24.01.21 Avyakt Bapdada Tamil Lanka Murli 17.10.87 Om Shanti Madhuban
பிராமண வாழ்க்கையின் அலங்காரம் தூய்மையே.
இன்று, பாப்தாதா உலகெங்கும் உள்ள, குறிப்பாகப் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகப்போகும் தனது குழந்தைகளைப் பார்க்கிறார். முழு உலகிலும், வெகு சிலரே விலைமதிப்பற்ற, பூஜிக்கத்தகுதிவாய்ந்த இரத்தினங்கள் ஆகுகிறார்கள். பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் மட்டுமே, உலகின் விசேட ஒளிகள் ஆகுகிறார்கள். எவ்வாறு ஒரு சரீரத்தில் ஒளி (உயிர்) இல்லாதபோது, உலகமே இல்லையோ, அவ்வாறே, இந்த உலகிலும், மேன்மையான பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களான, உலகின் ஒளிகளான நீங்கள் இல்லாவிட்டால், உலகத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் இருக்காது. முதலாவது யுகமும் சதோபிரதான் யுகமுமான சத்தியயுகம், புதிய உலகம், விசேட ஆத்மாக்களான உங்களுடனேயே ஆரம்பமாகிறது. பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களான நீங்கள் புதிய உலகின் ஆதாரமூர்த்திகளாக இருக்கிறீர்கள். எனவே, ஆத்மாக்களான உங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் உள்ளது. பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களான நீங்கள் உலகின் புதிய ஒளிகள் ஆவீர்கள். ஏறுகின்ற உங்களின் ஸ்திதியானது, உலகை அதன் மேன்மையான ஸ்திதிக்கு எடுத்துச் செல்வதற்குக் கருவி ஆகுகின்றது. நீங்கள் கீழே விழுகின்ற ஸ்திதியை அடையும்போது, உலகமும் கீழே விழுகின்ற ஸ்திதியை அடைகிறது. நீங்கள் மாறும்போது, உலகமும் மாறுகிறது. நீங்கள் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மகாத்மாக்கள் ஆவீர்கள்.
இன்று, பாப்தாதா குழந்தைகள் அனைவரையும் பார்த்தார். ஒரு பிராமணர் ஆகுவதென்றால், பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகுதல் என்று அர்த்தம். ஏனென்றால், பிராமணர்கள் தேவர்கள் ஆகுகிறார்கள். தேவர்கள் என்றால் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் என்று அர்த்தம். தேவர்கள் அனைவரும் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள். எவ்வாறாயினும், அவர்கள் நிச்சயமாக வரிசைக்கிரமமானவர்கள். சில தேவர்கள் நாளாந்தம், சரியான முறையில் பூஜிக்கப்படுகிறார்கள். சில தேவர்கள் அவ்வாறு பூஜிக்கப்படுவதில்லை. சில தேவர்களின் ஒவ்வொரு செயலும் பூஜிக்கப்படுகின்றன. ஆனால் ஏனையோருக்கோ, அவர்களின் சகல செயல்களும் பூஜிக்கப்படுவதில்லை. சிலர் ஒவ்வொரு நாளும் சரியான முறையில் அலங்கரிக்கப்படுகிறார்கள். ஆனால் ஏனையோரோ, தினமும் அலங்கரிக்கப்படுவதில்லை. அவர்கள் மேலோட்டமாகவே அலங்கரிக்கப்படுகிறார்கள். சரியான வழிமுறையுடன் அலங்கரிக்கப்படுவதில்லை. சில தேவர்களின் முன்னால், எல்லா வேளையும் பக்திப் பாடல்கள் பாடப்படுகின்றன. ஆனால் ஏனையோரின் முன்னால், இந்தப் பாடல்கள் சிலவேளைகளில் மட்டுமே பாடப்படுகின்றன. இவை அனைத்துக்கும் என்ன காரணம்? நீங்கள் அனைவரும் பிராமணர்கள் என்றே அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் அனைவரும் ஞானத்தையும் யோகத்தையும் கற்கிறீர்கள். அப்படியிருந்தும், ஏனிந்த வேறுபாடு? தாரணையில் வேறுபாடு காணப்படுகிறது. எவ்வாறாயினும், எந்தக் குறிப்பிட்ட தாரணையின் அடிப்படையில் அது வரிசைக்கிரமம் ஆகுகிறது என உங்களுக்குத் தெரியுமா?
பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகுவதற்கான விசேடமான அடிப்படை, தூய்மையே. எந்தளவிற்கு நீங்கள் சகல வகையான தூய்மையையும் கடைப்பிடிக்கிறீர்களோ, அந்தளவிற்கு ஒவ்வொரு வழிமுறையிலும் நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகுவீர்கள். இலகுவாக சதா சரியான வழிமுறையுடன் தமது ஆதியான, அநாதியான நற்குணமாகத் தூய்மையைக் கிரகிப்பவர்கள், சரியான வழிமுறையுடன் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகிறார்கள். தூய்மையின் சகல வகைகளும் எவை? தமது தொடர்புகளிலும் உறவுமுறைகளிலும் உள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும், அவர்கள் ஞானத்துடன் இருந்தாலென்ன அல்லது ஞானம் இல்லாமல் இருந்தாலென்ன, தமது ஒவ்வோர் எண்ணம், வார்த்தை, செயல்களால் சதா தூய மனோபாவத்துடனும் பார்வையுடனும் அதிர்வலைகளுடனும் இலகுவாகவும் இயல்பாகவும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றும் ஆத்மாக்கள், சகல வகையான தூய்மையையும் கொண்டிருப்பவர்கள் எனப்படுகிறார்கள். உங்களின் கனவுகளிலேனும், உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் சகல வகையான தூய்மையைக் கிரகிப்பதில் எந்தவிதக் குறைவும் இருக்கக்கூடாது. உதாரணமாக, உங்களின் கனவுகளிலேனும் பிரம்மச்சரியம் மீறப்பட்டால், அல்லது, பொறாமையில் அல்லது கோபத்தின் ஆதிக்கத்துடன் நீங்கள் செயல்களைச் செய்தால் அல்லது வேறோர் ஆத்மாவுடன் பேசினால், அந்த நபருடனான உங்களின் தொடர்பாடல் கோபத்தின் ஒரு சுவட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அதுவும் தூய்மைக்கான சத்தியத்தை முறிப்பதாகவே கருதப்படும். இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: கனவுகளால்கூட இத்தகைய பாதிப்பு ஏற்படுமாயின், பௌதீகமாகச் செய்யப்படும் செயல்கள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? இதனாலேயே, உடைந்த ஒரு விக்கிரகம் ஒருபோதும் பூஜிக்கப்படுவதில்லை. உடைந்த சிலைகளை ஆலயங்களில் வைத்திருக்க மாட்டார்கள். அவை இன்று அருங்காட்சியகங்களிலேயே உள்ளன. பக்தர்கள் அங்கு செல்வதில்லை. இவை மிகப் பழைய சிலைகள் என்ற புகழ் மட்டுமே அவற்றுக்கு உள்ளன. அவ்வளவுதான்! அவர்கள் பௌதீகமான அவயவங்கள் உடைந்தால் அதை உடைந்து விட்டதாகவே கருதுகிறார்கள். ஆனால், உண்மையில், எந்த முறையிலாவது தூய்மையைக் கடைப்பிடிப்பதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அந்த ஆத்மா பூஜிக்கத்தகுதி வாய்ந்த அந்தஸ்து அடைவதில் இருந்து தடுக்கப்படுகிறார். அதேபோல், நான்கு வகையான தூய்மைகளும் சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட்டால், அப்போது வழிபாடும் சரியான முறையில் இருக்கும்.
