23.02.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 27.11.85 Om Shanti Madhuban
பழைய உலகையும் பழைய சம்ஸ்காரங்களையும் மறப்பதற்கான வழிமுறை.
பாப்தாதா புத்தியில் நம்பிக்கையுடன் இருக்கும் குழந்தைகளின் நம்பிக்கையின் நடைமுறை வாழ்க்கைகளைப் பார்க்கிறார். புத்தியில் நம்பிக்கையுடன் இருக்கும் குழந்தைகளின் சிறப்பியல்புகளை நீங்கள் அனைவரும் செவிமடுத்தீர்கள். சிறப்பியல்புகள் நிறைந்த, புத்தியில் நம்பிக்கையுடன் இருக்கும் இத்தகைய வெற்றி இரத்தினங்கள், எப்போதும் இந்த பிராமண வாழ்க்கையிலும் இந்த அதிபுண்ணிய சங்கமயுக வாழ்க்கையிலும் நம்பிக்கையின் உதாரணங்களாக இருப்பார்கள். அவர்களிடம் இந்த போதை காணப்படும். நம்பிக்கையின் கண்ணாடி ஆன்மீக போதையே ஆகும். விழிப்புணர்வின் ரூபத்தில் நம்பிக்கை வெறுமனே புத்தியில் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு செயலிலும் ஆன்மீக போதையின் வடிவில் அது அனுபவம் செய்யப்படும். நீங்கள் அதை உங்களின் நடைமுறை ரூபத்தில் அனுபவம் செய்வீர்கள். மற்றவர்களும் அதை அனுபவம் செய்வார்கள். ஏனெனில், இது ஞானி, யோகி வாழ்க்கை ஆகும். இது வெறுமனே செவிமடுப்பதற்கும் பேசுவதற்கும் உரியதல்ல. ஆனால், உங்களின் வாழ்க்கையை உருவாக்குவதற்கே ஆகும். விழிப்புணர்வு, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் அனைத்தும் வாழ்க்கையில் உள்ளடங்குகின்றன. உங்களின் புத்தியில் நம்பிக்கையுடன் இருத்தல் என்றால், போதையுள்ள வாழ்க்கை வாழுதல் என்று அர்த்தம். இத்தகைய ஆன்மீக போதையுடன் இருக்கும் ஆத்மாவின் ஒவ்வோர் எண்ணமும் போதையால் நிரம்பியிருக்கும். நம்பிக்கையின் போதை உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மூன்றிலும் அனுபவம் செய்யப்படும். உங்களின் போதைக்கேற்ப, சந்தோஷத்தின் பிரகாசமும் உங்களின் முகத்திலும் உங்களின் நடத்தையிலும் புலப்படும். நம்பிக்கையின் அத்தாட்சி, போதை ஆகும். போதையின் அத்தாட்சி சந்தோஷம் ஆகும். வெவ்வேறு வகையான போதையின் பெரியதொரு தொகுதி காணப்படும். எவ்வாறாயினும், சாராம்சமாக, முதல் வகையான போதை, சரீரமற்ற, ஆத்ம உணர்வு ரூபம் ஆகும். இதன் விவரம் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? அனைவரும் ஆத்மாக்கள். ஆனால் நீங்கள் என்ன வகையான ஆத்மா என்ற விழிப்புணர்வில் இருப்பதை அனுபவம் செய்வதே ஆன்மீக போதை ஆகும். உங்களுக்கிடையே இதன் விவரங்களைக் கலந்துரையாடி, நீங்கள் அதைக் கடையுங்கள்.
