28.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இதயபூர்வமாக ‘பாபா, பாபா’ எனக் கூறினால், சந்தோஷத்தில் உங்களுக்கு மெய்சிலிர்க்கும். நீங்கள் சந்தோஷத்தில் நிலைத்திருந்தால் நீங்கள் மாயையை வெற்றி கொள்வீர்கள்.

கேள்வி:
சந்தோஷத்திற்கும் நினைவு செய்தலுக்கும் அடிப்படையாக உள்ள எந்த ஒரு விடயத்தை குழந்தைகள் கடின வேலையாகக் கருதுகின்றார்கள்?

பதில்:
ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கே முயற்சி தேவையாகும், இதனாலேயே உங்கள் சந்தோஷ பாதரசம் அதிகரிப்பதுடன், நீங்கள் இனிய பாபாவையும் நினைவு செய்கின்றீர்கள். மாயை தொடர்ந்தும் உங்களைச் சரீர உணர்வடையச் செய்கின்றாள். மாயை சக்திமிக்கவர்களுடன் சக்திமிக்கவளாகி அவர்களுடன் யுத்தம் புரிகின்றாள். எவ்வாறாயினும், அதனால் நீங்கள் குழப்பம் அடையக் கூடாது. பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, மாயையின் புயல்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உங்கள் பௌதீகப் புலன்களினால் பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். அதாவது, அவர் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுத்து உங்களுக்குக் கல்வி புகட்டுகின்றார். உங்களுக்குக் கற்பிக்கின்ற தந்தை எப்பொழுதும் ஆத்ம உணர்வுடையவராகவே இருக்கின்றார். அவர் அசரீரியானவர். அவர் சரீரம் எடுப்பதில்லை. அவர் மறுபிறப்பிற்குள் வருவதில்லை. தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் உங்களை என்னைப் போலவே ஆத்மாக்களாகக் கருதுங்கள். நானே பரம தந்தையாவேன். பரமாத்மா சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. அவர் ஆத்ம உணர்வுடையவர் என்று உங்களால் கூற முடியாது. அவர் அசரீரியானவர். தந்தை கூறுகின்றார்: எனக்கென ஒரு சரீரம் இல்லை. நீங்கள் தொடர்ந்தும் சரீரங்களைப் பெறுகின்றீர்கள் இப்;பொழுது, என்னைப் போல் ஆகுங்கள், சரீரத்தில் இருந்து விடுபட்டு, உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதுங்கள். நீங்கள் உலக அதிபதிகள் ஆக விரும்பினால், அதனை விடக் கடினமானது வேறு ஒன்றுமில்லை. தந்தை கூறுகின்றார்: சரீர உணர்வைத் துறந்து என்னைப் போன்று ஆகுங்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் எப்பொழுதும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். தந்தை அசரீரியானவராயின் அவரால் எங்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்? ஆகையாலேயே பாபா வந்து இச்சரீரத்தின் மூலம் எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர்கள் கௌமுக்கைக் (பசுவின் வாய்) காட்டுகின்றார்கள். இப்பொழுது, ஒரு பசுவின் வாயிலிருந்து எவ்வாறு கங்கை வெளிப்பட முடியும்? தாய்மார்களும் தாய்ப்பசுக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் அனைவரும் பசுக்கள். இவர் (பிரம்மபாபா) ஒரு பசு அல்ல. நீங்கள் வாயினூடாக ஞானத்தைப் பெறுகின்றீர்கள். தந்தையிடம் ஒரு பசு இருப்பதில்லை. அவர் எருதை ஓட்டுவதைப் போன்று காட்டுகின்றார்கள். ‘சிவனும் சங்கரரும் ஒருவரே’ என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். சிவனும் சங்கரரும் ஒருவர் அல்ல என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். சிவன் அதிமேலானவர். அதன் பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் உள்ளனர். அந்த பிரம்மா சூட்சும உலக வாசியாவார். குழந்தைகளாகிய நீங்கள் ஞானக் கடலைக் கடைந்து விளங்கப்படுத்துவதற்காக அவற்றிலிருந்து கருத்துக்களை பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நீங்கள் அச்சமற்றவர்களாகவும் ஆக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே சந்தோஷமாக இருக்கின்றீர்கள். ‘நாங்கள் கடவுளின் மாணவர்கள், பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார்’ என நீங்கள் கூறுகின்றீர்கள். கடவுள் பேசுகின்றார்: ஓ குழந்தைகளே, நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குவதற்கே உங்களுக்குக் கற்பிக்கின்றேன். நீங்கள் எங்கே சென்றாலும், நிலையங்களாக இருந்தாலும், வேறு எங்கு சென்றாலும், பாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதே உங்கள் புத்தியில் உள்ளது. ஒரு நிலையத்தில் நீங்கள் செவிமடுப்பவை பாபாவினால் பேசப்பட்ட முரளியாகும். ‘பாபா, பாபா’ எனத் தொடர்ந்தும் கூறுங்கள். இதுவும் உங்கள் யாத்திரையாகும். ‘யோகம்’ என்ற வார்த்தை அவ்வளவு பொருத்தமானது அல்ல. மக்கள் அமர்நாத், பத்திரிநாத் போன்ற இடங்களுக்குப் பாதயாத்திரை செய்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இந்த எல்லையற்ற நாடகம் இப்பொழுது ஒரு முடிவிற்கு வருகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். பாபா எங்களைத் தகுதியுடையவராக்கி, எங்களை திரும்பி அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார். நீங்களே கூறுகின்றீர்கள்: நாங்கள் தூய்மையற்றவர்களாக இருக்கின்றோம். தூய்மையற்றவர்களால் முக்தியைப் பெற முடியாது. தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். அவர்கள் சரீரமே தூய்மையற்றது எனக் கருதிக் கங்கைக்குச் சென்று நீராடுகின்றார்கள். ஆத்மா செயல்களினால் தாக்கப்படுவதில்லை என அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஆத்மாவே பிரதான விடயமாகும். ‘பாவாத்மா, புண்ணியாத்மா’ என்று கூறப்படுகின்றது. இவ் வார்த்தைகளை நீங்கள் நன்றாக நினைவு செய்ய வேண்டும். நீங்கள் முதலில் இதனை நன்றாகப் புரிந்து கொண்டு பின்னர் பிறரைப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும். நீங்களே சொற்பொழிவாற்ற வேண்டும். தந்தை கிராமம் கிராமமாகவோ அல்லது வீதி வீதியாகவோ செல்லப் போவதில்லை. நீங்கள் இப்படங்களை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். 