03.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் உண்மையான தந்தையிடமிருந்து உண்மையான கதையைச் செவிமடுத்து, சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாறுகின்றீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து, 21 பிறவிகளுக்குரிய உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள்.கேள்வி:
தந்தையின் கட்டளைகளில் எதனைப் பின்பற்றுவதால் குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகப் புத்தியுடையவர்கள் ஆகுகின்றீர்கள்?பதில்:
தந்தையின் கட்டளை: சரீரத்தின் சகல உறவினர்களையும் மறந்து, தந்தையையும், இராச்சியத்தையும் நினைவுசெய்யுங்கள். சற்குருவிடமிருந்து நீங்கள் பெறும் இந்த ஸ்ரீமத்தானது நீங்கள் சற்கதி அடைவதற்கானது. இந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்கள், அதாவது, ஆத்ம உணர்வுடையவர்களாக ஆகுபவர்கள், தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுகின்றார்கள்.
பாடல்:
இன்றைய மக்கள் இருளில் உள்ளனர்!
ஓம் சாந்தி.
இதுவே கலியுக உலகம்; அனைவரும் இருளில் உள்ளனர். இதே பாரதம் ஒளியில் இருந்தது. ஆதியில் பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, தங்களை இந்துக்கள் என அழைக்கும் இதே பாரத மக்கள் தேவர்களாக இருந்தனர். பாரத மக்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தபொழுது, அங்கு வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை; அங்கு ஒரு தர்மமே இருந்தது. 'சுவர்க்" சுவர்க்கம், வைகுந்தம், பாகிஸ்ற் (சுவர்க்கத்தின் மறுபெயர்கள்) என்பன அனைத்தும் பாரதத்தின் மறுபெயர்களாகும். புராதன பாரதம் தூய்மையாகவும், மிக மிகச் செல்வம் நிறைந்ததாகவும் இருந்தது. இப்பொழுது கலியுகம் ஆகையால், பாரதம் முற்றிலும் ஏழ்மை அடைந்துள்ளது. அது சத்திய யுகமாக இருந்தது. நீங்கள் அனைவரும் பாரதவாசிகளே. நீங்கள் இருளில் இருக்கின்றீர்கள் எனவும், சுவர்க்கத்தில் இருந்தபொழுது ஒளியில் இருந்தீர்கள் எனவும் அறிவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்கத்தின் ராஜ ராஜேஷ்வரரும் (அரசர்), ராஜ ராஜேஷ்வரியுமாக (அரசி) இருந்தனர். அது சந்தோஷ பூமியென அழைக்கப்பட்டது. புதிதாக வருபவர்களுக்காகவே தந்தை மீண்டும் விளங்;கப்படுத்துகிறார். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெற வேண்டும், இதுவே ஐPவன்முக்தி எனப்படுகின்றது. இப்பொழுது ஒவ்வொருவரும் பந்தன வாழ்க்கையில் இருக்கிறார்கள். குறிப்பாகப் பாரதமும், பொதுவாக உலகமும் துன்பக் குடிலான, இராவணனின் சிறையில் உள்;ளன. இராவணன் இலங்கையில் மாத்திரமே இருந்தான் என்றோ, இராமர் பாரதத்தில் இருந்தார் என்றோ, இராவணன் வந்து சீதையைக் கடத்திச் சென்றான் என்றோ இல்லை. அவை அனைத்தும் கட்டுக் கதைகளாகும். கீதையே சமயநூல்கள் அனைத்தினதும் பிரதான இரத்தினம், அதாவது, கீதை கடவுளால் பேசப்பட்டது. மனிதர்களால் எவருக்கும் சற்கதி அருள முடியாது. சத்திய யுகத்தில் ஐPவன்முக்தியடைந்த தேவர்கள் இருந்தார்கள். அவர்கள் கலியுக இறுதியில் தமது ஆஸ்தியைப் பெற்றனர். பாரத மக்கள் இதனை அறியவும் மாட்டார்கள், இது சமயநூல்கள் எதனிலும் குறிப்பிடப்படவும் இல்லை. சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. அந்த ஞானம் முழுவதும் பக்தி மார்க்கத்தினுடையது. சற்கதிக்கான பாதைக்குரிய ஞானம் எதனையும் மனிதர்கள் கொண்டிருப்பதில்லை. தந்தை கூறுகிறார்: மனிதர்களால் மனிதருக்குக் குருமார்களாக