23.01.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒவ்வோர் அடியிலும் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். இவை பிரம்மாவின் வழிகாட்டல்களா அல்லது சிவபாபாவினுடையவையா என்பதையிட்டுக் குழப்பம் அடையாதீர்கள்.கேள்வி:
நல்ல மூளையைக் கொண்ட குழந்தைகள் எந்த ஆழமான விடயங்களை இலகுவாகப் புரிந்துகொள்கிறார்கள்?பதில்:
பிரம்ம பாபாவா அல்லது சிவபாபாவா விளங்கப்படுத்துகிறார் என்பதை நல்ல மூளையைக் கொண்ட குழந்தைகள் இலகுவாகப் புரிந்துகொள்கிறார்கள். சிலர் இதனையிட்டுக் குழப்பம் அடைகிறார்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, பாபா, தாதா இருவரும் ஒருமித்தே இருக்கிறார்கள். ஆகவே குழப்பம் அடையாதீர்கள். அதை ஸ்ரீமத் எனக் கருதியவாறு தொடர்ந்தும் முன்னேறுங்கள். பிரம்ம பாபாவிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளும் எந்த வழிகாட்டல்களுக்கும் சிவபாபாவே பொறுப்பாவார்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே ஆன்மீகத் தந்தையை இனங்கண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். தந்தையாகிய கடவுள் எனவும், பரமாத்மா பரமதந்தை எனவும் அழைக்கப்படுகின்ற ஆன்மீகத் தந்தையை உலகில் உள்ள எந்த மனிதரும் அறியார். ஆன்மீகத் தந்தை வரும்பொழுது மட்டுமே, அவரால் இந்த இனங்காண்தலை ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியும். இந்த ஞானம் உலகின் ஆரம்பத்திலோ அல்லது உலகின் இறுதியிலோ இருப்பதில்லை. இது பழைய உலகின் இறுதியும், புதிய உலகின் ஆரம்பமுமான சங்கமம் என்ற ஞானம் இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சங்கம யுகத்தை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பதால், எவ்வாறு உங்களால் தந்தையை அறிந்திருக்க முடியும்? அவர்கள் கூறுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! எவ்வாறாயினும், தூய்மையாக்குபவர் யார் என்பதோ அல்லது அவர் எப்பொழுது வருகின்றார் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் எவ்வாறு இருக்கின்றேன் என்பதோ, நான் என்னவாக இருக்கிறேன் என்பதோ எவருக்கும் தெரியாது. நான் வந்து எனது அறிமுகத்தை கொடுக்கும்பொழுதே, என்னை அனைவரும் அறிந்துகொள்கிறார்கள். சங்கமயுகத்தில், ஒருமுறை மட்டுமே நான் எனது அறிமுகத்தையும், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய அறிமுகத்;தையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஒவ்வொரு சக்கரத்திலும் ஒருமுறையே நான் வருகிறேன். நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற அனைத்தும் பின்னர் மறைந்து விடுகிறது. சத்தியயுகத்தில் இருந்து கலியுக இறுதிவரை எந்த மனிதருக்குமே பரமதந்தையாகிய என்னையோ, பிரம்மா, விஷ்ணு, சங்கரரையோ தெரியாது. மனிதர்களே என்னைக் கூவியழைக்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் என்னைக் கூவியழைப்பதில்லை. மனிதர்களே துன்பத்தை அனுபவம்செய்யும்பொழுது, கூவி அழைக்கிறார்கள். சூட்சும