05.04.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 19.12.85 Om Shanti Madhuban
தந்தையைப் பின்பற்றுங்கள்.
இன்று, பாப்தாதா ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதற்காக, அன்பான குழந்தைகள் அனைவருக்கும் அவர்களின் அன்பிற்குப் பதில் அளிப்பதற்காக வந்துள்ளார். சரீரமற்ற பாப்தாதா ஒரு சரீரத்தின் ஆதாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஏன்? குழந்தைகளான உங்களையும் சரீரமற்றவர்கள் ஆக்குவதற்காகவே. தந்தை சரீரமற்றவராக இருந்து, சரீரமற்ற ரூபத்தின் அனுபவத்தைக் கொடுப்பதைப் போல், சரீரத்தில் இருந்தவண்ணம் சரீரமற்றவராக இருப்பதைப் போல், நீங்கள் அனைவரும் உங்களின் வாழ்க்கைகளை வாழும்போதே, சரீரங்களில் இருக்கும்போதே சரீரமற்ற, ஆத்ம உணர்வு ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். கரவன்ஹார் ஆகி (செய்யத் தூண்டுபவர்) உங்களின் சரீரங்களால் செயல்களைச் செய்யுங்கள். சரீரம் கரன்ஹார் (செய்பவர்). ஆத்மாவான நீங்கள் கரவன்ஹார் (செய்யத் தூண்டுபவர்). இந்த ஸ்திதியே சரீரமற்ற ஸ்திதி எனப்படுகிறது. இது தந்தையைப் பின்பற்றுதல் எனப்படுகிறது. சதா தந்தையைப் பின்பற்றுவதற்கு, உங்களின் புத்தி இரண்டு ஸ்திதிகளில் ஸ்திரமாக இருக்க வேண்டும். தந்தையைப் பின்பற்றும் ஸ்திதியே, சதா சரீரம் இல்லாத, சரீரமற்ற ஸ்திதி, அசரீரி ஸ்திதி ஆகும். தாதாவான தந்தை பிரம்மாவைப் பின்பற்றுவதற்கு, எப்போதும் அவ்யக்த ஸ்திதியில், தேவதை ஸ்திதியில், சூட்சுமமான ஸ்திதியில் இருங்கள். இந்த இரண்டு ஸ்திதிகளிலும் ஸ்திரமாக இருத்தலே தந்தையைப் பின்பற்றுதல் எனப்படுகிறது. இதற்குக் கீழான ஸ்திதி, புற ரூபத்தின் உணர்வும், மனிதர்களின் விழிப்புணர்வும் ஆகும். அந்த நிலைக்குக் கீழே இறங்காதீர்கள். மனிதர்களின் விழிப்புணர்வும் புற விழிப்புணர்வுமே உங்களைக் கீழே கொண்டு வருவதற்கான அடிப்படைக் காரணங்கள் ஆகும். ஆகவே, சதா அனைத்திற்கும் அப்பால் இருங்கள். இந்த இரண்டு ஸ்திதிகளிலும் ஸ்திரமாக இருங்கள். மூன்றாவது விடயம் என்னவென்றால், நீங்கள் பிராமணப் பிறப்பு எடுத்தவுடனேயே, பாப்தாதாவின் கற்பித்தல்களை நீங்கள் பெறுகிறீர்கள். எனவே, உங்களின் எண்ணங்களிலோ அல்லது கனவுகளிலோ கீழே வரும் ஸ்திதிக்குச் செல்லாதீர்கள். அந்த ஸ்திதி உங்களுக்குச் சொந்தமானதல்ல. ஒருவர் அனுமதி இல்லாமல் வெளிநாட்டுக்குச் சென்றால் என்ன நடக்கும்? பாப்தாதா ஏற்கனவே இந்தக் கீழ்ப்படிவிற்கான கோட்டை வரைந்துள்ளார்: இதற்கு வெளியே செல்லாதீர்கள். நீங்கள் கீழ்ப்படியாமல் விட்டால், மன உளைச்சலும் வருந்துகையும் ஏற்படும். எனவே, சதா உங்களின் பெருமையைப் பேணுவதற்கும், சகல பேறுகளின் சொரூபமாக இருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதற்குமான இலகுவான வழிமுறை, தந்தையைப் பின்பற்றுவதே ஆகும். இதைப் பின்பற்றுவது இலகுதானே? வாழ்க்கையில், குழந்தைப் பருவத்தில் இருந்தே பின்பற்றுவதை நீங்கள் அனுபவம் செய்துள்ளீர்கள். குழந்தைப் பருவத்தில், உங்களின் அப்பாவின் கைவிரலைப் பிடித்துக் கொண்டு