17.01.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    14.10.87     Om Shanti     Madhuban


பிராமண வாழ்க்கை என்பது தந்தையுடன் சகல உறவுமுறைகளின் அனுபவங்களைப் பெறுவதற்கான வாழ்க்கை ஆகும்.


இன்று, பாப்தாதா பல சந்திப்புக்களைக் கொண்டாடிய, பல கல்பங்களாக அவரைச் சந்திக்கும் தனது குழந்தைகளைச் மீண்டும் சந்திப்பதற்காக வந்துள்ளார். இந்த அலௌகீக சந்திப்பு, எதிர்காலத்தில் அழகான சத்தியயுகத்தில்கூட இடம்பெற முடியாது. இந்த விசேடமான யுகத்திற்கு மட்டுமே, தந்தையும் குழந்தைகளும் சந்திப்பதற்கான ஆசீர்வாதம் உள்ளது. இதனாலேயே, இந்த யுகம் சங்கமயுகம், அதாவது, சந்திப்பைக் கொண்டாடுவதற்கான ஒரு யுகம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய யுகத்தில், விசேட நடிகர்களான ஆத்மாக்களான நீங்களே இத்தகைய மேன்மையான சந்திப்பைக் கொண்டாடுபவர்கள். பாப்தாதாவும் பலமில்லியன்களில் கையளவினரான மேன்மையான, பாக்கியசாலி ஆத்மாக்களான உங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அவர் உங்களுக்கும் இந்த விடயத்தை நினைவூட்டுகிறார். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பாபா உங்களுக்கு எத்தனை விடயங்களை நினைவூட்டியுள்ளார்? நீங்கள் இவற்றை நினைவு செய்தால், நீண்டதொரு பட்டியல் வெளிப்படும். அவர் உங்களுக்குப் பல விடயங்களை ஞாபகப்படுத்தி இருப்பதால், நீங்கள் அனைவரும் நினைவு சொரூபங்கள் ஆகியுள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில், பக்தர்கள் ஒவ்வொரு கணமும் தொடர்ந்து நினைவு செய்வார்கள். இது நினைவின் சொரூபமான ஆத்மாக்களான உங்களின் ஞாபகார்த்தம் ஆகும். நினைவின் சொரூபமான ஆத்மாக்களான உங்களின் ஒவ்வொரு செயலின் சிறப்பியல்பையும் அவர்கள் தொடர்ந்து நினைவு செய்கிறார்கள். பக்தியின் சிறப்பியல்பு, நினைவு செய்தல், அதாவது, புகழ் பாடுதல். நினைவு செய்து கொண்டே, அவர்கள் அந்த போதையில் தங்களை மறந்து விடுகிறார்கள். குறுகிய நேரத்திற்கு அவர்களுக்கு வேறெந்த விழி;ப்புணர்வும் இருப்பதில்லை. நினைவு செய்து கொண்டிருக்கும்போது, அவர்கள் அதில் தங்களை மறந்து விடுகிறார்கள். அதாவது, அவர்கள் அதில் திளைத்திருக்கிறார்கள். குறுகிய காலத்திற்கு அவர்கள் பெறும் அந்த அனுபவம், அந்த ஆத்மாக்களுக்கு மிக அழகாகவும் தனித்துவமாகவும் அமைகிறது. அது ஏன்? ஏனென்றால், அவர்கள் நினைவு செய்யும் ஆத்மாக்கள், சதா தந்தையின் அன்பில் திளைத்திருப்பவர்கள். அந்த ஆத்மாக்கள் தந்தையிடமிருந்து தாம் பெறுகின்ற சகல பேறுகளிலும் சதா தங்களை மறந்திருப்பவர்கள். இதனாலேயே, இத்தகைய ஆத்மாக்களை நினைவு செய்யும்போது, அந்தப் பக்த ஆத்மாக்களும், ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாக்களான உங்களிடமிருந்து அந்த அனுபவத்தின் துளியைக் குறுகிய காலத்திற்குப் பெறுகிறார்கள். எனவே, சிந்தித்துப் பாருங்கள்: அவர்களை நினைக்கும் பக்த ஆத்மாக்களுக்கே இத்தகைய அலௌகீக அனுபவம் கிடைக்கின்றது என்றால், நினைவு சொரூபங்களாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் பாக்கியத்தை அருள்பவர்களாகவும் இருக்கும் ஆத்மாக்களான நீங்கள் உங்களின் நடைமுறை வாழ்க்கையில் எத்தனை அனுபவங்களைப் பெறுவீர்கள்? இந்த அனுபவங்களுடன் எப்போதும் தொடர்ந்து முன்னேறுங்கள்.

