25.02.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் நிச்சயமாக நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் நினைவு சக்தியால் மாத்திரமே நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுவீர்கள்.கேள்வி:
நீங்கள் முயற்சி செய்யும் போது, நீங்கள் கீழே விழுவதற்குக் காரணமாக இருக்கின்ற எண்ணம் எது? கடவுளின் உதவியாளர்களாகிய குழந்தைகள் தொடர்ந்தும் செய்கின்ற சேவை எது?பதில்:
சில குழந்தைகள் இன்னும் காலம் இருக்கின்றது எனவும், தாம் இறுதியில் முயற்சி செய்யலாம் என்றும் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும் மரணத்திற்கு ஒழுக்கம் இல்லை! 'நாளை, நாளை" என்று தொடர்ந்தும் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே மரணம் வரும். ஆகையாலேயே இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன என்றும் இறுதியில் நீங்கள் மிக விரைவாக முன்னேறுவீர்கள் என்றும் எண்ண வேண்டாம். இந்த எண்ணம் உங்களை மேலும் வீழ்ச்சி அடையச் செய்கின்றது. இயலுமானவரை நினைவில் இருக்க முயற்சி செய்;வதுடன் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் உங்களுக்குத் தொடர்ந்தும் நன்மை செய்யுங்கள். கடவுளின் குழந்தைகளாகிய ஆன்மீகக் குழந்தைகள் ஆத்மாக்களை மீட்கின்ற, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற சேவையைத் தொடர்ந்தும் செய்ய வேண்டும்.
பாடல்:
சிவனுக்கு வந்தனங்கள்.............
ஓம் சாந்தி.
சரீரதாரி இல்லாது, அசரீரத் தந்தையினால் செயல்களைச் செய்ய முடியாது எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அவர் தனது பாகத்தை நடிக்க முடியாது. பிரம்மா மூலம் ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் யோக சக்தியின் மூலம் சதோபிரதானாக ஆக வேண்டும். அதன் பின்னரே சதோபிரதான் உலகிற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இது உள்ளது. தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்கு இராஐயோகத்தைக் கற்பிக்க வருகின்றார். அவர் பிரம்மா மூலம் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். அதாவது அவர் மனிதரைத் தேவர்களாக ஆக்குகிறார். தேவர்களாக இருந்த மனிதர்கள் இப்பொழுது தூய்மையற்ற சூத்திரர்கள் ஆகி விட்டார்கள். பாரதம் தெய்வீக பூமியாக இருந்தபோது, தூய்மை, அமைதி, சந்தோஷம் அதாவது, அனைத்தும் இருந்தன. இது 5000 ஆண்டுகளுக்குரிய விடயமாகும். தந்தை இங்கு அமர்ந்திருந்து மிகச்சரியான கணக்கை உங்களுக்கு விளங்கப்;படுத்துகிறார். அவரிலும் மேலானவர்கள் எவருமே இல்லை. உங்களுக்கு உலக ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை அல்லது கல்ப விருட்சம் என அழைக்கப்படும் விருட்சத்தைப்; பற்றித் தந்தையால் மாத்திரமே விளங்கப்படுத்த முடியும். பாரதத்தில் தேவதர்மம் இருந்தது. அது இப்பொழுது மறைந்து விட்டது. தேவதர்மம் இப்பொழுது இல்லை. நிச்சயமாகத் தேவர்களின் விக்கிரகங்கள்; உள்ளன. சத்தியயுகத்தில் அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்ததென பாரத