16.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அல்பாவையும் பீற்றாவையும் நினைவு செய்யுங்கள், இதனால் உங்களால் மிகவும் களிப்பூட்டுபவர்களாக முடியும். தந்தை மிகவும் களிப்பூட்டுபவராக இருப்பதனால் நீங்களும் கூடக் களிப்பூட்டுபவராக இருக்க வேண்டும்.

கேள்வி:
ஏன் அனைவரும் தேவர்களின் சிலைகளால் கவரப்படுகின்றார்கள்? அவர்களிடம் இருக்கும் விஷேசமான குணம் யாது?

பதில்:
தேவர்கள் மிகவும் களிப்பூட்டுபவர்களும் தூய்மையானவர்களும் ஆவார்கள். அவர்களின் குதூகலம் கொடுக்கும் சுபாவத்தினால் அவர்களின் உருவங்கள் அனைவரையும் பெருமளவு கவர்கின்றன. தேவர்கள் கொண்ட விஷேச குணம் தூய்மையாகும், இந் நற்குணத்தின் காரணமாகவே தூய்மையற்ற மனிதர்கள் தேவர்களின் சிலைகளுக்குத் தலைவணங்குகின்றார்கள். அனைத்துத் தெய்வீக குணங்களையும் கொண்டிருப்பவர்களே களிப்பூட்டுபவர்களாக இருப்பதுடன் சதா சந்தோஷமானவர்களாகவும் இருப்பார்கள்.

ஓம் சாந்தி.
பரமாத்மாவினதும் ஆத்மாக்களினதும் சந்திப்பானது மிகவும் அற்புதமானது! அத்தகைய எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் எத்தனை களிப்பூட்டுபவர்களாக இருக்க வேண்டும்! தேவர்கள் களிப்பூட்டுபவர்கள் அல்லவா? எவ்வாறாயினும், இராச்சியமானது மிகப் பெரியதாகும். அனைவரும் ஒரேயளவு களிப்பூட்டுபவர்களாக இருக்க முடியாது, ஆனால் சில குழந்தைகள் நிச்சயமாகவே மிகவும் களிப்பூட்டுபவர்களாக இருக்கின்றார்கள். யாரால் களிப்பூட்டுபவர்களாக இருக்க முடியும்? சதா சந்தோஷமாக இருப்பவர்களாலும்; தெய்வீகக் குணங்கள் கொண்டவர்களாலுமே ஆகும். ராதையும் கிருஷ்ணரும் மிகவும் களிப்பூட்டுபவர்களாகவே இருக்கின்றார்கள், இல்லையா? அவர்கள் பெருமளவு கவர்ச்சியைக் கொண்டிருக்கின்றார்கள். என்ன கவர்ச்சி? தூய்மை என்ற கவர்ச்சியாகும். ஏனெனில் அவர்களின் ஆத்மாக்களும் சரீரங்களும் தூய்மையாகவே இருக்கின்றன. தூய்மையற்ற ஆத்மாக்கள் தூய்மையான ஆத்மாக்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களின் பாதங்களில் வீழ்ந்த வணங்குகின்றார்கள். தூய்மையான ஆத்மாக்கள் அதிகளவு வலிமையைக் கொண்டிருக்கிறார்கள். தேவ விக்கிரகங்களின் முன்னால் சந்நியாசிகளும் நிச்சயமாகத் தலைவணங்குகிறார்கள். சிலர் மிகவும் அகங்காரத்துடன் இருந்தாலும், அவர்கள் நிச்சயமாகத் தேவ விக்கிரகங்களின் முன்னாலும், சிவனின் முன்னாலும் தலைவணங்குவார்கள். அவர்கள் இறைவிகளின் விக்கிரகங்களுக்கு முன்னாலும் தலைவணங்குகிறார்கள். தந்தை களிப்பூட்டுகிறார். தந்தை உருவாக்கிய தேவர்களும் களிப்பூட்டுகிறார்கள். அவர்களிடம் தூய்மையின் ஈர்ப்பு உள்ளது. அவர்களின் அந்த ஈர்ப்பு இன்றும் அனைவரையும் தொடர்ந்து ஈர்க்கிறது. நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று ஆகுகிறீர்;கள் என நீங்கள் நினைத்தால், அவர்களிடம் உள்ள ஈர்ப்பினை நீங்களும் கொண்டிருக்க வேண்டும். இந்த