08.06.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் ஞானமாகிய மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். ஆகவே, உங்கள் பார்வை இனிமேலும் எதன் மீதும் ஈர்க்கப்படக்கூடாது.

கேள்வி:
பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பவர்களின் அறிகுறிகள் எவை?

பதில்:
அவர்கள் தங்களிடமுள்ள அனைத்தையும் தந்தைக்கு அர்ப்பணிக்கின்றார்கள். எதுவும் தங்களுக்கு உரியதல்ல என அவர்கள் கருதுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா இச்சரீரம் கூட எனக்கு உரியதல்ல. இது ஒரு பழைய சரீரம், நான் அதைத் துறக்க வேண்டும். அனைத்தின் மீதுள்ள அவர்களின் பற்று தொடர்ந்தும் துண்டிக்கப்படுவதுடன், அவர்கள் பற்று அனைத்தையும் அழிக்கின்றார்கள். இந்த உலகில் உள்ள அனைத்தும் எல்லைக்குட்பட்டதும், பயனற்றதும் என்பது அவர்கள் புத்தியில் இருக்கின்றது.

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு வேறெவராலும் கொடுக்க முடியாத, பிரமாந்தத்தினதும் (ஒளித் தத்துவம்), உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தைக் கொடுக்கின்றார். கீதை மாத்திரமே இராஜயோகத்தையும், கடவுள் வந்து சாதாரண மனிதர்களை நாராயணனாக மாற்றுகிறார் என்பதையும் குறிப்பிடுகின்றது. கீதையைத் தவிர வேறு எந்தச் சமயநூலிலும் இது குறிப்பிடப்படவில்லை. தந்தை, இதை உங்களுக்குக் கூறியுள்ளார். அவர் கூறுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தேன். இந்த ஞானம் தொன்றுதொட்டு தொடர்வதில்லை எனவும் நான் விளங்கப்படுத்தியுள்ளேன். தந்தை வந்து ஒரு தர்மத்தை ஸ்தாபிக்கின்றார், பின்னர் ஏனைய அனைத்துச் சமயங்களும் அழிக்கப்படுகின்றன. சமயநூல்கள் போன்ற எவையும் தொன்றுதொட்ட காலத்திலிருந்து தொடர்வதில்லை. சமய ஸ்தாபகர்கள், தங்கள் சமயங்களை ஸ்தாபிக்க வரும்பொழுது, விநாசம் இடம்பெறுவதில்லை, இல்லாவிட்டால், அனைத்தும் அப்பொழுதே முடிவுக்கு வந்திருக்கும். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் தொடர்ந்தும் சமயநூல்களைக் கற்கின்றார்கள். பிராமண தர்மத்தின் சமயநூல் கீதையாக இருந்தாலும், அதுவும் பக்தி மார்க்கத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது, ஏனெனில், சத்தியயுகத்தில் சமயநூல்கள் இருப்பதில்லை. ஏனைய சமயங்கள் வரும்பொழுது, விநாசம் இடம்பெறுவதில்லை. அந்நேரங்கள் எதனிலும் புதிய உலகம் உருவாக்கப்படும்வகையில், பழைய உலகம் அழிக்கப்படவில்லை; அதே உலகமே தொடர்கிறது. இப்பொழுது இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். கீதை மாத்திரமே புகழப்படுகின்றது. கீதையின் பிறப்பும் கொண்டாடப்படுகின்றது. வேதங்களின் பிறப்புக்கான கொண்டாட்டம் இருப்பதில்லை. ஒரேயொரு கடவுளே உள்ளார். ஆகவே, ஒரேயொருவரின் பிறப்பை மாத்திரமே அவர்கள் கொண்டாட வேண்டும். ஏனையவை படைப்பு ஆகும், அதிலிருந்து எதையும் அடைய முடியாது. தந்தையிடமிருந்து மாத்திரம் நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தாய்வழி அல்லது தந்தைவழி மாமன்கள் போன்றோரிடமிருந்து ஓர் ஆஸ்தி பெறப்படுவதில்லை. அந்த ஒரேயொருவரே உங்களுக்கு எல்லையற்ற ஞானத்தைக் கொடுப்பவராகிய, உங்கள் எல்லையற்ற தந்தை. அவர் உங்களுக்குச் சமயநூல்களைக் கூறுவதில்லை. அவர் கூறுகின்றார்: அவை அனைத்தும் பக்திமார்க்கத்துக்கு உரியவை. நான் உங்களுக்குச் சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தைக் கூறுகின்றேன். சமயநூல்கள் ஒரு கல்வியல்ல. கல்வியினூடாகவே ஒருவர் ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இக்கல்வியைக் கற்பிக்கின்றார். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடன் கடவுள் பேசுகின்றார், இது 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் மீண்டும் அதேபோன்று நடைபெறும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்து கொண்டுள்ளீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இவை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. இக் கமலவாயினூடாக அவர் உங்களுடன் பேசுகின்றார். இதுவே கடவுள் கடனாகப் பெற்றுள்ள, வாய் ஆகும். இது “கோமுக்” (பசுவின் வாய்) எனவும் அழைக்கப்படுகின்றது. இவர் சிரேஷ்ட தாயும் ஆவார். தண்ணீர் போன்றவை அன்றி, ஞான வாசகங்களே இவருடைய வாயிலிருந்து வெளிப்படுகின்றன. பக்தி மார்க்கத்தில், ஒரு கோமுக்கிலிருந்து நீர் வெளிப்படுவது காட்டப்பட்டுள்ளது. அவர்கள் பக்திமார்க்கத்தில் என்ன செய்கின்றார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அந்த நீரைப் பருகுவதற்கு ஒரு கோமுக் போன்றவற்றிற்கு அவர்கள் தொலைதூரத்துக்குப் பயணிக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். உங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்காக உங்களுக்குக் கற்பிப்பதற்கு, தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் எவ்வாறு உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை உங்களால் பார்க்க முடியும். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் அனைவரிடமும் கூறுகின்றீர்கள். அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சத்தியயுகத்தில் மிகச் சொற்ப மனிதர்களே இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கலியுகத்தில் பல மனிதர்கள் இருக்கின்றார்கள். தந்தை வந்து ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். நாங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றோம். மனிதர்களிலிருந்து தேவர்களாக ஆகுகின்ற குழந்தைகளில் தெய்வீகக் குணங்கள் புலப்படும். அவர்கள் தங்களில் கோபத்தின் சிறு சுவட்டையேனும் கொண்டிருக்க மாட்டார்கள். சந்தர்ப்பவசமாக, அவர்கள் கோபப்பட்டால், அவர்கள் உடனடியாகவே தந்தைக்கு எழுதுவார்கள்: பாபா, நான் இன்று இத்தவறைச் செய்தேன். நான் கோபப்பட்டு, ஒரு பாவத்தைச் செய்தேன். தந்தையுடன் உங்களுக்கு எந்தளவுக்குத் தொடர்பு உள்ளது? “பாபா, என்னை மன்னித்து விடுங்கள்”. தந்தை கூறுவார்: மன்னிப்புக் கிடையாது, ஆனால் அதே தவறை மீண்டும் செய்ய வேண்டாம். ஓர் ஆசிரியர் உங்களை மன்னிப்பதில்லை. அவர் உங்களுக்குப் பதிவேட்டைக் காட்டி, உங்கள் பண்புகள் சிறப்பாக இருக்கவில்லை என விளங்கப்படுத்துவார். எல்லையற்ற தந்தையும் கூறுகின்றார்: உங்கள் சொந்தப் பண்புகளை உங்களால் பார்க்க முடியும். தினமும் உங்கள் அட்டவணையைப் பார்த்து உங்களை வினவுங்கள்: நான் இன்று எவருக்காவது துன்பத்தை விளைவித்தேனா? நான் இன்று எவருக்காவது குழப்பத்தை உண்டாக்கினேனா? தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்கு, காலம் எடுக்கின்றது. பெரும் சிரமத்துடனேயே சரீர உணர்வு