30.01.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை ஞானமும் யோகமும் என்ற சத்துணவை உங்களுக்கு ஊட்டி, உங்களுக்கு சிறந்த விருந்தோம்பலை வழங்குகின்றார். எனவே சதா சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்து, ஸ்ரீமத்திற்கு ஏற்ப பிறருக்கு விருந்தோம்பல் வழங்குங்கள்.

கேள்வி:
இந்த சங்கமயுகத்தில் உங்களுடன் இருக்கின்ற மிகவும் பெறுமதியான எந்த விடயத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்?

பதில்:
இந்த அதிமேன்மையான பிராமண குலத்தில், உங்களுடைய இந்த வாழ்க்கையே அதி பெறுமதியானதாகும். ஆகையால் உங்கள் சரீரத்தை நீங்கள் மிகவும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அது மண்ணாலான ஒரு பொம்மை என்றும் அது இல்லாமல் போக வேண்டிய ஒன்று என்றும் நினைக்காதீர்கள்! இல்லை, நீங்கள் அதனை உயிருடன் வைத்திருக்க வேண்டும். எவரேனும் சுகவீனமுற்றால் அவரையிட்டு சலிப்படையாதீர்கள். அவரைத் தொடர்ந்தும் சிவபாபாவை நினைவுசெய்யுமாறுக் கூறுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு நினைவுசெய்கின்றீர்களோ அந்தளவிற்கு உங்கள் பாவங்கள் தொடர்ந்து அழிக்கப்படும். அந்த நபர் தொடர்ந்தும் சேவை செய்ய வேண்டும். அவர் உயிருடன் இருந்து தொடர்ந்தும் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும்.

ஓம் சாந்தி.
உங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானமாகிய மூன்றாவது கண்ணைக் கொடுக்கின்ற ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு மூன்றாவது கண்ணைக் கொடுக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். இப் பழைய உலகம் மாறப் போகின்றது என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். இதனை யார் மாற்றப் போகின்றார்கள் என்றோ அல்லது இதனை அவர் எவ்வாறு மாற்றப் போகின்றார் என்றோ அப்பாவி மக்களுக்குத் தெரியாது. ஏனெனில், அவர்களுக்கு ஞானமாகிய மூன்றாவது கண் இல்லை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஞானமாகிய மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். அதன் மூலம் நீங்கள் உலகின் ஆரம்பம் மத்தி இறுதியை அறிந்துள்ளீர்கள். இதுவே ஞான சக்கரின் ஆகும். சக்கரினின் ஒரு துளி கூட மிகவும் இனிப்பாகவே இருக்கும். ‘மன்மனாபவ’ என்ற ஒரு ஞான வார்த்தை மாத்திரமே உள்ளது: இந்த வார்த்தை மிகவும் இனிமையானதாகும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை உங்களுக்கு அமைதி தாமதிற்கும் சந்தோஷ தாமத்திற்கும் பாதையைக் காட்டுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு, உங்களது சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பதற்காக தந்தை வந்திருக்கின்றார் என்பதனால், குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். ‘சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறு எதுவும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது. சதா சந்தோஷமாகவும் களிப்புடனும் இருப்பவர்களுக்கு இது சத்துணவு போன்றதாகும். 