21.12.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது அதிபுனிதமான தந்தையின் மடிக்கு வந்து விட்டீர்கள். நீங்கள் உங்களின் எண்ணங்களில் கூட புனிதமாக (தூய்மை) இருக்க வேண்டும்.கேள்வி:
அதிபுனிதமான குழந்தைகளிடமுள்ள போதையும், அடையாளங்களும் யாவை?பதில்:
தாங்கள் அதிபுனிதமான தந்தையின் மடியைப் பெற்றுள்ளார்கள் என்ற போதையை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். அதிபுனிதமான தேவர்களாக அவர்கள் ஆகுகின்றனர். அவர்களின் மனங்களில் தீய எண்ணங்கள் எதுவும் பிரவேசிக்க முடியாது. அவர்கள் நறுமணம் மிக்க மலர்கள், ஒருபொழுதும் தவறான செயல்கள் எதனையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் அகநோக்கிலிருந்து, தங்களையே சோதித்துப் பார்க்கின்றார்கள்: அனைவரும் என்னிடமிருந்து நறுமணத்தைப் பெறுகின்றார்களா? எனது கண்கள் எதை நோக்கியாவது ஈர்க்கப்படுகின்றனவா?பாடல்:
உங்கள் பாதையிலேயே வாழ்ந்து உங்கள் பாதையிலேயே மடிவேன்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். பின்னர், அதை உங்களுக்குள்ளேயே கடைந்து, அதன் அர்த்தத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். உங்கள் பாதையிலேயே மடிவேன் எனக் கூறியவர் யார்? ஆத்மாவே இதைக் கூறினார், ஏனெனில் ஆத்மாவே தூய்மையற்றவர். இறுதியிலேயே நீங்கள் தூய்மையானவர்கள் எனக் கூறப்படுகின்றீர்கள், அல்லது நீங்கள் ஒரு தூய சரீரத்தைப் பெறும்பொழுது உங்களைத் தூய்மையானவர்கள் எனக் கூறமுடியும். தற்பொழுது நீங்கள் முயற்சியாளர்களே. நீங்கள் மரணிக்கவே தந்தையிடம் வருகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். ஒரு தந்தையை விட்டு நீங்கி இன்னொருவரை ஏற்றுக்கொள்வதென்றால், ஒருவருக்கு மரணித்து இன்னொருவருடன் வாழ்வதாகும். லௌகீகத் தந்தையொருவரின் குழந்தை தனது சரீரத்தை நீக்கும் பொழுது, அவர் சென்று வேறொரு தந்தைக்குப் பிறக்கின்றார். இங்கும் அவ்வாறே. நீங்கள் மரணித்து, பின்னர் அதிபுனிதமான தந்தையின் மடியைப் பெறுகின்றீர்கள். அதிபுனிதமானவர் யார்? (தந்தை). புனிதமானவர் யார்? (சந்நியாசிகள்). ஆம், சந்நியாசிகள் புனிதமானவர்கள் எனப்படுகின்றனர். உங்களுக்கும் சந்நியாசிகளுக்குமிடையில் வேறுபாடுள்ளது. அவர்கள் புனிதமானவர்கள் ஆகுகின்றனர், இருந்தும் அவர்கள் தூய்மையற்றவர்கள் மூலமே பிறப்பெடுக்கின்றனர். நீங்கள் இப்பொழுது அதிபுனிதமானவர்கள் ஆகுகின்றீர்கள். அதிபுனிதமான, தந்தையே இவ்வாறு உங்களை ஆக்குகின்றார். அம்மக்கள் புனிதமானவர்கள் ஆகுவதற்காக, தங்களின் வீடுகளை விட்டுச் செல்கின்றனர். ஆத்மாக்களே தூய்மையானவர்கள் ஆகுகின்றனர். சுவர்க்கத்தில் நீங்கள் தேவர்கள், எனவே நீங்களே அதி புனிதமானவர்கள். உங்களின் துறவறம் எல்லையற்றது, அவர்களுடையதோ எல்லைக்குட்பட்டது. அவர்கள் புனிதமானவர்கள் ஆகுகின்றனர், நீங்களோ அதிபுனிதமானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்கின்றீர்கள் எனப் புத்தி கூறுகின்றது. ரஜோ காலப்பகுதியிலேயே சந்நியாசிகள் வருகின்றனர். ரஜோவாக இருப்பதற்கும், சதோபிரதானாக இருப்பதற்குமிடையில் வேறுபாடு உள்ளது. நீங்கள் அதிபுனிதமானவர் மூலம் மிகவும் புனிதமானவர்கள் ஆகுகின்றீர்கள். அவரே ஞானக்கடலும், அன்புக்கடலும் ஆவார். ஆங்கிலத்தில், ஞானக்கடல், அன்புக்கடல் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் உங்களை