23.01.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அசரீரியான தந்தை தனது சொந்த வழிகாட்டல்களை உங்களுக்குக் கொடுத்து, உங்களை ஆஸ்திகர்களாக ஆக்குகிறார். ஆஸ்திகர்களாக ஆகுவதனால் மாத்திரமே, உங்களால் தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைப் பெற முடியும்.

கேள்வி:
எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுவதற்கு எந்த இரு விடயங்களில் நீங்கள் முழுக் கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
கல்வியிலும் சேவையிலும் ஆகும். சேவை செய்வதற்கு உங்களுடைய நடத்தை மிகவும் நன்றாக இருக்கவேண்டும். உங்களுக்கு ஓர் இராச்சியத்தைப் பெற்றுத்தரும் இந்தக் கல்வி மிக அற்புதமானதாகும். துவாபர யுகத்திலிருந்து, நீங்கள் தான தர்மங்கள் செய்ததன் மூலம் ஓர் இராச்சியத்தைப் பெற்றீர்கள். எனினும், இப்பொழுது இந்தக் கல்வியின் மூலமே நீங்கள் இளவரசன், இளவரசிகள் ஆகுகிறீர்கள்.

பாடல்:
எங்களுடைய யாத்திரை தனித்துவமானதாகும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாடலின் ஒரு வரியைக் கேட்டீர்கள். உங்களுடைய யாத்திரை வீட்டில் அமைதியாக அமர்ந்திருந்தவாறு முக்தி தாமத்திற்குச் செல்வதாகும். உலகிலுள்ள யாத்திரைகள் சாதாரணமானவையாக இருந்த போதிலும், உங்களுடைய யாத்திரை தனித்துவமானதாகும். ஒரு மனிதரின் புத்தியின் யோகம் தொடர்ந்து சாதுக்களையும், புனிதர்களையும் நோக்கியே செல்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டுள்ளன: தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவரே அசரீரியான தந்தையாவார். அசரீரியான தந்;தையின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பவர்கள் அசரீரியான ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார்கள் என்றில்லை. உலகில் பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. அசரீரியான வழிகாட்டல்கள் அசரீரியான தந்தையால் கொடுக்கப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் முக்தி, ஜீவன்முக்தி என்ற அதியுயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள். ஏனையோருக்கு இவ் விடயங்கள் பற்றி எதுவும் தெரியாது. தாமும் அசரீரியானவரின் மீதே நம்பிக்கைக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். எண்ணற்ற வழிகாட்டல்கள் உள்ளன. சத்தியயுகத்தில் ஒரேயொரு வழிகாட்டலே உள்ளது. கலியுகத்திலோ எண்ணற்ற வழிகாட்டல்கள் உள்ளன. எண்ணற்ற சமயங்கள் உள்ளன. நூறாயிரக் கணக்கான வழிகாட்டல்கள் இருக்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய வழிகாட்டல் உள்ளது. இங்கு ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களை அதி மேன்மையான மனிதர்களாக ஆக்குவதற்கு, அதி மேன்மையான வழிகாட்டல்களை உங்களுக்குக் கொடுக்கிறார். உங்களுடைய படங்களைப் பார்க்கும் போது, பலரும் வினவுகின்றார்கள்: நீங்கள் என்ன உருவாக்கியிருக்கிறீர்கள்? இதில் பிரதான விடயம் என்ன? அவர்களிடம் கூறுங்கள்: இது படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி இறுதியின் ஞானமாகும். இந்த ஞானத்தின் மூலமே நாங்கள் ஆஸ்திகர்களாக ஆகுகிறோம். நாங்கள் ஆஸ்திகர்களாகுவதன் மூலம் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம். நாஸ்திகர்களாகுவதனால் ஆஸ்தியை