31.05.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.01.86 Om Shanti Madhuban
மனதின் சக்தியும் பயமற்ற சக்தியும்.
இன்று, மரத்தின் விதையானவர் தனது புதிய மரத்தின் அத்திவாரங்களாக இருக்கும் குழந்தைகளைப் பார்க்கிறார். மரத்தின் விதையானவர் தனது மரத்தின் அடிமரத்தைப் பார்க்கிறார். மரத்தின் விதையானவரால் பராமரிக்கப்பட்ட மேன்மையான பழங்களான குழந்தைகள் அனைவரையும் அவர் பார்க்கிறார். ஆதிதேவ் தனது ஆதி இரத்தினங்களைப் பார்க்கிறார். ஒவ்வோர் இரத்தினத்தினதும் மகத்துவமும் சிறப்பியல்பும் அவருக்கே உரியது. எவ்வாறாயினும், அனைவருமே புதிய படைப்பிற்குக் கருவிகளாக இருக்கும் விசேடமான ஆத்மாக்கள். ஏனெனில் அவர்கள் தந்தையை இனங்கண்டு தந்தையின் பணியில் ஒத்துழைக்கும் கருவிகள் ஆகியுள்ளார்கள். அத்துடன் பலரின் முன்னால் உதாரணங்கள் ஆகியுள்ளார்கள். உலகைப் பார்க்காமல், நீங்கள் புதிய உலகை உருவாக்கும் ஒரேயொருவரைக் கண்டுள்ளீர்கள். உலகின் முன்னால் நீங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையினதும் தைரியத்தினதும் உதாரணங்கள் ஆகியுள்ளீர்கள். அதனால் நீங்கள் அனைவரும் விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். விசேடமான ஆத்மாக்கள் அனைவரும் குறிப்பாக ஒன்றுகூடியிருப்பதைப் பார்க்கும்போது, பாப்தாதா சந்தோஷம் அடைந்து, இத்தகைய குழந்தைகளின் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுகிறார். நீங்கள் தந்தையை இனங்கண்டீர்கள். தந்தையும் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், எத்தகையவராக இருந்திருந்தாலும், உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஏனெனில் உங்களுக்கு உலகியல் ‘தலைகள்’ இல்லாவிட்டாலும், நேர்மையான இதயங்களைக் கொண்டிருப்பவர்களை இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவர் நேசிக்கிறார். உலகியல் புத்திகளைக் கொண்டிருப்பவர்களைத் தந்தை விரும்புவதில்லை. அவர் இதயங்களைக் கொண்டிருப்பவர்களையே விரும்புகிறார். தந்தை உங்களுக்கு எத்தகைய எல்லையற்ற புத்தியைத் தருகிறார் என்றால், படைப்பவரை அறிவதன் மூலம், நீங்கள் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் அறிகிறீர்கள். ஆகவே, உங்களின் இதயத்தினாலேயே பாப்தாதா உங்களைத் தேர்ந்தெடுத்தார். உண்மையான, சுத்தமான இதயத்தின் அடிப்படையிலேயே ஓர் இலக்கம் உருவாக்கப்படுகிறது. சேவையின் அடிப்படையில் அல்ல. சேவையிலும், நீங்கள் நேர்மையான இதயத்துடன் சேவை செய்தீர்களா? அல்லது, உங்களின் தலையால் சேவை செய்தீர்களா? இதயத்தின் ஒலி, இதயத்தைச் சென்றடையும். தலையின் ஒலி, தலையைச் சென்றடையும்.
