28.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, யோகத்தின் மூலமே ஆத்மாக்களாகிய உங்களிலுள்ள கலப்படம் அகற்றப்படும். அப்பொழுதே நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் பெறுவீர்கள். எனவே, இயன்றவரை உங்கள் யோக சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

கேள்வி:
தேவர்களின் செயல்கள் மேன்மையாக இருந்தன. ஏன் இப்பொழுது அனைவரது செயல்களும் சீரழிந்தவையாகி விட்டன?

பதில்:
அவர்கள் தமது ஆதி தர்மத்தை மறந்து விட்டமையால் ஆகும்; தங்கள் தர்மத்தை மறந்ததால் அவர்கள் செய்கின்ற செயல்கள் (கர்மம்) சீரழிந்தவை ஆகி விட்டன. உங்கள் உண்மையான தர்மத்தின் புரிந்துணர்வைத் தந்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அத்துடன் நீங்கள் ஏனைய அனைவருக்கும் கூறவேண்டிய, முழு உலகினதும் வரலாறையும், புவியியலையும் அவர் உங்களுக்குக் கூறுகின்றார். அனைவருக்கும் தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுங்கள்.

பாடல்:
ஓ ஆத்மாவே, உங்கள் இதயக் கண்ணாடியில் உங்களுடைய முகத்தைப் பாருங்கள்.

ஓம் சாந்தி.
யார் இதை யாருக்குக் கூறினார்? தான் தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையாக்குகின்ற, குழந்தைகளுக்கே தந்தை இதைக் கூறுகின்றார். தேவர்களாக இருந்த பாரத மக்கள் இப்பொழுது 84 பிறவிச் சக்கரத்தை முடித்து, சதோபிரதான் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் சென்று, இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளார்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற தந்தை கூறுகின்றார்: எந்தளவிற்கு நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகியுள்ளீர்கள் என உங்கள் இதயங்களைக் கேளுங்கள். ஆரம்பத்தில், நீங்கள் தேவர்கள் என அழைக்கப்பட்டபொழுது, தூய, சதோபிரதான் ஆத்மாக்களாக இருந்தீர்கள். அது ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் என அழைக்கப்பட்டது. பாரத மக்கள் எவருமே இப்பொழுது தங்களைத் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என அழைப்பதில்லை. இந்து மதம் என்று ஒன்று இல்லை. அவர்கள் தூய்மையற்றவர்களாகி விட்டதால், அவர்களால் தங்களைத் தேவர்கள் என அழைக்க முடியாது. சத்திய யுகத்தில் தேவர்கள் தூய்மையாக இருந்தார்கள்; அது தூய இல்லறப் பாதையாக இருந்தது. எவ்வாறு அரசரும்;, அரசியும் தூய்மையாக இருந்தார்களோ, அதேபோன்று பிரஜைகளும் தூய்மையாக இருந்தார்கள். தந்தை பாரத மக்களுக்கு நினைவூட்டுகின்றார்: தூய இல்லறப் பாதைக்குச் சொந்தமான நீங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்திற்குச் சொந்தமாக இருந்தீர்கள். அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது. அங்கே ஒரு தர்மமே இருந்தது. இலக்ஷ்மி, நாராயணனே முதல் இலக்கச் சக்கரவர்த்தினி, சக்கரவர்த்தியாக இருந்தார்கள். அங்கே அது அவர்களது வம்சமாக இருந்தது, பாரதம் செல்வம் மிக்கதாக இருந்தது. அது சத்தியயுகமாக இருந்தது, பின்னர் அவர்கள் திரேதா யுகத்திற்குச் சென்றனர். அந்நேரத்திலும், அவர்கள் பூஜிக்கத்தக்க தேவர்களும், சத்திரியர்களும் என்றே அழைக்கப்பட்டனர். முதலில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமும், பின்னர் இராமர் சீதையின் இராச்சியமும் இருந்தன. அந்த வம்சமும் இருந்தது. எவ்வாறு கிறிஸ்தவர்களிடையே முதலாவது எட்வேட், இரண்டாவது எட்வேட் இருந்தார்களோ, அதேபோன்று, பாரதத்திலும் இருந்தது. இது 5000 வருடங்களுக்கான விடயம்; அதாவது, பாரதத்தில் 5000 வருடங்களுக்கு முன்னர் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. எவ்வாறாயினும் அவர்கள் எவ்வாறு, எப்பொழுது இராச்சியத்தைப் பெற்றார்கள் என எவருமே அறியார். அந்த அதே சூரிய வம்சமே பின்னர் சந்திர வம்சம் ஆகியது. இது ஏனெனில் அவர்கள் மறுபிறவி எடுக்கும்பொழுது, ஏணியில் கீழிறங்கி வேண்டியிருந்ததால் ஆகும். பாரதத்தின் இந்த வரலாற்றையும், புவியியலையும் எவருமே அறியார். தந்தையே படைப்பவர் என்பதால், அவர் நிச்சயமாகப் புதிய உலகான சத்திய யுகத்தைப் படைத்திருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, 5000 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள். இந்தப் பாரதம் சுவர்க்கமாக இருந்தது, பின்னர் நீங்கள் நரகத்திற்குச் சென்றீர்கள். இந்த உலகின் வரலாற்றையும், புவியியலையும் உலகம் அறியாது. அவர்கள் இறுதியின் முழுமையற்ற வரலாற்றை மாத்திரமே அறிவார்கள். சத்திய, திரேதா யுகங்களின் வரலாற்றையோ, புவியியலையோ எவருமே அறியார். ரிஷிகளும், முனிவர்களும் கூடக் கூறுகின்றார்கள்: நாங்கள் படைப்பவரையோ, படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அறியமாட்டோம். எனவே எவ்வாறு வேறு எவராலும் அதனை அறிய முடியும்? தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். பாரதத்திலேயே சிவபாபா தெய்வீகப் பிறப்பு எடுக்கின்றார். பாரதத்தில் மாத்திரமே அவர்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார்கள். சிவனின் பிறந்த தினத்தின் பின்னர், கீதையின் பிறந்த தினம் இருக்க வேண்டும். அத்துடன் பின்னர் கிருஷ்ணரின் பிறந்த தினம் இருக்க வேண்டும். ஆயினும் பாரத மக்கள் இந்தப் பிறந்த தினத்தின் முக்கியத்துவத்தையோ அல்லது சிவனது பிறந்த தினம் எப்பொழுது என்றோ அறியார்கள். ஏனைய மதத்தவர்கள் புத்தரின் அல்லது கிறிஸ்துவின் பிறந்த தினம் எப்பொழுது என மிக விரைவாக உங்களிடம் கூறுவார்கள். சிவனின் பிறந்த தினம் எப்பொழுது எனப் பாரத மக்களிடம் கேளுங்கள், எவராலுமே உங்களுக்கு கூறமுடியாது. சிவன் பாரதத்திலேயே வந்தார். அவர் வந்தபொழுது என்ன செய்தார் என எவருமே அறியார். சிவனே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை. சகல ஆத்மாக்களும் அழிவற்றவர்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றார். இது 84 பிறவிகளின் சக்கரம். அவர்கள் சமயநூல்களிலே 8.4 மில்லியன் பிறவிகள் பற்றிப் பொய்யான கதைகளை எழுதியுள்ளார்கள். தந்தை வந்து உங்களுக்குச் சரியான விடயங்களைக் கூறுகின்றார். ஆயினும், தந்தையைத் தவிர, படைப்பவரையும், படைப்பையும் பற்றி அவர்கள் கூறுகின்ற விடயங்கள் அனைத்தும் பொய்யானவை, ஏனெனில் இது மாயையின் இராச்சியமாகும். முதலில் பாரதம் தெய்வீகப் பூமியாக இருந்தபொழுது, நீங்கள் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருந்தீர்;கள். அங்கே வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க மாளிகைகள் இருந்தன. தந்தை இங்கமர்ந்திருந்து, படைப்பவரினதும், படைப்பினதும் ஆரம்பம், மத்தி, இறுதியினது இரகசியங்களை உங்களுக்குக் கூறுகின்றார், அதாவது, அவர் உங்களுக்கு உலகின் வரலாற்றையும், புவியியலையும் கூறுகின்றார். தாங்;கள் முதலில் தேவர்களாக இருந்தார்கள் என்பதைப் பாரத மக்கள் அறியார்கள். அவர்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களாகவும், மிகவும் ஏழைகளாகவும், அதர்மமானவர்களாகவும் ஆகிவிட்டார்கள்; அவர்கள் தங்களது சொந்தத் தர்மத்தையே மறந்துவிட்டார்கள். இது நாடகத்திற்கேற்ப நடைபெற வேண்டும். உலகின் வரலாறும், புவியியலும் உங்கள் புத்தியில் பிரவேசிக்க வேண்டும். ஆத்ம லோகத்தில் வசிக்கின்ற, சகல ஆத்மாக்களினதும் தந்தையே