30.04.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையின் ஸ்ரீமத் சதா உங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றது. ஆகையால் மனிதர்களின் வழிகாட்டல்களைத் துறந்து, ஒரேயொரு தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களை மாத்திரம் பின்பற்றுங்கள்.

கேள்வி:
எக் குழந்தைகளின் புத்தி இன்னமும் அலைந்து திரிவதை நிறுத்தாதுள்ளது?

பதில்:
அதிமேலான தந்தையின் வழிகாட்டல்களில், அதாவது, தந்தையின் வழிகாட்டல்களில் நம்பிக்கையற்ற குழந்தைகளின் புத்தி இன்னமும் அலைந்து திரிவதை நிறுத்தவில்லை. தந்தையின் மீது முழுமையான நம்பிக்கை இல்லாததால், அவர்கள் இரு பக்கங்களிலும் தங்கள் காலை வைத்துள்ளார்கள். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன், அவர்கள் தொடர்ந்தும் பக்தியையும் செய்வதனால் கங்கை போன்றவற்றில் நீராடுகின்றார்கள். அவ்வாறான குழந்தைகளின் நிலை என்னவாகும்? அவர்கள் ஸ்ரீமத்தை முற்றாகப் பின்பற்றாததால், தொடர்ந்தும் தடுமாறுகின்றார்கள்.

பாடல்:
எங்களை இப் பாவ உலகில் இருந்து மீட்டு, ஓய்வும் சௌகரியமும் நிறைந்த உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் பக்தர்களின் இப்பாடலைச் செவிமடுத்தீர்கள். நீங்கள் இப்பொழுது இதனைப் பாடுவதில்லை. நீங்கள் அதிமேலான தந்தையைக் கண்டு விட்டீர்கள் என்பதை அறிவீர்கள். அவர் மாத்திரமே அதிமேலானவர். இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் தங்கள் அதிசீரழிந்த ஸ்திதியில் இருக்கின்றார்கள். பாரதத்தில் தேவர்களாக இருந்தவர்களே, அதிமேலான மனிதர்களாவார்கள். தெய்வீகக்குணங்கள் போன்றன அனைத்தும் நிறைந்தவர்கள் என்பதே அவர்களின் புகழாகும். அந்தத் தேவர்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்கியவர் யார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இப்பொழுது முற்றிலும் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள். தந்தையே அதிமேலானவர். சாதுக்கள், புனிதர்கள் போன்றோர் அனைவரும் அவரிடமே பிரார்த்தனை செய்கின்றார்கள். அரைக்கல்பத்திற்கு மக்கள் அத்தகைய சாதுக்களின் பின்னால் அலைந்து திரிந்தார்கள். இப்பொழுது தந்தை வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் இப்பொழுது தந்தையிடம் திரும்பிச் செல்லவுள்ளோம். அவரது ஸ்ரீமத்தை அவர் எங்களுக்குக் கொடுப்பதன் மூலம், அவர் எங்களை அதிமேலானவர்களாகவும் சதா சந்தோஷம் நிறைந்தவர்களாகவும் ஆக்குகின்றார். இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்ற ஆரம்பித்த பின்னரே, நீங்கள் அதிசீரழிந்த புத்தியை உடையவர்கள் ஆகினீர்கள். இனியும் நீங்கள் வேறு எவரது வழிகாட்டல்களையும் பின்பற்றக்கூடாது. நீங்கள் தூய்மையாக்குபவரான என்னை அழைத்தீர்கள். அவ்வாறாயின், உங்களை மூழ்கச் செய்கின்றவர்களின் பின்னால் ஏன் செல்கின்றீர்கள்? ஏன் ஒரேயொருவரின் வழிகாட்டல்களைத் துறந்து, பலரின் பின்னால் சென்று தொடர்ந்தும் தடுமாறித் திரிகின்றீர்கள்? பல குழந்தைகள் இந்த ஞானத்தைச் செவிமடுக்கின்றார்கள். அத்துடன் கங்கையிலும் நீராடுகின்றார்கள் அல்லது குரு போன்றோரின் பின்னாலும் செல்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அந்தக் கங்கை