08.03.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றி உபகாரி ஆகுங்கள். அனைவருக்கும் சந்தோஷத்துக்கான பாதையைக் காட்டுங்கள்.

கேள்வி:
சில குழந்தைகள் ஏதேனும் தவறுகள் செய்வதற்கான முக்கிய காரணம் என்ன?

பதில்:
சரீர உணர்வே ஆகும். சரீர உணர்வினாலேயே குழந்தைகள் பல தவறுகளைச் செய்கின்றார்கள்; அவர்களால் சேவை செய்யவும் முடிவதில்லை. அனைவரும் அவர்களை வெறுக்கக்கூடிய அத்தகைய செயல்களை அவர்கள் செய்கின்றனர். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! தவறான செயல்கள் எதையும் செய்யாதீர்கள்! பாலும் சீனியும் போலாகி, சேவைக்காக மிக நல்ல திட்டங்களைத் தீட்டுங்கள். முரளியைச் செவிமடுத்து அதனைக் கிரகியுங்கள். இதில் கவனயீனமாக இருக்காதீர்கள்.

பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டு, கீழே பூமிக்கு இறங்கி வாருங்கள்!

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தையிடமிருந்து ஸ்ரீமத் ஆன்மீகக் குழந்தைகளுக்காக வருகின்றது. பாபா இப்பொழுது அனைத்து நிலையங்களிலும் உள்ள குழந்தைகளான எங்களுடன் பேசுகின்றார். திரிமூர்த்தி, சக்கரம், கல்ப விருட்சம், ஏணிப் படம், இலக்ஷ்மி, நாராயணன், கிருஷ்ணர் என்பனவே ஆறு பிரதான படங்கள். இது ஒரு முழுமையான கண்காட்சி போன்றது; முழுச் சாராம்சமும் இதில் அடங்கியுள்ளது. ஒரு படம் அல்லது நாடகம் போன்றவற்றின் விளம்பரத்துக்காக அவர்கள் செய்கின்ற விளம்பரப் பலகைகள் ஒருபொழுதும் மழையினால் பழுதடைவதில்லை. இந்தப் பிரதான படங்களும் அவ்வாறான பலகைகளில் வர்ணம் தீட்டப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீகச் சேவையை அதிகரித்து, பாரத மக்களுக்கு நன்மை பயப்பதற்காகவே ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். எல்லையற்ற தந்தையே நன்மை பயப்பவர் என நினைவுகூரப்படுகின்றது, எனவே தந்தை வந்து அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில், நிச்சயமாக இழப்பை ஏற்படுத்துபவரும் இருக்க வேண்டும். நன்மையடைகின்ற ஆன்மீகக் குழந்தைகளால் இவ் விடயங்களைப் புரிந்துகொள்ள முடியும். நாங்கள் நன்மை அடைந்ததைப் போல், மற்றவர்களையும் நன்மையடையச் செய்ய வேண்டும். தந்தையும் அனைவருக்கும் எவ்வாறு நன்மை பயக்கலாம் என்ற எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார். அவர் இதற்காக உங்களுக்கு வெவ்வேறு வழிமுறைகளைக் காட்டுகின்றார். படங்கள் 6’ஓ 9’ அளவிலுள்ள பலகைகளில் செய்யப்பட வேண்டும். பொதுவாக, மக்கள் அரசாங்கம் கூட்டங்களை நடத்துகின்ற டெல்கி போன்ற நகரங்களுக்குச் செல்கின்றார்கள். பலர் அரசாங்கக் காரியதரிசியின் செயலகங்களுக்கும் செல்கின்றார்கள். இந்தப் படங்கள் அங்கே வைக்கப்பட வேண்டும். தந்தை மக்கள் பலரும் நன்மையடைவதற்கான வழிகாட்டல்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். தகரங்களிலும் பல படங்களை உருவாக்கலாம். ஆத்ம உணர்வுடையவராகி, தந்தையின் சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இந்தப் படங்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் செய்யப்பட வேண்டும் எனத் தந்தை உங்களுக்கு அறிவுரை வழங்குகிறார். இந்த ஆறு படங்களும் பிரதான இடங்களில் வைக்கப்பட வேண்டும். அவை அவ்வாறான பிரதான இடங்களில் வைக்கப்பட்டால், நூற்றுக் கணக்கான மக்கள் புரிந்துகொள்வதற்கு உங்களிடம் வருவார்கள். எவ்வாறாயினும், குழந்தைகளுக்குச் சரீர