18.01.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் செயற்பாடுகள் மிக இராஜரீகமாக இருக்க வேண்டும். நீங்கள் தேவர்கள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள், ஆகையால், உங்கள் இலக்கும், அதன் தகைமையும் மற்றும் நீங்கள் கூறுவதும் செய்வதும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

பாடல்:
உங்களை கண்டதால், நான் முழு உலகையும் கண்டு கொண்டேன்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இப்போது, சில குழந்தைகளே இருக்கிறார்கள். பின்னர் பல குழந்தைகள் இருப்பார்கள். அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவை அறிந்து கொள்ள வேண்டும். சகல மதத்தவர்களும் அவரை ஏற்றுக் கொள்வார்கள். லௌகீகத் தந்தையரும் எல்லைக்குட்பட்ட பிரம்மாக்களே என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அங்கு, வம்ச விருட்சம் அவர்களின் குடும்பப்பெயரால் உருவாக்கப்படுகிறது. இது பின்னர் எல்லையற்றதாகின்றது. இவருடைய பெயர் பிரஜாபிதா பிரம்மா. அங்கு, எல்லைக்குட்பட்ட பிரம்மா, எல்லைக்குட்பட்ட குழந்தைகளை உருவாக்குகிறார். சிலருக்கு இரண்டிலிருந்து நான்கு குழந்தைகள் இருப்பார்கள். சிலருக்குக் குழந்தைகளே இருக்காது. இவருக்குக் குழந்தைகள் எவரும் இல்லை என உங்களால் கூற முடியாது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் இவரின் குழந்தைகளே. எல்லையற்ற பாபாவும் தாதாவும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளான உங்கள் மீது அதிகளவு ஆன்மீக அன்பைக் கொண்டிருக்கிறார்கள். அவர் குழந்தைகளான உங்களுக்கு மிகுந்த அன்புடன் கற்பிக்கிறார். நீங்கள் எவ்வாறிருந்தீர்களோ அதைவிட மகத்துவமானவர்களாக அவர் உங்களை ஆக்குகிறார்! எனவே, குழந்தைகளான உங்களுடைய சந்தோஷப் பாதரசம் அதிகளவில் உயர வேண்டும். நீங்கள் சதா தொடர்ந்து தந்தையை நினைவு செய்யும்போது சந்தோஷப் பாதரசம் உயரும். ஒவ்வொரு கல்பமும் மிகுந்த அன்புடன் குழந்தைகளான உங்களைத் தூய்மையாக்கும் சேவையைத் தந்தை செய்கிறார். அவர் அனைவரையும் தூய்மையாக்குகிறார். பஞ்சபூதங்கள் உட்பட அனைவரையும் தூய்மையாக்குகிறார். அவர் உங்களைச் சிப்பிகளில் இருந்து வைரங்கள் ஆக்குகிறார். இது பாரிய எல்லையற்ற சேவையாகும். தந்தை குழந்தைகளான உங்களுக்கு மிகுந்த அன்புடன் தொடர்ந்து கற்பிக்கிறார். ஏனெனில் குழந்தைகளைச் சீர்திருத்துதல் தந்தையினதும் ஆசிரியரினதும் கடமையாகும். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்களா அல்லது உங்களுடைய சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்றுகிறீர்களா எனக் குழந்தைகளான நீங்கள் உங்களுடைய அட்டவணைகளில் குறித்துக் கொள்ள வேண்டும். ஸ்ரீமத்தின் மூலம் மட்டுமே நீங்கள் மிகச்சரியானவர்கள் ஆகுவீர்கள். தந்தைக்காக உங்களுடைய புத்தியில் அதிகளவு அன்பு இருக்குமளவிற்கு, நீங்கள் மறைமுகமான சந்தோஷத்தால் நிரம்பியிருப்பீர்கள். உங்களுடைய இதயத்தைக் கேட்டுப் பாருங்கள்: எனக்குள் அத்தகைய பாரிய சந்தோஷம் உள்ளதா? நான் கலப்படமற்ற நினைவைக் கொண்டிருக்கின்றேனா? எனக்குள் ஏதாவது ஆசைகள் இருக்கின்றதா? நான் ஒரேயொரு தந்தையை நினைவு செய்கிறேனா? சுயதரிசனச் சக்கரம் தொடர்ந்து சுழலும்போது மட்டுமே ஆத்மாவால் சரீரத்தை விட்டு நீங்க முடியும். வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு சிவபாபாவிற்குச் சொந்தமாகுங்கள். இதுவே இறுதி மந்திரம் ஆகும்.

தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களிடம் வினவுகின்றார்: இனிமையான குழந்தைகளே, நீங்கள் பாப்தாதாவை உங்களின் முன்னால் பார்க்கும்போது, உங்களுடைய பாபாவே உங்களுடைய தந்தையும், உங்களுடைய ஆசிரியரும், சற்குருவும் ஆவார் என்பது உங்களுடைய புத்திகளில் பிரவேசிக்கின்றதா? தந்தை எங்களைப் பழைய உலகில் இருந்து புது உலகிற்கு அழைத்துச் செல்கிறார். இந்தப் பழைய உலகம் இப்போது முடிவடையப் போகிறது. இதில் எந்தவிதப் பயனும் இல்லை. தந்தை ஒவ்வொரு கல்பமும் உலகைப் புதியதாக்குகிறார். நாமும் ஒவ்வொரு கல்பமும் சாதாரண மனிதனில் இருந்து நாராயணன் ஆகுகிறோம். குழந்தைகள் இதைக் கடைந்து, அதிகளவு உற்சாகத்தைக் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளே, இப்போது மிகக் குறுகிய காலமே உள்ளது. நீங்கள் இன்று என்னவாக இருக்கிறீர்கள்? நாளை என்னவாகுவீர்கள்? இது இன்றுக்கும் நாளைக்கும் இடையேயுள்ள விளையாட்டாகும். இதனாலேயே குழந்தைகளான நீங்கள் எந்தவிதத் தவறுகளையும் செய்யக்கூடாது. குழந்தைகளான உங்களுடைய செயல்கள் மிகவும் இராஜரீகமானதாக இருக்க வேண்டும். உங்களையே பார்த்து, உங்களுடைய செயல்கள் தேவர்களைப் போன்றதாக இருக்கிறதா எனப் பாருங்கள். உங்களுடைய தலை (மூளை) தேவர்களைப் போன்றதாக இருக்கிறதா? உங்களுடைய இலக்கைப் போன்று நீங்கள் ஆகுகிறீர்களா? அல்லது நீங்கள் அதைப் பற்றி பேச மட்டுமே செய்கிறீர்களா? நீங்கள் பெற்ற ஞானத்தினால் நீங்கள் போதையுடன் இருக்க வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அகநோக்குடையவராகி இந்த விடயங்களைப் பற்றிச் சிந்திக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். இந்த உலகில் இருந்து அந்த உலகிற்குச் செல்வதற்குச் சிறிதளவு காலமே உள்ளது என்பதைக் குழந்தைகளான நீங்களும் அறிவீர்கள். நீங்கள் இந்த உலகை விட்டு நீங்கியிருக்கும்போது, ஏன் நீங்கள் அதைத் திரும்பிப் பார்க்கிறீர்;கள்? உங்களுடைய புத்தியின் யோகம் ஏன் அந்தத் திசைக்குச் செல்கிறது? நீங்கள் அனைத்தையும் உங்களுடைய புத்தியால் செய்ய வேண்டும். நீங்கள் அப்பால் சென்றிருக்கும்போது, ஏன் உங்களுடைய புத்தி மீண்டும் ஈர்க்கப்படுகிறது? கடந்து சென்ற விடயங்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். இந்தப் பழைய உலகில் எந்தவிதமான எதிர்பார்ப்புகளையும் கொண்டிராதீர்கள். இப்போது, நீங்கள் ஒரேயொரு மேன்மையான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும்: நாங்கள் இப்போது எமது சந்தோஷ பூமிக்குச் செல்ல வேண்டும். நீங்கள் எங்கேயும் நிற்கக்கூடாது அல்லது எங்கேயும் பார்க்கக்கூடாது. தொடர்ந்து முன்னேறுங்கள். தொடர்ந்து ஒரேயொரு திசையில் மட்டும் பாருங்கள். அப்போது மட்டுமே உங்களுடைய ஸ்திதி ஆட்ட, அசைக்க முடியாததாகவும், ஸ்திரமாகவும் ஆகும். காலம் மிகவும் இக்கட்டானதாக ஆகுகிறது. இந்தப் பழைய உலகின் நிலைமைகள் மோசமடைகின்றன. உங்களுக்கு அதனுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இப்போது ஸ்தாபிக்கப்படும் புது உலகத்துடனேயே உங்களுடைய தொடர்பு உள்ளது. இப்போது 84 பிறவிச் சக்கரம் முடிவடைகிறது எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். இந்த உலகம் இப்போது நிச்சயமாக முடிவடையப் போகிறது. இது இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த நேரத்தில், பஞ்சபூதங்களே அதிகளவு கோபம் அடைகின்றன, அதனாலேயே அவை அனைத்தையும் அழிக்கின்றன. பஞ்சபூதங்கள் தமது கோபத்தை மிகக் கடுமையாகக் காட்டி, முழு உலகையும் மூழ்கடிக்கும் என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். வெள்ளப்பெருக்குகள் ஏற்படும். நெருப்பு எரியும். மக்கள் பஞ்சத்தால் தவிப்பார்கள். கட்டடங்கள் அனைத்தும் பூமியதிர்ச்சியால் உடைந்து விழும். முழு உலகிலும் இத்தகைய நிலைமைகள் காணப்படும். பல்வேறுபட்ட வழிமுறைகளில் மரணம் சம்பவிக்கும். அவர்கள் வாயுக் குண்டுகளைப் போடுவார்கள். அவற்றின் நச்சு வாயுக்களால் மக்கள் இறந்து போவார்கள். இந்த முழுமையான நாடகத் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு எவரையும் குறைகூற முடியாது. விநாசம் நிச்சயமாக இடம்பெறப் போகிறது. இதனாலேயே, நீங்கள் உங்களுடைய புத்தியின் யோகத்தை இந்தப் பழைய உலகில் இருந்து நீக்க வேண்டும். இப்போது, நீங்கள் இந்தப் பாதையை உங்களுக்குக் காட்டிய ஒருவருக்கு 'ஆஹா சற்குரு!" என்று கூறவேண்டும். எமது உண்மையான குரு ஒரேயொரு பாபா மட்டுமே ஆவார். அவரின் பெயர் இப்பொழுதும் பக்தி மார்க்கத்தில் நினைவுகூரப்பட்டு புகழப்படுகிறது. குழந்தைகளான நீங்கள், 'ஆஹா சற்குரு! ஆஹா! ஆஹா பாக்கியமே! ஆஹா! ஆஹா நாடகமே! ஆஹா! நாம் தந்தையின் ஞானத்தினூடாக சற்கதியைப் பெறுகிறோம்" எனக் கூறுவீர்கள்.

