25.04.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் தொடர்பை ஏனைய அனைவரிடமிருந்தும்; துண்டித்து, ஒரேயொருவருடன்; இணைத்துக் கொள்ளுங்கள். சகோதரத்துவப் பார்வையுடன் ஒருவரையொருவர் பார்த்தால், நீங்கள் சரீரத்தைப் பார்க்கமாட்டீர்கள். அப்பொழுது உங்கள் பார்வை தீயதாக இருக்காது. உங்களுடைய வார்த்தைகளிலும் சக்தி இருக்கும்.

கேள்வி:
தந்தை குழந்தைகளுக்குக் கடன்பட்டிருக்கின்றாரா அல்லது குழந்தைகள் தந்தைக்குக் கடன்பட்டிருக்கின்றார்களா?

8பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் உரிமையுள்ளவர்கள் என்பதால் தந்தையே உங்களுக்குக் கடன்பட்டுள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் செய்யும் தானத்திற்குப் பலனாக நூறு மடங்கை தந்தை உங்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். கடவுளி;ன் பெயரில் நீங்கள் எதனைத் தானம் செய்தாலும், உங்கள் அடுத்த பிறவியில் நீங்கள் அதற்கான பலனைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஒரு கைப்பிடி அரிசியைக் கொடுத்து, உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். ஆகவே, நீங்கள் மிகவும் பரந்த இதயம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். “நான் பாபாவிற்குக் கொடுத்தேன்” என்ற எண்ணத்தை ஒருபோதும் கொண்டிருக்காதீர்கள்.

ஓம் சாந்தி.
இதுவே, அதி மங்களகரமான சங்கமயுகம் என்பதை நீங்கள் நூதனசாலைகளிலும் (மியூசியம்), கண்காட்சிகளிலும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் மாத்திரமே விவேகிகள். ஆகவே, இதுவே அதி மங்களகரமான சங்கமயுகம் என்பதை நீங்கள் அனைவருக்கும் மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். சிறந்த சேவைக்கான இடம் நூதனசாலையாகும். பலர் அங்கு செல்கின்றனர். ஆனால் அங்கு சிறந்த சேவை செய்யக்கூடிய குழந்தைகள் வெகுசிலரே உள்ளனர். நிலையங்கள் அனைத்துமே சேவைக்கான இடங்களாகும். டெல்கியிலுள்ள நிலையத்தில் எழுதப்பட்டுள்ளது: ஆன்மீக நூதனசாலை. இது சரியான கருத்தல்ல. பலரும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள்: பாரதத்திற்கு நீங்கள் என்ன சேவை செய்கின்றீPர்கள்? கடவுள் பேசுகிறார்: இது ஒரு காடாகும். இந்நேரத்தில், நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் காட்டிற்கோ, பூந்தோட்டத்திற்N;கா உரியவர்கள் அல்ல. இப்பொழுது நீங்கள் பூந்தோட்டத்திற்குச் செல்வதற்கான முயற்சியைச் செய்கின்றீர்கள். நீங்கள், இந்த இராவண இராச்சியத்தை, இராம இராச்சியமாக மாற்றுகின்றீர்கள். உங்களுடைய செலவுகளை எவ்வாறு நீங்கள் சமாளிக்கின்றீர்கள் என்று மக்கள் உங்களிடம் வினவுகின்றார்கள். அவர்களிடம் கூறுங்கள்: பிரம்மகுமாரிகளாகிய நாங்களே, எங்கள் செலவுகளைச் சமாளித்துக் கொள்கிறோம். இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் சில நாட்களுக்கு இங்கு வந்திருந்து, நாங்கள் என்ன செய்கின்றோம், எங்களுடைய இலக்கும், இலட்சியமும் என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு இராச்சியத்தில் நம்பிக்கை இல்லாததாலேயே, அவர்கள் அரசர்களின் ஆட்சியை முடிவடையச் செய்துள்ளார்கள். இப்பொழுது அவர்களும் தமோபிரதான் ஆகியுள்ளார்கள். இதனாலேயே அவர்கள் விரும்பப்படுவதில்லை. நாடகத்திற்கு ஏற்ப, அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. நாடகத்தில் இடம்பெறுவது