27.01.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒருபொழுதும் சட்டத்தை உங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒருவர் ஒரு தவறைச் செய்தால், அதைத் தந்தைக்கு அறிவியுங்கள், தந்தை அந்த ஆத்மாவை எச்சரிப்பார்.கேள்வி:
தந்தையிடம் உள்ள ஒப்பந்தம் என்ன?பதில்:
குழந்தைகளின் குறைபாடுகளை அகற்றுவதற்கான ஒப்பந்தம் ஒரேயொரு தந்தையிடம் மாத்திரமே உள்ளது. குழந்தைகளின் பலவீனங்களைத் தந்தை கேட்கும்பொழுது, அவற்றை அகற்றுவதற்கு அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு அன்புடன் விளங்கப்படுத்துகிறார்: கு ழந்தைகளான நீங்கள் எவரது பலவீனங்களைப் பார்த்தாலும், உங்கள் சொந்தக் கைகளில் சட்டத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் சொந்தக் கைகளில் சட்டத்தை எடுப்பது ஒரு தவறாகும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, நீங்கள் தந்தையிடம் புத்துணர்ச்சியூட்டப்படுவதற்காக வருகிறீர்கள், ஏனெனில் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற உலகம் முழுவதற்குமான இராச்சியத்தைக் கோர வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் இதை ஒருபொழுதும் மறக்க வேண்டாம். எவ்வாறாயினும், நீங்கள் அதை மறக்கிறீர்கள். மாயை உங்களை அதை மறக்கச் செய்கிறாள். அவள் உங்களை மறக்கச் செய்யாது விட்டால், உங்களுக்குப் பெருஞ் சந்தோஷம் இருந்திருக்கும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, தொடர்ந்தும் திரும்பத் திரும்ப உங்களுடைய பட்ஜைப் பாருங்கள். மீண்டும் மீண்டும் படங்களையும் பாருங்கள். தந்தையின் நினைவில் நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, தொடர்ந்தும் உங்கள் பட்ஜைப் பாருங்கள், அவ்வாறே நீங்கள் ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். இதுவே ஞானத்தைப் பெறுவதற்கான காலமாகும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! இரவு பகலாக அவர் தொடர்ந்தும் கூறுகிறார்: இனிய குழந்தைகளே! குழந்தைகள் கூறுவதில்லை: இனிமையிலும் இனிமையான பாபா. உண்மையில், நீங்கள் இருவருக்கும் இதைக் கூற வேண்டும். இருவரும் இனிமையானவர்கள், இல்லையா? எல்லையற்ற பாப்தாதா! சரீர உணர்வுடையவர்கள் பாபாவுக்குக் கூறுகிறார்கள்: இனிமையான, இனிமையான பாபா! சில குழந்தைகள் பாபாவுக்குக் கோபத்தினாலும் விடயங்களைக் கூறுகிறார்கள்: நீங்கள் அதைத் தாதாவுக்குக் கூறும்பொழுது, நீங்கள் தந்தைக்கும் அதைக் கூறுகிறீர்கள். அது ஒன்றேதான். சில சமயங்களில் அவர்கள் தங்களுடைய ஆசிரியருடன் குழப்பமடைகிறார்கள், சில சமயங்களில்; ஒருவருடனொருவர் குழப்பமடைகிறார்கள். ஆகவே, எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கிறார். அனைத்துக் கிராமங்களிலும்;; பல குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் தொடர்ந்தும் அனைவருக்கும் எழுதுகிறார்: எவ்வாறு நீங்கள் மிகவும் கோபமடைகிறீர்கள் என்பதைப் பற்றிய ஒரு முறைப்பாடு எனக்குக் கிடைத்துள்ளது. எல்லையற்ற தந்தை இதைச் சரீர உணர்வு என அழைக்கிறார். தந்தை