25.10.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 09.04.86 Om Shanti Madhuban
உண்மையான சேவையாளரின் அடையாளங்கள்.
இன்று, ஞான சூரியனும் ஞானச் சந்திரனும் பூமியின் பால்வெளியிலுள்ள நட்சத்திரங்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள். நட்சத்திரங்கள் அனைத்தும் ஜொலிக்கின்றார்கள். தமது ஒளியையும் பிரகாசத்தையும் வெளிவிடுகின்றார்கள். நட்சத்திரங்களில் பல்வகை காணப்படுகிறது. சிலர் விசேடமான ஞான நட்சத்திரங்கள். சிலர் இலகு யோகி நட்சத்திரங்கள். சிலர் நற்குணங்களைத் தானம் செய்யும் ரூபங்களாக உள்ள நட்சத்திரங்கள். சிலர் சதா சேவையாளர்களாக இருக்கும் நட்சத்திரங்கள். சிலர் சதா சம்பூரணமாக இருக்கும் நட்சத்திரங்கள். எவ்வாறாயினும், அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஒவ்வொரு விநாடியும் வெற்றி பெறும் நட்சத்திரங்களே. இவற்றுடன்கூடவே, சிலர் இன்னமும் நம்பிக்கை நட்சத்திரங்களாக மட்டும் இருந்தார்கள். ஒருபுறம், நம்பிக்கை நட்சத்திரங்கள் இருந்தார்கள். இன்னொரு புறம், வெற்றி நட்சத்திரங்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரிலும் பாரிய வேறுபாடு காணப்பட்டது. எனினும், ஒவ்வொரு வகையான நட்சத்திரத்தின் ஆதிக்கமும் உலகிலுள்ள ஆத்மாக்களின் மீதும் சடப்பொருளின் மீதும் படிந்து கொண்டே இருந்தன. வெற்றி நட்சத்திரங்கள் தமது ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் அனைவரையும் ஆதிக்கத்திற்கு உட்படுத்தினார்கள். நம்பிக்கை நட்சத்திரங்கள் சிலவேளைகளில் அன்பை அனுபவம் செய்தார்கள். சிலவேளைகளில் சிரமப்பட்டார்கள். எனவே, அவர்கள் இரண்டினதும் ஆதிக்கத்தில் இருந்ததால், அவர்கள் முன்னேறும்போது அவற்றை அவர்கள் மற்றவர் மீதும் ஏற்படுத்தினார்கள். எவ்வாறாயினும், நம்பிக்கை வைத்து அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் எந்த நட்சத்திரம்? நட்சத்திரங்கள் எல்லோரிடமும் ஞானமும் யோகமும் நற்குணங்களும் சேவைக்கான உணர்வுகளும் இருக்கின்றன. ஆனால் சிலரிடம் குறிப்பிடத்தக்க முறையில் ஞானப் பிரகாசம் காணப்பட்டது. சிலர் நினைவு மற்றும் யோகத்தின் சிறப்பியல்பைக் கொண்டிருந்தார்கள். சிலர் குறிப்பாக சகல நற்குணங்களின் ரூபங்களாக இருப்பதன் மூலம் மற்றவர்களைக் கவர்ந்தார்கள். நான்கு விடயங்களும் கிரகிக்கப்பட்டாலும், கிரகிக்கப்படும் சதவீதத்தில் வேறுபாடு காணப்படுகிறது. இதனாலேயே, பிரகாசிக்கும் நட்சத்திரங்களில் பலவகையான தோற்றங்கள் காணப்பட்டன. இது ஒரு தனித்துவமான, ஆன்மீகப் பால்வெளி ஆகும். பௌதீக நட்சத்திரங்களின் ஆதிக்கம் உலகில் ஏற்படுவதைப் போல், ஆன்மீக நட்சத்திரங்களான உங்களின் ஆதிக்கமும் உலகில் ஏற்படுகிறது. எந்தளவிற்கு நட்சத்திரங்களான