19.02.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அமர்ந்திருக்கும்பொழுதும், நடமாடும்பொழுதும், உலாவித்திரியும் பொழுதும், நினைவில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். ஞானமும், யோகமுமே இரண்டு பிரதான பாடங்களாகும். யோகம் என்றால் நினைவு செய்தலாகும்.கேள்வி:
திறமையான குழந்தைகள் எந்த வார்த்தைகளை ஒருபொழுதும் கூறுவதில்லை?பதில்:
“எங்களுக்கு யோகம் கற்பியுங்கள்!” என்று திறமையான குழந்தைகள் ஒருபொழுதும் கூறமாட்டார்கள். தனது தந்தையை நினைவுசெய்வது எவ்வாறு என ஒருவர் கற்க வேண்டுமா? இது நீங்கள்; கற்று, பின்னர் ஏனையோருக்கும் கற்பிக்கும் ஒரு பாடசாலை. குறிப்பாக, நினைவுசெய்யும் பொருட்டு நீங்கள் அமரவேண்டும் என்றில்லை. செயல்களைச் செய்யும்;பொழுதும் நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்ய வேண்டும்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்களுடன் ஆன்மீகத் தந்தை இந்த இரதத்தின் மூலம் பேசுகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நீங்கள் அவரின் குழந்தைகள் என்பதால், பாபாவின் நினைவில் அமர்வது எவ்வாறு என்று கற்பியுங்கள் என்று தந்தையையோ அல்லது எந்தச் சகோதர, சகோதரியையோ கேட்பது தவறாகும். நீங்கள் இன்னமும் சிறு குழந்தைகள் அல்ல. ஆத்மாவே பிரதான விடயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மா அழிவற்றவர், ஆனால் சரீரம் அழியக்கூடியது. ஆத்மாவே மகத்தானவர். தூன் ஓர் ஆத்மா, ஓர் ஆத்மா தனது சரீரத்தின் மூலம் பேசுகின்றார் என்ற ஞானம் அறியாமைப் பாதையில் எவரிடமும் இருக்கவில்லை. அவர்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகி, “நான் இதைச் செய்கின்றேன்” எனக் கூறுகிறார்கள். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகுகின்றீர்கள். “இச்சரீரத்தின் மூலம் நான் பேசுவதுடன் செயல்களையும் செய்கின்றேன்” என ஆத்மாக்களே கூறுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்கள் ஆண்கள். “எவ்வாறு யோகத்தில் இருப்பது என எங்களுக்குக் கற்பியுங்கள்!” எனும் இவ் வார்த்தைகளை நான் பலமுறை கேட்கிறேன் எனத் தந்தை கூறுகின்றார். அவர்கள் இதை அடிக்கடி கூறுகிறார்கள். நீங்களும அமர்ந்திருந்து, இன்னுமொருவரும் உங்கள் முன்னால் அமர்ந்திருக்கும்பொழுது, நீங்களும் அந்த நபரும், பாபாவின்; நினைவில் இருக்கும் இலக்கையே கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பாடசாலை அந்த நோக்கத்திற்காக மாத்திரம் இல்லை. இந்தப் பாடசாலை கற்பதற்காக ஆகும். நீங்கள் இங்கே வருவது வெறுமனே நினைவில் அமர்ந்திருப்பதற்காக மாத்திரம் அல்ல. நீங்கள் அமரும்பொழுதும், நடக்கும் பொழுதும், உலாவித்திரியும்பொழுதும், தந்தையை நினைவுசெய்ய வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இந் நினைவைக் கொண்டிருப்பதற்கு விசேடமாக அமர்ந்திருக்க வேண்டிய தேவை எதுவும் உங்களுக்கு இல்லை. சிலர் இராம நாமத்தை உச்சரிக்குமாறு பிறருக்குக் கூறுகிறார்கள். இராம நாமத்தை உச்சரிக்காது அவரை நினைவுசெய்வது சாத்தியமாகுமா? நீங்கள் நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் கூட அவரை நினைவுசெய்ய முடியும். கருமங்கள் ஆற்றும்பொழுதும் நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். காதலர்கள் அல்லது