29.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தூய்மையாகுங்கள், நீங்கள் ஆன்மீக சேவை செய்வதற்குத் தகுதி வாய்ந்தவராகுவீர்;கள். ஆத்ம உணர்வுடைய குழந்தைகள் தந்தையின் நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து, மற்றவர்களையும் இந்த யாத்திரையில் நிலைத்திருப்பதற்குத் தூண்டுவார்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் சங்கம யுகத்தில் ஈட்டும் வருமானம் எவ்வாறு உங்கள் உண்மையான வருமானம் ஆகுகின்றது?

பதில்:
இந்த நேரத்தில் நீங்கள் ஈட்டும் வருமானம் 21 பிறவிகளுக்கு நிலைத்திருக்கிறது. இந்த வருமானத்தால் நீங்கள் ஒருபோதும் கடனாளிகளாக மாட்டீர்கள். ஞானத்தைக் கேட்பதும், அதை மற்றவர்களுக்குக் கொடுப்பதும், தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதும், மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுவதுமே உண்மையான வருமானமாகும். அதனை உண்மையான தந்தையால் மட்டுமே உங்களுக்குக் கற்பிக்க முடியும். சக்கரம் முழுவதிலுமே வேறு யாராலும் அவ்வாறானதொரு வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாது. வேறெந்த வருமானமும் உங்களோடு சேர்ந்து வருவதில்லை.

பாடல்:
வீழ்ச்சியடைந்து விடக்கூடிய ஒரு பாதையில் நடந்து செல்ல வேண்டியும், அதனால் கவனமெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது..

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பக்தி மார்க்கத்தில் அதிகளவு தடுமாறி அலைந்து கொண்டிருந்தீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் அளவற்ற அன்போடும் நல்லுணர்வுகளுடனும் யாத்திரை செயகிறார்கள். இராமாயணம் போன்றவற்றைக் கேட்கிறார்கள். அந்தக் கதைகளை எல்லாம் அளவற்ற அன்போடு கேட்பதுடன், “எங்கள் பகவான் இராமரின் சீதா தேவி, இராவணன் என்ற அசுரனால் கடத்தப்பட்டாள்." என அவர்கள் அழுவதும் உண்டு. இதைக் கேட்கும் போது அவர்கள் அழுகிறார்கள். அவை அனைத்துமே எவ்விதமான நன்மையுமே அளிக்காத கட்டுக்கதைகள் ஆகும். “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து சந்தோஷமற்ற எங்களைச் சந்தோஷமாக்குங்கள்." என்றும் கூட அவர்கள் கூவி அழைக்கிறார்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படாதவர்கள் என்று அவர்கள் கூறுவதால், ஆத்மாக்கள் தான் துன்பத்தை அனுபவிக்கின்றனர் என்று அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆத்மாக்கள் சந்தோஷத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏன் இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்? கடவுள் துன்பத்திற்கும் சந்தோஷத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று அவர்கள் நம்புவதால், அவரது குழந்தைகள் எவ்வாறு சந்தோஷத்திற்கும் துன்பத்திற்கும் உட்பட முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இந்த விடயங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறீர்கள். இந்த ஞான மார்க்கத்திலும் கூட சில சமயங்களில், தீய கிரக தோஷங்கள் இருப்பதும், சில சமயங்களில், வேறு ஏதாவதும் இடம்பெறுகின்றன. சில சமயங்களில் உங்கள் முகங்கள் மலர்ந்து இருக்கின்றன. ஏனைய நேரங்களில் வாடுகின்றன. இது மாயையுடனான ஒரு யுத்தமாகும். மாயை வெற்றி