24.08.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் 84 பிறவிகளை நிறைவுசெய்து, இப்பொழுது வீடு திரும்ப உள்ளீர்கள் என்ற சந்தோஷத்தைச் சதா பேணுங்கள். கர்ம வேதனை முடிவதற்கு இன்;னமும் வெகுசில நாட்களே எஞ்சியுள்ளன.

கேள்வி:
பாவச்செயல்களை வெற்றிகொள்ளவுள்ள குழந்தைகளான நீங்கள், பாவச் செயல்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, எவ்விடயத்தில் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
நீங்கள் என்றுமே சரீர உணர்வுடையவர் ஆகாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள். சரீர உணர்வே சகல பாவச் செயல்களுக்கும் வேராகும். ஆகவே மீண்டும் மீண்டும் ஆத்ம உணர்வில் நிலைத்திருந்து தந்தையை நினைவுசெய்யுங்கள். நல்ல, தீய செயல்களுக்கான பலனை நீங்கள் நிச்சயமாகப் பெறுகின்றீர்கள். இறுதியில் உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தும். ஆகையால், உங்களுடைய இப்பிறவியின் பாவங்களின் சுமையை இலேசாக்குவதற்குத் தந்தையிடம் அனைத்தையும் நேர்மையாகக் கூறுங்கள்.

ஓம் சாந்தி.
நினைவுசெய்தலே மாபெரும் இலக்காகும். பலரும் ஞானத்தைச் செவிமடுப்பதில் மாத்திரமே அதிகளவு ஆர்வம் காட்டுகின்றார்கள். இந்த ஞானத்தைப் புரிந்துகொள்வது மிகவும் இலகுவாகும். நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைப் புரிந்துகொண்டு சுயதரிசன சக்கரதாரிகள் ஆகவேண்டும்; அதனை விட மேலதிகமாக இதில் எதுவும் இல்லை. நீங்கள் அனைவருமே சுயதரிசனச் சக்கரதாரிகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்;கின்றீர்கள். கிருஷ்ணர் செய்வதாக அவர்கள் காட்டியுள்ளதைப்; போல், நீங்கள் சக்கரத்தால் எவரது கழுத்தையும் வெட்டுவதில்லை. இலக்ஷ்மியும் நாராயணனுமே விஷ்ணுவின் இரட்டை வடிவங்கள். அவர்களிடம் சுயதரிசனச் சக்கரம் உள்ளதா? எனவே, கிருஷ்ணரை அவர்கள் ஏன் ஒரு சக்கரத்துடன் காட்டுகிறார்கள்? கிருஷ்ணரின் அத்தகைய பல படங்களைக் கொண்ட ஒரு சஞ்சிகை உள்ளது. உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கவே தந்தை வருகின்றார்; அவர் அசுரர்களின் கழுத்தை ஒரு சக்கரத்தினால் வெட்டுவதில்லை. அசுர சுபாவம் நிறைந்தவரே அசுரர் ஆவர். இல்லாவிடின் மனிதர்கள் மனிதர்களே. அவர் சுயதரிசனச் சக்கரத்தைப் பயன்படுத்தி அனைவரையும் கொல்கின்றார் என்றில்லை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் உருவாக்கியுள்ள பல்வேறு படங்கள் அனைத்தையும் பாருங்கள். இரவிற்கும் பகலிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது. நீங்கள் அனைவருமே நடிகர்கள் என்பதால், குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகச் சக்கரத்தையும், முழு நாடகத்தையும் அறிந்திருக்க வேண்டும். அந்த எல்லைக்குட்ட நடிகர்களுக்குத் தமது நாடகங்களைத் தெரியும். இந்த நாடகம் எல்லையற்றது. இதனை விபரமாக அறிந்துகொள்ள முடியாது. அந்த நாடகங்கள் இரண்டு மணித்தியாலங்களுக்கு நீடிக்கின்றன. ஒவ்வொருவரின் பாகத்தினது விபரங்களும்; அறியப்பட்டுள்ளன. இங்கே, இது 84 பிறவிகளை அறிந்திருப்பதற்கான விடயமாகும். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நான் பிரம்மாவின் இரதத்திற்குள் பிரவேசிக்கின்றேன். பிரம்மாவின் 84 பிறவிகளின் கதையும் இருக்க வேண்டும். இவ்விடயங்கள் மனிதர்களின் புத்திக்குள் பிரவேசிக்க முடியாது. அவர்களுக்கு 8.4 மில்லியன் பிறவிகளா அல்லது 84 பிறவிகள் உள்ளனவா என்பது கூடத் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களது 84 பிறவிகளின் கதையை உங்களுக்குக் கூறுகின்றேன். அது 8.4 மில்லியன் பிறவிகளாயின், அதனைக் கூறுவதற்குப் பல வருடங்கள் எடுக்கும். அனைத்தையும் ஒரு விநாடியில் நீங்கள் அறிவீர்கள். இது 84 பிறவிகளுக்கான கதையாகும். நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளைச் சுற்றி வந்தோம்? அது 8.4 மில்லியன் பிறவிகளாயின், அதனை ஒரு விநாடியில் புரிந்து கொள்வது சாத்தியமில்லை. 8.4 மில்லியன் பிறவிகள் இருப்பதில்லை. நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தை நிறைவுசெய்து, இப்பொழுது வீடு திரும்ப உள்ளீர்கள் என்ற சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும்;. கர்மவேதனை முடிவதற்கு இன்;னமும் வெகுசில நாட்களே எஞ்சியுள்ளன. உங்கள் பாவங்களை எரித்து, எவ்வாறு உங்கள் கர்மாதீத ஸ்திதியை நீங்கள் அடையலாம் என்பதற்கான வழி உங்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. தந்தை விளங்கப்படுத்தினார்: இப்பிறவியில் நீங்கள் செய்துள்ள பாவங்கள் அனைத்தையும் பாபாவிற்கு எழுதிக் கொடுத்தால், உங்கள் சுமை இலேசாக்கப்படும். உங்கள் பல பிறவிகளின் பாவங்களைப் பற்றி உங்களில் எவராலுமே எழுத முடியாது. பாவச் செயல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இராவண இராச்சியம் ஆரம்பித்த நாள் முதல் செயல்கள் பாவகரமானவையாக உள்ளன. சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையானவை. கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்குச் செயல்கள், தீய செயல்கள், நடுநிலைச் செயல்;களின் தத்துவத்தை விளங்கப்படுத்துகின்றேன். பாவத்தை வென்றவர்களின் யுகம், இலக்ஷ்மி நாராயணனுடன் ஆரம்பமாகுகின்றது. ஏணிப் படத்தில் இது மிகவும் தெளிவாக உள்ளது. இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. சூரிய, சந்திர வம்ச இராச்சியங்களின் இரகசியங்களையும், நீங்கள் அவர்களே என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் பல்-ரூப வடிவத்தின் பல படங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தையைத் தவிர வேறெவராலும் அதனை விளங்கப்படுத்த முடியாது. பிரம்மாவிற்குக் கற்பிப்பதற்கு அவருக்கு மேல் ஒருவர் இருப்பார், அல்லவா? குரு ஒருவர் அவருக்குக் கற்பித்திருந்தால், அவரது ஒரேயொரு சிஷ்யர் மாத்திரம் இருந்திருக்க மாட்டார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் தூய்மையானவரிலிருந்து தூய்மையற்றவராகவும், தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராகவும் ஆக வேண்டும். இதுவும் நாடகத்;தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பல தடவைகள் இச்சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்தும் அதனைக்; கடந்தும் செல்வீர்கள். நீங்கள் சகல துறையிலும் வல்லமை பெற்ற நடிகர்கள். வேறு எவரும் ஆரம்பத்;திலிருந்து இறுதிவரை ஒரு பாகத்தை நடிப்பதில்லை. தந்தை உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார்: ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் இன்ன இன்ன நேரத்தில் வருகின்றார்கள் என்பதையும், ஆனால் நீங்கள் சகல துறைப் பாகங்களையும் பெற்றுள்ளீர்கள் என்பதையும் அறிவீர்கள். சத்தியயுகத்தில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்;கள் என நீங்கள் கூறமாட்டீர்கள். அவர்கள் துவாபரயுகத்தின் மத்தியிலேயே வருகின்றார்கள். இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களிடம் மாத்திரமே உள்ளது. உங்களால் அதனைப் பிறருக்கு விளங்கப்படுத்த முடியும். வேறு எவருக்கும் உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியாது. அவர்களுக்குப் படைப்பவரைத் தெரியாதபொழுது, எவ்வாறு படைப்பை அறிந்திருக்க முடியும்? இந்தத் தர்மம் நிறைந்த விடயங்களை அச்சடித்து ஆகாய விமானத்திலிருந்து எங்கும் போடுங்கள். இக்கருத்துக்களையும், தலைப்புகளையும் பற்றி அமர்ந்திருந்து எழுதுங்கள். தமக்குச் செய்வதற்குச் சேவை இல்லை என்று சில குழந்தைகள் கூறுகின்றார்;கள். பாபா கூறுகின்றார்: அதிகளவு சேவை செய்வதற்குள்ளது. நீங்கள் இங்கே ஏகாந்தமாக அமர்ந்திருந்து, இவ்வேலையைச் செய்ய முடியும். நீங்கள் பெரிய ஸ்தாபனங்கள், கீதைப் பாடசாலைகள் போன்றவற்றை விழிப்படையச் செய்ய வேண்டும். நீங்கள் அனைவருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும்: இதுவே மிகவும் மேன்மையான சங்கமயுகம். விவேகமானவர்கள் விரைவில் புரிந்துகொள்;வார்;கள். புதிய உலகின் ஸ்தாபனையும், பழைய உலகின் விநாசமும் சங்கமயுகத்தில் நிச்சயமாக இடம்பெற வேண்டும். சத்திய யுகத்தில் மனிதர்கள் மேன்மையானவர்கள். இங்கே மனிதர்கள் தூய்மையற்றவர்களாகவும், அசுர சுபாவம் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். கும்ப மேலாவில் நீராடுவதற்காகப் பலரும் செல்வதையும் பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அங்கே அவர்கள் ஏன் நீராடுவதற்காகச் செல்கின்றார்கள்? ஏனெனில் அவர்கள் தூய்மையாக வேண்டும் என விரும்புகின்றார்கள். மக்கள் எங்கெல்லாம் நீராடச் செல்கின்றார்களோ, அங்கெல்லாம் சென்று சேவை செய்யுங்கள். நீர் தூய்மையாக்குபவர் அல்ல என்பதை மக்களுக்;கு விளங்கப்படுத்துங்கள். உங்களிடம் படங்களும் உள்ளன. கீதைப் பாடசாலைகளுக்குச் சென்று இந்தத் துண்டுப் பிரசுரங்களை விநியோகியுங்கள். சில குழந்தைகள் சேவை வேண்டும் என்று கேட்கின்றார்கள். கீதையின் கடவுள் பரமாத்மாவான பரமதந்தை சிவனே அன்றி, ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல என்பதை எழுதுங்கள். அவரின் (ஸ்ரீ கிருஷ்ணரின்) வாழ்க்கை வரலாற்றின் புகழையும், சிவபாபாவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதுங்கள். அதன்பின்னர் அவர்களே தீர்மானிக்கட்டும். அத்துடன் தூய்மையாக்குபவர் யார் என்ற கருத்திலும் எழுதுங்கள். பின்னர் சிவனிற்கும், சங்கரருக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டி, சிவன் எவ்வாறு சங்கரரில் இருந்து வேறுபட்டவர் என்பதையும் விளங்கப்படுத்துங்கள். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: சக்கரம் 5000 வருடங்கள் கொண்டது. மக்கள் 84 பிறவிகளையே எடுக்கின்றார்கள், 8.4 மில்லியன் பிறவிகளை அல்ல. இந்தப் பிரதான விடயங்களைச் சுருக்கமாக நீங்கள் எழுதினால் அவற்றை நீங்கள் விமானத்தின் மூலம் எங்கும் போட முடியும். அத்துடன் அவற்றைப் பயன்படுத்தி உங்களால் விளங்கப்படுத்தவும் முடியும். சக்கரத்தின் படத்தில் இன்ன இன்ன சமயம் இன்ன இன்ன காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டது என்பது தெளிவாக உள்ளது. இச்சக்கரத்தின் படத்தையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஞானம் முழுவதையும் கொடுக்கக்கூடிய, 12 பிரதான படங்களையும் கொண்ட கலண்டர்களை அச்சடித்தால், சேவை இலகுவாக இடம்பெற முடியும். இப்படங்கள் மிகவும் அவசியமானவை. எந்தப் படங்களை உருவாக்க வேண்டும், அதில் என்ன கருத்துக்களை எழுத வேண்டும் என்று அமர்ந்திருந்து எழுதுங்கள். நீங்கள் இப்பழைய உலகை மறைமுகமாக மாற்றுகின்றீர்கள். நீங்களே எவரும் அறியாத போராளிகள்; உங்களை எவரும் அறியார். பாபா மறைமுகமானவர், ஞானமும் மறைமுகமானது. அதிலிருந்து எச்சமயநூலும் உருவாக்கப்படுவதில்லை. ஏனைய சமய ஸ்தாபகர்கள் தங்கள் பைபிள் போன்றவற்றை அச்சடித்துள்ளார்கள். அதனையே மக்கள் தொடர்ந்தும் வாசிக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தமக்கென ஒரு சொந்தச் சமயநூலை அச்சடித்துள்ளார்கள். உங்களுடையது பக்தி மார்க்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அது தற்பொழுது அச்சடிக்கப்படுவதில்லை. ஏனெனில், சமயநூல்கள் போன்றன அனைத்தும் இப்பொழுது அழிவடைய உள்ளன. இந்த நேரத்தில், உங்கள் புத்தியில் நினைவைக் கொண்டிருக்க வேண்டும். தந்தையும் தனது புத்தியில் ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். அவர் சமயநூல் போன்ற எதையும் கற்பதில்லை. அவர் ஞானம் நிறைந்தவர். ‘ஞானம் நிறைந்தவர்’ என்றால் ஒவ்வொருவரின் இதயத்திலும் என்ன உள்ளது என்பதை அறிந்திருப்பவர் எனவும், கடவுளால் அனைத்தையும் பார்க்க முடிவதாலேயே செயல்களுக்கான பலனைக் கொடுக்கின்றார் என்றும் மக்கள் நினைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்தில் நீங்கள் என்னனென்ன பாவங்களைச் செய்கின்றீர்களோ, அவற்றிற்கான தண்டனை தொடர்ந்தும் உள்ளது. நீங்கள் நிச்சயமாக நல்ல, தீய செயல்களுக்கான பலனைப் பெற வேண்டும். இதனைப் பற்றி எங்கும் எழுதப்படவில்லை. தமது செயல்களுக்கான பலனைத் தாம் நிச்சயமாக அடுத்த பிறவியில் பெறுவார்கள் என்பதை மனிதர்கள் புரிந்துகொள்கின்றார்கள். அவர்களின் இறுதிக் கணத்தில், அவர்கள் செய்துள்ள பல பாவங்களையிட்டு அவர்களின் மனச்சாட்சி அவர்களைப் பெருமளவு உறுத்துகின்றது; அவர்கள் அனைத்தையும் நினைவுசெய்கிறார்கள். உங்கள் செயல்களைப் போன்றே, உங்கள் பிறவியும் இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது பாவத்தை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். ஆகையால் நீங்கள் அத்தகைய பாவங்களைச் செய்யக்கூடாது. சரீர உணர்வுடையவர் ஆகுவதே மிகப்பெரிய விகாரமாகும். ஆத்ம உணர்வுடையவர்களாகி, தந்தையை நினைவுசெய்யுங்கள் என்றே பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். காம வாளைப் பயன்படுத்துதலே கொடிய பாவம். அதுவே அதன் ஆரம்பம் முதல் மத்தியினூடாக, இறுதிவரை துன்பத்தை விளைவிக்கின்றது. ஆகையாலேயே சந்நியாசிகள் சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றது