21.06.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    16.02.86     Om Shanti     Madhuban


பொன்விழாவிற்குப் பொன்னான எண்ணங்கள்.


இன்று, பாக்கியத்தை அருள்பவரான பாப்தாதா, எங்கும் உள்ள பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிக் குழந்தைகள் அனைவரையும் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலும் பாக்கிய நட்சத்திரம் ஜொலிப்பதைக் கண்டு அவர் களிப்படைகிறார். கல்பம் முழுவதிலும், சகல பாக்கியங்களையும் கொண்டுள்ள இத்தனை குழந்தைகள் எந்தவொரு தந்தைக்கும் இருக்க முடியாது. நீங்கள் வரிசைக்கிரமமாகப் பாக்கியசாலிகளாக இருந்தாலும், கடைசி இலக்கத்திலுள்ள பாக்கியசாலிக் குழந்தையும், இன்றைய உலகிலுள்ள அதிமேன்மையான பாக்கியத்துடன் ஒப்பிடும்போது, அதிமிகுந்த பாக்கியசாலி ஆவார். இதனாலேயே, எல்லையற்ற பாப்தாதா குழந்தைகள் அனைவரின் பாக்கியத்தையும் இட்டுப் பெருமைப்படுகிறார். பாப்தாதா தொடர்ந்து, ‘ஆஹா எனது பாக்கியசாலிக் குழந்தைகளே! ஆஹா ஒரேயொருவரின் அன்பில் சதா தங்களை மறந்திருக்கும் எனது குழந்தைளே! ஆஹா!’ என்ற பாடலைப் பாடுகிறார். இன்று, பாப்தாதா குறிப்பாகக் குழந்தைகளான உங்கள் அனைவரினதும் அன்பு, தைரியம் என்ற இரண்டு சிறப்பியல்புகளுக்காகவும் உங்களைப் பாராட்டுவதற்காகவே வந்துள்ளார்.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் கொள்ளளவிற்கேற்ப அன்பின் பிரதிபலனைச் சேவையில் காட்டியுள்ளீர்கள். ஒரேயொரு தந்தையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உங்களின் ஆழமான ஆசையுடன் நீங்கள் நடைமுறையில் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் உங்களின் சொந்தப் பணிகளை ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் நிறைவேற்றியுள்ளீர்கள். நீங்கள் செய்த பணியைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். உங்களுக்குப் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறார். இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள சகல குழந்தைகளுக்கும், இங்கு தனிப்பட்ட முறையில் வந்திருப்பவர்களுக்கும், அத்துடன் வெகு தொலைவில் இருப்பவர்களுக்கும், தமது இதயபூர்வமாகத் தமது மேன்மையான எண்ணங்களால் சேவையில் ஒத்துழைப்பவர்களுக்கும், பாப்தாதா, ‘நீங்கள் எப்போதும் வெற்றி அடைவீர்களாக. நீங்கள் ஒவ்வொரு பணியையும் பூர்த்தி செய்வீர்களாக. நீங்கள் எப்போதும் நடைமுறை