22.01.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையின் பாகம் மிகச்சரியானது. அவர் தனக்கேயுரிய நேரத்தில் வருகிறார். அவர் வரும் நேரத்தில் சற்றேனும் வேறுபாடு இருக்கமுடியாது. அவர் வருவதன் ஞாபகார்த்தமான சிவராத்திரியைப் பெருமளவு கோலாகலத்துடன் கொண்டாடுங்கள்.

கேள்வி:
எக்குழந்தைகளின் பாவங்கள் முற்றாக அழிக்கப்படுவதில்லை?

பதில்:
மிகச்சரியாக யோகம் செய்யாதவர்களின் பாவங்கள் ஆகும். உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாவிட்டால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. நீங்கள் யோகத்தில் மிகச்சரியாக இணைந்திருக்காது விட்டால், உங்களால் முழுமையாகச் சற்கதியைப் பெற முடியாது. சில பாவங்கள் இன்னமும் எஞ்சியிருப்பதனால் உங்கள் அந்தஸ்தும் குறைக்கப்படும். நீங்கள் யோகம் செய்யாவிட்டால், எவரேனும் ஒருவரின் பெயரிலோ, வடிவிலோ சிக்குண்டு தொடர்ந்தும் அவரையே நினைவுசெய்வதுடன், ஆத்ம உணர்வுடையவராக இருக்கவும் இயலாதிருக்கும்.

பாடல்:
இன்று அதிகாலைப்பொழுதிலே வந்துள்ளவர் யாரோ?

ஓம் சாந்தி.
காலையென்பது எந்த நேரம்? காலையில் அவர் எப்பொழுது வருகிறார்? அதாவது அவர் எத்தனை மணிக்கு வருகிறார்? (ஒருவர் 3 மணி என்றார், ஒருவர் 4 மணி என்றார், வேறொருவர் சங்கம யுகத்தில் என்றார், மற்றுமொருவர் நள்ளிரவில் என்றார்.) பாபா மிகச்சரியான நேரத்தை அறிய விரும்புகிறார். நள்ளிரவைக் காலை என்று அழைப்பதில்லை. நள்ளிரவு தாண்டி ஒரு விநாடியோ, ஒரு நிமிடமோ கழிந்தாலும் அது முற்பகல் என்றே கூறப்படுகின்றது. அதாவது காலை வேளையின் ஆரம்பம் ஆகும். அதுவே உண்மையான காலைவேளை. நாடகத்தில் அவரது பாகம் மிகச்சரியானது. ஒரு விநாடி கூட தாமதமாக இருக்க முடியாது. இந்நாடகம் அநாதியாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவுக்குப் பின் ஒரு விநாடி கழிந்தாலன்றி அதை முற்பகல் என்று கூறமுடியாது. இவை எல்லையற்ற விடயங்கள் பற்றியதாகும். தந்தை கூறுகிறார்: நான் அதிகாலை வேளையில் வருகிறேன். வெளிநாட்டவர்கள் முற்பகல், பிற்பகல் பற்றிய மிகச்சரியான வழக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்களின் புத்தி தற்பொழுதும் சிறந்ததாகவே உள்ளது. அவர்கள் முற்றாகச் சதோபிரதானாகவோ, முற்றாகத் தமோபிரதானாகவோ ஆகுவதில்லை. பாரத மக்களே 100மூ சதோபிரதானாகி, பின்னர் 100மூ தமோபிரதான் ஆகுகின்றனர். தந்தை மிகச்சரியானவர். 12 மணியைக் கடந்து ஒரு நிமிடமானதும், காலைப் பொழுதாகும். நீங்கள் விநாடிகளைக் கணக்கிடுவதில்லை. ஒரு விநாடி கடந்துசெல்லும்பொழுது அதை உங்களால் கூறமுடியாது. குழந்தைகளாகிய நீங்களே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள்; உலகம் காரிருளில் உள்ளது. கடவுளின் பக்தர்கள் யாவரும் துன்பத்தின்பொழுது அவரை நினைவுசெய்து, கூவியழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆனாலும் அவர் யாரென்றோ, அல்லது எப்பொழுது வருகிறாரென்றோ, எவருக்கும் தெரியாது. அவர்கள் மனிதர்களே, ஆயினும் அவர்கள் தூய்மையற்றும், தமோபிரதானாகவும் இருப்பதனால் எதையும் மிகச்சரியாக அறிந்துகொள்வதில்லை. காமமும் தமோபிரதான் ஆகும். எல்லையற்ற தந்தை இப்பொழுது இந்தக் கட்டளையைப் பிறப்பித்துள்ளார்: குழந்தைகளே, காமத்தை வெல்வதால், உலகை