26.01.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    13.11.85     Om Shanti     Madhuban


உங்களின் எண்ணங்கள், சம்ஸ்காரங்கள், உறவுமுறைகள்,
வார்த்தைகள், செயல்களில் புதுமையை ஏற்படுத்துதல்.


இன்று, புதிய உலகப் படைப்பின் படைப்பாளரான தந்தை, புதிய உலகிற்கு உரிமையுள்ள தனது குழந்தைகளைப் பார்க்கிறார். அதாவது, அவர் தனது புதிய படைப்பைப் பார்க்கிறார். புதிய படைப்பு எப்போதும் விரும்பப்படுகிறது. உலகைப் பொறுத்தவரை, மக்கள் பழைய யுகத்தில் புது வருடத்தைக் கொண்டாடுகிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் புதிய யுகத்தையும் புதிய படைப்பின் புதிய வாழ்க்கையையும் அனுபவம் செய்கிறீர்கள். அனைத்தும் புதியதாகி உள்ளது. பழையவை அனைத்தும் முடிந்துவிட்டன. புதிய பிறவி, புதிய வாழ்க்கை ஆரம்பம் ஆகியுள்ளது. உங்களுக்குப் புதிய பிறவி கிடைக்கும்போது, அந்தப் பிறவியுடன் இயல்பாகவே உங்களின் வாழ்க்கையும் மாறுகிறது. ‘வாழ்க்கை மாறுகிறது’ என்றால் உங்களின் எண்ணங்கள்,சம்ஸ்காரங்கள், உறவுமுறைகள் அனைத்தும் மாறுகின்றன என்று அர்த்தம். அதாவது, அவை புதிதாகி உள்ளன. உங்களின் தர்மம் புதியது. உங்களின் செயல்கள் புதியவை. அவர்கள் பொதுவாக புது வருடம் என்று சொல்கிறார்கள். ஆனால், உங்கள் அனைவருக்கும், அனைத்தும் புதிதாகி உள்ளன. இன்று, அமிர்தவேளையில் இருந்து, நீங்கள் புது வருடத்திற்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். நீங்கள் வெறுமனே வார்த்தைகளால் பாராட்டுக்களைத் தெரிவித்தீர்களா? அல்லது உங்களின் மனங்களால் பாராட்டுக்களைத் தெரிவித்தீர்களா? புதுமைக்கான எண்ணத்தை நீங்கள் கொண்டிருந்தீர்களா? எண்ணங்கள், சம்ஸ்காரங்கள், உறவுமுறைகள் என்ற இந்த மூன்று விசேடமானவற்றிலும் புதுமைக்கான எண்ணத்தை நீங்கள் கொண்டிருந்தீர்களா? உங்களின் எண்ணங்களும் சம்ஸ்காரங்களும் புதியது ஆகுவதெனில், அவை மேன்மையானவை ஆகவேண்டும். புதிய பிறப்பும் புதிய வாழ்க்கையும் உங்களிடம் இருப்பதனால், பழைய பிறப்பின் அல்லது பழைய பிறவியின் சம்ஸ்காரங்களும் உறவுமுறைகளும் இப்போதும் நிலைத்திருப்பதில்லை, அல்லவா? இந்த மூன்று விடயங்களிலும் பழையதின் சிறிதளவு சுவடேனும் எஞ்சியிருந்தால், அந்தச் சுவடு, புதிய வாழ்க்கை, புதிய யுகம், புதிய உறவுமுறைகள், புதிய சம்ஸ்காரங்களின் பேறுகளையும் சந்தோஷத்தையும் இல்லாமல் செய்துவிடும். பல குழந்தைகள் தமது இதயபூர்வமான உரையாடலின் போது பாப்தாதாவிடம் தமது மனங்களில் உள்ள இந்த விடயங்களைப் பற்றித் தொடர்ந்து சொல்கிறார்கள். அவர்கள் அவற்றை வார்த்தைகளால் கூறுவதில்லை. நீங்கள் நலமா? என யாராவது கேட்டால், புறத்தே, நாம் மிக நன்றாக இருக்கிறோம் என்றே அவர்கள் பதில் அளிக்கிறார்கள். ஏனெனில், புற நோக்குடைய ஆத்மாக்களுக்கு அகத்தைப் பற்றி என்ன தெரியும்? என அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், தமது இதயபூர்வமான உரையாடல்களின் போது தந்தையிடமிருந்து அவர்களால் அவற்றை மறைக்க முடியாது. தமது மனங்களின் உரையாடலின்போது, அவர்கள் நிச்சயமாக, ‘நான் ஒரு பிராமணர் ஆகியுள்ளேன். நான் சூத்திரன் என்ற