21.01.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் சர்வசக்திவான் தந்தையிடமிருந்து சக்தியை எடுத்துக் கொள்வதற்கு வந்துள்ளீர்கள். அதாவது உங்கள் விளக்கினுள் ஞானம் எனும் எண்ணையை ஊற்றுவதற்காக வந்துள்ளீPர்கள்.

கேள்வி:
ஏன் சிவனின் ஊர்வலத்திற்கு புகழ் இருக்கின்றது?

பதில்:
சிவபாபா திரும்பிச் செல்கின்றபோது, ஆத்மாக்கள் அனைவரும் கூட்டமாக அவரின் பின்னால் ஓடிச்செல்வதால் ஆகும். பரந்தாமத்தில் ஆத்மாக்கள் தேன்கூடு போன்ற வடிவத்தில் இருக்கின்றார்கள். தூய்மையாகியுள்ள குழந்தைகளாகிய நீங்கள், தந்தையுடன் திரும்பிச் செல்வீர்கள். அவரது சகவாசத்தினால் ஊர்வலத்திற்கு புகழ் இருக்கின்றது.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் முதலில் ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் அனைவரும் சகோதரர்கள், அவர் எங்கள் அனைவரதும் தந்தையாவார். அவர் சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். நீங்கள் சகல சக்திகளையும் கொண்டிருந்து, உலகை ஆட்சி செய்தீர்கள் பாரதத்தில் அந்தத் தேவர்களின் இராச்சியம் இருந்தது, அதாவது குழந்தைகளாகிய உங்களின் இராச்சியமாக இருந்தது. நீங்கள் தூய தேவர்களாக இருந்தீர்கள். அது உங்களுடைய குலம் அல்லது வம்சமாகும். அவர்கள் அனைவரும் விகாரமற்றவர்கள். யார் விகாரமற்றவர்களாக இருந்தார்கள்? ஆத்மாக்களே, விகாரமற்றவர்களாக இருந்தார்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை விகாரமற்றவர்கள் ஆகின்றீர்கள். இது நீங்கள் சர்வசக்திவான் தந்தையை நினைவு செய்து, அவரிடமிருந்து சக்தியைப் பெறுவது போன்றதாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகளுக்கான பாகங்களை நடிக்கின்றீர்கள் என தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் கொண்டிருந்த சதோபிரதான் சக்தியை நாளுக்கு நாள் தொடர்ந்து இழக்கின்றீர்கள். ஒரு பற்றரியிலுள்ள சக்தி குறைகின்ற போது, கார் நின்றுவிடும்; பற்றரி பின்னர் சக்தியூட்டப்படும், அவ்வாறே நீங்களும் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகின்றீர்கள். ஆத்மாவினுடைய பற்றரி ஒருபோதும் முழுமையாக சக்தியிழப்பதில்லை. சிறிதளவு சக்தி எப்போதும் மீதமிருக்கும். ஒருவர் இறக்கின்ற போது, மண்ணினாலான விளக்கு ஏற்றப்படுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் அதனினுள் எண்ணையை ஊற்றுகின்றார்கள். அதனால் அது அணையமாட்டாது. பற்றரியின் சக்தி குறைவடைகின்ற போது, அது மறுபடியும் சக்தியூட்டப்படுகின்றது. நீங்களும் சர்வசக்திகளும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள் என குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை புத்தியின் யோகத்தை சர்வசக்திவான் தந்தையுடன் இணைக்கின்றீர்கள். அதனால் அவருடைய சக்தி உங்களினுள் பிரவேசிக்கின்றது. ஏனெனில், உங்களுடைய சக்தி குறைவடைந்து விட்டது. ஒரு சிறிதளவு சக்தி நிச்சயமாக இருக்கும். முழுமையாக முடிவடைந்திருந்தால், சரீரமும் இருக்கமாட்டாது. தந்தையை நினைவு செய்வதன் மூலம், ஆத்மா சம்பூரண தூய்மையாகின்றார். சத்தியயுகத்தில் உங்களுடைய