30.06.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பூஜிப்பவர்களிலிருந்து நீங்கள் இப்பொழுது பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாகுகிறீர்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்த தந்தை உங்களைத் தன்னைப் போன்று பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்கு வந்துள்ளார்.கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள் கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கை என்ன?பதில்:
நீங்கள் உயிருடன் இருக்கும்பொழுது, தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியையும் பெறும் வரை அவரைச் விட்டுச் செல்ல மாட்டீர்கள் என்றும், நீங்கள் பாபாவின் நினைவிலேயே உங்கள் பழைய சரீரங்களை நீக்கி, அவருடன் வீடு திரும்புவீர்கள் என்றும் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறீர்கள். வீடு செல்வதற்கு இலகுவான வழியை பாபா எங்களுக்குக் காட்டுகின்றார்.பாடல்:
ஓம் நமசிவாய.ஓம் சாந்தி.
பலரும் “ஓம் சாந்தி” என்று தொடர்ந்தும் கூறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்களும் “ஓம் சாந்தி” எனக் கூறுகிறீர்கள். உள்ளுக்குள் இருக்கும் ஒவ்வோர் ஆத்மாவும் “ஓம் சாந்தி” எனக் கூறுகிறார். எவ்வாறாயினும், ஆத்மாக்களுக்குத் தம்மையோ அல்லது தந்தையையோ மிகச்சரியாகத் தெரியாது. அவர்கள் தந்தையைக் கூவியழைத்தாலும், அவர் கூறுகிறார்: நான் யார் என்றோ, நான் எவ்வாறானவர் என்றோ எவருக்கும் மிகச்சரியாகத் தெரியாது. இவர் (பிரம்மா) கூறுகின்றார்: நான் யார் என்பதையும் நான் எங்கிருந்து வந்துள்ளேன் என்பதையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆத்மாக்கள் ஆண்கள்; அவர்கள் புத்திரர்கள்;. தந்தையே பரமாத்மர் எனவே ஆத்மாக்கள் தங்கள் மத்தியில் சகோதரர்கள்;. பின்னர், அவர்கள் சரீரங்களுள் பிரவேசிக்கும்பொழுது, சிலர் ஆண்கள் எனவும், சிலர் பெண்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். எவ்வாறாயினும், ஆத்மா என்றால் என்ன என்பதை மிகச்சரியாக எம் மனிதரும் அறியார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். பின்னர் நீங்கள் இந்த ஞானத்தை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். அங்கு, நீங்கள் ஓர் ஆத்மா, நீங்கள் பழைய சரீரத்தை நீக்கி, புதியதொன்றை எடுப்பீர்கள் என்ற ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஆத்மா என்ற புரிந்துணர்வை உங்களுடன் எடுத்துச் செல்கின்றீர்கள். முன்னர், ஆத்மா என்றால் என்ன என்பதையேனும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. எவ்வளவு காலமாக ஒரு பாகத்தை நடிக்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. இப்பொழுதும், இன்னமும் பலர் தங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. தங்களைப் பற்றி அவர்கள் மேலோட்டமாக அறிந்திருப்பதுடன், ஒரு பெரிய லிங்க ரூபத்தையும் நினைவுசெய்கிறார்கள். மிகச்சிலரே “இந்த ஆத்மாவாகிய நான், ஓர் ஒளிப்புள்ளி, தந்தையும் ஓர் ஒளிப்புள்ளி” என்ற அறிவுடன் நினைவுசெய்கின்றார்கள். அனைவரது புத்தியும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. சிலர் மிக நன்றாகப் புரிந்துகொண்டு, ஏனையோருக்கு விளங்கப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்;. நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர்;. எல்லாவற்றுக்கும் முதலில், மக்களுக்கு