28.03.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்த ஞானம் உங்களைக் குளிர்மையாக்குகின்றது. இந்த ஞானம், காமம், கோபம் என்ற தீயை அணைத்து விடுகின்றது. பக்தி செய்வதன் மூலம் அவ்வாறான தீயை அணைக்க முடியாது.கேள்வி:
நினைவு செய்வதில் நீங்கள் எடுக்க வேண்டிய பிரதான முயற்சி என்ன?பதில்:
தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கும் பொழுது, உங்கள் சொந்த சரீரத்தைக் கூட நினைவு செய்யக் கூடாது. ஆத்ம உணர்வுடையவராகி தந்தையை நினைவு செய்யுங்கள். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியாகும். இதற்கே தடைகள் ஏற்படுகின்றன, ஏனெனில் அரைக்கல்பமாக நீங்கள் சரீர உணர்வில் இருந்தீர்கள். பக்தி என்றால் சரீரத்தை நினைவு செய்வதாகும்.ஓம் சாந்தி.
நினைவு செய்வதற்கு ஏகாந்தம் மிகவும் அவசியமானது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மௌனமாகவும் ஏகாந்தமாகவும் இருக்கும் போது தந்தையின் நினைவில் நிலைத்திருக்கும் அளவிற்கு, கூட்டத்தின் மத்தியில் நினைவில் நிலைத்திருக்க முடியாது. குழந்தைகள் பாடசாலையில் கல்வி கற்கின்ற பொழுது, அவர்கள் ஏகாந்தமாக இருந்தே கற்கின்றார்கள். இங்கும் உங்களுக்கு ஏகாந்தம் அவசியமாகும். நீங்கள் சுற்றுலா சென்றாலும், நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். கல்வி மிக இலகுவானது. அரைக்கல்பமாக, மாயையின் இராச்சியம் ஆரம்பமானதில் இருந்து, நீங்கள் சரீர உணர்வில் இருந்தீர்கள். சரீர உணர்வே முதலாவது எதிரியாகும். தந்தையை நினைவு செய்வதற்குப் பதிலாக நீங்கள் சரீரத்தை நினைவு செய்கின்றீர்கள். அது சரீர அகங்காரம் என அழைக்கப்படுகின்றது. இங்கே ஆத்ம உணர்வுடையவர் ஆகுமாறு குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்படுகின்றது. இதற்கு மாத்திரமே முயற்சி தேவையாகும். நீங்கள் இப்பொழுது பக்தியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். பக்தி சரீரத்தின் மூலமே செய்யப்படுகின்றது. நீங்கள் யாத்திரை ஸ்தலங்கள் போன்ற இடங்களிற்கு உங்கள் சரீரங்களையும் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் ஒரு கணப் பார்வைக்காகவும், இதனை அல்லது அதனை செய்வதற்காகவும் செல்கின்றீர்கள். சரீரமே செல்ல வேண்டியுள்ளது. இங்கே, நீங்கள் ஆத்மாக்கள். நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவு செய்ய வேண்டும் என்ற ஒரேயொரு எண்ணமே உள்ளது. எந்தளவுக்கு நீங்கள் பாபாவை நினைவு செய்கின்றீர்களோ, அதற்கேற்ப உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பக்தி மார்க்கத்திலே உங்கள் பாவங்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஒரு வயதான நபருக்கு, அவர் பக்தி செய்யாதுவிடின்; பெரிய இழப்பு ஏற்படும,; அவர் நாஸ்திகர் ஆவார் என்ற கவலை இருக்கும். இது பக்தியில் நெருப்பும், ஞானத்தில் குளிர்மையும் உள்ளதை