17-11-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
இனிய குழந்தைகளே, உங்கள் நடத்தையைச் சீர்திருத்துவதற்கும், உலகை விகாரமற்றதாக்குவதற்கும் தந்தை வந்துவிட்டார். நீங்கள் சகோதரர்கள் ஆதலால், உங்கள் பார்வை மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும். கேள்வி: குழந்தைகளாகிய நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருப்பினும், உங்களுக்கு நிச்சயமாக ஒரு பிரதானமான அக்கறை இருக்க வேண்டும். அந்த அக்கறை யாது? பதில்: எவ்வாறு தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாகுவது என்பதே, உங்களுக்கு இருக்க வேண்டிய பிரதான அக்கறை ஆகும். நீங்கள் தந்தைக்குரியவர்கள் என்பதால் நீங்கள் தந்தையின் முன்னிலையில் தண்டனையை அனுபவம் செய்வதாக இருக்கக்கூடாது. நீங்கள் தண்டனையிலிருந்து விடுபட்டிருப்பதிலேயே அக்கறை கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்நேரத்தில், நீங்கள் பெரும் அவமானத்தை உணர்வீர்கள். நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள், நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இதைப் புரிந்துகொள்பவர்கள், எல்லையற்றதன் அதிபதிகள் ஆகுகிறார்கள். எவராவது அதைப் புரிந்துகொள்ளாதுவிடின், அதுவே அவருடைய பாக்கியமாகுகிறது. நீங்கள் அதைப் பற்றி அக்கறைப்படக்கூடாது. ஓம் சாந்தி. சிவன் என்னும் பெயருடைய ஆன்மீகத் தந்தை, இங்கமர்ந்திருந்து தனது குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். அனைவரினதும் ஆன்மீகத் தந்தை ஒரேயொருவரே. அனைத்துக்கும் முதலில், இது விளங்கப்படுத்தப்பட வேண்டும், ஏனெனில், அதன்பின்னர் அனைத்தையும் புரிந்துகொள்வது அவர்களுக்கு அப்பொழுது இலகுவாகுகிறது. அவர்கள் தந்தையின் அறிமுகத்தைப் பெற்றுக் கொள்ளாதுவிடின், தொடர்ந்தும் கேள்விகளைக் கேட்கின்றார்கள். அனைத்துக்கும் முதலில், அவர்களில் இந்த நம்பிக்கை பதிக்கப்பட வேண்டும். கீதையின் கடவுள் யார் என்பது முழு உலகத்துக்கும் தெரியாது. அவர்கள், அது கிருஷ்ணர் என்றே கூறுகிறார்கள், நாங்களோ கீதையின் கடவுள் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனே என்று கூறுகிறோம். அவர் மாத்திரமே ஞானக்கடலாவார். சமயநூல்கள் அனைத்தினதும் இரத்தினமாகிய கீதையே, பிரதான சமயநூல் ஆகும். அவர்கள் "ஓ, பிரபு! உங்கள் வழிமுறைகள் தனித்துவமானவை” என்று கூறும்பொழுது, கடவுளையே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் கிருஷ்ணரைப் பற்றி இவ்வாறு கூறுவதில்லை. சத்தியமானவராகிய தந்தையே நிச்சயமாக உங்களுக்குச் சத்தியத்தைக் கூறுகிறார். முதலில் உலகம் புதியதாகவும், சதோபிரதானாகவும் இருந்தது. இப்பொழுது உலகம் பழையதாகவும், தமோபிரதானாகவும் இருக்கிறது. ஒரேயொரு தந்தையால் மாத்திரமே உலகை மாற்ற முடியும். அதை எவ்வாறு தந்தை மாற்றுகிறார் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஆத்மாக்கள் சதோபிரதானாக ஆகும்;பொழுது மாத்திரமே சதோபிரதான் உலகம் ஸ்தாபிக்கப்பட முடியும். அனைத்துக்கும் முதலில், குழந்தைகளாகிய நீங்கள் அகநோக்குடையவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் அதிகளவு பேசக்கூடாது. மக்கள் வந்து அதிகளவு