07.12.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் நீண்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் ஒருதடவை தந்தையைச் சந்தித்துள்ளீர்கள். எனவே, நீங்கள் மிகவும் அன்பிற்கினிய, நீண்ட காலம் தொலைந்து, இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் ஆவீர்கள்.

கேள்வி:
உங்களுடைய ஸ்திதியை நிலையானதாக ஆக்குவதற்கான வழி என்ன?

பதில்:
கடந்து செல்கின்ற ஒவ்வொரு விநாடியும் நாடகத்தில் உள்ளது என்பதையும், அது முன்னைய கல்பத்திலும் அவ்வாறே நிகழ்ந்தது என்பதையும் எப்பொழுதும் நினைவிற் கொள்ளுங்கள். புகழ்ச்சி, இகழ்ச்சி, மரியாதை, அவமரியாதை அனைத்தும் இப்பொழுது உங்கள் முன்னால் வரும். எனவே உங்கள் ஸ்திதியை நிலையானதாக ஆக்குவதற்கு, கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்காதீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகத் தந்தையின் பெயர் என்ன? சிவபாபா. அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. ஆன்மீகக் குழந்தைகள் அனைவரதும் பெயர் என்ன? ஆத்மாக்கள். சரீரதாரிகளுக்குப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன் ஆத்மாக்கள் அனைவரும் ஒரே பெயரையே கொண்டுள்ளார்கள். ஆன்மீக ஒன்றுகூடல்கள் (சற்சங்கங்கள்) பல உள்ளன என்பது குழந்தைகளாகிய உங்களுக்கும் தெரியும். இது சத்தியமானவரின் உண்மையான சகவாசமாகும், இங்கு, சத்தியமான தந்தை இராஜயோகத்தைக் கற்பித்து, எங்களைச் சத்திய யுகத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இதைப் போன்ற வேறெந்த ஆன்மீக ஒன்றுகூடலோ அல்லது பாடசாலையோ இருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். முழு உலகச் சக்கரமும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே சுயதரிசனச் சக்கரதாரிகள். தந்தை இங்கமர்ந்திருந்து, உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எவருக்காவது விளங்கப்படுத்தும்பொழுதெல்லாம், சக்கரத்தின் படத்தின் முன்னால் அவரை அழைத்து வாருங்கள்: இப்பொழுது நீங்கள் இந்தப் பாதையில் செல்வீர்கள். தந்தை உயிர் வாழ்பவர்களுக்குக் கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இது எதுவுமே புதியதல்ல. நீங்கள் இதை ஒவ்வொரு கல்பத்திலும் செவிமடுக்கிறீர்கள் என்பதும், நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை செவிமடுக்கின்றீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் எந்தச் சரீரத் தந்தையையோ, ஆசிரியரையோ அல்லது குருவையோ உங்கள் புத்தியில் வைத்திருப்பதில்லை. சரீரமற்ற சிவபாபாவே உங்களுடைய தந்தையும், ஆசிரியரும், குருவும் என்பது உங்களுக்குத் தெரியும். வேறெந்தச் சமய ஒன்றுகூடலிலும் அவர்கள் இவ்வாறு கூறமாட்டார்கள். இந்த ஒரு மதுவனமே இருக்கின்றது. அம்மக்கள் பிருந்தாவனத்தில் ஒரு மதுவனத்தைக் காட்டுகிறார்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் அதை உருவாக்கியுள்ளார்கள். உண்மையில் இதுவே நடைமுறை மதுவனமாகும். நீங்கள் சத்திய, திரேதா யுகங்களினூடாக மறுபிறவிகளை எடுத்து, மிகவும் மேன்மையானவர்களாக ஆகுவதற்கு இப்பொழுது சங்கமயுகத்திற்கு வந்துள்ளீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை வந்து, எங்களுக்கு நினைவூட்டியுள்ளார். யார், எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். மக்கள் எதனையும் புரிந்துகொள்ளாமல் இதனைப் பற்றிப் பேசுகின்றார்கள். தந்தை உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகத்தில் சதோபிரதான் ஆத்மாக்கள் இருந்தார்கள், அவர்கள் சதோபிரதான் சரீரங்களைக் கொண்டிருந்தார்கள். இந்நேரத்தில் அது சத்திய யுகமல்ல் இது கலியுகமாகும். நாங்கள் மாத்திரமே சத்திய யுகத்தில் இருந்தோம். பின்னர், படிப்படியாக நகர்ந்து மறுபிறவி எடுத்து, நாங்கள் கலியுகத்திற்கு வந்தோம், நாங்கள் நிச்சயமாக மீண்டும் சக்கரத்தைச் சுற்றி வர வேண்டும். நாங்கள் இப்பொழுது எங்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். நீங்களே நீண்ட காலம் தொலைந்திருந்து, இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் ஆவீர்கள். நீண்ட காலம் தொலைந்திருந்து, இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளே, நீண்ட காலமாகத் தொலைந்திருந்து, நீண்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டார்கள். நீங்கள் 5000 ஆண்டுகளுக்கு பின்னர் வந்து பாபாவைச் சந்திக்கின்றீர்கள். அதே தந்தையே 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்து, உங்களுக்கு உலகச் சக்கரம் பற்றிய ஞானத்தை கொடுத்தார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். அவர் உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்கினார். தந்தை எங்களின் பிறப்புரிமையை எங்களுக்குத் கொடுப்பதற்காக இப்பொழுது வந்து, எங்களை மீண்டும் சந்தித்திருக்கின்றார். இங்கே தந்தை உங்களை இதனை உணரும்படி செய்கின்றார். ஆத்மா எனும் புரிந்துணர்வும், 84 பிறவிகளின் புரிந்துணர்வும் இதனுள் உள்ளடங்கியுள்ளன. சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்கும், வறுமையில் உள்ளவர்களிலிருந்து கிரீடமணிந்தவர்களாக மாற்றுவதற்கும், 5000 வருடங்களுக்கு முன்னர் விளங்கப்படுத்தியதைப் போல், தந்தை இங்கமர்ந்திருந்து இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். 84 பிறவிகளை எடுக்காதவர்கள் இங்கே கற்க வரமாட்டார்கள். சிலர் சிறிதளவே புரிந்துகொள்வார்கள்; அது வரிசைக்கிரமமானது. நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும். அனைவரும் இங்கு வந்து, தங்குவார்கள் என்றில்லை. மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற விரும்புபவர்களே இங்கு புத்துணர்ச்சி பெறுவதற்காக வருவார்கள். குறைந்த அந்தஸ்தைப் பெறவுள்ளவர்கள் அதிக முயற்சி செய்ய மாட்டார்கள். இந்த ஞானம் நீங்கள் குறைந்தளவு முயற்சி செய்தாலும் கூட வீணாகாத அத்தகையதாகும். ஆத்மாக்கள் தண்டனையை அனுபவித்த பின்னர் அங்கு செல்வார்கள். நீங்கள் சிறந்த முயற்சி செய்தால் குறைந்தளவு தண்டனையையே அனுபவிப்பீர்கள். நினைவு யாத்திரையில் இருக்காமல் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியாது. இதனை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுங்கள். அனைத்திற்கும் முதலில், நீங்கள் சந்திக்கும் எவருக்கும் அவரை ஓர் ஆத்மா என்று கருதும்படி விளங்;கப்படுத்துங்கள். பின்னரே