07-06-2020 ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா மதுவனம் 20/01/86


முயற்சிக்கும் மாற்றத்திற்கும் பொன்னான வாய்ப்புள்ள வருடம்.

இன்று, சக்திவாய்ந்த தந்தை தனது சக்திசாலிக் குழந்தைகளை, இந்த உலகைப் புதியதாகவும் மேன்மையானதாகவும் ஆக்கும் மிகப்பெரிய, அதி சக்திவாய்ந்த பணியைச் செய்யும் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்கும் சக்திசாலி ஆத்மாக்களைப் பார்க்கிறார். ஒவ்வோர் ஆத்மாவையும் அமைதி நிறைந்தவராகவும் சந்தோஷமானவராகவும் ஆக்கும் சக்திவாய்ந்த பணியைச் செய்யும் எண்ணம் உங்களுக்கு உள்ளது. இந்த மேன்மையான எண்ணத்தைக் கொண்டிருப்பதனால், இந்தப் பணியை நடைமுறையில் செய்யும் திடசங்கற்பம் உங்களின் புத்திகளில் உள்ளது. இந்த மேன்மையான பணி நடைபெற வேண்டும் என்ற ஒரேயொரு மேன்மையான எண்ணமே சகல சக்திசாலிக் குழந்தைகளிடமும் உள்ளது. அதற்கும் மேலாக, இந்தப் பணி ஏற்கனவே பூர்த்தியாகிவிட்;டது என்ற உத்தரவாதமும் உள்ளது. நீங்கள் வெறுமனே கருவிகளாக, கர்ம தத்துவத்திற்கும் அதன் பலனுக்கும் ஏற்ப, உங்களின் முயற்சியும் வெகுமதியினூடாக, பணிவான கருவிகளாக இருப்பதனூடாக அந்தப் பணியைச் செய்கிறீர்கள். விதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உங்களின் மேன்மையான உணர்வுகளால், அந்த உணர்வுகளின் அழியாத பலனைப் பெறுவதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். உலகிலுள்ள ஞானம் இல்லாத ஆத்மாக்கள் நினைக்கிறார்கள்: அமைதி ஏற்படுமா? என்ன நிகழும்? அது எவ்வாறு நிகழும்? அவர்களால் எந்த விதமான நம்பிக்கையும் வைக்க முடியவில்லை. ‘இது உண்மையில் நடக்குமா?’ என அவர்கள் கேட்கிறார்கள். ‘ஆமாம்!’ என நீங்கள் சொல்கிறீர்கள். அது நடப்பது மட்டுமல்ல, ஏற்கனவே நடந்துவிட்டது. ஏனென்றால் எதுவும் புதியதல்ல. அது பல தடவைகள் நடந்துள்ளது. இப்போதும் ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. புத்திகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், உத்தரவாதமான விதி உள்ளது என்பதை அறிவார்கள். இத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கை உங்களிடம் ஏன் உள்ளது? உங்களின் சுய மாற்றத்தின் நடைமுறை அத்தாட்சியினாலேயே. எங்கு நடைமுறை அத்தாட்சி உள்ளதோ, அங்கு வேறெந்த அத்தாட்சியும் கொடுக்க வேண்டியதில்லை. அத்துடன், இறைபணி எப்போதும் வெற்றிபெறும் என்ற உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது. இது மனித ஆத்மாக்கள், மகாத்மாக்கள், தர்மாத்மாக்களுக்கான பணி இல்லை. நீங்கள் புத்திகளில் இத்தகைய நம்பிக்கையைக் கொண்டுள்ள கவலையற்ற ஆத்மாக்கள் ஆவீர்கள். எதிர்காலத்திற்கு உத்தரவாதம் உள்ளது, இறைபணி ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் விநாசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அது நடக்கப் போகிறது எனப் பயப்படுகிறார்கள். நீங்கள் கவலையற்றவர்களாக இருக்கிறீர்கள். ஏனென்றால், புதிய உலகம் ஸ்தாபிக்கப்படப் போகிறது. அசாத்தியத்திற்கும் சாத்தியத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. பொன்னுலகின் தங்கச் சூரியன் எப்போதும் மேலேயும் உங்களுக்கு முன்னாலும் இருக்கும். ஆனால் அவர்களுக்கு முன்னால் விநாசத்தின் கரும் முகில்களே உள்ளன. காலம் நெருங்கி வருவதனால், நீங்கள் அனைவரும் கால் சதங்கைகளைக் கட்டிக் கொண்டு, தொடர்ந்து சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறீர்கள். இன்று, பழைய உலகம். நாளை, பொன்னுலகம். இன்றும் நாளையும் மிகவும் நெருக்கமாக வந்துள்ளன.

