சங்கமயுக பிராமண வாழ்க்கையின் மூன்று சிறப்பியல்புகள்.
இன்று, பாப்தாதா சதா அவருடன் வாழ்கின்ற, அவரின் சதா ஒத்துழைக்கும் சேவை சகபாடிகளாகச் சேவை செய்யும், அவருடன் திரும்பிச் செல்லவுள்ள தனது மேன்மையான குழந்தைகள் எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவருடன் வாழ்பவர்கள் என்றால், இலகுவான, இயல்பான யோகி ஆத்மாக்கள் என்று அர்த்தம். சேவையில் சதா ஒத்துழைக்கும் சகபாடிகள் என்றால், ஞானி ஆத்மாக்கள், உண்மையான சேவையாளர்கள் என்று அர்த்தம். அவருடன் செல்பவர்கள் என்றால், சமமாகவும் சம்பூரணமாகவும் உள்ள கர்மாதீத் ஆத்மாக்கள் என்று அர்த்தம். பாப்தாதா குழந்தைகள் எல்லோரிலும் இந்த மூன்று சிறப்பியல்புகளையும் பார்க்கிறார்: எந்தளவிற்கு நீங்கள் இந்த மூன்று விடயங்களிலும் நிரம்பியவர்கள் ஆகியுள்ளீர்கள்? சங்கமயுகத்தின் மேன்மையான பிராமண வாழ்க்கையின் இந்த மூன்று சிறப்பியல்புகளும் அத்தியாவசியமானவை. யோகி ஆத்மாக்கள், ஞானி ஆத்மாக்கள், தந்தைக்குச் சமமான கர்மாதீத் ஆத்மாக்கள். இந்த மூன்று சிறப்பியல்புகளிலும் ஏதாவதொன்று இல்லாமல் போனாலும், நீங்கள் பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்புகளில் நீங்கள் அனுபவசாலி இல்லை என்பதே அதன் அர்த்தம். அதாவது, இன்னமும் உங்களிடம் பிராமண வாழ்க்கையின் முழுமையான சந்தோஷமும் பேறுகளும் இல்லை என்றே அர்த்தம். பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் முழுமையான ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். ‘உங்களின் கொள்ளளவிற்கேற்ப, யோகி ஆகுவீர்களாக! உங்களின் கொள்ளளவிற்கேற்ப, ஞானி ஆகுவீர்களாக!’ என்று அவர் ஆசீர்வாதம் கொடுப்பதில்லை. அத்துடன், சங்கமயுகம் முழுக் கல்பத்திலும் விசேடமான யுகமாகும். இந்த யுகம் என்றால் ஆசீர்வதிக்கப்பட்ட காலப்பகுதி என்று அர்த்தம். ஏனென்றால், இந்த வேளையிலேயே ஆசீர்வாதங்களை அருள்பவர் ஆசீர்வாதங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக வந்துள்ளார். இந்த நேரத்தில் ஆசீர்வாதங்களை அருள்பவர் வருவதால், இந்த நேரமும் ஆசீர்வாதத்தைப் பெறுகிறது. இந்தக் காலப்பகுதிக்கு இந்த ஆசீர்வாதம் உள்ளது. இந்த நேரமே, சகல பேறுகள் என்ற முழுமையான பேற்றினை அனுபவம் செய்வதற்கான நேரமாகும். இது சம்பூரணமான முழுமை ஸ்திதியை அடைவதற்கான ஆசீர்வதிக்கப்பட்ட நேரமாகும். கல்பத்தின் எஞ்சிய காலப்பகுதி முழுவதிலும், உங்களின் செயல்களுக்கேற்ற வெகுமதியையே நீங்கள் பெறுகிறீர்கள். அல்லது, நீங்கள் இயல்பாகவே உங்களின் செயல்களின் பலனைத் தொடர்ந்தும் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நேரத்தில், உங்களின் செயல்களின் ஓரடி, இலகுவாகத் தந்தையிடமிருந்து பலமில்லியன் மடங்கு உதவியைப் பெற்றுத் தருகிறது. சத்தியயுகத்தில், நீங்கள் ஒன்றுக்காகப் பலமில்லியன் மடங்கினைப் பெற மாட்டீர்கள். ஆனால், இந்த நேரத்தில் உங்களின் வெகுமதியாக நீங்கள் எதைப் பெற்றீர்களோ, அதை அனுபவம் செய்வதற்கான உரிமையை அங்கு பெறுவீர்கள். நீங்கள் தொடர்ந்து கீழே வந்து, நீங்கள் சேமித்ததைப் பயன்படுத்துவீர்கள். உங்களின் கலைகள் தொடர்ந்தும் குறைவடையும். முதலாவது யுகம் முடிவிற்கு