உதாரணமாக இருப்பீர்களாக’ என்ற ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார். சுய மாற்றத்திற்காகவும் சேவையில் மேலும் முன்னேறுவதற்காகவும் நீங்கள் அனைவரும் செய்த தூய ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த சத்தியத்தை பாப்தாதா செவிமடுத்தார். உங்களின் பௌதீக உலகில் உங்களிடம் உள்ள தொலைக்காட்சிகளை விட பாப்தாதாவிடம் அதிசக்திவாய்ந்த, தனித்துவமான தொலைக்காட்சி இருக்கிறது என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. சரீரங்களால் செய்யப்படும் செயல்களை மட்டுமே உங்களால் பார்க்க முடியும். பாப்தாதாவால் உங்களின் மனங்களில் உள்ள எண்ணங்களையும் பார்க்க முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் என்ன பாகங்களை நடித்தீர்களோ, பாப்தாதா அனைத்தையும் பார்த்தார், கேட்டார். அதில் உங்களின் எண்ணங்களும் உங்களின் மனங்களின் வேகமும் நிலைமையும், உங்களின் சரீரங்களின் வேகமும் நிலைமையும் அடங்கும். அவர் எதைக் கண்டிருப்பார்? இன்று, பாபா வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காகவே வந்துள்ளார். எனவே, அவர் வேறு எதையும் கூறப்போவதில்லை. பாப்தாதாவும் சேவை சகபாடிகளாக இருக்கும் குழந்தைகளும் குறிப்பாக ஒரு விடயத்திற்காக அதிகளவு பாராட்டினார்கள். அவர்கள் தங்களின் கைகளைத் தட்டவில்லை. ஆனால், முழு ஒன்றுகூடலினாலும் செய்யப்பட்ட சேவையின் மூலம் இப்போது தந்தை வெளிப்படுத்தப்படுவார் எனச் சந்தோஷ ஆரவாரம் செய்தார்கள். இப்போது உலகில் இந்த ஒலி பரவ வேண்டும். அனைவரிலும் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த இந்த ஒரேயொரு ஒற்றுமையான எண்ணமே காணப்பட்டது. சொற்பொழிவுகள் கொடுப்பவர்களாக இருந்தாலும், அவற்றைக் கேட்பவர்களாக இருந்தாலும், அல்லது பௌதீகமான பணிகளைச் செய்பவர்களாக இருந்தாலும், அனைவருக்கும் சந்தோஷம் என்ற ரூபத்தில் இந்த மிக நல்ல எண்ணமே இருந்தது. இதனாலேயே, அழகானதொரு சந்தோஷப் பிரகாசம் காணப்பட்டது. தந்தையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உற்சாகம், எங்கும் சூழலில் ஒரு சந்தோஷ அலையை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர் தங்களுடன் சந்தோஷம் மற்றும் சுயநலமற்ற அன்பு என்ற புனித பிரசாதம் என்ற அனுபவத்தை எடுத்துச் சென்றார்கள். ஆகவே, பாப்தாதாவும் குழந்தைகளின் அன்பினால் மகிழ்ச்சி அடைந்தார். உங்களுக்குப் புரிகிறதா?

