28.01.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் சங்கமயுகத்துப் பிராமணர்கள் என்பதை நினைவு செய்யும்பொழுது, சத்தியயுகத்து மரங்களைப் பார்க்க ஆரம்பித்து, எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள்.
கேள்வி:
இந்த ஞானத்தில் மிகவும் ஆர்வமாக உள்ள குழந்தைகளை வெளிக்காட்டுவது எது?
பதில்:
அவர்கள் தங்களுக்கிடையில் ஞானத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். மற்றவர்களைப் பற்றி அரட்டையடிப்பதில் அவர்கள் மும்முரமாக இருப்பதில்லை. அவர்கள் ஏகாந்தத்தில் ஞானக்கடலைக் கடைகிறார்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிந்துள்ள, இவ்வுலக நாடகத்தின் இரகசியம் என்ன?
பதில்:
இவ்வுலக நாடகத்தில், வேறு எவரும் அன்றி, சிவபாபாவே நிலையானவர். இப்பழைய உலகின் ஆத்மாக்களைப் புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்வதற்கு யாரோ ஒருவர் தேவைப்படுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே நாடகத்தின் இந்த இரகசியத்தை அறிவீர்கள்.
ஓம் சாந்தி.
தந்தை அதிமங்களகரமான சங்கமயுகத்தில் வந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகிறார். நீங்கள் பிராமணர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் உங்களைப் பிராமணர்கள் என்று கருதுகிறீர்களா அல்லது இதையும் நீங்கள் மறந்துவிடுகிறீர்களா? பிராமணர்கள் ஒருபொழுதும் தங்கள் குலத்தை மறப்பதில்லை. ஆகவே நீங்கள் பிராமணர்கள் என்பதையும் நினைவுசெய்ய வேண்டும். இந்த ஒரு விடயத்தையேனும் நீங்கள் நினைவுசெய்தால், உங்கள் படகு அக்கரை சேர இயலும். நீங்கள் சங்கமயுகத்தில் செவிமடுக்கின்ற புதிய விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இதுவே ஞானக் கடலைக் கடைதல் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் ரூப்பும், பசாந்தும் (ஞான மழையைப் பொழிகின்ற யோக சொரூபம்) ஆவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானம் முழுவதாலும் நிரப்பப்பட்டுள்ளதால், அந்த இரத்தினங்கள் மட்டுமே வெளிப்பட வேண்டும். நீங்கள் சங்கமயுகத்துப் பிராமணர்கள் என்பதை நினைவுசெய்ய வேண்டும். உங்களிற் சிலர் இதையேனும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் சங்கமயுகத்து பிராமணர்கள் என்பதை நினைவுசெய்யும்பொழுது, சத்தியயுகத்து மரங்களைப் பார்க்க ஆரம்பித்து, எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தும் அனைத்து விடயங்களையும் உங்களுக்குள் மீட்டல் செய்யுங்கள். இப்பொழுது நாங்கள் சங்கமயுகத்தில் இருப்பதை எவரும் அன்றி, நீங்களே அறிவீர்;கள். சங்கமயுகத்துக் கல்விக்குக் காலம் எடுக்கிறது. இதுவே சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான, அதாவது, நரகவாசியிலிருந்து சுவர்க்கவாசியாக மாறுவதற்கான ஒரேயொரு கல்வி. நீங்கள் சுவர்க்கவாசிகளான தேவர்கள் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவுசெய்வதால், சந்தோஷமாக இருப்பீர்கள். தங்களைச் சங்கமயுகத்தில் வசிப்பவர்களாகக்; கருதுபவர்கள் மட்டுமே, சுவர்க்கவாசிகளாக முடியும். முன்னர், நீங்கள் நரகவாசிகளாக இருந்து அழுக்கான செயல்களைச் செய்தபொழுது, உங்கள் ஸ்திதி முழுமையாகவே சீரழிந்திருந்தது. இப்பொழுது நீங்கள் அவ் விடயங்கள் அனைத்தையும் செய்வதை நிறுத்த வேண்டும். நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக, அதாவது சுவர்க்கவாசிகளாக மாறவேண்டும். ஒருவருடைய மனைவி இறந்து, நீங்கள் அவளுடைய கணவனிடம், “உங்கள் மனைவி எங்கே?” என வினவும்பொழுது, “அவள் சுவர்க்கவாசி ஆகிவிட்டாள்” என்று அவர் கூறுவார், ஆனால் சுவர்க்கம் என்றால் என்ன என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். அவள் சுவர்க்கவாசி ஆகியிருப்பின், அவர் சந்தோஷமடைய