22.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞானமுடைய குழந்தைகளைத் தந்தை நேசிக்கின்றார். ஆகையால்; தந்தையைப் போலவே மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகுங்கள்.கேள்வி:
இந்த உபகாரமான யுகத்தில் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எதனை ஞாபகப்படுத்துகின்றார்?பதில்:
குழந்தைகளே, நீங்கள் வீட்டை விட்டு நீங்கி இப்பொழுது 5000 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 5000 ஆண்டுகளில் நீங்கள் 84 பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள், இது இப்பொழுது உங்கள் இறுதிப் பிறவி; இது உங்கள் ஓய்வு ஸ்திதி. ஆகையால் நீங்கள்; இப்பொழுது வீடு திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள். அதன்பின்னர் நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வசிக்கலாம், ஆனால் இந்த இறுதிப் பிறவியில், தூய்மையாகித் தந்தையை நினைவுசெய்யுங்கள்.
பாடல்:
விட்டிற்பூச்சிகளின் ஒன்றுகூடலில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது.
ஓம் சாந்தி.
கடவுள் ஒரேயொருவரே என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். கடவுள் ஒரேயொருவரே. ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஒரேயொருவரே. அவர் பரமாத்மாவான பரமதந்தை என அழைக்கப்படுகின்றார்; ஒரேயொருவரே உலகைப் படைப்பவர்; பலர் இருக்க முடியாது. இந்தக் கோட்பாட்டிற்;கு அமைய மனிதர்கள் தங்களைக் கடவுள் என அழைக்க முடியாது. நீங்கள் இப்பொழுது இறை சேவைக்கான கருவிகள் ஆகியுள்ளீர்கள். சத்தியயுகம் என அழைக்கப்படுகின்ற, புதிய உலகைக் கடவுள் ஸ்தாபிக்கிறார். நீங்கள் அதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள். சத்திய யுகத்தில் தூய்மையற்றவர்கள் எவரும் இல்லை. நீங்கள் இப்பொழுது தூய்மையாகுகிறீர்கள். அவர் கூறுகின்றார்: நானே தூய்மையாக்குபவர், குழந்தைகளான உங்களுக்கு நான் கொடுக்கின்ற மேன்மையான வழிகாட்டல்கள்: உங்கள் அசரீரியான தந்தையான, என்னை நினைவுசெய்தால் நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்தும், தமோபிரதானானவர்களிலிருந்தும் தூய்மையானவராகவும், சதோபிரதானாகவும் ஆகுவீர்கள். நினைவு என்ற யோக அக்கினி மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சாதுக்களும், புனிதர்களும் கடவுள் சர்வவியாபி எனக் கூறுகின்றனர். ஒருபுறம் அவர்கள் “கடவுள் ஒருவரே" எனக் கூறுகின்றார்கள், பின்னர் இங்கே (இவ்வுலகில்) தம்மைக் கடவுள் என அழைக்கின்ற பலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை 'ஸ்ரீ ஸ்ரீ 108 ஜெகத்குரு" என அழைக்கிறார்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே உலகின் குரு ஆவார். முழு உலகையும் தூய்மையாக்குகின்ற பரமாத்மாவே முழு உலகையும் துன்பத்திலிருந்து விடுவிக்கிறார். அவர் மாத்திரமே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். மனிதர்களை இவ்வாறு அழைக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்கின்றீர்கள். இது தூய்மையற்ற உலகம், அனைவரும் தூய்மையற்றவர்கள். தூய உலகில் சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியும் எவ்வாறோ, அவ்வாறே