14.06.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 22.01.86 Om Shanti Madhuban
நீங்கள் முழுமையாகவும் சம்பூரணமாகவும் ஆகுவதே பாப்தாதாவின் எதிர்பார்ப்புகள்.
இன்று, தூர தேசவாசி குறிப்பாக தொலை தேசங்களில் வசிக்கும் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். அவர் வெகு தொலைவில் இருந்து உங்களைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். அவர் வெகு தொலைவில் இருந்து என்ன ஆழமான அன்புடன் வந்துள்ளார்? குழந்தைகளான உங்களின் அன்பை பாப்தாதா அறிவார். ஒருபுறம், சந்திப்பிற்காக உங்களின் இதயங்களில் ஆழ்ந்த அன்பு உள்ளது. மறுபுறம், தந்தையைச் சந்திப்பதற்காக நீங்கள் பொறுமையாகக் காத்திருக்கிறீர்கள். இதனாலேயே, தந்தை விசேடமான ரூபத்தில் உங்களின் பொறுமைக்கான பலனைத் தருவதற்காக வந்திருக்கிறார். அவர் குறிப்பாக உங்களைச் சந்திக்கவே வந்துள்ளார். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் அனைவரின் இதயங்களிலும் சந்திப்பிற்காக உள்ள அன்பான, உற்சாகமான எண்ணங்களை ஒவ்வொரு கணமும் பாப்தாதா பார்க்கிறார், கேட்கிறார். நீங்கள் வெகு தொலைவில் இருந்தாலும், உங்களின் அன்பினால், நெருக்கமாக இருக்கிறீர்கள். எவ்வாறு குழந்தைகளான நீங்கள் இரவிரவாக விழித்திருந்து, திருஷ்டி மற்றும் அதிர்வலைகளினூடாக அன்பையும் சக்தியையும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்பதை பாப்தாதா ஒவ்வொரு கணமும் பார்க்கிறார். இன்று, பாபா குறிப்பாக முரளி கொடுக்க வரவில்லை. நீங்கள் பல முரளிகள் கேட்டுள்ளீர்கள். இப்போது, இந்த வருடம், பாப்தாதா குறிப்பாக புலப்படும் ரூபத்தை, பாப்தாதாவிடம் அன்பு வைத்திருப்பதன் அத்தாட்சியின் ரூபத்தை, சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுகின்ற நெருக்கமான ரூபத்தை, மேன்மையான எண்ணங்கள், மேன்மையான வார்த்தைகள், மேன்மையான செயல்கள், மேன்மையான உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளின் மேன்மையான ரூபத்தைக் காண விரும்புகிறார். நீங்கள் எதைச் செவிமடுத்துள்ளீர்களோ, அவற்றின் சொரூபம் ஆகுவதை பாப்தாதா காண விரும்புகிறார். நடைமுறை மாற்றத்தின் மேன்மையான விழாவை அவர் காண விரும்புகிறார். இந்த வருடம், நீங்கள் பொன்விழா மற்றும் வெள்ளி விழாவைக் கொண்டாடியிருப்பீர்கள் அல்லது கொண்டாடுவீர்கள். ஆனால், பாப்தாதா உண்மையான, மாசற்ற, விலைமதிப்பற்ற இரத்தினங்களின் மாலையை உருவாக்க விரும்புகிறார். ஒவ்வொரு வைரமும் விலைமதிப்பற்றதாகவும் பிரகாசமானதாகவும் இருக்க வேண்டும். அவற்றின் ஒளி மற்றும் சக்தியின் பிரகாசம் எல்லைக்குட்பட்டதாக இல்லாமல், எல்லையற்றதைச் சென்றடைய வேண்டும். பாப்தாதா குழந்தைகளான உங்களின் எல்லைக்குட்பட்ட எண்ணங்களையும், எல்லைக்குட்பட்ட வார்த்தைகளையும், எல்லைக்குட்பட்ட செயல்களையும், எல்லைக்குட்பட்ட உறவுமுறைகளையும் தொடர்புகளையும் நீண்ட காலமாகப் பார்த்திருக்கிறார். எவ்வாறாயினும், அவர் எல்லையற்ற தந்தை என்பதனால், எல்லையற்ற சேவைக்கான தேவை உள்ளது. அவருக்கு முன்னால் இந்த விளக்குகளின் ஒளி எவ்வாறிருக்கும்? நீங்கள் இப்போது வெளிச்ச வீடுகளாகவும் சக்தி வீடுகளாகவும் ஆகவேண்டும். உங்களின் பார்வையை எல்லையற்றதை நோக்கி வைத்திருங்கள். உங்களின் பார்வை எல்லையற்றது ஆகும்போதே, உலகம் மாறும். உலக மாற்றம் என்ற பெரிய பணி குறுகிய காலத்தில் நிறைவேற வேண்டும். எனவே, எல்லையற்றதற்கான வேகமும் வழிமுறையும் துரிதமாக இருக்க வேண்டும்.