21 பிறவிகளுக்கு சந்தோஷமாக இருப்பதற்கு இதுவே சத்துமிக்க போஷாக்காகும். இச் சத்துணவை ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் பரிமாறுங்கள். இது ஒருவருக்கொருவர் கொடுக்கும் மிகவும் சக்திமிக்க சத்துணவாகும். எந்த ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கு இந்த விருந்தோம்பலை வழங்க முடியாது. நீங்கள் ஸ்ரீமத்திற்கு ஏற்ப, அனைவருக்கும் ஆன்மீக விருந்தளிக்கின்றீர்கள். தந்தையின் அறிமுகத்தை ஒருவருக்குக் கொடுப்பதே உண்மையாக ஆரோக்கியமாக இருப்பதாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஜீவன்முக்திக்கான சத்துணவைப் பெறுகின்றீர்கள் என்பதை இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சத்தியுகத்தில் பாரதம் ஜீவன்முக்தியைப் பெற்றிருந்தது, அதாவது அது தூய்மையாக இருந்தது. தந்தை மிகவும் சிறப்பானதும், மேன்மையானதுமான போஷாக்கைக் கொடுக்கின்றார். இதனாலேயே ‘அதீந்திரிய சுகத்தை அறிய வேண்டுமாயின், கோபியரையும், கோபிகைகளையும் கேளுங்கள்’ என்றொரு பாடலும் உண்டு. இந்த ஞானமும் யோகமுமான இப் போஷாக்கு முதற்தரமானதும் அற்புதமானதுமாகும். இப் போஷக்கை ஆன்மீக சத்திரசிகிச்சையாளர் மாத்திரமே கொண்டிருக்கின்றார். இப் போஷாக்கைப் பற்றி வேறு எவருக்கும் தெரியாது. தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நான் எனது உள்ளங்கையில், உங்களுக்காக ஒரு பரிசைக் கொண்டு வந்துள்ளேன். முக்தியும், ஜீவன்முக்தியும் என்ற இப்பரிசுகள் என்னிடமே உள்ளன. ஒவ்வொரு கல்பத்திலும் நானே இதனை உங்களுக்குக் கொடுக்க வருகின்றேன். பின்னர் இராவணன் அதனை அபகரித்துக் கொள்கின்றான். ஆகையால், உங்கள் சந்தோஷ பாதரசம் மிகவும் அதிகளவு உயர வேண்டும்! ஆசிரியரும், உண்மையான சற்குருவுமான ஒரேயொரு தந்தையே உங்களை மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். நீங்கள் உலக இராச்சியத்தை அதி அன்பிற்கினிய தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். இது ஒரு சிறிய விடயமல்ல. நீங்கள் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். ‘இறை மாணவ வாழ்க்கையே மிகச் சிறந்தது’. இக் கூற்று இந்நேரத்திற்கே பொருத்தமாகும். பின்னர், புதிய உலகிலும் கூட, நீங்கள் சந்தோஷத்துடன் கொண்டாடுவீர்கள். உண்மையான சந்தோஷம் எப்பொழுது கொண்டாடப்படும் என்பதை உலக மக்கள் அறியாதுள்ளார்கள். மனிதர்களுக்கு சத்திய யுகத்தைப் பற்றிய எந்த ஞானமும் இல்லை. எனவே அவர்கள் தொடர்ந்தும் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறாயின், இப் பழைய தமோபிரதான் உலகில் சந்தோஷம் எங்கிருந்து வர முடியும்? இங்கு, மக்கள் தொடர்ந்தும் விரக்திக் கூக்குரல் இடுகின்றார்கள். இது அத்தகைய துன்பமிக்க உலகமாகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் இலகுவான வழியைக் காட்டுகின்றார். உங்கள் குடும்பத்துடன், வீட்டில் வாழும் போதும், தாமரை மலர் போன்று தூய்மையாக இருங்கள். நீங்கள் தொழில் செய்யும் போதும் என்னை நினைவு செய்யுங்கள். ஒரு காதலனும் அவனது காதலியும் உள்ளனர். அவர்கள் எப்பொழுதும் ஒருவரையொருவர் நினைவு செய்கின்றனர். அவள் அவனது காதலியும், அவன் அவளது காதலனும் ஆவார்கள். எவ்வாறாயினும், இங்கு அவ்வாறில்லை. இங்கே நீங்கள் பிறவி பிறவியாக அன்பிற்கினியவரின் காதலிகள் ஆவீர்கள். தந்தை உங்கள் காதலன் ஆகுவதில்லை. அந்த அன்பிற்கினியவரை இங்கே அழைப்பதற்காகவே நீங்கள் அவரை நினைவு செய்கின்றீர்கள். அதிகளவு துன்பம் இருக்கும் போது, நீங்கள் அதிகளவு கூவியழைக்கின்றீர்கள். ஆகையாலே நினைவு கூரப்படுகின்றது: வேதனையின் போதே அனைவரும் கடவுளை நினைவு செய்கின்றார்கள். ஆனால் சந்தோஷத்தின் போது எவரும் அவரை நினைவு செய்வதில்லை. இந்த நேரத்தில் தந்தை சர்வ சக்திவான் ஆவார். நாளுக்கு