20.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, மனிதர்கள் அனைவரையும் விழித்தெழச் செய்து, அவர்களுக்கு வழியைக் காண்பிப்பது உங்கள் கடமையாகும். எந்தளவிற்கு அதிகமாக ஆத்ம உணர்விலிருந்து தந்தையின் அறிமுகத்தை ஏனையோருக்கு நீங்கள் கொடுக்கிறீர்களோ அந்தளவிற்கு நன்மை உண்டு.கேள்வி:
எந்த ஒரு சிறப்பியல்பின் அடிப்படையில், செல்வந்தர்களிலும் பார்க்க, ஏழைக் குழந்தைகள் முன்னேறிச் செல்ல முடியும்;?பதில்:
ஏழைக் குழந்தைகள் தான, தர்மங்கள் செய்வதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஏழைகள் அதிக அன்புடன் பக்தி செய்கிறார்கள். ஏழைகளுக்கே காட்சிகளும் கிடைக்கின்றன, செல்வந்தர்களுக்குத் தமது செல்வத்தில் போதை உள்ளது. அவர்கள் அதிக பாவச்செயல்களைச் செய்வதனால், ஏழைக் குழந்தைகளினால் அவர்களிலும் பார்க்க முன்னேறிச் செல்ல முடியும்.
பாடல்:
ஓம் நமசிவாய....
ஓம் சாந்தி.
'நீங்களே தாயும் தந்தையும். நாங்கள் உங்கள் குழந்தைகள்";. நிச்சயமாக பரமாத்மா, பரமதந்தைக்கே இப்புகழ் பாடப்பட்டுள்ளது. அவரே படைப்பவர். ஆகையால் இதுவே அவரது தெளிவான புகழாகும். லௌகீகப் பெற்றோரே தமது குழந்தைகளை உருவாக்குபவர்கள்;. இந்த உலகிற்கு அப்பாற்பட்ட தந்தையோ படைப்பவர் என்று அழைக்கப்படுகிறார். அவர்கள் அவரின் புகழை அதிகம் பாடுகிறார்கள்: அவரே ஆதாரம், அவரே நண்பன்......அந்தளவுக்கு லௌகீகத் தந்தைக்குப் புகழ் இல்லை. பரமாத்மா பரமதந்தையின் புகழ் தனித்துவமானது. அவரே ஞானக்கடல் என்றும், முழு ஞானமும் நிறைந்தவர் என்றும் குழந்தைகள் புகழ் பாடுகிறார்கள். அவரிடம் முழு ஞானமும் உள்ளது. இது சரீர வாழ்வுக்கான கல்வி அறிவு இல்லை. அவரே ழுழு ஞானமும் நிறைந்த ஞானக்கடல் என அழைக்கப்படுகிறார். இது நிச்சயமாகவே ஆன்மீக அறிவிற்கான ஞானமாகும். எதைப் பற்றியது? எவ்வாறு சக்கரம் சுழல்கிறது என்பதும் ஞானமேயாகும், எனவே தந்தை அனைத்து ஞானத்தையும் கொண்டிருக்கின்றார். அவரே தூய்மையாக்குபவரான ஞானக்கடலாவார். கிருஷ்ணரைத் தூய்மை ஆக்குபவர் என்றோ அல்லது ஞானக்கடல் என்றோ அழைக்க முடியுhது. அவரது புகழ் முற்றிலும் தனித்துவமானது. இருவரும் பாரதவாசிகளே. சிவபாபாவும் பாரதத்தில் புகழப்படுகிறார். இங்குதான் மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் கிருஷ்ணனின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள். அவர்கள் கீதையின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள். இம்மூன்று பிறந்த நாட்களுமே பிரதானமானவை. இப்போது கேள்வி எழுகிறது: முதலில் யாருடைய பிறந்தநாள் வருகிறது? சிவனுடையதா அல்லது கிருஷ்ணருடையதா? மக்கள் தந்தையை முற்றாக மறந்துவிட்டார்கள். அவர்கள் கிருஷ்ணருடைய பிறந்தநாளை மிகுந்த அன்புடன் ஆடம்பரமாகக் கொண்டாடுகிறார்கள். எவருக்குமே சிவனின் பிறந்தநாளைப் பற்றி அதிகம் தெரியாது. அதனால் அதனை அவர்கள் புகழ்வதுமில்லை.. சிவன் வந்து என்ன செய்தார்? எவருக்குமே அவரது வாழ்க்கை வரலாறு