29.01.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பிரஜாபிதா பிரம்மா கொள்ளுப்பாட்டனார் ஆவார், அதாவது, அவரே சகல சமயங்களினதும் முதற் தந்தை ஆவார். நீங்கள் மாத்;திரமே அவரின் தொழிலை அறிந்திருக்கின்றீர்கள்.கேள்வி:
உங்கள் செயல்களை மேன்மையானதாக ஆக்குவதற்கான வழி என்ன?பதில்:
இப்பிறவியில் நீங்கள் செய்த எந்தச் செயல்களையும் தந்தையிடமிருந்து மறைக்காதீர்கள். ஒவ்வொரு செயலையும் ஸ்ரீமத்திற்கு ஏற்ப செய்யும் போது, ஒவ்வொரு செயலும் மேன்மையானதாகும். அனைத்தும் செயல்களிலேயே தங்கியுள்ளது. ஒருவர் ஒரு பாவச் செயலை செய்த பின்னர் அதனை மறைப்பாராயின், நூறு மடங்கு தண்டனை பெறுவதுடன், அப்பாவமும் தொடர்ந்தும் அதிகரிக்கும். தந்தையுடனான யோகமும் துண்டிக்கப்படுகின்றது. இவ்வாறாக தமது பாவங்களை மறைப்பவர்கள் தமக்குள் இருக்கின்ற சகல உண்மையையும் முற்றாக அழிக்கின்றார்கள். ஆகையாலேயே நீங்கள் தந்தையுடன் நேர்மையாக இருக்க வேண்டும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே, இப் பழைய உலகில் நீங்கள் இன்னமும் சொற்ப நாட்களுக்கான பயணிகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உலகி;லுள்ள மக்கள் தாம் இன்னமும் 40,000 ஆண்டுகள் இவ் உலகில் தொடர்ந்தும் வாழ்வோம் என நினைக்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இவ்விடயங்களை மறந்து விடாதீர்கள். இங்கே அமர்ந்திருக்கும் போது, குழந்தைகளாகிய நீங்கள், உங்களுக்குள் சந்தோஷ குமிழ்கள் பொங்கி எழ வேண்டும். உங்கள் கண்களால் நீங்கள் பார்ப்பவை அழியப் போகின்றன. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதும்; நீங்கள் 84 பிறவிகளை முழுமையாக எடுத்திருக்கின்றீர்கள் என்பதும் உங்கள் புத்திகளில் உள்ளது. தந்தை இப்பொழுது உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றார். பழைய உலகம் முடிவிற்கு வரும் போது, தந்தை உலகை புதுப்பிப்பதற்காக வருகின்றார். புதிய உலகம் பழையது ஆகுகின்றது, அதன் பின்னர் பழைய உலகம் புதியதாகின்றது. இந்த சக்கரத்தைப் பற்றிய ஞானம் உங்கள் புத்திகளில் உள்ளது. நீங்கள் இச்சக்கரத்தை சுற்றி பல தடவைகள் வந்திருக்கின்றீர்கள். இச்சக்கரம் இப்பொழுது இறுதியை அடைகின்றது. அதன் பின்னர், புதிய உலகில் வெகுசில தேவர்களாகிய நீங்கள் மாத்திரமே இருப்பீர்கள். அங்கே சாதாரண மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது சாதாரண மனிதரில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். உங்களுக்கு இப்பொழுது இந்த உறுதியான நம்பிக்கை உள்ளது. அனைத்தும் செயல்களில் தங்கியுள்ளது. மனிதர்கள் பிழையான செயல்களை செய்யும் போது, அவர்களின் மனசாட்சி நிச்சயமாக அவர்களை உறுத்தும். ஆகையாலேயே தந்தை வினவுகின்றார்: நீங்கள் இப்பிறவியில் எந்த செயல்களையும் செய்யவில்லை, அப்படித்தானே? இவ் உலகம் இராவணனின் தீய இராச்சியமாகும். நீங்கள் மாத்திரமே இதனை புரிந்து கொள்கின்றீர்கள். உலகிலுள்ள எவருக்கும் இராவணன் யாரென்பது தெரியாது. பாபுஜி (காந்திஜி) இராம இராச்சியத்தை