30.10.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் ஒரேயொரு தந்தையிடமிருந்து ஒரு வழிகாட்டலையே பெறுகின்றீர்கள். அது பிரிவினையற்ற வழிகாட்டல் என அழைக்கப்படுகின்றது. இப் பிரிவினையற்ற வழிகாட்டலைப் பின்பற்றுவதனால், நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள்.கேள்வி:
இந்தப் புதிர் விளையாட்டில், எப் பிரதான விடயத்தை மனிதர்கள் மறந்து விட்டார்கள்?பதில்:
இப் புதிர் விளையாட்டுக்குள் சென்றதனால், அவர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்வதற்கான பாதையை மறந்து விட்டார்கள். தாங்;கள் எப்பொழுது அல்லது எவ்வாறு வீடு திரும்பலாம் என்பதை அவர்கள் அறியார்கள். தந்தை இப்பொழுது உங்கள் அனைவரையும் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார். சத்தத்திற்கு அப்பாலுள்ள இனிய வீட்டுக்குச் செல்வதே, இப்பொழுது நீங்கள் செய்கின்ற முயற்சியாகும்.பாடல்:
ஓ இரவுப் பயணியே, களைப்படையாதீர்;! உங்கள் சந்தோஷ நாட்கள் வர இருக்கின்றன!ஓம் சாந்தி.
நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, வேறு எவருமே பாடலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. வெளியிலுள்ள மக்களால் இயற்றப்பட்ட பாடல்கள் சில உங்களுக்கு உதவக்கூடியன. நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். லௌகீகக் கல்வியைக் கற்பவர்கள், தாங்கள் வைத்தியர்களாகவோ அல்லது சட்டத்தரணிகளாகவோ ஆகுகின்றார்கள் என்று கூறுவதைப் போன்று, நீங்கள் புதிய உலகிற்கான தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் மாத்திரமே இந்த எண்ணங்களைக் கொண்டிருக்கின்றீர்கள். சத்தியயுகமாகிய, புதிய உலகம் அமரத்துவ பூமி என அழைக்கப்படுகின்றது. இந்நேரத்தில், சத்தியயுகமோ அல்லது தேவர்களின் இராச்சியமோ இல்லை; அது இங்கே இருக்க முடியாது. நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்து, கலியுக இறுதியை அடைந்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். சக்கரம் வேறு எவரது புத்தியிலும் பிரவேசிக்க மாட்டாது. அவர்கள் சத்தியயுகத்தின் கால எல்லையை நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனக் கூறுகின்றார்கள். சக்கரம் உண்மையில் ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒருமுறை சுழல்கின்றது என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டுள்ளீர்கள். மனிதர்கள் 84 பிறவிகளை மாத்திரமே எடுக்கின்றார்கள்; அதற்கான கணக்கு இருக்கின்றது. இந்தத் தேவதர்மம் பிரிவினையற்ற தர்மம் என அழைக்கப்படுகின்றது. பிரிவினையற்ற சமயநூலும் உள்ளது: ஒரேயொரு சமயநூலே உள்ளது. இல்லாவிட்டால், எங்கும் எண்ணற்ற சமயங்களும் எண்ணற்ற சமயநூல்களும். உள்ளன. நீங்கள் ஒருவரே. நீங்கள் ஒருவரிடமிருந்து ஒரு வழிகாட்டலையே பெறுகின்றீர்கள். இதுவே பிரிவினையற்ற வழிகாட்டல் என அழைக்கப்படுகின்றது. நீங்களே பிரிவினையற்ற வழிகாட்டலைப் பெறுகின்றீர்கள். இந்தக் கல்வி தேவர்கள் ஆகுவதற்காகும். இதனாலேயே தந்தை ஞானக்கடல் என்றும், ஞானம் நிறைந்தவர் என்றும் அழைக்கப்படுகின்றார். கடவுள் புதிய உலகிற்காக உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இதை மறக்காதீர்கள். பாடசாலையிலுள்ள மாணவர்கள் தங்களுடைய ஆசிரியரை மறப்பார்களா? இல்லை. வீட்டில் தங்கள் குடும்பத்துடன் வசிப்பவர்கள் ஒரு நல்ல நிலையை அடைவதற்காகவே கற்கின்றார்கள். நீங்களும் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டே முன்னேறுவதற்காகக் கற்கின்றீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் கற்கின்றீர்கள் என்பது உங்கள் இதயங்களில் பிரவேசிக்க வேண்டும். சிவபாபாவும் பாபா, பிரஜாபிதா பிரம்மாவும் பாபாவேயாவார். பிரஜாபிதா பிரம்மா, ஆதிதேவர் என்ற பெயர்கள் மிகவும் பிரபல்யமானவை. காந்திஜி கடந்த காலத்தில் இருந்ததைப் போன்று, அவரும் கடந்த காலத்தில் இருந்தார். அவர்கள் அவரை பாபுஜி (தந்தை) என அழைத்த பொழுதிலும் அவர் அவ்வாறானவர் என அவர்கள் சிந்திப்பதில்லை; அவர்கள் வெறுமனே அவ்வாறு கூறுகின்றார்கள். சிவபாபாவே உண்மையில் அவ்வாறானவர். பிரம்மபாபாவும் அவ்வாறானவரே, அத்துடன் ஒரு லௌகீகத் தந்தையும் உண்மையில் அவ்வாறானவர். எவ்வாறாயினும், அவர்கள் நகரத்தின் மேயரை ‘தந்தை’ என பெயரளவில் மாத்திரம் அழைக்கின்றார்கள் அவர்கள் அனைவரும் போலியானவர்கள், ஆனால் இவரோ உண்மையானவர் ஆவார். பரமாத்மாவாகிய தந்தை வந்து, பிரஜாபிதா மூலம் ஆத்மாக்களைத் தனக்குரியவர்கள் ஆக்குகின்றார். அவர் நிச்சயமாகப் பல குழந்தைகளைக் கொண்டிருக்க வேண்டும். அனைவரும் சிவபாபாவின் குழந்தைகளாவர். அவரை அனைவரும் நினைவுசெய்கின்றார்கள் இருந்தபொழுதிலும், சிலர் அவரை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் இந்த உலகம் ஓர் எண்ணத்தினாலே உருவாக்கப்பட்டது என்று கூறுகின்ற, உறுதியான நாஸ்திகர்களாக இருக்கின்றார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் கற்கின்றீர்கள் என்பதையும், சிவபாபா உங்களுக்கு கற்பிக்கின்றார் என்பதையும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இது இரவுபகலாக நினைவுசெய்யப்பட வேண்டும். இதையே மாயை உங்களை மீண்டும், மீண்டும் மறக்கச் செய்கின்றாள், இதனாலேயே நீங்கள் பாபாவை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் தந்தை, ஆசிரியர், சற்குரு ஆகிய மூவரையும் மறந்து விடுகின்றீர்கள். அவர் ஒரேயொருவரே, ஆனால் நீங்கள் அவரை இ;ன்னமும் மறந்து விடுகின்றீர்கள். இதிலேயே நீங்கள் இராவணனுடன் போரிடுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே! நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். இப்பொழுது தமோபிரதானாகி விட்டீர்கள். நீங்கள் அமைதி தாமத்தில் இருந்தபொழுது, தூய்மையாக இருந்தீர்கள். தூய்மையில்லாது எந்த ஓர் ஆத்மாவும் மேலே இருக்க முடியாது. இதனாலேயே சகல ஆத்மாக்களும் தூய்மையாக்குபவரான தந்தையைக் கூவி அழைக்கின்றார்கள். அனைவரும் தூய்மையற்று, தமோபிரதானாகும் பொழுதே தந்தை வந்து கூறுகின்றார்: நான் உங்களைச் சதோபிரதான் ஆக்குகின்றேன். நீங்கள் அனைவரும் அமைதிதாமத்தில் இருந்தபொழுது, தூய்மையாக இருந்தீர்கள். எந்தத் தூய்மையற்ற ஆத்மாக்களும் அங்கே இருக்க முடியாது. அனைவரும் நிச்சயமாகத் தண்டனை அனுபவித்துத் தூய்மையாக வேண்டும். எவருமே தூய்மையாகாது வீடு திரும்ப முடியாது. அவர்கள் இன்னார் பிரம்ம தத்துவத்துடன் கலந்துவிட்டார் அல்லது இன்னார் ஒளித் தத்துவத்துடன் கலந்து விட்டார் என்று கூறியபொழுதிலும், அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் எண்ணற்ற கருத்துக்களாகும். இது உங்களுடைய பிரிவினையற்ற வழிகாட்டலாகும். ஒரேயொரு தந்தையால் மாத்திரமே உங்களை மனிதர்களிலிருந்து, தேவர்களாக மாற்ற முடியும். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்குக் கற்பிக்க வருகின்றார். முன்னைய கல்பத்தில் நடந்தது போன்று, அவருடைய செயற்பாடு மிகச்சரியாகத் தொடர்கின்றது. இந்த நாடகம் அநாதியாகவே முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. சத்தியயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம், பின்னர் இந்தச் சங்கமயுகம் இருக்கின்றது. தேவதர்மம், இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் ஆகியனவே பிரதான சமயங்கள் ஆகும். அதாவது, அவர்கள் இராச்சியத்தைக் கொண்டிருப்பவர்கள். பிராமணர்களினதோ அல்லது கௌரவர்களினதோ இராச்சியம் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையை மீண்டும் மீண்டும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் லௌகீகப் பிராமணர்களுக்கும் விளங்கப்படுத்த முடியும். பாபா உங்களுக்குப் பல தடவைகள் கூறியுள்ளார்: முதலில் உச்சிக்குடுமிகளான பிராமணர்கள் உள்ளார்;கள். நீங்களே பிரம்மாவின் முதல் வம்சாவளியினர் ஆவீர்கள். பின்னர், பக்தி மார்க்கத்திலே, நீங்களே பூஜிக்கத் தக்கவர்களிலிருந்து பூஜிப்பவர்கள் ஆகுபவர்கள் என்பதை அறிவீர்கள் நீங்கள் இப்பொழுது பூஜிக்கத்தக்கவர்கள் ஆகுகின்றீர்கள். அந்த லௌகீகப் பிராமணர்கள் இல்லறத்தினர்;கள், சந்நியாசிகள் அல்லர். சந்நியாசிகள் ஹத்தயோகிகள்; அவர்களுடைய குடும்பத்தை விட்டுச்செல்ல அவர்கள் தங்களைக் கட்டாயப்படுத்துகின்றார்கள். ஹத்தயோகிகள் பலவிதமான யோகத்தைக் கற்பிக்கின்றார்கள். ஜெய்ப்;பூரில் ஹத்தயோகிகளுக்கான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது, ஆனால் அங்கே இராஜயோகத்துக்கான எந்த ரூபமும் இல்லை. தில்வாலா ஆலயத்தில் மாத்திரமே இராஜயோகத்தின் ரூபங்கள் இருக்கின்றன. அதற்கான அருங்காட்சியகம் (அரளநரஅ) அங்கேயில்லை. ஹத்தயோகத்துக்கான பல அருங்காட்சியங்கள் உள்ளன. பாரதத்தில் மாத்திரமே இராஜயோகத்திற்கான ஆலயங்களைக் கொண்டுள்ளார்கள். இந்த அருங்காட்சியகம் உயிருள்ள ரூபத்திலுள்ளது. நீங்கள் உயிருள்ள ரூபத்தில் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். சுவர்க்கம் எங்கே உள்ளது என மக்கள் அறியமாட்டார்கள். தில்வாலா ஆலயத்தில் உங்களைத் தரையிலே தபஸ்யா செய்வதாகக் காட்டியுள்ளார்கள். அது உங்களின் முழுமையான ஞாபகார்த்தமாகும். சுவர்க்கம் உங்களின் மேலேயே சித்தரிக்கப்பட்டுள்ளது. மக்கள் சுவர்க்கம் மேலேயுள்ளது என நம்புகின்றார்கள். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. அரைக் கல்பத்துக்குப் பின்னர், சுவர்க்கம் கீழே சென்றுவிடும், பின்னர், கல்பத்தின் இறுதியில், சுவர்க்கம் மேலே வரும். எவருமே அதன் ஆயுட்காலம் எவ்வளவு என அறியமாட்டார்கள். தந்தை உங்களுக்கு முழுச் சக்கரத்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். சக்கரம் முடிவுக்கு வருகின்றபொழுது, நீங்கள் ஞானத்தைப் பெற்று, மேலே செல்கின்றீர்கள். பின்னர் சக்கரம் புதிதாக ஆரம்பமாகுகின்றது. நீங்கள் இதை உங்கள் புத்தியில் மீண்டும் மீண்டும் சுழற்ற வேண்டும். அந்த மக்கள் ஞானத்தைக் கற்கின்றபொழுது, அவர்களுடைய புத்தியில் அவர்களின் புத்தகம் போன்றவை உள்ளன, இல்லையா? இதுவும் ஒரு கல்வியாகும். உங்களை இதனால் நிறைத்து வைத்திருங்கள். நீங்கள் அதை மறக்கக்கூடாது. வயதானவர்கள், இளையவர்கள், குழந்தைகள் அனைவருக்கும் இந்தக் கல்வியைக் கற்பதற்கு உரிமை உள்ளது. நீங்கள் அல்பாவை அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அல்பாவை அறிந்தவுடன், தந்தையின் சொத்து உங்கள் புத்தியில் பிரவேசிக்கும். மிருகங்களும்கூட தங்களுடைய குட்டிகளைத் தங்கள் புத்தியில் வைத்திருக்கின்றன. அவை காட்டுக்குள் செல்கின்ற பொழுதும் அவை தொடர்ந்தும், தங்களுடைய வீட்டையும், குட்டிகளையும் நினைவுசெய்கின்றன. அவை இயல்பாகவே தங்கள் குட்டிகளைக் கண்டு கொள்கின்றன. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, சதா என்னை நினைவுசெய்வதுடன், நீங்கள் எங்கிருந்து உங்கள் பாகங்களை நடிக்க வந்தீர்களோ, அந்த வீட்டையும் நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்கள் தங்களுடைய வீட்டை நேசிக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய வீட்டை அதிகளவு நினைவுசெய்கின்றார்கள், ஆனால் அவர்கள் திரும்பிச் செல்வதற்கான பாதையை மறந்து விட்டார்கள். நீங்கள் வெகு தொலைவில் வசிக்கின்றீர்கள் என்பது உங்கள் புத்தியிலுள்ளது. எவ்வாறாயினும், எவ்வாறு நீங்கள் அங்கு செல்லலாம், அல்லது ஏன் உங்களால் அங்கு செல்ல முடியாதுள்ளது என எவருமே அறியமாட்டார்கள். இதனாலேயே இந்தப் புதிர் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது என பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் எந்த வழியால் சென்றாலும், வெளியேறும் பாதை மூடப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தின் பின்னர், சுவர்க்க வாயில் திறக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைவரும் இந்த மரணபூமியை விட்டுச்செல்வார்கள். சகல மனிதர்;களும் அங்கே சென்று தங்கள் சமயங்களுக்கு ஏற்பவும், தங்கள் பாகங்களுக்கு ஏற்பவும் வரிசைக்கிரமமாக இருப்பார்கள். இந்த விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியிலுள்ளன. மக்கள் பிரம்ம தத்துவத்துக்குச் செல்வதற்காகப் பெரும் பிரயத்தனம் செய்;கின்றார்கள். நீங்கள் சத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். ஓர் ஆத்மா அவரது உடலை விட்டுச் செல்லும் பொழுது, எந்தச் சத்தமும் இருப்பதில்லை. அது உங்கள் இனிய வீடு என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பின்னர் தேவர்களின் பிரிவினையற்ற இராச்சியமாகிய, இனிய இராச்சியம் இருக்கின்றது. தந்தை வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு முழு ஞானத்தையும் விளங்கப்படுத்துகின்றார், அதன் மூலம் பின்னர் பக்தி