04.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிமையிலும் இனிமையான சேவாதாரிக் குழந்தைகளே, சேவையில் தடைகளை ஏற்படுத்தும் அத்தகைய செயல்களைச் செய்ய வேண்டாம்.கேள்வி:
சங்கமயுகத்தில், குழந்தைகள் முழுமையாக மிகச்சரியானவர்கள் ஆகவேண்டும். எக்குழந்தைகளால் மிகச்சரியானவர்கள் ஆகமுடியும்?பதில்:
1. உண்மையான தந்தையுடன் சதா நேர்மையாக இருக்கும் குழந்தைகளால் மிகச்சரியானவர்களாக ஆகமுடியும். நீங்கள் அகத்தில் ஒருவிதமாகவும், புறத்தில் வேறுவிதமாகவும் இருக்கக்கூடாது. 2. சிவபாபாவைத் தவிர வேறு எதிலும் தங்களை ஈடுபடுத்தாதவர்களும் 3. ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்களும், எத்தவறுகளையும் செய்யாதவர்களும் மிகச்சரியானவர்களாக ஆகமுடியும்.
பாடல்:
உங்கள் குழந்தைப் பருவ நாட்களை மறக்க வேண்டாம்…
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலின் ஒரு சில வரிகளைக் கேட்டார்கள். இப்பொழுது எல்லையற்ற தந்தை உங்களுக்கு உங்களுடைய எல்லையற்ற சந்தோஷ ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்னும் நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. நீங்கள் அத்தகையதொரு தந்தையின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். ஆகவே நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், என்ன நிகழும்? ஒரு கணம் நீங்கள் சிரித்தவாறே, நீங்கள் சக்கரவர்த்திகளும், சக்கரவர்த்தினிகளும் ஆகுவீர்கள் எனக் கூறுகிறீர்கள், ஆனால் நீங்கள் அவரைக் கைவிட்டால், நீங்கள் பின்னர் சாதாரணப் பிரஜைகள் ஆகுகிறீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள். அனைவரும் சுவர்க்கத்துக்குச் செல்வார்கள் என்றில்லை. சத்திய, திரேதா யுகங்களுக்குச் செல்லவுள்ளவர்கள் மாத்திரமே செல்வார்கள். சத்திய, திரேதா யுகங்களை ஒன்றுசேர்த்து சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், புதிய உலக ஆரம்பத்தில் வருபவர்கள், பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள், பின்னர் வருபவர்கள் எந்த ஞானத்தையும் பெற மாட்டார்கள். ஞானத்தைப் பெறுபவர்கள் சத்திய, திரேதா யுகங்களுக்குச் செல்வார்கள். ஏனைய அனைவரும் இராவண இராச்சியத்துக்குள் வருவார்கள். அவர்கள் ஒரு சிறிதளவு சந்தோஷத்தையே அனுபவம் செய்வார்கள். சத்திய, திரேதா யுகங்களில் பெருமளவு சந்தோஷம் உள்ளது. இதனாலேயே நீங்கள் தந்தையிடமிருந்து உங்களுடைய எல்லையற்ற சந்தோஷ ஆஸ்தியைக் கோருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய மிகச்சிறந்த செய்திகளை எழுதுங்கள். நீங்கள் அச்சிடுகின்ற அட்டைகளில் எழுதுங்கள்: இதுவே அதிமேன்மையான, எல்லையற்ற தந்தையிடமிருந்தான நற்செய்தியாகும். கண்காட்சிகளில் எவ்வாறு புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் காண்பிக்கிறீர்கள். இதை மிகவும் தெளிவாகப் பெரிய எழுத்துக்களில் எழுதுங்கள். எல்லையற்ற தந்தையும், ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், சற்கதியை