28.03.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    27.11.87     Om Shanti     Madhuban


எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே உண்மையான இராஜரிஷிகள்.


இன்று, பாப்தாதா இராஜரிஷிகள் அனைவரினதும் சபையைப் பார்க்கிறார். கல்பம் முழுவதிலும், அரசர்களின் சபையானது பல தடவைகள் இடம்பெறுகின்றன. ஆனால், இந்த இராஜ ரிஷிகளின் சபை, இந்தச் சங்கம யுகத்தில் மட்டுமே இடம்பெறுகிறது. நீங்கள் அரசர்கள். அதேவேளை நீங்கள் ரிஷிகளும் ஆவீர்கள். இந்த நேரத்தின் சபையின் இந்தச் சிறப்பியல்பானது நினைவுகூரப்படுகிறது. ஒருபுறம், உங்களிடம் இராச்சியம் உள்ளது. அதாவது, சகல பேறுகளுக்கான உரிமை உங்களிடம் உள்ளது. இன்னொருபுறம், நீங்கள் ரிஷிகள். அதாவது, நீங்கள் எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவத்தைக் கொண்டிருப்பவர்கள். ஒருபுறம், சகல பேறுகளுக்கான உரிமை இருக்கிறதென்ற போதை உங்களிடம் உள்ளது. இன்னொருபுறம், எல்லையற்ற ஆர்வமின்மை இருப்பதன் அலௌகீக போதை உங்களுக்கு உள்ளது. உங்களிடம் எந்தளவிற்கு மேன்மையான பாக்கியம் உள்ளதோ, அந்தளவிற்கு உங்களிடம் மேன்மையான துறவறம் இருக்கும். இரண்டினதும் சமநிலை காணப்படும். இதுவே ஓர் இராஜ ரிஷியாக இருத்தல் எனப்படுகிறது. இத்தகைய இராஜ ரிஷிக் குழந்தைகளின் சமநிலையை பாபா பார்த்தார். ஒருகணம், அந்த உரிமையுடையவராக இருக்கும் போதை உங்களிடம் உள்ளது. அடுத்தகணம், ஆர்வமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருக்கும் போதை உங்களிடம் உள்ளது. எந்தளவிற்கு உங்களால் இந்தப் பயிற்சியில் ஸ்திரமாக இருக்க முடியும்? அதாவது, எந்தளவிற்கு நீங்கள் இரண்டு ஸ்திதிகளையும் சமமாகப் பயிற்சி செய்கிறீர்கள்? பாபா இதைச் சோதித்தார். குழந்தைகள் எல்லோரும் தமது பயிற்சியில் வரிசைக்கிரமமாகவே இருக்கிறார்கள். எவ்வாறாயினும், காலத்திற்கேற்ப, உங்களால் எந்தளவிற்கு சாத்தியமோ, அந்தளவிற்கு இந்த இரண்டு ஸ்திதிகளையும் பயிற்சி செய்வதை நீங்கள் மேலும் அதிகரிக்க வேண்டும். எல்லையற்ற ஆர்வமின்மைக்கான மனோபாவத்தைக் கொண்டிருத்தல் என்பதன் அர்த்தம் என்ன? ஆர்வமின்மை என்றால் அப்பால் நகர்தல் என்று அர்த்தமல்ல. ஆனால், சகல பேறுகளையும் கொண்டிருக்கும் வேளையில், எந்தவொரு எல்லைக்குட்பட்ட கவர்ச்சிகளும் உங்களின் மனதை அல்லது புத்தியைக் கவரக்கூடாது. எல்லையற்றது என்றால், எல்லையற்ற முறையில் தந்தைக்குச் சமமானவராக, சம்பூரணமானவராகவும் முழுமையானவராகவும் ஆகுதல், உங்களின் புலன்களை ஆட்சி செய்பவராகவும், அத்துடன் உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் என்ற சூட்சுமமான சக்திகளில் ஓர் உரிமையைக் கொண்டிருப்பவராகவும் ஆகுதல் என்று அர்த்தம். உங்களில் எண்ணங்களிலேனும் எந்தவிதமான தங்கியிருத்தலும் இருக்கக்கூடாது. இதுவே ஓர் இராஜரிஷியாக இருத்தல், அதாவது, எல்லையற்ற விருப்பமின்மைக்கான மனோபாவத்தைக் கொண்டவராக இருத்தல், இலகுவாகவும் எப்போதும் சகல கவர்ச்சிகளில் இருந்தும், அதாவது, பழைய சரீரங்கள், சரீரங்களின் பழைய உலகம், எந்தவொரு புறநிலை மற்றும் எந்தவொரு பௌதீகமான உடமைகளில் இருந்தும், அப்பால் வெகு தொலைவில் இருத்தல் என்று அர்த்தம்.

