படைகிறார். கூர்மையான புத்திகளை மட்டும் கொண்டிருப்பவர்களால் அவர் மகிழ்வதில்லை. ஆனால், இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர், அவர்களின் இதயத்தையிட்டே மகிழ்ச்சி அடைகிறார். இதனாலேயே, இதயமும் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரும் மட்டுமே இதயத்தின் அனுபவத்தை அறிவார்கள். அமிழ்த்துவதற்கான இடம் இதயமே அன்றித் தலை அல்ல. தலை என்பது ஞானத்தை அமிழ்த்துவதற்கான இடமாகும். ஆனால், இதயமோ உங்களின் அதியன்பிற்குரியவரை அமிழ்த்துவதற்கான இடமாகும். ஞானத்தை அமிழ்த்துவதற்கான இடம் தலையாகும். ஆனால், அதியன்பிற்குரியவரை அமிழ்த்துவதற்கான இடம் இதயம் ஆகும். அதியன்பிற்குரியவர் உங்களுக்குத் தனது காதலிகளின் விடயங்களைப் பற்றி மட்டுமே கூறுவார், இல்லையா? சில காதலிகள் தமது தலையை அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஆனால், இதயத்தால் வேலை செய்யும்போது, தலையின் சிரமம் அரைவாசியாகக் குறைகிறது. தமது இதயபூர்வமாக சேவை செய்வதுடன் நினைவு செய்பவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை. அத்துடன், தமது இதயபூர்வமாக அன்புடன் நினைவு செய்யாதவர்களை விட அதிகளவு திருப்தி அவர்களிடம் இருக்கும். வெறுமனே நினைவு செய்வதுடன், ஞானத்தின் அடிப்படையில் தமது தலைகளால் சேவை செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அத்துடன் அவர்களுக்குக் குறைந்தளவு திருப்தியே இருக்கும். வெற்றி ஏற்பட்டாலும், அவர்களின் இதயத்தின் திருப்தி குறைவாகவே இருக்கும். அவர்கள் தொடர்ந்து, ‘என்ன நிகழ்ந்ததோ அது நல்லது, இருந்தபோதிலும்.... ஆனாலும்....’ என நினைப்பார்கள். ஆனால், தமது இதயபூர்வமாகச் செயல்களைச் செய்பவர்கள் சதா திருப்திக்கான பாடல்களைப் பாடுவார்கள். அவர்கள் தமது இதயபூர்வமாகத் திருப்தியான பாடல்களைப் பாடுவார்கள். வார்த்தைகளால் மட்டும் திருப்திப் பாடல்களைப் பாடுவதில்லை. உண்மையான காதலிகள் காலத்திற்கேற்ப தமது இதயபூர்வமாக சகல உறவுமுறைகளையும் அனுபவம் செய்வார்கள்.
இரண்டாவது அடையாளம்: உண்மையான காதலி எப்போதும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு செயலிலும் பேற்றின் சந்தோஷத்தை உடையவராக இருப்பார். ஒன்று, அனுபவம். மற்றது, அதில் இருந்து கிடைக்கும் பேறு. ‘ஆமாம், அவர் எனது தந்தை, அத்துடன் எனது மணவாளன், எனது குழந்தை. ஆனால், நான் விரும்பிய அளவு பேறுகள் எனக்குக் கிடைப்பதில்லை’ எனச் சிலர் அனுபவம் செய்கிறார்கள். அவரே தந்தை. ஆனால், ஆஸ்தி என்ற பேற்றின் சந்தோஷம் காணப்படுவதில்லை. அந்த அனுபவத்துடன், சகல உறவுமுறைகளினூடாகப் பெறப்படும் பேறுகளின் அனுபவமும் இருக்க வேண்டும். உதாரணமாக, தந்தை என்ற உறவுமுறையில், எப்போதும் ஆஸ்திக்கான பேற்றின் அனுபவம் இருக்க வேண்டும். நிறைந்திருக்கும் அனுபவம் இருக்க வேண்டும். சற்குருவினூடாக, சதா சம்பூரணமாகவும் முழுமையாகவும் இருக்கும் ஸ்திதியின் அனுபவம் இருக்க வேண்டும். அத்துடன் ஆசீர்வாதங்களினூடாக முழுமை ரூபத்தின் அனுபவமும் இருக்க வேண்டும். எனவே, பேறுகளின் அனுபவமும் அத்தியாவசியமானது. ஒன்று, உறவுமுறைகளின் அனுபவம். மற்றது, பேறுகளின் அனுபவம். சிலர் சகல பேறுகளையும் அனுபவம் செய்வதில்லை. நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள். ஆனால், சரியான நேரத்தில் சக்திகளின் பேறுகள் இருப்பதில்லை. பேறுகளின் அனுபவம் இல்லாவிட்டால், ஏதோவொரு பேறுகளின் குறைவும் காணப்படும். எனவே, அனுபவத்துடன் கூடவே, நீங்கள் பேறுகளின் சொரூபம் ஆகவேண்டியது அவசியமாகும். இது உண்மையான காதலியின் ஓர் அடையாளம்.
