18.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது உண்மையான தந்தையினால் உண்மையான தேவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். ஆகையால் சத்தியத்தின் யுகமான, சத்தியயுகத்தில் நீங்கள் சத்திய சகவாசத்தைக் (சற்சங்கம்-சமய ஒன்றுகூடல்;) கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி:
சத்தியயுகத்தில் ஏன் தேவர்கள் எப்பாவச் செயல்களிலும் ஈடுபட முடியாது?

பதில்:
ஏனெனில் அவர்கள் உண்மையான தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டு இருந்ததனால் ஆகும். நீங்கள் இராவணனால் சபிக்கப்படும்பொழுதே, பாவச் செயல்கள் செய்யப்பட ஆரம்பிக்கின்றன. சத்திய, திரேதாயுகங்களில் நீங்கள் சற்கதியில் இருக்கின்றீர்கள். அந்த நேரத்தில் சீரழிதல் என்ற குறிப்பே இருக்காது; அந்த நேரத்தில் விகாரங்களும் இல்லாததால், பாவச்செயல்கள் செய்யப்படுவதில்லை. துவாபர, கலியுகங்களில் அனைவரும் சீரழிவில் இருப்பதால், அவர்கள் தொடர்ந்தும் பாவச் செயல்களைச் செய்கின்றார்கள். இதுவே புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்குத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். அவர் பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம சற்குருவும் ஆவார். தந்தையின் இப் புகழ் மக்களிடம் கூறப்படும்பொழுது, கிருஷ்ணர் அனைவரதும் தந்தையாக இருக்க முடியாது என்பது இயல்பாகவே நிரூபிக்கப்படுகின்றது; அவர் சத்தியயுகத்து இளவரசரான, ஒரு சிறு குழந்தை. அவரால் ஓர் ஆசிரியராகவும் இருக்க முடியாது. அவரே அமர்ந்திருந்து ஓர் ஆசிரியரிடம் கற்கின்றார். அங்கே அனைவரும் சற்கதி அடைந்திருப்பதால், குருமார்கள் எவரும் இருப்பதில்லை. அரைக் கல்பத்திற்குச் சற்கதியும், அரைக் கல்பத்திற்குச் சீரழிவும் உள்ளன. அங்கே சற்கதி இருப்பதால், இந்த ஞானத்திற்கான அவசியம் அங்கில்லை. அங்கே இந்த ஞானத்தைப் பற்றிய குறிப்பே இடமில்லை, ஏனெனில் இங்கேயே இந்த ஞானத்தின் மூலம் உங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சற்கதி கிடைக்கின்றது. பின்னர் துவாபரயுகத்தில் இருந்து, கலியுக இறுதிவரை சீரழிவே உள்ளது. எனவே கிருஷ்ணரால் எவ்வாறு துவாபரயுகத்தில் இருக்க முடியும்? எவரும் இதனைப் பற்றி அறியார். ஒவ்வொரு விடயத்திலும் ஆழமான முக்கியத்துவம் உள்ளதால், அனைத்தையும் விளங்கப்படுத்துவது அதி அவசியமானதாகும். அவர் பரமதந்தையும், பரம ஆசிரியரும் ஆவார். ஆங்கிலத்தில், நீங்கள் அவரை மாத்திரமே ‘சுப்ரீம்’ என்று அழைப்பீPர்கள். சில ஆங்கில வார்த்தைகள் மிகவும் சிறந்தவை, உதாரணத்திற்கு ‘நாடகம்’ என்ற வார்த்தை உள்ளது. நாடகம்; (சினிமா) என்று கூத்து அழைக்கப்படுவதில்லை. ஏனெனில் கூத்தில் நடிகர்கள் மாறுவதுண்டு. இவ்வுலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது என அவர்கள் கூறுகின்றார்கள், ஆனால் எவ்வாறு அது சுழல்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியாது. அது அதேபோன்று மீண்டும் சுழல்கின்றதா அல்லது அதில் மாற்றம் ஏதும் உண்டா என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் கூறுகின்றார்கள்: ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதே இடம்பெறுகின்றது. இது நிச்சயமாகத் தொடர்ந்தும் மீண்டும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற, ஒரு நாடகமே. மனிதர்கள் மாத்திரமே தொடர்ந்தும் இச்சக்கரத்தை சுற்றி வருகின்றனர். சரி, இச் சக்கரத்தின் கால எல்லை என்ன? அது எவ்வாறு மீண்டும் சுழல்கின்றது? அது சுழல்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கின்றது? எவருக்கும் இது தெரியாது. இந்த நாடகத்தில் நடிப்பதற்குப் பாகங்களைக் கொண்டிருக்கின்ற, பௌத்த, இஸ்லாமிய குலத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். பிராமணர்களாகிய உங்களின் வம்சம் இருப்பதில்லை; இது பிராமணக் குலமாகும். இது அதிமேன்மையான, பிராமணக் குலம் என்று அழைக்கப்படுகின்றது. தேவ குலமும் உள்ளது. இதனை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும். தேவதைகள் சூட்சும உலகில் வாழ்கின்றார்கள். அங்கே சதைகளும், எலும்புகளும் இருப்பதில்லை. தேவர்களுக்குச் சதைகளும், எலும்புகளும் உள்ளன. பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார், விஷ்ணு பிரம்மா ஆகுகின்றார். அவர்கள் ஏன் விஷ்ணுவின் தொப்பூள்க் கொடியிலிருந்து பிரம்மா தோன்றுவது போன்று சித்தரித்துள்ளார்கள்? சூட்சும உலகில் இவ்விடயங்கள் இடம்பெறுவதோ அல்லது அங்கே எந்த ஆபரணங்களும் இருப்பதோ இல்லை. ஆகையாலேயே பிரம்மா ஒரு பிராமணராக வெள்ளை ஆடையில் சித்தரிக்கப்பட்டுள்ளார். பிரம்மா தனது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் ஒரு சாதாரண, ஏழை மனிதர் ஆகுகின்றார். இந்த நேரத்தில் அவர் கைத்தறியால் தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகளையே அணிகின்றார். சூட்சும சரீரம் என்றால் என்ன என்பதை அந்த அப்பாவி மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. அங்கு சதையும், எலும்பும் அற்ற தேவதைகளே இருக்கின்றார்கள் எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சூட்சும உலகில் எந்த அலங்காரங்களும் இருக்கக்கூடாது. ஏனெனில் அவை படங்களில் காட்டப்பட்டிருப்பதால், அனுமனின் காட்சியை அருள்வதைப் போன்றே, பாபா அதன் காட்சியையும் அருளி, அதன் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அனுமனைப் போன்ற எந்த ஒரு மனிதரும் இருப்பதில்லை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் பல்வகையான படங்களை உருவாக்கியுள்ளார்கள். அவர்களில் நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்களிடம் அதனைப் பற்றி நீங்கள் எதுவும் கூறினால், அவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். அவர்கள் தேவிகள் போன்றோரை அதிகளவு வழிபட்ட பின்னர் அவற்றை அவர்கள் மூழ்கடிக்கின்றார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். அவர்கள் பக்திமார்க்கம் என்ற புதைமண்ணில் தங்கள் கழுத்தளவிற்குச் சிக்கியுள்ளார்கள். அவர்களை அதிலிருந்து எவ்வாறு அகற்ற முடியும்? அதலிருந்து அவர்களை அகற்றுவது கடினமாகுகின்றது. பிறரை அகற்றச் சிலர் கருவிகளாகியபொழுதிலும், அவர்களே