அருள்பவரும், கீதையின் கடவுளுமாகிய சிவன், மீண்டும் ஒருமுறை பிரம்மாகுமார், குமாரிகளினூடாக, கலியுகத்து, முழுமையான விகார, சீரழிந்த, தூய்மையற்ற உலகைச் சத்தியயுகத்து, முழுமையாகவே விகாரமற்ற, தூய, மேன்மையான உலகாக மாற்றுகிறார். வந்து செவிமடுத்து, இந்த நற்செய்தியைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அரசாங்கத்துக்கும் கூறியுள்ளீர்கள்: எவ்வாறு நாங்கள் மீண்டும் ஒருமுறை மேன்மையான, 100மூ தூய்மை, அமைதி, சந்தோஷம் உள்ள சத்தியயுகத்துத் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கிறோம் என்பதையும், எவ்வாறு இந்த விகார உலகம் அழியப் போகிறது என்பதையும் வந்து புரிந்துகொள்ளுங்கள். இவ்விதமாகத் தெளிவாக எழுதுங்கள். மக்களால் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய அத்தகையதொரு வழியில் அட்டைகளில் எழுதுங்கள். எவ்வாறு பிரஜாபிதா பிரம்மாகுமார்களும், குமாரிகளும் நாடகத்திட்டத்துக்கேற்ப, மிகச்சரியாக அவர்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்று, பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனால் இலகு இராஜயோகத்தினூடாகவும், தூய்மைச் சக்;தியினூடாகவும் தங்கள் சரீரம், மனம், செல்வத்தின் மூலம் பாரதத்தை மிகவும் மேன்மையாகவும், தூய்மையாகவும் ஆக்குகிறார்கள் என்பதை வந்து புரிந்துகொள்ளுங்கள். இதை அட்டைகளில் தெளிவாக அச்சிடுங்கள், அதனால் பிரம்மா குமாரிகளாகிய நீங்கள் சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், இராம இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும். இது காந்திஜியின் விருப்பமாகவும் இருந்தது. இந்த முழு அழைப்பிதழையும் செய்தித்தாள்களிலும் அச்சிடுங்கள். பிரஜாபிதா பிரம்மாகுமார்களும், குமாரிகளும் இதைத் தங்கள் சொந்த சரீரங்கள், மனங்கள், பணத்தின் மூலம் செய்கிறார்கள், அதனால் மக்கள் ஒருபொழுதுமே நீங்கள் தானத்துக்காக அல்லது நன்கொடை போன்றவற்றுக்காக வேண்டுகிறீர்கள் என எண்ணாதவாறு நிச்சயமாக விளங்கப்படுத்துங்கள். வெளியுலகில், தங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற நன்கொடைகளின் அடிப்படையில் அனைவரும் முன்னேறுகிறார்கள். இங்கு, பிரம்மாகுமார், குமாரிகளாகிய நாங்கள் அனைத்து விடயங்களையும் எங்கள் சொந்த சரீரங்கள், மனங்கள், பணத்தினூடாகச் செய்கிறோம் எனக் கூறுகிறீர்கள். நாங்கள் எங்கள் சொந்த இராச்சியத்தைப் பெறுவதனால், எங்கள் செலவுகளை நாங்களே செலுத்துவோம். முயற்சி செய்பவர்கள் 21 பிறவிகளுக்கு ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். பாரததேச வாசிகளே மேன்மையாகவும், இரட்டைக் கிரீடதாரிகளாகவும் ஆகுகிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் இரட்டைக் கிரீடதாரிகள் ஆவார்கள். தற்சமயம், கிரீடம் இல்லை. இது மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். தந்தை கூறுகிறார்: இவ்வாறு எழுதுவதனால், பிரம்மா குமார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அப்பாவி