03.10.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எல்லையற்ற சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நீங்கள் தந்தையும் தாயுமானவருக்கு முன்னால் நேரில் வந்திருக்கிறீர்கள். தந்தை உங்களை ஆழ்ந்த துன்பத்திலிருந்து அகற்றி, அளவற்ற சந்தோஷத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

கேள்வி:
தந்தையொருவரே மறுபிறவிகள் எடுக்காது ஒதுங்கியிருக்கிறார். ஏன்?

பதில்:
ஏனெனில் உங்களைத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆக்கக்கூடிய ஒருவர் இருந்தாக வேண்டும். தந்தையும் மறுபிறவிகள் எடுப்பதாக இருந்தால், உங்களை அவலட்சணத்திலிருந்து அழகாக ஆக்கக் கூடியவர் யார்? இதனாலேயே தந்தை ஒதுங்கியிருக்கிறார்.

கேள்வி:
தேவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பது ஏன்?

பதில்:
காரணம், அவர்கள் தூய்மையாக இருக்கிறார்கள். அவர்களது தூய்மை காரணமாகவே அவர்களது செயற்பாடுகள் சீர்திருத்தப்பட்டனவாக இருக்கின்றன. தூய்மை இருக்கும் இடத்தில் அமைதியும் சந்தோஷமும் இருக்கும். தூய்மையே பிரதானமானது ஆகும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அவரே தந்தையாகவும் அதே சமயம் தாயும்தந்தையுமாகவும் இருக்கிறார். ‘நீங்களே தாயும்தந்தையும். நாங்கள் உங்கள் குழந்தைகள்.’ என்று நீங்கள் பாடினீர்கள். எல்லோரும் தொடர்ந்து கூவி அழைக்கிறார்கள். யாரை அவர்கள் கூவி அழைக்கிறார்கள்? பரம தந்தை, பரமாத்மாவையே அழைக்கிறார்கள். ஆனாலும், அவரது கருணையால் தாம் பெற்றுக் கொண்ட அளவற்ற சந்தோஷம் எதுவென்றோ அல்லது எப்போது அதைத் தாங்கள் பெற்றுக் கொண்டார்கள் என்றோ அவர்களுக்குப் புரிவதில்லை. அந்த அளவற்ற சந்தோஷம் என்பது எதைக் குறிக்கிறதென்று என்பதையேனும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இப்போது நீங்கள் இங்கே அவருக்கு முன்னால் இருக்கிறீர்கள். எவ்வளவு ஆழ்ந்த துன்பம் இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியும். இது துன்ப பூமியாகும். அதுவோ சந்தோஷ பூமியாகும். தாங்கள் சுவர்க்கத்தில் இருந்த போது 21 பிறவிகளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள் என்பது எவரது புத்தியிலும் பதிவதில்லை. முன்னர் உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கவில்லை. நீங்கள் தாயும்தந்தையுமான பரம தந்தை, பரமாத்மாவுக்கு முன்னால் இருக்கிறீர்கள் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். 21 பிறவிகளுக்குச் சுவர்க்க ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நீங்கள் இங்கே வருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது உங்களுக்குத் தந்தையைத் தெரியும். தந்தையிடமிருந்து நீங்கள் சக்கரம் முழுவதைப் பற்றியும் புரிந்து கொண்டு விட்டீர்கள். ஆரம்பத்தில் எங்களுக்கு அளவற்ற சந்தோஷம் இருந்தது. அதன் பின் துன்பம் அனுபவித்தோம். உங்கள் ஒவ்வொருவரது புத்தியிலும் இது வரிசைக்கிரமமாக இருக்கின்றது. மாணவர்களாகிய நீங்கள் இதை எப்போதும் நினைவிற் கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் இதை மறந்து விடுவதையும் இதனாலேயே நீங்கள் வாடிப் போகின்றீர்கள் என்பதையும் பாபா