இழக்கிறோம். நாஸ்திகர்களை, ஆஸ்திகர்களாக ஆக்குவதே குழந்தைகளாகிய உங்களுடைய இப்போதைய பணியாகும். இப்போது நீங்கள் தந்தையிடமிருந்து இந்த அறிமுகத்தைப் பெற்றிருக்கிறீர்கள். திரிமூர்த்தி படம் மிகவும் தெளிவானது. பிரம்மாவின் மூலம் உருவாக்கப்பட்ட பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். இந்த யக்யா பிராமணர்களாகிய உங்கள் ஊடாகவே செயற்படுகின்றது. இந்த யக்யா மிகவும் முக்கியமானதொன்றாகும். தந்தையே அனைவரிலும் அதி மேலான தந்தை என்பதையும், ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதையும் அவர்கள் அனைவருமே ஒரேயொரு தந்தையையே நினைவு செய்கிறார்கள் என்பதையும் நீங்கள் முதலில் விளங்கப்படுத்த வேண்டும். அவர் தந்தை என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் படைப்பவரான தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். படைப்பிடமிருந்து உங்களால் அதனைப் பெற முடியாது. இதனாலேயே அனைவரும் கடவுளை நினைவு செய்கிறார்கள். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர், அவர் பாரதத்திற்கு மாத்திரமே வருகிறார். அவர் தனது பணியைச் செய்வதற்காக இங்கு வருகிறார். திரிமூர்த்தி படம் மிகவும் சிறந்தது. அவர் பாபாவும், இவர் தாதாவும் ஆவார். பாபா பிரம்மாவினூடாக சூரிய வம்ச இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களுடைய இலக்கும், குறிக்கோளும் மிகத் தெளிவாக உள்ளன. இதனாலேயே பாபா பதக்கங்களைச் செய்வித்துள்ளார். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் அனைத்தையும் இரண்டு வார்த்தைகளில் சுருக்கமாக விளங்கப்படுத்துகிறோம். நீங்கள் தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியை ஒரு விநாடியில் பெறலாம். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர்;. இந்தப் பதக்கங்கள் மிகவும் சிறந்தவை. எவ்வாறாயினும் பல சரீர உணர்வுடைய குழந்தைகள் அவற்றைப் புரிந்துகொள்வதில்லை. இந்தப் பதக்கங்கள் ஒரு விநாடியின் முழு ஞானத்தையும் உள்ளடக்கியுள்ளன. பாபா வந்து, பாரதத்தை சுவர்க்கமாக்குகிறார். தந்தை மாத்திரமே உலகைப் புதியதாக ஆக்குகிறார். “அதி மேன்மையான சங்கமயுகம்” என்பது நினைவுகூரப்படுகிறது. இந்த முழு ஞானமும் உங்களுடைய புத்தியில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சிலர் யோகம் செய்த போதிலும், ஞானத்தைச் செவிமடுக்காததால், அவர்களால் எதனையும் கிரகிக்க முடியாதுள்ளது. சேவை செய்கின்ற குழந்தைகளால் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகிக்க முடியும். தந்தை வந்து மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற சேவையைச் செய்கின்றார். ஆனால் சில குழந்தைகள் எந்த சேவையையும் செய்வதில்லை. எனவே அத்தகைய குழந்தைகளால் என்ன பயன்? அவர்களால் எவ்வாறு பாபாவின் இதய சிம்மாசனத்தில் ஏற முடியும்? தந்தை கூறுகிறார்: அனைவரையும் இராவணனின் இராச்சியத்திலிருந்து விடுவிப்பதே நாடகத்தில் எனது பாகமாகும். இராம இராச்சியமும், இரவாண இராச்சியமும் பாரதத்தில் நினைவுகூரப்படுகிறது. இப்போது, இராமர் யார்? மக்களுக்கு இதுகூடத் தெரியாது. ‘பக்தர்களின் கடவுளாகிய, தூய்மையாக்குபவர் ஒரேயொருவரே’ என்று அவர்கள் பாடுகிறார்கள். ஆகவே எவராவது முதல் தடவை