22-04-2021 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்


இனிய குழந்தைகளே, தந்தை பாரதத்தை மீட்பதற்கு வந்துவிட்டார். இவ்வேளையில் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் உதவியாளர்களாக ஆகிவிட்டீர்கள். பாரதம் மாத்திரமே புராதன தேசம் ஆகும்.

கேள்வி:

நீங்கள் உயர்ந்த இலக்கை அடைவதிலிருந்து உங்களைத் தடுக்கின்ற அற்ப விடயங்கள் எவை?

பதில்:

எதன் மீதாவது சிறிதளவு ஆர்வம் இருந்தாலோ, உங்களுக்குக் கவர்ச்சியிலிருந்து விடுபட்டிருப்பதற்கான ஒரு மனோநிலை இல்லாவிட்டாலோ, உங்கள் புத்தி சிறந்த ஆடைகளை அணிவதிலும் அல்லது சிறந்த உணவை உண்பதிலும் ஈடுபட்டிருந்தாலோ, அவ்விடயங்கள் உங்களை உயர் இலக்கை அடைவதிலிருந்து தடுக்கும். இதனாலேயே பாபா கூறுகிறார்: குழந்தைகளே, எளிமையைக் கொண்டிருங்கள். நீங்கள் அனைத்து விடயங்களையும் மறக்க வேண்டும். உங்கள் சரீரம் கூட நினைவுசெய்யப்படக்கூடாது.

ஓம் சாந்தி. இப்பாரதமே அழிவற்ற தேசம் எனவும், அதன் உண்மையான பெயர் பாரதம் எனவும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது; இந்துஸ்தான் என்னும் பெயர் பின்னரே கொடுக்கப்பட்டது. பாரதம் ஆன்மீக தேசம் என அழைக்கப்படுகிறது. அது புராதன தேசமாகும். புதிய உலகில் பாரத தேசம் இருந்தபொழுது, அங்கு வேறு தேசங்கள் இருக்கவில்லை. இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் என்பனவே பிரதான சமயங்களாகும். இப்பொழுது பல்வேறு தேசங்கள் இருக்கின்றன! பாரதம் அழிவற்ற தேசமாகும். அது சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. புதிய உலகில், பாரதம் என்னும் ஒரு தேசம் மாத்திரமே இருக்கிறது. பரமாத்மாவாகிய பரமதந்தையான, சுவர்க்கத்தைப் படைப்பவராகிய, சுவர்க்கக் கடவுளாகிய, தந்தையே புதிய உலகைப் படைப்பவர் ஆவார். இப்பாரதம் அழிவற்ற தேசம் என்பதைப் பாரத மக்கள் அறிவார்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. ஒருவர் மரணிக்கும்பொழுது, சுவர்க்கம் மேலே இருப்பதால், அவர் சுவர்க்கத்துக்குச் சென்றுவிட்டார் என மக்கள் கூறுகிறார்கள். தில்வாலா ஆலயத்தில், மேலே கூரையில், அவர்கள் சுவர்க்கத்தின் உருவங்களைக் காண்பித்துள்ளார்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்பது எவருடைய புத்தியிலும் புகுவதில்லை, ஆனால் அது இப்பொழுது அவ்வாறில்லை; அது இப்பொழுது நரகமாக உள்ளது. இது அறியாமையாகும். இரு விடயங்கள் உள்ளன: ஞானமும், அறியாமையும். ஞானம் பகல் என அழைக்கப்படுகிறது, அறியாமை இரவு என அழைக்கப்படுகிறது. "உச்சளவு ஒளியும், உச்சளவு இருளும்” எனக் கூறப்பட்டுள்ளது. ஒளி என்றால், எழுச்சியும், இருள் என்றால், வீழ்ச்சியுமாகும். மக்கள் சூரிய அஸ்தமனத்தைக் காணச் செல்கிறார்கள், ஆனால் அது ஓர் எல்லைக்குட்பட்ட விடயமாகும். அதற்காகக் கூறப்பட்டுள்ளது: பிரம்மாவின் பகலும், பிரம்மாவின் இரவும். பிரம்மா மக்களின் தந்தை ஆவார். ஆகவே, அவர் நிச்சயமாக மக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். சற்குரு ஞானத் தைலத்தைக் கொடுக்கும்பொழுது, அறியாமை இருள் அகல்கிறது. உலகிலுள்ள எவரும் இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதில்லை. இது புதிய உலகத்துக்கான புதிய ஞானமாகும். சுவர்க்கத்துக்காக, உங்களுக்குச் சுவர்க்கக் கடவுளான, தந்தையிடமிருந்து ஞானம் தேவையாகும். பாடப்பட்டுள்ளது: தந்தை ஞானம்-நிறைந்தவர் ஆவார். ஆகவே, அவர் ஆசிரியர் ஆவார். தந்தை தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகிறார். வேறு எவரும் தூய்மையாக்குபவர் என அழைக்கப்பட முடியாது. ஸ்ரீ கிருஷ்ணரைக் கூட அவ்வாறு அழைக்க முடியாது. அனைவரினதும் தந்தை ஒருவரே ஆவார். ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரினதும் தந்தையாக இருக்க முடியாது. அவர் வளர்ந்து திருமணம் செய்யும்பொழுது, அவர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை ஆகுகிறார். இராதையும், கிருஷ்ணரும் இளவரசியும் இளவரசரும் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏதோவொரு வேளையில் திருமணம் செய்திருக்க வேண்டும். திருமணத்தின் பின்னர் மாத்திரமே அவர்களால் பெற்றோர்களாக ஆகமுடியும். அவர்களைக் கடவுளாகிய, உலகத் தந்தை என அழைக்க முடியாது. ஓர் அசரீரியான தந்தை மாத்திரமே கடவுளான, உலகத் தந்தை என அழைக்கப்பட முடியும். சிவபாபாவைக் கொள்ளுப்;பாட்டனார் என அழைக்க முடியாது. பிரஜாபிதா பிரம்மாவே கொள்ளுப் பாட்டனார் ஆவார். அவரிலிருந்தே ஒரு வம்சாவளி விருட்சம் வெளிப்படுகிறது. அவர் அசரீரியான கடவுளாகிய, தந்தை ஆவார். அவர் அசரீரியான ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். பக்தி மார்க்கத்தில் இங்கு சரீரத்திலிருக்கின்ற அசரீரியான ஆத்மாக்கள் அவரைக் கூவியழைக்கிறார்கள். நீங்கள் இப்புதிய விடயங்கள் அனைத்தையும் செவிமடுக்கிறீர்கள். இவை சமயநூல்கள் எவற்றிலும் மிகச்சரியாக எழுதப்பட்டிருக்கவில்லை. தந்தை கூறுகிறார்: நான் இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு நேரடியாக விளங்கப்படுத்துகிறேன். பின்னர் இந்த ஞானம் அனைத்தும் மறைந்துவிடுகிறது. பின்னர், தந்தை வரும்பொழுது, மிகச்சரியான ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே நேரடியாக விளங்கப்படுத்தி, ஓர் ஆஸ்தியைக் கொடுக்கிறார். பின்னர், சமயநூல்கள் உருவாக்கப்படுகின்றன. அவை மிகச்சரியாக உருவாக்கப்பட்டிருக்க முடியாது, ஏனெனில் சத்தியபூமி முடிவடைந்து, பின்னர் அது பொய்ம்மையின் பூமியாக ஆகுகிறது. ஆகவே, அங்கு பொய்ம்மையான விடயங்களே இருக்கும், ஏனெனில் அங்கு கீழிறங்கும் ஸ்திதி மாத்திரமே இருக்கிறது. சத்தியத்தின்; மூலமே மேலேறும் ஸ்திதி இருக்கிறது. பக்தி இரவு ஆகும். மக்கள் இரவின் இருளில் தடுமாறித் திரிகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் தலை வணங்குகிறார்கள். அத்தகைய காரிருள் உள்ளது! மக்கள் எதனையும் அறியார்கள். அவர்கள் வாயில் தோறும் தொடர்ந்தும் தடுமாறித் திரிகிறார்கள். குழந்தைகள் சென்று பார்க்கின்ற, இச்சூரியனின் உதயமும் அஸ்தமனமும் உள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஞான சூரியனின் எழுச்சியைக் காண வேண்டும். பாரதத்தின் எழுச்சியும், பாரதத்தின் வீழ்ச்சியும் உள்ளது. சூரியனைப் போன்று பாரதம் மூழ்குகிறது. சத்திய நாராணனின் கதையில், எவ்வாறு பாரதத்தின் படகு மூழ்குகிறது என அவர்கள் காண்பிக்கிறார்கள். பின்னர் தந்தை வந்து அதை