26.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தேவர்கள் ஆகுவதற்கு, அமிர்தத்தைப் பருகுவதுடன், பிறரையும் அதைப் பருகத் தூண்டுங்கள். அமிர்தத்தைப் பருகுபவர்கள் மாத்திரமே மேன்மையானவர்கள் ஆகுகின்றனர்.

கேள்வி:
இந்நேரத்தில் எதன் அடிப்படையில் சத்திய யுகத்துப் பிரஜைகள் தயாராகுகின்றனர்?

பதில்:
இந்த ஞானத்தினால் கவரப்பட்டு, இது மிக நல்லது எனக் கூறிவிட்டு, அதைக் கற்காமலோ, அல்லது முயற்சி செய்யாமலோ இருப்பவர்கள் பிரஜைகள் ஆகுகின்றனர். கவரப்படுதல் என்றால் ஒரு பிரஜை ஆகுவதாகும். சூரிய வம்ச அரசர் அல்லது அரசி ஆகுவதற்கு, முயற்சி தேவைப்படுகின்றது. கல்வியில் முழுக் கவனம் செலுத்தப்பட வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் நினைவில் இருந்து, பிறரையும் அதனைச் செய்வதற்குத் தூண்டுவீர்களாயின், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும்.

பாடல்:
நீங்கள் இரவை உறங்குவதிலும், பகலை உண்பதிலும் கழித்தீர்கள்.

ஓம் சாந்தி.
அவர்கள் வாழ்க்கைகள் வைரங்களைப் போன்றிருந்தன எனவும், அவை இப்பொழுது சிப்பியைப் போன்றவையாகி விட்டன எனவும் பாடலில் கூறப்படுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் கேட்டீர்கள். இது பொதுவானது. சிறு குழந்தையால் கூட இதைப் புரிந்துகொள்ள முடியும். சிறு குழந்தை கூட புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பாபா மிகவும் இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் சத்திய நாராயணனின் கதையைக் கூறும்பொழுது, சிறு குழந்தைகள் கூட அதனைச் செவிமடுப்பதற்கு அமர்கின்றனர். எவ்வாறாயினும், அந்த ஆன்மீக ஒன்றுகூடல்களில் அவர்கள் கூறுபவை வெறும் கதைகள் மாத்திரமே. அக்கதைகள் ஞானமல்ல் அவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட கதைகள். கீதையின் கதையும், இராமாயணக் கதையும் உள்ளன. அவர்கள் உரைக்கின்ற சமயநூல்களில் பல்வேறு கதைகள் உள்ளன. அவை அனைத்தும் கதைகளாகும். கதைகளால் எப்பொழுதாவது ஏதாவது நன்மை இருக்க முடியுமா? இது சத்திய நாராயணனின் கதை, அதாவது, ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுகின்ற உண்மைக் கதையாகும். இக்கதையைக் கேட்பதால் நீங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுகின்றீர்கள். இது அமரத்துவக் கதையும் ஆகும். நீங்கள் மக்களை அழைக்கின்றீர்கள்: வாருங்கள், நாங்கள் உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுவோம், நீங்கள் அமரத்துவ பூமிக்குச் செல்ல முடியும். அப்படியிருந்தும், எவருமே எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சமயநூல்களில் உள்ள கதைகளைச் செவிமடுத்து வருகின்றனர், இருப்பினும், அவர்கள் எதையுமே பெறவில்லை. அவர்கள் இலக்ஷ்மி நாராயணனின் ஆலயத்திற்குச் செல்கின்றனர்: வாருங்கள், நாங்கள் விக்கிரகங்களை ஒரு கணம் தரிசிக்கச் செல்வோம். சென்று, மகாத்மாக்களின் ஒரு கணப் பார்வையைப் பெறுவோம். அந்தச் சம்பிரதாயங்கள் தொடர்கின்றன. அவர்கள் தொடர்ந்தும் கடந்த காலத்தில் இருந்த ரிஷிகள், முனிவர்கள் அனைவருக்கும் தலை வணங்குகின்றனர். படைப்பவரினதும், படைப்பினதும் கதை அவர்களுக்குத் தெரியுமா என வினவுங்கள், அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்றே பதிலளிக்கின்றனர். படைப்பவரினதும், படைப்பினதும் இக்கதை