ஆத்மாவைப் பற்றிய புரிந்துணர்வு இல்லை. ஆகவே, அது விளங்கப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரும் ஓர் ஆத்மாவே என்னும் நம்பிக்கையை ஒவ்வொருவரும் கொண்டிருக்கும்பொழுது மாத்திரமே அவர்களால் தந்தையை அறிய முடியும். ஆத்மா என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாததால், அவர்கள் தந்தையைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாதுள்ளார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் ஒளிப்புள்ளிகள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு சின்னஞ்சிறிய ஆத்மாவிலும், அவரவரின் 84 பிறவிகளின் பாகம்; பதிவுசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் அதையும் நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், இந்த ஞானம் மிகவும் சிறந்தது என்றும், நீங்கள் கடவுளைக் காண்பதற்கு மிகச்சிறந்த பாதையைக் காட்டுகின்றீர்கள் என்றும் அவர்கள் வெறுமனே கூறுவார்கள். எவ்வாறாயினும், அவர்கள் “நான் யார்?” என்பதையோ அல்லது “கடவுள் யார்?” என்பதையோ அறிந்துகொள்ள மாட்டார்கள். “இது மிகவும் சிறந்தது! இது மிகவும் சிறந்தது!” என அவர்கள் கூறுவார்கள். நீங்கள் அவர்களை நாஸ்திகர்களாக மாற்றுகிறீர்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த ஞானத்தைப் பற்றிய புரிந்துணர்வை வேறு எவரும் கொண்டிருப்பதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள்: இப்பொழுது நாங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றோம். நாங்கள் இப்பொழுது எவரையும் பூஜிப்பதில்லை, ஏனெனில் நாங்கள் அதிமேலான கடவுளான, அனைவரையும் விட அதிகளவு பூஜிக்கத் தகுதிவாய்ந்தவரின் குழந்தைகள். அவரே அதி பூஜிக்கத் தகுதிவாய்ந்தவரான, மேன்மையான தந்தை (பிதா ஸ்ரீ) ஆவார். அதிமேன்மையான தந்தை எங்களைத் தனக்குரியவராக்கி, எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் மாத்திரமே பூஜிக்கத் தகுதிவாய்ந்த, அதிமேலானவர். அவரைத் தவிர வேறு எவராலும் எங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்க முடியாது. வழிபடுபவர்கள் நிச்சயமாக ஏனையோரையும் வழிபடுபவர்களாகவே ஆக்குகிறார்கள். உலகில் உள்ள ஏனைய அனைவரும் வழிபடுபவர்கள்;. நாங்கள் இப்பொழுது எங்களைத் தனக்குச் சமமானவர் ஆக்குகின்ற, பூஜிக்கத் தகுதிவாய்ந்தவரைக் கண்டுள்ளோம். நாங்கள் வழிபாடு செய்வதை அவர் நிறுத்தியுள்ளார். அவர் எங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். இது ஓர் அழுக்கான உலகம். இது மரண பூமி. இராவண இராச்சியம் ஆரம்பமாகும்பொழுது, பக்தியும் ஆரம்பமாகுகிறது. நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களிலிருந்து பூஜிப்பவர்களாக மாறுகிறீர்கள். பின்னர் உங்களைப் பூஜிப்பவர்களிலிருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்குத் தந்தை வர வேண்டும். நீங்கள் இப்பொழுது பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆகுகிறீர்கள். ஒவ்வோர் ஆத்மாவும் தனது சரீரத்தினூடாக ஒரு பாகத்தை நடிக்கிறார். ஆத்மாக்களாகிய உங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக்குவதற்கு, தந்தை உங்களைத் தூய்மையாக்குகிறார். ஆகவே, குழந்தைகளான உங்களுக்கு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: தந்தையே அனைவராலும் பூஜிக்கப்படுவதால், நீங்களும் பூஜிப்பவர்களிலிருந்து, பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக மாறும் வகையில் தந்தையை நினைவு செய்யுங்கள். அரைக் கல்பமாகப் பூஜிப்பவர்களாக இருந்;தவர்கள் பின்னர் அரைக் கல்பத்துக்குப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறார்கள். இதுவும் நாடகத்தின் பாகமாகும். நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை எவரும் அறியார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இதைத் தந்தையிடமிருந்து அறிந்து கொள்வதுடன், பின்னர் அதை ஏனையோருக்கும் விளங்கப்படுத்துகிறீர்கள். நீங்கள் விளங்கப்படுத்த வேண்டிய, முதலாவது பிரதான விடயம்: உங்களை ஒரு புள்ளியான, ஓர் ஆத்மா எனக் கருதுங்கள். அசரீரியான ஒரேயொருவரே ஆத்மாக்களின் தந்தை. அவர் ஒரேயொருவரே ஞானம்-நிறைந்தவர்;. அவர் இங்கு வந்து, எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை ஒருமுறை மாத்திரமே வருகின்றார். நீங்கள் அவரை ஒருமுறை மாத்திரமே அறிந்துகொள்ள வேண்டும். அவர் இச்சங்கமயுகத்தில் ஒருமுறை மாத்திரமே வருகிறார். அவர் வந்து பழைய தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குகிறார். இப்பொழுது, நாடகத் திட்டத்துக்கேற்ப, தந்தை வந்துள்ளார். இது ஒன்றும் புதிதல்ல. கல்பம் கல்பமாக நான் இவ்வாறே வருகிறேன். இதில் ஒரு விநாடியேனும் வேறுபாடு இருக்க முடியாது. பாபா உண்மையிலேயே ஆத்மாக்களாகிய உங்களுக்கு உண்மையான ஞானத்தைக் கொடுக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தில் ஏற்றுக் கொள்கிறீர்கள். பின்பு, அரைக் கல்பத்தின் பின்னர் தந்தை மீண்டும் வர வேண்டும். நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து அறிந்து கொள்வதை மீண்டும் அடுத்த கல்பத்திலும் அறிந்து கொள்வீர்கள். இப்பொழுது பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதையும், பின்னர் நீங்கள் சத்தியயுகத்திற்குச் சென்று, அங்கு உங்கள் பாகங்களை நடிப்பீர்கள் என்பதையும் அறிவீர்கள். நீங்கள் சத்தியயுகத்தின் சுவர்க்கவாசிகள் ஆகுவீர்கள். உங்கள் புத்தி இதை நினைவுசெய்கிறது, இல்லையா? இதை நினைவுசெய்வதால், நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். இது உங்கள் மாணவ வாழ்க்கை, அல்லவா? நாங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்குக் கற்;கிறோம். இக்கல்வி முடிவுறும்வரை, உங்கள் சந்தோஷம் ஸ்திரமாக இருக்க வேண்டும். விநாசத்துக்கான விடயங்கள் அனைத்தும் தயாராகும்வரை, இக்கல்வி தொடரும் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். நிச்சயமாகத் தீப்பற்றி எரியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. அவர்கள் ஒருவரோடொருவர்; மிகவும் கோபப்படுகின்றார்கள் (hழவ-வநஅpநசநன)! எங்கும் பல்வேறு வகையான இராணுவத்தினர் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் சண்டையிடத் தயாராகுகின்றார்கள். யுத்தம் ஆரம்பிப்பதற்குப் பல்வேறு தடைகள் உருவாக்கப்படுகின்றன. முன்னைய கல்பத்தில் நடைபெற்றதைப் போன்றே விநாசம் நடைபெற வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அதைப் பார்ப்பீர்கள். ஒரு தீப்பொறியிலிருந்து, மிகப்பெரிய யுத்தம் இடம்பெற்றதை முன்னரும் நீங்கள் பார்த்தீர்கள். அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பெரிய குண்டுகளைப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்துகிறார்கள். அவர்களுக்கு முன்னால் மரணம் நிற்கும்பொழுது, மென்மேலும் குண்டுகளைத் தயாரிப்பதைத் தவிர, வேறு வழி இல்லை. இறுதி