30.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, முழு உலகையும், தத்துவங்களையும் தூய்மையாக்குவதற்குச் சேவை செய்ய வேண்டும். சந்தோஷத்திற்கும், அமைதிக்குமான பாதையை அனைவருக்கும் காட்டுங்கள்.கேள்வி:
நீங்கள் உங்களுடைய சொந்தச்; சரீரங்களையும் மறப்பதற்கு முயற்சிப்பதால், குழந்தைகளான உங்களுக்கு அவசியம் இல்லாதது எது?பதில்:
படங்களாகும். உங்கள் உருவத்தை (சரீரம்) நீங்கள் மறக்க வேண்டும் என்பதால், உங்களுக்கு அந்தப் படங்கள் ஏன் தேவைப்படுகின்றன? உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, சரீரமற்ற தந்தையையும், உங்கள் இனிய வீட்டையும் நினைவுசெய்யுங்கள். இப்படங்கள் சிறு குழந்தைகளுக்கானவை; அதாவது, புதியவர்களுக்கானவை. நீங்கள் நினைவில் இருப்பதுடன் மற்றவர்களையும் நினைவுசெய்யத் தூண்ட வேண்டும். சதோபிரதான் ஆகுவதற்கு உங்களது தொழிலைத் தொடர்ந்தும் செய்வதுடன், நினைவில் நிலைத்திருப்பதற்கான பயிற்சியையும் செய்யுங்கள்.பாடல்:
நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்து வந்திருக்கிறேன்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் இவ்வார்த்தைகளைச் செவிமடுத்தவுடன், உங்களுக்கு உடனடியாகவே சந்தோஷத்தினால் புல்லரித்தது. நீங்கள் உங்களது பாக்கியமான, சுவர்க்க பாக்கியத்தைப் பெறவே இங்கு வந்திருக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இவ்வாறு வேறெங்கும் கூறப்படுவதில்லை. நீங்கள் உங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுவதற்காக, அதாவது சுவர்க்கத்தை படைப்பதற்காகவே, முயற்சி செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கு மட்டும் அல்லாது, சுவர்க்கத்தில் அதி மேன்மையான அந்தஸ்தைப் பெறுவதற்கும் முயற்சி செய்கிறீர்கள். சுவர்க்கத்தின் காட்சிகளை அருள்கின்ற தந்தையே இப்பொழுது எங்களுக்குக் கற்பிக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு இப் போதை இருக்க வேண்டும். பக்தி இப்பொழுது முடிவுக்கு வருகிறது. இராவணனது சங்கிலியில் பக்தர்கள் சிக்கி இருப்பதால், அவர்களை ஈடேற்றுவதற்குக் கடவுள் வருகிறார் என்று கூறப்படுகிறது. வெவ்;வேறு அபிப்பிராயங்களைக் கொண்ட பல மனிதர்கள் இருக்கின்றார்கள்! உலகச் சக்கரம் அநாதியாகத் தொடர்கின்ற ஒரு நாடகம் என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். புராதன புதிய உலகவாசிகளாகத் தாங்களே இருந்தார்கள் என்பதையும், இபபொழுது தாங்கள் பழைய உலகவாசிகள் ஆகி விட்டார்கள்; என்பதையும் பாரத மக்கள் புரிந்துகொள்கின்றார்கள். புதிய உலகமான சுவர்க்கத்தைத் தந்தை படைத்தார், அதனைப் பின்னர் இராவணன் நரகமாக்கினான். பாப்தாதாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இப்பொழுது உங்களுக்காகப் புதிய உலகைப் படைக்கிறீர்கள். நீங்கள் புதிய உலகிற்காகக் கற்கிறீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? தூய்மையாக்குபவரும், ஞானக்கடலுமே புகழப்படுகின்ற ஒரேயொருவர். அந்த ஒரேயொருவரைத் தவிர வேறு எவரது புகழையும் பாட முடியாது. அவரே தூய்மையாக்குபவர். நாங்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள்;. எவருமே தூய உலகை நினைவுசெய்வதில்லை. 