தெரியாது. அவர்கள் கிருஷ்ணரைப் பற்றிப் பல விடயங்களை எழுதி இருக்கிறார்கள். அவர் கோபியரைக் கடத்திச் சென்றார். அவர் அதைச் செய்தார், இதைச் செய்தார்! கிருஷ்ணரின் தெய்வீக லீலைகளைப் பற்றி எழுதுவதற்கு அவர்களிடம் விஷேசமான சஞ்சிகை ஒன்றும்கூட உள்ளது. சிவனின் தெய்வீகச் செயல்களைப் பற்றி எதுவும் கிடையாது. கிருஷ்ணரது பிறந்தநாள் எப்போது? கீதையின் பிறந்தநாள் எப்போது? சிறிது வளர்ந்த பின்னரே கிருஷ்ணரால் ஞானத்தை உபதேசிக்க முடியும். குழந்தை கிருஷ்ணரை எவ்வாறு ஒரு கூடையில் வைத்து ஆற்றைக் கடந்து கொண்டு சென்றனர் என்பதைக் காட்டுகிறார்கள். அவர் இளைஞனாக இரதத்தில் நின்றவாறு சக்கரத்தைச் சுழற்றுகின்றார் என்றும் காட்டப்படுகிறது. அப்பொழுது அவருக்கு 16, 17 வயது இருந்திருக்கும். அவரின் ஏனைய படங்கள் அனைத்தும் அவரின் குழந்தைப் பருவத்திற்குரியது. எப்பொழுது அவர் கீதையை உபதேசித்;தார்? அவர் இன்னாரைக் கடத்தினார், இதனைச் செய்தார், அதனைச் செய்தார் என அவர்கள் கூறிய காலத்தில் கீதையை உபதேசித்திருக்க முடியாது. அந்த நேரத்தில் ஞானம் இருந்திருக்கும் எனக் கூறுவது சரியாகாது. அவர் முதிர்ச்சி அடையும் போதே ஞானத்தைக் கூறி இருக்க முடியும். அவர் கீதையைச் சில காலத்தின் பின்னரே உபதேசித்திருக்க முடியும். சிவன் என்ன செய்தார்? அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை! அவர்கள் அறியாமை எனும் தூக்கத்தில் உள்ளனர். தந்தை கூறுகிறார்: ஒருவரும் எனது வரலாற்றை அறியமாட்டார்கள். நான் என்ன செய்தேன்? நான் மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகிறேன். நான் வரும் பொழுது கீதையுடனேயே வருகிறேன். நான் ஒரு வயோதிப, சாதாரண, அனுபவமுள்ள இரதத்தினுள் பிரவேசிக்கின்றேன். பாரதத்திலேயே நீங்கள் சிவனின் பிறந்தநாளையும், கிருஷ்ணனின் பிறந்தநாளையும் கீதையின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறீர்கள். இவை மூன்றுமே பிரதானமானவை. இராமரின் பிறப்பும் பின்னரேயே நிகழ்கிறது. இந்நேரம் நடப்பவை அனைத்தும் பின்னர் கொண்டாடப்படுகின்றன. சத்தியயுகத்திலும் திரேதாயுகத்திலும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முதலியன எதுவும் இல்லை. சந்திரவம்சம் சூரிய வம்சத்தில் இருந்து தனது ஆஸ்தியைப் பெறுகிறது. அங்கு எவருக்கும் புகழ் இல்லை.. அவர்கள் அரசரின் முடிசூட்டு விழாவையே கொண்டாடுகிறார்கள். இந்நாட்களில் ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடுகிறார்கள். அது ஒரு சாதாரண விடயம். கிருஷ்ணர் பிறவி எடுத்து, வளர்ந்து பெரியவரானதும் இராச்சியத்தை ஆட்சி செய்தார். அதில் புகழ் என்ற கேள்விக்கே இடமில்லை. சத்திய, திரேதா யுகங்களில் இராச்சியத்தில் சந்தோஷம் நிலவியது. அந்த இராச்சியம் எப்பொழுது, எப்படி ஸ்தாபிக்கப்பட்டது? இவை குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளன. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகிறேன். கலியுக இறுதியில் உலகம் தூய்மையற்றதாகவும், சத்தியயுக ஆரம்பத்தில் உலகம் தூய்மையானதாகவும் இருக்கிறது. நானே குழந்தைகளாகிய உங்கள் தந்தையாக இருப்பதுடன் உங்களின் ஆஸ்தியையும் கொடுக்கிறேன். கடந்த கல்பத்திலும் நான் உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுத்தேன். இதனாலேயே நீ;ங்கள் கொண்டாடுகிறீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் பெயரை மறந்ததனால் கிருஷ்ணனின் பெயரைப் புகுத்தி விட்டீர்கள். சிவனே யாவரிலும் மேலானவர். அவரின் பிறந்தநாளின் பின்னரே சரீரங்களை உடைய மனிதர்களின் பிறந்தநாள் வர முடியும். உண்மையில் ஆத்மாக்கள் அனைவரும் மேலிருந்தே கீழ் இறங்குகிறார்கள். நானும் அவதாரம் எடுக்கிறேன். கிருஷ்ணர் தனது தாயின் கர்ப்பப்பையின் மூலம் பிறந்து, அரவணைப்பும் பெறுகிறார். சகலரும் மறுபிறவி எடுக்கவே வேண்டும். சிவபாபா வருகிறார், ஆயினும் மறுபிறவி எடுப்பதில்லை. ஆகையாலேயே சிவபாபா இங்கிருந்து இதனை விளங்கப்படுத்துகிறார். திரிமூர்த்திகளாக பிரம்மா, விஷ்ணு, சங்கரர் காட்டப்பட்டுள்ளனர். சிவனுக்குத் தனக்கென ஒரு சரீரம் இல்லாததாலேயே ஸ்தாபனை பிரம்மா மூலம் நடைபெறுகிறது. தான் இவரின் வயோதிப சரீரத்தில் பிரவேசம் செய்வதாக தந்தையே இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார். இவரது சொந்தப் பிறவிகளைப் பற்றியே இவருக்குத் (பிரம்மா) தெரியாது. இப்பிறவி இவரின் பல பிறவிகளில் இறுதியானது. சிவனின் பிறந்தநாளா அல்லது கிருஷ்ணரின் பிறந்தநாளா மேலானது என முதலில் விளங்கப்படுத்துங்கள். கீதையை உபதேசித்தவர் கிருஷ்ணரே எனில் கீதையின் பிறந்ததினம் கிருஷ்ணரின் பிறந்ததினத்தில் இருந்து பல வருடங்களுக்குப் பின்னரே அதாவது அவர் வளர்ந்து பெரியவர் ஆன பின்னரே வரும். இவ்விடயங்கள் அனைத்தும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். எவ்வாறாயினும் சிவனின் பிறந்ததினத்திற்கு அடுத்ததாக கீதையின் பிறந்;ததினமே வருகிறது. உங்கள் புத்தியில் இக்கருத்துக்கள் இருக்க வேண்டும். பல கருத்துக்கள் உள்ளன. அவற்றைக் குறித்து வைத்திராவிடில் நீங்கள் அவற்றை நினைவில் வைத்திருக்க முடியாது. பாபா மிக அருகில் உள்ளார். இது அவரது இரதமும் ஆகும். அப்படியிருந்தும் அந்த நேரத்தில் கருத்துக்களை எல்லாம் நினைவு செய்வது சிரமமானது என நான் எண்ணுகிறேன். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: இரு தந்தையினரினதும் இரகசியத்தை ஒவ்வொருவருக்கும் விளங்கப்படுத்துங்கள். சிவபாபாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதனால் அவர் நிச்சயமாக வர வேண்டும். தங்கள் சொந்தச் சமயங்களை ஸ்தாபிப்பதற்கு கிறிஸ்துவும் புத்தரும் ஏனையோரும் வருவது போல் இவரும் ஒரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு இன்னொருவரில் பிரவேசம் செய்கிறார். அவரே உலகைப் படைப்பவரான தந்தையாகிய சுவர்க்கக் கடவுள். ஆகையால் அவர் நிச்சயமாக ஒரு புதிய உலகைப் படைப்பார். அவர் ஒரு பழைய உலகைப் படைக்க மாட்டார். புது