13.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையை உள்ளவாறும், அவர் என்னவாக இருக்கின்றார் என்றும் அறிந்து கொள்வதில் குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். அவரை அனைவரும் அறிந்துகொண்டார்களாயின், இங்கு மிகப் பெரிய கூட்டமொன்று இருக்கும்.

கேள்வி:
எப்பொழுது வெளிப்பாட்டின் ஒலி எங்கும் பரவும்?

பதில்:
கடவுளே இந்தப் பழைய உலகத்தை அழிப்பதன் மூலம் புதிய உலகின் ஸ்தாபனைப் பணியை மேற்கொள்வதற்கு வந்து விட்டார் என்பதை மனிதர்கள் கண்டறிந்து கொள்ளும் பொழுதாகும். அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற தந்தை எங்கள் பக்திக்கான பலனை எங்களுக்கு வழங்குவதற்கு வந்திருக்கின்றார். இந்த நம்பிக்கை உள்ளபொழுது வெளிப்பாடு இடம்பெறுவதுடன், எங்கும் குழப்பங்கள் நிலவும்.

பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீதே ஞான மழை பொழிகின்றது.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் இரு வரிகளைச் செவிமடுத்தீர்கள். மழையானது அனபிற்கினியவருடன் இருப்பவர்களுக்கேயாகும். உலக மக்களுக்கு அன்பிற்கினியவர் யார் என்பது தெரியாது. பல குழந்தைகள் இருந்தாலும், அவர்களில் பலருக்கும் தந்தையை எவ்வாறு நினைவு செய்வது எனத் தெரியாது. அவரை எவ்வாறு நினைவுசெய்வது என்பது அவர்களுக்குத் தெரியாது; அவர்கள் மீண்டும் மீண்டும் அவரை மறந்து விடுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். நீங்கள் புள்ளிகள். தந்தையே ஞானக்கடல்;, நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். அந்நினைவானது நிரந்தரமாகும் வகையில், அந்த நினைவில் இருக்கும் அத்தகையதொரு பயிற்சியை உங்களில் பதித்துக் கொள்ளுங்கள். இறுதியில் நான் ஓராத்மா என்பதை மாத்திரமே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பினும், உங்கள் புத்தியில் ஓர் ஆத்மாவாக இருக்கின்ற ஞானத்தை வைத்திருங்கள். நீங்கள் தந்தையின் வழிகாட்டலைப் பெற்றுள்ளீர்கள். எவருமே என்னை உள்ளவாறே, நினைவுசெய்வதில்லை. குழந்தைகள் மிகவும் சரீர உணர்வுடையவர்கள் ஆகுகின்றார்கள். நீங்கள் ஒருவருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கும்வரை, அவரால் எதையும் புரிந்துகொள்ள முடியாது என்பதைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அனைத்திற்கும் முதலில், அசரீரியான தந்தையே கீதையின் கடவுளான, எங்கள் தந்;தை, அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்நேரத்தில், அவர் சற்கதியை அருளல் என்ற பாகத்தை நடிக்;கின்றார். அவர்கள் இந்தக் கருத்தினையிட்டுத் தங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருந்தால், சாதுக்கள், சந்நியாசிகள் அனைவரும் இங்கு ஒரு விநாடியிலேயே வருவார்கள்; பாரதத்தில் பெரும் குழப்பம் ஏற்படும். இவ்வுலகம் இப்பொழுது அழியப்போகின்றது என்பதை அவர்கள் அறிந்திருந்தால், மும்பாயில் இருந்து அபு வரை பெரிய வரிசையே இருக்கும். எவ்வாறாயினும், எவராலும் அத்தனை விரைவாக அந்த நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியாது. விநாசம் நடைபெற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் அனைவரும் ஆழமான உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருப்பார்கள். பின்னர் இறுதியில் உங்கள் ஆதிக்கம் பரவும். பரமாத்மா, பரமதந்தை சிவனே கீதையின் கடவுள் என்ற