அனைவருக்கும் கூறுகிறார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! குழந்தைகள் அனைவரும் தொடர்;ந்தும் தளம்பல் அடைகிறார்கள். இதில், மாயை யாரைச் சக்திநிறைந்தவராகவும், உறுதியானவராகவும் இனங்காண்கிறாளோ, அவர்களுடன் யுத்தம் செய்கிறாள். அனுமன் ஒரு மகாவீரராகச் (தைரியமுள்ள போர்வீரர்) சித்தரிக்கப்படுகிறார். அவர்கள் அவரை அசைப்பதற்கு முயற்சி செய்தார்கள். இந்நேரத்திலேயே அவள் அனைவரையும் பரீட்சிக்கிறாள். அனைவரும் மாயையுடன் வெற்றியை அல்லது தோல்வியைக் கொண்டிருக்கிறார்கள். இந்த யுத்தத்தில், நினைவும், மறத்தலும் உள்ளன. நீங்கள் எவ்வளவுக்கு நினைவில் நிலைத்திருக்கிறீர்கள் அல்லது எவ்வளவுக்கு நீங்கள் சதா தந்தையை நினைவுசெய்ய முயற்சி செய்கிறீர்கள் என்பதற்கேற்ப, நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறந்த அந்தஸ்தைக் கோருகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்குத் தந்தை வந்துவிட்டார், அவர் உங்களுக்குத் தொடர்ந்தும் கற்பிக்கிறார். நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாத்திரமே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். இதில் எவருடனும் குழப்பமடைவதற்கான கேள்வியே கிடையாது. குழப்பமடைவது என்றால், கோபப்படுவதாகும். ஒருவர் ஒரு தவறைச் செய்தால், அதை பாபாவுக்கு முறையிடுங்கள். உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் அதை எவருக்கும் கூறுவதாக இருக்கக் கூடாது. அது உங்கள் சொந்தக் கரங்களில் சட்டத்தை எடுத்துக்கொள்வது போன்றதாகும். அரசாங்கம் எவரையும் தனது சொந்தக் கரங்களில் சட்டத்தை எடுத்துக்கொள்வதற்கு அனுமதிப்பதில்லை. ஒருவர் இன்னுமொரு நபரைக் குத்தினால், அவர் பழிவாங்கப்படுவதற்காகக் குத்தப்படுவார் என்றல்ல. அவர் பற்றி முறையிடப்பட்டு, அவருக்கெதிராக ஒரு வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. இங்கும், குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் எவருக்கும் திருப்பிப் பதிலளிக்கக்கூடாது. பாபாவுக்குக் கூறுங்கள். ஒரு பாபா மாத்திரமே அனைவரையும் எச்சரிப்பார். பாபா உங்களுக்கு மிகவும் இனிமையானதொரு வழிமுறையைக் காண்பிப்பார். அவர் உங்களுக்கு மிக்க இனிமையுடன் கற்பித்தல்களைக் கொடுப்பார். சரீர உணர்வுடையவர் ஆகுவதால், நீங்கள் உங்களுடைய சொந்த அந்தஸ்தைக் குறைக்கிறீர்கள். ஏன் நீங்கள் உங்களுக்கு ஓர் இழப்பை உருவாக்க வேண்டும்? சாத்தியமானவரையில், பாபாவைத் தொடர்ந்தும் பெருமளவு அன்புடன் நினைவுசெய்யுங்கள். உலகம் முழுவதிலும் உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கின்ற எல்லையற்ற தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்யுங்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். ஒருபொழுதும் எவரையும் அவதூறு செய்ய வேண்டாம்! தேவர்கள் எவரையாவது அவதூறு செய்கிறார்களா? சில குழந்தைகளால் ஏனையோரை அவதூறு செய்வதை நிறுத்த முடியாது. தந்தைக்குக் கூறுங்கள், அவர் அவர்களுக்குப் பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துவார். இல்;லாவிட்டால், நேரம் வீணாக்கப்படுகிறது. ஏனையோரை