20.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, மாயையின் புயல்கள் வருவதை நிறுத்தும் வகையில் நீங்கள் சரீர உணர்விற்கான வாயில்களை மூட வேண்டும்.

கேள்வி:
பரந்த, எல்லையற்ற புத்தியை உடைய குழந்தைகளின் அறிகுறிகள் எவை?

பதில்:
நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்தும் சேவைக்கான எண்ணங்களையே கொண்டிருக்கின்றார்கள். 2) அவர்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. 3) எவ்வாறு உலகைச் சுற்றி வளைத்து, தூய்மையற்றவர்கள் அனைவரையும் தூய்மையாக்கலாம் என்பது அவர்களின் புத்தியில் இருக்கின்றது. அவர்கள் தொடர்ந்தும் துன்ப பூமியைச் சந்தோஷ பூமியாக மாற்றுகின்ற சேவையைச் செய்கின்றார்கள். 4) அவர்கள்; ஏனைய பலரையும் தொடர்ந்தும் தங்களைப் போல் ஆக்குகின்றார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை அமர்ந்திருந்து, இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையான, என்னை நினைவுசெய்யுங்கள், அதனால் உங்கள் துன்பம் அனைத்தும் சதாகாலத்திற்குமாக முடிவடைகின்றது. சரீர பார்வையும், மனோபாவமும் மாற்றமடையும் வகையில், உங்களை ஆத்மாக்களாகக் கருதி, அனைவரையும் சகோதரத்துவப் பார்வையுடன் பாருங்கள். தந்தை சரீரமற்றவர், ஆத்மாக்களாகிய நீங்களும் சரீரமற்றவர்கள். தந்தை ஆத்மாக்களை மாத்திரமே பார்க்கின்றார். அனைவரும் தங்களுடைய அமரத்துவ சிம்மாசனங்களில் அமர்ந்துள்ள ஆத்மாக்களே. ஆத்மாக்களாகிய நீங்கள் பிறரைச் சகோதரத்துவப் பார்வையுடன் பார்க்க வேண்டும். இதற்குப் பெரும் முயற்சி தேவை. சரீரத்தின் விழிப்புணர்வினுள் நீங்கள் வரும்பொழுதே, மாயையின் புயல்கள் வருகின்றன. நீங்கள் சரீர உணர்விற்கான வாயில்களை மூடுங்கள், மாயையின் புயல்கள் வருவது நின்று விடும். முழுக் கல்பத்திலும் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் மாத்திரமே குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கான இக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். இனிமையிலும் இனிமையான, நீண்டகாலம் தொலைந்து, கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளே, நீங்கள் நரகத்தின் கரையிலிருந்து அப்பால் விலகி, இப்பொழுது முன்னேறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். இந்த அதிமங்களகரமான சங்கமயுகம் முற்றிலும் வேறானதும், இரண்டிற்கும் மத்தியில் இருப்பதுமாகும். உங்கள் படகானது கடலின் மத்தியில் உள்ளது; நீங்கள் சத்தியயுகத்தவர்களும் அல்ல, கலியுகத்தவர்களும் அல்ல. நீங்களே அதிமேன்மையான, அதிமங்களகரமான சங்கமயுகத்துப் பிராமணர்கள். சங்கமயுகம் பிராமணர்களுக்குரியது, பிராமணர்களே உச்சிக்குடுமிகள். இதுவே பிராமணர்களின் மிகச்சிறிய யுகமாகும். இந்த யுகம் ஒரு பிறவிக்கு மாத்திரமே உரியது; இது உங்கள் சந்தோஷத்திற்குரிய யுகமாகும். எந்தச் சந்தோஷத்திற்கு உரியது? கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார்: அத்தகைய மாணவர்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது உங்கள் புத்தியில் முழுச் சக்கரத்தின் ஞானமும் உள்ளது. நாங்கள் இப்பொழுது பிராமணர்கள், பின்னர் நாங்கள் தேவர்கள் ஆகுவோம். முதலில், நாங்கள் இனிய வீடான, வீட்டுக்குச் செல்வோம், பின்னர் புதிய உலகிற்குச் செல்வோம். பிராமணர்களாகிய நாங்கள் மாத்திரமே சுயதரிசனச் சக்கரதாரிகள். நாங்கள் இந்தக் குட்டிக்கரணத்தை