26.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சங்கமயுகத்திலேயே நீங்கள் புதியதும் தனித்துவமானதுமான ஞானத்தைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் நடிகர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எவருடைய பாகமும் இன்னுமொருவருடையதைப் போன்று அதேவிதமாக இருக்க முடியாது. கேள்வி: மாயையை வெல்வதற்கு ஆன்மீகப் போர்வீரர்களாகிய உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை யாது?

பாடல்:
கடவுளின் சகபாடிகளாக இருப்பவர்களைப் புயல்கள் என்ன செய்யும்?

ஓம் சாந்தி.
இப்பாடல் மனிதர்களால் இயற்றப்பட்டது. எவரும் அதன் அர்த்தத்தை முற்றாகவே புரிந்துகொள்வதில்லை. பக்தர்கள் புகழ் பாடல்களையும் பக்திப்பாடல்களையும் பாடுகிறார்கள். ஆனால் அவர்கள் முற்றாகவே எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் பெருமளவுக்குப் புகழ் பாடுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் எவரையும் புகழத் தேவையில்லை. குழந்தைகள் ஒருபொழுதும் தங்களுடைய தந்தையைப் புகழ்வதில்லை. அவர்கள் தனது குழந்தைகள் என்பது தந்தைக்குத் தெரியும். குழந்தைகளுக்கு அவர் தங்களுடைய தந்தை என்பதுவும் தெரியும். இப்பொழுது, இது ஓர் எல்லையற்ற விடயமாகும். எப்படியிருப்பினும், அனைவரும் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்கிறார்கள். இப்பொழுதும், அவர்கள் தொடர்ந்தும் அவரை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் கடவுளுக்குக் கூறுகிறார்கள்: ஓ பாபா! அவருடைய பெயர் சிவபாபா ஆகும். நாங்கள் அனைவரும் ஆத்மாக்கள், அவரும் ஓர் ஆத்மாவே ஆவார். அவரே பரமாத்மா, அவர் பரம் என அழைக்கப்படுகிறார். நாங்கள் அவருடைய குழந்தைகளாவோம். அவரும் பரமாத்மா என அழைக்கப்படுகிறார். அவருடைய வசிப்பிடம் எங்கே உள்ளது? பரந்தாமத்தில் ஆகும். ஆத்மாக்கள் அனைவரும் அங்கே வசிக்கிறார்கள். ஆத்மாக்கள் நடிகர்கள் ஆவர். ஒரு நாடகத்திலுள்ள நடிகர்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தனது பாகத்துக்கேற்ப, ஒவ்வொருவரும் ஓர் ஊதியத்தைப் பெறுகிறார்கள். அங்கு வசிக்கின்ற ஆத்மாக்கள் அனைவரும் நடிகர்கள் ஆவர். எவ்வாறாயினும், ஒவ்வொருவரும் ஒரு வரிசைக்கிரமமான பாகத்தைப் பெற்றுள்ளார்கள். எவ்வாறு ஆத்மாக்களில் அவர்களுடைய அழிவற்ற பாகங்கள் பதியப்பட்டுள்ளன என்பதை ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். இரு ஆத்மாக்களுக்கு ஒரேவிதமான பாகம் இருக்க முடியாது. அனைவருக்கும் ஒரே அளவான வலிமை இருக்க முடியாது. முதலில், சிவனாகிய உருத்திரனின் மாலைக்குள் வருபவர்களுடையதே, அதிசிறந்த பாகங்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு நாடகத்திலுள்ள மிகச்சிறந்த நடிகர்கள் அதிகளவு புகழப்படுகிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் அங்கு செல்கிறார்கள். இங்கு, இது ஓர் எல்லையற்ற நாடகமாகும். ஒரு தந்தையே இந்த எல்லையற்ற நாடகத்தின் உச்சியில் உள்ளார். அவரே அதிமேன்மையான நடிகரும், படைப்பவரும், இயக்குனரும் எனவும் நீங்கள் கூற முடியும். ஏனைய நடிகர்கள், இயக்குனர்கள் போன்ற அனைவரும் எல்லைக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் தங்களுடைய சிறிய பாகங்களைப் பெற்றுள்ளார்கள். ஆத்மாவே ஒரு பாகத்தை நடிக்கிறார். எவ்வாறாயினும், சரீர உணர்வின் காரணமாக, அந்நபரின் பாகம் அத்தகையது என அவர்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: ஆத்மாவில் முழுப்பாகமும் உள்ளது. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். சத்தியயுகத்தில், அனைவரும் ஆத்ம உணர்வில் இருக்கிறார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. இங்கு, கலியுகத்தில், அவர்கள் ஆத்ம உணர்வில் இருப்பதுமில்லை, அவர்களுக்குத் தந்தையையும் தெரியாது. நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதுடன், உங்களுக்குத் தந்தையையும் தெரியும். பிராமணர்களாகிய நீங்கள் தனித்துவமான ஞானத்தைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு ஆத்மாவைப் பற்றியும், எவ்வாறு ஆத்மாக்கள் அனைவரும் நடிகர்கள் என்பதும் தெரியும். அனைவரும் தத்தமது சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளார்கள். இரு ஆத்மாக்களுக்கு ஒரேவிதமான பாகம் இருக்க முடியாது. ஒவ்வொரு ஆத்மாவில் முழுப்பாகமும் பதியப்பட்டுள்ளது. உண்மையில், ஆத்மாவே ஒரு நாடகத்தில் ஒரு பாகத்தைப் பெறுகிறார். ஆத்மாவே ஒரு சிறந்த பாகத்தைப் பெறுகிறார். “நான் ஓர் ஆளுநர்”, அல்லது “நான் இன்னார்” என ஓர் ஆத்மா கூறுகிறார். எவ்வாறாயினும், அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதில்லை. சத்தியயுகத்தில், தாங்கள் ஆத்மாக்கள் என்பதையும், தாங்கள் தங்களுடைய சரீரங்களை நீக்கிவிட்டு இன்னுமொரு சரீரத்தைப் பெற வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அங்கு எவருக்கும் கடவுளைத் தெரியாது. இந்நேரத்திலேயே நீங்கள் அனைத்தையும் அறிந்துகொள்கிறீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் சூத்திரர்களையும், தேவர்களையும் விடவும் அதிகம் மேன்மையானவர்கள் ஆவீர்கள். இவ்வாறு ஆகுகின்ற பல்வேறு பிராமணர்களும் எங்கிருந்து வருகிறார்கள்? நூறாயிரக் கணக்கானவர்கள் கண்காட்சிகளுக்கு வருகிறார்கள், இந்த ஞானத்தைப் பெற்று, அதை மிகவும் நன்றாகப் புரிந்துகொள்பவர்கள் பிரஜைகள் ஆகுகிறார்கள். ஒவ்வொரு அரசருக்கும் பல பிரஜைகள் இருக்கிறார்கள். நீங்கள் பல பிரஜைகளை உருவாக்குகிறீர்கள். புரொஜெக்டர்களிலிருந்தும், கண்காட்சிகளிலிருந்தும் இந்த ஞானத்தைப் புரிந்துகொள்ளும் சிலர் மிகவும் சிறந்தவர்களாக ஆகுகிறார்கள். அவர்கள் அனைத்து விடயங்களையும் கற்று, யோகமும் செய்கிறார்கள். இப்பொழுது அவர்கள் தொடர்ந்தும் வெளிப்படுவார்கள். பிரஜைகள் வெளிப்படுவார்கள், செல்வந்தர்கள், அரசர்கள், அரசிகள், ஏழைகள் அனைவரும் வெளிப்படுவார்கள். பல இளவரசர்களும், இளவரசிகளும் இருக்கிறார்கள். சத்திய, திரேதா யுகங்களுக்காக, இளவரசர்களும், இளவரசிகளும் உருவாக்கப்பட வேண்டும். அவர்களில் வெறுமனே எட்டு அல்லது 108 பேர் இருக்க மாட்டார்கள். இப்பொழுது அவர்கள் அனைவரும் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். நீங்கள் தொடர்ந்தும் சேவை செய்கிறீர்கள். இதுவும் புதியதல்ல. நீங்கள் நடத்தும் வைபவங்களும் புதியவை அல்ல. நீங்கள் இதைப் பல தடவைகள் செய்துள்ளீர்கள். சங்கமயுகத்தில், நீங்கள் இவ்வியாபாரத்தை மாத்திரம் செய்கிறீர்கள். நீங்கள் வேறு