வரும்போது, நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகளில் இருந்து பதினான்கு சுவர்க்கக் கலைகள் உடையவர் ஆகுவீர்கள், இல்லையா? எவ்வாறாயினும், நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகள் சம்பூரணம் அடையும் வகையில் எப்போது நீங்கள் முழுமையான பேறுகளையும் அனுபவம் செய்தீர்கள்? அந்தப் பேறுகளுக்கான நேரம், இந்த சங்மகயுகமே ஆகும். இந்த வேளையில், தந்தை திறந்த இதயத்துடன் குழந்தைகளின் முன்னால் சகல பேறுகளின் நிரம்பி வழியும் பொக்கிஷக் களஞ்சியத்தை ஆசீர்வாதங்களின் ரூபத்தில், ஆஸ்தியின் ரூபத்தில், பேறுகளின் ரூபத்தில், மூன்று உறவுமுறைகளில், மூன்று ரூபங்களிலும் உங்களின் கல்வியின் பெறுபேறாக வழங்குகிறார். அவரின் கணக்கைப் பேணும்போது, நீங்கள் செய்யும் அளவிற்கு மட்டும் அவர் கொடுப்பதில்லை. ஒன்றுக்குப் பதிலாக அவர் பலமில்லியன் மடங்கினை உங்களுக்குக் கொடுக்கிறார். ‘உங்களின் சொந்த முயற்சியைச் செய்து, அதற்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!’ என அவர் கூறுவதில்லை. ஆனால், ஒரு கருணைநிறைந்த அருள்பவராகவும், பாக்கியத்தை அருள்பவராகவும், நீங்கள் அவருடன் சகல உறவுமுறைகளையும் வைத்திருப்பதனால், அவர் ஒவ்வொரு விநாடியும் உங்களின் உதவியாளர் ஆகுகிறார். உங்களின் ஒரு விநாடி தைரியத்தினூடாக, உங்களின் முயற்சி பல வருடங்களாக இருப்பதைப் போல், சதா உங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் அவர் உதவி செய்கிறார். ஏனென்றால், நீங்கள் பலவீனமானவர்கள் என்றும், பல பிறவிகளாக அலைந்து திரிந்த ஆத்மாக்கள் என்றும் அவர் அறிவார். இதனாலேயே, இந்தளவிற்கு அவர் தனது ஒத்துழைப்பை வழங்குகிறார். அவர் உங்களின் உதவியாளர் ஆகுகிறார். நீங்கள் சகல வகையான சுமைகளையும் அவரிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்பை அவர் உங்களுக்குத் தருகிறார். சுமைகளைச் சுமப்பதற்கு அவர் முன்வருகிறார். பாக்கியத்தை அருள்பவராக, அவர் உங்களை ஞானம் நிறைந்தவர்கள் ஆக்குகிறார். அவர் தெளிவாக மேன்மையான செயல்களின் ஞானத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவதுடன், உங்களின் பாக்கிய ரேகையை வரைவதற்கான பேனாவையும் உங்களிடம் கொடுத்துள்ளார். நீங்கள் விரும்பிய அளவு நீளமான பாக்கிய ரேகையை உங்களால் வரைந்து கொள்ள முடியும். நிரம்பி வழியும் பொக்கிஷங்கள் எல்லாவற்றினதும் சாவியையும் அவர் உங்களின் கைகளில் தந்துள்ளார். அந்தச் சாவியானது மிகவும் இலகுவானது. மாயையின் எந்தவிதமான புயல்கள் வந்தாலும், அவர் பாதுகாப்புக் குடை ஆகுகிறார். உங்களைச் சதா பாதுகாப்பாக வைத்திருக்கிறார். உங்களிடம் பாதுகாப்புக் குடை இருக்கும்போது, புயல்களால் என்ன செய்துவிட முடியும்? அவர் உங்களைச் சேவையாளர்கள் ஆக்குகிறார். அத்துடன், விவேகிகளின் புத்தியாகி, ஆத்மாக்களின் புத்திகளைத் தொடுகிறார். இதனால் குழந்தைகளின் பெயர் போற்றப்படுகின்றன. தந்தையின் பணியும் இலகுவாக நிறைவேறுகிறது. அவர் உங்களுக்கு அதிகளவு அன்பையும் நேசத்தையும் கொடுப்பதன் மூலம் தனது அதியன்பிற்குரிய குழந்தைகளான உங்களைப் பராமரிக்கிறார். அவர் சதா உங்களைப் பலவிதமான ஊஞ்சல்களில் வைத்து