16.08.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 07.03.86 Om Shanti Madhuban
மகா சிவராத்திரியே இந்தக் கல்வியின் நான்கு பாடங்களினதும் மிகச்சரியான ஞாபகார்த்தம் ஆகும்.
இன்று, ஞானத்தை அருள்பவரும், பாக்கியத்தை அருள்பவரும், ஆசீர்வாதங்களையும் சகல சக்திகளையும் அருள்பவருமான தந்தை, அனைவரையும் சகல பொக்கிஷங்களால் நிரப்பும் கள்ளங்கபடமற்ற பிரபு, தனது அதிகபட்ச அன்பான, சதா ஒத்துழைக்கும், நெருக்கமான குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். இந்தச் சந்திப்புக்கள், காலத்திற்குக் காலம் பண்டிகைகளாகக் கொண்டாடப்படும் ஞாபகார்த்தங்கள் ஆகியுள்ளன. காலத்திற்குக் காலம் வெவ்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படும் பண்டிகைகள் அனைத்தும், தற்சமயம் தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையே நிகழும் இனிமையான, உற்சாகமான சந்திப்புகளின் ஞாபகார்த்தங்களே ஆகும். அவை எதிர்காலத்தில் பண்டிகையின் ரூபத்தைப் பெறுகின்றன. இந்த வேளையில், அதி மேன்மையான குழந்தைகளான உங்களின் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணமும் சதா சந்தோஷத்துடன் இருப்பதற்கே ஆகும். துவாபர யுகத்தில் இருந்து, இந்தக் குறுகிய சங்கமயுகத்தின் அலௌகீக வாழ்க்கையையும் அலௌகீகப் பேறுகளையும் அலௌகீக அனுபவங்களையும் பக்தர்கள் வெவ்வேறு பெயர்களுடன் பண்டிகைகள் ஆக்கியுள்ளார்கள். இந்த வாழ்க்கை, உங்களின் இந்த ஒரு பிறவி, பக்தி மார்க்கத்தில் 63 பிறவிகளுக்கு நினைவு செய்வதற்கான வழிமுறைகள் ஆகுகின்றன. நீங்கள் அத்தகைய மகாத்மாக்கள்! இந்த நேரத்தின் அதி அற்புதமான விடயம் என்னவென்றால், நீங்கள் நடைமுறையில் கொண்டாடுகிறீர்கள். அத்துடன் அதன் ஞாபகார்த்தத்தையும் இப்போது கொண்டாடுகிறீர்கள். உங்களால் உங்களின் ஞாபகார்த்தத்தைக் காண முடிகிறது. நீங்கள் இப்போது உயிர்வாழும் ரூபத்திலும் இருக்கிறீர்கள். அதேவேளை உங்களின் விக்கிரகங்களும் உள்ளன.
நீங்கள் ஒவ்வொருவரும் 5000 வருடங்களுக்கு முன்னர் எதைப் பெற்றீர்கள்? நீங்கள் என்னவாகினீர்கள்? எப்படி நீங்கள் அவ்வாறு ஆகினீர்கள்? இப்போது உங்களுக்கு இந்த மிகச்சரியான ஞாபகார்த்தத்தையும் 5000 வருடங்களுக்குரிய உங்களின் ஜாதகத்தையும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் இதைக் கேட்கிறீர்கள். அத்துடன் அவர்கள் உங்களை நினைத்து, வழிபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போதும், உங்களின் வாழ்க்கைக் கதைகளைக் கூறுகிறார்கள் என்பதைக் கேட்கும்போதும் நீங்கள் மிகவும் களிப்படைகிறீர்கள். அவர்களால் உங்களின் ஆதி ரூபங்களை அதேபோல் உருவாக்க முடியவில்லை. ஆனாலும், அவர்களை அந்த அன்பும் நம்பிக்கையும் தொட்டுள்ளது. இதனாலேயே, அவர்கள் அந்த விக்கிரகங்களைச் செய்துள்ளார்கள். எனவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் நடைமுறையில் சிவ ஜெயந்தியைக் கொண்டாடுகிறீர்கள். ஏனெனில், சங்கமயுகம் கடவுளின் அவதாரத்திற்கான யுகம் ஆகும். இது மேன்மையான பணியையும் மேன்மையான செயல்களையும் செய்வதற்கான யுகம் ஆகும். எவ்வாறாயினும், இந்த எல்லையற்ற யுகத்திற்குள் நீங்களும் இந்தத் தினத்தின் ஞாபகார்த்தத்தைக் கொண்டாடுகிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒரு சந்திப்பின் மூலம் அதைக் கொண்டாடினீர்கள். ஆனால் அவர்களின் கொண்டாட்டமோ அழைப்பதாகும். அவர்களுடையது, அழைத்தல். ஆனால் உங்களுடையது, பெறுதல். ‘வாருங்கள்!’ என அவர்கள் கூறுகிறார்கள். ‘அவர் வந்துவிட்டார், நாம் அவரைக் கண்டுவிட்டோம்!’ என நீங்கள் கூறுகிறீர்கள். ஞாபகார்த்தத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் இரவிற்கும் பகலிற்கும் இடையிலுள்ள வேறுபாடு உள்ளது. உண்மையில், இதுவே கள்ளங்கபடமற்ற பிரபுவான தந்தையின் பகல் ஆகும். கள்ளங்கபடமற்ற பிரபு என்றால் கணக்கிடாமல் அருள்பவர், அதைப் பற்றிய கணக்கை வைத்திருக்காமல் அருள்பவர் என்று அர்த்தம். பொதுவாக, நீங்கள் கொடுக்கும் அளவிற்குப் பெறுகின்ற கணக்கொன்று உள்ளது. யார் எதைச் செய்தாலும், அவர்கள் செய்வதற்கேற்ற பலனைப் பெறுவார்கள். அதுவே கணக்கு ஆகும். எவ்வாறாயினும், ஏன் அவர் கள்ளங்கபடமற்ற பிரபு என்று அழைக்கப்படுகிறார்? ஏனென்றால், இந்த வேளையில், நீங்கள் கொடுக்கும் அதே அளவை உங்களுக்குக் கொடுக்கும் கணக்கை அவர் வைத்திருக்கவில்லை. ஒன்றுக்காகப் பலமில்லியன் மடங்கினைப் பெறுவதே இந்தக் கணக்கு ஆகும். எனவே. அது எண்ணற்றது ஆகியுள்ளதல்லவா? ஒன்றுக்கும் பலமில்லியன்மடங்கிற்கும் இடையில் மகத்தான வேறுபாடு உள்ளது. ‘பலமில்லியன்கள்’ (பதம்) எனக் கூறப்படுகிறது. ஏனெனில், எண்ணும்போது அதுவே இறுதி வார்த்தை ஆகுகிறது. (பலமில்லியன்கள் - பத்மா பதம்). கள்ளங்கபடமற்ற பொக்கிஷதாரியான ஒரேயொருவர், கணக்கிடாமல் கொடுக்கும் நாளை அவர்கள் ஒரு பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். நீங்கள் இந்த நேரத்தில் அதிகளவைப் பெற்றுள்ளீர்கள். அதனால் இந்த வேளையிலும் நீங்கள் முற்றிலும் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். அத்துடன் நீங்கள் எப்போதும் 21 பிறவிகளுக்கும் 21 சந்ததிகளுக்கும் சம்பூரணமாக நிறைந்திருப்பீர்கள்.
வேறு எவராலும் பல பிறவிகளுக்கான ஓர் உத்தரவாதத்தைக் கொடுக்க முடியாது. ஒருவர் எந்தளவிற்கு மகத்தான அருள்பவராக இருந்தாலும், எவராலும் உங்களின் பொக்கிஷக் களஞ்சியத்தைப் பல பிறவிகளுக்கு முற்றிலும் நிரப்பும் உத்தரவாதத்தைக் கொடுக்க முடியாது. எனவே, அவரே கள்ளங்கபடமற்ற பிரபு, அல்லவா? ஞானம் நிறைந்தவராக இருக்கும்போதே அவர் கள்ளங்கபடமற்றவராகவும் இருக்கிறார். இதனாலேயே, அவர் கள்ளங்கபடமற்ற பிரபு என்று அழைக்கப்படுகிறார். உண்மையில், அவர் கணக்குகளை வைத்திருந்தால், ஒவ்வோர் எண்ணத்தின் கணக்கையும் அவரால் அறிந்து கொள்ள முடியும். எவ்வாறாயினும், அவை அனைத்தையும் அறிந்திருந்தும், கொடுப்பதென்று வரும்போது அவர் கள்ளங்கபடமற்ற பிரபு ஆகிவிடுகிறார். எனவே, நீங்கள் அனைவரும் கள்ளங்கபடமற்ற பிரபுவான தந்தையின் கள்ளங்கபடமற்ற குழந்தைகள் அல்லவா? ஒருபுறம், நீங்கள் அவரைக் கள்ளங்கபடமற்ற பிரபு என்று அழைக்கிறீர்கள். மறுபுறம், நீங்கள் அவரைச் சம்பூரணமாக நிறைந்திருக்கும் பொக்கிஷதாரி என்று அழைக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு நன்றாக இந்த ஞாபகார்த்தத்தைக் கொண்டாடுகிறீர்கள் என்று பாருங்கள்! அதைக் கொண்டாடும் அந்த