இரண்டாவது வகையான போதை, இந்த அலௌகீக சங்கமயுக வாழ்க்கையைப் பற்றியதாகும். இந்த வாழ்க்கையிலும், நீங்கள் வாழும் வாழ்க்கையின் விவரங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எனவே, முதல் போதை, ஆத்ம உணர்வு ரூபத்தைப் பற்றியது. இரண்டாவது போதை, உங்களின் அலௌகீக வாழ்க்கையைப் பற்றியது. மூன்றாவது போதை, தேவதை ஸ்திதியைப் பற்றியது. யாரை தேவதை என்று அழைப்பது என்ற விவரங்களை ஆராயுங்கள். நான்காவது போதை, எதிர்காலத்தைப் பற்றியது. இந்த நான்கு வகையான அலௌகீக போதைகளிலும், உங்களின் வாழ்க்கையில் ஒரு வகையான போதை இருந்தாலும், நீங்கள் இயல்பாகவே தொடர்ந்து சந்தோஷ நடனம் ஆடுவீர்கள். உங்களிடம் நம்பிக்கை இருந்து, உங்களிடம் சந்தோஷம் இல்லாவிட்டால், அதற்கான காரணம் என்ன? ஏனெனில், உங்களிடம் அந்த போதை இல்லை. போதையானது இலகுவாக உங்களைப் பழைய உலகையும் பழைய சம்ஸ்காரங்களையும் மறக்கச் செய்கிறது. இந்த முயற்சி செய்யும் வாழ்க்கையில், குறிப்பாக இந்த இரண்டுமே தடைகள் ஆகுகின்றன: பழைய உலகம் (சன்ஸார்) அல்லது பழைய சம்ஸ்காரங்கள். சரீர உறவுகளும் சரீர உடைமைகளும் உலகில் அடங்குகின்றன. அத்துடன், உலகைவிட அதிகளவில், பழைய சம்ஸ்காரங்களே மகத்தான பிரச்சனை ஆகுகின்றன. உலகை மறக்க முடியும். ஆனால், சம்ஸ்காரங்களை மறக்க முடியாது. எனவே, சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் வழிமுறையானது, நான்கு வகையான போதைகளில் ஒன்றை நடைமுறை வடிவில் கொண்டிருப்பதே ஆகும். வெறுமனே எண்ணத்தின் வடிவில் அல்ல. நடைமுறையில் நீங்கள் இந்த போதையைக் கொண்டிருக்கும்போது, சம்ஸ்காரங்கள் ஒருபோதும் தடைகள் ஆகாது. உங்களின் சம்ஸ்காரங்கள் இன்னமும் மாறாமல் இருப்பதற்கான காரணம் இதுவே ஆகும். எண்ணத்தின் ரூபத்தில் நீங்கள் இந்த போதையைக் கிரகித்திருப்பதனால், அதாவது, உங்களின் புத்திகளில் ஞானத்தின் ரூபத்தில் கிரகித்திருப்பதனால், எந்த வேளையிலும் எவரின் பழைய சம்ஸ்காரங்கள் வெளிப்பட்டாலும், ‘எந்தவொரு பழைய சம்ஸ்காரங்கள் வெளிப்பட்டாலும் நான் அனைத்தையும் புரிந்து கொள்கிறேன்’ என நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் மாற வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால், அது புரிந்து கொள்வதன் மட்டத்தில் மட்டுமன்றி, செயல்வடிவில் இருக்க வேண்டும் அதாவது, அது உங்களின் நடைமுறை வாழ்க்கையில் இருக்க வேண்டும். வாழ்க்கையில் மாற்றம் அனுபவம் செய்யப்பட வேண்டும். இதுவே அதை நடைமுறைப்படுத்துதல் எனப்படுகிறது. தற்சமயம், அது புத்தியில் கருத்துக்களின் ரூபத்தில், அதைப் பற்றிச் சிந்திப்பதும் பேசுவதும் என்ற