31.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தையே முதலிலக்க நடிகர். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதே அவரது செயற்பாடாகும். தந்தையைப் போன்று வேறு எவராலும் நடிக்க முடியாது.கேள்வி:
சந்நியாசிகளின் யோகம் பௌதீகமானது. தந்தை எவ்வாறு ஆன்மீக யோகத்தை உங்களுக்குக் கற்பிக்கிறார்?பதில்:
சந்நியாசிகள் பிரம்ம தத்துவத்துடன் யோகம் செய்வதற்கே உங்களுக்குக் கற்பிக்கின்றனர். ஆயினும் அது ஒரு வசிப்பிடமும், அந்த யோகம் பௌதீகமானதும் ஆகும். தத்துவங்கள் 'பரம்" என்று கூறப்படுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் பரமாத்மாவுடன் யோகம் செய்கிறீர்கள், இதனாலேயே, உங்கள் யோகம் ஆன்மீகமானது. தந்தையினால் மாத்திரமே இந்த யோகத்தைக் கற்பிக்க முடியும். அவர் மாத்திரமே உங்கள் ஆன்மீகத் தந்தை ஆதலால்;, வேறு எவராலும் இதைக் கற்பிக்க இயலாது.
பாடல்:
நீங்களே அன்புக் கடல். நாங்கள் ஒரு துளிக்காக ஏங்குகின்றோம்.
ஓம் சாந்தி.
குழந்தைகளே, பலர் ‘ஓம்சாந்தி’ என்று கூறுகிறார்கள், அதாவது, அவர்கள் ஆத்மாக்களாகிய தங்கள் அறிமுகத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால்; அதை, அவர்களாலேயே புரிந்துகொள்ள முடிவதில்லை. 'ஓம்சாந்தி" என்ற வார்த்தைக்கு அவர்கள் பல அர்த்தங்களை உருவாக்கியுள்ளனர். ஓம் என்றால், கடவுள் என்று அர்த்தம் என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் இல்லை! ஆத்மாவே 'ஓம்சாந்தி" என்று கூறுகிறார். அமைதியே, ஆத்மாவாகிய ஒருவரின் ஆதி தர்மமாகும். இதனாலேயே 'ஆத்மாவாகிய நான், அமைதி சொரூபம்" எனக் கூறப்படுகிறது. இது எனது சரீரம், இதன் மூலமே, நான் செயல்களைச் செய்கிறேன். இது மிகவும் இலகுவானது! உண்மையில், தந்தையும் 'ஓம்சாந்தி” என்றே கூறுகிறார். ஏனெனில் நானே அனைவரின் தந்தையாகவும், விதையாகவும் இருப்பதால், படைப்பின் விருட்சமாகிய, கல்ப விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி நான் அறிவேன். நீங்கள் ஒரு மரத்தைப் பார்க்கும்பொழுது, அதன் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். அந்த விதை உயிரற்றது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இதுவே கல்ப விருட்சம். இதன் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. எனக்கு அது தெரியும். நானே ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றேன். நான் இங்கமர்ந்திருந்து ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைக் குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். இது ஒரு விளையாட்டு, இது ஒரு நாடகம் என அழைக்கப்படுகின்றது, நீங்கள் அதிலே நடிகர்கள். தந்தை கூறுகிறார்: நானும் ஒரு நடிகனே. குழந்தைகள் கூறுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவராகிய பாபாவே, ஒரு நடிகராகி இங்கே வாருங்கள்! வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குங்கள்! தந்தை கூறுகிறார்: இப்பொழுது நான் செயற்படுகிறேன். இச்சங்கமயுகத்திலேயே எனது பாகம் இருக்கிறது. எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. நான் இச்சரீரத்தின் மூலமாக நடிக்கிறேன். எனது பெயர் சிவன். அவர், தனது