16.10.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சங்கமயுகத்தில் சேவை செய்வதன் மூலம் நீங்கள் புகழத்தகுதி வாய்ந்தவர்;கள் ஆகவேண்டும். அப்பொழுது நீங்கள் அதிமேன்மையான மனிதர்;கள் ஆகுவதுடன், எதிர்;காலத்தில் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆகுவீர்கள்.கேள்வி:
எந்த நோயை வேரோடு அழிப்பதனால், உங்களால் தந்தையின் இதயத்தில் அமர முடியும்?பதில்:
1) சரீர உணர்வு என்ற நோயையாகும். இந்தச் சரீர உணர்;வு காரணமாகவே, சகல விகாரங்களும் உங்களைப் பெரும் நோயாளிகள் ஆக்கிவிட்டன. இந்தச் சரீர உணர்;வு முடிவடையும் பொழுது மாத்திரமே, நீங்கள் தந்தையின் இதயத்தில் அமர முடியும். 2) இதயத்தில் அமர்வதற்கு, உங்கள் புத்தியை பரந்ததாகவும் எல்லையற்றதாகவும் ஆக்கி, ஞானச் சிதையில் அமருங்கள். ஆன்மீகச் சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஞானத்தைப் பேசுவதுடன், தந்தையையும் மிக நன்றாக நினைவு செய்யுங்கள்.பாடல்:
விழித்தெழுங்கள்! ஓ மணவாட்டிகளே விழித்தெழுங்கள்! உங்கள் சந்தோஷ நாட்கள் வரவுள்ளன.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். ஆன்மீகத் தந்தை இதனை, இச்சாதாரண, பழைய சரீரத்தின் வாய் மூலமாகக் கூறினார்;. தந்தை கூறுகின்றார்;: நான் இந்தப் பழைய சரீரத்தினுள்ளும், இந்தப் பழைய இராச்சியத்தினுள்ளும் வரவேண்டியுள்ளது. இப்பொழுது இது இராவண இராச்சியமாகும். இச்சரீரம் வேறொருவருக்குரியது, ஏனெனில் நான் இதனுள் பிரவேசித்த பொழுது, ஏற்கனவே அதற்குள் ஓர் ஆத்மா இருந்தார். நான் ஓர் அந்நிய சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். எனக்குச்; சொந்தமானதொரு சரீரம் என்னிடம் இருந்திருந்தால், அதற்கெனச் சொந்தப் பெயரும் இருக்கும். எனது பெயர் என்றுமே மாறுவதில்லை. இன்னமும் நீங்கள் என்னை சிவபாபா என்றே அழைக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடல்களைத் தினமும் கேட்கின்றீர்கள். புதிய யுகம் அதாவது, சத்தியயுகமாகிய புதிய உலகம் வரவுள்ளது. விழித்தெழுங்கள் என யாருக்குக் கூறப்பட்டது? ஆத்மாக்களுக்கு, ஏனெனில் ஆத்மாக்கள் காரிருளில் உறங்குகின்றார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது; அவர்களுக்குத் தந்தையையேனும் தெரியாது. இப்பொழுது தந்தை உங்களை விழித்தெழச் செய்வதற்காக வந்துள்ளார். இப்பொழுது உங்களுக்கு எல்லையற்ற தந்தையைத் தெரியும். அவரிடமிருந்து எல்லையற்ற சந்தோஷத்தைப் புதிய யுகத்தில் பெறப் போகின்றீர்கள். சத்திய யுகமானது புதிய யுகம் என அழைக்கப்படுகின்றது; கலியுகம் பழைய யுகம் என அழைக்கப்படுகின்றது. கல்விமான்;களுக்கும், பண்டிதர்களுக்கும் எதுவுமே தெரியாது. நீங்கள் அவர்களில் எவரிடமாவது எவ்வாறு புதிய யுகம், பழையதாகுகின்றது என வினவினால், அவர்களில் எவராலும் உங்களுக்குப் பதில் கூற முடியாது. அவர்கள் அது நூறாயிரக் கணக்கான வருடங்களின் விடயமாகும் எனக் கூறுகின்றார்கள். எவ்வாறு நீங்கள் புதிய யுகத்திலிருந்து பழைய யுகத்திற்குள் வந்தீர்கள், அதாவது, எவ்வாறு நீங்கள் சுவர்க்கவாசிகளிலிருந்து நரகவாசிகளாக ஆகினீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. தாங்கள் வழிபடுகின்றவர்களின் சுயசரிதை கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஜெகதாம்பாளை வழிபடுகின்றார்கள், ஆனால் அம்பாள் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. உண்மையில் தாய்மார்களே அம்பாள் என அழைக்கப்படுகின்றார்கள், ஆனால், ஒருவர் மாத்திரமே வழிபடக்கூடியவர். சிவபாபாவின் கலப்படமற்ற ஞாபகார்த்தம் ஒன்றேயொன்றே உள்ளது. ஓர் அம்பாள் மாத்திரமே உள்ளார். எனினும், அவர்களுக்கு ஜெகதாம்பாள் யார் என்பது தெரியாது. இவர் ஜெகதாம்பாளும் (உலகத் தாய்), இலக்ஷ்மி உலகச் சக்கரவர்த்தினியும் ஆவார். உலகத் தாய் யார் என்றும், உலகச் சக்கரவர்த்தினி யார்; என்றும் உங்களுக்குத் தெரியும். இவ்விடயங்களை வேறு எவராலும், புரிந்துகொள்ள முடியாது. இலக்ஷ்மி, ஒரு தேவி என அழைக்கப்படுகின்றார், ஆனால் ஜெகதாம்பாள் ஒரு பிராமணர் என அழைக்கப்படுகின்றார். சங்கமயுகத்தில் மாத்திரமே பிராமணர்கள் உள்ளார்கள். இந்தச் சங்கமயுகத்தை எவருக்கும் தெரியாது. பிரஜாபிதா பிரம்மா மூலமாக புதிய, அதிமேன்மையான உலகம் உருவாக்கப்படுகின்றது. அதிமேன்மையான மனிதர்களை அங்கேயே (சத்திய யுகத்தில்) உங்களால் பார்க்க முடியும். இந்நேரத்தில் பிராமணர்களாகிய நீங்கள் புகழத் தகுதி வாய்ந்தவர்கள். நீங்கள் இப்பொழுது சேவையாளர்கள், பின்னர் நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக ஆகுவீர்கள். பிரம்மா பல கரங்களுடன் காட்டப்பட்டுள்ளார். எனவே அம்பாள் ஏன் அத்தனை கரங்களுடன் காட்டப்படவில்லை? அனைவரும் அவரதும் குழந்தைகளே. பிரஜாபிதாவும் தாயும், தந்தையுமாக ஆகுகின்றார். குழந்தைகளைப் பிரஜாபிதா என அழைப்பதில்லை. சத்தியயுகத்தில், இலக்ஷ்மியும், நாராயணனும் உலகத் தாய், உலகத் தந்தை என ஒருபொழுதும் அழைக்கப்படுவதில்லை. ‘பிரஜாபிதா’ என்னும் பெயர் மிகவும் பிரபல்யமானது, ஒருவர் மாத்திரமே உலகத் தாயும், தந்தையும் ஆவார். ஏனைய அனைவரும் அவருடைய குழந்தைகள். நீங்கள் அஜ்மீரில் உள்ள பிரஜாபிதா பிரம்மா ஆலயத்திற்குச் செல்லும் பொழுது, அவரை பாபா எனறு குறிப்பிட முடியும், ஏனெனில் அவரே மனித குலத்தின் தந்தை ஆவார். பௌதீகத் தந்தையர்கள் குழந்தைகளை உருவாக்குகின்றார்கள். ஆகவே அவர்கள் எல்லைக்குட்பட்ட, மனித குலத்தின் தந்தையர்கள். இவர் எல்லையற்றவர். சிவபாபா ஆத்மாக்கள் அனைவரதும் எல்லையற்ற தந்தையாவார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த வேறுபாட்டைப் பற்றி எழுத வேண்டும். ஜெகதாம்பாவும், சரஸ்வதியும் ஒருவரே ஆவார். இருந்தும் துர்க்கா, காளி போன்ற பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அனைவரும் அம்பாளினதும், பாபாவினதும் குழந்தைகள் ஆவீர்கள். இது படைப்பாகும். சரஸ்வதி பிரஜாபிதா பிரம்மாவின் புத்திரி ஆவார், அவர் அம்பாள் எனவும் அழைக்கப்படுகின்றார். ஏனைய அனைவரும் புத்திரர்களும், புத்திரிகளும் ஆவார்கள், அவர்கள் அனைவரும் தத்தெடுக்கப்படுகின்றார்கள். வேறு எவ்வாறு அங்கு பல குழந்தைகள் இருக்க முடியும்? அவர்கள் அனைவரும் வாய்வழித்தோன்றல்கள். ஒரு மனைவி