05.03.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பாபாவும் தாதாவும் அகங்காரம் அற்றவர்களாகவும், ஆத்ம உணர்வுடையவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வாறே, நீங்களும் தந்தையைப் பின்பற்றும்; பொழுது சதா தொடர்ந்து முன்னேறிச் செல்வீர்கள்.

கேள்வி:
உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு எதனையிட்டு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?

பதில்:
உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற விரும்பினால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியவை: 1. உங்களது மனதால் கூட எவருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருத்தல். 2. எந்த ஒரு சூழ்நிலையிலும், கோபப்படாமல் இருத்தல். 3. தந்தைக்கு உரியவர்களான பின்னர் தந்தையின் பணியிலும் இந்த உருத்திரனின் யாகத்திலும் இடையூறு விளைவிக்காமல் இருத்தல்;. சிலர் 'பாபா பாபா" எனத் தொடர்ந்து கூறுகிறார்கள், ஆனால் அவர்களிடம் இராஜரீகமான பழக்கவழக்கங்கள் இல்லாத காரணத்தினால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியாது.

ஓம் சாந்தி.
தந்தையிடம் இருந்து நிச்சயமாக ஆஸ்தியைப் பெற வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்கிறீர்கள். எவ்வாறு? ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதாலேயே ஆகும். கீதை என்ற ஒரு சமயநூலே உள்ளது. அதிலேயே கடவுளால் பேசப்பட்;ட மேன்மையான வாசகங்கள் உள்ளன என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். கடவுளே அனைவருக்கும் தந்தையாவார். மேன்மையான வாசகங்கள் கடவுளால் பேசப்படுகின்றன. கடவுள் நிச்சயமாக வந்து, ஆத்மாக்களை மேன்மையாக்கி இருக்க வேண்டும். ஆகையாலேயே அவர் புகழப்படுகிறார். ஸ்ரீமத் பகவத் கீதை என்றால் கடவுளால் பேசப்பட்ட மேன்மையான வாசகங்கள் என்று அர்த்தமாகும். கடவுள் நிச்சயமாக அதி மேலானவர். அந்த ஒரு சமயநூலில் மட்டுமே மேன்மையான வாசகங்கள் நினைவு கூரப்பட்டுள்ளன. கடவுளால் பேசப்பட்ட மேன்மையான வாசங்கள் வேறு எந்தச் சமயநூலிலுமே இல்லை. அதை எழுதியவரும் அம்மேன்மையான வாசகங்கள் யாருடையவை என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. ஏன் அந்தத் தவறு நடந்தது? அவை யாவற்றையும் தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார். இராவண இராச்சியம் ஆரம்பித்த காலத்திலிருந்து, அவர்கள் இராவணனுடைய கட்டளைகளைப் பின்பற்றத் தொடங்கினார்கள். இராவணனுடைய கட்டளைகளைப் பின்பற்றுபவர்களாலேயே முதலாவது பாரிய தவறு செய்யப்பட்டது. அவர்கள் இராவணனால் அறையப்படுகிறார்கள். குண்டுகள் போன்றவற்றைத் தயாரிக்கின்ற அம்மக்களை, சங்கரரே தூண்டுகிறார் எனக் கூறப்படுவதைப் போலவே, ஐந்து விகாரங்களான இராவணன் மனிதர்களைத் தூய்மையற்றவர்கள் ஆகுவதற்குத் தூண்டுகின்றான். ஆகையாலேயே அவர்கள் கூவி அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! எனவே தூய்மை ஆக்குபவர் ஒரே ஒருவரே. அனைவரையும் தூய்மையற்றவர்கள் ஆக்குபவன், உங்களைத் தூய்மை ஆக்குபவரிலிருந்து, வேறானவன் என்பது இதிலிருந்து நிரூபிக்கப்படுகிறது. இருவரும் ஒருவராக