நடக்கும்போதும், அமரும்போதும், உலாவரும்போதும் பின்பற்றும்படி செய்யப்பட்டீர்கள். பின்னர், நீங்கள் இல்லறத்தவர் ஆகியதும், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பின்பற்ற வேண்டும் எனக் கற்பிக்கப்பட்டீர்கள். அதன்பின்னர், மேலும் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லும்போது, ஒரு குருவை ஏற்றுக் கொண்டு, அந்தக் குருவைப் பின்பற்றுபவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் அவரைப் பின்பற்றுபவர்கள் ஆகுகிறீர்கள். உலக வாழ்க்கையில், ஆரம்பத்திலும் இறுதியிலும் நீங்கள் பின்பற்ற வேண்டியுள்ளது. அலௌகீக மற்றும் பரலோகத் தந்தையரும் உங்களுக்கு இலகுவான வழிமுறையையே காட்டுகிறார்கள். ‘நான் என்ன செய்வது? நான் எவ்வாறு இதைச் செய்வது? நான் இதை இப்படிச் செய்வதா அல்லது அப்படிச் செய்வதா?’ என்ற விரிவாக்கங்களில் இருந்து அவர்கள் உங்களை விடுவிக்கிறார்கள். இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஒரேயொரு விடையே: தந்தையைப் பின்பற்றுங்கள்.
பிரம்மா ஆத்மாவே 84 பிறவிகளையும் பூர்த்தி செய்து, எவ்வாறு பௌதீக ரூபத்தில் கர்மங்களைச் செய்வது என உங்களுக்குக் கற்பிப்பதற்குக் கருவி ஆகினார்.
• செயல்களை எவ்வாறு செய்தல்• செயல்களின் எந்தவிதமான பந்தனங்களில் இருந்தும் எவ்வாறு விடுபடுதல்
• கர்மத்தின் பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றுதல்.
• சரீரத்தில் இருந்தவண்ணம் எவ்வாறு சரீரமற்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருத்தல்.
• சரீர பந்தனங்களில் இருந்து எவ்வாறு விடுபடுதல்.
• எவ்வாறு சதா உங்களின் மனதின் அன்பிலே திளைத்திருப்பதுடன் உங்களை மறந்திருக்கும் ஸ்திதியைப் பேணுதல்
• எவ்வாறு ஒவ்வொரு புதிய சதத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துதல்.
• பௌதீக பிரம்மாவே பௌதீக வாழ்க்கையில் இதற்குக் கருவி ஆகினார்.
கர்ம பந்தனத்தில் கட்டுப்பட்டிருந்த ஓர் ஆத்மா கர்மாதீத் ஆகுவதன் உதாரணம் ஆகினார். எனவே, நடைமுறை வாழ்க்கையைப் பின்பற்றுவது இலகுவானதல்லவா? இதுவே தந்தையைப் பின்பற்றும் பாடம் ஆகும்;. சரீரங்கள், உறவுமுறைகள் அல்லது செல்வத்துடன் தொடர்புடைய கேள்விகளை நீங்கள் கேட்டால், அந்தக் கேள்விகள் அனைத்திற்குமான பதில், தந்தை பிரம்மாவின் வாழ்க்கையே ஆகும். இன்று, விஞ்ஞானிகள் தமது கேள்விகளுக்கான பதிலைக் கணணிகளிடம் கேட்கிறார்கள். ஏனெனில், மனித புத்தியை விடக் கணணி மிகச்சரியாக இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். உருவாக்கப்பட்ட ஒன்றை, அதை உருவாக்கியவரை விட மிகச்சரியாக இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும், மௌனத்தைக் கொண்டுள்ள உங்களுக்கு, தந்தை பிரம்மாவின் வாழ்க்கையே மிகச்சரியான கணணி ஆகும். எனவே, ‘ஏன்?’ அல்லது ‘எவ்வாறு?’ எனக் கேட்பதற்குப் பதில், உயிர்வாழும் கணணியைப் பாருங்கள். ‘எவ்வாறு?’ ‘என்ன?’ என்ற கேள்விகள், ‘இவ்வாறே’ என மாறிவிடும். அதிகளவில் கேள்விகளுக்குப் பதிலாக, நீங்கள் திருப்தியும் மனநிறைவும் அடைவீர்கள். அதிகளவில் கேள்விகள் கேட்பவர்கள், தளம்பும் புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே, கேள்வி அடையாளம் கோணலாக உள்ளது. நீங்கள் கேள்விக்குறி போடும்போது, அது கோணலாகவே உள்ளது. ஆனால், திருப்தியாகவும் மனநிறைவுடனும் இருப்பதன் அடையாளம், முற்றுப்புள்ளியே ஆகும். முற்றுப்புள்ளியில் ஏதாவது கோணலாக உள்ளதா? அது எல்லாப் பக்கங்களிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஒரு முற்றுப்புள்ளியை எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், அது ஒன்றாகவே இருக்கும். அதை நீங்கள் மேலிருந்து சரியான திசையில் பார்த்தாலும், அல்லது கீழிருந்து பிழையான திசையில் பார்த்தாலும் ஒரே மாதிரியே இருக்கும். திருப்தியும் மனநிறைவும் உள்ள ஸ்திதியில், அதாவது, நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்கும்போது, நீங்கள் தந்தையைப் பின்பற்றுகிறீர்கள். எனவே, சாரம் என்ன? பௌதீக ரூபத்தில் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். சூட்சுமமான ரூபத்தில் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். நீங்கள் தந்தை பிரம்மாவை அல்லது தந்தை சிவனைப் பின்பற்றினாலும், ஒரே வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன: தந்தையைப் பின்பற்றுங்கள். பிரம்மாவின் புகழ்: உலகின் குருவான பிரம்மாவிற்கு வணக்கங்கள் என்பதாகும். ஏனெனில், பௌதீக ரூபத்தில் பிரம்மாவே பௌதீக உலகில் நீங்கள் பின்பற்றுவதற்கான கருவி ஆகியவர்.
உங்களில் எவரும் உங்களை சிவகுமார் அல்லது சிவகுமாரி என்று அழைப்பதில்லை. நீங்கள் உங்களை பிரம்மாகுமார், பிரம்மாகுமாரி என்றே அழைக்கிறீர்கள். பௌதீகப் படைப்பானது மேன்மையான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு மாதிரி ஆகியவர் பிரம்மாவே ஆவார். ஆகவே, தந்தை சிவன் சற்குரு என்று அழைக்கப்படுகிறார். உங்களுக்கு எதையாவது கற்பிப்பவர் குரு என்று அழைக்கப்படுகிறார். உலகிற்குக் கற்பிப்பதற்குக் கருவி ஆகியவர் பிரம்மாவே. எனவே, ஒவ்வொரு செயலிலும் நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டும். இதன் தொடர்பாகவே, பிரம்மா ஜகத்குரு (உலக குரு) என அழைக்கப்படுகிறார். இதனாலேயே, உலகம் பிரம்மாவைப் புகழ்கிறது. ஜகத்பிதா என்ற பட்டமும் பிரம்மாவிற்கே உரியது. விஷ்ணுவும் சங்கரனும் பிரஜாபதி (மனித சமுதாயத்தின் பிரபு) என்று அழைக்கப்பட மாட்டார்கள். தலைவராக இருப்பதனால் அவர்கள் பதி (பிரபு) என்று அழைத்தாலும், உண்மையில் அவர் பிதாவே (தந்தை) ஆவார். அவர் உலகினால் நேசிக்கப்பட்ட அளவிற்கு, உலகில் இருந்து அவர் பற்றற்றவராகவும் இருந்தார். இப்போது அவர் சூட்சும ரூபத்தினூடாக அவரை அவ்யக்த ஸ்திதியில் பின்பற்றுவதற்கான பாடத்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். உங்களுக்குப் புரிகிறதா? வேறு எந்த ஆத்மாவிற்கும் இந்தளவு பற்றற்ற தன்மை கிடையாது. பிரம்மாவின் பற்றற்ற தன்மையின் கதையைப் பற்றி பாபா வேறொரு வேளையில் உங்களுக்குச் சொல்வார்.