விடயத்தில் நம்பிக்கை வைப்பது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல! இது பிரபல்யமாகினால், பாரதம் முழுவதும் அந்த ஒலி பரவும். இன்னமும், நீங்கள் எவருக்காவது விளங்கப்படுத்தும்பொழுது, அவரில் ஏதோ மந்திரவித்தை இடப்பட்டுள்ளது என்றே அந்த நபருக்கு வேறு ஒருவர் கூறுவார். இந்த விருட்சமானது மிகவும் மெதுவாக வளர வேண்டும். இன்னமும் சொற்ப காலம் எஞ்சியிருக்கின்றது. முயற்சி செய்வதற்கு உங்களுக்கு இன்னமும் நேரம் இருக்கின்றது. நீங்கள் முக்கியஸ்தர்களுக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள், ஆனால் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலும் சிலர் இந்த ஞானத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தையின் நினைவு இல்லாவிடின் அந்த ஸ்திதியும் இருக்காது. உங்கள் நம்பிக்கை என்ன என்பதைத் தந்தையும் புரிந்துகொள்கின்றார். இன்னமும் உங்களில் எவரும் தந்தையை ஒரு சதவீதம் அல்லது இரு சதவீதம் கூட நினைவுசெய்வதில்லை. அவர்கள் இங்கமர்ந்திருந்தாலும், அவர்களுக்குத் தந்தை மீது அத்தகைய அன்பில்லை. இங்கே அன்பும், பாக்கியமும் இருக்க வேண்டும். அவர்கள் தந்தையில் அன்பைக் கொண்டிருந்தால், தாங்கள் ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். நாங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றோம். அரைச் சக்கரத்திற்குச் சரீர உணர்வே இருந்தது, இதனாலேயே ஆத்ம உணர்விற்கு வருவதற்கு இப்பொழுது பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. உங்களை ஓராத்மா எனக் கருதி உங்கள் அதி அன்பிற்கினிய தந்தையை நினைவு செய்வது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல! அவர்கள் இதனைச் செய்தார்களாயின், அவர்களின் முகங்களில் அந்தப் பிரகாசம் இருக்கும். பெண் ஒருவர் திருமணம் செய்து, நகைகளை அணியும்பொழுது, அவளது முகத்தில் அதிகளவு சந்தோஷம் இருக்கின்றது. எவ்வாறாயினும், இங்கு சிலர் மணவாளனை நினைவுசெய்வதுமில்லை, இதனால் அவர்களின் முகங்கள் வாடியுள்ளன, கேட்கவும் வேண்டாம். ஒரு பெண் திருமணம் செய்யும்பொழுது, அவரின் முகம் மிகவும் சந்தோஷமடைகின்றது, ஆனால் சில பெண்களின் முகங்களோ திருமணம் செய்த பின்னரும் பிணத்தைப் போலவே இருக்கின்றது. பல்வேறானவர்கள் இருக்கின்றனர். சிலர் மறுவீட்டிற்குச் செல்லும்பொழுது, குழப்பம் அடைகின்றார்கள். இங்கும் அது இவ்வாறே. தந்தையை நினைவுசெய்வதற்கு முயற்சி தேவை. “அதீந்திரிய சுகத்தைப் பற்றிக் கோபி கோபிகைளைக் கேளுங்கள்” என இறுதிக் கணங்களைப் பற்றி நினைவுசெய்யப்படுகின்றது. நீங்கள் உங்களைக் கோப, கோபிகைளாகக் கருதி, தந்தையின் நினைவைச் சதா கொண்டிருக்கும் ஸ்திதியை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை வந்துள்ளார், அவர் உங்களுக்கு அந்த ஆஸ்தியைக் கொடுக்கின்றார். ஞானம் அனைத்தும் இதிலேயே அடங்குகின்றது. இறுதியில், இலக்ஷ்மியும் நாராயணனும் தமது 84 பிறவிகளை பூர்த்திசெய்யும்பொழுது, தந்தை வந்து, அவர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, அவர்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்தார். இலக்ஷ்மி நாராயணனின் படமே முதற்தரமான படமாகும். அவர்கள் தமது முன்னைய பிறவியில் அத்தகைய செயல்களைச் செய்திருக்க வேண்டும் எனவும், தந்தை இப்பொழுது உங்களுக்கு எவ்வாறு அச்செயல்களைச் செய்வது