குழந்தைகளான நீங்கள் உலகில் அமைதியை ஸ்தாபிப்பதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். எனவே, இலக்ஷ்மியும், நாராயணனும் ஆட்சி செய்யும் புதிய பாரதமும், புதிய உலகமும் மீண்டும் ஸ்தாபிக்கப்படுகிறது என்ற நல்ல செய்திகளை அனைவருக்கும் கூறுங்கள். இந்தத் துன்ப உலகம் மாறி சந்தோஷ உலகம் ஆகவேண்டும். அகத்தே, நீங்கள் சந்தோஷ உலகின் அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்குள் இருக்க வேண்டும். அங்கு, உங்களை எவரும் நீங்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறீர்களா அல்லது உங்களுடைய தேகஆரோக்கியம் நன்றாக இருக்கிறதா என்று கேட்க மாட்டார்கள். இந்தக் கேள்விகள் இவ்வுலகிலேயே கேட்கப்படுகின்றன. ஏனெனில் இது துன்ப உலகமாகும். எவரும் குழந்தைகளான உங்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்க முடியாது. 'நாங்கள் கடவுளின் குழந்தைகள். எனவே, எமது நலத்தைப் பற்றி எவ்வாறு நீங்கள் எங்களிடம் கேட்க முடியும்? நாம் எப்போதும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறோம்" என நீங்கள் கூறுவீர்கள். சுவர்க்கத்தை விட இங்கு அதிகளவு சந்தோஷம் உள்ளது. ஏனெனில் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கும் தந்தையைக் கண்டுவிட்டதால், நீங்கள் அனைத்தையும் அடைந்து விட்டீர்கள். நீங்கள் பிரம்ம தத்துவத்தில் வசிக்கும் ஒரேயொரு தந்தையைப் பற்றிய அக்கறையைக் கொண்டிருந்தீர்கள். இப்போது அவரை நீங்கள் கண்டு விட்டதால், வேறு எவரைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும்? நீங்கள் எப்போதும் இந்த போதையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் மிகவும் இராஜரீகமாகவும், மிகவும் இனிமையானவர்களாகவும் இருக்க வேண்டும். உங்களுடைய பாக்கியத்தை மேன்மையானதாக ஆக்;குவதற்குரிய நேரம் இது மட்டுமே ஆகும். பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுவதற்குரிய பிரதானமான வழிமுறையானது, ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையுடன் இருப்பதும், அகநோக்கில் இருப்பதும் ஆகும். எப்போதும் கவனம் செலுத்துங்கள்: 'நான் எத்தகைய செயல்களைச் செய்கிறேனோ, என்னைப் பார்க்கும் மற்றவர்களும் அதையே செய்வார்கள்". சரீர உணர்வு போன்றவை அரைக்கல்பமாக விதைக்கப்பட்ட விகாரங்களின் விதையாகும். இந்த விதைகள் உலகம் முழுவதிலும் விதைக்கப்பட்டுள்ளன. இப்போது அவை அமிழ்ந்து போக வேண்டும். சரீர உணர்வின் விதைகள் விதைக்கப்படக்கூடாது. இப்போது, ஆத்ம உணர்வின் விதைகளே விதைக்கப்பட வேண்டும். இப்போது இது உங்களுடைய ஓய்விற்கான ஸ்திதியாகும். நீங்கள் அதியன்பிற்கினிய தந்தையைக் கண்டு விட்டதால், அவர் மட்டுமே நினைவு செய்யப்பட வேண்டும். தந்தைக்குப் பதிலாக, உங்களுடைய சரீரத்தையும், சரீரதாரிகளையும் நினைவு செய்தல் தவறாகும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாகி சாந்தமானவர்கள் ஆகுவதற்கும் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும்.

