28.06.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.02.86     Om Shanti     Madhuban


சதா சேவையாளர்களாகவும் சதா யோகிகளாகவும் ஆகுங்கள்.


இன்று, ஞானக்கடலான தந்தை, தனது ஞான கங்கைகளைப் பார்க்கிறார். ஞானக்கடலில் இருந்து வெளிப்பட்ட ஞான கங்கைகள் எவ்வாறு, எங்கே மற்றவர்களைத் தூய்மையாக்குகிறார்கள் என்பதையும் இப்போது கங்கைகள் கடலுடன் சந்திப்பைக் கொண்டாடுவதையும் அவர் பார்க்கிறார். இது கங்கைகளும் கடலும் சந்திக்கும் சந்திப்பு. கங்கைகள் அனைவரும் எங்கும் இருந்து வந்திருக்கிறார்கள். ஞான கங்கைகளைப் பார்க்கையில் பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். தூய்மையற்ற உலகமும் தூய்மையற்ற ஆத்மாக்களும் தூய்மையாக்கப்பட வேண்டும் என்ற திடசங்கற்பமான நம்பிக்கையையும் போதையையும் கங்கைகளான நீங்கள் ஒவ்வொருவரும் வைத்திருக்கிறீர்கள். இந்த நம்பிக்கையுடனும் போதையுடனும் நீங்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து சேவைக்களத்தில் முன்னேறுகிறீர்கள். மாற்றத்திற்கான பணியை எவ்வளவு விரைவாகச் சாத்தியமாகுமோ அவ்வளவு விரைவாக நிறைவடையச் செய்ய வேண்டும் என்ற உற்சாகம் உங்களின் மனங்களில் உள்ளது. ஞான கங்கைகள் அனைவரும் ஞானக் கடலான தந்தையைப் போல், உலக உபகாரிகள், ஆசீர்வாதங்களை அருள்பவர்கள், மகாதானிகள். கருணைநிறைந்த ஆத்மாக்கள். இதனாலேயே, துன்பத்துடன் அமைதியற்றிருக்கும் ஆத்மாக்களின் ஒலியைக் கேட்டதும், துரித கதியில் அந்த ஆத்மாக்களுக்குச் சேவை செய்யும், அவர்களின் துன்பத்தையும் அமைதியின்மையையும் மாற்றும் உங்களின் உற்சாகம் அதிகரிக்கிறது. சந்தோஷமற்ற ஆத்மாக்களின் இதய அழுகுரல்களைக் கேட்கும்போது, நீங்கள் கருணை கொள்கிறீர்கள், இல்லையா? அவர்கள் அனைவரும் சந்தோஷம் அடைய வேண்டும் என்ற அன்பான உணர்வு உங்களிடம் உள்ளது. உலகிற்கு சந்தோஷக் கதிர்களையும் அமைதிக் கதிர்களையும் சக்திக்கதிர்களையும் கொடுப்பதற்கு நீங்கள் கருவிகள் ஆகியுள்ளீர்கள். ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை, மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு எந்தளவிற்கு ஞான கங்கைகளின் சேவை கருவியாகியுள்ளது என இன்று பாபா பார்க்கிறார். இப்போதும், குறுகிய நேரத்தில் நீங்கள் பல ஆத்மாக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். 50 வருடங்களில், இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் மிக நல்லதொரு சேவைக்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. சகல திசைகளிலும் சேவைத்தலங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஒலியைப் பரப்புவுதற்கு நீங்கள் பல்வேறு வடிவங்களை உருவாக்கியுள்ளீர்கள். அது மிகவும் நல்லதே. இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகளின் ஒன்றுகூடல் உருவாக்கப்பட்டுள்ளது. அது