18.01.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.01.21     Om Shanti     Madhuban


பாப்தாதாவின் பெறுமதிவாய்ந்த மேன்மையான வாசகங்கள் பிதா ஸ்ரீ இன்
நினைவு தினமான ஜனவரி 18 அன்று வகுப்பில் வாசிக்கப்பட வேண்டும்.


இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தை ஒருவரை நினைவு செய்வதன் மூலம் அதியுயர்ந்தவர்கள் (ளரிசநஅந) ஆகவேண்டும். எனவே, தவறாகவேனும் வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள்.

ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை இங்கு அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்களுடைய தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், அத்துடன் உங்களுடைய வீட்டையும் நினைவு செய்யுங்கள். அது மௌனக் கோபுரம் என்றும், சந்தோஷக் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு கோபுரம் மிக உயர்வாகவே இருக்கும். நீங்கள் அங்கு செல்வதற்கு முயற்சி செய்கிறீர்கள். கோபுரத்தில் வசிக்கின்ற தந்தை எவ்வாறு நீங்கள் அதியுயர்வான மௌனக் கோபுரத்திற்குச் செல்லலாம் என்று உங்களுக்குக் கற்பிக்கின்றார். குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இந்த ஆத்மாவாகிய நான் அமைதிதாம வாசி ஆவேன். அது தந்தையின் வீடாகும். நீங்கள் நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் இப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, அமைதி தாமத்;தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். இதற்கு முயற்சி தேவை என்பதைத் தந்தை அறிவார். ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பவர்கள் மகாவீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். நினைவின் மூலமாக மாத்திரமே நீங்கள் ஒரு மகாவீரராக, அதியுயர்ந்தவராக (ளரிசநஅந) ஆகுகின்றீர்கள். அதியுயர்ந்தவர் என்றால் சக்திசாலி என்பதாகும்.

உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகளாகவும், உலகின் அதிபதிகளாகவும் ஆக்குகின்ற பாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். ஆத்மாக்களின் புத்தி தந்தையிடம் செல்கின்றது. இதுவே ஆத்மாக்கள் தந்தைமீது கொண்டிருக்கும் அன்பாகும். அதிகாலையில் எழுந்திருந்து, தந்தையுடன் இனிய உரையாடலை மேற்கொள்ளுங்கள். பாபா, இது உங்களுடைய அற்புதமே! நீங்கள் என்னைச் சுவர்க்கத்தின் அதிபதியாக ஆக்குவீர்கள் என நான் ஒருபோதும் கனவுகூடக் கண்டிருக்கவில்லை! பாபா, நான் நிச்சயமாக உங்களுடைய கற்பித்தல்களைப் பின்பற்றுவேன். நான் பாவச் செயல்கள் எதனையும் செய்யமாட்டேன். பாபா என்ன முயற்சிகளைச் செய்கின்றாரோ, அவர் அதைக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்கிறார். சிவபாபாவிற்குப் பல குழந்தைகள் உள்ளனர். எனவே, அவர் நிச்சயமாக அக்கறை கொண்டிருப்பார், அல்லவா? பல குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். இங்கே, நீங்கள் இறை குடும்பத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை தனிப்பட்ட முறையில் நேரடியாக உங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றார். நான் உங்களுடனேயே உண்பேன், நான் உங்களுடனேயே அமர்ந்துகொள்வேன்… சிவபாபா இவரில் வந்து கூறுவது உங்களுக்குத் தெரியும்: இனிய குழந்தைகளே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! உங்களுடைய சொந்தச் சரீரம் உட்பட, உங்களுடைய உறவுகள் அனைத்தையும் மறந்துவிடுங்கள். இது உங்களுடைய இறுதிப் பிறவி ஆகும். இந்தப் பழைய உலகமும், பழைய சரீரமும் முடிவடைய வேண்டும். ஒரு கூற்று உள்ளது: நீங்கள் மரணிக்கும்போது, உலகமே உங்களுக்கு மரணித்துவிடுகிறது. நீங்கள் முயற்சி செய்வதற்கு இந்தக் குறுகிய சங்கம யுக காலப்பகுதி மாத்திரமே உள்ளது. குழந்தைகள் கேட்கின்றனர்: பாபா, எப்பொழுது வரைக்கும் இக்கல்வி தொடரும்? தேவ இராச்சியம் ஸ்தாபிக்கப்படும் வரைக்கும் பாபா தொடர்ந்தும் எங்களுடன் ஞானத்தைப் பகிர்ந்துகொள்வார். அதன்பின்னர் நீங்கள் புதிய உலகிற்கு மாற்றப்படுவீர்கள். இது ஒரு பழைய சரீரம், நிச்சயமாக கர்மவேதனை ஏதாவது தொடர்ந்தும் இருக்கவே செய்யும். இதில் பாபா உங்களுக்கு உதவி செய்வார் என நீங்கள் எவ்விதமான நம்பிக்கையும் வைத்திருக்கக்கூடாது. நீங்கள் கடனாளி ஆகினாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, தந்தை கூறுவார்: இது உங்களுடைய கர்மக் கணக்காகும். எவ்வாறாயினும், ஆம், யோகத்தினால் உங்களுடைய ஆயுட்காலம் அதிகரிக்கும். உங்களுடைய சொந்த முயற்சியைச் செய்யுங்கள். கருணை கொள்ளுமாறு கேட்காதீர்கள். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகத் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு நன்மை கிடைக்கும். இயன்றவரை, அனைத்தையும் யோக சக்தி மூலம் செய்யுங்கள். ‘உங்களுடைய கண் இமைகளுக்குள் என்னை மறைத்துவைத்திருங்கள்’ என்றும் பாடப்படுகிறது. நேசிக்கப்படும் ஒருவரை, “கண்களின் ஒளி” அல்லது “உயிரிலும் மேலான அன்பேயுருவானவர்” என்றெல்லாம் கூறப்படுகிறது. அந்தத் தந்தை மிகவும் பிரியமானவர், ஆனால் மறைமுகமானவர். நீங்கள் அவர்மீது கொண்டிருக்கும் அன்பு அந்தளவிற்கு இருக்கவேண்டும், கேட்கவே வேண்டாம்! குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை உங்களுடைய கண் இமைகளுக்குள் மறைத்துவைத்திருக்க வேண்டும். “கண் இமைகள்” என்றால் பௌதீகமான கண் இமைகள் என்பதல்ல. இது புத்தியால் நினைவு செய்வதற்கான விடயமாகும். அதியன்பிற்கினிய அசரீரியான தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஞானக் கடலும், சந்தோஷக் கடலும், அன்புக் கடலும் ஆவார். அத்தகைய அதியன்பிற்கினிய தந்தை மீது அதிக அன்பு இருக்க வேண்டும். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு தன்னலமின்றி அதிக சேவை செய்கின்றார். அவர் ஒரு தூய்மையற்ற சரீரத்தினுள் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்களை வைரங்களைப் போன்று ஆகச் செய்கின்றார். பாபா மிக இனிமையானவர்! எனவே, குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும். பாபா மிகவும் அகங்காரமற்றவராக இருந்து குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்கின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் அந்தளவிற்குச் சேவை செய்யவேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் உங்களுடைய சொந்தக் கட்டளைகளைக் காண்பித்தால், உங்களுடைய பாக்கியத்தைத் தவறவிட்டுவிடுவீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். பிரம்மாவின் குழந்தைகள் சகோதர, சகோதரிகள் ஆவர். நீங்கள் இறை பேரக் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் உங்களுடைய ஆஸ்தியை அவரிடமிருந்தே கோரிக்கொள்கின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு முயற்சி செய்கின்றீர்களோ, அதற்கேற்ப உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். இதற்கு, ஒரு பற்றற்ற பார்வையாளராக இருப்பதை அதிகளவில் நீங்கள் பயிற்சி செய்யவேண்டும். பாபா கூறுகிறார்: இனிய குழந்தைகளே, ஓ ஆத்மாக்களே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். தவறுதலாகவேனும், தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். நீங்கள் சத்தியம் செய்துள்ளீர்கள்: நீங்கள் மாத்திரமே என்னுடையவர்! நான் ஓர் ஆத்மா, நீங்கள் பரமாத்மா. நான் எனது ஆஸ்தியை உங்களிடமிருந்து கோரவேண்டும். நான் உங்களிடம் இருந்து இராஜ யோகம் கற்கின்றேன், அதிலிருந்து நான் இராச்சிய பாக்கியத்தைக் கோரிக்கொள்வேன்.

