19.06.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது புகழ்ச்சி, இகழ்ச்சி, மரியாதை, அவமரியாதை, சந்தோஷம், துன்பம் போன்றவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய சந்தோஷத்துக்கான நாட்கள் இப்பொழுது நெருங்கி வருகின்றன.

கேள்வி:
தந்தை அவரது பிராமணக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை என்ன?

பதில்:
தந்தையுடன் ஒருபோதும் முரண்படாதீர்கள்;. நீங்கள் தந்தையுடன் முரண்பட்டால், சற்கதியுடனும் முரண்படுவீர்கள்;. தந்தை உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றார்: முரண்படுவோர் கடுமையான தண்டனையை அனுபவம் செய்வார்கள். நீங்கள் ஒருவர் மற்றவருடனோ, அல்லது பிராமண ஆசிரியருடனோ முரண்பட்டால், மலர்களாகுவதற்குப் பதிலாக முட்களாகுவீர்கள். ஆகையினால், இதனையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

பாடல்:
ஓ மனமே பொறுமையாக இரு! உனது சந்தோஷத்துக்கான நாட்கள் வரவிருக்கின்றன!

ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான அன்புக்குரிய நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்ட குழந்தைளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் பல பிறவிகளின் அனைத்துத் துன்பங்களும் அகற்றப்படுகின்றன. நீங்கள் இந்தப் பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். உங்கள் துன்பத்துக்கான பாகம் முடிந்து சந்தோஷத்திற்கான பாகம் ஆரம்பமாகுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாதவர்கள் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் துன்பத்தை அனுபவம் செய்வார்கள். இங்கு பாபாவிடம் வந்த பின்னரும் கூட அவர்கள் ஏதோவொன்றைப் பற்றிய கவலையை உணர்வார்கள். பல குழந்தைகள் சிரமப்படுகின்றார்கள் என பாபாவும் புரிந்துகொண்டுள்ளார். மக்கள் யாத்திரைக்குச் செல்லும்போது சில நேரங்களில் பெருமளவில் சனக்கூட்டமும், சில நேரங்களில் பெருமழையும், புயலும் இருக்கும். ‘நாங்கள் கடவுளிடமே செல்கின்றோம், இதெல்லாம் ஒரு பெரிய விடயமா? என்றே உண்மையான பக்தர்கள் கூறுவார்கள். அவர்கள் கடவுளிடம் செல்வதாக நினைத்தே அந்த யாத்திரையை செய்கின்றார்கள். மனிதர்களுக்குப் பல கடவுள்கள் இருக்கின்றார்கள்! உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், அது பரவாயில்லை என்றே கூறுவார்கள். ஒரு நல்ல செயலைச் செய்கின்றபோது, எப்பொழுதும் தடைகள் இருக்கும். எனவே அவர்கள் திரும்பிச் செல்ல மாட்டார்கள். சிலர் திரும்பிச் சென்று விடுகின்றார்கள். சில நேரங்களில் தடைகள் இருக்கும், சில நேரங்களில் தடைகள் இருக்கமாட்டாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இது உங்களுடைய யாத்திரையாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் செல்கின்றீர்கள் எனக் கூறுகின்றீர்கள். அந்தத் தந்தை அனைவரின் துன்பத்தையும் அகற்றுகின்றார். உங்களுக்கு இந்த நம்பிக்கையுள்ளது. இந்நாட்களில், மதுவனத்திற்கு பெருந்தொகையில் மக்கள் வருவதைப் பார்க்கிறீர்கள். பாபா மிகவும் அக்கறை கொள்கின்றார், ஏனெனில், பலரும் கஷ்டங்களை எதிர் நோக்குகின்றார்கள். சிலர் நிலத்திலும் உறங்க வேண்டியுள்ளது. பாபா தனது குழந்தைகள் நிலத்தில் உறங்குவதை விரும்புவதில்லை. எவ்வாறாயினும், நாடகத்திற்கேற்ப, எவ்வாறு ஒரு கல்பத்திற்கு முன்னர் பெருமளவு கூட்டம் இருந்ததோ, அந்தளவு கூட்டம் இருக்கும், இது மீண்டும் இடம்பெறும். இதில் நீங்கள் எந்தவிதத் துன்பத்தையும் அனுபவம் செய்யக்கூடாது. கற்பவர்களில் சிலர் அரசர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் ஆகுவார்கள் என