26.03.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    16.12.85     Om Shanti     Madhuban


எவ்வாறு வலது கரம் ஆகுதல்.


இன்று, பாப்தாதா தனது பல கரங்களை பார்க்கின்றார். 1. நடைமுறையில் செயல்களை செய்வதற்கு எப்பொழுதும் அடிப்படையாக இருப்பது கரங்களே. ஒவ்வொரு ஆத்மாவும் தனது கரங்களாலேயே செயல்களைச் செய்கின்றார். 2. கரங்கள் ஒத்துழைப்பின் அடையாளம் என்றும் கூறப்படுகின்றது. ஒத்துழைக்கின்ற ஆத்மாக்கள் வலதுகரங்கள் என அழைக்கப்படுகின்றார்கள். எனவே ஒரு கரமானது ஒரு கைக்கு மேலதிகமானதாகும். 3. கரங்கள் சக்திகளாகவும் (தேவிகள்) காட்டப்படுகின்றன, அதனாலேயே மக்கள் பாகுபல் (பௌதிக சக்தி –உண்மையில் கரத்தின் பலம்) பற்றி பேசுகிறார்கள். கரங்களுக்கு வேறு சிறப்பியல்புகளும் உள்ளன. 4. ஒரு கரம், அதாவது ஒரு கையென்றால், அன்பின் அடையாளமாகும். ஆகையாலேயே, மக்கள் அன்போடு ஒருவரையொருவர் சந்திக்கும் போது, அவர்கள் கைகுலுக்கிக் கொள்கிறார்கள். கரத்தின் விசேடமான முதல் வரையறை உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது, அதாவது அவை உங்கள் எண்ணங்களை செயலில் வெளிப்படுத்துபவை. நீங்கள் அனைவரும் தந்தையின் கரங்கள் ஆவீர்கள். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும், இந்த நான்கு சிறப்பியல்புகளையும் உங்களில் பார்க்கிறீர்களா? இந்த நான்கு சிறப்பியல்புகளின் அடிப்படையில், நீங்கள் எத்தகையதொரு கரம் என உங்களால், உங்களை பார்க்க முடிகின்றதா? நீங்கள் அனைவரும் கரங்கள், ஆனால் நீங்கள் இந்த சிறப்பியல்களோடு ஒப்பிட்டு, நீங்கள் வலது கரமாக அல்லது இடது கரமா என சோதித்து பார்க்க வேண்டும்.

முதலாவது விடயம், நீங்கள் எந்தளவிற்கு செயல்களில் இட்டிருக்கிறீர்கள் என்பதாகும், அதாவது தந்தையின் ஒவ்வொரு மேன்மையான எண்ணத்தையும், வார்த்தையையும் நடைமுறைபடுத்தியிருக்கிறீர்கள்? செயல்களே மக்களால் இலகுவாக நடைமுறையில் பார்க்கக் கூடிய விடயங்களாகும். செயல்களை அனைவராலும் இலகுவாக பார்க்கவும் இனங்காணவும் முடியும். செயல்களினூடாக உங்களால் ஒன்றை அனுபவம் செய்ய முடியும். ஆகையாலேயே அனைவரும் கூறுகின்றார்கள்: அனைவரும் இதனைக் கூறுகிறார்கள், அதனை நடைமுறையில் செய்து காட்டுங்கள். உங்கள் நடைமுறை செயல்களில் அதனை அவர்கள் பார்க்கும் போதே, நீங்கள் கூறுவது உண்மையென அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்;. எனவே எண்ணங்கள், வார்த்தைகளுடன் செயல்களும், அனைத்தையும் தெளிவுபடுத்தும் வகையில் நடைமுறையில் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அவ்வாறே, வலது கரங்கள் அதாவது வலது கைகள் தமது ஒவ்வொரு செயல்களினூடாகவும் தந்தையை வெளிப்படுத்துகிறார்களா? வலது கரங்களின் சிறப்பியல்பானது, அவை எப்பொழுதும் மங்களகரமானதும், மேன்மையான செயல்களையுமே செய்கின்றன. வலது கரத்தினால் செய்யப்படும், செயல்களின் வேகமானது, இடது கரத்தினால் செய்யப்படும் செயல்களின் வேகத்தைவிட அதிகமாக இருக்கும். எனவே, இவ்வாறாக, சோதியுங்கள். நீங்கள் எப்பொழுதும் தூய்மையான, மேன்மையான செயல்களை விரைவான வேகத்துடன் செய்கிறீர்களா? நீங்கள் மேன்மையான செயல்களை செய்கின்ற வலதுகரங்களா? உங்களுக்கு இந்த சிறப்பியல்புகள் இல்லாதிருந்தால், நீங்கள் இயல்பாகவே இடதுகரங்களாகவே இருப்பீர்கள். ஏனெனில், அதிமேலான செயல்களே அதிமேலான தந்தையை வெளிப்படுத்துவதற்கு கருவியாக இருக்கும். உங்கள் ஆன்மிக திருஷ்டியினாலும், உங்கள் முகத்தில் ஆன்மிக சந்தோஷத்தை காட்டுவதன் மூலமும் நீங்கள் தந்தையை வெளிப்படுத்துகிறீர்கள். இதுவும் ஒரு செயலே ஆகும். எனவே, நீங்கள் அத்தகைய மேன்மையான செயல்களை செய்பவர்களாக ஆகியுள்ளீர்களா?

