20.12.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 20.03.87 Om Shanti Madhuban
அன்பின் அதிகாரத்திற்கும் சத்தியத்தின் அதிகாரத்திற்கும் இடையிலான சமநிலை.
இன்று, உண்மையான தந்தை, உண்மையான ஆசிரியர், சற்குரு சக்திவாய்ந்த சத்தியத்தால் நிரம்பிய தனது உண்மையான குழந்தைகளைச் சந்திப்பதற்கு வந்துள்ளார். அனைத்திலும் மகத்தான சக்தியும் அதிகாரமும் சத்தியமே. சத்தியத்திற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 1. சத்தியம் என்றால் உண்மை. 2. சத்தியம் என்றால் அழியாதது. இரண்டு அர்த்தங்களிலும், சத்தியத்தின் சக்தியே அனைத்திலும் மகத்தானது. தந்தையை சத்தியத்தந்தை எனக் கூறுகிறார்கள். எண்ணற்ற தந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் ஒரேயொரு சத்தியத் தந்தையே உள்ளார். ஒரேயொரு சத்திய ஆசிரியரும் ஒரேயொரு சற்குருவுமே உள்ளனர். சத்தியம், பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். அதாவது, பரமாத்மாவின் சிறப்பியல்பு உண்மை நிறைந்தவராக இருத்தல். அதாவது, சத்தியம் ஆகும். ‘சிவன் சத்தியமானவர், சிவன் சுந்தரமானவர்....’ என்ற பாடல் உங்களிடம் உள்ளது. உலகமும், ‘சத்தியம், சிவம் (நன்மைசெய்பவர்), சுந்தரம் (அழகானவர்)’ எனப் பாடுகிறது. அத்துடன் பரமாத்மாவான தந்தையை, அவர் சத்தியம், உயிருள்ளவர், பேரானந்தம் நிறைந்தவர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆத்மாக்களான நீங்களும் சத்தியம், உயிருள்ளவர்கள், ஆனந்த சொரூபமானவர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள். ‘சத்தியம்’ என்ற வார்த்தையைப் பற்றி அதிகளவு புகழ் பாடப்படுகிறது. எந்தவொரு பணியிலும், யாராவதொருவர் அதிகாரத்துடன் பேசும்போது, ‘நான் உண்மையானவன், இதனாலேயே நான் அதிகாரத்துடன் பேசுகிறேன்’ என்று அவர் கூறுவார். சத்தியத்தின் படகு ஆடும், ஆனால் அது அமிழாது எனச் சத்தியத்தைப் பற்றி நினைவுகூரப்படுகிறது. சத்தியம் இருக்கும் இடத்தில் ஆத்மா நடனம் ஆடுவார் என நீங்களும் கூறுகிறீர்கள். சத்தியத்தின் சக்தியைக் கொண்டுள்ள ஒருவர் சதா தொடர்ந்து நடனம் ஆடுவார். அவர் ஒருபோதும் வாடவோ, குழப்பம் அடையவோ, பயப்படவோ அல்லது பலவீனம் அடையவோ மாட்டார். சத்தியத்தின் சக்தியுடைய ஒருவர் சதா தொடர்ந்து சந்தோஷத்தில் நடனம் ஆடுவார். அவர் சக்திசாலியாக இருப்பார். அவரிடம் முகங்கொடுக்கும் சக்தி இருக்கும். அதனால் அவர் பயப்பட மாட்டார். சத்தியம் தங்கத்தைப் போன்றது எனக் கூறப்படுகிறது. ஆனால் பொய்மை சேறு போன்றது எனக் கூறப்படுகிறது. பக்தியிலும், கடவுளிடம் அன்பு கொண்டிருப்பவர்களை, ‘சத்சங்கி’, சத்தியத்தின் சகவாசத்தில் இருப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. இறுதியில், ஆத்மா தனது சரீரத்தை விடும்போது, அவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘சத்தியத்தின் பெயர் (சத்நாம்) உங்களுடன் உள்ளது’. எனவே, சத்தியம் அழியாதது. சத்தியம் உண்மைநிறைந்தது. சத்தியத்தின் சக்தியே மகத்தான சக்தியாகும். தற்சமயம், பெரும்பாலான மக்கள் உங்களைப் பார்க்கும்போது என்ன சொல்கிறார்கள்? உங்களிடம் சத்தியத்தின் சக்தி உள்ளது. இதனாலேயே, நீங்கள் அதிகளவு வளர்ச்சியுடன் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். சத்தியம் ஒருபோதும் தளம்பல் அடையாது. அது அசைக்க முடியாதது. சத்தியமே முன்னேறுவதற்கான வழிமுறை ஆகும். சத்தியத்தின் சக்தியால் நீங்கள் சத்திய யுகத்தை உருவாக்குகிறீர்கள். நீங்களே உண்மையான நாராயணனாகவும் உண்மையான இலக்ஷ்மியாகவும் ஆகுகிறீர்கள். இது உண்மையான தந்தையின் உண்மையான ஞானம் ஆகும். இதனாலேயே, அது உலகில் அழகானதாகவும் தனித்துவமானதாகவும் உள்ளது.
