22.01.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையிடம் புத்துணர்ச்சி பெறுவதற்காக வந்துள்ளீர்கள். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் சதா புத்துணர்ச்சி உடையவராக இருப்பீர்கள்.கேள்வி:
விவேகமான குழந்தைகளின் பிரதான அடையாளங்கள் எவை?பதில்:
விவேகமானவர்கள் முடிவற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார்;கள். சந்தோஷம் இல்லையெனில், அவர்கள் முட்டாள்களாவர். விவேகமானவர்கள் என்றால், தங்களுடைய புத்தியைத் தெய்வீகமானதாக ஆக்குபவர்கள் என்பதாகும். அவர்கள் மற்றவர்களின் புத்தியையும் தெய்வீகமானதாக ஆக்குகின்றார்கள். அவர்கள் ஆன்மீகச் சேவை செய்வதில் மும்முரமாக இருப்பதுடன், தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்காமல் அவர்களால் இருக்கவும் முடியாது.ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: இந்த தாதாவும், புரிந்துகொள்கின்றார், ஏனெனில் தந்தை இங்கமர்ந்திருந்து தாதாவின் மூலம் விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறு நீங்கள் புரிந்து கொள்கின்றீர்களோ, அதேபோன்று இந்த தாதாவும் புரிந்துகொள்கின்றார். கடவுள் என தாதா அழைக்கப்படுவதில்லை. இவை கடவுளின் வாசகங்களாகும். தந்தை விளங்கப்படுத்துகின்ற பிரதான விடயம் என்ன? ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள் என்பதாகும். ஏன் அவர் இதைக் கூறுகின்றார்? ஏனெனில் நாங்கள் எங்களை ஆத்மாக்களாகக் கருதுவதனால், பரமாத்மா பரமதந்தையான தூய்மையாக்குபவரால் தூய்மையாக்கப்படவுள்ளோம். இந்த ஞானம் உங்களின் புத்தியில் உள்ளது. இதை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். தாங்கள் தூய்மையற்றவர்கள் என மக்கள் கூவியழைக்கின்றார்கள். புதிய உலகம் நிச்சயமாகத் தூய்மையாக இருக்கும். தந்தையே உலகைப் புதிதாக்குகின்றார்; அவரே அதை ஸ்தாபிப்பவர். அவரையே அவர்கள் கூவியழைக்கின்றார்கள். அவர் தூய்மையாக்குகின்ற பாபா என அழைக்கப்படுகின்றார். அவர் தூய்மையாக்குபவர் எனவும், அத்துடன் தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்களே தந்தையைக் கூவி அழைக்கின்றார்கள்; சரீரங்கள் கூவி அழைப்பதில்லை. பரலோகத் தந்தையே, ஆத்மாக்களாகிய எங்களின் தந்தையாவார். அவரே தூய்மையாக்குபவர். அது புதிய உலகம் என்பதையும், இது பழைய உலகம் என்பதையும் நீங்கள் மிக நன்றாக நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் இதைப் புரிந்துகொள்கின்றீர்கள், இல்லையா? தாங்கள் முடிவற்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பதாக உணர்கின்ற சில விவேகமற்றவர்கள் (முட்டாள்கள்) இருக்கின்றனர்; தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக அவர்கள் உணர்கின்றனர். எவ்வாறாயினும், கலியுகத்தை ஒருபொழுதும் சுவர்க்கம் என அழைக்க முடியாது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதன் பெயரே கலியுகம், பழைய தூய்மையற்ற உலகமாகும். அதில் வித்தியாசம் இருக்கின்றது, இல்லையா? இது கூட மனிதர்களின் புத்தியில் நிலைத்திருப்பதில்லை. அவர்கள் முற்றிலும் சீரழிந்த நிலையை