30.08.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 13.03.86 Om Shanti Madhuban
இலகுவான மாற்றத்திற்கான அடிப்படை, அனுபவத்தின் அதிகாரமே.
இன்று, பாப்தாதா ஆதார மூர்த்திகளாகவும் ஈடேற்றும் ரூபங்களாகவும் இருக்கும் தனது குழந்தைகளைப் பார்க்கிறார். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் இன்றைய உலகை மேன்மையானதாகவும் சம்பூரணமானதாகவும் ஆக்கும் ஆதார மூர்த்தி ஆவீர்கள். இன்று, ஆதார மூர்த்திகளான மேன்மையான ஆத்மாக்களைப் பல்வேறு வடிவங்களிலும் வழிமுறைகளாலும் உலகமே அழைக்கிறது. மேன்மையான ஆத்மாக்களான நீங்களே சகல சந்தோஷமற்ற, அமைதியிழந்த ஆத்மாக்களுக்கும் ஆதாரத்தைக் கொடுப்பவர்கள். மற்றவர்களுக்கு ஒரு துளியைக் கொடுப்பவர்கள். மற்றவர்களுக்கு சந்தோஷத்தினதும் அமைதியினதும் பாதையைக் காட்டுபவர்கள். ஞானக்கண் இல்லாதவர்களுக்கு தெய்வீகக் கண்ணைக் கொடுப்பவர்கள். அலைந்து திரியும் ஆத்மாக்களுக்கு இலக்கைக் காட்டுபவர்கள். பேறுகள் இல்லாமல் இருக்கும் ஆத்மாக்களுக்குப் பேறுகளின் அனுபவத்தைக் கொடுத்து, அவர்களை ஈடேற்றுபவர்கள். உலகில் எங்கும் ஏதாவதொரு வகையான குழப்பம் நிலவுகிறது.
சில இடங்களில், செல்வத்தினால் குழப்பம் ஏற்படுகிறது. சில இடங்களில், மக்களின் மனங்களில் பல வகையான பதட்டங்கள் உள்ளன. சிலவற்றில், தமது வாழ்க்கைகளில் உள்ள அதிருப்தியால் அவர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. சில இடங்களில், தமோபிரதான் சூழலால் குழப்பம் ஏற்படுகிறது. எங்கும், உலகம் குழப்பத்திலேயே உள்ளது. இத்தகைய வேளையில், உலகின் ஒரு மூலையில், நீங்கள் ஸ்திரமான, அசைக்க முடியாத ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். உலகமே பயத்தில் உள்ளது. ஆனால் நீங்களோ பயமற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். அத்துடன் சதா சந்தோஷத்தில் ஆடிப் பாடுகிறீர்கள். சந்தோஷத்தில் ஆடிப்பாடுவதற்கு உலகம் தற்காலிகமான வசதிகளைப் பயன்படுத்தினாலும், அந்தத் தற்காலிகமான வசதிகள் உண்மையில் அவர்களை மேலும் கவலைச் சிதைக்குள்ளேயே அழைத்துச் செல்கிறது. உலகிலுள்ள இத்தகைய ஆத்மாக்களுக்கு மேன்மையான, அழியாத பேறுகளின் அனுபவத்தின் அதிகாரமே தேவைப்படுகிறது. அவர்கள் சகல ஆதாரங்களையும் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் அனுபவம் செய்திருக்கிறார்கள். அனைவரின் சொந்த விருப்பத்திற்கு எதிராக அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒலியானது, இதை விட எங்களுக்கு வேறு ஏதாவது வேண்டும் என்பதே ஆகும். அந்த வசதிகளும் வழிமுறைகளும் அவர்களுக்கு எந்தவிதமான வெற்றியின் அனுபவத்தையும் கொடுக்கப் போவதில்லை. அனைவரின் மனங்களிலும், எமக்குப் புதியதாக ஏதாவது வேண்டும், எமக்கு வேறு ஏதாவது வேண்டும் என்ற ஒலியே காணப்படுகிறது. உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக ஆதாரங்கள் அனைத்தும் வைக்கோல் போன்றவை. அவர்கள் உண்மையான ஆதாரத்தைத் தேடுகிறார்கள். தற்காலிக ஆதாரங்கள், பேறுகள், வழிமுறைகள் அனைத்தையும் பார்த்ததால், அவர்கள் களைப்படைந்து விட்டார்கள். இப்போது, இத்தகைய ஆத்மாக்களுக்கு யார் சரியான ஆதாரத்தை, உண்மையான ஆதாரத்தை, அழியாத ஆதாரத்தைக் காட்டுவார்கள்? அது நீங்கள் அனைவருமே, இல்லையா?
உலகுடன் ஒப்பிடும்போது, உங்களில் வெகு சிலரே இருக்கிறீர்கள். நீங்கள் வெகு சிலரே. எவ்வாறாயினும், சென்ற கல்பத்தின் ஞாபகார்த்தத்தில், எல்லையற்ற சேனையின் முன்னால் ஐந்து பாண்டவர்களையே காட்டியுள்ளார்கள். அனைத்திலும் மகத்தான அதிகாரம் உங்களுடையதே. விஞ்ஞான அதிகாரத்தையும், சமயநூல்களின் அதிகாரத்தையும், அரசியல் தலைமைத்துவத்தின் அதிகாரத்தையும் மத அதிகாரத்தையும் ஏனைய வேறு அதிகாரங்களையும் கொண்டவர்கள் ஏற்கனவே தமது அதிகாரத்தின் அடிப்படையில் உலகை மாற்றுவதற்கு முயற்சி செய்துவிட்டார்கள். அவர்கள் பல விடயங்களை முயற்சி செய்துவிட்டார்கள். எவ்வாறாயினும், உங்கள் அனைவரிடமும் உள்ள அதிகாரம் என்ன? கடவுளின் அனுபவமே, மகத்தான அதிகாரம் ஆகும். இந்த அனுபவத்தின் அதிகாரத்தால், உங்களால் இலகுவாக எவரிலும் மேன்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, உங்கள் அனைவரிடமும் இந்த அனுபவத்தின் விசேட அதிகாரம் உள்ளது. இதனாலேயே, ஒரேயொரு இலகுவான, சரியான பாதையே உள்ளது எனப் பெருமையுடனும் நிச்சயத்துடனும் போதையுடனும் உத்தரவாதத்துடனும் நீங்கள் கூறுகிறீர்கள். தொடர்ந்தும் கூறுவீர்கள். இதை ஒரேயொருவரிடமிருந்து மட்டுமே பெற முடியும். இது அனைவரையும் ஒன்றுபடச் செய்கிறது. நீங்கள் அனைவருக்கும் இந்தச் செய்தியைக் கூறுகிறீர்கள், இல்லையா? இதனாலேயே, இன்று, உலகிற்கு ஆதார சொரூபங்களாகவும் ஈடேற்றும் சொரூபங்களாகவும் இருக்கும் குழந்தைகளை பாப்தாதா பார்க்கிறார். பாப்தாதாவுடன் யார் கருவிகள் ஆகியுள்ளார்கள் என்று பாருங்கள்! அவர்கள் உலகின் ஆதாரங்கள். ஆனால் யார் அவ்வாறு ஆகியிருக்கிறார்கள்? சாதாரணமானவர்களே. உலகின் பார்வையில் இருப்பவர்கள், தந்தையின் பார்வையில் இருப்பதில்லை. ஆனால், தந்தையின் பார்வையில் இருப்பவர்கள், உலக மக்களின் பார்வையில் இருப்பதில்லை. உங்களைப் பார்க்கும்போது, அவர்கள் முதலில் புன்னகை செய்து, இவர்களாக இருக்க முடியுமா? எனக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், உலக மக்கள் என்ன செய்கிறார்களோ, அதைத் தந்தை செய்வதில்லை. அவர்களுக்குப் பிரபல்யமானவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் தந்தையோ பெயரும் புகழும் இல்லாதவர்களின் பெயரைப் பெருமைப்படுத்த விரும்புகிறார். அவர் அசாத்தியமானவற்றைச் சாத்தியம் ஆக்குகிறார். சாதாரணமானவர்களை அவர் மகத்தானவர்கள் ஆக்க வேண்டியுள்ளது. பலவீனமானவர்களை மிகவும் சக்திநிறைந்தவர்கள் ஆக்க வேண்டியுள்ளது. உலகைப் பொறுத்தவரை கல்வி அறிவில்லாதவர்களை அவர் ஞானம் நிறைந்தவர்கள் ஆக்க வேண்டியுள்ளது. இது தந்தையின் பாகத்தில் உள்ளது. இதனாலேயே, குழந்தைகளான