நீங்கள் பொன்விழாவைக் கொண்டாடினீர்கள், இல்லையா? எதிர்காலத்தில் நீங்கள் எதைக் கொண்டாடுவீர்கள்? நீங்கள் இங்கே வைரவிழாவைக் கொண்டாடுவீர்களா அல்லது உங்களின் இராச்சியத்திலா? ஏன் நீங்கள் பொன்விழாவைக் கொண்டாடினீர்கள்? பொன்னுலகைக் கொண்டுவருவதற்காகவே அதைக் கொண்டாடினீர்கள். இந்தப் பொன்விழாவில் இருந்து உங்களுக்குள் ஏற்பட்ட மேன்மையான பொன்னான எண்ணங்கள் என்ன? நீங்கள் மற்றவர்களுக்குப் பல பொன்னான எண்ணங்களைக் கொடுத்தீர்கள். அவர்களுக்கு மிக நல்ல எண்ணங்களைக் கொடுத்தீர்கள். வருடம் முழுவதும் உங்களின் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு கணமும் பொன்னானதாக இருக்கும் வகையில் உங்களுக்குள் இருக்கும் விசேடமான பொன்னான எண்ணம் என்ன? ‘பொன்னான காலை, பொன்னான இரவு, பொன் மாலை’ என மக்கள் சொல்கிறார்கள். எவ்வாறாயினும், அதிமேன்மையான ஆத்மாக்களான உங்களின் ஒவ்வொரு விநாடியும் பொன்னானதாக இருக்க வேண்டும். வெறுமனே பொன்னான காலையோ அல்லது பொன்னான இரவோ என்றில்லாமல், இவை பொன்னான விநாடிகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கணமும் உங்களின் இரு கண்களிலும் பொன்னான உலகமும், பொன்னொளியிலான இனிய வீடும் இருக்க வேண்டும். அது பொன்னொளி. மற்றையது பொன்னுலகம். இந்த அனுபவம் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் நீங்கள் செய்த படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு கண்ணில் முக்தி. மறுகண்ணில் ஜீவன்முக்தி. இந்த அனுபவத்தைக் கொடுப்பதே, பொன்விழாவிற்கான பொன்னான எண்ணம் ஆகும். உங்கள் அனைவருக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டுள்ளதா அல்லது அந்தக் காட்சியைப் பார்த்து சந்தோஷம் அடைவதுடன் நின்றுவிட்டீர்களா? பொன்விழா இந்த மேன்மையான பணிக்குரியதே. இந்தப் பணிக்குக் கருவிகளாக இருக்கும் நீங்கள் அனைவரும் இந்தப் பணியில் சகபாடிகளாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் அனைத்தையும் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிப்பவர்கள் அல்ல. ஆனால் நீங்கள் சகபாடிகள். இது உலகப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா. யாராவது ஒருவர் ஒரு நாள் மாணவராக இருந்தாலும், அவருக்கும் இது பொன்விழாவே. உண்மையில், இந்த விழாவிற்குத் தயார் செய்தபோது நீங்கள் இங்கு வந்தீர்கள். இங்கிருப்பவர்கள் அதை உருவாக்குவதற்கு முயற்சி செய்தவர்கள். ஆனால், நீங்களோ அதைக் கொண்டாடும் வேளையில் இங்கு வந்துள்ளீர்கள். எனவே, பொன்விழாவிற்காக பாப்தாதா அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் அனைவரும் இதை உணர்கிறீர்களா? நீங்கள் வெறுமனே பார்வையாளர்கள் இல்லையல்லவா? நீங்கள் அவ்வாறு ஆகுவீர்களா அல்லது பார்வையாளர்களாக இருப்பீர்களா? நீங்கள் உலகில் பலவற்றைக் கண்டிருப்பீர்கள். ஆனால் இங்கோ, பார்த்தல் என்றால் அவ்வாறு ஆகுதல் என்று அர்த்தம். கேட்டல் என்றால் அவ்வாறு ஆகுதல் என்று அர்த்தம். எனவே, உங்களுக்கு ஏற்பட்ட எண்ணம் என்ன? ஒவ்வொரு வினாடியும் பொன்னானதாக