பார்க்கின்றார். உங்கள் ஸ்திதி ‘தொட்டாற் சிணுங்கி’ தாவரம் போல ஆகி விடுகிறது. மாயை உங்களைத் தாக்குகிறாள். அதன் பின், உங்களுக்கு இருக்க வேண்டிய சந்தோஷம் உங்களிடம் இருப்பதில்லை. அந்தஸ்து வரிசைக்கிரமமாகவே இருக்கிறது. நீங்கள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்கிறீர்கள். ஆனால், அங்கும் கூட அரசனிலிருந்து ஆண்டி வரை இருக்கிறார்கள். அங்கேயும் ஏழைப் பிரஜைகளும் பணக்காரப் பிரஜைகளும் இருக்கிறார்கள். சுவர்க்கத்திலும் அவ்வாறே உள்ளது. நரகத்திலும் அவ்வாறேயாகும். மிக உயர்ந்த நிலையும் இருக்கிறது மிகவும் தாழ்ந்த நிலையும் இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் அளவற்ற சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முயற்சி செய்கிறீர்கள் என்பது இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மிக்கும் நாராயணருக்கும் அளவற்ற சந்தோஷம் இருந்தது. தூய்மையே பிரதானமான விடயம் ஆகும். தூய்மையின்றி, உங்களால் அமைதியையோ செழிப்பையோ பெற்றுக் கொள்ள முடியாது. இதற்கு மிக நல்ல நடத்தை தேவைப்படுகிறது. தூய்மையின் மூலமே மக்களின் நடத்தை சீர்திருத்தப்படுகிறது. மக்கள் தூய்மையாக இருக்கும் போது அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் தேவர்களாகுவதற்காகவே இங்கே வந்திருக்கிறீர்கள். தேவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பவர்கள். மனிதர்களால் எந்நேரமும் சந்தோஷமாக இருக்க முடியாது. தேவர்களுக்கே சந்தோஷம் இருக்கிறது. அத்தேவர்கள் தூய்மையானவர்கள் என்பதாலேயே நீங்கள் அவர்களை வழிபாடு செய்தீர்கள். எல்லாமே தூய்மையில் தான் தங்கியிருக்கிறது. இதில் தான் தடைகளும் ஏற்படுகின்றன. உலகத்தில் அமைதி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். பாபா கூறுகிறார்: தூய்மையின்றி அமைதி ஏற்பட முடியாது. தூய்மையே முதலாவதும் பிரதானமானதுமான விடயம் ஆகும். தூய்மையின் மூலமே ஒருவரது நடத்தை சீர்திருத்தப்படுகிறது. தூய்மையற்றுப் போவதால், ஒருவரது நடத்தை பாழாகி விடுகிறது. மீண்டும் ஒருமுறை நீங்கள் தேவர்களாக விரும்பினால், தூய்மை நிச்சயமாகத் தேவைப்படுகிறது என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேவர்கள் தூய்மையானவர்கள் என்பதாலேயே தூய்மையற்ற மனிதர்கள் அவர்களை வீழ்ந்து வணங்குகிறார்கள். தூய்மையே பிரதானமானது ஆகும். ‘ஓ தூய்மையாக்குபவரே, வந்து, எங்களைத் தூய்மையாக்குங்கள்!’ என்று மக்கள் கூவி அழைக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: காமமே மிகக்கொடிய எதிரியாகும். அதனை வெற்றி கொள்ளுங்கள். அதனை வெற்றி கொள்வதாலேயே நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் தூய்மையாகவும் சதோபிரதானாகவும் இருந்த போது, அங்கே அமைதியும் சந்தோஷமும் இருந்தது. இது நேற்று நடந்தது போன்ற ஒரு விடயமே என குழந்தைகளாகிய நீங்கள் நினைவு செய்கிறீர்கள். நீங்கள் தூய்மையாக இருந்த போது, அளவிட முடியாத அமைதியும் சந்தோஷமும் இருந்தது. உங்களிடம் எல்லாமே இருந்தது. நீங்கள் மீண்டும் இலக்ஷ்மி, நாராயணர் ஆக வேண்டும். முற்றிலும் விகாரமற்றவர் ஆகுவதே இதில் பிரதானமான