இன்று, பாப்தாதா இதயங்களைக் கொண்டிருப்பவர்களின் பட்டியலைப் பார்த்தார். தலைகளைக் கொண்டிருப்பவர்கள் ஒரு பெயரைச் சம்பாதிக்கிறார்கள். இதயங்களைக் கொண்டிருப்பவர்கள் ஆசீர்வாதங்களைச் சம்பாதிக்கிறார்கள். எனவே, இரண்டு மாலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஏனெனில், இன்று, முன்னால் சென்றவர்கள் சூட்சும வதனத்திற்கு வந்தார்கள். அந்த விசேடமான ஆத்மாக்கள் ஒரு இதயபூர்வமான கலந்துரையாடலைச் செய்தார்கள். அவர்களின் கலந்துரையாடலின் பிரதானமான தலைப்பு என்ன? நீங்கள் அனைவரும் விசேடமான ஆத்மாக்களைத் தோன்றச் செய்தீர்கள், இல்லையா? இப்போதுள்ள நேரத்திற்கும் முழுமை அடைவதற்கான நேரத்திற்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்ற கலந்துரையாடலே சூட்சும வதனத்தில் இடம்பெற்றது. எத்தனை பேர் தயார் ஆகியுள்ளார்கள்? எண்ணிக்கை தயாராகிவிட்டதா? அல்லது அவர்கள் இன்னமும் தயாராக வேண்டியுள்ளதா? அனைவரும் மேடையில் வரிசைக்கிரமமாக வருகிறார்கள், இல்லையா? முன்னோடிக் குழுவினர் கேட்டார்கள்: நாம் முன்னோடிப் பணியைச் செய்கிறோம். ஆனால், எமது சகபாடிகள் எமது பணிக்காக என்ன விசேடமான ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்? அவர்களும் ஒரு மாலையைத் தயாரிக்கிறார்கள். அவர்கள் என்ன மாலையைத் தயாரிக்கிறார்கள்? புதிய உலகை ஆரம்பிப்பதற்கு, யார், எங்கே பிறப்பு எடுப்பார்கள்? அது நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் அவர்களின் பணியில் சூட்சுமமான, சக்திவாய்ந்த மனங்களின் விசேடமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஸ்தாபனைக்குக் கருவிகள் ஆகப் போகும் சக்திசாலி ஆத்மாக்கள் தூய ஆத்மாக்களாக இருந்தாலும், மனிதர்களினதும் பஞ்சபூதங்களினதும் சூழல் தமோகுணியாக உள்ளது. அதிகபட்ச தமோகுணி சூழலில், தாமரை மலர்களைப் போன்ற வெகுசில தமோகுணி ஆத்மாக்களும் இருக்கிறார்கள். இதனாலேயே, இன்று இதயபூர்வமான சம்பாஷணையைச் செய்யும்போது, உங்களின் அதி அன்பிற்குரிய மேன்மையான ஆத்மாக்கள் புன்னகை புரிந்தவண்ணம் கேட்டார்கள்: எமது சகபாடிகள் இந்தப் பெரிய சேவையைப் பற்றி அறிவார்களா? அல்லது, அவர்கள் தமது நிலையங்களிலும் தமது சொந்தப் பிராந்தியங்களிலும் மும்முரமாக இருக்கிறார்களா?
பஞ்ச பூதங்களின் மாற்றத்திற்கான பணியும், தமோகுணி சம்ஸ்காரங்களைக் கொண்ட ஆத்மாக்கள் அனைவரின் விநாசமும் ஒரு நடைமுறையின் கீழ் இடம்பெறும். ஆனால், சடுதியான மரணம், அகால மரணம், ஒன்றாகப் பலரின் மரணம் போன்றவற்றின் அதிர்வலைகள் மிகவும் தமோகுணியாக இருக்கும். அவற்றை மாற்றுவதற்கும், காரணம் இன்றி இரத்தம் சிந்துவதன் சூழலின் அதிர்வலைகளில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், அந்த ஆத்மாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் என்ற இத்தகைய எல்லையற்ற பணிக்கான ஆயத்தங்களை நீங்கள் செய்கிறீர்களா? அல்லது, யாராவது வருகின்ற ஒருவருக்கு விளங்கப்படுத்துவதிலும் உண்பதிலுமே உங்களின் காலம் கழிகிறதா? அவர்கள் இதையே கேட்டார்கள். இன்று, பாப்தாதா அவர்களின் செய்தியை