அன்பிற்கினியவர்கள் ஒருவரையொருவர் நினைவுசெய்வதற்காக விசேடமாக அமர்ந்திருப்பதில்லை. நீங்கள் அனைத்தையும் செய்வதுடன், உங்கள் தொழில் போன்றவற்றையும் செய்யலாம். அவர்கள் அனைத்தையும் செய்யும்பொழுதும் தங்கள் அன்பிற்;கினியவரை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நினைவுசெய்வதற்காக எங்கேயாவது சென்று, விசேடமாக அமர்கிறார்கள் என்றில்லை. குழந்தைகளாகிய நீங்கள் பாடல்கள் பாடும்பொழுதும், செய்யுள்களை ஒப்புவிக்கும்பொழுதும் பாபா கூறுகின்றார்: அவை பக்தி மார்க்கத்திற்குரியவை. அவர்கள் கூறுகிறார்கள்: ஓ அமைதியை அருள்பவரே! ஆதலால் அவர்கள் நிச்சயமாகக் கிருஷ்ணரை அன்றி, பரமாத்மாவையே நினைவுசெய்கிறார்கள். நாடகத்திற்கேற்ப, ஆத்மாக்கள் அமைதியற்றவர்கள் ஆகுவதால், தந்தையைக் கூவியழைக்கிறார்கள். ஏனெனில் அவரே அமைதிக்கடலும், சந்தோஷக்கடலும், ஞானக்கடலும் ஆவார். ஞானமும், யோகமுமே இரு பிரதான விடயங்கள்;; யோகம் என்பது நினைவு என அர்த்தப்படும். இராஜயோகம் என்றழைக்கப்படும் உங்களுடைய யோகத்திலிருந்து அவர்களுடைய ஹத்தயோகம் முற்றிலும் வேறுபட்டது. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தையிடமிருந்து தந்தையை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்து கொள்கிறீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதே, உங்களுக்குள்ள பெரும் சந்தோஷம் ஆகும். எல்லாவற்றிக்கும் முதலில் கடவுளின் மிகச்சரியான அறிமுகம் உங்களுக்கு இருக்க வேண்டும். ஓர் ஆத்மா நட்சத்திரத்தைப் போன்றிருப்பதைப் போன்றே, கடவுளும் ஒரு நட்சத்திரம் போன்றவர் என்பதை எவரும் அறியார். அதாவது அவரும் ஓர் ஆத்மாவே, ஆனால் அவர் பரமாத்மா. அவர் பரமாத்மா என அழைக்கப்படுகிறார். அவர் ஒருபொழுதும் மறுபிறவி எடுப்பதில்லை. அவர் ஒருபொழுதும் பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் வருவதில்லை; இல்லை. அவர் பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர். அவரே வந்து, எவ்வாறு தான் வருகிறார் என்பதை விளங்கப்படுத்துகின்றார். பாரதத்தில் திரிமூர்த்திக்கான புகழ் உள்ளது. திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கரின் படத்தை அவர்களும் காட்டுகின்றார்கள். “பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள்” என அவர்கள் கூறினாலும், அவர்கள் அதிமேலான தந்தையை மறந்து விட்டார்கள். அவர்கள் திரிமூர்த்தியின் உருவத்தையே வைத்திருக்கின்றார்கள். எனினும் சிவனே நிச்சயமாக அவர்களுக்கு மேலாக உள்ளார் என்பதனால் சிவனே அவர்களைப் படைப்பவர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். படைப்பிடமிருந்து எவருமே ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. நீங்கள் பிரம்மாவிடமிருந்து எந்த ஆஸ்தியையும் பெறுவதில்லை என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். விஷ்ணு வைரங்களாலும், இரத்தினங்களாலுமான ஒரு கிரீடத்துடன் காட்டப்பட்டுள்ளார். ஒரு சதப் பெறுமதியற்றிருந்திலிருந்து நீங்கள் இப்பொழுது சிவபாபாவினால் ஒரு பவுண்ட் (ஆங்கில நாணயம்) பெறுமதி வாய்ந்தவர்கள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். சிவனுக்கென ஒரு வடிவம் இல்லாததால் அனைத்தும் பொய்யாகி விடுகின்றன. பரமாத்மாவாகிய பரமதந்தையே அதி உயர்ந்தவர். இது அவரது படைப்பு. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். நீங்கள் அங்கிருக்கும் பொழுது, உங்கள் லௌகீகத் தந்தையிடமிருந்து, உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்களாயினும், எல்லையற்ற தந்தையிடமிருந்தே அந்த வெகுமதி பெறப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாது. அதனை நீங்கள் இப்பொழுதே அறிந்துகொள்கிறீர்கள். இக்காலத்திற்கான உங்களது வருமானம் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு நீடிக்கிறது. நீங்கள் அங்கிருக்கும்பொழுது இதைப் பற்றிய எதனையும் அறியாதுள்ளீர்கள். அங்கு நீங்கள் இந்த ஞானம் எதனையும் பற்றி அறியாதவர்களாக இருக்கிறீர்கள். தேவர்களிடமோ சூத்திரர்களிடமோ இந்த ஞானம் இருப்பதில்லை. பிராமணர்களாகிய உங்களிடம் மாத்திரமே இந்த ஞானம் உள்ளது. இந்த ஞானம் ஆன்மீக ஞானமாகும். எவருக்குமே ஆன்மீகம் என்பதன் அர்த்தம் தெரியாது. அவர்கள் தத்துவ ஞானத்தின் கலாநிதிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். தந்தை மாத்திரமே ஆன்மீக ஞானத்தின் கலாநிதியாவார். தந்தையைச் சத்திரசிகிச்சை நிபுணர் எனவும் அழைக்கின்றார்கள். சாதுக்களும் சந்நியாசிகளும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் அல்லர். வேதங்களையும் சமயநூல்களையும் கற்பவர்கள் கலாநிதிகள் (டாக்டர் பட்டம் பெற்றவர்கள்) என அழைக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அப்பட்டங்கள் கொடுக்கப்படுகின்ற பொழுதிலும், உண்மையில் ஒரேயொரு ஆன்மீகத் தந்தையே ஆத்மாக்களுக்கு ஊசி ஏற்றுபவரான ஆன்மீகச் சத்திரசிகிச்சை நிபுணர். அது பக்தியாகும். ஆகவே பக்தியின் கலாநிதிகளினால் சமயநூல்களின் அறிவையே கொடுக்க முடியும் என்பதையும், அது எந்தவிதப் பயனுமற்றது என்பதையும் நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் கீழ் இறங்குவதால், அவர்களை எவ்வாறு கலாநிதிகள் என அழைப்பது? கலாநிதிகள் உங்களுக்குப் பயனளிக்க வேண்டும். இந்தத் தந்தை அநாதியான ஞானத்தின் சத்திரசிகிச்சை நிபுணர். நீங்கள் யோக சக்தியின் மூலம் என்றென்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள்; மற்றவர்கள் எதனை அறிவார்கள்? அவர் அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் என அழைக்கப்படுகின்றார். தந்தை மாத்திரமே ஆத்மாக்களின் விகாரக் கலப்படங்கள் அனைத்தையும் அகற்றும் சக்தியுடையவர். அவராலேயே அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்குச் சற்கதியை அளிக்க முடியும். ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவரான சர்வசக்திவான். எந்த மனிதரும் சர்வசக்திவான் என அழைக்கப்பட மாட்டார். அப்படியானால் தந்தை காட்டும் சக்தி என்ன? அவர் தனது சொந்தச் சக்தியினால் அனைவருக்கும் சற்கதி அளிக்கின்றார். அவர் ஆன்மீக ஞானத்தின் கலாநிதி என அழைக்கப்படுகின்றார். தத்துவ கலாநிதிகள் என அழைக்கப்படும் பலர் இருக்கின்றபொழுதும் ஆன்மீகக் கலாநிதி ஒரேயொருவரே உள்ளார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையாகிய என்னை நினைவுசெய்து தூய்மையாகுங்கள். நான் தூய உலகை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளேன். எனவே நீங்கள் ஏன் தூய்மையற்றவர்கள் ஆகுகிறீர்கள்? தூய்மையாகுங்கள்! தூய்மையற்றவர்கள் ஆகாதீர்கள்! ஆத்மாக்களாhகிய