உங்களின் மனோபாவத்தில் இருந்து, இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் சூழலில் ஒரேயொரு சத்தம் எதிரொலிக்கட்டும்: எல்லையற்றதன் எமது தலைவர்கள், உலகின் தலைவர்கள், இராச்சிய உரிமையுள்ள எல்லையற்றவர்கள், உண்மையான எல்லையற்ற சேவையாளர்கள், எமது தேவாத்மாக்கள் வந்துள்ளார்கள். இப்போது இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் இந்த ஒரேயொரு எல்லையற்ற சத்தம் எதிரொலிக்க வேண்டும். அப்போது மட்டுமே சம்பூரணமும் முழுமையும் நெருக்கமாக அனுபவம் செய்யப்படும். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.
எங்குமுள்ள, மேன்மையான உணர்வுகளையும் மேன்மையான ஆசைகளையும் பூர்த்திசெய்பவர்களுக்கும், தேவதைகளாகவும் அதனால் தேவர்களாகவும் ஆகும் ஆத்மாக்களுக்கும், அதியுயர்ந்த ஸ்திதியில் எப்போதும் வெளிச்ச வீடுகளாகவும் சக்தி வீடுகளாகவும் உள்ள விசேடமான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் சூட்சுமமான சமிக்கைகளைப் புரிந்து கொள்ளும் பரந்த, எல்லையற்ற புத்திகளைக் கொண்டுள்ள குழந்தைகளுக்கும், பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் செய்தியின் வடிவில் அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார்:
எங்கும் உள்ள அன்பான, ஒத்துழைக்கும், சக்திசாலிக் குழந்தைகளின் வெவ்வேறு அலைகளான கடிதங்களைப் பார்க்கும்போது, பாப்தாதா அன்புக்கடலில் மூழ்கிவிட்டார். ஒவ்வொருவரின் வெவ்வேறு அலைகளும், அவரின் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் ஏற்ப மேன்மையானவையாக இருந்தன. அந்த அலைகளைப் பார்க்கையில் பாப்தாதா களிப்படைகிறார். உங்களுக்கு நல்ல உற்சாகம் உள்ளது. திட்டங்களும் மிகவும் நல்லவை. நீங்கள் இப்போது அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் உங்களின் எதிர்காலக் கணக்கில் சேமிப்பதிலும் பாப்தாதாவிடமிருந்து மதிப்பெண்களைப் பெற வேண்டும். இந்த வேளையில், நடைமுறைப் பாடநெறிக்காக பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் மதிப்பெண்களையும் குறித்து வைக்கிறார். இந்த வருடம் நடைமுறைப் பாடநெறிக்கும் நடைமுறை விசைக்கும் மேலதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கான விசேடமான வருடம் ஆகும். ஆகவே, அவ்வப்போது உங்களுக்கு என்னென்ன சமிக்கைகள் கொடுக்கப்பட்டனவோ, நீங்கள் ஒவ்வொருவரும் அவற்றைத் தனிப்பட்ட முறையில் உங்களுக்குரியது எனக் கருதி, நடைமுறைப்படுத்த வேண்டும். அதனால் முதலாம் இலக்கத்தைப் பெற வேண்டும். இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகளான நீங்கள், எப்போதும் அன்பை அனுபவம் செய்கிறீர்கள். தொலைவில் இருந்தாலும் நெருக்கமாக இருப்பதை அனுபவம் செய்கிறீர்கள். ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உற்சாகம் உங்களுக்குள் எப்போதும் உள்ளது. இந்த உற்சாகம் உங்களுக்கு இருப்பதனால், நீங்கள் இப்போது எல்லையற்ற சேவைக்கு அத்தாட்சி ஆகுவதற்கான விசேடமான வாய்ப்பும் இந்த உற்சாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பும் உங்களிடம் உள்ளது. ஆகவே, பறக்கும் ஸ்திதியின் பந்தயத்தை வையுங்கள். இந்த வருடம், நினைவு, சேவை, தெய்வீகக் குணங்களின் சொரூபம் ஆகுதல், ஞான சொரூபமாகி, ஞானத்தைக் கலந்துரையாடுதல் என்ற நான்கு பாடங்களிலும் பறக்கும் ஸ்திதியின் பந்தயத்தில் ஓர் இலக்கத்தைக் கோருவதற்கான விசேடமான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இந்த