தூய்மையாக்குபவர் அல்ல. இருப்பினும், நீங்கள் மனித கட்டளைகளைப் பின்பற்றுவதால் அங்கு சென்று நீராடுகின்றீர்கள். ஆகையால் தந்தை கூறுகின்றார்: உங்களுக்கு அதிமேலான தந்தையின் வழிகாட்டல்களின் மீது நம்பிக்கை இல்லை! ஒருபுறம் கடவுளின் வழிகாட்டல்கள் உள்ளன, மறுபுறம் அசுர வழிகாட்டல்கள் உள்ளன. அத்தகைய மனிதர்களுக்கு என்ன நடக்கும்? உங்கள் ஒவ்வொரு காலையும் இரு வேறு படகில் வைத்தால் நீங்கள் இரண்டாகக் கிழிந்து விடுவீர்கள். அவர்களுக்குத் தந்தையின் மீது முழுமையான நம்பிக்கை இல்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, நான் உங்களுக்குரியவன். உங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி மேன்மை அடைவேன். நாங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு அடியும் அதிமேலான தந்தையின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும். தந்தையே உங்களை மௌனதாமத்திற்கும் சந்தோஷதாமத்திற்கும் அதிபதிகள் ஆக்குவார். ஆகையால் தந்தை கூறுகின்றார்: நான் பிரவேசித்திருக்கும் சரீரத்திற்குரியவர் 12 குருமார்களை ஏற்றுக் கொண்டிருந்தார். இருப்பினும் அவர் தமோபிரதான் ஆகினார். அவர்களைப் பின்பற்றியதில் எப்பயனும் இருக்கவில்லை. அவர் தந்தையை இனங்கண்ட பின்னர் அவர்கள் அனைவரையும் துறந்தார். அதிமேலான தந்தையை அவர் கண்டறிந்தபோது தந்தை கூறினார்: தீயதைக் கேட்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! மனிதர்கள் இப்பொழுது முற்றிலும் தூய்மையற்றவர்களாகவும் தமோபிரதான் புத்தியை உடையவர்களாகவும் உள்ளார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்ற முடியாத பலரும் இங்கே இருக்கின்றார்கள். அவர்களுக்குப் போதிய சக்தி இல்லை. மாயை அவர்களைத் தொடர்ந்தும் தடுமாறச் செய்கின்றாள். இராவணனே எதிரியாவான். ஆனால் இராமர் உங்கள் நண்பர். சிலர் அவரை இராமர் என்றும், சிலர் சிவன் என்றும் அழைக்கின்றார்கள். அவரது உண்மையான பெயர் சிவபாபா ஆகும். நான் மறுபிறப்பெடுப்பதில்லை. நாடகத்திற்கு ஏற்ப, எனது பெயர் சிவன் ஆகும். மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள், ஏனெனில், ஒரேயொருவருக்கு வெவ்வேறு பத்து பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் மனதில் தோன்றிய பெயர்கள் அனைத்தையும் கொடுத்தார்கள். எனது உண்மையான பெயர் சிவன் ஆகும். இது நான் பிரவேசித்துள்ள சரீரம். நான் கிருஷ்ணர் போன்றோருக்குள் பிரவேசிப்பதில்லை. விஷ்ணு சூட்சும உலகில் வாழ்வதாக மக்கள் நினைக்கின்றார்கள். உண்மையில், அவர் இல்லறப் பாதையைப் பிரதிநிதிப்படுத்தும் இரட்டை வடிவமாவார். எவ்வாறாயினும் நான்கு கரங்களுடன் எவரும் இருப்பதில்லை. நான்கு கரங்கள் குடும்ப வாழ்க்கையின் அடையாளமாகும். இரண்டு கரங்கள் துறவறப் பாதையின் அடையாளமாகும். தந்தை இல்லறப் பாதைக்குரிய தர்மத்தையே ஸ்தாபிக்கின்றார். சந்நியாசிகள் துறவறப் பாதையைச் சேர்ந்தவர்கள். இல்லறப் பாதையைச் சேர்ந்தவர்கள் தூய்மையானவரிலிருந்து தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். ஆகையால், உலகிற்கு ஆதாரமாக இருப்பதற்காக, சந்நியாசிகள் தூய்மையாக வேண்டிய