இப்போது, இந்த வருடம், நீங்கள் ‘முழுமையும் சமமாகவும்’ ஆகும் வருடமாக அனுபவம் செய்ய வேண்டும். முழுமைநிலையானது, தேவதைகளான உங்களை வெற்றி மாலையுடன் அழைக்கிறது. நீங்கள் வெற்றி மாலைக்கு உரிமையுள்ளவர்களாக ஆகப் போகிறீர்கள், அல்லவா? சம்பூரணமான தந்தையும் சம்பூரணமான ஸ்திதியும் குழந்தைகளான உங்களை அழைக்கிறார்கள்: வாருங்கள், மேன்மையான ஆத்மாக்களே, வாருங்கள்! சமமான குழந்தைகளே, வாருங்கள்! சக்திசாலிக் குழந்தைகளே, வாருங்கள்! சமமானவராகி, உங்களின் இனிமையான வீட்டில் ஓய்வெடுங்கள். பாப்தாதா பாக்கியத்தை அருள்பவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் இருப்பதைப் போல், இந்த வருடம், நீங்களும் குறிப்பாக பிராமண ஆத்மாக்களுக்கும் ஏனைய சகல ஆத்மாக்களுக்கும் பாக்கியத்தை அருள்பவர்களாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆகவேண்டும். நாளை, நீங்கள் தேவதேவியர்கள் ஆகுவீர்கள். ஆனால் இப்போது நீங்கள் இறுதி, தேவதை ரூபம் ஆகவேண்டும். தேவதைகள் என்ன செய்வார்கள்? அவர்கள் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகி, ஆசீர்வாதங்களைக் கொடுப்பார்கள். தேவதேவியர்(தேவ்தா) சதா கொடுப்பார்கள். அவர்கள் எடுக்க மாட்டார்கள். அவர்களை லேவ்தா (எடுப்பவர்கள்) என அழைக்க முடியாது. எனவே, நீங்கள் ஆசீர்வாதங்களை அருள்பவர்களும் பாக்கியத்தை அருள்பவர்களும் ஆவீர்கள். தேவர்கள் ஆகப்போகும் தேவதைகள். இப்போது குறிப்பாக, ‘நாம் தேவர்கள் ஆகப்போகும் தேவதைகள்’ என்ற மகாமந்திரத்தின் விழிப்புணர்வின் சொரூபங்கள் ஆகுங்கள். நீங்கள் ஏற்கனவே ‘மன்மனாபவ’ ஆகிவிட்டீர்கள். அது ஆரம்பத்தின் மந்திரம் ஆகும். இப்போது, இந்தச் சக்திவாய்ந்த மந்திரத்தை உங்களின் அனுபவத்தில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ‘எனக்கு இது வேண்டும், நான் இதைப் பெற வேண்டும்!’ இந்த விடயங்களே உங்களை லேவ்தா (எடுப்பவர்கள்) ஆக்குகிறது. எடுக்கும் சம்ஸ்காரங்களால் நீங்கள் தேவ்தா (தேவர்கள், அருள்பவர்கள்) ஆகுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே, இப்போது அந்த சம்ஸ்காரங்களை முடியுங்கள். உங்களின் முதல் பிறவியில், நீங்கள் வீட்டில் இருந்து பிரம்மாவுடன் முதல் தேவர்களாக முதல் வாழ்க்கையில் முதல் யுகத்திற்குள் வருவீர்கள். அது 1-1-1 என்ற காலப்பகுதியாக இருக்கும். பஞ்சபூதங்களும் முதலாம் இலக்க சதோபிரதானாக இருக்கும். இராச்சியமும் முதலாம் இலக்கமாக இருக்கும். உங்களின் பொன்னான ஸ்திதியும் முதலாம் இலக்கமாக இருக்கும். ஒரு நாளின் வேறுபாடு இருந்தாலும், அது 1-1-1 ஆக இருக்க மாட்டாது. தேவதைகளில் இருந்து தேவர்கள் ஆகுவதற்கு, நீண்ட காலத்திற்கு அந்த சம்ஸ்காரங்களை உங்களின் செயல்களில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நீண்ட காலம் என்பது நினைவுசெய்யப்படுகிறது. அந்த நீண்ட காலப்பகுதியின் முடிவு இப்போது வருகிறது. அதற்கென ஒரு திகதியைக் கணக்கிடாதீர்கள்.