படங்களைப் பார்க்கும்பொழுது, தொடர்ந்தும் கேள்விகளைக் கேட்கிறார்கள். அனைத்துக்கும் முதலில், நீங்கள் ஒரு விடயத்தை மாத்திரமே விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் அதிகளவு கேள்விகளைக் கேட்பதற்கான எந்த எல்லையையும் நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கக்கூடாது. அவர்களுக்குக் கூறுங்கள்: அனைத்துக்கும் முதலில், ஒரு விடயத்தில் நம்பிக்கை வையுங்கள், பின்னர் நாங்கள் மேலும் விளங்கப்படுத்துவோம். பின்னர் அவர்களை 84 பிறவிகளின் சக்கரத்தின் படத்துக்கு அழைத்து வாருங்கள். தந்தை கூறுகிறார்: இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் நான் இவரில் பிரவேசிக்கிறேன். தந்தை இவருக்குக் கூறுகிறார்: நீங்கள் உங்களுடைய சொந்தப் பிறவிகளையே அறிந்திருக்கவில்லை. பிரஜாபிதா பிரம்மாவினூடாக, தந்தை எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அனைத்துக்கும் முதலில், அவர் அல்பாவை விளங்கப்படுத்துகின்றார். மக்கள் அல்பாவைப் புரிந்துகொள்ளுமபொழுது, அவர்களுக்கு எச்சந்தேகங்களும் இருக்க மாட்டாது. அவர்களுக்குக் கூறுங்கள்: தந்தை சத்தியமானவர்; அவர் பொய்யான எதையும் கூறுவதில்லை. எல்லையற்ற தந்தை மாத்திரமே எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். இங்கு மக்கள் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவதைப் போன்று, சிவராத்திரி நினைவுகூரப்படுவதால், நிச்சயமாகச் சிவன் ஏதோவொரு நேரத்தில் இங்கு வந்திருக்க வேண்டும். அவர் கூறுகிறார்: நான் பிரம்மாவினூடாக, ஸ்தாபனையை மேற்கொள்கிறேன். அனைவரும் அந்த ஓர் அசரீரித் தந்தையின் குழந்தைகள் ஆவார்கள். நீங்களும் அவருடைய குழந்தைகளே, பின்னர் நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகவும் ஆகுகிறீர்கள். பிரஜாபிதா பிரம்மாவினூடாக, ஸ்தாபனை மேற்கொள்ளப்படுவதால், நிச்சயமாகப் பிராமணர்கள் இருக்க வேண்டும். ஆகவே, நீங்கள் சகோதரர்களும் சகோதரிகளும் ஆதலால், இதில் தூய்மை உள்ளது. இதுவும் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வசிக்கும்பொழுது, தூய்மையாக இருப்பதற்கான ஒரு யுக்தி ஆகும். ஒருபொழுதும் சகோதர, சகோதரிகள் ஒருவர் மீதொருவர் குற்றப் பார்வையைக் கொண்டிருக்கக்கூடாது. உங்கள் பார்வை 21 பிறவிகளுக்குச் சீர்திருத்தப்பட்டதாகுகிறது. தந்தை குழந்தைகளான உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கிறார். அவர் உங்கள் நடத்தைகளைச் சீர்திருத்துகிறார். இப்பொழுது முழு உலகிலுமுள்ள ஒவ்வொருவரினதும் நடத்தையும் சீர்திருத்தப்பட வேண்டும். இப்பழைய, தூய்மையற்ற உலகில் நன்னடத்தை எதுவும் கிடையாது. அனைவரிலும் விகாரங்கள் இருக்கின்றன. இது தூய்மையற்ற, விகாரமான உலகம். எவ்வாறு விகாரமற்ற உலகம் உருவாக்கப்படும்? தந்தையைத் தவிர எவராலும் அதை உருவாக்க முடியாது. தந்தை இப்பொழுது உங்களைத் தூய்மையாக்குகிறார். இவ்விடயங்கள் அனைத்தும் மறைமுகமானவை. நான் ஓர் ஆத்மா ஆவேன். இந்த ஆத்மாவாகிய நான், தந்தையாகிய கடவுளைச் சந்திக்க வேண்டும். அனைவரும் கடவுளைச் சந்திப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். கடவுளே அசரீரியானவர். பரமாத்மா மாத்திரமே விடுதலையளிப்பவரும், வழிகாட்டியும் என