30.12.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் சங்கமயுகத்தில் சத்தியம் என்ற ஆசீர்வாதத்தை சத்தியமான தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். எனவே நீங்கள் ஒருபோதும் பொய் பேசக்கூடாது.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் விகாரமற்றவர்கள் ஆகுவதற்கு நிச்சயமாகச் செய்ய வேண்டிய முயற்சி என்ன?

பதில்:
நீங்கள் நிச்சயமாக ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யவேண்டும். நெற்றியின் மத்தியில் ஆத்மாவை மாத்திரம் பார்க்கின்ற பயிற்சியைச் செய்யுங்கள். நீங்கள் ஆத்மாக்களுடன் பேசும்போதும், ஆத்மாக்களைச் செவிமடுக்கும்போதும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். உங்களுடைய பார்வை அவர்களின் சரீரத்தின்மீது விழக்கூடாது. இதுவே நீங்கள் செய்யவேண்டிய பிரதான முயற்சியாகும். இந்த முயற்சியிலேயே தடைகள் வருகின்றன. “நான் ஓர் ஆத்மா, நான் ஓர் ஆத்மா” என்று இயன்றவரை பயிற்சி செய்யுங்கள்.

பாடல்:
ஓம் நமசிவாய!

ஓம் சாந்தி.
உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்று தந்தை இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டியுள்ளார். நீங்கள் தந்தையிடமிருந்து அறிந்துள்ளவற்றையும், தந்தை உங்களுக்குக் காட்டியுள்ள பாதையையும் உலகிலுள்ள எவரும் அறியமாட்டார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். “உலகின் அதிபதிகளான, பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக ஆகுபவர்கள் பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகின்றனர்.” என்பதன் அர்த்தத்தையும் அவர் விளங்கப்படுத்தியுள்ளார். “நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவரும், பூஜிப்பவரும் ஆவீர்கள்” என்று பரமாத்மாவையிட்டு நீங்கள் கூறமாட்டீர்கள். இது முற்றிலும் சரியானது என்பது உங்கள் விழிப்புணர்வில் பிரவேசித்துள்ளது. தந்தை மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய செய்தியை உங்களுக்கு கூறுகின்றார். வேறு எவரும் “ஞானக் கடல்” என்று அழைக்கப்பட முடியாது. இது ஸ்ரீ கிருஷ்ணரின் புகழ் அல்ல. கிருஷ்ணர் என்பது அந்த ஆத்மாவினுடைய சரீரத்தின் பெயராகும். அவர் சரீரதாரியாவார், இந்த ஞானம் அனைத்தையும் அவரால் கொண்டிருக்க முடியாது. அந்த ஆத்மா இப்பொழுது ஞானத்தைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இது ஒரு அற்புதமான விடயமாகும். வேறு எவராலும் அன்றி தந்தையாலேயே இதனை விளங்கப்படுத்த முடியும். பலவகையான ஹத்த யோகத்தைக் கற்பிக்கின்ற சாதுக்களும் புனிதர்களும் இருக்கின்றார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். நீங்கள் சத்தியயுகத்தில் எவரையும் பூஜிப்பதில்லை. நீங்கள் அங்கே பூஜிப்பவர்கள் ஆகுவதில்லை. அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தார்கள் என்று அவர்களையிட்டே கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், அவர்கள் இன்னும் அவ்வாறு இல்லை. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களே இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகிவிட்டார்கள். தந்தை கூறுகிறார்: இவரும் பூஜித்ததுண்டு. இந்நேரத்தில் முழு உலக மக்களும் பூஜிப்பவர்களாக இருக்கின்றார்கள். புதிய உலகில், பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பவர்களின் தேவ தர்மம் மாத்திரமே இருக்கின்றது. நாடகத்திட்டத்திற்கு ஏற்ப, இது முற்றிலும் சரியானது என்ற