மிக மேன்மையானவர்கள் ஆக்குகின்றார்! நீங்கள் அதிபுனிதமான, அதிமேலானவரைக் கூவியழைக்கின்றீர்கள்: வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குங்கள்! தூய்மையற்ற உலகிற்கு வந்து, எங்களை அதிபுனிதமானவர்கள் ஆக்குங்கள். எனவே, எங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்ற போதையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும்! நாங்கள் என்னவாக ஆகுவோம்? நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். குழந்தைகள் எழுதுகின்றனர்: பாபா, மாயை எங்களுக்குப் பல புயல்களைக் கொண்டு வருகின்றாள். எங்களின் எண்ணங்களில் தூய்மை ஆகுவதற்கு அவள் எங்களை அனுமதிப்பதில்லை. நாங்கள் அதிபுனிதமானவர்கள் ஆகுவதால், நாங்கள் ஏன் அத்தகைய தீய எண்ணங்களைக் கொண்டிருக்கின்றோம்? தந்தை கூறுகின்றார்: தற்பொழுது, நீங்கள் முற்றிலும் அதிபுனிதமற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது, பல பிறவிகளின் இறுதியில், தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு முழு விசையுடன் கற்பிக்கின்றார். எனவே, குழந்தைகளே, நீங்கள் என்னவாக ஆகுகின்றீர்கள் என்ற போதையை உங்களின் புத்தி கொண்டிருக்க வேண்டும். இலக்ஷ்மி, நாராயணனை அவ்வாறு ஆக்கியவர் யார்? பாரதம் சுவர்க்கமாக இருந்தது. இந்நேரத்தில் பாரதம் தமோபிரதானாகவும், சீரழிந்தும் உள்ளது. இப்பொழுது நாங்கள் அதை அதிபுனிதமாக்குகின்றோம். அதனை அவ்வாறு ஆக்குகின்ற ஒருவர் நிச்சயமாக இருக்க வேண்டும். நீங்கள் தேவர்கள் ஆகவேண்டும் என்ற போதை உங்களினுள்ளே இருக்க வேண்டும். அதற்கு, நீங்கள் அத்தகைய தெய்வீகக் குணங்களைக் கொண்டிருப்பதும் அவசியம். நீங்கள் இப்பொழுது அடிமட்டத்திலிருந்து மேலேறி விட்டீர்கள். ஏணிப்படத்தில் “எழுச்சியும், வீழ்ச்சியும்” என எழுதப்பட்டுள்ளது. கீழே வீழ்ந்து விட்டவர்களால் எவ்வாறு தங்களை அதிபுனிதமானவர்கள் என அழைக்க முடியும்? அதிபுனிதமான தந்தை மாத்திரமே வந்து, குழந்தைகளாகிய உங்களை அவ்வாறு ஆக்குகின்றார். நீங்கள் அதிபுனிதமான உலக அதிபதிகள் ஆகுவதற்கே இங்கு வந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். பாபா எங்களை மிக மேன்மையானவர்கள் ஆக்குவதற்கே வந்துள்ளார். உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையாகுங்கள். ஒரு நறுமணம் மிக்க மலராக ஆகுங்கள். சத்தியயுகம் பூந்தோட்டம் என அழைக்கப்படுகின்றது. துர்நாற்றம் எதுவும் இருக்கக்கூடாது. சரீர உணர்வே துர்நாற்றம் எனக் கூறப்படுகின்றது. எவர் மீதும் தீய பார்வை எதுவும் இருக்கக்கூடாது. உங்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு, உங்களுடைய மனச்சாட்சி உள்ளே உறுத்துகின்ற வகையில் எப் பிழையான செயல்களையும் நீங்கள் செய்யக்கூடாது. நீங்கள் 21 பிறவிகளுக்கான செல்வத்தைச் சேர்க்கின்றீர்கள். நீங்கள் மிகுந்த செல்வந்தவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சகல தெய்வீகக் குணங்களாலும் நிரம்பியிருக்கிறீர்களா என ஆத்மாவாகிய உங்களை நீங்கள் ஒவ்வொருவரும் சோதித்துப் பார்க்க வேண்டும். பாபா கூறுவது போன்று நான் முயற்சி செய்கின்றேனா? உங்களின் இலக்கும், இலட்சியமும் என்னவென்று பாருங்கள்! சந்நியாசிகளுக்கும் உங்களுக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. நீங்கள் யாருடைய