இனிய குழந்தைகளே, இது அநாதியான நாடகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் வெற்றி - தோல்வியின் விளையாட்டு தொடர்கின்றது. எது நிகழ்ந்தாலும் நல்லதே. படைப்பவர் நிச்சயமாகத் தனது நாடகத்தை விரும்புவார், இல்லையா? எனவே, படைப்பவரின் குழந்தைகளும் அதை விரும்புவார்கள். இந்த நாடகத்தில், தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து மிகுந்த அன்புடன் சேவை செய்வதற்காக, உங்களிடம் மாத்திரமே, அதுவும் ஒரு தடவையே வருகின்றார். தந்தை தனது குழந்தைகள் அனைவரையும் நேசிக்கின்றார். சத்திய யுகத்தில் அனைவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். விலங்குகளுக்கு மத்தியிலும் அன்பு உள்ளது. அன்பில்லாத எந்தவொரு விலங்கும் அங்கே இருக்கமாட்டாது. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் இங்கே மாஸ்டர் அன்புக்கடல்கள் ஆகவேண்டும். நீங்கள் இங்கே அவ்வாறு ஆகினால், அந்த சம்ஸ்காரம் அழிவற்றதாகிவிடும். தந்தை கூறுகிறார்: நான் சரியாக ஒரு கல்பத்திற்கு முன்னர் செய்தது போன்றே உங்களை மீண்டும் ஒரு தடவை அன்பானவர்கள் ஆக்குவதற்காகவே வந்திருக்கின்றேன். எந்தக் குழந்தையிடமிருந்தாவது கோபத்தின் ஓசையைச் செவிமடுக்கும்போதெல்லாம் அவர் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, கோபப்படுவது நல்லதல்ல. ஏனெனில், நீங்களும் துன்பத்தை அனுபவம் செய்வதுடன், மற்றவர்களும் துன்பத்தைப் பெறுவார்கள். தந்தை உங்களுக்கு சதா காலமும் சந்தோஷத்தையே கொடுக்கின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போன்று ஆகவேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கக்கூடாது.

