25-04-2021 ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா மதுவனம் 18/12/87


கர்மாதீத் ஸ்திதியின் ஆழமான வரைவிலக்கணம்.

இன்று, சரீரமற்ற பாப்தாதா, சரீரமற்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் தனது மேன்மையான குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் சரீரமற்றவராகவும் கர்மாதீத் ஆகவும் ஆகும் மேன்மையான இலக்கைக் கொண்டிருப்பதன் மூலம் தனது முழுமையான ஸ்திதிக்கு நெருக்கமாக வருகிறார். இன்று, குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் கர்மாதீத் மற்றும் சரீரமற்ற ஸ்திதிக்கு நெருக்கமாக வருகிறீர்கள் என்றும், எந்தளவிற்கு நீங்கள் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுகிறீர்கள் என்றும் இன்னமும் அவ்வாறு செய்கிறீர்களா என்றும் பாப்தாதா பார்த்தார். உங்கள் எல்லோருடைய இலக்கும் தந்தைக்கு நெருக்கமாக வருவதும் அவருக்குச் சமமாக ஆகுவதும் ஆகும். ஆனால், இதை நடைமுறையில் செய்வது என்று வரும்போது நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். பிரம்மாபாபா சரீரத்தில் இருந்தபோதும் சரீரமற்றவராக, அதாவது, கர்மாதீத் ஆக இருந்த பௌதீக உதாரணத்தை நீங்கள் கண்டீர்கள். எனவே, கர்மாதீத் ஆகுவதன் சிறப்பியல்பு என்ன? நீங்கள் அந்தச் சரீரத்தில் இருந்து இந்தச் செயல்களின் களத்தில் உங்களின் பௌதீக அங்கங்களினூடாக உங்களின் பாகத்தை நடிக்கும்வரை, உங்களால் ஒரு விநாடியேனும் செயல்களைச் செய்யாமல் இருக்க முடியாது. ‘கர்மாதீத்’ என்றால், செயல்களைச் செய்யும்போது, கர்ம பந்தனத்தில் இருந்து அப்பாற்பட்டிருத்தல் என்று அர்த்தம். ஒரு பந்தனம் என்பது ஒருவிடயம். உறவுமுறை என்பது வேறோர் விடயம். பௌதீக அங்கங்களால் கர்ம உறவுமுறையில் பிரவேசித்தல் என்பது, கர்ம பந்தனத்தில் கட்டுப்படுவதில் இருந்து வேறுபட்ட விடயமாகும். கர்ம பந்தனம் உங்களை எல்லைக்குட்பட்ட கர்ம பலனில் உங்களைத் தங்கியிருக்கச் செய்கிறது. ‘தங்கியிருத்தல்’ என்ற வார்த்தை, நீங்கள் யாராவது ஒருவரில் தங்கியிருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கிறது. மற்றவர்களில் தங்கியிருப்பவர்கள் ஆவிகளைப் போல் அலைந்து திரிவார்கள். தீய ஆவி ஒன்று பிரவேசித்த மனிதரின் நிலைமை என்னவாக இருக்கும்? அவர் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் அலைந்து திரிவார். அதேபோல், நீங்கள் உங்களின் செயல்களால் கட்டுப்பட்டால், அதாவது, நீங்கள் அழிகின்ற கர்மபலனின் ஆசைகளால் கட்டுப்பட்டால், அந்தக் கர்மா உங்களை ஏதாவது பந்தனத்தில் கட்டிவிடும். அத்துடன் உங்களின் புத்தியால் உங்களைத் தொடர்ந்து அலையச் செய்யும். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் துயரத்தை ஏற்படுத்தும் கர்ம பந்தனம் என்று அழைக்கப்படுகிறது. ‘கர்மாதீத்’ என்றால், கர்மத்தில் தங்கியிருக்காதவர் என்று அர்த்தம். ஆனால் அவர் பௌதீக அங்கங்களின் அதிபதியாக, ஓர் அதிகாரியாக, தற்காலிகமான ஆசைகளில் இருந்து விடுபட்டவராக, பௌதீக அங்கங்களைச் செயல்படுத்துபவராக ஓர் உறவுமுறையில் (தொடர்பில்) பிரவேசிக்கிறார். செயல்கள் (கர்மா) ஆத்மாவான அதிபதியைத் தங்கியிருப்பவர் ஆக்கக்கூடாது. ஆனால், உரிமைகளைக் கொண்டுள்ள ஆத்மா தொடர்ந்து அங்கங்களின் மூலம் செயல்களைச் செய்ய வேண்டும். பௌதீக அங்கங்கள் உங்களைக் கவர்ந்தால், நீங்கள் உங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் தங்கியிருக்கிறீர்கள். பந்தனத்தில் கட்டுப்பட்டுள்ளீர்கள். கர்மாதீத் என்றால், இதற்கு அப்பாற்பட்டிருத்தல் என்று அர்த்தம். அதாவது, இதில் இருந்து விடுபட்டிருத்தல் என்று அர்த்தம். கண்களின் வேலை பார்த்தல். ஆனால், கண்களைப் பார்க்கச் செய்வது யார்? கண்கள் செயலைச் செய்கின்றன. ஆனால் ஆத்மாவே அந்தச் செயலைச் செய்ய வைப்பவர். எனவே, செயலைச் செய்ய வைக்கும் ஆத்மா, செயல்களைச் செய்யும் பௌதீக அங்கங்களில் தங்கியிருந்தால், அது கர்ம பந்தனம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் செயல்களைச் செய்ய வைப்பவராக இருந்தால் அல்லது செயல்களைச் செய்தால், அது கர்ம உறவுமுறைக்குள் பிரவேசித்தல் என்று அர்த்தம். கர்மாதீத் ஆத்மா உறவுமுறைக்குள் பிரவேசிக்கிறார். ஆனால் அவர் பந்தனத்தில் கட்டுப்படுவதில்லை. சிலவேளைகளில், நீங்கள் கூறுகிறீர்கள்: நான் அதைச் சொல்ல வேண்டும் என நினைக்கவில்லை, ஆனால் நான் அதைக் கூறிவிட்;டேன். நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் அதைச் செய்து விட்டேன். இத்தகையதோர் ஆத்மா கர்ம பந்தனத்தால் கட்டுப்படுத்தப்படும் ஆத்மா எனப்படுகிறார். இத்தகைய ஆத்மாவைக் கர்மாதீத் ஸ்திதிக்கு நெருக்கமானவர் என்றா அல்லது தொலைவில் இருப்பவர் என்றா அழைக்க முடியும்?