எவ்வாறு விஞ்ஞான சக்தியால் உங்களைப் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் மேலே எடுத்துச் செல்ல முடியுமோ, அவ்வாறே, மௌன சக்தியும் உங்களை எல்லைக்குட்பட்ட கவர்ச்சிகளில் இருந்து அப்பால் எடுத்துச் செல்லும். இதுவே தந்தைக்குச் சமமாக இருக்கும் சம்பூரணமான, முழுமையான ஸ்திதி எனப்படுகிறது. எனவே, நீங்கள் இத்தகைய ஸ்திதியைப் பயிற்சி செய்கிறீர்களா? பௌதீக அங்கங்கள் மிகவும் வெளிப்படையானவை. எனவே, உங்களின் பௌதீக அங்கங்களை வென்றவர் ஆகுதல் இலகுவாகின்றது. எவ்வாறாயினும், உங்களின் சூட்சும சக்திகளான மனம், புத்தி, சம்ஸ்காரங்களை வெற்றி கொள்வதற்கு சூட்சுமமான பயிற்சி தேவைப்படுகிறது. நீங்கள் விரும்பும் நேரத்தில், எந்தவொரு எண்ணத்தை அல்லது சம்ஸ்காரத்தை வெளிப்படச் செய்வதே, சூட்சுமமான சக்திகளை வென்றவராக ஆகுதல் எனப்படுகிறது. அதாவது, ஓர் இராஜரிஷியின் ஸ்திதி எனப்படுகிறது. எவ்வாறு உங்களின் பௌதீக அங்கங்களுக்கு இதைச் செய், அதைச் செய்யாதே என நீங்கள் கட்டளை இடுகிறீர்களோ, ‘உங்கள் கைகளைக் கீழே கொண்டுவாருங்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள்’ எனக் கூறும்போது, கைகள் மேலே உயருகின்றன. அதேபோல், உங்களின் எண்ணங்களும் சம்ஸ்காரங்களும் தீர்மானிக்கும் சக்தியும், அதாவது புத்தியும் உங்களின் கட்டளைகளுக்கேற்ப செயல்பட வேண்டும். ஆத்மா, அதாவது, அரசன் மனதிற்கு, அதாவது, எண்ணத்தின் சக்திக்கு, உடனடியாக ஸ்திரமாகவும் ஒருமுகமாகவும் ஆகும்படி கட்டளை இடும்போது, ஓர் எண்ணத்தில் ஸ்திரமாகும்படி கட்டளை இடும்போது, அந்தக் கணத்தில் அந்த முறையில் அரசனின் கட்டளை பின்பற்றப்படும்போது, அதுவே இராச்சிய உரிமையைக் கொண்டிருப்பவரின் அடையாளமாகும். மூன்று, நான்கு நிமிடங்களுக்கு இதைப் பயிற்சி செய்த பின்னரே இந்தக் கட்டளைக்கு உங்களின் மனம் கீழ்ப்படிவதாக இருக்கக்கூடாது. அல்லது, ஸ்திரமாகவும் ஒருமுகமாகவும் ஆகுவதற்குப் பதிலாக, அனைத்திற்கும் முதலில் அது குழப்பத்திற்கு உள்ளாகிப் பின்னர் ஸ்திரமடைவதாக இருக்கக்கூடாது. இதை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? இதை உரிமை உடைய ஒருவர் என உங்களால் அழைக்கமுடியுமா? எனவே, இந்த முறையில் சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், உங்களுக்கு ஏற்கனவே கூறப்பட்டுள்ளது - இறுதிப்பேற்றின் நேரத்தில், இறுதி வேளையில், ஒரு விநாடிக்கான ஒரேயொரு கேள்வி மட்டுமே இருக்கும். இப்போது இந்தச் சூட்சுமமான சக்திகளில் உரிமையுள்ள பயிற்சி உங்களுக்கு இல்லாவிட்டால், அதாவது, அரசனான உங்களின் கட்டளைகளுக்கு உங்களின் மனம் ஒரு விநாடிக்குப் பதிலாக, மூன்று விநாடிகளின் பின்னர் கீழ்ப்படிந்தால், உங்களை இராச்சிய உரிமையுள்ளவர் என்று அழைக்க முடியுமா? அல்லது, நீங்கள் ஒரு விநாடிக்குரிய இறுதிப் பரீட்சையில் சித்தி எய்துவீர்களா? நீங்கள் எத்தனை மதிப்பெண்களைப் பெறுவீர்கள்?