5000 வருடங்களுக்கு முன்னர் உண்மையிலேயே தூய உலகம் இருந்தது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்;கிறீர்கள். இந்தப் பாரதம் மட்டுமே இருந்தது. ஏனைய அனைத்துச் சமயங்களும் அமைதியில் இருந்தன. பாரதவாசிகளாகிய நாங்கள் அனைவரும் சந்தோஷ பூமியில் இருந்தோம். மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் இங்கே எவராலுமே அமைதியாக இருக்க முடியாது. இது அமைதி தாமமல்ல. அது அசரீரி உலகம், அங்கிருந்தே நாங்கள் வருகின்றோம். சத்தியயுகத்திமே சந்தோஷ தாமம்; அதனை அமைதி தாமம் என அழைக்க முடியாது. அங்கே, நீங்கள் தூய்மையும், அமைதியும், சந்தோஷமும் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். அங்கு எக் குழப்பமும் இருப்பதில்லை. வீடுகளில் குழந்தைகள் குழப்பம் செய்யும்பொழுது, அவர்களுக்கு அமைதியாக இருக்குமாறு கூறப்படுகின்றது. தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் அந்த அமைதி தாமத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் இந்தச் சண்டை மிகுந்த உலகிற்கு வந்தீர்கள். இது உங்களது புத்தியில் உள்ளது. தந்தையிடமிருந்து அதிமேலான அந்தஸ்தைப் பெறவே நீங்கள் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறீர்கள். இந்தப் பாடசாலை குறைந்தல்ல. இது தந்தையான கடவுளின் பல்கலைக்கழகம். முழு உலகிலுமே இதுவே மிகப்பெரிய பல்கலைக்கழகமாகும். இங்கேயே அனைவரும் அமைதியும், சந்தோஷமும் என்ற தங்களது ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகிறார்கள். ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரது புகழும் இல்லை. பிரம்மாவிற்கான புகழ் ஏதும் இல்லை. இந்நேரத்தில், தந்தை மட்டுமே வந்து உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கிறார். அதன்பின்னர் சந்தோஷம், சந்தோஷம் மட்டுமே இருக்கும். தந்தை மட்டுமே உங்களுக்கு அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறார். அவருக்கான புகழ் மட்டுமே உள்ளது. சத்திய, திரேதா யுகங்களில் எவரது புகழும் இருப்பதில்லை. அங்கு இராச்சியம் தொடர்கின்றது. நீங்கள் உங்களது ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஏனைய அனைவரும் அமைதி தாமத்திலே இருக்கிறார்கள். எவரது புகழும் இருப்பதில்லை. கிறிஸ்து ஒரு சமயத்தை ஸ்தாபித்தாலும், அதை அவர் செய்யவே வேண்டும். அவர் ஒரு சமயத்தை ஸ்தாபித்திருந்தாலும் அவர் தொடர்ந்தும் கீழிறங்குகின்றார். அவ்வாறாயின் என்ன புகழ் உள்ளது? தூய்மையாக்குபவரும், முக்தியளிப்பவரும் என அழைக்கப்படுகின்ற ஒரேயொருவருக்கு மாத்திரமே புகழ் உள்ளது. அவர் கிறிஸ்து, புத்தர் போன்றவர்களை நினைவுசெய்கின்றார் என்றில்லை. அவர்களே தந்தையான ஒரு கடவுளை நினைவுசெய்கிறார்கள். சத்தியயுகத்தில் எவருமே புகழப்படுவதில்லை. சமயங்கள் ஆரம்பித்த பின்னரே, அவர்கள் தந்தையின் புகழைப் பாடுவதுடன், பக்தியும் ஆரம்பமாகுகிறது. நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதைத் தந்தையின் குழந்தைகளாகியவர்கள் மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். தந்தையே படைப்பவர். அவர் சுவர்க்கம் எனும் புதிய உலகைப் படைக்கிறார். எவ்வாறாயினும் அனைவராலும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. நாடகத்தின் முக்கியத்துவமும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்களது