19.01.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் இனிய தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் சதோபிரதான் தேவர்கள் ஆகுவீர்கள். அனைத்தும் நினைவுயாத்திரையிலேயே தங்கியுள்ளது.கேள்வி:
குழந்தைகள் தந்தையின் ஈர்ப்பை அனுபவம் செய்வதைப் போலவே, எக்குழந்தைகளிலிருந்து அனைவரும் ஓர் ஈர்ப்பை அனுபவம் செய்வார்கள்?பதில்:
மலர்களாக ஆகிவிட்டவர்களிலிருந்தாகும். சிறு குழந்தைகள் மலர்களாகவும், விகாரங்களைப் பற்றி அறியாதவர்களாகவும் இருப்பதனால், அனைவரும் அவர்களால் கவரப்படுகிறார்கள், அவ்விதமாகவே, குழந்தைகளாகிய நீங்கள் மலர்கள் ஆகும்பொழுது, அதாவது, நீங்கள் தூய்மையாகும்பொழுது, அனைவரும் கவரப்படுவார்கள். உங்களில் விகாரமாகிய முட்கள் இருக்கக் கூடாது.ஓம் சாந்தி.
இதுவே அதிமங்களகரமான சங்கமயுகம் என்பது ஆன்மீகக் குழந்தைகளுக்குத் தெரியும். உங்களால் உங்களுடைய எதிர்கால அதிமேன்மையான முகத்தைப் பார்க்க முடியுமா? உங்கள் அதிமேன்மையான ஆடையை உங்களால் பார்க்க முடியுமா? இலக்ஷ்மி நாராயணனின் வம்சமாகிய சத்தியயுகத்துப் புதிய உலகத்துக்கு, அதாவது, சந்தோஷ உலகத்துக்கு நீங்கள் மீண்டும் ஒருமுறை செல்வீர்கள் என்பதையும், நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுவீர்கள் என்பதையும் உங்களால் உணர முடிகிறதா? இங்கமர்ந்திருக்கும்பொழுது, உங்களுக்கு இந்த எண்ணங்கள் ஏற்படுகின்றனவா? மாணவர்கள் கற்கும்பொழுது, தாங்கள் எந்த வகுப்பில் கற்கிறார்கள் என்பதை அவர்களின் புத்திகள் அறியும்: நான் ஒரு சட்டநிபுணர் ஆகுவேன், அல்லது நான் இன்னார் ஆகுவேன். அவ்விதமாகவே, நீங்கள் இங்கமர்ந்திருக்கும்பொழுது, நீங்கள் விஷ்ணுவின் வம்சத்துக்குச் செல்வீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே விஷ்ணுவின் இரு ரூபங்கள்: ஓர் இறைவனும் இறைவியும். இப்பொழுது உங்கள் புத்தி அலௌகீகமாக உள்ளது. வேறு எவருடைய புத்தியிலும் இவ்விடயங்கள் சுழன்று கொண்டிருக்க மாட்டாது. இவ்விடயங்கள் அனைத்தும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியிலேயே உள்ளன. இது ஒரு பொதுவான சத்சங்கம் (சத்தியத்தின் சகவாசம்) அல்ல. சிவன் என அழைக்கப்படும் உண்மையான பாபாவின் சகவாசத்திலேயே நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்னும் புரிந்துணர்வுடனேயே நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். சிவபாபா மாத்திரமே படைப்பவர் ஆவார். அவர் மாத்திரமே படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவார், அவர் எங்களுக்கு அந்த ஞானத்தைக் கொடுக்கிறார். அது அவர் எங்களுக்கு நேற்றைய விடயத்தை கூறுவதைப் போல உள்ளது. இங்கு அமர்ந்திருக்கும்பொழுது, நீங்கள் இங்கு புத்தாக்கம் செய்யப்பட வந்துள்ளீர்கள், அதாவது, உங்கள் சரீரத்தை ஒரு தேவரின் சரீரமாக மாற்றுவதற்கு வந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். ஆத்மா கூறுகிறார்: நான் என்னுடைய இந்தப் பழைய தமோபிரதான் சரீரத்தை மாற்றம் செய்து இலக்ஷ்மியும் நாராயணனும் போன்று ஆகவேண்டும். உங்கள் இலக்கும் இலட்சியமும் மிகவும் மேன்மையானதாகும். கற்கும் மாணவர்களை