உலகில் இந்தக் கேள்விக்கே இடமில்லை. ஆன்மீகத் தந்தை இங்கு வந்து, அமர்ந்திருந்து தனது ஆன்மீகக் குழந்தைகளுக்கு, அதாவது, ஆவிகளுக்கு விளங்கப்படுத்துகிறார். அச்சா, ஆன்மீகத் தந்தையின் பெயர் என்ன? ‘பாபா| என்று அழைக்கப்படுகின்ற ஒரேயொருவருக்கு நிச்சயமாக ஒரு பெயர் இருக்க வேண்டும். உண்மையாக, சிவன் என்ற ஒரு பெயரே நினைவுகூரப்படுகிறது. அவரின் பெயர் மிகவும் பிரபல்யமானது. ஆனால் மனிதர்கள் அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் சிவன் என்ற பெயரே இருக்கின்றபொழுதிலும் அவர்கள் தங்களது சொந்தப் புத்தியினால் லிங்க ரூபத்தை உருவாக்கி உள்ளார்கள். தந்தை கூறுகிறார்: நான் ஒருமுறை மாத்திரமே வருகிறேன். நான் வந்து உங்களுக்கு முக்தியும், ஜீவன்முக்தியும் எனும் ஆஸ்தியைக் கொடுக்கின்றேன். முக்தி தாமத்தையும், நிர்வாண தாமத்தையும் பற்றி மனிதர்கள் பேசினாலும், அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்குத் தந்தையையோ அல்லது தேவர்களையோ தெரியாது. தந்தை பாரதத்திற்கு வந்து, எவ்வாறு ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார் என எவரும் புரிந்துகொள்வதில்லை. இவ்விடயங்கள் எதுவுமே சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. எவ்வாறு பரமதந்தை வந்து தேவ தர்மத்தை ஸ்தாபிக்கின்றார்? மறைந்து விட்ட ஞானம் சத்திய யுகத்தில் தேவர்களுக்கு இருந்தது என்றல்ல் இல்லை! தேவர்களுக்கு இந்த ஞானம் இருந்திருந்தால், அப்பொழுதிருந்தே அது தொடர்ந்திருக்கும். இஸ்லாமியர்களினதும், பௌத்தர்களினதும் ஞானம் தொடர்கிறது. இந்த ஞானம் மறைந்து விடுகிறது என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்கின்றீர்கள். நான் வரும்பொழுது, தூய்மையற்றவர்களாகி, இராச்சியத்தை இழந்திருக்கும் ஆத்மாக்களைத் தூய்மையாக்குகிறேன். பாரதத்தில் உங்கள் இராச்சியம் இருந்தது, நீங்கள் அதனை எவ்வாறு இழந்தீர்கள்? இதுவும் எவருக்கும் தெரியாது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்கள் புத்தி மிகவும் சீரழிந்து விட்டது! நான் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து, பின்னர் உங்கள் வெகுமதியையும் கொடுக்கிறேன். பின்னர் நீங்கள் அனைவரும் அனைத்தையும் மறந்து விடுகின்றீர்கள்! எவ்வாறு தந்தை வந்து, அனைத்துக் கற்பித்தல்களையும் கொடுத்தார் என்ற அனைத்தையும் நீங்கள் மறந்து விடுகிறீர்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஞானக்கடலைக் கடைவதற்குக் குழந்தைகளாகிய உங்களுக்குப் பரந்த புத்தி இருப்பது அவசியம். தந்தை கூறுகிறார்: நீங்கள் சமயநூல்களைச் சத்திய, திரேதா யுகங்களில் கற்கவில்லை. பின்னரே கற்றீர்கள்; அவை அங்கே இருக்கவில்லை. நீங்கள் இந்த ஞானத்தை மறந்து விடுகிறீர்கள். எனவே கீதை, சமயநூல்கள் போன்றவை எங்கிருந்து வந்தன? கீதையைக் கேட்டு, ஓர் அந்தஸ்தைப் பெற்றவர்களே எதனையும் புரிந்துகொள்ளவில்லை. அப்படியாயின், மற்றவர்களால் எவ்வாறு எதனையும் புரிந்துகொள்ள முடியும்? தாங்கள் எவ்வாறு சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாறினார்கள் என்பது தேவர்களுக்கும் தெரியாது. அந்த முயற்சியைச் செய்கின்ற உங்கள் பாகம் முடிவுக்கு வந்த பின்னர், உங்கள் வெகுமதி ஆரம்பித்தது. இந்த ஞானம் எவ்வாறு அங்கே இருக்க முடியும்? தந்தை விளங்கப்படுத்துகிறார்: முன்னைய கல்பத்தில் நீங்கள் பெற்றதைப் போலவே, மிகச்சரியாக நீங்கள் மீண்டும் ஒருமுறை இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கப்பட்டு, பின்னர் வெகுமதி கொடுக்கப்படுகிறது. அங்கே சீரழிவு இருக்காது. ஆகவே ஞானத்துக்கான கேள்வி அங்கு எழ முடியாது. இந்த ஞானம் சற்கதி அடைவதற்கே ஆகும். இதைத் தந்தை ஒருவரே உங்களுக்குக் கொடுக்கிறார். 'சற்கதி", 'சீரழிவு" என்ற பதங்கள் இங்கேயே எழுகின்றன. பாரத மக்கள் மட்டுமே சற்கதியைப் பெறுகிறார்கள். தந்தையான சுவர்க்கக் கடவுளே சுவர்க்கத்தை உருவாக்கினார் என அவர்கள் நம்புகிறார்கள். எப்பொழுது அது உருவாக்கப்பட்டது என்பது பற்றி எதுவும் அவர்களுக்குத் தெரியாது. சமயநூல்களில் நூறாயிரக் கணக்கான வருடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நான் இந்த ஞானத்தை மீண்டும் ஒருமுறை உங்களுக்குக் கொடுக்கின்றேன். பின்னர் இந்த ஞானம் மறையும்பொழுது, பக்தி ஆரம்பமாகுகிறது. அரைக் கல்பத்திற்கு ஞானமும், அரைக் கல்பத்திற்குப் பக்தியும் இருக்கின்றன. இதனையும் எவரும் புரிந்துகொள்வதில்லை. சத்திய யுகத்திற்கு அவர்கள் நூறாயிரக் கணக்கான ஆண்டுகள் கால எல்லையைக் கொடுத்துள்ளார்கள். எனவே, அவர்களால் எவ்வாறு எதையும் புரிந்துகொள்ள முடியும்? 5000 வருடங்களுக்குரிய அனைத்தையும் கூட அவர்கள் மறந்து விட்டதால், எவ்வாறு அவர்களால் நூறாயிரம் வருடங்களுக்குரிய எதனையும் பற்றி அறிந்திருக்க முடியும்? அவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை. தந்தை இலகுவாக அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். ஒவ்வொரு சக்கரத்தினதும் கால எல்லை 5000 வருடங்கள், அதில் 4 யுகங்கள் மாத்திரமே உள்ளன. 4 யுகங்கள் ஒவ்வொன்றும் சமமான 1250 வருடங்கள் கால எல்லையைக் கொண்டிருக்கின்றன. இது பிராமணர்களின் சிறிய யுகமாகும். 4 யுகங்களுடனும் ஒப்பிடும்பொழுது இந்த யுகம் மிகச் சிறியதாகும். தந்தை பல்வேறுபட்ட வழிகளில் உங்களுக்குப் புதிய கருத்துக்களை விளங்கப்படுத்துகிறார். எனவே நீங்கள் அவற்றை கிரகிக்க வேண்டும்! நீங்கள் முயற்சியும் செய்ய வேண்டும்! அவர் உங்களுக்கு எதையாவது விளங்கப்படுத்துகின்ற பாகம் நாடகத்திற்கேற்ப தொடர்கின்றது. நான் உங்களுக்கு இன்று எதைக் கூற வேண்டியுள்ளதோ, அவற்றையே நான் உங்களுக்குக் கூறுகிறேன்; அது தொடர்ந்தும் வெளிவருகிறது. நீங்கள் தொடர்ந்தும் அதனைச் செவிமடுக்கிறீர்கள். நீங்கள் அதனைக் கிரகிப்பதுடன், மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்ட வேண்டும். நான் அதனைக் கிரகிக்க வேண்டியதில்லை. நான் உங்களுக்கு அதனைக் கூறி, உங்களைக் கிரகிக்கத் தூண்டுகிறேன். தூய்மையற்றவர்களைத் தூய்மைப்படுத்துவது