இனிய குழந்தைகளே, நீங்கள் ஒருபோதும் உங்களுடைய இந்த வாழ்க்கையை இட்டு மனவுளைச்சல் அடையக்கூடாது. இந்த வாழ்க்கை விலைமதிப்பற்றது என்று நினைவுகூரப்படுகிறது. நீங்கள் அதைப் பராமரிப்பதுடன், வருமானத்தையும் சம்பாதிக்க வேண்டும். நீங்கள் இங்கு எத்தனை நாட்கள் தங்கியிருந்தாலும், நீங்கள் தொடர்ந்து தந்தையை நினைவு செய்வதுடன், அதிகளவு வருமானத்தையும் சம்பாதிப்பீர்கள். உங்களுடைய கர்மக்கணக்குகளும் தொடர்ந்து தீர்க்கப்படும். எனவே, ஒருபோதும் மனவிரக்தி அடையாதீர்கள். குழந்தைகள் கேட்கிறார்கள்: பாபா, எப்போது சத்தியயுகம் வரும்? பாபா கூறுகிறார்: குழந்தைகளே, அனைத்திற்கும் முதலில், குறைந்தபட்சம் உங்களுடைய ஸ்திதியைக் கர்மாதீத் ஆக்குங்கள். உங்களுக்கு எவ்வளவு நேரம் இருக்கிறதோ, அதில் கர்மாதீத் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். பற்றினை அழித்தவர்கள் ஆகுவதற்குக் குழந்தைகளுக்கு அதிகளவு தைரியம் வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்களுடைய முழுமையான ஆஸ்தியைக் கோர விரும்பினால், நீங்கள் பற்றினை அழித்தவர் ஆகவேண்டும். நீங்கள் உங்களுடைய ஸ்திதியை மிகவும் மேன்மையானதாக்க வேண்டும். நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்கள். எனவே, நீங்கள் தந்தையின் அலௌகீக சேவையில் ஈடுபட வேண்டும். மிகவும் இனிமையான சுபாவம் தேவைப்படுகிறது. சுபாவமே மக்களை அதிகளவில் துன்புறுத்துகிறது. நீங்கள் பெற்றுள்ள மூன்றாவது ஞானக்கண்ணால் தொடர்ந்து உங்களைச் சோதித்துப் பாருங்கள். உங்களுக்குள் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், அவற்றை நீக்கி, ஒரு தூய்மையான வைரம் ஆகுங்கள். சிறிதளவு குறைபாடு காணப்பட்டாலும், உங்களுடைய பெறுமதி குறைவடைகிறது. எனவே, முயற்சி செய்து, உங்களைப் பெறுமதி வாய்ந்த வைரம் ஆக்கிக் கொள்ளுங்கள்.

