11.06.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உருத்திரரான கடவுளே, இந்த உருத்திர ஞான யாகத்தை உருவாக்கியுள்ளார். உங்களிடமுள்ள அனைத்தையும் அதில் அர்ப்பணியுங்கள், ஏனெனில் நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும்.

கேள்வி:
சங்கமயுகத்தில் இடம்பெறும் அற்புதமான விளையாட்டு என்ன?

பதில்:
கடவுள் உருவாக்கியுள்ள யாகத்தில் அசுரர்கள் தடைகளை உருவாக்குகிறார்கள். இந்த அற்புதமான விளையாட்டு சங்கமயுகத்தில் மாத்திரம் இடம்பெறுகிறது. கல்பம் முழுவதிலும் வேறெந்த நேரத்திலும் இவ்விதமான யாகம் உருவாக்கப்படுவதில்லை. இதுவே சுய இராச்சியத்தை அடைவதற்கு, குதிரை அர்ப்பணிக்கப்படுகின்ற யாகம் ஆகும். இதிலேயே தடைகள் உருவாக்கப்படுகின்றன.

ஓம் சாந்தி.
நீங்கள் எங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? இந்த இடம் ஒரு பாடசாலை அல்லது பல்கலைக்கழகம் எனவும் அழைக்கப்பட முடியும். இது ஓர் உலகப் பல்கலைக்கழகம், இதற்கு ஆன்மீகக் கிளைகள் உள்ளன. தந்தை அனைத்திலும் மகத்தான பல்கலைக்கழகத்தைத் திறந்துள்ளார். “உருத்திர யாகம்” என்னும் பெயர் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபாபா இந்நேரத்தில் இந்த கல்விக்கூடத்தை (பாடசாலை) அல்லது பல்கலைக்கழகத்தைத் திறந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதிமேன்மையான தந்தையே உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்க வேண்டும். இதுவே அவர் உருவாக்கிய யாகம் ஆகும். அதன் பெயர் மிகவும் பிரபல்யமானது: “குதிரை அர்ப்பணிக்கப்பட்ட உருத்திர ஞான யாகம்” (ராஜஸ்ய அஷ்வ மேகா ருத்ர கியான் யக்யா). நீங்கள் சுய இராச்சியத்தைக் கோருவதற்கு, சுயத்தை அர்ப்பணிக்கிறீர்கள், சரீரம் உட்பட, அக்கண்கள் மூலம் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நீங்கள் அர்ப்பணிக்கிறீர்கள். ஆத்மாவை அர்ப்பணிக்க முடியாது. சரீரங்கள் அனைத்தும் அர்ப்பணிக்கப்படும்போது, ஆத்மாக்கள் வீட்டிற்கு விரைந்து செல்வார்கள். இது சங்கமயுகமாகும். ஆத்மாக்கள் அனைவரும் வீட்டுக்கு விரைந்து செல்லும்போது, அவர்களின் சரீரங்கள் அழிக்கப்படும். இவை அனைத்தும் நாடகத்தில் உள்ளன. நாடகத்துக்கேற்ப, நீங்கள் அனைவரும் தொடர்ந்தும் முன்னேறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் இராச்சியத்துக்காக, நான் இந்த யாகத்தை உருவாக்கினேன். இது நாடகத்திட்டத்துக்கேற்ப, உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நான் உருவாக்கினேன் என்று கூற முடியாது. நாடகத் திட்டத்துக்கேற்ப, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காக, மிகச்சரியாக ஒரு கல்பத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்டதைப் போலவே, இந்த ஞான யாகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நான் உருவாக்கினேன் என்று கூறுவது அர்த்தமற்றதாகும். அது நாடகத் திட்டத்துக்கேற்ப, உருவாக்கப்பட்டுள்ளது. அது ஒவ்வொரு