21.04.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்காக முயற்சி செய்கின்றீர்கள். தேவர்கள் தூய்மையாக இருப்பதனால்; அதி மேன்மையான மனிதர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். இப்பொழுது நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள்.கேள்வி:
எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஏன் புகலிடம் கொடுத்துள்ளார்?பதில்:
ஏனெனில் நாங்கள் அனைவரும் குப்பைத் தொட்டியில் இருந்தோம். தந்தை எங்களைக் குப்பைத் தொட்டியிலிருந்து அகற்றி, அழகானவர்கள் ஆக்குகின்றார். அவர் அசுர குணமுள்ளவர்களைத் தெய்வீகக் குணமுள்ளவர்கள் ஆக்குகின்றார். நாடகத் திட்டத்திற்கேற்ப, தந்தை எங்களைக் குப்பைக்குள் இருந்து அகற்றி எங்களைத் தத்தெடுத்து எங்களைத் தனக்குரியவர் ஆக்கியுள்ளார்.பாடல்:
அதிகாலைப் பொழுதில் வந்துள்ளவர் யாரோ?ஓம் சாந்தி.
தந்தை இரவைப் பகலாக மாற்றுவதற்காக வர வேண்டும். தந்தை இப்பொழுது வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முன்பு, நாங்கள் சூத்திர குலத்துக்குரியவர்களாக இருந்தபொழுது, எங்களிடம் சூத்திர புத்தியே இருந்தது. மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்குப் பல்வேறு குலங்களைக் கொண்ட படம் மிகவும் சிறந்தது. இக் குலங்களின் சக்கரத்தை நீங்கள் எவ்வாறு சுற்றி வருகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை இப்பொழுது சூத்திரர்களாகிய உங்களைப் பிராமணர்களாக மாற்றியுள்ளார். நாங்கள் ஒவ்வொரு சக்கரத்தின் சங்கமத்திலும் பிராமணர்கள் ஆகுகின்றோம். பிராமணர்கள் அதிமேன்மையானவர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. தேவர்களே அதிமேன்மையானவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்;. நீங்கள் இங்கே அதிமேன்மையானவர்களாக ஆகுவதற்கே முயற்சி செய்கின்றீர்கள். மக்கள் தூய்மையற்றவர்களில் இருந்து தங்களைத் தூய்மையானவர்களாக மாற்றுவதற்காகவே தந்தையைக் கூவியழைக்கிறார்கள். ஆகவே, நீங்கள் உங்களையே கேட்க வேண்டும்.: எந்தளவுக்கு நான் தூய்மையாகுகின்றேன்? மாணவர்களும்; தங்கள் பாடங்களைக் கடைகின்றார்கள். அவர்கள் தமது கல்வியின் மூலம் தாம் என்னவாக ஆகுவார்கள் என்பதனையும் அறிவார்கள். நீங்கள் தேவர்கள் ஆகுவதற்காகவே இப்பொழுது பிராமணர்கள் ஆகுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இது உங்கள் பெறுமதி மிக்க வாழ்க்கையாகும். ஏனெனில் நீங்கள் கடவுளின் குழந்தைகள். கடவுள் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். அவர் உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக மாற்றுகின்றார். நீங்கள் தூய தேவர்கள் ஆகுகின்றீர்கள். குலங்களைப் பற்றி விளங்கப்படுத்துவது மிகவும் நல்லது. சந்;நியாசிகள் இவ்விடயத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அவர்கள் 84 பிறவிக் கணக்கைப் புரிந்துகொள்கின்றார்கள். துறவுப் பாதைக்குரியவர்கள் தாங்கள் 84 பிறவிகள் எடுக்கவில்லை என்பதையும் புரிந்துகொள்கின்றார்கள். இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் போன்றவர்களும், தாம் 84 பிறவிகளை எடுக்காவிட்டாலும்;, குறைந்த எண்ணிக்கையான மறுபிறப்பு எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, அவர்களால் விரைவில் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, சாதுரியமாகவும் இருக்க வேண்டும். இங்கு வரும் ஏனைய குழந்தைகள் புத்துணர்ச்சி பெற வருவதைப்; போன்றே, பாபா இங்கு நேரடியாக அமர்ந்திருக்கும் குழந்தைகளாகிய உங்களின் புத்திக்கும் புத்துணர்ச்சி ஊட்டுகின்றார். பாபா ஒவ்வொரு நாளும் உங்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுவதற்காகக் கூறுகின்றார்: இந்த விடயங்களைக் கிரகித்துக் கொள்ளுங்கள். நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளையும் எடுக்கின்றோம் என்பதையும், நாங்கள் எவ்வாறு சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆகுகின்றோம் என்பதையும் உங்கள் புத்தி தொடர்ந்தும் சிந்திக்கட்டும். பிராமணர்கள் பிரம்மாவின் குழந்தைகள். இப்பொழுது பிரம்மா எங்கிருந்து வந்துள்ளார்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் இவருக்கு பிரம்மா எனப் பெயரிடுகின்றேன். பிரம்மகுமார், குமாரிகளாகிய நீங்கள் அனைவரும் ஒரு குடும்பத்தவர்கள். ஆகவே நீங்கள் நிச்சயமாகத் தத்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். தந்தையே உங்களைத் தத்தெடுப்பார். தாதா அன்றி, அவரே தந்தை என அழைக்கப்படுகின்றார். தந்தையை மாத்திரமே தந்தை என அழைக்க முடியும். நீங்கள் தந்தையிடமிருந்து சொத்தைப் பெறுகிறீர்கள். தாய்வழிமாமன் அல்லது தகப்பன் வழிமாமன் அல்லது அதே குடும்பத்தைச் சேர்ந்த எவரேனும், ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம். ஒரு பெண் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த ஒருவர் அவளை வெளியே எடுத்துத் தத்துக் கொடுத்ததைப் பற்றித் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: ஏனெனில் அவர்களுக்கென சொந்தமாக ஒரு குழந்தை இல்லை. அந்தக் குழந்தை தன்னைத் தத்தெடுத்த தம்பதியினரை அம்மா, அப்பா என அழைக்கத் தொடங்குவார், அல்லவா? இங்கே இது ஒரு எல்லையற்ற விடயமாகும். அது குழந்தைகளாகிய நீங்களும் எல்லையற்ற குப்பைத் தொட்டியில் இருந்ததைப் போன்றுள்ளது! நீங்கள் நச்சாற்றில் வீழ்ந்தீர்கள்; மிகவும் அழுக்காகக் கிடந்தீர்கள்! நாடகத்திற்கேற்ப, தந்தை வந்து உங்களைக் குப்பையிலிருந்து அகற்றுவதுடன் உங்களைத் தத்தெடுத்துள்ளார். தமோபிரதான் உலகமே குப்பை என அழைக்கப்படுகின்றது. அசுர குணங் கொண்ட மனிதர்கள் சரீர உணர்வுடையவர்களாக உள்ளனர். விகாரங்களான காமமும், கோபமும் மிகவும் பெரியவை. நீங்கள் இராவணனின் மிகப்பெரிய குப்பைத் தொட்டியில் இருந்தீர்கள். உண்மையில், நீங்களும் அகதிகள் ஆவீர்கள். குப்பையிலிருந்து வெளியே வந்து அழகிய தேவர்கள் ஆகுவதற்காக இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் அடைக்கலம் புகுந்துள்ளீர்கள். தற்பொழுது, முழு உலகிலுமுள்ள அனைவருமே பெரிய குப்பைத் தொட்டியில் இருக்கின்றனர். தந்தை உங்களைக் குப்பைகளிலிருந்து அகற்றி, உங்களைத் தனக்குரியவர்கள் ஆக்குவதற்கு வருகின்றார். எவ்வாறாயினும் குப்பையில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களை அதிலிருந்து வெளியில் எடுத்தாலும், அவர்கள் அதற்குப் பழகி விட்டதால், குப்பையில் வாழவே விரும்புகின்றார்கள். தந்தை உங்களை எல்லையற்ற