குழந்தைகளுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். குரங்குகளுக்கோ அல்லது மிருகங்களுக்கோ என ஒரு பாடசாலை கிடையாது. எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: மனிதர்களுக்கு ஐந்து விகாரங்கள் இருப்பதால், அவர்களின் முகங்கள் மனிதர்களைப் போல் இருந்தாலும், அவர்களது செயல்களோ குரங்கைப் போன்றே இருக்கின்றன. தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார்: அனைவரும் தங்களைத் தூய்மையற்றவர்கள் என்கிறார்கள், ஆனால், அவர்களுக்குத் தங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குபவர் யார் என்பதோ, பின்னர், யார் வந்து தங்களைத் தூய்மையாக்குகிறார் என்பதோ தெரியாது. அவர்கள் கூவியழைக்கின்ற, தூய்மையாக்குபவர் யார்? அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை! தாங்கள் அனைவரும் நடிகர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆத்மாவாகிய நான், (சரீரம்) இந்த ஆடையை எடுத்து, ஒரு பாகத்தை நடிக்கிறேன். ஆத்மாக்கள் பரந்தாமத்திலிருந்து வந்து, தங்கள் பாகங்களை நடிக்கின்றனர். முழு நாடகமும் பாரதத்தை அடிப்படையாகக் கொண்டது. பாரதம், தூய்மையாக இருந்தது. யார் பாரதத்தைத் தூய்மையற்றதாக்கியவர்? இராவணனே. இலங்கை முழுவதிலும் இராவணனின் இராச்சியம் இருந்ததாக அவர்கள் பாடுகிறார்கள். தந்தை உங்களை எல்லையற்றதிற்குள் எடுத்துச் செல்கிறார். ஓ குழந்தைகளே, இந்த முழு உலகமுமே எல்லையற்ற இலங்கை (தீவு). அந்த இலங்கையோ எல்லைக்குட்பட்ட இலங்கை. இந்த எல்லையற்ற தீவில் இராவண இராச்சியமே இருக்கிறது. முதலில் அது இராம இராச்சியமாக இருந்தது, அது இப்பொழுது இராவண இராச்சியமாக இருக்கிறது. குழந்தைகள் வினவுகிறார்கள்: பாபா, கடவுளின் (இராமரின்) இராச்சியம் எங்கே இருக்கிறது? தந்தை பதிலளிக்கிறார்: குழந்தைகளே, அது இங்கேயே இருந்தது. மீண்டும் அதை அனைவரும் விரும்புகிறார்கள். பாரத மக்களாகிய நீங்கள், ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருந்தீர்கள், இந்து சமயத்தவர்களல்ல, இனிமையிலும் இனிமையான, அன்பான, நீண்ட காலம் பிரிந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே, ஆரம்பத்தில் நீங்கள் மாத்திரமே பாரதத்தில் இருந்தீர்கள். உங்களுக்கு அந்தச் சத்திய யுக இராச்சியத்தைக் கொடுத்தவர் யார்? நிச்சயமாக, தந்தையாகிய சுவர்க்கக் கடவுளே உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுத்தார். பலர் ஏனைய மதங்களுக்கு மாற்றப்பட்டு விட்டார்கள் என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். இங்கு, முஸ்லிம்களின் இராச்சியம் இருந்தபொழுது, அவர்கள் பலரை முஸ்லிம்களாக மாற்றி விட்டனர். இங்கு கிறிஸ்தவர்களின் இராச்சியம் இருந்தபொழுது, பலர் கிறிஸ்தவர்கள் ஆக்கப்பட்டனர். இங்கு, பௌத்தர்களுக்கென ஓர் இராச்சியம் இல்லாதபொழுதும், பலர் பௌத்தர்களாகினர்; அவர்கள் அந்தச் சமயத்திற்கு மாற்றப்பட்டனர். ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் மறைந்து பின்னரே, அது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்பட முடியும். பாரத மக்களாகிய உங்களுக்குத் தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் அனைவரும், ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருந்தீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள். நீங்கள் பிராமண, தேவ, சத்திரிய குலங்களினூடாகச் சென்றீர்கள். நீங்கள் தேவ குலத்தினுள் வரும்பொருட்டு, இப்பொழுது பிராமணக் குலத்தினுள் வந்துள்ளீர்கள். அவர்கள் பாடுகிறார்கள்: தேவர்கள் ஆகவுள்ள பிராமணருக்கு வந்தனங்கள். அவர்கள் முதலில் பிராமணர்களின் பெயரைக் குறிப்பிடுகிறார்கள். பிராமணர்களே, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்கினார்கள். இதுவே பாரதத்தின் புராதன யோகம் ஆகும். ஆதியில் இருந்த இராஜயோகமே, கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீதையின் யோகத்தைக் கற்பித்தவர் யார்? பாரதத்திலுள்ள மக்கள் அதை மறந்து விட்டனர். தான் குழந்தைகளாகிய உங்களுக்கே யோகம் கற்பித்ததாகத் தந்தை விளங்கப்படுத்துகிறார். இது ஆன்மீக யோகம். ஏனைய யோகங்கள் யாவும் பௌதீகமானவை. சந்நியாசிகள் பௌதீகமான யோகத்தை அல்லது பிரம்ம தத்துவங்களுடன் எவ்வாறு யோகம் செய்வது எனக் கற்பிக்கிறார்கள். அது தவறானது. பிரம்ம தத்துவம் ஒரு வசிப்பிடம். அது பரமாத்மா அல்ல. அவர்கள் தந்தையை மறந்து விட்டனர். நீங்களுமே அவரை மறந்து விட்டீர்கள்; நீங்கள், உங்கள் சொந்தத் தர்மத்தை மறந்து விட்டீர்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் எந்த யோகமுமே இல்லை. ஹத்தயோகமும், இராஜயோகமும் இங்கேயே உள்ளன. துறவுப் பாதையில் உள்ள சந்நியாசிகளால் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க இயலாது. அதை அறிந்து கொண்டவர்களால் மாத்திரமே அதைக் கற்பிக்க முடியும். சந்நியாசிகள் தங்கள் இராச்சியம் போன்றவற்றையும் கைவிட்டுச் செல்கிறார்கள். அரசன் 'கோபிசாந்தின்" உதாரணமும் இருக்கிறது; அவர் தனது இராச்சியத்தைத் துறந்து காட்டிற்குச் சென்றார். அவரைப் பற்றிய கதை ஒன்று இருக்கிறது. சந்நியாசிகள் உங்களை இராச்சியத்தைத் துறக்கும்படி செய்வதால், அவர்களால் எவ்வாறு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? தற்;பொழுது, விருட்சம் முழுவதுமே முற்றிலும் உக்கிய நிலையை அடைந்து விட்டது; இப்பொழுது அது விழுகின்ற நிலையில் உள்ளது. முழுமையாக உக்கிய போகும் நிலையை அடையும் ஒரு மரம் முடிவில் வெட்டி வீழ்த்தப்படும். அதைப் போலவே, இம் மனித உலக விருட்சமும் தமோபிரதான் நிலையில் உள்ளது; அதில் எந்தச் சக்தியுமே எஞ்சியிருக்கவில்லை. அது நிச்சயமாக அழிக்கப்படும். அதற்கு முன் ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும். சத்திய யுகத்தில் எவரும் சீரழிந்த நிலையில் இருப்பதில்லை. மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று யோகத்தைக் கற்பிக்கிறார்கள், ஆனால் அது ஹத்தயோகம்; அதில் எவ்வித ஞானமும் இல்லை. பலவிதமான ஹத்தயோகங்கள் உள்ளன. இது இராஜ யோகம். இது ஆன்மீக யோகம் என அழைக்கப்படுகிறது. ஏனைய யாவும் பௌதீகமான யோகங்கள். அந்த யோகத்தை மனிதர்களே மனிதர்களுக்குக் கற்பிக்கின்றனர். தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களுக்கு இந்த இராஜயோகத்தை ஒருமுறை மாத்திரமே கற்பிக்கிறேன். வேறெவராலும் என்றுமே அதை உங்களுக்குக் கற்பிக்க இயலாது. ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு, ஆன்மீகத் தந்தை கற்பிக்கிறார்: சதா என்னை மாத்திரமே நினைவுசெய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஹத்த யோகிகளால், ஒருபொழுதும் இதைக் கூற இயலாது. தந்தை, ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது புதியதொன்று. தந்தை இப்பொழுது உங்களை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குகிறார். தந்தைக்கென ஒரு சரீரமில்லை. அவர், இவரது சரீரத்தினுள் வந்து இவரது பெயரை மாற்றுகிறார், ஏனெனில், இவர் மரணித்து வாழ்கிறார். இல்லறத்தில் உள்ளவர்கள் சந்நியாசிகளாகும்பொழுது, 'மரணித்து வாழ்கிறார்கள்". அவர்கள் இல்லற ஆச்சிரமத்தை விட்டு விலகித் துறவறப் பாதையில் செல்கிறார்கள். நீங்கள் மரணித்து வாழும்பொழுது, உங்கள் பெயர் கூட மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் அனைவருக்கும் பெயர்கள் கொடுக்கப்பட்டன. அவர்களிற் சிலர் இந்த ஞானத்தைக் கேட்கும்பொழுது வியப்படைந்து மற்றவர்களுக்கும் கூறிய பின்னர், விலகிச் சென்று விட்டார்கள். பெயர்களைக் கொடுப்பது நிறுத்தப்பட்டது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: நான் அவர்களுக்கு ஒரு பெயரைக் கொடுத்த பின்னர் அவர்கள் ஓடிப் போனால் அது பயனற்றதாகி விடுகிறது. ஆரம்பத்தில் வந்தவர்களின் பெயர்கள் மிகவும் களிப்பூூட்டக்கூடியவையாக இருந்தன. இப்பொழுது அவர்களுக்கு அத்தகைய பெயர்கள் கொடுக்கப்படுவதில்லை. இங்கு நிரந்தரமாக இருப்பவர்களுக்கே பெயர்கள் கொடுக்கப்படும். பலருக்குப் பெயர்கள் கொடுக்கப்பட்டன, ஆனால் பின்னர், அவர்கள் தந்தையை விட்டுச் சென்று விட்டனர். இதனாலேயே இப்பொழுது பெயர்கள் மாற்றப்படுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்த ஞானம், கிறிஸ்தவர்களின் புத்தியிலும் இருக்கும். அசரீரியான தந்தையே வந்து, பாரதத்தின் யோகத்தைக் கற்பித்தார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தந்தையை நினைப்பதாலேயே பாவங்கள் அழிக்கப்படும். பின்னர் நாங்கள் வீடு திரும்புவோம். இந்தத் தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருந்து பின்னர் வேறு சமயத்திற்கு மாற்றப்பட்டவர்கள் வந்து இங்கே இருப்பார்கள். மனிதர்களால் மனிதர்களுக்குச் சற்கதி அளிக்க முடியாதென்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த தாதாவும் ஒரு மனிதரே. இவரும் கூறுகிறார்: என்னால் எவருக்குமே சற்கதியளிக்க முடியாது. தந்தையின் நினைவில் இருப்பதாலேயே, எங்களால் சற்கதியைப் பெற முடியுமென அந்த பாபா எங்களுக்குக் கற்பிக்கிறார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே ஓ, ஆத்மாக்களே, என்னுடன் யோகம் செய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆரம்பத்தில் நீங்கள் தூய்மையாகவும், சத்திய யுகத்தைச் சார்ந்தவர்களாகவும் இருந்தீர்கள், பின்னர், உங்களில் கலப்படம் கலக்கப்பட்டது. ஆரம்பத்தில் 24 கரட் தங்கமாக இருந்த தேவர்கள், இப்பொழுது கலியுகத்தை அடைந்து விட்டார்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இந்த யோகத்தைக் கற்க வேண்டும். சிலர் யாவற்றையும் அறிந்திருக்கிறார்கள், ஏனையோர் சிறிதளவே அறிந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். சிலரோ இங்கு என்ன கற்பிக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு மட்டும் வருகிறார்கள். அவர்கள் எண்ணுகிறார்கள்: பல பிரம்மாகுமாரர்களும், பிரம்மாகுமாரிகளும் உள்ளனர், நிச்சயமாக பிரஜாபிதா பிரம்மாவும் இருக்க வேண்டும், ஏராளமானோர் இவருடைய குழந்தைகளாகி விட்டனர். அங்கு நிச்சயமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும், எனவே அங்கு சென்று அவர்களைக் கேட்போம். “பிரஜாபிதா பிரம்மாவிடமிருந்து எதனை நீங்கள் பெறுகிறீர்கள்?” இது வினவப்பட வேண்டும், எவ்வாறாயினும், அவர்களுக்கு இந்தளவைக் கொண்ட புத்தியேனும் இல்லை! 'யார் கல்லுப்புத்தி உடையவர்களாக இருந்தார்களோ, அவர்கள் தெய்வீகப் புத்தி உடையவர்களாகி விட்டனர். யார் தெய்வீகப் புத்தி உடையவர்களாக இருந்தார்களோ, அவர்கள் கல்லுப்புத்தி உடையவர்கள் ஆகிவிட்டனர்" என்று குறிப்பாகப் பாரதத்தில் உள்ளவர்களுக்கே கூறப்படுகிறது. சத்திய, திரேதா யுகங்களில் நீங்கள் தெய்வீகப் புத்தி உடையவர்களாகவும், சத்திய யுகத்தவர்களாகவும் இருந்தீர்கள், பின்னர் திரேதா யுகத்தில் அவர்கள் இரு கலைகளால் குறைவடைந்தனர். அவர்கள் சித்தி அடையாததினாலேயே “சந்திர வம்சம்” என்ற பெயர் இருக்கிறது. இதுவும் ஒரு பாடசாலை; 33மூ இலும் குறைவான புள்ளிகள் பெறுபவர்கள் சித்தியடைவதில்லை. இராமரும், சீதையும் அவர்களுடைய வம்சமும் முழுமையடையவில்லை, இதனாலேயே அவர்களால் சூரிய வம்சத்தினராக முடியவில்லை. பரீட்சை மிகவும் உயர்ந்தது என்பதால் சிலர் சித்தியடைவதில்லை. முன்னர், அரசாங்கத்தினால் இந்திய சிவில் சேவைப் பரீட்சை (ஐ.சீ.எஸ்) நடாத்தப்பட்டது. அனைவராலும் அதற்காகக் கற்ற இயலாது. பலரில் ஒரு கையளவினரே தோன்றுவார்கள். ஒருவர் சூரிய வம்சத்துச் சக்கரவர்த்தி அல்லது சக்கரவர்த்தினியாக விரும்பினால், அதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. மம்மாவும், பாபாவும் கூட ஸ்ரீமத்தின் படியே கற்கிறார்கள். அவர்கள் கற்று முதல் தரத்தைப் பெற்றார்கள். பின்னர் தந்தையையும், தாயையும் பின்பற்றுபவர்கள் அவர்களுடைய சிம்மாசனத்தில் அமர்வார்கள். முதலாவது எட்வேர்ட், இரண்டாவது எட்வேர்ட் என்பது போல், சூரிய வம்சத்தில் எட்டு வம்சத்தினர் இருப்பார்கள். உங்களுக்குக் கிறிஸ்தவர்களுடன் பெருமளவு தொடர்பு இருக்கிறது. பாரத இராச்சியத்தைக் கிறிஸ்தவ குலத்தினர், முழுமையாகவே அழித்துவிட்டனர். அவர்கள் பாரதத்திலிருந்து எல்லையற்ற செல்வத்தை எடுத்துச் சென்றார்கள். எனவே சத்திய யுகத்தில் எவ்வளவு எல்லையற்ற செல்வம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அதனுடன் ஒப்பிடும்பொழுது, இங்கிருக்கும் செல்வம் எதுவுமில்லை! அங்கு சுரங்கங்கள் யாவுமே நிறைந்திருக்கும். இப்பொழுது சுரங்கங்கள் யாவும் வெறுமையாகி உள்ளன. சக்கரம் மீண்டும் சுழலும் ஆதலால், சுரங்கங்கள் அனைத்தும் மீண்டும் நிரம்பும். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் இராவணனை வென்று, உங்கள் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். அரைக் கல்பத்தின் பின்னர், இராவணன் வருவதால், நீங்கள் உங்கள் இராச்சியத்தை இழப்பீர்கள். பாரத மக்களாகிய நீங்கள் இப்பொழுது சிப்பிகளைப் போல் ஆகி விட்டீர்கள். நான் உங்களை வைரங்களைப் போல் ஆக்கினேன், இராவணன் உங்களைச் சிப்பிகளைப் போலாக்கி விட்டான். இராவணன் எப்பொழுது வந்தான் என்றோ, அவர்கள் அவனுடைய கொடும்பாவியை ஏன் எரிக்கிறார்கள் என்றோ மக்கள் புரிந்துகொள்வதில்லை. ஆரம்ப காலத்திலிருந்தே இராவணன் இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அரைக் கல்பத்தின் பின்னரே இராவண இராச்சியம் ஆரம்பமானது. அவர்கள் விகாரமுடையவர்கள் ஆனதால், தங்களைத் தேவர்கள் என அவர்களால் அழைக்க முடியவில்லை. உண்மையில் நீங்கள் தேவ தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருந்;தீர்கள். நீங்கள் அனுபவித்த அளவு சந்தோஷத்தை வேறு எவராலுமே அனுபவம் செய்ய இயலாது. அதி ஏழ்மை நிலையை அடைபவரும் நீங்களே. மற்றைய சமயங்களின் விரிவாக்கம் பின்னரே நடைபெறுகிறது. கிறிஸ்து வந்தபொழுது, ஆரம்பத்தில் வெகு சிலரே இருந்தனர். அவர்களில் பலர் இருக்கும்பொழுதே, அவர்களால் ஓர் இராச்சியத்தை ஆட்சிசெய்ய முடியும். நீங்கள், முதலில் உங்கள் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். இவ்விடயங்கள் யாவும் ஞான விடயங்களே. தந்தை கூறுகிறார்: ஓ, ஆத்மாக்களே, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். அரைக் கல்பத்திற்கு நீங்கள் சரீர உணர்வில் இருந்தீர்கள். இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! அரைக் கல்பமாக உங்கள் மீது துரு படிந்ததால், நீங்கள் மீண்டும் மீண்டும்; இதை மறந்து விடுகிறீர்கள். இந்நேரத்தில், நீங்களே உச்சிக்குடுமிகளான பிராமணர்கள். நீங்கள் அனைவரிலும் உயர்வானவர்கள். சந்நியாசிகள், பிரம்ம தத்துவத்துடன் யோகம் செய்கிறார்கள், ஆனால் அவர்களின் பாவம் அதன் மூலம் அழிவதில்லை. அனைவருமே நிச்சயமாக சதோ, ரஜோ, தமோ நிலைகளினூடாகச் கடந்து செல்ல வேண்டும். எவருமே வீடு திரும்ப முடியாது. அனைவரும் தமோபிரதானாகும்பொழுது, தந்தை வந்து அனைவரையும் சதோபிரதான் ஆக்குகிறார், அதாவது, அனைவரினதும் ஒளி ஏற்றப்படுகிறது. ஒவ்வோர் ஆத்மாவுமே, தனது சொந்தப் பாகத்தைப் பெற்றிருக்கிறார். நீங்களே கதாநாயக, கதாநாயகி நடிகர்கள். பாரத மக்களாகிய நீங்களே அனைவரிலும் அதியுயர்வானவர்கள், ஏனெனில் நீங்களே இராச்சியத்தைப் பெற்றுப் பின்னர் அதனை இழக்கின்றீர்கள். வேறு எவருமே இவ்வாறு ஓர் இராச்சியத்தைப் பெறுவதில்லை. அவர்கள் பௌதீகச் சக்தியினாலேயே ஓர் இராச்சியத்தைப் பெறுகிறார்கள். யார் உலகின் அதிபதிகளாக இருந்தார்களோ, அவர்கள் மீண்டும் அவ்வாறு ஆகுவார்கள் என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். வேறு எவருமல்லாது, தந்தையால் மாத்திரமே உண்மையான இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பிக்க முடியும். அம்மக்கள் கற்பிக்கும் யோகம் பிழையான யோகமாகும். எவராலும் வீடு திரும்ப முடியாது. இப்பொழுது, இது இறுதியாகும். அனைவருமே துன்பத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளார்கள், பின்னர் அவர்கள் வரிசைக்கிரமப்படி இறங்கி வருவார்கள். முதலில் சந்தோஷம் அனுபவம் செய்யப்படும், பின்னர் துன்பம் அனுபவம் செய்யப்படும். இவ்விடயங்கள் யாவுமே புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. கூறப்படுகிறது: உங்கள் கரங்கள் வேலையைச் செய்கையில், உங்கள் இதயம் தந்தையை