அதேபோல், உங்களின் புத்தியின், அதாவது, உங்களின் தீர்மானிக்கும் சக்தியின் மீதும் உரிமையுடையவர் ஆகுங்கள். எனவே, ஒரு சூழ்நிலை நிகழும்போது, அந்தச் சூழ்நிலைக்கேற்ப அந்தக் கணத்தில், ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடியதாக இருப்பதே, உங்களின் புத்தியின் மீது ஓர் உரிமை உடையவராக இருத்தல் எனப்படுகிறது. அந்தச் சூழ்நிலை அல்லது அந்தக்கணம் கடந்து சென்றபின்னரே, அது நடந்திருக்கக்கூடாது என நீங்கள் தீர்மானிப்பதோ, நீங்கள் முன்னரே தீர்மானித்திருந்தால் அது இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என்றோ இருக்கக்கூடாது. ஆகவே, அந்த வேளையில் சரியான தீர்மானத்தை எடுக்கக்கூடியதாக இருப்பதே, இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டிருக்கும் ஓர் ஆத்மாவின் அடையாளமாகும். எனவே, நாள் முழுவதும், எந்தளவிற்கு உங்களிடம் இராச்சியத்திற்கான உரிமை உள்ளது, அதாவது, எந்தளவிற்கு உங்களின் சூட்சுமமான சக்திகளை உங்களின் கட்டளைகளுக்கேற்ப செயல்பட வைக்கிறீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும், உங்களின் பணியாளர்களின் சபையைக் கூட்டுங்கள். இந்தப் பணியாளர்கள், அதாவது, பௌதீக அங்கங்களும் சூட்சுமமான சக்திகளும், உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனவா இல்லையா எனச் சோதித்துப் பாருங்கள். இந்த நேரத்தில் இராச்சியதாரியாக இருப்பதன் சம்ஸ்காரங்கள், பல பிறவிகளுக்கு உங்களுக்கு இராச்சியத்திற்கான உரிமையுடையவராக ஆக்கும். உங்களுக்குப் புரிகிறதா? அதேபோல், உங்களின் சம்ஸ்காரங்கள் சிலவேளைகளில் உங்களை ஏமாற்றுகிறதா? உங்களின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்கள்: உங்களின் அநாதியான சம்ஸ்காரங்கள், தூய்மையான, மேன்மையான சம்ஸ்காரங்கள் ஆகும். ஆதி சம்ஸ்காரங்கள் என்றால், சகல நற்குணங்களினதும் சொரூபமாக இருத்தல், இராச்சியத்திற்கு உரிமையுள்ள ஒரு தேவாத்மாவாக இருத்தல், சகல பேறுகளினதும் சொரூபமாக இருத்தல் என்பவையாகும். நீங்கள் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுவதற்கு இந்த இயல்பான சம்ஸ்காரங்கள் உங்களுக்குத் தேவை. எனவே, உங்களின் சம்ஸ்காரங்களின் சக்தியின் மீது இராச்சிய அதிகாரியாக இருத்தல் என்றால், உங்களின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்கள் எப்போதும் வெளிப்பட்டு இருக்க வேண்டும். இவை உங்களின் இயல்பான சம்ஸ்காரங்களாக இருக்க வேண்டும். மத்திய காலத்திற்கான சம்ஸ்காரங்கள், அதாவது, துவாபர யுகத்தில் இருந்து ஏற்பட்ட சம்ஸ்காரங்கள் உங்களைத் தம்மை நோக்கி இழுப்பதாக இருக்கக்கூடாது. உங்களின் சம்ஸ்காரங்களின் கட்டாயத்திற்கு உள்ளாகாதீர்கள். உங்களின் பழைய சம்ஸ்காரங்களைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். உண்மையில், உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் என்பது, உங்களின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்களே