அவதூறு செய்வதற்குப் பதிலாக, தந்தையை நினைவுசெய்வதே மேலானது, அதனால் நீங்கள் பெருமளவுக்கு நன்மையடைகிறீர்கள். எவருடனும் வாதிடுவது மிகவும் நல்லதல்ல. நீங்கள் புதிய உலகத்து இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பதை உங்கள் இதயங்களில் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உள்ளார உங்களுக்குப் பெரும் அக்கறை இருக்க வேண்டும். நினைவும், தெய்வீகக் குணங்களுமே பிரதான விடயங்களாகும். எவ்வாறாயினும், குழந்தைகளாகிய நீங்கள் சக்கரத்தை நினைவுசெய்கிறீர்கள். உங்களால் அதை இலகுவில் நினைவுசெய்ய முடியும். 84 பிறவிகளின் சக்கரம் உள்ளது. உங்களுக்குச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியும், சக்கரத்தின் கால எல்லையும் தெரியும். நீங்கள் அனைவருக்கும் பெருமளவு அன்புடன் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். எல்லையற்ற தந்தை எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். அவர் எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். விநாசம் நேர்முன்னிலையில் உள்ளது. புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டுப் பழைய உலகம் அழிக்கப்படும் சங்கமயுகமே இப்பொழுது உள்ளது. தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கிறார். நினைவில் நிலைத்திருப்பதால், நீங்கள் சந்தோஷத்தைப் பெறுவதுடன், உங்கள் சரீரத்தின் வலி, துன்பம் அனைத்தும் அகற்றப்படுகின்றன. அவை அரைக்கல்பத்துக்கு அகற்றப்படும். தந்தை சந்தோஷ தாமத்தை ஸ்தாபிக்கிறார். அதன்பின்னர், இராவணனாகிய மாயை துன்பதாமத்தை ஸ்தாபிக்கிறாள். உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்கள் மீது தந்தை அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறார்! ஆரம்பத்திலிருந்தே தந்தை உங்கள் மீது அன்பு செலுத்தியுள்ளார். காமச்சிதையில் அமர்ந்ததனால், குழந்தைகளாகிய நீங்கள் அவலட்சணம் ஆகினீர்கள் என்பதைத் தந்தை புரிந்துகொள்கிறார். ஆகவே, அவர் உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்கு வருகிறார். தந்தை ஞானம்-நிறைந்தவர் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் சிறிது சிறிதாக ஞானத்தைப் பெறுகிறீர்கள். பின்னர் மாயை உங்களை அதை மறக்கச் செய்கிறாள். அவள் நீங்கள் சந்தோஷமாக இருப்பதை அனுமதிப்பதில்லை. குழந்தைகளே, எல்லாக் காலத்திலும் உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர்ந்திருக்க வேண்டும். சத்தியயுகத்தில் உங்கள் (சந்தோஷ) பாதரசம் மிகவும் உயர்வாக இருந்தது. நீங்கள் இப்பொழுது நினைவுயாத்திரை மூலம் அதை உயரும்படி செய்ய வேண்டும். அது படிப்படியாக மாத்திரமே உயர்ந்து செல்லும். வெற்றியையும், தோல்வியையும் அனுபவம் செய்யும்பொழுது, முன்னைய கல்பத்தில் நீங்கள் செய்ததைப் போன்றே, நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் அந்தஸ்தை அடைவீர்கள். எவ்வாறாயினும், ஒவ்வொரு கல்பத்தையும் போன்றே, அதற்குக் காலம் எடுக்கும். முன்னைய