குப்பைத் தொட்டியிலிருந்து வெளியேற்றவே வந்துள்ளார். மக்கள் கூவியழைக்கின்றார்கள்: பாபா, வந்து எங்களை அழகானவர்கள் ஆக்குங்கள். எங்களை இந்த முட்காட்டிலிருந்து அகற்றி மலர்கள் ஆக்குங்கள். எங்களைக் கடவுளின் தோட்டத்தில் அமர்த்துங்கள். தற்பொழுது நாங்கள் அசுரர்களின் காட்டில் இருக்கின்றோம். தந்தை தனது பூந்தோட்டத்திற்குக் குழந்தைகளாகிய உங்களை அழைத்துச் செல்கின்றார். இப்பொழுது சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள்; ஆகியுள்ள நீங்கள் தேவர்களாகப் போகின்றீர்கள். அது தேவர்களின் இராச்சியம், பிராமணர்களினது அல்ல. நீங்கள் பாண்டவர்கள் என அழைக்கப்பட்டாலும், பாண்டவர்களாகிய உங்களுக்கு ஓர் இராச்சியம் இல்லை. நீங்கள் உங்கள் இராச்சியத்தைப் பெறுவதற்காகத் தந்தையுடன் அமர்ந்திருக்கின்றீர்கள். இப்பொழுது எல்லையற்ற இரவு முடிவுக்கு வருவதுடன், எல்லையற்ற பகல் உதயமாக உள்ளது. நீங்கள் பாடலைக் கேட்டீர்கள்: யார் அதிகாலைப் பொழுதில் வந்தார்கள்? அவர் அதிகாலையில் வந்து இரவை முடித்து, வைகறைப் பொழுதை ஏற்படுத்துகின்றார். இதன் கருத்து: அவர் நரகத்தை அழித்துச் சுவர்க்கத்தைக் உருவாக்குவதற்கு வந்துள்ளார் என்பதாகும். இந்தளவாவது உங்கள் புத்தியில் இருக்குமானால் நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம். புதிய உலகில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருபவர்கள் ஒருபொழுதும் அசுர குணங்களைக் காட்ட மாட்டார்கள். அவர்கள் தங்களை அதிமேன்மையாக்குகின்ற யக்ஞத்திற்கு அதிக அன்புடன் சேவை செய்வார்கள். நீங்கள் இந்த யாகத்திற்கு உங்கள் எலும்புகளையும் கூட கொடுக்க வேண்டும். உங்களையே சோதித்துப் பாருங்கள்: நான் இவ்வாறு நடந்தால், எவ்வாறு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும்? நீங்கள் இன்னமும் விவேகமற்ற சிறு குழந்தைகள் அல்ல. எவ்வாறு நீங்கள் ஓர் அரசனாகுவது அல்லது பிரஜைகளில் ஒருவராகுவது என்பதை இ;ப்பொழுது நீங்களாகவே புரிந்துகொள்ள முடியும். அரசர்கள் போன்றவர்களை நன்றாக அறிந்த, அனுபவமிக்க இரதத்தை பாபா எடுத்துள்ளார். அரசர்களின் பணிப்பெண்களும், வேலையாட்களும் கூட அதிக சந்தோஷத்தைப் பெறுவார்கள். அவர்கள் அரசர்களுடன் வாழ்ந்தாலும், அவர்கள் பணிப்பெண்களும் வேலையாட்களும் என்றே அழைக்கப்படுவார்கள். அவர்கள் சந்தோஷமாக இருப்பதுடன், அரசர், அரசி உண்ணும் உணவையே உண்கிறார்கள். மாளிகைக்கு வெளியில் வாழ்பவர்கள் அவற்றை உண்ண முடியாது. பணிப்பெண்களும் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். சிலர் அரசியை அலங்கரிக்கின்றார்கள், சிலர் குழந்தைகளைப் பராமரிக்கின்றார்கள். சிலர் நிலத்தைச் சுத்தம் செய்கின்றனர். தற்கால அரசர்களுக்கும் பல பணிப்பெண்களும், வேலையாட்களும் இருக்கின்றனர். ஆதலால் அங்கு எத்தனை பேர் இருந்திருப்பார்கள் எனக் கற்பனை செய்து பாருங்கள்! அவர்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பாக இருக்கின்றார்கள். அவர்கள் வாழும் இடங்கள் வெவ்வேறாக இருக்கும். அது அரசன் அரசிகளுக்குரியதைப் போன்று அலங்கரிக்கப்பட்டிருக்க மாட்டாது. அவர்கள் மாளிகைக்கு வந்தாலும் வேலையாட்களுக்கென இருக்கும் வீடுகளிலேயே வாழ்கின்றார்கள். ஆகவே தந்தை மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார்: அதி உயர்ந்தவராகுகின்ற அளவிற்கு நீங்கள், உங்கள் மீது கருணை கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆகுகின்றீர்கள். இது உங்களின் மகா பாக்கியம்; பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்;கள். இந்தச் சங்கம யுகம் மிக நன்மை அளிப்பதாகும். அதில் உங்களுக்கு அனைத்து விடயங்களிலும் நன்மையுள்ளது. சமையலறையிலே யோக நிலையில் நீங்கள் உணவுத் தயாரித்தால், பலர் நன்மையடைவார்கள். ஸ்ரீநாத்வார் ஆலயத்தில் முழுமையான மௌனத்திலேயே அவர்கள் உணவு தயாரிக்கிறார்கள். அவர்கள் ஸ்ரீநாத்தை மாத்திரம் நினைவுசெய்கின்றார்கள். பக்தர்கள் தங்கள் பக்தியில் மனமுருகி இருக்கின்றனர். நீங்கள் இந்த ஞானத்திலே போதை கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி கிருஷ்ணரின் மீதுள்ளது. கேட்கவே வேண்டாம்! இரு இளம் குழந்தைகள் பிருந்தாவனத்தில் (கிருஷ்ணரின் வனம்) வாழச் சென்றார்கள். அவர்கள் கிருஷ்ணரின் முழுமையான பக்தர்கள். அவர்கள், கிருஷ்ணரின் நினைவில் அங்கேயே வாழ்ந்து, தங்கள் சரீரத்தையும் அங்கேயே நீக்குவார்கள் எனக் கூறினார்;கள். அவர்களை நல்ல வீட்டில் வாழ்ந்து, ஞானத்தை எடுக்குமாறு பலமுறை அழைத்தாலும், அங்கு வாழ்வதற்கே விரும்புவதாக அவர்கள் கூறினர். அவர்கள் பக்தர்கள் அனைவரிலும் பார்க்க மேலானவர்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களையே முழுமையாகக் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தார்;கள். இப்பொழுது நீங்கள் உங்களையே தந்தைக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஆரம்பத்தில் பலர் தங்களை சிவபாபாவுக்கு அர்ப்பணித்தார்கள். பலர் வந்தார்கள். ஆனால் நாங்கள் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து வந்ததும், பலர் தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் நினைத்து பின் விட்டுச் சென்றுவிட்டனர். பலர் மீது சகுனங்கள் இருக்கின்றன. சிலவேளைகளில் ஒருவிதமான சகுனமும், சிலவேளையில் வேறுவிதமான சகுனமும் இருக்கின்றன. பாபா இங்கு வரும் அனைவரிடமும் கேட்குமாறு கூறுகின்றார்: நீங்கள் எங்கே வந்துள்ளீர்கள்? வெளியில் “பிரம்மகுமார், குமாரிகள்” என்றிருக்கும் பெயர் பலகையைப் பார்த்தீர்களா? இது ஒரு குடும்பம். ஒருவர் அசரீரியான பரமாத்மாவான பரமதந்தையும், மற்றவர் பிரஜாபிதா பிரம்மாவும் என்று நினைவுகூரப்படுகின்றனர். இங்கிருப்பவர்கள் அனைவரும் அவரது குழந்தைகள். சிவபாபா தாதா (பாட்டனார்) ஆவார். நாங்கள் எங்கள் ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகின்றோம். அவர் இந்த அறிவுரையைக் கொடுக்கின்றார்: என்னை நினைவுசெய்தால் நீங்கள் தூய்மையற்றவரிலிருந்து, தூய்மையாகுவீர்கள். அவர் இதே அறிவுரையை முன்னைய சக்கரத்திலும் கொடுத்துள்ளார். இது அத்தகையதொரு மேன்மையான கல்வி. உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் உங்கள் ஆஸ்தியைப், பெறுகிறீர்கள் என்பதை உங்கள் புத்தி புரிந்துகொள்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான கல்வியைக் கற்கின்றீர்கள். ஆதலால், நீங்கள் நிச்சயமாகத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். உங்கள் உணவும், பானமும் அத்துடன் உங்கள் வார்த்தைகளும், நடவடிக்கைகளும் மிகவும் இராஜரீகமானதாக இருக்க வேண்டும். தேவர்கள் சிறிதளவே உண்கின்றனர்! அவர்கள் எதையிட்டும் ஆசைப்படுவதில்லை. அவர்களுக்காக 36 வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. எனினும் அவர்கள் மிகச் சிறிதளவையே உண்கிறார்;கள்! உணவிலோ அல்லது பானத்திலோ ஆசைப்படுவது என்பது அசுர நடத்தையாகும். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். ஆதலால் உங்கள் உணவும், பானமும் மிகத் தூய்மையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். எனினும் மாயை உங்கள் புத்தியை முற்றிலும் கல்லாக்கி விடக்கூடியவள். எனவே, நீங்கள் அதற்கேற்பவே ஓர் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களுக்கு நீங்களே நன்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாயின், தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் நன்றாகக் கற்று ஏனையோருக்கும் கற்பித்தால், ஒரு பரிசைப் பெறுவீர்கள். இதனைத் தந்தை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதனை நீங்கள் உங்கள் சொந்த முயற்சிகளினால் பெறுவீர்கள். நீங்கள் எந்தளவிற்குச் சேவை செய்கிறீர்கள் என்பதையும், நீங்கள் என்னவாக ஆகப்போகிறீர்கள் என்பதையும் பார்ப்பதற்கு நீங்களே உங்களைச் சோதியுங்கள். இக்கணத்தில் நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு நீங்கினால், எதனைப் பெறுவீர்கள்? இதனை உங்களில் எவராவது பாபாவிடம் வினவினால், பாபா உடனடியாகவே கூறுவார்: எந்த அந்தஸ்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்பது உங்கள் இந்தச் செயற்பாட்டிலிருந்து புரிந்துகொள்ளப்படும். நீங்கள் முயற்சி செய்யாவிட்டால், ஒவ்வொரு சக்கரத்திலும் உங்களுக்கு நீங்களே இழப்பை ஏற்படுத்துவீர்கள். நன்றாகச் சேவை செய்பவர்கள் நிச்சயமாக உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவார்கள். யார் பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவார்கள் என்பது உள்ளார்த்தமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது. இது உரத்த சத்தத்துடன் கூறப்படுவதில்லை. தாம் சிரேஷ்ட மாணவர்களாகவா (சீனியர்கள்) அல்லது கனிஷ்ட மாணவர்களாகவா வரப்போகின்றோம் என்பதைப் பாடசாலையிலும் மாணவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். இங்கேயும் அது அப்படியே. மூத்தவர்கள்; (சீனியர்கள்) அரசர்கள் அரசிகளாக ஆகுவதுடன், இளையவர்கள் (ஜுனியர்கள்) குறைந்த அந்தஸ்தையும் பெறுவார்கள். செல்வந்தர்களிடையேயும் சிரேஷ்டர், கனிஷ்டர் என்றிருக்கும். அவ்வாறே பணிப்பெண்கள், வேலையாட்கள் மத்தியிலும் சிரேஷ்டர், கனிஷ்டர் என்றிருக்கும். மூத்தவர்களின் (சீனியர்கள்;) அந்தஸ்து உயர்வாக இருக்கும். நிலத்தைச் சுத்தம் செய்யும் பணிப்பெண்ணுக்கு மாளிகைக்குள் செல்வதற்கான உரிமை இல்லை. இவ்வனைத்து விடயங்களையும் குழந்தைகளான நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்வதுடன், இறுதியில் மேலும் மிக நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் மேன்மையானவர்களாக ஆகுபவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். குமார்க்காவைப் பாருங்கள்! அவர் ஒரு சிரேஷ்டமானவர், எனவே