நீங்கள் அறிவீர்கள். சிலர் உயர்ந்த அந்தஸ்தையும், மற்றவர்கள் குறைந்த அந்தஸ்தையும் கொண்டிருப்பார்கள். ஆனால் அனைவரும் நிச்சயமாகச் சந்தோஷமாகவே இருப்பார்கள். சில குழந்தைகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றார்கள். அவர்களால் எதையும் சகித்துக்கொள்ள முடியாதென்பதை பாபாவும் அறிவார். அவர்கள் ஏதாவது கஷ்டத்திற்கு முகம் கொடுக்கவேண்டி வந்தால் “இங்கே வருவதில் எங்களுக்கு எந்தவிதப் பயனும் இல்iலை!” எனக் கூறுவார்கள், அல்லது அவர்களுடைய பிராமண ஆசிரியர் தங்களை இங்கே வருமாறு வலியுறுத்தியதாகக் கூறுவார்கள். சில குழந்தைகள் தமது பிராமண ஆசிரியர் எந்தவிதக் காரணமுமின்றி தங்களைச் சிக்க வைத்து விட்டதாகவும் கூறுகின்றார்கள். அவர்கள் உலக பல்கலைக்கழகத்திற்குத் தாம் வந்திருப்பதை முழுமையாக இனங்காணவில்லை. இந்த நேரத்தில் கற்பதனால், எதிர்காலத்தில் சிலர் அரசர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் ஆகுகின்றார்கள். எவ்வாறாயினும், இங்குள்ள அரசர்களுக்கும், ஏழைகளுக்கும், அங்குள்ள அரசர்களுக்கும், ஏழைகளுக்குமிடையில் பகலுக்கும் இரவுக்குமுள்ள வித்தியாசமுள்ளது. இங்கே ஏழைகளும், அரசர்களும் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். அங்கே இருவருமே சந்தோஷமாக இருப்பார்கள். இங்கேயுள்ள உலகம் விகாரமானதும், தூய்மையற்றதுமாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இங்கே ஒருவர் பெருமளவு செல்வத்தை வைத்திருந்தாலும், அவை அனைத்தும் தூசாகப் போகின்றன. இந்த சரீரமும் அழிக்கப்படும். ஆத்மாக்கள் தூசாக மாட்டார்கள். பிர்லாவைப் போன்று பலர் செல்வந்தர்களாக இருந்தபோதிலும் இந்தப் பழைய உலகம் இப்பொழுது மாறுகின்றது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. அவர்கள் இதைப் புரிந்துகொண்டிருந்தால் அவர்கள் உடனடியாகவே இங்கே வருவார்கள். அவர்கள் கடவுள் இங்கே வந்துள்ளார் எனக் கூறுவார்கள். கடைசியில் வேறு எங்குதான் அவர்கள் செல்லமுடியும்? தந்தை இல்லாமல் எவருமே சற்கதியைப் பெறமுடியாது. ஒருவர் முரண்பட்டால், அவர் தனது சற்கதியுடனேயே முரண்படுகின்றார் எனக் கூறப்படுகின்றது. பலர் தொடர்ந்தும் முரண்பட்டு, பின்னர் வீழ்ந்துவிடுகின்றார்கள். இந்த ஞானத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்த பலர் இருக்கின்றார்கள். அவர்கள் பெருமளவு நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். சிலர் இந்தப் பாதையைத் தவிர வேறு பாதையில்லை என உண்மையிலேயே நம்புகின்றார்கள். இதன் மூலமே உங்களுடைய ஆஸ்தியாகிய அமைதியையும், சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்கின்றீர்கள். பாபா இல்லாது அமைதி, சந்தோஷத்தை அடைவது சாத்தியமில்லை. நீங்கள் பெருமளவு செல்வத்தைக் கொண்டிருக்கும்போதே, சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். செல்வத்தைக் கொண்டிருப்பதில் சந்தோஷம் இருக்கின்றது. அங்கே அசரீரி உலகில் ஆத்மாக்கள் அமைதியாக இருப்பார்கள். சிலர் தாங்கள் ஒரு பாகத்தை நடிக்க வேண்டிய தேவை இல்லாவிடின், தாங்கள் தொடர்ந்தும் மேலேயே இருந்து விடலாம் எனக் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அப்படிக் கூறுவதனால் எதுவும் நடப்பதில்லை. இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பல குழந்தைகள் ஏதோவொன்றைப் பற்றிச் சந்தேகம் கொண்டு பின்னர் விலகிச் செல்கின்றார்கள். அவர்கள் அவர்களுடைய ஆசிரியருடனோ, அல்லது ஒருவர் மற்றவருடனோ, முரண்பட்டுக் கற்பதை நிறுத்தி விடுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது மலர்களாகுவதற்காக இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் உண்மையிலேயே முட்களிலிருந்து மலர்களாக மாறுகின்றீர்கள் என நீங்கள் உணர்கின்றீர்கள். நீங்கள் நிச்சயமாக மலர்களாக வேண்டும். சில குழந்தைகள் ஒன்று அல்லது இன்னொரு சந்தேகத்தைக் கொண்டிருந்து இன்னார், இன்னார் இதைச் செய்கின்றார் என கூறுகின்றார்கள். இவர் அப்படியானவர், அல்லது இப்படியானவர் எனக் கூறுகின்றனர். இதனாலேயே நான் இங்கே வருவதில்லை. அவர்கள் முரண்பட்டு, வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் விரும்பும் எவருடனும் முரண்டுபடுங்கள், ஆனால் தந்தையுடன் முரண்படாதீர்கள். பாபா இந்த எச்சரிக்கையைக் கொடுக்கின்றார்: தண்டனை மிகவும் கடுமையானது. கருப்பை என்ற சிறையில் என்ன தண்டனையைப் பெறுகின்றீர்களோ, நீங்கள் செய்தவற்றிற்கான காட்சியை முதலில் நீங்களே காண்பீர்கள். முதலில் காட்சிகளைக் காணாமல் தண்டனை இருக்க முடியாது. அதேபோன்று தற்பொழுது எவ்வாறு கற்கும்போது நீங்கள் மற்றவர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு, முரண்படுவதால் கற்பதை நிறுத்தி விடுகின்றீர்கள் என்பதற்கான காட்சிகளையும் காண்பீர்கள். தந்தையுடன் கற்கவேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருபோதும் கற்பதை நிறுத்தாதீர்கள்! நீங்கள் இங்கே மனிதர்களிலிருந்து தேவர்களாகுவதற்கே கற்கின்றீர்கள். நீங்கள் அதிமேலான தந்தையைச் சந்திக்கவே இங்கு வந்துள்ளீர்கள். சிலநேரங்களில் எதிர்பார்த்ததிற்கும் மேலாக குழந்தைகள் வருகின்றார்கள். ஆகையினால் நாடகத்திற்கு ஏற்ப சில கஷ்டங்கள் இருக்கும். சில குழந்தைகள் “நான் இன்ன இன்னவற்றைப் பெறவில்லை. நான் இதைப் பெறவில்லை!” எனப் பல புயல்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள். அவை அனைத்தும் ஒன்றுமேயில்லை. மரணத்தின்போது ஞானமில்லாத மக்கள் ‘அவர்கள் காரணமில்லாமல் கொல்வதற்கு நான் என்ன குற்றம் செய்தேன்?’ எனக் கேட்பார்கள். கடைசியில் நடிக்கப்படும் பாகம் காரணமில்லாமல் இரத்தம் சிந்துகின்ற பாகம் என அழைக்கப்படும். சடுதியாகக் குண்டுகள் போடப்பட்டு பலர் இறப்பார்கள். அது காரணமில்லாமல் இரத்தம் சிந்துதல், இல்லையா? ஞானமில்லாத மக்கள் துன்பத்தில் கதறி அழுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமடைவீர்கள். ஏனெனில் இந்த உலகம் அழியப் போகின்றது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். மற்றைய அனைத்து மதங்களும் அழிக்கப்படா விட்டால் எவ்வாறு ஓர் உண்மையான தர்மம் ஸ்தாபிக்கப்பட முடியும்? சத்தியயுகத்தில் அனாதியான ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே இருந்தது. சத்தியயுக ஆரம்பத்தில் என்ன இருந்தது என்பதை எவராலும், எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? இது மங்களகரமான சங்கமயுகமாகும். தந்தை உங்களை அதிமேன்மையான மனிதர்களாக்குவதற்காக இங்கு வந்துள்ளார். அவர் அனைவரினதும் தந்தையாவார். நீங்கள் இப்பொழுது நாடகம் பற்றி அறிவீர்கள். அனைவரும் சத்திய யுகத்துக்குச் செல்ல மாட்டார்கள். அந்தக் கோடிக்கணக்கான ஆத்மாக்கள் அனைவரும் சத்திய யுகத்துக்குச் செல்ல மாட்டார்கள். இந்த விடயங்கள் எல்லாம் விரிவானவை. பல புத்திரிகள் இங்கே எதனையும் விளங்கிக் கொள்வதில்லை. அவர்கள் பக்திமார்க்கத்தில் உள்ள அனைத்திற்கும் பழக்கப்பட்டுள்ளதால், இந்த ஞானம் அவர்களது புத்தியில் இருப்பதில்லை. அவர்கள் பக்தி செய்யும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: கடவுளால் என்னதான் செய்ய முடியாது? அவரால் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்க முடியும். சிலர் பாபாவிடம் வந்து கூறுகிறார்கள், இன்னார், இன்னார் இறந்தவரை உயிர்ப்பித்தார். எனவே கடவுளால் இதைச் செய்ய முடியாதா? ஒருவர் நல்லவற்றைச் செய்கின்றபொழுது மக்கள் அவரைப் புகழத் தொடங்குகிறார்கள். பின்னர் அவர் ஆயிரக்கணக்கான சீடர்களைக் கொண்டிப்பார். உங்களிடம் வெகுசிலரே இங்கு வருகின்றார்கள். உங்களுக்குக் கடவுள் கற்பிக்கின்றார் என்றால், ஏன் உங்களில் வெகு சிலரே இருக்கின்றீர்கள்? பல மக்கள் இவ்வாறான விடயங்களைக் கூறுகின்றார்கள். ஆம், ஆமாம்! ஆனால் நீங்கள் இங்கே மரணிக்க வேண்டும். அங்கே உங்களுடைய காதுகளைத் திருப்திப்படுத்துகின்ற விடயங்கள் மாத்திரமே இருக்கும். அவர்கள் கீதையை மிகச்சிறப்பாக எடுத்துரைப்பார்கள். பக்தர்கள் அதைச் செவிமடுப்பார்கள். இங்கே இது உங்களது காதுகளைக் திருப்திப்படுத்தும் விடயமல்ல, உங்களை இலகுவாகத் தந்தையை நினைவுசெய்யுமாறு கூறுப்படுகின்றது. “மன்மனாபவ” என்ற பதமும் கீதையிலே குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை கூறுகின்றார்: நல்லது, நீங்கள் உங்கள் ஆசரியருடனோ, அல்லது உங்களுடைய நிலையத்துடனோ முரண்பட்டால், குறைந்பட்சம் இதையாவது செய்யுங்கள்: அனைவரின் தொடர்பையும் துண்டித்து, உங்களை ஆத்மாவெனக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை தூய்மையாக்குபவர், அவ்வளவுதான்! தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தை சுழற்றுங்கள். இந்தளவுக்காவது நீங்கள் நினைவு செய்தால், சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இப்பொழுது செய்யும் முயற்சிக்கு ஏற்பவே சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிடில் நீங்கள் யாரை ஆட்சிசெய்வீர்கள்? பெருமளவு முயற்சி செய்பவர்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்காக மக்கள் பெருமளவில் தலையை அடித்துக் கொள்கின்றார்கள். எவருமே முயற்சி செய்யாமல் வாழமுடியாது. எவ்வாறு அதிமேலானவர் தூய்மையாக்குகின்ற தந்தையாக இருக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். மக்கள் அவரைப் பற்றிய இப்புகழைப் பாடியபோதிலும், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. பாரதம் செல்வம் மிக்கதாக இருந்தது. பாரதம் சுவர்க்கமாக இருந்தபோது, அதுவே உலகின் அற்புதமாக இருந்தது. அந்த ஏழு அற்புதங்களும் மாயைக்குச் சொந்தமானவையாகும். முழு நாடகத்திலும், அதி மேலானது சுவர்க்கமும், அதி கீழானது நரகமுமாகும். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் வந்துள்ளீர்கள். எங்களது இனிய பாபா எங்களை அனைத்திலும் உயர்ந்த இலக்கிற்கு இட்டுச் செல்கின்றார் என நீங்கள் அறிவீர்கள். யாரால் அவரை மறக்கமுடியும்? நீங்கள் எங்கேயாவது சென்றாலும் ஒரு விடயத்தை நினைவுசெய்யுங்கள். தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தையே உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். இதைக் கடவுளே பேசுகின்றார், கடவுள் பிரம்மா பேசுவதில்லை. எல்லையற்ற தந்;தை குழந்தைகளாகிய உங்களைக் கேட்கின்றார்: குழந்தைகளே, நான் உங்களைச் செல்வந்தர்களாக்கிவிட்டுச் சென்றேன், எனவே எவ்வாறு நீங்கள் இவ்வளவு சீரழிந்தவர் ஆகினீர்கள்? எவ்வாறாயினும் சில குழந்தைகள் கேட்கின்றார்கள், ஆனால் எதையுமே புரிந்துகொள்வதில்லை! ஆகையினால் அக்குழந்தைகள் சிறிது கஷ்டத்தை