30.01.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களுடைய நினைவு யாத்திரை மிகவும் மறைமுகமானது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முக்தி தாமத்திற்கான யாத்திரையில் இருக்கின்றீர்கள்.கேள்வி:
நீங்கள் பௌதீக உலகவாசிகளிலிருந்து சூட்சும உலகவாசிகளாக ஆகுவதற்குச் செய்ய வேண்டிய முயற்சி என்ன?பதில்:
சூட்சும உலகின் தேவதைகளாக ஆகுவதற்கு, உங்களுடைய ஒவ்வோர் எலும்பையும் ஆன்மீக சேவைக்கு அர்ப்பணியுங்கள். உங்களுடைய எலும்புகளை அர்ப்பணிக்காமல், உங்களால் தேவதையாக முடியாது. ஏனெனில் தேவதைகளுக்குத் தசைகளோ அல்லது எலும்புகளோ கிடையாது. தாதிஜி ரிஷி செய்ததைப் போன்று நீங்கள் உங்களுடைய எலும்புகளை இந்த எல்லையற்ற சேவைக்குப் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதே நீங்கள் சரீரதாரிகளிலிருந்து சூட்சுமமானவர்களாக ஆகுவீர்கள்.
பாடல்:
ஓ மனமே பொறுமையாக இரு, உங்களுடைய சந்தோஷ நாட்கள் வரவுள்ளன!
ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பொறுமையாக இருப்பதற்கான சமிக்ஞையை இப்பாடலிலிருந்து பெற்றீர்கள். ஸ்ரீமத்தின் அடிப்படையில் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் இந்த மறைமுகமான நினைவு யாத்திரையில் இருக்கின்றீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனைய யாத்திரைகள் அவற்றின் சொந்த நேரத்தில் முடிவடைய வேண்டும். உங்களைத் தவிர வேறெவருக்கும் இந்த யாத்திரையைப் பற்றித் தெரியாது என்பதே இதன் பிரதான விடயமாகும். நீங்கள் நிச்சயமாக இந்த யாத்திரையில் செல்ல வேண்டும், நீங்கள் ஒரு வழிகாட்டியையும் கொண்டிருக்க வேண்டும். ‘பாண்டவ சேனை’ என்று உங்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது யாத்திரையில் இருக்கின்றீர்கள். பௌதீக யுத்தத்திற்கான கேள்வியேதும் இல்லை. இங்கே அனைத்தும் மறைமுகமானதாகும். இந்த யாத்திரையும் கூட மிகவும் மறைமுகமானதாகும். “தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் என்னை அடைவீர்கள்” என்று சமயநூல்கள் கூறுகின்றன. அதுவும் கூட ஒரு யாத்திரையே ஆகும், இல்லையா? சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் இவை அனைத்தையும் நடைமுறையில் செயல்படுத்துகிறார். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்களுடைய நிர்வாண தாமத்திற்கு யாத்திரை செல்ல வேண்டும். நீங்கள் இதைப் பற்றிச் சிந்தித்தீர்களேயானால் உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியும். இதுவே முக்தி தாமத்திற்கான உண்மையான யாத்திரையாகும். அனைவரும் முக்தி தாமத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் இந்த யாத்திரை செல்வதற்கு எவரேனும் முக்தி தாமத்தைக் காண்பிக்க வேண்டும். எவ்வாறாயினும், தனக்குரிய நேரத்திலேயே தந்தையால் வரமுடியும். அது எந்த நேரம் என்பது எவருக்கும் தெரியாது. தந்தை வந்து விளங்கப்படுத்தும்பொழுது, “இதுவே நினைவுகூரப்படுகின்ற உண்மையான யாத்திரை” என்பதில் குழந்தைகளாகிய நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள். கடவுள் இந்த யாத்திரையை எங்களுக்குக் கற்பித்தார்: மன்மனாபவ! மதியாஜிபவ! உங்களுக்கு