நிலையில் இருந்து அப்பால் விலகிவிட்டேன்’ எனக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், பிராமண வாழ்க்கையில் நான் பெற வேண்டிய விசேட அனுபவங்களான மகத்துவத்தையும் சிறப்பியல்பையும், அதி மேன்மையான பேறுகள் அனைத்தையும், அதீந்திரிய சுகத்தையும், இலேசான ஒளியான தேவதை வாழ்க்கையையும் நான் அதிகளவில் அனுபவம் செய்வதில்லை. இந்த மேன்மையான யுகத்தின் மேன்மையான வாழ்க்கையைப் பற்றி அவர்கள் என்ன கூறுகிறார்களோ, அவர்கள் அந்த அனுபவத்தையும் அந்த ஸ்திதியையும் மிகக் குறுகிய காலத்திற்கே அனுபவம் செய்கிறார்கள். இதற்கான காரணம் என்ன? நீங்கள் பிராமணர்கள் ஆகியதும், ஏன் உங்களால் பிராமண வாழ்க்கையின் உரிமைகளை அனுபவம் செய்ய முடிவதில்லை? நீங்கள் அரசரின் குழந்தையாக இருந்து, யாசகரின் சம்ஸ்காரங்களைக் கொண்டிருந்தால், அதைப் பற்றி என்னவென்று சொல்வது? உங்களை ஓர் இளவரசன் என்று அழைக்க முடியுமா? இங்கும், உங்களுக்குப் புதிய பிறவியும், புதிய பிராமண வாழ்க்கையும் கிடைத்தும், பழைய எண்ணங்களும் பழைய சம்ஸ்காரங்களும் இன்னமும் உங்களின் செயல்களில் வெளிப்பட்டால், உங்களை ஒரு பிரம்மகுமார் என்று அழைக்க முடியுமா? அல்லது, உங்களை அரைச் சூத்திர குமார் என்றும் அரை பிரம்மகுமார் என்றும் அழைப்பதா? உங்களுடைய ஒரு நாடகத்தில் நீங்கள் அரைவாசி இருட்டாகவும் அரைவாசி ஒளியாகவும் இருப்பதாகக் காட்டுகிறீர்கள். இது சங்கமயுகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, அல்லவா? சங்கமயுகம் என்றால் புதிய யுகம் என்று அர்த்தம். புதிய யுகத்தில், அனைத்தும் புதியதே.

இன்று, பாப்தாதா அனைவரின் ஒலிகளையும் கேட்டார்: புது வருடத்திற்கான வாழ்த்துக்கள். நீங்கள் வாழ்த்து மடல்களை அனுப்புகிறீர்கள். கடிதங்கள் எழுதுகிறீர்கள். ஆனால், நீங்கள் கூறுவதும் செய்வதும் ஒன்றாக உள்ளதா? நீங்கள் வாழ்த்துக்களை மிக நன்றாகக் கொடுத்தீர்கள். பாப்தாதாவும் உங்களைப் பாராட்டுகிறார். அனைவரின் வார்த்தைகளும் அழியாதவை ஆகட்டும் என்ற ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! என பாப்தாதாவும் கூறுகிறார். உங்களின் வாயில் ஒரு ரோஜா இருப்பதாக! என நீங்கள் அனைவரும் சொல்கிறீர்கள். (நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆகட்டும்!) பாப்தாதா கூறுகிறார்: உங்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளில் அழியாத ஆசீர்வாதம் இருப்பதாக! இன்றில் இருந்து, ‘புதியது’ என்ற ஒரு வார்த்தையை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் என்ன எண்ணங்களை உருவாக்கினாலும், என்ன வார்த்தைகளைப் பேசினாலும், என்ன செயல்களைச் செய்தாலும், அவை புதியவையா எனச் சோதித்துப் பாருங்கள். இன்றில் இருந்து, இந்தக் கணக்குப் புத்தகத்தை, அட்டவணையை அல்லது பதிவேட்டினை ஆரம்பியுங்கள். தீபாவளியின் போது நீங்கள் கணக்குப் புத்தகங்களில் என்ன செய்வீர்கள்? அவற்றில் ஒரு சுவஸ்திகாவை வரைவீர்கள், அல்லவா? சுவஸ்திகாவை கணேஷ் என்றும் அழைப்பார்கள். அந்த சுவஸ்திகாவின் நான்கு பிரிவுகளிலும் நீங்கள் நிச்சயமாக ஒரு புள்ளியை வைப்பீர்கள். ஏன் அவ்வாறு