31.01.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்த யோகம் உங்கள் பாவங்கள் அனைத்தையும் எரித்து, ஆத்மாக்களாகிய உங்களை சதோபிரதான் ஆக்கக் கூடிய தீ போன்றதாகும். ஆகவே, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்.

கேள்வி:
நீங்கள் புண்ணிய ஆத்மாக்களாகுகின்றீர்கள் என்பதால் எதனையிட்டு நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

பதில்:
நீங்கள் யாருக்குப் பணம் கொடுக்கின்றீர்கள் என்பதையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எவருக்காவது பணம் கொடுப்பீர்களாயின், அதனை அவர் மதுபானம் அருந்துவதிலோ, அல்லது தவறான வேறெதனையும் செய்வதில் செலவழித்தாலோ அந்தப் பாவம் உங்களைச் சேரும். நீங்கள்; இனிமேலும் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும், பாவ ஆத்மாக்களுடன் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் உங்களை இங்கு புண்ணியாத்மாக்களாக ஆக்க வேண்டும்.

பாடல்:
எங்களிடமிருந்து அவர் பிரிக்கப்படவும் மாட்டார், அவருக்கான எமது அன்புச் சுவாலை அணையவும் மாட்டாது….

ஓம் சாந்தி.
இந்த யோகம் நினைவுத் தீ எனவும் அழைக்கப்படுகிறது. யோகத் தீ என்றால் நினைவுத் தீ ஆகும். ஏன் “தீ” என்ற வார்த்தை பயன்படுத்தபை;படுகின்றது? ஏனெனில் நீங்கள் உங்கள் பாவங்களை அதன் மூலம் எரிக்கின்றீர்கள். தமோப்பிரதானிலிருந்து எவ்வாறு சதோப்பிரதான் ஆகுவது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். சதோபிரதான் என்றால் புண்ணியாத்மா என்றும் தமோபிரதான் என்றால் பாவாத்மா என்றும் அர்த்தமாகும். ஒருவர் சிறந்த புண்ணியாத்மா என்றோ அல்லது பாவம் மிக்க ஆத்மா என்றோ அழைக்கப்படுகிறார். மறுபிறவி எடுப்பதனால் ஆத்மாவே சதோபிரதான் ஆகவும் தமோபிரதான் ஆகவும் ஆகுகின்றார் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. இதனாலேயே ஆத்மாக்கள் பாவாத்மாக்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆகவே, மக்கள் தூய்மையாக்குகின்ற தந்தையை நினைவு செய்து கூறுகின்றார்கள்: வந்து ஆத்மாக்களாகிய எங்களைத் தூய்மையாக்குங்கள்! உங்களைப் பாவாத்மாக்களாக்கியது யார்? எவருக்கும் இது தெரியாது. நீங்கள் தூய ஆத்மாக்களாக இருந்த போது, பாரதம் இராம(கடவுள்) இராச்சியம் என அழைக்கப்பட்டது என்பது உங்களுக்ககுத் தெரியும். இப்பொழுது, அனைத்து ஆத்மாக்களும் பாவாத்மாக்கள் என்பதனாலேயே உலகம் இப்பொழுது இராவண இராச்சியம் என அழைக்கப்படுகிறது. பாரதமே தூய்மையாகுவதும், பாரதமே துய்மையற்றதாகுவதும். தந்தை மாத்திரமே வந்து பாரத மக்களைத் தூய்மையானவர்களாக ஆக்க முடியும். ஏனைய அனைத்து ஆத்மாக்களும் தூய்மையாக்கப்பட்டுப் பின்னர் அமைதிதாமத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்;. இந்த உலகம் இப்பொழுது துன்ப பூமி ஆகும். அவர்களால் இத்தகைய இலகுவான விடயத்தைத் தங்கள் புத்தியில் கொண்டிருக்க முடிவதில்லை! அவர்கள் இவ்விடயங்களை இதயபூர்வமாகப் புரிந்துகொள்ளும் பொழுதே அவர்களால் உண்மையான பிராமணர்கள் ஆகமுடியும். பிராமணர்களாகாது