ஆகும். ஏனையவை மத்திய காலத்திற்கு உரியவை. துவாபர யுகத்தில் ஏற்பட்ட சம்ஸ்காரங்கள். எனவே, உங்களின் பழைய சம்ஸ்காரங்கள், ஆரம்பகாலத்தைச் சேர்ந்தவையா அல்லது மத்திய காலத்தைச் சேர்ந்தவையா? எல்லைக்குட்பட்ட கவர்ச்சிக்குரிய எந்தவொரு சம்ஸ்காரமும் உங்களைக் கவர்ந்திழுத்தால், உங்களின் சம்ஸ்காரங்களில் உரிமையுள்ளவர் என உங்களை அழைக்க முடியுமா? உங்களின் இராச்சியத்திற்குள், ஒரு சக்தியோ அல்லது ஒரு பணியாளரோ, பௌதீக அங்கங்களில் ஒன்றோ, உங்களின் கட்டளைகளுக்கேற்ப நடக்காவிட்டால், உங்களின் இராச்சியத்தில் உங்களுக்கு முழு உரிமைகளும் உள்ளது எனக்கூற முடியுமா? நீங்களே ஓர் இராச்சியம், ஒரு மொழி, ஒரு தர்மம், ஒரே வழிகாட்டல் என்பதை ஸ்தாபிப்பவர்கள் என்ற சவாலைக் குழந்தைகளான நீங்கள் அனைவரும் விடுக்கிறீர்கள். பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளுமான நீங்கள் அனைவரும் இவ்வாறு சவால் விடுக்கிறீர்கள்தானே? எனவே, அது எப்போது ஸ்தாபிக்கப்படும்? அது எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படுமா? அந்த ஸ்தாபனைக்குக் கருவிகள் யார்? அது பிரம்மாவா அல்லது விஷ்ணுவா? பிரம்மாவின் மூலமே ஸ்தாபனை இடம்பெறுகிறது, இல்லையா? எங்கு பிரம்மா இருக்கிறாரோ, அங்கு அவருடன் பிராமணர்களும் இருக்கிறார்கள். எப்போது பிரம்மாவின் மூலம், அதாவது, பிராமணர்களின் மூலம் ஸ்தாபனை இடம்பெறும்? சங்கமயுகத்திலா அல்லது சத்தியயுகத்திலா? அங்கு, பராமரிப்பே நிகழும். பிரம்மா மற்றும் பிராமணர்களினூடான ஸ்தாபனை இப்போதே இடம்பெற வேண்டியுள்ளது. எனவே, அனைத்திற்கும் முதலில், ஓர் இராச்சியம், ஒரு தர்மம் (தாரணை), ஒரு வழிகாட்டல் என்பவை உங்களின் சொந்த இராச்சியத்தில் இருக்கிறதா எனப் பாருங்கள். உங்களின் ஒரு பௌதீக அங்கமேனும் மாயையின் வேறுபட்ட வழிகாட்டலின் கீழ் இருந்தால், அதை ஓர் இராச்சியம் அல்லது ஒரு வழிகாட்டல் என்று அழைக்க முடியாது. எனவே, அனைத்திற்கும் முதலில், நீங்கள் உங்களின் சொந்த இராச்சியம் மற்றும் உங்களின் சொந்த தாரணையின் அடிப்படையில் நீங்கள் ஓர் இராச்சியத்தை ஸ்தாபித்திருக்கிறீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். அல்லது, சிலவேளைகளில் சிம்மாசனத்தில் மாயை அமர்ந்து விடுகிறாளா? சிலவேளைகளில் நீங்கள் அதில் அமர்ந்திருக்கிறீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். உங்களின் சவாலை நடைமுறையில் செய்கிறீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். உங்களுக்கு அநாதியான சம்ஸ்காரங்கள் வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், அவற்றுக்குப் பதிலாக, மத்திய காலப்பகுதிக்கான சம்ஸ்காரங்கள் வெளிப்படுகின்றன. அவ்வாறாயின், அது உரிமையைக் கொண்டிருப்பது இல்லையல்லவா?

