16.03.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சிவபாபாவினால் உருவாக்கப்பட்ட யாகத்தை நீங்களே பராமரிக்க வேண்டும். இதுவே சுய இராச்சியத்தை அடைவதற்கான எல்லையற்ற யாகமாகும்.

கேள்வி:
எக்குழந்தைகள் இந்த யாகத்தின் மீது மதிப்பு வைத்துள்ளனர்?

பதில்:
இந்த யாகத்தின் மூலமே தாங்கள் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாறுகின்றார்கள் எனும் அதன் விசேடத் தன்மையை அறிந்த குழந்தைகளே அதனைப் புரிந்துகொள்கிறார்கள். இதில் பழைய உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்படவுள்ளது. உங்கள் பழைய சரீரங்களும் அதனுள் அர்ப்பணிக்கப்பட வேண்டும். இந்த யாகத்திற்குத் தடைகள் ஏற்படும் வகையில் நியதிகளுக்கு முரணான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். இத்தகைய கவனம் செலுத்தும்பொழுதே, உங்களால் அதன் மீது மதிப்பைக்; கொண்டிருக்க முடியும்.

பாடல்:
அன்னையே, ஓ அன்னையே, நீங்களே உலகிற்குப் பாக்கியத்தை அருள்பவர்!

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். பாடலை இயற்றிய அந்த அப்பாவி மக்கள் அன்னையை அறியவும் மாட்டார்கள். அவர்கள் 'ஜெகதாம்பாள்" (உலக மாதா) என்ற பெயரைக் கேட்டுள்ளனர், ஆனால் அவர் யார், அவர் இங்கிருக்கும்பொழுது என்ன செய்தார் என்பவற்றைக் குழந்தைகளாகிய உங்களையன்றி வேறெவரும் அறியார். உலக மாதா இருப்பதால், நிச்சயமாகத் தந்தையும், புத்திரிகளும் புத்திரர்களும் இருக்க வேண்டும். ஜெகதாம்பாவிடம் (விக்கிரகம்) செல்பவர்கள் தங்கள் புத்தியில் இவ் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதில்லை; அவர்கள் விக்கிரகங்களையே வழிபடுகிறார்கள். அவர்கள் தேவதேவியரின் முன்னிலையில் சென்று, இரக்;கிறார்கள். இதுவே சுய இராச்சியத்தை அடைவதற்காக, குதிரை அர்ப்பணிக்கப்பட்ட, அழிவற்ற உருத்திர ஞான யாகம்; தாயும் தந்தையுமானவரே இதனைப் படைப்பவர். இது உங்களுக்கும் பொருந்துகின்றது. நீங்களும் இந்த யாகத்தை உருவாக்கியவர்கள். நீங்கள் இந்த யாகத்தை மிக நன்றாகப் பராமரிக்க வேண்டும். இந்த யாகத்திற்குப் பெருமளவு மதிப்பளிக்க வேண்டும். யாகம் மிகவும் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. இதுவே தலைமையகம், இதற்குப் பல கிளைகளும் உள்ளன. மம்மாவும், பாபாவும், குழந்தைகளாகிய நீங்களும் இந்த யாகத்தின் மூலம் எதிர்காலத்தில் வைரங்கள் போல் ஆகுகிறீர்கள். ஆகையினால் நீங்கள் அவ்வாறான யாகத்தை மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் பராமரிக்க வேண்டும்! அதன் மீது அதிகளவு அன்பு இருத்தல் வேண்டும். இது எங்கள் மம்மா ஜெகதாம்பாளின் யாகம் ஆகும். மம்மாவினதும், பாபாவினதும் யாகம் எங்களுடைய யாகமும் ஆகும். இந்த யாகம், பல குழந்தைகள் இங்கு வந்து தமது ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுவதற்குரிய வகையில் வளர்;க்கப்பட வேண்டும். சிலருக்கு நேரமின்மையால் அழைப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர், ஆகவே அழைப்புக்கள் ஏனையோருக்குக் கொடுக்கப்பட வேண்டும்;. சுய இராச்சியத்தை அடைவதற்கான ஞான யாகம் என்பதே அதன் பெயர். இந்த யாகத்தில் உங்களது பழைய