மக்களால் புரிந்துகொள்ள முடியும். அதைப் பற்றிச் செல்வாக்குள்ள மக்கள் பேசும்பொழுது, ஏழைகளும் கேட்பார்கள். இல்லாவிட்டால், ஏழைகளை எவரும் செவிமடுப்பதில்லை. செல்வந்தர்களை மிகவும் விரைவாகச் செவிமடுக்கிறார்கள். நீங்கள் விசேடமாகப் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகிறீர்கள் எனவும், ஏனைய அனைவரும் அமைதி தாமத்துக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் நீங்கள் அவர்களுக்கு நிரூபியுங்கள். இவ்விதமாக விளங்கப்படுத்துங்கள்: 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதம் அவ்வாறு சுவர்க்கமாக இருந்தது. இப்பொழுது கலியுகமாகும், அது சத்தியயுகமாகும். எங்களுக்குக் கூறுங்கள்: சத்தியயுகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இப்பொழுது கலியுக இறுதியாகும். இதுவே அதே மாபெரும் மகாபாரத யுத்தமாகும். வேறெந்த நேரத்திலும் அத்தகையதொரு யுத்தம் நடைபெற்றதில்லை. இறுதியில் மூன்றாம் உலக யுத்தம் நடைபெற்றது. அவர்கள் முயற்சித்;துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அணுக்குண்டுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எவரையும் செவிமடுப்பதில்லை. அவர்கள் தங்கள் எதிரிகளுக்குக் கூறுகிறார்கள்: நீங்கள் ஏற்கெனவே உருவாக்கியுள்ள குண்டுகள் அனைத்தையும் கடலில் வீசினால், நாங்கள் மேலும் குண்டுகளை உருவாக்க மாட்டோம். அது எவ்வாறு நீங்கள் குண்டுகளை வைத்திருப்பதும், நாங்கள் அவற்றை உருவாக்காது இருப்பதும்? எவ்வாறாயினும், இவ்விதமாக விதி உருவாக்கப்பட்டது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு எவ்வளவுதான் வழிகாட்டல்களைக் கொடுத்தாலும், அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். விநாசம் நடைபெற்றிருக்காது விட்டால், நீங்கள் எவ்வாறு இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள்? குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கை உள்ளது. சந்தேகம்மிக்க புத்தியையுடையவர்கள் பாபாவை விட்டு விலகித் துரோகிகள் ஆகுகிறார்கள். தந்தைக்கு உரியவராகிய பின்னர், ஒரு துரோகியாக ஆகவேண்டாம்! நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும்;; வேறு எதனிலும் நன்மை இல்லை. உண்மையான தந்தையுடன் நேர்மையாக இருங்கள். நீங்கள் உள்ளுர ஒருவிதமாகவும், வெளிப்புறமாக வேறுவிதமாகவும் இருப்பின், உங்கள் அந்தஸ்து சீரழிந்ததாக ஆகிவிடும். நீங்கள் உங்களுக்கு ஓர் இழப்பை ஏற்படுத்துவீர்கள். உங்களால் ஒவ்வொரு கல்பத்திலும் ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைய இயலாதிருக்கும். இதனாலேயே நீங்கள் இந்நேரத்தில் மிகச்சரியாக இருக்க வேண்டும். கவனயீனமாக இருக்க வேண்டாம்! உங்களால் முடிந்தவரையில் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். நிலையான நினைவு இறுதியில் சாத்தியமாகும். தந்தையைத் தவிர எவரையும் நினைவுசெய்யக் கூடாது. ஒருவர் இறுதியில் ஒரு பெண்ணை நினைத்தால் …. நீங்கள் எவரில் பற்று