இடுகின்றோம். பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்தப் பல்வகை ரூபத்தை அறிவீர்கள். நாள் முழுவதும் உங்கள் புத்தி இவ் விடயங்களைக் கடைகின்றது. இனிய குழந்தைகளே, இது உங்களின் மிகவும் அன்பான குடும்பம், ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் மிக, மிக அன்பானவர்களாக வேண்டும். தந்தை இனிமையானவர் என்பதால், அவர் குழந்தைகளான உங்களையும் இனிமையானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் என்றுமே எவருடனும் கோபப்படக்கூடாது. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினூடாக என்றுமே எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். தந்தை என்றுமே எவருக்கும் எந்தத் துன்பத்தையும் விளைவிப்பதில்லை. தந்தையை நீங்கள் நினைவுசெய்கின்ற அளவிற்கேற்ப, தொடர்ந்தும் இனிமையானவர்கள் ஆகுவீர்கள். இந்த நினைவைக் கொண்டிருப்பதால், உங்கள் படகு அக்கரை செல்லும். இதுவே நினைவு யாத்திரையாகும். நினைவுசெய்வதால், நீங்கள் அமைதி தாமத்தினூடாகச் சந்தோஷ தாமத்திற்குள் செல்வீர்கள். குழந்தைகளாகிய உங்களைச் சதா சந்தோஷமானவர்கள் ஆக்குவதற்குத் தந்தை வந்து விட்டார். தந்தை உங்களுக்குத் தீய ஆவிகளை விரட்டுவதற்கான வழிகளைக் காட்டுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், அந்தத் தீய ஆவிகள் தொடர்ந்தும் சென்று விடும். உங்களுக்குள் எந்தத் தீய ஆவியையும் எடுத்துச் செல்லாதீர்கள். எவருக்கேனும் தீய ஆவிகள் ஏதேனும் இருந்தால், அப்பொழுது அவற்றை இங்கே என்னிடம் விட்டுச் செல்லுங்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, வந்து எங்களுடைய தீய ஆவிகளை அகற்றி, எங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆக்குங்கள். எனவே, தந்தை உங்களை மிகவும் அழகானவர்கள் ஆக்குகின்றார். பாபா, தாதா இருவரும் ஒன்றிணைந்து, குழந்தைகளான உங்களை அலங்கரிக்கின்றார்கள். தாயும், தந்தையுமே தங்கள் குழந்தைகளை அலங்கரிப்பவர்கள், இல்லையா? அவர்கள் எல்லைக்குட்பட்ட தந்தையர்கள், ஆனால் அந்த ஒரேயொருவரோ எல்லையற்ற தந்தை. குழந்தைகள் செயற்பட்டு, பெருமளவு அன்புடன் பிறருடன் தொடர்புகொள்ள வேண்டும். சகல விகாரங்கள் எனும் தானம் அளிக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு தானத்தைச் செய்யும்பொழுது, சகுனங்கள் அகற்றப்படுகின்றன. இதில் சாக்குப்போக்கு எனும் கேள்வியே கிடையாது. நீங்கள் எவரையும் அன்பால் வெற்றிகொள்ள முடியும். அன்புடன் விளங்கப்படுத்துங்கள்; அன்பு மிகவும் இனிமையானது. மக்களால் சிங்கங்கள், யானைகள், மிருகங்களை அன்பின் மூலம் பயிற்றுவிக்க இயலுகின்றது. அம்மக்கள் விகாரங்களை உடையவர்கள், ஆனால் நீங்களோ இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள். ஆகவே, நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, மிக, மிக இனிமையானவர்களாக வேண்டும். ஒருவரையொருவர் சகோதரத்துவப் பார்வையுடன் அல்லது சகோதர, சகோதரி எனும் பார்வையுடன் பாருங்கள். ஓர் ஆத்மா இன்னுமோர் ஆத்மாவிற்கு ஒருபொழுதுமே துன்பத்தை விளைவிக்கக்கூடாது. தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் சுவர்க்க இராச்சியப் பாக்கியத்தைக் கொடுப்பதற்கு நான் வந்துவிட்டேன். இப்பொழுது, என்னிடமிருந்து உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களை இரட்டைக் கிரீடமணிந்த உலக அதிபதிகள் ஆக்குவதற்கு வந்து