12.03.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சகவாசத்தின் ஆதிக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாத்து, கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். அப்போது, எந்தப் புயலும் வர முடியாது. மாயையைக் குற்றம் சாட்டாதீர்கள்!

கேள்வி:
உங்களது படகு கரையேறுவதற்கு நீங்கள் எந்த ஒரு விடயத்தில் சதா கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
'பாபா, உங்களுடைய கட்;டளைகள்; எதுவானாலும்!" எனத் தொடர்ந்து தந்தையின் கட்டளைகளைப் பின்பற்றினால், உங்களது படகு கரையேறும். கட்டளைகளைப் பின்பற்றுவோர் மாயையின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்களது புத்தியின் பூட்டு திறக்கப்படுவதால், அவர்கள் அளவற்ற சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் பிழையான செயல்களை ஒருபோதுமே செய்வதில்லை.

பாடல்:
உங்களைக் கண்டு கொண்டதன் மூலம், நான் முழு உலகையும் கண்டு கொண்டேன்........

ஓம் சாந்தி.
அனைத்து நிலையங்களிலும் உள்ள இனிமையிலும் இனிமையான சகல குழந்தைகளும் பாடலைக் கேட்டீர்கள். 5000 வருடங்களின் முன்னர் நீங்கள் எவ்வாறு முழு உலகினதும் ஆட்சியையும் எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெற்றீர்களோ, அவ்வாறே மீண்டும் ஒருமுறை பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் அனைவரும் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் இதை நாங்கள் பெற்றுப் பின்னர் இந்த இராச்சியத்தை இழக்கிறோம். குழந்தைகளே, நீங்கள் இப்போது எல்லையற்ற தந்தையின் மடியில் இருக்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது, நீங்கள் அவரது குழந்தைகள் ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே அவ்வாறானவர்களே. வீட்டில் இருக்கும் போதே, நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து உயர்ந்ததோர் ஆந்தஸ்தைப்; பெறுவதற்கு, இக் கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டிருங்கள். அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவரும், தூய்மைப்படுத்துபவரும், ஞானக்கடலுமானவருமான சிவபாபாவே எங்களுடைய தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடமிருந்தே நாங்கள் எங்களுடைய ஆஸ்தியைப் பெறுகிறோம் என்பதால் நாங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைவதற்குப் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். அஞ்ஞானப்பாதையில், குழந்தைகள் பாடசாலையில் கற்கும் போது, அவர்கள் கற்பதற்கு ஏற்பவே அவர்கள் சித்தி அடைவதற்கான புள்ளிகளை வரிசைக்கிரமமாகப் பெறுகிறார்கள். அங்கு, மாயை தங்களுக்குத் தடைகளை ஏற்படுத்துகின்றாள் என்றோ, மாயையின் புயல் உள்ளது என்றோ எவருமே கூறமாட்டார்கள். ஒன்று அவர்கள் முறையாகக் கற்பதில்லை அல்லது தீய சகவாசத்தில் அகப்படுகிறார்கள்;. அவர்கள் விளையாடுவதில் மும்முரமாகி விடுகிறார்கள். ஆகையாலேயே அவர்கள் கற்காது, தோல்வி அடைகிறார்கள். எவ்வாறாயினும், அதை மாயையின் புயல்; என அழைக்க முடியாது. ஒருவருடைய பழக்கவழக்கம் மிக நன்றாக இல்லாவிட்டால், அவர் கொண்டிருக்கின்ற தீய சகவாசத்தின் காரணமாக, அவர் கெட்டு விட்டார் என ஆசிரியர், அவ்வாறான ஒருவருக்கு