வாய் மூலம் படைக்கப்படுகின்றார். எனவே கணவன் படைப்பவர் ஆகுகின்றார். அவர் கூறுகின்றார்;: “இவர் என்னுடையவர்; நான் அவரோடு சேர்ந்து குழந்தைகளைப் படைத்துள்ளேன்”. இவை அனைத்தும் தத்தெடுத்தல் ஆகும். இது வாய் மூலமான ஆன்மீகப் படைப்பாகும். எவ்வாறாயினும் ஆத்மாக்கள் உள்ளார்;கள்; அவர்கள் தத்தெடுக்கப்படுவதில்லை (யனழிவநன). தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் எப்பொழுதும் எனது குழந்தைகள். நான் வந்து குழந்தைகளாகிய உங்களை பிரஜாபிதா பிரம்மா மூலமாகத் தத்தெடுக்கின்றேன் (யனழிவ). அவர் ஆத்மாக்களைத் தத்தெடுப்பதில்லை. அவர் புத்திரர்களையும், புத்திரிகளையும் தத்தெடுக்கின்றார். இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய, மிகவும் சூட்சுமமான விடயங்கள். இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதனால், நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகின்றீர்கள். அவர்கள் எவ்வாறு அப்படி ஆகினார்கள் என்பதை எங்களால் விளங்கப்படுத்த முடியும். அவர்கள் உலக அதிபதிகள் ஆகும்வகையில், எச் செயல்களைச் செய்தார்கள்? கண்காட்சிகளில் நீங்கள் வினவ முடியும்: அவர்கள் தங்கள் சுவர்க்க இராச்சியத்தை எவ்வாறு அடைந்தார்கள் என உங்களுக்குத் தெரியுமா? உங்கள் ஒவ்வொருவராலும் மிகச்சரியாக விளங்கப்படுத்த முடியும் என்றில்லை. தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாலும், ஆன்மீகச் சேவையில் ஈடுபட்டிருப்பவர்களாலுமே விளங்கப்படுத்த முடியும். ஏனைய அனைவரும் மாயையின் நோயில் சிக்குண்டுள்ளார்கள். பலவகையான நோய்கள் உள்ளன. சரீர உணர்வு எனும் நோயும் உள்ளது. விகாரங்களே உங்களை நோயாளி ஆக்குகின்றன. தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தூய தேவர்களாக ஆக்குகின்றேன். நீங்கள் முன்னர் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்து, முற்றிலும் தூய்மையானவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் முற்றிலுமாக தூய்மையற்றவர்களாக ஆகிவிட்டீர்கள். இதனை எல்லையற்ற தந்தையே கூறுகின்றார். இது அவதூறுக்குரிய விடயமல்ல, ஆனால் ஒரு விளக்கமாகும். எல்லையற்ற தந்தை பாரத மக்களுக்குக் கூறுகின்றார்: நான் இங்கு பாரதத்தினுள் வருகின்றேன். பாரதத்தின் புகழ் எல்லையற்றது. அவர் இங்கு வந்து நரகத்தைச் சுவர்க்கமாக்குவதுடன், ஏனைய அனைவருக்கும் அமைதியை வழங்குகின்றார். ஆகவே அத்தகையதொரு தந்தையின் புகழ் முடிவற்றது; அதற்கு முடிவே இல்லை. எவருக்குமே ஜெகதாம்பாளையோ அவரது புகழையோ தெரியாது. ஜெகதாம்பாளின் சுயசரிதைக்கும் இலக்ஷ்மியினது சுயசரிதைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நீங்கள் காட்ட முடியும். ஜெகதாம்பாள், இலக்ஷ்மி ஆகுகின்றார். பின்னர் 84 பிறவிகள் எடுத்து, இலக்ஷ்மி அதே ஜெகதாம்பாள் ஆகுகின்றார். நீங்கள் வெவ்வேறு வகையான படங்களை வைத்திருக்க வேண்டும். அவர்கள் இலக்ஷ்மியை ஒரு கலசத்துடன் சித்தரிக்கின்றார்கள். ஆனால் எவ்வாறு இலக்ஷ்மி சங்கம யுகத்தில் இருக்க முடியும்? அவர் சத்தியயுகத்தில் மாத்திரமே