யுத்தத்திலும் அக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன் அது நிகழ வேண்டும் என்பது நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அத்தகைய குண்டுகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு இப்பொழுது தந்தை வந்துள்ளார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக விளங்கப்படுத்த வேண்டும். அனைவரும் கூவியழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபரே, வாருங்கள்! எங்களை இந்த அழுக்கான உலகிலிருந்து அப்பால் ஒரு தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். இரு தூய உலகங்கள் உள்ளன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்;: முக்தியும், ஜீவன்முக்தியும். ஒவ்வோர் ஆத்மாவும் தூய்மையாகி, முக்தி தாமத்திற்குச் செல்வார். மரண பூமி எனவும் அழைக்கப்படுகின்ற, இத்துன்ப உலகம் அழிக்கப்படவுள்ளது. முதலில், நீங்கள் அமரத்துவ பூமியில் இருந்தீர்கள். பின்னர், சக்கரத்தைச் சுற்றி வரும்பொழுது மரண பூமிக்கு வந்தீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை அமரத்துவ பூமி ஸ்தாபிக்கப்படுகின்றது. அங்கு அகால மரணம் இருக்காது. இதனாலேயே அது அமரத்துவ பூமி என்று அழைக்கப்படுகிறது. சமயநூல்களில் இக்கூற்றுகள் குறிப்பிடப்பட்டிருப்பினும், எவரும் இதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுது பாபா வந்துள்ளார் என்பதையும், மரண பூமி நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும் என்பதையும் நீங்களும் அறிவீர்கள். இது நூறு வீதம் நிச்சயமாகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: யோகசக்தி மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக வேண்டும். என்னை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எவ்வாறாயினும், சில குழந்தைகளுக்கு இந்தளவையேனும் நினைவுசெய்ய இயலாதுள்ளது. தந்தையிடமிருந்து இராச்சியமான, உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்குச் சில முயற்சி செய்யப்பட வேண்டும். இயன்றவரை, நினைவில் நிலைத்திருங்கள். உங்களைச் சோதியுங்கள்: எவ்வளவு நேரம் என்னால் நினைவில் நிலைத்திருக்க முடிகின்றது? இவ்வாறு செய்வதற்கு நான் எத்தனை பேரை நினைவூட்டுகிறேன்? “மன்மனாபவ” ஒரு மந்திரமல்ல் அது தந்தையின் நினைவாகும். சரீர உணர்வைக் கைவிடுங்கள். நீங்கள் ஆத்மாக்கள். அந்தச் சரீரங்கள் உங்கள் இரதங்கள் ஆகும். நீங்கள் அதனூடாக அதிகளவு வேலையைச் செய்கிறீர்கள். சத்தியயுகத்துத் தேவர்களாகி அங்கு ஆட்சிசெய்வதை நீங்கள் மீண்டும் ஒருமுறை அனுபவம் செய்வீர்கள். அந்நேரத்தில், நடைமுறை ரீதியாகவே நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருக்கிறீர்கள். ‘என்னுடைய இச்சரீரம் பழையதாகி விட்டது, நான் இதை நீக்கி விட்டு, புதியதொன்றை எடுப்பேன்” என ஓர் ஆத்மா கூறுவார். அங்கு துன்பத்துக்கான கேள்வியே இல்லை. இங்கு மக்கள் தாம் சரீரத்தை விட்டு நீங்காதிருப்பதற்காக, வைத்தியர்கள் கொடுக்கின்ற மருந்துகளை எடுப்பதற்கு அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சுகயீனம் அடைந்தாலும், உங்கள் சரீரத்தில் சலிப்படைந்து விடக் (கநன ரி) கூடாது. உங்கள் சரீரத்தில் வாழும்பொழுது, நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். சிவபாபாவின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் தூய்மையாகுகிறீர்கள். இதுவே முயற்சியாகும். எவ்வாறாயினும், ஆத்மா