உங்களின் மனதில், வார்த்தைகளில், செயல்களில் - உறவுமுறைகளும் தொடர்புகளும் செயல்களில் அடங்கும் - கனவுகளில் தூய்மை இருந்தால், அது சம்பூரணமான தூய்மை எனப்படுகிறது. கவனக்குறைவினால், சில குழந்தைகள், ‘எனது நோக்கம் மிக நன்றாகவே இருந்தது, ஆனால் அந்த வார்த்தைகள் வெளிவந்து விட்டன’ அல்லது, ‘அது எனது இலக்கு இல்லை, ஆனால் அது நிகழ்ந்து விட்டது’ அல்லது, ‘நான் அதை மட்டுமே கூறினேன் அல்லது அதை ஒரு நகைச்சுவையாகவே செய்தேன்’ எனக் கூறி, வயதானவர்களுடனோ அல்லது இளையவர்களுடனோ முறையற்ற ஒரு விடயத்தை சரியெனக் கூற முயற்சி செய்வார்கள். இதுவும் சமாளிப்பதே ஆகும். இதனாலேயே, உங்களின் வழிபாடும் பெயரளவிலேயே உள்ளது. இந்தக் கவனக்குறைவே, முழுமையாக பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருக்கும் ஸ்திதியில் உங்களை வரிசைக்கிரமம் ஆக்குகிறது. இதுவும் தூய்மையின்மையின் கணக்கில் சேமிக்கப்படுகிறது. பூஜிக்கத்தகுதிவாய்ந்த தூய ஆத்மாக்களின் அடையாளம், அவர்களின் நான்கு வகையான தூய்மையும் இயல்பானதாகவும் இலகுவானதாகவும் நிலையானதாகவும் இருக்கும் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், தூய்மை என்ற தாரணை இயல்பாகவே அவர்களின் எண்ணங்களையும் வார்த்தைகளையும் செயல்களையும் கனவுகளையும் மிகச்சரியானது ஆக்குகிறது. முதலில், மிகச்சரியானது என்றால், யோகியுக்தாக இருத்தல். இரண்டாவதாக, மிகச்சரியானது என்றால் ஒவ்வோர் எண்ணத்திற்கும் அர்த்தம் இருக்க வேண்டும். அது அர்த்தமற்றதாக இருக்க மாட்டாது. ‘நான் வெறுமனே சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறினேன், அது வெளியே வந்துவிட்டது, நான் அதை வெறுமனே செய்தேன், அல்லது அது நிகழ்ந்துவிட்டது’ என நீங்கள் சொல்ல மாட்டீர்கள். இத்தகைய தூய ஆத்மாக்கள் ஒவ்வொரு செயலிலும் அதாவது, தமது முழு நாளின் செயல்பாடுகளில் மிகச்சரியாகவும் யுக்தியுக்தாகவும் இருப்பார்கள். இதனாலேயே, இத்தகைய ஆத்மாக்களின் ஒவ்வொரு செயலும் பூஜிக்கப்படுகிறது. அதாவது, அவர்களின் முழு நாளின் செயல்பாடுகளும் பூஜிக்கப்படுகின்றன. அவர்கள் விழித்தெழுந்த நேரத்தில் இருந்து நித்திரைக்குச் செல்லும் வரை அவர்களின் வெவ்வேறு செயல்பாடுகள் அனைத்தும் காணற்கரியதாகவே இருக்கும்.