இருக்க வேண்டும். ஒவ்வோர் எண்ணமும் பொன்னானதாக இருக்க வேண்டும். தொடர்ந்து சகல ஆத்மாக்களுக்கும் அன்பு, சந்தோஷம் என்ற பொன்னான மலர்களைத் தொடர்ந்து பொழியுங்கள். ஒருவர் எதிரியாக இருந்தாலும், அன்பைப் பொழியும்போது அது ஒரு எதிரியையும் ஒரு நண்பராக மாற்றும். மற்றவர்கள் உங்களுக்கு மரியாதை கொடுத்தாலென்ன கொடுக்காவிட்டாலென்ன, அவர்கள் உங்களை ஏற்றுக் கொண்டாலென்ன கொள்ளாவிட்டாலென்ன, எப்போதும் உங்களின் சுய மரியாதையைப் பேணுங்கள். உங்களின் அன்பான பார்வையாலும் மனோபாவத்தாலும் தொடர்ந்து மற்றவர்களுக்கு ஆத்ம உணர்வு மரியாதையைக் கொடுங்கள். அவர்கள் உங்களை ஏற்றுக் கொண்டாலென்ன கொள்ளாவிட்டாலென்ன, தொடர்ந்து அவர்களை உங்களின் இனிய சகோதரர்களாகவும் இனிய சகோதரிகளாகவும் கருதுங்கள். அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், உங்களால் அவர்களை ஏற்றுக் கொள்ள முடியுமல்லவா? அவர்கள் உங்களுக்கு கற்களை எறியட்டும். ஆனால் நீங்கள் அவர்களுக்கு இரத்தினங்களைக் கொடுங்கள். அதற்கு எதிராக நீங்களும் கற்களை எறியக்கூடாது. ஏனென்றால் நீங்கள் இரத்தின வியாபாரியான தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் இரத்தினச் சுரங்கத்தின் அதிபதிகள். நீங்கள் பல்கோடீஸ்வரர்கள். மற்றவர் கொடுத்தால் மட்டுமே நீங்கள் கொடுப்பீர்கள் என நினைக்கின்ற பிச்சைக்காரர்கள் இல்லை. அது ஒரு யாசகரின் சம்ஸ்காரம். அருள்பவரின் குழந்தைகள் எதையும் பெற்றுக் கொள்வதற்காகத் தமது கைகளை ஒருபோதும் நீட்ட மாட்டார்கள். ‘மற்றவர்கள் செய்தால் மட்டுமே நான் செய்வேன், மற்றவர் அன்பைத் தந்தால் மட்டுமே நானும் அன்பைக் கொடுப்பேன், அவர் எனக்கு மரியாதை கொடுத்தால் நானும் மரியாதை கொடுப்பேன்’ போன்ற எண்ணங்களைக் கொண்டிருப்பதும் உங்களின் கைகளை நீட்டுவதே ஆகும். இது இராஜரீகமாகப் பிச்சை எடுத்தல். நீங்கள் இதில் சுயநலமற்ற யோகிகள் ஆகினால் மட்டுமே பொன்னுலகின் சந்தோஷ அலைகள் இந்த உலகைச் சென்றடையும். விஞ்ஞான சக்தி, முழு உலகையும் அழிப்பதற்காக மிகவும் சக்திவாய்ந்த பொருட்களை உருவாக்கியுள்ளது. அதனால் குறுகிய காலத்தில் வேலை முழுவதையும் நிறைவேற்ற முடியும். விஞ்ஞான சக்தி இத்தகைய தெளிவான விடயங்களை உருவாக்குகிறது. அதேபோன்று, ஞான சக்தியைக் கொண்டிருக்கும் நீங்களும் குறுகிய காலத்தில் மிக விரைவாக எங்கும் சந்தோஷ அலைகளும் எதிர்கால மேன்மையான உலகிற்கான அலைகளும் பரவும் வகையில் சக்திவாய்ந்த மனோபாவத்தையும் சூழலையும் உருவாக்க வேண்டும். உலகில் அரைப்பங்கினர், அரைவாசி இறந்துவிட்டார்கள். அவர்கள் பயம் என்ற மரணப்படுக்கையில் தூங்குகிறார்கள். சந்தோஷ அலைகள் என்ற ஒட்சிசனை அவர்களுக்குக் கொடுங்கள். பொன்விழாவிற்கான இந்தப் பொன்னான எண்ணம் சதா வெளிப்படட்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் இப்போது உங்களின் வேகத்தைத் துரிதமானதாக்க வேண்டும். இதுவரை நீங்கள் செய்தது அனைத்தும் மிகவும் நல்லதே. இப்போது, எதிர்காலத்திற்காக, தொடர்ந்தும் சிறந்ததைச் செய்யுங்கள். அச்சா.

