16.02.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 25.11.85 Om Shanti Madhuban
புத்தியில் நம்பிக்கையுடன் இருக்கும் வெற்றி இரத்தினங்களின் அடையாளங்கள்.
இன்று, பாப்தாதா புத்தியில் நம்பிக்கையுடன் இருக்கும் வெற்றி இரத்தினங்களின் மாலையைப் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தான் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளதாக நம்புகிறார். உங்களில் அரிதாகவே இதை நம்பாதவர்கள் இருக்கிறீர்கள். எவரையாவது அவரின் புத்தியில் நம்பிக்கை உள்ளதா எனக் கேட்டால், ‘எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் எவ்வாறு நான் ஒரு பிரம்மகுமார் அல்லது பிரம்மகுமாரி ஆகுவேன்?’ எனப் பதில் அளிப்பார். நம்பிக்கை பற்றிய கேள்விக்கு, நீங்கள் அனைவரும், ‘ஆமாம், எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்றே பதில் அளிப்பீர்கள். இங்கு அமர்ந்திருக்கும் அனைவரின் புத்தியிலும் நம்பிக்கை உள்ளது என்றே எம்மால் சொல்ல முடியும், அப்படியல்லவா? அல்லது, இன்னமும் தங்களின் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என உணர்பவர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள்! உங்கள் அனைவரின் புத்திகளிலும் நம்பிக்கை உள்ளது. நல்லது, உங்கள் அனைவருக்கும் உறுதியான நம்பிக்கை இருந்தால், ஏன் வெற்றி மாலையில் இலக்கம் ஏற்படுகிறது? நம்பிக்கையைப் பொறுத்தவரை, அனைவரும் ஒரே பதிலையே கொடுக்கிறார்கள். அவ்வாறாயின், ஏன் இலக்கம் ஏற்படுகிறது? எட்டில் ஒருவர் ஆகுவதற்கும், 100 இல் ஒருவர் ஆகுவதற்கும், 16000 இல் ஒருவர் ஆகுவதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. இதற்கான காரணம் என்ன? எட்டு விசேடமான தேவர்களின் புகழுக்கும் வழிபாட்டிற்கும், 16000 மாலையின் புகழுக்கும் வழிபாட்டிற்கும் இடையில் பெரியதொரு வேறுபாடு உள்ளது. தந்தை ஒருவரே என்றும், நீங்கள் அனைவரும் ஒரேயொருவருக்குச் சொந்தமானவர்கள் என்றும் உங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவ்வாறாயின், ஏனிந்த வேறுபாடு? உங்களின் புத்திகளில் நம்பிக்கையைக் கொண்டிருப்பதில் சதவீதம் இருக்க முடியுமா? உங்களின் நம்பிக்கையில் சதவீதம் காணப்பட்டால், அதை நம்பிக்கை என்று அழைக்க முடியுமா? எட்டு இரத்தினங்களின் புத்திகளிலும் நம்பிக்கை உள்ளது. 16000 பேரின் புத்திகளிலும் நம்பிக்கை உள்ளது என்றே நீங்கள் சொல்வீர்கள், அப்படியல்லவா?
உங்களின் புத்தியில் நம்பிக்கையுடன் இருப்பதன் அடையாளம், வெற்றி ஆகும். இதனாலேயே, புத்தியில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் வெற்றியாளர்கள் என்றொரு புகழ் உள்ளது. எனவே, நம்பிக்கை வைத்திருத்தல் என்றால் நீங்கள் வெற்றியாளர் என்றே அர்த்தம். சிலவேளைகளில் வெற்றி அடைவதும், ஏனைய வேளைகளில் வெற்றி அடையாமல் இருத்தலும் என்பது சாத்தியமே இல்லை. சூழ்நிலைகள் எவ்வாறிருந்தாலும், புத்தியில் நம்பிக்கை வைத்திருக்கும் குழந்தைகள் எப்போதும் தமது சொந்த ஸ்திதியின் சக்தியின் அடிப்படையில் அந்தச் சூழ்நிலைகளை