எனவே, ஓர் இராஜரிஷி என்றால், சுய இராச்சியத்தின் மீது உரிமையுள்ளவர் என்று அர்த்தம். நீங்கள் ஒரு ரிஷியாக இருந்தால், அதாவது, உங்களுக்குள் எல்லையற்ற விருப்பமின்மை என்ற மனோபாவத்தின் பயிற்சி இருந்தால், நீங்கள் எப்போதும், இலகுவாகவும் இராச்சிய உரிமையுடையவர் ஆகுவீர்கள். விருப்பமின்மை என்றால், எந்தவிதமான பற்றும் கிடையாது. தந்தைக்கான உங்களின் அன்பு நிலையானதாக இருக்கும். இந்த அன்பான சுபாவம், உங்களைப் பற்றற்றவராக ஆக்கும். தந்தையிடம் அன்பாக இருப்பதும், நீங்கள் செயலை ஆரம்பிக்க முன்னர் பற்றற்றவராக இருப்பதும், எல்லையற்ற துறவியாக இருத்தல் எனப்படுகிறது. உங்களுக்குத் தந்தையிடம் அன்பு இல்லாவிட்டால், உங்களால் பற்றற்றவராக ஆக முடியாது. அங்கு பற்றுதல் இருக்கும். தந்தையை நேசிப்பவர்களால் வேறு எவரையுமோ அல்லது எந்தவொரு சடப்பொருளையுமோ நேசிக்க முடியாது. அவர்கள் எப்போதும் கவர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டிருப்பார்கள். அதாவது, அவர்கள் எப்போதும் பற்றற்றவர்களாகவே இருப்பார்கள். இது எதனாலும் பாதிக்கப்படாத ஸ்திதி, எந்தவொரு எல்லைக்குட்பட்ட கவர்ச்சியின் எந்தவொரு சுவடும் உங்களைப் பாதிக்காத ஸ்திதி எனப்படுகிறது. நீங்கள் பாதிக்கப்படாமல் இருந்தவண்ணம் படைப்பையும் வசதிகளையும் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் இத்தகைய எல்லையற்ற விருப்பமின்மை உடையவர்களாக, இத்தகைய உண்மையான இராஜரிஷிகள் ஆகிவிட்டீர்களா? இப்போது ஒன்றோ அல்லது இரண்டோ பலவீனங்களே எஞ்சியுள்ளன, ஒரு சூட்சுமமான சக்தி அல்லது பௌதீக அங்கம் போதுமானளவு கட்டுப்பாட்டின் கீழ் இல்லை, ஆனால் எஞ்சியவை எல்லாம் நன்றாகவே உள்ளன என நினைக்காதீர்கள். ஏனென்றால், ஒரு பலவீனம் இருந்தாலும், அது மாயை உள்ளே வருவதற்கான வாசலாக (கேற்) அமைந்துவிடும். அது சிறிய வாசலோ அல்லது பெரிய வாசலோ, அது ஒரு வாசலே. வாசல் திறந்திருந்தால், எவ்வாறு உங்களால் மாயை வென்றவராகவும் உலகை வென்றவராகவும் ஆகமுடியும்?

ஒருபுறம், நீங்கள் ஓர் இராச்சியம் மற்றும் ஒரு தர்மத்தைக் கொண்ட, அழகான, பொன்னுலகத்தை அழைக்கிறீர்கள். ஆனால், அத்துடன்கூடவே, நீங்கள் பலவீனங்களையும், அதாவது, மாயையையும் அழைக்கிறீர்கள். ஆகவே, அதன் பெறுபேறு என்னவாக இருக்கும்? நீங்கள் ஒரு குழப்பமான நிலையில் இருப்பீர்கள். ஆகவே, ‘இன்னமும் சிறிது நேரம் எஞ்சியுள்ளது, என்னால் அதைப் பின்னர் செய்ய முடியும், இன்னமும் மற்றவர்களில் அதிகளவு பலவீனங்கள் உள்ளன, ஆனால், எனக்குள் இந்த ஒரு விடயம் மட்டுமே உள்ளது’ எனச் சிந்தித்து, இதை ஒரு சிறிய விடயமாகக் கருதாதீர்கள். மற்றவர்களைப் பார்க்கும்போது, நீங்கள் பின்னால் தங்கிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிரம்மாபாபாவைப் பாருங்கள் எனக் கூறப்படுகிறது. தந்தையைப் பின்பற்றுங்கள் எனக் கூறப்படுகிறது. அனைவருடனும் நிச்சயமாக அன்பாகவும் ஒத்துழைப்பவராகவும் இருங்கள். நிச்சயமாக நற்குணங்களை எடுத்துக் கொள்பவர்கள் ஆகுங்கள். ஆனால், தந்தையைப் பின்பற்றுங்கள். நீங்கள் பிரம்மாபாபாவின் இறுதி ஸ்திதியை, இராஜ ரிஷியின் ஸ்திதியை, குழந்தைகளிடம் மிகவும் அன்பாக இருப்பதைக் கண்டீர்கள். அவர்களை அவரின் முன்னால் பார்க்கும்போது, அந்தப் பற்றற்ற தன்மையையும் நீங்கள் கண்டீர்கள். நடைமுறையில் எல்லையற்ற விருப்பமின்மைக்கான ஸ்திதியையும் கண்டீர்கள். கர்ம வேதனைக்கூடாகச் சென்றபோதும், அவர் தனது பௌதீக அங்கங்களின் மீது உரிமை உடையவராக இருந்தார். அதாவது, அவர் ஓர் இராஜரிஷியாகி, முழுமை ஸ்திதியின் அனுபவத்தை வழங்கினார். இதனாலேயே, தந்தையைப் பின்பற்றும்படி உங்களுக்குக் கூறப்பட்டது. எனவே, எப்போதும் உங்களின் இராச்சிய உரிமையைச் சோதித்துப் பாருங்கள். அத்துடன், இராச்சியத்தில் உள்ள உங்களின் பணியாளர்கள் எவரும் உங்களை ஏமாற்றவில்லையே என்பதையும் சோதித்துப் பாருங்கள்.