நேரத்திற்குரிய உங்களுடைய ஈர்ப்பு அழியாததாகுகின்றது. அனைவரின் ஈர்ப்பும் அழியாதது அன்று. அது வரிசைக்கிரமமானது. எதிர்காலத்தில் உயர் அந்தஸ்தைக் கோர இருப்பவர்களிடம் அத்தகைய ஈர்ப்பு இருக்கும். ஏனெனில் அந்த ஆத்மாக்கள் தூய்மையானவர்கள் ஆகுகிறார்கள். குறிப்பாக நினைவுயாத்திரையில் இருக்கும் உங்களிடம் அதிகளவு ஈர்ப்புக் காணப்படுகிறது. யாத்திரையின் போது நிச்சயமாகத் தூய்மை கடைப்பிடிக்கப்படுகிறது. தூய்மைக்கான ஈர்ப்பு அங்கு காணப்படுகிறது. தூய்மைக்கான ஈர்ப்பு உங்களுடைய கல்வியிலும் ஈர்ப்பினை ஏற்படுத்துகிறது. நீங்கள் இந்த வேளையில் அதனைப் புரிந்து கொள்கிறீர்கள். உங்களுக்கு அவருடைய தொழில் என்னவென்று தெரியும். அவர்களும் அதிகளவில் தந்தையை நினைவு செய்வார்கள்! அவர்கள் பெற்ற இராச்சியம் நிச்சயமாக இராஜயோகத்தைக் கற்பதனூடாகவே பெறப்பட்டுள்ளது. நீங்கள் இங்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்காக வந்துள்ளீர்கள். தந்தை இங்கிருந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். நீங்கள் இந்த நம்பிக்கையை உறுதியாக்கிய வண்ணம் இங்கு வந்துள்ளீர்கள். அவர் அதே தந்தையும், எமது ஆசிரியரும் ஆவார். அவர் எங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வார். நீங்கள் எப்போதும் இந்த நற்பண்புகளைக் கொண்டிருந்து, சதா மலர்ச்சியாக இருங்கள். நீங்கள் தந்தையாகிய அல்பாவின் நினைவில் இருந்தால் மட்டுமே, உங்களால் சதா மலர்ச்சியாக இருக்க முடியும். பின்னர், உங்களால் பீற்றாவை நினைவு செய்யக்கூடியதாக இருப்பதுடன் நீங்கள் மிகவும் களிப்பூட்டுபவராக ஆகுவீர்கள். நீங்கள் இங்கு களிப்பூட்டுபவர்களாக ஆகியுள்ளீர்கள் என்றும், எதிர்காலத்திலும் நீங்கள் களிப்பூட்டுபவர்கள் ஆகுவீர்கள் என்றும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இந்த நேரத்திற்குரிய கல்வி உங்களை அமரத்துவ தேசத்திற்கு அழைத்துச் செல்லும். உண்மையான பாபா உங்களை உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்க வைக்கிறார். இந்த உண்மையான வருமானம் 21 பிறவிகளுக்கு உங்களுடனேயே செல்லும். பின்னர், பக்திமார்க்கத்தில் நீங்கள் சம்பாதிப்பது எதுவாயினும் அது தற்காலிகச் சந்தோஷத்திற்கே ஆகும். அது உங்களுடன் எல்லா வேளைக்கும் வராது. குழந்தைகளாகிய நீங்கள் இந்தக் கல்வியில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எளிமையானவர்கள். உங்களுக்குக் கற்பிப்பவரும் மிகவும் எளிமையான வடிவில் இருக்கிறார். எனவே, கற்பவர்களும் எளிமையாக இருக்க வேண்டும். இல்லாவிடின், அவர்கள் தர்மசங்கடப்படுவார்கள்: நாம் எவ்வாறு அதிக விலையுயர்ந்த ஆடைகளை அணிய முடியும்? எமது மம்மாவும் பாபாவும் மிகவும் எளிமையானவர்கள். எனவே நாமும் எளிமையாக இருப்போம். ஏன் அவர்கள் மிக எளிமையாக இருக்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் எளிமைக்குரிய