29.01.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையின் ஸ்ரீமத் உங்களுக்கு 21 சந்ததிகளுக்கான சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. தந்தையைத் தவிர வேறு எவராலும் அத்தகைய தனித்துவமான அறிவுறுத்தல்களைக் கொடுக்க முடியாது. நீங்கள் தொடர்ந்தும் அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும்.
கேள்வி:
இராச்சிய திலகத்தை உங்களுக்கு நீங்களே இட்டுக்கொள்வதற்கான இலகுவான வழி என்ன?
பதில்:
1) இராச்சிய திலகத்தை உங்களுக்கு நீங்களே இட்டுக்கொள்வதற்கு, தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்கள் அனைத்தையும் தொடர்ந்தும் முழுமையாகப் பின்பற்றுங்கள். இதில் ஆசீர்வாதங்கள் அல்லது கருணை என்ற கேள்விக்கே இடமில்லை. 2) தந்தையைப் பின்பற்றுங்கள், மற்றவர்களைப் பார்க்காதீர்கள், “மன்மனாபவ” ஆகுங்கள். இவ்வாறு செய்வதனால், நீங்கள் இயல்பாகவே உங்களுடைய திலகத்தைப் பெறுகிறீர்கள். இந்த ஞானத்தைக் கற்பதனாலும், நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதனாலும், நீங்கள் பிச்சைக்காரர்களிலிருந்து இளவரசர்களாக மாறுகிறீர்கள்.
பாடல்:
ஓம் நமசிவாய
ஓம் சாந்தி.
பாப்பும், தாதாவும் “ஓம் சாந்தி” எனக் கூறும்பொழுது, அவர்கள் அதனை இருமுறையும் கூறலாம். ஏனெனில் தனித்தனியான இருவர் ஒருவரில் உள்ளனர்; ஒருவர் சரீரதாரி, மற்றவர் அசரீரியானவர். அவர்கள் ஒருமித்தோ அல்லது ஒவ்வொருவரும் தனித்தனியாகவோ கூறலாம். இது ஓர் அற்புதமாகும். பரமாத்மாவாகிய பரமதந்தை இவரின் சரீரத்தில் இருந்து ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பது உலகிலுள்ள எவருக்குமே தெரியாது. இது எங்கும் எழுதப்படவில்லை. ஒரு சக்கரத்திற்கு முன்பு பாபா கூறியதைப் போன்று இப்பொழுதும் அவர் கூறுகின்றார்: நான் இவரின் சாதாரண சரீரத்தில் இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவிக் காலத்தில் பிரவேசிக்கின்றேன். நான் இந்தச் சரீரத்தின் ஆதாரத்தை எடுக்கின்றேன். கீதையில் உள்ள சில வார்த்தைகள் நிஜமானவை. “நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவிக் காலத்தில் இவர் ஓய்வுபெறும் வயதில் இருக்கும்பொழுது, பிரவேசிக்கின்றேன்” என்ற வார்த்தைகள் உண்மையானவை. இவரைப் பொறுத்தவரை இவ்வாறு கூறுவது மிகச்சரியானது. சத்திய யுகத்தில் முதற் பிறவி எடுப்பவரும் இவரே. இறுதியில் இவர் ஓய்வுபெறும் ஸ்திதியில் இருக்கும்பொழுது தந்தை இவரில் பிரவேசிக்கிறார். ஆகையால் இவர் எத்தனை மறுபிறவிகள் எடுத்துள்ளார் என்பது இவருக்குத் தெரியாது என இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சமயநூல்களில் “8.4 மில்லியன் மறுபிறவிகள்” பற்றி அவர்கள் எழுதியுள்ளனர். அவை யாவும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அது பக்தியின் மரபு என அழைக்கப்படுகிறது. ஞான மார்க்கத்தில் செய்துள்ளவை பக்தி மார்க்கத்தில்; செய்துள்ளவற்றில் இருந்து வேறானவை. பக்தர்கள் பக்தி செய்து வருகையில் தொடர்ந்தும் கீழிறங்குகின்றார்கள். நீங்கள் இந்த ஞானத்தை ஒரு முறை மாத்திரமே பெறுகின்றீர்கள். அனைவருக்கும் சற்கதி வழங்குவதற்காகத் தந்தை இந்த ஒரு யுகத்தில் மாத்திரமே வருகின்றார். இந்நேரத்தில் மாத்திரமே தந்தை உங்கள் அனைவரையும் உங்களது எதிர்கால வெகுமதியை உருவாக்கச் செய்வதற்கு