எதைச் செய்வீர்கள்? தந்தை தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு வருகிறார். இது உலகின் வரலாறும், புவியியலும் என அழைக்கப்படுகிறது. அனைத்தும் வரிசைக்கிரமமானதாகும். இன்னார் மிகச் சிறந்த சொற்பொழிவை ஆற்றினார் எனச் சிறந்த சொற்பொழிவுகளை ஆற்றுகின்றவர்களைப் பற்றி அனைவரும் கூறுகிறார்கள். பின்னர், அவர்கள் வேறு ஒருவரைச் செவிமடுக்கும்பொழுது, முதலாம் நபர் மிகவும் நன்றாக விளங்கப்படுத்துவது வழக்கம் என அவர்கள் கூறுகிறார்கள். பின்னர், மூன்றாமவர் அவர்கள் இருவரையும் விடச் சிறந்தவராக இருப்பின், “இருவரையும் விட இவர் மேலும் சிறந்தவர்” என அவர்கள் கூறுகிறார்கள். ஏனையோரை விடவும் முன்னேறிச் செல்வதற்கு நீங்கள் ஒவ்வொரு விடயத்திலும் முயற்சி செய்ய வேண்டும். திறமைசாலிகள் உடனடியாகவே சொற்பொழிவுகளை ஆற்றவதற்காகத் தங்கள் கரங்களை உயர்த்துகிறார்கள். நீங்கள் அனைவரும் முயற்சி செய்பவர்கள் ஆவீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்கையில், நீங்கள் தபாற் புகையிரதங்கள் (கடுகதிப் புகையிரதங்கள்) ஆகுவீர்கள். மம்மா ஒரு விசேட தபாற் புகையிரதம் ஆவார். உங்களால் பாபாவைப் பற்றி அறிய முடியாது, ஏனெனில் அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து உள்ளார்கள். யார் பேசுகிறார் என உங்களால் கூற இயலாதிருக்கும். சிவபாபாவே விளங்கப்படுத்துகிறார் என நீங்கள் எப்பொழுதும் அதைக் கருத வேண்டும். பாப், தாதா இருவருக்கும் தெரியும், ஆனால் ஒவ்வொருவரினுள்ளும் என்ன இருக்கிறது என்பது அவருக்கே தெரியும். வெளிப்புறமாக, அவர் கூறுகிறார்: இவர் மிகவும் திறமைசாலி. தந்தை புகழைச் செவிமடுப்பதில் பூரிப்படைகிறார். ஒருவருடைய குழந்தை நன்கு கற்று, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரும்பொழுது, தனது மகன் தனது பெயரைப் புகழடையச் செய்வார் என அவருடைய தந்தை புரிந்துகொள்கிறார். இந்த ஆன்மீகச் சேவையில் இன்ன குழந்தை எப்பொழுது திறமைசாலியாக இருக்கிறார் என்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். ஒரு சொற்பொழிவில் விளங்கப்படுத்துவதே பிரதான விடயமாகும். ஐந்து குழந்தைகள் உள்ள ஒருவரிடம் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என வினவப்பட்டபொழுது, தனக்கு இரு குழந்தைகளே இருக்கிறார்கள் என பதிலளித்தவரின் உதாரணத்தையும் பாபா உங்களுக்குக் கொடுத்தார். மற்றைய நபர் அவருக்குக் கூறினார்: ஆனால் உங்களுக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள்! அப்பொழுது அவர் பதிலளி;த்தார்: ஆனால் எனக்கு தகுதியான குழந்தைகள் இருவர் மாத்திரமே இருக்கிறார்கள்! இங்கும் அதுவே. பல குழந்தைகள் இருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: இப்புத்திரி, வைத்தியர். நிர்மலா மிகவும் சிறந்தவர் ஆவார். அவர் தனது பௌதீகத் தந்தைக்குப் பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்தி, தனக்கென ஒரு நிலையத்தை அவர் திறக்குமாறு செய்தார். இது பாரத்துக்கான சேவையாகும். நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறீர்கள். இராவணன் இப்பாரதத்தை நரகம் ஆக்கிவிட்டான். ஒரு சீதை மாத்திரமே சிறையில் இருக்கவில்லை, ஆனால் நீங்கள் அனைவருமே இராவணனின் சிறையிலுள்ள