11.04.21 Avyakt Bapdada Tamil Lanka Murli 10.12.87 Om Shanti Madhuban
சரீரம், மனம், செல்வம், உறவுமுறைகளுக்கான மேன்மையான பேரம்.
இன்று, சகல பொக்கிஷங்களின் கடலும், இரத்தின வியாபாரியுமான தந்தை, தனது சகல குழந்தைகளையும் பார்த்துப் புன்னகைக்கிறார். சகல பொக்கிஷங்களையும் கொண்டுள்ள ஒருவரான, இரத்தின வியாபாரியான தந்தையின் வியாபாரிக் குழந்தைகள் யார் என்பதையும், அவர்கள் யாருடன் ஒரு பேரத்தைச் செய்துள்ளார்கள் என்றும் அவர் பார்க்கிறார். கடவுளுடன் ஒரு பேரத்தைச் செய்வதற்கு முன்வந்தவர்களும், ஏற்கனவே கடவுளுடன் ஒரு பேரத்தைச் செய்தவர்களினதும் முகங்கள் மிகவும் கள்ளங்கபடமற்றவை. எனினும் அவர்கள் இத்தகைய பெரியதொரு பேரத்தைச் செய்துள்ளார்கள்! இந்த ஆத்மாக்களே மிகப் பெரியதொரு பேரத்தைச் செய்த வியாபாரிகள். உலகிலுள்ள மக்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. உலகிலுள்ள மக்களோ, இந்த ஆத்மாக்களை எதற்கும் பிரயோசனம் அற்றவர்களாகவும், அதிகபட்சம் ஏழைகளாகவும் அவர்களால் எதுவும் முடியாது என்றும் நினைக்கிறார்கள். ‘எவ்வாறு இந்தக் குமாரிகளாலும் தாய்மார்களாலும் இறை பேற்றுக்கான உரிமையைப் பெற முடியும்?’ என நினைத்து, அவர்களை ஒதுக்கிவிட்டார்கள். எவ்வாறாயினும், தந்தையோ அனைத்திற்கும் முதலில், தாய்மார்களையும் குமாரிகளையும் சகல பேரங்களிலும் மிகப்பெரிய பேரத்தைச் செய்த மேன்மையான ஆளுமைகளாக ஆக்கியுள்ளார். அனைத்திற்கும் முதலில் ஞானக்கலசம் தாய்மார்களினதும் குமாரிகளினதும் தலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. அவர் ஒரு ஏழைக் குமாரியை இந்த யக்யத்தின் தாயாக, உலகத் தாயாக, ஜெகதாம்பாவாக ஆக்கினார். குறைந்தபட்சம் தாய்மார்களிடம் அவர்கள் மறைத்து வைத்திருக்கும் அவர்களின் சொந்தச் சொத்து ஏதாவது இருக்கும். ஆனால் குமாரிகளோ தாய்மார்களை விட ஏழைகள். தந்தை முதலில் ஏழ்மையிலும் ஏழையாக இருந்தவரை ஒரு வியாபாரி ஆக்கினார். அந்தப் பெரிய பேரம், அவரை ஏழ்மையான குமாரியில் இருந்து ஜெகதாம்பாவாக, இலக்ஷ்மியாக, செல்வத்தின் தேவியாக ஆக்குவதற்கேயாகும்! இன்றுவரை, ஒருவர் எத்தனை பல்கோடீஸ்வரராக இருந்தாலும், அவர் நிச்சயமாக இலக்ஷ்மியிடம் செல்வத்தை வேண்டி அவரை வழிபடுவார். இரத்தின வியாபாரியான தந்தை தனது வியாபாரிக் குழந்தைகளைப் பார்த்து சந்தோஷம் அடைகிறார். ஒரு பிறவிக்கு இந்தப் பேரத்தைச் செய்வதன் மூலம், நீங்கள் பல பிறவிகளுக்கு சதா செழிப்பானவர்களாகவும் முழுமையானவர்களாகவும் ஆகுகிறீர்கள். ஒரு சாதாரணமான பேரத்தைச் செய்யும் ஒருவர், எத்தனை பெரிய வர்த்தகராக இருந்தாலும், அவர் செல்வத்திற்கும் பொருட்களுக்குமான பேரத்தையே செய்வார். இந்த ஒரேயொரு எல்லையற்ற தந்தை மட்டுமே, செல்வத்துடனும் மனதுடனும் சரீரத்துடனும் மேன்மையான உறவுமுறைகளுடனும் ஒரு பேரத்தைச் செய்கிறார். இவரைப் போன்ற அருள்பவர் வேறு யாரையாவது கண்டுள்ளீர்களா? நீங்கள் நான்கு வகையான