வருகின்றார். எதிர்கால புதிய உலகிற்குச் செல்வதற்காகவே இப்பொழுது நீங்கள் கற்கின்றீர்கள். உங்கள் புதிய இராச்சியத்தை உருவாக்குவதற்காகவே தந்தை வருகின்றார். இதனாலேயே இது இராஜயோகம் என அழைக்கப்படுகிறது. ஆதலால், இந்த இராஜயோகம் மிக முக்கியமானது எனக் கருதப்படுகின்றது. மக்கள் பாரதத்தின் இந்த புராதன இராஜயோகத்தைக் கற்க விரும்புகின்றார்கள். இக்காலத்தில் சந்நியாசிகள் வெளிநாடுகளுக்குச் சென்று, புராதன இராஜயோகத்தையே கற்பிக்க வந்துள்ளதாக உரிமை கோருகின்றார்கள். வைகுந்தம் யோகத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றது என அங்கே மக்கள் நம்புவதால், அதனைக் கற்க வேண்டும் என உணர்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்த யோகசக்தியின் மூலமே நீங்கள் வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். தந்தை வைகுந்தத்தை ஸ்தாபிக்கின்றார். ஆனால் அவர் எவ்வாறு அதனை உருவாக்கினார் என்பது எவருக்குமே தெரியாது. ஆன்மீகத் தந்தை மாத்திரமே இந்த இராஜயோகம் கற்பிக்கின்றார். இதனைச் சரீரதாரிகளான மனிதர்களால் கற்பிக்க முடியாது. இந்நாட்களில் கலப்படமும், சீரழிவும் காணப்படுகின்றன. இதனாலேயே தந்தை கூறுகிறார்: தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவர் நானே. ஆகவே நிச்சயமாக ஆத்மாக்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குகின்ற எவராவது இருக்க வேண்டும். இப்பொழுது இது சரியா அல்லது பிழையா என நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நானே வந்து அனைத்து வேதங்களினதும் சமயநூல்களினதும் சாராம்சத்தைக் கொடுக்கின்றேன். இந்த ஞானத்தைக் கற்பதன் மூலம், நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில், தற்காலிகமான கணநேரச் சந்தோஷமே உள்ளது. இங்கே தந்தை 21 சந்ததிகளுக்கு நீடித்திருக்கும் சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். சற்கதியைப் பெறுவதற்காகத் தந்தை கொடுக்கும் ஸ்ரீமத் மிகவும் தனித்துவமானது. தந்தை ஒருவரே அனைவரின் இதயங்களையும் வெல்பவர். அது உயிரற்ற தில்வாலா ஆலயம், ஆனால் இதுவோ உயிருள்ள தில்வாலா ஆலயமாகும். அந்த உருவங்களில் உள்ள உங்கள் செயற்பாடுகள் மிகச்சரியானவை. இந்நேரத்திலேயே அவர்கள் சித்தரித்துள்ள உங்கள் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உங்கள் இதயத்தை வென்றவரும், அனைவருக்கும் சற்;கதியை அளிப்பவரும், உங்கள் துன்பத்தை அகற்றி, உங்களுக்குச் சந்தோஷத்தை அருள்பவருமாகிய தந்தையை நீங்கள் கண்டுகொண்டீர்கள். அவர் அதிமேன்மையானவராக நினைவுசெய்யப்படுகின்றார். கடவுள் சிவனே அனைவரிலும் அதிமேன்மையானவராகப் போற்றப்படுகின்றார். சிவனின் நீள்கோளவடிவான உருவம் சங்கரர் போன்றவர்களின் முன்னால் இருப்பது வேறு எங்கும் இல்லை. தேவர்கள் பக்தி செய்யாததால் சிவனின் உருவம் தேவர்களுக்கு முன் வைப்பது உண்மையில் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவர்களோ அல்லது சந்நியாசிகளோ பக்தி செய்பவர்கள் அல்ல. அவர்களிடம் பிரம்ம தத்துவத்தின் ஞானம் மாத்திரமே இருந்தது. ஆகாயம் ஒரு தத்துவம் என்பது போன்றே பிரம்ம தத்துவமும் ஓர் ஒளித் தத்துவமேயாகும். அவர்கள் தந்தையை நினைவுசெய்வதோ, அல்லது அவரிடமிருந்து மகாமந்திரத்தைப் பெறுவதோ இல்லை. தந்தை மாத்திரமே இந்தச் சங்கமயுகத்தில் வந்து உங்களுக்கு