புள்ளி வைக்கிறீர்கள்? எந்தவொரு பணியை ஆரம்பிக்கும் வேளையிலும், நிச்சயமாக நீங்கள் ஒரு சுவஸ்திகாவை வரைந்து, ‘கணேஷிற்கு வணக்கங்கள்’ எனக் கூறுகிறீர்கள். இது யாரின் ஞாபகார்த்தம்? ஏன் சுவஸ்திகா கணேஷ் என்று அழைக்கப்படுகிறது? சுவஸ்திகா என்பது உங்களின் சொந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதையும் படைப்பு முழுவதன் ஞானத்தையும் கொண்டிருப்பதையும் குறிக்கிறது. கணேஷ் என்றால் ஞானம் நிறைந்தவர் என்று அர்த்தம். சுவஸ்திகா என்ற ஒரு படத்தில் ஞானம் முழுவதும் அடங்கியுள்ளது. அவர்கள் கணேஷ் அல்லது சுவஸ்திகாவை ஞானம் நிறைந்தவராக இருப்பதன் விழிப்புணர்வின் ஞாபகார்த்தமாகக் காட்டுகிறார்கள். அதன் அர்த்தம் என்ன? எந்தவொரு பணியிலும் வெற்றி பெறுவதன் அடிப்படை, ஞானம் நிறைந்தவராக இருத்தல், அதாவது, விவேகியாகவும் ஞானத்தின் சொரூபமாகவும் இருப்பதே ஆகும். நீங்கள் விவேகியாகவும் ஞானம் நிறைந்தவராகவும் இருந்தால், ஒவ்வொரு செயலும் மேன்மையாகவும் வெற்றி நிறைந்ததாகவும் இருக்கும், அல்லவா? அவர்களோ வெறுமனே இந்த அடையாளத்தை ஒரு ஞாபகார்த்தமாகக் கடதாசியில் வரைகிறார்கள். ஆனால், பிராமண ஆத்மாக்களான நீங்களோ, ஒவ்வோர் எண்ணத்தையும் ஞானம் நிறைந்தவராக இருந்தவண்ணம் உருவாக்குகிறீர்கள். அதனால், நீங்கள் அந்த எண்ணங்களையும் அந்த வெற்றியையும் ஒரே வேளையில் அனுபவம் செய்வீர்கள். எனவே, இன்றில் இருந்து, இந்தத் திடசங்கற்பத்தின் நிறத்தினால், ஒவ்வோர் எண்ணமும் சம்ஸ்காரமும் உங்களின் வாழ்க்கை எனும் கணக்குப் புத்தகங்களில் புதியதாக இருக்க வேண்டும். அது ஏதாவதொரு வேளையில் நிகழும் என்பதல்ல. அது நிச்சயமாக நிகழும்! உங்களின் ஆதி ஸ்திதியில் ஸ்திரமானவராகி, இதைச் செய்யுங்கள். அதாவது, இதை இப்போதே ஆரம்பியுங்கள். (எந்தவொரு புண்ணிய பணியை ஆரம்பிக்கும்போதும் ஸ்ரீ கணேஷை நினைத்து, சுவஸ்திகாவை வரைதல்) நீங்களே ஸ்ரீ கணேஷ் ஆகி, அதை ஆரம்பியுங்கள். இது எல்லா வேளையும் நிகழும் என நினைக்காதீர்கள். நீங்கள் பல தடவைகள் ஓர் எண்ணத்தை உருவாக்குகிறீர்கள். ஆனால் அந்த எண்ணம் திடசங்கற்பமாக இருக்க வேண்டும். ஓர் அத்திவாரத்தை சிமெந்தைப் பயன்படுத்தி வலிமையானது ஆக்குவார்கள், அல்லவா? நீங்கள் மண்ணால் அத்திவாரம் இட்டால், அது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்? எனவே, உங்களுக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டால், ‘நான் அதை முயற்சி செய்து பார்க்கிறேன்’ அல்லது ‘என்னால் முடிந்தளவிற்கு நான் அதைச் செய்கிறேன்’ ‘மற்றவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்’ என நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் இந்த மண்ணை அதனுள் கலக்கிறீர்கள். அதனால், அத்திவாரம் பலம் வாய்ந்ததாக ஆகுவதில்லை. மற்றவர்களைப் பார்ப்பது இலகுவானது. தன்னையே பார்ப்பதற்குச் சிறிதளவு முயற்சி தேவைப்படும். நீங்கள் மற்றவர்களைப் பார்க்க வேண்டும் என்றால், உங்களின் அந்தப் பழக்கத்தினால் கட்டாயத்திற்கு உள்ளாகினால், தந்தை பிரம்மாவைப் பாருங்கள். அவரும் இன்னொருவரே. இதனாலேயே, பாப்தாதா தீபாவளியின் போது