20.01.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இச்சங்கமயுகமே முழுச் சக்கரத்திலும் அதிமேன்மையான யுகமாகும். இந்த யுகத்திலேயே சக்கரீனின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் சதோபிரதான் ஆகுகிறீர்கள்.கேள்வி:
பல விதமான கேள்விகள் எழுவதற்கான காரணம் என்ன? அவை அனைத்துக்குமான தீர்வு என்ன?பதில்:
சரீர உணர்வு உள்ளபொழுது, சந்தேகம் உருவாக்கப்படுவதுடன், அதன் காரணமாக, பல விதமான கேள்விகள் எழுகின்றன. பாபா கூறுகிறார்: நான் உங்களுக்குக் கொடுத்துள்ள வியாபாரமான தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர் ஆகி, ஏனையோரையும் தூய்மையாக்குகின்றதில் நீங்கள் மும்முரமாக இருக்கும்பொழுதே, கேள்விகள் அனைத்தும் முடிவடையும்.
பாடல்:
உங்களை அடைந்ததும், நாங்கள் முழு உலகையும் அடைந்து விட்டோம். பூமி, ஆகாயம், ஏனைய அனைத்தும் எங்களுக்கு உரித்தாகுகிறது.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகள் எனக் கூறியவர் யார்? இதைக் கூறியவர் நிச்சயமாகவே ஆன்மீகத் தந்தையாக இருக்க வேண்டும். இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது தந்தையின் நேர் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள், அவர் பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துகிறார். இவ்வுலகிலுள்ள மனிதர்கள் எவராலும், ஆன்மீகத் தந்தையைத் தவிர எவராலும், அனைவருக்கும் அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்து, அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிக்க முடியாது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இதனாலேயே அவர்கள் துன்ப வேளையின்பொழுது, தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள், தந்தையின் நேர்முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். பாபா உங்களைச் சந்தோஷ தாமத்துக்குத் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்குகிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்களை நிலையான சந்தோஷ தாமத்தின் அதிபதிகளாக ஆக்குகின்ற தந்தையின் நேர்முன்னிலையில் நீங்கள் வந்துள்ளீர்கள். நேர்முன்னிலையில் செவிமடுப்பதற்கும், இதைத் தொலைவிலிருந்து செவிமடுப்பதற்கும் இடையில் பெரும் வேறுபாடுள்ளது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் நேருக்கு நேராகச் சந்திப்பதற்கு மதுவனத்துக்கு வருகிறீர்கள். மதுவனம் மிகவும் பிரபல்யமானதாகும். மதுவனத்தில் அவர்கள் கிருஷ்ணரின் ஓர் உருவத்தைக் காண்பித்துள்ளார்கள். எவ்வாறாயினும், கிருஷ்ணர் அங்கு இருப்பதில்லை. இதற்கு முயற்சி தேவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் திரும்பத் திரும்ப உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும். ஆத்மாவாகிய நான், தந்தையிடமிருந்து என்னுடைய ஆஸ்தியைக் கோருகிறேன். முழுச்சக்கரத்திலும் தந்தை ஒருமுறை மாத்திரமே வருகிறார். இச்சங்கமயுகமே, முழுச் சக்கரத்திலும், அதிகம் அழகான யுகமாகும். அது அதிமேன்மையான யுகம் என அழைக்கப்படுகிறது. மனிதர்கள் அனைவரும் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்ற, சங்கமயுகம் இதுவேயாகும். தற்சமயம், மனித ஆத்மாக்கள் அனைவரும் தமோபிரதானாக உள்ளார்கள், அவர்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகுகிறார்கள். நீங்கள் சதோபிரதானாக இருக்கும்பொழுது, நீங்கள் மேன்மையானவர்களாக இருக்கிறீர்கள். மனிதர்கள் தமோபிரதான் ஆகும்பொழுது, அவர்கள் சீரழிந்தவர்கள் ஆகுகிறார்கள். ஆகவே இப்பொழுது தந்தை வந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்துகிறார். சரீரமன்றி, ஆத்மாவே முழுப் பாகத்தையும் நடிக்கிறார். ஆதியில் ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி தாமமாகிய, அசரீரி