இரட்டை வெளிநாட்டவர்களுக்கு அதிகளவு உற்சாகம் உள்ளது. இது இப்போது இரட்டை வெளிநாட்டவர்களுக்கான வாய்ப்பு ஆகும். பலர் இங்கு வந்துள்ளனர். உங்களுக்குப் புரிகிறதா? இப்போது அனைவருக்கும் சந்தோஷத் தோளியைக் கொடுங்கள். தில்குஷ் தோளி உள்ளது. எனவே, அதிகளவில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அச்சா.

சேவையாளர்களும் சந்தோஷ நடனம் ஆடுகிறார்கள். நீங்கள் நடனம் ஆடும்போது களைப்பு இல்லாமல் போய்விடும். எனவே, நீங்கள் அனைவருக்கும் சேவையின் நடனத்தையும் சந்தோஷ நடனத்தையும் ஆடிக்காட்டினீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் உங்களின் நடனத்தை ஆடிக்காட்டினீர்கள், அல்லவா? அச்சா.

சகல, அதிமேன்மையான, பாக்கியசாலி, விசேடமான ஆத்மாக்களுக்கும், ஒவ்வொரு விநாடியையும் எண்ணத்தையும் பொன்னாக ஆக்குபவர்களுக்கும், சகல கீழ்ப்படிவான குழந்தைகளுக்கும், எப்போதும் அருள்பவரின் குழந்தைகளாக இருந்து மற்றவர்களின் மடிகளை நிரப்புவர்களுக்கும், நிரம்பியுள்ள குழந்தைகளுக்கும், எப்போதும் பாக்கியத்தை அருள்பவர்களாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் இருந்து, அனைவரும் முக்தியையும் ஜீவன்முக்தியையும் பெறச்செய்பவர்களுக்கும், எப்போதும் நிரம்பி வழிகின்ற குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் பொன்னான அன்பும் பொன்னான சந்தோஷமும் என்ற பொன்னான மலர்கள் நிறைந்த அன்பும் நினைவும் வாழ்த்துக்களும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் எப்போதும் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்கிறீர்களா? தந்தையின் நினைவானது, இயல்பாகவே உங்களுக்கு உங்களின் ஆஸ்தியை நினைவூட்டுகிறது. நீங்கள் உங்களின் ஆஸ்தியை நினைவு செய்தால், இயல்பாகவே நீங்கள் தந்தையை நினைவு செய்வீர்கள். தந்தையும் ஆஸ்தியும் இரண்டும் ஒன்றாகவே உள்ளன. ஆஸ்தியினால் நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். ஆஸ்தி என்ற பேறு உங்களுக்குக் கிடைக்காவிட்டால், நீங்கள் ஏன் தந்தையை நினைவு செய்யப் போகிறீர்கள்? எனவே, தந்தையின் நினைவும் ஆஸ்தியின் நினைவும் உங்களை சதா நிரம்பிவழியச் செய்கின்றன. நீங்கள் பொக்கிஷங்களால் நிரம்பிவழிகிறீர்கள். வலி, துன்பத்தில் இருந்து வெகு தொலைவிற்கு வந்து விட்டீர்கள். இரண்டு நன்மைகள் உள்ளன. நீங்கள் துன்பத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். அத்துடன் பொக்கிஷங்களாலும் நிரம்பிவழிகிறீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இத்தகைய நிரந்தரமான பேற்றினைப் பெறச் செய்ய முடியாது. இந்த விழிப்புணர்வானது உங்களை சதா நிறைந்தவர்களாகவும் திருப்தியானவர்களாகவும் ஆக்கும். தந்தை ஒரு கடல். அவர் எப்போதும் நிரம்பிவழிகிறார். ஒரு கடலை நீங்கள் வற்றச் செய்வதற்கு எந்தளவு முயற்சி செய்தாலும், கடல் ஒருபோதும் வற்றாது. கடல் எப்போதும் நிரம்பியே இருக்கும். அதேபோன்று, நீங்களும் சதா நிரம்பியுள்ள ஆத்மாக்கள், அல்லவா? நீங்கள் வெறுமையாகினால், எதையாவது பெறுவதற்கு எங்கேயாவது நீங்கள் கைநீட்ட வேண்டியிருக்கும். எவ்வாறாயினும், நிரம்பி வழிகின்ற ஆத்மாக்கள் எப்போதும் சந்தோஷம் மற்றும் சுகம் என்ற ஊஞ்சல்களில் தொடர்ந்து ஆடிக்கொண்டிருப்பார்கள். எனவே, நீங்கள் இத்தகைய மேன்மையான ஆத்மாக்கள் ஆகிவிட்டீர்களா? நீங்கள் சதா நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பெற்றுள்ள பொக்கிஷங்களையும் சக்திகளையும் எந்தளவிற்குப் பயன்படுத்தியுள்ளீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். எப்போதும் தைரியம் மற்றும் உற்சாகம் என்ற இறக்கைகளுடன் தொடர்ந்து பறந்து கொண்டிருப்பதுடன், மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். உங்களுக்குத் தைரியம் இருந்து, ஊக்கமோ அல்லது உற்சாகமோ இல்லாவிட்டால், வெற்றி ஏற்பட முடியாது. உங்களிடம் உற்சாகம் இருந்து, தைரியம் இல்லாவிட்டால், அப்போதும் வெற்றி ஏற்படாது. இரண்டும் உங்களிடம் இருந்தால் மட்டுமே அது பறக்கும் ஸ்திதி எனப்படும். ஆகவே, எப்போதும் தைரியம் மற்றும் உற்சாகம் என்ற இறக்கைகளுடன் தொடர்ந்து பறந்து கொண்டே இருங்கள். அச்சா.