சரீரத்துக்குப் பெயர் வழங்கப்படுகின்றது; நீங்கள் ஒருவரை அவரது சரீரத்தின் பெயரைப் பயன்படுத்தியே அழைக்க முடியும். எல்லையற்ற தந்தை இந்தச் சங்கம யுகத்திலேயே உங்களை “ஆன்மீகக் குழந்தைகளே” என அழைக்கின்றார். ஆன்மீகத் தந்தை வந்துள்ளார் என நீங்கள் கூறுகின்றீர்கள். தந்தை உங்களை “ஆன்மீகக் குழந்தைகள்” என அழைக்கின்றார். ஆத்மா முதலிலும், குழந்தையின் பெயர் பின்னரும் இருக்கின்றது. ஆன்மீகக் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற விடயங்களை ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். சிவபாபாவே இந்தப் பாக்கிய இரதத்தில் பிரசன்னமாகி, அதே இலகு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பதை உங்கள் புத்தி புரிந்துகொள்கின்றது. வேறெந்த மனிதரிலும் தந்தை வந்து இராஜயோகம் கற்பிப்பதில்லை. தந்தை அதி மங்களகரமான சங்கம யுகத்திலேயே வருகிறார். வேறெந்த ஒரு மனிதனாலும் இதைக் கூறவோ அல்லது இவ்வாறு விளங்கப்படுத்தவோ முடியாது. இந்தக் கற்பித்தல்கள் இந்தத் தந்தையினால் (பிரம்மா) கொடுக்கப்படவில்லை என்பதை நீங்கள் மாத்திரமே புரிந்துகொள்கின்றீர்கள். கலியுகம் முடிவிற்கு வருகின்றது என்பதும், பின்னர் சத்தியயுகம் வரும் என்பதும் இவருக்குத் தெரியாது. இப்பொழுது இவருக்குப் பௌதீகக் குரு எவரும் இல்லை. ஏனைய மனிதர்கள் இன்னார் இன்னார் தங்களுடைய குரு என்றும், இன்னார் இன்னார் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்தார்கள் என்றும் கூறுகின்றார்கள். ஒவ்வொருவருக்கும் பௌதீகக் குரு இருக்கின்றார். சமய ஸ்தாபகர்கள் அனைவரும் சரீரதாரிகளே. இந்தத் தர்மத்தை ஸ்தாபித்தவர் யார்? பரமாத்மாவாகிய பரமதந்தை, திருமூர்த்தி சிவபாபாவே அதை பிரம்மா மூலம் ஸ்தாபித்தார். இவருடைய சரீரத்தின் பெயர் பிரம்மாவாகும். கிறீஸ்துவே தங்களது சமயத்தை ஸ்தாபித்தார் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர் ஓர் சரீரதாரி. அவருடைய உருவமும் இருக்கின்றது. இந்தத் தர்மத்தை ஸ்தாபித்தவர் என நீங்கள் எந்தப் படத்தைக் காட்டுவீர்கள்? நீங்கள் சிவபாபாவின் உருவத்தையே காட்டுகிறீர்கள். சிலர் சிவபாபாவின் பெரிய வடிவங்களையும், பிறர் சிறிய வடிவங்களையும் செய்கிறார்கள். எவ்வாறாயினும், அவர் ஒரு புள்ளியே. அவருக்கு ஒரு பெயரும், உருவமும் இருந்தாலும், அவர் சூட்சுமமானவர்; உங்களால் உங்களுடைய பௌதீகக் கண்களால் அவரைப் பார்க்க முடியாது. சிவபாபா குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களுடைய இராச்சியப் பாக்கியத்தைக் கொடுத்துச் சென்று விட்டார், இதனாலேயே நீங்கள் அவரை நினைவுசெய்கிறீர்கள். சிவபாபா கூறுகின்றார்: மன்மனாபவ! ஒரே தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள்! எவரையும் அவமதிக்காதீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரதாரி எவரையேனும் உங்கள்; புத்தியில் வைத்திருக்கக்கூடாது. இது மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயம். சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார். நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் இதனை நினைவுசெய்யுங்கள். சிவனாகிய கடவுள் பேசுகின்றார்: நீங்கள் முதலில் அல்பாவைப் புரிந்துகொள்ள வேண்டும். சரியான முறையில் முதலில் அல்பாவை விளங்கப்படுத்தாமல், பீற்றா, தீற்றா முதலியவற்றைப் பிறருக்கு விளங்கப்படுத்த ஆரம்பித்தால், அவர்களது புத்தியில் எதுவுமே பதிய மாட்டாது. சிலர் நீங்கள் கூறுவது சரி என்று கூறுகிறார்கள், அதேவேளை மற்றவர்கள், இதனைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் காலம் தேவை என்று கூறுகின்றார்கள். சிலர் இதனைப் பற்றிச் சிந்திப்போமெனக் கூறுகிறார்கள். பல்வேறு விதமான மக்கள் வருகிறார்கள். இவை புதிய விடயங்கள். பரமாத்மாவான பரமதந்தை சிவன், ஆத்மாக்களுக்கு இங்கமர்ந்திருந்து கற்பிக்கின்றார். “மக்கள் இவற்றைப் புரிந்துகொள்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்” எனும் எண்ணம் எழுகிறது. சிவனே ஞானக் கடல். சரீரமற்ற ஓர் ஆத்மாவை எவ்வாறு ஞானக்கடல் என அழைக்க முடியும்? அவர் நிச்சயமாக ஞானக்கடல் ஆவார். இந்த ஞானத்தை ஏதோவொரு காலத்தில் அவர் கூறியிருக்க வேண்டும். இதனாலேயே அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். இல்லையென்றால், அவர்கள் இந்தப் பெயரால் அவரை ஏன் அழைக்கப் போகின்றார்கள்? வேதங்களையும், சமயநூல்களையும் ஒருவர் கற்றிருந்தால், அவரை அவற்றின் மேதை என அழைக்கின்றார்கள். தந்தையே ஞானக்கடலாகிய, அதிகாரி என அழைக்கப்படுகின்றார். அவர் நிச்சயமாக இங்கு வந்து, சென்றார். இப்பொழுது சத்தியயுகமா அல்லது கலியுகமா இருக்கின்றது என முதலில் நீங்கள் மக்களிடம் வினவ வேண்டும். இது பழைய உலகமா அல்லது புதிய உலகமா? உங்கள் இலக்கும், குறிக்கோளும் உங்கள் முன் உள்ளன. இலக்ஷ்மியும், நாராயணனும் இங்கே இருந்திருந்தால், அது அவர்களுடைய இராச்சியமாக இருந்திருக்கும். இது பழைய உலகமாக இருக்க மாட்டாது, வறுமையும் இருக்காது. இப்பொழுது அவர்களின் உருவங்களே உள்ளன. அவர்களுடைய மாதிரிகளை அவர்கள் ஆலயங்களில் காட்டுகிறார்கள். இல்லாவிட்டால், அவர்கள் இங்கிருந்திருந்தால் அவர்களுடைய அரண்மனைகளும், பூந்தோட்டங்களும் மிகவும் பிரமாண்டமானவையாக இருந்திருக்கும்; அவர்கள் ஆலயங்களில் மட்டும் இருக்கவில்லை. ஜனாதிபதியின் மாளிகை மிகப் பெரியது. தேவர்கள் பெரிய அரண்மனைகளில் வசிக்கிறார்கள்; அவர்களிடம் பெருமளவு நிலம் உள்ளது. அங்கு பயமென்ற கேள்விக்கே இடமில்லை. அங்கு மலர்கள் சதா மலர்ந்திருக்கின்றன் அங்கு முட்கள் கிடையாது. அதுவே பூந்தோட்டம். அங்கு அவர்கள் மரங்கள் முதலானவற்றை எரிக்க மாட்டார்கள். மரங்களை எரிப்பதால் ஏற்படும் புகை அசௌகரியமானது. அங்கே நாங்கள் மிகச்; சிறிய பிரதேசத்தில் வசிக்கின்றோம். பின்னரே விரிவாக்;கம் ஏற்படுகிறது. அங்கு நறுமணம் மிக்க பூங்தோட்டங்கள் எல்லா இடங்களிலும் இருக்கும். அங்கே காடுகள் எதுவும் இருக்காது. உங்களால் இதைப் பார்க்க முடியாது விட்டாலும், உங்களால் இதை இப்பொழுது உணர முடியும். நீங்கள் திரான்ஸில் பிரமாண்டமான மாளிகைகள்; முதலியவற்றைக் காண்கிறீர்கள், ஆனால் உங்களால் அவற்றை இங்கே உருவாக்க முடியாது. அவற்றின் காட்சிகள் உங்களுக்குக் கிடைத்தன, பின்னர் அவை மறைந்து விடுகின்றன. உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தன, இல்லையா? அங்கே அரசர்கள், இளவரசர்கள், இளவரசிகள் இருப்பார்கள். இங்கு