வென்றவராகுங்கள். நீங்கள் தூய்மையாகாது விட்டால், அழிவுக்கு இட்டுச் செல்லப்படுவீர்கள். தூய்மையாகுவதன் மூலம் அழிவற்றதோர் அந்தஸ்தை நீங்கள் கோருவீர்கள். நீங்கள் இராஜயோகம் கற்கின்றீர்கள். நீங்கள் பின்வரும் சுலோகத்தை எழுதுகின்றீர்கள்: புனிதமாக இருங்கள், யோகியாக இருங்கள். உண்மையில் நீங்கள் “இராஜயோகியாக இருங்கள்” என்றே எழுதவேண்டும். “யோகி” என்ற வார்த்தை பொதுவானது. பிரம்ம தத்துவத்துடன் யோகம் செய்பவர்களும் யோகிகளே. ஒரு குழந்தை தனது தந்தையுடன் யோகம் செய்கின்றது. ஒரு மனைவி அவளது கணவனுடன் யோகம் செய்கிறாள். ஆனாலும் உங்கள் யோகம் இராஜயோகம் ஆகும். தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். இதனாலேயே “இராஜயோகம்” என எழுதுவது மிகச்சரியான முறையாகும். “புனிதமாகவும் இராஜயோகியாகவும் இருங்கள்”. நாளுக்கு நாள் தொடர்ந்தும் நீங்கள் திருத்தங்களைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் இன்று உங்களுக்கு மிகவும் ஆழமான, சிறந்த விடயங்களைக் கூறுகின்றேன். சிவஜெயந்தி இப்பொழுது வருகின்றது. நீங்கள் சிவஜெயந்தியை மிகச்சிறப்பாகக் கொண்டாட வேண்டும். சிவஜெயந்தியன்று, நீங்கள் மிகச்சிறந்த சேவை செய்யலாம். கண்காட்சிகளை நடாத்துபவர்கள் சிவஜெயந்தியை அவரவர் நிலையங்களிலோ, தங்கள் வீடுகளிலோ மிகச்சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அவர்கள் எழுத வேண்டும்: சிவபாபாவே கீதை ஞானத்தை அருளியவர். வாருங்கள், தந்தையிடமிருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறும் வழியைக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தீபங்கள் போன்றவற்றை ஏற்றி, உங்கள் இல்லங்களில் சிவஜெயந்தியைக் கொண்டாட வேண்டும். நீங்கள் அனைவரும் ஞான கங்கைகள் ஆகையால், ஒவ்வொரு இல்லமும் கீதைப் பாடசாலையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் கீதையைப் படிக்கின்றார்கள். ஆண்களை விடவும் பெண்களே அதிகமாகப் பக்தியில் ஈடுபடுகின்றனர். வீட்டிலுள்ள அனைவருமே கீதையைப் படிக்கின்ற பல குடும்பங்களும் உள்ளன. எனவே நீங்கள் ஒவ்வொரு வீட்டிலும் படங்களை வைத்திருக்க வேண்டும். பின்வருமாறு எழுதுங்கள்: வாருங்கள், மீண்டும் ஒருமுறை எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள். உண்மையில், சிவஜெயந்திக் கொண்டாட்டமே உங்களுடைய உண்மையான தீபாவளி. (ஒளி விழா) தந்தையாகிய சிவன் வரும்பொழுது ஒவ்வொரு இல்லத்திலும் ஒளி இருக்கின்றது. இந்தக் கொண்டாட்டத்தின்பொழுது நீங்கள் அதிகத் தீபங்கள் ஏற்றிக் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும். நீங்கள் உண்மையான தீபாவளியைக் கொண்டாடுகிறீர்கள். இறுதிக் கொண்டாட்டம் சத்தியயுக ஆரம்பத்தில் நிகழும். அப்பொழுது ஒவ்வோர் இல்லத்திலும் தீபம் இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆத்மாவின் தீபமும் ஏற்றப்பட்டிருக்கின்றது. இங்கு ஆத்மாக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். ஆத்மாக்கள் சீரழிந்த புத்தியைக் கொண்டுள்ளனர். ஆனால் அங்கோ ஆத்மாக்கள் தூய்மையாக இருப்பதால், தெய்வீகப் புத்தியைக் கொண்டுள்ளனர். ஆத்மாக்களே தூய்மையாகுகின்றனர். ஆத்மாக்களே தூய்மையற்றவர்களாகவும் ஆகுகின்றனர். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது ஒரு சதப் பெறுமதியேனும் அற்ற நிலையிலிருந்து ஒரு பவுண் பெறுமதியுள்ளவர்களாக ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக இருக்கும்பொழுது தூய சரீரத்தைப் பெறுகிறீர்கள். இங்கு ஆத்மாக்கள் தூய்மையற்றிருப்பதால் அவர்களுடைய சரீரங்களும், இவ்வுலகமும் தூய்மையற்றவையாக உள்ளன. உங்கள் மத்தியிலும் இவ்விடயங்களை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு உள்ளார சந்தோஷத்தை அனுபவம் செய்பவர்கள் வெகு சிலரே உள்ளனர். நீங்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாகவே முயற்சி செய்கின்றீர்கள். சகுனங்கள் உள்ளன: சிலவேளைகளில் இராகு கிரகணத்தின் சகுனங்கள் உள்ளன. அவை, முன்னர் இந்த ஞானத்தையிட்டு அதிசயித்தவர்களையும் அப்பால் ஓடுமாறு செய்கின்றன. வியாழனின் சகுனங்கள் இராகு கிரகணத்தின் சகுனங்களாக மாறிவிடுகின்றன. நீங்கள் விகாரத்தில் ஈடுபடும்பொழுது இராகு சகுனத்தின் கிரகணத்தின் ஆதிக்கத்திற்குள் வந்துவிடுகிறீர்கள். நீங்கள் ஒரு குத்துச்சண்டைப் போட்டியைக் கொண்டிருக்கிறீர்கள். தாய்மார்களாகிய நீங்கள் இல்லத்தை அமைப்பவர்களாக இருப்பதால், நீங்கள் அதைப் பார்த்திருக்கவும் மாட்டீர்கள். பிரம்மரிகள் (ரீங்காரமிடும் வண்டுகள்) இல்லத்தை அமைப்பவையாகக் கூறப்படுவது இப்பொழுது உங்களுக்குத் தெரியும்; அவை ஓர் இல்லத்தை ஆக்குகின்றன. இல்லம் அமைத்தல் ஒரு நல்ல கலையாகும். இதனாலேயே “இல்லத்தை அமைப்பவர்” என்ற பெயர் உள்ளது. ரீங்காரமிடும் வண்டுகள் அதிகளவு முயற்சி செய்கின்றன. அவையும் திறமையான இல்ல அமைப்பாளர்கள். அவை இரண்டு அல்லது மூன்று அறைகளை அமைக்கின்றன. அங்கு மூன்று அல்லது நான்கு வண்டுகளை வளர்த்தெடுக்கின்றன. அதேபோன்று, பிராமணர்களாகிய நீங்களும் ரீங்காரமிடும் வண்டுகளே. நீங்கள் ஓரிரு அல்லது பத்து, பன்னிரண்டு, அல்லது நூறு, ஐநூறு நபர்களையேனும் இங்கு கொண்டுவர முடியும். நீங்கள் ஒரு கூடாரத்தையும் (அயசஙரநந) இங்கு அமைக்கலாம். இதுவும் ஒரு வீட்டை அமைத்தல் போன்றதாகும். நீங்கள் அதற்குள்ளே அமர்ந்திருந்து அவர்களுக்கு ஞானத்தை ஓதலாம். அப்பொழுது சிலர் இதனைப் புரிந்துகொண்டு எறும்புகளிலிருந்து பிராமணர்களாக மாறுவார்கள். சிலர் முற்றாக உக்கிப் போயுள்ளனர். அதாவது அவர்கள் இந்தத் தர்மத்திற்குரியவர்கள் அல்லர். இந்தத் தர்மத்திற்கு உரியவர்களுக்கே தொடுகை மிக நன்றாக ஏற்படும். எவ்வாறாயினும் நீங்கள் மனிதர்களே. உங்கள் சக்தி அவர்களை விடவும் மேலானது. இரண்டாயிரம் மக்களைக் கொண்ட ஒன்றுகூடல்களில் நீங்கள் விரிவுரை நிகழ்த்தலாம். நீங்கள் முன்னேறும்பொழுது, நான்காயிரம் அல்லது ஐயாயிரம் மக்கள் உள்ள ஒன்றுகூடல்களுக்கும் செல்வீர்கள். ரீங்காரமிடும் வண்டுகள் உங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. இந்நாட்களில் சந்நியாசிகள் வெளிநாடுகளுக்குச் சென்று தாங்கள் பாரதத்தின் புராதன இராஜயோகத்தைக் கற்பிப்பதாகக் கூறுகின்றனர். சில பெண்கள்கூட காவியுடை தரித்து சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் வெளிநாட்டவரை அதிகளவு ஏமாற்றுகின்றனர். புராதன யோகம் கற்பதற்கு பாரதத்திற்கு வரும்படி அவர்களை அழைக்கின்றனர். “இதைக் கற்பதற்கு பாரதத்திற்கு வாருங்கள்” என்று