ஒவ்வோர் அடியிலும், வெவ்வேறு விழிப்புணர்வு ரூபங்களின் சொரூபமாக இருப்பதைத் தொடர்ந்து அனுபவம் செய்யுங்கள். காலத்திற்கேற்பவும் செயல்பாடுகளுக்கு ஏற்பவும் நினைவின் சொரூபமாக வெளிப்பட்ட நிலையில் இருப்பதை அனுபவம் செய்யுங்கள். உதாரணமாக, அமிர்தவேளையில், நாள் ஆரம்பமாகும்போது, நான் தந்தையுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறேன். நான் ஒரு மேன்மையான ஆத்மா, ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகின்ற ஒரு மாஸ்ரர் ஆசீர்வாதங்களை அருள்பவர் ஆவேன். நான் பாக்கியத்தை அருள்பவரிடமிருந்து நேரடியாகப் பாக்கியத்தைப் பெறும் ஒரு பலமில்லியன் மடங்கு பாக்கியசாலி ஆத்மா ஆவேன். உங்களின் விழிப்புணர்வில் இந்த மேன்மையான ரூபத்தைக் கொண்டு வாருங்கள். இது ஆசீர்வதிக்கப்பட்ட நேரமாகும். உங்களுடன் ஆசீர்வாதங்களை அருள்பவரும் பாக்கியத்தை அருள்பவரும் இருக்கிறார்கள். ஒரு மாஸ்ரர் ஆசீர்வாதங்களை அருள்பவராக, நீங்கள் நிரம்பியவர்கள் ஆகுகிறீர்கள். அத்துடன் நீங்கள் ஏனைய ஆத்மாக்கள் ஓர் ஆசீர்வாதத்தைப் பெறச் செய்யும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மா ஆவீர்கள். இந்த ரூபத்தின் விழிப்புணர்வை வெளிப்படச் செய்யுங்கள். நீங்கள் எப்படியோ அவ்வாறுதான் இருக்கிறீர்கள் என நினைக்காதீர்கள். ஆனால், காலத்திற்கேற்ப வெவ்வேறு விழிப்புணர்வின் ரூபங்களை அனுபவம் செய்யுங்கள். அப்போது நீங்கள் சந்தோஷத்தின் பல தனித்துவ வகைகளினதும் தனித்துவமான பேறுகளினதும் பொக்கிஷக்களஞ்சியம் ஆகுவீர்கள். ‘நான் அடைய வேண்டியதை அடைந்துவிட்டேன்’ என்ற மௌன வார்த்தைகளைக் கொண்ட பேறுகளின் பாடல்கள் உங்களின் இதயங்களில் இருந்து சதா ஒலிக்கும். இந்த முறையில், காலத்திற்கேற்பவும் செயல்களுக்கும் ஏற்ப, வெவ்வேறு விழிப்புணர்வின் ரூபங்களைத் தொடர்ந்து அனுபவம் செய்யுங்கள். முரளியைக் கேட்கும்போது, நீங்கள் இறை மாணவ வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்ற விழிப்புணர்வுடன் இருங்கள். அதாவது, நீங்கள் இறைவனின் மாணவன், கடவுள் அவரே பரந்தாமத்தில் இருந்து குறிப்பாக உங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்திருக்கிறார். கடவுளே வந்திருப்பதே விசேடமான பேறு ஆகும். இந்த விழிப்புணர்வின் சொரூபமாக இருந்து நீங்கள் முரளியைக் கேட்கும்போது, உங்களுக்குள் அதிகளவு போதை ஏற்படும். முரளியை வாசிப்பவர், ஒழுங்கு முறைக்கேற்ப, சாதாரணமான முறையில் வாசித்தால், அதைக் கேட்பவர்களும் அந்த முறையில் கேட்டால், உங்களுக்குள் அந்தளவு போதை ஏற்படாது. எவ்வாறாயினும், உங்களின் ரூபத்தின் உணர்வில் இருந்து, அதாவது, நீங்கள் இறைவனின் மாணவன் என்ற நிலையில் இருந்து அதைச் செவிமடுத்தால், நீங்கள் அலௌகீக போதையை அனுபவம் செய்வீர்கள். உங்களுக்குப் புரிகிறதா?

வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு விழிப்புணர்வு ரூபங்களின் போதை அதிகளவில் இருக்க வேண்டும். இந்த முறையில்;, நாள் முழுவதும் ஒவ்வொரு செயலிலும் தொடர்ந்து தந்தையின் நினைவின் சொரூபம் ஆகுங்கள். சிலவேளைகளில், இறைவனை நண்பராக அல்லது சகபாடியாக அனுபவம் செய்யுங்கள். சிலவேளைகளில், உங்களின் வாழ்க்கைத் துணைவராக அனுபவம் செய்யுங்கள். சிலவேளைகளில் கடவுளை உங்களின் விசேடமான அதியன்பிற்குரிய குழந்தையாக அனுபவம் செய்யுங்கள். அதாவது, உரிமையுள்ள, உங்களின் முதல் வாரிசாக அனுபவம் செய்யுங்கள். ஒரு குழந்தை மிகவும் அழகாகவும் தகுதிவாய்ந்தவராகவும் இருக்கும்போது, பெற்றோர்களுக்குத் தமது குழந்தை குடும்ப விளக்கு, குடும்பத்தின் பெயரைப் பெருமைப்படுத்த வந்தவர் என்ற போதை அதிகளவில் இருக்கும். கடவுளே குழந்தையாக இருக்கும் ஒருவரின் பெயர் அதிகளவில் பெருமைப்படுத்தப்படும். அவர்களின் குலம் அதிகளவில் நன்மை பெறும். எனவே, நீங்கள் சிலவேளைகளில் உலகச் சூழலால் அல்லது வெவ்வேறு பிரச்சனைகளால் சிறிதளவு தனிமையாக அல்லது சோகமாக இருந்தால், இத்தகைய அழகான குழந்தையுடன் விளையாடுங்கள். அவரை உங்களின் நண்பராகக் கருதி விளையாடுங்கள். நீங்கள் சிலவேளைகளில் களைப்படைந்து விட்டால், தாயின் மடியில் நித்திரைக்குச் செல்லுங்கள். அவரின் மடியில் அமிழ்ந்து விடுங்கள். ஏதாவதொரு வேளையில், உங்களுக்குள் மனச்சோர்வு ஏற்பட்டால், சர்வசக்திவானுடன் இருக்கும் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற விழிப்புணர்வின் சொரூபமாக இருப்பதை அனுபவம் செய்யுங்கள். அப்போது, மனச்சோர்வு அடைவதில் இருந்து, உங்களின் இதயம் சந்தோஷம் அடையும். வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு உறவுமுறைகளில், வெளிப்படுகின்ற வெவ்வேறு ரூபங்களின் விழிப்புணர்வுடன் இருங்கள். அப்போது நீங்கள் இயல்பாகவே தந்தையின் சதா சகவாசத்தை அனுபவம் செய்வீர்கள். அதனால், நீங்கள் சங்கமயுகத்தின் இந்த பிராமண வாழ்க்கையை விலைமதிப்பற்றதாக எப்போதும் அனுபவம் செய்வீர்கள்.