இந்த வாசகங்கள் மிகவும் பயனுள்ளவை. அவற்றைப் பேசியவர் யார் என்பதே செய்த ஒரேயொரு தவறாகும். அவர் கூறுகிறார்: உங்களது சரீரத்தையும், சரீர உறவினர்கள் அனைவரையும் மறந்துவிடுங்கள். இவருக்கும் (பிரம்ம பாபா) ஒரு சரீரம் இருக்கிறது. அவர் தனக்கெனச் சொந்தமான ஒரு சரீரமற்ற வேறொருவராவார், இவருக்கு விளங்கப்படுத்துபவரும் அவரே ஆவார். அந்தத் தந்தைக்கு ஒரு சரீரமில்லை. அவருக்கெனச் சொந்தமான ஒரு சரீரம் இல்லை. ஏனைய அனைவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. முழு உலகமும் உருவங்களுடனானது. இந்த மனித ரூபம் ஒரு சரீரமற்றவராலும், உருவத்தைக் கொண்டவராலுமே, அதாவது உயிரற்ற சரீரத்தாலும், ஆத்மாவாலும் ஆக்கப்பட்டுள்ளது. அந்தத் தந்தை ஒரு சரீரமற்றவர். அவர் இந்த உருவத்தின் (சரீரம்) ஆதாரத்தை எடுக்க வேண்டியுள்ளது என அவர் விளங்கப்படுத்துகிறார். மகாபாரத யுத்தம் நடந்தபொழுதே கடவுள் இதனைக் கூறினார் என்று சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. அவர் இராஜயோகத்தைக் கற்பித்தார், எனவே ஓர் இராச்சியமும் நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட்டது. இப்பொழுது இராச்சியம் எதுவும் இல்லை. கடவுள் புதிய உலகிற்காக இராஜயோகத்தைக் கற்பித்தார், ஏனெனில் விநாசம் முன்னால் நிற்கின்றது. சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டு கொண்டிருக்கும் வேளையில், அது அவ்வாறு நடந்ததாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இலக்ஷ்மியினதும் நாராயணனினதும் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுது சத்தியயுகம் இருந்ததென்பதும், இப்பொழுது அது கலியுகம் என்பதும் உங்களது புத்தியில் உள்ளது. தந்தை இப்பொழுது அதே விடயங்களை விளங்கப்படுத்துகிறார். உங்களை மீண்டும் அழைத்துச் செல்வதற்காகப் பரந்தாமத்திலிருந்து அவர் வந்திருப்பதாக வேறெவராலும் கூறமுடியாது. பரமாத்மாவாகிய பரமதந்தையினால் மாத்திரமே இதனை பிரம்மா மூலமாகக் கூறமுடியும். அவரால் இதனை வேறொருவர் மூலமாகவும் கூறமுடியாது. சூட்சும உலகில் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மாத்திரமே இருக்கிறார்கள். பிரம்மாவைப் பற்றிக் கூறும்பொழுது அவர் சூட்சும பிரம்மா என்றும், இவர் சரீரமுடைய பிரம்மா எனவும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது தேவதைகள் ஆகுகின்றீர்கள். பௌதீக உலகில், தேவதைகள் இருப்பதில்லை. தேவதைகளுக்குத் தசையாலும், எலும்பாலுமான சரீரங்கள் இருக்காது. நீங்கள் உங்களது எலும்புகள் முதலானவை அனைத்தையும் ஆன்மீக சேவைக்கு அர்ப்பணம் செய்து, பின்னர் தேவதைகள் ஆகுகின்றீர்கள். தற்பொழுது உங்களிடம் எலும்புகள் இருக்கின்றன. ஒருவர் தனது எலும்புகளைச் சேவைக்காக அர்ப்பணித்தார் என எழுதப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் நீங்கள் உங்களது எலும்புகளை இல்லாமல் செய்வதாகும். நீங்கள் பௌதீக உலகவாசிகளிலிருந்து இருந்து சூட்சும உலகவாசிகள் ஆக வேண்டும். இங்கே நாங்கள் எங்கள் எலும்புகளைக் கொடுத்த பின்னர் சூட்சுமமாகுகின்றோம். நீங்கள் இச் சேவைக்காக அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். நினைவில் இருந்தவாறே நாங்கள் தேவதைகள் ஆகுவோம். 