24.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே இப்பொழுது சுவாலையில் அர்ப்பணிக்கின்ற உண்மையான விட்டில் பூச்சிகள் ஆவீர்கள். இந்த அர்ப்பணத்தின் ஞாபகார்த்தமே தீபாவளி ஆகும்.

கேள்வி:
பாபா தனது குழந்தைகளுக்கு என்ன செய்தியைக் கூறுகிறார்?

பதில்:
ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு நிர்வாண தாமத்திலிருந்து கீழே வருகிறீர்கள் என்றும் தான் எவ்வாறு வருகின்றார் என்றும் பாபா உங்களுக்குக் கூறுகின்றார். அவர் கூறுகிறார்: நான் யார், நான் என்ன செய்கிறேன், நான் இராம இராச்சியத்தை எவ்வாறு ஸ்தாபிக்கிறேன், அத்துடன் நான் எவ்வாறு இராவணனை வெற்றி கொள்வதற்குக் குழந்தைகளாகிய உங்களைத் தூண்டுகிறேன் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இவ் அனைத்து விடயங்களையும் புரிந்து கொள்கிறீர்கள், உங்களது ஒளி ஏற்றப்பட்டுள்ளது.

பாடல்:
நீங்களே தாயும் தந்தையும்…

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் புலனங்கங்களினூடாகப் பாடலைச் செவிமடுத்தீர்கள். இப்பாடல் சரியாகவே ஆரம்பிக்கிறது. இறுதியில் “நான் உங்களது கால் தூசு” என்ற பக்தி மார்க்கத்தின் வார்த்தைகள் இருக்கின்றன. இப்பொழுது குழந்தைகள் எவரது கால் தூசும் ஆகமுடியாது. அது தவறானது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சரியான வார்த்தைகளைக் கூறுகிறார். குழந்தைகள் வருகின்ற அதே இடத்திலிருந்தே தந்தையும் வருகின்றார். அது சத்தத்திற்கு அப்பாற்பட்ட உலகமாகும் (நிர்வாணதாமம்). அனைவரும் எவ்வாறு வருகின்றனர் என்ற செய்தியை பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறியுள்ளார். அவர் தான் எவ்வாறு வருகின்றார் என்றும் வந்து என்ன செய்கின்றார் என்றும் உங்களுக்குக் கூறியுள்ளார். இராம இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்காக அவர் இராவணனை வெற்றி கொள்வதற்கு உங்களைத் தூண்டுகிறார். இராவண இராச்சியமும், இராம இராச்சியமும் இந்த பூமியிலேயே இருக்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். வானம், பூமி, சூரியன் அனைத்தும் உங்கள் கரங்களிலேயே இருக்கும். ஆகவே, இராம இராச்சியம் முழு உலகின் மீதும் உள்ளது எனவும், இராவண இராச்சியமும் முழு உலகின் மீதும் இருக்கிறது எனவும்; கூறலாம். இராவண இராச்சியத்தில் பில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். இராம இராச்சியத்தில் வெகு சிலரே இருக்கின்றனர். பின்னர் சிறிது சிறிதாக சனத்தொகை அதிகரிக்கிறது. இராவண இராச்சியத்தில் சனத்தொகை பாரிய அளவில் அதிகரிக்கிறது, ஏனெனில் மனிதர்கள் விகாரம் நிறைந்தவர்கள் ஆகுகின்றனர். இராம இராச்சியத்தில் அவர்கள் விகாரமற்றவர்களாக இருக்கின்றனர். இது மனிதர்களைப் பற்றிய ஒரு கதையாகும். இராமர் எல்லையற்றதன் அதிபதி, இராவணனும் எல்லையற்றதன் அதிபதி ஆவான். இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் உள்ளன. “எண்ணற்ற சமயங்களின் அழிவு” எனக் கூறப்படுகிறது. பாபா விருட்சத்தின் படத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். மக்கள் தஷேராவைக் கொண்டாடும்போது அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர். அது எல்லைக்குட்பட்ட எரித்தலாகும். உங்கள் விடயம் எல்லையற்றது. பாரத மக்களே இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர். எங்கெல்லாம் பல பாரத மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர். அது எல்லைக்குட்பட்ட தஷேராவாகும். அவர்கள் இராவண இராச்சியத்தை இலங்கையில் இருப்பதாகச் சித்தரித்துள்ளனர். சீதையை அவன் கவர்ந்து தனது வீடாகிய இலங்கைக்குக் கொண்டுசென்றதாக அவர்கள் கூறுகின்றனர். அது எல்லைக்குட்பட்ட விடயமாகும். தந்தை கூறுகிறார்: இராவணனின் இராச்சியம் முழு உலகிலும் இருக்கிறது. இராமரின் இராச்சியம் இப்பொழுது இல்லை. இராம இராச்சியம் என்றால் கடவுளால் ஸ்தாபிக்கப்பட்ட இராச்சியமாகும். சத்திய யுகமே இராம இராச்சியம் என அழைக்கப்படுகிறது. இராம நாமத்தை உச்சரித்தவாறு மக்கள் மாலையை உருட்டுகின்றனர், ஆனால் அவர்கள் அந்நேரத்தில் அரசனான இராமரை நினைவு செய்வதில்லை. அவர்கள் முழு உலகிற்கும் சேவை செய்பவரது மாலையின் மணிகளையே உருட்டுகின்றனர். தசேராவிற்குப் பின்னர் மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். ஏன் அவர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்? ஏனெனில் அதுவே தேவர்கள் முடிசூட்டும் விழாவாகும். முடிசூடும்போது அவர்கள் பல விளக்குகளை ஏற்றுகின்றனர். முதலில் முடிசூடுதல் இருக்கிறது. இரண்டாவதாக அனைத்து வீடுகளிலும் தீபமாலை இருக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். அந்நேரத்தில் ஆத்மாக்கள் அனைவரினதும் ஒளியும் ஏற்றப்படுகிறது. இப்பொழுது ஆத்மாக்கள் அனைவரினதும் ஒளியும் அணைந்துவிட்டது. அவர்கள் கலியுகத்தவர்கள், அதாவது அவர்கள் அனைவரும் இருளில் உள்ளனர். இருளென்றால் பக்தி மார்க்கம் என்று அர்த்தமாகும். பக்தி செய்துகொண்டிருக்கும்போது அவர்களது ஒளி குறைவடைந்துவிட்டது. அந்த தீபமாலை செயற்கையானதாகும். முடிசூடும் விழா என்பதனால் அவர்கள் வாண வேடிக்கைகளைச் செய்கிறார்கள் என்றில்லை. அவர்கள் தீபாவளி நேரத்தில் இலக்ஷ்மியை வரவழைக்கிறார்கள். அவர்கள் அவரை வணங்குகின்றனர். அந்தப் பண்டிகை பக்தி மார்க்கத்திற்குரியதாகும். அவர்கள் சிம்மாசனத்தில் அமருகின்ற அரசனது முடிசூடும் நாளை அதிகளவு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அவை அனைத்தும் எல்லைக்குட்பட்ட விடயங்களாகும். இப்பொழுது உண்மையான தசேராவான, எல்லையற்ற விநாசம் இடம்பெற உள்ளது. தந்தை அனைவரது ஒளிகளையும் ஏற்றவே வந்துள்ளார். தங்களது ஒளி பேரொளியுடன் கலந்துவிடுமென மக்கள் எண்ணுகின்றனர். பிரம்ம சமாஜியைச் சார்ந்தவர்கள் தங்கள் ஆலயங்களில் தொடர்ச்சியாக விளக்கினை ஏற்றி வைத்துள்ளனர். ஒரு விட்டில் பூச்சி எவ்வாறு சுவாலையைச் சுற்றிவந்து தன்னை அதில் முழுமையாக அர்ப்பணிக்கிறதோ அதேபோன்று ஆத்மாக்களும் பேரொளியுடன் இரண்டறக் கலந்துவிடுவதாக அவர்கள் நம்புகின்றனர். அதன் உதாரணமும் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் அரைச் சக்கரமாக காதலிகளாகவே இருந்தீர்கள். நீங்கள் வந்து இப்பொழுது ஒரேயொரு