விசேடமான வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். புதிய அனுபவத்தைப் பெறுங்கள். நீங்கள் புதுமையை விரும்புகிறீர்கள், இல்லையா? எனவே, உங்களால் இந்தப் புதுமையை ஏற்படுத்தி, ஓர் இலக்கத்தைப் பெற முடியும். இப்போது, இந்த வருடம், இந்த மேலதிகப் பந்தயத்திற்கு உங்களுக்கு மேலதிக மதிப்பெண்கள் கிடைக்கும். உங்களுக்கு மேலதிகமான நேரம் கிடைத்துள்ளது. நீங்கள் எப்போதும் உங்களின் முயற்சிகளுக்கேற்ப வெகுமதியைப் பெறுகிறீர்கள். ஆனால், இந்த வருடம், மேலதிக விசேடத்திற்குரிய வருடம் ஆகும். ஆகவே, பறக்கும் ஸ்திதியில் மிகவும் அனுபவசாலியாகி, தொடர்ந்து முன்னேறுவதுடன் மற்றவர்களையும் முன்னேறச் செய்யுங்கள். தந்தை குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் தனது கைகள் என்ற மாலையை அணிவிக்கிறார். உங்களிடம் பெரிய இதயம் இருந்தால், பௌதீக ரூபத்தில் இங்கு வருவது இலகுவாக இருக்கும். எங்கு பெரிய இதயம் இருக்கிறதோ, அங்கு பணமும் இயல்பாகவே வரும். அந்த இதயம், எங்கேயாவது இருந்து பணத்தைக் கொண்டுவரும். இதனாலேயே, உங்களிடம் இதயம் உள்ளது, ஆனால் பணம் இல்லை என நீங்கள் சொன்னால் பாப்தாதா அதை நம்புவதில்லை. இதயத்தைக் கொண்டிருப்பவர்கள் ஏதாவதொரு முறையில் தொடுகையைப் பெற்று, இங்கு வருகிறார்கள். முயற்சி செய்வதனால் பணம் சம்பாதிக்க வேண்டும். முயற்சியால் பெறப்படும் பணம், பலமில்லியன் மடங்கு நன்மையை ஏற்படுத்தும். நீங்கள் நினைவில் இருந்தவண்ணம் அதைச் சம்பாதிக்கிறீர்கள், இல்லையா? எனவே, அது நினைவின் கணக்கில் சேமிக்கப்படுகிறது. நீங்களும் இங்கு வருகிறீர்கள். அச்சா. நீங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உங்களின் பெயராலும் உங்களின் சிறப்பியல்பாலும் அன்பையும் நினைவுகளையும் கைகளின் மாலையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
வெள்ளி விழாவிற்காக வந்துள்ள ஆசிரியர்களுக்கான மேன்மையான அவ்யக்த வாசகங்கள்:
நீங்கள் அனைவரும் வெள்ளி விழாவைக் கொண்டாடினீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் வெள்ளி யுகத்திற்கு அன்றி, தங்க யுகத்திற்குரியவர்கள் ஆகியுள்ளீர்கள். தங்க யுகத்திற்குரியவர் ஆகுவதற்காக இந்த வருடம் நீங்கள் என்ன திட்டங்களைச் செய்துள்ளீர்கள்? சேவைக்காக நீங்கள் திட்டங்களைச் செய்கிறீர்கள். ஆனால், சுய மாற்றத்திற்கும் எல்லையற்ற மாற்றத்திற்கும் என்ன திட்டங்களைச் செய்துள்ளீர்கள்? நீங்கள் இதைச் செய்வீர்கள் என நீங்கள் சொல்லும்போது, உங்களின் சொந்த இடங்களுக்காகவே நீங்கள் திட்டங்களைச் செய்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் ஆதி கருவிகள். எனவே, உங்களிடம் எல்லையற்ற திட்டங்கள் உள்ளன. இந்த உலகம் முழுவதற்கும் நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்பது உங்களின் புத்திகளில் வெளிப்படையாக உள்ளதா? அல்லது, இதில் அக்கறை கொண்டவர்களின் பணியே இது என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கு எப்போதாவது எல்லையற்றதன் எண்ணங்கள் ஏற்பட்டதா? அல்லது நீங்கள் உங்களின் சொந்த இடத்தைப் பற்றி மட்டுமே நினைக்கிறீர்களா? உங்களின் பெயர் ‘உலக உபகாரிகள்’ என்பதாகும். நீங்கள் குறிப்பிட்ட இடத்தின் உபகாரிகள் என்று அழைக்கப்படுவதில்லை. எல்லையற்ற சேவைக்காக என்ன எண்ணங்கள் உங்களிடம் உள்ளன? நீங்கள் எல்லையற்றதன் அதிபதிகள் ஆக விரும்புகிறீர்கள், இல்லையா? நீங்கள் குறிப்பிட்ட பிராந்தியத்தின் அதிபதிகள் ஆக