விநாசம் என்பது இறுதிக்கணங்கள் எனப்படுகிறது. அந்த வேளையில், ‘நீண்ட காலத்திற்கு’ என்ற வாய்ப்பு ஏற்கனவே முடிந்திருக்கும். எவ்வாறாயினும், ‘குறுகிய காலத்திற்கு’ என்ற வாய்ப்பும் முடிந்துவிடும். இதனாலேயே, நீண்ட காலம் முடிவிற்கு வந்துவிட்டது என்ற சமிக்கையை பாப்தாதா கொடுக்கிறார். அதன்பின்னர், நீண்ட காலத்தின் கணக்கு என்ற வாய்ப்பு முடிவிற்கு வந்துவிடும். குறுகிய காலத்திற்கான முயற்சியும் குறுகிய காலத்திற்கான வெகுமதியும் என்றே சொல்லப்படும். கர்மக்கணக்கில், நீண்ட காலத்திற்குரிய கணக்கு முடிவிற்கு வருகிறது. குறுகிய காலத்திற்கான அல்லது தற்காலிகமான காலத்திற்குரிய கணக்கு ஆரம்பமாகிறது. ஆகவே, இந்த வருடம் மாற்றத்திற்கான வருடம் ஆகும். நீண்ட காலம் என்பதில் இருந்து, குறுகிய காலத்தில் மாற்றம் நிகழ வேண்டும். எனவே, இந்த வருடம் நீங்கள் செய்யும் முயற்சியில், நீண்ட காலத்திற்கான கணக்கில் நீங்கள் விரும்பிய அளவிற்குச் சேமிக்க வேண்டும். இன்றில்லாவிட்டால், நாளை மாறுவீர்கள் என்ற கவனக்குறைவுடன் நீங்கள் செயற்பட்டீர்கள் என்று பின்னர் முறைப்பாடு செய்யாதீர்கள். எனவே, கர்ம தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகுங்கள். ஞானம் நிறைந்தவர்கள் ஆகுங்கள். துரித கதியில் முன்னேறிச் செல்லுங்கள். தொடர்ந்து 2000 ஆம் வருடத்தின் அடிப்படையில் கணக்கிடாதீர்கள். முயற்சிகளுக்கான காலத்தின் கணக்கீடு, உலக மாற்றத்திற்கான காலத்தின் கணக்கீட்டில் இருந்து வேறுபட்டது. இன்னமும் 15 வருடங்கள் எஞ்சியுள்ளன அல்லது 18 வருடங்கள் எஞ்சியுள்ளன, அது 99 இல் நிகழும் என்று நினைக்காதீர்கள். இந்த முறையில் நினைக்காதீர்கள். கணக்கீட்டைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களின் முயற்சிகளின் கணக்கையும் அவற்றுக்கான வெகுமதியையும் அறிந்து, அந்த வேகத்தில் முன்னேறிச் செல்லுங்கள். இல்லாவிட்டால், நீண்ட காலத்திற்கான பழைய சம்ஸ்காரங்கள் எஞ்சியிருந்தால், நீண்ட காலத்திற்கான இந்தக் கணக்கீடு தர்மராஜ் புரியின் கணக்கில் சேமிக்கப்படும். இப்போதும், சிலரிடம் வீணானவற்றினதும் தவறான செயல்களினதும் பாவச் செயல்களினதும் நீண்ட காலக் கணக்கு உள்ளது. பாப்தாதாவிற்கு அவர்களைப் பற்றித் தெரியும். ஆயினும், அவர் அவர்களை வெளிப்படுத்துவதில்லை. அவர்; அவர்களைத் திரைக்குப் பின்னால் சிறிது காலம் விட்டு வைத்துள்ளார். எவ்வாறாயினும், வீணானவற்றினதும் தவறான செயல்களினதும் கணக்கில் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, இந்த வருடம் உங்களுக்கு மேலதிகமான பொன்னான வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதிபுண்ணிய சங்கமயுகம் இருப்பதைப் போல், இது முயற்சிகளுக்கும் வெகுமதிகளுக்குமான பொன்னான வாய்ப்பிற்குரிய வருடம் ஆகும். எனவே, தைரியத்திற்கும் உதவிக்குமான விசேட ஆசீர்வாதத்தைக் கொண்டிருக்கும் இந்த வருடத்தை, சாதாரணமான 50 வருடங்களைப் போல் வீணாக்காதீர்கள். இப்போதும், அன்புக்கடலான தந்தை, சகல உறவுமுறைகளின் அன்பினால், குழந்தைகளின் கவனக்குறைவான, சாதாரணமான முயற்சிகளைப் பார்த்தும் பார்க்காமலும், கேட்டும் கேட்காமலும் இருக்கிறார். அவர்களின் மீதுள்ள அன்பினால், மேலதிக உதவியுடன் மேலதிக மதிப்பெண்களைக் கொடுப்பதன் மூலம் அவர்களை முன்னேறச் செய்கிறார். அவர் உங்களுக்கு ஓர் உயர்த்தியைக் கொடுக்கிறார். ஆனால் காலம் இப்போது மாறுகிறது. ஆகவே, இப்போது கர்ம தத்துவத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு, இந்த நேரத்தின் நன்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள். 