25.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, யாவருக்கும் நன்மை அளிப்பதே தந்தையின் பாகமாகும். (pயசவ). அவ்வாறே நீங்களும் தந்தையைப் போல உபகாரிகள் ஆகுங்கள். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.கேள்வி:
குழந்தைகளின் எந்தச் சிறப்பியல்பைப் பார்க்கும் போது பாப்தாதா குதூகலம் அடைகிறார்?பதில்:
யக்ஞத்திற்காக ஏழைக் குழந்தைகள் ஒரு ரூபாவையோ அல்லது அரை ரூபாவையோ அனுப்பும் பொழுது பாபா குதூகலம் அடைகிறார். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, இதற்குப் பதிலாக எனக்கு ஒரு மாளிகையைத் தாருங்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளே இந்த ஒரு ரூபாவும் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் சேர்க்கப்படுவதால் நீங்கள் 21 பிறவிதளுக்கு மாளிகையைப் பெறுவீர்கள். குசேலரின் (சுதாமா) உதாரணமும் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் ஒரு சிப்பியளவேனும் செலவு செய்யாமல் உலக ஆட்சியைப் பெறுகிறீர்கள். பாபா ஏழைக் குழந்தைகளின் இச் சிறப்பியல்பைப் பார்ப்பதில் மிகவும் குதூகலம் அடைகிறார்.
பாடல்:
உங்களைக் கண்டதால் நாங்கள் முழு உலகையுமே கண்டுகொண்டோம்.. வானம், பூமி அனைத்தும் எங்களுக்கே சொந்தம்......
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பாபாவிடமிருந்து உங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா உங்களுடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் நாங்கள் உங்களிடமிருந்து மீண்டும் ஒரு முறை எங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றோம். இது ஒரு புதிய விடயமல்ல. குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் சந்தோஷதாமத்தின் ஆஸ்தியை தொடர்ந்தும் ஒவ்வொரு கல்ப்பத்திலும் பெறுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் 84 பிறவிகளை எடுக்க வேண்டும். உண்மையில் நாங்கள் எங்களுடைய 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெற்று, பின்னர் நாங்கள் அதனைப் படிப்படியாக இழக்கின்றோம். இந்நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இந்த நாடகத்தில் பெருமளவு சந்தோஷம் உள்ளது. என்பதும் உங்களுக்குத் தெரியும். அதன் இறுதியில் இராவணனிடமிருந்து நீஙகள் துன்பத்தையே பெறுவீர்கள். இந்நேரத்தில் உங்களில் சிலரே உள்ளனர். நீங்கள் முன்னேறும் போது மேலும் பெருமளவு வளர்ச்சி இருக்கும். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். நிச்சயமாக ஒவ்வொரு கல்;பத்திலும் நீங்கள் தந்தையிடமிருந்து உங்களது ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை இதயபூர்வமாக நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். இங்கே வந்து இந்த ஞானத்தை பெறுபவர்களுக்கு தாங்கள் ஞானக் கடலாகிய தந்தையிடமிருந்து உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி என்பவற்றின் ஞானத்தைப் பெற்று விட்டோம் என்பது புரியும். ஞானக் கடலும் தூய்மையாக்குபவருமாகிய தந்தையே தூய்மையற்றவர்களைத் தூய்மை ஆக்குபவர். அதாவது அவர் ஒருவரே உங்களை முக்திக்கும் ஜீவன் முக்திக்கும் அழைத்துச் செல்வார். இந்நேரத்திலேயே இதனை நீங்கள் அறிகிறீர்கள். பலர் குருமார்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் அவர்கள் அக்குருமார்களையும் விட்டு