விரும்பவில்லை, அல்லவா? சேவாதாரி கருவி ஆத்மாக்களான உங்களில் இந்த அலை உருவாக்கப்படும்போது, அந்த அலை மற்றவர்களிலும் உருவாக்கப்படும். இந்த அலை உங்களுக்குள் இல்லாவிட்டால், அதே அலை மற்றவர்களிலும் இருக்காது. எனவே, எப்போதும் உங்களை எல்லையற்ற சேவையாளர்களாகக் கருதி, எல்லையற்றதற்கான திட்டங்களைச் செய்யுங்கள். நீங்கள் ஒரு எல்லைக்குட்பட்;ட பந்தனத்தால் எந்தமுறையிலும் கட்டுப்படவில்லையே என்பதைச் சோதிப்பதே முதலாவது பிரதானமான விடயம் ஆகும். பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பவர்களால் மட்டுமே, எல்லையற்ற சேவையில் வெற்றி பெற முடியும். இது இங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்தும் வெளிப்படுத்தப்படும். எனவே, இந்த வருடம் நீங்கள் என்ன சிறப்பியல்பைக் காட்டுவீர்கள்? ஒவ்வொரு வருடமும் உங்களிடம் திடசங்கற்பமான எண்ணங்கள் உள்ளன. இத்தகைய வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம், உங்களுக்கு திடசங்கற்பமான எண்ணங்கள் ஏற்படுகின்றன. ஒரு திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்கும்படி நீங்கள் அனைவரையும் கேட்கிறீர்கள். எனவே, திடசங்கற்பமான எண்ணங்களைக் கொண்டிருத்தல் பொதுவானது ஆகிவிட்டது. அவை திடசங்கற்பமான எண்ணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் அவை வெறும் எண்ணங்களே. அவை திடசங்கற்பமான எண்ணங்களாக இருந்தால், இரண்டாவது தடவையும் உங்களுக்கு அந்த எண்ணங்கள் ஏற்பட வேண்டியதில்லை. ‘திடசங்கற்பமான எண்ணங்கள்’ என்பது பொதுவாதாகிவிட்டது. இப்போது, நீங்கள் எதையாவது செய்யும்போது, ‘நாம் திடசங்கற்பமான எண்ணங்களைக் கொண்டிருப்போம்’ என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களின் சிந்தனையும் செயலும் சமமாக இருக்கும் வகையில் ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடியுங்கள். திட்டங்களும் நடைமுறையும் ஒன்றாக இருக்க வேண்டும். பல திட்டங்கள் உள்ளன. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் பல பிரச்சனைகள் உள்ளன. அதற்கு முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் அனைத்தையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. இது நிகழும். தொடர்ந்து இது நிகழும். எவ்வாறாயினும், உங்களுக்கு இலக்கு இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து அதன் நடைமுறைப் பிரயோகத்தை நோக்கிச் செல்வீர்கள். இப்போது புதுமை புலப்படும் வகையில் ஒரு திட்டத்தைச் செய்யுங்கள். இல்லாவிடின், நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஒன்றுகூடுகிறீர்கள். அனைத்தும் அப்படியே உள்ளது என நீங்கள் கூறுகிறீர்கள். ஒவ்வொருவரும் அதே போன்றே இருப்பதையே நீங்கள் காண்கிறீர்கள். நீங்கள் விரும்புவதைப் போல் அது இருப்பதில்லை. நீங்கள் விரும்பும் அளவிற்கு அது இருப்பதில்லை. எவ்வாறு நீங்கள் அதை அடைவீர்கள்? அதற்கு, முதலடி எடுத்து வைப்பவர்களே அர்ஜூனர்கள். ஒருவராயினும் கருவி ஆகினால், மற்றவர்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் ஏற்படும். எனவே, நீங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியுள்ளீர்கள். ஆகவே, ஒரு நடைமுறைத் திட்டத்தை உருவாக்குங்கள். தியறி பரீட்சைகள் உள்ளன. நடைமுறைப் பரீட்சைகளும் உள்ளன. ஆரம்பத்தில் இருந்து இங்கிருப்பவர்களின் பாக்கியம் மேன்மையானது என்பது உண்மையே. இப்போது நீங்கள் என்ன புதிய விடயங்களைச் செய்வீர்கள்?