எந்தவொரு செயலும் மிகச்சரியாக இல்லாவிட்டால் அல்லது பிராமண வாழ்க்கைக்கு உருவாக்கப்பட்ட நேர அட்டவணைக்கேற்ப சதா இல்லாவிட்டால், அந்த வேறுபாட்டினால், நீங்கள் பூஜிக்கப்படும் முறையிலும் ஒரு வேறுபாடு காணப்படும். உதாரணமாக, ஒருவருக்கு அமிர்தவேளையில் எழும்புவதில் ஒழுங்குமுறை இல்லாவிட்டால், அவர்களின் வழிபாட்டிலும், அவர்களின் பக்தர்கள் அவர்களைப் பூஜித்தல் என்று வரும்போது தளம்பல் அடைவார்கள். அதாவது, பக்தர்களும் சரியான நேரத்தில் எழுந்து அவர்களைப் பூஜிக்க மாட்டார்கள். தமக்கு நேரம் இருக்கும்போது மட்டுமே அவர்கள் வழிபடுவார்கள். அல்லது, அமிர்த வேளையில் விழித்த நிலையை அவர்கள் அனுபவம் செய்யாவிட்டால், அவர்கள் சிலவேளைகளில் கட்டாயத்தின் பேரில் அமர்ந்திருந்தால், சிலவேளைகளில் சோம்பேறியாகவும் சிலவேளைகளில் விழிப்பாகவும் இருந்தால், அவர்களின் பக்தர்களும் கட்டாயத்தின் பேரில் அல்லது சோம்பேறித்தனத்துடனேயே அவர்களை வழிபடுவார்கள். அவர்கள் சரியான முறையில் அவர்களை வழிபட மாட்டார்கள். இந்த முறையில், நேர அட்டவணையின் ஒவ்வொரு செயலும் அவர்கள் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதைப் பாதிக்கும். சரியான முறையில் செயல்படாமல் இருத்தல், நேர அட்டவணையின்படி உள்ள எந்தவொரு செயலிலும் தளம்பல் அடைதல் என்பவை தூய்மையின்மையின் சுவடாகவே கருதப்படும். ஏனென்றால், சோம்பேறித்தனமும் கவனக்குறைவும் விகாரங்களே ஆகும். மிகச்சரியாக இல்லாத எந்தவொரு செயலும் ஒரு விகாரமே. ஆகவே, அது தூய்மையின்மையின் ஒரு சுவடல்லவா? இந்தக் காரணத்தால், பூஜிக்கத்தகுதிவாய்ந்த அந்தஸ்தைப் பெறுவதில் நீங்கள் வரிசைக்கிரமமானவர் ஆகுகிறீர்கள். எனவே, அத்திவாரம் என்ன? தூய்மை.
தூய்மையின் தாரணை மிகவும் ஆழமானது. செயல்களின் வழிகளும் முறைகளும் தூய்மையை அடிப்படையாகக் கொண்டவை. தூய்மை என்பது வெளிப்படையான விடயங்கள் மட்டுமல்ல. பிரம்மச்சாரியாக இருத்தல் அல்லது பற்றில் இருந்து விடுபட்டிருத்தலைத் தூய்மை என்று அழைக்க முடியாது. தூய்மை பிராமண வாழ்க்கையின் அலங்காரமாகும். உங்களின் முகத்தில் இருந்தும் உங்களின் நடவடிக்கைகளில் இருந்தும் ஒவ்வொரு கணமும் தூய்மையின் அலங்காரத்தை மற்றவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். தூய்மையின் அலங்காரம், எப்போதும் நடைமுறையில் உங்களின் கண்களில், உங்களின் வாயில், கைகளில், பாதங்களில் புலப்பட வேண்டும். உங்களின் முகத்தைப் பார்க்கும் எவரும் உங்களின் முகச்சாயல்களில் தூய்மையை அனுபவம் செய்ய வேண்டும். அவர்கள் ஏனைய வகையான முகச்சாயல்களைப் பற்றிப் பேசுவதைப் போன்று, தூய்மை உங்களின் முகபாவனைகளில் தென்படுகிறது, உங்களின் கண்களில் தூய்மையின் பிரகாசம் தெரிகிறது, உங்களின் உதடுகளில் தூய்மையின் புன்னகை தெரிகிறது என அவர்கள் கூற வேண்டும். அவர்கள் வேறு எதையும் பார்க்கக்கூடாது. இதுவே தூய்மையின் அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்ட ரூபம் என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்குப் புரிகிறதா? தூய்மையின் மேலும் அதிகமான ஆழம் உள்ளது. இதைப் பற்றி நீங்கள் பின்னர் கேட்பீர்கள். கர்ம தத்துவம் எவ்வாறு ஆழமானதோ, அதேபோல், தூய்மையின் வரைவிலக்கணமும் மிகவும் ஆழமானது. அத்துடன் தூய்மையே அத்திவாரமும் ஆகும். அச்சா.