இவ்வாறாக, கரங்கள் என்றால் ஒத்துழைப்பின் அடையாளமாகும். எனவே, சோதியுங்கள்: நான் ஒவ்வொரு கணமும் தந்தையின் பணியில் ஒத்துழைக்கின்றேனா? எனது சரீரம், மனம், செல்வத்தினால் நான் எப்பொழுதும் ஒத்துழைக்கின்றேனா? அல்லது, நான் சிலநேரங்களில் மாத்திரம் ஒத்துழைக்கின்றேனா? லௌகீக பணியிலும் கூட, சிலர் முழு நேர வேலையாட்களாகவும், சிலர் பகுதிநேர வேலையாட்களாகவும் உள்ளார்கள், அதில் வேறுபாடு உள்ளது. சிலநேரங்களில் மாத்திரம் ஒத்துழைப்பவர்களுக்கான பேறுகளுக்கும், எக்காலத்திலும் ஒத்துழைப்பவர்களுக்கான பேறுகளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. சிலர் தமக்கு நேரம் கிடைக்கும் போதோ, தமக்கு ஆர்வம் உள்ள போதோ அல்லது நல்ல மனோநிலையில் (மூட்) இருந்தால் மட்டுமே ஒத்துழைப்பார்கள். இல்லாவிடின், ஒத்துழைப்பதற்கு பதிலாக அவர்கள் அதன் பின்னர் யோகத்தில் தொடர்பற்றவர்கள் (வியோகி) ஆகுகிறார்கள். ஆகையால், சோதியுங்கள்: நான் சரீரம், மனம், செல்வம் ஆகிய மூன்று வழிகளிலும் முற்றாக ஒத்துழைக்கின்றேனா அல்லது அரைவாசி ஒத்துழைக்கிறேனா? எனது சரீரம், மனம், செல்வத்தை எனது சரீரம் மற்றும் சரீரம் சார்ந்த உறவினர்களில் அதிகளவு ஈடுபடுத்துகிறேனா அல்லது தந்தையின் மேன்மையான பணிக்காக அவற்றை பயன்படுத்துகிறேனா? சரீர உறவுமுறைகள் என்றதோர் இல்லறம் இருப்பதைப் போன்று, அதே அளவில் உங்கள் சொந்த சரீரம் என்றதோர் பெரிய இல்லறமும் உள்ளது. சில குழந்தைகள் உறவுமுறை என்ற இல்லறத்திற்கு அப்பால் சென்று விட்டார்கள், ஆனால், அவர்கள் தமது நேரத்தை, எண்ணங்களை, பணத்தை கடவுளின் பணிக்காக பயன்படுத்துவதை விட அதிகளவு தமது சொந்த சரீரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். உங்கள் சொந்த சரீரம் என்ற இல்லறமும் பெரியதொரு வலையே ஆகும். இந்த வலைக்கு அப்பால் நிலைத்திருப்பதே வலதுகரம் எனப்படுகின்றது. ஒரு பிராமணர் ஆகுதலோ, பிரம்மாகுமார் அல்லது பிரம்மகுமாரி என அழைக்கப்படுவதற்கான உரிமையை கொண்டிருப்பதோ, சதா ஒத்துழைப்பவராக இருப்பவர் என்பதைப் போன்றது அல்ல. ஒத்துழைப்பவராக இருப்பது என்றால், எவ்வாறாயினும், இல்லறத்திற்கு அப்பால் இருப்பது, தந்தையின் பணி மீது அன்புகொண்டிருப்பது என்ற இரண்டுமே ஆகும். சரீரம் என்ற இல்லறத்தின் விரிவாக்கத்தில் அதிகளவு விபரங்கள் உள்ளன. பாபா வேறொரு முறை இதனை விபரிப்பார். எவ்வாறாயினும், நீங்கள் எந்தளவிற்கு ஒத்துழைப்பவர்கள் ஆகியுள்ளீர்கள் என சோதித்து பாருங்கள்.