என்று கூறுகின்றார்கள். அங்கே துன்பம் என்ற குறிப்பே இருக்க மாட்டாது. இங்கோ, துன்பம், துன்பம் மாத்திரமே உள்ளது. ஆகையாலேயே சந்நியாசிகள் ஆர்வமின்மையைக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் காட்டிற்குச் செல்கின்றார்கள். அவர்களின் ஆர்வமின்மை எல்லைக்குட்பட்டது, ஆனால் உங்களது ஆர்வமின்மையோ எல்லையற்றது. இது ஓர் அழுக்கான உலகம். அனைவரும் கூறுகின்;றார்கள்: பாபா, வந்து எங்கள் துன்பத்தை அகற்றி, எங்களுக்குச் சந்தோஷத்தை அருளுங்கள். தந்தை மாத்திரமே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். புதிய உலகில் தேவர்களின் இராச்சியம் உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். அங்கே எவ்விதமான துன்பமும் இருக்கவில்லை. ஒருவர் தமது சரீரத்தை நீக்கும்பொழுது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என்று மக்கள் கூறியபொழுதிலும், தாம் நரகத்தில் உள்ளோம் என்பதையோ அல்லது தாம் மரணிக்கும்பொழுது, சுவர்க்கத்திற்குச் செல்லலாம் என்பதையோ நம்புவதில்லை. மரணித்தவர் சுவர்க்கத்திற்குச் சென்றாரா அல்லது இங்கே நரகத்திற்கே மீண்டும் வந்தாரா? அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. மூன்று தந்தையினரது இரகசியத்தையும் நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்தலாம். அனைவரும் லௌகீகத் தந்தை, பரலோகத் தந்தை ஆகிய இரு தந்தையினரைப் பற்றிப் புரிந்துகொள்கின்றார்கள். மூன்றாமவர் அலௌகீக பிரஜாபிதா பிரம்மா, அவர் சங்கமயுகத்திலேயே உள்ளார். பிராமணர்களும் தேவைப்படுகின்றார்கள். அந்தப் பிராமணர்கள் பிரம்மாவின் வாயினூடாகப் பிறந்த படைப்பு இல்லை. பிரம்மா இருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்வதால், ‘தேவர்களாக ஆகப்போகின்ற பிராமணர்களுக்கு வந்தனம்’ என்று அவர்கள் கூறுகின்றார்கள். தாம் யாரையிட்டு இவ்வாறு கூறுகின்றோம் என்பதையோ, எந்தப் பிராமணர்களைத் தாம் குறிப்பிடுகின்றோம் என்பதையோ அவர்கள் அறியார்கள். நீங்கள் அதிமேன்மையான சங்கமயுகத்திற்குரிய பிராமணர்கள்; அவர்கள் கலியுகத்திற்கு உரியவர்கள். இதுவே நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாறுகின்ற அதிமேன்மையான சங்கமயுகமாகும். தேவ தர்மம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இக் கருத்துக்கள் அனைத்தையும் கிரகித்த பின்னர் சேவை செய்ய வேண்டும். சரீரத்தைப் பிரிந்து சென்ற ஆத்மாக்களை வழிபட்டு அவர்களுக்கு உணவு படைக்கும்பொழுது, அவர்கள் ஒரு பிராமணப் புரோகிதரை வரவழைக்கின்றார்கள். நீங்கள் அவர்களுடன் உரையாடிய பின்னர், அவர்களிடம் கூறுங்கள்: ‘எங்களால் உங்களை உண்மையான பிராமணர்கள் ஆக்க முடியும்’. இது மரணித்த ஆத்மாக்களுக்கு உணவு படைப்பதற்கான விசேட மாதமாகும். இதனைச் சாதுரியமாகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பிரம்மகுமாரிகளிடம் சென்ற பின்னர் அவர்கள் அனைத்தையும் நிறுத்தி விடுகின்றார்கள் என்று கூறப்படும். நீங்கள் எவரும் குழப்பமடையும் வகையில் எதனையும் செய்யக்கூடாது. நீங்கள் இந்த ஞானத்தைச் சாதுரியமாகக் கொடுக்க வேண்டும். அந்த பிராமணர்கள் நிச்சயமாக வருவார்கள். அப்பொழுதே உங்களால் இந்த ஞானத்தை அவர்களுக்குக் கொடுக்க