உணர்வுள்ளதால் பல தவறுகளைச் செய்கின்றனர். நீங்கள் முழுமையாக ஆத்ம உணர்வுடையவர்கள்; என உங்களில் எவருமே எண்ணக்கூடாது. சிலர் பல தவறுகளைச் செய்கின்றார்கள், அவர்கள் உண்மையைக் கூறுவதில்லை. பிறர் உங்களை வெறுத்து, நீங்கள் சரீர உணர்வுடையவர் எனச் சுட்டிக்காட்டக்கூடிய வகையில் தவறான செயல்கள் எதையும் நீங்கள் செய்யக்கூடாதென விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சதா ஒரு யுத்த களத்தில் உள்ளீர்கள். ஏனைய இடங்களில் ஒரு யுத்தம் 10 இலிருந்து 20 வருடங்கள் வரை நீடிக்கக்கூடும். மாயையுடனான உங்கள் யுத்தம் இறுதி வரை நீடிக்கும். ஆயினும் இது மறைமுகமானது, எவருமே இது பற்றி அறியார். கீதையில் காட்டப்பட்டுள்ள மகாபாரத யுத்தம் பௌதீகமானது, ஆனால் இந்த யுத்தம் ஆன்மீகமானது. இது பாண்டவர்களின் ஆன்மீக யுத்தமாகும். பரமாத்மா பரமதந்தை மீது அன்பற்ற புத்தியைக் கொண்டவர்களினதே அந்தப் பௌதீக யுத்தம் ஆகும். பிராமணக் குலத்தின் அலங்காரங்களான நீங்கள் அன்பான புத்தியைக் கொண்டவர்கள். நீங்கள் ஏனைய அனைவரிடமிருந்தும் உங்களைத் துண்டித்து, ஒரேயொரு தந்தையுடன் உங்களை இணைத்துள்ளீர்கள். பல தடவைகள் சரீர உணர்வுடையவராகுவதால், நீங்கள் மறந்து விடுவதுடன், பின்னர் உங்கள் சொந்த அந்தஸ்தையும் அழிக்கின்றீர்கள். பின்னர் இறுதியில் அதிக வருந்துதல் இருக்கும். அந்நேரத்தில் எதுவுமே செய்ய முடியாதிருக்கும். இதுவே ஒவ்வொரு கல்பத்திற்குமான ஒரு பேரமாகும். இந்நேரத்தில் தவறான செயல்கள் செய்யப்பட்டால், கல்பம் கல்பமாக அந்தஸ்து அழிக்கப்படும். பெருமளவு இழப்பு ஏற்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: முன்னர் நீங்கள் 100மூ இழப்பில் இருந்தீர்கள். தந்தை உங்களை இப்பொழுது 100மூ இலாபத்துக்குள் இட்டுச் செல்கின்றார். எனவே நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உபகாரியாக வேண்டும். அனைவருக்கும் சந்தோஷத்துக்கான பாதையைக் காட்டுங்கள்! சுவர்க்கத்தில் சந்தோஷமும், நரகத்தில் துன்பமும் உள்ளன. ஏன்? இது விகாரமான உலகம். அந்த உலகம் விகாரமற்று இருந்தது, ஆனால் அது இப்பொழுது விகாரமானதாகி விட்டது. தந்தை மீண்டும் ஒருமுறை அதை விகாரமற்றதாக ஆக்குகின்றார். உலகிலுள்ள எவரும் இந்த விடயங்களைப் பற்றி அறியார். இந்தப் பிரதானமான படங்கள் நிரந்தரமான இடங்களில் இடப்பட வேண்டும். முதலாம் இலக்கப் பிரதான இடம் டெல்கியாகும், பின்னர் மும்பாயும், கல்கத்தாவும் இருக்கின்றன. அவற்றைத் தகரங்களில் வர்ணம் தீட்டுமாறு நீங்கள் ஒரு கட்டளையை எவருக்கும் கொடுக்க முடியும். பல உல்லாசப் பயணிகள் ஆக்ராவுக்குச் செல்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிக நல்ல சேவை செய்கின்றீர்கள், ஆனால் இப்பொழுது சிலவற்றைச் செய்து, அதை பாபாவுக்குக் காட்ட வேண்டும். இந்தப் படங்களைச் செய்வதில் எவ்விதச் சிரமமும் இல்லை. இதற்கு அனுபவமே தேவைப்படுகின்றது! மக்கள் தொலைவிலிருந்தே வாசிக்கக்கூடியதாக மிக நல்ல பெரிய படங்கள் இருக்க வேண்டும். சக்கரத்தின் மிகப் பெரிய படத்தையும் உருவாக்கலாம். எவருமே அவற்றைப் பாழாக்க முடியாத வகையில், அவை பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். யாகத்தில் அசுரர்கள் தடைகளை உருவாக்குகின்றார்கள், ஏனெனில் இது புதியதொன்றாகும். அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் உங்கள் சொந்த