27.04.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களின் ஆதி தர்மம் அமைதியாகும். அமைதி தாமத்திலேயே உண்மையான அமைதி உள்ளது. அனைவருக்கும் கூறுங்கள்: உங்களின் ஆதி தர்மத்தில் உங்களை ஸ்திரப்படுத்துங்கள்.கேள்வி:
தந்தையொருவர் மாத்திரமே கொண்டிருக்கின்ற, இந்நேரத்தில் நீங்கள் மாத்திரம் கற்கின்ற ஞானம் எது?பதில்:
பாவம், புண்ணியம் பற்றிய ஞானமாகும். பாரத மக்கள் தந்தையை அவமதிக்க ஆரம்பிக்கும்பொழுது, பாவாத்மாக்கள் ஆகுகின்றனர். அவர்கள் தந்தையையும், நாடகத்தையும் அறிந்துகொள்ளும்பொழுது, புண்ணியாத்மாக்கள் ஆகுகின்றனர். இந்நேரத்தில் மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் இக்கல்வியைக் கற்கின்றீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். மனிதர்களால் மனிதர்களுக்குச் சற்கதியை, அதாவது, ஜீவன்முக்தியை அருள முடியாது.பாடல்:
எங்களை இப்பாவ உலகிலிருந்து அப்பால், ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.ஓம் சாந்தி.
இது பாவாத்மாக்களின் உலகம் என்பதைத் தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தேவர்களின் இராச்சியம் நிலவிய, புண்ணியாத்மாக்களின் பூமியாக இருந்தது என்று பாரதத்தைப் பற்றி மாத்திரமே கூறமுடியும். இந்தப் பாரதம் சந்தோஷ பூமியாக இருந்தது. அங்கு வேறெந்தத் தேசங்களும் இருக்கவில்லை; ஒரு பாரதம் மாத்திரமே இருந்தது. சத்திய யுகத்தில் சௌகரியமும், சந்தோஷமும் இருந்தன, அது சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. இது நரகம் ஆகும். பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது நரகமாகி விட்டது. நரகத்தில் எவ்வாறு சௌகரியம், அதாவது, அமைதியும், சந்தோஷமும் இருக்க முடியும்? கலியுகமே நரகம் எனப்படுகின்றது. கலியுகத்தின் இறுதி ஆழ்நரகம் எனப்படுகின்றது; அது துன்ப பூமி என அழைக்கப்படுகின்றது. பாரதம் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தபொழுது, சந்தோஷ பூமியாக இருந்தது; தூய்மையே பாரத மக்களின் இல்லற தர்மமாக இருந்தது. அங்கு தூய்மையும், அமைதியும், சந்தோஷமும், அத்துடன் பெருமளவு செல்வமும் இருந்தன. அதே பாரதம் இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டது; அனைவரும் விகாரமானவர்களாகி விட்டனர். இது துன்ப பூமி. பாரதம் சந்தோஷ பூமியாக இருந்தது, ஆத்மாக்களாகிய எங்களின் வதிவிடம் அமைதி தாமமாகும். அமைதி தாமத்தில் மாத்திரமே அமைதியைக் காண முடியும். அங்கு மாத்திரமே ஆத்மாக்களால் அமைதியாக இருக்க முடியும். அது அசரீரி உலகமாகிய, இனிய வீடு என்றும் அழைக்கப்படுகின்றது. அது ஆத்மாக்களின் வீடாகும். ஆத்மாக்களாகிய நாங்கள் அங்கு வசிக்கும்பொழுது, அமைதியாக இருக்கின்றோம். காடுகளுக்குச் செல்வதன் மூலம் அமைதியை அடைய முடியாது. அமைதி தாமமே அவ்விடமாகும். சத்திய யுகத்தில் அமைதியும், அத்துடன் சந்தோஷமும் உள்ளன. இங்கு, துன்ப பூமியில் அமைதி எதுவும் இருக்க முடியாது. அமைதி தாமத்தில் மாத்திரமே அதை அடைய முடியும். சந்தோஷ தாமத்திலும் செயல்கள் செய்யப்படுகின்றன் அவர்கள் தங்களின் சரீரங்கள் மூலம் தங்களின் பாகங்களை நடிக்க வேண்டும். இத் துன்ப பூமியில் எந்தவொரு மனிதரும் சந்தோஷத்தையோ, அமைதியையோ கொண்டிருப்பதில்லை. இது தூய்மையற்ற, சீரழிந்த உலகம், இதனாலேயே அவர்கள் தூய்மையாக்குபவரைக் கூவியழைக்கின்றனர். எவ்வாறாயினும், எவரும் தந்தையை அறியாததால் அநாதைகள் ஆகிவிட்டனர். அநாதைகள் ஆகிவிட்டதாலேயே அவர்கள் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். அதிகளவு