போன்றதாகும். காமம், மற்றும் கோபத்தின் நெருப்புக்கள் இதன் மூலம் முடிக்கப்படுகின்றன. பக்திமார்க்கத்திலும், மக்கள் அத்தகையதோர் உணர்வைக் கொண்டிருப்பதனால் அவர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்கின்றார்கள். உதாரணமாக, அவர்கள் பத்திரிநாத்துக்குச் செல்வார்கள். ஒரு காட்சியைக் காண்கின்றார்கள்: பின்னர் என்ன நடக்கின்றது? அவர்கள்; அந்தத் தூய உணர்வை கொண்டிருந்து வேறு எவரையுமன்றி பத்திரிநாதரையே (மாற்றத்தை ஏற்படுத்தும் பிரபு) தம் புத்தியில் வைத்திருக்கின்றார்கள்;. முன்பு அவர்கள் பாத யாத்திரை செல்வார்கள். தந்தை கூறுகின்றார்: நான் அவர்களது ஆசைகளைத் தற்காலிகமாகப் பூர்த்தி செய்கின்றேன். நான் அவர்களுக்குக் காட்சி கொடுக்கின்றேன், ஆனால் அதன் மூலம் அவர்களைச் சந்திப்பதில்லை. நான் இல்லாமல் அவர்கள் இந்த ஆஸ்தியைப் பெற முடியாது. என்னிடமிருந்து மாத்திரமே நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அவர்கள் அனைவரும் சரீரதாரிகளே. படைப்பவராகிய தந்தையிடமிருந்தே நீங்கள் ஆஸ்தியை பெறுகின்றீர்கள். அதேசமயம் உயிர்வாழ்வனவோ, உயிரற்றனவோ ஏனைய அனைத்தும் படைப்பேயாகும். படைப்புகளிடமிருந்து உங்களால் ஆஸ்தியை பெற முடியாது. தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். குமாரிகள் தீய சகவாசத்தின் ஆதிக்கம் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: தூய்மையற்றவர்கள் ஆகுவதன் மூலம், நீங்கள் ஆரம்பத்திலிருந்து, மத்தியூடாக இறுதிவரை துன்பத்தையே பெறுகின்றீர்கள். தற்பொழுது அனைவரும் தூய்மையற்றவர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். அசரீரியான தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். பிரம்மாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என ஒருபோதும் நினைக்க வேண்டாம். அனைவரது புத்தியும் சிவபாபாவை நோக்கியே செல்ல வேண்டும். சிவபாபா இவர் மூலம் எங்களுக்குக் கற்பிக்கின்றார். தாதிமார்களான உங்களுக்கும் சிவபாபாவே கற்பிக்கின்றார். அவரை நீங்கள் எவ்வாறு உபசரிப்பீர்கள்;? நீங்கள் சிவபாபாவிற்குத் திராட்சை, மாம்பழம் போன்றவற்றைக் கொண்டு வருகின்றீர்கள், ஆனால், சிவபாபா கூறுகின்றார்: நான் அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவர். அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கேயாகும். பக்தர்கள் பிரசாதம் படைத்துப் பின்னர் அதனை தம் மத்தியில் பகிர்ந்து கொள்கிறார்கள். நான் அதை உண்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்து உங்களை தூய்மையாக்குகின்றேன். நீங்கள் தூய்மையாகிய பின்னர் நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்துக்கு உரிமை கொண்டாடுகின்றீர்கள். இதுவே என்னுடைய வியாபாரமாகும். கடவுள் சிவனின் வாசகங்கள் பற்றி அவர்கள் பேசுகின்றார்கள். அவர்கள் கடவுள் பிரம்மாவின் வாசகங்கள் பற்றிப் பேசுவதில்லை. அவர்கள் ‘பிரம்மா