புத்தாண்டில் புதுமைக்கான வாழ்த்து
இன்று நாலாபுறமும் உள்ள அனைத்து சிநேகி, சகயோகி மற்றும் சக்திசாலி குழந்தைகளின் இனிமையிலும் இனிமையான, மனதின் சிரேஷ்ட சங்கல்பங்கள், அன்பின் உறுதிமொழிகள், மாற்றத் திற்கான உறுதிமொழிகள், பாபாவுக்குச் சமமாக ஆவதற்கான ஊக்கம்-உற்சாகத்தின் திட சங்கல்பம், அதாவது அநேக ஆன்மிக இசைகள் நிறைந்த மனதின் பாடல்கள் அமிர்தவேளையில் இருந்தே மனதின் நண்பரிடம் வந்து சேர்ந்தன. மனதின் நண்பர் அனைவரின் இனிய பாடல்களைக் கேட்டு சிரேஷ்ட சங்கல்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார். மனதின் நண்பர் தம்முடைய ஆன்மிக நண்பர்களுக்கு, இறை நண்பர்களுக்கு, அனைவரது பாடல்களுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். சதா ஒவ்வொரு சங்கல்பத்திலும், ஒவ்வொரு சொல்லிலும் புனிதமாக, மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருப்பதற்கான வாழ்த்துகள்! சதா சகயோகத்தின் கை, மனதின் நண்பரின் காரியத்தில் சகயோகத்தின் சங்கல்பத்துடன் கையோடு கை இணைத்து இருக்கட்டும். நாலாபுறமும் உள்ள குழந்தைகளின் சங்கல்பம், கடிதம், கார்டு (வாழ்த்து அட்டைகள்), மற்றும் அதோடு கூடவே நினைவின் அடையாளமாக அன்பின் பரிசுகள் அனைத்தும் பாப்தாதாவிடம் வந்து சேர்ந்தன. பாப்தாதா சதா ஒவ்வொரு குழந்தையின் புத்தி என்ற நெற்றியின் மீது வரதானங்களின், சதா வெற்றிக்கான ஆசிர்வாதங்களின் கையை, புத்தாண்டின் வாழ்த்துகளாக, குழந்தைகள் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். புத்தாண்டில் சதா ஒவ்வொரு உறுதிமொழியை யும் பிரத்தியட்ச ரூபத்தில் கொண்டு வருவதற்கான, அதாவது ஒவ்வொரு அடியிலும் தந்தையைப் பின்பற்றுவதற்கான விசேஷ ஸ்மிருதி சொரூப திலகத்தை சத்குரு, கீழ்ப்படிதலான குழந்தைகள் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய நாள் சிறியவர்-பெரியவர் அனைவரின் வாயிலும் வாழ்த்துகளின் சொற்கள் அடிக்கடி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல் சதா புதிய இசை உள்ளது, புதிய விநாடி உள்ளது, புதிய சங்கல்பம் உள்ளது. ஆகவே ஒவ்வொரு விநாடியும் வாழ்த்துகள். சதா புதுமைக்கான வாழ்த்துகள் கொடுக்கப் படுகின்றன. ஏதேனும் புதிய பொருளா கட்டும், புதிய காரியமாகட்டும், வாழ்த்துகளை அவசியம் கொடுக்கின்றனர். புதுமைக்காக வாழ்த்து கொடுக்கப்படுகின்றது. ஆக, உங்கள் அனைவருக்காக எப்போதுமே புதியது. இது சங்கமயுகத்தின் விசேஷமாகும், சங்கமயுகத்தின் ஒவ்வொரு கர்மமும் பறக்கும் கலையில் செல்வதற்கானது. இக்காரணத்தால் சதா புதியதிலும் புதியது. ஒரு விநாடிக்கு முன் என்ன மனநிலை இருந்தது, வேகம் இருந்தது, அது அடுத்த விநாடி