கல்பத்திலும் உருவாக்கப்படுகிறது. இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதாகும். நாடகத் திட்டத்துக்கேற்ப, இந்த யாகம் கல்பத்தில் ஒருமுறை மாத்திரம் உருவாக்கப்படுகிறது. இது புதியதல்ல. உண்மையிலேயே, 5000 வருடங்களுக்கு முன்னர், சத்தியயுகம் இருந்தது என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. இப்பொழுது சக்கரம் மீண்டும் மீண்டும் இடம்பெற வேண்டும். மீண்டும் ஒருமுறை புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. புதிய உலக இராச்சியத்தைக் கோருவதற்கு நீங்கள் இப்பொழுது கற்கிறீர்கள். நிச்சயமாக நீங்கள் தூய்மையாக வேண்டும். நாடகத்துக்கேற்ப, முன்னைய கல்பத்தில் இவ்வாறு ஆகியவர்கள் மாத்திரம், மீண்டும் இவ்வாறு ஆகுவார்கள். நாடகம் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்க்கப்பட வேண்டும். நீங்களும் உங்களுக்காக முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளுக்குப் பாதை காட்டப்பட வேண்டும். பிரதான விடயம் தூய்மை ஆகும். உங்களைத் தூய்மையாக்கி, இந்த அழுக்கான உலகிலிருந்து அப்பால் அழைத்துச் செல்வதற்கு, நீங்கள் தந்தையை வரும்படி அழைத்தீர்கள். இப்பொழுது உங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துள்ளார். குழந்தைகளாகிய உங்களுக்குப் பல ஞானக் கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்பொழுதும், பிரதான விடயம் “மன்மனபவ” என்று தந்தை கூறுகிறார். நீங்கள் தூய்மையாகுவதற்குத் தந்தையை நினைவுசெய்கிறீர்கள். இதை மறக்க வேண்டாம்! நீங்கள் அவரை எவ்வளவுக்கு நினைவுசெய்கிறீர்கள் என்பதற்கேற்ப, நீங்கள் நன்மையடைவீர்கள். நீங்கள் உங்களுக்காக, ஓர் அட்டவணையை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் இறுதியில், சித்தியடைய மாட்டீர்கள். நீங்கள் செய்த முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, சதோபிரதானாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மேன்மையாகியவர்கள் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும்;. அவர்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். மிகக்குறுகிய காலமே எஞ்சியுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். மீண்டும் உங்கள் சந்தோஷ நாட்கள் வரவுள்ளன. உண்மையில், மீண்டும் எங்கள் மகத்தான சந்தோஷ நாட்கள் வரவுள்ளன. தந்தை ஒருமுறை மாத்திரம் வருகிறார். அவர் துன்ப தாமத்தை அழித்து, எங்களை எங்களுடைய சந்தோஷ தாமத்துக்கு அனுப்புகிறார். நீங்கள் இப்பொழுது இறை குடும்பத்தில் இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் உங்கள் தேவ குடும்பத்துக்குச் செல்வீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்நேரமே புகழப்படுகிறது. இச்சங்கமயுகமே, மேன்மையாகுவதற்கான யுகமாகும். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், சந்நியாசிகளும் நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள். அந்த நேரமும் வரும். தற்பொழுது, உங்களிடமிருந்து அந்தளவுக்கு ஒரு தாக்கம் இருக்க முடியாது. இப்பொழுது இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது, இன்னமும் காலம் உள்ளது. இறுதியில், சந்நியாசிகளும் வந்து இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வார்கள். எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்னும் ஞானம் வேறு எவரிடத்திலும் இல்லை. தூய்மையின் காரணமாக, எவ்வளவு தடைகள் ஏற்படுகின்றன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அப்பாவிகள் அடிக்கப்படுகின்றனர். திரளெபதி பாதுகாப்புக்காகக்; கூவியழைத்தாள். உண்மையில், நீங்கள் அனைவரும் திரௌபதிகளும், சீதைகளும், பார்வதிகளும் ஆவீர்கள். நினைவில் நிலைத்திருப்பதால், அப்பாவிகளும், கூன்முதுகுடையவர்களும், தங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோர முடியும். அவர்களால் நினைவில் நிலைத்திருக்க முடியும். தந்தை வந்து யாகத்தை உருவாக்கியதால், அதில் பல்வேறு தடைகள் உருவாக்கப்பட்டன. இப்பொழுதும், இன்னமும் தடைகள் உள்ளன. குமாரிகள் திருமணம் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இல்லாவிட்டால், அவர்கள் அடிக்கப்பட்டு, வீட்டிலிருந்து வெளியே துரத்தப்படுவார்கள். இதனாலேயே அவர்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆகவே, நிச்சயமாக உங்களைத் தூய்மையாக்கக்கூடிய, ஓர் இரதம் அவருக்குத் தேவைப்படுகின்றது. கங்கை நீரால் எவரும் தூய்மையாக முடியாது. தந்தையால் மாத்திரமே வந்து உங்களைத் தூய்மையாக்கி, உங்களைத் தூய உலகின் அதிபதிகள் ஆக்க முடியும். இத்தூய்மையற்ற உலகின் விநாசம் உங்கள் முன்னிலையில் உள்ளது என்பதை உங்களால் பார்க்க முடியும். ஆகவே, நீங்கள் ஏன் தந்தைக்குரியவராகி, உங்களை அர்ப்பணிக்கக்கூடாது? நீங்கள் வினவுகிறீர்கள்: எவ்வாறு நான் என்னை அர்ப்பணிப்பது? நான் எவ்வாறு அனைத்தையும் மாற்றம் செய்வது? பாபா கூறுகிறார்: குழந்தைகளே, உங்களால் இந்த (சரீர) பாபாவைப் பார்க்க முடியும், இல்லையா? இவரே அனைத்தையும் செய்வதுடன் உங்களுக்கும் கற்பிக்கிறார். நான் செய்வதையெல்லாம் ஏனையோர் பார்க்கும்பொழுது, அவர்களும் அதையே செய்வார்கள். தந்தையே இவரைக் கொண்டு இவ்விடயங்களைச் செய்ய வைத்தார். இவர் அனைத்தையும் யாகத்தில் அர்ப்பணித்தார். அனைத்தையும் அர்ப்பணிப்பதில் சிரமம் கிடையாது. இவர் மிகவும் செல்வந்தரும் இல்லை, மிகவும் ஏழையுமில்லை, இவர் சாதாரணமானவர் ஆவார். ஒரு யாகம் உருவாக்கப்படும்பொழுது, உணவு, பானம் போன்ற அனைத்தும் தேவைப்படுகின்றன. இது கடவுளின் யாகம். கடவுள் வந்து இந்த ஞான யாகத்தை உருவாக்கியுள்ளார். அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். இந்த யக்ஞத்தின் புகழ் மிகவும் மகத்தானதாகும். நீPங்கள் உங்களை அர்ப்பணித்தவராகவும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் கருதும்பொழுது, உங்கள் சரீரத்துக்கான ஜீவனோபாயம் கடவுளின் இந்த யக்ஞத்திலிருந்து (யக்ஞம், நிறுவனம்) வருகிறது. இவை அனைத்தும் கடவுளுக்கே உரியனவாகும். “நான் சிவபாபாவின் யக்யத்திலிருந்து