இன்று, பாபாவும் ஒரு சரீரத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. அது கடனாகக் கொடுக்கப்பட்டது. அதனால் ஒரு நல்ல அதிபதி சரீரத்தையும் இடத்தையும் அதன் சக்தியின் கொள்ளளவிற்கேற்பவே பயன்படுத்துவார். எவ்வாறாயினும், பாப்தாதா இரண்டு இரதங்களையும் அவர்களின் சக்திவாய்ந்த பாகங்களை நடிக்கச் செய்வதில் கருவி ஆகியுள்ளார். இதுவும் நாடகத்தில் ஒரு விசேடமான ஆசீர்வாதத்திற்கான அடிப்படையே ஆகும். பல குழந்தைகள் கேட்கிறார்கள்: ஏன் இந்தக் குறிப்பிட்ட இரதம் கருவி ஆகினார்? மற்றவர்;கள் மட்டுமன்றி, இவருக்கும் (குல்ஸார் தாதி) அந்தக் கேள்வி உள்ளது. பிரம்மாவிற்குத் தனது சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாமல் இருந்ததைப் போல், இவரும் தனது ஆசீர்வாதத்தை மறந்துவிட்டார். இந்தக் குழந்தை ஆரம்பத்தில் காட்சிகளின் பாகம் இருந்தபோது, சாகார் பிரம்மாவிடமிருந்து ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் தந்தை பிரம்மாவுடன், ஏகாந்தமான தபஸ்வி இடத்தில், இந்த ஆத்மாவின் காட்சிகளுக்கான விசேடமான பாகத்தையும், இலகுவான சுபாவமும் கள்ளங்கபடமற்ற வாழ்க்கையின் சிறப்பியல்பையும் கண்டபோது, பிரம்மபாபா இவருக்கு ஓர் ஆசீர்வாதத்தைக் கொடுத்தார்: நீங்கள் தந்தை பிரம்மாவின் சகபாடியாகி, ஆரம்பத்தில் இருந்து அவருடன் இந்தப் பாகத்தைக் கொண்டிருப்பதனால், எதிர்காலத்திலும், தந்தையின் சகபாடியாகி, அவருக்குச் சமமமானவர் ஆகும் கடமையைப் பூர்த்தி செய்வீர்கள். நீங்கள் சேவையிலும் பிரம்மாபாபாவிற்குச் சமமாக இருக்கும் பாகத்தை நடிப்பீர்கள். எனவே, அந்த ஆசீர்வாதம் ஒரு பாக்கிய ரேகை ஆகியுள்ளது. பிரம்மாபாபாவைப் போல், இரதத்தின் பாகத்தை இவர் நடிப்பதும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தப் பாகத்தை நடிப்பதற்கும், நீண்ட காலமாக அதிகளவு சக்திக்கு இடங்கொடுக்கக் கூடியதாக இருப்பதற்கும் பாப்தாதா இந்தக் குழந்தையைப் பாராட்டுகிறார். இசைந்து போகும் இந்தச் சிறப்பியல்பென்ற உயர்த்தியானது மேலதிகப் பரிசாக ஆகியுள்ளது. பாப்தாதா சரீரம் உட்பட அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஹார்மோனியம் (கருவி சரீரம்) பழையதாகி உள்ளது. அதைப் பயன்படுத்துபவர் சக்திசாலி. எவ்வாறாயினும், ‘ஹா ஜி, ஹா ஜி’ என்ற பாடத்தால், அது நன்றாக இயங்குகிறது. எவ்வாறாயினும், பாப்தாதா அதைச் சரியான வழிமுறையுடனும் சரியான முறையில் இயங்கச் செய்கிறார். அவர் உங்களைச் சந்திப்பேன் எனச் சத்தியம் செய்துள்ளார். ஆனால், இந்த வழிமுறை, காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறும். பாபா அனைத்தையும் 18 ஆம் வருடத்தில் கூறுவார். இன்னமும் 17 வருடங்கள் நிறைவு பெற வேண்டும். அச்சா.
