15.01.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அரைக் கல்பமாக நீங்கள் வழிபட்டு வந்த தந்தையே இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்தக் கல்வியின் மூலமே நீங்கள் தேவர்களாகுகிறீர்கள்.

கேள்வி:
யோக சக்தி யோக சக்தி எனும் உயர்த்தியின் அற்புதம் என்ன?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் யோக சக்தி எனும் உயர்த்தியினால் ஒரு விநாடியில் ஏறுகிறீர்கள். அதாவது நீங்கள் ஒரு விநாடியில், ஜீவன்முக்தி எனும் ஆஸ்தியை பெறுகின்றீர்கள். ஏணியில் இருந்து கீழிறங்குவதற்கு 5000 வருடங்கள் எடுக்கின்றதென்பதும்;, நீங்கள் ஒரு விநாடியில் ஏறுகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதுவே யோக சக்தியின் அற்புதமாகும். தந்தையின் நினைவின் மூலம் ஆத்மாவின் அனைத்துப் பாவங்களும் அழிக்கப்பட்டு நீங்கள் சதோபிரதானாகுகிறீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகத் தந்தையின் புகழ் குழந்தைகளுக்கு கூறப்பட்டுள்ளது. அவர் ஞானக்கடலும், சத்தியமானவரும், உயிருள்ளவரும், பேரானந்தமானவரும் ஆவார். அவரே அமைதிக்கடல். எல்லையற்ற அனைத்து புகழும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை ஞானக்கடலாவார். இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் பக்திக் கடல்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதிமேன்மையான பக்தர்களாக இருப்பவர்கள் மரியாதையைப் பெறுகிறார்கள். இந்நேரத்தில், அதாவது கலியுகத்தில், பக்தியும் துன்பமும் இருக்கின்றது. ஆனால் சத்தியயுகத்தில் ஞானத்தின் சந்தோஷம் இருக்கின்றது. அங்கே அவர்களுக்கு ஞானம் இருக்கின்றது என்பதல்ல. இப்புகழ் ஒரேயொரு தந்தையினுடையதே. இது குழந்தைகளின் புகழுமாகும், ஏனெனில் தந்தை குழந்தைகளுக்கு கற்பிக்கின்றார். அதாவது, அவர் இந்த யாத்திரையை அவர்களுக்குக் கற்பிக்கிறார். இரண்டு வகையான யாத்திரைகள் இருக்கின்றன என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். பக்தர்கள் யாத்திரை செய்யும் பொழுது நான்கு முக்கிய யாத்திரைத் தலங்களுக்குச் செல்கிறார்கள். அவர்கள் யாத்திரை செல்லும் காலத்தில், விகாரத்தில் ஈடுபட மாட்டார்கள். மதுபானம் அருந்தவோ அல்லது தூய்மையற்ற எதையும் உண்ணவோ மாட்டார்கள். சிலவேளைகளில் அவர்கள் “பத்திரிநாத்” திற்கும் சிலவேளைகளில் காசிக்கும் செல்கிறார்கள். அவர்கள் கடவுளை வழிப்படுகிறார்கள். கடவுள் ஒருவரே. அவர்கள் வேறெங்கும் சுற்றித்திரியக் கூடாது (அவரைத் தேடி). அவர்கள் இன்னும் சிவபாபாவை நோக்கி யாத்திரை செல்கிறார்கள். மிகச்சிறந்த யாத்திரை தலமாக நினைவு கூரப்படும் பெனாறஸ{ம் சிவனின் இடமென அழைக்கப்படுகின்றது. அவர்கள் எல்லாத் திசைகளுக்கும் சென்றாலும், அவர்கள் யாருடைய காட்சியைப் பெறுவதற்காக செல்கிறார்களோ அல்லது யாரை வழிப்படச் செல்கிறார்களோ அவருடைய வாழ்க்கை வரலாறோ தொழிலோ எவருக்கும் தெரியாது. இதனாலேயே அது குருட்டு நம்பிக்கை எனப்படுகின்றது. ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தெரியாமல் அவரை வழிப்படுவதும், தலை வணங்குவதும் குருட்டு நம்பிக்கை எனப்படும். அவர்கள் அனைத்தையும் வீட்டில் கொண்டாடுவதுடன் தேவியர்களையும் பெருமளவு வழிபடுகிறார்கள். அவர்கள் களிமண்ணால் தேவியர்களைச் செய்து, மிக நன்றாக அலங்கரிப்பார்கள். உதாரணமாக, அவர்கள் இலக்ஷ்மியின் உயிரற்ற வடிவத்தைச் செய்கிறார்கள். “அவருடைய வாழ்க்கை வரலாறு என்ன” என நீங்கள் அவர்களை வினவினால், அவர் சத்தியயுகத்துச் சக்கரவர்த்தினி அல்லது அவர் திரேதா யுகத்தின் சீதை என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் எவ்வளவு காலம் ஆட்சி செய்தார்கள்? எவ்வளவுகாலம் வரை இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது? இது எவருக்குமே தெரியாது. பக்திமார்க்கத்தில் மக்கள் யாத்திரை செல்கிறார்கள். எல்லா மார்க்கமும் கடவுளைச் சந்திப்பதற்காகவே. சமய நூல்களை கற்பதும் கடவுளைச் சந்திப்பதற்கான ஒருவழியாகும். எவ்வாறாயினும், கடவுள் எங்கே இருக்கிறார்? அவர் சர்வவியாபி என்று அவர்கள் கூறுகின்றார்கள். இந்தக் கல்வியின் மூலம் இப்பொழுது நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தையே வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். அந்தத் தந்தையைச் சந்திப்பதற்கான பக்தி மார்க்கம் அரைக் கல்பத்திற்கு நீடிக்கிறது. பாபா, எங்களைத் தூய்மையாக்கி, “நீங்கள் யார்” என்னும் அறிமுகத்தையும் எங்களுக்குக் கொடுங்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் புள்ளிகள் என்று பாபா விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாவே இங்கு ஒரு சரீரத்தை எடுக்கிறார். இதனாலேயே ஆத்மா இங்கே செயல்களைப் புரிகின்றார். தேவர்கள் கடந்த காலத்தில், சத்தியயுகத்தில் ஆண்டார்கள் எனக் கூறப்படுகிறது. தந்தையான கடவுள் உண்மையாகவே வைகுந்தத்தை ஸ்தாபித்தார் என்றும், ஆனால் அவர்கள் அப்போது அங்கே இருக்கவில்லை என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். வைகுந்தம் பாரதத்தில் இருந்தது. அவர்களுடைய புத்தி இன்னமும் நன்றாக இருக்கின்றது. பாரத மக்கள் சதோபிரதானாகவும், தமோபிரதானாகவும் ஆகின்றார்கள். கிறிஸ்தவர்கள் பெருமளவு சந்தோஷத்தையோ அல்லது பெறுமளவு துன்பத்தையோ அனுபவம் செய்வதில்லை. இப்பொழுது இறுதியில் வந்தவர்கள் மிகச் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் ஏழையாக இருந்தார்கள். கடுமையாக உழைப்பதன் மூலம் ஒருவரால் பெருமளவு சம்பாதிக்க முடியும். கிறிஸ்து முதலில் தனியாக வந்து, அவருடைய சமயத்தை ஸ்தாபித்தார். அது தொடர்ந்தும் வளர்ந்தது. ஒன்று இரண்டாகவும் பின்னர் அது நான்காகவும் வளர்ந்தது, அது படிப்படியாக இவ்வாறு வளர்ச்சியடைந்தது. கிறிஸ்தவர்களின் விருட்சம் எவ்வளவு பெரிதாகிவிட்டது எனப் பாருங்கள். தேவர் குலமே அத்திவாரமாகும். அது இந்நேரத்தில் இங்கேயே ஸ்தாபிக்கப்படுகிறது. முதலில் பிரம்மா மாத்திரமே இருந்தார், பின்னர் பிராமணர்களாகிய தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின், எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தந்தை கற்பிக்கும் போது பிராமணர்கள் பலர் உருவாக்கப்படுகிறார்கள். முதலில் இவர் மாத்திரமே இருந்தார். ஒருவரின் மூலம் பெருமளவு வளர்ச்சி நடைபெற்றது, அதில் இன்னும் பெருமளவு விரிவாக்கம் ஏற்படும். எவ்வாறாயினும், அங்கே எவ்வளவு சூரிய, சந்திர வம்சத்து தேவர்கள் இருக்கின்றார்களோ அந்தளவுக்கு பிராமணர்களும் இருக்க வேண்டும். முதலில், ஒரேயொரு தந்தையே இருக்கின்றார். அவருடைய ஆத்மா காலம் முழுவதும் இருக்கிறார். தந்தைக்கு குழந்தைகளான எத்தனை ஆத்மாக்கள் இருக்கிறார்கள்? ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரதும் தந்தை ஒரேயொரு அநாதியான தந்தையே ஆவார். உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. மனிதர்கள் அனைவரும் எல்லா நேரத்திலும் இருக்க மாட்டார்கள். ஆத்மாக்கள் தங்களுடைய பல வகையான பாகங்களை நடிக்க வேண்டும். இந்த விருட்சத்தில் முதலில் தோன்றும் அடிமரம் தேவர்களுடையதாகும். அதன்பின் அதிலிருந்து கிளைகள் வெளிவரும். எனவே, தந்தை இங்கமர்ந்திருந்து “அவர் வரும்போது என்ன செய்கிறார்” என்பதை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாவே அனைத்தையும் கிரகிக்கிறார். தந்தை எப்படி வருகிறார் என்பதை அவர் இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் தூய்மையற்றவராகும் போது என்னை நினைவு செய்கிறீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள். நீங்கள் என்னை நினைவு செய்யவில்லை. துவாபரயுகத்தில் துன்பம் அதிகரித்த போது நீங்கள் என்னை கூவியழைத்தீர்கள்: ஓ பாபா, பரமதந்தை, பரமாத்மாவே! ஆம் குழந்தைகளே, நான் செவிமடுத்தேன். உங்களுக்கு என்ன வேண்டும்? பாபா, வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குங்கள்! பாபா, நாங்கள் மிகவும் சந்தோஷமற்றவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் இருக்கின்றோம். வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! எங்களில் கருணை காட்டுங்கள்! என்னை ஆசீர்வதியுங்கள்! நீங்கள் என்னை கூவியழைத்தீர்கள்: பாபா, வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குங்கள்! சத்தியயுகம் தூய்மையானது என அழைக்கப்படுகிறது. தந்தையே இங்கமர்ந்திருந்து இதை விளங்கப்படுத்துகிறார். நாடக திட்டத்தின்படி இந்த சங்கமயுகத்திலே, உலகம் பழையதாகும் போதே நான் வருகின்றேன். இரண்டு வகையான சந்நியாசிகள் இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் ஹத்த யோகிகள். அவர்கள் இராஜயோகிகள் என்று அழைக்கப்பட முடியாது. அவர்களுடைய துறவு எல்லைக்குட்பட்டது. அவர்கள் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் விட்டுச்சென்று, காடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் குருமாரைப் பின்பற்றுபவர்களாக ஆகுகிறார்கள். அவர்கள் கோபிசாந் அரசனின் கதையைக் கூறுகிறார்கள். “நீங்கள் ஏன் வீட்டை விட்டு செல்கிறீர்கள்? எங்கே செல்கின்றீர்கள்?” என்று அவர் கேட்டார். சமய நூல்களில் பல கதைகள் இருக்கின்றன. பிரம்ம குமாரர்களாகிய நீங்களும் அரசர்களிடம் சென்று, அவர்களுக்கு ஞானத்தையும் யோகத்தையும் கற்றுக் கொடுக்கிறீர்கள். அஷ்டவக்கிர கீதையில், ஓர் அரசர் உலகத்தில் விருப்பமின்மையை கொண்டிருந்ததாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கடவுளை அடைவதற்கு எனக்கு உதவி செய்யக்கூடிய ஒருவர் தேவை என்று அவர் கூறினார். இதை அவர் முழு இராச்சியத்திற்கும் அறிவித்தார். இதுவே அந்த நேரமாகும். அரசர்களும் தந்தையை சந்திக்கக் கூடிய