விலகி வந்து ஞானத்தை எடுப்பார்கள். நீங்களும் இந்த ஞானத்தை இப்பொழுது பெற்றுள்ளீhகள். இதற்கு முன்னர் நீங்களும் அறியாமையில் இருந்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? சிவபாபா யார் என்பதையோ அல்லது பிரம்மா, விஷ்ணு, சங்கர் ஆகியவர்கள் யார் என்பதைப்பற்றியோ நீங்கள் எதுவுமே அறிந்திருக்கவில்லை. உலகின் அதிபதிகளாக நீங்களே இருந்தீர்கள் என்பதை இப்பொழுது அறிந்து கொண்டீர்களாயின் உங்களுடைய புத்தி அதி உயர்ந்த போதையைக் கொண்டதாக இருக்கும். தந்தையையும் உலக சக்கரத்தையும் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள்É அல்பாவையும், பீற்றாவையும், தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இதற்கு முன்னர் உங்களுக்கு எதுவுமே தெரியாது. உங்ளுக்குத் தந்தையையோ அல்லது அவருடைய படைப்பையோ தெரியாது. உலக மக்களுக்கு, தந்தையையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றியோ தெரியாது. நீங்கள் இப்பொழுது சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாகி விட்டீர்கள். தந்தை சகல குழந்தைகளிடமும் பேசுகிறார். பற்பல குழந்தைகளும் பற்பல நிலையங்களும் உள்ளன! இப்பொழுது பல நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: முன்னர் உங்களுக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமாகவே நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீhகள். தந்தையினால் நீங்கள் தூய்;;மையற்றவரிலிருந்து தூய்மையாக்கப்படுகின்றீர்கள் என்பதையும் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். ஏனைய மக்கள் தொடர்ந்தும் கூவியழைக்கிறார்கள். ஆனால் நீங்களோ மறைமுகமானவர்கள். அவர்கள் பிரம்ம குமாரர்கள், பிரம்ம குமாரிகள் எனப் பேசினாலும் எங்களுக்குக் கற்பிப்பவர் யாரென அவர்களுக்குத் தெரியாது. இவ்விடயங்கள் எந்தச் சமயநூல்களிலும் எழுதப்படவில்லை. கீதையின் அதே கடவுளே வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். இது உங்களுடைய புத்தியில் புக வேண்டும். நீங்கள் கீதையைக் கற்றிருப்பீhகள். ஞானமார்க்கம் முற்றிலும் வேறானது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சமய நூல்களைக் கற்பதனால் பெறப்பட்ட 'விதூட்மண்டலி" போன்ற தலைப்புகள் அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சமயநூல்களை அடிப்படையாகக் கொண்டதேயாகும். இது, அதிலிருந்து வேறுபட்டதாகும். இந்த ஞானம் அவற்றில் இல்லை. தந்தையே உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை இங்கு வந்து தருகிறார். தந்தை வந்து உங்களுடைய புத்தியின் பூட்டைத் திறந்துள்ளார். நீங்கள் முன்னர் எவ்வாறு இருந்து, இப்பொழுது எவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பதையும் அறிவீர்கள். சக்கரம் முழுவதுமே உங்கள் புத்தியில் புகுந்துள்ளது. ஆரம்பத்தில் இதனை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நாளுக்கு நாள் ஞானமாகிய மூன்றாவது கண் தொடர்ந்தும் நன்றாகத் திறக்கிறது. கடவுள் எப்பொழுது வந்தார் என்பதோ அல்லது கீதையின் ஞானத்தை உபதேசித்தவர் யார் என்பதோ மக்களுக்குத் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இதனை அறிந்துள்ளீர்கள். முழுச் சக்கரத்தினது ஞானமும் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் தோற்கடிக்கப்பட்டது எப்பொழுது? நீங்கள் எப்படி பாவப் பாதையில் சென்றீர்கள்? நீங்கள் ஏணியிலிருந்து எவ்வாறு கீழ் இறங்கினீர்கள் ஆகிய அனைத்தும் படத்திலே மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. 