07.04.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எல்லையற்ற தந்தைக்கு, நம்பிக்கைக்குரியவர்களாக இருங்கள் அப்போது, நீங்கள் முழுச் சக்தியையும் பெறுவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் மாயையை வெற்றிகொள்வீர்கள்;.

கேள்வி:
தந்தை எந்த முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்? அதன் அறிகுறி என்ன?

பதில்:
ஞானத்தின் அதிகாரமே தந்தையிடமுள்ள முக்கிய அதிகாரமாகும். அவரே ஞானக்கடல் என்பதால், அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு இக்கல்வியைக் கற்பிக்கின்றார். அவர் தன்னைப் போலவே உங்களையும் ஞானமுள்ளவராக ஆக்குகின்றார். நீங்கள் இக்கல்வியின் இலக்கையும், இலட்சியத்தையும் கொண்டுள்ளீர்கள். நீங்கள் இக்கல்வி மூலம் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள்.

பாடல்:
உலகமே மாறினாலும், நான் நிலையாக இருப்பேன்.

ஓம் சாந்தி.
கடவுளின் புகழைப் பக்தர்கள் பாடுகிறார்கள். இப்பொழுது நீங்கள் பக்தர்கள் அல்ல் நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். நம்பிக்கைக்குரிய குழந்தைகளே தேவைப்படுகின்றார்கள். ஒவ்வொரு விடயத்திலும் நீங்கள் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். ஒரு கணவனின் பார்வை தனது மனைவியை விட வேறொருவர் மீது கவரப்பட்டாலோ, அல்லது ஒரு மனைவியின் பார்வை தனது கணவனைத் தவிர வேறொருவர் மீது கவரப்பட்டாலோ, அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்றே அழைக்கப்படுகிறார்கள். இப்பொழுது இங்கே உங்களுக்கு எல்லையற்ற தந்தை உள்ளார். அவருடன் நம்பிக்கைக்குரிய, நம்பிக்கையற்ற குழந்தைகளும் உள்ளார்கள். நம்பிக்கைக்குரிய சிலர், பின்னர்; நம்பிக்கையற்றவர்களாகி விடுகின்றனர். தந்தையே உயர் அதிகாரி; அவர் சர்வசக்திவான், அல்லவா? ஆகவே, அவருடைய குழந்தைகளும் அவரைப் போன்றிருக்க வேண்டும். தந்தையிடம் வலிமையும், சக்தியும் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இராவணனை வெற்றிகொள்வதற்கான வழிமுறைகளை அவர் உங்களுக்குக் காட்டுகின்றார். இதனாலேயே அவர் சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகின்றார். நீங்களே சிவசக்தி சேனை. நீங்கள் உங்களை அதிகாரி எனவும் அழைக்கின்றீர்கள். தந்தை எங்களுக்கு அவரிடமுள்ள வலிமையைக் கொடுக்கின்றார். அவர் இராவணனாகிய, மாயையை எவ்வாறு வெற்றி கொள்வது என உங்களுக்குக் காட்டுகின்றார். நீங்களும் சக்தி வாய்ந்தவர்கள் ஆகவேண்டும். தந்தையே ஞானத்தின் அதிகாரி. அவர் ஞானம் நிறைந்தவர், அல்லவா? பக்தி மார்க்கத்தில் அம்மக்கள் சமயநூல்களின் அதிகாரிகளாக இருப்பது போன்று, நீங்களும் இப்பொழுது சர்வ சக்திவான்களாகவும், ஞானம் நிறைந்தவர்களாகவும் ஆகுகின்றீர்கள். நீங்களும் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இது ஒரு பாடசாலை (கற்கும் இடம்). இங்கு பெறும்; ஞானத்தைக் கற்பதனால், நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். இந்த ஒரு பாடசாலையே உண்டு. நீங்கள் இங்கேயே கற்க வேண்டும். பிரார்த்தனை போன்ற எதனையும் செய்ய வேண்டியதில்லை. கற்பதன் மூலமே நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். உங்களுக்கென இலக்கும் இலட்சியமும் உள்ளன. தந்தை