14.04.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அகநோக்குடையவராகி, ஞானம் நிறைந்த ஸ்திதியில் நிலைத்திருந்து, இம்மேன்மையான வாசகங்களைக் கிரகியுங்கள். அப்பொழுது உங்களால் உங்களுக்கும், ஏனையோருக்கும் நன்மையளிக்க முடியும். இறைவனின் தெய்வீகக் குணங்கள் நிறைந்த விக்கிரகங்களினால் உங்கள் இதயமும் மனமும் என்ற ஆலயத்தை அலங்கரித்து, தூய எண்ணங்கள் என்ற நறுமணத்தை பரவச் செய்யுங்கள்.கேள்வி:
உண்மையான, அதிமேன்மையான சேவை எது? மிகச்சரியான சேவையின் சூட்சுமமான, ஆழமான இரகசியம் என்ன?பதில்:
ஒருவர் ஒரு தவறைச் செய்யும்பொழுது, அவரை எச்சரிக்கை செய்வதுடன், உங்கள் யோக சக்தியானது சூட்சுமமான வகையில் அவரைச் சென்றடைந்து, அவரின் தூய்மையற்ற எண்ணங்களை அழிக்கட்டும். இதுவே அதிமேன்மையான, உண்மையான சேவையாகும். அத்துடன் உங்கள் மீதும் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனதில் தூய்மையற்ற எண்ணங்கள் எதுவும் எழக்கூடாது. நீங்கள் எச்சரிக்கையாக இருந்து, ஒரு தெய்வீகமான முறையில் பிறருக்குச் சேவை செய்ய வேண்டும். இதுவே சேவையின் சூட்சுமமான, ஆழமான இரகசியமாகும்.ஓம் சாந்தி.
முயற்சி செய்கின்ற ஒவ்வொரு குழந்தையும் நிச்சயமாக முதலில் அகநோக்கு என்ற ஸ்திதியில் இருக்க வேண்டியது அவசியமாகும். அகநோக்கில் பெருமளவு நன்மை அமிழ்ந்துள்ளது. இந்த ஸ்திதியின் மூலம் மாத்திரமே உங்களால் அசைக்க முடியாதவர்களாகவும், நிலையானவர்களாகவும், பொறுமையானவர்களாகவும், பணிவானவர்களாகவும் இருந்து, தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, முற்றிலும் ஞானம் நிறைந்த ஸ்திதியை அடைய முடியும். நீங்கள் அகநோக்கு அற்றவராக இருந்தால் உங்களால் முற்றிலும் ஞானம் நிறைந்த ஸ்திதியை அடைய முடியாது. ஏனெனில் நீங்கள் நேரடியாகச் செவிமடுக்கின்ற மேன்மையான வாசகங்களை நீங்கள் கிரகித்து, அவற்றின் ஆழத்திற்கு செல்லாமல், ஆனால் அந்த மேன்மையான வாசகங்களை வெறுமனே மீண்டும் மீண்டும் கூறினால், அந்த மேன்மையான வாசகங்கள் வெறும் வாசகங்களாக மாத்திரமே இருக்கும். ஒரு ஞானம் நிறைந்த ஸ்திதியில் மேன்மையான வாசகங்கள் செவிமடுக்கப்படாதிருந்தால், அப்பொழுது அந்த மேன்மையான வாசகங்களின் மீது மாயையின் நிழல் படிகின்றது. நீங்கள் செவிமடுத்த மேன்மையான வாசகங்களை நீங்கள் வெறுமனே மீண்டும் மீண்டும் கூறும்பொழுது, அவை மாயையின் தூய்மையற்ற அதிர்வுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. அப்பொழுது அவற்றினால் நீங்களும், பிறரும் நன்மை அடைவதற்குப் பதிலாக இழப்பே அனுபவம் செய்யப்படுகின்றது. “ஓ, குழந்தைகளே, முற்றிலும் அகநோக்குடையவர் ஆகுங்கள்”. உங்கள் மனம் ஓர் ஆலயம் போன்றது. நீங்கள் ஓர் ஆலயத்தில் எப்பொழுதும் வாசனையைப் பரப்பியிருப்பதைப் போலவே, உங்கள் மனம் தூய்மையாகுகின்றபொழுதே தூய்மையான