சக்கரங்களில் சித்தியடைந்தவர்கள் மாத்திரமே மீண்டும் சித்தியடைவார்கள். பாப்தாதா தொடர்ந்தும் ஒரு பற்றற்ற பார்வையாளராகக் குழந்தைகளாகிய உங்களின் ஸ்திதிகளை அவதானித்து, தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஏனைய நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகள் அந்தளவுக்குப் புத்துணர்ச்சியூட்டப்படுவதில்லை. நிலையத்துக்குச் சென்றபின்னர், அவர்கள் திரும்பவும் வெளிப்புறச் சூழலுக்குள் செல்கிறார்கள், இதனாலேயே, புத்துணர்ச்சியடைவதற்கு, குழந்தைகள் இங்கு வருகிறார்கள். தந்தையும் எழுதுகிறார்: குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்னுடைய அன்பையும், நினைவையும் கொடுங்கள். அந்தத் தந்தையர்கள் எல்லைக்குட்பட்டவர்களும், அவரோ எல்லையற்ற தந்தையும் ஆவார். பாப், தாதா இருவரும் பெருமளவு அன்பைக் கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் ஒவ்வொரு கல்பத்திலும் அவர்கள் மிகவும் சிறந்த சேவையைச் செய்வதுடன், அதைப் பெருமளவு அன்புடனும் செய்கிறார்கள். அவர்கள் உள்ளாரப் பெருமளவு கருணை கொள்கிறார்கள். நீங்கள் கற்காதபொழுதும், ஸ்ரீமத்தைப் பின்பற்றாதபொழுதும், உங்கள் நடத்தை சிறந்ததாக இல்லாதபொழுதும், பாபா கருணை கொள்கிறார்: நீங்கள் ஒரு குறைவான அந்தஸ்தையே கோருவீர்கள். பாபாவால் வேறு என்ன செய்ய முடியும்? அங்கு வசிப்பதற்கும், இங்கு வசிப்பதற்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. எவ்வாறாயினும், இங்கு அனைவரும் வசிக்க முடியாது. குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் வளர்கிறது. ஆயத்தங்களும் தொடர்ந்து செய்யப்படுகின்றன. அபுவே அதிமகத்தான யாத்திரைத் தலம் எனவும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை கூறுகிறார்: இங்கு நான் வந்து, பஞ்ச தத்துவங்கள் உட்பட, முழு உலகையும் தூய்மையாக்குகிறேன். அதிகளவு சேவை செய்யப்படவுள்ளது. ஒரு தந்தை மாத்திரமே வந்து அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். அவர் இதை முன்னரும் எண்ணற்ற தடவைகள் செய்துள்ளார். நீங்கள் இதை அறிந்திருந்தாலும், அதை மறக்கிறீர்கள், இதனாலேயே மாயை மிகவும் சக்திநிறைந்தவள் எனத் தந்தை கூறுகிறார். அவளுடைய இராச்சியம் அரைக்கல்பத்துக்குத் தொடர்கிறது. மாயை உங்களைத் தோற்கடிக்கிறாள், பின்னர் தந்தை உங்களை மீண்டும் எழுந்து நிற்கச் செய்கிறார். பலர் பாபாவுக்கு எழுதுகிறார்கள்: பாபா, நான் விழுந்து விட்டேன். பாபா பதிலளிக்கிறார்: நல்லது, மீண்டும் விழாதீர்கள்! எப்படியிருப்பினும், அவர்கள் தொடர்ந்தும் விழுகிறார்கள். அவர்கள் விழும்பொழுது, அவர்கள் மீண்டும் மேலேறுவதை நிறுத்துகிறார்கள். அவர்கள் கடுமையாகக் காயப்படுகிறார்கள். அனைவரும் காயப்படுகிறார்கள். அனைத்தும் கல்வியிலேயே தங்கியுள்ளது. கல்வியில் யோகம் உள்ளடக்கப்பட்டுள்ளது. “இன்னார் எனக்கு இதைக் கற்பிக்கிறார்”. தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இங்கு, நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியடைகிறீர்கள். பாடப்பட்டுள்ளது: உங்களை