ஆட்டுகிறார். உங்களின் பாதங்கள் தரையில் தொடுவதற்கு அவர் அனுமதிப்பதில்லை. நீங்கள் சிலவேளைகளில் களிப்பு என்ற ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். சிலவேளைகளில் சந்தோஷ ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். சிலவேளைகளில் தந்தையின் மடியெனும் ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். சிலவேளைகளில், நீங்கள் தொடர்ந்து ஆனந்தம், அன்பு, அமைதி என்ற ஊஞ்சல்களிலும் ஆடுகிறீர்கள். ஊஞ்சலில் ஆடுதல் என்றால் சந்தோஷமாக இருத்தல் என்று அர்த்தம். இந்தப் பேறுகள் அனைத்தும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நேரத்தின் சிறப்பியல்புகளாகும். இந்த வேளையில், ஆசீர்வாதங்களை அருள்பவர், பாக்கியத்தை அருள்பவராகவும் இருக்கிறார். ஏனென்றால், அவர் சகல உறவுமுறைகளின் பொறுப்பையும் நிறைவேற்றும் தந்தை ஆவார். தந்தை கருணைநிறைந்தவர். ஒன்றுக்குப் பதிலாகப் பலமில்லியன் மடங்கு பலனைக் கொடுப்பதே இந்த நேரத்திற்குரிய வழிமுறையாகும். இறுதியில், சகல கர்மக்கணக்குகளையும் தீர்த்து வைக்கும் தனது சகபாடியின் உதவியை அவர் பெற்றுக் கொள்வார். அவரின் சகபாடி யார் என உங்களுக்குத் தெரியுமல்லவா? ஒன்றுக்குப் பதிலாகப் பலமில்லியன் மடங்கினைப் பெற்றுக் கொள்ளும் இந்தக் கணக்கு முடிந்துவிடும். தற்சமயம், அவர் கருணைநிறைந்தவர். ஆனால், பின்னர் கர்மக் கணக்குகளைத் தீர்க்கும் நேரம் ஆரம்பமாகிவிடும். இந்த நேரத்தில், அவர் உங்களை மன்னித்தும் விடலாம். ஒரு மிகக் கடுமையான தவறையும் அவர் மன்னிக்கக்கூடும். உங்களின் உதவியாளராக, உங்களை அவர் முன்னால் பறக்கச் செய்வார். உங்களின் இதயத்தில் அதைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல் என்றால் மன்னிக்கப்படுதல் என்று அர்த்தம். இங்கு, உலகிலுள்ள மக்கள் மன்னிப்புக் கேட்பதைப் போல் நீங்கள் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. தவறைப் புரிந்துகொள்ளும் முறையே, மன்னிப்பாகும். எனவே, உங்களின் இதயபூர்வமாக அதைப் புரிந்து கொள்ளுங்கள். யாராவது கூறியதால் அல்லது அந்த நேரத்தில் அந்தச் சூழ்நிலையை மாற்றும் இலக்குடன் நீங்கள் மன்னிப்புக் கேட்டால், மன்னிப்புக் கிடைக்காது. சில குழந்தைகள் இன்னமும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சூழலைப் பார்த்து, ‘குறைந்தபட்சம் இந்தத் தடவை நான் இதைப் புரிந்து கொண்டு, மன்னிப்புக் கேட்கிறேன், பின்னர் என்ன நிகழும் என்று பார்ப்போம்.....’ எனக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், தந்தையும் ஞானம் நிறைந்தவர். அவருக்குத் தெரியும். அவர் புன்னகைத்து, அதை விட்டுவிடுகிறார். ஆனால், அவர் மன்னிப்பதில்லை. சரியான வழிமுறையைப் பயன்படுத்தாமல் நீங்கள் வெற்றி அடைய மாட்டீர்கள், இல்லையா? ஓரடியே வழிமுறையாகும். அதன் பெறுபேறு, பலமில்லியன்மடங்கு அடிகள். எவ்வாறாயினும், அந்த ஓரடிக்கான வழிமுறை குறைந்தபட்சம் மிகச்சரியாக இருக்க வேண்டும், இல்லையா? எனவே, இந்த நேரத்திற்கு எத்தனை சிறப்பியல்புகள் உள்ளன என்றும், இந்த நேரம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டது என்றும் உங்களுக்குக் கூறப்பட்டது.