உங்களால் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. சங்கம யுகத்து யாகம் இதுவாகும். யாகத்திற்கு பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். மரண பூமியில் இந்த யாகமே இறுதியானது என்பது உங்களுக்குத் தெரியும். யாகம் மரணபூமியிலேயே உள்ளது, ஆனால் அமரத்துவ பூமியில் யாகம் இருப்பதில்லை. பக்தர்கள் இவ்விடயங்களைத் தங்கள் புத்தியில் கொண்டிருக்க முடியாதுள்ளனர். பக்தி ஞானத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும். அந்த மக்கள் வேதங்களையும், சமய நூல்களையும் ஞானம் என நம்புகின்றனர். அந்தப் புத்தகங்களில் ஞானம் இருந்திருப்பின் அவர்களால் வீட்டிற்குத் திரும்பிச்செல்ல முடிந்திருக்கும். எவ்வாறாயினும், நாடகத்திற்கு ஏற்ப எவராலும் வீடு திரும்ப முடியாது. முதலாம் இலக்க ஆத்மா சதோ, இரஜோ, தமோ நிலைகளினூடாகச் செல்கின்றார் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அவ்வாறாயின், ஏனையவர்கள் மாத்திரம் எவ்வாறு சதோ பாகத்தை நடித்த பின்னர் வீடு திரும்ப முடியும்? அவர்களும் தங்கள் தமோபிரதான் ஸ்திதிக்குள் பிரவேசிக்க வேண்டும். அவர்களும் இதில் தங்கள் சொந்தப் பாகங்களை நடிக்க வேண்டும். ஒவ்வொரு நடிகரும் தனது சொந்த பலத்தைக் கொண்டிருக்கின்றனர். முக்கியமான நடிகர்கள் பிரபல்யமாக உள்ளனர். இந்த நாடகத்தின் படைப்பவர், இயக்குனர், பிரதான நடிகர் யார்? தந்தையாகிய கடவுள் ஒருவரே பிரதானமானவர் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். பின்னர் உலகத் தாயும் உலகத் தந்தையும் உள்ளனர். அவர்களே உலக அதிபதிகள் ஆகுகின்றனர். அவர்களது பாகங்கள் நிச்சயமாக மேன்மையானது. ஆகவே அவர்களது கொடுப்பனவும் அதியுயர்ந்ததாகும். அதி மேன்மையான ஒரேயொரு தந்தையே அவர்களுக்குக் கொடுக்கின்றார். அவர் கூறுகிறார்: நீங்கள் எனக்கு அதிகளவு உதவி செய்கின்றீர்கள் என்பதனால் அதற்கேற்ப உங்களுககுக்; கொடுக்கப்படும். ஒரு சட்டத்தரணி உங்களுக்குக் கற்பித்திருப்பின், நீங்கள் அதியுயர்ந்த பதவியைக் கோருவதற்கு உதவினார் என அவர் கூறுவார். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் இந்தக் கல்வியில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். நீங்களும் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழ வேண்டும். அவர்கள் (சந்நியாசிகள்) கர்ம யோகத்தைத் துறக்கின்றனர். நீங்கள் வீட்டில் வாழ்ந்;தவாறு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செல்வதுடன், தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கான முயற்சியையும் செய்ய முடியும். இதில் எந்தச் சிரமும் இல்லை. வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தவாறு நீங்கள் சிவ பாபாவின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். ஞானம் மிகவும் இலகுவானது. மக்கள் கூவியழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! தூய உலகில் தூய இராச்சியம் உள்ளது, தந்தை உங்களை அந்த இராச்சியத்திற்குத் தகுதி வாய்ந்தவராக