சான்றிதழ் ஒன்றைக் கொடுக்கின்றார். இதில், இராவணனான மாயையைக் குற்றம் சாட்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நல்லவர்களின் சில குழந்தைகள் மிகச் சிறப்படைய, ஏனையோரோ கெட்டு, மது போன்றவற்றை அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் பிழையான, அசிங்கமான வழியில் செல்கிறார்கள். பின்னர் அவ்வாறானவர்களின் தந்தை, அவர்கள் தகுதியற்றவர்கள் ஆகிவிட்டார்கள் எனக் கூறுகிறார். வேறு கல்வியில் பல பாடங்கள் உள்ளன. இங்கோ, ஒரு வகையான கல்வியே உள்ளது. அங்கு, மனிதர்கள் கற்பிக்கிறார்கள், ஆனால் இங்கோ குழந்தைகளாகிய உங்களுக்கு கடவுளே கற்பிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் நன்றாகக் கற்றால், உங்களால் உலக அதிபதிகளாக முடியும். பல குழந்தைகள் உள்ளார்கள் தீய சகவாசத்தின் ஆதிக்கத்தின் காரணமாக, சில குழந்தைகளால் கற்க முடிவதில்லை. அவற்றை நீங்கள் ஏன் மாயையின் புயல் என அழைக்க வேண்டும்? தீய சகவாசத்தின் காரணமாக ஒருவரால் கற்க முடியாது விட்டால், அதற்கு மாயையோ, ஆசிரியரோ அல்லது தந்தையோ என்ன செய்ய முடியும்? அவர்களால் கற்க முடியாது விட்டால், அவர்கள் வீடு திரும்பி விடுகிறார்கள். நாடகத்திற்கு ஏற்ப அவர்கள் முதலில் 'பத்தி" க்கு வர வேண்டும். அவர்கள் வந்து அடைக்கலம் பெற்றார்கள். சிலர் கணவர்களால் தொந்தரவு செய்யப்பட்டு, அடியும் வாங்கினார்கள். ஏனையோருக்கு விருப்பமின்மை இருந்தது. அவர்களால் வீடுகளில் இருக்க முடியாததால் இங்கு வந்தார்கள் எனினும் பின்னர் அவர்கள் இவ்விடத்தை விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களால் கற்க முடியாததால், தொழில் ஒன்றைத் தேடிக் கொண்டார்கள் அல்லது திருமணம் செய்து கொண்டார்கள். இங்கு, அவர்கள் மாயையின் புயலின் காரணமாகக் கற்க முடியவில்லை எனச் சாக்குபோக்கு கூறுகிறார்கள். தீய சகவாசத்தின் ஆதிக்கத்தினால் தங்களது நிலைமை இவ்வாறாகி விட்டதையும், தங்களிடம் விகாரங்கள் மிகவும் ஆழமாக உள்ளதென்பதையும் அவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. மாயையின் புயலை அனுபவித்ததால், வீழ்ந்து விட்டோம் என நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? அவை யாவும் உங்களிலேயே தங்கியுள்ளது! தந்தையிடம், ஆசிரியரிடம் சற்குருவிடமிருந்து பெறுகின்ற கற்பித்தல்களைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவற்றைப் பின்பற்றாது விட்டால், தீயசகவாசத்தின் ஆதிக்கமோ, காமத்தின் போதையோ அல்லது சரீர உணர்வோ உள்ளது என்பதே அதன் அர்த்தமாகும். நிலையங்கள் அனைத்திலும் உள்ள, குழந்தைகளாகிய நீங்கள், உலக ஆட்சியைப் பெறுவதற்கே எல்லையற்ற தந்தையுடன் கற்கிறோம் என்பதை விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நம்பிக்கை உங்களுக்கு இல்லாவிட்டால், நீங்கள் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்? வேறு பல ஆச்சிரமங்கள் இருக்கின்றன! எவ்வாறாயினும், அங்கு பேறுகள் ஒன்றுமே இல்லை. அங்கு, இலக்கோ, இலட்சியமோ இல்லை. அவை யாவும் சிறு பிரிவுகளும், குழுக்களும் ஆகிய, தண்டுகளும் கிளைகளும் ஆகும். விருட்சம் வளர வேண்டும். இங்கு, இவை யாவும் தொடர்புடையவை. இனிய தேவ விருட்சத்தைச் சேர்ந்தவர்கள் வெளிப்படுவார்கள். அனைவரிலும் இனிமையிலும் இனிமையானவர்கள் யார்? சத்தியயுத்தில் சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியும் ஆகுபவர்களே. முதல் எண்ணைப் பெறுபவர்கள் நிச்சயமாக மிகவும் நன்றாகக் கற்றிருக்க வேண்டும் என்பதை நீங்கள் இப்போது விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் சூரியவம்ச இராச்சியத்திற்குச் செல்கிறார்கள். குடும்பத்துடன் இருந்து, அர்ப்பணித்த வாழ்வு வாழ்ந்து கொண்டு, அதிகளவு சேவை செய்கின்ற பலரும் இருக்கிறார்கள். பெருமளவு வேறுபாடு உள்ளது! சிலர் இங்கு வாழ்ந்தாலும் கூட, கற்பிக்க முடியாததால், அவர்கள் தங்களை வேறு தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இறுதி நேரத்தில், அவர்கள் குறைவான ராஜ அந்தஸ்தைப் பெறுவார்கள். இங்குள்ளவர்களை விட வெளியில் வீடுகளில் வசிப்பவர்கள் அதிகம் கற்று, கற்பிப்பதில் விரைவாக முன்னேறிச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அனைவருமே இல்லறத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். குமார்களும் குமாரிகளும் இல்லறத்தினர் என அழைக்கப்படுவதில்லை. 60 வயதில் ஒருவர், இளைப்பாறும் போது, அனைத்தையும் தம் குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு சாது போன்ற ஒருவரிடம் சென்று வாழ்வது வழக்கத்தில் இருந்தது. இக்காலத்தில், அனைவரும் தமோபிரதான் ஆகையாலே, மரணமடையும் தறுவாயிலும் கூட தமது தொழிலைக் கைவிடுவதில்லை! அக்காலத்தில் அவர்கள் 60 வயதில் இளைப்பாறி விடுவார்கள். அவர்கள் பனாரஸில் போய் வாழ்வார்கள். குழந்தைகளே, ஒருவருமே வீடு திரும்ப முடியாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஒருவராலுமே ஜீவன்முக்தியைப் பெற முடியாது. தந்தை மட்டுமே முக்தியையும், ஜீவன்முக்தியையும் அருள்பவர். அனைவருமே ஜீவன்முக்தியைப் பெறுவதில்லை சிலர் முக்தி அடைகிறார்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இப்போது ஸ்தாபிக்கப்படுகிறது. அதன் பின்னர், அது ஒவ்வொருவரும் செய்கின்ற முயற்சியிலேயே தங்கியுள்ளது. அதிலும், குமாரிகளுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் உள்ளது. அவர்களும் பரலோகத்துத் தந்தைக்கு வாரிசுகள் ஆகுகிறார்கள். இங்கே. அனைத்துக் குழந்தைகளுக்கும் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கான உரிமை உள்ளது. வெளியிலே, புத்திரிகள் ஆஸ்தியைப் பெறுவதில்லை. புத்திரர்களுக்கு அதில் பேராசை உள்ளது. தங்களுக்கென கிடைக்க வேண்டிய ஆஸ்தி எப்படியோ தமக்கு கிடைக்க வேண்டும் எனச் சிலர் உணர்வதால், அதனை ஏன் விட வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் இருவிதமான கல்வியையுமே கற்கிறார்கள். பல்வேறு வகையான குழந்தைகளும் இருக்கிறார்கள். நன்றாகக் கற்பவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் பிரஜைகளின் மத்தியில், பெரும் செல்வந்தர்கள் ஆகுகிறார்கள். இங்கு வாழ்பவர்கள், மாளிகைகளில்; வாழ்வார்கள். அவர்கள் பணியாட்களாகவும், வேலைக்காரர்களாகவும் ஆகுகிறார்கள். பின்னர், அவர்கள் திரேதாயுக இறுதியில், இராச்சியத்தில் 3, 4 அல்லது 5 பிறவிகளை எடுக்கக் கூடும். சத்தியயுக ஆரம்பத்திலிருந்து, எப்போதுமே செல்வத்தைக் கொண்டிருக்கும் செல்வந்தர்கள் மிகவும் சிறப்புடையவர்களாக