அற்பிற்கினியவரிடம் உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள். இது எரிந்துபோய் விடுவதற்கான ஒரு விடயமல்ல. அந்தக் காதலர்கள் ஒருவரை ஒருவர் மட்டுமே நேசிக்கின்றனர். ஆனால் இங்கு ஒரேயொரு அற்பிற்கினியவரே உள்ளார், ஏனைய அனைவரும் காதலிகள் ஆவர். பக்தி மார்க்கத்தில்; காதலிகள் அனைவரும் அந்த அன்பிற்கினையவரையே நினைவு செய்கின்றனர். அவர்கள் தம்மை அர்ப்பணிப்பதற்காக அந்த அன்பிற்கினியவரை வருமாறு கூவியழைக்கின்றனர். நாங்கள் எவரையும் அன்றி உங்களை மட்டுமே நினைவு செய்வோம் என அவர்கள் கூறுகின்றனர். அது பௌதீக அன்பல்ல. அந்தக் காதலர்கள் பௌதீக அன்பினையே கொண்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருப்பதால் மிகவும் திருப்தியடைகின்றனர். இங்கு ஒரே ஒரு அன்பிற்கினியவரும் ஏனைய அனைவரும் காதலிகளும் ஆவர். அனைவரும் தந்தையையே நினைவு செய்கின்றனர். சிலர் இயற்கை போன்றவற்றை நம்புகின்ற பொழுதும் ‘ஓ கடவுளே’ என்ற வார்த்தைகள் இன்னமும் அவர்களது உதட்டிலிருந்து வெளிவருகின்றன. அனைவரும் அவரைக் கூவியழைக்கின்றனர்: எங்கள் துன்பத்தை அகற்றுங்கள்! பக்தி மார்க்கத்தில் பல காதலிகளும் ; அன்பிற்கினியவர்கள் பலரும் இருக்கிறார்கள். சிலர் ஒருவருடைய காதலராகவும் மற்றவர்கள் வேறு ஒருவருடைய காதலராகவும் உள்ளார்கள். அனுமனுக்கு எத்தனை காதலிகள் இருக்கிறார்கள்? அவர்கள் அனைவரும் அவர்களுடைய அன்புக்குரியவரின் படத்தை உருவாக்கிப் பின்னர் ஒன்றாக அமர்ந்திருந்து வழிபடுகிறார்கள். அவர்கள் வழிபட்டுவிட்டு பின்னர் தங்களுடைய அன்பிற்குரியவரை கடலிலே மூழ்கடித்துவிடுகிறார்கள். இதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. இதுபோன்ற எதுவும் இங்கு இருக்கமாட்டாது. இங்கு உங்களுடைய அன்பிற்குரியவர் என்றும் அழகானவர், அவர் என்றுமே அவலட்சணம் ஆகுவதில்லை. அழகிய பயணியாகிய தந்தை வந்து உங்கள் அனைவரையும் அழகானவர்கள் ஆக்குகின்றார். நீங்களும் பயணிகள், அல்லவா? நீங்கள் உங்கள் பாகத்தை நடிப்பதற்காக மிகவும் தொலைதூர தேசத்திலிருந்து வந்திருக்கின்றீர்கள். புரிந்துகொள்கின்ற நீங்களும் உங்கள் முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமாகவே புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது திரிகாலதரிசிகள் (முக்காலங்களையும் அறிந்தவர்கள்) ஆகியுள்ளீர்கள். படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி இறுதியையும் நீங்கள் அறிவீர்கள். ஆகவே நீங்கள் திரிகால தரிசி பிரம்ம குமார்கள், குமாரிகளாவீர்கள். அந்த மக்கள் ஜகத்குரு என்ற பட்டத்தைப் பெறுகிறார்கள், இந்தப் பட்டத்தை நீங்கள் பெறுகிறீர்கள். சுயதரிசன சக்கரதாரி என்பதே நீங்கள் பெறுகின்ற சிறந்த பட்டமாகும். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே சுயதரிசனச் சக்கரதாரிகளா அல்லது சிவ பாபாவும் சுயதரிசனச் சக்கரதாரியா? (சிவபாபாவும் அப்படியே). ஆம், ஆத்மா சரீரத்தில் இருக்கின்ற காரணத்தினால் அவர் சுயதரிசனச் சக்கரதாரி என்றழைக்கப்படுகின்றார். தந்தை இவருக்குள் பிரவேசித்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சிவபாபா சுயதரிசனச் சக்கரதாரியாக இல்லாவிட்டால் எவ்வாறு அவரால் உங்களை அவ்வாறு ஆக்கமுடியும்? அவர் அதி உயர்ந்த ஆத்மாவாகிய பரமன் ஆவார். சரீரத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடப்படவில்லை. பரம தந்தை வந்து உங்களையும் அதி உயர்ந்தவர்கள் ஆக்குகிறார். ஆத்மாக்களாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகமுடியாது. எந்த ஆத்மாக்களால்? பிராமண தர்மத்திற்குரிய ஆத்மாக்களால். நீங்கள் சூத்திர தர்மத்திற்குரியவர்களாக இருக்கும்பொழுது இதனை அறிந்திருக்கவில்லை. இப்பொழுது மாத்திரமே நீங்கள் தந்தையின் மூலமாக இதனை அறிந்துள்ளீர்கள். இவை அத்தகைய நல்ல விடயங்களாகும். நீங்களே இதற்கு செவிமடுத்துச் சந்தோஷமானவர்கள் ஆகுகின்றீர்கள். வெளியிலுள்ளவர்கள் இவற்றைச் செவிமடுக்கும்போது ஆச்சரியப்படுவார்கள். ஓ! இந்த ஞானம் மிக மேன்மையானது. அச்சா, அவர்களும் சுயதரிசனச்சக்கரதாரிகளாகி, உலக அதிபதிகளான பூகோளத்தை ஆட்சி புரிபவர்களாகவும் ஆகமுடியும். எவ்வாறாயினும் சிலர் இங்கிருந்து சென்றதும் அனைத்தும் முடிவடைந்து விடுகிறது. மாயை மிகவும் தைரியசாலி. இங்கு அவர்கள் கேட்டவை அனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இது கருப்பையில் இருக்கின்ற ஒரு குழந்தை சத்தியம் செய்வது போன்றதாகும். அவர் வெளியில் வந்ததும் அந்த சத்தியத்தை மறந்துவிடுகின்றார். நீங்கள் கண்காட்சிகளில் மக்களுக்கு விளங்கப்படுத்தும்போது, “மிக நல்லது, மிக நல்லது” என அவர்கள் கூறுகின்றனர். இந்த ஞானம் மிக நல்லது என்றும் அவர்களும் அத்தகைய முயற்சியைச் செய்வதுடன் அதை இதைச் செய்வர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்கள் சென்றதும் அனைத்தும் விட்டுவிடப்படுகிறது. அவர்கள் அதனால் சிறிதளவே தாக்கப்படுகின்றனர். அவர்கள் உங்களிடம் மீண்டும் வரமாட்டார்கள் என்பதல்ல. விருட்சம் தொடர்ந்தும் வளர்கிறது. பின்னர் விருட்சம் வளர்ந்ததும் அனைவரும் ஈர்க்கப்படுவார்கள். இது இப்பொழுது ஆழ் நரகமாகும். அவர்கள் கருட புராணத்தில் அத்தகைய பயங்கரமான கதைகளை எழுதியுள்ளனர். மனிதர்களை சிறிது பயப்படுத்துவதற்காக அவர்கள் இதனைக் கூறுகின்றனர். அதிலிருந்தே அவர்கள் மனிதர்களும் பாம்புகளாகவும் தேள்களாகவும் ஆகுவார்கள் என்ற எண்ணத்தை எடுத்துக்கொண்டார்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களை நச்சுக் கடலிலிருந்து அகற்றி பாற்கடலுக்கு அனுப்புகிறேன். ஆரம்பத்தில் நீங்கள் அமைதி தாம வாசிகளாகவே இருந்தீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் பாகத்தை நடிப்பதற்காக சந்தோஷ தாமத்திற்குச் சென்றீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் செல்கிறீர்கள். நீங்கள் இத்தாமங்களை நினைவு செய்கிறீர்கள் இல்லையா? “நீங்களே தாயும் தந்தையும், உங்களிடமிருந்தே நாங்கள் அதிக சந்தோஷத்தைப் பெறுகின்றோம்” என மக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் அந்தச் சந்தோஷம் சத்திய யகத்திலேயே இருக்கிறது. இப்பொழுது சங்கம யுகமாகும். இங்கு மக்கள் இறுதியில் அதிகளவு விரக்தியினால் கூக்குரலிடுவார்கள். ஏனெனில் அப்பொழுது