13.02.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அமைதியைப் பெறுவதற்கு, சரீரமற்றவர் ஆகுங்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகும்போதே, அமைதியின்மை ஏற்படுகின்றது. எனவே, உங்களுடைய ஆதிதர்மத்தில் ஸ்திரமாக இருங்கள்.கேள்வி:
மிகச்சரியான நினைவு என்றால் என்ன? நினைவிற்குரிய வேளையில், எந்தக் குறிப்பிட்ட விடயத்தில் நீங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்?பதில்:
மிகச்சரியான நினைவு என்றால், நீங்கள் உங்களை உங்களுடைய சரீரத்தில் இருந்து வேறுபட்ட ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதாகும். நீங்கள் எவருடைய சரீரத்தையும் நினைவு செய்யாமலிருப்பதில் கவனம் செலுத்துங்கள். நினைவில் இருப்பதற்கு, நீங்கள் ஞானத்தின் போதையைக் கொண்டிருக்க வேண்டும். பாபா உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார் என்பதும், நீங்கள் பூமி, கடல், ஆகாயம் ஆகிய முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதும் உங்களுடைய புத்தியில் இருக்கவேண்டும்.பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதால், நாம் முழு உலகையுமே கண்டுகொண்டோம். பூமி, ஆகாயம், அனைத்தும் எமக்கே சொந்தம்.ஓம் சாந்தி.
‘ஓம்’ என்பதன் அர்த்தம் ‘நான் ஓர் ஆத்மா’ என்பதாகும். ‘ஓம்’ என்றால் ‘கடவுள்’ என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறாகும். ‘ஓம்’ என்றால் ‘நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம்’ என்பதேயாகும். ‘ஓம் சாந்தி’ என மக்கள் கூறுகின்றனர். ஆத்மாவாகிய எனது ஆதிதர்மம் அமைதியாகும். ஆத்மா தனது சுய அறிமுகத்தை வழங்குகிறார். ‘ஓம் சாந்தி’ என மக்கள் கூறினாலும், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. ‘ஓம் சாந்தி’ என்ற வார்த்தை மிகவும் சிறந்ததாகும். நான் ஓர் ஆத்மா, எனது ஆதிதர்மம் அமைதி ஆகும். இந்த ஆத்மாவாகிய நான், அமைதிதாம வாசி ஆவேன். அர்த்தம் மிக எளிமையானது. இது நீண்டதும், பொய்யானதுமான விளக்கம் அல்ல. தற்கால மக்களுக்கு, இந்த உலகம் புதியதா அல்லது பழையதா என்றுகூடத் தெரியாது. புதிய உலகம் எப்போது பழையதாகும் என்றோ, பழைய உலகம் மீண்டும் எப்போது புதியதாகும் என்றோ எவருக்கும் தெரியாது. நீங்கள் எவரையாவது எப்போது பழைய உலகம் புதியதாகின்றது என்றும், அது எவ்வாறு பழையதாகின்றது என்றும் வினவினால், எவராலும் உங்களுக்குப் பதிலளிக்க முடியாதிருக்கும். இது இப்போது கலியுகத்துப் பழைய உலகம் ஆகும். புதிய உலகம் சத்தியயுகம் எனப்படுகிறது. புதிய உலகம் பழையதாகுவதற்கு எத்தனை வருடங்கள் எடுக்கின்றன? எவருக்கும் இது தெரியாது. அவர்கள் மனிதர்களாக இருந்தாலும், அவர்களுக்கு இது தெரியாது. எனவே, மனிதர்கள் விலங்குகளை விடவும் கேவலமானவர்கள் எனக் கூறப்படுகின்றது. குறைந்தபட்சம், விலங்குகள் தம்மைப் பற்றி எதனையும் கூறுவதில்லை. எவ்வாறாயினும், மனிதர்களோ ‘நாம் தூய்மையற்றவர்கள்’ எனக் கூறுகிறார்கள். அவர்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள். ஆனால் அவர் யார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். ‘தூய்மை’ எனும் வார்த்தை மிக நல்லது. தூய உலகமான சுவர்க்கம் மட்டுமே புதிய உலகமாகும். தேவ தேவியரின் விக்கிரகங்கள் உள்ளன. ஆனால், இலக்ஷ்மி, நாராயணனே புதிய, தூய்மையான உலகின் அதிபதிகள் என்பது