30.11.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் சரீரம், மனம், செல்வம் மூலம், அதாவது, உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களின் மூலம் 21 பிறவிகளுக்குத் தந்தையிடமிருந்து அதன் பிரதிபலனை நீங்கள் பெறும் வகையில் அத்தகைய சேவையைச் செய்யுங்கள். எவ்வாறாயினும், சேவை செய்யும்பொழுது, ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமைகள் எதுவும் இல்லாதிருக்கட்டும்.கேள்வி:
நாடகத்திற்கேற்ப, பாபா உங்களைச் செய்யும்படி தூண்டுகின்ற சேவையில் தீவிரத்தை ஏற்படுத்துவதற்குரிய வழி யாது?பதில்:
உங்கள் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டுமேயன்றி, முரண்பாடு இருக்கக்கூடாது. ஏதாவது முரண்பாடு இருப்பின், நீங்கள் என்ன சேவையைச் செய்வீர்கள்? இதனாலேயே நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் மத்தியில் அனைத்தையும் கலந்துரையாடி, ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். எவ்வாறாயினும், பாபா உங்கள் உதவியாளர், ஆனால் “தைரியத்தைப் பேணும் குழந்தைகளே தந்தையிடமிருந்து உதவியைப் பெறுகிறார்கள்” என்பதன் மிகச்சரியான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்டு, இப்பெரும் பணியில் உதவியாளர்கள் ஆக வேண்டும்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இங்கு ஆன்மீகத் தந்தையிடம் புத்துணர்ச்சி பெறுவதற்காகவே வருகிறீர்கள். புத்துணர்ச்சியடைந்த பின்னர், நீங்கள் திரும்பி வரும்பொழுது, நிச்சயமாக ஏதாவதொன்றைச் செய்து அனைவருக்கும் காட்ட வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் சேவையின் அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, தாங்கள் ஒரு நிலையத்தைத் திறக்க விரும்புவதாகச் சில குழந்தைகள் கூறுகிறார்கள். கிராமங்களிலும் சேவை செய்யப்பட்டுகின்றது. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், சரீரம், மனம், செல்வத்தின் மூலம் உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்குத் தந்தையிடமிருந்து அதன் பிரதிபலனைப் பெறும் வகையில் அத்தகைய சேவை செய்வதைப் பற்றிக் குழந்தைகளான நீங்கள் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு இந்த அக்கறை இருக்க வேண்டும்: நான் ஏதாவது செய்கிறேனா? நான் ஏனையோருக்கு ஏதேனும் ஞானம் அளிக்கிறேனா? உங்களுக்கு நாள் முழுவதும் இவ்வாறான எண்ணங்கள் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு நிலையத்தைத் திறக்கலாம், ஆனால் வீட்டில் கணவன், மனைவிக்கிடையில் எக் கருத்து வேற்றுமையும் இருக்கக்கூடாது; எந்தக் குழப்பங்களும் இருக்கக்கூடாது. வீட்டின் குழப்பங்களிலிருந்து சந்நியாசிகள் ஓடுகிறார்கள்; அவர்கள் எதையும் பராமரிப்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறார்கள். அரசாங்கம் அவர்களைத் தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி செய்கிறதா? ஆண்களே விட்டுச் சென்று விடுகிறார்கள். இந்நாட்களில், யாருமற்ற பெண்களும், விருப்பமின்மையைக் கொண்டவர்களும் தோன்றியுள்ளார்கள்;; அவர்களுக்கும் சந்நியாசிகள் கற்பிக்கின்றார்கள். அவர்கள் (சந்நியாசிகள்) தங்கள் வியாபாரத்தை அவர்களினூடாகச் செய்கின்றார்கள். அவர்களே (சந்நியாசிகள்) பணம் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். உண்மையில், அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு விலகிச் சென்றதும், பணம் எதனையும் தங்களுக்காக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும் என்பது உங்கள் ஒவ்வொருவரின் புத்தியிலும் இருக்க வேண்டும். மனிதர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை; அவர்கள் விவேகமற்றவர்கள். குழந்தைகளான உங்களுக்கான தந்தையின் கட்டளை: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள்;; பண்டிதர்களைப் போல் இருக்காதீர்கள். நீங்களே உங்களுக்கும் நன்மை செய்யுங்கள். நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் சதோபிரதான் ஆகுங்கள். நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். இல்லையேல், நீங்கள் பெருமளவுக்கு மனம் வருந்த நேரிடும். சிலர் கூறுகிறார்கள்: பாபா, நான் உங்களை மீண்டும் மீண்டும் மறந்து விடுகிறேன். எனக்கு வேறு பல எண்ணங்கள் இருக்கின்றன. பாபா கூறுகிறார்: அவை வரும். நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருந்து சதோபிரதான் ஆகவேண்டும். தூய்மையற்றவர்களாகிய ஆத்மாக்கள், பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவுசெய்வதனால், தூய்மையாக வேண்டும். தந்தை குழந்தைகளுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: ஓ கீழ்ப்படிவான குழந்தைகளே, என்னை நினைவுசெய்யுங்கள்;, அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். நீங்கள் அசரீரியான சிவபாபா கூறுகிறார் என்று அவர்களுக்குக் கூறவேண்டிய முதலாவது விடயம்;: என்னை நினைவுசெய்யுங்கள். நானே தூய்மையாக்குபவர். என்னை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்;; வேறு வழிமுறை எதுவும் இல்லை, எவராலும் உங்களுக்கு வேறு ஏதாவது வழிமுறையைக் காட்டவும் முடியாது. பல சந்நியாசிகள் உள்ளார்கள்;; அவர்கள் உங்களை யோகா மாநாடுகளில் (உழகெநசநnஉநள) பங்குபெறுமாறு அழைக்கிறார்கள். அவர்களுடைய ஹத்தயோகத்தின் மூலம் எவரும் நன்மையடைய மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இராஜயோகத்தைப் பற்றி எதனையும் அறிந்திராத பல யோகா ஆச்சிரமங்கள் உள்ளன் அவர்களுக்குத் தந்தையையேனும் தெரியாது. எல்லையற்ற தந்தை வந்து உங்களுக்கு உண்மையான யோகத்தைக் கற்பிக்கிறார். தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தன்னைப் போன்று ஆக்குகிறார். நான் அசரீரியானவர், நான் தற்காலிகமாக இச்சரீரத்தை எடுக்கிறேன். நிச்சயமாக “பாக்கிய இரதம்” என்பது ஒரு மனிதனே; ஓர் எருது அவ்வாறு அழைப்படுவதில்லை. அது ஒரு குதிரையா அல்லது இரதமா என்ற கேள்வியே இல்லை. யுத்தம் என்ற கேள்விக்கும் இடமில்லை. நீங்கள் மாயையுடன் மாத்திரமே யுத்தம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நினைவுகூரப்பட்டுள்ளது: மாயையை வெற்றி கொள்பவர்கள் முழு உலகையும் வெற்றி கொள்கிறார்கள். உங்களால் மிகவும் நன்றாக விளங்கப்படுத்த முடியும், ஆனால் நீங்கள் இன்னமும் கற்கிறீர்கள். கற்கும்பொழுது, சிலர் முழுமையாகவே வீழ்கிறார்கள். பெருமளவு முரண்பாடு உள்ளது. சிலசமயங்களில், இரு சகோதரிகளே ஒற்றுமையாக