14.03.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.11.87     Om Shanti     Madhuban


அகநோக்கு ஸ்திதியைக் கொண்டிருப்பதும் ஏகாந்தத்தில் இருப்பதுமே மௌன சக்தியைச் சேமிப்பதற்கான வழிமுறையாகும்.


இன்று, சர்வசக்திவான் பாப்தாதா, தனது சக்தி சேனையைப் பார்வையிடுகிறார். இந்த ஆன்மீக சக்தி சேனை, ஒரு தனித்துவமான சேனையாகும். இது ஆன்மீக சேனை என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அதன் விசேட சக்தி, மௌன சக்தியாகும். இது அமைதியை ஏற்படுத்தும் அஹிம்சா சேனையாகும். எனவே, இன்று, பாப்தாதா அமைதியை அருள்பவராக விளங்கும் ஒவ்வொரு குழந்தையையும் பார்த்தார். எந்தளவிற்கு ஒவ்வொருவரும் மௌன சக்தியைச் சேமித்திருக்கிறார்கள் என்றும் பார்த்தார். இந்த மௌன சக்தியே, ஆன்மீக இராணுவத்தின் விசேடமான ஆயுதமாகும். நீங்கள் அனைவரும் இந்த ஆயுதத்தை வைத்திருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். இந்த மௌன சக்தியானது முழு உலகையும் அமைதியற்ற நிலையில் இருந்து அமைதிநிறைந்ததாக மாற்றும். அது மனித ஆத்மாக்களை மட்டும் அல்ல, ஆனால், இயற்கையின் கூறுகளையும் மாற்றக்கூடியது. இப்போது இந்த மௌன சக்தியை மிகவும் ஆழமான முறையில் அறிந்து, அனுபவம் செய்யப்பட வேண்டும். எந்தளவிற்கு இந்த சக்தியால் நீங்கள் சக்திசாலிகள் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் மௌன சக்தியின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் தொடர்ந்தும் அனுபவம் செய்வீர்கள். தற்சமயம், வார்த்தைகளின் சக்தியாலும், சேவையின் வசதிகளின் சக்தியாலும் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். ஆனால், மௌன சக்தியானது, வார்த்தைகளின் சக்தியையும் சேவையின் பௌதீக வசதிகளையும் விட மிகவும் மகத்தான சக்தியாகும். மௌன சக்தியின் வசதிகளும் மேன்மையானவை. வார்த்தைகள் மூலம் சேவை செய்யும்போது, நீங்கள் படங்கள், புரெஜெக்டர்கள், வீடியோக்களைச் சேவை செய்வதற்கான வசதி வாய்ப்புக்களாகப் பயன்படுத்துவதைப் போல், மௌன சக்தியின் வசதி வாய்ப்புக்கள், தூய எண்ணங்கள், தூய ஆசிகள், கண்களின் மொழி என்பவையே ஆகும். எவ்வாறு நீங்கள் தந்தையின் அறிமுகத்தையும் படைப்பின் அறிமுகத்தையும் வார்த்தைகளின் மொழியால் கொடுப்பதைப் போல், மௌன சக்தியின் அடிப்படையில், கண்களின் மொழியால், உங்களால் தந்தையின் அனுபவத்தைக் கொடுக்க முடியும். புரெஜெக்டரினூடாக நீங்கள் ரூபங்களைக் காட்டுவதைப் போல், உங்களால் உங்களின் பிரகாசிக்கும் ரூபத்தையும் தந்தையின் ரூபத்தையும் உங்களின் நெற்றியின் புருவமையத்தில் தெளிவாகக் காட்ட முடியும். தற்சமயம், நினைவின் யாத்திரையின் அனுபவத்தை வார்த்தைகளின் மூலம் மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் போல், மௌன சக்தியால், உங்களின் முகம் இயல்பாகவே வெவ்வேறு நினைவின் ஸ்திதிகளின் அனுபவத்தைக் கொடுக்கும். இதை அனுபவம் செய்பவர்கள், அந்த வேளையில், தாம் விதை ஸ்திதியை அனுபவம் செய்வதை அல்லது, தேவதை ஸ்திதியை அனுபவம் செய்வதை அல்லது இயல்பாகவே பல்வகையான நற்குணங்களை உங்களின் சக்திவாய்ந்த முகத்தின் மூலம் அனுபவம் செய்வதை இலகுவாக உணர்வார்கள்.