மிக இலகுவானது என்பதைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். இது அல்ஃபாவினதும், பீற்றாவினதும் கதை ஆகும். கண்காட்சிகளுக்கு வருபவர்கள் கதையை மிக நன்றாகச் செவிமடுத்தாலும், அவர்கள் தூய்மையாகுவதில்லை. விகாரத்தில் ஈடுபடும் சம்பிரதாயம் அநாதியானது என அவர்கள் நம்புகின்றனர். அவர்கள் ஆலயங்களில் உள்ள தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று பாடுகின்றனர்: நீங்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள்… பின்னர், அவர்கள் வெளியில் வந்ததுமே, விகாரத்தில் ஈடுபடுவது அநாதியான சம்பிரதாயம் என்று கூறுவதுடன், அது இல்லாமல் எவ்வாறு உலகம் தொடர முடியும் என்றும் வினவுகின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: இலக்ஷ்மி நாராயணனுக்கும் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர், எனவே உங்களால் அவர்களுக்கு என்ன கூறமுடியும்? நீங்கள் அவர்களைச் சாதாரண மனிதர்களுக்குச் சமனாகக் கருத முடியாது; தேவர்களும் கூட மனிதர்களே. அவர்கள் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மிக இலகுவான விடயங்களையே கூறுகின்றார். உண்மையில் இங்கே பாரதத்தில் சுவர்க்கம் இருந்தது; அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அவர்களின் உருவங்களும் உள்ளன. சத்திய யுகத்தில்; அது அவர்களின் (இலக்ஷ்மி நாராயணன்) இராச்சியமாக இருந்தது என அனைவரும் நம்புகின்றனர். அங்கு எவருமே சந்தோஷமற்றவர்களாக இருக்கவில்லை. அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். அவர்களுக்குப் பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் இருந்தனர். இப்பொழுது அவர்கள் இல்லை. இப்பொழுது இது கலியுகத்தின் இறுதி. மனிதர்கள் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் சண்டை, சச்சரவு செய்கின்றார்கள். கடவுள் மேலே நிர்வாணா தாமத்தில் வசிக்கின்றார். உண்மையில், ஆத்மாக்களான நாங்களும் அங்கேயே வசிக்கின்றோம். பின்னர், எங்களின் பாகங்களை நடிப்பதற்கு இங்கு வருகின்றோம். முதலில், நாங்கள் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் இருந்தோம். அங்கு பெருமளவு சந்தோஷமும், பேரானந்தமும் இருந்தன, பின்னர் நாங்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டியிருந்தது. 84 பிறவிகளின் சக்கரம் நினைவுகூரப்பட்டுள்ளது. நாங்கள் சூரிய வம்சத்தில் 1250 வருடங்கள் ஆட்சிபுரிந்தோம். அங்கு எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. அங்கிருந்த மக்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாக இருந்தனர், அங்கு வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகள் இருந்தன. நாங்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்தோம், பின்னர் நாங்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டியிருந்தது. உலக வரலாறினதும், புவியியலினதும் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. அரைக் கல்பத்திற்குச் சந்தோஷம் இருந்தது. நாங்கள் இராம இராச்சியத்தில் இருந்தோம், பின்னர் மனிதர்களின் சனத்தொகை தொடர்ந்தும் வளர்ச்சி அடைந்தது. சத்திய யுகத்தில் 900,000 பேர் இருந்தனர். சத்திய யுகத்தின் இறுதியில் அது 900,000 இலிருந்து 2 