புதிய உலகுடன் உங்கள் உறவுமுறைகள் மற்றும் தொடர்பில் முயற்சி செய்வதற்குத் தந்தை இப்போது உங்களைத் தூண்டுகிறார். இனிய குழந்தைகளே, இப்போது எல்லையற்ற தந்தையுடனும், எல்லையற்ற சந்தோஷ ஆஸ்தியுடனும் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரேயொரு எல்லையற்ற தந்தையே உங்களைப் பந்தனத்தில் இருந்து விடுவித்து, அலௌகீக உறவுமுறைகளை ஏற்படுத்தித் தருகிறார். நீங்கள் இறை உறவுமுறைகளைக் கொண்டிருப்பவர்கள் என்ற விழிப்புணர்வை எப்போதும் கொண்டிருங்கள்.இந்த இறை உறவுமுறைகள் சதா சந்தோஷத்தை ஏற்படுத்துகின்றன. அச்சா.

இனிமையிலும் இனிமையான, நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் அதியன்பிற்குரிய குழந்தைகளுக்கும், ஆழ்ந்த அன்பைக் கொண்டுள்ள குழந்தைகளுக்கும், தாயும் தந்தையுமான பாப்தாதாவிடமிருந்து அதிகளவு அன்புடன் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நினைவுகளும் உரித்தாகட்டும். காலை வணக்கம். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