இன்று, குழந்தைகளான நீங்கள் அனைவரும் சத்திய ஞானத்தின் சத்திய அதிகாரத்தை எந்தளவிற்குக் கிரகித்துள்ளீர்கள் என பாப்தாதா பார்த்தார். சத்தியம் ஒவ்வோர் ஆத்மாவையும் கவரும். இன்றைய உலகம் பொய்மையான உலகமாக இருந்தாலும், அனைத்தும் பொய்மையாக இருந்தாலும், அதாவது, அனைத்தும் பொய்மையுடன் கலந்திருந்தாலும், சத்தியத்தின் சக்தியைக் கொண்டிருப்பவர்கள் வெற்றியாளர்கள் ஆகுகிறார்கள். சத்தியத்தின் பேறானது, சந்தோஷமும் பயமின்மையும் ஆகும். உண்மையைப் பேசுபவர்கள் எப்போதும் பயப்பட மாட்டார்கள். அவர்களுக்கு ஒருபோதும் பயம் இருக்காது. உண்மையில்லாதவர்கள் நிச்சயமாகப் பயப்படுவார்கள். எனவே, நீங்கள் அனைவரும் சத்தியத்தின் சக்தியால் நிரம்பிய மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். உங்களிடம் உண்மையான ஞானம், சத்தியத் தந்தை, உண்மையான பேறுகள், உண்மையான நினைவு, உண்மையான நற்குணங்கள், உண்மையான சக்திகள் என்ற சகல பேறுகளும் உள்ளன. எனவே, உங்களிடம் இத்தகைய அதிகாரத்தின் போதை உள்ளதா? அதிகாரம் என்றால் அகங்காரம் என்று அர்த்தமல்ல. ஒருவரிடம் எந்தளவிற்கு அதிகாரம் உள்ளதோ, அந்தளவிற்கு அவர்களின் மனோபாவத்தில் அதிகமான ஆன்மீக அதிகாரம் இருக்கும். அவரின் வார்த்தைகளில் அன்பும் பணிவும் காணப்படும். அதுவே அதிகாரத்தின் அடையாளம் ஆகும். நீங்கள் மரத்தின் உதாரணத்தைக் கொடுக்கிறீர்கள். மரத்தில் பழங்கள் நிறைந்திருக்கும் அதிகாரம் இருக்கும்போது, அது தலைவணங்கும். அதாவது, அது பணிவாக இருக்கும் சேவையைச் செய்யும். (உதாரணமாக இருக்கும்). அதேபோல், ஆன்மீக அதிகாரத்தைக் கொண்டுள்ள குழந்தைகளுக்கும், எந்தளவிற்கு அவர்களிடம் அதிகாரம் உள்ளதோ, அந்தளவிற்கு அவர்கள் அதிகளவு பணிவுடன் சேவை செய்வார்கள். அத்துடன் அனைவருடனும் அவர்கள் அதிகளவு அன்பாக இருப்பார்கள். சத்தியத்தின் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் அகங்காரமற்றவர்களாக இருப்பார்கள். எனவே, அந்த அதிகாரமும் போதையும் அகங்காரமற்ற ஸ்திதியும் இருக்க வேண்டும். இது உண்மையான ஞானத்தின் நடைமுறை ரூபம் எனப்படுகிறது.