நீங்கள் சக்திசாலிகளாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உலகிலுள்ள ஆத்மாக்களிலும் அதன் ஆதிக்கம் ஏற்படும். இது எதிர்காலத்திலும் தொடர்ந்து நிகழும். எந்தளவிற்கு இருள் சூழ்ந்திருக்கிறதோ, அந்தளவிற்கு ஜொலிக்கும் நட்சத்திரங்கள் தெளிவாகப் புலப்படும். ஆகவே, பேறுகள் இல்லாதிருக்கும் இருள் தொடர்ந்து அதிகரிக்கும்போது, - அது தொடர்ந்தும் அதிகரிக்கும்- அவர்கள் ஆன்மீக நட்சத்திரங்களான உங்களின் விசேடமான ஆதிக்கத்தை அனுபவம் செய்வார்கள். அனைவராலும் உங்களைப் பூமியின் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக, உங்களின் ஒளிப்புள்ளி ரூபத்தில், ஒளிச் சரீரங்களாக, தேவதைகளாகக் காண முடியும். வானத்திலுள்ள நட்சத்திரங்களை ஆராய்வதற்கு அவர்கள் தமது நேரத்தையும் சக்தியையும் பணத்தையும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஆன்மீக நட்சத்திரங்களான உங்களைப் பார்த்ததும் வியப்படைவார்கள். இப்போது அவர்கள் ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களை அவதானிப்பதைப் போல், இந்தப் பூமியின் பால்வெளியையும், தேவதைகளின் பிரகாசத்தையும் ஒளியை வெளிவிடும் நட்சத்திரங்களின் அழகையும் அவர்கள் அவதானிப்பார்கள்.
அவர்கள் இதை அனுபவம் செய்வதுடன், ‘யார் அவர்கள்? அவர்களின் மாயாஜாலத்தைக் காட்டுவதற்காக அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள்?’ எனக் கேட்பார்கள். ஸ்தாபனையின் ஆரம்பத்தில், எங்கும் உள்ளவர்களுக்கு பிரம்மாவினதும் கிருஷ்ணரினதும் காட்சிகளின் அனுபவங்களின் அலையொன்று ஏற்பட்டது. ‘யார் இவர்? நான் காண்பது என்ன?’ அதை முயற்சி செய்து புரிந்து கொள்வதற்காகப் பலரின் கவனமும் அதன்பால் ஈர்க்கப்பட்டது. அதேபோல், இப்போது, இறுதியிலும், உலகெங்கும் இந்த இரண்டு ரூபங்களின் (ஒளி மற்றும் தேவதை) பிரகாசத்தினூடாக அவர்கள் பாப்தாதாவினதும் குழந்தைகளினதும் காட்சிகளைக் காண்பார்கள். ஒன்றிலிருந்து அது பலருக்குப் பரவும். அனைவரின் கவனமும் இங்கே கவரப்படும். இந்தத் தெய்வீகக் காட்சி நீங்கள் அனைவரும் சம்பூரணம் ஆகுவதற்காகக் காத்திருக்கிறது. இந்த தேவதை ஸ்திதியை நீங்கள் இலகுவாகமும் இயல்பாகவும் அனுபவம் செய்யும்போது, உண்மையில் தேவதைகளின் காட்சி தென்படும். இந்த வருடம் குறிப்பாக நீங்கள் தேவதை ஸ்திதியை உருவாக்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. ‘நாம் நினைவை மட்டும் பயிற்சி செய்ய வேண்டுமா அல்லது நாம் சேவையும் செய்ய வேண்டுமா? அல்லது, நாங்கள் சேவை செய்வதில் இருந்து விடுவிக்கப்பட்டு, தபஸ்யாவில் இருக்க வேண்டுமா?’ எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். பாப்தாதா இப்போது சேவையின் உண்மையான அர்த்தத்தை உங்களுக்குக் கூறுகிறார்.