அதைக் காட்டிலும் உயர்ந்தது, அதாவது பறக்கும் கலையின் பக்கமாக இருக்கும். எனவே ஒவ்வொரு விநாடியின் மனநிலையின் வேகம் உயர்ந்தது, அதாவது புதியது. ஆக, உங்கள் அனைவருக்காகவும் ஒவ்வொரு விநாடியின் சங்கல்பத்தின் புதுமைக்கான வாழ்த்துகள்.! சங்கமயுகம் என்பதே வாழ்த்துகளின் யுகம். சதா வாய் இனிப்பாக, வாழ்க்கை இனிப்பாக, உறவுகள் இனிப்பாக அனுபவம் செய்வதற்கான யுகம். பாப்தாதா புத்தாண்டிற்காக வெறுமனே வாழ்த்துகள் மட்டும் சொல்லவில்லை, ஆனால் சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடிக்கான, ஒவ்வொரு சங்கல்பத்திற்கான உயர்ந்த வாழ்த்துக்களைக் கொடுக்கிறார். மனிதர்களோ இன்று மட்டுமே வாழ்த்துகள் சொல்கின்றனர், நாளை அது முடிந்தது. பாப்தாதா சதா காலத்திற்காக வாழ்த்துகள் தருகிறார். பாராட்டுகள் தருகிறார். புது யுகத்தின் அருகில் வருவதற் கான வாழ்த்துகள் தருகிறார். சங்கல்பங்களின் மிக நல்ல பாடல்கள் கேட்டோம். கேட்டுக் கேட்டு பாப்தாதா பாடல்களின் இசை மற்றும் இரகசியத்தில் மூழ்கி விட்டார்.
இன்று வதனத்தில் பாடல் மாலையின் (கீத் மாலா) புரோகிராம் அதிகாலையில் இருந்தே கேட்டுக் கொண்டிருந்தோம். அமிர்தவேளையும் கூட உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் கணக்கின் படி அவரவருடையது. ஒவ்வொரு குழந்தையும் தான் பாபாவிடம் அமிர்தவேளையில் பேசிக் கொண்டிருக்கிறோம் எனப் புரிந்து கொண்டிருக்கின்றனர். பாப்தாதாவோ நிரந்தரமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் பாடலைப் பாடும் விதமும் மிகவும் அன்பானது. உங்களது இசையும் அவரவருடையது. ஆனால் பாப்தாதாவுக்கு அனைவரின் பாடல்களும் பிரியமானவை. வாழ்த்துகளோ சொல்லி விட்டார். வாயினால் கொடுத்தாலும் சரி, மனதால் கொடுத்தாலும் சரி, வழக்கத்தின் பிரமாணம் கொடுத்தாலும் சரி, அல்லது அன்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான உயர்ந்த எண்ணத்துடன் கொடுத்தாலும் சரி. இப்போது இனி மேற்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? எப்படி சேவையின் 50 ஆண்டுகள் (1986-இல்) முடிவடைகின்றன. அந்த மாதிரி சர்வ சிரேஷ்ட சங்கல்பம் அல்லது உறுதிமொழியை நிறைவேற்றுவீர்களா அல்லது சங்கல்பத்தோடு நின்று போகுமா? உறுதிமொழியோ ஒவ்வொரு வருடமும் மிக நன்றாகவே செய்கிறீர்கள். எப்படி இன்றைய உலகில் நாளுக்கு நாள் எவ்வளவு நல்ல-நல்ல கார்டுகளைத் தயார் செய்து கொண்டே இருக்கின்றனர். ஆக, சங்கல்பமும் ஒவ்வொரு வருடத்திலும் சிரேஷ்டமானதாகச் செய்கிறீர்கள். ஆனால் சங்கல்பம் மற்றும் சொரூபம் இரண்டுமே சமமாக இருக்க வேண்டும். இது தான் உயர்ந்த தன்மையாகும். இந்த உயர்ந்த நிலையில் வருவதற்கு