05.05.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 26.11.84 Om Shanti Madhuban
உண்மையில் ஒத்துழைப்பவர்களே உண்மையான யோகிகள்.
இன்று, பாபா சந்திப்பிற்காகக் குழந்தைகளிடம் உள்ள அன்பைப் பார்க்கிறார். அவர்கள் ஒரு நம்பிக்கை, ஒரு வலிமை என்ற குடையின் கீழிருந்து, சந்திப்பிற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பதனால், எந்தவொரு குழப்பத்தாலும் அவர்களின் அன்பைச் சிறிதளவேனும் அசைக்க முடியாது. நீங்கள் தடைகளையும் களைப்பையும் மாற்றி, அன்பெனும் இலகுவான பாதையை அனுபவம் செய்து இங்கு வந்துள்ளீர்கள். ‘குழந்தைகளுக்குத் தைரியம் இருக்கும்போது, தந்தை உதவி செய்வார்’ என்பதன் அர்த்தம் இதுவே ஆகும். எங்கு தைரியம் உள்ளதோ, அங்கு உற்சாகமும் இருக்கும். தைரியம் இல்லாவிட்டால், உற்சாகமும் காணப்படாது. சதா தைரியத்தையும் உற்சாகத்தையும் பேணும் குழந்தைகள் தமது தொடர்ச்சியான ஸ்திதியால் முதலாம் இலக்கத்தைக் கோருகிறார்கள். ஒரு சூழ்நிலை எவ்வளவு கடுமையாக இருந்தாலும், ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளுடனும் மேன்மையான பறக்கும் ஸ்திதியாலும், நீங்கள் அந்த மிகப்பெரிய, கடுமையான சூழ்நிலையை ஒரு விநாடியில் சிறியதாகவும் இலகுவானதாகவும் உணர்வீர்கள். ஏனெனில், பறக்கும் ஸ்திதிக்கு முன்னால், அனைத்தும் ஒரு விளையாட்டில் உள்ள சிறிய பொம்மைகள் போன்றே உணரப்படும். சில சூழ்நிலைகள் பயங்கரமானவையாக இருந்தாலும், நீங்கள் அவற்றால் பயப்படாமல் இயல்பான ஒன்றாகவே அனுபவம் செய்வீர்கள். வேதனையான சூழ்நிலைகளும் உங்களைத் திடசங்கற்பம் ஆக்குவதாகவே நீங்கள் அனுபவம் செய்வீர்கள். உங்களிடம் வருகின்ற சூழ்நிலைகள் எத்தனை துன்பமானதாக இருந்தாலும், சந்தோஷ முரசங்கள் துன்பக் காட்சிகளின் எந்தவிதமான ஆதிக்கமும் ஏற்பட அனுமதிக்காது. அதற்குப் பதிலாக, உங்களின் அமைதியாலும் சக்தியாலும், அனைவரின் வலி மற்றும் துன்பம் என்ற நெருப்பின் மீது குளிர்ந்த நீரைப் போன்று செயற்பட்டு, அவர்களுக்கு உதவி செய்வீர்கள். அத்தகைய வேளையில், பரிதவிக்கும் ஆத்மாக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. இந்த ஒத்துழைப்பைப் பெறுவதனால் அவர்கள் மேன்மையான யோகத்தை அனுபவம் செய்வார்கள். உங்களின் இந்த உண்மையான ஒத்துழைப்பை, உண்மையான யோகிகளிடம் இருந்து பெறுவதாக அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். துயரமான அத்தகைய வேளையில், ‘உண்மையில் ஒத்துழைப்பவர்கள்,உண்மையான யோகிகள்’ என்ற வெளிப்படுத்துகையாலும் அவர்களின் பயிற்சி பெற்ற பேற்றினாலும் வெற்றி முழக்கங்கள் ஒலிக்கும். அத்தகைய நேரத்தைப் பற்றி, ‘ஒரு துளிக்கான தாகம்.....’ என்ற புகழ்ச்சி உள்ளது. ஒரு விநாடிக்குரிய அமைதியினதும் சக்தியினதும் இந்த ஒரு துளி அனுபவம், பரிதவிக்கும் ஆத்மாக்கள் நிறைவினை அனுபவம் பெறச் செய்யும். அத்தகைய வேளையில், ஒரு விநாடிக்கான பேறு, பல பிறவிகளுக்கான பேறுகளையும் நிறைவினையும் ஒரு விநாடியில் பெற்ற அனுபவத்தைக் கொடுக்கும். எவ்வாறாயினும், நீண்ட காலத்திற்கு சக்திவாய்ந்த ஸ்திதியைப் பயிற்சி செய்த ஆத்மாவால் மட்டுமே, தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தை ஒரு விநாடியில் தணிக்க முடியும். இப்போது சோதித்துப் பாருங்கள்: உங்களால் மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவராகவும், மாஸ்ரர் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும், மாஸ்ரர் கடலாகவும் இருந்து, பயங்கரமான, துன்பம் நிறைந்த வலியும் துன்பமும் மிக்க சூழலில் சக்திவாய்ந்த ஸ்திதியின் அனுபவத்தை ஒரு விநாடியில் கொடுக்க முடியுமா? அத்தகைய வேளையில், ‘என்ன நிகழ்ந்தது?’ என்பதைப் பார்ப்பதில் அல்லது கேட்பதில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், உங்களால் ஒத்துழைக்க முடியாது. பார்ப்பதற்கு அல்லது கேட்பதற்கு சிறிதளவு ஆசை உங்களுக்கு இருந்தாலும், அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் சக்திவாய்ந்த ஸ்திதியை நீங்கள் உருவாக்குவதற்கு அனுமதிக்காது. ஆகவே, இப்பொழுதில் இருந்தே, தற்காலிகமான ஆசைகளின் அறிவே அறிந்திராத சக்திவாய்ந்த ஸ்திதியை சதா பயிற்சி செய்யுங்கள். ஒவ்வோர் எண்ணத்திலும், ஒவ்வொரு மூச்சிலும் சதா சேவையாளர்களாகவும் சதா ஒத்துழைப்பவர்களாகவும் யோகிகளாகவும் ஆகுங்கள். உடைந்த ஒரு விக்கிரகத்திற்கு எந்தவித மதிப்பும் வழிபடப்படுவதற்கான தகுதியும் இல்லாததைப் போன்று, சதா இதில் ஈடுபடாத ஒரு சேவையாளர் அல்லது யோகிக்கும் அத்தகைய வேளையில் ஓர் உரிமையை ஆத்மாக்கள் கோரும்படி செய்வதற்கான உரிமை இருக்காது. ஆகவே, இத்தகைய சக்திவாய்ந்த சேவை செய்வதற்கான நேரம் இப்போது நெருங்கி வருகிறது. காலம் மணிகளை அடிக்கிறது. பக்தர்கள் தமது விசேடமான இஷ்ட தெய்வங்களை எழுப்புவதற்காக மணிகளை அடித்துப் பின்னர் அவர்களைத் தூங்கச் செய்வதுடன் பிரசாதம் படைப்பதைப் போன்று, காலமும் விசேட தேவர்களான உங்களை விழிப்படையச் செய்வதற்கு மணிகளை அடிக்கிறது. நீங்கள் விழித்தெழுந்து விட்டீர்கள். ஆனால், தூய இல்லறப்பாதையில் நீங்கள் மும்முரமாக இருக்கிறீர்கள். தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களின் தாகத்தை நீங்கள் தணிப்பதற்காகக் காலம் மணிகளை அடிக்கிறது. அத்துடன் ஒரு விநாடியில் பல பிறவிகளுக்கான பேறுகளைப் பெறக்கூடிய சக்திவாய்ந்த ஸ்திதியை உருவாக்குவதற்கு நீங்கள் பயிற்சி செய்வதற்கும் உங்களைத் தயாராக்குகிறது. சம்பூரணமான விசேடமான அதியன்பிற்குரிய ஆத்மாக்களான நீங்கள் வெளிப்படுத்துகைக்கான திரைகளைத் திறப்பதற்காகக் காலம் உங்களை அழைக்கிறது. உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அனைவரும் காலத்தின் மணி அடிப்பதைக் கேட்டீர்கள், அல்லவா? அச்சா.
