29.02.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எதிரியாகிய மாயை உங்கள் முன்னால் இருக்கிறாள். எனவே, உங்களை நன்றாகக் கவனித்துன் னொள்ளுங்கள்.. முன்னேறும் போது, நீங்கள் மாயையில் அகப்பட்டுக் கொண்டால், உங்களுடைய பாக்கிய ரேகையை நீங்கள் துண்டித்து விடுவீர்கள்.கேள்வி:
இராஜயோகிக் குழந்தைகளாகிய உங்களின் பிரதானமான பணி என்ன?பதில்:
கற்பதும் மற்றவர்களுக்குக் கற்பிப்பதுமே உங்களுடைய பிரதானமான பணியாகும். நீங்கள் இறை வழிகாட்டல்களின் கீழ் இருக்கிறீர்கள். நீங்கள் காட்டிற்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டில் உங்களுடைய குடும்பத்துடன் வசிக்கும் போது, மௌனமாக இருந்து தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களுடைய முழுக் கல்வியும் அல்பா, பீற்றா என்ற இரு வார்த்தைகளில் அடங்கியுள்ளது.ஓம் சாந்தி.
தந்தை பிரம்மாவினூடாகவும் ‘குழந்தைகளே, காலை வணக்கம்’ எனக் கூற முடியும். எவ்வாறாயினும், குழந்தைகளே, நீங்களும் பதில் அளிக்க வேண்டும். இங்கு, தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையே தொடர்பு உண்டு. புதியவர்கள் பலமானவர்கள் ஆகும் வரை, அவர்கள் எதைப் பற்றியாவது தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இது ஒரு கல்வியாகும். ‘கடவுள் பேசுகிறார்’ என எழுதப்பட்டுள்ளது. கடவுள் அசரீரியானவர். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக இந்த பாபாவும் இதனை மிகவும் உறுதியானதாக்குகிறார். ஏனெனில், வெளியே மாயையின் சக்தி உள்ளது. இங்கு, அவ்வாறு இல்லை. ஒரு கல்பத்தின் முன்னர் தமது ஆஸ்தியை கோரிக் கொண்டவர்கள் இயல்பாகவே வருவார்கள் என்பதைத் தந்தை புரிந்து கொள்கிறார். இன்ன இன்னார் விட்டுச் சென்றுவிடக் கூடாது, அல்லது குறிப்பிட்ட நபரை நீங்கள் பிடித்து வைத்திருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கக்கூடாது. அவர் சென்றால், செல்லட்டும்! இங்கு, இது மரணித்து வாழ்வதற்குரிய விடயமாகும். தந்தை உங்களைத் தத்தெடுத்துள்ளார். ஆஸ்தியை வழங்குவதற்காகத் தத்தெடுப்பது நிச்சயமாக இடம்பெறுகிறது. குழந்தைகளும் ஆஸ்தியின் ஆசையால் பெற்றோரிடம் வருகிறார்கள். செல்வந்தர் ஒருவரின் குழந்தை, ஏழை ஒருவரால் எப்போதாவது தத்தெடுக்கப்படுவாரா? எவ்வாறு அவர் அந்தச் செல்வம், சொத்து போன்றவற்றை விட்டுச் செல்வார்? செல்வந்தர்களே யாரையாவது தத்தெடுக்கின்றனர். இப்போது, பாபா எமக்குச் சுவர்க்க இராச்சியத்தை வழங்குகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் ஏன் அவருக்கு உரியவர்கள் ஆகக்கூடாது? அனைத்திலும் ஆசை ஏற்படுகிறது. ஒருவர் எந்தளவிற்குக் கற்;கிறாரோ, அந்தளவுவிற்கு ஆசை இருக்கும். உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியை வழங்குவதற்காகவே தந்தை உங்களைத் தத்தெடுத்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போன்று, மீண்டும் உங்கள் அனைவரையும் தத்தெடுக்கிறேன். நீங்களும் இவ்வாறு கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களுடையவன். 