19.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்தக் கல்வியே உங்கள் வருமானத்தின் மூலாதாரமாகும்; இதன் மூலமே 21 பிறவிகளுக்கு உண்மையான வருமானத்தைச் சம்பாதித்து மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள்.கேள்வி:
பாபா உங்களுக்கு கூறும் இனிமையான விடயங்கள் எப்பொழுது கிரகிக்கப்படும்?பதில்:
உங்கள் சொந்த மனதின் கட்டளைகளோ அல்லது பிறரின் கட்டளைகளோ உங்கள் புத்தியை செல்வாக்கு செலுத்தாத போதாகும். வதந்திகளின் அடிப்படையில் அனைத்தையும் செய்கின்ற குழந்தைகளினால் எதனையும் கிரகிக்க முடியாது. ஞானத்தைத் தவிர வேறு எதனையாவது வேறு எவரும் உங்களிடம் கூறும் போது, அந்நபர் உங்கள் எதிரியைப் போன்றவர் ஆவார். உங்களிடம் பொய் சொல்கின்ற பலரும் உள்ளனர். ஆகையால், தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள்! மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கு ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.
பாடல்:
எங்களுடைய யாத்திரை தனித்துவமானது.........
ஓம் சாந்தி.
நீங்களே உங்கள் புகழைப் பாடுவது போல் இப்பாடல் உள்ளது. உண்மையிலேயே ஒருவர் தன்னைத்தானே புகழ முடியாது. இந்த விடயங்கள் எல்லாம் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. விவேகமாக இருந்த பாரத மக்கள் இப்பொழுது விவேகமற்றவர்களாகி விட்டார்கள். இப்பொழுது இந்தக் கேள்வி எழுகிறது: விவேகமாக இருந்தவர்கள் யார்? இது ஓரிடத்திலும் எழுதப்படவில்லை. நீங்கள் மறைமுகமானவர்கள். இவை அத்தகைய அற்புதமான விடயங்கள்! தந்தை கூறுகிறார்: குழந்தைகள் என்னிடம் இருந்தே என்னை அறிந்து கொள்ள முடியும். பின்னர் அவர்கள் யாவற்றையும் என்னிடம் இருந்து அறிந்து கொள்கிறார்கள். உலக நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியும். வேறு எவருக்குமே இது தெரியாது. அவர்கள் ஒரு முக்கியமான பிழையைச் செய்து விட்டார்கள். அதாவது அவர்கள் பரமாத்மா, பரமதந்தை சிவனின் பெயருக்குப் பதிலாகக் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி விட்டார்கள். ஸ்ரீமத் பகவத் கீதை என அழைக்கப்படும் முதல்தரமான சமயநூல் பிழையாகி விட்டது. ஆகவே கடவுள் ஒருவரே என்பதையே முதன் முதலில் நிரூபியுங்கள். பின்னர் கீதையின் கடவுள் யார் என்று அவர்களிடம் கேளுங்கள். ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் பாரதத்தில் இருக்கிறது. நீங்கள் ஒரு புதிய சமயத்தைப் பற்றிப் பேசுவதாக இருந்தால், அது பிராமண தர்மமாகவே இருக்கும். முதலில் பிராமணரின் உச்சிக் குடுமியே உள்ளது. அவர்களுக்கு அடுத்த படியாக தேவர்கள் இருக்கிறார்கள். பிராமண தர்மமே அதி மேன்மையானது. பரமாத்மா பரமதந்தையாகிய சிவனால் பிரம்மா மூலம் படைக்கப்பட்டவர்களே பிராமணர்கள். பின்பு இந்தப் பிராமணர்கள் தேவர்கள் ஆகுகின்றார்கள். புதிய உலகைப் படைப்பவராகிய கடவுளே அனைவரதும்; தந்தை என்பதே பிரதான விடயமாகும். அவர் நிச்சயமாகவே புதிய உலகை உருவாக்குகிறார். புதிய