நினைவுசெய்யட்டும். தொடர்ந்தும் உங்கள் வேலையைச் செய்யுங்கள், உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைத்துக் கொள்ளுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகள். அந்த அன்பிற்கினியவர் இப்பொழுது வந்திருக்கிறார். அவர், மணவாட்டிகளாகிய உங்கள் அனைவரையும் அழகானவர்களாக்கித் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அவரே எல்லையற்ற மணவாட்டிகளின், எல்லையற்ற மணவாளன். அவர் கூறுகிறார்: நான் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். பின்னர், நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமப்படி, உங்கள் அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டு, உங்கள் குழந்தைகளைப் பராமரிக்கலாம். ஓ, ஆத்மாக்களே, உங்கள் இதயங்கள் தந்தையை நோக்கியே செல்ல வேண்டும். இந்நினைவைத் தொடர்ந்தும் பயிற்சி செய்யுங்கள். தந்தையை நினைவுசெய்வதால், இப்பொழுது நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகவுள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். மாணவர்களாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். இது மிகவும் இலகுவானது! நாடகப்படி, நீங்கள் அனைவருக்கும் பாதையைக் காட்டுகிறீர்கள். எவருடனும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ஞானம் யாவுமே, இப்பொழுது உங்கள் புத்தியில் இருக்கிறது. மனிதர்கள் நோயிலிருந்து குணமடையும்பொழுது, மக்கள் அவர்களை வாழ்த்துகிறார்கள். இங்கோ, முழு உலகுமே நோய்வாய்ப்பட்டிருக்கிறது. குறுகிய காலத்தில், வெற்றி முழக்கம் ஒலிக்கும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உண்மையான காதலிகள் ஆகுங்கள். உங்கள் கரங்கள் தொடர்ந்தும் வேலை செய்கையில், புத்தியானது உங்கள் அன்பிற்கினியவரை நினைவுசெய்வதைப் பயிற்சி செய்யட்டும். தந்தையை நினைவுசெய்வதனால், நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுகிறீர்கள் என்னும் சந்தோஷத்தைப் பேணுங்கள்.
2. சூரிய வம்ச சிம்மாசனத்தில் அமர்வதற்கு, தாயையும் தந்தையையும் முழுமையாகப் பின்பற்றுங்கள். தந்தையைப் போல் ஞானம் நிறைந்தவராகி அனைவருக்கும் பாதையைக் காட்டுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய துண்டிக்கப்படாத தொடர்;பு மூலம் ஒரு மின்னோட்டத்தை அனுபவம் செய்வதால், சதா ஒரு வெற்றியாளராகவும், மாயையை வெல்பவராகவும் ஆவீர்களாக.மின்சார சக்தியானது, மின்சார அதிர்ச்சியினால் ஒரு நபர் தூக்கியெறியப்படும் அத்தகையதொரு மின்னோட்டத்தைக் கொடுக்கின்றது. அதேபோன்று, இறை சக்தி மாயையைத் தூக்கி வீசட்டும். அத்தகைய மின்னோட்டம் இருக்கட்டும். எவ்வாறாயினும், உங்கள் தொடர்பே அந்த மின்னோட்டத்தின் அடிப்படையாகும். நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, ஒவ்வொரு விநாடியிலும் தந்தையுடன் உங்கள் தொடர்பு இருக்கட்டும். நீங்கள் ஒரு மின்னோட்டத்தைப் பெற்று, வெற்றியாளராகவும், மாயையை வெல்பவராகவும் ஆகும் வகையில், அத்தகையதொரு துண்டிக்கப்படாத தொடர்பு இருக்கட்டும்.
சுலோகம்:
நல்ல அல்லது தீய செயல்களைப் புரிபவர்களின் ஆதிக்கம் எனும் பந்தனத்திலிருந்து விடுபட்டுள்ளவரே, ஒரு தபஸ்வி ஆவார்.