10.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழும்பொழுது, ஒரு தாமரை மலரைப் போன்று தூய்மையாக இருக்க வேண்டும். ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். அவச்சேவை எதுவும் செய்யாதீர்கள்.கேள்வி:
எக்குழந்தைகளை மாயை மிகவும் பலமாகக் குத்துகிறாள்? அதியுயர்ந்த இலக்கு என்ன?பதில்:
சரீர உணர்விலுள்ள குழந்தைகளை மாயை மிகவும் பலமாகக் குத்துகிறாள்;; அவர்கள் பெயரிலும், ரூபத்திலும் சிக்கிக் கொள்கின்றனர். சரீர உணர்வு வந்தவுடனேயே அவர்கள் அறையப்படுகின்றார்கள். இதனால் அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. சரீர உணர்வை அகற்றுவதே மிக உயர்ந்த இலக்காகும். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! தந்தை உங்களின் கீழ்ப்படிவான சேவகராக இருப்பதனால், ஆணவமற்றவராகவும் இருப்பதைப் போல், நீங்களும் ஆணவமற்றவர் ஆகவேண்டும். சற்றேனும் ஆணவம் இருக்கக்கூடாது.
பாடல்:
அவர் எங்களை விட்டுப் பிரியப் போவதுமில்லை, எங்கள் இதயங்களில் துன்பம் இருக்கப் போவதுமில்லை.
ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். குழந்தைகள் கூறுகின்றனர்: நாங்கள் அசரீரி உலகில் இருந்தபொழுது, பாபாவிற்குச் சொந்தமாக இருந்தோம், பாபா எங்களுக்குச் சொந்தமாக இருந்தார். குழந்தைகளாகிய நீங்கள் மிகத் தெளிவான ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருதடவை அவருக்குச் சொந்தமாகியுள்ளோம். அவர் எங்களுக்கு இராஜயோகம் கற்பித்து, எங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துள்ளார். அவர் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே மிகச்சரியாக மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே. ஆகவே, வெறுமனே அவரது குழந்தைகளாகி, இங்கு மதுவனத்தில் அமர்ந்திருக்காதீர்கள். வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழும்பொழுதும், ஒரு தாமரை போல் தூய்மையாக இருங்கள். ஒரு தாமரை மலர் தண்ணீரினுள் உள்ளபொழுதும், தண்ணீருக்கு மேலேயே நிற்கின்றது; அது தண்ணீரால் தொடப்படுவதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் வீட்டிலேயே வாழ வேண்டும், ஆனால் தூய்மையாக இருங்கள். இது உங்களின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். நான் சகல மனிதர்களையும் தூய்மையாக்க வந்துள்ளேன். ஒரேயொருவரே தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும் ஆவார். அவரைத் தவிர வேறு எவராலும் அனைவரையும் தூய்மையாக்க முடியாது. நீங்கள் அரைக் கல்பமாக ஏணியில் கீழிறங்கி வருகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் நிச்சயமாக உங்களின் 84 பிறவிகளையும் பூர்த்திசெய்ய வேண்டும். நீங்கள் உங்களின் 84 பிறவிகளின் சக்கரத்தைப் பூர்த்திசெய்து, முழுமையாக உக்கிய நிலையை அடைந்திருக்கும்பொழுதே, நான் வரவேண்டியுள்ளது. அதற்கு முன்னர் வேறு எவராலும் உங்களைத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாக்க முடியாது. எவருக்குமே தந்தையையோ அல்லது அவரது படைப்பையோ தெரியாது. நாடகத்தின்படி, கலியுகத்தில் அனைவரும் தூய்மையற்றவர்களாகவும், தமோபிரதானாகவும் ஆகவேண்டும். தந்தை வந்து அனைவரையும் தூய்மையாக்கி, அவர்களை அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார். நீங்கள் பின்னர் தந்தையிடமிருந்து உங்களின் ஆஸ்தியாகிய சந்தோஷ தாமத்தைப் பெறுகின்றீர்கள். சத்திய யுகத்தில் துன்பம் கிடையாது. நீங்கள் இப்பொழுது மரணித்து வாழ்ந்து, தந்தைக்கு உரியவர்களாக இருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழ வேண்டும். பாபா உங்களில் எவரையும் உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் விட்டு வருமாறு ஒருபொழுதும் கூறுவதில்லை. இல்லை; இந்த இறுதிப் பிறவியில் வீட்டில் உங்களின் குடும்பத்துடன் வாழும்பொழுதே நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் உங்களின் வீடுகளையும், குடும்பங்களையும் விட்டு நீங்க வேண்டும் என பாபா எப்பொழுதாவது கூறியுள்ளாரா? இல்லை; கடவுளின் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக நீங்களாகவே உங்களின் வீடுகளை விட்டு வெளியேறினீர்கள். சில குழந்தைகள் வீட்டில் இருந்தவாறே கடவுளின் சேவையைச் செய்கின்றனர். அவர்கள் வீடுகளை விட்டு நீங்குமாறு செய்யப்படவில்லை. பாபா உங்களில் எவரையும் உங்கள் வீட்டை விட்டு நீங்குமாறு கூறவில்லை. சேவை செய்வதற்காக நீங்களாகவே இங்கே வந்திருக்கிறீர்கள். பாபா உங்களில் எவரையும் வீட்டை விட்டு நீங்குமாறு செய்யவில்லை. உங்களுடைய லௌகீகத் தந்தை உங்களைத் திருமணம் செய்யுமாறு கூறுகிறார். இப்பொழுது இது மரண பூமியின் இறுதி என்பதை அறிந்திருப்பதால், நீங்கள் அவ்வாறு செய்வதில்லை. திருமணம் செய்வதென்றால் நீங்களே உங்களை அழித்துக் கொள்வதாகும், எனவே, எவ்வாறு உங்களால் தூய்மையாக முடியும்? அதற்குப் பதிலாக, நீங்கள் ஏன் பாரதத்தைச் சுவர்க்கமாக்குவதில் உங்களை ஈடுபடுத்தக்கூடாது? குழந்தைகளுக்கு இராம இராச்சியம் தேவைப்படுகின்றது. அவர்கள் கூவியழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே! சீதையின் இராமரே! ஓ இராமா, வந்து பாரதத்தைச் சுவர்க்கமாக்குங்கள்! அவர்கள் இவ்வாறு கூறினாலும், எதையும் புர்pந்துகொள்வதில்லை. இந்நேரத்தில் கிடைக்கும் சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றது எனச் சந்நியாசிகள் கூறுகின்றனர். உண்மையில் அது அவ்வாறே உள்ளது; இங்கு எவ்விதச் சந்தோஷமும் கிடையாது. அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர், ஆயினும், அவர்களைச் சந்தோஷமற்றவர்கள் ஆக்குவதற்குத் தந்தை ஓர் உலகை உருவாக்க மாட்டார் என்பது அவர்களின் புத்தியில் புகுவதில்லை. தந்தை கூறுகின்றார்: சத்திய யுகத்தில் துன்பத்தின் பெயரோ, சுவடோ இருப்பதில்லை என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா? கம்சன் போன்றவர்கள் எங்கிருந்து வருவார்கள்? நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். உங்களின் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதால், உங்களை நீங்களே அழித்துக் கொள்கின்றீர்கள். சிலர் இந்த ஞானத்தைச் செவிமடுக்கும்பொழுது, வியப்படைகின்றனர். அவர்கள் இதை எடுத்துரைக்கின்றனர், பின்னர் ஓடிச் சென்று, துரோகிகள் ஆகுகின்றனர்; அவர்கள் சென்று, அதிகளவு அவச்சேவை செய்கின்றனர்! அவர்களுக்கு என்ன நடக்கும்? தங்களின் வாழ்க்கைகளை வைரம் போன்று பெறுமதி வாய்ந்தவையாக ஆக்குவதற்குப் பதிலாக, அவர்கள் சிப்பி போலாகுகின்றார்கள். இறுதியில், நீங்கள் செய்த அனைத்தினதும் காட்சிகளைப் பெறுவீர்கள். இத்தகைய நடத்தையால் நீங்கள் இன்ன இன்ன அந்தஸ்தையே பெறுவீர்கள்! நீங்கள் தூய புண்ணியாத்மாக்கள் ஆகுவதால், இங்கு