17.12.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்குவதற்கு சற்குரு வந்துவிட்டார். ஆகவே உங்கள் நடத்தை மிக மிக ராஜரீகமாக இருக்க வேண்டும்.

கேள்வி:
எவரையுமே குற்றம்சாட்ட முடியாத எந்தத் திட்டம் நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது?

பதில்:
இப்பழைய உலகின் விநாசத்திற்கான திட்டம் நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதையிட்டு எவரையுமே குற்றம்சாட்ட முடியாது. இந்த நேரத்தில் விநாசத்தின் பொருட்டுத் தத்துவங்கள் எல்லாம் வலுவான சீற்றம் கொண்டுள்ளன. எங்கும் பூகம்பங்;கள் ஏற்படும். கட்டிடங்கள் தகர்ந்து விழும். வெள்ளப் பெருக்குகளும், பஞ்சமும் ஏற்படும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் புத்தியின் யோகத்தைப் பழைய உலகத்திலிருந்து அகற்றி விடுங்கள். சற்குருவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். உயிருடன் இருக்கும்போதே சரீர உணர்வைத் துறந்துவிடுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

பாடல்:
நாங்கள் பாதையைப் பின்பற்ற வேண்டும், ஆயினும் நாம் விழாதிருப்பதில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
நீங்கள் பின்பற்ற வேண்டிய வழி எது? நீங்கள் குருவின் வழியைப் பின்பற்ற வேண்டும். எந்தக் குரு? இருக்கும் போதும் நடக்கும்போதும் மனிதர்களின் உதடுகளிலிருந்து பின்வரும் வார்தைகள் தோன்றும்: ஆகா குருவே! பல குருமார் உள்ளனர். “ஆகா குருவே! என்று யாருக்குக் கூறுவீர்கள்? யாருடைய புகழைப் பாடுவீர்கள்? அந்த ஒரு தந்தையே சற்குரு ஆவார். பக்தி மார்க்கத்தில் பல குருமார்கள் இருக்கிறார்கள். சிலர் ஒருவரையும் ஏனையோர் இன்னொருவரையும் போற்றுகிறார்கள். உண்மையான சற்குருவாகிய அந்த ஒருவரே போற்றப்படுகிறார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. உண்மையான சற்குரு ஒருவர் இருப்பதனால் போலியானவர்களும் இருக்கவேண்டும். உண்மையான அவர் சங்கமயுகத்திலேயே இருப்பார். பக்தி மார்க்கத்திலும் சத்தியம் என்று அழைக்கப்படும் அவரைப் போற்றுகிறார்கள். அதிமேன்மையான தந்தையே சத்தியமானவர். அவரே முக்தி அளிப்பவரும் வழிகாட்டியும் ஆவார். இக்காலத்தில் குருமார் வழிகாட்டிகளாகி, உங்களை ஸ்நானம் செய்வதற்குக் கங்கைக்கும் யாத்திரைகளுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். இந்த சற்குரு அப்படியானவர் அல்ல. அனைவரும் சற்குருவை நினைவு செய்து கூவி அழைக்கின்றார்கள். “ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்!” சற்குரு ஒருவரே தூய்மைப்படுத்துபவரென அழைக்கப்படுகின்றார். அவர் மட்டுமே தூய்மைப்படுத்த முடியும். அந்தக் குருமார்கள் எவரையும் தூய்மைப்படுத்தமுடியாது. அவர்கள் “சதா என்னையே நினைவு செய்யுங்கள்” எனக் கூறுவதில்லை. மக்கள் கீதையைப் படித்தாலும் அதன் கருத்தை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. அந்த ஒருவரே சற்குரு என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்களாயின், அவர்கள் தம்மைக் குருவென அழைக்க மாட்டார்கள். நாடகத்திற்கேற்ப, பக்திமார்க்கத்தின் திணைக்களம் முற்றாக வேறுபட்டது. அந்தப் பாதையில் பல குருமார்களும் பல பக்தர்களும் இருக்கின்றனர். இங்கு இவர் ஒருவரே உள்ளார். முதலாம் இலக்கத்தில் இருந்த இந்தத் தேவர்கள் இப்போது