உலகம் சுவர்க்கம் எனப்படும். இப்பொழுது அது நரகமாக உள்ளது. பாபா கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கம யுகத்தில் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோக ஞானத்தைத் தருகின்றேன். இதுவே பாரதத்தின் புராதன யோகமாகும். அதனை யார் கற்பித்தார்கள்? ஒரு பக்கம் அவர்கள் சிவபாபாவின் பெயரை மறைத்து வி;ட்டனர். பின்னர் கீதையின் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது விஷ்ணு முதலியோர் எனக் கூறுகிறார்கள். சிவாபாபா இராஜயோகத்தைக் கற்பித்தார். ஆனால் எவருக்குமே இது தெரியாது. அவர்கள் சிவபாபாவின் பிறந்ததினத்தை அசரீரியானவரின் பிறந்ததினமாக காட்டுகிறார்கள். அவர் எப்படி வந்தார், வந்து என்ன செய்தார்? அவரே அனைவருக்கும் ஜீவன் முக்தி அளிப்பவரும், விடுதலை அளிப்பவரும் வழிகாட்டியும் ஆவார். இப்பொழுது ஆத்மாக்கள் அனைவருக்கும் பரமாத்;மாவான வழிகாட்டி தேவை. அவரும் ஆத்மாவே. மனிதருக்கு மனிதர் வழிகாட்டிகளாக இருப்பது போல் ஆத்மாவே, ஆத்மாக்களுக்கு வழிகாட்டியாக வேண்டும்;. அது பரமாத்மாவாக மாத்திரமே இருக்க முடியும். மனிதர்கள் அனைவரும் மறு பிறவி எடுத்துத் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். அப்படியெனின் யார் அவர்களைத் தூய்மையாக்கித் திருப்பி அழைத்துச் செல்வார்கள்? தந்தை கூறுகிறார்: நான் மாத்திரமே இங்கு வந்து, தூய்மையாகும் வழியை உங்களுக்குக் காண்பிக்கிறேன். 'என்னை நினைவு செய்யுங்கள்! சரீர உறவுகளைத் துறவுங்கள்!" எனக் கிருஷ்ணரால் கூற முடியாது. அவர் 84 பிறவிகளை எடுக்கிறார். அவருக்கு உறவுகள் யாவும் உண்டு. தந்தை தனக்கென ஒரு சரீரம் அற்றவர். தந்தை இவ் ஆன்மீக யாத்திரையை உங்களுக்குக் கற்பிக்கிறார். இவ் ஆன்மீக ஞானம் ஆன்மீகத் தந்தையிடமிருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. கிருஷ்ணர் எவருடைய ஆன்மீகத் தந்தையும் இல்லை. நானே அனைவரினதும் ஆன்மீகத் தந்தை ஆவேன். நான் வழிகாட்டியாக வந்துள்ளேன். “விடுதலையளிப்பவர், வழிகாட்டி, பேரானந்தம் உடையவர், அமைதியானவர், என்றும் தூய்மையானவர்" என்றெல்லாம் என்னைப் பற்றியே கூறப்படுகிறது. ஆத்மாவாகிய உங்களுக்கு நான் இப்பொழுது ஞானத்தைத் தருகிறேன். தந்தை கூறுகிறார்: நான் இச்சரீரத்தின் மூலம் ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஞானத்;தைத் தருகிறேன். நீங்களும் உங்கள் சரீரம் மூலம் ஞானத்தைப் பெறுகிறீர்கள். அவரே தந்தையாகிய கடவுள். அவரின் வடிவம் காட்;டப்பட்டுள்ளது. ஆத்மா எவ்வாறு புள்ளி வடிவமாக உள்ளாரோ, அவ்வாறே பரமாத்மாவும் புள்ளி வடிவமானவர். இதுவே இயற்கையின் அதிசயம். உண்மையில் எவ்வாறு அச்சிறிய நட்சத்திரத்தில் 84 பிறவிகளும் பதியப்பட்டிருக்கின்றது என்பதே மிகப்பெரிய அதிசயம்! இது ஓர் அதிசயம்! இந்நாடகத்தில் தந்தைக்கும் ஒரு பாகம் உண்டு. பக்தி மார்க்கத்திலும் உங்களுக்கு அவர்; சேவை செய்கிறார். 