சேவைக்கான உணர்வுகள் என்றால், ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சதா நல்லாசிகளைக் கொண்டிருத்தல், அதிமேன்மையான தூய விருப்பங்களுக்கான உணர்வுகளைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். சேவைக்கான உணர்வுகள் என்றால், ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவர்களின் சொந்த உணர்வுகளுக்கேற்ற பலனை வழங்குதல் என்று அர்த்தம். எந்தவிதமான எல்லைக்குட்பட்ட உணர்வுகளும் இல்லாமல், அதிமேன்மையான உணர்வுகளைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். யாராவது உங்களிடமிருந்து ஆன்மீக அன்பு வேண்டும் என்ற உணர்வைக் கொண்டிருந்தால், அல்லது ஒத்துழைப்பு, ஏதாவதொரு சக்தி, சந்தோஷம், ஊக்கம் மற்றும் உற்சாகம் வேண்டும் என்ற உணர்வு இருந்தால், அல்லது சகல பேறுகளையும் அடையும் உணர்வைக் கொண்டிருந்தால், சேவை செய்தல் என்றால் அவர்களுக்கு அந்தப் பல்வேறு உணர்வுகளின் பலனை வழங்குதல் என்று அர்த்தம். அதாவது, அதை அனுபவம் செய்வதற்கு உங்களின் ஒத்துழைப்பால் அவர்களைத் தூண்டுதல் என்று அர்த்தம். இதுவே சேவைக்கான உண்மையான உணர்வுகள் எனப்படுகின்றது. வெறுமனே ஒரு உரையாற்றுதல் அல்லது குழுக்களுக்கு விளங்கப்படுத்தல் அல்லது யாராவதொருவருக்கு பாடநெறியைக் கொடுத்தல் அல்லது ஒரு நிலையத்தைத் திறத்தல் என்பனவற்றை சேவைக்கான உணர்வுகளைக் கொண்டிருத்தல் என்று கூறமுடியாது. சேவை செய்வதென்றால், ஆத்மாக்கள் ஏதாவது பேறுகளை அனுபவம் செய்யும் வகையில் அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். இந்த முறையில் சேவை செய்தால், அதற்குள் தபஸ்யாவும் இருக்கும்.
தபஸ்யாவின் முக்கியத்துவத்தைப் பற்றி நீங்கள் செவிமடுத்துள்ளீர்கள். அது திடசங்கற்பத்துடன் ஒரு பணியைச் செய்வதாகும். எங்கு சேவைக்கான மிகச்சரியான உணர்வுகள் உள்ளனவோ, அங்கு தபஸ்யாவிற்கான உணர்வுகள் அவற்றில் இருந்து வேறுபட்டவையாக இருக்காது. தியாகம், தவம், சேவை என்ற ஒன்றிணைந்த ரூபம் எங்குள்ளதோ, அதுவே உண்மையான சேவை ஆகும். துறவறமும் தபஸ்யாவும் இல்லாமல் சேவை இருந்தால், அது பெயரளவில் மட்டுமே சேவையாக இருக்கும். அதன் பலனும் தற்காலிகமானதாகவே இருக்கும். சேவை செய்யப்படும். தற்காலிகமான பலனின் ஆதிக்கம் பெறப்பட்டு, அங்கேயே அது முடிந்துவிடும். தற்காலிகமான பேற்றின் ஆதிக்கம், தற்காலிகமான புகழே. ‘அது மிக நல்லதொரு சொற்பொழிவு, நீங்கள் மிக நன்றாகப் பாடநெறியை வழங்கினீர்கள், நீங்கள் மிக நல்ல சேவை செய்தீர்கள்’ என அவர்கள் கூறுவார்கள். எனவே, யாராவதொருவர் நல்லது எனப் பேசும்போது, அங்கு தற்காலிகமான பலன் பெறப்படுகிறது. பேசுபவரும் தற்காலிகமான பலனையே பெறுகிறார். எவ்வாறாயினும், ஓர் அனுபவத்தை வழங்குதல் என்றால், அவர்களைத் தந்தையுடன் ஓர் உறவுமுறை ஏற்படுத்தச் செய்வதுடன், அவர்களைச் சக்திசாலிகள் ஆக்குதல் என்று அர்த்தம். இதுவே உண்மையான சேவையாகும். உண்மையான சேவையில் தியாகமும் தபஸ்யாவும் இல்லாவிட்டால், அது 50மூ சேவைகூடக் கிடையாது. ஆனால் அது 25மூ சேவையே ஆகும்.