18 ஆம் அத்தியாயம் தொடங்கிவிட்டது என உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. 18 ஆம் அத்தியாயத்தின் சிறப்பியல்பு, நினைவு சொரூபம் ஆகுவதாகும். ஒரு கணம் உங்களிடம் விழிப்புணர்வும், மறுகணம் நீங்கள் மறப்பதாகவும் இருக்கக்கூடாது. நினைவு சொரூபமாக இருத்தல் என்றால், நீண்ட காலத்திற்கு இயல்பாகவும் இலகுவாகவும் உங்களிடம் அந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். இப்போது போராடுகின்ற சம்ஸ்காரங்களையும், சிரமப்படுகின்ற சம்ஸ்காரங்களையும், குழப்பத்திற்கான சம்ஸ்காரங்களையும் உங்களின் மனதில் இருந்து முடித்துவிடுங்கள். இல்லாவிட்டால், அந்த சம்ஸ்காரங்கள் நீண்ட காலத்திற்கு உங்களுடையதாகிவிடும். அத்துடன் இறுதிக் கணங்களில் அதற்கேற்ப உங்களின் எதிர்கால அந்தஸ்தைப் பெறுவதற்குக் கருவி ஆகிவிடு;ம். நீண்ட காலத்திற்கு முயற்சி செய்யும் நேரம் இப்போது முடிவிற்கு வருகிறது என்றும் நீண்ட காலத்திற்கு பலவீனங்களின் கணக்கு இப்போது ஆரம்பம் ஆகுகிறது என்றும் உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் இப்போது இதைப் புரிந்து கொண்டீர்களா? இதனாலேயே, இது மாற்றத்திற்கான விசேடமான நேரம் ஆகும். தற்சமயம், பாபா ஆசீர்வாதங்களை அருள்பவராக இருக்கிறார். பின்னர் அவர் உங்களின் கணக்குகளைப் பார்ப்பவராக இருப்பார். தற்சமயம், அன்பின் கணக்கு மட்டுமே உள்ளது. எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நினைவின் சொரூபம் ஆகவேண்டும். நினைவின் சொரூபம் ஆகுதல், இயல்பாகவே உங்களைப் பற்றினை அழிப்பவர் ஆக்கும். பற்றின் பட்டியல் இப்போது மிகவும் நீண்டதாகிவிட்டது. ஒன்று, சுயத்தின் இல்லறம். ஏனையவை, தெய்வீகக் குடும்பத்தின் இல்லறம், சேவையின் இல்லறம், எல்லைக்குட்பட்ட பேறுகளின் இல்லறம். இவை அனைத்தினதும் பற்றை அழித்தவர் ஆகுங்கள். அதாவது, பற்றற்றவராகவும் அன்பானவராகவும் ஆகுங்கள். ‘நான்’ என்ற உணர்வு என்றால் பற்று என்று அர்த்தம். எனவே, அதிலும் பற்றை அழித்தவர் ஆகுங்கள். நீங்கள் நீண்ட காலத்திற்கு முயற்சி செய்வதன் மூலம் மட்டுமே, நீண்ட காலத்திற்கு வெகுமதியைப் பெறுகின்ற உரிமையைப் பெறுபவர்கள் ஆகுவீர்கள். நீண்ட காலத்திற்கான நேரம் என்றால் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பலனை அல்லது வெகுமதியைப் பெறுதல் என்று அர்த்தம். ஒவ்வொரு வகையான இல்லறத்தில் இருந்தும் விடுபடுவதன் அர்த்தத்தை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். உங்களால் அவற்றில் மிக நல்ல சொற்பொழிவுகளும் ஆற்ற முடியும். எவ்வாறாயினும், விடுதலை அடைதல் என்றால் பற்றை அழித்தவர் ஆகுதல் என்று அர்த்தம். உங்களுக்குப் புரிகிறதா? உங்களிடம் பாப்தாதாவை விட அதிக கருத்துக்கள் உள்ளன. எனவே, பாபா உங்களுக்கு மேலும் என்ன கருத்துக்களைச் சொல்வது? உங்களிடம் கருத்துக்கள் (பொயின்ற்ஸ்) உள்ளன. இப்போது ஒரு புள்ளி (பொயின்ற்) ஆகுங்கள். அச்சா.