மார்க்கத்தில் சமயநூல்கள் உருவாக்கப்பட்டன. நீங்கள் அந்தச் சமயநூல்களை போன்றவற்றை இப்பொழுது கற்க வேண்டியதில்லை. வயதான தாய்மார்கள் அந்தப் பாடசாலைகளில் கற்பதில்லை. அனைவரும் இங்கேயே கற்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அமரத்துவபூமியில் தேவர்கள் ஆகுகின்றீர்கள். அங்கே அவதூறான அத்தகைய வார்த்தைகள் பேசப்படுவதில்லை. சுவர்க்கம் கடந்த காலத்தில் இருந்தது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். சுவர்க்கத்தின் புகழ் உள்ளது. அவர்கள் பல ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். ‘முன்னர் இலக்ஷ்மி, நாராயணன் எப்பொழுது இருந்தார்கள்?’ என அவர்களிடம் வினவுங்கள். அவர்கள் முற்றிலும் எதையுமே அறிய மாட்டார்கள். நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். “ஓம்” என்பதன் அர்த்தம் “ஹம்சோ”வின் அர்த்தத்திலிருந்து வேறுபட்டது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் “ஓம்” என்பதன் அர்த்தத்தையும், “ஹம்சோ” என்பதன் அர்த்தத்தையும் ஒன்றாக்கி விட்டார்;கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதிதாம வாசிகள். உங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே நீங்கள் இங்கே கீழிறங்கி வந்துள்ளீர்கள். நீங்கள் தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகுகின்றீர்கள். “ஓம்” என்றால் “நான் ஓர் ஆத்மா” என்று அர்த்தம் ஆகும். இதில் அதிகளவு வேறுபாடு இருக்கின்றது! அவர்கள் இரண்டினது அர்த்தத்தையும் ஒன்றாக்கி உள்ளார்கள். இந்த விடயங்கள் புத்தியால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். முழமையாகப் புரிந்துகொள்ளாதவர்கள் சதாகாலமும் தொடர்ந்தும் தூங்கி விழுகின்றார்;கள். ஒருவர் வருமானத்தைச் சம்பாதிக்கும்பொழுது என்றுமே தூங்கி விழமாட்டார். அந்த வருமானம் தற்காலிகமானது. இந்த வருமானம் அரைக்கல்பத்திற்கு உரியது. எவ்வாறாயினும், உங்கள் புத்தி வேறு திசைகளில் அலைபாய்கின்ற பொழுது, நீங்கள் களைப்படைந்து, தொடர்ந்தும் கொட்டாவி விடுகின்றீர்கள். நீங்கள் இங்கே உங்கள் கண்களை மூடியவாறு அமரக்கூடாது. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், சரீரங்கள் அழியக்கூடியவை என்பதை நீங்கள் அறிவீர்கள். கலியுக நரகவாசிகள் அனைத்தையும் பார்க்கும் விதத்திற்கும், நீங்கள் பார்க்கும் விதத்திற்கும் இடையில் இரவுக்கும், பகலுக்கும் இடையிலுள்ள வித்தியாசமுள்ளது. ஆத்மாவாகிய நான் தந்தையுடன் கற்கின்றேன். ஞானக்கடலாகிய, பரமாத்மா, பரமதந்தை, எங்களுக்குக் கற்பிக்க வருகின்றார் என எவருமே அறியமாட்டார்கள். ஆத்மாவாகிய நான் அவரைச் செவிமடுக்கின்றேன். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யும் பொழுது மாத்திரமே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் புத்தியும் மேலே செல்லும். சிவபாபா இந்த ஞானத்தை எங்களுடன் பேசுகின்றார். இதற்கு ஒரு மிகவும் சீர்திருந்திய புத்தி தேவை. பாபா உங்கள் புத்தியைச் சீர்திருத்தும் வழியைக் காட்டுகின்றார். உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதன் மூலம், நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்வீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதவேண்டிய காரணம் என்னவென்றால், அப்பொழுது உங்களால் தந்தையை நினைவுசெய்வதுடன், முழுக்கல்பத்திலும் துண்டிக்கப்பட்டிருந்த அந்த உறவுமுறையையும் உருவாக்க முடியும். அங்கே வெகுமதியான சந்தோஷம், சந்தோஷம் மாத்திரமே இருக்கின்றது; அங்கே துன்பம் என்ற கேள்வியே இல்லை. அது சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தையாகிய, சுவர்க்கக் கடவுளே உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் அவ்வாறான தந்தையை மறந்து விடுகின்றீர்கள்! தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கின்றார். பல குழந்தைகள் மார்வாரி ஐhதியினரால் தத்தெடுக்கப்படுகின்றார்கள். அவர்கள் செல்வந்தர்களின் மடிக்குச் செல்வதால், மிகவும் சந்தோஷம் அடைகின்றார்கள். ஒருபொழுதும் செல்வந்தர்களின் குழந்தைகள் ஏழைகளால் தத்தெடுக்கப்பட மாட்டார்கள். நீங்கள் பிரஐhபிதா பிரம்மாவின் குழந்தைகள். ஆகையினால் நிச்சயமாக நீங்கள் வாய்வழித்தோன்றல்கள் ஆவீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் வாய்வழித்தோன்றல்கள். அந்தப் படைப்புக்கள் நஞ்சின் மூலம் பிறந்தவர்கள். நீங்கள் இதில் வித்தியாசத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது மாத்திரமே, அவர்களும் வாய்வழித்தோன்றல்கள் ஆகமுடியும். இது ஒரு தத்தெடுத்தலாகும். ஒரு கணவன், தனது மனைவி தனக்கு உரியவர் எனக் கருதுகின்றார். மனைவி நஞ்சின் மூலமாகவா அல்லது வாயின் மூலமாகவா உருவாகினார்? மனைவி வாய் மூலமான படைப்பு ஆவார். பின்னர், அவர்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றபொழுது, அந்தப் படைப்பு நஞ்சின் மூலம் பிறக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் வாய்வழித் தோன்றல்கள். “நீங்கள் என்னுடையவர்” என்று கூறுவதனால், நீங்கள் எனக்குரியவர்கள் ஆகுகின்றீர்கள், இல்லையா? “இவர்கள் எனது குழந்தைகள்” என்று கூறுவதனால், போதை உயர்வடைகின்றது. ஆகவே, நீங்கள் அனைவரும் வாய்வழித்தோன்றல்கள். ஆத்மாக்கள் வாய்வழித்தோன்றல்கள் அல்லர். ஆத்மாக்கள் அநாதியானவர்களும், அழிவற்றவர்களும் ஆவார்கள். எவ்வாறு மனித உலகம் மாற்றப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பல கருத்துக்களைப் பெற்றுள்ளீர்கள். இருந்த பொழுதிலும் பாபா கூறுகின்றார்: உங்களால் எதையும் கிரகிக்கவோ அல்லது பேசவோ முடியாவிட்டாலும் பரவாயில்லை, தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்களால் சொற்பொழிவுகள் ஆற்றுபவர்களை விடவும் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியும். சில நேரங்களில் சொற்பொழிவுகள் ஆற்றுபவர்களும் புயல்களினால் வீழ்ந்து விடுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் விழாமல் தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்திருந்தால், அவர்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும். விகாரத்தில் ஈடுபடுபவர்களே, தங்;கள் எலும்புகள் அனைத்தையும் உடைத்துக் கொள்கின்றார்கள், ஏனெனில் அது