மூன்றாவதாக, கரங்கள் அன்பின் அடையாளமாகும். அன்பு என்றால் சந்திப்பு என்று அர்த்தமாகும். சரீரதாரிகளை நீங்கள் சந்திக்கும் பொழுது நீங்கள் கைகுலுக்குவதைப் போன்றே, வலது கரமாக அல்லது வலது கையாக இருப்பவர்களின் அடையாளம், அவர்கள் தமது எண்ணங்கள், வார்த்தைகள், சம்ஸ்காரங்களில் இசைவாக இருப்பார்கள். தந்தையின் எண்ணங்கள் வலது கரமாக இருப்பவர்களின் எண்ணங்களாகவே இருக்கும். தந்தை வீணான எண்ணங்களை கொண்டிருப்பதில்லை. சக்திமிக்க எண்ணங்களை எப்பொழுதும் கொண்டிருப்பதே இதன் சமிக்ஞையாகும். தந்தையின் வார்த்தைகள் எப்பொழுதும் சந்தோஷத்தையே கொடுக்கும், அவை எப்பொழுதும் இனிய வார்த்தைகளாக இருக்கும், அவை எப்பொழுதும் மேன்மையான வாசகங்களாக இருக்கும், அவை சாதாரண வார்த்தைகள் அல்ல. அவை ஆத்ம உணர்வான ஓர் அவ்யக்த உணர்வை கொண்டிருக்கும். அவை சாதாரண உணர்வுடனான வார்த்தைகளாக இருக்க மாட்டாது. இதுவே அன்பு என அதாவது சந்திப்பு என அழைக்கப்படுகின்றது. அவ்வாறே, சம்ஸ்காரங்களின் இசைவாக்கமும் உள்ளது. தந்தையின் சம்ஸ்காரங்கள் எப்பொழுதுமே பரோபகாரமும், நன்மைபயப்பதாகவும், சுயநலமற்றதாகவுமே இருக்கும். உண்மையில், இதில் அதிகளவு விரிவாக்கம் உள்ளது, தந்தையின் சம்ஸ்காரங்கள் வலது கரமாக உள்ளவர்களின் சமஸ்காரமாக இருக்கும் என்பதே அதன் சாராம்சமாகும். இவ்வாறாக சமமாக ஆகுதல் என்றால், அன்பானவர் ஆகுதலாகும். ஆகையால், உங்களை சோதியுங்;;கள்: நான் எந்தளவிற்கு இவ்வாறு ஆகியுள்ளேன்?