விடவும், உங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர் நிச்சயமாகவே திறமைசாலியாக இருப்பார். நாங்கள் சிறந்த செயல்களைச் செய்வதற்கு, அவர் எங்களுக்குக் கல்வி புகட்டி, எங்களுக்குக் கற்பிக்கிறார், ஆகவே, நிச்சயமாகவே அவர் மேன்மையானவராக இருக்க வேண்டும். அதிமேன்மையான கடவுளே, எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். எதிர்காலத்தில், நாங்கள் அவர்களைப் போன்று தேவர்கள் ஆகுவோம். நாங்கள் எதிர்காலப் புதிய உலகத்துக்காகவே கற்கிறோம். வேறு எவருக்கும் புதிய உலகத்தைப் பற்றிக் கூடத் தெரியாது. இலக்ஷ்மியும் நாராயணனும் புதிய உலகத்தின் அதிபதிகளாக இருந்தார்கள் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் புகுகிறது. அது நிச்சயமாகத் திரும்பத் திரும்ப நடைபெறுகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களுக்குக் கற்பித்து, உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகிறேன். தேவர்களின் மத்தியிலும் வரிசைக்கிரமமாகவே அது உள்ளது. அது ஒரு தெய்வீக இராச்சியம், இல்லையா? நாள் முழுவதும், நான் ஓர் ஆத்மா என்னும் எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும். ஆத்மாவாகிய நான், மிகவும் தூய்மையற்று இருந்தேன், இப்பொழுது தூய்மையாகுவதற்குத் தூய தந்தையை நினைவுசெய்;கிறேன். நினைவின் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்மா தனது இனிய தந்தையை நினைவுசெய்கிறார். தந்தையே கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவுசெய்வதால், நீங்கள் சதோபிரதான் தேவர்களாக ஆகுவீர்கள். அனைத்தும் நினைவுயாத்திரையிலேயே தங்கியுள்ளது. தந்தை நிச்சயமாக வினவுவார்: குழந்தைகளே, நீங்கள் எவ்வளவு நேரத்துக்கு என்னை நினைவுசெய்கிறீர்கள்? நினைவிலேயே மாயையுடனான யுத்தம் உள்ளது. அது ஒரு யாத்திரையாக இல்லாமல், ஆனால் மாயையுடனான ஒரு யுத்தமாக இருக்கும்பொழுது, இதில் பல தடைகள் ஏற்படுகின்றன என்பதை நீங்களே புரிந்துகொள்ள முடியும். மாயை உங்களுக்கு நினைவுயாத்திரையில் தடைகளை உருவாக்குகிறாள், அதாவது, அவள் உங்களை மறக்கச் செய்கிறாள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, உங்கள் நினைவில் நிலைத்திருக்கும்பொழுது, எங்களுக்கு மாயையின் பல புயல்கள் ஏற்படுகின்றன. சரீர உணர்வே முதல் இலக்கப் புயலாகும். பின்னர் காமமும், பின்னர் கோபம், பேராசை, பற்று, ஆணவம் உள்ளன. குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் நினைவில் நிலைத்திருக்கும்பொழுது, தடைகள் இல்லாதிருப்பதற்குப் பெருமளவுக்கு முயற்சி செய்கிறோம், ஆனால் அப்படியிருந்தும், புயல்கள் உள்ளன. இன்று, கோபத்தின் புயல் இருக்கிறது, அல்லது, நாளை பேராசையின் புயல் இருக்கும். இன்று, எனது ஸ்திதி சிறந்ததாக இருந்தது, எனக்குப் புயல்கள் இருக்கவில்லை. நான் நாள் முழுவதும் நினைவு யாத்திரையில் நிலைத்திருந்தேன், எனக்குப் பெருமளவு சந்தோஷம் இருந்தது. நான் பாபாவைப் பெருமளவு நினைவுசெய்தேன். நினைவில் அன்புக் கண்ணீர் தொடர்ந்தும் சிந்தப்படுகிறது. தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதால், நீங்கள் இனிமையானவர்களாக