எவருக்கும் தெரியாது. எல்லையற்ற தந்தை மட்டுமே இங்கிருந்து சகல விடயங்களையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். புதிய உலகம் ‘சுவர்க்கம்’ என அழைக்கப்படுகிறது. தேவர்கள் சுவர்க்க வாசிகள் என அழைக்கப்படுகின்றனர். தற்சமயம், இந்தப் பழைய உலகம் நரகமாக உள்ளது. இங்கிருக்கும் மக்கள் நரகத்திலேயே வசிக்கிறார்கள். யாராவதொருவர் இறக்கும்போது, அவர் சுவர்க்கத்தில் வசிக்கச் சென்றுவிட்டார் என மக்கள் கூறுகின்றனர். எனவே, அவர்கள் நரகத்தில் வசிக்கிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். அவர்களின் சுய புரிந்துணர்விற்கேற்ப, இது உண்மையில் நரகமே ஆகும். எவ்வாறாயினும், அவர்கள் நரகவாசிகள் என நீங்கள் அவர்களிடம் நேரடியாகக் கூறினால், அவர்கள் உங்களுடன் குழப்பமடைவார்கள். அவர்கள் மனிதர்கள் போன்று தென்பட்டாலும், அவர்களின் முகங்கள் மனிதர்களைப் போன்றிருந்தாலும், அவர்களின் நடத்தை குரங்குகளைப் போன்றே உள்ளது. இதுவும் நினைவு கூரப்படுகின்றது. அவர்கள் ஆலயங்களிலுள்ள தேவ விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று, ‘நீங்கள் சகல நற்பண்புகளும் நிறைந்தவர்கள்’ எனக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் தங்களைப் பற்றி என்ன கூறுகிறார்கள்? தாம் சீரழிந்த பாவிகள் என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் அவர்களுக்கு நேரடியாக, அவர்கள் விகாரங்களைக் கொண்டவர்கள் எனக் கூறினால், அவர்கள் உங்களுடன் குழப்பமடைவார்கள். இதனாலேயே, தந்தை குழந்தைகளாகிய உங்களுடன் மட்டுமே பேசுவதுடன் விளங்கப்படுத்துகிறார். கலியுக மக்கள் நரகவாசிகள் என்பதனால், அவர் வெளியுலக மக்களுடன் பேசுவதற்குச் செல்வதில்லை. நீங்கள் இப்போது சங்கமயுக வாசிகள் ஆவீர்கள். நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். சிவபாபாவே பிராமணர்களாகிய எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவரே தூய்மையாக்குபவர் ஆவார். ஆத்மாக்களாகிய எங்களை வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்வதற்காகத் தந்தை வந்துள்ளார். இது மிகவும் எளிமையான விடயம் ஆகும்! தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதிதாமத்தில் இருந்து உங்களுடைய பாகங்களை நடிப்பதற்காக வந்துள்ளீர்கள். இந்தத் துன்ப பூமியில் அனைவரும் சந்தோஷமற்றிருக்கிறார்கள். இதனாலேயே, அவர்கள் மன அமைதியை வேண்டுகிறார்கள். ‘எவ்வாறு ஆத்மா அமைதி நிறைந்தவர் ஆகமுடியும்?’ என அவர்கள் கூறுவதில்லை. நீங்கள் ‘ஓம் சாந்தி, எனது ஆதிதர்மம் அமைதி’ எனக் கூறுகிறீர்கள். அவ்வாறாயின், நீங்கள் ஏன் அமைதியைக் கேட்கிறீர்கள்? ஏனெனில் நீங்கள் ஓர் ஆத்மா என்பதை நீங்கள் மறந்து சரீர உணர்வுடையவர் ஆகியதனாலேயே ஆகும். ஆத்மாக்கள் அமைதி தாமத்தில் வசிக்கிறார்கள். எனவே, இங்கு எவ்வாறு அமைதி இருக்க முடியும்? நீங்கள் சரீரமற்றவர் ஆகும்போதே, உங்களிடம் அமைதி இருக்க முடியும். இங்கு ஒவ்வோர் ஆத்மாவும் சரீரத்துடன் ஒன்றிணைந்துள்ளார். எனவே, அவர்கள் அனைவரும் நிச்சயமாக பேசவும், நடக்கவும் வேண்டும். ஆத்மாவாகிய நான், அமைதி தாமத்தில் இருந்து ஒரு பாகத்தை நடிப்பதற்காக வந்துள்ளேன். இராவணனே எதிரி என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை. எப்போது இராவணன் உங்களுடைய எதிரி ஆகினான்? எவருக்கும் இது தெரியாது. எந்தவொரு