என்று கற்பிக்கின்றார் எனவும் நீங்கள் அறிவீர்கள். அவர் கூறுகின்றார்: “மன்மனாபவ” ஆகுங்கள்! தூய்மையாக இருங்கள்! எந்தவிதமான பாவங்களையும் செய்யாதீர்கள், ஏனெனில் நீங்கள் இப்பொழுது சுவர்க்க அதிபதிகளான, புண்ணியாத்மாக்களாகிக் கொண்டிருக்கின்றீர்கள். இராவணனாகிய மாயை அரைக்கல்பத்திற்கு உங்களைப் பாவம் செய்ய வைத்து விட்டாள். இப்பொழுது உங்களைக் கேளுங்கள்: நான் ஏதாவது பாவம் செய்கின்றேனா? நான் தொடர்ந்தும் புண்ணியச் செயல்களைச் செய்கின்றேனா? நான் குருடர்களுக்கான கைத்தடி ஆகிவிட்டேனா? தந்தை கூறுகின்றார்: “மன்மனாபவ” ஆகுங்கள்! நீங்கள் கேட்க வேண்டும்: மன்மனாபவ எனக் கூறியது யார்? அவர்களோ கிருஷ்ணரே இதனைக் கூறியதாகக் கூறுகின்றார்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனே இதனைக் கூறினார் என நீங்கள் அறிவீர்கள். இதில் பகலுக்கும் இரவிற்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. சிவனின் பிறந்தநாளுடன் கூடவே, கீதையின் பிறந்தநாளும் இருக்கின்றது. கீதையின் பிறந்தநாளுடன் கூடவே கிருஷ்ணரின் பிறந்தநாளும் இருக்கின்றது. நீங்கள் எதிர்காலத்தில் இளவரசர்கள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் ஆண்டிகளிலிருந்து இளவரசர்களாக மாற வேண்டும். இதுவே இராஜயோகத்தின் இலக்கும் இலட்சியமும் ஆகும். கீதையின் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லர், ஆனால் அசரீரியானவரே என்பதை உங்களால் நிரூபிக்க முடியும், அப்பொழுது சர்வவியாபகர் என்ற கருத்தானது அகற்றப்பட்டு விடும். தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், தூய்மையாக்குபவரும் ஆவார். அவர் விடுதலையாக்குபவர் எனவும் அழைக்கப்படுகின்றார். எவ்வாறாயினும், மக்கள் அவரைச் சர்வவியாபகர் எனக் கூறுகின்றார்கள்! அவர்கள் தாம் கூறுகின்ற எதையுமே புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சமயத்தைப் பற்றித் தமது மனதில் புகுகின்ற அனைத்தையும்; கூறுகின்றார்கள். மூன்று பிரதான சமயங்கள் இருக்கின்றன. தேவ தர்மமானது அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றது. தந்தை பிராமண, தேவ, சத்திரிய தர்மங்களைச் ஸ்தாபிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். உலகத்திற்கு இது தெரியாது. அவர்கள் சத்தியயுகத்தின் கால எல்லையை நூறயிரக்கணக்கான வருடங்கள் என்றே கருதுகின்றார்கள். ஆதி சனாதன தேவிதேவதா தர்மமே அனைத்திலும் மிக மேன்மையான தர்மமாகும். எவ்வாறாயிலும், அவர்கள் தமது சொந்தத் தர்மத்தை மறந்ததால் அதர்மவான்களாகி விட்டார்கள். கிறிஸ்தவர்கள் தமது சமயத்தைத் துறப்பதில்லை. கிறிஸ்து தங்கள் சமயத்தை ஸ்தாபித்தார் என அவர்கள் அறிவார்கள். இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் போன்றவையே பிரதான சமயங்களாகும். பின்னர், மேலும் பல சிறிய சமயங்களும் இருக்கின்றன. இந்த விரிவாக்கம் எங்கு ஆரம்பமானது என்பது எவருக்குமே தெரியாது. மொகமட் வந்ததிலிருந்து இப்பொழுது குறுகிய காலம் கடந்து விட்டது. இஸ்லாமைச் சேர்ந்தவர்கள் மிகப் பழையவர்கள். கிறிஸ்தவர்கள் மிகவும் பிரபல்யமானவர்கள், பின்னர் மேலும் பலரும் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தத்தமது சொந்தச் சமயத்தைக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தத்தமது வெவ்வேறு சொந்தச் சமயத்தையும், வெவ்வேறு