அவ்யக்த பாப்தாதாவின் இனிய மேன்மையான வாசகங்கள் (மீட்டல்):
வெற்றி சொரூபமாக ஆகுவதற்கு, இரண்டு பிரதான சிறப்பியல்புகள் உங்களுக்குத் தேவையாகும் - முதலாவது தூய்மையாகும். இரண்டாவது ஒற்றுமை ஆகும். தூய்மையில் குறைபாடு இருக்குமாயின், ஒற்றுமையிலும் குறைபாடு இருக்கும். தூய்மை என்றால் வெறும் பிரம்மச்சரியம் மட்டுமல்ல, உங்கள் எண்ணங்கள், சுபாவம், சம்ஸ்காரங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். உதாரணமாக, பொறாமையின் அல்லது வெறுப்பின் எண்ணங்கள் இருக்குமாயின், அது தூய்மையல்ல. அது தூய்மையின்மை எனப்படும். எந்த ஒரு விகாரத்தினதும் சுவடு சற்றேனும் இல்லாதிருப்பதே தூய்மையின் வரைவிலக்கணமாகும். உங்கள் எண்ணத்திலேனும் எவ்வகையான தூய்மையின்மைமையும் இல்லாதிருக்கட்டும். குழந்தைகளாகிய நீங்கள் அதியுயர் பணியினை நிறைவுசெய்வதற்கு கருவிகள் ஆகி உள்ளீர்கள். நீங்கள் மகாரத்திகளின் வடிவில் கருவிகள் ஆகியுள்ளீர்கள், அல்லவா? நீங்கள் ஒரு பட்டியலை தயாரிப்பீர்களாயின், சேவைசெய்பவர்கள் மற்றும் சேவைக்கு கருவிகள் ஆகியுள்ள பிராமண குழந்தைகள் மாத்திரமே மகாரத்திகளின் பட்டியலில் இடம்பெறுவார்கள். எந்தளவிற்கு நீங்கள் மகாரத்தி என்ற சிறப்பியல்பை விருத்தி செய்திருக்கிறீர்கள்? இதனையிட்டு, உங்கள் ஒவ்வொருவருக்குமே உங்களைப் பற்றித் தெரியும். மகாரத்திகள் பட்டியலில் இடம்பெறுபவர்கள்: எதிர்காலத்திலும் அவர்கள் மகாரத்திகள் பட்டியலில் நீடித்திருப்பார்களா அல்லது தற்போதைய மகாரத்திகள் பட்டியலில் மாத்திரமா? இந்த இரண்டு விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஒற்றுமை என்றால் சம்ஸ்காரங்களினதும் சுபாவங்களினதும் ஒற்றுமையாகும். ஒருவரது சம்ஸ்காரங்களும் சுபாவமும் இசையாதிருப்பின் இயன்றளவு அவற்றை இசைவடையச் செய்யுங்கள் - இதுவே ஒற்றுமையாகும். ஒரு ஒன்றுகூடல் மாத்திரம் ஒற்றுமை என்று அழைக்கப்படுவதில்லை. இந்த இரண்டு விடயங்களும் இல்லாவிடின், சேவைக்கான கருவி ஆத்மாக்களால் எல்லையற்ற சேவைக்கு கருவிகள் ஆக முடியாது. எல்லைக்குட்பட்ட சேவையி;ல் அவர்கள் இவ்வாறாக ஆக முடியும், ஆனால் எல்லையற்ற சேவைக்கு இந்த இரண்டு விடயங்களும் தேவையாகும். நடனம் ஆடும் போதிலும், அனைவரும் ~ஒரே அடியாக” எடுத்து வைத்தால் மட்டுமே அது ~ஆஹா ஆஹா! வாக இருக்கும் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. எனவே, இங்கும், ~ஒரே அடியாக| எடுத்து வைப்பது என்றால், ஒரு நடனத்தில் இசைந்திருப்பது என்றே அர்த்தமாகும். ஞானம் பேசுகின்ற இவர்கள் அனைவரும் ஒன்றையே பேசுகின்றார்கள் அவர்கள் ஒரே தலைப்பையும், ஒரே வார்த்தையையுமே பயன்படுத்துகிறார்;கள் என்றே அனைவரது உதடுகளிருந்தும் வெளிப்பட வேண்டும். அப்படித்தானே? அவ்வாறாகவே, அனைவரதும் சுபாவமும் சம்ஸ்காரங்களும் இசைந்திருக்கும் போது அதனையே ஒற்றுமையாக இருப்பது என்று அழைக்க முடியும். இதற்காகவும் ஒரு திட்டத்தை கொண்டிருங்கள்.

எந்த ஒரு பலவீனமும் முடிவடைவதற்கு, குறிப்பாக மகா காளி வடிவிலான சக்திகளின் ஒன்றுகூடல் அவசியமாகும், அவர்களின் யோக அக்கினியின் தாக்கத்தினால் மாத்திரமே பலவீனமான சூழலை மாற்ற முடியும். இப்பொழுது, நாடகத்திற்கு ஏற்ப, இறுதி பெறுபேறு, ஒவ்வொருவரதும் செயல்கள் என்ற கண்ணாடியில் தெளிவாகத் தெரியும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்கையில், மகாரத்தி குழந்தைகளால், தமது ஞான சக்தியினால் ஒவ்வொருவரின் கர்மாவையும் அவர்களின் முகங்களின் ஊடாகவே அவர்களால் பார்க்க முடியும். தூய்மையற்ற ஏதேனும் சமைக்கப்படும் போது, அதன் வாசனையை கொண்டே அதனை இனங்கண்டுவிட முடியும். அவ்வாறே, ஆத்மாக்கள் தூய்மையற்ற எண்ணங்களைக் கொண்டிருக்கும் போது, அந்த அதிர்வலைகளினூடாக, உங்கள் புத்தி தெளிவான தொடுகைகளை பெற்றுக் கொள்ளும். புத்தியின் தெளிவான ரேகையே இதற்கு கருவியாக இருக்கும். இந்த சக்திமிக்க ஆயுதத்தைக் கொண்டிருப்பவர்களால் இதனை இலகுவாக பிரித்தறிய முடியும்.