எவ்வாறு வார்த்தைகளால் ஆத்மாக்களில் ஒத்துழைப்பு, அன்பு என்ற உணர்வுகளை நீங்கள் ஏற்படுத்துகிறீர்களோ, அவ்வாறே, நீங்கள் நல்லாசிகளுடன் அன்பு ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தால், உங்களின் உணர்வுகள் என்னவோ, அதே உணர்வுகளை அவர்களிலும் வெளிப்படுத்தச் செய்ய உங்களால் முடியும். உங்களின் நல்லாசிகள் அவர்களில் உணர்வுகளை உருவாக்கிவிடும். எவ்வாறு ஒரு தீபத்தால் இன்னொரு தீபத்தை ஏற்றி வைக்க முடியுமோ, அதேபோல், உங்களின் சக்திவாய்ந்த நல்லாசிகள், இலகுவாக மற்றவர்களில் அதி மேன்மையான உணர்வுகளை வெளிப்படச் செய்யும். இப்போது நீங்கள் பௌதீகமான பணிகள் அனைத்தையும் வார்த்தைகளால் செய்விக்கிறீர்கள். அதேபோல், மௌன சக்தி, அதாவது, தூய எண்ணங்களின் சக்தி என்ற மேன்மையான வழிமுறையால் எந்தவொரு பௌதீகமான பணியையும் உங்களால் இலகுவாகச் செய்ய முடியும். அதேபோல் மற்றவர்களைக் கொண்டும் செய்விக்க முடியும். விஞ்ஞானத்தின் சக்தியில் தொலைபேசி மற்றும் வயர் அற்ற தொலைபேசியின் வசதிகள் இருப்பதைப் போல், இந்தத் தூய எண்ணங்களும், ஒரு பணியை நேரடியாக ஒருவருடன் பேசுவதனால் அல்லது தொலைபேசியால் அல்லது வயரற்ற தொலைபேசியால் பேசுவதனால் செய்விப்பதைப் போன்ற அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். இவையே மௌன சக்தியின் சிறப்பியல்புகளாகும். மௌன சக்தியும் சளைத்ததல்ல. எவ்வாறாயினும், நீங்கள் வார்த்தைகளின் சக்தியையும் பௌதீகமான வசதிகளையும் அதிகளவில் பயன்படுத்துவதால், அது இலகுவாக இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள். இன்னமும் நீங்கள் மௌன சக்தியின் வசதிகளைப் பரிசோதனை செய்து பார்க்கவில்லை. அதனாலேயே உங்களுக்கு அந்த அனுபவமும் இல்லை. அந்த முறையை இலகுவானது என்றும் இது கஷ்டமானது என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும், காலத்தின் மாற்றத்திற்கேற்ப, நீங்கள் நிச்சயமாக மௌன சக்தியின் வசதிகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஆகவே, ஓ மேன்மையான ஆத்மாக்களே, அமைதியை அருள்பவர்களே, மௌன சக்தியை அனுபவம் செய்யுங்கள். வார்த்தைகளைப் பயிற்சி செய்வதனால், நீங்கள் வார்த்தைகளில் சக்திசாலிகள் ஆகியிருப்பதைப் போல், தொடர்ந்து மௌன சக்தியால் அதிகளவு பயிற்சி செய்யுங்கள். நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, வார்த்தைகளால் அல்லது பௌதீகமான வசதிகளால் சேவை செய்வதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது. அத்தகைய வேளையில், மௌன சக்தியின் வசதிகளே தேவைப்படும். ஏனென்றால், எது மிகவும் சக்திவாய்ந்ததோ, அது அதிகபட்சம் சூட்சுமமாகவும் இருக்கும். எனவே, தூய எண்ணங்கள் வார்த்தைகளை விட