'வேடனுக்குக் கொண்டாட்டம், இரைக்குத் திண்டாட்டம்" என்பது நினைவுகூரப்படுகிறது. தேவதைகள் வேடர்கள் என அழைப்படுகிறார்கள். நீங்கள் மனிதர்களில் இருந்து தேவதைகளாக மாறுகின்றீர்கள். உங்களைத் தேவர்கள் என அழைக்க முடியாது. இங்கே உங்களுக்குச் சரீரங்கள் உள்ளன. இந்நேரத்திலேயே சூட்சும உலகைப் பற்றி விளங்கப்படுத்தப்படுகிறது. நீங்கள் யோகத்தில் இருந்து தேவதைகள் ஆகுகின்றீர்கள். இறுதியில் நீங்கள் தேவதைகள் ஆகுவீர்கள். அந்நேரத்தில் உங்களுக்கு அனைத்தினதும் காட்சிகள் கிடைப்பதுடன், சந்தோஷத்தையும் கொண்டிருப்பீர்கள். மனிதர்கள் அனைவரும் மரணத்திற்கு இரையாவார்கள். உங்களில் மகாவீரர்களாக இருப்பவர்கள், அசைக்க முடியாதவர்களாக இருப்பார்கள். வேறு பல விடயங்களும் தொடர்ந்தும் இடம்பெறும். விநாசத்தின் காட்சிகள் நடைபெற வேண்டும். அர்ஜுனனுக்கு விநாசத்தின் காட்சியொன்று கிடைத்தது. இது ஓர் அர்ஜுனனுக்கான விடயமல்ல. குழந்தைகளான உங்களுக்கு விநாசத்தினதும், ஸ்தாபனையினதும் காட்சிகள் கொடுக்கப்பட்டன. அனைத்திற்கும் முதலில் பாபாவிற்கும் விநாசத்தின் காட்சி ஒன்று கிடைத்தது. அந்நேரத்தில் அவருக்கு எவ்வித ஞானமும் இருக்கவில்லை. அவர் உலகம் அழிக்கப்படுவதைக் கண்டார். பின்னர் அவருக்கு நான்கு புஜங்;களைக் கொண்ட உருவத்தின் (விஷ்ணு) காட்சி கிடைத்தது. விநாசத்தின் பின்னர் நாங்கள் உலக அதிபதிகளாக ஆகவுள்ளோம், ஆதலால் அவர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். விநாசம் நல்லதிற்கே என்பது உலகிற்குத் தெரியாது. அவர்கள் அமைதிக்காகப் பல ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். ஆனால் முடிவில் விநாசம் நடந்தேயாக வேண்டும். அவர்கள் தூய்மையாக்குபவரை நினைவுசெய்து, அவரை வரும்படி வேண்டுகிறார்கள். எனவே தந்தை நிச்சயமாக வருவார். அவர் வந்து, நாங்கள் ஆட்சிபுரியவுள்ள புதிய உலகை ஸ்தாபிப்பார். இது நல்லது, இல்லையா? ஏன் அவர்கள் தூய்மையாக்குபவரை நினைவுசெய்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் சந்தோஷமற்று இருப்பதாலேயே ஆகும். தேவர்கள் தூய உலகிலே இருக்கிறார்கள். அவர்களால் தூய்மையற்ற உலகில் தமது பாதத்தைப் பதிக்க முடியாது. ஆதலால் தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். ஒரு மகா விநாசம் ஏற்பட்டதாக நினைவுகூரப்படுகிறது. அதன்பின்னர் என்ன நடந்தது? அவ்வாறே ஒரு தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது, அப்படி இல்லையா? நீங்கள் இங்கே இராஜ யோகத்தைக் கற்கிறீர்கள், பின்னர் விநாசம் நடைபெறும். பின்னர் பாரதத்தில் யார் எஞ்சுவார்கள்? இராஜ யோகத்தைக் கற்று, ஞானத்தைக் கொடுப்பவர்களே எஞ்சுவார்கள். ஏனைய அனைவரும் அழிக்கப்பட வேண்டும். இதனைப் பற்றிப் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மக்கள், தூய்மையாக்குபவரை வரும்படி கூவி அழைக்கிறார்கள். எனவே, அவர் வரும்பொழுது அவர்கள் சந்தோஷமடைய வேண்டும். தந்தை கூறுகிறார்: விகாரத்தில் ஈடுபடாதீர்கள்! இவ்விகாரங்களை வெல்லுங்கள்! அல்லது அவற்றை ஒரு