அவருக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். இதில் தந்தை குழந்தைகளாகிய உங்களின் கவனத்தை ஈர்க்கின்றார்: மகாராத்திக் குழந்தைகளுக்கு மதிப்பளியுங்கள். நீங்கள் மதிப்பளிக்காது விட்டால், நீங்களே உங்களின் பாவச் சுமையை அதிகரிக்கின்றீர்கள். தந்தை இவ்விடயங்கள் அனைத்தின் மீதும் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றார். நீங்கள் எவ்வாறு அனைவருக்கும் வரிசைக்கிரமமாக மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாபா ஒவ்வொருவரையும் அறிவார். ஒருவரிடம் ஒன்றைக் கூறினால், அவர்கள் நம்பிக்கைத் துரோகிகளாக மாறுவதற்கு அதிக நேரம் எடுக்காது. குமாரிகளுக்கும், தாய்மார்களுக்கும் பந்தனங்கள் உள்ளன. அவர்கள் அதிக சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்! அநேகமாக தாய்மார்களே எழுதுகிறார்கள்: இவர் எனக்கு அதிகத் தொல்லை கொடுக்கின்றார். நான் என்ன செய்ய வேண்டும்? எனினும் அவர் உங்களைக் கட்டாயப்படுத்துவதற்கு நீங்கள் ஒரு மிருகம் அல்ல. நீங்களும்; சில விருப்பங்களை உங்களுக்குள் கொண்டிருக்க வேண்டும்;;. இதனாலேயே நீங்கள் இவ்வாறு கேட்கின்றீர்கள். இதனையிட்டுக் கேட்பதற்கு எதுவுமில்லை. ஓர் ஆத்மாவே ஒருவரது சொந்த எதிரியும், சொந்த நண்பனும் ஆவார். நீங்கள் விரும்பிய எதனையும் செய்யலாம். வினவுவதென்றால், ஏதோ ஒரு விருப்பத்தை உங்கள் இதயத்தினுள் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். முக்கியமான விடயம் நினைவுசெய்தலாகும். நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் தூய்மையாக முடியும். இலக்ஷ்மியும் நாராயணனும் முதற்தரமான தூய்மைமிக்கவர்கள். மம்மா அதிக சேவை செய்தவர்! மம்மாவிலும் பார்க்கத் திறமைசாலி என்பதை உங்களில் எவராலும் கோர முடியாது. ஞானத்தில் மம்மாவே அனைவரையும் விட அதி விவேகமானவர். பலர் யோகத்தில் பலவீனமானவர்கள்; அவர்களால் நினைவில் நிலைத்திருக்க முடிவதில்லை. பாபாவை நினைவுசெய்யாது விட்டால், எவ்வாறு உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட முடியும்? இறுதியில் நினைவுடனேயே நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு நீங்க வேண்டுமென நியதி கூறுகின்;றது. ஆத்மாக்களாகிய நீங்கள் சிவபாபாவின் நினைவிலேயே சரீரத்தை விட்டு நீங்க வேண்டும். தந்தை ஒருவரைத் தவிர வேறெவரையும் நினைவுசெய்யக்கூடாது. எதன் மீதும் எக்கவர்ச்சியும் இருக்கக்கூடாது. இதனைப் பயிற்சியிலிட வேண்டும்! நாங்கள் சரீரமற்றவராகவே வந்தோம். சரீரமற்றவராகவே நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: மிக இனிமையானவராக ஆகுங்கள்! அத்துடன் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும்! இப்பொழுது சரீர உணர்வின் தீய ஆவியுள்ளது. உங்கள் மீது பெருமளவு கவனம் செலுத்துங்கள். ஏனையோருடன் பெருமளவு அன்புடன் பழகுங்கள். தந்தையை நினைவுசெய்வதுடன், சக்கரத்தையும் சுழற்றுங்கள். சக்கரத்தின் இரகசியங்களை அனைவருக்கும் விளங்கப்படுத்தும்பொழுது, அவர்கள் வியப்படைவார்கள். எவராலும் 84 பிறவிகளையே நினைவுசெய்ய முடியாதபொழுது, எவ்வாறு 8.4 மில்லியன் பிறவிகளை நினைவுசெய்ய முடியும்? அது எவரது புத்தியிலும் புகவும் மாட்டாது. இச்சக்கரத்தை