‘கர்மாதீத்’ என்றால் அப்பாற்பட்டிருத்தல், அதாவது, சரீரம், சரீர உறவுகள், சடப்பொருட்கள், லௌகீக, அலௌகீக உறவுமுறைகளின் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருத்தல் என்று அர்த்தம். ‘உறவுமுறை’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும் - சரீர உறவுமுறைகள் அல்லது பௌதீக உறவினர்களுடனான உறவுமுறைகள் - சரீரத்தில் அல்லது உறவுகளில் ஏதாவது தங்கியிருத்தல் இருந்தால், அந்த உறவுமுறையும் ஒரு பந்தனம் ஆகிவிடும். ‘உறவுமுறை’ என்ற வார்த்தை, உங்களுக்கு ஓர் அழகான, தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். இன்று ஆத்மாக்கள் எல்லோரினதும் உறவுமுறைகள் பந்தனங்களாக மாறிவிட்டன. எங்கு உறவுமுறைகள் பந்தனங்களின் ரூபத்தை எடுக்கிறதோ, அந்த பந்தனங்கள் தொடர்ந்து ஏதாவதொரு முறையில் துயரத்தையே ஏற்படுத்தும். அது அவர்களைத் துன்பத்தின் அலைகளை அல்லது சந்தோஷமற்ற அலைகளை அனுபவிக்கச் செய்கிறது. தற்காலிகமான பேறுகள் அனைத்தும் இருந்தாலும், அவர்கள் அந்தப் பேறுகளின் சந்தோஷத்தைத் தற்காலிகமாகவே அனுபவம் செய்வார்கள். அந்தச் சந்தோஷத்துடன், ஒரு நிமிடம் அவர்கள் பேறுகளின் சொரூபங்களாக இருப்பதை அனுபவம் செய்வார்கள். அடுத்த நிமிடம், சகல பேறுகளும் இருந்தாலும், அவர்கள் பேறுகள் அற்ற நிலையையே அனுபவம் செய்வார்கள். நிரம்பி வழிபவராக இருந்தாலும், அவர்கள் தாம் வெறுமையாக இருப்பதாகவே உணர்வார்கள். அனைத்தும் இருந்தாலும், தமக்கு ஏதாவது வேண்டும் என்றே அவர்கள் தொடர்ந்தும் அனுபவம் செய்வார்கள். ஆத்மாக்களுக்கு எப்போதும் ஏதாவது தேவையாக இருக்கும் பட்சத்தில், அவர்களால் ஒருபோதும் திருப்தியாக இருக்க முடியாது. அவர்களின் மனங்களில், சரீரங்களில் அல்லது ஏனைய அனைவருடனும் எல்லா வேளையும் எப்போதும் சந்தோஷமாக இருத்தல் என்பது சாத்தியமில்லை. அவர்கள் ஏதோவொரு காரணத்தால், தமது விருப்பத்திற்கும் மாறாக, தங்களுடன் அல்லது மற்றவர்களுடன் சதா குழம்பிய வண்ணமே காணப்படுவார்கள். ஏனென்றால், குழப்பம் அடைதல் என்றால் அவர்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும். அதாவது, தமது பௌதீக அங்கங்களைச் செயல்பட வைக்கும் உரிமையைக் கொண்டவர் என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம். எனவே, அவர்கள் குழப்பம் அடைவார்கள், இல்லையா? கர்மாதீத் ஆகியவர்கள் ஒருபோதும் குழப்பம் அடைய மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்குக் கர்ம உறவுமுறையினதும் கர்ம பந்தனத்தினதும் அர்த்தம் தெரியும். செயல்களைச் செய்யுங்கள். தங்கியிருப்பவராக அல்ல. ஆனால், ஓர் அதிபதியாக, உரிமையுடையவராகச் செய்யுங்கள். ‘கர்மாதீத்’ என்றால், தனது கடந்த காலக் கர்மக்கணக்குகளின் பந்தனம் எதுவும் அற்றவர் என்று அர்த்தம். கடந்த காலக் கர்மக்கணக்கினால் உடலில் நோய்கள் ஏற்பட்டாலும் அல்லது ஏனைய ஆத்மாக்களின் சம்ஸ்காரங்களுடன் சுயத்தின் சம்ஸ்காரங்கள் முரண்பட்டாலும், கர்மாதீத் அடைந்த ஒருவர் எந்தவிதமான கர்ம வேதனையாலும் கட்டுப்பட மாட்டார். ஆனால், அதன் அதிபதியாகி, அந்தக் கணக்கைத் தீர்;ப்பார். ஒரு கர்மயோகியாக கர்ம வேதனையைத் தீர்ப்பதே, கர்மாதீத் ஆகுவதன் அடையாளமாகும். யோகத்தினால், ஒரு புன்னகையுடன், கர்ம வேதனையை சிலுவையில் இருந்து ஒரு முள்ளாக மாற்றி, அதை எரித்து விடுங்கள். அதாவது, கர்ம வேதனையை முடித்து விடுங்கள். அது எந்தவொரு நோயின் வடிவத்தையும் எடுக்கக்கூடாது. அது ஏதாவதொரு நோயின் வடிவத்தை எடுக்கும்போது, அந்த நபர் தொடர்ந்து அதை ஒரு நோய் என்று பேசிக் கொண்டிருப்பார். அவர் அதைப் பற்றித் தனது மனதிலும் பேசுவார். தனது வாயினாலும் பேசுவார். இரண்டாவதாக, அது ஒரு நோயின் வடிவில் இருப்பதனால், அவரும் துயரப்படுவார். மற்றவர்களையும் துயரத்திற்கு உள்ளாக்குவார். இத்தகையதோர் ஆத்மா அழுவார். ஆனால் கர்மாதீத் அடைந்த ஒருவரோ அதை நிர்வகிப்பார். சிலருக்குச் சிறிதளவு வலியே காணப்படும். ஆனால் அவர்கள் அதிகளவில் அழுவார்கள். ஆனால், ஏனையோர் அதிகளவில் வலி இருந்தாலும், அதைத் திறம்படக் கையாளுவார்கள். கர்மாதீத் ஸ்திதியைக் கொண்டிருக்கும் ஒருவர் தனது உடலின் அதிபதியாக இருப்பதால், அவர் தனது கர்மத்தால் வேதனைப்பட்டாலும், அவருக்குப் பற்றற்றவராக இருக்கும் பயிற்சி காணப்படும். அவ்வப்போது சரீரமற்றவராக இருக்கும் ஸ்திதியின் அனுபவமானது, அவரை நோய்க்கு அப்பால் எடுத்துச் செல்லும். வலியுடன் இருக்கும் ஒருவரை, அவரின் வலியை மறப்பதற்காக விஞ்ஞானத்தின் வசதிகளால் மயக்கம் அடையச் செய்கிறார்கள். அந்த மருந்தின் விளைவால் அவர் அந்த