5000 வருடங்களுக்கு முன்னரும் நான் உங்களுடையவன் ஆகினேன். நடைமுறையில் பல பிரம்ம குமார்களும் குமாரிகளும் இருக்கிறீர்கள். பிரஜாபிதாவும் பிரபல்யமானவர். நீங்கள் சூத்திரரில் இருந்து பிராமணர் ஆகினால் அன்றி, உங்களால் தேவர்கள் ஆகமுடியாது. இந்தச் சக்கரம் தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் சுழல்கிறது. நாம் சூத்திரர்களாக இருந்தோம். நாம் இப்போது பிராமணர்கள் ஆகியுள்ளோம். நாம் மீண்டும் தேவர்கள் ஆகுவோம். நாம் சத்தியயுகத்தில் ஆட்சி செய்வோம். எனவே, இந்தப் பழைய உலகம் நிச்சயமாக அழியப் போகிறது. அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லாவிடின், அவர்கள் சென்றுவிடுவார்கள். விழுகின்ற பல பலவீனமான குழந்தைகள் இருக்கிறார்கள். இதுவும், நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எதிரியாகிய மாயை, உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறாள். அவள் உங்களை தன்னை நோக்கி இழுக்கிறாள். தந்தை மீண்டும் மீண்டும் இதனை உங்களிடம் உறுதிப்படுத்துகிறார்: மாயையிடம் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். இல்லாவிடின், நீங்கள் உங்களுடைய பாக்கியத்தை இரத்துச் செய்து விடுவீர்கள். நாம் முன்னர் சந்தித்துள்ளோமா? எனத் தந்தையால் மட்டுமே வினவ முடியும். வேறு எவருக்குமே இவ்வாறு கேட்பதற்கான விவேகம் இருக்காது. தந்தை கூறுகிறார்: நான் கீதையை மீண்டும் கூறுவதற்கு வர வேண்டும். நான் உங்களை இராவணனின் சிறையில் இருந்து விடுவிப்பதற்காகவும் வர வேண்டும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற விடயங்களை விளங்கப்படுத்துகிறார். இது இப்போது இராவணனின் இராச்சியம் ஆகும். இது அரைக்கல்பத்தின் முன்னர் ஆரம்பித்த தூய்மையற்ற இராச்சியம் ஆகும். இராவணன் பத்துத் தலைகளுடனும், விஷ்ணு நான்கு கரங்களுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அப்படி மனிதர்கள் யாரும் இல்லை. இந்த நான்கு கரங்களும் இல்லறப்பாதையையே குறிக்கிறது. இதுவே இலக்கும் குறிக்கோளும் ஆகும்: விஷ்ணுவின் மூலம் பராமரிப்பு. விஷ்ணுதாமம், கிருஷ்ணதாமம் என்றும் அழைக்கப்படுகிறது. கிருஷ்ணரை இரண்டு கரங்களுடன் மட்டுமே காட்ட முடியும். மனிதர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை ஒவ்வொன்றையும் விளங்கப்படுத்துகிறார். அவை அனைத்தும் பக்தி மார்;க்கத்திற்குரியவையாகும். நீங்கள் இப்போது இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவதாகும். இந்தக் கீதைப் பாடசாலை நிச்சயமாக ஜீவன்முக்தியை அடைவதற்காகும். பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகிறார்கள். இதுவே உருத்திரனின் ஞான யாகமாகும். சிவனும் உருத்திரன் என அழைக்கப்படுகிறார். இப்போது தந்தை வினவுகிறார்: இந்த ஞானயாகம் கிருஷ்ணருடையதா அல்லது சிவனுடையதா? சிவன் பரமாத்மா என அழைக்கப்படுகிறார். சங்கரர் தேவர் என அழைக்கப்படுகிறார். அவர்கள் சிவனையும் சங்கரரையும் இணைத்து விட்டார்கள். இப்போது, தந்தை கூறுகிறார்: நான் இவரில் பிரவேசித்துள்ளேன். குழந்தைகளாகிய நீங்களும் பாப்தாதா எனக் கூறுகிறீர்கள். அவர்கள், சிவசங்கரர் எனக் கூறுகிறார்கள். ஒரேயொருவரே ஞானக்கடல் ஆவார். பிரம்மா, ஞானத்தின் மூலம் விஷ்ணு ஆகுகிறார் என்று உங்களுக்கு இப்போது தெரியும்.. படமும் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் தொப்புளிலிருந்து பிரம்மா தோன்றினார். வேறு எவராலும் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பிரம்மா தனது கரத்தில் சமயநூல்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்போது