பறக்கும் ஸ்திதியால் சகல இக்கட்டான சூழ்நிலைகளையும் வெற்றி கொள்பவர்களுக்கும், சதா யோகிகளுக்கும், சதா மாஸ்ரர் அருள்பவர்களுக்கும், ஆசீர்வாதங்களை அருள்பவர்களின் சொரூபங்களுக்கும், நீண்ட காலப் பேற்றினால் ஆத்மாக்களை ஒரு விநாடியில் முழுமையாக மனநிறைவடையச் செய்பவர்களுக்கும், ஆசைகளின் அறிவே அறியாதவர் என்ற ஸ்திதியால் சதா சகல ஆசைகளையும் பூர்த்தி செய்பவர்களுக்கும், இத்தகைய மாஸ்ரர் சர்வசக்திவான்களுக்கும், சக்திசாலி ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
(கங்காபென் கான்பூரின் செய்திகளை பாப்தாதாவிற்குத் தெரிவித்தார்): நீங்கள் சதா ஆட்ட, அசைக்க முடியாத ஆத்மா ஆவீர்கள். நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தந்தையின் பாதுகாப்புக் குடையை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? பாப்தாதா எப்போதும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். நீங்கள் எப்போதும் தந்தையிடமிருந்து பாதுகாப்பிற்கான வழிமுறைகளைப் பெற்றுள்ளீர்கள். இதனாலேயே, நீங்கள் எப்போதும் தந்தையின் அன்புக்கரத்தையும் அவரின் சகவாசத்தையும் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஏற்கனவே ‘எதுவும் புதியதல்ல’ என்பதைப் பயிற்சி செய்துள்ளீர்கள். என்ன நிகழ்ந்தாலும், அது ‘எதுவும் புதியதல்ல’. என்ன நிகழ்கிறதோ, ‘எதுவும் புதியதல்ல’. நீங்கள் இயல்பாகவே தொடர்ந்து தொடுகைகளைப் பெறுகிறீர்கள். ஒத்திகைகள் இடம்பெறுகின்றன. இத்தகைய வேளையில், பாதுகாப்பிற்கும் சேவைக்குமான வழிமுறைகள் என்ன? உங்களின் ரூபம் எத்தகையதாக இருக்க வேண்டும்? இதற்காகவே ஒத்திகைகள் இடம்பெறுகின்றன. இறுதியில், துயர அழுகுரல்களின் மத்தியில் வெற்றி ஏற்படும். உச்சக்கட்டத்தின் பின்னர், முடிவு ஏற்பட்டு, புது யுகத்தின் ஆரம்பம் நிகழும். அத்தகைய வேளையில், வெளிப்படுத்துகைக்கான முரசங்கள் அனைவரின் மனங்களிலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஒலிக்கும். காட்சிகள் இக்கட்டானதாக இருக்கும். ஆனால், வெற்றி முரசங்கள் ஒலிக்கும். ஆகவே, நீங்கள் ஒத்திகைகளுக்கு அப்பால் சென்றுள்ளீர்கள். நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்தி என்ற உங்களின் பாகத்தை நடித்துள்ளீர்கள். நீங்கள் மிக நன்றாக நடித்தீர்கள். இங்கு நீங்கள் வந்திருப்பதும் அன்பின் வடிவமே ஆகும். அச்சா. எண்ணங்களைக் கொண்டிருப்பதில், நீங்கள் எண்ணங்களில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். என்ன நிகழ்ந்தாலும், ‘ஆஹா, ஆஹா’. இதிலும், சிலர் நன்மை பெறுவார்கள். இதனாலேயே, எரிவதிலும் நன்மை உள்ளது. பாதுகாப்பாக இருப்பதிலும் நன்மை உள்ளது. ‘ஓ! எனக்குத் தீப்பற்றிவிட்டது!’ என நீங்கள் துயரத்தில் அழமாட்டீர்கள். இல்லை. அதிலும் நன்மை உள்ளது. நீங்கள் காப்பாற்றப்பட்டபோது, ‘ஆஹா, ஆஹா’ ‘ஆஹா, நான் காப்பாற்றப்பட்டுவிட்டேன்!’ எனக் கூறுவதைப் போன்று, எரிகின்ற போதும் ‘ஆஹா,ஆஹா’ என்று கூற வேண்டும். இதுவே நிலையான, ஸ்திரமான ஸ்திதி எனப்படுகிறது. மற்றவர்களைக் காப்பாற்றுவது உங்களின் கடமை. ஆனால், எரியப்போகும் ஒன்று எவ்வாறாயினும் எரிந்தே போகும். இதில் பல கர்மக்கணக்குகள் உள்ளன. நீங்கள் எவ்வாறாயினும் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆவீர்கள். ஒன்று போனது. ஆனால் நீங்கள் நூறாயிரம் மடங்கைப் பெற்றீர்கள். இதுவே பிராமணர்களின் சுலோகம் ஆகும். எதுவும் போகவில்லை. ஆனால் நீங்கள் பெற்றுள்ளீர்கள். இதனாலேயே நீங்கள் கவலையற்றவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் அதைவிடச் சிறந்ததைப் பெறக்கூடும். இதனாலேயே, எரிவதும் ஒரு விளையாட்டே. பாதுகாக்கப்பட்டதும் விளையாட்டே. இரண்டும் விளையாட்டுக்களே. நீங்கள் எந்தளவிற்குக் கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எரிகின்ற நிலைமை ஏற்பட்டபோதும் கவலையற்ற சக்கரவர்த்தியாக இருந்தீர்கள் என்பதையும் மக்கள் பார்ப்பார்கள். ஏனெனில் நீங்கள் பாதுகாப்புக் குடையின் கீழ் இருக்கிறீர்கள். அவர்களோ கவலைப்படுவார்கள். ‘என்ன நிகழும்? எமக்கு எங்கிருந்து உணவு கிடைக்கும்? நாம் எவ்வாறு தொடர்ந்து செயற்படுவது?’ ஆனால், குழந்தைகளுக்கோ எந்தவிதக் கவலையும் இல்லை. அச்சா.