வைத்திருக்கிறீர்களோ, அவரையே நீங்கள் நினைவுசெய்வீர்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், நீங்கள் மேலும் அண்மித்து வருவதுடன், நீங்கள் தொடர்ந்தும் அதிகளவுக்குக் காட்சிகளைப் பெறுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வகையான செயல்களை செய்தீர்கள் என பாபா காட்டுவார். ஆரம்ப நாட்களிலும், நீங்கள் காட்சிகளைப் பெற்றீர்கள். தண்டனையை அனுபவம் செய்தவர்கள் அதிகளவு அழுதார்கள். உங்களுக்கு நடைமுறையில் காட்டுவதற்காக, அந்த ஆத்மாக்களின் பாவங்கள் நூறுமடங்கு அழிக்கப்பட்டன. இதனாலேயே பாபாவின் சேவையில் தடைகளை உருவாக்கக்கூடிய அத்தகைய செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. இறுதியில், எவ்வாறு நீங்கள் இவ்விதமாக பாபாவின் சேவையில் பல தடைகளை உருவாக்கினீர்கள் எனவும், பெரும் இழப்பை ஏற்படுத்தினீர்கள் எனவும் நீங்கள் அனைத்தினதும் காட்சிகளைக் காண்பீர்கள். அது அசுர சமுதாயம் ஆகும். தடைகளை உருவாக்குபவர்கள் பெருமளவு தண்டனையை அனுபவம் செய்கிறார்கள். சிவபாபாவின் சபை மிகவும் பெரியதாகும். அவருடைய வலது கரமாகிய தர்மராஜ்ஜும் இங்கேயே இருக்கிறார். மற்றைய தண்டனை எல்லைக்குட்பட்டதாகும். இங்கு, 21 பிறவிகளுக்கு ஓர் இழப்பு ஏற்படுவதுடன், அந்தஸ்தும் அழிக்கப்படுகிறது. தந்தை தொடர்ந்தும் அனைத்தையும் விளங்கப்படுத்துவதனால், நீங்கள் சிலவற்றை அறிந்திருக்கவில்லை என உங்களில் எவரும் கூறமுடியாது. ஆகவே பாபா தொடர்ந்தும் உங்களுக்கு அனைத்தையும் பற்றி எச்சரிக்கிறார். ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் எத்தனை பேர் ஓடிவி;ட்டனர் என்பதை அவர் பார்க்கிறார். அவர்கள் விகாரமுடையவர்களாகி தொல்லை கொடுக்கின்றார்கள். பாடசாலையில் ஒருவர் சரியாகக் கற்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள்? அந்தஸ்தில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. இத்துன்ப உலகத்தைப் போன்றே, ஒரு நபர் ஜனாதிபதியும், ஒருவர் செல்வந்தரும், இன்னுமொருவர் ஏழையும் ஆவார், அவ்வாறே, சத்தியயுகத்திலும், அந்தஸ்து வரிசைக்கிரமமானதாகும். இராஜ, விவேகிக் குழந்தைகள் தந்தையிடமிருந்து தங்கள் முழு ஆஸ்தியையும் கோருவதற்கு முயற்சி செய்வார்கள். மாயையுடனான குத்துச்சண்டை உள்ளது. மாயை மிகவும் சக்திநிறைந்தவள் ஆவாள், தொடர்ந்தும் வெற்றியும், தோல்வியும் உள்ளது. பலரும் வந்த பின்னர், விலகிச் சென்று, துரோகிகள் ஆகுகிறார்கள். முன்னேறிச் செல்லும்பொழுது, அவர்கள் சித்தியடைவதில்லை. இது எவ்வாறு சாத்தியம் எனப் பலரும் வினவுகிறார்கள். வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும்பொழுதே, தூய்மையாக இருப்பது சாத்தியம் என்பதை அவர்கள் ஒருபொழுதும் கேள்விப்பட்டதில்லை. ஓ! ஆனால், கடவுளின் வாசகங்கள் கூறுகின்றன: காமமே கொடிய எதிரி! இது கீதையிலும் பாடப்பட்டுள்ளது. சத்தியயுகத்தில் தெய்வீகக் குணங்கள் உடையவர் வாழ்கின்றார்கள் என்பதையும், ஆனால் கலியுகத்தில் அசுரத்தன்மை