சமயநூல்களின் சாரத்தை இங்கிருந்து பேசுவது, தந்தையா அல்லது பிரம்மாவா? இவரும் மாஸ்டர் ஞானக்கடல் ஆகுகிறார். எண்ணற்ற படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை மிகச்சரியானவை அல்ல. அவை யாவும் பக்தி மார்க்கத்திற்குரியவை.; எட்டு அல்லது பத்துக் கரங்களுடன் எந்த மனிதர்களும் இல்லை. அது இல்லறப் பாதையையே குறிக்கின்றது. இராவணனின் அர்த்தமும் காட்டப்பட்டுள்ளது. அரைக்கல்பத்திற்கு, இது இராவணனின் இராச்சியமாக, இரவு ஆக இருக்கிறது. அரைக்கல்பத்திற்கு, இது இராமரின் இராச்சியமாக, பகலாக இருக்கிறது. தந்தை ஒவ்வொரு விடயத்தையும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். தந்தை பிரம்மா மூலம் விஷ்ணுதாமத்தை உருவாக்குவதுடன், அவர் உங்களுக்கு இராஜயோகத்தையும் கற்பிக்கிறார். அவர் நிச்சயமாக சங்கமயுகத்தில் மட்டுமே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பார். துவாபர யுகத்தில் கீதை கூறப்பட்டதெனச் சொல்வது தவறாகும். தந்தை சத்தியத்தையே பேசுகிறார். பலர் பிரம்மாவின் அல்லது கிருஷ்ணரின் காட்சிகளைக் கண்டுள்ளார்கள். அவர்கள் பிரம்மாவை வெள்ளை ஆடையில் கண்டுள்ளார்கள். சிவபாபா ஒரு புள்ளி ஆவார். அவர்கள் புள்ளியின் காட்சியைக் கண்டாலும், அவர்களால் எதனையும் புரிந்துகொள்ள முடியாது. நான் ஓர் ஆத்மா என்று நீங்கள் கூறுகிறீர்கள். அவ்வாறாயின், அந்த ஆத்மாவைக் கண்டவர் யார்? யாவருமே இல்லை. அதுவும் ஒரு புள்ளியே ஆகும். உங்களால் புரிந்துகொள்ள முடியும், அல்லவா? யாராவது, பக்தி உணர்வுகளுடன் எவரை வழிபடுகிறார்களோ, அவர்கள் அவரின் தரிசனத்தை மட்டுமே காண்பார்கள். அவர்கள் வேறு எந்த வடிவத்தைக் கண்டாலும், குழப்பம் அடைவார்கள். ஒருவர் அனுமானை வழிபட்டால், அவர் அவரை மட்டுமே காண்பார். கணபதியை வழிபடுபவர், கணபதியை மட்டுமே பார்ப்பார். தந்தை கூறுகிறார்: நான் உங்களை மிகுந்த செல்வந்தர்கள் ஆக்கினேன். அங்கு வைரங்களும் பெறுமதிமிக்க இரத்தினங்களும் பதித்த மாளிகைகள் இருந்தன. நீங்கள் எண்ணற்ற செல்வத்தைக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் அவை அனைத்தையும் எங்கு தொலைத்தீர்கள்? நீங்கள் இப்போது சீரழிந்தவர்கள் ஆகியிருப்பதனால், நீங்கள் தானம் வேண்டி பிச்சையெடுக்கின்றீர்கள். தந்தையால் இவை அனைத்தையும் உங்களுக்குக் கூற முடியும். இப்போது தந்தை வந்திருப்பதனால், நாம் மீண்டும் உலக அதிபதிகள் ஆகுகிறோம் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த அநாதியான நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் நாடகத்தில் தனது பாகத்தை நடிக்கிறார். ஒருவர் தனது சரீரத்தை விடுத்து இன்னொன்றை எடுத்தால், அதில் அழ வேண்டிய அவசியம் என்ன? சத்தியயுகத்தில், நீங்கள் ஒருபோதும் அழமாட்டீர்கள். நீங்கள் இப்போது பற்றினை வெற்றி கொள்கின்றீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் பற்றினை வென்ற ஆட்சியாளர்கள் ஆகுகிறார்;கள். அங்கு பற்று இல்லை. தந்தை தொடர்ந்தும் பல்வேறு விடயங்களை விளங்கப்படுத்துகிறார். தந்தை அசரீரியானவர். அவர் பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என மனிதர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டது எதுவுமேயில்லை. அவர்கள், ‘ஓ கடவுளே! ஓ தந்தையாகிய கடவுளே!’ எனக் கூவி அழைக்கிறார்கள், அல்லவா? எனவே, அவருக்குப் பெயரும் உருவமும் உள்ளது. ஓர் இலிங்கம், பரமாத்மா சிவன் என்றும், சிவபாபா என்றும் அழைக்கப்படுகிறது. அவர் நிச்சயமாக பாபா, அல்லவா? பாபா நிச்சயமாகக் குழந்தைகளையும் கொண்டிருப்பார். அசரீரி ஆத்மாக்கள் மட்டுமே அசரீரியானவரை, ‘பாபா’ என அழைக்கிறார்கள். அவர்கள் அவருடைய ஆலயத்திற்குச் செல்லும்போது, அவரை அவர்கள் ‘சிவபாபா’ என்று அழைக்கிறார்கள். அதன்பின்னர், அவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது, அவர்கள் தமது தந்தையையும் ‘பாபா’ என்றே அழைக்கின்றனர். அவர்கள் ஏன் அவரை சிவபாபா என அழைக்கிறார்கள் என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. தந்தை அல்பா மற்றும் பீற்றா எனும் இரு வார்த்தைகளில் அதியுயர்ந்த கல்வியை கற்பிக்கிறார். அல்பா மற்றும் பீற்றாவை நினைவுசெய்யும் போது, இராச்சியம் உங்களுடையதாகுகிறது. இது ஒரு மிகப்பெரிய பரீட்சையாகும். மனிதர்கள் உயர்ந்ததொரு பரீட்சையில் சித்தியடையும் போது, தங்கள் முன்னைய கல்வியை அவர்கள் நினைவு செய்வதில்லை. அவர்கள் தொடர்ந்து கற்கிறார்கள். இறுதியில் சாரம் முழுவதும் அவர்களின் புத்தியில் பதிந்திருக்கும். இங்கும் இது அவ்வாறே ஆகும். நீங்கள் தொடர்ந்தும் கற்கின்றீர்கள். இறுதியில், தந்தை ‘மன்மனாபவ!’ எனக் கூறுகிறார். அப்போது சரீர உணர்வு துண்டிக்கப்படுகிறது. நீங்கள் ‘மன்மனாபவ’ என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், இறுதியில், நீங்கள் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்வீர்கள். இதுவே பிரதான விடயமாகும். இது மிகவும் இலகுவானது! தற்காலத்தில், மற்றைய கல்வித்துறைகளிலும் கூட, அவர்கள் எவ்வகையான விடயங்களைக் கற்கிறார்கள் என யாருக்குத் தெரியும்? அரசர் எத்தகையவரோ, அதற்கமையவே தனது வழக்கங்களையும், விதிமுறைகளையும் கட்டளையிடுகிறார். முன்னர், நிறுத்தலளவை, தொன்களாகவும் இறாத்தல்களாகவும் இருந்தது. எனினும், இப்போது அது கிலோ முறையில் உள்ளது. வெவ்வேறான பல மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. டெல்கியில் ஒரு ரூபா விலையுள்ள ஒரு பொருள், மும்பாயில் இரண்டு ரூபா விலையுடையதாக இருக்கும். ஏனெனில், இரு மாநிலங்களும் வெவ்வேறானவை. ஒவ்வொருவரும் தமது மாநிலத்தில் பட்டினியைத் தவிர்க்க வேண்டும் எனப் புரிந்து கொண்டுள்ளனர். பெருமளவில் சண்டை போன்றன இடம்பெறுகின்றன. எவ்வளவோ குழப்பமும் நிலவுகிறது. பாரதம் செல்வச் செழிப்பான நாடாகத் திகழ்ந்தது. பின்னர், 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வரும்போது, கடனாளி ஆகிவிட்டது. ‘விலைமதிக்க முடியாத வைரம் போன்ற ஒரு பிறப்பு, பெறுமதியற்ற சிப்பிகளுக்காக இழக்கப்பட்டது’ எனக் கூறப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் ஏன் சிப்பிகளுக்காக உங்களையே கொலை செய்கிறீர்கள்? இப்போதாவது தூய்மையாகித் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்ளுங்கள்! அவர்களும் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! இதன் மூலம், நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்களென்றும், நீங்கள் இப்போது அவ்வாறில்லை என்றும் நிரூபணம் ஆகுகின்றது. இப்போது, இது நிச்சயமாகக் கலியுகமே ஆகும். தந்தை கூறுகிறார்: நான் தூய உலகை