உங்களுக்குக் கூறுகிறார். இத்தகைய எல்லையற்ற பணியைச் செய்வதற்கு யார் கருவிகளாக இருப்பார்கள்? நீங்கள் ஆரம்பத்தில் கருவிகள் ஆகியதால், இறுதியிலும் மாற்றம் என்ற எல்லையற்ற பணிக்கும் நீங்கள் கருவிகள் ஆகவேண்டும். ஒரு கூற்று உள்ளது: எதையாவது முடித்தவர், முழுப்பணியையும் நிறைவேற்றியுள்ளார். கர்ப்ப மாளிகைகளும் தயார் செய்யப்பட வேண்டும். அப்போது மட்டுமே யோக சக்தியால் புதிய படைப்பு ஆரம்பம் ஆகும். யோக சக்திக்கு மனதின் சக்தி தேவை. மனதின் சக்தியும் உங்களின் சொந்தப் பாதுகாப்பிற்கான வழிமுறை ஆகும். உங்களின் மனதின் சக்தியால் மட்டுமே, உங்களின் முடிவை அழகானதாக ஆக்கிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால், உங்களால் பௌதீகமான முறையில் சூழ்நிலைகளுக்கேற்ப உங்களால் ஒத்துழைப்பைப் பெற முடியாவிட்டாலும், மனதின் சக்தி, அதாவது, மேன்மையான எண்ணங்களின் சக்தி, ஒரேயொருவருடன் தொடர்புடைய இணைப்பு அந்த வேளையில் தெளிவாக இல்லாவிட்டால், உங்களின் பலவீனங்களும் தீய ஆவிகளைப் போல் வருந்துகையின் வடிவில் அனுபவம் செய்யப்படும். உங்களின் பலவீனங்களை நீங்கள் உணரும்போது, தீய ஆவியின் வடிவில் பயத்தை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். தற்சமயம், நீங்கள் விரும்பியபடி செய்கிறீர்கள். ஆனால், இறுதியில், பயமே அனுபவம் செய்யப்படும். ஆகவே, எல்லையற்ற சேவைக்காகவும் உங்களின் சொந்தப் பாதுகாப்பிற்காகவும், நீங்கள் மனதின் சக்தியையும் பயமற்ற தன்மையின் சக்தியையும் இப்பொழுதில் இருந்தே சேமிக்க வேண்டும். அப்போது மட்டுமே முடிவு அழகானதாக இருக்கும். எல்லையற்ற பணியில் ஒத்துழைப்பதன் மூலம், நீங்கள் எல்லையற்ற உலகின் எல்லையற்ற இராச்சியத்திற்கான உரிமையைப் பெற்றுக் கொள்வீர்கள். உங்களின் சகபாடிகள் உங்களின் ஒத்துழைப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். உங்களின் பணிகள் வேறானதாக இருந்தாலும், இரண்டுமே மாற்றத்திற்கான கருவிகளே. அவர்கள் தமது பெறுபேறுகளைக் கூறினார்கள்.
முன்னோடிக் குழுவினரில் சில ஆத்மாக்கள் தாங்களாகவே ஆயத்தம் ஆகியுள்ளார்கள். ஏனையோர் மேன்மையான ஆத்மாக்களை அழைப்பதற்குத் தயார் ஆகுகிறார்கள். சிலர் இத்தகைய ஆத்மாக்களைத் தயாராக்குவதில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் சேவைக்கான வழிமுறை, நட்பினதும் நெருக்கத்தினதும் உறவுமுறை ஆகும். அவர்களால் ஞானத்தைப் பற்றி உரையாட முடியாது. ஏனெனில், அவர்களிடம் ஞானி ஆத்மாக்களின் சம்ஸ்காரங்கள் உள்ளன. அவர்கள் ஒருவர் மற்றவரின் மேன்மையான சம்ஸ்காரங்களை அறிவார்கள். அவர்களின் மேன்மையான அதிர்வலைகளும் சதா புனிதமான, சந்தோஷமான முகங்களும் ஒருவரையொருவர் தூண்டும் பணியைச் செய்கின்றன. அவர்கள் வெவ்வேறு குடும்பங்களில் இருந்தாலும், அவர்கள் ஒரு உறவுமுறையின் அல்லது நட்பின் அடிப்படையில் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் உள்ளார்கள். அந்த ஆத்மாக்கள் ஞானம் நிறைந்தவர்கள் என்பதனால், அவர் தங்களுக்குச் சொந்தமானவர் அல்லது அவர் நெருக்கமானவர் என