வலியை உணரமாட்டார். அதேபோல், தனது கர்மாதீத் ஸ்திதியில் இருக்கும் ஒருவருக்குப் பற்றற்றவராக இருக்கும் பயிற்சி இருப்பதால், அவர் அவ்வப்போது இந்த ஆன்மீக ஊசியை ஏற்றிக் கொள்வார். பின்னர், இதனூடாக, அவர் சிலுவையை ஒரு முள்ளாக அனுபவம் செய்வார். தந்தையைப் பின்பற்றுவதன் மூலம், அவர் தந்தையின் இதயபூர்வமான விசேடமான ஆசீர்வாதங்களைக் குறிப்பாக கீழ்ப்படிவானவராக இருப்பதன் புலப்படும் பலனாகப் பெறுவது இன்னுமொரு விடயமாகும். முதலில், அவர்களின் சரீரமற்றவராக இருக்கும் சொந்தப் பயிற்சியாலும், இரண்டாவதாக, கீழ்ப்படிவானவராக இருப்பதால் தந்தையிடமிருந்து பெறும் ஆசீர்வாதங்களாலும் அவர் நோயை மாற்றுகிறார். அதாவது, அவரின் கர்ம வேதனையானது சிலுவையில் இருந்து ஒரு முள்ளாக மாறுகிறது. மேன்மையான, கர்மாதீத் ஆத்மா தனது கர்மயோகா ஸ்திதியால் கர்ம வேதனையை மாற்றுகிறார். எனவே, நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? அல்லது, நீங்கள் இதைப் பெரியதொரு விடயமாக உணர்கிறீர்களா? இது இலகுவானதா அல்லது கஷ்டமானதா? சிறிய விடயத்தைப் பெரியதாக்குவதும், அல்லது பெரிய விடயத்தைச் சிறியதாக்குவதும் உங்களின் சொந்த ஸ்திதியிலேயே தங்கியுள்ளது. துயரப்படுவதோ அல்லது அதிபதியாக இருக்கும் நேர்மையைப் பேணுவதோ உங்களிலேயே தங்கியுள்ளது. ‘என்ன நிகழ்ந்தது?’ என்பதும், அல்லது ‘என்னவெல்லாம் நடந்ததோ, அது நல்லதே’ என்பதும் உங்களிலேயே தங்கியுள்ளது. இந்த நம்பிக்கையால் தீயதையும் நல்லதாக மாற்ற முடியும். ஏனென்றால், உங்களின் கர்மக் கணக்குகளைத் தீர்ப்பதன் மூலமும், அவ்வப்போது நடைமுறைப் பரீட்சைத்தாளை எதிர்கொள்வதன் மூலமும், நாடகத்தின்படி, சில விடயங்கள் உங்களின் முன்னால் நல்லதொரு வடிவில் வரும். எவ்வாறாயினும், ஏனைய வேளைகளில், சில விடயங்கள் நல்லதாக இருந்தாலும், வெளிப்படையாக அவை இழப்பின் வடிவிலேயே வரும். அது நல்லதல்ல, அது அவ்வாறிருந்தது என நீங்கள் இதைக் குறிப்பிடுவீர்கள். இப்போதும், சூழ்நிலைகள் தொடர்ந்து வரும். அவை தொடர்ந்தும் அந்த ரூபத்திலேயே வரும். ஆனால், இழப்பெனும் திரையின் பின்னால், நன்மை மறைந்திருக்கும். வெளியே தோன்றும் திரை இழப்பிற்குரியது போல் தோன்றும். நீங்கள் சிறிது நேரத்திற்குப் பொறுமையாக இருந்தீர்களென்றால், சகித்துக் கொள்ளும் ஸ்திதியுடன் அனைத்தையும் அகநோக்குடன் பார்த்தால், உங்களால் வெளிப்படையான அந்தத் திரையின் பின்னால் என்ன மறைந்துள்ளது எனப் பார்க்கக்கூடியதாக இருக்கும். அதன் புறத்தே தெரியும் ரூபத்தைப் பார்த்தாலும், நீங்கள் அதைப் பார்க்க மாட்டீர்கள். நீங்கள் புனித அன்னங்கள், இல்லையா? அந்த அன்னங்களால் கற்களை இரத்தினங்களில் இருந்து வேறுபிரிக்கக்கூடியதாக இருக்கும்போது, புனித அன்னங்களான நீங்கள் மறைந்துள்ள நன்மையை எடுத்துக் கொள்ள வேண்டும். இழப்பிலும் நன்மையைக் கண்டு கொள்ள வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் விரைவில் பயப்படுகிறீர்கள். அப்போது, என்ன நிகழுகிறது? நீங்கள் பயப்படும்போது, நல்லதாக நீங்கள் நினைத்த எண்ணங்களும் மாறிவிடுகின்றன. எனவே, பயப்படாதீர்கள். நீங்கள் செயலைப் பார்க்கும்போது, அந்தச் செயலின் எந்தவிதமான பந்தனத்திலும் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். ‘என்ன நடந்தது? அது எவ்வாறு நடந்தது? அது அவ்வாறு நடந்திருக்கக்கூடாது. ஏன் எப்போதும் எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது? எனது பாக்கியம் அவ்வளவுதான்.’ நீங்கள் தொடர்ந்து இவ்வாறான நூல்களைக் கட்டுகிறீர்கள். இந்த எண்ணங்கள் நூல்கள் போன்றவை. இவ்வாறே நீங்கள் கர்ம பந்தனத்தில் உங்களைக் கட்டிக் கொள்கிறீர்கள். வீணான எண்ணங்கள் கர்ம பந்தனத்தின் சூட்சுமமான இழைகளாகும். ‘என்ன நிகழ்கிறதோ அது நல்லதே, நான் நன்றாக இருக்கிறேன், தந்தை நல்லவர், நாடகமும் நல்லதே’ என்றே ஒரு கர்மாதீத் ஆத்மா கூறுவார். பந்தனங்கள் வெட்டப்பட்டுவிட்டால், நீங்கள் கர்மாதீத் ஆகிவிடுகிறீர்கள், இல்லையா? நன்மை செய்பவரான தந்தையின் குழந்தைகளாக இருப்பதனால், சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடியும் நன்மை செய்வதாகவே இருக்கும். ஒவ்வொரு விநாடியிலும், உங்களின் வியாபாரம் நன்மையையே ஏற்படுத்தும். உங்களின் சேவை நன்மையை ஏற்படுத்தும். பிராமணர்களின் தொழில், உலக மாற்றத்திற்கானது, உலக நன்மைக்கானது. இத்தகைய நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டுள்ள ஆத்மாக்களுக்கு, ஒவ்வொரு கணமும் நிச்சயமாக நன்மை செய்வதாகவே இருக்கும். உங்களுக்குப் புரிகிறதா?