நீங்கள் இப்போது ஆயத்தங்களைச் செய்ய வேண்டும், அல்லவா? செல்வதைப் பற்றி நினைக்காதீர்கள். ஆனால், அனைவரையும் உங்களுடன் எடுத்துச் செல்வதைப் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் அனைவருக்கும் காட்சிகளை அருளி, அனைவரையும் மனநிறைவிற்கு உள்ளாக்கி, வெளிப்படுத்துகைக்கான முரசங்களை அறைந்து பின்னர் செல்லுங்கள். அதற்கு முன்னர் நீங்கள் ஏன் செல்ல வேண்டும்? நீங்கள் தந்தையுடன் சேர்ந்தே திரும்பிச் செல்வீர்கள். நீங்கள் வெளிப்படுத்துகைக்கான அற்புதமான காட்சிகளை அனுபவம் செய்த வண்ணமே செல்வீர்கள். இதை ஏன் நீங்கள் தவற விடவேண்டும்? மனதின் பக்தி, மனதின் வழிபாடு, அன்பு மலர்கள் - இந்த இறுதிக்காட்சிகள் மிகவும் அற்புதமானவை. முன்னோடிக் குழுவில் இருப்பவர்களின் விடயம் வேறுபட்டது. எவ்வாறாயினும், இந்தக் காட்சிகளைப் பார்ப்பது மிகவும் அத்தியாவசிமானது. எதையாவது பூர்த்தி செய்தவர்கள், பணி முழுவதையும் நிறைவேற்றி உள்ளார்கள் எனப்படுகிறது. இதனாலேயே, தந்தை இறுதியில் வருகிறார், எனவே, அவர் அனைத்தையும் செய்துள்ளார், அல்லவா? எனவே, ஏன் நீங்களும் தந்தையுடன் சேர்ந்து இந்த அற்புதமான காட்சியைப் பார்த்தவண்ணம் அவருடனேயே திரும்பிச் செல்லக்கூடாது? சிலருக்கு மட்டுமே இந்தப் பாகம் உள்ளது. ஆகவே, செல்லும் (இறக்கும்) எண்ணத்தைக் கொண்டிராதீர்கள். நீங்கள் சென்றால், அதுவும் நல்லதே. இங்கு நீங்கள் இருந்தால், அதுவும் நல்லதே. நீங்கள் தனித்துச் சென்றால், முன்னோடிக் குழுவில் சென்று சேவை செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, செல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள். அனைவரையும் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினையுங்கள். அச்சா. இதுவும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஓர் அனுபவமே. என்ன நிகழ்ந்தாலும் அது உங்களின் அனுபவத்தில் ஒரு பட்டம் ஆகுகிறது. மற்றவர்கள் தமது கல்வியில் உயர்ந்த பட்டத்தைப் பெறுவதைப் போன்று, அனுபவம் என்றால் அது உங்களின் பட்டத்தை உயர்த்துகிறது.