இன்று, நீங்கள் அனைவரும் பல இடங்களில் இருந்து, ஓரிடத்தை வந்தடைந்துள்ளீர்கள். இது கடலினதும் நதிகளினதும் மேளா (சந்திப்பு) என்று அழைக்கப்படுகிறது. ஒரு மேளாவில், நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கிறீர்கள். அத்துடன் நீங்கள் அதிகளவு பொக்கிஷங்களையும் பெறுகிறீர்கள். இதனாலேயே, நீங்கள் அனைவரும் இந்த மேளாவிற்கு வந்துள்ளீர்கள். இதுவே இந்தப் பருவகாலத்தின் புதிய குழந்தைகளின் கடைசிக் குழுவாகும். பழையவர்களுக்கும் புதியவர்களுடன் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இயற்கையும் இன்னமும் அன்புடன் ஒத்துழைக்கிறது. எவ்வாறாயினும், அதை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால், இயற்கையும் புத்திசாலி ஆகிவிடும். அச்சா.

எப்போதும் இராஜரிஷிகளாக இருக்கும் எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், தங்களையே ஆளுகின்ற குழந்தைகளுக்கும், இராச்சியத்திற்கான உரிமையுள்ள, சதா வெற்றியாளர்களாகி, தடைகளற்ற இராச்சியத்தை ஆளும் குழந்தைகளுக்கும், எப்போதும் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருக்கும் ரிஷி குமார்கள், குமாரிகளுக்கும், எப்போதும் தந்தையிடம் அன்பானவர்களாகவும், செயல்களைச் செய்யும்போது பற்றற்றவர்களாக இருப்பவர்களுக்கும், இத்தகைய அன்பான, பற்றற்ற குழந்தைகளுக்கும், எப்போதும் தந்தை பிரம்மாவைப் பின்பற்றும் விசுவாசமான குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

1. நீங்கள் உங்களை எண்ணற்ற தடவைகள் வெற்றி பெற்ற ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? வெற்றியாளர் ஆகுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா அல்லது இலகுவாக இருக்கிறதா? எது உங்களுக்கு இலகுவாக இருக்கிறதோ, அதை உங்களால் எல்லா வேளையும் செய்ய முடியும். எது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதோ, அதை உங்களால் எல்லா வேளையும் செய்ய முடியாது. எண்ணற்ற தடவைகள் நீங்கள் ஏதாவது பணிகளைச் செய்திருந்தால், அது இயல்பாகவே இலகுவாகிவிடும். நீங்கள் ஒரு புதிய பணியைச் செய்யும்போது, முதலில் அது உங்களுக்குக் கஷ்டமாகவே இருக்கும். ஆனால், ஒருதடவை நீங்கள் அதைச் செய்துவிட்டால், அதே கஷ்டமான பணி பின்னர் இலகுவானதாகிவிடும். எனவே, நீங்கள் அனைவரும் இந்த ஒரு தடவை மட்டும் வெற்றியாளர்கள் இல்லை. ஆனால், நீங்கள் எண்ணற்ற தடவைகள் வெற்றியாளர்கள் ஆகியுள்ளீர்கள். எண்ணற்ற தடவைகள் வெற்றியாளர் ஆகுவதென்றால், எப்போதும் இலகுவாக வெற்றியை அனுபவம் செய்பவர் என்று அர்த்தம். இலகுவாக வெற்றி பெறுபவர்கள், ஒவ்வோர் அடியிலும், இந்தப் பணிகள் அனைத்தும் ஏற்கனவே நிறைவேறியுள்ளன, ஒவ்வோர் அடியிலும் ஏற்கனவே வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது என்பதை அனுபவம் செய்வார்கள். அது நிகழுமா இல்லையா என்ற எண்ணமேனும் இருக்கக்கூடாது. நீங்கள் எண்ணற்ற தடவைகள் வெற்றியாளர்கள் ஆகியுள்ளீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும்போது, அது நிகழுமா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. நம்பிக்கையின் அடையாளம், போதை. போதையின் அடையாளம், சந்தோஷம். போதையுடன் இருப்பவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள். எல்லைக்குட்பட்ட