‘கர்மாதீத்’ இற்கான மொழியில் அதிகளவு வரைவிலக்கணங்கள் உள்ளன. கர்ம தத்துவம் ஆழமானதாக இருப்பதைப் போல், கர்மாதீத் ஸ்திதியின் வரைவிலக்கணமும் மிகவும் மகத்தானது. கர்மாதீத் ஆகுவது அத்தியாவசியமாகும். கர்மாதீத் ஆகாமல், உங்களால் தந்தையுடன் திரும்பிச் செல்ல முடியாது. யார் தந்தையுடன் திரும்பிச் செல்வார்கள்? சமமாக இருப்பவர்களே. நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள். அவர் எவ்வாறு தனது கர்மாதீத் ஸ்திதியைப் பெற்றார் என்பதைக் கண்டீர்கள். கர்மாதீத் ஆகுவதில் அவரைப் பின்பற்றுதல் என்றால், தந்தையுடன் திரும்பிச் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுதல் என்று அர்த்தம். இன்று கூறியது போதும். இந்தளவையும் இப்போது சோதித்துப் பாருங்கள். பின்னர் பாபா உங்களுக்கு மேலும் அதிகமாகக் கூறுவார். அச்சா.

ஓர் உரிமையைக் கொண்டிருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் எல்லோருக்கும், எந்தவொரு கர்ம பந்தனத்தையும் கர்ம உறவுமுறையாக மாற்றுபவர்களுக்கும், கர்ம வேதனையை கர்ம யோகா ஸ்திதியாகவும் ஒரு சிலுவையை ஒரு முள்ளாகவும் மாற்றுபவர்களுக்கும், ஒவ்வொரு விநாடியும் நன்மையை ஏற்படுத்துபவர்களுக்கும், பிரம்மாபாபாவைப் போல் கர்மாதீத் ஸ்திதிக்கு நெருக்கமாக இருப்பதை அனுபவம் செய்பவர்களுக்கும், இத்தகைய விசேடமான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