இருக்கின்றார். தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். படங்களை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டவர்களும் ஞானக்கடலைக் கடைய வேண்டும். அப்பொழுது அதனை விளங்கப்படுத்துவது இலகுவாகும். நீங்கள் பரந்த, எல்லையற்ற புத்தியைக் கொண்டிருக்கும் பொழுது மாத்திரமே நீங்கள் தந்தையின் இதயத்தில் அமர முடியும். உங்களால் தந்தையை மிக நன்றாக நினைவு செய்து, ஞானச்சிதையில் அமரும் பொழுதே, உங்களால் தந்தையின் இதயத்தில் அமர முடியும். ஞானத்தை மிகவும் நன்றாகப் பேசுவர்களால் தந்தையின் இதயத்தில் அமர முடியும் என்றில்லை; இல்லை. தந்தை கூறுகின்றார்: இறுதியில் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, உங்கள் சரீர உணர்வு முடிவடையும் பொழுது, உங்களால் வரிசைக்கிரமமாக இதயத்தில் அமர முடியும். பிரம்ம தத்துவத்தின் ஞானமுள்ளவர்கள் அதனுள் இரண்டறக் கலப்பதற்குப் பெருமளவு முயற்சி செய்கின்றார்கள், ஆனால் அதனுள் எவராலும் அவ்வாறு இரண்டறக் கலக்க முடியாது. அவர்கள் முயற்சி செய்து உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைகிறார்கள். அவர்கள் பிளாற்றினத்திற்குச் சமமாக நிறுக்கப்படும் வகையில், அத்தகைய மகாத்மாக்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் எவ்வாறாயினும், அவர்கள் பிரம்ம தத்துவத்திற்குள் இரண்டறக் கலப்பதற்கு முயற்சி செய்கின்றார்கள். அதனால், அவர்கள் தங்கள் முயற்சிகளின் பலனைப் பெறுகின்றார்கள். எனினும், அவர்களால் முக்தியையோ அல்லது ஜீவன்முக்தியையோ பெற முடியாது. இப்பழைய உலகம் முடிவடையப் போகின்றது எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அந்தக் குண்டுகள் அனைத்தும் சேமித்து வைப்பதற்காக உருவாக்கப்படவில்லை. அக்குண்டுகள் பழைய உலகின் விநாசத்திற்காகப் பயன்படுத்தப்படும் என உங்களுக்குத் தெரியும். பலவகையான குண்டுகள் உள்ளன. தந்தை இப்பொழுது உங்களுக்கு ஞானத்தையும், யோகத்தையும் கற்பிக்கிறார். பின்னர் நீங்கள் இரட்டைக்; கிரீடமணிந்த தேவர்களான இளவரசர், இளவரசிகளாக ஆகுவீர்கள். எந்த அந்தஸ்து உயர்ந்தது? பிராமணரின் உச்சிக்குடுமி மேலே உள்ளது. உச்சிக்குடுமியே அனைத்திலும் உயர்ந்தது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களைத்; தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாக்கவே வந்துள்ளார். நீங்கள் தூய்மையாக்குபவர்கள் ஆகுவதுடன், அனைவரையும் தூய்மையாக்கி, அவர்களை இளவரசர், இளவரசிகளாக ஆக்குகின்றீர்கள் என்ற போதையைக் கொண்டிருக்கின்றீர்களா? இந்தப் போதையை நீங்கள் கொண்டிருந்தால், உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் ஏற்படும். நீங்கள் எத்தனை பேரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கியுள்ளீர்கள் என உங்கள் இதயத்தையே வினவுங்கள். பிரஜாபிதா பிரம்மாவும் ஜெகதாம்பாளும் சமமானவர்கள். அவர்கள் பிராமணர்களின் படைப்பைப் படைக்கின்றார்கள். தந்தை மாத்திரமே உங்களுக்குச் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாறுவதற்கான வழியைக் காட்டுகின்றார். இது எந்தச் சமயநூலிலும் குறிப்பிடப்படவில்லை. இது கீதையின் யுகமாகும். உண்மையில் மகாபாரத யுத்தம் நிகழ்ந்தது. ஒருவருக்கு மாத்திரம் இராஜயோகம் கற்பிக்கப்படுமா? இதனாலேயே மக்கள் தங்கள் புத்தியில் அர்ச்சுனனையும், கிருஷ்ணரையும் கொண்டுள்ளார்கள். உங்களில் பலர் இங்கு கற்கின்றீர்கள் நீங்கள் எவ்வளவு சாதாரணமாக இங்கமர்ந்திருக்கின்றீர்கள் எனப் பாருங்கள். சிறு குழந்தைகள் அல்பாவையும் பீற்றாவையும் கற்கின்றார்கள். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள், உங்களுக்கும் அல்பாவும் பீற்றாவும் கற்பிக்கப்படுகின்றது. அல்பா என்றால் பாபா, பீற்றா என்றால் உங்கள் ஆஸ்தியாகும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். அசுரச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். உங்களுக்குள்ளே ஏதாவது குறைபாடுகள் இல்லையென்பதைச் சோதியுங்கள். “நான் நற்பண்புகள் அற்றவன், என்னிடம் நற்பண்புகள் இல்லை”. நிர்குண் ஆச்சிரமம் எனும் ஓர் ஆச்சிரமம் உள்ளது. ஆனால் அவர்களுக்கு அப்பெயரின் அர்த்தம் தெரியாது. “நிர்குண்” என்றால் “என்னிடம் நற்பண்புகள் இல்லை” என்பதாகும். உங்களை நற்பண்புடையவராக்குவது தந்தையின் பணியாகும். அவர்கள் தந்தையின் தலைப்புக்கள் என்ற கௌரவத்தைத் தாங்கள் எடுத்துக் கொண்டார்கள். தந்தை பல விடயங்களை விளங்கப்படுத்துவதுடன், உங்களுக்கு வழிகாட்டல்களையும் கொடுக்கின்றார். ஜெகதாம்பாளுக்கும், இலக்ஷ்மிக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைக் காட்டுங்கள். பிரம்மாவும், சரஸ்வதியும் சங்கமயுகத்திற்கு உரியவர்கள், ஆனால் இலக்ஷ்மியும் நாராயணனும் சத்தியயுகத்திற்கு உரியவர்கள். இப்படங்கள் விளங்கப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும். சரஸ்வதி பிரம்மாவின் புத்திரியாவார். சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாறுவதற்கே நீங்கள் கற்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் பிராமணர்கள். சத்தியயுகத்துத் தேவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களை மனிதர்கள் என அழைப்பது ஓர் அவமதிப்பாக இருந்ததால், அவர்கள் தேவர்கள் அல்லது இறைவர், இறைவியர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அரசர்;களும் அரசிகளும் இறைவர், இறைவியர்கள் என அழைக்கப்பட்டால், அவர்களுடைய பிரஜைகளும் அவ்வாறே அழைக்கப்படுவார்கள். இதனாலேயே, அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகின்றார்;கள். திரிமூர்த்தியின் படமும் உள்ளது. சத்தியயுகத்தில் சொற்ப மனிதர்களே உள்ளனர், ஆனால் கலியுகத்தில் அதிகளவு மனிதர்கள் உள்ளனர். எவ்வாறு இதனை விளங்கப்படுத்த முடியும்? இதற்குச் சக்கரத்தின் படம் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. கண்காட்சிகளுக்கு வருமாறு பலரை நீங்கள் வரவழைக்கின்றீர்கள். எனினும், சுங்க அதிகாரியை எவருமே வரவழைக்கவில்லை. நீங்கள் இந்த முறையில் கடைய வேண்டும். இதற்கு எல்லையற்ற புத்தி தேவை. நீங்கள் தந்தைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் குசைனின் குதிரையை அதிகளவில் அலங்கரிக்கின்றார்கள். குதிரை பெரியதாக