06.12.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    20.02.87     Om Shanti     Madhuban


நினைவு, தூய்மை மற்றும் உண்மையான சேவையாளராக இருக்கும் மூன்று கோடுகள்.


இன்று, அனைவரின் அன்பிற்கும் உரியவரும் உலகச் சேவையாளருமான தந்தை, எப்போதும் சேவை செய்யும் தனது குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். சேவையாளரான பாப்தாதா, எல்லா வேளையும் தனக்குச் சமமாக இருக்கும் சேவையாளர்களான தனது குழந்தைகளை விரும்புகிறார். இன்று, பாபா குறிப்பாக சேவையாளர்களான குழந்தைகள் அனைவரின் நெற்றியிலும் பிரகாசிக்கும் மூன்று கோடுகளைப் பார்க்கிறார். ஒவ்வொருவரின் நெற்றியும் திரிமூர்த்தி திலகத்தைப் போல் ஜொலிக்கின்றன. இந்த மூன்று கோடுகளும் எதைக் குறிக்கின்றன? இந்தத் திரிமூர்த்தி திலகத்தில் இருந்து ஒவ்வொரு குழந்தையினதும் தற்போதைய பெறுபேற்றைக் காண முடியும். ஒன்று, சம்பூரண யோகி வாழ்க்கை வாழ்வதற்கான கோடு. இரண்டாவது, தூய்மையின் கோடு. மூன்றாவது, உண்மையான சேவையாளராக இருப்பதற்கான கோடு. பாபா எல்லாக் குழந்தைகளிலும் இந்த மூன்று கோடுகளின் பெறுபேற்றைப் பார்த்தார். அனைவரின் நினைவுக் கோடும் பிரகாசித்தன. ஆனால், வரிசைக்கிரமமாக இருந்தன. சிலரின் கோடு, ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை கலப்படம் இல்லாமல் இருந்தன. அதாவது, அவர்கள் எப்போதும் ஒரேயொருவரின் அன்பில் மூழ்கியிருந்தார்கள். இரண்டாவதாக, அது எப்போதும் துண்டிக்கப்படாததாக உள்ளதா? அந்தக் கோடு எப்போதும் நேராக உள்ளதா? அதாவது, சகல உறவுமுறைகளினதும் அன்பு எப்போதும் நேரடியாகத் தந்தையுடன் உள்ளதா? அல்லது, கருவி ஆத்மாக்களினூடாகத் தந்தையுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்துவதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? உங்களுக்குத் தந்தையின் நேரடி ஆதாரம் உள்ளதா? அல்லது, வேறோர் ஆத்மாவினூடாக நீங்கள் தந்தையின் ஆதாரத்தை அனுபவம் செய்கிறீர்களா? நேரான கோட்டைக் கொண்டிருப்போர் ஒருவகையினர். ஏனையோரின் கோடுகளோ இடையில் சிறிது கோணலாக உள்ளன. இவையே நினைவின் கோட்டின் சிறப்பியல்புகளாகும்.

இரண்டாவது, சம்பூரணமான தூய்மையின் கோடாகும். இதுவும் வரிசைக்கிரமமானதே. ஒன்று, நீங்கள் பிராமணப் பிறப்பு எடுத்தவுடனே, பிராமண வாழ்க்கையின் ஆசீர்வாதத்தை, தந்தையிடமிருந்து விசேடமான ஆசீர்வாதத்தைப் பெற்றீர்கள். இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் உங்களின் வாழ்க்கையில் நிலையாகவும் இலகுவாகவும் அனுபவம் செய்தீர்கள். இந்தக் கோடு ஆரம்பத்தில் இருந்து இப்போதுவரை நேராகவே உள்ளது. ஏனையோர் இந்த பிராமண வாழ்க்கையின் இந்த ஆசீர்வாதத்தை ஓர் உரிமையின் ரூபத்தில் அனுபவம் செய்வதில்லை. அவர்கள் சிலவேளைகளில் அதை இலகுவாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனைய வேளைகளில் அதிகளவு கடின உழைப்பாலும் முயற்சியாலுமே அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களின் கோடு எப்போதும் நேராகவும் பிரகாசமாகவும் இருப்பதில்லை. உண்மையில், நினைவிலும் சேவையிலும் வெற்றி பெறுவதற்கான அடிப்படை, தூய்மையே ஆகும். தூய்மை என்பது வெறுமனே பிரம்மச்சாரியாக இருப்பது மட்டுமல்ல. ஆனால், தூய்மையின் சம்பூரணமான ரூபம் என்றால், பிரம்மச்சாரியாக இருப்பதுடன், நீங்கள் பிரம்மாபாபாவைப் பின்பற்றுபவராகவும் (பிரம்மா- ஆச்சாரி) இருக்க வேண்டும். பிரம்மா - ஆச்சாரி என்றால், தந்தை பிரம்மாவின் செயல்பாடுகளைப் பின்பற்றுபவர் என்று அர்த்தம். இது ‘தந்தையைப் பின்பற்றுதல்’ எனப்படுகிறது. ஏனென்றால், நீங்கள் பிரம்மாபாபாவைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் உங்களின் ஸ்திதியில் சிவ பாபாவிற்குச் சமமானவர் ஆகவேண்டும். ஆனால் உங்களின் நடவடிக்கைகளிலும் செயல்களிலும் பிரம்மாபாபாவைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வோர் அடியிலும் பிரம்மச்சாரியாக இருங்கள். சதா உங்களின் எண்ணங்களிலும் அத்துடன் உங்களின் கனவுகளிலும் பிரம்மச்சரியத்தின் சத்தியத்தைக் கடைப்பிடியுங்கள். தூய்மை என்பதன் அர்த்தம், சதா தந்தையை உங்களின் சகபாடி ஆக்கிக் கொள்வதாகும். அத்துடன் எப்போதும் தந்தையின் சகவாசத்தில் தங்கியிருப்பதாகும். நீங்கள் அவரை உங்களின் சகபாடி ஆக்கிக் கொண்டீர்களா? ‘பாபா என்னுடையவர்’ என உணர்வது அத்தியாவசியமே. ஆனால், எல்லா வேளையும் தந்தையின் சகவாசத்தை மட்டுமே வைத்திருக்க வேண்டும். இதுவே சம்பூரணமான தூய்மை எனப்படுகிறது. ஒன்றுகூடலின் சகவாசமும், குடும்பத்தின் மீதுள்ள அன்பிற்கான ஒழுங்குமுறைக் கோட்பாடுகளும் வேறுபட்டவை. அதுவும் அத்தியாவசியமானதே. எவ்வாறாயினும், தந்தையினாலேயே உங்களுக்குக் குடும்பத்தின் அன்பின் சகவாசம் கிடைத்தது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுக்குக் குடும்பத்தின் அன்பு கிடைத்துள்ளது. ஆனால், அது யாருடைய குடும்பம்? தந்தையின் குடும்பம். தந்தை இல்லாவிட்டால், எங்கிருந்து இந்தக் குடும்பம் வரும்? குடும்பத்தின் அன்பும் குடும்பத்தின் ஒன்றுகூடலும் மிகவும் நல்லதே. ஆனால், குடும்பத்தின் விதையாக இருப்பவரை மறந்துவிடாதீர்கள். நீங்கள் சிலவேளைகளில் தந்தையை மறந்துவிட்டு, குடும்பத்தின் சகவாசத்தைத் தேடுகிறீர்கள். அவ்வப்போது நீங்கள் தந்தையை விட்டு நீங்கினால், இடையில் ஓர் இடைவெளி ஏற்பட்டுவிடும். அதற்குள் மாயை புகுந்துவிடுவாள். ஆகவே, அனைவருடனும் அன்பாக வாழும்போது, அனைவருடனும் அன்பைப் பரிமாறும்போது, ஒன்றுகூடலை (சமுதாயம்) மறந்துவிடாதீர்கள். அதுவே தூய்மை எனப்படுகிறது. நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள், அல்லவா?