ரூபத்தில் உள்ளன. எவ்வாறாயினும், உங்களின் ஒவ்வொரு செயலிலும் உறவுமுறையிலும் மாற்றம் புலப்படும்போது, அது நடைமுறையில் அலௌகீக போதையைக் கொண்டிருத்தல் என்று அழைக்கப்படுகிறது. இப்போது, உங்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான போதையையும் அனுபவம் செய்யுங்கள். உங்களின் நெற்றியைப் பார்க்கும் எவரும், உங்களின் நெற்றியில் இருந்து ஆன்மீக போதையின் மனோபாவத்தை அனுபவம் செய்ய வேண்டும். ஒருவர் பேசினாலும் பேசாவிட்டாலும், அவரின் மனோபாவமே சூழலிலும் அதிர்வலைகளிலும் பரவுகின்றன. உங்களின் மனோபாவம், மற்றவர்கள் சந்தோஷ சூழலில் சந்தோஷ அதிர்வலைகளை உணரச் செய்ய வேண்டும். இதுவே போதையில் ஸ்திரமாக இருத்தல் எனப்படுகிறது. அதேபோன்று, ஆன்மீக போதை உங்களின் திருஷ்டியினூடாக, உங்களின் உதடுகளில் உள்ள புன்னகையினூடாக, உங்களின் வார்த்தைகளினூடாக பௌதீக ரூபத்தில் அனுபவம் செய்யப்பட வேண்டும். அப்போது மட்டுமே, உங்களை புத்தியில் நம்பிக்கை உடைய, போதையுடன் இருக்கும் வெற்றி இரத்தினம் என்று அழைக்க முடியும். நீங்கள் இதில் மறைமுகமாக இருக்கக்கூடாது. சிலர் இதில் கெட்டிக்காரர்கள் ஆகித் தாம் மறைமுகமாக இருப்பதாகக் கூறுவார்கள். எவ்வளவு பெரிய முகில்கள் வந்து மறைத்தாலும், எவராலும் சூரியனை மறைக்க முடியாது என்றொரு கூற்று உள்ளது. சூரியன் அதன் ஒளியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். சூரியன் அசையுமா அல்லது முகில்கள் அசைந்து செல்லுமா? முகில்கள் வந்து போகும். ஆனால், சூரியன் ஒளியின் வடிவில் ஸ்திரமாகவே இருக்கும். அதேபோன்று, இந்த ஆன்மீக போதையைக் கொண்டிருப்பவர்களால் தமது ஆன்மீகப் பிரகாசத்தை மறைக்க முடியாது. அவர்களின் ஆன்மீக போதையின் பிரகாசம் நிச்சயமாகப் புலப்படும் ரூபத்தில் அனுபவம் செய்யப்படும். அவர்களின் அதிர்வலைகள் இயல்பாகவே மற்றவர்களைக் கவரும். ஆன்மீக போதையில் இருப்பவர்களின் அதிர்வலைகள், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாதுகாப்புக் குடையைப் போல் செயற்படும். எனவே, இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இதை நடைமுறையில் பயிற்சி செய்யுங்கள். ஞானத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், ஞானத்தை உங்களின் நடைமுறை வாழ்க்கையில் பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் வெற்றிநிறைந்தவராகவும் ஆனந்தம் நிறைந்தவராகவும் ஞானம் நிறைந்தவராகவும் ஆகுவீர்கள். வெற்றி நிறைந்தவராகவும் ஆனந்தம் நிறைந்தவராகவும் இருப்பவரின் ரூபம் என்னவென்பதை பாபா வேறொரு வேளையில் உங்களுக்குக் கூறுவார்.