நான்காவதாக, கரங்கள் என்றால் சக்தியாகும். நீங்கள் எந்தளவிற்கு சக்திசாலிகள் ஆகியுள்ளீர்கள் என சோதியுங்கள். உங்கள் எண்ணங்கள், திருஷ்டி, மனோபாவம் எந்தளவிற்கு சக்திமிக்கதாக ஆகியுள்ளது? சக்திமிக்க எண்ணங்களதும், பார்வையினதும், மனோபாவத்தினதும் அடையாளமானது, அவை சக்திமிக்கதாக இருப்பதால், அவர்களால் எவரையுமே மாற்ற முடியும். அவர்கள் தமது எண்ணங்களினால் உலகை மேன்மையானதாக்குகின்றார்கள். தமது மனோபாவத்தினால் சூழலை மாற்றுகிறார்கள். அவர்கள் தமது திருஷ்டியினால், சரீரமற்ற ஆத்மா என்ற அனுபவத்தை வழங்குகிறார்கள். எனவே, நீங்கள் அத்தகைய சக்திமிக்க கரங்களா? அல்லது, நீங்கள் பலவீனமானவர்களா? ஏதேனும் பலவீனம் இருந்தால், நீங்கள் இடது கரமாவீர்கள். இப்பொழுது, யாரை நீங்கள் வலது கரம் என அழைக்க முடியும் என்பதை புரிந்து கொண்டீர்களா? நீங்கள் அனைவரும் கரங்களே, ஆனால் நீங்கள் எக்கரம் ஆவீர்கள்? இந்த சிறப்பியல்களினூடாக உங்களை இனங்காணுங்கள். நீங்கள் வலது கரம் இல்லை என எவரேனும் உங்களிடம் கூறினால், நீங்கள் அவ்வாறானவரே என்பதை நிரூபிக்க முயற்சிப்பதுடன், அதனையிட்டு நீங்கள் பிடிவாதமாகவும் இருப்பீர்கள், ஆனால் நீங்கள் எவ்வாறானவரோ அவ்வாறு உங்களை இனங்காண வேண்டும், ஏனெனில் இப்பொழுது உங்களை மாற்றிக் கொள்வதற்கு இன்னமும் சொற்பகாலமே உள்ளது. கவனயீனமாக இருந்து, நீங்கள் நன்றாகவே முன்னேறுகிறீர்கள் என நினைக்காதீர்கள். உங்கள் மனம் உறுத்தும், ஆனால் அகங்காரமும் கவனயீனமும் கூட உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி நீங்கள் முன்னேறிச் செல்வதற்கு உங்களை அனுமதிக்காது. ஆகையால், அதிலிருந்து விடுதலை அடையுங்கள். உங்களை மிகச்சரியாக சோதித்து பாருங்கள். சுயத்திற்கான நன்மை இதில் அமிழ்ந்துள்ளது. உங்களுக்கு புரிகின்றதா? அச்சா.

சதா சுயமாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்;கும், உண்மையான சுயத்தின் எண்ணங்களை பேணுபவர்களுக்கும், தமக்குள் இருக்கின்ற சிறப்பியல்புகள் அனைத்தையும் சதா சோதித்துப் பார்த்து அதன் மூலம் முழுமை அடைபவர்களுக்கும், இரண்டு இல்லறங்களுக்கும் அப்பால் இருப்பவர்களுக்கும், தந்தையின் மீதும் அவரது பணியின் மீதும் அன்பாக இருப்பவர்களுக்கும், அகங்காரத்திலிருந்தும் கவனயீனத்திலிருந்தும் எப்பொழுதும் விடுபட்டிருப்பவர்களுக்கும், அத்தகைய தீவிர முயற்சியாளர்களுக்கு, அத்தகைய மேன்மையான ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

பாப்தாதா குழுக்களை சந்திக்கின்றார்:

1. உங்களை சுயதரிசன சக்கரதாரிகளாக எப்பொழுதும் நீங்கள் கருதுகிறீர்களா? சுயதரிசன சக்கரம் பலவகையான மாயையின் சுழற்சிகளை முடிக்கின்றது. மாயையின் பல வகையான சுழற்சிகள் இருக்கின்றன, தந்தை அந்த சுழற்சிகளில் இருந்து உங்களை விடுவித்து உங்களை வெற்றியாளர் ஆக்குகின்றார். மாயையினால் சுயதரிசன சக்கரத்தின் முன்னால் நிலைத்திருக்க முடியாது. இதனை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? ஒவ்வொரு நாளும், பாப்தாதா இந்தத் தலைப்புடனேயே உங்களுக்கு அன்பையும் நமஸ்தேயையும் வழங்குகின்றார். ஆகையால், இந்த விழிப்புணர்வுடன் சதா சக்திமிக்கவர்களாக இருங்கள். உங்களையிட்ட பார்வையை எப்பொழுதும் வைத்திருந்தால், நீங்கள் சக்திமிக்கவர்கள் ஆகுவீர்கள். நீங்களே ஒவ்வொரு கல்பத்திலும் மேன்மையான ஆத்மாக்களாக இருந்தீர்கள், இப்பொழுதும் இருக்கிறீர்கள், நீங்கள் ஏற்கனவே மாயையை வெற்றவர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். இந்த ஞானத்தை எப்பொழுதும் உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்து, அந்த சந்தோஷத்தை பேணுங்கள். சந்தோஷம் பல வகையான துன்பங்களை மறக்க உங்களுக்கு உதவுகின்றது. இந்த உலகம் துன்ப உலகமாகும், ஆனால், நீங்கள் அனைவரும் சங்கமயுகத்தினர் ஆகியுள்ளீர்கள். இதுவும் பாக்கியமாகும்.