ஆகுவீர்கள். மாயையினால் தோற்கடிக்கப்பட்டிருக்கும்பொழுது, நீங்கள் எங்கே சென்றடைந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஒரு சக்கரத்தில் எவ்வளவு மாதங்களும், நாட்களும் இருக்கின்றன என்பதைச் சில குழந்தைகள் கணக்கிடுகிறார்கள். சக்கரத்தின் ஆயுட்காலம் நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனச்; சிலர் கூறினால், எவராலும் எதையும் கணக்கிட முடியாது என்பது உங்கள் புத்தியில் புகுகிறது. இவ்வுலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் முழுச் சக்கரத்திலும் எத்தனை பிறவிகளை எடுக்கிறீர்கள் என்பதும், நீங்கள்; எவ்வாறு வம்சத்தினுள் செல்கிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இவை முழுமையாகவே புதிய விடயங்களாகும்; அது புதிய உலகத்துக்கான புதிய ஞானமாகும். சுவர்க்கம் புதிய உலகம் என அழைக்கப்படுகிறது. தற்சமயம் நீங்கள் மனிதர்கள் எனவும், தேவர்களாக ஆகுகிறீர்கள் எனவும் நீங்கள் கூறுவீர்கள். தேவ அந்தஸ்து மேன்மையானதாகும். நீங்கள் தனித்துவமான ஞானத்தைப் பெறுகிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். எங்களுக்குக் கற்பிப்பவரும் தனித்துவமானவரும், ஒரு சரீரமற்றவரும் ஆவார். அவருக்கு ஒரு பௌதீக உருவம் கிடையாது. அவர் எப்பொழுதும் அசரீரியானவர் ஆவார். நாடகத்தில் எவ்வாறு அவருக்கு அத்தகையதொரு சிறந்த பாகம் உள்ளது எனப் பாருங்கள். தந்தை எவ்வாறு எங்களுக்குக் கற்பிக்கிறார்? அவரே உங்களுக்குக் கூறுகிறார்: நான் இன்னாரின் சரீரத்தில் பிரவேசிக்கிறேன். அவர் எச்சரீரத்தில் பிரவேசிக்கிறார் எனவும் அவர் உங்களுக்குக் கூறுகிறார். மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள்: அவர் எப்பொழுதும் அதே சரீரத்தில் வருகிறாரா? எவ்வாறாயினும், இது ஒரு நாடகமாகும். அதில் எவ்வித மாற்றமும் இருக்க முடியாது. நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைச் செவிமடுத்து, அவற்றைக் கிரகித்த பின்னர், சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கும் வழியிலேயே அவற்றை ஏனையோருக்குக் கூறுகிறீர்கள். பின்னர் நாங்கள் ஏனைய ஆத்மாக்களுக்குக் கற்பிக்கிறோம். ஆத்மாவே கற்கிறார். ஆத்மாவே கற்று, ஏனையோருக்குக் கற்பிக்கிறார். ஆத்மாவே அதிபெறுமதி வாய்ந்தவர் ஆவார். ஆத்மா அழிவற்றவரும், அமரத்துவமானவரும் ஆவார். சரீரமே அழிகிறது. எங்கள் பரமாத்மாவாகிய பரம தந்தையிடமிருந்து ஆத்மாக்களாகிய நாங்கள் ஞானத்தைப் பெறுகிறோம். நாங்கள் படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும், 84 பிறவிகளினதும் ஞானத்தைப் பெறுகிறோம். யார் இந்த ஞானத்தைப் பெறுபவர்? ஆத்மாவே அதைப் பெறுகிறார். ஆத்மா அழிவற்றவர் ஆவார். பற்றானது அழிவற்ற விடயங்களின் மீதே இருக்க வேண்டும், அழியக்கூடியவற்றுடன் அல்ல. நீங்கள் மிக நீண்ட காலமாகவே அழியும் சரீரத்துக்கான பற்றைக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா எனவும், நீங்கள் சரீர உணர்வைத் துறக்க வேண்டும் எனவும் நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். சில