இருக்கிறார்கள். வீட்டில் வசிக்கின்றவர்கள்; ஏன் செல்வமிக்க அந்தஸ்தைப் பெறக் கூடாது? அவர்கள் ராஜ அந்தஸ்தைப் பெற முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும் நீங்கள் வழுக்கி விழுந்து விட்டீர்களானால், பிரஜைகளின் மத்தியில் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும். அதுவும் உயர்ந்ததோர் அந்தஸ்தே ஆகும். இங்கு வசிப்பவர்களை விட, வெளியில் வசிப்பவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும். அனைத்துமே நீங்கள் செய்கின்ற முயற்சியிலேயே தங்கி உள்ளது. முயற்சியை மறைக்க முடியாது. பிரஜைகள் அனைவரிலும், செல்வந்தர்கள் ஆகுபவர்கள் மறைந்திருக்க மாட்டார்கள். வெளியில் வாழ்பவர்கள் குறைந்த அந்தஸ்தைப் பெறுவார்கள் என்றில்லை. இறுதியில் ஓர் இராச்சிய அந்தஸ்தா அல்லது ஆரம்பம் முதலே பிரஜைகளின் மத்தியில் ஒரு செல்வந்த அந்தஸ்தா சிறந்தது? வீடுகளில் வசிப்பவர்கள் அந்தளவிற்கு அதிகளவில் மாயையின் புயலை அனுபவிப்பதில்லை. இங்கு வசிப்பவர்களே அதிகளவான புயலை அனுபவிக்கிறார்கள். அவர்களிடம் தைரியம் இருப்பதால், அவர்கள் சிவபாபாவிடம் அடைக்கலம் பெற்றிருந்தாலும் தீய சகவாசத்தின் ஆதிக்கத்தினால் அவர்கள் கற்பதில்லை. அனைத்தும் இறுதியில் தெரிய வரும். ஒவ்வொருவரும் எவ்வாறான அந்தஸ்தைப் பெறுகிறார்கள் என்பதற்கான காட்சிகள் கிடைக்கும். அனைவரும் வரிசைக்கிரமமாகவே கற்கிறார்கள். சிலர் தாங்களாகவே ஒரு நிலையத்தை நடத்துகிறார்கள். சில இடங்களில், நிலையத்தை நடத்துபவர்களை விட கற்பவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள். அனைத்துமே நீங்கள் செய்கின்ற முயற்சியிலேயே தங்கியுள்ளது. மாயையின் புயல் வருகின்றது என்றில்லை. இல்லை. உங்களது பழக்கவழக்கம் சரியில்லாததாலும், நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாததுமே காரணமாகும். லௌகீகக் குடும்பத்திலும் அவ்வாறேயாகும். அவர்கள் ஆசிரியரது அல்லது பெற்றோரது வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை. நீங்கள் தனக்கெனத் தந்தை ஒருவரைக் கொண்டிருக்காத, தந்தை ஒருவரின் குழந்தைகளாகி இருக்கிறீர்கள். அங்கு, அவர்கள் அதிகளவு வெளியில் செல்ல வேண்டியுள்ளது. சில குழந்தைகள் தீய சகவாசத்தின் பிடியில் அகப்பட்டுக் கொள்;வதால் தோல்வி அடைகிறார்கள். மாயையின் புயல் உள்ளதென ஏன் அவர்கள் கூற வேண்டும்? அது அவர்களது சொந்த முட்டாள்தனம். அவர்கள் வழிகாட்டல்களைப் பின்பற்றாததால் அவ்வாறான பழக்கவழக்கத்தினால் அவர்கள் தோல்வி அடைகிறார்கள். பல குழந்தைகள் மிகவும் பேராசை உடையவர்கள். சிலருக்குக் கோபமும் ஏனையோருக்குத் திருடும் பழக்கமும் உள்ளது. கடைசியாக அனைத்துமே தெரிய வரும். இன்னார் இன்ன பழக்கத்தினால் விலகிச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் சென்று, சூத்திர குலத்திற்கு உரியவராகிவிட்டார் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் அவரைப் பிராமணர் என அழைக்க முடியாது. அவர் கல்வியை விட்டுச் சென்ற பின்னர், மீண்டும் சூத்திரர் ஆகிவிட்டார். சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்திருந்தாலுமே அவர்கள்; பிரஜைகள் ஆகுவார்கள். விருட்சம் மிகப் பெரியது ஏனையோர் எங்காவது ஓர் இடத்தில் வெளிப்படுகிறார்கள். தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள், வேறு சமயத்திற்கு மாறியிருந்தாலும் அவர்கள் வெளிப்படுவார்கள். பலரும் வருவார்கள். அனைவரும் வியப்படைவார்கள்! ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்களும் முக்தி என்ற தங்களது ஆஸ்தியைப் பெற்றுக் கொள்;ள முடியும்! எவருமே இங்கு வரலாம். தங்களது சொந்த இராச்சியத்தில் தாம் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய வேண்டுமானால், இங்கு வந்து அவர்கள் தங்கள் இலக்கைப்; பெற்றுக் கொள்வார்கள். அத்தகைய ஆத்மாக்கள் இங்கு வந்து தங்களது இலக்கை எவ்வாறு பெறுகிறார்கள் என்பதை பாபா உங்களுக்குக் காட்சியாகக் காட்டி இருக்கிறார். இங்கிருந்தால் மட்டுமே தமது இலக்கை அடைய முடியும் என்றில்லை. எச்சமயத்தைச் சேர்ந்த எவருமே, தமது இலக்கைப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்கள் பெறுகின்ற இலக்கு: தந்தையையும், சாந்திதாமத்தையும் நினைவு செய்து உங்களது சொந்த தர்மத்திலேயே உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைவதாகும். அவர்கள் ஜீவன்முக்தியைப் பெறுவதோ, அங்கு செல்வதோ இல்லை. அவர்கள் இதயபூர்வமாக அதை விரும்புவதில்லை. உண்மையிலேயே இந்தத் தர்மத்தைச் சேர்ந்தவர்களே அங்கு செல்வதை இதய பூர்வமாக விரும்புவார்கள். இறுதியில் ஆத்மாக்கள் தமது தந்தையைத் தெரிந்து கொள்ளவே வேண்டும். பல நிலையங்களில் கல்வியில் அதிகளவிற்குக் கவனம் செலுத்தாத பலரும் இருக்கிறார்கள். அவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியாது என்பது விளங்கிக் கொள்ளப்படுகிறது. அவர்களிடம் நம்பிக்கை இருந்திருந்தால், தமக்கு நேரம் இல்லை என எவருமே கூறமாட்டார்கள். எவ்வாறாயினும், அவர்களது பாக்கியத்தில் அது இல்லாததால், தங்களுக்கு இதற்கு நேரம் இல்லை என்றும், வேறு வேலைகள் உள்ளன என்றும் கூறுகிறார்கள். அவர்களது பாக்கியத்தில் அது இருந்தால் அவர்கள் இரவு பகலாக முயற்சி செய்யத் தொடங்குகிறார்கள். முன்னேறிச் செல்கின்ற போது, தீய சகவாசத்தினால் கெட்டுவிடுகிறார்கள். அதைத் தீய சகுனம் எனவும் அழைக்கலாம். பெரும் சகுனங்கள் பின்னர் குறைந்து, குறைந்த சகுனங்கள் ஆகுகின்றன. மேலும் முன்னேறிச் செல்லும் போது, சகுனங்கள் அகற்றப்பட்டு விடும்! சிலரைப் பற்றி பாபா கூறுகிறார்: அவர்கள் மீதே மோசமான சகுனங்கள் இருக்கின்றன, கடவுள் கூறுவதைக் கூட அவர்கள் செவிமடுப்பதில்லை! பிரம்மா அவற்றைக் கூறுகிறார் என அவர்கள் நினைக்கிறார்கள். சில குழந்தைகள், தமக்கு வழிகாட்டல்களைத் கொடுப்பவர் யார் என்பதைக் கூட உணராது இருக்கிறார்கள். சரீர உணர்வினால், சரீரமுடைய ஒருவரே, வழிகாட்டல்களைக் கொடுக்கிறார் என அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ஆத்ம உணர்வில் இருந்தால், சிவபாபா கூறுகின்ற அனைத்தையும் செய்ய வேண்டுமென புரிந்து கொண்டிருப்பார்கள். பின்னர் அவற்றுக்கு சிவபாபா பொறுப்பெடுக்கிறார். நீங்கள் சிவபாபாவின் வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும். சரீர உணர்விற்கு வருவதால், அவர்கள் சிவபாபாவை மறக்கிறார்கள். அதன் பின்னர் சிவபாபாவினால் பொறுப்பெடுக்க முடியாது. அவரது கட்டளைகள் உங்களது புத்தியில் பதிய