23-12-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
இனிய குழந்தைகளே, இந்தத் தூய்மையற்ற உலகம் ஒரு பழைய கிராமம் ஆகும். இது நீங்கள் வாழ்வதற்குத் தகுதியானதல்ல. நீங்கள் இப்பொழுது தூய, புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். கேள்வி: தந்தை எந்தவொரு வழிமுறையைத் தனது குழந்தைகள் முன்னேற்றம் அடைவதற்காகக் கூறுகின்றார்? பதில்: குழந்தைகளே, கீழ்ப்படிவாக இருந்து, தொடர்ந்தும் பாப்தாதாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். பாபாவும், தாதாவும் இணைந்திருக்கின்றார்கள். ஆகையினால் இவருடைய (பிரம்மா) வழிகாட்டல்களால் ஏதாவது தீங்கு ஏற்பட்டால், தந்தையே அதற்குப் பொறுப்பாளியாகி, அனைத்தையும் சரிப்படுத்தி விடுவார். நீங்கள் உங்களுடைய சொந்தக் கட்டளைகளைப் பயன்படுத்தக்கூடாது. இவற்றை சிவபாபாவின் வழிகாட்டல்கள் எனக் கருதியவாறே தொடர்ந்தும் முன்னேறுங்கள், அப்பொழுது பெரும் முன்னேற்றம் இருக்கும். ஓம் சாந்தி. ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தும் பிரதான விடயம்: நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையுடன் இங்கமர்ந்திருந்து தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்படும். அம்மக்கள் ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றார்கள். இந்தத் தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்படும்; உங்களை ஆத்மாக்களாகக் கருதி தந்தையை நினைவுசெய்யுங்கள். இது அதி இலகுவானது. இதுவே பாரதத்தின் இலகுவான, புராதன இராஜயோகமாகும். நீங்கள் "புராதனம்” என்று கூறியபொழுதிலும், அதற்கும் ஒரு காலப் பகுதி இருக்க வேண்டும். நீங்கள் "மிக நீண்ட காலத்திற்கு முன்னர்” எனக் கூறினாலும் அது எவ்வளவு காலத்திற்கு முன்னர் இருந்தது? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் உங்களுக்கு மிகச்சரியாக 5000 வருடங்களுக்கு முன்னரும் இராஜயோகம் கற்பித்தேன். தந்தையைத் தவிர வேறு எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. குழந்தைகளைத் தவிர வேறு எவராலும் இதைப் புரிந்துகொள்ளவும் முடியாது. குழந்தைகளாகிய ஆத்மாக்கள் பரமாத்மாவாகிய தந்தையிடமிருந்து நீண்ட காலம் பிரிந்திருந்ததாக நினைவுகூரப்படுகின்றது. தந்தையும் கூறுகின்றார்: நீங்கள் ஏணியில் இறங்கி வருகையில், தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் நினைவு செய்கின்றீர்கள். அனைவரும் ‘ஓ தூய்மையாக்குபவரே!’ என்று கதறி அழுகின்றார்கள். கலியுகத்தில் தூய்மையற்றவர்கள் மாத்திரமே உள்ளார்கள். சத்திய யுகத்தில் தூய்மையானவர்கள் மாத்திரமே இருக்கின்றார்கள். அது தூய்மையான உலகமாகும். இந்தத் தூய்மையற்ற உலகம் நீங்கள் வாழத் தகுதியற்றது. எவ்வாறாயினும், மாயையின் ஆதிக்கமும் குறைந்ததல்ல. அவர்கள் இங்கே 100 முதல் இருந்து 125 மாடிக் கட்டடங்களைக் கட்டுவதை நீங்கள் பார்க்க முடிகின்றது. இது மாயையின் பகட்டு எனக் கூறப்படுகின்றது. நீங்கள் ஒருவரைச் சுவர்க்கத்திற்கு வருமாறு அழைத்தாலும், அவர் இங்கேயே சுவர்க்கம் இருப்பதாகக் கூறுமளவிற்கு