யார் முன் வருகிறார்களோ, அவர்கள் தாம் அர்ஜுன். அது போல் யார் ஆவார்கள்? நாம் தான் ஆவோம் என்று. அனைவருமே நினைக்கின்றனர், மற்றவர் அர்ஜுன் ஆகிறாரா அல்லது பீமன் ஆகிறாரா என்று அதைப் பார்க்கக் கூடாது. நான் நம்பர் ஒன் அதாவது அர்ஜுன் ஆக வேண்டும். ஹே அர்ஜுன்! என்பது தான் பாடப் பட்டுள்ளது. அர்ஜுனனின் விசேஷம், சதா பிந்தியில் ஸ்மிருதி சொரூபமாக ஆகி வெற்றியாளர் ஆக வேண்டும். அந்த மாதிரி நஷ்டோமோகா ஸ்மிருதி சொரூபம் ஆகிறவர் அர்ஜுன். சதா கீதா ஞானத்தைக் கேட்பவர் மற்றும் மனனம் செய்பவர் அர்ஜுன். அந்த மாதிரி விதேகி, அனைவரும் உயிருடன் இருந்தாலும் இறந்தவராக உள்ளனர் -- அது போல் எல்லையற்ற வைராக்ய விருத்தி உள்ள அர்ஜுனாக யார் ஆவார்கள்? ஆக வேண்டுமா அல்லது வெறுமனே சொல்ல வேண்டுமா? புது வருடம் எனச் சொல்கிறீர்கள். சதா ஒவ்வொரு விநாடியிலும் புதுமை. மனதில், சொல்லில், கர்மத்தில், சம்மந்தத்தில் புதுமையைக் கொண்டு வர வேண்டும். இந்தப் புது வருடத்தின் வாழ்த்தை சதா கூடவே வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு சமயம் ஸ்திதியின் சதவிகிதம் முன்னால் இருக்க வேண்டும். எப்படி ஏதேனும் இலக்கைச் சென்று சேர்வதற்காக எத்தனை அடி எடுத்து வைத்துச் செல்கிறார்களோ, ஒவ்வொரு அடியிலும் சமீபத்தை நோக்கி முன்னால் சென்று கொண்டே இருக்கிறார்கள். முதலில் இருந்த இடத்தைக் அங்கேயே நின்று விடுவதில்லை. அது போல் ஒவ்வொரு விநாடி, ஒவ்வோர் அடியிலும் சமீப நிலை மற்றும் சம்பூர்ண நிலையின் சமீபம் வருவதற்கான லட்சணம் தனக்கும் அனுபவம் ஆக வேண்டும் மற்றும் மற்றவர்களுக்கும் அனுபவம் ஆக வேண்டும். சதவீதத்தை முன்னேற்றுவது எனச் சொல்லப் படுவது இது தான். சதவீதத்தின் புதுமை, வேகத்தின் புதுமை என்று சொல்லப் படுவது இது தான். ஆக, ஒவ்வொரு சமயமும் புதுமையைக் கொண்டு வந்து கொண்டே இருங்கள். புதிதாக என்ன செய்வது என்று அனைவரும் கேட்கின்றனர். முதலில் தன் மீது புதுமையைக் கொண்டு வாருங்கள். அப்போது சேவையில் புதுமை தானாகவே வந்து விடும். இன்றைய மனிதர்கள் நிகழ்ச்சியின் புதுமையை விரும்ப வில்லை, ஆனால் பிரபாவத்தின் புதுமையை விரும்புகின்றனர். ஆக, தன்னுடைய புதுமையின் மூலமாக பிரபாவத் திலும் புதுமை தானாக வந்து விடும். இந்த வருடம் பிரபாவம் உள்ளவராக ஆவதற்கான விசேஷத்தைக் காட்டுங் கள். பிராமண ஆத்மாக்கள் தங்களுக்குள் தொடர்பில் வரும் போது சதா ஒவ்வொருவருக்காகவும் மனதின் பாவனை சிநேகம் சகயோகம் மற்றும் நன்மையின் பிரபாவம் உள்ளதாக இருக்கட்டும். ஒவ்வொரு சொல்லும் யாருக்காவது தைரியம், உற்சாகம் கொடுப்பதற் கான பிரபாவம் உள்ளதாக இருக்கட்டும். வீணானதாக இருக்கக் கூடாது. சாதாரண உரையாடலில் அரை மணி