குழந்தைகள் எழுதுகிறார்கள்: ஆத்மாவாகிய நான், இவ்வேலையைச் செய்தேன். ஆத்மாவாகிய நான், இன்று இந்தச் சொற்பொழிவை ஆற்றினேன். இன்று, ஆத்மாவாகிய நான், பாபாவைப் பெருமளவுக்கு நினைவுசெய்தேன். அவர் ஞானம் நிறைந்த பரமாத்மா ஆவார். குழந்தைகளாகிய உங்களுக்கு அவர் அதிகளவு ஞானத்தைக் கொடுக்கிறார். நீங்கள் அசரீரி உலகத்தையும், சூட்சும உலகத்தையும் அறிவீர்கள். மக்களின் புத்தியில் எதையும்; பற்றிய எந்த அறிவும் கிடையாது. படைப்பவர் யார் என்பதை உங்கள் புத்தி அறிந்துள்ளது. இம்மனித உலகைப் படைப்பவர் நினைவுகூரப்படுகிறார், ஆகவே அவர் நிச்சயமாகவே செயல்களைச் செய்வதற்கு இங்கு வரவேண்டும். வேற்று மனிதர்கள் எவரும் ஆத்மாவையும், பரமாத்மாவையும் நினைவுசெய்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். உங்களை ஒரு சரீரமாகக் கருதுவதால், நீங்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆத்மா சத்தியமானவரும், உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமும் ஆவார். ஆத்மாவுக்கே அதிகப் புகழ் உள்ளது. ஒரே தந்தையின் ஆத்மாவைப் பற்றிய புகழ் அதிகளவுக்கு உள்ளது. அவர் மாத்திரமே துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். நுளம்புகள் துன்பத்தை அகற்றுபவர்களும், சந்தோஷத்தை அருள்பவர்களும் எனவோ அல்லது ஞானக்கடல்கள் எனவோ புகழப்பட மாட்டாது. இல்லை, இதுவே தந்தையின் புகழாகும். நீங்கள் ஒவ்வொருவரும் துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் ஆவீர்கள், ஏனெனில் நீங்கள் அனைவருடைய துன்பத்தையும் அகற்றி, அவர்களுக்குச் சந்தோஷத்தை அருளுகின்ற அந்தத் தந்தையின் குழந்தைகள், இல்லையா? அதுவும் அரைச் சக்கரத்துக்கே ஆகும். வேறு எவருக்கும் இந்த ஞானம் இல்லை. ஒரு தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவர் ஆவார். எங்களுக்கு ஞானம் இல்லை. நாங்கள் ஒரு தந்தையைப் பற்றிக் கூட அறியாதுவிடின், எங்களுக்கு வேறு எந்த ஞானம் இருக்கும்? நீங்களே முதலில் இந்த ஞானத்தைப் பெறுபவர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது உணர்கிறீர்கள். முன்னர், நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. ஒரு சிறு குழந்தைக்கு எந்த ஞானமோ அல்லது எந்தக் குறைபாடுகளோ இருப்பதில்லை. ஆகவே, அவர் ஒரு தூய குழந்தை ஆதலால், அவர் ஒரு மகாத்மா எனக் கூறப்படுகிறார். குழந்தை எவ்வளவுக்கு வயதில் இளையவராக இருப்பாரோ, அந்தளவுக்கு அதிகமாக முதல் இலக்க மலராக இருப்பார். அது அவர் அநேகமாக அவருடைய கர்மாதீத ஸ்திதியில் இருப்பதைப் போன்று, இருக்கும். அவர் செயல்களையும், பாவச் செயல்களையும் பற்றிய எதையும் அறிந்திருப்பதில்லை. குழந்தைக்குத் தன்னைப் பற்றியே தெரியும். அவர் ஒரு மலர், ஆகவே பாபா இப்பொழுது உங்களைக் கவர்வதைப் போன்று, அவர் அனைவரையும் கவர்கிறார். உங்கள் அனைவரையும் மலர்களாக ஆக்குவதற்குத் தந்தை வந்துவிட்டார். நீங்கள் உங்களில் சில மிகவும் தீய முட்களையும் கொண்டிருக்கிறீர்கள். ஐந்து விகாரங்களாகிய முட்கள் இருக்கின்றன. இந்நேரத்தில், உங்களுக்கு