இந்தப் பொய்மையான உலகில், பிரம்மாபாபாவின் சத்தியத்தின் அதிகாரத்தின் நடைமுறையான, பௌதீக ரூபத்தை நீங்கள் கண்டீர்கள். அவரின் அதிகார வார்த்தைகள் ஒருபோதும் அகங்காரத்தின் உணர்வைக் கொடுத்ததில்லை. நீங்கள் ஒரு முரளியைக் கேட்கும்போது, அந்த வார்த்தைகள் அதிகாரத்தைக் கொண்டுள்ளன! எவ்வாறாயினும், அவை அகங்கார வார்த்தைகள் இல்லை. அதிகார வார்த்தைகளில் அன்பும் பணிவும் அகங்காரமற்ற தன்மையும் அமிழ்ந்துள்ளன. இதனாலேயே, அதிகார வார்த்தைகள் அன்பானவை. அவை அன்பானவை மட்டுமல்ல. அவை மனதைத் தொடக்கூடியவை. நீங்கள் தந்தையைப் பின்பற்றுகிறீர்கள், இல்லையா? சேவையிலும் செயல்களிலும், நீங்கள் பிரம்மாபாபாவைப் பின்பற்றுகிறீர்கள். ஏனென்றால், பௌதீக உலகில், நீங்கள் பௌதீக உதாரணங்கள், மாதிரிகள் ஆவீர்கள். எனவே, நீங்கள் தந்தை பிரம்மாவின் முகத்திலும் செயல்பாடுகளிலும் அதிகார ரூபத்தை அவரின் செயல்களினூடாகவும் சேவையிலும் கண்டதைப் போல், தந்தையைப் பின்பற்றுபவர்களும் ஒரே வேளையில் அன்பையும் அதிகாரத்தையும், பணிவையும் மகத்துவத்தையும் காட்ட வேண்டும். அன்பு புலப்படுவதாகவும் அதிகாரம் இல்லாமலும் இருப்பதாகவோ அல்லது, அதிகாரம் புலப்படுவதாகவும் அன்பு இல்லாமலும் என்றோ இருக்கக்கூடாது. நீங்கள் பிரம்மாபாபாவைக் கண்டீர்கள். இப்போதும் நீங்கள் முரளிகளைக் கேட்கிறீர்கள். அது புலப்படும் உதாரணம் ஆகும். அவர் ‘குழந்தை, குழந்தை’ எனக் கூறுவதுடன், தனது அதிகாரத்தையும் காட்டுகிறார். அன்புடன், அவர் ‘குழந்தையே’ எனக் கூறுவார். அதிகாரத்துடன், அவர் கற்பித்தல்களையும் கொடுக்கிறார். அவர் ‘குழந்தை, குழந்தை’ எனக் கூறிய வண்ணம், உண்மையான ஞானத்தையும் வெளிப்படுத்துவதுடன், புதிய ஞானம் முழுவதையும் தெளிவுபடுத்துவார். இது அன்பினதும் சத்தியத்தினதும் அதிகாரத்தின் சமநிலையைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. எனவே, தற்சமயம், சேவையில் இந்தச் சமநிலையைக் கீழ்க்கோடிடுங்கள்.
ஸ்தாபனையின் நேரத்தில் இருந்து இன்றுவரை நிலத்தைத் தயார் செய்வதற்கு 50 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. (1987 இல் 50 வருடங்கள். இப்போது 83 வருடங்கள்). வெளிநாட்டிலும் அதிகளவு நிலம் பண்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 50 வருடங்கள் ஆகியிருக்காவிட்டாலும், அவர்கள் சகல வசதிகளும் தயார் நிலையில் இருக்கும்போது வந்திருக்கிறார்கள். இதனாலேயே, முன்பிருந்த 50 வருடங்கள் தற்போதுள்ள ஐந்து வருடங்களுக்குச் சமமாகும். நாங்களே பிந்தி வந்திருப்பவர்கள், விரைவாகச் சென்று, முதலாவதாக வரப் போகின்றவர்கள் என இரட்டை வெளிநாட்டவர்கள் அனைவரும் கூறுகிறார்கள். எனவே, காலத்தைப் பொறுத்தவரையும், நீங்கள் விரைவாகச் சென்று முதலாவதாக வருவீர்கள், இல்லையா? நிச்சயமாகப் பயமற்ற தன்மையின் அதிகாரத்தைக் கொண்டிருங்கள். ஒரேயொரு தந்தையின் புதிய ஞானமே உண்மையான ஞானமாகும். புதிய உலகம் புதிய ஞானத்தால் ஸ்தாபிக்கப்படுகிறது. இந்த அதிகாரமும் போதையும் உங்களின் ரூபத்தில் வெளிப்பட வேண்டும். நீங்கள் அதை 50 வருடங்களாக அமிழ்த்தி வைத்திருந்தீர்கள். எவ்வாறாயினும், உங்களுக்கு முன்னால் வருகின்ற எவருக்கும் நேரடியாகப் புதிய ஞானத்தைக் கொடுத்து அவரைக் குழப்பலாம் என்று அர்த்தம் இல்லை. இதன் அர்த்தம் அது இல்லை. நிலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நாடியைப் பிடித்தறிந்து, காலத்திற்கேற்ப ஞானத்தைக் கொடுங்கள். இதுவே ஞானம் நிறைந்தவராக இருப்பதன் அடையாளம் ஆகும். அந்த ஆத்மாவின் விருப்பத்தைக் கருத்தில் வைத்து, அவரின் நாடியைப் பிடித்தறிந்து, நிலத்தைத் தயார் செய்யுங்கள். ஆனால் நிச்சயமாக சத்தியம் உடையவராக இருப்பதில் பயமற்ற சக்தியைக் கொண்டிருங்கள். மனிதர்கள் என்ன சொல்வார்களோ எனப் பயப்படாதீர்கள். நீங்கள் பயமற்றவராகி, நிலத்தைத் தயார் செய்யுங்கள். இது புதிய ஞானம் என்பதனால், சிலரால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கே நீங்கள் இதை விளங்கப்படுத்த வேண்டும். நிச்சயமாக, ஒரு நபருக்கேற்ப புற ரூபத்தைத் தயார் செய்ய வேண்டும். ஆனால் அந்த நபரின் ஆதிக்கத்திற்கு உள்ளாகாதீர்கள். உங்களின் உண்மையான ஞானத்தின் அதிகாரத்தால் நிச்சயமாக அந்த நபரை மாற்றும் இலக்கை மறக்காதீர்கள்.