நீங்கள் இந்த உறவுமுறைகள் எல்லாவற்றினதும் பொறுப்பை நிறைவேற்றுவதில் மிகவும் மும்முரமாக இருப்பதால், உங்களிடம் வருவதற்கு மாயைக்கு நேரம் இருக்காதென்பது இன்னோர் விடயம். பெரிய இல்லறத்தைப் பார்த்துக் கொள்பவர்கள், இத்தகைய பெரிய இல்லறத்தைப் பார்த்துக் கொள்வதில் தாம் எப்போதும் மிக மும்முரமாக இருப்பதனால், வேறு எதையும் தாம் நினைப்பதில்லை எனக் கூறுவார்கள். எனவே, இறையன்பிற்கான உங்களின் பொறுப்பை நிறைவேற்றும் பிராமண ஆத்மாக்களான உங்களின் இறை செயல்கள் மிகவும் மகத்தானவை! இறைவனின் மீதான அன்பான செயல் உங்களின் நித்திரையிலும் தொடர்கிறது. உங்களின் தூக்கத்தில் நீங்கள் யோக நிலையில் இருந்தால், அது தூக்கம் அல்ல. ஆனால், நித்திரையின் போது செய்யும் யோகம் ஆகும். அப்போது உங்களின் தூக்கத்தில் கூட இறைவனைச் சந்திப்பதை உங்களால் அனுபவம் செய்ய முடியும். யோகம் என்றால் சந்திப்பு என்று அர்த்தம். யோகத்துடன் தூங்குதல் என்றால், சரீரமற்ற ஸ்திதியை அனுபவம் செய்தல் என்று அர்த்தம். எனவே, இதுவும் இறைவனுக்கான அன்பு, இல்லையா? எனவே, உங்களைப் போன்று அதிகளவு செயல்களைச் செய்பவர்கள் எவரும் இல்லை. உங்களால் ஒரு விநாடியேனும் எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. பக்தி மார்க்கத்தில், பக்தர்களின் வடிவில் நீங்கள் எவ்வாறு பல நாட்களின் பின்னர் அவரைச் சந்தித்தீர்கள் என்றும், அதனால் நீங்கள் எவ்வாறு அவரிடமிருந்து பிரதிபலனாக ஒன்றையும் விட்டுவிடாமல் பெற்றுக் கொள்வீர்கள் என்றும் பாடல்களைத் தொடர்ந்து பாடினீர்கள். எனவே, நீங்கள் ஒவ்வொரு விநாடியையும் கணக்கில் எடுத்துக் கொள்பவர்கள். இந்த ஒரு சிறிய பிறவியில் உள்ள சந்திப்பில், நீங்கள் கல்பம் முழுவதற்குமான கணக்கை நிறைவேற்றுகிறீர்கள். 5000 வருடங்களுடன் ஒப்பிடும்போது, இந்தச் சிறிய பிறவி வெகு சில தினங்களைப் போன்றதல்லவா? எனவே, மிகவும் சில தினங்களில், நீங்கள் நீண்ட காலத்திற்கான கணக்கைத் தீர்க்க வேண்டியுள்ளது. இதனாலேயே, ஒவ்வொரு மூச்சிலும் நினைவு செய்யுங்கள் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் உச்சாடனம் செய்கிறார்கள். ஆனால், நீங்கள் நினைவின் சொரூபங்கள் ஆகுகிறீர்கள். எனவே, ஒரு விநாடியேனும் உங்களால் எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா? இது மகத்தானதொரு செயலாகும். அந்தச் சிறிய இல்லறத்தின் செயல்பாடு, இந்தச் செயலில் இருந்து உங்களை அப்பால் கவரக்கூடாது. உங்களால் இலகுவாகவும் இயல்பாகவும் உங்களின் சொந்த சரீரம் உட்பட சரீர உறவுகள், சரீரத்தின் சகல உடமைகள் மற்றும் பேறுகளின் பற்றை வென்றவர் ஆகமுடியும். அதன்பின்னர் நினைவின் சொரூபம் ஆகமுடியும். இந்தக் கடைசிப் பரீட்சைத்தாள் உங்களை வரிசைக்கிரமமாக மாலையின் மணிகள் ஆக்கும்.