சந்தோஷ ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இந்நேரத்தில் அனைவரும் சந்தோஷமற்றவர்களாகவே இருக்கிறார்கள். அனைவரும் வீடு திரும்ப வேண்டும், பின்னர் சந்தோஷம் நிலவும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சிறந்த பாகங்களைப் பெற்றிருக்கிறீPர்கள். அதிகளவில் புகழப்படுகின்ற தந்தையே இபபொழுது வந்து, குழந்தைகளாகிய உங்கள் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் அனைவரும் குழந்தைகள். தந்தை என்றென்றும் சந்தோஷமானவர். உண்மையில், இவ்வாறு தந்தையைப் பற்றிக் கூறமுடியாது. அவ்வாறு அவர் சந்தோஷமானவராக இருப்பாரானால், அவர் சந்தோஷமற்றவராவும் ஆகுவார். பாபா இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். இந்நேரத்தில் தந்தையின் புகமே உங்களது புகழும் ஆகும். அதன்பின்னர், எதிர்காலத்தில், உங்களது புகழ் வேறுபட்டதாக இருக்கும். தந்தை எவ்வாறு ஞானக்கடலாக இருக்கிறாரோ, நீங்களும் அவ்வாறானவர்களே. உங்களது புத்தியில் உலகச் சக்;கரத்தின் ஞானம் உள்ளது. தந்தையே சந்தோஷக் கடல் என்பதும், நீங்கள் அவரிடமிருந்து பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இந்நேரத்தில் நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். எவ்வாறு மேன்மையான செயல்களைச் செய்வது என்பதைத் தந்தை குழந்தைகளான உங்களுக்கு இப்பொழுது கற்பிக்கிறார். அதேவிதமாக இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தை அடையும்வகையில், தங்களது முன்னைய பிறவியில் நிச்சயமாக அத்தகைய சிறந்த செயல்களைச் செய்திருக்க வேண்டும். அவர்கள் எவ்வாறு தங்களது இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பது உலகிலுள்ள எவருக்குமே தெரியாது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அவ்வாறே ஆகுகிறீர்கள். நீங்கள் மேன்மையானவர்களாக இருந்தீர்கள் என்பதும், மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகிறீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் புகுகிறது. தந்தை இங்கமர்ந்திருந்து செயல்;, நடுநிலைச்செயல், பாவச்செயலின் தத்துவத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், அதனூடாக நீங்கள் அவ்வாறு ஆகுகிறீர்கள். அவர் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார், ஆகையாலே நீங்கள் ஸ்ரீமத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் ஸ்ரீமத்தின் மூலம், தத்துவங்கள் உட்பட, முழு உலகையும் மேன்மையானதாக்கிறார். சத்தியயுகத்தில் அனைவரும், அனைத்தும் மேன்மையாக உள்ளது. அங்கு குழப்பங்களோ அல்லது எவ்வகையான புயலோ இருப்பதில்லை. அதிக சூடோ அல்லது அதிகக் குளிரோ இருக்காது; அங்கு எப்பொழுதும் வசந்த காலமே உள்ளது. நீங்கள் அங்கே மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கின்றீர்கள். அம்மக்கள் கடவுளே (குதா) சுவர்க்கத்தை (பாகிஸ்ட்) ஸ்தாபித்தார் எனப் பாடுகிறார்கள். ஆகையாலே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும். எப்பொழுதும் நினைவுகூரப்பட்டுள்ளது: தாயையும் தந்தையையும் பின்பற்றுங்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்யும்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. இப்பொழுது, ஆத்மாக்களான நாங்கள் தந்தையுடன் வீடு திருமப வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றி அனைவருக்கும் பாதையைக் காட்டுங்கள். எல்லையற்ற தந்தையே, சுவர்க்கத்தைப் படைப்பவர். அது இப்பொழுது நரகம். அவர், சுவர்க்கத்திற்கான ஆஸ்தியை, நிச்சயமாக நரகத்திலேயே கொடுத்திருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது எங்களது 84 பிறவிகளைப் பூர்த்திசெய்து, அதன்பின்னர் சுவர்க்கத்தில்; எங்களது முதலாவது பிறவியை எடுப்போம். உங்கள் இலக்கும், இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. இவ்வாறாகவே நீங்கள் ஆகவேண்டும். நாங்கள் மீண்டும் ஒருமுறை இலக்ஷ்மியும் நாராயணனும் போல் ஆகுகிறோம். உண்மையில், இப் படங்களுக்கான அவசியம் இல்லை. பலவீனமானவர்கள் இதை மீண்டும் மீண்டும் மறந்து விடுவதாலேயே படங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிலர் கிருஷ்ணரது படங்களைக் கூட வைக்கிறார்கள்; கிருஷ்ணரைப் பார்க்காமல், அவர்களால் அவரை நினைவுசெய்ய முடியாது. ஒவ்வொருவரது புத்தியிலும் ஒரு படம் இருக்கிறது. நீங்கள் படங்களை மாட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். நீங்கள் உங்களது சொந்த உருவங்களையும் மறக்க வேண்டும். நீங்கள் உங்களது சொந்தச் சரீரங்கள் உட்பட, உறவினர்கள் அனைவரையும் மறக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகள். அன்பிற்கினிய தந்தை கூறுகிறார்: தொடர்ந்தும் என்னை நினைவுசெய்தீர்களானால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் சரீரத்தை நீக்கும்பொழுது, இப்பழைய உலகை விட்டு நீங்;கித் தந்தையிடம் செல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில், உங்களது ஸ்திதி இருக்க வேண்டும். உங்கள் 84 பிறவிகள் முடிவடைந்து விட்டன, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பாபா உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்: என்னை நினைவுசெய்யுங்கள்! அவ்வளவே! தந்தையையும், இனிய வீட்டையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் சரீரமற்ற ஆத்மாக்களாக இருந்தீர்கள் என்றும், உங்களது பாகங்களை நடிப்பதற்காகவே இங்கே வந்து, சரீரங்களை ஏற்;றீர்கள் என்பதும் உங்களது புத்தியில் உள்ளது. நீங்கள் உங்களது பாகங்களை நடிக்கும்பொழுது, தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இச் சரீரம் ஒரு பழைய சப்பாத்தாகும். ஆத்மா இப்பொழுது தூய்மையாகுகிறார். தூய சரீரம் ஒன்றை இங்கு நீங்கள் பெற முடியாது. ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். முதன் முதலில் நாங்கள் இளவரசர்களும், இளவரசிகளுமாகி, திருமணத்தின் பின்னர் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுவோம். இராதையும் கிருஸ்ணரும் யார் என்பது மக்களுக்குத் தெரியாது. இருவருமே வெவ்வேறு இராச்சியத்திலிருந்து வந்து, பின்னர் திருமணம் செய்தார்கள். சில குழந்தைகள் திருமண வைபவத்தை 'திரான்ஸில்"; பார்த்திருக்கிறார்கள். ஆரம்பத்தில், உங்களுக்குப் பல காட்சிகள் கிடைத்தன, ஏனெனில் அந்தப் பாகம் பாகிஸ்தானில் உங்களைத் தொடர்ந்தும் சந்தோஷமாக