இன்று, பாபா உங்களுக்கு ஆன்மீக போதையைப் பற்றிக் கூறுகிறார். அனைவரும் இந்த போதையை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் இந்த நான்கு வகையான போதைகளில் எதையும் வெவ்வேறு வழிமுறைகளில் பயன்படுத்த முடியும். இந்த போதையை உங்களின் நடைமுறை வாழ்க்கையில் எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சதா கவலைகளில் இருந்து விடுபட்டு, கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பீர்கள். அனைவரும் உங்களை ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியின் ரூபத்திலே பார்ப்பார்கள். எனவே, இப்போது இதை விவரமாக அறிந்து, பயிற்சி செய்யுங்கள். எங்கு சந்தோஷம் உள்ளதோ, அங்கு மாயையால் தனது சூழ்ச்சிகளைக் காட்ட முடியாது. கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பவரின் இராச்சியத்திற்குள் மாயையால் பிரவேசிக்க முடியாது. அவள் வருவாள். நீங்கள் அவளைத் துரத்துவீர்கள். அவள் மீண்டும் வருவாள். நீங்கள் அவளை மீண்டும் துரத்துவீர்கள். சிலவேளைகளில், மாயை சரீரத்தின் ரூபத்தில் வருவாள். சிலவேளைகளில் சரீர உறவுகளின் ரூபத்தில் வருவாள். மாயை சிலவேளைகளில் ஒரு யானை போல், சிலவேளைகளில் ஒரு பூனை போல், சிலவேளைகளில் ஒரு எலியைப் போல் வருவதாக இது குறிப்பிடப்படுகிறது. சிலவேளைகளில், நீங்கள் எலியைத் துரத்துகிறீர்கள். சிலவேளைகளில் நீங்கள் பூனையைத் துரத்துகிறீர்கள். அவளைத் துரத்துவதிலேயே உங்களின் நேரம் கழிகிறது. ஆகவே, எப்போதும் ஆன்மீக போதையுடன் இருங்கள். அனைத்திற்கும் முதலில், உங்களை வெளிப்படுத்துங்கள். பின்னர் நீங்கள் தந்தையை வெளிப்படுத்துவீர்கள். ஏனெனில், தந்தை உங்களினூடாக வெளிப்படுத்தப்படுகிறார். அச்சா.
தங்களினூடாக சர்வசக்திவானை வெளிப்படுத்துபவர்களுக்கும், தமது நடைமுறை வாழ்க்கை என்ற கண்ணாடியில் ஆன்மீக போதையின் சிறப்பியல்பை வெளிப்படுத்துபவர்களுக்கும், எப்போதும் கவலையற்ற சக்கரவர்த்திகளாகி, மாயைக்கு விடை கொடுப்பவர்களுக்கும், எப்போதும் ஞானத்தை நடைமுறை வடிவில் செய்பவர்களுக்கும், புத்தியில் நம்பிக்கையுடன் இருப்பதுடன் தமது போதையையும் பேணும் குழந்தைகளுக்கும் எப்போதும் சந்தோஷ ஊஞ்சலில் ஆடுபவர்களுக்கும் இத்தகைய மேன்மையான, விசேட ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா சேவையாளர் ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:
சேவையாளர்கள் என்றால் தமது சொந்த சக்திகளால் மற்றவர்களைச் சக்திசாலிகள் ஆக்குபவர்கள் என்று அர்த்தம். இதுவே சேவையாளர்களின் உண்மையான சிறப்பியல்பு ஆகும். சக்தியற்றவர்களைச் சக்தியால் நிரப்புவதற்குக் கருவி ஆகுவதே உண்மையான சேவை ஆகும். இத்தகைய சேவையைச் செய்யும் பாகத்தை நடித்தல், ஒரு கதாநாயக பாகத்தை நடிப்பதாகும். எனவே, கதாநாயக நடிகர்களே, உங்களிடம் எவ்வளவு போதை உள்ளது? சேவைக்குரிய பாகத்தை நடிப்பதன் மூலம் உங்களால் நீங்கள் விரும்பிய அளவு