29.03.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள், 'ரூப்"பும், 'பசான்டும்" ஆவீர்கள். ஞான இரத்தினங்களே உங்கள் வாய்களிலிருந்து சதா வெளிப்பட வேண்டும். புதியவர்கள் வரும்பொழுது, அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள்.

கேள்வி:
உங்கள் ஸ்திதியை நிலையானதாகவும், ஸ்திரமானதாகவும் ஆக்குவதற்கான வழி யாது?

பதில்:
நீங்கள் வைத்துக் கொள்ளும் சகவாசத்தையிட்டு எச்சரிக்கையாக இருந்தீர்களாயின், உங்கள் ஸ்திதியை நீங்கள் நிலையானதாகவும், ஸ்திரமானதாகவும் ஆக்குவீர்கள். சிறந்த சேவை செய்கின்ற மாணவர்களின் சகவாசத்தையே எப்பொழுதும் கொண்டிருங்கள். எவராவது ஞான, யோக விடயங்களிற்குப் பதிலாக, தவறான விடயங்களைப் பேசினாலோ அல்லது அவரது வாயிலிருந்து இரத்தினங்கள் வெளி வருவதற்குப் பதிலாகக் கற்கள் வந்தாலோ, அந்த நபரது சகவாசத்தையிட்டு நீங்கள் எப்பொழுதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாடல்:
ஓ இரவு நேரப் பயணியே, களைப்படையாதீர்.

ஓம் சாந்தி.
கியானும் விக்கியானும். இது அல்பாவும், பீற்றாவும் எனவும் அழைக்கப்படுகிறது; தந்தை அல்பாவையும், பீற்றாவையும் பற்றிய ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். டெல்கியிலே 'விக்கியான் பவன்" இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. 'ஞானமும் யோகமும்" என்பதே அதன் அர்த்தம் என்பது குழந்தைகளான உங்களுக்குத் தெரியும். யோகத்தின் மூலம் நாங்கள் தூய்மையாகுகின்றோம், ஞானத்தின் மூலம் எங்கள் ஆடை நிறமூட்டப்படுகிறது. நாங்கள் முழுச் சக்கரத்தையுமே அறிந்து கொண்டோம். யோக யாத்திரைக்காகவே நாங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொண்டோம். யோகத்திற்காக அம்மக்கள் ஞானத்தைக் கொடுப்பதில்லை; அவர்கள் பௌதீக அப்பியாசங்கள் முதலியனவற்றைக் கற்பிக்கிறார்கள். இது ஒரு சூட்சுமமானதும், பிரதான விடயமும் ஆகும். இப்பாடலும் அதனுடன் தொடர்புபட்டே இருக்கிறது. தந்தை கூறுகிறார்: ஓ குழந்தைகளே, அசரீரியான உலகின் பயணிகளே, தூய்மையாக்கும் தந்தையே அனைவருக்கும் சற்கதியை அளிப்பவர். அவராலேயே அனைவருக்கும் வீட்டிற்கான பாதையைக் காட்ட முடியும். இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதற்கே மக்கள் உங்களிடம் வருகிறார்கள். யாரிடம் அவர்கள் வருகிறார்கள்? அவர்கள் பிரஜாபிதா பிரம்மாகுமாரிகளிடமும், குமாரர்களிடமுமே வருகிறார்கள். எனவே, “நீங்கள் யாரிடம் வந்துள்ளீர்கள்?” என நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். மக்கள் சாதுக்களிடமும், புனிதர்களிடமும், மகாத்மாக்களிடமும் செல்கிறார்கள். அவர்கள் இன்ன இன்ன மகாத்மா என அழைக்கப்படுகிறார்கள். இங்கோ பிரஜாபிதா பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் என்ற பெயரே இருக்கிறது. பல பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்: நீங்கள் யாரிடம் வந்துள்ளீர்கள்? பிரஜாபிதா பிரம்மா உங்களுக்கு யார்? அவரே அனைவரினதும் தந்தை. சிலர் கூறுகிறார்கள்: உங்களது குருஜியினது அல்லது உங்கள் மகாத்மாவின் ஒரு கணத் தரிசனம் எனக்கு வேண்டும்! அவர்களிடம் கேளுங்கள்: எவ்வாறு நீங்கள் அவரை ஒரு குரு என்று கூற முடியும்? இங்கு