மூன்றாவது அடையாளம்: அந்த உறவுமுறையினூடாக அனுபவத்தையும் பேற்றினையும் பெற்ற காதலிகள் எப்போதும் திருப்தியாக இருப்பார்கள். அவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் எதிலும் குறைவாக இருக்கும் ஆத்மாக்களாக ஒருபோதும் தங்களை உணர மாட்டார்கள். எனவே, இந்தக் காதலிகளின் சிறப்பியல்பு மனநிறைவே ஆகும். எங்கு பேறு உள்ளதோ, அங்கு நிச்சயமாக மனநிறைவு காணப்படும். உங்களிடம் மனநிறைவு இல்லாவிட்டால், நிச்சயமாக உங்களின் பேற்றில் ஏதோ குறைவாக உள்ளது. எங்கு பேறுகள் இல்லையோ, சகல உறவுமுறைகளை அனுபவம் செய்வதிலும் ஏதோ குறைவாக உள்ளது.
எனவே, அனுபவம், பேறுகள், மனநிறைவு - சதா மனநிறைவுடைய ஆத்மா என்பவையே மூன்று அடையாளங்கள் ஆகும். எந்த நேரமாக இருந்தாலும், எத்தகைய சூழலாக இருந்தாலும், சேவை செய்வதற்கான வசதிகள் எவ்வாறானவையாக இருந்தாலும், சேவையின் ஒன்றுகூடலில் எத்தகைய சகபாடிகள் இருந்தாலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் எப்போதும் மனநிறைவுடன் இருக்க வேண்டும். நீங்கள் இத்தகைய உண்மையான காதலிகள், இல்லையா? மனநிறைவான ஆத்மாவிற்கு ஒருபோதும் எந்தவிதமான எல்லைக்குட்பட்ட ஆசைகளும் இருக்காது. சிறுபான்மையான மனநிறைவுள்ள ஆத்மாக்களே இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஏதாவதொரு சூழ்நிலையில், மரியாதைக்கு அல்லது புகழுக்கான பசி காணப்படும். பசியுடன் இருக்கும் ஒருவர் ஒருபோதும் மனநிறைவாக இருக்கமாட்டார். யாருடைய வயிறுகள் எப்போதும் நிறைந்துள்ளதோ, அவர்கள் மனநிறைவுடன் இருப்பார்கள். எனவே, சரீரத்திற்கு உணவிற்கான பசி எடுப்பதைப் போல், மனதிற்கும் பெயர், புகழ், சத்கதி, வசதிகளுக்கான பசி காணப்படும். இது மனதின் பசி ஆகும். எனவே, பௌதீகமாக மனநிறைவுடன் இருப்பவர்கள் எப்போதும் திருப்தியாக இருப்பதைப் போல், மனநிறைவுள்ள மனங்களைக் கொண்டிருப்பவர்கள் சதா திருப்தியாக இருப்பார்கள். திருப்தி, மனநிறைவின் ஒரு அடையாளம் ஆகும். ஓர் ஆத்மா மனநிறைவுடன் இல்லாவிட்டால், ஆனால் பௌதீகமாக அல்லது மனதளவில் பசியுடன் இருந்தால், அவர் எவ்வளவுதான் பெற்றாலும், அவர் அதிகளவில் பெற்றாலும், மனநிறைவு இல்லாததால், அவர் எப்போதும் மனநிறைவு இல்லாமலே இருப்பார். அவரிடம் அதிருப்தி காணப்படும். இராஜரீகமானவர்கள் சிறிதளவுடன் மனநிறைவு அடைவார்கள். இராஜரீக ஆத்மாக்களின் அடையாளம், அவர்கள் சதா நிரம்பியிருப்பார்கள். அவர்கள் ஒரு சப்பாத்தியாக இருந்தாலென்ன அல்லது 36 வகையான உணவாக இருந்தாலென்ன, மனநிறைவாக இருப்பார்கள். எவ்வாறாயினும், மனநிறைவு இல்லாதவர்களுக்கு நீங்கள் 36 வகையான உணவைக் கொடுத்தாலும், அவர்கள் மனநிறைவு அடைய மாட்டார்கள். ஏனென்றால், அவர்களின் பசியானது அவர்களின் மனங்களிலேயே உள்ளது. உண்மையான காதலியின் அடையாளம், அவர் சதா மனநிறைவுடன் இருப்பார். எனவே, மூன்று