24.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்த நேரத்தில் சேவை செய்வதில் நீங்கள் தந்தையின் உதவியாளர்கள் ஆகுகின்றீர்கள். உங்கள் சரீரங்கள் இன்னமும் தூய்மையற்றவையாக இருப்பதாலேயே நீங்கள் நினைவுசெய்யப்படுகின்றீர்கள், ஆனால் பூஜிக்கப்படுவதில்லை.கேள்வி:
குழந்தைகளான நீங்கள் சதா உங்கள் புத்தியில் கொண்டிருக்க வேண்டிய போதை யாது?பதில்:
சிவபாபாவின் குழந்தைகளாக இருந்து, இராஜயோகத்தைக் கற்று, அவரிடமிருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்ற போதையை உங்கள் புத்தியில் சதா கொண்டிருங்கள். நீங்கள் உலக அதிபதியாக வேண்டுமானால், மிகுந்த அக்கறையுடன் கற்றுப் பிறருக்கும் கற்பியுங்கள். தந்தையை இழிவுபடுத்தும் வகையில் என்றுமே எதையுமே செய்யாதீர்கள்! எவருடனும் சண்டையிடாதீர்கள்! நீங்கள் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாறுகிறீர்கள். ஆகையால் அனைத்தையும் மிகவும் நன்றாகக் கிரகியுங்கள்.பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்களுக்கே இந்த ஞான மழை பொழிகின்றது.ஓம் சாந்தி.
தந்தையுடன் இருப்பவர்கள் பாப்தாதாவுடன் இருக்கிறார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். அவர்கள் இப்பொழுது இருவராக இருக்கிறார்கள். இது மிகவும் நன்றாக விளங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது. பரமாத்மா பரமதந்தையாகிய சிவன், ஸ்தாபனையைப் பிரம்மா மூலமாக எவ்வாறு மேற்கொள்கிறார்? மக்களுக்கு இது தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரம் இது தெரியும். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. கிருஷ்ணருக்குச் சொந்தமாக ஒரு சரீரம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரின் சரீரத்தின் மூலம் பரமாத்மா, ஞானத்தைக் கொடுக்கிறார் எனக் கூற முடியாது; இல்லை. கிருஷ்ணர் சத்திய யுகத்தின் இளவரசர். பரமாத்மாவான பரமதந்தை, ஸ்தாபனையைப் பிரம்மாவின் மூலமே மேற்கொள்வதால், அவர் நிச்சயமாக இவரினுள் பிரவேசிக்கவே வேண்டும். இதற்கு வேறு எந்த வழியுமே கிடையாது; இதில் தூண்டுதல் போன்ற கேள்விக்கே இடமில்லை. பிரம்மாவின் மூலம் தந்தை யாவற்றையும் விளங்கப்படுத்துகிறார். உருத்திர மாலை என்றும் அழைக்கப்படுகின்ற வெற்றி மாலையை மக்கள் பூஜிப்பதுடன், நினைவும்செய்கிறார்கள். இந்த உருத்திரரது மாலை நினைவு மட்டுமே செய்யப்படுகின்றது என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இரட்டை மணிகள் பிரம்மாவையும் சரஸ்வதியையுமே குறிப்பிடுகின்றன. மாலையின் மிகுதி யாவும் குழந்தைகளுடையதே. பூஜிக்கப்படுகின்ற, ஒரேயொரு விஷ்ணுவின் மாலை மாத்திரமே உள்ளது. இந்நேரத்தில் நீங்கள் முயற்சியாளர்களே. நீங்கள் இறுதியிலேயே நினைவுசெய்யப்படுகிறீர்கள். இது ஆத்மாக்களது மாலையா அல்லது சரீரதாரிகளினதா? இக்கேள்வி எழும், அல்லவா? விஷ்ணுவின் மாலையானது உயிருள்ள மனிதர்களின்; மாலை எனக் கூறப்படுகிறது. இலக்ஷ்மியும் நாராயணனும் பூஜிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவர்களது ஆத்மாக்கள், சரீரங்கள் இரண்டுமே தூய்மையானவை. உருத்திரரது மாலை