தொடரும். நீங்கள் வேறு எதைச் செய்யப் போகிறீர்கள்? நீங்கள் இப்போது வழிமுறையை அறிவீர்கள். நீங்கள் ஏற்கனவே பல வசதிகளைச் சேகரித்துள்ளீர்கள். தொடர்ந்தும் பலவகையான வசதிகளைச் சேகரிப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்த ஸ்திதியிலும் சுய முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துவதுடன், மற்றவர்களின் கவனத்தையும் அவ்வாறு செய்வதற்குத் தூண்டுகிறீர்கள். மேலும் என்ன எஞ்சியுள்ளது? ஆரம்பத்தில், ஆதி இரத்தினங்கள் அனைவரும் தமது சரீரங்கள், மனங்கள், செல்வம், நேரம், உறவுமுறைகள்,இரவு பகலையும் ஊக்கம் உற்சாகத்துடன் தந்தையிடம் அர்ப்பணித்தார்கள். அவர்களின் அர்ப்பணிப்பின் ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் பலனாக, சேவையில் சக்திவாய்ந்த ஸ்திதியின் நடைமுறை ரூபத்தை நீங்கள் கண்டீர்கள். ஸ்தாபனையின் ஆரம்பத்திலும் சேவையின் ஆரம்பத்திலும் இரு வேளைகளிலும், நீங்கள் இந்தச் சிறப்பியல்புகளைக் கண்டீர்கள். ஆரம்பத்தில், பிரம்மாபாபா நடந்தபோது, செயல்களைச் செய்தபோது, நீங்கள் அவரைச் சாதாரணமான ரூபத்தில் கண்டீர்களா? அல்லது கிருஷ்ணரின் ரூபத்தில் கண்டீர்களா? நீங்கள் அவரைச் சாதாரணமான ரூபத்தில் கண்டாலும், அவரைச் சாதாரணமானவராகப் பார்க்கவில்லை என்பதை நீங்கள் உணர்ந்தீர்கள் அல்லவா? அவர் தாதா என நீங்கள் நினைத்தீர்களா? அவர் நடக்கும்போதும் செயல்களைச் செய்யும்போதும், நீங்கள் அவரைக் கிருஷ்ணராகவே அனுபவம் செய்தீர்கள். நீங்கள் அதை அனுபவம் செய்தீர்கள், இல்லையா? ஆரம்பத்தில், நீங்கள் தந்தை பிரம்மாவில் இந்தச் சிறப்பியல்பைக் கண்டீர்கள், அனுபவம் செய்தீர்கள். சேவைக்காக ஆரம்பத்தில் உங்களில் எவர் சென்றாலும், அனைவரும் உங்களை ஒரு தேவி என்றே அனுபவம் செய்தார்கள். தேவிகள் வந்துள்ளனர் என்றே அனைவரும் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். இவர்கள் தனித்துவமானவர்கள் என்பது அனைவரின் உதடுகளில் இருந்தும் வெளிவந்தது. நீங்கள் இதை அனுபவம் செய்தீர்கள், இல்லையா? நீங்கள் தேவிகள் என்ற அவர்களின் உணர்வானது, அனைவரையும் கவர்ந்தது. அது சேவையின் வளர்ச்சிக்குக் கருவி ஆகியது. எனவே, ஆரம்பத்தில், தனித்துவமாக இருக்கும் சிறப்பியல்பு காணப்பட்டது. சேவையின் ஆரம்பத்திலும், தனித்துவமாகவும் தெய்வீகமாகவும் இருக்கும் சிறப்பியல்பு காணப்பட்டது. இப்போது, இறுதியில், அவர்கள் அதே பிரகாசத்தையும் ஜொலிப்பையும் புலப்படும் முறையில் அனுபவம் செய்வார்கள். அப்போது மட்டுமே வெளிப்படுத்துகைக்கான முரசங்கள் ஒலிக்கும். இப்போது, எஞ்சியுள்ள நேரத்தில், அவர்கள் உங்களைச் சதா யோகிகளாகவும் சதா சேவையாளர்களாகவும் சதா காட்சிகளை அருளும் சொரூபங்களாகவும் சதா தந்தையை ஒத்தவர்களாகவும் இருப்பதை அனுபவம் செய்வார்கள். இந்த வழிமுறையால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் பொன்விழாவைக் கொண்டாடினீர்கள். அதாவது, நீங்கள் பொன்னுலகின் நடைமுறை