கொள்ளப்பட வேண்டும். யாராவது ஒருவர் சுய உணர்வற்றுப் போகும் போது, மன்மனாபவ என்னும் உயிர் கொடுக்கும் மூலிகை கொடுக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் அளவற்ற கவர்ச்சி காணப்படுகிறது. தேவதேவியர்களின் விக்கிரகங்களுக்கு மிகுந்த அலங்காரம் செய்து உண்மையான நகைகளையும் அணிவிக்கிறார்கள். ஆபரணங்கள் எல்லாம் விக்கிரகத்திற்கே சொந்தமாகும். விக்கிரகங்களுக்குச் சொந்தமானவை எதுவானாலும் பின்னர் அவை பூசகர்களுக்கும், ஆலய தர்மகர்த்தாக்களுக்கும் சொந்தமாகின்றன. உயிருள்ள ரூபத்தில் இருந்த போது குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு வைரங்களாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டீர்கள் என்பதும் அதன் பின்னர் பூஜிப்பவர்கள் ஆகிய பின்னரும் கூட நீங்கள் அதிகளவு நகையாபரணங்களை அணிந்திருந்தீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இப்போது உங்களிடம் எதுவுமேயில்லை. நீங்கள் உயிருள்ள வடிவிலும், உயிரற்ற வடிவிலும் அவற்றை அணிந்திருந்தீர்கள். இப்போது உங்களிடம் எவ்வித ஆபரணங்களும் இல்லை. நீங்கள் முற்றிலும் சாதாரணமாக இருக்கிறீர்;கள். தந்தை கூறுகிறார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறேன். வெளிப்படையான இராஜரீக ஆடம்பரம் எதுவுமேயில்லை. சந்நியாசிகளுக்குக் கூட அளவற்ற வெளிப்படையான ஆடம்பரம் இருக்கிறது. சத்தியயுகத்தில் ஆத்மாக்களாகிய நாங்கள் எவ்வாறு மிகவும் தூய்மையாக இருந்தோம் என்று இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எங்கள் சரீரங்கள் கூடத் தூய்மையாக இருந்தன. அவற்றின் அலங்காரங்கள் கூட மிகவும் அழகாக இருந்தன. அழகாக இருப்பவர்களுக்குத் தம்மை அலங்கரித்துக் கொள்வதில் மிக்க ஆர்வம் இருக்கும். நீங்கள் அழகாக இருந்த பொழுது, அழகான ஆபரணங்களை அணிந்தீர்;கள். வைரங்களால் ஆன பெரிய அட்டிகைகளை நீங்கள் அணிவதுண்டு. இங்கே, எல்லாமே அவலட்சணமாக இருக்கின்றன. பசுக்கள் கூட மிகவும் அவலட்சணமாகி விட்டன. பாபா ஸ்ரீநாத் துவாரேக்குச் சென்ற போது, அங்கே அழகிய பசுக்கள் இருந்தன. கிரு~;ணரோடு காட்டப்படும் பசுக்கள் மிக அழகானவையாகக் காட்டப்படுகின்றன. இங்கே, இது கலியுகம் என்பதால் பசுக்கள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன என்று பாருங்கள். இப்படியான பசுக்கள் அங்கே இருக்க மாட்டா. குழந்தைகளாகிய நீங்கள் உலக அதிபதிகளாகுகிறீர்கள். அங்கே உங்கள் அலங்காரங்களும் மிக அழகானவையாகவே இருக்கும். சற்று சிந்தித்துப் பாருங்கள்: அங்கே நிச்சயமாகப் பசுக்கள் இருக்கும். அங்கே சாணம் மிகவும் செழிப்பானதாக இருக்கும். நிலத்திற்குப் பசளை தேவை. பசளை பயன்படுத்தப்படும் போது, அறுவடை நன்றாக இருக்கும். அங்கேயுள்ள எல்லாமே மிக நல்லதாகவும் போசணையளிப்பதாகவுமே இருக்கும். இங்கே, எதிலுமே எவ்விதமான போசணையும் இல்லை. எல்லாமே முற்றிலும் சக்தியற்றவையாகி விட்டன. புதல்வியர் சூட்சுமலோகத்திற்குச் செல்கிறார்கள். அவர்கள் மிகப் பெரிய பழங்களை உண்டு, மிக இனிமையான பழச்சாறு அருந்துவதுண்டு. அங்கேயுள்ள தோட்டக்காரர்கள் எவ்வாறு பழங்களைப் பிடுங்கி அவர்களுக்குக் கொடுப்பார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளே. சூட்சுமலோகத்தில் எவ்விதமான