ஆசீர்வாதங்களை வழங்கும் நேரத்தில் நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறாவிட்டால், வேறு எந்த நேரத்தில் நீங்கள் அவற்றைப் பெறுவீர்கள்? காலம் முடியும்போது, அந்தக் காலத்திற்கேற்ப, இந்த நேரத்தின் சிறப்பியல்புகளும் முடிவிற்கு வந்துவிடும். ஆகவே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, நீங்கள் எதையெல்லாம் எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, நீங்கள் எதையெல்லாம் உருவாக்க விரும்புகிறீர்களோ, அதைத் தந்தையின் உதவியானது ஆசீர்வாதத்தின் ரூபத்தில் இருக்கும் இந்த நேரத்தில் செய்யுங்கள், உருவாக்குங்கள். இந்த வைரம்போன்ற வாய்ப்பு மீண்டும் உங்களுக்குக் கிடைக்காது. இந்த நேரத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி நீங்கள் செவிமடுத்தீர்கள். இந்த நேரத்தின் சிறப்பியல்புகளின் அடிப்படையில், உங்களுக்குக் கூறப்பட்ட, பிராமண வாழ்க்கையின் மூன்று சிறப்பியல்புகளாலும் நிறைந்தவர் ஆகுங்கள். உங்கள் அனைவரினதும் விசேடமான சுலோகன், யோகி ஆகுவீர்களாக, தூய்மை ஆகுவீர்களாக என்பதேயாகும். ஞானி ஆகுவீர்களாக, கர்மாதீத் ஆகுவீர்களாக. நீங்கள் தந்தையுடன் திரும்பிச் செல்ல வேண்டியிருப்பதால், அவருடன் எப்போதும் இருப்பவர்களே, அவருடன் திரும்பிச் செல்வார்கள். எப்போதும் அவருடன் இருக்காதவர்களால் எவ்வாறு அவருடன் திரும்பிச் செல்ல முடியும்? அந்த நிலையில், அவருடன் உரிய நேரத்தில் செல்வதற்கு நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள். ஏனென்றால், தந்தைக்குச் சமமாக இருத்தல் என்றால், தயாராக இருத்தல் என்று அர்த்தம். சமமாக இருத்தல் என்றால், உங்களின் கையை பாபாவின் கையின் மேல் வைத்து, அவரின் சகவாசத்தில் இருத்தல் என்று அர்த்தம். இல்லாவிட்டால் என்ன நிகழும்? முன்னால் இருப்பவர்களைப் பார்த்தவண்ணம், நீங்கள் பின்தங்கிவிட்டால், அதைச் சகபாடியாக இருத்தல் எனக்கூறமுடியாது, இல்லையா? சகபாடிகள் ஒன்றாகவே செல்வார்கள். நீண்ட காலத்திற்கு அவரின் சகபாடியாக இருப்பதற்கு, ஒரு சகபாடியாக ஒத்துழைக்க வேண்டும். நீண்ட காலத்திற்கான இந்த சம்ஸ்காரமே, உங்களை ஒரு சகபாடி ஆக்குவதுடன், அவருடன் சேர்ந்து செல்லவும் வைக்கும். இப்போதும் நீங்கள் அவருடன் இல்லாவிட்டால், நீங்கள் தொலைவிலேயே இருப்பதை அது நிரூபிக்கிறது. எனவே, தொலைவில் இருக்கும் சம்ஸ்காரம், அவருடன் திரும்பிச் செல்லும் நேரத்திலும் உங்களைத் தொலைவிலேயே இருக்கச் செய்யும். ஆகவே, இப்பொழுதில் இருந்தே மூன்று சிறப்பியல்புகளையும் சோதித்துப் பாருங்கள். எப்போதும் அவருடனேயே இருங்கள். தந்தையின் சதா சகபாடியாகி, சேவை செய்யுங்கள். தந்தையே உங்களைச் செயல்பட வைக்கும் ஒரேயொருவர் ஆவார். நீங்கள் செயல்களைச் செய்யும் கருவிகள் ஆவீர்கள். அப்போது சேவையானது உங்களை ஒருபோதும் தளம்பச் செய்யாது. நீங்கள் தனியே இருக்கும்போது, ‘நான்’ என்ற உணர்வு உங்களுக்குள் இருக்கும். அப்போது மாயை என்ற பூனையும் மியாவ் எனக் கத்துவாள். நீங்கள், ‘மே, மே (நான்)’ எனக் கூறுகிறீர்கள். அவளும், ‘மி ஆவ், மி ஆவ் (நான் வருகிறேன்)’ எனக் கூறுகிறாள். மாயை ஒரு பூனை எனக் கூறப்படுகிறதல்லவா? எனவே, ஒரு சகபாடியாகி, சேவை செய்யுங்கள். கர்மாதீத் ஆகுவதன் வரைவிலக்கணமும் மிகவும் ஆழமானது. பாபா வேறொரு வேளையில் அதைப் பற்றி உங்களுக்குக் கூறுவார்.
