26.03.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சரீர உணர்வே மிகப் பெரிய நோயாகும். இந்த நோயினாலேயே வீழ்ச்சி ஏற்பட்டது. ஆகையினால் ஆத்ம உணர்வுடையவராகுங்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுது உங்களுடைய கர்மாதீத நிலையை அடைவீர்கள்?

பதில்:
உங்களுடைய கர்மவேதனையை யோக சக்தியினால் வெற்றி கொள்கின்ற போதும், முழுமையாக ஆத்ம உணர்வுடையவராகும்போதும் ஆகும். இந்த சரீர உணர்வு எனும் நோய் மிகப்பெரிய நோயாகும். இந்நோயின் மூலமாகவே உலகம் தூய்மையற்றதாகியது. ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள், நீங்கள் சந்தோஷத்தையும், போதையையும் கொண்டிருப்பதுடன், உங்கள் நடத்தையும் மறுசீரமைக்கப்படும்.

பாடல்:
ஓ, இரவுப்பயணியே களைப்படையாதீர்! விடியலுக்கான இலக்கு வெகு தூரத்திலில்லை.

ஓம் சாந்தி.
“பிரயாணி” என்பதன் அர்த்தத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் கேட்டீர்கள். வாய்வழித் தோன்றல்களாகிய பிராமணர்களைத் தவிர வேறு எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் தேவர்களாக இருந்தபோது, மனிதர்களாகவே இருந்தீர்கள், உங்கள் குணாதிசயங்களும் மிக நல்லவையாகவே இருந்தன. நீங்கள் சகல தெய்வீகக்குணங்களும், 16 கலைகளும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். நீங்கள் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் எவ்வாறு சிப்பிகளிலிருந்து, வைரங்களாகினீர்கள் என எந்த மனிதருமே அறியமாட்டார்கள் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே முற்றிலும் மாறுகின்றீர்கள். நீங்கள் இன்னமும் தேவர்களாகவில்லை. நீங்கள் இளமையூட்டப்படுகின்றீர்கள். சிலர் சிறிதளவு மாறியுள்ளனர்; சிலரின் குணாதிசயம் 5மூ மாகவும், மற்றவர்களினது 10மூ மாகவும் மாறியுள்ளது. பாரதம் சுவர்க்கமாக இருந்ததென்பதை உலகம் அறியமாட்டாது. கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்தில் தேவர்கள் இருந்தார்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் தெய்வீககுணங்களைக் கொண்டிருந்ததால் தேவ, தேவியர்கள் என அழைக்கப்பட்டார்கள். இப்பொழுது அவர்களிடம் அந்த தெய்வீகக்குணங்களில்லை. அதி செல்வந்தமாக இருந்த பாரதத்தின் வீழ்ச்சி எவ்வாறு இடம்பெற்றது என மக்கள் புரிந்து கொள்வதில்லை. தந்தையே இதை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். உங்களிடையே குணாதிசயங்களை மாற்றியவர்களால் இதை விளங்கப்படுத்தமுடியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் தேவர்களாக இருந்தபோது, ஆத்மஉணர்வுடையவர்களாக இருந்தீர்கள், பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பித்த பின்னர், சரீரஉணர்வுடையவர்கள் ஆகினீர்கள். இந்த சரீரஉணர்வே நீங்கள் கொண்டுள்ள மிகப்பெரிய நோயாகும். சத்தியயுகத்தில், நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாகவும், மிகவும் சந்தோஷமானவர்களாகவும் இருந்தீர்கள். உங்களை அவ்வாறு ஆக்கியது யார் என எவருமே அறியமாட்டார்கள். உங்களது