வரும்போது, அவருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். முதலில் அந்த நபரை ஆய்வு செய்து, அதற்கேற்ப விளங்கப்படுத்துங்கள். எல்லையற்ற சந்தோஷம் என்ற உங்களுடைய ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே எல்லையற்ற தந்தை வருகிறார். அவருக்கென ஒரு சரீரம் இல்லாத போது, அவரால் எவ்வாறு ஆஸ்தியை கொடுக்க முடியும்? அவரே கூறுகிறார்: நான் பிரம்மாவின் சரீரத்தினூடாக உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து. நீங்கள் அந்த அந்தஸ்தைப் பெற நான் உதவுகின்றேன். இப் பதக்கத்தை ஒரு விநாடியில் விளங்கப்படுத்த முடியும். இப் பதக்கம் மிகவும் சிறியதாகும்! எவ்வாறாயினும் விளங்கப்படுத்துபவர்கள் நல்ல ஆத்ம உணர்வில் இருக்கவேண்டும். அவ்வாறானவர்கள் மிகச் சிலரே உள்ளனர். எவரும் இந்த முயற்சியைச் செய்வதில்லை. ஆகவே பாபா கூறுகிறார்: உங்கள் அட்டவணையை எழுதி, நாள் முழுவதும் எவ்வளவு நேரம் நீங்கள் நினைவில் இருக்கிறீர்கள் எனப் பாருங்கள். உங்களுடைய அலுவலகத்தில் நீங்கள் வேலை செய்யும் நேரம் முழுவதும் நீங்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் செயல்களைச் செய்ய வேண்டும். இங்கு உங்களை யோகத்தில் அமரச் செய்து, தந்தையை நினைவு செய்யுமாறு கூறப்படுகின்றது. அந் நேரத்தில் நீங்கள் எச் செயலையும் செய்வதில்லை. செயல்களைச் செய்யும் போதும் நீங்கள் பாபாவை நினைவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாது விடின், விசேடமாக நினைவு செய்வதற்காக அமர வேண்டும் என்ற பழக்கம் ஏற்பட்டுவிடும். செயல்களைச் செய்யும் போது, நினைவில் நிலைத்திருந்தாலே நீங்கள் கர்மயோகிகள் என இனங்காணப்படுவீர்கள். உங்கள் பாகங்களை நீங்கள் நிச்சயமாக நடிக்க வேண்டும். இ;ந்த நினைவிலேயே மாயை தடைகளை ஏற்படுத்துகிறாள். நீங்கள் எவரும் உங்களுடைய அட்டவணையை நேர்மையாக எழுதுவதில்லை. அரை மணித்தியாலம் நினைவில் இருந்ததாக அல்லது முக்கால் மணித்தியாலம் நினைவில் இருந்ததாக உங்களிற் சிலர் எழுதுகிறீர்கள். அதுவும் அதிகாலையில் நினைவில் இருந்ததாக இருக்கவேண்டும். பக்தி மார்க்கத்தில் கூட மக்கள் அதிகாலையில் எழுந்து. மாலையை உருட்டியவாறு இராம நாமத்தை உச்சரிக்கிறார்கள். அந் நேரத்தில் அவர்கள் ஒரேயொருவரின் நினைவில் திளைத்திருக்கின்றார்கள் என்றில்லை. இல்லை. அவர்களுக்கும் வேறு பல எண்ணங்கள் உருவாகுகின்றன. உறுதியான பக்தர்களால் தங்கள் புத்தியை ஸ்;திரமாக வைத்திருக்க முடியும். இதுவே மௌன மந்திரமாகும். இது ஒரு புதிய விடயமாகும். ‘மன்மனபவ’ என்ற வார்த்தை கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கிருஷ்ணரின் பெயர் பயன்படுத்தப்படுவதால், அவர்கள் கிருஷ்ணரை நினைவு செய்கிறார்கள். அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் நிச்சயமாகச் சில பதக்கங்களை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: பிரம்மாவின் சரீரம் மூலம் தந்தை விளங்கப்படுத்துகிறார். எங்களுக்கு அந்தத் தந்தையின் மீது அன்புள்ளது. மக்களுக்கு ஆத்மாக்களைப் பற்றிய அல்லது பரமாத்மாவைப் பற்றிய ஞானம் இல்லை. வேறு எவராலுமன்றி, தந்தையால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். திரிமூர்த்தி சிவனின் படமே பிரதானமானது – தந்தையும், ஆஸ்தியும். இந்தச் சக்கரத்தைப் புரிந்துகொள்வது