அவதூறு செய்பவர்களை உங்கள் நண்பர்களாகக் கருதுங்கள். கடவுள் பேசுகிறார்: பலர் என்னை அவதூறு செய்கிறார்கள்! நான் வந்து அவர்களுடைய நண்பர் ஆகுகிறேன். அவர்கள் என்னை அதிகளவுக்கு அவதூறு செய்கிறார்கள், இருப்பினும், நான் அவர்கள் அனைவரையும் என்னுடைய குழந்தைகளாகக் கருதுகிறேன்! நான் அவர்கள்; மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறேன். எவரையும் அவதூறு செய்வது நல்லதல்ல. இந்நேரத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகள் அனைவரும் தொடர்ந்தும் முயற்சி செய்வதால், அவர்கள் பல்வேறு ஸ்திதிகளைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தவறு செய்யப்படும்பொழுது, அத்தவறிலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்யுங்கள். மாயை அனைவரையும் தவறுகள் செய்ய வைக்கிறாள். இது ஒரு குத்துச்சண்டை. சிலசமயங்களில், நீங்கள் விழும் விதத்தில் காயப்படுகிறீர்கள். தந்தை தொடர்ந்தும் உங்களை எச்சரிக்கிறார்: குழந்தைகளே, நீங்கள் இவ்விதமாகத் தோற்கடிக்கப்படும்பொழுது, நீங்கள் கற்றுள்ளவை அனைத்தும் அழிந்துவிடும். நீங்கள் ஐந்தாம் மாடியிலிருந்து விழுகிறீர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நான் ஒருபொழுது இத்தகையதொரு தவறை மீண்டும் செய்ய மாட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்! எவ்வாறு பாபாவால் உங்களை மன்னிக்க முடியும்? தந்தை கூறுகிறார்: முயற்சி செய்யுங்கள்! மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் என்பது பாபாவுக்குத் தெரியும். அவள் பலரைத் தோற்கடிக்கிறாள். உங்களுக்குத் தவறுகளைப் பற்றிக் கற்பிப்பதும், உங்களைத் தவறுகளிலிருந்து விடுபடச் செய்வதும் ஓர் ஆசிரியரின் கடமையாகும். ஒருமுறை ஒருவர் தவறு ஒன்றைச் செய்தால், அவர் எல்லாக் காலத்துக்கும் அதைத் தொடர்ந்து செய்வார் என்பதல்ல் இல்லை. தெய்வீகக் குணங்கள் நினைவுகூரப்படுகின்றன் ஒருபொழுதும் தவறுகள் நினைவுகூரப்படுவதில்லை. ஒரு தந்தை மாத்திரமே அநாதியான மூலிகைச்சிகிச்சை நிபுணர். அவர் உங்களுக்கு மருந்தைக் கொடுப்பார். ஏன் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் சொந்தக் கரங்களில் சட்டத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்? தங்களில் கோபத்தின் சுவட்டைக் கொண்டிருப்பவர்கள், தொடர்ந்தும் ஏனையோரை அவதூறு செய்வார்கள். அனைவரையும் சீர்திருத்துவது தந்தையின் கடமையாகும். நீங்கள் ஏனையோரைச் சீர்திருத்தப் போகின்றவர்கள் அல்ல. சிலர் தங்களில் கோபம் என்னும் தீய ஆவியைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏனையோரை அவதூறு செய்யும்பொழுது, தங்கள் சொந்தக் கரங்களில் சட்டத்தை எடுத்துக்கொள்வது போன்றுள்ளது. அவர்கள் அதன் மூலம் சீர்திருத்தப்பட மாட்டார்கள். உண்மையில், அங்கு முரண்பாடு இருக்கும், அவர்கள் உப்பையும் நீரையும் போன்று ஆகுவார்கள். குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்காகவும் தந்தை இங்கமர்ந்திருக்கிறார். உங்கள் சொந்தக் கரங்களில் சட்டத்தை எடுத்துக் கொண்டு, ஏனையோரை