உலகில் புதிய பாரதம் இருக்கும். அவர் பாரதத்தில் பிறப்பெடுத்திருக்கிறார். அவர் பிரம்மாவின் மூலம் பாரதத்தைச் சுவர்க்கமாக்குகிறார். அவர் உங்களைத் தனக்குச் சொந்தமாக்கிப் பின்னர் உங்களை மனிதரிலிருந்து தேவர்களாக்குவதற்காக இந்தக்கல்வியைக் கற்பிக்கிறார். நீங்கள் முதலில் சூத்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். பின்னர் பிராமண குலத்தைச் சார்ந்தவர்களாகவும் அதன் பின்னர் தேவ குலத்தைச் சார்ந்தவர்களாகவும் ஆகுகின்றீர்கள். அதன்பின் சனத்தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது சமயங்களும் ஒன்றிலிருந்து பலவாக அதிகரிக்கின்றன. ஒவ்வொரு சமயத்திலிருந்தும் தண்டுகளும் கிளைகளும் தோன்றுகின்றன. மூன்று முக்கிய கிளைகள் இருக்கின்றன. இதுவே பிரதானமாகும். அவை ஒவ்வொன்றில் இருந்தும் அவரவர்களுக்கு உரிய கிளைகள் தோன்றுகின்றன. அத்திவாரமே பிரதானமானதாகும். அத்துடன் மூன்று முக்கியமான கிளைகள் உள்ளன. அடிமரமே இந்நேரத்தில் இராஜயோகத்தைக் கற்கும் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களினதாகும். தில்வாலா ஆலயம் நன்றாகக் கட்டப்பட்டு இருக்கின்றது. அதில் இதனது முழு விளக்கமும் இருக்கிறது. சென்ற கல்பத்தில் இராஜயோகத் தபஸ்யாவைச் செய்த குழந்தைகள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். கிறிஸ்துவின் ஞாபகம் கிறிஸ்தவ நாடுகளில் இருப்பது போல, குழந்தைகளாகிய நீங்கள் இங்கே தபஸ்யா செய்ததன் பயனான உங்களுடைய ஞாபகார்த்தமும் இங்கேயே இருக்கிறது. இது புரிந்துகொள்வதற்கு மிக இலகுவாக இருப்பினும் இது ஒருவருக்கும் தெரியாது. சந்நியாசிகள் உங்களைப் பற்றிய யாவற்றையும் கற்பனை என்று கூறுவார்கள். அது எதுவாயினும் ஒருவரின் கற்பனைகள்...... அவர்கள் இந்தப்படங்கள் யாவற்றையும் நீங்கள் கற்பனையினால் உருவாக்கினீர்கள் என்றும் கூறுகிறார்கள். தந்தையை அவர்கள் அறியும்வரையில் இது எங்கள் கற்பனை என்றே கருதுவார்கள். ஒரேயொரு தந்தையே ஞானம் நிறைந்தவர். எனவே தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே முக்கியமான விடயமாகும். தந்தை சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கிறார். அவர் சென்ற கல்பத்திலும் இதைக் கொடுத்துள்ளார். நீங்கள் பின்னர் 84 பிறவிகளை எடுக்கவேண்டும். பாரத மக்கள் மாத்திரமே 84 பிறவிகளை எடுக்க வேண்டியிருந்தது. பின்னர் சங்கமயுகத்தில் தந்தை வந்து இராச்சியத்தை உருவாக்குகிறார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து இதைப் புரிந்துகொண்டீர்கள். அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்துகொண்டு, அவை உங்கள் புத்தியில் பதியும்போது, அதில் சந்தோஷம் இருக்கும். இந்தக் கல்வி பாரிய வருமானத்துக்குரிய ஒரு மூலாதாரமாகும். கல்வியின் மூலமே மக்கள் சட்டநிபுணர்கள் போன்றவர்கள் ஆகுகின்றார்கள். எவ்வாறாயினும் இந்தக்கல்வி மனிதர்களைத் தேவர்களாக்குவதற்கானதாகும். இந்தப் பேறு மிகவும் மகத்துவமானது! வேறு