28.01.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் எதையிட்டும் பொய்மையான அகங்காரத்தைக் கொண்டிருக்கக்கூடாது. இந்த இரதத்தின் மீது முழுமையான மரியாதையைக் கொண்டிருங்கள்.கேள்வி:
உங்கள் மத்தியில் எக்குழந்தைகள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாகவும், எக்குழந்தைகள் துர்பாக்கியசாலிகளாகவும் ஆகுகின்றார்கள்?பதில்:
தேவர்களைப் போன்ற நடத்தை கொண்டவர்களும்;, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பவர்களுமே பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகின்றார்கள். ஆனால் சித்தியடையாதவர்கள் துர்பாக்கியசாலிகள் எனப்படுகின்றார்கள். சிலர் மற்றவர்களுக்குத் தொடர்ந்தும் துன்பம் கொடுத்து மகாதுர்ப்பாக்கியசாலிகள் ஆகுகின்றார்கள். அவர்களுக்கு எவ்வாறு சந்தோஷத்தைக் கொடுப்பது என்பது தெரியாது. பாபா கூறுகின்றார்: உங்களை மிகவும் அவதானமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்து தகுதிவாய்ந்தவர்கள் ஆகுங்கள்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இப்பல்கலைக்கழகத்தில் அமர்ந்திருப்பதன் மூலம் நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் கோருகிறீர்கள். நீங்கள் அதி உயர்ந்த சுவர்க்க இராச்சியத்தையே பெறுகின்றீர்கள் என்பது உங்கள் இதயத்திற்குத் தெரியும். அத்தகைய குழந்தைகள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் நம்பிக்கையைக் கொண்டிருப்பினும், அனைவரும் ஒரேமாதிரியானவர்கள் அல்ல. நீங்கள் எப்பொழுதும் முதலில் இருந்து இறுதிவரை வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். ஒரு பரீட்சையிலும்; அவர்கள் முதல் இலக்கத்தில் இருந்து இறுதி இலக்கம் வரை வரிசைக்கிரமமாகவே இருக்கின்றார்கள். சிலர் சித்தியடைகின்றார்கள், சிலர் சித்தியெய்துவதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தை வினவலாம்: பாபா என்னைத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகின்றார், ஆனால் நான் எவ்வளவிற்கு அவ்வாறு ஆகியிருக்கின்றேன்? நான் இன்னின்னாரை விடச் சிறந்தவரா? அல்லது குறைந்தவரா? இது ஒரு கல்வியாகும். சில பாடங்களில் பலவீனமாக இருப்பவர்கள் ஒரு குறைந்தளவு தரத்தையே அடைகின்றார்கள். புலமைப்பரிசிலை ஒருசிலரே வெல்கின்றார்கள். இதுவும் ஒரு பாடசாலையாகும். நீங்கள் அனைவரும் கற்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு தூய்மையே முதலாவதும், பிரதானதுமான விடயமாகும். நீங்கள் தூய்மையாக வேண்டும் என்றே தந்தையைக் கூவி அழைத்தீர்கள். நீங்கள் குற்றப்பார்வையைக் கொண்டிருக்கும் பொழுது, உங்களாலேயே அதனை உணரக் கூடியதாக இருக்கும். சிலர் பாபாவிற்கு எழுதுகின்றார்கள் : பாபா நான் இந்த விடயத்தில் பலவீனமாக இருக்கின்றேன். மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு பாடத்தில்; பலவீனமாக இருக்கும் பொழுது அது நிச்சயமாகவே அவர்களின் புத்தியில் இருக்கின்றது. சிலர் தாங்கள் சித்தியடைய