துண்டிக்கப்படுகின்றது. நீங்கள் உங்களைச் சரீரமற்றவராகக் கருதும்பொழுது மாத்திரமே, தந்தை மீது அன்பு இருக்க முடியும். இல்லாவிட்டால், சரீரத்தின் கர்மக் கணக்குகளில் புத்தி சிக்கிக் கொள்கின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்துக்காகச் செயல்களைப் புரிய வேண்டும், ஆனால் உங்களால் இதற்கான நேரத்தையும் உருவாக்க முடியும். மக்கள் பக்தி செய்வதற்கு, நேரத்தை உருவாக்குகின்றார்கள். மீரா கிருஷ்ணரின் நினைவில் மாத்திரம் நிலைத்திருப்பார், ஆனால், அவர் இங்கு தொடர்ந்தும் மறுபிறவி எடுக்க வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பழைய உலகில் விருப்பமின்மை உள்ளது. நீங்கள் இப்பழைய உலகில் மறுபிறவி எடுக்கப் போவதில்லை என அறிவீர்கள். இவ்வுலகம் அழியவுள்ளது. உங்கள் புத்தியில் இவ்விடயங்கள் அனைத்தும் உள்ளன. பாபாவிடம் இந்த ஞானம் உள்ளதைப் போன்றே, குழந்தைகளாகிய உங்களிடமும் இந்த ஞானம் உள்ளது. உலகச் சக்கரத்தின் ஞானம் வேறு எவர் புத்தியிலும் இல்லை. தங்கள் புத்தியில் இந்த ஞானத்தை வைத்திருக்கக்கூடிய குழந்தைகளும் வரிசைக்கிரமமானவர்களே. அதிமேன்மையான தந்தையே தூய்மையாக்குபவர், அவர் எங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் மாத்திரம் இதை அறிவீர்கள். 84 பிறவிகளின் சக்கரம் உங்கள் புத்தியில் உள்ளது. இது நீங்கள் நரகத்தில் எடுக்கின்ற இறுதிப் பிறவி என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இது ஆழ்நரகம் என அழைக்கப்படுகின்றது. எங்கும் பெருமளவுக்கு அழுக்கு உள்ளது. இதனாலேயே, சந்நியாசிகள் தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் விட்டு நீங்குகின்றார்கள். இது ஒரு பௌதீகமான விடயமாகும். உங்கள் புத்தியிலிருந்து நீங்கள் அனைத்தையும் துறக்கின்றீர்கள், ஏனெனில் நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதை அறிவீர்கள். நீங்கள் அனைவரையும் மறக்க வேண்டும். இந்த அழுக்கான, பழைய உலகம் உங்களுக்கு ஏற்கெனவே மரணித்து விட்டது. உங்கள் வீடு பழையதாகி, ஒரு புதிய வீடு கட்டப்படும்பொழுது, அவ் வீடு இடிக்கப்பட்டுவிடும் என்பது உங்கள் இதயத்தில் பிரவேசிக்கின்றது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் கற்கின்றீர்கள். புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது; ஒரு குறுகிய காலமே எஞ்சியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பல குழந்தைகள் வந்து இங்கு கற்பார்கள். உங்கள் புதிய வீடு கட்டப்பட்டு வருகின்றது, பழைய வீடு தொடர்ந்தும் இடிக்கப்படும். மிகச் சொற்ப நாட்களே எஞ்சியுள்ளன. உங்கள் புத்தியில் இந்த எல்லையற்ற விடயங்கள் இருக்கின்றன. உங்கள் இதயங்கள் இப்பழைய உலகுடன் மேலும் இணைக்கப்படவில்லை. இறுதியில் இவை எவையும் பயனுள்ளவையாக இருக்காது. இப்பொழுது நாங்கள் இங்கிருந்து அப்பாற்செல்ல விரும்புகின்றோம். தந்தை கூறுகின்றார்: உங்கள் இதயம் இப்பழைய உலகுடன் பற்று வைத்திருக்கக்கூடாது. உங்கள் தந்தையான என்னையும், உங்கள் வீட்டையும் நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இல்லாவிட்டால், நீங்கள் பெருமளவு தண்டனையை அனுபவம் செய்வதுடன், உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படும். 