எதுவோ, அந்தப் பாகத்தையே நாங்கள் நடிக்கிறோம். ஸ்தாபனைப் பாகமும், ஒவ்வொரு கல்பத்திலும் தந்தையின் மூலம் தொடர்கிறது. குழந்தைகளாகிய நீங்களே உங்கள் செலவுகளைச் சமாளிக்கின்றீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் செலவுகளைச் சமாளித்துக் கொண்டு, உங்கள் சொந்த இராச்சியத்தை உருவாக்குகின்றீர்கள். வேறு எவருக்கும் இது தெரியாது. “அறியப்படாத போர்வீரர்கள்” என்ற உங்கள் பெயர் மிகவும் பிரபல்யமானது. உண்மையில் அந்த இராணுவத்தில் அறியப்படாத போர்வீரர்கள் இருப்பதில்லை. இராணுவ வீரர்களுக்கான ஒரு பதிவேடு வைக்கப்படும். ஒருவருடைய பெயரோ அல்லது இலக்கமோ பதியப்படாது இருப்பது சாத்தியமில்லை. உண்மையில் நீங்களே அறியப்படாத போர்வீரர்களாவீர்கள். உங்களுடைய பெயர் எந்தப் பதிவேட்டிலும் பதியப்படவில்லை. உங்களிடம் எந்த ஆயுதங்கள் போன்றவையுமில்லை. இங்கு பௌதீக வன்செயல் எதுவும் கிடையாது. யோக சக்தியின் மூலம் நீங்கள் உலகை வெல்கின்றீர்கள். கடவுள் சர்வசக்திவான். நீங்கள் நினைவு செய்வதன் மூலம் அவரிடமிருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்குத் தந்தையுடன் யோகம் செய்கிறீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகியதும், உங்களுக்கு ஒரு சதோபிரதான் இராச்சியம் தேவையாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் அதனை இப்போது ஸ்தாபிக்கின்றீர்கள். இருந்தாலும் கண்ணுக்குப் புலப்படாதவர்களே மறைமுகமானவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உங்களால் சிவபாபாவை அந்தக் கண்களால் பார்க்க முடியாது. நீங்கள் மறைமுகமானவர்கள். நீங்கள் மறைமுகமான முறையில் அவரிடமிருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும், தூய்மையானவர்களிடம் மாத்திரமே சக்தி இருக்கும் என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள். நீங்;கள் அனைவரும் சத்திய யுகத்தில் தூய்மையானவர்களாக இருப்பீர்கள். அவர்களின் 84 பிறவிகளின் கதையையும் தந்தை உங்களுக்குக் கூறுகிறார். நீங்கள் தந்தையிடமிருந்து சக்தியைப் பெற்று, தூய்மையாகி, பின்னர் தூய உலகின் இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். பௌதீக சக்தியினால், எவராலும் உலகை வெல்ல முடியாது. இது யோக சக்தி பற்றிய விடயமாகும். அவர்கள் சண்டையிடுகின்றார்கள், ஆனால் நீங்கள் இராச்சியத்தை உங்கள் கைகளில் ஏற்றுக்கொள்வீர்கள். தந்தை சர்வசக்திவான். ஆகையால் நீங்கள் அவரிடமிருந்து சக்தியைப் பெறவேண்டும். இப்பொழுது உங்களுக்குத் தந்தையையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் தெரியும். நீங்கள் மாத்திரமே சுயதரிசன சக்கரதாரிகள் என்பது உங்களுக்குத் தெரியும். எல்லோரிடத்திலும் இந்த விழிப்புணர்வு இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுவதால், உங்களிடம் இந்த விழிப்புணர்வு இருக்கவேண்டும். வெளியிலுள்ள அந்த மக்கள் இதனைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். இதனாலேயே, அவர்கள் இந்த ஒன்றுகூடலில் அமர்ந்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. அனைவரும் தூய்மையாக்கும் தந்தையைக் கூவி அழைக்கிறார்கள். ஆனால் எவரும் தன்னைத் தூய்மையற்றவர் என்று கருதுவதில்லை. அவர்கள் தொடர்ந்து பாடுகிறார்கள்: சீதைக்குரிய இராமரே தூய்மையாக்குபவர். நீங்கள் அனைவரும் மணவாட்டிகள். தந்தை