நிலையில் இருக்கிறார்கள். நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். எவரும் இங்கு திருமணம் செய்வதில்லை. இருவர் திருமணம் செய்யும்வேளையில், பெண் எளிமையாக இருப்பார். அவள் பழைய ஆடைகளை அணிந்து, தனது சரீரத்தில் எண்ணெய் தேய்ப்பாள். ஏனெனில் அவள் தனது மாமனார் வீட்டிற்குச் செல்கிறாள். அவள் பிராமணத் தரகரினூடாக நிச்சயம் செய்யப்படுகிறாள். நீங்களும் உங்களுடைய மாமனார் வீட்டிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் இராவண தேசத்தில் இருந்து இராம தேசத்திற்கு அதாவது, விஷ்ணு தேசத்திற்குச் செல்ல வேண்டும். எளிமையாக இருக்கும் சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. அதனால் சரீரம் அல்லது ஆடைகளின் எந்தவிதமான அகங்காரமும் இருக்காது. ஒருவரிடம் விலைமலிவான சேலை இருந்து, இன்னொருவரிடம் உள்ள மிக நல்ல சேலையைப் பார்க்கும்போது, அவருக்கு அதனைப் பற்றிய எண்ணங்கள் தோன்றும். அந்த நபர் எளிமையாக இல்லை என இவர் நினைப்பார். எவ்வாறாயினும், நீங்கள் எளிமையாக இருந்து எவருக்காயினும் இந்த மேன்மையான ஞானத்தை, மேன்மையான போதையுடன் வழங்கும்போது, அந்த அம்பு இலக்கைத் தாக்கும். நீங்கள் பாத்திரங்களை அல்லது ஆடைகளைக் கழுவும் போது யாராவது உங்களுக்கு முன்னால் வந்தால், நீங்கள்; உடனடியாக அவருக்கு அல்பாவை நினைவூட்டுங்கள். நீங்கள் அந்த போதையுடன் எளிமையான ஆடைகளை அணிந்து மற்றவர்களுக்கு ஞானத்தை வழங்கும்போது, உங்களுக்கு இத்தகைய மேன்மையான ஞானம் இருப்பதைப் பார்த்து அவர்கள் வியப்படைவார்கள். இதுவே கடவுளால் வழங்கப்பட்ட கீதை ஞானமாகும். உங்களுக்கு இத்தகைய போதை உள்ளதா? பாபா தனது சொந்த உதாரணத்தை வழங்குகிறார். உதாரணமாக, நான் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு மாணவர் எனக்கு முன்னால் வந்தால், நான் உடனடியாக அவருக்குத் தந்தையின் அறிமுகத்தை வழங்குகிறேன். யோகசக்தியாலும் வலிமையாலும், அந்த நபர் அங்கு நின்று, இவர் மிக எளிமையாக இருக்கிறார், எனினும் இந்தளவு சக்தியைக் கொண்டிருக்கிறார் என வியப்பார். அப்போது அவரால் எதனையும் கூற இயலாதிருக்கும். அவரின் உதடுகளில் இருந்து எந்தவிதமான வார்த்தைகளும் வெளிவராது. எவ்வாறு நீங்கள் ஒலிக்கு அப்பால் செல்கிறீர்களோ, அவ்வாறே, அவரும் ஒலிக்;கு அப்பால் செல்வார். நீங்கள் உங்களுக்குள் இந்தப் போதையைக் கொண்டிருப்பீர்கள். யாராவதொரு சகோதரர் அல்லது சகோதரி வரும்போது, அவரை நிற்க வைத்து, உலக அதிபதிகள் ஆகுவதற்கான வழிகாட்டல்களை அவர்களுக்கு வழங்குங்கள். அந்தப் போதை உங்களுக்குள் இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய இந்த ஆழமான அன்பில் ஸ்திரமாக இருக்க வேண்டும். பாபா எப்போதும் கூறுவார்: உங்களுக்கு ஞானம் உள்ளது. ஆனால் அங்கு யோகசக்தி இல்லை. தூய்மையைப் பேணி நினைவில் இருப்பதன் மூலம் நீங்கள் சக்தியை விருத்தி