84 பிறவிச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது? அது ஏணிப்படத்தில் மிகத்தெளிவாக உள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது சதோபிரதான் ஆகுங்கள். நீங்கள் வீடு திரும்ப வேண்டும். தூய்மையாகாது உங்களால் வீடு திரும்ப முடியாது. இந்த ஓர் அக்கறை மாத்திரமே உங்களுக்கு இருக்க வேண்டும். பல குழந்தைகள் பாபாவிற்கு எழுதுகின்றார்கள்: மாயையின் பல புயல்கள் எங்களுக்கு வருகின்றன. எங்கள் மனதில் மிகவும் தீய எண்ணங்கள் வருகின்றன. அவை முன்னர் வரவில்லை. தந்தை கூறுகின்றார்: அதனைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். முன்னர் நீங்கள் ஒரு யுத்த களத்தில் இருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, மாயையை வெற்றி கொள்ளுங்கள். இதனை மீண்டும் மீண்டும் நினைவு செய்யுங்கள். தாய்மார்கள் சேலையில் முடிச்சிட்டுக் கொள்வதைப் போன்று, ஆண்கள் தமது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொள்வதைப் போன்று நீங்களும் ஒரு முடிச்சை இட்டுக் கொள்ளுங்கள். உங்களது இந்த ‘பட்ஜ்’ மிகவும் சிறந்த அடையாளமாகும். நாங்கள் இளவரசர்கள் ஆகுகின்றோம். இது யாசிப்பவர்களில் இருந்து இளவரசர் ஆகுவதற்கானதொரு இறை பல்கலைக்கழகமாகும். நீங்கள் இளவரசராக இருந்தீர்கள். அப்படித்தானே? இங்கிலாந்தின் பிரின்ஸ் ஒவ்ஃ வேல்ஸ் இருப்பதைப் போன்று, ஸ்ரீ கிருஷ்ணர் உலக இளவரசராக இருந்தார். அது எல்லைக்குட்பட்ட விடயம். ராதையும் கிருஷ்ணரும் மிகவும் பிரபல்யமானவர்கள். அவர்கள் சுவர்க்கத்தின் இளவரசனும் இளவரசியுமாக இருந்ததால், அனைவரும் அவர்களை நேசிக்கின்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அதிகளவு நேசிக்கப்படுகின்றார். இருவருமே நேசிக்கப்பட வேண்டியவர்களே. முதலாவதாக, ராதையே இருக்க வேண்டும், எனினும் ஆண்குழந்தை வாரிசு ஆகுவதால் அவரே அதிகளவு நேசிக்கப்படுகின்றார். ஒரு மனைவி தனது கணவரின் மீது அன்பு கொண்டுள்ளார். ஒரு கணவனைக் குறித்தே ‘அவரே உனது குருவும், உனது கடவுளும்’ என்று கூறப்படுகின்றது. ஒரு மனைவியை இட்டு அவ்வாறு கூறப்படுவதில்லை. சத்தியயுகத்தில், தாய்மார்கள் புகழப்படுகின்றார்கள். முதலில் இலக்ஷ்மியும் பின்னர் நாராயணனும் உள்ளார். அம்பாள் தேவி மீது அதிகளவு மரியாதை உள்ளது. அவர் பிரம்மாவின் புத்திரியாவார். பிரம்மாவிற்கு அந்தளவிற்கு மரியாதை இருப்பதில்லை. அஜ்மீரில் பிரம்மாவிற்கு ஆலயம் ஒன்றுள்ளது. அங்கேயே மேலாக்கள் இடம்பெறுகின்றன. அம்பாளின் ஆலயங்களிலும் மேலாக்கள் இடம்பெறுகின்றன. உண்மையில், அந்த மேலாக்கள் அனைத்தும் உங்களை மேலும் அழுக்கடையச் செய்வதற்காகவாகும். உங்களுடைய இந்த மேலாவே உங்களைச் சுத்தமாக்குகின்றது. சுத்தமடைவதற்கு நீங்கள் சுத்தமான (தூய்மையான) தந்தையை நினைவு செய்ய வேண்டும். தண்ணீரினால் உங்கள் பாவங்களை உங்களால் அழித்து விட முடியாது. மன்மனாபவ என்ற இறைவார்த்தை கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஆரம்பத்திலும் பின்னர் இறுதியிலும் குறிப்பிடப்படுகின்றது. நாங்களே வழிபாட்டை ஆரம்பித்தோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சதோபிரதான் வழிபாடும், அதன் பின்னர் சதோ, இரஜோ வழிபாடும், அதன் பின்னர் தமோ வழிபாடும் இருந்தது. பாருங்கள், அவர்கள் இப்பொழுது மண்ணையும் கல்லையும் கூட வழிபடுகின்றார்கள்! அவை அனைத்தும் குருட்டு நம்பிக்கை ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இதுவே தலைகீழான