ஆத்மாக்களால் ஆனது, ஏனெனில் சரீரங்கள் தூய்மையற்று இருக்கின்றன் அவற்றைப் பூஜிக்க முடியாது. ஒரு ஆத்மாவை எவ்வாறு பூஜிக்க முடியும்? உருத்திரரது மாலையைப் பூஜிக்கலாம் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் இல்லை. அது நினைவு செய்தலுக்கான மாலை என அழைக்கப்படுவதால், அது பூஜிக்கப்படுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய சரீரங்களிலிருந்த நினைவையே சகல மணிகளும் குறிக்கின்றன் மணிகள் பிராமணர்களையே குறிக்கின்றன. யார் நினைவுசெய்யப்படுகிறார்கள் என்பதை எவருமே புரிந்துகொள்வதில்லை. பாரதத்திற்குச் சேவை செய்கின்ற பிராமணர்களாகிய நீங்களே நினைவுசெய்யப்படுகிறீர்கள். ஜெகதாம்பாளும், பல பெண்தெய்வங்கள் போன்றோரும் இருக்கிறார்கள். அவர்கள் நினைவுசெய்யப்பட வேண்டுமா? இலக்ஷ்மியும் நாராயணனும் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகின்றார்கள், நீங்கள் அல்ல. உங்கள் சரீரங்கள் தூய்மையற்றும், உங்கள் ஆத்மாக்கள் தூய்மையானவையாகவும் உள்ளதால் உங்களைப் பூஜிக்க முடியாது, ஆனால் நினைவு செய்யப்படுகின்றீர்கள். எவரேனும் இது பற்றி உங்களிடம் வினவலாம், நீங்கள் முற்கூட்டியே இதனைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். நீங்கள் பிராமணர்கள். பெண் தெய்வங்களின்; வடிவங்களில் உங்கள் ஞாபகார்த்தம் உள்ளது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்களே தூய்மை ஆகுகிறீர்கள். ஆகவே, இந்த மாலையானது முதலில் பிராமணர்களது என்றும், பின்னர் தேவர்களது என்றும் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் ஞானக் கடலைக் கடையும்பொழுது, பதில்கள் வெளிப்படும். சாலிகிராம்களினது வடிவில் இருக்கும்பொழுது ஆத்மாக்கள் பூஜிக்கப்படுகிறார்கள். சிவன் பூஜிக்கப்படும்பொழுது, சாலிகிராம்களும் பூஜிக்கப்படுகின்றனர், ஏனெனில் ஆத்மாக்கள் தூய்மையானவர்கள், அவர்களுக்குச் சரீரங்கள் இல்லை. நீங்கள் நினைவு மாத்திரமே செய்யப்படுகிறீர்கள்: ஏன்? நீங்கள் உங்கள் சரீரங்களின் மூலம் சேவை செய்கிறீர்கள். உங்களைப் பூஜிக்க முடியாது. பின்னர், நீங்கள் உங்கள் சரீரங்களை நீக்கும்பொழுது, சிவனுடன், நீங்களும் பூஜிக்கப்படுகிறீர்கள். அதனைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். தற்சமயம் நீங்கள் பிராமணர்கள், சிவபாபா பிரம்மாவினுள் பிரவேசிக்கிறார். ஆகவே இவரும் சரீர வடிவில் இருக்கிறார். நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இச்சரீரம் பௌதீகமானது. பிரம்மா, சரஸ்வதி, ஞான கங்கைகளாகிய நீங்கள் இருக்கிறீர்கள். இந்த யாகத்தின் மூலம் நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக்குகிறீர்கள். சிலர் பூஜிக்கும்பொழுது, சிவனையும் சாலிகிராம்களையுமே வைத்துள்ளனர். பிரம்மாவை, சரஸ்வதியை அல்லது குழந்தைகளான உங்களைப் பற்றி எக்குறிப்புமே இல்லை. இங்கு, சகலரது பெயரும் பயன்படுத்தப்படுகிறது. நீங்களே நினைவுகூரப்படுகிறீர்கள். ஞான கங்கைகளாக இருந்தவர்கள் யார்? அவர் ஞானக்கடல். இவரே மிகப்பெரிய நதியான, பிரம்ம புத்திரா ஆவார். இந்த பிரம்மாவும் தாய் ஆவார். ஒரே ஒரு கடலும், ஆனால் பல்வேறு வகையான