அழைக்கப்படுகிறார். ஏனைய சமயத்தவர்கள் விடுதலையளிப்பவர் அல்லது வழிகாட்டி என எவரையும் அழைப்பதில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே வந்து அனைவரையும் விடுதலை செய்கிறார், அதாவது, அவர் தமோபிரதானானவர்களைச் சதோபிரதானாக மாற்றுகிறார்;; அவர் அனைவருக்கும் வழிகாட்டுகிறார். ஆகவே, அனைத்துக்கும் முதலில், அவர்களின் புத்தியில் இந்த ஒரு விடயத்தைப் பதியுமாறு செய்யுங்கள். அவர்கள் இதைப் புரிந்துகொள்ளாது விடின், அவர்களை விட்டுவிடுங்கள்! அவர்கள் அல்பாவைப் புரிந்துகொள்ளாதுவிடின், எவ்வாறு அவர்களால் பீற்றாவினூடாக நன்மையடைய முடியும்? பதிலாக, அவர்களைச் செல்ல விடுங்கள். நீங்கள் குழப்பமடையக்கூடாது; நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள். அசுரர்களிடமிருந்து தடைகள் ஏற்படும். இது உருத்திர ஞான யாகமாகும். ஆகவே, அனைத்துக்கும் முதலில், அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, ஓர் அந்தஸ்தைக் கோருகிறீர்கள். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. அது இலக்ஷ்மி நாராயணனின் வம்சமாக இருக்கும். ஏனைய சமயத்தவர்கள் ஒரு வம்சத்தை ஸ்தாபிப்பதில்லை. தந்தை வந்து அனைவரையும் விடுதலை செய்கிறார். பின்னர் ஒவ்வொரு சமய ஸ்தாபகரும் தனது சொந்தச் சமயத்தை ஸ்தாபிப்பதற்கு, தனக்குரிய நேரத்தில் வரவேண்டும். சனத்தொகை வளர வேண்டும். அனைவரும் தூய்மையற்றவர்களாக வேண்டும். தந்தைக்கு மாத்திரமே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கும் பணி இருக்கிறது. அம்மக்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதற்கே வருகிறார்கள். அதில் மகத்துவம் எதுவும் இல்லை. ஒரேயொருவரின் புகழே உள்ளது. அம்மக்கள் கிறிஸ்துவுக்காக அதிகளவைச் செய்கிறார்கள். தந்தையாகிய கடவுளே, விடுதலையாக்குபவரும், வழிகாட்டியும் என நீங்கள் அவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். கிறிஸ்தவ சமய ஆத்மாக்கள் அவரைத் தொடர்ந்தும் பின்பற்றுகிறார்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களைத் துன்பத்திலிருந்து விடுதலை செய்கிறார். இக்கருத்துக்கள் அனைத்தையும் உங்கள் புத்தி மிக நன்றாகக் கிரகிக்க வேண்டும். ஒரேயொரு கடவுளே கருணை நிறைந்தவர் என அழைக்கப்படுகிறார். ஒரு மனிதர் கூட இன்னுமொருவருக்காகக் கருணை கொண்டிருப்பதில்லை. அவருடைய கருணை எல்லையற்றதாகும். ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவர் மீதும் கருணை கொண்டிருக்கிறார். சத்தியயுகத்தில் ஒவ்வொருவருமே சந்தோஷமாகவும், அமைதி நிறைந்தவராகவும் இருந்தார்; அங்கு துன்பத்தின் கேள்விக்கே இடமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் அல்ஃபா பற்றி விளங்கப்படுத்தும்பொழுது இந்தவொரு விடயத்தில் நம்பிக்கையை அவர்களில் பதிக்காமல், அதற்குப் பதிலாக, ஏனைய விடயங்களுக்குச் செல்லும்பொழுது, உங்கள் தொண்டை களைப்படைகின்றது என நீங்கள் கூறுகிறீர்கள். அனைத்துக்கும் முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஏனைய விடயங்களுக்குள் செல்ல வேண்டாம். அவர்களுக்குக் கூறுங்கள்: தந்தை சத்தியத்தை மாத்திரமே கூறுகிறார். தந்தை மாத்திரமே இவை அனைத்தையும் பிரம்மகுமார்களாகிய