அடைந்துள்ளார்கள். “நீங்கள் கல்லுப்புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள்” எனக் குழந்தைகள் கற்காதபொழுது, அவர்களுக்குக் கூறப்படுகின்றது. உங்களுடைய கிராமத்திலுள்ள மக்கள் முழுமையான கல்லுப்புத்தியைக் கொண்டிருகின்றார்கள் என பாபாவும் எழுதுகின்றார். அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை, ஏனெனில், அவர்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதில்லை. நீங்கள் தெய்வீகப்புத்தியைக் கொண்டவராக ஆகினால், மற்றவர்களையும் அதேபோன்று ஆக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்யவேண்டும். இது பற்றி வெட்கப்படுவது என்ற கேள்வியே இல்லை. எவ்வாறாயினும் மனிதர்கள் அரைக் கல்பமாகத் தங்கள் புத்தியில் பிழையான கருத்துக்களைக் கொண்டிருந்ததால், அவர்கள் அதை மறப்பதில்லை. எவ்வாறு அவர்களால் மறக்க முடியும்? ஒரேயொரு தந்தைக்கு மாத்திரமே அவர்களை மறக்கச் செய்யும் சக்தி இருக்கின்றது. வேறு எவருமன்றி தந்தையாலேயே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். ஏனைய அனைவரும் ஞானமற்றவர்கள் என்பதே இதன் அர்த்தமாகும். ஞானக்கடலாகிய தந்தை வந்து, ஞானத்தைப் பேசும் வரை, எவ்வாறு அவர்களால் ஞானத்தைப் பெற முடியும்? “தமோபிரதான்” என்றால், ஞானமற்றவர்களின் உலகம் என்பதாகும். “சதோபிரதான்” என்றால் தெய்வீக உலகமாகும். இதில் வித்தியாசம் இருக்கின்றது. தேவர்கள் மறுபிறவி எடுக்கின்றார்கள். நேரம் தொடர்ந்தும் கடந்து செல்கின்றது, புத்தியும் தொடர்ந்து பலவீனமாகுகின்றது. யோகத்தில் உங்களின் புத்தியை இணைப்பதால் பெற்றுள்ள சக்திகள் அனைத்தும், அப்பொழுது முடிவடைகின்றது. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துவதால், நீங்கள் மிகவும் புத்துணர்ச்சி அடைகின்றீர்கள். நீங்கள் புத்துணர்ச்;சி பெற்று ஓய்வு நிலையில் இருந்தீர்கள். தந்தையும் எழுதுகின்றார்: குழந்தைகளே, இங்கு வந்து புத்துணர்ச்சி பெற்று, ஓய்வும் எடுங்கள். புத்துணர்ச்சி பெற்ற பின்னர் நீங்கள் சத்தியயுகத்தில் ஓய்வான பூமிக்குச் செல்கின்றீர்கள். அங்கே நீங்கள் அதிகளவு ஓய்வு பெறுவீர்கள். அங்கே நீங்கள் அமைதி, சந்தோஷம், செழிப்பு போன்றவற்றைப் பெறுகின்றீர்கள்; நீங்கள் அங்கே அனைத்தையும் பெறுகின்றீர்கள். எனவே நீங்கள் இங்கு பாபாவிடம் புத்துணர்ச்சி பெறுவதற்கும், ஓய்வு பெறுவதற்குமே வருகின்றீர்கள். சிவபாபாவே உங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டுகின்றார். நீங்கள் பாபாவுடன் இருக்கும்பொழுது, ஓய்வெடுக்கின்றீர்கள். ஓய்வு என்றால் அமைதியாகும். நீங்கள் களைப்படையும்பொழுது, ஓய்வெடுக்கின்றீர்கள். சிலர் ஓரிடத்திற்கும், ஏனையோர் வேறோர் இடத்திற்கும் ஓய்வு எடுக்கச் செல்கின்றார்கள். அதில் புத்துணர்வடைதல் என்ற கேள்வியில்லை. நீங்கள் இங்கு வரும்பொழுது, தந்தை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு விளங்கப்படுத்துவதால், புரிந்துணர்வைப் பெறுகின்றீர்கள். அவரை நினைவுசெய்வதனால், நீங்கள் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகுகின்றீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்கே, இங்கு வருகிறீர்கள். இதற்கு நீங்கள் என்ன முயற்சியைச் செய்ய