இதுவரை நீங்கள் செய்த எதுவும் சிறப்பானதே. நீங்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது. அது அத்தியாவசியமாக இருந்தது. ஏனென்றால் நீங்கள் நிலத்தைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், எதுவரை நீங்கள் நிலத்தைத் தயார் செய்வீர்கள்? உங்களுக்கு இன்னமும் எவ்வளவு அதிக நேரம் வேண்டும்? உங்களுக்கு மருந்து கொடுக்கும்போது, ஆரம்பத்தில் சக்திவாய்ந்த மருந்தைக் கொடுக்க மாட்டார்கள். முதலில் சிறிதளவு மருந்தையே கொடுப்பார்கள். எவ்வாறாயினும், சிறிதளவு மருந்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்காதீர்கள். அதேவேளை கடுமையான மருந்தையும் கொடுக்காதீர்கள். பலவீனமான ஒருவருக்கு அதிகளவு மருந்தைக் கொடுத்தால், அதுவும் தவறானதே. உங்களுக்கு வேறுபிரித்தறியும் சக்தி தேவை. ஆனால், நிச்சயமாக உங்களின் உண்மையான புதிய ஞானத்தின் அதிகாரமும் உங்களுக்குத் தேவை. உங்களின் அதிகாரத்தின் சூட்சுமமான மனோபாவம், நிச்சயமாக மற்றவர்களின் மனோபாவங்களை மாற்றும். இந்த நிலம் தயார் செய்யப்படும். எனவே, நீங்கள் சேவை செய்து, அவர்கள் மதுவனத்திற்கு வரும்போது, குறைந்தபட்சம் அவர்கள் நிச்சயமாக இதையாவது தெரிந்திருக்க வேண்டும்: இந்த நிலத்தில் அவர்களின் நிலமும் தயார் செய்யப்படும். நிலம் எவ்வளவுதான் கடினமாக இருந்தாலும், அல்லது அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அல்லது அவர்களின் பதவி என்னவாக இருந்தாலும், இந்த நிலத்தில் அவர்களும் மென்மையாகி விடுவார்கள். நிலம் மென்மையாகியதும், நீங்கள் என்ன விதைகளை விதைத்தாலும், அதன் பழம் இலகுவாக வெளிப்படும். எந்தவிதமான பயமும் இல்லாதவராக இருங்கள். நிச்சயமாகப் பயமற்றவர் ஆகுங்கள். அவர்களுக்கு அதை யுக்தியுடன் கொடுங்கள். தாமும் இந்த இடத்திற்கு வந்தார்கள், ஆனால் இறை ஞானம் என்றால் என்னவென்று தமக்குத் தெரியவில்லை என அவர்கள் உங்களிடம் முறைப்பாடு செய்வதாக இருக்கக்கூடாது. இறை பூமிக்கு வந்தால், அவர்கள் நிச்சயமாக இறைவனின் வெளிப்படுத்துகைக்கான செய்தியைப் பெற்றே செல்ல வேண்டும். இந்த அதிகாரத்துடனேயே இலக்கு நிறைவேற்றப்பட வேண்டும்.