நாள் மாயையும் தமோபிரதான் சர்வசக்திவான் ஆகுகின்றாள். ஆகையால் தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதி, தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். இத்துடன், தெய்வீகக் குணங்களையும் கிரத்தால், நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் போல் ஆகுவீர்கள். இக் கல்வியின் பிரதான விடயம் நினைவுசெய்தல் ஆகும். நீங்கள் அதி மேலான தந்தையை மிகவும் அன்புடனும் பிரியத்துடனும் நினைவு செய்ய வேண்டும். அந்தத் தந்தையே புதிய உலகைப் படைப்பவர் ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கே வந்துள்ளேன். ஆகையாலேயே நீங்கள் என்னை நினைவு செய்ய வேண்டும். அப்பொழுதே உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிய முடியும். தூய்மையாக்குபவரான தந்தை கூறுகின்றார்: நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகியிருப்பதால் இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள். அப்பொழுது நீங்கள் தூய்மையாகி தூய உலகிற்கு அதிபதிகள் ஆவீர்கள். தூய்மையாக்குபவரான, தந்தையை மக்கள் கூவி அழைக்கின்றார்கள். தந்தை இப்பொழுது வந்துள்ளதால், நீங்கள் நிச்சயமாகத் தூய்மை ஆக வேண்டும். தந்தையே துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். சத்தியயுகம் நிச்சயமாக தூய உலகமாக இருந்தது. எனவே அங்கே அனைவருமே சந்தோஷமாக இருந்தார்கள். இப்பொழுது, மீண்டும் ஒருமுறை தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, தொடர்ந்தும் அமைதி தாமத்தையும் சந்தோஷதாமத்தையும் நினைவுசெய்யுங்கள். இப்பொழுது இது சங்கமயுகமாகும். படகோட்டி உங்களை இக்கரையிலிருந்து, அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார். ஒரு படகு மாத்திரமே உண்டென்றில்லை, முழு உலகமும் ஒரு பெரிய கப்பலைப் போன்றதாகும். அவர் அதனை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார். இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். உங்களுக்கு சந்தோஷத்தைத் தவிர, வேறு எதுவும் இல்லை. ஆஹா! எல்லையற்ற தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார்! இதனை நீங்கள் முன்னர் கேட்கவும் இல்லை, கற்கவும் இல்லை. கடவுள் பேசுகின்றார்: நான் ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். எனவே நீங்கள் அதனை முழுமையாகக் கற்க வேண்டும். நீங்கள் முழுமையாகக் கற்பதுடன் முழுமையாகக் கிரகிக்கவும் வேண்டும். எவ்வாறாயினும், கற்பதில் அனைவரும் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். உங்களையே நீங்கள் பார்க்க வேண்டும்: நான் உயர்ந்த நிலையிலா, சராசரி நிலையிலா அல்லது குறைந்த நிலையிலா உள்ளேன்? தந்தை கூறுகின்றார்: உங்களை சோதியுங்கள்: நான் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறத் தகுதியாக உள்ளேனா? நான் ஆன்மீக சேவை செய்கின்றேனா? தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, சேவை செய்பவராகி, தந்தையைப் பின்பற்றுங்கள். நான் சேவை செய்வதற்காகவே வந்துள்ளேன். நான் தினமும் சேவை செய்கின்றேன். அதனாலேயே நான் இவருடைய இரதத்தைப் பெற்றுள்ளேன். இவரின் இரதம் நோயுறும் போது, நான் இவருக்குள் அமர்ந்து முரளியை எழுதுகின்றேன். எனக்கு வாயினால் பேச முடியாது, எனவே குழந்தைகளாகிய நீங்கள் முரளியைத் தவற விடக் கூடாது என்பதால் நான் அதனை எழுதுகின்றேன். எனவே நானும் சேவையில் உள்ளேன். இது ஆன்மீகச் சேவை ஆகும். குழந்தைகளாகிய நீங்களும், உங்களை தந்தையின் சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதாவது இறை தந்தையின் சேவையிலாகும். நல்ல முயற்சி