அமிர்தவேளையில் இருந்து யோகா ஸ்திதியில் தூங்குவது வரை, நீங்கள் வெவ்வேறு விழிப்புணர்வுகளின் ரூபங்களின் அனுபவசாலி ஆகினால், நீண்ட காலத்திற்கு விழிப்புணர்வின் சொரூபம் ஆகும் இந்த அனுபவம், உங்களை நினைவின் சொரூபமாக இருக்கும் கேள்வியில் திறமைச் சித்தி எய்த வைக்கும். வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருப்பதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். ஏனென்றால், ஒவ்வொரு மனித ஆத்மாவும் வாழ்க்கையில் பல்வகை வேறுபாடுகளையே விரும்புவார். எனவே, நாள் முழுவதும் வெவ்வேறு உறவுமுறைகளையும் வெவ்வேறு விழிப்புணர்வின் ரூபங்களையும் அனுபவம் செய்யுங்கள். உலகிலும், தந்தை நிச்சயமாகத் தேவை என மக்கள் கூறுகிறார்கள். ஆனால், தந்தையுடன்கூடவே, வாழ்க்கைத் துணைவரின் அனுபவம் உங்களுக்கு இல்லாவிட்டால், அப்போதும் வாழ்க்கை நிறைவடையவில்லை என்றே கருதப்படும். உங்களுக்கு ஒரு குழந்தை இல்லாவிட்டால், அப்போதும் வாழ்க்கை நிறைவு பெறவில்லை என்றே கூறப்படும். ஒவ்வொரு உறவுமுறையும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சம்பூரணமாக உள்ளது எனக்கூறப்படும். எனவே, இந்த பிராமண வாழ்க்கை ஒரு சம்பூரணமான வாழ்க்கையாகும். இதில் நீங்கள் கடவுளுடன் ஒவ்வொரு உறவுமுறையையும் அனுபவம் செய்கிறீர்கள். ஓர் உறவுமுறையைக்கூடத் தவற விடாதீர்கள். கடவுளுடனான ஓர் உறவுமுறையேனும் தவறவிடப்பட்டால், யாராவதோர் ஆத்மா அந்த உறவுமுறையில் உங்களைத் தன்னை நோக்கிக் கவர்வார். சில குழந்தைகள் சிலவேளைகளில் கூறுவார்கள்: தந்தையுடன் உறவுமுறை உள்ளது. ஆனால், நண்பர் என்ற உறவுமுறை மிகச்சிறியதோர் உறவுமுறை. அதற்கு ஏனைய ஆத்மாக்கள் தேவைப்படுகிறார்கள். ஏனென்றால், தந்தை என்பவர் பெரியவர். எவ்வாறாயினும், கடவுளுடன் உறவுமுறைகளை ஏற்படுத்தும்போது, அதில் ஏனைய ஆத்மாக்களுடனான சிறிய அல்லது இலேசான உறவுமுறை கலந்து விட்டாலும், ‘சகல’ என்ற வார்த்தை முடிந்துவிடும். நீங்கள் ‘கொள்ளளவிற்கேற்ப’ என்ற வரிசையில் வந்துவிடுவீர்கள். பிராமணர்களின் மொழியில், ‘சகல’ என்ற வார்த்தை அனைத்திற்கும் பிரயோகிக்கப்படுகிறது. எங்கும் அனைத்தும் உள்ளதோ அங்கே சம்பூரணத்தன்மை காணப்படும். இரண்டு கலைகள் குறைவாக இருந்தாலும், நீங்கள் இரண்டாவது மாலையின் மணிகள் ஆகிவிடுவீர்கள். ஆகவே, சகல உறவுமுறைகளினதும் விழிப்புணர்வின் சொரூபம் ஆகுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? கடவுளே உங்களுக்குச் சகல உறவுமுறைகளின் அனுபவத்தை முன்வந்து வழங்கும்போது, நீங்கள் அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையா? இந்த வேளையில் கடவுளால் மட்டுமே உங்களுக்கு இந்தப் பொன்னான வாய்ப்பை வழங்க முடியும். வேறு எந்த வேளையிலும் யாராலும் உங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க முடியாது. யாராவது ஒருவர் உங்களின் தந்தையாகவும் அதேவேளை உங்களின் குழந்தையாகவும் இருக்க முடியுமா? இது ஒரேயொருவரின் புகழ் மட்டுமே ஆகும். இது ஒரேயொருவரின் மகத்துவம் ஆகும். ஆகவே, சகல உறவுமுறைகளினதும் நினைவின் சொரூபம் ஆகுங்கள். இதில் களிப்பு உள்ளதல்லவா? பிராமண வாழ்க்கை எதற்காக? களிப்புடன் இருந்து நீங்கள் இரசிப்பதற்காகவே. எனவே, இந்த அலௌகீகக் களிப்பைக் கொண்டாடுங்கள். களிப்பான வாழ்க்கையை அனுபவம் செய்யுங்கள். அச்சா.