மக்கள் அறிவார்கள். எவ்வாறாயினும் அவர்கள் கிருஷ்ணரைத் துவாபரயுகத்தில் காட்டியதன் மூலம் சமயநூல்களில் ஒரு தவறை செய்து விட்டனர். தந்தை மாத்திரமே வந்து, சரியான பாதையை அதனை மறந்து விட்டவர்களுக்குக் காட்டுகிறார். பாதையை உங்களுக்குக் காட்டுபவர் இங்கு வரும்போது, ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்திற்குச் செல்கிறார்கள். இதனாலேயே அவர் அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவர் என்று அழைக்கப்படுகிறார். ஒரே ஒரு படைப்பவரும் ஒரு உலகமுமே உள்ளன. ஒரே ஒரு உலக வரலாறும் புவியியலுமே உள்ளன. அது மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்களும் பின்னர் சங்கம யுகமும் உள்ளன. கலியுகத்தில் தூய்மையற்றவர்களும் சத்திய யுகத்தில் தூய்மையானவர்களும் இருக்கிறார்கள். சத்திய யுகம் இருக்கும்பொழுது, கலியுகம் நிச்சயமாக அழிக்கப்பட்டிருக்கும். ஸ்தாபனையானது விநாசத்தின் முன்னர் நடைபெறுகிறது. சத்தியயுகத்தில் ஸ்தாபனை நடைபெறுவதில்லை. கடவுள் உலகம் தூய்மையற்றிருக்கும்போது மாத்திரமே வருகிறார். சத்தியயுகமே தூய்மையான உலகமாகும். தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குவதற்குக் கடவுள் வந்தாகவே வேண்டும். தந்தை உங்களுக்கு இப்பொழுது அனைத்திலும் மிக இலகுவான வழிமுறையைக் காட்டுகிறார்: அனைத்துச் சரீர உறவுகளைத் துறந்;து, ஆத்ம உணர்வுடையவர்களாகித் தந்தையை நினைவுசெய்யுங்கள். தூய்மையாக்குபவர் ஒருவர் இருக்க வேண்டும். ஒரே ஒரு கடவுள் மாத்திரமே பக்தர்களுக்குப் பக்தியின் பலனை அளிப்பவர் ஆவார். அவரே பக்தர்களுக்கு ஞானத்தை அளிக்கிறார். ஞானக்கடல், இத்தூய்மையற்ற உலகிற்கு மாத்திரமே உங்களைத் தூய்மையாக்குவதற்காக வருகிறார். யோகத்தின் மூலமே நீங்கள் தூய்மையடைகிறீர்கள். தந்தையை அன்றி வேறொருவரும் உங்களைத் தூய்மைப்படுத்த முடியாது. நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்காகவே இவ்விடயங்களெல்லாம் உங்கள் புத்தியில் பதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் இச்செய்தி கொடுக்கப்பட வேண்டும். நேரடியாகவே கடவுள் வந்து விட்டார் என்று கூற வேண்டாம்! நீங்கள் மிகவும் சாதுரியமாக் விளங்கப்படுத்த வேண்டும். அவர்களுக்குக் கூறுங்;கள் : அவரே தந்தை, இல்லையா ? ஒருவர் சரீரத் தந்தை, மற்றவர் இவ்வுலகிற்கும் அப்பாற்பட்ட தந்தை ஆவார். துன்ப நேரத்தில் அப்பாலிருக்கும் தந்தையை அனைவரும் நினைவு செய்கிறார்கள். சந்தோஷ தாமத்தில் ஒருவரும் அவரை நினைவு செய்வதில்லை. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாகிய சத்தியயுகத்தில் சந்தோஷத்தைத் தவிர வேறெதுவும் இல்லை, அங்கே தூய்மை, அமைதி, செழிப்பு நிலவும். உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெற்ற பின்னர், அவரை நீங்கள் ஏன் அழைக்கப் போகிறீர்கள்? தாங்கள் சந்தோஷமாக இருப்பதை ஆத்மாக்கள் அறிவார்கள். அங்கு சந்தோஷத்தைத் தவிர, வேறெதுவும் இல்லை என எவருமே கூற முடியும். தந்தை ஒரு துன்ப உலகைப்; படைப்பதில்லை. இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. 