முதல் விடயமயாகும். இது நினைவுகூரப்படுகிறது. இதுவே ஞானயாகமாகும். இதில் நிச்சயமாகத் தடைகள் ஏற்படும். தூய்மை காரணமாக மக்கள் அளவற்ற தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அசுர சமுதாயமும் தேவ சமுதாயமும் நினைவுகூரப்பட்டிருக்கின்றன. சத்தியயுகத்தில் அவர்கள் தேவர்களாக இருந்தார்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்கிறது. அவர்களது முகங்கள் மனிதர்களுடையதைப் போல் இருந்தாலும், அவர்கள் தேவர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அங்கே அவர்கள் முற்றிலும் சதோபிரதானாக இருக்கிறார்கள். அங்கே குறைபாடுகள் எதுவுமே இல்லை. எல்லாமே அங்கே சம்பூரணமாக இருக்கும். தந்தை சம்பூரணமானவர் என்பதால், அவர் குழந்தைகளாகிய உங்களையும் சம்பூரணமானவர்கள் ஆக்குகிறார். நீங்கள் யோக சக்தியால் மிகவும் தூய்மையானவர்களாகவும் அழகானவர்களாகவும் ஆகுகிறீர்கள். உங்களை அவலட்சணத்திலிருந்து அழகாக்குவதற்காக வரும் பயணி என்றும் அழகானவர் ஆவார். அங்கே இயற்கையான அழகு இருக்கிறது. எவரையுமே அங்கே அழகானவர்களாக்க வேண்டியதில்லை. சதோபிரதானாகவும் அழகாகவும் இருப்பவர்கள் பின்பு தமோபிரதான் ஆகும்போது அவலட்சணமாகுகிறார்கள். பெயரே ஷியாம்-சுந்தராக (அவலட்சணமானவரும் அழகானவரும்) என்றிருக்கிறது. கிருஷ்ணர் ஏன் ஷியாம்-சுந்தர் என்று அழைக்கப்படுகிறார்? தந்தையைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு இதன் அர்த்தத்தை விளங்கப்படுத்த முடியாது. தந்தையாகிய கடவுள் உங்களுக்குக் கூறும் விடயங்களை வேறெந்த மனிதராலும் உங்களுக்குக் கூறமுடியாது. படங்களில் தேவர்களை சுயதரிசன சக்கரத்துடன் காட்டியிருக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தேவர்களுக்கு சுயதரிசன சக்கரம் அவசியமில்லை. சங்கு போன்றவற்றை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன தான் செய்வார்கள்? பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகளாக இருக்கிறீர்கள். நீங்களே சங்கை ஊத வேண்டியவர்கள். உலகத்தில் இப்போது எவ்வாறு அமைதி ஸ்தாபிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அத்துடன் கூடவே, உங்கள் நடத்தையும் நல்லதாக இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்திலும் கூட, நீங்கள் தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று உங்கள் நடத்தையைப் பற்றிப் பேசினீர்கள். ஆயினும், உங்கள் நடத்தையைத் தேவர்கள் சீர்திருத்துவதில்லை. அதைச் சீர்திருத்துபவர் இன்னொருவரே ஆவார். அந்த சிவபாபா அசரீரியானவர். அவரிடம் நீங்கள் ‘நீங்கள் சகல நற்குணங்களும் நிறைந்தவர்.’ என்று கூறப் போவதில்லை. சிவனது புகழ் வேறுபட்டதாகும். மக்கள் தேவர்களைப் போற்றிப் பாடுகிறார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு ஆகுவது எப்படி? ஆத்மாவே தூய்மையானவராகவும் தூய்மையற்றவராகவும் ஆகுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது தூய்மையாகுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சம்பூரணமாகும் போது, இந்தத் தூய்மையற்ற சரீரங்கள் இருக்கப் போவதில்லை. நீங்கள் சென்று, தூய சரீரங்களையே எடுப்பீர்கள். இங்கே தூய சரீரங்கள் எதுவுமே