18.03.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நினைவில் நிலைத்திருந்து, ஏனையோரையும் நினைவில் நிலைத்திருக்கும் பயிற்சியைச் செய்ய ஊக்கமளியுங்கள். யோகத்தைக் கொண்டு நடாத்துபவர்களின் புத்தி வேறு எங்கும் அலைபாயக்கூடாது.

கேள்வி:
எந்தக் குழந்தைகளுக்கு மிகப்பெரிய பொறுப்புள்ளது? அவர்கள் நிச்சயமாகக் கவனஞ்செலுத்த வேண்டிய விடயம் என்ன?

பதில்:
கருவி ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கும், மற்றவர்களுக்காக யோகத்தைக் கொண்டு நடாத்துபவர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்புள்ளது. யோகத்தைக் கொண்டு நடாத்தும் போது, உங்களின் புத்தி வேறு எங்காவது அலைபாய்ந்தால், நீங்கள் சேவை செய்வதற்குப் பதிலாக அவச்சேவையே செய்கின்றீர்கள். இதனாலேயே நீங்கள் புண்ணியச் செயல்கள் செய்வதில் மாத்திரமே கவனஞ் செலுத்த வேண்டும்.

பாடல்:
ஓம் நமசிவாய….

ஓம் சாந்தி.
தந்தை இங்கேயிருந்து முதலில் உங்களுடைய இலக்கில் உங்களை ஸ்திரப்படுத்துவதற்காக குழந்தைகளாகிய உங்களுக்கு திருஷ்டி கொடுக்கின்றார். எவ்வாறு நான் சிவபாபாவின் நினைவில் நிலைத்திருக்கின்றேனோ, அதேபோன்று நீங்களும் சிவபாபாவின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். கேள்வி எழுகின்றது: உங்களுக்கு முன்னர் அமர்ந்து இருந்து யோகத்தை கொண்டு நடாத்துபவர்கள் தொடர்ச்சியாக சிவபாபாவின் நினைவில் நிலைத்திருக்கின்றார்களா, அதனால் மற்றவர்களும் அந்தக் கவர்ச்சியை உணர்வார்களா? நினைவில் நிலைத்திருப்பதனால் நீங்கள் மிகவும் அமைதி நிறைந்தவர்களாக இருப்பீர்கள். நீங்கள் சரீரமற்றவர்களாக இருந்து, சிவபாபாவின் நினைவில் நிலைத்திருந்தால், உங்களால் ஏனையோரையும் அமைதிக்கு எடுத்துச்செல்ல முடியும். ஏனெனில் நீங்கள் அங்கே ஆசிரியராக அமர்ந்திருக்கின்றீர்கள். ஆசிரியர் சரியான நினைவில் நிலைத்திருக்காவிடில் ஏனையோராலும் நினைவில் நிலைத்திருக்க முடியாது. முதலில் நீங்கள் யாருடைய காதலியாக இருக்கின்றீர்களோ, அந்த அன்பிற்குரியவரின் நினைவில் நிலைத்திருக்கின்றீர்களா என சோதித்துப் பாருங்கள் ஒவ்வொருவரும் இதை உங்களுக்காகவே கேட்கவேண்டும். புத்தி வேறு திசைகளில் சென்றால், நீங்கள் சரீரஉணர்வுடையவராகினால், அங்கே சேவை செய்வதற்காக அமர்ந்திருக்காது, அவச்சேவையே செய்கின்றீர்கள். இது விளங்கிக்கொள்ளப்படவேண்டிய விடயமாகும். நீங்கள் சேவை செய்யாது வீணாக அமர்ந்திருந்தால் இழப்பையே ஏற்படுத்துகின்றீர்கள். ஆசிரியரின் புத்தியின் யோகம் எங்கேயாவது அலைபாயும் போது, எவ்வாறு அவரால் உதவமுடியும்? ஆசிரியர்களாக இங்கு அமர்ந்திருப்பவர்கள் தங்களையே கேட்கவேண்டும். நான் புண்ணியச் செயல்கள் செய்கின்றேனா? நீங்கள் பாவமான செயல்கள் எதனையும் செய்தால், அது சீரழிவுக்கு இட்டுச்சென்று, பின்னர் அந்தஸ்தும் அழிக்கப்படுகின்றது. நீங்கள் அவ்வாறானவர்களை கதியில் அமர்த்தும்போது, நீங்களும் அதற்குப் பொறுப்பாளியாவீர்கள். சிவபாபா அனைவரையும் அறிவார். இந்த பாபாவும் அனைவரது ஸ்திதியையும் அறிவார். சிவபாபா