02.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இதுவே அதிமேன்மையான சங்கமயுகம் ஆகும். பழைய உலகம் மாற்றமடைந்து புதியதாகுகின்றது. நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து, மேன்மையான தேவ அந்தஸ்தைக் கோர வேண்டும்.

கேள்வி:
சேவாதாரிக் குழந்தைகள் தங்களின் புத்தியில் சதா எவ்விடயத்தை வைத்திருக்கின்றனர்?

பதில்:
தானம் செய்வதனால் செல்வம் குறைவடையாது என்பதை அவர்கள் நினைவு செய்கின்றார்கள். இதனாலேயே அவர்கள் தங்கள் உறக்கத்தையும் துறந்து, இரவு பகலாகத் தொடர்ந்தும் ஞானச் செல்வத்தைத் தானம் செய்கின்றார்கள். அவர்கள் களைப்படைவதில்லை. எவ்வாறாயினும், அவர்களுக்குள் குறைபாடுகள் ஏதேனும் இருக்குமாயின் அவர்களுக்குச் சேவை செய்வதற்கான உற்சாகம் இருக்க மாட்டாது.

ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஓர் ஆசிரியர் தினமும் உங்களுக்குக் கற்பிப்பது போலவே, பரமதந்தையும் தினமும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஒரு தந்தை தனது குழந்தைகளுக்குக் கற்பித்தல்களைக் கொடுத்து, அவர்களைப் பராமரிக்கின்றார், ஏனெனில் குழந்தைகள் தங்கள் தந்தையுடனேயே வீட்டில் வசிக்கின்றார்கள். பெற்றோர் குழந்தைகளுடன் வசிக்கின்றனர். இங்கே, இது ஓர் அற்புதமான விடயம்! நீங்கள் ஆன்மீகத் தந்தையுடன் இருக்கின்றீர்கள். முதலில் நீங்கள் அசரீரி உலகில் ஆன்மீகத் தந்தையுடன் வசிக்கின்றீர்கள். பின்னர் குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுப்பதற்கும், உங்களைத் தூய்மையாக்குவதற்கும், உங்களுக்கு அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுப்பதற்கும் தந்தை சக்கரத்திற்குள் ஒருமுறை மாத்திரமே பிரவேசிக்கின்றார். எனவே அவர் நிச்சயமாக இங்கே கீழே வந்து தங்குகின்றார். இதனையிட்டே மனிதர்கள் குழப்பமடைந்துள்ளனர். அவர் ஒரு சாதாரணமான சரீரத்தில் பிரவேசிப்பதாக நினைவுகூரப்படுகின்றது. அந்தச் சாதாரணச் சரீரம் வேறு எங்கிருந்தும் இங்கு பறந்து வரப் போவதில்லை. அவர் நிச்சயமாக ஒரு மனித சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். அவர் உங்களுக்குக் கூறுகின்றார்: நான் இந்தச் சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். உங்களுக்கு உங்கள் சுவர்க்;க ஆஸ்தியைக் கொடுப்பதற்காகத் தந்தை வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். நாங்கள் நிச்சயமாகத் தூய்மையற்றவர்களாகவும், தகுதியற்றவர்களாகவும் ஆகியுள்ளோம்;. அனைவரும் கூறுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள்! தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு சக்கரத்திலும் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற கடமை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஓ குழந்தைகளே! நீங்கள் இப்பொழுது இந்தத் தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்க வேண்டும். பழைய உலகம் தூய்மையற்றது எனவும், புதிய உலகம் தூய்மையானது எனவும் கூறப்படுகின்றது. பழைய உலகை மீண்டும் புதியதாக்குவதற்குத் தந்தை வந்துள்ளார். கலியுகத்தைப் புதிய உலகம் என்று எவரும் கூற மாட்டார்கள். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயம். கலியுகம் பழைய உலகமே. பழையதினதும் புதியதினதும் சங்கமத்தில் தந்தை நிச்சயமாக வருகின்றார். நீங்கள் மக்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, இதுவே அதி மேன்மையான சங்கமயுகம் என்றும், தந்தை வந்துவிட்டார் என்றும் அவர்களுக்குக் கூறுங்கள். முழு உலகிலுமுள்ள ஒருவருக்கேனும் இது அதிமேன்மையான சங்கமயுகம் என்பது தெரியாது. நீங்கள் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். ஆகையாலேயே ‘இதுவே சங்கமயுகம்’ என்ற பிரதான விடயத்தை நீங்கள் நிச்சயமாக விளங்கப்படுத்த வேண்டும். எனவே இக் கருத்துக்கள் முக்கியமானவை. வேறெவருக்கும் தெரியாத விடயங்களை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும், இதனாலேயே இதுவே அதிமேன்மையான சங்கமயுகம் என நீங்கள் நிச்சயமாக எழுத வேண்டும் என பாபா கூறியுள்ளார். புதிய உலகத்தை, அதாவது, சத்தியயுகத்தைப் பற்றிய படங்களும் உள்ளன. இலக்ஷ்மியும், நாராயணனும் புதிய உலகாகிய, சத்தியயுகத்தின் அதிபதிகள் என்பதை மனிதர்களால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? “அதி மேன்மையான சங்கமயுகம்” என்ற பதங்கள் நிச்சயமாகப் படத்தில் எழுதப்பட வேண்டும். இதுவே பிரதான விடயம், ஆகையால் நீங்கள் நிச்சயமாக இதனை எழுத வேண்டும். கலியுகத்தின் பல வருடங்கள் இன்னமும் வரவுள்ளன என்று மக்கள் எண்ணுகின்றார்கள். அவர்கள் காரிருளில் உள்ளனர். ஆகையால் இலக்ஷ்மியும், நாராயணனும் புதிய உலகின் அதிபதிகள் என்பதை நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இந்தப் படங்கள் அடையாளங்களாகும். அவர்களது இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என நீங்கள் கூறுகின்றீர்கள். ஒரு பாடல் உள்ளது: புதிய உலகம் வந்து விட்டது. அறியாமை உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்! இது சங்கமயுகம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். இது புது யுகம் என அழைக்கப்படுவதில்லை. சங்கமமே சங்கமயுகம் என அழைக்கப்படுகின்றது. இதுவே புது உலகம் ஸ்தாபிக்கப்பட்டு, பழைய உலகம் அழிக்கப்படுகின்ற அதிமேன்மையான சங்கமயுகமாகும். இராஜயோகத்தைக் கற்பதால், நீங்கள் இப்பொழுது சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். இலக்ஷ்மி, நாராயணனினுடையதே, தேவர்களுக்குள் அதி உயர்ந்த அந்தஸ்து ஆகும். அவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் காணப்படுகின்றன, இதனாலேயே அவர்கள், தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தூய்மையே அதிசிறந்த தெய்வீகக் குணம் ஆகும், இதனாலேயே மனிதர்கள் தேவர்களின் விக்கிரகங்களை வழிபடுகின்றார்கள். தொடர்ந்தும் சேவை செய்பவர்களின் புத்தியால் இக்கருத்துக்கள் கிரகிக்கப்படுகின்றன. ‘தானம் செய்வதால் உங்கள் செல்வம் என்றுமே அழியாது’ என்று கூறப்படுகின்றது. நீங்கள் தொடர்ந்தும் பல விளங்கங்களைப் பெறுகின்றீர்கள். இந்த ஞானம் மிகவும் இலகுவானது. எவ்வாறாயினும், சிலரால் மிக நன்றாக அதனைக்; கிரகிக்க இயலுகின்றது, ஆனால், ஏனையோரால் கிரகிக்க முடிவதில்லை. குறைபாடுகளைக் கொண்டிருப்பவர்களால்; ஒரு நிலையத்தைப் பராமரிக்க முடியாது. நீங்கள் கண்காட்சிகளில் நேரடியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்த மேன்மையான சங்கமயுகம் பற்றி விளங்கப்படுத்துவதே பிரதான விடயம். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இந்தச் சங்கமயுகத்திலேயே ஸ்தாபிக்கப்படுகின்றது. இந்தத் தர்மம் இருந்தபொழுது, வேறு எந்தச் சமயங்களும்; இருக்கவில்லை. நாடகத்தில் மகா பாரத யுத்தமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஏனைய சமயத்தினர் இப்பொழுதே தோன்றியுள்ளனர்; முன்னர் அவர்கள் இருக்கவில்லை. நூறு வருடங்களுக்குள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். சங்கமயுகம் குறைந்தபட்சம் நூறு வருடங்களாக இருக்க வேண்டும். முழு உலகுமே மீண்டும் புதிதாக வேண்டும். புதுடெல்லியை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் சென்றது? புதிய உலகம் பாரதத்தில் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அப்பொழுது பழைய உலகம் அழிக்கப்படும் என்றும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அதன் சிறுபகுதி எஞ்சியிருக்கும்; பிரளயம் ஏற்படுவதில்லை. இந்த விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளன. இப்பொழுது இது சங்கம யுகம். இத்தேவர்கள் புதிய உலகில் இருந்தார்கள், அவர்கள் மீண்டும் அங்கிருப்பார்கள். இது இராஜயோகம் என்ற கல்வியாகும். உங்களால் விபரமாக விளங்கப்படுத்த முடியாவிட்டால், ‘பரமாத்மாவான பரமதந்தையே அனைவரதும் தந்தையாவார்’ என்ற ஒரு விடயத்தையேனும் விளங்கப்படுத்த வேண்டும். அனைவரும் அவரை நினைவுசெய்கின்றனர். குழந்தைகளாகிய எங்கள் அனைவருக்கும் அவர் கூறுகின்றார்: நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். “ஓ தூய்மையாக்குபவரே! வாருங்கள்” என்று நீங்கள் கூவி அழைக்கின்றீர்கள். உண்மையில் கலியுகத்தில் தூய்மையற்றவர்களும், சத்தியயுகத்தில் தூய்மையானவர்களும் உள்ளனர். பரமாத்மா பரமதந்தை கூறுகின்றார்: உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, தூய்மையற்ற உறவுமுறைகள் அனைத்தையும் துறந்து, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்தால், நீங்கள் தூய்மையாகுவீர்கள். இந்தக் கூற்று கீதையில் உள்ளது. இது கீதையின் யுகமாகும். சங்கமயுகத்தில் விநாசம் ஏற்பட்டபொழுது, கீதை உரைக்கப்பட்டது. தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பித்தார். அந்த இராச்சியம் ஸ்;தாபிக்கப்பட்டது, நிச்சயமாக அது மீண்டும் ஸ்தாபிக்கப்படும். ஆன்மீகத் தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். நல்லது, இந்தச் சரீரத்தினுள் அவர் பிரவேசிக்கவில்லை எனில், அவர் வேறு ஒருவரது சரீரத்தில் பிரவேசித்திருப்பார். எனினும் தந்தையே விளக்கத்தைக் கொடுப்பவர். நாங்கள் இவரது பெயரைக் குறிப்படுவதில்லை. தந்தை கூறுகின்றார் என்றே நாங்கள் உங்களுக்குக் கூறுகின்றோம்: நீங்கள் என்னை நினைவுசெய்தால், தூய்மையாகி, என்னை வந்தடைவீர்கள். இது மிகவும் எளிமையானது! என்னை நினைவுசெய்வதுடன், 84 பிறவிச் சக்கரத்தின் ஞானத்தையும் புத்தியில் வைத்திருங்கள். இதைக் கிரகிப்பவர்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுவார்கள். இச்செய்தி சகல சமயத்தவர்களுக்கும் உரியது. அனைவருமே வீடு திரும்ப வேண்டும். நீங்கள் வீட்டிற்குச் செல்வதற்கான பாதையை நாங்கள் உங்களுக்குக் காட்டுகின்றோம். நீங்கள் தந்தையின் இச் செய்தியை போதகர்கள் அல்லது வேறெவருக்கும் கொடுக்க முடியும். உங்கள் சந்தோஷப் பாதரசம் உங்களுக்குள் உயர வேண்டும். பரமாத்மாவான பரமதந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அனைவருக்கும் இதை ஞாபகப்படுத்துங்கள். தந்தையின் செய்தியைக் கூறுவதே முதலாம் இலக்கச் சேவையாகும். இப்பொழுதே கீதையின் யுகமாகும். தந்தை வந்துவிட்டார். ஆகவே அந்தப் படத்தை ஆரம்பத்திலிருந்தே நீங்கள் வைத்திருக்க வேண்டும். தந்தையின் செய்தியைத் தங்களால் கொடுக்க முடியும் என உணர்பவர்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் குருடர்களுக்குக் கைத்தடிகளாக வேண்டும் என்பது உங்கள் இதயங்களில் புக வேண்டும்;. இச்செய்தியை நீங்கள் எவருக்கும் கொடுக்க முடியும். பிரம்மகுமாரிகள் என்ற