2 தொடக்கம் 4 பிறவிகளை மாத்திரமே பாகமாகக் கொண்டவர்கள் இறுதியில் நிச்சயமாக எஞ்சிய காலத்தில் அமைதியில் நிலைத்திருப்பார்கள். எவ்வாறாயினும் நிச்சயிக்கப்பட்ட நாடகத்திலிருந்து வெளியேறுவது எவராலும் இயலாத காரியமாகும். ஒவ்வொருவரும் இந்நாடகத்தில் தனது பாகத்தை நடிக்க வர வேண்டும். ஓரிரு பிறவிகளை மாத்திரம் உடைய ஒருவர் எஞ்சிய காலமெல்லாம்; நிரந்தர முக்தியில் இருப்பதாகவே தோன்றும். ஆத்மாக்கள் நடிகர்களே. சில ஆத்மாக்கள் மேன்மையான பாகத்தையும் ஏனையவர் குறைந்த பாகத்தையும் பெறுகிறார்கள். இந்நேரத்தில் நீங்கள் இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். எவருமே கடவுளின் முடிவை சென்றடைய முடியாது எனப் பாடப்பட்டுள்ளது. தந்தையே வந்து, படைப்பவரைப் பற்றியும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றியும் உங்களுக்குக் கூறுகிறார். படைப்பவர் வரும்வரை ஒருவருக்கும் படைப்பவரையோ அல்லது படைப்பைப் பற்றியோ தெரிந்து கொள்ள முடியாது. தந்தையே வந்து தான் சாதாரண சரீரத்தினுள் பிரவேசம் செய்கிறார் என்று கூறுகிறார். நான் பிரவேசம் செய்பவர் தனது சொந்தப் பிறவிகளையே அறியாதவராக இருக்கி;றார். நான் அமர்ந்திருந்து, அவரின் 84 பிறவிகளின் கதையை அவரிடம் கூறுகிறேன். எவரது பாகத்திலும் எந்த ஒரு மாற்றமும் இருக்கவே முடியாது. இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. இதுவேனும் எவரது புத்தியிலும் பதிவதில்லை. அவர்கள் இதனை அவர்களது தூய்மையான புத்தியுடன் புரிந்து கொள்ள முயற்சி செய்யும்போது மாத்திரமே அவர்களது புத்தியில் இது பதியும். 7 நாள் பத்தியில் உங்களால் அனைத்தையும் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அவர்கள் 7 நாட்களுக்கு பாகவதம் போன்றவற்றை வாசிக்கிறார்கள். இங்கும் 7 நாட்களுக்கு வந்தாலேயன்றி, எவராலும் எதையும் புரிந்து கொள்ள முடியாது. சிலர் நன்கு புரிந்து கொள்கிறார்கள். சிலர் 7 நாட்களின் பின்பு எதையுமே புரிந்து கொள்வதில்லை. அது புத்தியில் பதிவதில்லை. அவர்;கள் கூறுவார்கள்: நான் 7 நாட்களாக வருகிறேன். ஆனால், ஒன்றுமே எனது புத்தியில் பதியவில்லை. அவர்;கள் உயர்;ந்த அந்தஸ்தைப் பெறப் போவதில்;;லையாயின் அது அவர்;களின் புத்தியில் பதிவதில்லை. சரி. குறைந்தது அவர் ஏதோ சில நன்மைகளையாவது பெற்றிருப்பார். இவ்வாறே பிரஜைகள் உருவாக்கப்படுகிறார்கள். எவ்வாறாயினும் இராச்சியத்தின் பாக்கியத்தைப் பெற வேண்டுமாயின் மறைமுகமான முயற்சி தேவைப்படுகின்றது. தந்தையை நினைவு செய்வதால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நீங்கள் அவற்றைப் பின்பற்றுகிறீர்களோ இல்லையோ, இவை தந்தையின் வழிகாட்டல்கள் ஆகும். நீங்கள் நேசிக்கும் ஒருவரை எப்பொழுதும் நினைவு செய்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் பாடுகிறார்கள்: ஓ, தூய்மையாக்குபவரே, வாருங்கள்! இப்பொழுது நீங்கள் அவரைக் கண்டு கொண்டபடியால், அவர்;; கூறுகிறார் : என்னை நினைவு செய்தால் உங்களது துரு அகற்றப்படும். அத்தனை