28.02.21 Avyakt Bapdada Tamil Lanka Murli 10.11.87 Om Shanti Madhuban
நல்லாசிகளின் இரத்தினமாகி, உலகைக் கவலையில் இருந்து விடுவியுங்கள்.
இன்று, இரத்தின வியாபாரியான தந்தை, எங்கும் உள்ள தனது விசேடமான நல்லாசிகளின் இரத்தினங்களைப் பார்க்கிறார். இரத்தின வியாபாரியான தந்தையின் இரத்தினங்கள், தமது நல்லாசிகளின் கதிர்களால் உலகில் ஒளியை ஏற்படுத்தியுள்ளார்கள். ஏனென்றால், செயற்கையான ஜொலிப்புடைய இன்றைய உலகில், ஆத்மாக்கள் அனைவரும் கவலை இரத்தினங்களாக இருக்கிறார்கள். உங்களின் நல்லாசிகளின் சக்தியால், நல்லாசிகளின் இரத்தினங்களான நீங்கள், தற்காலிகமாக மட்டும் ஜொலிக்கும் இத்தகைய கவலை இரத்தினங்களை மாற்றுகிறீர்கள். எவ்வாறு சூரியனின் கதிர்கள் நீண்ட தூரத்தில் இருக்கும் இருளையும் நீக்கக்கூடியதோ, அவ்வாறே, நல்லாசிகளின் இரத்தினங்களான உங்களின் நல்லாசிகளின் பிரகாசமும் கதிர்களும் உலகெங்கும் பரவுகின்றன. தற்காலத்தில், ஏதோவொரு ஆன்மீக ஒளி மறைமுகமான முறையில் அதன் பணியைச் செய்கிறது எனப் பல ஆத்மாக்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், எங்கிருந்து இந்த ஒளி தனது பணியைச் செய்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற தொடுகையை அவர்கள் பெற ஆரம்பித்துவிட்டார்கள். படிப்படியாக, தேடுவதன் மூலம், அவர்கள் இறுதியில் இந்த இடத்தை வந்துசேர்வார்கள். எனவே, இந்தத் தொடுகையானது, நல்லாசிகளின் இரத்தினங்களான உங்களின் மேன்மையான எண்ணங்களின் பிரகாசமே ஆகும். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியிலுள்ள இரத்தினத்தின் பிரகாசத்தையும் பார்க்கிறார். ஏனென்றால், நீங்கள் வரிசைக்கிரமமாகவே பிரகாசிக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நல்லாசிகளின் இரத்தினங்கள் ஆவீர்கள். ஆனால் அதன் பிரகாசம் வரிசைக்கிரமமானது.
ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்கும், ஞானம் இல்லாத ஆத்மாக்களுக்கும் உங்களின் மனதால் சேவை செய்வதற்கான இலகுவான வழிமுறை, நல்லாசிகளைக் கொண்டவராக இருப்பதேயாகும். உங்களால் இதை நடக்கும்போதும் அசையும்போதும் செய்ய முடியும். நலம்விரும்பிகளான உங்கள் அனைவரினதும் அதிர்வலைகள், மிக இலகுவாகக் கவலை மணிகளாக உள்ள ஆத்மாக்களின் சூழலையும் மனோபாவத்தையும் மாற்றும். இன்று, எங்கும் உள்ள மனிதர்களின் வாழ்க்கைகளில், மனிதர்கள் மூலமோ அல்லது உடமைகள் மூலமோ, சுயநல நோக்கங்களால், தமது உடமைகளால் ஏதோவொரு தற்காலிகமான பேறுகள் இருப்பதால், குறுகிய காலத்திற்கு ஏதாவது மேன்மையான பேறுகளை மனிதர்கள் அனுபவம் செய்கிறார்கள். எவ்வாறாயினும், அந்தத் தற்காலிகமான சந்தோஷம் குறுகிய காலத்தின் பின்னர் கவலையாக மாறிவிடும். அதாவது, உடமைகளும் மனிதர்களும் அவர்களின் கவலைகளை முடிப்பதற்கான வழிமுறைகள் ஆகாது. ஆனால், மேலும் கவலையை ஏற்படுத்துவதற்குக் கருவிகள் ஆகிவிடும். ஏதாவதொரு கவலையால் துன்பப்படும் ஆத்மாக்களால், இத்தகைய நல்லாசிகளைக் கொண்டுள்ள மிகச் சில ஆத்மாக்களைக் காண