09.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, மௌனமாக இருப்பது மகத்தான தெய்வீகக் குணமாகும். மௌனமாக இருந்து தொடர்ந்தும்; தந்தையை நினைவு செய்யும்பொழுது, நீங்கள் பெரும் வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள்.கேள்வி:
' கர்மத்தைத் துறத்தல்" என்று அர்த்தப்படுகின்ற எவ் வார்த்தைகளை நீங்கள் கூறக்கூடாது?பதில்:
'நாடகத்தில் இருந்தால், நான் அதைச் செய்வேன்". பாபா கூறுகிறார்: இவை 'கர்மத்தைத் துறத்தல்" என்பதைப் போன்று அர்;த்தப்படுகின்றது. நீங்கள் நிச்சயமாகச் செயல்களைச் செய்ய வேண்டும். முயற்சி செய்யாமல், உங்களால் ஒரு குவளைத் தண்ணீரைக் கூடப் பெற முடியாது. ஆகவே, 'அது நாடகத்தில் இருப்பின்" எனக் கூறி, அனைத்தையும் ஒருபுறம் விட்டுவிட வேண்டாம். நீங்கள் புதிய இராச்சியத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால், அப்பொழுது பெருமளவு முயற்சியைச் செய்யுங்கள்.
ஓம் சாந்தி.
முதலில் குழந்தைகளாகிய நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள்: தந்தையை நினைவுசெய்வதுடன், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள்! மன்மனாபவ! இவ்வார்த்தைகள் வியாசரால் எழுதப்பட்டவை. தந்தை சமஸ்கிருதத்தில் விளங்கப்படுத்தவில்லை. தந்தை ஹிந்தியில் விளங்கப்படுத்துகிறார். அவர் குழந்தைகளுக்குக் கூறுகிறார்: உங்கள் தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள்! இவை மிகவும் இலகுவான வார்த்தைகள்: 'குழந்தைகளே, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்". ஒரு லௌகீகத் தந்தை கூறுவதில்லை: குழந்தைகளே, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். இது புதியதொன்று. தந்தை கூறுகிறார்: ஓ குழந்தைகளே, உங்கள் அசரீரியான தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள்! ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆன்மீகத் தந்தையை நினைவுசெய்தல் தங்கள் கடமையெனவும், அப்பொழுது மாத்திரமே தங்கள் பாவங்கள் அழிக்கப்படும் எனவும் குழந்தைகள் புரிந்துகொள்வதால் தந்தையை நினைவுசெய்யுமாறு மீண்டும், மீண்டும் குழந்தைகளுக்குக் கூறுவது சரியல்ல. குழந்தைகளாகிய நீங்கள் சதா நினைவிலிருக்க முயற்சி செய்ய வேண்டும். இந்நேரத்தில் எவராலும் சதா நினைவில் இருக்க முடியாது; அதற்குக் காலம் எடுக்கிறது. இந்த பாபாவுமே கூறுகிறார்: என்னாலும் சதா நினைவில் இருக்க முடிவதில்லை. அந்த ஸ்திதி இறுதியில் இருக்கும். தந்தையை நினைவுசெய்தலே குழந்தைகளான நீங்கள் செய்ய வேண்டிய முதல் முயற்சி. சிவபாபாவிடமிருந்தே ஆஸ்தி பெறப்படுகிறது. இது பாரத மக்களுக்கே பொருந்துகிறது. தேவ இராச்சியத்தின் ஸ்தாபனை நடைபெறுகிறது. ஏனைய சமயங்களின் ஸ்தாபனையில் சிரமமேதும் இல்லை. அவர்கள் அனைவரும் தமது சமய ஸ்தாபகரைத் தொடர்ந்து கீழிறங்குகிறார்கள். தேவ தர்மத்திற்கு உரியவர்கள் ஞானத்தின் மூலம் ஈடேற்றப்பட வேண்டும். அதற்கு முயற்சி தேவை. தந்தை சங்கமயுகத்தில் இராச்சியம் ஒன்றை ஸ்தாபிக்க வருகிறார் எனக் கீதை என்ற சமயநூலிற் குறிப்பிடப்படவில்லை. பாண்டவர் மலைக்குச் சென்றார்கள் எனவும், அதன்பின்னர் பிரளயம் முதலியன