எவராலும் உங்களை இத்தகையதொரு பேற்றை பெறச் செய்யமுடியாது. கிரந்தத்தில் (சீக்கிய சமயநூல்) எழுதப்பட்டிருக்கிறது: மனிதர்களைத் தேவர்களாக்குவதற்குக் கடவுளுக்கு நீண்ட காலம் எடுக்கவில்லை. எவ்வாறாயினும் மக்களின் புத்தி வேலை செய்வதில்லை! அந்தத் தேவதர்மம் நிச்சயமாக மறைந்து விட்டது. இதனாலேயே மனிதர்கள் தேவர்களாக மாறினார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. தேவர்கள் சத்தியயுகத்தில் இருந்தார்கள். கடவுளே, நிச்சயமாக அவர்களைச் சங்கமயுகத்தில் படைத்திருக்க வேண்டும். அவர் எப்படி அவர்களை உருவாக்குவார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. குருநானாக்கும் கடவுள் புகழைப் பாடினார். அவர் பாடியதைப் போல் வேறுயாருமே பாடியதில்லை. இதனாலேயே மக்கள் பாரதத்தில் கிரந்தத்தை வாசிக்கிறார்கள். குருநானக் கலியுகத்திலே அவதரிக்கிறார். அவர் ஒரு சமயஸ்தாபகர். பின்னர் அது ஓர் இராச்சியமாகியது. தந்தை தேவதர்மத்தை ஸ்தாபித்தார். உண்மையில் புதிய உலகமானது பிராமணர்களுக்கு மாத்திரமானதே எனப்படுகிறது. உச்சிக்குடுமி பிராமணர்களுக்குரியதாக இருந்தாலும் தேவர்களுடனேயே இராச்சி;யம் ஆரம்பிக்கிறது. பிராமணர்களாகிய நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள். உங்களுடையது ஓர் இராச்சியம் அல்ல. நீங்கள் உங்களுக்கென்று ஓர் இராச்சியத்தை ;ஸ்தாபித்தீர்கள். இவையெல்லாம் மிகவும் அற்புதமான விடயங்கள்! மக்களுக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் முதலில் ஒன்றைக் கற்றால் பின்னர் அதனை ஏனையோர் உங்களிடமிருந்து கற்கவோ, அறிந்து கொள்ளவோ முடியும். நீங்கள் சூத்திரரிலிருந்து பிராமணர்களாகி விட்டீர்கள். பிரம்மாவும் இப்பொழுது தந்தையிடமிருந்து இதை அறிந்து கொண்டார். அவர் இவையாவற்றையும் இவருக்கு விளங்கப்படுத்தினார். ஆகவே இவரும் ஏனைய குழந்தைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அவர் அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இந்தச் சரீரத்தின் மூலம் விளங்கப்படுத்துகிறார். இவை யாவும் அனுபவத்திற்குரிய விடயங்களாகும். சமயநூல்களிலிருந்து யாருக்கும் எதையும் விளங்கிக்கொள்ள முடியாது. தந்தை கூறுகிறார்: இந்தக் கல்பம் முழுவதிலும் நான் ஒரே ஒரு தடவை மாத்திரம் வந்து உங்களுக்கு இவ்வாறே விளங்கப்படுத்துகிறேன். நான் ஒரு தர்மத்தை ஸ்தாபித்து, எண்ணற்ற சமயங்களை அழிப்பதற்குத் தூண்டுகிறேன். இது ஒரு 5000 ஆண்டுகளுக்குரிய நாடகமாகும். நீங்கள் 84 பிறவிகளை எடுத்திருக்கிறீர்களெனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர்கள் பிரம்மாவை விஷ்ணுவின் தொப்பூள் கொடியின் இறுதியில் காட்டியிருக்கிறார்கள். பிரம்மாவும் விஷ்ணுவும் யாருடைய குழந்தைகள்? அவர்கள் இருவரும் சிவனின் குழந்தைகள். அவர் ஒருவரே படைப்பவரும் அவர்கள் படைப்புகளும் ஆவார். எவராலும் இந்த விடயங்களைப் புரிந்து கொள்ளமுடியாது. இவை முற்றிலும் புதிய விடயங்கள் ஆகும். இவை