25.05.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் தொடர்ந்தும் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். பின்னர் அவர் உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வார்.கேள்வி:
நீங்கள் எச் செய்தியை அனைவருக்கும் வழங்க வேண்டும்?பதில்:
நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். எனவே, தூய்மையாகுங்கள். தூய்மையாக்குபவரான தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். இச்செய்தியை அனைவருக்கும் வழங்குங்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தை வழங்கியுள்ளார். இப்பொழுது தந்தையை வெளிப்படுத்த வேண்டியது உங்களுடைய கடமையாகும். ‘மகன் தந்தையை வெளிப்படுத்துகிறார்’ எனக் கூறப்படுகிறது.பாடல்:
உங்கள் பாதையில் வாழ்ந்;து, உங்கள் பாதையிலேயே மடிவேன்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பாடலின் அர்த்தத்தைச் செவிமடுத்தீர்கள்: பாபா, நாங்கள் உங்களுடைய உருத்திர மாலையில் கோர்க்கப்படுவோம். இந்தப் பாடல் பக்தி மார்க்கத்தில் இயற்றப்பட்டது. உலகிலுள்ள சம்பிரதாயங்கள் அனைத்தும், அதாவது, தானங்கள் செய்வது, தவம், வழிபாடுகள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. பக்தி இராவண இராச்சியத்திற்குரியது. ஞானம் இராம (கடவுளின்) இராச்சியத்திற்குரியது. கியான் என்பது ஞானம், அதாவது, கல்வி என்று அழைக்கப்படுகிறது. பக்தியைக் கல்வி என அழைக்க முடியாது. பக்தியில் எவராக ஆகவேண்டும் என்ற இலக்கு எதுவும் கிடையாது. பக்தி ஒரு கல்வியல்ல. இராஜயோகத்தைக் கற்பது ஒரு கல்வியாகும். ஒரு பாடசாலையில் ஓரிடத்திலேயே நீங்கள் கற்கின்றீர்கள். ஆனால் பக்தியிலோ நீங்கள் வீட்டுக்கு வீடு தடுமாறியலைகிறீர்கள். கல்வி என்றால் கல்வியாகும்! எனவே, நீங்கள் மிக நன்றாகக் கற்க வேண்டும். நீங்கள் மாணவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தம்மை மாணவர்களாகக் கருதாத உங்களிற் பலர் இருக்கிறீர்கள். ஏனெனில் அவர்கள் கற்பதே இல்லை. அவர்கள் தந்தையைத் தந்தையாகக் கருதுவதுமில்லை, அத்துடன் சிவபாபாவைச் சற்கதியை அருள்பவராகக் கருதுவதுமில்லை. இங்கிருக்கும் சிலரின் புத்தியில் எதுவும் தங்குவதில்லை. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. அது சகல வகையானோரையும் கொண்டிருக்க வேண்டும். தூய்மையற்றவர்களான உங்களைத் தூய்மையாக்குவதற்கே தந்தை வந்துள்ளார். ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ என நீங்கள் தந்தையைக் கூவி அழைத்தீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது தூய்மையாகுங்கள்! நீங்கள் அனைவருக்கும் தந்தையின் செய்தியை வழங்க வேண்டும்: தந்தையை நினைவுசெய்யுங்கள்! தற்சமயம், பாரதம் விலைமாதர் இல்லமாக உள்ளது. ஆனால் முன்னர் அது சிவாலயமாக விளங்கியது. இப்பொழுது இரண்டு கிரீடங்களும் அதனிடம் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே இதனை அறிவீர்கள். தூய்மையாக்குபவராகிய தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். நினைவுசெய்வதில் மாத்திரமே முயற்சி உள்ளது. மிகச் சிலரே நினைவில் இருக்கிறார்கள். பக்தர்களின் மாலையும் வெகு சிலரை மட்டுமே கொண்டுள்ளது. தனா பக்தர், நாரதர், மீரா போன்ற வெவ்வேறு பக்தர்களின் பெயர்கள் உள்ளன. அனைவரும் இங்கு வந்து கற்க மாட்டார்கள். ஒரு கல்பத்தின் முன்னர்; கற்றவர்கள் மாத்திரமே