உணவு உண்கிறேன்”. இது புரிந்துகொள்வதற்கான விடயமாகும். அனைவரும் வந்து இங்கு அமர முடியும் என்பதல்ல. எவ்வாறு அவர் அனைத்தையும் அர்ப்பணித்தார் என்னும் உதாரணத்தை நீங்கள் பார்த்தீர்கள். பாபா கூறுகிறார்: இவர் என்ன செய்தார் என்பதைப் பார்த்ததும் ஏனைய பலரும் அதைச் செய்யத் தூண்டப்பட்டதால், தங்களை அர்ப்பணித்தார்கள். இதைச் செய்தவர்கள், தங்கள் ஆஸ்தியைக் கோரினார்கள். ஆத்மாக்கள் வீடு திரும்புவார்கள் என்பதையும்;, அவர்களின் சரீரங்கள் அழிக்கப்படும் என்பதையும் உங்கள் புத்தியால் புரிந்துகொள்ள முடியும். இது ஒர் எல்லையற்ற யாகம், இதில் அனைவரும் அர்ப்பணிக்கப்படுவார்கள். எவ்வாறு நீங்கள் உங்கள் புத்தி மூலம் அனைத்தையும் அர்ப்பணிக்க முடியும் என்பதும், எவ்வாறு பற்றை அழித்தவர்கள் ஆகுகிறீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இது அத்தகையதொரு பெரும் யாகம் எனவும், அனைத்துப் பொருட்களும் தூசாகப் போகின்றன எனவும் நீங்கள் அறிவீர்கள். அங்கு, யாகங்கள் இருக்காது. அங்கு, அனர்த்தங்களும் இருக்க மாட்டாது. பக்தி மார்க்கத்து யாகங்கள் அனைத்தும் முடிவடையும். கடவுள் மாத்திரம் ஞானக்கடல். அவரே மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவரே சத்தியமும் உயிர்வாழ்பவரும் ஆவார். சரீரம் உயிரற்றதாகும். ஆத்மா உயிர்வாழ்பவர். அவரே ஞானக்கடல் ஆவார். ஞானக்கடல் இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். ஏனையோர் அதைப் பற்றிப் பாடுகிறார்கள், ஆனால் பாபா உங்களிடம் நேரடியாக ஞானம் அனைத்தையும் பேசுகிறார். அங்கு அதிகளவு ஞானம் கிடையாது. எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதை நீங்கள் அனைவரும் விளங்கப்படுத்த வேண்டும். இங்கு, தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் கூறுகிறார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறேன். “பாக்கிய இரதம்” என்பதும் மிகவும் பிரபல்யமாகும். கடவுள் பிரவேசித்தவர் நிச்சயமாக ஒரு மனிதராக இருக்க வேண்டும். கடவுளுக்கு சிவன் என்னும் ஒரு பெயர் மாத்திரம் உள்ளது, ஏனைய அனைவரின் பெயர்களும் மாறுகின்றன. அவருடைய பெயர் மாற்றமடைவதில்லை. எவ்வாறாயினும், பக்திமார்க்கத்தில் அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு, அவர் சிவபாபா என அழைக்கப்படுகிறார். சிவன் என்றால் நன்மையளிப்பவர் என அர்த்தமாகும். கடவுள் மாத்திரம் வந்து, சுவர்க்கமாகிய புதிய உலகை உருவாக்க முடியும். ஆகவே, அவரே நன்மையளிப்பவர், இல்லையா? பாரதத்தில் சுவர்க்கம் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது இப்பொழுது நரகமாகும். பின்னர், நிச்சயமாகச் சுவர்க்கம் இருக்கும். அது அதிமங்களகரமான சங்கமயுகம் என அழைக்கப்படுகிறது. இப்பொழுது தந்தை படகோட்டியாகி, உங்களை இக்கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார். இதுவே பழைய துன்ப உலகமாகும். பின்னர், நாடகத்துக்கேற்ப, நிச்சயமாக, நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கும், புதிய