30.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிமையான குழந்தைகளே, நீங்கள் தந்தையுடன் தனிப்பட்ட முறையில் கற்கிறீர்கள். சத்தியயுக இராச்சியத்திற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிந்துள்ள தந்தையின் தொழில் என்ன?

பதில்:
உங்களது தந்தையே, தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்பது உங்களுக்குத் தெரியும். பழைய உலகைப் புதியதாக்கவும் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிப்பதற்காகவும் தந்தை சக்கரத்தின் சங்கம யுகத்தில் வருகிறார். எங்களை மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆக்குவதற்காகத் தந்தை குழந்தைகளாகிய எங்களுக்குக் கற்பிக்கிறார். குழந்தைகளாகிய எங்களைத் தவிர வேறு எவரும் அவரது தொழிலை அறிய மாட்டார்கள்.

பாடல்:
கள்ளங்கபடம் அற்ற பிரபுவைப் போல் தனித்துவமானவர்கள் வேறு எவரும் இல்லை...

ஓம் சாந்தி.
'ஓம்சாந்தி" என்பதன் அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஓம் என்றால் நான் ஓர் ஆத்மா இது எனது சரீரம் என்பதாகும். “இது எனது ஆத்மா” எனச் சரீரமும் கூறலாம். 'நீங்கள் என்னுடையவர்கள்" என சிவபாபா கூறுவது போல் குழந்தைகளும் “பாபா நீங்கள் என்னுடையவர்” எனக் கூறுகின்றார்கள். அவ்வாறே, ஆத்மாவும் "இது எனது சரீரம்” எனக் கூறுகிறார். சரீரமும் “எனது ஆத்மா” எனக் கூறுகின்றது. தான் அழியாதவர் என்பது ஆத்மாவிற்குத் தெரியும். ஆத்மா இல்லாது சரீரத்தினால் எதுவும் செய்ய இயலாது. ஆத்மா சரீரத்திலிருந்து “எனது ஆத்மாவை சிரமப்படுத்தாதீர்கள்” எனக் கூறுகிறார். “எனது ஆத்மா புண்ணியாத்மா ஆவார்”. அல்லது “எனது ஆத்மா பாவாத்மா ஆவார்”. நீங்கள் புண்ணியாத்மாக்களாகவே சத்திய யுகத்தில் இருந்தீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். “நான் சத்தியயுகத்தில் சதோபிரதானாக, உண்மையான தங்கமாக இருந்தேன்" என ஆத்மாவே கூறுகிறார். அவர் தங்கமாக உண்மையில் இருக்கவில்லை ஆனால் ஓர் உதாரணத்திற்கே இவ்வாறு கூறுப்பட்டுள்ளது. எனது ஆத்மா தூய்மையானவரும் சத்தியயுகத்தவரும் ஆவார். “நான் தூய்மையற்றவன்” என ஆத்மா இப்பொழுது கூறுகிறார். உலக மக்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள் என்றும் இப்பொழுது தமோப்பிரதான் ஆகியுள்ளீர்கள் என்பதுவும் ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். குழந்தைப்பருவம், இளமைக்காலம், முதுமைப்பருவம் அனைத்திற்கும் அதேபோன்றுதான் இருக்கும். அனைத்தும் நிச்சயமாகப் புதியதிலிருந்து பழையதாகுகிறது. உலகமும் முதலில் சதோபிரதானாகவும் சத்தியயுகமாகவும் இருந்த பின்னர் அது தமோபிரதானாகவும் கலியுகமாகவும் ஆகியுள்ளதாலேயே அனைவரும் சந்தோஷமற்று இருக்கின்றனர். சதோபிரதானென்றால் புதிதாக்கப்பட்ட உலகம். தமோபிரதான் என்றால் பழுதடைந்த உலகம் ஆகும். பாடலிலும் கூட “பழுதடைந்த