துன்பமும், அமைதியின்மையும், வன்முறையும் உள்ளன! இது இராவண இராச்சியம். அவர்கள் இராம இராச்சியத்தை வேண்டுகின்றார்கள். இராவண இராச்சியத்தில் அமைதியோ, சந்தோஷமோ கிடையாது. இராம இராச்சியத்தில் அமைதி, சந்தோஷம் இரண்டுமே உள்ளன் அங்கு அவர்கள் ஒருபொழுதுமே தங்கள் மத்தியில் சண்டையிடுவதில்லை. அங்கு ஐந்து விகாரங்களும் இருக்கவில்லை. ஐந்து விகாரங்களும் இங்கேயே உள்ளன. சரீர உணர்வே முதலாவதும், முதன்மையானதுமான விகாரம் ஆகும். பின்னர், காமமும், கோபமும் உள்ளன. பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, எந்த விகாரங்களும் இருக்கவில்லை. அங்கு அவர்கள் அனைவரும் ஆத்ம உணர்வுடையவர்களாக இருந்தனர். மனிதர்கள் அனைவரும் இப்பொழுது சரீர உணர்வுடையவர்கள் ஆகிவிட்டனர். தேவர்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருந்தனர். சரீர உணர்வுடைய மனிதர்களால் ஒருபொழுதும் எவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் துன்பத்தையே விளைவிக்கின்றனர். இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் அல்லது பல்கோடீஸ்வரர்கள் சந்தோஷமாக உள்ளனர் என நினைக்காதீர்கள்; இல்லை. அவை அனைத்தும் மாயையின் பகட்டேயாகும். இது மாயையின் இராச்சியம். மகாபாரத யுத்தமானது அதன் விநாசத்திற்காக உங்கள் முன்னாலேயே உள்ளது. அதன்பின்னர் சுவர்க்க வாயில்கள் திறக்கும். அதற்கு அரைக் கல்பத்தின் பின்னர் நரக வாயில்கள் திறக்கும். இவ்விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. பாரத மக்கள் கூறுகின்றனர்: நாங்கள் பக்தி செய்யும்பொழுது, கடவுளைக் கண்டடைவோம். பாபா கூறுகின்றார்: நீங்கள் பக்தி செய்து, முற்றாக வீழ்ந்த நிலையில் இருக்கும்பொழுதே, நான் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு, அதாவது பாரதத்தைச் சுவர்க்கமாக்குவதற்கு வரவேண்டும். சுவர்க்கமாக இருந்த பாரதம் எவ்வாறு நரகமாகியது? இராவணனே அதனை அவ்வாறு ஆக்கினான். நீங்கள் கீதையின் கடவுளிடமிருந்தே இராச்சியத்தைப் பெற்றீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்குச் சுவர்க்க இராச்சியத்தை ஆட்சிசெய்தீர்கள். பின்னர் பாரதம் துவாபர யுகத்திலிருந்து கலியுகத்திற்குச் சென்றது, அதாவது, இறங்கும் ஸ்திதி காணப்பட்டது. அதனாலேயே அனைவரும் தொடர்ந்தும் கூவியழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தூய்மையற்ற மனிதர்களால் தூய்மையற்ற உலகில் அமைதியையோ அல்லது சந்தோஷத்தையோ பெற முடியாது; அவர்கள் தொடர்ந்தும் அதிகளவு துன்பத்தையே பெறுகின்றனர். இன்று, அவர்களின் பணம் திருடப்படுகின்றது. இன்று, அவர்கள் கடனாளிகள் ஆகுகின்றனர். இன்று, அவர்கள் நோயாளிகள் ஆகுகின்றனர். துன்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. நீங்கள் இப்பொழுது உங்களின் ஆஸ்தியாகிய அமைதியையும், சந்தோஷத்தையும் பெறுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெற முயற்சி செய்கின்றீர்கள். ஒரேயொரு தந்தையே மாத்திரமே உங்களைச் சதா சந்தோஷமுடையவர்கள் ஆக்குகின்றார். இராவணனே உங்களைச் சதா சந்தோஷமற்றவர்கள் ஆக்குகின்றான். பாரத மக்கள் இவ்விடயங்களை அறியார்கள். சத்திய யுகத்தில் துன்பமான எதுவும் இருக்க மாட்டாது. அங்கு நீங்கள் ஒருபொழுதும் அழவேண்டியதில்லை. அங்கு எப்பொழுதும் சந்தோஷம் உள்ளது, சந்தோஷத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அங்கு சரீர உணர்வு, காமம், கோபம் எதுவும் கிடையாது. நீங்கள் ஐந்து விகாரங்களையும் தானம் செய்யும்வரை, சந்தோஷமின்மை