21.02.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பிரிவினையற்ற வழிகாட்டல்களைப் பின்பற்றி, கலியுக மனிதர்களைச் சத்தியயுக தேவர்களாக்கும் மேன்மையான பணியைச் செய்யுங்கள்.

கேள்வி:
மனிதர்கள் சந்தோஷமற்றவர்கள் ஆகியதற்கான பிரதான காரணம் என்ன?

பதில்:
இராவணன் அனைவரையும் சபித்துள்ளான். இதனாலேயே அனைவரும் சந்தோஷமற்று இருக்கின்றனர். தந்தை உங்களுக்கு, உங்கள் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். இராவணன் உங்களை சபிக்கின்றான். உலகம் இதனைக்கூட அறியவில்லை. ஏனெனில் தந்தை பாரத மக்களுக்கே, அவர்கள் அதிகளவு சந்தோஷமாகவும், சுவர்க்கத்தின் அதிபதிகளாகவும் ஆகுகின்ற அவர்களது ஆஸ்தியைக் கொடுத்தார். அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகினார்கள். சபிக்கப்பட்டதனால், அவர்கள் பூஜிப்பவர்கள் ஆகினார்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகள் இங்கு மதுவனத்துக்கு பாப்தாதாவிடம் வருகின்றனர். நீங்கள் மண்டபத்தினுள் பிரவேசித்ததும், சகோதரர்களும் சகோதரிகளும் அமர்ந்திருப்பதையே பார்க்கின்றீர்கள். பின்னர், பாப்தாதா வரும் போது, நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான பிராமணர்களாகிய பிரம்மகுமாரர்களும், பிரம்ம குமாரிகளும் ஆவீர்கள். அந்த பிராமணர்களுக்குத் தந்தை பிரம்மாவை முற்றாகத் தெரியாது. தந்தை வரும்போது, நிச்சயமாக பிரம்மா, விஷ்ணு, சங்கர் தேவைப்படுகின்றனர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். கூறப்படுகின்றது: திரிமூர்த்தி சிவன் பேசுகின்றார். இப்பொழுது, அவர் மூவரினூடாகவும் பேசமாட்டார், அவர் பேசுவாரா? உங்களது புத்தியில் இவ்விடயங்களை மிக நன்றாகக் கிரகிக்கச் செய்யுங்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து நிச்சயமாக உங்கள் ஆஸ்தியான சுவர்க்கத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே பக்தர்கள் கடவுளிடமிருந்து எதை வேண்டுகின்றனர்? ஜீவன் முக்தி. அவர்கள் இப்பொழுது பந்தன வாழ்க்கையில் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தந்தையை நினைவு செய்கின்றனர்: வந்து எங்களை இந்தப் பந்தனத்திலிருந்து விடுவியுங்கள். பாபா இப்பொழுது வந்துவிட்டார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே தெரியும். தந்தை கல்பம் கல்பமாக வருகின்றார். “நீங்களே தாயும் தந்தையும்” என அவர்களும் கூவியழைக்கின்றனர், ஆனால் எவருக்கும் அதன் அர்த்தம் தெரியாது. அது அசரீரியான தந்தைக்கே உரியது என்பதை அவர்களும் புரிந்துகொள்கின்றனர். அவர்கள் பாடுகிறார்கள், ஆனால் அவர்கள் எதனையும் பெறுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் ஆஸ்தியை அவரிடமிருந்து இப்பொழுது பெறுவதுடன், ஒரு சக்கரத்தின் பின்னரும் மீண்டும் அதனைப் பெறுவீர்கள். அரைச் சக்கரத்திற்கு நீடிக்கின்ற உங்கள் ஆஸ்தியைத் தந்தை வந்து உங்களுக்குக் கொடுக்கின்றார் என்றும,; பின்னர் இராவணன் உங்களைச் சபிக்கின்றான் என்றும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் சபிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதுகூட உலகத்திற்குத் தெரியாது. இராவணனால் நாங்கள் சபிக்கப்பட்டோம். அதனாலேயே அனைவரும் சந்தோஷமற்றிருக்கின்றனர். பாரத மக்கள் சந்தோஷமாக இருந்தனர்;. நேற்று பாரதத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. தேவ சிலைகளுக்கு முன்னால் மக்கள் தங்கள் சிரந்;தாழ்த்தி அவர்களை