ஏற்பட்டது எனவும் கீதையில் எழுதப்பட்டுள்ளது. உண்மையில் அது அவ்வாறல்ல. இப்பொழுது நீங்கள் உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்காகக் கற்கின்றீர்கள். ஏனைய பாடசாலைகளில் அவர்கள் உங்களுக்குத் தற்;காலத்திற்கே கற்பிக்கின்றனர். சாதுக்களும், புனிதர்களும் எதிர்காலத்திற்காகக் கற்பிக்கின்றார்கள், ஏனெனில் தாங்கள் தங்களுடைய சரீரங்களை விடுத்து முக்தி தாமத்திற்குச் சென்று பிரம்ம தத்துவத்;துடன் கலந்து விடுவார்கள்; ஆத்மாக்கள் பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். ஆகையால் அதுவும் எதிர்காலத்திற்கானது. எவ்வாறாயினும், வேறு எவருமன்றி ஆன்மீகத் தந்தை மாத்திரமே உங்களுக்கு எதிர்காலத்திற்காகக் கற்பிக்கின்றார். அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஒரேயொருவரே என நினைவுகூரப்படுகிறது. அவை அனைத்தும் தவறானவை. தந்தை மட்டும் வந்து விளங்கப்படுத்துகிறார். அம்மக்கள் தொடர்ந்தும் ஆன்மீக முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்துடன் கலப்பதற்காகச் செய்கின்ற ஆன்மீக முயற்சி தவறானது. எவரும் எவருடனும் இரண்டறக் கலக்கப் போவதில்லை. பிரம்ம தத்துவம் கடவுள் அல்ல. அவை அனைத்தும் தவறானவை. பொய்யான பூமியில்; அனைவரும் பொய்களையே கூறுகிறார்கள். சத்திய பூமியிலுள்ள அனைவரும் உண்மையையே கூறுகிறார்கள். பாரதத்தில் சத்தியபூமி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது அது பொய்மைப் பூமியாகும். தந்தை பாரதத்தில் மாத்திரமே வருகிறார். மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் சிவன் வந்து பாரதத்தைச் சத்திய பூமி ஆக்கினார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர் வருவதில்லை எனவும், அவர் பெயர், வடிவத்திற்கு அப்பாற்பட்டவர் எனவும் அவர்கள் நம்புகிறார்கள். அவர் தூய்மையாக்குபவரும், ஞானக்கடலும் என அவர்கள் புகழ் பாடுகிறார்கள். அதனை அவர்கள் கிளிகளைப் போல் பாடுகிறார்கள். தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். மக்கள் கிருஷ்ணரின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்; கீதையின் பிறந்தநாளும் உள்ளது. கிருஷ்ணர் வந்து கீதையைக் கூறினார் என அவர்கள் கூறுகிறார்கள். எவருக்கும் சிவனின் பிறந்தநாளைப் பற்றியோ, அவர் என்ன செய்தார், எப்பொழுது வந்தார் என்பதோ தெரியாது. அவர் பெயர், வடிவத்திற்கு அப்பாற்பட்டவர் என அவர்கள் கூறுவதால், அவர் எவ்வாறு வருவார்? தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறேன், பின்னர் இந்த ஞானம் மறைந்து விடுகிறது. தந்தையே விளங்கப்படுத்துகிறார்: நான் வந்து பாரதத்தை மீண்டும் ஒருமுறை சுவர்க்கம் ஆக்குகிறேன். தூய்மையாக்குபவர் ஒருவர் இருக்கவே வேண்டும். பாரதத்தைப் பற்றியதே முக்கிய விடயமாகும். பாரதமே தூய்மையற்றதாக உள்ளது. பாரதத்தில் மாத்திரமே மக்கள் தூய்மையாக்குபவரைக் கூவி அழைக்கிறார்கள். 