அவ்யக்த் முரளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற மேன்மையான வாசகங்கள்.
சம்ஸ்காரங்களை ஒத்திசையச் செய்யும் நடனத்தை ஆடுங்கள். அப்போதே 108 வெற்றி இரத்தினங்களின் மாலை தயார் ஆகும்.

1. நீங்கள் ஒரு மாலையைத் தயாரிக்கும்போது, ஒவ்வொரு மணியும் அடுத்த மணியுடன் தொடர்புடையதாக இருக்கும். வெற்றி மாலையிலும், 108 ஆம் மணியும் ஏனைய மணிகளுடன் தொடர்பில் இருக்கும். ஆகவே, ஒவ்வொருவரும் தாங்கள் ஒரு மாலையில் கோர்க்கப்பட்டுள்ள மணிகளைப் போன்றவர்கள் என்பதை உணர வேண்டும். பல்வகையான சம்ஸ்காரங்களைக் கொண்டிருந்தாலும், நெருக்கம் புலப்பட வேண்டும்.

2. ஒருவருக்கொருவர் சம்ஸ்காரங்களை அறிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் அன்பை வழங்கி, ஒத்திசைவாக இருப்பதே மாலையின் மணிகளின் சிறப்பியல்பு ஆகும். எவ்வாறாயினும், உங்களின் சம்ஸ்காரங்களையும் எண்ணங்களையும் ஒருவருக்கொருவர் ஒத்திசைந்தால் மட்டுமே உங்களால் ஒருவருக்கொருவர் அன்பைக் கொண்டிருக்க முடியும். இதற்கு, இலகுத்தன்மை மற்றும் இலேசானதன்மை என்ற நற்குணங்களைக் கிரகியுங்கள்.

3. இன்னமும், உங்களின் ஸ்திதி புகழை அடிப்படையாகக் கொண்டே உள்ளது. நீங்கள் செய்யும் செயல்கள் எதுவாயினும் அவற்றுக்கு ஏதாவது பலன் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உங்களுக்குப் புகழ்ச்சி கிடைக்காவிட்டால், அந்த ஸ்திதியும் உங்களிடம் இருப்பதில்லை. ஏதாவது இகழ்ச்சி ஏற்பட்டால், நீங்கள் பிரபுவையும் அதிபதியையும் மறந்து, அநாதைகள் ஆகிவிடுகிறீர்கள். அதன்பின்னர், சம்ஸ்காரங்களின் முரண்பாடு ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு விடயங்களும் உங்களை மாலையில் இருந்து வெளியே எடுத்துவிடுகின்றன. ஆகவே, புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் ஒரு சமநிலையான ஸ்திதியை உருவாக்குங்கள்.

4. சம்;ஸ்காரங்களை ஒத்திசையச் செய்வதற்கு, அதிபதியாக வேண்டிய நேரத்தில் ஒரு குழந்தை ஆகாதீர்கள். ஒரு குழந்தையாக வேண்டிய நேரத்தில் ஓர் அதிபதி ஆகாதீர்கள். ஒரு குழந்தை என்றால் வீணான எண்ணங்களில் இருந்து விடுபட்டிருப்பவர் என்று அர்த்தம். உங்களுக்குக் கிடைத்துள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். ஓர் அதிபதியாக அறிவுரை சொல்லுங்கள். பின்னர் ஒரு குழந்தை ஆகிவிடுங்கள். முரண்பாடுகளில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.