உங்களின் ஒன்றுகூடலைப் பார்க்கும்போது, பாப்தாதாவும் புன்னகை செய்கிறார். ஏனெனில், நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளான நீங்களே அனைவரும் அதிமேன்மையான பாக்கியத்தைப் பெறுவதற்குக் கருவிகள் ஆகவேண்டும். உலகிலுள்ள மக்களின் பார்வையும் இப்போது சகல திசைகளில் இருந்தும் விலகி, ஒரேயொருவரை நோக்கி வருகிறது. தங்களால் செய்ய முடியாததைத் தந்தை மறைமுகமான முறையில் நிகழச் செய்கிறார் என்பதை அவர்கள் இப்போது புரிந்து கொள்கிறார்கள். அண்மையில் கும்ப மேளாவின் போது நீங்கள் எதைக் கண்டீர்கள்? அதையே நீங்கள் கண்டீர்கள், இல்லையா? அனைவரும் அன்பான பார்வையுடன் உங்களைப் பார்ப்பதை நீங்கள் கண்டீர்கள். இது படிப்படியாக வெளிப்படுத்தப்பட வேண்டும். மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் விஞ்ஞானிகளுமே மூன்று விசேடமான அதிகாரங்கள் ஆகும். இந்த மூவரும் சாதாரணமான ரூபத்தில் கடவுளின் தரிசனத்தைப் பெறும் மேன்மையான ஆவலுடன் இப்போது நெருங்கி வருகிறார்கள். அவர்கள் இன்னமும் ஒரு திரையினூடாகவே பார்க்கிறார்கள். இந்தத் திரை விலகவில்லை. ஒரு திரையினூடாகப் பார்ப்பதனால், அவர்கள் இன்னமும் குழப்பத்துடன் இருக்கிறார்கள். இவர்களா அது அல்லது வேறு யாராவது எங்கேயாவது இருக்கிறார்களா? என்ற குழப்பத்தின் திரை உள்ளது. எவ்வாறாயினும், அவர்களின் பார்வை ஈர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திரை இப்போது விலகவுள்ளது. பல வகையான திரைகள் உள்ளன. ஒன்று, அவர்களின் தலைமைத்துவம். அவர்களின் சிம்மாசனத்தின் அல்லது அவர்களின் ஆசனத்தின் திரையும் பெரியதொரு திரையே ஆகும். தமது திரைகளின் பின்னாலிருந்து வெளியே வருவதற்கு அவர்களுக்குச் சிறிது காலம் எடுக்கும். ஆயினும், குறைந்தபட்சம் அவர்கள் தமது கண்களைத் திறந்து விட்டார்கள்! கும்பகர்ணர்கள் இப்போது சிறிதளவு விழித்துவிட்டார்கள்.
பாப்தாதா நிச்சயமாக உலகிலுள்ள சகல ஆத்மாக்களும், அதாவது, தனது அனைத்துக் குழந்தைகளும் தமது தந்தையின் ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ளச் செய்வார். அவர்கள் எவ்வாறானவர்களாக இருந்தாலும், அவர்கள் குழந்தைகளே. எனவே, அது முக்தியோ அல்லது ஜீவன்முக்தியோ, இரண்டு வகையான ஆஸ்திகளையும் குழந்தைகள் பெற முடியும். தந்தை ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வந்திருக்கிறார். அவர்களுக்கு அது தெரியாது. அது அவர்களின் தவறில்லை. அதனால், உங்கள் அனைவருக்கும் அவர்களில் கருணை பிறக்கிறதல்லவா? உங்களுக்குள் கருணையும் உள்ளது. அத்துடன் எவ்வாறாயினும் ஆத்மாக்கள் அனைவரும் தமது ஆஸ்திக்கான தமது உரிமையைப் பெற வேண்டும் என்ற உற்சாகமும் உங்களுக்குள் உள்ளது. அச்சா.