எல்லாம் புதிய விடயங்களென பாபாவும் கூறுகிறார். இந்த விடயங்கள் சமயநூல்களில் இருக்க முடியாது. தந்தையே ஞானக்கடல் ஆவார். அவரே கீதையின் கடவுள், பக்திமார்க்கத்தில் மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். இதை அவர்கள் சத்தியயுகத்திலோ அல்லது திரேதாயுகத்திலோ கொண்டாடுவதில்லை. எனவே அவர் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் வரவேண்டும். இவ் விடயங்களை நீங்கள் தொடர்ந்தும் புரிந்துகொண்டு ஏனையோருக்கும் விளங்கப்படுத்துங்கள். உங்களுக்கு விளங்கப்படுத்தும் தந்தையின் புகழ் எதுவோ, அதுவே குழந்தைகளாகிய உங்களினது புகழுமாகும். நீங்களும் மாஸ்டர் ஞானக்கடலாக வேண்டும். நீங்கள் இங்கேயே அன்புக்கடலாகவும், சந்தோஷக்கடலாகவும் வரவேண்டும். எவருக்குமே துன்பத்தைக் கொடுக்காதீர்கள். மிகவும் இனிமையானவர்களாக ஆகுங்கள்! நஞ்சைப்போன்று கசப்பாக இருந்த நீங்கள், இப்பொழுது விகாரமற்ற பிராமணர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகளாகி விட்டீர்கள். நீங்கள் விகாரமுள்ள மனிதர்களிலிருந்து விகாரமற்ற தேவர்களாகுகின்றீர்கள். நீங்கள் அரைக்கல்பத்துக்குத் தூய்மையற்றவர்களாக இருந்து இப்பொழுது முற்றிலும் உக்கும் நிலையை அடைந்து விட்டீர்கள். மிகவும் பழைய துணிகளை ஒரு தடியால் அடிக்கும்பொழுது அவை முழுமையாகக் கிழிந்து விடும். இங்கேயும் ஆத்மாவானது ஞானம் என்னும் தடியால் அடிக்கப்படும். பொழுது அவர்கள் முழுமையாகத் துண்டுதுண்டாக்கப்படுகின்றனர். சில ஆடைகள் மிகவும் அழுக்காக இருப்பதனால் அவைகளைச் சுத்தமாக்க நீணடநேரம் எடுக்கும். பின்னர் அவர்கள் அங்கே ஒரு குறைந்த அந்தஸ்தை பெறுகிறார்கள். பாபா, ஒரு சலவைத்தொழிலாளியும், நீங்கள் அவருடைய உதவியாளரும் ஆவீர்கள். சலவைத்தொழிலாளரும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றார்கள். இங்கே நீங்களும் வரிசைக்கிரமத்திலேயே இருக்கின்றீர்கள். நன்றாகச் சலவை செய்யாத ஒரு சலவைத் தொழிலாளியைப் பார்த்து அவர் சிறிது காலத்திற்கு முன்னரே சலவை செய்வதற்குப் பயின்றிருக்கிறார் எனவும், அவர் ஒரு சவரத் தொழிலாளி போன்று இருக்கிறார் எனவும் கூறுகிறார்கள். முற்காலத்தில் அதிக அழுக்குத்துணிகள் கிராமங்களிலேயே கழுவப்படும். இந்தத் திறமை வெளிநாட்டவரிடமிருந்தே வந்தது. வெளிநாட்டவர் சிறிது மரியாதை கொடுப்பதுடன் பண உதவி முதலியனவற்றையும் கொடுக்கிறார்கள். நீங்கள் உயர் குலத்தைச்; சேர்ந்தவர்கள் என்பதும் இப்பொழுது வீழ்ந்துவிட்டீர்கள் (பாரதம்) என்பதும் அவர்களுக்குப் புரிகிறது. வீழ்ந்து விட்டவர்கள்மீது கருணை உண்டு. தந்தை கூறுகிறார்: நான் உங்களை மிகவும் செல்வந்தர்கள் ஆக்கினேன்! இப்பொழுது மாயை உங்களை எந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறாள் எனப்பாருங்கள்! நீங்கள் வெற்றி மாலையின் மணிகளாக இருந்தீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். பின்னர் 84 பிறவிகளை எடுத்ததும் இப்பொழுது எப்படி மாறிவிட்டீர்கள் எனப் பாருங்கள்! இது ஓர் அற்புதம்! அவர்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தார்கள். என்பதைப் பாரதமக்களுக்கு உங்களால் விளங்கப்படுத்த முடியும். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. பின்னர் வீழ்ந்து விட்டதன் மூலம் அவர்கள் நரகவாசிகளாக ஆகிவிட்டார்கள்.. தந்தை இப்பொழுது கூறுகிறார்: தூய்மையாகிச் சுவர்க்கவாசிகளாகுங்கள்! மன்மனாபவ! கடவுளாகிய சிவன் கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்! நினைவுயாத்திரையின் மூலம் உங்கள் பாவங்கள் யாவும் அழிக்கப்படும். இராணிகளாக்குவதற்காகப் பெண்களைக் கிருஷ்ணர் கடத்திச் சென்றாரெனச் சமயநூல்களில் கூறப்படுகின்றன. நீங்கள் யாவரும் கற்று இராணிகளாகுகிறீர்கள். எவ்வாறாயினும், எவராலும் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. தந்தை இப்பொழுது வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்கு விளங்கப்படுத்த வருகிறேன். ஆகவே, முதலில் அவர்களுக்குக் கடவுள் ஒரேயொருவர் என்றும், கீதையின் கடவுள் யாரென்றும் கூறுங்கள். இராஜயோகத்தை உங்களுக்கு கற்பித்தவர் யார்? கடவுள் பிரம்மா மூலம் ஸ்தாபனையைச் செய்து, பின்னர் அவரே அழித்தலையும் காத்தலையும் நடத்துகின்றார். பிராமணர்களாகிய நீங்கள் பின்னர் தேவர்களாகுகிறீர்கள். இவ்விடயங்களை சென்ற கல்பத்தில் புரிந்துகொண்டவர்கள் மாத்திரமே இப்பொழுதும் புரிந்துகொள்வார்கள். அவர்கள் விநாடிக்கு விநாடி நடந்து முடிந்த யாவற்றையும் இக்கணம் வரை புரிந்துகொள்வார்கள். நீங்கள் இந்த நாடகத்தில், பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் இன்னமும் அந்த ஸ்திதியை அடையவில்லையென்பதும், அதற்குக் காலம் எடுக்கும் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குப் புரியும். கர்மாதீத நிலையை நீங்கள் அடைய வேண்டுமானால் நீங்கள் யாவரும் முதல்தரத்தில் சித்தி அடைய வேண்டும். அப்பொழுது யுத்தம் ஆரம்பமாகும். தொடர்ந்தும் அவர்களுள் முரண்பாடு இருக்கும். எங்கே பார்த்தாலும் அவர்கள் யுத்தம் செய்வதற்கு ஆயத்தம் செய்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியும். அவர்கள் இந்த ஆயத்தங்களை எங்குமே செய்கிறார்கள். தெய்வீகக் காட்சிகள் மூலம் எவற்றைப் பார்த்தீர்களோ அவை எல்லாவற்றையும் உங்கள் பௌதீகக் கண்களால் பார்ப்பீர்கள். நீங்கள் ஸ்தாபனையின் காட்சிகளைப் பார்த்தீர்கள் பின்னர் இராச்சியத்தையும் நடைமுறையில் பார்ப்பீர்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். இது ஒரு பழைய சரீரம். யோகத்தினால் ஆத்மா தூய்மை அடைவார். பின்னர் நீங்கள் இந்தப் பழைய சரீரத்தை விட்டு விடுவீர்கள். 