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் அனைவரும் உங்களை சுய அதிபதிகளாகக் கருதுகிறீர்களா? நீங்கள் இப்போது சங்கமயுகத்தில் சுய அதிபதிகள். எதிர்காலத்தில், உங்களிடம் உலக இராச்சியம் இருக்கும். சுய அதிபதிகளால் மட்டுமே, உலக இராச்சியத்தின் உரிமை உடையவர்கள் ஆகமுடியும். நீங்கள் எப்போதும் உங்களை சுய இராச்சிய உரிமை உடையவர்களாக, உங்களின் பௌதீக அவயவங்கள் உங்களின் பணியாளர்களாகவும் நீங்கள் அவற்றை உரிமையுடன் செயற்படுத்துபவர்களாகவும் கருதுகிறீர்களா? அல்லது, சிலவேளைகளில் பௌதீக அவயவங்கள் அரசர்கள் ஆகிவிடுகின்றனவா? நீங்கள் அரசர்களா? அல்லது சிலவேளைகளில் பௌதீக அங்கங்கள் அரசர்கள் ஆகிவிடுகின்றனவா? பௌதீக அங்கங்கள் உங்களைச் சிலவேளைகளில் ஏமாற்றிவிடுகின்றனவா? நீங்கள் எவராலும் ஏமாற்றப்பட்டால், துன்பத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். ஏமாறுதல், உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறது. ஏமாற்றப்படாமல் இருந்தால், துன்பமும் இல்லை. எனவே, நீங்கள் சுய அதிபதிகள் என்ற சந்தோஷமாகவும் போதையுடனும் சக்தியுடனும் இருப்பவர்கள். சுய அதிபதி என்ற போதையானது உங்களைப் பறக்கும் ஸ்திதிக்கு எடுத்துச்செல்கிறது. எல்லைக்குட்பட்ட போதை தீங்கு விளைவிக்கும். ஆனால், இந்த எல்லையற்ற போதை - தனித்துவமான, ஆன்மீக போதை - நீங்கள் சந்தோஷத்தைப் பெறச் செய்கிறது. எனவே, உண்மையான இராச்சியம், அரசரின் இராச்சியம் ஆகும். பிரஜைகளின் இராச்சியம், குழப்பத்திற்குரிய இராச்சியம் ஆகும். ஆரம்பத்தில் இருந்தே, அது அரசர்களின் இராச்சியமாகவே இருந்தது. இந்த இறுதிப் பிறவியில், மக்களின் இராச்சியம் உள்ளது. ஆகவே, நீங்கள் இப்போது இராச்சிய உரிமை உடையவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் பல பிறவிகளாக யாசகர்களாக இருந்தீர்கள். இப்போது, யாசகர்களில் இருந்து, நீங்கள் உரிமை உடையவர்கள் ஆகியுள்ளீர்கள். பாப்தாதா எப்போதும் கூறுவார்: குழந்தைகளே, சந்தோஷமாக இருங்கள். பலனைப் பெறுபவர்களாகவும் செழிப்பானவர்களாகவும் இருங்கள். எந்தளவிற்கு நீங்கள் உங்களை ஒரு மேன்மையான ஆத்மாவாகக் கருதி மேன்மையான செயல்களைச் செய்து, மேன்மையான வார்த்தைகளைப் பேசி, மேன்மையான எண்ணங்களை உருவாக்குகிறீர்களோ, அந்தளவிற்கு, இந்த மேன்மையான எண்ணங்களால் நீங்கள் அதிகளவில் மேன்மையான உலகிற்கான உரிமையைப் பெற்றுக் கொள்வீர்கள். இந்த சுய இராச்சியமே உங்களின் பிறப்புரிமை ஆகும். இது உங்களைப் பிறவி பிறவிகளாக உரிமையைக் கோரச் செய்யும்.
அவ்யக்த பாப்தாதாவின் ஊக்கம் அளிக்கும் விலைமதிப்பற்ற மேன்மையான வாசகங்கள்.