விட்டேன். ஆனால் நீங்கள் இதற்காக முயற்சி செய்ய வேண்டும். நான் எவருக்கும் ஒரு கிரீடத்தை அணிவிக்க மாட்டேன். நீங்களே உங்கள் சொந்த முயற்சிகளின் மூலம் உங்களுக்கு ஓர் இராச்சியத் திலகத்தை இட வேண்டும். தந்தை உங்களுக்கு முயற்சி செய்வதற்கான வழியைக் காட்டுகின்றார். உங்களை இரட்டைக் கிரீடமணிந்த அதிபதியாக்குவதற்கான வழி இதுவே. கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். என்றுமே கற்பதை நிறுத்தாதீர்கள். எந்த காரணத்திலாவது நீங்கள் குழப்பமடைந்து, கற்பதை நிறுத்தினால், உங்களுக்கே பேரிழப்பை ஏற்படுத்துவீர்கள். தொடர்ந்தும் உங்கள் இலாப, நட்டத்தைப் பாருங்கள். நீங்கள் இறை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதற்குத் தந்தையான கடவுளுடன் கற்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் அத்தகைய ஒழுங்காக வருகை தருகின்ற மாணவர்கள் ஆகவேண்டும். மாணவ வாழ்வே சிறந்தது! நீங்கள் கற்குமளவிற்கேற்ப, பிறருக்கும் கற்பித்து, உங்கள் பண்புகளை விருத்தி செய்வதால், அதி சிறந்தவர்கள் ஆகுவீர்கள். இனிய குழந்தைகளே, இது இப்பொழுது உங்கள் திரும்பிச் செல்லும் பயணமாகும். சத்தியயுகத்திலிருந்து நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வந்து, திரேதா, துவாபர, கலியுகங்களினூடாகச் செல்வதைப் போன்று, அதேவிதமாக, நீங்கள் இப்பொழுது கலியுகத்திலிருந்து சத்திய யுகத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் திரேதா யுகத்தை அடையும்பொழுது, பௌதீக அங்கங்களின் விஷமத்தனம் முடிவடையும். ஆகவே, ஆத்மாக்களான நீங்கள் எவ்வளவுக்குத் தந்தையை நினைவுசெய்கின்றீர்களோ, அதற்கேற்ப, ரஜோ, தமோ ஸ்திதிகளின் துருவானது தொடர்ந்தும் அகற்றப்படுவதுடன், எவ்வளவுக்குத் துரு தொடர்ந்தும் அகற்றப்படுகின்றதோ, அதற்கேற்ப, காந்தமாகிய, தந்தைக்கான கவர்ச்சியும் தொடர்ந்தும் அதிகரிக்கும். ஆத்மாக்களான உங்களிற் சிலர் கவரப்படாமல் இருந்தால், நீங்கள் நிச்சயமாகத் துருவினால் மூடப்பட்டிருக்கின்றீர்கள். துரு முழுமையாக அகற்றப்பட்டு, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய தங்கம் ஆகும்பொழுது, அதுவே கர்மாதீத ஸ்திதி ஆகும். வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வசிக்கும்பொழுது, நீங்கள் ஒரு தாமரையைப் போன்று வாழ வேண்டும். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உங்கள் இல்லறங்களைப் பராமரிப்பதுடன், உங்கள் சரீரங்களின் ஜீவனோபாயத்திற்கான அனைத்தையும் செய்யுங்;கள். அத்துடன், தொடர்ந்தும் இந்தக் கல்வியையும் கற்றிடுங்கள். நினைவுகூரப்படுகின்றது: உங்கள் கரங்கள் வேலையைச் செய்கையில், உங்கள் இதயம் உங்கள் அன்பிற்கினியவருடன் இருக்கட்டும். உங்கள் வேலைகள் அனைத்தையும் செய்யும்பொழுதும், அன்பிற்கினியவரான, தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் அரைக் கல்பத்திற்குக் காதலிகளாக இருக்கின்றீர்கள். அவர்கள் தீவிர பக்தியைச் செய்யும்பொழுது, அதிகளவு அன்புடன் கிருஷ்ணரை நினைவுசெய்கின்றார்கள். அது அசைக்க முடியாத, தீவிர பக்தி ஆகும். அவர்கள் கிருஷ்ணரின் அசைக்க முடியாத நினைவைக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் அதனைச் செய்வதால், எவரும் முக்தியைப் பெறுவதில்லை. இந்த ஞானம் சதா நினைவைக் கொண்டிருப்பதற்கு உரியதாகும். தந்தை கூறுகின்றார்: தூய்மையாக்குபவராகிய, தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், ஆனால் மாயையும் மிகவும் உறுதியானவள்; அவள் எவரையும் தனியே விட்டு விடுவதில்லை. மீண்டும் மீண்டும் மாயையினால் தோற்கடிக்கப்படுவதற்குப் பதிலாக, தலைகுனிந்து வருந்துவது மேலானது. நீங்கள் மேன்மையானவர்கள் ஆகும்பொருட்டு, தந்தை இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். சில குழந்தைகள் அந்தளவு முயற்சியைச் செய்யாதிருப்பதை பாபா பார்க்கும்பொழுது, கருணையை உணர்கின்றார். இப்பொழுது இதனை நீங்கள் பயிற்சி செய்யாது விட்டால், பெருமளவு தண்டனை இருப்பதுடன், ஒவ்வொரு கல்பத்திலும் சில சதங்கள் பெறுமதியான ஓர் அந்தஸ்தையே தொடர்ந்தும் பெறுவீர்கள். இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகின்ற பிரதான விடயமானது: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, உங்கள் சரீர உறவினர்கள் அனைவரையும் மறந்து, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். ஒரு குமாரி தூய்மையாக இருக்கும்வரை, அனைவரும் அவளுக்குத் தலை வணங்குகின்றார்கள். அவள் திருமணம் செய்தவுடன், அவள் ஒரு பூஜிப்பவராகுவதுடன், அவள் அனைவர் முன்னிலையிலும் தலைவணங்கவும் வேண்டும். ஒரு குமாரி தனது பெற்றோரின் வீட்டில் இருக்கும்பொழுது, பல்வேறு உறவுமுறைகளையும் நினைவுசெய்வதில்லை. திருமணத்தின் பின்னர், சரீர உறவுமுறைகள் அதிகரிப்பதுடன், அவளுடைய கணவன், குழந்தைகள் மீதான பற்றும் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. பின்னர் அவள் தனது மாமியாரையும், மாமனாரையும் கூட நினைவுசெய்கின்றாள். முதலில், தாய், தந்தை மீதான பற்று மாத்திரமே உள்ளது. இங்கே அந்த உறவுமுறைகள் அனைத்தும் மறக்கப்பட வேண்டும், ஏனெனில் அவர் மாத்திரமே உண்மையான தாயும் தந்தையுமானவர். இதுவே இறை உறவுமுறை. நினைவுகூரப்பட்டுள்ளது: நீங்களே தாயும், நீங்களே தந்தையும்… இந்தத் தாயும் தந்தையுமானவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார், ஆகவே தந்தை கூறுகின்றார்: உங்கள் எல்லையற்ற தந்தையாகிய, என்னைச் சதா நினைவுசெய்வதுடன், சரீரதாரிகளில் பற்று எதனையும் கொண்டிராதீர்கள். ஒரு பெண் தனது கலியுகத்துக் கணவனை அதிகளவு நினைவுசெய்கின்றாள், இருப்பினும், அவன் அவளைச் சாக்கடையில் வீழச் செய்கின்றான். இந்த எல்லையற்ற தந்தை உங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அத்தகையதோர் இனிய தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்து, தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். இந்த நினைவுச் சக்தியின் மூலமே ஆத்மாக்களான நீங்கள் தூய்மையாகி, சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். சுவர்க்கம் என்ற பெயரைக் கேட்டவுடனேயே, உங்கள் இதயங்கள் சந்தோஷம் அடைகின்றன. சதா நினைவைக் கொண்டிருந்து, தொடர்ந்தும் பிறரையும் நினைவைக் கொண்டிருப்பதற்குத் தூண்டுபவர்களே, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவார்கள். இம் முயற்சியைச் செய்வதால், நீங்கள் அந்த ஸ்திதியை இறுதியில் உறுதியாக்குவீர்கள். இவ்வுலகம் பழையது, சரீரங்களும் பழையவை; அவர்களுடைய சரீரங்கள் உட்பட, சரீர உறவினர்களும் பழையவர்கள். இறுதிக் கணங்களில் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யும் வகையில், உங்கள் புத்தியின் யோகத்தை அவர்கள் அனைவரிலிருந்தும் அகற்றி, ஒரேயொரு தந்தையுடன் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேறு எந்த உறவினர்களை நினைவுசெய்தாலும், இறுதியிலும் அவர்களை நினைவுசெய்வதுடன், உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படும். இறுதியில் எல்லையற்ற தந்தையின் நினைவைக் கொண்டிருப்பவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணன் ஆகுவார்கள். நீங்கள் தந்தையின் நினைவைக் கொண்டிருக்கும்பொழுது, சிவாலயம் தொலைவில் இல்லை. இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, நீண்டகாலம் தொலைந்து, இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே, நீங்கள் உங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டவே எல்லையற்ற தந்தையிடம் வருகின்றீர்கள், ஏனெனில் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற உலக இராச்சியத்தை நீங்கள் பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனை என்றுமே மறக்கக்கூடாது. இதனை எப்பொழுதும் நினைவுசெய்தால், அப்பொழுது குழந்தைகளான உங்களால் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க முடியும். நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் உங்கள் பட்ஜைப் பாருங்கள்; அது உங்கள் இதயத்தில் இருக்கட்டும். ஓகோ! கடவுளின் ஸ்ரீமத்தின் மூலம் நான் இவ்வாறு ஆகுகின்றேன்! பட்ஜைப் பார்க்கும்பொழுது, தொடர்ந்தும் அவரை நேசியுங்கள். தொடர்ந்தும் “பாபா, பாபா!” என்று கூறுங்கள், தந்தையின் மூலம் இவ்வாறு ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் சதா அறிந்திருப்பீர்கள். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும், இல்லையா? இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் பரந்த, எல்லையற்ற புத்தியைக் கொண்டிருப்பது அவசியம். நாள் முழுவதும், சேவைக்கான எண்ணங்களையே தொடர்ந்தும் கொண்டிருங்கள். சேவை செய்யாமல் இருக்க முடியாத குழந்தைகளையே பாபா விரும்புகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகையும் சுற்றி வளைக்க வேண்டும், அதாவது, நீங்கள் தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்க வேண்டும். முழு உலகமும் துன்ப பூமியிலிருந்து சந்தோஷ பூமியாக மாற்றப்பட வேண்டும். ஓர் ஆசிரியர் கற்பிப்பதற்கு விரும்புகின்றார். நீங்கள் இப்பொழுது மிகவும் உயர்வான ஆசிரியர்களாகவும் ஆகிவிட்டீர்கள். ஆசிரியர் எந்தளவுக்கு மேலானவராக இருக்கின்றாரோ, அந்தளவிற்கு அதிகமாக அவர் பிறரையும் தன்னைப் போன்று ஆக்குகின்றார், அவர் களைப்படையவும் மாட்டார். இறை சேவையைச் செய்வதில் பெருமளவு சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகின்றது. நீங்கள் தந்தையின் உதவியைப் பெறுகின்றீர்கள். இது ஒரு பெரிய, எல்லையற்ற வியாபாரம்; வியாபாரிகள் செல்வந்தர்களாக ஆகுகின்றார்கள். அவர்களே இந்த ஞானப் பாதையில் பெருமளவு உற்சாகத்தைக் கொண்டிருப்பவர்கள். தந்தையே எல்லையற்ற வியாபாரி. பேரமானது முதற்தரம், ஆனால் இதற்காக நீங்கள் பெருமளவு தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். புதிய குழந்தைகளால் முயற்சி செய்வதில் பழையவர்களை விடவும் முன்னே செல்ல முடியும். ஒவ்வொருவரினது பாக்கியமும் தனிப்பட்டது, எனவே ஒவ்வொருவரும் தனிப்பட்ட முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் உங்களை முழுச் சோதனை செய்ய வேண்டும். அத்தகைய சோதனையைச் செய்பவர்களே இரவுபகலாக முயற்சி செய்வதில் தங்களை