20.04.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களுடைய இப்புதிய விருட்சம் மிகவும் இனியதாகும். இந்த இனிமையான விருட்சத்தில் மட்டுமே பூச்சிகள் வருகின்றன. பூச்சிகள் அனைத்தையும் தீர்த்துவிடுகின்ற, பூச்சிநாசினியானது “மன்மனபவவே” ஆகும்.

கேள்வி:
திறமைச்சித்தி அடைகின்ற மாணவர்களின் அடையாளங்கள் எவை?

பதில்:
அவர்கள் ஒரு பாடத்தில் மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களிலும் முழுக் கவனம் செலுத்துகிறார்கள். பௌதீகச் சேவை என்னும் பாடமும் சிறந்ததாகும். அதனூடாகப் பலர் சந்தோஷத்தைப் பெறுவதுடன், புள்ளிகளும் சேகரிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், அத்துடன், ஞானமும், சிறந்த நடத்தையும் இருக்க வேண்டும். தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதில் முழுக் கவனம் செலுத்துங்கள். நீங்கள் முழுமையான ஞானத்தையும், யோகத்தையும் கொண்டிருக்கும்பொழுது, உங்களால் திறமைச்சித்தி அடைய இயலும்.

பாடல்:
அவர் எங்களிடமிருந்து பிரிக்கப்படவும் மாட்டார், எங்கள் இதயங்களில் துன்பம் இருக்கவும் மாட்டாது.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எதைக் கேட்டீர்கள்? குழந்தைகளாகிய உங்களின் இதயங்கள் யாருடன் இணைக்கப்பட்டுள்ளன? வழிகாட்டியுடன் ஆகும். வழிகாட்டி உங்களுக்கு எதைக் காட்டுகின்றார்;? அவர் உங்களுக்குச் சுவர்க்க வாசல்களைக் காட்டுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் “சுவர்க்க வாசல்” (“புயவநறயல வழ ர்நயஎநn”) என்னும் பெயரைக் கேட்டுள்ளீர்கள். எப்பொழுது சுவர்க்க வாசல்கள் திறக்கின்றன? இது இப்பொழுது நரகம் ஆகும். யார் சுவர்க்க வாசல்களைத் திறக்கிறார்? எப்பொழுது? குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் இதை அறிவீர்கள். உங்களுக்குச் சுவர்க்கத்துக்குச் செல்வதற்கான வழி தெரியுமாகையால், நீங்கள் சதா சந்தோஷத்தில் இருக்கிறீர்கள். சுவர்க்க வாசல்களினூடாக மக்கள் எவ்வாறு செல்ல முடியும் என்பதை நீங்கள் சந்தைகளிலும் கண்காட்சிகளிலும் காட்ட முடியும். நீங்கள் பல படங்களை உருவாக்கியுள்ளீர்கள். பாபா வினவுகிறார்: இப்படங்கள் அனைத்திலிருந்தும், எந்தப் படத்தை, இவையே சுவர்க்கத்துக்குச் செல்வதற்கான வாசல்கள் என்பதை மக்களுக்கு விளங்கப்படுத்துவதற்குப் பயன்படுத்த வேண்டும்? உலகச் சக்கரத்தின் படம் சுவர்க்க வாசல்களைக் குறிப்பிடுகின்றது. இது சரியானதாகும். மேலே, ஒரு புறத்தில், நரகத்தின் வாசல்களும், மறுபுறத்தில் சுவர்க்க வாசல்களும் உள்ளன. இது முற்றிலும் தெளிவானதாகும். ஆத்மாக்கள் அனைவரும் இங்கிருந்து மௌன தாமத்துக்குத் திரும்பி ஓடுகிறார்கள். பின்னர் நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்கிறீர்கள். இதுவே வாசல் ஆகும். முழுச் சக்கரமும் வாசல் என்று அழைக்கப்பட மாட்டாது. மேலே, எங்கு சங்கமயுகம் காட்டப்படுகிறதோ, அங்கு ஆத்மாக்களாகிய நீங்கள் வெளியேறிப் பின்னர் புதிய உலகத்துக்குள் உட்பிரவேசிக்கும் வாசல்கள் இருக்கின்றன. ஏனைய அனைவரும் மௌன தாமத்தில் வசிக்கிறார்கள். இது நரகம் எனவும், அது சுவர்க்கம் எனவும் கடிகாரத்தின் கரங்கள் (முட்கள்) காட்டுகின்றன. இதை