இருக்கும் பெயரே பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள், எனவே அவர் தந்தையே அன்றி, குருவல்ல என்பதே அர்த்தம். பிரஜாபிதா பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் எனில் அவர்களுக்கு ஒரு தந்தை இருக்கின்றார் என்பதே அர்த்தம். அவர் உங்களது தந்;தையும் ஆவார். “பிரம்மாகுமாரிகளின் தந்தையை நான் சந்திக்க விரும்புகின்றேன்” என்றே நீங்கள் கூற வேண்டும். “பிரஜாபிதா” (மனித குலத்தின் தந்தை) என்ற பெயரை நீங்கள் எப்பொழுதாவது கேட்டதுண்டா? பல புத்திரர்களும், புத்திரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் தந்தையைப் (பிரம்மா) பற்றிப் புரிந்துகொள்ளும்பொழுதே, இவரே எல்லையற்ற தந்தை என்பதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியும். பிரஜாபிதா பிரம்மாவிற்கும் நிச்சயமாக ஒரு தந்தை இருந்திருக்க வேண்டும். இங்கு வருகின்ற எவரிடமும் கேளுங்கள்: நீங்கள் யாரிடம் வந்திருக்கிறீர்கள்? அறிவிப்புப் பலகையில் என்ன கூறப்பட்டுள்ளது? பல நிலையங்களும், பல பிரம்மாகுமார்களும், குமாரிகளும் இருப்பதனால் இவர் நிச்சயமாகத் தந்தையாகவே இருக்க வேண்டும், ஒரு குருவாக இருக்க முடியாது. முதலில் இது அவர்களது புத்தியிலிருந்து அகற்றப்பட வேண்டும். இது ஒரு வீடு என்றும்;, தாங்கள் ஒரு குடும்பத்திற்கு வந்துள்ளார்கள் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். “நாங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். நீங்களும் நிச்சயமாக அவ்வாறே இருக்க வேண்டும்”. அச்சா, பிரம்மா யாருடைய குழந்தை? பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரைப் படைத்தவர் பரமாத்மா, பரமதந்தையான சிவனே. அவரும் ஒரு புள்ளியே. அவரது பெயர் சிவன். அவரே எங்கள் பாட்டனார். ஆத்மாவாகிய நீங்களும் அவரது குழந்தையே. நீங்கள் பிரம்மாவினதும் குழந்தையே. நீங்கள் பாப்தாதாவைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறீர்கள் எனக் கூற வேண்டும். அவரது புத்தி அந்தத் தந்தையிடம் செல்லக்கூடிய வகையிலும் தான் யாரிடம் வந்துள்ளார், இந்தப் பிரஜாபிதா பிரம்மா தனது தந்தை, அந்த ஒரேயொருவரே சகல ஆத்மாக்களினதும் தந்தை என்பவற்றைப் புரிந்துகொள்ளும் வகையிலும் அவருக்கு விளங்கப்படுத்துங்கள். ஆகவே, முதலில் யாரிடம் நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் சிவபாபாவின் குழந்;தைகள் என்றும், இது ஒரு குடும்பம் என்றும், அவர்கள் பாபாவினதும், தாதாவினதும் அறிமுகத்தைப் பெறுகின்றார்கள் என்றும் புரிந்துகொள்ளும்வகையில் அவர்களுக்குச் சாதுரியமாக விளங்கப்படுத்துங்கள். அசரீரியான தந்தையே அனைவருக்கும் சற்கதியை அளிக்;கிறார் என உங்களால் விளங்கப்படுத்த முடியும். அவர் பிரஜாபிதாவின் மூலம் அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். அனைவரும் அவரைக் கூவி அழைக்கிறார்கள். எத்;தனை குழந்;தைகள் இங்கு வந்து தந்தையின் ஆஸ்தியைப் பெறுகிறார்கள் என உங்களால் பார்க்க முடியும். தாம் பாப்தாதாவைச் சந்திக்க வந்துள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில், அவர்கள் முதலில், தந்தையின் அறிமுகத்தைப் பெற வேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் அவர்களை