எண்ணங்கள் வெளிவருகின்றன. அசுரர்களின் சிலைகளன்றி, தூய தேவர்களின் விக்கிரகங்களே ஓர் ஆலயத்தில் வைக்கப்படுகின்றன. அவ்வாறே, குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் மனமும்; இதயமும் என்ற ஆலயத்தை அனைத்துத் தெய்வீக குணங்களும் நிறைந்த விக்கிரகங்களினால் அலங்கரிக்க வேண்டும். பற்றிலிருந்து விடுபடல், பேராசையிலிருந்து விடுபடல்;, அச்சத்திலிருந்து விடுபடல், பொறுமை மற்றும் ஆணவமற்றிருத்தல் போன்றவையே அந்தத் தெய்வீகக் குணங்களாகும், ஏனெனில் இவையே உங்கள் தெய்வீகக் குணங்களாகும். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் மனம் என்ற ஆலயத்தை மிகப் பிரகாசமானதாகவும், தெளிவானதாகவும், அதாவது, முற்றிலும் தூய்மையானதாக்க வேண்டும். உங்கள் இந்த ஆலயமானது அந்தளவு பிரகாசமானதாகவும், தெளிவானதாகவும் ஆகும்பொழுதே, உங்களால் மிகவும் அழகான, பிரகாசமான, தெளிவான வைகுந்தத்திற்குச் செல்ல முடியும். நீங்கள் இப்பொழுது உங்கள் மனதை முற்றாகவே பிரகாசமானதாக ஆக்குவதுடன், விகாரங்களின் ஆதிக்கத்திற்குள் இருக்கும் மனம் மற்றும் பௌதீகப் புலன்களைக் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்கின்றீர்கள். உங்களுக்கு மாத்திரம் நீங்கள் சேவை செய்தால் போதுமானதல்ல, நீங்கள் இந்தத் தெய்வீகச் சேவையை ஏனையோருக்கும் செய்ய வேண்டும். உண்மையில் சேவை செய்தல் என்பதன்; அர்த்தமானது மிகவும் சூட்சுமமானதும், ஆழமானதும் ஆகும். சேவை என்பது ஒருவரை அவரது தவறுக்காக எச்சரிப்பது மாத்திரமல்ல் இல்லை. நீங்கள் அவர்களுக்கு உங்கள் யோக சக்தி மூலம் சூட்சும அதிர்வலைகளை அனுப்பி, அவர்களின் தூய்மையற்ற எண்ணங்களை எரிப்பதாகும். இதுவே அதி மேன்மையான, உண்மையான சேவையாகும். அத்துடன், நீங்கள் உங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வார்த்தைகளில், செயல்களில் மாத்திரமல்ல் நீங்கள் உங்கள் மனங்களிலும் எவ்விதமான தூய்மையற்ற எண்ணங்களையும் கொண்டிருக்கக்கூடாது, ஏனெனில் அந்த எண்ணங்களின் அதிர்வலைகள் ஏனைய பலரையும் சென்றடைந்து, சூட்சுமமான ஓர் இழப்பையும் ஏற்படுத்துகின்றன, அது உங்களிலே ஒரு சுமையை உருவாக்குகின்றது; இந்தச் சுமை பின்னர் ஒரு பந்தனம் ஆகுகின்றது. ஆகவே, குழந்தைகளே, நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், மற்றவர்களுக்கான இந்தத் தெய்வீகச் சேவையையும் செய்யுங்கள். இதுவே சேவை செய்யும் குழந்தைகளாகிய உங்களின் அலௌகீகக் கடமையாகும். அத்தகைய சேவையைச் செய்பவர்கள் மற்றவர்களிடமிருந்து எந்தவொரு சேவையையும் பெறக்கூடாது. நீங்கள் ஏதாவது ஒரு பிழையைச் செய்தாலும், உங்கள் புத்தியின் யோக சக்தியால் அதனைச் சதா காலத்திற்குமாகத் திருத்திக் கொள்ளுங்கள். ஒரு தீவிர முயற்சியாளர் ஒரு சிறிய சமிக்ஞையைப் பெற்றவுடனேயே உடனடியாக உணர்ந்துகொண்டு, தன்னை