17.03.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞானக்கடலாகிய தந்தையின் மூலம் நீங்கள் மாஸ்டர் ஞானக் கடல்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளதால், திரிநேற்றி, திரிகாலதரிசி, திரிலோகிநாத் ஆவீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் உலகின் ஆன்மீகச் சேவையைச் செய்ய முடியாது, ஏன்?

பதில்:
ஏனெனில் நீங்கள் மாத்திரமே பரமாத்மாவிடமிருந்து சக்தியைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்களான நீங்கள் பரமாத்மாவிடமிருந்து முதலில் ஞான ஊசியைப் பெறுகின்றீர்கள், அதன் மூலம் நீங்கள் ஐந்து விகாரங்களை வெற்றி கொண்டு, பின்னர் நீங்கள் மற்றவர்களையும் அவ்வாறு செய்யக்கூடியவர்களாக ஆக்குகிறீர்கள். வேறு எவராலும் அத்தகைய சேவையைச் செய்ய முடியாது; குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே ஒவ்வொரு கல்பமும் இந்த ஆன்மீகச் சேவையைச் செய்கின்றீர்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் தந்தையின் நினைவில் அமர வேண்டும். நீங்கள் சரீரதாரிகளின் நினைவில் அமரக் கூடாது. வருகின்ற புதியவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. அவருடைய பெயர் மிகவும் இலகுவானது: சிவபாபா. குழந்தைகள் தந்தையை அறியாமல் இருப்பது அத்தகையதோர் அற்புதம்! சிவபாபா அதிமேன்மையானவரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவருமாவார். அவர் தூய்மையற்றவர்கள் அனைவரையும் தூய்மையாக்குகிறார், அவர் அனைவருடைய துன்பங்களை அகற்றுபவர் என அழைக்கப்படுகின்றார். எவ்வாறாயினும், “அவர் யார்” என்பது பிரம்ம குமாரிகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. நீங்கள் அவருடைய பேரன்களும் பேத்திகளும் ஆவீர்கள். எனவே, உங்களுக்கு நிச்சயமாகத் தந்தையையும், அவருடைய படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் அனைத்தையும் தந்தையிடமிருந்தே அறிந்து கொள்கிறீர்கள். இது தூய்மையற்ற உலகம். அவர் எவ்வாறு கலியுகத்தின் தூய்மையற்றவர்கள் அனைவரையும் தூய்மையாக்கி, அவர்களைச் சத்தியயுகத்தவர்களாக ஆக்குகிறார் என்பது பிரம்ம குமாரிகளைத் தவிர உலகத்திலுள்ள வேறெவருக்கும் தெரியாது. தந்தை மாத்திரமே உங்களைச் சீரழிந்த கலியுகத்திலிருந்து அகற்றி, உங்களுக்குச் சத்தியயுகத்துச் சற்கதியை அருள்கின்றார். பாரதத்தில் மாத்திரமே அவர்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அவர் நிச்சயமாக வந்தாலும், அவர் எதைக் கொடுக்கின்றார் என்பது பாரத மக்களுக்குத் தெரியாது. மக்கள் ஒவ்வொரு வருடமும் சிவனின் பிறந்த நாளை கொண்டாடினாலும், அவர்களுக்கு மூன்றாவது ஞானக் கண் இல்லை. இதனாலேயே அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது.

பாடல்: ஓ கடவுளே, குருடர்களாகிய எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்!