சரீரங்களும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். தந்தைக்கு உரியவராகுங்கள்! யாகம் ஒரு கட்டடம் அல்ல் இது ஓர் எல்லையற்ற விடயம். உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்பட வேண்டிய யாகம் இதுவாகும். இந்த யாகத்திற்கு எவ்வளவு மதிப்பு உண்டென்பதை நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது காண்பீர்கள். இங்குள்ள பலர் அதற்கு எந்த மதிப்பும் அளிப்பதில்லை. இந்த யாகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பலர் உள்ளனர். குழந்தைகள் தொடர்ந்தும் பிறந்து கொண்டே இருக்கின்றார்கள். இந்த யாகத்திற்கு மிகுந்த மரியாதை செலுத்தப்பட வேண்டும், ஆனால்; பலர் அதற்கு முற்றிலும் மதிப்பு அளிப்பதில்லை. மனிதர்கள் சிப்பிகளிலிருந்து வைரங்களாகவும், சீரழிந்தவர்களிலிருந்து மேன்மையானவர்களாகவும் மாறுகின்ற பெரிய யாகம் இதுவாகும். இதனாலேயே பாபா கூறுகிறார்: நீங்கள் தொடர்ந்தும் யாகங்களை உருவாக்கலாம், அதன் மூலம் ஒருவரேனும் மேன்மையானவர் ஆகினால் அது அவருடைய பெரும் பாக்கியமாகும். நூறாயிரக்கணக்கான ஆலயங்கள் போன்றன உள்ளன. அங்கு எவரும் மேன்மையாகுவதில்லை. இங்கு உங்களுக்கு மூன்று சதுர அடி நிலமிருந்தாலே போதும். இங்கு வருபவர் எவரும் தன் வாழ்க்கையை முற்றுமுழுதாக மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த யாகத்திற்கு அதிகளவு கௌரவம் அளிக்கப்பட வேண்டும். பல குழந்தைகள் பாபாவிற்கு எழுதுகிறார்கள்: பாபா, நான் எனது வீட்டில் யாகம் ஒன்றினை ஆரம்பிக்கலாமா? பாபா பதிலளிக்கிறார்: அச்சா, குழந்தாய், நீங்கள் அதை யாக பூமி ஆக்கலாம்; எவராவது நன்மையடைவர்! இந்த யாகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகள் தொடர்ந்தும் ஏனையோருக்கு நன்மை செய்கின்ற, யாகபூமி இதுவேயாகும். அத்தகைய யாகத்திற்குப் பெருமளவு மதிப்பளிக்கப்பட வேண்டும், ஆனால் முழுமையான ஞானம் இல்லாத காரணத்தால் அவர்கள் இதற்கு அந்தளவு மதிப்பு அளிப்பதில்லை. இந்த யாகத்திற்குத் தடைகளை ஏற்படுத்துகின்ற பலர் உள்ளனர். இது சிவபாபாவின் யாகமாகும். அன்னையும், தந்தையும் சேர்ந்துள்ளனர். நீங்கள் இந்த மம்மாவிடமிருந்தோ பாபாவிடமிருந்தோ எதனையும் பெறுவதில்லை. எல்லையற்ற தந்தையிடமிருந்தே உங்களுக்கு அனைத்தும் கிடைக்கின்றன. அவர் ஒரேயொருவரே. மம்மாவும் பாபாவும் சரீரதாரிகள். அசரீரியானவர் தனக்கென ஒரு சரீரம் அற்றவர், எனவே தந்தை கூறுகின்றார்: சரீரதாரிக்கு அடிமையாக வேண்டாம்! சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். இந்த பாபாவும் என்னை நினைவுசெய்கின்றார். மக்கள் தங்களுக்குக் காட்டப்பட்ட இராமர், கிருஷ்ணர், பிரம்மா ஆகியோரின் படங்களை நினைவுசெய்கின்றார்கள். எவ்வாறாயினும், அது அவ்வாறல்ல! அங்கு எவரும் எவரையும் நினைவுசெய்வதில்லை. அவர்கள் தங்களுடைய வெகுமதியைப் பெற்றபின் எவரையேனும் நினைவுசெய்ய வேண்டிய அவசியம் என்ன? நாங்கள் தூய்மையற்றவர்களாகி விட்டதால், தூய்மையானவர்கள் ஆகுவதற்கு அவரை நினைவுசெய்தல் வேண்டும். இந்தப் புகழ் ஒரேயொருவருக்கே உரியது. அவராலேயே இவருக்குப் புகழ் இருக்கின்றது. நீங்கள் எந்தச் சரீரதாரியையும் நினைவுசெய்ய வேண்டியதில்லை. ஒரு சரீரதாரியின் மூலமே