5. சேவையில் வெற்றி பெறுவதன் அடிப்படை பணிவே ஆகும். எந்தளவிற்கு அதிகமாகப் பணிவு உள்ளதோ, அந்தளவிற்கு வெற்றி ஏற்படும். உங்களை ஒரு கருவியாகக் கருதுவதன் மூலமே பணிவு ஏற்படும். பணிவெனும் நற்குணத்திற்கு அனைவரும் தலைவணங்குவார்கள். தலைவணங்குபவர்களுக்கு அனைவரும் தலைவணங்குவார்கள். ஆகவே, உங்களின் சரீரத்தை ஒரு கருவியாகக் கருதியவண்ணமும் உங்களை சேவைக்குக் கருவி எனக் கருதியவண்ணமும் தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களுக்குள் பணிவு ஏற்படும். எங்கு பணிவு உள்ளதோ, அங்கு முரண்பாடுகள் இருக்க முடியாது. இயல்பாகவே சம்ஸ்காரங்களின் ஒத்திசைவு காணப்படும்.

6. உங்களின் மனதில் உருவாக்கப்படும் எண்ணங்களில் நேர்மையும் சுத்தமும் இருக்க வேண்டும். உள்ளே எந்தவொரு விகாரம் என்ற குப்பையும் இருக்கக்கூடாது. உள்ளே சுபாவத்தின் அல்லது பழைய சம்ஸ்காரங்களின் முரண்பாடுகள் என்ற எந்தவிதமான குப்பையும் இருக்கக்கூடாது. இத்தகைய சுத்தமாக இருப்பவர்கள் நேர்மையாக இருப்பார்கள். நேர்மையாக இருப்பவர்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவார்கள். அனைவராலும் நேசிக்கப்படுபவர் ஆகுங்கள். சம்ஸ்காரங்களின் ஒத்திசையும் நடனம் இடம்பெறும். நேர்மையானவர்களைக் கண்டு பிரபு மகிழ்ச்சி அடைகிறார்.

7. சம்ஸ்காரங்களை ஒத்திசையும் நடனம் ஆடுவதற்கு, உங்களின் சுபாவத்தை இலகுவாகவும் சுறுசுறுப்பாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். இலகுத்தன்மை என்றால் உங்களின் முயற்சிகளில் அல்லது சம்ஸ்காரங்களில் எந்தவிதமான சுமையும் இருக்கக்கூடாது. நீங்கள் இலகுவாக இருந்தால், சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். இலகுவாக இருப்பதன் மூலம், உங்களின் பணிகளும் இலகுவாகும். உங்களின் முயற்சிகளும் இலகுவாகும். நீங்கள் இலகுவாக இல்லாவிட்டால், கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடும். அதன்பின்னர், உங்களின் சம்ஸ்காரங்களையும் பலவீனங்களையும் ஒரு கஷ்டமாகவே பார்ப்பீர்கள்.

8. நீங்கள் ஒவ்வொருவரின் சிறப்பியல்புகளைப் பார்த்து, உங்களை ஒரு விசேடமான ஆத்மா எனக் கருதுவதன் மூலம் சிறப்பியல்புகளால் நிறைந்தவர் ஆகும்போது, சம்ஸ்காரங்களை ஒத்திசைக்கும் நடனம் இடம்பெறும். ‘இது எனது சம்ஸ்காரம்’ என்ற வார்த்தைகள் முடிவிற்கு வரவேண்டும். உங்களின் சுபாவமும் மாறும் வகையில் இந்த வார்த்தைகளை முடியுங்கள். ஒவ்வொருவரின் சுபாவமும் மாறும்போது, உங்களின் முகச்சாயல்கள் தேவதை ஆகும்.

9. குழந்தைகளான உங்களை உலகச் சக்கரவர்;;த்திகள் ஆக்குவதற்கான கல்வியையே பாப்தாதா உங்களுக்குக் கற்பிக்கிறார். உலகச் சக்கரவர்த்திகள் ஆகப் போகிறவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுவார்கள். தந்தை அனைவராலும் நேசிக்கப்படுவதைப் போல், அனைவரும் அவரை நேசிப்பதைப் போல், உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அன்பு மலர்கள் ஆத்மாக்கள் அனைவரின் மீதும் பொழிய வேண்டும். இங்கு அன்பு மலர்கள் பொழியும்போது, அவை உயிரற்ற விக்கிரகங்களின் மீதும் பொழியும். ஆகவே, அனைவரிடமிருந்தும் அன்பு மலர்களால் பொழியப்படுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகும் இலக்கைக் கொண்டிருங்கள். உங்களின் ஒத்துழைப்பைக் கொடுப்பதன் மூலம் நீங்கள் அன்பைப் பெறுவீர்கள்.

10. எவரும் உங்களின் நடத்தையால் குழப்பம் அடையாமல் இருக்கும் இலக்கை எப்போதும் கொண்டிருங்கள். உங்களின் நடத்தை, எண்ணங்கள், வார்த்தைகள், ஒவ்வொரு செயலும் சந்தோஷத்தையே கொடுக்க வேண்டும். இதுவே பிராமணக் குலத்தின் நடைமுறை ஆகும். இந்த நடைமுறையைப் பின்பற்றுங்கள். சம்ஸ்காரங்களின் ஒத்திசையும் நடனம் இடம்பெறும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இறை இராஜரீகம் என்ற சம்ஸ்காரத்துடன் ஒவ்வொருவரின் சிறப்பியல்புகளைப் பற்றிப் பேசும் புண்ணியாத்மா ஆகுவீர்களாக.

எப்போதும் உங்களை ஒரு விசேட ஆத்மா எனக் கருதியவண்ணமே ஒவ்வோர் எண்ணத்தையும் உருவாக்குங்கள். ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். ஒவ்வொருவரின் சிறப்பியல்புகளைப் பாருங்கள். அவற்றைப் பற்றிப் பேசுங்கள். ஒவ்வொருவரையும் விசேடமானவர் ஆக்குவதற்கான நலம்விரும்பும் ஆசிகளை எப்போதும் கொண்டிருங்கள். இது இறை இராஜரீகம் ஆகும். மற்றவர்கள் எறிந்த விடயங்களை இராஜரீக ஆத்மாக்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, எவரின் பலவீனங்களை அல்லது குறைபாடுகளைப் பார்க்காமல் இருப்பதற்கு உங்களின் கண்களை மூடியிருப்பதில் சதா கவனம் செலுத்துங்கள். ஒவ்வொருவரின் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுங்கள். அன்பு, ஒத்துழைப்பு என்ற அன்பு மலர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
ஆசீர்வாதத்தின் சக்தியால் எந்தவொரு தீயைப் போன்ற சூழ்நிலையையும் நீரைப் போல் மாற்ற முடியும்.


அறிவித்தல்: இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. உலக தியான தினம். எனவே, மாலை 6.30 இலிருந்து 7.30 வரை சகல சகோதரர்களும் சகோதரிகளும் ஒன்றுதிரட்டிய முறையில் தியானம் செய்து அனுபவம் செய்யுங்கள்: இறைவனின் சகல சக்திகளாலும் நிறைந்துள்ள அதிமேன்மையான, இராஜயோகி ஆத்மாவான நான், பௌதீகப் புலன்களை வென்றவன். பாவங்களை வென்றவன். எனது நெற்றியின் புருவமையத்தில் எனது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறேன். நாள் முழுவதும் இந்த சுயமரியாதையைப் பேணுங்கள்: நான் கல்பம் முழுவதிலும் கதாநாயக பாகத்தை நடிக்கும் அதிமேன்மையான, மகாத்மா.