19.12.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து தெய்வீகப் பார்வையைப் பெற்றுள்ளீர்கள். இந்தத் தெய்வீகப் பார்வையினாலேயே உங்களால் ஆத்மாக்களையும், பரமாத்மாவையும் பார்க்க முடியும்.கேள்வி:
நாடகத்தின் எந்த இரகசியத்தைப் புரிந்துகொள்வதனால், நீங்கள் ஒருபொழுதும் எவருக்கும் குறிப்பிட்டதோர் அறிவுரையை வழங்க மாட்டீர்கள்?பதில்:
நாடகத்தில் கடந்த காலத்தில்; நிகழ்ந்தவை அனைத்தும் மீண்டும் மீண்டும் மிகச்சரியாக நிகழ்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும்பொழுது, நீங்கள் என்றுமே எவருக்கும்; பக்தி செய்வதை நிறுத்தும்படி அறிவுரை வழங்க மாட்டீர்கள். இந்த ஞானம் அவர்களின் புத்தியில் மிக நன்றாகப் பதியும்பொழுதும், தாங்கள் ஆத்மாக்கள், தங்கள் ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்து தாங்கள் கோர வேண்டும் என்று அவர்கள் புரிந்துகொள்ளும்பொழுதும், அவர்கள் அவரை இனங்காணும்பொழுதும், அவர்களின் எல்லைக்குட்பட்ட விடயங்கள் அனைத்தும் இயல்பாகவே முடிவிற்கு வரும்.ஓம் சாந்தி.
நீங்கள் இங்கு உங்கள் ஆதி தர்மத்தில் ஸ்திரமாகி அமர்ந்திருக்கிறீர்களா? ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களிடம் கேட்கிறார், ஏனெனில், எல்லையற்ற தந்தை மாத்திரமே பரமாத்மா என்றழைக்கப்படுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள், அவர் மாத்திரமே பரம் என அழைக்கப்படுகிறார். அவரே பரம ஆவி அல்லது பரமாத்மா என்றழைக்கப்படுகிறார். கடவுளாகிய பரமாத்மா நிச்சயமாக இருக்கிறார்;; அவர் இல்லை எனக் கூற முடியாது. பரமாத்மா என்றால் கடவுள் என்று அர்த்தமாகும். இது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் குழப்பம் அடையக்கூடாது, ஏனெனில் நீங்கள் இந்த ஞானத்தை 5000 வருடங்களுக்கு முன்னரும் செவிமடுத்தீர்கள். ஆத்மாக்களாகிய நீங்களே இதனைச் செவிமடுக்கிறீர்கள். ஆத்மாக்கள் மிகவும் சின்னஞ்சிறியவர்களும், சூட்சுமமானவர்களும் ஆவர். எவரது கண்களாலும் பார்க்க முடியாத வகையில், அவர்கள் (ஆத்மாக்கள்) மிகவும் சின்னஞ்சிறியவர்கள். ஆத்மாவைப் பௌதீகக் கண்களால் பார்த்துள்ள மனிதர் எவரும் இருக்க மாட்டார்கள். ஆத்மாக்களைக் காண முடியும், ஆனால் தெய்வீகப் பார்வையாலேயே காண முடியும், அதுவும் நாடகத் திட்டத்திற்கு ஏற்பவே நடக்கின்றது. சரி, உதாரணமாக, ஒருவர் ஏனையவற்றைக் காண்பதைப் போன்றே, ஆத்மாவின் காட்சியையும் காண்கிறார். பக்தி மார்க்கத்திலும், அவர்கள் ஏதாவதொன்றின் காட்சியைக் காணும்பொழுது, அதனை அவர்களின் பௌதீகக் கண்களினூடாகவே காண்கிறார்கள். அவர்கள் அந்தத் தெய்வீகக் காட்சியைப் பெறுகின்றார்கள், அவர்கள் அதை அதன் உயிருள்ள ரூபத்தில் உள்ளதைப் போன்றே காண்கிறார்கள். ஓர் ஆத்மா ஞானக் கண்ணைப் பெற்று அதனூடாக எதனையாவது காண்கின்றார், ஆனால் அது திரான்ஸ் நிலையிலேயே ஆகும். பக்தி மார்க்கத்தில், அவர்கள் பெருமளவு பக்தி செய்யும்பொழுதே, காட்சிகளைப் பெறுகிறார்கள். உதாரணமாக, மீரா தான் சுவர்க்கத்தில் நடனமாடிய காட்சியைப் பெற்றார். எவ்வாறாயினும், அப்பொழுது