2. நீங்கள் தூய்மைசக்தியினால் சதா உங்களை தூய்மையாக்குபவர்கள் என்பதுடன் ஏனையோர் தூய்மையாகுவதற்கும் தூண்டுபவர்கள், அப்படித்தானே? நீங்கள் குடும்பத்துடன் உங்கள் வீட்டில் வாழும் போதும் தூய ஆத்மாவாக இருக்கின்ற சிறப்பியல்பை உலகிற்கு வெளிபடுத்த வேண்டும். நீங்கள் அத்தகைய தைரியசாலி ஆத்மாவாக ஆகிவிட்டீர்களா? தூய ஆத்மாக்கள் என்ற விழிப்புணர்வுடன் நீங்கள் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் ஆகி, தொடர்ந்தும் இந்த நடைமுறை உதாரணத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுங்கள். நீங்கள் எத்தகைய ஆத்மாக்கள்? அசாத்தியம் என்பதையும், சாத்தியமாக்குவதை எடுத்துக் காட்டுவதற்கான கருவி ஆத்மாக்கள், தூய்மை சக்தியை பரவச் செய்பவர்கள். சதா இதனை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருங்கள்.

3. குமார்களாகிய நீங்கள் சதா உங்களை மாயையை வெற்றி கொண்டவர்களாக கருதுகிறீர்களா? நீங்கள் மாயையினால் தோற்கடிக்கப்பட கூடியவர்கள் அல்ல, ஆனால் மாயையை தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்பவர்கள். நீங்கள் அத்தகைய சக்திசாலிகளும், தைரியசாலிகளும் ஆவீர்கள், அப்படித்தானே? மாயை தைரியசாலிகளை கண்டு பயப்படுபவள். தைரியசாலிகளின் முன்னால் நிற்பதற்கான தைரியம் மாயைக்கு என்றுமே இல்லை. ஏதாவது பலவீனம் ஒன்றைக் காணும் போதே, மாயை பிரவேசிக்கின்றாள். தைரியசாலி என்றால், மாயையை எப்பொழுதும் வெற்றி கொள்பவர்கள் என்று அர்த்தமாகும். மாயையால் வரமுடியாது. நீங்கள் இந்த சவாலை விடுப்பவர்கள், அப்படித்தானே? நீங்கள் அனைவரும் முன்னேறிச் செல்பவர்கள், அப்படித்தானே? நீங்கள் அனைவரும் சேவைக்கான கருவிகள் என உங்களை கருதுகிறீர்களா? அதாவது, உலக உபகாரிகள் என உங்களை எப்பொழுதும் கருதி, இந்த விழிப்புணர்வில் முன்னேறிச் செல்பவர்களா? உலக உபகாரிகள் எல்லையற்றதில் நிலைத்திருப்பவர்கள். அவர்கள் எல்லைக்குட்பட்டதிற்குள் வருவதில்லை. எல்லைக்குட்பட்டதிற்குள் வருவதென்றால், உண்மையான சேவர்கள் அல்ல. எல்லைக்கு அப்பால் இருப்பது என்றால்: தந்தை எவ்வாறோ குழந்தைகளும் அவ்வாறு. நீங்கள் தந்தையை பின்பற்றும் மேன்மையான குமார்கள். சதா இந்த விழிப்புணர்வை பேணுங்கள். தந்தை முழுமையாகவும், எல்லையற்றவராகவும் இருப்பதைப் போன்றே, தந்தையைப் போன்று முழுமையடைந்து, சதா நிறைந்திருங்கள். இந்த விழிப்புணர்வை கொண்டிருப்பதன் மூலம் உங்கள் சகல வீணானவையும் முடிவடைந்து, நீங்கள் சக்திசாலிகள் ஆகுவீர்கள்.

அவ்யக்த முரளிகளில் இருந்து கேள்விகளும் பதில்களும்:

கேள்வி:
சம்பூர்ண ஸ்திதியை வெளிப்படுத்தும் விசேட தெய்வீகக் குணம் என்ன? ஓர் ஆத்மா தனது சம்பூர்ண ஸ்திதியை அடையும் போது, அது அவரது நடைமுறை செயலில் எவ்வாறு நினைவுசெய்யப்படுகின்றது?