விளங்கப்படுத்தப் பயன்படுத்துவதற்கு, இந்தப் படம் முதற்தரமானதும் அனைத்திலும் சிறந்ததும் ஆகும். “சுவர்க்க வாசல்” என்பது முற்றிலும் தெளிவானதாகும். இவை புத்தியால் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயங்கள். ஏனைய பல சமயங்கள் அழிக்கப்படவுள்ளன, ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் சந்தோஷ தாமத்துக்குச் செல்வீர்கள் என்பதையும், ஏனைய அனைவரும் மௌன தாமத்தில் இருப்பார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வாசல்கள் மிகவும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இச்சக்கரமே பிரதான படம் ஆகும். இதில் சுவர்க்கத்துக்கும் நரகத்துக்குமான வாசல்கள் முற்றிலும் தெளிவாக உள்ளன. ஒரு கல்பத்துக்கு முன்னர் சுவர்க்க வாசல்களினூடாகச் சென்றவர்கள் மட்டும் மீண்டும் அவ்வாறு செல்வார்கள். ஏனைய அனைவரும் மௌன வாசல்களினூடாகச் செல்வார்கள். நரக வாசல்கள் மூடப்பட்டு, அமைதிக்கும் சந்தோஷத்துக்குமான வாசல்கள் திறக்கின்றன. இது ஒரு முதற்தரமான படம்;. திரிமூர்த்தியினதும், இரண்டு பூகோளங்களினதும், இச்சக்கரத்தினதும் படங்கள், முதற்தரமான படங்கள் என்று பாபா எப்பொழுதும் கூறுகிறார். எல்லாவற்றுக்கும் முதலில், வரும் எவருக்கும் இப்படத்தை விளங்கப்படுத்துங்கள்: இதுவே சுவர்க்க வாசல்களைக் காட்டுகின்ற படம்: அது சுவர்க்கமும், இது நரகமும் ஆகும்; இப்பொழுது நரகம் அழிக்கப்பட்டு, முக்திக்கான வாசல் திறக்கிறது. நாங்கள் இப்பொழுது சுவர்க்கத்துக்குச் செல்வோம், ஏனைய அனைவரும் மௌன தாமத்துக்குச் செல்வார்கள். இது மிகவும் இலகுவானது! அனைவரும் சுவர்க்க வாசல்களினூடாகச் செல்வதில்லை. அங்கு அது தேவர்களின் இராச்சியமாக மாத்திரம் இருந்தது. நீங்கள் சுவர்க்க வாசலினூடாகச் செல்வதற்கு, இப்பொழுது தகுதிவாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் கற்குமளவுக்கு, ஓர் ஆதிபதி ஆகுவீர்கள்; நீங்கள் எதற்காகவேனும் அழுதால் அல்லது இரந்தால், பாழாக்கப்படுவீர்கள். சக்கரமே அனைத்திலும் அதிசிறந்த படம். அது புத்தியால் புரிந்து கொள்ளப்பட முடியும். ஒருமுறை படத்தைப் பார்த்ததும் புத்தியானது அதன் பிரகாரம் தொழிற்பட ஆரம்பிக்கிறது. அனைத்தையும் விளங்கப்படுத்தப் பயன்படுத்துவதற்கு, எந்தப் படங்கள் பிரதானமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய எண்ணங்களைக் குழந்தைகளாகிய நீங்கள் நாள் முழுவதும் கொண்டிருக்க வேண்டும். “சுவர்க்க வாசல்”: இந்த ஆங்கில வார்த்தைகள் மிகவும் சிறந்தவை. இப்பொழுது பல பாஷைகள் உள்ளன. “ஹிந்துஸ்தான்” என்னும் வார்த்தையிலிருந்தே, “ஹிந்தி” என்னும் வார்த்தை தோன்றியுள்ளது. ஹிந்துஸ்தான் என்னும் வார்த்தை சரியானதல்ல் உண்மையில், அதன் உண்மையான பெயர் பாரதம். அவர்கள் பாரத தேசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். வீதிகள் போன்றவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன் ஒரு நாட்டின் பெயர் மாறுவதில்லை. “மகாபாரதம்” என்னும் வார்த்தை உள்ளது. பாரதம் அனைத்து விடயங்களிலும் நினைவுகூரப்படுகிறது. பாரதமே தங்கள் நாடென்றும் மக்கள் பாடுகிறார்கள். தங்கள் சமயம் ஹிந்து சமயம் என்று கூறுவதால், தங்கள் பாஷையை ஹிந்தி என்று அழைத்துள்ளார்கள். இது நியாயமல்ல. சத்தியயுகத்தில் உண்மையைத் தவிர எதுவும் இருக்கவில்லை - அணிவதற்கு உண்மையானவையும், உண்மையான உணவும், உண்;மையான பேச்சும் இருந்தன - இங்கோ அனைத்தும் பொய்யானவை ஆகியுள்ளன. ஆகவே “சுவர்க்க வாசல்” என்னும் இவ்வார்த்தைகள் மிகவும் சிறந்தவை. வாருங்கள், சுவர்க்கத்துக்குச் செல்வதற்கான வாசலை நான் உங்களுக்குக் காட்டுவேன். பல்வேறு பாஷைகள் உள்ளன. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சற்கதிக்காக, மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். தந்தையின் வழிகாட்டல்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது: சற்கதிக்கான, அவருடைய வழிமுறைகள் தனித்துவமானவை. அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு அத்தகைய இலகுவான வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். நீங்கள் கடவுளின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஒரு வைத்தியரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நீங்கள் ஒரு வைத்தியர் ஆகுவீர்கள். கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நீங்கள் இறைவர்களும், இறைவிகளும் ஆகுவீர்கள். இவையே கடவுளின் வாசகங்கள். இதனாலேயே பாபா கூறியுள்ளார்: எல்லாவற்றுக்கும் முதலில், யார் கடவுள் என்று அவர்களுக்கு நிரூபியுங்கள். இறைவர்களும், இறைவிகளுமே நிச்சயமாகச் சுவர்க்கத்தின் அதிபதிகள். பிரம்ம தத்துவத்தில் எதுவுமே இல்லை. சுவர்க்கமும், நரகமும் இங்கேயே உள்ளன. சுவர்க்கமும், நரகமும் ஒன்றிலிருந்து மற்றையது முழுமையாக வேறுபட்டது. மக்களின் புத்திகள் முற்றிலும் தமோபிரதான் ஆகியுள்ளன் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. சத்தியயுகத்தின் கால எல்லையை அவர்கள் நூறாயிரக் கணக்கான வருடங்கள் என்று கணித்துவிட்டார்கள், கலியுகம் பற்றி இன்னமும் 40,000 வருடங்கள் உள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் காரிருளில் உள்ளார்கள்! உங்களைச் சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதற்குத் தந்தை உங்களை நற்குணமுள்ளவர்கள் ஆக்குகின்றார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்; அறிவீர்கள். எவ்வாறு சதோபிரதான் ஆகுவது என்பதே நீங்கள் கொண்டிருக்க வேண்டிய பிரதான அக்கறை ஆகும். சதா தன்னை மட்டுமே நினைவுசெய்யும்படி தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். நடக்கும்பொழுதும், அனைத்தையும் செய்யும்பொழுதும், புத்தியில் இந்த நினைவு மட்டுமே இருக்கட்டும். காதலர்கள் அனைவரும், அன்பிற்கினியவர்களும் செயல்களைச் செய்கிறார்கள். பக்தியிலும், அவர்கள் செயல்களைச் செய்கிறார்கள், ஆனால் அவர்களின் புத்தியில் இன்னமும் அந்த ஒரேயொருவரின் நினைவு இருக்கிறது. அவர்கள் அவரை நினைவுசெய்வதற்கு, மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். தந்தையும் மீண்டும் மீண்டும் கூறுகிறார்: சதா உங்கள் தந்தையான, என்னை நினைவுசெய்யுங்கள். அவர்கள் அவரைச் சர்வவியாபி என்று அழைப்பதால், அவர்கள் யாரை நினைவுசெய்வார்கள்? தந்தை விளங்கப்படுத்துகிறார்: அவர்கள் நாஸ்திகர்கள் ஆகியுள்ளார்கள்;; அவர்கள் தந்தையை அறிந்துகொள்ளவுமில்லை. அவர்கள் கூறுகிறார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே! ஆனால் அவர் யார் என்பதை