மக்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. ஆனால் நீங்கள் அதை அறிவீர்கள். இந்த ஞாபகார்த்த தினத்தில் சங்கமயுகத்தின் பிரதான கல்வியின் நான்கு விசேடமான பாடங்களும் கொண்டாடப்படுகின்றன. எவ்வாறு? இந்தப் பண்டிகை தினத்தில், புள்ளிக்கும் துளிக்கும் விசேடமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. புள்ளி என்பது நினைவிற்கான, அதாவது, யோகம் என்ற பாடம் ஆகும். நினைவில், நீங்கள் உங்களை ஒரு புள்ளி என்ற ஸ்திதியில் ஸ்திரப்படுத்திக் கொள்கிறீர்கள், இல்லையா? எனவே, புள்ளி என்பது நினைவின் அடையாளம் ஆகும். துளி என்பது ஞானத்தின் வெவ்வேறு துளிகளைக் குறிக்கிறது. ஞானம் என்ற பாடத்தின் அடையாளம், துளி ஆகும். இந்தத் தினத்தில் தாரணையின் அடையாளம், அவர்கள் பிடிக்கும் விசேடமான விரதம் ஆகும். எனவே, நீங்கள் விரதம் இருக்கிறீர்கள். தாரணையில், உங்களுக்குத் திடசங்கற்பம் உள்ளது. எனவே, நீங்கள் நிச்சயமாக சகித்துக் கொள்வதுடன் அகநோக்கிலும் இருப்பீர்கள் என ஒரு சத்தியத்தைச் (விரதம்) செய்கிறீர்கள். நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்கிறீர்கள், இல்லையா? இது தாரணையைக் குறிக்கிறது. சேவையின் அடையாளம், ‘ஜாக்ரன்’ (இரவு முழுவதும் விழித்திருத்தல்) ஆகும். உண்மையில், நீங்கள் மற்றவர்களை விழித்தெழச் செய்வதற்காகவே சேவை செய்கிறீர்கள். அறியாமை நித்திரையில் இருந்து அவர்களை விழித்தெழச் செய்வதும், அவர்களை விழிப்புடன் இருக்கச் செய்வதும், அவர்களை விழித்தெழச் செய்வதும் உங்களின் சேவையே ஆகும். எனவே, இந்த ஜாக்ரன் சேவையைக் குறிக்கிறது. எனவே, நான்கு பாடங்களும் உள்ளடங்கிவிட்டன, அல்லவா? எவ்வாறாயினும், அவை பௌதீக வடிவைப் பெற்றுள்ளன. எவ்வாறாயினும், பக்தர்களுக்கு அந்த அன்பும் நம்பிக்கையும் உள்ளன. உண்மையான பக்தர்களின் அடையாளம் என்னவென்றால், அவர்களுக்கு என்ன எண்ணங்கள் உள்ளனவோ, அவர்கள் அந்த எண்ணத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். இதனாலேயே, தந்தைக்கும் பக்தர்களிடம் அன்பு உள்ளது. குறைந்தபட்சம், அவர்கள் உங்களின் ஞாபகார்த்தத்தைத் துவாபர யுகத்தில் இருந்து அநாதியாகத் தொடரச் செய்துள்ளார்கள். குறிப்பாக இந்தத்தினத்தில், இங்கு சங்கமயுகத்தில் மீண்டும் மீண்டும் அர்ப்பணிப்பு விழாக்களை நீங்கள் செய்வதைப் போல், நீங்கள் அதைத் தனித்தனியாகக் கொண்டாடுவதைப் போன்று, உங்களின் இந்த விழாவின் ஞாபகார்த்தமாகவே அவர்கள் தங்களை அர்ப்பணிக்காவிட்டாலும், ஒரு ஆட்டைப் பலி கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு பலி கொடுக்கிறார்கள். உண்மையில், பாப்தாதாவும் கூறுகிறார்: நீங்கள் ‘நான்’ (மே,மே) என்ற உணர்வை அர்ப்பணித்தால் மட்டுமே உங்களால் உங்களையும் அர்ப்பணிக்க முடியும். அதாவது, உங்களால் சம்பூரணமாகவும் தந்தைக்குச் சமமானவராகவும் ஆகமுடியும். தந்தை பிரம்மா எடுத்து வைத்த முதல் அடி என்ன? அவர் ‘நான்’ மற்றும் ‘எனது’ என்பவற்றை அர்ப்பணிக்கும் விழாவைக் கொண்டாடினார். அதாவது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ‘நான்’ என்பதற்குப் பதிலாக, அவரின் இயல்பான வார்த்தையாக, அவரின் சாதாரணமான வார்த்தையாக ‘தந்தை’ என்ற வார்த்தையையே நீங்கள் எப்போதும் கேட்டீர்கள். அவர் ஒருபோதும் ‘நான்’ என்ற வார்த்தையைக் கூறவில்லை. ‘பாபா என்னைச் செய்ய வைக்கிறார். நான் எதையும் செய்யவில்லை. இல்லை, பாபாவே என்னை அசையச் செய்கிறார். நான் இதைக் கூறவில்லை. இல்லை, பாபாவே பேசுகிறார்.’ எந்தவொரு எல்லைக்குட்பட்ட மனிதரில் அல்லது பொருளில் பற்று வைத்திருத்தல் என்றால், ‘எனது’ என்ற உணர்வைக் கொண்டிருத்தல் ஆகும். ‘எனது’ மற்றும் ‘நான்’ என்ற உணர்வை அர்ப்பணிப்பதையே ஒரு பலி கொடுத்தல் எனப்படுகிறது. இந்தப் பலியைச் செய்தல் என்றால் மகா பலியைக் கொடுத்தல் என்று அர்த்தம். எனவே, இதுவே அர்ப்பணித்தலின் அடையாளம் ஆகும்.
பாபா பக்தர்களுக்கு ஒரு விடயத்திற்காக நன்றி கூறுகிறார்: பாரதத்திலோ அல்லது வேறு எந்த நாட்டிலுமோ, எந்தவொரு ரூபத்திலும் உற்சாக அலைகளைப் பரப்புவதற்காக அவர்கள் மிக நல்ல பண்டிகைகளை உருவாக்கியுள்ளார்கள். அது இரண்டு நாட்களுக்கோ அல்லது ஒரு நாளுக்கோ இருந்தாலும், குறைந்தபட்சம் உற்சாகத்தின் (உற்சாஹ்) அலை பரவுகிறது. இதனாலேயே, அது பண்டிகை (உற்சவம்) என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்சம், அவர்களில் பெரும்பாலானோரின் கவனம் ஒரு விசேட நோக்கத்திற்காகத் தந்தையிடம் ஈர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விசேடமான தினத்தில் நீங்கள் என்ன விசேடமான விடயங்களைச் செய்வீர்கள்? பக்தி மார்க்கத்தில், சிலர் விரதம் இருக்கும்போது அதை நல்லதற்காகச் செய்கிறார்கள். ஆனால் ஏனையோருக்கு அதற்கான தைரியம் இருப்பதில்லை. அவர்கள் ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு நாளுக்கு அல்லது குறுகிய காலத்திற்கு விரதம் இருக்கிறார்கள். பின்னர் அந்த விரதத்தை இடையில் விட்டுவிடுகிறார்கள். நீங்கள் அவ்வாறு செய்வதில்லை, அல்லவா? மதுவனத்தில், உங்களின் பாதங்கள் தரையில் இருப்பதில்லை. எனவே, நீங்கள் வெளிநாடுகளுக்குத் திரும்பிச் சென்றதும், நீங்கள் பூமிக்கு வந்துவிடுவீர்களா? அல்லது மேலேயே இருப்பீர்களா? நீங்கள் எப்போதும் மேலேயே இருந்தவண்ணம் செயலைச் செய்வதற்கு மட்டும் கீழே வருவீர்களா? அல்லது, எப்போதும் கீழே இருந்தவண்ணமே செயல்படுவீர்களா? மேலே இருத்தல் என்றால், மேலான ஸ்திதியில் இருத்தல் என்று அர்த்தம். ஏதாவது கூரையில் மேலே தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல! உயர்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தவண்ணம் சாதாரணமான செயல்களைச் செய்ய வேண்டும் என்பதே அதன் அர்த்தம் ஆகும். அதாவது, செயல்களைச் செய்வதற்குக் கீழே வரவேண்டும் என்பதாகும். சாதாரணமான செயல்களைச் செய்யும்போது, உங்களின் ஸ்திதியானது மேலேயே இருக்க வேண்டும். அதாவது, அது மேன்மையானதாக இருக்க வேண்டும். தந்தை சாதாரணமான ஓர் உடலைத் தத்து எடுத்திருக்கிறார். அவர் சாதாரணமான செயல்களை மட்டுமே செய்கிறார். நீங்கள் பேசுவதைப் போன்றே அவரும் பேசுகிறார். நீங்கள் செய்வதைப் போன்றே அவரும் செயல்படுகிறார். எனவே, செயல்கள் சாதாரணமானவையாக உள்ளன. உடலும் சாதாரணமானதாக உள்ளது. ஆனால், சாதாரணமான செயல்களைச் செய்யும்போது, அவரின் ஸ்திதி உயர்வாக உள்ளது. அதேபோன்று, உங்கள் அனைவரினதும் ஸ்திதி எப்போதும் உயர்வானதாக இருக்க வேண்டும்.
