17.01.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்தப் பழைய உலகிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லை. இதனாலேயே, அதன் மீது உங்கள் இதயம் பற்று கொண்டிருப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. தந்தையை நினைவு செய்ய நீங்கள் மறந்தால், தண்டனை கிடைக்கும்.
கேள்வி:
தந்தையின் பிரதானமான வழிகாட்டல்களில் ஒன்றிற்கு, நீங்கள் ஏன் கீழ்ப்படிவதில்லை?; அந்த வழிகாட்டல் என்ன?
பதில்:
தந்தையின் வழிகாட்டல்: எவரிடமிருந்தும் என்றுமே தனிப்பட்ட சேவையை ஏற்காதீர்கள், ஏனெனில் நீங்களே சேவகர்கள்;. எவ்வாறாயினும், சரீர உணர்வினால் உங்களிற் சிலர் தந்தை கொடுக்கும் வழிகாட்டல்களை மீறுகின்றீர்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் அந்த சந்தோஷத்தை இங்கே ஏற்பீர்களாயின், அங்கே உங்கள் சந்தோஷம் குறைக்கப்படும். குழந்தைகளாகிய உங்களிற் பலர் சுதந்திரமாக இருக்க விரும்புவதாகக் கூறுகின்றீர்கள், ஆனால் உண்மையில் நீங்கள் அனைவரும் தந்தையில் தங்கியிருக்கின்றீர்கள்.
பாடல்:
எனது இதயத்தின் ஆதாரம் துண்டிக்கப்படக் கூடாது.
ஓம் சாந்தி.
கடவுள் சிவன் தனது சாலிகிராம்களுடன் பேசுகின்றார்: மனிதர்கள் அனைவரும் சிவனையும் சாலிகிராம்களையும் அறிவார்கள். இருவரும் அசரீரியானவர்கள். கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார் என நீங்கள் இப்பொழுது கூறுவதில்லை. ஒரேயொரு கடவுளே இருப்பதால், கடவுள் சிவன் யாருடன் பேசுகின்றார்? ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடனாகும். குழந்தைகளாகிய நீங்கள் அந்தத் தந்தையுடன் மாத்திரமே ஒரு தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும் எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். சிவபாபா மாத்திரமே தூய்மையாக்குபவரும், ஞானக்கடலும், சுவர்க்க ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பவரும் என்பதால், அவர் ஒருவரையே நீங்கள் நினைவு செய்ய வேண்டும். பிரம்மா அவரது மகாபாக்கியசாலியான இரதம் ஆவார். அவர் இந்த இரதத்தினூடாக உங்கள்; ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பவர் பிரம்மா அல்ல. அவரும் ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார். ஆதலால் குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். உதாரணமாக இரதத்திற்;கு ஏதாவது சிரமம் இருந்தாலோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் முரளியைப் பெற்றுக் கொள்ளாமல் விட்டாலோ குழந்தைகளாகிய உங்கள் கவனம் சிவபாபா மீதே செல்கின்றது. அவர் என்றுமே நோய் வாய்ப்படுவதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு ஞானம் கொடுக்கப்படுகின்றது, அதனை உங்களால் பிறருக்கு விளங்கப்படுத்த முடியும். சில குழந்தைகள் கண்காட்சிகளில் அதிகளவு விளங்கப்படுத்துகின்றார்கள். குழந்தைகளாகிய உங்களிடம் இந்த ஞானம் முழுவதும் உள்ளது. படங்களில் காட்டப்பட்டுள்ள ஞானம் உங்கள் ஒவ்வொருவரின் புத்தியிலும் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் எதனாலும் ஸ்தம்பிதம் அடையக் கூடாது. தபால் சேவை இல்லாவிட்டாலும், அல்லது வேலை நிறுத்தம் இடம்பெற்றாலும், நீங்கள் என்ன செய்வீர்கள்? எவ்வாறாயினும் குழந்தைகளாகிய உங்களிடம் ஞானம் உள்ளது. சத்தியயுகம் இருந்தது என்றும், இது இப்பொழுது பழைய உலகமாகிய கலியுகம் எனவும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்தப் பழைய உலகிடம், கொடுப்பதற்கு எதுவுமே இல்லை எனப் பாடலிலும் நீங்கள் பாடுகின்றீர்கள். அதன் மீது உங்கள் இதயம் பற்று கொண்டிருக்க அனுமதிக்காதீர்கள். அவ்வாறாயின், தண்டனை அனுபவிக்க நேரிடும். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால் உங்கள் தண்டனையை குறைத்துக் கொள்ள முடியும். தந்தையுடனான உங்கள் நினைவு துண்டிக்கப்படுவதனால், நீங்கள் தண்டனையை அனுபவம் செய்து, பழைய உலகிற்கே திரும்பிச் செல்கின்றீர்கள் என்றிருக்கக் கூடாது, இவ்வாறாக விட்டுச் சென்ற பலர் உள்ளனர். அவர்கள் தந்தையை நினைவு செய்வதும் இல்லை. அவர்களுடைய இதயம் இன்னமும் பழைய உலகின் மீதே பற்று கொண்டுள்ளது. இப்போது, இவ் உலகம் மிகவும் தீயதாகும். உங்கள் இதயத்தை எவரேனும் மீது வைத்திருந்தால், அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைச் செவிமடுக்க வேண்டும். நீங்கள் பக்திமார்க்கத்துப் பாடல்களைச் செவிமடுக்கக் கூடாது. நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். இந்தச் சங்கம யுகத்திலேயே நீங்கள் ஞானக்கடலான தந்தையிடமிருந்து ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அவர் ஒரேயொருவரே ஞானக்கடல் என்பதை உலகிலுள்ள வேறு எவரும் அறியமாட்டார்கள். அவர் மனிதர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும் போதே அவர்கள் ஜீவன்முக்தியைப் பெறுகிறார்கள். அந்த ஒரேயொருவரே ஜீவன் முக்தியளிப்பவர் என்பதால் நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். மாயை எவரையும் விட்டுவைக்க மாட்டாள். இதனாலேயே நீங்கள் சரீர உணர்விற்கு வந்து ஏதாவது ஒரு தவறைச் செய்கின்றீர்கள். உங்களிற் சிலர் காமத்தினால் அரைவாசி ஆதிக்கத்திற்கும், சிலர் கோபத்தின் ஆதிக்கத்தி;ற்கும் உள்ளாகுகின்றார்கள். மனதில் பல புயல்கள் எழுகின்றன. ஏனெனில் நீங்கள் எவரையாவது நேசித்து, ஏதாவது செய்ய விரும்புகின்றீர்கள். நீங்கள் உங்கள் இதயத்தை எவரது சரீரத்தின் மீதும் பற்று வைக்க அனுமதிக்காதீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். அப்பொழுது உங்கள் சரீர உணர்வு அனைத்தும் முடிவடைந்து விடும். இல்லாவிடில் நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களை மீறியவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகும் போதே அதிகளவு நட்டம் ஏற்படுகின்றது. ஆதலால் உங்கள் சொந்த சரீரம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள். தந்தையையும் வீட்டையும் நினைவு செய்யுங்கள். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் சரீரங்களினூடாகச் செயலாற்றும் போதும், என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்தப் பாதை மிகவும் இலகுவானது. நீங்கள் தொடர்ந்தும் தவறுகள் செய்வதை பாபாவும் அறிவார். எவ்வாறாயினும் நீங்கள் தொடர்ந்தும் உங்கள் தவறுகளினால் சிக்கிக் கொள்வதாக இருக்கக்கூடாது. நீங்கள் ஒரு பிழையைச் செய்தால், நீங்கள் அதனை மீண்டும் செய்யக் கூடாது. உங்கள் காதைத் திருகி உங்களுக்கே கூறுங்கள்: நான் இந்தத் தவறை மீண்டும் செய்யமாட்டேன். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்தால், உங்களுக்கு நீங்களே இழப்பை ஏற்படுத்துகின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் தவறுகளினாலேயே நீங்கள் தாழ்வு நிலையை அடைகின்றீர்கள். அத்தகையதோர் உயர்ந்த ஏணியில் இருந்து நீங்கள் கீழ் இறங்கி வந்ததால், இப்போது நீங்கள் என்னவாக ஆகியுள்ளீர்கள்? முன்னர் உங்களுக்கு இந்த ஞானம் இருக்கவில்லை. நீ;ங்கள் அனைவரும் இப்பொழுது நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக இந்த ஞானத்தினால் புத்திசாலிகள் ஆகியுள்ளீர்கள். இயன்றவரை அகநோக்கில் நிலைத்திருங்கள். உங்கள் வாயை மூடி வைத்திருங்கள்! இந்த ஞானத்தால் புத்திசாலியானவர்கள் தங்கள் இதயத்தை என்றுமே பழைய உலகின்மீது இணைக்கமாட்டார்கள். இராவண இராச்சியத்தின் விநாசத்தை அவர்கள் கொண்டு வர வேண்டும் என்பதை அவர்களின் புத்தி; அறியும். இந்தச் சரீரம் பழையது. அது இராவண சமுதாயத்துக்கு உரியதாகும். நாங்கள் இராவண சமுதாயத்தை ஏன் நினைவு செய்ய வேண்டும்? நாங்கள் ஒரேயொரு இராமரை(கடவுளை) மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். நாங்கள் தந்தை மீது உண்மையிலேயே நம்பிக்கையுள்ளவர்கள் ஆக வேண்டும். தந்தை கூறுகின்றார்: தொடர்ந்தும் என்னை நினைவு செய்யுங்கள்.. அப்போது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தந்தைக்கு நம்பிக்கையுள்ளவர்கள் ஆக இருக்க வேண்டும். அதாவது கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும். பக்தர்கள் கடவுளை மாத்திரமே நினைவு செய்து பிரார்த்திக்கின்றார்கள்: கடவுளே வந்து எங்களுக்கு அமைதி சந்தோஷம் என்ற எங்கள் ஆஸ்தியைத் கொடுங்கள். பக்தி மார்க்கத்தில் பக்தர்கள் தங்களைத் தியாகம் செய்கின்றார்கள். இங்கே உங்களை அர்ப்பணிப்பதென்ற கேள்விக்கே இடமில்லை. நாங்கள் மரணித்து வாழ்கின்றோம். அதாவது நாங்கள் எங்களைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றோம். நாங்கள் அவரிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைக் கோருவதால் நாங்கள் வாழும் காலம் வரை தந்தைக்குரியவராக இருக்க வேண்டும். நாங்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும்.உயிர் வாழும் போது தன்னை அர்ப்பணிப்பது என்பது உண்மையில் இந்நேரத்தையே குறிக்கின்றது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் தற்கொலை போன்றவற்றைச் செய்கின்றார்கள். இங்கே தற்கொலை செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையுடன் யோகம் செய்யுங்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகாதீர்கள். நீங்கள் அமர்ந்திருந்தாலும் அல்லது உலாவித் திரிந்தாலும், தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்;. நீங்கள் எவருமே இன்னமும் 100மூ சித்தியடையவில்லை. நீங்கள் அனைவரும் தொடர்ந்தும் தளம்பலடைகின்றீர்கள். நீங்கள் செய்யும் தவறுகளை இட்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்காவிட்டால், எவ்வாறு நீங்கள் தவறு செய்வதை நிறுத்துவீர்கள்? மாயை எவரையும் விட்டு வைப்பதில்லை. பல தம்பதிகள் கூறுகின்றார்கள்: பாபா நாங்கள் மாயையினால் தோற்கடிக்கப்பட்டோம். நாங்கள் முயற்சி செய்தோம் ஆனால் என்ன நிகழ்ந்தது என்பதை நாங்கள் அறியோம். அத்தகைய பாரதூரமான ஒரு தவறை நாங்கள் எவ்வாறு செய்தோம் எனத் தெரியவில்லை. இந்தத் தவறினால் தங்கள் பெயர் பிராமண குலத்தில் அவதூறு செய்யப்படும் என அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் மாயையினால் உக்கிரமாகத் தாக்கப்படுவதால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது இருக்கின்றார்கள். அவர்கள் சரீர உணர்வுடையவர்களாக ஆகியதும், அவர்கள் விவேகமற்றவர்கள் போலாகுகின்றார்கள். விவேகமில்லாத போது