இன்று, குஜராத்தைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளார்கள். குஜராத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இலேசான தன்மையுடன் ஆடிப் பாடுவார்கள். பௌதீகமாக அவர்கள் எத்தனை நிறையுடையவர்களாக இருந்தாலும், அவர்கள் இலேசாகி, நடனம் ஆடுவார்கள். குஜராத்தின் சிறப்பியல்பே, அவர்கள் எப்போதும் இலேசாக இருப்பார்கள், அவர்கள் எப்போதும் சந்தோஷத்துடன் நடனம் ஆடுவார்கள். அத்துடன் தொடர்ந்து தந்தையினதும் தமது பேறுகளினதும் பாடல்களைப் பாடுவார்கள். குழந்தைப்பருவத்தில் இருந்தே, அவர்கள் மிக நன்றாக ஆடிப்பாடுவார்கள். அவர்கள் பிராமண வாழ்க்கையில் என்ன செய்கிறார்கள்? பிராமண வாழ்க்கை என்றால் குதூகலமான வாழ்க்கை என்று அர்த்தம். நீங்கள் கர்பா- ராஸ் (ஒரு வட்டத்தில் ஒற்றுமையாக ஆடுதல்) ஆடும்போது, மிகவும் இரசிக்கிறீர்கள், அல்லவா? நீங்களே அதை இரசித்து ஆடாவிட்டால், உங்களால் நீண்ட நேரம் அதைச் செய்ய முடியாது. நீங்கள் இரசிப்பதுடன், போதையுடன் இருக்கும்போது, களைப்படைய மாட்டீர்கள். நீங்கள் களைப்பற்றவர் ஆகுவீர்கள். எனவே, பிராமண வாழ்க்கை என்றால், சதா குதூகலத்தில் இருக்கும் வாழ்க்கை ஆகும். மற்றையது, பௌதீகமான களிப்பு. ஆனால் பிராமண வாழ்க்கை என்பது மனதின் களி;ப்பாகும். மனம் எப்போதும் தொடர்ந்து களிப்புடன் ஆடிப்பாட வேண்டும். அந்த மக்களுக்கோ இலேசாகி, ஆடிப் பாடும் பயிற்சி உள்ளது. அதனால் அவர்கள் தமது பிராமண வாழ்க்கையில் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பதைச் சிரமமாக உணர்வதில்லை. எனவே, குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் சதா இலேசாக இருக்கும் பயிற்சியைச் செய்பவர்கள், எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்;டவர்கள் என்று அர்த்தம். எனவே, குஜராத் முழுவதும் இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளார்கள். நீங்கள் முரளியினூடாகவும் ஆசீர்வாதத்தைப் பெற்றீர்கள், அல்லவா?
உங்களின் உலகில் அனைத்தும் கொள்ளளவிற்கும் நேரத்திற்கும் ஏற்பவே நடைபெறும் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. கொள்ளளவிற்கேற்பவே பெறுபேறும் இருக்கும். சூட்சும வதனத்தில், ‘எதுவும் கொள்ளளவிற்கேற்ப’ என்ற மொழியே கிடையாது. இங்கு, பகல், இரவு என்ற இரண்டும் கருத்தில் கொள்ளப்படும். அங்கு, பகலும் இல்லை. இரவும் இல்லை. அங்கு சூரியன் உதிப்பதும் இல்லை. சந்திரனும் இல்லை. அது இரண்டுக்கும் அப்பாற்பட்டது. நீங்கள் அங்கு போக வேண்டும், இல்லையா? உங்களின் இதயபூர்வமான சம்பாஷணையில், எப்போதுவரைக்கும்? எனக் குழந்தைகளான நீங்கள் கேட்கிறீர்கள். பாப்தாதா பதில் அளித்தார்: குழந்தைகளான நீங்கள் இப்போது தயார் எனக் கூறினால், பாப்தாதாவாலும் இப்போதே செய்ய முடியும். ‘எப்போது?’ என்ற கேள்வி அங்கு இருக்காது. முழு மாலையும் இன்னமும் தயார் ஆகாதவரைக்கும் மட்டுமே ‘எப்போது?’ என்ற கேள்வி ஏற்படும். இப்போது, நீங்கள் பெயர்களை எடுத்தாலும், 108 இற்கும், ஒருவரின் பெயரை உள்ளடக்குவதா இல்லையா என நீங்கள் சிந்திக்க வேண்டியிருக்கும். இப்போது, 108 மணிமாலையில், அனைவரும் அதே 108 பெயர்களைக் கொடுக்க வேண்டும். எவ்வாறாயினும், ஒரு வேறுபாடு காணப்படும். பாப்தாதாவால் இப்போதும் கைதட்ட முடியும். பஞ்சபூதங்களுடனும் மக்களுடனும் அனைத்தும் இப்போதே உடனடியாக நிகழ ஆரம்பித்து விடும். அதற்கு நீண்ட நேரம் எடுக்காது. எவ்வாறாயினும், தந்தை குழந்தைகள் அனைவரையும் நேசிக்கிறார். அவர் உங்களின் கையைப் பற்றிக் கொள்வார். அப்போது மட்டுமே நீங்கள் அவருடன் செல்வீர்கள். உங்களின் கையை அவரின் கையில் வைத்தல் என்றால், சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். எல்லோரும் சமமானவர்கள் ஆகமுடியாது, அல்லது அனைவரும் முதலாம் இலக்கத்தவர் ஆகமுடியாது என நீங்கள் கூறுவீர்கள். எவ்வாறாயினும், முதலாம் இலக்கத்தைத் தொடர்ந்து இரண்டாம் இலக்கம் வரும். அந்த மணி தந்தைக்குச் சமமாக ஆகாதிருக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் அது முதலாம் இலக்க மணியைப் போல் இருக்கும். மூன்றாம் மணி, இரண்டாம் மணியைப் போல் இருக்கும். நான்காவது மணி, மூன்றாம் மணியைப் போலிருக்கும். குறைந்தபட்சம், அந்த முறையில் அவர்கள் சமமானவர்கள் ஆகவேண்டும். ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு நெருக்கமாக வருவதன் மூலம், மாலை தயாரிக்கப்படும். இத்தகைய நிலையை அடைதல் என்றால், சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். 108 ஆம் மணி, 107 ஆம் மணிக்குச் சமமாக இருக்கும். அவர்களிடம் ஒவ்வொருவரைப் போன்ற சிறப்பியல்புகள் காணப்பட்டால், மாலை தயாராகி விடும். அது வரிசைக்கிரமமாகவே இருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? தந்தை கேட்கிறார்: ஆமாம், அனைவரும் தயார் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்துக் கூறக்கூடிய யாராவது இப்போது இருக்கிறீர்களா? பாப்தாதாவிற்கு ஒரு விநாடி மட்டுமே எடுக்கும். பாபா கைதட்டும்போது, தேவதைகள் வருகின்ற அந்தக் காட்சிகள் உங்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. அச்சா.
பரம பூஜிக்கத்தகுதிவாய்ந்த மேன்மையான ஆத்மாக்கள் அனைவருக்கும், சகல வகையான சம்பூரணமான தூய்மை என்ற தமது இலக்கை அடைந்த அதிதீவிர முயற்சி செய்யும் ஆத்மாக்கள் அனைவருக்கும், ஒவ்வொரு செயலையும் சரியான முறையில் செய்வதன் மூலம், வெற்றி சொரூபங்கள் ஆகும் ஆத்மாக்களுக்கும், ஒவ்வொரு கணமும் தூய்மையின் அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ள விசேடமான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பு நிறைந்த நினைவுகள் உரித்தாகட்டும்.