ஈடுபடுத்துகின்றார்கள். அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் ஏன் எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டும்? இயன்றளவு நாங்கள் எங்களுடைய நேரத்தை ஒரு தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவோம்”. அவர்கள் தங்களுக்குள் ஓர் உறுதியான சத்தியத்தைச் செய்கின்றார்கள்: நான் ஒருபொழுதும் தந்தையை மறக்க மாட்டேன். நான் நிச்சயமாக ஒரு புலமைப்பரிசிலைக் கோருவேன். பின்னர் அத்தகைய குழந்தைகளும் உதவியைப் பெறுகின்றார்கள். அத்தகைய புதிய முயற்சி செய்கின்ற குழந்தைகளையும் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் காட்சிகளைக் கொண்டிருப்பீர்கள். ஆரம்பத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும், நீங்கள் இறுதியிலும் காண்பீர்கள். அண்மித்து வருகையில், நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷத்தில் நடனமாடுவீர்கள். மறுபுறத்தில், தேவையற்ற இரத்தம் சிந்துதலும் தொடரும். குழந்தைகளாகிய உங்களின் இறை ஓட்டப் பந்தயம் நடைபெறுகின்றது. நீங்கள் தொடர்ந்தும் முன்னே ஓடுகையில், உங்களுக்குப் புதிய உலகின் காட்சிகள் அண்மித்து வருவதுடன், தொடர்ந்தும் உங்கள் சந்தோஷமும் அதிகரிக்கும். காட்சிகளை அண்மையில் அவதானிக்க இயலாதவர்கள் அந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது கலியுகத்து உலகில் விருப்பமின்மை இருப்பதுடன், புதிய சத்தியயுகத்து உலகிற்கான பெருமளவு அன்பும் இருக்க வேண்டும். நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்தால், சுவர்க்க ஆஸ்தியையும் நினைவுசெய்வீர்கள். நீங்கள் சுவர்க்க ஆஸ்தியை நினைவுசெய்தால், அப்பொழுது சிவபாபாவும் நினைவுசெய்யப்படுவார். நீங்கள் இப்பொழுது சுவர்க்கம் செல்ல வேண்டும் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள்: உங்கள் பாதங்கள் நரகத்தை நோக்கியும், உங்கள் தலைகள் சுவர்க்கத்தை நோக்கியும் இருக்க வேண்டும். இது இப்பொழுது இளைஞர்கள், முதியவர்கள் உட்பட, அனைவரினதும் ஓய்வு ஸ்திதி ஆகும். பாபா எப்பொழுதும் இந்தப் போதையைக் கொண்டிருக்கின்றார்: ஓகோ! நான் சென்று, யாருக்காக முற்கூட்டியே வெகுமதிகள் அனுப்பப்டுகின்றனவோ, அந்தச் சிறிய கிருஷ்ணர் ஆகுவேன். முழு நம்பிக்கையைக் கொண்ட கோபிகைகளே வெகுமதிகளை அனுப்புபவர்கள். அவர்களுக்கு அதீந்திரிய சுகத்தின் உணர்வுகள் உள்ளன. அமரத்துவ பூமியில் நாங்கள் தேவர்கள் ஆகுவோம். நாங்களே முன்னைய கல்பத்திலும் அவ்வாறு ஆகியவர்கள், பின்னர் நாங்கள் 84 பிறவிகளை எடுத்தோம். நீங்கள் இந்தக் குட்டிக்கரணத்தை நினைவுசெய்தால், அதுவும் பெரும் பாக்கியம்: எப்பொழுதும் எல்லையற்ற சந்தோஷத்தைப் பேணுங்கள். நீங்கள் ஒரு பெரிய அதிர்ஷ்ட இலாபச்சீட்டைப் பெறுகின்றீர்கள். நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் எங்கள் இராச்சியப் பாக்கியத்தைப் பெற்றோம், நாங்கள் அதனை மீண்டும் நாளையும் கோருவோம்; அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முன்னைய கல்பத்தில் செய்ததைப் போலவே, நாங்கள் மீண்டும் பிறவி எடுப்போம், நாங்கள் அதே தாய்மார்களையும், தந்தையர்களையும் கொண்டிருப்போம். கிருஷ்ணரின் தந்தையாக இருந்தவர், மீண்டும் அவ்வாறு ஆகுவார். நாள் முழுவதும் அத்தகைய எண்ணங்களைத் தொடர்ந்தும் கொண்டிருப்பவர்களே, மிகவும் களிப்படைந்து இருப்பார்கள். நீங்கள் ஞானக்கடலைக் கடையாது விட்டால், நீங்கள் ஆரோக்கியமின்றி