21.01.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே ஞான மழை பொழிந்து அனைத்தையும் பசுமையாக்குபவர்கள். நீங்களும், இந்த ஞானத்தைக் கிரகித்து, மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்ட வேண்டும்.

கேள்வி:
மழையைப் பொழியாத முகில்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?

பதில்:
அவர்கள் சோம்பேறி முகில்களாவர். மழையைப் பொழிபவர்களே சுறுசுறுப்பான முகில்களாவர். அவர்கள் ஞானத்தைக் கிரகித்திருந்தால் அவர்களால் அதை ஏனையோர் மீது பொழியாமல் இருக்க முடியாது. ஞானத்தைக் கிரகிக்காது, மற்றவர்களையும் இதைச் செய்யத்; தூண்டாதவர்கள் ஒட்டிய வயிற்றைக் கொண்டவர்கள் போன்றவர்கள். அவர்கள் ஏழைகள், அவர்கள் பிரஜைகளாகவே ஆகுவார்கள்.

கேள்வி:
இந்த நினைவு யாத்திரையில் நீங்கள் செய்ய வேண்டிய பிரதான முயற்சி என்ன?

பதில்:
உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையைப் புள்ளி வடிவிலே நினைவுசெய்வதாகும். தந்தையை மிகச்சரியாக அவராக, அவருடைய உண்மையான வடிவத்தில் நினைவு செய்வதற்கே முயற்சி தேவை.

பாடல்:
அன்புக்குரியவருடன் இருப்பவர்கள் மீதே, ஞான மழை பொழிகின்றது.

ஓம் சாந்தி.
முகில்கள் கடலின் மேலாகவே இருக்கின்றன, முகில்களின் தந்தை கடல் ஆவார். கடலுடன் இருக்கின்ற முகில்களுக்கு மாத்திரமே மழை பொழியப்படுகின்றது. அந்த முகில்கள் தங்களை நீரினால் நிரப்பி பின்னர் பொழிகின்றன. நீங்களும் உங்களை நிரப்பிக்கொள்வதற்காகவே கடலிடம் வந்துள்ளீர்கள். கடலின் குழந்தைகளாகிய நீங்கள் எப்படியும் முகில்களே, இதனாலேயே உங்களால் இந்த இனிய நீரை ஈர்த்துக்கொள்ள முடிகிறது. பலவகையான முகில்கள் இருக்கின்றன. சில முகில்கள் மிக அதிகமாக மழை பொழிந்து, வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன, அதேநேரம் சில முகில்கள் மிக அரிதாகவே பொழிகின்றன. நீங்களும் வரிசைக்கிரமமானவர்களே. மிக அதிகமாகப் பொழிபவர்கள் நினைவுகூரப்படுகின்றனர். பெருமளவு மழை பொழியும்பொழுது, மக்கள் சந்தோஷப்படுகின்றனர். இங்கும் பெருமளவு பொழிபவர்கள் புகழப்படுகின்றார்கள். ஞான மழை பொழியாதவர்கள் சோம்பேறி இதயமுடையவர்கள் ஆகுகின்றார்கள். அவர்களால் தங்களது வயிற்றை நிரப்ப முடிவதில்லை. அவர்களால் இந்த ஞானத்தை நன்றாகக் கிரகிக்க முடியாததால் அவர்களுடைய வயிறு ஒட்டிப் போய் விடுகிறது. பஞ்சம் ஏற்படும்பொழுது, மக்களின் வயிறு ஒட்டிப்போகின்றது. இங்கும்கூட, நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகித்து, அதை மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டாதுவிடின்;, உங்களுடைய வயிறு ஒட்டிப் போய் விடுகின்றது. இப்பொழுது பெருமளவு ஞான மழை பொழிபவர்கள் அரசர், அரசி ஆகுகின்றார்;கள்; மற்றவர்கள் ஏழைகளாகுவர். ஏழைகளின் வயிறு ஒட்டிப் போகின்றது. ஆகையினால் குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகிக்க வேண்டும். ஆத்மா, பரமாத்மாவைப் பற்றிய இந்த ஞானம் மிக எளிமையானது! முன்னர் உங்களிடம் ஆத்மா, பரமாத்மா பற்றிய ஞானம் இருக்கவில்லை. எனவே உங்கள் வயிறு ஒட்டியிருந்தது என நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாக்களையும், பரமாத்மாவையும் பற்றியதே பிரதான விடயம். ஆத்மா என்றால் என்ன என்று மக்கள் அறியார்கள். எனவே அவர்கள் பரமாத்மாவைப் பற்றி எவ்வாறு அறிவார்கள்? பல கல்விமான்களும் பண்டிதர்களும் இருக்கின்றார்கள்; அவர்கள் ஆத்மாவைப் பற்றி அறியார்கள். மறுபடியும் தொடர்கின்ற, 84 பிறவிகளின் அழியாத பாகங்களினால் நிரப்பப்பட்ட அழியாத ஆத்மாக்கள் நீங்கள் என்பதை இப்பொழுது அறிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், எனவே அவர்களுடைய பாகங்களும் அழிவற்றவை. ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு சகலதுறைப் பாகங்களையும் நடிக்கின்றீர்கள் என எவருமே அறியார். ஆத்மாவே பரமாத்மா என்று மக்கள் கூறுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் ஆரம்பத்திலிருந்து இறுதிவரையான முழு ஞானத்தையும் கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இந்த நாடகத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்று கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது அனைத்து ஞானத்தையும் பெற்றுள்ளீர்கள். தந்தையினால் உருவாக்கப்பட்ட ஞான யாகத்தில் இப் பழைய உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்பட இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: உங்கள் சொந்த சரீரம் உட்பட, அனைத்தையும் மறந்துவிடுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். தந்தையையும், உங்கள் இனிய வீடான, அமைதி தாமத்தையும் நினைவு செய்யுங்கள். இது துன்ப உலகமாகும். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக உங்களால் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தால் நிறைந்துள்ளீர்கள். ஆனால் நினைவில் இருப்பதிலேயே உங்கள் முயற்சிகள் தங்கியுள்ளன. பல பிறவிகளின் சரீர உணர்வை முடித்து, ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்குப் பெருமளவு முயற்சி தேவை. இதைப் பற்றிப் பேசுவது இலகுவாக இருப்பினும், உங்களை ஆத்மாவாகக் கருதி, புள்ளி வடிவமாகத் தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி தேவை. தந்தை கூறுகிறார்: நான் எவ்வாறானவர், நான் யார் என்பதை அரிதாகவே எவரும் நினைவுசெய்கின்றார்கள். தந்தை எவ்வாறோ அவரது குழந்தைகளும் அவ்வாறே. நீங்கள் உங்களை உள்ளவாறே அறிந்துகொண்டால், தந்தையையும் அவராகவே அறிந்து கொள்வீர்கள். ஒரு தந்தை மாத்திரமே கற்பிக்;கின்றார், ஆனால் பலர் கற்கின்றார்கள் என நீங்கள் அறிவீர்கள். தந்தை எவ்வாறு இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். எவ்வாறாயினும், அந்தச் சமயநூல்கள் போன்றவை பக்தி மார்க்கத்திற்கு உரியவை. மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே நாங்கள் இதைக் கூறவேண்டியுள்ளது, ஆனால் இங்கே எதையும் வெறுப்பது என்ற கேள்வியேயில்லை. பிரம்மாவின் பகலும், இரவும் சமயநூல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் மக்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை. பகலும், இரவும் அரை, அரைவாசியாகும். இது ஏணிப்படத்தில் மிக இலகுவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் மிகவும் சக்திவாய்ந்தவர், அவரால் வேண்டியதைச் செய்ய முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள், ஆனால் பாபா கூறுகிறார்: நானும் இந்த நாடகத்தில் கட்டுண்டுள்ளேன். பாரதம் தொடர்ந்தும் பல சிரமங்களைக் கொண்டிருக்கின்றது, எனவே நான் இங்கே மீண்டும், மீண்டும் வரமுடியுமா? எனது பாகத்திற்கும் ஓர் எல்லையுண்டு. முழுமையான துன்பம் உள்ளபொழுது மாத்திரமே எனது சொந்த நேரத்திற்கேற்ப நான் வருகிறேன். இதில் ஒரு விநாடி வித்தியாசம் கூட இருக்க முடியாது. ஒவ்வொருவரின் பாகமும் நாடகத்தில் மிகச்சரியாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது அதியுயர்ந்த தந்தையின் மறு அவதாரமாகும். பின்னர் குறைந்த சக்தியுடையவர்கள் வரிசைக்கிரமமாகத் தொடர்ந்து கீழே