21.03.21 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.11.87 Om Shanti Madhuban
உதவிக்கடலிடமிருந்து பலமில்லியன் மடங்கு உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது தைரியமான குழந்தைகள் அனைவரையும் பார்க்கிறார். ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை, ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் தனது தைரியத்தின் அடிப்படையில் பாப்தாதாவின் உதவியைப் பெறுவதற்குத் தகுதியானவர் ஆகுகிறார். ‘குழந்தை தைரியத்தைப் பேணினால், தந்தை நிச்சயமாக உதவி செய்வார்’ என்ற ஆசீர்வாதத்திற்கேற்ப அவர்கள் தமது முயற்சிகளில் தொடர்ந்து முன்னேறுகிறார்கள். குழந்தைகள் தைரியமாக ஓரடி எடுத்து வைக்கிறார்கள். அதற்குப் பதிலாக, குழந்தைகள் அனைவரும் தந்தையிடமிருந்து பலமில்லியன் மடங்கு அடிகள் உதவியைப் பெறுகிறார்கள். இது ஏனென்றால், நீங்கள் அதை பாப்தாதாவிடமிருந்து பெறும் ஒரு சத்தியம் அல்;லது ஓர் ஆஸ்தி என்று எவ்வாறு அழைத்தாலும், அது குழந்தைகளுக்காகவே. இந்த இலகுவான, மேன்மையான பேற்றினால், 63 பிறவிகளாகப் பலவீனம் ஆகிவிட்ட ஆத்மாக்களால் பலமானவராகி, தொடர்ந்து முன்னேற முடியும். நீங்கள் பிராமணப் பிறவி எடுத்தவுடனே உங்களுக்கு ஏற்பட்ட முதல் தைரியம் என்ன? அசாத்தியமானதையும் சாத்தியமாக்கிக் காட்டியதே உங்களின் முதல் தைரியமாகும். ஏனென்றால் நீங்கள் தூய்மை என்ற சிறப்பியல்பைக் கிரகித்தீர்கள். ‘நாம் தூய்மை ஆகவேண்டும்’ என்ற இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற தைரியம் உங்களுக்கு ஏற்பட்டது. அதனால் தந்தை உங்களுக்குப் பலமில்லியன் மடங்கு உதவியை வழங்கினார். ஆத்மாக்களான நீங்கள் ஆதியாகவும் அநாதியாகவும் தூய்மையானவர்கள். நீங்கள் பல தடவைகள் தூய்மை ஆகியுள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். இது எதுவும் புதியதல்ல. உங்களுக்குள் பல தடவைகள் இருந்த மேன்மையான ஸ்திதியை நீங்கள் மீண்டும் ஒரு தடவை ஏற்படுத்துகிறீர்கள். இப்போதும், தூய ஆத்மாக்களான உங்களின் பக்தர்கள், உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் முன்னால் சென்று, தூய்மை சக்தியைத் தொடர்ந்து வேண்டுகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் உங்களின் தூய்மையின் பாடல்களைப் பாடுகிறார்கள். அத்துடன்கூடவே, பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களான உங்கள் ஒவ்வொருவரிலும் தூய்மையின் அடையாளத்தை ஒளிவட்டமாகக் காட்டியுள்ளார்கள். இத்தகைய விழிப்புணர்வால் நீங்கள் சக்திசாலிகள் ஆகினீர்கள். அதாவது, தந்தையின் உதவியால், நீங்கள் பலவீனமான நிலையில் இருந்து பலம்வாய்ந்தவர்கள் ஆகினீர்கள். நீங்கள் எந்தளவிற்குச் சக்திசாலிகள் ஆகியிருக்கிறீர்கள் என்றால், உலகிற்கே, நாம் நிச்சயமாக இந்த உலகைத் தூய்மை ஆக்குவோம் என்ற இந்தச் சவாலை விடுப்பதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். பலவீன நிலையில் இருந்து, நீங்கள் மிகவும் சக்திசாலிகள் ஆகியுள்ளீர்கள். துவாபர யுகத்தின் ரிஷிகள், முனிவர்கள், மகாத்மாக்கள் அனைவரும் இல்லறத்தில் இருந்தவாறே தூய்மையாக