உண்மையான சேவையாளரின் அடையாளம் துறவறமாகும். அதாவது, பணிவும் தபஸ்யாவும் ஆகும். அதாவது, ஒரேயொரு தந்தையில் நம்பிக்கையும் போதையும் கொண்டிருப்பதற்கான திடசங்கற்பம் இருத்தல். இதுவே மிகச்சரியான சேவை எனப்படுகிறது. சதா உண்மையான சேவையாளர்கள் ஆகும்படி பாப்தாதா உங்களைக் கேட்கிறார். சேவையின் பெயரால், நீங்கள் குழப்பம் அடைந்தால், அல்லது மற்றவர்களைக் குழப்பினால், பாப்தாதா உங்களை அந்த வகையான சேவையில் இருந்து விடுபடும்படி கூறுகிறார். அவ்வாறான நிலையில், அந்த வகையான சேவையைச் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், சேவை செய்வதனால் அனுபவம் செய்யப்படும் விசேடமான நற்குணம் திருப்தி ஆகும். உங்களுடன் அல்லது உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களுடன் எங்கு திருப்தி இல்லையோ, அந்தச் சேவை உங்களுக்குப் பலனையும் தரமாட்டாது. மற்றவர்களும் பலனைப் பெற அது அனுமதிக்காது. ஆகவே, முதலில் உங்களை ஒரு திருப்தி இரத்தினமாக்கிப் பின்னர் சேவை செய்யுங்கள். இல்லாவிட்டால், நிச்சயமாக ஒரு சூட்சுமமான சுமை ஏற்படும். பல வகையான சுமைகள், பறக்கும் ஸ்திதிக்குத் தடைகள் ஆகிவிடும். நீங்கள் உங்களின் சுமையை அதிகரிக்க விரும்புவதில்லை. ஆனால், நீங்கள் அதை நீக்கவே விரும்புகிறீர்கள். இந்த உணர்வு உங்களிடம் இருக்கும்போது, ஏகாந்தத்தில் இருப்பது நல்லது. ஏனென்றால், ஏகாந்தத்தில் இருப்பதன் மூலம் நீங்கள் சுய மாற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். பாப்தாதா பேசுகின்ற தபஸ்யா என்பது இரவு பகலாகத் தபஸ்யாவில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதல்ல. எனினும் தபஸ்யாவில் இருத்தல் என்றால் சேவையும் செய்தல் என்று அர்த்தம். ஆனால் நீங்கள் வெளிச்சவீடாகவும் சக்தி வீடாகவும் ஆகி, அமைதிக்கதிர்களையும் சக்திக்கதிர்களையும் பரப்பி, அத்தகையதொரு சூழலை உருவாக்க வேண்டும். தபஸ்யாவுடன்கூடவே, மனதினூடான சேவையும் உள்ளது. இது வேறுபட்டது இல்லை. இல்லாவிட்டால், நீங்கள் என்ன வகையான தபஸ்யாவைச் செய்வீர்கள்? நீங்கள் ஏற்கனவே மேன்மையான ஆத்மாக்கள், பிராமண ஆத்மாக்கள் ஆவீர்கள். ஆனால், தபஸ்யா என்றால் உலகிற்குச் சேவை செய்வதற்காக உங்களின் திடசங்கற்பமான ஸ்திதியாலும் திடசங்கற்பமான எண்ணங்களாலும் சகல சக்திகளும் நிறைந்தவராக இருத்தல் என்று அர்த்தம். வார்த்தைகளால் மட்டும் சேவை செய்தல் சேவையல்ல. சந்தோஷமும் அமைதியும் தூய்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதைப் போல், துறவறமும் தபஸ்யாவும் சேவையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவவை. நீங்கள் தபஸ்யா ரூபம் ஆகவேண்டும், அதாவது, சக்திவாய்ந்த சேவையாளரின் ரூபம் ஆகவேண்டும் என பாப்தாதா உங்களைக் கேட்கிறார். தபஸ்யா சொரூபமாக இருக்கும் ஒருவரின் திருஷ்டியும் சேவை செய்யும். அமைதி சொரூபமாக இருக்கும் ஒருவரின் முகமும் சேவை செய்யும். தபஸ்யா ரூபமாக இருக்கும் ஒருவரின் தரிசனத்தைப் பெறும்போது அது பேற்றின் அனுபவத்தைக் கொடுக்கும். தற்காலத்தில் எவ்வாறு