'இந்த உலகம் அசுர இராச்சியம்" என மக்களே கூறுகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் குண்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். அவற்றினாலேயே விநாசம் ஏற்படும். அவர்கள் அதற்கான ஆயத்தங்களைச் செய்கிறார்கள். இராவணனால் அவர்கள் தூண்டப்பட்டதைப் போல் அது உள்ளது. இராவண இராச்சியம் எப்பொழுது முடிவுக்கு வரும்? பாரத மக்கள் 'கிருஷ்ணர் வரும்பொழுது" எனக் கூறுகிறார்கள். நீங்கள் சிவபாபா வந்து விட்டார் என விளங்கப்படுத்துகிறீர்கள். அவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள்! இவ்வார்த்தைகளை வேறெவராலும் கூற முடியாது. தந்தை மாத்திரமே கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதால்;, கலப்படம் அகற்றப்படும்! ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், ஆனால் இப்பொழுது உங்களில் கலப்படம் உள்ளது. அக்கலப்படம் நினைவின் மூலம் மாத்திரமே அகற்றப்பட முடியும். இதுவே நினைவு யாத்திரை என அழைக்கப்படுகிறது. நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். என்னை நினைவுசெய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது யோக அக்கினி என அழைக்கப்படுகிறது. தங்கத்தின்; மாசுக்கள் அகற்றப்படுவதற்காக, தீயில் இடப்படுகிறது. அதில் கலப்படம் சேர்க்கப்படுவற்காகவும் தங்கம் தீயில் இடப்படுகிறது. தந்தை கூறுகிறார்: அது காமச்சிதை. இது ஞானச்சிதை. கலப்படம் யோக அக்கினியினால் அகற்றப்பட்டு, பின்னர் நீங்கள் கிருஷ்ணரின் பூமிக்குச் செல்வதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். மக்கள் கிருஷ்ணரின் பிறந்தநாளன்று கிருஷ்ணரை வரும்படி அழைக்கிறார்கள். கிருஷ்ணர் தந்தையிடமிருந்து தனது ஆஸ்தியைப் பெற்றார் என்பது உங்களுக்குத் தெரியும். கிருஷ்ணர் சுவர்க்கத்தின் அதிபதியாக இருந்தார். தந்தையே கிருஷ்ணருக்கு அந்த அந்தஸ்தைக் கொடுத்தார். இராதையும், கிருஷ்ணரும் பின்னர் இலக்ஷ்மியும், நாராயணனும் ஆகினார்கள். மக்கள் இராதையினதும் கிருஷ்ணரினதும் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். எவரும் இலக்ஷ்மி, நாராயணனைப் பற்றிய எதையும் புரிந்துகொள்வதில்லை; அவர்;கள் முற்றிலும் குழப்பமடைந்து இருக்கின்றனர்! குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்துகொள்வதால், இதை மற்றவர்களுக்கும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். முதலில், அவர்களிடம் வினவுங்கள்: கீதையில் கூறப்பட்டுள்ளது. சதா என்னை மட்டுமே நினைவுசெய்யுங்கள்! இதனைக் கூறியவர் யார்? கிருஷ்ணர் அதைக் கூறியதாக அவர்கள் நம்புகிறார்கள். கடவுள் அசரீரியானவர் என்பதும், அவரிடமிருந்தே அதி உயர்ந்த மேன்மையான வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். பரமாத்மாவான பரமதந்தையே அதிமேலானவர். அவரின் வழிகாட்டல்கள் நிச்சயமாக அதிமேலானவை. அவருடைய ஸ்ரீமத்தின் மூலமே அனைவரும் சற்கதியைப் பெறுகிறார்கள். கீதையின் கடவுள் என பிரம்மா, விஷ்ணு, அல்லது சங்கரரைக் கூடக் கூறமுடியாது. 'சரீரதாரியான ஸ்ரீ கிருஷ்ணரே கீதையின் கடவுள்"; என அம்மக்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக எங்கேயோ ஒரு பிழை உள்ளது என்பதையே இது நிரூபிக்கின்றது. இது மனிதர்கள் செய்த பெரிய பிழை என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை மட்டுமே இராஜயோகத்தைக் கற்பித்தார். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். அவர்கள் செய்துள்ள பெரும் பிழைகளை வலியுறுத்திக் காட்டுங்கள். 'கடவுள் சர்வவியாபி" எனக் கூறுவதே முதலாவது பிழையாகும். 'கிருஷ்ணரே கீதையின் கடவுள்" எனக் கூறுவது இரண்டாவது பிழையாகும். மற்றையது, கல்பத்தின் கால எல்லை நூறாயிரம் வருடங்கள் எனக் கூறுவதாகும். இவையே மிகப் பாரதூரமான பிழைகள். கல்பம் நூறாயிரக் கணக்கான வருடங்களாக இருக்க முடியாது. கடவுள் சர்வவியாபியாக இருக்க முடியாது. அவர் தூண்டுவதன் மூலம் அனைத்தையும் செய்து முடிக்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அது அப்படியல்ல. தூண்டுதலால் அவர் உங்களைத் தூய்மையாக்குவதில்லை. தந்தை தனிப்பட்ட முறையில் உங்கள் முன்னால் அமர்ந்து கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! “தூண்டுதல்" என்ற வார்த்தை பிழையானது. சங்கரின் தூண்டுதலால் அவர்கள் குண்டுகள் போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள் எனக் கூறினாலும், அவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த யாகத்திலிருந்தே விநாசத்தின் சுவாலைகள் வெளிவருகின்றன. அவர் எவரையும் தூண்டுவதில்லை. அவை அனைத்தும் விநாசத்தின் கருவிகளே. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அந்த முழுப் பாகமும் சிவபாபாவினுடையதே. பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரின் பாகங்களும் உள்ளன. பிராமணர்களாகிய உங்களைப் பிரம்மா உருவாக்குகிறார், நீங்கள் பின்னர் விஷ்ணு பூமிக்கு அதிபதிகள் ஆகுகிறீர்கள். 84 பிறவிகளின் சக்கரத்தினூடாகச் சுற்றி வந்த பின்னர், நீங்கள் பிரம்மாவின் குடும்பத்தில் ஒருவர் ஆகுகிறீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் சரஸ்வதியும் பிரம்மாவும் ஆகுகிறார்கள். அவர் (சிவபாபா) உங்களை இவர் மூலம் தத்தெடுக்கிறார் என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே இவர் மூத்த மம்மா ஆகுகிறார். அவர் (மம்மா) பின்னர் ஒரு கருவியாகுகிறார். தாய்மாரிடம் கலசம் கொடுக்கப்பட்டுள்ளது. சரஸ்வதியிடம் மிகப்பெரிய சித்தார் கொடுக்கப்பட்டது. அவரே அனைவரிலும் அதிதிறமைசாலி. எவ்வாறாயினும் அங்கு ஒரு சித்தாரோ, ஹார்மோனியம் போன்றவையோ இல்லை. சரஸ்வதியின் ஞான முரளி மிகச் சிறந்ததாகும். அவர் மிகவும் நன்றாகப் புகழப்பட்டார். அவர்கள் அவருக்குப் (மம்மா) பல பெயர்களைக் கொடுத்துள்ளனர். தேவியர் வணங்கப்படுகிறார்கள். இங்கு நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறீர்கள், பின்னர் பூஜிப்பவர்களாகி, உங்களையே நீங்கள் வழிபடுகிறீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இப்பொழுது நாங்கள் பிராமணர்கள், பின்னர் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆகுவோம். அரசரும், அரசியும் எவ்வாறோ, குடிமக்களும் அவ்வாறே. உயர்ந்த அந்தஸ்தைப் பெறும் தேவியர்களுக்குப் பல ஆலயங்கள் கட்டப்படுகின்றன. நன்றாகக் கற்று ஏனையோருக்கும் கற்பிப்பவர்களது