நீங்கள் இந்தத் தினத்தை அவதார தினம் என்று அழைப்பதைப் போன்று, தினமும், அமிர்த வேளையில், நீங்கள் நித்திரையில் இருந்து விழித்திருப்பதாக நினைக்காதீர்கள். ஆனால், செயல்களைச் செய்வதற்காக அமைதி தாமத்தில் இருந்து அவதரித்திருப்பதாக நினையுங்கள். இரவில், செயல்களைச் செய்த பின்னர், நீங்கள் அமைதி தாமத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். அவதாரம் செய்யும் ஒருவர் மேன்மையான செயல்களைச் செய்வதற்காகவே அவதரிக்கிறார். அவர்கள் பிறப்பு எடுத்திருப்பதாகக் கூறப்படுவதில்லை. ஆனால், அவர்கள் அவதரித்திருப்பதாகவே கூறப்படுகிறது. மேலே இருக்கும் ஸ்திதியுடன் அவர்கள் கீழே வரும்போதே அவதாரம் எனப்படுகிறது. எனவே, அந்த ஸ்திதியுடன் செயல்களைச் செய்யும்போது, சாதாரணமான செயல்களும் அலௌகீகச் செயல்களாக மாறுகின்றன. ஏனையோர் தமது உணவை (போஜன்) உண்கிறார்கள். ஆனால் நீங்களோ பிரம்மபோஜனத்தை உண்கிறீர்கள். எனவே, இங்கு வேறுபாடு இருக்கிறதல்லவா? நீங்களும் செயல்களைச் செய்கிறீர்கள். ஆனால், நீங்கள் தேவதைகளைப் போல் செயல்படுகிறீர்கள். இலேசான, ஒளியான ஸ்திதியில் செயல்படுகிறீர்கள். ஆகவே, அவை அனைத்தும் அலௌகீக நடவடிக்கைகளும் அலௌகீகச் செயல்களும் ஆகும். ஆகவே, இன்று மட்டும் அவதார தினம் இல்லை. சங்கமயுகம் முழுவதும் அவதாரத்திற்குரிய தினம் ஆகும்.