வணங்குகின்றனர், ஆனால் எப்பொழுது சத்தியயுகம் இருந்தது என்பது எவருக்கும் தெரியாது. இப்பொழுது பாருங்கள், சத்தியயுகம் பல்லாயிரக்கணக்கான வருடங்களையும் திரேதா துவாபர கலியுகங்களும் அதே கால அளவையும் கொண்டிருப்பின், அக்கணக்கின்படி அதிகளவு மனிதர்கள் இருந்திருக்க வேண்டும்! அந்த சத்திய யுகத்திலேயே அதிகளவு மனிதர்கள் இருந்திருக்க வேண்டும்;! எந்த மனிதர்களது புத்தியிலும் இது இருப்பதில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: பாருங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தார்கள் என்பதுகூட நினைவுகூரப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வருடங்களில் அத்தனைபேர் மட்டும் இருந்திருக்க மாட்டார்கள். ஆகவே, மனிதர்களுக்கு இதுவும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். பாபா எங்கள் புத்தியை சுத்தமாக்குகின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இராவணன் உங்கள் புத்தியைச் சீரழித்தான். இதுவே பிரதான காரணம். சத்திய யுகத்தில் நீங்கள் தூய்மையானவர்கள். இங்கு நீங்கள் தூய்மையற்றவர்கள்;. எப்பொழுதிருந்து எப்போது வரை இராம இராச்சியம் என்பதோ அல்லது இராவண இராச்சியத்தின் கால எல்லை என்ன என்பதோ எவருக்கும் தெரியாது. இராமரது இராச்சியம், இராவணனது இராச்சியம் ஆகிய இரண்டும் இங்கேயே உள்ளது என அவர்கள் எண்ணுகின்றனர். அங்கு பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அங்கு மனிதர்களைப் போல் பல்வேறு கருத்துக்களும் இருக்கின்றன. இங்கு, குழந்தைகளாகிய நீங்கள் தந்தை மட்டுமே கொடுக்கின்ற ஒன்றிணைந்த பிரிவுபடாத வழிகாட்டல்களை இப்பொழுது பெறுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பிரம்மாவின் மூலமாக தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் திவ்ய குணங்கள் நிறைந்தவர்கள், 16 சுவர்க்கக் கலைகளும் நிரம்பப் பெற்றவர்கள் என தேவர்களின் புகழ் பாடப்பட்டுள்ளது. அவர்களும் மனிதர்களே; ஆகவே ஏன் மனிதர்களது புகழ் பாடப்பட்டது? அங்கு வேறுபாடு இருக்கவேண்டும் இல்லையா? உங்கள் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக இருக்கும் குழந்தைகளாகிய நீங்கள், இப்பொழுது மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற பணியைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கலியுக மனிதர்களைச் சத்தியயுகத்துத் தேவர்களாக்குகிறீர்கள் அதாவது நீங்கள் அவர்களை பிரம்மாண்ட் ஆகிய அமைதி தாமத்தினதும், உலகினதும் அதிபதிகள் ஆக்குகிறீர்கள். இது அமைதிதாமம் அல்ல. நீங்கள் நிச்சயமாக இங்கு செயல்களைச் செய்ய வேண்டும். அதுவே இனிய மௌனவீடாகும். ஆத்மாக்களாகிய நாங்களே பிரம்மாணட் ஆகிய இனிய வீட்டின் அதிபதிகள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். அங்கு நீங்கள் துன்பம் சந்தோஷம் என்பவற்றிற்கு அப்பால் வசிக்கின்றீர்கள். பின்னர், சத்திய யுகத்தில் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். மிகச் சரியான இலக்கும் குறிக்கோளும் உங்களுக்கு முன்னால் இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் யோக சக்தியைக் கொண்டவர்கள். அவர்கள் பௌதீக சக்தியைக் கொண்டவர்கள். நீங்களும் போர்க்களத்திலேயே உள்ளீர்கள், ஆனால் நீங்கள் இரட்டை அகிம்சாவாதிகள்;. அவர்களோ வன்முறையாளர்கள். காமவாள் வன்முறை என அழைக்கப்படுகிறது. அதை வன்முறை எனச் சந்நியாசிகளும் புரிந்துள்ளனர். அதனாலேயே அவர்கள் தூய்மையாகின்றனர். வேறெவரும் அல்லாது நீங்களே தந்தையிடம் அன்பினைக் கொண்டுள்ளீர்கள். அங்கே காதலனுக்கும் காதலிக்குமிடையில் அன்பு இருக்கிறது. அந்தக் காதலர்களின் அன்பு இந்த ஒரு பிறவிக்கே உரியது எனப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் அன்பிற்கினியவராகிய எனது காதலிகள் ஆவீர்கள். நீங்கள் ஒரே ஒரு அன்பிற்கினியவராகிய என்னைப் பக்திமார்க்கத்திலும் தொடர்ந்து நினைவு செய்தீர்கள். நான் இப்பொழுது கூறுகிறேன்: இந்த இறுதிப்பிறவியில் தூய்மையாகி என்னை மிகச்சரியாக நினைவு செய்யுங்கள், பின்னர் நீங்கள் என்னை நினைவு செய்வதிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவீர்கள். சத்திய யுகத்தில் நினைவைக் கொண்டிருப்பதற்கான தேவையே இல்லை. அனைவரும் துன்பத்திலிருக்கும் போதே என்னை நினைவு செய்கின்றார்கள். இது நரகம் ஆகும். இது சுவர்க்கம் என அழைக்கப்பட மாட்டாது. செல்வந்தர்களான முக்கியஸ்தர்கள் இதுவே தமக்குச் சுவர்க்கம் எனக் கருதுகிறார்கள். அவர்களிடம் விமானங்கள் போன்றவையும் அனைத்து பௌதீக சௌகரியங்களும் இருக்கின்றன. அவர்கள் அத்தகைய குருட்டு நம்பிக்கையுடன் வாழ்கின்றனர்! மக்கள் “நீங்களே தாயும் தந்தையும்” எனவும் பாடுகின்றனர் ஆனால் அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. எந்த எல்லையற்ற சந்தோஷத்தை அவர்கள் பெற்றார்கள்? எவருக்கும் இது தெரியாது. ஆத்மாவே பேசுகின்றார். நாங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகிறோம் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அதன் பெயரே சந்தோஷ பூமியாகிய சுவர்க்கம் ஆகும். அனைவரும் சுவர்க்கத்தை மிக இனிமையானதாகக் காண்கின்றனர். சுவர்க்கத்தில் வைரங்களும் இரத்தினங்களும் பதித்த மாளிகைகள் பல உள்ளன என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். பக்திமார்க்கத்தில் அத்தகைய எண்ணற்ற செல்வம் அங்கு இருந்தபோது, அவர்கள் சோம்நாதர் ஆலயத்தை உருவாக்கினார்கள். ஒவ்வொரு சிலையும் பல்லாயிரக்கணக்கான பெறுமதி வாய்ந்தவையாக இருந்தது. அவை அனைத்தும் எங்கு சென்றன? அதிகமானவை களவாடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. அங்கு அவ்வளவு செல்வம் இருந்தது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் ஒருமுறை தந்தையின் மூலம் சுவர்க்க அதிபதிகள் ஆகின்றோம் என்பது உங்கள் புத்திகளில்; உள்ளது. எங்கள் மாளிகைகள் தங்கத்தினால் ஆனதாக இருக்கும். கதவுகளிலும் பெறுமதிவாய்ந்த கற்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ஜெயின் ஆலயங்களும் அந்த முறையிலேயே கட்டப்பட்டன. முன்னரைப் போல் வைரங்கள் இப்பொழுது அங்கு இல்லை. நாங்கள் தந்தையிடமிருந்து எங்கள் ஆஸ்தியான சுவர்க்கத்தைக் கோருகிறோம் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். சிவபாபா பாரதத்தில் மட்டுமே வருகின்றார். கடவுளாகிய சிவனிடமிருந்து பாரதமே சுவர்க்கமென்ற ஆஸ்தியைப் பெறுகின்றது. கிறிஸ்துவிற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது என கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். யார் இராச்சியத்தை ஆண்டார்கள்? எவருக்கும் இது தெரியாது, ஆனால் பாரதம் மிகவும் பழமைவாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். ஆகவே அது சுவர்க்கமாக இருந்தது. தந்தை சுவர்க்கக் கடவுளாகிய தந்தை என அழைக்கப்படுகிறார் அதாவது சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற தந்தை