இன்று, இந்த மூன்று விடயங்களையும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் இந்த நேரத்தின் சிறப்பியல்புகளின் நன்மையை எந்தளவிற்குப் பெற்றுள்ளீர்கள் எனப் பாருங்கள். காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுதல் என்றால் மகான் ஆகுதல் என்று அர்த்தம். தன்னையும் தந்தையும் அறிந்து கொள்ளுதல் எத்தனை முக்கியமோ, அந்தளவிற்குக் காலத்தைப் பற்றி அறிந்து கொள்வதும் முக்கியமாகும். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனப் புரிந்து கொண்டீர்களா? பாப்தாதா அமர்ந்து, பெறுபேறுகளை அறிவிக்க முன்னர், உங்களின் சொந்தப் பெறுபேற்றைப் பாருங்கள். இது ஏனென்றால், பாப்தாதா பெறுபேறுகளை அறிவிக்கும்போது, நீங்கள் அந்தப் பெறுபேறுகளைக் கேட்டதும், இப்போது அவை அறிவிக்கப்பட்டுவிட்டன, இப்போது நான் என்ன செய்வது? என நினைப்பீர்கள். இப்போது, நான் எப்படிப்பட்டவனோ, என்ன செய்கிறேனோ, நான் நன்றாகவே இருக்கிறேன். இதனாலேயே, பாப்தாதா இப்போதும் கூறுகிறார்: இதைச் சோதியுங்கள், அதைச் சோதியுங்கள். பாபா உங்களுக்கு மறைமுகமாகப் பெறுபேறுகளைக் கூறுகிறார். ஏனென்றால், அவர் உங்களுக்குப் பெறுபேறுகளைத் தருவார் என்று உங்களுக்கு முன்கூட்டியே கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு நேரமும் வழங்கப்பட்டுள்ளது. சிலவேளைகளில் உங்களுக்கு ஆறு மாதங்களும், சிலவேளைகளில் ஒரு வருடமும் கொடுக்கப்படுகின்றன. ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன, பாபா இன்னமும் எங்களுக்கு எதையும் கூறவில்லை எனச் சிலர் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், உங்களுக்கு முன்னரே கூறியதுபோல், பாபா கருணை நிறைந்தவராக இருப்பதற்கும், ஆசீர்வாதங்களுக்கும் இன்னமும் சிறிது நேரம் உள்ளது. தற்சமயம், சித்திரகுப்தன் (கணக்குகளை வைத்திருப்பவர்) மறைமுகமாகவே இருக்கிறார். அவர் பின்னரே வெளிப்படுத்தப்படுவார். இதனாலேயே, தந்தைக்கு இன்னமும் கருணை உள்ளது. ‘ஓகே, அவர்களுக்கு இன்னும் ஒரு வருடத்தைக் கொடுங்கள், எப்படியிருந்தாலும், அவர்கள் என் பிள்ளைகள்தானே.’ தந்தை விரும்பினால், அவரால் என்னதான் செய்ய முடியாது? அவரால் ஒவ்வொருவரைப் பற்றியும் சகலதையும் அறிவிக்க முடியும். அவர் கள்ளங்கபடமற்ற பிரபு எனச் சிலர் நினைக்கிறார்கள். எனவே, சில குழந்தைகள் இப்போதும் பாபாவை கள்ளங்கபடமற்றவராகவே நினைக்கிறார்கள். அவர் கள்ளங்கபடமற்ற பிரபுவே. ஆனால், அவர் மகாகாலனும் ஆவார். இப்போது அவர் அந்த ரூபத்தைக் குழந்தைகளிடம் காட்டுவதில்லை. இல்லாவிட்டால், உங்களால் அவரின் முன்னாலேயே நிற்க