84 பிறவிகளின் ஏணிப் படமும் உள்ளது. ஏணியில் நீங்கள் எவ்வாறு ஏறி இறங்கினீhகள் என்பதையும், தூய்மை ஆக்குபவர் யார் என்பதையும், உங்களைத் தூய்மையற்றவர்களாக ஆக்கியவர் யார் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீhகள். அம் மக்கள் தூய்மை ஆக்குபவரைப் பற்றிப் பாடுகிறார்கள். இராவண இராச்சியம் எப்பொழுது ஆரம்பமானது என்பதையோ அல்லது அவர்கள் எப்போது தூய்மையற்றவர்கள் ஆகினார்கள் என்பதையோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை சேர்ந்துவர்களுக்கே இந்த ஞானம் உரியது. தந்தை கூறுகின்றார்: ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை நானே ஸ்தாபிக்கிறேன். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு உலகின் வரலாற்றையும் புவியியலையும் விளங்கப்படுத்த முடியாது. உங்களுக்கு இது ஒரு கதையைப் போல் உள்ளது. நாங்கள் எவ்வாறு இராச்சியத்தைப் பெற்றோம் பின்னர் நாங்கள் எவ்வாறு அதனை இழந்தோம் என்ற வரலாறையும் புவியியலையும் பற்றி இப்பொழுது நாங்கள் கற்கின்றோம். இது ஒரு எல்லையற்ற விடயமாகும். நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளது சக்கரத்தை சுற்றி வந்தோம், எவ்வாறு நாங்கள் உலகத்தின் அதிபதிகளாகினோம்? பின்னர், இராவணன் எவ்வாறு எங்களது இராச்சியத்தை எங்களிடமிருந்து அபகரித்தான்? என்பவற்றின் ஞானத்தை தந்தை மாத்திரமே தருகிறார். மக்கள் தசேராவை (இராவணனது கொடும்பாவியை எரிப்பது) கொண்டாடுகிறார்கள். ஆனால் உங்களுக்கும் இந்த ஞானம் இல்லாது இருந்ததைப் போலவே அவர்களிடமும் எந்த ஞானமும் இல்லை. எவ்வாறாயினும், உங்களுக்கு இப்பொழுது இந்த ஞானம் இருப்பதினால் நீங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளீர்கள். ஞானம் சந்தோஷத்தையே தரும். எல்லையற்ற ஞானத்தை நீங்கள் உங்களது புத்தியிலே கொண்டுள்ளீர்கள் தந்தை இப்போது உங்களது புத்தியை நிரப்புகின்றார். அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களது புத்தியை நிரப்புங்கள்! யாருக்கு அவர்கள் இதனைக் கூறினார்கள்? சாதுக்களுக்கோ அல்லது புனிதர்களுக்கோ அவர்கள் இதனைக் கூறவில்லை. அவர்கள் கள்ளம் கபடமற்ற பிரபுவாகிய சிவனுக்கே இதனைக் கூறுகிறார்கள். அவர்கள் அவரிடம் பிச்சை கேட்கின்றார்கள். இப்பொழுது உங்களுடைய சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டு இருக்க வேண்டும். உங்களுக்கு உங்களது புத்தியில் பெருமளவு ஞானம் உள்ளது. எல்லையற்ற தந்தையிடமிருந்து நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தின் ஆஸ்தியை பெறுகின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கும் நன்மை செய்து, மற்றவர்களையும் நன்மை அடையச் செய்யுங்கள். அனைவரையுமே நன்மை அடையச் செய்யுங்கள்! முன்னர், நீங்கள் அசுரரின் கட்டளைகளை பின்பற்றியதாலேயே ஒருவருக்கொருவர் நட்டத்தை ஏற்படுத்தியதுடன் கெடுதல் செய்தீர்கள். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் உங்களுக்கு நீங்களே நன்மை அடையச் செய்கிறீர்கள். அனைவருமே இந்த எல்லையற்ற ஞானத்;தைக் கற்க வேண்டும் என்பதுடன் நிலையங்கள் தொடர்ந்தும் திறக்கப்பட வேண்டும் என்பதே உங்களுடைய இதய பூர்வமான ஆசையாகும். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா நீங்கள் கண்காட்சி ஒன்றைக் தருவதுடன் ஒளிப்படக் கருவி (pசழதநஉவழச) ஒன்றையும் எங்களுக்குத் தந்தீர்களானால் எங்களால் ஒரு நிலையத்தை திறக்க முடியும். நாங்கள் பெற்ற சந்தோஷத்தை அதாவது எங்களது சந்தோஷம் எனும் பாதரசத்தை அதிகரிக்கச் செய்த அனுபவத்தை நாங்கள் மற்றவர்களுக்கும் கூறுவோம். நாடகத்திற்கு ஏற்பவே இந்த முயற்சியும் தொடருகிறது. மீண்டும் ஒருமுறை பாரதத்தைச் சுவர்க்மாக்குவதற்காகவே தந்தை வந்துள்ளார். முன்னர் நரகவாசிகளாக இருந்த நீங்கள் இப்பொழுது மீண்டும் சுவர்க்க வாசிகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டீர்கள். நீங்கள் இந்தச் சக்கரத்தை உங்களுடைய புத்தியிலே சதா தொடர்ந்தும் சுழற்ற வேண்டும். இவ்வாறு செய்வதினால் உங்களுக்கு சதா சந்தோஷமே இருக்கும். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதில் உங்களுக்கு போதையும் இருக்க வேண்டும். நாங்கள் இந்த ஞானத்தைத் தந்தையிடமிருந்து பெறுகின்றோம். இதைப் பற்றி அறியாத உங்களுடைய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இந்தப் பாதையைக் காட்டுவதே உங்களுடைய கடமையாகும். நன்மை செய்வதே தந்தையினுடைய பாகமாகும் அவ்வாறே எங்களுடைய பாகமும் அனைவருக்கும் நன்மை அளிப்பவராக ஆகுவதே ஆகும். பாபா எங்களை நன்மை அளிப்பவராக ஆக்கியுள்ளார். எனவே நாங்கள் எங்களுக்கும் பிறருக்கும் நன்மை அளிப்பவர்கள் ஆகுகிறோம். தந்தை கூறுகிறார்: வெவ்வேறு நிலையங்களுக்குச் சென்று சேவை செய்யுங்கள்! ஒரே இடத்தில் இருந்து சேவையைச் செய்யாதீர்கள். எவ்வளவு திறமையாக ஒருவர் ஆகுகின்றாரோ, அவ்வளவிற்கு அவர் ஆர்வம் கொண்டவராகி சகல இடங்களிற்கும் சென்று சேவை செய்வார். இத்தகைய ஒரு புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சேவை செய்யக் கூடியவர் யார், கீழ்ப்படிவாகவும், நம்பிக்கையாகவும் இருப்பவர் யார், கட்டளைகள் எல்லாவற்றையும் பின்பற்றுபவர் யார் என்பவற்றை நீங்கள் அறிவீர்கள். அறியாமைப்; பாதையிலும் கூட தகுதியற்ற குழந்தைகளையிட்டு தந்தை அதிருப்தி அடைகிறார். எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு மிகவும் எளிமையாக விளங்கப்படுத்துகிறேன் இதையிட்டு நீங்கள் பயப்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை. இதைச் செய்கின்ற எவருமே அதன் வெகுமதியைப் பெறுவார்கள். அதிருப்தி ஆகுதல் அல்லது சாபம் இடுதல் என்ற கேள்விக்கே இடமில்லை! தந்தை விளங்கப்படுத்துகிறார்: நன்றாகச் சேவை செய்யாமலும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்காமலும் ஏன் நீங்கள் இருக்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவிற்கு மற்றவர்களை நன்மை அடையச் செய்கிறீர்களோ, பாபா அவ்வளவிற்கு குதூகலமடைவார். இ;த்தோட்டத்தில் உள்ள இம்மலர் மிகவும் சிறந்ததாக இருக்கிறதா என பாபா பார்ப்பார்! இவை அனைத்தும் பூந்தோட்டமே. தோட்டத்தைப் பார்ப்பதற்காக அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நிலையங்களுக்கு நான் சுற்றுலாச் சென்று எவ்கையான மலர்கள் அங்கு உள்ளது என்பதையும், அவர்கள் எப்படிச் சேவை