உலகைப் புதிதாக்குபவர்” என்றே கூறப்பட்டுள்ளது. பழைய உலகம் பழுதடைந்துள்ளது ஏனெனில் அது இராவண இராச்சியமாகவும் அனைவரும் அங்கு தூய்மையற்றும் இருக்கின்றனர். சத்தியயுகத்தில் அனைவரும் தூய்மையாக இருந்ததுடன் அது புதிய விகாரங்கள் அற்ற உலகம் எனவும் அழைக்கப்பட்டது. இது பழைய விகாரங்கள் நிறைந்த உலகமாகும். இப்பொழுது கலியுகமாகும். பாடசாலைகளில் அல்லது கல்லூரிகளில் இவ்விடயங்கள் எதுவும் கற்பிக்கப்படுவதில்லை. கடவுள் வந்து உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்கிறார். “கடவுளின் வாசகங்கள்” என்பது கீதையாகிய ஸ்ரீமத் பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீமத் என்றால் மேன்மையான வழிகாட்டல்கள் ஆகும். கடவுளே அனைவரிலும் அதிமேன்மையானவரும் அதியுயர்ந்தவரும் ஆவார். அவரது மிகச்சரியான பெயர் சிவன் ஆகும். நீங்கள் ஒருபோதும் “உருத்ர ஜெயந்தி அல்லது உருத்ர ராத்திரி” எனக் கூறுவதைச் செவிமடுத்திருக்க மாட்டீர்கள். மக்கள் சிவராத்திரி பற்றிப் பேசுகிறார்கள் ஆனால் சிவன் அசரீரியானவர் என்பதால், எவ்வாறு அசரீரியானவரின் பிறந்த நாளைக் கொண்டாட முடியும்? கிருஷ்ணரின் பிறந்தநாளைப் பற்றிப் பேசுவது சரியானது. அவர் இன்னாரின் குழந்தையாவார் அவரின் பிறந்த நேரமும் திகதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவா எப்பொழுது பிறந்தார் என்பது எவருக்கும் தெரியாது. இது தெரிந்திருக்க வேண்டும். சத்திய யுக ஆரம்பத்தில் எவ்வாறு கிருஷ்ணர் பிறப்பெடுத்தார் என்ற புரிந்துணர்வை நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளீர்கள். அது 5000 ஆண்டுகளுக்கு முன்னர் என நீங்கள் கூறுகிறீர்கள். பாரதம் கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சுவர்க்கமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கு முன்னர், சந்திர வம்சமும், அதற்கு முன்னர் சூரிய வம்சமும் இந்தது. சமயநூல்கள் சத்திய யுகத்திற்கு நூறாயிரக்கணக்கான காலப்பகுதியை கொடுத்துள்ளன. கீதையே பிரதானமான சமயநூலாகும். கீதையின் மூலமே தேவ தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது. அது சத்திய, திரேதா யுகங்கள் வரை நீடித்திருந்தது அதாவது, ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் பரமாத்மாவாகிய பரமதந்தையினால் கீதையினூடாக ஸ்தாபிக்கப்பட்டது என்பதே அதன் அர்த்தமாகும். பின்னர் அரைச் சக்கரத்திற்குச் சமயநூல்களோ அல்லது சமய ஸ்தாபகர்களோ இருப்பதில்லை. தந்தை வந்தே பிராமணர்களைத் தேவர்களாகவும் சத்திரியர்களாகவும் ஆக்குகிறார். அதன் அர்த்தம் தந்தை மூன்று தர்மங்களை ஸ்தாபிக்கிறார் என்பதாகும். இது மேலதிக (லீப்) தர்மமாகும். அதன் கால அளவு மிக குறுகியது. அனைத்துச் சமயநூல்களினதும் அதிமேன்மையான கீதை கடவுளினால் பாடப்பட்டதாகும். தந்தை மறுபிறவி எடுப்பதில்லை. அவர் பிறப்பெடுக்கிறார் ஆனால் அவர் கூறுகிறார்;: நான் கருப்பையினுள் பிரவேசிப்பதில்லை. நான் பராமரிப்பைப் பெறுவதில்லை. சத்தியயுகத்தில் பிறக்கும் குழந்தைகள் கருப்பை எனும் மாளிகையில் இருப்பார்கள் ஆனால் இராவணனது இராச்சியத்தில் அவர்கள் கருப்பை எனும் சிறையினுள் செல்கின்றனர். பாவங்களுக்கான தண்டனை சிறையிலேயே அனுபவம் செய்யப்படும். தாம் மேலும் பாவங்களைச் செய்யமாட்டோம் எனக் கருப்பையில் அவர்கள் சத்தியம் செய்கின்றனர் ஆனாலும் இது பாவாத்மாக்கள் நிறைந்த உலகமாகும். குழந்தை வெளியில் வந்தவுடனேயே (பிறப்பெடுத்ததும்) பாவங்களைச் செய்ய ஆரம்பிக்கிறார். அங்கு செய்யப்பட்ட சத்தியம் அங்கேயே விட்டுவிடப்படுகிறது. இங்கும் கூட தாம் மேலும் காம வாளை ஒருவர் மீது ஒருவர் பயன்படுத்திப் பாவங்களைச் செய்ய மாட்டோம் எனப் பலரும் சத்தியம் செய்கின்றனர் ஏனெனில் அந்த விகாரம் ஆரம்பம், மத்தி, இறுதிவரை துன்பத்தையே விளைவிக்கிறது. சத்திய யுகத்தில் நஞ்சு இல்லை. ஆகவே மக்கள் அங்கு 21 பிறவிகளின் ஆரம்பம், மத்தி, இறுதி வரை எந்த துன்பத்தையும் அனுபவம் செய்வதில்லை. ஏனெனில் அது கடவுளின் இராச்சியமாகும். தந்தை மீண்டுமொருமுறை அதன் ஸ்தாபனையை மேற்கொள்கிறார். ஸ்தாபனை சங்கமயுகத்தில் மட்டுமே இடம்பெற முடியும் இல்லையா? ஒரு தர்மத்தை ஸ்தாபிக்க வருகின்ற எவரும் எந்தவொரு பாவத்தையும் செய்திருக்கக் கூடாது. அவர்கள் தமது அரைவாசி காலம் புண்ணியாத்மாக்களாகவும் பின்னர் அவர்களது அரைவாசி காலம் பாவாத்மாக்களாகவும் ஆகுகின்றனர். நீங்கள் சத்திய, திரேதா யுகங்களில் புண்ணியாத்மாக்களாக இருந்து பின்னர் நீங்கள் பாவாத்மாக்கள் ஆகுகின்றீர்கள். ஒரு சதோபிரதான் ஆத்மா மேலிருந்து கீழே வரும்போது அவரால் தண்டனையை அனுபவம் செய்ய முடியாது. சமயத்தை ஸ்தாபிப்பதற்காகக் கிறிஸ்துவின் ஆத்மா கீழே வரும் போது அவரும் தண்டைனையை அனுபவம் செய்திருக்க முடியாது. கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் அந்த ஆத்மா எந்த பாவச் செயலையும் செய்திருக்கவில்லை. அந்த ஆத்மா பிரவேசிக்கின்ற சரீரத்தின் ஆத்மாவே வலியை அனுபவம் செய்து அனைத்தையும் சகித்துக்கொள்கிறார். அது பாபா இவரினுள் எவ்வாறு பிரவேசிக்கிறாரோ அதைப் போன்றதாகும். பாபா சதோபிரதான் ஆவார். எதாவது வலி அல்லது கஷ்டம் இவரினாலேயே அனுபவம் செய்யப்படுகிறது சிவபாபாவினால் அல்ல. அவர் சதா அமைதியானவரும் சந்தோஷமானவரும் ஆவார். அவர் எப்போதும் சதோபிரதானாவே இருக்கிறார். எவ்வாறாயினும் அவர் இந்தப் பழைய சரீரத்திலேயே பிரவேசிக்கிறார். அதே போன்று, கிறிஸ்துவின் ஆத்மா பிரவேசித்த சரீரம் வலியை அனுபவம் செய்யும். ஆனால் கிறிஸ்து ஆத்மா வலியை அனுபவம் செய்திருக்கமாட்டார் ஏனெனில் அவர் இன்னமும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்லவேண்டி உள்ளது. புதிய ஆத்மாக்கள் கீழே வருவார்கள் ஆகவே அவர்கள் நிச்சயமாக முதலில் சந்தோஷத்தையே அனுபவம் செய்ய