முடியும். நல்லாசிகளைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுடன் சிறிது நேரம் தொடர்பில் வந்தாலும், அது அவர்களின் கவலைகளை முடிப்பதற்கான காரணம் ஆகிவிடும். எனவே, இன்று, இத்தகைய நலம்விரும்பி ஆத்மாக்களே உலகிற்குத் தேவையாக உள்ளது. இதனாலேயே, நல்லாசிகளின் இரத்தினங்களான ஆத்மாக்களான நீங்கள், உலகினால் அதிகபட்சம் நேசிக்கப்படுகிறீர்கள். அவர்கள் உங்களின் தொடர்பில் வரும்போது, உலகில் வேறெங்கும் இத்தகைய நல்லாசிகளைக் கொண்ட வேறு எவரையும் தங்களால் காண முடியாது என அவர்கள் உணர்கிறார்கள்.
எப்போதும் நல்லாசிகளைக் கொண்டிருப்பதன் பிரதானமான அடிப்படை, தூய எண்ணங்களே. எப்போதும் தூய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள், நிச்சயமாக எப்போதும் நல்லாசிகளைக் கொண்டிருப்பார்கள். சிலவேளைகளில் வீணான எண்ணங்கள் அல்லது மற்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் இருந்தால், உங்களால் சதா நல்லாசிகளைக் கொண்டிருக்க முடியாது. நலம்விரும்பி ஆத்மாக்களால் ஏனைய ஆத்மாக்களின் வீணான எண்ணங்களையும் மற்றவர்களைப் பற்றிய எண்ணங்களையும் முடிக்க முடியும். எனவே, ஒவ்வொரு மேன்மையான சேவையாளரின் அதாவது, நல்லாசிகளின் இரத்தினங்களின் தூய எண்ணங்களின் சக்திவாய்ந்த பொக்கிஷக்களஞ்சியம், சதா நிரம்பியே இருக்கும். அவர்கள் சதா நிரம்பியவர்களாக இருப்பதனால், அவர்களிடம் எப்போதும் மற்றவர்களுக்காக நல்லாசிகள் இருக்கும். நலம்விரும்பியாக இருத்தல் என்றால், ஞான இரத்தினங்கள் அனைத்தினாலும் நிறைந்தவராக இருத்தல் என்று அர்த்தம். இத்தகைய ஆத்மாக்களால் மட்டுமே ஞானம் நிறைந்த அருள்பவர்கள் ஆகமுடிவதுடன், எப்போதும் மற்றவர்களுக்காக நல்லாசிகளையும் கொண்டிருக்க முடியும். ஆகவே, சோதித்துப் பாருங்கள்: நாள் முழுவதும், என்னிடம் அதிகளவில் தூய எண்ணங்களும் நல்லாசிகளும் உள்ளதா? அல்லது, நான் மற்றவர்களின் எண்ணங்களிலேயே அதிகளவு நேரத்தைச் செலவிடுகிறேனா? தூய எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஒருவர், சதா நிறைந்திருக்கும் போதையில் இருப்பார். அவரின் நலம்விரும்பி என்ற ரூபத்தினால், அவரால் இவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்து, அவர்களையும் நிரப்ப முடியும். வீணான எண்ணங்களையும் மற்றவர்களைப் பற்றிய எண்ணங்களையும் கொண்டிருப்பவர், எப்போதும் வெறுமையாகவே இருப்பதனால், அவர் தன்னைப் பலவீனமாகவே உணர்வார். இதனாலேயே, அவரால் நல்லாசிகளைக் கொண்டிருக்கவோ அல்லது அவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்கவோ முடியாமல் உள்ளது. தற்சமயம், அனைவரின் கவலைகளை முடித்து, கவலைகளுக்குப் பதிலாக நல்லாசிகளைக் கொண்டிருக்கும் வழிமுறையால் ஆத்மாக்களை அனுபவசாலிகள் ஆக்குவதற்கான கருவிகள் ஆகும் நல்லாசிகளின் இரத்தினங்களுக்கான தேவை உள்ளது. எங்கு தூய எண்ணங்கள் உள்ளதோ, அங்கு கவலைகள் இயல்பாகவே முடிவிற்கு வந்துவிடும். எனவே, நல்லாசிகளைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் சதா மறைமுகமான சேவை செய்கிறீர்கள், இல்லையா?