மலர்களினதும், முட்களினதும் ஞானம் உள்ளது. முட்களின் காடும் உள்ளது. பாபுல் பற்றையின் முட்கள் பெரியவையாகும். அம்முட்களிலிருந்து பல பொருட்கள் செய்யப்படுகின்றன. முட்கள் மனிதர்களுடன் ஒப்பிடப்படுகின்றன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்நேரத்தில், பெருமளவு துன்பத்தை விளைவிக்கும் பல மனித முட்கள் இருக்கிறார்கள். இதனாலேயே இவ்வுலகம் துன்ப உலகம் என அழைக்கப்படுகிறது. அவர்கள் கூறுகிறார்கள்: தந்தையே சந்தோஷத்தை அருள்பவர். இராவணனாகிய மாயையே துன்பத்தை அளிப்பவள் ஆவாள். பின்னர், சத்தியயுகத்தில், மாயை இருக்க மாட்டாள், ஆகவே இவ்விடயங்களும் அங்கு இருக்க மாட்டாது. ஒரு நாடகத்தில், ஒரே பாகம் இரு தடவைகள் நடிக்கப்படுவதில்லை. நடிக்கப்படுகின்ற ஒவ்வொரு பாகமும் புதிது என்பது உங்கள் புத்தியில் உள்ளது. அதைப் பற்றிச் சிந்தியுங்கள்: சத்தியயுகத்திலிருந்து இன்று வரை, நாட்கள் மாறுகின்றன, முழுச் செயற்பாடும் மாறுகின்றது. ஆத்மாவில் 5000 வருடங்களுக்குரிய முழுமையான செயற்பாட்டின் பதிவேடும் பதியப்பட்டுள்ளது, இது மாற்றமடைய முடியாது. ஒவ்வொரு ஆத்மாவிலும் அவருடைய சொந்தப் பாகம் பதியப்பட்டுள்ளது. எவராலும் இந்த ஒரு விடயத்தை புரிந்துகொள்ள முடியாது. உங்களுக்கு இப்பொழுது ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியும். இது ஒரு பாடசாலை, இல்லையா? நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிய வேண்டும். இது தந்தையை நினைவுசெய்வதற்கும், தூய்மை ஆகுவதற்குமான கல்வியாகும். இதற்கு முன்னர், நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருந்தீர்களா? தந்தை மிகவும் தெளிவாக அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகிறார். முதலில் நீங்கள் அந்த முதல் இலக்கத்தில் இருந்தீர்கள், பின்னர், படிப்படியாகக் கீழிறங்கி வருகையில், இப்பொழுது, நீங்கள் இவ்வாறு ஆகிவிட்டீர்கள். உலகம் என்னவாகியுள்ளது எனப் பாருங்கள்! பல்வேறு மனிதர்கள் இருக்கிறார்கள். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் எவ்வாறு இருக்கும் எனச் சிந்தியுங்கள். அவர்கள் வசிக்கின்ற மாளிகைகள் இரத்தினங்களினாலும், வைரங்களினாலும் பதிக்கப்பட்டிருக்கும். நீங்கள் இப்பொழுது சுவர்க்கவாசிகள் ஆகுகிறீர்கள் என்பது உங்கள் புத்தியில் புகுகிறது. அங்கு, நீங்கள் உங்களுடைய சொந்த மாளிகைகளைக் கட்டுவீர்கள். அவர்கள் சமயநூல்களில் சித்தரிப்பதைப் போன்று, துவாரகை (கிருஷ்ணரின் தங்க நகரம்) கீழிருந்து வெளிப்படும் என்பதல்ல. ‘சமயநூல்கள்’ என்னும் வார்த்தை தொடர்ந்துள்ளது; அவர்களால் அதை வேறு எதுவாகவும் அழைக்க முடியாது. ஏனைய புத்தகங்கள் கற்பதற்கே உள்ளன. வேறொரு வகையான புத்தகம் நாவல் ஆகும். எவ்வாறாயினும், இவை சமயநூல்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனைய புத்தகங்கள் கற்பதற்காகவே உள்ளன. சமயநூல்களைக் கற்பவர்கள் பக்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பக்தி, ஞானம் என இரு விடயங்கள் உள்ளன. எதில் விருப்பமின்மை உள்ளது? பக்தியிலா அல்லது ஞானத்திலா? அது நிச்சயமாகப் பக்தி என்றே கூறப்பட்டுள்ளது. நீங்கள் மிகவும் மேன்மையாகுகின்ற