மீண்டும் வருவார்கள். அத்துடன் அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் உங்களை ஒரு கல்பத்தின் முன்னரும் சந்தித்தோம். நாங்கள் இங்கு கற்க வந்தோம். நாங்கள் நினைவு யாத்திரையைக் கற்க வந்தோம். குழந்தைகளாகிய உங்களை வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்வதற்காகவே தந்தை இப்பொழுது வந்துள்ளார். அவர் விளங்கப்படுத்துகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர்கள். இதனாலேயே, வந்து உங்களைத் தூய்மையாக்குமாறு நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவுசெய்து, தூய்மையாகுங்கள்! தந்தை உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். கிருஷ்ணரைத் தந்தை என்று அழைக்க முடியாது. கிருஷ்ணரைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியாது. உங்களைத் தவிர வேறு எவருக்கும் தந்தை யார் என்றோ, அல்லது அவர் எவ்வாறு எங்களுக்கு ஞானத்தை வழங்குகிறார் என்பதோ தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே தந்தை தனது அறிமுகத்தை வழங்குகிறார். புதிய குழந்தைகளை உடனடியாகத் தந்தை சந்திக்க மாட்டார். தந்தை கூறுகிறார்: மகன் தந்தையை வெளிப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே தந்தையை வெளிப்படுத்துகிறீர்கள். பாபா பல புதிய குழந்தைகளை நீண்ட காலமாகச் சந்தித்திருந்தாலும், தந்தை புதியவர்களைச் சந்திக்கவோ அல்லது பேசவோ வேண்டியதில்லை. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பலர் வந்தனர். நீங்கள் இராணுவத்தினரையும் ஈடேற்ற வேண்டும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அவர்கள் தமது தொழிலைச் செய்ய வேண்டியுள்ளது. இல்லாவிடில், எதிரி வந்து தாக்கிவிடுவான். அவர்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். யுத்த களத்தில் தமது சரீரங்களை நீக்குபவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள் எனக் கீதை கூறுகின்றது. எவ்வாறாயினும், அவ்வாறு உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர் இங்கு வரும்பொழுதே, உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். சுவர்க்கம் என்றால் என்னவென்று எவருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஐந்து விகாரங்களாகிய இராவணனுக்கு எதிராகப் போரிடுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகுவீர்களாக! ‘நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையை வைத்து, என்னை நினைவு செய்யுங்கள்!’ என வேறு எவரும் கூறமாட்டார்கள். ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரையும் சர்வசக்திவான் என உங்களால் அழைக்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, அல்லது சங்கரரையும் அவ்வாறு உங்களால் அழைக்க முடியாது. ஒரேயொரு தந்தை மட்டுமே சர்வசக்திவான். அவரே உலகச் சர்வசக்திவான். ஒரேயொரு தந்தை மட்டுமே ஞானக்கடல் என அழைக்கப்படுகிறார். அந்தச் சாதுக்கள், புனிதர்கள் அனைவரும் சமயநூல்களின் அதிகாரிகள். அவர்களைப் பக்தியின் அதிகாரம் கொண்டவர்கள் என்று கூட உங்களால் அழைக்க முடியாது. அவர்கள் சமயநூல்களின் அதிகாரிகள். அவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அனைத்தும் சமயநூல்களிலேயே தங்கியுள்ளது. தமது பக்திக்கான பலனைக் கடவுள் வழங்குவார் என அவர்கள் நம்புகிறார்கள். பக்தி எப்பொழுது ஆரம்பமாகுகின்றது என்றோ அல்லது எப்பொழுது