26.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் நடத்தையைச் சீர்திருத்திக்கொள்வதற்கு, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். தந்தையின் நினைவே உங்களை நூறு மடங்கு சதா பாக்கியசாலிகள் ஆக்குகின்றது.

கேள்வி:
உங்கள் ஸ்திதியை எப்பொழுது உங்களால் உண்மையில் இனங்காண முடியும்? சிறந்த ஸ்திதி என்று எதை நீங்கள் அழைப்பீர்கள்?

பதில்:
நோய்வாய்ப்பட்டிருக்கும் வேளையில் உங்கள் ஸ்திதியை உங்களால் இனங்காண முடியும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போதும் நீங்கள் சந்தோஷமாக இருந்து, உங்களுடைய மலர்ச்சியான முகம் தொடர்ந்தும் அனைவருக்கும் தந்தையை ஞாபகப்படுத்துமாயின், அதுவே சிறந்த ஸ்திதியாகும். நீங்களே அழுது, சந்தோஷமற்றிருப்பீர்களாயின், எவ்வாறு உங்களால் மற்றவர்களை மலர்ச்சியானவர்கள் ஆக்க முடியும்? என்னதான் நிகழ்ந்தாலும் நீங்கள் அழக்கூடாது.

ஓம் சாந்தி.
இரு கூற்றுக்கள் நினைவுகூரப்படுகின்றன: அபாக்கியசாலியும், நூறு மடங்கு பாக்கியசாலியும். ஒருவர் தனது பாக்கியத்தை இழக்கும்போது, அவர் அபாக்கியசாலி எனப்படுகின்றார். ஒரு பெண்ணின் கணவன் மரணிக்கும்போது, அப்பெண் அபாக்கியசாலி என அழைக்கப்படுகின்றார். அவள் தனியாக விடப்படுகின்றாள். நீங்கள் எக்காலத்திற்குமாக நூறு மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அங்கே துன்பம் எனும் கேள்விக்கே இடமில்லை. அங்கு மரணம் என்ற கேள்விக்கு இடமில்லை. ‘விதவை’ என்ற வார்த்தை அங்கே இருப்பதில்லை. ஒரு விதவை துன்பத்தை அனுபவம் செய்வதால் அவள் தொடர்ந்தும் அழுதுகொண்டிருக்கின்றாள். ஒருவர் சாதுவாகவோ அல்லது புனிதராகவோ இருக்கலாம், எனினும் அவர் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை என்று அர்த்தமல்ல. சிலருக்கு பித்துப் பிடிக்கின்றது, சிலர் சுகயீனமுற்று, நோய்வாய்ப்படுகின்றார்கள். இது நோய்கள் நிறைந்த உலகமாகும். சத்தியயுகம் நோய்களற்ற உலகம் ஆகும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், மீண்டும் பாரதத்தை நோய்களில் இருந்து விடுவிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது மக்கள் மிகவும் கீழ்த்தரமான நடத்தைகளைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் நடத்தையைச் சீராக்குவதற்கு ஒரு திணைக்களம் இருக்க வேண்டும். ஒரு பாடசாலையில் மாணவர்களுக்கான பதிவேடு ஒன்றுள்ளது. அதிலிருந்து அவர்களின் நடத்தையை அறிந்துகொள்ளலாம். இதனாலேயே பாபாவும் ஒரு பதிவேடு வைத்திருந்தார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தப் பதிவேட்டை வைத்திருக்க வேண்டும். நீங்கள் எத்தவறும் செய்யாதிருக்க, சோதித்துப் பாருங்கள். தந்தையை நினைவு செய்வதே முதன்மையான விடயமாகும். இதன் மூலமே உங்கள் நடத்தை சீராக்கப்படும். ஒரேயொருவரின் நினைவினாலேயே உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கின்றது. இவை ஞான இரத்தினங்கள் ஆகும். நினைவு செய்தல், இரத்தினம் என அழைக்கப்படுவதில்லை. நினைவினாலேயே உங்கள் நடத்தை சீராக்கப்படுகின்றது. உங்களைத் தவிர வேறு எவராலும், 84 பிறவிகளின் சக்கரத்தை விளங்கப்படுத்த முடியாது. இந்தச் சக்கரத்தைப் பயன்படுத்தியே நீங்கள் பிரம்மாவையும் விஷ்ணுவையும் பற்றி விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் சங்கரரின் நடத்தையைப் பற்றிப் பேசமுடியாது. பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் உள்ள தொடர்பு என்னவென்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். விஷ்ணுவின் இரட்டை