வேண்டும்? இனிமையிலும், இனிமையான குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்யுங்கள்! எவ்வாறு இந்த உலகச் சக்கரம் சுழல்கின்றது, எவ்வாறு நீங்கள் ஓய்வு பெறுகின்றீர்கள் என்பதைப் பற்றிய சகல கற்பித்தல்களையும் தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார். வேறெவரும் இவ் விடயங்களை அறியார். ஆகையினால், நீங்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும், அதனால் அவர்களும் உங்களைப் போன்று புத்துணர்ச்சி பெறமுடியும். அனைவருக்கும் செய்தியைக் கொடுப்பதே உங்களது கடமையாகும். நீங்கள் சதாகாலமும் புத்துணர்ச்சி ஊட்டப்பட்டவர்களாகவும், ஓய்வு பெற்றவர்களாகவும் ஆகவேண்டும். இந்தச் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். தந்தையையும், தங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுமாறு அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். இது மிக இலகுவான விடயம். எல்லையற்ற தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் உங்களுக்குச் சுவர்க்கம் எனும் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் உள்ளீர்கள். நீங்கள் மாயையின் சாபம் பற்றியும், தந்தையின் ஆஸ்தி பற்றியும் அறிவீர்கள். நீங்கள் இராவணனான, மாயையினால் சபிக்கப்படுகின்றபொழுது, உங்களது தூய்மை, அமைதி, சந்தோஷம் அனைத்தும் முடிவடைகின்றது. ஆகையினால் உங்களது செல்வமும் அப்பொழுது முடிவடைகின்றது. எவ்வாறு அவை அனைத்தும் படிப்படியாக முடிவடைகின்றது எனத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். அதற்கு எத்தனை பிறவிகள் எடுக்கின்றது? துன்ப பூமியில் எவ்வித ஓய்வும் இருக்க மாட்டாது. சந்தோஷ தாமத்தில் சதாகாலமும் ஓய்வைத் தவிர, வேறெதுவுமில்லை. பக்தியானது மக்களை அதிகளவு களைப்படையச் செய்துள்ளது! பக்தி அவர்களைப் பிறவிபிறவியாகக் களைப்படையச் செய்கின்றது; அது அவர்களை ஏழைகளாக்குகின்றது. தந்தை இப்பொழுது உங்களுக்கு இதை விளங்கப்படுத்துகின்றார். புதியவர்கள் வருகின்றபொழுது அவர்களுக்கு அதிகளவு விளஙகப்படுத்தப்படுகின்றது. மக்கள் அனைத்தையும் பற்றி அதிகளவு சிந்திக்கின்றார்கள். ஒருவேளை இங்கே ஏதோ மந்திரவித்தை இருக்கலாம் என அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், நீங்களும் மந்திரவாதி பற்றிப் பேசுகின்றீர்கள். எனவே நான் மந்திரவாதி என நானும் கூறுகின்றேன். ஆனால் இது மிருகங்களை ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றுகின்ற மந்திரவித்தையல்ல, இதில் மிருகங்கள் பற்றிய கேள்வியில்லை. இவை புத்தியினால் புரிந்துகொள்ளப்பட முடியும். பாடப்பட்டுள்ளது: சுவர்க்கத்தின் தெய்வீக ஒலி பற்றி ஓர் ஆட்டினால் எதனை அறிந்துகொள்ள முடியும்? இந்நேரத்தில் மனிதர்கள் செம்மறியாடு போல் இருக்கின்றார்கள். அந்த விடயங்கள் இந்த இடத்தையே குறிக்கின்றன. அவ்வாறான விடயங்கள் சத்தியயுகத்தில் பேசப்பட மாட்டாது. அவை இந்த நேரத்தையே நினைவூட்டுகின்றன. சண்டிகாவிற்குப் (மயான தேவதை) பல்வேறு ஒன்றுகூடல்கள் உள்ளன. அவள் யார் என அவர்களிடம் கேளுங்கள், அவள் ஒரு தேவி என அவர்கள் பதிலளிப்பார்கள். எவ்வாறாயினும் அவ்வாறான