ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுவதற்கான வழிமுறை.
இன்று, பாப்தாதா கவலையற்ற சக்கரவர்த்திகளின் ஒன்றுகூடலைப் பார்க்கிறார். முழுக் கல்பத்திலும், இந்த இராஜரீகமான ஒன்றுகூடல் தனித்துவமானது. பல சக்கரவர்த்திகள் இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்த சங்கமயுகத்தில் மட்டுமே கவலையற்ற சக்கரவர்த்திகளின் தனித்துவமான ஒன்றுகூடல் உள்ளது. கவலையற்ற சக்கரவர்த்திகளின் இந்த ஒன்றுகூடலானது, சத்தியயுகத்தின் அரச ஒன்றுகூடலை விட அதி மேன்மையானது. ஏனென்றால் அங்கு அவர்களுக்கு கவலைக்கும் (பிக்கர்) மற்றும் போதைக்கும் (பக்கூர்) இடையிலுள்ள வேறுபாட்டின் அறிவு அவர்களின் விழிப்புணர்வில் கிடையாது. அவர்களுக்குக் ‘கவலை’ என்ற வார்த்தையையே தெரியாது. ஆனால், இப்போதோ முழு உலகமும் ஏதாவதொரு விடயத்திற்காகக் கவலைப்படுகிறது. அவர்கள் விழித்தெழுந்த கணத்தில் இருந்து, தங்களைப் பற்றி, தமது குடும்பம், தமது வியாபாரம், தமது நண்பர்கள், உறவினர்கள் போன்றவற்றைப் பற்றி அவர்களுக்கு ஏதாவதொரு கவலை இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நீங்கள் அனைவரும் ஒரு நாளின் ஆரம்பத்தை அமிர்த வேளையில், கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகுவதன் மூலம் ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு பணியையும் கவலையற்ற சக்கரவர்த்திகளாகவே செய்கிறீர்கள். நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகளாக சௌகரியமாகத் தூங்குகிறீர்கள். உங்களிடம் அமைதிநிறைந்த, ஆனந்தமான தூக்கம் உள்ளது. நீங்கள் இத்தகைய கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அப்படி ஆகிவிட்டீர்களா? அல்லது உங்களுக்குள் இன்னமும் ஏதாவது கவலைகள் உள்ளதா? நீங்கள் உங்களின் பொறுப்புக்களைத் தந்தையிடம் கொடுத்து, அதனால் கவலையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். உங்களைப் பொறுப்பானவர்கள் எனக் கருதுவதன் மூலம், உங்களுக்குள் கவலைகள் ஏற்படுகின்றன. ‘பொறுப்புத் தந்தையினுடையது. நான் ஒரு கருவி சேவையாளர். நான் ஒரு கருவி கர்மயோகி. தந்தை கரன்கரவன்ஹார். கருவியான நான் அதைச் செய்கிறேன்.’ ஒவ்வொரு கணமும் உங்களுக்குள் இந்த இயல்பான விழிப்புணர்வு இருந்தால், நீங்கள் சதா கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பீர்கள். தவறுதலாகவேனும், ஏதாவது வீணானவற்றின் சுமையை நீங்கள் உங்கள் மீது எடுத்துக் கொண்டால், ஒரு கிரீடத்திற்குப் பதிலாக, உங்களின் தலைமீது பல கவலைக் கூடைகள் ஏறிவிடும். இல்லாவிட்டால், நீங்கள் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி. சதா ஒளிக்கிரீடத்தை அணிந்திருப்பவர். ‘நானும் தந்தையும் மட்டுமே இருக்கிறோம். மூன்றாவது நபர் கிடையாது.’ இந்த அனுபவம் உங்களை இலகுவாகக் கவலையற்ற சக்கரவர்த்தி ஆக்கிவிடும். எனவே, நீங்கள் கிரீடங்களை அணிபவர்களா அல்லது கூடைகளைச் சுமப்பவர்களா? ஒரு கூடையைச் சுமப்பதற்கும் ஒரு கிரீடத்தை அணிவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. உங்களின் முன்னால் கிரீடத்தை அணிந்த ஒருவர் நிற்கிறார். இன்னொரு நபர் தலையின் மீது சுமைகளின் கூடையைச் சுமந்தவண்ணம் உங்களின் முன்னால் நிற்கிறார். நீங்கள் எதை விரும்புவீர்கள்? கிரீடத்தையா அல்லது கூடையையா? தந்தை வந்து உங்களின் பல பிறவிகளின் சுமைகளின் கூடைகள் பலவற்றில் இருந்து உங்களை விடுவித்து, உங்களை இலேசாக்குகிறார். எனவே, கவலையற்ற சக்கரவர்த்தி என்றால் எப்போதும் டபிள் லைற் (இலேசாகவும் ஒளியாகவும்) ஆக இருப்பவர். அத்துடன் நீங்கள் ஒரு சக்கரவர்த்தி ஆகும்வரை, உங்களின் பௌதீக அங்கங்கள் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க முடியாது. நீங்கள் ஒரு சக்கரவர்த்தி ஆகினால் மட்டுமே உங்களால் மாயையை வென்றவராக, உங்களின் பௌதீக அங்கங்களை வென்றவராக, சடப்பொருளை வென்றவராக ஆகமுடியும். எனவே, நீங்கள் இராஜ ஒன்றுகூடலில் அமர்ந்திருக்கிறீர்கள், இல்லையா? அச்சா.
இன்று ஐரோப்பாவின் முறையாகும். ஐரோப்பா நன்றாக விரிவடைந்துள்ளது. ஐரோப்பா தனது அண்டைய நாடுகளுக்கு நன்மை செய்யும் வகையில் மிக நல்ல திட்டங்களைச் செய்துள்ளது. தந்தை எப்போதும் நன்மை செய்பவராக இருப்பதைப் போல், குழந்தைகளும் தமது தந்தையைப் போல், நன்மை செய்யும் உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, நீங்கள் எவரைப் பார்த்தாலும், அவரும் தந்தைக்குச் சொந்தமாக வேண்டும் என அவர்களில் உங்களுக்குக் கருணை பிறக்கிறதல்லவா? பாருங்கள், ஸ்தாபனைக்குரிய நேரத்தில் இருந்தே, பாப்தாதா வெளிநாடுகளில் உள்ள குழந்தைகளை ஏதாவதொரு ரூபத்தில் நினைத்துக் கொண்டே இருக்கிறார். பாப்தாதாவின் அந்த நினைவினால், காலம் வந்தபோது, எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரும் இங்கு வந்தடைந்துள்ளார்கள். எவ்வாறாயினும், பாப்தாதா நீண்ட காலமாக உங்களை அழைத்துக் கொண்டே இருக்கிறார். அந்த அழைப்பினால், நீங்கள் அனைவரும் காந்தத்தைப் போலக் கவரப்பட்டு இங்கே வந்துள்ளீர்கள். எவ்வாறு நீங்கள் பாபாவிற்குச் சொந்தமாகினீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை என நீங்கள் உணருகிறீர்கள், இல்லையா? ஆமாம், நீங்கள் அவருக்குச் சொந்தமாகியிருப்பது நல்லது. ஆனால், சில வேளைகளில் அமர்ந்திருந்து, என்ன நடந்தது, எவ்வாறு அது நடந்தது, நீங்கள் இருந்த இடத்திலிருந்து எவ்வாறு வந்தடைந்தீர்கள், எங்கிருந்து வந்தீர்கள் என்பவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அதைப் பற்றிச் சிந்திக்கும்போது, அது வியப்பாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்தில் எது நிச்சயிக்கப்பட்டிருந்ததோ, அது உங்கள் அனைவரையும் சகல மூலை முடுக்குகளில் இருந்தும் அழைத்து வந்து, ஒரு குடும்பத்தினராக உங்களை ஆக்கியுள்ளது. இப்போது, இது உங்களின் குடும்பம் என நீங்கள் உணர்வதால், இது மிகவும் அழகாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். தந்தை அனைவரிலும் அதி அழகானவர். எனவே, நீங்கள் அனைவரும் அழகானவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்களும் சளைத்தவர்கள் இல்லை. நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் சகவாசத்தின் நிறத்தால் நிறமூட்டப்பட்டதன் மூலம் அதிகபட்ச