முன்னால் ஓரிலக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஏனெனில், சேவை செய்தல் முன்னேறுவதற்கான வழிமுறை ஆகும். சேவை செய்வதில் மும்முரம் ஆகுவதன் மூலம், நீங்கள் இயல்பாகவே அனைத்தில் இருந்தும் அப்பால் செல்வீர்கள். ஒவ்வொரு சேவை நிலையமும் ஒவ்வோர் ஆத்மாவும் தனது பாகத்தை நடிக்கும் ஒரு மேடை ஆகும். பல வசதிகள் உள்ளன. ஆனால் எப்போதும் அந்த வசதிகளுக்கு சக்தி இருக்க வேண்டும். நீங்கள் சக்தி இல்லாமல் வசதிகளைப் பயன்படுத்தினால், நீங்கள் விரும்பிய பெறுபேற்றினை உங்களால் சேவையில் பெற முடியாதிருக்கும். பழைய காலத்தில் போர்வீரர்கள் எப்போதும் தமது ஆயுதங்களை தேவர்களின் முன்னால் படைத்து, அவற்றைச் சக்தியால் நிரப்பியே பின்னர் பயன்படுத்துவார்கள். எனவே, நீங்கள் அனைவரும் ஒரு பணிக்காக எந்தவிதமான வசதிகளைப் பயன்படுத்தினாலும், அதைப் பயன்படுத்துவதற்கு முன்னர், உங்களையே கேட்டுப் பாருங்கள்: நீங்கள் சரியான வழிமுறைக்கேற்ப அதை மிகச்சரியாகப் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் இப்போது பயன்படுத்தும் வசதிகளால் மக்கள் குறுகிய காலத்திற்குக் கவரப்படுகிறார்கள். அவர்கள் எல்லா வேளையும் அவற்றினால் கவரப்படுவதில்லை. ஏனெனில் சக்திகளினூடாக மாற்றத்தைக் காட்டும் சக்திசாலி ஆத்மாக்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகவே இருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் சேவை செய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு சேவையாளராக இருந்தாலென்ன அல்லது ஆசிரியராக இருந்தாலென்ன, சேவையில் உள்ள வேறுபாடு என்ன? நீங்கள் ஒரே நிகழ்ச்சிகளைச் செய்கிறீர்கள். நீங்கள் அதே திட்டங்களைச் செய்கிறீர்கள். உங்களின் நடைமுறை, சம்பிரதாயங்களும் ஒத்ததாகவே உள்ளன. எனவே, உங்களின் வெற்றியில் ஏன் வேறுபாடு ஏற்படுகிறது? ஏனெனில், சக்தி குறைவாக இருப்பதே அதன் காரணம். ஆகவே, வசதிகளைச் சக்திகளால் நிரப்புங்கள். உதாரணமாக, ஒரு வாளுக்குக் கூர்மையின் சக்தி இல்லாவிட்டால், அந்த வாளால் வாளின் பணியைச் செய்ய முடியாது. அது ஒரு வாள். ஆனால், அதில் கூர்மை என்ற வலிமை கிடையாது. நீங்கள் எந்தளவிற்கு உங்களைச் சக்தியால் நிரப்புகிறீர்களோ, அந்தளவிற்கு இயல்பாகவே சேவையில் அதிக வெற்றியை நீங்கள் பெறுவீர்கள். எனவே, சக்திசாலி சேவையாளர்கள் ஆகுங்கள். சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எப்போதும் வெற்றி பெறுங்கள். இது பெரியதொரு விடயம் அல்ல. எவ்வாறாயினும், நீங்கள் இதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அப்போது சக்திசாலி ஆத்மாக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பார்கள். தரமும் இருக்க வேண்டும் இன்னமும் அதிகளவு எண்ணிக்கையில் மக்கள் வரவுள்ளார்கள். தரத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அன்றி, தரத்திற்கேற்பவே ஓர் இலக்கத்தைப் பெறுவீர்கள். தரமுள்ள ஓர் ஆத்மா 100 எண்ணிக்கையுள்ள ஆத்மாக்களுக்குச் சமம் ஆவார்.