எல்லைக்குட்பட்ட தவம் செய்யும் ஒருவரின் தரிசனத்தைப் பெறுவதற்காக அதிகளவு சனக்கூட்டம் ஒன்றுகூடுகிறது என்று பாருங்கள். அது இப்போதும் இறுதிவரை தொடர்கின்ற உங்களின் தபஸ்யாவின் ஞாபகார்த்தத்தின் ஆதிக்கம் ஆகும். சேவைக்கான உணர்வுகள் என்றால் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சேவைக்கான உணர்வுகள் என்றால், மற்றவர்களின் பலவீனங்கள் அனைத்தையும் உங்களால் அமிழ்த்தக் கூடியதாக இருப்பதாகும். மற்றவர்களின் பலவீனங்களை எதிர்க்கும் உணர்வுகள் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனால், அமிழ்த்தக்கூடிய உணர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குள் சகிப்புத்தன்மையும் மற்றவர்களுக்குச் சக்தியை வழங்கவேண்டும் என்ற உணர்வும் இருத்தல். இதனாலேயே, ‘சகித்துக் கொள்ளும் சக்தி’ என்ற கூற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். சகித்துக் கொள்ளுதல் என்றால், தன்னை சக்தியால் நிரப்பி, மற்றவர்களுக்கும் சக்தியைக் கொடுத்தல் என்று அர்த்தம். சகித்துக் கொள்ளுதல் என்றால், இறத்தல் என்று அர்த்தமல்ல. சகித்துக் கொள்ளும்போது தாம் இறந்துவிடுவோம் எனச் சிலர் நினைக்கிறார்கள். ‘நான் இறக்க வேண்டுமா?’ என அவர்கள் கேட்கிறார்கள். எவ்வாறாயினும், அது இறத்தல் அல்ல. அது அன்புடன் அனைவரின் இதயங்களிலும் வாழ்வதற்கான வழிமுறை ஆகும். எந்தளவு எதிர்ப்பு இருந்தாலும், அவர்கள் இராவணனை விடப் பலசாலிகளாக இருந்தாலும், நீங்கள் ஒரு தடவை அல்ல, பத்துத் தடவைகள் சகித்துக்கொள்ள வேண்டி வந்தாலும், சகித்துக் கொள்வதன் பலன் அநாதியானது, இனிமையானது. அவர்களும் நிச்சயமாக மாறுவார்கள். ‘நான் அதிகளவில் சகித்துக் கொண்டேன், அதனால் அவர்களும் அதற்குப் பிரதிபலனாக எதையாவது செய்ய வேண்டும்’ என நினைக்காதீர்கள். தற்காலிகமான பலனுக்கான உணர்வுகளைக் கொண்டிராதீர்கள். கருணை உணர்வுகளைக் கொண்டிருங்கள். இதுவே சேவைக்கான உணர்வுகள் என்பதன் அர்த்தம் ஆகும். எனவே, இந்த வருடம், உண்மையான சேவை செய்வதன் அத்தாட்சியை வழங்கி, அதன் அத்தாட்சியை வழங்கியவர்களின் பட்டியலில் வருகின்ற பொன்னான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த வருடம், நீங்கள் நல்லதொரு மேளா (ஆன்மீகச் சந்தை) அல்லது நல்லதொரு நிகழ்ச்சி வைத்தீர்கள் என்பதை பாபா பார்க்க மாட்டார். ஆனால், திருப்தி இரத்தினங்களாக இருந்து, மற்றவர்களுக்கு திருப்தியை வழங்கும் சேவையில் நீங்கள் முன்னணியில் ஓரிலக்கத்தைப் பெற வேண்டும். ‘தடைகளை அழிப்பவர்’ என்ற பட்டத்தை வெல்லும் விழாவில் ஒரு பரிசைப் பெறுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? இதுவே ‘பற்றை அழிப்பவராகவும் நினைவின் சொரூபமாகவும் இருக்கும் ஸ்திதி’ என விவரிக்கப்படுகிறது. எனவே, இப்போது 18 ஆம் அத்தியாயத்தின் சொரூபம் ஆகுவதன் மூலம், இந்த 18 ஆம் வருடத்தின் நிறைவை அடையும், சம்பூரணம் ஆகும் விசேடமான ரூபத்தைக் காட்டுங்கள். இதுவே, தந்தையைப் போல் ஆகுதல் என்று விவரிக்கப்படும் ஸ்திதி ஆகும். அச்சா.