மீட்கிறார். நீங்கள் மீண்டும் ஒருமுறை இப்பாரதத்தை மீட்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்கிறீர்கள். இக்கண்காட்சிக்காக, நீங்கள் அழைப்பிதழ்களை அனுப்புகிறீர்கள், அதன் தலைப்பான "புதிய உலகின் ஆக்கம்” என்பது சரியாகும். அது எவ்வாறு புதிய உலகம் உருவாக்கப்படுகிறது என்பதற்கான கண்காட்சியாகும். படங்களின் மூலம் இவ்விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஆகவே, அப்பெயர் தொடர்வதே சிறந்ததாகும். எவ்வாறு புதிய உலகம் உருவாக்கப்படுகிறது எனவும், எவ்வாறு புதிய உலகின் எழுச்சி இருக்கிறது எனவும் நீங்கள் காண்பிக்கிறீர்கள். நிச்சயமாகப் பழைய உலகின் வீழ்ச்சி வருகிறது, இதனாலேயே நீங்கள் எவ்வாறு அங்கு எழுச்சி உள்ளது என்பதைக் காண்பிக்கிறீர்கள். எவ்வாறு நீங்கள் இராச்சியத்தைக் கோருகிறீர்கள் எனவும், பின்னர் எவ்வாறு நீங்கள் அதை இழக்கிறீர்கள் எனவும் ஒரு கதை உள்ளது. 5000 வருடங்களுக்கு முன்னர் அங்கு என்ன இருந்தது? அங்கு சூரிய-வம்சத்து இராச்சியம் இருந்தது எனக் கூறப்படும். பின்னர் சந்திர-வம்சத்து இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. அம்மக்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் இராச்சியத்தைக் கோருகிறார்கள். அவர்கள் இன்னாரிடமிருந்து இராச்சியத்தைக் கோரினார்கள் என அவர்கள் காண்பிக்கிறார்கள். அவர்கள் ஏணியின் படத்தைப் புரிந்துகொள்வதில்லை. எவ்வாறு நீங்கள் சத்தியயுகத்திலிருந்து திரேதா யுகத்துக்குச் சென்றீர்கள் எனவும், எவ்வாறு நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வந்தீர்கள் எனவும் தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். இதுவே 84 பிறவிகளின் ஏணியாகும். நீங்கள் ஏணியில் கீழிறங்கி வரவேண்டும், பின்னர் அதில் மேலே ஏறவேண்டும். வீழ்ச்சியின் இரகசியம் விளங்கப்படுத்தப்பட வேண்டும்: எவ்வளவு காலத்துக்குப் பாரதத்தின் வீழ்ச்சியும், எவ்வளவு காலத்துக்குப் பாரதத்தின் எழுச்சியும் இருக்கின்றது?. வீழ்ச்சியும், எழுச்சியும் பாரத மக்களுக்கே உரியவையாகும். எவ்வாறு மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவது என்பதைப் பற்றி நீங்கள் ஞானக்கடலைக் கடைய வேண்டும். பின்னர் நீங்கள் அவர்களுக்கு அழைப்பிதழ்களையும் அனுப்ப வேண்டும். "சகோதர, சகோதரிகளே, வந்து புரிந்துகொள்ளுங்கள்!” முதலில், அவர்களுக்குத் தந்தையின் புகழைக் கூறுங்கள். சிவபாபாவின் புகழ் கூறும் பலகை காணப்பட வேண்டும்: வந்து உங்கள் சூரிய, சந்திர வம்சத்து ஆஸ்தியைத்; தூய்மையாக்குபவரும், ஞானக்கடலும், தூய்மைக்கடலும், சந்தோஷக்கடலும், அமைதிக்கடலும், செழிப்புக்கடலும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், உலகின் தந்தையும், உலகின் ஆசிரியரும், உலகின் சற்குருவுமாகிய, சிவபாபாவிடமிருந்து கோருங்கள். அதன்மூலம்; மக்கள் தந்தையை அறிந்துகொள்வார்கள். தந்தையின் புகழானது, ஸ்ரீ கிருஷ்ணரின் புகழிலிருந்து வேறுபட்டதாகும். இது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. சேவாதாரிக் குழந்தைகள் நாள்முழுவதும் ஓடித் திரிவார்கள். அவர்கள் தங்களின் நாளாந்த வேலையிலிருந்து விடுமுறையும் எடுத்துத் தங்களை ஆன்மீகச் சேவையில் ஈடுபடுத்துவார்கள். இதுவே