நீங்கள் எல்லையற்ற உலக சேவைக்கான திட்டங்களைச் செய்துள்ளீர்கள். இந்தத் திட்டங்களை இலகுவாக வெற்றிகரமானது ஆக்குவதற்கான வழிமுறை, நலம்விரும்பி என்ற ஸ்திதியைக் கொண்டிருப்பதாகும். பல வகையான ஆத்மாக்கள் உங்களுடன் தொடர்பில் வருவார்கள். உங்களுடன் உறவுமுறையில் வருவார்கள். இத்தகைய ஆத்மாக்களுக்கு நல்லாசிகளைக் கொண்டிருத்தலே, இத்தகைய ஆத்மாக்களுக்குத் தைரியம் என்ற இறக்கைகளைக் கொடுப்பதற்கான வழிமுறை ஆகுகின்றது. ஏனென்றால், அவர்களின் தைரியம், ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகள் கவலை என்ற சிதையில் இருப்பதன் மூலம் பலவீனம் ஆகிவிடுகிறது. நலம்விரும்பி ஆத்மாக்களான உங்களின் நல்லாசிகள், அவர்களின் இறக்கைகளைச் சக்தியால் நிரப்பும். உங்களின் நல்லாசிகளின் உணர்வுகளின் அடிப்படையில் அவர்கள் பறக்க ஆரம்பிப்பார்கள். அதாவது, அவர்கள் ஒத்துழைப்பவர்கள் ஆகுவார்கள். அந்த ஆத்மாக்கள் மனவிரக்தி அடைந்து, சிறந்த உலகை உருவாக்குவதற்கான சக்தி தமக்குள் இருக்கிறதா என நினைக்கிறார்கள். தங்களையே ஏதாவதாக ஆக்க முடியாதவர்களால் எவ்வாறு உலகை ஏதாவதொன்றாக மாற்ற முடியும்? உலகை மாற்றுவது மிகவும் சிரமம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால், தற்சமயம் வெவ்வேறு அதிகாரங்களின் பெறுபேறுகளை அவர்கள் கண்டுள்ளார்கள். அதனால் அதைச் சிரமம் என்றே அவர்கள் கருதுகிறார்கள். உங்களின் நல்லாசிகளின் சக்தி, இத்தகைய மனச்சோர்வடைந்துள்ள ஆத்மாக்களின் இதயங்களையும், கவலைச் சிதையில் அமர்ந்திருக்கும் ஆத்மாக்களையும் சந்தோஷப்படுத்தும். தண்ணீரில் மூழ்கும் ஒருவருக்கு ஒரு வைக்கோல் போன்ற சிறியதொரு ஆதாரமும் இதயத்தைச் சந்தோஷமாக்கி, அவருக்குத் தைரியத்தைக் கொடுப்பதைப் போல், உங்களின் நல்லாசிகளின் ஸ்திதியானது, அவர்களுக்குள் ஏதாவது ஆதாரத்தின் அனுபவத்தைக் கொடுக்கும். அத்துடன் எரிந்து கொண்டிருக்கும் ஆத்மாக்கள் குளிர்ந்த தண்ணீரின் அனுபவத்தைப் பெறுவார்கள்.
அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவதன் அடிப்படை, நல்லாசிகளைக் கொண்டிருக்கும் ஸ்திதியாகும். எல்லோருக்காகவும் நல்லாசிகளைக் கொண்டிருப்பவர்கள், இயல்பாகவே அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவார்கள். உங்களின் நல்லாசிகளின் உணர்வானது, இயல்பாகவும் இலகுவாகவும் அவர்களின் மனங்களில் ஒத்துழைப்பு வேண்டும் என்ற உணர்வை உருவாக்கும். நல்லாசிகளைக் கொண்டுள்ள ஆத்மாக்களுக்காக அவர்களின் இதயங்களில் அன்பு இருக்கும். இந்த அன்பே அவர்களை ஒத்துழைப்பவர்கள் ஆக்கும். எங்கு அன்பு உள்ளதோ, அனைவரும் எப்போதும் தமது நேரம், செல்வம், ஒத்துழைப்பு அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பார்கள். எனவே, நல்;லாசிகளைக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களை அன்பானவர்களாக மாற்றுவார்கள். அந்த அன்பானது அவர்களைத் தங்களை அர்ப்பணிக்கச் செய்வதுடன், ஒவ்வொரு வகையான ஒத்துழைப்பையும் கொடுக்கும். ஆகவே, சதா நல்லாசிகளால் நிறைந்திருங்கள். ஒரு நலம்விரும்பியாக, அனைவரையும் அன்பானவர்களாகவும் ஒத்துழைப்பானவர்களாகவும் ஆக்குங்கள். நல்லாசிகளைக் கொண்டுள்ள ஓர் ஆத்மாவால் இலகுவாக அனைவரிடமிருந்தும் திருப்திக்கான சான்றிதழைப் பெற முடியும். நல்லாசிகளைக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே எப்போதும் திருப்திக்கான ஆளுமையைக் கொண்டிருக்க முடியும். அவர்கள் உலகின் முன்னால் விசேட ஆளுமைகள் ஆகின்றார்கள். தற்காலத்தில் ஆளுமை கொண்ட மனிதர்கள் பிரபல்யமானவர்கள் ஆகின்றார்கள். அதாவது, அவர்களின் பெயர்கள் போற்றப்படுகின்றன. எவ்வாறாயினும், ஆன்மீக ஆளுமை கொண்ட ஆத்மாக்களான நீங்கள் பிரபல்யமானவர்கள் ஆனவர்கள் மட்டும் ஆகுவதில்லை. அதாவது, நீங்கள் புகழத் தகுதிவாய்ந்தவர்கள் மட்டும் ஆகுவதில்லை. ஆனால், புகழத்தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதுடன், நீங்கள் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆகுகிறீர்கள். மதம், அரசியல் அல்லது விஞ்ஞானத் துறைகளில் எத்தனை மக்கள் பிரபல்யமானவர்கள் ஆகினாலும், உங்களின் ஆன்மீக ஆளுமையால் உங்களைப் போல் 63 பிறவிகளுக்குப் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்களாக அவர்கள் ஆகவில்லை. ஆகவே, பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர் ஆகுவதற்குத் தேவையான சிறப்பியல்பானது, எல்லோருக்கும் நல்லாசிகளைக் கொடுப்பதேயாகும். நீங்கள் மற்றவர்களுக்குச் சந்தோஷம், ஆதாரம் என்ற பேறுகளையும் தைரியம், ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளையும் கொடுக்கும்போது, இந்தப் பேறுகளின் ஆசீர்வாதங்களும் நல்லாசிகளும் அவர்களைத் தமது உரிமைகளைப் பெறக்கூடிய குழந்தைகளாக ஆக்கும். ஆனால் ஏனையோர் பக்த ஆத்மாக்கள் ஆகுவார்கள். இதனாலேயே, நீங்கள் பல பிறவிகளுக்குப் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். நல்லாசிகளைக் கொண்டதோர் ஆத்மா என்றால், நீண்ட காலத்திற்குப் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகுதல் என்று அர்த்தம். ஆகவே, உங்களிடம் ஏனைய நிகழ்ச்சித்திட்டங்கள் இருப்பதைப்போல், இந்த எல்லையற்ற செயல்திட்டத்தை ஆரம்பிப்பதுடன்கூடவே, உங்களுக்காகவும் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
1) எல்லா வேளையும், ஆத்மாக்கள் எல்லோருக்காகவும் நீங்கள் ஏனைய அனைத்து உணர்வுகளையும் மாற்றி, சதா நல்லாசிகளின் உணர்வுகளை மட்டுமே கொண்டிருப்பீர்கள்.