இந்த மகா மந்திரத்தைக் கொடுக்கின்றார். அனைவருக்கும் சற்கதி அருளும் தந்தை இந்த ஒரு யுகத்தில் மாத்திரமே வந்து, “மன்மனாபவ” எனும் மந்திரத்தைக் கொடுக்கின்றார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, உங்கள் சொந்தச் சரீர உணர்வுகள் உட்பட அனைத்துச் சரீர சமயங்களையும் துறந்து, உங்களை சரீரமற்ற ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். இதனை அவர் மிக இலகுவான முறையில் விளங்கப்படுத்துகின்றார். இது இராவண இராச்சியமாகையால் நீங்கள் அனைவரும் சரீர உணர்வுடையவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது தந்தை உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்வதால், தற்பொழுது உங்களில் கலந்திருக்கும் கலப்படத்தை அகற்ற முடியும். நீங்கள் உங்கள் சதோபிரதான் ஸ்திதியில் இருந்து இறங்கி, உங்கள் சதோ ஸ்திதிக்கு வந்ததும் உங்கள் சுவர்க்கக் கலைகளும் குறைவடைந்தன. தங்கத்தின் தூய்மை அதில் எவ்வளவு கரட் இருக்கிறது என்பதனால் குறிப்பிடப்படுகின்றது. இப்பொழுது கலியுக இறுதியில் இங்கே தங்கம் காணப்படுவதில்லை. சத்தியயுகத்தில் தங்கத்தினால் கட்டப்பட்ட மாளிகைகள் இருக்கும். அதன் வித்தியாசம் பகலும் இரவும் போன்றது. அது சத்தியயுக உலகம் என அழைக்கப்படுகிறது. அதனால் அங்கு செங்கட்டிகளும் கற்களும் தேவைப்படுவதில்லை. அங்கு கட்டப்படும் கட்டடங்களுக்குத் தங்கமும் வெள்ளியுமே பயன்படுத்தப்படுகின்றன அன்றி, குப்பைகள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கு அவர்களுக்கு விஞ்ஞானத்தினால் பெருமளவு சந்தோஷம் இருக்கின்றது. இதுவும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் மக்கள் விஞ்ஞானத்தின் அகங்காரத்தைக் கொண்டிருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் விஞ்ஞானத்தின் அகங்காரம் இருப்பதில்லை. நீங்கள் அங்கு இருக்கும்பொழுது, உங்களுக்கு விஞ்ஞானத்தினால் சந்தோஷம் மாத்திரமே கிடைக்கும். இங்கே, சந்தோஷம் தற்காலிகமானதுடன், இப்பொழுது விஞ்ஞானத்தினால் பெருமளவு துன்பமும் இருக்கின்றது. விநாசத்துக்காகக் குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் மற்றவர்களுக்கு அந்தக் குண்டுகளைத் தயாரிக்க வேண்டாம் எனக் கூறினாலும், தாங்கள் இன்னும் தொடர்ந்தும் அவற்றைத் தயாரிக்கின்றார்கள். அவர்கள் அந்தக் குண்டுகளினாலேயே மரணிப்பார்கள் எனத் தெரிந்திருந்தும், தொடர்ந்தும் அவற்றைத் தயாரிக்கின்றார்கள். ஆகவே அவர்களது புத்தி ஏற்கனவே மரணித்து விட்டது. இவை அனைத்தும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் செய்வதை அவர்களால் நிறுத்த முடியாது. அவர்கள் அனைவரும் அந்தக் குண்டுகளினால் மரணிப்பார்கள் என்பதை அறிந்திருந்தாலும், அவற்றைத் தயாரிப்பதற்கு யார் தூண்டுகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்களால் அவற்றைத் தயாரிப்பதை நிறுத்த முடியாது; அந்தக் குண்டுகள் நிச்சயமாகத் தயாரிக்கப்பட வேண்டும். விநாசமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு அதிகளவு அமைதிக்கான பரிசில்களைப் கொடுத்தாலும், ஒரேயொரு தந்தையே அமைதியை உருவாக்குபவர்;. அவரே அமைதிக் கடல். அவர் ஒருவரே உங்கள் ஆஸ்தியான அமைதி, சந்தோஷம், அத்துடன் தூய்மையையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தில் எல்லையற்ற