அவர்கள் தொடர்ந்தும் உணர்கிறார்கள். சொந்தமாக இருக்கும் உணர்வின் அடிப்படையில் அவர்கள் ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்கிறார்கள். காலம் இப்போது நெருங்கி வருகிறது. முன்னோடிக் குழுவினரின் பணியும் அதனால் துரித கதியில் தொடர்கிறது. இத்தகையதொரு பரிமாற்றம் சூட்சும வதனத்தில் இடம்பெற்றது. குறிப்பாக ஜெகதாம்பா குழந்தைகள் அனைவருக்காகவும் இனிய வார்த்தைகளைப் பேசினார். வெகு சில வார்த்தைகளில் அவர் அனைவருக்கும் நினைவூட்டினார்: ‘சதா வெற்றிக்கான அடிப்படை, சகித்துக் கொள்ளும் சக்தியும் ஏற்றுக் கொள்ளும் சக்தியும் ஆகும். இந்த இரண்டு சக்திகளால், நீங்கள் சதா மேன்மையான, இலகுவான வெற்றியை அனுபவம் செய்வீர்கள்.’ மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என பாபா கூறட்டுமா? இன்று, சந்திப்பிற்கும் பொழுதுபோக்கும் கதைக்கான விசேடமான நாளாக இருந்ததால், அவர்கள் அனைவரும் தமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அச்சா, வேறு யாருடைய அனுபவத்தை நீங்கள் கேட்பீர்கள்? (தாதா விஷ்வ கிஷோர்) பொதுவாக, அவர் மிகச் சிறிதளவே பேசுவார். ஆனால், அவர் எதைக் கூறினாலும், அதை சக்திவாய்ந்த முறையில் கூறுவார். அவரின் முழு அனுபவத்தையும் ஒரு சில வார்த்தைகளில் அவர் பகிர்ந்தார்: எந்தவொரு பணியிலும் வெற்றி அடைவதன் அடிப்படை, அசைக்க முடியாத நம்பிக்கையும் சம்பூரணமான போதையும் ஆகும். அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால், மற்றவர்களும் இயல்பாகவே போதையை அனுபவம் செய்வார்கள். இதனாலேயே, அவரின் வெற்றிக்கான அடிப்படை, நம்பிக்கையும் போதையுமாக இருந்தன. அது அவரின் அனுபவம். சாகார் பாபாவிற்கு எப்போதும் தான் எதிர்காலத்தில் உலகச் சக்கரவர்த்தி ஆகுவேன் என்ற நம்பிக்கையும் போதையும் இருந்ததைப் போல், விஷ்வ கிஷோர் தாதாவிற்கும் தானே முதல் உலகச் சக்கரவர்த்தியின் முதல் இளவரசன் என்ற போதை இருந்தது. அவருக்கு நிகழ்காலத்திலும் எதிர்காலத்திற்காகவும் அசைக்கமுடியாத போதை இருந்தது. எனவே, அங்கு சமநிலை காணப்பட்டது. அவர்களுடன் வாழ்ந்தவர்கள் இதைக் கண்டீர்கள், அல்லவா?
அச்சா, தீதி என்ன சொன்னார்? தீதி மிக நன்றாக உரையாடினார். அவர் கூறினார்: எமக்கு முன்னரே அறிவிக்காமல், ஏன் எங்கள் அனைவரையும் நீங்கள் அழைத்தீர்கள்? இல்லாவிட்டால், நான் விடைபெற்ற பின்னர் வந்திருப்பேன். நீங்கள் எனக்குச் சொல்லியிருந்தால், நான் விடைபெற்ற பின்னர் என்னைத் தயார் செய்திருப்பேன். ஆனால் நீங்கள் எல்லோரும் எனக்கு விடை தந்திருப்பீர்களா? பாப்தாதா குழந்தைகளுடன் இதயபூர்வமாக உரையாடினார். லௌகீகம் இல்லாவிட்டால் அலௌகீகத்திலும் சரீரங்களும் சரீர உறவுகளும் உள்ளன. அனைவருடனும் சரீர உறவுமுறைகளின் சம்ஸ்காரங்களும் உள்ளன. அலௌகீக உறவுமுறைகளுக்கும், சரீரங்களுக்கும், சம்ஸ்காரங்களுக்கும் உள்ள பற்றினை வென்றவர் ஆகுவதற்கு இதுவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ள வழிமுறை ஆகும். இவ்வாறே அவர் இறுதியில் பற்றற்றவராகித் தனது கடமையைப் பூர்த்தி செய்தார். விஷ்வ கிஷோருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. அவர் செல்வதற்கான நேரம் வந்ததும், அந்த நேரத்தில் அனைத்தையும் மறந்துவிட்டார். பற்றை அழிப்பவர் ஆகுவதற்கான வழிமுறை, நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் நிறைவேறியுள்ளது. அது அவரின் சொந்த முயற்சியால் நிகழ்ந்தது. அவரைக் கர்ம பந்தனத்தில் இருந்து விடுவிப்பதற்குத் தந்தையும் நாடகத்திற்கேற்ப ஒத்துழைப்பைக் கொடுத்தார். வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்கு உரியவர்களாக இருந்த, நீண்ட காலத்திற்கு ஒத்துழைப்பவர்களாக இருந்த குழந்தைகளுக்கு, பிரதானமான பாடத்தில் சித்தி எய்தியவர்களுக்கு, ஒரேயொருவரின் அனுபவத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு, இத்தகைய வேளையில், தந்தை அந்தக் குழந்தைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவார். சிலர் நினைக்கிறார்கள்: அவர்கள் அனைவரும் கர்மாதீத் ஆகிவிட்டார்களா? இதுதான் கர்மாதீத் ஸ்திதியா? எவ்வாறாயினும், ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைக்கும் குழந்தைகள் மேலதிக ஒத்துழைப்பைப் பெறுகிறார்கள். ஆகவே, அவர்களின் முயற்சிகள் குறைவாகத் தோன்றினாலும், தந்தையின் உதவியானது அந்த நேரத்தில் அவர்கள் மேலதிக மதிப்பெண்களைப் பெற்று, திறமைச் சித்தி எய்த வைக்கிறது. அது மறைமுகமாகவே உள்ளது. எனவே, அது அவ்வாறு இருந்ததா? என்ற கேள்வி எழுகிறது. எவ்வாறாயினும், அது அவர்களின் ஒத்துழைப்பிற்கான பிரதிபலன் ஆகும். உதாரணமாக, ‘அவசியமான வேளையில் அது பயன்படும்’ என்ற கூற்று உள்ளது. தமது இதயபூர்வமாக ஒத்துழைத்தவர்கள் அத்தகைய வேளையில் அதற்கான பிரதிபலன் என்ற ரூபத்தில் மேலதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? எனவே, பற்றை அழிப்பவராக இருக்கும் வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலமும் மேலதிக மதிப்பெண்கள் என்ற பரிசு மூலமும் அவர் வெற்றி பெற்றார். உங்களுக்குப் புரிகிறதா? இறுதியில் என்ன நிகழ்ந்தது? என நீங்கள் கேட்டதாலேயே, பாபா இன்று இந்த உரையாடலை உங்களுக்குக் கூறுகிறார். அச்சா, தீதி என்ன சொன்னார்? உங்கள் அனைவருக்கும் அவரின் அனுபவத்தைப் பற்றித் தெரியும். தீதி கூறினார்: எப்போதும் பாபாவினதும் தாதாவினதும் கைவிரல்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களின் கைவிரலை அவர்களிடம் கொடுங்கள். பாபாவை உங்களின் குழந்தை ஆக்கிக் கொள்ளுங்கள். அவரிடம் உங்களின் கைவிரலைக் கொடுங்கள். அல்லது அவரை உங்களின் தந்தையாக்கி, அவரிடம் உங்களின் கைவிரலைக் கொடுங்கள். இந்த இரண்டு ரூபங்களிலும், ஒவ்வோர் அடியிலும் அவரின் கைவிரலைப் பிடித்தபடி இருங்கள். அவரின் சகவாசத்தை அனுபவம் செய்தவண்ணம் தொடர்;ந்து முன்னேறுங்கள். இதுவே எனது வெற்றியின் அடிப்படை ஆகும். எனவே, இதுவே இடம்பெற்ற விசேடமான இதயபூர்வமான சம்பாஷணை ஆகும். தீதியால் எவ்வாறு ஆதி இரத்தினங்களின் ஒன்றுகூடலைத் தவறவிட முடியும்? இதனாலேயே அவரும் அங்கு வந்தார். அச்சா, இவையே முன்னோடிக் குழுவினரின் விடயங்கள் ஆகும். நீங்கள் என்ன செய்வீர்கள்?