முடியாது. இதனாலேயே, அவர் கள்ளங்கபடமற்ற பிரபு ஆகுகிறார். அனைத்தையும் அறிந்திருந்தாலும், அவர் அறியாதவர் போல் ஆகிவிடுகிறார். ஏன்? குழந்தைகளைச் சம்பூரணமானவர்கள் ஆக்குவதற்காகவே. உங்களுக்குப் புரிகிறதா? இந்தக் காட்சிகள் அனைத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா தொடர்ந்து புன்னகை செய்கிறார். நீங்கள் என்ன விளையாட்டுக்களை விளையாடுகிறீர்கள்! அவர் அனைத்தையும் தொடர்ந்து அவதானிக்கிறார். ஆகவே, பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்புகளை உங்களில் சோதித்துப் பார்த்து, உங்களைச் சம்பூரணமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அச்சா.
எங்கும் உள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும், யோகி ஆத்மாக்களுக்கும், ஞானி ஆத்மாக்களுக்கும், தந்தைக்குச் சமமான கர்மாதீத், மேன்மையான ஆத்மாக்களுக்கும், சுயத்தினதும் காலத்தினதும் முக்கியத்துவத்தை அறிந்து மகான் ஆகும் மகாத்மாக்களுக்கும், தந்தையுடன் சகல உறவுமுறைகளைக் கொண்டிருப்பதுடன் பேறுகளினதும் நன்மையை சதா பெறுகின்ற பரந்த, சுத்தமான புத்திகளைக் கொண்டுள்ள தூய, விவேகி குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் சதா உங்களைச் சகல சக்திகளும் நிரம்பிய மாஸ்ரர் சர்வசக்திவானாக அனுபவம் செய்கிறீர்களா? தந்தை சகல சக்திகளின் பொக்கிஷத்தை உங்களின் ஆஸ்தியாக வழங்கியுள்ளார். எனவே, சகல சக்திகளும் உங்களின் ஆஸ்தியாகும். அதாவது, அவை உங்களின் பொக்கிஷங்கள் ஆகும். உங்களின் பொக்கிஷங்கள் உங்களுடன் இருக்கிறதல்லவா? தந்தை அவற்றை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதனால் அவை குழந்தைகளுடையவை ஆகின. எனவே, நீங்கள் இயல்பாகவே உங்களுக்குச் சொந்தமானதை நினைவுசெய்வீர்கள். அவை அனைத்தும் அழிகின்ற விடயங்கள். ஆனால், ஆஸ்தியும் சக்திகளும் அழியாதவை. இன்று, நீங்கள் ஆஸ்தியைப் பெற்று, நாளை அவை முடிந்துவிடும் என்பதல்ல. இன்று உங்களுடன் அவை இருக்கும், நாளை யாராவது அவற்றை எரிப்பார்கள் அல்லது கொள்ளை அடிப்பார்கள் என்பதல்ல. எந்தளவிற்கு நீங்கள் அவற்றைச் செலவழிக்கிறீர்களோ, அந்தளவிற்கு அவை அதிகரிக்கும். நீங்கள் எந்தளவிற்கு ஞானப் பொக்கிஷங்களைப் பகிர்ந்தளிக்கிறீர்களோ, அந்தளவிற்கு அவை தொடர்ந்து அதிகரிக்கும். நீங்கள் இயல்பாகவே தொடர்ந்து சகல வசதிகளையும் பெறுவீர்கள். எனவே, நீங்கள் உங்களின் ஆஸ்தியை எல்லா வேளைக்குமாகப் பெற்றுள்ளீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறதல்லவா? இந்த ஆஸ்தி மிக மேன்மையானது. எதுவும் பெறப்படாமல் இருக்காது. உங்களிடம் சகல பேறுகளும் உள்ளன. அச்சா.