வகையில், நீங்கள் அவர்களிடம் சென்று, இந்த ஞானத்தைக் கொடுங்கள். நீங்கள் தந்தையை சந்தித்ததைப்போல, பிறரும் அவரைச் சந்திப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் உங்களை சுவர்க்கத்தின் அதிபதியாக்கி, உங்களுக்கு முக்தியும் ஜீவன் முக்தியும் கொடுப்போம். பின்பு கூறுங்கள்: வேறு எவரையும் அன்றி, சிவபாபாவை மாத்திரம் நினைவு செய்யுங்கள். ஆரம்பத்தில் நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “டிரான்ஸ்” ல் போவதுண்டு. அது ஒரு பெரிய அற்புதம்! தந்தை இவரில் இருந்ததால், அவர் அந்த அற்புதத்தைக் காட்டினார். அவர் ஒவ்வொருவருடைய கயிற்றையும் இழுப்பார். பாபாவும், தாதாவும் ஒன்றாகினர். நாங்கள் ஒரு இடுகாட்டை உருவாக்கி, அனைவரும் தந்தையின் நினைவில் தூங்கச் சென்று, அனைவரும் “டிரான்ஸ்” ல் செல்வது வழக்கமாகும். இவையெல்லாம் பாபாவின் சாமாத்தியம் ஆகும். சிலர் இதை மந்திர வித்தை எனக் கருதத் தொடங்கினர். இது சிவபாபாவின் விளையாட்டாகும். தந்தை மந்திரவாதியும், வியாபாரியும், நகை வியாபாரியும் ஆவார். மேலும் அவர் சலவைத் தொழிலாளியும், நகை செய்பவரும், வழக்கறிஞரும் ஆவார். அவரே அனைவரையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவித்துள்ளார் அனைவரும் அவரைக் கூவி அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, தொலைதூரவாசியே வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! தூய்மையற்ற உலகில் தூய்மையற்ற சரீரத்தில் வந்து, எங்களைத் தூய்மையாக்குங்கள். நீங்கள் இப்போது இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை வந்து உங்களுக்கு கூறுகிறார்: இராவணனுடைய பூமிக்குள் வரும்படி நீங்கள் கூவி அழைத்தீர்கள்! நான் பரந்தாமத்தில் இருந்தேன். சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு இராவணனுடைய பூமியாகிய நரகத்திற்கு என்னை வரும்படி நீங்கள் கூவி அழைத்தீர்கள்! இப்பொழுது எங்களைச் சந்தோஷ பூமிக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று நீங்கள் கூறினீர்கள். குழந்தைகளாகிய உங்களை நான் இப்போது அழைத்துச் செல்கிறேன். எனவே இதுவே நாடகமாகும். நான் உங்களுக்கு கொடுத்த இராச்சியம் முடிவடைந்து, துவாபர யுகத்தில் இருந்து இராவணனுடைய இராச்சியம் தொடர்கிறது. நீங்கள் விகாரத்தினுள் வீழ்ந்து விட்டீர்கள். அதன் வடிவங்கள் ஜகநாத்புரியில் இருக்கின்றன. முதலாவது இலக்கத்தில் இருந்தவர் 84 பிறவிகளை எடுத்து, இப்பொழுது கடைசி இலக்கத்தில் இருக்கிறார். அவரே இப்பொழுது மீண்டும் முதலாவது இலக்கத்திற்கு போக வேண்டும். இந்த பிரம்மா இங்கே அமர்ந்திருக்கிறார். விஷ்ணுவும் இங்கே அமர்ந்திருக்கிறார். அவர்களுக்கு இடையில் இருக்கும் தொடர்பு என்ன? உலகிலுள்ள எவருக்குமே இது தெரியாது. சரஸ்வதியும், பிரம்மாவும் உண்மையில் சுவர்க்கத்தின் அதிபதிகளாகிய இலக்ஷ்மியும் நாராயணனும் ஆவார்கள். அவர்கள் இப்பொழுது நரகத்தின் அதிபதிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் இப்போது இலக்ஷ்மி, நாராயணனாக ஆகுவதற்கு தபஸ்யா செய்கிறார்கள். தில்வாலா கோவிலில் இதற்கான சரியான ஞாபகார்த்தம் இருக்கிறது. “அபுவே சமயங்கள் அனைத்தின் எல்லா யாத்திரைத் தலங்களிலும் மேன்மையான