ஸ்தாபிப்பதனால், தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். இதனாலேயே, உருத்திரனின் ஞான யாகத்திலிருந்து மூண்டு எழும் இம்மகாபாரதப் போர் இடம்பெறுகிறது. இந்த அழிவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முதலில் பாபாவிற்கு ஒரு காட்சி கிடைத்தது. இத்தகையதொரு மகத்தான இராச்சியம் தனக்குக் கிடைக்க இருப்பதையிட்டு அவர் சந்தோஷமடைய ஆரம்பித்தார். பின்னர் விநாசத்தின் காட்சியும் அவருக்குக் கிடைத்தது. மன்மனாபவ, மத்யாஜிபவ என்ற இரு வார்த்தைகளும் கீதையிலிருந்தே பெறப்பட்டவை. கீதையிலுள்ள சில சொற்றொடர்கள் பொருத்தமானவையே ஆகும். அத்துடன் தந்தை கூறுகிறார்: நான் இந்த ஞானத்தை உங்களுக்குக் கூறுகிறேன். பின்னர் அது மறைந்து விடுகின்றது. இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்த காலத்தில், வேறெந்தத் தர்மமும் இருக்கவில்லையென்பது எவருக்கும் தெரியவும் மாட்டாது. அந்த நேரம் சனத்தொகையும் மிகக் குறைவாகவே இருந்திருக்கும். இப்போது எவ்வளவோ அதிகரித்து விட்டது. எனவே, இந்த மாற்றம் இடம்பெறவே வேண்டும். அழிவும் தேவைப்படுகிறது. மகாபாரதப் போர் நிகழ்கிறது. கடவுளும் அங்கிருப்பார். அவர்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். சிவபாபா வந்து எதனைச் செய்தார்? அதுகூட அவர்களுக்குத் தெரியாது. தந்தை இப்போது விளங்கப்படுத்துகிறார்: கீதை மூலம் கிருஷ்ண ஆத்மாவிற்கு அரச அந்தஸ்து கிடைத்தது. தந்தையும், தாயாகவும் இருக்கும் கீதை மூலமே நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். இதனாலேயே, படத்தில், கிருஷ்ணர் கீதையை உபதேசம் செய்யவில்லையெனக் காட்டப்படுகிறது. கீதா ஞானத்தினூடாகவே கிருஷ்ணர் இராஜயோகத்தைக் கற்றார். பின்னர் அவர் அவ்வாறு ஆகினார். நாளை மீண்டும் அவர் கிருஷ்ணர் ஆகுவார். அவர்கள் சிவனின் பெயருக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். எனவே, தந்தை விளங்கப்படுத்துகிறார்: இதனை உங்களுக்குள் உறுதியாக்கிக் கொள்ளுங்கள். அப்பொழுது எவரும் பிழையான விடயங்களைக் கூறி உங்களை வீழ்த்த மாட்டார்கள். அவர்கள் பல விடயங்களைக் கேட்கின்றனர்: விகாரம் இன்றி எவ்வாறு இவ்வுலகம் தொடரும்? அது எப்படி நிகழும்? ஓ! ஆனால் அது விகாரமற்ற உலகமாக இருந்தது என நீங்களே கூறுகிறீர்களே. ‘முற்றிலும் விகாரமற்ற’ எனக் கூறுகிறீர்கள் அல்லவா? அவ்வாறாயின், அது எவ்வாறு விகாரம் நிறைந்த உலகமாகலாம்? நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுயராச்சிய உரிமையைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்களென்பதை நீங்கள் இப்போது அறிந்துள்ளீர்கள். எனவே, அத்தகைய ஒரு தந்தையை நீங்கள் ஏன் நினைவு செய்யக் கூடாது? இது தூய்மையற்ற ஓர் உலகம். நூறாயிரக்கணக்கான மக்கள் கும்பமேளாவிற்குச் செல்கின்றனர். அவர்கள் கூறுவார்கள்: அங்குள்ள ஓர் ஆறு மறைமுகமானது. ஆறு ஒன்று மறைந்திருக்க முடியுமா? இங்கு கூட ஒரு ‘கௌமுக்’ (பசுவின் வாய்) ஐத் தயாரித்துள்ளனர். அவர்கள் கூறுகிறார்கள்: இங்கு கங்கை பாய்கிறது. எவ்வாறாயினும், கங்கை தனது வழியே கடலுக்குச் செல்லுமா அல்லது உங்களிடம் மலைக்கு மேல் வருமா? பக்திமார்க்கத்தில் பெருமளவு தடுமாற்றம் உள்ளது. ஞானம், பக்தி, பின்னர் விருப்பின்மை உள்ளது. ஒன்று, எல்லைக்குட்பட்ட விருப்பின்மை. மற்றையது, எல்லையற்றது. சந்நியாசிகள் தங்கள் வீட்டைத் துறந்து