செய்பவர்கள் மகாவீர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். பாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்களே மகாவீர்களாக உள்ளார்கள் என்று அறியப்பட்டுள்ளது. தந்தையின் கட்டளை: உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, ஏனையோரை சகோதரர்களாகப் பாருங்கள். அந்தச் சரீரத்தை மறந்திடுங்கள். பாபாவும் சரீரங்களைப் பார்ப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் ஆத்மாக்களை மாத்திரமே பார்க்கின்றேன். எவ்வாறாயினும், சரீரம் இல்லாமல் ஆத்மாவால் பேச முடியாது என்ற ஞானம் உள்ளது. நான் இச் சரீரத்தினுள் வந்துள்ளேன். நான் அதனை கடனாகப் பெற்றுள்ளேன். ஓர் ஆத்மா சரீரத்தில் இருந்தால் மாத்திரமே அவரால் கற்க முடியும். பாபா இங்கமர்ந்திருக்கின்றார் (நெற்றியின் நடுவில்). இது அமரத்துவ சிம்மாசனமாகும். ஆத்மா அமரத்துவமான ரூபமாகும். ஆத்மா சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ ஆகுவதில்லை. சரீரம் சிறிதாகவோ பெரிதாகவோ ஆகுகின்றது. நெற்றியின் நடுவிலேயே ஒவ்வொரு ஆத்மாவினதும் சிம்மாசனம் உள்ளது. ஒவ்வொருவரின் சரீரமும் வேறுபட்டதாகும். சிலரின் அமரத்துவ சிம்மாசனம் ஆண்களுக்கானதும், சிலரது அமரத்துவ சிம்மாசனம் பெண்களுக்கானதும் ஆகும். சிலரது அமரத்துவ சிம்மாசனம் குழந்தையுடையதாகும். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஆன்மீக அப்பியாசத்தைக் கற்பிக்கின்றார். எவருடனாவது நீங்கள் பேசும் போது எல்லாவற்றிற்கும் முதலில் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாவாகிய நான் இச் சகோதரருடன் பேசுகின்றேன். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்ற தந்தையின் செய்தியைக் கொடுங்கள். நினைவின் மூலமே கலப்படம் அகற்றப்படும். தங்கத்துடன் கலப்படம் கலக்கப்படும் போது தங்கத்தின் பெறுமதி குறைவடைகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் கலப்படம் ஆகும்; போது நீங்கள் மென்மேலும் பெறுமதியற்றவர்களாக ஆகுகின்றீர்கள். நீங்கள் மீண்டும் தூய்மையாக வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். அக் கண் மூலமாக உங்கள் சகோதரர்களைப் பாருங்கள். சகோதரத்துவப் பார்வையைக் கொண்டிருக்கும் போது, உங்கள் புலனங்கங்கள் குறும்பு செய்யமாட்டாது. நீங்கள் உங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெற்று, உலக அதிபதிகள் ஆக விரும்பினால் முயற்சி செய்யுங்கள். ஒவ்வொருவரையும் உங்கள் சகோதரராகக் கருதி அவர்களுக்கு ஞானத்தைத் தானம் செய்யுங்கள். அப்பொழுது இப் பழக்கம் உறுதியாகிவிடும். நீங்கள் அனைவருமே உண்மையான சகோதரர்கள். தந்தை மேலிருந்து வந்துள்ளார். நீங்களும் மேலிருந்தே வந்தீர்கள். தந்தை குழந்தைகளுடன் சேவை செய்கின்றார். தந்தை சேவை செய்வதற்கான தைரியத்தை உங்களுக்கு கொடுக்கின்றார். நீங்கள் தைரியத்தைக் கொண்டிருக்கும் போது தந்தை உங்களுக்கு உதவுகிறார். எனவே நீங்கள் இதனைப் பயிற்சி செய்ய வேண்டும்: ஆத்மாவாகிய நான் எனது சகோதரருக்குக் கற்பிக்கின்றேன். ஆத்மாவே கற்கின்றார். இது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. இதனை நீங்கள் ஆன்மீகத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். தந்தை வந்து இந்த ஞானத்தை சங்கமயுகத்திலேயே கொடுக்கின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் சரீரமற்றவராக வந்து, இங்கே ஒரு சரீரத்தை எடுத்து 84 பிறவிகளின் பாகத்தை நடித்தீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும் ஆகையால் உங்களையே