உலகம் இருக்கும். நீங்கள் மீண்டும் மீண்டும் தந்தையை நினைவுசெய்ய மறந்து விடுகிறீர்கள். இந்நினைவுக்கே முயற்சி தேவையாகும். கடந்த காலத்தில் நீங்கள் செய்துள்ள பாவச்செயல்களுக்கான வேதனை நிச்சயமாக இருக்கும். கர்மவேதனை இறுதிவரை தொடரும். அதற்கான மன்னிப்பு இருக்க முடியாது. உங்களால் கூறமுடியாது: பாபா, என்னை மன்னித்து விடுங்கள்! முற்றிலும் இல்லை. நாடகத்துக்கேற்ப, அனைத்தும் இடம்பெறுகிறது. கர்மக்கணக்குகளுக்கான மன்னிப்பு அங்கு இருக்க முடியாது, கர்மக்கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக மாற வேண்டும். இதற்காகவே நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். இரட்டை மேன்மையானவரான (ஸ்ரீ ஸ்ரீ) சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நீங்கள் (ஸ்ரீ) மேன்மையானவராக ஆகுகிறீர்கள். அதிமேன்மையான தந்தை உங்களை மேன்மையாக்குகிறார். இப்பொழுது நீங்கள் இவ்வாறு ஆகுகிறீர்கள். பாபா வந்து உங்களுக்கு ஒவ்வொரு கல்பமும் கற்பிக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் நினைவுசெய்கிறீர்கள். நீங்கள் இக்கல்வியின் அரைக்கல்ப வெகுமதியைப் பெறுகிறீர்கள். அந்நேரத்தில், எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதற்கான ஞானத்தின் தேவையே இருக்க மாட்டாது. ஒவ்வொரு கல்பத்திலும், பாபா ஒருமுறை மாத்திரமே வந்து, உங்களுக்கு இவை அனைத்தையும் கூறுகிறார். அவர் உங்களுக்கு எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதைக் கூறுகிறார். கற்பதும், தூய்மையாகுவதுமே உங்கள் கடமையாகும். யோகத்தில்; நிலைத்திருங்கள். நீங்கள் தந்தைக்கு உரியவராகிய பின்னர் தூய்மையாகாது விட்டால், நூறு மடங்கு தண்டனை இருக்கும். பின்னர் தந்தையின் பெயர் அவதூறு செய்யப்படுகிறது. “சற்குருவை அவதூறு செய்பவர்களால், தங்கள் இலக்கை அடைய முடியாது” எனக் கூறப்பட்டுள்ளது. இது யாரைக் குறிப்பிடுகிறது என்பதை மக்கள் அறியார்கள். உண்மையான தந்தை மாத்திரம் சற்குருவும், உண்மையான ஆசிரியரும் ஆவார். அவர் உங்களுக்குக் கற்பிப்பதுடன், அவர் உண்மையான சற்குருவும் ஆவார். தந்தை ஞானக்கடலாக இருப்பதைப் போன்றே, நீங்களும் ஞானக்கடல்கள். தந்தை உங்களுக்கு ஞானம் அனைத்தையும் கொடுத்துள்ளார். நீங்கள் முன்னைய கல்பத்தில் கிரகித்த அளவுக்கே, நீங்கள் ஒவ்வொருவரும் அதைக் கிரகிப்பீர்கள். நீங்கள் முயற்சிசெய்ய வேண்டும். செயல்களைச் செய்யாமல், இங்கு எவரும் இருக்க முடியாது. நீங்கள் எவ்வளவுதான் ஹத்தயோகம் செய்தாலும், அதுவும் செயல்களைப் செய்வதே ஆகும். அதுவும் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான வியாபாரம். அவர்கள் பிரபல்யமாகிப் பெருமளவு பணத்தைப் பெறுகிறார்கள், ஏனெனில் அவர்கள் தண்ணீரில் அல்லது நெருப்பில் நடக்கிறார்கள். அவர்களால் செய்ய முடியாத ஒரே விடயம், பறப்பதாகும். அதற்குப் பெற்றோல் போன்றன தேவைப்படும். எவ்வாறாயினும், அதில் நன்மை