உங்கள் அனைவருக்கும் தந்தையால் வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டுள்ளன: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது, தாமரையைப் போல் தூய்மையாக இருங்கள். பிறப்பிலிருந்து தூய்மையாக இருப்பதால் நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் பல பிறவிகளாகப் பாவங்களைச் செய்து வந்தீர்கள், எனவே நீங்கள் இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். தூய ஆத்மாக்கள் அசரீரி உலகில் வசிக்கின்றார்கள். தூய்மையற்ற எவருமே அங்கு செல்ல முடியாது. பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை உங்கள் புத்தி நிச்சயமாக நினைவு செய்ய வேண்டும். ‘எவ்வாறு எனது ஆசிரியரை நினைவுசெய்வர் என்று எனக்குக் கற்பியுங்கள்’ என ஒரு மாணவன் எப்பொழுதாவது கூறுவாரா? நினைவுசெய்வதற்குக் கற்பிக்க என்ன அவசியம் இருக்கின்றது? இங்கே (கதியில்) ஒருவரும் அமர்ந்திருக்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் உங்கள் தந்தையையே நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் உங்கள் தொழிலில் நாள் முழுவதும் ஈடுபடுவதால் மறந்து விடுகின்றீர்கள். இதனாலேயே நீங்கள் இங்கே அமர வைக்கப்படுகிறீர்கள். அவர்கள் குறைந்தபட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்காவது நினைவில் இருக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அனைத்தையும் செய்யும்பொழுதும் தந்தையை நினைவுசெய்யும் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகும். அரைக் கல்பத்திற்குப் பின்னர் உங்கள் அன்பிற்கினியவரைச் சந்திக்கின்றீர்கள். “ஆத்மாக்களிலுள்ள கலப்படம் அகற்றப்பட்டு, நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகும்வகையில், இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள்” என அவர் கூறுகின்றார். ஆகவே ஏன் நீங்கள் அவரை நினைவுசெய்யக்கூடாது? திருமணத்தின் பொழுது மணப்பெண்ணுக்கும் மணவாளனுக்கும் முடிச்சுப் போடப்பட்டதும், ‘கணவனே அவளது குரு, அவளது கடவுள், அவளுக்கு அனைத்தும்’ என அவளுக்குக் கூறப்படுகின்றது. எனினும் அவள் தனது நண்பர்;களையும் உறவினர்களையும், அவளது குரு போன்றவர்களையும் நினைவுசெய்கின்றாள். அது சரீரதாரிகளின் நினைவாகும். இவரோ கணவர்மார் அனைவருக்கும் கணவராவார்; நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். ‘எவ்வாறு ஏகாந்தமாக யோகத்தில் இருப்பது என்று எங்களுக்குக் கற்பியுங்கள்’ எனச் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் அதனால் என்ன நிகழும்? இங்கு நீங்கள் 10 நிமிடங்களுக்கு அமர்ந்திருந்தாலும் நீங்கள் தொடர்ச்சியான நினைவில் இருந்ததாக எண்ண மாட்டீர்கள். பக்திமார்க்கத்தில் ஒருவரை வணங்குவதற்கு அவர்கள் அமர்ந்திருக்கும்பொழுது, அவர்களது புத்தி பெருமளவு அலைபாய்கின்றது. தீவிர பக்தி செய்பவர்கள் காட்சியைப் பெறுவதிலேயே அக்கறையாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு காட்சியைக் காண்பதில் பெரும் விருப்பம் கொண்டிருப்பதால் அவர்கள் தொடர்ந்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த விருப்பமான எண்ணத்தில் தங்களை மறந்து இருப்பதனால் அவர்களுக்கு ஒரு காட்சி கொடுக்கப்படுகிறது. அதுவே தீவிர பக்தி எனக் கூறப்படுகின்றது. அவர்களின் பக்தி, உண்ணும்பொதும், அருந்தும்பொதும், ஒருவரை