ஏற்படுத்த விரும்புவதாக கூறுவதுண்டு, ஆனால் அதன் அர்த்தம் என்னவென்பதை எவருமே புரிந்து கொள்ளவில்லை. எல்லையற்ற தந்தை இராமஇராச்சியம் எவ்வாறிருக்கும் என இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது மங்கிய பார்வை உடையவர்களின் உலகமாகும். எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் ஆஸ்தியை கொடுக்கின்றார். நீங்கள் இனியும் பக்தி செய்வதில்லை. நீங்கள் இப்பொழுது தந்தையின் கையை பிடித்திருக்கின்றீர்கள். தந்தையின் ஆதரவு இல்லாது, நீங்கள் நச்சு நதியில் தத்தளித்தீர்கள். அரைக்கல்பத்திற்கு, பக்தி உள்ளது. ஞானம் கிடைத்த பின்னர், நீங்கள் புதிய உலகமான சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். பாபாவை நினைவுசெய்வதன் மூலம், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். அதன் பின்னர், நீங்கள் தூய இராச்சியத்திற்குச் செல்வீர்கள். அதிமேன்மையான சங்கமயுகமான இப்பொழுதே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இது அதிமேன்மையான சங்கமயுகமாகும், இந்நேரத்தில் நீங்கள் முட்களில் இருந்து மலர்கள் ஆகும் போது அழுக்கானவரில் இருந்து அழகானவர்களாக ஆகுகின்றீர்கள். உங்களை அவ்வாறு ஆக்குபவர் யார்? தந்தையே ஆவார். தந்தையே ஆத்மாக்களாகிய எங்களுடைய எல்லையற்ற தந்தை ஆவார் என்பதை நாங்கள் அறிவோம். உலகத் தந்தையை நாங்;கள் எல்லையற்ற தந்தை என அழைக்க முடியாது. ஆத்மாக்களைப் பொறுத்தவரையில், பரலோகத் தந்தையே அனைவரதும் தந்தை ஆவார். அதன் பின்னர் பிரம்மாவின் தொழிலும் தேவையாகும் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது அனைவரதும்; தொழிலும் தெரியும். விஷ்ணுவின் தொழிலும் உங்களுக்குத் தெரியும். அவருக்கு அதிகளவு அலங்காரம் செய்யப்படுகின்றது. அவர் சுவர்க்க அதிபதியாவார். இவர் சங்கமயுகத்திற்குரிவர் எனக் கூறப்படுகின்றது. அசரீரியான உலகம் உள்ளது, சூட்சும உலகம், சரீர உலகம். அவை சங்கமயுகத்தில் மாத்திரமே உள்ளன. இது பழைய உலகினதும்; புதிய உலகினதும் சங்கமம் ஆகும். மக்கள் கூவியழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! புதிய உலகம் தூய்மையான உலகமாகும், பழைய உலகம் தூய்மையற்ற உலகமாகும். எல்லையற்ற தந்தைக்கும் நடிப்பதற்கு ஒரு பாகம் உள்ளது. அவரே படைப்பவரும் இயக்குநரும் ஆவார். அனைவரும் இதில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதால் நிச்சயமாக அவருக்கும் ஒரு செயற்பாடு இருக்க வேண்டும். அப்படித்தானே? அவர் ஒரு மனிதர் என அழைக்கப்படுவதில்லை. அவருக்கு ஒரு சரீரம் இல்லை. ஏனைய அனைவரும் தேவர்கள் அல்லது மனிதர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். சிவபாபாவை தேவர் என்றோ மனிதர் என்றோ அழைக்க முடியாது, ஏனெனில் அவருக்கென சரீரம் இல்லை. அவர் இந்தச் சரீரத்தை தற்காலிகமாக கடனாக பெற்றிருக்கின்றார்கள். அவர் தானே கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஒரு சரீரம் இல்லாமல் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு நான் எவ்வாறு