பிரஜைகளும் இருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியும் ஆவார்கள். பின்னர், பக்தி மார்க்கத்தில் அவர்கள் பூஜிப்பவர்கள் ஆகுகிறார்கள். சத்தியயுகத்தின் சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியும்; இரு கலைகளில் குறைந்தவர்களான பின்னர், அரசர், அரசி என அழைக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் விபரமான விடயங்கள். இல்லையெனில் ஒரு விநாடியில் ஜீவன்முக்தி கிடைக்கும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கலாம், ஆனால் இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாக இருங்கள். இது இப்பொழுது உங்கள் ஓய்வு ஸ்திதியாகும். ஓய்வு தாமமும், அமைதி தாமமும் ஒன்றேயாகும். ஆத்மாக்கள், பிரம்மாந்தம் என்றும் அழைக்கப்படுகின்ற, அந்தப் பிரம்ம தத்துவத்தில் வசிக்கிறார்கள். உண்மையில், ஆத்மாக்கள் முட்டை வடிவமானவர்கள் அல்ல. ஆத்மா ஒரு நட்சத்திரமே. இந்த நாடகத்தில் உள்ள ஆத்மாக்கள் அனைவரும் நடிகர்கள் என பாபா விளங்கப்படுத்தி இருக்கின்றார். ஒரு நாடகத்தில் நடிகர்கள் வித்தியாசமான பாகங்களை நடிப்பதால், வித்தியாசமான ஆடைகளை மாற்றிக் கொள்வதைப் போன்று, இதுவும் ஓர் எல்லையற்ற நாடகமாகும். ஆரம்பத்திலிருந்தே, ஆத்மாக்கள் பூமிக்கு வந்து ஐந்து தத்துவங்களால் ஆன சரீரங்களுக்குள் பிரவேசித்து, தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள். பரமாத்மா, பிரம்மா, விஷ்ணு, சங்கரர் அனைவரும் நடிகர்களே. நாடகம் ஒன்றில் உங்கள் பாகங்களை நடிப்பதற்கு, உங்களுக்குப் பல்வேறு ஆடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டில், சகல ஆத்மாக்களும் சரீரமற்றவர்களாகவே இருக்கிறார்கள். பின்னர் ஐந்து தத்துவங்களால் ஆன சரீரம் ஒன்று தயாரானதும் அதற்குள் ஓர் ஆத்மா பிரவேசிக்கிறார். ஆத்மா 84 சரீரங்களைப் பெறுவதால், அவர் அந்தளவு பெயர்களையும் பெறுகின்றார். ஆத்மாக்களிற்கான பெயர் ஒன்றே ஒன்றுதான். சிவபாபாவே தூய்மையாக்குபவர். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் கிடையாது. எனவே அவர் ஒரு சரீரத்தை ஆதாரமாகப் பெற வேண்டியுள்ளது. அவர் கூறுகிறார்: எனது பெயர் சிவன். நான் வயதான ஒரு சரீரத்திற்குள் பிரவேசித்தாலும் இவரின் சரீரத்திற்கான பெயர் இவருக்கே உரியது. இவருக்கெனச் சரீரப் பெயர் உள்ளது, பின்னர் இவருக்கு ஓர் ஆன்மீகப் பெயர் கொடுக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு சமயத்திலிருந்து இன்னொரு சமயத்திற்கு மாறும்பொழுது, அவரது பெயர் மாற்றப்படுகிறது. நீங்களும் சூத்திர சமயத்திலிருந்து மாற்றமடைந்து, பிராமண தர்மத்திற்குள் வந்திருப்பதால், உங்களது பெயர்களும்; மாற்றப்பட்டிருக்கின்றன. பிரம்மா மூலம் சிவபாபா என நீங்கள் எழுதுகின்றீர்கள், சிவபாபாவே பரமாத்மாவான பரமதந்தை. அவரது பெயர் மாறுவதில்லை. மறைந்து விட்ட, ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனைப் பணியை, பிரம்மா மூலம் சிவபாபா மேற்கொள்கின்றார். தூய்மையாகவும், பூஜிக்கப்படத் தகுதியானவரகளாகவும் இருந்தவர்கள், தூ;மையற்ற, பூஜிப்பவர்கள் ஆகுகிறார்கள். நீங்கள் 84 பிறவிகளைப் பூர்த்திசெய்து விட்டீர்கள். தேவ தர்மம் இபபொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது. பரமாத்மா