எங்களுக்குக் கூறுகிறார். அவர் இப்படங்கள் அனைத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். உங்களுக்கு இதைப் பற்றிய சந்தேகம் எதுவும் இருக்கக்கூடாது. சந்தேகம் நிறைந்த புத்தி உங்களை விநாசத்துக்கு இட்டுச் செல்கிறது. அனைத்துக்கும் முதலில், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். வேறெந்த வழியும் இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர், இல்லையா? தந்தை கூறுகிறார்: சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்துவிட்டு, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! கடவுள் பிரவேசித்தவரும் சதோபிரதானாக முயற்சிசெய்ய வேண்டும். முயற்சி செய்வதால் மாத்திரமே அவர் அவ்வாறு ஆகுவார். அவர் எங்களுக்கு பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையிலான தொடர்பையும் காண்பிக்கிறார். தந்தை பிராமணர்களாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார், அதனால் நீங்கள் விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்களே 84 பிறவிகளை எடுத்து, இறுதியில் சூத்திரர்கள் ஆகுகிறீர்கள். பின்னர், தந்தை வந்து உங்களைச் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாற்றுகிறார். வேறு எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே, முதலாவது விடயம். தந்தை கூறுகிறார்: நான் இங்கு தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கே வரவேண்டும். நான் மேலிருந்து தூண்டுதல்களைக் கொடுக்கிறேன் என்பதில்லை. இவரின் பெயரே, "பாக்கிய இரதம்” என்பதனால், அவர் நிச்சயமாக இவரில் பிரவேசிக்கிறார். இது இவரின் பல பிறவிகளின் இறுதியாகும். பின்னர் இவர் சதோபிரதான் ஆகுகிறார். இதற்காகப் பயன்படுத்த வேண்டிய வழிமுறையைத் தந்தை உங்களுக்குக் காண்பிக்கிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதிச் சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! நான் மாத்திரமே சர்வசக்திவான். என்னை நினைவுசெய்வதால், நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள்; நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். அவர்கள் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெற்று, இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றார்கள். அவர்கள் அதை எவ்வாறு பெற்றார்கள் என்பதை அவர் விளங்கப்படுத்துகிறார். அருங்காட்சியகங்களிலும், கண்காட்சிகளிலும் அவர்களுக்குக் கூறுங்கள்: முதலில் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். பின்னர், ஏனைய தலைப்புக்களுக்குச் செல்லுங்கள். இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இல்லாவிட்டால், உங்களால் துன்பத்திலிருந்து விடுபட இயலாது. இதில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும்வரையில், உங்களால் எதையும் புரிந்துகொள்ள இயலாதிருக்கும். இந்நேரத்தில், உலகம் சீரழிந்துள்ளது. தேவர்களின் உலகம் மேன்மையானதாக இருந்தது. இவ்விதமாக நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் எதையாவது புரிந்துகொள்கிறார்களா அல்லது அவர்கள் அங்கு பித்துப் பிடித்த நபரைப் போன்று அமர்ந்திருக்கிறார்களா எனப் பார்ப்பதற்கு, நீங்கள் மனிதர்களின் நாடித் துடிப்பை