வைத்திருந்தது. இறுதியில் வன்முறை மாத்திரமே இருக்கும். பல பூகம்பங்கள் உண்டாகும். நீங்கள் தொடர்ந்தும் காட்சிகளைக் காண்பீர்கள். நீங்கள் எந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். அந்த நேரத்தில் குறைவாகக் கற்றவர்கள் பெருமளவு வருந்துவார்கள். தந்தை கூறுவார்: நீங்களும் கற்கவில்லை, ஏனையோருக்குக் கற்பிக்கவும் இல்லை. நீங்கள் நினைவில் நிலைத்திருக்கவும் இல்லை. நினைவுசெய்வதனாலேயே உங்களால் சதோபிரதானாக முடியும். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். அவர் கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்களில் உள்ள கலப்படம் அகற்றப்படும். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யபட வேண்டும். நீங்கள் உங்களது வியாபாரம் போன்றவற்றைத் தொடர்ந்தும் செய்யலாம். செயல்கள் செய்யப்பட வேண்டும், ஆனால் உங்கள் புத்தியின் யோகம் அங்கு தொடர்புபட்டிருக்க வேண்டும். இங்குதான் நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக வேண்டும். வீட்டில், உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது, என்னை நினைவுசெயயுங்கள், அப்பொழுது மட்டுமே நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தை உங்களுக்கு வேறு எந்தச் சிரமமும் கொடுப்பதில்லை. அவர் உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறையையே காட்டுகிறார். சந்தோஷ தாமத்திற்கு அதிபதியாக ஆகுவதற்கு, சதா என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். இப்பொழுது அவரை மட்டுமே நினைவுசெய்யுங்கள்: பாபாவும் ஒரு நட்சத்திரமே. அவர் சர்வசக்திவான் ஆதலால், அவர் மிகவும் பிரகாசமானவர் என்று மக்கள் நம்புகிறார்கள். தந்தை கூறுகிறார்: நானே மனித உலக விருட்சத்தின் உயிருள்ள விதையானவர் ஆவேன். நான் விதையானவர் ஆதலால், எனக்கு ஆரம்பம், மத்தி, இறுதியும் தெரியும். நீங்கள் விதைகளல்ல. நானே விதையானவர் ஆதலால், நான் ஞானக்கடல் என அழைக்கப்படுகிறேன். அவரே மனித விருட்சத்தின் உயிருள்ள விதையானவர் ஆதலால், எவ்வாறு உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது என்பதை நிச்சயமாக அறிவார். ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் படைப்பவரையோ, படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ தெரியாது. குழந்தைகளுக்கு இது தெரிந்திருக்குமானால், அவரிடம் செல்வதற்கு அதிகக் காலம் எடுக்காது. எவ்வாறாயினும் எவருக்குமே தந்தையிடம் செல்வதற்கான வழி தெரியாது. தூய்மையற்றவர்கள் எவ்வாறு தூய உலகிற்குச் செல்ல முடியும்? இதனாலேயே தந்தை கூறுகிறார்: கொடிய எதிரியான, காமத்தை வெற்றி கொள்ளுங்கள்! இதுவே, அது ஆரம்பித்த காலத்திலிருந்து மத்தியினூடாக இறுதி வரை உங்களுக்குத் துன்பத்தை விளைவிக்கின்றது அவர் குழந்தைகளான உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார்! எந்தச் சிரமமும் இல்லை. நீங்கள் தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்ய வேண்டும். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால், அதாவது, யோகத்தினால் உங்களது பாவங்கள் அழிக்கப்படும். ஒரு விநாடியில் நீங்கள் தந்தையிடமிருந்து ஆட்சியைப் பெறுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்திற்குச் சென்றாலும், அங்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு, நீங்கள் முயற்சி செய்யவே வேண்டும். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். சிறிதளவைச் செவிமடுத்தாலும், தந்தை வந்துவிட்டார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். இது அந்த அதே மகாபாரத யுத்தமே என இப்பொழுதும் மக்கள் கூறுகிறார்கள். நிச்சயமாகத் தந்தையே குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்திருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் அனைவரையும் விழித்தெழச் செய்கிறீர்கள். பலரை விழித்தெழச் செய்பவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவார்கள்;;. முயற்சிகள் செய்யப்பட வேண்டும். அனைவரும் ஒரே வகையான முயற்சியாளராக இருக்க முடியாது. இது ஒரு மிகவும் முக்கியமான பாடசாலை. இதுவே உலகப் பல்கலைக்கழகம். முழு உலகமுமே சந்தோஷ தாமமாகவும், அமைதி தாமமாகவும் ஆக்கப்பட வேண்டும் நீங்கள் அத்தகையதோர் ஆசிரியரை எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா? முழு உலகமுமே பிரபஞ்சம்; என அழைக்கப்படுகிறது. தந்தையே பிரபஞ்சத்திலுள்ள மனிதர்கள் அனைவரையும் சதோபிரதான் ஆக்குகிறார்; அதாவது, அவர் மாத்திரமே சுவர்க்கத்தைப் படைக்கிறார். பக்தி மார்க்கத்தில் கொண்டாடப்படுகின்ற அனைத்து விழாக்களும் சங்கமயுகமான இந்த நேரத்தையே குறிக்கின்றன. சத்திய, திரேதா யுகங்களில் எவ்விதமான விழாக்களும் இருப்பதில்லை. அங்கு அவர்கள் வெகுமதியை மாத்திரமே அனுபவம் செய்கின்றனர். அனைத்து விழாக்களும் இங்கேயே கொண்டாடப்படுகின்றன. 'ஹோலி", 'தூரியா" போன்றன ஞானத்திற்கான விடயங்கள். கடந்த காலத்தில் நடந்தவை யாவும் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன, ஆனால் உண்மையில் அவை இந்நேரத்திற்கே உரியவை. ஹோலியும் இந்நேரத்தையே குறிக்கிறது. சக்கரத்தின் இறுதி 100 ஆண்டுகளிலேயே, அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. உலகமும் புதிதாக ஆகுகிறது. பல தடவைகள் நீங்கள் உங்களது சுவர்க்க ஆஸ்தியைப் பெற்று, பின்னர் இழந்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தையிடமிருந்து நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்களது ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்ற சந்தோஷம் உங்களிடம் உள்ளது. நீங்கள் மற்றவர்களுக்கும் பாதையை காட்ட வேண்டும். நாடகத்திற்கு ஏற்ப, சுவர்க்கம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட வேண்டும். பகலுக்குப் பின் இரவும், இரவிற்குப் பின் பகலும் இருப்பதைப் போன்று, நிச்சயமாக, கலியுகத்தின் பின்னர் சத்திய யுகம் இருக்க வேண்டும். இனிமையிலும் இனிமையான குழந்தைகளான உங்களது புத்தியில் சந்தோஷ முரசுகள் கொட்ட வேண்டும். இப்பொழுது காலம் முடிவடைகிறது, நாங்கள் அமைதி தாமம் செல்கிறோம். இதுவே இறுதிப் பிறவி. கர்ம வினைகளும் சந்தோஷத்தின் மூலம் இலேசானதாகுகின்றன. சில கர்மக் கணக்குகள் வேதனையை அனுபவம் செய்வதனாலும், சில யோக சக்தி மூலமும் தீர்க்கப்பட வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குப் பொறுமையைக் கொடுக்கிறார். உங்கள் நிலையான சந்தோஷத்திற்கான