பாப்தாதா என அழைக்கிறோம். சிவபாபாவே ஞானம் நிறைந்தவரும், தூய்மையாக்குபவரும் ஆவார். பின்னர் அசரீரியான கடவுளே அனைவருக்கும் சற்கதியை அளிப்பவர் என்பதையும் விளங்கப்படுத்துங்கள். அவரே ஞானக் கடல். பிரம்மாவின் மூலம் நாம் எங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறோம். பிரம்மாகுமாரிகளும், குமாரர்களுமாகிய நீங்களே சிவபாபாவின் குழந்தைகள் என்பதையும், அவரே அனைவரதும் தந்தை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் ஒருவரே. அவரே ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கிறார். சுவர்க்கத்தைப் படைப்;பவரும், அனைவரதும் தந்தையும், ஆசிரியரும், குருவும் அவரே. அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார், அதாவது, அவர் எங்களை மூன்று காலங்களையும் அறிந்தவர்களான, திரிகாலதரிசிகள் ஆக்குகிறார். நீங்கள் சந்திக்கும் எவருக்காவது விளங்கப்படுத்துவதால் பயன் உண்டு என நினைத்தீர்களாயின் அவருக்கு இதனை விளங்கப்படுத்துங்கள். முதலில், அவரைக் கேளுங்கள்: உங்களுக்கு எத்தனை தந்தையர் உள்ளனர்? ஒருவர் உலகத் (லௌகீக) தந்தையும், மற்றவர் அப்பாலுள்ள (பரலோகத்) தந்தையும் ஆவார். தந்தையால் சர்வவியாபகராக இருக்க முடியாது. நீங்கள் அந்த ஆஸ்தியை உங்கள் லௌகீகத் தந்தையிடமிருந்தும், இந்த ஆஸ்தியை அப்பாலுள்ள தந்தையிடமிருந்தும் பெறுகிறீர்கள். அவர் சர்வவியாபகர் என உங்களால் எவ்வாறு கூற முடியும்? இந்த வார்த்தைகளைக் குறித்துப் பின்னர் கிரகியுங்கள். இதனை விளங்கப்படுத்துவது அத்தியாவசியமானது. நீங்களே பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டியவர்கள்: இது எங்கள் வீடு, எங்களிடம் ஒரு குரு இல்லை. இவர்கள் அனைவரும் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் என்பதை உங்களால் பார்க்க முடியும். அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற, அசரீரியான சிவபாபாவே எங்களுக்கு ஓர் ஆஸ்தியைத் தருகிறார். பிரம்மா, அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்றோ, தூய்;மையாக்குபவர் என்றோ, விடுதலையளிப்பவர் என்றோ அழைக்கப்படுவதில்லை. இது சிவபாபாவின் புகழ் மாத்திரமே. இவரே அனைவரதும் பாப்தாதா என்பதை வருகின்ற எவருக்கும் விளங்கப்படுத்துங்கள். அந்தத் தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். அவரே பிரம்மா மூலம் விஷ்ணு பூமியை ஸ்தாபிக்கிறார். இவ்வாறு நீங்கள் எவருக்காவது விளங்கப்படுத்தினால், அவர் தந்தையிடம் வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் இப் பழக்கத்தைக் கொண்டிருந்து, குருவின் ஒரு கணத் தரிசனத்தை வேண்டுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் குருமார்களைப் பெருமளவில் புகழ்கிறார்கள். குருமார்களே வேதங்கள், சமயநூல்கள், யாத்திரை செல்வது முதலியவற்றைக் கற்பிக்கின்றார்கள். மனிதர்களால் குருமார்களாக முடியாது என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நாங்கள் பிரம்மாவைக் கூட குரு என அழைப்பதில்லை. ஒரேயொரு சற்குருவே இருக்கிறார். எந்த மனிதர்களாலும் ஞானக்கடலாக இருக்க