செய்கிறீர்கள். நீங்கள் நினைவு யாத்திரையினூடாக தூய்மை ஆகுகிறீர்கள். நீங்கள் வலிமையைப் பெறுகிறீர்கள். ஞானம் செல்வத்திற்குரிய விடயமாகும். கல்வி கற்று ஒரு கலை முதுமானிப் பட்டதாரி அல்லது கலைப்பட்டதாரி ஆகியபின்னர், அதற்கேற்ப சம்பளத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். இங்கு இது வேறுபட்ட விடயமாகும். பாரதத்தின் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானது. இது நினைவாகும். தந்தை சர்வசக்திவான். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து சக்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மாக்கள் மற்றும் பாபாவின் குழந்தைகள் என்ற உணர்வினை உள்ளே கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் பாபாவைப் போன்று தூய்மையானவர்கள் அல்லர். நீங்கள் இப்போது அவ்வாறு ஆகவேண்டும். இது இப்போது உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் ஆகும். நீங்கள் யோகத்தினூடாகத் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். மிக விசேடமான, அதியன்பிற்குரிய குழந்தைகள் நாள் முழுவதும் இந்த எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். யாராவது வரும்போது, அவர்களுக்குப் பாதையைக் காட்டுவதுடன் அவர்கள் மீது கருணை கொள்ளுங்கள். ஏனெனில் அந்த உதவியற்ற அப்பாவி மக்கள் குருடர்களாக இருக்கிறார்கள். குருடர்களுக்கு வழிகாட்டுவதற்காக அவர்களிடம் ஓர் ஊன்றுகோல் உள்ளது. அந்த மக்கள் குருடர்கள். அவர்களுக்கு மூன்றாவது ஞானக்கண் கிடையாது. நீங்கள் இப்போது மூன்றாவது ஞானக்கண்ணைப் பெற்றுள்ளீர்கள். எனவே, இப்போது உங்களுக்கு அனைத்தும் தெரியும். எங்களுக்கு இந்த வேளையில் முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றித் தெரியும். அந்த விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. ‘தீயதைக் கேட்காதீர்கள் அல்லது தீயதைப் பார்க்காதீர்கள்’ என்பதை முன்னர் நீங்கள் அறிவீர்களா? ஏன் அந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன? உலகிலுள்ள எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்போது அதனைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை எவ்வாறு ஞானம் நிறைந்தவரோ, அவ்வாறே அவரின் குழந்தைகளான நீங்களும் உங்களுடைய முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள். சில குழந்தைகள் மிகவும் போதை கொண்டிருக்கின்றார்கள். ஆஹா! நீங்கள் பாபாவின் குழந்தைகள் ஆகி, ஆனால் பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியையும் பெறாவிட்டால், அவரின் குழந்தையாகிய முதல் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்? ஒவ்வொரு இரவும் உங்கள் அட்டவணையை சோதித்து பாருங்கள். பாபா ஒரு வியாபாரி ஆவார். வியாபாரிகள் தமது கணக்கை இலகுவாக பேணுவதுண்டு. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எவ்வாறு கணக்கு வைத்திருப்பது என்பதும் தெரியாது, எவ்வாறு பேரம் பேசுவது என்பதும் தெரியாது. வியாபாரிகள் இதனை மிக நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் வியாபாரிகள். உங்கள் இலாப நட்டத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் கணக்கை ஒவ்வொரு நாளும் சோதியுங்கள். உங்கள் கணக்கை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இலாபமா அல்லது நட்டமாக ஈட்டுகிறீர்கள் எனப் பாருங்கள். நீங்கள் வியாபார்கள், அப்படித்தானே? பாபா வியாபாரி என்றும் இரத்தின வியாபாரி என்றும் நினைவுகூரப்படுகின்றார். அவர் அழியாத ஞான இரத்தினங்களுடன் வியாபாரம் செய்கின்றார். நீங்கள், உங்கள் முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக இதனை புரிந்து கொள்கிறீர்கள். அனைவருக்கும் கூர்மையான புத்தி உள்ளது என்றில்லை. அவர்கள் ஒரு காதினால் கேட்டு மறு காதினால் வெளியே விட்டுவிடுகிறார்கள். அவர்களின் புத்தியிலுள்ள ஓட்டையால் அது வெளியேறி விடுகிறது. அவர்களால் தமது புத்தியை நிரப்ப முடியவில்லை. தந்தை கூறுகிறார்: செல்வம் ஒருபோதும் அதனைத் தானம் செய்வதனால் இல்லாமல் போவதில்லை. இவை அழியாத ஞான இரத்தினங்கள் ஆகும். தந்தையே ரூப் மற்றும் பசன்த் ஆவார். அவர் ஓர் ஆத்மா. அவர் தனக்குள் ஞானத்தைக் கொண்டிருக்கிறார். அவருடைய குழந்தைகளாகிய நீங்களும் ரூப் மற்றும் பசன்த் ஆவீர்கள். ஞானம் அனைத்தும் ஆத்மாவில் பதிந்துள்ளது. ஆத்மா மிகச்சிறியதாக இருந்தாலும் அவருக்கும் ஒரு வடிவம் உள்ளது. அவருக்கு ஒரு வடிவம் உள்ளதல்லவா? எவ்வாறு ஆத்மா உணரப்படுகிறாரோ, அவ்வாறே பரமாத்மாவையும் உணர முடியும். மக்கள் அமர்நாத்தை வழிபடுகிறார்கள். ஆனால் எவ்வாறு அவர்களால் இத்தகையதொரு சிறிய நட்சத்திரத்தை வழிபட முடியும்? அவர்கள் வழிபடுவதற்காகப் பல இலிங்கங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் கூரையளவிற்கு இலிங்கங்களை உருவாக்குகிறார்கள். உண்மையில் அவர் மிகச்சின்னஞ்சிறியவர். ஆனால் அவருடைய அந்தஸ்தோ மிக மேன்மையானது! தவம் செய்வதாலோ அல்லது யாகங்கள் வளர்ப்பதனாலோ எவராலும் எதனையும் அடைய முடியாது எனத் தந்தை சென்ற கல்பத்திலும் உங்களுக்குக் கூறியுள்ளார். இவை அனைத்தையும் செய்த வண்ணம் அவர்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வந்துள்ளார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வந்துள்ளார்கள். உங்களுக்கு, இது ஏறுகின்ற ஸ்திதியாகும். பிராமணர்களாகிய நீங்கள் முதலாம் இலக்க ஜீனிப்பூதங்கள். தனக்கு எந்தவொரு வேலையும் செய்யத் தராவிட்டால் அனைவரையும் விழுங்கிவிடுவதாகக் கூறிய ஜீனிப்பூதத்தின் கதை ஒன்று உள்ளது. எனவே, ஏணியில் மேலேயும் கீழேயும் செல்லுகின்ற பணி அதற்குக் கொடுக்கப்பட்டது. எனவே, அதற்கு ஏதாவதொரு பணி வழங்கப்பட்டது. பாபா உங்களுக்குக் கூறியுள்ளார்: நீங்கள் இந்த எல்லையற்ற ஏணியில் கீழிறங்கிப் பின்னர் மேலே ஏறுகிறீர்கள். நீங்கள் மட்டுமே ஏணியில் முழுமையாகக் கீழே இறங்கிப் பின்னர் அதன் உச்சிக்கு ஏறுகிறீர்கள். நீங்கள் ஜீனிப்பூதங்கள். வேறு எவரும் ஏணியில் முழுமையாக ஏறுவதில்லை. நீங்கள் முழு ஏணியினதும் முழுமையான ஞானத்தைப் பெற்றுக்கொண்டதன் மூலம் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கிறீர்;கள். நீங்கள் பின்னர் மீண்டும் கீழே இறங்கிப் பின்னர் மீண்டும் மேலே ஏறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்கள் தந்தை. நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்கிறீர்கள். நானே சர்வசக்திவான். ஏனெனில் எனது ஆத்மா 100மூ, என்றும் தூய்மையானது. புள்ளியாகிய நான் அதிகாரி ஆவேன். நான் சகல சமயநூல்களினதும் இரகசியங்கள் அனைத்தையும் அறிவேன். இது ஓர் அற்புதமாகும்! இந்த ஞானம் அனைத்தும் அதி அற்புதமானது! ஆத்மாவில் 84 பிறவிகளின் அழியாத பாகம் பதிந்துள்ளது என்றும், அதனை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் நீங்கள் ஒருபோதும் செவிமடுத்திருக்க மாட்டீர்கள். ஆத்மா அதனை எல்லாவேளையும் தொடர்ந்து நடிக்கிறார். 84 பிறவிச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. ஆத்மா 84 பிறவிகளின் பதிவுகளால் நிறைந்துள்ளார். இத்தகையதொரு சின்னஞ்சிறிய ஆத்மா இந்தளவு ஞானத்தைக் கொண்டுள்ளார்! பாபாவிடம் இந்த ஞானம் உள்ளது. குழந்தைகளாகிய உங்களிடமும் இந்த ஞானம் உள்ளது. நீங்கள் இத்தகைய பெரிய பாகத்தை நடிக்கிறீர்கள்! இந்தப் பாகம் ஒருபோதும் அழிய மாட்டாது. ஆத்மாவைக் கண்களால் காண முடியாது. அது ஒரு புள்ளி வடிவமானது. பாபா கூறுகிறார்: நானும் அவ்வாறே ஒரு புள்ளி ஆவேன். குழந்தைகளாகிய நீங்கள் இதனை இப்போது புரிந்துகொள்கிறீர்;கள். நீங்கள் எல்லையற்ற துறவிகளும் இராஜரிஷிகளும் ஆவீர்கள். நீங்கள் அதிகளவு போதை கொண்டவர்களாக இருக்க வேண்டும்! இராஜரிஷிகள் சம்பூரணமாகத் தூய்மையானவர்களாக இருப்பார்கள். இராஜரிஷிகள் சூரிய, சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் நீங்கள் இப்போது செய்வதைப் போன்று இங்கேயே தமது இராச்சியத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் இப்போது விடைபெறப் போகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் படகோட்டியின் நீராவிக்கப்பலில் அமர்ந்திருக்கிறீர்கள். இது அதி புண்ணிய சங்கமயுகம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நிச்சயமாகப் பழைய உலகில் இருந்து புதிய உலகிற்கு அமைதி தாமத்தினூடாகச் செல்ல வேண்டும். குழந்தைகளே, இது சதா உங்களுடைய புத்திகளில் இருக்க வேண்டும். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்தபோது, வேறு எந்த நாடுகளும் இருக்கவில்லை. எமது இராச்சியம் மட்டுமே இருந்தது. நாம் இப்போது யோகசக்தியால் மீண்டும் எமது இராச்சியத்தைக் கோருகிறோம். யோகசக்தியால் மட்டுமே உலக இராச்சியம் பெறப்படலாம் என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எவராலும் அதனைப் பௌதீகச் சக்தியால் பெற முடியாது. இது எல்லையற்றதொரு நாடகமாகும். நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை இந்த நாடகத்தின் விளக்கத்தை அளிக்கிறார். அவர் உலகின் வரலாறு மற்றும் புவியியலை ஆரம்பத்திலிருந்து உங்களுக்குக் கூறுகிறார். நீங்கள் மிகத் தெளிவாகச் சூட்சும வதனம் மற்றும் அசரீரி உலகின் இரகசியங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். அவர்களின் இராச்சியம் பௌதீக உலகில் உள்ளது. அதாவது, அது எமது இராச்சியமாக இருந்தது. நீங்கள் எவ்வாறு ஏணியில் கீழிறங்கி வந்தீர்கள் என்பதை நீங்களும் மீள நினைவு செய்கிறீர்கள். ஏணியில் மேலேயும் கீழேயும் செல்கின்ற நாடகம் குழந்தைகளாகிய உங்களுடைய புத்திகளில் உள்ளது. எவ்வாறு வரலாறும் புவியியலும் மீண்டும் நிகழ்கிறது என்பது இப்போது உங்களுடைய புத்திகளில் உள்ளது. நாம் இதில் கதாநாயக, கதாநாயகிப் பாத்திரங்களை ஏற்று நடிக்கிறோம். நாம் தோல்வியடைந்து பின்னர் வெற்றியாளர்கள் ஆகினோம். இதனாலேயே நாம் கதாநாயகர்கள், கதாநாயகிகள் என்று அழைக்கப்படுகிறோம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இப்போது எளிமையான நிலையில் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் மிக எளிமையானவர்களாக இருக்க வேண்டும். சரீரம் அல்லது ஆடைகளின் சிறிதளவு அகங்காரமும் இருக்கக்கூடாது. எந்தவொரு செயல்களைச் செய்யும்போதும், தந்தையின் நினைவின் மேன்மையான போதை இருக்க வேண்டும்.

2. நீங்கள் எல்லையற்ற துறவிகளும் இராஜ ரிஷிகளும் ஆவீர்கள். இந்தப் போதையில் இருப்பதுடன் தூய்மையானவர்கள் ஆகுங்கள். ஞானச் செல்வத்தால் நிறைந்து அதனைத் தானம் செய்யுங்கள். உண்மையாதொரு வர்த்தகராகி, உங்களுடைய நினைவு அட்டவணையைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் சேர்ச்லைட் நினைவினூடாக சரியான சூழலை உருவாக்குகின்றதொரு வெற்றி இரத்தினமாக ஆகுவீர்களாக.

சேவை செய்கின்ற ஆத்மாக்கள் எப்பொழுதும் தமது நெற்றிகளில் திலகத்தை அணிந்து கொள்கின்றார்கள். எவ்வாறாயினும் நீங்கள் சேவை செய்வதற்காக எவ்விடத்திற்குச் செல்கின்றீர்களோ, முன்கூட்டியே முதலில் ஞானோதயம் என்ற சேர்ச்லைட்டை பாய்ச்சுங்கள். அப்பொழுதே ஆத்மாக்கள் அனைவராலும் இலகுவாக நெருக்கமாக வரமுடியும். அப்பொழுது உங்களால் குறுகிய நேரத்தில் ஆயிரம் மடங்கு வெற்றியை ஈட்ட முடியும். இதற்கு, ஒவ்வொரு செயலிலும் வெற்றி இரத்தினம் என்ற திடசங்கற்பத்தைக் கொண்டிருந்து, எவ்வாறு உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் வெற்றி அமிழ்ந்துள்ளது எனப்பாருங்கள்.

சுலோகம்:
உங்களையோ அல்லது பிறரையோ தொந்தரவு செய்யும் எந்த ஒரு சேவையும் சேவை அல்ல ஆனால் ஒரு சுமையாகும்.