1. நீங்கள் உங்களை சதா சக்திநிறைந்த தந்தையின் சக்திசாலிக் குழந்தைகளாக அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் சிலவேளைகளில் சக்திசாலிகளாகவும் சிலவேளைகளில் பலவீனமாகவும் இல்லையல்லவா? சக்திசாலி என்றால் எப்போதும் வெற்றியாளர் என்று அர்த்தம். சக்திசாலிகள் ஒருபோதும் தோற்பதில்லை. அவர்களால் தமது கனவுகளிலேனும் தோல்வி அடைய முடியாது. எப்போதும் உங்களின் கனவுகளிலும் எண்ணங்களிலும் செயல்களிலும் வெற்றியாளராக இருப்பதே சக்திநிறைந்தவராக இருத்தல் எனப்படுகிறது. இந்த முறையில் நீங்கள் சக்திசாலிகளாக இருக்கிறீர்களா? இது ஏனென்றால், இந்த வேளையில் வெற்றியாளர்கள் ஆகுபவர்களே, நீண்ட காலத்திற்குப் புகழத் தகுதிவாய்ந்தவர்களாகவும் வெற்றி மாலையில் பூஜிக்கப்படுபவர்களாகவும் ஆகுவார்கள். நீங்கள் நீண்ட காலத்திற்கு வெற்றியாளர் ஆகாவிட்டால், நீங்கள் சக்திசாலி ஆகாவிட்டால், உங்களால் நீண்ட காலத்திற்குப் புகழ்வதற்கோ அல்லது பூஜிப்பதற்கோ தகுதிவாய்ந்தவர் ஆகமுடியாது. நீண்ட காலத்திற்கு எப்போதும் வெற்றியாளராக இருப்பவர்களே, நீண்ட காலத்திற்குப் புகழத் தகுதியானவர்களாகவும் வெற்றி மாலையில் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆகுவார்கள். ஆனால் சிலவேளைகளில் மட்டும் வெற்றியாளர்கள் ஆகுபவர்கள், அதில், அதாவது, பதினாறாயிரம் மணிமாலையில் சிலவேளைகளில் மட்டுமே வருவார்கள். எனவே, நீண்ட காலத்திற்கான கணக்கும் எப்போதும் என்ற கணக்கும் உள்ளன. சகல ஆலயங்களிலும் பதினாறாயிரம் மணிமாலை இருப்பதில்லை. சில இடங்களில் மட்டுமே அது உள்ளது.