பாப்தாதா ஒரு குழுவைச் சந்திக்கிறார்:
1) நீங்கள் உங்களை உலகின் அதிபாக்கியசாலிகளாகக் கருதுகிறீர்களா? இந்த முழு உலகமே தமது பாக்கியம் திறக்க வேண்டும் என அந்த மேன்மையான பாக்கியத்தை வேண்டி நிற்கிறது. ஆனால் உங்களின் பாக்கியம் ஏற்கனவே திறந்து விட்டது. இதை விட மகத்தான சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்? பாக்கியத்தை அருள்பவரே உங்களின் தந்தை என்ற போதை உங்களுக்கு இருக்கிறதல்லவா? பாக்கியத்தை அருள்பவர் தந்தையாக இருக்கும் ஒருவரின் பாக்கியம் எவ்வாறிருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள்! இதைவிட மகத்தான பாக்கியம் வேறு இருக்க முடியுமா? ஆகவே, அந்தப் பாக்கியம் உங்களின் பிறப்புரிமை என்ற சந்தோஷத்துடன் எப்போதும் இருங்கள். குழந்தைகளுக்குத் தமது தந்தைக்குச் சொந்தமான சொத்து அனைத்தினதும் உரிமை உள்ளது. எனவே, பாக்கியத்தை அருள்பவரிடம் என்ன உள்ளது? பாக்கியத்தின் பொக்கிஷங்கள். அந்தப் பொக்கிஷங்களின் உரிமை இப்போது உங்களுக்கு உள்ளது. எனவே, எப்போதும் தொடர்ந்து இந்தப் பாடலைப் பாடுங்கள்: ஆஹா! எனது பாக்கியமே, பாக்கியத்தை அருள்பவரான எனது தந்தையே! சந்தோஷத்தில் பறந்து செல்லுங்கள். இத்தகைய மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு வேறு என்ன வேண்டும்? உங்களின் பாக்கியத்தில் அனைத்தும் அடங்கியுள்ளது. பாக்கியசாலி ஒருவரிடம் அனைத்தும் இருக்கும்: சரீரம், மனம், செல்வம், மக்கள் (உறவுமுறைகள்) மேன்மையான பாக்கியம் என்றால் அடையாதது என்று எதுவும் இல்லை. உங்களிடம் ஏதாவது இல்லாமல் இருக்கிறதா? எனக்கு நல்லதொரு வீடு வேண்டும், எனக்கு நல்லதொரு கார் வேண்டும்... இல்லை. மனதின் சந்தோஷத்தைப் பெற்றுள்ள ஒருவர் அனைத்தையும் பெற்றிருப்பார். ஒரு கார் மட்டுமல்ல, ஆனால் அவர் எண்ணற்ற பொக்கிஷங்களைப் பெற்றிருப்பார். எனவே, அடையாதது என்று எதுவும் இல்லை. நீங்கள் இத்தகைய பாக்கியசாலிகள்! அழியும் விடயங்களில் ஆசை வைப்பதனால் என்ன பயன்? இன்று இருப்பது நாளை இருக்காது. எனவே, அதற்காக ஏன் ஆசை கொள்ள வேண்டும்? ஆகவே, இப்போது உங்களுடன் இருப்பதுடன் உங்களுடனேயே செல்லும் அழியாத பொக்கிஷங்களையிட்டு எப்போதும் சந்தோஷமாக இருங்கள். அந்தக் கட்டடங்கள், கார்கள், பணம் அனைத்தும் உங்களுடன் செல்ல மாட்டாது. ஆனால், இந்த அழியாத பொக்கிஷங்கள் பல பிறவிகளுக்கு உங்களுடன் இருக்கும். அவற்றை எவராலும் உங்களிடமிருந்து பறிக்க முடியாது. எவராலும் அவற்றைக் கொள்ளையிட முடியாது. நீங்களே அமரர்கள் ஆகி, அழியாத பொக்கிஷங்களைக் கண்டுபிடித்துள்ளீர்கள். இந்த மேன்மையான வெகுமதி உங்களுடன் பிறவி பிறவியாக நிலைத்திருக்கும். இது இத்தகையதொரு பெரிய பாக்கியமாகும்! எங்கு ஆசைகள் இல்லையோ, எங்கு ஆசைகளின் அறிவே இல்லாதவராக நீங்கள் இருக்கிறீர்களோ, அது ஏனென்றால் நீங்கள் பாக்கியத்தை அருள்பவரான தந்தையிடம் மேன்மையான பாக்கியத்தைப் பெற்றிருப்பதனாலேயே ஆகும்.