இதில் விசேட கவனத்தைச் செலுத்துங்கள்: எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னரும், சம்பூரணம் ஆகுகின்ற இலக்கும் மாதிரி ஆகுகின்ற இலக்கும் இருக்க வேண்டும். என்ன நிகழ்கிறது என்றால், ஒன்றுகூடலில் நன்மையும் உள்ளது. ஒன்றுகூடலில் இழப்பும் ஏற்படுகிறது. ஒன்றுகூடலில் ஒருவரையொருவர் பார்க்கும்போது, கவனக்குறைவு ஏற்படுகிறது. ஒன்றுகூடலில் ஒருவரையொருவர் பார்க்கும்போது, ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது. இரண்டும் ஏற்படுகின்றன. எனவே, கவனக்குறைவுடன் ஒன்றுகூடலைப் பார்க்காதீர்கள். அவர் அதைச் செய்கிறார், அவரும் அதைச் செய்கிறார், எனவே நானும் அதைச் செய்தால் என்ன? என்று சிந்திப்பது இப்போது ஒரு வழக்கம் ஆகியுள்ளது. இது எப்படியோ தொடர்கிறது. எனவே, ஒன்றுகூடலில் கவனக்குறைவினால் இழப்பு ஏற்படுகிறது. மேன்மை ஆகுவதற்கு ஒன்றுகூடலில் இருந்து ஒத்துழைப்பைப் பெறுதல் வேறுவிடயம். ‘நான் இதைச் செய்ய வேண்டும்’ அல்லது, ‘நான் இதைச் செய்து மற்றவர்களையும் அதைச் செய்வதற்குத் தூண்ட வேண்டும்’ என்ற இலக்கு உங்களிடம் இருந்தால், எதையாவது செய்வதற்கு ஊக்கமும் உற்சாகமும் காணப்படும். அது மற்றவர்களையும் செய்வதற்குத் தூண்டும்.
மீண்டும் மீண்டும் இந்த இலக்கை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு இலக்கு மட்டுமிருந்து, அதுவும் அமிழ்ந்திருந்தால், நடைமுறையில் அது நிகழப் போவதில்லை. எனவே, அவ்வப்போது, தொடர்ந்து உங்களின் இலக்கை வெளிப்படுத்துங்கள். தொடர்ந்து இலக்கையும் அதற்கான தகைமைகளையும் சோதித்துப் பாருங்கள். அப்போது அது சக்திவாய்ந்தது ஆகும். இல்லாவிட்டால், அது சாதாரணமாகவே இருக்கும். இப்போது, இந்த வருடம், நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்: நான் எளிமையானவனாகி, மற்றவர்களை மாதிரிகள் ஆக்க வேண்டும். இந்த சேவை என்ற இல்லறம் (களம்) தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆனால் இந்த இல்லறம் வளர்ச்சிக்கு ஒரு தடை ஆகக்கூடாது. அது வளர்ச்சிக்குத் தடை ஆகினால், அதைச் சேவை என்று அழைக்க முடியாது. அச்சா, இது மிகப் பெரியதொரு குழு. ஒரு சிறிய அணுக்குண்டினால் அத்தகைய அற்புதத்தைச் செய்ய முடியும் என்றால், இத்தனை ஆத்மிக் (ஆத்ம உணர்வு) குண்டுகளால் எதைத்தான் செய்ய முடியாது? நீங்களே மேடையில் வரப் போகிறவர்கள், இல்லையா? பொன்விழாவைச் சேர்ந்தவர்கள் முதுகெலும்பு போன்றவர்கள். ஆனால் நீங்களே நடைமுறையில் மேடையில் வரப் போகிறவர்கள். இப்போது, எதையாவது செய்வதன் மூலம் இதைக் காட்டுங்கள். பொன்விழாவின் கருவி ஆத்மாக்களின் அன்பான ஒன்றுகூடல் வெளிப்படுத்தப்பட்டதைப் போல், அந்த அன்பான ஒன்றுகூடல் சேவையில் விரிவாக்கத்தின் மூலமும் சேவையில் வெற்றியின் மூலமும் புலப்படும் பலனைக் காட்டியதைப் போல், கோட்டையைப் போன்ற ஒரு ஒன்றுகூடலை உருவாக்குங்கள். பொன்விழாவின் கருவி