ஐந்தாம் மாடியிலிருந்து வீழ்வது போன்றதாகும். சரீர உணர்வே ஐந்தாம் மாடியாகும், காமம் நான்காவது மாடியாகும், இவ்வாறே தொடர்கின்றது. தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரியாகும். சில குழந்தைகள் எழுதுகின்றார்கள்: பாபா, நான் வீழ்ந்து விட்டேன். கோபத்தைப் பற்றி, அவர்கள் வீழ்ந்து விட்டதாகக் கூறப்படுவதில்லை. ஒருவர் தனது முகத்தை அவலட்சணமாக்கும் பொழுது, அவர் தனக்கே தீங்கு விளைவிக்கின்றார். அவரால் காமமே கொடிய எதிரி என மற்றவர்களுக்குக் கூறமுடியாது. பாபா மீண்டும், மீண்டும் கூறுகின்றார்: குற்றப் பார்வை பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். சத்தியயுகத்தில் துகிலுரிதல் என்ற கேள்வியில்லை. அங்கு எந்தவிதமான குற்றப் பார்வையுமில்லை. கண்கள் குற்றமற்றவை ஆகுகின்றன. அது நாகரீகமான இராச்சியமாகும். இந்நேரத்தில் உலகம் குற்றமுடையது. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்குத் தொடர்கின்ற, குற்றமற்ற பார்வையைப் பெற்றுள்ளீர்கள். அங்கு எவருமே குற்றவாளிகளாக மாட்டார்கள். தந்தை பிரதான விடயத்தை விளங்கப்;படுத்துகின்றார்: தந்தையையும், 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவுசெய்யுங்கள். ஸ்ரீ நாராயணனாக இருந்தவர், இறுதியில் பாக்கிய இரதமாக ஆகுவதும் ஓர் அற்புதமே. தந்தை அவரில் பிரவேசிக்கின்றார், ஆகவே, அவர் மிகவும் பாக்கியசாலி ஆகுகின்றார். எவ்வாறு பிரம்மா, விஷ்ணு ஆகுகின்றார், பின்னர் எவ்வாறு விஷ்ணு, பிரம்மா ஆகுகின்றார் என்ற 84 பிறவிகளின் வரலாறு உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் நினைவு மூலம் உங்களின் புத்தியைச் சீர்திருத்துங்கள். எப்பொழுதும் உங்கள் புத்தியை இந்த ஞானத்தினால் நிறைத்து வைத்திருங்கள். சதா தந்தையையும், வீட்டையும் நினைவுசெய்வதுடன், மற்றவர்களுக்கும் நினைவூட்டுங்கள்.
2. இந்த இறுதிப்பிறவியில், உங்கள் குற்றப்பார்வையை முடித்து, அவற்றைக் குற்றமற்றதாக்குங்கள். குற்றப்பார்வை பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.ஆசீர்வாதம்:
நினைவினதும் சேவையினதும் சமநிலையை பேணுவதன் மூலம் ஏறும் ஸ்திதியை அனுபவம் செய்யும் ஓர் அரசன் ஆகுவீர்களாக.நினைவினதும் சேவையினதும் சமநிலையை பேணுவதன் மூலம், நீங்கள் தொடர்ந்தும் ஒவ்வொரு அடியிலும் ஏறும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். உங்கள் ஒவ்வொரு எண்ணத்திலும் சேவை இருக்கும் போது, நீங்கள் வீணானவற்றிலிருந்து விடுபடுவீர்கள். சேவையை உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக்குங்கள். ஒரு சரீரத்திற்கு சகல புலனங்கங்களும் அவசியமானது போலவே, பிராமண வாழ்க்கையில் சேவை ஒரு விசேட புலனங்கமாகும். சேவை செய்வதற்கு பல வாய்ப்புகளைக் கொண்டிருப்பதும், சேவை செய்வதற்கான ஓர் இடம் அமைவதும், அதைச் செய்வதற்கான சகவாசம் கிடைப்பதும் பாக்கியத்தின் அடையாளமாகும். சேவை செய்வதற்கான அத்தகைய பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்பவர்கள் அரசர்கள் ஆகுகிறார்கள்.
சுலோகம்:
அன்பென்ற கடவுளின் பராமரிப்பின் வடிவமானது இலகுயோகி வாழ்க்கையாகும்.