84 பிறவிகளின் பாகம் ஆத்மாக்களாகிய உங்களில் அநாதியாகவே பதியப்பட்டுள்ளது. இது இயற்கையின் அதிசயம் ஆகும். இதனை எப்படி உங்களால் விபரிக்க முடியும்? ஆத்மா மிகவும் சிறியவர்! மக்கள் இவற்றைக் கேள்வியுறும் போது ஆச்;சரியப்படுவார்கள். ஆத்மா ஒருவர் ஒரு நட்சத்திரம் போன்றவர். ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகளை மிகச்சரியாக அனுபவம் செய்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சந்தோஷத்தையும் மிகச்சரியாக அனுபவம் செய்கிறீர்கள். இது இயற்கையின் ஓர் அதிசயம்! பரமாத்மாவாகிய தந்தையும் ஓர் ஆத்மாவே. ஞானம் முழுவதும் அவரில் பதியப்பட்டுள்ளது. அவரே குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இவை புதிய விடயங்கள். இவற்றைச் செவிமடுக்கும் புதியவர்கள் இந்த ஞானம் எந்தவொரு சமயநூல்கள் போன்றவற்றிலும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறுகிறார்கள். ஆனாலும் சென்ற கல்ப்பத்தில் இதனைச் செவிமடுத்துத் தங்களது ஆஸ்தியைப் பெற்றவர்களினால் (இங்கு வருபவர்களின்) எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும். அதற்குக் காலம் எடுக்கும். பல பிரஜைகள் உருவாக்கப்படுகிறார்கள். அது இலகுவானது. அரசன் ஆவதற்கு முயற்சி தேவை. அதிகச் செல்வத்தைத் தானம் செய்யும் மக்கள் தமது அடுத்த பிறவியை ஓர் அரச குடும்பத்தில் எடுக்கிறார்கள். தங்களால் இயன்றவற்றை தானம் செய்யும் ஏழைகளும் அரசர்கள் ஆகுவார்கள். முழுமையான பக்தராக உள்ளவர்களும் தான தர்மங்கள் செய்கின்றனர். செல்வந்தர்களே அதிக அளவில் பாவம் செய்கின்றார்கள். ஏழைகள் அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஏழைகள் தம்மிடமுள்ள ஒரு சிலவற்றையும் அதிக அன்புடன் கொடுப்பதனால் அதற்குப் பலனாக அவர்கள் அதிகம் பெறுகிறார்கள். ஏழைகள் அதிக பக்தியும் செய்கிறார்கள். எனக்குக் காட்சி அளியுங்கள், அல்லாவிட்டால் நான் எனது கழுத்தை வெட்டுவேன்! செல்வந்தர் இதைச் செய்வதில்லை! ஏழைமக்களுக்கே காட்சி கிடைக்கிறது. தான தர்மம் செய்பவர்களும், அரசர்கள் ஆகுபவர்களும் அவர்களே. செல்வம் அதிகம் உள்ளவருக்கு அகங்காரமும் அதிகளவில் இருக்கிறது. இங்கும் ஏழைகள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். ஏழைகளே அதிகளவில் உள்ளனர். செல்வந்தர் பின்னரே வருவார்கள். மிகுந்த செழிப்புடன் இருந்த பாரதம் எவ்வாறு இ;ப்பொழுது மிக ஏழ்மை நிலை அடைந்துள்ளது என்பது உங்களுக்கு மாத்திரமே விளங்குகிறது. அரண்மனைகள் முதலியவை எல்லாம் பூகம்பம் முதலியவற்றால் அழிந்து மறைந்து விட பாரதம் ஏழ்மை அடைகிறது. இராவண இராச்சியம் ஏற்படும் பொழுது அவலக் கூக்குரல்கள் பல எழுகின்றன. எனவே எல்லாம், என்றும் ஒரேமாதிரி இருப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் கால வரையறை உண்டு. அங்கு மக்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாக இருப்;;பதைப் போலவே கட்டடங்களும் நீண்;ட ஆயுளைக் கொண்டிருக்கின்றன. பல பெரிய கட்டடங்கள், தங்கம், பளிங்கு முதலியவற்றால் தொடர்ந்து கட்டப்படும். தங்கத்;தாலான