பெயர்கள் மிகவும் போற்றப்படுகின்றன. நீங்களே பூஜிக்கத்; தகுதி வாய்ந்தவர்களாகவும், பின்னர் பூஜிப்பவர்களாகவும் ஆகுகிறீர்கள் என இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். சிவபாபா எப்பொழுதும் பூஜிக்கத்; தகுதிவாய்ந்தவர். சூரிய வம்சத்துத் தேவர்கள் பூஜிப்பவர்களாகவும், பின்னர் பக்தர்களாகவும் ஆகுகிறார்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுபவர்களின் ஏணி மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உங்களால் படங்களை உபயோகிக்காமலும் கூட எவருக்கேனும் விளங்கப்படுத்த முடியும். இதை இங்கு கற்பவர்களின் புத்தியில் முழு ஞானமும் இருக்கிறது. பாரத மக்கள் 84 பிறவிகளின் ஏணியில் ஏறி, இறங்குகிறார்கள்; அவர்கள் 84 பிறவிகள் எடுக்கிறார்கள். நாங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து, இப்பொழுது பூஜிப்பவர்களாகி விட்டோம். உங்களுக்கு 'ஹம்சோ, சோஹம்" என்பதன் அர்த்தம் மிக நன்றாகப் புரிகின்றது. ஓர் ஆத்மாவால், பரமாத்மாவாக முடியாது. தந்தை 'ஹம்சோ, சோஹம்" என்பதன் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நாங்கள் தேவர்களாக இருந்து, பின்னர் சத்திரியர்கள் ஆகினோம். 'ஹம்சோ" என்பதற்கு வேறு பொருள் இல்லை. பாரத மக்களே பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக இருந்து, பின்னர் பூஜிப்;பவர்கள் ஆகுகிறார்கள். வேறு சமயங்களில்; எவரும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருந்து, பின்னர் பூஜிப்;பவர்கள் ஆகுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர வம்சத்தில் ஒருவர்; ஆகுகிறீர்கள். நீங்கள் அத்தகையதொரு மிகவும் சிறந்த விளக்கத்தைப் பெற்றுள்ளீர்கள்! நாங்கள் தேவர்களாக இருந்தோம். ஆத்மாக்களாகிய நாங்கள் 'நிர்வாணா" தாமத்தில் வசித்தோம். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. உங்கள் முன்னிலையில் துன்பம் இருக்கும்பொழுது, நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் துன்ப வேளையில் வந்து உலகை மாற்றுகிறேன். நான் புதிய உலகை உருவாக்குகிறேன் என்பதில்லை. இல்லை; நான் வந்து பழைய உலகைப் புதியதாக்குகிறேன். தந்தை சங்கம யுகத்தில் வருகிறார். புதிய உலகம் இப்பொழுது உருவாக்கப்படுகிறது. பழைய உலகம் முடிவுக்கு வரவுள்ளது. இது ஓர் எல்லையற்ற விடயம். நீங்கள் தயாராhகும்பொழுது, முழு இராச்சியமும் தயாராhகி விடும். நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுகிறீர்களோ, அதற்கேற்பவே ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கிறீர்கள். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்ட முயற்சியையே நீங்கள் தொடர்ந்தும் செய்கிறீர்கள் என்றில்லை. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், அதன் பின்னர் நீங்கள் சென்ற கல்பத்திலும் அதே முயற்சியைச் செய்தீர்கள் எனக் கூற முடியும். முயற்சிக்கே எப்பொழுதும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெறுமனே வெகுமதியில் தங்கியிருக்க வேண்டாம். முயற்சி செய்யாமல் வெகுமதியைப் பெற்றுக் கொள்ள முடியாது. முயற்சி செய்யாமல் தண்ணீரையேனும் உங்களால் பருக முடியாது. 