சிவபாபா காலையின் பிரபு ஆவார். அதாவது, இரவைப் பகலாக, அதாவது காலையாக மாற்றுபவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எல்லையற்ற தந்தையே பிரபு ஆவார். அவர் ஒருவரே காலையின் பிரபுவான சாயி பாபா, கள்ளங்கபடமற்ற சிவபாபா ஆவார். அவருடைய பெயரே கள்ளங்கபடமற்றவர் (போலாநாத்) என்பதாகும். அவர் ஞானக் கலசத்தைக் கள்ளங்கபடமற்ற குமாரிகள் மீதும், தாய்மார் மீதும் வைக்கின்றார். அவர்களை அவர் உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். அவர் அத்தகையதோர் இலகுவான வழியைக் காட்டுகிறார். அவர் உங்களை மிகுந்த அன்புடன், ஞானத்தினால் பராமரிக்கின்றார். ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மையாக்குவதற்கு, நினைவு யாத்திரையில் இருங்கள். நீங்கள் யோகத்தில் நீராடவேண்டும். ஞானம் என்பது கல்வியாகும். யோகத்தில் நீராடுவதன் மூலமாகவே பாவங்கள் எரிக்கப்படும். உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதைத் தொடர்ந்தும் பயிற்சி செய்யுங்கள், அதனால் சரீரங்களின் அகங்காரம் முற்றாகவே துண்டிக்கப்படும். யோகத்தைக் கொண்டிருப்பதால் மாத்திரமே நீங்கள் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் ஆகி, பாபாவிடம் செல்லமுடியும். சில குழந்தைகள் இவ்விடயங்களை நன்றாகப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தமது அட்டவணையை நேர்மையாகக் காட்டுவதில்லை. அவர்கள் அரைக் கல்பமாகப் பொய்யான உலகில் வசித்துள்ளனர். எனவே, பொய்மை அவர்களினுள் நிலைத்துவிட்டதைப் போன்றுள்ளது. நீங்கள் தந்தைக்கு உங்களுடைய அட்டவணையை நேர்மையாகக் காண்பிக்க வேண்டும். சோதித்துப் பாருங்கள்: நான் 45 நிமிடங்கள் அமர்ந்திருந்தேன். அதில் எவ்வளவு நேரம் என்னை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்தேன்? சிலர் உண்மையைக் கூறுவதற்கு வெட்கப்படுகிறார்கள். தாங்கள் எவ்வளவு சேவை செய்தார்கள், எத்தனை பேருக்கு விளங்கப் படுத்தினார்கள் என்பதை அவர்கள் மிக விரைவாகவே கூறிவிடுவார்கள். ஆனால் அவர்களின் நினைவு அட்டவணையைப் பற்றி உண்மையைக் கூறமாட்டார்கள். நினைவில் இருக்காததால் உங்களுடைய அம்பினால் எவரையும் தாக்க முடியாமலுள்ளது, ஞான வாளில் சக்தி இல்லை. சிலர் தாங்கள் எப்பொழுதும் நினைவில் இருப்பதாகக் கூறுகின்றனர். பாபா கூறுகிறார்: நீங்கள் இதுவரைக்கும் அந்த ஸ்திதியைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் எப்பொழுதும் நினைவில் இருந்திருந்தால், கர்மாதீத நிலையை அடைந்திருப்பீர்கள். ஞானோதயம் புலப்படுவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் அவ்வளவு சுலபமாக உலகின் அதிபதி ஆகிவிட மாட்டீர்கள். தந்தை ஒருவரைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். இந்தச் சரீரம்கூட நினைவு செய்யப்படக்கூடாது. நீங்கள் இறுதியிலேயே இந்த ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் நினைவு யாத்திரை மூலம் தொடர்ந்தும் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள். நீங்கள் உங்களுடைய சரீரத்தை நீக்கிவிட்டால், உங்களால் எதையும் சம்பாதிக்க முடியாமல் போய்விடும். ஆத்மாவாகிய நீங்கள் அந்த சம்ஸ்காரங்களை உங்களுடன் கொண்டுசென்றாலும், உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்கு ஓர் ஆசிரியர் எப்படியும் தேவைப்படுவார். தந்தை மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். பல குழந்தைகள் வீட்டில் வசித்தவாறு, வேலைக்குச் செல்கின்றனர். அவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்காக ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதுடன், தொடர்ந்தும் தமது எதிர்காலத்திற்காகச் சேமித்துக்கொள்கின்றனர். அவர்கள் தொடர்ந்தும் தந்தையிடமிருந்து ஆலோசனையைப் பெறுகின்றனர். உங்களிடம் பணம் இருந்தால், எவ்வாறு உங்களால் அதைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தலாம்? பாபா கூறுகிறார்: ஒரு நிலையத்தைத் திறவுங்கள், அதன் மூலமாகப் பலரும் நன்மை பெறலாம். மக்கள் தான தர்மங்களைச் செய்து, அதற்கான பலனைத் தமது அடுத்த பிறவியில் பெற்றுக்கொள்கின்றனர். நீங்களும் உங்களுடைய எதிர்கால 21 பிறவிகளுக்கான இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றீர்கள். இது உங்களுடைய முதலாம் இலக்க வங்கியாகும். நான்கு அணாக்களை (1 சதம்) உங்களுடைய கணக்கில் வரவு வையுங்கள், நீங்கள் எதிர்காலத்தில் ஆயிரத்தைப் பெறுவீர்கள். கல்லானது தங்கமாகிவிடும். உங்களுடைய அனைத்தும் தெய்வீகமானதாக ஆகும். பாபா கூறுகிறார்: இனிய குழந்தைகளே, நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர விரும்பினால், தாயையும், தந்தையையும் முழுமையாகப் பின்பற்றுங்கள், அத்துடன் உங்களுடைய பௌதீகப் புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள். நீங்கள் உங்களுடைய பௌதீகப் புலன்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், அத்துடன் உங்களுடைய செயற்பாடுகளும் நன்றாக இல்லாவிட்டால், உயர்ந்ததோர் அந்தஸ்தை இழந்து விடுவீர்கள். நீங்கள் உங்களுடைய செயற்பாடுகளைச் சீர்திருத்த வேண்டும். பல ஆசைகளைக் கொண்டிராதீர்கள்.