பேரங்களையும் செய்துள்ளீர்கள், இல்லையா? உங்களின் சரீரம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். உங்களின் மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். உங்களின் செல்வப் பொக்கிஷக் களஞ்சியம் எப்போதும் நிரம்பியிருக்கும். அத்துடன் உங்களின் உறவுமுறைகளில் எப்போதும் சுயநலமற்ற அன்பு காணப்படும். உங்களுக்கு இந்த உத்தரவாதம் உள்ளது. தற்காலத்தில், மக்கள் பெறுமதியான பொருட்களுக்கு ஓர் உத்தரவாதத்தைக் கொடுக்கிறார்கள். அதிகபட்சம் அவர்களால் ஐந்து வருடம் அல்லது பத்து வருட உத்தரவாதத்தையே கொடுக்க முடியும். அதைவிட அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? ஆனால், இரத்தின வியாபாரியான தந்தை எவ்வளவு காலத்திற்கான உத்தரவாதத்தைக் கொடுக்கிறார்? அவர் உங்களுக்குப் பல பிறவிகளுக்கான உத்தரவாதத்தைக் கொடுக்கிறார். நான்கில் ஒன்றேனும் தவறவிடப்பட முடியாது. நீங்கள் பிரஜைகளுக்குப் பிரஜையாக இருந்தாலும், அந்த நிலையிலும், உங்களின் இறுதிப்பிறவி வரை, அதாவது, திரேதாயுகத்தின் இறுதிவரை இந்த நான்கு விடயங்களையும் நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் இத்தகைய பேரத்தை எப்போதாவது செய்துள்ளீர்களா? நீங்கள் இப்போதே இந்தப் பேரத்தைச் செய்துள்ளீர்கள், இல்லையா? நீங்கள் உறுதியான பேரத்தைச் செய்துள்ளீர்களா அல்லது அது உறுதியாக இல்லையா? நீங்கள் கடவுளுடன் குறைந்த செலவினாலான பேரத்தைச் செய்துள்ளீர்கள். அவர் உங்களுக்கு எதைக் கொடுத்துள்ளார்? நீங்கள் அவருக்கு உபயோகமான எதையாவது கொடுத்திருக்கிறீர்களா?
வெளிநாடுகளில் உள்ள மக்கள் எப்போதும் பாப்தாதாவிற்கு ஓர் இதயத்தின் சின்னத்தை அனுப்புவார்கள். அவர்கள் தமது கடிதங்களையும் இதய வடிவிலான படத்திலேயே எழுதுவார்கள். அவர்கள் இதயங்களைப் பரிசாக அனுப்புவார்கள். எனவே, நீங்கள் ஓர் இதயத்தைக் கொடுத்தீர்கள், இல்லையா? ஆனால், நீங்கள் என்ன இதயத்தைக் கொடுத்தீர்கள்? ஓர் இதயம் பல துண்டுகளாக உடைந்துவிட்டன. அம்மா, அப்பா, சித்தப்பா, பெரியப்பா, தாய்மாமா. இது மிகப்பெரியதொரு பட்டியலாகும். நீங்கள் கலியுகத்தின் உறவுகளைப் பற்றிய பட்டியல் ஒன்றைச் செய்தால், அது நீண்டதொரு பட்டியலாகும். முதலில், நீங்கள் உங்களின் இதயத்தை உறவுகளிடம் கொடுத்தீர்கள். இரண்டாவதாக, உங்களின் இதயத்தை உடமைகளிடம் கொடுத்தீர்கள்.... எத்தனை விடயங்களிலும் மனிதர்களிடமும் நீங்கள் உங்களின் இதயத்தின் பற்றை வைத்தீர்கள்? அவை அனைத்திலும் உங்களின் இதயம் பற்றிக் கொண்டது. அதனால் உங்களின் இதயம் பல துண்டுகளாக உடைந்து விட்டன. தந்தை இந்த இதயத்தின் உடைந்த துண்டுகளை எடுத்து அவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தார். எனவே, நீங்கள் எதைக் கொடுத்தீர்கள்? நீங்கள் எதைப் பெற்றீர்கள்? இந்தப் பேரத்தைச் செய்யும் வழிமுறையும் மிகவும் இலகுவானது. இது ஒரு விநாடிக்குரிய பேரமாகும். ‘பாபா’ என்ற வார்த்தையே அதற்கான வழிமுறையாகும். அது ஒரு வார்த்தைக்குரிய வழிமுறை. அதற்கு எவ்வளவு காலம் எடுக்கிறது? நீங்கள் உங்களின் இதயபூர்வமாக ‘பாபா’ எனக் கூறுகிறீர்கள். அந்தப் பேரம் ஒரு விநாடியில் ஏற்பட்டுவிடுகிறது. இது இலகுவானதொரு வழிமுறையாகும். இத்தகையதொரு இலகுவான பேரத்தை வேறு எந்த யுகத்திலும் செய்ய முடியாது. சங்கமயுகத்தில் மட்டுமே இதைச் செய்ய முடியும். எனவே, பாப்தாதா இந்த வியாபாரிகளின் முகங்களையும் ரூபங்களையும் பார்த்தார். உலகுடன் ஒப்பிடும்போது, நீங்கள் எல்லோரும் மிகவும் கள்ளங்கபடமற்றவர்கள். எவ்வாறாயினும், கள்ளங்கபடமற்றவர்களான நீங்களே அற்புதங்களைச் செய்துள்ளீர்கள். நீங்கள் இந்தப் பேரத்தைச் செய்வதில் கெட்டிக்காரர்கள், இல்லையா? இன்றைய செல்வந்த, முக்கிய நபர்கள், செல்வத்தைச் சேமித்த பின்னர், தமது செல்வத்தைப் பார்த்துக் கொள்ளும் பிரச்சனையில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அந்தப் பிரச்சனையில் அகப்பட்டிருப்பதனால், அவர்களுக்குத் தந்தையை இனங்காண நேரம் இருப்பதில்லை. அவர்களின் நேரம் தங்களையும் தமது பணத்தையும் பாதுகாத்துக் கொள்வதிலேயே கழிகிறது. அவர்கள் சக்கரவர்த்திகளாக இருந்தாலும், அவர்கள் கவலைச் சக்கரவர்த்திகளே. ஏனென்றால், அது நேர்மையில்லாமல் சம்பாதித்த பணமாகும். இதனாலேயே அவர்கள் கவலைச் சக்கரவர்;த்திகளாக இருக்கிறார்கள். ஆனால் உங்களிடமும் வெளிப்படையாக ஒரு சதமும் கிடையாது. ஆனால், நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள். நீங்கள் பிச்சைக்காரர்களாக இருந்தாலும், சக்கரவர்த்திகள். ஆரம்பத்தில் நீங்கள் என்ன சுலோகனைப் பயன்படுத்தினீர்கள்? பிச்சைக்காரனில் இருந்து இளவரசன். நீங்கள் இப்போதும் சக்கரவர்த்திகள். எதிர்காலத்திலும் சக்கரவர்த்திகள். இன்றைய முதலாம் இலக்க செல்வந்த ஆளுமைகளுடன் ஒப்பிடும்போது, திரேதாயுகத்தின் இறுதியில் உள்ள பிரஜைகளும் அதிக செல்வந்தர்களாக இருப்பார்கள். இன்றுள்ள சனத்தொகையைப் பொறுத்து அதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அதேயளவு செல்வம் காணப்படும். உண்மையில், புதைந்து போன செல்வமும் வெளிப்படும். சனத்தொகைக்கேற்ப செல்வம் பகிர்ந்தளிக்கப்படும். எனவே, அங்கு சனத்தொகை எவ்வளவாக இருக்கும்? இதன் அடிப்படையில் நீங்கள் இதைப் பார்த்தால், அங்கு எவ்வளவு செல்வம் இருக்கும்? பிரஜைகளுக்குக் கூட எந்தவிதக் குறைவும் இருக்காது. எனவே, அவர்கள் சக்கரவர்த்திகள், இல்லையா? சக்கரவர்த்திகள் என்றால் அவர்கள் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதல்ல. ஒரு சக்கரவர்த்தி என்றால், நிரம்பியிருப்பவர், எந்தவிதக் குறைவும் அற்றவர், அவரிடம் எதுவும் இல்லாமல் போகாது என்று அர்த்தம். எனவே, நீங்கள் இத்தகையதொரு பேரத்தைச் செய்துள்ளீர்களா? அல்லது, நீங்கள் இன்னமும் அதைச் செய்கிறீர்களா? அல்லது, நீங்கள் அதைப் பற்றி இன்னமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? சிலவேளைகளில், உங்களுக்கு மிக நல்லதொரு பொருள் மிகவும் மலிவாகக் கிடைத்தால், அந்தப் பொருள் நல்லதாக இருக்குமோ இல்லையோ என்ற குழப்பத்தில் நீங்கள் அகப்பட்டுக் கொள்வீர்கள். நீங்கள் அந்த