ஞானத்தை இப்பொழுது பெறுகிறீர்கள். இப்பொழுது தந்தை உங்களைச் சந்தோஷத்தை அருள்பவர்களாக ஆக்குகிறார். சந்தோஷ தாமம் சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. நீங்கள் சந்தோஷ தாமத்துக்குச் செல்வதனால், அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்களே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். ஓர் ஆத்மாவுக்கென ஒரு சமயம் இல்லை. ஓர் ஆத்மா என்றால் ஓர் ஆத்மாவே ஆவார். சரீரத்தில் ஓர் ஆத்மா பிரவேசிக்கும்பொழுதே, சரீரத்தின் சமயம் வேறுபடுகிறது. ஓர் ஆத்மாவின் சமயம் என்ன? ஓர் ஆத்மா ஒரு புள்ளியைப் போன்றவரும், அமைதி சொரூபமும் ஆவார். ஆத்மாக்கள் முக்திதாமமாகிய, அமைதி தாமத்தில் வசிக்கிறார்கள். இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகள் அனைவருக்கும் ஓர் உரிமை உள்ளது. ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டுள்ள குழந்தைகள் பலர் உள்ளார்கள். அவர்கள் பின்னர் வெளிப்பட்டு, திரும்பவும் தங்கள் சொந்தத் தர்மத்துக்கு வருவார்கள். தேவ தர்மத்தை விட்டுவிலகி, ஏனைய சமயங்களுக்குச் சென்றுள்ளவர்கள், தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்புவார்கள். வேறு எவராலும் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் முதலில், தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். இதிலேயே அனைவரும் குழப்பமடைகிறார்கள். யார் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார்: கிருஷ்ணர் ஒரு சரீரதாரி. இவர் (பிரம்மா) ஒரு தாதா என அழைக்கப்படுகிறார். அனைவரும் சகோதரர்கள் ஆவர். பின்னர், அனைத்தும் அந்தஸ்திலேயே தங்கியுள்ளது. அது ஒரு சகோதரரின் சரீரமும், இது ஒரு சகோதரியின் சரீரமும் ஆகும். இப்பொழுது உங்களுக்கு இதுவும் தெரியும். ஆத்மா ஒரு சின்னஞ் சிறிய நட்சத்திரம் ஆவார். இந்த ஞானம் அனைத்தும் ஒரு சின்னஞ் சிறிய நட்சத்திரத்திலேயே உள்ளது. ஒரு நட்சத்திரத்தினால் ஒரு சரீரமின்றிப் பேச முடியாது. ஒரு நட்சத்திரத்துக்கு ஒரு பாகத்தை நடிப்பதற்கு அங்கங்கள் தேவையாகும். உலகின் நட்சத்திரங்கள் வேறுபட்டவையாகும். பின்னர், ஓர் ஆத்மா இங்கு வந்து ஒரு சரீரத்தைத் தத்தெடுக்கிறார். அது ஆத்மாக்களின் வீடாகும். ஓர் ஆத்மா ஒரு சின்னஞ் சிறிய புள்ளியும், ஒரு சரீரம் பெரியதொன்றுமாகும். ஆகவே, மக்கள் அதை (சரீரம்) அதிகளவு நினைவுசெய்கிறார்கள். இப்பொழுது நீங்கள் ஒரு பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவுசெய்ய வேண்டும். பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் ஒன்றுகூடல் நடைபெறும்பொழுது, அவரே சத்தியமாவார். நினைவுகூரப்பட்டும் உள்ளது: பரமாத்மாவிடமிருந்து ஆத்மாக்கள் நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள். நாங்கள் பாபாவிடமிருந்து பிரிந்திருந்தவர்கள் ஆகினோம். எவ்வளவு காலமாகப் பிரிந்திருந்தீர்கள் என்பதை நீங்கள் நினைவுசெய்கிறீர்களா? தந்தை வந்து, அவர் உங்களுக்கு ஒவ்வொரு கல்பமும் கூறி வருகின்றவற்றை உங்களுக்குக் கூறுகிறார். அதில் சிறிதளவு மாற்றமும் இருக்க முடியாது. விநாடிக்கு