ரூபத்தை அடைந்துள்ளீர்கள். பொன்விழாவைக் கொண்டாடும் காட்சிகளில், நடைமுறையில் தேவிகளின் ரூபங்களை மக்கள் அனுபவம் செய்ததைப் போல் - தேவிகள் போன்று அங்கு அமர்ந்திருந்தவர்களும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் - இப்போது, நடக்கும்போதும் செயல்களைச் செய்யும்போதும், தொடர்ந்து சேவையில் இந்த அனுபவத்தை ஆத்மாக்களுக்குக் கொடுங்கள். இதுவே பொன்விழாவைக் கொண்டாடுதல் என்பதாகும். நீங்கள் அனைவரும் பொன்விழாவைக் கொண்டாடினீர்களா? பார்த்தீர்களா? நீங்கள் என்ன கூறுவீர்கள்? அது உங்கள் அனைவருக்கும் பொன்விழா, அப்படித்தானே? அல்லது, சிலருக்கு வெள்ளிவிழாவும் ஏனையோருக்கு செப்பு விழாவுமா? இது அனைவருக்கும் பொன்விழாவே. பொன்விழாவைக் கொண்டாடுதல் என்றால், சதா தங்க ஸ்திதியில் இருப்பவர் என்று அர்த்தம். இப்போது, நடக்கும்போதும் செயல்களைச் செய்யும்போதும், ஒரு தேவதையாக இருப்பதையும் பின்னர் ஒரு தேவராக இருப்பதையும் அனுபவம் செய்யுங்கள். உங்களின் இந்தச் சக்திவாய்ந்த விழிப்புணர்வினால், மற்றவர்களும் உங்களின் தேவதை மற்றும் தேவ ரூபங்களையே பார்ப்பார்கள். நீங்கள் பொன்விழாவைக் கொண்டாடினீர்கள். அதாவது, உங்களின் நேரத்தையும் எண்ணங்களையும் சேவைக்காக அர்ப்பணித்தீர்கள். இப்போது இந்த அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாடுங்கள். உங்களின் நேரத்தை அல்லது எண்ணங்களை உங்களின் சொந்த அற்ப விடயங்களான உங்களின் சரீரம், மனம், வசதிகள் மற்றும் உறவுமுறைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்தாதீர்கள். அவற்றைச் சேவைக்காகப் பயன்படுத்துதல் என்றால் இயல்பாகவே சுய முன்னேற்றத்திற்கான பரிசைப் பெறுதல் என்று அர்த்தம். இப்போது உங்களுக்காகப் பயன்படுத்தும் நேரத்தை மாற்றுங்கள். பக்தர்கள் ஒவ்வொரு மூச்சிலும் கடவுளின் பெயரை உச்சரிப்பதற்கு முயற்சி செய்வார்கள். அதேபோன்று, ஒவ்வொரு மூச்சிலும் சேவைக்காக ஆழ்ந்த அன்பைக் கொண்டிருங்கள். முற்று முழுதாகச் சேவையில் திளைத்திருங்கள். பாக்கியத்தை அருள்பவர்களாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆகுங்கள். சதா மகாதானிகள் ஆகுங்கள். வெறுமனே நான்கு அல்லது ஆறு மணிநேரங்களுக்கு மட்டும் சேவையாளர் ஆகாதீர்கள். நீங்கள் இப்போது உலக உபகாரிகள் ஆகும் ஸ்திதியில் இருக்கிறீர்கள். உலக நன்மைக்காக ஒவ்வொரு கணத்தையும் அர்ப்பணியுங்கள். சுயத்திற்கான நன்மை, இயல்பாகவே உலக நன்மையில் அடங்கியுள்ளது. உங்களின் எண்ணங்களால் ஒவ்வொரு விநாடியும் சேவை செய்வதில் நீங்கள் மும்முரமாக இருந்தால், உங்களுக்கு வேறு எதுவும் செய்வதற்கான நேரம் இல்லாததால், மாயைக்கும் உங்களிடம் வருவதற்கு நேரம் இருக்காது. பிரச்சனைகள் தீர்வுகளாக மாற்றப்படும். தீர்வுகளின் சொரூபங்களாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்களான