உங்களின் அட்டவணைகளைப் பார்த்தார். அந்த அட்டவணைகளில் பாப்தாதா கண்ட பிரதானமான விடயம் என்னவென்றால், பிராமணர்கள் ஆகிய பின்னரும், நீங்கள் பிராமண வாழ்க்கையை அனுபவம் செய்வதில்லை. நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களால் அனுபவம் செய்ய முடியாதிருக்கும். இதற்கான பிரதானமான காரணம் என்னவென்றால், உங்களின் பார்வை எப்போதும் மற்றவர்களைப் பார்ப்பதும் (பார் திருஷ்டி), நீங்கள் எப்போதும் மற்றவர்களைப் பற்றிச் சிந்திப்பதும் (பார் சிந்தன்), மற்றவர்களின் விடயங்களில் நீங்கள் ஈடுபடுவதுமே (பார் பான்ச்) ஆகும். நீங்கள் அதிகளவில் புற விடயங்களைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள், பேசுகிறீர்கள்;. ஆகவே, இப்போது சுய தரிசனச் சக்கரதாரிகள் ஆகுங்கள். உங்களில் (சுவ) கவனம் செலுத்துவதன் மூலம், மற்றவர்களில் கவனம் செலுத்துதல் (பார்) முடிவிற்கு வந்துவிடும். இன்று நீங்கள் அனைவரும் ஒன்றாகப் புது வருடத்திற்கான வாழ்த்துக்களைத் தெரிவித்ததைப் போன்று, நீங்கள் இயல்பாகவே ஒவ்வொரு நாளையும் புதிய நாளாகவும், புதிய வாழ்க்கையையும் புதிய எண்ணங்களையும் புதிய சம்ஸ்காரங்களையும் கொண்டிருப்பவர்களாக அனுபவம் செய்வீர்கள். தந்தைக்கும் பிராமணக் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தூய உற்சாகம், இயல்பாகவே தொடர்ந்து ஒவ்வொரு கணமும் உங்களின் மனங்களில் இருந்து வெளிப்படும். அனைவரின் திருஷ்டியிலும் பாராட்டுக்களினதும் வாழ்த்துக்களினதும் அலையொன்று பரவும். எனவே, இன்று, ‘வாழ்த்துக்கள்’ என்ற வார்த்தையை அழியாதது ஆக்குங்கள். உங்களுக்குப் புரிகிறதா? மக்கள் தமது அட்டவணைகளைப் பேணுவார்கள். தந்தை உங்களின் அட்டவணைகளைக் கண்டார். பாப்தாதா குழந்தைகளான உங்களின் மீது கனிவு கொள்கிறார். ஏனெனில், உங்களால் அனைத்தையும் பெற முடிந்தாலும், நீங்கள் எடுத்துக் கொள்வது நிறைவாக இருப்பதில்லை. பிரம்மாகுமார்கள் மற்றும் பிரம்மகுமாரிகள் என்ற புதிய பெயர் உங்களுக்கு உள்ளது. அவ்வாறாயின், ஏன் நீங்கள் செய்வதில் எதையாவது கலக்கிறீர்கள்? நீங்கள் அருள்பவரினதும் பாக்கியத்தை அருள்பவரினதும் ஆசீர்வாதங்களை அருள்பவரினதும் குழந்தைகள். எனவே, புதிய வருடத்தில் நீங்கள் எதை நினைப்பீர்கள்? நீங்கள் செய்யும் அனைத்தும் புதியதாக இருக்க வேண்டும். அதாவது, பிராமண வாழ்க்கையின் ஒழுக்கக் கோட்பாடுகள் அனைத்தும் புதியவையாக இருக்க வேண்டும். புதியது என்றால் எந்தவிதக் கலப்படமும் இருக்கக்கூடாது. நீங்கள் மிகவும் கெட்டிக்காரர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தந்தைக்கும் கற்பிக்க ஆரம்பித்து விட்டீர்கள். சில குழந்தைகள் கூறுகிறார்கள்: நாங்கள் ஏதாவது புதியதாகச் செய்ய வேண்டும் என பாபா கூறினார். எனவே, நாங்கள் இந்தப் புதியதைச் செய்கிறோம். எவ்வாறாயினும், அது பிராமண வாழ்க்கையின் ஒழுக்கக் கோட்பாடுகளுக்கேற்ப புதியதாக இருக்க வேண்டும். உங்களின் பிராமண வாழ்க்கைக்கு அல்லது பிராமணப் பிறப்பிற்கான ஒழுக்கக் கோட்பாடுகளுக்கான கோட்டை பாப்தாதா வரைந்துள்ளார். நீங்கள் எவ்வாறு புது வருடத்தைக் கொண்டாட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? பதினெட்டாம் அத்தியாயம் இப்போது ஆரம்பம் ஆகுகிறது என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

