15.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சிவபாபாவே அனைவரதும் பாவங்களையும் ஒற்றியெடுக்கின்ற முதற்தரமான மையொற்றுத் தாள் (டிடழவவiபெ pயிநச) ஆவார். அவரை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்.கேள்வி:
ஆத்மாவில் உள்ள மிகவும் ஆழமான கறைகள் எவை? அவற்றை அகற்றுவதற்கு நீங்கள் எம் முயற்சியைச் செய்ய வேண்டியது அவசியம்;?பதில்:
ஆத்மாக்களில் சரீர உணர்வு எனும் மிகவும் ஆழமான கறைகள் உள்ளன. ஆத்மாக்கள் மீண்டும் மீண்டும் எவராவது ஒருவரின் பெயரிலோ, உருவத்திலோ சிக்கிக் கொள்கின்றார்கள். ஆத்மாக்கள் தந்தையை நினைவுசெய்யாமல் சரீரதாரிகளையே தொடர்ந்தும் நினைவுசெய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஒருவர் மற்றவரின் இதயத்திற்குத் துன்பத்தைக் கொடுக்கிறார்கள்;. இந்தக் கறைகளை அகற்றும்பொருட்டு, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
பாடல்:
உங்கள் இதயக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்!
ஓம் சாந்தி.
சகல நிலையங்களிலுமுள்ள இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாடலைக் கேட்டார்கள். நீங்கள் எவ்வளவு புண்ணியத்தைச் செய்துள்ளீர்கள் என்றும், எவ்வளவு பாவத்தை அழித்துள்ளீர்கள் என்பதையும் காண்பதற்கு, உங்களையே பாருங்கள். சாதுக்கள், புனிதர்கள் உட்பட, முழு உலகத்தினரும் ‘‘ஓ தூய்மையாக்குபவரே!” எனக் கூவியழைக்கின்றனர். ஒரேயொரு தந்தையே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார். ஏனைய அனைவரும் தங்களில் பாவத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆத்மாக்களிலேயே பாவங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். புண்ணியமும் ஆத்மாக்களிலேயே சேமிக்கப்பட்டிருக்கின்றது. ஆத்மாக்களே தூய்மையானவர்;களாகவும், பின்னர் தூய்மையற்றவர்களாகவும் ஆகுகின்றனார். இங்கிருக்கும் ஆத்மாக்கள் அனைவரும் தூய்;மையற்றவர்கள்; பாவங்கள் என்ற கறையால் அவர்கள் மூடப்பட்டுள்ளார்கள், இதனாலேயே அவர்கள் பாவாத்மாக்கள் எனப்படுகிறார்கள். எவ்வாறு அப்பாவங்களை அழிக்க முடியும்? எண்ணெய் அல்லது மையானது எங்காவது சிந்தி விட்டால், அதனை அகற்றுவதற்கு மையொற்றுத் தாள் பயன்படுத்தப்படுகிறது. அவரே மையொற்றுத் தாளாகவும், தூய்மையாக்குபவராகவும் இருக்கின்றமையால் மனிதர்கள் அனைவரும் அவரையே நினைவுசெய்கிறார்கள். அவரையன்றி வேறெவராலுமே மையொற்றுத் தாளாக இருக்க முடியாது. அம்மக்கள் பிறவிபிறவியாக, கங்கையில் நீராடி, மேலும் தூய்மையற்றவர்களாகவே ஆகுகிறார்கள். சிவபாபா மாத்திரமே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கும் மையொற்றுத் தாள். அவர் மிகவும் சின்னஞ்சிறிய, ஒரு புள்ளியாவார். அவர் சகலரது பாவங்களையும் அழிக்கிறார். எந்த வழிமுறையால்? அவர் கூறுகிறார்: மையொற்றுத் தாளாகிய, என்னை நினைவுசெய்யுங்கள்! நானே உணர்வுள்ளவன். நான் உங்களுக்கு எவ்விதச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. நீங்களும் புள்ளிகளான, ஆத்மாக்கள், நானும் ஒரு