வருகின்றார்;கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள், அதன் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அந்தச் சக்தியின் முழு வலிமையையும் பெறுகின்றீர்கள். நீங்கள் முயற்சி செய்வதன் மூலம், தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்றீர்கள். இது மற்றவர்களின் பாகங்களில் இல்லை. பிரதான விடயம் நீங்கள் இப்பொழுது பெறுகின்ற, நாடகத்தைப் பற்றிய ஞானமாகும். ஏனைய அனைத்தும் பௌதீகமானவை, ஏனெனில் நீங்கள் அவை அனைத்தையும் உங்கள் பௌதீகக் கண்களால் பார்க்க முடியும். பாபாவே உலகின் அற்புதமாவார், அவர் வைகுந்தம் என்று அழைக்கப்படுகின்ற, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அவரைப் பற்றி அதிகப் புகழ்ச்சி உள்ளது. தந்தையையும், அவரது படைப்பையும் பற்றிய அதிகப் புகழ்ச்சி உள்ளது. கடவுளே அதிமேலானவர். தந்தை எவ்வாறு அதியுயர்ந்த சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார் என எவருமே அறியார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதை வரிசைக்கிரமமாகப் புரிந்துகொண்டு, நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப ஓர் அந்தஸ்தைக் கோரிக்கொள்கின்றீர்கள். நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், நாடகத்திற்கேற்பவே அதைச் செய்கின்றீர்கள். முயற்சி செய்யாமல் நீங்கள் எதையும் பெறமுடியாது. நீங்கள் ஒரு செயலைச் செய்யாது ஒரு கணமேனும் இருக்க முடியாது. அந்த ஹத்தயோகிகள் சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சியைச் செய்கின்றார்கள்; அது அவர்கள் இறந்துவிட்டது போன்றிருக்கும். அவர்கள் தமது குகைகளில், அவர்களில் தூசுகள் படியத்தக்கதாக அப்படியே இருக்கின்றார்கள். அவர்கள் மீது தண்ணீர் விழும்பொழுது, புற்கள் வளர ஆரம்பிக்கின்றன, ஆனால் அதில் என்ன நன்மை உள்ளது? எத்தனை நாட்களுக்குத்தான் அவர்களால் அவ்வாறு இருக்க முடியும்? அவர்கள் நிச்சயமாகச் செயல்கள் செய்தாக வேண்டும். எவருமே செயல்களைத் துறந்தவர்கள் ஆகமுடியாது. அவர்கள் தமக்கென உணவு போன்றவற்றைத் தயாரிக்காததனால் தங்களைச் செயல்களைத் துறந்தவர்கள் என்று கூறுகின்றனர். இதுவும் கூட நாடகத்தில் அவர்களின் பாகங்கள். சந்நியாசப் பாதைக்குரியவர்கள் இருந்திருக்காவிடின், பாரதத்தின் நிலைமை என்னவாகியிருக்கும்? பாரதம் முதற்தரமான தூய்மையானதாக இருந்தது. தந்தை அரைக் கல்பத்திற்கு நீடிக்கக்கூடிய தூய்மையை முதலில் உருவாக்குகின்றார். சத்திய யுகத்தில் நிச்சயமாக ஒரு தர்மமும் ஓர் இராச்சியமும் இருந்தது; அந்தத் தேவ தர்மம் இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் மக்களை விழித்தெழச்செய்யக்கூடிய அத்தகைய நல்ல சுலோகங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்: வந்து, உங்களுடைய தேவ இராச்சிய பாக்கியத்தை மீண்டும் கோரிக்கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் இதை மிக நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கிருஷ்ணர் ஏன் “அவலட்சணமானவரும், அழகானவரும்” என்று அழைக்கப்படுகின்றார் என்றும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இந்நாட்களில் பலருக்கு அவ்வாறான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் கிருஷ்ணருடன் போட்டியிடுகிறார்கள். எவ்வாறு தூய்மையற்ற அரசர்கள், தூய அரசர்களின் சிலைகளின் முன்னால் சென்று தலைவணங்குகிறார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்; அவர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்களே பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இப்பொழுது உங்கள் புத்தியில் முழுக் கல்பமும் உள்ளது. இந்தளவாவது