வெற்றியிலும் அதிகளவு சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகிறது. யாராவது ஏதாவதொன்றில் வெற்றி பெற்றதும், மேளதாளங்களுடன் இசை முழக்கப்படுகிறது. நம்பிக்கையும் போதையும் கொண்டிருப்பவர்கள் நிச்சயமாக சந்தோஷமாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் சந்தோஷத்தில் நடனம் ஆடுவார்கள். எவராலும் பௌதீகமாக நடனம் ஆடமுடியும். ஆனால் மனதில் நடனம் ஆடுவதென்றால் - நோயில் படுக்கையில் இருப்பவர்களால்கூட இந்த முறையில் நடனம் ஆடமுடியும். அது யாராக இருந்தாலும், நடனம் ஆடுவது அனைவருக்கும் இலகுவாக இருக்கும். ஏனென்றால், வெற்றியாளர் என்றால், சந்தோஷ மேளதாளங்கள் இயல்பாகவே ஒலிக்கும். பாண்ட் ஒன்று இசைக்கும்போது, உங்களின் பாதங்களும் இயல்பாகவே அதற்கேற்ப தட்ட ஆரம்பிக்கும். நடனம் ஆடத் தெரியாதவர்கள்கூட அமர்ந்திருந்தவண்ணம் நடனம் ஆடுவார்கள். அவர்களின் பாதங்களும் தோள்களும் அசையும். எனவே, நீங்கள் அனைவரும் எண்ணற்ற தடவைகள் வெற்றியாளர்கள் ஆகியுள்ளீர்கள். எப்போதும் இந்த சந்தோஷத்துடன் தொடர்ந்து முன்னேறுங்கள். உலகிலுள்ள அனைவருக்கும் சந்தோஷம் தேவைப்படுகிறது. அவர்களிடம் சகல பேறுகளும் இருந்தாலும், அவர்களுக்கு சந்தோஷப் பேறு இல்லை. ஆகவே, உலகிலுள்ள மக்களுக்குத் தேவையான அழியாத சந்தோஷத் தொடர்ந்து பகிர்ந்தளியுங்கள்.

2. உங்களைப் பாக்கியசாலியாகக் கருதியவண்ணம், ஒவ்வோர் அடியிலும் நீங்கள் உங்களின் மேன்மையான பாக்கியத்தை அனுபவம் செய்கிறீர்களா? ஏனென்றால், இந்த வேளையில், தந்தை பாக்கியத்தை அருள்பவராகி, உங்களுக்கு உங்களின் பாக்கியத்தை வழங்குவதற்காக வந்துள்ளார். பாக்கியத்தை அருள்பவர் பாக்கியத்தைப் பகிர்ந்தளிக்கிறார். பகிர்ந்தளிக்கும் வேளையில், அனைவரும் தாம் விரும்பிய அளவை எடுத்துக் கொள்ள முடியும். அனைவருக்கும் உரிமை உள்ளது. உங்கள் அனைவராலும் நீங்கள் விரும்பிய அளவைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே, இத்தகைய வேளையில், நீங்கள் எவ்வளவு பாக்கியத்தை உருவாக்கியுள்ளீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், இப்போதில்லையேல், எப்போதும் இல்லை. இதனாலேயே, தந்தை குழந்தைகள் அனைவருக்கும் ஒவ்வோர் அடியிலும் இந்தப் பாக்கிய ரேகையை வரைவதற்கான பேனாவை வழங்கியுள்ளார். உங்களின் கையில் பேனா உள்ளது. நீங்கள் விரும்பிய அளவு நீண்ட கோட்டை வரைவதற்கான முழு அனுமதியும் உங்களுக்கு உள்ளது. இது அத்தகையதோர் அற்புதமான வாய்ப்பாகும். எனவே, நீங்கள் சதா இந்தப் பாக்கிய நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கேற்ப அந்தளவைச் சேமிக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் அதிகளவில் செய்ய விரும்புகிறீர்கள், ஆனால் உங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை, நீங்கள் அதிகளவில் செய்ய விரும்புகிறீர்கள், ஆனால் நீங்கள் இந்தளவை மட்டுமே செய்தீர்கள் என்பதாக இல்லையல்லவா? உங்களைப் பற்றிய இந்த முறைப்பாடு இருக்கக்கூடாது. உங்களுக்குப் புரிகிறதா? ஆகவே, சதா உங்களின் பாக்கிய ரேகையைத் தொடர்ந்து உயர்த்துங்கள். அத்துடன் தொடர்ந்து மற்றவர்களையும் இந்த மேன்மையான பாக்கியத்தை இனங்காணச் செய்யுங்கள். ‘ஆஹா, எனது மேன்மையான பாக்கியமே!’ சதா இந்த சந்தோஷத்தின் பாடல்களைத் தொடர்ந்து பாடுங்கள்.