சுலபமாக சுய இராச்சிய உரிமையைப் பெற முடியாது! முயற்சி தேவை! நினைவு செய்வதற்கு முயற்சி தேவை. நினைவுயாத்திரையே பிரதான விடயமாகும். அதிகளவு நினைவில் இருப்பவர்கள் கர்மாதீத நிலையை அடைவார்கள். நீங்கள் முழுமையான நினைவில் இல்லாதுவிடின் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. யோகசக்தியின் மூலமே நீங்கள் பாவங்களை வென்றவர்கள் ஆகுவீர்கள். முன்பும் நீங்கள். யோகசக்தியின் மூலமே பாவங்களை வெற்;றி கொண்டீர்கள். கலியுக இறுதியில் தூய்மையான ஒருவரேனும் இல்லாத போது எவ்வாறு இலக்ஷ்மி நாராயணன் மிகத் தூய்மையானவர்கள் ஆகினார்கள்? கீதையின் அத்தியாயம் மீண்டும் நடக்கின்றதென்பது மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கடவுள் சிவன் கூறுகிறார் : தொடர்ந்தும் தவறுகள் செய்யப்படுகின்றன. தந்தையே வந்து, உங்களைத் தவறுகள் செய்வதிலிருந்து விடுவிக்கின்றார். பாரதத்தின் சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்துக்குரியவை. தந்தை கூறுகிறார்: நான் முன்னர் கூறியவை எவை என்று எவருமே அறிய மாட்டார்கள். யாருக்கு இவை அனைத்தும் கூறப்பட்டதோ அவர்கள் ஒரு அந்;தஸ்தைப் பெற்றனர். அவர்கள் தங்கள் 21 பிறவிகளுக்குரிய வெகுமதியை பெற்றனர். பின்னர் இந்த ஞானம் மறைந்து விட்டது. நீங்களே சக்கரத்தில் சுற்றி வந்தவர்கள். இந்த ஞானத்தைக் கடந்த கல்பத்தில் செவிமடுத்தவர்கள் மாத்திரமே மீண்டும் வருவார்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்றும் நாற்றுக்களை நீங்கள் இப்பொழுது நாட்டுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதுவே தேவ விருட்சத்தின் நாற்று ஆகும். அம்மக்கள் பௌதீக மரங்களின் பல நாற்றுக்களைத் தொடர்ந்தும் நாட்டுகிறார்கள். பாபா வந்து, உங்களுக்கு வேறுபாட்டை ஒப்பிட்டுக் காட்டுகிறார். பாபா தேவ மலர்களின் நாற்றுக்களை நாட்டுகிறார்;. அம்மக்கள் காடுகளை வளர்ப்பதற்காக நாற்றுகளைத் தொடர்ந்து நாட்டுகிறார்கள். நீங்கள் கௌரவர்கள் என்ன செய்கிறார்கள் எனவும், பாண்டவர்கள் என்ன செய்கிறார்கள் எனவும் காட்டுகிறீர்கள். அவர்களின் திட்டங்கள் யாவை? உங்களின்; திட்டங்கள் யாவை? அவர்கள் உலக சனத்தொகை அதிகரிப்பதைத் தடுப்பதற்குத் திட்டங்கள் தீட்டு;கிறார்கள். அவர்கள் சனத்தொகையை கட்டுப்படுத்துவதற்காக, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை தீட்டு;கிறார்கள். இதனை அடைவதற்காகத் தொடர்ந்தும் அவர்கள் கடினமாக வேலை செய்கிறார்கள். தந்தை உங்களுக்கு மிக நல்ல விடயமொன்றைக் கூறுகிறார் : தேவ தர்மம் என்ற குடும்பம் ஸ்தாபிக்கப்பட்டு, எண்ணற்ற சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படும். சத்திய யுகத்தில் ஆதியிலிருந்த அநாதியான தேவர்களின் ஒரே ஒரு குடும்பமே இருந்தது. அங்கு அப்பொழுது அதிகளவு குடும்பங்கள் இருக்கவில்லை. பாரதத்தில் அதிகளவு குடும்பங்கள் உள்ளன : குஜராத் குடும்பம், மகாராஷ்டிரா குடும்பம், உண்மையில் அங்கு பாரதவாசிகளின் ஒரே ஒரு குடும்பமே இருக்க வேண்டும். அதிகளவு எண்ணிக்கையான குடும்பங்கள் இருக்கும் போது