மாயையின் அத்தகைய ஆடம்பரம் உள்ளது. இதுவே மாயையின் ஆடம்பரம் என அழைக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இது பழைய கிராமம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இது பழைய உலகமான, நரகம் என அழைக்கப்படுகின்றது, அதுவும் இது ஆழ்நரகமாகும். சத்திய யுகம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இவ்வார்த்தைகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை விகாரமான உலகம் என அனைவரும் அழைக்கின்றனர். சுவர்க்கம் விகாரமற்ற உலகமாக இருந்தது. சுவர்க்கம் விகாரமற்ற உலகம் என்றும், நரகம் விகாரமான உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. மிக எளிமையான விடயங்கள் சில ஏன் எவரது புத்தியிலும் நிலைப்பதில்லை? மனிதர்கள் அதிக துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள்! தொடர்ந்தும் பல்வேறு யுத்தங்களும், அதிகச் சண்டையும் இடம்பெறுகின்றன. போட்டவுடனேயே மக்கள் மரணிக்;கக்கூடியவாறான அத்தகைய குண்டுகளை அவர்கள் நாளுக்கு நாள் உற்பத்தி செய்கின்றார்கள். எவ்வாறாயினும் சீரழிந்த புத்தியுடைய மனிதர்களால், இப்பொழுது என்ன நடக்க இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. என்ன நடக்கப் போகின்றது என்பதைத் தந்தையைத் தவிர வேறு எவராலும் விளங்கப்படுத்தவும் முடியாது. புதிய உலகம் மறைமுகமாக ஸ்தாபிக்கப்பட்டு, பின்னர் பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் மறைமுகமான போராளிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் ஒரு யுத்தத்தில் இருப்பதை எவராவது புரிந்துகொள்கின்றார்களா? உங்கள் யுத்தம் ஐந்து விகாரங்களுடனாகும். நீங்கள் அனைவருக்கும் தூய்மையாகுமாறு கூறுகின்றீர்கள். நீங்கள் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் அனைவரும் சகோதர, சகோதரிகள். நீங்கள் சரியான முறையில் விளங்கப்படுத்த வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவுக்கு ஒரு குழந்தையல்ல, பல குழந்தைகள் உள்ளனர். மிகச்சரியான பெயர் மக்களின் தந்தை (பிரஜாபிதா) என்பதாகும். ஒரு லௌகீகத் தந்தை ஒருபொழுதும் மக்களின் தந்தையென அழைக்கப்படுவதில்லை. பிரஜாபிதா பிரம்மா இருப்பதால், அவரது குழந்தைகள் அனைவரும் பிரம்மாகுமாரர்களும் குமாரிகளுமான, சகோதரர்களும், சகோதரிகளும் ஆவார்கள். எவ்வாறாயினும் அவர்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை; அவர்களது புத்தி கல்லுப் போன்றுள்ளது. அவர்கள் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வதுமில்லை. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் அனைவரும் சகோதர, சகோதரிகள்; அவர்களால் விகாரத்தில் ஈடுபட முடியாது. "பிரஜாபிதா” என்ற வார்த்தையைப் பெயர்ப் பலகையில் கொண்டிருப்பது முக்கியமாகும். நீங்கள் நிச்சயமாக இந்த வார்த்தைகளை எழுத வேண்டும். வெறுமனே "பிரம்மா” என்று எழுதுவதன் மூலம் அந்தளவு தாக்கம் இருக்க மாட்டாது. ஆகையினால் பலகையில் சரியான வார்த்தைகள் எழுதப்பட வேண்டும். இது அதி முக்கியமானது. சில பெண்களுக்கும் பிரம்மா