நேரம் கூடக் கழித்து விடுகிறீர்கள். பிறகு யோசிக்கிறீர்கள் -- இதன் முடிவு என்னவாக வெளிப்பட்டது? ஆக, அந்த மாதிரி கெட்டதும் இல்லாமல், நல்லதும் இல்லாமல் சாதாரண பேச்சு, நடவடிக்கைகளும் கூட பிரபாவம் உள்ள பேச்சு எனச் சொல்ல மாட்டார்கள். அதே போல் ஒவ்வொரு கர்மமும் பலன் கொடுப்பதாக இருக்க வேண்டும் -- தனக்காக என்றாலும் சரி, மற்றவர்களுக்காக என்றாலும் சரி. ஆக, தங்களுக்குள்ளேயும் கூட ஒவ்வொரு ரூபத்திலும் ஆன்மிகப் பிரபாவம் உள்ளவராக ஆகுங்கள். சேவையிலும் கூட ஆன்மிகப் பிரபாவம் உள்ளவராக ஆகுங்கள். நன்கு முயற்சி செய்கிறீர்கள். மனதாரச் செய்கிறீர்கள். இதையோ அனைவருமே சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் இராஜயோக ஃபரிஸ்தாக்கள், ஆன்மிகம் என்றால் இங்கே தான் உள்ளது, பரமாத்ம காரியம் இங்கே தான் நடக்கிறது என்று அந்த மாதிரி பாபாவைப் பிரத்யட்சம் செய்வதற்கான பிரபாவம் இருக்க வேண்டும். வாழ்க்கை நன்றாக உள்ளது, காரியம் நன்றாக உள்ளது என்று இதையும் சொல்கிறார்கள்.ஆனால் பரமாத்ம காரியம், பரமாத்ம குழந்தைகள், இதுவே நிறைவான வாழ்க்கை, முழுமையான வாழ்க்கை -- இந்தப் பிரபாவம் இருக்க வேண்டும். சேவையில் இன்னும் பிரபாவம் உள்ளவராக இருக்க வேண்டும். இப்போது இந்த அலையைப் பரப்புங்கள் -- நாமும் நல்லவராக ஆக வேண்டும் என்று அவர்கள் சொல்ல வேண்டும். நீங்கள் மிக நல்லவர்கள் -- இது பக்த மாலையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது வெற்றி மாலை, அதாவது சொர்க்கத்தின் அதிகாரி ஆவதற்கான மாலையை முதலில் தயார் செய்யுங்கள். முதல் ஜென்மத்திலேயே 9 லட்சம் வேண்டும். பக்த மாலை மிக நீண்டதாகும். இராஜ்யத்தின் அதிகாரி, இராஜ்யம் செய்கிறவராக இல்லை. இராஜ்யத்தில் வருவதற்கான அதிகாரி -- இதுவும் கூட இப்போது வேண்டும். ஆக, இப்போது அந்த மாதிரி அலையைப் பரவச் செய்யுங்கள். நல்லது எனச் சொல்பவர்கள், நல்லவராக ஆவதில் தொடர்பில் உள்ளவர்கள் குறைந்தது பிரஜையின் சம்மந்தத்திலோ வரட்டும். பிறகும் உங்களுடைய தொடர்பில் வருகிறார்கள் என்றால் அவர்களை சொர்க்கத்தின் அதிகாரியாகவோ ஆக்குவீர்கள் இல்லையா? அந்த மாதிரி சேவையில் பிரபாவம் உள்ளவராக ஆகுங்கள். இவ்வருடத்தைப் பிரபாவசாலி ஆவது மற்றும் பிரபாவத்தின் மூலம் பாபாவைப் பிரத்யட்சம் செய்வதற்கான விசேஷத் தன்மையின் மூலம் விசேஷ ரூபத்தில் கொண்டாடுங்கள். தான் பிரபாவத்தில் வந்து விடக் கூடாது. ஆனால் பாபா மீது பிரபாவத்தை ஏற்படுத்துங்கள். புரிந்ததா? எப்படி பக்தியில் சொல்கிறீர்கள் இல்லையா -- இவை அனைத்தும் பரமாத்மாவின் வடிவங்கள். அதைத் தலைகீழான பாவனையில் சொல்லி