வேண்டும்! இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களைப் பற்றி அறிந்துகொள்கிறீர்கள். இதைப் பற்றி உள்ளாரச் சிந்;தியுங்கள்: இப்பொழுது நாங்கள் சங்கமயுகத்தில் இருப்பதுடன், தூய்மையாகிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தந்தையிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியைக் கோருகிறோம். மீண்டும் மீண்டும் இதை உங்களுக்குள் தொடர்ந்தும் கூறுங்கள். நீங்கள் இதை மறக்காமல் இருந்தாலும், மாயை உங்களை மறக்க வைத்து, உங்களை முற்றிலும் கலியுகத்தவர்கள் ஆக்குகிறாள். உங்கள் செயற்பாடுகள் முற்றிலும் கலியுகத்துக்குரியவை ஆகும்பொழுது, உங்கள் சந்தோஷப் பாதரசம் ஸ்திரமாக இருக்காது. உங்கள் முகங்கள் பிரேதங்களைப் போன்று ஆகிவிடுகின்றன. தந்தை கூறுகிறார்: காமச்சிதையில் அமர்ந்ததால், அனைவரும் எரிகின்ற பிரேதத்தைப் போன்று ஆகிவிட்டார்கள். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிந்திருப்பதால், அந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: நீங்கள் அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய விரும்பினால், கோப, கோபியரிடம் கேளுங்கள். உங்கள் சொந்த இதயத்தைக் கேளுங்கள்: நான் அந்த அனுபவத்தில் நிலைத்திருக்கிறேனா? நீங்கள் இறை பணியில் (அளைளழைn) இருக்கிறீர்கள். இந்த இறை பணியில் நீங்கள் புரிகின்ற பணி என்ன? அனைத்துக்கும் முதலில், நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாகவும், பின்னர் பிராமணர்களிலிருந்து தேவர்களாகவும் மாறுகிறீர்கள். நீங்கள் பிராமணர்கள் என்பதை ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள்! தாங்;கள் பிராமணர்கள் என்று ஏனைய லௌகீக பிராமணர்கள் விரைவிலேயே கூறிவிடுகிறார்கள். அந்தப் பிராமணர்கள் கருப்பையின் மூலம் பிறக்கிறார்கள், நீங்களோ வாய்வழித் தோன்றல்களான குழந்தைகள். பிராமணர்களாகிய உங்களுக்கு மகத்தான போதை இருக்க வேண்டும். பிரம்ம போஜனம் நினைவுகூரப்படுகிறது. நீங்கள் மக்களுக்குப் பிரம்ம போஜனத்தை உண்ணக்; கொடுக்கும்பொழுது, தாங்கள் தூய பிராமணர்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்பதாக அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைகிறார்கள். நீங்கள் தூய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் தூய்மையற்ற எதையும் செய்யக்கூடாது. இதற்குக் காலமெடுக்கிறது. தாங்கள் பிறப்பெடுத்த கணத்திலேயே எவரும் இவ்வாறு ஆகுவதில்லை. “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி” எனும் கூற்று உள்ளது. நீங்கள் பிறப்பெடுத்தவுடனேயே உங்கள் (லௌகீக) தந்தையின் வாரிசு ஆகுகிறீர்கள். இவர் பிரஜாபிதா பிரம்மா எனவும், பிரம்மா சிவனின் குழந்தை எனவும் நீங்கள் இனங்கண்டு கூறும்பொழுது, இந்த நம்பிக்கையைக் கொண்டிருந்து, பின்னர் ஒரு வாரிசு ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், பின்னர் நீங்கள் எவ்விதமான தவறான செயலைப் புரிந்தாலும், மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியிருக்கும். மக்கள் எவ்வாறு தங்களைக் காசியில் அர்ப்பணிக்கிறார்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தண்டனையை அனுபவம் செய்யும்பொழுது, அவர்களின் கணக்குகள் தீர்க்கப்படுகின்றன. அவர்கள் முக்தியடைவதற்காக அக் கிணற்றினுள் பாய்;கிறார்கள். இங்கு அதுபோன்று எதுவுமே கிடையாது. குழந்தைகளாகிய உங்களுக்கு சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! இது மிக இலகுவானது! எவ்வாறாயினும், குழந்தைகள் மாயையால் பிடிக்கப்பட்டு, ஒரு சுழலில் இடப்படுகிறார்கள். உங்கள் யுத்தம் மிக நீண்டகாலம் நீடிக்கிறது. பௌதீகச் சேனைகளின் யுத்தம் இந்தளவு காலத்துக்கு நடைபெற மாட்டாது. நீங்கள் பாபாவிடம் வந்த கணத்திலேயே உங்கள் யுத்தம் ஆரம்பித்தது. பழையவர்கள் அதிகளவு