இன்று, இது கரீபியனின் முறையாகும். அனைவரும் பாப்தாதாவால் அதிகபட்சம் நேசிக்கப்படுகிறார்கள். ஒவ்வோர் இடத்தினதும் தனித்துவமான சிறப்பியல்பு எப்போதும் பாப்தாதாவின் முன்னால் உள்ளது. உண்மையில், பாப்தாதாவிடம் ஒவ்வொரு குழந்தையினதும் முழுமையான அட்டவணையும் உள்ளது. எவ்வாறாயினும், குழந்தைகள் அனைவரையும் பார்க்கும்போது, குறிப்பாக எதைப்பற்றி பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார்? குழந்தைகள் அனைவரும் தமது கொள்ளளவிற்கேற்ப சேவை செய்வதில் ஈடுபட்டிருப்பதை இட்டே அவர் மகிழ்ச்சி அடைகிறார். சேவை செய்தல் பிராமண வாழ்க்கையின் விசேடமான தொழில் ஆகியுள்ளது. சேவை செய்யாமல், இந்த பிராமண வாழ்க்கை வெறுமையாகக் காணப்படும். செய்வதற்குச் சேவை இல்லாவிட்டால், உங்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமே இல்லாததைப் போல் நீங்கள் உணர்வீர்கள். சேவை செய்வதில் மும்முரமாக இருப்பதற்கான உங்களின் உற்சாகத்தைப் பார்த்துக் குறிப்பாக பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். கரீபியர்களின் சிறப்பியல்பு என்ன? அவர்களே எப்போதும் நெருக்கமாக (கரிப்) இருப்பவர்கள். பாப்தாதா இதைப் பௌதீகமான முறையில் பார்க்கவில்லை. பௌதீகமாக, நீங்கள் வெகு தொலைவில் இருக்கலாம். ஆனால், உங்களின் மனங்களில் நீங்கள் நெருக்கமாக இருக்கிறீர்கள், இல்லையா? பௌதீகமாக நீங்கள் எந்தளவிற்குத் தொலைவில் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு, குறிப்பாகத் தந்தையின் சகவாசத்தை அனுபவம் செய்வதற்கான ஓர் உயர்த்தியை நீங்கள் பெறுவீர்கள். ஏனெனில், தந்தையின் பார்வை எப்போதும் எங்கும் உள்ள குழந்தைகள் அனைவர் மீதும் இருக்கும். அவர்கள் அவரின் பார்வையில் அமிழ்ந்திருப்பார்கள். எனவே, கண்களில் அமிழ்ந்திருப்பவர்கள் எவ்வாறிருப்பார்கள்? அவர்கள் தொலைவில் இருப்பார்களா அல்லது நெருக்கமாக இருப்பார்களா? ஆகவே, நீங்கள் அனைவரும் நெருக்கமாக இருக்கும் இரத்தினங்கள் ஆவீர்கள். உங்களில் எவரும் தொலைவில் இல்லை. நீங்கள் நெருக்கமாகவும் அன்பானவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் நெருக்கமாக இல்லாவிட்டால், உங்களுக்குள் ஊக்கமும் உற்சாகமும் இருக்காது. தந்தையின் சகவாசம், உங்களை சதா சக்திசாலியாக ஆக்குவதுடன் முன்னேறவும் செய்கிறது.
உங்கள் அனைவரையும் பார்ப்பதில் அனைவரும் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். ஏனெனில், நீங்கள் மிகுந்த தைரியத்துடன் சேவையை வளரச் செய்கிறீர்கள். அனைத்திலும் மிகப் பெரிய மாலையை நாங்கள் தயாரிக்க வேண்டும் என்ற ஒரேயொரு எண்ணமே உங்கள் அனைவருக்கும் உள்ளது என்பதை பாப்தாதா அறிவார். எங்கும் சிதறிப் போயுள்ள மாலையின் மணிகள் அனைவரையும் நான் ஒன்றுசேர்க்க வேண்டும். ஒரு மாலை செய்து, தந்தைக்குப் பரிசளிக்க வேண்டும். வருடம் முழுவதும், இந்தப் பூங்கொத்தை அல்லது மாலையைத் தந்தையின் முன்னால் கொண்டு வரவேண்டும் என்ற உற்சாகம் உங்களுக்குள் உள்ளது. எனவே, ஒரு வருடம் முழுவதும், நீங்கள் இதற்காகவே முழுமையான ஆயத்தங்களைச் செய்கிறீர்கள். இந்த வருடம், வெளிநாடுகளில் உள்ள