பேசுகி;ன்றார்’ என்று கூறுவதில்லை. இவர் முரளியை நடத்திய போதிலும், சிவபாபாவே முரளியை நடத்துவதாகக் கருதுங்கள். பாபா எவராவது ஒருவர் அம்பினால் மிக நன்றாக தைக்கப்பட வேண்டுமென புரிந்து கொள்ளும் போது அவர் பேசுபவரின் உள்ளே பிரவேசிப்பார். ஞான அம்பு மிகவும் கூர்மையானது என்று கூறப்படுகின்றது. விஞ்ஞானத்திற்கு அதிகளவு சக்தி உள்ளது. குண்டு வெடிப்பு போன்றன பல இடம்பெறுகின்றன. நீங்களோ ஆழமான மௌனத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் மௌனத்தின் மூலம் விஞ்ஞானத்தை வெற்றி கொள்கின்றீர்கள். நீங்கள் இந்த உலகைத் தூய்மையாக்குகின்றீர்கள், ஆனால் நீங்கள் முதலில் உங்களைத் தூய்மையாக்க வேண்டும். நாடகத்துக்கு ஏற்ப, நீங்கள் தூய்மையாக வேண்டும். இதனால் தான் விநாசம் நிச்சயிக்கப்பட்டது. நாடகத்தைப் புரிந்து கொள்வதன் மூலம், நீங்கள் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது அமைதிதாமத்திற்குச் செல்ல வேண்டும். தந்தை கூறுகின்றார்: அது உங்களது வீடாகும், நீங்கள் உங்களது வீட்டிற்கு அதிகளவு சந்தோஷத்துடன் செல்ல வேண்டும். இதில்; ஆத்ம உணர்வுடையவராகுவதற்கு நீங்கள் பல முயற்சிகளைச் செய்ய வேண்டும். பாபா இந்த நினைவு யாத்திரையை வலியுறுத்துகின்றார். இதில் மட்டுமே முயற்சி இருக்கின்றது. தந்தை வினவுகின்றார்: நடக்கும் போதும், அசைந்து திரியும்போதும் நினைவு செய்வது இலகுவானதா அல்லது ஓர் இடத்தில் அமர்ந்திருந்து நினைவு செய்வது இலகுவானதா? மக்கள் பக்தி மார்க்கத்திலே அமர்ந்திருந்து மணிமாலையை பெருமளவு உருட்டுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் “ராமா, ராமா” எனக் கூறுவார்கள், ஆனால் அதில் எந்த நன்மையும் இல்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிக இலகுவான வழிமுறைகளைச் சொலுகின்றார். உணவை சமைக்கும் போதும், வேறு காரியங்களை செய்யும் போதும் தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். பக்திமார்க்கத்திலே, ஸ்ரீநாத்தில் பிரசாதம் தயார் செய்யும் போது அவர்கள் வாயை மூடி ஒரு துணியை கட்டிக்கொள்வார்கள், அதனால் சிறிதளவு சத்தம் கூட இருக்க மாட்டாது. அது பக்திமார்க்கமாகும். நீங்கள் தந்தையை நினைவு செய்தல் வேண்டும். அவர்கள் பிரசாதம் செய்கின்றார்கள், ஆனால் எவருமே அதை உண்பதில்லை: வழிகாட்டிகளின் குடும்பமே அதை உண்;கின்றனர். இங்கே சிவபாபாவே கற்பிக்கின்றார் என உங்களுக்குத் தெரியும். பக்தி மார்க்கத்திலே, சிவபாபா தங்களுக்குக் கற்பிப்பதாக அவர்கள் கருதுவதில்லை. அவர்கள் சிவபுராணத்தை உருவாக்கியிருந்தாலும், அவர்கள் அதில் சிவனையும் பார்வதியையும், சிவனையும் சங்கரரையும்; கலந்து விட்டார்கள். அதைக் கற்பதில் எந்தவித நன்மையும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களது சொந்த வேதநூல்களையே கற்க வேண்டும். பாரத மக்களுக்கு கீதை உள்ளது, கிறீஸ்தவர்கள் ஒரேயொரு