இருக்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். ஒரு பசு உணவை உண்டால், நாள் முழுவதும் அதனைக் கடைகின்றது; அதன் வாய் நாள் முழுவதும் தொடர்ந்தும் அதனை அசை போடுகின்றது. அது தனது வாயைப் பயன்படுத்தாமல் விட்டால், அது உடல் நலமின்றி உள்ளது என்பதே அதன் அர்த்தமாகும். இங்கும் அவ்வாறே. எல்லையற்ற தந்தை, தாதா இருவரும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளான உங்களுக்காகப் பெருமளவு அன்பைக் கொண்டிருக்கின்றார்கள். அவர் உங்களுக்கு அதிகளவு அன்புடன் கற்பித்து, உங்களை அவலட்சணமானவர்களிலிருந்து அழகானவர்கள் ஆக்குகின்றார். எனவே, குழந்தைகளான உங்களின் சந்தோஷப் பாதரசம் உயர வேண்டும். நினைவு யாத்திரை மூலம் பாதரசம் உயரும். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் அருமையான சேவையைச் செய்கின்றார். அவர் அனைவரையும், ஐந்து தத்துவங்களையும் கூட தூய்மையாக்குகின்றார். இது அத்தகைய பெரிய, எல்லையற்ற சேவையாகும். தந்தை பெருமளவு அன்புடன் குழந்தைகளாகிய உங்களுக்குத் தொடர்ந்தும் கற்பிக்கின்றார், ஏனெனில் குழந்தைகளைச் சீர்திருத்துவது தந்தையினதும், ஆசிரியரினதும் கடமையாகும். தந்தையிடமிருந்து வருகின்ற ஸ்ரீமத்தின் மூலமே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் தந்தையை எந்தளவிற்கு அதிகமாக அன்புடன் நினைவுசெய்கின்றீர்களோ, அந்தவிற்கு அதிகமாக மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்களா அல்லது உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுகின்றீர்களா என்பதையும் உங்கள் அட்டவணையில் எழுத வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாத்திரமே, நீங்கள் மிகச்சரியானவர்கள் ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்குள் சத்தியம் செய்யுங்கள்: நான் எந்த நேரத்தையும் வீணாக்க மாட்டேன், நான் சங்கமயுகத்தின் ஒவ்வொரு கணத்தையும் ஒரு தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவேன். நான் என்றுமே பாபாவை மறக்க மாட்டேன். நான் நிச்சயமாக ஒரு புலமைப்பரிசிலைக் கோருவேன்.

2. இது இப்பொழுது உங்கள் ஓய்வு ஸ்திதி என்பதை எப்பொழுதும் அறிந்திருங்கள். உங்கள் பாதங்கள் நரகத்தை நோக்கியும், உங்கள் தலை சுவர்க்கத்தை நோக்கியும் உள்ளன. குட்டிக்கரணத்தை நினைவுசெய்து, மிகவும் சந்தோஷமாக இருங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தூய்மையற்ற சூழல் எதனையும் உங்கள் சக்திவாய்ந்த மனோபாவத்தினால் மாற்றுகின்ற, ஒரு மாஸ்டர் தூய்மையாக்குபவர் ஆவீர்களாக.

சூழல் எவ்வாறிருந்தாலும் உங்கள் சக்திவாய்ந்த மனோபாவத்தினால் அந்தச் சூழலை மாற்ற முடியும். சூழல் விகாரங்கள் நிறைந்ததாக இருந்தாலும், உங்கள் மனோபாவம் விகாரமற்றதாக இருக்க வேண்டும். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவர்களால் ஒரு தூய்மையற்ற சூழலால் ஆதிக்கம் செலுத்தப்பட முடியாது. ஒரு மாஸ்டர் தூய்மையாக்குபவராக இருந்து, தூய்மையற்ற அல்லது பலவீனமான சூழல் எதனையும் உங்கள் சக்திவாய்ந்த மனோபாவத்தினால் முடித்து விடுங்கள். அதனைப் பற்றிப் பேசுவதனால், அத்தகையதொரு சூழலை உருவாக்காதீர்கள். ஒரு பலவீனமான அல்லது ஒரு தூய்மையற்ற சூழலைப் பற்றிப் பேசுவதும் ஒரு பாவமே ஆகும்.

சுலோகம்:
இப்பொழுது, கடவுளை இனங்கண்டு கொள்ளுதல் எனும் விதையைப் பூமியில் விதையுங்கள், அப்பொழுது வெளிப்பாடு இடம்பெறும்.