பற்றரி முழுமையாகச் சக்தி ஊட்டப்பட்டிருக்கும். பின்னர் சிறிது சிறிதாக அது குறைவடைகின்றது. திரேதாயுகம் வரை அது மெதுவாக் குறைவடைகின்றது. அதுவும் கலைகள் என்று அழைக்கப்படுகின்றது. பின்னர் சதோபிரதானாக இருந்த ஆத்மாக்கள், சதோ ஸ்திதியை அடைகின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. அவர்களுடைய சக்தி குறைவடைகின்றது. நீங்கள் சத்தியயுகத்தில் மனிதர்களிலிருந்து, தேவர்களாகுகின்றீர்கள் எனப்புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் தமோபிரதானிலிருந்து, சதோபிரதானாகுவீர்கள். நீங்கள் தமோபிரதானாகி, சக்தி இழந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது மீண்டும் ஒரு முறை தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் முழு சக்தியையும் பெறுகின்றீர்கள். உங்கள் சரீரமும் சரீர உறவினர்கள் அனைவரும் முடியப்போகின்றனர் என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பின்னர் நீங்கள் எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுவீர்கள். தந்தை எல்லையற்றவர் எனவே அவர் உங்களுக்கு எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்கள், உங்களிடம் மிகச்சிறிதளவு சக்தியே உள்ளது. ஓ குழந்தைகளே, இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள்! நானே சர்வசக்திவான். நீங்கள் என்னிடமிருந்து சர்வசக்திகளும் நிறைந்த இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். சத்தியயுகத்தில் தேவர்கள் முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் தூய்மையாகவும், தெய்வீகுணங்கள் உடைவர்களாகவும், இருந்தார்கள். அவர்களிடம் எந்த தெய்வீக குணங்களும் இப்போது இல்லை. ஒவ்வொருவரது பற்றரியும் இப்பொழுது முழுமையாக சக்தி இழந்து விட்டது. ஓவ்வொருவரினதும் பற்றரியும் இப்பொழுது சக்தியூட்டப்படுகின்றது. பரமதந்தை, பரமாத்மாவுடன் யோகம் செய்யாது, எவருடைய பற்றரியும் இப்பொழுது சக்தியூட்டப் படமாட்டாது. அந்தத் தந்தை என்றென்றும் தூய்மையானவர். இங்கு அனைவரும் தூய்மையற்றவர்கள். நீங்கள் தூய்மையாக இருக்கின்றபோது, உங்களுடைய பற்றரி சக்தியூட்டப்பட்டிருக்கும். எனவே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஒருவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! அதிமேலானவர் கடவுளாவார். மீதி அனைவரும் படைப்புக்களேயாவர். படைப்புகள் ஒரு போதும் படைப்புகளிடமிருந்து ஆஸ்தியைப் பெறமுடியாது. படைப்பவர் ஒருவர் மாத்திரமே இருக்கின்றார். அவர் எல்லையற்ற தந்தையாவார். ஏனைய அனைத்து தந்தைமார்கள் எல்லைக்குட்பட்டவர்கள். எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதன்மூலம், நீங்கள் எல்லையற்ற அரசுரிமையைப் பெறுகின்றீர்கள். ஆகையினால் பாபா புதிய உலகாகிய சுவர்க்கத்தை உங்களுக்காக ஸ்தாபிக்கின்றார் என உங்கள் இதயத்தால் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொள்கின்றீர்கள். நாடகத்திட்டதிற்கேற்ப சுவர்க்கம் ஸ்தாபிக்கப்டுகின்றது. சத்தியயுகம் வரப்போகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் சதா சந்தோஷம் இருக்கின்றது. எவ்வாறு அதை நீங்கள் பெறுகின்றீர்கள்? தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள் நான் என்றென்றும் தூய்மையானவர். நான் ஒரு மனித சரீரம் எடுப்பதில்லை. நான் ஒரு தேவசரீரத்தையோ அல்லது மனிதசரீரத்தையோ எடுப்பதில்லை. அதாவது நான் பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் பிரவேசிப்பதில்லை. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு சுவர்க்க அரசுரிமையைக் கொடுப்பதற்காக அவரது 60 வது வயதில் ஓய்வு ஸ்திதியை அடைகின்றபோது அவரது சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். இவரே முற்றிலும் சதோபிரதானிலிருந்து, தமோபிரதானாகியவராவார். அதிமேலான கடவுள் முதல் எண்ணிக்கையானவர் எனவும், பின்னர் நீங்கள் காட்சிகளைப் பெறகின்ற சூட்சும உலகவாசிகளான பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இருக்கின்றனர். எனவும் கூறப்படுகின்றது. சூட்சும உலகம், எந்த ஒரு பௌதீக சரீரமும் இல்லாத நடுவிலுள்ள உலகமாகும். சூட்சும சரீரங்களை தெய்வீகக் காட்சிகள் மூலமே காணமுடியும். மனிதஉலகம் இங்கேயே இருக்கின்றது. எவ்வாறாயினும், அவர்கள் காட்சிகளுக்கான தேவதைகளாவர். இறுதியில் நீங்கள் சம்பூரணதூய்மையாகும் போது குழந்தைகளாகிய உங்களுடைய காட்சிகள் இருக்கும்; நீங்கள் அவ்வாறான தேவதைகள் ஆகுவீர்கள். பின்னர் நீங்கள் சத்தியயுகத்திற்கு வந்து, உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இந்த பிரம்மா, விஷ்ணுவை நினைவு செய்வதில்லை. இவர் சிவபாபாவை நினைவு செய்து விஷ்ணு ஆகுகின்றார். ஆகையினால் நீங்கள் இதைப்புரிந்து கொள்ளவேண்டும். எவ்வாறு அவர்கள் இராச்சியத்தைக் கோரினார்கள்? அங்கே யுத்தம் போன்ற எதுவுமில்லை. தேவர்கள் எவ்வாறு வன்முறையானவர்களாக இருக்க முடியும்? சிலர் இதை நம்புகின்றார்களோ அல்லது நம்பவில்லையோ, குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவு செய்து, உங்கள் இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். இது கீதையிலும் கூறப்பட்டுள்ளது. ஓ குழந்தைகளே உங்களுடைய சரீரத்தையும், சரீரசமயங்கள் அனைத்தையும் துறந்து சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! அவர் பற்றுவைப்பதற்கு கடவுளுக்கு ஒரு சரீமில்லை. அவர்கூறுகின்றார்: நான் குறுகிய காலத்திற்கு இவரின் சரீரத்தைக்கடனாக எடுக்கின்றேன். வேறு எவ்வாறு நான் ஞானத்தைக் கொடுக்கமுடியும்? நானே விதையாவேன். நான் முழுவிருட்சத்தின் ஞானத்தையும் கொண்டிருக்கிறேன். வேறு எவரும் இதை அறியமாட்டார்கள். உலகின் காலவரையறை எவ்வளவு நீண்டது? எவ்வாறு அது ஸ்தாபனையாகி, பராமரிக்கப்பட்டு, அழிக்கப்டுகின்றது? மனிதர்கள் இதை அறிந்து கொள்ளவேண்டும். மனிதர்களே கற்கின்றார்கள், மிருகங்கள் கற்கப்போவதில்லை. அந்த மக்கள் எல்லைக்குட்பட்ட கல்வியைக் கற்கின்றார்கள். தந்தை உங்களுக்கு எல்லையற்ற கல்வியைக் கற்பித்து, அதன் மூலம் அவர் உங்களை எல்லையற்றதின் அதிபதிகள் ஆக்குகின்றார். எனவே, எந்த ஒரு மனிதரோ, அல்லது சரீரதாரிகளோ கடவுள் என அழைக்கபடமுடியாது