உங்களின் முன்னால் வருவதற்கு அவற்றுக்குத் தைரியம் இருக்காது. சேவையின் ஆரம்பத்தில், நீங்கள் உங்களின் தெய்வீகமான, சக்திவாய்ந்த ரூபங்களில் இருந்தமையால், தூய்மையற்ற பார்வையுடன் உங்களிடம் வந்தவர்களும் மாறி, தூய்மை ஆகவிரும்பும் மாணவர்களாக ஆகினார்கள். இதை நீங்கள் கண்டீர்கள். உங்களின் முன்னால் வந்த தூய்மையற்றவர்கள் மாறியதைப் போல், உங்களின் முன்னால் வருகின்ற பிரச்சனைகளும் தீர்வுகளாக மாற்றப்பட வேண்டும். இப்போது உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கு நேரம் எடுக்காதீர்கள். உலக நன்மைக்கான உங்களின் மேன்மையான உணர்வுகளால் மேன்மையான ஆசிகள் என்ற உங்களின் சம்ஸ்காரங்களும் வெளிப்பட வேண்டும். உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுவதில் உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களின் மேன்மையான சம்ஸ்காரங்களின் முன்னால், எல்லைக்குட்பட்ட சம்ஸ்காரங்கள் இயல்பாகவே முடிவடைந்துவிடும். உங்களின் நேரத்தைப் போராடுவதில் வீணாக்காதீர்கள். வெற்றியாளருக்குரிய சம்ஸ்காரங்கள் வெளிப்பட வேண்டும். உங்களின் வெற்றி சம்ஸ்காரங்களின் முன்னால் எதிரிகள் இயல்பாகவே எரிக்கப்பட்டு விடுவார்கள். இதனாலேயே, சதா சேவை செய்வதினூடாக உங்களின் சரீரங்கள், மனங்கள், செல்வத்தை அர்ப்பணிக்கும்படி உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் உங்களின் எண்ணங்களால் அல்லது வார்த்தைகளால் அல்லது செயல்களால் என எதனால் சேவை செய்தாலும், சேவையைத் தவிர வேறு எந்தச் சூழ்நிலைகளிலும் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். தானம் செய்யுங்கள். ஆசீர்வாதத்தைக் கொடுங்கள். சுயத்தில் உள்ள எந்தவொரு கிரகணமும் இயல்பாகவே விலகிவிடும். அழியாத ‘லாங்கார்’ இனை ஆரம்பியுங்கள். (தொடர்ந்து மற்றவர்களுக்கு உணவு கொடுத்தல்). ஏனெனில், மிகக் குறைந்தளவு நேரமே உள்ளது. நீங்கள் ஆத்மாக்களுக்கும் சூழலுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் தீய ஆவிகளுக்கும் சேவை செய்ய வேண்டியுள்ளது. அலைந்து திரியும் அந்த ஆத்மாக்களுக்கு அவர்களின் இலக்கை நீங்கள் காட்ட வேண்டும். நீங்கள் அவர்களை முக்தி தாமத்திற்கு அனுப்பி வைப்பீர்கள், இல்லையா? நீங்கள் அவர்களுக்கு ஒரு வீட்டைக் கொடுப்பீர்கள், இல்லையா? எனவே, இப்போது நீங்கள் எவ்வளவு சேவையைச் செய்ய வேண்டும்? அங்கு எத்தனை ஆத்மாக்கள் இருக்கிறார்கள்? ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நீங்கள் முக்தியையும் ஜீவன்முக்தியையும் கொடுக்க வேண்டும். அனைத்தையும் சேவைக்காகப் பயன்படுத்துங்கள். உங்களால் அதிகளவு போஷாக்கான பழத்தை உண்ணக்கூடியதாக இருக்கும். சிரமப்படுவதன் பழத்தை உண்ணாதீர்கள். சேவையின் பலன் என்னவென்றால், அது உங்களைச் சிரமப்படுவதில் இருந்து விடுவிக்கிறது.