அதிகம் சூட்சுமமானவை. இதனாலேயே, சூட்சுமத்தின் விளைவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். இப்போதும் நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள். எங்கு வார்த்தைகளின் சக்தியால் ஒரு பணியைச் செய்ய முடியாதோ, ‘இவர் வார்த்தைகளால் கூறுவதைப் புரிந்து கொள்ள மாட்டார், தூய உணர்வுகளால் மட்டுமே அவரை மாற்ற முடியும்’ என நீங்கள் கூறுகிறீர்கள். எங்கு வார்த்தைகளால் ஒரு பணியில் வெற்றியை ஏற்படுத்த முடியாதோ, அங்கு மௌன சக்தியின் கூறுகளான, தூய எண்ணங்கள், நல்லாசிகள், கண்களின் மொழி என்பவற்றால் ஏற்படும் கருணையினதும் அன்பினதும் அனுபவம் அந்தப் பணியை நிறைவேற்றும். இப்போதும், அதிகளவில் தர்க்கம் செய்கின்ற ஒருவர் வந்தால், அவர் வார்த்தைகளால் மேலும் தர்க்கம் செய்வார். ஆகவே, நீங்கள் அவரை நினைவில் அமரச் செய்து, அவருக்கு மௌன சக்தியின் அனுபவத்தைக் கொடுப்பீர்கள், இல்லையா? நினைவு செய்வதனால் அவர் ஒரு விநாடியேனும் அமைதியை அனுபவம் செய்வாராயின், அந்த மௌன அனுபவத்தினூடாகத் தனது விவாதிக்கும் புத்தியை அவர் அர்ப்பணித்து விடுவார். எனவே, மௌன சக்தியின் அனுபவத்தைத் தொடர்ந்து அதிகரியுங்கள். இன்னமும், இந்த மௌன சக்தியின் அனுபவம் மிகச் சிறிதளவே காணப்படுகிறது. உங்களில் பெரும்பாலானோர் மௌன சக்தியின் இனிமையின் சிறிதளவு ருசியை மட்டுமே அனுபவம் செய்துள்ளீர்கள். ஓ அமைதியை அருள்பவர்களே, உங்களின் பக்தர்கள் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களிடம் அனைத்திற்கும் மேலாக அமைதியையே வேண்டுகிறார்கள். ஏனென்றால், அமைதியில் சந்தோஷம் அடங்கியுள்ளது. அவர்கள் அதைச் சிறிது நேரத்திற்கே அனுபவம் செய்கிறார்கள். எனவே, எத்தனை ஆத்மாக்களுக்கு மௌன சக்தியின் அனுபவம் உள்ளதென்றும், உங்களில் எத்தனை ஆத்மாக்கள் அதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றும், எத்தனை ஆத்மாக்கள் அதனுடன் பரிசோதனை செய்கிறார்கள் என்றும் பாப்தாதா பார்த்தார். இதற்கு, நீங்கள் அகநோக்கில் இருப்பதும் ஏகாந்தத்தில் இருப்பதும் அவசியமாகும். புறநோக்கில் இருப்பது இலகுவானதே. எவ்வாறாயினும், காலத்திற்கேற்ப, அகநோக்கில் இருப்பதற்கான பயிற்சி அதிகளவில் தேவைப்படுகிறது. ‘ஏகாந்தத்தில் இருப்பதற்குத் தமக்கு நேரம் இல்லை, அகநோக்கு ஸ்திதியை அனுபவம் செய்வதற்குத் தமக்கு நேரம் இல்லை, ஏனென்றால், சேவையின் செயல்பாடுகளும் வார்த்தைகளின் சக்தியும் அதிகளவில் அதிகரித்துள்ளன’ எனச் சில குழந்தைகள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், இதற்காக அரை மணிநேரத்தை அல்லது ஒரு மணிநேரத்தை ஒதுக்குவதற்கான அவசியம் இல்லை. சேவையின் செயல்பாடுகளுக்கு இடையே, ஏகாந்தத்தை நீங்கள் அனுபவம் செய்வதற்கான அளவு நேரத்தை உங்களால் கண்டுகொள்ள முடியும்.