2) நீங்கள் தந்தைக்கு நெருக்கமாக இருக்கும் ஆத்மாக்களாக உங்களை அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் இப்போது தந்தைக்குச் சொந்தமானவர்கள் என்ற சந்தோஷம் எப்போதும் உங்களுக்குள் இருக்கிறதா? நீங்கள் துன்ப உலகில் இருந்து விலகி, சந்தோஷ உலகிற்குள் வந்துள்ளீர்கள். உலகமே துன்பத்தில் அழுகிறது. ஆனால், நீங்கள் சந்தோஷ உலகில், சந்தோஷ ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். இதில் அதிகளவு வேறுபாடு காணப்படுகிறது! உலகமே தேடுகிறது. ஆனால், நீங்கள் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள். எனவே, உங்களின் சகல பேறுகளையும் பார்த்து, எப்போதும் மலர்ச்சியுடன் இருங்கள். நீங்கள் பெற்றவற்றை ஒரு பட்டியல் இடுங்கள். அது நீண்டதொரு பட்டியலாக இருக்கும். நீங்கள் எதைப் பெற்றுள்ளீர்கள்? பௌதீகமாக உங்களுக்குள் சந்தோஷம் இருக்கும்போது, சரீரமும் ஆரோக்கியமாக இருக்கும். உங்களின் மனதிற்கு அமைதி கிடைக்கும்போது, அமைதியே மனதின் சிறப்பியல்பாகும். செல்வத்திற்கு அதிகளவு சக்தி உள்ளது. அதனால் பருப்பும் ரொட்டியும்கூட 36 வகை அறுசுவை உணவாகவே அனுபவம் செய்யப்படும். கடவுளை நீங்கள் நினைக்கும்போது, பருப்பும் ரொட்டியும்கூட மிக மேன்மையானதாகவே இருக்கும். உலகில் 36 வகை அறுசுவை உணவு இருந்து, உங்களிடம் வெறுமனே பருப்பும் ரொட்டியும் இருந்தாலும், எது அதிமேன்மையானதாக இருக்கும்? பருப்பும் ரொட்டியும் நல்லவை. ஏனென்றால், அது பிரசாதம் ஆகும் (புனிதமான உணவு). நீங்கள் உணவு தயாரிக்கும்போது, நீங்கள் அதை நினைவுடன் தயாரிக்கிறீர்கள். நீங்கள் அதை நினைவுடன் உண்கிறீர்கள். எனவே, அது பிரசாதம் ஆகுகிறது. பிரசாதம் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அனைவரும் தினமும் பிரசாதத்தையே உண்கிறீர்கள். பிரசாதத்தில் அதிகளவு சக்தி உள்ளது. எனவே, சரீரம், மனம், செல்வம் என்ற மூன்றிலும் அதிகளவு சக்தி உள்ளது. எனவே, பிராமணர்களின் பொக்கிஷக் களஞ்சியத்தில் எந்தவிதக் குறைவும் இல்லை. ஆகவே, இந்தப் பேறுகளை சதா உங்களின் முன்னால் வைத்திருந்து, சந்தோஷமாகவும் மலர்ச்சியுடனும் இருங்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் செயல்களினூடாக நற்குணங்களைத் தான் செய்யும் இலேசான, ஒளியான தேவதை ஆகுவீர்களாக.தமது செயல்களால் நற்குணங்களைத் தானம் செய்யும் குழந்தைகளின் முகங்களும் செயல்களும் தேவதைகள் போன்று தென்படும். அவர்கள் தங்களை டபிள் லைற் ஆக அனுபவம் செய்வார்கள். அதாவது, அவர்கள் ஒளியாக (பிரகாசம்) இருப்பார்கள். அத்துடன் இலேசாகவும் (பாரமில்லாமல்) இருப்பார்கள். அவர்கள் எதையும் சுமையாக உணர மாட்டார்கள். ஏதோவொரு சக்தி தங்களை இயக்குவது போல், அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உதவியை அனுபவம் செய்வார்கள். தமது செயல்கள் அனைத்திலும் அவர்கள் மகாதானிகளாக இருப்பதனால், அவர்கள் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களையும் நல்லாசிகளையும் பெறுகிறார்கள்.
சுலோகம்:
சேவையில் ஒரு வெற்றி நட்சத்திரம் ஆகுங்கள். பலவீனம் அடையாதீர்கள்.