மாட்டோம் என்றே நம்புகின்றார்கள். இதில் முதல் இலக்க பாடம் தூய்மையாகும். பலரும் தாம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக எழுதுகின்றார்கள். ஆகவே, அதற்கு என்ன கூறுவீர்கள்? தம்மால் இனிமேல் முன்னேற முடியாது என்பதை அவர்களின் இதயம் புரிந்து கொள்கின்றது. நீங்கள் தூய இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். இதுவே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சதா என்னை நினைவு செய்து தூய்மை ஆகுங்கள் அப்பொழுது உங்களால் இலஷ்மி நாராயணனின் வம்சத்தினுள் வரமுடியும். ஒரு மாணவனால் உயர்ந்த அந்ஸ்தைப் பெற முடியுமா இல்லையா என்பதை ஒரு ஆசிரியரால் புரிந்து கொள்ள முடியும். அவர் பரம ஆசிரியர் ஆவார். இந்த தாதாவும் பாடசாலையிலேயே கற்றார். சில குழந்தைகள் மிகவும் தீய விடயங்களைச் செய்வதானால் அவர்களின் ஆசிரியர் இறுதியில் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டி நேரிடுகின்றது. முன்னர் அவர்கள் மிகவும் தீவிரமான தண்டனையை கொடுத்தார்கள். இப்பொழுது தண்டனை குறைக்கப்பட்டிருப்பதனால் குழந்தைகள் அதிகளவு சீரழிந்துவிட்டார்கள். இக்காலத்தில் மாணவர்கள் அதிகளவு குழப்பங்களை விளைவிக்கின்றார்கள்! மாணர்வகள் 'இளரத்தம்” என அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் செய்பவனவற்றைப் பாருங்கள்! அவர்கள் பொருட்களுக்குத் தீவைத்து தமது வாலிப சக்தியைக் காட்டுகின்றார்கள். இது அசுர உலகமாகும். இளைஞர்கள் மிகவும் தீயவர்களாக உள்ளார்கள். அவர்களின் கண்கள் மிகவும் குற்றமுடையதாக இருக்கின்றது. வெளியில் மிகவும் நல்வர்களாகவே அவர்கள் தோற்றமளிக்கின்றார்கள். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: உங்களால் இறைவனின் ஆழத்தை அடைய முடியாது. அவ்வாறே, அவர்கள் எத்தகைய மனிதர்கள் என்பதையும் உங்களால் அறியமுடியாது. ஆமாம், அவர்களின் செயற்பாடுகளில் இருந்து அவர்கள் கற்பதில் இருந்தும் அவர்களின் புத்தியில் எவ்வளவு ஞானத்தை அவர்கள் எடுத்துள்ளார்கள் என்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். சிலர் பேசும் பொழுது, அது அவர்களின் வாயில் இருந்து மலர்கள் பொழிவதைப் போன்றும், மற்றவர்கள் பேசும் பொழுது அது கல்லெறிவதைப் போன்றுமே உள்ளது. பார்ப்பதற்கு, அவர்கள் மிகவும் நல்லவர்கள் போலவே தோன்றுவார்கள், அவர்கள் கருத்துக்களையும் குறித்துக் கொள்வார்கள். எவ்வாறாயினும், அவர்கள் கல்லுப்புத்தியையே கொண்டிருக்கின்றார்கள்! அவர்கள் வெளிப்புறப் பகட்டையே கொண்டுள்ளார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள், இதனாலேயே ஞானத்தால் வியப்படைந்து, மற்றவர்களுக்கும் அதனைக் கொடுத்துவிட்டு, தம்மைச் சிவபாபாவின் குழந்தைகள் என்றும் அழைத்தவர்கள், பின்னர் ஓடி விட்டார்கள், அதாவது துரோகிகளாகி விட்டார்கள். திறமைசாலிகள் துரோகிகளாக ஆக மாட்டார்கள் என எண்ணாதீர்கள்! மிகச் சிறந்தவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பவர்கள் கூடத் துரோகிகளாகின்றார்கள். இராணுவ படையினரிலும் இது இவ்வாறே உள்ளது. அவர்கள் விமானத்தை இன்னோர் நாட்டிற்கு எடுத்துச் செல்கின்றார்கள். இங்கும் அது அவ்வாறேயுள்ளது. ஸ்தாபனைக்கு பெருமளவு முயற்சி தேவையாகும். குழந்தைகள் கற்பதற்குப் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும், ஆசிரியர்களும் கற்பிப்பதற்கு பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். வெளியில் ஒரு மாணவன் கற்காது மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தால் அவன் தண்டிக்கப்படுகின்றான். அவர் தந்தையாவார். தந்தை எதையும் கூறுவதில்லை. அந்த விதி தந்தைக்குப் பொருந்தாது. இங்கே, நீங்கள் முற்றிலும் அமைதி காக்க வேண்டும். தந்தை சந்தோஷத்தை அருள்பவரும், அன்புக் கடலும் ஆவார். ஆகவே, குழந்தைளாகிய உங்களின் நடத்தையானது தேவர்களுடையதைப் போன்றிருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் என்பதை பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு எப்பொழுதும் கூறுகின்றார். எவ்வாறாயினும், உங்களில் சிலர் பலமில்லியன் மடங்கு துர்பாக்கியசாலிகளாகவும் ஆகின்றீர்கள். சித்தியடையாதவர்கள் துர்பாக்கிய சாலிகள் என்றே அழைக்கப்பட முடியும். இது இறுவரை தொடரும் என்பது பாபாவிற்குத் தெரியும். சிலர் நிச்சயமாகவே மகா துர்ப்பாக்கியசாலிகள் ஆகுகின்றார்கள். அவர்களின் நடத்தையின் மூலம், அவர்களால் இங்கே இருக்கமுடியாது என்பது புரிந்து கொள்ளப்படும். அவர்கள் மேன்மையானவர்கள் ஆகுவதற்குத் தகுதியற்றவர்கள். அவர்கள் தொடர்ந்தும் அனைவருக்கும் துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்வாறு சந்தோஷத்தைக் கொடுப்பது என்பதே தெரியாது இருக்கும் பொழுது, அவர்களின் நிலைமை என்னவாகும்? பாபா எப்பொழுதும் கூறுகின்றார் : உங்களில் அதிகளவு அக்கறை கொள்ளுங்கள். நாடகத்திற்கு ஏற்ப இவை அனைத்தும் நடந்தேயாக வேண்டும். அவர்கள் இரும்பைவிடவும் மோசமானவர்களாகி விட்டார்கள். மிகச் சிறந்தவர்கள் கடிதம் கூட எழுதுவதில்லை. அந்த அப்பாவி நாதியற்ற மக்களின் நிலைமை என்ன? தந்தை கூறுகின்றார்: நான் அனைவருக்கும் நன்மையளிக்கவே வந்துள்ளேன். இன்று, நான் அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள்கின்றேன், ஆனால் அவர்கள் நாளையே சீரழிந்தவர்கள் ஆகின்றார்கள். நேற்று நீங்கள் உலகின் அதிபதிகள் என்றும் இன்று நீங்கள் அடிமைகளாகி விட்டீர்கள் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். விருட்சம் முழுவதுமே உங்கள் புத்தியில் இருக்கின்றது. இந்த விருட்சம் அற்புதமானது! மனிதர்கள் இந்த விருட்சத்தைப் புரிந்து கொள்வதுமில்லை! ஒரு சக்கரம் எனில் 5000 வருடங்களைக் கொண்டமிகச் சரியான விருட்சம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அதில் ஒருவிநாடிக்கான வித்தியாசமேனும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த எல்லையற்ற விருட்சத்தின் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இந்த