கட்டடங்கள் மேலும் உறுதி வாய்ந்தவை. நாடகம் (சினிமா) ஒன்றில் யுத்தம் நடக்கும் பொழுது எவ்வாறு கட்டடங்கள் முழுமையாக அழிக்கப்படுகின்றன எனவும், அவை எவ்வாறு மீண்டும் கட்டப்படுகின்றன எனவும் காட்டுகிறார்கள். அவை அப்படிக் கட்டப்பட்டவை. சுவர்க்கத்தில் அரண்மனைகள் கட்டப்பட்ட போது மர வேலையாளர் போன்றவர்கள் எவ்வாறு அவற்றை கட்டுகிறார்கள் என காண்பிப்பதில்லை. ஆம், அதே கட்டடங்கள் அங்கே இருக்கும் என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது உங்களுக்குக் காட்சிகள் கிடைக்கும். அறிவு இதனையே கூறுகிறது. குழந்தைகளே, உங்களுக்கும் இவற்றிற்றும் தொடர்பேதும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் கல்வியைக் கற்றுச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுங்கள். சுவர்க்கமும் நரகமும் பலமுறை வந்து போய் இருக்கின்றன. இப்பொழுது இரண்டும் கடந்து விட்டன. இப்பொழுது இது சங்கமயுகம். இந்த ஞானம் சத்திய யுகத்தில் இருக்க மாட்டாது. இந்நேரத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு முழு ஞானமும் உள்ளது. இலக்ஷ்மி நாராயணனுக்கு அவர்களது இராச்சியத்தை யார் கொடுத்தார்கள்? குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இது தெரியும். அவர்கள் தங்கள் ஆஸ்தியை யாரிடம் இருந்து பெற்றனர்? அவர்கள் இங்கு கல்வி கற்றுச் சுவர்க்க அதிபதிகள் ஆகினார்கள். பின்னர் இங்கே சத்திரசிகிச்சை நிபுணர்கள் பெரிய வைத்தியசாலைகளைக் கட்டுவது போல் அவர்கள் அங்கு சென்று அரண்மனை முதலிய கட்;டடங்களைக் கட்டினார்கள். தினமும் தந்தை பற்பல நல்ல கருத்துக்களை உங்களுக்குத் தருகிறார். மிகுந்த அன்புடன் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துவது போல் மக்கள் அனைவரையும் விழித்தெழச் செய்து அவர்களுக்குப் பாதையைக் காட்டுவது உங்கள் கடமை. சரீர உணர்விற்கு அவசியமில்லை. தந்தை ஒருபொழுதும் சரீர உணர்வு உடையவராக இருக்க முடியாது. ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கே நீங்கள் சகல முயற்சிகளையும் செய்கிறீர்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுபவர்கள் ஏனையோருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்துப் பலருக்கு நன்மை அளிக்க முடியும். சரீர உணர்வு வரும் போது ஏனைய விகாரங்களும் வருகின்றன. சண்டையிடல், சச்சரவு செய்தல், அதிகாரம் பண்ணல் போன்ற இவை அனைத்தும் சரீர உணர்வுகளே. உங்களுடையது இராஜயோகமாயினும் நீங்கள் மிகவும் சாதாரணமாகவே இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் மிகச் சிறிய செயலிலும் கர்வம் ஏற்படுகிறது. நீங்கள் நாகரீகமான கைக்கடிகாரத்தைக் காணும் போது உங்கள் இதயம் அதனை அணிய விரும்புகிறது. நீங்கள் தொடர்ந்து அதனைப் பற்றிச் சிந்திக்கின்றீர்கள். அதுவும் சரீர உணர்வு என அழைக்கப்படும். உங்களிடம் விலை உயர்ந்த மிகச் சிறந்த பொருள் ஒன்று