மணவாளன் ஆவார். அனைவருக்கும் முக்தியை வழங்குவதற்காக அவர் வருகிறார். அவர் குழந்தைகளாகிய உங்களை அலங்கரிக்கிறார். நீங்கள் ஓர் இரட்டை என்ஜினைப் பெற்றிருக்கிறீர்கள். ஒரு ரோல்ஸ் றொயிஸ் மோட்டார் சிறந்த என்ஜினைக் கொண்டிருக்கும். தந்தையும் அவ்வாறானவரே. நீங்;கள் கூறுகிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எங்களைத் தூய்மையாக்கி, உங்களுடன் மீண்டும் அழைத்துச் செல்லுங்கள்! நீங்கள் அனைவரும் இங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் இசைக் கருவிகள் போன்றவற்றை இசைப்பதில்லை. எவ்விதமான கஷ்டம் என்ற கேள்விக்கே இடமில்லை. நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும், தொடர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் சந்திப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் தொடர்ந்தும் பாதையைக் காட்டுங்கள். தந்தை கூறுகிறார்: எனது பக்தர்களை அல்லது இலக்ஷ்மி, நாராயணன் அல்லது ராதை, கிருஷ்ணரின் பக்தர்களை நீங்கள் சந்திக்கும்போது அவர்களுக்குத் தானம் செய்யுங்கள். தானத்தை வீணாக்காதீர்கள். தகுதியானவர்களுக்கே தானம் வழங்கப்படும். தூய்மையற்ற மனிதர்கள் தொடர்ந்து தூய்மையற்ற மனிதர்களுக்கே தானம் செய்வார்கள். தந்தையே சர்வ சக்திவான். நீங்கள் அவரிடமிருந்து சக்தியைப் பெற்று, அதி மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள். இராவணன் வரும்போது, அந்நேரத்திலும், ஒரு சங்கம யுகம் இருக்கும் – அதாவது திரேதா மற்றும் துவாபர யுகங்களின் சங்கமம்;. இது கலியுகத்தினதும், சத்தியயுகத்தினதும் சங்கமமாகும். எவ்வளவு காலத்திற்கு ஞானம் இருக்கும், எவ்வளவு காலத்திற்கு பக்தி இருக்கும் போன்ற விடயங்கள் அனைத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர், நீங்கள் இவ் விடயங்களை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதே பிரதான விடயமாகும். எல்லையற்ற தந்தை வந்ததும், விநாசமும் இடம்பெறும். மகாபாரத யுத்தம் எப்போது இடம்பெற்றது? கடவுள் இராஜயோகத்தைக் கற்பித்தபோதாகும். புதிய உலகின் ஆரம்பமும், பழைய உலகின் முடிவும் என்றால், விநாசம் இடம்பெற வேண்டும் என்பதே அதன் அர்த்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். உலகம் காரிருளில் உள்ளது. இப்போது அதனை விழித்தெழச் செய்ய வேண்டும். அரைக் கல்பமாக அது உறங்கிக் கொண்டிருக்கின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, மற்றவர்களைச் சகோதரத்துவப் பார்வையுடன் பாருங்கள். அப்போது, எவருக்காவது நீங்கள் ஞானத்தைக் கொடுக்கும்போது, உங்கள் வார்த்தைகளில் சக்தி இருக்கும். ஆத்மாவே தூய்மையானவராகவும், தூய்மையற்றவராகவும் ஆகுகின்றார். ஓர் ஆத்மா தூய்மையாகும்போது, அவர் ஒரு தூய சரீரத்தைப் பெறுகின்றார். அவரால் அதனை, இப்போது பெற முடியாது. அனைவரும் தூய்மையாக வேண்டும். சிலர் யோக சக்தியினால் தூய்மையாகுவார்கள். மற்றவர்கள் தண்டனை மூலம் தூய்மையாகுவார்கள். நினைவு யாத்திரைக்கு முயற்சி தேவைப்படுகிறது. இதனை நீங்கள் பயிற்சி செய்வதற்கு, பாபா தொடர்ந்தும் உங்களைத் தூண்டுகிறார். பாதிரிமார் எங்கு சென்றாலும், அவர்கள் கிறிஸ்துவின் நினைவில் அமைதியாகச் செல்வதுபோன்று, நீங்களும் வெளியே எங்காவது செல்லும்போது, பாபாவின் நினைவில் செல்லுங்கள். அவர்கள் தொடர்ந்து