'கர்மாவைத் துறத்தல்" என்ற வார்த்தைகள் தவறானவை. தந்தை கூறுகிறார்: நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழலாம். பாபா அனைவரையும் இங்கு இருக்கச் செய்வதில்லை. 'அவரிடம் அடைக்கலம் புகுதல்" என்பது நினைவு கூரப்படுகிறது. அவர்கள் தொந்தரவுகளுக்கு உள்ளானதால், ஓர் பத்தியை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே அவர்கள் தந்தையிடம் அடைக்கலம் தேடி வந்தனர். பாபா அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரேயொரு பரமாத்மா பரமதந்தையிடமே அடைக்கலம் பெறப்படுகின்றது. குருமார் போன்றோரிடம் அடைக்கலம் புகுவதில்லை. அதிகளவு தொந்தரவுகளுக்கு உள்ளாகும்பொழுதே, அவர்கள் அடைக்கலம் தேடி வருகிறார்கள். மக்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகும்பொழுது குருமாரிடம் செல்வதில்லை. அங்கு அவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வேளையில் செல்கின்றார்கள். நீங்கள் இராவணனால் மிக அதிகளவில் தொந்தரவு செய்யப்பட்டீர்கள். உங்களை இராவணனிடமிருந்து விடுதலை செய்வதற்கு இராமர் இப்பொழுது வந்துள்ளார். அவர் உங்களுக்கு அடைக்கலம் தருகிறார். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களுக்குரியவன். வீட்;டில் உங்கள் குடும்பத்தவருடன் வாழும்பொழுதே, பாபாவிடம் நீங்கள் அடைக்கலம் புகுந்துள்ளீர்கள். 'பாபா நான் உங்கள் வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்றுவேன்". தந்தை ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார்: வீட்டில் உங்கள் குடும்பத்தவருடன் வாழும்பொழுது, என்னை நினைவுசெய்வதுடன், ஏனைய அனைவரையும் நினைவுசெய்வதை நிறுத்துங்கள். என்னை நினைவுசெய்வதனால், மாத்திரமே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அது அடைக்கலம் புகுதல் என்ற ஒரு கேள்வி மாத்திரமல்ல. நினைவுசெய்வதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. தந்தையைத் தவிர வேறு எவராலும் இவ்வாறு விளங்கப்படுத்த முடியாது. பல நூறாயிரக் கணக்கானோர் எங்கே தந்தையுடன் இருக்க முடியும் எனக் குழந்தைகள் ஆச்சரியப்படுகிறார்கள். பிரஜைகளும் தமது சொந்த வீட்டில் வசிக்;கிறார்கள்; அவர்கள் அரசருடன் வசிப்பதில்லை. உங்களுக்குக்; கூறப்பட்டுள்ளது: ஒரேயொருவரையே நினைவுசெய்யுங்கள். பாபா, நான் உங்களுக்கு உரியவர். நீங்கள் மாத்திரமே சற்கதியெனும் ஆஸ்தியை ஒரு விநாடியிற் தருகிறீர்கள். நீங்கள் எங்களுக்கு இராஜயோகம் கற்பித்து, எங்களை அரசர்க்கெல்லாம் அரசராக ஆக்குகிறீர்கள். தந்தை கூறுகிறார்: சென்ற கல்பத்தில் தங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டவர்கள் மீண்டும் வந்து அதைப் பெறுவார்கள். இறுதிவரை ஒவ்வொருவரும் வந்து தங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெற வேண்டும். நீங்கள் தற்;பொழுது தூய்மையற்றிருப்பதால் உங்களை நீங்கள் தேவர்கள் என அழைக்க முடியாது. தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அவர் கூறுகிறார்: என் கண்ணின் மணிகளே, நீங்கள் சத்திய யுகத்தில் இருந்தபொழுது, நீங்கள் 