16.01.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். இல்லாவிடில் மாயை உங்களைக் கடனாளி ஆக்கிவிடுவாள். உங்களின் கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. எனவே, அவற்றையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.கேள்வி:
எக்குழந்தைகள் மாயையால் பாவச் செயல்கள் செய்ய வைக்கப்படுகின்றனர்? எக்குழந்தைகள் யக்ஞத்தில் தடைகளாக உள்ளனர்?பதில்:
சுய அகங்காரம் கொண்டிருக்கின்ற குழந்தைகள் மாயையால் பல பாவச் செயல்கள் செய்ய வைக்கப்படுகின்றனர். அத்தகைய அகங்காரத்தைக் கொண்டிருப்பவர்கள் முரளியைக் கற்கவேனும் மாட்டார்கள். அவர்களை அத்தகைய தவறுகள் செய்ய வைப்பதன் மூலம் மாயை அவர்களை அறைந்து ஒரு சதத்திற்கும் பெறுமதியற்றவர்கள் ஆக்குகின்றாள். தங்களின் புத்தியில் அரட்டைகளையும், குப்பைகளையும கொண்டிருப்பவர்கள் யக்ஞத்திற்குத் தடைகளாகின்றனர். அவை மிகவும் தீய பழக்கங்களாகும்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக அந்த ஒருவரே தந்தையும், ஆசிரியரும், பரம குருவும் என்ற எண்ணத்துடன் இங்கு அமர்ந்திருக்க வேண்டும் எனத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையாகி, பின்னர் தூய உலகிற்குச் செல்வீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் தூய உலகிலிருந்தே கீழிறங்கி வந்தீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். முதலில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து சென்றீர்கள். நீங்கள் வீழ்ந்துவிட்டீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் ஏனைய அனைத்திலிருந்தும் விலகியிருப்பதுடன், சிவபாபாவின் நினைவில் இருப்பதால், சிவ பூமி தொலைவில் இல்லை என்பதையும் இந்த ஞானத்தின் மூலமாக நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்யாவிட்டால், சிவ பூமி வெகு தொலைவிலேயே இருக்கும். பின்னர் தண்டனை அனுபவிக்க நேரிடுவதுடன், நீங்கள் மிகவும் தூரத்திற்குச் சென்றுவிடுகின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எச்சிரமமும் கொடுப்பதில்லை. முதலில், நீங்கள் உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையாக வேண்டும் என அவர் மீண்டும் மீண்டும் கூறுகின்றார். இக்கண்களே உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. நீங்கள் முன்னேறிச் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திரான்ஸ_ம், யோகமும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபட்டவை என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். யோகம் என்றால் நினைவு ஆகும். நீங்கள் திறந்த கண்களுடன் நினைவு செய்யலாம். திரான்ஸ் யோகம் என அழைக்கப்படுவதில்லை. ஒருவர் திரான்ஸில் செல்லும்போது, அது ஞானம் என்றோ, யோகம் என்றோ அழைக்கப்படுவதில்லை. திரான்ஸில் செல்பவர்களை மாயை அதிகளவில் தாக்குகின்றாள். எனவே, நீங்கள் அதனையிட்டு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தையின் நினைவு மிகவும் ஒழுங்குமுறைப்படி இருக்க வேண்டும். நீங்கள் சட்டத்திற்கு முரணான செயல்கள் எதையாவது செய்தால் மாயை உங்களைக் கீழே வீழ்த்திவிடுவாள். நீங்கள் திரான்ஸ் பற்றிய எந்த ஆசையையும் ஒருபோதும் கொண்டிருக்கக்கூடாது. ஆசை என்றால் என்னவென்றே அறியாதவர் ஆகுங்கள். நீங்கள் எந்த ஆசையையும் கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் கேட்காமலே தந்தை உங்களின் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்றார், ஆனால் நீங்கள் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றினால் மாத்திரமே அது நிகழும். நீங்கள் அவரது