யாத்திரைத் தலமாகும். ஏனெனில் தந்தை இங்கே வந்து, எல்லாச் சமயத்தவர்களுக்கும் ஜீவன் முக்தியை அருள்கிறார்” என்று தந்தை இங்கே வருவதாலேயே எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் முதலில் சாந்தி தாமத்திற்கும், பின்னர் சுவர்க்கத்திற்கும் செல்கிறீர்கள். ஏனையோர் சாந்தி தாமத்திற்குச் சென்று வசிப்பார்கள். அந்த ஞாபகார்த்தம் உயிரற்றதும் இது உயிருள்ள வடிவிலும் இருக்கின்றது. நீங்கள் அதன் உயிருள்ள வடிவமாக ஆகும்போது, கோயில்கள் முதலானவை அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். பின்னர் பக்தி மார்க்கத்தில், அந்த ஞாபகார்த்தங்கள் மீண்டும் ஒருமுறை உருவாக்கப்படும். நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறீர்கள். சுவர்க்கம் மேலே இருக்கின்றது என மக்கள் நம்புகிறார்கள். சுவர்க்கமாக இருந்த பாரதம், இப்பொழுது அது நரகமாகிவிட்டது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சக்கரத்தைப் பார்க்கும் பொழுது முழு ஞானமும் உங்களுடைய புத்தியினுள் புகுகின்றது. ஏனைய சமயங்கள் துவாபர யுகத்தில் வர ஆரம்பிக்கின்றன. இப்பொழுது எத்தனை சமயங்கள் இருக்கின்றன எனப் பாருங்கள்! இது கலியுகமாகும். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் சத்திய யுகத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். கலியுகத்தில் அனைவருக்கும் கல்லு புத்தியே இருக்கின்றது. சத்தியகத்தில் அனைவரும் தெய்வீக புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தெய்வீக புத்தியைக் கொண்டிருந்தீர்கள், இப்பொழுது கல்லுப் புத்தியைக் கொண்டவர்களாகி விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் தெய்வீக புத்தி உடையவர்களாக ஆக வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னைக் கூவி அழைத்ததால், நான் இப்பொழுது வந்துள்ளேன். நான் கூறுகிறேன்: காமத்தை வென்று, உலகை வென்றவர்களாகுங்கள்! இதுவே பிரதான விகாரம். சத்தியயுகத்தில் அனைவரும் விகாரமற்றவர்கள். கலியுகத்தில் அவர்கள் விகாரமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது விகாரமற்றவர்களாகுங்கள்! நீங்கள் 63 பிறவிகளாக விகாரத்தில் ஈடுபட்டீர்கள். இப்பொழுது இந்த இறுதிப் பிறப்பில் தூய்மையாகுங்கள். இப்பொழுது அனைவரும் இறக்க வேண்டும். நான் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு வந்திருக்கிறேன். எனவே என்னுடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! நான் கூறுவதை செவிமடுங்கள்! நீங்கள் இப்போது உங்களுடைய கல்லுப்புத்தியை தெய்வீக புத்தியாக மாற்றுவதற்காக முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் ஏணியில் முழுமையாக கீழிறங்கி, பின்னர் மேலே ஏறுகின்றீர்கள். நீங்கள் ஜீனியைப் போன்றவர்கள். தனக்கு வேலை தரும்படி அரசனிடம் ஒரு ஜீனி கேட்ட கதை ஒன்று இருக்கின்றது. எனவே அரசர் அவனுக்கு ஏணியில் ஏறி இறங்கமாறு கூறினார். பலர் கூறுகிறார்கள்: எதற்காக கடவுள் எங்களை ஏணியில் ஏறி இறங்கச் செய்கின்றார்? கடவுள் ஏன் அவ்வாறான ஓர் ஏணியை உருவாக்கினார்? தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது ஓர் அநாதியான நாடகம். நீங்கள் 5000 வருடங்களில் 