தானமாகக் கொடுங்கள். அப்பொழுது கிரகணம் அகற்றப்படும்! பாரதத்தின் மேலுள்ள கிரகணம் நிச்சயமாக அகற்றப்பட வேண்டும். நீங்கள் அவலட்சணமானவர்களிலிருந்து அழகானவர்கள் ஆகவேண்டும். தூய தேவர்கள் சத்திய யுகத்திலேயே வாழ்ந்தார்கள். அவர்கள் நிச்சயமாக இங்கேயே அவ்வாறு ஆகியிருக்க வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவதால் நாங்கள் விகாரமற்றவர்கள் ஆகுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியும்;. கடவுள் கூறுகின்றார்: இது மறைமுகமானது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாற வேண்டும். உங்களால், ஒரு விநாடியில் இராச்சியத்தைப் பெறமுடியும். ஆரம்ப காலத்தில் சில புத்திரிகள் 'திரான்ஸ்" இல் சென்று 4 முதல் 5 நாட்களுக்கு சுவர்க்கத்தில் இருக்கும் வழக்கம் இருந்தது. சிவபாபா வந்து, சுவர்க்கத்தின் காட்சிகளைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுத்தார். தேவர்கள் பெரும் மரியாதையுடனும், பெருமையுடனும் வருவது வழக்கம். எனவே, இது குழந்தைகளாகிய உங்களது இதயத்தைத் தொடுகிறது, ஏனெனில் உண்மையில் தந்தையே எங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக மறைமுகமான முறையில் வருகிறார். அவர் பிரம்மாவின் சரீரத்தில் வருகிறார். பிரம்மாவினது சரீரமும் இங்கேயே இருக்க வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் மூலமே ஸ்தாபனை இடம்பெறுகிறது. “நீங்கள் யாரிடம் வந்தீர்கள்?” என்று இங்கே வரும் எவரிடமும் நீங்கள் வினவ வேண்டும் என்று பாபா விளங்கப்படுத்திள்ளார். பிரம்மகுமாரிகளிடம். நல்லது. நீங்கள் பிரம்மாவின் பெயரை முன்னர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார், இல்லையா? நாங்கள் அனைவரும் இப்பொழுது அவருக்குரியவர்களே. நாங்கள் முன்னரும் நிச்சயமாக அவருக்குரியவர்களாகவே இருந்தோம். பிரம்மா மூலம் ஸ்தாபனை நடைபெறுகிறது. எனவே, பிராமணர்களும் தேவைப்படுகிறார்கள். பிரம்மா மூலம் தந்தை, யாருக்கு விளங்கப்படுத்துகிறார்? அவர் சூத்திரர்களுக்கு விளங்கப்படுத்துவதில்லை. இப் பிராமணர்களே வாய்வழித் தோன்றல்களான படைப்புக்கள் ஆவர். சிவபாபா, பிரம்மா மூலம் எம்மைத் தனக்குரியவர்களாக ஆக்கிக் கொண்டார். பல பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் இருக்கின்றனர். பல நிலையங்களும் உள்ளன. அவற்றில் பிரம்மகுமாரிகளே கற்பிக்கிறார்கள். இங்கே நாங்கள் பாட்டனாரின் ஆஸ்தியைப் பெறுகிறோம். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். அவர் அசரீரியானவர் என்பதால், அவர் இவரது சரீரத்தை ஆதாரமாக எடுத்து, எங்களுக்கு ஞானத்தைக் கூறுகிறார். அனைவருமே பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், நாங்கள் பிரஜாபிதா பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் ஆவோம். சிவபாபாவே தாதா (பாட்டன்) ஆவார். அவர் எங்களைத் தத்தெடுத்துள்ளார். நாங்களே பிரம்மாவின் மூலமாக தாதாவுடன் கற்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த இலக்ஷ்மி, நாராயணன் இருவருமே சுவர்க்கத்தின் அதிபதிகள். அதிமேலான அசரீரியானவர் மாத்திரமே கடவுள். குழந்தைகளே, நீங்கள் இதனை