ஒருவர் தங்கள் புத்தியில் வைத்திருக்கும் காதலர்களுக்கும் அன்பிற்கினியவர்களுக்கும் இடையிலே உள்ள பக்தியைப் போன்றதாகும். அதில் விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் ஒருவர் மற்றவரின் சரீரத்தில் விருப்பம் கொண்டிருப்பதால் அவர்களால் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியாது. இப்பொழுது தந்தை தன்னை நினைவுசெய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். விதையை நினைவுசெய்வதனால், முழு விருட்சத்தையும், நீங்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என்பதனையும் உங்களால் நினைவுசெய்ய முடியும். இது ஒரு பல்வகை சமயங்களின் விருட்சமாகும். பாரதம் முன்னர் சத்திய யுகமாக இருந்தது எனவும், இப்பொழுது அது கலி யுகமாகவும் உள்ளது என்பதும் உங்கள் புத்தியில் மாத்திரமே உள்ளது. இந்த ஆங்கிலச் சொற்கள் மிகவும் சிறந்தவை; அதன் கருத்துக்களும் மிகவும் சிறந்தவை. ஆத்மாக்கள் தங்கம் போல் ஆகுகின்றனர், பின்னர் அவர்களில் கலப்படம் கலக்கின்றது. இப்பொழுது அவர்கள் முற்றிலும் பொய்மையானவர்கள் ஆகிவிட்டனர். அவர்கள் இப்பொழுது கலியுகத்தவர்கள் (சைழn-யபநன) என அழைக்கப்படுகின்றார்கள். கலி யுக ஆத்மாக்களின் ஆபரணங்களும் அதேபோலாகி விட்டன. தந்தை கூறுகின்றார்: நான் தூய்மையாக்குபவர். ஆகவே சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என என்னை நீங்கள் பிரார்த்தனை செய்து வந்தீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்கு வழிமுறைகளைக் கற்பிப்பதற்காக நான் வருகின்றேன்: மன்மனபவ, அத்துடன் மத்தியாஜீபவ, அதாவது, சுவர்க்க அதிபதிகள் ஆகுங்கள். யோகத்தில் அதிகளவு சந்தோஷம் இருப்பதாகவும், ஆனால் ஞானத்தில் அந்தளவுக்கு இருப்பதில்லை எனவும் உங்களில் சிலர் கூறுகின்றீர்கள். அவர்கள் யோகத்தை மட்டும் செய்து விட்டு செல்கின்றார்கள்;; அவர்கள் யோகத்தை மட்டும் விரும்புகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: எனக்கு அமைதி மாத்திரமே வேண்டும். நல்லது. நீங்கள் எங்கு அமர்ந்திருக்கும்பொழுதும், உங்களினால் தந்தையை நினைவுசெய்ய முடியும். பாபாவை நினைவுசெய்வதால், நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். அதற்கு யோகம் கற்பிக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் தந்தையை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். பலர் தங்கள் நிலையங்களுக்குச் சென்று, அரை மணித்தியாலம் அல்லது 45 நிமிடங்களுக்கு நினைவில் அமர்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: “என்னைச் சிறிது நேரம் யோகத்தில் அமர விடுங்கள்.” அல்லது அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, யோகத்தில் அமருவதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை எங்களுக்குக் கொடுத்துள்ளார். இங்கு பாபா கூறுகின்றார்: நடந்தும், நடமாடியும் திரியும்பொழுது நினைவில் இருங்கள். அறவே நினைவு செய்யாமல் இருப்பதை விட நினைவுசெய்வதற்கு அமர்ந்திருப்பது நல்லது. நீங்கள் இதனைச் செய்வதை பாபா தடை செய்வதில்லை. நீங்கள் விரும்பினால், இரவு முழுவதும் அமர்ந்திருக்கலாம். ஆனால் அவரை இரவில் மாத்திரம் நினைவுசெய்யும் பழக்கத்தை உருவாக்கி விடக்கூடாது. நீங்கள் அனைத்தையும் செய்யும்பொழுதும் அவரது நினைவில் இருக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். இதில் மாத்திரமே நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். புத்தி மீண்டும் மீண்டும் வேறு திசைகளை நோக்கி ஓடுகின்றது. பக்தி மார்க்கத்திலும் அவர்கள் புத்தி அலைபாய்வதால் அவர்கள் தங்களைத் தாங்களே கிள்ளிக் கொள்கின்றார்கள். பாபா உண்மையான பக்தர்களைப் பற்றிப் பேசுகின்றார். ஆதலால் இங்கேயும் நீங்கள் உங்களுடன் இவ்வாறு பேச வேண்டும். நான் ஏன் பாபாவை நினைவுசெய்யவில்லை? பாபாவை நினைவுசெய்யாமல் எவ்வாறு நான் உலகின் அதிபதி ஆகுவேன்? அந்தக் காதலர்களும், அன்பிற்கினியவர்களும் ஒருவர் மற்றவரின் பெயரிலும் வடிவத்திலும் அகப்பட்டுள்ளனர். இங்கேயோ நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இந்த ஆத்மாவாகிய நான் இந்தச் சரீரத்தில் இருந்து வேறுபட்டவர். நீங்கள் ஒரு சரீரத்தில் பிரவேசிக்கும்பொழுது செயல்களைச் செய்ய வேண்டியுள்ளது. உங்களில் பலர் ஒரு காட்சியைப் பெற விரும்புவதாகக் கூறுகின்றீர்கள். நீங்கள் எதனுடைய காட்சியைப் பெறுவீர்கள்? ஒரு புள்ளியினுடையதை ஆகும். நல்லது. சிலர் கிருஷ்ணரின் காட்சியைப் பெற விரும்புவதாகக் கூறுகின்றார்கள். கிருஷ்ணரின் வடிவங்கள் உள்ளன. உயிரற்றதாக உள்ளதை உயிருள்ள வடிவத்தில் நீங்கள் காண்பீர்கள். அதில் என்ன பயன் உள்ளது? காட்சிகளைக் காண்பதால் எப்பயனும் இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை நினைவுசெய்யும்பொழுது, தூய்மையாகுகிறீர்கள். நாராயணனின் காட்சிகளைக் காண்பதினால் நீங்கள் நாராயணனைப் போல் ஆகுவதில்லை. உங்கள் இலக்கும் இலட்சியமும் இலக்ஷ்மி அல்லது நாராயணனைப் போலாகுவது என்பது உங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும் கற்காமல் உங்களால் அவர்களைப் போலாக முடியாது. கற்பதனால் நீங்கள் திறமைசாலிகள் ஆகுகின்றீர்கள். முதலில் உங்கள் பிரஜைகளை உருவாக்குங்கள், பின்னர் நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணனைப் போல் ஆக முடியும். இதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. தர்மராஜிடமிருந்து எத் தண்டனையையும் பெறாத வகையில், நீங்கள் திறமைச்சித்தி எய்த வேண்டும். இந்த விசேட குழந்தையும் உங்களுடன் இருக்கிறார். இவரும் கூறுகின்றார்: நீங்கள் மிக விரைவாக என்னை முந்திச் செல்ல முடியும். பாபாவிற்கு அத்தகைய பெரிய சுமை உள்ளது. இவர் நாள் முழுவதும் பல விடயங்களைச் சிந்திக்க வேண்டும். நீங்கள் பாபாவை நினைவுசெய்யும் அளவிற்கு என்னால் முடிவதில்லை. உணவு அருந்தும் வேளைகளில், நான் பாபாவைச் சிறிது நினைவுசெய்யத் தொடங்கி, பின்னர் மறந்து விடுகிறேன். சிலவேளைகளில் நானும் பாபாவும் உலாவச் செல்வோம் என எண்ணுகிறேன், பின்னர் நடக்கும்பொழுது நான் பாபாவை மறந்து விடுகிறேன். இந்த நினைவு மிகவும் நழுவலான ஒரு விடயமாகும். நினைவு திரும்பத் திரும்ப நழுவி விடுகின்றது. நீங்கள் இதில் பெரும் முயற்சி செய்ய வேண்டும். நினைவு செய்வதினாலேயே ஆத்மாக்கள் தூய்மையாகுகிறார்கள். நீங்கள் பலருக்குக் கற்பித்தால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். இந்த ஞானத்தை மிக நன்றாகப் புரிந்துகொள்பவர்களால் நல்ல அந்தஸ்தைக் கோர முடியும். கண்காட்சிகளில் பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கண்;காட்சிகளில் நூறாயிரக்கணக்கானவர்களுக்குச் சேவை செய்ய முடியும். எனவே