24.01.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் சரீரமற்றவராகி பாபாவை நினைவு செய்யும்போது, இவ்வுலகம் உங்களுக்கு மரணித்து விடுகின்றது. அந்நேரத்தில் நீங்கள் உங்கள் சரீரத்தையும் உலகத்தையும் மறந்துவிடுகின்றீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் தந்தையால் ஏன் மூன்றாவது கண்ணாகிய ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது?

பதில்:
உங்களுக்கு மூன்றாவது கண்ணாகிய ஞானம் கொடுக்கப்பட்டுள்ளததால், நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை அவராகவும், அவரின் அதே ரூபத்திலும் நினைவுசெய்ய முடியும். எவ்வாறாயினும், உங்கள் புத்தி மிகச்சரியாக யோகத்தில் ஆழ்ந்திருக்கும்போதே, உங்கள் மூன்றாவது கண் தொழிற்படும். நீங்கள் ஒரேயொரு தந்தை மீது உண்மையான அன்பைக் கொண்டிருக்கும்போது, வேறு எவரினதும் பெயரிலோ அல்லது ரூபத்திலோ சிக்கிக்கொள்ள மாட்டீர்கள் என்பதே இதன் அர்த்தமாகும். குழந்தைகளாகிய நீங்கள் பாபாவின் மீது கொண்டுள்ள அன்பை மாயை தடைசெய்கின்றாள், பின்;னர் நீங்கள் உங்களையே ஏமாற்றுகின்றீர்கள்.

பாடல்:
உங்கள் பாதையிலேயே வாழ்ந்து, உங்கள் பாதையிலேயே மடிவேன் .........

ஓம் சாந்தி.
பிராமணக் குழந்தைகளாகிய உங்களைத் தவிர, வேறு எவரும் இப்பாடலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. வேதங்கள், சமயநூல்களை உருவாக்கியவர்களால் தாங்கள் கற்கின்ற எதனது அர்த்தத்தையும் புரிந்துகொள்ள முடியாது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நான் பிரம்மாவின் வாய் மூலம், வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகின்றேன். மக்கள், இப்பாடல்களின் பின்னால் உள்ள அர்த்தத்தைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதுள்ளனர். தந்தை மாத்திரமே உங்களுக்கு உண்மையான அர்த்தத்தை விளங்கப்படுத்துகின்றார். ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கும்போது, உலகத்துடனான அவரது தற்போதைய சகல உறவுமுறைகளும் முழுமையாகத் துண்டிக்கப்படுகின்றன. பாடல் கூறுகின்றது: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சரீரமற்;றவராகித் தந்தையை நினைவு செய்யுங்கள். எனவே, இந்த உலகம் உங்களுக்கு மரணித்துவிடுகின்றது. இச்சரீரம் இந்தப் பூமியிலேயே இருக்கின்றது. ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கிச் செல்லும்போது, அந்நேரத்தில் அவ்வாத்மாவிற்கு மனித உலகமே இல்லாது போகின்றது; அவ்வாத்மா சரீரமற்றவர் (நிர்வாணா) ஆகுகின்றார். பின்னர், அவர் வேறொரு சரீரத்தில் பிரவேசிக்கும்போது, அப்பாகத்தை நடிக்க ஆரம்பிக்கின்றார். அதன்பின்னர், அவர் அச்சரீரத்தை நீக்கி வேறொன்றினுள் பிரவேசிக்கின்றார். அவர் மகா ஒளித் தத்துவத்திற்குத் திரும்பிச் செல்வதில்லை; அவர் வேறொரு சரீரத்திற்குப் பறந்து செல்கிறார். அவர் இந்த ஆகாய தத்துவத்தின் கீழ் தனது பாகத்தை நடித்தாக வேண்டும். அவரால் பரந்தாமத்திற்குத் திரும்பிச் செல்லமுடியாது. ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கும்போது, அவர் நீக்கிச் சென்ற சரீரத்துடன் அவருக்கு மேலும் கர்ம பந்தனம் இருப்பதுமில்லை, அவர் சென்று புகவேண்டிய சரீரத்துடனும் அவருக்குக் கர்ம பந்தனம் இருக்காது, ஏனெனில், ஆத்மா சரீரத்திலிருந்து வேறுபட்டவர். அவர் தனது அடுத்த சரீரத்தை எடுக்கும்போது, மீண்டும் அவரது கர்ம பந்தனங்கள் ஆரம்பிக்கின்றன. உங்களைத் தவிர வேறு எந்த மனிதர்களுக்கும் இவ்விடயங்கள் தெரியாது. அவர்கள் அனைவரும் முற்றிலும் விவேகமற்றவர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், அவர்கள் தங்களை அவ்வாறு கருதமாட்டார்கள்; அவர்கள் தங்களை மிகவும் விவேகமுள்ளவர்களாகக் கருதி, ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் அமைதிப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பிராமண குல இரத்தினங்களாகிய உங்களால் இதனை மிகத்தெளிவாக விளங்கப்படுத்த முடியும். அமைதி என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. சிலர், மகாத்மாக்கள் என அழைக்கப்படுபவர்களிடம் சென்று, எவ்வாறு மன அமைதியைப் பெறலாம் என வினவுகின்றார்கள். உலகில் எவ்வாறு அமைதி நிலவமுடியும் என அவர்கள் அவர்களிடம் வினவுகின்றார்கள். அசரீரி உலகில் எவ்வாறு அமைதி நிலவ முடியும் என அவர்கள் வினவுவதில்லை. அது எப்படியும் அமைதி தாமமேயாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் அமைதி தாமத்;தில் வசிக்கின்றீர்கள். மக்கள் மன அமைதியை வேண்டுகின்றார்கள், ஆனால் எவ்வாறு அமைதியைப் பெறலாம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அமைதி தாமமே உங்கள் வீடாகும். இங்கு எவ்வாறு அமைதி இருக்க முடியும்? ஆம், சத்தியயுகத்தில் அமைதியும் சந்தோஷமும், செழிப்பும் இருக்கின்றன் அங்கு அனைத்தும் இருக்கின்றது. அது தந்தையாலேயே ஸ்தாபிக்கப்படுகின்றது. இங்கோ, அதிகளவு அமைதியின்மை நிலவுகின்றது! இப்பொழுது மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் இவை அனைத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். பாரதத்தில் மாத்திரமே அமைதி, சந்தோஷம், செழிப்பு ஆகியன இருந்தன. அந்த ஆஸ்தி தந்தையினாலேயே கொடுக்கப்பட்டது, பின்னர், இராவணன் சந்தோஷமின்மை, அமைதியின்மை, ஏழ்மை ஆகிய இந்த ஆஸ்தியை உங்களுக்குக் கொடுத்தான். எல்லையற்ற தந்தை இங்கிருந்து, இவ்விடயங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை பரந்தாமத்தில் வசிப்பவர். அவர் ஞானம் நிறைந்தவர். அவர் எங்களுக்குச் சந்தோஷ தாமம் என்ற எங்கள் ஸ்தியைக் கொடுக்கின்றார். அவர் ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்களே ஞானத்தைக் கொண்டிருப்பவர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். அந்த ஞானக்கடலே இச்சரீரத்தின் மூலம் உலக வரலாற்றையும் புவியியலையும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த உலகம், நிச்சயிக்கப்பட்ட ஓர் ஆயுட்காலத்தைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், உலகம் எப்பொழுதும் இருக்கின்;றது. அது புதியதிலிருந்து பழையதாக மாறுகின்றது எனக் கூறப்படுகின்றது. புதிய உலகம் மாற்றமடைந்து பழையதாகுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கின்றது என்பதையேனும் மனிதர்கள் அறியார்கள். கலியுகத்தின் பின்னர் நிச்சயமாகச் சத்தியயுகம் வரவேண்டும் என்பதையும், அதனால் தந்தை கலியுகத்தினதும் சத்தியயுகத்தினதும் சங்கமத்தில் வர வேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை பிரம்மாவின் மூலம் புதிய