மாற்றிக் கொள்வதுடன், அப்பொழுதிலிருந்து, முன்னேறுகையில், சரியான கவனத்தைச் செலுத்துகின்றார். இதுவே பரந்த புத்தியைக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கடமையாகும். ஓ என் உயிரின் மூச்சே, பரமாத்மாவினால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அழிவற்ற சுய இராச்சியத்திற்கான ஞான யாகத்திற்கு உங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தை முழுமையாக அர்ப்பணிப்பதில் ஆழமான முக்கியத்துவம் இருக்கின்றது. நீங்கள் உங்கள் சரீரம், மனம் மற்றும் செல்வம் போன்ற அனைத்தையும் அர்ப்பணித்து மரணித்து விட்டோம் எனக் கூறும் கணத்தில் இருந்தே, அதாவது, அனைத்தையும் யாகத்தில் அர்ப்பணித்து மரணித்து விட்டீர்கள்; எனக் கூறும் கணத்திலிருந்து, எதுவும் உங்களுககு எஞ்சியிருப்பதில்லை. அதிலும் நீங்கள் முதலில் உங்கள் சரீரம் மற்றும் மனதை முற்றாகவே சேவை செய்வதில் பயன்படுத்த வேண்டும். அனைத்தும் யக்ஞத்திற்கும், கடவுளுக்குமாக இருக்கும்பொழுது, சுயத்திற்காக எதுவுமே மீதமாக இருக்காது, அத்துடன் உங்களால் எந்தச் செல்வத்தையும் வீணாக்கவும் முடியாது. உங்கள் மனமானது தூய்மையற்ற, பாவ எண்ணங்களின் பின்னால் ஓடவும் முடியாது. ஏனெனில் நீங்கள் அதைக் கடவுளுக்கு அர்ப்பணித்துள்ளீர்கள். எவ்வாறாயினும், கடவுள் தூய்மையாகவும், அமைதியாகவும் இருக்கின்றார். இதன் காரணமாகவே தூய்மையற்ற எண்ணங்கள் இயல்பாகவே சாந்தப்படுத்தப்படுகின்றன. நீங்கள் உங்கள் மனதை மாயையின் கரங்களில் ஒப்படைத்தீர்களாயின், மாயை பல்வகை ரூபத்தைக் கொண்டிருப்பதனால் மனமெனும் குதிரை மீது சவாரி செய்கின்ற, பலவகையான பாவகரமான எண்ணங்களும் தோன்ற முடியும். இப்பொழுது, எந்தவொரு குழந்தையேனும் இன்னமும் பாவகரமான எண்ணங்களைக் கொண்டிருந்தால், அவரது மனம் முழுமையாகவே அர்ப்பணிக்கப்படவில்லை, அதாவது அவரது மனம் முழுமையாகவே கடவுளுக்கு உரியதாகவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, முழுமையான துறவறம் உடைய குழந்தைகளே, இப்பொழுது ஆழமான இரகசியங்களைப் புரிந்துகொண்டு, செயல்களைச் செய்யும்பொழுது பற்றற்ற பார்வையாளர்களாகி, உங்களை அவதானித்து, மிகவும் எச்சரிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள். கோபிவல்லபரே, தனது அன்பிற்கினிய கோப கோபியர்களுக்கு உங்கள் உண்மையான, நிஜமான அன்பானது எது என்பதை விளங்கப்படுத்துகின்றார். ஓ எனது அன்பிற்கினியவரே, நீங்கள் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கும் அன்பு நிறைந்த எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஏனெனில் எவ்வளவிற்கு அழகாக ஒரு மலர் இருக்கின்றதோ, அதற்கேற்ப, நீங்கள் பெறுகின்ற பராமரிப்பும் மேன்மையாக உள்ளது. மலர்களைப் பெறுமதி வாய்ந்ததாக்குவதற்கு, ஒரு தோட்டக்காரர் அவற்றிலிருந்து