வெற்றி கொள்வார்கள். வெற்றி இரத்தினங்கள் ஆகியவர்கள், அதாவது, வெற்றி மாலையின் மணிகள் ஆகியவர்களையும் கழுத்து மாலை ஆகியவர்களையும் ஒருபோதும் மாயையால் தோற்கடிக்கப்பட முடியாது. உலக மக்களும், பிராமணக் குடும்பத்துடன் தொடர்பில் அல்லது உறவுமுறையில் இருப்பவர்களும் ஒருவர் தோற்றுவிட்டார் என நம்பினாலும் அல்லது கூறினாலும், அந்தத் தோல்வி ஒரு தோல்வியே இல்லை. ஏனெனில், சிலவேளைகளில் அவதானிப்பவர்களுக்கு அல்லது எதையாவது செய்பவர்களுக்குத் தவறான புரிந்துணர்வே இருக்கும். பணிவாகவும், ஆக்கபூர்வமானவர்களாகவும் எப்போதும் ‘ஹா ஜி’ என்று சொல்லும் ஆத்மாக்கள் தவறான புரிந்துணர்வினால் சிலவேளைகளில், தோற்றது போல் தோன்றலாம். மற்றவர்கள் அதைத் தோல்வி என்றே பார்க்கக்கூடும். ஆனால், நிஜத்தில், அது அவர்களின் வெற்றியே. எவ்வாறாயினும், அந்த வேளையில், மற்றவர்களின் அபிப்பிராயங்களால் அல்லது சூழலால், நீங்கள் உங்களின் புது;தியில் உள்ள நம்பிக்கையை மாற்றி, ‘இது வெற்றியா அல்லது தோல்வியா என எனக்குத் தெரியவில்லை’ எனச் சந்தேகப்படக்கூடாது. இவ்வாறு சந்தேகப்படாதீர்கள். ஆனால் உங்களின் நம்பிக்கையை உறுதியானதாக வைத்திருங்கள். அப்போது, இன்று தோல்வி என மற்றவர்கள் சொல்வது, மாறி நாளை அவர்கள் உங்களுக்கு ‘ஆஹா ஆஹா!’ என மலர்களைப் படைப்பார்கள்.
வெற்றி ஆத்மாக்களுக்கு தாம் செய்யும் செயல்கள் சரியா அல்லது தவறா என அவர்களின் மனங்களில் ஒருபோதும் எந்தவிதமான குழப்பமும் இருக்காது. மற்றவர்களின் அபிப்பிராயங்கள் வேறுவிடயம். சிலர் நீங்கள் சரியென்று சொல்வார்கள். ஏனையோர், நீங்கள் பிழை என்று சொல்வார்கள். ஆனால், நீங்கள் வெற்றியாளர்கள் என்ற உறுதியான நம்பிக்கை உங்களின் மனதில் இருக்க வேண்டும். தந்தையின் மீது நம்பிக்கை வைத்திருப்பதுடன், நீங்கள் உங்களிலும் நம்பிக்கை வைத்திருத்தல் அவசியம். இது ஏனெனில், புத்தியின் நம்பிக்கை வைத்திருக்கும் ஆத்மாவின், அதாவது, வெற்றியாளரின் மனம், அதாவது, எண்ணத்தின் சக்தியானது, எப்போதும் தெளிவாகவே இருக்கும். சுயத்திற்கு அல்லது மற்றவர்களுக்காக எடுக்கப்படும் தீர்மானம் ‘ஆமாம்’ அல்லது ‘இல்லை’ என்பதாக இருந்தாலும், அது மிகவும் இலகுவானதாகவும் சத்தியம் நிறைந்ததாகவும் தெளிவாகவும் இருக்கும். இதனாலேயே, ‘எனக்குத் தெரியாது...’ என்ற குழப்பம் எதுவும் இருக்காது. புத்தியில் நம்பிக்கை உடைய வெற்றி இரத்தினங்களின் அடையாளமானது, அவர்கள் சத்தியம் நிறைந்த தீர்மானத்தை எடுப்பதனால், அவர்களின் மனங்களில் சிறிதளவு குழப்பமும் இருக்காது. அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள். சந்தோஷ அலைகளே இருக்கும். சூழல்கள் நெருப்பைப் போன்றிருந்தாலும், இத்தகையதோர் ஆத்மாவிற்கு, அந்த அக்கினிப் பரீட்சையும் வெற்றியின் சந்தோஷத்தையே கொடுக்கும். ஏனெனில், அவர் அந்தப் பரீட்சையில் வெற்றியாளர் ஆகுவார். இப்போதும், உலக ரீதியாக யாராவது ஒருவர் எதிலாவது வெற்றி பெற்றால், அவர்கள் அதைச் சந்தோஷத்துடன் கொண்டாடுவார்கள். அவர்கள் சிரித்து, நடனமாடி, கைதட்டி ஆரவாரிப்பார்கள். அது