பெயர்கள் அங்கு இருக்க மாட்டாது. சத்தியயுகத்தில் அவர்களுடைய பெயர்கள் எப்பொழுதும் ஸ்ரீ இராமச்சந்திரன், ஸ்ரீ கிருஷ்ணர் என மங்களகரமானவையாக இருக்கின்றன. மேன்மையான ஒருவரே ஸ்ரீ என அழைக்கப்படுகின்றார். சத்தியயுகத்துச் சமூகத்தவரே மேன்மையானவர்கள் எனக் கூறப்படுகின்றனர். எவ்வாறு விகாரமான கலியுகத்துச் சமூகத்தவரை மேன்மையானவர்கள் என அழைக்க முடியும்? ஸ்ரீ என்றால் மேன்மையானவர்கள். இன்றைய மக்கள் மேன்மையானவர்கள் அல்ல. மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு அதிக நேரம் எடுப்பதில்லை என நினைவுகூரப்படுகின்றது. அவர்கள் பின்னர் ஐந்து விகாரங்களில் ஈடுபடுவதனால், தேவர்களிலிருந்து மனிதர்களாக மாறுகின்றனர். இராவண இராச்சியத்தில் அனைவரும் மனிதர்களே. அங்கே அவர்கள் அனைவரும் தேவர்கள். அது தேவ உலகம் என்றும், இது மனித உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. தேவ உலகம் பகல் என்றும், மனித உலகம் இரவு என்றும் அழைக்கப்படுகின்றது. ஒளியானது பகல் என்றும், இருளானது அறியாமை இரவு என்றும் அழைக்கப்படுகின்றது. நீங்கள் இவ் வித்தியாசத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். முன்னர் நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை என்பதை அறிவீர்கள். இப்பொழுது இந்த விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளன. ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் படைப்பவரை அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி அவர்கள் அறிவார்களா என வினவினால், அவர்கள் “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) என்றே கூறியிருப்பார்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையை அறிந்து கொள்ளாததால், முன்னர் நாஸ்திகர்களாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அவரே ஆதியான, அநாதியான பாபா ஆவார். அவர் ஆத்மாக்களின் பாபா ஆவார். நீங்கள் ஒருபொழுதும் எரிக்கப்பட முடியாத, எல்லையற்ற தந்தைக்கு இப்பொழுது உரியவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இங்கு அனைவரும் எரிக்கப்படுகின்றார்கள், ஏனெனில் அவர்கள் சரீரங்களைக் கொண்டிருக்கின்றனர். இராவணனும் எரிக்கப்படுகின்றான். ஓர் ஆத்மாவை என்றுமே எவராலும் எரிக்க முடியாது. தந்தை தன்னிடம் மாத்திரமேயுள்ள மறைமுகமான ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்றார். ஆத்மாவிலேயே இந்த மறைமுகமான ஞானம் உள்ளது. ஆத்மாக்களும் மறைமுகமானவர்கள். ஓர் ஆத்மா தனது வாயின் மூலம் பேசுகின்றார். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சரீர உணர்வுடையவர்கள் ஆகாதீர்கள்! ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். இல்லையெனில், நீங்கள் தலைகீழாக மாறி விட்டதைப் போல் உள்ளது. உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுவதற்கு நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் நாடகத்தின் முக்கியத்துவத்தையும் மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை அனைத்தும் மீண்டும் மீண்டும் அதேபோன்று இடம்பெறுகின்றது. எவரும் இதை அறியார்;. எவ்வாறு நாடகம் விநாடிக்கு