பெயர்களையும் கொண்டிருப்பதால், குழப்பமடைந்து விட்டார்கள். நான்கு பிரதான சமயநூல்களே இருக்கின்றன என்று அவர்களுக்குத் தெரியாது. அவற்றில் தேவ தர்மமும், பிராமண தர்மமும் உள்ளடங்குகின்றன. பிராமணர்களே தேவர்கள் ஆகுகின்றார்கள், அவர்களே பின்னர் சத்திரியர்கள் ஆகுகின்றார்கள். எவருக்குமே இது தெரியாது. “பிராமணர்களுக்கு வந்தனங்கள்” என்று பாடப்பட்டுள்ளது. பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து பிராமண, தேவ, சத்திரிய தர்மங்களை ஸ்தாபித்தார். இந்தப் பதங்கள் இருக்கின்றன, ஆனால் அவர்கள் அனைத்தையும்; கிளிகளைப் போல் வாசிக்கின்றார்கள். இது ஒரு முட்காடாகும். பாரதம் பூந்தோட்டமாக இருந்தது என்று மக்கள் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும், எப்பொழுது அது உருவாக்கப்பட்டது, எவ்வாறு அது உருவாக்கப்பட்டது அல்லது யார் அதை உருவாக்கியவர் என்று எவருக்குமே தெரியாது. பரமாத்மா யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகவே, அவர்கள் அநாதைகள் ஆகிவிட்டார்கள். இதனாலேயே அதிகளவு சண்டை, சச்சரவுகள் இருக்கின்றன. அவர்கள் பக்தி செய்வதில்; தொடர்ந்தும் சந்தோஷமடைகின்றார்கள். தந்தை இப்பொழுது ஒளியை ஏற்படுத்துவதற்கு வந்துள்ளார். அவர் ஒரு விநாடியில் உங்களுக்கு ஜீவன்முக்தியை அருள்கின்றார். சற்குரு உங்களுக்கு ஞானத் தைலத்தைக் கொடுக்கும்பொழுது, அறியாமை என்ற இருளானது அகல்கின்றது. நாம் இப்பொழுது ஒளியில் இருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது கண்ணைக் கொடுத்துள்ளார். தேவர்கள் மூன்றாவது கண்ணுடன் காட்டப்பட்டாலும், மக்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. உண்மையில், நீங்கள் மூன்றாவது கண்ணைக் கொண்டிருக்கின்றீர்கள், ஆனால் அவர்கள் தேவர்களை மூன்றாவது கண்ணுடன் காட்டியுள்ளார்கள். கீதையில், பிராமணர்கள் என்பது பற்றிக் குறிப்பிடப்படவேயில்லை. அவர்கள் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையிhன யுத்தத்தையும், ஒரு குதிரை இரதத்தையும் கீதையில் காட்டியுள்ளார்கள். அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, அவர்கள் உங்களுக்குக் கூறுகின்றார்கள்: சமயநூல்களைக் கூட நீங்கள் நம்புவதில்லை! நாங்கள் ஏன் சமயநூல்களை நம்புவதில்லை என்பதை உங்களால் அவர்களுக்குக் கூறமுடியும். அவை அனைத்தும் பக்திமார்க்கத்தின் சம்பிரதாயமே என்பது உங்களுக்குத் தெரியும். ஞானமும், பக்தியும் நினைவு கூரப்படுகின்றன. பக்தியானது இராவண இராச்சியம் தொடங்கும்பொழுதே ஆரம்பிக்கின்றது. பாரத மக்கள் பாவப்பாதையில் செல்வதனால் தமது தர்மத்திலும், செயல்களிலும் சீரழிந்து போனதாலேயே, அவர்கள் இப்பொழுது தம்மை இந்துக்கள் என அழைக்கின்றார்கள். அவர்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களாகி விட்டார்கள். அவர்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்கியது யார்? இராவணன்! மக்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். அவர்கள் அது தொன்றுதொட்ட காலத்திலிருந்தே தொடர்ந்துள்ளது என்று நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், சத்தியயுகத்தில் இராவண இராச்சியம் இருக்கவில்லை. அவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை. மாயை முற்றாகவே அவர்களின் புத்தியைக் கல்லாக்கி விட்டாள். தந்தை மாத்திரமே