01.07.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சரீர உணர்வு என்றால் அசுர நடத்தை என்று அர்த்தமாகும். அதை மாற்றித் தெய்வீக நடத்தையைக் கிரகியுங்கள், நீங்கள் இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.
கேள்வி:
ஓவ்வோர் ஆத்மாவும் தனது பாவச் செயல்களுக்காக எவ்வாறு தண்டனையை அனுபவம் செய்கின்றார்? அதிலிருந்து விடுபடுவதற்கு நீங்கள் எவ் வழிமுறையைப் பயன்படுத்த வேண்டும்?
8பதில்:
ஓவ்வொருவரும் தனது பாவச் செயல்களுக்காகக் கருப்பையாகிய சிறையில் தண்டனையை அனுபவம் செய்கிறார், இரண்டாவதாக, அவர் இராவணனின் சிறையில் பலவிதமான துன்பத்தையும் பெறுகின்றார். இச்சிறைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு பாபா வந்துள்ளார். அவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் பொருட்டு, நீங்கள் பண்பாடுடையவர்களாக வேண்டும்.ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து நாடகத் திட்டத்திற்கேற்ப விளங்கப்படுத்துகின்றார். தந்தையே வந்து உங்களை இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்கின்றார், ஏனெனில் அனைவருமே பாவாத்மாக்களாகிய, குற்றவாளிகள். ஏனெனில் உலகம் முழுவதிலுமுள்ள மனித ஆத்மாக்கள் அனைவரும் குற்றவாளிகள் ஆதலால், அவர்கள் இராவணனின் சிறையில் உள்ளதுடன், அவர்கள் தங்கள் சரீரங்களை நீங்கும்பொழுது, அவர்கள் கருப்பைச் சிறைக்குள் செல்கின்றார்கள். தந்தை வந்து உங்களை இரு சிறைகளிலிருந்தும் விடுவிக்கின்றார். பின்னர், அரைக் கல்பத்திற்கு, நீங்கள் இராவணனின் சிறைக்கோ அல்லது கருப்பைச் சிறைக்கோ செல்ல மாட்டீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, தந்தை படிப்படியாக உங்களை இராவணனின் சிறையிலிருந்தும் கருப்பைச் சிறையிலிருந்தும் அகற்றிக் கொண்டிருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். இராவண இராச்சியத்தில் நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். பின்னர், இராம இராச்சியத்தில், அனைவரும் பண்பாடுடையவர்கள். அங்கு தீய ஆவிகள் எவற்றினதும் செல்வாக்கு கிடையாது. சரீரத்தின் அகங்காரமுள்ளபொழுதே, ஏனைய தீய ஆவிகளும் வருகின்றன. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் அவர்களைப் போன்று (இலக்ஷ்மியும் நாராயணனும்) ஆகும்பொழுது மாத்திரம், தேவர்கள் என அழைக்கப்படுவீர்கள். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். இராவணனின் சிறையிலிருந்து உங்களை விடுவிப்பதற்காக, தந்தை வந்து உங்களுக்குக் கற்பிப்பதுடன், சீர்கெட்டுள்ள அனைவருடய நடத்தையையும் சீர்செய்கின்றார். அரைக் கல்பத்திற்கு உங்கள் நடத்தை சீர்கெட்டிருந்தது, இப்பொழுது அது முழுமையாகச் சீர்கெட்டுள்ளது. இந்நேரத்தில் அனைவருடைய நடத்தையும் தமோபிரதானாக உள்ளது. உண்மையிலேயே தெய்வீக நடத்தைக்கும் அசுர நடத்தைக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து உங்களுடைய நடத்தையைத் தெய்வீகமானதாக்கினால் மாத்திரமே, அசுர நடத்தையிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள். அசுர நடத்தையில் சரீர உணர்வே முதலாவதாகும். ஆத்ம உணர்வுடையவர்களின் நடத்தை ஒருபொழுதும் சீர்கெடுவதில்லை. அனைத்தும் உங்களுடைய நடத்தையிலேயே தங்கியுள்ளன. தேவர்களின் நடத்தை எவ்வாறு