இருப்பது அசாத்தியமான விடயம் எனக் கருதுகிறார்கள். தற்சமயம், அவர்கள் இதைக் கஷ்டம் என்றே கருதுகிறார்கள். ஆனால், நீங்களோ தூய்மை ஆத்மாவின் ஆதியான, அநாதியான ரூபம் எனக் கூறி, இதைப் பற்றி இயல்பான முறையில் அவர்களுடன் பேசுகிறீர்கள். எனவே, அதில் உள்ள கஷ்டம் என்ன? ‘குழந்தைக்குத் தைரியம் உள்ளது, தந்தை உதவி செய்கிறார்’ என இது அழைக்கப்படுகிறது. நீங்கள் அசாத்தியமானதும் இலகு ஆகுவதை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்தும் அது இலேசாக இருப்பதை அனுபவம் செய்கிறீர்கள். அவர்கள் அதை எந்தளவிற்கு அதிகமாக அசாத்தியம் எனக் கருதுகிறார்களோ, அந்தளவிற்கு நீங்கள் அது அதிகபட்சம் இலகுவானது எனக் கூறுகிறீர்கள். எனவே, தந்தை ஞான சக்தியால் உதவியை வழங்கினார். உங்களின் நினைவால், உங்களுக்கு தூய ஸ்திதியின் அனுபவத்தைக் கொடுப்பதன் மூலம், பாபா ஆத்மாக்களான உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியை வழங்கினார். எனவே, இதுவே தைரியமான முதலாவது அடியை எடுத்து வைத்து, தந்தையிடமிருந்து பலமில்லியன் மடங்கு உதவியைப் பெற்றுக் கொள்வதாகும்.
அதேபோல், மாயை எத்தனை வெவ்வேறு வடிவங்களில் உங்களைத் தாக்க வந்தாலும், நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். ஆரம்பத்தில் இருந்து இப்போதுவரை, அவள் சிலவேளைகளில் இராஜரீக வடிவில் வருகிறாள். சிலவேளைகளில், புலப்படும் ரூபத்தில் வருகிறாள். சிலவேளைகளில் மறைமுகமான வடிவில் வருகிறாள். சிலவேளைகளில், செயற்கையான இறை ரூபத்தில் வருகிறாள். நீங்கள் 63 பிறவிகளாக மாயையின் சகபாடிகளாக வாழ்ந்து வந்தீர்கள். இத்தகைய உறுதியான சகபாடிகளைக் கைவிடுவது சிறிது கஷ்டமே. இதனாலேயே, அவள் உங்களை வெவ்வேறு வடிவங்களில் தாக்குவதற்கு முனைகிறாள். ஆனால் இங்கே, நீங்கள் பலசாலிகள். அதிகளவில் தாக்கப்பட்டாலும், தைரியமுள்ள குழந்தைகள் தந்தையின் உதவியைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள். இந்த உதவியால், அவர்களால் மாயையின் தாக்குதலுக்கு சவால் விட முடிகிறது. அவளின் கடமை வருவது, எங்களின் கடமை வெற்றி பெறுவது என அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் எந்தவொரு தாக்குதலையும் ஒரு விளையாட்டாகவே கருதுகிறீர்கள். மாயையின் சிங்கம் போன்ற வடிவத்தையும் அவர்கள் ஓர் எறும்பு போலேவே கருதுகிறார்கள். ஏனென்றால், மாயையின் இராச்சியம் இப்போது முடிவடையப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்துடன் பல தடவைகள் வெற்றியாளர்கள் ஆகியிருக்கும் வெற்றியாளர் ஆத்மாக்களான உங்களின் வெற்றிக்கு 100மூ உத்தரவாதம் உள்ளது. இதனாலேயே, உத்தரவாதமுள்ள இந்த வெற்றியின் போதை, உங்களுக்குத் தந்தையிடமிருந்து பலமில்லியன் மடங்கு உதவியைப் பெறுவதற்கான உரிமையைக் கொடுக்கிறது. எனவே, எங்கு குழந்தைகள் தைரியத்தைப் பேணுகிறார்களோ, அங்கு அவர்கள் சர்வசக்திவான் தந்தையின் உதவியைப் பெறுகிறார்கள். அது அசாத்தியமானதைச் சாத்தியமானதாக்குவதற்கும், மாயைக்கும் உலகிற்கும் சவால் விடுக்கவும் உதவுகிறது. இது பெரியதொரு விடயமல்ல. நீங்கள் இதை நம்புகிறீர்கள், இல்லையா?