செல்வமுள்ளது. அங்கே பாலாறுகள் ஓடுகின்றன. விஷ்ணு பாற்கடலில் மிதப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அந்தப் படம் பாற்கடலுக்கும் இந்த நச்சுக்கடலுக்கும் உள்ள பாரிய வித்தியாசத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே வரையப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் குளங்கள் போன்றவற்றை உருவாக்கி, அங்கு ஓர் கற்பீடத்தில் விஷ்ணுவின் சிலையை வைக்கிறார்கள். பக்தியில் அவர்கள் அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றார்கள். அது பெருமளவு நேரத்தையும், பணத்தையும் வீணாக்குவதாகும். அவர்கள் தேவியரின் சிலைகளை உருவாக்குவதற்கு அதிகளவு செலவு செய்கின்றார்கள். பின்னர் அவர்கள் அவற்றைக் கடலில் மூழ்கடிக்கிறார்கள். ஆகவே அந்தப் பணம் வீணாக்கப்படுகின்றது. இது பொம்மைகளின் வழிபாடேயாகும். வழிபாடு செய்பவர்கள் எவருமே தாங்கள் வழிபடுபவர்களின் தொழில்களை அறிந்திருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் எவருடைய ஆலயங்களுக்குச் சென்றாலும், அவர்களின் தொழிலை அறிந்துள்ளீர்கள். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை; குழந்தைகளாகிய நீங்;கள் எங்கு செல்வதற்கும் தடை செய்யப்படுவதில்லை. முன்னர் நீங்கள் எதனையும் புரிந்துகொள்ளாமல் சென்றீர்கள். இப்பொழுது நீங்கள் விவேகம் உடையவர்களாகிச் செல்கின்றீர்கள். அவர்களுடைய 84 பிறவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என நீங்கள் கூறுகிறீர்கள். பாரத மக்கள் கிருஷ்ணரின் பிறப்பைப் பற்றியேனும் அறிந்திருக்கவில்லை. இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. இந்த ஞானம் உங்கள் வருமானத்தின் மூலாதாரமாகும். வேதங்களையும் சமயநூல்கள் போன்றவற்றையும் கற்பதில் எந்தவித இலக்கோ, இலட்சியமோ இருப்பதில்லை. ஒரு பாடசாலையில் எதனையாவது கற்கும்பொழுது, எப்பொழுதும் ஏதாவது இலக்கும் இலட்சியமும் இருக்கும். நீங்கள் இக்கல்வியினால் பெரும் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். இந்த ஞானத்தைக் கற்பதனால் நீங்கள் சற்கதியைப் பெறுவதுடன், பெரும் செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள். எந்த ஆலயத்துக்கு நீங்கள் சென்றாலும் அங்கு யாருடைய நினைவுச் சின்னமிருக்கின்றது என்பதை உங்களால் மிக விரைவில் புரிந்துகொள்ள முடியும். அந்தத் தில்வாலா ஆலயம் உயிரற்றவர்களினதும், ஆனால் இதுவோ உயிருள்ளவர்களினதும் ஆகும். விருட்சப் படத்தில் இங்கு நீங்கள் சித்தரித்திருக்கப்பட்டிருப்பதைப் போன்று அந்த ஆலயமும் நீங்கள் தபஸ்யாவில் கீழே அமர்ந்திருப்பதுடன், மேலே கூரையில் முழுச் சுவர்க்கமும் காட்டப்பட்டுள்ளதைச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை உருவாக்குவதற்குப் பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளது. இங்கே உங்களுக்கு எவ்விதமான செலவும் இல்லை. பாரதம் 100மூ செழிப்பாகவும், தூயதாகவும் இருந்தது. இப்பொழுது பாரதம் 100மூ கடனாளியாகவும் தூய்மையற்றதாகவும் ஆகிவிட்டது. அனைவரும் காம விகாரத்தின் மூலமே பிறப்பெடுக்கின்றார்கள். அங்கே அசுத்தம் என்ற கேள்வியே இல்லை. கருட புராணத்தில் மக்கள் தங்கள் நடத்தையை மாற்றுவதற்காகப் பல பயங்கரமான கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அந்நேரத்தில் மக்கள் மாறுவார்கள் என