சீர்கெடுகின்றது? அவர்கள் பாவப் பாதையில் செல்லும்பொழுது, அதாவது, அவர்கள் விகாரமுடையவர்கள் ஆகும்பொழுது, அவர்களின் நடத்தை சீர்கெடுகின்றது. ஜெகநாதர் ஆலயத்தில் அவர்கள் பாவப் பாதையிலுள்ள அத்தகைய அவலட்சணமான உருவங்களைக் காண்பித்துள்ளார்கள். அது ஒரு மிகவும் பழைய ஆலயம், அவர்கள் அணிந்துள்ளதாகக் காண்பித்துள்ள ஆடைகள் போன்றவை அனைத்தும் தேவர்களுக்கானதாகும். எவ்வாறு தேவர்கள் பாவப் பாதையில் செல்கின்றார்கள் என அவர்கள் காட்டுகின்றார்கள். அதுவே முதற் குற்றப் பழக்கம் ஆகும். அவர்கள் காமச்சிதையில் ஏறிப் பின்னர் படிப்படியாக மாற்றமடைகையில், முழுமையாக அவலட்சணம் ஆகுகின்றார்கள். முதலில், அவர்கள் சத்தியயுகத்தில் உள்ளபொழுது, முழுமையாகவே அழகானவர்களாக உள்ளனர். பின்னர் இரு கலைகள் குறைவடைகின்றன. திரேதாயுகம் சுவர்க்கம் என அழைக்கப்பட முடியாது; அது பாதி சுவர்க்கமாகும். இராவணன் வரும்பொழுது மாத்திரமே உங்கள் மீது துருப் பிடிக்க ஆரம்பிக்கின்றது எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் இறுதியில் முழுமையான குற்றவாளிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் இந்நேரத்தில் 100மூ குற்றவாளிகள் எனக் கூறப்படுவீர்கள். நீங்கள் 100மூ விகாரமற்றவர்களாக இருந்து 100மூ விகாரமுடையவர்கள் ஆகிவிட்டீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்களைத் தொடர்ந்தும் சீர்திருத்துங்கள். இராவணனின் இச் சிறை மிகவும் பெரியதாகும். இது இராவண இராச்சியமாதலால், அனைவருமே குற்றவாளிகள் எனக் கூறப்படுவார்கள். இராம இராச்சியத்தைப் பற்றியும் இராவண இராச்சியத்தைப் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இராம இராச்சியத்துக்குச் செல்வதற்கு நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். எவரும் இன்னமும் முழுமையானவர்கள் ஆகவில்லை: சிலர் முதலிலும் சிலர் இரண்டாவதிலும் ஏனையோர் மூன்றாவதிலும் உள்ளனர். தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பித்து, தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்கும் உங்களைத் தூண்டுகின்றார். அனைவருக்கும் சரீர உணர்வுள்ளது. நீங்கள் சேவையில் ஈடுபட்டிருக்குமளவுக்கு, உங்களுடைய சரீர உணர்வு குறைவடையும். சேவை செய்வதால் மாத்திரம் அச்சரீர உணர்வு குறைக்கப்படும். ஆத்ம உணர்வுடையவர்கள் பெருமளவு சேவை செய்வார்கள். பாபா ஆத்ம உணர்வுடையவரும் அத்தகைய சிறந்த சேவையைச் செய்பவரும் ஆவார். இராவணனின் குற்றவாளிச் சிறையிலிருந்து அவர் அனைவரையும் விடுவித்து அனைவரையும் சற்கதி அடையச் செய்கின்றார். அங்கு எந்தச் சிறையும் இருக்காது. இங்கு, இரட்டைச் சிறைகள் உள்ளன. சத்தியயுகத்தில், நீதிமன்றங்களோ, பாவாத்மாக்களோ, இராவணனின் சிறையோ இல்லை. இராவணனின் சிறை எல்லையற்றதாகும். ஐந்து விகாரங்களின் இழைகளினால் அனைவரும் கட்டப்பட்டுள்ளார்கள்;; அங்கு எல்லையற்ற துன்பமுள்ளது. நாளுக்கு நாள், தொடர்ந்தும் துன்பம் அதிகரிக்கின்றது. சத்தியயுகம் பொன்னுலகம் எனவும், திரேதாயுகம் வெள்ளியுகம் எனவும் அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்கள் இரு கலைகளால் குறைவடைந்திருப்பதால், சத்தியயுகத்துச் சந்தோஷம் திரேதாயுகத்தில் இருக்க முடியாது. ஆத்மாக்களின் கலைகள் குறைவடையும்பொழுது, சரீரங்களும் அவ்வாறு ஆகுகின்றன. இராவண