மடிக்கு வந்துள்ளீர்கள் என்ற போதையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அவர் எங்களை என்னவாக ஆக்குகிறார்? அகநோக்குடையவராகி, நீங்கள் எந்தளவிற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகியுள்ளீர்கள் எனச் சோதியுங்கள். அனைவரும் ஞானத்தின் நறுமணத்தைப் பெறும் வகையில் நாங்கள் எவ்வளவு அழகானவர்கள் ஆகவேண்டும்! நீங்கள் இந்த நறுமணத்தைப் பலருக்கும் வழங்குகின்றீர்கள். நீங்கள் மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்குகின்றீர்கள். அனைத்திற்கும் முதலில், யார் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்! அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் குருமார்களே. ஞான மார்க்கத்தில் பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர, வேறு எவரும் குருவாக இருக்க முடியாது. ஏனைய அனைவரும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். கலியுகத்திலேயே பக்தி இடம்பெறுகின்றது. அப்பொழுதே இராவணன் பிரவேசிக்கின்றான். உலகிலுள்ள வேறு எவருக்கும் இது தெரியாது. நீங்கள் சத்தியயுகத்தில் இருந்தபொழுது, 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். ஒரு நாள் கடந்து விட்டாலும், நீங்கள் அதைப் பௌர்ணமித் தினம் என அழைக்க மாட்டீர்கள். இங்கும் அவ்வாறே. சக்கரம் ஒரு பேனைப் போல, தொடர்ந்தும் சிறிது சிறிதாகச் சுற்றுகின்றது. நீங்கள் இப்பொழுது 16 சுவர்க்கக் கலைகளும் நிரம்பியவர்கள் ஆகவேண்டும், அதுவும் அரைக்கல்பத்திற்காகும். பின்னர், கலைகள் தொடர்ந்தும் குறைவடையும். உங்களின் புத்தியில் இந்த ஞானம் உள்ளதால், நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். தங்களுக்குக் கற்பிப்பவர் யாரென்பது பலரின் புத்தியில் புகுவதில்லை. ஞானக்கடல்! அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நமஸ்தே, குழந்தைகளே. நீங்களும் பிரமாந்தத்தின் அதிபதிகள் ஆவீர்கள். அனைவரும் அங்கேயே வசிக்கின்றனர்; பின்னர் நீங்கள் உலக அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள். உங்களுடைய உற்சாகத்தை அதிகரிப்பதற்காக, தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை விடவும் அதிக மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள்! நான் உலக அதிபதி ஆகுவதில்லை. நான் உங்களை என்னை விடவும் மகத்தான புகழ்வாய்ந்தவர்கள் ஆக்குகிறேன்;. குழந்தைகள் தங்கள் (லௌகீகத்) தந்தையை விடவும் மகத்தானவர்கள் ஆகும்பொழுது, அவர்கள் கற்றதனால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரியுள்ளார்கள் என்பதைத் தந்தை புரிந்துகொள்கின்றார். தந்தையும் கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன், இப்பொழுது உங்களுக்கு வேண்டிய அந்தஸ்தைக் கோருவதற்கான முயற்சியைச் செய்யுங்கள். தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே முதலில் இந்தப் போதை அதிகரிக்க வேண்டும். தந்தை இவரில் இருப்பதால், தந்தையால் எந்த வேளையிலும் வந்து உங்களுடன் பேச முடியும். குழந்தைகளாகிய நீங்கள் அவருக்குரியவர்கள், அல்லவா? இந்த இரதம் அவருக்குரியது, அல்லவா? எனவே, அதிபுனிதமான தந்தை இப்பொழுது உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளார். நீங்கள் இப்பொழுது மற்றவர்களைத் தூய்மையாக்க