உங்களைக் கற்களிலிருந்து தெய்வீகமானவர்களாக மாற்றுகின்றார். நீங்கள் கலியுகத்திற்குச் சென்ற பின்னரே சத்திய யுகமானது ஸ்தாபிக்கப்பட முடியும். தந்தை இதனை விளங்கப்படுத்துகின்றார், ஆனால் இது எவருடைய புத்தியிலும் பகுவதில்லை. குமாரிகளாகிய நீங்கள் இப்பொழுது நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள். அவர் உங்களை அரசிகள் ஆக்குகின்றார். நீங்கள் கடத்தப்பட்டீர்கள், அதாவது, ஆத்மாக்களான உங்களுக்குக் கூறப்பட்டது: நீங்கள் எனக்குரியவர்கள் ஆகினீர்கள், பின்னர் நீங்கள் என்னை மறந்து விட்டீர்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர்களாகி, மாயைக்குச் சொந்தமாகி விட்டீர்கள். எவ்வாறாயினும், ஓடிவிடுதல் அல்லது கடத்தப்படல் என்ற கேள்விக்கே இடமில்லை. சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நினைவில் மாத்திரமே முயற்சி உள்ளது. பலரும் சரீர உணர்வுடையவர்களாகி, பாவச்செயல்களைச் செய்கின்றார்கள். சில ஆத்மாக்கள் தன்னை நினைவுசெய்வதேயில்லை எனத் தந்தைக்குத் தெரியும். அவர்கள் சரீர உணர்வு உடையவர்களாகிப் பெருமளவு பாவங்களைச் செய்வதனால், பாவக் கலசம் நூறு மடங்குகள் நிறைகின்றது. மற்றவர்களுக்குப் பாதையைக் காட்டுவதற்குப் பதிலாக, அவர்கள் தாமே பாதையை மறந்து விடுகின்றார்கள். பின்னர் அவர்கள் மேலும் சீரழிந்தவர்கள் ஆகுகின்றார்கள். இலக்கு மிகவும் உயர்ந்தது. மேலேறுகின்றவர்கள் சுவர்க்க அமிர்தத்தின் இனிமையைச் சுவைக்கின்றார்கள். வீழ்பவர்கள் முற்றாகவே நசுக்கப்படுகின்றார்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. எவ்வளவு வித்தியாசம் உருவாக்கப்பட்டுள்ளது எனப் பாருங்கள்! சிலர் கற்று ஆகாயத்தைத் தொடுகின்றனர், ஆனால் ஏனையோர் பூமியில் வீழ்கின்றனர். அவர்களின் புத்தி மந்தமாக இருந்தால், அவர்களால் கற்க முடியாதுள்ளது. சிலர் தம்மால் ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியாமல் உள்ளது என பாபாவிடம் கூறுகின்றனர். பாபா கூறுகிறார்: சரி, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள், நான் உங்களுக்குச் சந்தோஷத்தை அளிப்பேன். எவ்வாறாயினும் நீங்கள் என்னை நினைவுசெய்வதே இல்லை! நீங்கள் தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் ஏனையோருக்கும் நினைவுபடுத்துவீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்யும்பொழுது, உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நீங்கள் அவரை நினைவு செயயும்வரை, உங்களால் சந்தோஷபூமிக்குச் செல்ல முடியாது. அசரீரியான தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை உங்களால் பெறமுடியும். ஏனைய அனைவரும் தற்காலிகமான சந்தோஷத்தையே கொடுக்கின்றனர். மந்திர சக்தியால் ஒருவருக்குக் குழந்தை கிடைத்தாலோ அல்லது அதிர்ஷ்ட இலாபத்தை வெல்வதற்கான ஆசீர்வாதங்கள் கிடைத்தாலோ, அப்பொழுது அந்த நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. ஒருவர் இரண்டு அல்லது நான்கு மில்லியன்களால் நன்மையைப் பெற்றால், அதனை அவர் யாரிடமிருந்து பெற்றாரோ, அவரைப் புகழ்கிறார், ஆனால் அவை அனைத்தும் தற்காலிகமானது; அவரால் 21 பிறவிகளுக்கான செல்வத்தையோ அல்லது ஆரோக்கியத்தையோ பெற முடியாது. எவ்வாறாயினும் மனிதர்களுக்கு எதுவும் தெரியாது, எனவே நீங்கள் அவர்கள் மீது குறைகூற முடியாது. அவர்கள் தற்காலிகமான