வீழ்ச்சி ஏன் ஏற்பட்டது எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். உங்கள் தர்மத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். பாரதம் ஒரு சதத்திற்கும் பெறுமதியற்றதாகி விட்டது. இதற்கான பிரதான காரணம் என்ன? சரீர உணர்வாகும்! இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது. அதி செல்வந்தமாக இருந்த பாரதம், இப்பொழுது எவ்வாறு ஏழ்மையடைந்தது என மக்கள் அறியமாட்டார்கள். நாங்கள் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்துக்குச் சொந்தமானவர்கள். எனவே எவ்வாறு நாங்கள் எமது தர்மத்திலும், கர்மத்திலும் சீரழிந்தவர்களாகினோம்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இராவண இராச்சியம் ஆரம்பமாகியபோது, நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகினீர்கள், அதனாலேயே உங்கள் நிலை இவ்வாறாகியது. எவ்வாறு வீழ்ச்சி இடம்பெற்றது என ஏணிப்படம் காட்டுகின்றது. நீங்கள் ஒரு சதத்திற்கும் பெறுமதியற்றவர்கள் ஆகியதற்கு சரீர உணர்வே பிரதான காரணமாகும். தந்தை இங்கிருந்து இதை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் சமயநூல்களில் சக்கரத்தின் காலஎல்லை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் எனக் காட்டியுள்ளார்கள். இந்நாட்களில் கிறிஸ்தவர்களே விவேகமானவர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்கு3000 ஆண்டுகளுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்ததாகக் கூறுகின்றார்கள். புராதன பாரதமே சுவர்க்கம் என அழைக்கப்பட்டது என அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இந்நேரத்தில் அவர்கள் பாரதத்தின் முழு வரலாறையும், புவியியலையும் அறியமாட்டார்கள். வெகு சில குழந்தைகளிடம் சிறிதளவு ஞானமுள்ளது, ஆனால் அவர்களும் சரீர உணர்வில் இருப்பதால், தங்களைப் போன்று வேறு எவருமில்லை என நினைக்கின்றார்கள். பாரதம் ஏன் இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்தது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். தூய்மையாக்குபவரே வாருங்கள்! வந்து இராம இராச்சியத்தை ஸ்தாபியுங்கள் என பாபு காந்திஜியும் கூறுவது வழக்கம். ஆத்மாக்கள் ஒரு நேரத்தில் தந்தையிடமிருந்து நிச்சயமாகச் சந்தோஷத்தைப் பெற்றுள்ளார்கள். இதனாலேயே அவர்கள் தூய்மையாக்குபவரை நினைவு செய்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: சூத்திரர்களிலிருந்து, பிராமணர்களாகிவிட்ட எனது குழந்தைகளும் முழுமையாக ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதில்லை. அவர்கள் மறுபடியும் சரீர உணர்வுடையவர்கள் ஆகுகின்றார்கள். இது ஒரு பழமையான நோயாகும், இதனாலேயே உங்களின் நிலையும் இவ்வாறாக ஆகியுள்ளது. ஆத்மஉணர்வுடையவர் ஆகுவதற்கு அதிகளவு முயற்சி எடுக்கும். எந்தளவுக்கு நீங்கள் ஆத்மஉணர்வுணர்வுடையவர் ஆகுகின்றீர்களோ, அந்தளவு அதிகமாகத் தந்தையை நினைவு செய்வீர்கள். ஆகையினால் எல்லையற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். நினைவுகூரப்படுகின்றது: நீங்கள் அப்பாலுள்ள பிரம்மதத்துவத்தில் வசிக்கின்ற பரமாத்மாவைச் சந்திப்பதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது அவரைக் கண்டுகொண்டீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகின்றீர்கள். வேறு என்ன உங்களுக்கு வேண்டும்? இயல்பாகவே ஆத்ம உணர்வுடையவராகி, சதா என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழலாம். முழு உலகமுமே சரீர உணர்விலுள்ளார்கள். அதிமேன்மையாக இருந்த பாரதத்தின் வீழ்ச்சியும் இடம்பெற்றது. அதனுடைய வரலாறும், புவியியலும் என்னவென்று எவருமே உங்களுக்குக் கூறமுடியாது. இந்த விடயங்கள் எவையும் சமய நூல்களிலே குறிப்பிடப்படவில்லை. தேவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள். அவர்கள் தாங்கள் ஒரு சரீரத்தை விட்டு, வேறொன்றை எடுப்பதாகப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் இறையுணர்வு உள்ளவர்களல்லர். நீங்கள் அதிகளவு ஆத்ம உணர்வில் இருக்கும்போது, அதிகளவு தந்தையை நினைவு செய்வதுடன், இனிமையானவர்களாகவும் ஆகுவீர்கள். சரீரஉணர்வுடையவர் ஆகியதாலேயே, சண்டை, சச்சரவுகளும், குரங்குத்தனமான நடவடிக்கைகளும் இருந்தன. தந்தை இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இந்த பாபாவும் இவை அனைத்தையும் புரிந்துகொள்கின்றார். சில குழந்தைகள் சரீரஉணர்வுள்ளவராகி, சிவபாபாவை மறக்கின்றார்கள். சில நல்ல குழந்தைகளும் சரீர உணர்வில் இருக்கின்றனர்: அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதில்லை. நீங்கள் இந்த எல்லையற்ற வரலாறையும், புவியியலையும் எவருக்கும் விளங்கப்படுத்தலாம். அங்கே நிச்சயமாக சூரிய, சந்திர வம்ச இராச்சியங்கள் இருந்தன. நாடகம் பற்றி எவருமே அறியமாட்டார்கள். பாரதம் இப்பொழுது அதிகளவு வீழ்ந்துவிட்டது, வீழ்ச்சியினுடைய மூல காரணம், சரீர உணர்வாகும். சில குழந்தைகளுமே சரீர உணர்வுடையவர்கள் ஆகின்றனர். யார் தங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார் என அவர்கள் புரிந்து கொள்வதில்லை. எப்போதும் சிவபாபாவே உங்களுக்குக் கூறுகின்றார் எனக் கருதுங்கள். சிவபாபாவை நினைவு செய்யாததாலேயே, நீங்கள் சரீரஉணர்வுடையவர்கள் ஆகின்றீர்கள். முழு உலகமுமே சரீரஉணர்வுக்கு உள்ளாகி விட்டது, இதனாலேயே தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் செவிமடுத்து அவரது பாகத்தை நடிக்கின்றார். தந்தை மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். உங்களில் சிலர் மிக நன்றாகச் சொற்பொழிவுகள் ஆற்றியபோதும், நல்ல நடத்தையும் தேவையாகும். சரீர உணர்வுடையவராகியதால் சிலர் தோல்வியடைகின்றனர். அந்தளவு சந்தோஷமோ அல்லது போதையோ இருப்பதில்லை. பின்னர் அவர்கள் பாவச் செயல்களைச் செய்து, அதன் காரணமாக அதிகளவு தண்டனையை அனுபவஞ் செய்கின்றார்கள். சரீர உணர்வில் இருப்பதால் அதிகளவு சேதம் ஏற்படுகின்றது. அதிகளவு தண்டனையும் அனுபவஞ் செய்யப்பட வேண்டும். தந்தை கூறுகின்றார்: இது இறை உலக