இருக்க முடியாது. எந்தவொரு குருவினாலும் சற்கதியை அருள முடியாது. அக்குருமார்கள் உங்களைப் பக்தி செய்து, தானதர்மங்கள் கொடுக்குமாறு கூறுகிறார்கள். துவாபர யுகத்திலிருந்து பக்தி தொடர்ந்து வந்துள்ளது. சத்திய, திரேதா யுகங்களில் ஞானத்தின் வெகுமதியே உள்ளது. இந்த ஞானம் அங்கும் தொடர்கின்றது என்றில்லை. பாரதம் பெற்ற ஆஸ்தி சங்கமயுகத்தில் தந்தையாற்; கொடுக்கப்பட்டது, நீங்கள் இப்பொழுது மீண்டும் அதனைப் பெறுகிறீர்கள். நரகவாசிகளாகிய பாரத மக்கள் பெருந் துன்பத்தை அனுபவிக்கும்பொழுது, துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவராகிய தூய்மையாக்குபவரான, தந்தையைக் கூவியழைக்கிறார்கள். எவருடைய துன்பத்தை அகற்ற? அனைவருடைய துன்பத்தையும், ஏனெனில், குறிப்பாகப் பாரதத்திலும், பொதுவாக உலகிலும் உள்ள அனைவரிலும் நிச்சயமாக ஐந்து விகாரங்களும் உள்ளன. தந்தையே தூய்மையாக்குபவர். அவர் கூறுகிறார்: ஒவ்வொரு கல்பத்தின் சங்கம யுகத்திலும் நான் வந்து, அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆகுகிறேன். இது தூய்மையற்ற உலகம் என்பதால், அப்பாவிகளையும், பலவீனமானவர்களையும், கல்லுப் புத்தியுடையவர்களையும், நற்குணமற்றவர்களையும், குருமாரையும் ஈடேற்றுகின்றேன். சத்திய யுகம் தூய உலகமென அழைக்கப்படுகிறது. பாரதத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. தாங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தார்கள் என்பதைப் பாரத மக்கள் அறிய மாட்டார்கள். தூய்மையற்ற உலகம் என்றால் பொய்யான பூமி என்றும், தூய உலகம் என்றால் சத்திய பூமி என்றும் அர்த்தமாகும். பாரதம் தூய உலகமாக இருந்தது. அது இலக்ஷ்மி நாராயணனின் சூரிய வம்சத்து இராச்சியமாக இருந்தது. இந்தப் பாரதமே ஒருபொழுதும் அழிக்கப்பட முடியாத, அழிவற்ற பூமி ஆகும். அவர்களின் இராச்சியம் இருந்தபொழுது, வேறு எந்தத் தேசமும் இருக்கவில்லை. அவை அனைத்தும்; பின்னரே வந்தன. கல்பத்தின் ஆயுட்காலம் நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனச் சமயநூல்களில் எழுதப்பட்டிருப்பதே மிகப்பெரிய தவறாகும். கல்பம் நூறாயிரக் கணக்கான வருடங்களை உடையதல்ல எனவும், சத்தியயுகமும் நூறாயிரக்கணக்கான வருடங்களை உடையதல்ல எனவும் தந்தை கூறுகின்றார். கல்பத்தின் ஆயுட்காலம் 5000 வருடங்கள் ஆகும். மனிதர்கள் 8.4 மில்லியன் பிறவிகளை எடுக்கிறார்கள் என்று பின்னர் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் மனிதர்களைப் பூனைகள், நாய்கள் முதலியனவாக்கி விட்டனர். எவ்வாறாயினும் மிருகங்களின் பிறப்பு முற்றிலும் வேறுபட்டது. 8.4 மில்லியன் வகைகள் உள்ளன. மனிதரில் ஒரேயொரு வகையே உள்ளது. அவர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். நாடகத் திட்டத்தின்படி பாரத மக்கள் தமது தர்மத்தை மறந்து விட்டனர். கலியுக இறுதியில் அவர்கள் முற்றிலும் தூய்மையற்றவர்களாகி விட்டனர். சங்கம யுகத்தில் தந்தை வந்து உங்களைத் தூய்மையாக்குகின்றார். இது துன்ப பூமி என அழைக்கப்படுகிறது. பின்னர் சந்தோஷ உலகில் உங்கள் பாகங்கள் மீண்டும் ஆரம்பமாகும். தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, பாரத மக்களாகிய நீங்கள் சுவர்க்க வாசிகளாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் 84 பிறவிகளின் ஏணியில் இறங்கி வந்தீர்கள். சதோ ஸ்திதியிலிருந்து நீங்கள் நிச்சயமாக ரNஐh, தமோ ஸ்திதிகளுக்கு வரவேண்டி இருந்தது. வேறு எவருமே