ஏகாந்தத்தில் இருத்தல் என்றால் உங்களை ஒரு சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரப்படுத்திக் கொள்ளுதல் என்று அர்த்தம். உங்களை விதை ஸ்திதியில் ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை வெளிச்சவீடு மற்றும் சக்தி வீடு என்ற ஸ்திதியில் ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது, உலகிற்கே ஒளியையும் சக்தியையும் கொடுப்பவராக அனுபவம் செய்யுங்கள். தேவதை ஸ்திதியின் மூலம், மற்றவர்களுக்கு அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். நீங்கள் இந்த ஸ்திதியில் ஒரு விநாடி அல்லது ஒரு நிமிடமேனும் ஒருமுகப்படுத்தினால், ஒரு நிமிடத்திற்கான இந்த ஸ்திதி, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அதிகளவு நன்மையை ஏற்படுத்தும். நீங்கள் இதைப் பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. இப்போது, ஒரு நிமிடம் நேரமேனும் இல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? எண்ணக்கட்டுப்பாட்டு வேளைக்கான நேரம் ஆரம்பமாகியதும், இது எவ்வாறு சாத்தியம்? என சிலர் சிந்திப்பார்கள். சேவை செயல்பாட்டிற்கான அளவு பாரியதாக உள்ளது. நீங்கள் எப்போதும் மும்முரமாக இருக்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இலக்கை வைத்திருப்பதனால், அது சாத்தியமாகி உள்ளது. அந்த நிகழ்ச்சி தொடர்கிறது, இல்லையா? நிலையங்களின் எண்ணக்கட்டுப்பாட்டு வேளை என்ற நிகழ்வு நடக்கிறதல்லவா? அல்லது, நீங்கள் சிலவேளைகளில் எண்ணக்கட்டுப்பாட்டைத் தவறவிட்டுவிடுகிறீர்களா? சிலவேளைகளில் அதைச் செய்கிறீர்களா? இதுவும் பிராமணக் குலத்தின் ஒரு நடைமுறையே. இதுவும் ஒரு ஒழுங்குமுறையே. ஏனைய ஒழுங்குமுறைகள் அவசியம் என நீங்கள் கருதுவதைப் போல், இதுவும் சுய முன்னேற்றத்திற்கும், சேவையின் வெற்றிக்கும், நிலையங்களின் சூழலுக்கும் அத்தியாவசியமானது. எனவே, அகநோக்கில் இருந்து, ஏகாந்தத்தில் இருக்கும் பயிற்சியைச் செய்யும் இலக்கை வைத்திருப்பதுடன், உங்களின் இதயத்தி;ல் அதற்கான ஆழ்ந்த அன்பைக் கொண்டிருப்பதுடன், அவ்வப்போது இதைச் செய்வதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். இதன் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் இயல்பாகவே அதற்காக நேரத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், உங்களுக்கு அதற்கான நேரமும் கிடைக்காது. உங்களின் மனதையும் புத்தியையும் சக்திவாய்ந்த ஒரு ஸ்திதியில் ஸ்திரப்படுத்துவதே, ஏகாந்தத்தில் இருப்பதாகும். நீங்கள் சாகார் பிரம்மாபாபாவைக் கண்டீர்கள்: சம்பூரண நிலைக்கு நெருங்கி வருவதில் அவரிடம் இருந்த அடையாளம், சேவை செய்யும்போது, செய்திகளைக் கேட்கும்போது, அவர் ஏகாந்தத்திலேயே