சக்திகளினதும் தேவர்களினதும் உயிரற்ற விக்கிரகங்களில், இந்த சிறப்பியல்புள்ளது: அதாவது எந்த பாவ ஆத்மாவினாலும் தனது பாவத்தை, இவற்றின் முன்னால் மறைத்து விட முடியாது. அவர்கள் இதனைப்பற்றி தொடர்ந்தும் பேசி, நீங்கள் இவ்வாறானவர்கள் எனக் கூறுகிறார்கள். எனவே, இந்த சிறப்பியல்பை, இப்பொழுதும், இந்த இறுதி கணங்களிலும் உங்கள் உயிரற்ற ஞாபகார்த்தங்களில் பார்க்க முடிகின்றது. உயிருள்ள வடிவில் சக்திகளின் இந்தச் சிறப்பியல்பு மிகவும் பிரபல்யமாக இருந்;தாலேயே, அவை ஞாபகார்த்தங்களிலும் காட்டப்படுகின்றன. இதுவே மாஸ்டர் ஜனின்ஜனன்ஹராக (அனைத்தும் அறிந்தவர்) இருப்பதன் ஸ்திதியாகும். அதாவது, ஞானம் நிறைந்தவராக இருக்கின்ற ஸ்திதியாகும். இந்த ஸ்திதியும் நடைமுறைரீதியாக அனுபவம் செய்யப்படும். இது அனுபவம் செய்யப்பட்டது என்பதுடன் இனியும் அனுபவம் செய்யப்படும். அத்தகைய ஒன்றுகூடலை உருவாக்கிவிட்டீர்களா? அது நிச்சயமாக உருவாக்கப்படும். தந்தையை ஒவ்வொரு அடியிலும் வெளிப்படுத்தக் கூடிய அத்தகைய விட்டில் பூச்சிகளின் ஒன்றுகூடலே தேவையாகும், அச்சா.

ஆசீர்வாதம்:
ஆசீர்வாதம்: சதா அன்பில் மூழ்கியுள்ளவராகவும் சேவை செய்யும் போது, நினைவின் அனுபவங்களில் விரைந்தோடும் ஓர் ஆத்மாவாகவும் ஆகுவீர்களாக.

நீங்கள் நினைவில் நிலைத்திருக்கிறீர்கள், ஆனால் இப்பொழுது அந்த நினைவினால் பெறுகின்ற பேறுகளின் அனுபவங்களை தொடர்ந்தும் அதிகரித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது விசேடமாக நேரத்தை ஒதுக்கி, இதில் கவனம் செலுத்துங்கள், அப்பொழுது நீங்கள் அன்பில் மூழ்கியிருப்பவரும் அனுபவக் கடலில் திளைத்திருப்பவரும் என இனங்காணப்படுவீர்கள். அந்தச் சூழலில் நீங்கள் தூய்மையையும் அமைதியையும் உணர்வதைப் போன்று நீங்கள் அன்பில் மூழ்கியுள்ள ஒரு மேன்மையான யோகி ஆத்மா என்பதும் அனுபவம் செய்யப்படட்டும். ஞானத்தின் தாக்கம் உள்ளது, ஆனால் நீங்கள் யோகத்தின் வெற்றி சொரூபமாக இருப்பதன் தாக்கமும் இருக்கட்டும். சேவை செய்யும் போது, நினைவின் அனுபவத்தில் திளைத்திருப்பதுடன் நினைவு யாத்திரையின் விரைந்தோடும் அனுபவங்களையும் கொண்டிருங்கள்.

சுலோகம்:
இங்கேயே, இப்பொழுதே வெற்றியை ஏற்றுக் கொள்வதாயின், எதிர்கால வெகுமதியை முடித்துவிடுவது என்று அர்த்தமாகும்.


இந்த அவ்யக்த் மாதத்தில் அவ்யக்த் ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேடமான வீட்டுவேலை.
நம்பிக்கையினதும் ஆன்மீகப் போதையினதும் அடிப்படையில், தந்தை பிரம்மா உத்தரவாதம் அளிக்கப்பட்ட விதியை அறிந்து கொண்டு, ஒரு விநாடியில் அனைத்தையும் பயனுள்ள முறையில் உபயோகித்தார். அவர் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை. எனவே, அனைத்தையும் பயனுள்ள முறையில் உபயோகிப்பதே அன்பின் அடையாளமாகும். எதையாவது பயனுள்ள முறையில் உபயோகிப்பதெனில், அதை மேன்மையான நோக்கத்திற்காக உபயோகிப்பதாகும்.