உடையவர்கள் உள்ளார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அசுரத்தன்மையுடையவர்கள் தெய்வீகக் குணங்கள் உடையவர்களை புகழ்கின்றார்கள். இதில் அதிகளவு வேறுபாடு உள்ளது! நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் என்பதையும், நீங்கள் எவ்வாறு ஆகுகின்றீர்கள் என்பதையும் இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இங்கேயே நற்குணங்கள் அனைத்தையும் கிரகிக்க வேண்டும்: உங்கள் உணவு, பானம் போன்றவையும் முற்றிலும் தூய்மையாக இருக்க வேண்டும். அவர்கள் தேவர்களுக்கு எதனைப் படைக்கிறார்கள் எனப் பாருங்கள்! அவர்கள் எவ்வாறு அத்தகைய போஷாக்கு உணவை அதிகளவு சுத்தத்துடன் தயாரிக்கிறார்கள் என ஸ்ரீநாத் ஆலயத்துக்குச் சென்று பாருங்கள்! அங்கு வைஷ்ணவர்கள் இருக்கிறார்கள். ஜெகநாத் ஆலயத்தில் அவர்கள் எதனைப் படைக்கிறார்கள் எனப் பாருங்கள்! சோறு! அங்கு, அவர்கள் பாவப் பாதைக்குரிய மிகவும் அவலட்சணமான உருவங்களைக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுடைய இராச்சியமாக இருந்தபொழுது, 36 வகையான உணவுகள் இருந்தன. அவர்கள் ஸ்ரீநாத் ஆலயத்தில் பெருமளவு உணவுகளைத் தயாரிக்கிறார்கள். பூரி (ஜெகநாத்) ஸ்ரீநாத்திலிருந்து வேறுபட்டதாகும். பூரியில் உள்ள ஆலயத்தில் (ஜெகநாத்தில்) அவர்கள் தேவர்களின் ஆடைகளில் அவலட்சணமான உருவங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அங்கு படைக்கப்படும் போக் சுத்திகரிக்கப்படாத நெய்யில் செய்யப்படும் சோறாகும். இது பாரதம் என்னவாக இருந்தது, அது என்னவாகி விட்டது என்பதற்கான வித்தியாசத்தை காட்டுகின்றது. இப்பொழுது அதன் நிலைமையைப் பாருங்கள்! போதுமானளவு தானியம் கூட இல்லை! அவர்களுடைய திட்டத்துக்கும் சிவபாபாவின் திட்டத்துக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. அவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும். இயற்கை அனர்த்தங்களும் உள்ளன. எத்தானியம் போன்றவையும் இருக்க மாட்டாது. சில இடங்களில், அதிகளவுக்கு மழை பெய்யும், ஏனைய இடங்களில், முற்றாகவே மழை பெய்யாது. இது அதிகளவு சேதத்தை விளைவிக்கிறது. இந்நேரத்தில், தத்துவங்களும் தமோபிரதானாக இருக்கின்றன் ஆகவே அங்கு வழமைக்கு மாறான மழைவீழ்ச்சி இருக்கிறது. புயல்களும் தமோபிரதான் ஆகும். சூரிய வெப்பமும் மிகவும் கடுமையானதாகவே இருக்கும், கேட்கவும் வேண்டாம்! இந்த இயற்கை அனர்த்தங்கள் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவையாகும். விநாசவேளையில் அவர்களின் புத்தி அன்பற்றுள்ளது. உங்கள் புத்தி தந்தையிடம் அன்பு கொண்டுள்ளது. அறியாமைப் பாதையில், பெற்றோர்கள் தங்கள் தகுதியான குழந்தைகளை நேசிக்கிறார்கள். இதனாலேயே பாபா கூறுகிறார்: அன்பும் நினைவும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே உள்ளது! நீங்கள் அதிக சேவை செய்யும்பொழுது… நீங்கள் சேவை செய்ய வேண்டும். குறிப்பாகப் பாரதத்துக்கும் பொதுவாக உலகத்துக்கும் சேவை செய்யப்பட வேண்டும். பாரதம் சுவர்க்கமாக்கப்பட