கடைசி இலக்கத்தில் இருக்கின்றனர். தந்தை வந்து அவர்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கிறார். ஆகவே ஏனையோரெல்லாம் இயல்பாகவே வீடு திரும்ப வேண்டும். இதனாலேயே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் அந்த ஒருவரே என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு சக்கரத்தின் போதும் சங்கமயுகத்தில் தேவதர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்களே அதிமேலான மனிதர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் வேறெதுவும் செய்வதில்லை. முக்தியும், சற்கதியும் அளிப்பவர் ஒருவரே என நினைவு கூரப்படுகின்றது. இது தந்தைக்கு மாத்திரமே உரித்தான புகழ்ச்சியாகும். சங்கமயுகத்திலேயே முக்தியும் சற்கதியும் பெறப்படுகின்றது. சத்திய யுகத்தில் ஒரேஒரு தர்மம் மட்டுமே நிலவும். இதுவும் புரிந்து கொள்ளப்படவேண்டிய விடயமே. எவ்வாறாயினும் இந்த விவேகத்தை யார் உங்களுக்குக் கொடுப்பார்கள்? தந்தையே வந்து உங்களுக்கு வழியைக் காட்டுகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் யாருக்கு ஸ்ரீமத் வழங்குகிறார்? ஆத்மாக்களுக்கே. அவரே தந்தையும், ஆசிரியரும் சற்குருவும் ஆவார். அவர் உங்களுக்கு ஞானத்தைக் கற்பிக்கின்றார். ஏனைய குருமார்கள் எல்லாம் பக்தியையே போதிக்கின்றார்கள். நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் தந்தையிடமிருந்து சற்கதி பெற்று இந்தப் பழைய உலகத்திலிருந்தும் நீங்கி விடுகிறீர்கள். இதுவும் உங்கள் எல்லையற்ற துறவாகும். உங்கள் 84 பிறவிச் சக்கரம் இப்போது முடிவுக்கு வருகிறது எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இந்த உலகமும் முடிவுறும் தறுவாயில் உள்ளது. ஒருவர் கடும்நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் போது அவர்கள் கூறுவார்கள்: இவர் விரைவில் இறந்து விடுவார். எனவே அவரை நினைவு செய்வதில் என்ன பயன்? அந்த சரீரம் அழிக்கப்பட்டதும் அந்த ஆத்மா சென்று இன்னொரு சரீரத்தை எடுப்பார். நம்பிக்கை எல்லாமே அற்றுப்போய்விடும். வங்காளத்தில் ஒருவரைப் பற்றி நம்பிக்கை இழந்து விட்டால், ஆத்மா கங்கையிலேயே சரீரத்தை விட்டு விடும்படி அவரைக் கங்கைக்கரைக்குக் கொண்டு செல்வார்கள். தேவ விக்கிரகங்களை ஆராதனை செய்து விட்டு ‘அமிழ்ந்துவிடு!, அமிழ்ந்துவிடு!’ என்பார்கள். முழு உலகமுமே அமிழ்ந்து போக உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். வெள்ளப்பெருக்கும், தீச்சுவாலைகளும் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் இறப்பார்கள். அந்த நிலைமைகள் ஏற்படும். பூகம்பங்களினால் கட்டிடங்கள் தகர்ந்து போகும். இந்த நேரத்தில் தத்துவங்களுக்கு உண்டாகும் கடும்சீற்றத்தினால் அனைத்துமே அழிந்துவிடும். இத்தகைய சூழ்நிலைகள் உலகம் முழுவதிலும் ஏற்படும். பலதரப்பட்ட மரணங்கள் சம்பவிக்கும். குண்டுகள் நஞ்சினால் நிரப்பப்பட்டுள்ளன. அதில் ஒரு மூச்சேனும் உள்வாங்கினால் அவர்கள் மயக்கநிலை அடைவார்கள். என்ன நிகழப்போகின்றது எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இவற்றையெல்லாம் தூண்டுபவர் யார்? தந்தை இதனைத் தூண்டவில்லை. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கு எவரையும் குறை கூறமுடியாது. இத்திட்டம் நாடத்திலே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பழைய உலகம் நிச்சயமாக மீண்டும் புதியதாகும். அத்துடன் இயற்கை அனர்த்தங்களும் நிகழும். விநாசம் நிகழவே வேண்டும். புத்தியின் யோகமானது இப்பழைய உலகத்திலிருந்து அகற்றப்படவே வேண்டும். இதுவே எல்லையற்ற துறவு எனப்படுகின்றது. நீங்கள் இப்போது ‘ஆகா சற்குரு! ஆகா!’ என்று கூறுகின்றீர்கள். நீங்கள் இப்பாதையை எங்களுக்குக் காண்பித்துள்ளீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: அந்த ஒருவருக்கு அவதூறு ஏற்படக்கூடிய வகையில் உங்கள் நடத்தை அமையக்கூடாது. நீங்கள் இங்கே மரணித்து வாழ வேண்டும். நீங்கள் சரீரத்தைத் துறந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் சரீரத்திலிருந்து பற்றற்றவராகி ஆத்ம உணர்விற்கு வந்து தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் நல்லதொரு விடயத்தைக் கூறுகின்றீர்கள். ஆகா! சற்குரு ஆகா! பரலோக சற்குருவே (இவ்வுலகத்திற்கு அப்பால் இருப்பவர்) போற்றப்படுகிறார். பல லௌகீக குருமார்கள் உள்ளனர். பக்தி மார்க்கத்திலும் நினைவு செய்யப்படுகின்ற ஒரேயொரு சத்தியமான சற்குருவே உள்ளார். உலகம் முழுவதற்கும் தந்தையானவர் அந்த ஒருவர் மட்டுமே. புதிய உலகம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகிறது என்பது கூட எவருக்கும் தெரியாது. சமயநூல்களில் விநாசத்தையும் பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் அரசமிலையில் மிதந்து வருவதாகவும் காண்பித்துள்ளார்கள். அவர் அரசமிலையில் வந்திருக்கமுடியாது என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கின்றீர்கள். கிருஷ்ணரைப் புகழ்வதில் பயனில்லை. உங்களை ஏறும் ஸ்திதிக்குக் கொண்டு செல்லக்கூடிய சற்குருவை நீங்கள் இப்போது கண்டுகொண்டீர்கள். இவ்வாறு கூறப்படுகிறது: ஏறும் ஸ்திதியின் மூலம் அனைவருக்கும் நன்மை உண்டு. ஆகவே ஆன்மீகத் தந்தை இங்கு அமர்ந்திருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாவே 84 பிறவிகள் எடுத்துள்ளார். ஒவ்வொரு பிறவியிலும் ஆத்மாக்களுக்கு வெவ்வேறு பெயர்களும் வடிவங்களும் உண்டு. இன்னார் 84 பிறவிகள் எடுத்துள்ளார் எனக்கூறமுடியாது. இல்லை. ஆத்மாவே 84 பிறவிகளை எடுக்கின்றார். சரீரம் மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் இவ்விடயங்களை எல்லாம் உங்கள் புத்தியில் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஞானம் முழுவதையும் உங்கள் புத்தியில் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் வருகின்ற எவருக்கும் இவ்வாறு விளங்கப்படுத்துங்கள்: ஆரம்பத்தில் தேவர்களின் அந்த இராச்சியமே இருந்தது. பின்னர் நடுப்பகுதியில் இராவணனின் ஏணியில் இறங்கி வந்தீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர் சதோ, ரஜோ, தமோ நிலைகளில் தொடர்ந்து இறங்கி வந்தீர்கள். சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. சிலர் வினவுவார்கள். பாபா எங்களை இந்த 84 பிறவிச்சக்கரத்தினுள் கொண்டு வந்ததனால் அவருக்கு என்ன பயன்? எவ்வாறாயினும், இந்த உலகச்சக்கரம் அநாதியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதன் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்திருக்கவேண்டும். ஒரு மனிதன் இதை அறியாதிருந்தால், அவன் ஒரு நாஸ்திகனே, இதை அறிந்துகொள்வதால் நீங்கள் மேன்மையான ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். இந்தக் கல்வி மிக மேன்மையானது. ஒரு முக்கியமான பரீட்சையில் சித்தியடைவோர் அனைத்திலும் மேலான அந்தஸ்து கிடைத்ததையிட்டு உள்ளத்தில் பெருமகிழ்ச்சி கொள்ளவார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் தமது முன்னைய பிறவியில் இந்த ஞானத்தைக் கற்றதன் மூலம் சாதாரண மனிதரிலிருந்து தேவர்கள் ஆகினார்கள். இந்தக் கல்வி மூலம் அவர்களது இராச்சியம் நிறுவப்படுகிறது. கற்றலின் மூலம் இத்தகைய மேன்மையான ஓர் அந்தஸ்து கிடைக்கிறதே! இது ஓர் அற்புதம்! பெரிய கோவில்களைக் கட்டுவோர், பேரறிவாளிகள் போன்றோரிடம் சத்தியயுக ஆரம்பத்தில் இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வாறு பிறப்பெடுத்தார்களென வினவினால் அவர்களால் உங்களுக்கு விடைகூற இயலாமல் இருக்கும். கீதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இராஜயோகம் இதுவே என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் தொடர்ந்து கீதையைக் கற்று வந்துள்ளார்கள். ஆனாலும் அதனால் நன்மை அடையவே இல்லை. தந்தை இப்போது இங்கமர்ந்திருந்து உங்களுக்கு இதைக் கூறுகிறார். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா உங்களை 5000 வருடங்களுக்கு முன்னரும் சந்தித்தோம். இவரை ஏன் சந்தித்தீர்கள்? சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவதற்கும், இலக்ஷிமி நாராயணன் போல் ஆகுவதற்குமே. இங்கு வருகின்ற இளையோர், முதியோர், வயோதிபர் ஆகியோருக்கு நிச்சயமாக இது கற்பிக்கப்பட்டுள்ளது. இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும். இதுவே உண்மையான நாராயணனின் கதையாகும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இதை மிக நன்றாகப் புரிந்து கொள்பவர்கள் அகத்தே சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். பாபா வினவுகிறார்: இராச்சியத்தைக் கோருவதற்கான தைரியம் உங்களிடம் உள்ளதா? அவர்கள் பதிலளிக்கின்றார்கள். பாபா ஏன் இல்லை? நாங்கள் மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்குக் கற்கின்றோம். பல காலமாக நாங்கள் எங்களை ஒரு சரீரமாகவே கருதினோம். தந்தை இப்போது எங்களை நெறிப்படுத்தும் வழியைக் காட்டியுள்ளார். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி தேவையாகும். நீங்கள் மீண்டும், மீண்டும் பெயரிலும் வடிவத்திலும் அகப்பட்டு விடுகிறீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் பெயரிலும், வடிவத்திலும் பற்றற்றிருக்க வேண்டும். ஆத்மா என்பதும் ஒரு பெயரே. தந்தையே பரமாத்மாவும், பரமதந்தையும் ஆவார். ஒரு பௌதீகத் தந்தை, ஒருபோதும் பரமதந்தையென அழைக்கப்படுவதில்லை. பரம் என்பது அந்த ஒரு தந்தைக்கு வழங்கப்படுகின்றது. அவருக்கே நீங்கள் ‘ஆகா! குருவே!’ என்று கூறுகிறீர்கள். நீங்கள் சீக்கியர்களுக்கும் விளங்கப்படுத்தலாம். இதன் முழு விபரமும் கிரந்தத்தில் (சீக்கிய சமய நூல்) உள்ளது. கிரந்தில், ஜப் சஹிப், சுக்மணி என அவரை விபரித்திருப்பதைப் போல் வேறெந்த சமயநூல்களிலும் விபரிக்கப்படவில்லை. இந்த இரண்டு சொற்களுமே உள்ளன. தந்தை கூறுகிறார்: சஹிப் (பிரபு) நினைவு செய்யப்பட்டால் 21 பிறவிகளுக்கு நீங்கள் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இதையிட்டுக் குழப்பம் அடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை விளங்கப்படுத்தி உங்களுக்கு அனைத்தையும் இலகுவாக்குகின்றார். எத்தனையோ இந்துக்கள் சீக்கியர்களாக மாற்றப்பட்டுள்ளனர். மனிதர்களுக்கு வழியைக் காட்டுவதற்காக நீங்கள் பல படங்கள் முதலியவற்றை உருவாக்குகிறீர்கள். நீங்கள் மிக இலகுவாக விளங்கப்படுத்தலாம். அப்பொழுது நீங்கள் வேறொரு மதத்தைச் சார்ந்த ஓர் ஆத்மாவாக உள்ளீர்கள். இது பலவகைப்பட்ட மதங்களின் விருட்சமாகும். வேறு எவருக்கும் கிறிஸ்து எவ்வாறு வருகிறாரெனத் தெரியாது. ஒரு புதிய ஆத்மா கர்மவேதனை எதனையும் அனுபவம் செய்யமுடியாதென பாபா விளங்கப்படுத்தியுள்ளார். தனக்குத் தண்டனை கிடைக்கக்கூடியதாக கிறிஸ்து ஆத்மா எந்தப் பாவச்செயலையும் செய்யவில்லை. வந்தவர் ஒரு சதோபிரதான் ஆத்மாவே. எவருடைய சரீரத்தில் அவர் பிரவேசித்தாரோ, அவரே சிலுவையில் அறையப்பட்டார். கிறிஸ்து அல்ல. அவர் நீங்கிச் சென்று இன்னொரு சரீரத்தைப் பெற்று உயர்ந்த அந்தஸ்தைக் கோரினார். பாப்பாண்டவரின் படமும் உள்ளது. இந்த வேளையில் முழு உலகமுமே ஒரு சதப் பெறுமதியேனும் அற்றது. நீங்களும் அவ்வாறே இருந்தீர்கள். இப்போது நீங்கள் பவுண் பெறுமதி உள்ளவர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் வாரிசுகள் அவை அனைத்தையும் பயன்படுத்தி வாழ்வார்கள் என்றில்லை. இல்லவே இல்லை. நீங்கள் கைகளை நிரப்பிவாறே செல்வீர்கள். ஏனையோரெல்லாம் வெறுங்கையுடனேயே செல்வார்கள். நீங்கள் நிறைந்துள்ளவர்கள் ஆகுவதற்குக் கற்கின்றீர்கள். சென்ற கல்பத்தில் வந்தவர்கள் மீண்டும் வருவார்களென்பதும் உங்களுக்குத் தெரியும். அவர்கள் சிறிதளவையேனும் செவிமடுத்ததும் வருவார்கள். நீங்கள் அனைவரும் அனைத்தையும் கூட்டாகவே காண்பீர்கள் என்றில்லை. நீங்கள் பல பிரஜைகளை உருவாக்குகிறீர்கள். பாபாவால் அனைவரையும் கவனித்துக்கொள்ள இயலாது. சிறிதளவையேனும் செவிமடுப்பதால் பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். அவர்களை நீங்கள் எண்ணிப் பார்ப்பதும்கூட இயலாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். பாபாவும் சேவை செய்து கொண்டிருக்கின்றார். பாபாவினால் சேவை செய்யாதிருக்க முடியாது. அவர் ஒவ்வொரு நாளும் காலையில் உங்களுக்குச் சேவை செய்ய வருகிறார். மக்களும் காலையிலேயே ஆன்மிக ஒன்றுகூடல்களை கொண்டிருக்கின்றார்கள். அந்த நேரத்தில் அனைவரும் ஓய்வாக இருக்கிறீர்கள். பாபா கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்து அதிகாலையில் வரவும் கூடாது. இரவிலும் அதிகம் பிந்தி வரக்கூடாது. ஏனெனில் நாளுக்கு நாள் உலகம் சீரழிந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே ஒவ்வொரு தெருவிலும் ஒரு நிலையம் இருக்குமானால் நீங்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டதும் இலகுவாகவும், விரைவாகவும் நிலையத்தைச் சென்றடைந்து விடலாம். உங்கள் எண்ணிக்கை அதிகரித்ததும், இராச்சியம் நிறுவப்படும். தந்தை மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். இராஜயோகம் மூலம் ஸ்தாபனை நடைபெறுகிறது. அப்போது பூமியில் ஏனைய பகுதிகள் இருக்கமாட்டாது;. எத்தனையோ பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். மணிமாலையும் உருவாக்கப்பட வேண்டும். பிரதானமான விடயம் யாதெனில், பலருக்கும் சேவை