விருட்சமாகும்: விதையே உச்சியில் உள்ளது. தந்தை கூறுகின்றார்;: நானே இந்த மனித உலகைப் படைப்பவரும், அதன் விதையும் ஆவேன். நான் இப்பொழுது புதிய உலகைப் படைக்கின்றேன். மரக்கன்று நாட்டப்படுகிறது. விருட்சத்தின் பழைய இலைகள் கீழே விழுந்ததும், புதிய இலைகள் தோன்றத் தொடங்குகின்றன. தந்தை இப்பொழுது ஆதிசனாதன தேவ தேவியரின் தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். கலந்து விட்ட (மதம் மாறியவர்கள்) பல இலைகளும் உள்ளன. அவர்கள் தம்மை இந்துக்கள் என அழைக்கின்றார்கள். உண்மையில், இந்துக்கள் ஆதிசனாதன தேவ தேவியரின் தர்மத்தைச் சேர்ந்தவர்கள். தேவர்கள் வாழ்ந்த இந்துஸ்தானின் உண்மையான பெயர் பாரதம் ஆகும். வேறு எந்தத் தேசத்தின் பெயரும் மாற்றப்படவில்லை. ஆனால் இத்தேசத்தின் பெயரையே அவர்கள் மாற்றியுள்ளார்கள். அவர்கள் அதனை இந்துஸ்தான் என அழைக்கின்றார்கள். பௌத்தர்கள் தமது சமயம் ஜப்பானியம் என்றோ சீனம் என்றோ கூறுவதில்லை. அவர்கள் தமது சமயத்தைப் பௌத்தம் என்றே அழைக்கின்றார்கள். இங்கும், எவரும் தம்மை ஆதிசனாதன தேவதேவியரின் தர்மத்தினர் எனக் கருதுவதில்லை. ஒருவர் தாம் அந்தத் தர்மத்தைச் சேர்ந்தவர்; எனக் கூறினால், அவரிடம் வினவுங்கள்: அந்தத் தர்மம் எப்பொழுது உருவாகியது, அதனை உருவாக்கியவர் யார்? அவரால் உங்களுக்குப் பதிலளிக்க முடியாது. சக்கரத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதுவே அறியாமையின் இருள் எனப்படுகின்றது. முதலில், அவர்களுக்குத் தமது தர்மத்தைத் தெரியாது. இரண்டாவதாக, இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் மிகவும் தொலைவிற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனாலேயே இது காரிருள் எனப்படுகின்றது. ஞானத்திற்கும் அறியாமைக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. சிவபாபா மாத்திரமே ஞானக்கடல் ஆவார். அது தீர்த்தக் குடத்தைக் கொடுப்பதைப் போன்றதாகும். சிவபாபாவை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழியும் என நீங்கள் ஒருவரிடம் கூறுதல் தீர்த்தம் கொடுப்பதைப் போன்றதாகும். சிலர் அதில் (கங்கையில்) நீராடுகின்றார்கள், சிலர் பானையில் அதனை எடுத்துக் கொள்கின்றார்கள். சிலர் சிறிய கலசத்தையும் சிலர் அதைவிட சிறிய கலசத்தையும் எடுத்துச் செல்கின்றார்கள். அவர்கள் ஒரு துளி தண்ணீரை இட்டு, அதனை ஞானநீர் எனக் கருதி அதனை அருந்துகின்றார்கள். வைஷ்ணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, ஒரு பானையில் கங்கை நீரை நிறைத்து எடுத்துக் செல்வதுடன், அதனை மேலும் அனுப்புமாறு தொடர்ந்து கேட்பதும் உண்டு. இப்பொழுது அந்த நீர் அனைத்தும் மலைகளில் இருந்தே வருகின்றன. தண்ணீரும் மேலே இருந்தே விழுகின்றது. இக்காலத்தில் 100 மாடிக் கட்டடங்களும் கட்டப்படுகின்றன. சத்தியயுகத்தில் அதுபோல் இருக்க மாட்டாது. அங்கே, நீங்கள் அதிகளவு நிலப்பரப்பைக் கொண்டிருப்பீர்கள். கேட்கவும் வேண்டாம்! இங்கே நிலம் பற்றாக்குறையாக இருப்பதால் அவர்கள் பல