அதில் சிக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் தாமும் புதைமண்ணில் தங்கள் கழுத்தளவிற்குக் சிக்கிக் கொள்கின்றார்கள், அதாவது, அவர்கள் மிகப்பெரிய புதைமண்ணான விகாரத்தில் வீழ்கின்றார்கள். இவ்விடயங்கள் சத்தியயுகத்தில் இருக்க மாட்டாது. நீங்கள் இப்பொழுது உண்மையான தந்தையினால் உண்மையான தேவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். சத்தியயுகத்தில் சத்தியமானவரின் சகவாசம் (சமய ஒன்றுகூடல்) இருக்க மாட்டாது. இங்கேயே பக்தி மார்க்கத்தில் நீங்கள் சமய ஒன்றுகூடல்களைக் கொணடிருக்கின்றீர்கள். அனைவரும் கடவுளின் வடிவம் என மக்கள் நினைக்கின்றார்கள்; அவர்கள் எதனையுமே புரிந்துகொள்வதில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: கலியுகத்தில், அனைவரும் பாவாத்மாக்கள், ஆனால் சத்தியயுகத்தில் அனைவருமே புண்ணியாத்மாக்கள். பகலிற்கும் இரவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். உங்களுக்குக் கலியுகம், சத்தியயுகம் இரண்டையும் தெரியும். இந்தப் பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்குச் செல்ல வேண்டியதே பிரதான விடயமாகும். அவர்கள் நச்சுக்கடலையும், பாற்கடலையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள், ஆனால் அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து, செயல்கள், நடுநிலைச் செயல்களைப் பற்றிய இரகசியங்களை உங்களுக்குக் கூறுகின்றார். மக்கள் செயல்களைச் செய்கின்றார்கள், ஆனால் சில செயல்கள் நடுநிலையானவை, ஏனையவை பாவச் செயல்கள். இராவண இராச்சியத்தில், சகல செயல்களும் பாவச் செயல்கள். சத்தியயுகத்தில் பாவச் செயல்கள் செய்யப்படுவதில்லை, ஏனெனில் அங்கே இராம இராச்சியமே உள்ளது; அவர்கள் தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்கள். இராவணன் உங்களைச் சபிக்கின்றான். இது இன்பமும், துன்பமும் பற்றிய நாடகமாகும். துன்ப வேளையில் அனைவரும் தந்தையை நினைவுசெய்கின்றார்கள். சந்தோஷத்தின்பொழுது எவரும் அவரை நினைவுசெய்வதில்லை. அங்கே விகாரங்கள் இருக்க மாட்டாது. மரக்கன்று நாட்டப்படுகின்றது எனக் குழந்தைகளாகிய உங்களிடம் கூறப்பட்டுள்ளது. இப்பொழுதே மரக்கன்று நாட்டும் வழக்கம் ஆரம்பமாகுகிறது. தந்தை மரக்கன்று நாட்டும் வழக்கத்தை ஆரம்பித்தார். இங்கு ஆங்கிலேயரின் ஆட்சி இருந்தபொழுது, பத்திரிகைகளில் என்றுமே மரக்கன்றுகள் நாட்டப்பட்டன எனப் பிரசுரிக்கப்படவில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து தேவ தர்மத்தின் மரக்கன்றை நாட்டுகின்றார். அவர் வேறெந்த மரக்கன்றையும் நாட்டுவதில்லை. பல சமயங்கள் இருந்தபொழுதிலும், தேவ தர்மம் மறைந்துள்ளது. அவர்கள் தமது தர்மத்திலும், கர்மத்திலும் சீரழிந்து விட்டதால், அவர்கள் அதன் பெயரை மாற்றினர். தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அதே தேவ தர்மத்திற்குள் செல்வார்கள். அனைவரும் தமது சொந்தச் சமயத்திற்குச் செல்ல வேண்டும். கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்களால் அதிலிருந்து வெளியேறி தேவ தர்மத்தினர் ஆக