மேதையோ அல்லது பண்டிதரோ, ‘இராவணன் யார்’ என்பதை அறிந்திருக்கவில்லை. தாங்கள் எரிக்கும் கொடும்பாவிக்குரியவனைப் பற்றி அவர்கள் அறியமாட்டார்கள். பல பிறவிகளாக அதனை அவர்கள் எரிக்கிறார்கள். எனினும், அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. இராவணன் யார் என நீங்கள் அவர்களில் எவரிடமாவது கேட்டாலும், ‘அது கற்பனையே’ என்றே அவர்கள் பதிலளிப்பார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாததால், அவர்களால் என்ன பதிலை கூற முடியும்? ‘ஹே இராமா, இந்த உலகம் உருவாக்கப்படவில்லை, அது கற்பனையே’ என சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பலரும் இதனைக் கூறுகிறார்கள். கற்பனை என்பதன் அர்த்தம் என்ன? இது கற்பனைகளாலான உலகம் என்றும், ஒருவர் எத்தகைய எண்ணங்களை உருவாக்கினாலும் அது நிகழும் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களில் சிலர் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்கிறீர்கள். ஆனால் ஏனையவர்களோ எதனையும் புரிந்து கொள்வதில்லை. தெளிவாகப் புரிந்துகொள்பவர்களே உண்மையான குழந்தைகள். ஆனால், எதையும் புரிந்துகொள்ளாதவர்களோ மாற்றாந்தாய்க் குழந்தைகள் ஆவர். மாற்றாந்தாய்க் குழந்தைகள் ஒருபோதும் வாரிசுகள் ஆகுவதில்லை. பாபாவிற்கு உண்மையான குழந்தைகளும், மாற்றாந்தாய்க் குழந்தைகளும் இருக்கிறார்கள். உண்மையான குழந்தைகள் தந்தையின் ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்றுவார்கள். ஆனால் மாற்றாந்தாய்க் குழந்தைகள் அவ்வாறு பின்பற்றுவதில்லை. அப்போது தந்தை கூறுகிறார்: இவர் எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை. அவர் இராவணனின் வழிகாட்டல்களையே பின்பற்றுகிறார். இராமர், இராவணன் என இரு வார்த்தைகள் உள்ளன. இராமரின் இராச்சியம் அதுவாகும். ஆனால் இது இராவணனின் இராச்சியம் ஆகும். இப்போது இது இரண்டினதும் சங்கமம் ஆகும். பாபா அவர்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இந்த பிரம்ம குமாரர்கள், குமாரிகள் தமது ஆஸ்தியை சிவபாபாவிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். நீங்களும் அதனைக் கோரிக்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் இந்த மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுவீர்களா? ‘யாருடைய வழிகாட்டல்கள்?’ என அவர்கள் கேட்கிறார்கள். தந்தை தூய்மையாகுவதற்கான ஸ்ரீமத்தை வழங்குகிறார். பின்னர், அவர்கள் கூறுகிறார்கள்: நான் தூய்மையாக இருப்பேன், ஆனால் எனது கணவன் இதனை ஏற்றுக்கொள்ளாவிடின், நான் யார் கூறுவதைக் கேட்பேன்? எனது கணவனே எனது தெய்வம். பாரதத்தில், ‘கணவனே அவர்களின் குரு, அவர்களின் கடவுள், அவர்களின் அனைத்தும்!’ என அவர்களுக்குக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், உண்மையில் எவரும் அதனை நம்புவதில்லை. அந்த வேளையில் அவர்கள் ‘ஆமாம்’ எனக் கூறுகிறார்களே தவிர, அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் தமது குருமார்களிடமும் ஆலயங்களுக்கும் செல்கிறார்கள். கணவன் இவ்வாறு கூறுவார்;: வெளியே செல்ல வேண்டாம்! நான் உனக்கு இராமர் விக்கிரகம் ஒன்று தருகிறேன். நீ அதனை வைத்து வீட்டிலேயே வழிபடலாம். நீ ஏன் அயோத்திக்கு (இராமரின் பிறப்பிடம்) செல்ல வேண்டும்? அவள் எதனையும் கேட்க மாட்டாள். அது பக்தி மார்க்கத்தின் அலைந்து