வேண்டும். எவ்வாறாயினும் தம்முடன் பேசுபவர் யார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. வேறொருவரும் உங்களுக்குக் கட்டளைகளைக் கொடுக்கவில்லை. தந்தை மாத்திரமே கூறுகிறார்: நான் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறேன். முதலில் என்னை நினைவுசெய்யுங்கள். அதன் பின்னர் நான் உங்களுக்குக் கூறுகின்ற ஞானத்தைக் கிரகித்து, ஏனையோரையும் அவ்வாறு செய்ய ஊக்குவியுங்கள். இந்த ஒரு தொழிலைச் செய்யுங்கள் போதும்! நல்லது, பாபா, உங்களது கட்டளைகள் எதுவானாலும்! அரசர்களின் முன்னிலையில் உள்ளவர்கள், 'உங்களது விருப்பமே எனது ஆணை!" எனக் கூறுகிறார்கள். அரசர்கள் கட்டளைகளைப் பிறப்பிப்பதுண்டு, ஆனால் இங்கோ இது சிவபாபாவின் கட்டளையாகும். நீங்கள் தொடர்ந்து 'கட்டளை எதுவானாலும், சிவபாபாவே!" எனக் கூறவேண்டும். அதன் பின்னர், சிவபாபாவே கட்டளையைக் கொடுக்கிறார் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்;டிருப்பதால் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யும் போது, உங்களது புத்தியின் பூட்டு திறக்கிறது. சிவபாபா கூறுகிறார்: இந்தப் பயிற்சியை நீங்கள் வளர்த்துக் கொண்டால் உங்களது படகு கரையேறும். எவ்வாறாயினும் நீங்கள் அவரைத் தொடர்ந்து மறந்து விடுவதே, இதில் சிரமமாக உள்ளது. மாயையே, உங்களை மறக்கச் செய்கிறாள் என நீங்கள் ஏன் கூறவேண்டும்? நீங்கள் மறந்து விடுவதாலேயே, அனைத்தையும் பிழையாகவே செய்கிறீர்கள். பல குழந்தைகள் ஞானத்தை நன்றாகக் கொடுக்கிறார்கள் ஆனால் அவர்களிடம் பாவத்தை அழிக்கக் கூடிய யோகம் இல்லை. பல நல்ல குழந்தைகள் உள்ளனர் ஆனால் அவர்களிடம் யோகமே இல்லாதிருக்கிறது. அவர்களது பழக்கவழக்கத்திலிருந்து, அவர்கள் யோகத்தில் இருப்பதே இல்லை என்பது விளங்கிக் கொள்ளப்படுகிறது. ஆகையாலே அவர்களது பாவங்கள் அழியாததால், அவர்கள் வருந்த வேண்டி வரும். இதில் புயல் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாததே இதற்குக் காரணம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். இராஜயோகத்தைக் கற்பதற்கே நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் பிரஜைகள் ஆகுவதற்காக (பிரஜாயோகா) உங்களுக்கு யோகம் கற்பிக்கப்படவில்லை. தாயும் தந்தையும் உள்ளார்கள். அவர்களைப் பின்பற்றுங்கள். உங்களாலும் சிம்மாசனத்தில் அமர முடியும். அவர்களே ஸ்ரீ இலக்ஷ்மி நாராயணன் ஆகுகிறார்கள் என்பது நிச்சயம். ஆகையாலே தாயையும் தந்தையையும் பின்பற்றுங்கள். ஏனைய சமயத்தினர் தாய் தந்தையைப் பின்பற்றுவதில்லை. அவர்கள் தந்தையில் மாத்திரமே நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இங்கு உங்களுக்கு இருவருமே உள்ளனர். கடவுளே படைப்பவர். தாயோ மறைமுகமான இரகசியம்.. தாயும் தந்தையும் தொடர்ந்து உங்களுக்குக் கற்பிக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்கள்: அதைச் செய்யாதீர்கள். இதைச் செய்யுங்கள்! ஓர் ஆசிரியர் உங்களைத் தண்டித்தால், அதை அவர் பாடசாலையிலேயே செய்கிறார். மாணவர் ஒருவர் கூறமாட்டார்: நீங்கள் என்னுடைய கௌரவத்தை இழக்கச் செய்கிறீர்கள்! தந்தை ஒருவர் 5. 