ஞானம் நிறைந்தவர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவருடைய கற்பித்தல்கள் முற்றிலும் வேறுபட்டவை. தந்தையே ஞானக்கடல் என்பதால் அனைத்தும் அவருக்கு மாத்திரமே தெரியும். அவர் எங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார். வேறு எவராலும் இதனை எங்களுக்குக் கொடுக்க முடியாது. உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதற்காகவே தந்தை நேரடியே வருகின்றார். பின்னர் அவர் சென்று விடுகின்றார். இக்கல்வியிலிருந்து நீங்கள் என்ன வெகுமதியைப் பெறப் போகின்றீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். சகல சமயங்களினது ஒன்றுகூடல்களும், குருமார்கள் போன்றோரும் பக்திமார்க்கத்திற்கே உரியவர்கள். இப்பொழுது நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இக்குலத்திற்குரியவர்கள் பக்திமார்க்கத்திலிருந்தே தோன்றுவார்கள் என உங்களுக்கும் தெரியும். சேவை செய்வதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் வேறுபட்ட வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் அனுபவங்களைக் கூறுவதன் மூலம், நீங்கள் வேறு பலரின் பாக்கியத்தை உருவாக்கவும் வேண்டும். சேவை செய்யும் குழந்தைகளான உங்கள் ஸ்திதி பயமற்றதாகவும், அசைக்க முடியாததாகவும், யோக்யுக்தாகவும் இருக்க வேண்டும். யோகத்தில் நிலைத்திருந்து, சேவை செய்யும் போது வெற்றி கிட்டும். குழந்தைகளாகிய நீங்கள் எவரையும் வற்புறுத்தாமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் மிகவும் யோக்யுத்தாக இருக்க வேண்டும். உண்மையில் நீங்கள் அனைவரும் ஓய்வு ஸ்திதியில் உள்ளீர்கள் என்றும், நீங்களே சத்தத்திற்கு அப்பால் இருப்பவர்கள் என்றும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஓய்வு ஸ்திதியில் இருக்கின்ற நீங்களே தந்தையையும், சத்தத்திற்கு அப்பால் உள்ள வீட்டையும் நினைவுசெய்பவர்கள். உங்களுக்கு வேறு எந்த விருப்பமும் இருக்கக்கூடாது. உங்களுக்கு நல்ல உடைகள் போன்றன வேண்டும் எனக் கூறுவது அனைத்தும் தீய விருப்பங்களாகும். சரீர உணர்வுடையவர்களினால் சேவை செய்ய இயலாது. நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். இறை குழந்தைகளுக்கு யோகசக்தி தேவையாகும். யோகம் என்பது சக்தியாகும். தனது குழந்தைகள் அனைவரையும் பாபா அறிவார். நீங்கள் எந்தப் பலவீனத்தை அகற்ற வேண்டும் என்பதை பாபாவினால் உடனடியாகக் கூற முடியும். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: சிவனின் ஆலயத்திற்குச் செல்லுங்கள். அங்கு நீங்கள் பல பக்தர்களைக் காண்பீர்கள். பலர் காசியில் வாழ்வதற்குச் செல்கின்றார்கள். காசியின் பிரபு தங்களுக்கு நன்மை செய்வார் என அவர்கள் எண்ணுகிறார்கள். நீங்கள் அங்கு பல வாடிக்கையாளர்களைக் காண்பீர்கள். எனினும், இதற்கு உங்களுக்குக் கூர்மையான புத்தி தேவையாகும். நீங்கள் சென்று கங்கையில் நீராடுபவர்களுக்கும் விளங்கப்படுத்தலாம். ஆலயங்களுக்குச் சென்றும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். மறைமுகமான முறையில் உடை அணிந்து கொண்டும் நீங்கள் செல்லலாம். அனுமானின் உதாரணமும் உள்ளது. உண்மையில், அந்த உதாரணம் உங்களையே குறிப்பிடுகின்றது. பாதணிகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கின்ற