அவர்கள் அறிந்துகொள்வதே இல்லை. ஓர் ஆத்மா கூறுகிறார்: ஓ தந்தையாகிய கடவுளே! ஆனால் ஓர் ஆத்மா என்றால் என்ன? ஆத்மா வேறுபட்டவர் ஆவார். அந்த ஒரேயொருவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார், அதாவது, பரம், அதிமேன்மையான பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். ஆத்மாக்களின் ஞானத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதரேனும் கிடையாது. நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம் ஆகும், ஆகவே, இரு விடயங்கள் உள்ளன. இச்சரீரம் பஞ்ச தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளது. ஓர் ஆத்மா அழிவற்ற ஒளிப்புள்ளி. அது எதனால் ஆக்கப்பட்டுள்ளது? அவர் அத்தகையதொரு சின்னஞ்சிறிய ஒளிப்புள்ளி. சாதுக்கள், புனிதர்கள் போன்றோர் இதை அறியார்கள். இவர் பல குருமார்களை ஏற்றுக் கொண்டார், ஆனாலும் ஆத்மா என்றால் என்ன என்றோ அல்லது பரமாத்மாவாகிய பரமதந்தை என்றால் என்ன என்றோ அவர்களில் எவரும் அவருக்குக் கூறவில்லை. அவர்கள் பரமாத்மாவை மட்டுமே அறியார்கள் என்பதல்ல் அவர்கள் ஆத்மாக்களையும் அறியார்கள். அவர்கள் ஆத்மாக்களை அறிந்திருப்பின், உடனடியாகவே பரமாத்மாவை அறிந்திருப்பார்கள். ஒரு குழந்தைக்குத் தனது தந்தையை அறியாமல், தன்னை மட்டும் அறிந்துகொண்டு (உலகில்) தொடர்வது எவ்வாறு சாத்தியம்? ஆத்மாக்கள் என்றால் என்ன என்பதையும், அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பதையும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் மிகவும் சூட்சுமமானவர்கள் என்பதையும், அவர்களை இக்கண்களால் காண முடியாது என்பதையும் வைத்தியர்களும் புரிந்துகொள்கிறார்கள். ஆகவே, அவர்கள் அவரை (ஆத்மா) ஒரு கண்ணாடிக் கூண்டில் பூட்டியிருப்பின், அவரைப் பார்ப்பது எவ்வாறு அவர்களுக்குச் சாத்தியமாக இருக்கும்? உலகிலுள்ள எவரும் உங்களிடமுள்ள ஞானத்தைக் கொண்டிருக்க முடியாது. ஆத்மா ஒரு புள்ளி என்பதையும், பரமாத்மாவும் ஒரு புள்ளி என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்களாகவும், தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாகவும் மாறுகிறோம். அங்கு தூய்மையற்ற ஆத்மாக்கள் வசிக்க முடியாது. அங்கிருந்து வருகின்ற அனைவரும் தூய்மையானவர்களே, பின்னர் அவர்களே தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். பின்னர் தந்தை வந்து அவர்களைத் தூய்மையாக்குகின்றார். இவையே அனைத்திலும் இலகுவான விடயங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகிறீர்கள் என்பதையும், இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் மட்டுமே 84 பிறவிகளை எடுக்கிறோம். அது ஒருவரை மட்டுமே பற்றிய கேள்வியல்ல. தந்தை கூறுகிறார்: நான் இவருக்கு விளங்கப்படுத்துகிறேன்;, ஆனால் நீங்களும் செவிமடுக்கிறீர்கள். நான் இவரில் பிரவேசித்துள்ளேன். நான் இவருடன் பேசுகிறேன், நீங்கள் அதைக் கேட்கிறீர்கள். இவரே இரதம். ஆகவே பாபா விளங்கப்படுத்தியுள்ளார்;: “சுவர்க்க வாசல்” என்னும் பெயரை நீங்கள் எழுத வேண்டும். எவ்வாறாயினும், அதிலும், சத்தியயுகத்தில் இருந்த தேவதர்மம் இப்பொழுது மறைந்துவிட்டது