கங்கைகளும் இருக்கின்றன. ஞானத்தை நன்றாக வரிசைக்கிரமமாக அறிந்து கொண்டவர்களே, ஏரிகள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்களது புகழும் உள்ளது. மன்சரோவர் ஏரியில் நீராடுவதனால், நீங்கள் தேவதைகள் ஆகுகிறீர்கள் எனக் கூறப்படுகிறது. ஆகையாலேயே, உங்களது மாலை நினைவுகூரப்படுகிறது. அவருக்கு அடுத்து இருப்பவர்களாலேயே மாலை உருவாக்கப்படும். இந்நேரத்தில் உங்களால் மாத்திரமே இம் மாலையைப் புரிந்துகொள்ள முடியும். உங்கள் ஆதி சனாதன தர்மத்திற்குரியவர்களாலேயே இதனைப் புரிந்துகொள்ள முடியாவிடின், எவ்வாறு வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியும்? ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையற்றவர்கள் அனைவரையும் தூய்மையாக்குகின்றார். கிறிஸ்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார் என உங்களால் கூற முடியாது. அவர் பிறப்பு இறப்புச் சக்கரத்தினுள் பிரவேசித்து, கீழே வர வேண்டும். உண்மையில் அவரை ஒரு குரு எனவும் அழைக்க முடியாது, ஏனெனில் ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். இறுதித் தறுவாயில் விருட்சம் முழுவதாக உக்கிய நிலையை அடையும்பொழுதே, தந்தை வந்து அனைவருக்;கும் சற்கதியை அருள்கின்றார். ஆத்மாக்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதற்காக மேலிருந்து கீழே வருகின்றார்கள். அவர்கள் மறு பிறவி எடுக்க வேண்டும். சற்குரு ஒரேயொருவரே, அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். எம் மனிதராலும் உண்மையான சற்குருவாக இருக்க முடியாது. அவர்கள் தங்கள் சமயங்களை ஸ்தாபிப்பதற்காக வருகின்றார்கள், ஏனைய அனைவரும் தங்கள் பாகங்களை நடிப்பதற்கு அவர்களைப் பின்பற்றுகிறார்கள். அனைவரும் தங்கள் தமோபிரதான் ஸ்திதியை அடையும்பொழுது, நான் அனைவருக்கும் சற்கதியை அருள்வதற்கு வருகின்றேன். அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறார்கள். சக்கரமானது மீண்டும் புதிதாக ஆரம்பமாகுகிறது. நீங்கள், இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். அவர்கள் அரசர்களானால்; என்ன, பிரஜைகளானால் என்ன, இவர்களே இராச்சியத்தைப் பெறுவார்கள். பல பிரஜைகள் உருவாக்கப்படுகிறார்கள். ஓர் இராஜ அந்தஸ்தைப் பெறுவதற்கே முயற்சி தேவைப்படுகிறது. வெற்றி மாலையில் யார் கோர்க்கப்படுவார்கள் என்பதைப் பற்றிய அனைத்தையும் நீங்கள் இறுதியில் அறிந்து கொள்வீர்கள். கற்றவர்களின் முன்னால் கற்காதவர்கள் தலைகுனிவார்கள். அவர்கள் சத்திய யுகத்திற்குச் செல்வார்கள், ஆனால் வேலையாட்களாகவும், பணிப்பெண்களாகவுமே ஆகுவார்கள். பரீட்சைகளின்;; பின்னர் யார் சித்தியடைந்தார்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்வதைப் போன்று, இதைப் பற்றியும் அனைவரும் அறிந்து கொள்வார்கள். எவராவது ஒருவர் கற்பதில் கவனம் செலுத்தாது விடின், அவர் சித்தியெய்த மாட்டார். இது உங்கள் எல்லையற்ற கல்வியாகும். மனிதர்கள் தேவர்களாகுகின்ற, இறை உலகப் பல்கலைக்கழகம் இது ஒன்று மாத்திரமே உள்ளது; இங்கு அனைவரும் வரிசைக்கிரமமாகவே சித்தி எய்துகிறார்கள். இது இராஜயோகக் கல்வி மாத்திரமே ஆகும். ஓர் இராஜ அந்தஸ்தைப் பெறுவதற்கு நீங்கள் முயற்சி செய்வது அவசியம், அத்துடன் நீங்கள் சேவையும் செய்ய வேண்டும். அரசர்கள் ஆகுபவர்கள் அவர்களது பிரஜைகளை உருவாக்கவும் வேண்டும். மிகச்சிறந்த புதல்விகள் மிகப்பெரிய நிலையங்களைக் கவனித்துக் கொள்வதால், அவர்கள் பல பிரஜைகளை உருவாக்குகிறார்கள். பாபாவும் கூறுகிறார்: பாபாவால் அங்கு வந்து பார்வையிடக்கூடிய வகையில், ஒரு மிகப் பெரிய பூந்தோட்டத்தை உருவாக்குங்கள். தற்சமயம், இது மிகவும் சிறியதாகவே இருக்கிறது. பம்பாயில் பல ஆயிரக்கணக்கானோர் இருப்பார்கள். முழு வம்சமும் சூரிய வம்சமாக இருப்பதனால், மேலும் பலர் இருப்பார்கள். முயற்சியாளர்கள் அரசர்களாகவும், மிகுதிப் பேர் பிரஜைகளாகவும் ஆகுகிறார்கள். பாடப்பட்டுள்ளது: ஓ கடவுளே, சற்கதிக்காகவே உங்கள் தெய்வீகச் செயற்பாடுகள் உள்ளன! நீங்கள் கூறுகிறீர்கள்: ஆகா பாபா, ஆகா! உங்கள் வழிகளும், முறைகளும் தனித்துவமானவை! அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற ஸ்ரீமத்தும் தனித்துவமானது. தந்தை உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கிறார்;. அவர் உங்களை விட்டுவிட்டுச் செல்வதில்லை. அசரீரி, சூட்சும, பௌதீக உலகங்களைப் பற்றி மக்களுக்குத் தெரியாது. உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவது மாத்திரமே முழுமையான ஞானம் ஆகாது. ஆத்மாக்களாகிய நாங்கள் வசிக்கின்ற ஆத்ம உலகைப் பற்றியும் நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இந்த உலகச் சக்கரத்தை அறிந்துகொள்வதனால், நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆகுகிறீர்கள். இவ்விடயங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படல் வேண்டும். சிவன் பெயருக்கும், உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் கூறுகிறார்கள். அவருடைய உருவம் இருப்பினும், சிவன் பெயருக்கும், உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் கூறுகிறார்கள்! அவர்கள் பின்னர் அவர் சர்வவியாபி என்று கூறுகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்: கடவுள் சர்வவியாபி என்பதை நான் நம்புவதில்லை. மக்கள் ஒருவரையொருவர் கொல்கிறார்கள்: இது கடவுளின் செயலா? நீங்கள் மேலும் முன்னேறிச் சென்று, உங்கள் எண்ணிக்கையிலும் வளர்ச்சி ஏற்படும்பொழுது, அவர்கள் இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதற்கு வருவார்கள். பாபா நேற்றிரவு விளங்கப்படுத்தினார்: தங்களைத் திறமைசாலிகள் எனக் கருதுபவர்கள் இவ்வாறான கடிதங்களை எழுத வேண்டும். இந்த முழுமையான ஞானம் என்றால் என்ன என்பதைப் பற்றி அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். நீங்கள் எழுதலாம்: எங்களால் உங்களுக்கு முழுமையான ஞானத்தைக் கொடுக்க முடியும். அசரீரியான உலகத்தைப் பற்றிய ஞானத்தை எங்களால் உங்களுக்குக் கொடுக்க முடியும். நாங்கள் அசரீரியான தந்தையினது அறிமுகத்தைக் கொடுப்பதுடன், பிரஜாபிதா பிரம்மாவைப் பற்றியும், அவரது பிராமண தர்மத்தைப் பற்றியும் உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். இலக்ஷ்மி நாராயணனுடைய வம்சம் எவ்வாறு