பெரும்பாலானோர் தமது சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கான முயற்சிகளில் அதிக நேரத்தைத் தமக்காகச் செலவிடுகிறார்கள் என்பதைப் பெறுபேறுகளில் இருந்து பாப்தாதா கண்டார். அவர்கள் இங்கு 50 வருடங்கள் இருந்திருந்தாலும் அல்லது ஒரு மாதமாக இருந்தாலும், ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை, ஆதியான ரூபத்தில் இருந்து சம்ஸ்காரத்தை மாற்ற வேண்டியது ஒன்றாகவே உள்ளது. அந்த ஆதி சம்ஸ்காரம் பல்வேறு வழிகளில் ஒரு பிரச்சனை ஆகுகிறது. உதாரணமாக, ஒருவருக்கு புத்தியின் அகங்காரம் என்ற சம்ஸ்காரம் காணப்படும். இன்னொருவருக்கு வெறுப்பு என்ற சம்ஸ்காரம் இருக்கும். இன்னொருவருக்கு மனவிரக்தி அடையும் சம்ஸ்காரம் இருக்கும். அதே சம்ஸ்காரமே. ஆனால் அது ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை பல்வேறு நேரங்களில் தொடர்ந்து வெளிப்படுகிறது. உங்களுக்கு 50 வருடங்களோ அல்லது ஒரு வருடமோ எடுத்திருந்தாலும், இந்தப் பிரதானமான சம்ஸ்காரமே அவ்வப்போது பல்வேறு ரூபங்களில் ஒரு பிரச்சனையாக வருகிறது. அதனால் நீங்கள் அதிகளவு நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டியுள்ளது. இப்போது, ஓர் அருள்பவரின், ஒரு பாக்கியத்தை அருள்பவரின், ஒரு ஆசீர்வாதங்களை அருள்பவரின் சக்திவாய்ந்த சம்;ஸ்காரங்கள் வெளிப்பட வேண்டும். இந்த மகத்தான சம்ஸ்காரங்கள் இயல்பாகவே பலவீனமான சம்ஸ்காரங்களை முடித்துவிடும். அந்த சம்ஸ்காரங்களை அழிப்பதில் அதிகளவு நேரத்தைச் செலவிடாதீர்கள். சேவையின் பலனாக, அந்தப் பலனின் சக்தியால் அவை இயல்பாகவே மடிந்துவிடும். உதாரணமாக, நீங்கள் நல்லதொரு ஸ்திதியுடன் சேவையில் மும்முரமாக இருக்கும்போது, அந்தச் சேவையின் சந்தோஷத்தால், அந்தப் பிரச்சனைகள் அனைத்தும் இயல்பாகவே அந்த நேரத்தில் அடங்கியிருப்பதை நீங்கள் அனுபவம் செய்துள்ளீர்கள். ஏனெனில், உங்களுக்குப் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திக்கவே நேரம் இருந்திருக்காது. நீங்கள் ஒவ்வொரு விநாடியிலும் ஒவ்வோர் எண்ணத்திலும் சேவையில் மும்முரமாக இருக்கும்போது, பிரச்சனைகளின் லாங்கார் (தொடர்ச்சியான வரிசை) முடிவதுடன், உங்களால் அப்பால் நகரவும் முடியும். நீங்கள் ஆதாரத்தைக் கொடுப்பதற்குக் கருவியாகி, மற்றவர்களுக்குப் பாதையைக் காட்டி, அவர்களுக்குத் தந்தையின் பொக்கிஷங்களைக் கொடுக்கும்போது, பலவீனங்கள் இயல்பாகவே அப்பால் போய்விடும். நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் இப்போது எல்லையற்றதையும் எல்லையற்ற பணியைப்பற்றியுமே சிந்திக்க வேண்டும். உங்களின் பார்வை, உங்களின் மனோபாவம், உங்களின் வார்த்தைகள், உங்களின் சகவாசம் அல்லது உங்களின் அதிர்வலைகள் என எதன் மூலம் தானம் செய்தாலும், நிச்சயமாக நீங்கள் தானம் செய்ய வேண்டும். பக்தியில், ஏதாவது அவர்களிடம் இல்லாவிட்டால், அந்தக் குறிப்பிட்ட விடயத்தைத் தானம் செய்யும்படி கூறப்படும் வழக்கம் உள்ளது. அதைத் தானம் செய்வதன் மூலம், அவ்வாறு கொடுப்பது பெறுகின்ற ரூபத்தைப் பெறும். பொன்விழா என்றால் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் வெறுமனே அதைக் கொண்டாடினீர்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் சேவையின் 50 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறீர்கள். எனவே, இப்போது புதிய வழியில் செல்லுங்கள். நீங்கள் இளையவரோ அல்லது வயதானவரோ, 50 வருடங்களைப் பூர்த்தி செய்தவரோ அல்லது ஒரு நாள் குழந்தையோ, நீங்கள் அனைவரும் தீர்வுகளின் சொரூபங்கள் ஆக வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? 50 வருடங்களின் பின்னர் வாழ்க்கை மாறுகிறது. பொன்விழா என்றால், மாற்றத்திற்கான விழா, சம்பூரணம் ஆகுவதற்கான விழா என்று அர்த்தம். அச்சா.