இருக்க முடியாது. பஞ்சபூதங்கள் கூடச் சதோபிரதானாக இருக்கும் போதே, தூய்மையான சரீரங்கள் இருக்க முடியும். புதிய உலகத்தில் எல்லாமே சதோபிரதானாக இருக்கும். இந்த நேரத்தில், பஞ்ச பூதங்களும் தமோபிரதானாக உள்ளன. இதனாலேயே எத்தனையோ பல அனர்த்தங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எத்தனை பேர் இறந்து போகிறார்கள் என்று பாருங்கள்! மக்கள் யாத்திரை போன்றவற்றிற்கு செல்கிறார்கள். அப்பொழுது விபத்துகள் ஏதும் ஏற்பட்டால் அவர்கள் இறந்து போகிறார்கள். நிலம், நீர் போன்றவை அளவற்ற சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்தப் பஞ்சபூதங்கள் எல்லாம் உங்களுக்கு உதவி செய்கின்றன. அழிவின் போது, தீடீர் வெள்ளம், புயல் என்பன ஏற்படும் போது அவையே இயற்கை அனர்த்தங்களாகும். மக்கள் உற்பத்தி செய்யும் குண்டுகள் போன்றவையும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை இறைவனின் அனர்த்தங்கள் என்று கூற முடியாது. அவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவையாகும். பூகம்பங்கள் போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. அந்த அனர்த்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பூமியின் பாரத்தைக் குறைக்கின்றன. பாபா எவ்வாறு உங்களை முற்றிலும் இலேசானவர்கள் ஆக்கி, தன்னோடு உங்களைப் புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். உங்கள் தலை பாரமற்றதாகும் போது, நீங்கள் மிகவும் விழிப்பானவர்களாகுகிறீர்கள். பாபா உங்களை முற்றிலும் இலேசானவர்களாக்குகிறார். உங்கள் துன்பமெல்லாம் அகற்றப்படுகிறது. இப்போது உங்கள் எல்லோரது தலைகளும் மிகவும் பாரமாக இருக்கின்றன. பின்னர், நீங்கள் எல்லோருமே இலேசானவர்களாகவும் அமைதியானவர்களாகவும் சந்தோஷமானவர்களாகவும் ஆகுவீர்கள். எவர் எம்மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பாபா எல்லோருக்கும் சற்கதி அருள வந்திருக்கிறாரே என்று எல்லோரும் சந்தோஷப்பட வேண்டும். ஸ்தாபனை பூர்த்தியாகியதும் சகல மதங்களும் அழிக்கப்பட்டு விடும். ஆரம்பத்தில் உங்கள் புத்திகளில் இந்த எண்ணங்கள் ஏதும் இருக்கவில்லை. இப்போது உங்களுக்கு விளங்குகிறது. பிரம்மா மூலம் ஸ்தாபனை இடம்பெற்றதென்றும், எண்ணற்ற சமயங்கள் அழிக்கப்பட்டன என்றும் நினைவுகூரப்பட்டுள்ளது. தந்தை ஒருவரே இந்தப் பணியை மேற்கொள்கிறார். சிவபாபாவைத் தவிர வேறு யாராலும் இதனைச் செய்ய முடியாது. வேறு யாருக்கும் இவ்வாறானதொரு அலௌகீகப் பிறப்பும் அலௌகீகப் பணியும் இருக்க முடியாது. தந்தை அதிமேலானவர் என்பதால், அவரது பணியும் மிக உயர்ந்ததாகும். அவர் கரன்கரவான்ஹாராக (செய்பவரும் செய்விப்பவருமாக) இருக்கிறார். உலகத்தில் பாவாத்மாக்களால் உருவாக்கப்பட்டிருக்கும் சுமையை அகற்றுவதற்காகத் தந்தை வந்திருக்கிறார் என்ற ஞானத்தை நீங்கள் எடுத்துரைக்கிறீர்கள். தந்தை ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபித்து, எண்ணற்ற சமயங்களை அழிப்பதற்காக வருகிறார் என்று நினைவுகூரப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் அத்தகைய மகாத்மாக்கள் ஆக்கப்படுகிறீர்கள். தேவர்களைத் தவிர வேறு யாருமே மகாத்மாக்களாக