எனது ஆத்மாவின் பாகமாகும். முன்னைய கல்பத்தில் நான் விளங்கப்படுத்தியவை தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. இந்த ஆத்மா ஞானக்கடலைக் கடைந்தாலும், நான் உங்களுக்கு என்ன கூறப் போகிறேன் என்பது முற்கூட்டியே எனக்குத் தெரியாது. இவர் அனைத்தையும் கடைந்து உங்களுக்குக் கூறுகிறாரா அல்லது பாபா கூறுகிறாரா என்பது ஒரு மிகவும் ஆழமான விடயமாகும். இதற்கு மிக நல்ல மூளை தேவைப்படுகிறது. சேவையிலே மும்முரமாக ஈடுபடுபவர்கள் சதா ஞானக்கடலைக் கடைந்து கொண்டிருப்பார்கள். உண்மையில், குமாரிகள் பந்தனங்களில் இருந்து விடுபட்டவர்கள். அவர்களுக்குப் பந்தனங்கள் இல்லாததால், அவர்கள் இந்த ஆன்மீகக் கல்வியில் மும்முரமாகலாம். குமாரிகளால் இந்த ஞானத்தை மிகவும் நன்றாகப் பெற முடியும். அவர்கள் தாமும் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். அவர்கள் ஒரு வருமானத்தை ஈட்ட வேண்டிய தேவையில்லை. குமாரிகள் இந்த ஞானத்தை மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ளும்பொழுது, அவர்களால் மிகவும் சிறந்தவர்களாக ஆக முடியும். அவர்கள் விவேகமானவர்களாக இருந்தால் இந்த வருமானத்தைச் சம்பாதிப்பதில் மும்முரமாகுவார்கள். சிலர் லௌகீகக் கல்வியைப் பெரும் ஆர்வத்துடன் கற்கின்றார்கள். அக்கல்வியில் எந்தவொரு நன்மையும் இல்லை என விளங்கப்படுத்தப்படுகிறது. இங்கும் நீங்கள் கற்று, உங்களைச் சேவை செய்வதில் மும்முரமாக்க முடியும். அக்கல்விகள் பயனற்றவை. அவர்கள் கல்வியைக் கற்றுப் பின்னர் குடும்பப் பெண்களாகி, தங்கள் குடும்ப நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். குமாரிகள் இந்த ஞானத்தில் தங்களை ஈடுபடுத்த வேண்டும். நீங்கள் ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, பின்னர் இவை அனைத்தையும் கிரகிப்பதால், உங்களை இதில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். மம்மா ஆரம்பித்திலேயே வந்து இக்கல்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பல குமாரிகள் இப்பொழுது மறைந்து விட்டார்கள். குமாரிகளுக்கு நல்லதொரு வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றும்பொழுது, மிகவும் முதற் தரமானவர்களாக முடியும். இது ஸ்ரீமத்தா அல்லது பிரம்மாவின் வழிகாட்டல்களா என அதிசயப்படுவதால், பலர் குழப்பம் அடைகின்றார்கள். எவ்வாறாயினும் இது பாபாவின் இரதமாகும். இவர் ஏதும் தவறு செய்தாலும், நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால் அந்த ஒரேயொருவரே அனைத்தையும் சரிப்படுத்தி விடுவார். இவரினூடாக மாத்திரமே நீங்கள் ஸ்ரீமத்தைப் பெற முடியும். நீங்கள் ஸ்ரீமத்தை பெற்றுக் கொள்கிறீர்கள் என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருங்கள். அதன் பின்னர் என்ன நடந்தாலும், அதற்கு அந்த ஒரேயொருவரே பொறுப்பானவர். இவர் மூலம் ஏதேனும் நடந்து விட்டால், பாபா கூறுகிறார்: அதற்கு நானே பொறுப்பாளி. இந்த இரகசியம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரால் இவரையும் சீர்ப்படுத்த