மில்லியன்களாக அதிகரித்துள்ளது, பின்னர் திரேதா யுகத்தில் 12 பிறவிகளுக்குப் பெருமளவு சந்தோஷமும், சௌகரியமும் இருந்தன. அங்கு ஒரு தர்மம் மாத்திரமே இருந்தது. பின்னர் என்ன நிகழ்ந்தது? இராவண இராச்சியம் ஆரம்பமாகியது. இராம இராச்சியத்தையும், இராவண இராச்சியத்தையும் பற்றி நான் எவ்வளவு இலகுவாக விளங்கப்படுத்துகிறேன் எனப் பாருங்கள். சிறு குழந்தைகளுக்கும் நீங்கள் இவ்விதமாக விளங்கப்படுத்த வேண்டும். பின்னர் என்ன நிகழ்ந்தது? வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட பெரிய தங்க மாளிகைகள் அனைத்தும் பூகம்பத்தினால் நிலத்திற்கடியில் சென்று விட்டன. பாரத மக்கள் விகாரமானவர்களாகியபொழுது, பூகம்பங்கள் ஏற்பட்டன, பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பித்தது. அனைவரும் தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்கள் ஆகினர். தங்க இலங்கை நிலத்திற்கடியில் சென்று விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு, ஏதாவது எஞ்சியிருந்திருக்க வேண்டும். பக்தி மார்க்கம் ஆரம்பமாகியது; மனிதர்கள் விகாரமானவர்களாக ஆரம்பித்தனர். அது பின்னர் இராவண இராச்சியம் ஆகியது, அவர்களின் ஆயுட்காலங்களும் குறைவடைந்தன. அவர்கள் விகாரமற்ற யோகிகளிலிருந்து, இந்திரிய சுகங்களில் ஈடுபடுகின்ற, விகாரமான போகிகள் ஆகினர். அரசர், அரசியைப் போன்றே பிரஜைகளும் விகாரமுடையவர்கள் ஆகினர். இக்கதை மிக இலகுவானது! இளம் புத்திரிகள் இக்கதையைக் கூறினால், முக்கியமான, செல்வாக்குடைய பிரமுகர்கள் வெட்கமடைவார்கள். தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து உங்களுக்கு இதைக் கூறுகின்றார். அவரே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் ஆவார். பின்னர் துவாபர யுகத்தில் நீங்கள் இந்திரிய சுகத்தில் ஈடுபட்டு, தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். பின்னர் ஏனைய சமயங்கள் வர ஆரம்பித்தன. அமிர்தத்தின் போதை முடிவடைந்தது; சண்டை, சச்சரவுகள் ஆரம்பமாகின. நாங்கள் துவாபர யுகத்தில் வீழ ஆரம்பித்தோம், பின்னர் கலியுகத்தில் மேலும் அதிக விகாரமுடையவர்கள் ஆகினோம்! நாங்கள் தொடர்ந்தும் அனுமானினதும், கணேஷரினதும் கல்லினாலான விக்கிரகங்களைச் செய்தோம். நாங்கள் கல்லுப்புத்தியை உடையவர்களாகி, கல்லை வழிபட ஆரம்பித்தோம். கடவுள் கற்களிலும், கூழாங்கற்களிலும் இருப்பதாக நாங்கள் நம்பினோம். அவ்வாறு செய்ததாலேயே பாரதத்தின் நிலைமை இப்படியாகி விட்டது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நஞ்சைத் துறந்து, அமிர்தத்தைப் பருகி, தூய்மையாகி, உங்களின் இராச்சியத்தைக் கோருங்கள். நஞ்சைத் துறவுங்கள், நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் நஞ்சைத் துறப்பதில்லை. நஞ்சிற்காகப் பெண்கள் அதிகளவில் துன்புறுத்தப்படுகின்றனர்! இதனாலேயே திரௌபதி பாதுகாப்பிற்காகக் கூவியழைத்தாள். அமிர்தத்தைப் பருகாமல் தேவர்களாகுவது சாத்தியமல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். சத்திய யுகத்தில் இராவணன் இருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் மேன்மையானவர்கள் ஆகாவிட்டால் உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. மேன்மையானவர்களாக இருந்தவர்கள் இப்பொழுது