அடையாளங்களையும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் யாருடைய காதலிகள் என்பதைப் பற்றி எப்போதும் சிந்தியுங்கள். நீங்கள் எப்போதும் சம்பூரணமாக இருக்கும் அதியன்பிற்குரியவரின் காதலிகள். எனவே, ஒருபோதும் திருப்தியைக் கைவிடாதீர்கள். நீங்கள் சேவையைக் கைவிடலாம். ஆனால், உங்களின் திருப்தியைக் கைவிடாதீர்கள். உங்களை அதிருப்தி ஆக்கும் எந்தவொரு சேவையும் சேவையே இல்லை. சேவை என்றால், உங்களுக்குப் போஷாக்கான பழத்தைக் கொடுக்கும் சேவையாக இருக்க வேண்டும். எனவே, உண்மையான காதலி என்பவர் சகல எல்லைக்குட்பட்ட ஆசைகளுக்கும் அப்பாற்பட்டிருப்பவர், சதா நிரம்பியவராகவும் சமமானவராகவும் இருப்பவர் ஆவார்.
இன்று, பாபா உங்களுக்குக் காதலிகளின் கதைகளைக் கூறுகிறார். நீங்கள் பல குறும்புத்தனமான விளையாட்டுக்களையும் விளையாடுகிறீர்கள். அவற்றைப் பார்க்கும்போது, அதியன்பிற்குரியவர் புன்னகை செய்கிறார். நீங்கள் உங்களின் குறும்புத்தனமான விளையாட்டுக்களை விளையாடலாம். ஆனால், அதியன்பிற்குரியவர் என்பவர் அதியன்பிற்குரியவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த விளையாட்டுக்களை அவரின் முன்னால் விளையாடுங்கள். மற்றவர்களின் முன்னால் அல்ல. நீங்கள் வெவ்வேறு வகையான எல்லைக்குட்பட்ட சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களின் குறும்புத்தனமான விளையாட்டுக்களை விளையாடுகிறீர்கள். ‘எனது சுபாவம்’, ‘எனது சம்ஸ்காரங்கள்’ என்று வரும்போதே நீங்கள் அந்தக் குறும்புத்தனமான விளையாட்டுக்களை விளையாட ஆரம்பிக்கிறீர்கள். தந்தையின் சுபாவம் எனது சுபாவமாக இருக்க வேண்டும். எனது சுபாவம், தந்தையின் சுபாவத்தை விட வேறுபட்டதாக இருக்க முடியாது. அது மாயையின் சுபாவம். அது வேறொருவருக்குச் சொந்தமான சுபாவம். அது உங்களின் சுபாவம் என எப்படி உங்களால் கூற முடியும்? மாயை அந்நியமானது. அவள் உங்களுக்குச் சொந்தமானவள் இல்லை. தந்தையே உங்களுக்குச் சொந்தமானவர். ‘எனது சுபாவம்’ என்றால் தந்தையின் சுபாவம் என்று அர்த்தம். மாயையின் சுபாவத்தை உங்களின் சுபாவம் எனக் கூறுவது தவறானது. ‘எனது’ என்ற வார்த்தை உங்களைச் சுழற்சிக்குள் போட்டு விடுகிறது. காதலிகளும் இந்தக் குறும்புத்தனமான விளையாட்டுக்களை அதியன்பிற்குரியவரிடம் காட்டுகிறார்கள். தந்தையினுடையது எதுவோ, அது என்னுடையது. ஒவ்வொரு சூழ்நிலையிலும், பக்தி மார்க்கத்திலும் கூறப்படுகிறது: என்னிடம் உள்ள எதுவும் உங்களுடையது. எதுவும் என்னுடையதல்ல. எவ்வாறாயினும், உங்களுடையது எதுவோ, அது என்னுடையது. தந்தையின் எண்ணம் எதுவோ, அது எனது எண்ணம். சேவை செய்யும் பாகங்களை நடிக்கும்போது, தந்தையின் சுபாவமும் சம்ஸ்காரங்களும் உங்களுடையவை. அதனூடாக என்ன நிகழும்? எல்லைக்குட்பட்ட எனது என்ற எதுவும் உங்களுடையது என்றாகிவிடும். உங்களுடையது எதுவும் என்னுடையது. எனக்கென்று