பரமதந்தையே வந்து, பிரம்மா மூலம் மீண்டும் ஸ்தாபனையை மேற்கொள்கிறார் என நினைவுகூரப்படுகிறது. ஆகவே பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகிறார்கள். பிரம்மாவும், பிராமணர்களும் எங்கிருந்து வருகிறார்கள்? சிவபாபா வந்து, பிரம்மா மூலம் உங்களைத் தத்தெடுக்கிறார். அவர் கூறுகிறார்: நீங்கள் எனக்கு உரியவர்கள். நீங்கள் எவ்வாறாயினும் சிவபாபாவின் குழந்தைகளே, பின்னர் நீங்கள் பிரம்மா மூலம் பேரக்குழந்தைகள் ஆகுகிறீர்கள். ஒரேயொருவரே மக்கள் அனைவரதும் தந்தை. இக்குழந்தைகள் அனைவரும் குமாரர்களும் குமாரிகளும் ஆவார்கள். சிவபாபா அவர்களைப் பிரம்மா மூலம் தத்தெடுக்கின்றார். தந்தையே வந்து, ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கிறார் என்பதை மக்கள் அறியார்கள். புதிய ஆத்மாக்கள் வருகின்றார்கள் என்றில்லை. பிரளயம் (முழு அழிவு) ஏற்பட்டு, பின்னர் கிருஷ்ணர் கடலில் அரசமிலையில் மிதந்து வந்தார் என அவர்கள் காட்டுகிறார்கள். அவர்கள் அந்தக் கதைகள் அனைத்தையும் உருவாக்கியுள்ளார்கள். உலகின் வரலாறும் புவியியலும் தொடர்ந்தும் மீண்டும் நடக்கும். ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள், ஒவ்வோர் ஆத்மாவினது பாகமும் அநாதியானது; அந்தப் பாகம் என்றுமே அழிக்கப்படுவதில்லை. சத்தியயுகத்தில் இலக்ஷ்மி நாராயணனது சூரிய வம்ச இராச்சியம் இருக்கிறது; அது ஒருபொழுதும் மாறுவதில்லை. உலகம் புதியதிலிருந்து பழையதாகவும், பழையதிலிருந்து புதியதாகவும் தொடர்ந்து மாறுகிறது. ஒவ்வொருவரும் தனது அழியாத பாகத்தைப் பெற்றுள்ளார். தந்தை கூறுகிறார்: பக்தி மார்க்கத்தில், என்னென்ன உணர்வுகளுடன் பக்தர்கள் தங்களின் பக்தியைச் செய்கின்றார்களோ, அதற்கு ஏற்ப நான் அவர்களுக்குக் காட்சிகளை அருள்கிறேன். நான் சிலருக்கு அனுமானினதும், ஏனையோருக்குக் கணேசரதும் காட்சிகளை அருள்கிறேன். நான் அவர்களது பக்தி உணர்வுகளை நிறைவேற்றுகிறேன். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடவுள், அனைவரிலும் இருக்கின்றார் என்று பின்னர், மக்கள் எண்ணுகிறார்கள். இதனாலேயே அவர்கள் அவரை 'சர்வவியாபி" எனக் கூறுகிறார்கள். பக்தர்களுக்கான மாலை ஒன்று உள்ளது. ஆண்களில் நாரதரும், பெண்களில் மீராவும் பிரதானமானவர்கள் என நினைவுகூரப்படுகின்றது. பக்தர்களுக்கான மாலை, உருத்திர மாலை, ஞான மாலை யாவுமே ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. பக்தர்களின் மாலை ஒருபொழுதுமே பூஜிக்கப்படுவதில்லை. உருத்திர மாலை பூஜிக்கப்படுகிறது. உச்சியில் மலரும், பின்னர் இரட்டை- மணிகளும், அதன்பின்னர் அரச சிம்மாசனத்தில் அமர்கின்ற குழந்தைகளும் இருக்கிறார்கள். உருண்டா மாலையே விஷ்ணுவின் மாலையாகும். பக்தர்களின் மாலை புகழப்படுவது மாத்திரமே. அவர்கள் அனைவரும் உருத்;திர மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். நீங்கள் பக்தர்களல்ல, ஆனால் ஞானம் நிறைந்த ஆத்மாக்கள். தந்தை கூறுகிறார்: நான் ஞானமுடைய ஆத்மாக்களை நேசிக்கிறேன். தந்தையே ஞானக்கடல், அவர் குழந்தைகளான உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். உங்கள் மாலை வணங்கப்படுகிறது. அஷ்ட (எட்டு) மணிகளின் வழிபாடும் உள்ளது; ஏனெனில் அவர்கள் ஞானமுடைய