சந்தோஷத்தின் அடையாளம் ஆகும். புத்தியில் நம்பிக்கை வைத்திருப்பவர் ஒருபோதும் எந்தவொரு பணியிலும் தனித்திருப்பதாக உணர மாட்டார். அனைவரும் ஒரு புறத்திலும், அவர் மற்றைய பக்கத்திலும் இருந்தாலும், பெரும்பாலானோர் ஒரு புறத்திலும், வெற்றி இரத்தினம் தனித்து இருந்தாலும், அவர் தன்னைத் தனித்திருப்பதாகக் கருத மாட்டார். ஆனால், தந்தை தன்னுடன் இருப்பதாகவே கருதுவார். இதனாலேயே, தந்தையின் முன்னால் எல்லையற்ற சேனையும் எதுவுமே இல்லை. தந்தை எங்குள்ளாரோ, முழு உலகமும் தந்தைக்குள் இருக்கும். ஒரு விதைக்குள் முழு மரமும் இருக்கும். புத்தியில் நம்பிக்கை வைத்திருக்கும் வெற்றியாளர் ஆத்மா எப்போதும் தனக்கு ஏதாவது ஆதாரம் இருப்பதாகவே கருதுவார். ஆதாரத்தை வழங்கும் அருள்பவர் தன்னுடன் இருக்கும் இயல்பான அனுபவம் அவருக்கும் இருக்கும். ஒரு பிரச்சனை எழும்போது அவர் தந்தையின் முன்னால் சென்று, ‘பாபா, நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் எனது உதவியாளர், அல்லவா? இப்போது, நீங்கள் மட்டுமே எனக்காக இருக்கிறீர்கள்’ எனக் கூற மாட்டார். அவர் சுயநலமான ஆதாரத்தைப் பெற மாட்டார். ‘நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் இத்தகையவர், அல்லவா?’ அவை அனைத்தினதும் அர்த்தம் என்ன? இதை நம்பிக்கை என்பதா? நீங்கள் தந்தைக்கு, அவரே உங்களின் ஆதாரம் என நினைவூட்டுகிறீர்கள். புத்தியில் நம்பிக்கை வைத்திருப்பவர்களால் ஒருபோதும் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க முடியாது. அவருக்கு ஆதாரம் இல்லாமல் இருக்கும் அல்லது தனித்திருக்கும் எண்ணங்களின் அனுபவம் சிறிதளவேனும் இருக்காது. அவரின் புத்தியில் நம்பிக்கை வைத்திருப்பதனால், அவர் வெற்றியாளர் ஆகியிருப்பதனால், அவர் சதா சந்தோஷ நடனம் ஆடுவார். அவர் ஒருபோதும் குழப்பம் அல்லது சோகத்தின் அல்லது ஏதாவது தற்காலிகமான அல்லது எல்லைக்குட்பட்ட விருப்பமின்மையைக் கொண்டிருப்பதன் அலைகளில் அகப்பட்டுக் கொள்ள மாட்டார். சிலவேளைகளில், மாயை பலமாகத் தாக்கும்போது, அந்த வேளையில் எல்லைக்குட்பட்ட விருப்பமின்மை ஏற்படும். எவ்வாறாயினும், அது எல்லைக்குட்பட்ட, தற்காலிக விருப்பமின்மை ஆகும். அது எல்லா வேளையும் எல்லையற்ற விருப்பமின்மையாக இருக்காது. அது கட்டாயத்தின் பேரில் ஏற்படும் விருப்பமின்மைக்கான மனோபாவம் ஆகும். இதனாலேயே, அந்த வேளையில், ‘நான் இதை விட்டு நீங்குவது சிறந்தது. எனக்கு இதில் விருப்பமில்லை, நான் சேவை செய்யாமல் விடப்போகிறேன், நான் இதை விட்டு நீங்கப் போகிறேன்’ என நீங்கள் சொல்கிறீர்கள். விருப்பமின்மை உள்ளது. ஆனால், அது எல்லையற்றது அல்ல. வெற்றியாளர் ஆத்மா எப்போதும் தோல்வியில் வெற்றியையும், வெற்றியில் வெற்றியையும் அனுபவம் செய்வார். எல்லைக்குட்பட்ட விருப்பமின்மையைக் கொண்டிருத்தல் என்றால், அப்பால் நகருதல் என்று அர்த்தம். அவர்கள் விருப்பமின்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், உண்மையில், அது அப்பால் விலகுவதே ஆகும். எனவே, வெற்றி இரத்தினம் ஒருபோதும் எந்தவிதப் பணி, பிரச்சனை