சீரழிந்தவர்கள் ஆகிவிட்டனர். நீங்கள் இப்பொழுது அமிர்தத்தைப் பருகி, மேன்மையானவர்கள் ஆகவேண்டும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! நீங்கள் கீதையை மறந்து விட்டீர்களா? நானே கீதையைப் படைத்தேன், ஆனால் அவர்கள் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி விட்டனர்! இலக்ஷ்மி நாராயணனுக்கு அவர்களின் இராச்சியத்தை வழங்கியவர் யார்? நிச்சயமாகக் கடவுளே அதை வழங்கியிருக்க வேண்டும். கடவுளே அவர்களின் முன்னைய பிறவியில் அவர்களுக்கு இராஜயோகம் கற்பித்தார், ஆனால் கிருஷ்ணரின் பெயர்; புகுத்தப்பட்டுள்ளது. நீங்கள் மற்றவர்களுக்கு இதை விளங்கப்படுத்துவதைப் பயிற்சி செய்ய வேண்டும். இது மிக இலகுவான கதை! பாபாவிற்கு எவ்வளவு நேரம் எடுத்தது? இத்தகைய இலகுவான விடயத்தை அரை மணி நேரம் எடுத்தாலும் சிலரால் புரிந்துகொள்ள முடிவதில்லை! இதனாலேயே தந்தை கூறுகின்றார்: அமர்ந்திருந்து இச் சிறுகதையை எவருக்காவது விளங்கப்படுத்துங்கள். ஒரு கையில் ஒரு படத்தை வைத்துக் கொள்ளுங்கள். சத்திய யுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமும், திரேதா யுகத்தில் இராமர் சீதையின் இராச்சியமும் உள்ளன. பின்னர் துவாபர யுகத்தில் இராவண இராச்சியம் ஆரம்பித்தது. இது அத்தகைய இலகுவான கதை ஆகும். நாங்கள் நிச்சயமாகத் தேவர்களாக இருந்தோம், பின்னர் சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகினோம். இப்பொழுது, நீங்கள் உங்களைத் தேவர்களாகக் கருதாததால், உங்களை இந்துக்கள் என அழைக்கின்றீர்கள். மேன்மையான தர்மத்தைக் கொண்டிருந்து, மேன்மையான செயல்களைச் செய்வதிலிருந்து நீங்கள் உங்களின் தர்மத்திலும், செயல்களிலும் சீரழிந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். சிறு புதல்விகள் அமர்ந்திருந்து இவ்வாறு சொற்பொழிவு ஆற்றினால், முழு ஒன்றுகூடலும் “மீண்டும் கூறுங்கள், மீண்டும் கூறுங்கள்!” என்று கூறும். பாபா அனைத்து நிலையங்களிலும் உள்ளவர்களுடன் பேசுகின்றார். இந்த முதியவர்கள் எதையும் கற்க மாட்டார்கள். எனவே, இந்தச் சிறு குமாரிகளுக்குக் கற்பியுங்கள்! குமாரிகளின் பெயர்களும் உள்ளன. டெல்கியிலும், பம்பாயிலும் மிகச் சிறந்த குமாரிகள் உள்ளனர்; அவர்கள் நன்கு கற்றவர்கள். அவர்கள் உஷாராக வேண்டும்; அவர்களால் அதிகம் செய்ய முடியும்! குமாரிகள் உஷாராகினால் பெயர் போற்றப்படும். செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் அரிதாகவே தைரியம் உள்ளது. அவர்களிடம் தங்களின் செல்வத்தின் போதை உள்ளது. ஒருமுறை அவர்கள் சீதனத்தைப் பெற்று விட்டால், அவ்வளவுதான்! ஒரு குமாரி திருமணம் செய்ததும் அவலட்சணமாகி, அனைவருக்கும் தலைவணங்க வேண்டியுள்ளது. எனவே, தந்தை மிகவும் இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும், அவர்கள் தெய்வீகப் புத்தியுடையவர்கள் ஆகுவதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. பாருங்கள், இந்நாட்களில் கற்காதவர்கள் கூட பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் (ஆP), சட்ட மன்ற உறுப்பினர்களாகவும் (ஆடுயு) ஆகுகின்றனர். கற்பதனால், அவர்களால் என்னவாக முடியும் எனப் பாருங்கள்! இக்கல்வி மிக இலகுவானது! நீங்கள் சென்று, மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். எவ்வாறாயினும், அவர்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால், கற்பது