ஆக்குகின்றார். இந்த ஞானத்தில் இரண்டு பிரதான பாடங்கள் உள்ளன: அல்பாவும், பீற்றாவும். சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுவதுடன் தந்தையையும் நினைவு செய்தால், நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள். என்னை வீட்டில் நினைவு செய்யுங்கள் எனத் தந்தை கூறுகிறார். நீங்கள் வீட்டையும் நிச்சயமாக நினைவு செய்ய வேண்டும். நீங்கள் என்னை வீட்டில் நினைவு செய்வதன் மூலம் உங்களால் அங்கு செல்ல முடியும். சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுவதன் மூலம் நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இவ்விடயங்களை உங்கள் புத்தியில் மிகக் கவனமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்நேரத்தில் அனைவரும் முற்றிலும் தமோபிரதானாக உள்ளனர். சந்தோஷ பூமியில் நீங்கள் அமைதி, சந்தோஷம், செழிப்பு என்பனவற்றைக் கொண்டிருந்தீர்கள். அங்கு ஒரேயொரு தர்மமே உள்ளது. இப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் அமைதியின்மையே காணப்படு;கிறது. எவ்வளவு குழப்பங்களை மாணவர்கள் உருவாக்குகின்றனர் எனப் பாருங்கள்! அவர்கள் தங்கள் புதிய இரத்தத்தினால்; செய்து காட்டுகின்றனர். இந்த உலகம் முற்றிலும் பழையதும் தூய்மையற்றதும் ஆகும் ஆனால் சத்திய யுகமோ, தூய புதிய உலகம் ஆகும். தந்தை இந்தச் சங்கம யுகத்தில் வந்துள்ளார். மகாபாரதப் போரும் இந்தச் சங்கம யுகத்திலேயே இடம்பெறுகின்றது. இந்த உலகம் இப்பொழுது மாற வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் சங்கமயுகத்திலேயே புதிய உலகை ஸ்தாபிப்பதற்காக வருகின்றேன். இதுவே அதி மங்களகரமான சங்கமயுகம் என அழைக்கப்படுகிறது. மக்கள் புண்ணிய மாதத்தையும் (புருஷோத்தம், அதிமேன்மையான) புண்ணிய நேரத்தையும் கொண்டாடுகின்றனர். ஆனால் எவரும் இந்தப் புண்ணிய சங்கமயுகத்தைப் பற்றி அறியமாட்டார்கள். தந்தை இந்தச் சங்கமயுகத்தில் வந்து உங்களை வைரங்களைப் போன்று ஆக்குகின்றார். இதில் நீங்களும் வரிசைக் கிரமமாவீர்கள். அரசர்கள் வைரங்கள் போலாகுகின்றனர் ஆனால் பிரஜைகளோ தங்கம் போல் ஆகுகின்றனர். ஒரு குழந்தை பிறந்ததும் தனது ஆஸ்திக்கான உரிமையைக் கொண்டுள்ளது. நீங்கள் இப்பொழுது உங்கள் தூய புதிய உலகிற்கான உரிமையைக் கோரிக்கொள்கிறீர்கள். இருப்பினும், அதில் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். நீங்கள் இப்பொழுது செய்யும் முயற்சியே ஒவ்வொரு சக்கரத்திலும் நீங்கள் செய்யும் முயற்சியாகும். ஆத்மாக்கள் தாங்கள் செய்யும் முயற்சியிலும் பார்க்க மேலும் அதிகமாகச் செய்ய முடியாதிருப்பின், அத்தகைய ஆத்மாக்கள், அதே முயற்சியையே ஒவ்வொரு கல்பமும் செய்வார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு சக்கரத்திலும் அவர்கள் பிரஜைகளில் ஒருவராகவோ அல்லது செல்வந்தப் பிரஜைகளின் பணிப்பெண்களாகவோ அல்லது வேலைக்காரர்களாகவோ ஆகுவார்கள். அனைவரும் வரிசைக்கிரமமானவர்களே அத்துடன் ஒவ்n;வாருவரும் எவ்வளவு கற்கின்றார்கள் என்பதிலிருந்து