மாத்திரம் உங்கள் புத்தியில் நீங்கள் வைத்திருந்தால், அதுவே பெரும் பாக்கியமாகும். இந்நாடகம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது. பழைய உலகில் மீது விருப்பமின்மை இருக்க வேண்டும். உங்கள் புத்தியின் யோகம் மௌன தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் செல்ல வேண்டும். “மன்மனாபவ” கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கீதையைக் கற்கின்ற எவருக்குமே, “மன்மனாபவ” என்பதன் உண்மையான அர்த்தம் தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கே இது தெரியும். கடவுள் பேசுகின்றார்: சரீர உறவினர் அனைவரையும் துறந்து உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இதனைக் கூறியவர் யார்? கிருஷ்ணர் கடவுள் அல்ல. சிலர் தாங்கள் சமயநூல்களை மாத்திரம் நம்புகின்றோம் எனக் கூறுகின்றார்கள். கடவுளே வருகின்றபொழுதும், அவர்கள் இன்னமும் அவரை நம்பாதுள்ளார்கள்! அவர்கள் தொடர்ந்தும் சமயநூல்களை மிகச்சரியாகக் கற்கின்றார்கள். கடவுள் வந்து இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். ஸ்தாபனை இப்பொழுது மேற்கொள்ளப்படுகின்றது. அச்சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. இது கடவுள் என்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தால், அவர்கள் தங்கள் ஆஸ்தியைப் பெற ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பக்தியும் பறந்து (முடிந்து) விடும். எனினும், அவர்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கும்பொழுதே இது சாத்தியமாகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. தேவர்களாக ஆகுவதற்கு மிக இராஜரீகமான சம்ஸ்காரங்களைக் கிரகியுங்கள். உங்கள் உணவும், பானமும் மிகத் தூய்மையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். எதனாலும் கவரப்படாதீர்கள். உங்களுக்கு நன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்கு, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்.2. உங்கள் மீது கவனம் செலுத்துவதுடன், அனைவருடனும் அதிகளவு அன்புடன் பழகுங்;கள். உங்களையும் விட மூத்தவர்களுக்கு (சீனியர்கள்) மதிப்பு கொடுங்கள். மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அனுசரித்துக் கொள்ளும் சக்தியின் மூலம் அருள்பவரின் ஸ்திதியைக் கொண்டிருப்பதால், சதா தடைகளை அழிப்பவர்களாகவும், தீர்வுகளின் சொரூபங்களாகவும் ஆவீர்களாக.இரு விடயங்களின் அடிப்படையிலேயே தடைகளை அழிப்பவர்களாகவும், தீர்வுகளின் சொரூபங்களாகவும் இருக்கின்ற ஆசீர்வாதமானது பெறப்படுகின்றது. 1) நீங்கள் அருள்பவரின் குழந்தைகளாதலால், அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். மரியாதையையோ அல்லது அன்பையையோ பெறும்பொழுதே, நீங்கள் அன்பாக இருப்பீர்கள் என்பதல்ல. நீங்கள் கொடுக்க வேண்டும். உங்களுக்காகவும், உங்களுடன் உறவுமுறையிலும், தொடர்பிலும் வரும் அனைவருக்காகவும் அனுசரிக்கும் சக்தியின் கடலாக ஆகுங்கள். இவ்விரு சிறப்பியல்புகளையும் கொண்டிருப்பதால், நீங்கள் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் நிறைக்கப்பட்டு, ஒரு தீர்வு சொரூபமாக ஆகுவீர்கள்.
சுலோகம்:
சத்தியத்தை உங்கள் சகபாடியாக்கினால், உங்கள் படகு ஒருபொழுதும் மூழ்காது.