சதா சக்திசாலிகளாக இருக்கும் உலக உபகாரிகளுக்கும், சதா ஆசீர்வாதங்களை அருள்பவர்களும் மகாதானியும் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், மற்றவர்களுக்குத் தீர்வுகளின் சொரூபங்கள் ஆகுவதன் மூலம் தமது சொந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் எப்போதும் இலகுவாக முடிப்பவர்களுக்கும், ஒவ்வொரு கணத்தையும் ஒவ்வோர் எண்ணத்தையும் சேவையில் அர்ப்பணிப்பவர்களுக்கும், இத்தகைய உண்மையான, பொன்னான, விசேடமான ஆத்மாக்களுக்கும், தந்தைக்குச் சமமான மேன்மையான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா பொன்விழாவின் ஆதி இரத்தினங்களைச் சந்திக்கிறார்:

ஆரம்பத்தில் இருந்தே, ஆத்மாக்களான நீங்கள், தந்தையுடன் இருப்பதுடன் அவரின் சகபாடிகளாக இருக்கும் இரண்டு விசேடமான பாகங்களையும் நடித்தவர்கள் என்ற விசேடமான சந்தோஷம் உங்களுக்கிருக்கிறதா? நீங்கள் அவருடனேயே இருந்தீர்கள். நீங்கள் உயிருடன் இருந்தபோதே, அவருக்குச் சமமான அவரின் சகபாடிகளாகவும் இருக்கிறீர்கள். எனவே, அவருடன் இருக்கின்ற விசேடமான ஆசீர்வாதத்தையும் நீங்கள் பெற்றீர்கள். அத்துடன் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அவரின் சகபாடியாக இருக்கும் விசேடமான ஆசீர்வாதத்தையும் பெற்றீர்கள். நீங்கள் அன்பினூடாகப் பிறந்தவர்கள். முன்னர் உங்களிடம் ஞானம் இருக்கவில்லை. நீங்கள் அன்பின் மூலம் பிறந்தவர்கள். நீங்கள் எந்த அன்பினால் பிறந்தீர்களோ, அந்த அன்பை மற்றவர்களுக்கும் கொடுப்பதற்கும் நீங்கள் விசேடமான கருவிகள் ஆவீர்கள். உங்களின் முன்னால் வருகின்ற எவரும், தந்தையின் அன்பின் விசேடமான அனுபவத்தை உங்கள் அனைவரின் மூலமாகவும் பெற வேண்டும். அவர்கள் உங்களில் தந்தை ரூபத்தைப் பார்க்க வேண்டும். உங்களின் செயல்களில் தந்தையின் தெய்வீகச் செயல்களைக் காண வேண்டும். தந்தையின் தெய்வீகச் செயல்கள் என்னவென்று யாராவது உங்களிடம் கேட்டால், உங்களின் செயல்கள் அந்தத் தெய்வீகச் செயல்களைக் காட்ட வேண்டும். ஏனென்றால், நீங்களே தந்தையின் தெய்வீகச் செயல்களைக் கண்ட ஆத்மாக்கள். அத்துடன் அந்தத் தெய்வீகச் செயல்களில் அவரைப் பின்பற்றியவர்கள். எத்தகைய தெய்வீகச் செயல்கள் இடம்பெற்றிருந்தாலும், அவை தந்தையின் தெய்வீகச் செயல்கள் மட்டுமல்ல. அவை கோபிவல்லபரினதும் கோபிகைகளினதும் தெய்வீகச் செயல்களே. தந்தை தனியாக எதையும் செய்யவில்லை. அவர் ஒவ்வொரு செயலையும் குழந்தைகளுடன் சேர்ந்தே செய்தார். அவர் எப்போதும் குழந்தைகளைத் தனக்கு முன்னால் வைத்தார். எனவே, உங்களை முன்னால் வைப்பதும் அவரின் தெய்வீகச் செயலே. இத்தகைய தெய்வீகச் செயல்கள் விசேட ஆத்மாக்களான உங்களினூடாகப் புலப்படட்டும். ‘நான் முன்னால் இருக்க வேண்டும்’ எனத் தந்தை ஒருபோதும் நினைத்ததில்லை. இதிலும் அவர் எப்போதும் ஒரு தியாகியாகி, மற்றவர்களை எப்போதும் முன்னால் வைத்தார். ஆகவே, இந்தத் தியாகத்தின் பலனான முதல் பழத்தை அவர் எப்போதும் பெற்றார்.