பாபா உங்களை அதிகளவு ஞானத்தினால் அலங்கரித்து, சத்திய யுகத்தின் சக்கரவர்த்தியாகவும், சக்கரவர்த்தினியாகவும் ஆக்குகிறார். இதற்கு, சகிப்புத்தன்மை என்ற நற்குணம் அதிகளவில் தேவைப்படுகிறது. சரீரங்கள்மீது அதிகளவு பற்றைக் கொண்டிராதீர்கள். அனைத்தையும் யோக சக்தியால் செய்யுங்கள். பாபா அதிகளவில் இருமிக்கொண்டிருக்கின்றார், அவ்வாறிருந்தும் அவர் சேவை செய்வதில் சதா ஈடுபட்டிருக்கின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களை ஞானத்தினாலும், யோகத்தினாலும் அலங்கரித்து, உங்களைத் தகுதியானவர்கள் ஆக்குகிறார். நீங்கள் இப்பொழுது கடவுளின் மடியில், அதாவது தாயினதும் தந்தையினதும் மடியில் அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு பிரம்மாவின் வாய் மூலமாகப் பிறப்புக் கொடுக்கின்றார், எனவே அவர் தாயாக ஆகுகிறார். எவ்வாறாயினும், உங்களுடைய புத்தி சிவபாபாவிடமே செல்கிறது: நீங்களே தாயும், தந்தையும். நாங்கள் உங்களுடைய குழந்தைகள்… நீங்கள் இங்கேயே சகல நற்குணங்களும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். மீண்டும் மீண்டும் மாயையினால் தோற்கடிக்கப்படாதீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்பிற்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்களுடைய தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வணக்கமும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

அவ்யக்த மேன்மையான வாசகங்கள்:

நீங்கள் அனைவரும் யோகயுக்த், யுக்தியுக்த் ஸ்திதிகளில் ஸ்திரமாக இருந்தவாறு உங்களுடைய பணிகளை மேற்கொள்கின்றீர்களா? இது ஏனென்றால், தற்போது உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகிய மூன்றும் யுக்தியுக்தாக இருக்கவேண்டும். அப்பொழுதே உங்களால் முழுமையாகவும், சம்பூரணமாகவும் ஆகமுடியும். சூழலெங்கும் யோகயுக்தாகவும், யுக்தியுக்தாகவும் இருக்கட்டும். ஒரு யுத்த களத்தில், அனைத்துப் போர்வீரர்களும் யுத்தத்திற்குச் செல்வதற்காகத் தமது எதிரிகளுக்கு முன்னால் நின்றுகொண்டிருக்கும்போது, அவர்கள் தங்கள்மீதும், தமது ஆயுதங்கள்மீதும் அதாவது தமது சக்திகள் மீதும் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். நேரம் இப்பொழுது தொடர்ந்தும் அண்மித்து வருகிறது. இப்பொழுது இது யுத்த களத்திற்கு முன்னால் வருவதற்கான நேரம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இத்தகைய நேரத்தில் நீங்கள் எங்கும், உங்களுடைய சக்திகள் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் சற்றேனும் குறைவாகக் கவனம் செலுத்துவீர்களாயின், காலத்திற்கேற்ப பதற்றம் அதிகரிக்கையில், எங்கும் நிலவும் பதற்றமான சூழலின் தாக்கமானது, யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஆன்மீக பாண்டவர்கள்மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். நாளுக்கு நாள், சம்பூரணத்திற்கான காலம் நெருங்கி வரும்போது, உலகில் பதற்றமும் இன்னமும் அதிகரித்துக்கொண்டே செல்லும், அது குறைவடையாது. எங்கும், அவர்கள் போராட்டமான வாழ்க்கையை அனுபவம் செய்வார்கள், அதாவது அவர்கள் எல்லாத் திசைகளிலும் ஈர்க்கப்படுவது போன்றிருக்கும். ஒரு பக்கத்தில் சிறிய சிறிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும், இன்னொரு பக்கத்தில் அரசாங்கத்தின் கடுமையான சட்டதிட்டங்களினால் பதற்றம் நிலவும், மூன்றாவது பக்கத்தில் உறவுமுறைகள் ஏதாவது தவறவிடப்படுவதால் பதற்றம் காணப்படும், நான்காவது பக்கத்தில் உங்களுடைய லௌகீக உறவினர்களுடன் கொண்டிருக்கும் அன்பு, சுதந்திரம் என்பவற்றால் ஏற்படும் அற்ப சந்தோஷத்தின் உணர்வு முடிவடைவதால் உருவாகும் பயத்தின் பதற்றம் காணப்படும். மக்களில், எல்லாத் திசைகளில் இருந்தும் பதற்றம் அதிகரிக்கும். எங்கும் நிலவும் பதற்றத்தின் மத்தியில் ஆத்மாக்கள் நம்பிக்கையிழந்த நிலையில் இருப்பார்கள். அவர்கள் எங்கு சென்றாலும், பதற்றமே காணப்படும். சரீரத்தின் ஒரு நரம்பு இழுக்கப்பட்டாலும் அது அதிகளவு வேதனையைக் கொடுக்கின்றது. அப்பொழுது உங்களுடைய தலையே (மூளை) இழுக்கப்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதேபோன்று, இந்தச் சூழலும் அதிகரிக்கும். இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்ற இலக்கும் தென்படாது. நீங்கள் “ஆம்” என்று கூறினால் ஒரு போராட்டம், நீங்கள் “இல்லை” என்று கூறினாலும் ஒரு போராட்டமே. நீங்கள் சம்பாதித்தாலும் கஷ்டம், சம்பாதிக்காவிட்டாலும் கஷ்டமே ஏற்படுகிறது. நீங்கள் சேமித்தாலும் கஷ்டம், சேமிக்காவிட்டாலும் கஷ்டமே. அத்தகையதோர் சூழல் தொடர்ந்தும் உருவாக்கப்படும். அத்தகையதோர் காலகட்டத்தில், எங்கும் நிலவும் பதற்றத்தின் தாக்கம் ஆன்மீக பாண்டவ சேனையில் இல்லாதிருக்கட்டும். நீங்கள் எவ்வித பதற்றமுமின்றி பிரச்சனையில்லாமல் இருந்தாலும், சூழலின் ஆதிக்கமானது பலவீனமான ஆத்மாக்களில் இலகுவாகவே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. என்ன நிகழும் அல்லது எவ்வாறு நிகழும் என்ற பயம் காணப்படுகிறது. எனவே, அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்படாமல் இருப்பதற்கு, அவ்வப்போது மதுவனத்திலிருந்து உத்தியோகபூர்வமான இறை நினைவு யாத்திரைக்கான நிகழ்ச்சித் திட்டம் அனுப்பிவைக்கப்பட வேண்டும். அப்பொழுது ஆத்மாக்களின் பாதுகாப்பு அரண் (கோட்டை) உறுதியாக இருக்கும்.