ஆரம்பத்தில் இருந்து இப்போதுவரை, ஒவ்வொரு குழந்தையும் எந்தளவிற்குத் தைரியத்தைப் பேணுகிறார் என்ற பெறுபேறுகளை பாப்தாதா பார்த்தார். இதன் அடிப்படையிலேயே, தந்தையின் உதவியைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவதுடன் இலகு முயற்சியாளராகித் தொடர்ந்தும் அவர் முன்னேறுகிறார். எனவே எந்தளவிற்கு ஒவ்வொரு குழந்தையும் சென்றடைந்துள்ளார் என்றும் பார்த்தார். எனவே, அவர் எதைக் கண்டார்? தந்தையின் உதவி - அதாவது, அருள்பவரிடமிருந்து பெறப்படும் பரிசும், ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து பெறப்படும் ஆசீர்வாதங்களும் - ஒரு கடலைப் போன்றது. கடலிடமிருந்து எடுத்துக் கொள்ளும் சில குழந்தைகள், கடலைப் போன்று நிரம்பியவர்கள் ஆகி, மற்றவர்களையும் அவ்வாறே ஆக்குகிறார்கள். எவ்வாறாயினும், ஏனைய குழந்தைகள், உதவி செய்வதற்கான வழிமுறை தெரியாததால், அல்லது, உதவியைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக, தமது சொந்த முயற்சிகளில் விளையாட்டுக்கள் விளையாடுவதால், அதாவது, சிலவேளைகளில் தமது வேகத்தில் தீவிரமாக இருப்பதும் ஏனைய வேளைகளில் மனச்சோர்வுடனும் இருப்பதனாலும், அவர்கள் தொடர்ந்து தளம்பல் அடைகிறார்கள். சில குழந்தைகள் சிலவேளைகளில் உதவியைப் பெற்றுக் கொள்கிறார்கள். சிலவேளைகளில் சிரமப்படுகிறார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு உதவியைப் பெறுகிறார்கள். எனினும், அவர்களின் கவனக்குறைவால், அவர்கள் சிலவேளைகளில் உதவியைப் பெற்றுக் கொள்ளும் வழியை மறந்து விடுகிறார்கள். தைரியத்தைப் பேணுவதற்குப் பதிலாக, அவர்கள் அகங்காரமடைந்து, தாம் எப்போதும் தூய்மையானவர்கள் என்று நினைக்கிறார்கள். ‘தந்தை எங்களுக்கு உதவி செய்யாவிட்டால், அவர் வேறு யாருக்குத்தான் உதவி செய்வார்? தந்தை எங்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்.’ இந்த அகங்காரத்தால், தைரியத்தைப் பேணும் வழிமுறையால் உதவியைப் பெற்றுக் கொள்வதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். கவனக்குறைவெனும் அகங்காரமும், சுயத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கும் அகங்காரமும் அவர்கள் உதவியைப் பெறுவதைத் தடுத்துவிடுகின்றன. தம்மிடம் இப்போது அதிகளவு யோகா இருப்பதாகவும், தாம் ஞானி ஆத்மாக்களாகவும் யோகி ஆத்மாக்களாகவும் ஆகியிருப்பதாகவும், மிகவும் பிரபல்யமான சேவையாளர்கள் ஆகியிருப்பதாகவும், தாம் நிலையங்களின் பொறுப்பாளர் என்றும், தமது சேவை இராச்சியம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இயற்கையும் தங்களுக்குச் சேவை செய்வதற்குத் தகுதியாகி உள்ளது என்றும் அவர்கள் நினைத்துத் தமது வாழ்க்கையை அவர்கள் சௌகரியமாக வாழ்கிறார்கள். இது கவனம் செலுத்துவதில் ஏற்படும் கவனக்குறைவாகும். ஆகவே, நீங்கள் உயிர் வாழும்வரை, நீங்கள் படிக்க வேண்டும். அத்துடன், சம்பூரணம் ஆகுவதில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவத்தை விருத்தி செய்வதிலும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் இதை மறந்து விடுகிறீர்கள். நீங்கள் பிரம்மாபாபாவைக் கண்டீர்கள்: அவர் தனது இறுதி, சம்பூரணமான கர்மாதீத் ஸ்திதியை அடையும்வரை, அவர் தன்னிலும், சேவையிலும், ஒரு மாணவ வாழ்க்கையில் இருப்பதைப் போல், எல்லையற்ற விருப்பமின்மையின் மனோபாவத்தைக் கொண்டிருப்பதில் கவனம் செலுத்தினார். இதைச் செய்து காட்டுவதில் அவர் ஒரு கருவி ஆகினார். இவ்வாறே அவர் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தைரியத்தைப் பேணினார். அவர் தைரியத்தைக் கொடுப்பதற்கும் கருவியாகினார். எனவே, அவர் தந்தையின் உதவியைப் பெற்றுக் கொள்வதில் அதிகளவு தகுதியுடையவர் ஆகியதுடன் அதனால் முதலாம் இலக்கத்தையும் அடைந்தார். அவரின் எதிர்காலம் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும், அவர் கவனக்குறைவாக இருக்கவில்லை. அவர் சதா தனது தீவிர முயற்சிகளின் அனுபவங்களை இறுதிவரை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். அவர் உதவிக் கடலில் எந்தளவிற்குத் திளைத்திருந்தார் என்றால், இப்போதும், தந்தையைப் போல் அவர் குழந்தைகள் அனைவருக்கும் அவ்யக்த முறையில் உதவி செய்கிறார். இதுவே, தைரியமாக ஓரடி எடுத்து வைத்து, பலமில்லியன் மடங்கு உதவியைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியானவர் ஆகுவது எனப்படுகிறது.
சில குழந்தைகள் உதவியைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அதைப் பெறாமல் இருப்பதை பாப்தாதா கண்டார். தைரியத்தைப் பேணுவதற்கான வழிமுறையை அவர்கள் மறந்தமையே இதற்கான காரணம் என பாபா கூறினார். இதற்கான காரணம், அகங்காரமும் கவனக்குறைவும், சுயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதுமேயாகும். உங்களிடம் சரியான வழிமுறை இல்லாதபோது, உங்களுக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்காமல் போகின்றன. நீங்கள் கடலின் குழந்தைகளாக இருந்தாலும், நீங்கள் சிறிய குளங்கள் போல் ஆகிவிடுகிறீர்கள். ஒரு குளத்தின் தண்ணீர் ஓரிடத்திலேயே தேங்கியிருப்பதைப் போல், நீங்களும் உங்களின் முயற்சியில் ஒரு தேக்கநிலைக்கு வந்துவிடுகிறீர்கள். இதனாலேயே, நீங்கள் சிலவேளைகளில் சிரமப்படுகிறீர்கள். சிலவேளைகளில் களிப்பை அனுபவம் செய்கிறீர்கள். இன்று, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நாளை, கூழாங்கற்களின் காரணத்தால், அவற்றை நீக்குவதில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள். அது ஒரு மலைகூட இல்லை. வெறும் கூழாங்கற்களே. நீங்களோ மகாவீர பாண்டவ சேனையினர். எனினும், கூழாங்கற்கள் கூட மலைகள் போன்று ஆகிவிடுகின்றன. நீங்கள் அந்த முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். அதன்பின்னர் நீங்கள் பாபாவிற்கு வியப்பூட்டுகிறீர்கள். யாராவது உங்களிடம் அவை மிகச்சிறிய கூழாங்கற்களே எனக் கூறினால், நீங்கள் என்ன வியப்பான விடயங்களைக் கூறுகிறீர்கள்? ‘உங்களுக்கு என்ன தெரியும்? இது உங்களுக்கு நடந்திருந்தால்தான் உங்களுக்குப் புரியும்.’ அவர்கள் தந்தையிடமும் இப்படிக் கூறுகிறார்கள்: ‘நீங்கள் அசரீரியானவர். உங்களுக்கு என்ன தெரியும்?’ அவர்கள் பிரம்மாபாபாவிடமும் இவ்வாறு கூறுகிறார்கள்: ‘உங்களுக்குத் தந்தையின் உயர்த்தி கிடைத்தது. உங்களுக்கு என்ன தெரியும்?’ அவர்கள் மிக நல்ல விடயங்களைக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், இதற்கான காரணம், ஒரு சின்னஞ்சிறிய தவறேயாகும். ‘குழந்தை தைரியத்தைப் பேணினால், தந்தை உதவி செய்வார்’ என்ற இரகசியத்தை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இதுவே நாடகத்தில் உள்ள ஆழமான கர்ம தத்துவம் ஆகும். ஒரு குழந்தை தைரியமாக இருக்கும்போது, கடவுள் உதவி செய்வார். இந்த வழிமுறை ஒரு நிச்சயிக்கப்பட்ட சட்டமாக இல்லாவிட்டால், அனைவரும் உலகின் முதலாம் இலக்க மன்னர் ஆகிவிடுவார்கள். ஒரேவேளையில் அனைவராலும் சிம்மாசனத்தில் அமர முடியுமா? இந்த வழிமுறையாலேயே வரிசைக்கிரமம் ஆகும் நீதி உள்ளது. இல்லாவிட்டால், எல்லோரும் தந்தையிடம் முறைப்பாடு செய்து, ஏன் பிரம்மா முதலாம் இலக்கத்தவர் ஆகினார், தாங்களும் முதலாம் இலக்கத்தவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் தானே எனக் கேட்பார்கள். இதனாலேயே, நாடகத்தின்படி இந்த இறை நீதி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிச்சயிக்கப்பட்ட நீதி. நீங்கள் தைரியமாக ஓரடி எடுத்து வைத்தால், பலமில்லியன் அடிகள் உதவியைப் பெற்றுக் கொள்வீர்கள். பாபா உதவிக்கடலாக இருந்தாலும், நாடகத்தின்படி, இந்த நீதிக்கான வழிமுறை நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களால் முடிந்தளவு தைரியத்தைப் பேணுங்கள். அதற்கேற்ப உங்களால் முடிந்தளவு உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் இதில் எதையும் கொடுக்காமல் இருக்கப்போவதில்லை. அது ஒரு வருடக் குழந்தையோ அல்லது 50 வருடக் குழந்தையோ, அவர் அர்ப்பணித்தவரோ அல்லது தனது குடும்பத்துடன் வசிப்பவரோ, யாராக இருந்தாலும், அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. எவ்வாறாயினும், சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே பேறுகள் பெறப்படும். எனவே, நீங்கள் இறை நீதியைப் புரிந்து கொண்டீர்கள், அல்லவா?
நீங்கள் மிக நன்றாக தைரியத்தைப் பேணினீர்கள். இங்கு வருவதற்குக் கூட நீங்கள் தைரியத்தைப் பேணினீர்கள். இதனாலேயே, நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். தந்தைக்குச் சொந்தமாகுவதிலும் நீங்கள் தைரியத்தைக் கடைப்பிடித்தீர்கள். இதனாலேயே, நீங்கள் அவருக்குச் சொந்தமாகினீர்கள். சதா தைரியத்தின் வழிமுறையுடன் செயல்படுவதன் மூலம் உதவியைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவதற்கும், சிலவேளைகளில் அந்த வழிமுறையைப் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. சதா, ஒவ்வோர் அடியிலும், உதவியைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவராகி, முதலாம் இலக்கத்தவர் ஆகுகின்ற இலக்கை அடையுங்கள். பிரம்மா மட்டுமே முதலாம் இலக்கத்தவர் ஆகுவார். ஆனால், பலர் முதல் பிரிவில் வருவார்கள். இதனாலேயே, பாபா கூறுகிறார்: முதலாம் இலக்கம். உங்களுக்குப் புரிகிறதா? உங்களால் முதல் பிரிவில் வரமுடியும், இல்லையா? இது முதலாம் இலக்கம் எனப்படுகிறது. வேறொரு வேளையில், பாபா உங்களுக்குக் குழந்தைகளின் கவனக்குறைவு என்ற தெய்வீகச் செயலைப் பற்றிக் கூறுவார். நீங்கள் அற்புதமான தெய்வீகச் செயல்களைச் செய்கிறீர்கள். பாப்தாதா சதா குழந்தைகளின் தெய்வீகச் செயல்களைத் தொடர்ந்தும் பார்க்கிறார். சிலவேளைகளில், தீவிர முயற்சிகளின் தெய்வீகச் செயலை அவர் பார்க்கிறார். சிலவேளைகளில், கவனக்குறைவெனும் தெய்வீகச் செயலையும் அவர் பார்க்கிறார். அச்சா.