ஞானத்தைக் கொடுப்பவரே விருட்சத்தின் பிரபுவாவார். ஒரு விதை மிகவும் சின்னஞ்சிறியதாகும். ஆனால் அதிலிருந்து எவ்வளவு பழங்கள் உருவாகின்றன எனப்பாருங்கள். இந்த விருட்சம் மிகவும் அற்புதமானது, அதன் விதை சின்னஞ்சிறியது! ஆத்மாவும் சின்னஞ்சிறிய வடிவமானதே! தந்தையும் சின்னஞ்சிறிய வடிவமுடையரே. அவரை இந்தப் பௌதீகக் கண்களால் பார்க்க முடியாது. அவர்கள் விவேகானந்தரின் கதையைக் கூறுகின்றார்கள் அவர் தனது குருவிடமிருந்து ஓர் ஒளி வெளிப்பட்டு தனக்குள் பிரவேசித்ததாகக் கூறுகின்றார். அவ்வாறு ஒருவரில் இருந்து ஒளி வெளிப்பட்டு இன்னொருவருக்குள் பிரவேசிக்க முடியாது. அவரில் இருந்து வெளிப்பட்டது என்னவென்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பலரும் அத்தகைய காட்சிகளைக் கொண்டிருக்கின்றார்கள். பலரும் அதில் நம்பிக்கைக் கொண்டு, பின்னர் அதனைப் பற்றி எழுதுகின்றார்கள். கடவுள் பேசுகின்றார்: மனிதர்களின் புகழ் இ;ல்லை. தேவர்களின் புகழ் மாத்திரமே இருக்கின்றது. அவர்களைப் உங்களைத் தேவர்கள் ஆக்குபவரின் புகழும் இருக்கின்றது. பாபா மிகச் சிறந்த மடல்களைச் செய்வித்தார். நீங்கள் யாராவது ஒருவரது பிறந்த தினத்தைக் கொண்டாட விரும்பினால், அது சிவபாபாவினதாகவே இருக்க வேண்டும். சிவபாபாவே இலஷ்மி நாராயணனை அவ்வாறு ஆக்கினார். ஒரேயொருவரின் புகழ் மாத்திரமே இருக்கின்றது. அந்த ஒருவரை மாத்திரமே நினைவு செய்யுங்கள். இவர் தானே கூறுகின்றார்: நானே அதிஉயர்ந்தவர் ஆகி பின்னர் நான் இறங்கி வருகின்றேன். உங்களுக்கும் அதுவே பொருந்தும்! நீங்களே உலகின் அதிபதிகள் ஆக இருந்தீர்கள், இப்பொழுது என்னவாகி விட்டீர்கள்? சத்தியயுகத்தில் யார் இருந்தார்கள்? நீங்கள் அனைவரும் செய்த முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமாக அங்கிருந்தீர்கள். அங்கு அரசர்களும் அரசிகளும் இருந்தார்கள். அங்கே சந்திர சூரிய வம்சத்தினரும் இருந்தார்கள். பாபா உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார்! நடக்கும் பொழுதும் உலாவித்திரியும் பொழுதும் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்களே உயிர்வாழும் கலங்கரை விளக்கங்கள். கல்வி முழுவதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் இன்னமும் அந்த நிலையை அடையவில்லை, அது இனிமேல் தான் வர இருக்கின்றது! இதுவே சிறப்புச்சித்தியெந்துபவர்களின் நிலையாகும். அவர்கள் ஞானம் அனைத்தையும் தமது புத்தியில் கொண்டிருப்பார்கள். அப்பொழுது மாத்திரமே நீங்கள் தந்தையின் அன்பான, பிரியமான குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். தந்தை அத்தகைய குழந்தைகளுக்குச் சுவர்க்க இராச்சியத்தையே அர்ப்பணிக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் இராச்சியத்தை ஆள்வதில்லை, நான் உங்களுக்கு அதனைக் கொடுக்கின்றேன். இதுவே சுயநலமற்ற சேவை எனப்படுகின்றது. தந்தை உங்களைத் தனது தலையில் அமர்த்துகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் அத்தகைய