இறை அரசாங்கம் ஆகும். புத்திரிகளாகிய நீங்கள் விசேடமாக உங்களை அத்தகைய சேவையில் ஈடுபடுத்தினால், உங்களால் பெருமளவில் பெயரைப் புகழடையச் செய்ய முடியும். சேவாதாரிக் குழந்தைகள் மிகவும் நன்றாகப் பராமரிக்கப்படுகிறார்கள், ஏனெனில் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் நிரம்பி வழிகிறது. நீங்கள் உண்கின்ற பொக்கிஷக் களஞ்சியம் எப்பொழுதும் நிரம்பி வழிவதுடன், அது உங்கள் துன்பத்தையும் வேதனையையும் அகற்றுகிறது. நீங்கள் சிவனின் குலத்துக்கு உரியவர்கள் ஆவீர்கள். அவரே படைப்பவர், இது அவரின் படைப்பு ஆகும். "பாபுல்” என்னும் பெயர் (தந்தை) மிகவும் இனிமையானதாகும். சிவன் மணவாளனும் ஆவார். சிவபாபாவின் புகழ் முழுமையாக வேறுபட்டதாகும். நீங்கள் "அசரீரி” என்னும் வார்த்தையை எழுதும்பொழுது, அவருக்கென்று ஒரு ரூபமில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள். சிவபாபாவே அதிஅன்பிற்கினியவர் ஆவார். நீங்கள் நிச்சயமாக "பரம அன்பிற்கினியவர்” என எழுத வேண்டும். இவ்வேளையில், அவர்கள் ஒரு யுத்தகளத்தைக் கொண்டிருக்கிறார்கள், உங்களுக்கும் ஒரு யுத்தகளம் உண்டு. "அகிம்சாவாதிகளான சிவசக்திகள்” நினைவுகூரப்படுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் இறைவிகளை ஆயுதங்களுடன் சித்தரித்து, அவர்களை வன்முறையாளர்களாக்கி விட்டார்கள். உண்மையில், நீங்கள் உலக இராச்சியத்தை நினைவின் மூலமும், யோகசக்தி மூலமும் கோருகிறீர்கள். ஆயுதங்கள் போன்றவற்றுக்கான கேள்வியே கிடையாது. கங்கையின் செல்வாக்கு பெருமளவுக்கு உள்ளது. பலர் காட்சிகளைக் காண்பார்கள். பக்தி மார்க்கத்தில், கங்கை நீரை அவர்கள் பெறும்பொழுது மாத்திரமே அவர்களால் சற்கதியை அடைய முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் மறைமுகமான கங்கையைப் பற்றிப் பேசுகிறார்கள். அம்பு எய்யப்பட்ட இடத்தில் கங்கை வெளிப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். ஒரு கௌமுக்கிலிருந்து (பசுவின் வாய்) கங்கை வெளிப்பட்டதாகவும் அவர்கள் காண்பிக்கிறார்கள். திரிவேணியில் (மூன்று நதிகள் சங்கமமாகும்; இடம்) மறைமுகமான சரஸ்வதியை அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் பல கதைகளை உருவாக்கியுள்ளார்கள். இங்கு, அல்பாவாகிய, ஒரு விடயம் மாத்திரமே உள்ளது, அவ்வளவுதான்! அல்லா வந்து பாகிஸ்தை (சுவர்க்கம்) ஸ்தாபிக்கிறார். குதா சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். ஈஸ்வர் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். உண்மையில், கடவுள் ஒருவரே. அவர்கள் தங்கள் சொந்தப் பாஷைகளில் அவருக்குப் பல்வேறு பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். எவ்வாறாயினும், தாங்கள் அல்லாவிடமிருந்து சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவார்கள் என்பதை அவர்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்கிறார்கள். இங்கு தந்தை கூறுகிறார்: மன்மனபவ! தந்தையை நினைவுசெய்வதனால், நீங்கள் நிச்சயமாக ஆஸ்தியை நினைவுசெய்வீர்கள். சுவர்க்கமே படைப்பவரின் படைப்பு ஆகும். இராமர் (கடவுள்) நரகத்தைப் படைத்தார் எனக் கூறப்பட முடியாது. அசரீரியான படைப்பவர் யார் என்பதைப் பாரத மக்கள் அறிந்துகொள்வதில்லை. மக்கள் கொடும்பாவியை எரிக்கின்ற இராவணனே நரகத்தைப் படைப்பவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இராவண இராச்சியத்தில் பக்தி மார்க்கத்தின் நாற்று மிகவும் பெரியதாக வளர்கிறது! அவர்கள் இராவணனின் மிகப் பயங்கரமான ரூபத்தை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் இராவணன் தங்களின் எதிரி எனவும் கூறுகிறார்கள். அத்தகைய பெரும் விரிவாக்கம் உள்ளது எனவும், அதனாலேயே அவர்கள் இராவணனை ஒரு பெரிய சரீரத்துடன் உருவாக்குகிறார்கள் எனவும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். சிவபாபா ஒரு புள்ளியே ஆவார், ஆனால் அவர்கள் அவரை ஒரு பெரிய ரூபத்துடன் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார்கள். எவ்வாறு ஒரு புள்ளி வழிபடப்பட முடியும்? அவர்கள் வழிபடுபவர்களாக வேண்டும். ஓர் அற்புதமான நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கிறது என ஆத்மாவையிட்டுக் கூறப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் ஆத்மாவே பரமாத்மா எனக் கூறுகிறார்கள். ஆகவே, எவ்வாறு அவர் ஆயிரம் சூரியன்களை விடவும் பிரகாசமானவராக இருக்க முடியும்? அவர்கள் ஆத்மாவைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் அதைப் பற்றிப் புரிந்துகொள்வதில்லை. கடவுள் ஆயிரம் சூரியன்களை விடவும் பிரகாசமானவராக இருந்திருப்பின், எவ்வாறு அவர் அனைவரிலும் பிரவேசிக்க முடியும்? அவர்கள் அத்தகைய தவறான விடயங்களைக் கூறுகிறார்கள்! அவற்றைச் செவிமடுப்பதனால், அவர்கள் இப்பொழுது என்னவாக ஆகிவிட்டார்கள் எனப் பாருங்கள்! ஆத்மாவே பரமாத்மா என அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, தந்தையின் ரூபமும் அதுவாகவே இருக்க வேண்டும். எவ்வாறாயினும், அவர்கள் அவரை வழிபடும்பொருட்டு, அவரின் ரூபத்தைப் பெரியதாக ஆக்கிவிட்டார்கள். பாண்டவர்களை உயரமாகக் குகைகளில் உருவாக்கியுள்ளதைப் போன்று, அவர்கள் அத்தகைய பெரிய கல் விக்கிரகங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை! இது ஒரு கல்வியாகும். வியாபாரம் கல்வியிலிருந்து வேறுபட்டதாகும். பாபா உங்களுக்குக் கற்பிக்கிறார், உங்களுக்கு ஒரு வியாபாரத்தையும் கற்பிக்கிறார். பலகையில், முதலில், தந்தையின் புகழும் இருக்க வேண்டும். தந்தையின் முழுப் புகழும் எழுதப்பட வேண்டும். இவ்விடயங்கள் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில், வரிசைக்கிரமமாக, நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப பிரவேசிக்கின்றன, அதனாலேயே யானைப் படையினரும், குதிரைப் படையினரும் உள்ளார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அது ஆயுதங்கள் போன்றவற்றுக்கான கேள்வியே கிடையாது. தந்தை உங்கள் புத்தியில் உள்ள பூட்டைத் திறக்கிறார். வேறு எவராலும் இந்த கோத்ரெஜ் பூட்டைத் திறக்க முடியாது. குழந்தைகள் தந்தையைச் சந்திக்க வரும்பொழுது, பாபா அவர்களை வினவுகிறார்: நாங்கள் முன்னர் சந்தித்திருக்கிறோமா? முன்னர் இந்நாளில் இவ்விடத்தில் நாங்கள் சந்தித்திருக்கிறோமா? குழந்தைகள் பதிலளிக்கிறார்கள்: ஆம் பாபா, நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் சந்தித்தோம். இவ்விடயங்களை