பாகத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் நூறாயிரக்கணக்கானோர், மில்லியன்கணக்கானோர் உள்ளனர். ஒரு மேளா இடம்பெறும்பொழுது பலரும் அங்கே செல்கின்றார்கள். அவர்கள் தங்கள் உணவைத் தயாரித்துக் கொள்வதில்லை. அவர்கள் இல்;லறத்தினர் வழங்கும் பராமரிப்பிலேயே வாழ்கின்றார்கள். அவர்கள் செயல்களைத் துறந்துள்ளார்கள். அவ்வாறாயின், அவர்கள் எங்கிருந்து உணவைப் பெறுவார்கள்? ஆகையாலேயே அவர்கள் அந்த இல்லறத்தினர் கொடுக்கின்ற உணவை உண்ணுகின்றார்கள். இல்லறத்தினர் அது தாங்கள் செய்யும் தானம் என நினைக்கின்றார்கள். இவரும் தூய்மையற்ற ஒரு பூஜிப்பவராகவே இருந்தார். அவர் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் தூய்மையாகுகின்றார். அவர் தனது ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெற முயற்சிக்கின்றார். ஆகையாலேயே தந்தையைப் (பிரம்மா) பின்பற்றுபவர் ஆகுங்கள் என உங்களுக்குக் கூறப்படுகின்றது. மாயை ஒவ்வொரு அடியிலும் உங்களை வீழ்த்துகின்றாள். ஏழைகளாயினும் செல்வந்தர்களாயினும், மக்கள் சரீர உணர்வினாலேயே தவறுகளைச் செய்கின்றார்கள். சரீர உணர்வைத் துண்டிக்கின்ற முயற்சியையேனும் நீங்கள் செய்ய வேண்டும்! சரீர உணர்வைத் துண்டிப்பதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, உங்கள் சரீரத்தின் மூலம் உங்கள் பாகத்தை நடியுங்கள். நீங்கள் ஏன் சரீர உணர்வுடையவர் ஆகுகின்றீர்கள்? நாடகத்திற்கு ஏற்ப, நீங்கள் சரீர உணர்வுடையவராக வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் நீங்கள் முற்றிலும் சரீர உணர்வுடையவர் ஆகியுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஆத்மாக்கள். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கும்பொழுது, அதன்பின்னர் அந்தச் சரீரத்தை வெட்டினாலும் ஏதாவது சத்தம் கேட்குமா? கேட்காது. ஆத்மாவே கூறுகின்றார்: எனது சரீரத்தைத் துன்புறுத்தாதீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆனால் சரீரங்களோ அழியக்கூடியவை. உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள். சரீர உணர்வைத் துறந்திடுங்கள். நீங்கள் எந்தளவிற்கு ஆத்ம உணர்வுடையவர் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் தொடர்ந்தும் ஆரோக்கியமானவர்களாகவும், நோயிலிருந்து விடுபட்டவர்களாகவும் ஆகுவீர்கள். இந்த யோக சக்தியினாலேயே நீங்கள் 21 பிறவிகளுக்கு நோய்களில் இருந்து விடுபட்டவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு ஆத்ம உணர்வுடையவர் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் தண்டனையிலிருந்தும் விடுபடுகின்றீர்கள். அவ்வாறில்லா விட்டால் நீங்கள் அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். ஆகையால் நீங்கள் மிகவும் நன்றாக ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். பலருக்கு இந்த ஞானம் கிடைக்கின்ற பாக்கியம் இருப்பதில்லை. ஒருவர் உங்கள் குலத்திற்கு வந்து, ஒரு பிராமணர் ஆகாது, அதாவது, பிரம்மாவின் வாய்வழித் தோன்றிய குழந்தையாகாது விட்டால் அவரால் எவ்வாறு ஒரு தேவர் ஆக முடியும்? பலரும் இங்கே வந்து, கூறவேண்டுமென்பதற்காக ‘பாபா, பாபா’ என்று எழுதுகின்றார்கள். அவர்கள் ஓரிரு