அனைத்தும் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் இந்த நிலையில் சரீரத்தை இப்பொழுது நீக்கிவவேண்டியிருப்பின், நீங்கள் என்னவாகுவீர்கள் என்பதை பாபாவினால் உடனடியாகக் கூறமுடியும். நாளுக்கு நாள் நேரம் குறுகிக் கொண்டே செல்கின்றது. நீங்கள் எவராவது இப்பொழுது சரீரத்தை நீக்கிவிடவேண்டியிருப்பின், உங்களால் மீண்டும் கற்க முடியாது. ஆம், ஒரு சிறு குழந்தையிடம் சிவ பாபாவை நினைவு செய்யுமாறு கூறும் போது எவ்வாறு அவர் தொடர்ந்து “சிவபாபா சிவபாபா” எனக் கூறுகின்றாரோ அதேபோல் ஏதோவொன்று உங்கள் புத்தியில் புகுவதன் மூலம் நீங்கள் சிவ பாபாவை நினைவு செய்வீர்கள். பின்னர் அந்த ஆத்மா ஏதோவொன்றைப் பெறுவார். விகாரத்தைப் பற்றி எதுவும் தெரியாதிருப்பதனால் ஒரு சிறு குழந்தை, ஒரு மகாத்மாவுக்குச் சமமானவர் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும், அவர் தொடர்ந்து வளர்ச்சியடையும் பொழுது விகாரங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுகின்றார். அங்கு கோபமோ அல்லது பற்றோ இருக்கிறது. நீங்கள் இந்த உலகிலே உங்கள் பௌதீகக் கண்களால் பார்க்கும் எவற்றிலிருந்தும் பற்றை முடிக்கவேண்டும் என இப்பொழுது உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. முழு உலகமும் இடுகாடாக மாற உள்ளது என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். அனைத்தும் பழையதாகவும்; முற்றிலும் தூய்மையற்றும் உள்ளன. ஒருவர் மரணிக்கும் போது, அவரது பழைய உடைமைகள் அனைத்தும் கர்னிகோர் (விஷேடபிராமணப் புரோகிதருக்கு); கொடுக்கப்படுகின்றன. தந்தையே எல்லையற்ற கர்னிகோர் ஆவார். அவர் சலவைத் தொழிலாளியும் ஆவார். அவர் உங்களிடமிருந்து எதனைப்பெறுகிறார்? அதற்குப்பதிலாக எதனைக் கொடுக்கிறார்? நீங்கள் பாபாவிற்குக் கொடுக்கும் சிறிய பணத்தொகை எதுவானாலும் அழிந்துவிடும். இருந்தபோதிலும் தந்தை கூறுகிறார்: உங்கள் பணத்தை உங்களுடனேயே வைத்திருங்கள். அதிலிருந்து உங்கள் பற்றை நீக்குங்கள். தொடர்ந்தும் தந்தைக்கு உங்கள் கணக்கைக் காட்டுங்கள் அப்போது நீங்கள் தொடர்ந்தும் வழிகாட்டல்களைப் பெறுவீர்கள். உங்களிடமுள்ள வைக்கோற் பெறுமதியான சிறிதளவை, செல்வத்திற்காக, பல்கலைக்கழகத்திற்கும், ஆரோக்கியத்திற்காக மருத்துவமனைக்கும், பயன் படுத்தலாம். மருத்துவமனை நோயாளிகளுக்கும், பல்கலைக்கழகம் மாணவர்களுக்குமாகும். இதில் மருத்துவமனை கல்லூரி இரண்டும் இணைந்துள்ளன. இதற்கு மூன்று சதுர அடி நிலம் மாத்திரமே உங்களுக்குத் தேவை, அவ்வளவே! வேறு எதனையும் கொண்டிராதவர்கள் மூன்று சதுர அடி நிலத்தைக் கொடுத்து அங்கு ஒரு வகுப்பை நடாத்த முடியும். இருப்பதற்கு மூன்று சதுர அடி நிலம் போதுமானதாகும். ஓர் ஆசனம் மூன்று சதுர அடியை மாத்திரமே கொண்டதாகும். உங்களுடைய மூன்று சதுர அடி நிலத்தில் வருகின்ற எவரும் அனைத்தையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வருகின்ற எவரையும் அமரச்செய்து தந்தையின் அறிமுகத்தை அவர்களுக்குக் கொடுங்கள். சேவைக்காகப் பல