ஆத்மாக்கள் என்பதால், அவர்கள் பூஜிக்கப்படுகிறார்கள். இதனைப் பிரதிநிதித்துவம் செய்யவே மக்கள் மோதிரம் ஒன்றைச் செய்து, அதை அணிகிறார்கள், ஏனெனில் அவர்களே பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறார்கள். அவர்கள் திறமைச்சித்தி பெறுவதால் புகழப்படுகிறார்கள். சிவபாபாவே மத்தியில் வைக்கப்பட்டுள்ள, ஒன்பதாவது இரத்தினம்; அதை அவர்கள் நவ இரத்தினம் என அழைக்கிறார்கள். இது விபரமான விளக்கம்;. தந்தை கூறுகிறார்: தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் வீடு திரும்புவீர்கள். தூய்மையற்ற ஆத்மாக்களால், தூய உலகிற்குச் செல்ல முடியாது. இங்கு, அனைவரும் தூய்மையற்றவர்களே. தேவர்களின் சரீரங்கள் தூய்மையானவையும், விகாரமற்றவையும் ஆகும்; அவர்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள். அரசரும் அரசியும் எவ்வாறோ, அவ்வாறே பிரஜைகளும் ஆவார்கள். இங்கு அனைவரும் பூஜிப்பவர்கள். அங்கு துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அது சந்தோஷ தாமமான, சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. அங்கு சந்தோஷம், செல்வம், அமைதி அனைத்தும் இருக்கின்றன. இப்பொழுது எதுவும் இல்லை. அதனாலேயே இது நரகம் என்றும், அது சுவர்க்கம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் அமைதி தாமத்து வாசிகள். நாங்கள் அங்கிருந்து எங்கள் பாகங்களை நடிப்பதற்காக வருகிறோம். நாங்கள் முற்றாக 84 பிறவிகளை எடுக்க வேண்டும். இது இப்பொழுது துன்ப பூமி. பின்னர் நாங்கள் அமைதி தாமத்திற்கும், அதன்பின்னர் சந்தோஷ தாமத்திற்கும் செல்வோம். நாங்கள் சந்தோஷ தாமத்திற்கு அதிபதிகள் ஆகுவதற்கும், மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கும் தந்தை எங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறார். இதுவே உங்கள் சங்கம யுகமாகும். தந்தை கூறுகின்றார்: நான் சக்கரத்தின் சங்கம யுகத்திலேயே வருகிறேன், ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. நான் கல்பத்தில் ஒருமுறை, சங்கம யுகத்தில் மாத்திரமே உலகை மாற்றுவதற்காக வருகிறேன். அது சத்திய யுகமாக இருந்தது, இது இப்பொழுது கலியுகம், பின்னர் சத்திய யுகம் வர வேண்டும். இதுவே நன்மையளிக்கும் சங்கம யுகம். அனைவரும் நன்மையடைய வேண்டும். அனைவரும் இராவணனது சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவர் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என அழைக்கப்படுகிறார். இங்கு, அனைவரும் சந்தோஷம் அற்றவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்லும் பொருட்டு, முதலில் அமைதி தாமத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் பாகங்களை நடிக்க ஆரம்பித்து இப்பொழுது 5000 ஆண்டுகள் ஆகிவிட்டன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் உங்கள் வீட்டை நீங்கி, 5000 ஆண்டுகள் ஆகிவிட்டன இக்காலத்தில் பாரத மக்களாகிய நீங்கள் 84 பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள். இது உங்கள் இறுதிப் பிறவி; இது இப்பொழுது அனைவரதும் ஓய்வு ஸ்திதி.. அனைவரும் வீடு திரும்ப வேண்டும். அவரே உருத்திரரான, ஞானக்கடல் என நினைவுகூரப்படுகிறார். இதுவே சிவனது ஞான யாகம். சிவனே