கூட இல்லை. மிகச்சிறந்த குமாரிகள் பலர் உள்ளனர், ஆனால் அவர்கள் தங்களுக்கேயுரிய போதையைக் கொண்டுள்ளனர். அவர்கள் சிறிதளவே செய்துவிட்டு, தாங்கள் அதிகளவு செய்துள்ளதாக நினைக்கின்றனர். இப்பொழுது, இன்னமும் பெருமளவு பணி செய்யப்படவுள்ளது. இந்நாட்களில் குமாரிகளே பெருமளவு நாகரிகமாக இருப்பதில் ஈடுபடுகின்றார்கள். அங்கு, இயற்கை அழகு இருக்கின்றது. இங்கோ, அழகு மிகவும் செயற்கையானது. சிகையலங்காரத்திற்கு மாத்திரமே அவர்கள் அதிகளவு பணத்தைச் செலவிடுகின்றார்கள். அது மாயையின் பகட்டாகும். இராவண இராச்சியமான, மாயையின் வீழ்ச்சி உள்ளது, பின்னர் இராம இராச்சியத்தின் எழுச்சி ஏற்படுகின்றது. இராம இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், நீங்கள் குறைந்தபட்சம் சில முயற்சியையாவது செய்ய வேண்டும்! நீங்கள் கற்காவிட்டால் என்னவாகுவீர்கள்? நீங்கள் அங்கு செல்லும்பொழுது, சில சதங்களே பெறுமதியான பிரஜைகள் ஆகுவீர்கள். இன்றைய பிரமுகர்கள் அங்கு பிரஜைகள் ஆகுவார்கள். செல்வந்தர்கள் ‘இது நல்லது’ என கூறி விட்டுத் தங்களின் பணியில் மூழ்கி விடுகின்றனர். அவர்கள் மிகவும் கவரப்படுகின்றார்கள், பின்னர் என்ன? இறுதியாக என்ன நிகழும்? அவர்கள் அங்கே பிரஜைகள் ஆகுவார்கள்! கவரப்படுதல்; என்றால் பிரஜைகள் ஆகுவதாகும். முயற்சி செய்பவர்கள் கடவுளின் இராச்சியத்திற்குள் செல்வார்கள். விளக்கம் மிக இலகுவானது. இக்கதையின் போதையைப் பேணுபவர்களின் படகுகள் அக்கரை சேரும். நாங்கள் அமைதி தாமத்திற்குச் சென்று, பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வோம். அவ்வளவுதான்; நீங்கள் பாபாவை நினைவுசெய்வதுடன், மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்ட வேண்டும். அப்பொழுதே நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கையில் படங்கள் இருக்க வேண்டும். பாபா இலக்ஷ்மி நாராயணனை வழிபட்டபொழுது, தனது சட்டைப் பையில் அவர்களுடைய படத்தை வைத்திருப்பது வழக்கம். பல சிறிய புகைப்படங்கள் உள்ளன் அவை பேழைகளிலும் உள்ளன. அந்தப் படங்களை விளங்கப்படுத்துங்கள். இவரே பாபா, நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இப்பொழுது தூய்மையாகி, தந்தையை நினைவுசெய்யுங்கள்! சின்னத்தில் (பட்ஜ்) அதிக ஞானம் உள்ளது! அதில் முழு ஞானமும் உள்ளது. இதனை விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. தந்தையிடமிருந்து ஜீவன்முக்தி என்ற உங்களின் ஆஸ்தியை ஒரு விநாடியில் பெறுங்கள்! விளங்கப்படுத்துகின்ற எவராலும் ஜீவன்முக்தி அந்தஸ்திற்கான ஓர் உரிமையைக் கோர முடியும். ஏனைய அனைவரும் தாங்கள் எவ்வளவு கற்கின்றார்கள் என்பதற்கேற்ப, ஓர் அந்தஸ்தைக் கோருவார்கள். அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள்; அவர்கள் குறைந்தபட்சம் இறுதியில் வருவார்கள். சனத்தொகை அதிகரிக்க வேண்டும். தேவ தர்மமே அதியுயர்ந்தது; அவர்கள் (தேவர்கள்) உருவாக்கப்படுவார்கள், இல்லையா? நூறாயிரக்கணக்கான பிரஜைகள் உருவாக்கப்படுவார்கள். சூரிய வம்சத்தவர் ஆகுவதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. சேவை செய்பவர்கள் மாத்திரமே ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். அவர்களின் பெயர்களும் போற்றப்படும். குமார்க்கா, ஜனக் போன்றோர் மிக