மிகவும் இலகுவாகும். கண்காட்சிகளில் நூறாயிரக் கணக்கான பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். சொற்ப எண்ணிக்கையிலான அரசர்களே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பிரஜைகள் மில்லியன் வரை உள்ளனர். பலர் பிரஜைகள் ஆகுகிறார்கள். ஆனால் அரசர்களை உருவாக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அதிகளவு சேவை செய்பவர்கள் நிச்சயமாக உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். சில குழந்தைகள் சேவை செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: நான் எனது வேலையை விடப் போகின்றேன். எவ்வாறாயினும் நான் உண்பதற்கு தேவையானது உள்ளது. இப்போது நான் பாபாவிற்கு உரியவர் என்பதால் நான் சிவபாபாவினால் பராமரிக்கப்படுவேன். எவ்வாறாயினும் பாபா கூறுகிறார்: நான் இவர் ஓய்வுபெறும் ஸ்திதியின் போதே இவரின் சரீரத்திற்குள் பிரவேசித்தேன். தாய்மார்கள் இளமையாக இருப்பதால், வீட்டில் இருந்தவாறே அவர்கள் இரு வகையான சேவைகளையும் (வீட்டைக் கவனிப்பதுடன், ஆன்மீக சேவையும் செய்தல்) செய்யலாம். பாபா உங்கள் ஒவ்வொருவருக்கும், உங்களுடைய சூழ்நிலைகளுக்கு ஏற்பவே ஆலோசனை வழங்குகிறார். அவர்கள் திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்படாத போது, அதிகளவு தொந்தரவு உள்ளது. ஆகையாலேயே ஆலோசனை வழங்குவதற்கு முன்னர், பாபா ஒவ்வொருவரது கர்மகணக்கையும் பார்க்கின்றார். ஒரு குமாருக்கு பாபா கூறுவார்: நீங்கள் சேவை செய்து, அச் சேவையின் மூலம் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியை பெறலாம் லௌகீகத் தந்தையிடமிருந்து நீங்கள் எதனைப் பெறுவீPர்கள்? தூசையே! அனைத்தும் மண்ணாகப் போகின்றது. நாளுக்கு நாள், மிகவும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. தமது லௌகீகத் தந்தையின் சொத்துகளுக்கு தாம் வாரிசாகப் போகின்றோம் என பல குழந்தைகள் நினைக்கின்றார்கள். ஆனால் தந்தை கூறுகிறார்: அவர்களுக்கு எந்த ஆஸ்தியும் கிடைக்க மாட்டாது. அந்தச் சொத்துக்கள் எல்லாம் சாம்பல் ஆகப் போகின்றன. தமக்கு பின்னர், தமது சந்ததியினர் அந்த ஆஸ்தியிலிருந்து உண்பார்கள் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். ஒரு செல்வந்தருடைய செல்வம் அழிவதற்கு அதிக நேரம் எடுக்காது. மரணம் உங்கள் முன்னால் நிற்கின்றது. எவராலும் அந்த ஆஸ்தியை அடைய முடியாது. இதனை மிகத் தெளிவாக விளங்கப்படுத்தக்கூடியவர்கள் மிகச் சிலரே உள்ளனர்;. அதிகளவு சேவை செய்பவர்கள் மாத்திரமே ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். எனவே அவர்களுக்கு மரியாதைக் கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 21 பிறவிகளுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். அவர்கள் இயல்பாகவே ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்கள், ஆகவே அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு மரியாதைக் கொடுக்கப்படுகின்றது. தாம் பெற்றுக் கொண்டிருப்பவை சிறந்தவை என்பதை அவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும். தமக்குக் கிடைத்தமட்டில் அவர்கள் சந்தோஷம் அடைகின்றார்கள். எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுவதற்கு, நீங்கள் கல்வியிலும், சேவையிலும் முழுக் கவனம் செலுத்தவேண்டும். இந்தக் கல்வி