பாட்ஜ்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பாட்ஜ்; மிக எளிமையானது. படங்கள் மிக நல்லவை. அத்துடன் எழுத்துக்களும் முழு அர்த்தத்தையும் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் அதிகளவு சேவை செய்ய முடியும். நாளுக்கு நாள் இயற்கை அனர்த்தங்கள் அதிகரிக்கும் போது மக்களுக்கு இந்த உலகில் விருப்பமின்மை ஏற்பட்டு தந்தையை நினைவு செய்ய ஆரம்பிப்பார்கள். இந்த ஆத்மாவாகிய நான் அழிவற்றவன், நான் எனது அழிவற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தையே கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள் அப்பொழுது உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதித் தந்தையிடம் முழுமையான அன்பைக் கொண்டிருங்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகாதீர்கள். ஆம், உங்கள் குழந்தைகள் போன்றோரிடம் நீங்கள் வெளிப்படையான அன்பைக் கொண்டிருக்கலாம். ஆனால் உங்களது உண்மையான அன்பு ஆன்மீகத் தந்தையிடமே இருக்கட்டும். அவரை நினைவு செய்வதன் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் நண்பர்கள் உறவினர்களைப் பார்க்கும் போது உங்கள் புத்தி, தந்தையின் நினைவு எனும் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் நினைவெனும் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் போல் இருக்க வேண்டும். ஆத்மாக்கள் பரமாத்மாவாகிய தந்தையை நினைவு செய்ய வேண்டும். உங்களுடைய புத்தி அங்கு மேலே தொங்க வேண்டும். தந்தையின் வீடு மேலேயே உள்ளது. அசரீரி உலகமும், சூட்சும உலகமும் இந்தப் பௌதீக உலகமும் உள்ளன. இப்பொழுது உங்கள் பயணம் முடிவிற்கு வருகிறது, நீங்கள் விரைவாக வீடு திரும்ப வேண்டும். நீங்கள் இப்பொழுது உங்கள் வீடுதிரும்பும் பயணத்தில் உள்ளீர்கள். ஆகவே, உங்கள் வீடு அதிக கவர்ச்சியாக உள்ளது. அந்த வீடு உங்கள் எல்லையற்ற தாமமாகும். நீங்களும் உங்கள் சொந்த வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். மக்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்காகவே பக்தி செய்கிறார்கள். இருப்பினும், அவர்கள் முழுமையான ஞானத்தைக் கொண்டிருக்கவுமில்லை அத்துடன் அந்த வீட்டிற்கு அவர்களால் திரும்பிச் செல்லவும் முடிவதில்லை. அவர்கள் கடவுளை அடைவதற்காகவும், நிர்வாணாதாமத்திற்குச் செல்வதற்காகவும் பல யாத்திரைகள் போன்றவற்றிற்குச் செல்கின்றனர். அவர்கள் அதிகளவு முயற்சி செய்கின்றனர். சந்நியாசிகள் அமைதிக்கான பாதையை மாத்திரமே காட்டுகின்றனர்; அவர்களுக்கு சந்தோஷபூமி பற்றி எதுவும் தெரியாது. தந்தை மாத்திரமே உங்களுக்கு சந்தோஷ பூமிக்கான பாதையைக் காட்டுகிறார். எல்லாவற்றிற்கும் முதலில் நீங்கள் நிச்சயமாக உங்கள் ஓய்வு ஸ்திதியான சத்தத்திற்கு அப்பாற்பட்ட (நிர்வாணா) இடத்திற்குச் செல்ல வேண்டும். அந்த இடம் “பிரம்மாந்த்;” என்றும் அழைக்கப்படுகிறது. அவர்கள் பிரம்ம தத்துவமே கடவுள் என நினைக்கின்றனர். ஆத்மாக்களாகிய நாங்கள் புள்ளிகள், எமது வசிப்பிடம் “பிரம்மாந்த்” ஆகும். நீங்களும் அந்த வடிவில் வழிபாடு