வியாபாரத்தை ஆரம்பித்து விட்டீர்கள். இறுதியில் தாங்கள் கீழிறங்கி விட்டார்கள்; எனவும், நிச்சயமாக ஏதோ தவறுள்ளது எனவும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். தந்தையே நன்மைபயப்பவர். அவரால் மாத்திரமே பாரதம் எப்பொழுது, எவ்வாறு உபகாரியாகியது எனக் கூறமுடியும். யார் பாரதத்தைத் தமோபிரதான் ஆக்குகின்றார், பின்னர் யார் அதனைச் சதோபிரதான் ஆக்குகிறார் அல்லது எவ்வாறு சக்கரம் சுழல்கின்றது என எவருமே அறியார். சங்கமயுகம் பற்றியும் எவரும் அறியமாட்டார்கள். கடவுள் ஒவ்வொரு யுகத்திலும் வருகின்றார் என அவர்கள் நம்புகின்றார்கள். சிலநேரங்களில் கடவுள் பெயருக்கும்;, ரூபத்துக்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் கூறுகின்றனர். பாரதம் புராதன சுவர்க்கமாக இருந்தது. கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தேவர்களின் இராச்சியம் இருந்தது எனவும் மக்கள் கூறுகின்றனர். ஆயினும் அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை நீடித்து விட்டார்கள். எனவே குழந்தைகளே, நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்குப் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். அரைக் கல்பமாகச் சத்திய, திரேதா யுகங்களில் நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருந்தீர்கள், ஆனால் நீங்கள் இறையுணர்வு உடையவர்களாக இருக்கவில்லை. இங்கே நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஆத்ம உணர்வுடையவர் ஆகவேண்டும். அவர்கள் “யாத்திரை” என்ற வார்த்தையைப் பயன்;படுத்;துகின்றனர், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. “மன்மனாபவ” என்பதன் அர்த்தமானது: ஆன்மீக யாத்திரையில் நிலைத்திருங்கள். ஓ ஆத்மாக்களே, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள்! கிருஷ்ணரால் இதைக் கூறமுடியாது. எவ்வாறு அவர் கீதையின் கடவுளாக இருக்க முடியும்? எவரும் அவரை அவமரியாதை செய்ய முடியாது. நீங்கள் ஏணியில் கீழிறங்கி வந்தபொழுது, அரைக்கல்பத்துக்குக் காமச்சிதையில் அமர்ந்து அவலட்சணமானவர்கள் ஆகினீர்கள் எனத் தந்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். இப்பொழுது இது கலியுகம். இங்கேயுள்ள முழுச் சமுதாயமும் அவலட்சணமானது, ஆனால் எவ்வாறு அனைவரதும் அவலட்சண ரூபத்தைக் காட்ட முடியும்? அவர்கள் எதையும் புரிந்துகொள்ளாமலே படங்கள் அனைத்தையும் உருவாக்கியுள்ளார்கள் அவர்கள் காட்டியுள்ளவாறு, ஒருவர் மாத்திரமே அவலட்சணமாகவும், அழகாகவும் இருப்பது எவ்வாறு சாத்தியம்? அவர்கள் குருட்டு நம்பிக்கையுடன் பொம்மைகளைப் பூஜிப்பவர்கள் என அழைக்கப்படுகின்றனர். பொம்மைகளுக்குப் பெயர், ரூபம் அல்லது தொழில் எதுவும் இருக்க முடியாது. முன்னர் நீங்களும் பொம்மைகளைப் பூஜிப்பவர்களாக இருந்தீர்கள். நீங்களும் எதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளவில்லை. எனவே எவ்வாறு கண்காட்சியின் பிரதான படங்கள் உருவாக்கப்பட வேண்டுமென பாபா விளங்கப்படுத்தியுள்ளார். கண்காட்சியைத் தொடர்ந்தும் நடாத்தக்கூடிய செயற்குழு ஒன்றும் இருக்க வேண்டும். பந்தனத்திலிருந்து விடுபட்ட பலர் இருக்கின்றனர். குமாரிகள் பந்தனத்திலிருந்து விடுபட்டவர்கள். ஓய்வு ஸ்திதியில் உள்ளவர்களும் பந்தனத்திலிருந்து விடுபட்டவர்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் இந்த