சீதைகள் ஆவீர்கள். சமயநூல்களில் அவர்கள் பல கட்டுக்கதைகளை எழுதியுள்ளார்கள். நாடகத்தில் இப்பக்தி மார்க்கமும் உள்ளது. சத்தியயுகத்திலிருந்து நடைபெற்றுள்ள அனைத்தும் திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக ஆகுகிறீர்கள், நீங்கள் வழிபடுபவர்களாகவும் ஆகுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்களை வழிபடுபவர்களிலிருந்து வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக மாற்றுவதற்கு நான் வரவேண்டியுள்ளது. முதலில் நீங்கள் சத்தியயுகத்தவர்கள் ஆகிப் பின்னர் கலியுகத்தவர்கள் ஆகுகிறீர்கள். சத்தியயுகத்தில், அது சூரிய-வம்சத்து இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாகும். இராம இராச்சியம் சந்திர வம்சமாகும். இந்நேரத்தில், நீங்கள் அனைவரும் ஆன்மீகப் போர்வீரர்கள் ஆவீர்கள். ஒரு யுத்தகளத்துக்குச் செல்பவர்களே போர்வீரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் ஆன்மீகப் போர்வீரர்களும், ஏனையோர்கள் பௌதீகப் போர்வீரர்களும் ஆவர். அவர்களுடைய சண்டையும், யுத்தமும் பௌதீகச் சத்தியுடன் உள்ளது. ஆரம்பத்தில், அவர்கள் கைச்சண்டை போடுவது வழக்கமாகும். அவர்கள் தங்கள் மத்தியில் சண்டையிடுவார்கள், அவர்களில் ஒருவர் வெற்றியடைவார். இப்பொழுது, அவர்கள் குண்டுகள் போன்றவற்றை உருவாக்கியுள்ளார்கள். நீங்களும் போர்வீர்கள், அவர்களும் போர்வீரர்களே. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாயையை வெற்றிகொள்கிறீர்கள். நீங்கள் ஆன்மீகப் போர்வீர்கள் ஆவீர்கள். ஆத்மாக்களே சரீரத்தின் பௌதீகப் புலன்களினூடாக அனைத்தையும் செய்கிறார்கள். தந்தை வந்து ஆத்மாக்களுக்குக் கற்பிக்கிறார்: குழந்தைகளே, நீங்கள் என்னை நினைவுசெய்யும்பொழுது, மாயை உங்களை உண்ண மாட்டாள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், உங்களுக்குத் தவறான எண்ணங்களும் ஏற்படாது. தந்தையை நினைவுசெய்வதால், அந்த சந்தோஷமும் இருக்கும். இதனாலேயே அதை அதிகாலையில் பயிற்சி செய்யுமாறு தந்தை உங்களுக்குக் கூறுகிறார்: பாபா, நீங்கள் மிகவும் இனிமையானவர்! ஆத்மாவும் கூறுகிறார்: “பாபா!”. தந்தை உங்களுக்கு புரிந்துணர்வை கொடுத்துள்ளார்: நான் உங்களுடைய தந்தை. உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை உங்களுக்குக் கூறுவதற்கு நான் வந்துவிட்டேன். இதுவே தலைகீழான மனித உலக விருட்சமாகும். இதுவே பல்வேறு சமயங்களினதும் மனித உலகமாகும். இது ஒரு பல்வகை நாடகம் என அழைக்கப்படுகிறது. அவரே இம்மனித விருட்சத்தின் விதையாவார் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். மக்கள் என்னை நினைவுசெய்கிறார்கள். சிலர் ஒரு விருட்சத்துக்கும், ஏனையோர் இன்னுமொரு விருட்சத்துக்கும் உரியவர்கள் ஆவர். அவர்கள் வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் வெளிப்படுகிறார்கள். இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதாகும். அந்தச் சமயத்தின் ஸ்தாபகராக இன்னார் அனுப்பப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எவரும் அங்கிருந்து அனுப்பப்படுவதில்லை. நாடகத்துக்கேற்ப, இவை அனைத்தும் திரும்பத் திரும்ப நடைபெறும். அவர் மாத்திரமே ஒரு தர்மத்தையும், ஓர் இராச்சியத்தையும் ஒன்றாக