விடுகின்றனர். ஆனால் ஞானத்தின் பிரபாவத்தினால் உங்கள் அனைவரின் ரூபத்தின் மூலம் அவர்கள் பாபாவை அனுபவம் செய்ய வேண்டும். யாரைப் பார்த்தாலும் பரமாத்ம சொரூபத்தின் அனுபூதி ஏற்பட வேண்டும். அப்போது புது யுகம் வரும். இன்னும் முதல் பிறவியின் பிரஜைகளைக் கூடத் தயார் செய்யவில்லை. பின்னால் வரக்கூடிய பிரஜைகளோ சுலபமாகத் தயாராகி விடுவார்கள். ஆனால் முதல் பிறவியின் பிரஜைகள் தயாராக வேண்டும். எப்படி இராஜா சக்தி சாலியாக இருப்பாரோ, அது போல் பிரஜைகளும் கூட சக்திசாலியாக இருப்பார்கள். ஆகவே சங்கல்பம் என்ற விதையை சதா பலன் சொரூபத்தில் கொண்டு வந்து கொண்டே இருங்கள். உறுதிமொழியைப் வெளிப்படையான ரூபத்தில் சதா கொண்டு வந்து கொண்டே இருக்க வேண்டும். இரட்டை வெளிநாட்டினர் என்ன செய்வீர்கள்? அனைவரிடமும் இரட்டை ரிசல்ட்டை வெளிப்படுத்து வீர்கள் இல்லையா? ஒவ்வொரு விநாடியின் புதுமையின் மூலம் ஒவ்வொரு விநாடியும் பாபாவின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். நல்லது.
சதா ஒவ்வொரு சங்கல்பத்திலும் புதுமையின் மகான் தன்மையைக் காண்பிக்கக் கூடிய, ஒவ்வொரு விநாடியும் பறக்கும் கலையின் அனுபவம் செய்யக்கூடிய, சதா பிரபாவசாலி ஆகி, பாபாவின் பிரபாவத்தைப் பிரத்தியட்சம் செய்யக்கூடிய, ஆத்மாக்களிடம் புது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான புதிய தூண்டுதலைக் கொடுக்கக் கூடிய, புது யுகத்தின் அதிகாரி ஆக்குவதற்கான சிரேஷ்ட அலையைப் பரப்பக் கூடிய -- அப்படிப்பட்ட சதா வரதானி ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் சதா புதுமையின் சங்கல்பங்களுடன் கூடிய அன்பு நினைவு மற்றும் நமஸ்தே!
தாதிகளுடன் -- சக்திசாலி சங்கல்பத்தின் சகயோகம் விசேஷமாக இன்றைய அவசியமாக உள்ளது. தன்னுடைய புருஷார்த்தம் என்பது வேறு பொருள். ஆனால் சிரேஷ்ட சங்கல்பத்தின் சகயோகம் விசேஷத் தேவையாக உள்ளது. இந்த சேவை தான் விசேஷ ஆத்மாக்களாகிய உங்களுக்கானது. சங்கல்பத்தால் சகயோகம் கொடுப்பதென்பது இந்த சேவையை அதிகப் படுத்துவதாகும். வாய்மொழி மூலம் கற்பிப்பதற்கான சமயம் முடிந்துபோய் விட்டது. இப்போது சிரேஷ்ட சங்கல்பத் தால் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். சிரேஷ்ட பாவனை மூலம் மாற்றம் செய்யும் சேவை தான் அவசியமாக உள்ளது. இந்த பலம் தான் அனைவருக்கும் தேவையாக உள்ளது. சங்கல்பமோ அனைவருமே செய்கின்றனர். ஆனால் சங்கல்பத்தில் பலத்தை நிரப்ப வேண்டியது இப்போதைய தேவையாகும். ஆக, எவ்வளவு சுயம் சக்திசாலியோ, அவ்வளவு மற்றவர்களிடமும் சங்கல்பத்தில் பலம் நிரப்ப முடியும். எப்படி தற்சமயம் சூரியனின் சக்தியை சேமித்து அநேகக் காரியங்களில் பயன்படுத்துகின்றனர் இல்லையா? இதுவும் சங்கல்ப