தந்தையைப் பின்பற்றும் சகல இலகு முயற்சியாளர் குழந்தைகளுக்கும், விசேடமான திருப்தியும் மனநிறைவும் உடைய ஆத்மாக்களுக்கும், சதா கரவன்ஹாராகித் தமது சரீரத்தின் மூலம் செயல்களைச் செய்விக்கும் மாஸ்ரர் படைப்பாளர் குழந்தைகளுக்கும், தமது வாழ்க்கைகளினூடாகப் பதில் அளிக்கும் குழந்தைகளுக்கும், அன்பு நிறைந்த நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:1.ஆசிரியர்கள் சதா தமது சொந்த ஸ்திதியுடன் முன்னேறுவதுடன் மற்றவர்களையும் முன்னேறச் செய்பவர்கள். தானும் முன்னேறி, மற்றவர்களையும் முன்னேறச் செய்வதே ஆசிரியர்களின் விசேடமான இலக்கும் தகைமைகளும் ஆகும். தந்தையைப் போல், சதா மாஸ்ரர் சர்வசக்திவானாகி, நீங்களும் முன்னேறி, மற்றவர்களையும் முன்னேறச் செய்யுங்கள். நீங்கள் உங்களின் துறவறத்தினூடாகப் பாக்கியத்தைப் பெறும் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். சதா துறவறம் பாக்கியம் ஆகும். மேன்மையான பாக்கியம், மேன்மையான செயல்கள், மேன்மையான பலன்…… இந்த நடைமுறை, புலப்படும் பழத்தால் நீங்களும் பறப்பதுடன், மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள். சதா உங்களை ஒரு கருவியாகக் கருதுவதே, மேன்மையானவர் ஆகுவதற்கான இலகுவான வழிமுறை ஆகும். சங்கமயுகத்தில் ஒரு சேவையாளர் ஆகுவதும் விசேடமான பாக்கியத்தின் அடையாளம் ஆகும். சேவை செய்வதென்றால், பிறவி பிறவியாக நிரம்பியிருப்பவர் ஆகுதல் என்று அர்த்தம். ஏனெனில், சேவை செய்வதன் மூலம் நீங்கள் சேமிக்கிறீர்கள். அத்துடன் பல பிறவிகளுக்காக நீங்கள் சேமித்தவற்றில் இருந்து நீங்கள் தொடர்ந்து உண்பீர்கள். சேவை செய்வதன் மூலம் நீங்கள் சேமிக்கிறீர்கள் என்ற விழிப்புணர்வை நீங்கள் பேணினால், நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். அந்த சந்தோஷத்தின் மூலம் நீங்கள் ஒருபோதும் களைப்படைய மாட்டீர்கள். சேவை உங்களைக் களைப்பற்றவர் ஆக்குகிறது. அது உங்களைச் சந்தோஷப்பட வைக்கிறது.
சேவையாளர் என்றால் தந்தைக்குச் சமமானவர் என்று அர்த்தம். எனவே, எந்தளவிற்கு நீங்கள் சமமானவர் ஆகியுள்ளீர்கள், எந்தளவிற்குத் தந்தைக்குச் சமமானவர் ஆகி, தொடர்ந்து மற்றவர்களைத் தந்தைக்குச் சமமானவர் ஆக்கியுள்ளீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். நிலையங்களின் சூழ்நிலையைச் சக்திவாய்ந்தது ஆக்குவதற்கு, ஒன்று அல்லது இரண்டு தடவைகள் நிலையங்களுக்குச் சென்று, அனைவரும் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்வதற்கான நிகழ்ச்சிகளை நடத்துங்கள். சக்திவாய்ந்த ஒரு சூழல் இயல்பாகவே உங்களைப் பல சந்தர்ப்பங்களில் இருந்து தொலைவில் கொண்டு செல்லும். இப்போது, நீங்களும் தரமானவராகி, தொடர்ந்து மற்றவர்களையும் தரமானவர்கள் ஆக்குங்கள்.