இராச்சியத்தில் நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகினீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இராவணனின் சிறையிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு இப்பொழுது தந்தை வந்துள்ளார். அரைச் சக்கரத்தின்; சரீர உணர்வு அகற்றப்படுவதற்குக் காலம் எடுக்கின்றது. நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். ஏற்கெனவே தங்;களுடைய சரீரங்களை நீக்கியுள்ளவர்களால் மீண்டும் இங்கு வந்து, வளர்ந்த பின்னர் ஞானத்தைப் பெற முடியும். தாமதமாகவே உங்களுடைய சரீரத்தை நீக்கும்பொழுது, நீங்கள் முயற்சி செய்வதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது. எவராவது மரணிக்கும்பொழுது, அவருடைய பௌதீகப் புலன்கள் பெரிதாகும்பொழுது மாத்திரமே அவரால் மீண்டும் முயற்சி செய்ய முடியும். அவர் விவேகியாகும்பொழுது, மாத்திரம் அவரால் எதையாவது செய்ய முடியும். தாமதமாகச் செல்பவர்களால் எதையும் கற்க இயலாதிருக்கும். அவர்கள் ஏற்கெனவே கற்றுக் கொண்டளவு மாத்திரம் கற்பார்கள். இதனாலேயே நீங்கள் மரணிப்பதற்கு முன்னர் முயற்சி செய்ய வேண்டும். இங்கு வருவதற்கு அவர்கள் நிச்சயமாகச் சாத்தியமானளவு முயற்சி செய்வார்கள். இந்நிலைமையில் பலர் வருவார்கள். விருட்சம் தொடர்ந்தும் வளரும். விளக்கம் மிகவும் இலகுவானது. தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்கு பம்பாயில் மிகச் சிறந்த சந்தர்ப்பம் உள்ளது: அவர் எங்கள் அனைவரினதும் தந்தை. உங்களுக்கு நிச்சயமாகத் தந்தையின் சுவர்க்க ஆஸ்தி தேவையாகும். அது மிகவும் இலகுவானதாகும். உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பவர் யார் என்கின்ற சந்தோஷம் உங்கள் இதயத்தினுள்ளே பொங்கியெழ வேண்டும். இது எங்களுடைய இலக்கும் இலட்சியமும் ஆகும். முன்னர், நாங்கள் சற்கதியில் இருந்து பின்னர் சீரழிவை அடைந்ததுடன், இப்பொழுது சீரழிவிலிருந்து சற்கதிக்குள் செல்லவும் வேண்டும். சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். துவாபர யுகத்தில் இராவண இராச்சியம் இருந்தபொழுது, இராவணனாகிய ஐந்து விகாரங்களும் சர்வவியாபி ஆகுகின்றன என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். விகாரங்கள்; சர்வவியாபியாக இருக்குமிடத்தில் எவ்வாறு தந்தை சர்வவியாபியாக இருக்க முடியும்? ஆத்மாக்கள் அனைவரும் பாவாத்மாக்கள். தந்தை உங்கள் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் உள்ளதாலேயே அவர் கூறுகின்றார்: நான் ஒருபொழுதும் அதைக் கூறவில்லை, ஆனால் அவர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, விகாரத்தில் வீழ்வதாலும், அவமதிக்கப்பட்டிருப்பதாலும் இதுவே பாரதத்தின்; நிலைமையாகி விட்டது. 5000 வருடங்களுக்கு முன்னர், பாரதம் சுவர்க்கமாக இருந்ததுடன் அனைவரும் சதோபிரதானாக இருந்தார்கள் என்பது கிறிஸ்தவர்களுக்கும் தெரியும். அவர்களுடைய புத்திகள் தமோபிரதான் ஆகிவிட்டதால், பாரத மக்கள் நூறாயிரக்கணக்கான வருடங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் (கிறிஸ்தவர்கள்) மேன்மையானவர்களாகவோ அல்லது சீரழிந்தவர்களாகவோ ஆகுவதில்லை. சுவர்க்கம் உண்மையில் இருந்தது என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: 5000 வருடங்களுக்கு முன்னர் இராவணனின் சிறையிலிருந்து குழந்தைகளாகிய உங்களை விடுவிப்பதற்கு நான் வந்தேன் என அவர்கள் கூறுவது சரியானதே. நான் உங்களை விடுவிப்பதற்கு மீண்டும் வந்துள்ளேன். அரைக் கல்பத்துக்கு இராம இராச்சியமும் அரைக் கல்பத்துக்கு இராவண இராச்சியமும் உள்ளன. குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கும்பொழுதெல்லாம் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பாபாவும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, இம்முறையில் விளங்கப்படுத்துங்கள். ஏன் நீங்கள் எல்லையற்ற துன்பத்தை அனுபவம் செய்;கின்றீர்கள்? முதலில் அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தபொழுது, அங்கு எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. அவர்கள் நற்குணங்கள் அனைத்தாலும் நிரம்பியவர்களாக இருந்தார்கள். இந்த ஞானம் ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணன் ஆகுவதற்கானது. இக் கல்வியினூடாகவே உங்கள் நடத்தையைத் தெய்வீகமானதாக ஆக்குகிறீர்கள். இந்நேரத்தில், இராவண இராச்சியத்திலுள்ள அனைவருடைய நடத்தையும் சீரழிந்து விட்டது. ஒரேயொரு இராமர்;; மாத்திரமே அனைவருடைய நடத்தையையும் சீர்திருத்துபவர். இந்நேரத்தில் பல்வேறு சமயங்கள் உள்ளன. மனிதர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் பெருமளவு வளர்கின்றது. அது அதே வழியில் அதிகரிக்கத் தொடங்கினால், அங்கு எவ்வாறு அனைவரும் உண்பதற்குப் போதியளவு உணவு இருக்கும்? அத்தகைய விடயங்கள் சத்தியயுகத்தில் இருக்காது. அங்கு துன்பத்துக்கான கேள்வியே கிடையாது. இக்கலியுகம் அனைவரும் விகாரமுடையவர்களாக இருக்கின்ற துன்பபூமி ஆகும். அது சந்தோஷ பூமியாகும். அனைவரும் முழுமையாக விகாரமற்றவர்கள். நீங்கள் அவர்களுக்கு இதைத் திரும்பத் திரும்பக் கூறுவதால், அவர்களால் சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். தந்தை கூறுகின்றார்: நானே தூய்மையாக்குபவர்;. என்னை நினைவுசெய்வதால், உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை எவ்வாறு இதைக் கூறுவார்? ஒரு சரீரத்தைத் தத்தெடுப்பதால், அவர் நிச்சயமாகப் பேசுவார். ஒரேயொரு தந்தை மாத்திரம் தூய்மையாக்குபவரும் அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். நிச்சயமாக ஒருவரின் இரதத்தில் அவர் பிரவேசித்திருப்பார். தந்தை கூறுகின்றார்: தனது சொந்தப் பிறவிகளையே அறியாதவரின் இரதத்திலேயே நான் பிரவேசிக்கின்றேன். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது 84 பிறவிகளைப் பற்றிய ஒரு நாடகமாகும். ஆரம்பத்தில் வந்தவர்களே மீண்டும் வருவார்கள். அவர்களே பல பிறவிகளை எடுப்பார்கள், பின்னர் சில பிறவிகளை எடுப்பவர்களும் இருப்பார்கள். அனைவருக்கும் முதலில் தேவர்களே வந்தார்கள். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விரிவுரைகள் ஆற்றுவதற்குக் கற்பிக்கின்றார்: நீங்கள் இம்முறையில் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் மிக நன்றாக நினைவுசெய்வதில் நிலைத்திருந்தால், சரீர உணர்வு இல்லாதிருந்தால், அப்பொழுது உங்களால் சிறந்த விரிவுரைகளை ஆற்ற முடியும். சிவபாபா ஆத்ம உணர்வுடையவர். அவர் தொடர்ந்தும் கூறுகின்றார்: குழந்தைகளே, நீ;ங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருப்பீர்களாக! அங்கு விகாரங்கள் இல்லாதிருப்பதாக! அசுரத்தனம் எதுவும் உள்ளார இல்லாதிருப்பதாக! நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடாது! நீங்கள் எவரையும் அவதூறு செய்யக்கூடாது! குழந்தைகளாகிய நீங்கள் இங்குமங்கும் கேட்கும் வதந்திகளை ஒருபொழுதும் நம்பக்கூடாது. தந்தையை வினவுங்கள்: அவர் இதைக் கூறுகின்றார், அது உண்மையா? உங்களுக்கு பாபா கூறுவார். இல்லையேல், பலர் தாமதமின்றியே பொய்கள் கூறுவார்கள்: இன்ன இன்னார் உங்களைப் பற்றி இதைக் கூறினார். அவர்கள் இவ்வாறு கூறி அவரை முடித்துவிடுவார்கள். இவ்விடயங்கள் பெருமளவு நடைபெறுகின்றன என்பது பாபாவுக்குத் தெரியும். அவர்கள் தவறான கதைகளைக் கூறிப் பின்னர் ஏனையோரின் இதயங்களைப் பாழாக்குகின்றார்கள். ஆகவே, நீங்கள் ஒருபொழுதும் பொய்க் கதைகளைச் செவிமடுத்து உள்ளாரக் கொதிப்படையக்கூடாது. வினவுங்கள்: இன்ன இன்னார் என்னைப் பற்றி இதைக் கூறினார்களா? உள்ளாரச் சுத்தம் இருக்க வேண்டும். அவர்கள் கேள்விப்பட்டுள்ள வதந்திகளின் அடிப்படையில் சில குழந்தைகள் விரோதத்தை வளர்த்துக் கொள்கின்றார்கள். நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டுள்ளதால், நீங்கள் அவரை வினவ வேண்டும். பிரம்ம பாபா மீதும் எந்த நம்பிக்கையையும் கொண்டிராத பலர் உள்ளார்கள். அவர்கள் சிவபாபாவையும் மறக்கின்றார்கள். தந்தை அனைவரையும் மேன்மையானவர்கள் ஆக்குவதற்கு வந்துள்ளார். அவர் அனைவரையும் பெருமளவு அன்புடன் ஈடேற்றுகின்றார். நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெற வேண்டும். நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையானால், வினவ மாட்டீர்கள், நீங்கள் ஒரு பதிலைப் பெறவும் மாட்டீர்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவது என்ன என்பதை நீங்கள் கிரகிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் உலகில் அமைதியை ஸ்தாபிப்பதற்குக் கருவிகளாகி விட்டீர்கள். தந்தை ஒருவரினுடையதைத்; தவிர, எவருடைய வழிகாட்டல்களும் மேன்மையானவையாக இருக்க முடியாது. அதிமேன்மையான வழிகாட்டல்கள் கடவுளினுடையவை ஆகும், அவரிடமிருந்தே நீங்கள் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தையும் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களுக்கு நன்மை செய்து ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருங்கள். மகாராத்திகள் ஆகுங்கள். நீங்கள் கற்காதுவிடின், நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள்? இது ஒவ்வொரு கல்பத்துக்குமான விடயமாகும். சத்தியயுகத்திலுள்ள பணிப்பெண்களும் சேவகர்களும் வரிசைக்கிரமமானவர்கள். உங்களை மேன்மையானவர்கள் ஆக்குவதற்குத் தந்தை வந்துள்ளார், ஆனால் நீங்கள் கற்காதுவிடின், நீங்கள் என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள்? பிரஜைகள் மத்தியிலும் உயர்ந்த அந்தஸ்தும், தாழ்ந்த அந்தஸ்தும் உள்ளன. இது புத்தியினால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தாங்கள் எங்கு செல்கின்றார்கள், தாங்கள் மேன்மையானவர்களாகவா அல்லது சீரழிந்தவர்களாகவா ஆகுகின்றார்கள் என்பது மக்களுக்குத் தெரியாது. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: முன்னர், நீங்கள் சத்திய, திரேதா யுகங்களில் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் கலியுகத்தில் இருக்கின்றீர்கள். இந்நேரத்தில், மனிதர்களை மனிதர்களே உண்கிறார்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் மனிதர்கள் புரிந்துகொள்ளும் பொழுது மாத்திரம், அவர்களால் ஞானம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சில குழந்தைகள் ஒரு செவியால் செவிமடுத்து மற்றைய செவியினூடாக அதை வெளியே விடுகின்றார்கள். சிறந்த நிலையங்களிலுள்ள சிறந்த குழந்தைகள் ஒரு குற்றப் பார்வையைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நன்மை, இழப்பு, கௌரவம் போன்றவற்றைப் பற்றிக் கவனம் செலுத்துவதில்லை. குற்றப் பார்வையே பிரதான விடயமாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: காமமே கொடிய எதிரி. அதை வெற்றிகொள்ளும்பொருட்டு, நீங்கள்; பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. தூய்மையே பிரதான விடயம் ஆகும். அதன் காரணமாகப் பெருமளவு சண்டை ஏற்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. அதை நீங்கள் வெற்றிகொள்ளும்பொழுது மாத்திரம் நீங்கள் உலகை வெற்றி கொளவீர்கள். தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், அனைத்தையும் புரிந்துகொள்வீர்கள். ஸ்தாபனை நடைபெற்றிருக்கும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் கேட்கும் வதந்திகளை நம்புவதால், உங்களுடைய ஸ்திதி பாழாகுவதை ஒருபொழுதும் அனுமதிக்காதீர்கள். உள்ளாரச் சுத்தத்தைக் கொண்டிருங்கள். பொய்களைக் கேட்டு, உள்ளாரக் கொதிப்படையாதீர்கள். கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுங்கள்.2. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். எவரையும் அவதூறு செய்யாதீர்கள். நன்மை, இழப்பு, கௌரவம் என்பவற்றில் கவனம் செலுத்துகையில் குற்றப் பார்வையை முழுமையாக முடித்துவிடுங்கள். தந்தை உங்களுக்குக் கூறுவதை ஒரு செவியால் செவிமடுங்கள், ஆனால் மற்றையதினூடாக அது வெளியேறுவதை அனுமதிக்க வேண்டாம்!
ஆசீர்வாதம்:
நீங்கள் நம்பிக்கையினதும் போதையினதும் அடிப்படையில் ஒவ்வொரு பாதகமான சூழ்நிலையையும் வெற்றி கொண்டு, ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.இப்பொழுது பேறுகளில் ஏதேனும் குறை இருந்தாலும், யோகத்தின் மூலம் பேறுகளின் அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய அத்தகைய வெற்றியை அடையுங்கள். ஒவ்வாரு பாதகமான சூழ்நிலையிலும் நம்பிக்கையும் போதையும் உங்களை வெற்றியடையச் செய்யும். நீங்கள் மேலும் முன்னேறுகையில் காய்ந்த சப்பாத்திகளை உண்பதற்கு நேரிடும் அத்தகைய சோதனைகளும் வரும். எவ்வாறாயினும், உங்கள் நம்பிக்கை, போதை, யோகத்தில் வெற்றியின் சக்தி மூலம் அந்தக் காய்ந்த சப்பாத்திகளும் மென்மையாகி விடும். நீங்கள் விரக்தியடைய மாட்டீர்கள். வெற்றி சொரூபமாக இருக்கின்ற உங்கள் கௌரவத்தை வைத்திருங்கள், அப்பொழுது எவராலும் உங்களை விரக்தியடையச் செய்ய முடியாது. இதைச் சோதியுங்கள்: உங்களிடம் வசதிகள் இருக்குமாயின், அவற்றைச் சௌகரியமாகப் பயன்படுத்துங்கள், ஆனால் அவை எந்நேரத்திலும் உங்களை ஏமாற்ற மாட்டாது என்பதை உறுதிப்படுத்துங்கள்.
சுலோகம்:
ஒரு கருவியாகி உங்கள் பாகத்தை மிகச்சரியாக நடியுங்கள், நீங்கள் தொடர்ந்தும் அனைவரினதும் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.