முட்களை அகற்ற வேண்டும். அவ்வாறே, ஒருவர் உங்களை எச்சரித்தால், அவர் உங்களுக்குப் பராமரிப்பையே வழங்கினார், அதாவது அவர் உங்களுக்குச் சேவை செய்கிறார் என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அந்தச் சேவைக்கும், பராமரிப்புக்கும் மரியாதையைக் கொடுக்க வேண்டும். இதுவே முழுமையடைவதற்கான வழிமுறையாகும். இதுவே ஞானம் நிறைந்த உண்மையான உள்ளார்ந்த அன்பாகும். இந்தத் தெய்வீக அன்பின் மூலம், ஒருவர் மற்றவர் மீது பெருமளவு மரியாதையைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு விடயத்திலும் நீங்கள் முதலில் உங்களை எச்சரிக்க வேண்டும். இதுவே மிகவும் இனிமையான, பணிவான ஸ்திதியாகும். இவ்விதமாக அன்புடன் முன்னேறிச் செல்கையில், அது நீங்கள் உள்ளார்த்தமாக, சத்தியயுகத்தின் அந்த அழகிய நாட்களை அனுபவம் செய்வதைப் போன்றிருக்கும். அங்கு, இந்த அன்பு இயல்பாக இருக்கும். எவ்வாறாயினும், சங்கமயுகத்தின் இந்த இனிமையிலும் இனிமையான காலப்பகுதியில், இதுவே ஒருவர் மற்றவருக்குச் சேவை செய்ய வைக்கின்ற, மிக இனிமையான, களிப்பூட்டும் அன்பாகும். இந்தத் தூய்மையான அன்பே உலகில் நினைவுசெய்யப்படுகின்றது. உயிருள்ள மலர்களாகிய நீங்கள் அனைவரும் ஒவ்வொரு கணத்திலும் சதா மலர்ச்சியுடன் இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் உங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருப்பதால், உங்கள் ஒவ்வொரு நாளமும் முற்றாக இறை சக்தியால் நிறைக்கப்படுகின்றது. அத்தகைய கவர்ச்சிகரமான சக்தியானது நிச்சயமாகவே அதன் தெய்வீக அற்புதத்தைக் காட்டுகின்றது. சிறிய அப்பாவிக் குழந்தைகள் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருப்பதால், எப்பொழுதும் புன்னகைத்தவாறு இருப்பதுடன், தமது களிப்பூட்டும் செயற்பாடுகளால் அனைவரையும் பெருமளவுக்குக் கவர்கின்றார்கள். அவ்வாறே, உங்கள் அனைவரது வாழ்க்கையும் தெய்வீகமானதாகவும், களிப்பூட்டுவதாகவும் இருக்கட்டும். இதற்கு, நீங்கள் ஏதாவது ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி உங்கள் அசுர சுபாவங்களுக்கெதிரான வெற்றியை அடைய வேண்டும். கோபத்தின் சுபாவத்தினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ள ஒருவர் உங்களின் முன்னால் வருவதை நீங்கள் பார்த்தால், ஞான சொரூபமாகி, தொடர்ந்தும் ஒரு குழந்தையின் இனிமையுடன் புன்னகை செய்யுங்கள், இயல்பாகவே அந்நபர் சாந்தமாகி விடுவார், அதாவது, தன்னை மறந்த நிலையிலிருந்து, அவர் விழிப்புணர்வு நிலைக்கு வருவார். அவர் அதனைப் பற்றி அறிந்திராதபொழுதிலும், சூட்சுமமான வழியில் அவரை வெற்றி கொண்டு, அதிபதி ஆகுங்கள். இதுவே அதிபதியாகவும், குழந்தையாகவும் இருப்பதற்கான அதி மேன்மையான வழிமுறை ஆகும். எவ்வாறு கடவுள் முழுமையான ஞான சொரூபமாக