இருந்தாலும், குதிரையின் தலையில் உள்ள தலைப்பட்டி மிகவும் சிறியது. ஓர் ஆத்மா சின்னஞ்;சிறிய புள்ளி, இருப்பினும், அவரின்; அலங்காரம் மிகப்பெரியது. இதுவே அமரத்துவ ரூபத்தின் சிம்மாசனமாகும். அவர்கள் கீதையில் இருந்து சர்வவியாபி என்னும் கருத்தையும் எடுத்துள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். ஆகவே நான் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? தந்தையும், ஆசிரியரும், குருவுமானவர் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் தந்தையும், ஞானக்கடலும் ஆவேன். நீங்கள் இந்த எல்லையற்ற வரலாற்றையும் புவியியலையும் புரிந்துகொள்ளும் பொழுது, எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். மாயை உங்களை மூக்கில் பிடித்துக் கொள்கின்றாள். எவராவது ஒருவரின் செயற்பாடு தீயதாகும் பொழுது, அவர் பாபாவுக்குத் தான் அத்தகைய பிழையைச் செய்துவிட்டதாகக் கூறி எழுதுகின்றார். அவர் கூறுகின்றார்: நான் எனது முகத்தை அழுக்காக்கிக் கொண்டேன். இங்கு உங்களுக்குத் தூய்மை கற்பிக்கப்படுகின்றது. எனவே, எவரேனும் வீழ்ந்தால் அதற்குத் தந்தையால் என்ன செய்ய முடியும்? வீட்டில் ஒரு குழந்தை தீய செயல்களைச் செய்து தனது முகத்தை அழுக்காக்கினால் அவருடைய தந்தை “நீங்கள் மரணித்திருந்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறுவார். எல்லையற்ற தந்தை இது நாடகத்தில் உள்ளது என அறிந்தாலும் அவரும் இதனையே கூறுவார், இல்லையா? ஏனையோருக்கு இந்தக் கற்பித்தலைக் கொடுத்ததன் பின்னர் நீங்கள் வீழ்ந்தால், ஆயிரம் மடங்கு தண்டனையைச் சேகரித்துக் கொள்வீர்கள். சிலர் கூறுகின்றார்கள்: மாயை என்னை அறைந்து விட்டாள். நீங்கள் முழுமையாக உங்கள் விவேகம் அனைத்தையும் இழக்கும் வகையில் மாயை உங்களைக் குத்துகின்றாள். தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: அந்தக் கண்கள் உங்களைப் பெருமளவில் ஏமாற்றுகின்றன. எவ்விதமான பாவச்செயல்களையும் செய்யாதீர்கள். நீங்கள் யுத்தகளத்தில் இருப்பதனால் பல புயல்கள் வரும். என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. மாயை விரைவாக உங்களை அறைந்து விடுகின்றாள். இப்பொழுது நீங்கள் மிகவும் விவேகிகள் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களே விவேகிகள் ஆகுகின்றார்கள்; ஆத்மாக்களே விவேகமற்றவர்களாக இருந்தார்கள். தந்தை இப்பொழுது எங்களை விவேகிகள் ஆக்குகின்றார். பலர் இன்னும் சரீர உணர்வில் உள்ளனர். அவர்கள் தாங்கள் ஆத்மாக்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. ஆத்மாக்களாகிய எங்களுக்குத் தந்தை கற்பிக்கின்றார். ஆத்மாவாகிய நான், இந்தச் செவிகளினால் செவிமடுக்கின்றேன். தந்தை கூறுகின்றார்: விகாரமானவற்றைச் செவிமடுக்க உங்கள் செவிகளை அனுமதிக்காதீர்கள். தந்தை உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். இது மிக உயர்ந்ததோர் இலக்காகும். மரணம் நெருங்கும்பொழுது, உங்களுக்குப் பயம் இருக்கும். ஒருவர் மரணிக்கும் தறுவாயில் இருக்கும்பொழுது, அவருடைய நண்பர்களாலும், உறவினர்களாலும் அந்நபருக்கு “கடவுளை நினைவுசெய்யுங்கள்!”; அல்லது “உங்கள் குருவை நினைவுசெய்யுங்கள்!” எனக் கூறப்படுகின்றது. அவர்கள் உங்களுக்குச் சரீரதாரிகளை நினைவுசெய்வதற்குக் கற்பிக்கின்றார்;கள். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். இது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை உங்களுக்குச் சதா அவரை மாத்திரம் நினைவு செய்யுமாறு கட்டளையிடுகின்றார். சரீரதாரிகளை நினைவுசெய்யாதீர்கள். தாயும் தந்தையும் சரீரதாரிகள், இல்லையா? எனக்குச் சரீரமே கிடையாது. நான் சரீரமற்றவர். நான் இவரில் அமர்ந்திருந்து உங்களுக்கு ஞானத்தை அளிக்கின்றேன். இப்பொழுது நீங்கள் ஞானத்தையும், யோகத்தையும் கற்கின்றீர்கள். நீங்கள் இந்த ஞானத்தை ஞானக்கடலான தந்தையிடமிருந்து இளவரசர், இளவரசிகள் ஆகுவதற்காகக் கற்பதாகக் கூறுகின்றீர்கள். ஞானக்கடல் உங்களுக்கு ஞானத்தைக் கற்பிப்பதுடன், உங்களுக்கு இராஜயோகத்தையும் கற்பிக்கின்றார். அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. விவேகிகள் ஆகுவதுடன் மாயையின் புயல்களினால் ஒருபொழுதும் தோற்கடிக்கப்படாதீர்கள். உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றுவதால், உங்களில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் செவிகளை விகாரமற்ற எதனையும் செவிமடுக்க அனுமதிக்காதீர்கள்.
2. உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: நான் எனக்குச் சமமானவர்களாக எத்தனை பேரை ஆக்கியுள்ளேன்? நான் மாஸ்டர் தூய்மையாக்குபவராக ஆகியுள்ளேனா? அத்துடன் ஏனையோரைத் தூய்மையாக்கும் (அவர்களை இளவரசர், இளவரசி ஆக்கும்) சேவையை நான் செய்கின்றேனா? என்னிடம் ஏதாவது குறைகள் உள்ளனவா? நான் எந்த அளவிற்குத் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துள்ளேன்?ஆசீர்வாதம்:
கருணை நிறைந்த தந்தையின் கருணை நிறைந்த குழந்தைகள் ஆகி, அனைவருக்கும் அவர்களுக்கு அவர்களுடைய இலக்கைக் காட்டுவீர்களாக.கருணை நிறைந்த தந்தையின் கருணைநிறைந்த குழந்தைகள் எவராவது பிச்சைக்காரர்களைப் போல் செயற்பட்டால் அவர்களின் மீது கருணை கொள்கிறார்கள். அவருக்கு நன்மை செய்ய வேண்டும், அவர் தனது இலக்கை அடைய வேண்டும் என உணர்கிறார்கள். அத்தகைய ஆத்மாக்களின் தொடர்பில் எவரேனும் வரும்போது அவர்களுக்கு நிச்சயமாக நீங்கள் தந்தையின் அறிமுகத்தை கொடுப்பீர்கள். உங்கள் வீட்டிற்கு எவராவது வந்தால், முதலில் நீங்கள் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உபசரிப்பீர்கள். அவர் எதையுமே ஏற்காது புறப்பட்டால், அது தீயது என்று கருதப்படுகின்றது. அவ்வாறே, உங்கள் தொடர் எவர் வந்தாலும், நீங்கள் நிச்சயமாக தந்தையின் அறிமுகம் என்ற தண்ணீரை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதாவது, அருள்பவரின் குழந்தைகளாக, அருள்பவர்கள் ஆகி, அவர்களுக்கு நிச்சயமாக எதனையாவது கொடுங்கள். அப்பொழுது அவர்களால் தமது இலக்கை அடைய முடியும்.
சுலோகம்:
“ஆர்வமின்மையின் மிகச்சரியான மனோபாவம்” என்பதன் இலகுவான அர்த்தம், நீங்கள் எந்தளவிற்கு பற்றற்றவராக இருக்கிறீர்களோ அந்தளவிற்கு அன்பாக இருப்பதாகும்.