அவர்கள் பார்வையின்றி இருப்பதாகக் கூறுகின்ற இந்தப் பாடல் மனிதர்களால் இயற்றப்பட்டது. அனைவரும் பௌதீகக் கண்களைக் கொண்டிருந்தாலும், தாங்கள் பார்வையற்று இருப்பதாக அவர்கள் ஏன் கூறுகிறார்கள்? மூன்றாவது ஞானக் கண்ணை கொண்டவர்கள் எவரும் இல்லை என்று தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். தந்தையை அறியாமல் இருப்பதே அறியாமை என்று அழைக்கப்படுகிறது. தந்தையைத் தந்தையின் மூலம் அறிந்து கொள்வதே, ஞானமாகும். தந்தை உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் மூன்றாவது ஞானக் கண்ணைக் கொடுக்கின்றார், அதன் மூலம் நீங்கள் முழுப் படைப்பினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்துகொள்கிறீர்கள். ஞானக் கடலின் குழந்தைகளாகிய நீங்கள் மாஸ்டர் ஞானக் கடல்கள் ஆகுகின்றீர்கள். மூன்றாவது ஞானக் கண்ணைக் கொண்டிருப்பதென்றால் திரிநேற்றி, திரிகாலதரிசி, திரிலோகநாதர் ஆகுவதாகும். சத்தியயுக அதிபதிகளாக இருந்த இலக்ஷ்மியும், நாராயணனும் தங்களது ஆஸ்தியை எவ்வாறு பெற்றார்கள் என்பது பாரத மக்களுக்குத் தெரியாது. அவர்கள் எப்பொழுது வந்தார்கள்? அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள்? அவர்களுக்கு இவை எதுவுமே தெரியாது. தேவர்கள் தூய்மையானவர்கள். நிச்சயமாகத் தந்தை மாத்திரமே அவர்களைத் தூய்மையாக்குகிறார். தேவர்களையும், சிவனையும் நம்புகின்ற பாரத மக்களாகிய உங்களுக்கே, தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். பாரதத்திலேயே சிவனின் பிறப்பு இடம்பெற்றது. கடவுளே அதி மேன்மையானவர். இங்கேயே மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஜெகதாம்பாள், ஜெகத்பிதாவாகிய, சரஸ்வதியினதும், பிரம்மாவினதும் பிறந்த நாட்களும் இங்கேயே இடம்பெறுகின்றன் பாரதத்தில் மட்டுமே அவை கொண்டாடப்படுகின்றன. அச்சா, இலக்ஷ்மியும், நாராயணனும் இங்கேயே பிறக்கின்றார்கள்; அவர்களே இராதையும், கிருஷ்ணனும் ஆவார்கள். பாரத மக்கள் இதனையேனும் புரிந்துகொள்வதில்லை! அவர்கள் கூறுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எனவே நிச்சயமாக அனைவரும் தூய்மையற்றவர்கள். சாதுக்கள், புனிதர்கள், ரிஷிகள், முனிகள் அனைவரும் கூவியழைக்கிறார்கள்: வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! மறுபுறத்தில் கங்கையே தூய்மையாக்குபவர் என அவர்கள் நம்புவதால் அவர்கள் கும்ப மேலாவிலே தமது பாவங்களைக் கழுவச் செல்கிறார்கள். வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள் என்று அவர்கள் தூய்மையாக்குபவரைக் கூவியழைக்கிறார்கள், ஆனால் ஒரு மனிதரால் எவ்வாறு எவரையும் தூய்மையாக்க முடியும்? தந்தை விளங்கப்படுத்துகிறார் ஆரம்பத்தில் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபொழுது, நீங்கள் அனைவரும் தூய்மையாக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர்களாக இருக்கிறீர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: கடவுளே, எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்! எங்கே செல்வதற்கான பாதையைக் காட்டுவது? அவர்கள் கூறுகிறார்கள்: “பாபா, எங்களுக்கு ஜீவன்முக்திக்கான பாதையைக் காட்டுங்கள்! எங்களிடம் ஐந்து விகாரங்கள் உள்ளன. பாபா, நாங்கள் அனைவரும் சுவர்க்கத்தில் இருந்தபொழுது, விகாரமற்றிருந்தோம். இப்பொழுது நாம் விகாரமுடையவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகிவிட்டோம்; இதன் இரகசியத்தை எங்களுக்குக் கூறுங்கள்”. இவை கட்டுக் கதைகள் அல்ல. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஸ்ரீமத் பகவத்கீதையே கடவுளால் பாடப்பட்ட கீதையாகும். அசரீரியான கடவுளே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவரர். மனிதர்களைக் கடவுள் என அழைக்க முடியாது. தந்தை கூறுகிறார்: எத்தனையோ மகத்தான குருமார்கள் பாரதத்தில் இருக்கின்றபொழுதிலும், அது ஏன் சிப்பி போன்று தூய்மையற்றதாகி விட்டது? பாரதம் சுவர்க்கமாக இருந்தது நேற்றைய விடயமாகும். பாபா பாரதத்திற்குச் சுவர்க்கம் எனும் வெகுமதியைக் கொடுத்தார். அவர் வந்து, தூய்மையற்ற பாரத மக்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, அவர்களைத் தூய்மையாக்கினார். தந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை குழந்தைகளிடம் அவர்களின் சேவையாளராக வந்திருக்கின்றார். தந்தையே ஆன்மீகச் சேவையாளர். மனிதர்கள் அனைவரும் பௌதீகச் சேவையாளர்கள். சந்நியாசிகளும் பௌதீகச் சேவையாளர்களே. அவர்கள் அமர்ந்திருந்து, சமயநூல்கள் போன்றவற்றை உரைக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: அசரீரியான நான், ஒரு சாதாரண, பழைய, பௌதீகச் சரீரத்தில் பிரவேசித்து, குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன்: ஓ பாரதக் குழந்தைகளே! பாருங்கள்! ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து, ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அதைக் கூறுபவர் பிரம்மா அல்ல, இச்சரீரத்தை ஆதாரமாக எடுத்திருக்கின்ற அசரீரியான தந்தையே கூறுகின்றார். சிவனுக்கெனச் சொந்தச் சரீரம் இல்லை. சாலிகிராம் ஆத்மாக்களுக்குத் தங்களுடைய சொந்தச் சரீரங்கள் உள்ளன. மறு பிறவி எடுப்பதால், அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர். இப்பொழுது முழு உலகமும் தூய்மையற்றுள்ளது; ஒருவரேனும் தூய்மையானவர்கள் இல்லை. நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், பின்னர் உங்களில் கலப்படம் கலந்ததால், நீங்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் சென்றீர்கள். பாரத மக்களாகிய உங்களிடம் சிவபாபா வந்து, 'பாக்கிய இரதம்" என அழைக்கப்படுகின்ற ஒரு சரீரத்தைத் தத்தெடுக்கிறார். சங்கரரும் சிவனும் இணைந்திருப்பதாக அவர்கள் நம்புவதால், ஆலயங்களில் சங்கரரின் உருவத்தைக் காட்டுகிறார்கள். சிவன் அசரீரியானவர், சங்கரரோ சூட்சுமமானவர் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. சிவனும், சங்கரரும் எவ்வாறு இணைந்திருக்க முடியும்? அச்சா, எருதை ஓட்டுபவர் யார்? சிவனா, சங்கரரா? சூட்சும உலகிற்கு ஓர் எருது எங்கிருந்து வரும்? அசரீரியான உலகில் சிவன் வசிக்கிறார். சங்கரரோ சூட்சும உலகில் இருக்கிறார். சகல ஆத்மாக்களும் அசரீரியான உலகில் உள்ளனர். சூட்சும உலகில் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மாத்திரமே இருக்கின்றார்கள். அங்கே மிருகங்கள் இல்லை. தந்தை கூறுகிறார்: நான் ஒரு சாதாரண, பழைய சரீரத்தில் பிரவேசித்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். உங்களது சொந்தப் பிறவிகளை பற்றிக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியாது. சத்திய யுகத்தில் இருந்து இன்றுவரை நீங்கள் எத்தனை பிறவிகள் எடுத்துள்ளீர்கள்? நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். இது இப்பொழுது உங்கள் இறுதிப் பிறவி. தூய அமரத்துவ பூமியாக இருந்த பாரதம், இப்பொழுது தூய்மையற்ற மரண பூமியாகிவிட்டது. ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியளிப்;பவர். அசரீரியான பரமாத்மாவாகிய பரம தந்தை, சிவனின் மாலையே உருத்திர மாலையாகும். ஸ்ரீ ஸ்ரீ உருத்திரரின் 108 மணிமாலை எனக் கூறப்படுகிறது. அனைவரும் சிவனின் கழுத்தைச் சுற்றிய மாலையில் உள்ளவர்களே. எனவே தந்தையே தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியளிப்பவரும், அனைவருக்கும் அவர்களது ஆஸ்தியைக் கொடுப்பவரும் ஆவார். பௌதீகத் தந்தையிடம் இருந்து ஓர் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியே பெறப்படுகிறது. சந்தோஷம் காக்கையின் எச்சத்தைப் போன்றது எனச் சந்நியாசிகள் கருதுகிறார்கள். தந்தை கூறுகிறார்: உண்மையில் உங்கள் அந்தச் சந்தோஷம் காக்கையின் எச்சத்தைப் போன்றதே. தந்தையே வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகிறார், அதாவது, அவர் ஞானத்தால் முட்களை மலர்களாக மாற்றுகிறார். இதுவே கீதையின் ஞானம். எந்த மனிதராலும் இந்த ஞானத்தை விளங்கப்படுத்த முடியாது. ஞானக்கடலாகிய, தூய்மையாக்குபவரான தந்தையால் மாத்திரமே அதை விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இப்பொழுது பெறும் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து மாத்திரமே பெறமுடியும். நீங்கள் மாத்திரமே சற்கதியைப் பெறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்திலும், ஏனையோர் கலியுகத்திலும் இருக்கிறார்கள். இது இப்பொழுது கலியுக இறுதியாகும். மகாபாரத யுத்தம் உங்கள் முன்னிலையில் உள்ளது. 5000 வருடங்களுக்கு முன்னர், நீங்கள் இராஜயோகம் கற்ற பின்னர், வைக்கோற்போர் தீப்பற்றியது. நீங்கள் இப்பொழுது இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவதற்காக இராஜயோகம் கற்கிறீர்கள். ஏனைய அனைத்தும் பக்தி மார்க்கமாகும். தந்தை வரும்பொழுது, சுவர்க்க வாயில்களைத் திறக்கின்றார். தந்தை கூறுகிறார்: ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் பாரதத் தாய்மார்களாகிய, சிவசக்திகளான நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறீர்கள். பாரதத் தாய்மார்களும் சிவசக்திகளுமாகிய நீங்களே பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குபவர்கள். நீங்கள் சிவனின் குழந்தைகள். நீங்கள் அவரை நினைவுசெய்கிறீர்கள். நீங்கள் சிவனிடமிருந்து சக்தியை எடுத்து, எதிரியான ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்கிறீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னரும் குழந்தைகளாகிய நீங்கள் பாரதத்தின் ஆன்மீகச் சேவையைச் செய்தீர்கள். அந்தச் சமூக சேவையாளர்கள் பௌதீகச் சேவையைச் செய்கிறார்கள். இது ஆன்மீகச் சேவையாகும். பரமாத்மா வந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஊசி போடுகிறார்; அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆத்மாக்களே செவிமடுப்பவர்கள். நீங்கள் ஆத்மாக்கள், நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். நீங்கள் ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுக்கிறீர்கள். உங்களுக்கு 84 பிறவிகளில் 84 பெற்றோர்கள் உள்ளார்கள். சத்திய, திரேதா யுகங்களில் நீங்கள் சுவர்க்க சந்தோஷத்தைப் பெற்றீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் சந்தோஷ ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பாரதம் உண்மையாகவே இந்த ஆஸ்தியைப் பெற்றது. பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. அங்கே அசுரர்கள் போன்றவர்கள் இருக்கவில்லை. இந்தப் பழைய உலகம் இப்பொழுது தீக்கிரையாகப் போகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நான் வந்து