இருக்க முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும்; செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக இவ்விடயங்களை விளங்கிக் கொள்கிறீPர்கள். அனைவருக்குமே நம்பிக்கை இருக்கிறது என நினைத்து விட வேண்டாம். அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. எந்தளவிற்கு அதிகமாக நம்பிக்கை உள்ளதோ, அந்தளவிற்கு அதிகமாகச் சந்தோஷம் உள்ளது. நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். சுய-ஆட்சி என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு, நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். சாதாரண மனிதர்கள் தேவர்கள் ஆகுவதற்கு அதிகக் காலம் எடுப்பதில்லை. நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். நீங்கள்; மம்மாவையும் பாபாவையும் பின்பற்றுகிறீர்கள். அவர்கள் ஏனையோரையும்; தம்மைப் போலவே ஆக்குவதற்காகச் சேவை செய்கிறார்கள். ஆகையாலே, அவர்கள் செய்கின்ற சேவையோடு, ஒப்பிடும் போது நீங்கள்; என்ன சேவையைச் செய்கின்றீர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். சிவபாபாவும், பிரம்மதாதாவும் இணைந்திருக்கிறார்கள் என பாபா விளங்கப்படுத்தி இருக்கிறார். ஆகையால், அவரே அனைவரிலும் மிகவும் நெருக்கமானவர் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அவரது (பிரம்மாவின்) பரிபூரணமான வடிவமே சூட்சும உலகில் காணப்படுகிறது. ஆகையால் நிச்சயமாக அவர் அனைவரிலும், முன்னிலையில் இருக்க வேண்டும். தந்தை எவ்வாறு ஆணவம் அற்றவராகவும், ஆத்ம உணர்வுடையவராகவும் இருக்கிறாரோ அவ்வாறு இந்த தாதாவும் ஆணவம் அற்றவர். இவர் கூறுகிறார்: சிவபாபா தொடர்ந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். முரளி பேசப்படும் போது, அந்த பாபா கூறுகிறார்: இவர் மூலமாக, சிவபாபாவே பேசுகிறார் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். இந்த பிரம்மாவும் நிச்சயமாகச் செவிமடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் செவிமடுக்காமலோ, அல்லது உபதேசிக்காமலோ இருந்தால், எவ்வாறு அவரால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும்? எவ்வாறாயினும் அவர் தனது சுய சரீர உணர்வை நீக்கிக் கூறுகிறார்: அனைத்தையும் உபதேசிப்பவர் சிவபாபாவே என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். நான் தொடர்ந்து முயற்சி செய்கிறேன். சிவபாபா மாத்திரமே அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். தூய்மையற்ற ஸ்திதியைக் கடந்தே இவரும் வந்திருக்கிறார். மம்மா குமாரி ஆதலால், அவர் முன்னேறிச் சென்று விட்டார். குமாரிகளாகிய நீங்களும் மம்மாவைப் பின்பற்ற வேண்டும். இல்லறத்தினர் பாபாவைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் தூய்மையற்றவர்கள் என்பதையும், நீங்கள் தூய்மையாக வேண்டும் என்பதையும் நீங்கள் ஒவ்வொருவரும் விளங்கிக் கொண்டிருத்தல் வேண்டும். நினைவு யாத்திரையையே தந்தை உங்களுக்குப் பிரதானமாகக் கற்பிக்கிறார். இதில் எவ்விதச் சரீர உணர்வும் இருக்கக் கூடாது. நல்லது, உங்களில் எவருக்கேனும் ஞானத்தை கொடுக்க