என்ற பெயர் உள்ளது. அவர்கள் பெயர்த் தட்டுப்பாடு காரணமாக ஆண்களின் பெயரைப் பெண்களுக்கு வைத்துள்ளார்கள். அவர்கள் பல்வேறு பெயர்களை எங்கிருந்து கொண்டுவர முடியும்? அனைத்தும் நாடகத்திற்கேற்பவே நடைபெறுகின்றது. தந்தைக்கு நம்பிக்கையுடையவராகவும், கீழ்ப்படிவானவராகவும் ஆகுவது உங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்வது போன்றதல்ல! பாபாவும் தாதாவும் இணைந்திருக்கின்றார்கள். யார் பேசுகின்றார் என உங்களால் கூறமுடியாது. இதனாலேயே சிவபாபா கூறுகின்றார்: மக்களால் எனது வழிகாட்டல்களைப் புரிந்துகொள்ளவும் முடியாதுள்ளது. உங்களுக்குக் கூறப்படுபவை சரியாக அல்லது பிழையாக இருந்தாலும் எப்பொழுதும் சிவபாபாவே அதை உங்களுக்குக் கூறுகின்றார் எனக் கருதுங்கள், அவரே பொறுப்பாளியாவார். இவர் ஏதாவது தீங்;கு விளைவிப்பதைக் கூறினாலும் அவரே பொறுப்பாளியாதலால், அவர் அனைத்தையும் சரிப்படுத்தி விடுவார். தொடர்ந்தும் அவற்றை சிவபாபாவின் வழிகாட்டல்கள் எனக் கருதுங்கள். பெருமளவு முன்னேற்றம் இருக்கும். எவ்வாறாயினும் இதைப் புரிந்துகொள்வது உங்களிற் சிலருக்;குச் சிரமமாகத் தெரிகின்றது; அப்பொழுது நீங்கள்; தொடர்ந்தும் உங்கள் சொந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்;கு வழிகாட்டல்களைக் கொடுப்பதற்கும், விளங்கப்படுத்துவதற்கும் வெகு தொலைவிலிருந்து வருகின்றார். வேறு எவரிடமும் இந்த ஆன்மீக ஞானம் இல்லை. இது பற்றி நாள் முழுவதும் சிந்தியுங்கள். மக்கள் புரிந்துகொள்ளக்கூடியவாறு எதனை நீங்கள் எழுத வேண்டும்? மக்களின் பார்வை அதன் மீது வீழக்கூடியவாறு அத்தகைய எளிமையான வார்த்தைகளை நீங்கள் எழுத வேண்டும். எவரும் கேள்வி கேட்க வேண்டிய தேவை இல்லாதவாறு அத்தகையதொரு முறையில் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தை கூறுகிறார் என அவர்களுக்குக் கூறுங்கள்: உங்களை ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்படும். மிக நன்றாக நினைவில் நிலைத்திருப்பவர்கள்;, உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். இது ஒரு விநாடிக்கான விடயமாகும். மக்கள் பல்வேறு வகையான கேள்விகளைக் கேட்கின்றார்கள்; நீங்கள் அவை அனைத்திற்கும் பதிலளிக்கக்கூடாது. அதிகளவு கேள்விகளைக் கேட்காதீர்கள் என அவர்களிடம் கூறுங்கள். அனைத்திற்கும் முதலில் ஒரு விடயத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்! நீங்கள் கேள்விகள் எனும் காட்டினுள் சிக்கிக் கொண்டீர்களானால், உங்களால் வெளியே வரும் பாதையைக் கண்டுகொள்ள முடியாது. இது, மக்கள் மூடுபனியில் சிக்கிக்கொள்ளும்பொழுது, அதிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டுகொள்வது சிரமமாக இருப்பது போன்றது. இங்கும் அவ்வாறே. மக்கள் மாயையிடம் அதிகளவில் அகப்பட்டுள்ளார்கள். ஆகையினால் முதலில் அனைவருக்கும் ஒரு விடயத்தைக் கூறுங்கள்: நீங்கள் ஓர் அழிவற்ற ஆத்மா. தந்தையும் அழிவற்றவரும், தூய்மையாக்குபவரும் ஆவார். நீங்கள் தூய்மையற்றவர்கள். நீங்கள் இப்பொழுது வீட்டிற்குத் திரும்ப வேண்டும் அல்லது புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். ஆத்மாக்கள் இறுதி வரை பழைய உலகிற்குத் தொடர்ந்தும் கீழிறங்கி வருவார்கள். முழுமையாகக் கற்காதவர்கள் நிச்சயமாக இறுதியில் வருவார்கள். கணக்கு மிகத் தெளிவானது, நீங்கள் அனைவரும் எந்தளவு கற்றுள்ளீர்கள் என்பதிலிருந்து யார் முதலில் வருவார்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. இது ஒரு பாடசாலையிலும் காணப்படுகிறது. இலக்கை நோக்கி ஓடி, அதனைத் தொட்டவுடன் திரும்பி வாருங்கள்! முதலில் திரும்பி வருபவர் ஒரு பரிசைப் பெறுகின்றார். இது விடயம் எல்லையற்றது. நீங்கள் பெறுகின்ற பரிசு எல்லையற்றது. தந்தை கூறுகின்றார்: நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். இங்கேயே நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். இதனாலேயே பாபா உங்களை ஓர் அட்டவணையை வைத்திருக்குமாறு கேட்கின்றார். நினைவு யாத்திரையின் அட்டவணையை வைத்திருங்கள், அப்பொழுது நீங்கள் இலாபத்திலா அல்லது நட்டத்திலா உள்ளீர்கள் எனப் புரிந்துகொள்வீர்கள். எவ்வாறாயினும் சில குழந்தைகள் அதை வைத்திருப்பதில்லை. பாபா குழந்தைகளாகிய உங்களை இதைச் செய்யுமாறு கேட்கின்றார். ஆனால் நீங்கள் இதைச் செய்வதில்லை. மிகச்சிலரே இதைச் செய்கின்றார்கள், இதனாலேயே வெகு சிலருடைய மாலையே உருவாக்கப்படுகின்றது. எண்மர் அதியுயர்ந்த புலமைப்பரிசிலைப் பெறுகின்றார்கள், பின்னர், 108 பேர் மேலதிகப் புள்ளிகளைப் பெறுகின்றார்கள். யார் மேலதிகப் புள்ளிகளைப் பெறுவார்கள்? சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினியாக ஆகவுள்ளவர்கள். மிகச்சிறிதளவு வித்தியாசமே உள்ளது. தந்தை கூறுகின்றார்: முதலில் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள்! இதுவே நினைவு யாத்திரை. தந்தையிடமிருந்து வந்த இந்தச் செய்தியைக் கொடுங்கள். அதிகளவு பேச வேண்டிய தேவையில்லை. வெறுமனே "மன்மனாபவ” என்று கூறுங்கள்! சரீர உறவினர்கள் அனைத்தையும் துறவுங்கள்! பழைய உலகின் அனைவரையும் உங்கள் புத்தியிலிருந்து அகற்றுங்கள், ஏனெனில் நீங்கள் இப்பொழுது சரீரமற்றவர்களாகி வீடு திரும்ப வேண்டும். இங்கு பாபா உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறார், ஆனால் நாள் முழுவதும் நீங்கள் அவரை நினைவுசெய்வதில்லை. நீங்கள் ஸ்ரீமத்தையும் பின்பற்றுவதில்லை; அது உங்கள் புத்தியில் நிலைத்திருப்பதும் இல்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல விரும்பினால் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுங்கள். பாபா உங்களுக்கு உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கொடுத்தார், பின்னர் நீங்கள் 84 பிறவிகள் எடுக்கும்பொழுது அதனை இழந்தீர்கள். இதில் நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் என்ற கேள்வியே இல்லை. பல குழந்தைகள் அல்பாவை அறியாததால் தொடர்ந்தும் பல கேள்விகளைக் கேட்கின்றனர். தந்தை கூறுகின்றார்: முதலில், சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள், நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். வேறு