தந்தையை பெருமளமவு நினைவு செய்ய வேண்டும்! இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது. தந்தை சங்கமயுகத்தில் வந்து அனைவருக்கும் வரிசைக்கிரமமாக அவர்களின் முயற்சிக்கு ஏற்ப ஜீவன் முக்தியை அருள்கின்றார். முதலாவதாக இருப்பவரே உயர்ந்தவர் முற்றிலும் தூய்மையானவர். இறுதி இலக்கத்தில் இருப்பவரோ முற்றாகவே தூய்மையற்றவராக இருக்கின்றார். பாபா அனைவருக்கும் அன்பு மற்றும் நினைவுகளைக் கொடுக்கின்றார். பாபா மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார்!! நீங்கள் ஒருபொழுதும் எவ்விதமானதோர் பொய்யான அகங்காரத்தையும் கொண்டிருக்கக் கூடாது. தந்தை கூறுகின்றார் : நீங்கள் எச்சரிக்;கையாக இருப்பதுடன் இரதத்திற்கு மரியாதையையும் கொடுக்க வேண்டும். இவர் மூலமே தந்தை ஞானத்தைப் பேசுகின்றார். இவர் முன்னர் ஒருபொழுதுமே அவதூறு செய்யப்படவில்லை. அனைவரும் அவரைப் பெருமளவில் நேசித்தார்கள். இப்பொழுது அவர் எத்தனை அவதூறுகளை சந்திக்கவேண்டியுள்ளது எனப்பாருங்கள்! சிலர் துரோகிகளாகி ஓடி விட்டார்கள் அவர்களின் நிலைமை என்னவாகியுள்ளது எனப்பாருங்கள்? அவர்கள் சித்தியடைய மாட்டார்கள். இல்லையா? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: மாயையும் அப்படிப்பட்டவள் அல்லவா? ஆகவே, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மாயை எவரையுமே விட்டு வைப்பதில்லை. அவள் அனைத்து வகையான தீயையும் ஆரம்பிக்கின்றாள். தந்தை கூறுகின்றார்: எனது குழந்தைகள் அனைவரும் காமச் சிதையில் அமர்ந்திருந்ததால் அவலட்சணமாகி உள்ளார்கள். அனைவரும் ஒரேமாதிரியாக இருக்க முடியாது. அல்லது உங்கள் அனைவருக்கும் ஒரே பாகமும் இல்லை. இது ஒரு விலைமாதர் இல்லம் எனப்படுகின்றது. அனைவரும் பல தடைவைகள் காமச் சிதையில் அமர்ந்திருப்பார்கள்! இராவணன் மிகவும் சக்திவாய்ந்தவன்! அவன் உங்கள் புத்திகளை தூய்மையற்றதாக ஆக்குகின்றான். இங்கு வந்து தந்தையிடம் இருந்து கற்பித்தல்களைப் பெற்றுக் கொண்டவர்கள் கூட அவ்வாறு ஆகிவிட்டார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையை நினைவு செய்யும் வரை உங்கள் குற்றப் பார்வை மாறமாட்டாது. இதனாலேயே சூர்தாசின் (தன்னையே குருடாக்கியவர்) கதை இருக்கின்றது. அவர்கள் அதனை ஒரு உதாரணத்திற்காகவே உருவாக்கியிருக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மூன்றாம் கண்ணாகிய ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். அறியாமை என்றால் இருளாகும். “நீங்கள் குருடர்கள்” எனக் கூறப்படும் பொழுது “நீங்கள் அறியாமையில் இருக்கின்றீர்கள்” என்பதே அர்த்தமாகும். ஞானம் மறைமுகமானது, இதில் எதையும் கூறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. அனைத்து ஞானமும் ஒரே விநாடியில் வெளிப்படுகின்றது. அனைத்திலும் இலகுவானது ஞானமாகும். இருப்பினும், இறுதிவரை மாயையிடம் இருந்து வரும் சோதனைகள் தொடரும். இப்பொழுது