அல்லது நபரில் இருந்து அப்பால் விலகிச் செல்ல மாட்டார். ஆனால், ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும், அனைத்திற்கும் முகங்கொடுத்து, ஒத்துழைப்பவராக இருந்து, எல்லா வேளைக்கும் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருப்பார். புத்தியில் நம்பிக்கை உடைய வெற்றி இரத்தினம் ஒருபோதும் தனது வெற்றியைப் பற்றிப் பேசமாட்டார். அவர் ஒருபோதும் மற்றவர்களுக்கு முறைப்பாடு செய்ய மாட்டார். ‘பார்த்தீர்களா? நான் கூறியது சரி, இல்லையா?’ இந்த முறையில் முறைப்பாடு செய்தல், இதைப் பற்றிப் பேசுதல் வெறுமையாக இருப்பதன் அடையாளம் ஆகும். வெறுமையாக இருக்கும் எதுவும் அதிகளவில் சத்தம் செய்யும். நிறைந்திருக்கும் எதுவும் சத்தம் செய்யாது. வெற்றி இரத்தினம் மற்றவர்களின் தைரியத்தை அதிகரிப்பார். அவர் ஒருபோதும் எவரையும் கீழே தள்ள முயற்சி செய்ய மாட்டார். ஏனெனில், வெற்றி இரத்தினம் தந்தையைப் போன்று, ஒரு மாஸ்ரர் ஆதாரத்தை அருள்பவர் ஆவார். அவர் கீழே விழுந்தவர்களையும் உயர்த்தி விடுவார். புத்தியில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர் எப்போதும் எந்தவிதமான வீணானவற்றில் இருந்தும், அவை வீணான எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களில் இருந்தும் தொலைவிலேயே இருப்பார். வீணானவற்றில் இருந்து அப்பால் நகருதல் என்றால் வெற்றியாளர் ஆகுதல் என்று அர்த்தம். வீணானவற்றாலேயே சிலவேளைகளில் வெற்றியும் சிலவேளைகளில் தோல்வியும் ஏற்படுகின்றது. வீணானவற்றை முடித்துவிட்டால், தோல்வியும் முடிவிற்கு வந்துவிடும். வீணானவை அனைத்தையும் முடித்தல், வெற்றி இரத்தினமாக இருப்பதன் அடையாளம் ஆகும். எனவே, இப்போது சோதித்துப் பாருங்கள்: நான் புத்தியில் நம்பிக்கை கொண்ட வெற்றி இரத்தினமாக இருப்பதன் அடையாளங்களை அனுபவம் செய்கிறேனா? உங்களின் புத்திகளில் நம்பிக்கை உள்ளது என நீங்கள் அனைவரும் கூறினீர்கள். நீங்கள் சத்தியத்தைப் பேசினீர்கள். எவ்வாறாயினும், அறிந்து, ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உங்களின் புத்தியில் நம்பிக்கை வைத்திருத்தல் ஒரு விடயம். அவ்வாறே வாழ்வது வேறு விடயம். நீங்கள் அனைவரும் கடவுளைக் கண்டுள்ளீர்கள், அவருக்கு இப்போது சொந்தமாக இருக்கிறீர்கள் என நீங்கள் அனைவரும் நம்புகிறீர்கள். அறிவதும் ஏற்றுக்கொள்வதும் ஒரே விடயமே. எவ்வாறாயினும், அவ்வாறே வாழ்வதில் நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். எனவே, அறிந்து கொள்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள். ஆனால், மூன்றாம் ஸ்திதியானது, அறிந்து, ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழுதல் ஆகும். நம்பிக்கை வைத்திருப்பதனதும் வெற்றி அடைவதனதும் நடைமுறை அடையாளங்கள் ஒவ்வொரு செயலிலும் புலப்பட வேண்டும். இதிலேயே வேறுபாடு ஏற்படுகிறது. இதனாலேயே, நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். ஏன் இலக்கங்கள் உருவாகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?