பைபிள் உள்ளது. தேவர்களின் வேதநூல் கீதையாகும். அதில் ஞானம் இருக்கின்றது. ஞானம் மாத்திரமே கற்கப்படுகின்றது. நீங்கள் ஞானத்தைக் கற்கவேண்டும். யுத்தங்கள் பற்றி எதையும் குறிப்பிடும் புத்தகங்களுடன் உங்களுக்குச் செய்வதற்கு எதுவும் இல்லை. நாங்களே யோகசக்தியை கொண்டிருப்பவர்கள், எனவே நாம்; பௌதீகச் சக்தி கொண்டவர்களின் விடயங்களுக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்? உண்மையில் நீங்கள் போராட்டத்தைக் கொண்டிருக்க முடியாது: நீங்கள் யோகசக்தி மூலம் ஐந்து விகாரங்களையும்; வெற்றி கொள்கின்றீர்கள். உங்களுடைய போராட்டம் ஐந்து விகாரங்களுடனாகும். அங்கே மனிதர்கள், மனிதர்களுடன் சண்டையிடுகின்றனர், ஆனால் நீங்களோ உங்கள் சொந்த விகாரங்களுடன் சண்டையிடுகின்றீர்கள். சந்நியாசிகளால் இந்த விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. உங்களுக்கு உடற்பயிற்சி போன்றவை கற்பிக்கப்படுவதில்லை. உங்களுக்கு ஒரேயொரு பயிற்சியே இருக்கின்றது. உங்களுடையது யோகசக்தியாகும். நீங்கள் யோகசக்தியினால் ஐந்து விகாரங்களையும்; வெற்றி கொள்கின்றீர்கள். அந்த ஐந்து விகாரங்களும் உங்கள் எதிரிகளாகும், அவற்றில்; சரீரஉணர்வு முதல் இடத்திலுள்ளது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா. ஆத்மாவாகிய நீங்கள், இங்கே கீழே இறங்கி வந்து ஒரு கருப்பையினுள் பிரவேசிக்கின்றீர்கள், ஆனால் நான் இந்த சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். நான் ஒரு கருப்பையினுள் பிரவேசிப்பதில்லை. சத்தியயுகத்தில், நீங்கள் கருப்பை எனும் மாளிகைக்குள் இருப்பீர்கள், பின்னர் இராவண இராச்சியத்தில் நீங்கள் கருப்பை எனும் சிறைக்குள் செல்கின்றீர்கள், ஆனால் நான் அவதாரம் செய்கின்றேன். இதுவே தெய்வீகப் பிறப்பு எனப்படுகின்றது. நாடகத்துக்கு ஏற்ப நான் இவரினுள் பிரவேசிக்க வேண்டும். நான் இவருக்குப் பிரம்மா என்று பெயரிடுகின்றேன். அவர் எனக்குச் சொந்தமானவர் என்பதனால் நான் அவருக்கு பிரம்மா எனப் பெயரிடுகின்றேன்;. குழந்தைகள் தத்தெடுக்கப்படுகின்ற பொழுது, அவர்களுக்கு இவ்வாறான அழகான பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. உங்களுக்கும் நல்ல பெயர்கள் கொடுக்கப்பட்டன. திரான்ஸ் செய்தியாளரூடாக அற்புதமான பெயர் பட்டியல்கள் வந்தன. பாபாவுக்கு அனைத்துப் பெயர்களும் நினைவில் இல்லை. பெயர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. சரீரத்திற்கே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள், அவ்வளவுதான். நீங்கள் பூஜிக்கத்தக்க தேவர்கள் ஆகுகின்றீர்கள் எனவும் பின்னர் நீங்கள் அரசாட்சி செய்வீர்கள் எனவும் உங்களுக்குத் தெரியும். பின்னர் பக்திமார்க்கத்திலே உங்களுடைய சிலைகள் மாத்திரமே இருக்கும். தேவர்களின் பல சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்களும் கூட வணங்கப்படுகின்றார்கள். அவர்கள் களிமண்ணினால் சாலிகிராம்களை