ஏதும் இல்லை. அவர்கள் தூய்மையாகுவதில்லை. விஞ்ஞானிகளும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறார்கள். அவர்களுடையது விஞ்ஞானத்தின் ஓட்டப் பந்தயமும், உங்களுடையது மௌனத்தின் ஓட்டப் பந்தயமும் ஆகும். அனைவரும் அமைதியை வேண்டுகிறார்கள். தந்தை கூறுகிறார்: அமைதியே உங்களுடைய ஆதிதர்மம்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் அமைதி தாமமாகிய, உங்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். இது துன்ப தாமம் ஆகும். அமைதி தாமத்திலிருந்து நாங்கள் சந்தோஷ தாமத்துக்குச் செல்வோம். துன்ப தாமம் முடிவடைய வேண்டும். அதை மிகவும் நன்றாகக் கிரகித்து, ஏனையோரையும் அதைக் கிரகிக்கத் தூண்டுங்கள். மிகச் சொற்ப நாட்களே எஞ்;சியுள்ளன. கற்ற பின்னர், தங்கள் ஜீவனோபாயத்துக்காக, மாணவர்கள் அதிகளவு பிரயத்தனம் செய்ய வேண்டும். நீங்கள் எக்கல்வியைக் கற்க வேண்டும் எனப் பாக்கியசாலிக் குழந்தைகளாகிய உங்களால் உடனடியாகவே தீர்மானிக்க இயலும். அக்கல்வியினூடாக எதைப் பெறுவீர்கள் எனவும், இக்கல்வியினூடாக் எதைப் பெறுவீர்கள் எனவும் நீங்கள் அறிவீர்கள். இக்கல்வியினூடாக, உங்கள் 21 பிறவிகளுக்கான ஒரு வெகுமதியை நீங்கள் உருவாக்குகிறீர்கள். ஆகவே, நீங்கள் எக்கல்வியைக் கற்க வேண்டும் எனச் சிந்தியுங்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் கோர விரும்புபவர்கள், இந்த எல்லையற்ற கல்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள். எவ்வாறாயினும், நாடகத் திட்டத்துக்கேற்ப, அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர்கள் ஏனைய கல்வியில் ஈடுபட்டு, ஸ்தம்பிதம் அடைந்து விடுகின்றார்கள். அவர்கள் இக்கல்வியைக் கற்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் தங்களுக்கு நேரம் இல்லை எனக் கூறுகிறார்கள். பாபா வினவுகிறார்: எந்த ஞானம் சிறந்தது? அக்கல்வியினூடாக நீங்கள் எதைப் பெறுவீர்கள்?, இக்கல்வியினூடாக நீங்கள் எதைப் பெறுவீர்கள்? நீங்கள் கூறுவீர்கள்: பாபா, லௌகீகக் கல்வி எதனூடாகவும் நாங்கள் எதைப் பெற முடியும்? ஒருவேளை நாங்கள் ஏதோவொன்றைச் சம்பாதிக்க இயலும். இங்கு, கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார். நாங்கள் கற்று ஓர் இராஜ அந்தஸ்தைக் கோர விரும்புகிறோம். ஆகவே, எக்கல்வியில் நீங்கள் மேலும் கவனம் செலுத்த வேண்டும்? சிலர் கூறுகிறார்கள்: பாபா, நான் அந்தப் பாடநெறியை முடித்த பின்பு, நான் இங்கு வருவேன். அது அவர்களின் பாக்கியத்தில் இல்லை என்பதை பாபா புரிந்துகொள்கிறார். நீங்கள் மேலும் முன்னேறுகையில், என்ன இடம்பெறப் போகின்றது எனப் பாருங்கள். உங்கள் சரீரத்துக்கான உத்தரவாதம் கிடையாது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்வதால், இந்த உண்மையான வருமானத்தைச் சம்பாதிப்பதில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அது அவர்களின் பாக்கியத்தில் இருந்தால் மாத்திரம் அவர்கள் பாக்கியத்தை விழித்தெழச் செய்கிறார்கள். நீங்கள் உங்கள் முழு விசையையும் பயன்படுத்த