பொன்விழாவிற்கு முன்னர், இது உலகப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆகும். இங்கு 50 வருடங்கள் இருப்பவர்களுக்கு மட்டுமே பொன்விழா என நினைக்காதீர்கள். இது இறைபணியின் பொன்விழா ஆகும். ஸ்தாபனைப் பணியில் ஒத்துழைக்கும் அனைவரும் - அவர்கள் ஞானத்தில் 2 வருடங்கள் இருந்தாலென்ன அல்லது 50 வருடங்கள் இருந்தாலென்ன – 2 வருடங்கள் ஞானத்தில் இருப்பவர்களும் உங்களை பிரம்மகுமார்கள் என்றே அழைக்கிறீர்கள், அப்படியல்லவா? அல்லது உங்களுக்கு வேறொரு பெயர் உள்ளதா? எனவே, இது பிரம்மாவின் படைப்பான பிராமணர்களின் பொன்விழா ஆகும். அதனால், சகல பிரம்மகுமார்களும் பிரம்மகுமாரிகளும் இதில் அடங்குவார்கள். நீங்கள் பொன்விழாவை அடையும்வரை, உங்களில் சத்தியயுக, சதோபிரதான் எண்ணங்களையும் சம்ஸ்காரங்களையும் வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் இத்தகைய பொன்விழாவையே கொண்டாட வேண்டும். நீங்கள் இதைப் பெயரளவில் நடைமுறை வழக்கங்களுக்கேற்பக் கொண்டாடுகிறீர்கள். ஆனால், உண்மையான பொன்விழா என்பது நீங்கள் தங்க யுகத்திற்குரியவர் ஆகும் விழா ஆகும். பணி வெற்றிகரமாக முடிந்தது என்றால், அந்தப் பணிக்குக் கருவிகள் ஆகியவர்கள் வெற்றி சொரூபங்கள் ஆகியுள்ளார்கள் என்று அர்த்தம். இப்போதும் நேரம் உள்ளது. இந்த மூன்று மாதங்களில், ஒரு தனித்துவமான பொன்விழாவைக் கொண்டாடி, அதை உலக மேடையில் காட்டுங்கள். உலக மக்கள் அந்த கௌரவத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கு, நீங்கள் சமநிலைக்குரிய ஸ்திதியை வெளிப்படுத்த வேண்டும். அவர்களைக் கௌரவப்படுத்துவதற்கு நீங்கள் எதைச் செய்தாலும், அது பெயரளவிலேயே. நீங்கள் நிஜத்தை உலகிற்குக் காட்ட வேண்டும்: நாங்கள் அனைவரும் ஒன்றே. நாம் ஒரேயொருவருக்கே சொந்தமானவர்கள். எம்மிடம் நிலையான, ஸ்திரமான ஸ்திதி உள்ளது. நாம் ஒரேயொருவரின் அன்பில் மூழ்கியிருப்பவர்கள். ஒரேயொருவரின் பெயரை வெளிப்படுத்துபவர்கள். எனவே, உங்களின் பொன்னான ஸ்திதியின் இந்தத் தனித்துவமான, அழகான கொடியை ஏற்றுங்கள். உங்களின் கண்களிலும் உங்களின் வார்த்தைகளினூடாகவும் செயல்களினூடாகவும் பொன்னுலகின் காட்சிகள் தெளிவாகப் புலப்பட வேண்டும். இத்தகையதொரு பொன்விழாவைக் கொண்டாடுங்கள். அச்சா.

இத்;தகைய அழியாத பாராட்டுக்களுக்குத் தகுதிவாய்ந்த மேன்மையான குழந்தைகளுக்கும், தமது ஒவ்வோர் எண்ணத்தினூடாகவும் செயலினூடாகவும் புதிய உலகின் காட்சியை வழங்கும் குழந்தைகளுக்கும், தமது சத்திய யுக ஸ்திதியினூடாக, பொன்னுலகம் வரவுள்ளது என்ற தூய நம்பிக்கைத் தீபத்தை உலகிலுள்ள ஆத்மாக்களில் ஏற்றி வைப்பவர்களுக்கும், சதா பிரகாசிக்கும் நட்சத்திரங்களுக்கும், வெற்றி தீபங்களுக்கும், தமது திடசங்கற்பத்தால் புதிய வாழ்க்கைக்கான காட்சிகளை அருளும் ரூபங்களான குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும். அத்துடன் அழியாத வாழ்த்துக்களுடனும் அழியாத ஆசீர்வாதங்களுடனும் நமஸ்தே.