ஆவார். நிச்சயமாக தந்தை வந்திருக்கவேண்டும் ஆகவே நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகினீர்கள்;. நீங்கள் ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்கும் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அரைக்கல்பத்திற்குப் பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பிக்கின்றது. படங்களில் அதனைத் தெளிவாகக் காட்டுங்கள், அப்போது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் என்ற விடயம் அவர்களது புத்தியிலிருந்து அகன்றுவிடும். இலக்ஷ்மியும் நாராயணனும் தனியாக இருப்பதில்லை. அவர்களிடம் வம்சம் ஒன்று இருக்கிறது; அவர்களது குழந்தைகள் அரசர்கள் ஆவார்கள். அங்கு அரசர்களாகும் பலர் உள்ளனர். முழு மாலையும் உருவாக்கப்பட்டுள்ளது. மாலையே நினைவுகூரப்படுகிறது. தந்தையின் உதவியாளர்களாகி தந்தையின் சேவை செய்பவர்களின் மாலையே உருவாக்கப்படுகிறது. இதுவே பூஜிப்பவர்களாகவும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆகுகின்ற முழுச் சக்கரத்தையும் சுற்றிவருகின்றவர்களது ஞாபகார்த்தம் ஆகும். நீங்கள் பூஜிக்கத்; தகுதிவாய்ந்தவர்களிலிருந்து பூஜிப்பவர்களாகும் போது நீங்கள் அமர்ந்திருந்து உங்களது மாலையையே பூஜிக்கின்றீர்கள். முதலில் அவர்கள் மாலையைத் தங்கள் கைகளில் பிடிக்கின்றனர், பின்னர் அதனை வணங்குகிறார்கள். பின்பு மாலையை உருட்ட ஆரம்பிக்கின்றனர். நீங்கள் முழுச் சக்கரத்தையும் சுற்றி பின்னர் சிவபாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் மட்டுமே இதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளீர்கள். மனிதர்கள் ஒருவரின் அல்லது இன்னொருவரின் பெயரில் மாலையை உருட்டுகின்றனர். அவர்கள் எதனையும் அறியமாட்டார்கள். உங்களிடம் இப்பொழுது முழு மாலையினதும் ஞானம் இருக்கிறது. வேறுஎவரும் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை. யாருடைய மாலை உருட்டப்படுகின்றதென்பதை கிறிஸ்தவர்களால் உண்மையில் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளதா? தந்தையின் உதவியாளர்களாகி சேவைசெய்தவர்களது மாலையே இதுவாகும். இந்நேரத்தில் அனைவரும் தூய்மையற்றுள்ளனர். தூய்மையாக இருந்தவர்களே கீழிறங்கி வரும் போது தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர். இப்பொழுது அவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகத் திரும்புவர். அவர்கள் வரிசைக்கிரமமாகவே வருகின்றனர், வரிசைக்கிரமமாகவே திரும்புகின்றனர். அங்கே பல விடயங்கள் புரிந்துகொள்வதற்கு இருக்கின்றன. இது ஒரு விருட்சம் ஆகும்; அங்கு பல கிளைகளும் பிரிவுகளும் இருக்கின்றன. இந்த முழு விருட்சமும் இப்பொழுது அழிக்கப்பட்டு பின்னர் உங்கள் அத்திவாரம் இடப்படும். நீங்களே இந்த விருட்சத்தின் அத்திவாரம் ஆவீர்கள். இதிலேயே சூரிய, சந்திர வம்சங்கள் ஆகிய இரண்டும் உள்ளன. சத்திய திரேதா யுகங்களில் ஆட்சி செய்தவர்களது சமயம் இப்பொழுது இல்லை. அங்கு சிலைகளே உள்ளன. உங்களிடமுள்ள உருவங்களின் சரிதத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட விடயங்கள் பல்லாயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்தவை என அவர்கள் கூறுகிறார்கள் ஆனால் உண்மையில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே அனைத்திலும் பழைமையானதாகும். அதனைவிட பழைமை வாய்ந்தது வேறெதுவும் இல்லை. இலலையெனில், அனைத்தும் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளே பழைமை வாய்ந்தவை ஆகும். அவர்கள் கீழே அடியில் அகழ்ந்து அதனை ஆய்வு செய்கின்றனர். பக்தி மார்க்கத்தில் பூஜிக்கப்பட்ட பழைய ரூபங்கள் பூமியதிர்ச்சியினால் ஆலயங்கள் பாதிக்கப்பட்டபோது அவை அகற்றப்பட்டு பின்னர் மீண்டும் கட்டப்பட்டன. இப்பொழுது வெறுமையாக இருக்கும் வைர, தங்க, சுரங்கங்கள் பின்னர் அங்கு நிறைந்து இருக்கும். இந்த விடயங்கள் அனைத்தும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. சத்திய யுகத்தில் குறைந்தளவு மனிதர்களும் பின்னர் எவ்வாறு சனத்தொகை அதிகரிக்கின்றது என்பது பற்றிய உலகின் வரலாற்றினையும் புவியியலையும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அனைத்து ஆத்மாக்களும் தொடர்ந்தும் பரந்தாமத்திலிருந்து கீழிறங்கி வருவார்கள். அவர்கள் தொடர்ந்து கீழிறங்கி வரும் போது விருட்சம் தொடர்ந்து வளர்கின்றது. பின்னர் விருட்சம் முற்றாக உக்கிய நிலையை அடையும் போது “இராமர் சென்றார், பெரிய குடும்பத்தைக் கொண்ட இராவணனும் சென்றான்” எனக் கூறப்படுகிறது. அங்கு பல சமயங்கள் உள்ளன. எங்களது குடும்பம் மிகச் சிறியது. இது பிராமணர்களது குடும்பமாகும். அங்கு அநேகமான சமயங்கள் உள்ளன. அவர்கள் சனத்தொகை புள்ளிவிபரத்தை வெளியிடுகின்றனர். அவை அனைத்தும் இராவண சமுதாயத்திற்கு உரியவை. அவர்கள் அனைவரும் சென்றுவிடுவர். மிகச் சிலரே மீதமாக இருப்பார்கள். இராவண சமூகத்தினர் சுவர்க்கத்தினுள் பிரவேசிக்கமாட்டார்கள். அவர்கள் அனைவரும் முக்தி தாமத்தில் இருப்பர். இருப்பினும், கல்வி கற்கும் நீங்கள் வரிசைக்கிரமமாக சுவர்க்கத்தினுள் வருவீர்கள். அது எவ்வாறு அசரீரி விருட்சம், இது எவ்வாறு மனித உலக விருட்சம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டுள்ளீர்கள். இது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் கல்வியில் கவனம் செலுத்தாதுவிட்டால் உங்கள் பரீட்சையில் நீங்கள் தோல்வியடைவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் கற்பதுடன், கற்பிப்பீர்களேயாயின், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் விகாரத்தினுள் விழுந்தீர்களாயின், இவை அனைத்தும் மறக்கப்பட்டுவிடும். ஆத்மாக்கள் தூய தங்கங்களாக இருக்கும் போது மட்டுமே அவர்களால் நன்றாகக் கிரகிக்க முடியும். ஒரு தங்கப் பாத்திரம் தூய்மையான தங்கத்தாலானது ஆகும். ஒருவர் தூய்மையற்றவர் ஆகும்போது அவரால் ஞானத்தைப் பேச முடியாது. நீங்கள் இப்பொழுது பாபாவிற்கு முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். தந்தையாகிய கடவுள், சிவபாபாவே ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்;பிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நாங்கள் இந்தப் புலன்களினூடாகச் செவிமடுக்கிறோம். கற்பிப்பவர் தந்தையே ஆவார். இந்த முழு உலகிலும் இத்தகைய ஒரு பாடசாலை வேறெங்கே இருக்கிறது? அவரே தந்தை, ஆசிரியர், சற்குருவாகிய கடவுள் ஆவார். அவர் அனைவரையும் அழைத்துச் செல்வார். நீங்கள் தந்தைக்கு முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். அங்கே முரளியை நேரடியாகச் செவிமடுப்பதில் வித்தியாசம் இருக்கிறது. இந்தப் பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஒருநாள் அனைவரும் இதனை வைத்திருப்பீர்கள். தந்தை குழந்தைகளின் சந்தோஷத்திற்காக அத்தகைய விடயங்களை உருவாக்கி உள்ளார்;. இது பெரிய விடயமல்ல. இவர் சக்கரவர்த்தியாக இருந்தார். முதலில் இவர் அழகானவராக