இந்தத்தினத்தில், நீங்கள் பாப்தாதாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். ஆனால், பாப்தாதாவோ ‘நீங்கள் முதலில்’ என்று கூறுகிறார். குழந்தைகளான நீங்கள் இல்லாவிட்டால், யார் ‘தந்தை’ என்று சொல்வார்கள்? குழந்தைகளே தந்தையைத் ‘தந்தை’ என்று அழைக்கிறார்கள். ஆகவே, அனைத்திற்கும் முதலில், குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும், ‘உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ (ஹப்பி பேர்த்டே ரூ யூ) என்ற பிறந்தநாள் பாடலைப் பாடுகிறீர்கள். பாப்தாதாவும், ‘உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ எனக் கூறுகிறார். குழந்தைகள் தந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். தந்தையும் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நீங்கள் வாழ்த்துக்களால் (ஊக்கப்படுத்துதல்) பராமரிக்கப்படுகிறீர்கள். உங்கள் அனைவரினதும் பராமரிப்பு என்ன? நீங்கள் தந்தையினதும் குடும்பத்தினதும் பாராட்டுக்களால் பராமரிக்கப்படுகிறீர்கள். நீங்கள் ஆடுகிறீர்கள், பாடுகிறீர்கள். வாழ்த்துக்களால் பராமரிக்கப்படுகிறீர்கள், பறக்கிறீர்கள். இந்தப் பராமரிப்பும் அற்புதமானது. ஒவ்வொரு கணமும் ஒருவருக்கொருவர் நீங்கள் எதைக் கொடுக்கிறீர்கள்? வாழ்த்துக்கள். இதுவே பராமரிப்பிற்கான வழிமுறை ஆகுகிறது. ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அனைத்தும் வரிசைக்கிரமமானது என்பதை பாப்தாதாவும் அறிவார், நீங்களும் அறிவீர்கள். அது வரிசைக்கிரமமாக இல்லாவிட்டால், சத்தியயுகத்தில், நீங்கள் குறைந்தபட்சம் 150000 சிம்மாசனங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இதனாலேயே, அது வரிசைக்கிரமமாக இருக்க வேண்டியுள்ளது. அது வரிசைக்கிரமமாக ஆகவேண்டியுள்ளது. ஆனால், சிலவேளைகளில் நீங்கள் யாராவது ஒருவர் தவறு என நினைத்தால், அவர் நல்லதாக எதையும் செய்யவில்லை என நினைத்தால், அந்தத் தவறைச் சரியாக்குவதற்கான வழிமுறை, சரியான முறையில் எதையாவது செய்யாத ஒருவருக்கு மிகச்சரியான வழிமுறையைக் கற்பிப்பதற்கான முறை, நேரடியாக அவர் தவறு எனக் கூறுவதல்ல. நீங்கள் இவ்வாறு சொன்னால், அவர் ஒருபோதும் மாறமாட்டார். ஒரு நெருப்பை அணைப்பதற்கு, நீங்கள் இன்னொரு நெருப்பை உருவாக்க மாட்டீர்கள். நீங்கள் அதில் குளிர்ந்த நீரையே ஊற்றுவீர்கள். ஆகவே, முதலில் நீங்கள் எவருக்காவது அவர் தவறு எனக் கூறினால், அந்த நபர் மேலும் மனவிரக்தி அடைவார். அனைத்திற்கும் முதலில், அவர் நல்லவர், அனைத்தும் நல்லதே எனக் கூறுவதன் மூலம் அந்த நபருக்கு நம்பிக்கை ஊட்டுங்கள். அனைத்திற்கும் முதலில், குறைந்தபட்சம் நீரைத் தெளியுங்கள். அதன்பின்னர் அந்த நெருப்பு ஏன் உருவாகியது என்பதை அவருக்கு விளங்கப்படுத்துங்கள். ‘நீங்கள் இத்தகையவர், நீங்கள் இதைச் செய்தீர்கள், நீங்கள் அதைச் செய்தீர்கள்’ என அவருக்கு நேரடியாகக் கூறாதீர்கள். அனைத்திற்கும் முதலில், குளிர்ந்த நீரைத் தெளியுங்கள். அதன்பின்னர் அவரும் ஏன் அந்த நெருப்பு உருவாகியது என்பதையும், அந்த நெருப்பை எவ்வாறு அணைப்பது என்ற வழிமுறையையும் உணர்ந்து கொள்வார். ஒருவர் தீயவராக இருந்து, அவர் தீயவர் என நீங்களும் சொன்னால், அது நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதைப் போன்றதாகும். ஆகவே, அனைத்திற்கும் முதலில், ‘அது மிகவும் நல்லது, அது மிகவும் நல்லது’ எனக் கூறுங்கள். அதன்பின்னர், நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லுங்கள். அப்போது அதைக் கேட்டுக் கிரகிப்பதற்கான தைரியத்தை அவர் பெறுவார். இதனாலேயே, ‘மிகவும் நல்லது, மிகவும் நல்லது’ எனக் கூறுதல் வாழ்த்துக்களை வழங்குவதாகும் என பாபா உங்களுக்குக் கூறினார். உதாரணமாக, பாப்தாதாவும் ஒருபோதும் எவருக்கும் அவர் தவறு என நேரடியாகக் கூறுவதில்லை. அவர் முரளியிலேயே எது சரி, எது தவறு எனக் கூறுகிறார். எவ்வாறாயினும், யாராவது வந்து பாபாவிடம் தான் தவறு செய்கிறேனா எனக் கேட்டால், ‘இல்லை, நீங்கள் முற்றிலும் சரியே’ என்றே