பெயரைக் கேள்விப்படும்பொழுது, மக்கள் அச்சம் கொள்கின்றார்கள். நீங்கள் தந்தையின் செய்தியையே அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள் என அவர்களிடம் கூறுங்கள். பரமாத்மாவான பரமதந்தை கூறுகின்றார்: என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! அவ்வளவே! நாங்கள் எவரையும் அவதூறு செய்யவில்லை. தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! நானே தூய்மையாக்குபவரான, அதிமேலானவர். என்னை நினைவுசெய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதைக் குறித்துக் கொள்ளுங்கள். இது மிகவும் பயனுள்ள விடயம். மக்கள் சிலசமயங்களில் புயங்களில் அல்லது கரங்களில் எழுத்துக்களைப் பொறித்திருப்பார்கள். இதையும் எழுதிக் கொள்ளுங்கள். இவ்வளவையேனும் நீங்கள் விளங்கப்படுத்தினாலும் நீங்கள் கருணை நிறைந்த பரோபகாரியாக இருப்பீர்கள். இதனை நீங்கள் செய்வதாகச் சத்தியம் செய்யுங்கள். நீங்கள் நிச்சயமாகச் சேவை செய்து, இப் பழக்கத்தை உறுதியாக்க வேண்டும். நீங்கள் இங்கும் விளங்கப்படுத்த முடியும். இந்தப் படங்களையும் நீங்கள் கொடுக்கலாம். இச் செய்தியைக் கொடுப்பது தகுதியானது. நூறாயிரக்கணக்கானோர் உருவாக்கப்படுவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் செய்தியைக் கொடுங்கள். ஒருவர் பணம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், அவரிடம் கூறுங்கள்: தந்தையே ஏழைகளின் பிரபு, ஒவ்வொரு வீட்டிற்கும் இச்செய்தியைக் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை. இவர் பாப்தாதாவும், இது அவரிடமிருந்து நாங்கள் பெறுகின்ற எங்கள் ஆஸ்தியுமாகும். இவர் 84 பிறவிகளை எடுக்கின்றார், இவர் இப்பொழுது தனது இறுதிப் பிறவியில் இருக்கின்றார். நாங்கள் பிராமணர்கள், நாங்கள் பின்னர் தேவர்கள் ஆகுவோம். பிரம்மாவும் ஒரு பிராமணரே ஆவார். பிரஜாபிதா பிரம்மா மாத்திரம் இருப்பதில்லை; நிச்சயமாகப் பிராமண குலமும்; உள்ளது. பிரம்மா ஒரு தேவரான, விஷ்ணு ஆகுகின்றார்;. பிராமணர்களே உச்சிக்குடுமிகள். அவர்கள் தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகுகின்றார்கள். நீங்கள் கூறுவதைப் புரிந்துகொள்கின்ற சிலர் நிச்சயமாக வெளிப்படுவார்கள். ஆண்களும் சேவை செய்ய முடியும். வியாபாரிகள் அதிகாலையில் தங்கள் கடைகளைத் திறக்கும்பொழுது, பிரார்த்திக்கின்றார்கள்: எனக்கு ஒரு நல்ல வாடிக்கையாளரை அனுப்பி வையுங்கள்! நீங்களும் அதிகாலையில் சென்று தந்தையின் செய்தியைக் கொடுக்க முடியும். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் நன்றாக வியாபாரம் செய்வீர்கள். பிரபுவை நினைவுசெய்தால், நீங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெறுவீர்கள். அதிகாலை வேளை மிகவும் நல்லது. இந்நாட்களில் பெண்களும் தொழிற்சாலைகளில் பணி புரிகின்றார்கள். இந்த பட்ஜைத் தயாரிப்பது மிக இலகுவாகும். குழந்தைகளாகிய நீங்கள் இரவுபகலாகச் சேவையில் ஈடுபட்டு, உங்கள் உறக்கத்தைத் துறக்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டதும் மக்;கள் பிரபுவும் அதிபதியுமானவருக்கு உரியவர்கள் ஆகுகின்றார்கள். நீங்கள் இச்செய்தியை எவருக்கும் கொடுக்கலாம். உங்கள் ஞானம் மிகவும் மேன்மையானது. அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் ஒரேயொருவரையே நினைவுசெய்கின்றோம். கிறிஸ்துவின் ஆத்மாவும் அவரது குழந்தையே. ஆத்மாக்கள் அனைவருமே அவரின் குழந்தைகள். தந்தையாகிய கடவுள் கூறுகின்றார்: சரீரதாரிகள் எவரையும் நினைவுசெய்யாதீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, சதா என்னை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் என்னிடம் வருவீர்கள். மக்கள் வீடு திரும்புவதற்கே முயற்சி செய்கின்றார்கள். எனினும், எவராலும் அது முடியாதுள்ளது. இந்நேரத்தில் குழந்தைகள் மிகவும் பின்தங்கி இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அவர்களால் அந்தளவு முயற்சி செய்ய முடியாதிருப்பதுடன், தொடர்ந்தும் சாக்குப்போக்குகளையும் கூறுகின்றார்கள். இவ்விடயத்தில் பெருமளவு சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது. சமய ஸ்தாபகர்கள் அதிகளவு சகித்துக் கொள்ள நேரிட்டது! கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாரெனக் கூறப்படுகின்றது. அனைவருக்கும் இச்செய்தியைக் கொடுப்பதே உங்கள் கடமையாகும். இதைச் செய்வதற்கான வழிமுறைகளை பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் காட்டுகின்றார். உங்களில் எவரேனும் சேவை செய்யாதபொழுது, நீங்கள் எதனையும் கிரகிக்கவில்லை என பாபா புரிந்துகொள்கின்றார். செய்தியை எவ்வாறு கொடுப்பது என பாபா உங்களுக்கு ஆலோசனை கூறுகின்றார். நீங்கள் புகையிரதங்களிலும் இச்செய்தியைத் தொடர்ந்தும் கொடுக்க முடியும். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். சிலர் சென்று மௌன தாமத்தில் இருப்பார்கள். உங்களால் மாத்திரமே இந்தப் பாதையை அவர்களுக்குக் காட்ட முடியும். பிராமணர்களாகிய நீங்கள் செல்லவே வேண்டும். உங்களிற் பலர் உள்ளனர், எனவே உங்களை எங்காவது இட வேண்டும்: பிராமணர்கள், தேவர்கள், சத்திரியர்கள்;. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளும் நிச்சயமாக இருப்பார்கள். பிராமணர்கள் முதலில் இருக்கின்றார்கள்;. பிராமணர்களாகிய நீங்கள் அதிமேலானவர்கள். அந்தப் பிராமணர்கள் கருப்பை மூலம் பிறக்கின்றார்கள். பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். இல்லாவிட்டால், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான, பிராமணர்கள் எங்கு சென்றார்கள்? நீங்கள் அந்தப் பிராமணப் புரோகிதர்களுடன் அமர்ந்திருந்து அவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, அவர்கள் மிகவும் விரைவாகப் புரிந்துகொள்வார்கள். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் பிராமணர்கள், நாங்களும் எங்களைப் பிராமணர்கள் என்றே அழைக்கின்றோம். இப்பொழுது எங்களுக்குக் கூறுங்கள்: உங்களுடைய சமயத்தை ஸ்தாபித்தவர் யார்? அவர்கள் பிரம்மாவின் பெயரைத் தவிர வேறெந்தப் பெயரையும் குறிப்பிட மாட்டார்கள். நீங்களாகவே இதை முயற்சி செய்து பாருங்கள்! மிகப்பெரிய பிராமணக் குடும்பங்கள் உள்ளன. பல பிராமணப் புரோகிதர்களும் உள்ளனர். பல குழந்தைகள் அஜ்மீருக்குச் செல்கின்றார்கள். அப் பிராமணர்களை நீங்கள் சந்திக்கச் சென்று, உங்கள் சமயத்தை ஸ்தாபித்தவர் யார் என்று அவர்களிடம் வினவினீர்கள் என்ற செய்தியை இன்னமும் உங்களில் எவருமே பாபாவிற்குக் கொடுக்கவில்லை. பிராமண தர்மத்தை ஸ்தாபித்தவர் யார்? உண்மையான பிராமணர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பலருக்கு நன்மையை ஏற்படுத்த முடியும். பக்தர்கள் மாத்திரமே யாத்திரை செல்கின்றார்கள். இலக்ஷ்மி, நாராயணனின் இந்தப் படம் மிகவும் சிறப்பானது. ஜெகதாம்பா யார் என உங்களுக்குத் தெரியுமா? இலக்ஷ்மி யார்? நீங்கள் இவ்வாறு பணியாட்களுக்கும், சுதேசிகளுக்கும் விளங்கப்படுத்த முடியும். உங்களைத் தவிர வேறெவராலும் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் மிகவும் கருணை மிக்கவர்களாக வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: நீங்களும் தூய்மையானவர்களாகி, தூய உலகிற்குச் செல்ல முடியும். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். ஏனையோருக்குப் பாதையைக் காட்டுவதில் நீங்கள் மிகவும் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். நினைவில் நிலைத்திருப்பவர்களே பிறரையும் நினைவில் நிலைத்திருப்பதற்கு நினைவூட்ட முயற்சி செய்வார்கள். தந்தை அவர்களிடம் சென்று பேசப் போவதில்லை; இது குழந்தைகளாகிய உங்கள் கடமையாகும். ஏழைகளும் சந்தோஷமடையும் வகையில் நீங்கள் அவர்களுக்கும் நன்மையளிக்க வேண்டும். தந்தையைச் சிறிதளவு நினைவுசெய்தாலும், அவர்களாலும் பிரஜைகளில் ஒருவராகலாம், அதுவும் நல்லதே. இந்தத் தர்மம் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. நாளுக்கு நாள், உங்கள் ஒலி மேலும் உரத்துப் பரவும். இந்தச் செய்தியைத் தொடர்ந்தும் அனைவருக்கும் வழங்குங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். இனிமையிலும் இனிமையான, குழந்தைகளாகிய நீங்கள் பலமில்லியன் தடவைகள் பாக்கியசாலிகள். இந்தப் புகழைச் செவிமடுக்கும்பொழுது, உங்களுக்கு அது புரிகின்றது. ஆகையால் நீங்கள் ஏன் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்? இது மறைமுகமான ஞானம், உங்களுக்கு மறைமுகமான சந்தோஷம் உள்ளது. நீங்கள் மறைமுகமான போராளிகள். நீங்கள் அறியப்படாத போராளிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். வேறு எவருமே அறியப்படாத போராளிகளாக இருக்க முடியாது. தில்வாலா ஆலயமே உங்கள் மிகச்சரியான ஞாபகார்த்தம். இது உங்கள் இதயங்களை வென்றவரின்; குடும்பம். மகாவீர், மகாவீரிணி மற்றும் அவர்களின் குழந்தைகளின் யாத்திரையே உண்மையான யாத்திரை ஆகும். இந்த இடம் காசியிலும் உயர்வானது. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுங்கள். சேவை செய்வதற்கான சத்தியத்தைச் செய்யுங்கள். சேவை செய்யாமைக்கான சாக்குப்போக்குகளைக் கூறாதீர்கள்.

2. எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், ஆனால் மறைமுகமான சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். சரீரதாரிகள் எவரையும் நினைவுசெய்யாதீர்கள். ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆட்ட அசைக்க முடியாதவர்களாக இருந்து, பாதகமான சூழ்நிலைகளை நல் அதிர்ஷ்டமாகக் கருதுவதால், உங்கள் நம்பிக்கையின் அத்திவாரத்தை உறுதியானதாக ஆக்குவீர்களாக.

பாதகமான சூழ்நிலைகள் வரும்பொழுது, உயரே பாய்ந்து செல்லுங்கள், ஏனெனில் பாதகமான சூழ்நிலைகள் வருவது நல் அதிர்ஷ்டத்தின் ஓர் அறிகுறியாகும். அவை உங்கள் நம்பிக்கையின் அத்திவாரத்தை உறுதியாக்குவதற்கான வழிகளாகும். நீங்கள் ஒருமுறை சதாகாலத்திற்கும் அங்கதனைப் போல் உறுதியானவர்கள் ஆகும்பொழுது, அந்தப் பரீட்சைத் தாள்களும் உங்களுக்குத் தலைவணங்கும். முதலில் அவை ஒரு பயங்கரமான ரூபத்தில் வரும், பின்னர் அவை உங்களுக்குச் சேவகர்களாக வரும். மகாவீரர்களைப் போன்று அவற்றிற்குச் சவால் விடுங்கள். நீரில் ஒரு கோட்டை இட முடியாததைப் போன்று, அதேவிதமாக, பாதகமான சூழ்நிலைகள் எதுவும் மாஸ்டர் கடலான, சுயத்தைத் தாக்க முடியாது. உங்கள் ஆதி ஸ்திதியில் இருப்பதால், நீங்கள் ஆட்ட அசைக்க முடியாதவர்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
எவருடைய ஒவ்வொரு செயலும் மேன்மையாகவும், வெற்றிகரமானதாகவும் உள்ளதோ, அவரே ஞானம் நிறைந்தவர் ஆவார்.