நிச்சயமாக அவர்களுக்குள் முரண்பாடுகள் இருக்கும். பின்னர் உள்நாட்டு யுத்தமும் ஏற்படுகின்றது. குடும்பங்களிலும் உட்பூசல்கள் இருக்கின்றன. கிறிஸ்தவர்களும் தமக்கென சொந்;தக் குடும்பத்தைக் கொண்டுள்ளனர். அவர்களுக்குள்ளும் உட்பூசல் இருக்கின்றது : இரு சகோதரர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை. அத்துடன் அவர்கள் தண்ணீருக்காகச் சண்டையிடுவதுமுண்டு. சீக்கிய சமயத்தினர் அச்சமயத்தைச் சேர்ந்;த சீக்கியருக்குக் கூடிய சந்தோஷத்தைக் கொடுக்க விரும்புவார்கள். அந்த இழை இழுக்கப்படுவதனால் தொடர்ந்தும் அவர்களுக்காக முயற்சி செய்வார்கள். இறுதி நேரம் வரும் போது உள்நாட்டு யுத்தம்; போன்றவையும் ஏற்படும். அவர்கள் தங்கள் மத்தியிலும் சண்டையிட ஆரம்பிப்பார்கள். விநாசம் நிகழவே வேண்டும். அவர்கள் பல குண்டுகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறார்கள். மகாயுத்தத்தில் இரு குண்டுகள்; வீசப்பட்டன. அவர்கள் இப்பொழுது அவற்றில் பலவற்றை உற்பத்தி செய்துள்ளனர். இது புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். இது அதே மகா பாரதயுத்தம் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்த யுத்தத்தை நிறுத்தாவிடில் முழு உலகமுமே தீக்கிரையாகி விடும் என முக்கியஸ்தர்கள் அனைவரும் கூறுகிறார்கள். உலகம் தீக்கிரையாக்கப்பட்டு விடும் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கிறார். இந்த இராஜயோகம் சத்தியயுகத்திற்கானது. அந்த தேவ தர்மம் இப்பொழுது மறைந்து விட்டது. தேவ தர்மத்தின் பல வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தந்தை கூறுகிறார் : கடந்த கல்பத்தில் ஏற்பட்ட தடைகள் யாவும் மீண்டும் ஏற்படும். நீங்கள் ஆரம்பத்தில் இதை அறிந்திருக்கவில்லை. பின்னர் அதே விடயம் முன்னைய கல்பத்திலும் நடைபெற்றதென்;பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இந்த நாடகம் ஏற்கெனவே நி;ச்சயிக்கப்பட்டது. நாங்கள் இந்த நாடகத்தில் கட்டுண்டுள்ளோம். நீங்கள் நினைவுயாத்திரையை மறக்கக்கூடாது. இது ஒரு பரீட்சை என அழைக்கப்படுகின்றது. நீங்கள் களைத்து விடுவதனாலேயே உங்களால்; நினைவுயாத்திரையில் நிலைத்திருக்க முடிவதில்லை. 'ஓ, இரவின் பயணியே, களைப்படைய வேண்டாம்!" என்னும் பாடலும் உள்ளது. இதன் அர்த்தம் ஒருவருக்கும் விளங்கவில்லை. இந்த நினைவு யாத்திரையின் மூலமே இரவு முடிவடைந்து பகல் ஆரம்பமாகுகின்றது. பாதிக் கல்பம் முடிவடையும் போது துன்பம் ஆரம்பமாகுகின்றது. 'மன்மனபவ" என்பதன் பொருளைத் தந்தையே மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். கீதையில் கிருஷ்ணரின் பெயர் புகுத்தப்பட்டதனால் இப்போது கீதை அத்தனை பலம் வாய்ந்ததாக இல்லை. இப்போது அனைவரும் நன்மையடையப் போகின்றார்கள். நாம் மனிதர் அனைவருக்கும் - குறிப்பாகப் பாரதத்திற்கும் பொதுவாக உலகத்திற்கும் நன்மையளிக்கிறோம் என்பதே அதன் அர்த்தமாகும். நாம் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் அனைவருக்கும் நன்மையளிக்கிறோம். பரோபகாரிகள் ஆகுபவர்களே