இது பற்றை வென்றவராக இருத்தல் எனப்படுகிறது. பற்றை வென்றவராக இருப்பதன் வரைவிலக்கணம் மிகவும் ஆழமானது. பாபா இதைப் பற்றி வேறொரு வேளையில் கூறுவார். உங்களின் புத்தியில் நம்பிக்கை வைத்திருத்தல், பற்றை வென்றவர் ஆகுவதற்கான ஏணியில் ஒரு படி ஆகும். அச்சா, இன்று, இரண்டாவது குழுவினர் வந்துள்ளார்கள். வீட்டின் குழந்தைகள் அதன் அதிபதிகள் ஆவார்கள். எனவே, வீட்டின் அதிபதிகள் வீட்டுக்கு வந்துள்ளார்கள். இவ்வாறே நீங்கள் கூறுவீர்கள், அல்லவா? நீங்கள் உங்களின் வீட்டுக்கு வந்துள்ளீர்களா? அல்லது, உங்களின் வீட்டில் இருந்து வந்துள்ளீர்களா? அதை உங்களின் வீடாக நீங்கள் கருதினால் பற்று காணப்படும். எவ்வாறாயினும், அது தற்காலிகமான சேவைத்தலமே ஆகும். அனைவரின் வீடும் மதுவனமே. ஆத்மாக்களைப் பொறுத்தவரை, பரந்தாமமே வீடு. பிராமணர்களைப் பொறுத்தவரை, உங்களின் வீடு மதுவனம். உங்களின் தலைமையகம் அபுமலையில் இருப்பதாக நீங்கள் சொல்வதனால், நீங்கள் தங்கியுள்ள இடம் என்ன? அது ஓர் அலுவலகம், அப்படியல்லவா? இதனாலேயே, நீங்கள் இதைத் தலைமையகம் என்று அழைக்கிறீர்கள். எனவே, நீங்கள் வீட்டில் இருந்து வரவில்லை. ஆனால், நீங்கள் வீட்டுக்கு வந்துள்ளீர்கள். எவராலும் அலுவலகங்களை மாற்ற முடியும். ஆனால் எவரையும் அவரின் வீட்டில் இருந்து வெளியே அனுப்ப முடியாது. அலுவலகங்களை மாற்ற முடியும். இதை உங்களின் வீடாகக் கருதினால், அது உங்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வு இருக்கும். ஒரு நிலையத்தை உங்களின் வீடாக்கினால் மட்டுமே, சொந்தம் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். நீங்கள் அதை ஒரு நிலையமாகக் கருதினால், சொந்தம் என்ற உணர்வு ஏற்படமாட்டாது. அது உங்களின் வீடாகவும் ஓய்வெடுக்கும் இடமாகவும் ஆகும்போது, சொந்தமாக இருக்கும் உணர்வு ஏற்படும். எனவே, நீங்கள் வீட்டுக்கு வந்துள்ளீர்கள். உங்களின் வீடு அருள்பவரின் வாசல் என்றொரு கூற்று உள்ளது. இந்தக் கூற்று எந்த இடத்திற்குப் பொருந்தும்? அருள்பவரின் உண்மையான வாசல், உங்களின் வீடான மதுவனம், அப்படியல்லவா? நீங்கள் வீட்டுக்கு வந்துள்ளீர்கள். அதாவது, அருள்பவரின் வீட்டுக்கு வந்துள்ளீர்கள். அதை வீடு அல்லது வாசல் என்று அழைத்தாலும் இரண்டும் ஒன்றேயாகும். வீட்டுக்கு வருவதன் மூலம், நீங்கள் ஓய்வையும் சௌகரியத்தையும் பெறுகிறீர்கள். மனதில் ஓய்வு, சரீரத்தில் ஓய்வு, செல்வத்தைப் பொறுத்தவரை ஓய்வு. பணம் சம்பாதிப்பற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. உணவு சமைப்பதில் இருந்தும் உங்களால் ஓய்வெடுக்க முடியும். இல்லாவிட்டால், நீங்களே அதைச் சமைத்த பின்னரே உங்களால் உண்ண முடியும். உங்களின் தட்டில் சமைத்த உணவை நீங்கள் பெறுகிறீர்கள். இங்கு நீங்கள் பிரபுகள் ஆகியுள்ளீர்கள். தாகூர்களின் (தேவ சிலைகள், பிரபுகள்) வீடுகளில் மணி அடிப்பார்கள். பிரபுவை எழுப்புவதற்கு அல்லது தூங்கச் செய்வதற்கு, அவர்கள் மணி அடிப்பார்கள். அவர்கள் பிரசாதம் படைக்கும்போது, ஆலயத்தின் மணியை அடிப்பார்கள். உங்களின் மணியும் அடிக்கப்படுகிறது, அல்லவா? தற்காலத்தில், அது நாகரிகமாக உள்ளது. எனவே, அதற்குப் பதிலாக