எப்போதும் மேன்மையான செயல்களைச் செய்வதன் மூலம் பேறுகளின் தத்துவத்தை அறிந்திருப்பவர்களுக்கும், நீண்ட காலத்திற்கு சதா தீவிர முயற்சி செய்பவர்களுக்கும், மேன்மையான முயற்சிக்கான மேன்மையான சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும், எப்போதும் சத்தியயுகத்தின் ஆதி இரத்தினங்களுக்கும், சங்கமயுகத்தின் ஆதி இரத்தினங்களுக்கும், ஆதி தேவனிற்குச் சமமான குழந்தைகளுக்கும், ஆதியான தந்தையிடமிருந்தும் அநாதியான தந்தையிடமிருந்தும் முதலாவதாக வருவதற்கான மேன்மையான ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளவர்களுக்கும், சேவையாளரான தந்தையிடமிருந்து அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா தாதிகளுடன் பேசுகிறார்:

யார் வீட்டின் கதவுகளைத் திறப்பீர்கள்? பொன்விழாவைக் கொண்டாடுபவர்கள் அல்லது வெள்ளி விழாவைக் கொண்டாடுபவர்கள் பிரம்மாவுடன் சேர்ந்து வாசல்களைத் திறப்பீர்கள், அல்லவா? அல்லது, நீங்கள் பிந்தி வருவீர்களா? நீங்கள் பாபாவுடன் சென்றால், ஒரு மணமகளைப் போல் செல்வீர்கள். ஆனால் பின்னால் சென்றால், ஊர்வலத்தில் ஒருவராகவே செல்வீர்கள். உறவினர்களும் ஊர்வலத்தில் ஒரு பாகம் என்றே அழைக்கப்படுவார்கள். அவர்கள் நெருக்கமானவர்களாக இருக்கலாம். ஆனால், ஊர்வலம் வந்துவிட்டது என்றே சொல்வார்கள். எனவே, யார் கதவுகளைத் திறப்பீர்கள்? பொன்விழாவினரா அல்லது வெள்ளி விழாவினரா? வீட்டின் கதவுகளைத் திறப்பவர்களே சுவர்க்கத்தின் வாயிலையும் திறப்பார்கள். இப்போது சூட்சும வதனத்திற்கு வருவதற்கு எவருக்கும் தடையில்லை. பௌதீக உலகில், நேரம், சூழ்நிலைகள் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் சூட்சும வதனத்திற்கு வருவதற்குக் கட்டுப்பாடுகள் இல்லை. எவரும் உங்களை நிறுத்த மாட்டார்கள். உங்களின் முறைக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. இதைப் பயிற்சி செய்வதன் மூலம், உங்களின் சரீரத்தில் இருந்தவண்ணம் நீங்கள் ஒரு விநாடியில் அங்கு சென்று திரும்பி வருவதை உணர்வீர்கள். சூட்சும சரீரத்துடன் உலா வருகின்ற ஞாபகார்த்தம் உள்ளது. எனவே உள்ளே உள்ள ஆத்மா ஒரு வாகனம் ஆகுகிறார். நீங்கள் பட்டனை அழுத்தியதும் விமானம் பறக்க ஆரம்பிப்பதாக அனுபவம் செய்வீர்கள். நீங்கள் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பி வருவீர்கள். மற்றவர்களும் நீங்கள் இங்கே இருந்தாலும் இங்கே இல்லாதிருப்பதாக உணர்வார்கள். சாகார் ரூபத்தில் பேசும்போது, பாபா