சில குழந்தைகள் சம்பூரணமான தூய்மை ஸ்திதியை நோக்கி முன்னேறுவதைக் கடினமாக உணர்கிறார்கள். இதனாலேயே, அவ்வப்போது அவர்களுக்கு யாராவது ஒருவரைத் தமது சகபாடி ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. யாராவது ஒருவரின் சகவாசம் வைத்திருப்பது அவசியம் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் சந்நியாசிகள் ஆகத் தேவையில்லை. ஆனால், ஆத்மாக்களின் சகவாசத்தில் இருக்கும்போது, தந்தையின் சகவாசத்தை மறந்து விடாதீர்கள். இல்லாவிட்டால், அவசியமான நேரத்தில், நீங்கள் அந்த ஆத்மாவின் சகவாசத்தையே நினைப்பீர்கள். தந்தையை மறந்துவிடுவீர்கள். அதனால், நீங்கள் அவசியமான நேரத்தில் ஏமாற்றப்பட்டு விடுவீர்கள். இது ஏனென்றால், பௌதீகமான, சரீரதாரிகளின் ஆதாரத்தை எடுக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் முதலில் சரீரதாரிகளையே நினைப்பீர்கள். பின்னரே, அவ்யக்த தந்தையையும் அசரீரியான தந்தையையும் நினைப்பீர்கள். எந்தவொரு நேரத்திலும், முதலில் நீங்கள் பௌதீகமானவர்களின் ஆதாரத்தை நினைத்தால், அதுவே முதலாம் இலக்கம் ஆகிவிடும். தந்தை இரண்டாம் இலக்கம் ஆகிவிடுவார். எனவே, தந்தையை நீங்கள் இரண்டாம் இலக்கத்தில் வைத்தால், நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள்? அது முதலாம் இலக்கமா அல்லது இரண்டாம் இலக்கமா? ஒத்துழைப்பைப் பெறுவதோ அல்லது அன்பாக இருப்பதோ, ஒருவரை உங்களின் ஆதாரமாக ஆக்கிக் கொள்வதில் இருந்து வேறுபட்டது. இது மிகவும் ஆழமானது. நீங்கள் இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். சில ஒன்றுகூடல்களில், அன்பாக இருப்பதற்குப் பதில், நீங்கள் பற்றற்றவர் ஆகுகிறீர்கள். நீங்கள் அகப்பட்டுக் கொள்வீர்களோ எனப் பயப்படுகிறீர்கள். அதனால், உங்களைத் தொலைவில் வைத்துக் கொள்வது நல்லது என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், இல்லை! நீங்கள் 21 பிறவிகளுக்கு இல்லறத்திலும் ஒரு குடும்பத்துடனும் வாழ வேண்டும். இல்லையா? எனவே, நீங்கள் பயத்தால் உங்களைத் தொலைவில் வைத்திருந்தால், உங்களைத் தனிமைப்படுத்தினால், அவை ஒரு கர்மசந்நியாசியின் சம்ஸ்காரங்கள் ஆகிவிடும். நீங்கள் கர்மயோகிகள் ஆகவேண்டுமே அன்றி, கர்ம சந்நியாசிகளாக அல்ல. நீங்கள் ஓர் ஒன்றுகூடலில் இருந்து அன்பாக இருந்தாலும், வேறு எவரையும் அன்றி, ஒரேயொரு தந்தையை மட்டுமே உங்களின் புத்தியின் ஆதாரமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும். உங்களின் புத்தியை எந்தவோர் ஆத்மாவின் சகவாசமும், நற்குணங்களும் அல்லது சிறப்பியல்புகளும்; கவரக்கூடாது. அதுவே தூய்மை என்று அழைக்கப்படுகிறது.

அந்தத் தூய்மை உங்களுக்குக் கடினமானதாக இருந்தால், ஆசீர்வாதங்களை அருள்பவரான தந்தையிடமிருந்து பிறப்பிலே நீங்கள் பெற்ற ஆசீர்வாதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே அது நிரூபிக்கிறது. ஆசீர்வாதத்திற்குச் சிரமப்பட வேண்டியதில்லை. ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் பிராமண வாழ்க்கையின் முதல் ஆசீர்வாதமான, ‘நீங்கள் தூய்மை ஆகுவீர்களாக, நீங்கள் யோகி ஆகுவீர்களாக’ என்பதைப் பெறுகிறார். எனவே, உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் தூய்மையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளேனா? அல்லது, சிரமப்பட்டு உழைத்தே நான் தூய்மையை ஏற்றுக் கொண்டேனா? இது உங்களின் பிராமணப் பிறவி என்பதை நினைவில் வைத்திருங்கள். இது மாற்றப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல. ஆனால், இது பிராமணப் பிறப்பின் அடிப்படையில் மாற்றப்பட்ட வாழ்க்கையாகும். பிறப்பில் ஏற்படும் சம்ஸ்காரங்கள் மிகவும் இலகுவாகவும் இயல்பாகவும் இருக்கும். நீங்களும் உங்களுக்கிடையே இதையே கூறுகிறீர்கள்: எனது சம்ஸ்காரங்கள் பிறப்பில் இருந்தே இவ்வாறுதான் உள்ளன. பிராமணப் பிறப்பின் சம்ஸ்காரங்கள், ‘நீங்கள் யோகி ஆகுவீர்களாக, நீங்கள் தூய்மை ஆகுவீர்களாக’ என்பதே ஆகும். இது ஓர் ஆசீர்வாதம், அத்துடன் உங்களின் ஆதி சம்ஸ்காரம் ஆகும். வாழ்க்கையில் இரண்டு விடயங்கள் தேவைப்படுகின்றன: ஒன்று, ஒரு சகபாடி. மற்றையது, சகவாசம். இதனாலேயே, திரிகாலதரிசியான தந்தை, அனைவரின் தேவைகளையும் அறிந்ததால், உங்களின் மிகச்சிறப்பான சகபாடி ஆகுவதுடன், உங்களுக்கு மிகச்சிறந்த சகவாசத்தையும் வழங்குகிறார். குறிப்பாக இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு இந்த இரண்டும் தேவைப்படுகின்றன. அதனாலேயே, நீங்கள் பிராமணப் பிறப்பு எடுத்த கணத்தில் இருந்தே சகபாடிக்கான அனுபவத்தை பாப்தாதா உங்களுக்கு வழங்கியுள்ளார். அவர் உங்களை மணவாட்டிகள் ஆக்கியுள்ளார். நீங்கள் பிறப்பு எடுத்தவுடனேயே உங்களின் சகபாடியைக் கண்டு கொண்டீர்கள், இல்லையா? உங்களின் சகபாடியைக் கண்டுவிட்டீர்களா அல்லது இன்னமும் அவரைத் தேடுகிறீர்களா? ஆகவே, தூய்மையை உங்களின் ஆதி சம்ஸ்காரமாக அனுபவம் செய்யுங்கள். அது மேன்மையான கோடு எனப்படுகிறது. உங்களின் அத்திவாரம் பலமாக உள்ளதல்லவா?

மூன்றாவது கோடு, உண்மையான சேவையாளருக்குரியது. அனைவரின் நெற்றியிலும் ஒரு சேவையாளருக்கான கோடு உள்ளது. சேவை செய்யாமல் உங்களால் இருக்க முடியாது. பிராமண வாழ்க்கையைச் சதா தடைகளில் இருந்து விடுவிப்பதற்கான வழிமுறை சேவையே ஆகும். அத்துடன் சேவையிலேயே உங்களுக்கு அதிகமான பரீட்சைகளும் வருகின்றன. தடைகளில் இருந்து விடுபட்டிருக்கும் சேவையாளரே உண்மையான சேவையாளர் எனப்படுகிறார். தடைகள் வருவது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவை வரவேண்டியுள்ளது. அவை தொடர்ந்து வரும். ஏனென்றால், இந்தத் தடைகள் அல்லது பரீட்சைத்தாள்கள் உங்களை அனுபவசாலிகள் ஆக்குவதற்காகவே வருகின்றன. அதை ஒரு தடையாகக் கருதாதீர்கள். ஆனால் உங்களின் அனுபவத்தால் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்ற உணர்வுடன் அதைப் பாருங்கள். அப்போது அதை முன்னேற்றத்திற்கான ஏணியாக நீங்கள் அனுபவம் செய்வீர்கள். நீங்கள் இதனூடாக மேலும் அதிகமாக முன்னேற வேண்டும். ஏனென்றால், சேவை என்றால் நீங்கள் ஆத்மாக்கள் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுகின்ற ஓர் ஒன்றுகூடல் என்று அர்த்தம். இந்த முறையில் இந்த மனோபாவத்துடன் நீங்கள் அதைப் பார்த்தால், நீங்கள் எப்போதும் அனுபவத்தின் அதிகாரத்துடன் முன்னேறிச் செல்வதை அனுபவம் செய்வீர்கள். ஒரு தடையைத் தடையாகக் கருதாதீர்கள். தடைக்குக் கருவியாக இருக்கும் ஆத்மாவைத் தடைகளை ஏற்படுத்தும் ஆத்மாவாகக் கருதாதீர்கள். ஆனால், அந்த ஆத்மாவை உங்களை அனுபவசாலி ஆக்கும் உங்களின் ஆசிரியராகக் கருதுங்கள். உங்களை இகழ்பவரையும் உங்களின் நண்பர் என நீங்கள் கூறுவதனால், தடைகளினூடாகச் செல்ல வைப்பவரும் உங்களை அனுபவசாலி ஆக்குபவரும் உங்களின் ஆசிரியர், அல்லவா? அவர் உங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்தார், இல்லையா? தற்காலத்தில், நோய்களை