கேள்வியல்ல. நீங்கள் இதில் விவேகம் மிக்கவராகவும், திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். இன்னமும் எவருமே கர்மாதீத் ஆகவில்லை, ஓரிரண்டு பலவீனங்கள் இன்னமும் இருக்கின்றன என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். இந்தக் கடை மாத்திரமே உள்ளதால் அனைவரும் இங்குதான் வரவேண்டும் என்ற போதையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அந்தச் சந்நியாசிகள் போன்ற அனைவரும் ஒரு நாள் வருவார்கள். இந்தக் கடை ஒன்றே உள்ளது. ஆதலால் அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? அதிகமாக அலைந்து திரிந்தவர்கள், சரியான பாதையைக் கண்டுகொள்வார்கள். இக்கடை மாத்திரம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தந்தை ஒருவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர், அல்லவா? அத்தகைய போதை இருக்க வேண்டும். தந்தைக்கு ஓர் அக்கறை உள்ளது: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு ஆஸ்தியான அமைதிதாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் கொடுப்பதற்காகவே வந்துள்ளேன். இதுவே அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்துகின்ற, உங்களின் வியாபாரமும் ஆகும். இது பழைய உலகம். அதற்கு எத்தனை வயது? ஒரு குறுகிய காலத்திற்குள் இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். புதிய உலகம் உருவாக்கப்படும்போதே பழைய உலகம் அழிக்கப்பட முடியும் என்பது ஆத்மாக்கள் அனைவரது புத்திக்குள்ளும் புகும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்கையில், உண்மையில் கடவுள் இங்கேயே உள்ளார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் படைப்பவராகிய தந்தையை மறந்து விட்டார்கள். அவர்கள் திரிமூர்த்தியிலிருந்து சிவனின் வடிவத்தை அகற்றி விட்டதால் அதில் எவ்விதப் பயனும் இல்லை. அவர் படைப்பவர், அல்லவா? திரிமூர்த்தியில் சிவனின் வடிவமும் இருக்கும்போது படைப்பு பிரம்மா மூலமே இடம்பெறுகின்றது என்பது தெளிவாகுகின்றது. அதில் பிரஜாபிதா பிரம்மா இருப்பதால், பிரம்மகுமார்களும், பிரம்மகுமாரிகளும் இருக்க வேண்டும். பிராமண குலமே அதிமேன்மையானது; நீங்களே பிரம்மாவின் குழந்தைகள். பிரம்மா எவ்வாறு பிராமணர்களாகிய உங்களை உருவாக்குகிறார் என்பதனை எவருமே அறியார். தந்தையால் மாத்திரமே உங்களைச் சூத்திரரிலிருந்து பிராமணர்களாக மாற்ற முடியும். இவை மிகவும் ஆழமானதும், அர்த்தமுள்ளதுமான விடயங்கள்; அவர்களுக்குத் தந்தையே நேரடியாக விளங்கப்படுத்தும்பொழுதே அவர்களால் புரிந்துகொள்ள முடியும். தேவர்களாக இருந்தவர்கள் இப்பொழுது சூத்திரர்கள் ஆகிவிட்டனர். இப்பொழுது நீங்கள் எவ்வாறு அவர்களைக் கண்டுபிடிப்பீர்கள்? இதற்கு நீங்கள் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுது பிரம்மகுமாரிகளின் பணி மகத்தானது என அவர்களால் புரிந்துகொள்ள முடியும். அதிகளவில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆகாய விமானத்திலிருந்து துண்டுப்பிரசுரங்கள் போடப்பட வேண்டும் எனவும் பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அவை ஆகக் குறைந்தது செய்தித்தாள்களைப் போன்று பெரியதாக இருக்க வேண்டும். அப்பொழுது ஏணி போன்ற முக்கிய கருத்துக்களும் அவற்றில் உள்ளடக்கக்கூடியதாக இருக்கும். முக்கிய மொழிகள் ஹிந்தியும், ஆங்கிலமும் ஆகும். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் சேவையை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியே நாள் முழுவதும் சிந்திக்க வேண்டும். அந்த முயற்சி நாடகத்திற்கேற்ப தொடர்ந்தும் செய்யப்பட வேண்டும் என்பதை நீங்களும் அறிவீர்கள். ஒருவர் சேவையைச் சிறப்பாகச் செய்யும்பொழுது, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவார் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. நீங்கள் இந்த வரிகளையும் எழுத வேண்டும்: ஒவ்வொரு நடிகரும் தனது சொந்தப் பாகத்தைக் கொண்டிருக்கின்றார்;. தந்தையும் அசரீரி உலகிலிருந்து இந்த நாடகத்திற்குள் வருகின்றார். அவரும் தனது பாகத்தை நடிப்பதற்காக ஒரு பௌதீகச் சரீரத்தை ஆதாரமாக எடுக்கின்றார். ஒவ்வொருவரும் நடிக்கின்ற பாகம் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. ஆகவே, இந்த வரியும் மிக முக்கியமானது. உலகச் சக்கரத்தை அறிந்து கொள்வதனால், அவர்கள் உலக அதிபதிகளான, பூகோள ஆட்சியாளராகிய, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவராகவும் ஆக முடியும் என்பதை மக்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டும். முழு ஞானமும் உங்களிடம் உள்ளது, அல்லவா? தந்தையிடம் கீதையின் ஞானம் உள்ளது. அதன் மூலம் ஒரு சாதாரண மனிதன் நாராயணனாக மாற முடியும். முழு ஞானமும் உங்கள் புத்தியில் இருக்கும்பொழுது, ஒரு முழு இராச்சியமும் தேவைப்படுகிறது. ஆதலால், குழந்தைகளாகிய நீங்கள் அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பதுடன், தந்தையின் சேவையிலும் ஈடுபட்டிருங்கள். ஜெய்ப்பூரில் உள்ள ஆன்மீக அருங்காட்சியகம் எப்பொழுதும் அங்கேயே இருக்கும். எழுதப்பட்டுள்ளது: இந்த ஞானத்தைப் புரிந்துகொள்வதனால், மனிதர்கள் உலக அதிபதிகள் ஆகமுடியும். அதனைப் பார்ப்பவர்கள ஏனையோருக்;கும் அதனைப் பற்றிக் கூறுவர். குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மம்மாவும் சேவையில் உள்ளார்; அவர் நியமிக்ககப்பட்டுள்ளார். சரஸ்வதி யார் என்பது எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. பிரஜாபிதா பிரம்மாவுக்கு ஒரு புத்திரி மாத்திரம் உள்ளாரா? அவருக்குப் பல வேறுபட்ட பெயர்களுடன் பல புத்திரிகள் இருக்க வேண்டும். சரஸ்வதி உங்களைப் போன்று தத்தெடுக்கப்பட்டவர். ஒரு நிறுவனத்தின் தலைவர் விட்டு விலகும்பொழுது வேறொருவர் நியமிக்கப்படுவார். ஒரு பிரதம மந்திரியும் அவ்வாறு நியமிக்கப்படுகின்றார். அவர் ஆற்றலுடையவர் எனக் கருதும்பொழுது அவர் நியமிக்கப்படுகிறார். பின்னர் அவருடைய காலம் முடிவடையும்பொழுது, வேறொருவர் நியமிக்கப்படுகின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு கற்பிக்கும் முதலாவது பண்பு: பிறர் மீது எவ்வாறு மரியாதை கொடுப்பது என்பதாகும். கல்வியறிவு அற்றவர்களுக்கு எவ்வாறு பிறருக்கு மரியாதை கொடுப்பது என்பது தெரியாது. அனைவரும் திறமைசாலிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மூத்தவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்கும்பொழுது நீங்களும் கற்றுக் கொள்வீர்கள். கல்வியறிவு அற்றவர்கள் புத்துக்கள். கல்வியறிவு அற்றவர்களை ஈடேற்றுவதற்காகவே தந்தை