தேவர்களாகிய உங்களைப் போல் செல்வந்தர்களாகவோ, என்றென்;றும் சந்தோஷமானவர்களாகவோ, என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவோ இருந்ததில்லை. பாரதம் மிகுந்த செல்வமிக்கதாக இருந்தது! வைரங்களும், இரத்தினங்களும் பெருங் கற்களைப் போல் இருந்தன, அவை உடைக்கப்பட்டன. தந்தை, தான் எப்படி உங்கள் அனைவரையும் செல்வம் மிக்கவர்களாக ஆக்கினார் எனக் குழந்தைகளான உங்களுக்கு நினைவூட்டுகின்றார்! நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும், சகல தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகவும் இருந்தீர்கள். அரசரும் அரசியும் எவ்வாறோ, பிரஜைகளும் அவ்வாறே இருந்தார்கள். அவர்களை இறைவர்கள், இறைவிகள் என்றும் அழைக்கலாம். எவ்வாறாயினும், ஒரேயொரு கடவுளே உள்ளார் எனவும், அவரே தந்தை என்றும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அவரை 'பிரபு" அல்லது “ஈஸ்வரன்” என அழைப்பதால், அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை என்பதை நீங்கள் நினைவிற் கொள்வதில்லை. அவரே எல்லையற்ற தந்தையாவார். பாரத மக்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடியபொழுதிலும், அவர்களில் ஒருவருக்கேனும் அவர் உண்மையில் எப்பொழுது வந்தார் எனத் தெரியாது என்று அவர் விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் கல்லுப்புத்தியுள்ள கலியுகத்தினர். அவர்கள் தெய்வீகப் பிரபுக்களாக இருந்தனர், இப்பொழுது கல்லுப் பிரபுக்களாக இருக்கின்றனர். அவர்கள் அரசர்களாகவும், அரசிகளாகவும் இல்லாததால் அவர்களைப் பிரபுக்கள் என்று கூட அழைக்க முடியாது. ஆரம்பத்தில் இது தெய்வீக அரசரின் பூமியாக இருக்கின்றது. பின்னர் இது அசுரர்களின் இராச்சியம் ஆகுகின்றது. இது ஒரு நாடகம். அவை எல்லைக்குட்பட்ட நாடகங்களும், இதுவோ எல்லையற்ற நாடகமும் ஆகும். இந்நேரத்திலேயே ஆரம்பம் முதல் இறுதி வரை உலக வரலாறு, புவியியல் ஆகியவற்றை நீங்கள் அறிகிறீர்கள்; வேறெவரும் இதை அறியார். தேவர்கள் பாரதத்தில் இருந்தபொழுது, அவர்களே முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தனர். அவர்கள் பாரதத்தில் மாத்திரமே இருந்தனர். தந்தை பாரத மக்களாகிய உங்களுக்கு நினைவூட்டுகின்றார். சத்திய யுகத்தில் ஆதிசனாதன தேவர்கள் மேன்மையான தர்மத்தைக் கொண்டிருந்து, னே;மையான செயல்களைச் செய்தார்கள். பின்னர் அவர்கள் 84 பிறவிகளினூடாகக் கீழிறங்கி வரவேண்டி இருந்தது. தந்தை இங்கிருந்து, இப்பொழுது இது எவ்வாறு உங்களது பல பிறவிகளின் இறுதிப் பிறவி என்னும் கதையை உங்களுக்குக் கூறுகின்றார். இது ஒருவரை மாத்திரமே பற்றிய கேள்வியல்ல. யுத்தகளம் போன்றவையும் இல்லை. பாரத மக்கள் அது தங்களுடைய (இலக்ஷ்மி நாராயணனின்) இராச்சியமாக இருந்தது என்பதையும் மறந்து விட்டனர். சத்திய யுகத்திற்கு நீண்ட ஆயுட்காலத்தைக் கொடுத்ததனால், அவர்கள் அதனை வெகு தொலைவிற்குக் கொண்டு சென்று விட்டனர். மனிதர் எவருமே கடவுளாக இருக்க முடியாது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். மனிதர்களால் மனிதர்களுக்குச் சற்கதி அருள முடியாது. அனைவருக்கும் சற்கதி அளிப்பவரும், தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவரும் ஒரேயொருவரே எனக் கூறப்படுகிறது. இது பொய்யான பூமி ஆகும். சத்தியமான தந்தையே சத்திய உலகை ஸ்தாபிப்பவர். பக்தர்கள் அனைவரையும் வழிபடுகின்றனர், ஆனால் பக்தி மார்க்கத்தில் தாங்கள் வழிபடும்; ஒருவரது வாழ்க்கை