வேண்டும். ஏனைய அனைவரும் அமைதி தாமத்துக்குத் திரும்பவும் அனுப்பப்பட வேண்டும். பாரதம் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகிறது, ஏனைய அனைத்தும் முக்தியாகிய ஆஸ்தியைப் பெறுகிறது. அனைவரும் திரும்பச் செல்வார்கள். விரக்திக் கூக்குரல்களின் பின்னர், வெற்றிக்குரல்கள் ஒலிக்கும். எங்கும் அதிகளவு விரக்தி இருக்கும்! இது காரணமின்றிய இரத்தப் பெருக்குக்கான ஒரு நாடகமாகும். இயற்கை அனர்த்தங்களும் இருக்கும். அனைவரும் மரணிக்க வேண்டும். தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார்: முழு முயற்சி செய்யுங்கள். தந்தைக்குச் சதா கீழ்ப்படிவாகவும், நம்பிக்கை நிறைந்தவராகவும் இருங்கள்! நீங்கள் சேவையாளராக வேண்டும். முன்னைய கல்பத்தில் அத்தகைய சேவையைச் செய்தவர்களுக்குத் தொடர்ந்தும் காட்சிகள் அருளப்படும். நீங்கள் தொடர்ந்தும் அனைத்தையும் பற்றற்ற பார்வையாளராகப் பார்ப்பீர்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாகி விட்டீர்கள். உங்கள் புத்தியில் சுயதரிசனச் சக்கரம் சதா சுழன்று கொண்டிருக்க வேண்டும். நாங்கள் இவ்விதமாக 84 பிறவிகளை எடுத்துள்ளோம். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். தந்தையினதும், வீ;ட்டினதும் நினைவு இருக்க வேண்டும். சத்தியயுகமும் நினைவுசெய்யப்பட வேண்டும். நாள் முழுவதும் இவை அனைத்தையும் பற்றிச் சிந்திப்பதற்கு உங்கள் புத்தியைப் பயன்படுத்துங்கள். நாங்கள் இப்பொழுது உலகத்தின் பெரும் இளவரசர்களாக ஆகவுள்ளோம். நாங்கள் ஸ்ரீ இலக்ஷ்மி அல்லது ஸ்ரீ நாராயணனாக ஆகுவோம். இப்போதை இருக்க வேண்டும். பாபாவுக்கு இந்தப் போதை இருந்தது. ஒவ்வொரு நாளும் பாபா இப்படத்தைப் (இலக்ஷ்மியினதும் நாராயணனினதும்) பார்க்கிறார். உள்;ர, அவருக்கு இப்போதை இருந்தது: நாளையே நான் சென்று ஸ்ரீ கிருஷ்ணர் ஆகுவேன். பின்னர், திருமணத்தின் பின்னர், அவர் ஸ்ரீ நாராயணன் ஆகுவார். உங்களுக்கும் அதுவே பொருந்தும். நீங்களும் அவ்வாறு ஆகுவீர்கள், இல்லையா? இது இராஜயோகம், இது பிரஜைகள் ஆகுவதற்கான யோகம் அன்று. (பிரஜா யோகம்). ஆத்மாக்களாகிய நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் இராச்சியப் பாக்கியத்தைப் பெறுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் இராச்சியத்தை இழந்தீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்கள் இராச்சியத்தை மீளவும் கோருகிறீர்கள். பாபா இப்படங்கள் போன்றவற்றை உருவாக்கி வைத்துள்ளார், அதனால் நீங்கள் அவற்றைப் பார்க்கும்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். நாங்கள் 21 பிறவிகளுக்கு எங்கள் சுவர்க்க இராச்சிய பாக்கியத்தை அடைகிறோம். அது மிகவும் இலகுவானது! இப்பிரஜாபிதா பிரம்மாவினூடாக, சிவபாபா எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். பின்னர் நாங்கள் சென்று அவ்வாறு