உருவாக்கிப் பின்னர் இரவிலே உடைத்து விடுகின்றார்கள். அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அலங்கரித்து, வழிபாடு செய்த பின்னர் கடலிலே மூழ்கச் செய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்கள் என்னுடைய விக்கிரகத்தையும் உருவாக்கி உணவூட்டிய பின்னர் நான் கற்களிலும், கூழாங்கற்களிலும் இருப்பதாகக் கூறுகின்றார்கள்! அவர்கள் என்னை மிகவும் கீழானவர் ஆக்கிவிட்டார்கள். நீங்கள் மிகவும் ஏழைகள் ஆகி விட்டீர்கள். ஏழைகளே பின்னர் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றார்கள். செல்வந்தர்கள் அரிதாகவே இந்த ஞானத்தை எடுக்கின்றார்கள். செல்வந்தர்களிடமிருந்து அதிகமாக எடுப்பதன் மூலம் பாபாவால் என்ன செய்ய முடியும்? இங்கு குழந்தைகளின் ஒவ்வொரு துளியினாலேயே அனைத்துமே அனைத்தும் உருவாக்கப்படுகின்றது. அவர்கள் கூறுகின்றார்கள்: “பாபா எனது பெயரால் ஒரு செங்கல்லை வையுங்கள்” அதற்குப் பதிலாக தங்க, வெள்ளி மாளிகைகளைப் பெறுவோம் என அவர்கள் நினைக்கின்றார்கள். அங்கே அளவற்ற தங்கம் இருக்கும்: அங்கே தங்கக் கட்டிகள் இருக்கும். இதனாலேயே அங்கே கட்டடங்கள் அவற்றினால் கட்டப்படுகின்றன. ஆகையினால், தந்தை மிக்க அன்புடன் கூறுகின்றார்: இனிமையிலும், இனிமையான குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள். நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. தந்தை ஏழைக் குழந்தைகளுக்கு அவர்கள் செல்வந்தர்கள் ஆகுவதற்கான வழிமுறைகளை கொடுக்கின்றார்: இனிய குழந்தைகளே, உங்களிடமுள்ள அனைத்தையும் மாற்றீடு செய்யுங்கள். இங்கு எதுவுமே எஞ்சப் போவதில்லை. நீங்கள் இங்கிருந்து மாற்றீடு செய்கின்ற எல்லாவற்றையும் புதிய உலகில் நூறு மடங்காகப் பெறுவீர்கள். பாபா உங்களிடம் எதையுமே கேட்பதில்லை. அவர் அருள்பவர். அவர் ஓர் இலகுவான வழிமுறையை உங்களுக்குக்; கூறுகின்றார். இங்கே உள்ள அனைத்தும் மண்ணோடு மண்ணாகிவிடும். நீங்கள் சிலவற்றையாவது மாற்றீடு செய்தால், புதிய உலகில் அதனைப் பெறுவீர்கள். இது இப்பொழுது இந்தப் பழைய உலகின் அழிவுக்கான நேரமாகும். இதில் எதுவுமே பயன்பட மாட்டாது. இதனாலேயே பாபா கூறுகின்றார்: ஒவ்வொரு வீட்டிலும் பல்கலைக்கழகமாகிய வைத்தியசாலையைத் திறவுங்கள், அதன் மூலம் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் பெறுவீர்கள். இதுவே பிரதான விடயமாகும். நல்லது.
இரவு வகுப்பு - 12/1/69
இந்த நேரத்தில் சாதாரண, ஏழைத் தாய்மார்களாகிய நீங்கள் முயற்சி செய்து உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். யக்ஞத்தில் தாய்மார்களே பெருமளவு உதவி செய்கின்றார்கள், அதே சமயம் வெகுசில ஆண்களே உதவியாளர் ஆகியுள்ளனர். தாய்மார்களுக்கு வாரிசுகள் ஆகுகின்ற போதையில்லை. அவர்கள் (பெண்கள்) தொடர்ந்தும் விதைகளை விதைத்து, தத்தமது சொந்த வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.