விநாடி தொடர்ந்தும் நகர்கின்றது என்ற ஞானத்தையும் உங்கள் புத்தி கொண்டுள்ளது. எவருமே ஆகாயத்தின் முடிவை அடைய முடியாது. அவர்களால் பூமியின் முடிவை அடைய முடியும். ஆகாயம் சூட்சுமமானது, பூமி வெளிப்படையானது. நீங்கள் பல விடயங்களின் முடிவை அடைய முடியாது. மேலே எங்கும் வானம் பரந்திருப்பது போன்று, கீழே பூமியும் எங்கும் பரந்திருக்கின்றது என அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் சமயநூல்களிலிருந்து இந்த விடயங்களைக் கேட்டிருக்கின்றார்கள். எனவே அவர்கள் அவை அனைத்தையும் பார்ப்பதற்காக மேலே செல்கின்றார்கள். அவர்கள் மேலே ஓர் உலகை ஸ்தாபிக்கவும் முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் உலகை அதிகளவு விரிவாக்கம் செய்துள்ளார்கள். பாரத்தில், ஒரு தேவ தர்மம் மாத்திரமே இருந்தது. அங்கே வேறு எந்தத் தேசமும் இருக்கவில்லை. பின்னர் அவர்கள் உலகை அதிகளவு கட்டி எழுப்பினார்கள். இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவர்கள் பாரதத்தில் அத்தகைய சிறிய நிலப்பரப்பிலேயே வாழ்ந்தார்கள். அவர்கள் ஜமுனா நதிக்கரை ஓரத்திலே வாழ்ந்தார்கள். டெல்கி தேவதைகளின் (பரிஸ்தான்) பூமியாக இருந்தது. இது தொடர்ந்தும் அகாலமரணம் இடம்பெறுகின்ற இடுகாடு (கபிரிஸ்தான்) என அழைக்கப்படுகின்றது. அமரத்துவ தாமமே தேவதைகளின் உலகம் என அழைக்கப்படுகின்றது. அங்கே பெருமளவு இயற்கை அழகு இருக்கின்றது. உண்மையில் பாரதமே தேவதைகளின் பூமி என அழைக்கப்படும். இலக்ஷ்மியும், நாராயணனும் தேவதைகளின் பூமியின் அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் மிக அழகானவர்களாக இருந்தார்கள்;; அவர்கள் சதோபிரதானாக இருந்தார்கள். இயற்கையான அழகை அவர்கள் கொண்டிருந்தார்கள். அந்த ஆத்மாக்கள் தொடர்ந்தும் பிரகாசித்தார்கள். கிருஷ்ணரின் பிறப்பு எவ்வாறு இடம்பெறுகின்றது என பாபா குழந்தைகளுக்குக் காட்டினார். முழு அறையும் பிரகாசிக்கத் தொடங்குவதைப் போன்றுள்ளது. எனவே தந்தை இங்கிருந்து குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது தேவதைகளின் பூமிக்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள்; அதுவும் வரிசைக்கிரமமானதாக இருக்க வேண்டும்; அனைவருமே ஒரேமாதிரி இருக்க முடியாது. எவ்வாறு ஒரு சின்னஞ்சிறிய ஆத்மா, எவ்வளவு பெரிய பாகத்தை நடிக்கின்றார் எனச் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்குகின்றபொழுது, சரீரம் என்னவாகுகின்றது எனப் பாருங்கள்! முழு உலகிலுமுள்ள நடிகர்கள் அனைவரும் அநாதியாக உருவாக்கப்பட்ட பாகங்களை நடிக்கின்றார்கள். இவ்வுலகமும் அநாதியானது. ஒவ்வொருவருக்குள்ளே இருக்கும் பாகமும் அநாதியானது. இது உலக விருட்சம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வதால், நீங்கள் அதை அற்புதமானது என்று மாத்திரமே கூற முடியும்! தந்தை உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அவ்வாறிருந்தும், உங்களுக்குப் புரிந்துகொள்வதற்கு நாடகத்தில் எந்தளவு நேரம் நிச்சயிக்கப்பட்டுள்ளதோ, அந்தளவு நேரத்தையே நீங்கள் புரிந்துகொள்வதற்கு எடுப்பீர்கள். ஒவ்வொருவருடைய புத்திக்குமிடையே