முடியும். எவ்வாறாயினும் அவரே தந்தை, அல்லவா! பாபா, தாதா இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். ஆகையாலேயே 'இவற்றை சிவபாபா கூறுகிறாரா அல்லது பிரம்மா கூறுகிறாரா என்பது எனக்குத் தெரியாது" என நீங்கள் குழப்பமடைந்து கூறுகிறீர்கள். சிவபாபாவே வழிகாட்டல்களைக் கொடுக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால், நீங்கள் ஒருபொழுதுமே தளம்பல் அடைய மாட்டீர்கள். சிவபாபா விளங்கப்படுத்துகின்ற அனைத்தும் சரியானதே. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நீங்களே எனது தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவீர்கள். ஆகையாலே நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும், இல்லையா? அவர் உங்களுக்கு எதைக் கூறினாலும் நீங்கள் அதைப் பின்பற்ற வேண்டும். சிவபாபாவே உங்களுடன் பேசுகிறார் என்றே எப்பொழுதும் கருதுங்கள். அவரே உபகாரி. இவரின் பொறுப்பு அவரில் தங்கியுள்ளது. இவரே அவரின் இரதம். 'இது பிரம்மாவின் ஆலோசனையா அல்லது சிவபாபாவின் ஆலோசனையா என்பது எனக்குத் தெரியாது" என நீங்கள் ஏன் குழப்பமடைந்து கூறுகிறீர்கள்? சிவபாபாவே அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார் என்பதை நீங்கள் ஏன் புரிந்துகொள்வதில்லை? ஸ்ரீமத் உங்களுக்கு கூறுவதைத் தொடர்ந்தும் செய்யுங்கள். நீங்கள் ஏன் மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுகிறீர்கள்? நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றும்பொழுது, ஒருபொழுதும் தூங்கி வழிய மாட்டீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் குழப்பமடைவதால், அதனை உங்களால் பின்பற்ற முடியாதுள்ளது. பாபா கூறுகின்றார்: ஸ்ரீமத்தில் நம்பிக்கை வைத்திருங்கள், அப்பொழுது நான் பொறுப்பாவேன். உங்களுக்கு நம்பிக்கை இல்லாது விட்டால், நான் பொறுப்பாளியல்ல. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை எப்பொழுதும் புரிந்துகொள்ளுங்கள். 'நீங்கள் எங்களை நேசித்தாலும் அடித்தாலும்” எனப் பாடப்படும்பொழுது, அது அந்த ஒரேயொருவரையிட்டே பாடப்படுகின்றது. இதில் எவரையும் உதைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. எவ்வாறாயினும், நம்பிக்கை வைப்பது எவருக்கும் சிரமமாகவே உள்ளது. நீங்கள் முழு நம்பிக்கை உடையவர்களாக இருந்திருந்தால், கர்மாதீத நிலையை அடைந்திருப்பீர்கள். எவ்வாறாயினும், அந்த ஸ்திதியை அடைவதற்குக் காலம் தேவைப்படுகிறது. இறுதியில் அதுவே உங்கள் ஸ்திதியாகும். இவ்விடயம் குறித்து உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருத்தல் அவசியம். சிவபாபாவால் என்றுமே தவறு செய்ய முடியாது. இவர் தவறு செய்யலாம். நாங்கள் இருவரும் இணைந்தே இருக்கிறோம். எவ்வாறாயினும், சிவபாபாவே விளங்கப்படுத்துகிறார், அவர் கூறுபவற்றை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருத்தல் வேண்டும். எனவே அவை பாபாவின் ஸ்ரீமத் எனக் கருதியவாறு, தொடர்ந்தும் முன்னேறுங்கள், அப்பொழுது