அமிர்தவேளையில் விடைபெறும் வேளையில், பாப்தாதா தாதிகளையும் தாதி நிர்மல்சாந்தாவையும் சந்திக்கிறார்.
மகாராத்திகளின் ஒவ்வோர் அடியிலும் சேவை உள்ளது. நீங்கள் எதையாவது கூறினாலென்ன கூறாவிட்டாலென்ன, ஒவ்வொரு செயலிலும் ஒவ்வோர் அடியிலும் சேவை உள்ளது. ஒரு விநாடியேனும் உங்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. நீங்கள் மனதின் மூலமோ, வார்த்தைகளின் மூலமோ, அல்லது உறவுகள் மற்றும் தொடர்புகளின் மூலமோ, எவ்வாறு சேவை செய்தாலும், நீங்கள் சதா யோகிகளும் சதா சேவையாளார்களும் ஆவீர்கள். இது நல்லது. நீங்கள் மதுவனத்தில் சேமித்த பொக்கிஷங்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்துச் சேவை செய்வதற்காகச் செல்கிறீர்கள். மகாராத்திகளுக்கு, ஓரிடத்தில் தங்கியிருப்பதும் ஆத்மாக்களுக்கு ஒரு பௌதீக ஆதாரம் ஆகிவிடும். தந்தை எவ்வாறு பாதுகாப்புக் குடையாக இருக்கிறாரோ, அவ்வாறே, தந்தைக்குச் சமமாக இருக்கும் குழந்தைகளும் பாதுகாப்புக் குடை ஆகுகிறார்கள். உங்களைப் பார்ப்பதில் அனைவரும் மிகவும் சந்தோஷம் அடைகிறார்கள். எனவே, இது மகாராத்திகள் எல்லோருக்கும் ஓர் ஆசீர்வாதம் ஆகும். உங்களின் கண்களில் ஆசீர்வாதம் உள்ளது. உங்களின் நெற்றியில் ஆசீர்வாதம் உள்ளது. எத்தனை ஆசீர்வாதங்கள் உங்களிடம் உள்ளன! செயல்களைச் செய்யும் பௌதீக அங்கங்கள் அனைத்திற்கும் ஓர் ஆசீர்வாதம் உள்ளது. நீங்கள் மக்களைப் பார்க்கும்போது அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? ஆத்மாக்களான உங்களின் கண்களினூடாக தாம் தந்தையின் கண்களை அனுபவம் செய்வதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். எனவே, கண்களுக்கும் ஆசீர்வாதம் இருக்கிறதல்லவா? வாய்க்கும் ஓர் ஆசீர்வாதம் உள்ளது. முகத்திற்கும் ஓர் ஆசீர்வாதம் உள்ளது. ஒவ்வோர் அடிக்கும் ஓர் ஆசீர்வாதம் உள்ளது. உங்களிடம் பல ஆசீர்வாதங்கள் உள்ளன. நீங்கள் அவற்றை எண்ணுவீர்களா? நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறீர்கள். ஆனால் நீங்கள் முன்கூட்டியே ஆசீர்வாதங்களைப் பெற்றுவிட்டீர்கள். நீங்கள் என்ன அடியை எடுத்து வைத்தாலும், உங்களின் மடியானது ஆசீர்வாதங்களால் நிரம்புகிறது. இலக்ஷ்மியின் ரூபத்தில், அவரின் கைகளில் இருந்து அனைவரும் தொடர்ந்து செல்வத்தைப் பெறுவதைப் போல் காட்டியுள்ளார்கள். அது குறுகிய காலத்திற்குரியது அல்ல. ஏனென்றால், அவர் எல்லா வேளைக்கும் செல்வத்தின் தேவியாகி, தொடர்ந்து செல்வத்தைப் பகிர்ந்தளிக்கிறார். எனவே, இது யாருடைய ரூபம்?