எப் பாவத்தையும் செய்யக்கூடாது. நீங்கள் செய்யும் எப் பாவத்திற்கும் நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். நீங்கள் சுவர்க்கத்திற்குச் சென்றாலும், மிகவும் தாழ்ந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். நீங்கள் இங்கு இராஜயோகம் கற்கவென வந்து, பின்னர் பிரஜைகள் ஆகுகின்றீர்கள்! நீங்கள் பெறுகின்ற அந்தஸ்தில் பெருமளவு வேறுபாடு உள்ளது. எவராவது யக்ஞத்திற்கு எதையாவது கொடுத்து விட்டு, அதைத் திரும்பப் பெறுவாராயின், அவர் சுடலை காப்பவராகவே பிறப்பார் என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சில குழந்தைகளின் நடத்தை அவர்களின் அந்தஸ்தைக் குறைக்கும் வகையில் உள்ளது. பாபா விளங்கப்படுத்துகின்றார்: அரசர் அல்லது அரசி ஆகுவதற்குப் பதிலாக, பிரஜைகளின் மத்தியில் ஒரு தாழ்ந்த அந்தஸ்தைப் பெறக்கூடிய அத்தகைய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். யக்ஞத்திற்குத் தன்னை அர்ப்பணித்த பின்னர் அதை விட்டு ஓடுபவர் என்னவாக ஆகுவார்? தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: குழந்தைகளே, பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். இல்லாவிடில், நூறு மடங்கு தண்டனை பெறப்படும். எனவே, நீங்கள் ஏன் உங்களுக்கே ஓர் இழப்பை ஏற்படுத்த வேண்டும்? வீட்டில் வாழ்ந்து கொண்டு பெருமளவு சேவை செய்பவர்கள், இங்கு வசிப்பவர்களை விடவும் மிகவும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். எட்டு அணாக்கள் அல்லது ஒரு ரூபாயை அனுப்புகின்ற ஏழைக் குழந்தைகள் பலர் உள்ளனர். இங்கு ஆயிரக் கணக்கில் கொடுப்பவர்களை விடவும் ஏழைகளே உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றனர். ஏழைகள் பாவச் செயல்கள் செய்யாததால், உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றனர். ஒரு பாவம் செய்யப்படும்பொழுது, நூறு மடங்கு தண்டனை சேர்க்கப்படுகின்றது. நீங்கள் தூய, புண்ணியாத்மாவாகி அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் துன்பம் விளைவிப்பீர்களாயின், நீதிச் சபை இருக்கும். நீங்கள் என்ன செய்தீர்கள், அதற்கான தண்டனை என்ன என்பது பற்றிய காட்சிகள் வழங்கப்படும். உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படுகின்றது. சில குழந்தைகள் இதைச் செவிமடுத்தாலும், தொடர்ந்தும் தவறாகவே நடந்து கொள்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: எப்பொழுதும் பாலும், சீனியும் போன்று வாழுங்கள். நீங்கள் உவர்நீர் போல் வாழ்வீர்களாயின், பெருமளவு அவச்சேவையையே செய்கின்றீர்கள். நீங்கள் எவரது பெயரிலோ அல்லது ரூபத்திலோ சிக்கிக் கொள்வீர்களாயின், அதுவும் பெரும் பாவமே ஆகும். மாயை ஓர் எலியைப் போன்றவள். இரத்தம் வருவதைக் கூட நீங்கள் உணராத அத்தகைய வகையில் அவள் உங்களை ஊதிக் கடிக்கின்றாள். மாயை உங்களை இரத்தம் வடிக்கவும் செய்கின்றாள். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று கூட உணராத வகையில் அவள் உங்களை அத்தகைய செயல்களைச் செய்ய வைக்கின்றாள். ஐந்து விகாரங்களும் உங்களை முழுமையாக ஆட்கொண்டு விட்டன! நீங்கள் எச்சரிக்கப்படவில்லை என நீதிச் சபைக்கு முன்னால் கூறாமல் இருப்பதற்காக பாபா உங்களைக் கணடிப்பாக எச்சரிக்கவே வேண்டும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரே மிகவும் ஆணவமற்றவர்! அவர் கூறுகின்றார்: நான் உங்களின் கீழ்ப்படிவான சேவகன். சில குழந்தைகள் பெருமளவு அகங்காரத்தைக் கொண்டுள்ளனர்! பாபாவிற்குச் சொந்தமாகிய பின்னரும் அவர்கள் செய்யும் செயல்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! இவர்களுடன் ஒப்பிடும்பொழுது, வெளியே வீட்டில் தங்கள் குடும்பங்களுடன் வாழ்பவர்கள் இவர்களை விடவும் மிக முன்னிலையில் உள்ளனர். நீங்கள் சரீர உணர்விற்கு வந்ததுமே மாயை உங்களைப் பலமாகக் குத்துகின்றாள். சரீர உணர்வை அகற்றுவது என்பது ஓர் உயர்ந்த இலக்காகும். சரீர உணர்வு வந்ததுமே நீங்கள் அறையப்படுகின்றீர்கள். எனவே, உங்களின் அந்தஸ்து அழிக்கப்படக்கூடியதாக ஏன் நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகுகின்றீர்கள்? நீங்கள் அங்கு சென்று, நிலத்தைக் கூட்டிச் சுத்தம் செய்வதாக இருக்கக்கூடாது. உங்களில் எவராவது பாபாவிடம் கேட்டால், பாபாவினால் உங்களுக்குக் கூறமுடியும். நீங்கள் எவ்வளவு சேவை செய்கின்றீர்கள், எத்தனை பேருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளீர்கள் என நீங்கள் ஒவ்வொருவரும் நீங்களாகவே புரிந்துகொள்ள முடியும். மம்மாவும், பாபாவும் அனைவருக்கும் சந்தோஷத்தையே கொடுக்கின்றனர். அவர்கள் மிகவும் சந்தோஷமடைகின்றனர்! பாபா மும்பாயில் அதிகளவில் ஞான நடனம் ஆடுவதுண்டு. அங்கே சக்கரவாகப் பறவைகள் (புராணக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அமிர்தத்தைப் பருகிய பறவைகள்) போன்ற பலர் இருந்தனர். பாபா கூறுகின்றார்: நான் ஞானத்தைச் செவிமடுப்பதில் மிக ஆர்வமாக உள்ளவர்களின் முன்னால் ஞான நடனமாடுவதால், பல நல்ல கருத்துக்கள் வெளிப்படுகின்றன. சக்கரவாகப் பறவைகள் தமக்குள்ளே இதை எடுத்துக் கொள்கின்றன. நீங்களும் அவர்களைப் போன்று ஆகவேண்டும், அப்பொழுதே உங்களாலும் பின்பற்றக் கூடியதாக இருக்கும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் உங்களுடைய சொந்த வழிகாட்டல்களைப் பின்பற்றித் தந்தையை அவமதித்தால், பெருமளவு சேதத்தையே விளைவிக்கின்றீர்கள். தந்தை இப்பொழுது உங்களை விவேகிகள் ஆக்குகிறார். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. எவருமே இப்பொழுது அதனை அவ்வாறு கருதுவதில்லை. வேறு எந்தத் தேசமும் பாரதம் இருந்ததைப் போன்று தூய்மையாக இல்லை. அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள், ஆனால் பாரத மக்களாகிய தாங்களே சுவர்க்கவாசிகளாக இருந்ததை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அங்கு எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. கடவுள் எவ்வாறு வந்து, அழுக்கான தூய்மையற்ற ஆடைகளைக் கழுவுகின்றார் என்று குரு நானக் கடவுளின் புகழைப் பாடினார். அவர் அசரீரியானவர் என்பதே அவரது புகழாகும். “சிவலிங்கம்” என்பதற்குப் பதிலாக அவர்கள் “அமரத்துவ சிம்மாசனம்” என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். தந்தை இப்பொழுது முழு உலகத்தினதும் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளே, ஒரு பாவத்தையேனும் செய்யாதீர்கள்! இல்லாவிடில், நூறு மடங்கு தண்டனை சேர்க்கப்படும். நீங்கள் என்னை அவமதித்திருந்தால், உங்களின் அந்தஸ்து அழிக்கப்படும். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் வாழ்க்கையை வைரம் போன்று பெறுமதி வாய்ந்ததாக்குங்கள். இல்லாவிடில், பெருமளவு வருந்துதல் இருக்கும். நீங்கள் செய்த தவறுகள் தொடர்ந்தும் உள்ளார உங்களை உறுத்திக் கொண்டே இருக்கும்: எனது அந்தஸ்து குறைந்ததாகும் வகையில் நான் ஒவ்வொரு கல்பத்திலும் அதே செயலைச் செய்வேனா? தந்தை கூறுகின்றார்: நீங்கள் தாயையும், தந்தையையும் பின்பற்ற விரும்பினால், நேர்மையாகச் சேவை செய்யுங்கள். மாயை ஏதோவொரு வழியால் உங்களில் பிரவேசிக்கின்றாள். நிலையப் பொறுப்பாளர்கள் முற்றிலும் ஆணவமற்றவர்கள் ஆகவேண்டும். தந்தை எவ்வளவு ஆணவமற்றவர் எனப் பாருங்கள்! சில குழந்தைகள் பிறரிடமிருந்து தனிப்பட்ட சேவையை ஏற்றுக் கொள்கின்றனர். தந்தை மிகவும் ஆணவமற்றவர்! அவர் என்றுமே எவருடனும் கோபப்படுவதில்லை. குழந்தைகள் கீழ்ப்படிவற்றவர்களாக இருந்தால், தந்தையால் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும்: நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? எல்லையற்ற தந்தை மாத்திரமே அனைத்தையும் அறிவார். குழந்தைகள் அனைவருமே ஒரேயளவிற்குத் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதில்லை; இன்னமும் சில தகுதியற்றவர்கள் இருக்கவே செய்கின்றனர். பாபா தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பல குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அவர்களில் நூறாயிரக் கணக்கானோர் இருப்பார்கள். தந்தை தொடர்ந்தும் உங்களை எச்சரிக்கின்றார்: குழந்தைகளே, கவனயீனமானவர்களாகி, தவறுகள் செய்யாதீர்கள்! நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கே இங்கு வந்துள்ளீர்கள். எனவே, தூய்மையற்ற செயல்களைச் செய்யாதீர்கள்! எவரது பெயரிலோ, ரூபத்திலோ சிக்கிக்கொள்ளாதீர்கள்! சரீர உணர்வுடையவர்கள் ஆகாதீர்கள்! ஆத்ம உணர்வுடையவர்களாகித் தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள்! தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! மாயை மிகவும் சக்திசாலி. பாபாவால் அனைத்தையும் விளங்கப்படுத்த முடியும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போன்று ஆணவமற்றவர் ஆகுங்கள். எவரிடமிருந்தும் தனிப்பட்ட சேவையை ஏற்றுக்கொள்ளாதீர்கள்! எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். தண்டனையை அனுபவம் செய்யக்கூடியதாக பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். பாலும் சீனியும் போல் ஒன்றாக வாழுங்கள்.
2. உங்கள் மனதின் சொந்தக் கட்டளைகளை அன்றி, தந்தையொருவரின் ஸ்ரீமத்தையே பின்பற்றுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய தெய்வீகப் புத்தி எனும் விமானத்தின் மூலம் உலகைப் பராமரிக்கின்ற, ஒரு மாஸ்டர் படைப்பவர் ஆவீர்களாக.ஒருவரின் புத்தி எவ்வளவு தெய்வீகமானது என்பதற்கேற்பவே, அந்தத் தெய்வீகத்தின் அடிப்படையிலேயே, அவர்களின் வேகமானது விரைவாக உள்ளது. உங்களுடைய தெய்வீகப் புத்தி எனும் விமானத்தின் தெளிவு மூலம் ஒரு விநாடியில் உலகைச் சுற்றிலும் சுற்றுலா சென்று, ஆத்மாக்கள் அனைவரையும் பராமரியுங்கள். அவர்களைத் திருப்தியானவர்கள் ஆக்குங்கள். நீங்கள் ஒரு பூகோள ஆட்சியாளராகி, தொடர்ந்தும் சுற்றுலா செல்லுமளவுக்கேற்ப, தாங்கள் ஓர் ஒளியைக் கண்டு விட்டார்கள், ஒரு தேவதை நடப்பதைக் கண்டு விட்டார்கள் என்ற ஓசையானது நாலா திசைகளிலிருந்தும் வெளிப்படும். இதற்கு, ஒரு மாஸ்டர் படைப்பவராக, சுயத்திற்கு நன்மை அளிப்பவராகவும், உலகிற்கு நன்மை அளிப்பவராகவும் ஆகுங்கள்.