புள்ளியே. அவர் கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தை வினவ வேண்டும்: நினைவினால் எத்தனை பாவங்கள் அழிக்கப்பட்டு விட்டன?, நான் எத்தனை பாவங்களைச் செய்துள்ளேன்? இன்னமும் எத்தனை பாவங்கள் எஞ்சியுள்ளன? நீங்கள் இதனை எவ்வாறு அறிய முடியும்? அந்த ஒரேயொரு மையொற்றுத் தாளை நினைவுசெய்கின்ற பாதையை மற்றவர்களுக்கும் தொடர்ந்து காட்டுங்கள். அனைவருக்கும் இந்த அறிவுரையைக் கொடுப்பது மிகவும் நல்லது. இந்த அறிவுரையைப் பெறுபவர்கள்; தந்தையை நினைவுசெய்வதும், அறிவுரையைக் கொடுப்பவர்கள் அவரை நினைவுசெய்யாததும் ஓர் அதிசயமே. இதனாலேயே அவர்களின் பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. ஒரேயொருவரே தூய்மையாக்குபவர் எனப்படுகிறார். பல பாவங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. காமம் என்ற பாவமும் உள்ளது. சரீர உணர்வு எனும் பாவமே அனைத்திலும் மிகவும் மோசமான, முதற் தரமான பாவமாகும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! நீங்கள் எவ்வளவிற்கு அவரை மாத்திரம் சதா நினைவுசெய்கிறீர்களோ, அந்தளவிற்கே உங்களில் உள்ள கலப்படம் அகற்றப்படும். நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். இப்பாதையைப் பிறருக்கும் காட்டுங்கள்! நீங்கள் மற்றவர்களுக்கு எந்;தளவுக்கு அதிகமாக விளங்கப்படுத்துகிறீர்களோ, அவ்வளவுக்கு அதிகமாக நன்மையைப் பெறுவீர்கள். உங்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்துங்கள். அத்துடன் மற்றவர்களுக்கும் கூறுங்கள்: தந்தையை நினைவுசெய்யுங்கள், நீங்கள் ஒரு புண்ணியாத்மா ஆகுவீர்கள். ஒரேயொரு தூய்மையாக்குபவரே இருக்கின்றார் எனக் கூறுவது உங்கள் கடமை. பல ஞான ஆறுகள் இருப்பினும், நீங்கள் ஒரேயொருவரையே நினைவுசெய்யுமாறு அனைவருக்கும் கூற வேண்டும். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். அவருக்குப் பெருமளவு புகழ் உள்ளது. அவர் ஞானக்கடலுமாவார். ஒரேயொரு தந்தையை நினைவுசெய்து ஆத்ம உணர்வில் இருப்பதே மிகவும் கடினமான விடயம். தந்தை உங்களுக்கு மாத்திரம் கூறுவதில்லை; சகல நிலையங்களிலுமுள்ள குழந்தைகளும் அவரது மனதில் உள்ளார்கள். தந்தை சகல குழந்தைகளையும் பார்க்கிறார். சிறந்த சேவை செய்யும் குழந்தைகள் உள்ள சிவபாபாவின் பூந்தோட்டங்கள் இருக்கின்றன. பாபா மிகச்சிறந்த பூந்தோட்டத்தில் உள்ளவர்களை நினைக்கிறார். செல்வந்தர் ஒருவருக்கு நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருந்தாலும், அவர் மூத்த மகனையே நினைவுசெய்கின்றார். மலர்களில் பல வகையானவை உள்ளன. ஆகவே, பாபாவும் தனது மிகப் பெரிய பூந்தோட்டங்களை நினைவுசெய்கிறார். எவருக்கும் இந்தப் பாதையைக் காட்டுவது மிகவும் இலகுவானது: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். அவர் ஒருவரே தூய்மையாக்குபவர். அவரே கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். அவரே முழு உலகத்தினதும் முதற்தரமான மையொற்றும் தாள். அனைவரும் அவரையே நினைவுசெய்கிறார்கள். எவருக்கும் இந்தப் பாதையைக் காட்டுவது இலகுவானது: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள்! உங்களை