கர்நாடகாவின் சிறப்பியல்பு என்ன? ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்பு உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களுக்கே உரிய மிக நல்ல மொழி உள்ளது: உணர்வுகள் (பாவனா) என்ற மொழியில் நீங்கள் கைதேர்ந்தவர்கள். உங்களுக்கு மிகச் சிறிதளவு ஹிந்தியே புரிகிறது. ஆனால், கர்நாடகாவைச் சேர்ந்தவர்களின் சிறப்பியல்பானது, நீங்கள் உணர்வுகள் என்ற மொழியில் முதலாம் இலக்கத்தவர்கள். இதனாலேயே, நீங்கள் எப்போதும் உங்களின் உணர்வுகளின் பலனைப் பெறுகிறீர்கள். நீங்கள் எதையும் கூறாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்போதும் ‘பாபா, பாபா’ என்று கூறுகிறீர்கள். நீங்கள் இந்த உணர்வுகளின் மேன்மையான மொழியை அறிவீர்கள். இதுவே உணர்வுகளின் பூமி. அச்சா.
எங்கும் உள்ள தைரியமான குழந்தைகளுக்கும், தந்தையின் உதவியை சதா பெறுகின்ற தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் அனைவருக்கும், எப்போதும் சட்டத்தை அறிந்து, சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதால் வெற்றி பெறும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், தந்தைக்குச் சமமானவர்களாக இருந்து, பிரம்மாபாபாவைப் போல், இறுதிவரை படிக்கின்ற, முயற்சி செய்கின்ற வழிமுறையால் சதா முன்னேறுகின்ற மேன்மையான, மகத்தான குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
அவ்யக்த பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
1. நீங்கள் உங்களை இரட்டை லைற் தேவதைகளாகக் கருதுகிறீர்களா? இலேசான, ஒளியான இரட்டை லைற் ஸ்திதியே, தேவதை ஸ்திதியாகும். தேவதை என்றால் இலேசானவர் என்று அர்த்தம். நீங்கள் தந்தைக்குச் சொந்தமாகியதும், உங்களின் சுமைகள் அனைத்தையும் நீங்கள் தந்தைக்கே கொடுத்துவிட்டீர்கள், இல்லையா? நீங்கள் சுமைகளில் இருந்து விடுபட்டு இலேசாகியதும், நீங்கள் தேவதைகள் ஆகுகிறீர்கள். தந்தை உங்களின் சுமைகளை முடிப்பதற்காக வந்துள்ளார். எனவே, தந்தை உங்களின் சுமைகளை இல்லாமல் செய்வார். நீங்கள் உங்களின் சுமைகள் அனைத்தையும் இறக்கிவிட்டீர்களா? நீங்கள் இரகசியமாக சின்னதொரு மூட்டையை உங்களுடன் வைத்திருக்கவில்லையே? நீங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டீர்களா? அல்லது, தேவைப்படும்போது என்று எதையாவது உங்களுடன் வைத்திருக்கிறீர்களா? பழைய சம்ஸ்காரங்களில சிலது இன்னமும் எஞ்சியுள்ளதா? அல்லது அவை அனைத்தும் முடிந்துவிட்டனவா? பழைய சுபாவமும் பழைய சம்ஸ்காரங்களும் பொக்கிஷங்கள்தான், இல்லையா? நீங்கள் அவற்றையும் கொடுத்துவிட்டீர்களா? சிறிதளவு எஞ்சியிருந்தாலும், அது உங்களை மேலே இருந்து கீழே இழுத்துவிடும். அது உங்களை ஒரு தேவதையாகுவதற்கும் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வதற்கும் விடாது. சிலவேளைகளில், நீங்கள் மேலே இருப்பீர்கள். ஏனைய நேரங்களில் நீங்கள் கீழே வந்துவிடுவீர்கள். இதனாலேயே, பாப்தாதா கூறுகிறார்: அனைத்தையும் கொடுத்துவிடுங்கள். அது