நீங்கள் கூறமாட்டீர்கள். நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கே அவர்களுடனேயே இருந்து, அவர்களுக்குக் கூறுவீர்கள்: இந்த இராஜயோகத்தைக் கற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சுவர்க்கத்தில் பிறப்பெடுப்பீர்கள். நீங்கள் உங்கள் ஆடை முதலியவற்றை மாற்றிக் கொள்ளுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் உங்கள் சரீரங்களையும், சரீர உறவுகளையும் மறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தையே விடுதலையளிப்பவரும், வழிகாட்டியும் ஆவார். அவர் அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றார். நீங்கள் இப்பொழுது முற்றிலும் சதோபிரதான் ஆகவேண்டும். முன்னர் நீங்கள் சத்திய யுகத்தில் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் கலியுகத்தில் இருக்கிறீர்கள். முழு உலகமும், சகல சமயத்தவர்களும் இப்பொழுது கலியுகத்தில் இருக்கின்றனர். பிற சமயத்தவர்கள் எவரையும் நீங்கள் சந்திக்கும்பொழுது, தந்தை கூறுவதாகக் கூறுங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவுசெய்தால் நீங்கள் தூய்மையாகுவீர்கள். பின்னர் நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். இந்தளவை மட்டுமே கூறுங்கள். அதிகம் வேண்டாம். இது மிக இலகுவானது. அச்செய்தி ஒவ்வொரு வீட்;டிற்கும் வழங்கப்பட்டதாக உங்கள் சமயநூல்களில் கூறப்படுகிறது. ஒருவர் தவற விடப்பட்டதால் தனக்கு இதனை எவரும் கூறவில்லை என முறைப்பாடு செய்தார். தந்தை வந்துவிட்டார் என்பதை நீங்கள் முரசுகள் கொட்டி அறிவிக்க வேண்டும். அமைதி தாமமும், சந்தோஷ தாமமுமாகிய தங்கள் ஆஸ்தியை வழங்குவதற்குத் தந்தை வந்துவிட்டார் என்பதை என்றோ ஒருநாள் நிச்சயமாக அனைவரும் அறிந்துகொள்ள நேரிடும். தேவதர்மம் நிலவிய காலத்தில் வேறு சமயங்கள் இருக்கவில்லை. ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தனர். நீங்கள் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பதுடன் இத்தகைய சுலோகங்களையும் உருவாக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: சரீர உணர்வையும், சகல சரீர உறவுமுறைகளையும் துறந்துவிடுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையான, என்னை நினைவுசெய்யும்பொழுது தூய்மையாகுவீர்கள். தற்சமயம் ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள். தந்தை அனைவரையும் தூய்மையாக்கித் தன்னுடன் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வழிகாட்டியாக இப்பொழுது வந்துள்ளார். அனைவரும் தத்தமது பிரிவுகளுக்குச் செல்வார்கள். பின்னர் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி இங்கு வருவார்கள். இது மிக இலகுவானது! உங்கள் புத்தி இவை அனைத்தையும் கிரகிக்க வேண்டும். சேவை செய்பவர்கள் மறைந்திருக்க முடியாது; அவச்சேவை செய்பவர்களும் மறைந்திருக்க முடியாது. சேவையாளர்கள் மட்டுமே அனைவராலும் அழைக்கப்படுகின்றனர். எவருக்கேனும் ஞானம் கொடுக்க முடியாதவர்கள் அழைக்கப்படுவதில்லை. அவர்கள் பாபாவின் பெயருக்கு அவதூறை ஏற்படுத்துகின்றனர். அப்பொழுது மக்கள் கூறுவார்கள்: பிரம்மகுமாரிகள் இவ்வாறானவர்களா? அவர்களால் எவ் வினாக்களுக்கும் விடையளிக்க முடியாதுள்ளது. எனவே இது பாபாவின் பெயரிற்கு அவதூறை