அது முடிவடைகின்றது என்றோ அவர்களுக்குத் தெரியாது. தாம் செய்யும் பக்தியால் கடவுள் களிப்படைகிறார் எனப் பக்தர்கள் நம்புகிறார்கள். அவர்கள் கடவுளைக் காணும் ஆசையைக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர் யாருடைய வழிபாட்டினால் களிப்படைவார்? நீங்கள் அவரை மட்டும் வழிபட்டால் தான் அவர் நிச்சயமாகக் களிப்படைவார். நீங்கள் சங்கரரை வழிபட்டால் தந்தையால் எவ்வாறு களிப்படைய முடியும்? நீங்கள் அனுமானை வழிபட்டால் தந்தை களிப்படைவாரா? அவர்கள் காட்சியைப் பெறுகிறார்கள்; வேறு எதனையும் அவர்கள் பெறுவதில்லை. தந்தை கூறுகிறார்: நான் அவர்களுக்குக் காட்சிகளை அருளினாலும், அவர்களில் எவராலும் வந்து என்னைச் சந்திக்க முடியாது. இல்லை. நீங்கள் மட்டுமே வந்து என்னைச் சந்திக்கிறீர்கள். கடவுளைச் சந்திப்பதற்காகப் பக்தர்கள் பக்தி செய்கிறார்கள். எந்த வடிவில் வந்து கடவுள் எம்மைச் சந்திப்பார் என எமக்குத் தெரியாது என அவர்கள் கூறுகிறார்கள். எனவே, அது குருட்டு நம்பிக்கை எனப்படுகிறது. நீங்கள் இப்பொழுது தந்தையைச் சந்தித்துள்ளீர்கள். அசரீரியான தந்தை வந்து ஒரு சரீரத்தை ஏற்கும்பொழுதே, அவரால் தனது அறிமுகத்தை வழங்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் கூறுகிறார்: நான் உங்களுடைய தந்தை. 5000 வருடங்களுக்கு முன்னர் நான் உங்கள் இராச்சிய பாக்கியத்தை உங்களுக்கு வழங்கினேன். அதன்பின்னர் நீங்கள் 84 பிறவிகள் எடுத்தீர்கள். இந்த உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. துவாபர யுகம் ஆரம்பமாகிய பின்னரே, ஏனைய மதங்கள் வருகின்றன. ஒவ்வொரு மத ஸ்தாபகரும் தனது சொந்த மதத்தை ஸ்தாபிப்பதற்கு வருகிறார். அவர்களில் எவரேனும் எவ்வளவு மகத்தானவர்கள் என்ற கேள்விக்கு இடமில்லை. அது எவருடைய மகத்துவமும் இல்லை. தந்தை பிரம்மாவில் பிரவேசிக்கும்பொழுது மட்டுமே இவருக்கு மகத்துவம் ஏற்பட்டது. இவர் தனது வியாபாரத்தைச் செய்து கொண்டிருந்தார்; கடவுள் தனக்குள் பிரவேசிப்பார் என்பதை இவர் அறிந்திருக்கவில்லை. தந்தை இவரினுள் பிரவேசித்து, தான் எவ்வாறு இவரில் பிரவேசித்துள்ளார் என்பதை விளங்கப்படுத்தினார். அவர் கூறினார்: எவ்வாறு உங்களுக்குச் சொந்தமானது எனக்குரியதாக ஆகுகின்றது என்பதையும், எனக்குரியது எவ்வாறு உங்களுக்குரியதாக ஆகுகின்றது என்பதையும் பாருங்கள். நீங்கள் உங்களுடைய சரீரம், மனம், செல்வத்தினால் எனது உதவியாளர் ஆகுகிறீர்கள். அதன் பிரதிபலனாக, இதனை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். தந்தை கூறுகிறார்: தனது சொந்தப் பிறவிகளைப் பற்றியே தெரிந்திராத, சாதாரணமான ஒருவரின் சரீரத்திலேயே நான் பிரவேசிக்கிறேன். ஆனால் எவருக்கும் எப்பொழுது அல்லது எவ்வாறு நான் வருகிறேன் என்பது தெரியாது. தந்தை எவ்வாறு இந்தச் சாதாரணமான சரீரத்தில் பிரவேசித்துள்ளார் என்பதை இப்பொழுது உங்களால் காணக்கூடியதாக உள்ளது. இந்தச் சரீரத்தினூடாக அவர் எங்களுக்கு ஞானத்தையும், யோகத்தையும் கற்பிக்கிறார். ஞானம் மிக இலகுவானது. நரகத்தின் வாயில்கள் எப்பொழுது மூடுகின்றன என்பதையும், எவ்வாறு சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கின்றன என்பதையும் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். இராவண இராச்சியம் துவாபர யுகத்துடன் ஆரம்பமாகுகின்றது. அப்பொழுதே நரகத்தின் வாயில்கள் திறக்கின்றன. பழைய, புதிய உலகங்கள் அரைக்கு