அவதூறும் உள்ளது. பின்னர் அவர்கள் ஆஸ்தியும் குறைக்கப்படுகின்றது. அத்தகைய தவறு செய்கின்ற பலர் இருக்கின்றார்கள். மாயை அவர்களைத் தோற்கடிக்கும் வண்ணம் பலமாக அறைகின்றாள். பின்னர் கோபத்தினால் அவர்கள் மற்றவர்களை அறைகின்றார்கள் அல்லது தங்கள் பாதணியினால் அடிக்கின்றார்கள். பின்னர் அவர்கள் மனம் வருந்துகின்றார்கள். பாபா கூறுகின்றார்: இப்போது நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் அதிகளவை இழந்து விட்டீர்கள். இராகுவின் கிரகணத்தின் சகுனம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்போது நீங்கள் உங்கள் விகாரங்களைத் தானம் செய்வீர்களேயாயின் நீங்கள் அந்தத் தீய சகுனங்களிலிருந்து விடுபட முடியும். இராகுவின் சகுனங்கள் இருக்கும் போது, அதற்குக் காலம் எடுக்கும். ஏணியில் இருந்து ஒரு தடவை கீழ் இறங்கினால் மேல் ஏறுவது சிரமமாக இருக்கும். மது அருந்தும் பழக்கமுடையவருக்கு அதனைக் கைவிடுவது சிரமமாக இருக்கும். உங்கள் முகத்தை அழுக்காக்குவதே உங்களிற் சிலர் செய்யும் மிகப் பெரிய தவறாகும். நீங்கள் பின்னர் சரீரத்தைத் தொடர்ந்தும் நினைவு செய்கின்றீர்கள். பின்னர் உங்களுக்குக் குழந்தைகள் இருக்கும் போது, நீங்கள் அவர்களைத் தொடர்ந்தும் நினைவு செய்கின்றீர்கள். அப்போது உங்களால் என்ன ஞானத்தை மற்றவர்களுக்குக் வழங்க முடியும்? எவரும் உங்களுக்குச் செவிமடுக்க மாட்டார்கள். நாங்கள் இப்போது ஒரே ஒருவரை மாத்திரம் நினைவு செய்து ஏனையோரை மறக்க முயற்சி முயற்சி செய்கின்றோம். இதில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். நாள் முழுவதும் சிவபாபாவை நினைவு செய்வதே உங்கள் அக்கறையாக இருக்க வேண்டும். நாடகம் இப்போது ஒரு முடிவுக்கு வருகின்றது. நாங்கள் வீடு திரும்ப வேண்டும். எங்கள் சரீரங்கள் அழிக்கப்படவுள்ளன. நீங்கள் எந்தளவுக்குத் தந்தையை நினைவு செய்யகின்றீர்களோ அதற்கேற்ப வேறு எவரையும் நினைவு செய்ய மாட்டீர்கள். அத்துடன் சரீர உணர்வும் அகற்றப்படும். இந்த இலக்கு மிகவும் உயர்ந்தது. தந்தையைத் தவிர வேறு எவர் மீதும் உங்கள் இதயத்தைப் பற்று வைக்க அனுமதிக்காதீர்கள். அல்லாவிடில் அந்த நபர் உங்கள் முன் தோன்றியவாறே இருப்பார். அவர் நிச்சயமாக உங்களைப் பழிவாங்குவார்;. எங்கள் இலக்கு மிகவும் உயர்ந்தது. இதனைப் பற்றிப் பேசுவது, சுலபம். பல்லாயிரக்கணக்கானவரில் வெகு சிலரே மாலையின் மணியாகுகின்றார்கள். சிலர் ஒரு புலமைப் பரிசிலைப் பெறுகின்றார்கள். மிக நல்ல முயற்சி செய்தவர்கள் நிச்சயமாக ஓர் புலமைப் பரிசிலை பெறுவார்கள். ஒரு பற்றற்ற பார்வையாளராகி நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள் எனப் பாருங்கள். உங்களில் பலர் வேலை செய்வதில் இருந்து விடுபட்டு ஆன்மீக சேவையில் ஈடுபட விரும்புகின்றீர்கள். எனினும் பாபா ஒவ்வொருவருடைய நிலைமையையும் பார்க்கின்றார். உறவினர்கள் யாருமில்லாத நீங்கள் ஒரு தனி நபராயின் அது பரவாயில்லை. இருந்தாலும் பாபா கூறுகின்றார்: உங்கள் மற்றைய தொழிலுடன் இந்தச் சேவையையும் தொடர்ந்தும் செய்யுங்கள். உங்கள் தொழிலில் நீங்கள் சேவை செய்யக் கூடிய பலரை நீங்கள் சந்திக்க நேரிடும். குழந்தைகளாகிய நீ;ங்கள் அதிகளவு ஞானம் பெற்றுள்ளீர்கள்;. தந்தை குழந்தைகளாகிய உங்கள் மூலமாகவே அதிகளவு சேவை மேற்கொள்வதற்குத் தூண்டுகின்றார். அவர் சில குழந்தைகளில் பிரவேசித்தும் சேவை செய்கின்றார். அவர் சேவை செய்ய வேண்டும். பொறுப்பு இருக்கும் ஒருவர் எவ்வாறு