கூறுகின்றார்: அவ்வாறானவர்கள் இங்கே ஆசரியர்களாக இருக்கின்றார்கள் இருந்தும் அவர்களது புத்தியின் யோகம் அலைபாய்கின்றது. எவ்வாறு அவர்களால் மற்றவர்களுக்கு உதவமுடியும்? பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் கருவிகளாகியுள்ளீர்கள். சிவபாபாவுக்குச் சொந்தமாகி, அவரிடமிருந்து ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். பாபா கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! நீங்கள் இங்கே ஆசிரியராக அமர்ந்திருக்கும்போது, அந்த ஸ்திதியில் மிகநன்றாக அமர்ந்திருங்கள். உண்மையில் அனைவரும் தந்தையையே நினைவு செய்ய வேண்டும். மாணவர்களால் தங்களுடைய சொந்த நிலையை புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் சித்தியடைவார்களா இல்லையா என்பதைக் கூறமுடியும். அவர்களுடைய ஆசிரியரும் அதை அறிவார். பிரத்தியேகமான ஆசிரியரும் அதை அறிவார். அந்தக்கல்வியில் எவராவது விரும்பினால் அவர்களால் விசேடமான ஆசிரியரை நியமிக்க முடியும். இங்கே சிலர் கூறுகின்றனர் எங்களுக்கு தியானத்தை கொண்டு நடாத்துங்கள்! எனவே நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கவேண்டும். தந்தையின் கட்டளையானது சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! நீங்கள் காதலிகள் நடக்கும் போதும், சுற்றித்திரியும் போதும் உங்களுடைய அன்பிற்கினியவரை நினைவு செய்யுங்கள். சந்நியாசிகள் பிரம்மதத்துவத்தை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் சென்று பிரம்மதத்துவத்துடன் இரண்டறக்கலந்து விடுவதாக நம்புகிறார்கள். அதிகளவில் நினைவில் நிலைத்திருப்பவர்கள் நல்ல ஸ்திதியைக் கொண்டிருப்பார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்று அல்லது வேறொரு சிறப்பியல்பைக் கொண்டிருக்கின்றீர்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள் எனக்கூறப்பட்டுள்ளது. அத்துடன் நீங்களும் நினைவில் நிலைத்திருக்கவேண்டும். பாபாவுடன் நேர்மையாக இருப்பவர்கள் சிலர் இருக்கின்றனர். ஏனையோர் நேர்மையற்றவர்களாவர். மிகுந்த கஷ்டத்துடனே அவர்கள் தொடர்ச்சியான நினைவில் இருக்கின்றனர். சிலர் தந்தையுடன் முழுமையாக நேர்மையுடன் உள்ளனர். இந்த பாபாவும் குழந்தைகளாகிய உங்களுக்கு அவரது அனுபவத்தை கூறுகின்றார். நான் சிறிதுநேரம் நினைவில் நிலைத்திருந்து பின்னர் அவரை மறந்து விடுகிறேன். இது அவருக்குப் பல சுமைகள் இருந்ததாலாகும். பல குழந்தைகள் இருக்கின்றார்கள். சிவபாபாவா அல்லது பிரம்மபாபாவா இந்த முரளியை நடத்துகின்றார்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொள்ளமாட்டீர்கள். ஏனெனில் இருவரும் ஒன்றாகவே உள்ளனர். இவர் கூறுகின்றார்: நானும் சிவபாபாவை நினைவு செய்கின்றேன். இந்த பாபாவும் குழந்தைகளாகிய உங்களுக்கு தியானத்தை நடாத்துகின்றார். அவர் இங்கே அமர்ந்திருக்கும் போது, எவ்வாறு மிகநல்ல மயான அமைதி நிலவுவதை உங்களால் காணமுடியும். பலரும் அதற்குள் ஈர்க்கப்பட்டார்கள். அவர் அனைவரதும் தந்தையாவார்! அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள்! பண்டிதர் போன்றல்லாது நீங்களும் நினைவில் நிலைத்திருக்கவேண்டும். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காதுவிடின், கடைசியில் தோல்வியடைவீர்கள். பாபாவும், மம்மாவும் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், மணிமாலை இன்னமும் உருவாக்கப்படவில்லை. இது வரைக்கும் ஒரு மணிகூட முழுமையாக தயாராகவில்லை. அந்நாட்களில், குழந்தைகளை உயர்த்துவதற்காக ஒரு மணிமாலை உருவாக்கப்பட்டது, ஆனால் மாயை அவர்களில் பலரை முற்றாக முடித்துவிட்டதைக் காணமுடிந்தது. சேவையிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. ஆகையினால் உங்களுக்கு முன்னால் தியானத்தை மேற்கொள்ள அமர்பவர்கள், ஒரு நேர்மையான ஆசிரியராக அங்கு அமரவேண்டும் என புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் உங்களுடைய புத்தி எங்கும் அலைபாய்கின்றது என்றும், அதனால் நீங்கள் அங்கே அமர்வதற்கு தகுதியற்றவர் என்றும் கூறவேண்டும். நீங்களே அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். எவரும் தாமாகவே வந்து அங்கே அமரலாம் என்றில்லை. ஏனையோருக்கு ஞானம் கொடுக்காது சிலர் இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் நினைவில் நிலைத்திருக்கின்றார்கள். எவ்வாறாயினும் இங்கே நீங்கள் இரண்டிலும் திறமைசாலிகளாக இருக்கவேண்டும். மணவாளன் மிகவும் அன்பானவர். அவர் அதிகளவில் நினைவு செய்யப்படவேண்டும். இதற்கு முயற்சி தேவையாகும். பிரஜைகளை உருவாக்குவது இலகுவாகும். ஒரு பணிப்பெண்ணாக அல்லது வேலைக்காராக ஆகுவதோ பெரிய விடயமல்ல, அவர்களால் ஞானப்பாதையைப் பின்பற்ற முடியாது. உதாரணமாக பண்டாரி (சமையலறையை பார்த்துக்கொள்பவர்) அனைவரையும் சந்தோஷமடையச் செய்வார். அவர் எவருக்கும் துன்பம் கொடுக்கமாட்டார். அனைவரும் அவரைப் புகழ்வார்கள். சிவபாபாவின் பண்டாரி அவ்வளவு அற்புதமானவர்! அவர் முதல் எண்ணிக்கையானவர்! அவர் பலரது இதயத்தை திருப்பதியடையச் செய்கின்றார். பாபாவும் குழந்தைகளின் இதயங்களைத் திருப்திப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்து, இந்தச் சக்கரத்தை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கே நன்மை கொண்டுவர வேண்டும். ஆழ்ந்த அன்புடன் உங்கள் எலும்புகளாலும் சேவை செய்யுங்கள். மிகவும் கருணை நிறைந்தவர்கள் ஆகுங்கள். மக்கள் முக்திக்காகவும் ஜீவன்முக்திக்காகவும் அதிகளவில் தடுமாறி அலைந்து திரிகின்றார்கள். எவருமே சற்கதிபற்றி அறியமாட்டார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே திரும்பவேண்டும்என நம்புகின்றார்கள். இது ஒரு நாடகம் ஆனால் தங்களால் அதில் உறுதியாக இருக்க முடியாது என அவர்கள் உணர்கின்றார்கள். பாருங்கள் சில இடங்களில் முஸ்லீம்களும் வகுப்புக்கு வருகின்றார்கள். நாங்கள் அநாதியாகவே தேவதர்மத்திற்குச் சொந்தமானவர்கள், பின்னர் இஸ்லாம் மத்திற்கு மாற்றப்பட்டோம் என அவர்கள் கூறுகின்றார்கள். நாங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளோம். சிந்தியிலும்கூட ஐந்து