சதா பிரகாசிக்கும் ஆன்மீக நட்சத்திரங்களுக்கும், திருப்தியின் அலைகளைப் பரப்பும் திருப்தி இரத்தினங்களுக்கும், ஒரே வேளையில் தமது சதா துறவறத்தாலும், தபஸ்யாவாலும் சேவையாலும் மற்றவர்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்திசாலி ஆத்மாக்களுக்கும், சதா ஆத்மாக்கள் அனைவருக்கும் ஆன்மீகப் பலனையும் ஆன்மீக உணர்வுகளையும் கொடுப்பவர்களுக்கும், தந்தையைப் போல் ஒரு விதையாக இருக்கும் ஒவ்வொரு மேன்மையான குழந்தைக்கும், முழுமை அடைவதற்காக பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
அவ்யக்த பாப்தாதா பஞ்சாப் மற்றும் ஹரியானா பிராந்தியங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்திக்கிறார்:
நீங்கள் உங்களைச் சதா ஆட்ட, அசைக்க முடியாத ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? எந்தவொரு குழப்பமான சூழ்நிலையிலும் ஸ்திரமாக இருத்தல் ஒரு மேன்மையான பிராமண ஆத்மாவாக இருப்பதன் அடையாளமாகும். உலகமே குழப்பத்தில் உள்ளது. ஆனால் மேன்மையான ஆத்மாக்களான உங்களால் குழப்பம் அடைய முடியாது. ஏன்? நீங்கள் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் அறிவீர்கள். ஞானம் நிறைந்த, சக்திசாலி ஆத்மாக்கள் எப்போதும், இயல்பாகவும் அசைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, சூழலால் ஒருபோதும் உங்களைப் பயமுறுத்த முடியாது. நீங்கள் பயமற்றவர்கள். சக்திகள் பயமற்றவர்களா? அல்லது, உங்களுக்குள் சிறிது பயம் இருக்கிறதா? ஏனென்றால், ஸ்தாபனை நேரத்திற்கு முன்னரே, பாரதத்தில் உள்நாட்டுக் கலகம் இடம்பெறப் போகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஆரம்பத்தில் இருந்தே உங்களின் சித்திரங்களிலும் காட்டப்பட்டுள்ளன. ஆகவே, என்ன காட்டப்பட்டுள்ளதோ, அது நிகழும், இல்லையா? பாரதத்தின் பாகம் உள்நாட்டுக் கலகங்கள் இடம்பெறும் என்பதாகும். இதனாலேயே, இது எதுவும் புதியதல்ல. எனவே, இது எதுவும் புதியதல்லவா? அல்லது உங்களுக்குப் பயம் ஏற்படுகிறதா? ‘என்ன நிகழ்ந்தது? எவ்வாறு அது நிகழ்ந்தது? இது நிகழ்ந்தது.....’ செய்திகளைக் கேட்கும்போதும் பார்க்கும்போதும் உங்கள் அனைவரின் பணி, சக்திசாலிகளாக இருந்து நிச்சயிக்கப்பட்ட நாடத்தைப் பார்ப்பதுடன், மற்றவர்களுக்கு சக்தியைக் கொடுப்பதாகும். உலகிலுள்ள மக்கள் பயத்துடன் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்த ஆத்மாக்களைச் சக்தியால் நிரப்ப வேண்டும். உங்களுடன் தொடர்பில் வருகின்ற எவருக்கும் தொடர்ந்து சக்தியைத் தானம் செய்ய வேண்டும். தொடர்ந்து அவர்களுக்கு அமைதியைத் தானம் செய்யுங்கள்.