பழங்களும் இருக்க முடியாது. அவையெல்லாம் வெறும் காட்சிகளேயாகும். இருந்த போதிலும், சுவர்க்கம் என்பது இங்கே தான் இருக்கும். சுவர்க்கம் மேலே இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். சுவர்க்கம் சூட்சுமலோகத்திலும் இல்லை, அசரீரி உலகத்திலும் இல்லை. அது இங்கேயே இருக்கிறது. இங்கே புதல்வியர் பெற்றுக் கொண்ட காட்சிகள் பின்பு இந்தக் கண்களாலேயே காணப்படும். ஒவ்வொருவரிடமும் அவரவர் நிலைமைக்கேற்பவே ஒவ்வொன்றும் இருக்கும். இராஜாக்களின் மாளிகைகள் எத்தனை அழகானவை என்று பாருங்கள்! ஜெய்ப்பூரில் பல மிக நல்ல மாளிகைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. வெறுமனே அந்த மாளிகைகளைப் பார்ப்பதற்கென்று மக்கள் போவதாக இருந்தாலும் அவர்கள் அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் பார்வைக்கென்றே மாளிகைகள் விசேடமாக வைத்திருக்கிறார்கள். தாங்களோ வேறு மாளிகைகளில் வசிப்பார்கள். அது கலியுகத்திலும் நடைபெறுகிறது. இது தூய்மையற்ற உலகம். எவருமே தன்னைத் தூய்மையற்றவராகக் கருதுவதில்லை. நீங்கள் தூய்மையற்றவர்களாக இருந்தீர்கள் என்பது உங்களுக்கு இப்போது விளங்குகிறது. நீங்கள் எந்த உபயோகமும் இல்லாதவர்களாக இருந்தீர்கள், இப்போது நீங்கள் அழகானவர்களாகப் போகின்றீர்;கள். அந்த உலகம் முதல் தரமானது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் மாளிகைகள் முதல் தரமானவையாக இருக்கின்ற போதிலும், அங்கேயுள்ள மாளிகைகளோடு ஒப்பிடும் போது அவை ஒன்றுமேயில்லை. ஏனெனில், இங்கேயுள்ள மாளிகைகள் தற்காலிகமான சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கின்றன. அங்கே முதல் தரமான மாளிகைகள் இருக்கும். அங்கே முதல் தரமான பசுக்கள் இருக்கின்றன. அங்கே இடையர்களும் இருப்பார்கள். ஸ்ரீகிருஷ்ணரும் கூட ஒரு இடையன் என்றே அழைக்கப்படுகிறார். இங்கே பசுக்களை மேய்க்கும் இடையர்கள் தம்மைக் கிருஷ்ண வம்சத்தைச் சேர்ந்த இடையர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், அது கிருஷ்ண வம்சம் என்று அழைக்கப்பட முடியாது. அவர்கள் கிருஷ்ண இராச்சியத்திற்கு உரியவர்கள் என்று அழைக்கப்படலாம். பசுக்களை வைத்திருக்கும் செல்வந்தர்களிடம் பசுக்களைப் பராமரிக்கும் இடையர்களும் இருப்பார்கள். இடையன் என்ற வார்த்தை சத்தியயுகத்திற்குச் சொந்தமானதாகும். இது நேற்றைய விடயமேயாகும். நேற்று நாங்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்திற்குச் சொந்தமானவர்களாக இருந்தோம். அதன் பின் தூய்மையற்றவர்கள் ஆகினோம். எனவே, நாங்கள் எங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்தோம். இப்போதெல்லாம் மக்களை நீங்கள் அவர்கள் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்திற்குரியவர்களா அல்லது இந்து சமயத்திற்குரியவர்களா என்று கேட்டால், அவர்கள் எல்லோருமே தாங்கள் இந்;து சமயத்திற்குரியவர்கள் என்றே எழுதுகிறார்கள். இந்து சமயத்தை ஸ்தாபித்தவர் யார்? தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்தவர் யார்? எவருக்குமே இது தெரியாது. பாபா இக் கேள்வியைக் கேட்கிறார்: “தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்தவர் யார்?" என்று எனக்குக் கூறுங்கள். சிவபாபா அதனை பிரம்மா மூலம் ஸ்தாபிக்கிறார். ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் சிவபாபாவினுடைய ஸ்ரீமத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் பின் இராவண இராச்சியம் நிலவியது. மக்களும் விகாரத்தில் மூழ்கத் தொடங்கினார்கள். பக்தி மார்க்கம் ஆரம்பமாகிய போது, தம்மை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். எவருமே இப்போது தன்னை ஒரு தேவன் என்று அழைத்துக் கொள்வதில்லை. இராவணன் உங்களை விகாரமுள்ளவர்கள் ஆக்கினான். தந்தை வந்து உங்களை விகாரமற்றவர்கள் ஆக்குகிறார். கடவுளுடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் தேவதேவியர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை மட்டுமே வந்து பிராமணர்களாகிய உங்களைத் தேவர்கள் ஆக்குகிறார். ஏணியிலே நீங்கள் எவ்வாறு கீழிறங்குகிறீர்கள் என்பது வரிசைக்கிரமமாக குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் பதிந்திருக்கிறது. ஏனைய மனிதர்கள் எல்லாமே அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார்கள் என்றும் குழந்தைகளாகிய நீங்களோ கடவுளின் வழிகாட்டல்களைப் பி;ன்பற்றுகிறீர்கள் என்றும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்;கள். இராவணனுடைய வழிகாட்டல்களைப் பின்பற்றி நீங்கள் ஏணியில் கீழிறங்கி வந்திருக்கிறீர்கள். 84 பிறவிகளின் பின் நீங்கள் முதலாவது பிறவி எடுப்பீர்கள். உங்கள் ஈஸ்வரிய புத்திகளால் நீங்கள் உலகின் ஆரம்பம், நடுப்பகுதி, இறுதியைப் புரிந்து கொள்கிறீர்கள். உங்களுடைய இந்த வாழ்க்கை விலைமதிக்க முடியாதது. இப்பொழுது தந்தை வந்து உங்களைத் தூய்மையாக்குகிறார் என்பதால், இது மிகவும் மகிமை வாய்ந்தது. இப்போது நாங்கள் ஆன்மீக சேவை செய்யத் தகுதி வாய்ந்தவர்களாகுகிறோம். அவர்கள் சரீர உணர்வுடன் இருக்கும் பௌதீகமான சமூக சேவகர்களாவர். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள். நீங்கள் ஆத்மாக்களை ஆன்மீக யாத்திரையில் எடுத்துச் செல்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் சதோப்பிரதானாக இருந்தீர்கள். இப்போது தமோப்பிரதானாகி விட்டீர்கள். சதோப்பிரதானாக இருப்பவர்கள் தூய்மையானவர்கள் என்றும் தமோப்பிரதானாக இருப்பவர்கள் தூய்மையற்றவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆத்மாவிலேயே மாசு கலந்துள்ளது. ஆத்மாவே சதோப்பிரதானாக்கப்பட வேண்டும். எவ்வளவுக்கு நீங்கள் தந்தையின் நினைவில் இருக்கிறீர்களோ அவ்வளவுக்குத் தூய்மையாகுவீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் குறைந்த தூய்மை கொண்டவர்களாகி, தலை மீது இன்னும் உங்களுக்குப் பாவச் சுமை இருக்கும். சகல ஆத்மாக்களும் ஆரம்பத்தில் தூய்மையானவர்கள். அதன் பின் ஒவ்வொருவரது பாகமும் தனிப்பட்டதாகும். எல்லாருக்கும் ஒரே பாகம் இருக்க முடியாது. பாபாவின் பாகமே அதிமேலான பாகமாகும். அதனையடுத்து, பிரம்மா, சரஸ்வதியின் பாகங்கள் இருக்கின்றன. ஸ்தாபனையை நடாத்துபவர்களே பின்பு அதனைப் பராமரிக்கிறார்கள். அவர்களுடையதே மகத்துவமான பாகமாகும். முதலில் சிவபாபாவும் அவரையடுத்து, மறுபிறவிகள் எடுக்கும் பிரம்மாவும் சரஸ்வதியும் இருக்கிறார்கள். சங்கரர் சூட்சும ரூபம் மட்டுமே எடுக்கிறார். சங்கரர் கடனாக ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்வதில்லை. கிருஷ்ணருக்கு அவரது சொந்த சரீரம் இருக்கிறது. சிவபாபாவே இங்கே ஒரு சரீரத்தைக் கடனாகப் பெற்றுக் கொள்கிறார். அவர் தூய்மையற்ற உலகத்தில் தூய்மையற்றதொரு சரீரத்தில் பிரவேசித்து, அனைவரையும் முக்தி, ஜீவன்முக்திக்குள் அழைத்துச் செல்வதற்காக அனைவருக்கும் சேவையாற்றுகிறார். முதலில் நீங்கள் முக்திக்குள் செல்ல வேண்டும். தந்தை ஒருவரே ஞானம் நிறைந்த தந்தையும் தூய்மையாக்குபவரும் ஆவார். அவர் மட்டுமே சிவபாபா என்று அழைக்கப்படுகிறார். சங்கரரை பாபா என்று அழைப்பது சரியல்ல. சிவ பாபா என்ற வார்த்தை மிகவும் இனிமையானது. சிலர் சிவனுக்கு எருக்கலம் பூவைப் படைக்கிறார்கள். இன்னும் சிலர் இன்னொன்றைப் படைக்கிறார்கள். சிலர் பாலும் படைக்கிறார்கள். தந்தை தொடர்ந்தும் பல்வேறு வழிகளிலும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அனைத்துமே யோகத்திலேயே தங்கியுள்ளது என்று குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. யோகத்திலேயே உங்கள் பாவங்கள் அழிகின்றது. யோகம் செய்பவர்களால் ஞானத்தையும் நன்றாகக் கிரகித்துக் கொள்ள முடிகின்றது. அவர்கள் தொடர்ந்தும் தாமாகவே கற்றுக் கொள்வார்கள், ஏனெனில், அவர்கள் ஞானத்தை எடுத்துரைக்கவும் வேண்டும். இது புதியதொரு விடயமாகும். கடவுளிடம் இருந்து நேரடியாக இந்த ஞானத்தை செவிமடுத்தவர்கள் மட்டுமே இப்பொழுது இதனை செவிமடுக்கிறார்கள். அதன் பின் இந்த ஞானம் இருக்கப் போவதில்லை. தற்போது தந்தை என்னவெல்லாம் கூறுகின்றாரோ அவற்றையெல்லாம் இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்;கள். இப்போது அதை நீங்கள் உட்கிரகிக்கிறீர்கள். அதன் பின் வெகுமதியின் பாகத்தை நீங்கள் நடிக்க வேண்டும். இப்பொழுதே நீங்கள் ஞானத்தை செவிமடுத்து மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கிறீர்கள். இந்தப் பாகம் சத்தியயுகத்தில் இருக்காது. அங்கே, வெகுமதியின் பாகமேயாகும். மக்கள் சட்டத்தரணிகளாகுவதற்குக் கற்கிறார்கள். அதன் பின் சட்டத்தரணிகளாகத் தொழில் செய்து பணம் உழைக்கிறார்கள். இது மிகப் பெரிய வருமானம்! உலக மக்களுக்குத் இதைப் பற்றி எதுவும் தெரியாது. நீங்கள் ஒருபோதும் கடனாளியாக ஆகாத அளவில் உண்மையான வருமானத்தை உண்மையான தந்தை உங்களை ஈட்டச் செய்கிறார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். இப்போது நீங்கள் ஒரு உண்மையான வருமானத்தை ஈட்;டுகிறீர்கள். அது உங்களோடு 21 பிறவிகளுக்கு இருக்கும். அந்த மற்றைய வருமானம் உங்களோடு சேர்ந்து வரப் போவதில்லை. இதுவே உங்களோடு சேர்ந்து வரும். எனவே, இந்த வருமானத்தை உழைத்துக் கொள்வதில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளாகிய உங்கள் புத்திகளைத் தவிர வேறு எவரது புத்தியிலும் இந்த விடயங்கள் இல்லை. உங்கள் மத்தியிலும் இதை மீண்டும் மீண்டும் மறந்து விடுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். நீங்கள் தந்தையையோ அல்லது ஆஸ்தியையோ மறந்து விடக் கூடாது. செய்ய வேண்டியதென்று ஒன்றேயொன்று தான் இருக்கிறது: நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளும் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் சரீரங்களும் 21 