2) மற்றவர்களை உங்களுக்கு முன்னால் செல்ல வைப்பதற்காக, சதா மேன்மையான ஒத்துழைப்பை நீங்கள் தொடர்ந்து கொடுப்பீர்கள்.
3) ஒரு சிறந்த உலகை, அதாவது, மேன்மையான உலகை உருவாக்குவதற்கு, உங்களின் மேன்மையான ஆசிகளால் நீங்கள் அனைவருடனும் ஒத்துழைப்பீர்கள்.
4) நீங்கள் எல்லா வேளைக்கும் வீணான எண்ணங்களையும் மற்றவர்களுக்கான எண்ணங்களையும் முடிப்பீர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் கடந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புள்ளியாகி, ஓர் இரத்தினமாகித் தொடர்ந்து உலகிலுள்ள அனைவருக்கும் உங்களின் மேன்மையான உணர்வுகள், மேன்மையான ஆசிகள், அன்பு உணர்வுகளின் கதிர்களால் ஒளியைக் கொடுத்து, அவர்களைச் சக்திசாலிகள் ஆக்குவீர்கள்.
சுயத்திற்கான இந்த நிகழ்ச்சித் திட்டமே, முழுமையான நிகழ்ச்சியும் வெற்றி பெறுவதற்கான அத்திவாரமாகும். எப்போதும் இந்த அத்திவாரத்தைப் பலமானதாக வைத்திருங்கள். அப்போது வெளிப்படுத்துகைக்கான ஒலி இயல்பாகவே கேட்கும். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் எல்லோரும் இந்தப் பணிக்குக் கருவிகள், அப்படியல்லவா? நீங்கள் இந்த உலகை ஒத்துழைப்பதாக ஆக்குவதனால், நீங்கள் இதில் முதலில் கருவிகளாக இருக்கிறீர்கள். இளைஞர்களோ வயதானவர்களோ, அவர்கள் நோயுற்றிருந்தாலென்ன அல்லது ஆரோக்கியமாக இருந்தாலென்ன, யானை மீதிருப்பவர்களோ அல்லது குதிரை மீதிருப்பவர்களோ, அனைவரும் ஒத்துழைப்பவர்களே. இங்கு காலாட்படையினர் யாரும் இல்லை. எனவே, அனைவரின் விரலும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு செங்கல்லும் முக்கியமானது. சிலது அத்திவாரத்திலுள்ள செங்கற்கள். ஏனையவை சுவரின் செங்கற்கள். அவை தரைக்கு மேலேயே இருக்கும். ஆனால் ஒவ்வொரு செங்கல்லும் முக்கியமானது. நீங்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியைச் செய்வதாக உணர்கிறீர்களா அல்லது, இந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர்களே இதைச் செய்கிறார்கள் என உணர்கிறீர்களா? அதாவது, அது நிகழ்ச்சியை உருவாக்கியவர்களின் நிகழ்ச்சி என நினைக்கிறீர்களா? இது உங்களின் நிகழ்ச்சி என்றே நீங்கள் கூறுகிறீர்கள், இல்லையா? எல்லையற்ற செயல்திட்டத்தையும் நிகழ்ச்சியையும் பார்க்கும்போது, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் இந்த எல்லையற்ற பணிக்காக மிக நல்ல ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகின்றன. ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்கும் உலகிலுள்ள ஆத்மாக்களின் மீது கருணை உள்ளது. உங்களின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தந்தையின் வெளிப்படுத்தலுக்கான, அதாவது, தந்தை தனது பணியைச் செய்கிறார் என்ற சத்தத்தைக் கேட்க வேண்டும் என்ற கருணை உங்களிடம் உள்ளது. அவர்கள் நெருக்கமாக வந்தாலென்ன, ஓர் உறவுமுறையில் வந்தாலென்ன, ஓர் உரிமையைப் பெற்று, பூஜிக்கத்தகுதிவாய்ந்த தேவர்களாகவோ அல்லது தனது பெயரைப் பெருமைப்படுத்தும் 330 மில்லியனில் ஒருவராகவோ ஆகினாலென்ன, நிச்சயமாக அவர்களுக்கு அந்தச் சத்தம் கேட்க வேண்டும். இத்தகைய உற்சாகம் உங்களிடம் உள்ளதல்லவா? இன்னமும், நீங்கள் 900,000 பேரைக்கூடத் தயார் செய்யவில்லை. எனவே, உங்களுக்குப் புரிகிறதா? இது உங்களின் நிகழ்ச்சியே. சொந்தமாக இருக்கும் இந்த உணர்வே, உங்களின் நிகழ்ச்சியால் உங்களின் உலகை உருவாக்கச் செய்யும். அச்சா.
இன்று, குழுக்கள் ஐந்து திசைகளில் இருந்து வந்துள்ளார்கள். மக்கள் திரிவேணியைப் (மூன்று நதிகளின் சங்கமம்) பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இது ஐந்து நதிகளின் சங்கமம். ஐந்து திசைகளில் உள்ள நதிகள் வந்து சமுத்திரத்தைச் சந்தித்துள்ளன. நதிகளினதும் கடலினதும் சங்கமம், ஒரு மேன்மையான சந்திப்பாகும். புதியவர்களும் பழையவர்களும் சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறார்கள். ஒருவர் நம்பிக்கை இழந்த பின்னர் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டால், அங்கு பெரும் சந்தோஷம் ஏற்படும். பழையவர்களுக்கும் சடுதியாக ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எனவே, மேலும் அதிகமான சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. ‘எங்களால் எப்போது சந்திக்க முடியுமோ தெரியவில்லை’ என அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது உங்களால் சந்திக்க முடியும் என நீங்கள் நினைக்கவில்லை. ‘எப்போது?’ என்ற கேள்வி, ‘இப்போது’ என மாறும்போது ஏற்படும் சந்தோஷத்தின் அனுபவம் மிகவும் தனித்துவமானது. அச்சா. இன்று, வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பாப்தாதா விசேடமான அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். ஒரு விசேடமான சேவையாளர் (ஜெயந்திபெஹென்) வந்துள்ளார். அவரே வெளிநாட்டுச் சேவைக்கான முதல் கருவியாவார். மரத்தைப் பார்க்கும்போது, விதையின் நினைவு ஏற்படும். இந்தக் குடும்பமே உலகச் சேவைக்குக் கருவி ஆகுவதற்கு விதையாக இருந்தவர்கள். முதலாவது கருவிக் குடும்பத்திற்கு பாபா நினைவுகளை வழங்குகிறார்.