வேண்டும். அவர்கள் முதலில் துன்பத்தை அனுபவம் செய்ய முடியாது. அது சட்டம் அல்ல. பாபா இவரில் உள்ளார். எந்தக் கஷ்டமும் இவரினாலேயே அனுபவம் செய்யப்படுகிறது சிவபாபாவினால் அல்ல. எவ்வாறாயினும் உங்களுக்கு மட்டுமே இவ் விடயங்கள் தெரியும். வேறு எவருக்கும் அவை தெரியாது. தந்தை இங்கிருந்து அனைத்து இரகசியங்களையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஸ்தாபனை இந்த இலகு இராஜயோகத்தின் மூலம் இடம்பெறுகிறது பின்னர் அதே விடயங்கள் பக்திமார்க்கத்தில் நினைவு கூரப்படுகின்றன. சங்கமயுகத்தில் இடம்பெறுபவை அனைத்தும் நினைவுகூரப்படுகின்றன. பக்திமார்க்கம் ஆரம்பித்ததும் சிவபாபா பூஜிக்கப்படுகிறார். யார் முதலில் பக்தி செய்கின்றார்கள்? இலக்ஷ்மியும் நாராயணனும் இராச்சியத்தை ஆட்சிசெய்யும் போது அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக உள்ளனர். பின்னர் அவர்கள் பாவப் பாதைக்குச் செல்லும் போது அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களிலிருந்து பூஜிப்பவர்களாக மாறுகின்றனர். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அசரீரியான பரமாத்வாகிய பரம தந்தையே இவரினூடாகக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது முதலில் குழந்தைகளாகிய உங்களது புத்திகளிலேயே புக வேண்டும். இம்முறையில்; விளங்கப்படுத்துகின்ற இவ்வாறான வேறெந்த இடமும் இந்த உலகில் இருக்க முடியாது. தந்தையே வந்து பாரதத்தின் ஆஸ்தியாகிய சுவர்க்கத்தை மீண்டுமொருமுறை கொடுக்கிறார். திரிமூர்த்தியின் படத்தின் கீழ் எழுதப்பட்டுள்ளது: தேவ உலக இராச்சியம் உங்கள் இறை பிறப்புரிமை ஆகும். சிவபாபா வந்து உங்களைத் தகுதியானவர்களாக்கி உங்கள் சுவர்க்க இராச்சியமான ஆஸ்தியைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கிறார். பாபா உங்களைத் தகுதியானவர் ஆக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் தூய்மையற்றிருந்தீர்கள் இல்லையா? நாங்கள் தூய்மையாகியதும் இந்தச் சரீரங்கள் இருக்கமாட்டாது. நீங்கள் இராவணனால் தூய்மையற்றவர்கள் ஆக்கப்பட்டீர்கள். பின்னர் பரமாத்மாவாகிய பரமதந்தை எங்களைத் தூய்மையாக்கித் தூய உலகின் அதிபதிகள் ஆக்குகிறார். அவரே ஞானக்கடலாகிய தூய்மையாக்குபவர் ஆவார். அந்த அசரீரியான பாபாவே எங்களுக்குக் கற்பிக்கிறார். எல்லோராலும் ஒன்றாகச் சேர்ந்து கற்கமுடியாது. உங்களில் சிலரே நேரடியாக கற்கிறீர்கள், ஏனைய குழந்தைகள் அனைவரும் இப்பொழுது சிவபாபா பிரம்ம பாபாவின் சரீரத்திலிருந்து உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை வழங்கிக்கொண்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் அந்த முரளியை எழுத்து வடிவில் பெற்றுக்கொள்வார்கள். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் இவ்வாறு இல்லை. தற்பொழுது டேப் றெகோடரை கண்டுபிடித்துள்ளார்கள் எனவே அவர்கள் பதிவு நாடாவில் பதிவுசெய்து அனுப்புகின்றனர். இந்த-இந்த குரு இவற்றை விளங்கப்படுத்துகிறார் என அம்மக்கள் கூறுவார்கள். அவர்கள் தங்கள் புத்தியில் சரீரதாரிகளையே நினைவில் வைத்திருக்கின்றனர். அது இங்கு பொருந்தாது. இங்கு அசரீரியான தந்தையே ஞானம் நிறைந்தவர் ஆவார். மனிதர்களை ஞானம் நிறைந்தவர்கள் என அழைக்க முடியாது. தந்தையாகிய கடவுளே ஞானம் நிறைந்தவர், அமைதிநிறைந்தவர், பேரானந்தம் மிக்கவர் எனக் கூறப்படுகிறது எனவே அவரிடம் ஆஸ்தி இருக்கவேண்டும். அவரது குழந்தைகள் அவரின் திவ்யகுணங்களைப் பெற வேண்டும். நீங்கள் இப்பொழுது அவற்றைப் பெறுகிறீர்கள். நாங்கள் திவ்ய குணங்களைக் கிரகித்து இலக்ஷ்மி நாராயணன் போல் ஆகுகின்றோம். அனைவரும் அரசன் அல்லது அரசி ஆவார்கள் என்பது அல்ல. அரசர்கள், அரசிகள், ஆலோசகர்கள் இருந்தார்கள் என்பது நினைவுகூரப்படுகிறது. அங்கு ஆலோசகர்கள் இல்லை ஏனெனில் சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியும் சக்தியைக் கொண்டுள்ளனர். அவர்கள் விகாரமானவர்கள் ஆகும்போதே ஆலோசகர்கள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றனர். முன்னர் மந்திரிகள் போன்றோர் இருக்கவில்லை. அது ஓர் அரசனதும் அரசியினதும் இராச்சியமாக இருந்தது. ஏன் அவர்களுக்கு ஆலோசகர்கள் தேவைப்படுகின்றனர்? அவர்கள் தாமே அதிபதிகளாக இருப்பதனால் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை. இது புவியியலும் வரலாறும் ஆகும். எவ்வாறாயினும் தந்தையே அனைத்தையும் செய்து உங்களுக்கு அறிவூட்டி யோகத்தையும் கற்பிக்கிறார் என்பது முதலில் உங்கள் புத்தியில் புக வேண்டும். நினைவுயாத்திரையில் நிலைத்திருங்கள். நாடகம் இப்பொழுது ஒரு முடிவிற்கு வருகிறது. நாங்கள் விகாரத்தில் ஈடுபட்டதனால் முற்றாகத் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளோம் அதனாலேயே “பாவ ஆத்மாக்கள்” எனக் கூறப்படுகிறது. சத்தியயுகத்தில் பாவாத்மாக்கள் இல்லை. அங்கு புண்ணியாத்மாக்களே உள்ளனர். நீங்கள் இப்பொழுது செய்யும் முயற்சிக்கான வெகுமதியே அதுவாகும். உங்களுடையது நினைவு யாத்திரையே ஆகும். அதுவே பாரதத்தின் யோகம் என அழைக்கப்படுகிறது. எவ்வாறாயினும் யோகம் என்பது பாவங்கள் அழிக்கப்படுகின்ற நினைவே என்பதை அவர்கள் புரிந்தகொள்வதில்லை. பின்னர் நீங்கள் உங்களது சரீரத்தை நீக்கி வீடு திரும்புவீர்கள். அது இனிய வீடு என அழைக்கப்படுகிறது. ஆத்மா கூறுகிறார்: நான் அந்த அமைதிதாமவாசி ஆவேன். நாங்கள் அங்கிருந்து சரீரம் அற்றவர்களாக வந்து எமது பாகத்தை நடிப்பதற்காக இங்கு சரீரத்தை எடுத்தோம். ஐந்து விகாரங்களே மாயை என அழைக்கப்படுகின்றன என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இவையே ஐந்து தீய ஆவிகள் ஆகும். தீய ஆவிகளான காமமும், கோபமும் உள்ளன முதலாம் இலக்கத் தீய ஆவி சரீர உணர்வு ஆகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்த