இன்று, டெல்லி சபையைச் சேர்ந்தவர்கள் இங்கிருக்கிறார்கள். நீங்கள் இராஜ சபையின் அங்கத்தவர்களா? அல்லது, நீங்கள் வெறுமனே சபையை அவதானிப்பவர்களா? சபையில், இருவரும் அமர்ந்திருப்பார்கள்: சபையின் அங்கத்தவர்களும், சபையை அவதானிப்பவர்களும். நீங்கள் அனைவரும் யார்? டெல்லிக்கு இரண்டு சிறப்பியல்புகள் உள்ளன. 1. டெல்லி, இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரின் இதயத்தில் உள்ளது. 2. அங்கிருந்தே இராச்சியம் ஆளப்படுகிறது. அது இதயத்தில் உள்ளது. எனவே, உங்களின் இதயத்தில் யார் இருக்க வேண்டும்? இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவர். எனவே, டெல்லி வாசிகள் சதா இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரைத் தமது இதயங்களில் வைத்திருப்பவர்கள். நீங்கள் இத்தகைய அனுபவசாலி ஆத்மாக்கள். உங்களிடம் சுய இராச்சிய அதிகாரமும் எதிர்காலத்தின் உலக இராச்சிய அதிகாரமும் உள்ளன. உங்களின் இதயத்தில் இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரை வைத்திருக்கும்போது, இப்போது இராச்சியத்திற்கான உரிமை உங்களிடம் இருப்பதுடன், எப்போதும் அந்த உரிமை உங்களிடம் இருக்கும். எனவே, உங்களின் வாழ்க்கையில் இந்த இரண்டு சிறப்பியல்புகளும் இருக்கிறதா என எப்போதும் சோதித்துப் பாருங்கள்: உங்களின் இதயத்தில் சௌகரியம் அளிப்பவரை வைத்திருத்தல், ஓர் உரிமையைக் கொண்டிருத்தல். இத்தகைய பொன்னான வாய்ப்பை எடுத்துக் கொள்பவர்கள், வெறுமனே பொன்னான வாய்ப்பு மட்டுமல்ல, ஆனால் வைரமான வாய்ப்பை எடுத்துக் கொள்பவர்கள், மிகுந்த பாக்கியசாலிகள் ஆவார்கள். அச்சா.

இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாட்டிலோ, நீங்கள் இப்போது எல்லையற்ற சேவைக்கான மிக நல்ல வசதியைப் பெற்றுள்ளீர்கள். பெயரைப் போன்றே, பணியும் அழகானது. பெயரைக் கேட்கும்போது, அனைவரும் உற்சாகம் அடைகிறார்கள் - ‘சிறந்த உலகிற்கான குளோபல் ஒத்துழைப்பு’. இது மிக நீண்டதொரு பணியாகும். இதற்கு ஒரு வருடத்திற்கு மேல் எடுக்கும். எனவே, இந்தச் செயல்திட்டத்தின் பெயரைக் கேட்டவுடன் அனைவரும் உற்சாகம் அடைவதைப் போல், அவர்கள் அந்தப் பணியையும் உற்சாகத்துடன் செய்வார்கள். அழகான பெயரைக் கேட்கும்போது நீங்கள் அனைவரும் சந்தோஷம் அடைவதைப் போல், பணியைச் செய்யும்போது, நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். வெளிப்படுத்துகை என்ற திரை அசைய ஆரம்பித்து விட்டது என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அதாவது, எதன் அடிப்படையில் திரை திறக்கப்படுமோ, அது உருவாக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்தும் உருவாக்கப்படும். இந்தப் பணியின் பெயர், ‘குளோபல் ஒத்துழைப்பு’ என்றிருப்பதைப் போல், நீங்களும் அதன் சொரூபங்களாகித் தொடர்ந்து அந்தப் பணியை இலகுவாகச் செய்வீர்கள். அப்போது முயற்சி என்பது பெயரளவில் மட்டுமே என்பதை அனுபவம் செய்வதுடன், பலமில்லியன் மடங்கு வெற்றியையும் அனுபவம் செய்வீர்கள். கரவன்ஹார் உங்களைக் கருவி ஆக்கியிருப்பதையும் உங்களைக் கொண்டு அதைச் செய்விப்பதையும் நீங்கள் உணர்வீர்கள். ‘நான் செய்கிறேன்’ என நீங்கள் உணர மாட்டீர்கள். அந்த விழிப்புணர்வு உங்களுக்குள் இருந்தால், மக்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். கரவன்ஹார் உங்களைச் செய்விக்கிறார். அனைத்தையும் செய்யும் ஒரேயொருவர் அந்தப் பணியைச் செய்கிறார்;. அதேபோல், ‘கட்டளைகளைக் கொடுக்கும் ஒரேயொருவரே, எங்களை அவற்றைச் செய்யவும் வைக்கிறார்’ என்ற ஜெகதாம்பாவின் சுலோகனை நீங்கள் அனைவரும் நினைவு செய்கிறீர்கள். எப்போதும் இந்த சுலோகனை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள். சகல திசைகளிலும் மிக நல்ல ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகின்றன. எங்கு ஊக்கமும் உற்சாகமும் உள்ளதோ, அங்கு வெற்றி அண்மையில் வந்து, உங்களின் கழுத்து மாலையாகும். இந்த எல்லையற்ற பணியானது, பல ஆத்மாக்களை ஒத்துழைக்கச் செய்து, அவர்களை நெருக்கமாகக் கொண்டுவரும். ஏனென்றால், வெளிப்படுத்துகைக்கான திரை திறந்ததும், ஒவ்வொரு தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்த எல்லையற்ற மேடையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பின்னணியைச் சேர்ந்தவர்களும் என்றால், முழு உலகத்தின் ஆத்மாக்களின் பல்வகை மரத்தின் தொகுப்பு என்று அர்த்தம். எந்தவொரு தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களும் விடுபடக்கூடாது. தாம் செய்தியைப் பெறவில்லை என அவர்கள் முறைப்பாடு செய்யக்கூடாது. ஆகவே, சகல பின்னணியைச் சேர்ந்தவர்களும் என்றால், தலைவர்களில் இருந்து சேரிவாசிகள் வரை அதில் அடக்கம். சேவை செய்வதென்றால், இந்த ஞானத்தை உயர் கல்விமான் விஞ்ஞானிகளுக்கும், அதேவேளை கல்வி அறிவே இல்லாதவர்களுக்கும் கொடுத்தலாகும். எனவே, சகல பின்னணிகளையும் கொண்டவர்கள் என்றால், இந்தச் செய்தியானது உலகிலுள்ள ஒவ்வோர் ஆத்மாவையும் சென்றடைய வேண்டும். இது அத்தகைதொரு பெரிய பணியாகும். உங்களில் எவருமே, உங்களுக்குச் சேவை செய்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை எனக் கூற முடியாது. யாராவது ஒருவருக்கு நோய் ஏற்பட்டால், அந்த நோயாளிகள் ஏனைய நோயாளிகளுக்குச் சேவை செய்ய முடியும். கல்வி அறிவில்லாதவர்கள், ஏனைய கல்வி அறிவில்லாதவர்களுக்குச் சேவை செய்ய முடியும். ஒருவரால் எதைச் செய்ய முடியுமோ, அதற்கான வாய்ப்பு உள்ளது. அச்சா, உங்களால் பேச முடியாவிட்டால், உங்களின் எண்ணங்களால் சந்தோஷ மனோபாவத்தை உருவாக்குங்கள். உங்களின் சந்தோஷமான ஸ்திதியால் உலகைச் சந்தோஷமானதாக்குங்கள். உங்களில் எவருமே, உங்களால் எதையும் செய்ய முடியவில்லை அல்லது உங்களுக்கு நேரம் இல்லை என்ற சாக்குப்போக்குச் சொல்ல முடியாது. அமர்ந்திருக்கும்போது அல்லது அசையும்போது, 10 நிமிடங்களுக்கேனும் சேவை செய்யுங்கள். நீங்கள் உங்களின் ஒத்துழைப்பு விரலைக் கொடுப்பீர்கள், இல்லையா? உங்களால் எங்கேயாவது போக முடியவில்லை என்றால், உங்களின் ஆரோக்கியம் நல்லதாக இல்லாவிட்டால், வீட்டில் அமர்ந்திருந்து உங்களால் அதைச் செய்ய முடியும். நீங்கள் ஒத்துழைப்பது அத்தியாவசியமாகும். அப்போது மட்டுமே நீங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். அச்சா.