உங்களுடன் ஒரு விநாடி இருப்பார். அதன்பின்னர் அவர் அங்கு இல்லாமல் இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள். ஒரு கணம் அவர் அங்கிருப்பார். அடுத்த கணம் அங்கிருக்க மாட்டார். நீங்கள் அதை அனுபவம் செய்தீர்கள், இல்லையா? உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கிறதல்லவா? அதற்கு, பௌதீக விரிவாக்கம் அனைத்தையும் மூட்டை கட்டுவது அவசியமாகும். சாகார் ரூபத்தில் அவரின் இறுதி ஸ்திதியைக் கண்டீர்கள். அதிகளவு விரிவாக்கம் இருந்தபோதும், விரிவாக்கத்தை அமிழ்த்தி அப்பால் செல்லும் நிலையே இருந்தது. ஒரு நிமிடம், பாபா பௌதீகமாக எதற்காவது ஒரு வழிகாட்டலைக் கொடுப்பார். அடுத்த கணம், பாபா சரீரமற்ற ஸ்திதியின் அனுபவத்தைக் கொடுத்தார். எனவே, நீங்கள் விஸ்தாரத்தில் இருந்து விடுபடும் சக்தி வெளிப்படுவதைக் கண்டீர்கள். ‘பாபா இங்கிருக்கிறாரா இல்லையா? பாபா நாங்கள் சொல்வதைக் கேட்கிறாரா இல்லையா?’ என நீங்களும் கேட்பதுண்டு. எவ்வாறாயினும், வேகம் மிகவும் துரிதமாக இருந்ததால் எந்தவொரு பணியும் தவறவிடப்படவில்லை. நீங்கள் பாபாவிற்கு எதையாவது சொல்லும்போதும், அவர் அதைத் தவற விடுவதில்லை. ஏனெனில், வேகம் மிகவும் துரிதமாக இருந்ததால், ஒரு நிமிடத்தில் அவரால் இரண்டு பணிகளையும் செய்ய முடிந்தது. அவரால் சாரத்தை உணர்ந்து கொள்வதுடன், சுற்றுலாவும் செய்ய முடிந்தது. யாராவது அவருடன் பேசிய பின்னர், பாபா தான் சொல்வதைக் கேட்கவில்லை என எவரும் கூறாதபடி அவரின் சரீரமற்ற நிலை இருந்தது. அந்த வேகம் மிக விரைவானதாக இருந்தது. புத்தி மிகவும் பரந்ததாகவும் எல்லையற்றதாகவும் ஆகியது. அதனால், ஒரே வேளையில் அவரால் இரண்டு பணிகளையும் செய்ய முடிந்தது. விஸ்தாரத்தில் இருந்து விடுபடும் சக்தியை நீங்கள் பயன்படுத்தும்போதே, இது நிகழும். இப்போது இல்லறத்தின் விரிவாக்கம் உள்ளது. அதில் இருக்கும்போது, தேவதை ஸ்திதியின் பயிற்சியானது, காட்சிகளை அருளும். ஒவ்வொரு சிறிய விடயத்திற்கும் இந்தக் கணத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியானது, நீங்கள் மேலே சென்றதும் இயல்பாகவே பயனற்றது போன்று தோன்றும். நீங்கள் மேலே சென்றதும், கீழே உள்ள விடயங்கள் இயல்பாகவே முடிவிற்கு வந்துவிடும். நீங்கள் சிரமப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். நேரமும் மீதமாகும். சேவையும் வேகமாக நிகழும். இல்லாவிட்டால், நீங்கள் அதிகளவு நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். அச்சா.