சென்று காட்டில் வசிக்கிறார்கள். இங்கு நிலைமை அவ்வாறல்ல. உங்கள் புத்தியைக் கொண்டு முழு உலகத்தையும் துறக்கிறீர்கள். இராஜயோக மாணவர்களான உங்கள் பிரதானமான பணி கற்பதும், கற்பிப்பதுமே ஆகும். இப்பொழுது இராஜயோகத்தைக் காட்டில் கற்பிக்கலாம் என்பதல்ல. இது ஒரு பாடசாலை. இதிலிருந்து பல கிளைகள் தோன்றும். குழந்தைகளாகிய நீங்கள் இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள். சிவபாபாவுடனிருந்து கல்வி கற்கும் பிரம்மகுமார்களும் பிரம்மகுமாரிகளும் அனைவருக்கும் கற்பிக்கின்றனர். ஒரு சிவபாபா அமர்ந்திருந்து அனைவருக்கும் கற்பிக்க இயலாது. எனவே இதுவே பாண்டவ அரசாங்கம் ஆகும். நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களுக்கு உட்;பட்டவர்கள். இங்கு நீங்கள் எவ்வளவோ அமைதியுடன் அமர்ந்திருக்கிறீர்கள். வெளியுலகில் எவ்வளவோ கொந்தளிப்பும் குழப்பமும் காணப்படுகின்றன. தந்தை கூறுகிறார்: ஐந்து விகாரங்களையும் தானம் செய்யுங்கள். அந்தச் சகுனங்கள் எல்லாம் அகன்று விடும். என்னுடையவர் ஆகுங்கள். நான் உங்கள் ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்வேன். நாங்கள் இப்போது சந்தோஷதாமத்திற்குச் செல்கிறோம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். துன்பதாமம் தீக்கிரையாக்கப்படவுள்ளது. சில குழந்தைகளுக்கும் விநாசத்தின் காட்சிகள் கிடைத்துள்ளன. இன்னும் சிறிது காலமே எஞ்சியுள்ளது. ஆகவே நீங்கள் நினைவு யாத்திரையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களாயின், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு உங்களுக்கு உயர்ந்ததோர் அந்தஸ்து கிடைக்கும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு அன்பும் நினைவும் காலை வந்தனமும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தியையும் கோருவதற்கு, மரணித்து வாழுங்கள். தத்தெடுக்கப்பட்டவர் ஆகுங்கள். உங்கள் மேன்மையான பாக்கியத்தை இரத்துச் செய்து விடாதீர்கள்.
2. தவறான விடயங்களைச் செவிமடுப்பதன் மூலம் சந்தேகத்தை வளர்க்காதீர்கள். உங்களுடைய நம்பிக்கையைச் சிறிதளவேனும் தளம்ப அனுமதிக்காதீர்கள். இத்துன்ப பூமி தீக்கிரையாகப் போகிறது. எனவே, உங்கள் புத்தியின் யோகத்தை அதிலிருந்து விலக்கிவிடுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் பிரச்சனைகளை தீர்வுகளாக மாற்றுகின்ற ஓர் உலக உபகாரி ஆகுவீர்களாக.“நான் ஓர் உலக உபகாரி”. இந்த மேன்iமான உணர்வு மற்றும் விருப்பத்தின் மேன்மையான சம்ஸ்காரம் இப்பொழுது வெளிப்படட்டும். இந்த மேன்மையான சம்ஸ்காரத்தின் முன்னால் எல்லைக்குட்பட்ட சம்ஸ்காரங்கள் இயல்பாகவே முடிவடையும். பிரச்சனைகள் தீர்வுகளாக மாற்றப்படும். உங்கள் நேரத்தைப் போராடுவதில் வீணாக்க வேண்டாம். ஆனால் வெற்றி பெறுவதற்கான சம்ஸ்காரம் வெளிப்படட்டும். இப்பொழுது அனைத்தையும் சேவைக்காகப் பயன்படுத்துங்கள். நீங்கள் உழைப்பதிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள். பிரச்சனைகளுக்குள் செல்வதற்குப் பதில் தானங்களைச் செய்யுங்கள். ஆசீர்வாதங்களை வழங்குங்கள். உங்கள் கெட்ட சகுனங்கள் இயல்பாகவே முடிவடையும்.
சுலோகம்:
யாருடைய பலவீனங்களையும் அல்லது குறைபாடுகளையும் பற்றிப் பேசுவதற்கப் பதில் நற்குணங்களின் சொரூபமாகுங்கள். மற்றும் நற்குணங்களை மட்டும் பேசுங்கள்.