ஞான யாகத்தை உருவாக்குகிறேன். நீங்கள் அனைவரும் தூய்மையான தேவர்களாகுகிறீர்கள். ஆயிரக் கணக்கான நீங்கள் தேவர்களாகுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குச் சற்கதி அருள்வதற்குத் தந்தை வந்திருக்கிறார். அவர் உங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றுகிறார். அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானம் எனும் மூன்றாவது கண்ணைக் கொடுப்பதால், நீங்கள் முழு நாடகத்தையும், சிவபாபா என்ன பாகத்தை நடிக்கிறார் என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள். பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். விஷ்ணுவின் தொப்பூள்க் கொடியிலிருந்து பிரம்மா தோன்றினார் எனக் காட்டப்பட்டுள்ளது. பிரம்மா, விஷ்ணு ஆகுகிறார்; பின்னர் பிராமணர்கள், தேவர்களாக ஆகுகிறார்கள். விஷ்ணு பிரம்மாவாகுவதற்கு 5000 வருடங்கள் எடுக்கின்றன. இந்த ஞானம் உங்களுக்கு உள்ளது. பிராமணர்களாகிய உங்களது தாமரை தொப்பூள்க் கொடியிலிருந்து விஷ்ணு பூமி வெளிப்படுகிறது. விஷ்ணுவின் தொப்பூளில் இருந்து பிரம்மா தோன்றி, வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும்; சாராம்சத்தினைக் கூறுவதாகக் காட்டப்பட்டுள்ள ஒரு படத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இப்பொழுது பிரம்மாவின் மூலம் முழு சாராம்சத்தையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான்கு பிரதான சமயநூல்கள் உள்ளன. முதலாவது தேவ தர்மத்தின் சமயநூல் கீதையாகும். கீதையைப் பாடியவர் யார்? சிவபாபாவே ஆவார். சிவபாபாவே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், சந்தோஷக் கடலும் ஆவார். கிருஷ்ணர் அன்றி, அவரே பாரதத்தைச் சுவர்க்கமாக்கினார். கிருஷ்ணர் என்னிடம் ஞானத்தைக் கேட்டு, கிருஷ்ணர் ஆகினார். எனவே இது மறைமுகமானது, இல்லையா? புதிய குழந்தைகளால் இவ் விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இது நரகம் எனவும், அது சுவர்க்கம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபாபா சுவர்க்கத்தை ஸ்தாபித்தார், அங்கு இலக்ஷ்மியும், நாராயணனும் ஆட்சிபுரிந்தார்கள். நீங்கள் இப்பொழுது மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: துன்ப பூமியாகிய மரண பூமியில் இதுவே உங்களது இறுதிப் பிறவியாகும். பாரதமே அமரத்துவ பூமியாக இருந்தது. துன்பம் என்ற குறிப்பே அங்கே இருக்கவில்லை. பாரதமே தேவதைகளின் பூமியாக இருந்தது; இப்பொழுது அது மயான பூமியாகி விட்டதால், அது மீண்டும் தேவதைகளின் பூமியாக வேண்டும். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்காகக் கற்கின்ற இடம். இது சந்நியாசிகள் அமர்ந்திருந்து, சமயநூல்களை உரைக்;கின்ற ஓர் ஆன்மீககூட்டம் அல்ல. ஒரு புதியவரால் ஏழு நாள் பாடநெறியை எடுக்காமல், இவ் விடயங்களில் எதனையும் புரிந்துகொள்ள முடியாது. இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் பக்தர்கள். அந்த ஆத்மாக்கள் கடவுளை நினைவுசெய்கிறார்கள். அனைவரும் ஒரேயொரு அன்புக்குரியவராகிய, கடவுளின் காதலிகள். தந்தை வந்து சத்திய பூமியை ஸ்தாபிக்கின்றார். அரைக் கல்பத்தின் பின், இராவணன் வந்து அதைப் பொய்மையான பூமியாக ஆக்குகிறான். இது இப்பொழுது சங்கம யுகமாகும். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, பாரதத்திற்கு உண்மையாக ஆன்மீக ரீதியில் சேவை செய்யுங்கள். சர்வசக்திவானான தந்தையிடமிருந்து சக்தியைப் பெற்று, உங்கள் எதிரியான ஐந்து விகாரங்களையும் வெற்றி கொள்ளுங்கள்.

2. மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்கு, நிச்சயமாகத் தூய்மையாகுங்கள். ஞானத்தைக் கிரகித்து, ஒரு முள்ளிலிருந்து மலராகுவதுடன், ஏனையோரையும் அவ்வாறு ஆகுமாறு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சொந்த மனதின் கட்டளைகளிலிருந்தும், பிறரின் கட்டளைகளிலிருந்தும் விடுபட்டவராகி, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், சந்தோஷத்தையும், இலேசான தன்மையையும் சதா அனுபவம் செய்வீர்களாக.

ஸ்ரீமத்திற்கேற்ப ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கின்ற குழந்தைகளின் மனங்கள், எப்பொழுதும் திருப்தியாக இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய மனங்களில் எவ்விதமான குழப்பத்தையும் கொண்டிருக்க மாட்டார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் இயல்பாகவே சந்தோஷத்தையும், இலேசான தன்மையையும் அனுபவம் செய்வீர்கள். இதனாலேயே உங்கள் மனங்களில் குழப்பம் இருக்கும்பொழுதெல்லாம், உங்கள் சந்தோஷத்தின் சதவீதம் சிறிதளவு குறைந்தாலும், இதனைச் சோதியுங்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில், நிச்சயமாக ஏதோ கீழ்ப்படிவின்மை இருக்கின்றது, இதனாலேயே நீங்கள் சூட்சுமமாகப் பரிசோதனை செய்து உங்களை உங்களுடைய சொந்த மனதின் கட்டளைகளிலிருந்தும், பிறரின் கட்டளைகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ள வேண்டும்.

சுலோகம்:
உங்கள் புத்தி எனும் விமானத்தின் மூலம் சூட்சும வதனத்தை அடைந்து, ஞான சூரியனின் கதிர்களை அனுபவம் செய்வதே, சக்திவாய்ந்த யோகத்தைக் கொண்டிருப்பதாகும்.


மாதேஷ்வரிஜியின் பெறுமதி மிக்க மேன்மையான வாசகங்கள்

ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான வேறுபாடு

ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள், சற்குரு முகவரைச் சந்தித்தபொழுது, ஓர் அழகிய சந்திப்பு இடம்பெற்றது. நாங்கள் இவ் வார்த்தைகளைப் பேசும்பொழுது, ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள் என்பதே அவற்றின் மிகச்சரியான அர்த்தம் ஆகும். நீண்டகாலமாக என்பதன் அர்;த்தமானது, ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்டகாலம் பிரிந்திருந்தார்கள் என்பதாகும். ஆத்மாக்களும் பரமாத்மாவும் ஒத்த தன்மையை உடையவர்கள் என்பதையும், அவர்களுக்கிடையில் ஓர் அடிப்படையான வேறுபாடு உள்ளது என்பதையும் இது நிரூபிக்கின்றது. எவ்வாறாயினும், உலக மக்கள் இதனை இனங்கண்டு கொள்ளாததால், ஆத்மாவாகிய நானே பரமாத்மா என்று இந்த வார்த்தைகள் அர்த்தப்படுவதாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். எனவே, ஆத்மாக்கள் மாயையின் தூசியினால் மூடப்பட்டுள்ளதால், தங்கள் ஆதி ரூபத்தை மறந்து விட்டார்கள். எனவே, மாயையின் தூசு அகற்றப்படும்பொழுது, ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா ஆகுகின்றார் என அவர்கள் கூறுகின்றார்கள். ஆகவே, ஆத்மாக்களை இவ்விதமாக வேறானவர்களாக அவர்கள் கருதுகின்றார்கள். ஆத்மாவே பரமாத்மா என்று அவர்கள் கூறுவது மக்கள் கொண்டுள்ள இன்னுமோர் அபிப்பிராயமாகும், ஏனெனில் ஆத்மாக்கள் தங்களை மறந்து விட்டதால், சந்தோஷமற்றவர்கள் ஆகிவிட்டார்கள். ஓர் ஆத்மா தன்னை இனங்கண்டு, தூய்மையாகும்பொழுது, அந்த ஆத்மா பரமாத்மாவில் இரண்டறக் கலந்து, ஒன்றாகுகின்றது. ஆகவே, அவர்கள் இவ்விதமாக ஆத்மாக்களை வேறானவர்களாகக் கருதுகின்றார்கள். ஆனால் ஆத்மாக்களும், பரமாத்மாவும் ஒத்த தன்மையை உடையவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஓர் ஆத்மாவினால் பரமாத்மாவாக ஆகவும் முடியாது, ஓர் ஆத்மாவினால் பரமாத்மாவில் இரண்டறக் கலக்கவும் முடியாது, பரமாத்மாவைத் தூசு எதுவும் மூடவும் முடியாது.