இராவணனின் சொத்து. நீங்கள் இராவணனின் சொத்தை உங்களுடன் வைத்திருந்தால், உங்களுக்குத் துன்பம் மட்டுமே கிடைக்கும். தேவதை ஆகுதல் என்றால், இராவணனின் சொத்தில் சின்னஞ்சிறிதளவேனும் உங்களிடம் இருக்கக்கூடாது. பழைய சுபாவமும் சம்ஸ்காரங்களும் மேலே வருகின்றன, இல்லையா? ‘அது நடக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை, ஆனால் அது நடந்துவிட்டது’ அல்லது, ‘அது தானாகவே நடந்துவிடுகிறது’ என நீங்கள் கூறுகிறீர்கள், இல்லையா? எனவே, உங்களிடம் இன்னமும் சிறியதொரு பழைய மூட்டை இருக்கிறது, ஒரு குப்பை மூட்டை இருக்கிறது என்பதையே இது நிரூபிக்கிறது. எல்லா வேளையும் தேவதை ஆகுதல் என்றால் ஒரு பிராமண வாழ்க்கை வாழுதல் என்று அர்த்தம். கடந்தகாலம் இப்போது முடிந்துவிட்டது. நீங்கள் பழைய கணக்குகளை எரித்துவிட்டீர்கள். இப்போது, இது புதிய விடயங்களும் புதிய கணக்குகளும் ஆகும். பழைய கடனில் சிறிதளவேனும் எஞ்சியிருந்தால், நீங்கள் சதா மாயையால் நோயாளி ஆகிவிடுவீர்கள். ஏனென்றால், கடனுடன் இருத்தல் ஒரு நோய் என்றே சொல்லப்படுகிறது. ஆகவே, சகல கணக்குகளையும் முடித்துவிடுங்கள். உங்களுக்குப் புதிய வாழ்க்கை கிடைத்ததும், பழையவை அனைத்தும் முடிந்துவிடும்.
2. நீங்கள் சதா ‘ஆஹா, ஆஹா’ என்ற பாடல்களைப் பாடுகிறீர்கள், இல்லையா? துயரத்தில் அழும் பாடல்கள் இப்போது முடிந்துவிட்டன. நீங்கள் இப்போது சதா உங்களின் மனதில் ‘ஆஹா, ஆஹா!’ என்ற பாடல்களையே பாடுகிறீர்கள். நீங்கள் மேன்மையான செயல்களைச் செய்யும்போது, உங்களின் மனதில் தோன்றுவதென்ன? ‘ஆஹா எனது மேன்மையான கர்மா!’ அல்லது, ‘ஆஹா, எனக்கு மேன்மையான செயல்களைக் கற்பித்தவர் அந்த ஒரேயொருவரே!’ அல்லது, ‘ஆஹா, என்னை இந்த மேன்மையான செயல்களைச் செய்ய வைக்கும் மேன்மையான நேரம்!’ எனவே, நீங்கள் சதா ‘ஆஹா, ஆஹா!’ என்ற பாடல்களைப் பாடுபவர்கள், இல்லையா? சிலவேளைகளில், தவறுதலாகவேனும், நீங்கள் துயரத்தில் அழுவதில்லை, அல்லவா? ‘ஐயோ! என்ன நடந்துவிட்டது?’ இல்லை. துயரமான ஒரு காட்சியை நீங்கள் கண்டாலும், துன்பமான எந்தவொரு சத்தமும் வெளிப்படக்கூடாது. நேற்று, நீங்கள் துயரமான பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் இன்றோ, நீங்கள் ‘ஆஹா, ஆஹா!’ என்ற பாடல்களையே பாடுகிறீர்கள். இது இப்போது மிகவும் வேறுபட்டதாக உள்ளது. இது யாரின் சக்தி? தந்தையின் சக்தியா அல்லது நாடகத்தின் சக்தியா? (நாடகத்தின் சக்தி). நாடகத்தாலேயே தந்தையும் வரவேண்டி உள்ளது. எனவே, நாடகமும் சக்திவாய்ந்தது. நாடகத்தில் எந்தவொரு பாகமும் இல்லாவிட்டால், அப்போது பாபா என்ன செய்வார்? தந்தை சக்திவாய்ந்தவர். நாடகமும் சக்திவாய்ந்தது. எனவே, தொடர்ந்து இரண்டினதும் புகழைப் பாடுங்கள்: ஆஹா, நாடகமே ஆஹா! நீங்கள் ஒருபோதும் கனவிலும் நினைத்திராதது இப்போது நிஜத்தில் நடக்கிறது. வீட்டில் இருந்தவாறே நீங்கள் அனைத்தையும் பெற்றீர்கள். வீட்டில் இருந்தவாறே இத்தகைய பாக்கியத்தைப் பெறுவதே, வைரமான அதிர்ஷ்டலாபம் எனப்படுகிறது.