நீங்கள் நினைவுசெய்தால், உங்கள் ஸ்திதி மிக நன்றாக இருக்கும். எவ்வாறாயினும், மாயை உங்களை நினைவுசெய்ய அனுமதிப்பதில்லை; அவள் உங்களை மறக்கச் செய்கின்றாள். உங்களுடைய ஸ்திதி சதா மலர்ச்சியாக இருந்தால், நீங்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுவீர்கள். இலக்ஷ்மி, நாராயணன் படத்தைப் பார்க்கும்பொழுது மக்கள் அதிகளவு சந்தோஷமடைகின்றார்கள். அவர்கள் இராதை, கிருஷ்ணரின் படத்தையோ அல்லது இராமர் போன்றவர்களின் படங்களையோ பார்க்கும்பொழுது அந்தளவு சந்தோஷம் அடைவதில்லை. ஏனெனில் சமயநூல்களிலே கிருஷ்ணரைப் பற்றி பல குழப்பமான விடயங்களை எழுதியுள்ளார்கள். இந்த பாபாவே ஸ்ரீ நாராயணன் ஆகுகின்றார். இலக்ஷ்மி, நாராயணன் படங்களைப் பார்க்கும்பொழுது பாபா பெருமளவு சந்தோஷம் அடைகின்றார். நீங்கள் சென்று இளவரசர் ஆகுவதற்கு முன்னர் எவ்வளவு காலம் உங்கள் பழைய சரீரங்களில் இருப்பீர்கள் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே உங்களது இலக்கும், இலட்சியமுமாகும். நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். உங்களுக்குள்ளே சந்தோஷம் பொங்கியெழ வேண்டும். எந்தளவிற்கு நீங்கள் கற்கின்றீர்களோ, அதற்கேற்ப உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் கற்காவிட்டால் என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள்? உலகச் சக்கரவர்த்திகளின் அந்தஸ்தையும், செல்வந்தப் பிரஜைகளின் அந்தஸ்தையும், வேலையாட்;களின் அந்தஸ்தையும் பாருங்கள். ஒரு பாடம் மாத்திரமே இருக்கின்றது; அது “மன்மனாபவ, மத்தியாஜிபவ” ஆகும். அது அல்பாவும் பீற்றாவும், ஞானமும் யோகமும் ஆகும். இந்த பாபா பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார். அவர் அல்லாவைக் கண்டதால் அனைத்தையும் கொடுத்து விட்டார். அவர் அவ்வாறான பெரிய அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வென்றார். அவருக்கு வேறு என்ன தேவை? எனவே குழந்தைகளாகிய நீங்களும் ஏன் உள்ளார இந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருக்கக்கூடாது? இதனாலேயே தந்தை கூறுகிறார்: அவ்வாறான ஒளி உட்புகவிடும் (வசயளெடiபாவ) படங்களை ஒவ்வொருவருக்கும் உருவாக்குங்கள். அவற்றைப் பார்ப்பதனால், குழந்தைகள் சந்தோஷமடைவார்கள். சிவபாபா இந்த ஆஸ்தியை பிரம்மா மூலம் எங்களுக்குக் கொடுக்கின்றார். மனிதர்கள் எதனையும் அறியமாட்டார்கள். அவர்கள் முற்றிலும் சீரழிந்த புத்தியைக் கொண்டுள்ளனர். நீங்கள் இப்பொழுது சீரழிந்த புத்தியைக் கொண்டவர்களிலிருந்து தூய, சுத்தமான புத்தியைக் கொண்டவர்கள் ஆகுகின்றீர்கள். வேறு எதையுமே கற்கவேண்டிய அவசியமில்லாது, நீங்கள் அனைத்தையுமே அறிந்துகொள்கின்றீர்கள்; நீங்கள் இக்கல்வியின் மூலம் உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இதனாலேயே தந்தை ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகின்றார். ஒவ்வொருவரின் இதயத்திலும் இருப்பதை அவர் அறிவார் என மக்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும் தந்தை ஞானத்தைக் கொடுக்கின்றார். ஒவ்வொருவரும் எவ்வளவு கற்கின்றார் என ஓர் ஆசிரியரால் புரிந்துகொள்ள முடியும். அவர் முழுநாளும் அமர்ந்திருந்து, ஒவ்வொருவரின் புத்தியிலும் என்ன இருக்கின்றது என அவதானிப்பதில்லை. இந்த ஞானம் அற்புதமானது! தந்தை ஞானக்கடல் என்றும், அமைதிக்கடல் என்றும், சந்தோஷக்கடல் என்றும், அழைக்கப்படுகின்றார். இப்பொழுது நீங்கள் மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பட்டங்;களை அங்கே கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் முற்றிலும் குணங்கள் நிறைந்தவர்களாகவும்;, 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும், அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களாகவும் ஆகுவீர்கள். இதுவே மனிதரின் அதியுயர்ந்த நிலையாகும். தற்பொழுது இறை அந்தஸ்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இதைப் புரிந்துகொண்டு, பிறருக்கும் அதை விளங்கப்படுத்த வேண்டும். இலக்ஷ்மி, நாராயணன் படத்தைப் பார்க்கும்பொழுது நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். இப்பொழுது நாங்கள் அவர்களைப்; போன்று உலக அதிபதிகள் ஆகுவோம். ஞானத்தின் மூலமே நீங்கள் அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் பெறுகின்றீர்கள். உங்கள் இலக்கையும், குறிக்கோளையும் பாhக்கும்பொழுது நீங்கள் புத்துணர்ச்சி அடைகின்றீர்கள். ஆகவே தந்தை கூறுகிறார்: ஒவ்வொருவரும் இலக்ஷ்மி, நாராயணன் படத்தை வைத்திருக்க வேண்டும். இந்தப் படம் உங்கள் இதயத்தில் உள்ள அன்பை அதிகரிக்கும். நீங்கள் மரண பூமியில் உங்களுடைய இறுதிப் பிறவியில் இருக்கின்றீர்கள் என்றும், அமரத்துவ பூமியில் நீங்கள் அவர்களைப் போன்று ஆகுவீர்கள் என்றும் உங்கள் இதயத்தில் இருக்கவேண்டும். இது உங்களுக்கும் பொருந்தும். ஆத்மாக்களே பரமாத்மா என்று இல்லை; இல்லை. இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தும்பொழுது, நாங்கள் எவரிடமும் எதையுமே கேட்பதில்லை என்று அவர்களிடம் கூறுங்கள். பிரஜாபிதா பிரம்மாவின் பல குழந்தைகள் இருக்கின்றார்கள். நாங்கள் எங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தினால் சேவை செய்கின்றோம். பிராமணர்களாகிய நாங்கள் இந்த யக்ஞத்தை எங்கள் சொந்த வருமானத்தில் நடாத்துகின்றோம். நாங்கள் சூத்திரர்களின் பணத்தைப் பயன்படுத்த முடியாது. எண்ணற்ற குழந்தைகள் இருக்கின்றார்கள். எங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தைச் சேவைக்காக எந்தளவிற்கு அர்ப்பணிக்கின்றோமோ, அதற்கேற்ப ஓர் அந்தஸ்தைப் பெறுவோம் என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் அறிவோம். பாபா விதைகளை விதைத்ததனால் நாராயணன் ஆகுகின்றார் என நீங்கள் அறிவீர்கள். பணம் இங்கே எதற்குமே பயன்படப் போவதில்லை, எனவே நான் ஏன் இந்தப் பணிக்கு அதனைப் பயன்படுத்தக்கூடாது? அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் பட்டினியால் இறந்தார்களா? அவர்கள் மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டார்கள். பாபாவும் மிக நன்றாகப் பராமரிக்கப்படுகின்றார். இவர் முழு உலகையும் சுவர்க்கமாக்குகின்ற, சிவபாபாவின் இரதமாவார். அந்த ஒரேயொருவர் அழகான பயணியாவார். பரமாத்மா அனைவரையும் அழகானவர்கள் ஆக்குவதற்காக இங்கு வருகின்றார். அவர் உங்களை அவலட்சணமானவர்களிலிருந்து, அழகானவர்களாக மாற்றுகின்றார். அவர் அத்தகைய அழகான மாணவாளன். அவர் வந்து அனைவரையும் அழகானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் உங்களை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் அவரை நினைவுசெய்ய வேண்டும். எவ்வாறு நீங்கள் ஆத்மாவைப் பார்க்காதுவிடினும், புரிந்துகொள்கின்றீர்களோ, அவ்வாறே பரமாத்மாவையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். புள்ளி வடிவான ஆத்மாக்களும், பரமாத்மாவும் தோற்றத்தில் ஒரேமாதிரியானவர்கள், மீதி அனைத்தும் ஞானமாகும். இவை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இக்கருத்துக்களை உங்கள் புத்தியில் குறித்து வைத்திருக்க வேண்டும். உங்களுடைய புத்தி இந்த ஞானத்தை நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகக் கிரகிக்கின்றது. வைத்தியர்களால் மருந்துகள் போன்றவற்றை நினைவில் வைத்திருக்க முடிகின்றது. அவர்கள் அந்த நேரத்தில் புத்தகங்களில் தகவல்களைத் தேட ஆரம்பிப்பார்கள் என்று இல்லை. வைத்தியர்களுக்கும் கருத்துக்கள் இருக்கின்றன் வக்கீல்களுக்கும் கருத்துக்கள் இருக்கின்றன. நீங்களும் இந்த ஞானக் கருத்துக்களைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் விளங்கப்படுத்தக்கூடிய தலைப்புக்கள் பல உள்ளன. எந்த ஒரு கருத்தும் எவருக்காவது நன்மை பயக்கும். சிலர் ஒரு கருத்தின் அம்பினால் தைக்கப்படுவர். மற்றவர்கள் வேறொரு கருத்தினால் தைக்கப்படுவர். பல கருத்துக்கள் உள்ளன. இந்தக் கருத்துக்களை மிக நன்றாகக் கிரகித்தவர்களால் மிக நன்றாகச் சேவை செய்ய முடியும். அரைச் சக்கரமாக நீங்கள் கடும் நோயாளியாக இருந்தீர்கள். ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டார்கள், எனவே ஒரேயொரு அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் உங்களுக்கு மருந்து கொடுக்கின்றார். அவர் சத்திரசிகிச்சை நிபுணராகவே எப்பொழுதும் இருக்கின்றார்; அவர் என்றும் நோய்வாய்ப்படுவதில்லை. ஏனைய அனைவரும் நோயாளிகள் ஆகுகின்றார்கள். அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் இந்த யுகத்தில் ஒருமுறை மாத்திரமே வந்து “மன்மனாபவ” என்ற ஊசியை உங்களுக்குப் போடுகிறார். இது மிக இலகுவானது. எப்பொழுதும் இந்தப் படத்தை உங்கள் பையில் வைத்திருங்கள். பாபா முன்னர் நாராயணனைப் பூஜிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் படத்திலிருந்து இலக்ஷ்மியின் ரூபத்தை அகற்றிவிட்டு நாராயணனின் ரூபத்தை மாத்திரம் வைத்திருந்தார். தான் பூஜித்தவராகவே இப்பொழுது தான் ஆகுகின்றார் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவர் இலக்ஷ்மிக்கு விடுதலை கொடுத்தார். (படத்திலிருந்து அவரது உருவத்தை அகற்றினார்) அவர் இலக்ஷ்மியாக ஆகப்போவதில்லை என்பது நிச்சயம். அவர் அந்தப் படத்திலே நாராயணனின் காலை இலக்ஷ்மி பிடித்துவிடுவதை விரும்பவில்லை. ஆண்;கள் இதைப் பார்த்தால், தங்கள் காலையும் பிடித்துவிடுமாறு தங்கள் மனைவிமாரைக் கேட்பார்கள். அங்கே நாராயணனின் காலை இலக்ஷ்மி பிடித்து விடமாட்டார். இந்தப் பழக்கவழக்கங்கள் அங்கே இருக்க மாட்டாது. இந்த வழக்கம் இராவண இராச்சியத்துக்குரியது. முழு ஞானமும் இப்படத்தில் உள்ளது. மேலே திரிமூர்த்தி இருக்கின்றார்கள். இந்த ஞானத்தை முழுநாளும் நினைவு செய்வதில் பெருமளவு அதிசயம் உள்ளது. இப்பொழுது பாரதம் சுவர்க்கம் ஆகுகின்றது. இது மிக நல்ல விளக்கமாகும். இருந்தும் இது ஏன் மனிதர்களின் புத்தியில் பதிவதில்லை என்பது அறியப்படாமல் உள்ளது. தீச்சுவாலை முழு வலிமையுடன் மூட்டப்படும்; வைக்கோற்;போர் தீயிடப்படும். இராவண இராச்சியம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். இந்த யக்ஞத்திற்குத் தூய பிராமணர்கள் தேவை. முழு உலகிலும் தூய்மையைக் கொண்டு வருகின்ற மிகப்பெரிய யக்ஞம் இதுவாகும். அந்தப் பிராமணர்கள் தங்களை பிரம்மாவின் குழந்தைகள் என்று கூறியபொழுதிலும், அவர்கள் விகாரத்தின் மூலம் பிறந்தவர்கள்;. பிரம்மாவின் குழந்தைகள் தூய வாய்வழித்தோன்றல்கள். ஆகையினால் இதை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியைச் சுத்தமாக்கி, இந்த அற்புதமான ஞானத்தைக் கிரகித்து, தந்தையைப் போன்று ஒரு மாஸ்டர் ஞானக்கடலாகுங்கள். இந்த ஞானத்தின் மூலம் அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் கிரகித்துக் கொள்ளுங்கள்.