சுவர்க்கம் இருக்கவில்லை. அது 500 அல்லது 600 வருடங்களுக்கு முன்னராக இருக்க வேண்டும். உண்மையில் அந்நேரத்தில் சுவர்க்கம் இருக்கவில்லை. கடந்த காலத்தில் இருந்தவை தெய்வீகக் காட்சியினால் காணப்பட்டன. அவர்கள் பெருமளவு பக்தி செய்து, முழுமையாகப் பக்தியில் ஈடுபட்டிருக்கும்பொழுது, காட்சியைக் காண்கிறார்கள், ஆனால் அதனூடாக அவர்கள் முக்தியைப் பெறுவதில்லை. முக்திக்கும், ஜீவன்முக்திக்கும் உரிய பாதை, பக்தியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பாரதத்தில் பல ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அதில் சிவலிங்கத்தையும்; பிரதிஷ்டை செய்கிறார்கள். அவர்கள் பெரிய, சிறிய இலிங்கங்களை வைத்துள்ளார்கள். ஆத்மாக்கள் பரமாத்மாவை ஒத்தவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் ஒரேயளவினர். தந்தையைப் போன்றே குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காகத் தங்கள் சரீரங்களில் பிரவேசிக்கிறார்கள். இது புரிந்துகொள்ளப்பட வேண்டியதொரு விடயம். இவை பக்தி மார்க்கத்தின்; கட்டுக்கதைகள் அல்ல. ஒரேயொரு தந்தையே ஞானப் பாதையின் விடயங்களை விளங்கப்படுத்துகிறார். அனைத்திற்கும் முதலில், எல்லையற்ற அசரீரியான தந்தை மாத்திரமே அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். எவராலும் அவரை முழுமையாகவோ அல்லது மிகச்சரியாகவோ புரிந்துகொள்ள முடியாது. அவர் சர்வவியாபி என அவர்கள் கூறுகின்றார்கள். அது சரியானதல்ல. அவர்கள் தந்தையை மிகுந்த அன்புடன் கூவியழைக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நீங்கள் வரும்பொழுது, நாங்கள் உங்களிடம் எங்களை அர்ப்பணிப்போம். வேறு எவருமன்றி, நீங்கள் மாத்திரமே எனக்குரியவர். எனவே, நீங்கள் நிச்சயமாக அவரை நினைவுசெய்ய வேண்டும். ‘ஓ குழந்தைகளே!’ என அவரே கூறுகிறார். அவர் ஆத்மாக்களிடம் பேசுகிறார். இது ஆன்மீக ஞானம் எனப்படுகிறது. ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்டகாலம் பிரிந்திருந்தார்கள் என நினைவுகூரப்படுகிறது. இந்தக் கணக்கும் காட்டப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் அவரிடமிருந்து நீண்டகாலம் பிரிந்திருந்தீர்கள், இப்பொழுது உங்களுடைய இராஜயோகத்தை மீண்டும் ஒருமுறை கற்பதற்குத் தந்தையிடம் வந்துள்ளீர்கள். அந்த (பரம) ஆசிரியர் உங்களுடைய சேவகர். ஓர் ஆசிரியர் எப்பொழுதும் ஒரு கீழ்ப்படிவான சேவகர். தந்தையும் கூறுகிறார்: நான் குழந்தைகள் அனைவரினதும் சேவகர் ஆவேன். நீங்கள் அது உங்கள் உரிமையைப் போல் கூவி அழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! நீங்கள் அனைவரும் பக்தர்கள். ‘ஓ கடவுளே, வாருங்கள்! வந்து மீண்டும் ஒருமுறை எங்களைத் தூய்மையாக்குங்கள்!’ என நீங்கள் கூறுகிறீர்கள். தூய்மையான உலகம் சுவர்க்கம் என்றும், தூய்மையற்ற உலகம் நரகம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது ஒரு கல்லூரியும், இறைதந்தையின் உலகப் பல்கலைக்கழகமும் ஆகும். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதே இதன் இலக்கும் குறிக்கோளும் ஆகும். நீங்கள் இவ்வாறு ஆகவேண்டும் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையற்ற எவரேனும் பாடசாலையில் அமர்ந்திருப்பாரா? நீங்கள் இலக்கையும், குறிக்கோளையும் உங்களுடைய புத்தியில் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு சட்டநிபுணராக அல்லது மருத்துவராக ஆக விரும்பினால், நீங்கள் கற்க வேண்டும். உங்களுக்கு இந்த நம்பிக்கை இல்லாவிடின், நீங்கள் இங்கு வரவும் மாட்டீர்கள். நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக, சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுகிறீர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறீர்கள். இதுவே சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுகின்ற உண்மையான கதையாகும். உண்மையில், இது ஒரு கல்வி, ஆனால் ஏன் இது ஒரு கதை என அழைக்கப்படுகிறது? ஏனெனில், நீங்களும் இதனை 5000 வருடங்களுக்கு முன்னரும் செவிமடுத்தீர்கள். அது இப்பொழுது கடந்த காலமாகும். கடந்த காலமானது கதை (சமயக்கதை) என்றழைக்கப்படுகின்றது. இவையே நீங்கள் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான கற்பித்தல்கள் ஆகும். தேவர்கள் புதிய உலகிலும், மனிதர்கள் பழைய உலகிலும் இருக்கின்றார்கள் என்பது உங்கள் இதயத்தில் உள்ளதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தேவர்களிடம் உள்ள தெய்வீகக் குணங்கள் மனிதர்களிடம் கிடையாது; இதனாலேயே, அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மனிதர்கள், தேவர்களின் விக்கிரகங்களின் முன்னால் தலைவணங்கிக் கூறுகின்றார்கள்: நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள்….. பின்னர் அவர்கள் தங்களைச் சீரழிந்த பாவிகள் என்று அழைக்கிறார்கள். மனிதர்களே இவ்வாறு கூறுகிறார்கள். தேவர்கள் இவ்வாறு கூறுவதில்லை. தேவர்கள் சத்தியயுகத்திலேயே இருக்கின்றார்கள்; அவர்கள் கலியுகத்தில் இருக்க முடியாது. எவ்வாறாயினும், தற்காலத்தில், அவர்கள் அனைவரையும் ஸ்ரீ, ஸ்ரீ என்று அழைக்கிறார்கள். ஸ்ரீ என்றால் மேன்மையானவர் என்று அர்த்தமாகும். கடவுளால் மாத்திரமே உங்களை அதிமேன்மையானவர்கள் ஆக்க முடியும். மேன்மையான தேவர்கள் சத்தியயுகத்திலேயே இருக்கின்றார்;கள். இந்நேரத்தில், மனிதர்கள் எவரும் மேன்மையானவர்கள் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். இந்தப் பழைய உலகம் அழியப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், இதனாலேயே, நீங்கள் அதன் மீது விருப்பமின்மையைக் கொண்டிருக்கிறீர்கள். அம்மக்;கள் ஹத்தயோகத் துறவிகள். அவர்கள் தங்கள் வீடுகளைத் துறந்து செல்கிறார்கள். பின்னர் அவர்கள் சென்று மாளிகைகளில் வசிக்கிறார்கள். அவர்களின் சிறிய குடில்கள் போன்றவற்றில் வசிப்பதற்கு எந்தவிதச் செலவும் இருக்காது; எதுவும் ஏற்படாது. ஏகாந்தம் வேண்டுமாயின், ஒருவர் மாளிகையில் அன்றி, சிறிய குடிலிலேயே இருக்க வேண்டும். பாபாவும் சிறியதொரு குடிலை அமைத்துள்ளார். சிறிய குடிலில் சகல