2. நீங்கள் அனைவரும் இந்த எல்லையற்ற நாடகத்தில் உங்களைக் கதாநாயக நடிக ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? உங்கள் அனைவருக்கும் கதாநாயக பாகங்கள் உள்ளன. நீங்கள் ஏன் கதாநாயக நடிகர்கள் ஆகினீர்கள்? ஏனென்றால், நீங்கள் ஸீரோவாக (பூச்சியம்) இருக்கும் ஒரேயொருவரான, அதிமேலான தந்தையுடன் உங்களின் பாகங்களை நடிப்பவர்கள். நீங்களும் ஸீரோக்கள். அதாவது, புள்ளிகள். எவ்வாறாயினும், நீங்கள் சரீரதாரிகள் ஆகுகிறீர்கள். ஆனால் தந்தையோ எப்போதும் ஸீரோவாகவே இருக்கிறார். எனவே, ஸீரோவுடன் தமது பாகங்களை நடிப்பவர்கள் ஹீரோ நடிகர்கள். இந்த விழிப்புணர்வு உங்களுக்குள் இருந்தால், நீங்கள் எப்போதும் உங்களின் பாகத்தை மிகச்சரியாக நடிப்பீர்கள். உங்களின் கவனமும் இயல்பாகவே ஈர்க்கப்படும். எல்லைக்குட்பட்ட நாடகத்தில், ஹீரோ நடிகர்கள் அதிகளவு கவனம் செலுத்துவார்கள். உங்கள் அனைவருக்கும் அனைத்திலும் மிகப் பெரிய பாகமான ஹீரோ பாகம் கிடைத்துள்ளது. எப்போதும் இந்தப் போதையையும் சந்தோஷத்தையும் பேணுங்கள்: ஆஹா எனது ஹீNhh பாகமே! உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரும், ‘மீண்டும் ஒருமுறை! மீண்டும் ஒருமுறை!’ எனக் கூறுவார்கள். துவாபர யுகத்தில் இருந்து உங்களைப் பற்றிப் பாடப்பட்ட பக்திப்பாடல்கள் அனைத்தும் இந்த வேளையில் உங்களின் ஹீரோ பாகங்களின் ஞாபகார்த்தமே ஆகும். இத்தகையதோர் அழகான ஞாபகார்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் ஹீரோக்கள் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே, உங்களின் புகழ் இன்று வரை தொடர்கிறது. உங்களின் இறுதிப் பிறவியிலும் நீங்கள் உங்களின் சொந்தப் புகழைக் கேட்கிறீர்கள். கோபி வல்லபரினதும் கோபிகைகளினதும் கோபர்களினதும் புகழ் உள்ளது. தந்தையின் புகழ், சிவனின் ரூபத்தில் உள்ளது. குழந்தைகளின் புகழ், சக்திகளின் ரூபத்தில் உள்ளது. எனவே, நீங்கள் ஹீரோ பாகங்களை எப்போதும் நடிக்கும் மேன்மையான ஆத்மாக்கள். தொடர்ந்து இந்த விழிப்புணர்வுடன் முன்னேறுங்கள்.