அனுபவம் செய்கின்றார்கள். நீங்கள் புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும், மரியாதையையும், அவமரியாதையையும், சந்தோஷத்தையும், துன்பத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும். இங்குள்ள மக்களைப் பாருங்கள்! அவர்கள் பிரதம மந்திரியின் மீது கூட கல்லெறிய நேரம் எடுக்காது. மாணவர்கள் இள இரத்தம் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் பெருமளவில் புகழப்படுகின்றார்கள். அக்குழந்தைகள் எதிர்கால இள இரத்தம் என அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், அதே மாணவர்கள் துன்பம் விளைவிக்கக் காரணமாகின்றார்கள். அவர்கள் கல்லூரிக்குத் தீ வைக்கின்றார்கள்: அவர்கள் தொடர்ந்தும் அனைவரையும் அவமரியாதை செய்கிறார்கள். தந்தை உலகின் நிலை என்னவாகியுள்ளது என விளங்கப்படுத்துகிறார். ஒரு நாடகத்தில் உள்ள நடிகருக்கு அதன் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியோ அல்லது பிரதான நடிகர்கள் பற்றியோ தெரியாதுவிடின் நீங்கள் என்ன கூறுவீர்கள்? அனைவரிலும் மகத்துவமான நடிகரின் வாழ்க்கை வரலாறு பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் நடிக்கின்ற பாகத்தையோ அல்லது முக்கியமான மதங்களின் ஸ்தாபகர்கள் நடிக்கின்ற பாகத்தையோ அவர்கள் அறியமாட்டார்கள். குருட்டு நம்பிக்கையுடன் அவர்கள் அனைவரையும் குருமார்கள் என மக்கள் அழைக்கின்றார்கள். ஒரு குரு என்றால் சற்கதி அருள்பவர் ஆவார். பரமாத்மா, பரமதந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். அவர் பரம குருவுமாவார். அவர் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரது பாகம் அற்புதமானது. அவர் இந்த தர்மத்தை ஸ்தாபித்து ஏனைய அனைத்து மதங்களையும் அழிக்கின்றார். ஏனைய அனைத்து ஸ்தாபகர்களும் இலகுவாக மதத்தை ஸ்தாபிக்கிறார்கள். ஸ்தாபனையையும், விநாசத்தையும் கொண்டு நடாத்துபவரே குரு என அழைக்கப்படுகிறார். தந்தை கூறுகிறார்: நான் மகாகாலன் ஆவேன். ஒரு தர்மம் ஸ்தாபிக்கப்பட்டு, மற்றைய அனைத்து மதங்களும் அழிக்கப்படும். அனைத்தும் இந்த ஞான யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் என்பதே அதன் அர்த்தமாகும். பின்னர் எந்த யுத்தமும் இடம்பெற மாட்டாது, எந்த யாகமும் உருவாக்கப்பட மாட்டாது. நீங்கள் இப்பொழுது உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவீர்கள். ஏனைய அனைவரும் இலகுவாக “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) என்று கூறுவார்கள். நீங்கள் அவ்வாறு கூறுவதில்லை. வேறு எவருமன்றித் தந்தையால் மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். ஆகையினால், குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், மாயை உங்களின் நினைவை முடிக்கும் அளவுக்கு உங்களை எதிர்க்கின்றாள். குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தையும், துன்பத்தையும், மரியாதையையும், அவமரியாதையையும் சகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இங்குள்ள எவரும் அவமரியாதை செய்யப்படுவதில்லை. ஏதாவது நடந்தால் அதைத் தந்தைக்கு முறையிடுங்கள். நீங்கள் முறையிடாவிடின் பாவத்தைச் சேர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் தந்தைக்கு அதுபற்றிக் கூறினால், அவர்கள் மிக விரைவில் எச்சரிக்கப்படுவார்கள். இந்த சத்திரசிகிச்சை நிபுணரிடமிருந்து எதையும் மறைக்காதீர்கள். அவர் மகத்தான சத்திரசிகிச்சை நிபுணர். அவர் ஞானம் எனும் ஊசியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அது ஞானத் தைலம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஞானமானது காஜல் (கண் அழகுபடுத்தல்) ஞானம் என அழைக்கப்படுகின்றது. இங்கே மந்திரவித்தை என்ற கேள்வியில்லை. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுவதற்கான பாதையைக் காட்ட வந்துள்ளேன். நீங்கள் தூய்மையாகாதுவிடின் உங்களால் எதையும் கிரகிக்க முடியாது. காமத்தின் காரணமாகவே பாவங்கள் செய்யப்படுகின்றன. நீங்கள் காமத்தை வெல்ல வேண்டும். நீங்களே விகாரத்தில் ஈடுபட்டால், விகாரத்தில் ஈடுபடாதீர்கள் என உங்களால் மற்றவர்களுக்குக் கூறமுடியாது. அது மிகப் பெரிய பாவமாகும். “இராமா, இராமா” எனக் கூறுங்கள், நீங்கள் கடலைக் கடக்கமுடியும் என்று கூறிய பண்டிதரின் கதையை பாபா கூறுகிறார். மக்கள் அது கடல்நீரைக் குறிப்பதாக நினைக்கின்றார்கள். எவ்வாறு வானத்தின் உயரத்தையும், கடலின் ஆழத்தையும் சென்றடைய முடியாதோ, அவ்வாறே பிரம்ம தத்துவத்துக்கும் முடிவில்லை. இங்கே மக்கள் அனைத்தினதும் ஆழத்துக்குச் செல்ல முயற்சிக்கின்றார்கள், ஆனால் அங்கு, அவர்கள் எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். இங்கு அவர்கள் ஆகாயத்தில் எவ்வளவு தூரம் சென்றாலும், அவர்கள் மீண்டும் திரும்பி வரவேண்டும். அவர்களிடம் போதிய எரிபொருள் இல்லாவிடில், எவ்வாறு அவர்களால் திரும்பிவர முடியும்? அது அறிவியலின் அளவற்ற அகந்தையாகும். அவற்றின் மூலம், அவர்கள் அழிவை ஏற்படுத்துவார்கள். ஆகாய விமானங்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும், ஆனால் அதன் மூலம் பெருமளவு துன்பமும் விளையும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாஅக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எந்தக் காரணத்துக்காகவும் கற்பதை நிறுத்தாதீர்கள். தண்டனை மிகவும் கடுமையானது. ஆகையால், அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, மற்றைய அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து, ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். முரண்படாதீர்கள்.

2. தந்தையே உங்களுக்கு ஞான ஊசியை அல்லது ஞானத் தைலத்தைக் கொடுக்கின்றார். அநாதியான சத்திரசிகிச்சை நிபுணரிடம் எதையும் மறைக்காதீர்கள். தந்தையிடம் கூறுவதன் மூலம் நீங்கள் மிக விரைவில் எச்சரிக்கப்படுவீர்கள்.

ஆசீர்வாதம்:
ஒவ்வொருவரின் சிறப்பியல்பையும் அறிந்திருப்பதன் மூலம், அனைவரையிட்டும் தூய்மையான ஆக்கபூர்வ எண்ணங்களைக் கொண்டிருப்பதனால், நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, ஒரே வழிகாட்டலின் ஒற்றுமையான ஒன்றுகூடலை உருவாக்குவீர்களாக.

நாடகத்திற்கு ஏற்ப நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஏதோ ஒரு சிறப்பியல்பைப் பெற்றிருக்கிறீர்கள். எனவே அந்த சிறப்பியல்பைப் பயன்படுத்துவதுடன், பிறரின் சிறப்பியல்பையும் பாருங்கள். ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் போது, அவர்கள் கூறுவதன் நோக்கம் மாற்றமடையும். ஒவ்வொருவரின் சிறப்பியல்பையும் நீங்கள் பார்க்கும்போது, நீங்கள் பலராக இருப்பினும், நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது பார்க்கப்படுவதுடன், ஒன்றுகூடலும் ஒரு வழிகாட்டலில் ஒன்றிணையும். ஒருவரைப் பற்றி இன்னொருவர் உங்களிடம் குறை கூறும்போது, அவருக்கு ஆதரவளிக்காது, உங்களிடம் குறை கூறுபவரின் வடிவத்தை நீங்கள் மாற்றினால், நீங்கள் பிறரின் மீது நல்லாசிகளும் தூய உணர்வுகளும் கொண்டிருப்பவர் என அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
மேன்மையான எண்ணங்கள் என்ற பொக்கிஷமே, பிராமண வாழ்க்கையின் அடிப்படையும், மேன்மையான வெகுமதியும் ஆகும்.