03.06.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் ஸ்ரீமத்துக்கேற்ப, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் மேன்மையானவர் ஆகுவதற்காகவும், பிறரையும் அவ்வாறு ஆக்குவதற்காகவும் மேன்மையான வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள்.

கேள்வி:
கருணை நிறைந்த குழந்தைகளாகிய உங்களின் இதயங்களிலிருந்து வெளியேறும் அலை என்ன? நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

பதில்:
கருணை நிறைந்த குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று சேவை செய்ய விரும்புகிறீர்கள். இக்காலத்தில், ஏழை மக்கள் மிகவும் சந்தோஷமற்று இருக்கிறார்கள். ஆகவே, தூய்மை, அமைதி, சந்தோஷம் நிறைந்த தெய்வீக இராச்சியம் இப்பொழுது உலகில் ஸ்தாபிக்கப்படுகிறது என்ற நல்ல செய்தியை நாங்கள் சென்று அவர்களுக்குக் கொடுப்போம். முன்னர் இடம்பெற்ற அதே மகாபாரத யுத்தம் இப்பொழுது மீண்டும் நடைபெறவுள்ளது. அந்நேரத்தில் தந்தை நிச்சயமாக இங்கு வந்தார். அவர் மீண்டும் இப்பொழுது வந்துள்ளார்.

ஓம் சாந்தி.
நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதை இங்கமர்ந்திருக்கும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் நிச்சயமாக உங்களை ஆத்மாக்களாகக் கருதுகிறீர்கள். ஏனெனில் ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரங்களைக் கொண்டுள்ளதால் உங்களால் சரீரங்களினூடாகச் செவிமடுக்க முடிகிறது. தந்தை இச்சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளதால்; அவரால் எங்களுடன் பேச முடிகிறது. நீங்கள் இப்பொழுது இறை சமுதாயத்தினரான, கடவுளின் குழந்தைகள் எனவும், பின்னர் தேவ சமுதாயத்தில் ஒருவராகுவீர்கள் எனவும் புரிந்துகொள்கிறீர்கள். தேவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள். மிகச்சரியாக 5000 வருடங்களின் முன்னர் செய்ததைப் போன்றே, இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒருமுறை அந்தத் தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறோம். பின்னர், நாங்கள் தேவர்கள் ஆகுவோம். இந்நேரத்தில், முழு உலக மக்களும் - குறிப்பாகப் பாரதமும் பொதுவாக முழு உலகமும் - தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கிறார்கள். உண்மையிலேயே சந்தோஷ தாமம் என்று அழைக்கப்படும் ஓரிடம் உள்ளது என்பதையேனும் அவர்கள் அறியாதுள்ளார்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து அனைவரையும் சந்தோஷமானவர்களாகவும் அமைதி நிறைந்தவர்களாகவும் ஆக்குகிறார். இங்கு ஒவ்வொரு வீட்டிலுமுள்ள மக்கள், தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கிறார்கள். உலகெங்கும் துன்பமே உள்ளது, துன்பத்தைத் தவிர, வேறெதுவுமில்லை. தந்தை உங்களை 21 பிறவிகளுக்குச் சதா சந்தோஷமானவர்களாக ஆக்குகின்றார் என இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். துன்பம் எப்பொழுது ஆரம்பித்தது, அது எப்பொழுது முடிவுறும் என்பதைப் பற்றிச் சிந்திப்பதற்கு தங்கள் புத்தியை வேறு எவரும் பயன்படுத்துவதில்லை. நீங்கள் நிச்சயமாகவே இறை சமுதாயத்தில் ஒருவர் என்பதை உங்கள் புத்தி மட்டுமே புரிந்துகொள்கிறது. உண்மையில், மனிதர்கள் அனைவரும் கடவுளின் சமுதாயத்தில் ஒருவராக இருக்கிறார்கள்; அனைவரும் அவரைத் தந்தை என அழைக்கிறார்கள். இப்பொழுது சிவபாபா உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீமத் மிகவும் பிரபல்யமானது. இந்த அதிமேன்மையான வழிகாட்டல்கள் அதிமேன்மையான கடவுளிடமிருந்து வருகின்றன. அவருடைய வழிமுறைகள் தனித்துவமானவை என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. சிவபாபாவின் ஸ்ரீமத் முன்னர் நாங்கள் இருந்ததிலிருந்து எங்களை முழுமையாகவே மாற்றுகிறது; அது எங்களைச் சுவர்க்க அதிபதிகளாக மாற்றுகிறது. மனிதர்கள் அனைவரும் உங்களை நரகத்தின் அதிபதிகள் ஆக்குகிறார்கள். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது, இல்லையா? புத்தியில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டுமே இங்கு வருகின்றார்கள், அவர்கள் பாபா எங்களை மீண்டும் ஒருமுறை சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்கிறார் என்பதையும் புரிந்துகொள்கிறார்கள். நாங்கள் 100மூ தூய இல்லறப் பாதைக்கு உரியவர்களாக இருந்தோம். இப்பொழுது நாங்கள் இதை நினைவுசெய்கிறோம். 84 பிறவிகளின் கணக்கு உள்ளது. ஒவ்வொருவரும் எத்தனை பிறவிகளை எடுக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். தாமதமாக வரும் சமயத்தவர்கள் எங்களை விடவும் குறைவான பிறவிகளையே எடுப்பார்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள் எனும் நம்பிக்கையை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அனைவரையும் மேன்மையாக்குவதற்கு இப்பொழுது நாங்கள் மேன்மையான வழிகாட்டல்களைப் பெறுகிறோம். எங்களுடைய அதே பாபா எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். வேதங்கள், சமயநூல்கள் போன்றவை அனைத்தும் கடவுளை அடைவதற்கான வழிகள் என மக்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும், கடவுள் கூறுகிறார்: அவற்றினூடாக எவரும் என்னைக் கண்டடைய முடியாது. நானே வர வேண்டும். இதனாலேயே எனது பிறப்பு கொண்டாடப்படுகிறது. எவ்வாறாயினும், எப்பொழுது அல்லது யாருடைய சரீரத்தில் நான் வருகிறேன் என்பதைப் பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு எவரும் அறியார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். உலகிலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் துன்பத்தை விளைவிக்கிறார்கள். விகாரத்தில் ஈடுபடுவதும் துன்பத்தை விளைவிக்கின்றது என மக்கள் நம்புவதில்லை. அது பெரும் துன்பத்தை விளைவிக்கிறது என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். தூய்மையான குமாரிகள் தூய்மையற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர். அவர்களை நரகவாசிகள் ஆக்குவதற்கெனப் பல்வேறு சடங்குகள் நடத்தப்படுகின்றன. இங்கு, அத்தகைய குழப்பங்களுக்;கான கேள்விக்கே இடமில்லை. நீங்கள் இங்கு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதுடன், முழு உலகையும் சதா சந்தோஷமிக்கதாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சிவசக்திகள் எனப் புகழப்படுகிறீர்கள். உங்களுடன் ஒப்பிடுகையில், இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் எவ்விதப் புகழுமே இல்லை. சிவசக்திகளின் பெயர் போற்றப்படுகிறது. தந்தை அனைவரையும் தூய்மையாக்கி, அவர்களைச் சதா சந்தோஷமானவர்களாக ஆக்குகின்ற சேவையைச் செய்வதைப் போன்று, அவ்வாறு செய்வதில் நீங்களும் அவருடைய உதவியாளர்கள் ஆகினீர்கள். இதனாலேயே பாரதத்தின் தாய்மார்களான நீங்கள், சக்திகளாகிய நீங்களும் புகழப்படுகின்றீர்கள். அரசியும் அரசருமான இலக்ஷ்மியும் நாராயணனும், அவர்களுடைய பிரஜைகள் அனைவரும் சுவர்;க்கவாசிகளாக இருந்தார்கள். அது ஒரு பெரிய விடயமாக இருக்கவில்லை. அவர்கள் சுவர்க்கவாசிகளாக இருந்ததைப் போலவே, இங்கும், அரசர்களும் அரசிகளும் ஏனைய