செய்து, அவர்களைத் தம்மைப்போல் ஆக்குபவர்கள், மாலையின் மணிகள் ஆகுகின்றார்கள். மக்கள் மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். ஆனால் அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. மக்களின் புத்தியானது மணிகளை உருட்டுவதில் ஈடுபடும் பொருட்டு பல குருமார்கள் அவர்களுக்கு மணிமாலையைக் கொடுக்கிறார்கள். காமமே மிகக்கொடிய எதிரியாகும். நாளுக்கு நாள் அனைத்துமே உக்கிரம் மிக்கதாக வரும். இந்த உலகம் மிகவும் தீயதாக இருப்பதால் ஆத்மாக்கள் நாளுக்கு நாள் தமோபிரதான் ஆகிக்கொண்டிருக்கின்றனர். பலர் பாபாவிடம் தெரிவிப்பார்கள்: உண்மையில் நாங்கள் சலிப்படைந்து விட்டோம்! விரைவில் எங்களை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்! தந்தை கூறுகிறார்: பொறுமையைக் கடைப்பிடியுங்கள்! ஸ்தாபனை நிகழும் என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவாதமே உங்களை அங்கே அழைத்துச் செல்லும். மேலும் ஆத்மாக்களாகிய நீங்கள் பரந்தாமத்திலிருந்து வந்தீர்கள் எனவும், இப்போது நீங்கள் அங்கு திரும்பிச் செல்லவேண்டும் எனவும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பின்னர் உங்கள் பாகத்தை நடிப்பதற்காகக் கீழே வருவீர்கள். ஆகவே நீங்கள் பரந்தாமத்தை நினைவு செய்யவேண்டும். தந்தை கூறுகிறார்: சதா என்னை மட்டுமே நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அனைவருக்கும் இச்செய்தியை வழங்குங்கள். வேறு தூதுவர் போன்றோர் எவரும் இல்லை. அந்த சமயஸ்தாபகர்கள் ஆத்மாக்களை முக்தி தாமத்திலிருந்து கீழே அழைத்து வருகின்றார்கள். அதன் பின்னர், அவர்கள் ஏணியில் இறங்க வேண்டும். ஆத்மாக்கள் முற்றிலும் தமோபிரதான் ஆகும் போது, தந்தை வந்து அனைவரையும் சதோபிரதான் ஆக்குகிறார். உங்களாலேயே அனைவரும் வீடு திரும்ப வேண்டியுள்ளது. உங்களுக்குப் புதிய உலகம் அவசியம் தேவைப்படுகிறது. அல்லவா? இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவில் போதை கொண்டிருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

ஆசீர்வாதம்:
உபகாரமிக்க மனோபாவதுடன் சேவை செய்வதன் மூலம் சகல ஆத்மாக்களிடமிருந்தும் ஆசீர்வாதங்களை பெறும் உரிமையை கோருவீர்களாக.

உபகாரமிக்க மனோபாவத்துடன் சேவை செய்வதே ஆத்மாக்கள் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களை பெறுவதற்கான வழியாகும். உலக உபகாரிகள் என்ற இலக்கை நீங்கள் கொண்டிருக்கும் போது, உபகாரமற்ற எப்பணியையும் உங்களால் மேற்கொள்ள முடியாது. உங்கள் பணி எதுவோ, அதுவே உங்கள் தாரணை (கிரகித்தல்) ஆகும். ஆகவே, உங்கள் பணியை நீங்கள் நினைவு செய்தால், நீங்கள் எப்பொழுதும் கருணை நிறைந்தவராகவும் மகாதானியாகவும் இருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் உபகாரமிக்க மனோபாத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பீர்கள். ‘நான்’ என்ற எந்தவொரு உணர்வையும் நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்கள். அத்துடன் நீங்கள் கருவி என்பதையும் நினைவிற் கொண்டிருப்பீர்கள். அத்தகைய சேவையாளர்கள், அவர்களின் அத்தகைய சேவைக்கு பிரதிபலனாக, ஆத்மாக்கள் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களை பெறும் உரிமையை கோருகின்றார்கள்.

சுலோகம்:
பௌதீக வசதிகளின் மீதான கவர்ச்சிகள் உங்கள் ஆன்மிக முயற்சியை பாதிக்கின்றது.