எதையும் கேட்க வேண்டிய தேவையில்லை. அவர்கள் அல்பாவைப் புரிந்துகொள்ளாமல் தொடர்ந்தும் பீற்றாவையும், தீற்றாவையும் பற்றிப் பேசும்பொழுது, நீங்கள் குழப்பமடைந்து பின்னர் விரக்தியடைகிறீர்கள். தந்தை கூறுகின்றார்: முதலில் அல்பாவைப் புரிந்து கொள்வதால், நீங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வீர்கள். என்னிடமிருந்து என்னைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் புரிந்துகொள்வதற்கு எதுவுமே எஞ்சியிருக்க மாட்டாது. இதனாலேயே உங்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்கப்படுகின்றது. நீங்கள் ஏழு நாட்களில் அதிகளவு புரிந்துகொள்ள முடியும். எவ்வாறாயினும் இதைப் புரிந்துகொள்பவர்கள் மத்தியிலும் வரிசைக்கிரமம் உள்ளது. சிலர் எதையுமே புரிந்துகொள்வதில்லை. அவர்கள் எவ்வாறு அரசர்களாகவோ அல்லது அரசிகளாகவோ ஆகமுடியும்? ஒருவரை மாத்திரம் அரசர்கள் ஆட்சிசெய்வார்களா? ஒவ்வொருவரும் தமது சொந்தப் பிரஜைகளை உருவாக்க வேண்டும். பெருமளவு நேரம் வீணாக்கப்படுகின்றது. அவர்கள் ஏழைகளும், உதவியற்றவர்களும் எனத் தந்தை கூறுகின்றார். அவர்கள் எவ்வளவுதான் பெரிய அந்தஸ்தைக் கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் தூசாகப் போகின்றது என்பதைத் தந்தை அறிவார். சிறிதளவு காலமே எஞ்சியுள்ளது. விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள் அழிக்கப்படுவார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அவ்வாறான அன்பான புத்தியைக் கொண்டுள்ளோம் என உங்களால் புரிந்துகொள்ள முடியும். சிலர் தங்களால் ஓரிரு மணித்தியாலங்களுக்கே நினைவில் நிலைத்திருக்க முடிகின்றது எனக் கூறுகின்றனர். உங்களுடைய லௌகீகத் தந்தை மீது ஓரிரு மணித்தியாலம்தான் அன்பு காட்டுவீர்களா? நீங்கள் நாள் முழுவதும் தொடர்ந்தும் "பாபா, பாபா” என்று கூறுகிறீர்கள். இங்கே நீங்கள் "பாபா, பாபா” என்று கூறினாலும், அந்த ஆழமான அன்பு இருப்பதில்லை. சிவபாபாவை நினைவுசெய்யுமாறு உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றது. நீங்கள் உண்மையான நினைவைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இதில் மிகவும் திறமைசாலிகளாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கக்கூடாது. பலர், ‘நான் சிவபாபாவை அதிகளவில் நினைவுசெய்கின்றேன்’ எனக் கூறுகிறார்கள். அவ்வாறாயின், அவர்கள் பறந்து கொண்டிருக்க வேண்டும்: பாபா, நான் இப்பொழுது பலருக்கும் நன்மை அளிப்பதற்காகச் சேவைக்குச் செல்கின்றேன். நீங்கள் அதிகளவு மக்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுக்கும்பொழுது, அதிகளவில் நீங்கள் நினைவில் நிலைத்திருப்பீர்கள். பல புதல்விகள் தாம் பந்தனத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் முழு உலகமுமே பந்தனத்திலுள்ளது! பந்தனங்கள் சாமர்த்தியமாக துண்டிக்கப்பட வேண்டும். பல வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக, நாளைக்கு நீங்கள் மரணிப்பதாக இருந்தால், உங்களுடைய குழந்தைகளை யார் பராமரிப்பார்கள்? நிச்சயமாக யாரோ ஒருவர் அவர்களைப் பராமரிப்பதற்கு வெளிப்படுவார். அறியாமைப் பாதையில், நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துகொள்வீர்கள். இக்காலத்தில், மறுபடியும் திருமணம் செய்வது பெரிய பிரச்சினையாகும். ஒருவருக்குச் சிறிதளவு பணத்தைக் கொடுத்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறுங்கள். இது உங்களுடைய மரணித்து வாழ்கின்ற பிறப்பாகும். நீங்கள் மரணித்து வாழும்பொழுது, உங்களுக்கான அனைத்தையும் யார் பார்த்துக் கொள்வார்கள்? நிச்சயமாக ஒரு தாதி (ரெசளந) வேலைக்கு அமர்த்தப்படுவார். பணத்தினால் எதனைத்தான் அடைய முடியாது? நீங்கள் நிச்சயமாகப் பந்தனத்திலிருந்து விடுதலையாக வேண்டும். சேவையில் மிகுந்த ஆர்வமுடையவர்கள் சேவை செய்ய ஓடிச் செல்வார்கள்; அவர்கள் உலகிற்கு மரணித்தவர்கள்;. இங்கே தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் போன்றோரை ஈடேற்றவும் வேண்டும். அனைவரும் தமோபிரதானிலிருந்து, சதோபிரதானாகும் வகையில், அவர்களுக்கு "மன்மனாபவ” என்ற செய்தியைக் கொடுங்கள். தந்தையே இதை உங்களுக்குக் கூறுகின்றார். ஏனைய அனைவரும் மேலிருந்து கீழிறங்கி வருகிறார்கள். அவர்களைப் பின்பற்றுபவர்களும் அவர்களின் பின்னால் தொடர்ந்தும் கீழிறங்கி வருகிறார்கள். உதாரணமாக, கிறிஸ்து அனைவரையும் கீழே கொண்டுவந்தார். இங்கே கீழே தமது பாகங்களை நடித்த பின்னர் அமைதியற்றவர்கள் ஆகும்பொழுது, அவர்;கள் அமைதியை வேண்டுவதாகக் கூறுகின்றார்கள். அவர்கள் அமைதி நிலையில் இருந்தார்கள், பின்னர் அவர்கள் இங்கு கீழே தங்களுடைய குருவைப் பின்பற்ற வேண்டியிருந்தது. பின்னர் அவர்கள் "ஓ, தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” எனக் கூவியழைக்கிறார்கள். நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது எனப் பாருங்கள்! அவர்கள் இறுதியில் தமது இலக்கை அடைவதற்காக வருவார்கள். சில குழந்தைகள் காட்சிகளைப் பெற்றுள்ளார்கள். அவர்கள் வந்து தங்களுடைய "மன்மனாபவ” ஆகுகின்ற இலக்கை அடைவார்கள். நீங்கள் இப்பொழுது பிச்சைக்காரரிலிருந்து, இளவரசர்கள் ஆகுகின்றீர்கள். இந்நேரத்தில் செல்வந்தர்களாக உள்ளவர்கள் பின்னர் பிச்சைக்காரர்கள் ஆகுவார்கள். இது ஓர் அற்புதமே! எவரும் இந்நாடகம் பற்றி அறியார். முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. அங்கு ஏழைகள் சிலரும் இருப்பார்கள், இல்லையா? இதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் தொலைநோக்கான புத்தி தேவை. இறுதியில் எவ்வாறு நீங்கள் அனைவரும் இடமாற்றப்படுவீர்கள் என்ற காட்சிகளைக் காண்பீர்கள். நீங்கள் புதிய உலகிற்காகக் கற்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் கற்று சித்தியெய்தும்பொழுது, தேவ குலத்துக்குள் செல்வீர்கள். தற்பொழுது நீங்கள் பிராமணக் குலத்தில் இருக்கின்றீர்கள். இவ்விடயங்களை வேறெவராலும் புரிந்துகொள்ள முடியாது. கடவுள் கற்பிக்கின்றார் என்பது சிறிதளவேனும் எவரது புத்தியிலும் நிலைத்திருப்பதில்லை. அசரீரியான கடவுள் நிச்சயமாக இங்கே வருகின்றார். இந்த நாடகம் மிகவும் அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாடகத்தைப் புரிந்துகொண்டு, உங்களுடைய பாகங்களை நடிக்கின்றீர்கள். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுகின்றது என்பதை விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் திரிமூர்த்தி படத்தைப் பயன்படுத்த வேண்டும். விநாசம் நிச்சயமாக இயல்பாகவே இடம்பெறும். அவர்கள் வெறுமனே பெயரைக் கொடுத்துள்ளனர்;. இந்நாடகம் நிச்சயிக்கப்பட்டது. உங்களை ஆத்மாக்களாகக் கருதி தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயம். அதன் மூலம் கறை அகற்றப்படும். பாடசாலையில் எவ்வளவு நன்றாகக் கற்கின்றீர்களோ, அதற்கேற்ப உங்கள் வருமானமும் அதிகளவாகும். நீங்கள் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் 21 பிறவிகளுக்குப் பெறுகின்றீர்கள்; இது ஒரு சிறிய விடயமல்ல! இங்கு சிலர் செல்வத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் அதிலிருந்து உண்பதற்குக் காலம் இருக்காது. தந்தை தன்னிடமிருந்த அனைத்தையும் இங்கே சேவைக்காகப் பயன்படுத்தி விட்டார். ஆகையினால் அவர் அதிகளவு சேர்த்துக் கொண்டார்! அனைவரின் செல்வமும் சேர்க்கப்பட மாட்டாது. பல கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய செல்வம் பயன்பட மாட்டாது. தந்தை அதை ஏற்றுக்கொள்வதில்லை அல்லது அவர் அதற்கான பிரதிபலனைக் கொடுக்க வேண்டியிருக்கும். அச்சா. இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார். தாரணைக்கான சாராம்சம்: - உங்கள் பந்தனங்களை முடிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள். உங்கள் இதயத்தில் தந்தை மீது ஆழமான அன்பு வைத்திருங்கள். தந்தையின் செய்தியை அனைவருக்கும் கொடுத்து, அனைவருக்கும் நன்மை செய்யுங்கள்.
- இந்த எல்லையற்ற நாடகத்தை ஒரு தொலைநோக்குப் புத்தியால் புரிந்துகொள்ளுங்கள். ஒரு பிச்சைக்காரனிலிருந்து, இளவரசர் ஆகுகின்ற கல்வியில் முழுமையான கவனஞ் செலுத்துங்கள். உண்மையான நினைவு அட்டவணையை வைத்திருங்கள்.
ஆசீர்வாதம்: நீங்கள் சத்தியத்தின் அடிப்படையில் ஒரேயொரு தந்தையை வெளிப்படுத்துகின்ற, ஒரு பயமற்ற அதிகார சொரூபம் ஆகுவீர்களாக. சத்தியமே வெளிப்பாட்டிற்கான அடிப்படை ஆகும். தந்தையை வெளிப்படுத்துவதற்குத் தயக்கத்துடன் அல்லாமல், பயமின்றியும், ஓர் அதிகார சொரூபமாகவும் பேசுங்கள். எங்கள் அனைவரினதும் தந்தை ஒரேயொருவரே, அவர் மாத்திரமே இப்பணியை மேற்கொள்கின்றார், நாங்கள் அனைவரும் ஒரேயொருவரின் குழந்தைகள், அவரே உண்மையான ஒரேயொருவர் என்பதையேனும் பல அபிப்பிராயங்களை உடையவர்கள் ஏற்றுக்கொள்ளும்பொழுதே வெற்றிக் கொடி ஏற்றப்படும். அந்த நம்பிக்கையுடன் நீங்கள் முக்தி தாமத்திற்குத் திரும்பிச் செல்வீர்கள். பின்னர் உங்கள் சொந்தப் பாகங்களை நடிப்பதற்கு நீங்கள் கீழிறங்கி வரும்பொழுது, "கடவுள் ஒருவரே” எனும் இந்தச் சம்ஸ்காரங்கள் வெளியாகும். இதுவே சத்தியயுகத்தில் உள்ள விழிப்புணர்வு ஆகும். சுலோகம்: எதனையாவது சகித்துக் கொள்வதெனில், உங்கள் சொந்தச் சக்தி ரூபத்தை வெளிப்படுத்துவதாகும்.
---ஓம் சாந்தி---
|
|