அரசாங்கம், இல்லையா? இறை அரசாங்கத்தில் எனது வலதுகரம் தர்மராஜாவார். நீங்கள் நல்ல செயல்கள் செய்கின்றபோது, அதிலிருந்து நல்ல பலனைப் பெறுகின்றீர்கள். தீய செயல்கள் செய்யப்பட்டால் தண்டனை அனுபவஞ் செய்யப்படும். ஒவ்வொருவரும் கர்ப்பச் சிறையில் தண்டனை அனுபவிக்கின்றனர். இதைப்பற்றிய கதை இருக்கின்றது. இந்த விடயங்கள் அனைத்தும் இந்த நேரத்தையே குறிப்பதாகும். ஒரு தந்தைக்கு மட்டுமே புகழ் இருக்கின்றது. வேறு எவருக்குமே புகழ்ச்சியில்லை. இதனாலேயே திரிமூர்த்தி சிவஜெயந்தி வைரம் போன்று பெறுமதியானது என எழுதப்பட்டுள்ளது. மீதி அனைத்தும் சிப்பி போன்றதாகும். சிவபாபாவைத் தவிர வேறு எவராலும் உங்களைத் தூய்மையாக்க முடியாது. நீங்கள் தூய்மையாகின்றீர்கள், பின்னர் இராவணன் உங்களைத் துய்மையற்றவர்களாக்குகின்றான், இதனாலேயே அனைவரும் சரீரஉணர்வுடையவர்கள் ஆகின்றனர். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகின்றீர்கள். இந்த ஆத்மஉணர்வு ஸ்திதி 21 பிறவிகளுக்கு நீடிக்கின்றது. எனவே அதன் மகத்துவம் ஒருவருக்கேயாகும். சிவபாபாவே பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுகின்றார். சிவபாபா எப்போது வருகின்றார் என எவருமே அறியமாட்டார்கள். அவரது வரலாறே முதலாவதாக இருக்க வேண்டும். பரமதந்தை, பரமாத்மாவே சிவன் என அழைக்கப்படுகின்றார். சரீரஉணர்வின் காரணமாகவே வீழ்ச்சி ஏற்பட்டதென நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இது இடம்பெறுகின்றபோதே, அதை உயர்த்துவதற்காக தந்தை வருகின்றார். உயர்ச்சியும், வீழ்ச்சியும், பகலும், இரவும், ஞானசூரியன் உதித்து அறியாமை இருளை அகற்றுகின்றார். சரீர உணர்வே மிகப்பெரிய அறியாமையாகும். ஆத்மாக்கள் பற்றி எவருமே அறியமாட்டார்கள். அவர்கள் இயல்பாகவே, ஆத்மாவே பரமாத்மா எனக் கூறுகின்றனர், அதனால் அவர்கள் மேலும் பாவாத்மாக்கள் ஆகின்றனர்! இதனாலேயே வீழ்ச்சி ஏற்படுகின்றது. நீங்கள் 84 பிறவிகள் எடுத்து ஏணியில் கீழிறங்கினீர்கள். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது. உலகின் வீழ்ச்சி எவ்வாறு ஏற்பட்டது என்ற உலகின் வரலாறையும், புவியியலையும் குழந்தைகளாகிய உங்களைத்தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். விஞ்ஞானத்தின் மூலம் அதிகளவு முன்னேற்றம் ஏற்படுமென அவர்கள் நம்புகிறார்கள். உலகம் மேலும் தூய்மையற்றதாகவும், நரகம் போன்றும் ஆகிவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அதிகளவு சரீர உணர்வு இருக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது ஆத்மஉணர்வுடையவராக வேண்டும். பல மிக நல்ல மகாராத்திகளும் இருக்கின்றனர். அவர்கள் ஞானத்தை மிக நன்றாகப் பேசுகின்றனர், ஆனால் அவர்களது சரீரஉணர்வு இன்னமும் அகற்றப்படவில்லை. சரீரஉணர்வின் காரணமாக சிலரில் கோபத்தின் சுவடும், ஏனையோரில் பற்றின் சுவடும் இருக்கின்றது, ஒன்று அல்லது இன்னொன்று உள்ளது. குணாதிசயங்கள் சீர்திருத்தப்பட வேண்டும். மிக, மிக இனிமையானவர் ஆகுங்கள். இதனாலேயே ஆடும், சிங்கமும் ஒரே