இதேவிதமாக வேறு எவராலும் வினவ முடியாது. இவை அத்தகைய ஆழமான விடயங்களும், புரிந்துகொள்ளப்பட வேண்டியவையும் ஆகும். பாபா ஞானத்தைப் பல்வேறு திறமையான வழிகளில் விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், நீங்கள் அவற்றை வரிசைக்கிரமமாகவே கிரகிக்கிறீர்கள்! சிவபாபாவின் புகழானது, பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் புகழிலிருந்து வேறுபட்டதாகும். ஒவ்வொருவருடைய பாகமும் தனிப்பட்டதாகும். ஒருவருடைய பாகம் இன்னுமொருவரைப் போன்று அதேவிதமாக இருக்க முடியாது. இந்நாடகம் அநாதியானதாகும். பின்னர் அது திரும்பத் திரும்ப நடைபெறும். எவ்வாறு நீங்கள் அசரீரி உலகத்துக்குச் செல்கிறீர்கள் என்பதுவும், பின்னர் எவ்வாறு நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்கு இங்கு கீழே வருகிறீர்கள் என்பதுவும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளன. நீங்கள் சூட்சும உலகத்தினூடாகச் செல்கிறீர்கள். நீங்கள் திரும்பவும் வரும்பொழுது, சூட்சும உலகம் இருக்க மாட்டாது. எவரும் சூட்சும உலகின் காட்சிகளைக் காண்பதில்லை. சூட்சும உலகின் காட்சிகளைக் காண்பதற்கு எவரும் அங்கு தபஸ்யா செய்வதில்லை, ஏனெனில் எவரும் அதைப் பற்றி அறியார். அங்கு சூட்சும உலகின் பக்தர்கள் இருக்க மாட்டார்கள். இப்பொழுதே சூட்சும உலகம் உருவாக்கப்பட்டுள்ளது, அதனால் உங்களால் சூட்சும உலகத்தினூடாகத் திரும்பவும் சென்று, பின்னர் புதிய உலகத்துக்குச் செல்ல முடியும். இவ்வேளையில் நீங்கள் தொடர்ந்தும் சென்று அங்கிருந்து திரும்பிச் செல்கிறீPர்கள். நீங்கள் இப்பொழுது நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள், இது உங்களுடைய தாயின் வீடாகும். விஷ்ணு தந்தை என அழைக்கப்பட மாட்டார். அது உங்களுடைய புகுந்த வீடாகும். ஒரு இளம்பெண் தன்னுடைய புகுந்த வீட்டுக்குச் செல்லும்பொழுது, அவள் தன்னுடைய பழைய ஆடைகள் அனைத்தையும் விட்டுச் செல்கிறாள். நீங்கள் முழுமையாகவே பழைய உலகத்தைப் பின்னே நீ;க்கி விட்டுச் செல்கிறீர்கள். உங்களுடைய எளிமைக்கும், அவர்களுடைய எளிமைக்கும் இடையில் அதிகளவு வித்தியாசம் உள்ளது! நீங்கள் முழுமையாகவே கவர்ச்சியிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். சரீர உணர்வும் துண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு விலையுயர்ந்த சேலையை அணியும்பொழுது, நீங்கள் உடனடியாகவே சரீர உணர்வுடையவர்கள் ஆகி, நீங்கள் ஓர் ஆத்மா என்பதை மறக்கிறீர்கள். இவ்வேளையில் நீங்கள் வனவாசத்தில் (எளிமையைக் கொண்டிருத்தல்) இருக்கிறீர்கள். எளிமையும், ஓய்வுபெறும் ஸ்திதியும் ஒரே விடயமே ஆகும். சரீரம் நீக்கப்பட வேண்டும். ஆகவே, நீங்கள் சேலையைத் துறக்க மாட்டீர்களா? சில சமயங்களில், ஒருவர் விலைமலிவான சேலையைப் பெறும்பொழுது, அவளுடைய இதயம் சுருங்குகிறது. நீங்கள் விலைமலிவான ஒன்றைப் பெறுகிறீர்கள் என நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். சிறந்த பொருட்கள் மிகவும் அவதானமாகப் பராமரிக்கப்பட வேண்டும். சிறந்த ஆடைகளை அணிவதும், சிறந்த உணவை உண்பதுமான அற்ப விடயங்களும் கூட உங்கள் உயர் இலக்கை அடைவதில் உங்களைத் தடுக்கிறது. இலக்கு