09.08.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 04.03.86 Om Shanti Madhuban
அதிமேன்மையான படைப்பின் அத்திவாரம் அன்பே ஆகும்.
இன்று, பாப்தாதா தனது படைப்பான மேன்மையான ஆத்மாக்களைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இந்த மேன்மையான, புதிய படைப்பே உலகில் அதிமேன்மையான, அதிகபட்சமாக நேசிக்கப்படும் படைப்பு ஆகும். ஏனெனில், இது தூய ஆத்மாக்களின் படைப்பாகும். நீங்கள் தூய ஆத்மாக்களாக இருப்பதனால், தற்சமயம் நீங்கள் பாப்தாதாவால் நேசிக்கப்படுகிறீர்கள். உங்களின் இராச்சியத்தில் நீங்கள் அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள். துவாபர யுகத்தில், நீங்கள் பக்தர்களால் நேசிக்கப்படும் தேவ விக்கிரக ஆத்மாக்களாக இருப்பீர்கள். இந்த வேளையில் நீங்கள் கடவுளால் நேசிக்கப்படும் பிராமண ஆத்மாக்கள் ஆவீர்கள். சத்தியயுகத்திலும், திரேதா யுகத்திலும் நீங்கள் இராச்சிய உரிமை கொண்டுள்ள அதியுன்னத, மேன்மையான தேவாத்மாக்களாக இருப்பீர்கள். துவாபர யுகத்தில் இருந்து, கலியுகம் முழுவதுமாக இன்றுவரை, நீங்கள் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களாக இருப்பீர்கள். மூன்று நிலைகளிலும், இந்த வேளையிலேயே நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆவீர்கள். நீங்கள் தேவதைகள் ஆகப்போகும் அதியுன்னதமாக நேசிக்கப்படும் பிராமண ஆத்மாக்கள் ஆவீர்கள். இந்த வேளையில் உங்களின் மேன்மையான ஸ்திதிக்கேற்ப நீங்கள் கல்பம் முழுவதும் மேன்மையானவராக இருப்பீர்கள். இந்த இறுதிப் பிறவியிலும் மேன்மையான ஆத்மாக்களான உங்களைப் பக்தர்கள் எவ்வாறு அழைக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் மிகுந்த அன்புடன் அழைக்கிறார்கள். அவை உயிரற்ற விக்கிரகங்கள் என அவர்கள் அறிந்திருந்தாலும், மிகுந்த அன்புடன் மேன்மையான ஆத்மாக்களான உங்களை அவர்கள் வழிபடுகிறார்கள். அவர்கள் உங்களுக்குப் பிரசாதம் படைத்து ஆரத்தி செய்கிறார்கள்(ஒரு தட்டில் தீபங்களை வைத்து வழிபடுதல்). இரட்டை வெளிநாட்டவர்களான நீங்களும் பூஜிக்கப்படுகின்ற ரூபங்கள் என உணர்கிறீர்களா? தந்தையின் பணி பாரதத்தில் செய்யப்பட்டது. இதனாலேயே, தந்தையின் ரூபங்களுடன் கூடவே, உங்கள் அனைவரின் ரூபங்களும் பாரதத்தில் உள்ளன. பாரதத்திலேயே அவர்கள் அதிகபட்சமான ஆலயங்களைக் கட்டியிருக்கிறார்கள். நீங்கள் மட்டுமே பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் என்ற போதை உங்களுக்கு இருக்கிறதல்லவா? சேவை செய்வதற்காகவே நீங்கள் உலகின் நான்கு மூலைகளுக்கும் பரவிச் சென்றுள்ளீர்கள். சிலர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்கள். ஏனையோர் ஆபிரிக்காவிற்குச் சென்றுள்ளார்கள். ஆனால் நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள்? இந்த நேரத்தில், உங்களிடம் சேவை செய்யும் சம்ஸ்காரங்களும் அன்பான சம்ஸ்காரங்களும் உள்ளன. சேவை செய்வதற்குத் தேவையான சிறப்பியல்பு அன்பே ஆகும். ஞானத்துடன் ஆன்மீக அன்பை அவர்கள் அனுபவம் செய்யும் வரைக்கும், அவர்கள் ஞானத்தைக் கேட்க மாட்டார்கள்.
இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் அனைவரும் தந்தைக்குச் சொந்தமாக வந்தபோது, உங்கள் அனைவரினதும் அத்திவாரம் என்ன? தந்தையிடமிருந்து அன்பு, குடும்பத்திடமிருந்து அன்பு, இதயபூர்வமான அன்பு, சுயநலமற்ற அன்பு. இதுவே உங்களை மேன்மையான ஆத்மாக்கள் ஆக்கியது. எனவே, சேவையில் வெற்றி பெறுவதற்கான முதல் ரூபம் அன்பின் ரூபமே ஆகும். அன்பினால் நீங்கள் தந்தைக்குச் சொந்தம் ஆகும்போது, ஞானத்தின் எந்தக் கருத்தும் இலகுவாகத் தெளிவாக்கப்படும். அன்பில்லாமல் வருபவர்களுக்கு ஞானத்தைக் கிரகிக்கவும் முன்னேறவும் காலம் எடுக்கும். முயற்சியும் தேவைப்படும். இது ஏனென்றால், அவர்களின் மனோபாவம் அதிகளவில் ‘என்ன? ஏன்? இவ்வாறு? அவ்வாறு?’ போன்றவற்றில் அகப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் அன்பிலே தங்களை மறந்திருக்கும்போது, தங்களின் அன்பினால், தந்தையின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் அன்பானதாக உணர்வார்கள். அப்போது அவர்களின் கேள்விகளும் முடிந்துவிடும். தந்தையின் அன்பு அவர்களைக் கவர்வதால், அவர்கள் கேள்விகள் கேட்டாலும், எதையாவது புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்யும் நிலையிலேயே இருப்பார்கள். நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள், இல்லையா? அன்பிலே மூழ்கியிருப்பவர்கள், தாம் நேசிப்பவர்கள் என்ன கூறினாலும் அதில் அன்பை மட்டுமே பார்ப்பார்கள். ஆகவே, சேவையின் பிரதானமான அடிப்படை அன்பே ஆகும். தந்தையும் குழந்தைகளான உங்களை சதா அன்புடன் நினைக்கிறார். அவர் உங்களை அன்புடன் அழைக்கிறார். நீங்கள் சகல தடைகளையும் அன்புடன் கடந்து செல்ல வைக்கிறார். எனவே, இந்த இறை பிறப்பின், இந்த பிராமணப் பிறப்பின் அத்திவாரம் அன்பே ஆகும். அன்பெனும் அத்திவாரத்தைக் கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் எதையும் கஷ்டம் எனக் கருத மாட்டார்கள். அன்பினால், அவர்களிடம் ஊக்கமும் உற்சாகமும் காணப்படும். ‘தந்தையின் ஸ்ரீமத் என்னவோ, அதை நாம் பின்பற்ற வேண்டும்.’ ‘நான் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், நான் செய்வேன்’ போன்றவை அன்பான ஒருவரின் தகைமைகள் இல்லை. ‘தந்தை எனக்கு இதைக் கூறினார். நான் நிச்சயமாக இதைச் செய்ய வேண்டும்’ என்பதே அன்புடன் இருக்கும் அன்பான ஆத்மாக்களின் ஸ்திதி ஆகும். அன்பானவர்கள் தளம்ப மாட்டார்கள். எப்போதும், தந்தையும் நானும் என்றே இருக்கும். மூன்றாம் நபர் கிடையாது. தந்தை அனைவரிலும் மகத்தானவராக இருப்பதைப் போல், அன்பான ஆத்மாக்களுக்கும் எப்போதும் பெரிய இதயங்கள் இருக்கும். சிறிய இதயங்களைக் கொண்டிருப்பவர்கள் சிறிய விடயங்களுக்கும் குழப்பம் அடைவார்கள். சிறிய விடயங்களும் பெரியதாகிவிடும். பெரிய இதயங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு, பெரிய விடயங்களும் சிறியதாகிவிடும். இரட்டை வெளிநாட்டவர்கள் அனைவரும் பெரிய இதயங்களைக் கொண்டிருப்பவர்கள், இல்லையா? இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் அனைவரையும் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். வெகு தொலைவில் இருந்து, விட்டில் பூச்சிகளான நீங்கள் தீச்சுடரிடம் உங்களை அர்ப்பணிப்பதற்காக வந்துள்ளீர்கள். நீங்களே உண்மையான விட்டில் பூச்சிகள்.