திரிதலாகும். அவள் நிச்சயமாக அங்கு தொடர்ந்தும் அலைந்து திரிவாள். அங்கிருக்கும் ஆலயம் இராமரினுடையது என அவள் நம்புவதனால், அவள் யார் கூறுவதையும் கேட்கமாட்டாள். ஆனால், நீங்கள் யாரை நினைவு செய்ய வேண்டும்? இராமரையா அல்லது அவரின் ஆலயத்தையா? அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை! எனவே, தந்தை விளங்கப்படுத்துகிறார்: பக்தி மார்க்கத்தில், நீங்கள் கடவுளிடம், ‘வந்து எமக்கு ஜீவன்முக்தியை அருளுங்கள்’ எனக் கூவியழைத்தீர்;கள். ஏனெனில், அவர் மட்டுமே அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவர் ஆவார். அச்சா, அவர் எப்போது வருகிறார்? எவருக்கும் இது தெரியாது. இராவணன் உங்களுடைய எதிரி எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். இராவணனின் அற்புதம் யாதெனில், மக்கள் தொடர்ந்தும் அவனுடைய கொடும்பாவியை எரித்தாலும், அவன் ஒருபோதும் இறப்பதில்லை. இராவணன் என்றால் என்ன என்பது எவருக்கும் தெரியாது. எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். அவர்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், சிவன் யார் என அவர்களுக்குத் தெரியாது. சிவனே கடவுள் என்றும், ஒவ்வொரு கல்பத்திலும் இந்த ஒரு யுகத்திலேயே அவர் வந்து பாரதத்தை நரகத்தில் இருந்து சுவர்க்கமாக மாற்றுகிறார் என்றும் அரசாங்கத்தைச் சார்ந்தவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்துங்கள். அவர் பிச்சைக்காரர்களை இளவரசர்களாக மாற்றுகிறார். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகிறார். அவரே அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவர் ஆவார். மனிதர்கள் அனைவரும் இப்போது இங்கு இருக்கிறார்கள். கிறிஸ்துவின் ஆத்மாவும் இங்கு இன்னொரு வடிவத்தில் இருக்கிறார். இன்னமும் எவராலும் வீடு திரும்பமுடியாது. ஒரேயொரு மகத்தான தந்தையால் மட்டுமே அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள முடியும். அவர் பாரதத்தில் மட்டுமே வருகிறார். உண்மையில், நீங்கள் ஜீவன்முக்தியை அருளும் ஒரேயொருவருக்கு மட்டுமே பக்தி செய்யவேண்டும். அந்த அசரீரியான தந்தை இங்கு வசிப்பதில்லை. அவர் எப்போதும் மேலே இருப்பதாகவே கருதி நினைவுகூரப்படுகிறார். ஆனால் எவரும் கிருஷ்ணரை மேலே இருப்பதாகக் கருதுவதில்லை. அவர்கள் கிருஷ்ணரையும், ஏனைய அனைவரையும் இங்கு கீழே இருப்பதாகவே கருதுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுடைய நினைவு மிகச்சரியானது. நீங்கள் உங்களை உங்களுடைய சரீரத்தில் இருந்து வேறுபட்டவராகக் கருதுகிறீர்கள். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் எவருடைய சரீரத்தையும் நினைவு செய்யக்கூடாது. இதில் கவனம் செலுத்துவது மிக அவசியமானதாகும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். பாபா எம்மை முழு உலகிற்கும் அதிபதிகள் ஆக்குகிறார். அவர் எம்மை பூமி முழுவதற்கும் கடல், ஆகாயம் அனைத்திற்கும் அதிபதிகள் ஆக்குகிறார். அது இப்போது பிளவுபட்டுத் துண்டுகளாகப் பிரிந்துபோயுள்ளது. அவர்கள் தமது எல்லையைக் கடக்க அனுமதிப்பதில்லை. இவ் விடயங்கள் எதுவும் அங்கு இருக்காது. கடவுள் மட்டுமே தந்தை ஆவார். அனைவரும் தந்தையாக இருக்க முடியாது. இந்துக்களும் சீனர்களும் சகோதரர்கள் என்றும், இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள் என்றும் அவர்கள் கூறினாலும், அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர சகோதரிகள் என அவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. இல்லை. ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் சமயநூல்களைச் செவிமடுக்கும்போது, ‘இது உண்மை, இது உண்மை’ எனக் கூறுகிறார்களே தவிர, அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. உண்மையில், அவை அனைத்தும் பொய்யானவை. சத்தியபூமியில், அவர்கள் சத்தியத்தை மட்டுமே பேசுவார்கள். ஆனால் இங்கோ, பொய்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை. நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என அவர்களில் எவருக்காவது நீங்கள் கூறினால், அவர்கள் உங்களுடன் குழப்பமடைவார்கள். நீங்கள் சத்தியத்தைக் கூறினாலும், சிலர் உங்களை அவதூறு செய்ய ஆரம்பிப்பார்கள். பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே இப்போது தந்தையை அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தெய்வீகப் பண்புகளைக் கிரகிக்கிறீர்கள். பஞ்ச பூதங்கள் இப்போது முற்றிலும் தூய்மையற்றதாகியுள்ளன என நீங்கள் அறிவீர்கள். தற்காலத்தில், மக்கள் தீய ஆவியை அதிகளவில் பூஜிக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் தீய ஆவியை நினைவு செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். தீய ஆவிகளை நினைவு செய்யாதீர்கள். உங்களுடைய குடும்பத்துடன் வீட்டில் வசிக்கும்போது, உங்களுடைய புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் வைத்திருங்கள். நீங்கள் இப்போது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். எந்தளவிற்கு நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் இப்போது பாவகரமான செயல்களை வென்றவர்கள் ஆகவேண்டும். அது பாவச் செயல்களை வென்றவர்களின் யுகமாகும். இது பாவச் செயல்கள் புரிபவர்களின் யுகமாகும். நீங்கள் யோக சக்தியால் பாவச் செயல்களை வெற்றிகொள்கிறீர்;கள். பாரதத்தின் யோகம் மிகவும் பிரபல்யமானது. ஆனால் மக்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. சந்நியாசிகள் வெளிநாடுகளுக்குச் சென்று பாரதத்தின் யோகத்தை அவர்களுக்குக் கற்பிப்பதற்காகத் தாம் வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கு சந்நியாசிகள் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாத ஹத்த யோகிகள் என்பது தெரியாது. நீங்கள் இராஜரிஷிகள். அவர்கள் எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள். ஆனால் நீங்களோ எல்லையற்ற சந்நியாசிகள் ஆவீர்கள். இவற்றிற்கு பகலிற்கும் இரவிற்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. வேறு எவரும் அன்றி பிராமணர்களாகிய உங்களால் மட்டுமே இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும். இது ஒரு புதிய விடயமாகும். வருகின்ற புதியவர்களால் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இதனாலேயே, இங்கு வருவதற்குப் புதியவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது இந்திர சபையாகும் (ஞானத்தைப் பொழிகின்ற தெய்வம்). அனைவரும் இப்போது கல்லுப் புத்தியைக் கொண்டுள்ளனர். சத்திய யுகத்தில் அனைவரும் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருப்பார்கள். இது இப்போது இரண்டினதும் சங்கமம் ஆகும். வேறு