இராஜயோகம் கற்பிப்பேன்? மனிதர்கள் நான் கல்லிலும் கூழாங்கற்களிலும் இருப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் நான் எவ்வாறு வருகின்றேன் என்பதை புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கின்றீர்கள். எந்த மனிதராலும் இதனைக் கற்பிக்க முடியாது. தேவர்கள் எவ்வாறு சத்திய யுக இராச்சியத்தை பெற்றார்கள்? அவர்கள் நிச்சயமாக சங்கமயுகத்தில் இராஜயோகம் கற்றிருக்க வேண்டும். எனவே, இதனை கடைவதால், குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும்;. நாங்கள் இப்பொழுது 84 பிறவிச்சக்கரத்தை நிறைவு செய்துள்ளோம். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார். தந்தை தானே கூறுகின்றார்: இதுவே பல பிறவிகளின் இறுதிப்பிறவியாகும். சத்தியயுகத்தின் இளவரசனான ஸ்ரீகிருஷ்ணர், 84 பிறவிச் சக்கரத்தை சுற்றி வருகின்றார். நீங்கள் சிவனின் 84 பிறவிகள் என காட்டுவதில்லை. உங்கள் மத்தியில் கூட, உங்கள் முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாகவே நீங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். மாயை மிக பலசாலியாவாள். அவள் எவரையும் விட்டு வைப்பதில்லை. தந்தைக்கு இது மிக நன்றாகத் தெரியும். தந்தை அந்தரயாமி (அனைவருக்குள்ளும் என்ன உள்ளது என்பதை அறிந்தவர்) என நினைக்காதீர்கள். இல்லை! அவர் அனைவரையும் அவர்களின் நடத்தையின் மூலம் அறிந்து கொள்கின்றார். மாயை அவர்களை முற்றாக விழுங்கிவிடும் போது, அவர் செய்தியை பெறுகின்றார். அத்தகைய பல விடயங்களை குழந்தைகளாகிய நீங்கள் அறியமாட்டீர்கள். தந்தை அனைத்தையும் அறிவார் என்பதால் பாபா அந்தரயாமி என மக்கள் நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் அந்தரயாமி அல்ல. அனைவருமே அவர்களின் நடத்தையினால் அறிந்து கொள்கின்றார்கள். சிலரின் நடத்தை மிக தீயதாக உள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கின்றார்: மாயையையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்! மாயை உங்களை ஏதோ ஒரு வகையில் முற்றாக விழுங்கக் கூடியவள். இருப்பினும், தந்தை அவர்களுக்கு விளங்கப்படுத்திய போதும், அவர்களின் புத்தியில் அது நிற்பதில்லை. ஆகையாலேயே குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காமமே கொடிய எதிரியாகும். நீங்கள் விகாரத்திற்குள் விழுவதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அத்தகைய குழந்தைகள் உள்ளார்கள். ஆகையால், தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஒரு தவறை செய்திருந்தால், அதனை தந்தையிடம் நேர்மையாகக் கூறுங்கள். அதனை மறைக்;காதீர்கள். இல்லாவிடின், நூறு மடங்கு பாவம் சேமிக்கப்படுவதுடன், உங்கள் மனசாட்;சி தொடர்ந்தும் உறுத்துவதால் நீங்கள் தலை கீழாக விழுகிறீர்கள். நீங்கள் உண்மையான தந்தையுடன் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும். இல்லாவிடின், பேரிழப்பு இருக்கும். இந்த நேரத்தில் மாயை தீவிரமாக உள்ளாள். இது இராவணனின் உலகமாகும். நாங்கள் ஏன் இப் பழைய உலகை நினைவு செய்ய