வரலாற்றையேனும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் சிவனின் பிறந்தநாளையும் கொண்டாடுகின்றார்கள். தந்தையே புதிய உலகத்தை உருவாக்குபவர்; அவரே எல்லையற்ற சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுக்கின்ற, தந்தையாகிய சுவர்க்கக் கடவுள். சத்திய யுகத்தில் சந்தோஷம் நிலவியது. அது எவ்வாறு, யாரால் ஸ்தாபிக்கப்பட்டது? அவர் நரகவாசிகளைச் சுவர்க்கவாசிகளாகவும், சீரழிந்தவர்களை மேன்மையான தேவர்களாகவும் ஆக்கினார். தந்தைக்கு மாத்திரமே இந்தக் கடமை உள்ளது. நான் குழந்தைகளாகிய உங்களைத் தூய்;மையாக்குகின்றேன். நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பின்னர் உங்;களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குபவர் யார்? அந்த இராவணனே ஆவான்! கடவுளே சந்தோஷத்தையும், துன்பத்தையும் கொடுப்பவர் என மனிதர்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: அரைக் கல்பத்திற்கு நீங்கள் தந்தையை நினைவுசெய்யாத வகையில், நான் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றேன்! பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பிக்கும்பொழுது, நீங்கள் அனைவரையும் வழிபட ஆரம்பிக்கிறீர்கள். இதுவே உங்கள் பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். நீங்கள் வினவுகிறீர்கள்: பாபா நான் எத்தனை பிறவிகள் எடுத்துள்ளேன்? தந்தை கூறுகின்றார்: குழந்தைகளான நீங்கள் உங்களுடைய சொந்தப் பிறவிகளையே அறியாதவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் முழு 84 பிறவிகளையும் எடுத்துள்ளீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்குரிய உங்கள் ஆஸ்தியைப் பெற வந்துள்ளீர்கள், அதாவது, உங்கள் உண்மையான பாபா உங்களுக்குக் கூறுகின்ற சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகும் உண்மைக் கதையான இந்த ஞானத்தைச் செவிமடுப்பதற்கு வந்துள்ளீர்கள். இது ஞானமும், அது பக்தியுமாகும். பரமாத்மாவே வந்து இந்த ஆன்மீக ஞானத்தை உங்களுக்குத் தருகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, சதா தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! சிவபாபாவே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். ஆத்மாக்கள் அனைவரும் பரந்தாமத்திலிருந்து வந்து, சரீரங்களில் பிரவேசித்து, தங்;களின் பாகங்களை நடிக்கிறார்கள். இது (இவ்வுலகம்) செயல்களின் களம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு முக்கியமான நாடகம். ஆத்மாக்கள் தங்களின் நல்ல அல்லது தீய சம்ஸ்காரங்களுக்;கேற்ப நல்ல அல்லது தீய மனிதப் பிறவியை எடுக்கிறார்கள். தூய்மையாக இருந்த இவர் இப்பொழுது தூய்மையற்றவர் ஆகிவிட்டார். இது உங்களுக்கும் பொருந்தும். உங்கள் தந்தையான நான் இராவணனின் இந்த அந்நிய தேசத்தில் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் வரவேண்டியுள்ளது. நான் முதலாம் இலக்கத்தைப் பெறுபவரின் சரீரத்தில் பிரவேசிக்க வேண்டும். சூரிய வம்சத்தினரே முழு 84 பிறவிகளையும் எடுக்கிறார்கள். இவர் பிரம்மா, நீங்கள் பிராமணர்கள். தந்தை தினமும் இதனை விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், கல்லுப் புத்தியுள்ளவர்களைத் தெய்வீக புத்தியுள்ளவர்களாக மாற்றுவது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போல் இல்லை! ஓ ஆத்மாக்களே, இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! ஓ ஆத்மாக்களே, ஒரேயொரு