தூய்மையாக்குபவர்; அவரே பரமாத்மாவும் ஆவார். பக்தர்கள் அவருக்கு உருத்திரர் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்கள். அவரது உண்மையான பெயர் சிவனேயாகும். பிரஜாபிதா பிரம்மா மூலம் சிவபாபா ஸ்தாபனைப் பணியை மேற்கொள்கிறார். ஒரேயொரு பிரம்மா மாத்திரமே இருக்கிறார். இவர் தூய்மையற்றவர், இதே பிரம்மா பின்னர் தூய்மையாகுவதால், ஒரு தேவதை ஆகுகின்றார். சூட்சும உலகில் காட்டப்படுகின்ற பிரம்மா வேறு ஒரு பிரம்மா அல்ல. ஒரேயொரு பிரம்மா மாத்திரமே இருக்கிறார். இவர் (சாகார் பிரம்மா) சரீரியானவர், அவர் (அவ்யக்த் பிரம்மா) சூட்சுமமானவர். இவர் முற்றாகத் தூய்மையாகியதும், சூட்சும உலகில் காணப்படுவார். அங்கு தசையோ எலும்புகளோ இருக்காது. சிவபாபா விளங்கப்படுத்தி இருக்கிறார்: சரீரமற்ற ஆத்மாக்கள் தொடர்ந்தும் அலைந்து திரிகிறார்கள்; அவர்களே ஆவி;கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கென ஓர் சரீரம் கிடைக்கும் வரை தொடர்ந்தும் அவர்கள் அலைந்து திரிகிறார்கள். அவர்களில் சிலர் நல்லவர்கள், ஏனையோர் தீயவர்கள். தந்தை அனைத்தையும் பற்றி உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவரே ஞானக்கடல், எனவே அவர் நிச்சயமாக ஞானத்தை விளங்கப்படுத்துகிறார். ஒரு விநாடியில் ஜீவன்முக்தி கிடைக்கிறது. அல்பாவையும், பீற்றாவையும் நினைவுசெய்தால், நீங்கள் ஜீவன்முக்தி என்ற ஆஸ்தியை ஒரு விநாடியில் பெறுவீர்கள். இது மிகவும் இலகுவானது! இதனது பெயரே இலகு இராஜயோகம் ஆகும். அவர்கள், தங்களது யோகமே பாரதத்தின் யோகம் என நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், அதுவோ சந்நியாசிகளின் ஹத்தயோகமாகும். யோகம் முற்றிலும் இலகுவானது. யோகம் என்றால் நினைவு செய்தலாகும். அவர்களுடையது ஹத்தயோகம் ஆகும். இது இலகுவானது. தந்தை கூறுகின்றார்: இவ்வாறாக என்னை நினைவுசெய்யுங்கள். பேழை (டழஉமநவ) போன்ற எதையும் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் தந்தையின் குழந்தைகள். தந்தையை மாத்திரமே நினைவுசெய்யுங்கள்! நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்கே இங்கு வந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அனைவரும் வீடு திரும்பி, பின்னர் மீண்டும் அதே பாகங்களை நடிப்பதற்கு வருவீர்கள். பாரத மக்களே சூரிய வம்சத்தினராகவும், பின்னர் சந்திர வம்சத்தினராகவும், அதன்பின்னர் வைசிய வம்சத்தினராகவும், பின்னர் சூத்திர வம்சத்தினராகவும் ஆகுகிறார்கள். இக்காலப் பகுதியிலேயே, ஏனைய சமயத்தினரும் வருகிறார்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். பின்னர் நீங்கள் முதல் இலக்கத்தைக் கோர வேண்டும். நீங்கள் சத்திய யுகத்திற்குச் செல்லும்பொழுது, ஏனைய அனைவரும் அமைதி தாமத்திலே இருப்பார்கள். ஏனைய சமயங்களுக்கான வம்சம் இருப்பதில்லை. பாரதத்தில் மாத்திரமே வம்சங்கள் இருக்கின்றன. நீங்கள் சூரிய, சந்திர வம்சங்களிற்கு உரியவர்கள். நீங்கள் இப்பொழுது பிராமண குலத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் பிரம்மாவின் குலத்திற்கு உரியவர்களான பிராமணர்களாகி விட்டீர்கள். தந்தை இங்கிருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். எதையுமே கிரகிக்க முடியாத புத்தி