உலகை ஸ்தாபிக்கின்றார் என்பதையும், பின்னர் சங்கரரின் மூலம் அவர் விநாசத்தைத் தூண்டுவார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அம்மூவரின் மூலமே படைப்பு, விநாசம், பராமரிப்பு ஆகியன இடம்பெறுகின்றன என்பதைத் திரிமூர்த்தியின் படம் விளங்கப்படுத்துகின்றது. இது ஒரு சாதாரண விடயம், இருப்பினும், குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களை மறந்து விடுகின்றீர்கள். இல்லாவிடில் நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் சதா நினைவைக் கொண்டிருக்;க வேண்டும். பாபா இப்பொழுது எங்களைப் புதிய உலகிற்குச் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். பாரத மக்களைத் தவிர வேறு எவரும் அதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதில்லை. ஆம், ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டவர்களும் வருவார்கள். நீங்கள் முன்னர் ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டிருந்ததைப் போன்றே, அவர்களும் மீண்டும் ஒரு முறை இந்தத் தர்மத்திற்கு மாற்றப்படுவார்கள். இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் உள்ளது. எனவே, இப்பழைய உலகம் இப்பொழுது மாறப்போகின்றது என்பதை நீங்கள் மனிதர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். மகாபாராத யுத்தம் நிச்சயமாக இடம்பெற வேண்டும். உங்களுக்கு இராஜ யோகம் கற்பிப்பதற்காக பாபா இந்நேரத்தில் வருகின்றார். இப்பொழுது இராஜயோகத்தைக் கற்பவர்களே, புதிய உலகிற்குச் செல்வார்கள்;. கடவுளே அதிமேலானவர் என்பதையும், பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் உள்ளனர் என்பதையும் உங்களால் அனைவருக்கும் விளங்கப்படுத்த முடியும். பின்னர் இங்கு கீழே மனித உலகில் ஜெகதாம்பாவும், ஜெகத்பிதாவும் பிரதானமானவர்களாக உள்ளனர். தந்தை இங்கு வந்து இந்த பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்கின்றார். பிரஜாபிதா பிரம்மா இங்கேயே இருக்கின்றார். பிரம்மாவின் மூலம் இங்கேயே படைப்பானது இடம்பெற வேண்டும். அது சூட்சும உலகில் இடம்பெறுவதில்லை; அது இங்கேயே இடம்பெறுகின்றது. இவர் சரீரதாரியில் இருந்து சூட்சுமமானவர் ஆகுகின்றார். அவர்கள் இராஜயோகத்தைக் கற்று, விஷ்ணுவின் இரட்டை ரூபம் ஆகுகின்றனர். நீங்கள் உலக வரலாற்றையும், புவியியலையும் புரிந்துகொள்;ள வேண்டும். மனிதர்களாகிய உங்களால் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்;ள முடியும். உலகின் அதிபதியானவரால் மாத்திரமே உலக வரலாற்றையும் புவியியலையும் விளங்கப்படுத்த முடியும். ஞானம் நிறைந்தவரான அவர், பிறப்பு, மறுபிறப்பிற்கு அப்பாற்பட்டவர். வேறு எவரது புத்தியிலும் இந்த ஞானம் இல்லை. உங்கள் புத்தி பிரித்தறியும் சக்தியைக் கிரகிக்க வேண்டும். அவர்களது புத்தியில் ஏதேனும் இருக்கின்றதா, இல்லையா என நீங்கள் அவர்களது நாடித்துடிப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். ‘அஜ்மால்கான்’ என அழைக்கப்படுகின்ற மிகவும் பிரபல்யமான மூலிகை வைத்தியர் ஒருவர் இருந்தார். வெறுமனே ஒருவரைப் பார்த்தே அவரது நோயைக் கண்டுபிடிக்க அவரால் முடிந்தது என அவரைப் பற்றிக் கூறப்படுகின்றது. ஒருவர் தகுதிவாய்ந்தவரா, இல்லையா