1.அனைவரும் ஒரு விடயத்திற்காகக் காத்திருக்கிறார்கள்: அது என்ன? ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை உள்ள புதிர்: நான் யார்? என்பதாகும். இது இறுதிவரை இருக்கும். இறுதிவரை, அனைவரும் இதை அறியக் காத்திருப்பார்கள்: உண்மையில் நான் யார்? அல்லது, மாலையில் நான் எங்கே உள்ளேன்? இந்தக் காத்திருத்தல் எப்போதும் முடியும்? அனைவரும் தமக்கிடையே, யார் எட்டில் வருவார்கள், யார் 100 இல் வருவார்கள் என்று பேசுகிறார்கள். 16000 இல் யார் வருவார் என்ற கேள்வி இல்லை. இறுதியில் இந்தக் கேள்வியே உள்ளது. யார் எட்டில் அல்லது 100 இல் வருவார்கள்? வெளிநாட்டவர்கள் நினைக்கிறார்கள்: நாம் எந்த மாலையில் வருவோம்? ஆரம்பத்தில் வருபவர்கள் நினைக்கிறார்கள்: பிந்தி வந்தவர்கள் விரைவாகச் செல்கிறார்கள். எமக்கு ஓரிடம் கிடைக்குமா அல்லது பிந்தி வந்திருப்பவர்கள் அதைப் பெறுவார்களா என்று தெரியவில்லை. இறுதிக் கணக்கு என்னவாக இருக்கும்? தந்தையிடம் ஒரு புத்தகம் உள்ளதல்லவா? இன்னமும் எதுவும் நிச்சயிக்கப்படவில்லை. நீங்கள் ஓவியப் போட்டி வைக்கும்போது, எவ்வாறு ஓவியத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? நீங்கள் முதலில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், அவற்றில் இருந்து முதலாம், இரண்டாம், மூன்றாம் இலக்கங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே தேர்ந்தெடுத்தால், அவை வரிசைக்கிரமமாக நிச்சயிக்கப்பட்டுவிடும். எனவே, இப்போது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், இன்னமும் நிச்சயிக்கப்படவில்லை. இறுதியில் வருபவர்களுக்கு என்ன நிகழும்? எப்போதும் இறுதிவரை சில ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். முன்பதிவுகள் செய்யப்பட்டாலும், இறுதிக்கணம் வரை குறிப்பிட்ட அளவு எஞ்சியிருக்கும். ஆனால், அவர்கள் பலமில்லியன்களில் கையளவினரும் அந்தக் கையளவினரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருமே ஆகும். அச்சா.
நீங்கள் அனைவரும் எந்த மாலையில் இருக்கிறீர்கள்? உங்களில் நம்பிக்கை வையுங்கள். உங்களின் நம்பிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகுவதற்கான அடிப்படையாக ஏதாவது அற்புதமானவை இருக்கும். எட்டு இரத்தினங்களின் சிறப்பியல்பானது ஒரு விசேடமான விடயத்தில் தங்கியுள்ளது. எட்டு இரத்தினங்களின் நடைமுறை ஞாபகார்த்தம் இருப்பதைப் போன்று, அவர்களின் வாழ்க்கையிலும் அஷ்ட சக்திகளும் நடைமுறையில் புலப்படும். அவர்களின் வாழ்வில் நடைமுறையில் ஒரு சக்தியேனும் குறைவாக இருந்தால், அது விக்கிரகத்தின் ஒரு கரம் உடைந்திருப்பதைப் போன்றே இருக்கும். அதனால் அந்த விக்கிரகம் பூஜிப்பதற்குத் தகுதிவாய்ந்ததாக இருக்கமாட்டாது. அதேபோன்று, ஒரு சக்தியேனும் குறைவாகக் காணப்பட்டால், அவரை விசேடமான அஷ்ட தேவர்களின் பட்டியலில் நிச்சயிக்க முடியாது. இரண்டாவதாக, அஷ்ட தேவர்கள் பக்தர்களின் விசேடமான இஷ்ட தெய்வங்களாகக் கருதப்படுகிறார்கள். ‘விசேடமான இஷ்ட தெய்வம்’ என்றால் மகத்தான முறையில் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்கள் என்று அர்த்தம். பக்தர்கள் தமது விசேடமான இஷ்ட தெய்வங்களிடமிருந்து முழுமையான வெற்றியையும் அதைப் பெறுவதற்கான வழிமுறையையும் பெறுகிறார்கள். இங்கும், விசேட இரத்தினங்களாக இருப்பவர்கள்,பிராமணக் குடும்பம் முழுவதன் முன்னாலும் விசேடமான அதியன்பிற்குரியவர்களாக இருப்பார்கள். அதாவது, அவர்களே தமது ஒவ்வோர் எண்ணத்தினூடாகவும் ஒவ்வொரு செயலாலும் வெற்றிக்கான பாதையையும் வழிமுறையையும் காட்டுபவர்கள். இப்போதும், அவர்கள் அனைவரின் முன்னால் மகத்தான ரூபங்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே, அவர்களிடம் அஷ்ட சக்திகள் இருக்கும். அத்துடன் குடும்பத்தின் முன்னால் விசேடமான அதியன்பிற்குரியவர்களாக இருப்பார்கள். அதாவது, அவர்கள் மேன்மையான ஆத்மாக்களாகவும் மகாத்மாக்களாகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாக்களாகவும் இருப்பார்கள். இதுவே அஷ்ட இரத்தினங்களின் சிறப்பியல்பு ஆகும். அச்சா.