நன்றாகக் கிரகிக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் உங்களுக்கு இரண்டு தந்தையர்கள் இருக்கிறார்கள் என்பதை அனைத்திற்கும் முதலில் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். சுவர்க்கத்தில் உங்களுக்கு ஒரு தந்தையே இருக்கிறார். பரலோகத்; தந்தையிடமிருந்து இராச்சியத்தைப் பெற்றபின் நீங்கள் ஏன் அவரை நினைவுசெய்ய வேண்டும்? நீங்கள் அங்கே அவரை நினைவுசெய்யும் வகையில் எவ்விதத் துன்பமும் இருப்பதில்லை. “ஓ! துன்பத்தை நீக்குபவரே! சந்தோஷத்தை அருள்பவரே!” என்று பாடப்பட்டுள்ளது. இது இக்காலத்தையே குறிக்கின்றது. நடந்து முடிந்தவை பின்னர் நினைவுகூரப்படுகின்றன. புகழ் ஒரேயொருவருக்கே. அந்தத் தந்தை ஒருவரே வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகிறார். மனிதர்கள் இதனைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் கடந்தவற்றைப் பற்றிய கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தந்தை உண்மையிலேயே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார் என்பதையும், அதன் மூலமாக நீங்கள் அந்த இராச்சியத்தைப் பெற்றீர்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் 84 பிறவிகளுக்கான சக்கரத்தில் சுற்றி வந்து, இப்பொழுது மீண்டும் ஒருமுறை கற்கிறீர்கள். பின்னர் நீங்கள் 21 பிறவிகளுக்கு ஆட்சிபுரிவீர்கள். நீங்கள் அவர்களைப் போல தேவர்கள் ஆகுவீர்கள். முன்னைய கல்பத்திலும் நீங்கள் அவ்வாறு ஆகினீர்கள். நீங்கள் 84 பிறவிகளுக்கான முழுச் சக்கரத்தையும் சுற்றி வந்தீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறது. நீங்கள் மீண்டும் ஒருமுறை சத்திய, திரேதா யுகங்களுக்குச் செல்ல இருக்கிறீர்கள். இதனாலேயே தந்தை வினவுகிறார்: இதற்கு முன்னர் நாங்கள் எத்தனை தடவைகள் சந்தித்திருக்கிறோம்? இது நடைமுறை ரீதியான விடயம், இல்லையா? புதியவர்கள் இதனைச் செவிமடுக்கும்பொழுது, நிச்சயமாக 84 பிறவிகளைக் கொண்ட ஒரு சக்கரம் உள்ளது என அவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஆரம்பத்தில் வருபவர்களுக்கே இச்சக்கரம், முழுச் சக்கரமாக இருக்கும். அனைத்துமே புத்தியினாலேயே கணிக்கப்பட வேண்டும். பாபா, நான் இதே கட்டடத்திலே இதே ஆடையை அணிந்தவாறே உங்களைப் பல தடவைகள் சந்தித்துள்ளேன். தொடர்ந்தும் உங்களைச் சந்திப்பேன். நீங்கள் தொடர்ந்தும் தூய்மையானவர்களிருந்து தூய்மையற்றவர்களாகவும், தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாகவும் ஆகினீர்கள். எதுவும் சதா புதியதாக இருப்பதென்பது அசாத்தியமானது. அனைத்தும் நிச்சயமாக பழையதாகும். அனைத்துமே சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாகச் செல்ல வேண்டும். புது உலகம் வருகின்றது என்பதைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இது நரகம். அதுவே தூய உலகம். பலர் கூவியழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! அவர்களது துன்பம் அதிகரிப்பதால், அவர்கள் கூவியழைக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து பின்னர் பூஜிப்பவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். நாங்கள் துவாபர