வேண்டும்? நாங்கள் இப்பொழுது போகவுள்ள புதிய உலகையே நாங்கள் நினைவுசெய்ய வேண்டும். தந்தை ஒருவர் புதிய வீடொன்றை கட்டும் போது, அவரது குழந்தைகள் சந்தோஷமடைகின்றார்கள், ஏனெனில், புதியதொரு வீடு தமக்காகக் கட்டப்படுகின்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். இங்கு, இது ஓர் எல்லையற்ற விடயமாகும். புதிய உலகமான சுவர்க்கம் எங்களுக்காக கட்;டப்படுகின்றது. நாங்கள் வாழ்வதற்காக நிச்சயமாக சுவர்க்கத்தில் வீடுகள் இருக்கும். நாங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்ல உள்ளோம். தந்தையை நீங்கள் எந்தளவிற்கு நினைவுசெய்கிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் அழகான மலர்கள் ஆகுகின்றீர்கள். நாங்கள் விகாரங்களின் ஆதிக்கத்தினால் முட்கள் ஆகினோம். இங்கே மாயை அரைவாசிக் குழந்தைகளை முற்றாக உண்டு விடுகின்றாள் என்பதை தந்தை அறிவார். இனியும் வராமல் இருக்கின்ற குழந்தைகள் மாயையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் தந்தையிடம் கூட வருவதில்லை. மாயை இவ்வாறாக பலரை விழுங்குகின்றாள். பலரும் இங்கிருந்து சென்று விடுகின்றார்கள், அவர்கள் கூறுகின்றார்கள்: இது மிக நல்லது, இது மிக நல்லது. நான் இதனை செய்வேன், அதனை செய்வேன். நான் எனது வாழ்வையே யக்ஞத்திற்காக கொடுப்பேன். எவ்வாறாயினும், அவர்கள் இன்று இங்கில்லை. உங்கள் யுத்தம் மாயைக்கு எதிரானது. மாயைக்கு எதிராக எவ்வாறு யுத்தம் இடம்பெற முடியும் என எவருக்கும் தெரியாது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் ஒவ்வொருவரதும் மூன்றாம் ஞானக் கண்ணை திறந்திருக்கின்றார். அதனைக் கொண்டே நீங்கள் இருளில் இருந்து ஒளிக்குள் வந்திருக்கிறீர்கள். ஆத்மாக்களுக்கு மாத்திரமே இந்த ஞானக் கண் கொடுக்கப்படுகின்றது. ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். எல்லையற்ற தந்தையை நினைவுசெய்யுங்கள்! பக்தி மார்க்கத்தில் நீங்கள் நினைவுசெய்தீர்கள். நீங்கள் கூறுவதுண்டு: நீங்கள் வரும் போது, நான் என்னை உங்களிடம் அர்ப்பணிப்பேன். உங்களை நீங்கள் எவ்வாறு அர்ப்பணிப்பீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அதனை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் எவ்வாறு ஆத்மாக்களோ தந்தையும் ஓர் ஆத்மாவே. தந்தையின் பிறப்பு அலௌகீகமானது (சூட்சுமமானது). அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு கற்பிக்கின்றார். நீங்களே கூறுகிறீர்கள்: ஒவ்வொரு சக்கரத்திலும் எங்கள் தந்தை ஆகுகின்ற அதே தந்தையே இவராவார். நாங்கள் கூறுகின்றோம்: பாபா, பாபா! தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, குழந்தைகளே! ஒரு ஆசிரியரைப் போன்றே அவர் எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். வேறு எவராலும் இராஜயோகம் கற்பிக்க முடியாது. அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். ஆகையால், நீங்கள் அத்தகைய தந்தைக்கு உரியவராகி, அத்தகைய ஆசிரியரிடமிருந்து கற்பித்தல்களை பெறுங்கள். நீங்கள் உள்ளார்ந்தமாக, சந்தோஷத்தில் பொங்கி