எனும் கிரகணங்களின் சகுனங்கள் அகற்றப்பட முடியாது. கூறப்படுகின்றது: ஒரு தானத்தைச் செய்யுங்;கள், சகுனங்கள் அகற்றப்படும். இந்நேரத்தில் முழுப் பாரதத்திலும் கிரகணங்களின் சகுனங்கள் உள்ளன. நீங்கள் ஐந்து விகாரங்களையும் தானம் செய்யும்வரை, உங்களால் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்த சம்பூர்ண தேவர்கள் ஆகமுடியாது. தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். மக்கள் கூறுகின்றனர்: குருவின்றி, சற்கதி பெற முடியாது. எவ்வாறாயினும், சற்கதி என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. “மனிதர்களுக்கான முக்தியும் சற்கதியும்” என்றால், முக்தியும், ஜீவன்முக்தியும் என்பதாகும். தந்தையால் மாத்திரமே அதை அருள முடியும். இப்பொழுது அனைவருக்கும் சற்கதி கிடைக்கவுள்ளது. டெல்கியானது புதுடெல்கி என்றும், பழைய டெல்கி என்றும் அழைக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அது இப்பொழுது புதியதல்ல. புதிய உலகிலேயே புது டெல்கி இருக்கும். பழைய உலகில் பழைய டெல்கி இருக்கும். அங்கு உண்மையில் யமுனை நதிக்கரை இருந்தது, டெல்கி தேவதைகளின் பூமியாக இருந்தது. அது தேவர்கள் ஆட்சிபுரிந்த, சத்திய யுகமாக இருந்தது. இப்பொழுது, பழைய உலகில் பழைய டெல்கி உள்ளது. புதிய உலகில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. பாரத மக்கள் இதை மறந்துவிட்டனர். புதிய பாரதமும், புதிய டெல்கியும் இருந்தபொழுது, அது அவர்களின் இராச்சியமாக இருந்தது. அந்நேரத்தில் வேறு எந்தத் தேசமும் இருக்கவில்லை. எவரும் இதை அறியார். அரசாங்கம் இதைக் கற்பிப்பதில்லை. அந்த வரலாறு முழுமையற்றது என்பதை அவர்கள் அறிவார்கள்; அது இஸ்லாமியர்களும், பௌத்தர்களும் வந்ததிலிருந்தே உள்ளது. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தைப் பற்றி எவரும் அறியார். தந்தை மாத்திரமே அமர்ந்திருந்து, முழு உலகினதும் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றதென விளங்கப்படுத்துகின்றார். பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, அது சத்திய யுகமாக இருந்தது. இப்பொழுது, அதே பாரதம் எப்படியாகி விட்டது எனப் பாருங்கள்! எனவே, பாரதத்தை மீண்டும் ஒரு வைரத்தைப் போன்றதாக்க யாரால் முடியும்? தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் முற்றிலும் பாவம் நிறைந்தவர்கள் ஆகும்பொழுது, உங்களைப் புண்ணியாத்மாக்கள் ஆக்குவதற்கு நான் வருகின்றேன். எவரும் அறிந்திராத, இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. வேறு எவருமின்றி, தந்தையாலேயே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவர். அவர் வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். என்றுமே மனிதர்களால் மனிதர்களுக்குச் சற்கதியருள முடியாது. நீங்கள் தேவர்களாக இருந்தபொழுது, ஒருவருக்கொருவர் சந்தோஷத்தை மாத்திரமே கொடுத்தீர்கள். அங்கு எவரும் உடல்நலமற்றவர்களாகவோ, நோயாளிகளாகவோ இருக்கவில்லை. இங்கு அனைவரும் நோயாளிகளாக உள்ளனர். தந்தை இப்பொழுது அதை மீண்டும் ஒருமுறை சுவர்க்கமாக்க வந்துள்ளார். தந்தை சுவர்க்கத்தை உருவாக்குகின்றார், இராவணன் நரகத்தை உருவாக்குகின்றான். இது எவருமே அறிந்திராத, ஒரு நாடகமாகும். சமயநூல்களின் ஞானம் பக்தி மார்க்கத்தின் வெறும் தத்துவமே. அது சற்கதிக்கான பாதையல்ல. இது சமயநூல்களின் தத்துவமல்ல. தந்தை சமயநூல்களை உரைப்பதில்லை. இது ஆன்மீக ஞானமாகும். தந்தையே ஆன்மீகத் தந்தை என