அமைதியற்ற இந்த நேரத்தில், இது அமைதியை வழங்குவதற்கான நேரம் ஆகும். ஆகவே, நீங்கள் அமைதித் தூதுவர்கள். ‘அமைதித் தூதுவர்கள்’ என்பது நினைவுகூரப்படுகிறது. ஆகவே, நீங்கள் எங்கே வசித்தாலும், தொடர்ந்து உங்களை அமைதித் தூதுவர்கள் எனக் கருதியவண்ணம் செயல்படுங்கள். நீங்கள் அமைதிக்கான செய்தியை வழங்கும் அமைதித் தூதுவர்கள். ஆகவே, நீங்கள் அமைதி சொரூபங்களாகவும் சக்திசாலிகளாகவும் இருந்தால், நீங்கள் தொடர்ந்து மற்றவர்களுக்கும் அவற்றை வழங்குவீர்கள். அவர்கள் உங்களுக்கு அமைதியின்மையைக் கொடுப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு அமைதியைக் கொடுங்கள். அவர்கள் நெருப்பை உருவாக்குகிறார்கள். நீங்கள் அதில் நீரை ஊற்றுங்கள். இதுவே உங்களின் பணி, இல்லையா? இதுவே உண்மையான சேவையாளராக இருத்தல் எனப்படுகிறது. ஆகவே, இத்தகைய வேளையில், இந்த வகையான சேவைக்கான தேவையே உள்ளது. சரீரங்கள் அழியக்கூடியவை. ஆனால் ஆத்மாக்கள் சக்திசாலிகள் ஆவார்கள். எனவே, உங்களில் ஒருவர் சரீரத்தை விட்டாலும், நினைவின் வெகுமதியானது அடுத்த சரீரத்திற்கும் தொடரும். எனவே, தொடர்ந்து மற்றவர்கள் நிரந்தரமான பேறுகளைப் பெறத் தூண்டுங்கள். எனவே, நீங்கள் யார்? அமைதித் தூதுவர்கள்! அமைதித் தூதுவர்கள் என்றால் மாஸ்ரர் அமைதியைத் தானம் செய்பவர்களும் மாஸ்ரர் சக்தியைத் தானம் செய்பவர்களும் ஆவார்கள். இந்த விழிப்புணர்வை உங்களால் சதா பேண முடிகிறதா? எப்போதும் இந்த விழிப்புணர்வுடன் தொடர்ந்து முன்னேறுவதுடன், மற்றவர்களையும் முன்னேறச் செய்யுங்கள். இதுவே சேவை செய்தல் எனப்படுகிறது. அரசாங்க சட்டங்கள் எவையாக இருந்தாலும், அவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும். ஆனால், உங்களுக்குச் சிறிதளவு நேரம் கிடைத்தாலும், உங்களால் நிச்சயமாக உங்களின் மனதாலும் வார்த்தைகளாலும் தொடர்ந்து சேவை செய்ய முடியும். இப்போது மனதின் மூலம் சேவை செய்வதற்கான பெரிய தேவை உள்ளது. ஆனால், நீங்கள் உங்களைச் சக்தியால் நிரப்பினால் மட்டுமே உங்களால் அதை மற்றவர்களுக்கு வழங்க முடியும். ஆகவே, சதா அமைதியை அருள்பவரின் குழந்தைகளே, அமைதியை அருள்பவர்கள் ஆகுங்கள். நீங்கள் அருள்பவர்கள் ஆகுவதுடன், அருள்பவர் ஆகுவதற்கான வழிமுறையைக் காட்டுபவர்களாகவும் ஆகவேண்டும். நீங்கள் அசையும்போது, ‘நான் ஒரு மாஸ்ரர் அமைதியை அருள்பவன், ஒரு மாஸ்ரர் சக்தியை அருள்பவன்’ என நினையுங்கள். இந்த விழிப்புணர்வுடன், தொடர்ந்து சகல ஆத்மாக்களுக்கும் அதிர்வலைகளைக் கொடுங்கள். அப்போது மட்டுமே, உங்களுடன் தொடர்பில் வருவதன் மூலம் தம்மால் அமைதியை அனுபவம் செய்ய முடியும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஆகவே, நீங்கள் மாஸ்ரர் அமைதியை அருள்பவர்களாகவும் மாஸ்ரர் சக்தியை அருள்பவர்களாகவும் ஆகவேண்டும் என்ற ஆசீர்வாதத்தை நினைவு செய்யுங்கள். நீங்கள் அனைவரும் தைரியசாலிகள், இல்லையா? குழப்பத்தில்கூட எந்தவிதமான வீணான எண்ணங்களும் இருக்கக்கூடாது. ஏனென்றால், வீணான எண்ணங்கள் உங்களைச் சக்திசாலிகள் ஆக்குவதற்கு அனுமதிக்காது. ‘என்ன நிகழும்? இது நிகழாது, இல்லையா?’ என்பது வீணானது ஆகும். என்ன நிகழ்ந்தாலும், அதை சக்திவாய்ந்த ஸ்திதியில் இருந்தவண்ணம் அவதானித்து, மற்றவர்களுக்கு சக்தியை வழங்குங்கள். அந்தப் ‘பக்கக்காட்சிகளும்’ வரும். ஒரு ‘கிளைக்கதையே’ இடம்பெறுகிறது. அதை ஒரு கிளைக்கதையாகக் கருதியவண்ணம் அவதானியுங்கள். நீங்கள் பயப்பட மாட்டீர்கள். அச்சா.