ஏற்படுத்துவது, இல்லையா? சிவபாபாவின் பெயருக்கு அவதூறை ஏற்படுத்துபவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியாது. இங்கும் சிலர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். சிலர் பல்கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஆனால் ஏனையோரோ பட்டினியால் மரணிக்கின்றார்கள். அத்தகைய பிச்சைக்காரர்களும் இளவரசர்கள் ஆகுவார்கள். ஒரு காலத்தில் சுவர்க்கத்தில் இளவரசராக இருந்த ஸ்ரீகிருஷ்ணர் இப்பொழுது ஒரு பிச்சைக்காரர் ஆகியுள்ளதைக் குழந்தைகளாகிய நீங்களே புரிந்துகொள்கின்றீர்கள். அவர் மீண்டும் ஒருமுறை பிச்சைக்காரரிலிருந்து இளவரசர் ஆகுகின்றார். அவர் பிச்சைக்காரராக இருந்தார், இல்லையா? அவர் சிறிதளவைச் சம்பாதித்தார். அதுவும் குழந்தைகளாகிய உங்களுக்காகவே ஆகும். இல்லையேல் அவர் எவ்வாறு உங்களைப் பராமரித்திருக்க முடியும்? இவ்விடயங்கள் எதுவும் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. சிவபாபாவே இவ்விடயங்களை உங்களுக்குக் கூறுகின்றார். இவர் உண்மையில் ஒரு கிராமத்துச் சிறுவனாகவே இருந்தார். அவரது பெயரும் கிருஷ்ணர் என்று இருக்கவில்லை. அது ஆத்மாவைக் குறிக்கும் விடயமாகையால் மக்கள் குழப்பமடைகிறார்கள். ஆகவே பாபா கூறுகிறார்: சிவஜெயந்தியன்று படங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு வீட்டிற்கும் சேவை செய்யுங்கள். அல்லது நீங்கள் எழுதலாம்: ஒரு விநாடியில் 21 பிறவிகளுக்கான சுவர்க்க இராச்சியத்தை எவ்வாறு நீங்கள் கோர முடியுமென்பதை இங்கு வந்து புரிந்துகொள்ளுங்கள். தீபாவளியின்பொழுது மக்கள் தங்கள் கடைகளைத் திறப்பது போன்று, நீங்களும் அழியாத ஞான இரத்தினங்களின் கடையொன்றைத் திறக்க வேண்டும். உங்கள் கடை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் தீபாவளியின்பொழுது தங்கள் கடைகளை அலங்கரிக்கின்றனர். ஆனால் நீங்களோ இதனை சிவஜெயந்தியன்று செய்ய வேண்டும். ஏனெனில் சிவபாபாவே தீபங்களாகிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒளியேற்றி உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். அழியும் செல்வத்திற்காக மக்கள் இலக்ஷ்மியை வழிபடுகிறார்கள். நீங்களோ உலக மாதாவிடமிருந்து உலக இராச்சியத்தை இங்கு பெறுகிறீர்கள். தந்தை தொடர்ந்தும் இந்த இரகசியங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தையிடம் சமயநூல்கள் எதுவுமில்லை. தந்தை கூறுகிறார்: நான் ஞானம் நிறைந்தவர். ஆம், உங்களில் சிலர் மிகவும் சிறப்பாகச் சேவை செய்யும்பொழுது, நான் அதை அறிவேன். இதனாலேயே நான் உங்களை நினைவுசெய்கிறேன். ஆனால் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் என்ன நடக்கின்றது என்பதை நான் அறிந்தவரல்ல, ஆம் சிலவேளைகளில் ஒருவர் தூய்மையற்றவரென நான் உங்களுக்குக் கூறமுடியும். அவர்களுக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. அவர்களுடைய முகங்கள் வாடியுள்ளன. எனவே மேலேயிருந்து பாபா ஒரு செய்தி அனுப்புவார்: அந்த நபரிடம் கேளுங்கள். இவ்வாறு சிலருக்குச் செய்வதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது; ஆனால் அவர் அனைவரைப் பற்றியும் பேசுவதில்லை. தங்கள் முகங்களை அழுக்காக்கும் பல குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் எதைச் செய்தாலும் தமக்கு