தந்தை பிரம்மா ஒவ்வொரு விடயத்திலும் முதலாம் இலக்கத்தவர் ஆகினார். ஏன் அவர் அவ்வாறு ஆகினார்? தியாக உணர்வினாலும் மற்றவர்களைத் தனக்கு முன்னால் வைப்பதாலும் அவர் அவ்வாறு ஆகினார். அதனால் அவர் முன்னால் வந்தார். உறவுமுறைகளை அல்லது பௌதீக சௌகரியங்களைத் துறப்பது பெரிய விடயம் அல்ல. எவ்வாறாயினும், ஒவ்வொரு பணியிலும், அவரின் எண்ணங்களிலும், மற்றவர்களை முன்னால் வைக்கும் உணர்வே அவரிடம் இருந்தது. இந்தத் தியாகம் மேன்மையான தியாகம் ஆகும். இது சுய விழிப்புணர்வை முடித்தல், ‘நான்’ என்ற உணர்வை முடித்தல் எனப்படும். எனவே, நேரடியான பராமரிப்பைப் பெற்றவர்களிடம் விசேடமான சக்திகள் உள்ளன. நேரடிப் பராமரிப்பின் சக்தி சிறிய விடயம் இல்லை. இப்போது மற்றவர்களைப் பராமரிப்பதன் மூலம் அந்தப் பராமரிப்பை வெளிப்படுத்துங்கள். எவ்வாறாயினும், நீங்கள் விசேடமானவர்கள். நீங்கள் பல விடயங்களில் விசேடமானவர்கள். ஆரம்பத்தில் இருந்து தந்தையுடன் சேர்ந்து ஒரு பாகத்தை நடிப்பதென்பது ஒரு சிறிய சிறப்பியல்பு இல்லை. பல சிறப்பியல்புகள் உள்ளன. ஆனால் இப்போது விசேட ஆத்மாக்களான நீங்கள் ஒரு விசேடமான தானத்தைச் செய்ய வேண்டும். அனைவரும் ஞானத்தைத் தானம் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் உங்களின் சிறப்பியல்புகளைத் தானம் செய்ய வேண்டும். தந்தையின் சிறப்பியல்புகள், உங்களின் சிறப்பியல்புகளே. எனவே, அந்தச் சிறப்பியல்புகளைத் தானம் செய்யுங்கள். சிறப்பியல்புகளின் மகாதானிகள் சதா மகானாக இருப்பார்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராகவோ அல்லது பூஜிப்பவராகவோ இருந்தாலும், அவர்கள் கல்பம் முழுவதும் மகானாக இருப்பார்கள். தந்தை பிரம்மா, இறுதியிலும் கலியுகத்தைப் பொறுத்தவரை, மகானாக இருந்ததை நீங்கள் கண்டீர்கள், இல்லையா? எனவே, ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, இத்தகையதொரு மகாதானி மகானாகவே இருப்பார். அச்சா. உங்கள் அனைவரையும் பார்ப்பதில் சகலரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, நீங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்து அளித்திருக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் மிக நன்றாகக் கொண்டாடினீர்கள். நீங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தியதுடன், நீங்களும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். விசேடமான ஆத்மாக்கள் ஒரு விசேடமான பணியைச் செய்வதைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். அன்பின் மாலை தயார் ஆகிவிட்டதல்லவா? முயற்சியின் மாலையும், சம்பூரணம் ஆகுவதன் மாலையும் அவ்வப்போது வெளிப்படுகின்றன.