நாட்கள் வருகின்றன. நீங்கள் தொழில் போன்றவற்றைத் தொடர்ந்தும் செய்ய வேண்டும், ஏனெனில் உங்களது சரீரங்களின் ஜீவனோபாயத்திற்குப் பணம் தேவை. வியாபாரிகள் தர்மத்திற்காகச் சிறிது பணத்தை ஒதுக்கி வைப்பதாக பாபா விளங்கப்படுத்தியுள்ளார். தாங்கள் பெருமளவு செல்வத்தைச் சேர்த்தால் தங்களால் இன்னும் அதிகமாகத் தானம் செய்ய முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். இங்கும் தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒருவர் 2 பைசாக்களை மாத்திரம் கொடுத்தாலும், அதற்குப் பிரதிபலனாக 21 பிறவிகளுக்கு அதிகளவைப் பெறுகிறார். முன்னர் நீங்கள் செய்த தான தர்மங்களுக்கான பிரதிபலனை அடுத்த பிறவியில் பெற்றீர்கள். நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்குப் பிரதிபலனைப் பெறுகிறீர்கள். முன்னர் நீங்கள் சாதுக்களுக்கும், புனிதர்களுக்கும் கொடுத்து வந்தீர்கள். அனைத்தும் அழிக்கப்படவுள்ளன என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நான் இப்பொழுது உங்கள் முன்னால் நேரடியே வந்திருக்கிறேன். ஆதலால் இப்பணிக்காகவே அனைத்தையும் பயன்படுத்துங்கள், நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆஸ்தியைப் பெறுவீர்கள். முன்னர் நீங்கள் நேரடியாகக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது நேரடியாகவே கொடுக்கிறீர்கள். உங்களுடைய ஏனைய அனைத்தும் அழிக்கப்பட உள்ளது. பாபா தொடர்ந்தும் உங்களுக்குக் கூறுகிறார்: உங்களிடம் பணம் இருந்தால், நிலையங்களை ஆரம்பியுங்கள். 'உண்மையான கீதைப் பாடசாலை" என்ற வார்த்தைகளை எழுதுங்கள். கடவுள் பேசுகிறார்: சதா என்னையும், உங்கள் ஆஸ்தியையும் மாத்திரமே நினைவுசெய்யுங்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போல் புகழத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதற்கு, தந்தையைப் பின்பற்றுங்கள்.
2. இதுவே இறுதிப் பிறவி. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆதலால் உங்களினுள் சந்தோஷ முரசுகள் கொட்ட வேண்டும். கர்ம வேதனைகள் அனைத்தையும் கர்ம யோகத்தின் மூலம், அதாவது, தந்தையை நினைவுசெய்வதால், சந்தோஷமாகத் தீர்த்துக் கொள்ளுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய விழிப்புணர்வின் ஒளி மூலம் பிராமணக் குலத்தின் பெயரைப் புகழடையச் செய்கின்ற, குல தீபம் ஆவீர்களாக.இந்தப் பிராமணக் குலமே அனைத்திலும் மகத்தான குலமாகும், நீங்கள் அனைவரும் இந்தக் குலத்தின் தீபங்கள் ஆவீர்கள். ஒரு குல தீபம் என்றால், உங்கள் விழிப்புணர்வின் ஒளி மூலம் பிராமணக் குலத்தின் பெயரை எப்பொழுதும் புகழடையச் செய்பவர் என்று அர்த்தமாகும். ஒரு நிலையான, அநாதியான ஒளி என்றால், சதா ஒரு நினைவு சொரூபமாகவும், ஒரு சக்தி சொரூபமாகவும் இருப்பதாகும். நீங்கள் ஒரு மாஸ்டர் சர்வசக்திவான் எனும் விழிப்புணர்வைக் கொண்டிருந்தால், இயல்பாகவே ஒரு சக்தி சொரூபம் ஆகுவீர்கள். இந்த அநாதியான, நிலையான ஒளியின் ஞாபகார்த்தமே உங்கள் உயிரற்ற விக்கிரகத்தின் முன்னால் சதா ஏற்றப்பட்ட ஒளியாகக் காட்டப்பட்டுள்ளது.
சுலோகம்:
சகல ஆத்மாக்களுக்கும் தூய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களே, ஆசீர்வாதங்களை அருள்கின்ற, ரூபங்கள் ஆவார்கள்.