வெளிநாடுகளில் கருவிகளாக இருக்கும் சேவையாளர் குழந்தைகள் அனைவரும் எப்போதும் தந்தையை வெளிப்படுத்த முயற்சி செய்வதில் இரவு பகலாக ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கும் சத்தமானது, நாங்கள் வெளிநாடுகளில் இருந்து உரத்த சத்தத்துடன் பாரதத்தில் தந்தையை வெளிப்படுத்த வேண்டும் என்பதேயாகும். இந்தச் சத்தம் சதா உங்களைச் சேவை செய்வதில் முன்னேறச் செய்கிறது. விசேடமான சேவை செய்வதற்கான ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும், உங்களின் இதயங்களில் தந்தை மீதுள்ள அன்பே காரணமாகும். ஒவ்வோர் அடியிலும் ஒவ்வொரு கணத்திலும், ‘பாபா, பாபா’ என்ற ஒலி தொடர்ந்து உங்களின் உதடுகளில் இருந்து வெளிப்படுகிறது. யாராவதொருவர் ஒரு வாழ்த்து மடலை அல்லது பரிசை அனுப்பும்போது, அதில் நிச்சயமாக ஓர் இதயத்தின் படம் இருக்கும். அவர்களின் இதயங்களில் எப்போதும் இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவர் இருப்பதே இதற்கான காரணமாகும். அவர்கள் தமது இதயங்களைக் கொடுத்து, இதயத்தைப் பெற்றுள்ளார்கள். இவ்வாறான கொடுக்கல் வாங்கல் என்று வரும்போது, நீங்கள் புத்திசாலிகள். இதனாலேயே, தமது இதயபூர்வமாக ஒரு பேரத்தைச் செய்பவர்களும், தமது இதயபூர்வமாகத் தந்தையை நினைப்பவர்களும் தமது சின்னமாக ஓர் இதயத்தை அனுப்புகிறார்கள். இதயபூர்வமான இந்த நினைவும், இதயபூர்வமான அன்புமே உங்களில் பெரும்பாலானோருக்கு நீங்கள் வெகு தொலைவில் இருந்தாலும் நெருக்கமாக இருக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. பாப்தாதா காண்கின்ற குறிப்பிட்ட சிறப்பியல்பானது, பிரம்மாபாபாவிடம் உங்களுக்கிருக்கும் ஆழ்ந்த அன்பேயாகும். நீங்கள் மிக இலகுவாக பாபாவினதும் தாதாவினதும் ஆழ்ந்த இரகசியத்தை அனுபவம் செய்கிறீர்கள். சாகார் பிரம்மாபாபாவின் பராமரிப்பைப் பெறும் பாகம் உங்களுக்கு இல்லாவிட்டாலும், நீங்கள் மிக நன்றாக அவயக்த பராமரிப்பை அனுபவம் செய்கிறீர்கள். தந்தையுடனும் தாதாவுடனும் ஓர் உறவுமுறையை அனுபவம் செய்யும் சிறப்பியல்பால், நீங்கள் மிக இலகுவாக வெற்றிகரமாக முன்னேறுகிறீர்கள். எனவே, ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் பாபா உங்களின் பெயரை முதலில் குறிப்பிடுகிறார் என உணரவேண்டும். ஒவ்வொரு குழந்தையும் உங்களின் பெயரில் தனிப்பட்ட முறையில் பாப்தாதாவிடமிருந்து அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?
நீங்கள் திட்டங்களைச் செய்கிறீர்கள். இந்தத் தேசத்தின் நடைமுறைகளுக்கும் வெளிநாட்டு நடைமுறைகளுக்கும் இடையில் சிறிதளவு வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால், அன்பினால், அந்த நடைமுறைகளும் ஒன்றாகவே தோன்றுகின்றன. அது வெளிநாட்டிலிருந்து வந்த திட்டமாக இருந்தாலென்ன, அல்லது இந்தத் தேசத்தில் இருந்து வந்த திட்டமாக இருந்தாலென்ன, ஒரேயொரு திட்டமே உள்ளது. சிலவேளைகளில், அவற்றைச் செய்யும் வழிமுறைகள் சிறிதளவு வேறுபாடாக உள்ளன. இந்தத் தேசத்திற்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலுள்ள ஒத்துழைப்பு, தொடர்ந்து இந்த எல்லையற்ற பணியைச் சதா வெற்றியடையச் செய்யும். வெற்றி எப்போதும் குழந்தைகளான உங்களுடன் உள்ளது. இந்தத் தேசத்தினதும் வெளிநாடுகளினதும் ஊக்கமும் உற்சாகமும் இந்தப் பணியை முன்னேறச் செய்கிறது. அது எப்போதும் தொடர்ந்து முன்னேறும். அச்சா.