கர்ம பந்தனங்களே மன அமைதியின்மைக்கான காரணம், கர்மாதீத ஸ்திதியே அமைதிக்கான அடிப்படை.

உண்மையில், ஒவ்வொரு மனிதரும் மன அமைதியை அடைய விரும்புகின்றார், இதனாலேயே அவர்கள் இதற்கான பல வழிமுறைகளை உருவாக்கியுள்ளார்கள். எவ்வாறாயினும், இதுவரை எந்த மனமும் உண்மையில் அமைதியை அடைந்திராமைக்கான காரணம் என்ன? முதலில் மன அமைதியின்மைக்கான மூல காரணம் என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்பது அத்தியாவசியமாகும். கர்ம பந்தனத்தில் சிக்கிக் கொள்வதே, மன அமைதியின்மைக்கான மூல காரணமாகும். ஐந்து விகாரங்கள் எனும் கர்ம பந்தனங்களிலிருந்து மனிதர்கள் விடுபடும் வரையில், அவர்களால் அமைதியின்மையிலிருந்து விடுபட முடியாது. உங்கள் கர்ம பந்தனங்கள் துண்டிக்கப்படும்பொழுதே, நீங்கள் மன அமைதியை அடைகின்றீர்கள், அதாவது, உங்களால் ஜீவன்முக்தியை அடைய முடியும். எவ்வாறு உங்கள் கர்ம பந்தனங்களைத் துண்டிக்கலாம் என்பதைப் பற்றி நீங்கள் இப்பொழுது சிந்திக்க வேண்டும். எவரால் உங்களை அவற்றிலிருந்து விடுவிக்க முடியும்? எந்த மனித ஆத்மாவினாலும் இன்னுமொரு மனித ஆத்மாவை விடுவிக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். பரமாத்மாவினால் மாத்திரமே கர்மக் கணக்குகளின் கர்ம பந்தனங்களைத் துண்டிக்க முடியும். அவர் மாத்திரமே வந்து, யோக சக்தி மூலம் எங்களைக் கர்ம பந்தனங்களிலிருந்து விடுவிக்கின்றார், இதனாலேயே கடவுள் சந்தோஷத்தை அருள்பவர் என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் ஓர் ஆத்மா, உண்மையில் நீங்கள் யாருடைய குழந்தை, உங்களுடைய உண்மையான தெய்வீகக் குணங்கள் எவை எனும் ஞானத்தை நீங்கள் கொண்டிருக்கும்பொழுதே, இவை அனைத்தும் உங்கள் புத்தியில் இருக்கும்பொழுதே, கர்ம பந்தனங்கள் துண்டிக்கப்பட முடியும். கடவுளிடமிருந்து மாத்திரம் நாங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றோம், அதாவது, கர்ம பந்தனங்களைக் கடவுளால் மாத்திரமே துண்டிக்க முடியும். அச்சா.