உங்களுக்கு அவரின் அறிமுகம் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் அவரையே நினைவுசெய்தல் வேண்டும். பாபாவும் ஒரு சரீரதாரியே. அவர் (சிவபாபா) அனைவரின் அறிமுகத்தையும் கொடுக்கின்றார். எவ்வாறாயினும் சிவபாபாவிடமிருந்து தூண்டுதலினால் தங்களால் ஞானத்தை நேரடியாகப் பெற முடியும் எனக் கூறுகின்ற பல விவேகமற்ற குழந்தைகள் உள்ளார்கள். அது அப்படியாயின், அவர் இந்த இரதத்தினுள் வருவதற்கு என்ன தேவையிருக்கிறது? பலர் இந்தச் சரீரதாரியுடன் எனக்கு என்ன தொடர்பு உள்ளதென நினைக்கிறார்கள். தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! என்னை நினைவுசெய்யுங்கள்! எவ்வாறாயினும் இதனை அவர், இவர் மூலமாகவே கூறுகின்றார், இல்லையா? நீங்கள் வரிசைக்கிரமமாக மதிப்பைப் பேணுகிறீர்கள். வரிசைக்கிரமமாக சிம்மாசனத்தில் அமரப் போகின்றவர்கள் மாத்திரமே மதிப்பைப் பேணுவார்கள். மம்மாவும், பாபாவுமே முதலாவதாக இராச்சியத்தின் சிம்மாசனத்தில் அமர்வார்கள், பின்னர் நீங்கள் அவர்களைத் தொடர்ந்து வர வேண்டும். பல பிரஜைகள் உருவாக்கப்பட வேண்டும். அந்தஸ்தும் மிகவும் உயர்ந்தது. இதில் அச்சம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஒருவர் முதல் முறையாக ஆகாய விமானத்தில் செல்லும்பொழுது, அச்சமடைகின்றார். சிலர் சந்திரனுக்கும் செல்கின்றார்கள். அது பயிற்சி பற்றிய விடயமாகும். எவ்வாறாயினும், அதனால் எந்த நன்மையும் இருக்கப் போவதில்லை. நீங்கள் மட்டுமே இதனைப் புரிந்துகொள்கிறீர்கள். அவர்கள் தங்களுடைய இராச்சியத்தைத் தாங்கள் சந்திரனில் உருவாக்குவார்களென எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும் அவ்வாறு எதுவும் நடக்கப் போவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் வீழ்ச்சியைப் புரிந்துகொள்கின்றீர்கள். குழந்தைகள் வீழ்ச்சியையும், எழுச்சியையும் புரிந்துகொள்கிறார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வாறு ஆட்சிசெய்தனர் எனக் காட்டுகின்ற படங்களும் உள்ளன. இன்று ஏழையான பாரதம் எவ்வாறுள்ளது எனப் பாருங்கள்; இது உண்மையானதொன்று! அந்த மக்கள் தாங்களே அவற்றை எழுதியுள்ளார்கள்; இது ஏணிப் படத்தில் எழுதப்பட வேண்டும். அங்கு மாளிகைகள் வைரங்களினால் பிரகாசித்துக் கொண்டிருக்கும். இங்கேயே சிப்பியினாலான உருவங்கள் கட்டடங்களில் பயன்படுத்தப்பட வேண்டும். முன்னர் அவர்களிடம் சிப்பிகள் இருந்தன. குருத்துவாராவில் (சீக்கிய ஆலயம்) அவர்கள் முன்னர் சிப்பிகளை வைத்திருப்பது வழக்கம். இப்பொழுது எவரும் பணத்தையேனும் வைப்பதில்லை. ஏணியின் படம் மிகவும் நல்லது. நீங்கள் அதில் பெருமளவை எழுதலாம். மம்மாவுடனும், பாபாவுடனும் குழந்தைகள் உள்ள படமும் இருக்க வேண்டும். பட உச்சியில் ஆத்மாக்களின் விருட்சமும் இருக்க வேண்டும். புதிய படங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படும். எவ்வாறு வீழ்ச்சியும், அதன்பின் எழுச்சியும் நடைபெறுகின்றன என்பதை விளங்கப்படுத்துவது இலகுவாகும். நாங்கள் அசரீரி உலகிற்குச் சென்று, பின்னர் சரீர உலகிற்கு வருவோம். இதனை விளங்கப்படுத்துவது இலகுவானது. ஒருவர் இதனைப் புரிந்துகொள்ளா விட்டால், அது அவரது