ஓர் ஆத்மாவாகக் கருதி சகோதரத்துவப் பார்வையைக் கொண்டிருங்கள். இந்த முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த முயற்சியையே செய்ய வேண்டும். பிறருடன் எங்களுக்கென்ன வேலை உள்ளது? புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பமாகின்றது, அதாவது முதலில் உங்களை ஓர் ஆத்மாவாகக்; கருதி உங்கள் சகோதரர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அப்பொழுது அம்பு மிக நன்றாக இலக்கைத் தைக்கும். நீங்கள் அந்தளவிற்கு பலம் வாய்;ந்தவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்தால் மாத்திரமே உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும். நீங்கள் ஒருசில விடயங்களைச் சகித்துக் கொள்ளவும் வேண்டும். எவரேனும் பிழையாக எதையும் கூறும் போது நீங்கள் மௌனமாகிவிடுங்கள். நீங்கள் மௌனமாக இருக்கும் போது அவர்களால் என்ன செய்ய முடியும்? கைதட்டுவதற்கு இரண்டு கரங்கள் வேண்டும். முதலாமவர் வாய்த் தர்க்கம் செய்யும் போது மற்றையவர் மௌனமாக இருந்தால் அப்போது முதலாமவர் தானாகவே மௌனமாகி விடுவார். இரு கைகளால் தட்டும் போதே சத்தமேற்படும். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்ய வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் சதா சந்தோஷமாக இருக்க விரும்பினால் ‘மன்மனாபவ’ ஆகுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். சகோதரனான, ஆத்மாவை பாருங்கள். எனவே, ஆன்மீக யாத்திரையில் நிலைத்திருக்கும் பழக்கத்தை குழந்தைகளாகிய நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது உங்கள் நன்மைக்காகவாகும். தந்தையின் கற்பித்தல்களை உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் இந்த ஞானத்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கொடுக்கின்றேன். நான் ஆத்மாவை மாத்திரமே பார்க்கின்றேன். ஒருவர் இன்னொருவருடன் பேசும் போது அவரின் முகத்தையே பார்க்கின்றார். நீங்கள் ஆத்மாக்களுடனேயே பேசுகின்றீர்;;;;கள் என்பதால் நீங்களும் ஆத்மாவையே பார்க்க வேண்டும். நீங்கள் ஞானத்தை சரீரத்தின் மூலம் கொடுத்தாலும், நீங்கள் சரீர உணர்வைத் துண்டிக்க வேண்டும். தந்தையாகிய பரமாத்மாவே இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தையும் கூறுகின்றார்: நானும் ஆத்மாக்களையே பார்க்கின்றேன். ஆத்மாக்களும் கூறுகின்றார்கள்: நாங்களும் தந்தையான பரமாத்மாவையே பார்க்கின்றோம். அவரிடமிருந்தே நாங்கள் ஞானத்தைப் பெறுகின்றோம். இதுவே ஓர் ஆத்மா மற்றவர்களுடன் ஏற்படுத்தும் ஆன்மீக ஞானக் கொடுக்கல் வாங்கல் எனப்படுகின்றது. ஆத்மாவிற்குள்ளேயே ஞானம் உள்ளது. ஆத்மாவுக்கே ஞானம் கொடுக்கப்பட வேண்டும். இது சக்தி போன்றது. உங்கள் ஞானம் சக்தியினால் நிறைந்திருக்கும் போது, அதனை நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தும் போது, அது உடனடியாகவே இலக்கைத் தாக்கும். தந்தை கூறுகின்றார்: இதனைப் பயிற்சி செய்து அம்பு இலக்கைத் தைக்கின்றதா எனப் பாருங்கள். இந்தப் புதிய பழக்கத்தை ஏற்படுத்தும் போது சரீர உணர்வு அகற்றப்படுகின்றது, சிறு சிறு மாயையின் புயல்களும் வரும். நீங்கள் தீய எண்ணங்கள் எதனையும் கொண்டிருக்க மாட்டீர்கள். குற்றப் பார்வையும் இருக்க மாட்டாது. ஆத்மாக்களாகிய நாங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளோம். இப்போது நாடகம் முடிவடைய உள்ளது. நீங்கள் இப்பொழுது