உணர வேண்டும். அவர்களுக்குப் பித்துப் பிடித்திருப்பின், அவர்களை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்களுடைய நேரத்தை வீணாக்கக்கூடாது. இந்த ஞானத்திற்குத் தாகமாகவும், தகுதியானவராகவும் இருப்பவர்களை இனங்காண்கின்ற ஒரு புத்தி உங்களுக்குத் தேவை. இதைப் புரிந்துகொள்பவர்களின் முகங்கள் மாறும். அனைத்துக்கும்; முதலில், அவர்களுக்குச் சில நற்செய்திகளைக் கூறுங்கள்: நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். சில குழந்தைகள் நினைவு யாத்திரையில் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது பாபாவுக்குத் தெரியும். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி தேவை. இதிலேயே மாயை பல தடைகளை உருவாக்குகிறாள். இது நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை இங்கமர்ந்திருந்து எவ்வாறு இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்பதை விளங்கப்படுத்துகிறார். உலகிலுள்ள மனிதர்கள் சிறிதளவேனும் எதையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, ஏனையோருக்கு விளங்கப்படுத்தும்பொழுது, ஸ்திரமாக இருப்பீர்கள். இல்லாவிட்டால், அவர்கள் உங்களின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியபடி இருப்பார்கள். பாபா கூறுகிறார்: நீங்கள் எந்தப் பெருஞ் சிரமங்களுக்கூடாகவும் செல்லத் தேவையில்லை. ஸ்தாபனை நிச்சயமாக நடைபெற வேண்டும். எவராலும் நியதியை மாற்ற முடியாது. நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். நாங்கள் தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறோம். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! அமர்ந்திருந்து பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துங்கள். தந்தையை நினைவு செய்வதால், அன்புக் கண்ணீர் சிந்த வேண்டும். ஏனைய உறவுமுறைகள் அனைத்தும் கலியுகத்திற்கு உரியது. இந்த உறவுமுறை ஆன்மீகத் தந்தையுடனானதாகும். உங்களுடைய இந்தக் கண்ணீர் வெற்றிமாலையின் மணிகளாகும். மிகச் சிலரே அந்தளவு அன்புடன் தந்தையை நினைவுசெய்பவர்கள். உங்கள் எதிர்காலத்தை மேன்மையானதாக்குவதற்கு, இயன்றவரை நேரத்தை உருவாக்குங்கள். கண்காட்சிகளில் அதிகக் குழந்தைகள் இருக்கவும் கூடாது, அங்கு அதிகளவு படங்களை வைத்திருக்கவும் தேவையில்லை. "கீதையின் கடவுள் யார்?” என்பதே முதற்தரமான படமாகும். அந்தப் படத்துக்கு அடுத்ததாக, இலக்ஷ்மி நாராயணனின் படத்தையும், பின்னர் ஏணியின் படத்தையும் வைத்திருங்கள். அவ்வளவுதான்! அதிகளவு படங்களை வைத்திருக்கத் தேவையில்லை. இயன்றவரை, குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையை அதிகரிக்க வேண்டும். தூய்மையற்றவரிலிருந்து எவ்வாறு தூய்மையாகுவது என்பதே, உங்களுக்கு இருக்க வேண்டிய பிரதான அக்கறையாகும். நீங்கள் பாபாவுக்கு உரியவர்களாகும்பொழுது, நீங்கள் அவர் முன்னிலையில் சென்று தண்டனை பெற வேண்டியிருப்பின், அது பெரும் சீரழிவுக்குரிய ஒரு விடயம். இப்பொழுது நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்காதுவிடின், தண்டனைக்குரிய நேரத்தில் தந்தையின் முன்னிலையில் இருக்கும்பொழுது, மிகவும் அவமானப்படுவீர்கள். நீங்கள் தண்டனையை