தாதிகளும் தீதிகளும் ஒன்றுகூடலின் அன்பினதும் சக்தியினதும் புலப்படும் பலனைக் காட்டியதைப் போல், நீங்களும் புலப்படும் பலனைக் காட்ட வேண்டும். எனவே, ஒருவருக்கொருவர் நெருக்கமாக வருவதற்கு, நீங்கள் சமமானவர் ஆகவேண்டும். பலவிதமான சம்ஸ்காரங்கள் உள்ளன. அது அவ்வாறே இருக்கும். ஜெகதாம்பாவையும் பிரம்மாவையும் பாருங்கள். அவர்களின் சம்ஸ்காரங்கள் வேறுபட்டதாகவே இருந்தன. இப்போது கருவிகளாக இருக்கும் தாதிகளும் தீதிகளும் ஒரே சம்;ஸ்காரங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் சம்ஸ்காரங்களை ஒத்திசைப்பதே அன்பின் அடையாளம் ஆகும். சம்ஸ்காரங்கள் ஒத்திசைந்தால்தான் ஒரு ஒன்றுகூடல் உருவாக முடியும் என நினைக்காதீர்கள். இல்லை. உங்களின் சம்ஸ்காரங்களை ஒத்திசைப்பதனால், ஒன்றுகூடல் இயல்பாகவே பலம் வாய்ந்தது ஆகும். அச்சா. இதுவும் நிச்சயமாக நிகழும். சேவை என்பது ஒருவிடயம். ஒரு கருவியாகி, அவ்வாறே தொடர்ந்து செயல்படுவதும் ஒரு சிறப்பியல்பே. இந்த எல்லைக்குட்பட்ட தன்மையை நீக்க வேண்டும், இல்லையா? இதற்காகவே உங்களுக்கு அனைவரையும் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது, ஒரு நிலையத்தில் இருப்பவர்கள் இன்னோர் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது, இல்லையா? நீங்கள் அனைவரும் தயாரா? கட்டளை ஒன்று கொடுக்கப்படும். உங்களின் கைகளை நீங்கள் தூக்கியவண்ணம் இருக்கிறீர்கள், அல்லவா? ஒரு மாற்றத்தை ஏற்படுவதால் நன்மை உள்ளது. இந்த வருடம், இந்தப் புதிய விடயத்தை நாம் செய்வோம், செய்வோமா? நீங்கள் நிச்சயமாகப் பற்றை அழித்தவர்கள் ஆகவேண்டும். நீங்கள் துறவிகளாகவும் தபஸ்விகளாகவும் ஆகியிருப்பதனால், இது ஒரு பெரிய விடயம் இல்லை. துறவறமும் ஒரு பாக்கியமே. எனவே, உங்களின் பாக்கியத்தின் முன்னால், இந்தத் துறவறம் எம்மாத்திரம்? முன்வருபவர்கள் நன்றிகளைப் பெறுவார்கள். எனவே, நீங்கள் எல்லோரும் தைரியமானவர்கள். ஒரு இட மாற்றம் என்றால் மாற்றம் என்று அர்த்தம். எவரையும் இடம் மாற்ற முடியும். உங்களுக்குத் தைரியம் இருந்தால், அது பெரிய விடயமே இல்லை. அச்சா, இந்த வருடம், நாம் இந்தப் புதுமையை ஏற்படுத்துவோம். உங்களுக்கு இது விருப்பமா? ஆரம்பத்தில் இருந்து என்றும் தயாராக இருக்கும் பாடத்தைக் கற்றுக் கொண்டவர்கள், அகத்தே சக்தியால் நிரம்பியிருக்கிறார்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும் எந்தவொரு கட்டளையையும் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இயல்பாகவே சக்தியைப் பெறுகிறீர்கள். எனவே, சதா கீழ்ப்படிவானவராக இருப்பதற்கான சக்தியை நீங்கள் ஏற்கனவே பெற்றுள்ளீர்கள். அச்சா. நீங்கள் எப்போதும் மேன்மையான பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். இந்தப் பாக்கியத்தால், நீங்கள் தொடர்ந்து உதவியைப் பெறுவீர்கள். உங்களுக்குப் புரிகிறதா?