84 பிறவிகளினூடாகச் சென்றுள்ளதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்வகையில் நீங்கள் இப்பொழுது தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதற்கு அக்கறைப்படுகிறீர்;கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்;; அப்பொழுது மாத்திரமே உங்களால் உங்கள் வாழ்வுகளை மேன்மையாக்க முடியும். தந்தையே அதிமேன்மையானவர். நீங்கள் மாத்திரம் இதை அறிவீர்கள். தந்தை உங்களுக்கு இதை மிகவும் நன்றாக நினைவூட்டுகின்றார். அந்த எல்லையற்ற தந்தையே ஞானக்கடல். எங்களுக்குக் கற்பிப்பதற்கு, அவர் இங்கு வருகின்றார். தந்தை கூறுகின்றார்: உங்கள் ஜீவனோபாயத்துக்காக நீங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்யுங்கள், ஆனால் இக்கல்வியையும் கற்று, நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக இருங்கள். பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கும் குழந்தைகள், தங்களிடமுள்ள அனைத்தையும் தந்தைக்கு அர்ப்பணிப்பார்கள். எதுவும் எங்களுக்கு உரியதல்ல. பாபா, இச்சரீரம் கூட எனக்கு உரியதல்ல. இது ஒரு பழைய சரீரம்;; அது துறக்கப்பட வேண்டும். அனைத்தின் மீதுள்ள பற்றுக்கள் துண்டிக்கப்படுகின்றன. நீங்கள் பற்றை வென்றவர்களாக ஆக வேண்டும். இது எல்லையற்ற விருப்பமின்மை, ஆனால் மற்றைய விருப்பமின்மையோ எல்லைக்குட்பட்டது. நீங்கள் சுவர்க்கத்துக்குச் சென்று, உங்கள் சொந்த மாளிகைகளை உருவாக்குவீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இங்கு அனைத்தும் எல்லைக்குட்பட்டதாக உள்ளதால், இவ்வுலகில் எதுவும் அங்கு பயனுள்ளதாக இருக்காது. நீங்கள் இப்பொழுது எல்லைக்குட்பட்டதில் இருந்து வெளியேறி, எல்லையற்றதிற்குள் செல்கின்றீர்கள். இந்த எல்லையற்ற ஞானம் மாத்திரமே உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். உங்கள் பார்வை மேலும் இங்குள்ள எதன் மீதும் ஈர்க்கப்படுவதில்லை. இப்பொழுது நாங்கள் வீடு திரும்ப வேண்டும். தந்தை ஒவ்வொரு கல்பமும் எங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகின்றார், பின்னர் அவர் எங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். உங்களுக்கு இது புதிய கல்வியல்ல. நீங்கள் ஒவ்வொரு கல்பமும் இதைக் கற்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். உலகம் முழுவதிலும் பல மனிதர்கள் உள்ளார்கள். எவ்வாறாயினும், உங்களில் ஒரு சிலர் மாத்திரமே இதை அறிவீர்கள். பிராமணர்களின் இவ்விருட்சம் தொடர்ந்தும் படிப்படியாக வளர்கின்றது. நாடகத் திட்டத்துக்கேற்ப, ஸ்தாபனை நடைபெற வேண்டும். இது உங்களுடைய ஆன்மீக அரசாங்கம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எங்களால் தெய்வீகக் காட்சியினூடாகப் புதிய உலகைப் பார்க்க முடியும். நாங்கள் அங்கு செல்ல வேண்டும். ஒரேயொருவரே கடவுள். அவரே எங்களுக்குக் கற்பிப்பவர். தந்தை எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார். பின்னர், யுத்தம் நடைபெற்று, ஒரு தர்மத்தின் ஸ்தாபனையும், பல சமயங்களின் விநாசமும் ஏற்பட்டது. நீங்கள் அந்த அவர்களே. நீங்கள் கல்பம் கல்பமாகக் கற்று, உங்கள் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். நீங்கள் அனைவருமே உங்கள் சொந்த முயற்சிகளைச் செய்ய வேண்டும். உங்களுடைய இக்கல்வி எல்லையற்றது. எம்மனிதராலும் உங்களுக்கு இக் கற்பித்தல்களைக் கொடுக்க