மிகவும் உயர்வானதாகும். எவ்வாறு ஒரு மனைவி தனது கணவனுக்கு அவனுடைய கைத்தடியைக் கூடத்; துறக்க வேண்டும் என்று கூறியதாக ஒரு சமயக் கதையையும் அவர்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: இப்பழைய ஆடைகள், இப்பழைய உலகம் அனைத்தும் முடிவடையவுள்ளன. ஆகவே, உங்கள் புத்தியின் யோகத்தை முழு உலகிலிருந்தும் துண்டியுங்கள். இது எல்லையற்ற துறவறம் என அழைக்கப்படுகிறது. சந்நியாசிகள் எல்லைக்குட்பட்ட துறவறத்தைக் கொண்டிருப்பது வழக்கமாகும், ஆனால் அவர்கள் இப்பொழுது நகரங்களில் வசிக்க ஆரம்பித்துள்ளார்கள். முன்னர், அவர்களுக்குப் பெருமளவு வலிமை இருந்தது. எவ்வாறு கீழிறங்குபவர்களைப் பற்றிய புகழ் இருக்க முடியும்? புதிய ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக இறுதிவரையில் தொடர்ந்தும் கீழிறங்குவார்கள். அவர்கள் எவ்வளவு வலிமையைக் கொண்டிருப்பார்கள்? நீங்களே முழு 84 பிறவிகளையும் எடுப்பவர்கள் ஆவீர்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்;துகொள்வதற்கு ஒரு மிகச்சிறந்த புத்தி தேவையாகும். சேவாதாரிக் குழந்தைகள் தொடர்ந்தும் சேவைக்காகப் பெருமளவு உற்சாகத்தைக் கொண்டிருப்பார்கள். ஞானக்கடலின் குழந்தைகள் பாபா செய்ததைப் போலவே, உற்சாகத்துடன் சொற்பொழிவுகளை ஆற்ற வேண்டும். இதில் ஒருவர் மனந்தளர்வைக் கொண்டிருக்கக் கூடாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. உங்கள் புத்தியை எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருக்குமாறு செய்யுங்கள். இப்பொழுது வீடு திரும்புவதற்கான நேரமாகும். ஆகவே, பழைய உலகத்தினதும், பழைய சரீரத்தினதும் எந்தக் கவர்ச்சியிலிருந்தும் விடுபட்டிருங்கள்.
  2. நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்பொழுதும் மலர்ச்சியாக இருங்கள்.

ஆசீர்வாதம்:

உங்கள் அதியுயர் ஸ்தானத்தில் ஸ்திரமாக இருந்தவாறு, முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆகி, ஒவ்வொரு எண்ணத்தையும் உருவாக்கி, ஒவ்வொரு வார்த்தையையும் பேசி, ஒவ்வொரு செயலையும் செய்வீர்களாக.

முற்றிலும் விகாரமற்றிருத்தல் என்றால்; நீங்கள் எவ் விகாரத்தினாலும் எந்த சதவீதத்தாலும் கவரப்படாதவராகவோ அல்லது எந்த விகாரத்தின் ஆதிக்கத்திற்கும் உட்படாதவராக இருப்பது என்று அர்த்தமாகும். அதியுயர் ஸ்தானத்திலிருக்கும் ஆத்மாக்கள் சாதாரண எண்ணங்கள் எதனையும் கொண்டிருக்க முடியாது. எனவே, நீங்கள் எந்த ஒரு எண்ணத்தையும் உருவாக்கும் முன்னரோ அல்லது எந்த ஒரு செயலையும் செய்யும் முன்னரோ சோதியுங்கள்: உங்கள் பெயரின் அளவிற்கு உங்கள் பணி மேன்மையாக உள்ளதா? உங்கள் பெயர் மேன்மையானதாகவும் உங்கள் பணி குறைந்ததாகவும் இருப்பின், அப்பொழுது நீங்கள் உங்கள் பெயரிற்கு அவமரியாதையை ஏற்படுத்துகிறீர்கள். ஆகையால் உங்கள் இலக்கிற்கு ஏற்ப தரத்தையும் ஏற்றுக் கொண்டால் நீங்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள் எனப்படுவீர்கள், அதாவது அதிபுனிதமான ஆத்மா ஆவீர்கள்.

சுலோகம்:

எதனை செய்தாலும் கரன்கரவன்ஹார் தந்தையையின் விழிப்புணர்வை கொண்டிருந்தால் உங்கள் சொந்த முயற்சிக்கும் யோகத்திற்கும் இடையில் சரியானதொரு சமநிலையை இருக்கும்.


---ஓம் சாந்தி---