இருந்தார். நீங்கள் இதை அனுபவம் செய்தீர்கள், அல்லவா? ஒரு மணிநேரம் சொல்லும் செய்திகளை, ஐந்து நிமிடத்தில் அவற்றின் சாரத்தை அவர் புரிந்து கொண்டார். அத்துடன் குழந்தைகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்ததுடன், தனது அகநோக்கம் மற்றும் ஏகாந்தத்தின் ஸ்திதியின் அனுபவத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவர் நடக்கும்போதும் அசையும்போதும், செவிமடுக்கும்போதும் செயல்களைச் செய்யும்போதும் அகநோக்கம் மற்றும் ஏகாந்த ஸ்திதியை அனுபவம் செய்ததே சம்பூரணத்தின் அடையாளம் ஆகும். எனவே, உங்களால் தந்தையைப் பின்பற்ற முடியாதா? தந்தை பிரம்மாவை விட அதிகளவு பொறுப்பு யாருக்காவது இருக்கிறதா? தந்தை பிரம்மா ஒருபோதும் தான் பிஸியாக (வேலைப்பழுவுடன்) இருக்கிறேன் எனக் கூறியதில்லை. அவர் குழந்தைகளின் முன்னால் ஓர் உதாரணம் ஆகினார். இப்போது, காலத்திற்கேற்ப, இந்தப் பயிற்சிக்கான தேவையே உள்ளது. உங்களிடம் சேவைக்கான சகல வசதிகளும் இருந்தாலும், மௌன சக்தியுடன் சேவை செய்வதற்கான தேவை உங்களுக்கு இன்னமும் உள்ளது. ஏனென்றால், மௌன சக்தியே ஓர் அனுபவத்தைக் கொடுக்கும் சக்தியாகும். பெரும்பாலும், வார்த்தைகளின் சக்தியால் அம்பு தலையை மட்டுமே சென்றடையும். ஆனால், அனுபவத்தின் அம்போ இதயத்தைச் சென்றடையும். எனவே, காலத்திற்கேற்ப, ‘ஒரு விநாடிக்கான அனுபவத்தை எங்களுக்குக் கொடுங்கள்!’ என்ற அழுகுரல் கேட்கும். கேட்பதனாலும் பேசுவதனாலும் களைப்படைந்தவர்கள் வருவார்கள். மௌன சக்தியின் வழிமுறைகளால், உங்களால் அவர்களை ஒரு கணப்பார்வையில் அப்பால் எடுத்துச் செல்ல முடியும். உங்களின் தூய எண்ணங்களால், உங்களால் ஆத்மாக்களின் வீணான எண்ணங்களை முடிக்க முடியும். உங்களின் தூய உணர்வுகளால் உங்களால் தந்தைக்கான அன்பான உணர்வுகளை அவர்களில் வெளிப்படுத்த முடியும். அந்த ஆத்மாக்களை மௌன சக்தியால் திருப்தியானவர்கள் ஆக்கினால் மட்டுமே அவர்கள் உயிர்வாழும் அமைதியை அருள்பவர்களான ஆத்மாக்களான உங்களின் முன்னால் வந்து, ‘ஓ அமைதியை அருள்பவர்களே, ஓ சாந்தியை அருள்பவர்களே’ எனப் பாடுவார்கள். அதன்பின்னர், இந்த இறுதி சம்ஸ்காரத்தைத் தங்களுடன் எடுத்துச் சென்று, அவர்கள் துவாபர யுகத்தில் பக்த ஆத்மாக்களாகி, உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் முன்னால் நின்று இந்தப் புகழைப் பாடுவார்கள். வேறொரு வேளையில் எண்ணக்கட்டுப்பாட்டு நேரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அது எந்தளவிற்கு அவசியம் என்பதைப் பற்றியும் பாபா உங்களுக்குக் கூறுவார். எவ்வாறாயினும், நீங்கள் மௌன சக்தியின் முக்கியத்துவத்தை அறிவதுடன், அதனைச் சேவை செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா?