விழிப்புணர்வுடன் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இருக்கின்றீர்கள். இது உண்மையாக கீதையின் அத்தியாயமாகும். அவர்கள் கீதையில் பெயரை மாற்றிவிட்டார்கள், நீங்கள் இதை விளங்கப்படுத்த முயற்சி செய்கின்றீர்கள், அவ்வளவே! கீதையை கிருஷ்ணரே உபதேசித்தார் என்று அவர்கள் 2500 ஆண்டுகளாக நினைத்துக்கொண்டிருந்தார்கள். அசரீரியான தந்தையே கீதையைக் கூறினார் என்பதை ஒரு பிறவியில் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்குக் காலம் எடுக்கும். பக்தியின் விருட்சம் எவ்வளவு உயரமானதும், சிக்கலானதும் என்பதைப் பற்றியும் அவர் விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார்; என நீங்கள் எழுதலாம். இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கின்ற குழந்தைகள் மற்றவர்களுக்கும் இந்த நம்பிக்கையுடன் விளங்கப்படுத்த வேண்டும். இந்த நம்பிக்கையில்லாவிட்டால், எவ்வாறு மற்றவர்களுக்கு இதை விளங்கப்படுத்தலாம் என்பதையிட்டு நீங்கள் உங்;களுக்குள்ளேயே குழப்பமடைந்து, ஏதாவது குழப்பம் இடம்பெறலாம் எனப் பயப்படுகின்றீர்கள். நீங்கள் இன்னமும் பயமற்றவர்களாக ஆகவில்லை. நீங்கள் முழுமையாக ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகும்போதே பயமற்றவர்களாக இருப்பீர்கள். பக்தி மார்க்கத்திலேயே அவர்கள் பயப்படுகின்றார்கள். நீங்கள் அனைவரும் தைரியமான போர் வீரர்கள். மாயையை எவ்வாறு வெற்றி கொள்வதென்பது உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. “மன்மனாபவ” என்று தந்தை உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். தூய்மையாக்குபவராகிய தந்தை மாத்திரமே வந்து இதை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்தக் கருத்து கீதையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், எவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்களாக! கீதையில் இந்தக் கருத்துக்கள், ஒரு மூட்டை மாவில் ஒரு துளி உப்பைப் போன்றதாகும். அனைத்தினதும் நம்பிக்கையை தந்தை உங்களுக்குள் பதியச் செய்கின்றார். நம்பிக்கை நிறைந்த புத்தியைக் கொண்டிருப்பவர்கள் வெற்றியாளர்கள் ஆகுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது உங்களுடைய ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் நிச்சயமாக உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வசிக்க வேண்டும். அனைவரும் இங்கே வந்து வசிப்பதற்கான தேவையில்லை. சேவை இடம்பெற வேண்டும், நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். நீங்கள் மீட்புப் படையினர். நீங்கள் இறை மிஷனைச் சேர்ந்தவர்கள். நீங்கள் முன்னர் மாயையின் சூத்திர மிஷனுக்குரியவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் இறை மிஷனுக்கு உரியவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் அதி முக்கியத்துவமானவர்கள். இலக்ஷ்மி நாராயணனுக்கு என்ன புகழ் இருக்கின்றது? அரசர்கள் ஆட்சி செய்வதைப் போன்றே அவர்களும் ஆட்சி செய்தாலும், அவர்கள் அனைத்து நற்குணங்களும் நிறைந்த உலகின் அதிபதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் அந்நேரத்தில் வேறெந்த இராச்சியமும் இருப்பதில்லை. அவர்கள் எவ்வாறு உலகின் அதிபதிகளாக ஆகினார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றோம். எனவே, நாங்கள் எவ்வாறு அவர்களுக்குத் தலைவணங்க முடியும்? நீங்கள் இப்பொழுது ஞானம் நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். ஞானத்தைக் கொண்டிராதவர்கள் தொடர்ந்தும் தலைவணங்குகிறார்கள். உங்களுக்கு