நீங்கள் ரெக்கோர்டை இசைக்கிறீர்கள். ஒரு ரெக்கோர்ட் பாடலுக்கு நீங்கள் நித்திரைக்குச் செல்கிறீர்கள். ஒரு ரெக்கோர்ட் பாடலுக்கு விழித்தெழுகிறீர்கள். எனவே, நீங்களும் பிரபுகள், அல்லவா? பக்தி மார்க்கத்தில் அனைத்தும் இங்கிருந்தே பிரதி செய்யப்பட்டன. இங்கும், ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு தடவைகள் போக் படைக்கப்படுகிறது. அவர்கள் அதிகாலை 4.00 மணியில் இருந்து உயிர்வாழும் தாகூர்களுக்கு போக் படைக்க ஆரம்பிப்பார்கள். போக் அமிர்த வேளையில் இருந்து ஆரம்பமாகிறது. அந்த வேளையில், கடவுள் குழந்தைகளான உங்களுக்கு உயிர்வாழும் ரூபத்தில் சேவை செய்கிறார். அனைவரும் கடவுளின் பணியைச் செய்வார்கள். ஆனால், இங்கு கடவுளே உங்களுக்குப் பணி செய்கிறார். அவர் யாருக்குப் பணி செய்கிறார்? உயிர்வாழும் தாகூர்களுக்கு. இந்த நம்பிக்கை எப்போதும் உங்களைச் சந்தோஷ ஊஞ்சலில் ஆடச் செய்யும். உங்களுக்குப் புரிகிறதா? சகல பிராந்தியங்களைச் சேர்ந்த அனைவரும் குறிப்பாக நேசிக்கப்படுகிறார்கள். எந்தவொரு பிராந்தியம் வந்தாலும், அந்த வேளையில் அவர்கள் குறிப்பாக நேசிக்கப்படுகிறார்கள். நீங்கள் அதியன்பிற்குரியவர்கள். ஆனால், நீங்கள் இப்போது குறிப்பாகத் தந்தைக்கு மட்டும் அன்பிற்குரியவர்கள் ஆகவேண்டும். குறிப்பாக மாயையால் நேசிக்கப்படுபவர்கள் ஆகாதீர்கள். நீங்கள் குறிப்பாக மாயையால் நேசிக்கப்படுபவர்கள் ஆகி, பின்னர் அதிகளவு விளையாட்டுக்களை விளையாடுகிறீர்கள். இங்கு வந்திருக்கும் அனைவரும், பகவானால் (கடவுள்) நேசிக்கப்படும் பாக்கியவான்கள் ஆகுவீர்கள். அச்சா.
உங்களின் புத்திகளில் உள்ள நம்பிக்கையால் சதா வெற்றி இரத்தினங்கள் ஆகியுள்ளவர்களுக்கும், கடவுளினதும் தமது பாக்கியத்தினதும் விழிப்புணர்வின் சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், வெற்றியிலும் தோல்வியிலும் சதா வெற்றியை அனுபவம் செய்பவர்களுக்கும், மாஸ்ரர் ஆதாரத்தை அருள்பவர்களாகி, ஆதாரத்தை வழங்கும் ஆத்மாக்களுக்கும், அதாவது, மற்றவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குபவர்களுக்கும், சதா தங்களைத் தந்தையுடன் இருப்பதாக அனுபவம் செய்யும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
குழுக்களைச் சந்திக்கிறார்:
1. நீங்கள் அனைவரும் ஒரேயொருவரின் அன்பிலே எப்போதும் திளைத்திருக்கும் மேன்மையான ஆத்மாக்களா? நீங்கள் சாதாரணமானவர்கள் இல்லையல்லவா? மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் எத்தகைய செயல்களைச் செய்தாலும், அவை எப்போதும் மேன்மையானதாகவே இருக்கும். உங்களின் பிறப்பு மேன்மையானதாக இருக்கும்போது, எவ்வாறு உங்களின் செயல்கள் சாதாரணமானவையாக இருக்கும்? உங்களின் பிறப்பு மாறும்போது, உங்களின் கர்மமும் மாறும். உங்களின் பெயர், உருவம், தேசம், செயல்கள் அனைத்தும் மாறும். எனவே, நீங்கள் எப்போதும் புதிய பிறவியை எடுப்பீர்கள். நீங்கள் புதிய பிறவியின் புதுமையின் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். இதைச் சிலவேளைகளில் மட்டும் உடையவர்கள், சிலவேளைகளில் மட்டுமே இராச்சியத்தைப் பெறுவார்கள்.