அழகானவர்கள் ஆகியுள்ளீர்கள். உங்களில் யாரைப் பார்த்தாலும், ஒவ்வொருவரும் அடுத்தவரை விட அழகானவராகவே இருக்கிறீர்கள். ஆன்மீகத்தின் ஆதிக்கம் ஒவ்வொருவரின் முகத்திலும் தென்படுகிறது. வெளிநாட்டவர்கள் ஒப்பனை (மேக்-அப்) செய்வதற்கு விரும்புவார்கள். எனவே, இதுவே நீங்கள் தேவதை என்ற ஒப்பனை செய்வதற்கான இடம் ஆகும். இந்த ஒப்பனை எப்படிப்பட்டதென்றால், நீங்கள் தேவதைகள் ஆகுகிறீர்கள். அதற்கு முன்னர் அவர்கள் எப்படி இருந்திருந்தாலும், ஒப்பனை செய்தபின்னர் அவர்களின் தோற்றம் மாறிவிடுகிறது. ஒப்பனையால் அவர்கள் மிகவும் அழகாகத் தென்படுகிறார்கள். எனவே, இங்கும், நீங்கள் அனைவரும் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாகத் தோன்றுகிறீர்கள். ஏனெனில், நீங்கள் ஆன்மீக ஒப்பனை செய்துள்ளீர்கள். அந்த ஒப்பனை தீங்கு விளைவிக்கக்கூடும். ஆனால், இந்த ஒப்பனையால் எந்தவிதத் தீங்கும் கிடையாது. எனவே, நீங்கள் அனைவரும் பிரகாசிக்கும் ஆத்மாக்கள். அனைவராலும் நேசிக்கப்படுபவர்கள். இங்கு, அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. நீங்கள் விழித்தெழுந்ததும், அன்புடன் ‘காலை வணக்கம்’ என்று கூறுகிறீர்கள். நீங்கள் உண்ணும்போது, அன்புடன் பிரம்மபோஜனை உண்கிறீர்கள். நீங்கள் நடக்கும்போது, தந்தையுடன் கைகோர்த்து நடக்கிறீர்கள். வெளிநாட்டவர்கள் கைகோர்த்து நடப்பதை விரும்புகிறார்கள், இல்லையா? எனவே, பாப்தாதாவும் கூறுகிறார்: எப்போதும் தந்தையின் கையை உங்களின் கையால் பிடித்தவண்ணம் நடவுங்கள். தனியே நடக்காதீர்கள். நீங்கள் தனித்து நடந்தால், சிலவேளைகளில் உங்களுக்கு சலிப்பு ஏற்படலாம். சிலவேளைகளில், யாராவது ஒருவரின் பார்வை உங்களின் மீது விழலாம். நீங்கள் தந்தையுடன் நடந்தால், முதலில், மாயையின் பார்வை ஒருபோதும் உங்களின் மீது விழாது. இரண்டாவதாக, அவரின் சகவாசம் இருப்பதனால், நீங்கள் எப்போதும் உண்பதையும் அனைத்தையும் செய்வதையும் சந்தோஷமாகவே செய்வீர்கள். எனவே, நீங்கள் அனைவரும் உங்களின் சகபாடியை விரும்புகிறீர்கள், இல்லையா? அல்லது, உங்களுக்கு வேறு யாராவது தேவையா? வேறொரு சகபாடிக்கான தேவை இல்லையல்லவா? உங்களின் இதயத்தைச் சிறிதளவு களிப்பூட்டுவதற்கு உங்களுக்குச் சிலவேளைகளில் வேறு யாராவது தேவைப்படுகிறார்களா? உங்களை ஏமாற்றும் உறவுமுறைகளில் இருந்து நீங்கள் விடுபட்டுள்ளீர்கள். அவற்றில் ஏமாற்றமும் துன்பமுமே உள்ளன. நீங்கள் இப்போது ஏமாற்றமோ அல்லது துன்பமோ இல்லாத ஓர் உறவுமுறைக்குள் வந்துள்ளீர்கள். நீங்கள் அதில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். எல்லா வேளைக்குமாக நீங்கள் அதில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் இத்தகைய பலம் வாய்ந்தவர்கள் அல்லவா? உங்களின் எவரும் பலவீனமானவர்கள் இல்லையல்லவா? நீங்கள் அங்கு திரும்பிச் சென்றதும், ‘நான் என்ன செய்வது? எவ்வாறு நான் இதைக் கையாள்வது? மாயை வந்துவிட்டாள்’ எனக் கடிதம் எழுதுவதாக இருக்கக்கூடாது.
ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்ன விசேடமான அற்புதத்தைச் செய்திருக்கிறீர்கள்? ஒவ்வொரு வருடமும் இங்கு ஒரு பூங்கொத்தைக் கொண்டு வரவேண்டும் எனத் தந்தை கூறியதை நடைமுறைப்படுத்துவதில் அனைவரும் மிக நல்ல கவனம் செலுத்துவதை பாப்தாதா காண்கிறார். உங்களுக்கு எப்போதும் அந்த உற்சாகம் உள்ளது. இப்போதும் உங்களுக்கு அது உள்ளது. அதாவது, ஒவ்வொரு வருடமும் தந்தையிடமிருந்து பிரிந்து சென்ற புதிய குழந்தைகள் அவர்களின் வீட்டிற்கும் அவர்களின் குடும்பத்திற்கும் வரவேண்டும் என்பதே அதுவாகும். எனவே, ஐரோப்பா இந்த இலக்கை வைத்திருந்து நல்லதொரு விரிவாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை பாப்தாதா பார்த்தார். அதனால், நீங்கள் தந்தையின் மேன்மையான வாசகங்களையும் அவரின் அறிவுறுத்தல்களையும் நிறைவேற்றும் கீழ்ப்படிவான குழந்தைகள். கீழ்ப்படிவான குழந்தைகள் எப்போதும் தந்தையின் விசேடமான ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். கீழ்ப்படிவான குழந்தைகள் இயல்பாகவே ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறார்கள். உங்களுக்குப் புரிகிறதா? சில வருடங்களுக்கு முன்னர், வெகு சிலரே இருந்தனர். ஆனால், ஒவ்வொரு வருடமும் விரிவாகுவதால், இது குடும்பங்கள் அனைத்திலும் அதிபெரியது ஆகியுள்ளது. எனவே, ஒன்றில் இருந்து இரண்டு. இரண்டில் இருந்து மூன்று. இப்போது, அங்கு எத்தனை நிலையங்கள் உள்ளன? யுகே வேறானது, பெரியது. அனைவரின் தொடர்பும் யுகே உடனேயே உள்ளது. ஏனெனில், அதுவே வெளிநாடுகளின் அத்திவாரமாக உள்ளது. எத்தனை கிளைகள் தோன்றினாலும், மரம் எந்தளவிற்குத் தொடர்ந்து வளர்ந்தாலும், அதன் தொடர்பு அத்திவாரத்துடன் எப்போதும் இருக்கும். அத்திவாரத்துடன் தொடர்பு இல்லாவிட்டால், எவ்வாறு மேலதிக வளர்ச்சி ஏற்படும்? இலண்டனின் விசேடமான அன்பான இரத்தினங்கள் கருவிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். ஏனெனில், அதுவே அத்திவாரம் ஆகும். எனவே, அனைவரின் தொடர்பாலும், இலகுவாக வழிகாட்டல்களைப் பெறுவதன் மூலமும், உங்களின் முயற்சிகளும் சேவையும் இரண்டுமே இலகுவாகியுள்ளன. பாப்தாதா எப்போதும் உங்களுடனேயே இருக்கிறார். ஒரு விநாடியேனும் உங்களால் பாப்தாதா இல்லாமல் செயல்பட முடியாது. நீங்கள் அந்தளவிற்கு ஒன்றிணைந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், பௌதீக ரூபத்தில், சேவை வசதிகளில், சேவைக்கான திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், உங்களின் சுய முன்னேற்றத்தில், யாருக்காவது ஏதாவது வழிகாட்டல்கள் தேவைப்பட்டால், நீங்கள் அந்தத் தொடர்பை வைத்திருக்கிறீர்கள். உங்களால் இலகுவாக ஒரு தீர்வைப் பெறுவதற்காகவே இந்த வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. சிலவேளைகளில், உங்களின் புத்தியும் தெளிவாக இல்லாததால், உங்களால் பாப்தாதாவின் வழிகாட்டல்களையும் அவரின் சக்தியையும் பெற முடியாதவாறு மாயையின் புயல்கள் ஏற்படும். அத்தகைய வேளையில், நீங்கள் தீதிகள், தாதிகள் என்று அழைக்கும் பௌதீகமான ஊடகர்கள் (மீடியங்கள்) கருவிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கருவிகளாக இருப்பதனால், உங்களின் நேரம் வீணாகாது. எவ்வாறாயினும், உங்களிடம் தைரியம் உள்ளதென்பதை பாப்தாதா அறிவார். நீங்கள் அங்கே தோன்றி, அங்கேயே சேவைக்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். எனவே, ‘புண்ணியம் வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறது’ என்ற பாடத்தை நீங்கள் உறுதியாக்கியுள்ளீர்கள். அங்குள்ள ஆத்மாக்களைக் கருவிகளாக்கி விரிவாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் நல்லது. நன்மை செய்யும் உணர்வுகளுடன் நீங்கள் செயல்படுகிறீர்கள். எனவே, எங்கு திடசங்கற்பம் உள்ளதோ, அங்கு நிச்சயமாக வெற்றி ஏற்படும். என்ன நிகழ்ந்தாலும், நீங்கள் சேவையில் வெற்றி பெற வேண்டும். இந்த மேன்மையான எண்ணம், இன்று உங்களுக்கு உடனடிப் பலனை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, உங்களின் மேன்மையான குடும்பத்தைப் பார்க்கும்போது, உங்களுக்குள் விசேடமான சந்தோஷம் ஏற்படுகிறது. குறிப்பாகப் பாண்டவர்கள் ஆசிரியர்கள் ஆகியுள்ளார்கள். சக்திகள் எப்போதும் உதவியாளர்களே. பாண்டவர்களால் செய்யப்பட்ட சேவையின் விரிவாக்கத்தின் உடனடிப் பலனை நீங்கள் எப்போதும் பெறுகிறீர்கள். சேவையை விட, சேவை நிலையங்களின் பிரகாசமும் காந்தியும் சக்திகளாலேயே ஏற்படுகிறது. சக்திகளுக்கு அவர்களுக்கே உரிய பாகம் உள்ளது. பாண்டவர்களுக்கு அவர்களுக்கு உரிய பாகம் உள்ளது. ஆகவே, இருவருமே தேவை. பாண்டவர்கள் இல்லாமல் சக்திகள் மட்டும் உள்ள நிலையங்கள் சக்திவாய்ந்ததாக இருக்காது. எனவே, இருவரும் தேவைப்படுகிறார்கள். நீங்கள் அனைவரும் இப்போது விழித்துவிட்டீர்கள். எனவே, உங்கள் அனைவரின் மூலமாகவும் ஏனையவர்கள் இலகுவாக விழித்தெழுவார்கள். இதற்குக் காலம் எடுத்துள்ளது. முயற்சியும் தேவைப்பட்டது. ஆனால், இப்போது நீங்கள் மிக நன்றாக வளருகிறீர்கள். திடசங்கற்பம் வெற்றி அடையாமல் விடுவதென்பது சாத்தியம் இல்லை. நீங்கள் நடைமுறை அத்தாட்சியைக் காண்கிறீர்கள். ஏதாவதொன்று அங்கே ஒருபோதும் நிகழாது எனச் சிறிதளவு நீங்கள் மனம் தளர்ந்தாலும், உங்களின் அந்தச் சிறிய பலவீனமான எண்ணமும் சேவையில் ஒரு வேறுபாட்டை ஏற்படுத்திவிடும். திடசங்கற்பம் என்ற தண்ணீர் விரைவாகப் பழத்தை உருவாக்கும். திடசங்கற்பமே வெற்றியை ஏற்படுத்தும்.