84 பிறவிச் சக்கரம் இப்பொழுது முடிவிற்கு வருகிறது. பின்னர் நீங்கள் யாவரும் புதிய சரீரத்தைப் பெறுவீர்கள். இவையெல்லாம் புரிந்து கொள்வதற்கு மிக இலகுவான விடயங்கள். கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் நிச்சயமாக வரும் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த முடியும். எண்ணற்ற சமயங்கள் நிச்சயமாக அழிக்கப்படும். பின்னர் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிப்பதற்குத் தந்தை நிச்சயமாக வர வேண்டும்;. நீங்கள் தேவர்களாகுவதற்காகவே இப்பொழுது பிராமணர்களாகி விட்டீர்கள். இவர்கள் வேறெவருமாக இருக்க முடியாது. நீங்கள் இப்பொழுது சிவபாபாவிற்கு உரியவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சிவபாபா உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கிறார். பாரதம் ஆஸ்தியைப் பெற்று விட்டது. என்பதே சிவஜெயந்தி என்பதன் அர்த்தமாகும். சிவபாபா வந்தார், அவர் வந்ததும் என்ன செய்தார்? இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் தங்கள் சமயங்களை ஸ்தாபித்தார்கள். தந்தை வந்ததும் எதைச் செய்தார்? அவர் நிச்சயமாகச் சுவர்க்கத்தை ஸ்தாபித்தார். அவர் எப்படி ஸ்தாபனையை நடத்தினார் என்பதும், ஸ்தாபனை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதும் உங்களுக்குப் புரியும். பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் இவை யாவற்றையும் மறந்து விடுவீர்கள். நீங்கள் 21 பிறவிக்கான ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியும். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அங்கே, ஒருவர் தந்தை என்றும், மற்றவர் குழந்தை என்றும் அவர்கள் புரிந்து கொண்டாலும் அவர் பெறுகின்ற ஆஸ்தி இந்நேரத்தின் வெகுமதி என்பதை அவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் உங்கள் 21 பிறவிகளுக்கான ஓர் உண்மையான வருமானத்தை இந்நேரத்திலேயே சம்பாதிப்பதுடன், உங்கள் ஆஸ்தியையும் பெறுகிறீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டும். சதோபிரதானில் இருந்து நீங்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளின் ஊடாகச் செல்வீர்கள். இதனை நன்றாக நினைவு செய்வதால் நீங்கள்; அந்தச் சந்தோஷத்தை அடைவீர்கள். இதனை விளங்கப்படுத்துவதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகிறது. யாவற்றையும் விளங்கியதும் அவர்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். தாமாகவே நன்றாக விளங்கிக் கொண்ட குழந்தைகள் பின்னர் பலருக்கு விளங்கப்படுத்துவர். அவர்கள் தொடர்ந்தும் முட்களை மலர்களாக மாற்றுவர். இது ஓர் எல்லையற்ற கல்வியாகும். நீங்கள் ஓர் எல்லையற்ற ஆஸ்தியையும் பெறுகிறீர்கள். இங்கே எல்லையற்ற துறவறம் இருக்கிறது. வீட்டில் வசிக்கும் போது உங்கள் புத்தியிலிருந்து முழு இல்லறமுமே துறக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்தப் பழைய உலகம் அழிக்கப்படும் என்பது உங்களுக்குப் புரியும். இப்பொழுது நீங்கள் புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும். இதனாலேயே எல்லையற்ற துறவை மேற்கொள்ளுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. சந்நியாசிகளின் துறவு எல்லைக்குட்பட்டதும் அவர்களுடைய