முன்னோடிக் குழுவினர் தமது பணியைச் செய்கிறார்கள். நீங்கள் உங்களை மேலதிக சக்தியால் நிரப்பிக் கொள்ள வேண்டும். இதனூடாகவே மாற்றத்தை ஏற்படுத்தும் பணி என்ற பாடநெறி பூர்த்தியாகும். ஏனெனில் அதுவே அத்திவாரம் (முன்னோடிக் குழு) ஆகும். எல்லையற்ற சேவையாளர்கள் அத்திவாரம் ஆகி, எல்லையற்ற தந்தையை வெளிப்படுத்துவார்கள். இந்த உலகில் மிக விரைவில் வெளிப்படுத்துகைக்கான முரசங்கள் அடிப்பதை நீங்கள் கேட்பீர்கள். எங்கும், ஒரே முரசங்கள் ஒரே தாளத்துடன் அடிக்கும்: ‘நாம் அவரைக் கண்டுவிட்டோம்! அவர் வந்துவிட்டார்!’ இன்னமும் அதிகளவு சேவை செய்வதற்கு எஞ்சியுள்ளது. அது நிறைவேறிவிட்டது என நீங்கள் நினைக்கிறீர்கள். இன்னமும், வார்த்தைகளால் அவர்களை மாற்றும் பணி நிகழ்கிறது. உங்களின் மனோபாவத்தால் மனோபாவங்கள் மாற வேண்டும். உங்களின் எண்ணங்களால் எண்ணங்கள் மாற வேண்டும். இன்னமும், நீங்கள் இந்த ஆராய்ச்சியை ஆரம்பிக்கவில்லை. நீங்கள் இதைச் சிறிதளவில் செய்ய ஆரம்பித்ததும், என்ன நிகழும்? இந்தச் சூட்சுமமான சேவை இயல்பாகவே உங்களைப் பல பலவீனங்களுக்கு அப்பால் எடுத்துச் செல்லும். எவ்வாறு இது நிகழும் என நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், இந்தச் சேவை செய்வதில் நீங்கள் மும்முரமாகினால், நீங்களே உங்களின் பலவீனங்களை மிகத் தெளிவாக அனுபவம் செய்யும் ஒரு சூழல் இயல்பாகவே உருவாக்கப்படும். அந்தச் சூழலால், நீங்கள் வெட்கம் அடைந்து மாறுவீர்கள். உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கும்போது என்ன நிகழ்கிறது என்பதை நீங்கள் கண்டீர்கள். ஆகவே, இப்போது இத்தகைய திட்டத்தைச் செய்யுங்கள். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். வருமானமும் அதிகளவில் கூடும். அதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். உங்களுக்குக் கட்டடங்களும் கிடைக்கும். அதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். இது எத்தகைய வழிமுறை என்றால், நீங்கள் வெற்றி சொரூபங்கள் ஆகுவீர்கள். அச்சா.
பல சக்திகள் உள்ளனர். ஆரம்பத்தில், கருவிகள் ஆகிய பல சக்திகள் இருந்தனர். பொன் விழாவிலும் பல சக்திகள் இருந்தனர். பாண்டவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தார்கள். எவ்வாறாயினும், பாண்டவர்கள் இருந்தார்கள். அது நல்லது. இவர்களே ஆரம்பத்தில் தைரியத்தைப் பேணி அனைத்தையும் சகித்துக் கொண்டவர்களின் அத்தாட்சி ஆகும். அவர்கள் தடைகளை அழிப்பதற்குக் கருவிகள் ஆகினார்கள். கருவிகளை உருவாக்கும் பணியில் அமரர்களாக இருந்தார்கள். இதனாலேயே, அநாதியாகவும் அமரத்துவமாகவும் இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ள குழந்தைகளை பாப்தாதாவும் சதா விரும்புகிறார். இந்த ஆதி இரத்தினங்கள் ஸ்தாபனை வேளையில் தேவைப்படும் போது ஒத்துழைத்தார்கள். ஆகவே, கருவிகளாகவும் தேவைப்படும் வேளையில் ஒத்துழைத்த இத்தகைய ஆத்மாக்களுக்கு எப்போதெல்லாம் எந்தவொரு கஷ்டம் வந்தாலும், பாப்தாதா அவர்களுக்கான பிரதிபலனைக் கொடுக்கிறார். எனவே, இத்தகைய வேளையில் கருவிகளாகிய உங்கள் அனைவருக்கும் இந்த மேலதிகப் பரிசு நாடகத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே, மேலதிக பரிசிற்கான உரிமை உங்களுக்கு உள்ளது. உங்களுக்குப் புரிகிறதா?