வடிவமே இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகும். அதன் பின்னர் அவர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். அவர்கள் தமது 84 பிறவிகளின்போதே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் பூஜிப்பவர்களாகவும் ஆகுகின்றார்கள். பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாக இங்கேயே இருக்க வேண்டும். ஒரு சாதாரண சரீரமே தேவைப்படுகின்றது. பொதுவாக, இவ்விடயத்திலேயே மக்கள் குழப்பம் அடைகின்றார்கள். பிரம்மா தூய்மையாக்குபவரான தந்தையின் இரதமாவார். தொலை தூர வாசி அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. தூய்மையான உலகைப் படைப்பவர் தூய்மையற்ற உலகிற்கு வந்திருக்கின்றார். தூய்மையற்ற உலகில் தூய்மையான ஒருவரேனும் இருக்க முடியாது. நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள். அதனை யாரோ ஒருவர் நிச்சயமாக எடுக்கவேண்டும். ஆரம்பத்தில் வருகின்றவர்களே 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். சத்தியயுகத்தில் தேவர்கள் மாத்திரமே உள்ளார்கள். யார் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பதைப் பற்றி மனிதர்கள் சிந்திப்பதே இல்லை. இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அனைவரும் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். 84 பிறவிகள் உள்ளன என்பதை மிகவும் சாதூரியமாக விளங்கப்படுத்த வேண்டும். அனைவருமே 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்றில்லை. அனைவருமே ஒன்றாக வந்து ஒன்றாகவே சரீரத்தை நீங்கிச் செல்வார்கள் என்றில்லை. ‘உங்கள் சொந்தப் பிறவிகளை உங்களுக்குத் தெரியாது’ எனக் கடவுள் பேசுகின்றார் என (கீதையில்) கூறப்பட்டுள்ளது. கடவுளே இதனை அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து 84 பிறவிகளின் கதையை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். இது ஒரு கல்வியைப் போன்றதாகும். 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்துகொள்வது இலகுவாகும். ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்;கள் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். உங்கள் மத்தியிலும்கூட, அனைவருமே 84 பிறவிகளை எடுப்பார்கள் என்றில்லை. அனைவருமே 84 பிறவிகளை எடுப்பார்களாயின், நீங்கள் அனைவருமே ஒன்றாகவே கீழே வருவீர்கள். அது சாத்தியமில்லை. அனைத்தும் உங்கள் கல்வியிலும் நினைவிலுமே தங்கியுள்ளது. அவற்றிலும் நினைவே முதன்மையானது. கடினமான ஒரு பாடத்திற்கே நீங்கள் அதிகளவு புள்ளிகளைப் பெறுவதுண்டு. அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. உயர்ந்த, மத்திய, குறைந்த பாடங்களும் உள்ளன. இங்கே, இரண்டு பாடங்கள் பிரதானமானவை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை நினைவு செய்தால், முற்றிலும் விகாரமற்றவர்களாகி, வெற்றி மாலையில் கோர்க்கப்படுவீர்கள். இது ஒரு ஓட்டப் போட்டியாகும். முதலில், நீங்கள் இதனை எந்தளவிற்குக் கிரகிக்கின்றீர்கள் என உங்களையே பாருங்கள். நான் எந்தளவிற்கு நினைவில் நிலைத்திருக்கின்றேன்? எனது நடத்தை எவ்வாறாக உள்ளது? நான் அழுகின்ற பழக்கத்தைக் கொண்டிருந்தால், என்னால் எவ்வாறு பிறரை முகமலர்ச்சியடையச் செய்ய முடியும்? பாபா கூறுகின்றார்;: அழுபவர்கள் தோல்வியடைகின்றார்கள். என்ன நடந்தாலும், அழவேண்டிய அவசியமில்லை. நோய் வந்தாலும், சந்தோஷத்துடன் இவ்வாறு கூறுங்கள்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். நோயுறும்போதே