அரைவாசியாகும். தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான வழியைக் காட்டுகிறேன்: தந்தையை நினைவுசெய்யுங்கள். பல பிறவிகளுக்குரிய உங்கள் பாவங்கள் தீரும். இந்தப் பிறவியில் நீங்கள் செய்துள்ள பாவங்கள் அனைத்தையும் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிறவியில் என்ன பாவங்களை நீங்கள் செய்துள்ளீர்கள் என உங்களுக்கு ஞாபகம் உள்ளது, இல்லையா? நீங்கள் என்ன புண்ணியம் செய்து, தானங்கள் செய்துள்ளீர்கள் என்பதையும் அறிவீர்கள். இவர் தனது குழந்தைப் பருவத்தை அறிவார். கிருஷ்ணர் சியாம்சுந்தர் (அவலட்சணமானவரும் அழகானவரும்) என அழைக்கப்படுகிறார். இதன் அர்த்தம் எவரின் புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. அவருடைய பெயர் சியாம்சுந்தராக இருப்பதனால், அவர்கள் அவரைக் கரு நீல நிறமாக உருவாக்கியுள்ளனர். ரகுநாதர் ஆலயத்தையும், அனுமான் ஆலயத்தையும் பாருங்கள். அனைவரது ரூபங்களும் அவலட்சணமாக உருவாக்கப்பட்டுள்ளன. இது தூய்மையற்ற உலகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அவலட்சணமானவர்களில் இருந்து அழகானவர்கள் ஆகுவதற்கான அக்கறையைக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, இவ்வாறு செய்வதற்கு, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். தந்தை கூறுகிறார்: இது உங்கள் இறுதிப் பிறவி. என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நிச்சயமாக, நீங்கள் உங்கள் சரீரத்தை இங்கு துறக்க வேண்டும். அவர் உங்களை உங்கள் சரீரங்களுடன் அழைத்துச் செல்ல மாட்டார். தூய்மையற்ற ஆத்மாக்களால் அங்கு செல்ல முடியாது. எனவே தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்கான வழிகளை நிச்சயமாகக் காட்டுவார். அவர் கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பக்தி மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் குருட்டு நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிவகாசியைப் பற்றிப் பேசுகிறார்கள். பின்னர், கங்கையைச் சிவன் கொண்டு வந்ததாகவும், கங்கை பகீரதனினூடாகத் (பாக்கிய இரதம்) தோன்றியது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஒருவரின் தலையில் இருந்து எவ்வாறு நீர் வெளிப்பட முடியும்? பகீரதனின் தலைமுடியினூடாகக் கங்கை வெளிப்படுவதற்கு அவர் மலைகளில் அமர்ந்திருக்கிறாரா? கடலில் இருந்து சென்ற நீரே மழையாகப் பொழிகிறது. அதன்பின்னர், அந்த நீர் உலகெங்கும் பொழிகிறது; எங்கும் நதிகள் உள்ளன. மலைகளிலுள்ள நீர் பனிக்கட்டி ஆகுகின்றது. அந்தப் பனிக்கட்டி தொடர்ந்தும் உருகி நதியாகப் பாய்கிறது. மலைகளில் உள்ள குகைகளில் உள்ள நீரும் கிணறுகளை நிரப்புகிறது. அவையும் மழையில் தங்கியுள்ளன. மழை எதுவும் இல்லாதபொழுது, கிணறுகள் வரண்டு போகின்றன. நீங்கள் இப்பொழுது கூறுகிறீர்கள்: பாபா, எங்களைத் தூய்மையாக்கி, சுவர்க்கத்திற்கு அனுப்புங்கள். கிருஷ்ண பூமியான சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான விருப்பத்தையே மக்கள் கொண்டிருக்கிறார்கள். விஷ்ணு பூமியைப் பற்றி எவருக்கும் தெரியாது. நான் எங்கு பார்த்தாலும், கிருஷ்ணரை மட்டுமே காண்கிறேன் என்று கிருஷ்ண பக்தர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் கடவுளைச் சர்வவியாபகர் என அழைப்பதனால், தாம் எங்கு பார்த்தாலும், கடவுளை மட்டுமே பார்க்கிறார்கள் என