அனைவரது பணியும் இப்பொழுது தெரியும். எந்தப் படங்கள் சரியானது என்றும் எது பிழையானது என்றும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். இது இராவண இராச்சியம் என்பதையும் அது இப்பொழுது எரிக்கப்படவுள்ளது என்பதையும்கூட உங்களால் விளங்கப்படுத்த முடியும். வைக்கோற் போர் எரிக்கப்பட வேண்டும். உலகம் வைக்கோற் போரைப் போன்றது எனக் கூறப்படுகின்றது. பயன்பாட்டில் உள்ள வார்த்தைகளால் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பல படங்களை உருவாக்கியுள்ளார்கள். உண்மையில், ஆரம்பத்தில் சிவனின் வழிபாடும் பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் வழிபாடும் இருக்கின்றது. அவர்கள் உருவாக்கியுள்ள திரிமூர்த்தி சரியானது. அதன் பின்னர் இந்த இலக்ஷ்மியும், நாராயணனும் உள்ளனர். சரஸ்வதியும் திரிமூர்த்தியில் பிரம்மாவுடன் உள்ளடக்கப்பட்டிருக்கிறார். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பல படங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் அனுமானைக்கூட தொடர்ந்தும் பூஜிக்கிறார்கள். நீங்கள் துணிவுள்ள போர்வீரர்கள் ஆகுகிறீர்கள். ஆலயத்தில் சிலர் யானைச் சவாரி செய்பவர்களாகவும், சிலர் குதிரைச் சவாரி செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், எப்படி உங்களில் எவருக்கேனும் அவ்வாறு சவாரி செய்ய முடியும்? தந்தை கூறுகிறார்: மகாராத்திகள். மகாராத்தி என்றால் யானையில் சவாரி செய்பவராவார். எனவே, சிலரை யானையில் சவாரி செய்;வதாகச் சித்தரித்துள்ளார்கள். யானையை எப்படி முதலை விழுங்கியது என்பதன் அர்த்தமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: முதலையான மாயை சில நேரங்களில் மகாராத்திகளை உண்டுவிடுகிறாள். நீங்கள் இப்போது இந்த ஞானத்தை புரிந்துகொள்கிறீர்கள். மாயை நல்ல மகாராத்திகளை விழுங்கிவிடுகிறாள். இவ்விடயங்கள் ஞானத்துடன் தொடர்புடையவையாகும். வேறு எவராலுமே இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. தந்தை கூறுகிறார்: விகாரமற்றவர்களாகி, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். ஒவ்வொரு சக்கரத்திலும் தந்தை கூறுகிறார்: காமமே கொடிய எதிரி. இதில் வெற்றியடைய உங்களுக்கு முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் மக்களின் தந்தைக்கு உரியவர்கள், எனவே நீங்கள் சகோதர சகோதரிகள் ஆவீர்கள். உண்மையில், ஆதியில் நீங்கள் ஆத்மாக்களே. ஓர் ஆத்மாவே ஆத்மாக்களோடு பேசுகிறார். ஆத்மாவே இச்;செவிகள்; மூலமாக அனைத்தையும் செவிமடுக்கிறார் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். நான் ஓர் ஆத்மாவுடனேயே பேசுகிறேன், சரீரத்துடன் அல்ல. ஆத்மாக்களாகிய நாங்கள் ஆதியில் சகோதரர்கள். பின்னர் நாங்கள் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் ஆகிறோம். இதை நீங்கள் சகோதரர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். உங்களது பார்வை ஆத்மாவை நோக்கியே செல்லவேண்டும். நான் எனது சகோதரனுடன் பேசுகிறேன். சகோதரரே, செவிமடுக்கிறீர்களா? ஆம், ஆத்மாவாகிய நான் செவிமடுக்கிறேன். பிகானீர் எனும் இடத்திலுள்ள ஒரு குழந்தை எப்பொழுதும் 'இந்த ஆத்மா" 'அந்த ஆத்மா" என எழுதுகிறார். 'ஆத்மாவாகிய நான் இந்தச் சரீரத்தின் மூலமாக எழுதுகிறேன்." 'ஆத்மாவாகிய நான் இதை நினைக்கிறேன்." 'ஆத்மாவாகிய நான், இதைச் செய்கிறேன்." ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி தேவைப்படுகிறது. ஆத்மாவாகிய நான் 'நமஸ்தே" கூறுகிறேன். 