வந்துள்ளார். அவர்கள் இந்நாட்களில் பெண்களை முன்னிலையில் நிறுத்துகிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பரமாத்மாவுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள், என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் விஷ்ணு தாமத்தின் அதிபதிகளாகப் போகின்றீர்கள் என மிகவும் சந்தோஷமாக உள்ளீர்கள். ஒரு குமாரியின் புத்தியின் யோகம், நிச்சயிக்கப்பட்ட மணமகனைப் பார்க்காவிட்டாலும் அவர் மீதே இருக்கும். பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் நிச்சயார்த்தம் மிகவும் அற்புதமானது என ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் தந்தை ஒருவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். அம்மக்கள் கூறுகின்றார்கள்: உங்கள் குருவை நினைவுசெய்யுங்கள். இந்த மந்திரத்தை நினைவுசெய்யுங்கள். இங்கு தந்தையே அனைத்தும் ஆவார். அவர் வந்து இவர் மூலமாக உங்கள் நிச்சயதார்த்தத்தை ஏற்;பாடு செய்கிறார். அவர் கூறுகின்றார்: நானே உங்கள் தந்தை. நீ;ங்களும் என்னிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஒரு குமாரி தனக்கு நிச்சயிக்கப்பட்டவரை ஒருபொழுதும் மறப்பதில்லை. நீங்கள் ஏன் மறக்கின்;றீர்கள்? கர்மாதீத ஸ்திதியை அடையக் காலம் எடுக்கின்றது. கர்மாதீத ஸ்திதியை அடைந்த எவரும் மணவாளனுடன் திருமண ஊர்வலமும் செல்லும்வரை வீடு திரும்ப முடியாது. அது சங்கருக்கான விடயமல்ல் இது சிவனின் திருமண ஊர்வலம். ஒரு மணவாளனே உள்ளார். ஏனைய அனைவரும் மணவாட்டிகளே. இது சிவபாபாவின் ஊர்வலம். எனினும், அவர்கள் குழந்தையின் பெயரைப் புகுத்தியுள்ளார்கள். இந்த உதாரணத்துடன் ஏனையோர்களுக்கும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். தந்தை அனைவரையும் அழகானவர்களாக்கிய பின்னர் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வஐகின்றார். அவர் வந்து, காமச்சிதையில் அமர்ந்ததினால் தூய்மையற்றவர்களாகி விட்ட குழந்தைகளாகிய உங்களை, ஞானச்சிதையில் அமரச் செய்கின்றார். அவர் உங்களை அழகானவர்கள் ஆக்கி, அனைவரையும் தன்னுடன் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். இது ஒரு பழைய உலகம், அல்லவா? தந்தை ஒவ்வொரு சக்கரத்திலும் வருகிறார். நான் அழுக்கான அனைவரையும் அழகானவராக்கி, அவர்களை வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்கின்றேன். இராவணன் உங்களை அழுக்காக்குகின்றான், சிவபாபா உங்களை அழகானவராக்குகின்றார். பாபா தொடர்ந்தும் பல வழிமுறைகளை விளங்கப்படுத்துகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உணவு, பானம் போன்றவற்றின் மீது கொண்டுள்ள தீய ஆசைகளைத் துறந்திடுங்கள். ஆத்ம உணர்வுடையவராகி, சேவை செய்யுங்கள். நினைவிலிருந்து சக்தியைப் பெற்று, உங்கள் ஸ்திதியைப் பயமற்றதாகவும், அசைக்க முடியாததாகவும் ஆக்குங்கள்.

2. இக்கல்வியில் திறமைசாலிகளாக உள்ளவர்கள் மீது மரியாதை கொண்டிருங்கள். அலைந்து திரிபவர்களுக்குப் பாதையைக் காட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள். அனைவருக்கும் நன்மையைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
மாஸ்டர் பாக்கியத்தை அருள்பவர்களாகி, உங்கள் தபஸ்வி வடிவத்தின் மூலம் அனைவருக்கும் பேறுகளின் அனுபவத்தை வழங்குவீர்களாக.