உலகவாசிகள் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. எவருக்கும் இது தெரியாது, வேறு எவராலும் இதை விளங்கப்படுத்தவும் இயலாது. உங்கள் புத்தியின் பூட்டுக்கள் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் உண்மையிலேயே பரந்தாமத்தில் வசிக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்;துகொள்கிறீர்கள். அது அசரீரி உலகமும், இது பௌதீக உலகமுமாகும். இங்கு ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் நடிகர்கள் ஆவோம். நாங்களே முதலில் எங்கள் பாகங்களை நடிப்பதற்கு வருபவர்கள், பின்னர் ஏனைய அனைவரும் வரிசைக்கிரமமாகக் கீழே வருகிறார்கள். நடிகர்கள் அனைவருமே ஒரேநேரத்தில் வருவதில்லை. பல்வேறு விதமான நடிகர்கள் அனைவரும் தொடர்ந்தும் வருகிறார்கள். நாடகம் ஒரு முடிவுக்கு வரும்பொழுது மாத்திரமே, நீங்கள் அனைவரும் ஒன்றாக வருகிறீர்கள். ஆதியில் நீங்கள் அமைதி தாமவாசிகள் எனவும், நீங்கள் பின்னர் உங்கள் பாகங்களை நடிப்பதற்குக் கீழே வருகிறீர்கள் எனவும் ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது இனங்கண்டுகொள்தல் கொடுக்கப்படுகிறது. தந்தை தனது பாகத்தை நடிப்பதற்கு எல்லாவேளையிலும் வருவதில்லை. நாங்கள் மாத்திரமே எங்கள் பாகங்களை எல்லாவேளையிலும் நடிப்பதுடன், சதோபிரதானிலிருந்து தமோபிரதானாகவும் ஆகுகிறோம். அவரை நேரடியாகச் செவிமடுப்பதில் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெரும் பூரிப்பை அனுபவம் செய்கிறீர்கள். வெறுமனே முரளியை வாசிப்பதில் நீங்கள் அதிகளவு பூரிப்பை அனுபவம் செய்வதில்லை, ஏனெனில் நீங்கள் இங்கு பாபாவின் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். பாரதம் இறைவர்களினதும், இறைவிகளினதும் இடமாக இருந்தது என்பதையும், அது இப்பொழுது அவ்வாறில்லை என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்களால் அவர்களின் உருவங்களைப் பார்க்க முடியும், ஏனெனில் அது நிச்சயமாக அவ்வாறு இருந்தது. நாங்கள் அவ்விடத்து வாசிகளாக இருந்தோம். முதலில் நாங்கள் தேவர்களாக இருந்தோம். நீங்கள் உங்கள் பாகத்தை நினைவுசெய்வீர்கள், அல்லது அதை மறப்பீர்களா? தந்தை கூறுகிறார்: நீங்கள் இங்கு உங்கள் பாகங்களை நடித்தீர்கள். இதுவே நாடகமாகும். புதிய உலகம் நிச்சயமாகப் பழைய உலகமாக ஆகுகிறது. முதலில், ஆத்மாக்களாகிய நீங்கள் மேலிருந்து கீழே வரும்பொழுது, நீங்கள் சத்தியயுகத்தில் வருகிறீர்கள். இந்நேரத்தில் உங்கள் புத்தியில் இவ்விடயங்கள் அனைத்தும் உள்ளன. நீங்கள் சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியுமாக, உலக அதிபதிகளாக இருந்தீர்கள். உங்களுக்கு ஓர் இராச்சியம் இருந்தது, ஆனால் அந்த இராச்சியம் இப்பொழுது இல்லை. எவ்வாறு இராச்சியத்தை ஆட்சிசெய்வது என நீங்கள் இப்பொழுது கற்கிறீர்கள். அங்கு ஆலோசகர்கள் இல்லை. அங்கு எவருக்கும் ஆலோசனை கொடுக்க வேண்டிய தேவையில்லை, ஏனெனில் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், அவர்கள் அனைவரிலும் அதிமேன்மையானவர்களாக ஆகுகிறார்கள். அப்பொழுது அவர்களுக்கு வேறு எவரிடமிருந்தும் ஆலோசனை பெறத் தேவையில்லை. வேறு எவரிடமிருந்தாவது அவர்கள் ஆலோசனை பெற வேண்டியிருப்பின், அவர்களின் சொந்தப் புத்தி பலவீனமாக இருந்தது எனப் புரிந்துகொள்ளப்படும். இந்நேரத்தில் நீங்கள் பெறுகின்ற ஸ்ரீமத், சத்தியயுகத்திலும் இருக்கும். முதலில், அங்கு அரைக்கல்பத்துக்கு தேவ இராச்சியம் இருந்தது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது புத்துணர்ச்சியூட்டப்பட்டவராக ஆகுகிறீர்கள். பரமாத்மாவைத் தவிர எவராலும் ஆத்மாக்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். நீங்கள் அமைதி தாமத்;திலிருந்து வந்து, இங்கு “பேச்சினுள்” வந்துள்ளீர்கள். “பேச்சினுள்” வராது உங்களால் செயல்களைச் செய்ய முடியாது. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தையிடம் ஞானம் அனைத்தும் உள்ளதைப் போன்றே, ஆத்மாக்களாகிய உங்களிடமும் இந்த ஞானம் உள்ளது. ஆத்மா கூறுகிறார்: நான் இச்சரீரத்தை விட்டுநீங்கி, எனது சம்ஸ்காரங்களுக்கேற்ப, இன்னுமொன்றைப் பெறுகிறேன். நிச்சயமாக மறுபிறவி உள்ளது. ஆத்மாக்கள் தாங்கள் பெற்றுள்ள பாகங்கள் அனைத்தையும் தொடர்ந்தும் நடிக்கிறார்கள். தங்கள் சம்ஸ்காரங்களுக்கேற்ப, ஆத்மாக்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கிறார்கள். நாளுக்கு நாள், ஆத்மாக்களின் தூய்மையின் கலை தொடர்ந்தும் குறைவடைகிறது. “தூய்மையின்மை” என்னும் வார்த்தை துவாபர யுகத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. அப்பொழுதும் அங்கு நிச்சயமாகவே ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. நீங்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டும்பொழுது, ஒரு மாதத்தின் பின்னர், அங்கு நிச்சயமாகவே சிறிதளவு வேறுபாடு இருக்கும். பாபா உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியைக் கொடுப்பதற்கு வந்துள்ளேன். நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, ஓர் அந்தஸ்தைக் கோருவீர்கள். தந்தையைப் பொறுத்தவரையில், எவ்வித வேறுபாடும் இருப்பதில்லை. அவர் ஆத்மாக்களுக்குக் கற்பிக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். ஆத்மாக்களுக்குத் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கான ஓர் உரிமை உள்ளது. இங்கு ஆண் அல்லது பெண் என்னும் காட்சி கிடையாது. நீங்கள் அனைவரும் குழந்தைகள், நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள், தந்தை உங்களுக்குக் கற்பித்து, உங்களுடைய ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கிறார். தந்தை மாத்திரமே ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கூறுகிறார்: அன்பான, இனிமையிலும் இனிமையான, நீண்டகாலம் தொலைந்து, இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளே, நீங்கள் உங்கள் பாகங்களை நீண்ட காலமாக நடித்துள்ளீர்கள், இப்பொழுது இறுதியில் உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு என்னைச் சந்தித்துள்ளீர்கள். நாடகத்தில் இதுவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே பாகங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. நடிகர்களாகிய நீங்கள் தொடர்ந்தும் உங்கள் பாகங்களை நடிப்பதால், தொடர்ந்தும் செயற்படுகிறீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், அவர்களில் அழிவற்ற பாகங்கள் பதியப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்ந்தும் தங்கள் சரீரங்களை மாற்றுவதால், ஆத்மாக்கள் தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்களாக மாறுகிறார்கள். ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். சத்தியயுகத்தில், ஆத்மாக்கள் தூய்மையானவர்கள் ஆவர். இது தூய்மையற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. அது தேவ இராச்சியமாக இருந்தபொழுது, விகாரமற்ற உலகமாக இருந்தது. அது இனிமேலும் அவ்வாறில்லை. இது ஒரு நாடகமாகும். புதிய உலகம் பழைய உலகமாக ஆகுகிறது, பழைய உலகம் புதிய உலகமாக ஆகுகிறது. இப்பொழுது உங்களுக்காகச் சந்தோஷ உலகம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் சென்று முக்தி தாமத்தில் வசிப்பார்கள். எல்லையற்ற நாடகம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது, ஆத்மாக்கள் அனைவரும் நுளம்புக்கூட்டம் போன்று வீடு திரும்புவார்கள். இந்நேரத்தில், தூய்மையற்ற உலகத்துக்கு வரும் ஆத்மாக்களுக்கு என்ன பெறுமதி இருக்க முடியும்? புதிய உலகத்துக்கு முதலில் வருபவர்களுக்கு மாத்திரமே பெறுமதி இருக்கிறது. புதியதாக இருந்த உலகம், இப்பொழுது