எழ வேண்டும். ஒருவர் அழுக்காகி விட்டால், அந்தளவிற்கு சந்தோஷம் இருக்க முடியாது. சிலரைப் பொறுத்தவரையில், நீங்கள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும், அவர்கள் உங்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை போலாக உள்ளது. இங்கே, மனிதர்களுக்கு பல குடும்பப் பெயர்கள் உள்ளன! உங்கள் குடும்பப் பெயர் எவ்வளவு சிறப்பாக உள்ளதெனப் பாருங்கள்! இவர் அனைவரிலும் அதி மகத்துவமானவர்: கொள்ளுப்பாட்டனாரான பிரம்மா. அவரை எவருக்கும் தெரியாது. சிவபாபா சர்வவியாபி என்று கூறுவது மட்டுமல்ல, எவரும் பிரம்மாவை பற்றி எதுவும் புரிந்து கொண்டிருக்கவில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் படங்களும் உள்ளன. பிரம்மா சூட்சும உலகில் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரின் வாழ்க்கை சரிதத்தை அவர் சற்றேனும் அறியாதுள்ளார்கள்! அவர்கள் பிரம்மாவை சூட்சும உலகில் காட்டுகின்றார்கள். எனவே, பிரஜைகளின் தந்தையான பிரம்மா எங்கிருந்து வருகின்றார்? அங்கிருந்து அவர் குழந்தைகளை தத்தெடுக்கின்றாரா? எவரும்; எதனையும் புரிந்து கொள்வதில்லை. மக்கள் பிரஜாபிதா பிரம்மாவை பற்றி பேசுகின்றார்கள். ஆனால் அவரின் வாழ்க்கை சரிதத்தை அவர்கள் அறியாதிருக்கின்றார்கள். இது பாபாவின் இரதம் என அதாவது இவரின் பல பிறவிகளின் பின்னர் அவரின் சரீரத்தை ஆதாரமாக பாபா எடுத்திருப்பதாக விளங்கப்படுத்தியுள்ளார். இந்த அதிமேன்மையான சங்கமயுகமான இப்பொழுதே கீதையின் அத்தியாயம் ஆகும். தூய்மையே பிரதான விடயமாகும். தூய்மையற்றவரில் இருந்து எவ்வாறு தூய்மை ஆகுவது என்பதை உலகில் உள்ள எவருமே புரிந்து கொள்ளாதிருக்கிறார்கள். சாதுக்களும் புனிதர்களும் என்றுமே கூறுவதில்லை: ‘உங்கள் சரீரம் உட்பட அனைத்தையும் மறந்திடுங்கள், ஒரேயொரு தந்தையை நினைவுசெய்தால் மாயையின் செல்வாக்கினால், நீங்கள் செய்த சகல பாவச் செயல்களும் முற்றாக எரிந்து விடும்.’’ எந்த ஒரு குருவினாலும் இவ்வாறு கூற முடியாது. இவர் எவ்வாறு பிரம்மா ஆகுகின்றார் என தந்தையால் கூற முடியாது. அவரின் குழந்தை பருவத்தில், அவர் ஒரு கிராமியச் சிறுவனாக இருந்தார். அவர் முதற் பிறவியிலிருந்து இறுதி பிறவி வரை 84 பிறவிகளை எடுத்துள்ளார். ஆகையால், புதிய உலகம் பழையதாகின்றது. குழந்தைகளாகிய உங்கள் புத்திகளின் பூட்டு இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. உங்களால் இதனை உங்களால் புரிந்து கொண்டு, கிரகிக்க முடிகின்றது. நீங்கள் இப்பொழுது விவேகமானவர் ஆகியுள்ளீர்கள். முன்னர், நீங்கள் விவேகமற்றவர்களாக இருந்தீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் விவேகமானவர்கள் ஆவார்கள், ஆனால் இங்குள்ளவர்கள் விவேகமற்றவர்கள். உங்கள் முன்னிலையிலுள்ள படத்தை பாருங்கள். அவர்கள் வைகுந்தத்தின் அதிபதிகள், அப்படித்தானே? கிருஷ்ணர் சுவர்க்க அதிபதி ஆவார். அவர் பின்னர் கிராமத்துச் சிறுவன் ஆகுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இதனை கிரகித்து, நிச்சயமாக