முடியும். இந்த மாதத்தில் நீங்கள் லௌகீகப் பிராமணர்களுக்கு அதிகளவில் சேவை செய்யலாம். அவர்களிடம் கூறுங்கள்: ‘பிராமணர்களாகிய நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், யார் பிராமண தர்மத்தை ஸ்தாபித்தது என்று எங்களுக்குக் கூறுங்கள்” வீட்டில் இருக்கும்பொழுதே உங்களால் அவர்களுக்கு நன்மையளிக்க முடியும். அமர்நாத்திற்கு யாத்திரை செல்பவர்களால், எழுதப்பட்டவற்றிலிருந்து அதிகளவு புரிந்துகொள்ள முடியாது. அங்கே அமர்ந்திருந்து அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: நாங்கள் அமர்நாத்தைப் பற்றிய உண்மைக் கதையை உங்களுக்குக் கூறப் போகின்றோம். ஒரேயொருவரே அமர்நாத் என்று அழைக்கப்படுகின்றார். அமர்நாத் என்றால் அமரத்துவமான உலகை ஸ்தாபிப்பவர் என்று அர்த்தமாகும். அந்த உலகம் சத்தியயுகமாகும். இவ்வாறாக அவர்களுக்குச் சேவை செய்யுங்கள். அங்கே நீங்கள் நடந்தே செல்ல வேண்டும். அங்கு சென்று நல்ல, பிரபல்யமானவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். சந்நியாசிகளுக்கும் நீங்கள் இந்த ஞானத்தைக் கொடுக்கலாம். நீங்கள் முழு உலகிற்கும் நன்மை செய்பவர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், முழு உலகிற்கும் நன்மை செய்கின்றீர்கள் என்ற போதையை உங்கள் புத்தி கொண்டிருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், ஏகாந்தமாக அமர்ந்திருந்து ஞானத்தின் நல்ல கருத்துக்களைக் கடையுங்கள். பின்னர் அவற்றைப் பற்றி எழுதுங்கள். அனைவருக்கும் செய்தியை எவ்வாறு கொடுத்து அவர்களுக்கு நன்மை ஏற்படுத்தலாம் என்பதற்கான வழிகளைப் பற்றிச் சிந்தியுங்கள்.

2. பாவச்செயல்களைச் செய்வதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, ஆத்ம உணர்வில் இருந்து தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் இனிமேலும் பாவச்செயல்களைச் செய்யக்கூடாது. இப்பிறவியில் நீங்கள் செய்துள்ள பாவங்களைப் பற்றி பாப்தாதாவிடம் நேர்மையாகக் கூறுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சந்தோஷமானவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் இருந்து, நிறைவாகவும் சம்பூரணமாகவும் ஆகுவதால், திருப்தியை அனுபவம் செய்வீர்களாக.

சகல பொக்கிஷங்களாலும் நிரம்;பியுள்ளவர்களே சதா திருப்தியாக இருக்கின்றார்கள். திருப்தி என்றால் நிறைவாக இருப்பதாகும். தந்தை நிறைந்திருப்பதாலேயே கடல் எனப் புகழப்படுகின்றார். அதேபோன்று, குழந்தைகளாகிய நீங்களும் மாஸ்டல் கடல்கள் ஆகவேண்டும், அதாவது, நீங்கள் நிறைவானவர்களாகி, சதா தொடர்ந்தும் சந்தோஷத்தில் நடனமாட வேண்டும். உங்களினுள் சந்தோஷத்தைத் தவிர, எதுவும் இருக்க முடியாது. நீங்கள் நிறைவானவர்களாக இருப்பதால், எவராலும் தொந்தரவுக்குட்பட முடியாது. எவ்வகையான குழப்பத்தையோ அல்லது தடையையோ நீங்கள் ஒரு விளையாட்டாக அனுபவம் செய்வதுடன், எந்தப் பிரச்சனையும் களிப்புக்கான ஒரு வழியாகவும் ஆகிவிடும். உங்கள் புத்தி நம்பிக்கையைக் கொண்டிருப்பதால், சதா சந்தோஷமானவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பீர்கள்.

சுலோகம்:
சிக்கலான சூழ்நிலைகளையிட்டுப் பயப்படாமல், அவற்றிலிருந்து ஒரு பாடத்தைக் கற்று, உங்களை உறுதியானவர்கள் ஆக்குங்கள்.