விநாடி, நடைபெறுகின்ற ஒவ்வொரு செயலும் புதிதாகும். கடந்து செல்கின்ற ஒவ்வொரு விநாடியையும், கடந்து செல்கின்ற ஒவ்வொரு நிமிடத்தையும் நீங்கள் பின்னே விட்டு விடுவது போன்றுள்ளது. அவை தொடர்ந்தும் கடந்து செல்வதனால், உங்களால் அப்பொழுது கூற முடியும்: பல வருடங்களையும், நாட்களையும், நிமிடங்களையும், விநாடிகளையும் நீங்கள் கடந்து செல்கிறீர்கள். முழுமையான 5000 வருடங்கள் இருக்கும், அது பின்னர் முதலாம் இலக்கத்திலிருந்து ஆரம்பிக்கும். மிகச்சரியான கணக்கு உள்ளது. ஒவ்வொரு நிமிடமும், விநாடியும் குறித்துக் கொள்ளப்படுகிறது. ஒருவர் எத்தனை பிறவிகளை எடுத்துள்ளார் என ஒருவர் உங்களை வினவியிருப்பின், உங்களால் கணக்கிட்டுப் பதிலளிக்க முடியும். கிருஷ்ணர் முதலாம் இலக்கப் பிறவியை எடுத்தார். உங்களால் சிவனுக்கு, ஒவ்வொரு நிமிடத்தையும் விநாடியையும் கணக்கிட முடியாது. கிருஷ்ணருக்கெனத் திகதி, நேரம், கணம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. மனிதர்களின் மணிக்கூட்டில் ஒரு நிமிடம் அல்லது ஒரு விநாடி வித்தியாசம் இருக்க முடியும், ஆனால் சிவபாபா அவதரிக்கின்ற கணப்பொழுதில், சிறிதளவு மாற்றம் கூட இருக்க முடியாது. அவர் எப்பொழுது வந்தார் என்பதைக் கூட உங்களால் கூற முடியாது. பாபா காட்சிகளைக் கண்டிருந்தபொழுது, அவர் வந்தார் என்பதல்ல. ஒருவரால் மதிப்பிட மாத்திரமே முடியும். தான் இன்னாராக ஆகப் போகிறார் என்னும் ஒரு காட்சியை பாபா கண்டிருந்த நேரத்திலேயே, அவர் பிரவேசித்தார் என்பதல்ல. நல்லது.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. சந்தோஷ தாமத்துக்குச் செல்வதற்கு, சந்தோஷத்தை அருள்பவராக ஆகுங்கள். அனைவருடைய துன்பத்தையும் அகற்றி, அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுங்கள். ஒருபொழுதும் துன்பத்தை விளைவிக்கின்ற ஒரு முள்ளாக ஆக வேண்டாம்.
2. இந்த அழியும் சரீரத்தில் உள்ள ஆத்மா அதிகம்பெறுமதி மிக்கவர் ஆவார். அவர் அமரத்துவமானவரும், அழிவற்றவரும் ஆவார். ஆகவே, அழிவற்ற விடயங்களுக்கான அன்பைக் கொண்டிருங்கள். சரீர உணர்வை முடித்து விடுங்கள்.ஆசீர்வாதம்:
ஒரே பலம் ஒரே ஆதாரம் என்பதன் அடிப்படையில், தைரியசாலியாக இருந்து, உங்கள் இலக்கை அருகாமையில் அனுபவம் செய்வீர்களாக.உங்கள் அதியுயர் இலக்கை அடைவதற்கு முன்னர், நிச்சயமாக சூறாவளியும் புயலும் இருக்கும். ஒரு நீராவிக் கப்பல் மறுபுறத்தை அடைய வேண்டுமாயின், நடுக்கடலின் ஊடாகவே செல்ல வேண்டும். ஆகையால், விரைவில் அச்சமடையவோ, களைப்படையவோ, நிறுத்திவிடவோ வேண்டாம். உங்கள் சகபாடியை உங்களுடனேயே வைத்திருந்தால், அனைத்து சிரமங்களும் இலகுவாகிவிடும். தைரியசாலியாகவும் தந்தையின் உதவியை பெறத்தகுதி வாய்ந்தவராகவும் ஆகுங்கள். ஒரே பலம், ஒரே ஆதாரம் என்ற பாடத்தை எப்பொழுதும் உறுதியாக்கிக் கொண்டால், உங்களால் இலகுவாக நீர்ச்சுழியை (நடுக்கடல்) கடந்து சென்று உங்கள் இலக்கை உங்களால் அருகாமையில் அனுபவம் செய்ய முடியும்.
சுலோகம்:
ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் அத்துடன் சடப்பொருள் மீதும் நல்லாசிகளைக் கொண்டிருப்பவரே ஓர் உலக உபகாரி ஆவார்.