'ஆன்மீகக் குழந்தைகளே" என்று பாபா கூறும்போது அவர் நெற்றியையே பார்க்க வேண்டும். ஆத்மாவே செவிமடுக்கிறார். நான் இந்த ஆத்மாவுடனேயே பேசுகிறேன். அதுபோன்றே, உங்களது பார்வையும் நெற்றியின் மத்தியில் இருக்கும் ஆத்மா மீதே செல்லவேண்டும். சரீரத்தின்மீது உங்கள் பார்வை படும்போதே, தடைகள் ஏற்படுகின்றன. ஆத்மாக்களுடன் பேசுங்கள்! ஆத்மாவையே பாருங்கள்! சரீர உணர்வைத் துறந்துவிடுங்கள்! தந்தையும் நெற்றியின் மத்;தியில் அமர்ந்திருக்கிறார் என்பதையும், நீங்கள் அவருக்கு 'நமஸ்தே" கூறுகிறீர்கள் என்பதையும், இந்த ஆத்மாவும் புரிந்து கொள்கிறார். நீங்கள் ஓர் ஆத்மா, ஆத்மாவே செவிமடுக்கிறார் என்ற ஞானமும் உங்களது புத்தியில் உள்ளது. முன்னர் உங்களுக்கு இந்த ஞானம் இருக்கவில்லை. நீங்கள் உங்கள் பாகத்தை நடிப்பதற்காக இந்தச் சரீரத்தைப் பெற்றீர்கள். இதனாலேயே ஒவ்வொரு சரீரத்திற்கும் பெயர் கொடுக்கப்படுகிறது. இந்த நேரத்திலேயே, நீங்கள் வீடு திரும்புவதற்காக, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். உங்கள் பாகத்தை நடிப்பதற்காகவே அந்தப் பெயர் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பெயர்கள் இல்லாது, எச்செயற்பாடுகளும் இடம்பெற முடியாது. அங்கும் தொழிலுக்கான செயற்பாடுகள் இருக்கும். எவ்வாறாயினும், நீங்கள் சதோபிரதான் ஆகியிருப்பீர்கள். இதனாலேயே அங்கு எந்தவொரு பாவச் செயல்களும் இருப்பதில்லை. நீங்கள் பாவச் செயல்கள் எதையுமே செய்யமாட்டீர்கள். மாயையின் இராச்சியம் அங்கிருப்பதில்லை. தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். இது ஒரு பழைய சரீரமாகும். அதன் பின்னர் நீங்கள் சத்திய, திரேதா யுகங்களுக்குச் செல்வீர்கள். அங்கு ஞானத்துக்கான அவசியம் இருக்காது. ஏன் இங்கு உங்களுக்கு ஞானம் கொடுக்கப்படுகிறது? ஏனெனில் நீங்கள் சீரழிந்த நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் அங்கும் செயல்களைச் செய்தாலும்கூட, அவை நடுநிலையான செயல்களாகவே இருக்கும். தந்தை கூறுகிறார்: உங்களது கைகள் வேலையில் ஈடுபடட்டும், இதயமோ தந்தையோடு இருக்கட்டும்! ஆத்மா தந்தையை நினைவு செய்கிறார். சத்தியயுகத்தில் நீங்கள் தூய்மையானவர்கள் என்பதால், அனைத்துச் செயல்களும் உண்மையானதாக இருக்கும். தமோபிரதானான இராவண இராச்சியத்தில் அனைத்துச் செயற்பாடுகளும் பொய்யானவையாக உள்ளன. இதனாலேயே மக்கள் யாத்திரைகள் போன்றவற்றிற்குச் செல்கிறார்கள். சத்திய யுகத்தில் எவரும் எந்தப் பாவமுமே செய்யாததால், அவர்கள் யாத்திரை செல்ல வேண்டியதில்லை. அங்கே நீங்கள் செய்கின்ற அனைத்தும் உண்மையானவை. சத்தியம் என்ற ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அங்கு எந்த விகாரத்திற்குமான கேள்விக்கே இடமில்லை. எந்தச் செயல்களிலும், பொய் பேசவேண்டிய அவசியம் இல்லை. இங்கு, பேராசையால் அவர்கள் ஏமாற்றுதல், பொய் பேசுதல் போன்றவற்றைத் தொடர்ந்தும் செய்கிறார்கள். இவ்விடயங்கள் அங்கு இருக்காது. நாடகத்தின்படி நீங்கள் அத்தகைய மலர்களாக ஆகுகிறீர்கள். அந்த உலகம் விகாரமற்றது, இவ்வுலகமோ விகாரமானது. முழு நாடகமும் உங்களது புத்தியில் உள்ளது. இந்நேரத்தில் மாத்திரமே, நீங்கள் தூய்மையாகுவதற்கு முயற்சி செய்யவேண்டும். யோக சக்தியின் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீPர்கள். யோக சக்தியே பிரதானமானதாகும். தந்தை கூறுகிறார்: பக்தி மார்க்கத்தில், தவம் செய்தல், யாகம் வளர்த்தல் போன்றவற்றின் மூலம் எவராலுமே என்னை அடைய முடியவில்லை. அனைவருமே சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாகச் செல்லவேண்டும். இந்த ஞானம் இலகுவானதும், களிப்பூட்டக்;கூடியதும் ஆகும். அதற்கும் முயற்சி தேவையாகும். இந்த யோகத்தின் மூலமாகவே, நீங்கள் சதோபிரதான் ஆகுகிறீர்கள், அதாவது புகழப்படுகிறீர்கள். தந்தை மாத்திரமே தமோபிரதானில் இருந்து, சதோபிரதான் ஆகுவதற்கான பாதையை உங்களுக்குக் காட்டுகிறார். வேறு எவராலுமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. எவரும் சந்திரனுக்குச் சென்றால் என்ன, நீரில் நடந்தாலும் என்ன, இவை எதுவுமே இராஜ யோகமல்ல. அவர்களால் ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறமுடியாது. நீங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவ்வாறே ஆகுகிறீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். முன்னைய சக்கரத்திலும் தந்தை உங்களுக்கு இதை விளங்கப்படுத்தினார் என்பதை இப்போது நீங்கள் நினைவு செய்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நம்பிக்கையுள்ள புத்தியை உடையவர்கள் வெற்றியாளர்கள் ஆவார்கள். ஒருவர் நம்பிக்கையற்றவராக இருந்தால், அவர் செவிமடுக்க வரமாட்டார். நம்பிக்கையுள்ள புத்தியைக் கொண்டிருந்;தவர்களும், பின்னர் சந்தேக புத்தியுடையவர்களாக ஆகுகிறார்கள். மிகவும் நல்ல பல மகாரத்திகளும்கூட சந்தேகங்களை வளர்க்கிறார்கள். மாயையின் சிறிய புயலால் சரீர உணர்வு ஏற்படுகிறது. பாபாவும், தாதாவும் இணைந்திருக்கிறார்கள். சிவபாபா உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். பின்னர் அவர் போய்விடுகிறாரா அல்லது என்ன நடக்கிறது என்பது யாருக்குத் தெரியும்? அவர் எப்போதுமே இங்கிருப்பாரா அல்லது போய்விடுவாரா என நீங்கள் பாபாவிடம் வினவ வேண்டுமா? இந்தக் கேள்வியை உங்களால் தந்தையிடம் கேட்க முடியாது. தந்தை கூறுகிறார்: தூய்மையற்றவரில் இருந்து தூய்மையானவர் ஆகுவதற்கான பாதையை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். நான் வந்து போகிறேன். எனக்கு செய்வதற்கு அதிக வேலை உள்ளது. நான் குழந்தைகளிடம் வருகின்றேன், அவர்களின் மூலமும், பணிகளைச் செய்விக்கிறேன். எவருமே இதனையிட்டுச் சந்தேகங்களை எழுப்பக் கூடாது. தந்தையை நினைவு செய்வதே உங்களது கடமையாகும். சந்தேகப்படுவதால் நீங்கள் விழுந்து விடுகிறீர்கள். மாயை உங்களைப் பலமாக அறைகிறாள். தந்தை கூறுகிறார்: இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் நான் இவருக்குள் பிரவேசிக்கிறேன். குழந்தைகளே, தந்தையே உண்மையில் எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார் என்பதில் குழந்தைகளாகிய நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள். வேறு எவராலும் இதைக் கொடுக்க முடியாது. இருந்தாலும், நம்பிக்கையுடன் இருந்தும் பின்னர் பலர் வீழ்ந்து விடுகிறார்கள் என்பது தந்தைக்குத் தெரியும். நீங்கள் தூய்மையாக வேண்டும். எனவே, தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! வேறு எதிலுமே அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். அவ்வாறு நீங்கள் பேசினால், உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை என்பதே அதன் அர்த்தமாகும். அனைத்திற்கும் முதலில் உங்கள் பாவங்களை அழிக்கின்ற, அந்த ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். பயனற்ற விடயங்களைப் பேச வேண்டிய அவசியம் இல்லை. தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எனவே நீங்கள் ஏன் ஏனைய விடயங்களில் ஈடுபடவேண்டும்? கேள்வி பதிலின்போது எவராவது குழப்பம் அடைவதை