பிறவிகளுக்கு நோயிலிருந்து விடுபட்டு இருக்கும். நீங்கள் முதிர்ந்த வயதை அடையும் வரை அகால மரணங்கள் இடம்பெறாது. குழந்தைகளாகிய உங்களுக்கு அளவற்ற சந்தோ~ம் இருக்க வேண்டும். தந்தையின் நினைவே பிரதான விடயமாகும். இதில் தான் மாயை தடைகளை உருவாக்குகிறாள். அவள் புயல்களைத் தோற்றுவிக்கிறாள். பல வகையான புயல்களும் வருகின்றன. தந்தையை நினைவு செய்வேன் என்று நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால், உங்களால் அவ்வாறு செய்ய முடியாதிருக்கிறது. தந்தையின் நினைவில் தான் பலரும் தோல்வியடைகிறார்கள். பலரும் யோகம் என்ற பாடத்தில் குறைவாகவே இருக்கிறார்கள். யோகத்தில் முடிந்தளவுக்கு உறுதியாகுங்கள். விதையையும் மரத்தையும் பற்றிய ஞானம் ஒன்றும் பெரிய விடயமில்லை. தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். என்னை நினைவு செய்வதன் மூலமும் அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் எல்லாவற்றையுமே அறிந்து கொள்வீர்கள். தந்தையின் நினைவில் எல்லாமே அடங்கியிருக்கிறது. இனிய பாபாவை நினைவு செய்யுங்கள்! அதிமேலான சிவபாபா கடவுள் ஆவார். அவரே எல்லோரிலும் அதிமேலானவர். அவர் 21 பிறவிகளுக்கு அதிமேலான ஆஸ்தியைத் தருகிறார். உங்களை அவர் அமரத்துவமானவர்களாகவும் சதா சந்தோ~மானவர்களாகவும் ஆக்குகிறார். நீங்கள் அமரத்துவ பூமிக்கு அதிபதிகளாகுகிறீர்;கள். எனவே, அத்தகையதொரு தந்தையை நீங்கள் மிக நன்றாக நினைவு செய்ய வேண்டும். தந்தையை நீங்கள் நினைவு செய்யாத போது, ஏனைய எல்லாவற்றையும் நினைவு செய்கிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த இறை வாழ்வு மிக, மிகப் பெறுமதி வாய்ந்தது. இந்த வாழ்க்கையில் ஆத்மா, சரீரம் இரண்டையுமே தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். ஆன்மீக யாத்திரையில் நிலைத்திருந்து, மற்றவர்களுக்கும் இந்த யாத்திரையைக் கற்றுக் கொடுங்கள்.

2. உண்மையானதொரு வருமானத்தை உழைத்துக் கொள்வதில் உங்களை முடிந்தளவுக்கு ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நோயிலிருந்து விடுதலை அடைவதற்கு தந்தையின் நினைவில் உறுதியானவர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
மாஸ்டர் ஞானம் நிறைந்தவராகவும், அறியாமையை முடிப்பவராக இருப்பதன் மூலம் ஞான சொரூபமாகவும் யோகயுத்தாகவும் ஆகுவீர்களாக.

மாஸ்டர் ஞானம் நிறைந்தவராக இருப்பவர்களுக்கு எவ்விதமான அறியாமையும் இருக்க மாட்டாது. அவர்கள் தாம் ஏதோ ஒன்றில் அறியாமையில் இருந்தோம் என்பதால் தமக்குத் தெரியாது என்று கூறி, தம்மை விடுவிக்க முயற்சிக்க முடியாது. ஞான சொரூபமான குழந்தைகள் எந்த அறியாமையிலும் இருக்க மாட்டார்கள். யோகயுத்தானவர்கள் முன்கூட்டியே அனைத்தையும் அறிந்தவர்களாக அனுபவம் செய்வார்கள். மாயையின் பிரகாசமும் கவர்ச்சியும் எதிலும் குறைந்தது இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். மாயை மிகவும் கவர்ச்சியானவள் என்பதாலேயே நீங்கள் அவளிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சகல வழிகளிலும் மாயை பற்றி பு ரிந்து கொண்டிருப்பவர்கள் தோற்கடிக்கப்படுவது சாத்தியமில்லை.

சுலோகம்:
எப்பொழுதும் சந்தோஷமான இதயத்தைக் கொண்டிருப்பவர்கள் எக் கேள்வியையும் கொண்டிருக்க முடியாது.