விகாரங்கள் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அது விகாரங்களற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. விகாரங்கள் நிறைந்த உலகை விகாரமற்ற உலகமாக மாற்றுவது தந்தையின் பணி மாத்திரமே ஆகும். அவர் மட்டுமே சர்வ சக்திவான், ஞானக்கடல், தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகிறார். இந்நேரத்தில் அனைவரும் விகாரம் மூலமே பிறப்பெடுக்கின்றனர். சத்திய யுகத்திலேயே உலகம் விகாரமற்று இருக்கிறது. தந்தை கூறுகிறார்: இது உங்களது இறுதிப் பிறப்பாகும். நீங்கள் இப்பொழுது விகாரமானவர்களிலிருந்து விகாரமற்றவர்களாக ஆக வேண்டும். அவர்கள் வினவுகின்றனர்: இந்த நஞ்சு இல்லாது குழந்தைகள் எவ்வாறு பிறக்கும்;;? தந்தை விளங்கப்படுத்துகிறார்: மரணபூமி முடிவடைய உள்ளது அதன் பின்னர் விகாரம் நிறைந்த மனிதர்கள் இருக்கமாட்டார்கள். இதனாலேயே நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள் எனத் தந்தைக்கு நீங்கள் சத்தியம் செய்ய வேண்டும். அவர்கள் கூறுகின்றனர்: பாபா நான் நிச்சயமாக எனது ஆஸ்தியை உங்களிடமிருந்து கோரிக்கொள்வேன். மக்கள் பொய்யான சத்தியத்தைச் செய்கின்றனர். அவர் எப்பொழுது, எவ்வாறு வருகின்றார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவரது பெயரோ, ரூபமோ, இடமோ, கால அளவோ அவர்களுக்குத் தெரியாது. தந்தை வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கிறார். நீங்கள் இப்பொழுது அவரது அறிமுகத்தைப் பெறுகிறீர்கள். உலகில் எவருமே தந்தையாகிய கடவுளை அறியவில்லை. அவர்கள் அவரைக் கூவியழைக்கின்றனர் அத்துடன் அவரைப் பூஜிக்கின்றனர் ஆனால் அவரது தொழில் பற்றி அவர்களுக்குத் தெரியாது. பரமாத்மாவாகிய பரமதந்தையே உங்கள் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரியும். இந்த தந்தை தானே தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: நான் உங்களது தந்தை. நான் இந்த சரீரத்தில் பிரவேசித்துள்ளேன். பிரஜாபிதா பிரம்மாவின் மூலமே ஸ்தாபனை இடம்பெறுகிறது. எவரது ஸ்தாபனை? பிராமணர்களது. பிராமணர்களாகிய நீங்கள் கல்வி கற்பதன் மூலம் பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். நான் வந்து உங்களைச் சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாக மாற்றுகிறேன். தந்தை கூறுகிறார்: நான் சக்கரத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். சக்கரம் 5000 வருடங்களைக் கொண்டுள்ளது. இந்த உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. நான் பழைய உலகைப் புதியதாக்கி, ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபிப்பதற்காகவே வருகிறேன். பின்னர் நான் பழைய தர்மங்கள் அனைத்தையும் அழிக்கிறேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்து உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக 21 பிறவிகளுக்கு மாற்றுகிறேன். சூரிய வம்சமும், சந்திர வம்சமும் பிரஜைகளும் தேவர்கள் ஆவார்கள். எவ்வாறாயினும் நீங்கள் இப்பொழுது செய்யும் முயற்சிக்கேற்பவே நீங்கள் மேன்மையான அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் இப்பொழுது செய்யும் எத்தகைய முயற்சியும் ஒவ்வொரு சக்கரமும் தொடரும். நீங்கள் அந்த முயற்சியையே ஒவ்வொரு சக்கரமும் செய்கிறீர்கள் என்றும், அந்த அந்தஸ்தையே நீங்கள் பெறுவீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அசரீரியான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்திகளில் உள்ளது. அவரை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அவரை நினைவு செய்யாது உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. அவர்கள் எத்தனை பிறவிகளை எடுக்கின்றனர் என்பது மக்களுக்குத் தெரியாது. சமயநூல்களில் 8.4 மில்லியன் பிறவிகள் என எவரோ ஒருவர் பொய்யான கதையை எழுதியுள்ளார். 84 பிறவிகளே உள்ளன என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இதுவே உங்களது இறுதிப்பிறப்பாகும் பின்னர் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் முதலில் அசரீரியான உலகிற்குச் சென்று பின்னர் சுவர்கத்திற்குச் செல்கிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மையாக இருப்பதாக நீங்கள் தந்தைக்குச் செய்த சத்தியத்தில் உறுதியாக இருங்கள். நீங்கள் நிச்சயமாகத் தீய ஆவிகளான காமம், கோபம் போன்றவற்றை வெற்றி கொள்ள வேண்டும்.

2. உலாவித் திரியும் போதும் அனைத்தையும் செய்யும் போதும், உங்களுக்குக் கற்பிக்கின்ற தந்தையை நினைவு செய்யுங்கள். நாடகம் இப்பொழுது முடிவிற்கு வருகிறது. ஆகவே நீங்கள் நிச்சயமாக இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாக வேண்டும்.

ஆசீர்வாதம்:
ஒரேயொருவரில் அன்பையும் ஒரேயொருவரில் நம்பிக்கையையும் கொண்டிருப்பதன் மூலம் ஒரு நிலையான ஸ்திரமான ஸ்திதியை கொண்டிருந்து எப்பொழுதும் தடைகளிலிருந்து விடுபட்டவரான ஒரு தீர்வின் சொரூபமாகுவீர்களாக.

உலகில் வேறு எந்த ஒரு நபரோ அல்லது உடமைகளோ இல்லை என நீங்கள் உணர்ந்திருக்கும் வகையில், எப்பொழுதும் ஒரே ஒரு தந்தையின் அன்பிலும் அவரின் பணியிலும் மூழ்கியிருங்கள். ஒரேயொருவரின் அன்பைக் கொண்டிருக்கும் குழந்தைகளும், ஒரேயொருவரின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பவர்களும் நிலையான ஸ்திரமான ஸ்திதியை கொண்டிருந்து, எப்பொழுதும் தடைகளிலிருந்து விடுபட்டவர்களாக, ஏற்றத்தின் ஸ்திதியை அனுபவம் செய்கின்றார்கள். அவர்கள் சாக்குப் போக்குகளை தீர்வுகளாக மாற்றுகின்றார்கள். அவர்கள் சாக்குபோக்குகளால் பலவீனம் ஆகுவதில்லை, ஆனால் தீர்வுகளின் சொரூபம் ஆகுகின்றார்கள்.

சுலோகம்:
சரீரமற்றிருப்பது கம்பியற்ற தொடர்பாகும். விகாரமற்றிருப்பது கம்பியற்ற தொடர்பை இணைப்பதாகும்.