நன்றாக நிலையங்களைப் பராமரிக்கின்றார்கள். எவ்வித முரண்பாடுகளும் இல்லை. தந்தை கூறுகின்றார்: தீயதைப் பார்க்காதீர்கள்! தீயதைப் பேசாதீர்கள்! அப்படியிருந்தும், சிலர் தொடர்ந்தும் அத்தகைய விடயங்களைக் கூறுகின்றனர். அத்தகையவர்கள் அங்கு சென்று என்னவாகுவார்கள்? அவர்கள் அத்தகைய இலகுவான சேவையைக் கூட செய்வதில்லை! சிறு புதல்விகளாலும் இதனை விளங்கப்படுத்த முடியும்; அவர்களால் ஞானத்தைக் கூறமுடியும். குரங்குச் சேனை மிகவும் பிரபல்யமானது. இராவணனின் சிறைக்குள் அகப்பட்டுள்ள சீதைகள் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் பல்;வேறு கதைகளை உருவாக்கியுள்ளனர்! எவராவது அத்தகைய சொற்பொழிவுகளை ஆற்ற வேண்டும். பின்னர் அவர்கள் (குமாரிகள்) ‘இன்னார் இன்னார் நன்றாகக் கவரப்பட்டனர்’ என வெறுமனே கூறுகிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்: நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? “அவர்களின் ஞானம் மிகவும் நல்லது" என அவர்கள் வெறுமனே பிறருக்குக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களே அதனைப் புரிந்துகொள்வதில்லை. எனவே என்ன நன்மை பெறப்பட்டது? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரு தெய்வீகப் புத்தியுடையவர் ஆகுவதற்கு, கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். ஸ்ரீமத்திற்கேற்ப கற்று, பிறருக்கும் கற்பியுங்கள். உங்களின்; எல்லைக்குட்பட்ட செல்வம், நாகரீகம் போன்றவற்றின்; போதையைத் துறந்து, இந்த எல்லையற்ற சேவையில் உங்களை ஈடுபடுத்துங்கள்.

2. தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள்… வீணான விடயங்களைப் பற்றிப் பேசாதீர்கள். எவராலும் கவரப்படாதீர்கள். சத்திய நாராயணனாகின்ற சிறு கதையை அனைவருக்கும் கூறுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஞானத்தின் ஒளி மற்றும் சக்தி மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை விழித்தெழச் செய்து, சதா ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

ஞானத்தின் ஒளி மற்றும் சக்தி மூலம் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்துகொண்டு, முயற்சி செய்யும் குழந்தைகளே, நிச்சயமாக வெற்றியடைகின்றார்கள். வெற்றியடைவதும் ஓர் அதிர்ஷ்;டத்தின் அடையாளமே. ஞானம் நிறைந்தவர் ஆகுவதெனில், உங்கள் அதிர்ஷ்டத்தை விழித்தெழச் செய்வதாகும். அது படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தை வெறுமனே கொண்டிருப்பதல்ல, ஆனால் ஞானம் நிறைந்தவராக இருப்பது எனில், உங்கள் ஒவ்வோர் எண்ணத்திலும், வார்த்தையிலும், செயலிலும் ஒரு ஞான சொரூபமாக இருப்பது என்று அர்த்தமாகும், அப்பொழுது நீங்கள் ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்கள். சரியான முயற்சியைச் செய்யும்பொழுதும், உங்களால் வெற்றியைக் காண முடியவில்லை எனில், அப்பொழுது அது உங்கள் தோல்வியல்ல, ஆனால் நீங்கள் மேலும் முதிர்ச்சியடைந்தவராகவும், உறுதியானவராகவும் ஆகுவதற்கான வழியாகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சுலோகம்:
உங்கள் பௌதீக அங்கங்களைச் செயற்படுமாறு செய்யும்பொழுது, பற்றற்றவராக இருங்கள், உங்களால் இலகுவில் கர்மாதீத ஸ்திதியை அனுபவம் செய்ய இயலும்.