சேவை உங்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மேன்மை ஆக்குகிறது. சேவையின் சக்தியும் எதிலும் குறைந்தது இல்லை. நினைவிற்கும் சேவைக்கும் இடையில் சமநிலை இருக்க வேண்டும். எனவே, சேவையானது உங்களுக்கு முன்னேற்றத்தின் அனுபவத்தைக் கொடுக்கும். சேவையில் நினைவைக் கொண்டிருப்பது இயல்பானதாகும். பிராமண வாழ்க்கையின் இயல்பு என்ன? நினைவில் இருத்தல். ஒரு பிராமணப் பிறப்பை எடுத்தல் என்றால், நினைவின் பந்தனத்தில் கட்டுப்பட்டிருத்தலாகும். அவர்களின் பிராமண வாழ்க்கையில் ஏதாவதொரு அடையாளம் அவர்களிடம் இருப்பதைப் போல், இந்த பிராமண வாழ்க்கையின் அடையாளம், நினைவே ஆகும். நினைவில் இருத்தல் இயல்பானதாக இருக்க வேண்டும். இதற்கு, நீங்கள் நினைவை வேறாகவும் சேவையை வேறாகவும் செய்வதாக இருக்கக்கூடாது. இல்லை. இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். சேவையைச் செய்வதும் நினைவில் இருப்பதும் வெவ்வேறாகச் செய்வதற்கு உங்களிடம் போதியளவு நேரம் இல்லை. இந்தக் காரணத்தினால், நினைவும் சேவையும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும். இதிலேயே நீங்கள் அனுபவசாலிகளாகவும் வெற்றிநிறைந்தவர்களாகவும் ஆகவேண்டும். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்ரர் துன்பத்தை நீக்குபவராகவும் சந்தோஷத்தை அருள்பவராகவும் ஆகி, கர்ம தத்துவத்தைப் புரிந்து கொள்வதன் மூலம், முக்திக்கும் சத்கதிக்கும் இடையில் தீர்மானிப்பவர் ஆகுவீர்களாக.இதுவரை நடந்த உங்களின் வாழ்க்கைக் கதையைப் பார்ப்பதிலும் அதைப் பற்றிப் பேசுவதிலும் எப்போதும் மும்முரமாக இருக்காதீர்கள். அதற்குப் பதிலாக, அனைவரின் கர்ம நிலையையும் புரிந்துகொண்டு, அவர்களுக்கு முக்தி கொடுப்பதா அல்லது சத்கதி கொடுப்பதா எனத் தீர்மானியுங்கள். மாஸ்ரர் துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவரின் பாகத்தை நடியுங்கள். உங்களின் படைப்பின் துன்பத்தையும் அமைதியின்மையையும் முடித்து, அவர்களுக்கு மகாதானங்களையும் ஆசீர்வாதங்களையும் கொடுங்கள். வசதிகளை உங்களுக்காக எடுத்துக் கொள்ளாமல், இப்போது ஓர் அருள்பவராகி வழங்குங்கள். நீங்கள் பெற்ற சத்கதியின் (உதவி) அடிப்படையில் நீங்கள் சுய முன்னேற்றத்தை அனுபவம் செய்தால் அல்லது தற்காலிகமான காலப்பகுதிக்கு நீங்கள் சேவையில் வெற்றியைப் பெற்றால், இன்று நீங்கள் ஒரு மகாத்மாவாக இருப்பீர்கள். ஆனால், நாளை, அந்த மகத்துவத்திற்கான தாகத்துடன் இருப்பீர்கள்.
சுலோகம்:
எந்தவித அனுபவமும் இல்லாதிருப்பது போராடும் நிலையாகும். அதனால், ஒரு போராளியாக இல்லாமல் ஒரு யோகி ஆகுங்கள்.