உறங்குவார்? சிவபாபா சதா ஏற்றப்பட்ட தீபம் ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் இரவு பகலாகச் சேவை செய்கின்றேன். சரீரம் களைப்புற்றால் ஆத்மாவினால் என்ன செய்ய முடியும்? சரீரத்தினால் போதியளவு தொழிலைச் செய்ய முடியாதுள்ளது. தந்தையோ களைப்பற்றவர். ஏற்றிய தீபமாகிய அவரே உலகில் உள்ள அனைவரையும் விழிப்படையச் செய்கின்றார். அவரின் பாகம் அற்புதமானது. குழந்தைகளாகிய உங்களுக்குள் வெகு சிலரே அவரை அறிந்துள்ளீர்கள். தந்தையே மகா காலன் ஆவார். நீங்கள் அவருக்குக் கீழ்படியாவிடின் தர்மராஜிடம் இருந்து தண்டனை அனுபவம் செய்ய நேரிடும். தந்தையின் பிரதான வழிகாட்டல்களில் ஒன்று: எவரிடமிருந்தும் தனிப்பட்ட சேவைகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுவதனால் தந்தையின் வழிகாட்டல்களை மீறுகின்றீர்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் இங்கே அந்தச் சந்தோஷத்தை ஏற்றுக் கொண்டால், அங்கே உங்கள் சந்தோஷம் குறைக்கப்பட்டு விடும். நீங்கள் அதனைப் பழக்கப்படுத்திக் கொண்டால், வேலைக்காரர்கள் இல்லாமல் அதனை உங்களால் செய்ய முடியாதிக்கும். பலர் கூறுகின்றார்கள்: நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். எனினும், தந்தை கூறுகின்றார்: தங்கியிருத்தல் நல்லதே. நீங்கள் அனைவரும் தந்தையில் தங்கியிருக்க வேண்டும். சுதந்திரமாக இருப்பதற்கு முயற்சிக்கும் போதே நீங்கள் வீழ்ந்து விடுகிறீர்கள்;. நீங்கள் அனைவரும் சிவபாபாவில் தங்கியிருக்கிறீர்கள். முழு உலகமும் அவரிலேயே தங்கியிருக்கிறது. இதனாலேயே அவர்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! அவரிடமிருந்து நீங்கள் அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுகிறீர்கள். ஆனால் மக்கள் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் பக்தி மார்க்கத்தைக் கடந்து செல்ல வேண்டும். இரவு முடிவடையும் போதே தந்தை வருகின்றார். தந்தை வருவதில் ஒரு வினாடியேனும் வேறுபாடு இருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: இந்த நாடகத்தை நான் அறிவேன். இந்த நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை எவருக்குமே தெரியாது. சத்தியயுகத்தில் இந்த ஞானம் மறைந்து விடும். உங்களுக்கு இப்பொழுது படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம் மத்தி, இறுதியையும் தெரியும், இதுவே ஞானம் என அழைக்கப்படுகின்றது. ஏனைய அனைத்தும் பக்தியாகும். தந்தை ஞானம் நிறைந்தவர் எனப்படுகின்றார். இப்பொழுது அவரே எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். எனினும் ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்கள். சிலர் சாதாரண பிரஜைகளாக அல்லது பணியாட்களாக ஆகுகின்றார்கள். அவர்கள் சிறிதளவு ஞானத்தையேனும் புரிந்து கொள்வதில்லை! இது ஓர் அதிசயமே. இந்த ஞானம் புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவானதாகும். எங்கள் 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது ஒரு முடிவிற்கு வருகிறது. நீங்கள் உங்கள் வீட்டிற்கு வெகுவிரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். நாங்களே இந்த நாடகத்தின் பிரதான நடிகர்கள் என்பதால் எங்களுக்கு முழு நாடகத்தையும் தெரியும். நாடகம் முழுவதும் நாங்களே கதாநாயகன், கதாநாயகி பாகங்களை நடிக்கின்றோம். இது மிகவும் இலகுவானதானாலும் அது உங்கள் பாக்கியத்தில் இல்லையாயின் நீங்கள் என்ன