மூடியிருக்கும் சரீர உணர்வு எனும் கறைகள் அகற்றப்படும் வகையில் அவரை நினைவுசெய்வதற்கான வழியை பாபா காட்டியுள்ளார். ஆத்ம உணர்விற்கு வருவதற்கு முயற்சி தேவைப்படுகிறது. எவருமே பாபாவிற்கு உண்மையைக் கூறுவதில்லை. சிலர் தங்கள் அட்டவணையை எழுதி பாபாவிற்கு அனுப்பிவிட்டுப் பின்னர் களைப்படைந்து விடுகிறார்கள். இலக்கு மிகவும் உயர்ந்தது. மாயை அவர்களது போதை முழுவதையும் முற்றாக அழித்து விடுகின்றாள், பின்னர் அவர்கள் அதனை எழுதுவதையும் நிறுத்தி விடுகிறார்கள். அரைக் கல்பத்திற்குரிய சரீர உணர்வைத் துறக்க முடியாது. தந்தை கூறுகிறார்: இந்தத் தொழிலைத் தொடர்ந்தும் செய்யுங்கள். தந்தையை நினைவுசெய்து, மற்றவர்களையும் இதனைச் செய்வதற்குத் தூண்டுங்கள்; அவ்வளவே! இதுவே அனைத்திலும் அதியுயர்ந்த தொழிலாகும்;. நினைவில் நிலைத்திருக்காதவர்கள் இந்தத் தொழிலைச் செய்ய மாட்டார்கள். தந்தையின் நினைவே பாவங்கள் அழிக்கப்படுகின்ற, யோக அக்கினியாகும். இதனாலேயே உங்கள் பாவங்கள் எந்தளவுக்கு அழிந்துள்ளன என உங்களிடம் கேட்கப்படுகின்றது. நீங்கள் தந்தையை எவ்வளவிற்கு அதிகமாக நினைவுசெய்கிறீர்களோ, அவ்வளவிற்கே உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் சொந்த இதயத்தை நன்றாகவே தெரியும். மற்றவர்கள் செய்கின்ற சேவையிலிருந்து நீங்கள் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் முடியும். பாபாவை நினைவுசெய்வதற்கான பாதையை நீங்கள் மற்றவர்களுக்குக் காட்டுகிறீர்கள். அவரே தூய்மையாக்குபவர். இங்குள்ள இவ்வுலகம் தமோபிரதானான தூய்மையற்ற உலகமாகும். சகல ஆத்மாக்களும், அவர்களது சரீரங்களும் தமோபிரதானாகவே இருக்கின்றன. நீங்கள் இப்பொழுது மீண்டும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அங்கே, சகல ஆத்மாக்களும் தூய்மையாக இருக்கின்றார்கள். அவர்கள் தூய்மையாகும்பொழுதே, அவர்களால் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும். நீங்கள் மற்றவர்களுக்கும் இப்பாதையைக் காட்ட வேண்டும். தந்தை உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த வழிமுறையைக் காட்டுகின்றார்: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள்! இந்த மையொற்றுத் தாளைப் பயன்படுத்துவதனால் உங்கள் பாவங்கள் அனைத்தும், பாவச்செயல்கள் அனைத்தும் அழிக்கப்படும். தூய்மையாகுவதே மிக முக்கிய விடயம். மனிதர்கள் தூய்மையற்றவர்களாக ஆகியதால், கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து அனைவரையும் தூய்மையாக்கி, எங்கள் அனைவரையும் உங்களுடன் திரும்பவும் அழைத்துச் செல்லுங்கள். அவர் ஒரு தூய்மையற்ற ஆத்மாவேனும் எஞ்சியிருக்க முடியாத வகையில், சகல ஆத்மாக்களையும் தூய்மையாக்கித் தன்னுடன்; திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வார் என்று எழுதப்பட்டுள்ளது. சுவர்க்கவாசிகளே முதலில் வருவார்கள் என்றும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை அனைவருக்குமான மருந்தையே கொடுக்கின்றார். நீங்கள் சந்திக்கின்ற