நீக்குவதற்காக உங்களைத் தேகப்பியாசங்களைச் செய்ய வைக்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில், அந்தத் தேகப்பியாசங்களைச் செய்ய உங்களுக்குச் சிரமமாக இருக்கும். ஆனால், அந்த வலி, எல்லா வேளைக்கும் உங்களை வலிகளில் இருந்து விடுவிக்கும். எவ்வாறாயினும், இதைப் புரிந்து கொள்ளாதவர்கள், அந்த வலியில் சிகிச்சை அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளாமல், தங்களுக்கு மேலும் வலியைக் கொடுத்துள்ளதாகக் கூறி வேதனையால் அழுவார்கள். அதேபோல், அது தடையின் வடிவில் வந்திருக்கலாம். அந்த ஆத்மாவும் தடைகளை ஏற்படுத்தும் ஓர் ஆத்மாவாகத் தோன்றலாம். ஆனால், நீங்கள் தடைகளை வெற்றி கொள்வதற்கு அந்த ஆத்மா கருவி ஆகுவதுடன், உங்களை எல்லா வேளைக்கும் அசைக்க முடியாதவராகவும் ஆக்குகிறார். இதனாலேயே, தடைகளில் இருந்து விடுபட்ட ஓர் ஆத்மா உண்மையான சேவையாளர் எனப்படுகிறார். இத்தகைய மேன்மையான கோட்டைக் கொண்டவர்கள், உண்மையான சேவையாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சதா சுத்தமான புத்தியையும், சுத்தமான மனோபாவத்தையும் கொண்டிருந்து, தூய செயல்களைச் செய்வதே சேவையில் வெற்றி பெறுவதற்கான இலகுவான வழிமுறையாகும். நீங்கள் எந்தவொரு சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னரும், அனைத்திற்கும் முதலில் சுத்தத்திற்குப் பதிலாக, கடந்தகாலத்தின் ஏதாவது விழிப்புணர்வு சிறிதளவேனும் இருக்கிறதா எனச் சோதித்துப் பாருங்கள். அவ்வாறு இருந்தால், நீங்கள் அந்த ஆத்மாவுடன் பேசுகின்ற, பார்க்கின்ற முறையும் அந்த மனோபாவத்துடனும் பார்வையுடனுமே இருக்கும். அப்போது உங்களால் சுத்தத்துடன் சேவை செய்வதனால் ஏற்படும் சம்பூரணமான வெற்றியை உங்களால் பெற முடியாதிருக்கும். கடந்த காலத்தின் சகல விடயங்களையும் வெவ்வேறான மனோபாவங்கள் அனைத்தையும் முடிப்பதே, சுத்தமாகும். கடந்த காலத்தைப் பற்றி நினைப்பதும், ஏதாவதொரு சதவீதத்தில் சிறிதளவு பாவமாக இருக்கும். எண்ணங்கள் ஓர் உலகை உருவாக்குகின்றன. எதைப் பற்றியாவது பேசுவது அதை விடப்பெரிய விடயமாகும். இது ஏனென்றால், அந்த எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம், அந்தப் பழைய எண்ணங்களின் விழிப்புணர்வானது அதைப் போன்ற உலகையும் சூழலையும் உருவாக்கும். அதன்பின்னர், ‘நான் சொன்னபடி நடந்ததுதானே?’ என நீங்கள் கூறுவீர்கள். ஆனால், ஏன் அவ்வாறு நிகழ்ந்தது? உங்களின் பலவீனமான, வீணான எண்ணங்களே அந்த வீணான சூழலை உருவாக்கியது. ஆகவே, உண்மையான சேவையாளர் என்றால் பழைய அதிர்வலைகளையும் முடிப்பவர் ஆவார். விஞ்ஞானிகள் ஆயுதங்களால் ஆயுதங்களை அழிக்கிறார்கள். அவர்கள் ஒரு விமானத்தை அழிப்பதற்கு இன்னொரு விமானத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் யுத்தம் செய்யும்போது, ஒருவரையொருவர் முற்றாக அழிக்கிறார்கள். எனவே, உங்களின் தூய அதிர்வலைகளால் தூய அதிர்வலைகளை வெளிப்படச் செய்ய முடியும். அத்துடன் வீணான அதிர்வலைகளை முடிக்க முடியும். எண்ணங்களால் ஏனைய எண்ணங்களை முடிக்க முடியும். உங்களின் எண்ணங்கள் சக்திவாய்ந்தவையாக இருந்தால், அந்தச் சக்திவாய்ந்த எண்ணங்கள் நிச்சயமாக வீணான எண்ணங்களை முடித்துவிடும். உங்களுக்குப் புரிகிறதா? அனைத்திற்கும் முதலில் சேவையில் உங்களுக்குத் தேவையானது சுத்தம். அதாவது, தூய்மையின் சக்தியாகும். இந்த மூன்று கோடுகளும் பிரகாசிப்பதை பாபா பார்க்கிறார்.