முடியாது; அவர்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட முடியாது. ஆம், வேறு சமயங்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட, தேவ தர்மத்தைச் சேர்ந்த சில ஆத்மாக்கள், தமது தேவ தர்மத்திற்கு மீண்டும் வருவார்கள். அவர்கள் உண்மையிலேNயு இந்த ஞானத்தையும் யோகத்தையும் பெருமளவு விரும்புகின்றார்கள், அவர்கள் உங்கள் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இது நிரூபிக்கும். இவ் விடயங்களைப் புரிந்துகொள்வதற்கும், விளங்கப்படுத்துவதற்கும் பரந்த புத்தி தேவை. நீங்களும் இவ்விடயங்களைக் கிரகிப்பதுடன், சிலர் கீதையை உரைக்கும்பொழுது, பிறர் அதனை அமர்ந்திருந்து செவிமடுப்பதைப் போல, நீங்கள் அவற்றைப் பிறருக்கு உரைக்கும்பொழுது, ஒரு புத்தகத்திலிருந்து வாசித்து பிறருக்கு விளங்கப்படுத்துவதில்லை. சிலரால் கீதையை மனப்பாடம் செய்து கூற முடியும். அவர்கள் அனைவரும் அமர்ந்திருந்து அதிலிருந்து தங்கள் சொந்த அர்த்தத்தைப் பிரித்தெடுக்கின்றார்கள். வாசகங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே உள்ளன. நீங்கள் கடலை மையாகவும், காடு முழுவதையும் பேனையாகவும் ஆக்கினாலும், இந்த ஞானத்திற்கு முடிவு இருக்க மாட்டாது என நினைவுகூரப்பட்டுள்ளது. கீதை மிகவும் சிறியது; அதில் 18 அத்தியாயங்களே உள்ளன. சிலர் சிறியதொரு கீதையை தமது கழுத்தில் அணிகின்றார்கள். அது சின்னஞ்சிறிய எழுத்துக்களைக் கொண்டது. சிலர் அதைத் தங்கள் கழுத்தில் அணியும் பழக்கமுடையவர்கள். அவர்கள் அத்தகைய சிறிய பேழையைச் செய்கின்றார்கள். உண்மையில், இது ஒரு விநாடிக்கான விடயமாகும். நீங்கள் ஒருமுறை தந்தைக்கு உரியவராகியதும், அது நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதைப் போன்றதாகும். அத்தகைய குழந்தைகள், பாபாவிற்கு எழுதவும் ஆரம்பிக்கின்றார்கள்: ‘பாபா, நான் உங்கள் ஒருநாள் வயதுக் குழந்தை”. ஒரேநாளில் அவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி, உடனடியாக பாபாவிற்குக் கடிதம் எழுதுகின்றார்கள். நீங்கள் ஒரு குழந்தை ஆகிவிட்டதால், நீங்கள் ஓர் உலக அதிபதி. இது பிறரின் புத்தியில் அரிதாகவே நிற்கின்றது. நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள், அல்லவா? அங்கே வேறு எந்தத் தேசமும் இல்லை. அவற்றின் பெயர்கள், வடிவங்கள் அனைத்தும் மறைந்திருக்கும். இந்த இடங்கள் இருந்தன என்பதும் எவருக்கும் தெரியாது. அவை இருந்திருந்தால், அவற்றின் வரலாறும், புவியியலும் நிச்சயமாக இருக்கும். அங்கே அந்தத் தேசங்கள் இருக்க மாட்டாது. ஆகையாலேயே நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் எனக் கூறப்படுகின்றது. பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: நான் உங்கள் தந்தையும், நானே ஞானக்கடலும் ஆவேன். இந்த ஞானம் மிகவும் மேன்மையானது என்பதால் நாங்கள் அதன் மூலம் உலக அதிபதிகள் ஆகுகின்றோம். எங்கள் தந்தை பரமன். அவரே உண்மையான தந்தையும், உண்மையான ஆசிரியரும் ஆவார். அவர் எங்களுக்கு உண்மையைக் கூறுகின்றார். அவர் எங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்கள் எல்லையற்றவை. அவர் அனைவருக்கும் சற்கதி