இருப்பதில்லை; அவர்கள் உவர்நீர் போல் ஆகுகிறார்கள். உங்கள் மத்தியில் எந்த முரண்பாடும் இருக்கக்கூடாது. ஏதாவது முரண்பாடு இருப்பின், தந்தை கூறுவார்: நீங்கள் என்ன சேவையைச் செய்வீர்கள்? இதுவே பல சிறந்த குழந்தைகளின் நிலைமை ஆகும். இப்பொழுது மாலை உருவாக்கப்படுமானால், அது ஒரு குறைபாடுள்ள மாலை எனக் கூறப்படும். இன்னமும் குழந்தைகளில் குறிப்பிட்ட குறைபாடுகள் உள்ளன. நாடகத் திட்டத்திற்;கேற்ப, பாபா உங்களைச் சேவை செய்யத் தூண்டுகிறார்; அவர் தொடர்ந்தும் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். சென்று டெல்லியை முற்றுகையிடுங்கள். ஒருவர் மாத்திரமே இதைச் செய்ய வேண்டும் என்றில்லை. இதைப் பற்றி உங்கள் மத்தியில் கலந்துரையாடுங்கள். நீங்கள் அனைவரும் ஒத்திசைய வேண்டும். பாபா தனியாக உள்ளார், ஆனால் அவர் தனது உதவியாளர்களாகிய தனது குழந்தைகளின்றி, இப்பணியை மேற்கொள்ள மாட்டார். நீங்கள் நிலையங்களைத் திறந்து, மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுகிறீர்கள். பாபா வினவுகிறார்: நீங்கள் உதவியாளர்களா? நீங்கள் பதிலளிக்கிறீர்கள்: ஆம் பாபா. உதவியாளர்கள் இல்லையெனில், எதனையும் அடைய முடியாது. உங்கள் வீட்டிற்;கு நண்பர்களும், உறவினர்களும் வருகிறார்கள். அவர்கள் உங்களை அவதூறு செய்தாலும் அல்லது உங்களைக் கேலி செய்தாலும் நீங்கள் அதைப் பற்றி அக்கறைப்படக்கூடாது. குழந்தைகளாகிய நீங்கள் அமர்ந்திருந்து உங்கள் மத்தியில் கலந்துரையாட வேண்டும். ஒரு நிலையம் திறக்கப்படும்பொழுது, அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்;து பாபாவுக்கு எழுதுகிறார்கள்: பாபா, ஆசிரியரின் அறிவுரை மூலம் நாங்கள் இவை அனைத்தையும் செய்கிறோம். சிந்தி பாஷையில் அவர்கள் கூறுகிறார்கள், “1 ஐயும் 2 ஐயும் ஒன்றாக இடுங்கள், அது 12 ஆகுகிறது”. 12 உம் சேர்ந்திருக்கும் பொழுது, மிகச்சிறந்த ஆலோசனைகள் வெளிப்படும். சில இடங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனை கேட்பதில்லை. இவ்விதமாக ஏதாவது செய்ய முடியுமா? பாபா கூறுவார்: உங்கள் ஒன்றுகூடலில் ஒற்றுமை இல்லாதவரை, எவ்வாறு உங்களால் அத்தகைய பெரிய பணியை மேற்கொள்ள முடியும்? சிறிய கடைகளும், பெரிய கடைகளும் உள்ளன. அவர்கள் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். எவரும் இவ்வாறு கூறுவதில்லை: பாபா, நீங்கள் எங்களுக்கு உதவுங்கள்! அனைத்திற்கும் முதல், நீங்கள் உங்கள் உதவியாளர்களை உருவாக்க வேண்டும். அப்பொழுது பாபா கூறுவார்: குழந்தைகள் தைரியத்தைப் பேணும்பொழுது, தந்தை உதவி செய்கிறார். அனைத்திற்கும் முதலில், உங்கள் சொந்த உதவியாளர்களை உருவாக்குங்கள். பாபா, நாங்கள் இந்தளவைச் செய்கிறோம், மிகுதிக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். நீங்கள் முதலில், பாபாவிடம் உதவி கேட்க வேண்டும் என்றில்லை. முதலில், தைரியத்தைப் பேணுங்கள், பின்னர்… அவர்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அனைத்திற்கும் முதலில், குழந்தைகளாகிய நீங்கள் தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். எந்தக் குழந்தைகள் உதவி செய்கிறார்கள்? என்ன ரூபத்தில் செய்கிறார்கள்? முழு அட்டவணையையும் எழுதுங்கள்: இவர் இன்ன உதவியைக் கொடுக்கிறார். அனைத்து