அவதூறுசெய்வது, ஒரு பெரிய தவறாகும். அனைவருக்கும் ஏதோவொரு பலவீனம் உள்ளது. இன்னமும், உங்களில் எவரும் சம்பூரணம் அடையவில்லை. சிலருக்கு ஒரு குறிப்பிட்ட குறைபாடுள்ளது, ஏனையோருக்கு இன்னுமொரு குறைபாடு உள்ளது. அவற்றை அகற்றுவதற்கான அந்த ஒப்பந்தம் தந்தையிடம் உள்ளது. இது உங்கள் கடமையல்ல. குழந்தைகளின் குறைபாடுகளைத் தந்தை கேட்கும்பொழுது, அவற்றை அகற்றுவதற்கு, அவர் பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துகிறார். இன்னமும், எவரும் சம்பூரணம் ஆகவில்லை. ஸ்ரீமத்தின் அடிப்படையில் அனைவரும் சீர்திருத்தப்பட்டிருக்கிறார்கள். இறுதியில் நீங்கள் சம்பூரணம் ஆகுவீர்கள். இந்நேரத்தில் நீங்கள் அனைவரும் முயற்சி செய்பவர்கள். பாபா எப்பொழுதும் அசைக்க முடியாதவராக இருக்கிறார். அவர் தொடர்ந்தும் பெருமளவு அன்புடன் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். உங்களுக்குக் கற்பிப்பது தந்தையின் கடமையாகும். பின்னர், நீங்கள் அதைப் பின்பற்றுவதோ அல்லது இல்லையோ, உங்கள் பாக்கியம்! இல்லாவிட்டால், உங்கள் அந்தஸ்து அதிகளவு குறைக்கப்படுகின்றது! ஸ்ரீமத்தைப் பின்பற்றாமலும், அத்தகைய செயல்களைப் புரிவதாலும் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படுகிறது. பின்னர், நீங்கள் அத்தவறைச் செய்ததன் காரணமாக, உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தும். நீங்கள் பெருமளவு முயற்சியைச் செய்ய நேரிடும். எவருக்காவது ஒரு குறைபாடு இருப்பின், நீங்கள் தந்தைக்குக் கூறவேண்டும். ஏனைய பலருக்கும் கூறுவது சரீர உணர்வாகும். அத்தகையவர்கள் தந்தையை நினைவுசெய்வதில்லை. நீங்கள் கலப்படமற்றவர்களாக ஆகவேண்டும். நீங்கள் அந்த ஒருவரிடம் (தந்தை) கூறினால், பின்னர் அந்த ஆத்மா சீர்திருத்தப்பட முடியும். ஒரு தந்தை மாத்திரமே அனைவரையும் சீர்திருத்துகிறார். ஏனைய அனைவரும் சீர்திருத்தப்படாதவர்கள். எவ்வாறாயினும், மாயை உங்கள் தலையைச் சுற்றச் செய்யும் அத்தகையவள் ஆவாள். தந்தை உங்கள் முகத்தை ஒரு திசையில் திருப்புகிறார், பின்னர் மாயை உங்களைச் சுழற்றி, உங்கள் முகத்தைத் தனது திசையில் திருப்புகிறாள். உங்களைச் சீர்திருத்துவதற்கும், உங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்கும் தந்தை வந்துவிட்டார். ஒருவரின் பெயரை அனைவருக்கும் கூறி அவதூறுசெய்வது, நீதியற்றதாகும். நீங்கள் சிவபாபாவை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். அவர் தீர்ப்பைக் கொடுக்கிறார். தந்தை மாத்திரமே செயலின் பலனைக் கொடுக்கிறார். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும், ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள்! பல்வேறு விருந்தினர்கள் வருகிறார்கள். பல விருந்தினர்களின் வருகையால் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நீங்களே குழந்தைகளும், நீங்களே விருந்தினர்களும் ஆவீர்கள். ஆசிரியருக்கு அவருடைய புத்தியில் இந்த அக்கறை மாத்திரமே இருக்கும். நான் அவர்களைப் போன்று, குழந்தைகளைத் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள் ஆக்க