அல்லது ஆறு முஸ்லீம்கள் வந்தார்கள். அவர்கள் இப்பொழுதும் வருகின்றார்கள். இப்பொழுது அவர்கள் தொடர்ந்து வருகின்றார்களா அல்லது இல்லையா என நாங்கள் பார்க்கலாம். ஏனெனில் மாயையும் அனைவரையும் சோதிக்கின்றாள். சிலரால் இங்கு மிகவும் உறுதியாக இருக்க முடிகின்றது. மற்றவர்களால் இங்கே இருக்க முடியாதிருக்கின்றது. உண்மையில் பிராமண தர்மத்திற்குச் சொந்தமானவர்களும் 84 பிறவிகள் எடுத்தவர்களும் ஒருபோதும் தளம்பலடைய மாட்டார்கள். ஏனையோர் ஒரு காரணத்தால் அல்லது இன்னொன்றால் விட்டுச்செல்வார்கள். அதிகளவு சரீர உணர்வும் இருக்கின்றது. நீங்கள் பலருக்கு நன்மை பயக்க வேண்டும். இல்லையெனில் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள்? நீங்கள் உங்களுக்கு நன்மை பயப்பதற்காக வீட்டையும், குடும்பத்தையும் துறந்துள்ளீர்கள். நீங்கள் தந்தைக்கு பெரிதாக எந்த உதவியையும்; செய்வதில்லை. இப்பொழுது நீங்கள் தந்தைக்கு சொந்தமாகியுள்ளதால், இராச்சியத்துக்கான பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியவாறான சேவையைச் செய்யவேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கு சதா சந்தோஷமான இராச்சியத்தை பெறுகின்றீர்கள். நீங்கள் மாயையை வெற்றி கொள்ளவதுடன், இதைச் செய்வதற்கு மற்றவர்களுக்கும் கற்பிக்கவேண்டும். சிலர் தோல்வியடைகின்றார்கள். அவர்கள் இராச்சியத்தைக் கோருவது கஷ்டமானது என நினைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அந்த முறையில் சிந்திப்பது பலவீனமாகும். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்வது மிக இலகுவானது. குழந்தைகள் இராச்சியத்தைக் கோருவதற்கான தைரியத்தைக் கொண்டிராதபோது, அவர்கள் கோழைகள் போல அமர்ந்திருப்பர். அவர்கள் தாங்களும் அதை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் அதை எடுக்கவும் உதவிசெய்ய மாட்டார்கள். எனவே அதன் முடிவு என்னவாகும்? தந்தை கூறுகின்றார்: பகல், இரவாகச் சேவை செய்யுங்கள்! காங்கிரஸ் கட்சினரும் அதிகளவு முயற்சி செய்தார்கள். அவர்கள் அதிகளவு போராடினார்கள். ஏனெனில் அதன் பின்னரே அவர்களால் அந்நியரிடமிருந்து அரசாங்கத்தைக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது. நீங்கள் உங்களின் இராச்சியத்தை இராவணனிடமிருந்து திரும்பிப் பெறவேண்டும். அவன் அனைவரதும் எதிரியாவான். அனைவரும் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளவில்லை. எவருமே அவர்களுடைய இதயங்களில் உண்மையான தொடர்ச்சியான சந்தோஷத்தைக் கொண்டிருப்பதில்லை. சிவபாபா கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை சதா சந்தோஷம் உடையவர்களாக்க வந்துள்ளேன். இப்பொழுது ஸ்ரீமத்தைப்பின்பற்றி மேன்மையாவர்கள் ஆகுங்கள். பாரதமக்கள் அனைவரும் தங்களது சொந்த தர்மத்தை மறந்துவிட்டார்கள். அரசன், அரசி எவ்வாறோ பிரஜைகளும் அவ்வாறேயாவர். எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கின்றது என்ற புரிந்துணர்வு இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், நீங்கள் மறுபடியும் இதை