கீழ்ப்படிவானவராகி, கடவுளிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.
முதலாம் இலக்கக் கீழ்ப்படிவான குழந்தை என்றால், உங்களின் தந்தை உங்களுக்கு என்ன கூறுகிறாரோ, நீங்கள் அதைச் செய்யும் குழந்தை என்று அர்த்தம். தந்தை கொடுக்கும் கட்டளைகளையும் ஸ்ரீமத்தையும் அவர் கொடுத்தவாறே மிகச்சரியாகப் பின்பற்றுவதே கீழ்ப்படிவானவராக இருத்தல் என்று அர்த்தம். ஸ்ரீமத்துடன் உங்களின் சொந்தக் கட்டளைகளையோ அல்லது மற்றவர்களின் கட்டளைகளையோ கலக்கும் எண்ணம் சிறிதளவேனும் உங்களுக்குள் இருக்கக்கூடாது. என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்! என்பதே தந்தையின் வழிகாட்டல்கள். இந்த வழிகாட்டலை ஒரு கீழ்ப்படிவான குழந்தையாக நீங்கள் பின்பற்றினால், நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதுடன், அனைத்தும் உங்களுக்கு இலகுவாகி விடும்.
அமிர்த வேளையில் இருந்து இரவு நேரம் வரை எவ்வாறு நீங்கள் சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், செயல்பட வேண்டும், மற்றவர்களுடனான உங்களின் உறவுமுறைகளில் எவ்வாறு பழக வேண்டும் என்ற ஸ்ரீமத்தையும் கட்டளைகளையும் பாப்தாதா உங்களுக்குக் கொடுத்துள்ளார். நீங்கள் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் உங்களின் ஸ்திதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும் உங்களுக்கு ஸ்ரீமத்தும் கட்டளைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். ஏனெனில், இவை நீங்கள் கடவுளிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான அடிப்படை ஆகும். இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதனால், கீழ்ப்படிவான குழந்தைகள் எப்போதும் இலேசாகவும் ஒளியாகவும் இருந்து, பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வார்கள்.
நீங்கள் பாப்தாதாவின் வழிகாட்டல்களைப் பெற்றுள்ளீர்கள்: குழந்தைகளே, வீணான எண்ணங்களை வைத்திருக்காதீர்கள். வீணானவை எதையும் பார்க்காதீர்கள். வீணானவை எதையும் கேட்காதீர்கள். வீணானவை எதையும் பேசாதீர்கள். வீணான செயல்களைச் செய்வதன் மூலம் உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். தீயது எதையும் நீங்கள் செய்வதில்லை. ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெறும் உரிமையுள்ள, கீழ்ப்படிவான குழந்தையாக ஆகவேண்டும். பாபாவின் வழிகாட்டல்கள் : குழந்தைகளே, அமிர்தவேளையில், மிகச்சரியான, சக்திவாய்ந்த நினைவு செய்யுங்கள். ஒரு கர்மயோகியாக, ஒவ்வொரு செயலையும் பணிவுடன் ஒரு கருவியாகச் செய்யுங்கள். அதேபோன்று, உங்களின் பார்வையும் மனோபாவமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும் நீங்கள் வழிகாட்டல்களைப் பெற்றுள்ளீர்கள். இந்த வழிகாட்டல்களை மிகச்சரியாகத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், நீங்கள் சதா அதீந்திரிய சுகமும் சந்தோஷமும் நிறைந்த அமைதியான ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள்.