சுலோகம்:
ஒரு மாஸ்டர் அருள்பவர் ஆகுவதும், பல ஆத்மாக்களுக்குப் பேறுகளின் அனுபவத்தைக் கொடுப்பதுமே, தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதாகும்.
மாதேஷ்வரிஜியின் மேன்மையான பெறுமதிமிக்க வாசகங்கள்
1) கடவுள் சர்வவியாபகர் அல்ல என்பதற்கான அத்தாட்சி யாது?
சமயநூல்கள் அனைத்தினதும் இரத்தினமாகிய, கீதையில் உள்ள கடவுளின் வாசகங்கள்: குழந்தைகளே, எங்கே வெற்றி இருக்கின்றதோ, அங்கே நான் இருக்கின்றேன். இவையே கடவுளின் மேன்மையான வாசகங்கள். மலைகள் அனைத்திலும் அதியுயர்ந்த இமாலயத்தில் நான் இருக்கின்றேன், அத்துடன் பாம்புகளில் நானே கருநாகம் ஆவேன். இதனாலேயே அவர்கள் மலைகளின் மத்தியில் கைலாயத்தைக் காட்டுகின்றார்கள், பாம்புகளின் மத்தியில் அவர்கள் ஒரு கருநாகத்தைக் காட்டுகின்றார்கள். கடவுள் அனைத்துப் பாம்புகளை விடவும் கருநாகத்தில் மாத்திரம் இருந்தார் என்றால், அவர் அனைத்துப் பாம்புகளிலும் வசிக்கவில்லை என்பதையே இது நிரூபிக்கின்றது. கடவுள் அதியுயர்ந்த மலையில் இருக்கின்றார் எனில், அவர் உயரங் குறைவான மலைகளில் இருப்பதில்லை, அப்பொழுது கூறப்படுகின்றது: வெற்றி இருக்குமிடத்தில் பிறப்பு இருக்கின்றது, அதாவது, அவர் தோற்கடிக்கப்படுவதில்லை. கடவுள் சர்வவியாபகர் அல்ல என்பதை இவ்விடயங்கள் நிரூபிக்கின்றன. ஒருபுறத்தில் அவர்கள் இதனைக் கூறுகின்றார்கள், மறுபுறத்தில் கடவுள் பல ரூபங்களில் வருகின்றார் என அவர்கள் கூறுகின்றார்கள், அவர்கள் கடவுளின் 24 அவதாரங்களையும் காட்டியுள்ளார்கள். மீன், முதலைகள் போன்ற அனைத்தும் கடவுள் வடிவங்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அது அவர்களுடைய பொய்யான ஞானமாகும். கடவுள் எங்கும் இருக்கின்றார் என்று மாத்திரமே அவர்கள் கருதுகின்றார்கள். உண்மையில், கலியுகத்தில், மாயையே எங்கும் பிரசன்னமாக இருக்கின்றாள். எனவே, அப்பொழுது கடவுள் எவ்வாறு எங்கும் பிரசன்னமாக இருக்க முடியும்? கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது: நான் மாயையில் பிரசன்னமாகி இருப்பதில்லை. இது கடவுள் எங்கும் நிறைந்திருப்பதில்லை என்பதையே நிரூபிக்கின்றது.