இருக்கின்றாரோ, அவ்வாறே அவர் முழுமையான அன்பு சொரூபமாகவும் இருக்கின்றார். இந்த இரு குணங்களும் இறைவனில் அமிழ்ந்துள்ளன. ஆனால் முதலில் ஞானமும், இரண்டாவதாகவே அன்பும் இருக்கின்றன. ஒருவர் முதலில் ஒரு ஞான சொரூபம் ஆகாமல், அன்பு சொரூபமாக மாத்திரம் ஆகினால், அந்த அன்பு அவரை ஒரு தூய்மையற்ற கணக்கிற்குள்ளேயே எடுத்துச் செல்கின்றது. இதனாலேயே நீங்கள் அந்த அன்பை அமிழ்த்தி விட்டு, அனைத்திற்கும் முதலில் ஒரு ஞான சொரூபம் ஆகுங்கள். பல வடிவங்களிலும் வரும் மாயையை வெற்றி கொண்டு, பின்னர் ஓர் அன்பு சொரூபமாகுங்கள். ஞானமின்றித் திரான்சில் செல்லும் ஒருவர் மாயைக்குள் சிக்கிக் கொள்ளலாம் அவ்வாறே நீங்கள் ஞானத்தைப் பயன்படுத்தாமல், அன்பானவர் ஆகினால், நீங்கள் திசை திருப்பப்படுவீர்கள். உதாரணமாக, ஒருவர் ஞான (கியான்) சொரூபமாக இருக்காமல், திரான்சில் செல்லும்பொழுது (தியான்), சிலவேளைகளில் மாயையில் சிக்கிக் கொள்கின்றார். இதனாலேயே பாபா கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, அந்தத் திரான்சும் ஒரு பஞ்சுச் சங்கிலி, ஆனால் நீங்கள் ஞான சொரூபமாகிப் பின்னர் திரான்சில் செல்லும்பொழுது, பெருமளவு களிப்பு இருக்கும். ஆகவே, முதலில் ஞானம் உள்ளது, பின்னரே திரான்ஸ் உள்ளது. ஞானம் நிறைந்த ஸ்திதியானது திரான்சில் இருக்கின்ற ஸ்திதியை விடவும் மேன்மையானது. இதனாலேயே, குழந்தைகளே, முதலில் ஞான சொரூபங்கள் ஆகுங்கள், பின்னர் அன்பு வெளிப்படட்டும். இந்த முயற்சி செய்யும் வாழ்க்கையிலே ஞானமில்லாமல், அன்பினை மாத்திரம் கொண்டிருத்தல், தடைகளை உருவாக்குகின்றது. பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியானது மிகவும் களிப்பூட்டுவதும், இனிமையானதும், அழகானதுமான ஸ்திதியாகும். உங்கள் எதிர்கால வாழ்க்கையின் அனைத்தும் இந்த ஸ்திதியிலேயே தங்கியிருக்கின்றது. ஒருவருக்குப் பௌதீகமான நோய் இருக்கும்பொழுது, ஒரு பற்றற்ற பார்வையாளர் எனும் ஸ்திதியில் இருந்து, அந்நேரத்தில் சந்தோஷமாக அந்நோயை அனுபவம் செய்யும்பொழுது, அந்தக் கடந்த காலத்திற்கான கர்ம வேதனை தீர்க்கப்பட்டு விடுவதுடன், எதிர்காலத்திற்கான அவரது சந்தோஷக் கணக்கும் உருவாக்கப்படுகின்றது. இந்தப் பற்றற்ற பார்வையாளர் எனும் சந்தோஷமான ஸ்திதியானது உங்கள் கடந்த காலம், எதிர்காலம் இரண்டுடனும் தொடர்புடையதாகவே இருக்கின்றது. இந்த இரகசியத்தைப் புரிந்துகொண்டால்; இந்த அழகான காலம் கணக்குகளைத் தீர்ப்பதிலேயே கடந்து விட்டது என்று உங்களில் எவரும் கூறமாட்டீர்கள். இல்லை, இது மாத்திரமே இரண்டு பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்படுகின்ற, முயற்சி செய்வதற்கான அழகான காலமாகும். இரு பணிகளையும் நிறைவேற்றும் தீவிர முயற்சியாளர்களாலேயே அதீந்திரிய சுகத்தையும், பேரானந்தத்தையும் அனுபவம் செய்ய முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பெரிய, பல்வகையான நாடகத்தின் ஒவ்வொரு விடயத்திலும் முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் இந்த நிச்சயிக்கப்பட்ட நாடகமானது முற்றாகவே நம்பிக்கையைக் கொடுக்கின்ற ஒன்றாகும். பாருங்கள், இந்த நாடகம் வாழுகின்ற உயிர் ஒவ்வொன்றையும் தங்கள் பாகங்களை முற்றாகவே நடிக்கச் செய்கின்றது. ஒருவர் தவறானவராக இருந்தாலும், அவர் தவறாக நடந்து கொள்ளல் என்ற அந்தப் பாகத்தை முழுமையாகவே நடிக்கின்றார். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. சரி, பிழை அனைத்தும் நாடகத் திட்டத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது, அப்பொழுது எதையிட்டும் எவ்விதமான சந்தேகங்களையும் கொண்டிருப்பது ஞானம் அல்ல, ஏனெனில் ஒவ்வொரு நடிகரும் தனது சொந்தப் பாகத்தை நடிக்கின்றார். ஒரு திரைப்படத்தில், பெயரிடப்பட்டுள்ள பல வகையான நடிகர்கள் அனைவரும் தங்கள் சொந்த நடிப்பை நடிக்கும்பொழுது, நீங்கள் அவர்களைப் பார்த்துச் சிலரை வெறுப்பீர்கள் அல்லது பிறருடன் சந்தோஷமாக இருப்பீர்கள் என்றோ இல்லை; அது அவ்வாறில்லை. அது ஒவ்வொருவரும் தத்தமது சொந்த நல்ல அல்லது தீய பாகத்தைப் பெற்றுள்ள ஒரு நாடகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், நீங்களும் இந்த அநாதியாக உருவாக்கப்பட்ட திரைப்படத்தைத் தொடர்ந்தும் ஒரு பற்றற்ற பார்வையாளராகவும், ஒரு நிலையான, முகமலர்ச்சியான ஸ்திதியுடனும் அவதானிக்க வேண்டும். இந்தக் கருத்துக்கள் அனைத்தும் ஓர் ஓன்றுகூடலிலே மிக நன்றாகக் கிரகிக்கப்பட வேண்டும். தெய்வீக ரூபத்திலேயே ஒருவரையொருவர் பாருங்கள். அனுபவத்தின்; ஞானத்துடன், அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். உங்கள் இலக்கு பற்றிய விழிப்புணர்வுடன், அமைதியாக இருத்தல், பணிவு, பொறுமை, இனிமை மற்றும் குளிர்மை போன்ற தெய்வீகக் குணங்கள் வெளித்தோன்றட்டும். பொறுமையான ஸ்திதியைக் கிரகிப்பதற்கான பிரதான அடிப்படை: “காத்திருந்து பாருங்கள்” என்பதாகும். ஓ, எனது அன்பிற்கினிய குழந்தைகளே, “காத்திருத்தல்” என்றால் பொறுமையாக இருத்தலும், பார்த்தல் எனில் பார்ப்பதுமாகும். அனைத்திற்கும் முதலில், உங்கள் இதயத்தில் பொறுமை என்ற தெய்வீகக் குணத்தைக் கிரகித்து, இந்தப் பல்வகை நாடகத்தை வெளிப்படையாகப் பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள். எந்தவொரு இரகசியத்தையும் நீங்கள் கேட்கும் காலம் நெருங்கி வரும்வரை, நீங்கள் பொறுமை என்ற தெய்வீகக் குணத்தைக் கிரகிக்க வேண்டும். பின்னர், பொறுமை எனும் தெய்வீகக் குணத்துடன், நீங்கள் அந்த இரகசியத்தைச் செவிமடுக்கும்பொழுது, அதனைக் கேட்கையில், தொந்தரவுக்குள்ளாக மாட்டீர்கள். இதனாலேயே, ஓ முயற்சியாளர்களே, சிறிது பொறுத்திருந்து