வகையான குழப்பத்தில் அகப்பட்டுக் கொள்ளவில்லை, அல்லவா? பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் இலகுவான ஒன்றை மிகவும் சிரமமாக ஆக்கிவிட்டார்கள். அது அனைவரையும் ஒரு சுழற்சிக்கு உள்ளாக்கிவிட்டது. இப்போதும், அவர்கள் அதே ரூபத்தில் தந்தையைத் தேடுகிறார்கள். அவர்கள் சிறியதொரு விடயத்தைப் பெரியதாக்கிவிட்டார்கள். இதனாலேயே, அவர்கள் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்கள் அதிமேலான கடவுளைக் காண்பதற்கு நீண்ட, சிக்கலான வழிமுறைகளைக் காட்டியுள்ளார்கள். அதைப் பற்றிச் சிந்தித்து, பக்தர்கள் இன்னமும் அதே குழப்பத்தில் அகப்பட்டுள்ளார்கள். கடவுள் பக்தியின் பலனைக் கொடுப்பதற்காக வந்துள்ளார். எனினும், இந்தக் குழப்பத்தால், பக்தர்கள் ஒவ்வோர் இலைக்கும் நீரூற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு நீங்கள் எத்தனை செய்திகளைக் கொடுத்தாலும், அவர்கள் என்ன கூறுகிறார்கள்? எவ்வளவு மேன்மையான கடவுள்! அவர் மிக இலகுவாக இங்கு வருவதென்பது அசாத்தியமான விடயம்! எனவே, தந்தை புன்னகை செய்தார். ஏனென்றால், பக்தியில் அல்லது அவர்களின் செல்வத்திற்காக அல்லது அவர்களின் பதவிக்காகப் பிரபல்யமான மனிதர்கள், தமது சொந்த வேலைகளைச் செய்வதில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் சாதாரண ஆத்மாக்களான நீங்களோ தந்தையுடன் ஒரு பேரத்தைச் செய்திருக்கிறீர்கள். பாண்டவர்களான நீங்கள் உறுதியான பேரத்தைச் செய்துள்ளீர்கள், இல்லையா? இரட்டை வெளிநாட்டவர்களும் ஒரு பேரத்தைச் செய்வதில் கெட்டிக்காரர்கள். அனைவரும் ஒரு பேரத்தைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அனைத்தும் வரிசைக்கிரமமானதே. தந்தை அனைவருக்கும் சமமாகப் பொக்கிஷங்களை வழங்கியுள்ளார். ஏனென்றால், அவரே எல்லையற்ற கடல் ஆவார். அனைத்தையும் வரிசைக்கிரமமாகக் கொடுக்க வேண்டிய அவசியம் தந்தைக்கு இல்லை.
தற்காலத்தில் விநாசத்திற்காக வேலை செய்யும் ஆத்மாக்கள், தம்மிடம் விநாசத்திற்காகப் பல உபகரணங்கள் இருப்பதாகவும் இந்த உலகைப் போல் பல உலகங்களைத் தம்மால் அழிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். தந்தையும் தன்னிடம் பல பொக்கிஷங்கள் இருப்பதாகக் கூறுகிறார். இந்த உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரும் உங்களைப் போல் விவேகிகளாகி, ஒரு பேரத்தைப் பேசி அனைத்தையும் பெற்றாலும், அப்போதும் அது முடிவற்றதாகவே இருக்கும் என அவர் கூறுகிறார். பிராமண ஆத்மாக்களின் சனத்தொகையை விடப் பல மில்லியன் அதிகமான ஆத்மாக்கள் வந்தாலும், அவர்களாலும் அனைத்தையும் பெற முடியும். அவரிடம் முடிவற்ற பொக்கிஷங்கள் உள்ளன. எவ்வாறாயினும், அவற்றை எடுப்பவர்களே வரிசைக்கிரமம் ஆகுகிறார்கள். வெகுசில தைரியசாலிகள் மட்டுமே திறந்த இதயத்துடன் ஒரு பேரத்தைச் செய்வதற்காக வருகிறார்கள். இதனாலேயே, இரண்டு வகையான மாலைகள் பூஜிக்கப்படுகின்றன. எட்டு இரத்தினங்களுக்கும், 16000 மணிமாலையின் கடைசி இலக்க மணிக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. பெரியதொரு வேறுபாடு காணப்படும். ஒரு பேரத்தைச் செய்யும்போது, நீங்கள் எல்லோரும் ஒன்றுபோலவே இருக்கிறீர்கள். கடைசி இலக்க ஆத்மாவும் ‘பாபா’ என்றே சொல்கிறார். முதலாம் இலக்க ஆத்மாவும் ‘பாபா’ என்றே சொல்கிறார். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தையில் வேறுபாடு இல்லை. பேரத்தைச் செய்யும் வழிமுறை ஒன்றே. கொடுக்கின்ற அருள்பவரும் சமமாகவே கொடுக்கிறார். ஞானப் பொக்கிஷங்களோ அல்லது சக்திகளின் பொக்கிஷங்களோ, நீங்கள் அறிந்த சங்கமயுகத்தின் சகல பொக்கிஷங்களையும் அனைவரும் ஒத்ததாகவே பெறுகிறார்கள். பாபா ஒருவருக்குச் சகல சக்திகளைக் கொடுத்து, இன்னொருவருக்கு ஒரேயொரு சக்தியை மட்டும் கொடுப்பதாகவோ அல்லது ஒருவருக்கு ஒரு நற்குணத்தையும் இன்னொருவருக்கு சகல நற்குணங்களையும் கொடுப்பதாகவோ இல்லை. அந்த வேறுபாடு இல்லை. அனைவரின் பட்டமும் ஒன்றே. ஆரம்பம், மத்தி, முடிவின் ஞானத்தை அறிந்தவர்கள், திரிகாலதரிசிகளும் மாஸ்ரர் சர்வசக்திவான்களும் ஆவார்கள். ஒருவர் சகல சக்திகளையும் கொண்டுள்ள சர்வசக்திவானும், இன்னும் சிலரிடம் சில சக்திகள் மட்டுமே இருக்கின்றன என்பதும் கிடையாது. இல்லை. நீங்கள் எல்லோரும் சகல நற்குணங்களும் நிறைந்த தேவாத்மாக்கள் ஆகுவீர்கள் என்றே அழைக்கப்படுகிறீர்கள். எல்லோரும் நற்குணங்களின் ரூபங்கள் என்றே அழைக்கப்படுகிறீர்கள். அனைவரிடமும் சகல பொக்கிஷங்களும் உள்ளன. இந்த ஞானத்தை ஒரு மாதம் மட்டுமே கற்றவர்களும், இந்த ஞானப் பொக்கிஷத்தைப் பற்றி 50 வருடங்கள் இந்த ஞானத்தில் இருப்பவர்களைப் போன்றே பேசுகிறார்கள். ஒவ்வொரு நற்குணத்தில் அல்லது ஒவ்வொரு சக்தியில் ஒரு சொற்பொழிவு கொடுக்கும்படி உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் மிக நல்லதொரு சொற்பொழிவை ஆற்றுவீர்கள். அது உங்களின் புத்தியில் இருப்பதனாலேயே, உங்களால் அதைச் செய்ய முடிகிறது. எனவே, அனைவரிடமும் பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால், இதில் உள்ள வேறுபாடு என்ன? ஒரு முதலாம் இலக்க வியாபாரி சகல பொக்கிஷங்களையும் தனக்காகக் கடைவதன் மூலம் தனக்காகப் பயன்படுத்துவார். அவர் அந்த அனுபவத்தின் அதிகாரத்தினால் அனுபவசாலியாகி, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார். பொக்கிஷங்களைப் பயன்படுத்துவது என்றால் அவற்றை அதிகரித்தல் என்று அர்த்தம். ஒருபுறம், பொக்கிஷங்களைப் பற்றிப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு புறம், அவற்றைக் கடைபவர்கள் இருக்கிறார்கள். அனுபவசாலிகள் ஆகியிருப்பதனால், அவற்றைக் கடைபவர்களால் யாருக்கு அவற்றைக் கொடுக்கிறார்களோ, அவர்களையும் அனுபவசாலிகள் ஆக்க முடியும். அவற்றைப் பற்றிப் பேசுபவர்களால், மற்றவர்களையும் அவற்றைப் பற்றிப் பேச வைக்கவே முடியும். அவர்கள் தொடர்ந்தும் இதைப் புகழ்வார்கள். ஆனால் அவர்கள் அனுபவசாலி ஆகமாட்டார்கள். அவர்கள் மகத்தானவர்கள் ஆகமாட்டார்கள். ஆனால், வெறுமனே புகழ் பாடுபவர்களாகவே ஆகுவார்கள்.