விடயங்களும் எழுத்தில் உத்தியோக பூர்வமாகக் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் இவ்வாறு கூறுவார்கள் என்றில்லை: நான் ஒரு நிலையத்தைத் திறப்பதனால், எனக்கு உதவி செய்யுங்கள்! அவ்வாறாயின், பாபா அவற்றைத் திறக்க மாட்டாரா? எவ்வாறாயினும், அது சாத்தியமில்லை. நிர்வாகக் குழு ஒன்று இணைந்து செயற்பட வேண்டும். உங்கள் மத்தியிலும் வரிசைக்கிரமம் உள்ளது; சிலர் முற்றிலும் எதனையும் புரிந்துகொள்வதில்லை. சிலர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த ஞானத்தில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை பாபா உணர்கின்றார். நீங்கள் இப்பொழுது ஒரேயொருவரில் தந்தையையும், ஆசிரியரையும், குருவையும் கண்டுகொண்டீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும். இவ்விடயங்கள் உலகில் உள்ள எவருக்கும் தெரியாது. சிவபாபா மாத்திரமே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். அனைவரினதும் தந்தை ஒரேயொருவரே. இது வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. அவரே ஞானம்-நிறைந்தவரும், முக்தியளிப்பவரும், வழிகாட்டியும் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். ஒன்றிணைந்து உங்கள் மத்தியில் கலந்துரையாடலை நடாத்துங்கள். நீங்கள் பணத்தைச் செலவிடும்பொழுது, நீங்கள் ஒரு நபருடைய வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்ற முடியாது. அனைவரும் உதவிசெய்ய வேண்டும். உங்களுக்கு அந்தளவு விவேகம் இருப்பது அவசியம். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் இந்தச் செய்தியைக் கொடுக்க வேண்டும். சிலர் வினவுகிறார்கள்: நாங்கள் ஒரு திருமண அழைப்பிதழைப் பெற்றுள்ளோம்; நாங்கள் அங்கு செல்ல வேண்டுமா? பாபா கூறுகிறார்: ஏன் இல்லை? சென்று சேவை செய்யுங்கள். பலருக்கும் நன்மையைக் கொண்டு வாருங்கள். நீங்கள் ஒரு சொற்பொழிவையும் ஆற்ற வேண்டும்: “மரணம் நேர்முன்னிலையில் உள்ளது. தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்”. இங்கு, அனைவரும் பாவாத்மாக்கள்;. அவர்கள் தொடர்ந்தும் தந்தையை அவதூறு செய்கிறார்கள். அவர்கள் உங்களைத் தந்தையிடமிருந்து விலகச் செய்து விடுகிறார்கள். விநாச வேளையில் அன்பற்ற, துண்டித்துக் கொள்ளும் புத்தியை உடையவர்கள் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. யார் இதைக் கூறினார்? தந்தையே கூறுகிறார்: அவர்களின் புத்தியில் எனக்கான அன்பு இல்லை. விநாச வேளையில் அவர்களின் புத்தியில் அன்பு இல்லை. அவர்கள் என்னை முற்றாகவே அறிந்து கொள்வதில்லை. அன்பான புத்தியை உடையவர்களும், என்னை நினைவுசெய்பவர்களும் மாத்திரமே வெற்றியடைவார்கள். அவர்கள் அன்பு கொண்டிருந்தாலும், என்னை நினைவுசெய்யாது விட்டால், ஒரு குறைந்த அந்தஸ்தையே கோருவார்கள். தந்தை குழந்தைகளுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். அனைவருக்கும் செய்தியைக் கொடுப்பதே பிரதான விடயமாகும். தந்தையை நினைவுசெய்வதால், நீங்கள் தூய்மையாகி, தூய உலகின் அதிபதி ஆகுவீர்கள். நாடகத் திட்டத்திற்கேற்ப, பாபா ஒரு பழைய சரீரத்தைக் கடனாகப் பெற வேண்டும். இவருடைய ஓய்வுபெறும் வயதில், இவரில் அவர் பிரவேசிக்கிறார். மக்கள் தங்கள் ஓய்வுபெறும் வயதிலேயே