என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இதை எவரும் அறியார். கிறிஸ்தவர்களும் முதலில் சதோபிரதானாக இருந்தார்கள். பின்னர், மறுபிறவி எடுப்பதால், அவர்கள் தமோபிரதான் ஆகியுள்ளார்கள். நிச்சயமாக விருட்சம் பழையதாகுகிறது. இதுவே பல்வேறு சமயங்களுக்கான விருட்சம் ஆகும். விருட்சம் பற்றிய கணக்கீட்டுக்கேற்ப, ஏனைய அனைத்துச் சமயங்களும் பின்னர் வருகின்றன. இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதாகும். சத்தியயுகத்துக்குச் செல்வதற்கு, மக்கள் இலகுவில் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள் என்பதல்ல் இல்லை. இந்த நாடகம் அநாதியாக நிச்சயிக்கப்பட்டது. சத்தியயுகத்தில் ஒரேயொரு புராதன, ஆதி, சனாதன, தேவிதேவதா தர்மம் மட்டும் இருந்தது. நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்கின்றீர்கள் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. ஆத்மா கூறுகிறார்: நாங்கள் தமோபிரதானாக இருப்பின், எவ்வாறு வீடு திரும்பிச் செல்ல முடியும்? நாங்கள் எவ்வாறு சுவர்க்கத்துக்குச் செல்வோம்? அதற்காகவே, சதோபிரதான் ஆகுவதற்கான வழிமுறையைத் தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார். தந்தை கூறுகிறார்: நான் மட்டும் தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகிறேன். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். எழுதப்பட்டுள்ளது: கடவுள் பேசுகிறார். கிறிஸ்துவுக்கு இத்தனை வருடங்களுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்று அனைவரும் கூறுகின்றார்கள், ஆனால் அது எவ்வாறு அப்படி ஆகியது என்பதையோ, அதன்பின்னர் அது எங்கு சென்றது என்பதையோ எவரும் அறியார். இப்பொழுது நீங்கள் இதை மிகவும் தெளிவாக அறிவீர்கள். இவ்விடயங்கள் எவற்றையும் நீங்கள் முன்னர் அறிந்திருக்கவில்லை. ஆத்மாக்களே நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் ஆகுகிறார்கள் என்பதை உலகிலுள்ள எவரும் அறியார். ஆத்மாக்கள் அனைவரும் குழந்தைகள்; அவர்கள் தந்தையை நினைவுசெய்கிறார்கள். தந்தையே அனைவரினதும் அன்பிற்கினியவர், அனைவரும் அவருடைய காதலர்களே. அந்த அன்பிற்கினியவர் வந்துவிட்டார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் மிகவும் இனிமையான, அன்பிற்கினியவர். இல்லாவிட்டால், ஏன் அனைவரும் அவரை நினைவுசெய்யப் போகிறார்கள்? “பரமாத்மா” என்னும் வார்த்தைகள் வாயிலிருந்து வெளிப்படாத ஒரு மனிதரேனும் இல்லை. அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை என்பது தான் விடயம் ஆகும். ஆத்மாக்கள் சரீரமற்றவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களும் வழிபடப்படுகிறார்கள். வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்த நாங்கள், பின்னர் எங்களுடைய சொந்த ஆத்மாக்களை வழிபட ஆரம்பித்தோம். நீங்கள் பிராமணக் குலத்தில் முன்னைய பிறவியை எடுத்திருப்பீர்கள் என்பது சாத்தியமே. ஸ்ரீநாத்துக்கு போக் படைக்கப்படுகிறது, ஆனால் அதை வழிபடுபவர்களே உண்கின்றார்கள். அவை அனைத்தும் பக்திமார்க்கம் ஆகும். தந்தை மட்டுமே சுவர்க்க வாசல்களைத் திறக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்;; ஆனால் அவர் எவ்வாறு