என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பிரம்மா, விஷ்ணு சங்கரர் சூட்சும சரீரங்களை கொண்டுள்ளனர். அவர்களுடைய பெயர் முற்றிலும் வித்தியாசமானது. அவர்கள் கடவுள் என அழைக்கப் படமுடியாது. இந்த சரீரம், இந்த தாதாவின் ஆத்மாவின் சிம்மாசனமாகும். அமரத்துவ சிம்மாசனமும் இருக்கின்றது. இது இப்பொழுது அமரத்துவ ரூபமான தந்தையின் சிம்மாசனமாகும். அவர்கள் அமிர்தசரசில் அமரத்துவ சிம்மாசனத்தை வைத்திருக்கின்றார்கள். பிரபல்யமான மக்கள் அங்கே சென்று அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்கின்றார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்த சரீரங்கள் அனைத்தும் அமரத்துவமான ஆத்மாக்ககளின் சிம்மாசனமாகும். ஆத்மா அமரத்துவமானவர், மரணத்தினால் விழுங்க முடியாதவர். எவ்வாறாயினும், சிம்மாசனம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும். இந்த அமரத்துவ ருபமான இந்த ஆத்மா இந்த சிம்மாசனத்தில் அமர்கின்றார். முதலில், சிம்மாசனம் சிறியதாகும், பின்னர் அது வளர்கின்றது. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு, இன்னொன்றை எடுக்கின்றார். ஆத்மா அமரத்துவமானவர், ஆனால் நல்ல தீய சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கின்றார். இதனாலேயே கூறப்பட்டுள்ளது. அது அவரது கர்மத்தின் பலனாகும். ஆத்மாக்கள் ஒருபோதும் ஆழிக்கப்படுவதில்லை. ஆத்மாக்களின் தந்தை ஒருவரே இருக்கின்றார். நீங்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாபா, சமயநூல்களிலுள்ள விடயங்களை உங்களுக்கு கூறுகின்றாரா? சமயநூல்கள் போன்றவற்றை கற்பதனால் எவரும் வீடு திரும்ப முடியாது. இறுதியில் அனைவரும் வெட்டுக்கிளிகளின் அல்லது தேனீக்களின் கூட்டம் போன்று வீட்டுக்குத் திரும்புவார்கள். தேனீக்களில் இராணித்தேனீயும் இருக்கின்றது. அவை அனைத்தும் அவளை பின்தொடரும். தந்தை திரும்பிச் செல்கின்றபோது அனைத்து ஆத்மாக்களும் அவரின் பின்னால் செல்வார்கள். பரந்தாமத்தில் அனைத்து ஆத்மாக்களும் தேன்கூடு போன்ற வடிவத்தில் இருக்கின்றார்கள். ஆனால் இங்கே மனிதர்களின் கூட்டம் இருக்கின்றது. இந்தக்கூட்டமும் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பி ஓடவேண்டும். தந்தை வந்து ஆத்மாக்கள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச்செல்வார். சிவனின் ஊர்வலம் நினைவு கூரப்படுகின்றது. நீங்கள் குழந்தைகள் அல்லது மணவாட்டிகள் என அழைக்கப்படலாம். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு கல்வி கற்பித்து நினைவு யாத்திரையையும் கற்பிக்கின்றார். தூய்மையாகாமல் ஒரு ஆத்மாவால் வீடு திரும்பமுடியாது. நீங்கள் தூய்மையாகும் போது, நீங்கள் முதலில் அமைதிதாமத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் அனைவரும் அங்கு சென்று வசிப்பீர்கள் பின்னர் நீங்கள் படிப்படியாக அங்கிருந்து இங்கு வருகின்றபோது உங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நீங்கள் தந்தையின் பின்னால் முதலில் போவீர்கள். நீங்கள் தந்தையுடன் யோகம் செய்கின்றீர்கள். அல்லது மணவாட்டிகளாகிய