வேண்டும். நான் ஓய்வுபெறுகின்றேன். நீங்கள் அதிபுனிதமானவர்கள் ஆகும்பொழுது, தூய்மையற்ற எவரும் இங்கு வரமாட்டார்கள். இது அதிபுனிதமானவர்களின் தேவாலயம் (உhரசஉh). அந்தத் தேவாலயங்களுக்குச் செல்பவர்கள் அனைவரும் தூய்மையற்றவர்களே. அனைவரும் தூய்மையற்றவர்களும், புனிதமற்றவர்களும் ஆவார்கள். இது மிகப்பெரிய, புனிதமான தேவாலயம். தூய்மையற்ற எவரும் இங்கு காலடி எடுத்து வைக்க முடியாது. எவ்வாறாயினும், உங்களால் இப்பொழுது இதனைச் செய்ய முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இவ்வாறு ஆகும்பொழுது, அனைத்துச் சட்டங்களும் அமுல்படுத்தப்படும். வேறு எவராலும் உள்ளே வரமுடியாது. இந்த ஒன்றுகூடலில் தாங்களும் வந்து அமர முடியுமா எனச் சிலர் கேட்கிறார்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் அலுவலகர்கள் (ழககiஉநசள) போன்றோருடன் பணிபுரிவதால், அவர்கள் இங்கு வந்து அமர்வதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும். உங்கள் பெயர் போற்றப்படும்பொழுது, நீங்கள் வேறு எவரைப் பற்றியும் அக்கறைப்படத்; தேவையில்லை. இப்பொழுது உங்களுக்கு இந்த அக்கறை இருப்பது அவசியம்; அதிபுனிதமானவர் கூட அவர்களுக்கு வழி விட வேண்டியுள்ளது. தற்சமயம் அவர்களுக்கு ‘இல்லை’ என உங்களால் கூறமுடியாது. உங்களுடைய செல்வாக்கு பரவும்பொழுது, மக்களின் பகைமையும் குறைவடையும். பின்னர், அதிபுனிதமான தந்தையே பிராமணர்களாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் விளங்கப்படுத்துவீர்கள். சந்நியாசிகளை அதிபுனிதமானவர்கள் என அழைக்க முடியாது. அவர்கள் ரஜோ காலப் பகுதியில் மாத்திரமே வருகிறார்கள். அவர்களால் உலக அதிபதிகள் ஆகமுடியுமா? நீங்கள் இப்பொழுது முயற்சியாளர்கள். சிலவேளைகளில்; உங்கள் நடத்தை மிக நன்றாக உள்ளது, சிலவேளைகளில் அது பெயரை அவதூறு செய்யும் வகையில் உள்ளது. நிலையங்களுக்கு வரும் பலரால் முற்றிலும் எதையும் இனங்காண முடிவதில்லை. நீங்கள் என்னவாக ஆகுகின்றீர்கள் என்பதையும் மறந்து விடுகின்றீர்கள். உங்கள் நடத்தையிலிருந்து, நீங்கள் என்னவாக ஆகுவீர்கள் என்பதைத் தந்தையால் புரிந்துகொள்ள இயலும். உங்கள் பாக்கியத்தில் அதியுயர்ந்த அந்தஸ்து இருக்குமாயின், நீங்கள் பெரும் இராஜரீகத்துடன் நடந்துகொள்கின்றீர்கள். யார் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நினைவில் கொண்டிருங்கள், அப்பொழுது உங்களுக்குள் உள்ளாரப் பொங்கியெழும் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். நாங்கள் இறை தந்தையின் மாணவர்கள், எனவே அவர் மீது அதிகளவு மரியாதை இருக்க வேண்டும். நீங்கள் இக்கணத்திலும் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றீர்கள். அதற்கு இன்னமும் காலம் எடுக்கும் என்பதைத் தந்தை புரிந்துகொள்கின்றார். அனைத்தும் வரிசைக்கிரமமானதே. ஒரு கட்டடமும் முதலில் சதோபிரதானாக இருந்து, பின்னர் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கின்றது. நீங்கள் இப்பொழுது சதோபிரதானாகவும், 16 சுவர்க்கக் கலைகளும் நிரம்பியவர்களாகவும் ஆகப்போகின்றீர்கள். கட்டடம் கட்டப்படுகின்றது. நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சுவர்க்கம் என்ற கட்டடத்தைக் கட்டுகின்றீர்கள். அதிபுனிதமற்றதாக ஆகிவிட்ட பாரதம், இப்பொழுது அதிபுனிதமானதாக ஆக்கப்படுவதையிட்டு நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, நீங்கள் உங்களைப் பெருமளவில் எச்சரிக்கை செய்ய வேண்டும். உங்கள் அந்தஸ்தை அழிக்கும் வகையில் உங்கள் பார்வை இருக்கக்கூடாது. ‘நான் இதனை பாபாவிற்கு எழுதினால், பாபா என்ன நினைப்பார்?’ என எண்ணாதீர்கள். இல்லை, அனைவரும் இந்நேரத்தில் முயற்சி செய்கின்றார்கள். இவ்வேளையில் இவரையும் (பிரம்மா) அதிபுனிதமானவர் என அழைக்க முடியாது. இவர் அவ்வாறு ஆகிவிட்ட பின்னர், இந்தச் சரீரமும் எஞ்சியிருக்காது. நீங்களும் அதிபுனிதமானவர்கள் ஆகுகின்றீர்கள். எவ்வாறாயினும், பல்வேறு அந்தஸ்து மட்டங்கள் உள்ளன. அதற்கு, நீங்களும் முயற்சி செய்து, மற்றவர்களையும் அவ்வாறு செய்வதற்குத் தூண்டுவது அவசியமாகும். பாபா தொடர்ந்தும் பல கருத்துக்களை உங்களுக்கு வழங்குகிறார். எவரேனும் வரும்பொழுது, அவருக்கு அதிபுனிதத்திற்கும் (hழடநைளவ ழக வாந hழடல), புனிதத்திற்கும் (hழடல) இடையிலான வித்தியாசத்தைக் காட்டுங்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் சத்தியயுகத்தில் பிறப்பெடுக்கின்றார்கள்; ஏனையோர் பின்பே வருவதால், அதிகளவு வேறுபாடு உள்ளது. சிவபாபா உங்களை என்னவாக ஆக்குகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்களைச் சரீரமற்ற ஆத்மாக்களாகக் கருதுங்கள். அதிமேலான சிவபாபாவே உங்களுக்குக் கற்பித்து, உங்களை அதிமேலானவர்கள் ஆக்குகிறார். நாங்கள் பிரம்மா மூலம் கற்கின்றோம். பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். மனிதர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுது முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது. உங்களுக்கு மாத்திரமே தெரிந்த, இராம இராச்சியத்தை நீங்கள் ஸ்தாபிக்கின்றீர்கள். நாடகத்திற்கேற்ப, சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு, நாங்கள் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றோம். பாபா இப்பொழுது எங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். தந்தையைத் தவிர்ந்த எவராலும் எங்களை அமைதி தாமத்திற்கோ அல்லது சந்தோஷ தாமத்திற்கோ அழைத்துச் செல்ல முடியாது. 'இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார்" அல்லது 'முக்தி அடைந்து விட்டார்" எனக் கூறும்பொழுது, அவர்கள் தொடர்ந்தும் கட்டுக்கதைகளையே கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: எவ்வாறு விகாரம் நிறைந்த, தூய்மையற்ற ஆத்மாக்களால் அமைதி தாமத்திற்குச் செல்ல முடியும்? நீங்கள் எந்தளவு ஆன்மீகப் போதையைக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளுமாறு இதனை நீங்கள் அவர்களுக்குக் கூற முடியும். எவ்வாறு நாங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என ஞானக்கடலைக் கடையுங்கள். நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும் இந்த உணர்வு உங்களுக்குள் இருக்க வேண்டும்: தகுதியுடையவர்கள் ஆகுவதற்கு எங்களுக்குப் பொறுமையும் இருக்க வேண்டும். வேறெவருமன்றி, பாரத மக்களே முற்றிலும் தகுதிவாய்ந்தவர்களாகவும், முற்றிலும் தகுதியற்றவர்களாகவும் ஆகுகின்றனர். தந்தை இப்பொழுது உங்களைத் தகுதியானவர்கள் ஆக்குகிறார். இந்த ஞானம் மிகவும் களிப்படையச் செய்கிறது. நாங்கள் இந்தப் பாரதத்தை அதிபுனிதமானதாக ஆக்குவோம் என்ற மகத்தான