நிலையங்களின் வளர்ச்சியின் பெறுபேறு நன்றாக இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். அது சிறியதொரு பூங்கொத்தோ அல்லது பெரியதொரு பூங்கொத்தோ, ஒவ்வொருவரும் நடைமுறையில் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார்கள். எனவே, பாப்தாதாவும் சென்ற கல்பத்தின் தனது அன்பான குழந்தைகளைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் அன்புடன் முயற்சி செய்துள்ளீர்கள். அன்புடன் செய்யப்படும் முயற்சி, முயற்சி போல் தோன்றாது. எனவே, எங்கும் இருந்து நல்லதொரு குழு வந்துள்ளது. நீங்கள் அனைவரும்; சேவை செய்வதில் எப்போதும் களைப்பற்றவர்களாக இருந்து, தொடர்ந்து முன்னேறுவதை பாப்தாதா மிகவும் விரும்புகிறார். சேவையில் உங்களின் வெற்றியின் சிறப்பியல்பானது, நீங்கள் ஒருபோதும் மனவிரக்தி அடைவதில்லை. இன்று வெகுசிலரே உள்ளனர். ஆனால் நாளை, நிச்சயமாகப் பலர் வருவார்கள். அதற்கு உத்தரவாதம் உள்ளது. ஆகவே, அவர்கள் எங்கு தந்தையின் அறிமுகத்தைப் பெற்றாலும், எங்கு தந்தையின் குழந்தைகள் கருவிகள் ஆகியிருந்தாலும், நிச்சயமாக அங்கு தந்தையின் குழந்தைகள் மறைந்திருப்பார்கள். அவர்கள் காலத்திற்கேற்ப தமது உரிமையைக் கோருவதற்கு இங்கு வருவார்கள். அவர்கள் தொடர்ந்து இங்கு வருவார்கள். எனவே, நீங்கள் அனைவரும் சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறீர்கள். நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். தந்தை அநாதியானவர். குழந்தைகள் அநாதியானவர்கள். பேறும் அநாதியானது. உங்களின் சந்தோஷமும் அநாதியானது. நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பவர்கள். சிறந்ததில் சிறந்தவர்களாக இருப்பவர்கள். வீணானவை அழிக்கப்படும்போது, சிறந்தது மட்டுமே எஞ்சியிருக்கும். பாபாவிற்குச் சொந்தமாகுதல் என்றால், சதா அழியாத பொக்கிஷங்களுக்கான உரிமையைப் பெற்றிருத்தல் என்று அர்த்தம். எனவே, உங்களுக்கு உரிமையுள்ள வாழ்க்கையே, சிறந்த வாழ்க்கை ஆகும்.
கரீபியன் சேவைக்கான அத்திவாரம், மிகவும் விசேடமான ஆத்மாக்களினூடாகவே இடப்பட்டது. அரசாங்கத்திற்குச் சேவை செய்வதற்கான அத்திவாரம், கயானாவிலேயே நிகழ்ந்தது, இல்லையா? இராஜயோகத்தின் சிறப்பியல்பின் சத்தத்தை அரசாங்கத்திற்குப் பரவச் செய்ததும் ஒரு சிறப்பியல்பே. அரசாங்கமும் மூன்று நிமிடங்களுக்கு மௌனத்தைப் பேணுவதற்கான முயற்சியைத் தொடர்ந்து செய்தது. அரசாங்கத்திற்கு நெருக்கமாக வரும் வாய்ப்பு அங்கு ஆரம்பமாகியது. நல்லதொரு பெறுபேறு கிடைத்தது. அது இன்னமும் வெளிப்படுகிறது. அவர்கள் செய்த சேவையில் கரிபியர்களும் விசேடமான விஐபி களைத் தயார் செய்துள்ளார்கள். அவர்களில் ஒருவரினூடாகப் பலருக்குச் சேவை இடம்பெற்றுள்ளது. ஆகவே, அதுவும் ஒரு சிறப்பியல்பே. நீங்கள் ஒரு விஐபி இடமிருந்தே உத்தியோகபூர்வமாக அழைப்பிதழைப் பெற்றீர்கள். எனவே, அதை முதலில் செய்வதற்குக் கரீபியனே கருவி ஆகியது. இன்று, நீங்கள் எல்லா இடங்களுக்கும் உதாரணங்கள் ஆகியுள்ளீர்கள். பலருக்கும் உற்சாகத்தையும் தூண்டுதலையும் கொடுக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள். எனவே, அனைவரும் இதன் பலனைப் பெறுவார்கள், இல்லையா? இப்போதும், உங்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பு