6 குழந்தைகள் மத்தியில் கூட உங்களை அறையலாம். குழந்தையால் கூற முடியாது: ஏன் 5, 6 குழந்தைகள் முன்னிலையில் என்னை அறைந்தீர்கள்? இல்லை. இங்கு, குழந்தைகளுக்குக் கற்பித்தல்கள் கொடுக்கப்படுகின்றன. உங்களால் அவற்றைப் பின்பற்ற முடியாதுவிட்டால், வீட்டிலேயே வாழ்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது அவச்சேவை செய்தால், நீங்கள் எதையெல்லாம் சம்பாதித்தீர்களோ அவை அழிந்து விடும். உங்களுக்குக் கற்க விருப்பம் இல்லாவிட்டால், 'இதை என்னால் தொடர்ந்து செய்ய முடியாது!" என விட்டு விடுங்கள்! பாபாவை நீங்கள் ஏன் இழிவடையச் செய்ய வேண்டும்? பல குழந்தைகள் உள்ளனர். சிலர் கற்பார்கள், ஏனையோர் விலகி விடுவார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது கல்வியினால் போதை கொண்டிருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: ஒருவரிடமிருந்து ஒருவர் சேவையைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். எந்தக் கர்வமும் இருக்கக் கூடாது. மற்றவர்களிடமிருந்து தனிப்பட்ட சேவையைப் பெறுவது சரீரத்தின் கர்வமாகும். பாபா உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நீதிமன்றத்தின் முன்னிலையில் அமரும் போது, நீங்கள் கூறுவீர்கள்: நான் சட்ட திட்டங்களை அறிந்திருக்கவில்லை! ஆகையாலேயே தந்தை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பின்னர் காட்சிகள் காட்டப்பட்டு தண்டனை வழங்கப்படும். சாட்சி இல்லாது தண்டனையை வழங்க முடியாது. பாபா மிக நன்றாக, முன்னைய கல்பத்தில்; போலவே விளங்கப்படுத்துகிறார். அனைவரது பாக்கியமும் தெரிகிறது! சிலர் சேவை செய்து தமது வாழ்வை வைரம் போன்றதாக்கிக் கொள்கிறார்கள். ஏனையோரோ தமது பாக்கியத்தை இழந்து விடுகிறார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம், ஆசிரியரிடம், சற்குருவிடமிருந்து பெறுகின்ற கற்பித்தல்களைப் பின்பற்றுங்கள். மாயையை குற்றம் சாட்டாதீர்கள். ஆனால் உங்களது பலவீனங்களைச் சோதித்து அவற்றை அகற்றுங்கள்.

2. கர்வத்தைத் துறந்து உங்களது கல்வியில் போதையைக் கொண்டவர்களாக இருங்கள். தனிப்பட்ட சேவையை ஒருபோதுமே மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளாதீர்கள். தீய சகவாசத்தின் ஆதிக்கத்திலிருந்து உங்களை மிகவும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில், கவலையிலிருந்து விடுபட்டு (கவலையற்றவர்களாக) எப்பொழுதுமே நிலையான, அசைக்க முடியாததொரு ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருப்பீர்களாக.

நம்பிக்கையுடைய புத்தியை கொண்டிருப்பவர்களின் அடையாளம் அவர்கள் எப்பொழுதும் கவலையிலிருந்து விடுபட்டிருக்கின்றார்கள். அத்தகைய ஆத்மாக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தளம்பல் அடைவதில்லை. அவர்கள் எப்பொழுதும் அசைக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். ஆகையால், என்ன நடந்தாலும், அதனை பற்றி சிந்திக்காது, ‘ஏன்?’ அல்லது “எதற்கு?” என்ற கேள்விகளுக்குள் செல்லாது, திரிகாலதரிசிகளாக இருந்து, கவலையிலிருந்து விடுபட்டிருங்கள்;. ஏனெனில் ஒவ்வொரு அடியிலும் நன்மை உள்ளது. உபகாரியான தந்தையின் கரங்களை நீங்கள் பிடித்துக் கொண்டிருப்பதனால், உபகாரமற்ற எதனையுமே அவர் உபகாரமானதாக மாற்றுவார் என்பதனால் சதா கவலையிலிருந்து விடுபட்டவராக இருங்கள்.

சுலோகம்:
எப்பொழுதும் அன்பாக இருப்பவர்கள் இயல்பாகவே ஒவ்வொரு பணியிலும் ஒத்துழைக்கின்றார்கள்.