கடவுளைத் தேடுவதற்கான முயற்சியைச் செய்கிறார்கள். பக்திமார்க்கத்தில் அவர்கள் ஓதுவதாலும், தபஸ்யா போன்றவற்றைச் செய்வதாலும் கடவுளைச் சந்திப்பதற்கான பாதையைத் தாங்கள் கண்டுவிடுவார்கள் என நம்புகிறார்கள். தாங்கள் எப்பொழுது அவரைக் கண்டுகொள்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் பிறவிபிறவியாகப் பக்தி செய்து வந்துள்ளார்கள். எவரும் கடவுளைக் கண்டுகொள்ளவில்லை. பழைய உலகம் மீண்டும் புதிதாக்கப்படும்பொழுது, பாபா வருவார் என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. தந்தை மாத்திரமே படைப்பவர். (திரிமூர்த்தியின்) படம் உள்ளது, ஆனால் அவர்கள் திரிமூர்த்தியின் படத்தில் சிவனைக் காட்டுவதில்லை. அவர்கள் சிவபாபா இன்றி, பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் காட்டியுள்ளார்கள்; இது தலை வெட்டப்பட்டுள்ளதைப் போன்றுள்ளது. தந்தை இன்றி, அவர்கள் அனாதைகள் ஆகிவிட்டனர். தந்தை கூறுகிறார்: நான் வந்து உங்களைப் பிரபுவும், அதிபதியுமானவருக்கு உரியவர்கள் ஆக்குகிறேன். நீங்கள் 21 பிறவிகளுக்கு பிரபுவும், அதிபதியுமானவருக்கு உரியவர்கள். உங்களுக்கு எச்சிரமமும் இருப்பதில்லை. நீங்களும் கூறுகிறீர்கள்: தந்தையைச் சந்திக்கும்வரை, நாங்கள் அனாதைகளாகவும், சீரழிந்த புத்தியைக் கொண்டவர்களாகவும் இருந்தோம். அவர்கள் தூய்மையாக்குபவரைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அவர் எப்பொழுது வருவார் என்பது அவர்களுக்குத் தெரியாது. புதிய உலகமே தூய உலகம். தந்தை அனைத்து விடயங்களையும் மிக எளிமையான முறையில் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இப்பொழுது தந்தைக்குரியவர் என்பதால், நிச்சயமாகச் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள். சிவபாபாவே எல்லையற்றதின் அதிபதி. தந்தையே வந்து உங்களுக்கு அமைதியும், சந்தோஷமும் எனும் ஆஸ்தியைக் கொடுத்தார். சத்தியயுகத்தில் சந்தோஷம் இருந்தது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தார்கள். நீங்கள் இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்கிறீர்கள். சிவபாபா ஏன் வந்திருப்பார்;? உலகைப் புதியதாக்கவும், தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கவுமே அவர் நிச்சயமாக வந்திருப்பார்;. அவர் ஒரு மேன்மையான பணியை மேற்கொள்கிறார். மனிதர்கள் காரிருளில் உள்ளார்கள். தந்தை கூறுகிறார்: இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களை விழித்தெழச் செய்கிறார். எவ்வாறு புதிய உலகம் பழையதாகுகின்றது என்ற இந்த முழு நாடகத்தையும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது அனைத்தையும் துறந்து, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள். நாங்கள் எவரையும் வெறுப்பதில்லை. நீங்கள் இதை விளங்கப்படுத்த வேண்டும். நாடகத்திற்கேற்ப, மாயையின் இராச்சியம் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்பொழுது இச்சக்கரம் முடிவுக்கு வருகிறது. நீங்கள் இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள், அவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும். நீங்கள் இனிமேலும் ஐந்து விகாரங்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றக்கூடாது. நீங்கள் அரைக்கல்பமாக