தவறான ஏதும் நடந்தாலும் அவை சரிப்படுத்தப்படும். சில சந்தர்ப்பங்களில் தவறான புரிந்துணர்வு ஏற்படுகிறது. சிவபாபாவினதும், பிரம்மபாபாவினதும் முரளிகள் மிகத் தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். பாபா கூறியிருந்தாலோ அல்லது இவர் கூறியிருந்தாலோ பரவாயில்லை. பிரம்மா பேசுவதே இல்லை என்பதல்ல. எவ்வாறாயினும் பாபாவே அதனை விளங்கப்படுத்தினார். பிரம்மாவிற்கு எதுவும் தெரியாது, சிவபாபாவே அனைத்தையும் கூறுகின்றார் எனப் புரிந்துகொள்ளுங்கள். 'நான் சிவபாபாவின் இரதத்தை நீராட்டுகிறேன். நான் சிவபாபாவின் சமையலறையில் சேவை செய்கிறேன்". இதை மாத்திரம் நீங்கள் நினைவுசெய்தாலும் அதுவும் மிகவும் நல்லது. சிவபாபாவின் நினைவில் நிலைத்திருக்கும்பொழுது அனைத்தையும் செய்தால், நீங்கள் பலரை விட முன்னேறிச் செல்ல முடியும். சிவபாபாவின் நினைவே முக்கிய விடயம்: 'அல்பாவும்", 'பீற்றாவும்", ஏனைய அனைத்தும் விபரங்களாகும். தந்தை விளங்கப்படுத்துபவற்றில் கவனம் செலுத்துங்கள். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவரும், ஞானக்கடலும் ஆவார். அவரே தூய்மையற்ற சூத்திரர்களைப் பிராமணர்களாக மாற்றுகின்றார். அவர் பிராமணர்களை மாத்திரமே தூய்மையாக்குகிறார், அவர் சூத்திரர்களைத் தூய்மையாக்குவதில்லை. இவ்விடயங்கள் எதுவும் பாகவதம்; போன்றவற்றில் குறிப்பிடப்படவில்லை. இவற்றிலுள்ள சில வார்த்தைகள், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. இராதையும், கிருஷ்ணரும், இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகின்றார்கள் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வதில்லை. இதைப் பற்றி மக்கள் குழப்பமடைகிறார்கள். தேவர்கள் சூரிய வம்சத்தினரும், சந்திர வம்சத்தினரும் ஆவார்கள். இலக்ஷ்மி, நாராயணனுக்கும் இராமர் சீதைக்கும் வம்சங்கள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: ஓ பாரத மக்களே, இனிய குழந்தைகளே, நினைவுகூருங்கள்! இது நூறாயிரம் வருடங்களுக்கான விடயம் அல்ல. உங்களுக்கு இராச்சியம் கொடுக்கப்பட்டமை நேற்றைய விடயமே. உங்களுக்கு அபரிமிதமான செல்வமும், செழிப்பும் கொடுக்கப்பட்டன. தந்தை உங்களை முழு உலகிற்கும் அதிபதிகள் ஆக்கினார். அந்நேரத்தில் வேறு எந்த நாடுகளும் இருக்கவில்லை. அதன்பின்னர் உங்களுக்கு என்ன நடந்தது? கல்விமான்கள் அல்லது பண்டிதர்கள் போன்ற எவரும் இவ் விடயங்களைப் பற்றி அறியார். தந்தை மாத்திரமே கூறுகின்றார்: ஓ பாரத மக்களே, நான் உங்கள் இராச்சிய பாக்கியத்தை உங்களுக்குக் கொடுத்தேன். நீங்கள் மற்றவர்களுக்குக் கூறுகிறீர்கள்: சிவபாபா கூறுகின்றார்: நான் உங்களுக்கு அதிகளவு செல்வத்தை கொடுத்தேன்! அவை அனைத்தையும் நீங்கள் எங்கே இழந்தீர்கள்? தந்தையின் ஆஸ்தி மிகவும் மகத்தானது.! தந்தையே உங்களை வினவுகின்றார்! உங்கள் தந்தை உங்களை விட்டுப் பிரிந்த பின்னர் (இறந்தால்) உங்கள் நண்பர்கள், உறவினர்கள் உங்களை வினவுகின்றார்கள்: தந்தை