நீங்கள் மணவாளனுடன் யோகம் செய்கின்றீர்கள். ஒரு இராச்சியம் உருவாக்கப்பட வேண்டும் நீங்கள் அனைவரும் ஒன்றாக கீழே வரமாட்டீர்கள். அங்கே அது அனைத்து ஆத்மாக்களின் உலகமாகும். நீங்கள் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாக கீழே வருவீர்கள். மரம் மெதுவாகவே வளரும். முதலில் அங்கே தந்தை ஸ்தாபித்த ஆதிசனாதன தேவி, தேவதாதர்மம் இருக்கும். அவர் முதலில் எங்களை பிராமணர்கள் ஆக்குகின்றார். அவர் பிரஜாபிதா பிரம்மா ஆவார். அவரது மக்களாகிய நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகின்றீர்கள். பல பிரம்மகுமாரர்கள், பிரம்மகுமாரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் நிச்சயமாக புத்தியில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள், இதனாலேயே அவர்களில் பலர் இருக்கின்றனர். எத்தனை பிராமணர்கள் இருக்கின்றார்கள்? பலமானவர்களும் பலவீனமானவர்களும்? சிலர் 99 வீதமான புள்ளிகளைப் பெறுகின்றார்கள், மற்றவர்கள் 10 வீதமான புள்ளிகளையே பெறுகின்றார்கள். எனவே அவர்கள் பலவீனமானவர்கள் என்றே அர்த்தமாகும். உங்களுக்குள்ளேயும் பலமானவர்கள் நிச்சயமாக ஆரம்பத்தில் வருவார்கள் ஆனால் பலவீனமானவர்கள் இறுதியிலேயே வருவார்கள். இது நடிகர்களின் உலகம், இது தொடர்ந்து சத்தியயுகம், திரேதாயுகம், என சுழலும். இப்பொழுது இது அதி மேன்மையான சங்கமயுகமாகும். தந்தை இப்பொழுது இதை எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். முன்னர் நாங்கள் சக்கரத்தின் காலவரையறை நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் எனத் தவறாகப்புரிந்து கொண்டோம். தந்தை இப்பொழுது முழுச்சக்கரமும் 5000 வருடங்கள் என எங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அரை கல்பத்திற்கு இது இராம இராச்சியமாகவும், மீதி அரை கல்பத்திற்கு இராவண இராச்சியமாகவும் இருக்கும். கல்பம் நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததினால் அது அரை, அரைவாசியாக இருந்திருக்க முடியாது. சந்தோஷமும் துன்பமும் உலகில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த எல்லையற்ற ஞானத்தை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகின்றோம். சிவபாபா சரீரத்துக்கான பெயரைக் கொண்டிருப்பதில்லை. இந்த சரீரம் இந்த தாதாவுக்கு சொந்தமானது. பாபா எங்கே? பாபா இந்த சரீரத்தை குறுகிய காலத்திற்குக் கடனாக எடுத்துள்ளார். பாபா கூறுகின்றார்: எனக்கு ஒரு வாய் தேவை இங்கும் (அபுவில்) கூட கௌமூக் (பசுவின்வாய்) உருவாக்கப்பட்டுள்ளது. மலைகளிலிருந்து தண்ணீர் எங்கும் பாய்கின்றது. அவர்கள் இங்கே தண்ணீர் பாய்கின்ற இடங்களில் பசுக்களின் வாயை கண்டுபிடித்துள்ளார்கள். அவர்கள் அதை கங்கையின் நீராகக் கருதுகின்றார்கள். எவ்வாறு கங்கைகள் இங்கு வரமுடியும்? அந்த விடயங்கள் அனைத்தும் பொய்யானவையாகும். சரீரமும் பொய்யானது, மாயையும் பொய்யானது, உலகமும் பொய்யானது எனக்கூறப்பட்டுள்ளது. பாரதம் சுவர்க்கமாக இருந்தபோது அது சத்தியபூமி என அழைக்கப்படுகின்றது. பின்னர் பாரதம் பழையதாகின்றபோது அது பொய்மையான பூமி என