வித்தியாசம் உள்ளது. ஒவ்வோர் ஆத்மாவிலும் மனமும், புத்தியும் உள்ளன, ஆனால் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இடையில் அதிகளவு வித்தியாசம் உள்ளது. குழந்தைகளான நீங்கள் இப்பொழுது ஒரு புலமைப்பரிசிலை வெல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். ஆகையினால் உங்கள் இதயங்களில் சந்தோஷம் உள்ளது. இங்கேயும் நீங்கள் உள்ளே வந்தவுடன் உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும் உங்கள் முன்னால் பார்க்க முடியும். அப்பொழுது நிச்சயமாக அந்தச் சந்தோஷம் இருக்கும், இல்லையா? நீங்கள் இப்பொழுது அவர்களைப் போன்று ஆகுவதற்காக இங்கே கற்பதற்கு வந்துள்ளீர்கள் எனப் புரிந்துகொள்கின்றீர்கள். இல்லையெனில், எவருமே இங்கு வந்திருக்க மாட்டார்கள். இதுவே உங்கள் இலக்கும், இலட்சியமுமாகும். உங்களுடைய அடுத்த பிறவியின் இலக்கையும், இலட்சியத்தையும் காணக்கூடிய ஒரு பாடசாலை வேறு எங்குமே இல்லை. அவர்களே சுவர்க்கத்தின் அதிபதிகள் என்றும், நாங்கள் அவ்வாறு ஆகப்போகின்றோம் என்றும் நீங்கள் காணலாம். நாங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றோம். நாங்கள் அந்த இராச்சியத்துக்கோ அல்லது இந்த இராச்சியத்துக்கோ உரியவர்கள் அல்ல. நாங்கள் இடையில் இருந்து, அங்கு செல்கின்றோம். படகோட்டி அசரீரியானவர், படகும் அசரீரியானதே. அவர் படகை மறுகரைக்கு இழுத்து எடுத்து, பரந்தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அசரீரியான தந்தை அசரீரியான குழந்தைகளை அழைத்துச் செல்கின்றார். தந்தை மாத்திரமே குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். இந்தச் சக்கரம் முடிவுக்கு வந்து, அதன்பின்னர் அதேபோன்று மீண்டும் இடம்பெற வேண்டும். நீங்கள் ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரத்தை எடுக்கின்றீர்கள். நீங்கள் சிறியவராகி, பின்னர் மீண்டும் பெரியவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஒரு மாம்பழ விதையை விதைக்கின்றபொழுது, ஒரு மாமரம் வெளிப்படுகின்றது. அது எல்லைக்குட்பட்ட விருட்சம், ஆனால் இதுவோ பல்வகை விருட்சம் என்றும் அழைக்கப்படுகின்ற, மனித விருட்சமாகும். நீங்கள் தொடர்ந்தும் உங்கள் முழுப் பாகங்களையும் சத்தியயுகத்திலிருந்து கலியுகம் வரை நடிக்கின்றீர்கள். அழியாத ஆத்மாக்களான நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தின் உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் இருந்தார்கள்; அவர்கள் இப்பொழுது இல்லை. அவர்கள்; சக்கரத்தைச் சுற்றி வந்து அவ்வாறு ஆகினார்கள். முன்னர், அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனாக இருந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது, இது அவர்களது கடைசிப் பிறவியாகும். பிரம்மா, சரஸ்வதி உட்பட அனைவரும் நிச்சயமாக வீடு திரும்ப வேண்டும். சுவர்க்கத்தில் அதிகளவு மக்கள் இருக்கவில்லை. அங்கே இஸ்லாமிய மதத்தை அல்லது பௌத்த மதத்தைச் சேர்ந்த நடிகர்கள் இருக்கவில்லை. அங்கே தேவர்கள் மாத்திரமே இருந்தார்கள். வேறு எவருக்கும் இந்தப் புரிந்துணர்வு இருப்பதில்லை. விவேகமானவர்களாக ஆகுபவர்கள் ஒரு பட்டத்தைப் பெற