அருள்கின்ற, எல்லையற்ற குரு ஆவார். நீங்கள் ஒரேயொருவரைப் பற்றிப் புகழ் பாடும்பொழுது, அப் புகழ் வேறு எவருக்கும் உரியதாக இருக்க முடியாது. அவர் உங்களைத் தனக்குச் சமமாக்கும்பொழுதே, அது இருக்கும். ஆகவே, நீங்களும் தூய்மையாக்குபவர்கள் ஆகுகின்றீர்கள். மக்கள் எழுதுகின்றார்கள்: சத்னாம்! (சத்தியத்தின் பெயரில்). தாய்மார்களாகிய நீங்களே தூய்மையாக்குகின்ற கங்கை ஆவீர்கள். உங்களைச் சிவசக்திகள் என்றோ அல்லது சிவனின் குலத்தைச் சேர்ந்த, பிரம்மாகுமார்கள் பிரம்மாகுமாரிகளான, சிவ குலத்தினர் என்றோ அழைக்கலாம். அனைவருமே சிவனின் குலத்தினரே, ஆயினும், பிரம்மாவினூடாகவே படைப்பு படைக்கப்படுவதால், பிரம்மாகுமாரிகளும் பிரம்மாகுமார்களுமான நீங்கள் சங்கமயுகத்தில் மாத்திரமே இருக்கின்றீர்கள். அவர் உங்களைப் பிரம்மாவினூடாகத் தத்தெடுக்கின்றார். அனைத்துக்கும் முதலில், பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளுமான நீங்கள் இருக்கின்றீர்கள். எவரும் எதிர்த்தால், நீங்கள் அவரிடம் கூறலாம்: இவரே தந்தை பிரவேசிக்கின்ற, பிரஜாபிதா பிரம்மா. தந்தை கூறுகின்றார்: நான் இவரின் பல பிறவிகளில் இறுதிப் பிறவியில் இவரினுள் பிரவேசிக்கின்றேன். அவர்கள் பிரம்மா விஷ்ணுவின் தொப்பூள்க் கொடியிலிருந்து வெளிப்படுவதாகச் சித்தரிக்கின்றார்கள். நல்லது. அவ்வாறாயின் விஷ்ணு எவரது தொப்பூள்க் கொடியிலிருந்து வெளிப்பட்டார்? நீங்கள் இருபக்கத்தையும் குறிக்கின்ற அம்புக்குறியைக் வரைய வேண்டும்: விஷ்ணு பிரம்மாவாகவும், பிரம்மா விஷ்ணுவாகவும் ஆகுகின்றார். அவர் இவரிலிருந்தும், இவர் அவரிலிருந்தும் வெளிப்படுகின்றார்கள். இவருக்கு ஒரு விநாடியே எடுக்கின்றது, அவருக்கு 5000 வருடங்கள் எடுக்கின்றன. இவை அமர்ந்திருந்து, நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துகின்ற அற்புதமான விடயங்கள். தந்தை கூறுகின்றார்: இலக்ஷ்மியும் நாராயணனும் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள், பின்னர் நான்; இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவருக்குள் பிரவேசித்து, இவரை இவ்வாறு ஆக்குகின்றேன். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அமருங்கள், அவரை நாங்கள் ஏன் பிரம்மா என அழைக்கின்றோம் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுகின்றோம். இந்தப் படங்கள் முழு உலகிற்கும் காட்டப்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. எங்களால் இதனை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், இதனைப் புரிந்துகொள்வதற்கான நியதியுடையவர்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்வார்கள். அதனைப் புரிந்துகொள்ளாதவர்களை, எங்கள் குலத்திற்குரியவர்களல்ல என்றே நாங்கள் கூறுகின்றோம். அவர்கள் அங்கே செல்லலாம், எனினும் அவர்கள் பிரஜைகளில் ஒருவராகவே இருப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை, அனைவருமே ஆதரவற்ற ஏழைகள். செல்வம் இல்லாததால், ஏழைகளாக இருப்பவர்களே ஆதரவற்ற