உண்மையில் நீங்கள் எந்த ஸ்திதியை அடைந்திருக்கின்றீர்கள் என்பது நிரூபணமாகின்றது. கஷ்டத்தின்போது, நீங்கள் வேதனையடைந்தாலும், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை செய்தியைக் கொடுத்திருக்கின்றார். சிவபாபா மாத்திரமே தூதுவர் ஆவார். வேறு எவரும் இதுவாக இருக்க முடியாது. ஏனையவர்கள் கூறுகின்ற அனைத்தும் பக்திக் கதைகளே ஆகும். இவ்வாறன விடயங்கள் அனைத்தும் அழியக்கூடியவையாகும். எதுவுமே உடைந்துபோக முடியாத ஓர் இடத்திற்கே நான் உங்களை அழைத்துச் செல்கின்றேன். அங்கே, அனைத்தும் மிக நன்றாகச் செய்யப்பட்டிருப்பதால், எதுவும் உடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இங்கே, பல பொருட்கள் விஞ்ஞானத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கும் நிச்சயமாக விஞ்ஞானம் இருக்கும், ஏனெனில், உங்களுக்கு அதிகளவு சௌகரியம் தேவையாகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பக்தி மார்க்கம் ஆரம்பித்தபோது நீங்கள் எவ்வளவு துன்பத்தை அனுபவம் செய்தீர்கள் போன்ற விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்திகளில் உள்ளது. தேவர்கள் முற்றிலும் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது. இப்பொழுது எந்தக் கலைகளும் எஞ்சவில்லை. அவர்களின் கலைகள் எவ்வாறு குறைந்தன? பூரணைச் சந்திரனும் தேய்கின்றது. இந்த உலகம் புதிதாக இருந்தபோது அனைத்தும் சதோபிரதானாகவும் முதற்தரமாகவும் இருந்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நாளடைவில் அது பழையதாகும்போது, அதன் கலைகள் குறைவடைகிறது. இலக்ஷ்மியும் நாராயணனும் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாக இருக்கின்றார்கள். தந்தை இப்பொழுது சத்திய நாராயணனின் உண்மைக் கதையை உங்களுக்குக் கூறுகின்றார். இப்பொழுது இது இரவாகும். பின்னர் பகல் வரும். நீங்கள் சம்பூரணம் அடைவதால் அதற்கேற்ற உலகம் உங்களுக்குத் தேவையாகும். பஞ்ச தத்துவங்களும் சதோபிரதான் (பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தது) ஆகுகின்றது. ஆகையால் அங்கே உங்கள் சரீரமும் இயற்கையான அழகைக் கொண்டுள்ளது. அவை சதோபிரதானாகும். முழு உலகமுமே பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்ததாகின்றது. இப்பொழுது எக்கலைகளும் இல்லை. தந்தையின் ஞானத்தைப் பெறுகின்ற பாக்கியம் முக்கியஸ்தர்களுக்கும் மகாத்மாக்களுக்கும் இல்லை. அவர்கள் தமக்குரிய பெருமையைக் கொண்டிருக்கின்றார்கள். பொதுவாக, இப்பாக்கியம் ஏழைகளுக்கே இருப்பதாகக் கூறப்படுகின்றது. சிலர் கூறுகிறார்கள்: தந்தை அதிமேலானவர் என்பதால், அவர் ஒரு பேரரசருக்;குள்ளோ அல்லது தூய்மையான ரிஷிக்குள்ளோ பிரவேசிக்க வேண்டும். சந்நியாசிகள் மாத்திரமே தூய்மையானவர்கள். அவர் தூய்மையான ஒரு குமாரிக்குள்ளும் பிரவேசிக்கலாம். தந்தை இங்கமர்ந்திருந்து, அவர் பிரவேசிப்பவரினூடாக விளங்கப்படுத்துகிறார்: 84 பிறவிகளையும் முழுமையாக எடுப்பவருக்குள்ளேயே நான் பிரவேசிக்கின்றேன். ஒரு நாளேனும் குறைவாக இருக்க முடியாது. கிருஷ்ணர் பிறக்கின்றபோது அவர் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவராக உள்ளார். அதன் பின்னர் அவர் சதோ, இராஜோ, தமோ ஸ்திதிகளைக் கடக்கின்றார். அனைத்தும் முதலில், சதோபிரதானாகவே உள்ளது. பின்னர், சதோ, இரஜோ, தமோவாக ஆகுகின்றன. சத்திய யுகத்திலும் அவ்வாறே உள்ளது. முதலில் ஒரு குழந்தை சதோபிரதானாகவும், பின்னர் அவர் வளர்ந்ததும், தான் இச்சரீரத்தை நீக்கி சதோபிரதான் குழந்தை ஆகுவேன் எனக் கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு அந்தளவிற்கு போதை இல்லை. சந்தோஷப் பாதரசம் உயர்வடைவதில்லை. நன்றாக முயற்சி செய்பவர்களின் சந்தோஷப் பாதரசம் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. அவர்கள் முகமலர்ச்சியுடனும், மிகவும் சந்தோஷமாகவும் இருக்கின்றார்கள். நீங்கள் மேலும் முன்னேறும்போது, தொடர்ந்தும் காட்சிகளைப் பெறுவீர்கள். உங்கள் வீட்டை நெருங்கும்போது, உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் கட்டடங்களையும் நினைவு செய்வீர்கள். இங்கும் அவ்வாறே ஆகும். முயற்சி செய்யும்போது, உங்கள் வெகுமதி உங்களை நெருங்கி வரும்போது, நீங்கள் தொடர்ந்தும் பல காட்சிகளைக் காண்பீர்கள். நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். சித்தியெய்தாதவர்கள் வெட்கத்தினால் தாமாகவே தலை குனிவார்கள். பாபாவும் உங்களுக்கு அனைத்தையும் கூறுவதால், நீங்கள் பின்னர் அதிகளவு வருத்தப்பட நேரிடும். உங்கள் சொந்த எதிர்காலத்தையும் நீங்கள் என்னவாகுவீர்கள் என்பதைப் பற்றிய காட்சியையும் நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் செய்த தீய செயல்களையும் பாபா உங்களுக்குக் காட்டுவார்: நீங்கள் முழுமையாகக் கற்காமல், துரோகிகள் ஆகியதால் இது உங்களுக்கான தண்டனையாகும். நீங்கள் அனைத்திற்குமான காட்சிகளையும் பெறுவீர்கள். காட்சிகள் கொடுக்காது அவரால் எவ்வாறு தண்டனை கொடுக்க முடியும்? ஒரு நீதிமன்றத்திலும்கூட, நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும், அதற்கான தண்டனை என்னவென்பதும் உங்களுக்குக் கூறப்படுகின்றது. நீங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்வரை, ஏதோ ஒரு அடையாளம் இருக்கும். ஓர் ஆத்மா தூய்மையாகியதும், அவர் தனது சரீரத்தை நீங்கிச் செல்லவேண்டும். அவரால் அதன் பின்னரும் இங்கிருக்க முடியாது. நீங்கள் அந்த ஸ்திதியை அடையவேண்டும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்பி, அதன் பின்னர் புதிய உலகிற்கு வருவதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றீர்கள். விரைவில் வீட்டிற்குச் சென்று மீண்டும் விரைவில் கீழே திரும்பி வருவதற்கான முயற்சியையே நீங்கள் செய்கின்றீர்கள். குழந்தைகள் விரைந்தோடுவதற்குத் தூண்டப்படுகிறார்கள். அவர்களின் இலக்கைத் தொட்டுவிட்டு வருமாறு அவர்கள் கேட்கப்படுகின்றார்கள். நீங்களும் விரைவில் அங்கு சென்று பின்னர் புதிய உலகிற்கு முதல் இலக்கத்தில் வாருங்கள். இதுவே உங்களுக்கான ஓட்டப் போட்டியாகும். பாடசாலைகளில் அவர்கள் ஓட்டப்போட்டிகள் நடாத்துகின்றார்கள். இது உங்களுடைய இல்லறப் பாதையாகும். முதலில், நீங்கள் தூய இல்லற தர்மத்தைக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது உலகம் விகாரம் நிறைந்ததாக உள்ளது. பின்னர் அது விகாரமற்றதாகும். நீங்கள் இவ்விடயங்களைத் தொடர்ந்தும் கடைந்தால், மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். எங்கள் இராச்சியத்தை நாங்கள் கோருகின்றோம், பின்னர் அதனை இழக்கின்றோம். மக்கள் கதாநாயகன், கதாநாயகி பற்றி பேசுகிறார்கள். நீங்கள் வைரம் போன்ற ஒரு பிறவியை எடுக்கின்றீர்கள், பின்னர் சிப்பி போன்ற பிறவியை எடுக்கின்றீர்கள். இப்பொழுது தந்தை கூறுகின்றார்: சிப்பியை விரட்டிச் செல்வதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இவர் கூறுகின்றார்: நானும்கூட எனது நேரத்தை வீணாக்கியுள்ளேன். அவர் எனக்கும் கூறினார்: இப்பொழுது எனக்குரியவராகி இந்த ஆன்மீக வியாபாரத்தை மேற்கொள்ளுங்கள். எனவே நான் உடனடியாக