சந்தோஷத்தினால் வெறுமனே சந்தோஷமடைகின்றனர். தந்தை குழந்தைகளான உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கிறார். அது மிக இலகுவானது! சிலரால் எதனையும் விளங்கப்படுத்த முடியாமலுள்ளது. சிலர் புரிந்துகொள்கின்றனர், ஆனால் அவர்கள் மிகச்சரியான யோகத்தைக் கொண்டிராததனால், அம்பு எவரையும் தைப்பதில்லை. சரீர உணர்விற்கு வருவதனால் ஏதோவொரு பாவம் செய்யப்படுகிறது. யோகமே பிரதான விடயம். யோக சக்தியின் மூலமே நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். கிருஷ்ணர் அல்லாமல், கடவுளே உங்களுக்குப் புராதன யோகத்தைக் கற்பித்தார்;. நினைவு யாத்திரை மிக சிறந்தது. நீங்கள் ஒரு நாடகத்தைச் சென்று பார்த்திருப்பின் அனைத்துக் காட்சிகளும் உங்கள் மனதில் தோன்றுகின்றன. எவ்வாறாயினும் அதனை இன்னொருவருக்குக் கூறுவதற்கு நேரம் எடுக்கும். இங்கும் அதேபோன்றே உள்ளது. விதையும் விருட்சமும்;; இந்தச் சக்கரம் மிகத் தெளிவாக உள்ளது. இது ஒரு விநாடிக்கான விடயம்: அமைதி தாமமும், சந்தோஷ தாமமும், துன்ப தாமமும் என்பன. எவ்வாறாயினும், நீங்கள் அதனை நினைவுசெய்யக்கூடியதாக இருக்க வேண்டும். தந்தையின் அறிமுகமே பிரதான விடயம். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதன் மூலம், நீங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வீர்கள். அச்சா. சிவபாபா குழந்தைகளான உங்களை நினைவுசெய்கிறார். பிரம்மபாபா உங்களை நினைவுசெய்வதில்லை. தனது தகுதிவாய்ந்த குழந்தைகள் யார் என்பது சிவபாபாவிற்குத் தெரியும். அவர் தனது தகுதிவாய்ந்த, சேவைதாரிக் குழந்தைகளை நிச்சயமாக நினைவுசெய்வார். இவர் எவரையும் நினைவுசெய்ய மாட்டார். இவரது ஆத்மா வழிகாட்டலைப் பெற்றிருக்கிறார்;: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பாக்கியசாலி ஆகுவதற்கு, ஒரேயொரு தந்தையிடம் உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். அன்பைக் கொண்டிருத்தல் என்றால் ஒவ்வோர் அடியிலும் ஒரேயொருவரின் ஸ்ரீமத்தைத் தொடர்ந்தும் பின்பற்றுவதாகும்.

2. நிச்சயமாகப் புண்ணியச் செயல்கள் செய்யுங்கள். அனைத்திலும் மிகப் பெரிய புண்ணியச் செயலானது அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதாகும். தந்தையை நினைவுசெய்வதுடன், அனைவருக்கும் தந்தையை நினைவுபடுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பௌதீகமான வேலையைச் செய்வதுடன், உங்கள் மனம் மூலம் உலக மாற்றம் எனும் பணியையும் செய்கின்ற, ஒரு பொறுப்பான ஆத்மா ஆவீர்களாக.

பௌதீகமான வேலை எதனையும் செய்யும்பொழுது, நீங்கள் உலக மேடையில் உலக நன்மை எனும் சேவைக்கான கருவி எனும் விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். “எனது மேன்மையான மனநிலை மூலம் உலக மாற்றம் எனும் பணியைச் செய்வதற்கான பாரிய பொறுப்பைப் பெற்றுள்ளேன்”. நீங்கள் இவ் விழிப்புணர்வைக் கொண்டிருக்கும்பொழுது, கவனயீனம் அனைத்தும் முடிவடைவதுடன், நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, அதைச் சேமிப்பீர்கள். ஒவ்வொரு விநாடியையும் பெறுமதி அறவிட முடியாததாகக் கருதும்பொழுது, நீங்கள் அதை ஒரு தகுதிவாய்ந்த வழியில் உலக நன்மைக்காகவும், உயிரற்றவை, உயிருள்ளவை ஆகியவற்றை மாற்றுகின்ற பணிக்காகவும் தொடர்ந்தும் பயன்படுத்துவீர்கள்.

சுலோகம்:
இப்பொழுது, சத்திரியர்களாக இருப்பதற்குப் பதிலாக, யோகிகள் ஆகுங்கள்.