ஓடையில் நீர் அருந்துகின்ற உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கே துன்பம் விளைவிக்கின்ற மிருகங்கள் ஏதும் இல்லை. இந்த விடயங்களை அரிதாகவே எவரும் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கின்றனர். அதிகளவு கஷ்டத்துடனேயே கர்மவேதனை முடிக்கப்பட்டு, அவர்கள் கர்மாதீதம் ஆகின்றனர். பலர் சரீர உணர்வுடையவர்கள் ஆகின்றனர். அவர்கள் யார் இந்த வழிகாட்டல்களைக் கொடு;க்கின்றார் எனத் தெரிந்துகொள்வதில்லை. எவ்வாறு நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து ஸ்ரீமத்தைப் பெறமுடியும்? சிவபாபா கூறுகின்றார்: இவரில்லாது நான் எவ்வாறு உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கமுடியும்? இவர் எனது இரதமாக நிச்சயிக்கப்பட்டவர். சரீர உணர்வுடையவராகி, பிழையான செயல்கள் செய்வதனால், உங்களையே நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள். அதனுடைய பலன் என்னவாக இருக்கும்? மிகத் தாழ்ந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். கல்வியறிவில்லாதவர்கள், கற்றவர்களின் முன்னால் தலை வணங்கவேண்டியிருக்கும். பாரதத்தின் வரலாறும், புவியியலும் அது இருக்க வேண்டியது போன்று சம்பூரணமாக இல்லை என பல மக்கள் கூறுகின்றனர். இதை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். உங்களைத் தவிர வேறு எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. எவ்வாறாயினும், ஆத்மஉணர்வு ஸ்திதி தேவையாகும். அவ்வாறானவர்களாலேயே உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியும். இதுவரைக்கும் எவருமே கர்மாதீத நிலையை அடையவில்லை. இவருக்கு(பிரம்மபாபா) பல பொறுப்புக்கள் உள்ளன. அவருக்குப் பல கவலைகள் இருந்தபோதும், அனைத்தும் நாடகத்துக்கேற்பவே நடக்கின்றது என அவர் புரிந்து கொள்கின்றார். ஆயினும், உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு, வித்தியாசமான வழிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: நீங்கள் அதிகளவு ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும். உங்களின் மீது எந்தச் சுமையுமில்லை. தந்தைக்குப் பல சுமைகள் உள்ளன. இவர், பிரஜாபிதாவே தலைவராவார். எவ்வாறாயினும், சிவபாபா இவரினுள் இருக்கின்றார் என எவருமே அறியமாட்டார்கள். உங்களிடையேயும், அரிதாகவே எவரும் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளீர்கள். எப்போது பாரதத்தில் சுவர்க்கம் இருந்தது, இது பின்னர் எங்கே சென்றது, என்ற உலக வரலாறையும், புவியியலையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எவ்வாறு அதன் வீழ்ச்சி ஏற்பட்டது? எவருமே இதை அறியமாட்டார்கள். நீங்கள் விளங்கப்படுத்தும்வரை எவருமே புரிந்துகொள்ள முடியாது. இதனாலேயே பாபா உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். பாடசாலைகளில் உள்ளவர்களுக்கும் எழுதி, அவர்கள் வரலாறையும், புவியியலையும் காட்டவேண்டுமெனக் கூறுங்கள். நீங்கள் வீழ்ச்சி பற்றிய சொற்பொழிவுகளையும் கொடுக்க