மீண்டும் ஒருமுறை பழையதாகி விட்டது என்பது உங்களுக்குத் தெரியும். புதிய உலகத்தில், தேவர்களாகிய நாங்கள் மாத்திரமே இருந்தோம். அங்கு துன்பத்தின் குறிப்பே கிடையாது. இங்கு, முடிவற்ற துன்பம் உள்ளது. தந்தை வந்து உங்களைத் துன்ப உலகிலிருந்து விடுவிக்கிறார். நிச்சயமாக இப்பழைய உலகம் மாற வேண்டும். நாங்கள் உண்மையிலேயே சத்திய யுகத்தின் அதிபதிகளாக இருந்தோம் எனவும், 84 பிறவிகளை எடுத்த பின்னர் இவ்வாறு ஆகிவிட்டோம் எனவும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவுசெய்வதால், நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள்! ஆகவே, நாங்கள் ஆத்மாக்கள், தந்தையை நினைவுசெய்கிறோம் என்னும் நம்பிக்கையை ஏன் நாங்கள் கொண்டிருப்பதில்லை? சில முயற்சி செய்யப்படவே வேண்டும். ஓர் இராச்சியத்தைக் கோருவது அத்தனை இலகுவானதல்ல. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். மாயை உங்களை மீண்டும் மீண்டும் மறக்கச் செய்கிறாள் என்பது மாயையின் ஓர் அற்புதமேயாகும். இதற்கென ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும். எனக்கு உரியவர் ஆகுவதால், நினைவு உறுதியாகும் என எண்ண வேண்டாம். அப்பொழுது நீங்கள் வேறு என்ன முயற்சியைச் செய்வீர்கள்? இல்லை, நீங்கள் வாழும்வரையில், நீங்கள் முயற்சி செய்து, தொடர்ந்தும் ஞானாமிர்தத்தைப் பருக வேண்டும். இது உங்களுடைய இறுதிப்பிறவி என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிப்பதுடன், நிச்சயமாக முயற்சி செய்யவும் வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்மா என்ற நம்பிக்கையை கொண்டிருந்து, தந்தையை நினைவுசெய்யுஙகள்! “நீங்களே தாயும், நீங்களே தந்தையும்”. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திலிருந்து வருகின்ற புகழாகும். ஓர் அல்பாவையே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். இது மாத்திரமே இனிய சக்கரீன் ஆகும். ஏனைய அனைத்தையும் துறந்து ஒரு சக்கரீனை (தந்தை) நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குவதற்கு, நினைவுயாத்திரையில் நிலைத்திருங்கள். அனைவருக்கும் கூறுங்கள்: தந்தையிடமிருந்து உங்கள் சந்தோஷ ஆஸ்தியைக் கோருங்கள்! சத்தியயுகத்தில் மாத்திரமே சந்தோஷம் உள்ளது. பாபாவே சந்தோஷ தாமத்தை ஸ்தாபிப்பவர் ஆவார். தந்தையை நினைவுசெய்வது மிகவும் இலகுவானதாகும். எவ்வாறாயினும், மாயையிடமிருந்து பெருமளவு எதிர்ப்பு உள்ளது. ஆகவே, தந்தையாகிய, என்னை நினைவுசெய்ய முயற்சி செய்யுங்கள், கலப்படம் அகற்றப்படும். “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி” என்பது நினைவுகூரப்படுகிறது. ஆத்மாக்களாகிய நாங்கள் ஆன்மீகத் தந்தையின் குழந்தைகள் ஆவோம். நாங்கள் அவ்விடத்து வாசிகள் ஆவோம். பின்னர் நாங்கள் எங்கள் பாகங்களைத் திரும்பத் திரும்ப நடிக்க வேண்டும். எங்கள் பாகங்களே இந்நாடகத்தில் நீண்டதாகும். நாங்கள் அதிகளவு சந்தோஷத்தையும் பெறுகிறோம். தந்தை கூறுகிறார்: உங்கள் தேவ தர்மம் அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. ஏனைய அனைவரும் தங்கள் கணக்குகளைத் தீர்த்த பின்னர், இயல்பாகவே அமைதி தாமத்துக்குச் செல்வார்கள். நாங்கள் ஏன் அதிகளவு விரிவாக்கத்துக்குச் செல்ல வேண்டும்? அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துவிட்டார். நுளம்புக்கூட்டம் போன்று அவர் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். சத்தியயுகத்தில், மிகச் சொற்பளவினரே உள்ளார்கள். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சரீரங்கள் அழிக்கப்படும், அழிவற்ற ஆத்மாக்கள் தங்கள் கணக்குகளைத் தீர்த்து, வீடு திரும்புவார்கள். தீயில் இடப்படுவதால், ஆத்மாக்கள் தூய்மையாக்கப்படுவார்கள் என்பதல்ல. யோகத்தீயாகிய, நினைவின் மூலம் ஆத்மாக்கள் தூய்மையாக வேண்டும். இது யோகத்தீ ஆகும். எவ்வாறாயினும், சீதை தீயில் நடந்ததாக ஒரு கதையை அவர்கள் பின்னர் அமர்ந்திருந்து உருவாக்கியுள்ளார்கள். தீயில் எவருமே தூய்மையாக்கப்படப் போவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்நேரத்தில் சீதைகளாகிய நீங்கள் அனைவருமே தூய்மையற்றிருக்கிறீர்கள். நீங்கள் இராவண இராச்சியத்தில் இருக்கிறீர்கள். ஒரு தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால், நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். ஓர் இராமர் மாத்திரமே இருக்கிறார். “தீ” என்னும் வார்த்தையைக் கேட்பதனால், சீதை தீயினூடாக நடந்ததாக அவர்கள் எண்ணுகிறார்கள். யோகத் தீயிற்கும் ஏனைய தீயிற்கும் மத்தியில் அதிகளவு வேறுபாடு உள்ளது. பரமாத்மாவாகிய பரமதந்தையுடன் யோகத்தைக் கொண்டிருப்பதனால் மாத்திரமே, ஆத்மாக்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாகுவார்கள். பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு உள்ளது. நரகத்தில், சீதைகள் அனைவரும், துன்பக்குடிலான, இராவணனின் சிறையில் இருக்கிறார்கள். இங்குள்ள சந்தோஷம் ஒரு காக்கை எச்சத்தைப் போன்றதாகும். அதனுடன் ஒப்பிடுகையில் சத்தியயுகத்துச் சந்தோஷமானது முடிவற்றதாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது மணவாளனாகிய, சிவனுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள், ஆகவே ஆத்மாக்களாகிய நீங்கள் பெண்கள் ஆவீர்கள். சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவுசெய்தால், நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் அமைதி தாமத்துக்குச் சென்று, பின்னர் சந்தோஷ தாமத்துக்குச் செல்வீர்கள். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியை ஞான இரத்தினங்கள் மூலம் நிரப்ப வேண்டும். உங்களுக்கு எவ்விதமான சந்தேகமும் இருக்கக்கூடாது. நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்பொழுது, பலவிதமான கேள்விகள் எழுகின்றன. அதன் பின்னர் தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ள வியாபாரத்தை நீங்கள் மேற்கொள்வதில்லை. நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக ஆகவேண்டும் என்பதே பிரதான விடயமாகும். ஏனைய அனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கிவிடுங்கள்! இராச்சியத்திலுள்ள சம்பிரதாயங்கள் அனைத்தும் தொடரும். மாளிகைள் கட்டப்பட்டிருந்ததைப் போன்றே, பின்னர் அவை மீண்டும் கட்டப்படும். தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். நீங்கள் கூவியழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, தூ;யமையாகுவதால், நீங்கள் சந்தோஷமடைவீர்கள். தேவர்களே அனைவரிலும் தூய்மையானவர்கள் ஆவர். இப்பொழுது நீங்கள் 21 பிறவிகளுக்கு அனைவரிலும் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். அவர்கள் தூய்மையானவர்கள் எனவும், முழுமையாக விகாரமற்றவர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். இதைப் பற்றிய எந்த எண்ணங்களும் இருக்கத் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் முதலில், தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாகுங்கள்! மக்கள் கூவியழைக்கிறார்கள்: “ஓ தூய்மையாக்குபவரே!”, ஆனால் அவர்கள் முற்றாகவே எதையும் புரிந்துகொள்வதில்லை. தூய்மையாக்குபவர் யார் என்பதைக் கூட அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இது தூய்மையற்ற உலகமும், அது தூய்மையான உலகமுமாகும். தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். அவர்கள் முற்றாகவே யார் தங்களைத் தூய்மையாக்குகிறார் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தூய்மையாக்குபவரைக் கூவியழைக்கிறார்கள், அவர்கள் தூய்மையற்றிருக்கிறார்கள் என