கடிதங்கள் எழுதிய பின்னர் மறைந்து விடுகின்றார்கள். அவர்களும் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள், ஆயினும் அவர்கள் பிரஜைகளில் ஒருவராகவே இருப்பார்;கள். பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள். பின்னர், அதிகளவு துன்பம் இருக்கும்போது, பலரும் ஓடோடி வருவார்கள். பல நிலையங்கள் திறக்கப்படும். கடவுள் வந்து விட்டார் என்ற ஓசை பரவும். குழந்தைகளாகிய உங்களுக்கு ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதில் இன்னமும் குறைபாடுள்ளது. இன்னமும் அதிகளவு சரீர உணர்வு உள்ளது. இறுதியில், உங்களுக்குச் சரீர உணர்வு இருக்குமாயின், உங்கள் அந்தஸ்து குறைவடையும். நீங்கள் அப்பொழுது பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவீர்கள். பல பணிப்பெண்களும் வேலையாட்களும் வரிசைக்கிரமமாக உள்ளனர். அரசர்களுக்குச் சீதனமாகப் பணிப்பெண்களும் கொடுக்கப்படுகின்றார்கள். செல்வந்தப் பிரஜைகளுக்கு அவ்வாறு கொடுக்கப்படுவதில்லை. இராதை தன்னுடன் எத்தனை பணிப்பெண்களையும், வேலையாட்;களையும் சீதனமாக அழைத்து வருகின்றார் என்பதைச் சில குழந்தைகள் (காட்சிகளில்) பார்த்துள்ளார்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, பல காட்சிகளைக் காண்பீர்கள். ஒரு சாதாரணப் பணிப்பெண்ணாக இருப்பதை விட, ஒரு செல்வந்தப் பிரஜையாக இருப்பது மேலானதாகும். ‘பணிப்பெண்’ என்ற வார்த்தை நல்லதல்ல என்பதால் ஒரு செல்வந்தப் பிரஜை ஆகுவது சிறந்ததாகும். நீங்கள் தந்தைக்கு உரியவர் ஆகும்பொழுது, மாயை உங்களை அதிகளவு உபசரிக்கின்றாள். அவள் அதிகளவு சக்திவாய்ந்தவளாகி, சக்திவாய்ந்தவர்களுடன் அதிகளவு சண்டை இடுகின்றாள். பின்னர், சரீர உணர்வு காரணமாக, நீங்கள் சிவபாபாவிடம் இருந்து உங்கள் முகத்தைத் திருப்பிக் கொள்வதால், நீங்கள் பாபாவை நினைவுசெய்வதை நிறுத்தி விடுகின்றீர்கள். உங்களுக்கு உணவு உண்ண நேரம் இருக்கின்றது, எனினும் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற பாபாவை நினைவுசெய்ய உங்களுக்கு நேரம் இருப்பதில்லை! பல நல்ல குழந்தைகள் சிவபாபாவை மறந்து விடுவதால், சரீர உணர்வுடையவர்கள் ஆகுகின்றார்கள். உங்களுக்கு வாழ்க்கை என்ற தானத்தைக் கொடுத்த தந்தையை நினைவுசெய்து அவருக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதக்கூடாதா? எவ்வாறாயினும், கேட்கவும் வேண்டாம்! மாயை உங்கள் மூக்கைப் பிடித்து உங்களை வெளியேற்றுகின்றாள். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் பல மில்லியன்களுக்கான வருமானத்தைப் பெறுகின்றீர்கள். உங்களிடம் உள்ள செல்வத்தை எண்ண முடியாதளவிற்கு நீங்கள் செல்வந்தர் ஆகுகின்றீர்கள். நீங்கள் செல்வம், செழிப்பு, நிலம், அனைத்தையும் பெறுகின்றீர்கள். செப்பு, இரும்பு, வெண்கலம் போன்றவை அங்கே இருப்பதில்லை. அங்கே தங்க நாணயங்கள் மாத்திரமே இருக்கும். கட்டடங்களும் தங்கத்தினால் கட்டப்பட்டிருக்கும். அவ்வாறாயின் உங்களுக்கு என்ன குறை இருக்க முடியும்? இதுவோ சீரழிந்த இராச்சியமாகும். ஆட்சியாளர் எவ்வாறோ, பிரஜைகளும் அவ்வாறே உள்ளார்கள். சத்தியயுகத்தில், ஆட்சியாளர்கள் எவ்வாறுள்ளார்களோ, அவ்வாறே