விடை:
சமநிலையாகும். புகழ்ச்சி இகழ்ச்சி, வெற்றி தோல்வி, சந்தோஷம் துன்பம், இவை அனைத்திலும் சமநிலையை கொண்டிருப்பதே சம்பூர்ண ஸ்திதி எனப்படுகின்றது. துன்பத்தின் போதும், உங்கள் முகத்திலும், நெற்றியிலும் துன்பத்தின் சுவட்டிற்கு மாறாக சந்தோஷத்தினதும் களிப்பினதும் அலையே தெரியும். உங்களை இகழ்ந்த ஒருவரை நோக்கி, உங்கள் பார்வையிலும் மனோபாவத்திலும் சற்றேனும் மாற்றம் இல்லாதிருக்கும். எப்பொழுதும் பிறரையிட்டு, உபகாரமிக்க பார்வையும், தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களையும் கொண்டிருங்கள். இதுவே மகத்துவம் ஆகும்.

கேள்வி:
உங்களுக்காக பேரானந்தம் கொண்டிருப்பதற்கும், பாப்தாதாவிடம் இருந்து பேரானந்தத்தை பெறுவதற்குமான வழி என்ன?

விடை:
உங்கள் சமநிலை எப்பொழுதும் மிகச்சரியாக இருக்கும் போது, நீங்கள் தொடர்ந்தும் பாப்தாதாவிடமிருந்து பேரானந்தத்தைப் பெறுவீர்கள். உங்கள் புகழை செவிமடுக்கின்ற அதேவேளை நீங்கள் அப்புகழினால் போதை அடைவதில்லை, அதேபோன்று இகழ்ச்சியை செவிமடுக்கும் போதும், நீங்கள் வெறுப்புணர்ச்சியை கொண்டிருப்பதில்லை. இரண்டு ஸ்திதிகளின் போதும், உங்கள் சமநிலை நன்றாக இருக்கும் போது, அது அற்புதம் என்பதுடன், உங்களையிட்டு திருப்தியாகவும் இருப்பீர்கள்.

கேள்வி:
உங்களுடையது இல்லறப் பாதையாகும், எந்த சோடியான விடயங்களில் நீங்கள் சமநிலையை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்?

விடை:
ஆத்மாவும் சரீரமும் இரு வேறு விடயங்களைப் போன்றே, தந்தையும் தாதாவும் இரண்டாவார்கள். அவர்கள் இருவரும் மேற்கொண்ட பணியினூடாகவே உலகத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. அவ்வாறே, இரண்டு விடயங்களிலும் நீங்கள் சமநிலையை கொண்டிருந்தால், உங்களால் மேன்மையானதொரு பேற்றினை கொண்டிருக்க முடியும். 1. அன்பாகவும் பற்றற்றவராகவும் இருத்தல் 2. புகழ்ச்சியும் இகழ்ச்சியும் 3. அன்பும் சக்தியும். 4. தர்மமும் கர்மமும் 5. ஏகாந்தத்தில் இருப்பதும் களிப்படைதலில் இருப்பதும் 6. சீரியஸாக இருப்பதன் முதிர்ச்சியும், இசைந்து கொடுப்பதும். இந்த சகல வகைகளின் சமநிலைகளிலும் சமத்துவம் இருக்கும் போது, உங்களால் சம்பூர்ணம் என்ற ஸ்திதியை நிறைவடையச் செய்ய முடியும். ஒரு குணாதிசயம் அமிழ்ந்தும் மற்றையது வெளிப்படுதலும் என்றிருக்கக் கூடாது. அவ்வாறாயின் எத்தாக்கமும் இருக்க மாட்டாது.

கேள்வி:
எவ்விடயத்தில் நீங்கள் சமத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும், எவ்விடயத்தில் நீங்கள் சமத்துவத்துவத்தைக் கொண்டிருக்கத் தேவையில்லை?

விடை:
மகத்துவமாக இருப்பதில் சமத்துவம் இருக்கட்டும். சாதாரணமாக இருப்பதில் அல்ல. உங்கள் கர்மா மேன்மையாக இருப்பதைப் போன்றே, உங்கள் தாரணையும் மேன்மையான இருக்கட்டும். உங்கள் தாரணை உங்கள் கர்மாவை அமிழ்த்தி விடுவதாக இருக்கக்கூடாது. உங்கள் தர்மமும் கர்மமும் சமமாக இருக்கும் போதே மகத்துவம் உள்ளது. அப்பொழுதே நீங்கள் தர்மாத்துமா எனப்படுவீர்கள். எனவே, உங்களிடம் வினவுங்கள்: நான் அத்தகைய தர்மாத்துமாவாக ஆகியுள்ளேனா? நான் அத்தகைய கர்மயோகியாக ஆகியுள்ளேனா? நான் பேரானந்தமிக்கவராக ஆகியுள்ளேனா?