மைசூர் எவ்வாறு மிகவும் அழகாக இருக்கின்றதோ, அப்படியே சுவர்க்கமும் மிக அழகாக இருக்கும். அங்கே மிகவும் நல்ல தென்றல் வீசும். பல நீர்வீழ்ச்சிகள் இருக்கும். சுவர்க்கத்தை நினைப்பதால் ஆத்மா மிக நல்ல விடயங்களை உருவாக்குவதற்கு விரும்புகிறார். அங்கு என்ன இருக்கும் என்பதையும், நீங்கள் எங்கே வசிப்பீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் உணர்கிறீர்கள். இந்நேரத்தில் நீங்கள் இந்த விழிப்புணர்வைக் கொண்டிருக்கின்றீர்கள். உருவங்களைப் பார்த்து, நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் எனப் பாருங்கள்! அங்கே துன்பம் எதுவும் இருக்காது. நாங்கள் சுவர்க்கத்தில் இருந்தோம், இப்பொழுது கீழிறங்கி வந்துவிட்டோம். நாங்கள் இப்பொழுது மீண்டும் சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். எவ்வாறு நாம் அங்கு செல்லலாம்? நீங்கள் ஒரு கயிற்றைப் பற்றிக் கொண்டு அங்கு செல்வீர்களா? ஆத்மாக்களாகிய நாங்கள் அமைதிதாம வாசிகள். நீங்கள் தேவர்களாகுவதுடன், ஏனையோரையும் அவ்வாறு ஆக்குகிறீர்கள் என்பதைத் தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளார். வீட்டில் இருந்தவாறே பலர் காட்சிகளைப் பெறுகிறார்கள். பந்தனத்தில் இருப்பவர்கள் ஒருபொழுதும் பாபாவைக் கண்டிருக்காது விடினும், அவ் ஆத்மாக்கள் எவ்வாறு நடனமாடுகிறார்கள் எனப் பாருங்கள்! ஆத்மாக்கள் தங்கள் வீட்டை அண்மித்து வருவதால், சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். பாபா உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதற்காகவும், உங்களை அலங்கரிக்கவும் வந்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இறுதியில் இதுவும் ஒரு நாள் பத்திரிகையில் அச்சிடப்படும். இப்பொழுது உங்கள் எதிரில் புகழ்ச்சி, இகழ்ச்சி, மரியாதை, அவமரியாதை அனைத்தும் வருகின்றன. முன்னைய கல்;பத்திலும் இவ்வாறே நிகழ்ந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு விநாடிக்கு முன்னர் என்ன நடந்ததென நீங்கள் கவலைப்படக்கூடாது. முன்னைய கல்பத்திலும் இதே மாதிரியே பத்திரிகைகளில் அச்சிடப்பட்டன. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். என்னென்ன குழப்பங்கள் நடந்தனவோ, அது நடந்து விட்டது. குறைந்தபட்சம் உங்கள் பெயராவது பிரபல்யமடைந்துள்ளது. நீங்கள் அவற்றுக்குப் பதிலளித்தீர்கள். சிலர் கற்கின்றார்கள், மற்றவர்கள் கற்பதில்லை. அவர்களுக்கு நேரமில்லை; அவர்கள் வேறு வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். இது மிகப்பெரிய, எல்லையற்ற நாடகம் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. சக்கரம் தொடர்ந்தும் சுழல்வதால் நாடகம் தொடர்ந்தும் நகர்ந்து செல்கிறது. இந்த விநாடியில் என்ன நடக்கிறதோ, அது மீண்டும் 5000 வருடங்களின் பின்னர் இடம்பெறும். நீங்கள் ஒரு விநாடியில் நடைபெற்றதைப் பற்றி, அது இடம்பெற்ற பின்னர் நினைக்கிறீர்கள். நடைபெறுகின்ற தவறுகள் எதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவையாக ஆகுகின்றன. இதே தவறு சென்ற கல்பத்திலும் நடந்தது, அது இப்பொழுது கடந்த காலமாகி விட்டது. பின்னர் எதிர்காலத்தில் அதைச் செய்ய