வழிகாட்டல்களைப் பயிற்சியில் இடவேண்டும். நீங்கள் மறைமுகமான பாண்டவர்கள். எவராலும் உங்களை இனங்காண முடியாது. தந்தை மறைமுகமானவர், ஞானமும் மறைமுகமானது. அங்கே மனிதர்களே மனிதர்களுக்கு ஞானம் கொடுக்கின்றார்கள். இங்கே, பரமாத்மாவாகிய தந்தையே ஆத்மாக்களுக்கு ஞானம் கொடுக்கின்றார். ஆயினும் ஆத்மாக்களே ஞானத்தை எடுக்கின்றார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை, ஏனெனில் அவர்கள் ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதுகின்றார்கள். உண்மையில் ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றனர். ஆத்மாக்களே தங்கள் செயல்களுக்கு ஏற்றவாறு மறுபிறவி எடுக்கின்றனர். தந்தை இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் மிக நன்றாகப் பதியச் செய்கின்றார். சகல நிலையங்களிலும், ஆத்ம உணர்வுடைய குழந்தைகளே வரிசைக்கிரமமாக மிக நன்றாகப் புரிந்துகொண்டு, பின்னர் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்கள். சரீர உணர்வுடையவர்களால், எதையும் புரிந்துகொள்ளவோ அல்லது பிறருக்கு விளங்கப்படுத்தவோ முடியாது. “என்னால்; எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை” எனக் கூறுவதும் சரீர உணர்வாகும். ஓ, நீங்கள் ஓர் ஆத்மா! தந்தை இங்கேயிருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்கள் புத்தி திறக்கப்பட வேண்டும். அது உங்கள் பாக்கியத்தில் இல்லையெனில் புத்தி திறக்க மாட்டாது. தந்தை உங்களை முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார், ஆனால் உங்கள் பாக்கியத்தில் அது இல்லையெனில், நீங்கள் முயற்சி செய்ய மாட்டீர்கள். அல்பாவையும், பீற்றாவையும் புரிந்துகொள்வது மிக இலகுவானது. நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பாரத மக்களாகிய நீங்கள் அனைவரும், தேவ, தேவியராக இருந்தீர்கள். பிரஜைகளும் அவ்வாறே இருந்தார்கள். இந்நேரத்தில் அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டார்கள். உங்களுக்குப் பல தடவைகள் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுமாறு கூறப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உங்களைத் தேவ, தேவியர்கள் ஆக்கினேன். இப்பொழுது நீங்கள் என்னவாக ஆகியுள்ளீர்கள்? இது ஆழ் நரகமாகும். அவர்கள் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் அனைத்தையும் விகாரங்கள் எனும் நஞ்சுள்ள ஒரே ஆற்றிலே காட்டுகின்றார்கள். இங்கே மனிதர்கள் மிருகங்களை விடவும் மோசமானவர்களாக ஆகிவிட்டார்கள். மனிதர்களிடம் அதிகளவு கோபம் உள்ளது. அவர்கள் நூறாயிரக் கணக்கானவர்களைக் கொல்கின்றார்கள். சிவபாபாவே விபச்சார விடுதியாகி விட்ட, பாரதத்தைச் சிவாலயமாக ஆக்குகின்றார். தந்தை மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அவர் இதையும், அதையும் செய்யுமாறு உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். படங்களை உருவாக்கி, பின்னர் அவற்றை முக்கியஸ்தர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இதுவே அதே புராதன யோகமாகும். இந்தப் புராதன ஞானத்தை அனைவரும் செவிமடுக்க வேண்டும். ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்துக் கண்காட்சியை நடாத்துங்கள். அவர்கள் உங்களிடமிருந்து பணம் போன்றவற்றை அறிவிடக்;கூடாது. இல்லையெனில், அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் எவ்வளவு என்று உணர்கின்றீர்களோ, அந்தக் கட்டணத்தை எங்களிடமிருந்து அறவிடலாம். முதலில் படங்களைப் பாருங்கள்! அவர்கள் படங்களைப் பார்க்கும்பொழுது, விரைவாக உங்கள் பணத்தை உங்களிடம் திருப்பித் தந்துவிடுவார்கள். நீங்கள் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டியதே அவசியமானது. உங்கள் கைகளில் அதிகாரம் உள்ளது. நீங்கள் விரும்பினால் அனைத்தையும் செய்ய முடியும். அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள், அழிவுக்கு இட்டுச் செல்லப்படுவர், ஆயினும், பாண்டவர்களோ தங்களது எதிர்கால அந்தஸ்தைக் கோரினார்கள். அந்த இராச்சியம் எதிர்காலத்தில் இருக்கும். அது இப்பொழுது இல்லை. அந்தக் கட்டடங்கள் அனைத்தும் அழிக்கப்படும். நீங்கள் கண்காட்சிகளை நடத்த வேண்டுமெனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். மக்களுக்கு மிக அழகான அழைப்பிதழ்களை அனுப்புங்கள். செல்வாக்குள்ள மக்களுக்கு முதலில் விளங்கப்படுத்துங்கள், நீங்கள் உதவியையும் பெறுவீர்கள். உறங்கிக் கொண்டிருக்காதீர்கள்; சில குழந்தைகள் சரீர உணர்வினால் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு செயற்குழுவை உருவாக்குங்கள். பாலும், சீனியும் போன்றாகித் திட்டங்களைத் தீட்டுங்கள்! நீங்கள் முரளியைக் கற்கவில்லையானால், எவ்வாறு உங்களால் எதையும் கிரகிக்க முடியும்? மிகவும் கவனயீனமானவர்கள் பலர் இருக்கின்றனர். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்ம உணர்வுடையவராகி, சேவை செய்வதற்குப் பல்வேறு வழிமுறைகளை உருவாக்குங்கள். ஒருவரோடொருவர் பாலும், சீனியும் போலாகி, சேவை செய்யுங்கள். உபகாரியான தந்தையைப் போன்று உபகாரி ஆகுங்கள்.

2. அன்பான புத்தியைக் கொண்டிருந்து, ஏனைய அனைவரிடமும் இருந்து உங்களைத் துண்டித்து, ஒரேயொருவருடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். கல்பம் கல்பமாக இழப்பை ஏற்படுத்தக்கூடிய தவறான செயல்கள் எதையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எப்பொழுதும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருந்து, மேலேறும் ஸ்திதியை அனுபவம் செய்கின்ற, மகாவீராக இருப்பீர்களாக.

மகாவீர்க் குழந்தைகள் ஒவ்வொரு விநாடியிலும், ஒவ்வோர் எண்ணத்திலும் மேலேறும் ஸ்திதியை அனுபவம் செய்கின்றார்கள். அவர்களுடைய மேலேறும் ஸ்திதியே அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்துவதில் கருவி ஆகும். அவர்கள் நிறுத்தத்திற்கு வருவதோ அல்லது களைப்படைவதோ இல்லை, ஆனால் சதா களைப்பற்றவர்களாகவும், எப்பொழுதும் ஊக்கம், உற்சாகத்தை உடையவர்களாகவும் இருக்கின்றார்கள். நிறுத்தத்திற்கு வருபவர்கள் குதிரைப் படையினர் எனவும், களைப்படைபவர்கள் காலாட் படையினர் எனவும் கூறப்படுகின்றார்கள். சதா முன்னேறிச் சென்று கொண்டிருப்பவர்களே மகாவீர் என்று அழைக்கப்படுகின்றார்கள். அவர்களின் என்றுமே கண்கள் மாயையின் ரூபம் எதனை நோக்கியும் ஈர்க்கப்படுவதில்லை.

சுலோகம்:
தங்கள் ஆன்மீக முயற்சி மூலம் தாங்கள் விரும்பும்பொழுதெல்லாம் ஒரு குளிர்மையான ரூபத்தை அல்லது எரிமலை (சக்திமிக்க) ரூபத்தை ஏற்றுக் கொள்பவர்களே, சக்தி வாய்ந்தவர்கள் ஆவர்.


மாதேஷ்வரிஜியின் மேன்மையான பெறுமதிமிக்க வாசகங்கள்

ஓர் ஆத்மாவினால் என்றுமே பரமாத்மாவின் பாகமாக முடியாது.