குமார்களிடம்:
குமார்கள் என்ன அற்புதங்களைச் செய்வீர்கள்? நீங்கள் குழப்பங்களை விளைவிப்பவர்கள் இல்லையல்லவா? அற்புதங்களைச் செய்வதற்கு, நீங்களும் சக்திசாலிகள் ஆகி, மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குங்கள். சக்திசாலிகள் ஆகுவதற்கு, எப்போதும் உங்களின் விழிப்புணர்வில் மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற உங்களின் பட்டத்தை வைத்திருங்கள். எங்கு சக்தி உள்ளதோ, அங்கு நீங்கள் மாயையிடம் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் உங்களில் கவனம் செலுத்தும் அளவிற்கு, உங்களால் சேவையிலும் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும். உங்களில் நீங்கள் கவனம் செலுத்தாவிட்டால், சேவையிலும் எந்தவிதமான சக்தியும் இருக்காது. ஆகவே, உங்களை சதா வெற்றி சொரூபம் ஆக்குவதற்கு, சக்திவாய்ந்த பயிற்சியைச் செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள். எல்லா வேளையும் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படுவதற்கு விசேடமான நிகழ்ச்சிகளை உருவாக்குங்கள். சுய முன்னேற்றத்திற்கு முதலில் நிகழ்ச்சிகள் இருந்தால், சேவையும் இலகுவாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேறும். குமார் வாழ்க்கை என்பது பாக்கியசாலி வாழ்க்கை ஆகும். ஏனெனில், நீங்கள் பல பந்தனங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். இல்லாவிடின், இல்லற வாழ்க்கையில் பல பந்தனங்கள் உள்ளன. எனவே, அதி பாக்கியசாலிகள் ஆகப்போகும் ஆத்மாக்களான நீங்கள், சிலவேளைகளில் உங்களின் பாக்கியத்தை மறப்பதில்லை, அல்லவா? எப்போதும் உங்களை மேன்மையான பாக்கியத்தைக் கொண்டுள்ள ஆத்மாக்களாகக் கருதுங்கள். நீங்கள் மற்றவர்களின் பாக்கிய ரேகையை வரைபவர்கள். பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பவர்கள், இயல்பாகவே பறக்கும் ஸ்திதியினூடாகத் தொடர்ந்து முன்னேறுவார்கள். இதனாலேயே, பாப்தாதா எப்போதும் குமார் மற்றும் குமாரிகளின் வாழ்க்கையை விரும்புகிறார். இல்லற வாழ்க்கை பந்தனம் உள்ள வாழ்க்கை. ஆனால், குமார் வாழ்க்கை என்பது பந்தனத்தில் இருந்து விடுபட்ட வாழ்க்கை ஆகும். எனவே, பந்தனத்தில் இருந்து விடுபட்ட ஆத்மா ஆகி, மற்றவர்களையும் பந்தனத்தில் இருந்து விடுபடச் செய்யுங்கள். ஒரு குமார் என்றால், சதா நினைவிற்கும் சேவைக்கும் இடையில் சமநிலையைப் பேணுபவர் என்று அர்த்தம். இந்தச் சமநிலை உங்களிடம் இருந்தால், நீங்கள் சதா பறக்கும் ஸ்திதியில் இருப்பீர்கள். எவ்வாறு சமநிலையைப் பேணுவது என்பதை அறிந்தவர்கள் ஒருபோதும் எந்தவிதமான சந்தர்ப்பத்திலும் தளம்பல் அடைய மாட்டார்கள்.