போராடியுள்ளனர். இது புதிதாக வருபவர்களுக்கும் தொடரும். அந்த யுத்தத்தில் படைவீரர்கள் மரணிக்கும்பொழுது, அவர்களுக்குப் பதிலாக ஏனையோர் நியமிக்கப்படுகிறார்கள். இங்கும் சிலர் மரணிக்கிறார்கள், ஆனால் இன்னமும் எங்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது. விருட்சம் பெரிதாக வளரவேண்டும். தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: நான் உங்கள் தந்தையும், உங்கள் பரம ஆசிரியரும், சற்குருவும் ஆவேன் என்பதை நினைவுசெய்யுங்கள். “தந்தை, ஆசிரியர், அல்லது சற்குரு” என்று நீங்கள் கிருஷ்ணரை அழைக்க மாட்டீர்கள். நீங்கள் அனைவருக்கும் நன்மை அளிப்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும். மகாராத்திக் குழந்தைகள் சேவை செய்வதில் மும்முரமாக இருக்கும்பொழுது பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள்; அவர்கள் அழைக்கப்படும் இடங்களுக்கெல்லாம் ஓடிச் செல்கிறார்கள். கண்காட்சிகளில் சேவை செய்வதற்கும், சேவைக் குழுக்களில் இருப்பதற்கும் சிறந்த குழந்தைகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். சேவை செய்வதில் மும்முரமாக இருப்பதற்குக் குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது, அதன் மூலம், நீங்கள் இறை பணியில் இருக்கும் சிறந்த குழந்தைகள் என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். மிக நன்றாகச் சேவை செய்பவர்களையிட்டுத் தந்தையும் பூரிப்படைகிறார். உங்கள் இதயத்தை வினவுங்கள்: நான் சேவை செய்கிறேனா? இறை தந்தையின் சேவையில் இருப்பதைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். தந்தையாகிய கடவுள் செய்யும் சேவை என்ன? அனைவருக்கும் அவர் இச்செய்தியைக் கொடுக்கிறார்;: மன்மனாபவ! உங்கள் புத்தியில் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உள்ளது. நீங்கள் சுயதரிதனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுகிறீர்கள். ஆகவே நீங்கள் இவை அனைத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஒருபொழுதும் சுயதரிதனச் சக்கரம் சுழல்வதை நிறுத்துவதில்லை. நீங்கள் உயிருள்ள கலங்கரை விளக்கங்கள். உங்களுக்குப் பெருமளவில் புகழ் உள்ளது. உங்களுக்கு எல்லையற்ற தந்தையின் புகழ் தெரியும். அவரே தூய்மையாக்குபவராகிய, ஞானக்கடல். அவரே கீதையை உரைத்தவர். அவர் ஞானத்தின் மூலமும், யோக சக்தி மூலமும் தனது பணியைச் செய்து முடிக்கின்றார். யோக சக்தி அதிக தாக்கத்தைக் கொண்டுள்ளது. இப்பொழுது நீங்கள் கற்கின்ற, பாரதத்தின் புராதன யோகம் பிரபல்யமானது. சந்நியாசிகள் ஹத்தயோகிகள் ஆவர்;; அவர்களால் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்க முடியாது. தந்தையொருவர் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறார். நீங்கள் இந்த ஞானத்தினூடாகப் பிறவி எடுக்கிறீர்கள். கீதையே தாயும் தந்தையும் என்று கூறப்படுகிறது. தாயும் தந்தையும் உள்ளனர். சிவபாபாவின் குழந்தைகளாக இருப்பதுடன், உங்களுக்குத் தாயும் தந்தையும் தேவைப்படுகின்றனர். மக்கள் இதைப் பாடினாலும், அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. இதன் அர்த்தம் மிக ஆழமானது என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். “தந்தையாகிய கடவுளே” என்று கூறப்பட்டுள்ளதால், பின்னர் ஏன் நீங்கள் தாயும் தந்தையும் என்று கூறுகிறீர்கள்? இங்கு சரஸ்வதி இருப்பினும், உண்மையில் பிரம்மபுத்திராவே உண்மையான தாய் என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். கடலும் பிரம்மபுத்திராவும் உள்ளன. இந்த இரண்டினதும் சங்கமமே முதல் சங்கமம் ஆகும். பாபா இவரில் அவதரிக்கிறார். இவை மிகவும் சூட்சுமமான விடயங்கள். உங்களிற் பலர் இவ்விடயங்களை உங்கள் புத்தியில் வைத்திருப்பதில்லை. உங்களிற் பலருக்கு அவற்றைப் பற்றிச் சிந்திக்க