எல்லையற்றதாகும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் இந்தக் கல்வியை இங்கு கற்று, அங்கு அரசகுமாரர்கள் ஆகுகிறீர்கள். மனிதர்கள் செல்வத்தைத் தானம் செய்வதால், அவர்கள் ஓர் அரசருக்கோ அல்லது ஒரு செல்வந்தருக்கோ குழந்தையாகப் பிறக்கின்றார்கள். எவ்வாறாயினும் அந்த சந்தோஷம் தற்காலிகமானதாகும். நீங்கள் இந்தக் கல்வியில் அதிகளவு கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் சேவை செய்வதில் அக்கறை கொண்;டிருக்க வேண்டும். நீங்கள் உங்களது கிராமத்திற்குச் சென்று, அங்கு சேவை செய்யவேண்டும். அதனால் பலர் நன்மை அடைவார்கள். அத்தகைய சேவை செய்வதில் எவரும் இன்னமும் எந்த ஆர்வமும் கொள்ளவில்லை என்பதை பாபா அறிவார். நன்நடத்தையும் அவசியமாகும். அவச் சேவை செய்வதனால், இந்த யக்யாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், உங்களுக்கும் இழப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. பாபா சகலதையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். பதக்கம் போன்றவற்றிற்கு அதிகளவு அக்கறை செலுத்தப்படுகின்றது. நாடகத்திற்கு ஏற்ப, நேரம் எடுக்கும் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. இலக்ஷ்மி, நாராயணனின் ‘திரான்ஸ்லைற்’ முதற்தரமானது. எவ்வாறாயினும் குழந்தைகளாகிய உங்களுக்கு இன்று குருவின் சகுனம் உள்ளது. ஆனால் நாளை இராகுவாகிய கிரகணத்தின் சகுனம் இருக்கும். நாடகத்தில் உங்கள் பாகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராக நீங்கள் அவதானிக்கவேண்டும். மிகச் சிலரே ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள். உங்கள் தீய சகுனங்கள் அகற்றப்படுவது சாத்தியமாகும். உங்களுடைய தீய சகுனங்கள் அகற்றப்பட்டால், உங்களால் உயரப் பாய முடியும். சிறப்பான வாழ்வை உங்களுக்காக உருவாக்க முயற்சி செய்யுங்கள். தவறினால், கல்பம் கல்பமாக அனைத்தும் அழிக்கப்படும். முன்னைய கல்பத்தைப் போன்றே. தீய சகுனங்கள் மீண்டும் வந்துள்ளன என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதபோது உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியாது. கடவுளின் ஸ்ரீமத்தே அதி மேலானதாகும். வேறு எவராலும் அல்லாது, உங்களால் மாத்திரமே இந்த இலக்ஷ்மி நாராயணனின் படத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஏனையோர் படங்கள் மிக நன்றாக உள்ளன என்று மட்டுமே கூறுவார்கள். இந்தப் படங்களை நீங்கள் பார்க்கும்போது, அசரீரியான உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம், முழு உலகச் சக்கரமும் உங்கள் புத்தியில் பதிகின்றது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக ஆகுகிறீர்கள். இந்தப் படங்களைப் பார்த்து பாபா மிகவும் சந்தோஷப்படுகிறார். மாணவர்களாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்யவேண்டும்: இந்தக் கல்வி மூலம் நாங்கள் இவ்வாறே ஆகுகிறோம்! இந்தக் கல்வி மூலம் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் கூறக்கூடாது: எனது பாக்கியத்தில் இதுவே உள்ளது! முயற்சி செய்வதனால் நீங்கள் ஒரு வெகுமதியைப் பெறுகிறீர்கள். முயற்சி செய்வதற்கு உங்களைத் தூண்டுகின்ற தந்தையையே