உங்களுடைய ஞானம் சரியானது, மற்றும் பின்னர் பக்தி இருக்கின்றது. ஆன்மீகத் தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தையை உங்கள் தந்தையாக நீங்கள் புரிந்து கொண்டால், உங்களுடைய ஆஸ்தியை நிச்சயமாக அவரிடமிருந்து பெறுவீர்கள். தந்தை உங்களைத் தொடர்ந்தும் முயற்சி செய்யுமாறு தூண்டுவதுடன், உங்களுக்குத் தொடர்ந்து விளங்கப்படுத்துகின்றார். உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள். தந்தைக்குத் தெரியும் சிலர் சிறந்த முயற்சியாளர்கள்;, சிலர் நடுத்தரமானவர்கள், ஏனையோர் மூன்றாவது தரம் என்று. நீங்கள் பாபாவிடம் வினவினால், நீங்கள் முதலாவதா, இரண்டாவதா, அல்லது மூன்றாவதா என்று அவர் அவர் உடனடியாகவே கூறுவார். நீங்கள் எவருக்கும் ஞானத்தைக் கொடுக்காவிட்டால் நீங்கள் மூன்றாம் தரத்தவர். நீங்கள் அத்தாட்சியை கொடுக்காது விட்டால், பாபா நிச்சயமாகக் கூறுவார். கடவுள் வருகின்ற போது உங்களுக்குக் கற்பிக்கின்ற ஞானம் பின்னர் மறைந்துவிடுகிறது. எவருக்குமே இது தெரியாது. நாடகத் திட்டத்துக்கு ஏற்ப, அது பக்திமார்க்கமாகும், அதன் மூலம் எவருமே என்னை அடையவும் முடியாது, அல்லது சத்தியயுகத்திற்குச் செல்லவும் முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் முந்திய கல்பத்தில், எந்தளவு முயற்சி; செய்தீர்களோ அதையே நீங்கள் தொடர்ந்தும் செய்வீர்கள். எந்தக் குழந்தைகள் தங்களுக்கு நன்மை செய்கின்றார்கள் எனத் தந்தையால் புரிந்து கொள்ள முடியும். தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு நாளும் இலக்ஷ்மி நாராயணனின் படத்துக்கு முன்னால் வந்து அமருங்கள். பாபா, உங்களுடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நாங்கள் நிச்சயமாக இந்த ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வோம். மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்குகின்ற ஆர்வம் உங்களுக்கு நிச்சயமாகத் தேவை. ‘நீங்கள் இத்தனை வருடங்களாகக் கற்கின்றீர்கள், உங்களால் மற்றவர்களுக்குக் கற்பிக்க முடியாது விடின், நீங்கள் கற்றதுதான் என்ன?’ என நிலையங்களில் வாழ்பவர்களுக்கு நான் எழுதுவதுண்டு. குழந்தைகள் முன்னேற வேண்டும். முழு நாளுமே சேவை பற்றிய எண்ணங்கள் உங்கள் புத்தியில் இருக்கவேண்டும்.
நீங்கள் ஓய்வு ஸ்திதியில் இருக்கின்றீர்கள், இல்லையா? ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்களுக்கு ஆச்சிரமங்கள் இருக்கின்றன. ஓய்வு எடுத்தவர்களிடம் நீங்கள் செல்ல வேண்டும். அவர்கள் இறப்பதற்கு முன்னர் அவர்களிடம் இலட்சியத்தைக் கூறுங்கள். எவ்வாறு உங்கள் ஆத்மா சத்தத்துக்கு அப்பால் செல்ல முடியும்? தூய்மையற்ற ஆத்மாக்களால் அங்கு செல்ல முடியாது. கடவுள் பேசுகின்றார்: சதா என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் சத்தத்துக்கு அப்பாலுள்ள இடத்திற்கு ஓய்வுக்குச் செல்வீர்கள். பெனாரசிலும் பெருமளவு சேவை இருக்கின்றது. காசியில் வசிப்;பதற்காகவே பல சாதுக்கள் பல சாதுக்கள் அங்கே வசிக்கின்றார்கள். முழுநாளும் சிவகாசி விஸ்வநாத் கங்கா (உலக அதிபதி சிவனின் மூலம் காசியிலிருந்து கங்கை வந்தது) என தொடர்ந்து கூறுகின்றார்கள். உங்களுக்குள்ளே சதா சந்தோஷ கரகோஷம் இருக்க வேண்டும். நீங்கள் மாணவர்கள் இல்லையா? நீங்கள் சேவை செய்கின்றீர்கள், அத்துடன் கற்கின்றீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். நாங்கள் சிவபாபாவிடம் செல்கின்றோம். இதுவே மன்மனாபவ ஆகும். எவ்வாறாயினும், பலரால் நினைவு செய்ய முடிவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் அரட்டை அடிக்கின்றார்கள். பிரதான