இயலாதுள்ளது. ஒரு குறைந்த அந்தஸ்தை அடைபவர்களுக்கு மிகவும் குறுகிய புத்திகளே உள்ளன. இப்பொழுதும் தந்தை அவர்களுக்குக் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இது இலகுவானது, இல்லையா? பரமாத்மாவே ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை. அவர் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதுவே பிரதான விடயம். மந்த புத்தி உடையவர்களால் இந்த ஆழமான விடயங்களைப் புரிந்துகொள்ள இயலாதுள்ளது. இதனாலேயே கீதை கூறுகிறது: மன்மனாபவ! நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும், தாங்;கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுவதாகவும் பாபாவுக்கு எழுதுகின்ற அனைவரும் கூறுகிறார்கள். ஏதோவொன்று அவர்களைத் தோற்கடிக்கிறது. இது மாயைக்கும், கடவுளின் குழந்தைகளான உங்களுக்கும்; இடையிலான ஒரு குத்துச்சண்டை. வேறு எவருக்கும் இது பற்றித் தெரியாது. புhபா கூறுகின்றார்: உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு நீங்கள் மாயையை வெற்றிகொள்ள வேண்டும். முதலில், நீங்கள் கர்ம உறவுமுறைகளுக்குள் வந்தீர்கள். அரைக்கல்பத்தின் பின்னர், நீங்கள் படிப்படியாகக் கர்ம பந்தனங்களைக் கொண்டிருக்க ஆரம்பித்தீர்கள். அனைத்துக்கும் முதலில், நீங்கள் தூய ஆத்மாக்களாக இருந்தபொழுது, உங்கள் செயல்களில் பந்தனம் இருக்கவில்லை; சந்தோஷத்துக்குரிய அல்லது துன்பத்துக்குரிய பந்தனம் இருக்கவில்லை, நீங்கள் சந்தோஷ உறவுமுறைகளுக்குள் வந்தீர்கள். நீங்கள் சந்தோஷ உறவுமுறைகளில் இருந்தீர்கள் எனவும், பின்னர் துன்;பம் நிறைந்த உறவுமுறையைக் கொண்டிருந்தீர்கள் எனவும் இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் நிச்சயமாகச் சந்தோஷ உலகத்துக்குச் செல்லப் போகிறீர்கள். உலகம் புதியதாகவும், நீங்கள் தூய்மையாகவும் இருந்தபொழுது, நீங்கள் அதிபதிகளாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் பழைய உலகில், தூய்மையற்றுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். ஆகவே, அதை நினைவுசெய்யுங்கள்! தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும், நீங்கள் திரும்பவும் என்னுடன் வீட்டுக்கு வருவீர்கள். நீங்கள் உங்கள் மௌன தாமத்தினூடாக உங்கள் சந்தோஷ தாமத்துக்குச் செல்லவுள்ளீர்கள். அனைத்துக்கும் முதலில், நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். தூய்மையாக்குபவரான நானே, உங்களைத் தூய்மையாக்குவதால், நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச்செல்ல முடியும். இவ்விதமாக உங்களுடன் பேசுங்கள்: இப்பொழுது சக்கரம் முடிவுக்கு வருகிறது. நாங்கள் இத்தனை பிறவிகளை எடுத்துள்ளோம். தூய்மையற்றவர்களிலிருந்து எங்களைத் தூய்மையாக்குவதற்குத் தந்தை இப்பொழுது வந்துவிட்டார். யோக சக்தியினால் மாத்திரமே நாங்கள் தூய்மையாக முடியும். யோக சக்தி மிகவும் பிரபல்யமானது. தந்தையால் மாத்திரமே உங்களுக்கு இதைக் கற்பிக்க முடியும். இதற்காக உங்கள் சரீரத்தின் மூலம் நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை. இவ்விடயங்களை நாள் முழுவதும் கடையுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும், ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, உங்கள் புத்தியில் இவ்விடயங்களைக் கொண்டிருங்கள். நீங்கள் வீட்டின் கூரையில் அதிகளவு ஏகாந்தத்தைக் கொண்டிருக்க முடியும். இதில் பயம் எனும் கேள்வியே இருக்;கக்கூடாது. முன்னர், முரளியைச் செவிமடுத்த பின்னர், நீங்கள்; கேட்டவற்றைக் கடைவதற்கு மலைகளுக்குச் செல்வீர்கள். ஞானத்தில் ஆர்வமுடையவர்கள், தங்களுக்கிடையில் ஞான விடயங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்களிடம் ஞானம் இல்லாவிட்டால், அவர்கள் மற்றவர்களைப் பற்றி அரட்டையடிக்க