என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுத்துள்ள மூன்றாவது கண்ணாகிய ஞானத்தின் மூலம், நீங்கள், உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை அவராகவே, அவரின் ரூபத்திலேயே நினைவு செய்கின்றீர்கள். எவ்வாறாயினும், தங்கள் புத்தியை மிகச்சரியாக யோகத்தில் ஆழ்ந்திருக்கச் செய்பவர்களால் மாத்திரமே இதனைச் செய்ய முடியும். உங்கள் புத்தியில், நீங்கள் தந்தைமீது எந்தளவிற்கு அதிகமான அன்பைக் கொண்டுள்ளீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்களால் இதனைப் புரிந்துகொள்;ள முடியும். நீங்கள் அனைவருமே இவ்வாறு இருக்கின்றீர்கள் என்றில்லை. உங்களில் சிலர், ஒருவர் மற்றவரின் பெயர்களிலும் ரூபங்களிலும் சிக்கியுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களது அன்பு என்மீது மாத்திரமே இருக்கவேண்டும். நீங்கள் கொண்டுள்ள அந்த அன்பை நிறுத்திவிடக்கூடியவளாக மாயை இருக்கின்றாள். தனது வாடிக்கையாளர்கள் தன்னை விட்டுச் செல்வதை மாயை காணும்போது, அவள் அவர்களது மூக்கையோ அல்லது காதுகளையோ முழுமையாகப் பற்றிப் பிடிக்கின்றாள். அந்த ஆத்மா மாயையினால் ஏமாற்றப்பட்ட பின்னரே, தான் எவ்வாறு மாயையினால் ஏமாற்றப்பட்டார் என்பதை உணர்கின்றார். அவரால் மாயையையோ அல்லது உலகையோ வெல்ல முடியாதிருக்கும். அவரால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாதிருக்கும். இதற்கே முயற்சி தேவை. ஸ்ரீமத் கூறுகின்றது: என்னை நினைவு செய்யுங்கள், அதனால் உங்கள் தூய்மையற்ற புத்தி தூய்மையாகுகிறது. எவ்வாறாயினும், உங்களில் சிலருக்கு இதுவே சிரமமானதாக உள்ளது. இங்கு, அல்பாவும் பீற்றாவும் எனும் ஒரு பாடம் மாத்திரமே உள்ளது. அவ்வளவே! உங்களால் இரு வார்த்தைகளையும் நினைவுசெய்ய முடியாதா? “அல்பாவை நினைவு செய்யுங்கள்” என பாபா கூறுகின்றார், ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் இன்னமும் உங்கள் சொந்தச் சரீரத்தையும், மற்றவர்களது சரீரங்களையுமே நினைவு செய்கின்றீர்கள். பாபா கூறுகின்றார்: ஒரு சரீரத்தைப் பார்க்கும் வேளையிலும் நீங்கள் என்னையே நினைவு செய்ய வேண்டும். என்னைப் பார்த்து, என்னைப் புரிந்துகொள்வதற்காகவே, ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். இதனை உபயோகியுங்கள். உங்கள் மூன்றாவது கண்ணைப் பயன்படுத்துங்கள்! நீங்கள் திரிகாலதரிசிகளாகவும் ஆகுபவர்கள். எவ்வாறாயினும், திரிகாலதரிசிகளாக இருப்பதில் நீங்கள் வரிசைக்கிரமமாகவே உள்ளீர்கள். ஞானத்தைக் கிரகிப்பது சிரமமல்ல. சிலர் ஞானத்தை மிகத்தெளிவாகப் புரிந்துகொள்கின்றார்கள், ஆனால் யோகசக்தியில் குறைவாக இருக்கின்றார்கள்; அவர்கள் ஆத்ம உணர்வில் இருப்பது குறைவாக உள்ளது. அவர்கள் கோபம் அடைவதுடன் அற்ப விடயங்களுக்காகத் தொடர்ந்தும் கீழே விழுகின்றார்கள். அவர்கள் மேலெழுந்து, பின்னர் மீண்டும் கீழே விழுகின்றார்கள். அவர்கள் இன்று நிமிர்ந்து நிற்கிறார்;கள், நாளையே மீண்டும் கீழே வீழ்ந்துவிடுவார்கள். சரீர உணர்வே பிரதான விடயமாகும், ஆனால் அவர்கள் பின்னர் ஏனைய விகாரங்களான பற்று, பேராசை போன்றவற்றிலும் சிக்கிக்கொள்கின்றார்கள். அவர்களுக்குத் தங்கள் சொந்தச் சரீரங்களிலும் பற்று உள்ளது. தாய்மார்களாகிய உங்களுக்குப் பெருமளவு பற்று உள்ளது. தந்தை இப்பொழுது உங்களை அதிலிருந்து விடுவிக்கின்றார். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டீர்கள், எனவே உங்களுக்கு ஏன் இன்னமும் பற்று உள்ளது? அந்நேரத்தில் உங்கள் முகம், நீங்கள் பேசும் விதம், மற்றும் உங்களைப் பற்றிய அனைத்துமே ஒரு குரங்கினதைப் போல் ஆகுகின்றது. தந்தை கூறுகின்றார்: பற்றை வெல்லுங்கள்! சதா என்னை நினைவு செய்யுங்கள்! உங்கள் தலை மீது மிகப்பெரிய பாவச்சுமை உள்ளது. நீங்கள் எவ்வாறு அதனை அகற்றப் போகின்றீர்கள்? எவ்வாறாயினும், நீங்கள் நினைவில் இருப்பதைக்கூட மாயை தடுக்கின்றாள். நீங்கள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும், அவள் உங்கள் புத்தியை மீண்டும் மீண்டும் அலைபாயச் செய்கின்றாள். நீங்கள் மிகவும் கடுமையாக முயற்சி செய்து, தொடர்ந்தும் அதியன்பிற்கினிய பாபாவின் புகழைப் பாடுகின்றீர்கள்: “பாபா, நாங்கள் உங்களிடம் வர இருக்கின்றோம்.” எவ்வாறாயினும், நீங்கள் முன்னேறிச் செல்கையில், நீங்கள் மறந்துவிடுவதுடன் உங்கள் புத்தி ஏனைய திசைகளை நோக்கியும் செல்கின்றது. முதலாம் இலக்கத்தைக் கோருகின்ற இவரும் ஒரு முயற்சியாளரே. நீங்கள் தந்தையாகிய கடவுளின் மாணவர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்க வேண்டும். கீதையில் எழுதப்பட்டுள்ளது: கடவுள் பேசுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குகின்றேன். சிவனின் பெயருக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயர் இடப்பட்டுள்ளது. உண்மையில் சிவபாபாவின் பிறந்த தினம் முழு உலகிலும் கொண்டாடப்பட வேண்டும். சிவபாபா அனைவரதும் வழிகாட்டியாகி, அவர்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றார். கடவுளே, விடுதலையளிப்பவரும், வழிகாட்டியும் என்பதையும், அவரே அனைவரையும் தூய்மையாக்குகின்ற தந்தை என்பதையும் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அவரே அனைவரையும் அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச்செல்பவர். எனவே, அவரின் பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக்கூடாது? பாரத மக்கள் அதனைக் கொண்டாடுவதில்லை. இதனாலேயே பாரதம் அத்தகைய மோசமான நிலையை அடைந்துள்ளது. அனைவரும் மிகவும் சந்தோஷமற்ற சூழ்நிலைகளிலேயே மரணிக்கப் போகின்றார்கள். ஏவப்பட்ட உடனேயே அனைவரையும் கொல்லத்தக்க விதத்தில் ஒருவகை வாயுவாலான அத்தகைய குண்டுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அது அவர்களுக்கு குளோரோபோஃம் (மயக்க மருந்து) கொடுக்கப்பட்டது போலிருக்கும். அத்தகைய பொருட்கள் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் இவற்றை உருவாக்க வேண்டும்; அவர்கள் அதை நிறுத்துவது அசாத்தியமானது. முன்னைய கல்பத்தில் நிகழ்ந்ததே, இப்பொழுது மீண்டும் நிகழவுள்ளது. அந்த ஏவுகணைகளாலும், இயற்கை அனர்த்தங்களாலும் பழைய உலகம் அழிக்கப்பட்டது, இப்போதும் அதுவே நிகழும். நாடகத் திட்டப்;படி, விநாச நேரம் வரும்போது அது நிச்சயமாக நிகழும். நாடகத்திற்கேற்ப, விநாசம் நிச்சயம் இடம்பெறும். இங்கு இரத்த ஆறுகள் பாயும். உள்நாட்டு யுத்தத்தின்போது, மக்கள் ஒருவரையொருவர் கொல்கின்றார்கள். இந்த உலகம் மாறவேண்டும் என்பதை உங்களில் சிலர் மாத்திரமே புரிந்துகொள்கின்றீர்கள்; நீங்கள் சந்தோஷ பூமிக்குச் செல்வதால், சதா