கிறிஸ்துவை நினைவு செய்கின்றார்கள். பாரத மக்கள் பலரை நினைவு செய்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: ஒரேயொருவரைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். நாங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து முக்திக்கும், ஜீவன் முக்திக்குமான உரிமையைப் பெறுகின்றோம். ஜீவன் முக்தி ஒரு விநாடியில் கிடைக்கின்றது. சத்திய யுகத்தில் அனைவருக்கும் ஜீவன் முக்தி கிடைக்கின்றது. ஆனால் கலியுகத்தில் அனைவரும் பந்தன வாழ்வில் உள்ளார்கள். எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். அவர் தொடர்ந்து சகல இடங்களையும் சுற்றிப் பார்க்கிறார். இதுவே அதி மங்களகரமான சங்கம யுகம் என்ற செய்தியை மனிதர்களுக்குக் கொடுப்பது உங்கள் கடமையாகும். எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பதற்கு எல்லையற்ற தந்தை வந்துள்ளார். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் பாவங்கள் அகற்றப்படும். இந்த உண்மையான கீதையையே, தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். மனிதர்களுடைய கட்டளைகளைப் பின்பற்றி, நீங்கள் வீழ்ந்துவிட்டீர்கள். ஆனால் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பிரதானமான விடயம்: நடக்கும்போதும், இருக்கும்போதும், உலாவித் திரியும்போதும், தொடர்ந்து தந்தையை நினைவு செய்து, அவரின் அறிமுகத்தைக் கொடுங்கள். சின்னத்தை (பட்ஜ்) நீங்கள் உங்களுடன் வைத்திருங்கள். அதனை இலவசமாகக் கொடுப்பதானாலும், கொடுக்கலாம். எவ்வாறாயினும், அது தகுதி வாய்ந்தவர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட வேண்டும். தந்தை குழந்தைகளுக்கு முறைப்பாடு செய்கின்றார்: நீங்கள் உங்கள் பௌதீகத் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். இருந்தபோதும், உங்களுடைய பரலோகத் தந்தையாகிய என்னை, நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்! உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் தூய இல்லறப் பாதைக்கு உரியவர்களாக இருந்தீர்கள். இப்போது மீண்டும் நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். நீங்கள், கடவுளுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்பவர்கள். உங்களுக்குள்ளே சோதித்துப் பாருங்கள்: என்னுடைய புத்தி எங்காவது அலைபாய்கின்றதா? தந்தையை நான் எவ்வளவு நேரத்திற்கு நினைவு செய்தேன்? தந்தை கூறுகிறார்: உங்களை ஏனையவர்களிடமிருந்து துண்டித்து, ஒருவருடன் மாத்திரம் இணைத்துக் கொள்ளுங்கள். இதில், நீங்கள் எவ்வித தவறும் செய்யக்கூடாது. உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: மற்றவர்களை சகோதரப் பார்வையுடன் பாருங்கள். அப்போது அவர்களின் சரீரத்தை அவதானிக்க மாட்டீர்கள். அப்போது உங்கள் பார்வை தவறானதாக இருக்க மாட்டாது. இதுவே உங்கள் இலக்காகும். இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். அனைவரும் சகோதரர்களைப் பற்றிப் பேசுகிறார்கள் - இது ஒரு சகோதரத்துவம் என்று மக்கள் கூறுகிறார்கள். அது நல்லது. நாங்கள் பரமதந்தை, பரமாத்மாவின் குழந்தைகள். ஆகவே, தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கும்போது, நாங்கள் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறோம்? இவ்வாறு விளங்கப்படுத்தி, தொடர்ந்து முன்னேறுங்கள். தந்தைக்கு, சேவை