விட்டுச் சென்ற செல்வம் அனைத்;தையும் என்ன செய்தீர்கள்;? இவரே எல்லையற்ற தந்தை. தந்தை உங்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்கள் ஆக்கினார். அவர் உங்களுக்கு அத்தகையதோர் இராச்சியத்தைக் கொடுத்தார்! ஆகவே அந்தச் செல்வம் அனைத்தும் எங்கே சென்றன? அவருக்கு எவ்வாறு பதில் கூறுவீPர்கள்? வேறெவராலும் எதையும் புரிந்துகொள்ள முடியாது. பாபா உங்களிடம் வினவுவது சரியே என்பது உங்களுக்குப் புரிகிறது. எவ்வாறு நீங்கள் இந்தளவிற்கு ஏழ்மை நிலையை அடைந்தீர்கள்? ஆரம்பத்தில் அனைத்தும் சதோபிரதானாக இருந்து, பின்னர் கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்து வந்தன. எனவே ஏனைய அனைத்தும் கூட தொடர்ந்தும் குறைவடைகின்றது. சத்திய யுகத்தில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள்; அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. 'இலக்ஷ்மி, நாராயணனின்”; பெயர்கள் 'இராதை, கிருஷ்ணரின்" பெயர்களை விடவும் அதிகளவு பிரபல்யமானவை. இலக்ஷ்மி நாராயணன் பற்றிய அவதூறு எதுவும் இல்லை. ஏனைய அனைவரையும் பற்றிய அவதூறு எழுதப்பட்டுள்ளது. இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தில், எந்த அசுரர்களும் சித்தரிக்கப்படவில்லை. ஆகவே, இவ் விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை! பாபா உங்கள் புத்தியை ஞானச் செல்வத்தால் நிரப்புகின்றார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, அந்த மாயையை இட்டு எச்சரிக்கையாக இருங்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. விவேகிகளாகி, உண்மையான சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரேயொரு தந்தையே பொறுப்பாளி. எனவே ஸ்ரீமத் பற்றிச் சந்தேகங்கள் கொள்ளாதீர்கள். அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருங்கள்.
2. ஞானக் கடலைக் கடைந்து, தந்தை கூறுகின்ற அனைத்திலும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஞானத்தைக் கிரகித்து, பின்னர் அதனை மற்றவர்களுக்கும் கூறுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருந்து, உங்கள் நடைமுறை உதாரணத்தின் மூலம் தந்தையை வெளிப்படுத்துவீர்களாக.விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கு, பல்வகையான அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், உங்கள் நடைமுறை உதாரணமே அதிமேன்மையான அத்தாட்சியாகும். ஒரு நடைமுறை உதாரணம் என்றால், நீங்கள் யார், நீங்கள் யாருக்குரியவர்கள் எனும் விழிப்புணர்வில் நிலைத்திருப்பது என்று அர்த்தமாகும். தங்களுடைய உண்மையான, அநாதியான ரூபங்களில் ஸ்திரமாக இருக்கின்ற குழந்தைகளே, தந்தையை வெளிப்படுத்துவதற்குக் கருவிகள் ஆகுகின்றார்கள். அவர்களின் பாக்கியத்தைப் பிறர் பார்க்கும்பொழுது, அவர்களுடைய பாக்கியத்தை உருவாக்கிய ஒரேயொருவரை இயல்பாகவே நினைவுசெய்கின்றார்கள்.சுலோகம்:
தங்களுடைய கருணைப் பார்வையினால் ஒவ்வோர் ஆத்மாவையும் மாற்றமடையச் செய்பவர்களே, புண்ணியாத்மாக்கள் ஆவார்கள்.