எனவே, முதலாம் இலக்கம் என்றால், கடைதல் சக்தியால் பொக்கிஷங்களில் அனுபவசாலி ஆகி, மற்றவர்களையும் அனுபவசாலி ஆக்குதல் என்று அர்த்தம். அதாவது, மற்றவர்களையும் செல்வந்தர்கள் ஆக்குவதாகும். இதனாலேயே, அவர்களின் பொக்கிஷங்கள் எப்போதும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இந்தப் பொக்கிஷங்களைக் காலத்திற்கேற்ப தங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்துவதன் மூலம், அவர்கள் எப்போதும் வெற்றி சொரூபங்களாக இருப்பார்கள். பொக்கிஷங்களைப் பற்றி வெறுமனே பேசுபவர்களால் மற்றவர்களைச் செல்வந்தர்கள் ஆக்கவும் முடியாது. அத்துடன் நேரத்திற்கேற்ப தாங்கள் பயன்படுத்த வேண்டிய காலம், சக்தி, நற்குணம் அல்லது ஞானத்தையும் அவர்களால் பயன்படுத்த முடியாதிருக்கும். இதனாலேயே, அவர்களால் சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருக்கும் சொரூபங்களாக இருக்கும் சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. அத்துடன் அவர்களால் அருள்பவர்களாகத் தாம் கொடுக்கிறோம் என்பதையும் உணர முடியாது. செல்வம் இருந்தாலும், அவர்களால் அந்தச் செல்வத்தின் சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. சக்தியைக் கொண்டிருந்தாலும், அந்தச் சக்தியால் அந்த நேரத்தில் அவர்களால் வெற்றி பெற முடியாதிருக்கும். நற்குணங்கள் இருந்தாலும், அவர்களால் பொருத்தமான நேரத்தில் அந்த நற்குணங்களைப் பயன்படுத்த முடியாதிருக்கும். அவர்களால் அவற்றைப் பற்றிப் பேச மட்டுமே முடியும். அனைவரிடமும் செல்வம் உள்ளது. ஆனால், அந்தச் செல்வத்தின் சந்தோஷம், அதைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே அனுபவம் செய்ய முடியும். தற்காலத்தில், அழிகின்ற செல்வத்தை வைத்திருப்பவர்கள் - அவற்றில் சிலது அவர்களின் வங்கியில் இருக்கும், சிலது அவர்களின் அலுமாரியில் அல்லது அவர்களின் மெத்தையின் அடியில் இருக்கும் - தாங்களும் அதைப் பயன்படுத்த மாட்டார்கள், அதை மற்றவர்கள்; பயன்படுத்தவும் விடமாட்டார்கள். அவர்களும் அதிலிருந்து நன்மை பெறமாட்டார்கள். மற்றவர்களையும் அதிலிருந்து நன்மை பெற அனுமதிக்க மாட்டார்கள். எனவே, அந்தச் செல்வம் அவர்களிடம் இருந்தாலும், அவர்கள் அதிலிருந்து சந்தோஷத்தைப் பெற மாட்டார்கள், இல்லையா? அது அவர்களின் தலையணையின் கீழ் இருக்கும். அவர்கள் சென்றுவிடுவார்கள். எனவே, அதைப் பற்றி வெறுமனே பேசுவது என்றால், அதைப் பயன்படுத்தாமல் இருத்தல் என்று அர்த்தம். இத்தகையவர்கள் எப்போதும் ஏழைகளாகவே பார்க்கப்படுகிறார்கள். இந்தச் செல்வத்தை உங்களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ சரியான நேரத்தில் பயன்படுத்தாவிட்டால், அதை வெறுமனே புத்தியில் வைத்திருந்தால், நீங்கள் அழியாத செல்வத்தின் போதையிலும் சந்தோஷத்திலும் இருக்க மாட்டீர்கள். அத்துடன் உங்களால் அதை மற்றவர்களுக்கும் கொடுக்க முடியாது. அதன்பின்னர், நீங்கள் தொடர்ந்து, ‘நான் என்ன செய்வது? எவ்வாறு நான் அதைச் செய்வது?’ என்ற வழிமுறையுடனேயே முன்னேறுவீர்கள். இதனாலேயே இரண்டு மாலைகள் உருவாக்கப்படுகின்றன. அதைக் கடைபவர்கள் இருக்கிறார்கள். அதைப் பற்றி வெறுமனே பேசுபவர்களும் இருக்கிறார்கள். எனவே, நீங்கள் எத்தகைய வியாபாரிகள்? முதலாம் இலக்கத்தவர்களா அல்லது இரண்டாம் இலக்கத்தவர்களா? இந்தப் பொக்கிஷங்களுடன் கொடுக்கப்பட்ட நிபந்தனையானது, எந்தளவிற்கு நீங்கள் அவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்து, ஒரு பணிக்காகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு அது அதிகரிக்கும். இதுவே விரிவாக்கத்திற்கான வழிமுறையாகும். இதில், சரியான வழிமுறையைப் பயன்படுத்தாமையால், உங்களிலும் முன்னேற்றம் காணப்படுவதில்லை. மற்றவர்களுக்குச் சேவை செய்வதிலும் முன்னேற்றம் காணப்படுவதில்லை. பாபா எண்ணிக்கையை அதிகரிப்பதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், மற்றவர்களைச் சம்பூரணமாக்குவதில் உள்ள வளர்ச்சியைப் பற்றிக் கூறுகிறார். அந்த எண்ணிக்கையில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இப்போதும் அவர்கள், ‘யோகம் என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை’ அல்லது ‘எவ்வாறு நான் தந்தையை நினைவு செய்வது?’ எனத் தொடர்ந்து சொல்கிறார்கள். இப்போது அந்தச் சக்தி அவர்களிடம் இல்லை. அவர்கள் மாணவர்களின் வரிசையில் இருக்கிறார்கள். பதிவேட்டில் அவர்களின் பெயர்கள் உள்ளன. ஆனால், அவர்கள் செல்வந்தவர்கள் ஆகவில்லை, இல்லையா? அவர்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சிலவேளைகளில், அவர்கள் தமது ஆசிரியரிடம் சென்று உதவி கேட்பார்கள். சிலவேளைகளில், அவர்கள் தந்தையுடன் இதயபூர்வமாக உரையாடுவார்கள்: ‘உதவி செய்யுங்கள்!’ எனவே, அவர்கள் நிரம்பவில்லை, இல்லையா? கடைகின்ற சக்தியால் தமது செல்வத்தை அதிகரிப்பவர்களால் மற்றவர்களும் அவர்களின் செல்வத்தை அதிகரிக்க உதவ முடியும். கடையும் சக்தி என்றால் செல்வத்தை அதிகரித்தல் என்று அர்த்தம். ஆகவே, செல்வந்தராக இருக்கும் சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள். செல்வந்தராக இருக்கும் சுகத்தை அனுபவம் செய்யுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? கடையும் சக்தி மிகவும் முக்கியமானது. உங்களுக்கு ஏற்கனவே சிறியதொரு சமிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், கடையும் சக்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி பாபா மேலும் உங்களுக்குக் கூறுவார். பாபா தொடர்ந்து உங்களைச் சோதிப்பதற்கான வேலையை உங்களுக்குக் கொடுக்கிறார். பெறுபேறு அறிவிக்கப்படும்போது, உங்களுக்கு அதைப் பற்றித் தெரியாது, பாப்தாதா உங்களுக்கு அதைப் பற்றிக் கூறவில்லை என நீங்கள் கூறுவதை பாபா விரும்பவில்லை. இதனாலேயே, ஒவ்வொரு நாளும் பாபா தொடர்ந்து உங்களுக்கு ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார். சோதித்தல் என்றால் மாறுதல் என்று அர்த்தம். அச்சா.
மேன்மையான வியாபாரி ஆத்மாக்கள் அனைவருக்கும், எப்போதும் தமது பொக்கிஷங்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் பயன்படுத்தும் பெரிய, பரந்த புத்திகளைக் கொண்டுள்ள குழந்தைகளுக்கும், அனுபவத்தின் அதிகாரிகளாக இருந்து, தங்களை நிரம்பியவர்களாக அனுபவம் செய்வதுடன், மற்றவர்களையும் நிரம்பியவர்கள் ஆக்கும் குழந்தைகளுக்கும், சர்வசக்திவான் பாப்தாதாவின் அன்பும், நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா ஒரு குழுவைச் (கிழக்குப் பிராந்தியம்) சந்திக்கிறார்:
சூரியன் கிழக்கில் உதிக்கிறது. எனவே, கிழக்குப் பிராந்தியம் என்றால் ஞான சூரியன் எப்போதும் உதிப்பவர் என்று அர்த்தம். கிழக்குப் பிராந்தியத்தில் இருப்பவர்கள், ஞான சூரியனின் ஒளியால் ஆத்மாக்களை ஒளிக்குள் கொண்டுவருபவர்கள், இருளை நீக்குபவர்கள் என்று அர்த்தம். சூரியனின் பணி, இருளை இல்லாமல் செய்வதேயாகும். எனவே, நீங்கள் அனைவரும் மாஸ்ரர் ஞான சூரியர்கள், அதாவது, நீங்களே எங்கும் அறியாமையை முடிப்பவர்கள், இல்லையா? நீங்கள் அனைவரும் இந்தச் சேவையைச் செய்வதில் மும்முரமாக இருக்கிறீர்களா? அல்லது, உங்களின் சொந்தச் சூழ்நிலைகளிலும் உங்களின் இல்லறச் சூழ்நிலைகளிலும் நீங்கள் அகப்பட்டுள்ளீர்களா? ஒளியைக் கொடுக்கும் பணியில் எப்போதும் மும்முரமாக இருப்பதே சூரியனின் வேலை. குடும்பத்திலோ அல்லது வேறெந்த உறவுமுறையிலோ அல்லது உங்களுக்கு முன்னால் எந்தவொரு சூழ்நிலை நிகழும்போதோ, சூரியன்களான உங்களால் ஒளியைக் கொடுக்கும் பணியைச் செய்யாமல் இருக்க முடியாது. எனவே, நீங்கள் இத்தகைய மாஸ்ரர் ஞான சூரியன்களா அல்லது சிலவேளைகளில் ஏதாவது பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொள்கிறீர்களா? முதலாவது கடமை, ஞான ஒளியைக் கொடுப்பதேயாகும். உங்களின் இறை உறவுமுறையினூடாக உங்களுடனும் உங்களின் குடும்பத்துடனும் தொடர்பில் உள்ள ஆத்மாக்களை மேன்மையானவர்கள் ஆக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தால், இந்தச் சேவை இயல்பாகவே இடம்பெறும். கடவுளின் பெயரால் நீங்கள் அனைத்தையும் செய்யும்போது, சகல உறவுமுறைகளும் வெற்றிகரமானதாகவும் இலகுவானதாகவும் ஆகும். நீங்கள் அனைத்தையும் கடவுளின் பெயரால் செய்கிறீர்கள் என்ற உணர்வு உங்களுக்கு இருக்கும்போது, இயல்பாகவே ஒற்றுமையும் குடும்பத்திற்காக உண்மையான அன்பும் காணப்படும். எனவே, குடும்பம் மேன்மையானது. அதனுடன் உங்களின் தொடர்பும் மேன்மையானது. கடவுளின் பெயரால் எதையாவது செய்யும்போது, அது உங்களின் ஏனைய தொடர்புகளில் இருந்து உங்களை அப்பால் எடுத்துச் செல்வதில்லை. ஏனென்றால், கடவுளின் பெயரால் எதையாவது செய்வதில் மும்முரமாக இருக்கும்போது, உண்மையில் குடும்பத்திற்காக நீங்கள் செய்யும் அனைத்திலும், உங்களின் ஏனைய தொடர்புகளிலும் நீங்கள் ஆதாரத்தைப் பெறுவீர்கள். ஆகவே, அனைத்தையும் கடவுளின் பெயரால் செய்வதன் மூலம் சதா தொடர்ந்து முன்னேறுங்கள். நேபாளத்தில் இருப்பவர்களின் சின்னமாகச் சூரியனைக் காட்டுகிறார்கள். அரசர்களுக்கிடையே, சூரிய வம்ச அரசர்களே மிகவும் பிரபல்யமானவர்கள். அவர்கள் மேன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே, நீங்களும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்கும் மாஸ்ரர் ஞான சூரியர்கள் ஆவீர்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் சங்கமயுகத்தில் ஒவ்வொரு செயலையும் ஒரு விசேட செயலாகச் செய்து, பதினாறு சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர்கள் ஆகுவீர்களாக.சங்கமயுகம் உங்களின் விசேடமான திறமைகளை வெளிப்படுத்தும் யுகமாகும். ஒவ்வொரு செயலும் திறமையாக இருப்பவர்களின் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு நற்குணமும் புகழப்படுகின்றது. பதினாறு சுவர்க்கக்கலைகள் நிரம்பியவர் என்றால், உங்களின் ஒவ்வொரு செயலும் ஒரு விசேடமான திறமையாகப் புலப்படும்: இதுவே முழுமையான ஸ்திதியின் அடையாளமாகும். சாகார் ரூபத்தில், பாபாவின் சிறப்பியல்பை அவரின் பேசுகின்ற, நடந்து செல்கின்ற விதங்களில் நீங்கள் கண்டீர்கள். எனவே, அதுவும் ஒரு கலையே. அமர்ந்திருக்கும் கலை, எழுந்திருக்கும் கலை, பார்க்கும் கலை, நடந்துசெல்லும் கலை என அனைத்திலும் தனித்துவமும் சிறப்பியல்பும் காணப்படும். எனவே, அதேபோல் தந்தையைப் பின்பற்றுங்கள். பதினாறு கலைகளிலும் நிறைந்தவர் ஆகுங்கள்.
சுலோகம்:
சக்திசாலி நபர் என்றால், எதையாவது உடனடியாக வேறுபிரித்தறிந்து, உடனடியாக ஒரு தீர்மானத்தை எடுப்பவர் ஆவார்.