எவருக்கும் இம் மருந்தைக் கொடுங்கள். தந்தையிடம் செல்ல வேண்டும் எனறு விரும்புகின்றீர்கள், ஆனால் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றுள்ளதால், உங்களால் அங்கு திரும்பிச் செல்ல முடியாது. தூய்மையாகுவதனால், உங்களால் அங்கு செல்ல முடியும். ஓ ஆத்மாக்களே, என்னை நினைவுசெய்தால், நான் உங்களை என்னுடன் அழைத்துச் செல்வேன். பின்னர் அங்கிருந்து நான் உங்களைச் சந்தோஷத்திற்குள் அனுப்புவேன். பின்னர் உலகம் பழையதாகும்பொழுது, நீங்கள் துன்பத்தைப் பெறுகிறீர்கள். நான் எவருக்குமே துன்பத்தைக் கொடுப்பதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சோதிக்க வேண்டும்: நான் பாபாவை நினைவுசெய்கிறேனா? நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக உங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தவளவுக்கு அதிகமாக உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். இது அத்தகைய இலகுவான மருந்து ஆகும். சாதுக்கள், சந்நியாசிகளில் எவருக்கும் இந்த மருந்தைப் பற்றித் தெரியாது. இது எங்குமே எழுதப்பட்டிருக்கவில்லை. இது முற்றிலும் ஒரு புதிய விடயமாகும். பாவக் கணக்குகள் சரீரங்களுடன் சம்பந்தப்பட்டவையல்ல. முழுப் பாகங்களும் அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாக்களில் பதியப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் தூய்மையற்றுள்ளபொழுது அதன் தாக்கம் உயிர்வாழ்பவர்களில் காணப்படும். ஆத்மாக்கள் தூய்மையாகும்பொழுது, தூய சரீரங்களைப் பெறுகிறார்கள். ஆத்மாவே சந்தோஷமானவராகவும், சந்தோஷமற்றவராகவும் ஆகுகின்றார். சரீரம் வேதனைப்படும்பொழுது, ஆத்மாவே அந்த வலியை உணர்கின்றார். ‘இவர் சந்தோஷமற்ற ஆத்மா, அவர் சந்தோஷமான ஆத்மா’ என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறிய ஆத்மா எவ்வாறு அத்தகைய ஒரு பாகத்தை நடிக்கின்றார் என்பது ஓர் அற்புதமே. தந்தையே சந்தோஷத்தை அருள்பவர். இதனாலேயே மக்கள் அவரை நினைவு செய்கிறார்கள். இராவணனே துன்பத்தை ஏற்படுத்துகின்றான். சரீர உணர்வே முதலில் வருகின்றது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும்; இதற்கே பெரும் முயற்சி தேவை. பெரும் சிரமத்துடனேயே நீங்கள் அவரை உங்கள் இதயத்தால் உங்களால் முடிந்த வழியில் நினைவுசெய்கிறீர்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். இங்கிருக்கும்பொழுதும், உங்களிற் பலர் இதை மறந்து விடுகிறீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வில் இருந்தால், பாவம் செய்ய மாட்டீர்கள். தந்தையின் கட்டளைகள்: தீயவற்றைக் கேட்காதீர்கள்! இது குரங்குகளுக்குப் பொருத்தமானதல்ல (சித்தரிக்கப்பட்டுள்ளது போல்); இது மனிதர்களுக்கே பொருத்தமானது. ஏனெனில் மனிதர்கள் குரங்குகளைப் போல் இருப்பதாலேயே, அவர்கள் குரங்குகளின் உருவங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாள் முழுவதும் தொடர்ந்தும் வீண்வம்புகள் பேசுகின்ற பலர் உள்ளார்கள். ஆகவே தந்தை விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. சகல நிலையங்களிலும், சிலர் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தைக் கொடுக்கின்றார்கள். தந்தையின் நினைவிலேயே இருக்கின்ற சிறந்த குழந்தைகள் சிலரும் இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களால் எவருக்குமே துன்பத்தைக் கொடுக்கக்கூடாது என நம்புகிறார்கள். உங்கள் வார்த்தைகளாலேனும் நீங்கள் எவருக்கேனும் துன்பத்தைக் கொடுத்தீர்களாயின், நீங்கள் துன்பத்திலேயே மரணிக்க நேரிடும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தையே கொடுக்க வேண்டும். அனைவரிடமும் கூறுங்கள்: ஆத்ம உணர்வில் இருங்கள்! தந்தையை நினைவுசெய்யுங்கள், பணம் கொடுக்கல், வாங்கல் பற்றி எதையும் பேசாதீர்கள். அன்பான தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் உலக அதிபதிகளாகுவீர்கள். கடவுள் பேசுகின்றார்: 'மன்மனாபவ!" சதா என்னையும் உங்கள் ஆஸ்தியையும் மாத்திரமே நினைவுசெய்யுங்கள்! உங்களிடையே வேறு எதைப் பற்றியும் பேசாதீர்கள்! தந்தையை நினைவுசெய்து மற்றவர்களுக்கும் நன்மையைக் கொடுங்கள்! உங்களிடம் எவர் வந்தாலும், அவர்கள், “பாபாவின் குழந்தைகள் மையொற்றுத் தாளே” எனக் கூறக் கூடியளவிற்கு உங்கள் ஸ்திதி மிக இனிமையானதாக இருக்க வேண்டும். நீங்கள் அந்த ஸ்திதியை இப்பொழுது கொண்டிருக்கவில்லை. எவராவது பாபாவிடம் கேட்டார்களாயின், மையொற்றுத் தாள் என்பதை விடுங்கள், அவர்கள் ஒரு கடதாசியாகவேனும் இன்னமும் ஆகவில்லை. பாபா சகல நிலையங்களிலுமுள்ள குழந்தைகளுடனேயே பேசுகின்றார். பம்பாய், கல்கத்தா, டெல்கி போன்ற சகல நிலையங்களிலும் குழந்;தைகள் இருக்கிறார்கள். சிலவேளைகளில் “இன்ன இன்ன குழந்தை பெருமளவு தொல்லையை விளைவிக்கின்றார்” எனும் அறிக்கைகளையும் பாபா பெறுகின்றார். பிறரைப் புண்ணியாத்மாக்கள் ஆக்குவதற்குப் பதிலாக, அவர் அவர்களை மேலும் பாவாத்மாக்கள் ஆக்குகிறார். அவரைக் கேட்கின்ற எவருக்குமே பாபா உடனடியாகவே கூறுவார். சிவபாபாவிற்கு அனைத்தும் தெரியும். அவரிடம் சகல கணக்குகளும் இருக்கின்றன. இந்த பாபாவாலும் உங்களுக்குக் கூற முடியும். உங்கள் முகத்திலிருந்து அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். இந்த பாபாவும் நினைவால் போதை அடைந்திருக்கின்றார். அவரது முகம் தேவர்களினதைப் போல் மலர்ச்சியானதாகவும், சந்தோஷமானதாகவும் இருக்கின்றது. ஓர் ஆத்மா சந்தோஷமாக இருக்கும்பொழுது, அவரது சரீரமும் சந்தோஷமானதாகவே தென்படுகின்றது. சரீரம் வலியை அனுபவம் செய்யும்பொழுது, ஆத்மாவே அதனை உணர்கின்றார். அனைவருக்கும் தொடர்ந்தும் ஒரு விடயத்தைக் கூறுங்கள்; சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அவர்கள் கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார் என எழுதியுள்ளார்கள், பலர் கிருஷ்ணரை நினைவுசெய்தபொழுதிலும், அவர்களது பாவங்கள் இன்னமும் அழிக்கப்படவில்லை. பதிலாக அவர்கள் மேலும் அதிகமாகத் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். தாங்கள் யாரை நினைவுசெய்ய வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கடவுளின் வடிவத்தை அறியார்கள். அவர் சர்வவியாபி என்று அவர்கள் கூறியபொழுதிலும், ஆத்மா ஒரு நட்சத்திரம் ஆகையால் பரமாத்மாவும் ஒரு நட்சத்திரமே ஆவார். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவைப் போன்றவர் என்றும் அவர்கள் கூறுவதால், அவரும் ஒரு புள்ளியே. அத்தகைய ஒரு சின்னஞ்சிறிய ஆத்மா ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். அவர் சகல புள்ளிகளுக்கும் கூறுகிறார்: குழந்தைகளே, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! அவர் இந்த அங்கங்கள் மூலம் பேசுகின்றார். அங்கங்கள் இல்லாது ஓர் ஆத்மாவால் ஒலியை உண்டாக்க முடியாது. ஓர் ஆத்மாவினதும், பரமாத்மாவினதும் உருவம் ஒன்றே என உங்களால் கூற முடியும், இல்லையா? பரமாத்மாவால் மிகப்பெரிய லிங்கமாகவோ அல்லது அவ்வாறான ஏதாவது ஒன்றாகவோ இருக்க முடியாது. தந்தை கூறுகிறார்: நானும் அத்தகைய ஒரு புள்ளியே, ஆனால் நானோ தூய்மையாக்குபவர், ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள். இது ஒரு அத்தகையதோர் எளிமையான விடயம். இப்பொழுது, ஆத்ம உணர்வுடையவர்களாகி, தந்தையாகிய என்னை நினைவுசெய்து, மற்றவர்களுக்கும் இப்பாதையைக் காட்டுங்கள்! நான் உங்களுக்குக் கூறுகிறேன்: மன்மனாபவ! பின்னர் நான் உங்களுக்குச் சிறுகிளைகளினதும், கிளைகளினதும் சிறிதளவு விபரத்தை விளங்கப்படுத்துகிறேன். முதலில், நீங்கள் சதோபிரதானாக இருக்கிறீர்கள், பின்னர் நீங்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளின் ஊடாகச் செல்கிறீர்கள். ஆத்மாக்கள் பாவாத்மாக்கள் ஆகும்பொழுது, அவர்களில் பல கறைகள் படிந்திருக்கின்றன. எவ்வாறு அந்தக் கறைகள் அகற்றப்பட முடியும்? கங்கையில் நீராடுவதால், பாவங்கள் அழிக்கப்படும் என அம்மக்கள் நம்புகிறார்கள். எப்படியாயினும் அது சரீரத்தை நீராட்டுவதாகும். தந்தையை நினைவுசெய்வதால் மாத்திரமே ஓர் ஆத்மாவால் தூய்மையாக முடியும். இதுவே நினைவு யாத்திரை என அறியப்;படுகிறது. இது மிகவும் இலகுவானது. தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் இதனை ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகிறார். கீதையிலும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்: “மன்மனாபவ”! நீங்கள் நிச்சயமாக ஆஸ்தியைப் பெறுவீர்கள், ஆனால் என்னை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்;தையே அழிவற்ற மையொற்றும் தாள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதனால், நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள், ஆனால் இராவணனோ உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குகிறான். ஆகவே, நீங்கள் அத்தகைய தந்தையை நினைவுசெய்ய வேண்டும்! பாபாவை நினைவுசெய்யாதவர்களின் நிலைமையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, ஏனைய அனைத்தையும் துறந்து விடுங்கள்! ஒரு விடயத்தை நினைவுசெய்யுங்கள்: ஆத்ம உணர்வுடையவராகி, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! அவ்வளவுதான்! ஓர் ஆத்மா தனது சரீரத்தை விடுத்து இன்னொரு சரீரத்தை எடுக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாவே சந்தோஷத்தையும், துன்பத்தையும் அனுபவம் செய்கிறார். எப்பொழுதுமே ஒருவர் மற்றவரின் இதயத்தைப் புண்படுத்தாதீர்கள். ஒருவருக்கொருவர் சந்தோஷத்தைக் கொடுங்கள். இதுவே உங்கள் தொழிலாகும். தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தைக் கொடுக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவர் மற்றவரின் சரீரங்களில் சிக்குண்டுள்ளார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நாள் பூராகவும் நினைவுசெய்கிறார்கள். மாயை மிகவும் புத்திசாலி! பாபா எந்தப் பெயரையும் குறிப்பிடுவதில்லை. இதனாலேயே பாபா கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்களாக! ஞானம் மிகவும் இலகுவானது. நினைவில் இருப்பதே கடினமான விடயம். அந்த மக்கள் அக்கல்வியிலே பல பாடங்களை 15 முதல் 20 வருடங்கள் வரை கற்கிறார்கள். இந்த ஞானம் மிகவும் இலகுவானது. நாடகத்தை அறிந்து கொள்வது என்பதும் ஒரு கதையைப் போன்றது. முரளியை நடத்துவது பெரிய விடயமல்ல. நினைவே பெருஞ் சிரமத்தை விளைவிக்கிறது. பின்னர் பாபா கூறுகிறார்: நாடகம்! எப்படியாயினும் தொடர்ந்தும் முயற்சியைச் செய்யுங்கள். தந்தையை நினைவுசெய்வதனால் உங்கள் பாவங்கள் நினைவு எனும் அக்கினியில் அழிக்கப்படும். சில மிகச்சிறந்த குழந்தைகளும் இதிலேயே சித்தியடையவதில்லை. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. என்றுமே எவரது இதயத்தையும் புண்படுத்தாதீர்கள். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். ஒரேயொரு தந்தையின் நினைவிலிருந்து பிறருக்கும் அவரை நினைவு படுத்துங்கள்.
2. பாவக் கறைகளை அகற்றுவதற்கு, ஆத்ம உணர்வுடையவராகி, அழிவற்ற மையொற்றுத் தாளாகிய, தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தொடர்ந்தும் அனைவருக்கும் நன்மை அளிக்கக்கூடிய வகையில், உங்கள் ஸ்திதியை மிகவும் இனிமையானதாக்குங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் ஆசீர்வாதங்களை அருளும் சொரூபமாகி, உங்கள் ஒத்துழைப்பு மூலம் பலவீனமான ஆத்மாக்களை ஆஸ்திக்கான ஓர் உரிமையைக் கோருமாறு செய்வீர்களாக.இப்பொழுது, ஓர் ஆசீர்வாதங்களை அருளும் சொரூபமாக, உங்கள் எண்ண சக்தி மூலம் பலவீனமான ஆத்மாக்களுக்குச் சேவை செய்து, அவர்களைத் தந்தைக்கு அண்மையில் கொண்டு வாருங்கள். பெரும்பாலான ஆத்மாக்களில் இந்தத் தூய விருப்பம் வெளிப்படுகிறது. வேறு எவரும் செய்ய முடியாததை ஆன்மீகச் சக்தியால் செய்ய முடியும். ஆனால் அவர்கள் ஆன்மீகத்தை நோக்கி முன்னேறுவதற்கான தைரியத்தில் பின்னடைவாக உள்ளனர். உங்கள் சக்தி மூலம் அவர்களுக்குத் தைரியம் எனும் கால்களைக் கொடுங்கள், அப்பொழுது மாத்திரமே அவர்களால் தந்தைக்கு அண்மையில் வர இயலும். இப்பொழுது, ஓர் ஆசீர்வாதங்களை அருளும் சொரூபமாகி, உங்கள் ஒத்துழைப்பு மூலம் அவர்களை ஆஸ்திக்கான ஓர் உரிமையைக் கோருமாறு செய்யுங்கள்.
சுலோகம்:
தங்கள் மாற்றத்தின் மூலம் தங்களுடைய தொடர்புகள், வார்த்தைகள், உறவுமுறைகளில் வெற்றியாளர்களாக இருப்பவர்கள் மாத்திரமே வெற்றி சொரூபங்கள் ஆகுகின்றார்கள்.