கருவிகள் ஆகியுள்ள ஆத்மாக்கள், கருவிகள் ஆகுவதன் பலனைப் பெறுவார்கள். அந்தப் பழத்தை உண்பவர்கள் பலசாலிகளாக இருப்பார்கள். இது உடனடிப் பலன், சங்கமயுகத்தின் பழம் ஆகும். இந்த யுகத்தின் பழத்தை உண்பவர்கள், எப்போதும் சக்திசாலிகளாக இருப்பார்கள். இத்தகைய சக்திசாலி ஆத்மாக்கள் எப்போதும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் இலகுவாக வெற்றி பெறுவார்கள். சந்தர்ப்பங்கள் கீழேயே இருக்கும். அவர்கள் மேலே இருப்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் பாம்பொன்றை வெல்வதாகக் காட்டியுள்ளார்கள். அவர் தனது பாதங்களை அந்தப் பாம்பின் தலையில் வைத்து, அதன் மீது நடனம் ஆடினார். எனவே, அது உங்களின் ஞாபகார்த்தமே. பாம்பு எத்தனை நஞ்சுடையதாக இருந்தாலும், நீங்கள் அதை வெற்றி கொண்டு, அதன் மீது நடனம் ஆடுகிறீர்கள். இந்த மேன்மையான சக்திவாய்ந்த விழிப்புணர்வானது அனைவரையும் சக்திசாலிகள் ஆக்குகிறது. எங்கு சக்தி உள்ளதோ, அங்கு வீணானவை அனைத்தும் முடிந்துவிடும். நீங்கள் சர்வசக்திவான் தந்தையுடன் இருக்கிறீர்கள். சதா இந்த விழிப்புணர்வுடன் தொடர்ந்து முன்னேறுங்கள்.
2. நீங்கள் அனைவரும் அமரத்துவத் தந்தையின் அமரத்துவ ஆத்மாக்கள், அல்லவா? நீங்கள் அமரர்கள், அல்லவா? உங்களின் சரீரங்களை நீங்கள் விட நேரிட்டாலும், நீங்கள் அமரர்களே. ஏன்? ஏனெனில், நீங்கள் இங்கிருந்து உங்களின் பாக்கியத்தை உருவாக்கிய வண்ணம் செல்கிறீர்கள். நீங்கள் வெறுங்கையுடன் செல்வதில்லை. இதனாலேயே, இது மரணம் அல்ல. இது நிரம்பியவராகச் செல்லுதல். இறத்தல் என்றால் வெறுங்கையுடன் செல்லுதல் என்று அர்த்தம். நிரம்பியவராகச் செல்லுதல் என்றால், உங்களின் ஆடையை மாற்றுதல் என்று அர்த்தம். எனவே, நீங்கள் அமரர்கள் ஆகிவிட்டீர்கள், அல்லவா? நீங்கள் அமரர்கள் ஆகும் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள். இதில் நீங்கள் மரணத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுவதில்லை. நீங்கள் அங்கிருந்து விலகிச் சென்று பின்னர் திரும்பி வரவேண்டும் என்பதை அறிவீர்கள். இதனாலேயே, நீங்கள் அமரர்கள். அமரத்துவக் கதையைக் கேட்பதன் மூலம், நீங்கள் அமரர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் மிகுந்த அன்புடன் கதை கேட்கிறீர்கள், அல்லவா? தந்தை உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகிறார். அதன்மூலம் உங்களுக்கு அமரர்களாக இருப்பதற்கான ஆசீர்வாதத்தையும் தருகிறார். இந்த சந்தோஷத்தை எப்போதும் பேணுவதன் மூலம், நீங்கள் அமரர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் செழிப்பானவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் வெறுமையாக இருந்தீர்கள். இப்போது நிரம்பி விட்டீர்கள். பல பிறவிகளுக்கு நீங்கள் வெறுமை அடையாத வகையில் இப்போது நிரம்பியவர்கள் ஆகியுள்ளீர்கள்.