தொடர்கிறது, இராமர் சீதையினது வம்சம் எவ்வாறு தொடர்கிறது, பின்னர் அவர்களது இராச்சியத்தை அவர்களிடமிருந்து அபகரித்தது யார்? அந்தச் சுவர்க்கம் இப்பொழுது எங்கு சென்றது போன்றவற்றையும் எங்களால் உங்களுக்குக் கூற முடியும். "நரகம் எங்கே?" என நீங்கள் வினவினால், கூறப்படுகிறது: அது முடிவடைந்து விட்டது. சுவர்க்கமும் முடிவுக்கு வரும். அந்த நேரத்திலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. வைரங்களும், இரத்தினங்களும் பதித்த அந்த மாளிகைகள், எவராலுமே மீட்க முடியாதவாறு கீழே சென்று விட்டன. தங்கத்தாலும் வைரங்களாலும் ஆன மாளிகைகள் என்றுமே கீழிருந்து வெளிப்படுவதில்லை. சோமநாதர் ஆலயம் பின்னரே கட்டப்பட்டது. அவர்களின் வீடுகள் அந்த ஆலயங்களைச் விடச் சிறப்பாக இருந்திருக்கும். இலக்ஷ்மி நாராயணனது வீடு எவ்வாறு இருந்திருக்கும்? அந்தச் சொத்துக்கள் யாவும் எங்கு சென்றன? கல்விமான்கள் இத்தகைய விடயங்களைச் செவிமடுக்கும்பொழுது, உங்கள் ஞானம் மிகவும் சக்திவாய்ந்தது என வியப்படைவார்கள். மனிதர்;களுக்கு எதுவுமே புரியாது, ஆனால் அவர் சர்வவியாபி என அவர்கள் கூறுகிறார்கள். இவ்விடயங்கள் யாவும் புரிந்துகொள்ளப்பட்டு, விளங்கப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் செல்வத்தைப் பெற்று, பின்னர் அதை, மற்றவர்களுக்குத் தானம் செய்கிறீர்கள். பாபா இதை உங்களுக்குத் தொடர்ந்தும் கொடுக்கிறார், பின்னர் நீங்கள் அதை மற்றவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். இது ஒரு முடிவற்ற பொக்கிஷம்; அனைத்தும் நீங்கள் எவ்வளவு கிரகித்திருக்கிறீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளன. எந்தளவுக்கு அதிகமாக நீங்கள் கிரகிக்கிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தை நீங்கள் அடைவீர்கள். சிப்பிகளுக்கும், வைரங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! வைரங்களின் பெறுமதி அதியுயர்ந்தது, சிப்பிகளின் பெறுமதி மிகவும் குறைந்தது. நீங்கள் இப்பொழுது சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாறுகிறீர்கள். இவ்விடயங்கள் எவரது கனவிலும் இருக்காது. வாழ்ந்து சென்று விட்டவர்களான இலக்ஷ்மி நாராயணனுக்கென ஓர் இராச்சியம் இருந்தது என்பதை மாத்திரமே அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், ஆனால்;, அவர்களுக்கு அந்த இராச்சியத்தைக் கொடுத்தது யார் என்பதும், எப்பொழுது கொடுக்கப்பட்டது என்பதும் எவருக்குமே தெரியாது. அவர்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்தவர் யார்? இங்கு எதுவும் இல்லை. நீங்கள் இராஜயோகத்தைக் கற்பதனால், சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். இது ஓர் அற்புதம்! இதனையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் பெரும் போதையைக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் நீங்கள் அந்த நிரந்தரமான போதையைக் கொண்டிருப்பதை மாயை அனுமதிக்க மாட்டாள். நாங்களே சிவபாபாவின் குழந்தைகள். தாங்கள் இந்த ஞானத்தைக் கற்று, உலக அதிபதிகள் ஆகவேண்டும் என்பது