வழிகாட்டல்களுக்குக் கீழ்ப்படியாமல் தவறான பாதையைப் பின்பற்றினால், சுவர்க்கத்திற்குச் செல்வதற்குப் பதிலாக நரகத்தினுள் வீழ்வது சாத்தியமாகும். முதலை யானையை விழுங்கியதாகப் பாடப்படுகின்றது. பலருக்கு ஞானத்தைக் கொடுத்தவர்களும், போக் படைத்தவர்களும் இன்று இங்கு இல்லை. அவர்கள் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியாததால் சென்று, முழுமையாக மாயைக்குரியவர்கள் ஆகினார்கள். தேவர்கள் ஆகுகையில், அவர்கள் அசுரர்களாகினர். இதனாலேயே நீங்கள் இப்பாதையில் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நீங்களே உங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கின்றார். ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாமல் இராதீர்கள். அசுர கட்டளைகளைப் பின்பற்றியதாலேயே நீங்கள் கீழிறங்கும் நிலைக்குச் சென்றீர்கள். அதியுயர்ந்த நிலையிலிருந்த நீங்கள் இப்பொழுது என்ன நிலையை அடைந்துவிட்டீர்கள் எனப் பாருங்கள்! நீங்கள் அடி மட்டத்தை அடைந்துவிட்டீர்கள்! இப்பொழுதும்கூட, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாமல், கவனயீனமாக இருந்தால், உங்களின் அந்தஸ்து அழிக்கப்படும். பாபா நேற்றும் விளங்கப்படுத்தினார்: நீங்கள் ஸ்ரீமத் இல்லாமல் எதையாவது செய்யும்போது, பெருமளவு அவச்சேவை செய்யப்படுகின்றது. நீங்கள் ஸ்ரீமத் இல்லாமல் எதையாவது செய்தால், தொடர்ந்தும் வீழ்வீர்கள். ஆரம்பத்திலிருந்தே பாபா தாய்மாரைக் கருவிகளாக்கியுள்ளார். ஏனெனில் தாய்மாருக்கே கலசம் கொடுக்கப்பட்டுள்ளது. தாய்மாருக்கு வந்தனங்கள்! எனப் பாடப்படுகின்றது. பாபா தாய்மாரின் குழுவொன்றை உருவாக்கி, அனைத்தையும் அவர்களிடம் கையளித்தார். புத்திரிகள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். பொதுவாக ஆண்களே கடனாளிகளாகின்றனர். எனவே தந்தை தாய்மார் மீதே கலசத்தை வைக்கின்றார். இந்த ஞான மார்க்கத்தில் தாய்மார்கூட கடனாளிகளாகின்றனர். பல்கோடி மடங்கு பாக்கியசாலிகள் ஆகவேண்டியவர்கள்கூட மாயையால் தோற்கடிக்கப்பட்டு கடனாளிகள் ஆகக்கூடும். இங்கு, ஆண்கள் பெண்கள் இரு சாராரும் கடனாளிகள் ஆகலாம். வெளியில், ஆண்களே கடனாளிகள் ஆகுகின்றனர். இங்கு, எத்தனை பேர் தோற்கடிக்கப்பட்டு, விட்டுச் சென்றுவிட்டார்கள் எனப் பாருங்கள். அவர்கள் கடனாளிகள் ஆகிவிட்டதையே இது குறிக்கின்றது. பாரத மக்கள் முழுமையாகக் கடனாளிகள் ஆகிவிட்டனர் எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள்! தாங்கள் எவ்வாறிருந்தார்கள் எனவும், எங்கிருந்து முழுமையாக வீழந்தார்கள் எனவும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை! இங்கும்கூட, அவர்கள் மேலேறும்போது, ஸ்ரீமத்தை மறந்து தங்களின் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதால் கடனாளிகளாகின்றனர். எனவே, அவர்களின் நிலை என்னவாக இருக்கும்? வெளியில், அவர்கள் கடனாளிகளாகி, பின்னர் ஐந்து அல்லது ஏழு வருடங்களின் பின்னர் மீண்டும் செயற்பட ஆரம்பிக்கின்றனர். இங்கு, அவர்கள் 84 பிறவிகளுக்குக் கடனாளிகள் ஆகுவதால் அவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியாது. அவர்கள் தொடர்ந்தும் கடனாளிகள் ஆகுகின்றனர். பல மகாராத்திகள் பலரையும் ஈடேற்றினர், எனினும் அவர்களே இன்று இங்கே இல்லை. அவர்கள் கடனாளிகள் ஆகிவிட்டனர். இங்கு, அந்தஸ்து மிக உயர்வானது. இருந்தபோதிலும், நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அதி உச்சியிலிருந்து கீழே வீழ்ந்துவிடுவீர்கள். மாயை முழுமையாகவே உங்களை விழுங்கிவிடுகின்றாள். குழந்தைகளாகிய நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிர்வாகக் குழுக்களை