நீங்கள் சேவையின் பல சிறப்பியல்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்கள். அவை அனைத்தினதும் சாரம் என்னவென்றால், பாவகரமான எண்ணங்களில் இருந்து விடுபட்ட சுயநலமற்ற ஸ்திதியால் சேவை செய்வதே வெற்றிக்கான அடிப்படை ஆகும். இந்த வகையான சேவையாலேயே நீங்கள் எப்போதும் திருப்தியாகவும் மலர்ச்சியாகவும் இருப்பீர்கள். ஏனையோரும் எப்போதும் திருப்தியாக இருப்பார்கள். சேவை செய்யாமல் ஒன்றுகூடல் இருக்க முடியாது. ஒன்றுகூடலில், வெவ்வேறு சூழ்நிலைகள், வெவ்வேறு அபிப்பிராயங்கள், வெவ்வேறு வழிமுறைகள், வசதிகள் போன்றவை இருக்க வேண்டும். எவ்வாறாயினும், சூழ்நிலைகள் வந்திருந்தபோதும், வெவ்வேறு வழிமுறைகளைக் கேட்டாலும், நீங்கள் எப்போதும் பலரை ஒரேயொருவரின் நினைவில் ஒன்றிணைந்திருக்கச் செய்வதுடன், நிலையான, ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். வெவ்வேறான நிலைகளைப் பார்த்து ஒருபோதும் குழப்பம் அடையாதீர்கள்: இப்போது பல அபிப்பிராயங்கள் இருப்பதனால், நான் என்ன செய்வது? நான் யார் சொல்வதை ஏற்றுக் கொள்வது? நான் யார் சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல் விடுவது? நீங்கள் சுயநலமில்லாமல், வேறெந்த எண்ணங்களும் இல்லாமல் இருந்து, ஒரு தீர்மானத்தை எடுத்தால், எவருக்கும் வீணான எண்ணங்கள் இருக்காது. ஏனென்றால், எவராலும் சேவை செய்யாமல் இருக்க முடியாது. எவராலும் நினைவில்லாமலும் இருக்க முடியாது. ஆகவே, தொடர்ந்து சேவையை அதிகரியுங்கள். அத்துடன், தொடர்ந்து உங்களை அன்புடனும் ஒத்துழைப்புடனும் சுயநலமற்ற உணர்வுகளுடனும் முன்னேறச் செய்யுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?

இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைவரும், அவர்கள் இளையவர்களோ வயதானவர்களோ, அனைவருமே ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் சேவைக்கான அத்தாட்சியைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். வெளிநாட்டில் உள்ள சேவைக்கான திட்டமும் இப்போது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இந்தத் தேசத்திலும், பணிகள் அனைத்தும் இப்போது அனைவரின் ஒத்துழைப்பினால் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. குழந்தைகளான உங்களுக்குச் சேவை செய்வதில் உள்ள விருப்பத்தைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். தந்தையை வெளிப்படுத்த வேண்டும் என்ற அனைவரின் இலக்கும் நல்லதே. நீங்கள் சிரமப்படுவதைத் தந்தைக்கான அன்பாக மாற்றுவதன் மூலம் புலப்படும் பலனைக் காட்டியுள்ளீர்கள். குழந்தைகளான நீங்கள் அனைவரும் இங்கே விசேடமான சேவை செய்வதற்குக் கருவிகளாக வந்துள்ளீர்கள். பாப்தாதாவும் உங்களின் புகழைப் பாடுகிறார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! நீங்கள் அனைவரும் மிக நன்றாகச் செய்துள்ளீர்கள். சிலர் ஏதாவது செய்துள்ளார்கள், ஏனையோர் செய்யவில்லை என்பதல்ல. சிறிய இடங்களோ அல்லது பெரிய இடங்களோ, சிறிய இடங்களில் இருந்தவர்களும் எந்தவிதத்திலும் குறைவில்லாத சேவையைச் செய்துள்ளார்கள். எனவே, அனைவரின் மேன்மையான நல்லாசிகளுடனும் மேன்மையான தூய உணர்வுகளுடனும், பணிகள் மிக நன்றாகச் செய்யப்பட்டன. எப்போதும் மிக நன்றாகவே