நீங்கள் முன்னேறும்பொழுது, இரகசியங்களைத் தொடர்ந்தும் அவதானியுங்கள். இந்தப் பொறுமை என்ற ஸ்திதியின் மூலமே உங்கள் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். இந்தத் தெய்வீகக் குணம் நம்பிக்கையுடன் தொடர்புபட்டது. உங்கள் புத்தியில் நம்பிக்கையைக் கொண்டிருந்து, பற்றற்ற பார்வையாளர்களாக இருந்து, உங்கள் மலர்ச்சியான முகங்களுடன் ஒவ்வொரு காட்சியையும் அவதானிக்கும்பொழுது, உள்ளார்த்தமாகப் பொறுமையானவர்களாகவும், அசைக்க முடியாதவர்களாகவும் இருப்பீர்கள். இறுதியில் சம்பூரணம் அடையும் தறுவாயில் இந்த ஞான முதிர்ச்சியடைந்த ஸ்திதியையே நீங்கள் கொண்டிருப்பீர்கள். இதனாலேயே இந்தப் பற்றற்ற பார்வையாளர் எனும் இந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதற்கு நீங்கள் நீண்டகாலம் கடுமையாக முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, நாடகத்தில் ஒவ்வொரு நடிகரும் தான் பெற்றுள்ள பாகத்தை நன்றாக நடிப்பதற்கு, அதனை முற்கூட்டியே ஒத்திகை பார்க்க வேண்டும். அவ்வாறே, அன்பான மலர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் வர இருக்கும் மிகக் கடினமான பரீட்சையில் சித்தியெய்துவதற்கு, யோக சக்தியின் மூலம் நிச்சயமாக முற்கூட்டியே ஒத்திகை செய்ய வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் இந்த முயற்சியை நீண்டகாலமாகச் செய்யாது விட்டால்;, தடுமாற்றம் ஏற்படுவதனால் அந்த நேரத்தில் நீங்கள் சித்தியடைய மாட்டீர்கள். இதனாலேயே முதலில் உங்கள் தெய்வீக அத்திவாரத்தை உறுதியாக்கி, அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் உடையவர்கள் ஆகுங்கள். ஞான சொரூபமாக இருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதால், நீங்கள் இயல்பாகவே அமைதி சொரூபமாக இருக்கின்ற ஸ்திதியைக் கொண்டிருக்கின்றீர்கள்;. ஞானம் நிறைந்த குழந்தைகள் முரளியைச் செவிமடுப்பதற்கு ஒன்றாக அமரும்பொழுது, அவர்களைச் சுற்றிலும் ஓர் அமைதி நிறைந்த சூழல் உருவாக்கப்படுகின்றது, ஏனெனில் அவர்கள் மேன்மையான வாசகங்களைச் செவிமடுக்கும்பொழுது, அவை உள்ளே ஆழமாக அவர்களைத் துளைக்கின்றன. அவற்றினுள் ஆழமாகச் செல்வதன் மூலம், அவர்;கள் ஆழமான, இனிய மௌனத்தை அனுபவம் செய்கின்றார்கள். நீங்கள் இதற்கென அமர்ந்திருந்து, விசேட முயற்சியைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஞானம் நிறைந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதனால், நீங்கள் இயல்பாகவே இந்தத் தெய்வீகக் குணத்தினை விருத்தி செய்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து, ஏகாந்தத்தில் அமர்ந்திருக்கும்பொழுது, தூய எண்ணங்களின் அலைகள் வெளிப்படுகின்றன. அந்நேரத்தில், நீங்கள் முற்றாக அப்பால் இருக்கும் ஸ்திதியைக் கொண்டிருக்க வேண்டும். பின்னர், நீங்கள் உங்கள் ஆதியான தூய