2. உலகின் அதிர்வலைகளில் இருந்தும் மாயையிடமிருந்தும் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறை:
வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தையிடம் எப்போதும் ஆழ்ந்த அன்பைப் பேணுபவர்கள், மாயையின் ஒவ்வொரு வகையான தாக்குதல்களில் இருந்தும் பாதுகாப்பாக இருப்பார்கள். யுத்தகாலத்தின்போது, குண்டுகள் போடப்படும்போது அனைவரும் நிலத்தின் கீழ் செல்வதனால், அவற்றினால் தாக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதைப் போன்று, நீங்கள் ஒரேயொருவரின் அன்பிலே உங்களை மறந்திருக்கும்போது, நீங்கள் உலகின் அதிர்வலைகளில் இருந்தும் மாயையிடம் இருந்தும் பாதுகாப்பாக இருப்பீர்கள். உங்களைத் தாக்குவதற்கான தைரியம் மாயைக்கு இருக்கமாட்டாது. எனவே, அன்பிலே உங்களை மறந்திருங்கள். இதுவே உங்களின் பாதுகாப்பிற்கான வழிமுறை ஆகும்.
3. தந்தைக்கு நெருக்கமாக உள்ள இரத்தினங்களின் அடையாளங்கள்: தந்தைக்கு நெருக்கமாக இருப்பவர்கள், தந்தையின் சத்திய சகவாசத்தின் நிறமூட்டப்படுவார்கள். சத்திய சகவாசத்தின் நிறம், ஆன்மீகம் ஆகும். எனவே, நெருங்கிய இரத்தினங்கள் எப்போதும் ஆன்மீக ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பார்கள். சரீரங்களில் இருக்கும்போதும், அவர்கள் பற்றற்றவர்களாகவும் தமது ஆன்மீகத்தில் ஸ்திரமானவர்களாகவும் இருப்பார்கள். சரீரங்களைப் பார்க்கும்போது, அவர்கள் அவற்றைப் பார்க்க மாட்டார்கள். புலப்படாத ஆத்மா, நடைமுறை ரூபத்தில் புலப்படும். இதுவே அந்த அற்புதம் ஆகும். தமது ஆன்மீக போதையில் இருப்பவர்களால் மட்டுமே தந்தையைத் தமது சகபாடி ஆக்க முடியும். ஏனெனில், தந்தை ஆத்மா ஆவார்.
4. பழைய உலகின் கவர்ச்சிகள் அனைத்தில் இருந்தும் அப்பால் இருப்பதற்கான இலகுவான வழிமுறை: நீங்களே அழியாத பொக்கிஷங்களின் அதிபதிகள் என்ற போதையை எப்போதும் பேணுங்கள். தந்தையின் பொக்கிஷங்கள் எவையாயினும் - ஞானம், சந்தோஷம், அமைதி, ஆனந்தம் - அவை அனைத்தும் உங்களின் நற்குணங்கள் ஆகும். ஒரு குழந்தை இயல்பாகவே தனது தந்தையின் சொத்திற்கு அதிபதி ஆகுகிறார். சகல உரிமைகளையும் கொண்டுள்ள ஓர் ஆத்மா, தனது உரிமைகளின் போதையைக் கொண்டிருப்பார். அந்த போதையில் அவர் அனைத்தையும் மறந்துவிடுவார், அப்படியல்லவா? அவருக்கு வேறு எந்த விழிப்புணர்வும் இருக்காது. ஒரேயொரு விழிப்புணர்வு மட்டுமே இருக்க வேண்டும் - தந்தையும் நானும். இந்த விழிப்புணர்வினால், நீங்கள் இயல்பாகவே பழைய உலகின் கவர்ச்சிகளுக்கு அப்பால் செல்வீர்கள். தமது போதையைப் பேணுபவர்களின் முன்னால், இலக்கு எப்போதும் மிகத் தெளிவாக இருக்கும். தேவதையாகவும் தேவராகவும் ஆகுவதே இலக்கு ஆகும்.