குமார்களைச் சந்திக்கிறார்:

1. நீங்கள் இலகு யோகி குமார்கள்தானே? சதா யோகி குமார்கள், கர்மயோகி குமார்கள். ஏனென்றால், குமார்களால் தாம் விரும்பிய அளவிற்கு தங்களை முன்னேற்றிக் கொள்ள முடியும். ஏன்? நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எந்தவிதமான சுமைகளும் இல்லை. உங்களுக்கு எந்தவிதமான பொறுப்புக்களும் கிடையாது. இதனாலேயே, நீங்கள் இலேசாக இருக்கிறீர்கள். நீங்கள் இலேசாக இருப்பதால், நீங்கள் விரும்பிய அளவு உயரத்திற்கு உங்களால் செல்ல முடியும். சதா யோகியும் இலகு யோகியும். இது ஓர் உயர்ந்த ஸ்திதியாகும். உயரே செல்லுதல் என்பதன் அர்த்தம் இதுவேயாகும். இத்தகைய உயர்ந்த ஸ்திதியைக் கொண்டிருப்பவர்கள், வெற்றியாளர் குமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் வெற்றியாளர்களா அல்லது சிலவேளைகளில் தோற்றுவிடுகிறீர்களா? சிலவேளைகளில் வெற்றி அடைகிறீர்களா? நீங்கள் இந்த விளையாட்டை விளையாடுவதில்லை, இல்லையா? சிலவேளைகளில் தோற்பதும், சிலவேளைகளில் வெற்றி அடைவதும் என்ற சம்ஸ்காரங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் நிலையான, ஸ்திரமான ஸ்திதியை அனுபவம் செய்ய மாட்டீர்கள். ஒரேயொருவரின் அன்பிலே உங்களை மறந்திருப்பதை நீங்கள் அனுபவம் செய்ய மாட்டீர்கள்.