ஆஸ்தியைப் பெறுவார்;கள். நினைவுயாத்திரையின்றி எந்;வொரு நன்மையும் இருக்க முடியாது. அவரே எல்லையற்ற தந்தை என இப்போது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றீர்;கள். பாரதவாசிகளாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுத்தீர்கள். மறுபிறவிக் கணக்கும் உள்ளது. யார் 84 பிறவிகள் எடுக்கிறார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் தங்கள் செய்யுள்களை எழுதியும், பாராயணங்களை செய்தும் வருகிறார்கள். அதே கீதையிலேயே பல அவதூறான விடயங்களை அவர்கள் எழுதியுள்ளனர். அவர்கள் கீதையிலும் பார்க்க பாகவதத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். கீதையில் ஞானமும், பாகவதத்தில் வாழ்க்கை வரலாறும் உள்ளன. உண்மையில் கீதைதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. தந்தையே ஞானக்கடல், அவரது ஞானமே சதா காலத்திற்கும் தொடர்கிறது. அவர்கள் கீதையை அரை மணித்தியாலத்தில் வாசிக்கின்றனர்! நீங்கள் இப்;போது தொடர்ந்தும் ஞானத்தைச் செவிமடுக்கிறீர்கள். மக்கள் தொடர்ந்து, ஒவ்வொருநாளும் உங்களிடம் வருவார்கள். அவர்கள் படிப்படியாக வருவார்கள். மகாராஜாக்கள் இப்பொழுதே வருவார்களேயானால் அதி;க காலம் எடுக்காது; செய்தி மிகவும் விரைவில் பரவி விடும். அதனாலேயே அனைத்தும் மெதுவாகவும் சாதுரியமாகவும் தொடர்கிறது. இந்த ஞானம் மறைமுகமானது. நாம் என்ன செய்கிறோம் என்பதை ஒருவரும் அறிய மாட்டார்கள். நீங்கள் எவ்வாறு இராவணனுடன் போரிடுகிறீர்கள் என்பதை உங்களைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். கடவுள் பேசுகிறார்: சதோபிரதான் ஆகுவதற்கு என்னை நினைவு செய்யுங்கள். அனைத்துப் பாவங்களும் அழிக்கப்படும். தூய்மையாகுங்கள். அப்பொழுது மட்டுமே உங்களை நான் என்னுடன் திரும்ப அழைத்துச் செல்வேன். அனைவருமே ஜீவன்முக்தி பெற வேண்டும். இராவண இராச்சியத்திலிருந்து விடுதலை உள்ளது. நீங்கள் எழுதுகிறீர்கள்: பிரம்மகுமார், குமாரிகளான சிவசக்திகளான நாங்கள் பரமாத்மா, பரமதந்தையின் ஸ்ரீமத்திற்கு ஏற்ப, சரியாக 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போன்றே மேன்மையான உலகை ஸ்தாபிப்போம். 5000 வருடங்களுக்கு முன்னர் உலகம் மேன்மையாக இருந்தது. நீங்கள் இதை உங்கள் புத்தியில் பதியச்செய்ய வேண்டும். உங்கள் புத்தியில் முக்கிய கருத்துக்கள் இருக்கும்போது மட்டுமே நீங்கள் நினைவுயாத்திரையில் இருக்க முடியும். கல்லுப் புத்தியுடையவர்களும் உள்ளனர். சில குழந்தைகள் இன்னும் காலம் இருக்கிறதெனவும், தாங்கள் இறுதியில் முயற்சி செய்வார்கள் எனவும் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும் மரணத்திற்கு ஒழுக்கம் இல்லை! ‘நாளை, நாளை’ எனக்கூறிக் கொண்டிருக்கும் போது, நாளையே எவரும் மரணிக்கக்கூடும். நீங்கள் முயற்சி செய்யாமல் இருந்துவிட்டு, உங்களுக்கு இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன எனவும், நீங்கள் இறுதியில் மிக விரைவாக முன்னேறுவீர்கள் எனவும் எண்ண வேண்டாம். இந்த எண்ணம் உங்களை