வேண்டும். பாரதம் வைரம் போன்று இருந்தது; எவ்வாறு அது சிப்பி போன்றாகியது? இதற்கு எத்தனை வருடங்கள் எடுத்தன? நாங்கள் இவை அனைத்தையும் விளங்கப்படுத்தலாம். நீங்கள் ஆகாய விமானத்திலிருந்து துண்டுப்பிரசுரங்களையும் போடலாம். விளங்கப்படுத்துபவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். அரசாங்கமும் இதையே வேண்டுகின்றது. எனவே நீங்கள் டெல்லியிலுள்ள அரசாங்க மண்டபமான விக்யான்பவனுக்கு அனைவரையும் அழைக்க வேண்டும். அது பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்படவேண்டும். அத்துடன் அழைப்பிதழ்களையும் அனுப்புங்கள்! நாங்கள் முழு உலகினதும் வரலாறையும், புவியியலையும் ஆரம்பத்திலிருந்து, இறுதிவரை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றோம். அவர்கள் தாமாகவே வந்து போவார்கள். இதில் பணம் என்ற கேள்வியில்லை. உதாரணமாக நீங்கள் ஒருவரைச் சந்திக்கும்போது, உங்களுக்கு ஒரு பரிசைக் கொடுக்க அவர் விரும்பினால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. நீங்கள் அதைச் சேவைக்குப் பயன்படுத்தலாம், ஆனால் உங்களுக்காக அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தந்தை கூறுகின்றார்: உங்களிடம் இருந்து கிடைக்கும் தானத்தினால் நான் என்ன செய்யமுடியும்? நான் உங்களுக்கு முழுப்பிரதிபலனையும் கொடுக்க வேண்டும். நான் மிகவும் திறமையான பங்குத்தரகராவேன். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்பிற்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சரீர உணர்வுடையவர்களாகி, தவறான செயல்கள் எதையும் செய்யாதீர்கள். ஆத்ம உணர்வுடையவராகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். உங்கள் குணாதிசயங்களைத் தொடர்ந்தும் சீர்திருத்துங்கள்.

2. மிக, மிக இனிமையாகவும், சாந்தமாகவும் ஆகுங்கள். உங்களுக்குள்ளேயிருக்கும் தீய ஆவிகளான கோபத்தையும், பற்றையும் அகற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
மேன்மையான பொக்கிஷமான நேரத்தை தகுதியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் சதா முழுமையான வெற்றியின் சொரூபமாக ஆகுவீர்களாக.

நேரம் என்ற பொக்கிஷத்தை தமது நன்மைக்காகவும் ஏனைய அனைவரின் நன்மைக்காகவும் பயன்படுத்துபவர்கள் இயல்பாகவே ஏனைய அனைத்து பொக்கிஷங்களையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதனை தகுதியான முறையில் பயன்படுத்தினால் இயல்பாகவே எண்ணங்களின், சந்தோஷத்தின், சக்திகளின், ஞானத்தின், சுவாசத்தின் பொக்கிஷங்களை சேர்த்துக் கொள்கின்றார்கள். கவனயீனத்தை மாத்திரம் கைவிட்டு, நேரம் என்ற பொக்கிஷத்தை தகுதியான முறையில் பயன்படுத்தினால் நீங்கள் சதா முழுமையான வெற்றியின் சொரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
மனோ ஒருமைபாட்டுடனும் ஸ்திரமாகவும் கடலின் ஆழத்திற்கு சென்று, அனுபவங்கள் என்ற வைரங்களையும் இரத்தினத்தையும் கண்டெடு;ப்பதே அனுபவ சொரூபமாகுவதாகும்.


மாதேஸ்வரிஜியின் விலைமதிப்பற்ற மேன்மையான வாசகங்கள்.