செய்யக்கூடிய புத்திரிகள் பலர் தேவை. நிலையங்கள் தொடர்ந்து திறக்கப்படுகின்றன. மற்றவர்கள் பலருக்கு நன்மை செய்வதில் குழந்தைகள் ஆர்வமாக உள்ளார்கள். எவ்வாறாயினும், அனைவரையும் கவனித்துக் கொள்ளும் ஆசிரியர்களும் சிறந்த மகாராத்திகளாக இருக்கவேண்டும். ஆசிரியர்களும் வரிசைக் கிரமமே. தந்தை கூறுகிறார்: இலக்ஷ்மி-நாராயணன் கோவில் எங்கு உள்ளதோ, சிவன் கோவில் எங்கு உள்ளதோ, கங்கை ஆறு எங்கு உள்ளதோ, ஏராளமான மக்கள் எங்கு இருக்கின்றார்களோ, அங்கெல்லாம் நீங்கள் சென்று, சேவை செய்யவேண்டும். அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: கடவுள் கூறுகிறார்: காமமே மிகப் பெரிய எதிரியாகும். ஸ்ரீமத்தின்படி, தொடர்ந்து சேவை செய்யுங்கள். இது உங்களுடைய இறை குடும்பமாகும். நீங்கள் இங்கு வந்து, ஏழு நாட்களுக்கு பத்தியில் இருங்கள், இக்குடும்பத்துடன் இருங்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷமாக இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தையால் நீங்கள், பல்கோடி மடங்கு பாக்கியசாலிகள் ஆக்கப்படுகின்றீர்கள். கடவுளால் உங்களுக்குக் கற்பிக்க முடியுமென்பது உலகத்துக்குத் தெரியாது. இங்கு நீங்கள் கற்கின்றீர்கள். ஆகவே நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். அதி மேலானவர்கள் ஆகுவதற்காக நாங்கள் கற்கின்றோம். நீங்கள் மிகவும் பரந்த இதயமுடையவர்களாக இருக்கவேண்டும். நீங்கள் தந்தையை உங்களுக்குக் கடனாளி ஆக்குகின்றீர்கள். கடவுளின் பெயரில் நீங்கள் கொடுப்பன எவையாக இருந்தாலும், அதற்கான பலனை நீங்கள் அடுத்த பிறவியில் பெறுகின்றீர்கள், இல்லையா? நீங்கள் அனைத்தையும் பாபாவிற்குக் கொடுக்கும்போது, பாபாவும் உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கவேண்டும். நீங்கள் இந்த எண்ணத்தை ஒருபோதும் கொண்டிருக்கக் கூடாது: நான் பாபாவிற்குக் கொடுத்தேன். மக்கள் பலர் நினைக்கிறார்கள்: நான் இந்தளவு கொடுத்தேன். ஆகவே ஏன் எனக்கு விசேட உபசரணை வழங்கப்படுவதில்லை? நீங்கள் ஒரு கைப்பிடி அளவு அரிசியைக் கொடுத்து, உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். பாபாவே அருள்பவர். அரசர்கள் இராஜரீகமானவர்கள். ஓர் அரசனை நாங்கள் முதலில் சந்திக்கும்போது, அவருக்கு நாங்கள் ஒரு பரிசைக் கொடுப்போம். ஆனால், அவர் அதனைத் தனது கைகளால் வாங்குவதில்லை. தனது செயலாளரிடம் கொடுக்குமாறு அவர் சுட்டிக்காட்டுவார். சிவபாபாவே அருள்;பவர். ஆகவே அவர் எவ்வாறு உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்? அவர் எல்லையற்ற தந்தை. நீங்கள் அவருக்கு ஒரு பரிசைக் கொடுப்பீர்கள். ஆனால், பாபா அதற்குப் பிரதியுபகாரமாக உங்களுக்கு நூறு மடங்கு வழங்குவார். ஆகவே நீங்கள் பாபாவிற்குக் கொடுத்தீர்கள் என்ற எண்ணம் ஒருபோதும் உங்களுக்கு இருக்கக்கூடாது. நீங்கள் பெற்றுக்கொள்கின்றீர்கள் என்ற எண்ணத்தையே சதா கொண்டிருங்கள். அங்கு நீங்கள் பல்கோடீஸ்வரர்கள் ஆகுவீர்கள். நடைமுறையில் நீங்கள் பல்கோடி மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். பல குழந்தைகள் பரந்த இதயம் கொண்டவர்கள். மற்றவர்கள் பலர் உலோபிகளாகவும் உள்ளார்கள். தாங்கள் பல்கோடீஸ்வரர்களாக ஆகுகின்றார்கள் என்பதைக்கூட அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நாங்கள் மிகவும் சந்தோஷமடைகின்றோம். தந்தையாகிய