செயல்படும். நீங்கள் திட்டங்களைச் செய்யும்போது, உங்களுக்கு அதிகளவு நேரம் எடுத்தது, நீங்கள் பல எண்ணங்களைப் பயன்படுத்தினீர்கள் என்ற எண்ணங்கள் உங்களுக்கு ஏற்பட்டன, இல்லையா? அத்துடன் நீங்கள் பௌதீகமான சக்தியைப் பயன்படுத்தினீர்கள். நீங்கள் உங்களின் செல்வத்தையும் ஒன்றுகூடலின் சக்தியையும் பயன்படுத்தினீர்கள். வெளிநாடுகளிலும் இந்தத் தேசத்திலும் இரண்டு இடங்களிலும் சகல சக்திகளையும் பயன்படுத்தியதன் மூலம் சேவையின் யாகம் வெற்றிகரமாக நிறைவேறியது. செயன்முறைத் திட்டங்கள் மிக நன்றாக நடைபெற்றன. நீங்கள் நன்றாகச் செய்தீர்களா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. அவை எப்போதும் நன்றாகவே இருந்தன. எப்போதும் அவை நன்றாகவே இருக்கும். நீங்கள் ‘அமைதிக்கான பலமில்லியன் நிமிடங்கள்’ என்ற செயன்முறைத் திட்டத்தையோ அல்லது பொன்விழாவையோ எதைச் செய்தாலும், அவை இரண்டும் மிகவும் அழகானவை. நீங்கள் செய்த செயன்முறைத் திட்டங்களுக்கான வழிமுறைகளும் நல்லவை. சிலவேளைகளில், ஏதாவதொன்றின் மதிப்பை அதிகரிப்பதற்கு, அதை ஒரு திரையின் பின்னால் வைப்பார்கள். அந்தத் திரை அதன் மதிப்பை மேலும் அதிகரிக்கும். அந்தத் திரையின் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு மக்களின் ஆவல் அதிகரிக்கும். இந்தத் திரை, வெளிப்படுத்துகைக்கான திரையாக ஆகும். நீங்கள் இப்போது நிலத்தைப் பண்படுத்தி உள்ளீர்கள். நிலத்தில் விதையை விதைக்கும்போது, அது நிலத்தின் கீழ் மறைந்துவிடுகிறது. விதையை மேலே வைக்க மாட்டார்கள். அதை நிலத்தின் கீழ் மறைத்தே வைப்பார்கள். ஆனால், மறைத்து வைக்கப்பட்ட அந்த விதையின் மலர்களும் பழங்களுமே புலப்படுகின்றன. எனவே, நீங்கள் இப்போது விதையை விதைத்திருக்கிறீர்கள். மரம் இயல்பாகவே தொடர்ந்து மேடையில் தோன்றும்.

நீங்கள் எல்லோரும் சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறீர்கள்தானே? ‘ஆஹா பாபா!’ என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள், ‘ஆஹா சேவையே!’ என்றும் கூறுகிறீர்கள். அச்சா. பாப்தாதா செய்திகள் அனைத்தையும் கேட்டார்.

இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் இடம்பெற்ற வெவ்வேறு துறைகளின் ஒன்றுகூடலுக்கான இந்தச் சேவை, ஒரே நேரத்தில் சகல இடங்களிலும் ஒரே சத்தத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல வழிமுறை ஆகியுள்ளது. எதிர்காலத்திலும், உங்களிடம் என்ன நிகழ்ச்சிகள் இருந்தாலும், இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும், எங்கும் ஒரே வகையான சேவையை ஒரே நேரத்தில் செய்யுங்கள். அதன்பின்னர், அந்தச் சேவையின் பலனை மதுவனத்திற்கு ஒரு குழுவாகக் கொண்டு வாருங்கள். சகல இடங்களிலும் ஒரே அலை இருப்பதனால், அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. யார் சேவையில் அதிகபட்ச அத்தாட்சியைக் கொடுப்பார்கள் என்ற ஆன்மீக ஓட்டப்பந்தயம் அனைவருக்கிடையேயும் உள்ளது. இது போட்டி இல்லை. எனவே, இந்த உற்சாகத்துடன் எங்கும் பெயர் போற்றப்படுகிறது. ஆகவே, எந்தவொரு தொழிலினதும் குழுவொன்றைத் தயார் செய்யுங்கள். ஆனால், இந்த வருடம் எங்கும் ஒரே வகையான சேவையை ஒரே முறையில் செய்வதில் கவனம் செலுத்துங்கள். அந்த ஆத்மாக்கள் எங்கும் உள்ள