வேண்டும். ஒருவர் கற்று, செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றார். ஆகவே இங்கே வந்து உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும் பார்க்கும்பொழுது, குழந்தைகளான நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்கள் சந்தோஷத்திற்கு எந்த எல்லையுமில்லை. இவ்வாறே ஒரு பாடசாலையோ அல்லது பல்கலைக்கழகமோ இருக்க வேண்டும். இது மிகவும் மறைமுகமானது! எவ்வாறாயினும், இது ஒரு மிகவும் மகத்தான பல்கலைக்கழகம். கல்வி எந்தளவு உயர்ந்ததோ, கல்லூரியும் அந்தளவு மகத்தானதாக இருக்கும். அங்கே நீங்கள் சகல வசதிகளையும் கொண்டிருக்கின்றீர்கள். ஆத்மாக்கள் கற்று, பின்னர் தங்க சிம்மாசனத்தில் அல்லது மர சிம்மாசனத்தில் அமர வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் இவை கடவுள் சிவனின் வாசகங்களாகும். இவரே முதல் இலக்க, உலகின் இளவரசராவார். ஒவ்வொரு கல்பத்திலும் தந்தை வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நான் இவரினுள் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் கற்பிக்கின்றேன். தேவர்களிடம் இந்த ஞானம் இருப்பதில்லை. இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் தேவர்களாகிய பின்னர், இந்தக் கல்விக்கான தேவை இருக்காது. இதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் பரந்ததொரு புத்தி தேவை. அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியிலிருந்து, இந்தத் தூய்மையற்ற உலகை அகற்றுங்கள். உங்கள் பழைய சரீரத்தையும், சரீர உறவுமுறைகளையும் மறந்து, உங்கள் புத்தியைத் தந்தையோடும், சுவர்க்கத்தோடும் இணையுங்கள்.
2. அநாதியான ஓய்வைப் பெறுவதற்கு, தந்தையினதும், உங்கள் ஆஸ்தியினதும் விழிப்புணர்வில் இருங்கள். தந்தையின் செய்தியை அனைவருக்கும் கொடுத்து அவர்களைப் புத்துணர்வூட்டுங்கள். ஆன்மீகச் சேவை செய்வது பற்றி வெட்கப்படாதீர்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் சதா தந்தையின் முன்னால் நேரடியாக இருந்து, சந்தோஷத்தை அனுபவம் செய்வதால், களைப்பற்றவர்களாகவும், சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட்டவர்களாகவும் இருப்பீர்களாக.நீங்கள் எவ்வகையான சுபாவத்தையேனும் அல்லது சம்ஸ்காரத்தையேனும் மாற்றுவதில் மனந்தளர்ந்தாலோ அல்லது கவனயீனமானவர் ஆகினாலோ, அதுவும் களைப்படைதலின் ஒரு வடிவமே ஆகும். ஆகவே இதில் களைப்பற்றவர்கள் ஆகுங்கள். களைப்பற்றவர்கள் ஆகுவது எனில் சோம்பேறித்தனம் எதனையும் கொண்டிராதிருப்பது என்று அர்த்தமாகும். இவ் வகையான சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட்டுள்ள குழந்தைகளே, சதா தந்தையின் முன்னால் நேரடியாக இருந்து, சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள். அவர்கள் தங்களின் மனங்களில் துன்ப அலைகள் எதனையும் கொண்டிருப்பதில்லை. ஆகவே சதா தந்தையின் முன்னால் இருந்து, சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள்.
சுலோகம்:
ஒரு வெற்றி சொரூபம் ஆகும்பொருட்டு, தொடர்ந்தும் உங்கள் ஒவ்வோர் எண்ணத்தினாலும்; புண்ணியத்தையும்;, உங்கள் வார்த்தைகளால் ஆசீர்வாதத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.