இன்றைய உலகைப் பொறுத்தவரை, புதுமை முக்கியமானது. உதாரணமாக, யாராவது ஒருவர் தவறாக ஒரு நாகரிகத்தைக் கண்டுபிடித்தாலும், மக்கள் அதைப் பின்பற்றவே செய்வார்கள். முன்னர் ஓவியங்கள் எத்தனை அழகானவை எனப் பாருங்கள். அவற்றுடன் ஒப்பிடும்போது, இன்றைய ஓவியங்கள் வெறும் கோடுகளே. எவ்வாறாயினும், மக்கள் நவீன ஓவியங்களை விரும்புகிறார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களின் தெரிவு, புதுமையின் அடிப்படையிலேயே அமைகிறது. புதுமை இயல்பாகவே தன்னை நோக்கிக் கவரும். ஆகவே, நிச்சயமாகப் புதுமை, சத்தியம், மகத்துவம் என்பவற்றின் போதையை உடையவராக இருங்கள். பின்னர், காலத்தையும் நபரையும் கருத்தில் கொண்டு சேவை செய்யுங்கள். புதிய உலகின் புதிய ஞானம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற இலக்கை நிச்சயமாக வைத்திருங்கள். இப்போது, அன்பும் அமைதியும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் அன்புக்கடலும் அமைதிக்கடலும் என்ற தந்தையின் ரூபத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனால், ஆத்மா எவ்வாறு ஞான சொரூபமாக இருக்கிறார் என்றும், தந்தை எவ்வாறு ஞானக்கடலாக இருக்கிறார் என்றும் புதிய ஞானத்தை அவர்களுக்குக் கொடுப்பதற்கான பல திட்டங்களை நீங்கள் இன்னமும் செய்யவில்லை. இது புதிய உலகிற்கான புதிய ஞானம் என்பது அனைவரின் உதடுகளில் இருந்தும் வெளிப்படுவதற்கான நேரமும் வரும். தற்சமயம், அது நல்லது என்றே அவர்கள் கூறுகிறார்கள். இது புதியது என்று அவர்கள் கூறவில்லை. நினைவெனும் பாடத்தை நீங்கள் மிக நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். இதனாலேயே, நிலம் மிக நன்றாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. நிலத்தைத் தயார் செய்யும் முதலாவது பணியும் அத்தியாவசியமானது. நீங்கள் செய்த எதுவும் மிகவும் நல்லதே. நீங்கள் அதை மிக நன்றாகச் செய்தீர்கள். உங்களின் சரீரங்கள், மனங்கள், செல்வத்தைப் பயன்படுத்தி நீங்கள் அதைச் செய்தீர்கள். அதற்கு உங்களுக்கு நன்றிகள்.
நீங்கள் முதலில் வெளிநாட்டுக்குச் சென்றபோது, திரிமூர்த்தியின் படத்தை விளங்கப்படுத்துவது சிரமமாக இருப்பதாக உணர்ந்தீர்கள். இப்போது, அவர்கள் திரிமூர்த்தியின் படத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஏணிப்படியின் படத்தைப் பாரதத்தின் கதையாகக் கருதக்கூடும். ஆனால், வெளிநாடுகளில் இந்தப் படத்தால் கவரப்படுகிறார்கள். எனவே, இந்தப் புதிய விடயங்களை அவர்களுக்கு எவ்வாறு விவரிக்கலாம் என நீங்கள் திட்டங்கள் செய்ததைப் போல், இப்போதும் கண்டுபிடிப்புக்களை உருவாக்குங்கள். நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என நினைக்காதீர்கள். இல்லை. நீங்கள் புதுமையின் மகத்துவத்தின் சக்தியைக் கிரகிக்க வேண்டும் என்பதே பாப்தாதாவின் இலக்காகும். இதை மறந்து விடாதீர்கள். நீங்கள் உலகிற்கே விளங்கப்படுத்த வேண்டும். உலகின் விடயங்களைப் பற்றிப் பயப்படாதீர்கள். உங்களின் சொந்த வழிமுறைகளை உருவாக்குங்கள். ஏனென்றால் குழந்தைகளான நீங்கள் மட்டுமே கண்டுபிடிப்பாளர்கள். குழந்தைகளான நீங்கள் மட்டுமே சேவைக்கான திட்டங்களைப் பற்றி அறிவீர்கள். நீங்கள் உங்களின் இலக்கை வைத்திருந்தால், திட்டங்களில் மிகச் சிறந்த திட்டத்தை உருவாக்க முடியும். அத்துடன் வெற்றி உங்களின் பிறப்புரிமை ஆகும். ஆகவே, புதுமையைக் காட்டுங்கள். ஞானத்தின் மிக ஆழமான கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதற்கு உங்களிடம் மிக நல்ல வழிமுறைகள் உள்ளன. உங்களால் அவற்றை விளங்கப்படுத்த முடியும். உங்களால் ஒவ்வொரு கருத்தையும் தர்க்கரீதியாகத் தெளிவு படுத்த முடியும். உங்களிடம் உங்களின் சொந்த அதிகாரம் உள்ளது. அது உங்களின் சொந்த மனதால் உருவாக்கப்பட்ட ஒன்றோ அல்லது கற்பனை வடிவமோ இல்லை. இது நிஜமானது. இது உங்களின் அனுபவமாகும். உங்களிடம் அனுபவத்தின் அதிகாரமும், ஞானத்தின் அதிகாரமும் சத்தியத்தின் அதிகாரமும் உள்ளன. உங்களிடம் பல அதிகாரங்கள் உள்ளன. எனவே, ஒரே வேளையில் அதிகாரத்தையும் அன்பையும் இரண்டையும் பயன்படுத்துங்கள்.