கேள்வி:
உங்கள் புத்தியின் எந்தவொரு தளம்பலுக்கும் காரணம் என்ன?

விடை:
நிறைவடையாதிருப்பதே குறைபாட்டிற்கான காரணமாகும். ஏதாவது ஒன்று நிறைவாக இருந்தால், அதில் எந்தத் தளம்பலும் இருக்க மாட்டாது. எனவே, எந்தத் தளம்பலில் இருந்தும் உங்களை பாதுகாப்பது என்றால், தொடர்ந்தும் நிறைவாக இருங்கள், அப்பொழுது நீங்கள் சம்பூர்ணம் அடைவீர்கள். எதுவும் நிறைந்திருந்தால், அது இயல்பாகவே கவரும். நிறைவுக்கு ஈர்க்கும் சக்தியுள்ளது. எனவே, நீங்கள் எந்தளவிற்கு நிறைவாக இருக்கிறீர்களோ அந்தளவிற்கு, ஆத்மாக்கள் அனைவரும் அதற்கேற்ப இயல்பாகவே கவரப்படுவார்கள்.

கேள்வி:
ஆத்ம உணர்வின் சூட்சுமமான ஸ்திதி என்ன?

விடை:
எவரேனும் ஆத்ம உணர்வில் இருக்கும் போது, எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு சமிக்சையை பெறுகின்றார், அவர் அந்த சமிக்சையை தனக்குள் அமிழ்;த்தி, அது முன்னேற்றத்திற்கான வழியெனக் கருதி, தற்போதைக்கும் எதிர்காலத்திற்குமாக அதனை உள்ளடக்கிக் கொள்கின்றார். சூட்சும வடிவிலும் கூட, “என்ன?|” அல்லது ‘எப்படி?” என்பது அவரது பார்வையிலோ மனோபாவத்திலோ எழ மாட்டாது. அதேபோன்று, புகழ்ச்சியை கேட்கும் போதும், அந்த ஆத்மாவிற்கான அன்பான உணர்வு இருக்கும். அதேபோன்று யாராவது ஏதேனும் ஒரு கற்பித்தலை அல்லது சமிக்சையை கொடுக்கும் போதும், அன்பான உணர்வும், தூய்மையான ஆக்கபூர்வமான எண்ணங்களும் இருக்கட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எப்பொழுதும் இணைந்த வடிவத்தை அனுபவம் செய்து, சதா சந்தோஷமும் பூரிப்புமான ஸ்திதியில் இருப்பீர்களாக.

பாப்தாதா எப்பொழுதும் குழந்தைகளிடம் கூறுகின்றார்: குழந்தைகளே, தந்தையோடு கரம் கோர்த்து நடங்கள். தனியாக நடக்காதீர்கள். தனியாக நடப்பதால், சிலவேளைகளில் நீங்கள் சலிப்படைந்து விடுவீர்கள் அல்லது எவரேனும் ஒருவரின் பார்வை உங்கள் மீது படக்கூடும். தந்தையுடன் இணைந்திருக்கின்ற வடிவத்தை எப்பொழுதும் அனுபவம் செய்தால், மாயையின் பார்வை எப்பொழுதுமே உங்கள் மீது படாது. அவரின் சகவாசத்தை அனுபவம் செய்வதால், நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷமாகவும் பூரிப்புடனும் சாப்பிடுவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷத்துடன் கொண்டாடுவீர்கள். உங்களை ஏமாற்றத்திலும் துன்பத்திலும் சிக்கச் செய்யக்கூடிய உறவுமுறைகளிடமிருந்தும் பாதுகாக்கப்படுகிறீர்கள்,

சுலோகம்:
யோகம் என்ற கேடயத்தை எப்பொழுதும் நீங்கள் அணிந்திருந்தால், எதிரியான மாயையின் எந்தத் தாக்குதல்களினாலும் தாக்கப்பட மாட்டீர்கள்.