1-1-1 இலிருந்து ஆட்சிபுரிந்தீர்கள். ஏனையோரின் இராச்சியம் அவர்களின் சனத்தொகை நூறாயிரக்கணக்கில் இருக்கும்பொழுது ஆரம்பமாகுகிறது. நீங்கள் யுத்தம் போன்றவற்றைப் புரியத்; தேவை இல்லை. நீங்கள் யோக சக்தி மூலம் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். மௌனமாக இருந்து, தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். இந்தப் படங்கள் போன்றவை அந்நேரத்தில் பயனற்றதாகி விடுவதால், இறுதியில் நீங்கள் மௌனமாக இருப்பீர்கள். நீங்கள் விவேகிகள் ஆகிவிடுவீர்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இப்பொழுது, நீங்கள் இதைச் செய்வதும், செய்யாதிருப்பதும் உங்களைப் பொறுத்தது. எந்தச் சரீரதாரியின் பெயரிலோ அல்லது வடிவத்திலோ சிக்காதீர்கள். தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை, உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்லும். பின்னர் நீங்கள் என்னிடம் வருவீர்கள். முழுமையாகச் சித்தியடைபவர்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுகிறார்கள். நினைவு யாத்திரையிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. நீங்கள் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்பொழுது, பல புதியவர்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்வார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எந்தச் சரீரதாரியின் பெயரிலோ, வடிவத்திலோ சிக்காதீர்கள். ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, சற்கதியைப் பெறுங்கள். மௌனமாக இருங்கள்.
2. உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்காக மிக நன்றாகக் கற்று, பிறருக்கும் கற்பியுங்கள். கற்பதனாலேயும், பிறருக்குக் கற்பிப்பதனாலும் மாத்திரமே உங்கள் பெயர் போற்றப்படும்.ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய ஆதி ரூபத்தினதும், தாமத்தினதும் சுய மரியாதையில் ஸ்திரமாக இருப்பதால், ஒரு மாஸ்டர் விடுதலையளிப்பவர் ஆகுவீர்களாக.இன்றைய சூழலில், ஒவ்வோர் ஆத்மாவும் ஏதோவொரு வகையான பந்தனத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றார். சிலர் தங்கள் சரீரங்களின் வேதனையாலும், சிலர் தங்கள் உறவுமுறைகளாலும், சிலர் தங்கள் விருப்பங்களாலும், சிலர் தங்களுடைய துன்பம் நிறைந்த சமஸ்காரங்கள், சுபாவத்தினாலும், சிலர் கடவுளை அடையாததாலும், சிலர் தங்களுடைய துன்பத்தினாலும் ஆதிக்கம் செலுத்தப்படுவதால், கதறியழுது கூவி அழைக்கின்றார்கள். அத்தகைய துன்பத்தினதும், அமைதியின்மையினதும் ஆதிக்கத்தில் உள்ள ஆத்மாக்கள், தங்களை அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்ள விரும்புகின்றார்கள். ஆகவே, அவர்களின் துன்பம் மிக்க வாழ்வுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு, உங்கள் ஆதி ரூபத்தினதும், தாமத்தினதும் சுய மரியாதையில் ஸ்திரமாக இருங்கள்; கருணைநிறைந்தவராகி, ஒரு மாஸ்டர் விடுதலையளிப்பவர் ஆகுங்கள்.
சுலோகம்:
சதா ஆட்ட, அசைக்க முடியாதவராக இருப்பதற்கு, ஒரு நிலையான, ஸ்திரமான ஸ்திதி எனும் ஆசனத்தில் அமர்ந்திருங்கள்.