நீங்கள் கண்டிருக்கின்றீர்கள். அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றாது விட்டால் நீங்கள் மிகவும் தாழ்ந்த அந்தஸ்தை அடைவீர்கள். எல்லாவற்றிற்கும் முதலில் வருபவர்களுக்கு இந்தப் பதக்கங்களை விளங்கப்படுத்துங்கள். தகுதியானவர்கள் தங்களுக்கும் ஒன்றைத் தருமாறு உடனேயே கேட்பார்கள். ஆம், ஏன் தரக்கூடாது? இந்தத் தாமத்திற்கு உரியவர்கள் அம்பினால் தைக்கப்படுவார்கள். அவர்கள் நன்மை பெறலாம். தந்தை ஒரு விநாடியில் உங்கள் உள்ளங்கையில் சுவர்க்கத்தைத் தருகிறார். இதனையிட்டு நீங்கள் அதிகளவு சந்தோஷப்பட வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தைச் சிவனின் பக்தர்களுக்குக் கொடுக்கவேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுவீர்கள். இந்தச் சேவையை நாள் முழுவதும் செய்யுங்கள். விசேஷமாக பனாரஸ்ஸில் பல சிவன் கோவில்கள் உள்ளன. ஆகவே அங்கு சிறந்த சேவை செய்யலாம். எவராவது வெளிப்படுவார்கள். சேவை செய்வது மிகவும் இலகுவானதாகும். செய்து பாருங்கள்! உங்களுக்கு உணவு வழங்கப்படும். சேவை செய்வதற்கு முயற்சித்துப் பாருங்கள். எவ்வாறாயினும் அங்கு நிலையங்கள் உள்ளன. காலையில் கோயில்களுக்குச் சென்று, இரவில் திரும்புங்கள். சில நிலையங்களைத் திறந்திடுங்கள். சிவன் கோயில்களில் உங்களால் அதிகளவு சேவை செய்ய முடியும். சிவனின் ஆலயங்களே மிகவும் மேன்மையானவையாகும். பம்பாயில் பபுல்நாத்திற்கு (முட்களின் பிரபு) ஓர் ஆலயம் உள்ளது. முழு நாளும் நீங்கள் அங்கு சென்று, சேவை செய்து பலருக்கு நன்மை செய்யலாம். இந்தப் பதக்கங்கள் சிறந்தவையே. அதனைச் செய்து பாருங்கள்! பாபா கூறுகிறார்: நூறாயிரம் பதக்கங்கள் அல்ல, மில்லியன் பதக்கங்களை நீங்கள் செய்யலாம். முதியவர்கள் மிகச் சிறந்த சேவை செய்யலாம். பல பிரஜைகள் உருவாக்கப்;படுவார்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். அவ்வளவுதான்! நீங்கள் “மன்மனாபவ” என்ற வார்த்தையை மறந்துவிட்டீர்கள். கடவுளே இதனைக் கூறுகிறார். கிருஷ்ணர் கடவுளல்ல. அவர் முழுமையான 84 பிறவிகளையும் எடுக்கிறார். கிருஷ்ணர் அந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு சிவபாபாவே உதவுகிறார். தடுமாறித்திரிவதற்கான அவசியம் என்ன? தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! சிவன் கோயில்களில் உங்களால் சிறந்த சேவையை செய்ய முடியும். சேவையில் வெற்றியடைவதற்கு ஆத்ம உணர்வில் நிலைத்திருந்தவாறு சேவை செய்யுங்கள். உங்களுடைய இதயம் சுத்தமாக இருக்கும்போது, உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. பாபா பனாரஸ்ஸிற்கு விசேடமாக ஆலோசனை வழங்குகின்றார்; ஏனெனில், பனாரஸில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஆச்சிரமங்கள் இருக்கின்றன. அவர்களிடம் கூறுங்கள்: பிராமணர்களாகிய நாங்கள் பிரம்மாவின் குழந்தைகள். பிரம்மாவின் மூலம் தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். வேறு வழியேதும் இல்லை. சிவன் கோயில்களுக்குச் சென்று காலை முதல் இரவுவரை அங்கிருந்து சேவை செய்யுங்கள். முயற்சி செய்து பாருங்கள்! சிவபாபா கூறுகிறார்: எனக்குப் பல கோயில்கள் உள்ளன. எவருமே உங்களிடம் எதுவும் கூறமாட்டார்கள். மாறாக, நீங்கள் சிவனை அதிகளவு புகழ்கின்றீர்கள் என்று