பிரஜைகளும் இருக்கின்றார்கள். அனைவரும் மேன்மையானவர்கள். எவ்வாறாயினும் இது மனிதர்களின் புத்தியில் நிலைத்திருப்பதில்லை. அவர்கள் தமோபிரதானாக உள்ளார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் அவ்வாறே இருந்தீர்கள். இவரும் அவ்வாறே இருந்தார். நான் இப்பொழுது உங்களைத் தேவர்களாக ஆக்குவதற்கே வந்துள்ளேன். இருப்பினும், நீங்கள் அவ்வாறு ஆகுவதில்லை. நீங்கள் தொடர்ந்தும் உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றீர்கள். ‘நான் மிகவும் நல்லவர், நான் இப்படியானவர், அப்படியானவர்’. தாங்கள் நரகத்தில் இருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எவருமே அறியாதுள்ளார்கள். நாங்கள் ஆழ் நரகத்திற்குள் இருக்கின்றோம். நீங்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப, குழந்தைகளாகிய நீங்கள் இதனை வரிசைக்கிரமமாக அறிந்திருக்கின்றீர்கள். மனிதர்கள் இப்பொழுது ஆழ்நரகத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் இரவுபகலாகக் கவலையுடன் வாழ்கின்றார்கள். ஞான மார்க்கத்தில், பிறரைத் தங்களைப் போன்றவர்கள் ஆக்குகின்ற சேவையைச் செய்யாமல், ‘என்னுடையதும் உங்களுடையதும்’ என்று கவலைப்பட்டுக் கொண்டிப்பவர்களே, நோயாளிகளும் சுகவீனமுடையவர்களும் ஆவார்;கள். தந்தையை மாத்திரம் அல்லாது வேறு எவரையும் நினைவுசெய்வது கலப்படமான நினைவாகும். தந்தை கூறுகின்றார்: வேறு எவர் கூறுவதையும் செவிமடுக்காதீர்கள்! நான் கூறுவதை மாத்திரமே செவிமடுங்கள்! என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள்! மனிதர்களை நினைவுசெய்வதில் எப்பயனும் இல்லை. அதனை விட தேவர்களை நினைவுசெய்வது சிறந்ததாகும். தந்தை வினவுகின்றார்: நீங்கள் ஏன் தலை வணங்குகின்றீர்கள்? நீங்கள் இந்த பாபாவிடம் வரும்போது, சிவபாபாவை நினைவுசெய்த பின்னர் இங்கே வாருங்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யாது விட்டால், அது நீங்கள் பாவம் செய்வதைப் போன்றதாகும். பாபா கூறுகின்றார்: முதன் முதலில் தூய்மையாகுவதற்கான சத்தியத்தைச் செய்யுங்கள். சிவபாபாவை நினைவுசெய்யுங்கள்! பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்;பட வேண்டும். இதனை அரிதாகச் சிலரே புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். தந்தையிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்ற விவேகம் கூட அவர்களிடம் இல்லை. இதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். மாலையில் மணியாகுவது என்பது உங்கள் மாமியாரின் வீட்டிற்குச் செல்வதைப் போன்றதல்ல! தந்தையை நினைவுசெய்வதே பிரதானமானதாகும். தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதுள்ளதா? அதிகளவு சேவையும், தந்தையின் நினைவும் இருக்க வேண்டும். நாளாந்த அட்டவணையை வைத்திருக்குமாறு தந்தை உங்களிடம் கூறுகின்றார். தங்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று எண்ணுகின்ற குழந்தைகள், தொடர்ந்தும், சகல வகையிலும் அதிகளவு முன்னெச்சரிக்கையுடன் இருப்பார்கள். அவர்களின் உணவும் பானமும் மிகவும் தூய்மையாக இருக்கும். குழந்தைகளின் நன்மைக்காகவே தந்தை அதிகளவு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் சகல