வெள்ளி விழாவிற்காக வந்திருந்த சகோதர, சகோதரிகளுக்காக அவ்யக்த பாப்தாதாவின் இனிய செய்தி.

வெள்ளி விழாவில் ஆன்மீகக் குழந்தைகளுக்கு அன்பான தங்க மலர்கள்.

அழகான, மேன்மையான வாழ்விற்கும், முழு உலகிலும் அதிமேலானவர்களுக்கும், மகத்தான யுகத்தின் மகத்தான நடிகர்களுக்கும், இந்த யுகத்தை மாற்றுகின்ற குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள். சேவையின் வளர்ச்சியில் கருவிகளாக இருக்கும் விசேடமான பாக்கியத்திற்காகப் பாராட்டுக்கள். ஆரம்பத்தில் இருந்து கடவுளிடம் அன்பாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருப்பதுடன் ஆரம்பத்தில் இருந்து மாதிரிகள் ஆகியதற்கும் பாராட்டுக்கள். காலத்தின் பிரச்சனைகள் என்ற புயலை ஒரு பரிசாகக் கருதி, எப்போதும் தடைகளை அழிப்பவர்களாக இருப்பதற்குப் பாராட்டுக்கள்.

பாப்தாதா எப்போதும் சேவையின் அத்திவாரங்களாக இருப்பதுடன் இத்தகைய அனுபவங்களின் பொக்கிஷங்களால் நிறைந்திருக்கும் தனது குழந்தைகளைக் கண்டு சந்தோஷப்படுகிறார். அவர் குழந்தைகளின் தைரியம் என்ற நற்குண மாலையின் மணிகளை உருட்டுகிறார். இத்தகைய அதிர்ஷ்டகரமான, அன்பான வைபவத்தில், அவர் உங்களுக்கு இந்த விசேடமான பொன்னான ஆசீர்வாதங்களை வழங்குகிறார்: நீங்கள் எப்போதும் ஒரேயொருவரை வெளிப்படுத்தும் பணியில் ஒற்றுமையாகவும் வெற்றியாளர்களாகவும் இருப்பீர்களாக! உங்களின் ஆன்மீக வாழ்க்கையில் அமரர்களாக இருப்பீர்களாக! உடனடியான, அமரத்துவ பழத்தை உண்பதில் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாக இருப்பீர்களாக!

ஆசீர்வாதம்:

நீங்கள் எப்போதும் சந்தோஷம் உடையவராகி, ‘ஆஹா நாடகமே! ஆஹா!’ என்ற விழிப்புணர்வுடன் பலருக்கும் சேவை செய்வீர்களாக.

இந்த நாடகத்தின் எந்தக் காட்சியைப் பார்க்கும்போதும், ‘ஆஹா நாடகமே! ஆஹா!’ என்ற விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் நாடகத்தின் ஞானத்தைப் பெற்றுள்ளதுடன், தற்சமயம் எவ்வாறு நன்மை செய்யும் யுகம் என்பதையும், உங்களின் முன்னால் வருகின்ற எந்தக் காட்சிகளும் நன்மை நிறைந்தவை என்ற ஞானத்தையும் பெற்றுள்ளீர்கள். தற்சமயத்தில் நன்மை புலப்படாவிட்டாலும், எதிர்காலத்தில் அதில் மறைந்துள்ள நன்மை புலப்படும். அப்போது நீங்கள் ‘ஆஹா நாடகமே! ஆஹா!’ என்ற விழிப்புணர்வுடன் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் ஒருபோதும் உங்களின் முயற்சிகளை இட்டுக் கவலைப்பட மாட்டீர்கள். இயல்பாகவே உங்களின் மூலமாகப் பலரும் சேவை செய்யப்படுவார்கள்.

சுலோகம்:

மௌன சக்தியே உங்களின் மனதினால் சேவை செய்வதற்கான இலகுவான முறையாகும். எங்கு மௌன சக்தி உள்ளதோ, அங்கு திருப்தி இருக்கும்.


--ஓம் சாந்தி---

ஓம் சாந்தி