மகத்தான முயற்சியுடன் சேவை செய்வதன் மூலம், உங்களுக்கு அதிகளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, தொடர்ந்தும் இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் அதிகளவு வளர்ச்சி ஏற்படும் என்பதையிட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இந்தத் தேசத்தில், நபரின் நாடியை அறிந்து சேவை செய்வதன் மூலம் வெற்றி ஏற்படுகிறது. வெளிநாடுகளிலும், இந்த வழிமுறையினால் வெற்றி ஏற்பட்டுள்ளது. நீங்கள் முதலில் அந்த நபரைத் தொடர்பு கொள்கிறீர்கள். அந்த முறையில் நிலம் தயார் செய்யப்படுகிறது. தொடர்பினை உருவாக்கிய பின்னர், அந்த நபரை ஓர் உறவுமுறைக்குள் கொண்டுவாருங்கள். அவரைத் தொடர்பில் இருப்பவராக மட்டும் விட்டுவிடாதீர்கள். அவரை ஓர் உறவுமுறைக்குள் கொண்டுவாருங்கள். இறுதி நிலை, அவரின் புத்தியால் அவரை அர்ப்பணிக்கச் செய்வதாகும். எவரையும் தொடர்பில் கொண்டு வருதல் அத்தியாவசியம் ஆகும். அதன்பின்னர், நீங்கள் அவரை ஓர் உறவுமுறைக்குள் கொண்டுவரவேண்டும். ஓர் உறவுமுறைக்குள் வரும்போது, அவர் ‘தந்தை என்ன கூறுகிறாரோ, அதுவே சத்தியம்’ என்ற உணர்வுடன் தனது புத்தியை அர்ப்பணிக்க வேண்டும். அதன்பின்னர், எந்தக் கேள்விகளும் எழாது. பாபா என்ன கூறுகிறாரோ, அதுவே சரியானது. ஏனென்றால், அவர்கள் அதை அனுபவம் செய்வார்கள். எனவே, அவர்களின் கேள்விகள் முடிந்துவிடும். இதுவே அனைத்தும் தெளிவாக அனுபவம் செய்யப்படும் அர்ப்பணித்த புத்தி எனப்படுகிறது. அவர்கள் அர்ப்பணித்த புத்திகளைக் கொண்டிருத்தல் அத்தியாவசியம் என்ற இலக்கை வைத்திருங்கள். அப்போது மட்டுமே ஒரு மைக் இப்போது தயாராக உள்ளார் எனக் கூற முடியும். மைக் என்ன சத்தத்தைச் செய்வார்? அவர்களின் ஞானம் நல்லது என்பது மட்டுமல்ல. இல்லை! ‘இது புதிய ஞானம், இது மட்டுமே புதிய உலகைக் கொண்டுவரும்’ என்ற சத்தம் ஒலிக்க வேண்டும். அப்போது மட்டுமே கும்பகர்ணர்கள் விழித்தெழுவார்கள். இல்லாவிட்டால், அவர்கள் தமது கண்களைத் திறந்து, ‘மிகவும் நல்லது, மிகவும் நல்லது’ எனக் கூறிவிட்டு, பின்னர் திரும்பவும் நித்திரையில் ஆழ்ந்து விடுகிறார்கள். ஆகவே, நீங்கள் ஒரு குழந்தையாகவும் அதிபதியாகவும் ஆகியிருப்பதைப் போல், அவர்களையும் அவ்வாறு ஆக்குங்கள். அந்த அப்பாவி, உதவியற்ற மக்களை வெறுமனே பிரஜைகள் ஆக்காதீர்கள். ஆனால், அவர்களை இராச்சியத்திற்கு உரிமை உடையவர்களாக ஆக்குங்கள். இதற்கான திட்டங்களைச் செய்யுங்கள்: அவர்கள் குழப்பம் அடையாமல், தமது புத்திகளை அர்ப்பணிக்கும் வகையில் நாங்கள் என்ன வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்? அவர்கள் இதைப் புதியதாக உணர வேண்டும். எந்தவிதமான குழப்பமும் அடையக்கூடாது. அவர்கள் அன்பினதும் புதுமையினதும் அதிகாரத்தை உணர வேண்டும்.