சக்தி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது -- அதன் மூலம் மற்றவர்களுக்கும் பலத்தை நிரப்ப முடியும். காரியத்தை வெற்றிகரமாக ஆக்க முடியும். எங்களிடம் தைரியம் இல்லை என்று. அவர்கள் தெளிவாகச் சொல்கின்றனர், ஆகவே அவர்களுக்கு தைரியம் கொடுக்க வேண்டும். வார்த்தை மூலமாகவும் தைரியம் வருகிறது, ஆனால் சதா காலத்திற்கும் இருக்காது. வார்த்தையோடு கூடவே சிரேஷ்ட சங்கல்பத்தின் சூட்சும சக்தி அதிக மான காரியம் செய்யும். எவ்வளவு சூட்சுமமான பொருளாக உள்ளதோ, அது அதிகமான வெற்றி யைக் காண்பிக்கும். வார்த்தையைக் காட்டிலும் சங்கல்பம் சூட்சுமமானது இல்லையா? ஆகவே இன்று இது தான் அவசியமாக உள்ளது. இந்த சங்கல்ப சக்தி மிகவும் சூட்சுமமானது. எப்படி இஞ்செக்ஷ்ன் மூலமாக இரத்தத்தில் சக்தியை நிரப்பி விடுகின்றனர் இல்லையா? அது போல் சங்கல்பம் என்பது ஒரு இன்ஞ்செக்ஷ்னின் வேலையைச் செய்கிறது. அதனால் உள்ளுக்குள் உள்ளுணர்வில் சங்கல்பத்தின் மூலம் சங்கல்பத்தில் சக்தி வந்து விடுகிறது. இப்போது இந்த சேவை மிகவும் அவசியமாக உள்ளது. நல்லது.
டீச்சர்களுடன் -- நிமித்த சேவாதாரி ஆவதில் பாக்கியத்தின் பிராப்தியை அனுபவம் செய்கிறீர்களா? சேவைக்கு நிமித்தமாவது என்றால் பொன்னான வாய்ப்பு கிடைப்பதாகும். ஏனென்றால் சேவாதாரிக்கு தானாகவே நினைவு மற்றும் சேவையைத் தவிர வேறு எதுவுமே இருப்ப தில்லை. உண்மையான சேவாதாரி என்றால் இரவும் பகலும் சேவையில் பிஸியாக இருப்பதால் சகஜமாகவே முன்னேற்றத்தின் அனுபவம் செய்வார்கள். இது மாயாஜீத் ஆவதற்கான கூடுதல் லிஃப்ட்டாகும். ஆக, நிமித்த சேவாதாரி எவ்வளவு முன்னேறிச் செல்ல விரும்புகிறாரோ, அவ்வளவு சகஜமாக முன்னேறிச் செல்ல முடியும். இது விசேஷ வரதானமாகும். ஆக, கிடைக்கின்ற கூடுதல் லிஃப்ட் அல்லது பொன்னான வாய்ப்பின் மூலம் லாபத்தை எடுத்துக் கொண்டீர்கள். சேவாதாரி தானாகவே சேவைக்கான பலனை உண்ணக்கூடிய ஆத்மா ஆகிறார். ஏனென்றால் சேவையின் பிரத்தியட்ச பலன் இப்போதே கிடைக்கிறது. நல்ல தைரியம் வைத்திருக்கிறீர்கள். தைரியசாலி ஆத்மாக்கள் மீது பாப்தாதாவின் உதவி என்ற கை சதா உள்ளது. இந்த உதவியின் மூலம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் மற்றும் முன்னேற்றத்தில் சென்று கொண்டே இருக்க வேண்டும். பாபாவின் இந்த உதவி எனும் கை சதா காலத்திற்குமான ஆசிர்வாதமாகி விடுகிறது. பாப்தாதா சேவாதாரிகளைப் பார்த்து விசேஷமாகக் குஷியடைகிறார். ஏனென்றால், பாப்சமான் காரியத்தில் நிமித்தமாகி யிருக்கிறீர்கள். சதா உங்களைப் போன்ற ஆசிரியர்களை விருத்தி செய்து கொண்டே செல்லுங்கள். சதா புதிய ஊக்கம், புதிய உற்சாகத்தைத் தனக்குள் தாரணை