அதிகூடியளவு துன்பம் இருக்கிறது. பின்னர் சத்திய யுகத்தில் அதிகூடியளவு சந்தோஷம் இருக்கிறது. இது அதிகூடியளவு சந்தோஷத்தையும் அதிகூடியளவு துன்பத்தையும் பற்றிய நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். அவர்கள் விஷ்ணு அவதாரத்தையும் காட்டுகின்றார்கள். அவர்கள் இலக்ஷ்மி நாராயணன் தம்பதி மேலிருந்து கீழிறங்கி வருவதாகக் காட்டுகின்றனர். எவ்வாறாயினும், மனிதர்கள் மேலிருந்து வருவார்கள் என்றில்லை. ஆத்மாக்களே மேலிருந்து வருகிறார்கள், ஆனால் கடவுளின் அவதாரம் தனித்துவமானது. அவரே வந்து பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுகிறார். மக்கள் அவரது பிறந்த தினமாகிய சிவ ஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர். ஆஸ்தியாகிய முக்தி, ஜீவன் முக்தியை அருள்பவர் பரம தந்தையாகிய பரமாத்மா சிவனே என்பதை அவர்கள் தெரிந்துகொண்டால் தந்தையாகிய கடவுளின் பண்டிகையை முழு உலகிலும் கொண்டாடுவார்கள். சிவபாபாவே விடுதலையளிப்பவரும் வழிகாட்டியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருப்பின் அவர்கள் எல்லையற்ற தந்தையின் ஞாபகார்த்தத்தைக் கொண்டாடுவார்கள். அவரது பிறப்பு பாரதத்திலேயே இடம்பெறுகிறது. பாரதத்திலேயே மக்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர். எவ்வாறாயினும் அவர்கள் அவரை முழுமையாக இனங்காணாததன்; காரணமாக விடுமுறையுடன் கொண்டாடுவதில்லை. பிறந்த தினமும் அனைவருக்கும் சற்கதியளிக்கும் தந்தையின் யாத்திரையும் நிச்சயமாக அவர் வந்து அத்தகைய தனித்துவமான செயலைப் புரிகின்ற அவரது பிறந்த இடத்திலேயே கொண்டாடப்பட வேண்டும். இங்கிருக்கும் ஆலயமும் உங்களது ஞாபகார்த்தமே ஆகும். எவ்வாறாயினும் சிவபாபாவே விடுதலையளிப்பவராகவும் வழிகாட்டியாகவும் வருகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. எங்களை துன்பம் அனைத்திலிருந்தும் விடுவித்து சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்லுமாறு அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. பாரதமே அதி மேன்மையான பூமியாகும். நினைவு கூரப்படுகின்ற பாரதத்தின் புகழ் எல்லையற்றதாகும். இங்கேயே சிவபாபா பிறப்பெடுக்கிறார். ஆனால் எவரும் அவரை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் அவரை கௌரவிக்கும் வகையில் ஒரு முத்திரையை உருவாக்கவில்லை. அவர்கள் ஏனைய பலரதும் முத்திரைகளை உருவாக்குகின்றனர். இப்பொழுது மக்கள் இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளும் வகையில் எவ்வாறு நீங்கள் விளங்கப்படுத்தலாம்? சந்நியாசிகள் வெளிநாடுகளுக்குச் சென்று பாரதத்தின் புராதன யோகத்தைக் கற்பிக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு உங்கள் இராஜயோகம் பற்றிக் கூறியதும் உங்கள் பெயர் புகழப்படும். அவர்களுக்குக் கூறுங்கள்: இராஜயோகத்தைக் கற்பித்தது யார் என்பது எவருக்கும் தெரியாது. கிருஷ்ணர் ஹத்த யோகத்தைக் கற்பிக்கவில்லை. சந்நியாசிகள் ஹத்த யோகத்தைப் பயிற்சி செய்கிறார்கள். அவர்கள் அதிகளவில் கற்று தம்மைத் தத்துவஞானிகள் என் அழைக்கிறார்கள். அவர்கள் பல