அமைதிப் பேரணியில் பாதசாரிகளாகவும் சைக்கிளிலும் கலந்துகொண்டவர்களை அவ்யக்த பாப்தாதா சந்திக்கிறார்.
நீங்கள் அனைவரும் அமைதிப் பேரணியால் சேவை செய்தீர்கள். நீங்கள் செய்த சேவை அனைத்தினதும் நடைமுறைப் பலனையும் நீங்கள் அனுபவம் செய்தீர்கள். நீங்கள் அந்தச் சேவையின் விசேடமான சந்தோஷத்தை அனுபவம் செய்தீர்கள், அல்லவா? நீங்கள் நடந்து சென்று அமைதிப் பேரணியை நடத்தினீர்கள். அனைவரும் உங்களை அந்தப் பேரணியில் பங்களிப்பவர்களாகவே பார்த்தார்கள். இப்போது, அவர்கள் உங்களை ஆன்மீக யாத்திரீகர்களின் ரூபத்தில் காண வேண்டும். அவர்கள் உங்களைச் சேவையின் வடிவில் கண்டார்கள். இப்போது அவர்கள் உங்களை அலௌகீக யாத்திரையின் அனுபவத்தைக் கொடுக்கும் அலௌகீக யாத்திரீகர்களாக அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் அன்புடன் செய்து இந்தச் சேவையில் வெற்றி பெற்றதைப் போன்று, நீங்கள் இப்போது ஆன்மீக யாத்திரையில் வெற்றி பெற வேண்டும். நீங்கள் அதற்காக அதிகளவு முயற்சி செய்தீர்கள். நீங்கள் அதிகளவு சேவை செய்தீர்கள். நீங்கள் மிக நன்றாக ஞானத்தைப் பேசினீர்கள். உங்களின் வாழ்க்கைகள் மிகவும் நன்றாக இருப்பதை அவர்கள் அனுபவம் செய்தார்கள். அவை அனைத்தும் நிகழ்ந்தன. எவ்வாறாயினும், இப்போது அவர்களும் தமது வாழ்க்கைகளை அவ்வாறு ஆக்குவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கையை விட வேறெந்த வாழ்க்கையும் இல்லை என்பதை அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். எனவே, ஆன்மீக யாத்திரையின் இலக்கை வைத்திருந்து, ஆன்மீக யாத்திரையின் அனுபவத்தை அவர்களுக்குக் கொடுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும், நீங்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்பதையும் நீங்கள் ஆன்மீக யாத்திரீகர்கள் என்பதையும் அவர்கள் காண வேண்டும். ஆகவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்களும் யாத்திரையில் இருந்தவண்ணம், ஒரு யாத்திரையின் அனுபவத்தை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு அமைதிப் பேரணியின் அனுபவத்தைக் கொடுத்தீர்கள். இப்போது, தேவதை ஸ்திதியின் அனுபவத்தையும் கொடுங்கள். நீங்கள் இந்தப் பூமியில் வசிப்பவர்கள் அல்ல, நீங்கள் தேவதைகள், உங்களின் பாதங்கள் நிலத்தில் பதிவதில்லை என்பதை அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். நாளுக்கு நாள், அனைவரையும் உங்களின் பறக்கும் ஸ்திதியால் பறக்கச் செய்யுங்கள். இது இப்போது அனைவரையும் பறக்கச் செய்வதற்கான நேரம் ஆகும். இது அவர்களை நடக்கச் செய்வதற்கான நேரம் அல்ல. நடப்பதற்கு நேரம் எடுக்கும். ஆனால், பறப்பதற்கு நேரம் எடுக்காது. மற்றவர்களைப் பறக்கச் செய்வதற்கு உங்களின் பறக்கும் ஸ்திதியைப் பயன்படுத்துங்கள். உங்களுக்குப் புரிகிறதா? உங்களின் திருஷ்டியாலும் விழிப்புணர்வினாலும் தொடர்ந்து