வேறாக எதுவும் இல்லை. தந்தையினுடையதில் இருந்து வேறுபட்ட எதுவும் என்னுடையதல்ல. அது மாயையின் சுழற்சி ஆகும். ஆகவே, எல்லைக்குட்பட்ட குறும்புத்தனமான விளையாட்டுக்களைக் கைவிட்டு, ‘நான் உங்களுடையவன், நீங்கள் என்னுடையவர்’ என்ற ஆன்மீகப் பெருமையைப் பேணுங்கள். நீங்கள் வெவ்வேறு உறவுமுறைகளின் அனுபவத்தின் ஆன்மீக, குறும்புத்தனமான விளையாட்டுக்களை விளையாடலாம். ஆனால், மற்றைய வகையான விளையாட்டை விளையாடாதீர்கள். ஓர் உறவுமுறையை நிறைவேற்றுவதில் நீங்கள் ஆன்மீகக் குறும்புத்தனமான விளையாட்டுக்களை விளையாட முடியும். அன்பான குறும்புத்தனமான விளையாட்டுக்கள் நல்லவை. சிலவேளைகளில், நண்பர் என்ற உறவுமுறையில் அன்பான குறும்புத்தனமான விளையாட்டுக்களை விளையாடுங்கள். அவை குறும்புத்தனமான விளையாட்டுக்கள் இல்லை. ஆனால் தனித்துவமானவை. அன்பான குறும்பு விளையாட்டுக்கள் அழகானவை. சிறு குழந்தைகளின் குறும்பை அனைவரும் விரும்புவார்கள். ஏனென்றால், அவர்கள் அழகானவர்கள், தூய்மையானவர்கள். குழந்தைகளிடம் சுத்தமும் தூய்மையும் உள்ளன. ஆனால், முதிர்ந்த ஒருவர் குறும்பான விளையாட்டுக்களை விளையாடினால், அது தீங்கானது என்றே கருதப்படுகிறது. நீங்கள் விளையாட விரும்பினால், தந்தையுடன் வெவ்வேறு உறவுமுறைகளில் தூய்மையும் அன்பும் நிறைந்த குறும்பு விளையாட்டுக்களை விளையாடுங்கள்.
நிலையான கையும் சகவாசமுமே உண்மையான காதலியினதும் அதியன்பிற்குரியவரினதும் அடையாளம் ஆகும். ஒருபோதும் சகவாசத்தையும் கையையும் கைவிட்டுப் பிரிந்து செல்லாதீர்கள். எப்போதும் உங்களின் புத்தியில் சகவாசத்தை வைத்திருங்கள். ஒவ்வொரு பணியிலும் தந்தையின் ஒத்துழைப்புக் கரம் எப்போதும் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஒருமனதுடன் ஒத்துழைப்பதன் அடையாளம், ஒரு கரம் இன்னொரு கரத்துடன் சேர்ந்திருத்தல் ஆகும். எனவே, எப்போதும் தந்தையுடன் ஒத்துழைப்பதென்றால், தந்தையுடன் கையோடு கை சேர்த்து இருத்தல் ஆகும். அத்துடன் எப்போதும் அவரை உங்களின் புத்தியில் வைத்திருப்பதாகும். மனதின் அன்பும் புத்தியின் சகவாசமும். இந்த ஸ்திதியில் இருப்பதென்றால், உண்மையான காதலியும் அதியன்பிற்குரியவரும் என்ற நிலையில் இருத்தல் என்று அர்த்தம். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் எப்போதும் அவருடன் இருப்பீர்கள் என்பதே நீங்கள் செய்த சத்தியம். சிலவேளைகளில் மட்டும் அவருடன் இருப்பீர்கள் என நீங்கள் சத்தியம் செய்யவில்லை. மனதின் பற்றானது சிலவேளைகளில் அதியன்பிற்குரியவருடனும், ஏனைய வேளைகளில் அவ்வாறு இல்லாமலும் இருந்தால், அது சதா சகவாசம் இல்லையல்லவா? ஆகவே, உண்மையான காதலிகளின் நிலையைப் பேணுங்கள். உங்களின் பார்வையிலும் உங்களின் மனோபாவத்திலும் அதியன்பிற்குரியவர் இருக்க வேண்டும். அவர் உங்களின் உலகமாக இருக்க வேண்டும்.