ஒருவர் எந்தளவிற்கு முழுமையான தேவதையாக இருப்பதை அனுபவம் செய்கிறாரோ, அந்தளவிற்கு அந்த மணியை மாலையில் கோர்க்க முடியும் எனப் புரிந்து கொள்ளலாம். எனவே, அவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தப்படுகிறார்கள். எவ்வாறாயினும், அன்பு மாலை பலம்வாய்ந்தது, இல்லையா? அன்பு மாலையின் முத்துக்கள் எப்போதும் அமரத்துவமானவை. அழியாதவை. நீங்கள் அனைவரும் அன்பெனும் பாடத்தில் சித்தி அடைவதற்கான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். எவ்வாறாயினும், இப்போது தீர்வுகளின் சொரூபங்களாக இருப்பவர்களின் மாலை தயார் ஆகவேண்டும். சம்பூரணமாக இருத்தல் என்றால், தீர்வுகளின் சொரூபமாக இருத்தல் என்று அர்த்தம். தந்தை பிரம்மாவிடம் ஒரு பிரச்சனையுடன் சென்றவர்கள், அந்தப் பிரச்சனையை மறந்துவிடுவதை நீங்கள் கண்டீர்கள். அவர்கள் எதற்காகத் தந்தை பிரம்மாவிடம் சென்றார்கள்? இப்போது எதனுடன் திரும்பிச் செல்கிறார்கள்? நீங்கள் இதை அனுபவம் செய்தீர்கள், இல்லையா? தமது பிரச்சனைகளைப் பேசுவதற்கான தைரியம் அவர்களிடம் இருக்காது. ஏனெனில், முழுமையான ஸ்திதியின் முன்னால், தமது பிரச்சனைகளைக் குழந்தைப்பிள்ளையின் விளையாட்டுக்களாகவே அவர்கள் அனுபவம் செய்வார்கள். இதனாலேயே அந்தப் பிரச்சனைகள் முடிவடைந்தன. இதுவே தீர்வுகளின் சொரூபமாக இருத்தல் எனப்படுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் தீர்வுகளின் சொரூபம் ஆகினால், பிரச்சனைகள் எங்கே செல்லும்? அதன்பின்னர் அரைக்கல்பத்திற்கு விடைபெற்றுச் செல்லும் வைபவம் கொண்டாடப்படும். இப்போது, உலகிலுள்ள பிரச்சனைகளுக்கான தீர்வுகள், இடம்பெற உள்ள மாற்றத்திலேயே தங்கியுள்ளது. எனவே, நீங்கள் பொன்விழாவைக் கொண்டாடினீர்களா? நீங்கள் உங்களை வளைப்பதற்கான விழாவைக் கொண்டாடினீர்கள். தங்களை வளைத்துக் கொள்பவர்களால் தாம் விரும்பிய எந்த வடிவத்தையும் எடுத்துக் கொள்ள முடியும். உங்களை வளைத்துக் கொள்ளுதல் என்றால், அனைவராலும் நேசிக்கப்படுதல் என்று அர்த்தம். எவ்வாறாயினும், கருவிகளாக இருப்பவர்களின் மீது அனைவரின் பார்வையும் இருக்கும். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் மகத்துவத்தாலும் பாப்தாதாவுடனான நெருக்கத்தாலும் கல்பத்திற்கான மேன்மையான வெகுமதியை உருவாக்கும் ஒரு விசேடமான நடிகர் ஆகுவீர்களாக.

மரணித்து வாழும் இந்த வாழ்க்கையில், மகத்துவத்திற்கான அடிப்படை இரண்டு விடயங்கள் ஆகும். 1) சதா மற்றவர்களை ஈடேற்றுதல். 2) பிறப்பில் இருந்தே தூய்மையாக இருத்தல். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, இதில் நிலையாக இருக்கும் குழந்தைகள், எந்தவிதத்திலும் அவர்களின் தூய்மை குறையாதவர்கள் (தூய்மை நீங்காமல் இருத்தல்), எப்போதும் உலகிற்கும் பிராமணக் குடும்பத்திற்கும் உபகாரிகளாக இருப்பவர்கள், இத்தகைய நடிகர்கள் எப்போதும் பாப்தாதாவிற்கு நெருக்கமாக இருப்பார்கள். எனவே, அவர்களின் மேன்மையான வெகுமதி கல்பம் முழுவதற்கும் உருவாக்கப்படுகிறது.

சுலோகம்:
உங்களின் எண்ணங்கள் வீணானவை ஆகும்போது, ஏனைய பொக்கிஷங்கள் அனைத்தும் வீணாகிப் போகின்றன.