நீங்கள் புயலின் மையத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் உறுதியானவர்கள் ஆகும் போது, எவ்விதமான புயலும் இருக்காது, நீங்கள் வீழ்ந்து விடவும் மாட்டீர்கள். பின்னர் உங்கள் விருட்சம் எவ்வளவிற்கு வளர்கின்றது என்பதை உங்களால் காண முடியும்! அது மிகவும் பிரபல்யமானதாகும். ஒரு மரம் எப்பொழுதும் வளர்கின்றது. ஒரு சிறிதளவு விநாசம் நடைபெறும்பொழுதே நீங்கள் மிகவும் எச்சரிக்கையடைகின்றீர்கள். பின்னர் நீங்கள் தந்தையின் நினைவைப் பற்றிக் கொள்வீர்கள். இன்னமும் சொற்ப காலமே எஞ்சி இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார்: ஒருவருடன் மற்றையவர் மிகுந்த அன்புடன் பழகுங்கள். எவரையும் கடுமையாகப் பார்க்க வேண்டாம். கோபம் என்ற அசுத்த ஆவி வரும் பொழுது முகம் முற்றாகவே மாறுகின்றது. நீங்கள் இலக்ஷ்மி நாராயணின் முகத்தைக் கொண்டவர்களாக ஆக வேண்டும். உங்கள் இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னால் இருக்கின்றது. நீங்கள் மாற்றம் அடைய வேண்டிய வேளையில் காட்சிகள் அருளுவது நடைபெறும். தந்தை குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் மிகவும் சந்தோஷமாக்கினார்! இறுதியில் நீங்கள் பல பாகங்களைப் பார்ப்பீர்கள். அத்துடன் நீங்கள் மிகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள். “வேடனுக்குக் கொண்டாட்டம், இரைக்குத்; திண்டாட்டம்” எனக் கூறப்பட்டுள்ளது. பல காட்சிகள் இறுதியில் பார்க்கப்படும், இதனாலேயே “இதனையே நான் செய்தேன்!” என்ற மனவருத்தம் ஏற்படும். பின்னர் அதற்கான தண்டனை மிகவும் தீவிரமானதாக இருக்கும். தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த மதிப்பை நீங்கள் பேணாவிடின், தண்டனை கிடைக்கும். விகாரத்தில் ஈடுபட்டவர்களும், சிவபாபாவிற்கு அதிகளவு அவதூறை ஏற்படுத்தியவர்களும் அதிகளவு தண்டனையை அனுபவம் செய்வார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். ஸ்தாபனையின் போது என்ன நடைபெறுகின்றது எனப் பாருங்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள். அசுரர்கள் போன்றவர்கள் எவருமே சத்திய யுகத்தில் இருப்பதில்லை. அது சங்கமயுகத்தையே குறிக்கின்றது. விகாரமான மனிதர்கள் பெருமளவு துன்பத்தையே உருவாக்குகின்றார்கள்! அவர்கள் தங்கள் புதல்விகளை அடித்துத், திருமணம் செய்யுமாறு துன்புறுத்துகின்றார்கள். பெண்கள் விகாரத்திற்காகப் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றார்கள். அவர்கள் அதிகளவு எதிர்ப்பிற்கு முகம்; கொடுக்கின்றார்கள்! அவர்கள் கூறுகின்றார்கள்: சந்நியாசிகளாலேயே தூய்மையாக இருக்க முடியாதிருக்கும் பொழுது, நீங்கள் தூய்மையாக இருக்கின்றீர்கள் எனக் கூறும் நீங்கள் யார்? நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது அவர்கள் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். தூய்மையின்றி உங்களால் தேவர்களாக முடியாது. நீங்கள் பெருமளவினைப் பெற்றுக் கொள்வதாலேயே உங்களால் அனைத்தையும் துறக்கக் கூடியதாக