2.நீங்கள் அனைவரும் உங்களை என்ன இரத்தினமாகக் கருதுகிறீர்கள்? (திருப்தி இரத்தினங்கள்.) குறிப்பாக இந்த நேரத்தில், திருப்தியே அத்தியாவசியமானது. அதிகளவில் வழிபடப்படும் தேவி யார்? திருப்தி தேவி (சந்தோஷி மா). திருப்தி தேவியைத் திருப்திப்படுத்துவது இலகுவானது. திருப்தி தேவி மிக விரைவாகத் திருப்தி அடைந்துவிடுவார். திருப்தி தேவியை ஏன் வழிபடுகிறார்கள்? ஏனெனில், இப்போது அதிகளவு பதட்டம் காணப்படுகிறது. அதிகளவு துன்பம் காணப்படுகிறது. இதனால், தொடர்ந்து அதிருப்தியும் அதிகரிக்கிறது. இதனாலேயே, அனைவரும் திருப்தியாக இருப்பதற்கான வழிமுறைகளைத் தேடுகிறார்கள். ஆனால் அவர்களால் இதைக் காண முடிவதில்லை. எனவே, இத்தகைய வேளையில், நீங்கள் அனைவரும் திருப்தி இரத்தினங்களாகி, அனைவருக்கும் திருப்தியின் ஞானோதயத்தை வழங்க வேண்டும். உங்களின் திருப்தியின் ஞானோதயத்தால் மற்றவர்களையும் திருப்திப்படுத்துங்கள். அனைத்திற்கும் முதலில் நீங்கள் திருப்தியாக இருங்கள். பின்னர் சேவையில் திருப்தியாக இருங்கள். பின்னர் உங்களின் உறவுமுறைகளுடன் திருப்தியாக இருங்கள். அப்போது மட்டுமே உங்களைத் திருப்தி இரத்தினம் என்று அழைக்க முடியும். உங்களுக்கு திருப்தியின் மூன்று சான்றிதழ்களும் தேவை. ஒன்று, உங்களிடமிருந்து, ஒன்று சேவையில் இருந்து, மூன்றாவது உங்களின் சகபாடிகளிடமிருந்து. நீங்கள் இந்த மூன்று சான்றிதழ்களையும் பெற்றுவிட்டீர்கள், அல்லவா? நீங்கள் உலகின் குழப்பத்தில் இருந்து விலகி அச்சல்காரை (ஸ்திரத்தன்மையின் வீடு) வந்தடைந்தது நல்லதே. இந்தத் தந்தையின் இடம் அச்சல்கார் ஆகும். அச்சல்காரை வந்தடைவதும் மகத்தான பாக்கியத்தின் அடையாளம் ஆகும். நீங்கள் துறந்ததாலேயே அச்சல்காரை வந்தடைந்துள்ளீர்கள். நீங்கள் பாக்கியசாலிகள் ஆகியுள்ளீர்கள். ஆனால், நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களால் உங்களின் பாக்கிய ரேகையை அதிகரிக்க முடியும். நீங்கள் பாக்கியசாலிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளீர்கள். இப்போது நீங்கள் கடவுளுக்குச் சொந்தமாக இருப்பதனால், நீங்கள் பாக்கியசாலிகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் அனைவரிடமிருந்தும் விலகி, ஒரேயொருவருக்குச் சொந்தம் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே, நீங்கள் பாக்கியசாலிகள் ஆகியுள்ளீர்கள். குழந்தைகளான உங்களில் இந்தத் தைரியத்தைக் காணும்போது பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் எத்தகையவராக இருந்தாலும், உங்களின் துறவறத்திலும், சேவையில் தைரியத்திலும் நீங்கள் மேன்மையானவர்கள். நீங்கள் இளையவரோ அல்லது புதியவரோ, உங்களின் துறவறத்திற்காகவும் தைரியத்திற்காகவும் பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். இந்த மரியாதையுடனேயே பாப்தாதா உங்களைப் பார்க்கிறார். கருவி ஆகுவதிலும் முக்கியத்துவம் உள்ளது. இந்த முக்கியத்துவத்துடன் தொடர்ந்து முன்னேறும் வேளையில், நீங்கள் உலகில் மகத்தான ஆத்மாக்களாகவும் மிகவும் பிரபல்யமான ஆத்மாக்களாகவும் ஆகுவீர்கள். எனவே, உங்களுக்கு உங்களின் மகத்துவம் என்னவென்று தெரியுமல்லவா? நீங்கள் மகத்தானவர்களாக இருக்கும் அளவிற்கு, நீங்கள் பணிவானவர்களாகவும் இருக்கிறீர்கள். பழங்கள் நிறைந்த ஒரு மரம் எப்போதும் தலைசாய்ந்திருக்கும். அதேபோன்று, பணிவானவர்கள் உடனடியான, நடைமுறைப் பழத்தை உண்பவர்கள். இதுவே சங்கமயுகத்தின் சிறப்பியல்பு ஆகும். அச்சா.