செய்யுங்கள் மற்றும் மற்றவர்களுக்கும் காண்பியுங்கள். உங்கள் ஊக்கத்தைப் பார்த்துத் தானாகவே சேவை நடை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு சமயமும் ஏதேனும் சேவையின் புதுமைக் கான திட்டத்தை உருவாக்கிக் கொண்டே இருங்கள். அந்த திட்டம், அதிவேகமான சேவைக்கான விசேஷ சாதனமாக ஆகக்கூடிய அளவுக்கு இருக்க வேண்டும். இப்போது அந்த மாதிரி ஏதாவது அற்புதம் செய்து காட்டுங்கள். எப்போது சுயம் நிர்விக்னமாக இருக்கிறீர்களோ, அசையாதவராக இருக்கிறீர் களோ, அப்போது சேவையில் புதுமையை எளிதாகக் காண்பிக்க முடியும். எவ்வளவு யோகயுக்த் ஆகிறீர்களோ, அவ்வளவு புதுமை, இது போல் செய்ய வேண்டும் என்று டச் ஆகும் மற்றும் நினைவின் பலத்தினால் வெற்றி கிடைத்து விடும். ஆக, விசேˆமான ஏதேனும் காரியத்தைச் செய்து காட்டுங்கள்.
பார்ட்டிகளுடன் --- 1. சர்வ கஜானாக்களால் நிரம்பப் பெற்ற சிரேஷ்ட ஆத்மாக்கள் என்பதாக அனுபவம் செய்கிறீர்களா? எவ்வளவு கஜானாக்கள் கிடைத்துள்ளன என அறிவீர்களா? எண்ணிப் பார்க்க முடியுமா? அவிநாசி மற்றும் அளவற்றது. ஆக, ஒவ்வொரு கஜானாவையும் ஸ்மிருதியில் கொண்டு வாருங்கள். கஜானாவை ஸ்மிருதியில் கொண்டு வருவதால் குஷி இருக்கும். எவ்வளவு கஜானாக்களின் நினைவில் இருக்கிறீர்களோ, அவ்வளவு சக்திசாலி ஆகிக் கொண்டே செல்வீர்கள். மேலும் எங்கே சக்தி உள்ளதோ, அங்கே வீணானவை முடிந்து போகும். வீண் சங்கல்பம், வீண் சமயம், வீண் வார்த்தை அனைத்தும் மாறி விடும். அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்களா? மாற்றம் ஏற்பட்டு விட்டது இல்லையா? புதிய வாழ்க்கையில் வந்து விட்டீர்கள். புதிய வாழ்க்கை, புதிய ஊக்கம், புதிய உற்சாகம் ஒவ்வொரு கணமும் புதிது, ஒவ்வொரு சமயமும் புதிது. ஆக, ஒவ்வொரு சங்கல்பத்திலும் புதிய ஊக்கம், புதிய உற்சாகம் இருக்க வேண்டும். நேற்று என்னவாக இருந்தோம், இன்று என்னவாக ஆகி விட்டோம்! இப்போது பழைய சங்கல்பம், பழைய சம்ஸ்காரமோ மிஞ்சியிருக்கவில்லை தானே? கொஞ்சம் கூட இல்லை. ஆக, சதா இதே ஊக்கத்தில் முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். எப்போது அனைத்தையும் அடைந்து விட்டீர்களோ, அப்போது நிறைவடைந்து விட்டீர்கள் இல்லையா? நிறைவான பொருள் குழப்பத்தில் வருவதில்லை. நிரம்புவது என்றால் ஆடாததாக இருப்பது. ஆக, தன்னுடைய இந்த சொரூபத்தை முன்னால் வையுங்கள் -- நாம் குஷியின் கஜானாவினால் நிரம்பியவராக ஆகி விட்டோம். எங்கே குஷி உள்ளதோ, அங்கே சதா காலத்திற்கும் துக்கம் விலகிப் போய் விட்டது. ஒருவர் எவ்வளவு சுயம் குஷியாக இருக்கிறாரோ, அந்த அளவு மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியைச் சொல்லிக் கொண்டே இருப்பார்.