முடியாது. சியாம்சுந்தரின் இரகசியங்களையும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் இப்பொழுது அழகானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும், முன்னர், நீங்கள் அவலட்சணமானவர்களாக இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். கிருஷ்ணர் மாத்திரம் இவ்வாறாக இருக்கவில்லை; முழு இராச்சியமும் அவ்வாறு இருந்தது. நீங்கள் நரகவாசிகளிலிருந்து சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது இந்த நரகத்தில் விருப்பமின்றி இருக்கின்றீர்கள். நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்துக்கு வந்து விட்டீர்கள். இங்கு பலர் வருகின்றார்கள், ஆனால் முன்னைய கல்பத்தில் வெளிப்பட்டவர்கள் மாத்திரம் மீண்டும் வெளிப்படுவார்கள். சங்கமயுகத்தை மிகவும் நன்றாக நினைவுசெய்யுங்கள். நாங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்றோம்; நாங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றோம். நரகம் என்றால் என்ன அல்லது சுவர்க்கம் என்றால் என்ன என்பதைக் கூட மக்கள் புரிந்துகொள்வதில்லை. அனைத்தும் ஒன்றாகவே இருக்கின்றது எனவும், சந்தோஷமாக இருப்பவர்கள் சுவர்க்கத்திலும், சந்தோஷமற்றிருப்பவர்கள் நரகத்திலும் இருக்கின்றார்கள் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள். பல அபிப்பிராயங்கள் உள்ளன. ஒரு வீட்டில் பல அபிப்பிராயங்கள் உள்ளன. சிலர் தங்கள் குழந்தைகளுடனான பற்றின் இழைகளைத் துண்டிப்பதில்லை. அவர்களின் பற்றினால், தாங்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்பதைக் கூட புரிந்துகொள்வதில்லை. அவர்கள் வினவுகின்றார்கள்: எனது மகன் திருமணம் செய்வதை நான் அனுமதிக்கலாமா? எவ்வாறாயினும், குழந்தைகளாகிய உங்களுக்கு இம்மரியாதைக் கோட்பாடு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒருபுறம், நீங்கள் சுவர்க்கவாசி ஆகுவதற்கு ஞானத்தைப் பெறுகின்றீர்கள். மறுபுறம், நீங்கள் அவரை நரகத்துக்கு அனுப்பலாமா என வினவுகின்றீர்கள்! நீங்கள் வினவுவதால். பாபா கூறுகின்றார்: தொடருங்கள், அவரைத் திருமணம் செய்ய அனுமதியுங்கள். நீங்கள் இதை பாபாவிடம் வினவுவதால், உங்களுக்கு உங்கள் குழந்தையிடம் பற்று உள்ளது என்பதை பாபா புரிந்துகொள்கின்றார். “வேண்டாம்” என்று பாபா கூறினாலும், கீழ்ப்படிவின்மை ஏற்படும். புதல்விகள் திருமணம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தீய சகவாசத்திற்குள்ளாகி, பாழாகி விடலாம். புதல்வர்கள் திருமணம் செய்ய வேண்டியதில்லை. எவ்வாறாயினும், இதற்கு உங்களுக்குத் தைரியம் தேவை. பாபா, இவரினூடாக அதை நடைமுறையில் செய்து காட்டினார். ஏனையோர் இவரைப் பார்த்தபொழுது, அவர்களும் அதையே செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களின் வீடுகளில் பெருமளவு சச்சரவு ஏற்பட்டது. இதுவே சண்டை சச்சரவுக்கான உலகம்; இது ஒரு முட்காடாகும். மக்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் புண்படுத்துகின்றார்கள். சுவர்க்கம் ஒரு மலர்த்தோட்டம் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு காடாகும். தந்தை வந்து உங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றுகின்றார். அரிதாகவே சிலர் வெளிப்படுகின்றார்கள். நீங்கள் கண்காட்சிகளில் கூறுகின்ற அனைத்துக்கும் “ஆம்” எனக் கூறினாலும், அவர்கள் முற்றிலும் எதையும் புரிந்துகொள்வதில்லை; அது ஒரு செவியினூடாகச் சென்று, மற்றைய செவியினூடாக வெளிவருகின்றது. ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்குக் காலம் எடுக்கின்றது. மனிதர்கள் தங்களை முட்களாகக் கருதுவதில்லை. அவர்கள் மனிதர்களைப் போன்ற முகச்சாயல்களைக் கொண்டிருந்தாலும், அவர்களுடைய நடத்தை குரங்குகளை விடவும் மிகவும் மோசமாக உள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் தங்களை அவ்வாறானவர்களாகக் கருதுவதில்லை. ஆகவே, தந்தை கூறுகின்றார்: உங்கள் படைப்புக்கு விளங்கப்படுத்துங்கள். அவர்கள் எதையும் புரிந்துகொள்ளாது விட்டால், அவர்களை விலகிச் செல்லச் செய்யுங்கள். எவ்வாறாயினும், அதைச் செய்வதற்கு, உங்களுக்குச் சக்தி தேவை. பற்று என்னும் பூச்சிகள் அகற்ற முடியாதவாறு, அவர்களை அதிகளவுக்குப் பற்றிக் கொண்டுள்ளன. இங்கு, நீங்கள் பற்றை அழிப்பவர்கள் ஆகவேண்டும். என்னுடையவர் ஒரேயொருவரே அன்றி, வேறு எவரும் அல்லர். எங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு இப்பொழுது தந்தை வந்துள்ளார். நீங்கள் தூய்மையாக வேண்டும். இல்லாவிட்டால், பெருமளவு தண்டனை இருப்பதுடன், உங்கள் அந்துஸ்தும் அழிக்கப்படும். உங்களைச் சதோபிரதான் ஆக்குவதே, இப்பொழுது உங்களுடைய ஒரே அக்கறையாக இருக்க வேண்டும். சிவாலயங்களுக்குச் சென்று விளங்கப்படுத்துங்கள்: கடவுள் பாரத மக்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்கினார், அவர் மீண்டும் ஒருமுறை அதைச் செய்கின்றார். அவர் கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருந்து, உங்களிடமுள்ள அனைத்தையும் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். எதுவும் எனக்கு உரியதல்ல. இச்சரீரம் கூட எனக்கு உரியதல்ல. அதனுடனான உங்கள் பற்றைத் துண்டித்து, பற்றை அழிப்பவர் ஆகுங்கள்,

2. உங்கள் பதிவேட்டில் பதியப்படும் வகையில், ஒருபொழுதும் எத்தவறையும் செய்யாதீர்கள். தெய்வீகக் குணங்கள் அனைத்தையும் கிரகியுங்கள். உங்களுக்குள் கோபத்தின் சுவடு சிறிதளவிலும் இருக்கக்கூடாது.

ஆசீர்வாதம்:
நீங்கள் இலேசானவராகவும் ஒளியானவராகவும் இருந்து, உயரே பாய்ந்து செல்வதால், அனைத்துப் பிரச்சனைகளையும் வெற்றிகொள்கின்ற, ஒரு தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக.

எப்பொழுதும் உங்களை ஒரு விலைமதிக்க முடியாத இரத்தினம் எனவும், பாப்தாதாவின் இதயம் எனும் கொள்கலனில் இருப்பவராகவும் கருதுங்கள், அதாவது, சதா தந்தையின் நினைவில் மூழ்கியிருங்கள், அப்பொழுது நீங்கள் எந்தச் சூழ்நிலையையும் சிரமமானதாக அனுபவம் செய்ய மாட்டீர்கள், உங்கள் சுமைகள் அனைத்தும் முடிவடைந்து விடும். இந்த இலகு யோகத்தின் மூலம் இலேசானவராகவும் ஒளியானவராகவும் ஆகி, உங்கள் முயற்சிகளில் உயரே பாய்ந்து செல்லுங்கள், அப்பொழுது நீங்கள் ஒரு தீவிர முயற்சியாளர் ஆகுவீர்கள். எதனையேனும் நீங்கள் சிரமமாகக் கருதும்பொழுதெல்லாம், தந்தையின் முன்னால் அமர்ந்து பாப்தாதாவின் ஆசீர்வாதக் கரங்கள் உங்கள் மீது இருப்பதை அனுபவம் செய்யுங்கள், இதனைச் செய்வதால், நீங்கள் ஒரு விநாடியில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் காண்பீர்கள்.

சுலோகம்:
ஓத்துழைக்கும் சக்தியானது அசாத்தியமானவற்றையும் சாத்தியமானவையாக்கும், அது ஒரு பாதுகாப்புக் கோட்டை ஆகும்.