ஏழைகள் எனப்படுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பல கருத்துக்களைக் கிரகிக்க வேண்டும். தலைப்புக்களில் சொற்பொழிவுகள் ஆற்றப்பட வேண்டும். இந்தத் தலைப்பு எதிலும் குறைந்ததா? அவர்கள் பிரஜாபிதா பிரம்மாவையும் சரஸ்வதியையும் நான்கு கரங்களுடன் காட்டுகின்றார்கள். ஆகவே, இரு கரங்கள் புத்திரிக்கானவை; அவர்கள் தம்பதியினரல்ல. உண்மையில், விஷ்ணுவே தம்பதியினரைக் குறிக்கின்றார். பிரம்மாவின் புத்திரியே சரஸ்வதியாவார். சங்கரருக்கும் துணைவி இருப்பதில்லை. ஆகையாலேயே அவர்கள் சிவனையும், சங்கரரையும் பற்றிப் பேசுகின்றார்கள். சங்கரர் என்ன செய்கின்றார்? விநாசம் அணுகுண்டுகளினால் இடம்பெறுகின்றது. தந்தையால் எவ்வாறு தனது குழந்தைகளுக்கு மரணத்தை ஏற்படுத்த முடியும்? அது பாவம் ஆகிவிடும். தந்தை உண்மையில், உங்கள் அனைவரையும் எந்த முயற்சியும் இல்லாது அமைதிதாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அனைவரும் தத்தமது கர்மக் கணக்கைத் தீர்த்த பின்னர் வீடு திரும்புகின்றார்கள். ஏனெனில் இது தீர்வுக்கான காலமாகும். தந்தை சேவை செய்வதற்காக வருகின்றார். அவர் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். நீங்களும் முதலில் முக்தியையும், பின்னர் சற்கதியையும் பெறுவீர்கள். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். வேறு எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. சிலருடன்; உங்கள் புத்தி மூலம் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தாலும், அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை என்பதை உங்களால் பார்க்க முடியும்! நன்றாகப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள், வந்து புரிந்துகொள்வார்கள். அவர்களிடம் கூறுங்கள்: ஒவ்வொரு விடயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், அதற்கு நீங்கள் சில காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கே, தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்கான கட்டளையே உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. இது முட்காடு; அனைவருமே ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கின்றார்கள். இது துன்ப உலகம் எனப்படுகின்றது. சத்தியயுகம் சந்தோஷ உலகமாகும். துன்ப உலகம் எவ்வாறு சந்தோஷ உலகமாகுகின்றது என்பதை நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவோம். இலக்ஷ்மியும் நாராயணனும் சந்தோஷ உலகில் இருந்தார்கள். பின்னர் 84 பிறவிகளை எடுக்கும்பொழுது, அவர்கள் துன்ப உலகிற்கு பிரவேசித்தார்கள். இவருக்கு எவ்வாறு பிரம்மா எனப் பெயரிடப்பட்டது? தந்தை கூறுகின்றார்: நான் இவருக்குள் பிரவேசித்து, இவர் எல்லையற்ற துறவறத்தை மேற்கொள்வதற்குத் தூண்டுகின்றேன். தந்தை துறவறத்திற்கான தூண்டுதலை உடனடியாகவே ஏற்படுத்துகின்றார், ஏனெனில், அவர் இவரைச் சேவை செய்யத் தூண்ட வேண்டும்; அவரே அனைத்தையும் தூண்டுகின்றார். அவருக்குப் பின்னர் பலரும் உருவாகினர், அவர்களுக்கும் பெயர்கள் வழங்கப்பட்டன. அம்மக்;கள் பூனைக்குட்டிகளின் உதாரணத்தையும் காட்டுகின்றார்கள். அவை