இன்று, பஞ்சாப் வந்துள்ளனர். பஞ்ஞாபில், மௌன சக்தியால் சேவை செய்வது முக்கியமாகும். மௌன சக்தியால், உங்களால் வன்முறை மனோபாவத்தைக் கொண்டவர்களை அஹிம்சாவாதிகளாக ஆக்க முடியும். ஸ்தாபனையின் ஆரம்பத்தில், வன்முறை மனோபாவத்தைக் கொண்டவர்கள் எவ்வாறு ஆன்மீக மௌன சக்தியைக் கொண்டவர்களின் முன்னால் மாறினார்கள் என்பதை நீங்கள் கண்டீர்கள். எனவே, மௌன சக்தியே வன்முறை மனோபாவத்தைக் கொண்டவர்களை அமைதிப்படுத்தியது. அவர்கள் வார்த்தைகளைக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. இயற்கையின் சக்தியால் வெப்பத்தின் அல்லது குளிரின் அலை எங்கும் பரவும்போது, இயற்கையின் பிரபுக்களால் எங்கும் மௌன அலைகளைப் பரப்ப முடியாதா? விஞ்ஞானத்தின் கருவிகளால் மிகவும் சூடான சூழலைக் குளிர்ந்த சூழலாக மாற்ற முடிகிறது. எனவே, ஆன்மீக சக்தியால் ஆத்மாக்களை மாற்ற முடியாதா? எனவே, பஞ்ஞாபைச் சேர்ந்தவர்கள் எதைக் கேட்டீர்கள்? அமைதியின் பொக்கிஷக் களஞ்சியத்தை வைத்திருக்கும் ஒருவர், அமைதிக் கதிர்களைக் கொடுக்கிறார் என்ற அதிர்வலைகளை அனைவரும் உணர வேண்டும். இத்தகைய சேவை செய்வதற்கான நேரம் பஞ்ஞாபிற்கே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் விழாக்களையும் கண்காட்சிகளையும் நடத்துகிறீர்கள். ஆனால், இந்தச் சக்தியை அனுபவம் செய்து, மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தைக் கொடுங்கள். உங்களின் மனதில் ஒருமுகப்பட்ட, சக்திவாய்ந்த மனோபாவம் இருக்க வேண்டும். ஒரு வெளிச்சவீடு எந்தளவிற்கு சக்திவாய்ந்ததாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அதனால் அதன் ஒளியை அப்பால் செலுத்த முடியும். எனவே, பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் இந்தச் சக்தியுடன் பரிசோதனை செய்வதற்கான நேரம் இதுவேயாகும். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஒரு குழுவினர் வந்துள்ளார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் புயல்களை அமைதியடையச் செய்வீர்கள். ஆந்திராவில் பல புயல்கள் வந்துள்ளன. புயல்களை அமைதியடையச் செய்வதற்கு, உங்களுக்கு மௌன சக்தி தேவை. மனித ஆத்மாக்கள் புயல்களில் அலைந்து திரிகிறார்கள். எனவே, அவ்வாறு அலைந்து திரியும் ஆத்மாக்களுக்கு அமைதியின் இலக்கைக் காட்டுதல், ஆந்திராவில் இருப்பவர்களின் விசேடமான சேவையாகும். அவர்கள் பௌதீகமாக அலைந்து திரியும்போது, முதலில் அவர்களின் மனங்களே அலைந்து திரிகின்றன. அதன்பின்னரே சரீரங்கள் அலைகின்றன. அவர்களின் மனங்கள் ஸ்திரமாக இருக்கும்போது, அவர்களின் புத்திகள் சரீரத்தின் ஆதாரத்திற்காக வேலை செய்யும். மனம் ஸ்திரமாக இல்லாவிட்டால், சரீரத்திற்குத் தேவையான பௌதீக வசதிகளுக்காகப் புத்தியும் வேலை செய்யாது. ஆகவே, அனைவரின் மனதையும் ஓய்வடையச் செய்வதற்கு, இந்தச் சக்தியைப் பயன்படுத்துங்கள். பஞ்ஞாபும் ஆந்திராவும் புயல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு, வன்முறையின் புயல்கள் உள்ளன. இங்கு, கடலால் ஏற்படும் புயல்கள் உள்ளன. ஆகவே, அது மனிதர்களால் ஏற்படுகிறது. இது இயற்கையால் ஏற்படுகிறது. எவ்வாறாயினும், இரு இடங்களிலும் புயல்கள் ஏற்படுகின்றன. புயல்கள் அடிப்பவர்களுக்கு மௌனத்தின் பரிசைக் கொடுங்கள். இந்தப் பரிசு புயல்களை மாற்றும். அச்சா.