ஆகுவோம். நீங்கள் படத்தைப் பார்த்ததும் சந்தோஷப் பாதரசம் உயர்கிறது. தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதனால், நாங்கள் உலகின் இளவரசர்கள் ஆகுவோம். அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும்! நான் கற்கிறேன், நீங்களும் கற்கிறீர்கள். இக்கல்வியின் பின்னர், நாங்கள் சென்று அவ்வாறு ஆகுவோம். அனைத்தும் கல்வியில் தங்கியுள்ளது. நீங்கள் அதிகம் கற்கும்பொழுது, நீங்கள் அதிகம் சம்பாதிப்பீர்கள். சில சத்திரசிகிச்சை நிபுணர்கள் மிகவும் திறமைசாலிகள் எனவும், அவர்களால் ஒரு சமயத்தில் நூறாயிரக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்க முடியும் எனவும் பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். சட்டநிபுணர்களும் அவ்வாறே. சிலர் பெருமளவு சம்பாதிக்கிறார்கள், ஏனையோரோ ஒரு கிழிந்த கோட்டையே அணிகிறார்கள். இங்கும் அதுவே. இதனாலேயே பாபா திரும்பத் திரும்பக் கூறுகிறார்: குழந்தாய், எதனைப் பற்றியும் கவனயீனமாக இருக்க வேண்டாம்! சதா ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! நீங்கள் இரட்டை மேன்மையான சிவபாபாவினால் மேன்மையாக்கப்படுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து பல தடவைகள் உங்கள் ஆஸ்தியைப் பெற்றுள்ளீர்கள், பின்னர் அதைப் பல தடவைகள் இழந்தீர்கள். அரைக்கல்பத்துக்கு நீடிக்கின்ற ஓர் ஆஸ்தியை நீங்கள் 21 பிறவிகளுக்குப் பெறுகிறீர்கள். நீங்கள் அரைக் கல்பத்துக்கு, 2500 வருடங்களுக்குச் சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அகத்திலும் புறத்திலும் நேர்மையாக இருங்கள். ஒருபொழுதும் உங்கள் கல்வியில் கவனயீனமாக இருக்க வேண்டாம். ஒருபொழுதும் சந்தேகம்மிக்க புத்தியைக் கொண்டிருந்து கற்பதை நிறுத்த வேண்டாம். சேவையில் ஒரு தடையாக ஆகாதீர்கள்.
2. ஸ்ரீமத்தைப் பின்பற்றி, எங்கள் சரீரம், மனம், செல்வத்தினால் உதவி செய்து, தூய்மைசக்தியின் மூலம் 21 பிறவிகளுக்கு பாரதத்தை மேன்மையாகவும் இரட்டைக் கிரீடமுடையதாகவும் ஆக்குவதற்காக நாங்கள் சேவை செய்கின்றோம் என்ற நற்செய்தியை அனைவருக்கும் கொடுங்கள்.ஆசீர்வாதம்:
ஒரு விநாடியில் உங்கள் எண்ணங்களை நிறுத்தி, உங்கள் அத்திவாரத்தை பலப்படுத்துவதன் மூலம் சிறப்புச் சித்தி எய்துவீர்களாக.ஒரு பரீட்சைத்தாள் வருவது உங்களை முதிர்ச்சி அடையச் செய்து உங்கள் அத்திவாரத்தை பலப்படு;த்துவதற்காகும். எனவே அதனைக் கண்டு அஞ்சாதீர்கள். ஏதேனும் வெளிப்படையான தளம்பல் இருக்குமாயின், ஒரு விநாடியில் உங்கள் எண்ணங்களை நிறுத்துவதற்கான பயிற்சியை செய்யுங்கள். எவ்வளவு விரிவாக்கம் இருந்தாலும், ஒரு விநாடியில் அதனை அமிழ்த்திக் கொள்ளுங்கள். பசி அல்லது தாகம், வெப்பம் அல்லது குளிர் எதுவாக இருப்பினும் உங்கள் சமஸ்காரம் வெளிப்படாது இருக்கட்டும். அதனை நிறுத்துவதற்கு தயாராகவிருக்கும் சக்தியை பயன்படுத்துங்கள். நீண்ட காலத்திற்கான இப்பயிற்சி உங்களை சிறப்புச் சித்தி எய்தச் செய்யும்.
சுலோகம்:
உங்கள் சந்தோஷத்தின், அமைதியின் அதிர்வலைகளினால் மக்களுக்கு சந்தோஷத்தினதும் சௌகரியத்தினதும் அனுபவத்தைக் கொடுப்பதே உண்மையான சேவையாகும்.