ஆரம்பிக்கிறார்கள். உங்கள் கண்காட்சிகளில் பல்வேறு மக்களுக்கும் நீங்கள் இப்பாதையைக் காண்பிக்க முடியும். உங்கள் தர்மம் பெரும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஏனைய சமயத்தவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அவர் ஒரு முஸ்லீம் அல்லது நீங்கள் இவ்வாறானவர் என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. இல்லை; நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா. நீங்கள் மற்றவரை ஓர் ஆத்மாவாகப் பார்க்க வேண்டும். அந்த ஆத்மாவுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் இதை உங்கள் கண்காட்சிகளில் விளங்கப்படுத்த வேண்டும். ஆகவே, இதைப் பயிற்சி செய்யுங்கள்: இந்த ஆத்மாவாகிய நான், எனது சகோதர ஆத்மாவுக்கு விளங்கப்படுத்துகிறேன். நாங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றோம். நாங்கள் எங்களுடைய சகோதரர்;களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும் ஆத்மாக்களாக எங்களைக் கருதுகிறோம்: நீங்கள் இப்பொழுது தந்தையிடம் வரவேண்டும். நீங்;கள் நீண்டகாலத்துக்கு முன்னர் அந்த அமைதிதாமத்தை நீங்கிப் பிரிந்து சென்றீPர்கள். இங்கு அதிகளவு துன்பமும், அமைதியின்மையும் உள்ளன. தந்தை கூறுகிறார்: இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதைப்; பயிற்சி செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் பெயர்களையும், ரூபங்களையும், சரீரங்களையும் மறப்பீர்கள். நீங்கள் ஏன் இன்ன இன்னார் ஒரு முஸ்லீம் என்று எண்ண வேண்டும்? அவரை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறு அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும். அந்த ஆத்மா நல்லவரா அல்லது தீயவரா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். தீய ஆதிக்கமுள்ளவர்களிலிருந்து விலகியிருக்குமாறு ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். இங்கு உங்கள் பாகங்களை நடிப்பதை நீங்கள் இப்பொழுது முடித்து விட்டதால், வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் தூய்மையாக வேண்டும். நிச்சயமாக நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இப்பொழுது தூய்மையாகுவதால், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். மக்கள் வார்த்தைகளில் ஒரு சத்தியப் பிரமாணம் செய்யவேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்களும் ஒரு சத்தியப் பிரமாணம் செய்யவேண்டும். தந்தை உங்களுக்கு விவேகமான வழிமுறைகளைக் கொடுக்கிறார். உண்மையில் ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதரர்கள், நீங்கள் சரீரங்;களில் பிரவேசிக்கும்பொழுது, சகோதர, சகோதரிகள்; ஆகுகிறீர்கள். சகோதர, சகோதரிகள்; விகாரத்தில் ஈடுபடக்கூடாது. தந்தையை நினைவு செய்து தூய்மையாகுவதால், நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் மாயையால் தோற்கடிக்கப்பட்டால், மீண்டும் எழுந்து உஷாராக இருக்க வேண்டும் என்று விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் உஷாராக இருக்குமளவுக்கு, அதிகளவை அடைவீர்கள்; இலாபமும் நட்டமும் உள்ளன. அரைக் கல்பத்துக்கு இலாபமும் (வரவு) மற்றைய அரைக் கல்பத்துக்கு இராவண இராச்சியத்தில் நட்டமும் (செலவு) உள்ளது. ஒரு கணக்கு உள்ளது: வெற்றியானது இலாபமும், தோல்வியானது நட்டமும் ஆகும். ஆகவே, உங்களைச் சோதியுங்கள். தந்தையை நினைவுசெய்வதால், குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். மற்றவர்கள் இப்பாடலைப் பாடுகிறார்கள், ஆனால் அதைப் பற்றிய ஒரு விடயத்தையேனும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. புரிந்துகொள்ளாமலேயே அவர்கள் அனைத்து விடயங்களையும் செய்கிறார்கள். நீங்கள் இப்பொழுது வழிபாடு போன்றவற்றைச் செய்வதில்லை, ஆனால் நீங்கள் புகழ் பாடுகிறீர்கள். அந்த