உடையவர்களிடம் தந்தையை நினைவுசெய்யுமாறு கூறப்படுகிறது. தனது தந்தையை அறிந்துகொள்வதனால், தனது சொத்துக்கள் எவை என்பதை ஒரு மகன் அறிந்து கொள்கின்றார். ஒரு புத்திரி ஆஸ்தியைப் பெறுவதில்லை. இங்கே, நீங்கள் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள், ஆகவே உங்கள் அனைவருக்கும் ஓர் உரிமை உள்ளது. ஆண்களும், பெண்களுமாகிய உங்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. சிவபாபாவை எவ்வாறு நினைவுசெய்வது என்பதை அனைவருக்கும் கற்பியுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக அவரை நினைவுசெய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, அந்தளவிற்கு அதிகமாகத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். ஆத்மாக்களில் உள்ள கலப்படம் எவ்வாறு அகற்றப்பட முடியும்? தந்தை கூறுகின்றார்: யோகத்தின் மூலம் மாத்திரமே கலப்படம் அகற்றப்படும். இந்தத் தூய்மையற்ற சரீரங்கள் இங்கேயே நீக்கப்பட வேண்டும். பின்னரே ஆத்மாக்கள் தூய்மையாகுவார்கள். நீங்கள் அனைவரும் ஒரு நுளம்புக் கூட்டத்தைப் போன்று திரும்பிச் செல்வீர்கள். சத்திய யுகத்தில் வெகு சிலரே இருப்பார்கள் என புத்தியானது கூறுகின்றது. இந்த விநாசத்தில் பலரும் மரணம் அடைவார்கள். அதன்பின்னர் வெகு சிலரே எஞ்சுவார்கள். சத்திய யுகத்தில் மிகச் சில அரசர்களும், 900,000 பிரஜைகளும் மாத்திரம் இருப்பார்கள்; 900,000 நட்சத்திரங்கள், அதாவது, பிரஜைகள் இருக்கின்றார்கள் என அவர்கள் இதனைப் பற்றிப் பாடுகிறார்கள். விருட்சம் முதலில் சிறியதாக இருந்து, பின்னர் வளர்கிறது. இப்பொழுது பல ஆத்மாக்கள் உள்ளனர்! தந்தை வந்து அனைவரதும் வழிகாட்டியாகி உங்கள் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. யோக அக்கினியின் மூலம் பாவச் செயல்களின் மாசை எரித்துத் தூய்மையாகுங்கள். இது இப்பொழுது உங்கள் ஓய்வு ஸ்திதி. ஆகவே, வீடு திரும்புவதற்கு, முற்றிலும் சதோபிரதான் ஆகுங்கள்.
2. இந்த நன்மைபயக்கும் யுகத்தில், தந்தையைப் போல், துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் ஆகுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் சாதாரணமானவற்றை முடிப்பதால், மகத்துவத்தை அனுபவம் செய்கின்ற, ஒரு மேன்மையான முயற்சியாளர் ஆவீர்களாக.மேன்மையான முயற்சியாளர்களின் ஒவ்வோர் எண்ணமும் மகத்தானதாக இருக்கும், ஏனெனில் அவர்களின் ஒவ்வோர் எண்ணத்திலும், ஒவ்வொரு மூச்சிலும் இயல்பாகவே தந்தையின் நினைவு இருக்கும். ஒவ்வொரு கேட்டிராத வார்த்தையும் கேட்கப்படுகின்றது, முடிவற்ற உச்சாடனம் சதாகாலமும் தொடர்கின்றது என்று பக்தி மார்க்கத்தில் கூறப்படுவதைப் போன்று, அதேவிதமாக, உங்கள் முயற்சியும் நிலையானதாக இருக்கட்டும். இதுவே மேன்மையான முயற்சி என அழைக்கப்படுகின்றது. நீங்கள் முயற்சி செய்வதற்கு பலவந்தத்தைக் (கழசஉந) கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் இயல்பான நினைவு இருக்கட்டும், அப்பொழுது சாதாரணமானவை முடிவடைந்து, நீங்கள் தொடர்ந்தும் மகத்துவத்தை விருத்தி செய்வீர்கள். இதுவே முன்னேறிச் செல்வதன் அறிகுறியாகும்.
சுலோகம்:
கடையும் சக்தி மூலம் கடலின் ஆழத்திற்குச் செல்பவர்களே, இரத்தினங்களுக்கான ஓர் உரிமையைக் கோருகின்றார்கள்.