யோகம் ஹத்தயோகமும் ஆகும். இங்கே ஹத்த (பலவந்தம்) யோகம் என்ற கேள்விக்கே இடமில்லை. இது ஒரு கல்வி. இப்பாடசாலையில் நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாகுவதற்குக் கற்கின்றீர்கள். இந்த வாசகங்கள் கடவுளாகிய சிவனின் வாசகங்கள். அவை கடவுளாகிய கிருஷ்ணனின் வாசகங்களாக இருக்க முடியாது. கிருஷ்ணரினால் ஒருபோதும் புதிய உலகத்தை உருவாக்க முடியாது. அவரைத் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என அழைக்க முடியாது. அவர் ஒரு சுவர்க்க இளவரசன் என்றே அழைக்கப்படலாம். இவை யாவும் நீங்கள் புரிந்து கொண்டு கிரகிக்க வேண்டிய இனிமையான விடயங்களாகும். தெய்வீக நடத்தையும் தேவைப்படுகிறது. வதந்திகளை ஒருபோதும் செவிமடுக்க வேண்டாம். அதன்படி நடக்கவும் வேண்டாம். வியாசர் கூறிய விடயங்களை செவிமடுத்தும் உங்கள் நிலை எப்படியாகிவிட்டது எனப் பாருங்கள்! எவராவது ஞானத்தைத் தவிர வேறு எதையாவது உங்களுக்குக் கூறினால் அவர் உங்கள் எதிரி என விளங்கிக் கொள்ளுங்கள். அவர் உங்களைச் சீரழிந்த நிலைக்குத் தள்ளுகிறார். ஏனையோரின் கட்டளைகளை ஒருபோதும் பின்பற்ற வேண்டாம்! நீங்கள் உங்களுடைய அல்லது பிறருடைய கட்டளைகளைப் பின்பற்றினால் நீங்கள் மரணிக்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: பொய் கூறுபவர்கள் பலர் இருக்கிறார்கள். தந்தைக்கு மாத்திரம் செவிமடுங்கள். தீயதைக் கேட்காதீர்கள். தீயதைப் பார்க்காதீர்கள். பாப்தாதா மனிதர்களைத் தேவர்களாக்குவதற்கு வந்திருக்கிறார் ஆகவே ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இங்கே, தந்தையைப் போல, சந்தோஷக் கடலும் அன்புக் கடலும் ஆகுங்கள். தெய்வீகக் குணங்கள் யாவற்றையும் கிரகியுங்கள். ஒருவருக்கும் துன்பம் கொடுக்காதீர்கள்.
2. நீங்கள் கேட்கும் வதந்திகளை நம்பாதீர்கள். ஏனையோரது கட்டளைகளை ஒருபோதும் பின்பற்றாதீர்கள். தீயவற்றைக் கேட்காதீர்கள். தீயவற்றைப் பார்க்காதீர்கள்.ஆசீர்வாதம்:
வீணான எண்ணங்களில் இருந்து எப்பொழுதும் விடுபட்டிருந்து, சதா பிராமண வாழ்வின் பழக்க, வழக்கங்களுக்கு ஏற்ப வாழ்வீர்களாக.பிராமண பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தமது வாழ்வில் நடந்து கொள்பவர்கள் எப்பொழுதும் ஸ்ரீமத்தின் அறிவுறுத்தல்களை தமது விழிப்புணர்வில் வைத்திருப்பார்கள். அதன் பின்னர், நாள் முழுவதும் தமது தூய இல்லற செயற்பாடுகளில் மும்முரமாக இருக்கும் போது, அவர்களால் இராவணனின் எந்த வீணான எண்ணங்களினாலும் தாக்கப்பட முடியாது. தூய எண்ணங்களை கொண்டிருப்பது புத்தியின் செயற்பாடும், தந்தை உங்களுக்கு எதனை கூறியுள்ளாரோ அதனை பிறருக்கு கூறுவது குரலின் செயற்பாடும், ஒரு கர்மயோகியாக ஒவ்வொரு செயலையும் செய்வது சரீரத்தின் செயற்பாடும் ஆகும். இந்த செயற்பாட்டில் மும்முரமாக இருப்பவர்கள் வீணான எண்ணங்களில் இருந்து விடுபடுகின்றார்கள்.
சுலோகம்:
உங்களுடைய புதிய எண்ணங்களினால், புதிய உலகத்தினது பிரகாசமான காட்சியை கொடுங்கள்.