வகையான முன்னெச்சரிக்கையையும் எடுக்க வேண்டும். உங்களது உணவும் பானமும் தூய்மையாக உள்ளனவா, நீங்கள் பேராசை இல்லாதிருக்கின்றீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் கர்மாதீத நிலையை அடையும்வரை மாயை உங்களைப் பிழையான விடயங்களைச் செய்ய வைப்பாள். அதற்கு இன்னமும் நேரம் உள்ளது. அப்பொழுது நீங்கள் விநாசம் உங்கள் முன்னிலையிலேயே உள்ளதை அறிந்து கொள்வீர்கள். தீ பரவும். குண்டுகள் எவ்வாறு விழுகின்றன என்பதையும் பார்ப்பீர்கள். பாரதத்தில் இரத்த வெள்ளம் ஓடும். ஏனைய இடங்களில் குண்டுகள் வீசி, ஒருவரையொருவர் அழித்துக் கொள்வார்கள். இயற்கை அழிவுகளும் இடம்பெறும். அதிகபட்சக் கஷ்டங்கள் பாரதத்திலேயே இருக்கும். நீங்கள் என்ன சேவை செய்கின்றீர்கள் என்று உங்களையே நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் எத்தனை பேரை உங்களுக்குச் சமமாக ஆக்குகின்றீர்கள், எத்தனை பேரைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆக்குகின்றீர்கள்? பலரும் பக்தியில் அதிகளவு சிக்கியுள்ளார்கள். ‘இப் புத்திரிகளால் எங்களுக்கு என்ன கற்பிக்க முடியும்?’ என்று அவர்கள் நினைக்கின்றார்கள். தந்தையான கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை அவர்கள் அறியாதுள்ளார்கள். அவர்களுக்குச் சிறிதளவு கல்வியறிவு அல்லது செல்வம் இருப்பதால், அவர்கள் உங்களுடன் விவாதம் செய்கின்றார்கள். அவர்கள் தங்கள் கௌரவத்தை இழக்கின்றார்கள். சற்குருவை அவதூறு செய்பவர்களால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. அவர்கள் பின்னர் சதப் பெறுமதியான அந்தஸ்தையே கோருவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ‘என்னுடையது, உங்களுடையது’ என்ற கவலைகள் அனைத்தையும் துறந்து விட்டு, பிறரை உங்களுக்குச் சமமானவர் ஆக்குங்கள். ஒரேயொரு தந்தை கூறுவதை மாத்திரமே செவிமடுங்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். உங்கள் நினைவு கலப்படம் ஆகுவதை அனுமதிக்காதீர்கள்.

2. உங்களுக்கு நன்மை செய்வதற்கு, உங்கள் உணவிலும், பானத்திலும் அதிகளவு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். சோதியுங்கள்: நான் பேராசை கொண்டிருக்கின்றேனா? மாயை என்னைப் பிழையான செயல்களைச் செய்விக்கின்றாளா?

ஆசீர்வாதம்:
உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் கடவுளின் ஞானத்தை அத்தாட்சியாக எடுத்துகாட்டுவதன் மூலம் தர்ம யுத்தத்தில் வெற்றியடைபவர் ஆகுவீர்களாக.

இப்பொழுது நீங்கள் தர்ம யுத்த களத்திற்கு வரவேண்டும். உங்கள் நடைமுறை வாழ்வே அந்தத் தர்ம யுத்த களத்தில் நீங்கள் வெற்றியடைவதற்கு வழியாகும், ஏனெனில், கடவுளின் ஞானத்தின் அத்தாட்சி உங்கள் நடைமுறை வாழ்விலேயே தங்கியுள்ளது. ஞானமும் தெய்வீகக் குணங்களும் உங்கள் வடிவத்தில் நடைமுறையில் தென்படட்டும். ஏனெனில், இக்காலத்தில், எதனையும் கலந்துரையாடுவதன் மூலம் உங்கள் ரூபத்தை அத்தாட்சிப்படுத்த (வெளிப்படுத்த) முடியாது, உங்கள் தாரணையின் நடைமுறை வடிவத்தினூடாக ஒரு விநாடியில் ஒருவரை மௌனிக்கச் செய்ய முடியும்.

சுலோகம்:
ஆத்மாவை ஒளிரச் செய்வதற்கு, கடவுளின் நினைவினூடாக உங்கள் மனதின் பிரச்சினைகளை முடியுங்கள்.