அழைக்கப்படுகின்றார். அவரே ஆத்மாக்களின் தந்தையாவார். தந்தை கூறுகின்றார்: நானே மனித உலகின் விதை, இதனாலேயே நான் ஞானம் நிறைந்தவராக உள்ளேன். நான் இந்த மனித உலக விருட்சத்தின் காலப்பகுதி, எவ்வாறு அது வளர்கின்றது, எவ்வாறு பக்தி மார்க்கம் ஆரம்பமாகுகின்றது என்பவற்றை அறிவேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன், பின்னர் நீங்கள் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஒருமுறை மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள், பின்னர் அது மறைந்து விடுகின்றது. சத்திய, திரேதா யுகங்களில் இந்த ஞானத்திற்கான தேவையில்லை. பிராமணர்களாகிய உங்களிடம் மாத்திரமே இந்த ஞானம் உள்ளது. தேவர்களிடம் இந்த ஞானம் இல்லை. எனவே, இந்த ஞானம் தொன்று தொட்டு தொடர்ந்திருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஒரேயொரு தடவையே இந்த ஞானத்தைப் பெற்று, அதன் மூலம் ஜீவன்முக்தி அடைகின்றீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்தே உங்களின் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பலர் உங்களிடம் வந்து, தாங்கள் எவ்வாறு மன அமைதியைப் பெறலாம் எனக் கேட்கின்றனர். எனினும், இவ்வாறு கேட்பது தவறாகும். சரீரத்திற்கு அங்கங்கள் இருப்பது போன்றே, மனமும், புத்தியும் ஆத்மாவின் அங்கங்கள் ஆகும். தந்தை மாத்திரமே வந்து, ஆத்மாக்களைக் கல்லுப்புத்தி உடையவர்களிலிருந்து தெய்வீகப்புத்தி உடையவர்களாக மாற்றுகின்றார். அது சத்திய, திரேதா யுகங்கள் வரை நீடிக்கின்றது. பின்னர் அவர்கள் கல்லுப்புத்தி உடையவர்கள் ஆகுகின்றார்கள். இப்பொழுது நீங்கள் கல்லுப்புத்தி உடையவர்களிலிருந்து மீண்டும் ஒருமுறை தெய்வீகப்புத்தி உடையவர்கள் ஆகுகின்றீர்கள். தெய்வீகமாக இருந்த உங்களின் புத்திகளில் பின்னர் கலப்படம் கலக்கப்பட்டது. இப்பொழுது, உங்களின் புத்தி எவ்வாறு மீண்டும் தெய்வீகமாக முடியும்? தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதால் நீங்கள் தூய்மையாகி, என்னிடம் வருவீர்கள். எவ்வாறு மன அமைதி இருக்க முடியும் என உங்களிடம் வினவுபவர்களிடம் கூறுங்கள்: இங்கு எவ்வாறு அமைதி நிலவ முடியும்? இங்கு விகாரங்கள் இருப்பதால், இது துன்ப பூமியாகும். எல்லையற்ற தந்தையிடமிருந்து மாத்திரமே உங்களால் ஆஸ்தியைப் பெறமுடியும். நீங்கள் இராவணனின் சகவாசத்தில் இருக்கும்பொழுது தூய்மையற்றவர்கள் ஆகுகின்றீர்கள், பின்னர் நீங்கள் தந்தை மூலம் ஒரு விநாடியில் தூய்மையாகுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் தந்தையிடமிருந்து ஜீவன்முக்தி என்ற உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு வந்துள்ளீர்கள். தந்தை உங்களுக்கு ஜீவன்முக்தி என்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார், பின்னர் இராவணன் உங்களைப் பந்தன வாழ்க்கை மூலம் சபிக்கின்றான். இதனாலேயே இங்கு துன்பத்தைத் தவிர, வேறெதுவும் இல்லை. நாடகம் அறிந்துகொள்ளப்பட வேண்டும். துன்ப பூமியில் எவருமே அமைதியையும், சந்தோஷத்தையும் கொண்டிருக்க முடியாது. அமைதியே ஆத்மாக்களாகிய எங்களின் ஆதி தர்மம், அமைதி தாமம் சகல ஆத்மாக்களினதும் வீடாகும். ஆத்மா கூறுகின்றார்: எனது ஆதி தர்மம் அமைதி. நான் இந்த ஹார்மோனியத்தை (சரீரம்) அங்கே வாசிப்பதில்லை, நான் வெறுமனே அமர்ந்துள்ளேன். எவ்வளவு காலத்திற்கு நான் அவ்வாறு அமர்ந்திருப்பேன்? செயல்கள் செய்யப்பட வேண்டும். மனிதர்கள் நாடகத்தைப் புரிந்துகொள்ளும்வரை சந்தோஷமற்றவர்களாகவே