5. நீங்கள் திறமைச் சித்தி அடையக்கூடிய ஒரு விநாடிக்குரிய அற்புதமான விளையாட்டு: ஒரு விநாடிக்குரிய விளையாட்டானது, நீங்கள் ஒரு நிமிடத்தில் சரீரத்தில் இருப்பதும் அடுத்த நிமிடத்தில் உங்களை அவ்யக்த ஸ்திதியில் ஸ்திரப்படுத்திக் கொள்வதும் ஆகும். இந்த ஒரு விநாடிக்குரிய விளையாட்டை நீங்கள் பயிற்சி செய்துள்ளீர்களா? நீங்கள் விரும்பிய ஸ்திதியில் விரும்பியபோது, உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருத்தல். இறுதிப்பரீட்சை ஒரு விநாடிக்குரியதாக மட்டுமே இருக்கும். ஒரு விநாடியில் குழப்பத்திற்கு உள்ளானவர்கள் தோல்வி அடைவார்கள். அசைக்க முடியாதவர்களாக இருப்பவர்கள் சித்தி எய்துவார்கள். இத்தகைய கட்டுப்படுத்தும் சக்தி உங்களுக்கு உள்ளதா? இப்போது, நீங்கள் இதை அதிவேகத்தில் பயிற்சி செய்ய வேண்டும். எந்தளவிற்குக் குழப்பம் உள்ளதோ, அதற்கேற்ப உங்களின் ஸ்திதியும் அதிகபட்சம் அமைதிநிறைந்ததாக இருக்கும். கடல் வெளியே அதிக சத்தத்துடனும், உள்ளே முற்றிலும் அமைதிநிறைந்ததாகவும் இருப்பதைப் போன்று, உங்களுக்கும் இத்தகைய பயிற்சி அவசியம். கட்டுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே உலகைக் கட்டுப்படுத்த முடியும். தம்மையே கட்டுப்படுத்த முடியாதவர்களால் எவ்வாறு உலகை ஆள முடியும்? உங்களுக்கு முற்றுப்புள்ளி இடும் சக்தி தேவை. ஒரு விநாடியில் விஸ்தாரத்தில் இருந்து சாரத்திற்குச் செல்லுங்கள். ஒரு விநாடியில், சாரத்தில் இருந்து விரிவாக்கத்திற்குள் செல்லுங்கள். இதுவே அற்புதமான விளையாட்டு ஆகும்.
6. தொடர்ந்து அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுங்கள்: ஆத்மாக்களான நீங்கள் சந்தோஷ ஊஞ்சலில் ஆடுவதைப் பார்க்கும்போது, சந்தோஷமற்றிருக்கும் ஆத்மாக்கள் சந்தோஷம் அடைகிறார்கள். உங்களின் கண்கள், வாய்கள், முகங்கள் அனைத்தும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். இத்தகைய சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆகுங்கள். இவ்வாறு சந்தோஷத்தைக் கொடுப்பவர்கள், தமது எண்ணங்களிலேனும் துன்ப அலைகளை அனுபவம் செய்ய மாட்டார்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்துவதன் மூலம், முழுமையான வெற்றியைப் பெறும் சதா சக்திசாலி ஆத்மா ஆகுவீர்களாக.முழுமையான வெற்றி அடைவதற்கு, உங்களின் ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரியுங்கள். இந்த ஒருமுகப்படுத்தும் சக்தியானது இலகுவாக உங்களைத் தடைகளில் இருந்து விடுவிக்கிறது. சிரமப்பட்டு உழைக்க வேண்டியதில்லை. ஒரேயொரு தந்தையே. வேறு எவரும் இல்லை. இந்த இலகுவான அனுபவம் இருப்பதுடன், உங்களின் ஸ்திதியும் நிலையாகவும் ஸ்திரமானதாகவும் ஆகும். அனைவருக்காகவும் நலம்விரும்பும் மனோபாவமும் சகோதரப் பார்வையும் காணப்படும். எவ்வாறாயினும், ஒருமுகப்படுத்துவதற்கு, உங்களின் மனமும் புத்தியும் உங்களின் கட்டளைகளுக்கேற்ப சதா செயற்படும்படியாக சக்திசாலி ஆகுங்கள். உங்களின் கனவுகளிலேனும், ஒரு விநாடிக்கேனும் எந்தவிதமான குழப்பமும் இருக்கக்கூடாது.
சுலோகம்:
தாமரை போன்று பற்றற்றவராக இருங்கள். நீங்கள் இறையன்பைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவீர்கள்.