கடவுள் இல்லாதபோது, அவர் தற்காலிகமான ஒரு காலத்திற்கு, மறைமுகமாக, உங்களுக்குப் பலனைக் கொடுக்கிறார். அவர் பிரசன்னமாக இருக்கும்போது, உங்களுக்கு 21 பிறவிகளுக்குக் கொடுக்கிறார். சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் நிரம்பி வழிகின்றது என்பது நினைவுகூரப்படுகின்றது. பாருங்கள். பல குழந்தைகள் இருக்கிறார்கள். யார் என்ன கொடுக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. தந்தைக்குத் தெரியும், தந்தை தங்கியிருக்கும் உறைக்கும் (பிரம்மா) தெரியும். அவர் மிகவும் சாதாரணமானவர். இதனாலேயே குழந்தைகள் இங்கிருந்து சென்றவுடன், அவர்களின் போதை மறைந்துவிடுகிறது. ஞானமும், யோகமும் இல்லாதபோது சிறு சச்சரவுகள் தொடர்கின்றன. சிறந்த குழந்தைகளையும் மாயை தோற்கடிக்கச் செய்கிறாள். மாயை, அவர்கள் தந்தையை விட்டு விலகிச் செல்லவும் செய்கிறாள். நீங்கள் யாரிடம் வந்துள்ளீர்களோ, அந்தத் தந்தையை உங்களால் நினைவு செய்ய முடியாதா? அகத்தில் அதிகளவு சந்தோஷம் இருக்கவேண்டும். நீங்கள் கூறிக்கொண்டிருந்த நாளும் வந்துவிட்டது: தந்தை வரும்போது, நாங்கள் அவருக்குச் சொந்தமானவர்கள் ஆகுவோம். கடவுள் வந்து, உங்களைத் தத்தெடுப்பதனால் நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள் என்று அழைக்கப்படுகிறீர்கள். ஆகவே நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கவேண்டும். ஆனால் மாயை, உங்கள் சந்தோஷத்தை இழக்கச் செய்கிறாள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கடவுள் எங்களைத் தத்தெடுத்துள்ளார். அவர் எங்களுடைய ஆசிரியராகி, எங்களுக்குக் கற்பிக்கிறார். உங்களுடைய பல்கோடி மடங்கு பாக்கியத்தை நினைவு செய்து, சந்தோஷமாக இருங்கள்.

2. உங்கள் பார்வையை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்: ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். சரீரத்தைப் பார்க்காதீர்கள். தந்தையுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், உங்கள் புத்தி அலைபாய்வதற்கு இடமளிக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்கள்மீது தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருந்து, உங்களுடைய சூட்சுமமான பலவீனங்களைப் பற்றிச் சிந்திப்பதன் மூலம் அவற்றை மாற்றுவீர்களாக.

வெறுமனே ஞானக் கருத்துக்களை மீட்டல் செய்வதும், அவற்றைப் பற்றிக் கூறுவதும், அவற்றைச் செவிமடுப்பதும் உங்கள்மீது தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பது என்பதல்ல. உங்கள்மீது தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பதென்றால், உங்களுடைய பலவீனங்களைப் பற்றியும், நீங்கள் செய்த சிறு சிறு தவறுகள் பற்றியும் சிந்தித்து, அவற்றை இல்லாமல் செய்து, மாற்றுவதாகும். இதுவே உங்கள்மீது தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பது என்பதன் அர்த்தம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஞானத்தை மிக நன்றாகக் கடைகின்றீர்கள், ஆனால் ஞானத்தை உங்களுக்காகப் பயன்படுத்தி, தாரணையின் சொரூபமாகி, உங்களை மாற்றிக் கொள்வதிலேயே நீங்கள் இறுதிப் பெறுபேற்றில் புள்ளிகளைப் பெற்றுக்கொள்வீர்கள்.

சுலோகம்:
ஒவ்வொரு கணமும் கரன்கரவன்ஹார் பாபாவை நினைவு செய்தால், நீங்கள் ‘நான்’ என்ற உணர்வின் அகங்காரம் எதனையும் கொண்டிருக்க மாட்டீர்கள்.