சந்தோஷமும் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். நாடகத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் இப்பொழுது கடந்த காலமாகி விட்டது என்றும், அது மீண்டும் மிகச்சரியாகத் திரும்பத் திரும்ப நிகழும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே, நீங்கள் எவருக்கும் பக்தி செய்வதை நிறுத்தும்படி அறிவுரை கூறக்கூடாது. இந்த ஞானம் அவர்களுடைய புத்தியில் பதியும்பொழுது, அவர்கள் தாங்கள் ஆத்மாக்கள் என்பதையும், எல்லையற்ற தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும் என்பதையும் புரிந்துகொள்வார்கள். எல்லையற்ற தந்தையை இனங்கண்டு கொள்ளும்பொழுது, எல்லைக்குட்பட்ட விடயங்கள் அனைத்தும் முடிவடைந்து விடுகின்றன. தந்தை கூறுகிறார்: வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வசிக்கும்பொழுது, உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைத்துக் கொள்ளுங்கள். பக்தி மார்க்கத்தில், சிலர் பெருமளவுக்குத் தீவிர பக்தி செய்வதைப் போன்று, சரீரத்தின் ஜீவனோபாயத்திற்காகச் செயல்கள் செய்யப்பட வேண்டும். அவர்கள் மிகவும் உறுதிவாய்ந்ததோர் ஒழுங்குமுறையாகத் தினமும் விக்கிரகங்களைத் தரிசிப்பதற்குச் செல்கின்றார்;கள். சரீரதாரிகளிடம் செல்வது பௌதீக யாத்திரையாகும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் அதிகளவு தடுமாறி அலைய வேண்டியுள்ளது. இங்கு, நீங்கள் முற்றாகவே தடுமாற வேண்டியதில்லை. மக்கள் இங்கு வரும்பொழுது, இந்த ஞானத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக அவர்கள் அமரச் செய்யப்படுகிறார்கள். எவ்வாறாயினும், தந்தையை நினைவுசெய்வதற்கு நீங்கள் ஓரிடத்தில் அமர வேண்டும் என்றில்லை. பக்தி மார்க்கத்தில், கிருஷ்ண பக்தர்களால் நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும், அவரை நினைவுசெய்ய முடியாதா? இதனாலேயே, அவர்களின் வீடுகளில் கிருஷ்ணரின் படம் இருக்கும்பொழுது, ஏன் மக்கள் ஆலயங்களுக்குச் செல்ல வேண்டும் எனக் கற்றவர்கள் கேட்கின்றார்;கள். உங்களால் எங்கிருந்தும் கிருஷ்ணரின் படத்தைப் பூஜிக்க முடியும். அச்சா, உங்களிடம் ஒரு படம் இல்லாவிட்டாலும், உங்களால் அவரை நினைவுசெய்ய முடியும். நீங்கள் ஒருமுறை எதனையாவது பார்த்தால், தொடர்ந்தும் அதனை நினைவுசெய்கின்றீர்கள். உங்களிடமும் அதே கேள்வி கேட்கப்படுகிறது: உங்களால் வீட்டில் இருந்தவண்ணம் சிவபாபாவை நினைவுசெய்ய முடியாதா? இது புதியதொரு விடயம். எவருக்கும் சிவபாபாவைத் தெரியாது. அவருடைய பெயர், உருவம், தேசம் அல்லது காலப்பகுதி என்பவற்றை அவர்களுக்குத் தெரியாது, ஆனால் அவர் சர்வவியாபி என அவர்கள் கூறுகிறார்கள். ஓர் ஆத்மாவைப் பரமாத்மா என்று அழைக்க முடியாது. ஆத்மாக்கள் தங்கள் தந்தையை நினைவுசெய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அவரைத் தெரியாததனால், நீங்கள் ஏழு நாட்களுக்கு அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அதன்பின்னர், சகல கருத்துக்களின் விபரங்களும்; விளங்கப்படுத்தப்படுகின்றன. தந்தையே