இருக்குமாயின் நீங்கள் அதனைக் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதனைத் தொலைத்தீர்களாயின் அதனைப் பற்றிய எண்ணங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். உங்கள் இறுதி நேரத்தில் எதையாவது நினைவில் வைத்திருந்தீர்களாயின் உங்கள் அந்தஸ்து அழிக்கப்பட்டு விடும். இப்பழக்கங்கள் சரீர உணர்விற்கு உரியன. அப்பொழுது சேவை செய்வதற்குப் பதிலாக அவச்சேவை இருக்கும். இராவணன் உங்களைச் சரீர உணர்வுடையவர் ஆக்கி விட்டான். பாபா எவ்வாறு அனைத்தையும் மிகவும் எளிமையாகச் செய்கிறார் என்பதை உங்களால் பார்க்க முடியும். ஒவ்வொருவரின் சேவையும் பார்க்கப்படுகிறது. மகாராத்திக் குழந்தைகள் தம்மை வெளிப்படுத்த வேண்டும். மகாராத்திகளுக்கே எழுதப்பட்டுள்ளது: இந்த இடத்திற்குச் சென்று சொற்பொழிவு ஆற்றுங்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் அழைக்கிறார்கள். எவ்வாறாயினும், குழந்தைகளில் அதிகளவு சரீர உணர்வு உள்ளது. அவர்கள் சொற்பொழிவு கொடுப்பதில் கெட்டிக்காரர் ஆயினும், அவர்கள் மத்தியில் அந்த ஆன்மீக அன்பு இல்லை. சரீர உணர்வு உங்களை உவர்நீர் போல் ஆக்குகிறது. நீங்கள் அற்ப விடயங்களிலும் விரைவில் குழப்பமடையக் கூடாது. பாபா இதனாலேயே கூறுகிறார்: யாரிடமாவது வினவ வேண்டுமாயின் பாபாவிடம் வினவுங்கள்! சிலர் வினவுகிறார்கள்: பாபா உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? எனக்கு எண்ணற்ற குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் சிலர் தகுதியற்றவர்கள், ஏனையோர் தகுதி உள்ளவர்களாகவும் மிக நல்லவர்களாகவும் உள்ளனர். நீங்கள் அப்படிப்பட்ட தந்தைக்குக் கீழ்ப்படிவுள்ளவர்களாகவும் அவரின் மீது நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சரீர உணர்வு உடையவராகி, நாகரீகத்தைப் பின்பற்ற வேண்டாம். பலவற்றில் ஆர்வம் கொண்டிருக்காதீர்கள். தொடர்ந்து மிக எளிமையாக வாழுங்கள்.
2. நீங்கள் உங்கள் மத்தியில் ஒருவரோடு ஒருவர் மிகுந்த ஆன்மீக அன்புடன் பழகுங்கள். ஒருபோதும் உவர்நீர் போல் ஆக வேண்டாம். பாபாவின் தகுதிவாய்ந்த ஒரு குழந்தை ஆகுங்கள். ஒருபோதும் கர்வம் உடையவர்களாக வேண்டாம்.ஆசீர்வாதம்:
உங்கள் புத்தியை அர்ப்பணிக்கின்ற உணர்வை கொண்டிருந்து அதனை சுத்தமாக ஆக்கி சகல பொக்கிஷங்களும் நிறைந்தவர் ஆகுவீர்களாக.இந்த மேன்மையான நேரத்தில் ஞான பொக்கிஷங்களை சேர்த்துக் கொண்டு, ஒன்றை நூறாயிரம்; மடங்காக ஆக்குவதே சேமிப்பதாகும். இந்த பொக்கிஷங்கள் அனைத்தினாலும் நிறைந்திருப்பதற்கு சுத்தமான புத்தியும் நேர்மையான இதயமுமே அடிப்படையாக உள்ளது. எவ்வாறாயினும், தந்தையை உங்கள் புத்தியால் அறிந்து, அதனை தந்தையிடம் அர்ப்பணிப்பதனால் மாத்திரமே உங்கள் புத்தி சுத்தமாக முடியும். அர்ப்பணிப்பதற்கு, அதாவது உங்கள் சூத்திர புத்தியை கொடுப்பது தெய்வீக புத்தியை பெறுவதற்காகும்.
சுலோகம்:
வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்கு மாத்திரமே உரியவராக இருப்பது என்ற வழிமுறையை சதா பயன்படுத்தி தொடர்ந்தும் வளர்ந்திடுங்கள்.