3. நீங்கள் அனைவரும் நினைவு யாத்திரையில் முன்னேறிச் செல்கிறீர்கள், அல்லவா? இந்த ஆன்மீக யாத்திரை சதா உங்களுக்கு சந்தோஷத்தின் அனுபவங்களைக் கொடுக்கும். இந்த யாத்திரையின் மூலம், ஏனைய அனைத்து யாத்திரைகளும் எல்லா வேளைக்கும் பூர்த்தியாகும். நீங்கள் ஆன்மீக யாத்திரையில் இருந்தால், ஏனைய அனைத்து யாத்திரைகளிலும் நீங்கள் இருக்கிறீர்கள். அதனால், வேறெந்த யாத்திரையிலும் செல்ல வேண்டிய தேவை இல்லை. ஏனெனில், இதுவே மகத்தான யாத்திரை ஆகும். ஏனைய அனைத்து யாத்திரைகளும் இந்த மகா யாத்திரையில் அடங்கிவிடும். முன்னர், நீங்கள் யாத்திரைகளில் அலைந்தீர்கள். ஆனால் இந்த ஆன்மீக யாத்திரையால், இப்போது நீங்கள் உங்களின் இலக்கைக் கண்டுள்ளீர்கள். உங்களின் மனங்கள் இப்போது இலக்கைக் கண்டுள்ளன. எனவே, உங்களின் சரீரங்களும் இலக்கைக் கண்டுள்ளன. ஒரு யாத்திரையின் மூலம், பல வகையான அலைதல்களும் முடிவிற்கு வந்துள்ளன. எனவே, நீங்கள் ஆன்மீக யாத்திரீகர்கள் என்ற விழிப்புணர்வை எப்போதும் பேணுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் எப்போதும் அப்பாற்பட்டவராக, பற்றற்றவராக, பற்றில் இருந்து விடுபட்டவராக இருப்பீர்கள். எவருக்கும் எந்தவிதமான பற்றும் இருக்காது. ஒரு யாத்திரீகருக்கு எவரிடமும் ஒருபோதும் பற்று இருக்காது. உங்களின் ஸ்திதியும் சதா இவ்வாறு இருக்கட்டும்.
பிரியாவிடை நேரத்தில்:
பாப்தாதா இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த குழந்தைகள் அனைவரையும் காண்பதில் சந்தோஷம் அடைகிறார். ஏனெனில், நீங்கள் அனைவரும் ஒத்துழைக்கும் குழந்தைகள். பாப்தாதா எப்போதும் ஒத்துழைக்கும் குழந்தைகளை, இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்களாக நினைக்கிறார். புத்தியில் நம்பிக்கை வைத்திருக்கும் குழந்தைகளான நீங்கள் அனைவரும் தந்தையால் நேசிக்கப்படுகிறீர்கள். ஏனெனில், நீங்கள் அனைவரும் அவரின் கழுத்து மாலை ஆகியுள்ளீர்கள். அச்சா. குழந்தைகள் அனைவரும் சேவையை மிக நன்றாக வளரச் செய்கிறார்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் சந்தோஷப் பாக்கியத்தைக் கொண்ட ஆத்மாவாகி, உங்களின் உண்மையான சேவையால் அழியாத, அலௌகீக சந்தோஷக் கடலின் அலைகளில் முன்னேறுபவர் ஆகுவீர்களாக.
தமது சேவைக்காக பாப்தாதாவிடமிருந்தும் தமது மூத்த கருவிகளிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறும் குழந்தைகள், அலௌகீக, ஆத்ம உணர்வுடைய, அக சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். அக சந்தோஷத்தையும் ஆன்மீகக் களிப்பையும் எல்லையற்ற பேறுகளையும் தமது சேவையின் மூலம் அனுபவித்த வண்ணம், அவர்கள் தொடர்ந்து சந்தோஷக் கடலின் அலைகளில் முன்னேறிச் செல்வார்கள். உண்மையான சேவையானது, அனைவரின் அன்பு, அனைவரின் அழியாத மரியாதை மற்றும் சந்தோஷமான ஆசீர்வாதங்களினூடாக பாக்கியசாலியாக இருக்கும் மேன்மையான பாக்கியத்தை நீங்கள் அனுபவிக்கச் செய்யும். சதா சந்தோஷமாக இருப்பவர்களிடம் சந்தோஷ பாக்கியம் இருக்கும்.
சுலோகம்:
சதா மலர்ச்சிநிறைந்தவராகவும், கவரும் ரூபமாகவும் இருப்பதற்கு, திருப்தி இரத்தினம் ஆகுங்கள்.
ஓம் சாந்தி
அறிவித்தல்: இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சர்வதேச யோகா தினம். சகல சகோதர, சகோதரிகளும் ஒன்றுதிரண்டு, மாலை 6.30 இலிருந்து 7.30 வரை யோகம் செய்வதுடன், இந்தத் தூய எண்ணத்தைக் கொண்டிருங்கள்: ஆத்மாவான என்னிடம் இருந்து தூய்மையின் கதிர்கள் வெளிப்பட்டு, முழு உலகையும் தூய்மை ஆக்குகின்றன. நான் மாஸ்ரர் தூய்மையாக்கும் ஆத்மா.