இதுவரை சேவைக்கான வளர்ச்சியின் பெறுபேறும், பிராமணர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் மிகவும் நல்லது. ஏனென்றால், முதலில் நீங்கள் விதையானவரை மறைமுகமாக வைத்தீர்கள். அதுவும் அத்தியாவசியமானதே. விதையை மறைமுகமாகவே வைக்க வேண்டும். அதைத் தென்பட வைத்தால், அது பழத்தைக் கொடுக்காது. விதையை நிலத்தின் கீழேயே வைக்க வேண்டும். ஆனால், அது நிலத்தின் கீழேயே இருந்து விடாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது வெளியே வெளிப்படுத்தப்பட வேண்டும். அது பழத்தின் ரூபத்தில் இருக்க வேண்டும். அதுவே உயர்தர ஸ்திதி ஆகும். உங்களுக்குப் புரிகிறதா? ஏதாவது புதியதாகச் செய்யும் இலக்கை வைத்திருங்கள். இந்த வருடம் இது நிகழும் என நினைக்காதீர்கள். எவ்வாறாயினும், உங்களின் இலக்கானது, விதையானவரையும் புறத்தே வெளிப்படுத்தும். நீங்கள் சென்று உடனடியாக அவர்களுக்குச் சொற்பொழிவுகள் கொடுப்பதாக இருக்கக்கூடாது. அனைத்திற்கும் முதலில், சத்தியத்தின் சக்திக்கான உணர்வை அவர்களுக்குக் கொடுப்பதற்காக நீங்கள் உரையாற்ற வேண்டும். ‘இறுதியில் அந்த நாள் வந்துவிட்டது...’ என்பது அனைவரின் உதடுகளில் இருந்தும் வெளிப்பட வேண்டும். சகல மதங்களும் ஒன்றுசேர்ந்து, ஒன்றாகி, ‘நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம், நாம் ஒரேயொருவருக்குச் சொந்தமானவர்கள்’ என்று கூறும் நாடகத்தை நீங்கள் நடத்தினீர்கள். அது ஒரு நாடகத்தை நடித்துக் காட்டுதல். ஆனால், இது சகல மதங்களையும் சேர்ந்தவர்கள் நடைமுறையில் ஒன்றாக ஒரு மேடையில் வந்து, ஒரே குரலில், ‘தந்தை ஒரேயொருவரே, இந்த ஞானம் மட்டுமே உள்ளது, ஒரேயொரு இலக்கே உள்ளது, ஒரேயொரு வீடே உள்ளது, இதுவே அது’ எனக் கூறவேண்டும். இதையே இப்போது கேட்க வேண்டும். இத்தகைய காட்சி எல்லையற்ற மேடையில் ஏற்படும்போது, வெளிப்படுத்துகைக்கான கொடி ஏற்றப்படும். இந்தக் கொடியின் கீழ் அனைவரும் வந்து இந்தப் பாடலைப் பாடுவார்கள். அனைவரின் உதடுகளில் இருந்தும், ‘எங்களின் பாபா’ என்ற ஒரே சத்தமே ஒலிக்கும். அப்போது மட்டுமே நீங்கள் நடைமுறையில் சிவராத்திரியைக் கொண்டாடினீர்கள் என்று கூறமுடியும். இருள் முடிவிற்கு வரும். தங்கக் காலையின் காட்சிகள் தென்படும். இது இன்று மற்றும் நாளையின் விளையாட்டு எனப்படுகிறது. இன்று, இருள் உள்ளது. நாளை, தங்கக் காலை ஏற்படும். இதுவே இறுதித் திரையாகும். உங்களுக்குப் புரிகிறதா?
நீங்கள் செய்த திட்டங்கள் அனைத்தும் நல்லவை. ஒவ்வொரு இடத்திலும் உள்ள நிலத்திற்கேற்பவே திட்டங்களைச் செய்ய வேண்டும். நிலத்திற்கேற்ப, வழிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தால், அது பரவாயில்லை. இறுதியாக, அனைவரையும் தயாராக்கி, நிச்சயமாக மதுவனத்திற்கு முத்திரை இடுவதற்காக அழைத்து வாருங்கள். வெவ்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த அனைவரும் தயார் செய்யப்பட்டு, அவர்களின் மீது முத்திரை குத்தப்பட வேண்டும். உங்களின் பாஸ்போர்டில் முத்திரை குத்தாமல் உங்களை எங்கும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். எனவே, இந்த முத்திரை மதுவனத்திலேயே குத்தப்பட வேண்டும்.