சமயநூல்களைக் கற்றபொழுதிலும் தந்தை இப்பொழுது கூறுவதே சரியானது, ஏனையவை தவறானவை என இவ்விடயங்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் தங்களை மாற்றியமைத்துக் கூறவேண்டும். தந்தை வருகின்ற இந்த இடமே உண்மையில் மகத்துவமான யாத்திரை ஸ்தலம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பூமியே தர்மபூமி என அழைக்கப்படுகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இங்கிருப்பது போல் வேறெங்கும் பல தர்மாத்மாக்கள் இல்லை. நீங்கள் அதிக தான தர்மங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் தந்தையை இனங்கண்டு கொண்டதுடன் உங்கள் மனம், சரீரம், செல்வம் அனைத்தையும் இந்தச் சேவையில் பயன்படுத்துகிறீர்கள். தந்தை மட்டுமே அனைவருக்கும் விடுதலையளிக்கின்றார். அவர் அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றார். எந்தச் சமய ஸ்தாபகர்களும் எவரையும் துன்பத்திலிருந்து விடுவிப்பதில்லை. அம்மக்கள் தமது சமய ஸ்தாபகர்களைப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக தமது பாகங்களை நடிப்பதற்காகக் கீழிறங்கி வருகின்றனர். தங்கள் பாகங்களை நடித்துக்கொண்டிருக்கும் பொழுதே, அவர்கள் தமோபிரதான் ஆகுகின்றனர். பின்னர் தந்தை வந்து உங்களை சதோபிரதான் ஆக்குகின்றார். ஆகவே பாரதம் அத்தகைய மகத்தான யாத்திரை ஸ்தலமாகும். பாரதமே முதல் இலக்கத்தையுடைய அதிமேன்மையான பூமியாகும். தந்தை கூறுகிறார்: இதுவே எனது பிறப்பிடமாகும். நான் அனைவருக்கும் சற்கதியளிக்கவே இங்கு வருகின்றேன். நான் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகிறேன். தந்தை உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்காகவே வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஆகவே, அத்தகைய தந்தையை அதிகளவு அன்புடன் நினைவு செய்யுங்கள். ஏனையவர்கள் உங்களைப் பார்க்கும்பொழுது, அவர்களும் அத்தகைய செயல்களையே செய்வார்கள். இது சூட்சுமமான, தெய்வீகச் செயல்கள் என அறியப்பட்டுள்ளன. எவரும் எதனையும் புரிந்துகொள்வதில்லை என ஒருபொழுதும் எண்ணாதீ;ர்கள். மக்கள் வெளித்தோன்றி உங்களிடமிருந்து இப்படங்களை எடுத்துச் செல்வார்கள். நீராவிக் கப்பலில் அவர்கள் எடுத்துச் செல்லக்கூடியவாறு மிகச் சிறந்த படங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். அப்பொழுது எங்கெல்லாம் நீராவிக்கப்பல் நிற்கிறதோ, அங்கு அவர்களால் படங்களைப் போட முடியும். உங்கள் சேவை அதிகளவு இடம்பெற வேண்டும். பல பெருந்தன்மையான மக்கள் உங்களது பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புவதற்காக வெளித்தோன்றுவார்கள். யார் பழைய உலகை மாற்றிப் புதிய உலகை ஸ்தாபிக்கிறார் என்று அனைவரும் அறிந்துகொள்ளும் வகையிலான அத்தகைய சேவையை அவர்கள் செய்வார்கள். முன்னர், நீங்களும் சீரழிந்த புத்தியையே கொண்டிருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் மிகவும் சுத்தமான புத்தியை உடையவர்கள் ஆகிவிட்டீர்கள். ஞானத்தின் மூலமும் யோக சக்தியின் மூலமும் நீங்கள் இவ்வுலகைச் சுவர்க்கமாக ஆக்குகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஏனைய அனைவரும் முக்தி தாமத்திற்குச் சென்று அங்கே இருப்பார்கள். நீங்கள் அதிகாரிகளாகவும் ஆகவேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள், இல்லையா? நீங்கள் அவரது நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் சக்தியைப் பெறுகிறீர்கள். தந்தை, உலக சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். அவர் உங்களுக்கு அனைத்து வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சத்தைக் கூறுகிறார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் சேவைக்காக அதிகளவு உற்சாகத்தைக்; கொண்டிருக்க வேண்டும். வேறெதுவும் அல்லாது ஞான இரத்தினங்களே உங்கள் உதடுகளிலிருந்து வெளிவரவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ரூப்பும் பசந்தும் ஆவீர்கள். முழு உலகமும் எவ்வாறு மீண்டும் மிகப் புதியதாகவும் புத்துணர்ச்சியுடையதாகவும் ஆகுகின்றது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அனைத்தும் புதிதாகுகின்றன. அங்கு துன்பம் இல்லை. ஐந்து தத்துவங்களும்கூட உங்களுக்குச் சேவை செய்யக் காத்திருக்கும். இந்நேரத்தில், அவர்கள் அவச்சேவை செய்கிறார்கள், ஏனெனில் மனிதர்கள் தகுதியற்றவர்களாக உள்ளனர். தந்தை இப்பொழுது உங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் உதடுகளிலிருந்து சதா ஞான இரத்தினங்கள் மாத்திரமே வெளித் தோன்றக்கூடியவாறு ரூப்பும் பசந்தும் ஆகுங்கள். சேவை செய்வதில் உற்சாகமாக இருங்கள். நினைவில் நிலைத்திருந்து ஏனையோருக்கும் தந்தையை நினைவூட்டுங்;கள். இந்தத் தெய்வீகமான, தனித்துவமான பணியைச் செய்யுங்கள்.

2. உண்மையான காதலியாகி, ஒரேயொரு அற்பிற்கினியவரிடம் உங்களை அர்ப்பணியுங்கள் அதாவது, உங்களைத் தியாகம் செய்யுங்கள்! அப்பொழுதே உண்மையான தீபாவளி இருக்கும்.

ஆசீர்வாதம்:
உங்கள் பௌதீக இல்லறத்தையும் உங்கள் தெய்வீகக் குடும்பத்தையும் சமமாக கவனித்துக் கொள்வதன் மூலம் சதா இலேசாகவும் வெற்றியாளராகவும் ஆகுவீர்களாக.

குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் உங்கள் சொந்த பௌதீக வாழ்வாதாரத்தையும் மற்றும் உங்கள் ஆன்மிக வாழ்வாதாரத்தையும் கவனித்துக் கொள்ளுதல் என்ற இரட்டை சேவை கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இரண்டு வகையான சேவைக்கும் சமமான நேரத்தைக் கொடுப்பதுடன், இரண்டிலும் கவனம் செலுத்தப்படல் வேண்டும். ஸ்ரீமத்தின் ஊசி சரியாக இருக்குமாயின், இரு பக்கங்களும் சமமாக இருக்கும். எவ்வாறாயினும், உங்கள் இல்லறத்தைப் பற்றி நீங்கள் பேசும் போது, நீங்கள் ஓர் இல்லறத்தவராகுவதால் சாக்குப் போக்குகள் ஆரம்பமாகின்றன. எனவே, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற விழிப்புணர்வை கொண்டிருங்கள். ஓர் இல்லறத்தவராக இருக்காதீர்கள். உங்கள் இல்லறத்தினதும் உங்கள் தெய்;வீகக் குடும்பத்தினதும் சமநிலையை கொண்டிருந்தால் நீங்கள் சதா இலேசாகவும் வெற்றியாளராகவும் இருப்பீர்கள்.

சுலோகம்:
முதற் பிரிவில் வருவதற்கு உங்கள் பௌதீக புலன்களை வெற்றி கொண்டவராகவும் மாயையை வெற்றி கொண்டவராகவும் ஆகுங்கள்.