அனுபவிக்காமல் இருப்பதே, உங்களுக்கு இருக்க வேண்டிய மகத்தான அக்கறையாகும். நீங்கள் ரூப்பும் பசந்தும் ஆவீர்கள். பாபா கூறுகிறார்: நானும் ரூப்பும் பசந்தும் ஆவேன். நான் ஒரு சின்னஞ்சிறிய புள்ளியும், ஞானக்கடலும் ஆவேன். அவர் ஆத்மாக்களாகிய உங்களை ஞானம் அனைத்தினாலும் நிரப்புகிறார். உங்கள் புத்தியில் 84 பிறவிகளின் இரகசியங்கள் அனைத்தும் உள்ளன. நீங்கள் ஞான சொரூபங்களாகி, ஏனையோர் மீது ஞானத்தைப் பொழிகிறீர்கள். ஒவ்வொரு ஞான இரத்தினமும் எவராலும் விலைமதிக்க முடியாதளவுக்கு மிகவும் பெறுமதிவாய்ந்தது. இதனாலேயே பாபா கூறுகிறார்: நீங்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள். உங்கள் பாதங்களில் உள்ள தாமரை மலரின் அடையாளமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியாது. மக்களுக்கு "பதம்பதி” (பல்கோடீஸ்வரர்கள்) என்னும் பெயர் உள்ளது, இப்பெயர் உள்ளவர்களிடம் பெருமளவு செல்வம் உள்ளது என ஏனையோர் எண்ணுகிறார்கள். "பதம்பதி” என்னும் குடும்பப்பெயரும் உள்ளது. தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். பின்னர் அவர் கூறுகிறார்: தந்தையையும், 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவுசெய்வதே, பிரதான விடயம். இந்த ஞானம் பாரத மக்களுக்குரியது. நீங்களே 84 பிறவிகளை எடுப்பவர்கள். இதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயம். சந்நியாசிகள் போன்ற எவரும் சுயதரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுவதில்லை. தேவர்களையும் அவ்வாறு அழைக்கக்கூடாது. தேவர்களிடம் இந்த ஞானம் இல்லை. அவர்களிடம் கூறுங்கள்: எங்களிடம் ஞானம் அனைத்தும் உள்ளது. இலக்ஷ்மி நாராயணனுக்குக் கூட இந்த ஞானம் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்ற அனைத்தும் மிகச்சரியானவை. இந்த ஞானம் மிகவும் அற்புதமானது! நீங்கள் மிகவும் மறைமுகமான மாணவர்கள். நீங்கள் ஒரு பல்கலைக்கழகத்துக்குச் செல்வதாகவும், கடவுள் உங்களுக்குக் கற்பிப்பதாகவும் நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுடைய இலக்கும், இலட்சியமும் என்ன? நாங்கள் இவ்வாறு (இலக்ஷ்மியும் நாராயணனும்) ஆகவுள்ளோம். மக்கள் இதைக் கேட்கும்பொழுது, வியப்படைவார்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் எங்கள் தலைமை அலுவலகத்துக்குச் செல்கிறோம். நீங்கள் எதைக் கற்கிறீர்கள்? சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான, பிச்சைக்காரர்களிலிருந்து இளவரசர்களாக மாறுவதற்கான கல்வியை நாங்கள் கற்கிறோம். உங்கள் படங்கள் முதற்தரமானவை. செல்வம் எப்பொழுதும் தகுதியானவர்களுக்கே தானமளிக்கப்பட வேண்டும். நீங்கள் எங்கு தகுதியானவர்களைக் கண்டுபிடிப்பீர்கள்? சிவாலயங்களிலும், இலக்ஷ்மி நாராயணன் ஆலயங்களிலும், இராமர் சீதை ஆலயங்களிலும் ஆகும். அங்கு சென்று அவர்களுக்குச் சேவை செய்யுங்கள்! உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்! கங்கையாற்றுக்குச் சென்று அங்கு மக்களைக் கேளுங்கள்: கங்கை தூய்மையாக்குபவரா அல்லது பரமாத்மாவாகிய பரமதந்தை தூய்மையாக்குபவரா? இந்த நீர் அனைவருக்கும் சற்கதியை அளிக்குமா அல்லது எல்லையற்ற தந்தை அதைச் செய்வாரா? உங்களால் இதை மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். மக்களுக்கு உலக அதிபதிகள் ஆகுவதற்கான வழியைக் காண்பியுங்கள். மனிதர்களுக்கு இதைத் தானம் செய்து, சிப்பிகள் போன்றோரை வைரங்களாகவும், உலக அதிபதிகளாகவும் ஆக்குங்கள். பாரதம் உலக அதிபதியாக இருந்தது. உங்கள் பிராமணக் குலம் தேவர்களினுடையதை விடவும் உயர்வானதாகும். தான் தந்தையின் ஒரேயொரு அன்பிற்கினிய புதல்வன் என்பதை இந்த பாபா புரிந்துகொள்கிறார். பாபா என்னுடைய இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளார். உங்களைத் தவிர எவராலும், இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள இயலாதுள்ளது. பாபா எனது இரதத்தை ஓட்டுகிறார். நான் பாபாவை எனது தோள்களில் இருத்தியுள்ளேன், அதாவது, சேவை செய்வதற்கு, நான் இச்சரீரத்தை பாபாவுக்குக் கொடுத்துள்ளேன். அவர் அதற்குப் பிரதிபலனாக அதிகளவைக் கொடுக்கிறார்! அவர் என்னை அனைவரிலும் உயர்வானவராக்கி, என்னை அவருடைய தோள்களில் இருத்துகிறார். அவர் என்னை முதலாம் இலக்கத்தவர் ஆக்குகிறார். ஒரு தந்தை தனது குழந்தைகளில் அதிகளவு அன்பு செலுத்தும்பொழுது, அவர்களைத் தனது தோள்களில் அமர்த்துகிறார். ஒரு தாய் ஒரு குழந்தையைத் தனது மடியிலேயே இருத்துகிறார், ஆனால் ஒரு தந்தை குழந்தையைத் தனது தோள்களில் இருத்துகிறார். ஒரு பாடசாலையை ஒருபொழுதுமே கற்பனை என அழைப்பதில்லை! வரலாறும், புவியியலும் ஒரு பாடசாலையில் கற்கப்படுகின்றன. அது கற்பனையாக இருக்க முடியுமா? இதுவும் உலகின் வரலாறும், புவியியலும் ஆகும். அச்சா. இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார். தாரணைக்கான சாராம்சம்: - அமர்ந்திருந்து, பெருமளவு அன்புடன் ஆன்மீகத் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் நினைவில் அன்புக் கண்ணீர் சிந்தும்பொழுது, அக்கண்ணீர் வெற்றிமாலையின் மணிகள் ஆகும். உங்கள் நேரத்தை ஒரு தகுதியான வழியில் பயன்படுத்தி, உங்கள் எதிர்கால வெகுமதியை உருவாக்குங்கள்.
- அதிகம் பேசாதீர்கள், ஆனால் அகநோக்குடையவராகி, அனைவருக்கும் அல்பாவின் செய்தியைக் கொடுங்கள். நீங்கள் தண்டனையை அனுபவிக்குமாறு நேரிடுகின்ற எச்செயல்களையும் செய்யாதிருக்கும், ஓர் அக்கறையை மாத்திரம் கொண்டிருங்கள்.
ஆசீர்வாதம்: நீங்கள் தந்தை செய்வதைப் போன்று, உங்கள் நல்லாசிகளால் உங்களை அவதூறு செய்பவர்களையும் ஈடேற்றி, அவர்களுக்குச் சேவை செய்வீர்களாக. தந்தை தன்னை அவதூறு செய்பவர்களையும் ஈடேற்றுவதைப் போன்று, அவேழியில், உங்கள் முன்னால் எவ்வகையான ஆத்மா இருந்தாலும், உங்கள் கருணை உணர்வுகளாலும், நல்லாசிகளாலும் அந்த ஆத்மாவை மாற்றமடையச் செய்யுங்கள். இதுவே உண்மையான சேவை ஆகும். விஞ்ஞானிகளால் மணலில் பொருட்களை வளரச் செய்ய முடிவதைப் போன்று, அதேவழியில், கருணை மிக்கவர்களாகி, உங்களை அவதூறு செய்பவர்களையும் ஈடேற்றுவதற்கு மௌனச் சக்தியைப் பயன்படுத்துவதால், பூமியை மாற்றமடையச் செய்யுங்கள். உங்கள் சுய மாற்றத்தினாலும், நல்லாசிகளாலும் எவ்வகையான ஆத்மாவும் மாற்றமடைவார், ஏனெனில் நல்லாசிகளே நிச்சயமாக வெற்றியை ஏற்படுத்துகின்றன. சுலோகம்: ஞானத்தைக் கடைவதே, சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கான அடிப்படை ஆகும்.
---ஓம் சாந்தி---
|
|