ஆத்மாக்களாகிய நாங்கள் பரமாத்மாவின் பாகம் என்று மக்கள் எண்ணுகின்றார்கள். அவரது பாகமாக இருப்பது எனில், அவரின் ஒரு துண்டாக இருப்பது என்று அர்த்தம் ஆகும். ஒருபுறம் அவர்கள் கடவுள் அநாதியானவரும், அழிவற்றவரும் என்று கூறுவதால், எவ்வாறு அழிவற்ற பரமாத்மாவினால் துண்டுகளாக இருக்க முடியும்? பரமாத்மாவை எவ்வாறு துண்டுகளாக வெட்ட முடியும்? ஒவ்வோர் ஆத்மாவும் அழிவற்றவரும், அமரத்துவமானவரும் என்பதால், ஆத்மாக்களை உருவாக்குபவரும் நிச்சயமாக அமரத்துவமானவர் ஆவார். அத்தகைய அமரத்துவமான பரமாத்மாவைத் துண்டுகளாக்குவது எனில், அவரை அழியக்கூடியவர் ஆக்குவதாகும். ஆனால் ஆத்மாக்களாகிய நாங்கள் பரமாத்மாவின் குழந்தைகள் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே நாங்கள் அவருடைய சந்ததியினர், அதாவது, நாங்கள் அவருடைய குழந்தைகள், எனவே நாங்கள் எவ்வாறு அவருடைய பாகமாக இருக்க முடியும்? இதனாலேயே கடவுளின் மேன்மையான வாசகங்கள் கூறுகின்றன: குழந்தைகளே, நான் அமரத்துவமானவரும், நான் உயிருள்ளவரும், ஏற்றப்பட்ட ஒளியும் ஆவேன். நானே தீபம். நான் என்றுமே அணைக்கப்படுவதில்லை. மனித ஆத்மாக்கள் அனைவரினதும் தீபங்கள் ஏற்றப்பட்டு, அணைக்கப்படுகின்றன. அப்பொழுது நான் அவர்கள் அனைவரையும் விழித்தெழச் செய்கின்றேன், ஏனெனில் நானே ஒளியையும், சக்தியையும் கொடுப்பவன். எவ்வாறாயினும், நிச்சயமாக, கடவுளின் ஒளிக்கும், ஆத்மாக்களின் ஒளிக்கும் இடையில் வேறுபாடுள்ளது. உதாரணத்திற்கு, மின்குமிழ்களில் சில பெரும் சக்தியையும், ஏனையவை குறைந்தளவு சக்தியையும் கொண்டுள்ளன. அதேபோன்று, சில ஆத்மாக்களுக்குப் பெரும் சக்தியும், ஏனைய ஆத்மாக்களுக்குக் குறைந்தளவு சக்தியும் உள்ளன. எவ்வாறாயினும், கடவுளின் சக்தி கூடியதோ, குறைந்ததோ அல்ல. இதனாலேயே கடவுளையிட்டு, அவர் சர்வசக்திவான், அதாவது, ஆத்மாக்கள் அனைவரை விடவும் பெரும் சக்தி உடையவர் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் சக்கரத்தின் இறுதியில் வருகின்றார். அவர் சக்கரத்தின் மத்தியில் வருவதாக, அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாகச் சிலர் நம்பினால், அப்பொழுது கடவுள் மத்திய காலப் பகுதியில் வருவதாக நீங்கள் கூறும்பொழுது, எவ்வாறு கடவுள் அனைவரிலும் அதிமேன்மையானவராக இருக்க முடியும்? கடவுள் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாக நீங்கள் கூறுவதானால், கடவுள் தனது சக்தியை அடிக்கடி பயன்படுத்துவதாக நீங்கள் கூற முடியுமா? சர்வசக்திவானின் சக்தி இவ்வளவு தானா? மத்திய காலப் பகுதியில் அவர் தனது சக்தி மூலம் பிறருக்குச் சக்தியை அல்லது சற்கதியைக் கொடுக்க முடியுமாயின், அவரது சக்தியானது சதாகாலமும் இருக்க வேண்டும். ஆகவே பின்னர் ஏன் மக்கள் சீரழிவினுள் செல்கின்றார்கள்? கடவுள் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை, அதாவது, அவர் சக்கரத்தின் மத்தியில் வருவதில்லை என்பதையே இது நிரூபிக்கின்றது. அவர் சக்கரத்தின் இறுதியில் வந்து, ஒருமுறை மாத்திரமே தனது சொந்தச் சக்தி மூலம் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். இப் பாரிய சேவையைக் கடவுள் செய்த பின்னரே அவரது ஞாபகார்த்தமாக ஒரு பெரிய சிவலிங்கம் உருவாக்கப்பட்டு, அதிகளவு வழிபடப்படுகின்றது. நிச்சயமாக, கடவுள் சத்தியமானவரும், உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமும் ஆவார். அச்சா. ஓம்சாந்தி.