வேண்டும்: நான் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து என்னுடைய ஆஸ்தியைக் கோருவேன். எல்லையற்ற பாபா எங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கிறார். ஆகவே, இந்த ஒரு பிறவிக்கு நான் ஏன் தூய்மையாக இருக்கக்கூடாது? பல குழந்தைகள் தூய்மையாக இருக்கிறார்கள்; அவர்கள் பொய்கள் கூறுவதில்லை. அனைவரும் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் கற்கிறார்கள், இருப்பினும் ஏனையோர் இதை நம்புவதில்லை. பழைய உலகம் புதியதாகும்பொழுது மாத்திரம், எல்லையற்ற தந்தை ஒருமுறை வருகிறார். பழைய உலகின் விநாசம் முன்னிலையில் உள்ளது. இது மிகவும் தெளிவானதாகும். இதுவும் நிச்சயமாக அதே நேரமாகும். இப்பொழுது பல சமயங்கள் உள்ளன, சத்தியயுகத்திலோ ஒரு தர்மம் மாத்திரம் உள்ளது. இதுவும் உங்கள் புத்தியில் உள்ளது. உங்கள் மத்தியில், நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கு இன்னமும் முயற்சி செய்கின்ற சிலர் உள்ளார்கள். ஓ! நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஏன் நேரம் எடுக்க வேண்டும்? உங்கள் சரீரத்துக்கு உத்தரவாதம் கிடையாதால், நீங்கள் வாய்ப்புக்களை வீணாக்கக்கூடாது. எவ்வாறாயினும், அது அவர்;கள் பாக்கியத்தில் இல்லாவிட்டால், இது முற்றாகவே அவர்களின் புத்தியில் பிரவேசிப்பதில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதித்து, 21 பிறவிகளுக்கான உங்கள் உருவாக்குங்கள். உங்கள் சரீரத்துக்கு உத்தரவாதம் கிடையாது. ஆகவே, எந்த வாய்ப்பையும் வீணாக்காதீர்கள்.

2. பற்றை அழிப்பவராகி, உங்களிடமுள்ள அனைத்தையும் இந்த உருத்திர ஞான யாகத்தில் அர்ப்பணியுங்கள். உங்களை அர்ப்பணித்து, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக அனைத்தையும் பராமரியுங்கள். பௌதீகமான தந்தையின் உதாரணத்தைப் பின்பற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களை அவதூறு செய்பவர்களுக்குத் தெய்வீகக் குணங்களின் மாலையை அணிவிப்பதனால் ஓர் இஷ்ட தெய்வமாகவும், ஒரு மகாத்மாவாகவும் ஆகுவீர்களாக.

இக்காலத்தில் ஒரு விசேடமான ஆத்மாவிற்கு வரவேற்பளிக்கும்போது, அவருக்குப் பௌதீகமான மாலை அணிவிக்கப்படுகின்றது, பதிலுக்கு அவர் அதனைக் கழற்றித் தனக்கு அணிவித்தவரின் கழுத்திலேயே இடுவதுண்டு. அவ்வாறே, உங்களை அவதூறு செய்பவர்களுக்கு நீங்கள் தெய்வீகக் குணங்களின் மாலையை அணிவிக்க வேண்டும். அப்பொழுது அந்த நபர் தெய்வீகக் குணங்களின் மாலையை உங்களுக்கே திரும்பவும் அணிவிப்பார், ஏனெனில், உங்களை அவதூறு செய்யும் ஒருவருக்குத் தெய்வீகக் குணங்களின் மாலையை நீங்கள் அணிவிப்பதால், பிறவி பிறவியாக உங்கள் பக்தன் ஆகுகின்றார் என்ற உத்தரவாதத்தை அவர் அளிக்கின்றார். இவ்வாறாகக் கொடுப்பது என்றால் பற்பல மடங்கு பெறுவதாகும். இந்தச் சிறப்பியல்பு உங்களை ஓர் இஷ்ட தெய்வமாகவும், ஒரு மகாத்மாவாகவும் ஆக்குகின்றது.

சுலோகம்:
உங்கள் மனதின், மனோபாவத்தைச் சதா சக்திமிக்கதாக ஆக்கினால், தீமையான ஒன்றும் நன்மையாக மாறும்.