நஷ்டத்தையே ஏற்படுத்துகின்றனர். அவர்கள் உண்மையைக் கூறியிருந்தால், சிறிதளவேனும் இலாபம் ஏற்படலாம். அவர்கள் உண்மையைக் கூறாதபொழுது, மேலும் நட்டத்தையே ஏற்படுத்திக் கொள்கின்றனர். உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்கு பாபா வந்திருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டாலும், உங்களிற் சிலர் உங்கள் முகங்களை அழுக்காக்குகிறீர்கள். முட்களாலான இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஒரு மனித முள்ளே! சத்தியயுகம் ‘அல்லாவின் பூந்தோட்டம்’ எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த யுகமோ ஒரு காடு என அழைக்கப்படுகிறது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: தர்மம் உச்சளவில் அவதூறு செய்யப்படும் நிலை ஏற்படும்பொழுதே நான் வருகிறேன். 84 பிறவிகள் எடுத்த பின்னர் முதலாவது கிருஷ்ணர் என்னவாகியுள்ளார் எனப் பாருங்கள்! தற்சமயம் அனைவரும் தமோபிரதானாக உள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவை யாவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவற்றில் எதுவும் சுவர்க்கத்தில் இருக்காது. சட்டநிபுணர்கள் தங்கள் புத்தகங்களில் குறிப்புக்களை எழுதி வைப்பது போன்று, நீங்களும் குறித்துக் கொள்ள வேண்டிய பல கருத்துக்கள் உள்ளன. வைத்தியர்களும் இவ்வாறான புத்தகங்களை வைத்திருக்கின்றார்;கள். அவர்கள் அதைக் கவனத்திற் கொண்டே ஒவ்வொருவருக்கும் பொருத்தமான மருந்தை பரிந்துரை செய்கின்றார்;கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் மிக நன்றாகக் கற்க வேண்டும். நீங்கள் சேவையும் செய்ய வேண்டும். பாபா உங்களுக்கு “மன்மனாபவ” என்ற முதற்தர மந்திரத்தைக் கொடுத்துள்ளார். தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள், நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். மக்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் சிவபாபா என்ன செய்தார்? அவர் நிச்சயமாகச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுத்திருக்க வேண்டும். அது 5000 வருடங்களுக்கு முன்;னர் ஆகும். அந்தச் சுவர்க்கம் பின்னர் நரகமாக மாறியது. இப்பொழுது நரகமானது மீண்டும் சுவர்க்கமாக மாற்றமடையப் போகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் யோகத்தில் மூழ்கியிருங்கள். அப்பொழுது நீங்கள் அனைத்தையும் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். ஆயினும் உங்கள் யோகம் மிகச்சரியாக இல்லாது, நீங்கள் தந்தையையும் நினைவுசெய்யாது விட்டால் நீங்கள் எதனையும் புரிந்துகொள்ள முடியாது. உங்கள் பாவங்களும் அழிக்கப்பட மாட்டாது. நீங்கள் யோகத்தில் மூழ்கியிருக்காது விட்டால், அந்தளவிற்குச் சற்கதியையும் பெற மாட்டீர்கள். உங்கள் பாவங்கள் சில மேலும் எஞ்சியிருப்பதால் உங்கள் அந்தஸ்தும் குறைக்கப்படும். முற்றிலும் யோகமே செய்யாது பலர் இருக்கின்றனர். அவர்கள் பிறருடைய பெயரிலும், வடிவிலும் சிக்குண்டுள்ளனர். அவர்களை நீங்கள் தொடர்ந்தும் நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் எவ்வாறு அழிக்கப்பட முடியும்? தந்தை கூறுகிறார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். அச்சா.