3. நீங்கள் எப்போதும் உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகளான மேன்மையான ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? சுயதரிசனச் சக்கரமே உங்களை மாயையின் சுழற்சிகள் அனைத்திலிருந்தும் விடுவிக்கும். சுயதரிசனச் சக்கரம், உங்களின் இராச்சிய பாக்கியத்தின் உரிமையை நீங்கள் பெற்று, உலகை ஆள்பவராக ஆக்கும். இந்த சங்கம யுகத்தில் மட்டுமே நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தின் ஞானத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் பிராமண ஆத்மாக்கள். அதனால் நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள். பிராமணர்கள் எப்போதும் உச்சிக்குடுமியாகக் காட்டப்பட்டுள்ளார்கள். உச்சிக்குடுமி என்றால் அதியுயர்ந்தவர்கள் என்று அர்த்தம். பிராமணர்கள் என்றால், எப்போதும் மேன்மையான செயல்களைச் செய்பவர்கள் என்று அர்த்தம். பிராமணர்கள் என்றால், எப்போதும் மேன்மையான தர்மத்தை, தாரணையைக் கொண்டிருப்பவர்கள் என்று அர்த்தம். நீங்கள் இத்தகைய பிராமணர்கள் ஆகிவிட்டீர்களா? பெயரளவில் மட்டும் பிராமணர்கள் இல்லை. ஆனால், உங்களின் செயல்களிலும் பிராமணர்கள். ஏனென்றால், பிராமணர்கள் இப்போது இறுதியிலும் அதிகளவில் நினைவு செய்யப்படுகிறார்கள். உண்மையான பிராமணர்களான உங்களின் ஞாபகார்த்தம் இன்றும் தொடர்கிறது. ஒரு மேன்மையான பணியைச் செய்யும்போது, மக்கள் ஒரு பிராமணப் பூசாரியையே அழைக்கிறார்கள். ஏனென்றால், பிராமணர்கள் மட்டுமே அந்தளவு மேன்மையானவர்கள். எனவே, எந்த வேளையில் நீங்கள் மிக மேன்மையானவர்கள் ஆகினீர்கள்? நீங்கள் இப்போதே இவ்வாறு ஆகுகிறீர்கள். இதனாலேயே, இப்போதும், மேன்மையான பணியின் ஞாபகார்த்தம் தொடர்கிறது. நீங்கள் மேன்மையான பிராமணர்கள், சுயதரிசனச் சக்கரதாரிகள், ஒவ்வோர் எண்ணமும், வார்த்தையும் செயலும் மேன்மையானதாக இருப்பவர்கள் என்ற விழிப்புணர்வில் எப்போதும் இருங்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் வழிபாட்டை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருப்பதன் மூலமும், உங்களின் ஒவ்வொரு செயலையும் பூஜிக்கத்தகுதிவாய்ந்ததாக ஆக்குவதன் மூலமும் பரம பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர் ஆகுவீர்களாக.

குழந்தைகளான உங்களின் ஒவ்வொரு சக்தியும் தேவர்களின் ரூபத்தில் பூஜிக்கப்படுகின்றன: சூரிய தேவன், வாயுதேவன், பூமாதேவி. அதேபோல், பயமற்றிருக்கும் சக்தியானது காளி தேவியின் ரூபத்தில் பூஜிக்கப்படுகிறது. முகங்கொடுக்கும் சக்தியானது துர்க்காதேவியின் ரூபத்தில் பூஜிக்கப்படுகிறது. திருப்தியாக இருந்து, மற்றவர்களைத் திருப்திப்படுத்தும் சக்தியானது, சந்தோஷிமா தேவியின் ரூபத்தில் பூஜிக்கப்படுகிறது. காற்றைப் போல் இலேசாக இருக்கும் சக்தியானது, வாயுவின் மகனாகப் (ஹனுமான்) பூஜிக்கப்படுகிறது. எனவே, உங்களின் இந்த வழிபாட்டை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, உங்களின் ஒவ்வொரு செயலையும் பூஜிக்கத்தகுதிவாய்ந்ததாக ஆக்குங்கள். அப்போது நீங்கள் பரம பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
வாழ்க்கையில் திருப்தியினதும் இலேசான தன்மையினதும் சமநிலையைக் கொண்டிருத்தலே, அனைத்திலும் மிகப்பெரிய சிறப்பியல்பாகும்.