அனைத்தும் கற்பனைக் கதைகள். பூனைக் குட்டிகள் எவ்வாறிருக்க முடியும்? ஒரு பூனையினால் அமர்ந்திருந்து ஞானத்தை செவிமடுக்க முடியாது. பாபா உங்களுக்குச் சேவை செய்வதற்குப் பல வழிகளைக் காட்டுகின்றார். ஒருவருக்கு ஏதேனும் புரியாதிருந்தால், அவரிடம் கூறுங்கள்: நீங்கள் அல்ஃபாவைப் புரிந்துகொள்ளும் வரையில், வேறு எதனையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. இந்த ஒரு விடயத்தின் மீது நம்பிக்கை வைத்து அதனை எழுதுங்கள். இல்லாவிடின் நீங்கள் அதனை மறந்து விடுவீர்கள்! மாயை உங்களை அதனை மறக்கச் செய்வாள். தந்தையின் அறிமுகமே பிரதான விடயமாகும். எங்கள் தந்தையே பரமதந்தையும், வேறு எவருக்குமே தெரியாத, உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை எங்களுக்குக் கூறுகின்ற, பரம ஆசிரியரும் ஆவார். இதனை விளங்கப்படுத்துவதற்குக் காலம் எடுக்கின்றது. அவர்கள் தந்தையைப் புரிந்துகொள்ளும் வரையில், தொடர்ந்தும் கேள்விகளைக் கேட்;பார்கள். அவர்கள் அல்ஃபாவைப் புரிந்துகொள்ளாவிட்டால், அவர்களால் பீற்றாவையும் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள்; அர்த்தமில்லாது சந்தேகம் கொண்டு தொடர்ந்தும் வினவுவார்கள்: சமயநூல்களில் அவ்வாறு உள்ளபொழுது, நீங்கள் ஏன் இவ்வாறு கூறுகின்றீர்கள்? ஆகையால், முதலில் தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கர்மா, நடுநிலைக் கர்மா, பாவக் கர்மாவின் ஆழமான தத்துவத்தை உங்கள் புத்தியில் வைத்திருந்து, எப்பாவச் செயலையும் செய்யாதீர்கள். ஞானத்தையும் யோகத்தையும் கிரகித்து, பின்னர் பிறருக்கு ஞானத்தைக் கொடுங்கள்.

2. உண்மையான தந்தையின் உண்மையான ஞானத்தைக் கொடுப்பதன் மூலம், சாதாரண மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற சேவையைச் செய்யுங்கள். விகாரம் என்ற புதைமண்ணில் இருந்து அனைவரையும் அகற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களில் பரீட்சார்த்தம் செய்து, உங்கள் சக்திநிறைந்த ஸ்திதியால் உங்கள் மனம் மூலம் சேவை செய்வதற்கான நற்சான்றிதழைக் கோருவீர்களாக.

உலகிற்கு ஒளியும் சக்தியும் எனும் ஆசீர்வாதங்களைக் கொடுக்கும்பொருட்டு, உங்களில் நினைவு மூலம் பரீட்சார்த்தம் செய்வதால், அமிர்தவேளையில் சக்திவாய்ந்த சூழலை உருவாக்குங்கள், அப்பொழுது உங்கள் மனம் மூலம் சேவை செய்வதற்கான நற்சான்றிதழை உங்களால் கோர முடியும். இறுதிக் கணங்களில், உங்கள் மனதின் மூலமே பிறரை ஒரு கணப் பார்வையால் அப்பால் எடுத்துச் செல்கின்ற சேவையையும், உங்கள் சொந்த மனோபாவம் மூலம் பிறரின் மனோபாவத்தை மாற்றுகின்ற சேவையையும் செய்ய வேண்டும். உங்கள் மேன்மையான விழிப்புணர்வால் அனைவரையும் சக்திநிறைந்தவர்கள் ஆக்குங்கள். நீங்கள் இவ்விதமாக ஒளியையும் சக்தியையும் கொடுப்பதைப் பயிற்சி செய்யும்பொழுது, சூழல் தடைகளிலிருந்து விடுபட்டதாகும், இந்தக் கோட்டையும் உறுதியானதாகும்.

சுலோகம்:
எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மூலம் ஒரேநேரத்தில் மூன்று வகையான சேவைகளையும் செய்பவரே, ஒரு விவேகியாவார்.