ஒரேயொரு தந்தையின் புகழே கலப்படமற்றது. தந்தையே வந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள்; கேள்விகள் எதனையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் விழிப்புணர்வில் சக்கரம் இருக்கட்டும், நீங்கள் எவ்வாறு மாயையை வெற்றிகொள்கிறீர்கள் என்பதையும், பின்னர் எவ்வாறு நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்;கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்பட்டால், நூறு மடங்கு தண்டனையை அனுபவம் செய்வீர்கள். தந்தை கூறுகிறார்: சற்குருவை அவதூறு செய்வது நடைபெறுவதை அனுமதிக்காதீர்கள், இல்லையெனில், நீங்கள் ஓர் அந்தஸ்தைக் கோர இயலாதிருக்கும். இதுவே சத்திய நாராயணன் ஆகுகின்ற உண்மைக்கதை. வேறு எவருக்கும் இதைப் பற்றித் தெரியாது. அவர்கள் சத்திய நாராயணனின் கதையிலிருந்து கீதையின் கதையை வேறாக்கி விட்டார்கள். இக்கீதை ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கானது. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகும் கதையைக் கூறுகிறேன். இது கீதை எனவும், அமரத்துவக் கதை எனவும் அழைக்கப்படுகிறது. தந்தை மாத்திரமே உங்களுக்கு மூன்றாவது கண்ணைக் கொடுக்கிறார். நீங்கள் தேவர்களாகுவதால், உங்களுக்கு அந்த நற்குணங்களும் இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இவ்வுலகில் எதுவுமே சதா காலமும் நீடிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். சிவபாபா மாத்திரமே நிலையானவர். ஏனைய அனைவரும் கீழிறங்கி வரவேண்டும். அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு அவர் இச்சங்கமயுகத்தில் மட்டுமே வருகிறார். இப்பழைய உலக ஆத்மாக்களைப் புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்வதற்கு உங்களுக்கு யாரோ ஒருவர் தேவைப்படுவார். இவை அனைத்தும் நாடகத்தின் இரகசியங்கள். தந்தை வந்து எங்களைத் தூய்மையாக்குகிறார். சரீரதாரியைக் கடவுள் என்று அழைக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: தற்பொழுது, ஆத்மாக்கள் அனைவரதும் இறக்கைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்களால் பறக்க முடியாதுள்ளது. உங்களுக்கு ஞானம், யோகம் ஆகிய இறக்கைகளைக் கொடுப்பதற்குத் தந்தை வந்துள்ளார். யோகசக்தி மூலம் உங்கள் பாவங்கள் எரிக்கப்பட்டு, நீங்கள் பின்னர் அந்தப் புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், அனைத்துக்கும் முதலில், நீங்கள் முயற்சி செய்தாக வேண்டும். ஆகவே தந்தை கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள், உங்கள் நினைவு அட்டவணையை வைத்திருங்கள். சிறந்த அட்டவணையை வைத்திருப்பவர்களே தங்கள் அட்டவணையை எழுதுவதுடன், பெரும் சந்தோஷத்தையும் அனுபவம் செய்வார்கள். நீங்கள் ஏனைய அனைத்து முயற்சிகளையும் செய்து, ஓர் அட்டவணையை எழுதாவிட்டால், உங்களில் யோகசக்தியை நிரப்புவதற்கு உங்களால் இயலாதிருக்கும். ஓர் அட்டவணை வைத்திருப்பதால், அதிக இலாபமடைகிறீர்கள். இந்த அட்டவணையுடன், நீங்கள் ஞானக் கருத்துக்களையும் எழுதிக்கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள், எவ்வளவு நேரம் நினைவில் நிலைத்திருக்கிறீர்கள் ஆகிய இரண்டுக்குமாக ஓர் அட்டவணையை எழுத வேண்டும். இறுதியில், வேறு எதுவுமே நினைவு செய்யப்படாதவாறு, அதிக முயற்சியை நீங்கள் செய்யவேண்டும். இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதற்கு முயற்சி செய்வதனால், நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகுகிறீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஏகாந்தத்தில் ஞானக்கடலைக் கடையுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். மாயையை வென்று, உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையுங்கள்.