என்றால் என்ன என்பதை நீங்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். நினைவு யாத்திரையே உங்களுக்கான பிரதான விடயம். நினைவில் இருக்கும்பொழுதே, நாங்கள் இங்கிருந்து, நாங்கள் வசிக்க வேண்டிய ஆத்ம லோகத்திற்;கு திரும்பிச் செல்வோம். அது எங்கள் அமைதி தாமமாகும். நீங்கள் மாத்திரமே அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் அறிந்து நினைவுசெய்கிறீர்கள். வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. ஒரு கல்பத்தின் முன்னர் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் கோரியவர்களே, மீண்டும் அதைக் கோருவார்கள். பிரதான விடயம் நினைவு யாத்திரை ஆகும். பக்தி மார்க்க யாத்திரைகள் இப்பொழுது முடிவிற்;கு வருகின்றன. பக்தி மார்க்கமும் முடிவடையும். பக்தி மார்க்கம் என்றால் என்ன? ஞானம் இருக்கும்பொழுது மாத்திரமே இது புரிந்துகொள்ளப்பட முடியும். பக்தி செய்வதால், தாங்கள் கடவுளைக் கண்டுவிட முடியும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அவர் எங்களுக்குக் கொடுக்கின்ற பக்தியின் பலன் என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. சுவர்க்க இராச்சியமாகிய, உங்கள் ஆஸ்தியைத் தந்தை உங்களுக்கு நிச்சயமாகக் கொடுக்கிறார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் உங்கள் அனைவருக்கும் உங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுத்தார். அரசர்;, அரசி, பிரஜைகள் அனைவரும் சுவர்க்கவாசிகளாக இருந்தார்கள். தந்தை கூறுகிறார்: 5000 வருடங்களுக்கு முன்னர், நான் உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்கினேன். நான் இப்பொழுது மீண்டும் உங்களை அவ்வாறானவர்கள் ஆக்குகின்றேன். பின்னர் நீங்கள் மீண்டும் இவ்வாறே உங்கள் 84 பிறவிகளை எடுப்பீர்கள். இதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள்! இதை மறந்து விடாதீர்கள்;! தந்தை கொண்டிருக்கின்ற, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம், குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் சிறிதுசிறிதாக (வசiஉமடந) வெளிப்பட வேண்டும். நாங்கள் 84 பிறவிகளை எவ்வாறு எடுக்கிறோம்? இப்பொழுது நாங்கள் எங்கள் ஆஸ்தியை பாபாவிடமிருந்து கோருகின்றோம். நாங்கள் முன்னரும் பல தடவைகள் தந்தையிடமிருந்து அதைப் பெற்றுள்ளோம். தந்தை கூறுகிறார்: நீங்கள் முன்னர் செய்தது போன்று அதைக் கோருங்கள். தந்தை தொடர்ந்தும் அனைவருக்கும் கற்பிக்கிறார். அவர்; தொடர்ந்தும் உங்களை எச்சரித்துத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்குமாறு உங்களுக்குக் கூறுகிறார். ஒரு பற்றற்ற பார்வையாளராக உங்களைச் சோதித்து, நீங்கள் எந்தளவுக்கு முயற்சி செய்கிறீர்கள் எனப் பாருங்கள். நீங்கள் மிகவும் நன்றாக முயற்சி செய்கிறீர்கள் என உங்களிற் சிலர் எண்ணுகிறீர்கள். 'தந்தையான கடவுள் வந்துள்ளார் என்பதை அனைவரும் அறிந்து கொள்வதற்காக, நான் கண்காட்சிகளுக்கான ஆயத்தங்களைத் தொடர்ந்தும் செய்கிறேன்’ என நீங்கள் நினைக்கிறீர்கள். அப்பாவி மக்கள் ஆழ்ந்த அறியாமை உறக்கத்தில் இருக்கிறார்கள். இந்த ஞானம் பற்றிய எதனையும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. எனவே, அவர்கள் நிச்சயமாகப் பக்தியை மேலும் மேன்மையானதாகக் கருதுகிறார்கள். முன்னர் உங்களுக்கு ஞானம் ஏதாவது இருந்ததா? தந்தையே ஞானக்கடல் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவரே உங்கள் பக்தியின் பலனை உங்களுக்குக் கொடுப்பவர்;. பெருமளவு பக்தி செய்துள்ளவர்களே, அதிகப் பலனைப் பெறுவார்கள். அவர்களே ஒரு மேன்மையான அந்தஸ்தைக் கோருவதற்கு, மிக நன்றாகக் கற்பவர்கள். இவை அத்தகைய இனிமையான விடயங்கள். வயோதிபத் தாய்மார்கள் போன்றோருக்கும் அது விளங்கப்படுத்தப்படும் வகையில், அனைத்தும் இலகுவாக்கப்பட்டுள்ளன, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். கடவுள் சிவனே அதிமேலானவர். கூறப்பட்டுள்ளது: பரமாத்மாவாகிய சிவனுக்கு வந்தனங்கள். அவர் கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அவ்வளவுதான்! அவர் உங்களுக்கு வேறு எந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. நீங்கள் மேலும் முன்னேறுகையில், தொடர்ந்தும் சிவபாபாவை நினைவுசெய்வீர்கள். நாங்கள் எங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும்;; நாங்கள் வாழும்பொழுதே, தந்தையிடமிருந்து நிச்சயமாக எங்கள் ஆஸ்தியைக் கோருவோம். சிவபாபாவை நினைவுசெய்தவாறு தங்கள் சரீரங்களை விட்டு நீங்குபவர்கள், தங்களுடன் அந்தச் சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்;குச் செல்வார்கள். அவர்களின் யோகத்திற்கேற்ப, அவர்களின் பலனைப் பெறுவார்கள். நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, இயன்றளவு நினைவில் நிலைத்திருப்பதே, பிரதான விடயம். உங்கள் தலை மீதுள்ள பாவச் சுமை அகற்றப்பட வேண்டும். இதற்கு நினைவு மாத்திரமே தேவை. தந்தை உங்களுக்கு வேறெந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. அரைக் கல்பமாக, குழந்தைகளாகிய நீங்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது என்பதை அவர் அறிவார். எனவே, நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைக் கோருவதற்கு இலகுவான பாதையைக் காண்பிப்பதற்கு நான் இப்பொழுது வந்துள்ளேன். தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் அவரை முன்னரும் நினைவுசெய்தாலும், உங்களுக்கு ஞானம் இருக்கவில்லை. இப்பொழுது தந்தை உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்துள்ளார்: இவ்வாறாக என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பலர் சிவனை அதிகளவு வழிபட்டு நினைவுசெய்தாலும், அவரை இனங்கண்டு கொள்வதில்லை. இவ்வேளையில் தந்தையே வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுத்து ‘என்னை நினைவுசெய்யுங்கள்!’ எனக் கூறுகிறார். நீங்கள் இப்பொழுது அவரை நன்றாக அறிவீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் பாப்தாதாவிடம் செல்கிறீர்கள் எனக் கூறுகிறீர்கள். இந்த “பாக்கிய இரதத்தை” தந்தை பெற்றுள்ளார். “பாக்கிய இரதம்” மிகவும் பிரபல்யமானதாகும். தந்தை இந்த இரதத்தினூடாக உங்களுடன் ஞானத்தைப் பேசுகிறார். இதுவும் நாடகத்தில் நடிக்கப்பட்ட ஒரு பாகமே. கல்பம் கல்பமாக அவர் இந்தப் பாக்கிய இரதத்தில் பிரவேசிக்கிறார். இவரே அவலட்சணமானவரும் அழகானவரும் என அழைக்கப்;பட்டவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்கிறீர்கள், ஆனால் மக்கள் அவருக்கு “அர்ஜுனன்” என்னும் பெயரைக் கொடுத்தார்கள். எவ்வாறு பிரம்மா விஷ்ணு ஆகுகிறார் எனவும், எவ்வாறு விஷ்ணு பிரம்மா ஆகுகிறார் எனவும் தந்தை மிகச்சரியாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இப்பொழுது பிரம்மாவின் உலகிற்கு