அனைத்தையும் கைவிட்டேன். எவரும் பணத்தை வீசுவதில்லை. பணம் பயனுள்ளது. பணம் இல்லாது கட்டடம் போன்ற எதனையும் உங்களால் பெற முடியாது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, பல செல்வந்தர்கள் வருவார்கள். அவர்கள் தொடர்ந்து உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் பெரிய கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் சென்று உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றதென சொற்பொழிவாற்ற வேண்டிய நாளும் வரும். வரலாறு ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் தொடரும். சத்திய யுகத்திலிருந்து, கலியுகம் வரைக்குமான உலக வரலாற்றையும் புவியியலையும் எங்களால் உங்களுக்குக் கூறமுடியும். நடத்தையைப் பற்றியும் நீங்கள் அவர்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்த வேண்டும். இலக்ஷ்மி நாராயணனையும் புகழ்ந்திடுங்கள். பாரதம் மிகவும் தூய்மையாக இருந்தது, அப்பொழுது மக்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது, அவர்கள்; விகாரமான குணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். சக்கரம் நிச்சயமாக திரும்பச் சுழலும். எங்களால் உலக வரலாற்றையும் புவியியலையும் உங்களுக்குக் கூறமுடியும். மிகவும் சிறப்பாகக் கூறக்கூடியவர்களே அங்கு செல்ல வேண்டும். உதாரணத்திற்கு சமய சேவை செய்யும் நிறுவனங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்ற வேண்டும். கிருஷ்ணர் ஒரு தேவராக இருந்தார், அவர் சத்தியயுகத்தில் இருந்தார். முதலில் அவர் ஸ்ரீ கிருஷ்ணராகவும் பின்னர் அவர் நாராயணனாகவும் ஆகுகின்றார். இப்பொழுது நாங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் 84 பிறவிகளைப் பற்றிக் கூறுகின்றோம். அதனை வேறு எவராலும் கூற முடியாது. இந்தத் தலைப்பு மிகவும் பெரியதாகும். திறமைசாலிகள் சென்று சொற்பொழிவாற்ற வேண்டும். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதை உங்கள் இதயம் அறிந்திருப்பதால், அதிகளவு சந்தோஷமாக இருக்க வேண்டும். இதனை நீங்கள் அமர்ந்திருந்து உள்ளார்த்தமாக உச்சரித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு இப்பழைய உலகில், எதிலும் விருப்பம் ஏற்படாது. நீங்கள் பரமாத்மா பரமதந்தையினூடாக உலக அதிபதிகள் ஆகுவதற்கே இங்கு வருகின்றீர்கள். இவ்வுலகம் ‘விஷ்வ’ என அழைக்கப்படுகின்றது. பிரம்ம தத்துவத்தையோ அல்லது சூட்சும உலகத்தையோ, உலகம் என அழைக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: நான் உலக அதிபதி ஆகுவதில்லை. நான் குழந்தைகளாகிய உங்களையே உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். இவை மிகவும் ஆழமான விடயங்கள் ஆகும். நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். அதன் பின்னர் நீங்கள் மாயையின் அடிமைகள் ஆகுகின்றீர்கள். மக்களின் முன்னிலையில் நீங்கள் அமர்ந்திருந்து அவர்களுக்கு யோகத்தில் அமர்வதற்கு கற்பிக்கும்போது, ஆத்ம உணர்வில் அமர்ந்திருந்து தந்தையை நினைவு செய்யுமாறு நீங்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். ஐந்து நிமிடங்களின் பின்னரும், அதனை அவர்களுக்குக் கூறுங்கள். நீங்கள் யோக நிகழ்ச்சிகளை நடாத்துகின்றீர்கள். பலரது புத்தியும் அலைந்து திரிவதால், ஐந்து பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை நீங்கள் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதி இங்கு அமர்ந்திருக்கின்றீர்களா? நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்களா? அப்பொழுது