சந்தோஷம் உள்ளார உள்ளது. மிகவும் இராஜரீகமான நடத்தை இருக்க வேண்டும். உங்கள் உணவு, பானம், நடத்தை போன்றவற்றிலிருந்து ஒருவரால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். சிவபாபா உங்களை மிக மேன்மையானவர்கள் ஆக்குகின்றார்! நீங்கள் அவரின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள், எனவே நீங்கள் அவருடைய பெயரைப் புகழடையச் செய்ய வேண்டும். நீங்கள் அதிபுனிதமானவரின் குழந்தைகள் என அவர்கள் புரிந்துகொள்ளுமாறு உங்கள் நடத்தை இருக்க வேண்டும். படிப்படியாக, நீங்கள் தொடர்ந்தும் இவ்வாறு ஆகுவீர்கள். உங்கள் புகழ் தொடர்ந்தும் வெளிப்படும். அப்பொழுது தூய்மையற்றவர்கள் எவரும் உள்ளே வராதவகையில் சட்ட திட்டங்கள் கொண்டுவரப்படும். உங்களுக்கு இன்னமும் காலம் தேவைப்படுகின்றது என பாபா புரிந்துகொள்கின்றார். உங்கள் இராச்சியம் தயாராகும் வகையில் குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். பின்னர் இந்த நியதிகளை நடைமுறைப்படுத்தினால், பரவாயில்லை. அந்த வேளையில், கீழே இங்கிருந்து அபு வீதி வரை நீண்ட வரிசை ஒன்று இருக்கும். நீங்கள் மேலும் முன்னேறுகையில் பாருங்கள். பாபா தொடர்ந்தும் உங்கள் பாக்கியத்தை அதிகரிக்கின்றார். நீங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் (பத்ம பதம்) எனச் சரியாகவே கூறப்பட்டுள்ளது. அவர்கள் காலடியில் ஒரு தாமரையைக் (பதம்) காட்டுகின்றார்;கள். அவை அனைத்தும் குழந்தைகளான உங்களின் புகழாகும். இருப்பினும், தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! தந்தையை நினைவுசெய்யுங்கள்! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தும் வகையில் எச்செயல்களையும் செய்யாதீர்கள். முற்றிலும் நறுமணம்மிக்க மலர் ஆகுங்கள். சரீர உணர்வு எனும் துர்நாற்றத்தை நீக்குங்கள்.
2. உங்களின் நடத்தை மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். அதிபுனிதமானவர்கள் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். உங்களின் அந்தஸ்தை அழிக்கும் வகையில் உங்கள் பார்வை இருக்கக்கூடாது.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு பொக்கிஷத்தையும் பயன்படுத்துவதால், பல மில்லியன் மடங்குகள் பாக்கியசாலிகளாக இருந்து, பல மில்லியன் வருமானத்தைச் சேகரிப்பீர்களாக.நாடகத்திற்கேற்ப, சங்கமயுக வேளையில் நீங்கள் ஒவ்வொரு விநாடியிலும் பல மில்லியன் வருமானத்தைச் சேகரிக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெறுகின்றீர்கள். அத்தகைய ஆசீர்வாதத்தை உங்களுக்காகப் பயன்படுத்துவதுடன், அதைப் பிறருக்கும் தானம் செய்யுங்கள். அதேவிதமாக, எண்ணப் பொக்கிஷத்தையும், ஞானப் பொக்கிஷத்தையும், பௌதீகச் செல்வத்தின் பொக்கிஷத்தையும் பயன்படுத்தி, பல மில்லியன் வருமானத்தைச் சேகரியுங்கள், ஏனெனில் இந்நேரத்தில் உங்கள் பௌதீகச் செல்வத்தைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதால், ஒவ்வொரு சதத்தினதும் பெறுமதியானது ஓர் இரத்தினத்திற்குச் சமமானதாக ஆகுகின்றது. எனவே அனைத்துப் பொக்கிஷங்களையும் உங்களுக்காகவும், சேவைக்காகவும் பயன்படுத்துங்கள், நீங்கள் பல மில்லியன் மடங்குகள் பாக்கியசாலிகள் ஆகுவீர்கள்.
சுலோகம்:
உங்கள் இதயத்தில் அன்பு இருந்தால், உங்களால் இலகுவாக அனைவரினதும் ஒத்துழைப்பைப் பெற இயலும்.