இந்த ஞானத்தின் அதீந்திரிய சுகத்தைக் கொண்டிருக்;க வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் சந்தோஷம் அதிகரிப்பதுடன், அந்த அழுக்கான சரீரங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றையும் வெற்றிகொள்வீர்கள். தந்தை கூறுகின்றார்: அல்பாவை நினைவு செய்யுங்கள், இராச்சியம் உங்களுடையதாகும். நீங்கள் ஒரு விநாடியில் உங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். ஒரு சக்கரவர்த்திக்கு ஒரு மகன் இருந்தால், அவரின் மகனே பின்னர் சக்கரவர்த்தி ஆகுகிறார். எனவே தந்தை கூறுகின்றார்: தொடர்ந்தும் என்னையும் சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள், நீங்கள் பூகோளத்தை ஆட்சிபுரிபவர்கள் ஆகுவீர்கள். ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெறப்பட முடியும் என நினைவு கூரப்படுகின்றது. உங்களால் ஒரு விநாடியில் பிச்சைக்காரரில் இருந்து இளவரசராக ஆகமுடியும். இது மிகச்சிறந்த ஒரு விடயமாகும். எனவே, நீங்கள் மிகச்சரியாக ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு அடியிலும் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஓ எனது இனிய குழந்தைகளே! நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுங்கள், அதனால் உங்கள் பற்று அகற்றப்பட முடியும். எவ்வாறாயினும், நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுவது என்பது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல! இவரே நம்பிக்கைப் பொறுப்பாளராகி, குழந்தைகளாகிய உங்களையும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக ஆக்குகின்றார். இவர் தனக்கென எதையாவது பெறுகின்றாரா? அவர் கூறுகின்றார்: நம்பிக்கைப் பொறுப்பாளராகி அனைத்தையும் பராமரியுங்கள். நம்பிக்கைப் பொறுபாளராகுவதால், அனைத்தின் மீதும் உள்ள சகல பற்றுக்களும் நீக்கப்படும். அனைத்துமே உங்களுக்கு கடவுளினால் கொடுக்கப்பட்டது என்று கூறுகின்ற போதிலும் ஒருவர் மரணிக்கும்பொழுதோ அல்லது இழப்பு ஏற்படும் பொழுதோ ஏன் சுகவீனம் அடைகின்றீர்கள்? நீங்கள் எதையாவது பெறுகின்ற பொழுது சந்தோஷம் அடைகின்றீர்கள். அனைத்துமே கடவுளால் கொடுக்கப்பட்டது என்று நீங்கள் கூறுவதால், ஒருவர் மரணிக்கும் பொழுது நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்? எவ்வாறாயினும் மாயையும் குறைந்தவளல்ல. இது உங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்வது போன்றதல்ல! தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள்: நான் இத் தூய்மையற்ற உலகில் இனிமேலும் வாழ விரும்பவில்லை. என்னைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்! உங்களுடன் என்னைத் திரும்ப அழைத்துச் செல்லுங்கள்! எவ்வாறாயினும் உங்களில் எவருமே இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. தூய்மையாக்குபவர் வருகின்ற பொழுது, உங்கள் சரீரங்கள் நிச்சயமாக மரணிக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே அவரால் ஆத்மாக்களாகிய உங்களைத் திரும்ப அழைத்துச் செல்ல இயலும். ஆகவே, அத்தகைய தந்தை மீது உங்கள் புத்தி அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும்! ஒரேயொருவர் மீது மாத்திரம் அன்பு இருக்க வேண்டும். அவரை