அவர் கூறுவார். ஏனெனில், அந்த நேரத்தில் அந்த நபருக்குத் தைரியம் இருக்காது. ஒரு நோயாளி தனது மரணப் படுக்கையில் இருக்கும்போது, தான் இப்போது இறக்கப் போகிறேனா என அவர் மருத்துவரிடம் கேட்டால், அந்த மருத்துவர் ஒருபோதும், ‘ஆமாம், நீங்கள் இறக்கப் போகிறீர்கள்’ எனக் கூற மாட்டார். ஏனெனில் அந்த நோயாளிக்கு அப்போது அதற்கான தைரியம் இருக்காது. ஒருவருக்கு பலவீனமான இதயம் இருந்து, நீங்கள் இவ்வாறான ஒரு விடயத்தை அவருக்குக் கூறினால், நிச்சயமாக அவருக்கு இதயம் நின்றுவிடும். அதாவது, அவருக்கு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியைச் செய்யும் சக்தி இருக்காது. எனவே, சங்கமயுகமே பாராட்டுக்களுடன் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான யுகம் ஆகும். இந்த பாராட்டுக்கள் மேன்மையான பராமரிப்பு ஆகும். இதனாலேயே, உங்களின் வாழ்த்துக்களின் பராமரிப்பின் ஞாபகார்த்தத்தை எந்தவொரு தேவரின் நாளாகக் கொண்டாடும்போதும் அதைப் பெரிய நாள் என அவர்கள் அழைக்கிறார்கள். தீபாவளி அல்லது சிவராத்திரி நாட்களை அவர்கள் பெரிய தினம் என்றே அழைக்கிறார்கள். எந்தவொரு பண்டிகை தினத்தையும் அவர்கள் பெரிய தினம் என்றே அழைக்கிறார்கள். உங்களிடம் பெரிய இதயங்கள் இருப்பதனால், அவர்கள் அவற்றைப் பெரிய தினங்கள் என்று அழைக்கிறார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தல் என்றால் பெரிய இதயங்களைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். உங்களுக்குப் புரிகிறதா? தவறு செய்பவருக்கு அவர் தவறு என நீங்கள் கூறாமல், உங்களுக்குள் சிறிதளவு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் ஒரு சமிக்கையைக் கொடுக்க வேண்டும். ஆனால், குறைந்தபட்சம் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். அந்த நபரோ இறக்கிறார். நீங்கள் அவரை, ‘இறந்துவிடு, இறந்துவிடு!’ எனக் கூறுகிறீர்கள். ஆகவே, சரியான நேரத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். அவரின் தைரியத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். ‘மிகவும் நல்லது, மிகவும் நல்லது’ எனக் கூறுவதன் மூலம், அந்த நபர் தைரியத்தைப் பெற்றுக் கொள்வார். எவ்வாறாயினும், அதை உங்களின் இதயபூர்வமாகக் கூறுங்கள். அதை மேலோட்டமாகக் கூறாதீர்கள். நீங்கள் அதைக் கூற வேண்டும் என்பதற்காகக் கூறுகிறீர்கள் என அந்த நபர் உணரக்கூடாது. இது உணர்வின் விடயம் ஆகும். உங்களின் இதயத்தின் உணர்வானது கருணையாக இருக்க வேண்டும். அப்போது அவரின் இதயமும் அந்தக் கருணையை உணரும். எனவே, தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். தொடர்ந்து வாழ்த்துக்களைப் பெறுங்கள். இந்த வாழ்த்துக்களே ஆசீர்வாதங்கள் ஆகுகின்றன. சிவனின் பண்டாரா (பொக்கிஷக் களஞ்சியம்) நிரம்பி வழிகிறது என்பதே இந்த தினத்தின் ஞாபகார்த்தம் ஆகும். எனவே, இது தந்தை சிவனின் புகழ் மட்டுமல்ல, உங்களின் புகழும் ஆகும். பண்டாரா எப்போதும் நிரம்பி வழியட்டும். அருள்பவரின் குழந்தைகள் அருள்பவர்கள் ஆகுகிறார்கள்! பக்தர்கள் எடுத்துக் கொள்பவர்கள் (லேவ்தா), ஆனால் நீங்கள் அருள்பவர்கள் (தேவ்தா) என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. எனவே, அருள்பவர் என்றால் வழங்குபவர் என்று அர்த்தம். நீங்கள் ஒருவருக்கு எதையாவது கொடுத்துவிட்டுப் பின்னர், அவரிடமிருந்து எதையாவது எடுத்துக் கொண்டால், அவர் அதை உணர மாட்டார். அவர் எதையும் ஏற்றுக் கொள்ளும்படி உங்களால் செய்ய முடியும். ஆனால், முதலில் நீங்கள் அவருக்கு எதையாவது கொடுக்க வேண்டும். தைரியத்தைக் கொடுங்கள். நம்பிக்கையைக் கொடுங்கள். சந்தோஷத்தைக் கொடுங்கள். பின்னர், அவர் எதையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்பினால், அவர் அதைச் செய்வார். எனவே, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுங்கள். தினமும் தந்தையுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதெனில், ஒரு பண்டிகையைக் கொண்டாடுதல் என்று அர்த்தம். எனவே, ஒவ்வொரு நாளும் திருநாளே. அச்சா.