அழைக்கப்படுகின்றது. இந்தப்பொய்யான பூமியில் இருக்கும் அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆகும்போது அவர்கள் கூவி அழைக்கின்றார்கள். பாபா எங்களைத் தூய்மையாக்கி, இந்தப்பழைய உலகிலி இருந்து அப்பால் எடுத்துச் செல்லுங்கள்! தந்தை கூறுகின்றார்: எனது குழந்தைகள் அனைவரும் காமச் சிதையில் அமர்;ந்ததால் அவலட்சணமாகி விட்டார்கள். தந்தை இங்கே இருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள், இல்லையா? நீங்கள் அதை நினைவு செய்கின்றீர்களா? அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் முழு உலகிற்கும் விளங்கப்படுத்துவில்லை. அவர் உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். அதனால், உங்களுடைய தந்தை யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த உலகம் முட்காடு என அழைக்கப்படுகின்றது. உங்களைக்குத்திய பெரிய முள் காமமாகும். சைவ உணவு உண்கின்ற பல பக்தர்கள் இங்கு இருந்தபோதிலும் அவர்கள் விகாரத்தில் ஈடுபடாமல் இருப்பதில்லை. பிறப்பிலிருந்தே பிரமச்சாரியாக பலர் இருக்கின்றார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்கள் தூய்மையற்ற உணவை உண்பதில்லை. சந்நியாசிகளும் கூறுகின்றார்கள் விகாரமற்றவர்கள் ஆகுங்கள்! அவர்கள் மக்களை எல்லைக்குட்பட்ட துறவறத்தை மேற்கொள்ளுமாறு தூண்டுகின்றார்கள்.. அவர்கள் தமது அடுத்த பிறவியில் குடும்பத்தவர்களுக்கு பிறந்து பின்னர் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் விட்டுச்சென்று விடுகின்றார்கள். கிருஷ்ணர் போன்ற தேவர்கள் தங்களுடைய குடும்பத்தையும் வீட்டையும் விட்டுச் செல்கின்றார்களா? இல்லை! அவர்களுடைய துறவு எல்லைக்குட்பட்டது, ஆனால் உங்களுடைய துறவு எல்லையற்றதாகும். நீங்கள் உங்கள் உறவினர்கள் அனைவரும் உட்பட முழுஉலகையும் துறக்கின்றீர்கள். உங்களுக்காக சுவர்க்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது உங்களுடைய புத்தி சுவர்க்த்தையே நோக்கிச்செல்ல வேண்டும். எனவே நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யவேண்டும். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! மன்மனாபவ! மத்தியாஜிபவ! ஆதனால் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். இது கீதையின் அதே அத்தியாயமாகும் இதுவும் சங்கமயுகமாகும். சங்கமயுகத்தில் மாத்திரமே நான் வந்து உங்களுடன் இந்த ஞானத்தைப் பேசுகின்றேன். முன்னைய கல்பத்திலும் சங்கமயுகத்தில் நான் உங்களுக்கு நிச்சயமாக இராஜயோகத்தைக் கற்பித்தேன். இந்த உலகம் மாறி, நீங்கள் தூய்மையற்றவர்களில் இருந்து, தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். நாங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகின்ற இது, இப்பொழுது மேன்மையான சங்கமயுகமாகும். அனைத்தையும் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டு, உறுதியான நம்பிக்கை கொண்டிருங்கள். இதைக் கூறுவது ஒரு மனிதரல்ல. இது கடவுளின் மேன்மையான வழிகாட்டல்களான ஸ்ரீமத் ஆகும். மீதி அனைத்தும் மனிதர்களின் வழிகாட்டல்களாகும். மனிதர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றியதால், நீங்கள் வீழ்ந்து