முடியாது. அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தில் சமயநூல்களைக் கற்பவர்கள். அதுவே சமயநூல்களின் ஞானம் என்று அழைக்கப்படுவதுடன், (சமயநூல்களின்) தத்துவம் என்றும் அறியப்பட்டுள்ளது. ஞானக்கடலான தந்தையே உங்களுக்கு இங்கு கற்பிக்கிறார். இதுவே ஆன்மீக ஞானம். பிரம்மாவோ, விஷ்ணுவோ சங்கரரோ ஞானக்கடலாக இருக்க முடியாது. ஆகவே, மனிதர்களை எப்படி அவ்வாறு அழைக்க முடியும்? மனிதர்களால் ஞானத்தின் அதிகாரிகளாக இருக்க முடியாது. பரமாத்மா பரமதந்தையே சமயநூல்களின் அதிகாரி எனவும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவாகிய இவரினூடாகவே பரமாத்மா பரமதந்தை சமயநூல்களினதும், வேதங்களினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகின்றார் எனக் காட்டப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: எவருக்குமே என்னைத் தெரியாது, ஆகவே எவ்வாறு அவர்களால் ஓர் ஆஸ்தியைப் பெற முடியும்? எல்லையற்ற தந்தையிடமிருந்தே நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். இந்த பாபா இப்பொழுது என்ன செய்கிறார்? இதுவே ஹோலியும், துரியாவும் ஆகும். இரண்டு பதங்களே இருக்கின்றன: ஞானமும் யோகமும். அவர் எங்களுக்கு “மன்மனாபவ”வின் ஞானத்தையும் கொடுக்கிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆகவே, இதுவே கியானும் விக்கியானுமாகிய, ஹோலியும் துரியாவும் ஆகும். மக்களிடம் ஞானம் இல்லாததால் அவர்கள், ஒருவரது முகத்திற்கு இன்னொருவர் வர்ணப் பொடியைத் தூவுகிறார்கள். இது உண்மையாகவே அவ்வாறு உள்ளது. எவருமே முக்தியையோ அல்லது சற்கதியையோ பெறுவதில்லை. அவர்கள் வர்ணப்பொடியை ஒருவரது முகத்தில் இன்னொருவர் தூவுகிறார்கள். எவரிடமும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண் கிடையாது. அவர்கள் கட்டுக்கதைகளைச்; செவிமடுத்து வந்தார்கள். அது குருட்டு நம்பிக்கை எனப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது ஞானமாகிய மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். வேறெவரிடமிருந்தும் பெற முடியாத ஆஸ்தியைப் பிரம்மாவினூடாகப் பெறுகின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில், குழந்தைகளாகிய நீங்கள் அவர்களுக்குத் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவது பற்றிய அறிவுரையைக் கொடுக்க வேண்டும், அதனால் “பிரஜாபிதா பிரம்மாகுமாரிகளும், குமாரர்களும்” என்ற பெயர் சகல நிலையங்களிலும் எழுதப்பட்டுள்ளன. “கீதைப் பாடசாலை” என எழுதுவது ஒரு பொதுவான வழக்கமாகும். நீங்கள் “பிரம்மாகுமாரிகள்” என எழுதும்பொழுதே உங்களால் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க முடியும். “பிரம்மாகுமாரிகள்” என்ற பெயரைக் கேட்கும்பொழுது, மக்கள் அச்சமடைகின்றார்கள், இதனாலேயே “கீதைப் பாடசாலை” என்ற பெயரைச் சிலர் எழுதியுள்ளார்கள். எப்படியாயினும், இதையிட்டு அச்சப்படுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. இது ஒரு வீடு என அவர்களுக்குக் கூறுங்கள். யாருடைய வீட்டிற்கு நீங்கள் வந்துள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? பிரஜாபிதா பிரம்மாவே அவர்கள் அனைவரதும் தந்தை. பாரத மக்கள் பிரஜாபிதா பிரம்மாவை நம்புகிறார்கள். ஆதிதேவர் இருந்தார் என்றும், அவர்களே