மேலும் வீழ்ச்சியடையச் செய்யும். இயலுமானளவு எவ்வளவு அதிகமாக முயற்சி செய்ய முடியுமோ, அவ்வளவுக்குத் தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் உங்களுக்கு நன்மையளிக்க வேண்டும். உங்களை நீங்களே சோதித்துப் பார்க்க வேண்டும். நான் எந்தளவுக்குத் தந்;தையை நினைவு செய்கிறேன்? நான் எவ்வளவு சேவை செய்கிறேன்? நீங்கள் கடவுளின் ஆன்மீக உதவியாளர்கள். நீங்கள் ஆத்மாக்களை மீட்கிறீர்கள். அவர் உங்களுக்கு ஆத்மாக்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர் ஆக்குகின்ற வழிகளைக் காட்டுகிறார். உலகில் நல்ல மனிதர்களும், தீய மனிதர்களும் உள்ளனர். ஒவ்வொருவரும் அவரவருக்கே உரித்தான தனிப்பட்ட பாகத்தைக் கொண்டுள்ளனர். இது ஓர் எல்லையற்ற விடயம். பிரதான கிளைகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. எவ்வாறாயினும் அங்கு பல இலைகள் உள்ளன. தந்தை தொடர்ந்து கூறுகிறார்: குழந்தைகளே, முயற்சி செய்யுங்கள்! புத்தியின் யோகமானது தந்தையுடன் தொடர்பு உடையதாக இருக்குமாறு அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை குழந்தைகள் அனைவருக்கும் கூறுகிறார் : தூய்மையாகுங்கள். அப்பொழுது நீங்கள் முக்தி தாமத்திற்குச் செல்வீர்கள். மகாபாரத யுத்தத்தினால் என்ன நிகழ உள்ளது என்பது உலகில் உள்ள எவருக்குமே தெரியாது. இந்த ஞான யாகமானது புதிய உலகுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் யாகம் பூர்த்தியாகும் வேளையில் அனைத்தும் அதனுள் அர்ப்பணிக்கப்படும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. எனவே தடைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். தடைகள் ஏற்படுவதனால், நினைவு யாத்திரையை மறக்காதீர்கள். உங்கள் நினைவு யாத்திரை நின்று விடாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள்.
2. அப்பாலிருக்கும் தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுத்து, தூய்மையாகும் வழிகளை அவர்களுக்குக் காட்டுங்கள். தெய்வீக விருட்சத்தின் நாற்றை நாட்டுங்கள்.ஆசீர்வாதம்:
உங்களுடைய சகல சுமைகளையும் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, சதா ஒரு இலகுயோகியாக முன்னேறிச் செல்வீர்களாக.தந்தையின் பணியை நிறைவேற்றும் எண்ணத்தைக் கொண்டிருக்கின்ற குழந்தைகள் அந்தளவிற்கு தந்தையிடமிருந்து ஒத்துழைப்பைப் பெறுகின்றார்கள். சகல வீணானவற்றின் சுமையையும் தந்தையிடம் ஒப்படைத்து விடுங்கள். தந்தைக்கு உரியவராகி பொறுப்புகளின் சுமையை தந்தையிடம் ஒப்படைப்பதால், நீங்கள் அதிகளவு வெற்றி அடைவதுடன் இலகுவாக முன்னேறிச் செல்வீர்கள். ‘ஏன்?’ ‘என்ன?’ என்ற கேள்விகளிலிருந்து விலகியிருந்து, விசேடமாக, முற்றுப்புள்ளி என்ற ஸ்;திதியை கொண்டிருங்கள். அப்பொழுது நீங்கள் இலகுயோகி ஆகி, தொடர்ந்தும் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்கள்.
சுலோகம்:
உங்கள் இதயத்திலும் புத்தியிலும் நேர்மை இருந்தால், நீங்கள் தகுதி வாய்ந்தவராகி, தந்தையினதும் குடும்பத்தினதும் நம்பிக்கைக்குரியவர் ஆகுவீர்கள்.