அவற்றைத் திறக்கின்றார்;? அவர் எவ்வாறு விளங்கப்படுத்த முடியும்? கடவுள் பேசுகிறார், ஆகவே நிச்சயமாக அவர் ஒரு சரீரத்தினூடாகப் பேச வேண்டும். ஆத்மாவே சரீரத்தினூடாகப் பேசிச் செவிமடுக்கின்றார். பாபா எங்களுக்கு விபரங்களைக் கூறுகின்றார். விதையும் விருட்சமும் உள்ளன. இது புதிய விருட்சம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். படிப்படியாக, வளர்ச்சி இருக்கும். உங்களுடைய இவ்விருட்;சத்தைப் பல பூச்சிகள் தாக்குகின்றன, ஏனெனில் ஒரு புதிய மரம் மிகவும் இனியதாகும். இனிய மரங்களை மட்டுமே பூச்சிகள் தாக்குகின்றன. ஆகவே, அவற்றின் மீது பூச்சிநாசினி தெளிக்கப்படுகின்றது. தந்தையும் உங்களுக்கு மிகவும் சிறந்த பூச்சிநாசினியாகிய “மன்மனபவ”வைக் கொடுத்துள்ளார். ஏனெனில் “மன்மனபவ” என்னும் உணர்வில் உங்களை நீங்கள் ஸ்திரப்படுத்தாததால், உங்களைப் பூச்சிகள் உண்கின்றன. எதனிலாவது பூச்சிகள் இருப்பின், அது எவ்வாறு பயன்படும்? அது வீசப்படுகின்றது. ஓர் உயர்ந்த அந்தஸ்துக்கும், ஒரு தாழ்ந்த அந்தஸ்துக்கும் மத்தியில் பெரும் வேறுபாடுள்ளது. இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார்: மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள். எவருடனும் உவர்நீரைப் போன்று ஆக வேண்டாம்; பாலும் சீனியும் போன்று ஆகுங்கள். அங்கு சிங்கமும் வெள்ளாடும் கூட பாலும் சீனியும் போன்று வசிக்கின்றன. ஆகவே, குழந்தைகளாகிய நீங்களும் பாலும் சீனியும் போலாக வேண்டும். எவ்வாறாயினும், அது ஒருவரின் பாக்கியத்தில் இல்லாதுவிட்டால், அவர் என்ன முயற்சிகளைச் செய்வார்? பின்னர், அவர் சித்தியடைவதில்லை. உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்குவதற்கே ஓர் ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஓர் ஆசிரியர் அனைவருக்கும் கற்பிக்கின்றார். உங்களால் அந்த வேறுபாட்டையும் பார்க்க முடியும். குறிப்பிட்ட பாடத்தில் யார் திறமைசாலி என்று வகுப்பிலுள்ள மாணவர்களால் கூற முடியும். இங்கும் அவ்வாறே உள்ளது. பௌதீகச் சேவை என்னும் பாடமும் உள்ளது. பண்டாரி (சமையலறையைப் பராமரிக்கும் போளி தாதி) உள்ளார், ஏனெனில் பலரும் சந்தோஷத்தைப் பெறுவதால், அவர்கள் அவரை அதிகளவு நினைவுசெய்கிறார்கள். இது நல்லது; இப்பாடத்தினூடாகவும் நீங்கள் புள்ளிகளைப் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும், திறமைச்சித்தி அடைவதற்கு, நீங்கள் ஒரு பாடத்தில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது; நீங்கள் அனைத்துப் பாடங்களுக்கும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். ஞானம் தேவைப்படுகிறது, பொருத்தமான செயற்பாடும் தேவைப்படுகிறது, அத்துடன் தெய்வீகக் குணங்களும் தேவைப்படுகின்றன. கவனம் செலுத்துவது சிறந்தது. எவராவது பண்டாரியிடம் வரும்பொழுது, அவர் கூறுவார்: “மன்மனபவ” ஆகுங்கள்! சிவபாபாவை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தையை நினைவுசெய்யும்பொழுது, தொடர்ந்தும் ஏனையோருக்கு அறிமுகத்தைக் கொடுங்கள். ஞானமும் யோகமும் தேவைப்படுகின்றன. அது மிகவும் இலகுவானது. இதுவே பிரதான விடயம். குருடருக்கு ஒரு கைத்தடி ஆகுங்கள். மக்களைக் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: வாருங்கள், நான் உங்களுக்குச் சுவர்க்க வாசல்களைக் காட்டுவேன். இது நரகமும், அது சுவர்க்கமும் ஆகும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்து தூய்மையாகுங்கள், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். மன்மனபவ! மிகச்சரியாக ஒரு கல்பத்தின் முன்னர் செய்ததைப் போலவே, பாபா உங்களுக்குக் கீதையை மீண்டும் மீண்டும் கூறுகின்றார். இதனாலேயே பாபா படத்தை உருவாக்கி வைத்துள்ளார்: கீதையின் கடவுள் யார்? சுவர்க்க வாசல்களைத் திறப்பவர் யார்? அவற்றைச் சிவபாபா திறக்கின்றார். கிருஷ்ணர் அதனூடாக அக்கரை செல்வதால், அவர்கள் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியுள்ளார்கள். இரு பிரதான படங்கள் உள்ளன. ஏனைய அனைத்தும் விபரங்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையானவர்களாக வேண்டும். பெருமளவு அன்புடன் பேசுங்கள். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினூடாக, ஏனையோருக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள். பண்டாரியைப் பாருங்கள். அவர் அனைவரையும் சந்தோஷமாக வைத்துள்ளார், ஆகவே அவர்கள் அவருக்காகப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள். இதுவும் ஒரு பாடமாகும். அவர்கள் வந்து பரிசுகளைக் கொடுக்கிறார்கள். அப்பொழுது அவர் கூறுகிறார்: பின்னர் நான் உங்களை நினைவுசெய்ய வேண்டுமாதலால், நான் ஏன் உங்களிடமிருந்து பெற வேண்டும்?; நான் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்து பெற்றால், நான் சிவபாபாவை நினைவுசெய்வேன். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்காக, உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்குவதற்கு, ஒருவர் மற்றவருடன் பாலும் சீனியும் போல் வாழுங்கள்;; மிகவும் இனிமையானவர் ஆகுங்கள். ஒருபொழுதும் உவர்நீர்; போலாகாதீர்கள். அனைத்துப் பாடங்களிலும் முழுக் கவனம் செலுத்துங்கள்.

2. சற்கதி அடைவதற்கு, தந்தையிடமிருந்து நீங்கள் பெற்றுள்ள மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றி, இம்மேன்மையான வழிகாட்டல்களை ஏனையோருக்கும்; கூறுங்கள். அவர்களுக்குச் சுவர்க்கம் செல்வதற்கான பாதையைக் காட்டுங்;கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தூய எண்ணங்கள் எனும் சக்தியின் கையிருப்பு மூலம் இலகுவில் மனம் மூலம் சேவை செய்வதை அனுபவம் செய்வீர்களாக.

அகநோக்குடையவராகி, தூய எண்ணங்கள் எனும் சக்தியின் கையிருப்பைச் சேகரித்துக் கொள்ளுங்கள், தூய எண்ணங்கள் எனும் இச் சக்தியானது இலகுவில் உங்கள் வீணான எண்ணங்களை முடித்து விடுவதுடன், உங்கள் நல்லாசிகளாலும், தூய எண்ணங்களாலும் பிறரையும் மாற்ற முடிகின்றது. தூய எண்ணங்களின் கையிருப்பைச் சேகரிப்பதற்கு, முரளியின் ஒவ்வொரு கருத்தையும் செவிமடுப்பதுடன், அவற்றைச் சக்தி வடிவில் ஒவ்வொரு கணமும் பயன்படுத்துங்கள். நீங்கள் தூய எண்ணங்கள் எனும் சக்தியின் கையிருப்பைச் சேகரிக்கும் அளவிற்கேற்ப, தொடர்ந்தும் இலகுவில் மனம் மூலம் சேவை செய்வதில் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் மனதின் பொறாமைக்கும் முரண்பாட்டிற்கும் விடைகொடுங்கள், அப்பொழுது நீங்கள் வெற்றி அடைவீர்கள்.