பாரதத்தில் எங்கும் உள்ள சதா அன்பான, ஒத்துழைக்கும் குழந்தைகளின் தூய எண்ணங்களும், அன்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான தூய ஒலியும் தொடர்ந்து பாப்தாதாவை வந்தடைகின்றன. இந்தத் தேசமும் வெளிநாடுகளும் ஒருவருக்கொருவர் முன்னணியில் இருக்கிறார்கள். ஒவ்வோர் இடத்தின் சிறப்பியல்பும் அதற்கேயுரியது. பாரதம் தந்தை அவதரித்த தேசம். இதுவே வெளிப்படுத்துகையின் ஒலி உரத்துக் கேட்கக்கூடிய தேசமாகும். ஆரம்ப பாகமும் இறுதிப் பாகமும் பாரதத்திலேயே இடம்பெறும். வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் ஒத்துழைப்பு, பாரதத்தில் வெளிப்படுத்துகை இடம்பெறச் செய்யும். பாரதத்தில் ஏற்படும் வெளிப்படுத்துகையின் ஒலியானது வெளிநாடுகளைச் சென்றடையும். இதனாலேயே, பாரதத்தின் குழந்தைகளின் சிறப்பியல்பு எப்போதும் மேன்மையானது. பாரதத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்தாபனைக்கு அடிப்படை ஆகினார்கள். ஸ்தாபனைக்கு ஆதார மூர்த்திகள், பாரதத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஆவார்கள். இதனாலேயே, அனைவரும் பாரதத்தின் குழந்தைகளின் பாக்கியத்தின் புகழைப் பாடுகிறார்கள். நீங்கள் நினைவு செய்வதிலும் சேவை செய்வதிலும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் சதா முன்னேறுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். இதனாலேயே, பாரதத்தின் ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட முறையில் அவர்களின் பெயரால் பாப்தாதாவிடமிருந்து அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள எல்லையற்ற, சேவையாளர் குழந்தைகளுக்கு, எல்லையற்ற தந்தையின் அன்பும், பாப்தாதாவின் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஆத்மாக்கள் அனைவருக்கும் சக்திகளைத் தானம் செய்யும் மாஸ்ரர் விதை ஆகுவீர்களாக.உங்களின் விதை ரூப ஸ்திதியால், மீண்டும் ஒரு முறை பக்தர்கள் அனைவருக்கும், காய்ந்து, வாடிப் போன இலைகளாக இருக்கும் ஆத்மாக்களுக்கும் சக்திகளைத் தானம் செய்யுங்கள். அவர்கள் சகல பேறுகளையும் அனுபவம் அடையச் செய்வதற்கான அடிப்படை, ‘சகல ஆசைகளின் அறிவே இல்லாதவராக இருத்தல்’ என்ற உங்களின் ஸ்திதியாகும். நீங்கள் சகல ஆசைகளின் அறிவே இல்லாதவராக இருக்கும்போது, உங்களால் அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆசைகளின் அறிவே இல்லாதவராக இருத்தல் என்றால், விதை ரூபத்தின் அதிகபட்ச சக்திவாய்ந்த ஸ்திதியாகும். எனவே, மாஸ்ரர் விதையானவராகி, பக்தர்கள் அழைப்பதைக் கேளுங்கள். அவர்கள் ஏதாவது பேறுகளைப் பெறச் செய்யுங்கள்.
சுலோகம்:
பரமாத்மாவின் பாதுகாப்புக் குடையின் கீழ் சதா இருத்தல் என்றால், உங்களின் அலௌகீக வாழ்க்கையின் பாதுகாப்பை அனுபவம் செய்வதாகும்.