ஸ்தாபிக்கிறார். இது உலகில் எவருக்கும் தெரியாது. இப்பொழுது சங்கமயுகமாகும். விநாசத்தின் சுவாலைகள் வெளிப்பட வேண்டும். இது சிவபாபாவின் ஞான வேள்வி ஆகும். அவர்கள் அதற்கு உருத்திரர் எனப் பெயரிட்டுள்ளார்கள். பிராணமர்களாகிய நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவினூடாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்களே அதியுயர்ந்தவர்கள் ஆவீர்கள். ஏனைய வம்சங்கள் அனைத்தும் பின்னர் வெளிப்படுகின்றன.. உண்மையில், அனைவரும் பிரம்மாவின் குழந்தைகள் ஆவர். பிரம்மா கொள்ளுப் பாட்டனார் என அழைக்கப்படுகிறார். வம்சாவளி விருட்சம் உள்ளது. முதலில் அதியுயர்ந்த பிரம்மா வருகிறார், பின்னர் மிகுதி வம்சாவளி விருட்சம் வளர்கிறது. கடவுள் எவ்வாறு உலகத்தைப் படைக்கிறார் என மக்கள் வினவுகிறார்கள். அங்கு படைப்பு உள்ளது. அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகும்பொழுது, அவரைக் கூவியழைக்கிறார்கள். அவர் வந்து சந்தோஷமற்ற உலகத்தைச் சந்தோஷமானதாக ஆக்குகிறார். இதனாலேயே மக்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரே, வாருங்கள்! அவர்கள் ஹரித்துவார் என்னும் பெயரை வைத்துள்ளார்கள். ஹரித்துவார் என்றால், “கடவுளை அடைவதற்கான வாசல்” என்பது அர்த்தமாகும். அங்கு கங்கை பாய்கிறது. கங்கையில் நீராடுவதனால், அவர்களால் கடவுளை அடைவதற்கான வாசலுக்குள் செல்ல இயலும் என அவர்கள் நம்புகிறார்கள்; ஆனால், கடவுளை அடையும் வாசல் எங்கே உள்ளது? இதில் அவர்கள் கிருஷ்ணரைக் குறிப்பிடுகிறார்கள். சிவபாபாவே வாசலாகிய, கடவுள் ஆவார். அவர் துன்பத்தை அகற்றுபவரும் சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். முதலில் நீங்கள் வீடு செல்ல வேண்டும். உங்கள் தந்தையையும், உங்கள் வீட்டையும் பற்றி இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். கடவுளின் சிம்மாசனம் சிறிது உயர்ந்ததாகும். ஒரு மாலையில், மலரும் (குஞ்சம்), அதற்குக் கீழே இரட்டை மணிகளும் உள்ளார்கள். அப்பொழுது அவர்கள் உருத்திரரின் மாலையைப் பற்றிப் பேசுகிறார்கள். உருத்திர மாலை பின்னர் விஷ்ணுவின் மாலை ஆகுகிறது. விஷ்ணுவின் கழுத்து மாலை ஆகுபவர்கள், பின்னர் விஷ்ணு தாமத்தில் ஆட்சிசெய்கிறார்கள். பிராமணர்களின் மாலை கிடையாது, ஏனெனில் அது தொடர்ந்தும் திரும்பத் திரும்ப அறுகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: அனைத்தும் வரிசைக்கிரமமானதாகும். இன்று, நீங்கள் நன்கு முன்னேறுகிறீர்கள், நாளை புயல்களும், ஒரு கிரகணமும் ஏற்பட்டு, நீங்கள் பின்தங்கி விடுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: சிலர் எனக்கு உரியவர்கள் ஆகுகிறார்கள், தாங்கள் கேட்கும் ஞானத்தால் வியப்படைந்து அதைப் பற்றிப் பேசுகிறார்கள், அவர்கள் திரான்ஸிலும் சென்று மாலையில் கோர்க்கப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் முழுமையாக ஓடிவிட்டு, தகனம் செய்பவர்களாக ஆகுகிறார்கள். ஆகவே, எவ்வாறு ஒரு மாலை உருவாக்கப்பட முடியும்? பிராமணர்களின் மாலை உருவாக்கப்பட முடியாது எனத் தந்தை விளங்;கப்படுத்துகிறார். பக்தர்களின் மாலை உருத்திரரின் மாலையிலிருந்து வேறுபட்டதாகும். பக்தர்களின் மாலையில், மீராவே பெண்களில் பிரதானமானவரும், நாரதரே