பாக்கியத்தில் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். இந்த நாடகம் ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து பார்க்கப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் யாகத்திற்குப் பெருமளவு மரியாதையைக் கொடுக்க வேண்டும். இந்த யாகத்திலிருந்து ஒரு பைசாவினையேனும் (ரூபாவின் 1ஃ100 ஒரு பங்கு) எடுத்து, தாயினதோ அல்லது தந்தையினதோ அனுமதி இல்லாமல் வேறு எவருக்கும் கொடுப்பது பெரிய பாவம். நீங்கள் குழந்தைகள், உங்களுக்கு எந்த நேரத்தில் என்ன தேவையோ, அது கொடுக்கப்பட முடியும். உங்களின் தேவைக்கு அதிகமாக எதனையும் ஏன் நீங்கள் வைத்திருக்க வேண்டும்? நீங்கள் நினைக்கிறீர்கள்: ஒருவேளை, பின்னர் எனக்கு இது கிடைக்காது. எவ்வாறாயினும் அதை நீங்கள் வைத்திருப்பதால், உங்கள் மனச்சாட்சி உறுத்துகிறது, ஏனெனில் இது நியதிக்கு எதிரானது. எந்த நேரத்திலும் உங்களுக்கு வேண்டியதைப் பெற முடியும். தந்தை கூறுகிறார்: இறுதி நேரத்தில் எவரும் திடீரென இறக்கலாம். அந்நேரத்தில் நீங்கள் செய்த பாவங்களெல்லாம், அதாவது, அந்தக் குப்பைகள் அனைத்தும் இறுதியில் உங்கள் முன்னிலையில் தோன்றும். இதனாலேயே பாபா எப்பொழுதும் விளங்கப்படுத்துகிறார்: உங்களுக்குள் குழப்பம் எதுவும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். உங்கள் இதயம் சுத்தமாக இருக்கும்பொழுது இறுதி நேரத்தில் எதுவுமே உங்கள் முன் தோன்றாது. நீங்கள் தொடர்ந்தும் யாகத்திலிருந்து அனைத்தையும் பெறுகிறீர்கள். பெருமளவு பணமுள்ள பல குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கூறப்படுகிறது: தேவையேற்படும்பொழுது, நான்; அதைக் கேட்பேன். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா எப்பொழுது தேவையேற்படினும், நாங்கள் அதைத் தருவதற்காக இங்கிருக்கிறோம். அவர்கள் தூய்மையாக இல்லாமலும், உணவு, பானம் பற்றி முன்னெச்சரிக்கையாக எடுக்காமல் இருந்தாலும், தங்களுடைய செல்வம் முழுவதையும் தருவதாக வாக்களிக்கிறார்கள்: “பாபா, என்னிடம் பெருமளவு செல்வம் உள்ளது! அது வீணே உள்ளதுடன், திடீரெனத் தொலைந்தும் போகும். அதேநேரம் மற்றவர்கள் அதிலிருந்து உண்ண முடியும். ஆகவே உங்களுக்குத் தேவையேற்படும்பொழுது கேளுங்கள்!” பாபா கூறுகிறார்: நான் அதனைக் கொண்டு என்ன செய்வேன்? கட்டடங்கள் கட்ட வேண்டுமெனில் பணம் தானாகவே வருகிறது. பல குழந்தைகள் தங்களுடைய சொந்த வீடுகளில் இருக்கிறார்கள். அத்தகைய குழந்தைகளும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள். பிரஜைகளின் அந்தஸ்தும் குறைந்ததல்ல, பல செல்வந்தர்கள் அரசர்களை விடவும் அதிகச் செல்வந்தர்களாக உள்ளனர். இதனாலேயே அப்படிப்பட்ட எண்ணங்கள் உள்ளார இருக்கக்கூடாது. நீங்கள் ஒரு சத்தியத்தைச் செய்தீர்கள்: பாபா, நீங்கள் எங்களுக்கு எதை ஊட்டினாலும்! எவ்வாறாயினும் நீங்கள் அதனைப் பின்பற்றாவிடில், சீரழிவு ஏற்படுகிறது. தந்தை சற்கதியை அருள்வதற்கு வந்துள்ளார். நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறாவிடின், அது சீரழிவு எனப்படும். அங்கும் பல செல்வந்தர்கள் உள்ளனர். சிலர் உயர்ந்த அந்தஸ்தினையும், ஏனையோர் தாழ்ந்த