அவரது மனித படைப்புகள் என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள், இருப்பினும், அவர்கள் கிறிஸ்துவில் மாத்திரமே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மக்கள் கிறிஸ்துவை அல்லது புத்தரைத் தங்கள் தந்தை (குயவாநச) என்றே கருதுகிறார்கள். வம்சாவழி விருட்சம் ஒன்று இருக்கிறது. உண்மையில் தந்தையே, ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைப் பிரம்மா மூலம் ஸ்தாபித்தார். ஆகவே, பிரம்மாவே முப்பாட்டனார். முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். அவர்கள் தாமும் உங்கள் தந்தையைச் சந்திக்க வேண்டும் எனக் கூற வேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் பிரம்மபாபாவிடமிருந்து அல்ல, சிவபாபாவிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். உங்களது தந்தை யார்? கீதையின் கடவுள் யார்? ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்தவர் யார்? தந்தை என்ற பெயரைக் கேட்டவுடனேயே சகல பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் சிவபாபாவின் குழந்தைகளே என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். நீங்கள் பிரம்மாவினூடாக, சிவபாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்திகளாகிய முக்தி, சற்கதி ஆகியவற்றைப் பெறுகிறீர்கள். அவர் தற்சமயம் எங்களுக்கு ஜீவன்முக்தியைத் தருகிறார். ஏனைய அனைவரும் முக்திக்குச் செல்வார்கள். இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். எவராவது வரும்பொழுது, அவர்கள் யாரைச் சந்திக்க வந்துள்ளார்கள் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: அவர் என்னுடைய தந்தையும், உங்களுடைய தந்தையும் ஆவார். இங்கு குருமார்கள் முதலியவர்கள் எவருமே இல்லை. நீங்கள் இதனைப் புரிந்துகொள்கிறீர்கள். அம்மக்கள் ஹோலியையும், துரியாவையும் கொண்டிருக்கிறார்கள். இல்லாவிடின் ஹோலிக்கும், துரியாவிற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை. உங்கள் ஆடைகள் ஞானத்தால் நிறமூட்டப்பட்டுள்ளன. இந்த ஆத்மாவானவர் இந்த ஆடையினுள் இருக்கிறார். ஆத்மாவானவர் தூய்மையானதும், தூய சரீரத்தைப் பெற்றுக் கொள்கிறார். இது ஒரு தூய சரீரமல்ல. இந்தச் சரீரம் அழிக்கப்படவுள்ளது. மக்கள் தங்கள் சரீரங்களைக் கங்கையில் குளிப்பாட்டுகிறார்கள்; ஆனால் தந்தையைத் தவிர வேறெவரும் தூய்மையாக்குபவராக முடியாது. ஆத்மாக்களே தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர், ஆனால் ஆத்மாக்கள் கங்கையில் குளிப்பதனால், தூய்மையாக்கப்பட முடியாது. ஏவராலுமே இதனைப் புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே என்றும், ஆத்மா செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். விவேகிகளாகி விட்டவர்களால் இதனைக் கிரகித்து, பிறரையும் அதனைச் செய்வதற்குத் தூண்;ட முடியும். தங்கள் வாய்களிலிருந்து ஞான இரத்தினங்களை மாத்திரமே வெளிவருவதற்கு அனுமதிக்கின்ற குழந்தைகளே ரூப்பும் பசானும் ஆவார்கள். நீங்கள் உங்களிடையே கியானையும் விக்கியானையும் விட வேறு ஏதாவதைப் பற்றிப் பேசிக் கொண்டீர்களாயின், அது கற்களை வீசுவதைப் போன்றதே. அப்பொழுது நீங்கள் சேவை செய்வதற்குப் பதிலாக, அவச்சேவையையே செய்கிறீர்கள். 