செய்யப்படுகிறீர்கள். அவர்களால் புள்ளியை எவ்வாறு வழிபாடு செய்ய முடியும்? அவர்கள் வழிபாடு செய்வதற்காக, ஒவ்வொரு ஆத்மாவினதும் சாலிகிராமை உருவாக்கி அதனை வழிபாடு செய்கின்றனர். ஒரு புள்ளியை வேறு எவ்வாறு வழிபாடு செய்ய முடியும்? இதனாலேயே அவர்கள் பெரிய உருவங்களை உருவாக்குகின்றனர். தந்தையிடம் தனக்கென சொந்தமாகச் சரீரம் ஒன்றில்லை. இப்பொழுது உங்களுக்கு இவ்விடயங்கள் தெரியும். நீங்கள் படங்களில் ஆத்மாவின் பெரிய ரூபங்களையும் காட்ட வேண்டும். மக்கள் ஒரு புள்ளியைப் பார்ப்பதன் மூலம் எதனைப் புரிந்துகொள்ளப் போகிறார்கள்? ஆகவே, ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவது உண்மையில் சிறந்தது. சில தாய்மார்களும் அதைப்போன்று திலகத்தை இட்டுக் கொள்கிறார்கள். ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள வெள்ளைத் திலகத்தை நீங்கள் பெற முடியும். ஆத்மாவும் நட்சத்திரத்தைப் போன்று வெள்ளை நிறமாகும். ஒருவரது நெற்றியின் மத்தியில் அமர்ந்திருக்கும் ஆத்மாவைக் குறிக்கும் அடையாளம் இந்தத் திலகமாகும். இருப்பினும், அதன் அர்த்தத்தை எவருமே அறிய மாட்டார்கள். எவ்வாறு இந்தச் சின்னஞ்சிறிய ஆத்மா அதிகளவு ஞானத்தைக் கொண்டிருக்கிறார் என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். பல குண்டுகள் போன்றவை உருவாக்கப்படுகின்றது. எவ்வாறு ஆத்மாக்களில் அவர்களின் பாகங்கள் பதியப்பட்டுள்ளன என்பது அற்புதமே ஆகும். இவை மிக ஆழமான விடயங்கள் ஆகும். சின்னஞ் சிறிய ஆத்மாவினால் அவரின் சரீரத்தினூடாக பலவற்றைச் செய்யக் கூடியதாக உள்ளது. ஆத்மாக்கள் அழிவற்றவை. அவர்களது பாகங்கள் ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை, அத்துடன் அவர்களது செயற்பாடுகள் ஒருபோதும் மாறுவதுமில்லை. விருட்சம் இப்பொழுது பெரிதாக உள்ளது ஆனால் சத்திய யுகத்தில் அது மிகச் சிறியதாக இருக்கும். சிறிய இனிய விருட்சத்தின் நாற்று இப்பொழுது நாட்டப்படுகிறது. தூய்மையற்றவர்களாக இருந்த நீங்கள் இப்பொழுது தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். சின்னஞ்சிறிய ஆத்மாவினுள் அத்தகைய பெரிய பாகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அது இயற்கை ஆகும் நீங்கள் தொடந்தும் உங்கள் அழிவற்ற பாகத்தை நடிக்கின்றீர்;கள். அது ஒருபொழுதும்; நிறுத்தத்திற்கு வருவதில்லை. எவ்வாறு ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் என்பதும் எவ்வாறு அவர்கள் அழிவற்ற பாகத்தினால் நிரப்பப்பட்டுள்ளனர் என்பதும் ஓர் அற்புதமே ஆகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஓ குழந்தைகளே நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக வேண்டும். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள்; இதற்கு முயற்சி தேவை. ஆத்மாக்களாகிய நீங்கள் பெரிய பாகத்தைக் கொண்டுள்ளீர்கள். உங்களைப்போல் பாபா அத்தகைய பெரிய பாகத்தைக் கொண்டிருக்கவில்லை. தந்தை கூறுகிறார்: நீங்கள் சுவர்க்கத்தில் சந்தோஷமாக இருக்கும் பொழுதே, நான் சென்று ஓய்வெடுக்கிறேன். அந்த நேரத்தில் நடிப்பதற்கு எனக்குப் பாகம் எதுவும் இல்லை. இந்த நேரத்திலேயே உங்களுக்காக நான் அதிகளவு சேவையைச் செய்கிறேன். இந்த ஞானம் மிக அற்புதமானது! வேறுஎவரும் அன்றி நீங்களே அதனைப்பற்றி அறிந்துள்ளீர்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருக்காது உங்களால் இதனைக் கிரகிக்க முடியாது. நீங்கள் உங்கள் உணவு அல்லது பானத்தை மாற்றும் போது, நீங்கள் இதனை எவ்வாறு கிரகிக்கிறீர்கள் என்பதில் ஒரு வேறுபாட்டை ஏற்படுத்தும். இதில் நீங்களும் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும். தந்தையை நினைவு செய்வது மிக இலகுவானதாகும். நீங்கள் தந்தையை நினைவு செய்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக்கொள்ள வேண்டும். இதனாலேயே தந்தை கூறியுள்ளார்: உங்களுடன் படங்களை வைத்திருங்கள். யோகம் மற்றும் உங்கள் ஆஸ்தியின் படங்களை உருவாக்குங்கள் அப்போது பிராமணர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறோம் என்ற போதையை நீங்கள் கொண்டிருப்பீர்கள். பின்னர் தேவர்களிலிருந்து நீங்கள் சத்திரியர்கள் ஆகுவீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் சங்கம யுகத்தவர்கள் ஆவீர்கள்;. நீங்கள் மேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள். மக்களின் புத்தியில் இவ்விடயங்களைப் பதியச் செய்வதற்கு நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். நாளுக்கு நாள் நீங்கள் அதிகளவு ஞானத்தைப் புரிந்து கொள்ளும் போது, நீங்கள் மேலும் சந்தோஷம் நிறைந்தவர்களாக ஆகுவீர்கள். பாபா உங்களுக்கு அதிகளவு நன்மையளிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு சக்கரத்திலும் நீங்கள் ஏறுகின்ற ஸ்தியையே கொண்டிருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்காக அனைத்தையும் செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் சிவபாபாவின் களஞ்சியத்திலிருந்தே உண்கிறீர்கள் என்பதை உங்கள் புத்தி நினைவு செய்ய வேண்டும். சிவபாபாவைத் தொடர்ந்தும் நினைவு செய்வதன் மூலம் உங்கள் அனைத்துக் கவலைகளும் நீக்கப்படும். நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை நீக்கி வீடு திரும்புவீர்கள். பாபா உங்களிடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்வதில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் ஏனெனில் பாபா அருள்பவர்;. தந்தை கூறுகிறார்: எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! யாருக்கு உங்கள் பணத்தைக் கொடுக்கின்றீர்கள் என்பதையிட்டு முழுக் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒருவருக்கு பணத்தைக் கொடுத்து அதை அவர் மதுபானம் அருந்துவதிலோ அல்லது வேறு தவறான வழிகளிலோ செலவழிப்பாராயின் அந்தப் பாவம் உங்களை வந்தடையும். பாவாத்மாக்களுடன் கொடுக்கல் வாங்கல்களைக் கொண்டிருப்பதால் நீங்கள் பாவாத்மாக்களாக ஆகுவீர்கள். அத்தகைய வேறுபாடு இங்கே இருக்கிறது! நீங்கள் இங்கு