பாபாவின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நினைவின் மூலம் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகும் போது, நீங்கள் சதோபிரதான் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இது மிகவும் இலகுவானதாகும்! குழந்தைகளுக்குக் கற்பித்தல்களைக் கொடுப்பதே தந்தையின் பாகம் என்பது அவருக்குத் தெரியும். இது ஒரு புதிய விடயமல்ல. நான் 5000 வருடங்களுக்கு ஒரு முறை வர வேண்டும். நான் இப் பந்தனத்தில் கட்டுண்டுள்ளேன். நான் இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன்: இனிய குழந்தைகளே நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். அப்போது உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்களது இலக்குக்கு இட்டுச் செல்லும். இதுவே உங்கள் இறுதிக் காலமாகும். என்னை மாத்திரம் நினைவு செய்தால் நீங்கள் சற்கதியை பெறுவீர்கள். நினைவுயாத்திரையில் நிலைத்திருப்பதன் மூலம், தூண்கள் பலமடைகின்றன. ஆத்ம உணர்விற்கு வருவதற்கான இக் கற்பித்தல்களை ஒருமுறை மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் பெறுகின்றீர்கள். இது அத்தகையதோர் அற்புதமான ஞானமாகும்! பாபாவும் அற்புதமானவர், பாபாவின் ஞானமும் அற்புதமாகும். எந்த நேரத்திலும் இதனை உங்களுக்குக்கு வேறு எவராலும் கூறமுடியாது. இப்போது இது வீடு திரும்புவதற்குரிய நேரமாகும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, இதனைப் பயிற்சி செய்யுங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி ஆத்மாக்களுக்கு ஞானத்தைக் கொடுங்கள். ஏனையவர்களை சகோதரர்களாகப் பார்ப்பதற்கு உங்கள் மூன்றாவது கண்ணைப் பயன்படுத்;த வேண்டும். இது மிகச் சிறந்த முயற்சியாகும். இதுவே பிராமணர்களாகிய உங்களது மிகவும் மேன்மையான குலமாகும். இந்த நேரத்தில், உங்களுடைய வாழ்க்கை மிகவும் பெறுமதியானதாகும். ஆகவே நீங்கள் அந்தச் சரீரங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். தமோபிரதான் ஆகியதால், அந்தச் சரீரங்களின் ஆயுட்காலம் தொடர்ந்தும் குறைவடைந்தது. நீங்கள் இப்பொழுது எந்தளவிற்கு யோகத்தில் நிலைத்திருக்கின்றீர்களோ அந்தளவிற்கு உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கும். சத்தியயுகத்தில் அது அதிகரிக்கும். உங்கள் ஆயுட்காலம் 150 வருடங்கள் ஆகும். ஆகையால் உங்கள் சரீரத்தை நீங்கள் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அது மண்ணாலான பொம்மை என்றும் அதனால் அது இல்லாது போக வேண்டும் என நினைக்காதீர்கள். இல்லை. நீங்கள் அதனை உயிருடன் வைத்திருக்க வேண்டும். இது மிகவும் பெறுமதியான வாழ்க்கையாகும். ஒருவர் சுகவீனமடைந்தால், அந்த நபரினால் சலிப்படையாதீர்கள். அந்த நபரிடம் சிவபாபாவை நினைவு செய்யக் கூறுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு நினைவு செய்கின்றீர்களோ, அதற்கேற்ப உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அழிகின்றது. அந்த நபர் தொடர்ந்தும் சேவை செய்ய வேண்டும். அவர் உயிருடன் இருந்து, சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும். அவர் பாபாவை நினைவுசெய்கின்றார் என்ற புரிந்துணர்வு உள்ளது. தந்தையிடமிருந்து ஆஸ்தியை பெறுவதற்காக ஆத்மாவே நினைவுசெய்கின்றார். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை சோதியுங்கள்: எனது முயற்சியில் நான் உயர்வாகவா, சராசரியாகவா அல்லது குறைவாகவா உள்ளேன்? நான் உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்குத் தகுதி கொண்டிருக்கின்றேனா? நான் ஆன்மீக சேவை செய்கின்றேனா?