இருந்தார், இப்பொழுது அவலட்சணமானவராக ஆகியுள்ளார். இதனாலேயே “அழகானவரும் அவலட்சணமானவரும்” என்று கூறப்படுகிறது. நாங்கள் அழகானவர்களாக இருந்தோம் இப்பொழுது அவலட்சணமானவர்கள் ஆகியுள்ளோம் பின்னர் மீண்டும் அழகானவர்கள் ஆகுவோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஏன் ஒருவர் மட்டும் அவ்வாறாக ஆகவேண்டும்? பாம்பு ஒருவரை மட்டுமா கடித்தது? மாயையே பாம்பு என அழைக்கப்படுகிறாள். விகாரத்தில் ஈடுபடுவதினால் அனைவரும் அவலட்சணம் ஆகியுள்ளனர். இவ் விடயங்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படல் வேண்டும். எல்லையற்ற தந்தை கூறுகிறார்: உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழும்போது, இந்த இறுதிப் பிறவியில் எனக்காகத் தூய்மையாகுங்கள். பாபா குழந்தைகளிடம் இதனை யாசிக்கிறார். ஒரு தாமரை மலரைப் போல் தூய்மையாகி என்னை நினைவுசெய்யுங்கள், இந்தப் பிறவியிலேயே நீங்கள் தூய்மையாகுவீர்கள். அத்துடன் நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதனால் உங்கள் கடந்த பிறப்புக்களின் பாவங்களும் அழிக்கப்படும். பல பிறவிகளின் பாவங்கள் எரிக்கப்படுகின்ற யோகத்தீ இதுவாகும். நீங்கள் சதோப்பிரதான் நிலையிலிருந்து கீழிறங்கி சதோ, இரஜோ, தமோ நிலைகளினூடாச் செல்லும் போது, கலைகள் தொடர்ந்தும் குறைவடைவதுடன் கலப்படம் தொடர்ந்து கலக்கப்படுகிறது. தந்தை இப்பொழுது கூறுகிறார்: என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். நீங்கள் நதியில்; நீராடினால் தூய்மையாகுவீர்கள் என்றில்லை. நீரும் ஒரு தத்துவமே ஆகும். அங்கு ஐம்பூதங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறு அந்நதிகள் தூய்மையாக்குபவை ஆகமுடியும்? கடலிலிருந்தே நதிகள் உருவாகின்றன. ஆகவே, முதலாவதாக, கடலே தூய்மையாக்குவதாக இருக்கவேண்டும், அவ்வாறில்லையா? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. வெற்றி மாலையில் கோர்க்கப்படுவதற்;கு, தந்தையின் உதவியாளர்களாகி சேவை செய்யுங்கள். ஒரேயொரு அன்பிற்கினியவரிடம் உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். ஒருவரை மட்டுமே நினைவு செய்யுங்கள்.

2. உங்களுக்கு முன்னால் உங்களுடைய மிகச் சரியான இலக்கையும் குறிக்கோளையும்;; வைத்து முயற்சி செய்யுங்கள். இரட்டை அகிம்சாவாதிகளாகி, மனிதர்களை தேவர்களாக மாற்றுகின்ற மேன்மையான பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
தந்தை பிரம்மாவை போன்று ஓர் மேன்மையான துறவியாகி, ~நான்| என்பதன் எவ்வித உணர்வுகளையும் முடித்துவிடுவீர்களாக.

உறவுமுறைகளின் துறவறம், சடப்பொருட்களின் சௌகரியங்களின் துறவறம் என்பன பெரிய விடயங்களே அல்ல. எவ்வாறாயினும், ஒவ்வொரு பணியிலும் உங்கள் ஒவ்வொரு எண்ணத்திலும் பிறரை முன்னிலைப்படுத்தும் உணர்வைக் கொண்டிருப்பது அதாவது ~நான்| என்ற உணர்வை முடித்துவிட்டு, ~நீங்கள் முதலில்| எனக் கூறுதலே மேன்மையான துறவறமாகும். இதுவே சுயத்தைப் பற்றிய எவ்வித உணர்வையும் முடித்து விடுதல் எனப்படுகின்றது. தந்தை பிரம்மா எப்பொழுதும் குழந்தைகளை தனக்கு முன்னால் வைத்தார். அவர் எப்பொழுதும் ~நான் முன்னால் இருக்க வேண்டும்| என்பதை துறந்தவராகவே இருந்தார். இந்த துறவறத்தினால், அனைவருக்கும் முன்னிலையில் இருக்கும் பலனைப் பெற்றார். அதாவது, முதல் எண்ணிற்கு உரியவரானார். எனவே தந்தையை பின்பற்றுங்கள்.

சுலோகம்:
உடனடியாக ஒருவர் மீது பிழை காண்பதும் அவருக்கு துன்பம் விளைவிப்பதே ஆகும்.