ஆண்களில் பிரதானமானவரும் ஆவர். இது உருத்திர மாலையாகும். சங்கமயுகத்தில் மாத்திரமே முக்தியையும், ஜீவன்முக்தியையும் அருள்வதற்குத் தந்தை வருகிறார். நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதையும், அது இப்பொழுது நரகம் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நரகத்தை உதைத்துத் தள்ளிவிட்டு, உங்களிடமிருந்து இராவணன் அபகரித்த சுவர்க்க இராச்சியத்தைக் கோருங்கள். தந்தை மாத்திரமே வந்து இவை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவருக்குச் அனைத்துச் சமயநூல்களும், யாத்திரைகளும் தெரியும். அவரே விதையும், ஞானக்கடலும், அமைதிக்கடலும் ஆவார். ஆத்மாக்கள் இதைக் கூறுகிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் சத்தியயுகத்தின் அதிபதிகளாக இருந்தார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அவர்கள் இருப்பதற்கு முன்னர் என்ன இருந்தது? அது நிச்சயமாகச் சங்கமயுகம் இருந்தபொழுதான, கலியுக இறுதியாக இருக்க வேண்டும், அது பின்னர் சுவர்க்கம் ஆகியது. தந்தை சுவர்க்கத்தைப் படைப்பவர் என அழைக்கப்படுகிறார். அவரே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர் ஆவார். இலக்ஷ்மியும் நாராயணனும் சுவர்க்க அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் யாரிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் கோரினார்கள்? சுவர்க்கத்தைப் படைப்பவராகிய, தந்தையிடமிருந்தாகும். இதுவே தந்தையின் ஆஸ்தியாகும். சத்தியயுகத்தில் தாங்கள் கொண்டிருந்த இராச்சியத்தை எவ்வாறு இலக்ஷ்மியும் நாராயணனும் கோரினார்கள் என நீங்கள் எவரையும் வினவ முடியும், எவராலும் உங்களுக்கு அதைக் கூற இயலாது. இந்த தாதாவும் கூறுகிறார்: எனக்கு இது தெரியாது. நான் அவர்களை வழிபடுவது வழக்கம், ஆனால் எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் சங்கமயுகத்தில் இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். கீதையில் இராஜயோகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கீதையைத் தவிர வேறு எங்குமே இராஜயோகம் குறிப்பிடப்படவில்லை. தந்தை கூறுகிறார்: நான் உங்களை அரசர்க்கெல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். கடவுள் வந்து உங்களுக்குச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுகின்ற ஞானத்தைக் கொடுத்தார். கீதையே பாரதத்தின் பிரதான சமயநூல் ஆகும். கீதை எப்பொழுது உருவாக்கப்பட்டது என்பது எவருக்கும் தெரியாது. தந்தை கூறுகிறார்: நான் சக்கரத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். இராச்சியம் கொடுக்கப்பட்டவர்கள், அந்த இராச்சியத்தை இழந்து, தமோபிரதானாகவும், சந்தோஷமற்றவர்களாகவும் ஆகினார்கள். இது இராவண இராச்சியமாகும். இது முழு பாரதத்தின் கதையாகும். பாரதமே சதாகாலமும் இருக்கிறது ஏனைய அனைத்தும் பின்னரே வருகின்றன. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு 84 பிறவிகளின் இரகசியங்களைக் கூறுகிறேன். 