தந்தையையும், இராச்சியத்தையும் நினைவுசெய்யுங்கள்! சரீர உறவினர்களைத் துறவுங்கள், நீங்கள் தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுவீர்கள். அனைவரும் மரணிக்க வேண்டும். இது இப்பொழுது அனைவருக்கும் ஓய்வு ஸ்திதியாகும். ஒரேயொரு சற்குருவைத் தவிர எவராலும் அனைவருக்கும் சற்கதியை அருள்பவராக இருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: ஓ பாரதக் குழந்தைகளே, ஆரம்பத்தில் நீங்கள் தெய்வீகப் புத்தியுடையவர்களாக இருந்தீர்கள். ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்ட காலம் பிரிந்திருந்தார்கள் என நினைவுகூரப்படுகிறது. ஆகவே, தேவ தர்மத்தைச் சேர்ந்த பாரத மக்களாகிய நீங்களே முதலில் வந்தீர்கள். ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்கள் பின்னரே வந்ததனால், அவர்கள் குறைந்த எண்ணிக்கையான பிறவிகளையே எடுக்கின்றனர். உலக விருட்சம் எவ்வாறு வளர்கின்றது எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். இதைக் கிரகிப்பவர்களுக்கு இது மிகவும் இலகுவானது. ஆத்மாக்களே அனைத்தையும் கிரகிக்கின்றார்கள். ஆத்மாக்களே பாவாத்மாக்களாக அல்லது புண்ணியாத்மாக்களாக ஆகுகின்றார்கள். இது உங்களின் 84வது பிறவியான, இறுதிப் பிறவி. நீங்கள் இப்பொழுது ஓய்வு ஸ்திதியில் உள்ளீர்கள். ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் ஒரு மந்திரத்தைப் பெறுவதற்காக குரு ஒருவரை ஏற்கிறார்கள். நீங்கள் இப்பொழுது வெளியிலுள்ள அம்மக்களைக் குருமார்களாக ஏற்பதில்லை. நானே உங்கள் அனைவருக்கும் தந்தையாகவும், ஆசிரியராகவும், சற்குருவாகவும் இருக்கிறேன். நான் 'தூய்மையாக்குபவரான சிவபாபா" என அழைக்கப்படுகிறேன். உங்களுக்கு இப்பொழுது ஞாபகம் வந்துள்ளது. அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள் ஆதலால், சத்தியமானவர்களும், உணர்வுள்ளவர்களும் ஆவர். ஒவ்வோர் ஆத்மாவிலும் ஒரு பாகம் பதியப்பட்டுள்ளது. இவ்வாறே தந்தை சத்தியமாகவும், உணர்வுள்ளவராகவும் உள்ளார். அவர் மனித உலக விருட்சத்தின் விதை என்பதால், அவர் கூறுகின்றார்: முழு விருட்சத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை நான் அறிவேன். இதனாலேயே நான் “ஞானம் நிறைந்தவர்" என அழைக்கப்படுகிறேன். உங்களுக்கும் விதையானவரிலிருந்து எவ்வாறு விருட்சம் வெளிவருகின்றது எனும் ஞானம் முழுவதும் உள்ளது. விருட்சம் வளர்வதற்குக் காலம் எடுக்கிறது. தந்தை கூறுகின்றார்: நானே விதை. இறுதியில் முழு விருட்சமுமே முற்றாக உக்கிய நிலையை அடைகிறது. தேவதேவியரின் தர்மத்தின் அத்திவாரம் இப்பொழுது இல்லாமல் இருப்பதைப் பாருங்கள்; அது மறைந்து விட்டது. தேவ தர்மம் மறைந்து விட்ட பின்பே தந்தை வர வேண்டியுள்ளது. அவர் ஒரு தர்மத்தை ஸ்தாபித்து, ஏனைய சமயங்கள் அனைத்தையும் அழியச் செய்கிறார். பிரஜாபிதா பிரம்மா மூலமே தந்தை, ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனையை மேற்கொள்;கின்றார். நீங்கள் சீரழிந்த மனிதரிலிருந்து மேன்மையான தேவர்கள் ஆகுவதற்கு இங்கு வந்துள்ளீர்கள். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதும், முடிவற்றதும் ஆகும். தந்தை வந்துள்ளார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களும், அசரீரியான உலக வாசிகளும் ஆவார்கள். அனைவரும் அந்த ஒரேயொரு தந்தையை நினைவுசெய்கிறார்கள். துன்ப காலங்களிலேயே அனைவரும் அவரை நினைவுசெய்கிறார்கள். இராவண இராச்சியத்தில் துன்பம் நிலவுகிறது. ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவரான தந்தை, என இங்கு அனைவரும் நினைவுசெய்கிறார்கள். அவர் புகழப்படுகிறார். தந்தை வரவில்லையெனில் உங்களை யார் தூய்மையாக்குவார்கள்? தற்பொழுது கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் உட்பட, மனிதர்கள் அனைவரும் தமோபிரதானாக உள்ளனர். அனைவரும் நிச்சயமாக மறுபிறவி எடுத்தே ஆகவேண்டும். இப்பொழுது நரகத்தில் அனைவரும் மறுபிறவி எடுக்கிறார்கள். இந்து சமய மக்கள் கூறுவது போல் அவர்கள் சந்தோஷத்திற்குள் செல்வதில்லை: ஒருவர் இறக்கும்பொழுது சுவர்க்கவாசி ஆகுவாராயின், அவர் அதுவரை நரகத்திலேயே இருந்திருக்கின்றார் என்றே பொருள்படுகிறது. அவர் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார். ஆகையால் உங்கள் வாயில் ரோஜா இருப்பதாக! (அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுள்ளது உண்மையாகட்டும்! அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டாரெனில், ஏன் நரகத்தின் தூய்மையற்ற உணவை அவருக்கு ஊட்டுகிறீர்கள்? மக்கள் சரீரங்களை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு உணவு ஊட்டுகிறார்கள். வங்காளத்தில் அவர்கள் மீன், முட்டை ஆகியவற்றையும் அவர்களுக்கு ஊட்டுகிறார்கள். அத்தகைய உணவை உண்பதற்கான அவசியம் அவர்களுக்கு என்ன உள்ளது? இன்னமும் எவராலும் வீட்டிற்குத் திரும்ப முடியாதுள்ளது. முதலாவது இலக்க ஆத்மாவும் 84 பிறவிகளை எடுக்க வேண்டும். இந்த ஞானத்தில் சிரமம் எதுவுமில்லை. பக்தி மார்க்கத்தில் அதிகளவு முயற்சி உள்ளது. இராமரின் பெயரை உச்சரிக்கும்பொழுது அவர்களுக்குப் புல்லரிக்கின்றது. அவை அனைத்தும் பக்தி மார்க்கமே. சூரியன், சந்திரன் ஆகியன ஒளியைத் தருகின்றன் அவை தேவர்களல்ல. உண்மையில் ஞான சூரியனும், ஞானச் சந்திரனும், ஞான நட்சத்திரங்களும் எனும் புகழ் இந்நேரத்தையே குறிப்பிடுகின்றது. அச்சா
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இந்த 84வது, இறுதிப் பிறவியில் பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். புண்ணியாத்மா ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். முற்றிலும் தூய்மையானவர்கள் ஆகுங்கள்.
2. உங்கள் புத்தியைத் தெய்வீகமாக்குவதற்கு, சரீர உறவினர்கள் அனைவரையும் மறந்து, ஆத்ம உணர்வுடையவர்களாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய சகவாசத்தையும் சகபாடியையும் புரிந்துகொள்வதால், மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருந்து, சகவாசத்தின் பொறுப்பைச் சதா பூர்த்தி செய்வீர்களாக.நாடகத்தின் பாக்கியத்திற்கேற்ப, பிராமண ஆத்மாக்களாகிய உங்களிற் சிலர் மாத்திரமே உங்களைச் சகல பேறுகளையும் பெறச் செய்கின்ற, மேன்மையான பிராமணர்களின் சகவாசத்தைப் பெறுபவர்கள். உண்மையான பிராமணர்களின் சகவாசம் உங்களை மேலேறும் ஸ்திதிக்குள் செல்ல வைக்கின்றது. தங்களை மந்த ஸ்திதிக்குள் அழைத்துச் செல்கின்ற சகவாசம் எதனையும் பிராமணர்களால் ஒருபொழுதும் கொண்டிருக்க முடியாது. எப்பொழுதும் மேன்மையான சகவாசத்தில் இருப்பவர்களும், தந்தையைத் தங்கள் சகபாடியாக்குபவர்களும், அவருடனான தங்கள் அன்பின் பொறுப்பைப் பூர்த்திசெய்பவர்களுமே மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.
சுலோகம்:
மனதையும், புத்தியையும் ஒரு சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரப்படுத்துவதே, ஏகாந்தத்தில் நிலைத்திருப்பவர் என்பதாகும்.