2. எவருக்கும் ஞானத்தைக் கொடுக்கையில், உங்கள் புத்தி அறிந்திருக்க வேண்டும்: இந்த ஆத்மாவாகிய நான், எனது சகோதர ஆத்மாவுக்கு ஞானத்தைக் கொடுக்கிறேன். அனைவரதும் பெயரையும், ரூபத்தையும், சரீரத்தையும் மறந்துவிடுங்கள். தூய்மைக்கான சத்தியப் பிரமாணம் செய்து, தூய்மையாகுங்கள்;; தூய உலகின் அதிபதி ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தொடர்ச்சியான யோகம் எனும் வழிமுறை மூலம் சதா காலமும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் ஆகுகின்ற, ஒரு மேன்மையான, மகாத்மா ஆத்மா ஆவீர்களாக.
இந்நாட்களில் மகாத்மாக்கள் “அகண்ட்; (தொடர்ச்சியான) ஆனந்த்” போன்ற பெயர்களைக் கொண்டுள்ளனர், ஆனால் நீங்களே அனைத்திலும் “அகண்ட்;” (அனைத்து நேரமும், தொடர்ந்தும்) ஆவீர்கள்: பேரானந்தத்தில் அகண்ட்;, சந்தோஷத்தில் அகண்ட்;. எவ்வாறாயினும், நீங்கள் எச் சகவாசததினாலும் ஆதிக்கம் செலுத்தப்படக்கூடாது. ஏனையோரைப் பற்றிய குறைபாடுகளை நீங்கள் பார்க்கும்பொழுதும், கேட்கும்பொழுதும், அதைப் பற்றி “பொருட்படுத்தாத மனோபாவம்” ஒன்றைக் கொண்டிருங்கள், இந்தச் சிறப்பியல்பு மூலம் நீங்கள் ஓர் அகண்ட்; யோகி ஆகுவீர்கள். “அகண்ட்;” யோகிகளாக இருப்பவர்கள் சதா காலமும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றனர். நீங்கள் அத்தகைய மகாத்மாக்களாக இருக்கின்றீர்கள், அதாவது, அரைக் கல்பத்திற்குப் பூஜிக்கத் தகுதிவாய்ந்த ரூபத்தில் இருக்கின்றீர்கள், அரைக் கல்பத்திற்கு உங்கள் உயிரற்ற ரூபங்கள் பூஜிக்கப்;படுகின்றன.
சுலோகம்:
ஒரு தெய்வீகமான புத்தியே மௌன சக்தியின் அடிப்படை ஆகும்.
இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விஷேட வீட்டுவேலை
அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, சதா நினைவில் வைத்திருங்கள்: “நாங்கள் பிரச்சனைகளை தொலைவில்; துரத்திவிட்டு, சம்பூரணத்தை அண்மையில் கொண்டு வர வேண்டும்.” இதற்கு, இறை மரியாதைக் கோட்பாடுகள் எதிலும் நாம் கவனயீனமாக இருக்கக்கூடாது, ஆனால் அசுர கோட்பாடுகளிலும், மாயையிலும் கவனயீனமாக இருக்கவேண்டும். பிரச்சனைகளுக்கு முகங்கொடுங்கள், பிரச்சனைகள் முடிவடைந்து விடும்.