பிறரின் புத்தியில் பிரவேசிக்குமா? நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். கூறப்பட்டுள்ளது: சற்குருவை இழிவு செய்பவர்களால், உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய முடியாது. அது இப்பொழுது இந்த நேரத்தையே குறிக்கிறது. அவர்களுக்கு எந்த இலக்கோ, இலட்சியமோ இருப்பதில்லை. உங்களுக்கு ஓர் இலக்கும், இலட்சியமும் உள்ளன. அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். இதனைக் கற்பதனால், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்பதை அறிவீPர்கள். இதை மிகக் கவனத்துடன்; நீங்களும்; கற்று, பிறருக்கும் கற்பிக்க வேண்டும். தந்தையை இழிவடையச் செய்யக்கூடிய எதனையும் நீங்கள் செய்யக்கூடாது. நீங்கள் சண்டை செய்யவும் கூடாது! அனைவருடனும் இனிமையாகப் பேசுங்கள்! அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். பாபா கூறுகிறார்: தானம் ஒன்றை வழங்கினால் சகுனங்கள் அகற்றப்பட்டு விடும். சரீர உணர்வின் தானமே முதலிலக்கத் தானமாகும். இந்நேரத்தில், நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் இறை உணர்வு உடையவர்கள் ஆகுகிறீர்கள். இது விலை மதிப்பிட முடியாத வாழ்வாகும். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும் உங்களுக்குக் கற்பிக்க வருகிறேன். பின்னர் நீங்கள் மறந்து விடுகிறீர்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. அச்சா.
ஞான இரத்தினங்களைக் கிரகித்து, சேவையும் செய்கின்ற இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அனைவருடனும் இனிமையாகப் பேசுங்கள். தந்தையை இழிவுபடுத்தும் வகையில் எதனையுமே செய்யாதீர்கள். சரீர உணர்வைத் தானம் செய்து, ஆத்ம உணர்வு உடையவராகவும்;, இறையுணர்வு உடையவராகவும்; ஆகுங்கள்.2. நீங்கள் பெறுகின்ற ஞானச் செல்வத்தைத் தானம் செய்யுங்கள். இந்தக் கல்வியின் மூலம், ஓர் இராச்சியத்தைப் பெறுகின்ற போதையில் சதா இருங்கள்;. கவனமாகக் (யவவநவெழைn) கற்றுக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய ஒருமுகப்படுத்தல், ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் பயிற்சி மூலம்;, பல ஆத்மாக்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்கின்ற, ஓர் உலக உபகாரி ஆவீர்களாக.தங்கள் அலைந்து திரிகின்ற புத்திகளையும், விஷமத்தனமான மனங்களையும் ஸ்திரமாக்குவதும், ஒன்றுகுவிப்பதுமே சகல ஆத்மாக்களினதும் விருப்பமாகும். எனவே, அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு, முதலில் ஒரு நிலையான, ஸ்திரமான ஸ்திதியில் சதா ஸ்திரமாக இருப்பதாலும், வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குரியவராக இருக்கின்ற ஒரு ஸ்திதியில் இருப்பதாலும் நீங்கள் அனைவரும் உங்கள் எண்ணங்களை ஒருமுகமாக்குகின்ற பயிற்சியை அதிகரிக்க வேண்டும். வீணான எண்ணங்களைத் தூய எண்ணங்களாக மாற்றுங்கள், அப்பொழுது நீங்கள் ஓர் உலக உபகாரியாக இருப்பதற்கான ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.
சுலோகம்:
தந்தை பிரம்மாவைப் போன்று, ஞான சொரூபங்களாகவும், சக்தி சொரூபங்களாகவும், நினைவு சொரூபங்களாகவும் ஆகுபவர்களே, உண்மையான பிராமணர்கள் ஆவார்கள்.