அனைவரையும் முழுமையாகவும் சம்பூரணமாகவும் ஆக்குங்கள். தாம் எதையோ பெற்றதன் மூலம் நிரம்பியிருப்பதாகவும், தாம் முன்னர் வெறுமையாக இருந்தோம் என்றும், இப்போது நிரம்பி வழிவதாகவும் அவர்கள் உணர வேண்டும். அவர்கள் பேறுகளை அனுபவம் செய்யும்போது, ஒரு விநாடியில் அவர்கள் தங்களை அர்ப்பணிக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் ஏதாவது பேறு கிடைத்துள்ளது. இதனாலேயே, நீங்கள் அனைத்தையும் துறந்துள்ளீர்கள். நீங்கள் அதை விரும்பினீர்கள். நீங்கள் அதை அனுபவம் செய்தீர்கள். அதனாலேயே நீங்கள் அனைத்தையும் துறந்தீர்கள். நீங்கள் வெறுமனே அவற்றைத் துறக்கவில்லை. ஆகவே, இப்போது மற்றவர்களுக்கும் பேறுகளின் அனுபவத்தைக் கொடுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அனைவரும் நல்லவர்களே. சேவை செய்வதில் நீங்கள் எத்தனை நாட்களைச் செலவிட்டிருந்தாலும், நீங்களும் மற்றவர்களும் மேன்மையானவர்கள் ஆகினீர்கள். உங்களுக்கு நல்ல ஊக்கமும் உற்சாகமும் இருந்தன. பெறுபேறு நன்றாக இருந்தது, அப்படியல்லவா? நீங்கள் சதா ஆன்மீக யாத்திரையில் இருந்தால், நீங்கள் சதா தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள். நீங்கள் அமைதிப் பேரணியைப் பூர்த்தி செய்ததால் சேவை முடிந்துவிட்டது என நினைக்காதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் முன்பு எவ்வாறு இருந்தீர்களோ, அவ்வாறே ஆகிவிடுவீர்கள். இல்லை. சதா சேவை செய்யாமல் பிராமணர்களால் சேவைக்களத்தில் இருக்க முடியாது. உங்களின் சேவைக்குரிய பாகம் மாறிவிட்டது, அவ்வளவே. நீங்கள் இறுதிவரை சேவை செய்ய வேண்டும். நீங்கள் அத்தகைய சேவையாளர்கள், அல்லவா? அல்லது, நீங்கள் ஒரு மாதத்திற்கு அல்லது இரண்டு மாதங்களுக்குச் சேவை செய்யும் சேவையாளர்களா? நீங்கள் சதா சேவையாளர்கள். எனவே, எல்லா வேளையும் ஊக்கமும் உற்சாகமும் இருக்க வேண்டும். அச்சா. நாடகத்தில் உங்களுக்கு சேவையில் எந்தவொரு பாகம் கிடைத்தாலும், அது சிறப்பியல்பால் நிரம்பியிருக்கும். உங்களின் தைரியத்தினால் நீங்கள் உதவியைப் பெறுவதை அனுபவம் செய்தீர்கள். அச்சா. நீங்கள் உங்களின் மூலம் தந்தையை வெளிப்படுத்தும் மேன்மையான எண்ணத்தைக் கொண்டிருந்தீர்கள். ஏனெனில், நீங்கள் தந்தையை வெளிப்படுத்தும்போது, இந்தப் பழைய உலகம் முடிவிற்கு வருவதுடன், உங்களின் இராச்சியமும் வரும். தந்தையை வெளிப்படுத்துவதெனில், உங்களின் இராச்சியத்தை உருவாக்குதல் என்று அர்த்தம். உங்களின் சொந்த இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற உற்சாகம் உங்களுக்கு எப்போதும் உள்ளதல்லவா? விசேடமான நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்ற ஊக்கமும் உற்சாகமும் இருப்பதைப் போன்று, இந்த எண்ணத்திற்காகவும் எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் இருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா?