எனவே, இது காதலிகளினதும் அன்பிற்குரியவரினதும் சந்தோஷமான ஒன்றுகூடல் ஆகும். இது ஒரு பூந்தோட்டம். அத்துடன் இது கடற்கரை. இது அற்புதமான, தனியார் கடற்கரை. இதில் ஆயிரக்கணக்கானவருக்கு இடையே நீங்கள் தனித்திருக்கிறீர்கள். (ஹிந்தி மொழியில் பீச் என்றால் மத்தியில் என்று அர்த்தம்) நீங்கள் ஒவ்வொருவரும் அதியன்பிற்குரியவருடன் தனிப்பட்ட அன்பை அனுபவம் செய்கிறீர்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட அன்பை உணர்தல் - அது அற்புதமான அதியன்பிற்குரியவரும் காதலியுமாக இருத்தல் ஆகும். அவர் ஒரேயொரு அதியன்பிற்குரியவர். ஆனால் அவர் அனைவருக்கும் சொந்தமானவர். ஒவ்வொருவரும் ஏனைய அனைவரையும் விட மகத்தான உரிமையைக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. உங்களின் உரிமைக்கு இலக்கம் கிடையாது. ஆனால், அந்த உரிமைகளை நீங்கள் கோருவதில்தான் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். நீங்கள் இறை தோட்டத்தில் அவரின் சகவாசத்தில் கையோடு கைசேர்த்து, நடக்கிறீர்கள் அல்லது அமர்ந்திருக்கிறீர்கள் என்ற உணர்வுடன் எப்போதும் இருங்கள். அவருக்கு உங்களின் கையையும் சகவாசத்தையும் கொடுப்பதன் மூலம் நீங்கள் ஆன்மீகக் கடற்கரையில் களிப்புடன் கொண்டாடுகிறீர்கள். அப்போது நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுடன், சதா நிரம்பியவராகவும் இருப்பீர்கள். அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் இரட்டை அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் இப்போது இங்கு வந்திருப்பது நல்லதே. எதிர்காலத்தில் என்ன மாற்றங்கள் இடம்பெற்றாலும் அது நாடகத்தில் உள்ளன. எவ்வாறாயினும், காலத்திற்கேற்ப நீங்கள் இங்கு வந்து சேர்ந்திருப்பதனால் நீங்கள் இரட்டை அதிர்ஷ்டசாலிகள். அச்சா.
ஆன்மீக அதியன்பிற்குரியருக்கான அன்பின் பொறுப்பை நிறைவேற்றும் அநாதியான காதலிகளுக்கும், தங்களை சகல பேறுகளாலும் நிரம்பியிருப்பவராக அனுபவம் செய்பவர்களுக்கும், ஒவ்வொரு ஸ்திதியிலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருப்பவர்களுக்கும், திருப்தி என்ற பொக்கிஷத்துடன் நிரம்பியிருப்பதுடன், மற்றவர்களையும் நிரப்புவர்களுக்கும், சதா சகபாடிகளாக இருந்து சதா தமது கையைக் கொடுக்கும் உண்மையான காதலிகளுக்கும், ஆன்மீக அன்பிற்குரியவரின் இதயபூர்வமான அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா மேன்மையான, புதிய வகையான சேவையைச் செய்வதன் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்தும் இலகு சேவையாளர் ஆகுவீர்களாக.உங்களின் எண்ணங்களினூடாக இறை சேவை செய்வது, சேவை செய்வதற்கான ஒரு புதிய, மேன்மையான வழிமுறை ஆகும். ஒரு நகை வியாபாரி ஒவ்வொரு நாளும் தனது இரத்தினங்கள் சுத்தமாக இருக்கிறதா, அவை ஜொலிக்கின்றனவா, சரியாக வைக்கப்பட்டிருக்கின்றனவா எனச் சோதித்துப் பார்ப்பார். அதேபோல், ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையில், உங்களின் மனதில் உங்களின் எண்ணங்களால் உங்களுடன் தொடர்பில் வருகின்ற ஆத்மாக்களின் மீது உங்களின் பார்வையைச் செலுத்துங்கள். உங்களின் எண்ணங்களில் எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் அவர்களை நினைக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் எண்ணங்கள் அவர்களைச் சென்றடையும். இந்த முறையில் புதிய வகையான சேவையை ஏற்றுக் கொள்வதன் மூலம், நீங்கள் தொடர்ந்து வளர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். உங்களின் இலகு யோகத்தின் சூட்சுமமான சக்தியானது, இயல்பாகவே ஆத்மாக்களை உங்களை நோக்கிக் கவரச் செய்யும்.
சுலோகம்:
சாக்குப்போக்குகள் சொல்லும் விளையாட்டை அமிழ்த்தி விடுங்கள். எல்லையற்ற விருப்பமின்மைக்கான மனோபாவம் வெளிப்பட வேண்டும்.