ஏன் அவர்கள் கூறுவதில்லை? இதனாலேயே, அனைவரும் அவரது ரூபமே என பரமாத்மாவின் (கடவுளின்) பக்தர்கள் கூறுகிறார்கள். அவரே இந்த முழு நாடகத்தையும் இடம்பெறச் செய்கிறார். இந்த அற்புதமான நாடகத்தை உருவாக்குவதற்காகக் கடவுள் ஒரு ரூபத்தை எடுத்ததாக அவர்கள் கூறுகிறார்கள். எனவே, அவர் நிச்சயமாக ஒரு பாகத்தை நடிப்பார். கடவுளின் சுவர்க்கப் பூமியைப் பாருங்கள்! அங்கு அழுக்கு என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கு, அழுக்கைத் தவிர வேறு எதுவுமில்லை. இங்கு, கடவுள் சர்வவியாபகர் என்றும், கடவுளே சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுக்கிறார் என்றும் மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் ஒரு குழந்தையைப் பெறும்பொழுது, சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால், அந்தக் குழந்தை இறந்துவிட்டால், அவர்கள் துன்பமடைகிறார்கள். கடவுள் உங்களுக்கு எதனையாவது வழங்கிப் பின்னர் அதனைத் திரும்ப எடுத்துக் கொண்டார், எனவே, இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது? சத்தியயுகத்தில் அவர்கள் அழக்கூடிய வகையில் எவ்விதத் துன்பத்தையும் அனுபவம் செய்ய மாட்டார்கள். பற்றை வென்ற அரசனின் உதாரணம் உள்ளது. அந்த உதாரணங்கள் அனைத்தும் பொய்யானவை; அதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. சத்தியயுகத்தில் சாதுக்கள், புனிதர்கள் போன்ற எவரும் இல்லை. அத்தகைய விடயங்கள் இங்கிருக்க முடியாது, பற்றை வென்ற அரசர் எவரும் இங்கிருக்க முடியாது. கடவுள் பேசுகிறார்: இப்பொழுது யாதவர்களும், கௌரவர்களும், பாண்டவர்களும் என்ன செய்கிறார்கள்? உங்களுடைய யோகம் தந்தையுடன் ஆகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களினூடாக நான் பாரதத்தைச் சுவர்க்கமாக்குகிறேன். இப்பொழுது தூய்மையாகுபவர்கள், பின்னர் தூய உலகின் அதிபதிகள் ஆகுவார்கள். நீங்கள் சந்திக்கும் அனைவரிடமும் கூறுங்கள்: கடவுள் கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள்! என்னை மட்டும் நேசியுங்கள்! வேறு எவரையும் நினைவுசெய்யாதீர்கள்! இந்த நினைவு கலப்படமற்ற நினைவு எனப்படுகிறது. இங்கு, நீங்கள் தண்ணீர் போன்றவற்றைப் படைக்க வேண்டியதில்லை. பக்தி மார்க்கத்தில் அவற்றையெல்லாம் நீங்கள் செய்தீர்கள். நீங்கள் கடவுளையும் நினைவுசெய்தீர்கள். குருமார்கள் கூறுவார்கள்: என்னை நினைவுசெய்யுங்கள்! உங்கள் கணவனை நினைவுசெய்யாதீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குப் பல விடயங்களை பாபா விளங்கப்படுத்துகிறார். நீங்கள் அனைவருக்கும் இந்தச் செய்தியைக் கொடுக்க வேண்டும் என்பதே அவர் பிரதானமாக விளங்கப்படுத்துகின்ற விடயம்: பாபா கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள்! பாபா என்றால் கடவுள் என்று அர்த்தமாகும். கடவுள் அசரீரியானவர். கிருஷ்ணரை அனைவரும் கடவுள் என அழைப்பதில்லை. கிருஷ்ணர் குழந்தை ஆவார். சிவபாபா இவரில் இல்லாவிடின், நீங்கள் இங்கிருப்பீர்களா? சிவபாபா உங்களைத் தத்தெடுத்து, இவரினூடாக உங்களைத் தனக்குச் சொந்தமாக்குகிறார். எனவே, இவர் தாயாகவும், அத்துடன் தந்தையாகவும் இருக்கிறார். சரீர ரூபத்தில் உள்ள ஒரு தாய் தேவைப்படுகிறார். அவரே (சிவபாபா) தந்தை ஆவார். எனவே, இந்த விடயங்களை மிக நன்றாகக் கிரகியுங்கள். எந்தவொரு விடயத்தையுமிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் குழப்பம் அடையக்கூடாது. ஒருபொழுதும் கற்பதை