பாப்தாதா உங்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்த்துக் களிப்படைகிறார். உங்களின் இதயங்களில், வெளிப்படுத்துகை என்ற திரையைத் திறந்து, அதற்குப் பின்னால் இருப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை உங்கள் அனைவருக்கும் உள்ளது. இது நிகழ ஆரம்பித்து விட்டது. அதனால் அது தொடர்ந்து இலேசாகிவிடும். வெளிநாட்டில் உள்ள குழந்தைகளின் திட்டங்கள் தொடர்ந்து பாப்தாதாவை வந்தடைகின்றன. அவர்களுக்கும் இந்த உற்சாகம் உள்ளது. அவர்கள் தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்பையும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பெறுகிறார்கள். எங்கு ஊக்கம் உள்ளதோ, நீங்கள் ஊக்கத்தைப் பெறுவீர்கள். எங்கு உற்சாகம் உள்ளதோ, நீங்கள் உற்சாகத்தைப் பெறுவீர்கள். எனவே, இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது. ஆகவே, மிகுந்த ஆடம்பரத்துடன் இந்தப் பணியை முன்னேறச் செய்யுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், நீங்கள் அதை ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செய்தீர்கள். தந்தையினதும் சகல பிராமணர்களினதும் ஒத்துழைப்புடனும் நல்லாசிகளுடனும் தூய உணர்வுகளுடனும், அது தொடர்ந்து மேலும் முன்னேறும். அச்சா.

நினைவைக் கொண்டிருப்பதற்கும் சேவை செய்வதற்கும் சதா ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்கும் எங்கும் உள்ள மேன்மையான குழந்தைகளுக்கும், ஒவ்வொரு செயலின் விழிப்புணர்வின் சொரூபமாக இருக்கும் அனுபவத்தைக் கொண்டிருக்கும் அனுபவசாலி ஆத்மாக்களுக்கும், ஒவ்வொரு செயலிலும் தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் சதா அனுபவம் செய்யும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், தமது பிராமண வாழ்க்கைகளைக் களிப்புடன் வாழும் மகாத்மாக்களுக்கும், தயவு செய்து பாப்தாதாவின் ஆழ்ந்த அன்பு நிறைந்த நினைவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இந்தச் சங்கம யுகத்தில், பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாகி, ஒன்றுக்குப் பதிலாக நூறு மடங்கு பலனைப் பெறுவீர்களாக.

சங்கமயுகம் மட்டுமே நீங்கள் ஒன்றுக்காக நூறு மடங்கு நடைமுறைப் பலனைப் பெறுவதற்கான யுகமாகும். ‘நான் தந்தைக்குச் சொந்தமானவன், நான் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதும், நீங்கள் மாயையை வென்றவராகவும் வெற்றியாளராகவும் இருக்கும் போதையை அனுபவம் செய்வீர்கள். இந்த மேன்மையான எண்ணத்தைக் கொண்டிருத்தலே விதையாகும். அதன் மகத்தான பலன், பரமாத்மாவான தந்தையே மனித ரூபத்தில் உங்களைச் சந்திக்க வந்திருப்பதாகும். இந்தப் பலனில் சகல பலன்களும் அடங்கியுள்ளன.

சுலோகம்:
உண்மையான பிராமணர் என்றால், அவரின் முகமும் நடத்தையும் தூய்மையின் ஆளுமையினதும் இராஜரீகத்தினதும் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவை.


ஓம் சாந்தி
அறிவித்தல்: இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. உலகத் தியான வேளைக்கான யோகத்தில் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை சகல சகோதர, சகோதரிகளும் குறிப்பாக யோக தபஸ்யாவில் அமர்ந்திருந்து, நல்லாசிகள் நிறைந்த உங்களின் எண்ணங்களால் உலகிலுள்ள ஆத்மாக்களுக்கும் சடப்பொருளிற்கும் அமைதியினதும் சக்தியினதும் அதிர்வலைகளை வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.