அமைதியை அருள்பவர்களாக இருக்கும் எங்கும் உள்ள மேன்மையான ஆத்மாக்களுக்கும், எங்கும் உள்ள மகத்தான அகநோக்கில் உள்ள ஆத்மாக்களுக்கும், எப்போதும் ஏகாந்தத்தில் இருந்து செயல்படும் மேன்மையான கர்மயோகி ஆத்மாக்களுக்கும், சதா மௌன சக்தியுடன் பரிசோதனை செய்யும் மேன்மையான யோகி ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

தாதிஜி ஒரு நாள் ராஜ்பீப்லா மேலாவிற்குச் (குஜராத்) செல்வதற்காக விடைபெறுகிறார்:

விசேடமான ஆத்மாக்கள் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். மூத்தவர்களிடமிருந்து பெறப்படும் ஒத்துழைப்பானது, பாதுகாப்புக் குடையாகி, அனைவரையும் பெருமைப்படுத்துகிறது. நீங்கள் எங்கே சென்றாலும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களின் பெயரால் விசேடமான அன்பையும் நினைவுகளையும் கொடுங்கள். பக்தி மார்க்கத்தில், குழந்தைகள் பெயர்களைக் கொண்ட மாலையின் மணிகளை அதிகளவில் உருட்டினார்கள். தந்தை இப்போது இந்த மாலையை ஆரம்பித்தால், அது பெரியதொரு மாலை ஆகிவிடும். இதனாலேயே, குழந்தைகள் (விசேடமான ஆத்மாக்கள்) எங்கே சென்றாலும், குறிப்பாக ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். எங்கேயாவது விசேடமான ஆத்மாக்கள் செல்வது என்றால், சேவையில் அதிகளவு சிறப்பியல்புகளை ஏற்படுத்துதல் என்று அர்த்தம். அது இங்கேயே ஆரம்பமாகிறது. ஆனால், நீங்கள் அங்கே சென்று, நிலத்தில் காலடி வைக்கிறீர்கள். எனவே, அங்கே காலடி வைத்தல் என்றால், அங்கு சுற்றி வருதல் என்று அர்த்தம். இங்கு, நீங்கள் சேவை செய்வதற்காகச் சுற்றி வருகிறீர்கள். அங்கே, பக்தி மார்க்கத்தில், நிலத்தில் காலடி வைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். எவ்வாறாயினும், அவை அனைத்தும் இங்கேயே ஆரம்பமாகின்றன. நீங்கள் எங்கேயாயினும் அரை மணிநேரத்திற்கோ அல்லது ஒரு மணி நேரத்திற்கோ சென்றாலும், அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள். அத்துடன் அங்கே சேவையும் இடம்பெறுகிறது. பக்தி மார்க்கத்தில், நீங்கள் வெறுமனே காலடி பதித்தாலேயே அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். அவை அனைத்தும் இங்கேயே ஸ்தாபிக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்திற்கான அத்திவாரங்கள் அனைத்தும் இங்கேயே போடப்படுகின்றன. ஆனால், அதன் வடிவம் மாறிவிடுகிறது. எனவே, மேளாவில் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகிய அனைவருக்கும், அதாவது, சந்திப்பைக் கொண்டாடுவதற்கான சேவையைச் செய்வதற்குக் கருவிகள் ஆகியவர்களுக்கும், பாப்தாதா மேளாவிற்கு முன்னரே அவர்கள் அனைவருடனும் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறார். இது தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான மேளாவாகும். ஆனால், அது சேவைக்கான மேளா. ஆகவே, அனைவருக்கும் இதயபூர்வமான அன்பும் நினைவுகளும் உரித்தாகுக. அச்சா. உலகில், இரவு கிளப் பல உள்ளன. ஆனால் இங்கோ, உங்களிடம் அமிர்தவேளை கிளப் உள்ளது.

(தாதிகளிடம்) நீங்கள் அனைவரும் அமிர்தவேளை கிளப்பின் உறுப்பினர்கள். அனைவரும் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். அவர்கள் விசேடமான ஆத்மாக்களைப் பார்க்கும்போது, சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகிறது. அச்சா.

விடை பெறும் வேளையில். சற்குரு தினத்தில் அன்பும் நினைவுகளும் (காலை 6.00 மணி)

வியாழனுக்குரிய நாளில், மரத்தின் சகல முதலாவது, விலைமதிப்பற்ற இலைகளுக்கு, விருட்சத்தின் பிரபுவான தந்தையிடமிருந்து அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும். மேன்மையான ஆத்மாக்கள் அனைவரின் மீதும் நிச்சயமாக வியாழதிசை உள்ளது. ராகு திசையும் ஏனைய திசைகளும் இப்போது முடிவடைந்துவிட்டன. இப்போது, பிராமண ஆத்மாக்கள் அனைவரின் மீதும் ஒரேயொரு வகையான திசையே உள்ளது. அது வியாழதிசை, விருட்சத்தின் பிரபுவின் திசையாகும். எனவே, வியாழ திசை உள்ளது. அத்துடன் இன்று வியாழக்கிழமை. விருட்சத்தின் பிரபுவானவர், தனது ஆதி இலைகளுடன் சந்திப்பைக் கொண்டாடுகிறார். எனவே, உங்களிடம் நினைவு உள்ளது. எப்போதும் நினைவு இருக்கும். நீங்கள் சதா அன்பிலே அமிழ்ந்துள்ளீர்கள். எப்போதும் அன்பானவர்களாக இருப்பீர்கள். உங்களுக்குப் புரிகிறதா?

ஆசீர்வாதம்:
நீங்கள் சக்திவாய்ந்த தடையைப் பிரயோகிப்பதன் மூலம், உங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட ரூபத்தால் சேவை செய்யும் ஒளி - சக்தி வீடு ஆகுவீர்களாக.

உங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட ரூபத்தால் சேவை செய்வதற்கு, அனைத்திற்கும் முதலில், தூய எண்ணங்களைக் கொண்டிருங்கள். அத்துடன் ஒரு விநாடியில் உங்களின் பல எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் விசேடமான பயிற்சியையும் செய்யுங்கள். நாள் முழுவதும், தொடர்ந்து தூய எண்ணங்களின் கடலின் அலைகளில் பயணம் செய்யுங்கள். நீங்கள் விரும்பும் போதெல்லாம், தூய எண்ணங்களின் கடலின் அடிமட்டத்திற்குச் சென்று, மௌன ரூபம் ஆகுங்கள். இதற்கு, உங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த பிரேக் அவசியம். உங்களின் எண்ணங்களில் முழுமையான கட்டுப்பாடும், உங்களின் புத்தியின் மீதும் சம்ஸ்காரங்களின் மீதும் சகல உரிமைகளும் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே உங்களால் ஒரு ஒளி மற்றும் சக்தி வீடாகி, உங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட ரூபத்தால் சேவை செய்ய முடியும்.

சுலோகம்:
உங்களின் எண்ணங்களிலும் நேரத்திலும் வார்த்தைகளிலும் சிக்கனமாக இருங்கள். உங்களால் பாபாவின் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும்.