நிறுத்தாதீர்கள். சில குழந்தைகள் தீய சகவாசத்தின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுகிறார்கள். பின்னர் அவர்கள் முகங்கோணி, தமது சொந்தப் பாடசாலையைத் திறக்கிறார்கள். அவர்கள் யாராவதொருவருடன் முரண்பட்டதும், சென்று தமது சொந்தப் பாடசாலையைத் திறக்கிறார்கள். அது முட்டாள்தனமாகும். அவர்கள் முகங்கோணினால், பாடசாலையைத் திறப்பதற்குத் தகுதியானவர்கள் அல்ல. அவர்களின் சரீர உணர்வு அவர்களைத் தொடர அனுமதிப்பதில்லை. அவர்கள் புத்தியில் விரோதத்தைக் கொண்டிருப்பதனால், அதனை மட்டுமே நினைவுசெய்கிறார்கள். அதனால், அவர்களால் எவருக்கும் எதனையும் விளங்கப்படுத்த முடியாது. அவர்கள் யாருக்கு ஞானத்தை வழங்குகிறார்களோ, அவர்கள் விரைவாக முன்னேறிச் செல்கிறார்கள். இவர்களோ கீழே வீழ்கிறார்கள். தனது சொந்த ஸ்திதியை விட மற்றவர்களின் ஸ்திதியானது பெருமளவில் நன்றாக இருப்பதை ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். சில சந்தர்ப்பங்களில், மாணவர் அரசர் ஆகுகிறார். ஆசிரியர் பணிப்பெண்ணாக அல்லது வேலையாளாக ஆகுகிறார். முயற்சி செய்து, தந்தையின் கழுத்து மாலையின் ஒரு பாகம் ஆகுங்கள். பாபா, நான் உயிர் வாழும்வரை உங்களுக்கே உரியவனாக இருப்பேன். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதால் மட்டுமே, உங்கள் படகால் அக்கரைக்குச் செல்ல முடியும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. எந்தவொரு விடயத்தையிட்டும் ஒருபொழுதும் குழப்பமடையாதீர்கள். மற்றவர்களுடன் முகங்கோணி, என்றுமே கற்பதை நிறுத்திவிடாதீர்கள். விரோதத்தைக் கொண்டிருப்பது சரீர உணர்வாகும். தீய சகவாசத்தின் ஆதிக்கத்திற்குள் நீங்கள் செல்லாதிருப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் நடத்தையானது தந்தையை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் தூய்மையானவர் ஆகுங்கள்.2. உங்கள் புத்தி தந்தை மீது அன்பு வைத்திருந்து, அவரது கலப்படமற்ற நினைவில் நிலைத்திருக்கட்டும். உங்கள் சரீரம், மனம், செல்வத்தினால் தந்தையின் முழுமையான உதவியாளர் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வதனாலும், உலகிற்கு ஆதாரமளிக்கின்ற ரூபமாக ஆகுவதாலும் ஒரு மேன்மையான அந்தஸ்திற்கான உரிமையைக் கோருவீர்களாக.ஒரு மேன்மையான அந்தஸ்தை நீங்கள் பெறுவதற்கான பாப்தாதாவின் கற்பித்தல்கள்: குழந்தைகளே, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களை மாற்றுவதற்குப் பதிலாக, நீங்கள் சூழ்நிலைகளை அல்லது ஏனைய ஆத்மாக்களை மாற்றுவதைப் பற்றிச் சிந்திக்கின்றீர்கள் அல்லது எண்ணங்களைக் கொணடிருக்கின்றீர்கள். ஏதாவது மீட்சியை, ஒத்துழைப்பை அல்லது ஆதாரத்தைப் பெறும்பொழுது, உங்களை மாற்றுவீர்கள் என நீங்கள் சிந்திக்கிறீர்கள். சில ஆதாரத்தின் அடிப்படையில் நீங்கள் உங்களை மாற்றும்பொழுது, உங்கள் வெகுமதியும் சில ஆதாரத்தின் அடிப்படையிலேயே தங்கியிருக்கும், ஏனெனில் நீங்கள் எத்தனை பேரின் ஆதாரத்தைப் பெறுகின்றீர்களோ, உங்கள் சேமிப்புக் கணக்கும் அதற்கேற்ப, அத்தனை பேரின் மத்தியில் பகிரப்படும். எனவே எப்பொழுதும் உங்களை மாற்றுகின்ற இலக்கைக் கொண்டிருங்கள். “நான் உலகிற்கு ஆதாரமளிக்கின்ற ரூபமாக ஆகவேண்டும்”.
சுலோகம்:
ஊக்கம், உற்சாகத்தின் மூலமும், ஓர் ஒன்றுகூடலின் மேன்மையான எண்ணங்களினாலும் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது.