15.12.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 21.03.85 Om Shanti Madhuban
சுயதரிசனச் சக்கரத்தால் வெற்றிப் பதக்கத்தை வெல்லுதல்.
இன்று, பாப்தாதா, ஆன்மீக சேனையின் கொமாண்டர் என்ற தனது ரூபத்தில் இருந்தவண்ணம் தனது ஆன்மீக சேனையைப் பார்க்கிறார். இந்த ஆன்மீக சேனையில், மகாவீர்கள் யார் என்றும், அவர்கள் எத்தகைய சக்திவாய்ந்த ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் பார்க்கிறார். பௌதீக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், நாளாந்தம் அதிசூட்சுமமான, சக்திவாய்ந்த வேகத்தைக் கொண்டுள்ள ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிக்கிறார்கள். அதேபோன்று, ஆன்மீக சேனையும் அதிசூட்சுமமான, சக்திவாய்ந்த ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் ஆகிவிட்டீர்களா? விநாசத்தை ஏற்படுத்தும் ஆத்மாக்கள் ஏற்கனவே இத்தகைய ஆயுதங்களைத் தயாரித்துவிட்டார்கள். அவர்கள் மைல்களுக்கு அப்பால் வீட்டில் அமர்ந்திருந்தாலும் அவற்றின் கதிர்களால் விநாசத்தை ஏற்படுத்த முடியும். அவர்கள் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தொலைவில் இருந்தவண்ணம், அவர்களால் தமது இலக்கைத் தாக்க முடியும். அதேபோன்று, ஆன்மீக சேனையும் கட்டியெழுப்பும் பணியைச் செய்யும் சேனையா? அவர்கள் விநாசத்திற்கான திட்டங்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். நீங்கள் புதிய படைப்பிற்கும் உலக மாற்றத்திற்குமான திட்டங்களைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருக்கும் சேனையினரான நீங்கள், அதற்குச் சமமான துரித கதியைக் கொண்ட ஆன்மீக வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறீர்களா? உங்களால் ஓரிடத்தில் அமர்ந்த வண்ணம், எங்கேயேனும் இருக்கும் எந்தவோர் ஆத்மாவையும் ஆன்மீக நினைவெனும் கதிர்களால் தொட முடியுமா? உங்களின் மாற்றத்திற்கான சக்தி, இத்தகைய துரித கதியில் செயற்பட ஆயத்தமாக உள்ளதா? நீங்கள் அனைவரும் ஞானத்தை, அதாவது, சக்தியைப் பெறுகிறீர்கள். ஞான சக்தியால், நீங்கள் சக்திவாய்ந்த ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் ஆகிவிட்டீர்களா? நீங்கள் மகாவீரர்கள் ஆகிவிட்டீர்களா அல்லது வீரர்கள் ஆகியுள்ளீர்களா? நீங்கள் வெற்றிப் பதக்கத்தைப் பெற்றுவிட்டீர்களா? பௌதீக இராணுவத்தில் இருப்பவர்கள் வெகுமதியாகப் பல வகையான பதக்கங்களைப் பெறுகிறார்கள். நீங்கள் அனைவரும் வெற்றிப்பரிசாக வெற்றிப் பதக்கத்தைப் பெற்றுவிட்டீர்களா? வெற்றிக்கு ஏற்கனவே உத்தரவாதம் உள்ளது. இத்தகைய நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டிருக்கும் மகாவீர் ஆத்மாக்கள், வெற்றிப் பதக்கத்திற்கான உரிமையைப் பெறுகிறார்கள்.
யாரெல்லாம் தமது வெற்றிப் பதக்கத்தை வென்றுள்ளார்கள் என பாப்தாதா பார்த்தார். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தால் வெற்றிப் பதக்கத்தை வென்றீர்கள். எனவே, நீங்கள் அனைவரும் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் ஆகிவிட்டீர்களா? இந்த ஆன்மீக ஆயுதங்களின் ஞாபகார்த்தம், உங்களின் ஞாபகார்த்த விக்கிரகங்களில் பௌதீகமாகக் காட்டப்பட்டுள்ளது. தேவியரின் ரூபங்களில் அவர்கள் ஆயுதங்களைப் பிடித்திருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பாண்டவர்களும் ஆயுதங்களைப் பிடித்திருப்பதாகவே காட்டப்படுகிறார்கள், அல்லவா? ஆன்மீக ஆயுதங்கள், அதாவது, ஆன்மீக சக்திகளே பௌதீக ஆயுதங்களில் வடிவில் காட்டப்பட்டுள்ளன. உண்மையில், குழந்தைகளான நீங்கள் அனைவரும் ஒரே வேளையில் ஒரே ஞானசக்தியை பாப்தாதாவிடமிருந்து பெறுகிறீர்கள். அவர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஞானத்தைக் கொடுப்பதில்லை. அப்படி இருக்கும்போது, நீங்கள் ஏன் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள்? எப்போதாவது பாப்தாதா எவருக்காவது தனியாகக் கற்பித்தாரா? அவர் உங்கள் அனைவருக்கும் ஒரே நேரத்திலேயே கற்பிக்கிறார், அப்படியல்லவா? அவர் உங்கள் அனைவருக்கும் ஒரே கல்வியையே கற்பிக்கிறார், அப்படியல்லவா? அல்லது, அவர் ஒரு குழுவுக்கு ஒன்றையும் இன்னொரு குழுவிற்கு வேறொன்றையும் கற்பிக்கிறாரா?
இங்கு, நீங்கள் ஆறுமாத இறை மாணவராக இருந்தாலென்ன அல்லது 50 வருட இறைமாணவராக இருந்தாலென்ன, நீங்கள் ஒரே வகுப்பிலேயே அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் வெவ்வேறாக அமர்ந்திருக்கிறீர்களா? பாப்தாதா ஒரே வேளையில் ஒரு கல்வியை, அனைவருக்கும் கற்பிக்கிறார். சிலர் பிந்தி வந்திருந்தாலும், ஏற்கனவே என்ன கற்பிக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் அதே கல்வியைத் தொடர்ந்து இப்போதும் கற்பிக்கிறீர்கள். நீங்கள் மீட்டல் பாடநெறியையும் கற்கிறீர்கள். அல்லது, பழையவர்களுக்கு உங்களின் பாடநெறியை விட வேறுபட்ட பாடநெறி கற்பிக்கப்பட்டதா? அதே பாடநெறி, அல்லவா? இங்கு 40 வருடங்கள் இருந்தவர்களுக்கான முரளி, ஆறு மாதங்களுக்கு மட்டும் இங்கிருப்பவர்களுக்கான முரளியைவிட வேறுபட்டதா? இருவருக்கும் அதே முரளியே, அல்லவா? கல்வி ஒன்றே, ஆசிரியரும் ஒன்றே. அவ்வாறாயின், ஏன் இந்த வரிசைக்கிரமம்? அல்லது, நீங்கள் அனைவரும் முதலாம் இலக்கத்தவர்களா? இலக்கங்கள் எவ்வாறு உருவாகின்றன? ஏனெனில், அனைவரும் படித்தாலும், நீங்கள் கல்வியின் அல்லது ஞானத்தின் ஒவ்வொரு கருத்தையும் ஓர் ஆயுதத்தின் அல்லது சக்தியின் வடிவில் உள்ளெடுக்கிறீர்களா அல்லது ஒரு கருத்தின் வடிவில் மட்டும் ஞானத்தைக் கிரகிக்கிறீர்களா என்பதிலேயே வேறுபாடு ஏற்படுகிறது. இது இலக்கத்தை உருவாக்குகிறது. சிலர் இதைக் கேட்கும்போது, அதை ஒரு கருத்தின் வடிவில் மட்டுமே தமது புத்திகளில் கிரகிக்கிறார்கள். அவர்களால் தாம் கிரகித்த குறிப்பைப் பற்றி மிக நன்றாகப் பேசவும் முடியும். உங்களில் பெரும்பாலானோர், சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் பாடநெறிகளைக் கொடுப்பதிலும் கெட்டிக்காரர்கள். குழந்தைகள் சொற்பொழிவுகளும் பாடநெறிகளும் கொடுக்கும் முறையைப் பார்த்து பாப்தாதாவும் சந்தோஷப்படுகிறார். சில குழந்தைகள் பாப்தாதாவை விடச் சிறப்பாக சொற்பொழிவுகள் ஆற்றுகிறார்கள். அவர்கள் மிக நல்ல கருத்துக்களைப் பேசுகிறார்கள். எவ்வாறாயினும், ஞானத்தை ஒரு ஞானக்கருத்தாகக் கிரகிப்பதிலும் ஒவ்வொரு ஞானக் கருத்தையும் ஒரு சக்தியின் வடிவில் கிரகிப்பதிலுமே வேறுபாடு ஏற்படுகிறது. உதாரணமாக, நாடகம் என்ற கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இது நீங்கள் வெற்றி அடைவதற்கான ஒரு மிகப் பெரிய சக்திவாய்ந்த ஆயுதம் ஆகும். தமது நடைமுறை வாழ்க்கைகளில் நாடகத்தின் ஞானத்தின் சக்தியைக் கிரகித்திருப்பவர்களால் ஒருபோதும் அசைய முடியாது. சதா ஸ்திரமாகவும் ஆட்ட அசைக்க முடியாதவராகவும் இருப்பதற்கான விசேடமான சக்தி, இந்த நாடகம் என்ற கருத்தே ஆகும். அதை ஒரு சக்தியாகக் கிரகிப்பவர்கள் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டார்கள். எவ்வாறாயினும், அதை ஒரு கருத்தாக மட்டும் கிரகிப்பவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் நாடகத்தைப் பற்றிப் பேசுவார்கள். அவர்கள் குழப்பம் அடைந்தாலும், நாடகத்தைப் பற்றிப் பேசுவார்கள்! சிலவேளைகளில், அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழியும். ‘என்ன நடந்தது என எனக்குத் தெரியாது, அது என்னவென்று எனக்குத் தெரியாது.’ எனினும் அவர்கள் தொடர்ந்து நாடகத்தைப் பற்றிப் பேசுவார்கள்! ‘ஆமாம், நான் வெற்றியாளன் ஆகவேண்டும். நான் எவ்வாறாயினும் ஒரு வெற்றி இரத்தினமே. நான் நாடகத்தை நினைக்கிறேன். ஆனாலும் என்ன நிகழ்ந்தது என எனக்குத் தெரியவில்லை!’
எனவே, இதை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? இது, ஞானத்தை சக்தி அல்லது ஆயுதத்தின் வடிவில் கிரகித்தலா அல்லது ஒரு கருத்தாக மட்டும் கிரகித்தலா? அதேபோன்று, ஆத்மா ஒருவர் தன்னைப்பற்றி, ‘நான் சக்திசாலி ஆத்மா, நான் சர்வசக்திவானின் குழந்தை. ஆனால் இந்தச் சூழ்நிலை மிகவும் பெரியது. இவ்வாறான ஒன்று நிகழும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை’ எனக் கூறுவார். மாஸ்ரர் சர்வசக்திவானாக இருப்பதற்கும், அந்த வார்த்தைகளைப் பேசுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. நீங்கள் அவற்றை விரும்புகிறீர்களா? எனவே, நீங்கள் அதை எவ்வாறு அழைப்பீர்கள்? ஆத்மாவின் பாடம், கடவுளின் பாடம், நாடகத்தின் பாடம், 84 பிறவிகளின் பாடம் என்பவை உள்ளன. எத்தனை பாடங்கள் உள்ளன? அவை அனைத்தையும் சக்திகளின் வடிவில், அதாவது, ஆயுதங்களின் வடிவில் கிரகித்தல் என்றால் வெற்றியாளர் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் அவற்றை வெறுமனே கருத்துக்களின் வடிவில் கிரகித்தால், சிலவேளைகளில் அந்தக் கருத்து செயற்படும். ஏனைய வேளைகளில் அது செயற்படமாட்டாது. எவ்வாறாயினும், நீங்கள் அவற்றைக் கருத்துக்களாக மட்டுமே கிரகிக்கிறீர்கள். நீங்கள் சேவையில் மும்முரமாக இருப்பதனாலும் அந்தக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறுவதனாலும் நீங்கள் மாயையிடமிருந்து பாதுகாப்பாக இருக்கிறீர்கள். எவ்வாறாயினும், ஏதாவதொரு சூழ்நிலை அல்லது இராஜரீக வடிவத்தில் மாயை உங்களின் முன்னால் வரும்போது, உங்களால் சதா வெற்றியாளர் ஆகமுடிவதில்லை. நீங்கள் அதே கருத்தைப் பேசுகிறீர்கள். ஆனால், சக்தி இல்லாததால், உங்களால் சதா மாயையை வென்றவர் ஆகமுடிவதில்லை.
எனவே, நீங்கள் எவ்வாறு வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? அதனால், நீங்கள் ஒவ்வொரு ஞானக் கருத்தையும் ஓர் ஆயுதமாக அல்லது சக்தியாகக் கிரகித்துள்ளீர்களா என இப்போது சோதித்துப் பாருங்கள். நீங்கள் வெறுமனே ஞானம் நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்களா அல்லது சக்திசாலிகளாகவும் ஆகியுள்ளீர்களா? ஞானம் நிறைந்தவராக இருப்பதுடன், நீங்கள் சக்திசாலியாகவும் ஆகியுள்ளீர்களா? அல்லது, நீங்கள் வெறுமனே ஞானம் நிறைந்தவராக மட்டும் ஆகியுள்ளீர்களா? மிகச்சரியான ஞானம் ஒளியினதும் சக்தியினதும் வடிவில் இருக்கும். நீங்கள் அந்த ரூபத்தில் அதைக் கிரகித்துள்ளீர்களா? ஞானம் உங்களைச் சரியான நேரத்தில் வெற்றியாளர் ஆக்காவிட்டால், நீங்கள் ஞானத்தைச் சக்தி ரூபத்தில் கிரகிக்கவில்லை. போராளி ஒருவர் சரியான வேளையில் தனது ஆயுதங்களைப் பயன்படுத்தாவிட்டால், அவரை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? அவரை நீங்கள் மகாவீரர் என்று அழைப்பீர்களா? நீங்கள் ஏன் ஞானச் சக்தியைப் பெற்றுள்ளீர்கள்? நீங்கள் அதை மாயையை வென்றவர் ஆகுவதற்கே பெற்றுள்ளீர்கள், அல்லவா? அல்லது, அந்த நேரம் கடந்தபின்னரே நீங்கள் அந்தக் கருத்தை நினைவு செய்வீர்களா? ‘நான் இவ்வாறு செய்திருக்க வேண்டும். நான் இதை நினைத்திருக்க வேண்டும்.’ ஆகவே, விசையெனும் பாடநெறியை நீங்கள் எந்தளவிற்குச் செய்துள்ளீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் அனைவரும் பாடநெறியைக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறீர்கள், அல்லவா? பாடநெறியைக் கொடுப்பதற்குத் தயாராக இல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? உங்கள் அனைவராலும் பாடநெறியைக் கொடுக்க முடியும். நீங்கள் அதை மிகுந்த அன்புடனும் மிக நன்றாகவும் கொடுக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்குப் பாடநெறியை மிகுந்த அன்புடனும் களைப்பற்ற முறையிலும் ஆவலுடனும் கொடுப்பதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் மிக நல்ல நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். அதற்காக உங்களின் சரீரங்கள், மனங்கள், செல்வம் என்பனவற்றையும் பயன்படுத்துகிறீர்கள். இதனாலேயே, அதிகளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை நீங்கள் மிக நன்றாகச் செய்கிறீர்கள். எவ்வாறாயினும், காலத்திற்கேற்ப, நீங்கள் இப்போது இதில் சித்தி எய்தியுள்ளீர்கள். உங்களின் குழந்தைப்பருவம் முடிந்துவிட்டதல்லவா? நீங்கள் இப்போது உங்களின் இளமைப்பருவத்தில் இருக்கிறீர்களா அல்லது ஓய்வெடுக்கும் பருவத்தில் இருக்கிறீர்களா? எந்த ஸ்திதியை நீங்கள் அடைந்துள்ளீர்கள்? இந்தக் குழுவில், பெரும்பாலானோர் புதியவர்களே. எவ்வாறாயினும், வெளிநாட்டுச் சேவையில் பல வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. எனவே, இது இனிமேலும் குழந்தைப் பருவம் கிடையாது. நீங்கள் இப்போது இளமைப்பருவத்தை அடைந்துள்ளீர்கள். இப்போது, விசையெனும் பாடநெறியைச் செய்து, மற்றவர்களுக்கும் கொடுங்கள்.
எவ்வாறாயினும், இளைஞர்களிடம் அதிகளவு சக்தி உள்ளது. இளைஞர்களின் வயது மிகவும் சக்திவாய்ந்தது. அவர்களால் தாம் நினைத்ததைச் செய்ய முடியும். இதனாலேயே, தற்காலத்தில், அரசாங்கமே இளைஞர்களைப் பார்த்துப் பயப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனெனில், உலக விடயங்கள் என்று வரும்போது, இளைஞர் குழுவிற்கு புத்தியின் சக்தியும் உள்ளது. பௌதீக வலிமையும் உள்ளது. எவ்வாறாயினும், இங்கு, நீங்கள் அனைத்தையும் உடைப்பவர்கள் அல்ல. நீங்கள் அனைத்தையும் திருத்துபவர்கள். ஆகவே, அவர்கள் விசையைப் பிரயோகிக்கிறார்கள். ஆனால் இங்கு, நீங்கள் அமைதி சொரூபங்களான ஆத்மாக்கள். நீங்கள் பிழையாகிப் போனவற்றையும் சரியாக்குபவர்கள். நீங்கள் அனைவரின் துன்பங்களையும் நீக்குபவர்கள். அவர்களோ துன்பத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் நீங்களோ துன்பங்களை நீக்குகிறீர்கள். நீங்கள் துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர்கள். தந்தை எத்தகையவரோ, குழந்தைகளும் அவ்வாறே. ஒவ்வோர் ஆத்மாவிற்கும், உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் உங்களின் ஒவ்வோர் எண்ணமும் சந்தோஷத்தைக் கொடுக்கும். ஏனெனில், நீங்கள் துன்ப உலகை விட்டு வந்துள்ளீர்கள். நீங்கள் இப்போது துன்ப உலகில் இல்லை. நீங்கள் துன்ப உலகில் இருந்து சங்கமயுகத்திற்குள் வந்துள்ளீர்கள். நீங்கள் அதிபுண்ணிய சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். அந்த இளைஞர்களோ கலியுகத்தவர்கள். நீங்கள் சங்கமயுக இளைஞர்கள். ஆகவே, எப்போதும் இந்த ஞானத்தை சக்தி ரூபத்தில் உங்களுக்குள் கிரகிப்பதுடன் மற்றவர்களையும் அவ்வாறே செய்வதற்குத் தூண்டுங்கள். நீங்கள் விசையெனும் பாடநெறியைக் கொடுக்காவிட்டால், கருத்துக்களைக் கொடுக்கும் பாடநெறியையே கொடுப்பீர்கள். ஆகவே, இப்போது, மீண்டும் பாடநெறியை மீட்டல் செய்யுங்கள். ஒவ்வொரு ஞானக் கருத்திலும் என்ன சக்திகள் உள்ளன, எவ்வளவு சக்தி அதில் உள்ளது, எந்த நேரத்தில் என்ன சக்திகளைப் பயன்படுத்த முடியும், எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற பயிற்சியை இப்போது நீங்கள் உங்களுக்கே கொடுக்க முடியும். ஆகவே, இப்போது சோதித்துப் பாருங்கள்: நாள் முழுவதும் ஆத்மாவின் கருத்தை சக்திவாய்ந்த ஆயுதமாக நடைமுறையில் நீங்கள் பயன்படுத்தினீர்களா? நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் என்பதனால், உங்களால் உங்களுக்கே இந்தப் பயிற்சியைக் கொடுக்க முடியும். ஆத்மாவைப் பற்றிய கருத்துக்களைப் பிரித்து எடுக்கும்படி கூறினால், நீங்கள் எத்தனை கருத்துக்களை எடுப்பீர்கள்? அதிகமான கருத்துக்கள். சொற்பொழிவுகள் ஆற்றுவதில் நீங்கள் கெட்டிக்காரர்கள். எவ்வாறாயினும், ஒரு சந்தர்ப்பம் வரும்போது ஒவ்வொரு கருத்தையும் நடைமுறையில் உங்களால் எந்தளவிற்குப் பயன்படுத்த முடிகிறது என்று பாருங்கள். ‘நான் நன்றாகவே இருக்கிறேன், ஆனால் ஏதோ நடந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையாலேயே இது நடந்தது’ என நினைக்காதீர்கள். ஆயுதங்கள் எதற்காக? எதிரிகள் வரும்போது நீங்கள் பயன்படுத்துவதற்கா? அல்லது, எதிரிகள் வந்ததால் நீங்கள் தோல்வி அடைந்தீர்கள், மாயை வந்ததால் நீங்கள் தளம்பினீர்கள் என்பதா? மாயை (உங்களின் எதிரி) வரும்போது பயன்படுத்துவதற்கே ஆயுதங்கள் உள்ளன! நீங்கள் ஏன் சக்திகளைக் கிரகித்தீர்கள்? சரியான நேரத்தில் நீங்கள் வெற்றியாளர் ஆகுவதற்காக நீங்கள் சக்திசாலிகள் ஆகியுள்ளீர்கள். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? உங்களுக்கிடையே நீங்கள் தொடர்ந்து மிக நல்ல இதயபூர்வமான உரையாடல்களைச் செய்கிறீர்கள். பாப்தாதாவிற்கு சகல செய்திகளும் கிடைக்கின்றன. குழந்தைகளான உங்களின் இந்த உற்சாகத்தையும் படிப்பிலும் தந்தையிலும் நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் பார்க்கும்போது பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் சேவையையும் விரும்புகிறீர்கள். ஆனால், சிலவேளைகளில் பலமற்றவராகி, உங்களின் ஆயுதங்களைக் கைவிட்டுவிடுகிறீர்கள். அந்த வேளையில் உங்களைப் படம்பிடித்து உங்களுக்குக் காட்டப்பட வேண்டும். அது குறுகிய நேரத்திற்கே நிலைத்திருக்கிறது. அதிக நேரத்திற்கு அல்ல. எனினும், சதா தடைகளில் இருந்து விடுபட்டிருப்பதற்கும், சிலவேளைகளில் தடைகளுடனும் சிலவேளைகளில் தடைகளில் இருந்து விடுபட்டவராகவும் இருப்பதில் வேறுபாடு உள்ளது, அப்படியல்லவா? ஒரு கயிற்றில் எந்தளவிற்கு அதிகமாக முடிச்சுக்கள் இருக்கிறதோ, அந்தளவிற்கு அது பலவீனமாகவே இருக்கும். அதை மீண்டும் இணைக்க முடியும். ஆனால், முடிச்சு போட்ட ஒன்றுக்கும் போடாத ஒன்றுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. திருத்தப்பட்ட ஒன்றை நீங்கள் விரும்புவீர்களா? எனவே, இங்கும், ஒரு தடை வருகிறது. நீங்கள் அந்தத் தடையில் இருந்து விடுபடுகிறீர்கள். பின்னர் மீண்டும் தடைகள் வருகின்றன. அது உடைந்து பின்னர் மீண்டும் ஒட்டுவதைப் போன்றதே. ஆகவே, அந்த இணைப்பு இருக்குமல்லவா? இதனாலேயே, உங்களின் ஸ்திதியும் பாதிக்கப்படுகிறது.
சிலர் மிக நல்ல, தீவிரமான முயற்சியாளர்கள். அவர்கள் ஞானம் நிறைந்தவர்களும் சேவையாளர்களும் ஆவார்கள். அவர்கள் பாப்தாதாவின் கண்களிலும் குடும்பத்தின் கண்களிலும் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், உடைந்து பின்னர் திருத்தப்பட்ட ஓர் ஆத்மா சதா சக்திசாலியாக இருப்பதில்லை. இத்தகைய ஆத்மாக்கள் அற்ப விடயங்களுக்கும் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். சிலவேளைகளில், அவர்கள் சதா இலேசாகவும் மலர்ச்சியாகவும் இருப்பதுடன் சந்தோஷ நடனமும் ஆடுகிறார்கள். ஆனால், எல்லா வேளையும் அவர்களை அவ்வாறு பார்க்க முடியாது. அவர்கள் மகாராத்திகளின் பட்டியலில் இருப்பார்கள். ஆனால், இத்தகைய சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பவர்கள், நிச்சயமாகப் பலவீனமாகவே இருப்பார்கள். இதற்கான காரணம் என்ன? உடைவதும் திருத்துவதுமான இத்தகைய சம்ஸ்காரங்கள் அவர்களை உள்ளே பலவீனம் ஆக்குகின்றன. புறத்தே, எதுவும் இருக்காது. அவர்கள் மிக நன்றாகவே தோற்றம் அளிப்பார்கள். ஆகவே, ஒருபோதும் இந்த சம்ஸ்காரங்களை உருவாக்காதீர்கள். மாயை வந்தபோதும், நீங்கள் நன்றாக முன்னேறுகிறீர்கள் என எண்ணாதீர்கள். சிலவேளைகளில் உடைந்தும், பின்னர் மீண்டும் ஒட்டப்பட்டும் முன்னேறுவதை என்னவென்று சொல்வது? எப்போதும் முழுமையாக இருங்கள். சதா தடைகளில் இருந்து விடுபட்டிருங்கள். சதா மலர்ச்சியாக இருங்கள். சதா பாதுகாப்புக் குடையின் கீழ் இருங்கள். அந்த வாழ்க்கைக்கும் இந்த வாழ்க்கைக்கும் இடையில் வேறுபாடு உள்ளதல்லவா? இதனாலேயே, சிலரின் ஜாதகங்கள் முற்றிலும் சுத்தமாக உள்ளன என பாப்தாதா கூறுகிறார். மற்றவர்களின் ஜாதகங்களில் கறைகள் உள்ளன. அந்தக் கறைகள் அழிக்கப்பட்டாலும், அவை இன்னமும் புலப்படுகின்றன, அல்லவா? எந்தவிதமான கறைகளும் இல்லாதிருக்கட்டும். நீங்கள் எதை விரும்புவீர்கள் - சுத்தமான கடதாசியா அல்லது கறைகள் இருந்து பின்னர் நீக்கப்பட்ட கடதாசியா? கடதாசியைச் சுத்தமாக வைத்திருப்பதன் அடிப்படை மிகவும் இலகுவானது. இது மிகவும் கஷ்டம் என நினைக்காதீர்கள். இல்லை. இது மிகவும் இலகுவானது. ஏனெனில், காலம் நெருங்கி வருகிறது. காலமும் விசேடமானதோர் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளது. ஒருவர் எந்தளவிற்குப் பிந்தி வருகிறாரோ, அந்தக் காலத்திற்கேற்ப, அவர் மேலதிக உயர்த்தி என்ற பரிசைப் பெறுகிறார். இப்போதுள்ள பாகமான அவ்யக்த ரூபம், ஆசீர்வதிக்கப்பட்ட பாகம் ஆகும். எனவே, உங்களுக்கு நேரத்தின் உதவியும் இருக்கிறது. உங்களுக்கு அவ்யக்த பாகத்தின் உதவியும் அவயக்த ஒத்துழைப்பின் உதவியும் உள்ளன. இது துரித கதிக்கான நேரம் ஆகும். உங்களுக்கு இந்த உதவியும் உள்ளது. முன்னர், ஒரு கண்டுபிடிப்பை உற்பத்தி செய்வதற்குச் சிறிது காலம் எடுத்தது. இப்போது, அனைத்தும் தயார் நிலையில் கிடைக்கின்றன. அனைத்தும் தயாராக இருக்கும் காலப்பகுதியில் நீங்கள் வந்துள்ளீர்கள். இந்த ஆசீர்வாதம் சிறிய விடயம் அல்ல. முதலில் வந்தவர்கள் வெண்ணையைப் பிரித்தெடுத்தார்கள். நீங்கள் வெண்ணையை உண்ணும் காலத்தில் வந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அல்லவா? சிறிதளவு கவனம் செலுத்துங்கள். அதைவிட இது பெரிய விடயம் அல்ல. உங்களுக்கு சகல வகையான உதவிகளும் உள்ளன. ஆரம்பத்தில் வந்த ஆத்மாக்கள், இப்போது கருவி மகாராத்தி ஆத்மாக்களிடமிருந்து நீங்கள் பெறும் அளவு பராமரிப்பைப் பெறவில்லை. அவர்கள் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் அதிகளவு முயற்சி செய்வதுடன், உங்களுக்கு நேரமும் ஒதுக்குகிறார்கள். முதலில், பொதுவான பராமரிப்பே பெறப்பட்டது. எவ்வாறாயினும், நீங்கள் விசேடமான அதியன்பிற்குரிய, நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டவர்களாகப் பராமரிக்கப்படுகிறீர்கள். நீங்கள் அந்தப் பராமரிப்பிற்கான பிரதிபலனையும் கொடுப்பவர்கள், அல்லவா? அது சிரமம் இல்லை. ஒவ்வொரு கருத்தையும் சக்தியாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.
சதா மகாவீரர்களாக இருந்து, பாதுகாப்புக் குடையின் கீழ் இருக்கும் ஆத்மாக்களுக்கும், சதா காலத்திற்கேற்ப ஞான சக்தியைப் பயன்படுத்துபவர்களுக்கும், உறுதியான, அசைக்க முடியாத, நிலையான ஸ்திதியைக் கொண்டிருப்பவர்களுக்கும், தங்களை மாஸ்ரர் சர்வசக்திவான்களாக அனுபவம் செய்பவர்களுக்கும், சதா மாயையை வெல்லும் மேன்மையான குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா தாதிகளைச் சந்திக்கிறார்:
விசேடமான அதியன்பிற்குரிய இரத்தினங்கள், தமது ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சம்பாதிப்பது மட்டுமன்றி, ஏனையோரும் பலமில்லியன்களைச் சம்பாதிக்கிறார்கள். விசேடமான அதியன்பிற்குரிய இரத்தினங்கள் ஒவ்வோர் அடியிலும் தொடர்ந்து முன்னேறுகிறார்கள். நீங்கள் அநாதியான சாவியைப் பெற்றுள்ளீர்கள். அது தானாக இயங்கும் சாவி. கருவியாக இருத்தல் என்றால் தானியங்கி சாவியைப் பிரயோகித்தல் என்று அர்த்தம். விசேடமான அதியன்பிற்குரிய இரத்தினங்கள் நிச்சயமாக இந்த அநாதியான சாவியுடன் முன்னேற வேண்டும். உங்கள் அனைவரின் எண்ணத்திலும் சேவை கலந்துள்ளது. ஒரு நபர், ஏனைய ஆத்மாக்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவதற்குக் கருவி ஆகுகிறார். அவர்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் கருவியைப் பார்த்ததுமே அந்த அலை பரவுகிறது. இது சிலர் ஒருவரையொருவர் பார்த்ததும் நிறமூட்டப்படுவதைப் போன்றதாகும். எனவே, இந்த ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் இந்த இயல்பான அலை, மற்றவர்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக்கிறது. பொதுவாக, ஒருவர் நன்றாக நடனம் ஆடும்போது, மற்றவர்களின் பாதங்களும் நடனம் ஆட ஆரம்பிக்கும். அந்த அலை எங்கும் பரவும். உங்களின் விருப்பத்திற்கு மாறாக உங்களின் கைகளும் பாதங்களும் ஆடும். அச்சா.
மதுவனத்தின் சகல செயற்பாடுகளும் இனிதே நடக்கின்றன. மதுவனம், மதுவனவாசிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருவிக் குழந்தைகளைப் பார்க்கும்போது பாப்தாதா எப்போதும் கவலையற்றவராக இருக்கிறார். ஏனெனில் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். குழந்தைகள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல. தந்தை குழந்தைகளின் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனால், குழந்தைகள் தந்தைக்கு முன்னணியில் இருக்கிறார்கள். கருவிகள் தந்தையைக் கவலையற்றவர்கள் ஆக்குபவர்கள். எந்த சந்தர்ப்பத்திலும், எந்தவிதக் கவலையும் இல்லை. நீங்கள் தந்தைக்கு நல்ல செய்திகளையே கொடுக்கிறீர்கள். வேறு எங்கேயும், ஒரு குழந்தை மற்றவரை விட முன்னணியிலும், ஒவ்வொரு குழந்தையும் விசேடமானவராகவும் இருக்கும் குழந்தைகள் கிடையாது. எவருக்கும் இத்தகைய பல குழந்தைகள் இருக்க மாட்டார்கள். சிலர் சண்டை பிடிப்பார்கள். ஏனையோர் படிப்பார்கள். இங்கோ, ஒவ்வொருவரும் ஒரு விசேட இரத்தினம். ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பியல்பு உள்ளது.
ஆசீர்வாதம்:
நீங்கள் சக்திவாய்ந்த பார்வையையும் தூய்மைக்கான மனோபாவத்தையும் கொண்டிருப்பதன் மூலம், சகல பேறுகளையும் கொண்டுள்ள, துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்பவர் ஆகுவீர்களாக.
விஞ்ஞானத்தின் மருந்துகளுக்கு வலி, வேதனைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கான சக்தி உள்ளது. ஆனால், தூய்மை சக்திக்கு, அதாவது, மௌன சக்திக்கு ஆசீர்வாதங்களின் சக்தி உள்ளது. இந்தச் சக்திவாய்ந்த பார்வையும் தூய்மை என்ற மனோபாவமும் எல்லா வேளையும் நீங்கள் பேறுகளைப் பெறச் செய்யும். இதனாலேயே, உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் முன்னால் சென்று, அவர்கள் அழுது, கருணையை உங்களிடம் வேண்டுகிறார்கள். நீங்கள் உயிர்வாழும் ரூபத்தில் மாஸ்ரர் துன்பத்தை நீக்குபவர்களாகவும் சந்தோஷத்தை அருள்பவர்களாகவும் ஆகி, கனிவு உடையவர்கள் ஆகியிருப்பதனாலேயே, பக்தி மார்க்கத்திலும் நீங்கள் பூஜிக்கப்படுகிறீர்கள்.
சுலோகம்:
காலம் நெருங்கி வருவதற்கேற்ப, உண்மையான தபஸ்யாவும் ஆன்மீக முயற்சியும் எல்லையற்ற விருப்பமின்மையே ஆகும்.
ஓம் சாந்தி
விசேட அறிக்கை: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. மாலை 6.30 இலிருந்து 7.30வரை அனைவரும் சர்வதேச யோகத்திற்காக ஒன்றுகூடுவார்கள். உங்களை இப்போது அவதரித்துள்ள ஓர் அவதார ஆத்மாவாகக் கருதுங்கள். இந்த விழிப்புணர்வுடன் உங்களின் சரீரத்திற்குள் பிரவேசித்து, சரீரத்தில் இருந்து பற்றற்றவர் ஆகுங்கள். உங்களின் விதை ரூப ஸ்திதியுடன் அமர்ந்திருந்து சூழலில் இறை சக்திகளைப் பரப்பும் சேவையைச் செய்யுங்கள்.