முடியாவிட்டால், நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள்! நினைவு யாத்திரையில் நீங்கள் நிலைத்திருந்தால், உங்களால் ஞானத்தைக் கொடுக்க முடியும். எவ்வாறாயினும் நினைவு யாத்திரையில் நீங்கள் நிலைத்திருக்க மறந்தால், பரவாயில்லை! ஞானத்தை முதலில் கொடுத்து விட்டு, அதன் பின்னர், உங்களை நினைவு யாத்திரையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒலிக்;கு அப்பால் செல்கின்ற ஸ்திதியே ஓய்வு பெறுகின்ற ஸ்திதியாகும். ஆத்ம உணர்வில் நிலைத்திருந்து, தந்தையையும், சக்கரத்தையும் நினைவு செய்வதே பிரதான விடயமாகும். எவருக்குமே துன்பம் விளைவிக்காதீர்கள்! தொடர்ந்தும் விளங்கப்படுத்துங்கள்: தந்தையை மட்டுமே நினைவு செய்யுங்கள். இது ஒரு யாத்திரையாகும். எவரேனும் ஒருவர் மரணம் அடையும் போது, அவர் சுவர்க்கத்திற்கு சென்று விட்டார் என அவர்கள் கூறுகிறார்கள். அஞ்ஞானப்பாதையில் ஒருவருமே சுவர்க்கத்தை நினைவு செய்வதில்லை. சுவர்க்கத்தை நினைவு செய்தல் என்றால், இங்கு மரணித்து வாழ்தலாகும். எவருமே அதை அத்தனை சுலபமாக நினைவு செய்வதில்லை. நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: தந்தையை எவ்வளவு அதிகமாக நினைவு செய்கிறீர்களோ அவ்வளவுக்கு உங்களது சந்தோஷம் என்ற பாதரசம் அதிகளவில் உயரும். உங்களது ஆஸ்தியையும் நீங்கள் நினைவு செய்ய வேண்டும். தந்தையை எவ்வளவு அதிகமாக நினைவு செய்கிறீர்களோ, அதே அளவிற்கு நீங்கள் முகமலர்ச்சியுடனும் இருப்பீர்கள். தந்தையை நினைவு செய்யாததால், குழப்பம் அடைந்து, தொடர்ந்து நீங்கள் திணறுவீர்கள். அந்தளவிற்கு அதிக நேரத்திற்கு உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடியாது. பாபா உங்களுக்குக் காதலன் காதலி பற்றிய உதாரணத்தைக் காட்டியுள்ளார். அவர் தனது பணியைச் செய்து கொண்டிருக்கிறார். அவள் நெசவு செய்து கொண்டிருந்தாலும் அவளது காதலனே அவளது முன்னிலையில் தோன்றுகிறான். காதலி தனது காதலனை நினைவு செய்கிறாள். அதன் பின்னர் காதலனும் தனது காதலியை நினைவு செய்கிறான். இங்கு நீங்கள் ஒரே ஒரு தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். தந்தை உங்களை நினைவு செய்ய வேண்டியதில்லை! தந்தையே அனைவரதும் அன்பிற்கினியவர். குழந்தைகளாகிய நீங்கள் எழுதுகிறீர்கள்: பாபா, நீங்கள் என்னை நிiiவு செய்கிறீர்களா? ஓ, அனைவரதும் அன்பிற்கினியவர் எவ்வாறு காதலிகளாகிய உங்களை நினைவு செய்ய முடியும்? அது சாத்தியம் இல்லை. அவரே அன்பிற்கினியவர். அவர் காதலியாக முடியாது. நீங்களே அவரை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அந்த ஓர் அன்பிற்கினியவரின் காதலி ஆகுகின்றீர்;கள். அவரும் காதலி ஆகுவாராயின், அவர் எத்தனை பேரை நினைவு செய்வார்? அது சாத்தியம் இல்லை! அவர் கூறுகிறார்: நான் யாரையும் நினைவு செய்வதற்கு, என்னிடம் எந்தப் பாவச்சுமையும் கிடையாது. உங்களிடமே பாவச்சுமை உள்ளது. தந்தையை நீங்கள் நினைவு செய்யாவிட்டால், பாவச்சுமை அகற்றப்பட மாட்டாது. நான் ஏன் எவரையேனும் நினைவு செய்ய வேண்டும்? ஆத்மாக்களாகிய நீங்களே என்னை நினைவு செய்ய வேண்டும். நினைவு செய்தலில் எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நிலைத்திருக்கிறீர்களோ அந்தளவிற்கு ஆத்மாக்களாகிய நீங்கள் அதிகளவில் தூய, தர்மாத்மாக்களாகி, அந்தளவிற்கு உங்களது பாவங்களும் அதிகளவில் தொடர்ந்து அழிக்கப்படும். இலக்கு மிகவும் உயர்ந்தது. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு அதிக முயற்சி தேவையாகும்! இந்த ஞானம் முழுவதையும் நீங்கள் பெறுகிறீர்கள். நீங்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாகத் திரிகாலதரிசிகள் ஆகுகிறீர்கள். முழுச் சக்கரமும் உங்களது புத்தியில் இருக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்களே கலங்கரைவிளக்கங்கள்இ அல்லவா? நீங்களே அனைவருக்கும் சாந்திதாமத்துக்கும்;, சந்தோஷபூமிக்குமான பாதையைக் காட்டுகிறீர்கள். இப்புதிய விடயங்கள் அனைத்தையும் நீங்கள் செவிமடுக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உண்மையிலேயே சாந்தி தாமத்துவாசிகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்கே இங்கு வருகிறீர்கள். நாங்கள் நடிகர்கள். இந்த எண்ணங்களைத் தொடர்ந்து உங்களது புத்தியில் வைத்திருந்தால், நீங்கள் போதை உடையவர்கள் ஆகுவீர்கள். ஆரம்பம் முதல், மத்தியினூடாக இறுதிவரை உங்களது பாகம் என்ன என்பதைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் நிச்சயமாக உங்கள்; கர்மதீத நிலையை அடைந்து, சத்திய யுகத்திற்குச் செல்கிறீர்கள். இந்த அக்கறையைக் கொண்டிருக்கும் அதே வேளையில், உங்களுக்கு நன்மை விளைவித்துக் கொள்ளுங்கள்! பண்டிதராக மட்டுமே இருந்து விடாதீர்கள்! நீங்களே அந்த ஸ்திதியில் இருக்காமல், அதனை மற்றவர்களுக்குக் கற்பிப்பீர்களானால், அதனால் எந்தவிதத் தாக்கமும் ஏற்படாது. நீங்களும் உங்களது சொந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நினைவில் நிலைத்திருப்பதற்கு பாபா எவ்வாறு முயற்சி செய்கிறார் என்பதை பாபா உங்களுக்குக் கூறுகிறார். புத்தியின் யோகத்தைத் துண்டிக்கும் வகையில் சிலவேளைகளில் மாயையின் புயல்கள்; வருகின்றன. பல குழந்தைகள் தங்களது அட்டவணைணயை அனுப்புகிறார்கள். அவர்கள் தன்னிலும் முன்னேறிச் செல்வதைப் பார்க்கும் போது, பாபா வியப்படைகிறார். அந்த வலுவை அவர்கள் உணர்வதால் அவர்கள் தங்களது அட்டவணையை எழுதத் தொடங்குகிறார்கள். அவ்வளவு விரைவாக அவர்கள் ஓடுவார்களாயின், அவர்கள் முதல் இலக்;கத்தைப் பெறுவார்கள்! ஆனால் அது அவ்வாறில்லை! அவர்கள் தமது அட்டவணையை எழுதும் விடயத்திலேயே அவ்வாறு இருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேரைத் தங்களைப் போல உருவாக்கியுள்ளார்கள் என்பதைப் பற்றி அவர்கள் எழுதுவதில்லை. ஏனையோரும் 'இன்னார் எனக்கு இந்தப் பாதையைக் காட்டினார்" என பாபாவிற்கு எழுதுவதில்லை. பாபா அவ்வாறான செய்திகளைப் பெறுவதில்லை. ஆதலால் பாபா எதைப் புரிந்துகொள்வார்? உங்களது அட்டவணையை அனுப்புவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. நீங்கள் உங்களைப் போன்று ஏனையோரையும் ஆக்க வேண்டும். நீங்கள் 'ரூப், பசான்ட்" ஆக வேண்டும். அவ்வாறில்லா விட்டால், நீங்கள் தந்தைக்குச் சமமானவர்கள் அல்லர். நீங்கள் மிகச்சரியான 'ரூப், பசான்ட்" ஆக வேண்டும். இதற்கே முயற்சி தேவைப்படுகிறது. சரீர உணர்வு உங்களைக் கொல்கின்றது. இராவணன் உங்களைச் சரீர உணர்வுடையவர் ஆக்கிவிட்டான். நீங்கள் இப்போது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுகிறீர்கள். அரைக் கல்பத்தின் பின்னர், இராவணனான மாயை உங்களைச் சரீர உணர்வுடையவர் ஆக்குகிறான். ஆத்ம உணர்வுடையவர்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகுகிறார்கள். ஒருவரும் இன்னமும் முழுமை அடையவில்லை. ஆகையாலேயே பாபா எப்போதுமே கூறுகிறார்: எவரது இதயத்தையும் நோகச் செய்யாதீர்கள். துன்பம் கொடுக்காதீர்கள்!. அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். உங்கள் பேச்சிலும், தொடர்பிலும் பெருமளவு ராஜரீகம் இருக்க வேண்டும். கடவுளின் குழந்தைகளின் உதடுகளில் இருந்து சதா இரத்தினங்கள் மட்டுமே வெளிப்பட வேண்டும். நீங்கள் மனிதர்களுக்கு வாழ்வு என்ற தானத்தை வழங்குகிறீர்கள். அவர்களுக்கு பாதையைக் காட்டிக் கூறுங்;கள்: நீங்கள் கடவுளின் குழந்தைகள். இல்லையா? சுவர்க்க இராச்சியத்தை நீங்கள் அவரிடம் இருந்து பெற வேண்டும். அதை ஏன் நீங்கள் இந்த நேரத்திலேயே பெறக் கூடாது? இதை நினைவு செய்யுங்கள்: உண்மையிலேயே நீங்கள், உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெற்றீர்கள். அல்லவா? பாரத மக்களாகிய நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். நீங்கள் 84 பிறவிகள் எடுத்தீர்கள். நீங்கள் இலக்ஷ்மி நாராயணனுடைய குலத்தைச் சேர்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை நீங்கள் ஏன் குறைவாகக் கருதுகிறீர்கள்? அனைவராலுமே இவ்வாறு ஆக முடியாது எனக் கூறுபவர்கள் இக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதை பாபா விளங்கிக் கொள்கிறார். அவர்கள் இப்போது தளம்ப ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். 21 பிறவிகளுக்கு வெகுமதியைச் சேர்த்துக் கொள்வதற்கு பாபா உங்களுக்கு உதவியிருக்கிறார். நீங்கள் அதைப் பயன்படுத்தத் தொடங்கி, பின்;னர் அதைக் குறைத்துக் கொண்டீர்கள். நீங்கள் துருவினால் மூடப்பட்டு, இப்போது தமோபிரதானாகவும், சிப்பியைப் போல் பெறுமதி அற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். பாரதம் மாத்திரமே 100மூ வளமுடையதாக இருந்தது. அவர்கள் எங்கிருந்து தங்களது ஆஸ்தியைப் பெற்றார்கள்? நடிகர்களால் மாத்திரமே இதை உங்களுக்குக் கூற முடியும். மனிதர்கள் நடிகர்களே. இலக்ஷ்மியும் நாராயணனும் எங்கிருந்து தமது இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இவை மிக நல்ல கருத்துக்கள்! நிச்சயமாக அவர்கள் தங்களது பாக்கியமான இராச்சியத்தைத் தங்கள் முற்பிறவியிலேயே பெற்றிருக்க வேண்டும். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். அவர் கூறுகிறார்: நான் உங்களுக்கு செயல், நடுநிலைச் செயல், பாவச் செயல்களுக்கான தத்துவத்தைக் கூறுகிறேன். இராவண இராச்சியத்தில் மனிதர்களின் செயல்கள் யாவும் பாவச்செயல்களே. அங்கே உங்களது செயல்கள் யாவும் நடுநிலையானவை. அது தெய்வீகமான உலகம். நானே படைப்பவர். ஆகையாலே நான் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் வரவே வேண்டும். இது இராவண இராச்சியம். அது கடவுளின் இராச்சியம். அதனது ஸ்தாபனையை கடவுள் இப்போது மேற்கொள்கிறார். நீங்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகள். நீங்கள் உங்களது ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். வளம் நிறைந்ததவர்களாக இருந்து பாரத மக்கள் இப்போது வளமற்றவர்கள் ஆகி விட்டார்கள். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. இதில் எந்த வித்தியாசமும் இருக்க முடியாது. அனைவருமே விருட்சத்தில் தங்களது சொந்தப் பகுதிக்குரியவர்கள். இது பல்வகை விருட்சம். தேவதர்மத்தைச் சேர்ந்தவர்கள், தேவதர்மத்திற்கே மீண்டும் செல்;வார்கள். கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் தமது சமயத்திலேயே சந்தோஷமாக இருக்கிறார்கள். ஏனையோரையும் அவர்கள் தமது சமயத்திற்கு ஈர்த்துள்ளனர். பாரத மக்கள் தங்களது தர்மத்தை மறந்ததால், ஏனைய சமயங்கள் சிறந்ததெனக் கருதுகிறார்கள். நல்ல வருமானம் சம்பாதிக்கலாம் என்பதற்காகப் பலர் தொழில் புரிவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். நாடகம் மிகவும் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதை விளங்கிக் கொள்வதற்கு மிகவும் நல்ல புத்தி தேவை. ஞானக்கடலைக் கடைவதன் மூலம், அனைத்தையும் உங்களால் விளங்கிக் கொள்ள முடியும். இந்த நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. குழந்தைகளாகிய நீங்கள், உங்களைப் போலவே ஏனையோரையும் சதா சந்தோஷமாக்க வேண்டும். தூய்மையற்றவர்களைத் தூய்மை ஆக்குவது உங்களது தொழில் ஆகும். தந்தையின் பணி எதுவோ, அதுவே உங்களது பணியும் ஆகும். தேவர்களைப் போன்று நீங்களும் முக மலர்ச்சியுடையவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால் நீங்கள் அழகான குழந்தைகள். கோபத்தை இட்டு நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷம் என்ற ஆஸ்தியைக் கொடுக்கவே வந்துள்ளார். அனைவருக்கும் சுவர்க்கத்திற்கான பாதையைக் காட்டுங்கள். தந்தையே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவராவார். நீங்களும் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆகவேண்டும். எவருக்குமே துன்பத்தை விளைவிக்காதீர்கள். நீங்கள் எவருக்கேனும் துன்பத்தை விளைவித்தீர்களாயின், தண்டனை 100 மடங்காக அதிகரிக்கும். எவருமே தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. குழந்தைகளுக்கென விசேடமான நீதிமன்றம் உள்ளது. தந்தை கூறுகிறார்: நீங்கள் தடைகளை ஏற்படுத்தினால் பெருமளவு தண்டனை கிடைக்கும். இன்னார் எவ்வாறு ஆகுவார் என்பதற்கான காட்சிகள் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்குக் கிடைக்கும். ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு இவ்விடயங்கள் காட்டப்பட்டன. ஆனால் பாபா ஏனையோருக்கு அவர்கள் அவற்றைக் கூறுவதைத் தடை செய்திருந்தார். இறுதியில் அனைவரும் மிகச் சரியாகத் தெரிந்துக் கொள்வார்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் போது, உக்கிரமான காட்சிகள் கிடைக்கும். தொடர்ந்து வளர்ச்சி ஏற்படும். வரிசை அபு வரைக்கும் நீண்டிருக்கும். எவராலுமே பாபாவை சந்திக்க முடியாதிருக்கும். அவர்கள் கூறுவார்கள்: ஓ கடவுளே! உங்களது திருவிளையாடல்கள்..........இதுவும் நினைவு கூரப்பட்டுள்ளது. கல்விமான்களும், பண்டிதர்களும் கூட இறுதியில் வருவார்கள். அவர்களது சிம்மாசனம் ஊசலாடும். குழந்தைகளாகிய நீங்களோ பெருமளவு சந்தோஷத்துடன் இருப்பீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும். இந்த அன்பையும் நினைவையும் நீங்கள் ஒருமுறை மாத்திரமே பெறுகிறீர்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நினைவில் நிலைத்திருக்கிறீர்களோ அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் அன்பைப் பெறுவீர்கள். அந்தளவிற்கு அதிகமாக உங்களது பாவங்களும் அழிகின்றன. அத்துடன் அந்தளவிற்கு அதிகமாக உங்களால் கிரகிக்கவும் முடியும். குழந்தைகளாகிய உங்களது சந்தோஷத்தின் பாதரசம் உயர்வாக இருக்க வேண்டும். உங்களிடம் வருகின்ற அனைவருக்கும் பாதையைக் காட்டுங்கள். எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெற வேண்டும். இது சிறியதோர் விடயமா? அவ்வாறான முயற்சி செய்யப்பட வேண்டும்! நல்லது.

ஆன்மீக பாப்தாதாவிடம் இருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு அன்பும், நினைவும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களது பேச்சிலும் தொடர்பிலும் மிகவும் இராஜரீகமனவர்களாக ஆகுங்கள். உங்கள் உதடுகளில் இருந்து சதா இரத்தினங்கள் மாத்திரமே வெளிப்படட்டும். ஏனையோரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குவதற்கான சேவையைச் செய்யுங்கள். எவரது இதயத்தையும் புண்படுத்தாதீர்கள்.

2. கோபத்தையிட்டுப் பெருமளவு எச்சரிக்கையாக இருங்கள். தேவர்களைப் போன்று உங்களது முகமும் சதா மலர்ச்சியுடன் இருக்க வேண்டும். ஞான, யோக சக்திகளால் உங்களை ஒரு தேவர்; ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
தூய புத்தியை கொண்டிருக்கும் ஒருவராகவிருந்து, எந்த வகையான வருத்தப்படுவதிலிருந்தும் சதா அப்பாலிருப்பதன் மூலம் பேறுகளின் சொரூபம் என்ற ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.

தமது வாழ்வின் படகை தந்தையிடம் ஒப்படைத்து, ‘நான்’ என்பதன் சகல உணர்வுகளையும் முடித்து, தமது சொந்த மனதின் கட்டளைகளை ஸ்ரீமத்துடன் கலக்காத குழந்தைகள், சதா சகல வகையான வருத்தப்படுவதிலிருந்தும் அப்பாலிருப்பதால், அவர்கள் பேறுகளின் சொரூபத்தின் ஸ்திதியை அனுபவம் செய்கின்றார்கள். அத்தகைய குழந்தைகள் தூய புத்தியுடையவர்கள் எனப்படுகின்றார்கள். அத்தகைய தூய புத்தியுடைய குழந்தைகள் புயலை பரிசாகவும் தமது சுபாவத்தினது அல்லது சம்ஸ்காரங்களின் எந்த முரண்பாட்டையும் முன்னேற்றத்திற்கான ஒரு வழியாகவே கருதுகின்றார்கள். அவர்கள் தந்தையை சதா தமது சகபாடியாக ஆக்குவதால் ஒவ்வொரு பாகத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக பார்ப்பதனால், சதா சந்தோஷமாகவும் மலர்ச்சியாகவும் முன்னேறிச் செல்கிறார்கள்.

சுலோகம்:
சந்தோஷத்தை அருள்பவரான தந்தையின் குழந்தைகளாக, சந்தோஷத்தைக் கொடுக்கின்ற குழந்தைகளிடம் துன்ப அலைகள் வர முடியாது.