ஆதர் குமார்களிடம் (அரைக்குமார்கள்):
1. நீங்கள் அனைவரும் உங்களின் வாழ்க்கைகளின் நடைமுறை உதாரணங்களினூடாகச் சேவை செய்பவர்கள், அல்லவா? உங்கள் அனைவரினதும் வாழ்க்கைகளின் மாற்றமே, மகத்தான நடைமுறை அத்தாட்சி ஆகும். பேசுகின்ற பலரையும் செவிமடுக்கும் பலரையும் மக்கள் பார்த்துள்ளார்கள். இப்போது, அவர்கள் அனைவரும் பார்க்கவே விரும்புகிறார்கள். அவர்கள் கேட்க விரும்புவதில்லை. எனவே, நீங்கள் எப்போது எந்த செயல்களைச் செய்தாலும், நீங்கள் செய்யும் செயல்கள் மிகவும் மாறியிருப்பதையும், அந்த மாற்றத்தைக் காணும் மற்றவர்களும் மாற வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருங்கள். இதனூடாக, நீங்களும் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதுடன், உங்களால் மற்றவர்களுக்கு நன்மையையும் ஏற்படுத்த முடியும். எனவே, சேவைக்காக ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். உங்களின் ஒவ்வொரு செயலும் சேவைக்காக என்ற விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தால், நீங்கள் இயல்பாகவே மேன்மையான செயல்களைச் செய்வீர்கள். நினைவில் வைத்திருங்கள்: மற்றவர்களின் மாற்றம் உங்களின் சுய மாற்றத்தினூடாகவே நிகழும். இந்தச் சேவை இலகுவானதும் மேன்மையானதும் ஆகும். வார்த்தைகளினூடாகச் சொற்பொழிவுகள் கொடுப்பதும், அத்துடன் உங்களின் வாழ்க்கைகளினூடாகக் கொடுப்பதுமே ஒரு சேவையாளராக இருத்தல் எனப்படுகிறது. நீங்கள் மற்றவர்களுக்குத் திருஷ்டி கொடுப்பதன் மூலம் மற்றவர்களின் திருஷ்டியை மாற்றும் சேவையாளர்கள் ஆவீர்கள். உங்களின் திருஷ்டி எந்தளவிற்குச் சக்திநிறைந்ததோ, அந்தளவிற்கு உங்களால் மற்றவர்களை மாற்ற முடியும். உங்களின் திருஷ்டியாலும் மேன்மையான செயல்களாலும் எப்போதும் மற்றவர்களுக்குச் சேவை செய்யும் கருவிகள் ஆகுங்கள்.
2. நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதும் இப்போது என்னவாக உள்ளீர்கள் என்பதும் எப்போதும் உங்களின் விழிப்புணர்வில் உள்ளதா? இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், உங்களின் பழைய சம்ஸ்காரங்களால் வெளிப்பட முடியாது. இத்துடன் கூடவே, நீங்கள் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் என்பதையும் நினைவு செய்யுங்கள். உங்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் மேன்மையானதாக இருப்பதனால், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். சந்தோஷமாக இருப்பதனால், நீங்கள் சதா தொடர்ந்து முன்னேறுவீர்கள். நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினதும் உலகம் மேன்மையானது. எனவே, மேன்மையான உலகின் முன்னால், துன்பத்தை விளைவிக்கும் உலகை நீங்கள் நினைக்க மாட்டீர்கள். உங்களின் இந்த எல்லையற்ற குடும்பதைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். இத்தகையதொரு அதிர்ஷ்டமான குடும்பத்தை நீங்கள் பெறுவீர்கள் என உங்களின் கனவுகளிலேனும் ஒருபோதும் நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இப்போது இதை நடைமுறை வடிவில் பார்க்கிறீர்கள், அனுபவம் செய்கிறீர்கள். இது ஒரு வழிகாட்டலில் ஒற்றுமையாக உள்ள குடும்பம் ஆகும். இது பெரியதொரு குடும்பம் ஆகும். கல்பம் முழுவதிலும் இந்த வேளையில் மட்டுமே நீங்கள் இத்தகைய குடும்பத்தைப் பெறுவீர்கள். சத்தியயுகத்திலும், அது சிறியதொரு குடும்பமாகவே இருக்கும். எனவே, பாப்தாதாவையும் குடும்பத்தையும் பார்க்கையில் சந்தோஷம் ஏற்படுகிறதல்லவா? நீங்கள் இந்தக் குடும்பத்தை நேசிக்கிறீர்களா? ஏனெனில், இங்கு எந்தவிதமான சுயநல நோக்கங்களும் கிடையாது. இத்தகைய குடும்பத்திற்குச் சொந்தமானவர்கள் எதிர்காலத்திலும் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருப்பார்கள். இறைவனின் குடும்பமான இதன் சிறப்பியல்புகளைப் பார்த்த வண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள்.