2. சதா விஸ்தாரத்தை அடையக்கூடிய ஆன்மிகத் தோட்டம் இல்லையா? மேலும் நீங்கள் அனைவரும் ஆன்மிக ரோஜாக்கள் இல்லையா? எப்படி அனைத்து மலர்களிலும் ரோஜா மலர் சிரேஷ்டமானது எனப் பாடப் படுகின்றது. அது அல்ப காலத்திற்கு மணம் தரக்கூடியது. நீங்கள் யார்? ஆன்மிக ரோஜா என்றால் அவிநாசி மணம் தருபவர். சதா ஆன்மிகத்தின் மணத்தில் இருப்பவர்கள் மற்றும் ஆன்மிக மணம் தருபவர்கள். அந்த மாதிரி ஆகியிருக்கிறீர்களா? அனைவரும் ஆன்மிக ரோஜாக்களா அல்லது மற்றப் பூக்களா? இன்னும் கூட விதவிதமான மலர்கள் உள்ளன. ஆனால் எவ்வளவு ரோஜா மலரின் மதிப்பு உள்ளதோ, அவ்வளவு பிற மலர்களுக்கு இல்லை. பரமாத்ம தோட்டத்தில் சதா மலர்ந்திருக் கும் மலர்கள் நீங்கள். ஒரு போதும் வாடிப் போகிறவர்கள் அல்லர். சங்கல்பத்திலும் கூட ஒரு போதும் மாயாவினால் வாடிப்போகக் கூடாது. மாயா வருகிறது என்றால் வாடிப் போகிறீர்கள். மாயாஜீத் என்றால் சதா மலர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். எப்படி பாபா அவிநாசியாக இருக்கிறார், அது போல் குழந்தைகளும் கூட சதா அவிநாசி ரோஜாக்கள். புருஷார்த்தமும் அவிநாசி (அழிவில்லாத) என்றால், பிராப்தியும் அவிநாசி.
3. சதா தன்னை சகயோகி என அனுபவம் செய்கிறீர்களா? சகஜமாகத் தோன்றுகிறதா அல்லது கஷ்டமாகத் தோன்றுகிறதா? தந்தையின் ஆஸ்தி குழந்தைகளின் உரிமையாகும். ஆகவே உரிமை எப்போதுமே சகஜமாகக் கிடைக்கிறது. ஆக, நீங்களும் கூட அதிகாரிகள் தாம். அதிகாரிகளாக இருப்பதால் சகஜயோகிகளாக இருக்கிறீர்கள். கடின உழைப்பிற்கான தேவை இல்லை. தந்தையை நினைவு செய்வது ஒரு போதும் கஷ்டமாக இருப்பதில்லை. இவர் எல்லையற்ற தந்தை மற்றும் அவிநாசி தந்தை. அதனால் சதா சகஜயோகி ஆத்மாக்கள். பக்தி என்றால் முயற்சி (கடின உழைப்பு). ஞானம் என்றால் சகஜமான பலன் பிராப்தியாவதாகும். எவ்வளவு சம்மந்தம் மற்றும் அன்போடு நினைவு செய்கிறீர்களோ, அவ்வளவு சகஜமாக அனுபவம் ஆகும். சதா தன்னுடைய இந்த வரதானத்தை நினைவு வைக்க வேண்டும் -- நான் சகஜ யோகியாகவே இருக்கிறேன். ஆக, எப்படி ஸ்மிருதி உள்ளதோ, அப்படி ஸ்திதி தானாகவே அமைந்து விடும். நல்லது.