1. தமோகுனி மாயையின் விரிவாக்கம்

‘சதோகுனி, ரஜோகுனி, தமோகுனி” என்ற மூன்று வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றை சரியாக புரிந்து கொள்வது அவசியமாகும். இம் மூன்று குணங்களும் ஒரேநேரத்தில் காணப்படுகின்றன என மக்கள் நினைக்கின்றார்கள். ஆனால் காரணம் எங்களுக்கு என்ன கூறுகின்றது? இம் மூன்று குணங்களும் தொடர்ந்தும் ஒரேநேரத்தில் இருக்கின்றனவா? அல்லது மூன்று குணங்களின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறாக காணப்படுகின்றனவா? இம் மூன்று குணங்களும் ஒரேநேரத்தில் காணப்படுவதில்லை என்றே காரணம் கூறுகின்றது. சத்தியயுகமாக இருக்கும் போது, சதோகுனியாகவும், துவாபரயுகமாக இருக்கும் போது, ரஜோகுனியாகவும், கலியுகத்தில் தமோகுனியாகவும் உள்ளது. சதோவாக இருக்கும் போது ரஜோ அல்லது தமோ குணம் இருப்பதில்லை. ரஜோவாக இருக்கும் போது, சதோகுனி இருக்க மாட்டாது. இவை மூன்றும் தொடர்ந்தும் ஒரே நேரத்தில் காணப்படுகின்றன. ஒரு நபர் உண்மையைக் கூறுவதுடன் எப்பாவத்தையும் செய்யாதிருந்தால் அவர் சதோகுனி என மக்கள் நம்புகின்றார்கள். ஆனால் காரணம் கூறுவது என்னவெனில், நாங்கள் சதோகுனி எனும் போது அங்கு முழுமையான சந்தோஷம் அதாவது முழு உலகமும் சதோகுனி என்பதே அர்த்தமாகும். உண்மையைக் கூறும் ஒருவர் சதோகுனி எனவும் பொய் பேசும் ஒருவர் கலியுகத்து தமோகுனியானவர் எனவும் உங்களால் கூறமுடியாது. உலகம் இவ்வாறாகவே தொடர்ந்துள்ளது. நாங்கள் அதைச் சத்தியயுகம் எனக் கூறும் போது, முழு உலகமும் சதோகுனியாகவும் சதோபிரதானாகவும் உள்ளது என்பதே அதன் அர்த்தமாகும். ஆம், முழு உலகமும் சதோகுனியாக இருந்த போது, ஒரு காலத்தில் சத்தியயுகம் அவ்வாறு இருந்தது. அந்த சத்தியயுகம் இப்பொழுது இல்லை. இப்பொழுது முழு உலகமும் தமோபிரதான் இராச்சியமான கலியுகமாகும். தமோபிரதான் உலகில் எவ்வாறு சதோகுனி இருக்க முடியும்? இப்பொழுது பிரம்மாவின் இரவு என அழைக்கப்படும் காரிருள் ஆகும். பிரம்மாவின் பகல் சத்தியயுகம் பிரம்மாவின் இரவு கலியுகமும் ஆகும். எனவே இரண்டையும் இணைக்க முடியாது.

2. உங்களை சுவையற்ற கலியுகத்திலிருந்து சுவை நிறைந்த சத்தியுகத்திற்கு அழைத்துச் செல்வது கடவுள் ஒருவரின் பணி மாத்திரமே ஆகும்.

கலியுகம் ஏன் சுவையற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது? ஏனெனில் இவ்வுலகத்தில் சுவை எதுவும் இல்லை. அதாவது எதிலும் சக்தி இல்லை. உலகத்தில் நிலவிய சந்தோஷம், அமைதி, தூய்மை என்பன இல்லை. இவ்வுலகத்தில் ஐந்து விகாரங்கள் இருப்பதால் எந்த சக்தியும் இல்லாதுள்ளது. எனவே பயத்தின் கடல் எனவும், கர்ம பந்தனங்களின் கடல் என இது அழைக்கப்படுகின்றது. இதனாலேயே மக்கள் சந்தோஷமற்று இருப்பதுடன், கடவுளைக் கூவி அழைக்கின்றார்கள். கடவுளே எங்களை கடலின் அக்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக பயமற்ற உலகம் ஒன்று இருப்பதை இது நிரூபிக்கின்றது. இதனாலேயே இவ்வுலகம் பாவக்கடல் என அழைக்கப்படுகின்றது. மக்கள் இதிலிருந்து விலகி புண்ணிய ஆத்மாக்கள் இருக்கும் உலகிற்கு போக விரும்புகின்றார்கள். எனவே இரு உலகங்கள் உள்ளன. ஒன்று சுவையான சத்தியயுகமும், மற்றையது சுவையற்ற கலியுகமும் ஆகும். இரு உலகங்களும் இப்பூமியில் உள்ளன. கடவுள் இப்பொழுது சுவையான உலகத்தை ஸ்தாபிக்கின்றார். அச்சா.