பாப்தாதா ஒரு குழுவைச் சந்திக்கிறார்:
நீங்கள் அதிகளவில் செவிமடுத்தீர்கள். இப்போது நீங்கள் செவிமடுத்த அனைத்தையும் உங்களுக்குள் அமிழ்த்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் எந்தளவிற்கு நீங்கள் உங்களுக்குள் அமிழ்த்திக் கொள்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் தந்தையைப் போன்று சக்திசாலி ஆகுவீர்கள். நீங்கள் அதிபதிகள், அப்படியல்லவா? எனவே, தந்தை எவ்வாறு சர்வசக்திவானோ, அதேபோன்று, நீங்களும் மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆவீர்கள். அதாவது, நீங்கள் சகல சக்திகளையும் உங்களுக்குள் அமிழ்த்திக் கொள்பவர்கள். நீங்கள் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுபவர்கள். உங்களின் வாழ்க்கைகளின் அடிப்படையில் தந்தைக்கும் குழந்தைகளான உங்களுக்கும் இடையே எந்தவித வேறுபாடும் இருக்கக்கூடாது. தந்தை பிரம்மாவின் வாழ்க்கையை நீங்கள் கண்டதைப் போல், பிரம்மபாபாவும் குழந்தைகளும் ஒத்தவர்களாகத் தென்பட வேண்டும். பௌதீக ரூபத்தில், பிரம்மபாபா உங்களுக்கு நடைமுறையில் செயல்களைச் செய்து காட்டுவதற்குக் கருவி ஆகினார். எனவே, சமமானவர் ஆகுங்கள். அதாவது, மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆகுங்கள். எனவே, உங்களிடம் சகல சக்திகளும் உள்ளதா? நீங்கள் அவற்றைக் கிரகித்துள்ளீர்கள். ஆனால், சதவீதத்திலேயே கிரகித்துள்ளீர்கள். உங்களுக்குத் தேவையான அளவை அல்ல. நீங்கள் நிரம்பியவர்களாக இல்லை. நீங்கள் நிரம்பியவர்கள் ஆகவேண்டும், அல்லவா? எனவே, சதவீதத்தை அதிகரியுங்கள். அவசியமான வேளையில் நீங்கள் சக்திகளைப் பயன்படுத்துவதன் அடிப்படையிலேயே இலக்கம் ஒன்று பெறப்படுகிறது. அவசியமான வேளையில் சக்திகளைப் பயன்படுத்தாவிட்டால் அதை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? அவை இருந்தும் இல்லாதது போன்றே அது இருக்கும். ஏனெனில், அவை தேவைப்படும் வேளையில் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, காலத்திற்கேற்ப, உங்களுக்கு என்ன சக்தி தேவையோ, உங்களால் அந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியுமா எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் தந்தைக்குச் சமமாக, மாஸ்ரர் சர்வசக்திவானாக இருப்பதன் நடைமுறை ரூபத்தை உலகிற்குக் காட்ட வேண்டும். அப்போது மட்டுமே சர்வசக்திவான் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக உலகம் ஏற்றுக் கொள்ளும். இது உங்களின் இலக்கு அல்லவா? நாம் பொன்விழாவை அடையும் வரை யார் இந்த இலக்கத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள் என நாம் பார்ப்போம். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உலக நன்மைக்கான உணர்வுகளைக் கொண்டிருப்பதன் மூலம், உண்மையில் கருணைநிறைந்தவராகி, ஒவ்வோர் ஆத்மாவிற்கும் பாதுகாப்பிற்கான திட்டங்களைச் செய்வீர்களாக.

தற்சமயம், சில ஆத்மாக்கள் தங்களுக்கே தீங்கு விளைவிப்பதற்குக் கருவிகள் ஆகுகிறார்கள். அவர்களிடம் கருணை கொள்ளுங்கள். ஏதாவது திட்டங்களைச் செய்யுங்கள். சில ஆத்மாக்களின் பாகங்களைப் பார்க்கும்போது, அதனால் குழப்பம் அடையாதீர்கள். ஆனால், அவர்களின் பாதுகாப்பிற்கான வழிமுறையைப் பற்றிச் சிந்தியுங்கள். இது எல்லா வேளையும் நிகழுகிறது அல்லது மரம் அசைகிறது என நினைக்காதீர்கள். இல்லை. வந்துள்ள தடைகளை முடித்துவிடுங்கள். உங்களின் உலக நன்மையாளர் மற்றும் தடைகளை அழிப்பவர் என்ற பட்டங்களுக்கேற்ப, உங்களின் எண்ணங்களிலும் வார்;த்தைகளிலும் செயல்களிலும் கருணைநிறைந்தவராகி, சூழலை மாற்றுவதில் ஒத்துழையுங்கள்.

சுலோகம்:
தமது எண்ணங்களில் கவனம் செலுத்தும் பாதுகாப்புடன் இருப்பவர்களால் மட்டுமே கர்ம யோகிகள் ஆகமுடியும்.


இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேடமான வீட்டுவேலை.
உங்களுக்குள் ஏதாவது வகையான பாரம் அல்லது சுமை இருந்தால், ஆன்மீக அப்பியாசத்தைச் செய்யுங்கள். ஒரு நிமிடம் கர்மயோகி ஆகுங்கள். அதாவது, சரீர ரூபத்தை எடுத்து பௌதீக உலகில் உங்களின் பாகத்தை நடியுங்கள். அடுத்த நிமிடம், சூட்சும தேவதை ஆகுங்கள். சூட்சும வதனவாசியாக சூட்சும ரூபத்தை அனுபவம் செய்யுங்கள். அடுத்த நிமிடம், அசரீரியானவராகி, அசரீரி உலகவாசியாக இருப்பதை அனுபவம் செய்யுங்கள். இந்த அப்பியாசத்தைச் செய்வதன் மூலம், நீங்கள் இலேசானவர் ஆகுவீர்கள். பாரமும் இல்லாமல் போய்விடும்.