ஒன்றுகூடலைப் பார்க்கும்போது, அவர்களும் உற்சாகம் அடைவார்கள். அத்துடன் முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்வார்கள். தொடர்ந்து திட்டங்களைச் செய்து, இந்த முறையில் முன்னேறுங்கள். அனைத்திற்கும் முதலில், உங்களின் சொந்த இடங்களில் உள்ள அந்தத் தொழில்களைச் செய்பவர்களுக்குச் சேவை செய்யுங்கள். சிறிய ஒன்றுகூடல்களுக்கான நிகழ்ச்சிகளைச் செய்யுங்கள். அந்தச் சிறிய ஒன்றுகூடல்களில் இருந்து பெரிய ஒன்றுகூடல்களுக்கான விசேடமான ஆத்மாக்களைத் தயார் செய்யுங்கள். எவ்வாறாயினும், அண்மையில் உள்ள நிலையங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும். ஏனென்றால், சிலரால் இங்கு வரமுடியாமல் போகலாம். அதனால் அவர்கள் அங்கு இடம்பெறும் நிகழ்ச்சிகளில் நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, அனைத்திற்கும் முதலில், சிறிய சிநே-மிலன்களை (அன்பான ஒன்றுகூடல்கள்) செய்யுங்கள். அதன்பின்னர் பிராந்தியம் முழுவதிலும் இருந்து வருபவர்களுக்கு ஒன்றுகூடல் நிகழ்ச்சியைச் செய்யுங்கள். அதன்பின்னர் மதுவனத்தில் பெரிய ஒன்றுகூடல் இடம்பெற வேண்டும். அதனால் அவர்கள் மதுவனத்திற்கு வருவதற்கு முன்னர் அனுபவசாலிகள் ஆகுவார்கள். எவ்வாறாயினும், ஒரே தொழிலைச் சேர்ந்தவர்களுக்கு வெளிநாடுகளிலும் இங்கும் ஒரே தலைப்பே இருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குப் பொருத்தமான தலைப்புகளும் இருக்கலாம். தலைப்பு பரந்ததாக இருந்தால், அதில் இரண்டு அல்லது மூன்று தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்ற முடியும். எனவே, இப்போது மதம், அரசியல், விஞ்ஞானம் என்ற புலங்களில் இருந்து மூன்று வகையான மாதிரிகளைத் தயார் செய்யுங்கள். அச்சா.

தூய்மைக்கான ஆசீர்வாதத்தின் உரிமையைக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள் அனைவருக்கும், சதா ஸ்திரமான ஸ்திதியை அனுபவம் செய்வதுடன் சதா யோகி வாழ்க்கை வாழும் ஆத்மாக்களுக்கும், ஒவ்வொரு கணமும் ஒரேயொரு எண்ணத்துடன் உள்ள உண்மையான சேவையாளர்களான மேன்மையான ஆத்மாக்களுக்கும், உலகில் அன்பு கொண்டிருக்கும் உலகச் சேவையாளர் ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலமும் சதா யோகியாக ஆகுவதன் மூலமும் மறப்பதில் இருந்தும் தவறுகள் செய்வதில் இருந்தும் விடுபடுவீர்களாக.

தங்களைத் தந்தையுடன் ஒன்றிணைந்தவர்களாக அனுபவம் செய்யும் குழந்தைகள், ‘நீங்கள் சதா யோகிகளாக இருப்பீர்களாக!’ என்ற ஆசீர்வாதத்தை இயல்பாகவே பெறுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் தொடர்ந்து ஒரு சந்திப்பை அனுபவம் செய்கிறார்கள். எவ்வளவுதான் சில வேளைகள் அவர்களை மறக்க முயற்சி செய்தாலும், அவர்கள் மறப்பதில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். தந்தையை ஒருபோதும் மறக்காத இத்தகைய குழந்தைகள், தந்தையால் நேசிக்கப்படுகிறார்கள். அவர்கள் சதா யோகிகளாகவும் இருக்கிறார்கள். ஏனென்றால், அன்பின் அடையாளம், இயல்பான நினைவாகும். மாயையால் அவர்களின் எண்ணங்களில் ஓர் ஆணியையேனும் (சிறிய பகுதி) அசைக்க முடியாது.

சுலோகம்:
சாக்குப்போக்குகள் சொல்வதற்குப் பதிலாக, தீர்வைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான உரிமையைப் பெறுவீர்கள்.