2) அசரீரி உலகம் - ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் வசிப்பிடம்
நாங்கள் அசரீரி உலகைப் பற்றிப் பேசும்பொழுது, அசரீரி என்றால் உருவமற்றது என அர்த்தமல்ல என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அசரீரி உலகைப் பற்றிப் பேசும்பொழுது, நிச்சயமாக அதற்கு ஓர் அர்த்தம் உள்ளது. நிச்சயமாக ஓர் உலகம் உள்ளது, ஆனால் அது பௌதீக உலகம் கொண்டிருப்பதைப் போன்ற ஓர் ரூபத்தைக் கொண்டிருப்பதில்லை. அதேபோல், பரமாத்மாவும் அசரீரியானவர், ஆனால் அவர் நிச்சயமாகத் தனது சொந்த சூட்சும ரூபத்தைக் கொண்டிருக்கின்றார். எனவே, ஆத்மாக்களாகிய எங்களினதும், பரமாத்மாவினதும் உலகமே, அசரீரி உலகமாகும். எனவே, நாங்கள் உலகைப் பற்றிப் பேசும்பொழுது, அங்கே ஓர் உலகம் இருக்கின்றது என்பதையும், அங்கே நாங்கள் வசிக்கின்றோம் என்பதையும் அது காட்டுகின்றது, இதனாலேயே அதற்கு “உலகம்” எனும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அநாதியான ஒளித் தத்துவத்தையே கடவுள் ரூபம் என உலக மக்கள் எண்ணுகின்றார்கள், ஆனால் அது ஓய்வு இல்லம் எனவும் அழைக்கப்படுகின்ற, கடவுளின் வசிப்பிடம் ஆகும். எனவே, கடவுளின் வீட்டை, கடவுள் என்று எங்களால் கூற முடியாது. மற்றைய உலகமானது பிரம்மா, விஷ்ணு, சங்கரர் தங்களது சூட்சும ரூபங்களில் வசிக்கின்ற, சூட்சும உலகம் ஆகும். இது இரு பாகங்களைக் கொண்ட, பௌதீக உலகமாகும். ஒன்று, அரைக் கல்பத்திற்கு முழுமையான சந்தோஷம், தூய்மை, அமைதி இருக்கின்ற, சுவர்க்கம் எனும் விகாரமற்ற உலகமாகும். மற்றையது துன்பமும், அமைதியின்மையும் உள்ள விகாரமான, கலியுக உலகமாகும். இந்த இரு உலகங்களே உள்ளன என்று நாங்கள் ஏன் கூறுகின்றோம்? ஏனெனில் சுவர்க்கம், நரகம் எனும் இரு உலகங்களும் கடவுளால் படைக்கப்பட்டவை என்று மக்கள் கூறுவதாலாகும், ஆனால் இதற்கான கடவுளின் வாசகங்கள்: குழந்தைகளே, நான் துன்ப உலகை உருவாக்கவில்லை. சந்தோஷ உலகமே நான் உருவாக்குகின்ற உலகமாகும். மனித ஆத்மாக்கள் தங்களையும், பரமாத்மாவாகிய என்னையும் மறந்து விட்டதால், துன்பமும், அமைதியின்மையும் உள்ள உலகம் ஏற்பட்டது, இதனாலேயே அவர்கள் வேதனைப்படுகின்றார்கள். சந்தோஷமும், தர்மமும் மிக்க உலகம் இருக்கும்பொழுது, அங்கே ஓர் உலகம் இருப்பதில்லை என்றல்ல. ஆம்;, அங்கே தேவர்கள் வசிக்கின்றார்கள் என்று நாங்கள் கூறும்பொழுது, அங்கே நிச்சயமாகச் செயல்கள் அனைத்தும் இருந்திருக்கும். எவ்வாறாயினும், அங்கே விகாரத்தின் மூலமான படைப்பு இருக்கவில்லை என்பது நிச்சயமே, அத்துடன் இதன் காரணமாக, கர்ம பந்தனங்களும் இருக்கவில்லை. அவ்வுலகம் சுவர்க்க உலகம் எனவும், கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்ட உலகம் எனவும் அழைக்கப்படுகின்றது. எனவே, ஒன்று அசரீரி உலகமும், மற்றையது சூட்சும உலகமும், மூன்றாவது பௌதீக உலகமும் ஆகும். அச்சா.