மாயையின் வழிகாட்டல்களைப் பின்பற்றித் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். நான் இப்பொழுது உங்களைச் சதோபிரதான் ஆக்குவதற்கு வந்துள்ளேன். இது சதோபிரதானாகவும், தமோபிரதானாகவும் ஆகுவதைப் பற்றிய ஒரு விளையாட்டாகும். இதில் அவதூறு என்ற கேள்விக்கே இடமில்லை. சிலர் வினவுகிறார்கள்: கடவுள் ஏன் வருவதும், போவதும் என்ற இவ் விளையாட்டை உருவாக்கினார்? “ஏன்?” என்னும் கேள்வி எழுவதில்லை. இதுவே நாடகச் சக்கரம், இது மீண்டும் மீண்டும் தொடர்கின்றது. நாடகம் அநாதியானது. சத்தியயுகம் கடந்து விட்டது, இப்பொழுது இது கலியுகமாகும். தந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். தொடர்ந்தும் “பாபா, பாபா” என்று கூறுங்கள், அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் நன்மை அடைவீர்கள். தந்தை கூறுகிறார்: இவ்விடயங்கள் மிக ஆழமானவையும், களிப்பூட்டுபவையும் ஆகும். கூறப்பட்டுள்ளது: பெண்சிங்கத்தின் பாலை வைத்திருப்பதற்கு ஒரு தங்கப் பாத்திரம் தேவைப்படுகிறது. எவ்வாறு உங்கள் புத்தி தங்கம் ஆகும்? ஆத்மாவிலேயே புத்தி உள்ளது. ஆத்மா கூறுகிறார்: இப்பொழுது எனது புத்தி பாபாவிடம் செல்கிறது. நான் பாபாவைப் பெருமளவு நினைவுசெய்கிறேன். எங்கேயாவது அமர்ந்திருக்கும்பொழுது, புத்தி வேறு திசைகளில் செல்கிறது. உங்கள் புத்தி தொடர்ந்தும் உங்கள் வியாபாரம் போன்றவற்றை நினைவுசெய்கிறது. அப்பொழுது உங்கள் புத்தி உங்களைச் செவிமடுக்காமல் இருப்பது போல உள்ளது. இதற்கு முயற்சி தேவை. மரணம் நெருங்கி வருவதால், நீங்கள் தொடர்ந்தும் நினைவில் நிலைத்திருப்பீர்கள். மரணவேளையில், அனைவரும் கூறுகிறார்கள்: கடவுளை நினைவுசெய்யுங்கள்! இப்பொழுது தந்தையே கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள்! இப்பொழுது இது உங்கள் அனைவரினதும் ஓய்வுபெறும் ஸ்திதியாகும். நீங்கள் வீடு திரும்ப வேண்டும், இதனாலேயே நீங்கள் என்னை நினைவுசெய்ய வேண்டும். வேறு எதனையும் செவிமடுக்க வேண்டாம். உங்கள் தலை மீது பல பிறவிகளின் பாவச்சுமைகள் உள்ளன. சிவபாபா கூறுகிறார்: இவ்வேளையில், அனைவரும் அஜாமிலைப் போன்றுள்ளார்கள். நினைவு யாத்திரையே பிரதான விடயம், அதனூடாகவே நீங்கள் தூய்மையாகுவீர்கள். உங்கள் மத்தியில் பெருமளவு அன்பு இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆலோசனை பெறுங்கள். தந்தையே அன்புக்கடல். ஆகவே, உங்கள் மத்தியில், நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமளவு அன்பு கொண்டிருக்க வேண்டும். ஆத்ம உணர்வுடையவராகித் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் சகோதர, சகோதரி என்ற உறவு முறையிலிருந்தும் அப்பாற் செல்ல வேண்டும். சகோதரர்களுடனோ அல்லது சகோதரிகளுடனோ யோகம் கொண்டிருக்க வேண்டாம். ஒரேயொரு தந்தையுடன் மாத்திரமே யோகத்தைக் கொண்டிருங்கள். தந்தை ஆத்மாக்களுக்குக் கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதால், உங்கள் விகாரப் பார்வை முடிவடையும். உங்கள் பௌதீகப் புலன்களினூடாக எந்தப் பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். நிச்சயமாக உங்கள் மனதில் புயல்கள் வரும். இலக்கு மிகவும் உயர்வானது. பாபா கூறுகிறார்: உங்கள் பௌதீகப் புலன்கள் உங்களை ஏமாற்றுவதைக் காணும்பொழுது, மிக எச்சரிக்கையாக இருங்கள்;. நீங்கள் எதனையாவது பிழையாகச் செய்தால், அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. கூறப்பட்டுள்ளது: மேலேறுபவர்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறார்கள். உங்கள் முயற்சி இன்றி எதுவும் நிகழாது. பெருமளவு முயற்சி தேவைப்படுகிறது. உங்கள் சரீரம் உட்பட, சரீர உறவினர்கள் அனைவரையும் துண்டித்து விடுங்கள். சிலருக்குப் பந்தனம் எதுவும் இல்லை, இருப்பினும், அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்;; அவர்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. உங்களிடம் 100,000 முதல் 200,000 வரையான ரூபாய்கள் இருக்கலாம், நீங்கள் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம், இருப்பினும், பாபா கூறுகிறார்: உங்கள் வியாபாரத்தில் அதிகளவு சிக்கிக்கொள்ளாதீர்கள். ஓய்வு ஸ்திதியில் இருப்பவராக ஆகுங்கள். உங்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏழை மக்கள் அத்தகைய எளிமையான முறையில் வாழ்கிறார்கள். இப்பொழுது வெளிப்பட்டுள்ள கண்டுபிடிப்புக்களைப் பாருங்கள். கேட்கவே வேண்டாம்! செல்வந்தர்களுக்குச் செலவுகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. இல்லையேல், உங்கள் வயிற்றுக்கு என்ன தேவை? கால் இறாத்தல் மா மாத்திரமே, அவ்வளவுதான். அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருவரோடொருவர் மிக அன்பாக இருங்கள், ஆனால் சகோதர, சகோதரிகளுடன் யோகம் செய்யாதீர்கள். பௌதீகப் புலன்களினூடாக, எப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்.
2. கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சதோபிரதான் ஆகுங்கள். மாயையின் வழிகாட்டல்களைத் துறவுங்கள். உங்கள் மத்தியிலான ஒன்றுகூடலை மிகவும் உறுதியானதாக்கி, ஒருவருக்கொருவர் உதவியாளர் ஆகுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் பெரும் பாக்கியசாலியாக இருந்து, அமிர்தவேளையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதால், திறந்த பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்து உங்கள் புத்தியை நிரப்புவீர்களாக.ஆசீர்வாதங்களை அருள்பவராலும், பாக்கியத்தை அருள்பவராலும் வரையப்படுகின்ற, நீங்கள் விரும்பும் எந்தப் பாக்கிய இரேகையையும் அமிர்தவேளையில் உங்களால் பெற முடியும், ஏனெனில் அந்நேரத்தில், கள்ளங்கபடமற்ற பிரபுவின் ரூபத்தில் அவர் அன்பால் நிறைந்திருக்கின்றார், எனவே ஓர் அதிபதியாகி, உங்கள் உரிமையைக் கோருங்கள். இந்தப் பொக்கிஷத்திற்கு எந்தப் பூட்டோ அல்லது திறவுகோலோ கிடையாது. அந்நேரத்தில் மாயையின் சாக்குப்போக்குகளை உருவாக்குவதைக் கை விட்டு, ஒரேயொரு எண்ணத்தை மாத்திரமே கொண்டிருங்கள்: நான் யாராக இருப்பினும், எவ்வாறு இருப்பினும், நான் உங்களுடையவன். தந்தையிடம் உங்கள் மனத்தையும், புத்தியையும் அர்ப்பணித்து, இதய சிம்மாசனத்தில் அமர்;ந்திருங்கள். நீங்கள் தந்தையின் பொக்கிஷங்கள் அனைத்தையும் உங்களுடையவையாக அனுபவம் செய்வீர்கள்.
சுலோகம்:
சேவையில் சுயநலம் ஏதேனும் கலந்திருப்பின், வெற்றியும் கலப்படமானதாகி விடும், எனவே தன்னலமற்ற சேவையாளர் ஆகுங்கள்.