மாடிக் கட்டடங்களைக் கட்டுகின்றார்கள். அங்கே, அளவுக்கதிகமாகத் தானியங்களும் இருக்கின்றன. அமெரிக்காவில், தானியங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, அதனை அவர்கள் எரிக்க வேண்டியுள்ளது. இது மரண உலகமாகும். அது அமரத்துவ உலகமாகும். அரைக்கல்பத்திற்கு நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். அங்கே மரணம் பலவந்தமாக வர மாட்டாது. இதனையிட்டு ஒரு கதையும் உள்ளது. இவை எல்லையற்ற விடயங்களாகும். இந்த எல்லையற்ற விடயங்களில் இருந்து, அவர்கள் எல்லைக்குட்பட்ட கதைகளைக் கட்டியுள்ளார்கள். ஆதியில், கிராந்த் மிகவும் சிறிதாகவே இருந்தது. அது இப்பொழுது மிகவும் பெரிதாகச் செய்யப்படுகின்றது. சிவபாபா சின்னஞ்சிறிய அளவுடையவராயினும், அவருக்கெனச் சின்னங்கள்; மிகப் பெரிதாகக் கட்டப்பட்டுள்ளன. புத்தரதும் பாண்டவர்களதும் சின்னங்களும் மிகப் பெரிதாகக் கட்டப்பட்டுள்ளன. அவ்வாறு எவருமே இpல்லை. குழந்தைகளாகிய உங்கள் ஒவ்வொருவரது வீட்டிலும், இலக்கினதும் இலட்சியத்தினதும் படத்தை வைத்திருக்க வேண்டும். நாங்கள் கற்பதன் மூலம் இவ்வாறு ஆகுகின்றோம். அவ்வாறாயின் நீங்கள் ஏன் அழ வேண்டும்? அழுபவர்கள் இழக்கின்றார்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆக வேண்டும். இதற்கே முயற்சி தேவையாகும். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதன் மூலம், உங்கள் சந்தோஷ பாதரசம் உயர்வடைவதால், இனிய பாபா நினைவு செய்யப்படுகின்றார். நாங்கள் சுவர்க்கம் என்ற ஆஸ்தியை பாபாவிடம் இருந்து பெறுகின்றோம். பாபா இந்த பாக்கிய இரதத்தில் எங்களுக்குக் கற்பிப்பதற்காக வருகின்றார். பாபாவை இரவு பகலாக நினைவு செய்யுங்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்குக் காதலர்களாக இருக்கின்றீர்கள். பக்தர்கள் கடவுளை நினைவு செய்கின்றார்கள். பல பக்தர்கள் இருக்கின்றார்கள். ஞானத்தில், அனைவரும் ஒரேயொரு தந்தையையே நினைவு செய்கின்றார்கள். அவர் அனைவரதும் தந்தை ஆவார். ஞானக்கடலான தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதால் உங்களுக்கு மெய்சிலிர்க்க வேண்டும். மாயையின் புயல் நிச்சயமாக வரும். பாபா கூறுகின்றார்: நான் முன்னிலையில் இருப்பதால், நானே அதிகபட்ச புயலை சந்திக்க வேண்டும். எனக்கு புயல்கள் வருவதைப் போன்று, குழந்தைகளுக்கும் எவ்வளவு புயல் வரும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் அதிகளவு குழப்பம் அடைந்திருப்பீர்கள். பல வகையான புயல்கள் வருகின்றன. அறியாமை நாட்களில் கூட உங்களுக்கு அவ்வாறு வந்திருக்க மாட்டாது. இப் புயல்கள் எனக்கே முதலில் வரவேண்டும். இல்லாவிட்டால், எவ்வாறு என்னால் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? இவரே முன்னிலையில் உள்ளார். அவர் சக்திமிக்கவர் என்பதால், மாயையும் சக்திமிக்கதாகி எதிர்த்து அவருடன் யுத்தம் புரிகின்றாள். குத்துச் சண்டையில், அனைவரும் ஒரேமாதிரி இருப்பதில்லை. முதல், இரண்டாம், மூன்றாம் தரங்கள் உள்ளன. பாபா அதிகபட்ச புயல்களைச் சந்திக்கின்றார், ஆகையாலேயே அவர் கூறுகின்றார்: இப் புயல்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உங்கள் பௌதீகப் புலன்களினால் எப் பாவச் செயலையும் செய்யாதீர்கள். சிலர் கூறுகின்றார்கள்: நாங்கள் ஞானத்திற்கு வந்த பின்னர் ஏன் அவ்வாறு நிகழ்கின்றது? இதனைவிட, நாங்கள் ஞானத்தை எடுக்காதிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவ்வாறாயின், எங்களுக்கு இவ்வாறான எண்ணங்கள் வந்திருக்க மாட்டாது. எவ்வாறாயினும், இது ஒரு யுத்தமாகும். ஒரு பெண்ணின் முன்னிலையில் இருக்கும் போதும், நீங்கள் தூய்மையான பார்வையை கொண்டிருக்க வேண்டும். சிவபாபாவின் குழந்தைகள் என்றவகையில் நீங்கள் சகோதர்கள் என்பதையும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்றவகையில் நீங்கள் சகோதர சகோதரிகள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறாயின் எங்கிருந்து விகாரங்கள் வருகின்றன? பிராமணர்கள், தேவர்களாக ஆகப் போகின்ற உச்சிகுடுமிகள், ஆகையால் நீங்கள் சகோதர சகோதரிகள். இருவருமே ஒரு தந்தையின் (பிரம்மாவின்) குழந்தைகள் என்பதால், அவர்கள் ஒரு குமாரியாகவும் குமாராகவும் இருக்காதிருந்தால், சண்டை இடம்பெறும். அப்பாவிகள் துன்புறுத்தப்படுகின்றார்கள். ஆண்களும் எழுதுகின்றார்கள்: எனது மனைவி புத்னா (அரக்கி) போன்றவள். அதிகளவு முயற்சி செய்யப்பட வேண்டும். இளையவர்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். தூய திருமணம் செய்து வாழ்பவர்கள் - இது அற்புதமாகும்! அவர்களால் மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். இருப்பினும், அவர்கள் சிறந்த ஸ்திதியில் இருந்து, ஞானத்தில் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையின் புயலைக் கண்டு, அச்சப்படவோ அல்லது குழப்பம் அடையவோ வேண்டாம். உங்கள் புலன்களினால் எப்பாவச் செயல்களையும் செய்யாதிருப்பதில்; மிகவும் கவனம் செலுத்துங்கள். ஞானக்கடலான பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற சந்தோஷத்தைப் பேணுங்கள்.

2. சதோபிரதான் ஆக வேண்டுமாயின், ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். ஞானக் கடலை கடைந்து, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
மேன்மையான முயற்சியை செய்வதன் மூலம், இறுதி முடிவின் போது முதல் இலக்கத்தை கோருகின்ற ஒரு பறக்கும் பறவை ஆகுவீர்களாக.

இறுதி முடிவில் முதல் இலக்கத்தைக் கோருவதற்கு: 1) இதயத்தின் அழிவற்ற ஆர்வமின்மையினால் கடந்த விடயங்களையும் சம்ஸ்காரங்களின் விதையையும் எரித்தொழியுங்கள். 2) அமிர்தவேளையிலிருந்து இரவுவரை இறை ஒழுக்கங்களையும் கோட்பாடுகளையும் எப்பொழுதுமே கடைப்பிடிப்பது என சத்தியம் செய்யுங்கள். 3) உங்கள் எண்ணங்களினால், உங்கள் வார்த்தைகளினால், உங்கள் உறவுமுறைகளினால் தொடர்புகளினால் சதா ஒரு மகாதானியாகவும், ஒரு புண்ணியாத்மாவாகவும் இருந்து தொடர்ந்தும் தான தர்மங்கள் செய்யுங்கள். நீங்கள் அத்தகைய மேன்மையான முயற்சியை செய்து, அவ்வாறாக உயரப்பாயும் பொழுது உங்களால் பறக்கின்ற பறவையாகி இறுதி முடிவில் முதல் இலக்;கத்தைக் கோர முடியும்.

சுலோகம்:
உங்கள் மனோபாவத்தினால் சூழலை சக்திமிக்கதாக ஆக்குவதே சேவைக்கான இறுதி முயற்சியாகும்.