இனிமையிலும், இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சிவஜெயந்தியன்று அழியாத ஞான இரத்தினங்களின் கடையொன்றைத் திறந்து, சேவை செய்யுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஞான ஒளியேற்றி, ஒவ்வொருவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள்.

2. நீங்கள் உண்மையான தந்தையுடன் நேர்மையாக இருக்கவேண்டும். நீங்கள் செய்துள்ள பாவங்கள் எதனையும் தந்தையிடமிருந்து மறைக்காதீர்கள். பாவங்கள் எதுவும் எஞ்சியிருக்காதவாறு யோகத்தில் மூழ்கியிருங்கள். எவருடைய பெயரிலோ, வடிவத்திலோ சிக்கிக்கொள்ளாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கடலினடியில் சென்று, அனுபவங்கள் எனும் இரத்தினங்களைப் பெறுவதால், சதா சக்திவாய்ந்த ஆத்மா ஆகுவீர்களாக.

ஒரு சக்திவாய்ந்த ஆத்மா ஆகுவதற்கு, ஒவ்வொரு சிறப்பியல்பையும், ஒவ்வொரு சக்தியையும், யோகத்தில் ஒவ்வொரு பிரதான ஞானக் கருத்தையும் பயிற்சி செய்யுங்கள். அனைத்தையும் பயிற்சி செய்து, அன்பில் மூழ்கியுள்ள ஓர் ஆத்மாவின் முன்னிலையில் எவ்விதமான தடைகளும் நிலைத்திருக்க முடியாது; ஆகவே பயிற்சி எனும் ஆய்வுகூடத்தில் அமர்ந்திருங்கள். இப்பொழுது வரை, நீங்கள் ஞானக்கடலினதும், தெய்வீகக் குணங்களின் கடலினதும், சக்திகளின் கடலினதும் மேற்பரப்பிலேயே மிதந்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது, கடலினடியில் செல்லுங்கள், நீங்கள் பல விதமான தனித்துவமான அனுபவங்கள் எனும் இரத்தினங்களைப் பெற்று, ஒரு சக்திவாய்ந்த ஆத்மா ஆகுவீர்கள்.

சுலோகம்:
தூய்மையின்மையானது விகாரங்கள் எனும் தீய ஆவிகளை வரவழைக்கின்றது, எனவே உங்களில் எண்ணங்களில் கூட தூய்மையாகுங்கள்.


இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேட வீட்டுவேலை
உங்களுடைய புத்தி என்ற பாதம் தரையில் இல்லாதிருக்கட்டும். தேவதைகளின் பாதங்கள் ஒருபொழுதும் தரையில் படுவதில்லை என்று கூறப்படுகிறது. அதேபோன்று, புத்தியானது சரீரம் என்ற தரைக்கு மேலே இருக்க வேண்டும், அதாவது, சடப்பொருளின் கவர்ச்சிக்கு அப்பால் இருக்கவேண்டும். சடப்பொருளை உங்களில் தங்கியிருப்பதாக ஆக்குங்கள், அதில் தங்கியிருப்பவர் ஆகாதீர்கள்.