நாடகத்தில் இல்லை. கடவுளின் படைப்புக்கள் இப்பொழுது இடம்பெறுகின்றன. கடவுள் ஒருவரே சுவர்க்கத்தை உருவாக்குகின்றார். அவரே தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என அழைக்கப்படுகின்றார். மற்றைய போர்வீரர்கள் தங்கள் ஆட்சியாளருக்காகப் போராடுகிறார்கள். ஆனால் போர்வீரர்களான நீங்கள் இப்பொழுது உங்கள் சொந்த நன்மைக்காக மாயையை வெற்றி கொள்கிறீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் அதிகளவு செய்தால் அதிகளவு பெறுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுவதற்கு உங்கள் மனம், சரீரம், செல்வத்தை உபயோகிக்க வேண்டும். நீங்கள் அதிகளவு செய்யுமபொழுது, உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். இங்கே எதுவும் எஞ்சியிருக்கப் போவதில்லை. சக்கரத்தின் இந்நேரத்தில், “சிலரின் செல்வம் புதைக்கப்பட்டிருக்கும்” என்ற கூற்று நினைவு கூரப்படுகின்றது. தந்தை இப்பொழுது வந்து, உங்கள் இராச்சிய பாக்கியத்தை நீங்கள் பெறுவதற்கு உதவுகின்றார். அவர் கூறுகிறார்: இப்பொழுது உங்களிடமுள்ள உங்கள் மனம், சரீரம், செல்வம் அனைத்தையும் இதற்காக உபயோகியுங்கள். இந்த பிரம்மா தன்னிடமிருந்த அனைத்தையும் அர்ப்பணித்தார். அவர் ஒரு மகாதானி என அழைக்கப்பட்டார். அநாதியான செல்வத்தைக் கொடுத்ததுடன், அவர் தனது அழியும் செல்வத்தையும் தானம் செய்தார். ஒவ்வொருவரும் உங்கள் தெரிவுக்கேற்ப போதியளவு கொடுக்கலாம். பிரபல்யமான தானிகள், பெரும் கொடையாளிகள் எனவும் அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு பெயரை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் மறைமுகமாகக் கடவுளின் பெயரில் கொடுத்தாலும், அவர்களின் இராச்சியம் உருவாக்கப்படுவதில்லை. உங்களுடைய இராச்சியமே இப்பொழுது உருவாக்கப்படுகிறது. ஆகவே நீங்கள் முழுமையான கொடையாளிகள் ஆகவேண்டும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் தங்களையே தாங்கள் அர்ப்பணிப்பார்கள் எனக் கூறுகின்றார்கள். இங்கே எவ்விதச் செலவும் இருப்பதில்லை. அந்த அரசாங்கம் அதிகளவு செலவு செய்ய வேண்டும். நீங்கள் என்னென்ன இங்கு செய்கின்றீர்களே. அவற்றை நீங்கள் உங்களுக்காகவே செய்கின்றீர்கள். நீங்கள் மாலையில் எட்டாகவோ, மாலையில் நூற்றியெட்டாகவோ, அல்லது மாலையில் பதினாறாயிரத்து நூற்றியெட்டாகவோ வருவது உங்களிலேயே தங்கியுள்ளது. நீங்கள் திறமைச்சித்தி எய்த வேண்டும். நீங்கள் தண்டனையை அனுபவம் செய்யாது, கர்மாதீத நிலையை அடையும் வகையில், அத்தகைய வருமானத்தை யோகத்தின் மூலம் சம்பாதிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் போர்வீரர்கள். உங்கள் யுத்தம் இராவணனுடனாகும். மனிதர்களுடன் அல்ல. தோல்வியடைந்தவர்கள் 2 கலைகள் குறைவாக இருக்கின்றனர். திரேதா யுகம் 2 கலைகள் குறைந்த சுவர்க்கம் என அறியப்பட்டுள்ளது. தந்தையை முழுமையாகப் பின்பற்றுவதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். எவ்வாறாயினும், இதற்கு நீங்கள் மனதினாலும் புத்தியினாலும் அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். “பாபா இவை அனைத்தும் உங்களுடையவை” என நீங்கள் கூறுவீர்கள். அப்பொழுது தந்தை பதிலளிப்பார்: அதனைச் சேவைக்குப் பயன்படுத்துங்கள். உங்கள் பணியை நான் உங்களுக்குக் கொடுக்கும் அறிவுறுத்தல்களுக்கேற்ப