ஞானக்கடல். நீங்கள் அவர் கூறுவதை நீண்டகாலமாகச் செவிமடுக்கிறீர்கள், ஏனெனில் அவரிடமே ஞானம் உள்ளது. நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான ஞானத்தைப் பெறுவதைப் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் தினமும் உங்களுக்குப் புதிய, ஆழமான விடயங்களைக் கூறுகிறேன். உங்களுக்கு முரளி கிடைக்காதபொழுது, நீங்கள் அதிகளவில் அழுகின்றீர்கள்! தந்தை கூறுகிறார்: தந்தையை நினைவுசெய்யுங்கள்! நீங்கள் முரளியைக் கற்றாலும், தந்தையை மறந்து விடுகிறீர்கள். அனைத்திற்கும் முதலில், ‘நான் ஓர் ஆத்மா, சின்னஞ்சிறியதொரு புள்ளி’ என்பதை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். ஓர் ஆத்மா என்றால் என்னவென்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் கூறுகிறார்கள்: ஆத்மா இவரை விடுத்து, இன்னொருவருக்குள் பிரவேசித்தார். ஆத்மாக்களாகிய நாங்கள் மறுபிறவிகள் எடுப்பதனால், தூய்மையற்றவர்கள் ஆகினோம். முன்னர், நீங்கள் தூய இல்லற தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தீர்கள். இலக்ஷ்மி, நாராயணன் இருவரும் தூய்மையானவர்களாக இருந்தார்கள். அதன்பின்னர், இருவரும் தூய்மையற்றவர்கள் ஆகினார்கள், இப்பொழுது இருவரும் மீண்டும் தூய்மையானவர்கள் ஆகுகிறார்கள். எனவே, அவர்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகினார்களா அல்லது அவர்கள் தூய பிறப்பை எடுத்தார்களா? எவ்வாறு நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள் என்பதையும், பாவப் பாதைக்குள் செல்வதனால், நீங்கள் எவ்வாறு தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள் என்பதையும் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். பூஜிப்பவர்கள் தூய்மையற்றவர்கள் எனப்படுகிறார்கள், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் தூய்மையானவர்கள் எனப்படுகிறார்கள். முழு உலகினதும் வரலாறும், புவியியலும் உங்கள் புத்தியில் உள்ளன. அங்கு யார் ஆட்சிசெய்தார்கள் என்பதையும், அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதனை அறிந்தவர்கள் வேறு எவரும் இல்லை. முன்பு, நீங்களும் படைப்பவரினதோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, அல்லது இறுதியினதோ ஞானத்தை அறிந்திருக்கவில்லை. நீங்கள் நாஸ்திகர்களாக இருந்தீர்கள் என்பதே இதன் அர்த்தமாகும்;; நீங்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் நாஸ்திகர்கள் ஆகும்பொழுது அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்கின்றீPர்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுவதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள். அங்கு அதிகளவு சந்தோஷம் காணப்படும். இங்கேயே தெய்வீகக் குணங்கள் கிரகிக்கப்பட வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதர, சகோதரிகள் ஆவார்கள். எவ்விதமான குற்றப் பார்வையும் இருக்கக்கூடாது; இதற்கு முயற்சி தேவை. கண்கள் மிகவும் குற்றம் புரிபவை. பௌதீகப் புலன்கள் அனைத்திலும், கண்களே