இன்று, இது அமெரிக்காவைச் சேர்ந்தவர்களின் முறையாகும். அமெரிக்காவில் இருப்பவர்களுக்குத் தந்தை கூறுகிறார்: ‘ஆ மேரே’ (வாருங்கள், என்னுடையவர்களே). அமெரிக்காவைச் சேர்ந்தவர்களும், ‘ஆ மேரே’ என்று கூறுகிறார்கள். இது ஒரு சிறப்பியல்பு, இல்லையா? விருட்சத்தின் படத்தில், ஆரம்பத்தில் இருந்தே, விசேடமாக அமெரிக்காவைச் சக்திவாய்ந்தாக அவர்கள் காட்டியுள்ளார்கள். ஸ்தாபனை ஆரம்பம் ஆகியதில் இருந்து, தந்தை அமெரிக்காவில் இருப்பவர்களை நினைத்து வந்தார். உங்களுக்கு விசேடமான பாகங்கள் உள்ளன, அல்லவா? விநாசத்தின் சக்தி மேன்மையானதாக இருப்பதைப் போல், அதற்கு வேறென்ன சிறப்பியல்பு உள்ளது? ஆமாம், ஒவ்வோர் இடத்திற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்புகள் உள்ளன. ஆனால், அமெரிக்காவின் சிறப்பியல்பு என்னவென்றால், ஒருபுறம், அவர்கள் விநாசத்திற்காக பெரியளவில் ஆயத்தம் செய்கிறார்கள். மறுபுறம், விநாசத்தை முடிப்பதற்கு ஐக்கியநாடுகள் அமையமும் உள்ளது. ஒருபுறம், விநாசத்தின் சக்தி உள்ளது. மறுபுறம், அனைவரையும் ஒன்றுசேர்க்கும் சக்தி உள்ளது. எனவே, இது இரட்டைச்சக்தி, இல்லையா? அங்கு, அவர்கள் அனைவரையும் ஒற்றுமையாக்க முயற்சி செய்கிறார்கள். எனவே, அங்கிருந்தே ஆன்மீகச் சந்திப்பின் சத்தம் உரத்து ஒலிக்கும். அந்த மக்களோ தமக்கேயுரிய முறையில் மக்களை ஒற்றுமையாக்குவதன் மூலம் அமைதியைப் பெற முயற்சி செய்கிறார்கள்.
எவ்வாறாயினும், சரியான வழிமுறையில் அவர்களை ஒற்றுமையாக்குவது உங்களின் பணியே ஆகும். அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியாமல் உள்ளது. உண்மையில், சகல மதங்களையும் சேர்ந்த ஆத்மாக்களை ஒரு குடும்பத்தில் கொண்டு வருவது பிராமணர்களான உங்களின் உண்மையான பணி ஆகும். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய விசேடமான விடயம் ஆகும். விநாசத்திற்கான சக்தி அங்கு மகத்தானதாக இருப்பதைப் போல், ஸ்தாபனை சக்திக்கான சத்தமும் உரத்தும் தெளிவாகவும் கேட்கப்பட வேண்டும். ஒரே வேளையில் விநாசத்தினதும் ஸ்தாபனையினதும் கொடிகள் ஏற்றப்பட வேண்டும். ஒன்று, விஞ்ஞானத்தின் கொடி. மற்றையது, மௌனத்தின் கொடி. விஞ்ஞான சக்தியினதும் மௌன சக்தியினதும் ஆதிக்கம் வெளிப்படுத்தப்படும்போது, வெளிப்படுத்துகைக்கான கொடிகள் ஏற்றப்படலாம் எனக் கூறப்படும். உதாரணமாக, ஒரு விஐபி இன்னொரு நாட்டிற்குச் செல்லும்போது, அவரை வரவேற்பதற்காக எங்கும் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கும். அவர்கள் தமது சொந்த நாட்டுக் கொடியையும் ஏற்றுவார்கள். அத்துடன் வந்திருக்கும் நபரின் நாட்டின் கொடியையும் ஏற்றுவார்கள். எனவே, அவர்கள் கடவுளின் வெளிப்படுத்துகை என்ற கொடியையும் ஏற்றட்டும். அவர்கள் கடவுளின் பணியையும் வரவேற்கட்டும். தந்தையின் கொடி ஒவ்வொரு மூலையிலும் ஏற்றப்படும்போது, குறிப்பாக சக்திகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனக் கூற முடியும். இது பொன்விழாவிற்கான வருடம், அல்லவா? எனவே, அனைவராலும் பொன் நட்சத்திரங்களைப் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். அந்த விசேட நட்சத்திரங்கள் ஆகாயத்தில் புலப்படும்போது, அனைவரின் கவனமும் அவற்றை நோக்கிச் செல்கிறது. இந்தப் பொன்னான பிரகாசிக்கும் நட்சத்திரங்களும் அனைவரின் கண்களிலும் புத்திகளிலும் புலப்பட வேண்டும். இதுவே பொன்விழாவைக் கொண்டாடுதல் என்று அர்த்தம். இந்த நட்சத்திரங்கள் எங்கே முதலில் பிரகாசிப்பார்கள்?