2. நீங்கள் உங்களின் ஒவ்வொரு செயலிலும் எப்போதும் அற்புதங்களைச் செய்யும் குமார்கள், இல்லையா? எந்தவொரு செயலும் சாதாரணமானதாக இருக்கக்கூடாது. அது அற்புதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். நீங்கள் தந்தையின் புகழைப் பாடுவதுடன், அவரின் அற்புதங்களின் புகழையும் பாடுவதைப் போல், குமார்கள் என்றால் ஒவ்வொரு செயலிலும் அற்புதங்களைச் செய்து காட்டுபவர்கள் என்று அர்த்தம். சிலவேளைகளில் இவ்வாறும், சிலவேளைகளில் அவ்வாறும் என்றிருப்பவர்கள் இல்லை. நீங்கள் உங்களை இழுக்கும் எந்தத் திசையிலும் இழுபடுபவர்கள் இல்லை. உருண்டு கொண்டிருக்கும் ஒரு பானையைப் போல் ஆகாதீர்கள். சிலவேளைகளில், நீங்கள் எங்கேயாவது உருள்வதும், பின் ஏனைய நேரங்களில் வேறு எங்கேயாவது உருள்வதும் என்பதாக இருக்கக்கூடாது. அற்புதங்களைச் செய்பவர்கள் ஆகுங்கள். ஒரேயொருவர் அழியாதவர். அவர் உங்களையும் அழியாதவர்கள் ஆக்குகிறார். இந்த முறையில் ஒரு சவால் விடுப்பவர் ஆகுங்கள். அற்புதங்களைச் செய்து, ஒவ்வொரு குமாரும் ஒரு தேவதையைப் போல் நடப்பதை, அசைவதை நடைமுறையில் செய்துகாட்டுங்கள். தொலைவில் இருந்தே தேவதையின் பிரகாசம் அனுபவம் செய்யப்பட வேண்டும். வார்த்தைகளால் சேவை செய்வதற்கு நீங்கள் பல நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளீர்கள். நிச்சயமாக நீங்கள் அவற்றைச் செய்வீர்கள். ஆனால், தற்காலத்தில் மக்களுக்கு ஏதாவது நடைமுறை அத்தாட்சி தேவைப்படுகிறது. நடைமுறை அத்தாட்சியே அனைத்திலும் மிகப் பெரிய அத்தாட்சியாகும். நடைமுறை அத்தாட்சியாக இருப்பவர்கள் பலர் இருக்கும்போது, சேவை இலகுவாக நிகழும். நீங்கள் தேவதை சேவையைச் செய்யும்போது, குறைந்தளவு கடின உழைப்பே இருக்கும். நீங்கள் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். வார்த்தைகளால் மட்டும் சேவை செய்யாதீர்கள். ஆனால் உங்களின் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் செயல்களாலும் ஒரே நேரத்தில் மூன்றினாலும் சேவை செய்யுங்கள். இதுவே ஓர் அற்புதம் என்று அழைக்கப்படுகிறது. அச்சா.

விடைபெறும் வேளையில்: எங்கும் உள்ள அதிதீவிர முயற்சியாளர்கள் அனைவருக்கும், சதா சேவையாளர்களுக்கும், எப்போதும் இலேசாகவும் ஒளியாகவும் இருந்து மற்றவர்களையும் டபிள் லைற் ஆக்குபவர்களுக்கும், வெற்றியைத் தமது உரிமையாகப் பெறுபவர்களுக்கும், சதா தந்தையைப் போல் முன்னேறுவதுடன், மற்றவர்களையும் முன்னேறச் செய்பவர்களுக்கும், எப்போதும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பேணும் இத்தகைய மேன்மையான ஆத்மாக்களுக்கும், அன்பான குழந்தைகளுக்கும், பாப்தாதா இதயத்தின் ஆழத்தில் இருந்து அதிகளவு அன்பும் நினைவுகளுடன் காலை வணக்கங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:

நீங்கள் ஒவ்வோர் அடியிலும் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேமித்து, ஒரு பல்கோடீஸ்வரர் ஆகுவீர்களாக.

குழந்தைகளை ஒரு மிக உயர்ந்த ஸ்திதியில் இருக்கும்படி தந்தை எச்சரிக்கிறார். ஆகவே, இது இப்போது சிறியதொரு தவறையும் செய்வதற்கான நேரம் இல்லை. இப்போது, ஒவ்வோர் அடியிலும் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம், ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்களைச் சம்பாதிப்பதன் மூலம், ஒரு பல்கோடீஸ்வரர் ஆகுங்கள். நீங்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் என்று அழைக்கப்படுவதைப் போல், உங்களின் செயல்களும் அவ்வாறே இருக்க வேண்டும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானம் இல்லாமல் இருக்கக்கூடாது. எனவே, ஒவ்வோர் அடியையும் மிகவும் கவனமாக, ஸ்ரீமத்திற்கேற்ப எடுத்துவையுங்கள். உங்களின் சொந்த மனதின் கட்டளைகளை ஸ்ரீமத்துடன் கலக்காதீர்கள்.

சுலோகம்:

உங்களின் மனதை உங்களின் கட்டளைகளுக்கேற்ப நடக்கச் செய்யுங்கள். நீங்கள் இயல்பாகவே ‘மன்மனாபவ’ என்ற ஸ்திதியில் இருப்பீர்கள்.


--ஓம் சாந்தி---

ஓம் சாந்தி