தூய்மை ஆக வேண்டும். தூய்மையே பிரதானமாகும். சிலர் எழுதவும் செய்கின்றார்கள்: பாபா, மாயை என்னை விழச் செய்து விட்டாள். எனது கண்கள் குற்றமானதாக ஆகிவிட்டது! தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அவ்வளவே! நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். உங்கள் ஜீவனோபாயத்திற்காக நீங்கள் இன்னமும் சொற்ப காலத்திற்கே செயற்பட வேண்டும், அதன் பின்னர் நாங்கள் வீட்டிற்கு திரும்;பிச் செல்வோம். இப் பழைய உலகின் விநாசத்திற்கான யுத்தம் இடம்பெறும். அது எவ்வாறு இடம்பெறும் என பொறுத்திருந்து பாருங்கள். நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை உங்கள் புத்தி புரிந்து கொள்கின்றது. ஆகையால், உங்களுக்கு நிச்சயமாக புதிய உலகம் தேவையாகும். ஆகையாலேயே விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும். நாங்கள் ஸ்ரீமத்தை பின்பற்றுவதன் மூலம் எங்கள் புதிய உலகை நாங்கள் ஸ்தாபிக்கின்றோம். தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் சேவையில் பிரசன்னமாகியுள்ளேன். தூய்மையற்றவர்களான உங்களை தூய்மையானவர்கள் ஆக்குவதற்காக வருமாறு என்னை நீங்கள் அழைத்தீர்கள். நீங்கள் என்னை வருமாறு வேண்டியதால், நான் வந்திருக்கின்றேன். நான் உங்களுக்கு மிகவும் இலகுவான வழியை காட்டுகின்றேன்: மன்மனபவ! இது கடவுளால் பேசப்பட்டது, ஆனால் அவர்கள் கிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். கிருஷ்ணர் தந்தைக்கு அடுத்தவர் ஆவார். அவரே பரந்தாமத்தின் அதிபதி ஆவார், ஆனால் இவர் உலக அதிபதி ஆவார். சூட்சும உலகில் எதுவும் இடம்பெறுவதில்லை. அனைவரிலும் முதலாமவர் கிருஷ்ணர் ஆவார். அனைவரும் அவர் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கின்றார்கள். ஏனைய அனைவரும் பின்னரே வருகின்றார்கள். அனைவராலும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்றில்லை. ஆகையால், இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் உங்கள் எலும்புகளில் ஆழமான சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். போலியான சந்தோஷத்தினால் பயனில்லை. வெளியிலுள்ள வெவ்வேறான வகையான குழந்தைகள் பாபாவிடம் வருகின்றார்கள். அவர்கள் என்றுமே தூய்மையாக இருந்ததில்லை. பாபா அவர்களில் ஒருவரிடம் வினவினார்: நீங்கள் விகாரத்தில் ஈடுபடுகிறீர்கள், இருப்பினும் ஏன் இங்கே வருகின்றீர்கள்? அவர் பதிலளித்தார்: நான் என்ன செய்வது? என்னால் வராது இருக்க முடியவில்லை. நான் ஒவ்வொரு நாளும் வருகின்றேன், ஏனெனில், ஏதோ ஒருநாள், அம்பு இலக்கைத் தாக்கக்கூடும். உங்களைத் தவிர, வேறு யார் எனக்கு சற்கதி அருள முடியும்? அவர் வந்து இங்கே அமர்ந்திருந்து விட்டு செல்வதுண்டு. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் ஆவாள். அவரை பாபா தூய்மையற்றவரில் இருந்து தூய்மையாக்குகின்றார் என்றும் அழகான மலராக ஆக்குகின்றார் என்றும் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார், அவரால் என்ன செய்ய முடியும்? குறைந்தபட்சம் அவர் உண்மையையேனும் கூறுகின்றார். அவர் நிச்சயமாக இப்பொழுது சீரடைந்திருப்பார். இங்கு மட்டுமே அவரால் சீராக முடியும் என்ற நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், பல நடிகர்கள் இருக்கிறார்கள். ஒருவரின் முகச்சாயலைப் போன்று இன்னொருவருடையது இருக்க முடியாது. ஒரு சக்கரத்தின் பின்னர், மீண்டும் உங்கள் பாகத்தை அதே முகச் சாயலுடன் நீங்கள் நடிப்பீர்கள். ஆத்மாக்கள் அனைவரது பாகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் அனைவரும் தொடர்ந்தும் தமது பாகங்களை மிகச்சரியாக நடிக்கின்றார்கள். சிறிதளவேனும் வேறுபாடு இருக்க முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் அழியாதவர்கள், அவர்களுக்குள் அழியாததொரு பாகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட வேண்டும். இது உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தப்பட்ட போதும், நீங்கள் மறக்கிறீர்கள். உங்களால் பிறருக்கு விளங்கப்படுத்த முடியாதுள்ளது. இதுவும் நாடகத்தில் இடம்பெற வேண்டும். இந்த இராச்சியம் ஒவ்வொரு சக்கரத்திலும் ஸ்தாபிக்கப்பட வேண்டும். வெகுசிலரே சத்தியயுகத்திற்கு பிரவேசிக்கின்றார்கள், அவர்களும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றார்கள். இங்கும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. உங்கள் ஒவ்வொருவருக்கு மட்டுமே உங்கள் சொந்த பாகத்தை அறிய முடியும். வேறு எவராலும் அதனை அறிய முடியாது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உண்மையான தந்தையுடன் எப்பொழுதும் நேர்மையாக இருங்கள். உங்களை முற்றாக தந்தையிடம் ;அர்ப்பணியுங்கள்.
2. ஞானத்தை கிரகித்து விவேகமானவர் ஆகுங்கள். உங்களுக்குள் ஆழமான சந்தோஷத்தை பேணுங்கள். ஸ்ரீமத்திற்கு எதிராக எதனையேனும் செய்து, உங்கள் சந்தோஷத்தை இழக்காதீர்கள்.ஆசீர்வாதம்:
ஞானத்தின் ஆழமான விடயங்களை செவிமடுக்கின்ற ஞானம் நிறைந்த ஆத்மாவாக இருந்து அதன் சொரூபம் ஆகுவீர்களாக.ஞானம் நிறைந்த ஆத்மாக்கள், ஒவ்வொரு ஞான விடய வடிவத்தையும் அனுபவம் செய்கின்றார்கள். அவற்றை நீங்கள் செவிமடுத்து அவற்றை ஆழமாக இனங்காணுவதைப் போன்று, இவ்விடயங்களை செவிமடுப்பதுடன் அவற்றை உங்களுக்குள் அமிழ்;த்திக் கொள்ளுங்கள். அதாவது, நீங்கள் அவற்றின் வடிவமாக வேண்டும். இந்த பயிற்சியும் இருக்க வேண்டும். ‘ ஆத்மாவான நான் அசரீயானவன்’. நீங்கள் மீண்டும் மீண்டும் இதனை செவிமடுத்தால், ஆனால் அதனை நீங்கள் அசரீரியான ஸ்திதியின் அனுபவத்துடன் செவிமடுக்க வேண்டும். கருத்துக்கு ஏற்ப, உங்கள் அனுபவம் இருக்கட்டும். இதனை செய்வதனால், உங்கள் கணக்கில் நீங்கள் தூய எண்ணங்களை சேமித்துக் கொள்வதுடன், உங்கள் புத்தி இதனுடன் மும்முரமாக இருக்கும் போது, உங்களால் இலகுவாக வீணான எண்ணங்களிலிருந்து விலகியிருக்க முடியும்.
சுலோகம்:
ஞானத்தினதும் அனுபவத்தினதும் இரட்டை அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள் போதையுடைய யாசகர்கள், அதாவது பறக்கின்ற யோகிகள் (மாஸ்ட் ஆண்டிகளும் ரம்டா யோகிகளும்)