எங்கும் உள்ள சகல குழந்தைகளுக்கும் சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் அவதார நாளாக இருப்பதற்கு அழியாத பாராட்டுக்கள். எப்போதும் அருள்பவர்களாகவும் தந்தையைப் போல் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் இருந்து ஒவ்வோர் ஆத்மாவையும் நிரப்புவர்களுக்கும், மாஸ்ரர் கள்ளங்கபடமற்ற பிரபுக்களான குழந்தைகளுக்கும், எப்போதும் நினைவில் இருப்பதுடன், தமது ஒவ்வொரு செயலையும் ஒரு ஞாபகார்த்தம் ஆக்குபவர்களுக்கும், எப்போதும் சேவையிலும் சுய முன்னேற்றத்திலும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறும் மேன்மையான குழந்தைகளுக்கும், சிவ ஜெயந்தியினதும் அதனால் வைரம் போன்று பெறுமதிவாய்ந்த ஜெயந்தியான, பிராமண ஜெயந்தியினதும் ஞாபகார்த்தமான இந்த விசேடமான தினத்தில், அனைவரையும் சந்தோஷமாகவும் நிரம்பியவர்களாகவும் ஆக்கும் ஜெயந்திக்காக வாழ்த்துக்களும் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்ரர் படைப்பவராகி, உங்களின் ஒவ்வொரு சக்திகளையும் உங்களின் கட்டளைகளுக்கேற்பப் பயன்படுத்துவீர்களாக.எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னரும், அந்தச் செயலுக்கேற்ற சக்தியை வரவழையுங்கள். அதன் அதிபதியாக அதற்குக் கட்டளை இடுங்கள். ஏனெனில், இந்தச் சக்திகள் அனைத்தும் உங்களின் கரங்களைப் போன்றவை. உங்களின் கட்டளைகள் இல்லாமல் உங்களின் கைகளால் எதையும் செய்ய முடியாது. ஒரு பணியை வெற்றிகரமாகச் செய்வதற்கு சகித்துக் கொள்ளும் சக்திக்குக் கட்டளை இடுங்கள். அதன்பின்னர், எவ்வாறு வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது என்பதைப் பாருங்கள். எவ்வாறாயினும், கட்டளை இடுவதற்குப் பதிலாக, நீங்கள் பயப்பட்டு, உங்களால் எதையாவது செய்ய முடியுமா இல்லையா என நீங்கள் நினைத்தால், இந்த வகையான பயம் உங்களுக்குள் ஏற்பட்டால், அந்தக் கட்டளை நிறைவேறாது. ஆகவே, ஒரு பயமற்ற மாஸ்ரர் படைப்பாளராகி, ஒவ்வொரு சக்தியையும் உங்களின் கட்டளைகளுக்கேற்ப பயன்படுத்துங்கள்.
சுலோகம்:
ஆதாரத்தை அருள்பவரான தந்தையை வெளிப்படுத்துவதன் மூலம், அனைவரையும் கரைக்குக் கொண்டுவாருங்கள்.
ஓம் சாந்தி
அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகல இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகளும் குறிப்பாக மாலை 6.30 இலிருந்து 7.30 வரை தியானத்தைப் பயிற்சி செய்வதற்கு அமருங்கள். ஒரு மூதாதை என்ற சுயமரியாதையில் ஸ்திரமாக இருங்கள். கல்ப விருட்சத்தின் வேர்களில் அமருங்கள். விருட்சம் முழுவதற்கும் சக்திவாய்ந்த யோக தானத்தைச் செய்யுங்கள். உங்களின் சந்ததிக்கு தெய்வீகப் பராமரிப்பை வழங்குங்கள்.