உரியவர்கள் எனவும், விஷ்ணுவின் உலகிற்குரியவர்கள் ஆகுவீர்கள் எனவும் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். விஷ்ணுவின் உலகில் இருந்;து பிரம்மாவின் உலகிற்குச் செல்வதற்கு 84 பிறவிகள் எடுக்கின்றன. நீங்கள் இப்பொழுது செவிமடுத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தும் உங்களுக்குப் பல தடவைகள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. தந்தை இப்பொழுது ஆத்மாக்களுக்குக் கூறுகிறார்: சதா என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதனாலேயே நீங்கள் சந்தோஷத்தையும் அனுபவம் செய்ய வேண்டும். இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாகுவதால், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். ஆகவே, நீங்கள் ஏன் தூய்மையாகக்கூடாது? நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகளாகிய, பிரம்மகுமார்களும், குமாரிகளும் ஆவீர்கள். இருப்பினும், பௌதீகத்திலிருந்து, உங்கள் மனோபாவத்;தை மாற்றுவதற்கு உங்களுக்குக் காலம் எடுக்கின்றது. படிப்படியாக, இறுதியில், நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடைவீர்கள். இப்பொழுது, கர்மாதீத ஸ்திதியை அடைவது எவருக்கும் சாத்தியமில்லை. நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்பொழுது, உங்கள் சரீரங்களில் இருக்க மாட்டீர்கள். நீங்கள் அனைவரும் அவற்றை விட்டு நீங்க வேண்டும், யுத்தம் ஆரம்பிக்கும். ஒரேயொரு தந்தையின் நினைவு மாத்திரமே இருக்க வேண்டும். இதற்கு முயற்சி தேவையாகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரு பற்றற்ற பார்வையாளராக உங்களைச் சோதித்து நீங்கள் எந்தளவுக்கு முயற்சி செய்கிறீர்கள் எனப் பாருங்கள். உலாவித் திரியும்பொழுதும், செயல்களைச் செய்யும் பொழுதும் நீங்கள் எவ்வளவு நேரம் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கிறீர்கள்?2. ஒருபொழுதும் உங்கள் சரீரத்துடன் சலிப்படைய வேண்டாம். உங்கள் சரீரத்தில் வாழும்பொழுதே, தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியை நீங்கள் கோர வேண்டும். சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கு, இந்த வாழ்வில் முழுமையாகக் கற்றிடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்டர் படைப்பவர் எனும் ஸ்திதி மூலம் அனர்த்தங்களில் களிப்பை அனுபவம் செய்வதால், ஒரு முழுமையான யோகி ஆகுவீர்களாக.ஒரு மாஸ்டர் படைப்பவர் எனும் ஸ்திதியில் நீங்கள் ஸ்திரமாக இருக்கும்பொழுது, மிகப்பெரிய அனர்த்தமும் ஒரு களிப்பூட்டும் காட்சியாக அனுபவம் செய்யப்படும். விநாசம் எனும் அனர்த்தத்தையும் நீங்கள் சுவர்க்க வாயில்கள் திறப்பதற்கான வழியாகக் காட்டுவதைப் போன்று, அதேவழியில், சிறிய அல்லது மிகப்பெரிய பிரச்சனையோ அல்லது அனர்த்தமோ ஒரு களிப்பூட்டும் ரூபமாகவே காணப்படட்டும். விரக்திக் குரல்களுக்குப் (ஹாய், ஹாய்) பதிலாக, அற்புத வார்த்தைகள் (ஓகோ) வெளிப்படுமாறு செய்யுங்கள். துன்பமானது சந்தோஷத்தின் ரூபத்தில் வெளிப்படுமாறு செய்யுங்கள். சந்தோஷத்தினதும் துன்பத்தினதும் ஞானத்தைக் கொண்டிருந்து, அவற்றினால் ஆதிக்கம் செலுத்தப்படாமல் இருங்கள். துன்பத்தை உங்கள் பெரும் சந்தோஷம் வருவதற்கான நாட்களாகக் கருதுங்கள், அப்பொழுதே நீங்கள் ஒரு முழுமையான யோகி என அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
இதய சிம்மாசனத்தை விட்டு நீங்கி, சாதாரண எண்ணங்களைக் கொண்டிருப்பது என்றால், உங்கள் பாதங்களைத் தரையில் வைப்பது என்று அர்த்தமாகும்.