அவர்கள் இன்னமும் சந்தோஷமேபடுவார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: இந்தப் பிரம்மா ஒரு பிராமணர். அவர் ஒரு தேவர் அல்ல. இந்த ஒருவரும் சிவபாபாவை நினைவு செய்தே அந்த அந்தஸ்தைப் பெறுகிறார். இவர் மூலம் சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! அது மிகவும் இலகுவானதாகும்! எவரும் மூத்தவர்களை அவதூறு செய்ய மாட்டார்கள். இதுவரை பனாரஸ்ஸில் அதிகளவு சேவை இடம்பெறவில்லை. பதக்கங்களையும், படங்களையும் உபயோகித்து விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும். எவராவது ஏழையாயின், நாங்கள் உங்களுக்கு இதனை இலவசமாகத் தருகிறோம் என்று அவருக்குக் கூறுங்கள். எவராவது செல்வந்தரானால், அவருக்குக் கூறுங்கள்: நீங்கள் எதனையாவது கொடுத்தால், நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்து, பலருக்கு நன்மையளிக்கலாம். அதனால் உங்களுக்கும் நன்மை ஏற்படும். உங்களுடைய இந்த வியாபராமே மிகச் சிறந்ததாகும். யாராவது செய்து பாhக்கவேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் வாழ்க்கையில் இந்த ஞானத்தைக் கிரகித்து சேவை செய்யுங்கள். அதிகளவு சேவை செய்பவர்களுக்கும், மிகச் சிறந்த நடத்தையைக் கொண்டுள்ளவர்களுக்கும் மதிப்பளியுங்கள்.

2. செயல்களைச் செய்யும் போது நினைவில் நிலைத்திருக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். சேவையில் வெற்றியடைவதற்கு, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதுடன், உங்களுடைய இதயத்தையும் சுத்தமாக வைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
மௌனசக்தியினால் ஒரு விநாடியில் முக்தியினதும், ஜீவன்முக்தியினதும் அனுபவத்தைக் கொடுக்கின்ற ஓர் விசேட ஆத்மா ஆகுவீர்களாக.

ஆத்மாக்களுக்கு ஒரு விநாடியில் முக்தியினதும் ஜீவன்முக்தியினதும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே விசேட ஆத்மாக்களின் இறுதி சிறப்பியல்பாகும். அவர்கள் பாதையை காட்டமாட்டார்கள், ஆனால், அமைதியினதும் அதீந்திரசுகத்தினதும் அனுபவத்தை ஒரு விநாடியில் கொடுப்பார்கள். ஜீவன்முக்தியினது அனுபவமானது சந்தோஷமும், முக்தியினது அனுபவமானது அமைதியும் ஆகும். எனவே உங்கள் முன்னிலையில் யார் வந்தாலும், ஒரு விநாடியில் இவற்றின் அனுபவத்தைக் கொடுங்கள். உங்களிடம் அத்தகைய வேகம் இருக்கும் போது, அவர்கள் அனைவரும் அறிவியலை வென்ற மௌனத்தைக் காண்பார்கள், அப்பொழுது ~ஆஹா, ஆஹா| என்பது அனைவரது உதடுகளிலிருந்தும் வெளிப்பட்டு, வெளிப்பாட்டிற்கான காட்சிகள் உங்கள் முன்னிலையில் வரும்.

சுலோகம்:
தந்தையின் ஒவ்வொரு கட்டளைக்கும் தம்மை அர்ப்பணிக்கின்ற உண்மையான விட்டில்பூச்சிகள் ஆகுங்கள்.


இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான வீட்டு வேலையாகும்.
சோதியுங்கள்: எனது ஒவ்வொரு எண்ணமும் சுயத்திற்கும் ஏனைய அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்துகின்றதா? ஒரு விநாடியில் நான் எத்தனை எண்ணங்களைக் கொண்டிருக்கின்றேன்? எத்தனை தகுதியானவை, எத்தனை தகுதியற்றவையாகும்? உங்கள் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாதிருக்கட்டும். எண்ணங்கள் வாழ்க்கையின் மதிப்பளவிடமுடியாத பொக்கிஷமாகும். நீங்கள் பௌதீக பொக்கிஷங்களை வீணாக்காததைப் போன்று ஓர் எண்ணமேனும் வீணாகாதிருக்கட்டும்.