84 பிறவிகளை எடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு கீழே இறங்குவதற்கு 5000 வருடங்களும், மேலே ஏறுவதற்கு ஒரு விநாடியும் எடுக்கின்றது. இதுவே உங்கள் யோக சக்தி எனும் உயர்த்தி ஆகும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்! தந்தை வந்ததும் நீங்கள் ஒரு விநாடியில் மேலே செல்கின்றீர்கள். பின்னர் நீங்கள் 5000 வருடங்களுக்கு கீழே இறங்குகின்றீர்கள். உங்களுடைய கலைகள் தொடர்ந்தும் குறைகின்றது. உங்களுக்கு ஏறுவதற்கு ஓர் உயர்த்தி இருக்கிறது. “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி”. நீங்கள் சதோபிரதானாக வேண்டும். பின்னர் நீங்கள் படிப்படியாக தமோபிரதானாகுவீர்கள். இதற்கு 5000 வருடங்கள் எடுக்கின்றது. நல்லது, பின்னர் ஒரு பிறப்பில் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக வேண்டும். நான் இப்போது உங்களுக்கு சுவர்க்க ஆட்சியைக் கொடுக்கிறேன், நீங்கள் தூய்மையாக இருக்க மாட்டீர்களா? எவ்வாறாயினும் கோபம் கொண்டவர்களும், காமம் கொண்டவர்களும் தங்களுக்கு நஞ்சு கிடைக்காவிடின், தங்கள் மனைவிமாரை அடிக்கிறார்கள். அவர்கள் அவர்களை வெளியே துரத்திவிடுகிறார்கள் அல்லது அவர்களுக்குத் தீ மூட்டுகிறார்கள். அப்பாவித் தாய்மார்கள் பெருமளவு துன்புறுத்தப்படுகிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதிபதியாகி, உலகின் ஆட்சியைப் பெறுவதற்கு முக்கியமான விகாரமாகிய காமத்தை வெல்லுங்கள். நீங்கள் நிச்சயமாக முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆகவேண்டும்.

2. நாங்கள் தந்தையை இனங்கண்டதைப் போல மற்றவர்களும் தந்தையை இனங்காண்பதற்கு உதவி செய்யுங்கள். தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுங்கள். அவர்களுக்கு உண்மையான யாத்திரையை கற்பியுங்கள்.

ஆசீர்வாதம்:
ஏகாந்தத்தில் நிலைத்திருந்து, மௌனசக்தியினால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வை காண்பீர்களாக.

புதிய, சக்திமிக்க கண்டுபிடிப்பை உருவாக்கும் போது, அது நிலத்தின் கீழேயே செய்யப்படுகின்றது. இங்கும், ஏகாந்தத்தில் இருப்பது என்றால் நிலத்தின் கீழ் இருப்பது என்று அர்த்தமாகும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், செயற்பாடுகளில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் போதும், ஞானத்தை செவிமடுத்துக் கொண்டோ அல்லது கூறிக் கொண்டோ இருக்கும் போதும் அல்லது வழிகாட்டல்களை வழங்கும் போதும் இந்த பௌதீக உலகிற்கும் உங்கள் சரீரம் என்ற உணர்விற்கும் அப்பால் மௌனத்திற்குச் செல்லுங்கள். இப் பயிற்சியும், இதனை அனுபவம் செய்கின்ற ஸ்திதியும், இந்த அனுபவத்தை பிறருக்குக் கொடுப்பதும் உங்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வை கொடுக்கும். இதனை செய்வதால், நீங்கள் பிறருக்கு ஒரு விநாடியில் அமைதியினதும் சக்தியினதும் அனுபவத்தை கொடுப்பீர்கள். உங்கள் முன்னிலையில் யார் வந்தாலும், இந்த ஸ்திதியினூடாக ஒரு காட்சியை காணும் அனுபவத்தைப் பெறுவார்கள்.

சுலோகம்:
வீணான, பாவகரமான எண்ணங்களை ஒருபுறம் ஒதுக்கி, ஆத்ம உணர்வு ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதே யோக்யுக்தாக இருப்பதாகும்.