உள்ளது. இதுவும் நெருங்கிய தொடர்பில் வருவதற்கான ஒரு வழிமுறையே ஆகும். ஞானத்தினூடாக சிறிதளவு தொடர்பினை ஏற்படுத்தும் வழிமுறையால், நீங்கள் செய்யும் சேவையில் குறிப்பாகத் தனித்துவமானவர்கள் என்ற அனுபவத்தை அவர்களுக்கு உங்களால் வழங்க முடியும். எந்தவொரு கூட்டத்திலும், நீங்கள் சேவைக்குக் கருவியாகும் போதெல்லாம், உலக சூழ்நிலைகளிலும், அவர்கள் தனித்துவத்தையும் அன்பையும் அனுபவம் செய்யும் வகையில் உங்களின் வார்த்தைகளைப் பேசுங்கள். ஆகவே, அதுவும் உங்களின் தனித்துவத்தையும் நீங்கள் அவர்களுடன் இருக்கும்போது எத்தனை அன்பானவர்கள் என்பதையும் காட்டுவதற்கான ஒரு வாய்ப்பு ஆகும். எனவே, இந்த வழிமுறையில் மேலும் சிறிதளவு கவனம் செலுத்துங்கள். உங்களால் இதை சேவை செய்வதற்கான மேன்மையான வழிமுறை ஆக்க முடியும். கயானாவைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். ஆரம்பத்தில் இருந்து சேவை செய்வதற்கான வாய்ப்பு என்ற அதிர்ஷ்டலாபத்தை நீங்கள் வென்றுள்ளீர்கள். சகல இடங்களும் மிக நன்றாக விரிவடைந்துள்ளது. இப்போது மேலும் ஒரு சிறப்பியல்பை உருவாக்குங்கள். இப்போது அந்த இடத்தைச் சேர்ந்த பிரபல்யமான பண்டிதர்கள் சிலரைத் தயார் செய்யுங்கள். ரிறினிடாடிலும் கயானாவிலும் பல பண்டிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நெருங்கி வந்துள்ளார்கள். அவர்கள் பாரதத்தின் தத்துவத்தை நம்புகிறார்கள். எனவே, இப்போது பண்டிதர்களின் குழுவொன்றைத் தயார் செய்யுங்கள். ஹரித்துவாரில் சாதுக்களின் குழுவொன்று தயார் செய்யப்படுவதைப் போல், அங்கு ஒரு பண்டிதர்களின் குழுவைத் தயார் செய்யுங்கள். அன்புடன், உங்களால் அவர்களை உங்களுக்குச் சொந்தம் ஆக்கிக் கொள்ள முடியும். அனைத்திற்கும் முதலில், அன்புடன் அவர்களை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். ஹரித்துவாரில், அதுவும் அன்பின் பெறுபேறே. அன்பே அவர்களை மதுவனத்தை அடையச் செய்தது. அவர்கள் மதுவனம் வரை வர முடிந்தால், ஞானத்தை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கும் அவர்கள் வருவார்கள். அவர்கள் வேறு எங்கே செல்வார்கள்? எனவே, இதை இப்போது செய்து காட்டுங்கள். அச்சா.
ஐரோப்பா என்ன செய்வீர்கள்? எண்ணிக்கையில் நீங்கள் குறைந்தவர்கள் இல்லை. எண்ணிக்கை எத்தனையாக இருந்தாலும், தரம் நன்றாக இருந்தால், நீங்களே முதலாம் இலக்கத்தவர்கள். வேறு எவரும் கொண்டு வராதவர்களை உங்களால் கொண்டுவர முடியும். இது பெரியதொரு விடயம் இல்லை. உங்களுக்குத் தைரியம் இருக்கும்போது, தந்தை உதவி செய்வார். குழந்தைகளான உங்களிடம் தைரியம் இருக்கும்போது, நீங்கள் குடும்பம் முழுவதிடமிருந்தும் பாப்தாதாவிடமிருந்தும் உதவியைப் பெறுகிறீர்கள். இதனாலேயே இது பெரியதொரு விடயமல்ல. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை உங்களால் செய்ய முடியும். இறுதியாக அனைவரும் ஓரிடத்திற்கே வரவேண்டும். சிலர் இப்போது வருவார்கள். ஏனையோர் சிறிது பிந்தி வருவார்கள். அவர்கள் வரவேண்டியுள்ளது. அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும், ஏதாவதொன்றை அடைவதற்கான ஆசை அவர்களிடம் உள்ளது. சூழல் நன்றாக இருப்பதனால், அவர்களிடம் மன அழுத்தம் இல்லாவிட்டாலும், அவர்கள் ஞானத்தைப் பெறும்வரைக்கும் அவர்களின் தற்காலிகள் ஆசைகள் நிறைவேறாது. ஒன்றன் பின் ஒன்றாக ஆசைகள் தொடர்ந்து ஏற்படும். அந்த ஆசைகள் சதா திருப்தியாக இருக்கும் அனுபவத்தைக் கொடுக்க மாட்டாது. சந்தோஷமற்றவர்களாக இல்லாதிருந்தாலும் அவர்கள் இன்னமும் கடவுளின் சுயநலமற்ற அன்பையும் அன்பான வாழ்க்கையையும் ஆத்ம உணர்வு அன்பை அல்லது கடவுளின் அன்பையும் அனுபவம் செய்யவில்லை. அவர்களிடம் எவ்வளவு அன்பு இருந்தாலும், வேறு எங்கும் சுயநலமற்ற அன்பு இருக்க முடியாது. அவர்களிடம் நிஜமான அன்பு கிடையாது. எனவே, அனைவரும் இதயபூர்வமான உண்மையான அன்பையும் குடும்பத்தின் அன்பையும் விரும்புகிறார்கள். வேறு எங்கேயாவது உங்களால் இது போன்றதொரு குடும்பத்தைக் காண முடியுமா? எனவே, அவர்களிடம் எந்தப் பேறு குறைவாக இருப்பதாக அவர்கள் உணர்கிறார்களோ, அந்தக் குறிப்பிட்ட பேற்றின் கவர்ச்சியைப் பற்றி அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அச்சா.
நீங்கள் அனைவரும் விசேடமான ஆத்மாக்கள். உங்களிடம் ஏதாவது சிறப்பியல்பு இல்லாவிட்டால், நீங்கள் பிராமண ஆத்மாக்கள் ஆகியிருக்க மாட்டீர்கள். உங்களின் சிறப்பியல்பே நீங்கள் ஒரு பிராமண வாழ்க்கையைப் பெறச் செய்தது. அனைத்திலும் மகத்தான சிறப்பியல்பானது, நீங்கள் பலமில்லியன்களில் கைப்பிடி அளவினர் என்பதே ஆகும். எனவே, உங்கள் ஒவ்வொருவரிடமும் உங்களுக்கே உரிய சிறப்பியல்பு உள்ளது. நாள் முழுவதும், உங்களுக்குத் தந்தையிடமும் சேவை செய்வதிலும் அன்பு உள்ளது. லௌகீகத் தொழில் ஒன்றை அந்தத் தொழிலிற்காகச் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், நினைவு செய்வதற்கும் சேவை செய்வதற்கும் உங்களிடம் இதயபூர்வமான அன்பு இருக்க வேண்டும். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா உங்களின் ஆதி தாமத்தினதும் ஆதி ரூபத்தினதும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், அன்பானவராகவும் பற்றற்றவராகவும் அப்பாற்பட்டும் இருப்பீர்களாக.அசரீரி உலகினதும் உங்களின் அசரீரி ரூபத்தினதும் விழிப்புணர்வைக் கொண்டிருத்தல், எப்போதும் உங்களைப் பற்றற்றவராகவும் அன்பானவராகவும் ஆக்குகிறது. நாம் அசரீரி உலகின் வாசிகள். இங்கு சேவைக்காகவே அவதரித்துள்ளோம். நாம் இந்த அழியும் உலகிற்குச் சொந்தமானவர்கள் அல்ல. ஆனால் நாம் அவதாரங்கள். இந்தச் சிறிய விடயத்தை நீங்கள் நினைத்தால், உங்களால் அப்பால் செல்ல முடியும். தங்களை அவதாரங்களாகக் கருதாமல், இல்லறத்தவர்களாகக் கருதுபவர்களின் வாகனம் சேற்றில் புதையுண்டிருக்கும். ‘ஓர் இல்லறத்தவர்’ என்றால், சுமையின் ஸ்திதி. ஆனால் ‘ஓர் அவதாரம்’ என்றால் முற்றிலும் இலேசானவர். உங்களை ஓர் அவதாரம் எனக் கருதுவதன் மூலம், நீங்கள் உங்களின் ஆதிதாமத்தையும் ஆதி ரூபத்தையும் நினைப்பதுடன் அப்பாலும் செல்வீர்கள்.
சுலோகம்:
ஒரு பிராமணர் என்பவர் ஒவ்வொரு பணியையும் சுத்தமாகவும் சரியான முறையிலும் செய்பவர் ஆவார்.