3. நீங்கள் சங்கமயுகத்தில் சுய இராச்சிய உரிமையைப் பெற்றுள்ள ஆத்மாக்கள் ஆகிவிட்டீர்களா? உங்களிடம் உள்ள பௌதீகமான அங்கங்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் ஆட்சி செய்கிறீர்களா? உங்களின் பௌதீகமான அங்கங்கள் எதுவும் உங்களை ஏமாற்றவில்லை, அல்லவா? உங்களின் எண்ணங்களிலேனும் நீங்கள் சிலவேளைகளில் ஏமாற்றப்படவில்லை, அல்லவா? சிலவேளைகளில் உங்களுக்குள் வீணான எண்ணங்கள் தோன்றுகிறதா? சுய இராச்சிய ஆத்மாக்கள் என்ற போதையுடனும் நம்பிக்கையுடனும் சதா சக்திசாலி ஆகுங்கள். மாயையை வென்றவர்களாகவும் உலகை வென்றவர்களாகவும் ஆகுங்கள். சுய இராச்சிய ஆத்மாக்களால் இலகு யோகிகளாகவும் சதா யோகிகளாகவும் ஆகமுடியும். ஒரு சுய இராச்சிய ஆத்மா என்ற போதையுடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். தாய்மார்களான நீங்கள் பற்றில் இருந்து விடுபட்டிருக்கிறீர்களா அல்லது உங்களுக்குள் பற்று உள்ளதா? பாண்டவர்களுக்கு எப்போதாவது சிறிதளவு கோபத்தின் சுவடு ஏற்படுகிறதா? சிலவேளைகளில் யாராவது உங்களைத் தளம்பல் அடைய முயற்சி செய்தால், நீங்கள் கோபப்படுவீர்களா? உங்களின் ஆசிரியர் சிலவேளைகளில் உங்களுக்குச் சேவை செய்வதற்குக் கொஞ்ச வாய்ப்பும், ஏனையோர்களுக்கு அதிகளவு வாய்ப்பும் கொடுத்தால், அவர் செய்வதைப் பார்த்து உங்களுக்குள் சிறிதளவு கோபம் ஏற்படுகிறதா? அவதானமாக இருங்கள்! சிறிதளவு சரீர உணர்வு இருந்தால், ஒரு பரீட்சைத்தாள் வரும். அங்கு நிச்சயமாக சிறிதளவு விசை அல்லது கோபம் காணப்படும். ஆகவே, எப்போதும் சுய இராச்சிய அதிகாரியாக இருங்கள். அதாவது, எப்போதும் அகங்காரமற்றவராக, எப்போதும் ஒரு பணிவான சேவையாளராக இருங்கள். பற்றெனும் பந்தனமும் முடிந்துவிட்டது. அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையை ஒத்தவராக, உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் ஞாபகார்த்தம் ஆக்குவதன் மூலம், இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுடன், இராச்சிய சிம்மாசனத்திலும் அமர்ந்திருப்பவர்கள் ஆகுவீர்களாக.தந்தையிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ஞாபகார்த்தம் ஆகுவதைப் போல், தந்தைக்குச் சமமாக இருப்பவர்கள் என்ன வார்த்தைகளைப் பேசினாலும், அது அனைவரின் இதயத்திலும் பதிந்துவிடும். அதாவது, அவை ஒரு ஞாபகார்த்தத்தை உருவாக்கும். யாருக்காக அவர்கள் ஓர் எண்ணத்தை உருவாக்கினார்களோ, அவர்களின் இதயத்தை அந்த எண்ணம் தொடும். அவரின் இரண்டு வார்த்தைகள்கூட அவர்களின் இதயத்திற்குப் புத்துணர்வை அளிக்கும். அத்துடன் அவர்கள் அவருக்கு நெருக்கமாக இருப்பதை உணர்வார்கள். இதனாலேயே, அனைவரும் அவர் தமக்குச் சொந்தமானவர் எனக் கருதுகிறார்கள். இத்தகைய சமமான குழந்தைகள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுடன், இராச்சிய சிம்மாசனத்திலும் அமர்வார்கள்.
சுலோகம்:
உங்களின் பறக்கும் ஸ்திதியால், ஒரு பறக்கும் பறவையாகி, எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் ஒவ்வொரு பிரச்சனையையும் வெற்றி கொள்ளுங்கள்.