கொண்டே இருந்தீர்கள். இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்ற்றுவதனால் நீங்கள் மேலேறுகின்றீர்கள். தந்தை உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகின்றார். தேவர்களின் வழிகாட்டல்கள், சுவர்க்க வாசிகளின் வழிகாட்டல்களாகும். ஏனைய வழிகாட்டல்கள் நரகவாசிகளின் வழிகாட்டல்களாகும் அவை இராவணனின் வழிகாட்டல்கள் என அழைக்கப்படுகின்றன. இராவண இராச்சியமும் குறைந்தது இல்லை. இப்பொழுது முழு உலகின் மீதும் இராவண இராச்சியம் உள்ளது. இது ஒரு எல்லையற்ற தீவு(லங்கா) இதன் மீது இராவண இராச்சியம் உள்ளது. பின்னர் அது தேவர்களின் தூய இராச்சியமாகும். அங்கே அதிகளவு சந்தோஷம் இருக்கின்றது. சுவர்க்கத்தின் அதிகளவு புகழ்ச்சியும் உள்ளது. அவர்கள் இன்னார் இன்னார் சுவர்க்கத்திற்கு சென்று விட்டார் என்று கூறுகின்றார்கள். எனவே அவர் நிச்சயமாக நரகத்திலே இருந்திருக்க வேண்டும். அவர் நரகத்திலிருந்து சென்றிருந்தால், அவர் நிச்சயமாக நரகத்திற்கே திரும்புவார். இந்நேரத்தில் சுவர்க்கம் இருப்பதில்லை. இந்த விடயங்கள் எந்த சமய நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. தந்தை இப்பொழுது உங்களுக்கு அனைத்து ஞானத்தையும் கொடுத்து, உங்களது பற்றரியை சக்தியூட்டுகின்றார். மாயை பின்னர் உங்கள் தொடர்பை துண்டிக்கின்றாள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செய்ல்களில் தூய்மையாகி ஆத்மா எனும் பற்றரியை சக்தியூட்டுங்கள். உறுதியான பிராமணர் ஆகுங்கள்.

2. உங்கள் சொந்த மனதினதும், மற்றைய மனிதர்களினதும் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதைத் துறவுங்கள். ஒரே தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, உங்களை மேன்மையானவர்கள் ஆக்குங்கள். சதோபிரதானாகி, தந்தையுடன் வீட்டுக்குப் பறந்து செல்லுங்கள்.

ஆசீர்வாதம்:
ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலமாக, சகல பேறுகளினாலும் நிரம்பியவராகி, சந்தோஷம், சக்தி, வெற்றியை அனுபவம் செய்வீர்களாக.

நம்பிக்கை பொறுப்பாளர் என தம்மை கருதி, ஸ்ரீமத்திற்கு ஏற்ப தொடர்ந்தும் முன்னேறிச் செல்லும் குழந்தைகளும், ஸ்ரீமத்துடன் தமது சொந்தக் கட்டளைகளை அல்லது பிறரது கட்டளைகளை சற்றேனும் கலக்காதவர்களும் சதா சந்தோஷத்தை, சக்தியை, வெற்றியை அனுபவம் செய்வார்கள். நீங்கள் குறைவாக முயற்சி செய்தாலோ அல்லது அதிகளவு கடினமாக உழைக்காத போதும் அதிகளவு பெறுவீர்களாயின், நீங்கள் ஸ்ரீமத்தை மிகச்சரியாக பின்பற்றுகிறீர்கள் எனப்படுகின்றீர்கள். எவ்வாறாயினும் மாயை உங்கள் கட்டளைகளையும், பிறரது கட்டளைகளையும் கடவுளின் ஸ்ரீமத்துடன் இராஜரீகமாக கலப்பதால், உங்களால் சகல பேறுகளையும் அனுபவம் செய்ய முடியாதுள்ளது. இதற்கு பிரித்தறியும் சக்தியையும், தீர்மானிக்கும் சக்தியையும் கிரகித்தால் நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.

சுலோகம்:
தபஸ்ய சக்தியினால் பாக்கியத்தை அருள்பவரான தந்தையை தனக்கு உரியவராக ஆக்குபவரே ஒரு குழந்தையும், அதிபதியும் ஆவார்.