ஸ்தாபனைக்கான பணி தாய்மார்களால் துளித் துளியாக (அவர்களின் சதங்களால்) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போது வெற்றிக்கான நேரம் அண்மையில் வந்துவிட்டது. தாய்மார்கள் தமது இதயபூர்வமாகவே கொடுக்கிறார்கள். அவர்களின் வர்த்தகச் சம்பாத்தியத்தில் இருந்து அல்ல. இதயங்களின் வருமானம் ஆயிரங்களுக்குச் சமமானது. அவர்கள் அன்பு விதைகளை விதைத்தார்கள். அந்த அன்பு விதைகளின் பழமும் பலனுள்ளது. ஆமாம், பாண்டவர்களும் அவர்களுடன் இருக்கிறார்கள். பாண்டவர்கள் இல்லாமல் பணியைத் தொடர முடியாது. ஆனால் பெரும்பாலானோர் சக்திகளே. இதனாலேயே, பஞ்ச பாண்டவர்களைப் பற்றி அவர்கள் எழுதியுள்ளார்கள். எவ்வாறாயினும், அவர்கள் குடும்பத்திற்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்கள். பற்றற்றவர்களாகவும் கடவுளிடம் அன்பானவர்களாகவும் இருப்பதன் மூலம் அவர்கள் தைரியத்தினதும் உற்சாகத்தினதும் அத்தாட்சியைக் கொடுத்துள்ளார்கள். இதனாலேயே, பாண்டவர்களும் எதிலும் சளைத்தவர்கள் இல்லை. சக்திகளின் சர்வசக்திவான் நினைவுகூரப்படுகிறார். பாண்டவர்களின் தந்தையும் நினைவுகூரப்படுகிறார். ஆகவே, நீங்கள் என்ன முறையில் கருவி ஆகியிருந்தாலும், கருவியாக இருக்கும் அந்த விழிப்புணர்வைப் பேணி, தொடர்ந்து முன்னேறுங்கள். அச்சா.
பலமில்லியன் மடங்கு பாக்கியத்தின் உரிமையை சதா கொண்டிருப்பவர்களுக்கும், சதா வெற்றிக்கான உரிமையைக் கொண்டிருப்பவர்களுக்கும், எப்போதும் தங்களை மேன்மையான ஆதார மூர்த்திகளாகவும் மற்றவர்களை ஈடேற்றும் மூர்த்திகளாகவும் கருதுபவர்களுக்கும், இத்தகைய மேன்மையான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.ஆசீர்வாதம்:
ஆழமான அனுபவங்களின் இரசாயனகூடத்தில் இருப்பதன் மூலம் அகநோக்குடையவராகி, புதிய ஆராய்ச்சியைச் செய்வீர்களாக.சகல அனுபவங்களும் முதலில் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும்போது, வெளிப்படுத்துகை இடம்பெறும். இதற்கு, அகநோக்குடையவர் ஆகுங்கள். நினைவு யாத்திரையில் இருங்கள். ஒவ்வொரு பேற்றினதும் ஆழத்திற்குச் சென்று இதை ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களுக்குள் ஓர் எண்ணத்தைப் பதித்து, அதன் பெறுபேற்றை அல்லது வெற்றியைப் பாருங்கள்: எனது எண்ணம் நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா? இந்த முறையில் அனுபவங்களின் ஆழத்தின் இரசாயனக்கூடத்தில் இருங்கள். அப்போது நீங்கள் அனைவரும் குறிப்பாக அன்பிலே திளைத்திருப்பதையும் இந்த உலகிற்கு அப்பாற்பட்டிருப்பதையும் மற்றவர்கள் உணருவார்கள். அனைத்தையும் செய்யும்போதும், சக்திவாய்ந்த யோகா ஸ்திதியில் இருக்கும் பழக்கத்தை அதிகரியுங்கள். வார்த்தைகளை உபயோகிக்கும் பழக்கம் உங்களுக்கு இருப்பதைப் போல், உங்களின் ஆன்மீகத்தைப் பேணுவதையும் பயிற்சி செய்யுங்கள்.
சுலோகம்:
திருப்தி என்ற ஆசனத்தில் அமர்ந்தவண்ணம் சூழ்நிலைகள் என்ற விளையாட்டுக்களை அவதானிப்பவர்கள் திருப்தி இரத்தினங்கள் ஆவார்கள்.