எனவே, உங்களிடம் பல ஆசீர்வாதங்கள் உள்ளன. எந்த ஆசீர்வாதங்களும் விடுபடவில்லை எனத் தந்தை கூறுகிறார். எனவே, அவர் எதைக் கொடுப்பார்? நீங்கள் ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்பட்டவண்ணம் முன்னேறுகிறீர்கள். அவர் தனது கரத்தை அசைத்தார், ஆசீர்வாதங்கள் பெறப்பட்டன எனக் கூறப்படுகிறது. எனவே, ‘நீங்கள் சமமானவர் ஆகுவீர்களாக’ என்ற ஆசீர்வாதத்தைத் தந்தை வழங்கினார். இதனூடாக, நீங்கள் சகல ஆசீர்வாதங்களையும் பெற்றுள்ளீர்கள். தந்தை அவ்யக்த் ஆகியபோது, அவர் குழந்தைகள் எல்லோருக்கும், ‘நீங்கள் சமமானவர் ஆகுவீர்களாக’ என்ற ஆசீர்வாதத்தை வழங்கினார். அவர் இதைத் தனக்கு முன்னால் இருப்பவர்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை. அவர் அதை எல்லோருக்கும் கொடுத்துள்ளார். மகாவீரர்கள் அனைவரும் தந்தையின் முன்னால் சூட்சுமமான ரூபத்தில் இருந்து, இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள். அச்சா.
உங்கள் எல்லோருக்கும் ஆசீர்வாதங்களும் உள்ளன. மருந்தும் உள்ளது. இதனாலேயே, பெரியதொரு நோயும் சிறியதாகி விடுகிறது. அது தனது ரூபத்தைக் காட்டுகிறது. ஆனால் அதனால் உங்களைத் தாக்க முடியாது. அது சிலுவையில் இருந்து ஒரு முள்ளாக மாறுகின்ற ரூபத்தைக் காட்டுகிறது. எவ்வாறாயினும், உங்களிடம் எப்போதும் தந்தையின் கரமும் அவரின் சகவாசமும் உள்ளன. ஒவ்வோர் அடியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும், நீங்கள் தொடர்ந்து தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களையும் மருந்தையும் பெறுகிறீர்கள். ஆகவே, கவலையற்றவராக இருங்கள். (நான் எப்போது இதிலிருந்து விடுபடுவேன்?) மிகவும் சுதந்திரமானவர் ஆகுங்கள். அப்போது உங்களால் சூட்சும வதனத்திற்கு வரமுடியும். மற்றவர்களும் இதனூடாகச் சக்தியைப் பெறுவார்கள். உங்களின் நோய் உங்களுக்குச் சேவை செய்கிறது. எனவே, இந்த நோய் என்பது நோயில்லை. ஆனால் சேவை செய்வதற்கான வழிமுறையாகும். இல்லாவிட்டால், உங்கள் எல்லோருக்கும் உதவி உள்ளது, உங்களுக்கு வேறெந்த அனுபவமும் இருப்பதில்லை என எல்லோரும் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இது தனது ரூபத்தைச் சிறிது காட்டுகிறது. ஏனென்றால், நீங்கள் அனுபவசாலி ஆகவேண்டும். அதன்மூலம் மற்றவர்களுக்குத் தைரியம் கொடுக்கும் சேவையை உங்களால் செய்ய முடியும். இல்லாவிட்டால், எல்லோருக்கும் மனவிரக்தி ஏற்பட்டுவிடும். நீங்கள் ஒரு மாதிரி போல் இருக்கும் சிறியதொரு ரூபத்தையே காண்கிறீர்கள். ஆனால் உங்களின் கணக்கில் பெரும்பகுதியைத் தீர்த்து விட்டீர்கள். அதன் சிறியதொரு சுவடு மட்டுமே எஞ்சியுள்ளது. அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்களிடம்: உங்களின் இதயத்தில் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நல்லாசிகளைக் கொண்டிருத்தல் என்றால் இதயபூர்வமான நன்றிகளைப் பெறுதல் என்று அர்த்தம். ஒவ்வொரு குழந்தையும் தொடர்ந்து ஒவ்வோர் அடியிலும் தந்தையின் இதயபூர்வமான நன்றிகளைப் பெறுகிறார். இந்த சங்கமயுகமே எல்லா ஆத்மாக்களுக்கும் எல்லா நேரத்திற்குமான நன்றிகளைத் தெரிவிப்பதற்கான நேரமாகும். சங்கமயுகம் முழுவதுமே நன்றிதெரிவிக்கும் நாள் ஆகும். தந்தை செய்வதைப் போல், சதா தொடர்ந்து ஒருவருக்கொருவர் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் வழங்குங்கள். அச்சா.