செய்யுங்கள். அனைவரும் நன்மையடைவதற்காக ஒரு பல்கலைக்கழகத்தைத் திறவுங்கள், நிலையங்களையும் திறவுங்கள். இந்தச் செய்தியைக் கொடுங்கள்.: தந்தையை நினைவுசெய்து உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள்;;. குழந்தைகளாகிய நீங்கள் தூதுவர்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். ஆகவே அனைவருக்கும் இந்தச் செய்தியைக் கொடுங்கள். தந்தை பிரம்மாவின் மூலம் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் ஜீவன்முக்தி அடைவீர்கள். இப்பொழுது உங்களுக்குப் பந்தன வாழ்க்கையே உள்ளது. ஆனால் பின்னர் நீங்கள் விடுதலை பெற்ற வாழ்க்கையைக் கொண்டிருப்பீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் பாரதத்தில் மாத்திரமே வருகின்றேன். இந்த நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அது எப்பொழுது உருவாக்கப்பட்டது, எப்பொழுது முடிவடையும் என்ற கேள்வி எழ முடியாது. இந்த நாடகம் அநாதியாகத் தொடர்கிறது. ஆத்மாக்கள் சின்னஞ்சிறிய புள்ளிகள் என்பதுடன், ஒவ்வொருவரும் அநாதியாக நிச்சயிக்கப்பட்ட பாகத்தைத் தம்முள் கொண்டுள்ளார்கள். இவை மிகவும் ஆழமான விடயங்கள். ஒவ்வோர் ஆத்மாவும் நட்சத்திரம் போன்ற சின்னஞ்சிறிய புள்ளி. தாய்மார் தங்கள் நெற்றியில் திலகம் (புள்ளி) இடுகிறார்கள். இப்பொழுது முயற்சி செய்வதன் மூலம், குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இராச்சிய திலகத்தை உங்களுக்கு நீங்களே இடுக்கிறீர்கள். நீங்கள் தந்தையின் கற்பித்தல்களை மிகச்சரியாகப் பின்பற்றினால், நீங்களே உங்களுக்கு இராச்சிய திலகத்தைக் இடுகிறீர்கள். இதில் எவ்வித கருணை அல்லது விசேட ஆசீர்வாதங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் உங்களுக்கு இராச்சிய திலகத்தை இடவேண்டும். அந்தத் திலகம் இந்த ஆதியான இராச்சிய திலகத்தைக் குறிக்கிறது. இப்பொழுது நீங்கள் அந்தளவிற்கு முயற்சி செய்வதுடன் தந்தையையும் பின்பற்ற வேண்டும். நீங்கள் மற்றவர்களைப் பார்க்கக்கூடாது. இதுவே “மன்மனாபவ” ஆகுவது என்பதாகும். இதன் மூலம் இயல்பாகவே நீங்கள் உங்கள் திலகத்தைப் பெறுவீர்கள். தந்தை இதனை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். நீங்கள் பிச்சைக்காரரில் இருந்து இளவரசராக மாறுகின்ற இந்தக் கல்வி இராஜயோகம் ஆகும். ஆகவே நீங்கள் அதற்கேற்றவாறு மிக நல்ல முயற்சி செய்வதுடன், இவரையும் பின்பற்ற வேண்டும். இந்த விடயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இக்கல்வி மூலம் நீங்கள் ஒரு வருமானத்தை ஈட்டிக்கொள்கிறீர்கள். நீங்கள் அதிகளவு யோகம் செய்தால் அதிகளவு ஞானத்தைக் கிரகிப்பீர்கள். யோகத்திற்கே முயற்சி தேவைப்படுகிறது. இதனாலேயே பாரதத்தின் இராஜயோகம் நினைவுகூரப்படுகிறது. எவ்வாறாயினும், உங்கள் வாழ்நாள் முழுவதையும் கங்கை போன்றவற்றில் நீராடுவதில் செலவழித்தாலும், உங்களால் தூய்மையாக முடியாது. பக்தி மார்க்கத்தில் மக்கள் கடவுளின் பெயரால் ஏழைகளுக்குக் கொடுக்கின்றார்கள். கடவுளே இங்கே வந்து ஏழைகளுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றார். அவர் ஏழைகளின் அதிபதியாவார். 