மாத்திரமே, நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். மாயையின் புயல்கள் உங்களுக்கு வரும், ஆனால் உங்கள் பௌதீகப் புலன்கள் மூலம் எப் பாவச்செயலையும் செய்யாதீர்கள். அது நியதிக்கு முரணானது. தந்தை கூறுகின்றார்: நான் வருகின்ற பொழுது, நான் இவருடைய சரீரத்தின் ஆதாரத்தை எடுக்கின்றேன், ஆனால் நீங்கள் தந்தையையே நினைவுசெய்ய வேண்டும். பிரம்மாவும் பாபா, சிவனும் பாபா என உங்களுக்கு தெரியும். விஷ்ணுவும் சங்கரரும் தந்தை என்று அழைக்கப்படுவதில்லை. சிவன் அசரீரியான தந்தையும், பிரஐhபிதா பிரம்மா சரீரரீதியான தந்தையும் ஆவர். நீங்கள் இப்பொழுது இச் சரீரதாரியினூடாக அசரீரியான தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள். தாதா (பாட்டனார்) இவரினுள் பிரவேசிக்கின்றார். இவ்வாறே தந்தையினூடாக பாட்டனாரிடமிருந்து உங்களது ஆஸ்தியைக் நீங்கள் கோருகின்றீர்கள். பாட்டனாராகிய தாதா அசரீரியானவர், இத் தந்தை சரீரதாரியாவார். இது ஓர் அற்புதமான புதிய விடயம்! அவர்கள் திரிமூர்த்தியைக் காட்டுகின்றார்கள், ஆனால் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சிவனை அகற்றி, அவரை மறையச் செய்து விட்டார்கள்; தந்தை அவ்வாறான அழகிய விடயங்களை விளங்கப்படுத்துகின்றார், எனவே நீங்கள் அவருடைய மாணவர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்கவேண்டும்! பாபா உங்களுடைய தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாவார். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கூறுகின்ற உலகின் வரலாற்றையும், புவியியலையும் செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் பின்னர் இந்த 5000 வருடங்கள் பற்றிய சக்கரத்தைப் பிறருக்குக் கூறவேண்டும். கல்லூரி மாணவர்களுக்கும் உலக வரலாறும், புவியியலும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். 84 பிறவிகளின் ஏணி என்றால் என்ன? நீங்கள் 84 பிறவிகளின் ஏணி பற்றியும், எவ்வாறு பாரதம் உயர்வடைகின்றது என்றும், எவ்வாறு பாரதம் வீழ்சியடைகின்றது என்றும் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். பாரதம் ஒரு விநாடியில் சுவர்க்கமாகவும் பின்னர் 84 பிறவிகளின் போது நரகமாகவும் ஆகுகின்றது. இவை புரிந்துகொள்வதற்கு மிக இலகுவான விடயங்களாகும். எவ்வாறு பாரதம் சத்தியயுகத்திலிருந்து கலியுகமாக ஆகியது? பாரதமக்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டிய விடயம் இதுவேயாகும். நீங்கள் ஆசிரியர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். அவர்களிடம் உலக ஞானம் இருக்கின்றது, ஆனால் இதுவோ ஆன்மீக ஞானமாகும். மனிதர்கள் அந்த ஞானத்தைக் கொடுக்கின்றனர்; தந்தையான கடவுள் இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அவரே மனித உலக விருட்சத்தின் விதையாவார், எனவே அவர் கொண்டிருக்கின்ற ஞானம் மனித உலகம் பற்றியதாகவே இருக்கும். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அழுக்கான சரீரங்கள் மீதுள்ள உங்கள் பற்றை முழுமையாக வெற்றி கொண்டு, இந்த ஞானத்தின் அதீந்திரிய சுகத்தில் நிலைத்திருங்கள். இந்த உலகம் மாற்றப்படவுள்ளது என்பதையும், நீங்கள் சந்தோஷ உலகத்திற்குச் செல்ல இருக்கின்றீர்கள் என்பதையும் உங்கள் புத்தி நினைவுசெய்ய வேண்டும்.

2. ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகி, அனைத்தையும் பராமரியுங்கள். அனைத்துப் பற்றையும் முடித்து, ஒரேயொரு தந்தை மீது மாத்திரம் உண்மையான அன்பு கொண்டிருங்கள். உங்கள் பௌதீகப் புலன்களால் எப் பாவச்செயல்களையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
சகல பௌதீகப் புலன்களின் கவர்ச்சியிலிருந்தும் அப்பால் இருப்பதன் மூலம் தெய்வீகப் புத்தியினதும் தெய்வீகக் கண்ணினதும் ஆசீர்வாதத்தைப் பெற்று ஒரு தாமரையைப் போன்றிருப்பீர்களாக.

ஒவ்வொரு பிராமணக் குழந்தையும் பிறப்பெடுத்ததுமே, அவர் பாப்தாதாவிடமிருந்து, தெய்வீகமான, சக்திநிறைந்த புத்தியையும் தெய்வீகக் கண்ணினதும் ஆசீர்வாதத்தைப் பெறுகின்றார். தமது பிறந்தநாள் பரிசுகளை மிகச்சரியாக பயன்படுத்துகின்ற குழந்தைகள் ஒரு தாமரையைப் போன்று மேன்மையான ஸ்திதி என்ற ஆசனத்தில் ஸ்திதிரமாக இருக்கின்றார்கள். சரீர உறவினர், சரீர உடமைகள் அல்லது பௌதீகப் புலன்கள் போன்ற எந்தக் கவர்ச்சிகளாலும் அவர்களைக் கவர முடியாது. அவர்கள் சகல கவர்ச்சிகளுக்கும் அப்பால் இருப்பதுடன் சதா முகமலர்ச்சியுடனும் இருப்பார்கள். அவர்கள் தாம் சகல கலியுக, தூய்மையற்ற, விகாரமான கவர்ச்சிகளிலிருந்தும் விலகியிருக்கின்றோம் என்ற ஓர் அனுபவத்தைக் கொண்டிருப்பார்கள்.

சுலோகம்:
நீங்கள் எதனாலும் கவரப்படாதிருந்தால், சக்திசொரூபமான நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.


இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேட வீட்டுவேலை.
உங்கள் பற்றின் இழைகளை சோதித்து, உங்கள் புத்தி எங்கேனும் பலவீனமான நூலில் சிக்கிக் கொண்டிருக்கின்றதா எனப்பாருங்கள். சூட்சுமமான பந்தனங்கள் அல்லது உங்கள் சொந்த சரீர பற்று எதுவுமே இல்லாதிருக்கட்டும். அந்தளவிற்கு சுதந்திரமாக இருப்பதற்கு அதாவது அந்தளவிற்கு தெளிவாக இருக்க வேண்டுமாயின், எல்லையற்ற துறவறம் கொண்டவராக இருங்கள். அப்பொழுதே உங்களால் அவ்யக்த ஸ்திதியில் நிலைத்திருக்க முடியும்.