புண்ணியாத்மாக்கள் ஆகவேண்டும். ஆகவே, பாவாத்மாக்களுடன் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் கொண்டிராதீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் எவருக்கும் துன்பம் கொடுக்கக் கூடாது. நீங்கள் எவர்மீதும் பற்றைக் கொண்டிருக்கக் கூடாது. தந்தை உங்களிடம் சகரினாக வருகின்றார். வைக்கோற் பெறுவதிவாய்ந்த உங்கள் பழையனவற்றை எடுப்பதிலிருந்து அவர் உங்களுக்கு எந்தளவு வட்டியைச் செலுத்துகிறார் என்பதைப் பாருங்கள். நீங்கள் பெருந்தொகையான வட்டியைப் பெறுகிறீர்கள். அவர் மிகவும் கள்ளங்கபடம் அற்றவர்! இரண்டு கைப்பிடி அரிசிக்குப் பதிலாக அவர் உங்களுக்கு மாளிகையைக் கொடுக்கின்றார். நல்லது

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, வெகு நாட்களுக்கு முன்பு தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பொழுது உங்கள் பயணம் முடிவுக்கு வருகிறது, நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இதனாலேயே நீங்கள் இந்தப் பழைய உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் புத்தியின் யோகம் நிச்சயமாக தந்தையின் நினைவெனும் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. சங்கமயுகத்தில் தந்தையினால் உருவாக்கப்பட்ட யாகத்தைப் பராமரிப்பதற்கு நீங்கள் உண்மையான தூய பிராமணர்கள் ஆகவேண்டும். நீங்கள் எதைச் செய்;தாலும், தந்தையின் நினைவில் நீங்கள் நிலைத்திருக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
உங்களது பொக்கிஷங்கள் அனைத்தையும் சகல ஆத்மாக்களுக்கும் சேவை செய்வதற்காக பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஒரு இலகு யோகி ஆகி,; ஒத்துழைப்பவர்கள் ஆகுவீர்களாக.

எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் அனைத்தின் ஊடாகவும் உலக ஆத்மாக்கள் அனைவருக்கும் சேவை செய்யும் சேவையாளர் என உங்களைக் கருதி, அனைத்தையும் சேவைக்காக பயன்படுத்துவதே இலகுயோகி ஆகுவதற்கான வழியாகும். நீங்கள் இந்த பிராமண வாழ்க்கையில் தந்தையிடமிருந்து பெற்றிருக்கின்ற சக்திகள், தெய்வீகக் குணங்கள், ஞானம் மற்றும் மேன்மையான வருமானம் ஈட்டுவதற்கான நேரம் அனைத்தையும் சேவைக்காக பயன்படுத்துங்கள். அதாவது, ஒத்துழைப்பவராக இருக்கும் போது நீங்கள் இலகுயோகி ஆகுவீர்கள். எவ்வாறாயினும் நிறைந்திருப்பவர்களாலேயே ஒத்துழைப்பவர்களாக இருக்க முடியும். எனவே ஒத்துழைப்பவர் என்றால் மகாதானி என்று அர்த்தமாகும்.

சுலோகம்:
எல்லையற்ற ஆர்வமின்மை கொண்டிருக்கும் ஒருவர் ஆகும்போது, கவரப்படுகின்ற சம்ஸ்காரங்கள் இலகுவாக முடிவடையும்.


அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான வீட்டு வேலை.
பிராமணர்களான உங்கள் மத்தியில் உங்கள் மொழியானது அவ்யக்த உணர்வுகளினால் நிறைந்திருக்கட்டும். நீங்கள் எவரது தவறுகளைப் பற்றி கேட்டிருந்தாலும் அதனை உங்கள் எண்ணங்களுக்குள் என்றுமே எடுத்துச் செல்லாதீர்கள். அல்லது அவை பிறரது எண்ணங்களுக்குள்ளும் செல்லாதிருக்கட்டும். ஒன்றுகூடலுக்குள் குறிப்பாக அவ்யக்த அனுபவங்களின் பரிமாற்றத்தையே கொண்டிருங்கள்.