100மூ செழிப்பாக இருந்த பாரதம் இப்பொழுது 100மூ கடனாளியாகி விட்டது. ஏழைகளுக்கே எப்பொழுதும் தானங்களும் கொடுக்கப்படுகின்றன. தந்தை உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். எனினும் நீங்கள் அத்தகைய தந்தையை அவதூறு செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இவ்வாறு என்னை அவதூறு செய்யும்பொழுது நான் வரவேண்டும். அதுவும்கூட நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர் உங்கள் தந்தையும், உங்கள் ஆசிரியரும் ஆவார். அமரத்துவமான சற்குருவைப் பற்றி சீக்கியர்கள் பேசுகிறார்கள். ஆனால் பக்தி மார்க்கத்தில் பல குருமார் உள்ளனர். இந்தச் சிம்மாசனம்; அமரத்துவமானவருக்கு உரியது. அவரும் குழந்தைகளாகிய உங்களின் சிம்மாசனங்களையும் உபயோகிக்கின்றார். அவர் கூறுகின்றார்: அனைவருக்கும் நன்மையளிப்பதற்காகவே நான் இவரின் சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். இது இந்நேரத்திற்குரிய இவரின் பாகமாகும். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். புதிய நபரால் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அநாதியான ஞானச் செல்வத்தைத் தானம் செய்வதனால், நீங்கள் மகாதானிகள் ஆகவேண்டும். தந்தை பிரம்மா தன்னிடம் இருந்த அனைத்தையும் சேவைக்காகப் பயன்படுத்தியதைப் போன்று, தந்தையைப் பின்பற்றி அந்த இராச்சியத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருங்கள்.
2. தண்டனையில் இருந்து விடுபடுவதற்கு, யோகத்தின் மூலம் உங்கள் கர்மாதீத நிலையை அடையக்கூடியதாக அத்தகைய வருமானத்தைச் சம்பாதியுங்கள். திறமைச் சித்தியடைவதற்கு முழு முயற்சி செய்வதுடன், மற்றவர்களைப் பார்க்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய பூஜிக்கத் தகுதிவாய்ந்த ரூபத்தின் விழிப்புணர்வு மூலம் சகல ஆத்மாக்களையும் சக்திவாய்ந்தவர்கள் ஆக்குகின்ற, ஓர் ஆதார சொரூபமாகவும், ஈடேற்றும் சொரூபமாகவும் ஆவீர்களாக.
தேவர்கள் ஆகவுள்ள பிராமணர்களாகிய நீங்களே இந்தக் கல்ப விருட்சத்தின் பிரதான அடிமரமும், அனைவரினதும் மூதாதையர்களும் ஆவீர்கள். ஆதார சொரூபங்களாகவும், ஈடேற்றும் சொரூபங்களாகவும் உள்ள மூதாதையர் ஆத்மாக்களாகிய நீங்களே ஒவ்வொரு செயலினதும் அத்திவாரமும், குலத்தின் மரியாதைக் கோட்பாடுகளின் அத்திவாரமும், சம்பிரதாயங்களின் அத்திவாரமும் ஆவீர்கள். அடிமரமான, உங்களினூடாகவே சகல ஆத்மாக்களும் மேன்மையான எண்ணங்களுக்கும், அனைத்துச் சக்திகளுக்குமான சக்தியைப் பெறுகின்றார்கள். அனைவரும் உங்களைப் பின்பற்றுகின்றார்கள், இதனாலேயே உங்களை அத்தகைய பெரும் பொறுப்புக்குப் பொறுப்பானவர்களாகக் கருதியவாறு ஒவ்வோர் எண்ணத்தையும் உருவாக்குவதுடன், ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும். ஏனெனில் நேரமும், உலகின் நிலையும் மூதாதை ஆத்மாக்களாகிய உங்களிலேயே தங்கியுள்ளது.
சுலோகம்:
எங்கும் சகல சக்திகளினதும் கதிர்களைப் பரப்புபவர்களே மாஸ்டர் ஞான சூரியன்கள்.
இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேட வீட்டுவேலை
அவ்வப்பொழுது உங்கள் எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்துவதைப் பயிற்சி செய்யுங்கள். ஒரு நிமிடத்திற்கு, உங்கள் எண்ணங்களையும், அத்துடன் சரீரத்தின் மூலமாகச் செய்யப்படும் செயல்களையும் நிறுத்தி, புள்ளி ரூபத்திற்கு வருவதைப் பயிற்சி செய்யுங்கள். இந்த ஒரு விநாடி பயிற்சியானது நாள் முழுவதும் அவ்யக்த ஸ்திதியை உருவாக்குவதற்கு உங்களுக்கு உதவி புரியும்.