சூரியன் ஒளியினதும்;, ஏனைய பல அழியக்கூடிய பேறுகளின் அனுபவத்தையும் கொடுப்பதைப் போன்று தபஸ்வி ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் தபஸ்வி வடிவத்தின் மூலம் பேறுகளின் கதிர்களை அனைவரும் அனுபவிக்குமாறு செய்ய வேண்டும். இதற்கு முதலில், உங்கள் சேமிப்புக் கணக்கை நீங்கள் அதிகரிக்க வேண்டும். அதன்பின்னர் மாஸ்டர் பாக்கியத்தை அருள்பவர்கள் ஆகி, தொடர்ந்தும் நீங்கள் சேமித்தவற்றைக் கொடுங்கள். தபஸ்யா சொரூபம் என்பதன் அர்த்தம் உங்கள் தபஸ்யாவினூடாக மௌனச் சக்தியின் கதிர்கள் அனைத்தையும் பரவச் செய்வதை அனுபவம் செய்வதாகும்.

சுலோகம்:
பணிவானவர் ஆகி தொடர்ந்தும் அனைவருக்கும் மரியாதையைக் கொடுங்கள்; இதுவே உண்மையான ஈடேற்றம் ஆகும்.


மாதேஸ்வரிஜியின் பெறுமதி அளவிட முடியாத மேன்மையான வாசங்கள்

அரைக் கல்பத்திற்கு, பிரம்மாவின் பகலான ஞானம் உள்ளது, அரைக்கல்பத்திற்கு, பிரம்மாவின் இரவான பக்தி உள்ளது.

அரைக்கல்பத்திற்கு, பிரம்மாவின் பகலாகும், அரைக்கல்பத்திற்குப் பிரம்மாவின் இரவாகும். இரவு இப்பொழுது முடிவடைந்து, பகல் வரவேண்டும். கடவுள் இப்பொழுது வந்து, இருளை அகற்றி, ஒளியேற்ற ஆரம்பிக்கின்றார். ஞானத்தினூடாக ஒளி ஏற்றப்படுகின்றது. பக்தியினூடாக இருள் நிலவுகின்றது. பாடலில், பாடப்படுகின்றது: எங்களை இந்தப் பாவ உலகில் இருந்து அப்பால், இதயத்திற்கு சௌகரியமும் ஓய்வும் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இது ஓய்வு இல்லாததோர் ஓய்வற்ற உலகமாகும். முக்தி நிலையில், ஓய்வோ அல்லது ஓய்வின்மையோ இருப்பதில்லை. சத்திய, திரேதா யுகங்களே ஓய்வும் சௌகரியமும் உள்ள உலகமாகும். அனைவருமே இந்தச் சந்தோஷ உலகை நினைவுசெய்கிறார்கள். எனவே, நீங்கள் இப்பொழுது ஓய்வும் சௌகரியமும் நிறைந்த உலகிற்குச் செல்கிறீர்கள். எந்த ஒரு தூய்மையற்ற ஆத்மாவும் அங்கே செல்ல முடியாது. இறுதி நேரத்தில், அவர்கள் தர்மராஜிடமிருந்து தண்டனையை அனுபவம் செய்து, கர்மாவின் எந்தப் பந்தனங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, தமது தூய சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்வார்கள், ஏனெனில் அங்கே எந்தத் தூய்மையற்ற சம்ஸ்காரங்களோ அல்லது பாவங்களோ இருப்பதில்லை. ஆத்மாக்கள் தமது உண்மையான தந்தையை மறக்கும்பொழுது, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட வெற்றியும் தோல்வி அடங்கிய புதிர் விளையாட்டான, நாடகம் உள்ளது. ஆகவே இப்பொழுது சர்வசக்திவான் பரமாத்மாவிடமிருந்து சக்தியைப் பெற்று, விகாரத்தை வெற்றி கொண்டு, 21 பிறவிகளுக்கான உங்களின் இராச்சிய பாக்கியத்தைப் பெறுங்கள். அச்சா.