செய்கிறார்கள் என்பதையும் பார்ப்பேன். அங்கு செல்வதினால் மாத்திரமே, அவர்கள் எவ்வளவு சந்தோஷத்தினால் நடனமாடுகிறார்கள் என்பதை உங்களால் கூற முடியும். அவர்கள் வந்து பாபாவிடம் கூறுகிறார்கள்: பாபா நான் இம் முறையிலேயே இன்னார் இன்னாருக்கு விளங்கப்படுத்தினேன். இன்று, நான் எனது கணவரையும், சகோதரரையும் அழைத்து வந்தேன். பாபா எப்படி வந்தார் என்பதையும் அவர் இப்பொழுது எப்படி எங்களுடைய வாழ்வை வைரத்தைப் போன்று பெறுமதி மிக்கதாக ஆக்குகின்றார் என்பதையும், நான் அவர்களுக்கு விளங்கப்படுத்தினேன். அதைச் செவிமடுத்த போது அவர்கள் தாங்களும் இதைப் பார்க்க விரும்பினார்கள். குழந்தைகளுக்கு உற்சாகம் வரும் போது, அவர்கள் பிறரையும் அழைத்து வருவார்கள். நீங்கள் உலகின் வரலாறையும் புவியியலையும் அறிந்திருக்க வேண்டும். பாரதம் எப்படி முழு உலகின் அதிபதியாக இருந்தது என்பதை உங்களுக்குள்ளேயே நீங்கள் சீர்தூக்கிப் பார்க்கலாம். இப்பொழுது அதன் நிலைமையைப் பாருங்கள்! சத்திய திரேதா யுகங்களிலே பெருமளவு சந்தோஷம் இருந்தது. பாபா இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். இறுதியிலே உலகில் பெருமளவு குழப்பங்கள் நிகழும் என்பதை நீங்கள் அறிவீர்கள். யுத்தம் ஓயப்போவதில்லை. எந்நேரமும் ஓரிடத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் சண்டையே நிலவுகிறது. எல்லா இடங்களிலும் பெருமளவு குழப்பங்கள் இடம் பெறும்! வெளி நாடுகளில் என்ன நிகழ்கிறது என்பதைப்; பாருங்கள்! அவர்கள் தாங்கள் என்ன செய்கிறேம் என்பதையே விளங்கிக் கொள்ளவில்லை. அங்கே பெருமளவு புயல்கள் இருப்பதால் மக்கள் தொடர்ந்தும் மரணிக்கிறார்கள்! அதிகளவு துன்பம் உள்ள உலகம் இதுவாகும். இந்தத் துன்ப உலகை விட்டு நீங்கள் நீங்குகின்ற காலம் இப்பொழுது வந்து விட்டது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபா உங்களுக்கு பொறுமையைத் தருகின்றார். இது ஓர் அசுத்தமான உலகம் என்றும் அவர் உங்களுக்கு கூறுகின்றார். மிகக் குறுகிய காலத்திலேயே அமைதியாக நாங்கள் உலகை ஆட்சி புரிவோம். இதையிட்டு நீங்கள் சந்தோஷடைய வேண்டும். இல்லையா? நிலையங்கள் தொடர்ந்தும் திறக்கப்படும். புதிய நிலையங்கள் திறக்கும் போது, பாபா சிறந்த குழந்தைகளுக்கு எழுதி அவர்களை அங்கே செல்லுமாறு கூறுவார். பாபா தனது இதயத்திலே அமர்ந்துள்ளவர்களின் பெயர்களையும் எழுதுவார். பலர் நன்மை அடைந்துள்ளனர். பல குழந்;தைகள் எமுதுகிறார்கள்: பாபா நான் பந்தனத்தில் உள்ளேன்! ஒரு சிறந்த நிலையம் எங்கேயாவது திறக்கப்பட்டிருக்குமாயின், தங்களுடைய ஆஸ்தியைப் பெறுவதற்குப் பலரால் வர முடியும். இங்கே உள்ள அனைத்துமே அழியப் போகின்றதாகையினால், எல்லோரும் நன்மையடையும் வகையில் உங்களிடமுள்ள அனைத்தையும் ஏன் நீங்கள் உபயோகிக்கக் கூடாது? நாடகத்தில் அவர்களுடைய பாகம் அவ்வாறானதே! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்தப் பாகத்தை நடிக்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் கருணை கொண்டுள்ளீர்கள். பந்தனத்தில் இருந்து பிறரை விடுதலையாக்குவதற்கு என்னால் ஆன ஒரு சிறிதளவு உதவியையேனும் செய்வேன். அவர்கள் அவர்களது ஆஸ்தியைப் பெறட்டும்! எல்லோரும் காமச் சிதையில் எரிந்து கொண்டிருப்பதால் தந்தை மிகவும் அக்கறை கொண்டுள்ளார். உலகம் முழுவதுமே சுடுகாடாகப் போகிறது. கூறப்பட்டுள்ளது: அல்லா சுடுகாட்டிற்கு வந்து எல்லோரையும் விழித்தெழச் செய்து அவர்களை வீட்டிற்கு திரும்பி அழைத்துச் செல்கிறார். இராவணன் எப்படி உங்களைத் தோற்கடித்தான் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். முன்னர் நீங்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஒரு பெரும்; செல்வந்த நகைவியாபாரியாக இருந்த போது உங்களுக்குப் பல குழந்தைகள் இருந்தால் அந்தப் போதையே உங்களுக்கு இருக்கும். அப்படி இல்லையா? நீங்கள் முற்றிலும் தூய்மையற்று இருந்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பழைய உலகிலே ஒருவர் எவ்வளவு பெரும் செல்வந்தனாகவோ பல மில்லியன்களை உடைய செல்வந்தனாகவோ இருந்தாலுமே அவை அனைத்தும் சிப்பிகளின் பெறுமதியை உடையவையாகும். இப்பொழுது அது முடிவிற்கு வருகிறது. மாயையும் மிகவும் சக்தி வாய்ந்தவள்! தந்தை கூறுகிறார்: குழந்தைகளே ஒரு நிலையத்தை திறவுங்கள். அதில் பலர் நன்மையடைவார்கள். ஏழைகளே விரைவில் விழித்தெழுவார்கள். ஆனால் செல்வந்தர்களில் எவரேனும் ஒருவர் அரிதாகவே விழித்தெழுவார்;. அவர்கள் தங்கள் சொந்த சந்தோஷத்திலேயே முழு கவனத்தையும் ஈடுபடுத்துவார்கள். மாயை அவர்கள் அனைவரையுமே தன் அதிகாரத்துள் வைத்திருக்கிறாள். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும் போது, அவர்கள் புரிந்துகொண்டாலும் அவர்களால் எப்படி விட்டுவிட முடியும்? எங்களைப் போலவே அவர்களும் அனைத்தையும் விட்டுவிடவேண்டி வருமென அவர்கள் பயப்படுகிறார்கள். அது அவர்களது பாக்கியத்திலே இல்லாது இருந்தால் அவர்களால் தொடர முடியாது. அதிலிருந்து விடுதலையாகுவது அவர்களுக்குக் கஷ்டம் போல் இருக்கும்.. அந் நேரத்தில் அவர்களுக்கு விருப்பமின்மை ஏற்பட்டு, உண்மையிலேயே இது ஒரு அசுத்தமான உலகம் என்பதை உணர்வார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அங்கே எதைச் செவிமடுத்தாலுமே அங்கேயே வி;ட்டுச் சென்று விடுவார்கள். பல மில்லியன்களில் ஒரு கைப்பிடி அளவினரே வருவார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் பம்பாய்க்கு வந்து அவர்களில் சிலர் நிறம் தீட்டப்படுகிறார்கள். அவர்கள் தாம் தமது எதிர் காலத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என அவர்கள் உணர்வதினாலேயே சிப்பிகளுக்குப் பதிலாக வைரங்களைப் பெறுவார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறர்: உங்கள் மூட்டை முடிச்சுக்கள் அனைத்தையும் சுவர்க்கத்திற்கு மாற்றிவிடுங்கள். அங்கே நீங்கள் 21 பிறவிகளுக்கான ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். சிலர் ஒரு ரூபாவையோ அல்லது அரை ரூபாவையேனும் அனுப்புகிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்களது ஒரு ரூபாயும் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு நீங்கள் 21 பிறவிகளுக்காக ஒரு மாளிகையைப் பெறுவீர்கள். சுதாமரின் (குசேலரின்) உதாரணமும் இருக்கிறது. அவ்வாறான குழந்தைகளைக் காண்பதில் பாபா மிகவும் குதூகலமடைகிறார். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வித செலவுமின்றி உலக ஆட்சியைப் பெறுகின்றீர்கள். அங்கே, யுத்தம் போன்றவை இல்லை. அம் மக்கள் சிறு நிலத்துண்டிற்காக பெருமளவு சண்டை செய்கின்றார்கள். உங்களுக்கு கூறப்பட்டது: மன்மனாபவ! அவ்வளவு தான். இங்கு வந்து அமர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நடக்கும் போதும் உலாவும் போதும் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். சந்தோஷத்தைப் பேணுங்கள். உங்கள் உணவும் பானமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் அங்கு போய் ஓர் இளவரசனாகப் பிறப்பெடுப்பதற்கு எவ்வளவு தூரம் தூய்மையானவர்கள் ஆகவேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் முன்னேறும் போது உலகின் நிலைமை மிக மோசமானதாக இருக்கும். உண்பதற்கு போதியளவு உணவும் கிடையாது. அத்துடன் நீங்கள் புல்லை உண்ணத் தொடங்கி விடுவீர்கள். அப்பொழுது வெண்ணெய் இல்லாமல் என்னால் வாழ முடியாது என நீங்கள் கூற மாட்டீர்கள்! நீங்கள் எதனையும் பெற மாட்டீர்கள். இப்பொழுதும் கூட பல இடங்களில் மக்கள் புல்லுடன் வாழ்கின்றார்கள். நீங்கள் மிகவும் சௌகரியமாக பாபாவின் வீட்டில் இருக்கின்றீர்கள். ஒரு வீட்டில் தந்தை அவருடைய குழந்தைகளுக்கே முதலில் உணவு ஊட்டுகிறார். உலகம் இப்பொழுது மிகவும் கெட்டுவிட்டது. நீங்கள் மிக்க சந்தோஷத்துடன் இங்கே அமர்ந்துள்ளீர்கள். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள்! உங்களுக்கும் பிறருக்கும் நன்மையையே செய்யுங்கள்! பின்னர் அவர்கள் தன்னாலேயே வருவார்கள். அவர்களுடைய பாக்கியம் விழித்தெழும். அதனை விழித்தெழச் செய்ய வேண்டும். எல்;லையற்ற இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் முன்னைய கல்பத்தில் செய்தது போலவே முயற்சியைச் செய்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பேண வேண்டும். நீங்கள் பாப்தாதாவின் படத்தை பார்த்தவுடனேயே சந்தோஷத்தினால் உங்களுக்கு புல்லரிப்பு ஏற்பட வேண்டும். அந்த சந்தோஷமென்ற பாதரசம் நிலையாக இருக்க வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சதா சந்தோஷத்தைப் பேணுவதற்காக இந்த எல்லையற்ற ஞானத்தை உங்கள் புத்தியிலே வைத்திருங்கள். உங்களுடைய புத்தியை ஞானரத்தினங்களால் நிரப்பி, உங்களுக்கும் பிறருக்கும் நன்மை செய்யுங்கள். இந்த ஞானத்தில் மிகமிகத் திறமை சாலிகள் ஆகுங்கள்.
2. உங்களுடைய இராச்சிய பாக்கியத்தை எதிர்கால 21 பிறவிகளுக்கு பெறுவதற்கு உங்களுடைய மூட்டை முடிச்சுக்கள் அனைத்;தையும் மாற்றுங்கள். இந்த அசுத்தமான உலகிலிருந்து விடுதலை பெறுவதற்கு வழிமுறைகளை உருவாக்குங்கள்.ஆசீர்வாதம்:
ஒவ்வொரு செயலின் விதையையும் பலனளிக்கச் செய்யும் ஒரு தகுதியான ஆசிரியர் ஆகுவீர்களாக.ஒரு தகுதியான ஆசிரியர் கற்பித்தல்களின் சொரூபமாக இருப்பவர் ஆவார், ஏனெனில் உங்கள் வடிவத்தினூடாக கற்பித்தல்களை கொடுப்பதே அதனை கொடுப்பதற்கான இலகுவான வழிமுறையாகும். அத்தகைய ஆசிரியர்கள் தமது ஒவ்வொரு அடியினூடாகவும் கற்பித்தல்களை வழங்குகின்றார்கள். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் வெறும் வார்த்தை அல்ல, ஆனால் மேன்மையான வாசகமாகும். அவர்களின் ஒவ்வொரு செயலினதும் விதை பலனளிக்கின்றது. அது வீணானதாக ஆக முடியாது. அத்தகைய தகுதியான ஆசிரியர்களின் எண்ணங்கள் ஆத்மாக்களுக்கு புதிய உலகிற்கான உரிமையை கோர உதவுகின்றது.
சுலோகம்:
‘மன்மனாபவ’ என்ற ஸ்திதியில் நிலைத்திருந்தால், நீங்கள் அலௌகீக சந்தோஷத்தையும் உங்கள் மனதில் இனிமையானதொரு ஸ்திதியையும் நீங்கள் அனுபவம் செய்வீர்கள்.