விடைபெறும் வேளையில் (அமிர்தவேளையில்)
இந்த சங்கமயுகம் அமிர்த வேளையாகும். சங்கமயுகம் முழுவதும் அமிர்தவேளையாக இருப்பதனால், இந்த வேளையின் மகத்துவம் எல்லா வேளையும் நினைவுகூரப்படுகிறது. எனவே, சங்கமயுகம் முழுவதும், அதாவது, அமிர்த வேளை என்றால் வைரமான காலைப்பொழுது என்று அர்த்தம். தந்தை எப்போதும் குழந்தைகளுடன் இருக்கிறார். குழந்தைகளும் தந்தையுடன் இருக்கிறார்கள். எனவே, இது எல்லையற்ற வைரமான காலைப்பொழுது ஆகும். பாப்தாதா எப்போதும் இதைக் கூறுகிறார். ஆனால், பௌதீக உலகில் பௌதீக ரூபத்தில் இருப்பதனால், இன்றும், பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம், பொன்னான காலை வணக்கம், அல்லது வைரமான காலைவணக்கம் என எவ்வாறு நீங்கள் அதை அழைத்தாலும் அதை உங்களுக்கு வழங்குகிறார். இது உங்களை மேலும் ஒரு வைரம் ஆக்குவதற்காகவே வழங்கப்படுகிறது. எனவே, தந்தையுடன் எப்போதும் இருப்பதற்கு காலைவணக்கங்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் மாயையை வென்றவராகவும் சுய அதிபதியாகவும் ஆகி, பஞ்ச பூதங்களையும் ஐந்து விகாரங்களையும் உங்களின் பணியாளர்கள் ஆக்குவீர்களாக.சத்தியயுகத்தில், உலகச் சக்கரவர்த்தியினதும் உலகச் சக்கரவர்த்தினியினதும் இராஜ ஆடைகளின் பின்புறமாக உள்ள நீண்ட மேலங்கியைப் பணிப்பெண்கள் பிடித்திருப்பார்கள். அதேபோல், சங்கமயுகத்தில், குழந்தைகளான நீங்களும் மாயையை வென்றவர்கள் மற்றும் சுய அதிபதிகள் என்ற உங்களின் பட்டங்களின் ஆடையால் அலங்கரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்போது பஞ்ச பூதங்களும் ஐந்து விகாரங்களும் உங்களின் ஆடையைப் பின்னால் இருந்தவண்ணம் பிடித்துக் கொள்ளும். அதாவது, அவை உங்களுக்கு அடிமைகளாக இருக்கும். இதற்கு, திடசங்கற்பம் என்ற இடுப்புப்பட்டியால் உங்களின் பட்டங்கள் என்ற ஆடையை இறுக்கிக் கொள்ளுங்கள். வெவ்வேறு ஆடை அணிகலன்களால் உங்களை அலங்கரித்துத் தந்தையுடன் இருங்கள். அப்போது அந்த விகாரங்களும் பஞ்சபூதங்களும் மாற்றம் அடைந்து, உங்களின் ஒத்துழைக்கும் சகபாடிகள் ஆகிவிடும்.
சுலோகம்:
நீங்கள் பேசும் நற்குணங்களினதும் சக்திகளினதும் அனுபவத்தில் திளைத்திருங்கள். அனுபவமே மகத்தான அதிகாரம் ஆகும்.