உருவாக்குவதாலோ, உங்களின் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதாலோ எதையும் அடைய முடியாது. உங்களின் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணையுங்கள். இவ்வாறு செய்வதால் நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தைக்குச் சொந்தமாகிய பின்னர், நீங்கள் தந்தைக்குக் கீழ்ப்படியாமல், அவரது ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் முற்றாகவே வீழ்ந்துவிடுவீர்கள். பின்னர், தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும். தொடர்பு துண்டிக்கப்பட்டால், மாயை ஏன் உங்களை அதிகளவில் தொந்தரவு செய்கின்றாள் என உங்களையே நீங்கள் கேட்கவேண்டும். நீங்கள் தந்தையுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சி செய்யவேண்டும். வேறு எவ்வாறு உங்கள் மின்கலம் சக்தியூட்டப்பட முடியும்? நீங்கள் பாவச் செயல்கள் செய்யும்போது உங்களின் மின்கலம் சக்தியிழக்கின்றது. நீங்கள் மேலேறுகையிலே வீழ்ந்துவிடுகின்றீர்கள். அத்தகைய பலர் இருப்பதை பாபா அறிவார். ஆரம்பத்தில் பலர் வந்து பாபாவிற்குச் சொந்தமாகினர். அவர்கள் பத்திக்கு வந்தனர், எனினும் இன்று அவர்கள் எங்கே? அவர்கள் பழைய உலகை நினைத்ததால், வீழ்ந்துவிட்டனர். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களை எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கத் தூண்டுகின்றேன். உங்களின் இதயத்தை இப்பழைய, தூய்மையற்ற உலகில் பற்றுவைக்க விடாதீர்கள். உங்களின் இதயத்தை சுவர்க்கத்துடன் இணையுங்கள். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆக விரும்பினால், ஏதாவது முயற்சி செய்தாக வேண்டும்! உங்களின் புத்தியின் யோகம் ஒரேயொரு தந்தையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பழைய உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருங்கள். நீங்கள் பழைய உலகை மறப்பது நல்லது. எவ்வாறாயினும், நீங்கள் எதை நினைவு செய்ய வேண்டும்? சாந்தி தாமமும், சந்தோஷ தாமமுமு; ஆகும். நடக்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், சுற்றித் திரியும்போதும் இயன்றவரை தந்தையை நினைவு செய்யுங்கள். எல்லையற்ற சந்தோஷம் நிறைந்த சுவர்க்கத்தை நினைவு செய்யுங்கள். இது மிக இலகுவானது. நீங்கள் இவ்விரு அறிவுறுத்தல்களையும் மீறி எதிர்த்திசையில் செல்வீர்களாயின், உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். நீங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்காகவே இங்கு வந்திருக்கின்றீர்கள். இது திரும்பிச் செல்லவேண்டிய பயணம் என்பதால், அனைவரும் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகவேண்டும் என நீங்கள் அவர்களுக்குக் கூறுகின்றீர்கள். உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது எனும்போது, சுவர்க்கம் நரகமாகுவதையும், நரகம் சுவர்க்கமாகுவதையுமே அது குறிக்கின்றது. இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. தந்தை உங்களைச் சுயதரிசன சக்கரதாரிகளாக இங்கு அமர்ந்திருக்குமாறு கூறியுள்ளார். இந்நினைவில் அமர்;ந்திருங்கள். நாங்கள் பல தடவைகள் இச்சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளோம். நாங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள். இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒரு தடவை தேவர்களாகின்றோம். உலகிலுள்ள எவருமே இந்த இரகசியத்தை அறியமாட்டார்கள். தேவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுக்க மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே தூய்மையாக உள்ளனர். சங்கு ஊதுவதற்கு, அவர்களிடம் அத்தகைய ஞானம் இல்லை. அவர்கள் ஏற்கனவே தூய்மையாக உள்ளதால், இதற்கான அடையாளத்தை அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. இருவரும் சேர்ந்து நான்கு கரங்களை உடைய உருவமாகும்போதே அந்த அடையாளம் கொடுக்கப்படுகின்றது. நீங்கள் இன்று தேவர்களாகினாலும், நாளையே நீங்கள் வீழ்ந்துவிடுவதால் உங்களுக்கு அந்த அடையாளம் கொடுக்கப்படுவதில்லை. மாயை உங்களை விழச் செய்கின்றாள். தந்தை உங்களை தேவர்களாக்குகின்றார், மாயையோ உங்களை அசுரர்களாக்குகின்றாள். மாயை உங்களைப் பல வழிகளில் சோதிக்கின்றாள். தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்தும்போதே நீங்கள் உங்களின் ஸ்திதியிலிருந்து உண்மையிலேயே வீழ்ந்துவிட்டீர்கள் என்பதை உணர்ந்துகொள்கின்றீர்கள். ஆதரவற்ற, அப்பாவி ஆத்மாக்கள் பலர் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்து பெற்றதையெல்லாம் சேமித்து வைத்தனர். அவ்வாறிருந்தும்கூட, அவர்கள் சில சமயங்களில் மாயையால் தோற்கடிக்கடுகின்றனர். நீங்கள் ஒரு தடவை சிவபாபாவிற்குச் சொந்தமாகிவிட்டால், ஏன் அவரை மறக்கின்றீர்கள்? நினைவு யாத்திரையே இதில் பிரதான விடயமாகும். யோகம் செய்வதால் மாத்திரமே நீங்கள் தூய்மையாக முடியும். ஞானத்துடன் கூடவே தூய்மையும் அவசியமாகும். நீங்கள் கூவியழைத்தீர்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள், அப்பொழுதே நாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும்! நீங்கள் தூய்மையாகி, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கே நினைவு யாத்திரை உள்ளது.. இங்கிருந்து விலகிச் சென்றவர்களும்கூட சிறிதளவு ஞானத்தைச் செவிமடுத்திருப்பதால் நிச்சயமாக சிவபூமிக்குச் செல்வார்கள். அவர்களின் அந்தஸ்து எதுவாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் நிச்சயமாக வருவார்கள். அவர்கள் தந்தையை ஒரு தடவையே நினைவு செய்திருந்தாலும்கூட சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். ஆனால், அவர்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமாட்டார்கள். சுவாக்கம் என்ற பெயரைக் கேட்டு வெறுமனே சந்தோஷப்படாதீர்கள். நீங்கள் தோல்வியடைந்த பின்னர், சில சதங்கள் பெறுமதியான அந்தஸ்தைப் பெறுவதில் சந்தோஷமடையக்கூடாது. அது சுவர்க்கமாக இருந்தாலும், அந்தஸ்தில் பல்வேறு மட்டங்கள் உள்ளன. நீங்கள் ஒரு வேலைக்காரன் அல்லது சுத்தம் செய்பவர் என்ற உணர்வு இருக்கவே செய்யும். இறுதியில், நீங்கள் எவ்வாறு ஆகுவீர்கள் என்ற காட்சியைப் பெறுவீர்கள். நான் இந்த நிலையை அடைவதற்கு என்ன பாவங்கள் செய்தேன்? நான் ஏன் ஒரு சக்கரவர்த்தினி ஆகவில்லை? நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் பல்கோடீஸ்வரர் ஆகலாம். நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் உங்களால் பல்கோடீஸ்வரர் ஆகமுடியாது. ஆலயங்களில் தேவர்கள் தாமரை அடையாளத்துடன் காண்பிக்கப்பட்டுள்ளனர். வேறுபாட்டை நீங்கள் புரிந்துகொள்ளலாம். அந்தஸ்தில் அதிக வேறுபாடு உள்ளது. இப்பொழுதும்கூட, அந்தஸ்தில் எத்தனை மட்டங்கள் உள்ளன எனப் பாருங்கள். அவர்களிடம் பெருமளவு பகட்டு உள்ளது. அவையனைத்தும் தற்காலிக சந்தோஷமே ஆகும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்காக உங்கள் கைகளை உயர்த்துகின்றீர்கள். எனவே, நிச்சயமாக அதற்காக முயற்சி செய்யப்பட வேண்டும். தங்களின் கைகளை உயர்த்திய சிலர்கூட இப்பொழுது இங்கு இல்லை. பின்னர் மற்றவர்கள் கேட்கின்றனர்: இவர்களா தேவர்களாகப்போகின்றார்கள்? முயற்சி செய்கையில் அவர்களின் கதை முடிந்துவிட்டது! உங்களின் கையை உயர்த்துவதும், பலருக்கு விளங்கப்படுத்துவதும் இலகுவானது. எவ்வாறாயினும். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகையில் சில மகாராத்திகளும்கூட காணாமல் போய்விடுகின்றனர். மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் வேளையில் அவர்கள் தங்களுக்கே ஓர் இழப்பை ஏற்படுத்திக்கொள்கின்றனர். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அகநோக்குடையவராகி, தந்தையை நினைவு செய்யுங்கள். எவ்வாறு? பாபா எங்களின் தந்தையும், எங்களின் ஆசிரியரும், எங்களின் குருவும் ஆவார். நாங்கள் எங்களின் இனிய வீட்டிற்குச் செல்கின்றோம். உங்களுக்குள் இந்த ஞானம் முழுவதும் இருக்க வேண்டும். தந்தையிடம் ஞானம், யோகம் இரண்டும் உள்ளது, நீங்கள் இவ்விரண்டையும் கொண்டிருக்க வேண்டும். சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, அது ஞானமும், அத்துடன் நினைவும் ஆகும். ஞானம், யோகம் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் ஞானத்தை மறந்து சிவபாபாவின் நினைவில் மாத்திரம் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். தந்தை உங்களுக்கு யோகம் கற்பிக்கும்போது, அவர் இந்த ஞானத்தை மறக்கின்றாரா? முழு ஞானமும் அவரில் உள்ளது. குழந்தைகளாகிய உங்களிடம் இந்த ஞானம் இருக்கவேண்டும். நீங்கள் அதைக் கற்க வேண்டும். நான் என்ன செயல்களைச் செய்தாலும், என்னைப் பார்ப்பவர்களும் அதையே செய்வார்கள். நான் முரளியைக் கற்காவிட்டால், மற்றவர்களும் அதைக் கற்கமாட்டார்கள். நான் சீரழிவுக்குச் சென்றால், மற்றவர்களும் அதையே செய்வதால் மற்றவர்களை விழச் செய்வதில் நான் ஒரு கருவியாகின்றேன். பல குழந்தைகள் முரளியைக் கற்காமல் சுய அகங்காரத்தைக் கொண்டுள்ளனர். மாயை விரைவாக அவர்களைத் தாக்குகின்றாள். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் அவசியமாகும். இல்லாவிடில் ஏதோவொரு பாவச் செயல் செய்யப்படுகின்றது. பல குழந்தைகள் பல தவறுகளைச் செய்கின்றார்கள். பின்னர் அனைத்துமே அழிக்கப்படுகின்றது. நீங்கள் தவறுகள் செய்யும்போது, மாயை உங்களை அறைந்து, ஒரு சதத்திற்கும் பெறுமதியற்றவர்கள் ஆக்குகின்றாள். இதற்குப் பெருமளவு புரிந்துணர்வு தேவை. நீங்கள் அகங்காரம் உடையவராகும்போது மாயை உங்களைப் பல பாவச் செயல்கள் புரியவைக்கின்றாள். நீங்கள் ஒரு குழுவை உருவாக்கும்போது, ஓரிரு பெண்கள் நிச்சயமாகத் தலைமை வகிக்க வேண்டும். அவர்களின் ஆலோசனைகளுடனேயே அனைத்தும் செய்துமுடிக்கப்பட வேண்டும். கலசம் இலக்ஷ்மிக்கே வழங்கப்பட்டுள்ளது. அமிர்தம் வழங்கப்பட்ட போது, அதைப் பருகுவதற்காக அசுரர்களும்கூட வந்ததாக நினைவுகூரப்படுகின்றது. யக்ஞத்திற்குத் தடைகள் விளைவிப்பவர்களும் உள்ளனர். பல்வேறு தடைகளை உருவாக்குபவர்களும் உள்ளனர். நாள் முழுவதும் அரட்டையடிப்பவையே அவர்களின் புத்தியில் இருக்கும். அது மிகவும் தீயதாகும். நடப்பவையனைத்தையும் தந்தைக்குத் தெரிவியுங்கள். ஒரேயொரு தந்தையால் மாத்திரமே உங்களைச் சீர்திருத்த முடியும். நீங்கள் சட்டத்தை உங்களின் கைகளில் எடுக்கக்கூடாது. தந்தையின் நினைவில் இருந்து அனைவருக்கும் அவரது அறிமுகத்தைக் கொடுங்கள். அப்பொழுதே உங்களால் அவர்களைப் போன்று ஆகமுடியும். மாயை மிகவும் பலசாலி. அவள் எவரையும் விட்டுவைப்பதில்லை. எப்பொழுதும் உங்களின் செய்தியைத் தந்தைக்கு எழுதுங்கள். தொடர்ந்தும் அவரிடமிருந்து வழிகாட்டல்களைப் பெறுங்கள். நீங்கள் எப்படியோ அனைத்திற்கும் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். பாபா குறித்த ஒரு நபரைப் பற்றி எதையாவது விளங்கப்படுத்துவதால் அவர் அந்தர்யாமி (ஒவ்வொருவருக்கும் உள்ளேயிருப்பதை அறிந்தவர்) எனக் குழந்தைகளாகிய நீங்கள் நினைக்கின்றீர்கள். எவ்வாறாயினும், தந்தை கூறுகின்றார்: இல்லை, நான் உங்களுக்கு ஞானத்தையே கற்பிக்கின்றேன். இதில் அந்தர்யாமி என்ற கேள்விக்கே இடமில்லை. ஆம், நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள் என்பதை நான் அறிவேன். ஒவ்வொருவரினுள்ளும் இருக்கின்ற ஆத்மா எனது குழந்தை. தந்தை ஒவ்வொருவரினுள்ளும் இருக்கின்றார் என்றில்லை. மக்கள் இதைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். தந்தை கூறுகின்றார்: ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்றும், அவர் தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றார் என்றும் நான் அறிவேன். இவை அத்தகைய இலகுவான விடயங்களாகும்! அவ்வாறிருந்தும்கூட, அவர்கள் இதை மறந்து, கடவுள் சர்வவியாபகர் எனக் கூறுகின்றார்கள். இந்த ஒரு தவறாலேயே அனைவரும் அதிகளவில் வீழ்ந்துவிட்டனர்! உங்களை உலக அதிபதிகள் ஆக்குபவரை நீங்கள் அவதூறு செய்கின்றீர்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: பாரதத்தில் அதர்மம் உச்சக்கட்டத்தில் உள்ளபோதே நான் வருகின்றேன். தந்தை இங்கு வந்துவிட்டார். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் ஞானக்கடலை மிக நன்றாகக் கடைய வேண்டும். இந்த ஞானத்தை மிக நன்றாகக் கடைவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுதே உங்களுக்கு நன்மை பயக்க உங்களால் முடியும். இதில் பணம் என்ற கேள்வியில்லை. எவரும் பட்டினியால் இறந்துவிட மாட்டார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையிடமிருந்து சேமிப்பதற்கேற்ப, உங்களின் பாக்கியத்தை உருவாக்குகின்றீர்கள். ஞானத்திற்கும், பக்திக்கும் பின்னர் விருப்பமின்மை எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். விருப்பமின்மை என்றால் அனைத்தையும் மறப்பதாகும். நீங்கள் விலகியிருக்க வேண்டும்: ஆத்மாவாகிய நான் இச்சரீரத்தை நீக்குகின்றேன். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை நீங்கள் மிகவும் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் ஒருபோதும் கவனயீனமாக இராதீர்கள். மிக மிக எச்சரிக்கையாக இருங்கள். ஒருபோதும் எந்தச் சட்டத்தையும் மீறாதீர்கள்.2. அகநோக்குடையவராகி, உங்களின் புத்தியை ஒரேயொரு தந்தையுடன் இணையுங்கள். தூய்மையற்ற இப்பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருங்கள். நீங்கள் செய்கின்ற செயல்களைப் பார்த்து, மற்றவர்களும் அதையே செய்வார்கள் என்பதை உங்களின் புத்தியில் வைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
சுயமரியாதை ஆசனத்தில் ஸ்திரமாக நிலைத்திருப்பதன் மூலம், மேன்மையான சுயமரியாதையைக் கொண்டிருந்து, மாயையை அர்ப்பணிக்கச் செய்வீர்களாக.மாஸ்டர் சர்வசக்திவானாக இருப்பதன் விழிப்புணர்வை கொண்டிருப்பதே, சங்கமயுகத்தின் மேன்மையான சுயமரியாதையாகும். ஓர் உயர் அதிகாரி அல்லது ஓர் அரசர் தனது சுயமரியாதை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போதே பிறரும் அவருக்கு மரியாதை கொடுப்பார்கள். அவர் தனது ஆசனத்தில் இல்லாதிருந்தால், எவருமே அவரின் கட்டளைகளைப் பின்பற்ற மாட்டார்கள். அவ்வாறே, நீங்கள் சுயமரியாதை கொண்டிருப்பவராகி, உங்கள் சுயமரியாதை ஆசனத்தில் அமர்ந்திருந்தால், மாயை உங்களுக்குத் தன்னை அர்ப்பணிப்பாள்.
சுலோகம்:
பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் நிலைத்திருந்து, இதயத்திற்குச் சௌகரியமளிப்பவரின் சகவாசத்தை அனுபவம் செய்பவர்களே அன்பில் மூழ்கியிருக்கும் ஆத்மாக்கள் ஆவார்கள்.