வெளிநாடுகளில் இப்போது மிக நல்ல விரிவாக்கம் உள்ளது. இது இருக்க வேண்டும். ஒவ்வொரு மூலையிலும் மறைந்திருக்கும் தந்தையின் குழந்தைகள் காலத்திற்கேற்ப இப்போது தொடர்பில் வருகிறார்கள். ஒவ்வொருவரும் முன்னேறிச் செல்வதுடன், அடுத்தவரை விட ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் சேவை செய்கிறார்கள். உங்களிடம் தைரியம் இருக்கும்போது, நீங்கள் தந்தையின் உதவியையும் பெறுகிறீர்கள். நம்பிக்கை இழந்தவர்களிலும் நம்பிக்கைத் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இது நிகழ்வது அசாத்தியம், இது மிகவும் கஷ்டம் என உலகிலுள்ள மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உங்களின் அன்பானது உங்களைத் தடைகளில் இருந்து விடுவித்து, இங்கு பறக்கும் பறவைகளைப் போல் அழைத்து வந்துள்ளது. நீங்கள் இங்கே இரட்டை விமானத்தில் வந்தீர்கள், அல்லவா? ஒன்று ஆகாயவிமானம். மற்றையது, புத்தியின் விமானம். உங்களிடம் தைரியம் மற்றும் உற்சாகம் என்ற இறக்கைகள் இருக்கும்போது, நீங்கள் விரும்பிய இடத்திற்கு உங்களால் பறந்து செல்ல முடியும். பாப்தாதா எப்போதும் குழந்தைகளின் தைரியத்திற்காக அவர்களைப் புகழ்கிறார். அவர்களின் தைரியத்தால், ஒரு தீபத்தில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றப்படுகிறது. ஒரு மாலையும் உருவாக்கப்படுகிறது. அன்புடன் முயற்சி செய்பவர்களுக்காக மிக நல்ல பலன் கிடைக்கிறது. இது அனைவரின் ஒத்துழைப்பின் சிறப்பியல்பாகும். சூழ்நிலை எத்தகையதாக இருந்தாலும், முதலில் திடசங்கற்பமும் அன்பான ஒன்றுகூடலும் இருக்க வேண்டும். இதன் மூலம், வெற்றி நடைமுறையில் புலப்படும். தரிசான நிலத்தையும் திடசங்கற்பத்தால் பழம் கொடுக்கும் நிலமாக மாற்ற முடியும். தற்காலத்தில், பாலைவனங்களிலும் பழங்களை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள். எனவே, மௌன சக்தியால் எதைத்தான் செய்ய முடியாது? அன்பெனும் நீரைப் பெறுகின்ற நிலம் மிகவும் பெரிய, ருசியான பழத்தைத் தரும். உதாரணமாக, சுவர்க்கத்தில், பழம் பெரியதாகவும் ருசியானவதாகவும் இருக்கும். வெளிநாடுகளில், பெரிய பழங்கள் உள்ளன. ஆனால் அவை ருசியாக இருப்பதில்லை. பழம் பார்ப்பதற்கு மிக நன்றாக இருக்கும். ஆனால் அது ருசியாக இருக்காது. பாரதத்தின் பழங்கள் சிறியவை. ஆனால் அவை ருசியானவை. அனைத்தின் அத்திவாரமும் இங்கேயே இடப்படுகிறது. அன்பெனும் நீரைப் பெறுகின்ற நிலையம் எப்போதும் சேவையைப் பொறுத்தவரையிலும் சகபாடிகளைப் பொறுத்தவரையிலும் மிக நல்ல பலனைத் தரும். சுவர்க்கத்தில், தூய நீரும் தூய மண்ணும் இருக்கும். இதனாலேயே, நீங்கள் அங்கே அத்தகைய பழங்களைப் பெறுவீர்கள். எங்கு அன்பு உள்ளதோ, அங்கு சூழல், அதாவது, அங்கிருக்கும் இடம் மேன்மையானதாக இருக்கும். யாராவது ஒருவர் குழப்பம் அடையும்போது, அவர் என்ன கூறுகிறார்? எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. எனக்கு அன்பு மட்டுமே தேவை. எனவே, குழப்பம் அடைவதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரேயொரு வழிமுறை அன்பே ஆகும். தொலைந்து போன குழந்தைகள் இப்போது திரும்பி வந்துள்ளார்கள் என்பதே பாப்தாதாவின் மகத்தான சந்தோஷம் ஆகும். நீங்கள் அங்கு செல்லாவிட்டால், எவ்வாறு அங்கே சேவை இடம்பெறும்? இதனாலேயே, பிரிந்திருப்பதிலும் நன்மை உள்ளது. எவ்வாறாயினும், சந்திப்பதில் நன்மை உள்ளது. நீங்கள் அனைவரும் உங்களின் சொந்த இடங்களில் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் பாப்தாதாவின் ஒரேயொரு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒரேயொரு இலக்கே உள்ளது. அதாவது, அனாதைக் குழந்தைகள் அனைவரையும் தந்தைக்குச் சொந்தமாக்குதல். நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்த அமைதிக்கான நிகழ்ச்சியும் நல்லதே. குறைந்தபட்சம், குறுகிய காலத்திற்காயினும் மக்கள் மௌனத்தில் இருப்பதைப் பயிற்சி செய்ய வைப்பதற்கு நீங்கள் கருவிகள் ஆகுவீர்கள். ஒருவர் ஒரு நிமிடத்திற்காயினும் சரியான முறையில் மௌனத்தை அனுபவம் செய்தால், அந்த ஒரு நிமிடத்தின் மௌன அனுபவமும் இயல்பாகவே தொடர்ந்து அவரை மீண்டும் மீண்டும் ஈர்க்கும். ஏனெனில், அனைவருக்கும் அமைதியே தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், அவர்களுக்கு அதற்கான வழிமுறை தெரியாது. அவர்களிடம் சகவாசமும் இல்லை. ஆத்மாக்கள் அனைவரும் அமைதியை விரும்புவதால், இத்தகைய ஆத்மாக்கள் அமைதியை அனுபவம் செய்யும்போது, அவர்கள் இயல்பாகவே தொடர்ந்தும் ஈர்க்கப்படுவார்கள். ஒவ்வோர் இடத்திலும், மேன்மையான ஆத்மாக்கள் தமது விசேடமான பணிகளைச் செய்வதற்கு நல்ல கருவிகள் ஆகியுள்ளார்கள். எனவே, அற்புதங்களைச் செய்வது பெரிய விடயம் அல்ல. சத்தத்தைப் பரப்புவதற்கான வழிமுறை, இன்றுள்ள விசேடமான ஆத்மாக்களினூடாகவே ஆகும். அந்த விசேடமான ஆத்மாக்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தொடர்பில் வருகிறார்களோ, அந்தளவிற்கு அவர்களின் தொடர்புகளினூடாகப் பல ஆத்மாக்களும் நன்மை பெறுவார்கள். ஒரு விஐபி யின் மூலம் சாதாரணமான ஆத்மாக்கள் பலர் நன்மை பெறுவார்கள். எவ்வாறாயினும், அவர்கள் நெருங்கிய உறவுமுறையில் வரமாட்டார்கள். அவர்களின் சொந்த மதத்திலும் அவர்களின் சொந்தப் பாகங்களிலும், அவர்கள் ஏதாவதொரு விசேடமான பலனைப் பெறுவார்கள். சாதாரணமானவர்களைத் தந்தை விரும்புகிறார். அவர்களாலேயே தமது நேரத்தைக் கொடுக்க முடியும். ஆனால் மற்றவர்களுக்கு (விஐபி கள்) நேரம் இல்லை. எவ்வாறாயினும், அவர்கள் கருவிகள் ஆகும்போது, அதில் இருந்து பலர் நன்மை அடைவார்கள். அச்சா.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் அமரத்துவத்திற்கான ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ள ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் சதா ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்பட்ட வண்ணம் தொடர்ந்து செயற்படுகிறீர்கள், அல்லவா? தந்தையிடம் துண்டிக்க முடியாத அன்பை வைத்திருப்பவர்கள், அமரத்துவத்திற்கான ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் சதா கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருக்கிறார்கள். ஒரு பணிக்குக் கருவியாக இருந்தவண்ணம், அதைச் செய்யும்போது கவலையற்றவராக இருத்தலே சிறப்பியல்பாகும். தந்தை கருவி ஆகியுள்ளார். ஆனால், கருவி ஆகியபோதும் அவர் பற்றற்றவராக இருக்கிறார். இதனாலேயே அவர் கவலையற்றவராக இருக்கிறார். அதேபோல் தந்தையைப் பின்பற்றுங்கள். அன்பெனும் பாதுகாப்புடன் சதா தொடர்ந்து முன்னேறுங்கள். அன்பின் அடிப்படையில், தந்தை எல்லா வேளைக்கும் உங்களைப் பாதுகாக்கிறார். உங்களைப் பறக்கச் செய்வதன் மூலம் முன்னேறச் செய்கிறார். இந்த உறுதியான நம்பிக்கை உங்களுக்குள் உள்ளதல்லவா? உங்களின் அன்பான, ஆன்மீக உறவுமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆன்மீக உறவுமுறையால் நீங்கள் ஒருவர் மீது ஒருவர் மிகவும் நேசிப்பவர் ஆகுகிறீர்கள். ஒரு கூற்றினால் தாய்மார்களுக்கு ஒரு மிக இலகுவான விடயத்தை பாப்தாதா கூறியுள்ளார். ‘எனது பாபா!’ என்ற ஒரு கூற்றை நினைவு செய்யுங்கள். அவ்வளவே! ‘எனது பாபா!’ என நீங்கள் கூறி, சகல பொக்கிஷங்களையும் பெறுகிறீர்கள். ‘பாபா’ என்ற இந்த வார்த்தை சகல பொக்கிஷங்களுக்கும் சாவியாக உள்ளது. தாய்மார்களுக்கு சாவிகளைப் பார்த்துக்கொள்வதில் விருப்பம், அல்லவா? எனவே, பாப்தாதாவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சாவியைக் கொடுத்துள்ளார். நீங்கள் விரும்பிய பொக்கிஷங்களை உங்களால் எடுத்துக்கொள்ள முடியும். இது ஒரு பொக்கிஷத்திற்கான சாவி மட்டுமல்ல. இது சகல பொக்கிஷங்களுக்குமான சாவி ஆகும். தொடர்ந்து ‘பாபா, பாபா!’ எனக் கூறுங்கள். நீங்கள் இப்போது ஒரு குழந்தையாகவும் அதிபதியாகவும் ஆகுவதுடன், எதிர்காலத்தில் ஓர் அதிபதி ஆகுவீர்கள். சதா இந்த சந்தோஷ நடனத்தை ஆடுங்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் துண்டிக்காத நம்பிக்கை ரேகையால் உங்களின் முதலாம் இலக்கப் பாக்கியத்தை உருவாக்குவதன் மூலம் வெற்றித் திலகத்தினால் அலங்கரிக்கப்படுவீர்களாக.நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டுள்ள குழந்தைகள் ‘எவ்வாறு?’(கேஸே) அல்லது ‘இவ்வாறு’ (ஏஸே) என்ற விரிவாக்கத்திற்குள் செல்ல மாட்டார்கள். அவர்களின் நம்பிக்கையின் முறியாத ரேகையை சகல ஆத்மாக்களும் தெளிவாகக் காண்பார்கள். அவர்களின் நம்பிக்கையின் ரேகை ஒருபோதும் இடையில் முறிவதில்லை. இத்தகைய ரேகையைக் கொண்டிருப்பவர்களின் நெற்றிகளில் நீங்கள் எப்போதும் வெற்றித் திலகத்தைக் காண்பீர்கள். அதாவது, அது அவர்களின் விழிப்புணர்வில் இருக்கும். அவர்கள் பிறந்தவுடனேயே, சேவை செய்வதற்கான பொறுப்புக் கிரீடத்தை அவர்கள் அணிவார்கள். அவர்கள் சதா ஞான இரத்தினங்களுடன் விளையாடுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் சதா நினைவு மற்றும் சந்தோஷ ஊஞ்சல்களில் ஆடுவதில் தமது வாழ்க்கையைக் கழிப்பார்கள். இதுவே முதலாம் இலக்கப் பாக்கிய ரேகை ஆகும்.
சுலோகம்:
உங்களின் புத்தியெனும் கணணியில் ஒரு முற்றுப்புள்ளியை இடுதல் என்றால் சந்தோஷமாக இருத்தல் என்று அர்த்தம்.