குமாரிகள்: குமாரிகளான நீங்கள் அனைவரும் உங்களை உலக உபகாரிகள் என்று கருதியவண்ணம் தொடர்ந்து முன்னேறுகிறீர்களா? இந்த விழிப்புணர்வானது எப்போதும் உங்களைச் சக்திசாலிகள் ஆக்கும்.
• குமாரி வாழ்க்கை என்பது சக்திநிறைந்த வாழ்க்கை
• குமாரிகள் தாமும் சக்திசாலிகள் ஆகுவதுடன் மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குபவர்கள்.
• நீங்கள் எல்லா வேளையும் வீணானவற்றுக்கு விடை கொடுப்பவர்கள்.
• குமாரி வாழ்க்கையின் பாக்கியத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்தவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள்.
• சங்கமயுகத்தில் ஒரு குமாரியாக இருத்தல் மகத்தான பாக்கியம் ஆகும்.
• ஒரு குமாரி தனது வாழ்க்கையினூடாகப் பலரின் வாழ்க்கைகளை உருவாக்குபவர்.
• ஒரு குமாரி என்பவர் தந்தையுடன் இருப்பவர்.
• ஒரு குமாரி என்பவர் எப்போதும் தன்னைச் சக்திசாலியாக அனுபவம் செய்வதுடன் மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குபவர்.
• ஒரு குமாரி என்பவர் வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு மேன்மையான தந்தைக்குச் சொந்தமானவர்.
• ஒரு குமாரி என்பவர் இத்தகைய போதையுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பவர்.
எனவே, நீங்கள் இத்தகைய குமாரிகள், அப்படியல்லவா? அச்சா.
கேள்வி:
எந்தச் சிறப்பியல்பாலும் நற்குணத்தாலும் உங்களால் அனைவராலும் நேசிக்கப்பட முடியும்?
பதில்:
அன்பாகவும் பற்றற்றவராகவும் இருக்கும் நற்குணமும் சிந்திப்பதில் இருந்து விடுபட்டிருக்கும் சிறப்பியல்பும் உங்களை அனைவராலும் நேசிப்பவர் ஆக்கும். அன்பானவர் ஆகுவதன் மூலம், உங்களால் இயல்பாகவே அனைவரின் இதயபூர்வமான அன்பையும் பெற்றுக் கொள்ள முடியும். உங்களால் இந்தச் சிறப்பியல்பினால் வெற்றி பெற முடியும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தீர்வுகளின் சொரூபமாகி, சகல பிரச்சனைகளுக்கும் விடை கொடுக்கும் விழாவைக் கொண்டாடுவீர்களாக.
தீர்வுகளின் சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களின் மாலையானது, உங்களின் சம்பூரண ஸ்திதியில் நீங்கள் ஸ்திரமாகியதும் தயார் ஆகும். உங்களின் சம்பூரண ஸ்திதியில், சகல பிரச்சனைகளையும் குழந்தைத்தனமான விளையாட்டுக்களைப் போல அனுபவம் செய்வீர்கள். அதாவது, அவை முடிந்துவிடும். உதாரணமாக, ஒரு குழந்தை பிரம்மாபாபாவின் முன்னால் தனது பிரச்சனையுடன் வந்தாலும், அவருக்கு அந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேசுவதற்கான தைரியம் ஏற்படாது. அவர் அந்த விடயங்களை மறந்துவிடுவார். அதேபோன்று, குழந்தைகளான நீங்களும் தீர்வுகளின் சொரூபங்கள் ஆகவேண்டும். அப்போது நீங்கள் அரைக்கல்பத்திற்கு சகல பிரச்சனைகளுக்கும் விடை கொடுக்கும் பண்டிகையைக் கொண்டாடுவீர்கள்.
சுலோகம்:
சதா ஞானத்தைக் கடைபவர்கள், மாயையின் கவர்ச்சிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.