அவ்யக்த பாப்தாதா குமார்களைச் சந்திக்கிறார்:ஒரு குமார் என்றால் எல்லா வேளையும் பலவீனத்தை எட்டி உதைத்தவர் என்று அர்த்தம். நீங்கள் அரைக்கல்பத்திற்குப் பலவீனங்களை எட்டி உதைத்து விட்டீர்கள், அல்லவா? அல்லது இன்னமும் நீங்கள் அதைச் செய்யவில்லையா? எப்போதும் சக்திசாலிகளாக இருக்கும் ஆத்மாக்களின் முன்னால் பலவீனங்களால் வரமுடியாது. சதா சக்திசாலியாக இருத்தல் என்றால், பலவீனத்தை முடித்தல் என்று அர்த்தம். இத்தகைய சக்திசாலி ஆத்மாக்களைத் தந்தை விரும்புகிறார். குடும்பமும் அவர்களை விரும்புகிறது. ஒரு குமார் என்றால், தனது சொந்தக் கர்மங்களால் மற்றவர்களின் மேன்மையான கர்மங்கள் என்ற ரேகையை வரைபவர் ஆவார். உங்களின் சொந்தக் கர்மங்கள் மற்றவர்களின் ரேகைகளை வரைவதற்குக் கருவி ஆகுகின்றன. நீங்கள் இத்தகைய சேவையாளர்கள். எனவே, ஒவ்வொரு கர்மத்திலும், சோதித்துப் பாருங்கள்: மற்றவர்களும் தெளிவாகக் கர்மத்தின் ரேகையைப் பார்க்கும் வகையில் ஒவ்வொரு கர்மமும் தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களின் மேன்மையான கர்மங்களின் மேன்மையான கணக்கில் சதா சேமிக்கும் விசேடமான ஆத்மாக்கள். இதுவே உண்மையான சேவையாளராக இருத்தல் எனப்படுகிறது. நீங்கள் சதா முன்னேறுவதற்கான வழிமுறை, நினைவும் சேவையுமே ஆகும். நினைவு உங்களைச் சக்திசாலி ஆக்குகிறது. சேவை உங்களைப் பொக்கிஷங்களால் நிறைக்கிறது. நினைவுடனும் சேவையுடனும் தொடர்ந்து முன்னேறுவதுடன், மற்றவர்களையும் முன்னேறுச் செய்யுங்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் மற்றவர்களை ஈடேற்றி, பிரம்மாபாபாவைப் போல், உங்களின் மேன்மையான சித்திரத்தை உருவாக்குவீர்களாக.ஒவ்வொரு குழந்தையும் தனது மேன்மையான விழிப்புணர்வினாலும் மேன்மையான செயலாலும் தனது விதியின் சித்திரத்தை உருவாக்கியுள்ளார். இப்போது, பிரம்மபாபாவைப் போல, சம்பூரணத்திற்கும், அதிமேன்மையானவர் ஆகுவதற்குமான இறுதி வரைதலே எஞ்சியுள்ளது. இதற்கு, மற்றவர்களை ஈடேற்றுபவர் ஆகுங்கள். அதாவது, சுயநலமான நோக்கங்களில் இருந்து சதா விடுபட்டிருங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு பணியிலும், ஒவ்வொரு ஒத்துழைக்கும் ஒன்றுகூடலிலும், நீங்கள் சுயநலமற்றவராக இருக்கும் அளவிற்கு, உங்களால் மற்றவர்களையும் ஈடேற்ற முடியும். அப்போது நீங்கள் எப்போதும் உங்களை நிரம்பியவராக அனுபவம் செய்வீர்கள். நீங்கள் சதா பேறுகளின் சொரூபம் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பீர்கள். அப்போது நீங்கள் உங்களுக்காக எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
சுலோகம்:
நீங்கள் ஒரு முற்றும் துறந்த துறவி ஆகுவதன் மூலம், இலகுத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்ற நற்குணங்களை உங்களுக்குள் விருத்தி அடையச் செய்வீர்கள்.