நீங்கள் அனைவரும் எவ்வாறாயினும் அர்ப்பணித்தவர்களே. உங்களை அர்ப்பணிக்காவிட்டால், நீங்கள் சேவை செய்வதற்கு எவ்வாறு கருவிகள் ஆக முடியும்? நீங்கள் அர்ப்பணித்ததாலேயே, நீங்கள் பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும் ஆகியுள்ளீர்கள். அத்துடன் சேவை செய்வதற்கும் கருவிகள் ஆகியுள்ளீர்கள். இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ, உங்களில் எவரும் ஒரு கிறிஸ்தவ குமாரியாக அல்லது ஒரு பௌத்த குமாரியாக சேவை செய்யவில்லை, அல்லவா? நீங்கள் ஒரு பிரம்மாகுமார் அல்லது பிரம்மாகுமாரியாகவே சேவை செய்கிறீர்கள், இல்லையா? எனவே, பிராமணர்களின் பட்டியலில் அனைவரும் அர்ப்பணித்தவர்களே. நீங்கள் இப்போது மற்றவர்களையும் அர்ப்பணிக்கச் செய்ய வேண்டும். நீங்கள் மரணித்து வாழுகிறீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். ‘எனது பாபா’ எனக் குழந்தைகள் சொல்கிறார்கள். எனவே, பாபாவும் ‘நான் உங்களுடையவர் ஆகியுள்ளேன்’ எனக் கூறுகிறார். எனவே, நீங்கள் அர்ப்பணித்துள்ளீர்கள், இல்லையா? நீங்கள் உங்களுடைய குடும்பத்துடன் வீட்டில் வசித்தாலென்ன அல்லது நிலையத்தில் வசித்தாலென்ன, யார் தமது இதயபூர்வமாக ‘எனது பாபா’ எனக் கூறுகிறாரோ, தந்தை அவர்களைத் தனக்குச் சொந்தமாக ஆக்கிவிடுகிறார். இது இதயத்தால் செய்யப்படும் பேரமாகும். இது வார்த்தைகளால் மட்டும் செய்யப்படும் ஒரு பௌதீகமான பேரமல்ல. ஆனால் இதயத்தால் செய்யப்படுவது. அர்ப்பணித்தல் என்றால் ஸ்ரீமத்தின் கீழ் இருத்தல் என்று அர்த்தம். இந்த முழு ஒன்றுகூடலும் அர்ப்பணித்தவர்களே, இல்லையா? இதனாலேயே, ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது உங்களின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களால் மாற முடியாது. இறைவனின் வீட்டில் புகைப்படம் எடுக்கப்படுதல் என்பது சிறியதொரு பாக்கியம் இல்லை. இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் பௌதீகமானது இல்லை. ஆனால், இது தந்தையின் இதயத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஆகும். அச்சா.
சத்தியத்தின் அதிகாரத்தைக் கொண்டுள்ள மேன்மையான ஆத்மாக்கள் அனைவருக்கும், புதுமையையும் மகத்துவத்தையும் காட்டும் சகல உண்மையான சேவையாளர் குழந்தைகளுக்கும், அன்பினதும் அதிகாரத்தினதும் சமநிலையைப் பேணும் அனைவருக்கும், ஒவ்வோர் அடியிலும் தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான உரிமையைக் கோரும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், உண்மையான, அதாவது அழியாத இரத்தினங்கள் அனைவருக்கும், தமது அழியாத பாகங்களை நடிப்பவர்களுக்கும், அழியாத பொக்கிஷங்களின் அதிபதிகளாக இருக்கும் குழந்தைகளுக்கும், உலகப் படைப்பாளரும், உண்மையான தந்தையும் உண்மையான ஆசிரியரும் சற்குருவிடமிருந்தும் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மனதின் மௌனத்தினால் சேவை செய்து, புதியதொரு கண்டுபிடிப்பை உருவாக்கும் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.ஆரம்பத்தில், நீங்கள் அனைவரும் மௌனத்தைக் கடைப்பிடிக்கும்போது, நீங்கள் அனைவரும் சுதந்திரம் ஆகினீர்கள். நேரமும் சேமிக்கப்பட்டது. அதேபோல், உங்களுக்குள் எந்தவிதமான வீணான எண்ணங்களும் இல்லாமல் இருப்பதற்காக மனதின் மௌனத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களின் உதடுகளில் இருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவராததைப் போல், எந்தவிதமான வீணான எண்ணங்களும் இருக்கக்கூடாது. இதுவே மனதின் மௌனம் எனப்படுகிறது. இதன்மூலம் உங்களின் நேரமும் சேமிக்கப்படுகிறது. மனதின் இந்த மௌனத்தால், புதியதொரு கண்டுபிடிப்பு வெளிப்படும். இதன்மூலம், நீங்கள் குறைந்தளவு முயற்சியுடன் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். விஞ்ஞானத்தின் வசதிகள் ஒரு விநாடியில் ஒரு வழிமுறையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுவதைப் போல், இந்த மௌனத்தின் வசதிகளால், நீங்கள் ஒரு விநாடியில் ஒரு வழிமுறையைக் கண்டுகொள்வீர்கள்.
சுலோகம்:
அர்ப்பணித்த ஸ்திதியில் இருப்பவர்களிடம் அனைவரின் ஒத்துழைப்பும் அர்ப்பணித்துவிடும்.
அறிவித்தல்: இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. உலகத் தியான வேளை. சகல இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை ஒன்றுதிரட்டிய முறையில் தியானம் செய்வார்கள். விசேட யோகத்தின் வேளையில்;, உங்களின் ஒளி மற்றும் சக்தியின் ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள். நெற்றியின் மத்தியில் பாப்தாதாவை வரவழைத்து, ஒன்றிணைந்த ரூபத்தை அனுபவம் செய்யுங்கள். எங்கும் ஒளியினதும் சக்தியினதும் கதிர்களைப் பரப்பும் சேவையைச் செய்யுங்கள்.