நீங்கள் பார்த்தால், அவர்களிடம் கூறுங்கள்: அவ்விடயங்களை மறந்துவிட்டு, தந்தையை நினைவு செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் சந்தேகங்களை உருவாக்கும்போது, கற்பதை நிறுத்திவிடுகிறீர்கள்;, அதனால் நன்மை இருக்காது. அவர்களது நாடித் துடிப்பை உணர்ந்து விளங்கப்படுத்துங்கள். அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், அவர்களை ஒரே ஒரு விடயத்தில் உறுதியான நம்பிக்கையுடையவர்கள் ஆக்குங்கள். நீங்கள் மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். குழந்தைகளே, அனைத்திற்கும் முதலில், பாபா வந்து, எங்களைத் தூய்மைப்படுத்துகிறார் என்பதில் குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். உங்களிடம் இந்த சந்தோஷம் இருக்கின்றது. நீங்கள் கற்காவிட்டால், தோல்வியடைவீர்கள். அத்தகைய ஆத்மா அதன் பின்னர் எவ்வாறு சந்தோஷமாக இருக்க முடியும்? பாடசாலையில் அனைவரும் ஒரே கல்வியையே கற்றாலும், சிலர் கற்று பல்லாயிரங்களை சம்பாதிக்கிறார்கள். சிலரோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையே சம்பாதிக்கிறார்கள். சாதாரண மனிதரிலிருந்து தேவர்கள் ஆகுவதே உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் ஆகும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாறவேண்டும். தேவர்கள் மிகப்பெரிய இராச்சியத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அதில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதென்பது உங்களுடைய கல்வியிலும், செயல்களிலுமே தங்கியுள்ளது. உங்களுடைய செயல்கள் மிக நன்றாக இருக்க வேண்டும். பாபா தன்னைப் பற்றிக் கூறுகிறார்: நான் இன்னும் எனது கர்மாதீத நிலையை அடையவில்லை. நானும்கூட சம்பூரணம் அடையவேண்டும், நான் இன்னும் அவ்வாறு ஆகவில்லை. ஞானம் மிகவும் இலகுவானது. தந்தையை நினைவு செய்வதும் இலகுவானதே. ஆனால் அதையாவது நீங்கள் செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எவ்விடயத்திலேனும் சந்தேகத்தை வளர்த்து, ஒருபோதும் கற்பதை நிறுத்திவிடாதீர்கள். தூய்மையாகுவதற்கு, முதலில், ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். வேறு விடயங்கள் எதிலும் ஈடுபடாதீர்கள்.

2. சரீரத்தில் உங்கள் பார்வை படும்போதே, தடைகள் வருகின்றன. எனவே எப்போதும் நெற்றியின் மத்தியைப் பாருங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, ஆத்மாக்களுடனேயே பேசுங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். பயமற்றவர்களாகி சேவை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
சக்திசொரூபமாகி, உங்கள் திடசங்கற்ப எண்ணங்களினூடாக பலவீனங்கள் என்ற கலியுக மலையை அழிப்பீர்களாக.

நீங்கள் மனந்தளரும் போதும், ஒரு சம்ஸ்காரத்தின் அல்லது சூழ்நிலையின் ஆதிக்கத்திற்குள் வரும் போதும், ஒரு நபரினால் அல்லது சடப்பொருளின் சௌகரியத்தினால் கவரப்படும் போதும், இப் பலவீனங்களிற்கு ஒரு திடசங்கற்ப எண்ணம் என்ற ஒருவிரலை கொடுத்து அவற்றை எக்காலத்திற்குமாக அழித்துவிடுங்கள். அதாவது வெற்றியாளர் ஆகுங்கள். ‘வெற்றி உங்கள் கழுத்து மாலையாகும்’. இந்த விழிப்புணர்வினால், நீங்கள் எப்பொழுதும் சக்தி சொரூபமாக இருப்பீர்கள். இதுவே அன்பிற்கான பிரதியுபகாரமாகும். சக்கார் பாபா தனது ஸ்திதி என்ற தூணின் மூலம் இதனை செய்து காட்டினார். இவ்வாறாக தந்தையை பின்பற்றி, சகல தெய்வீகக் குணங்களின் தூண் ஆகுங்கள்.

சுலோகம்:
வசதிகள் சேவைக்காகும், உங்கள் ஆடம்பரத்திற்கும் சௌகரியங்களுக்கும் அல்ல.