2. பாபா எவ்வாறு தனது சரீரம், மனம், செல்வத்தை அர்ப்பணித்து, அவற்றைச் சேவைக்குப் பயன்படுத்தினாரோ, அவ்வாறே நீங்களும் தந்தையைப் போன்று கடவுளின் சேவையில் அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுதத வேண்டும். சதா புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு, உங்கள் இலக்கினதும், இலட்சியத்தினதும் படத்தை உங்களுடன் வைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் திறமைச்சித்தி அடைவதற்கு உங்கள் முயற்சியின் வேகத்தைத் தீவிரமாகவும், உங்கள் பிரேக்குகளைச் சக்திவாய்ந்ததாகவும் வைத்திருக்கின்ற, ஒரு மிகச்சரியான யோகி ஆவீர்களாக.

தற்போதைய நேரத்திற்கேற்ப, உங்கள் முயற்சியின் வேகம் தீவிரமாகவும், உங்கள் பிரேக் சக்திவாய்ந்ததாகவும் இருக்கவேண்டும், அப்பொழுது மாத்திரமே உங்களால் இறுதியில் திறமைச்சித்தி அடைய முடியும், ஏனெனில் அந்நேரத்தில் சந்தர்ப்பங்கள் உங்கள் புத்தியில் பல எண்ணங்களை இடும். அந்நேரத்தில், உங்களுக்குச் சகல எண்ணங்களுக்கும் அப்பால் சென்;று, ஒரே எண்ணத்தில் ஸ்திரமாக இருக்கின்ற பயிற்சி தேவை. உங்கள் புத்தியில் சகல திசைகளிலும் செல்லும் அந்நேரத்தில் நீங்கள் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இடுவது அவசியமாகும்: “நிறுத்தவும்” எனக் கூறியதும், நீங்கள் நிறுத்துகின்றீர்கள். நீங்;கள் எப்பொழுது விரும்புகின்றீர்களோ, எவ்வாறு விரும்புகிறீர்களோ அவ்வாறு உங்கள் புத்தியை ஒரே எண்ணத்தில் ஸ்தாபிப்பதே மிகச்சரியான யோகத்தைக் கொண்டிருப்பதாகும்.

சுலோகம்:
நீங்கள் கீழ்ப்படிவான சேவகர்கள் ஆதலால், கவனயீனமாக இருக்க முடியாது. ஒரு சேவகர் என்றால், எப்பொழுதும் சேவையில் பிரசன்னமாகி இருப்பவர் என அர்த்தமாகும்.


இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேட வீட்டுவேலை
நீங்கள் அவ்யக்த ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, குறைவாகச் சிந்தியுங்கள், ஆனால் அதிகமாகச் செய்யுங்கள். அனைத்துக் குழப்பங்களையும் முடித்து, பிரகாசமானவராகவும், தெளிவானவராகவும் ஆகுங்கள். பழைய சூழ்நிலைகள், பழைய சம்ஸ்காரங்கள் என்ற சாம்பலை உங்களுடைய முழுமையான ஸ்திதி என்ற கடலினுள் அமிழ்த்தி விடுங்கள். பழைய பிறவியின் விடயங்களை நீங்கள் மறந்து விடுவது போன்று, பழைய விடயங்களை முடித்துவிடுங்கள்.