மாட்டோமெனவும், நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்வீர்கள் எனவும் நீங்கள் உங்களுக்கே கூறுகிறீர்கள். ஒரு தவறை மீண்டும் மீண்டும் புரிவது நல்லதல்ல என்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய செயல்கள் நல்லவை அல்ல. நீங்கள் தவறான செயல்களைச் செய்தால், உங்கள் மனச்சாட்;சி உறுத்தும். நீங்கள் எதனைச் செய்யக்கூடாதென்று தந்தை உங்களுக்கு கூறுகின்றார், ஏனெனில் அது எவருக்காவது துன்பத்தை விளைவிக்கும், நீங்கள் அதைச் செய்வதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அதனைச் செய்யக்கூடாது என்று தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். எதனையாவது நீங்கள் கேட்காமல் எடுத்தால், அது திருட்டு எனப்படும். அத்தகைய செயல்களைச் செய்யாதீர்கள்! கசப்பான வார்த்தைகளைப் பேசாதீர்கள்! இன்று உலகம் எப்படி உள்ளதென்றுப் பாருங்கள்! ஒருவர் வேலையாளுடன் கோபித்தால், அவர் பகைமையை உருவாக்குகின்றார். அங்கு சிங்கமும், ஆடும் சீனியும் பாலும் போல் ஒன்றாக வாழ்கின்றன. உவர்நீரும் இருக்கின்றது, சீனியும், பாலும் இருக்கின்றன. சத்தியயுகத்தில் ஆத்மாக்கள் அனைவரும் சீனியும் பாலும் போல ஒருமித்து வாழ்கிறார்கள். ஆனால் இந்த இராவண இராச்சியத்தில் மனிதர்கள் அனைவரும் உவர்நீரைப் போல் வசிக்கிறார்கள். தந்தையரும் மகன்களும் கூட உவர்நீரைப் போன்று இருக்கிறார்கள். காமமே மிகக்கொடிய எதிரி. மக்கள் காம வாளைப் பயன்படுத்தி, தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இம் முழு உலகுமே உவர்நீரைப் போன்றது, ஆனால் சத்தியயுக உலகமானது பாலும் சீனியும் போன்றுள்ளது. உலகுக்கு இவ்விடயங்களைப் பற்றி என்ன தெரியும்? சுவர்க்கமானது ஆயிரக்கணக்கான வருடங்களைக் கொண்டது என மக்கள் கூறுகின்றார்கள். ஆகையால் அவர்களது புத்தியில் எதுவுமே புக முடியாது. தேவர்களாக இருந்தவர்களது புத்தியில் மாத்திரமே இது புகுகின்றது. அந்தத் தேவர்கள் சத்தியயுகத்தில் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். 84 பிறவிகளை எடுத்தவர்கள் கற்பதற்கு மீண்டும் வந்து, முட்களிலிருந்து மலர்கள் ஆகுவார்கள். இது மாத்திரமே தந்தையின் பல்கலைக்கழகம், அதன் கிளைகள் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. கடவுள் வரும்பொழுது அவருடைய உதவியாளர்களான எங்களுடன் சேர்ந்து ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார். நீங்கள் கடவுளின் உதவியாளர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அம்மக்கள் பௌதீகச் சேவையைச் செய்கிறார்கள், நீங்களோ ஆன்மீகச் சேவையைச் செய்கிறீர்கள். ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகியுள்ளதால், எவ்வாறு ஆன்மீகச் சேவை செய்வது என ஆத்மாக்களாகிய எங்களுக்கு பாபா கற்பிக்கிறார். பாபா மீண்டும் ஒருதடவை உங்களைச் சதோபிரதான் ஆக்குகிறார். பாபா கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது யோக அக்கினியாகும். பாரதத்தில் புராதன யோகம் நினைவுகூரப்படுகிறது. பலவகையான செயற்கையான யோகங்கள் உள்ளன. இதனாலேயே பாபா கூறுகின்றார்: இதனை நினைவு யாத்திரை என்று கூறுவது சரியாகும். சிவபாபாவை நினைவுசெய்வதால் நீங்கள் சிவ பூமிக்குச் செல்வீர்கள். அது சிவ பூமியாகும், மற்றையது விஷ்ணுவின் பூமி, இது இராவணனின் பூமி ஆகும். விஷ்ணுவின் பூமியின் பின்னர் அது இராமரது பூமி ஆகுகின்றது. சூரிய வம்சத்தின் பின்னர் சந்திர வம்சம் இருக்கின்றது. அது ஒரு பொதுவான விடயம். அரைக் கல்பத்திற்குச் சத்திய, திரேதா யுகங்கள் இருக்கின்றன, மற்றைய அரைக் கல்பத்திற்குத் துவாபர, கலியுகங்கள் இருக்கின்றன. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். இதனை மிக நன்றாகக் கிரகிப்பவர்கள் பிறருக்கும் விளங்கப்படுத்துவார்கள். நாங்கள் இப்போது மங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கிறோம். அவர்களால் இதனை அவர்களது புத்தியில் வைத்திருக்க முடியுமாயின் நாடகம் முழுவதுமே அவர்களது புத்தியில் புகுந்துவிடும். எவ்வாறாயினும் அவர்கள் தொடர்ந்தும் தங்கள் கலியுகத்துச் சரீர உறவினர்களை நினைவுசெய்கிறார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் தந்தை ஒருவரையே நினைவுசெய்ய வேண்டும். ஒரேயொருவரே இராஜயோகத்தைக் கற்பிப்பவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். இதனாலேயே, சிவபாபாவின் பிறப்பின் மூலமே முழு உலகமும் மாற்றப்படுகிறது என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என்பது பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். பிராமணர்கள் மாத்திரமே தங்கள் புத்தியில் படைப்பவரதும், படைப்பினதும் ஞானத்தைக் கொண்டுள்ளார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பிறருக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். கசப்பான வார்த்தைகளைப் பேசாதீர்கள். பாலும் சீனியும் போல மிக நல்லவர்களாக இருங்கள்.

2. எச் சரீரதாரியையும் இகழாதீர்கள். சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். அவரை மாத்திரமே புகழுங்கள். ஆன்மீக உதவியாளர்கள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அனைவரினதும் தெய்வீகக் குணங்களைப் பார்க்கும்பொழுது, தந்தையின் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, தெய்வீகக் குணங்களின் சொரூபம் ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில், தெய்வீகக் குணங்கள் எனும் மாலையை அணிகின்ற குழந்தைகளே, வெற்றி மாலையில் பிரவேசிக்கின்றார்கள். இதனாலேயே நீங்கள் ஒரு புனித அன்னம் ஆகவேண்டும், அத்துடன், அனைவரினதும் தெய்வீகக் குணங்களைப் பார்க்கையில், நீங்களாகவே தந்தையின் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றீர்கள். அனைவரினதும் கழுத்திலும் தெய்வீகக் குணங்களின் இந்த மாலையானது இருக்கட்டும். அவர்கள் தந்தையின் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கும் அளவிற்கேற்ப, தங்களின் கழுத்தைச் சுற்றி அத்தகையதொரு பெரிய மாலையைக் கொண்டிருக்கின்றார்கள். தெய்வீகக் குணங்களின் மாலையின் மணிகளை உருட்டுவதால், நீங்களே தெய்வீகக் குணங்களின் சொரூபம் ஆகுவீர்கள். இதன் ஞாபகார்த்தமாகவே, தேவர்களினதும், சக்திகளினதும் (தேவியர்) கழுத்தில் ஒரு மாலை காட்டப்பட்டுள்ளது.

சுலோகம்:
பற்றற்ற பார்வையாளர் எனும் ஸ்திதியே மிகச்சரியான தீர்மானங்களை உருவாக்குவதற்கான சிம்மாசனம் ஆகும்.