இருப்பார்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு. ஏழைகள் மாத்திரமே இங்கு வருவார்கள். செல்வந்தர்களைப் பொறுத்தவரை, இங்கேயே சுவர்க்கம் உள்ளது; அவர்களின் பாக்கியத்தில் சுவர்க்க சந்தோஷம் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு. நான் செல்வந்தர்களை ஏழைகளாகவும், ஏழைகளைச் செல்வந்தர்களாகவும் ஆக்குகின்றேன். செல்வந்தர்களால் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. ஏனெனில், இங்கே அவர்கள் தங்களின் செல்வத்தின் போதையில் இருக்கின்றார்கள். ஆம், அவர்களால் பிரஜைகள் ஆகமுடியும். அவர்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள், ஆனால், ஏழைகளே உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். ஏழைகள் செல்வந்தர்கள் ஆகுகின்றனர். அம்மக்கள் செல்வந்தராக இருப்பதையிட்டு, அகங்காரம் கொண்டுள்ளனர், ஆனால் பாபா கூறுகின்றார்: அவர்களின் செல்வம், சொத்துக்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகின்றது. விநாசம் நிகழப் போகின்றது. ஆத்ம உணர்வு உடையவராகுவதற்குப் பெருமளவு முயற்சி தேவை. இந்நேரத்தில் அனைவரும் சரீர உணர்வு உடையவர்களாக உள்ளனர். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். ஆத்மா கூறுகின்றார்: நான் 84 பிறவிகளைப் பூர்த்திசெய்து விட்டேன். நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது, நாங்கள் வீடு திரும்ப வேண்டும். இது இப்பொழுது கலியுகத்தின் இறுதியினதும், சத்திய யுகத்தின் ஆரம்பத்தினதும் சங்கமம் ஆகும். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒரு தடவை பாரதத்தை மீண்டும் ஒருமுறை வைரமாக்க வருகின்றேன். தந்தையால் மாத்திரமே இந்த வரலாற்றையும், புவியியலையும் உங்களுக்குக் கூறமுடியும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடமிருந்து ஜீவன்முக்தி என்ற உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு, நிச்சயமாகத் தூய்மையாகுங்கள். துன்ப பூமியில் வாழும்பொழுதே, நாடகம் பற்றிய ஞானத்தை உங்களின் புத்தியில் வைத்திருந்து, துன்பத்திற்கு அப்பாற்பட்டிருங்கள்.2. செல்வத்தினதும், சொத்துக்களினதும் போதையைத் துறந்து, ஆத்ம உணர்வில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு பற்றற்ற பார்வையாளராக, அப்பால் இருந்து, “மகான்”, “விருந்தாளி” எனும் இரு வார்த்தைகளின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதனால், சகல கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டவர்கள் ஆகுவீர்களாக.ஒரு பற்றற்ற பார்வையாளராக இருக்கின்ற, அப்பால் இருக்கின்ற உங்கள் ஸ்திதியை உருவாக்குவதற்கு, இரு விடயங்களில் கவனம் செலுத்துங்கள். 1)ஆத்மாவாகிய நான் ஒரு மகான். 2) ஆத்மாவாகிய நான், இப்பழைய உலகிலும், இப்பழைய சரீரத்திலும் உள்ள ஒரு விருந்தாளி. நீங்கள் இவ்விழிப்புணர்வைக் கொண்டிருப்பதனால், பற்றின் பலவீனங்கள், கவர்ச்சிகள் அனைத்தும் இலகுவாகவும், இயல்பாகவும் முடிவடையும். உங்களை மகானாகப் புரிந்துகொள்வதனால், உங்கள் சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்தினால் நீங்கள் செய்கின்ற சாதாரணச் செயல்களும், நீங்கள் கொண்டிருக்கின்ற சாதாரண எண்ணங்களும் மாற்றமடையும். உங்களை மகானாகவும், விருந்தாளியாகவும் கருதியவாறு முன்னேறுவதால், நீங்கள் புகழப்பட தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள்.
சுலோகம்:
அனைவரினதும் நல்லாசிகள் மற்றும் அவர்களின் ஒத்துழைப்பு எனும் துளிகள் மூலம் ஒரு பெரிய பணியும் இலகுவானதாகுகின்றது.