எண்ணங்களில்; உங்களை ஸ்தாபிப்பதால், ஏனைய எண்ணங்கள் அனைத்தும் இயல்பாகவே சாந்தமடைந்து, உங்கள் மனம் அமைதியாகுகின்றது. உங்களுக்கு நிச்சயமாக உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவதற்குச் சில சக்தி வேண்டும். இதற்கு உங்களுடைய இலக்கிற்காக, தூய எண்ணங்களைக் கிரகியுங்கள். உங்கள் கோட்பாட்டிற்கேற்ப உங்கள் புத்தியானது யோகத்தைக் கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் இயல்பாகவே வேறெந்த எண்ணங்களிலிருந்தும் விடுபட்டிருக்கின்ற ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, நீண்டகாலம் தொலைந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட ஞான நட்சத்திரங்களான, ஞான பூந்தோட்டங்களாக இருக்கின்ற குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாக இருக்கும் பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இலக்கின் விழிப்புணர்வு மூலம் அமைதியாக இருத்தல், பணிவு, பொறுமை, இனிமை, குளிர்மை போன்ற அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள்.2. புத்தியிலே நம்பிக்கை கொண்டு, இந்த நாடகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராகவும், மலர்ச்சியான முகத்துடனும் அவதானித்து, உள்ளார, பொறுமையானவராகவும், அசைக்க முடியாதவராகவும் ஆகுங்கள். நீங்கள் நீண்டகாலமாகப் பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் இருப்பதற்கான கடினமான முயற்சியைச் செய்ய வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அன்பினதும் சக்தியினதும் சொரூபமாக இருப்பதன் சமநிலையைக் கொண்டிருந்து, சேவை செய்வதால், ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.நீங்கள் சதா தந்தைக்கான அன்பை ஒரு கண்ணிலும், தந்தையால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமையின் (சேவை) விழிப்புணர்வை மறு கண்ணிலும் கொண்டிருப்பதைப் போன்று, அதேவிதமாக, ஓர் அன்பான சொரூபமாக இருப்பதுடன், இப்பொழுது ஒரு சக்தி சொரூபமாகவும் ஆகுங்கள். அன்புடன் கூடவே, உங்களால் எவருடைய இதயத்தையும் துளைக்கின்ற வகையில், அத்தகைய சக்தியால் உங்கள் வார்த்தைகள் நிறைந்திருக்கட்டும். ஒரு தாய் தனது குழந்தைககுத் தேவைப்படுகின்ற வாரத்தைகளால் கற்பிக்கின்றார், ஆனால் தாயின் அன்பின் காரணமாக, அவ் வாரத்தைகள் கடினமானவையாக அல்லது கசப்பானவையாக உணரப்படுவதில்லை. அதேபோல், உண்மையான ஞானத்தைத் தெளிவான வார்த்தைகளில் அனைவருக்கும் கூறுங்கள். எவ்வாறாயினும், அவ்வார்த்தைகள் அன்பினால் நிறைந்திருக்கட்டும், அப்பொழுதே நீங்கள் ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.
சுலோகம்:
சர்வசக்திவான் தந்தையை உங்கள் சகபாடி ஆக்குங்கள், அப்பொழுது நீங்;கள் வருந்துதலிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.