அந்தஸ்தினையும் பெறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்திற்கேற்ப முயற்சி செய்ய வேண்டும். உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதால், நீங்கள் உங்களையே ஏமாற்றுகிறீர்கள். இதுவே சிவபாபாவினால் உருவாக்கப்பட்ட ஞான யாகம். இதுவே சுய இராச்சியத்தைப் பெறுவதற்குக் குதிரை அர்ப்பணிக்கப்படுகின்ற, அழிவற்ற உருத்திர ஞான யாகம் என அழைக்கப்படுகின்றது. சிவபாபா வந்து, உங்களுக்குச் சுய இராச்சியத்தைக் கொடுக்கின்றார். அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர்கள் பெயரைப் புகழடையச் செய்யாது விட்டால், அவர்களின் உதடுகளிலிருந்து நல்ல கருத்துக்கள் வெளியாக மாட்டாது, அவர்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்தவும் மாட்டார்கள். பெயரைப் புகழடையச் செய்வற்கு இன்னும் காலம் எடுக்கப் போகின்றது எனக் கூறப்படும். இதனாலேயே நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, முக்கிய கருத்துக்களை மறந்து விடுகிறீர்கள். 'இதுவே சுய இராச்சியத்தைப் பெறுவதற்காகக் குதிரை அர்ப்பணிக்கப்பட்ட, அழிவற்ற உருத்திர ஞான யாகம்” எனவும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் பலகையிலும் எழுத முடியும்: பழைய உலகம் முழுவதும் இந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்பட உள்ளது, இதற்கு, மகாபாரத யுத்தமும் சற்று முன்னாலேயே உள்ளது. விநாசம் நிகழும் முன்னர் நீங்கள் சுய இராச்சியம் எனும் அந்தஸ்தைப் பெற விரும்பினால், உள்ளே வந்து பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அறிவிப்புப் பலகையில் பெருமளவை எழுத முடியும். அதில் இலக்கும், இலட்சியமும் உள்ளடங்கி இருக்கின்றன. சுய இராச்சிய அந்தஸ்தை நீங்கள் பெறமுடியும் என்று கீழே எழுதுங்கள். வாசிக்கும் எவருமே புரிந்துகொள்வது சாத்தியப்படும் விதத்தில் எழுத்துக்கள் இயலுமான வரை தெளிவாக இருக்க வேண்டும். பாபா உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். அவ்வாறான பலகைகளை உருவாக்குங்கள்! நிச்சயமாக இந்த வார்த்தைகளை எழுதுங்கள்! நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது இந்த யாகத்தின் தாக்கம் பெருமளவில் இருக்கும். பல புயல்கள் ஏற்படும். 'சத்தியப் படகு தள்ளாடும், ஆனால் ஒருபொழுதும் மூழ்காது" எனக் கூறப்படுகிறது. நீங்கள் பாற்கடலுக்குச் செல்ல வேண்டும். ஆகையினால் உங்கள் இதயம் நச்சுக்கடலின் மீது பற்று வைக்கக்கூடாது. ஞானத்தைப் பெறாதவர்களைத் துரத்திச் செல்வதில் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். விளக்கம் மிக, மிக இலகுவானது. நீங்கள் பூஜிக்கப்படத் தகுதிவாய்ந்;த, தேவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது பூஜிப்பவர்களாகி விட்டீர்கள். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்தால், கலப்படம் அகற்றப்படும்; உங்கள் பாவங்களும் அழிக்கப்படும். வேறு வழிமுறை இல்லை. இதுவே சரியான வழிமுறை. எவ்வாறாயினும், பெருமளவு சரீர உணர்வு இருப்பதனால், நீங்கள் யோகத்தில் நிலைத்திருப்பதில்லை. சரீர உணர்வு முடிவடையும்பொழுது, உங்களால் யோகத்தில் நிலைத்திருக்கக் கூடியதாக இருக்கும். பின்னர் நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடைவீர்கள். இறுதியில் நீங்கள் எதனையும் நினைக்கக்கூடாது. சில குழந்தைகளுக்குக் குறித்த பொருட்களில் அதிகளவு பற்றுள்ளது, கேட்கவே வேண்டாம்; அவர்கள் சிவபாபாவை நினைவு செய்வதே இல்லை! அப்படிப்பட்ட தந்தையை ஒரு நோக்கத்துடன் நினைவுசெய்ய வேண்டும். 