உங்கள் ஸ்திதியும் அதற்கேற்ப இருக்க வேண்டும். நீங்கள் கர்மாதீத நிலையை அடையும்பொழுது, உங்கள் சரீரம் இங்கு இருக்க மாட்டாது. நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது, யுத்தங்கள் அதிகரிக்கும் என்பதையும், பின்னர் பலர் உங்களிடம் தொடர்ந்தும் வருவார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உங்கள் புகழ் தொடர்ந்தும் அதிகரிக்கும். இறுதியில் சந்நியாசிகளும் வருவார்கள்; அவர்கள் தந்தையை நினைவுசெய்ய ஆரம்பிப்பார்கள். அவர்கள் முக்தி தாமத்திற்குச் செல்லும் தங்கள் பாகத்தை நடிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் இந்த ஞானத்தைக் கற்க மாட்டார்கள். எவ்வாறாயினும் உங்கள் செய்தி ஆத்மாக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். அனேகர் இதனைத் செய்தித்தாள்கள் மூலம் தொடர்ந்தும் அறிவார்கள். அனேகக் கிராமங்கள் உள்ளன் அங்கு உள்ள அனைவருக்கும் நீங்கள் இச் செய்தியைக் கொடுக்க வேண்டும். நீங்கள் தீர்க்கதரிசிகளும், தூதுவர்களும் ஆவீர்கள். வேறு எவருமன்றி, தந்தையே தூய்மையாக்குபவர். சமய ஸ்தாபகர்கள் எவரையேனும் தூய்மையாக்குகிறார்கள் என்றில்லை. அவர்களுடைய சமயங்கள் பரவ வேண்டும். ஆகவே எவ்வாறு அவர்களால் எவருக்கேனும் வீட்டிற்கான பாதையைக் காட்ட முடியும்;? ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தூய்மையாக இல்லாத பலர் இருக்கின்றார்கள். காமமே கொடிய எதிரி. மிக நல்ல குழந்தைகளும் இதனால் வீழ்ச்சியடைகிறார்கள். தீய பார்வையும் காமத்தின் சுவடே. காமம் மிகப்பெரிய அசுரன். தந்தை கூறுகின்றார்: இதனை வெற்றிகொள்ளுங்கள், நீங்கள் உலகினை வென்றவர்கள் ஆகுவீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. செயல்களைச் செய்யும் வேளையில் நினைவில் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். தந்தையுடன் வீடு திரும்பி, பின்னர் தூய, புதிய உலகின் அதிபதிகள் ஆகுவதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்.
2. ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, நீங்கள் பலருக்கும் சேவை செய்ய வேண்டும்; பலருக்கும்; கற்பிக்க வேண்டும். தூதுவர்களாகி, இந்தச் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் “என்னுடையது” எனும் உணர்வின் சூட்சும ரூபம் எதனையும் துறப்பதனால், சதா பயமற்றவராகவும், கவலையற்ற சக்கரவர்த்தியாகவும் ஆகுவீர்களாக.இன்றைய உலகில், செல்வமும், அத்துடன் பயமும் உள்ளன. அவர்களிடம் எந்தளவிற்கு அதிகமாகச் செல்வம் உள்ளதோ, அந்தளவிற்கு அதிகமாக அவர்கள் பயத்துடன் உண்டு உறங்குகின்றார்கள். “என்னுடைய” எனும் உணர்வு இருக்குமிடத்தில், நிச்சயமாகப் பயம் இருக்கும். தங்க மான் என்னிடம் இருந்தாலும், பயம் இருக்கின்றது. எவ்வாறாயினும், நீங்கள் “என்னுடையவர் ஒரேயொரு சிவபாபாவே”, என்று கூறினால், பயமற்றவர் ஆகுவீர்கள். எனவே, இந்த “என்னுடையது, என்னுடையது” என்பதைச் சூட்சும ரூபததில் சோதித்து, அதனைத் துறவுங்கள், அப்பொழுது நீங்கள் பயமற்றவராக இருப்பதற்கும், கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பதற்குமான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.
சுலோகம்:
ஏனையோரின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பைக் கொடுங்கள், நீங்கள் இயல்பாகவே மரியாதையைப் பெறுவீர்கள்.