விடயம் நினைவாகும். நினைவே உங்களை சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றது. நீங்கள் அனைவரும் உலகில் அமைதி நிலவவேண்டும் என்ற ஆசையைக் கொண்டுள்ளீர்கள். பாபா கூறுகின்றார்: உலகில் அமைதி இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது என அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இதனாலேயே பாபா இலக்ஷ்மி, நாராயணனின் படத்துக்குப் பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார். சந்தோஷம், அமைதி, தூய்மை நிறைந்த அந்த உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என அவர்களுக்குக் கூறுங்கள். உலகில் அமைதி நிலவவேண்டும் என அனைவரும் கூறுகின்றனர். பலர் தொடர்ந்தும் பரிசுகளைப் பெறுகின்றனர். அதிபதியாலேயே உலகில் அமைதியை ஸ்தாபிக்க முடியும். அவர்களது இராச்சியத்தில் உலகில் அமைதி நிலவியது, ஓர் இராச்சியம், ஒரு மொழி, ஒரு தர்மம் இருந்தது. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகில் இருந்தார்கள். அத்தகைய உலகை ஸ்தாபித்தவர் யார்? அமைதியை ஸ்தாபித்தவர் யார்? அது சுவர்க்கம் எனவும் அது அவர்களின் (இலக்ஷ்மி, நாராயணனின்) இராச்சியமாக இருந்தது எனவும் வெளிநாட்டவர்கள் கூடப் புரிந்து கொள்கின்றார்கள். இப்பொழுது உலகில் அமைதி ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் காலையில் எங்கும் சுற்றித் திரியும் போது இலக்ஷ்மி, நாராயணனின் படத்தைப் பயன்படுத்துங்கள், அதனால் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது மற்றும் நரகத்தின் விநாசம் சற்று முன்னாலேயே உள்ளது என்ற ஓசை ஒவ்வொருவரின் காதிலும் ஒலிக்கும் என்று பாபா விளக்கியுள்ளார். நாடகத்துக்கு ஏற்ப இன்னமும் தாமதம் ஏற்படலாம் என உங்களுக்குத் தெரியும். இது பிரசித்தி பெற்ற மக்களின் பாக்கியத்தில் இல்லை. இருப்பினும் பாபா தொடர்ந்து உங்களை முயற்சி செய்யுமாறு தூண்டுகின்றார். சேவை நாடகத்துக்கேற்ப தொடர்கின்றது. அச்சா. இரவு வந்தனங்கள்.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. தீய சகவாசத்தின் ஆதிக்கத்தையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். தூய்மையற்றவர்களின் சகவாசத்துக்குள் ஒரு போதும் செல்லாதீர்கள். மௌன சக்தியின் மூலம் இந்த உலகைத் தூய்மையாக்குகின்ற சேவையை செய்யுங்கள்.2. நாடகத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு, மலர்ச்சியாக இருங்கள். உங்களிடமுள்ள அனைத்தையும் புதிய உலகிற்கு மாற்றி விடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஆன்மீகத் தாக்கத்துடன் தேவதை அலங்காரத்தை அணிந்து கொண்டு அனைவருக்கும் அன்பானவராக ஆகுவீர்களாக.சதா பாப்தாதாவுடன் நிலைத்திருக்கும் குழந்தைகள் அவரின் சகவாசத்தின் நிறத்தினால் நிறமூட்டப்படுவார்கள். அதே வகையில் ஆன்மீகத்தின் தாக்கம் ஒவ்;வொருவரின் முகத்திலும்;; வெளித்தோன்றும். இந்த ஆன்மீகத்தில் நிலைத்திருப்பதன் மூலம் தேவதை அலங்காரம் இயல்பாகவே அவர்களால் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு பெண் எப்படிப்பட்டவர் என்பது முக்கியமல்ல. அவர் அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் முற்றிலும் மாற்றப்படுகின்றார். அலங்காரம் செய்யப்படுவதன் மூலம் அவர்கள் அழகாகத் தோன்றமளிக்கின்றார்கள். இங்கும் தேவதை அலங்காரத்தை அணிவதன் மூலம் நீங்கள் பிரகாசிக்க ஆரம்பிப்பீர்கள். இந்த ஆன்மீக அலங்காரம் உங்களை அன்பானவராக ஆக்குகின்றது.
சுலோகம்:
உண்மையான முயற்சி என்பது பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்தல், யோகம் மற்றும் தெய்வீகக் குணங்களை உள்வாங்குதல் ஆகும்.