நீங்கள் அவர்களுக்குக் கூறும்பொழுது, அவர்கள் குழப்பமடைகிறார்கள். எவரும் தன்னை விகாரமுடையவர் எனக் கருதுவதில்லை. அவர்கள் கூறுகிறார்கள்: அனைவரும் இல்லறத்திலேயே வசித்தார்கள். இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் குழந்தைகள் இருந்தார்கள். அங்கு குழந்தைகள் யோகசக்தி மூலம் பிறக்கிறார்கள். அவர்கள் அதை மறந்துவிட்டார்கள். அவ்வுலகம் சுவர்க்கமாகிய விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. அது சிவாலயம் ஆகும். தந்தை கூறுகிறார்: தூய்மையற்ற உலகில் தூய்மையானவர் ஒருவரேனும் இருப்பதில்லை. இத்தந்தை அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற, தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார். வேறு எங்கும், ஒரு குரு சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, அவருடைய சிம்மாசனம் அவருடைய மகனுக்கே கொடுக்கப்படுகிறது. எவ்வாறு அவரால் எவரையாவது சற்கதிக்குள் அழைத்துச் செல்ல முடியும்? ஒருவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். சத்தியயுகத்தில் தேவர்கள் மாத்திரமே இருக்கிறார்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்துக்குச் செல்வார்கள். அவர்கள் இராவண இராச்சியத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். தந்தை அனைவரையும் தூய்மையாக்கி, அவர்கள் அனைவரையும் திரும்பவும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். எவருமே உடனடியாகத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக ஆகுவதில்லை. அவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக, தொடர்ந்தும் கீழே வருகிறார்கள். சதோபிரதானாக இருப்பதிலிருந்து, அவர்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்ல வேண்டும். 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இப்பொழுது கலங்கரை விளக்கத்தைப் போன்றவர்கள் ஆவீர்கள். நீங்கள் இப்பொழுது இச்சக்கரத்தின் ஞானத்தைப் புரிந்துகொள்கிறீர்கள். எவ்வாறு இச்சக்கரம் சுழல்கிறது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஏனைய அனைவருக்கும் பாதையைக் காண்பிக்க வேண்டும். அனைவரும் படகுகள் ஆவார்கள். நீங்களே அனைவருக்கும் பாதையைக் காண்பிக்கின்ற விமானமோட்டிகள் ஆவீர்கள். அனைவருக்கும் கூறுங்கள்: அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்து, துன்ப உலகமாகிய கலியுகத்தை மறந்துவிடுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் வாழும்வரையில், தொடர்ந்தும் ஞானாமிர்தத்தைப் பருகுங்கள். ஞான இரத்தினங்களால் உங்கள் புத்தியை நிரப்புங்கள். சந்தேகங்களைக் கொண்டிருந்து, கேள்விகள் எவற்றையும் எழுப்ப வேண்டாம்.
2. யோகத்தீயில், சீதையாகிய ஆத்மாவைத் தூய்மையாக்குங்கள். எதைப் பற்றியும் அதிகளவு விரிவாக்கத்துக்குள் செல்ல வேண்டாம், ஆனால் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள்.ஆசீர்வாதம்:
ஆத்ம உணர்வுடைய ஸ்திதியில் நிலைத்திருக்கின்ற ஓர் திருப்திமணியாகவிருந்து, எப்பொழுதும் ஓர் விசேட பாகத்தை நடிப்பவர் ஆகுவீர்களாக.விசேட நடிகர்களாக இருக்கின்ற குழந்தைகளின் ஒவ்வொரு செயற்பாடும் விசேடமானதாகும். அவர்களின் எந்த ஒரு செயலும் சாதாரணமானது அல்ல. சாதாரணமான ஆத்மாக்கள் சரீர உணர்வுடனேயே செயல்களை செய்வார்கள். ஆனால் விசேடமான ஆத்மாக்கள் ஒவ்வொரு செயலையும் ஆத்ம உணர்வுடனேயே செய்வார்கள். ஆத்ம உணர்வில் நிலைத்திருந்து செயல்களை செய்பவர்கள் எப்பொழுதும் தாமும்; திருப்தியாவிருந்து பிறரையும் திருப்தி ஆக்குவார்கள் என்பதால் இயல்பாகவே திருப்தி மணியாக இருப்பவர் என்ற ஆசீர்வாதத்தை பெறுகின்றார்.
சுலோகம்:
பரிசோதனை செய்கின்றதோர் ஆத்மாவாக இருந்து, யோக பரிசோதனையின் மூலம் உங்கள் பொக்கிஷங்கள் அனைத்தையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.