அனைவரும் நரகவாசிகளாக இருக்கிறார்கள். நீங்கள் இந்த நரகவாசிகளைச் சுவர்க்கவாசிகளாக மாற்றுகிறீர்கள். மக்கள் எதனையும் அறிந்துகொள்வதில்லை. அவர்களின் புத்திகள் முற்றாக சீரழிந்துள்ளன. அவர்கள் தொடர்ந்தும் என்ன செய்கிறார்கள் எனப் பாருங்கள்! சண்டையிடுதல் போன்றன அதிகளவு இடம்பெறுகின்றன. அவர்கள் அனைத்திலும் துன்பத்தையே அனுபவம் செய்கிறார்கள். சத்தியயுகத்தில், அவர்கள் செய்யும் அனைத்திலும் சந்தோஷம் உள்ளது. பாபா உங்களைச் சந்தோஷமாக்குவதற்கென உங்கள் அனைவருக்கும் மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். நினைவுகூரப்பட்டுள்ளது: மேன்மையான வழிகாட்டல்கள் (ஸ்ரீமத்) கடவுளின் வாசகங்கள். மேன்மையான வழிகாட்டல்கள் (ஸ்ரீமத்) மனிதர்களின் வழிகாட்டல்கள் எனக் கூறப்படவில்லை. சத்தியயுகத்தில் தேவர்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கத் தேவையில்லை. இங்கேயே நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். தந்தையுடன், சிவசக்திகளாகிய நீங்களும் நினைவுசெய்யப்படுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை நடைமுறை ரீதியாகவே அப் பாகத்தை நடிக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களின் மூலம் நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் சந்தோஷ தாமத்துக்கான பாதையைக் காட்டுவதே உங்கள் வியாபாரம் ஆகும். தங்களின் ஜீவனோபாயத்துக்குச் சம்பாதிப்பதற்கென ஆண்கள் தொழில் புரிய வேண்டும். தேவர்கள் மாலையில் உலாச் செல்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. தேவர்கள் எவ்வாறு இங்கு வர முடியும்? அந்த நேரம் (மாலை) தூய்மையான நேரம் எனக் கூறப்படுகிறது. அனைவருக்கும் மாலைவேளையில் நேரம் உள்ளது. நடந்தும், இருந்தும் உலாவிச் செல்லும்;பொழுதும், குழந்தைகளாகிய நீங்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் சரீரதாரிகளைப் பராமரிக்க வேண்டியதில்லை. தந்தை திரௌபதியின் பாதங்களைப் பிடித்து விட்டார் என்று நினைவுகூரப்படுகிறது. மக்கள் இதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அதன் அர்த்தம் திரௌபதியின் சரீரத்தின் பாதத்தை அவர் பிடித்து விட்டார் என்றல்ல. பாபாவிடம் பல வயோதிபத் தாய்மார்கள் வருகிறார்கள். பெருமளவு பக்தி செய்ததால், அவர்கள் களைப்படைந்து உள்ளார்கள் என்பதை பாபா அறிவார். அவர்கள் அரைக் கல்பமாக மிகவும் தடுமாறித் திரிந்ததால், “பாதங்களைப் பிடித்து விடுதல்” என்னும் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணர் எவ்வாறு எவருடைய பாதங்களை பிடித்து விடுவார்? அது சரியெனத் தோன்றுகிறதா? உங்கள் பாதங்களைப் பிடித்து விடுவதற்கு நீங்கள் கிருஷ்ணரை அனுமதிப்பீர்களா? அவர்கள் கிருஷ்ணரைப் பார்த்திருப்பின், உடனடியாகவே அவரைப் பற்றிப் பிடித்துக் கொள்வார்;கள் (உடiபெ). அவரிடம் அதிகளவு கவர்ச்சி உள்ளது! அவர்கள் கிருஷ்ணரைத் தவிர, வேறு எவரையும் தங்கள் புத்தியில் வைத்திருப்பதில்லை; அவரே அனைவரையும் விட மிகவும் பிரகாசமானவர் (கவர்ச்சியுள்ளவர்). சிறு குழந்தையான கிருஷ்ணர் புல்லாங்குழலை வாசித்தார் எனக் கூறுவது சரியாகத் தோன்றவில்லை. நீங்கள் எவ்வாறு இங்கு சிவபாபாவைச் சந்திக்க முடியும்? குழந்தைகளாகிய நீங்கள் ஏனையோருக்கும் கூறவேண்டும்: முதலில் சிவபாபாவை நினைவுசெய்யுங்கள், பின்னர் உங்களால் அவரிடம் வரமுடியும். சிவபாபா உங்களை 21 பிறவிகளுக்குச் சந்தோஷமானவர்கள் ஆக்குகிறார் என்பதையிட்டு, குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள் உள்ளார்ந்த சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்; நீங்கள் அத்தகைய தந்தையிடம் உங்களை அர்ப்பணிக்க வேண்டும். ஒரு தந்தையின் தகுதிவாய்ந்த குழந்தைகள், தந்தையின் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்பொழுது, அந்தத் தந்தை தன்னையே அவர்களிடம் அர்ப்பணிப்பார். எவ்வாறாயினும், சில குழந்தைகள் தங்கள் தந்தையையே கொலை செய்பவர்களாகவும் உள்ளார்கள். இங்கு, நீங்கள் அதி அன்பிற்கினியவர்கள் ஆகவேண்டும். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். கருணைநிறைந்த குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று சேவை செய்யும் விருப்பத்தை உங்கள் இதயங்களில் கொண்டிருக்கிறீர்கள். இக்காலத்தில் ஏழை மக்கள் மிகவும் சந்தோஷமற்று இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று தூய்மை, அமைதி, சந்தோஷத்தைக் கொண்ட தெய்வீக இராச்சியம் உலகில் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது எனும் நல்ல செய்தியை அவர்களுக்குக் கொடுங்கள். அதே மகாபாரத யுத்தம் நடைபெறவுள்ளது. உண்மையிலேயே தந்தை அந்நேரத்தில் இங்கு வந்தார். இப்பொழுதும் தந்தை மீண்டும் வந்துள்ளார். பாபா உங்களை அதிமேன்மையான மனிதர்களாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த யுகமே அதி மங்களகரமான சங்கமயுகமாகும். நீங்கள் எவ்வாறு அதிமேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்கள் இலக்கு என்ன என்று மக்கள் உங்களிடம் வினவும்பொழுது, சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவது என அவர்களுக்குக் கூறுங்கள். தேவர்கள் மிகவும் பிரபல்யமானவர்கள்;. சென்று தேவர்களின் பக்தர்களுக்கு விளங்கப்படுத்துங்கள் எனத் தந்தை கூறுகிறார். நீங்களே முதலில் சிவனை வழிபட ஆரம்பித்துப் பின்னர் தேவர்களை வழிபட ஆரம்பித்தீர்கள். ஆகவே, எல்லாவற்றுக்கும் முதலில், சிவ பக்தர்களிடம் சென்று விளங்கப்படுத்துங்கள். ‘என்னை நினைவுசெய்யுங்கள்!’ என சிவபாபா கூறுகிறார் என்று அவர்களிடம் கூறுங்கள். அவர்கள் சிவனை வழிபடுகிறார்கள், ஆனால் அவரே தூய்மையாக்குபவராகிய தந்தை என்பது அவர்களின் புத்தியில் புகுவதில்லை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் எவ்வளவுக்குத் தடுமாறித் திரிகிறார்கள் எனப் பாருங்கள்! அவர்கள் வீட்டிலும் ஒரு சிவலிங்கத்தை வைத்திருக்க முடியும். அவர்கள் அதை வீட்டில் வழிபடவும் முடியும். ஆகவே, அவர்கள் அமர்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை என்ன? எவ்வாறாயினும், மக்கள் நிச்சயமாகப் பக்தி மார்க்கத்தில் தடுமாறித் திரிய வேண்டும். அதனைச் செய்வதிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் சிவனின் குழந்தைகளாகிய, சிவசக்திகள் ஆவீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். நினைவைக் கொண்டிருப்பதால் மட்டுமே உங்களால் அதைப் பெற முடியும். உங்கள் பாவங்களும் அழிக்கப்படும். தந்தையே தூய்மையாக்குபவர், இல்லையா? அவரை நினைவுசெய்வதனால் மாத்திரமே, உங்களால் தூய்மையாகுவதுடன், பாவச் செயல்களை வெல்பவர்களாகவும் ஆகமுடியும். அனைவருக்கும் இப் பாதையைக் காட்டுங்கள். இப்பொழுது நீங்கள் இராமருக்கு உரியவர்கள். இராம இராச்சியத்தில் சந்தோஷமும், இராவண இராச்சியத்தில் துன்பமும் உள்ளன. அதிகளவு வழிபாடு செய்யப்பட்டவர்களின் விக்கிரகங்கள் பாரதத்தில் மட்டுமே உள்ளன. பல ஆலயங்கள் உள்ளன. சிலர் அனுமனை வழிபடுகிறார்கள், ஏனையோர் வேறு ஒருவரை