மறக்கின்றீர்கள். அது உங்களின் புத்தியில் நிலைத்திருப்பதில்லை. பலர் பிராமணர்களாக ஆகியுள்ள போதிலும் சிலர் பலவீனமாக இருப்பதால், அவர்கள் தொடர்ந்தும் விகாரத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தாங்கள் பிரம்மகுமாரர்கள் எனக்கூறியபோதிலும், அவர்கள் உண்மையில் அவ்வாறில்லை. வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றித் தொடர்ந்தும் மற்றவர்களை தங்களுக்கு சமமாக ஆக்குபவர்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியும். தடைகளும் இருக்கும். அமிர்தத்தை அருந்துகின்ற போதும் அவர்கள் தடைகளையும் உருவாக்கின்றார்கள். இதுவும் நினைவு கூரப்படுகின்றது. எனவே, அவர்களது அந்தஸ்து என்னவாக இருக்கும்? சில குழந்தைகள் விகாரத்துக்காக தாக்கப்படுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள். நான் சிறிதளவு துன்பத்தை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. பாபா என்னுடைய அன்பிற்கினியவராவார். தாக்கப்படுகின்ற போதும், நான் சிவபாபாவை நினைவு செய்கின்றேன். அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கவேண்டும். நாங்கள் தந்தையிடமிருந்து எங்களது ஆஸ்தியைக் கோரிக்கொள்வதுடன், தொடர்ந்தும் மற்றவர்களையும் எங்களைப்போன்று ஆக்குகின்றோம். இந்த ஏணிப்படம் பாபாவின் புத்தியில் அதிகளவு இருக்கின்றது. அவர் அதற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார். ஞானத்தைக் கடைந்து அவ்வாறான படங்களை உருவாக்கிய குழந்தைகளுக்கு பாபா நன்றி தெரிவிக்கின்றார். அல்லது பாபா அந்தக் குழந்தையின் புத்தியைத் தொடுகின்றார் எனவும் கூறலாம். அவர் ஏணியின் மிக நல்ல படத்தை உருவாக்கியுள்ளார். நீங்கள் 84 பிறவிகளைப்புரிந்து கொள்வதனால், முழுஉலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியினைப் புரிந்து கொள்கின்றீர்கள். இது முதல்தரமான படமாகும். திரிமூர்த்தி சக்கரம் போன்ற படங்களிலும் பார்க்க மிகச்சிறந்த ஞானம் இந்தப்படத்திலுள்ளது. நாங்கள் இப்பொழுது மேலேறுகின்றோம். இது மிக இலகுவானது. பாபா வந்து உங்களுக்கு ஒரு உயர்த்தியைக் கொடுக்கின்றார். நாங்கள் அமைதியாகவே தந்தையிடமிருந்து எங்கள் ஆஸ்தியைக் கோருகின்றோம். ஏணிப்படத்தின் ஞானம் மிகவும் நல்லது. நீங்கள் இந்துக்களல்ல, தேவதர்மத்திற்குச் சொந்தமானவர்கள் என விளங்கப்படுத்துங்கள். தாங்கள் 84பிறவிகள் எடுக்கவில்லை என அவர்கள் கூறினால், ஓ ஏன் நீங்கள் 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள் என ஏன் நம்புகின்றீர்களில்லை எனக்கூறுங்கள். நீங்கள் மீண்டும் நினைவில் நிலைத்திருந்தால் மீண்டும் முதல் எண்ணிக்கையில் வரமுடியும். அவர்கள் உங்கள் குலத்திற்கு சொந்தமானவர்கள் எனில் அனைவரும் 84 பிறவிகள் எடுக்கின்றார்களா எனக் கேள்வி எழுப்பமாட்டார்கள். ஏன் நீங்கள் மிகவும் தாமதமாக வந்ததாக சிந்திக்கின்றீர்கள்? தந்தை குழந்தைகள் அனைவருக்கும் கூறுகின்றார்: பாரதமக்களாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களுடைய ஆஸ்தியைக் கோரி சுவர்க்கத்திற்குச் செல்லுங்கள். குழந்தைகளே யோகத்தில் நிலைத்திருந்து, ஏணிப்படத்தை நினைவு செய்யும் போது, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தில் நிலைத்திருப்பீர்கள். நாங்கள் 84 பிறவிகளை பூர்த்திசெய்துள்ளோம். நாங்கள் இப்பொழுது வீடு திரும்பவுள்ளோம். அதிகளவு சந்தோஷம் அனுபவஞ் செய்யப்படவேண்டும். சேவை செய்வதற்கும் உற்சாகம் இருக்கவேண்டும். ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்காக உங்களுக்குப் பலவழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏணியின் படத்தை விளங்கப்படுத்துங்கள். படங்கள் அனைத்துமே தேவைப்படுகின்றன. திரிமூர்த்தி படமும் தேவையாகும். பாபா கூறுகின்றார்: நீங்கள் சென்று இந்த ஞானத்தை எனது பக்தர்களுக்கும் கொடுக்கலாம். நீங்கள் அவர்களை ஆலயங்களில் கண்டு கொள்ளலாம். நீங்கள் ஏணிப்படத்தை ஆலயங்களிலும் விளங்கப்படுத்தலாம். நீங்கள் பாபாவின் அறிமுகத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து, அவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்பது நாள்முழுவதும் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நாளுக்கு நாள் அவர்களுடைய புத்தியின் பூட்டு தொடர்ந்தும் திறக்கப்படும். தங்களுடைய ஆஸ்தியைக் கோர இருப்பவர்கள் வருவார்கள். நாளுக்கு நாள், அவர்கள் தொடர்ந்தும் வந்து கற்பார்கள். சிலரின் மீது தீயகிரகணங்கள் இருப்பதால், பாபா அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. அவர்களின் மீது தீயசகுணம் இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. இதனாலேயே அவர்களால் சேவை செய்ய முடியாதிருக்கின்றது. முழுப்பொறுப்புமே குழந்தைகளாகிய உங்கள் மீதுள்ளது. உங்களுக்குச் சமமாகத் தொடர்ந்தும் பிராமணர்களை உருவாக்குங்கள். சேவையில் ஈடுபட்டிருப்பதால் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவஞ் செய்வதுடன், பலரும் நன்மையடைவார்கள். பாபா பம்பாயில் சேவை செய்கின்ற போது அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருந்தார். பல புதியவர்கள் வந்தார்கள். பாபா அங்கே சேவை செய்வதில் அதிகளவு ஆசையைக் கொண்டிருந்தார். அவ்வாறே குழந்தைகளாகிய நீங்களும் கருணை நிறைந்தவர்கள் ஆகவேண்டும். உங்களைச் சேவையில் ஈடுபடுத்துங்கள். நீங்கள் ஒருவரை உங்களுக்குச் சமமாக ஆக்கும்வரை, உணவை எடுக்கக்கூடாது என உங்கள் இதயத்தால் உணரவேண்டும். முதலில் புண்ணியம் செய்யுங்கள் முதலில் பாவஆத்மாவை புண்ணியத்மா ஆக்குங்கள் பின்னர் உங்கள் சப்பாத்தியை உண்ணுங்கள். எனவே சேவையில் மும்முரமாக ஈடுபடுங்கள். ஒருவருடைய வாழ்க்கையை பெறுமதியாக ஆக்கிய பின்னரே நீங்கள் சப்பாத்தியை உண்ணவேண்டும். நீங்கள் மற்றவர்களையும் உங்களைப்போன்று பிராமணர்களாக்க முயற்சி செய்யவேண்டும். குழந்தைகளுக்காக ஒரு சஞ்சிகை அச்சிடப்படப்படுகின்றது. ஆனால் பிரம்மகுமாரர்கள் அதை அந்தளவு வாசிப்பதில்லை. அவர்கள் அதை வாசிக்கத் தேவையில்லை என உணர்கிறார்கள். ஏனெனில் அது வெளியிலுள்ள மக்களுக்காக என