5000 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். உங்களுடைய பிறவிகளைப் பற்றிக் கூட உங்களுக்குத் தெரியாது. ஓ பாரத மக்களே, இறுதியில் தந்தை வருகிறார். அவர் ஆரம்பத்தில் வந்திருப்பாராயின், எவ்வாறு அவரால் உங்களுக்கு ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்க முடியும்? சனத்தொகை அதிகரித்திருக்காதுவிட்டால், எவ்வாறு அவரால் அதை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? அங்கு ஞானத்துக்கான அவசியம் இல்லை. இப்பொழுது மாத்திரமே, சங்கமயுகத்தில், தந்தை உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் ஞானம்-நிறைந்தவர் ஆவார். நிச்சயமாக அவர் ஞானத்தைப் பேசுவதற்கு இறுதியில் வரவேண்டும். ஆரம்பத்தில் அவரால் உங்களுக்கு எதைக் கூற முடியும்? இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். இது பாண்டவ அரசாங்கத்தின் பல்கலைக்கழகமாகும். இப்பொழுது சங்கமயுகமாகும். அவர்கள் அமர்ந்திருந்து யாதவர்களினதும், கௌரவர்களினதும், பாண்டவர்களினதும் சேனைகளைக் காண்பித்துள்ளார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: விநாசவேளையில், யாதவர்களும், கௌரவர்களும் அன்பற்ற புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் அவமதிக்கிறார்கள். அவர்களுக்குத் தந்தையிடம் அன்பு இல்லை. கடவுள் பூனைகளிலும், நாய்களிலும் இருக்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், பாண்டவர்கள் அன்பான புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். கடவுளே பாண்டவர்களின் சகபாடி ஆவார். பாண்டவர்கள் என்றால் ஆன்மீக வழிகாட்டிகள் என்பது அர்த்தமாகும். அவர்கள் பௌதீக வழிகாட்டிகளும், நீங்களோ ஆன்மீக வழிகாட்டிகளும் ஆவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்ம உணர்வுடையவர்களாகி, இந்த எல்லையற்ற நாடகத்தில் ஒரு கதாநாயகப் பாகத்தை நடியுங்கள். ஒவ்வொரு நடிகருக்குமென அவருடைய சொந்தப் பாகம் உள்ளது. ஆகவே, உங்களுடைய பாகத்தை வேறு எவருடைய பாகத்துடனும் ஒப்பிட வேண்டாம்.

2. அதிகாலையில் எழுந்திருந்து உங்களுடன் பேசுங்கள். பௌதீகப் புலன்களிலிருந்து வேறுபட்டிருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். பாபா, நீங்கள் மிகவும் இனிமையானவர்! நீங்கள் எங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கிறீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எப்பொழுதும் சரீர உணர்விலிருந்தும், சரீரங்கள் என்ற துர்நாற்றத்திலிருந்தும் தொலைவில் இருப்பதன் மூலம் ஓர் இந்திரபிரசத்து வாசி ஆகுவீர்களாக.

மனிதர்கள் அல்லாது, தேவர்கள் மாத்திரமே இந்திரபிரசத்தில் வசிக்க முடியும் எனக் கூறப்படுகின்றது. மனிதர் என்றால் தன்னை ஓர் ஆத்மா என்றல்லாது, ஒரு சரீரம் எனக் கருதும் ஒருவர் என்று அர்த்தமாகும். எனவே, எப்பொழுதும்; சரீர உணர்விலிருந்தும், சரீரங்கள் என்ற பழைய உலகிலிருந்தும், பழைய உறவுமுறைகளில் இருந்தும் தொடர்ந்தும் அப்பால் பறந்து சென்றிடுங்கள். மனிதர் என்ற துர்நாற்றம் சற்றேனும் வீசாதிருக்கட்டும். ஆத்ம உணர்வுடையவராக இருப்பதனால், உங்களுடைய ஞானம், யோகம் என்ற இறக்கைகள் பலமாக இருக்கட்டும், அப்பொழுது நீங்கள் இந்திரபிரசத்து வாசி என அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
தமது சரீரத்தை, மனதை, செல்வத்தை தகுதியான முறையில் பயன்படுத்தி, தமது பொக்கிஷங்கள் அனைத்தையும் அதிகரித்துக் கொள்பவர்களே விவேகமானவர்கள் ஆவார்கள்.