'உங்கள் கரங்கள் வேலையைச் செய்ய, உங்கள் இதயம் தந்தையை நினைவுசெய்யட்டும்!" என்று கூறப்பட்டுள்ளது. இவ்விதமாக, அரிதாகவே எவராலும் பாபாவை நினைவுசெய்ய இயலுகின்றது. அவர்களின் நடத்தையிலிருந்து உங்களால் அனைத்தையும் கூற முடியும். அவர்கள் யாகத்திற்கு மதிப்பு அளிப்பதில்லை. யாகம் மிகவும் நன்றாகப் பராமரிக்கப்பட வேண்டும். பாபாவைப் பூரிப்படையச் செய்வதே, பராமரித்தல் என்பதன் பொருளாகும். ஒவ்வொரு விடயத்திலும் நீங்கள் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். ஏழைகள் தங்களுடைய சதங்களையும் யாகத்திற்குக் கொடுப்பதனால், பல்கோடீஸ்வரர்கள் ஆகுகிறார்கள். தாய்மார்களிடம் எதுவும் இல்லாதிருப்பினும், இந்த யாகத்திற்கு ஓரிரு ரூபாய்களை அல்லது அரை ரூபாயைக் கொடுத்து, பல மில்லியன்களை உடையவர்கள் ஆகுகிறார்கள், ஏனெனில் அவர்கள் இதனைப் பெரும் அன்புடனும், பக்தி உணர்வுகளுடனும், சந்தோஷத்துடனும் கொண்டு வருகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு. நான் குழந்தைகளான உங்களுக்காக வந்திருக்கின்றேன். சிலர் அரை ரூபாயைக் கொண்டு வந்து கூறுகிறார்கள்: பாபா, எனது பெயரில் கட்டடத்திற்கு ஒரு செங்கல்லை வையுங்கள். அவர்கள் சிலசமயங்களில், இரு கைப்பிடியளவு தானியமும் கொண்டு வருகிறார்கள். பதிலாக அவர்கள் அதிகளவு பெறுகிறார்கள். ஒவ்வொரு தானியமும் ஒரு தங்கக் காசிற்குச் சமனாகுகிறது. நீங்கள் ஏழைகளுக்குத் தானம் கொடுக்க வேண்;டும் என்றில்லை. அம்மக்கள் ஏழைகளுக்கு நன்கொடை அளிக்கிறார்கள். உலகில் அவர்களைப் போல் பல ஏழைகள் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் இங்கு வந்து இருப்பதாயின் அவர்கள் இங்கிருப்பவர்களைக் குழப்புவார்கள். இந்த யாகத்திலே தங்களை அர்ப்பணிக்கலாமா எனப் பலர் கேட்கிறார்கள். எவ்வாறாயினும் அவர்களை மிகுந்த கவனத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் யாகத்தினுள் வந்த பின்னர் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. இந்த யாகத்திலே நீங்கள் மிகவும் தர்மாத்மாக்களாக வேண்டும். பெருமளவு எச்சரிக்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்தச் சரீரத்திற்கான ஜீவனோபாயத்தைக் கொடுக்கின்ற யாகத்திற்குப் பெருமளவு மதிப்பளிக்கப்பட வேண்டும். இந்த யாகத்திற்குக் கொடுக்கப்பட்ட பணத்தை எவருக்கும் கொடுப்பது பெரும் பாவமாகும். சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாறுவோருக்கும், கடவுளின் சேவையில் ஈடுபட்டுள்ளோருக்குமே இப்பணம் உரியது. எவ்வாறாயினும் பிறவிபிறவியாக ஏழைகளுக்;குத் தானம் அளிப்பதும், தர்மம் செய்வதும் இடம்பெறுகின்றன. கீழிறங்கும்பொழுது, நீங்கள் தொடர்ந்தும் பாவாத்மாக்கள் ஆகினீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்காகச் சிறு கிராமங்களிலும் கண்காட்சிகளை நடாத்துகிறீர்கள். ஒரேயொரு ஏழை மட்டுமே