எவராலும் அன்றித் தந்தையால் மட்டுமே உங்களைக் கல்லில் இருந்து வைரமாக மாற்றமுடியும். நீங்கள் இங்கு உங்களுடைய புத்தியைத் தெய்வீகமாக்குவதற்கு வந்துள்ளீர்கள். பாரதம் உண்மையில் ‘தங்கச் சிட்டுக்குருவி’யாக இருந்தது. இலக்ஷ்மியும் நாராயணனும் உலகின் அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் எப்போது அரசாண்டார்கள் என்பது எவருக்கும் தெரியாது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் அவர்களின் இராச்சியம் இருந்தது. அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளார்கள் என நீங்கள் விளங்கப்படுத்தலாம். தற்சமயம், அவர்கள் தமோபிரதானாக உள்ளனர். இப்போது தந்தையால் சதோபிரதான் ஆக்கப்படுகிறார்கள். இது உங்களுக்கும் பொருந்தும். எந்தவொரு சாதுக்களாலோ அல்லது புனிதர்களாலோ அன்றித் தந்தையால் மட்டுமே இந்த ஞானத்தை வழங்க முடியும். அது பக்தி மார்க்கம். இது ஞான மார்க்கமாகும். குழந்தைகளாகிய நீங்கள் வைத்திருக்கும் மிக நல்ல பாடல்களைக் கேட்கும்போது, உங்களுக்குப் புல்லரிப்பதுடன், உங்களுடைய சந்தோஷப் பாதரசமும் மிகவும் உயரும். இந்த போதை நிலையாக இருக்க வேண்டும். இது ஞானாமிர்தமாகும். மக்கள் மதுபானத்தை அருந்தும்போது போதையடைகிறார்கள். ஆனால் இங்கு உங்களிடம் ஞானாமிர்தம் உள்ளது. உங்களுடைய போதை குறைவடையக்கூடாது. அது சதா உயர்வாகவே இருக்க வேண்டும். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனின் படத்தைப் பார்க்கையில் சந்தோஷமடைகிறீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு அனைத்தையும் கடைப்பிடிக்கையில், உங்களுடைய புத்தியானது தந்தையுடனும் ஆஸ்தியுடனும் யோகத்தில் இருக்க வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பாவச் செயல்களை வென்றவர் ஆகுவதற்கு, நீங்கள் யோக சக்தியால் அவற்றை வெற்றிகொள்ள வேண்டும். இங்கு அனைத்தையும் கடைப்பிடிக்கையில், உங்களுடைய புத்தியின் யோகம் தந்தையுடனும் ஆஸ்தியுடனும் இருக்க வேண்டும்.
2. தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்திக்கான முழு உரிமையையும் கோருவதற்கு, நீங்கள் உண்மையான குழந்தைகள் ஆகவேண்டும். ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தை மட்டுமே பின்பற்றுங்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துபவற்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, பின்னர் அதனை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்;.ஆசீர்வாதம்:
சம்பூர்ணம் என்ற ஒளியினால், அறியாமை என்ற திரையை அகற்றுகின்றதோர் ~சேர்ச்லைட்| ஆகுவீர்களாக.வெளிப்பாட்டிற்கான காலம் இப்பொழுது நெருங்கியுள்ளது. ஆகையால், அகநோக்குடையவராகி, ஆழமான அனுபவங்களின் இரத்தினங்களினால் உங்களை நிரப்பிக் கொள்ளுங்கள். சம்பூர்ணம் என்ற உங்கள் ஒளியினால் அறியாமை என்ற திரையை அகற்றுகின்ற அத்தகையதோர் சேர்ச்லைட் ஆகுங்கள். நீங்கள் குழப்பங்களில் இருந்து உலகை பாதுகாத்து, உலகை சந்தோஷமாகவும் பொன்னானதாகவும் மாற்றுகின்ற பூமியின் நட்சத்திரங்கள். நீங்கள் உலகிற்கு சந்தோஷம், அமைதி என்ற சுவாசத்தை கொடுப்பதற்கு ஓர் கருவியான அதிமேன்மையான ஆத்மா ஆவீர்கள்.
சுலோகம்:
மாயையினதும் சடப்பொருளினதும் சகல கவர்ச்சிகளிலிருந்தும் தொலைவில் இருக்கும் போது, நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள்.