இப்பொழுது சேவை அதிகளவில் அதிகரிக்கும், ஆனால் இந்த அதிகரிப்புடன் கூடவே நீங்கள் மிகவும் யுக்தியுக்தாகவும் இருக்கவேண்டும். இப்பொழுது பெருந்தொகையான மக்கள் உங்களுடன் ஓர் உறவுமுறையை அல்லது தொடர்பை ஏற்படுத்திக்கொள்வார்கள். சிலரே வந்து சொரூபங்கள் ஆகுவார்கள். வெளித்தோன்றுபவர்களில் அனைவரும் ஒரேமாதிரியாக இருக்கமாட்டார்கள். நாளுக்கு நாள், ஆத்மாக்களின் தரம் பலவீனமாகவே சென்றுகொண்டிருக்கும். அதாவது, பெரும் எண்ணிக்கையில் பிரஜைகள் இருப்பார்கள். அவர்கள் ஒரு விடயத்தையே விரும்புவார்கள், அவர்களுக்கு இரு விடயங்கள் தேவையில்லை. அவர்கள் அனைத்திலும் நம்பிக்கை வைத்திருக்க மாட்டார்கள். எனவே, தொடர்பில் மாத்திரம் இருப்பவர்களுக்கும்கூட, அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்குவதன் மூலம் தொடர்ந்தும் அவர்களைத் தொடர்பில் வைத்திருங்கள். காலம் மேலும் மோசமடையும்போது, பிரச்சனைகள் காரணமாக, அவர்களுக்கு தினமும் சமூகமளிக்கும் மாணவர்களாக (சநபரடயச ளவரனநவெள) இருப்பது சிரமமாக இருக்கும். எவ்வாறாயினும், பலரும் உங்களுடன் தொடர்பில் வருவார்கள். ஏனெனில், இவையே இறுதிக் கணங்கள் ஆகும். எனவே, இறுதிக் கட்டம் எவ்வாறிருக்கும்? ஆரம்பத்தில் உங்களிடம் ஆர்வத்தினதும் உற்சாகத்தினதும் அலைகள் மிகப்பெரிதாக இருந்தன. இப்பொழுது அரிதாகவே அது எவரிடமாவது காணப்படுகிறது. வருபவர்களில் பெரும்பான்மையினர் ஓர் உறவுமுறை அல்லது தொடர்பில் உள்ளவர்களாகவே இருப்பார்கள். எனவே, இந்தக் கவனம் தேவைப்படுகிறது. நீங்கள் தொடர்பில் இருக்கவேண்டிய ஆத்மாக்களை இனங்காணாத காரணத்தினால், அவர்கள் அதை அடையாமல் விடுபடுவதாக இருக்கக்கூடாது. எவருமே வெறுங்கையுடன் திரும்பிச் செல்லக்கூடாது. அவர்களால் கோட்பாடுகளைப் பின்பற்ற முடியாவிட்டாலும்கூட, அவர்கள் அன்பான தொடர்பில் இருக்க விரும்பினால், நிச்சயமாக அத்தகைய ஆத்மாக்களில் கவனம் செலுத்துங்கள். இந்தக் குழுவினர் மூன்றாவது நிலையில் உள்ளவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, அவர்கள் அதற்குரிய முறையில் கையாளப்பட வேண்டும். அச்சா. ஓம் சாந்தி.

ஆசீர்வாதம்:
நீங்கள் அன்பின் காரணமாக உங்களுடைய பலவீனங்கள் அனைத்தையும் அர்ப்பணம் செய்கின்ற, ஒரு சக்தி சொரூபம் ஆகுவீர்களாக.

அன்பின் அடையாளம் அர்ப்பணம் ஆகும். அன்பின் காரணமாக எதையாவது அர்ப்பணிக்கும்போது, அது சிரமமான ஒன்றாகவோ அல்லது அசாத்தியமான ஒன்றாகவோ இருந்தாலும்கூட, இலகுவானதாகவும் சாத்தியமானதாகவும் ஆகிவிடும். எனவே, சக்தி சொரூபமாக இருக்கின்ற ஆசீர்வாதத்தினால், உங்களுடைய பலவீனங்கள் அனைத்தையும் பலவந்தத்தாலன்றி, உங்களுடைய இதயத்தினால் அர்ப்பணித்துவிடுங்கள். ஏனெனில், உண்மையான தந்தையினால் உண்மை மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, வெறுமனே தந்தையின் அன்பிற்கான பாடல்களைப் பாடிக்கொண்டிருக்காமல், தந்தையைப் போன்று அவ்யக்த ஸ்திதியின் சொரூபம் ஆகுங்கள், அப்பொழுது அனைவரும் உங்களுடைய பாடல்களைப் பாடுவார்கள்.

சுலோகம்:
உங்களுடைய எண்ணங்களிலும், கனவுகளிலும் இதயங்களுக்கு சௌகரியமளிப்பவரின் நினைவு இருக்கும்போதே நீங்கள் ஓர் உண்மையான தபஸ்வி என்று கூறப்படுவீர்கள்.