2. உங்கள் மூன்றாவது கண்ணினால் ஆத்மாக்களை சகோதரர்களாகப் பாருங்கள். அனைவரையுமே சகோதராகக் கருதி, அவர்களுக்கு ஞானத்தைக் கொடுங்கள். ஆத்ம உணர்வின் ஸ்திதியில் நிலைத்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் போது, உங்கள் பௌதீகப் புலன்கள் விஷமம் செய்ய மாட்டாது.

ஆசீர்வாதம்:
எந்த பரீட்சையை கண்டும் பயப்படாது, அதற்கு மாறாக முற்றுப்புள்ளி இட்டு முழுமையான சித்தியடைவதன் மூலம் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

எவ்வகையான பரீட்சை உங்களிடம் வந்தாலும், அதனால் பயப்படாது, ~ஏன் இது வருகிறது?| என்ற கேள்விகளைக் கேட்டு, இவ்வாறாக சிந்தித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். வினாக்குறிகளை முடித்து முற்றுப்புள்ளி இடுங்கள். அப்பொழுதே நீங்கள் தரம் ஏற்றப்படுவீர்கள், அதாவது அந்தப் பரீட்சையில் சித்தியடைகிறீர்கள். முற்றுப்புள்ளி இடுபவர்கள் முழுமையான சித்தி அடைவார்கள், ஏனெனில், முற்றுப்புள்ளியானது ஒரு புள்ளியின் ஸ்திதியாகும். பார்த்தும் பார்க்காதிருங்கள், கேட்டும் கேட்காதிருங்கள். தந்தை உங்களுக்குக் கூறுவதை மாத்திரமே கேளுங்கள். தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ளதை மாத்திரமே பாருங்கள். அப்பொழுது நீங்கள் முழுமையான சித்தியடைவீர்கள். ஏறும் ஸ்திதியை சதா அனுபவம் செய்து, வெற்றி நட்சத்திரம் ஆகுவதே சித்தியடைவதன் அடையாளமாகும்.

சுலோகம்:
சுயமுன்னேற்றம் அடைவதற்கு, வினாக்கள், திருத்தங்கள், மேற்கோள் குறிகளைத் துறந்து, உங்கள் தொடர்பை நன்றாகக் கொண்டிருங்கள்.


இந்த அவ்யத் மாதத்தில் அவ்யத் ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேட வீட்டுவேலை
ஏதேனும் ஒரு தடை உங்கள் புத்தியைத் தொந்தரவு செய்யுமாயின், யோக பரிசோதனையினூடாக அந்தத் தடையை முதலில் முடித்துவிடுங்கள். உங்கள் மனதில் அல்லது புத்தியில் சிறிதளவு தொந்தரவும் இல்லாதிருக்கட்டும். இன்னொரு உயிர் அதாவது இன்னொரு ஆத்மா என்ன கூறுகின்றார் என்பதை இலகுவில் அறிந்து கொள்ளவும், பிறரின் மனதின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் வகையிலும், அவ்யக்த ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருக்கும் அத்தகைய பயிற்சி இருக்கட்டும்.