தந்தையின் வழிகாட்டல்: உங்களின் சரீரம், மனம், செல்வம், உறவுமுறைகள் என்பவற்றைத் தந்தை உங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாகக் கொடுத்துள்ளார் எனக் கருதுங்கள். உங்களுக்கு என்ன எண்ணங்கள் ஏற்பட்டாலும் அவை சாதகமானவையாக இருக்க வேண்டும். அந்த சாதகமான எண்ணங்கள் நல்லாசிகளால் நிறைந்திருக்க வேண்டும். ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற சரீர உணர்விற்கு அப்பாற்பட்டிருங்கள். ஏனென்றால், இவையே மாயையால் உங்களுக்குள் பிரவேசிக்கக்கூடிய இரண்டு கதவுகள் ஆகும். எண்ணங்கள், நேரம், மூச்சு என்பவை பிராமண வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் ஆகும். ஆகவே, அவற்றைச் சேமியுங்கள். அவற்றை வீணாக்காதீர்கள். சக்திநிறைந்தவராக இருப்பதற்கான அடிப்படை, இயல்பாகவும் எப்போதும் கீழ்ப்படிவானவராக இருப்பதாகும். பாப்தாதாவின் முதலாவதும் பிரதானதுமான வழிகாட்டல், தூய்மையானவராக இருந்து காமத்தை வெல்லுங்கள் என்பதே ஆகும். இந்த வழிகாட்டலைப் பின்பற்றுவதில் உங்களில் பெரும்பாலானோர் சித்தி எய்திவிட்டீர்கள். ஆனால் உங்களில் அரைப்பங்கினர் இரண்டாவது விடயமான கோபத்தில் தோற்றுவிடுகிறீர்கள். உங்களில் பலரும், நீங்கள் கோபப்படுவதில்லை, ஆனால் சிலவேளைகளில் சிறிதளவு அதிகாரத் தோரணையுடன் இருக்க வேண்டியுள்ளது எனக் கூறுகிறீர்கள். எனவே, இதுவும் கீழ்ப்படிவின்மையே. இது நீங்கள் சந்தோஷத்தை அனுபவிக்கத் தடுத்துவிடுகிறது.
காலையிலிருந்து இரவுவரை, தமது நாளாந்த நேர அட்டவணையில் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கேற்ப அனைத்தையும் செய்யும் குழந்தைகள், ஒருபோதும் எதையும் கடினமாக உணர்வதில்லை. அவர்கள் கீழ்ப்படிவின் விசேடமான பலனை, ஆசீர்வாதங்களின் ரூபத்தில் பெறுகிறார்கள். அதனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் பலனுள்ளதாகிறது. கீழ்ப்படிவான குழந்தைகள் சதா திருப்தியை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் இயல்பாக மூன்று வகையான திருப்தியையும் அனுபவம் செய்கிறார்கள். 1) அவர்கள் தங்களுடன் திருப்தியாக இருக்கிறார்கள். 2) அவர்கள் அனைத்தையும் சரியான முறையில் செய்வதனால், தாம் பெறும் வெற்றிகரமான பலன் எதுவாயினும் அதனால் அவர்கள் திருப்தி அடைகிறார்கள். 3) அவர்களுடன் தொடர்பில் அல்லது உறவுமுறையில் வருகின்ற எவரும் அவர்களால் திருப்தி அடைகிறார்கள். கீழ்ப்படிவான குழந்தைகள் தமக்குக் கொடுக்கப்படும் வழிகாட்டல்களுக்கேற்ப ஒவ்வொரு செயலையும் செய்வதனால், அந்தச் செயல்கள் மேன்மையானவை. எனவே, அவர்களின் எந்தவொரு செயலும் அவர்களின் மனங்களில் அல்லது புத்திகளில் குழப்பத்தை விளைவிக்காது. தாம் செய்யும் எதுவும் சரியா இல்லையா என அவர்கள் ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. அவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கேற்ப அனைத்தையும் மிகச்சரியாகச் செய்வதனால், தமது கர்ம பந்தனங்களின் ஆதிக்கத்தின் கீழ் எதையும் செய்யாததால், அவர்கள் சதா இலேசாக இருக்கிறார்கள். அவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களுக்கேற்ப ஒவ்வொரு செயலையும் செய்வதனால், அவர்கள் கடவுளின் ஆசீர்வாதங்களை அனுபவம் செய்கிறார்கள். அத்துடன் சதா தமக்குள் அக சக்தியை உணர்கிறார்கள். சம்பூரணமாக அதீந்திரிய சுகத்தால் நிறைந்திருக்கிறார்கள்.