அதிகம் குற்றமானவை. அவை அரைக்கல்பத்திற்குக் குற்றமானவையாகவும், அரைக்கல்பத்திற்குக் குற்றமற்றவையாகவும் இருக்கின்றன. சத்தியயுகத்தில், கண்கள் குற்றம் புரிவதில்லை. யாராவதொருவர்; குற்றப் பார்வை உடையவராகினால், அவர் அசுரன் எனப்படுகிறார். நான் தூய்மையற்ற உலகில் பிரவேசிக்கிறேன் எனத் தந்தையே கூறுகிறார். தூய்மையற்றவர்களாகி விட்டவர்கள் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். இவர் (பிரம்மா) தன்னைக் கடவுள் என்று அழைக்கிறார் என மக்கள் கூறுகிறார்கள். விருட்சத்தின் படத்தைப் பாருங்கள்: இவர் தமோபிரதான் உலகில் விருட்சத்தின் அதி உச்சியில் நின்று கொண்டிருக்கிறார். அவரே அதன் கீழ் இருந்து தபஸ்யாவும் செய்கிறார். இலக்ஷ்மியினதும் நாராயணனினதும் வம்சம் சத்தியயுகத்தில் தொடர்கிறது. அந்தக் காலப்பகுதி இலக்ஷ்மி, நாராயணனின் ஆட்சியாகவே கருதப்படுகிறது. இதனாலேயே பாபா கூறுகிறார்: நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தைக் காட்டும்பொழுது, அதில், எழுத வேண்டும்: இந்த இராச்சியம் ஆரம்பித்து 1250 வருடங்களின் பின்னரே திரேதாயுகம் ஆரம்பமாகுகின்றது. சமயநூல்களில் நூறாயிரக்கணக்கான வருடங்களைப் பற்றிப் பேசப்பட்டுள்;ளன் இரவிற்கும் பகலிற்கும் இடையிலான வேறுபாடு உள்ளது! பிரம்மாவின் இரவு அரைக்கல்பத்திற்கும், பிரம்மாவின் பகல் அரைக்கல்பத்திற்கும் உள்ளன. தந்தை மாத்திரமே இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். அவர் மீண்டும் கூறுகிறார்: இனிய குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள்! அவரை நினைவுசெய்வதனால், நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவதுடன், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்களுடைய இலக்கிற்கு இட்டுச் செல்லும். பாபா உங்களை இங்கே தங்கியிருக்கச் சொல்வதில்லை. சேவையாளர் குழந்தைகளை இங்கு தங்கியிருக்கும்படி அவர் கேட்பதில்லை. நிலையங்களும், அருங்காட்சியகங்களும் தொடர்ந்தும் திறக்கப்படுகின்றன. பலருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்படுகின்றன: இங்கு வந்து உலக இராச்சியம் எனும் உங்கள் இறை பிறப்புரிமையைக் (புழனடல டிசைவாசiபாவ) கோருங்கள். நீங்கள் தந்தையின் குழந்தைகள். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். எனவே, நீங்கள் உங்களுடைய சுவர்க்க ஆஸ்தியைப் பெற வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஒருமுறை மாத்திரமே வருகிறேன். அதே உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. மனிதர்களின் கட்டளைகள் பல உள்ளன, அவர்கள் பல விடயங்களைக் கூறுகிறார்கள். பல விதமான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. இவை பிரிவினையற்ற வழிகாட்டல்கள் என்று அழைக்கப்படுகின்றன. விருட்சம் மிகவும் பெரியது! எனவே, பல கிளைகளும், சிறுபிரிவுகளும் வெளிப்படுகின்றன. பல்வேறு சமயங்;கள் பரவுகின்றன. முன்னர், ஒரு வழிகாட்டலும், ஓர் இராச்சியமுமே காணப்பட்டன. முழு