வெளிப்பட்டாலும், அதுவும் நன்மையானதே. அதில் ஒரு செலவும் இல்லை. இலக்ஷ்மியும் நாராயணனும் இராச்சியத்தைப் பெற்றார்கள். ஆனால் அவர்கள் என்ன செலவைச் செய்ய வேண்டியிருந்தது? எதுவுமே இல்லை! அவர்கள் உலக இராச்சியத்தைப் பெறுவதற்காக எதனையுமே செலவிடவில்லை. அம்மக்கள் தங்களுக்குள் அதிகம் சண்டையிடுகிறார்கள்! வெடிமருந்துகள் போன்றவற்றில் அவர்கள் அதிகம் செலவிடுகிறார்கள். இங்கு செலவு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒரு சிப்பியளவு கூட செலவு செய்யாமல் ஒரு விநாடியில் உலக இராச்சியத்தைப்; பெறுங்கள்! முதலில் அல்பாவையும் நினைவுசெய்யுங்கள், பின்னர் பீற்றாவாகிய, இராச்சியம் உங்களுடையதே. தந்தை கூறுகின்றார்: இயன்றளவு உண்மையான இதயங்களுடன் பிரபுவைப் பூரிப்படையச் செய்தால், நீங்கள் சத்திய பூமியின் அதிபதிகள் ஆகுவீர்கள். இங்கு பொய்மை தொடர முடியாது. நீங்கள் பாபாவை நினைவுசெய்தல் வேண்டும். 'எப்படியாயினும் நான் பாபாவின் குழந்தை" என்று எண்ண வேண்டாம். நினைவுசெய்வதற்குப் பெரும் முயற்சி தேவைப்படுகின்றது. பாவச்செயல் ஏதும் செய்தால் பெரும் இழப்பு ஏற்படுகிறது; உங்கள் புத்தியால் ஸ்திரமாக இருக்க முடியாதிருக்கும். பாபா இதில் அனுபவம் உள்ளவர். சில குழந்தைகள் தங்களை மிகவும் திறமைசாலிகள் என்று எண்ணுவதாக பாபா தொடர்ந்தும் உங்களுக்குக் கூறுகின்றார். எவ்வாறாயினும் பாபா கூறுகிறார்: பெரும் முயற்சி தேவைப்படுகிறது. மாயை பல தடைகளை ஏற்படுத்துகிறாள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த உருத்திர ஞான யாகத்தின் மீது பெருமளவு மரியாதை வைத்திருங்கள். யாகத்திற்காக மிகவும் தூய்மையான, சக்திநிறைந்த சூழலை உருவாக்குவதில் ஒத்துழையுங்கள். அதனைப் பெருமளவு அன்புடன் பராமரியுங்கள்.

2. உங்களுக்குள் எதனையும் மறைத்து வைத்திருக்காதீர்கள். உங்கள் இதயம் சுத்தமாக இருக்கும்பொழுது, உங்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன. இந்த யாகத்தின் ஒவ்வொரு சதமும் பெறுமதி வாய்ந்தது. ஆகவே ஒரு சிப்பியையேனும் வீணாக்காதீர்கள். ஒத்துழைத்து யாகத்தை வளரச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் காரணங்களைத் தீர்வுகளாக மாற்றி, ஒரு சக்தி சொரூபமாக சதா முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்களாக.

ஞானப் பாதையில், நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, மாயை மேலும் அதிகளவில் உங்களைப் பல்வேறு வழிகளிலும் பரீட்சிப்பதற்கு வருவாள். இப் பரீட்சைகள் உங்களை வீழச் செய்வதற்கு அல்லாமல், முன்னேறச் செய்வதற்கான வழிகளாகும். எவ்வாறாயினும், தீர்வுகளைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக, காரணங்களைப் பற்றிச் சிந்திப்பதால், உங்கள் நேரமும், சக்தியும் வீணாகும். காரணங்களைச்; சிந்திப்பதற்குப் பதிலாக, நீங்கள் தீர்வுகளைப் பற்றிச் சிந்தித்து, தந்தையின் நினைவைக் கொண்டிருக்கின்ற அன்பில் மூழ்கியிருந்தால், பின்னர் நீங்கள் ஒரு சக்தி சொரூபமாகவும், தடைகளிலிருந்து விடுபட்டவராகவும் ஆகுவீர்கள்.

சுலோகம்:
தனது பார்வை, மனோபாவம், விழிப்புணர்வின் சக்தி மூலம் அமைதியின் அனுபவத்தைக் கொடுப்பவரே, ஒரு மகாதானி ஆவார்.