வேண்டும். நாடகத் திட்டத்துக்கேற்ப, தந்தையிடம் இந்த ஒப்பந்தம் உள்ளது. குழந்தைகளாகிய நீ;ங்கள் ஒருபொழுதும் ஒரு முரளியையும் தவற விடக்கூடாது. முரளியே நினைவுசெய்யப்படுகிறது. நீங்கள் ஒரு முரளியைத் தவறவிட்டால், அது பாடசாலைக்கு வருகை தராதிருப்பது போன்றதாகும். இதுவே எல்லையற்ற தந்தையின் பாடசாலை. நீங்கள் இதை ஒருநாள் கூடத் தவற விடக்கூடாது. தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். இதை உலகில் எவரும் புரிந்துகொள்வதில்லை. சுவர்க்கம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகிறது என்பதைக் கூட எவரும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் அனைத்தையும் புரிந்துகொள்கிறீர்கள். இக்கல்வி உங்களைப் பெருமளவு வருமானத்தைச் சம்பாதிக்கச் செய்கிறது. நீங்கள் பிறவிபிறவியாக இக்கல்வியின் பலனைப் பெறுகிறீர்கள். விநாசத்துக்கான அனைத்தும் உங்கள் கல்வியுடன் தொடர்புபடுகிறது. நீங்கள் உங்கள் கல்வியைப் பூர்த்திசெய்ததும் யுத்தம் ஆரம்பமாகும். கற்றுத் தந்தையை நினைவுசெய்த பின்னர், நீங்கள் பரீட்சையை எடுத்து, முழுப் புள்ளிகளையும் கோருவீர்கள், பின்னர் யுத்தம் ஆரம்பமாகும். உங்கள் கல்வி ஒரு முடிவுக்கு வரும்பொழுது, யுத்தம் ஆரம்பமாகும். இது புதிய உலகத்துக்கான, முழுமையான புதிய ஞானம். இதனாலேயே ஆதரவற்ற அப்பாவி மக்கள் குழப்பமடைகிறார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் பிறருடைய குறைபாடுகளைக் காணும்;பொழுது, ஒருபொழுதும் எவரையும் அவதூறு செய்யாதீர்கள். எங்கும் எவருடைய குறைபாடுகளையும் பற்றிப் பேசாதீர்கள். ஒருபொழுதும் உங்கள் இனிமையைக் கைவிட வேண்டாம். என்றுமே கோபப்படவோ அல்லது எவரையும் எதிர்க்கவோ வேண்டாம்.
2. ஒரு தந்தை மாத்திரமே அனைவரையும் சீர்திருத்துகிறார். ஆகவே, ஒரு தந்தைக்கு அனைத்தையும் கூறி, கலப்படமற்றவர்கள் ஆகுங்கள். என்றுமே முரளியைத் தவற விட வேண்டாம்.ஆசீர்வாதம்:
நீங்கள் “நான்” எனும் சரீர உணர்வை யாகத்தில் அர்ப்பணித்து விடக்கூடிய, ஒரு தாரணை சொரூபம் ஆகுவீர்களாக.“நான்” எனும் உணர்வு உங்கள் எண்ணங்களிலும் அல்லது கனவுகளிலும் இல்லாமலிருக்கும்பொழுதும், உங்களுடைய அநாதியான ஆத்ம உணர்வு ரூபம் உங்கள் விழிப்புணர்வில் இருக்கும்பொழுதும், சப்தமற்ற உச்சரிப்பான “பாபா, பாபா” தொடர்ந்தும் வெளிப்படும்பொழுதும், நீங்கள் ஓர் உண்மையான பிராமணரான, தாரணை சொரூபம் எனப்படுவீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் “நான்” எனும் உணர்வைத் தியாகம் செய்தால், அதாவது, இவ்வுலகத்தின் உங்களது பழைய சுபாவத்தையும், சம்ஸ்காரங்களையும் இந்தப் பெரும் யாகத்தில் தியாகம் செய்யும்பொழுது, பழைய உலகம் அர்ப்பணிக்கப்பட்டு விடும். அதேபோல் இப்பொழுது நீங்கள் இந்த யாகம் உருவாகக் கருவியாக இருந்ததைப் போல், இப்பொழுது இறுதி அர்ப்பணிப்பையும் உருவாக்கி, அதன் சம்பூரணத்திற்குக் கருவி ஆகுங்கள்.
சுலோகம்:
சுயத்திடமிருந்தும், சேவையிலிருந்தும், அனைவரிடமிருந்தும் திருப்தி எனும் சான்றிதழைக் கோருவதே, ஒரு வெற்றி சொரூபம் ஆகுவதாகும்.