நீங்களும் கவனம் செலுத்துவீர்கள். பாபா உங்களுக்கு இவ்வாறான பல வழிகளைக் கூறுகின்றார். உங்களை மீண்டும் மீண்டும் நீங்கள் எச்சரிக்க வேண்டும். உங்களை ஆத்மாவெனக் கருதி, சிவபாபாவின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்களா? வேறு எங்காயினும் தமது புத்தியின் யோகத்தைக் கொண்டிருப்பவர்கள் உஷார் அடைவார்கள். இதனை அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துங்கள். பாபாவின் நினைவைக் கொண்டிருப்பதனால் மாத்திரமே உங்களால் அக்கரையை அடைய முடியும். மக்கள் பாடுகின்றார்கள்: ஹே படகோட்டியே எனது படகை அக்கரைக்குச் செலுத்துங்கள். எவ்வாறாயினும் அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. நீங்கள் அரைக் கல்பத்திற்கு முக்தி தாமத்திற்குச் செல்வதற்காக பக்தி செய்தீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவு செய்தால், முக்தி தாமத்திற்குச் செல்வீர்கள். உங்கள் பாவங்களை அழிப்பதற்காகவே நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதால், நீங்கள் இனிமேலும் பாவங்களைச் செய்யக்கூடாது. இல்லாவிடின் பாவம் இன்னமும் எஞ்சியிருக்கும். உங்களை ஆத்மாவெனக் கருதி தந்தையை நினைவு செய்வதே முதற்தரமான முயற்சியாகும். இவ்வாறாக நீங்கள் பிறரை எச்சரிக்கை செய்வதனால் நீங்களும் கவனம் செலுத்துவீர்கள். உங்களையும் நீங்கள் எச்சரிக்கை செய்ய வேண்டும். நீங்கள் முதலில் நினைவில் நிலைத்திருந்தாலே உங்களால் பிறரை நினைவில் நிலைத்திருக்கச் செய்ய முடியும். நான் ஓர் ஆத்மா, நான் வீடு திரும்புகின்றேன். அதன் பின்னர் நான் இங்கு வந்து ஆட்சி செய்வேன். உங்களை ஒரு சரீரம் எனக் கருதுவது கொடிய நோயாகும். இதனாலேயே அனைவரும் ஆழ் நரகத்தில் இருக்கின்றார்கள், எனவே நீங்கள் அனைவரையும் மீட்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆன்மீக வியாபாரத்தைச் செய்வதன் மூலம் உங்கள் நேரத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள். உங்கள் வாழ்வை வைரம் போன்று பெறுமதி வாய்ந்ததாக்குங்கள். தொடர்ந்தும் உங்களை எச்சரிக்கை செய்யுங்கள். உங்களை ஒரு சரீரமாகக் கருதுகின்ற கொடிய நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

2. மாயைக்கு என்றுமே அடிமையாகாதீர்கள். ‘நான் ஓர் ஆத்மா’ என்பதை அமர்ந்திருந்து உள்ளார்த்தமாக உச்சரித்துக் கொண்டிருங்கள். நீங்கள் யாசிப்பவர்களில் இருந்து இளவரசனாக மாறுகின்றீர்கள் என்ற சந்தோஷத்தைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
விகாரமற்று இருத்தலின் சக்தியினால் சூட்சும வதனம் அல்லது மூவுலகத்தையும் அனுபவம் செய்கின்ற மகாபாக்கியசாலி ஆகுவீர்களாக.

விகாரமற்று இருத்தலின் சக்தியை கொண்டிருக்கின்ற பாக்கியசாலி குழந்தைகளாலும் முற்றிலும் சுத்தகரிக்கப்பட்ட புத்தியின் யோகத்தையுடையவர்களாலும் மூவுலகையும் இலகுவாக சுற்றி பயணிக்க முடியும். உங்கள் எண்ணங்கள் சூட்சும உலகை சென்றடைய வேண்டுமாயின், சகல உறவுமுறைகளின் சாராம்சத்தினது, சுத்திகரிக்கப்பட்ட நினைவை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இதுவே அதி சக்திவாய்ந்த கம்பியாகும் (வயர்). மாயையினால் இதற்கு இடையூறு செய்ய முடியாது. ஆகையால், சூட்சும உலகின் அற்புதத்தை அனுபவம் செய்ய வேண்டுமாயின், உங்களை விகாரமற்று இருத்தலின் சக்தியினால் நிரப்பிக் கொள்ளுங்கள்.

சுலோகம்:
எந்த மனிதரினாலோ, பொருளினாலோ, பௌதீக வசதிகளினாலோ கவரப்படுவது என்றால் உங்கள் மனதில் உங்கள் சகபாடியான தந்தையை விவாகரத்து செய்வதாகும்.