இருக்கின்றது என நீங்கள் அவர்களுக்குக் கூறுகின்றீர்கள். கடவுள் பேசுகின்றார்: காமத்தை வென்றவர்கள் உலகினையே வெல்வார்கள்! நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகப் போகின்றீர்களாயின், நீங்கள் ஏன் தூய்மையாக இருக்கக்கூடாது? எவ்வாறாயினும், மாயையும் உங்களைப் பெருமளவில் வீழ்த்துகின்றாள். இக்கல்வி மிகவும் மேன்மையானதாகும். தந்தை வந்தே உங்களுக்குக் கற்பிக்கின்றார். சில குழந்தைகள் இதனை மிகச் சரியாக நினைவு செய்யாதிருக்கும் பொழுது மாயை அவர்களை அறைகின்றாள். மாயை சிலரை எனக்குக் கீழ்ப்படியாதவர்கள் ஆக்குகின்றாள். அப்பொழுது அத்தகைய ஆத்மாக்களின் நிலை என்ன? மாயை உங்களை மிகவும் கவனயீனமானவர்களாகவும் அகங்காரம் கொண்டவர்களாகவும் ஆக்குகின்றாள், அதனைக் கேட்கவும் வேண்டாம்! இராச்சியமானது வரிசைக்கிரமாகவே உருவாக்கப்படுகின்றது. ஆகவே இது ஏதோவொரு காரணத்திற்காகவே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது! நீங்கள் இப்பொழுது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தைப் பற்றிய ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும்! அகங்காரம் வந்த மாத்திரத்திலேயே நீங்கள் மரணிக்கின்றீர்கள்;. மாயை உங்களை முற்றாக ஒரு சதப்பெறுமதியேனும் அற்றவர்களாக ஆக்குகின்றாள். நீங்கள் தந்தைக்கு கீழ்ப்படியாதவர்களாக இருக்கும் பொழுது உங்களால் அவரை நினைவு செய்ய முடியாது. நல்லது.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருவரோடொருவர் அன்புடன் பழகுங்கள். ஒருபொழுதும் கோபப்படாதீர்கள் அல்லது கடுமையான பார்வையைக் கொண்டிராதீர்கள். ஒருபோதும் தந்தைக்குக் கீழ்ப்படியாது இருக்காதீர்கள்.
2. மேன்மைச் சித்தியடைவதற்குக் கல்வியை உங்கள் புத்தியில் கொண்டிருங்கள். ஒரு கலங்கரை விளக்கமாகுங்கள். இரவு பகலாக உங்கள் புத்தியில் இந்த ஞானத்தைக் கடையுங்கள்.ஆசீர்வாதம்:
பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாகவிருந்து, சதா உங்கள் மேன்மையான பாக்கியத்தின் சந்தோஷத்திலும் போதையிலும் நிலைத்திருப்பீர்களாக.முழு உலகிலும் சமயங்களின் தந்தையர் என்றோ ஜெகத்குருக்கள் என்றோ அழைக்கப்படுபவர்கள் தாய் தந்தையிடமிருந்து அலௌகீக பிறப்பையோ அல்லது பராமரிப்பையோ பெறுவதில்லை. அவர்களால் கனவிலேனும் அலௌகீகத் தாய் தந்தையை அனுபவம் செய்ய முடியாது. ஆனால் பலமடங்கு மில்லியன் பாக்கியசாலிகளான மேன்மையான ஆத்மாக்களான நீங்களோ ஒவ்வொருநாளும் தாய் தந்தையிடமிருந்து அன்பையும் நினைவையும் பெறும் தகுதியுடையவர்கள் என்பதுடன் சகல உறவுமுறைகளையும் அவர்களுடன் கொண்டிருக்கின்றீர்கள். சர்வசக்திவான் தந்தையே குழந்தைகளாகிய உங்களுடைய சேவகனாகி, ஒவ்வொரு அடியிலும் சகபாடிக்கான பொறுப்பை நிறைவேற்றுகின்றார். ஆகையால், இந்த மேன்மையான பாக்கியத்தின் சந்தோஷத்திலும் போதையிலும் நிலைத்திருங்கள்.
சுலோகம்:
உங்கள் சரீரத்தையும் மனதையும் சதா சந்தோஷமாக வைத்திருப்பதற்கு, சக்திமிக்க சந்தோஷ எண்ணங்களைக் கொண்டிருங்கள்.