அதிமேலானவர். அதன் பின்னர் சூட்சும உலகம் இருக்கின்றது. இது பௌதீக உலகமாகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மாத்திரமே சூட்சும உலகில் வசிக்கின்றனர். அவர்களைப் பற்றிய எந்த வரலாறும் புவியியலும் இல்லை. இந்த மூன்று மாடிகளுமே இருக்கின்றன. கடவுள் ஒரேயொருவரே, அவரது படைப்பும் ஒன்றே, இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. நீங்கள் சத்திய யுகத்திலிருந்து திரேதா யுகத்திற்கும், பின்னர் துவாபர, கலியுகங்களுக்கும் செல்ல வேண்டும். எவருமே அறியாத, 84 பிறவிகளுக்கான கணக்கும் இருக்க வேண்டும். இது எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கின்றீர்கள். தந்தை இந்தச் சக்கரத்தினுள் பிரவேசிப்பதில்லை. குழந்தைகளே தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் கதறி அழுகின்றார்கள்: பாபா, வந்து எங்களை மீண்டும் ஒருமுறை தூய்மையாக்குங்கள்! அனைவரும் ஒரேயொருவரையே கூவி அழைக்கின்றார்கள்: நாங்கள் அனைவரும் இராவண இராச்சியத்தில் சந்தோஷமற்றவர்கள் ஆகிவிட்டோம். வந்து எங்களை விடுதலையாக்குங்கள்! எங்களை இராம இராச்சியத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்! அரைக்கல்பத்திற்கு அது இராம இராச்சியமாகவும், அரைக் கல்பத்திற்கு அது இராவண இராச்சியமாகவும் உள்ளது. முதலில் பாரத மக்கள் தூய்மையானவர்களாக இருக்கின்றனர். பின்னர் அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் பாவப் பாதையில் செல்லும்பொழுது, தூய்மையற்றவர்களாக ஆரம்பித்தார்கள். அப்பொழுதே, பக்தி மார்க்கம் ஆரம்பமாகியது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இந்த ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு, அரைக் கல்பத்திற்கான உங்களின் சந்தோஷ ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஞானத்தின் வெகுமதி அரைக் கல்பத்திற்கு தொடர்கின்றது. பின்னர் இராவண இராச்சியம் இருக்கின்றது, நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்குகிறீர்கள். நீங்கள் தெய்வீக இராச்சியத்தில் இருந்தீர்கள், பின்னர் நீங்கள் அசுர இராச்சியத்திற்குள் சென்றீர்கள். இது நரகம் என்றும் அழைக்கப்படுகின்றது. நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள், பின்னர் 84 பிறவிகள் எடுத்ததனால் இப்பொழுது நரகத்தில் வந்து சேர்ந்துள்ளீர்கள். அது சந்தோஷ பூமியாக இருந்தது, இது துன்ப பூமி. அது 100மூ வளமின்றி உள்ளது. நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்துள்ளீர்கள். பூஜிக்கத் தக்கவர்களிலிருந்து, அதே பாரத மக்கள் பூஜிப்பவர்கள் ஆகினார்கள். இதுவே உலகின் வரலாறும், புவியியலும் என அழைக்கப்படுகின்றது. இம் முழுச் சக்கரமும் பாரத மக்களான உங்களைப் பற்றியது. மற்றைய மதத்தவர்கள் 84 பிறவிகள் எடுப்பதில்லை. அவர்கள் சத்திய யுகத்தில் இருக்க மாட்டார்கள். சத்திய, திரேதா யுகங்களில் பாரதம் மாத்திரமே இருந்தது. சூரிய வம்சத்தினரும், பின்னர் சந்திர வம்சத்தினரும், பின்னர் வைசிய வம்சத்தினரும், அதன்பின்னர் சூத்திர வம்சத்தினரும் இருந்தனர். நீங்கள் தேவர்களின் வம்சத்தினர் ஆகுவதற்காக, இப்பொழுது பிராமண வம்சத்தினர் ஆகியுள்ளீர்கள். இவையே பாரதத்தின் குலங்கள். பிராமணர்கள் ஆகுவதனால், நீங்கள் இப்பொழுது சிவபாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். தந்தை 5000 வருடங்களுக்கு முன்னர் கற்பித்ததைப் போன்று உங்களுக்கு மிகச்சரியாகக் கற்பிக்கின்றார். நீங்கள் கல்பம் கல்பமாக, தூய்மையானவர்களாகவும், பின்னர் தூய்மையற்றவர்களாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் சென்று, பின்னர் துன்ப தாமத்திற்கு வருகின்றீர்கள். பின்னர் நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்ல வேண்டும். அது அசரீரி உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஆத்மா என்றால் என்ன, அல்லது பரமாத்மா என்றால் என்ன என்பதை எந்த மனிதருமே அறியார். ஓர் ஆத்மாவானவர் நட்சத்திரமான, ஒரு புள்ளியாவார். நெற்றியின் மத்தியிலே ஒரு சின்னஞ்சிறிய புள்ளி பிரகாசிப்பதாகக் கூறப்படுகின்றது. அது தெய்வீகக் காட்சியினால் மாத்திரமே காணக்கூடிய, சின்னஞ்சிறிய புள்ளியாகும். உண்மையில் அதை நட்சத்திரம் என அழைக்க முடியாது, ஏனெனில் நட்சத்திரம் மிகப்பெரியது. அவை வெகுதொலைவில் இருப்பதனால், அவை சின்னஞ் சிறியவையாகத் தோன்றுகின்றன. இது கொடுக்கப்பட்டுள்ள ஓர் உதாரணமே. ஓர் ஆத்மா ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரங்கள் போன்று சிறியது. ஆத்மாவின் தந்தையும் புள்ளி வடிவானவர். அவர் பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். அவரது புகழ் வேறுபட்டது. அவர் மனித உலக விருட்சத்தின் உணர்வுள்ள விதை ஆகையால், அவரிடம் அனைத்து ஞானமும் உள்ளது. ஆத்மாக்களான நீங்களும் இப்பொழுது ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஆத்மாவே ஞானத்தைக் கிரகிக்கின்றார். 84 பிறவிகளின் பாகம் அத்தகைய சின்னஞ்சிறிய புள்ளியிலே பதியப்பட்டுள்ளது! அதுவும் அழிவற்றது. நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் தொடர்ந்தும் சுற்றி வந்தீர்கள். இதற்கு எந்த முடிவும் இருக்க முடியாது. அங்கே தேவர்கள் இருந்தார்கள், அவர்கள் அசுரர்களாகி, மீண்டும் ஒருமுறை தேவர்களாக வேண்டும். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல வேண்டும். ஏனைய அனைத்தும் பக்கக் காட்சிகளாகும். இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் போன்றவர்கள் 84 பிறவிகள் எடுப்பதில்லை. பாரதத்தில் இந்தச் சத்திய யுகம் நீதியானதாகவும், செல்வம் மிக்கதாகவும் இருந்தது. பின்னர் 84 பிறவிகளினூடாகச் செல்கையில், அவர்கள் விகாரமானவர்கள் ஆகிவிட்டனர். இது விகார உலகம். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தூய்மை, அமைதி, செழிப்பு இருந்தன. தூய்மையே பிரதான விடயம் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டுகின்றார். இதனாலேயே அவர்கள் கூவியழைக்கின்றார்கள்: ஓ விகாரமானவர்களை, விகாரமற்றவர்கள் ஆக்குபவரே, வாருங்கள்! அவரால் மாத்திரமே சற்கதி அருள முடியும். அதனாலேயே அவர் மாத்திரமே சற்குரு ஆவார். நீங்கள் இப்பொழுது தந்தையினால் பிச்சைக்காரர்களிலிருந்து, இளவரசர்களாக மாற்றப்படுகின்றீர்கள், அதாவது, நீங்கள் சாதாரண ஆணிலிருந்து நாராயணனாகவும், சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் மாறுகின்றீர்கள். இது உங்கள் இராஜயோகம். பாரதம் இப்பொழுது தந்தையிடமிருந்து இராச்சியத்தைப் பெறுகின்றது. இந்த ஆத்மா 84 பிறவிகளை எடுக்கின்றார். ஆத்மாவே சரீரத்தின் மூலம் கற்கின்றார்; சரீரம் கற்பதில்லை. ஆத்மாவே அந்தச் சம்ஸ்காரங்களைச் சுமந்து செல்கின்றார். இந்த ஆத்மாவாகிய நான், இந்தச் சரீரத்தின் மூலம் கற்கின்றேன். இதுவே ஆத்ம உணர்வில் இருத்தல் என அறியப்படுகின்றது. ஓர் ஆத்மா தனது சரீரத்திலிருந்து பிரியும்பொழுது, சரீரத்தினால் எந்தப் பலனும் இல்லை. ஆத்மா கூறுகின்றார்: நான் இப்பொழுது ஒரு புண்ணியாத்மா ஆகுகின்றேன். மக்கள் சரீர உணர்வுடையவராகி, “நான் இதைச் செய்கின்றேன்” எனக் கூறுகின்றார்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்றும், உங்கள் சரீரங்கள் பெரியவை என்றும் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாவான நான், தந்தையாகிய கடவுளுடன் கற்கின்றேன். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நீங்கள் சத்திய யுகத்தில் சதோபிரதானாக இருந்தீர்கள், பின்னர் உங்களில் கலப்படம் கலக்கப்பட்டது. உங்களில் கலப்படம் கலக்கப்பட்டதால், நீங்கள் தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை தூய்மையாக வேண்டும். இதனாலேயே கூறப்படுகின்றது: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! தந்தை உங்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்: ஓ தூய்மையற்ற ஆத்மாக்களே! உங்கள் தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள், உங்களிலுள்ள கலப்படம் அகற்றப்பட்டு, நீங்கள் தூய்மையாகுவீர்கள். இது புராதன யோகம் என அழைக்கப்படுகின்றது. இந்த நினைவின் மூலம், அதாவது, இந்த யோக அக்கினி மூலம் கலப்படம் எரிக்கப்படும். தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையாகுவதே பிரதான விடயம். சாதுக்கள், புனிதர்கள் போன்ற அனைவரும் தூய்மையற்றவர்கள். தந்தையே உங்களுக்குத் தூய்மையாகுவதற்கான வழியைக் காட்டுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாகுங்கள். உண்ணும்பொழுதும், நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும், சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், ஏனெனில் நானே ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் அன்பிற்கினியவர். நான் உங்களைத் தூய்மையானவர்கள் ஆக்கினேன், நீங்கள் பின்னர் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். பக்தர்கள் அனைவரும் காதலிகள். அன்பிற்கினியவர் கூறுகின்றார்: நீங்கள் செயல்கள் செய்யலாம், ஆனால் உங்களது புத்தியைத் தொடர்ந்தும் என்னை நினைவுசெய்யுமாறு ஆக்குங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இந்த முயற்சியையே செய்ய வேண்டும். ஆகவே உங்கள் ஆஸ்தியைக் கோரும்பொருட்டு, நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவரைப் பெருமளவு நினைவுசெய்பவர்கள், பெருமளவு ஆஸ்தியைப் பெறுவார்கள். இது நினைவு யாத்திரை. என்னை அதிகளவு நினைவுசெய்பவர்கள் தூய்மையாகி, எனது கழுத்து மாலை ஆகுவார்கள். அசரீரி உலகிலே ஆத்மாக்கள் அனைவரதும் வம்சாவழி விருட்சம் உருவாக்கப்பட்டுள்ளது. அது அசரீரி விருட்சம் என அழைக்கப்படுகின்றது. இது பௌதீக விருட்சம். அனைவரும் அசரீரி உலகிலிருந்து வரிசைக்கிரமமாக இறங்கி வந்து, பின்னர் தொடர்ந்தும் கீழிறங்க வேண்டும். விருட்சம் மிகப்பெரியது! ஆத்மாக்கள் தங்களது பாகங்களை நடிப்பதற்காக இங்கே வருகின்றார்கள். ஆத்மாக்கள் அனைவரும் இந்த நாடகத்தில் உள்ள நடிகர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், அவர்களது பாகங்களும் அழிவற்றவை. நீங்கள் நாடகம் எப்பொழுது உருவாக்கப்பட்டது எனக் கேட்க முடியாது; அது அநாதியாகவே தொடர்கின்றது. பாரத மக்கள் முதலில் சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றனர், பின்னர் துன்பத்தைக் கொண்டிருந்து, அதன்பின்னர் அமைதி தாமத்துக்குச் செல்ல வேண்டும். தந்தை பின்னர் உங்களைச் சந்தோஷ தாமத்துக்கு அனுப்பி வைப்பார். நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சிக்கேற்ப, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். தந்தை ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். நீங்கள் அனைவரும் இப்பொழுது செய்யும் முயற்சிகளுக்கேற்ப இராச்சியத்தில் ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். சத்திய யுகத்தில் நிச்சயமாக வெகு சில மனிதர்களே இருப்பார்கள். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் விருட்சம் சிறியது. மீதி அனைத்தும் அழிக்கப்படும். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது, அதாவது, சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. 5000 வருடங்களுக்கு முன்னரும் இந்த யுத்தத்தின் பின்னர் சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டது. எண்ணற்ற மதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அது நன்மை பயக்கும் யுத்தம் என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது நரகத்தின் வாயில்கள் திறந்துள்ளன, பின்னர் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும். தந்தை சுவர்க்கத்தின் வாயில்களைத் திறக்கின்றார், இராவணன் நரகத்தின் வாயில்களைத் திறக்கின்றான். தந்தை உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார், இராவணன் உங்களைச் சபிக்கின்றான். உலகம் இந்த விடயங்களை அறியாது. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இவ் விடயங்களை விளங்கப்படுத்துகின்றேன். நீங்கள் மாத்திரம் கொடுக்கக்கூடிய, இந்த ஞானம் கல்வி அமைச்சருக்கும் தேவையாகும். எவ்வாறாயினும் நீங்கள் மறைமுகமானவர்கள்; எவருமே உங்களை இனங்காண்பதில்லை. நீங்கள் உங்கள் இராச்சியத்தை யோக சக்தி மூலம் பெறுகின்றீர்கள். எவ்வாறு இலக்ஷ்மி, நாராயணன் தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள் என நீங்கள் அறிவீர்கள். இது தந்தை வந்து அனைவரையும் தூய்மையாக்குகின்ற, மங்களகரமான, நன்மை பயக்கும் யுகம் என அழைக்கப்படுகின்றது. கிருஷ்ணரை அனைவரும் “தந்தை” என அழைக்க மாட்டார்கள். அசரீரியானவரே தந்தை என அழைக்கப்படுகின்றார். அந்த ஒரேயொரு தந்தையை நினைவு செய்து, தூய்மையானவர்களாகவும் ஆகுங்கள். நீங்கள் நிச்சயமாக விகாரங்களைத் துறக்க வேண்டும். பாரதம் விகாரமற்ற, சந்தோஷ தாமமாக இருந்தது. அது இப்பொழுது விகாரமான துன்ப பூமியாகவும், ஒரு சதத்திற்கும் பெறுமதியற்றதாகவும் உள்ளது. இதுவே நீங்கள் புத்தியால் கிரகித்து, பிறரும் கிரகிப்பதற்கு உதவி செய்ய வேண்டிய, நாடகத்தின் விளையாட்டு ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நினைவின் மூலம் தூய்மையாகி, தந்தையின் கழுத்து மாலை ஆகுங்கள். செயல்கள் செய்கின்ற வேளையிலும், தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுங்கள்.

2. ஒரு புண்ணியாத்மா ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு திருப்தி இரத்தினமாகத் திறமைச்சித்தி அடைவதால், அனைவரிடமிருந்தும் திருப்தி எனும் கடவுச்சீட்டைப் பெறுவீர்களாக.

தங்கள் முயற்சிகள், தங்கள் சேவை, பிராமணக் குடும்பத்துடனான தங்கள் தொடர்புகள் மூலம் எப்பொழுதும் தங்களுடன் திருப்தியாக இருக்கின்ற குழந்தைகளே திருப்தி இரத்தினங்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சகல ஆத்மாக்களுடனுமான தொடர்பில் இருக்கும்பொழுதும், தங்களையும், பிறரையும் திருப்தியாக வைத்திருப்பதில் வெற்றியாளர்களாக இருப்பவர்களே வெற்றி மாலையில் ஒருவர் ஆகுபவர்கள். திறமைச்சித்தி எய்துவதற்கு, அனைவரிடமிருந்தும் திருப்தி எனும் கடவுச்சீட்டை நீங்கள் பெறுவது அவசியம். இந்தக் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு, சகித்துக் கொள்ளும் சக்தியையும், அனுசரித்துப் போகும் சக்தியையும் கிரகியுங்கள்.

சுலோகம்:
கருணைமிக்கவர்களாகி, மனந்தளர்ந்துள்ள, களைப்படைந்த ஆத்மாக்களுக்குச் சேவை செய்வதால், அவர்களுக்கு ஆதாரத்தை அளியுங்கள்.