63 வருடங்களாக நீங்கள் ஒருவர் மற்றவர் மீது கற்;;களையே வீசி வந்துள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் இப்பொழுது கியானையும், விக்யானையும் பற்றிப் பேசி, உங்கள் இதயங்களை மகிழ்விக்க வேண்டும். வம்பு பேசுவதைச் செவிமடுக்காதீர்கள். இது ஞானம். முழு உலகிலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசுகின்றார்கள். குழந்தைகளான நீங்களே ரூப்பும் பசான்டும் ஆவீர்கள். கியானையும் விக்கியானையும் தவிர வேறெதையும் நீங்கள் பேசவோ அல்லது செவிமடுக்கவோ கூடாது. தவறான விடயங்களைப் பேசுபவர்களின் சகவாசம் தீங்கானது. பெருமளவு சேவை செய்பவர்களது சகவாசம் உங்களை அக்கரைக்கு எடுத்துச் செல்கிறது. சில பிராமணர்கள் ரூப்பும் பசானும் ஆக இருக்கையில், ஏனையோரோ பிராமணர்களாகிய பின்னரும் தவறான விடயங்களையே பேசுகின்றார்கள். நீங்கள் அத்தகையவர்களின் சகவாசத்தை வைத்திருக்கக்கூடாது. அவர்கள் மேலும் இழப்பை உருவாக்குகிறார்கள். பாபா மீண்டும் மீண்டும் உங்களை எச்சரிக்கிறார்: ஒருவருடன் மற்றவர் தவறான விடயங்களைப் பற்றிப் பேசாதீர்கள்;! இல்லாவிடின், உங்களுக்குள் இருக்கின்ற சகல சத்தியத்தையும் முற்றாக நீங்கள் அழித்து விடுவீர்கள். நீங்கள் பிறரிடமுள்ள உள்ள சத்தியம் அனைத்தையும் அழிப்பதனால், அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. பாபா உங்களுக்குச் சகலவற்றையும் மிக இலகுவாக கூறுகிறார். மேலும் பலருக்கு இந்த ஞானத்தைச் சென்று கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்;தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இதனைச் செய்பவர்களே தந்தையின் உண்மையான குழந்தைகள். தந்தை சேவை செய்கின்ற குழந்தைகளைப் புகழ்கிறார். நீங்கள் அவர்களது சகவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். யார் நல்ல மாணாக்கர்களின் சகவாசத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றும், யாருடைய சகவாசத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் பற்றி பாபாவிடம் கேட்டீர்களாயின், பாபாவால் உங்களுக்குக் கூற முடியும். பாபாவின் இதயத்திலே அமர்ந்திருப்பவர்கள்; யார் என்பதை அவர் உங்களுக்கு உடனடியாகவே கூறுகிறார். சேவை செய்பவர்களிலே பாபாவிற்கு மரியாதை உண்டு. சிலரால் சேவை செய்ய முடியாது. அவர்கள் அவ்வாறான தீய சகவாசத்தைக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களது ஸ்திதி தளம்புகின்றது. ஆம், பௌதீகச் சேவை செய்வதில் சிறந்தவர்களாக இருப்பவர்களாலும் நல்லதோர் ஆஸ்தியைப் பெற முடியும். அல்பாவையும், பீட்டாவையும் பற்றிப் புரிந்துகொள்வது மிக இலகுவானது. அனைவருக்கும் கூறுங்கள்: தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். இரு வார்த்தைகளே உள்ளன: அல்பாவும், பீட்டாவும், அவ்வளவுதான். இது முற்றிலும் இலகுவானது. இங்கு வருகின்ற எவருக்கும் கூறுங்கள்: தந்தையின் கட்டளைகள்: சதா என்னையே நினைவுசெய்யுங்கள், அவ்வளவுதான்! இதுவே, மிகச்சிறந்த விருந்தோம்பல். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள்! ஒவ்வொரு நிலையத்திலும் வரிசைக்கிரமமான குழந்தைகளே இருக்கிறார்கள். சிலரால் இவற்றை விபரமாக விளங்கப்படுத்த முடியும். உங்களால் விளங்கப்படுத்த முடியாது விட்டால், அவர்களுக்குக் கூறுங்கள்: தந்தை முன்னைய கல்பத்திலும் கூறினார்: சதா என்னையே நினைவுசெய்யுங்கள்! எந்தச் சரீரதாரிகளையோ அல்லது தேவர்களையோ நினைவுசெய்ய வேண்டாம். அவர் இதனைச் செய்தார், இவர் இதனைச் செய்தார் என வம்பு பேசுவதில் உங்களை ஈடுபடுத்தாதீர்கள்! பாபா ஹோலியையும், தூரியாவையும் உங்களுடன் விளையாடியுள்ளார். வர்ணப்பொடிகள் போன்றவற்றை வீசுதல் அசுர மக்களின் வேலையாகும். வேறு எவராவது இன்னொருவரை இழிவுபடுத்துவதைக் கேட்டுக் கொண்டு நீங்கள் இருக்கக்கூடாது. பாபா உங்களுக்கு அத்தகைய சிறந்த விடயங்களைக் கூறுகிறார். மன்மனாபவ, மத்தியாஜிபவ! வருகின்ற எவருக்கும் விளங்கப்படுத்துங்கள்: சிவபாபாவே அனைவருக்கும் தந்தை. அவர் கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதனால், நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள்’ அவரே கீதையின் கடவுளுமாவார். மரணம் உங்கள் முன்னிலையில் உள்ளது. ஆகவே சேவை செய்வது குழந்தைகளாகிய உங்களது கடமையாகும். அனைவருக்கும் தந்தையை நினைவுபடுத்துங்கள்! நீங்கள் உங்கள் இராச்சியத் திலகத்தைப் பெற்றுக் கொள்கின்ற மகா மந்திரம் இதுவே. இது அத்தகையதோர் இலகுவான விடயம். தந்தையை நினைவுசெய்வதுடன், பிறருக்கும் நினைவூட்டுங்கள். உங்கள் படகு அக்கரை செல்லும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. விவேகிகளாகி, அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுங்கள். கற்கள் உங்கள்; வாயிலிருந்து வெளிவருவதால், அவச்சேவை நடைபெறுவதை அனுமதிக்காதீர்கள். ஞானத்தையும், யோகத்தையும் தவிர வேறு எதனையும் கலந்துரையாடாதீர்கள்.

2. ரூப்பும், பசாந்தாகவும் இருப்பவர்களினதும், சேவை செய்பவர்களினதும் சகவாசத்தையே வைத்திருங்கள். தவறான விடயங்களைப் பேசுபவர்களது சகவாசத்தைக் கொண்டிராதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்டர் சர்வசக்திவானாக இருந்து, பிறரில் தங்கியிருக்கும் பந்தனம் எதனையும் முடித்து விடுவதால், உண்மையான சுதந்திரத்தை அனுபவம் செய்வீர்களாக.

உலகிற்குச் சகல சக்திகளையும் தானம் செய்யும்பொருட்டு, ஒரு சுதந்திரமான ஆத்மா ஆகுங்கள். பழைய சரீரங்களுடனான உறவுமுறையிலிருந்து விடுபடுகின்ற அதிமுதன்மையான சுதந்திரம் இருக்கட்டும், ஏனெனில் சரீரங்களில் தங்கியிருப்பதே, உங்கள் மனச்சாட்சிக்கு எதிராக உங்களைப் பல பந்தனங்களில் பிணைக்கின்றது. தங்கியிருத்தல் எப்பொழுதும் உங்களைக் கீழே கொண்டு வந்து, உங்களை விரக்தியையும், முற்றிலும் வறண்டதொரு ஸ்திதியையும் அனுபவம் செய்ய வைக்கின்றது. அத்தகைய ஆத்மாக்களுக்கு எந்த ஆதாரமும் புலப்படுவதில்லை. அவர்கள் கடலின் மத்தியில் சிக்கிக் கொண்டதைப் போன்று, துன்பத்தையோ அல்லது சந்தோஷத்தையோ அனுபவம் செய்வதில்லை. ஆகவே, ஒரு மாஸ்டர் சர்வசக்திவானாகி, சகல பந்தனங்களிலிருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள். உங்களுடைய உண்மையான சுதந்திரத்தின் தினத்தைக் கொண்டாடுங்கள்.

சுலோகம்:
கடவுளைச் சந்திப்பதில் சகல பேறுகளினதும் மகிழ்ச்சியை அனுபவம் செய்து, ஒரு திருப்தியான ஆத்மா ஆகுங்கள்.