முயற்சியைச் செய்வீர்கள்? இது இந்தக் கல்வியில் தொடர்ந்து நிகழ்கின்றது. உங்களிற் சிலர் இதில் தோல்வியடைகின்றார்கள். இது அத்தகையதொரு மிகப் பெரிய பாடசாலையாகும். ஓர் இராச்சியம் உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவிற்குக் கற்கின்றீர்களோ அந்தளவிற்கே அந்தஸ்தைக் கோருவீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்களிற் பலர் உள்ளனர். நீங்கள் அனைவரும் வாரிசுகள் ஆக முடியும் என்றில்லை. தூய்மையாகுவது மிகவும் சிரமமானது. தந்தை அனைத்தையும் மிக இலகுவாக உங்களுக்குப் புரிய வைக்கின்றார். இந்த நாடகம் ஒரு முடிவிற்கு வருகின்றது. தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலமாக, நீங்கள் முழுமையாகத் தூய்மையாக வேண்டும். அப்போது நீங்கள் முற்றிலும் தூய்மையான புதிய உலகிற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். இயலுமானவரை நினைவில் நிலைத்திருங்கள். இது உங்கள் பாக்கியத்தில் இல்லையாயின் தந்தையை நினைவு செய்வதற்குப் பதிலாக, நீங்கள் பிறரை நினைவு செய்வீர்கள். பிறர் மீது உங்கள் இதயத்தை இணைப்பதனால் நீங்கள் அதிகளவில் அழ நேரிடும். தந்தை கூறுகின்றார்: இந்தப் பழைய உலகில் பற்றை வைப்பதற்கு உங்கள் இதயத்தை அனுமதிக்காதீர்கள். இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். இதனை வேறு எவருமே அறியமாட்டார்கள். கலியுகம் நீண்ட காலத்திற்குத் தொடரும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார்கள். கண்காட்சி போன்றவற்றில் நீங்கள் செய்யும் சேவை பிரஜைகளை உருவாக்குவதற்கு ஒரு துரிதமான வழியாகும். சில அரசர்களும், அரசிகளும் வெளிப்படுவார்கள். பலர் சேவை செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். சிலர் பணக்காரர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் உள்ளார்கள். நீ;ங்கள் உங்களைப் போன்று மற்றவர்களையும் ஆக்க வேண்டும். அதிலிருந்து நீங்களும் நன்மையைப் பெறுவீர்கள். நீங்கள் குருடருக்கு ஊன்று கோலாக வேண்டும். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள் என அவர்களிடம் கூறுங்கள். விநாசம் உங்கள் முன்னால் உள்ளது. விநாச காலம் மிகவும் நெருங்கி வருவதை அவர்கள் பார்க்கும் போது அவர்கள் நீங்கள் கூறுவதைச் செவிமடுப்பார்கள். உங்கள் சேவை அதிகரிக்கும் போது “ இது சரியானது” என அவர்கள் எண்ணுவார்கள். விநாசம் இடம் பெறவேண்டும் எனப் பிறருக்கு நீங்கள் தொடர்ந்தும் கூறுங்கள். கண்காட்சிகளிலும் களியாட்டங்களிலும் நீங்கள் செய்யும் சேவையும் அதிகரிக்கும். சிறந்ததொரு மண்டபத்தைத் தேர்ந்து எடுப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு வாடகை கொடுப்பதற்கு தயாராக உள்ளோம் என அவர்களிடம் கூறுங்கள். அவர்களிடம் கூறுங்கள்: உங்கள் பெயர் மென்மேலும் புகழப்படும். பலர் அத்தகைய மண்டபங்களை வைத்திருக்கின்றார்கள். முயற்சி செய்வதினால், உங்களால் மூன்று சதுர அடி நிலத்தைப் பெற முடியும். அது வரைக்கும் சிறு கண்காட்சிகளைத் தொடர்ந்தும் நடாத்துங்கள். நீங்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடும் போது, அதன் ஓசை எங்கும் பரவும். எழுதுங்கள்: சிவஜெயந்தி நாளை ஒரு பொது விடுமுறையாக்க வேண்டும். உண்மையில், அந்த ஒரே ஒருவரின் பிறந்ததினமே கொண்டாடப்பட வேண்டும். அவரே தூய்மையாக்குபவர். உண்மையான முத்திரை திரிமூர்த்தியினதாகும். அதில் கூறப்படுகின்றது: சத்தியத்தின் மூலம் வெற்றி. இதுவே நீங்கள் வெற்றி பெறும் காலம் ஆகும். இவ்விடயங்களைப் பிறருக்கு நன்றாக விளங்கப்படுத்தக் கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவை. நிலையத்தில் இருக்கும் பிரதானமானவர் அனைவர் மீதும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த முத்திரையை உருவாக்கலாம். இது திரிமூர்த்தி சிவஜெயந்தி, சிவஜெயந்தி என்று நீங்கள் கூறும்போது மக்கள் எதனையும் புரிந்து கொள்ளமாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்களே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். நீங்கள் பலருக்கு நன்மை செய்யும் போது, நீங்களும் அத்தகையதோர் உயர்த்தியைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் சேவையிலிருந்து நீங்கள் மிகப் பெரிய உயர்த்தியை பெறுவீர்கள். கண்காட்சிகளில் பெருமளவு சேவையை நிறைவேற்ற முடியும். பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். சேவையில் எந்தக் குழந்தைகள் கவனம் செலுத்துகிறார்கள் என பாபா தொடர்ந்தும் பார்க்கின்றார். அவர்களே பாபாவின் இதய சிம்மாசனத்தில் ஏறுவார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் ஏதாவது ஒரு தவறை செய்தால், அவ்வப்போது உங்கள் செவிகளை திருகிக் கொள்ளுங்கள். அதனால் மீண்டும் அதே தவறைச் செய்யாதிருப்பீர்கள், ஒருபோதும் சரீர உணர்வுடையவர் ஆகாதீர்கள். இந்த ஞானத்தில் ஒரு திறமைசாலியாகி அகநோக்கில் இருங்கள்.
2. ஒரேயொரு தந்தைக்கு நம்பிக்கைக்குரியவராக இருங்கள். நீங்கள் உயிர் வாழும் வரையில், அவரிடம் உங்களை அர்ப்பணியுங்கள். வேறு எவரின் மீதும் உங்கள் இதயத்தை பற்றச் செய்யாதீர்கள். விவேகமற்றவராக எதனையும் செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் பரந்த எல்லையற்ற புத்தியினாலும் பெரிய இதயத்தாலும் உரிமையாகின்றதன் அனுபவத்தை வழங்குகின்ற மாஸ்டர் படைப்பவர் ஆகவீர்களாக.
மாஸ்டர் படைப்பவரின் முதலாவது படைப்பு அவரது சரீரமே ஆகும். தங்கள் சரீரத்தின் மீது மாஸ்டராக இருப்பதில் முழுமையான வெற்றியை அடைபவர்கள் தங்கள் அன்பின் மூலமாகவும் தொடர்புகள் மூலமாகவும் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக (உரிமையாகின்ற) இருக்கின்ற அனுபவத்தை கொடுப்பார்கள். அத்தகைய ஆத்மாவுடன் தொடர்பை வைத்திருப்பதனால் ஆத்மாக்கள் ஒரு சிறப்பியல்பையோ அல்லது சந்தோஷத்தையோ அருள்பவராகி அமைதி அன்பு பேரின்பம் ஒது;துழைப்பு தைரியம் ஆர்வம் உற்சாகம் போன்றவற்றையோ அனுபவம் செய்வார்கள். அத்தகைய ஆத்மாக்கள் மாத்திரமே பரந்த எல்லையற்ற புத்தியையும் பெரிய இதயத்தையும் கொண்டிருப்பவர்கள் என அழைக்கப்படுவர்.
சுலோகம்:
ஆர்வம் உற்சாகம் எனும் இறக்கைளினால் சதா தொடர்ந்தும் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான வீட்டுவேலை.
நீங்கள் எந்தச் செயலைச் செய்வதற்கு முன்னரும், எந்த வார்த்தைகளைப் பேசுவதற்கு முன்னரும், எண்ணங்கள் எதனையும் கொண்டிருப்பதற்கு முன்னரும், அவை “தந்தை பிரம்மாவைப் போன்றவையா” என முதலில் சோதித்துப் பாருங்கள். தந்தை பிரம்மாவின் சிறப்பியல்பானது: அவர் எதனைச் சிந்தித்தாரோ, எதனைப் பேசினாரோ அதனையே அவர் செய்வார். அதே போன்று தந்தையைப் பின்பற்றுங்கள். உங்கள் சொந்த சுயமரியாதையின் விழிப்புணர்வுடனும், தந்தையின் சகபாடியுடனும், நம்பிக்கையின் சக்தியுடனும், உங்கள் மேன்மையான பதவியில் நிலைத்திருந்து சகல எதிர்ப்புக்களையும் முடித்துவிடுங்கள்.