வழிபடுகிறார்கள். அது குருட்டு நம்பிக்கை என அழைக்கப்படுகிறது. நீங்களும் குருடராக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் யார் என்றோ, எவ்வாறானவர் என்றோ இவரும் அறிந்திருக்கவில்லை. வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் வழிபடுபவர்கள் ஆகிவிட்டார்கள். சத்தியயுகத்தில், வழிபடத் தகுதிவாய்ந்தவர்களே இருக்கிறார்கள், ஆனால் இங்கே வழிபடுபவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். தந்தை உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகிறார். வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக இருப்பவர்கள் சத்தியயுகத்தில் மட்டுமே இருக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு, பூஜிப்பவர்கள் மட்டுமே இருக்;கிறார்கள். ஆகவே, அவர்கள் தொடர்ந்தும் வழிபடுகிறார்கள். நீங்கள் சிவசக்திகள் ஆவீர்கள். தற்பொழுது, நீங்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவர்களும் அல்லர், வழிபடுபவர்களும் அல்லர். தந்தையை மறந்து விடாதீர்கள். இச்சரீரம் சாதாரணமானது, இல்லையா? அதிமேன்மையான கடவுள் இவரில் பிரவேசிக்கிறார். நீங்கள் தந்தையை உங்களிடம் வருமாறு அழைக்கிறீர்கள். பாபா வாருங்கள்! நாங்கள் மிகவும் தூய்மையற்றவர்களாகி விட்டோம். பழைய தூய்மையற்ற உலகில் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! இவ்வாறே குழந்தைகள் தந்தையை அழைக்கிறார்கள்! இங்கு எவரும் தூய்மையானவர்கள் அல்ல. அவர் நிச்சயமாகத் தூய்மையற்ற அனைவரையும் தூய்மையாக்கி, அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். ஆகவே, அனைவரும் தமது சரீரத்தை விட்டு நீங்க நேரிடும். ஒருவர் தனது சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, மக்கள் அதிகளவு தளம்பல் அடைகின்றார்கள். நீங்கள் சந்தோஷமாகச் சரீரத்தை நீங்கிச் செல்கின்றீர்கள். சிவபாபாவை அதிகபட்சம் நினைவு செய்பவர் யார் என்பதைக் காட்ட, ஆத்மாக்களாகிய நீங்கள் விரைந்தோட வேண்டும். சிவபாபாவை நினைவுசெய்து கொண்டிருக்கையில், உங்கள் சரீரத்தை விட்டு நீங்குவது உங்களுடைய பெரும் பாக்கியம். உங்கள் படகு ஏற்கெனவே அக்கரை சென்றுவிட்டது என்பதே அதன் அர்த்தமாகும். அத்தகைய முயற்சியைச் செய்யுமாறு தந்தை அனைவருக்கும் கூறுகிறார். சில சந்நியாசிகளும் இதை விரும்புகிறார்கள்: அவர்கள் பிரம்ம தத்துவத்தில் இரண்டறக் கலப்பதைப் பயிற்சி செய்கிறார்கள். பின்னர், அவர்கள் மரணிக்கும்பொழுது, எங்காவது அமர்ந்திருக்கையில், தங்கள் சரீரங்களை விட்டு நீங்குகிறார்கள். அந்நேரத்தில் மயான அமைதி நிலவுகிறது. இப்பொழுது உங்கள் சந்தோஷ நாட்கள் மீண்டும் வருகின்றன. நீங்கள் அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நாங்கள் உங்களிடம் வருவோம். ஆத்மாக்களாகிய நாங்கள் உங்களை நினைவுசெய்வதால், தூய்மையாகும்பொழுது, நீங்கள் எங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வீர்கள். ஆரம்ப நாட்களில், தாங்கள் விடுவிக்கப்படுவோம் என நம்பிப் பெருமளவு அன்புடன் மக்கள் தங்களைக் காசியில் அர்ப்பணிப்பது வழக்கம். இப்பொழுது, தந்தையின் நினைவில் இருக்கும்பொழுது, நீங்கள் அமைதி தாமத்துக்குச் செல்கிறீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்கள், இந்நினைவுச் சக்தியினூடாகவே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அம்மக்கள் தங்கள் பாவங்கள் தண்ணீரால் கழுவப்பட்டு, தாங்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறார்கள். இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகிறார்: அவர்கள் அதனூடாக யோக சக்தியைப் பெறுவதில்லை. அவர்கள் செய்துள்ள பாவங்களுக்கான தண்டனையை அனுபவம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் ஒரு புதிய பிறவியை எடுப்பதுடன், அவர்களின் பாவக் கணக்குகளும் புதிதாக ஆரம்பிக்கின்றன. தந்தை இங்கமர்ந்திருந்து செயல்களினதும், நடுநிலைச் செயல்களினதும், பாவச் செயல்களினதும் தத்துவத்தை விளங்கப்படுத்துகிறார். இராம இராச்சியத்தில் செயல்கள் நடுநிலையானவையும், இராவண இராச்சியத்தில் செயல்கள் பாவம் மிக்கவையும் ஆகும். அங்கு இராம இராச்சியத்தில் விகாரங்கள் போன்றவை இருப்பதில்லை. தந்தை உங்களுக்குத் தனது வழிமுறைகள், இரகசியங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார் என இனிமையிலும் இனிமையான மலர் போன்ற குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயம். தூய்மையாக்குபவராகிய தந்தை உங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கிறார். அவர் மிகவும் பணிவானவர். இவரிடம் அகங்காரம் எதுவும் இல்லை. இவர் பெருமளவு எளிமையாக வாழ்கிறார். பாப், தாதா இருவரும் குழந்தைகளாகிய உங்களின் சேவகர்கள். அதிமேன்மையான சிவபாபாவும், பிரஜாபிதா பிரம்மாவும் குழந்தைகளாகிய உங்களின் இரு சேவகர்கள். ஏனையோர் திரிமூர்த்தி பிரம்மாவைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் அதன் அர்த்தத்தை அறிந்துகொள்வதில்லை. திரிமூர்த்தி பிரம்மா என்ன செய்கிறார் என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வதில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவருடைய மேன்மையான வழிகாட்டல்களை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்ற நம்பிக்கையை எப்பொழுதும் கொண்டிருங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். அனைவருக்கும் சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டுங்கள்.

2. ஒரு தகுதிவாய்ந்த குழந்தையாகி, உங்களைத் தந்தையிடம் அர்ப்பணிங்கள். உங்களையிட்டுத் தந்தை கொண்டிருக்கும் ஒவ்வோர் ஆசையையும் பூர்த்தி செய்யுங்கள். பணிவான, ஆணவமற்ற பாப், தாதா இருவரையும் போன்று தந்தைக்குச் சமமானவர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
ஒவ்வொரு விநாடியிலும் உங்கள் புத்தி நம்பிக்கையைக் கொண்டிருப்பதுடன், நீங்கள் கவலையற்றவராகவும் இருந்து, நன்மையளிக்கின்ற தந்தையிடமிருந்தும், நன்மையளிக்கும் நேரத்திலிருந்தும் நன்மையைப் பெறுவீர்களாக.

என்ன காட்சிகள் நடிக்கப்பட்டாலும், அவற்றை ஒரு திரிகாலதரிசியாக அவதானியுங்கள். தைரியத்தையும் உற்சாகத்தையும் பேணி, ஒரு சக்திவாய்ந்த ஆத்மாவாகி, உலகையும் சக்திவாய்ந்ததாக ஆக்குங்கள். உங்கள் சொந்தப் புயல்களால் அசைக்கப்படாதீர்கள்; உறுதியாக இருங்கள். நீங்கள் பெற்றுள்ள, பெறுகின்ற சகல நேரம், சகவாசம், பல்வேறு பொக்கிஷங்கள் அனைத்திலிருந்தும் செல்வம் மிக்கவராகவும், சக்தி வாய்ந்தவராகவும் ஆகுங்கள். கல்பம் முழுவதிலும் அத்தகைய நாட்கள் மீண்டும் வரப் போவதில்லை. எனவே உங்கள் கவலைகள் அனைத்தையும் தந்தையிடம் கையளியுங்கள், உங்கள் புத்தியானது நம்பிக்கையைக் கொண்டிருப்பதுடன், கவலையற்றதாகவும் இருக்கட்டும். ஒவ்வொரு விநாடியிலும் நன்மையளிக்கின்ற தந்தையிடமிருந்தும், நன்மையளிக்கும் நேரத்திலிருந்தும் நன்மையைப் பெறுங்கள்.

சுலோகம்:
அனைவரையும் தந்தையின் சகவாசத்தால் நிறமூட்டுங்கள், தீய விடயங்கள் அனைத்தும் இயல்பாகவே முடிவடைந்து விடும்.