யுகத்தில் பூஜிப்பவர்களாகினோம். எண்ணற்ற சமயங்கள் தொடர்ந்தும் வருகின்றன. நாங்கள் உண்மையிலேயே தொடர்ந்தும் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாகவும், தூய்மையானவர்களில் இருந்து தூய்மையற்றவர்களாகவும் ஆகுகிறோம். நாடகம் பாரதத்தின் அடிப்படையிலேயே உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் இப்பொழுது சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்கள். வேறெவருக்கும் சிவனைத் தெரியாது. எங்களுக்கு அவரைத் தெரியும். அவர் உண்மையிலேயே எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். பிரம்மா மூலமாகச் சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகிறது. இந்த யோகத்தைக் கற்று ஸ்தாபனையை நிறைவேற்றுபவர்கள், தமது இராச்சிய பாக்கியத்தை நிச்சயமாகப் பெறுவார்கள். உண்மையிலேயே தந்தையிடமிருந்து ஒவ்வொரு கல்பத்திலும் இந்த இராஜயோகத்தைக் கற்கிறோம் என நாங்கள் கூறுகிறோம். 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றதென பாபா விளங்கப்படுத்தியிருக்கிறார். பின்னர் நாங்கள் புதிய சக்கரத்தில் சுற்றி வரவேண்டும். நீங்கள் இந்தச் சக்கரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படங்கள் உங்களிடம் இல்லாவிட்டாலும் உங்களால் இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியும். இவ்விடயங்கள் மிக எளிதானவை. பாரதம் உண்மையிலேயே சுவர்க்கமாக இருந்தது, இப்பொழுது அது நரகமாக உள்ளது. கலியுகம் இன்னும் தனது குழந்தைப் பருவத்தில் இருக்கின்றது என மக்கள் நம்புகிறார்கள். இது கலியுக முடிவு என நீங்கள் கூறுகிறீர்கள். சக்கரம் இப்பொழுது முடிவிற்கு வருகிறது. தந்தை கூறுகிறார்: இத் தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குவதற்கே நான் வந்துள்ளேன். நாங்கள் தூய உலகிற்குச் செல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். முக்தி தாமம், ஜீவன்முக்தி தாமம், அமைதி தாமம், சந்தோஷ பூமி, துன்ப பூமி என்பனவற்றையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். எவ்வாறாயினும், உங்களது பாக்கியத்தில் இல்லாவிட்டால், 'ஏன் நான் சந்தோஷ பூமிக்குள் செல்லக்கூடாது" என்ற எண்ணம் தோன்றாது. அந்த சாந்திதாமம் உண்மையிலேயே ஆத்மாக்களாகிய எங்களது வீடாகும். ஆத்மாக்களுக்கு அங்கே புலனங்கங்கள் இல்லாததால் அவர்கள் எதையுமே கூறுவதில்லை. அங்கே அனைவரும் அமைதியைப் பெறுகிறார்கள். சத்திய யுகத்தில் ஒரு தர்மமே இருக்கிறது. இந்த உலக நாடகம் அநாதியானதும், அழியாததும் ஆகும். அது தொடர்ந்தும் சுழல்கிறது. ஆத்மாக்கள் ஒருபொழுதும் அழிக்கப்பட மாட்டார்கள். நீங்கள் அனைவரும் ஒரு குறுகிய காலத்திற்குச் சாந்தி தாமத்தில் வசிக்க வேண்டும். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயம். கலியுகம் துன்ப பூமியாகும். எண்ணற்ற சமயங்கள் இருப்பதால் பெருமளவு குழப்பம் இருக்கிறது! அது முழுமையான துன்ப பூமியாக இருக்கும்பொழுது, தந்தை வருகிறார். துன்ப பூமிக்குப் பின்னர் சந்தோஷத்தால் நிரம்பிய பூமி இருக்கிறது. நாங்கள் சாந்தி தாமத்திலிருந்து சந்தோஷ தாமத்திற்குள் பிரவேசிக்கின்றோம். அது பின்னர் துன்ப பூமி ஆகுகின்றது. அவர்கள் சத்தியயுகத்தில் முற்றிலும் விகாரமற்றவர்களாகவும், ஆனால் இங்கே அவர்கள் முற்றிலும் விகாரம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இது விளங்கப்படுத்துவதற்கு மிகவும் இலகுவானதாகும். உங்களுக்குத் துணிவு தேவைப்படுகிறது. நீங்கள் எங்கும் சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அனுமான் ஆன்மீகக் கூட்டங்களிற்குச் சென்று, பின்னால் பாதணிகளின் மத்தியிலேயே இருப்பார் என எழுதப்பட்டுள்ளது. தைரியமான போர்வீரர்கள் எங்கேயும் சென்று மற்றவர்கள் கூறுவதைச் சாதுரியமாகச் செவிமடுப்பார்கள். உங்களுடைய ஆடையை மாற்றி, உங்களால் மற்றவர்களுக்கு நன்மை அளிப்பதற்காக எங்கேயும் செல்ல முடியும். பாபாவும் ஒரு மறைமுகமான விதத்தில் உங்களுக்கு நன்மையளிக்கிறார். ஆலயங்கள் முதலானவற்றிலிருந்து உங்களுக்கு அழைப்புக் கிடைக்கும்பொழுது, நீங்கள் அங்கே சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் நீங்கள் புத்திசாலிகளாக ஆகுகின்றீர்கள். நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் இதற்கு முயற்சிக்க வேண்டும். சந்நியாசிகளும், அரசர்களும் இறுதியில் வந்தார்கள் என நினைவுகூரப்படுகிறது. ஜனக மன்னன் ஜீவன்முக்தியை ஒரு விநாடியில் பெற்றார். அவர் பின்னர் திரேதா யுகத்தில் அனுஜனகன் (எதிர் கால ஜனகனாகுபவர்) ஆகுகிறார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இறுதி விநாசத்தின் காட்சிகளைக் காண்பதற்கு உங்களது ஸ்திதியை மகாவீரரைப் போல் பயமற்றதாகவும், அசைக்க முடியாததாகவும் ஆக்குங்கள். ஒரு மறைமுகமான முறையில் நினைவு யாத்திரையில் இருங்கள்.
2. சூட்சும உலகவாசியான ஒரு தேவதை ஆகுவதற்கு, தாதிஜி ரிஷி செய்ததைப் போல, உங்களது ஒவ்வோர் எலும்பையும் எல்லையற்ற சேவைக்கு அர்ப்பணியுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் ஏகாந்தத்தையும், சுய ஆய்வுப் பரிசோதனையையும் பயிற்சி செய்து உங்களை அனுபவத்தினால் நிரப்புவதால், மாயையை வெல்பவர் ஆகுவீர்களாக.சக்தி நிறைந்தவராகவும், ஞானம் நிறைந்தவராகவும் ஆகுவதற்கு, அதாவது, அனுபவத்தின் ஒரு வடிவம் ஆகுவதற்கு, ஏகாந்தத்திலும், சுய ஆய்வுப் பரிசோதனையிலும் நிலைத்திருப்பவர் ஆகுங்கள். அனுபவம் இல்லாதிருத்தலே தளம்பலுக்கான காரணம் ஆகும். எனவே புரிந்துகொண்டு ஏனையோருக்கு விளங்கப்படுத்தும் ஒருவராகவோ அல்லது வெறுமனே கடைதலின் வடிவமாகவோ அல்லாது ஏகாந்தத்தில் நிலைத்திருந்து ஒவ்வொரு கருத்தையும் அனுபவம் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் எவ்விதமான ஏமாற்றம், துன்பம் அல்லது குழப்பம் போன்றவற்றிலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள். முதலாவது பாடமாகிய, நீங்கள் யாருடைய குழந்தை, உங்கள் பேறுகள் என்ன என்பதை நீங்கள் அனுபவம் செய்யும்பொழுது, இலகுவாகவே மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள்.
சுலோகம்:
தங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றும்பொழுதும், இலேசாகவும் ஒளியாகவும் இருப்பவர்களே தந்தைக்கு நெருக்கமான மணிகள் ஆவார்கள்.