உலகிலும் அவர்களின் இராச்சியம் நிலவியது. இந்நேரத்தில் நீங்கள் இதனைப் புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தோம். அதன்பின்னர், 84 பிறவிகளை எடுத்து, நாங்கள் ஏழ்மை நிலையை அடைந்துள்ளோம். நீங்கள் இப்பொழுது மரணத்தை வெல்கிறீர்கள். அங்கு அகால மரணம் கிடையாது. இங்கு, எங்கேயாவது அமர்ந்திருக்கும் ஒருவருக்கு அகால மரணம் ஏற்படுகிறது. எங்கும் மரணத்தை விட வேறு எதுவும் இல்லை. அங்கு அவ்வாறு இல்லை. அங்கு, ஒருவரின் முழுமையான ஆயுட்காலத்திற்கும் வாழ்வு தொடர்கின்றது. பாரதத்தில் அமைதி, தூய்மை, செழிப்பு இருந்தன. அங்கு சராசரி ஆயுட்காலம் 150 வருடங்கள் ஆகும். இப்பொழுது ஆயுட்காலத்தைப் பாருங்கள்! கடவுள் உங்களுக்கு யோகத்தைக் கற்பித்தார். எனவே, நீங்கள் யோகேஷ்வரர் என்று அழைக்கப்படுகிறீர்கள். அங்கு நீங்கள் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. நீங்கள் இந்நேரத்தில் யோகேஷ்வரர்கள்;; கடவுள் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். பின்னர் நீங்கள் இராஜ-இராஜேஸ்வரர்கள் (இளவரசர்களும், இளவரசிகளும்) ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது ஞானேஷ்வரர்கள் (ஞானம் நிறைந்தவர்) ஆவீர்கள். பின்னர், நீங்கள் இராஜேஸ்வரர், அதாவது, அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுகிறீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் கண்களைக் குற்றமற்றதாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான சகோதர, சகோதரிகள் என்பதை எப்பொழுதும் உங்கள் புத்தி அறிந்திருக்கட்டும். அதனால், நீங்கள் குற்றப் பார்வையைக் கொண்டிருக்கக்கூடாது.
2. உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்கான செயல்களைச் செய்யும்பொழுது, உங்கள் புத்தியின் யோகத்தை ஒரேயொரு தந்தையுடன் இணைத்துக் கொள்ளுங்கள். எல்லைக்குட்பட்ட விடயங்கள் அனைத்தையும் துறந்து, எல்லையற்ற தந்தையை நினைவுசெய்யுங்கள். ஓர் எல்லையற்ற துறவி ஆகுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் அதீந்திரிய சுகம் எனும் ஊஞ்சலில் சதா ஊஞ்சலாடுவதால், சங்கமயுகத்தில் அலௌகீகப் பேறுகள் அனைத்தினாலும் நிறைந்திருப்பீர்களாக.எப்பொழுதும் அலௌகீகப் பேறுகளால் நிறைந்துள்ள குழந்தைகள், அதீந்திரிய சுகம் எனும் ஊஞ்சலில் தொடர்ந்தும் ஊஞ்சலாடுகின்றார்கள். குறிப்பாக நேசிக்கப்படுகின்ற குழந்தைகளே ஊஞ்சலில் ஊஞ்சலாடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். அதேபோன்று அதீந்திரிய சுகம் எனும் ஊஞ்சலே பேறுகள் அனைத்தினாலும் நிறைந்துள்ள பிராமணர்களின் ஊஞ்சல் ஆகும். இந்த ஊஞ்சலில் தொடர்ந்தும் எப்பொழுதும் ஊஞ்சலாடுங்கள். என்றுமே சரீர உணர்விற்குள் வராதீர்கள். இந்த ஊஞ்சலில் இருந்து எழுந்து, தங்கள் பாதங்களைத் தரையில் வைப்பவர்கள் அசுத்தமானவர்கள் ஆகுகின்றார்கள். அதிமேலான தந்தையின் சுத்தமான குழந்தைகள் அதீந்திரிய சுகம் எனும் ஊஞ்சலில் சதா ஊஞ்சலாடுகின்றார்கள்; அவர்களால் தங்கள் பாதங்களைச் சேற்றில் வைக்க முடியாது.
சுலோகம்:
“நான் ஒரு துறவி” எனும் ஆணவத்தின் துறவறமே உண்மையான துறவறம் ஆகும்.