நினைக்கிறார்கள். பாபா கூறுகின்றார்: ஒரு ஆசிரியரில்லாது வெளியிலுள்ள மக்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியாது. இது பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் வாசித்து உங்களைப் புத்துணர்வூட்டுவதற்காகும். எவ்வாறாயினும், அவர்கள் அதை வாசிப்பதில்லை. அவர்கள் சஞ்சிகை முழுவதையும் வாசித்தார்களா அந்த சஞ்சிகையிலிருந்து என்ன விளங்கிக் கொண்டார்கள், அது எந்தளவிற்குப் பொருத்தமானது என சகல நிலையங்களிலுமுள்ள குழந்தைகளிடம் கேட்கப்படுகின்றது. சஞ்சிகையைப் பிரசுரித்தவர்களுக்கு நன்றி கூறப்படவேண்டும். நீங்கள் மிக நல்ல சஞ்சிகைகளை பிரசுரித்துள்ளீர்கள் நாங்கள் உங்களுக்கு அதிகளவு நன்றி கூறுகின்றோம். சஞ்சிகையை வாசிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இது குழந்தைகளாகிய உங்களைப் புத்துணர்வூட்டுவதற்காகும். ஆனால் நீங்கள் வாசிப்பதில்லை. மிகவும் பிரபல்யமானவர்கள் அனைவராலும் அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் இன்ன இன்னாரை அவர்களுடைய இடங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு அனுப்புமாறு கேட்கின்றார்கள். எவ்வாறு சொற்பொழிவு ஆற்றுவது என்று அறியாததாலேயே அவர்கள் மற்றவர்களை வருமாறு அழைக்கின்றார்கள் என பாபா பின்னர் புரிந்து கொள்கின்றார். ஆகையினால் சேவாதாரிக் குழந்தைகளுக்கு அதிகளவு மதிப்பு கொடுக்கப்படவேண்டும் அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இராச்சியத்துக்கான பதக்கத்தைக் கோருவதற்கு அனைவரது இதயத்தையும் சந்தோஷப்படுத்துங்கள். மிக, மிக கருணை நிறைந்தவராகி, உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்மையளியுங்கள். உங்கள் எலும்புகளாலும் சேவை செய்யுங்கள்.

2. சரீர உணர்வுடையவராகி, அவச்சேவை செய்யாதீர்கள். சதா புண்ணியச்செயல்களைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உங்களைப் போன்று பிராமணர்களாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். சேவாதாரிகளுக்கு மதிப்புக் கொடுங்கள்.

ஆசீர்வாதம்:
நினைவும் சேவையும் என்ற இரட்டை பூட்டினால் சதா பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருப்பீர்களாக.

நாள் முழுவதும் உங்கள் எண்ணங்களில், வார்த்தைகளில், செயல்களில் தந்தையின் நினைவையும் சேவையையும் இருக்கட்டும். ஒவ்வொரு எண்ணத்திலும் தந்தையின் நினைவு இருக்கட்டும். உங்கள் வார்த்தைகளில், தந்தையிடம் நீங்கள் பெற்ற பொக்கிஷங்களை வழங்கி, உங்கள் செயல்களில் அவரின் தெய்வீக செயற்பாடுகளை வெளிப்படுத்துங்கள். இவ்வாறாக நீங்கள் சதா நினைவிலும் சேவையிலும் மும்;முரமாக இருக்கும் போது, இரட்டை பூட்டு போடப்படுவதனால் மாயையினால் என்றுமே வரமுடியாது. இந்த விழிப்புணர்வுடன் ஒரு பலமான பூட்டை போடுபவர்கள் சதா பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருப்பார்கள்.

சுலோகம்:
‘பாபா’ என்ற வார்த்தையின் வைர சாவியை உங்களுடன் வைத்திருந்தால், நீங்கள் தொடர்ந்தும் சகல பொக்கிஷங்களையும் அனுபவம் செய்வீர்கள்.