இருக்க முடியாது. இங்கே அவர்கள் பலரையும் மகாத்மாக்கள் என்று அழைக்கிறார்கள். ஆனால், மேன்மையான ஆத்மாக்கள் மட்டுமே மகாத்மாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சுவர்க்கம் இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. அங்கே இராவண இராச்சியம் இல்லை. அதனால் அங்கே விகாரம் என்ற கேள்வி எழமுடியாது. இதனாலேயே அது முற்றிலும் விகாரமற்ற உலகம் எனப்படுகிறது. நீங்கள் எவ்வளவுக்கு நிறைந்தவர்களாகுகிறீர்களோ அவ்வளவுக்கு நீண்ட காலத்திற்கு நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். சம்பூரணமற்றவர்களால் அந்தளவு சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. பாடசாலையிலும் சிலர் பூரணமடைவார்கள். சிலர் பூரணமற்றவர்களாக இருப்பார்கள். வேறுபாடு வெளிப்படையாகத் தெரியும். மருத்துவர் என்றால் மருத்துவர் தான் என்னும் போதிலும், சிலருக்கு மிகச் சிறிய வருமானமும் சிலருக்கு பெரியதொரு வருமானமும் கிடைக்கிறது. அதே போல தேவர்கள் தேவர்கள் தான் என்றாலும், அவர்களது அந்தஸ்தில் பெருமளவு வேறுபாடு காணப்படுகிறது. தந்தை வந்து, உங்களுக்கு இந்த மேன்மையான கல்வியைக் கற்பிக்கிறார். கிருஷ்ணரை ஒருபோதும் கடவுள் என்று அழைக்க முடியாது. கிருஷ்ணர் ஷியாம்-சுந்தர் என்று அழைக்கப்படுகிறார். அவலட்சணமான ஒரு கிருஷ்ணரைக் கூடக் காட்டுகிறார்கள். ஆனால், கிருஷ்ணர் அவலட்சணமானவராக இருக்க முடியாது. அவரது பெயரும் உருவமும் மாறுகிறது. ஆத்மா அவலட்சணமாகும் போது, அவர் வேறொரு பெயரும், உருவமும், இடமும், காலமும் கொண்டவராகவே இருக்கிறார். எல்லாமே உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால், ஆரம்பத்திலிருந்து எவ்வாறு நீங்கள் பாகங்களை ஏற்று, நடித்தீPர்கள் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். முதலில் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். அதன் பின், தேவர்களிலிருந்து அசுரர்களாகினீர்கள். வேறு யாருக்குமே தெரியாத 84 பிறவிகளின் அர்த்தத்தையும் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியிருக்கிறார். தந்தையே வந்து, உங்களுக்கு சகல இரகசியங்களையும் விளங்கப்படுத்துகிறார். தந்தை கூறுகிறார்: என் அன்புக்குரிய குழந்தைகளே, நீங்கள் என்னுடன் வீட்டிலே வசித்தீர்;கள். நீங்கள் சகோதரர்களாக இருந்தீர்கள். எல்லோரும் ஆத்மாக்களாக இருந்தீர்கள். அங்கே சரீரங்கள் இருக்கவில்லை. அங்கே தந்தையும் சகோதரர்களாகிய நீங்களுமே இருந்தீர்கள். வேறு எந்த உறவுமுறையும் இருக்கவில்லை. தந்தை மறுபிறவி எடுப்பதில்லை. நாடகத்திற்கேற்ப அவர் ஒதுங்கியிருக்கிறார். அவ்வாறானதே அவரது பாகமாகும். எவ்வளவு காலமாக நீங்கள் கூவி அழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றும் தந்தை உங்களுக்குக் கூறியிருக்கிறார். துவாபரயுகத்தில் இருந்து தான் நீங்கள் கூவி அழைக்க ஆரம்பித்தீர்கள் என்றல்ல. இல்லை. அதற்கு வெகு காலத்தின் பின்பே அவரை நீங்கள் கூவி அழைக்க ஆரம்பித்தீர்கள். தந்தை உங்களைச் சந்தோஷப்படுத்துகிறார். அதாவது, தந்தை உங்களுக்குச் சந்தோஷ ஆஸ்தியைத் தருகிறார். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா நாங்கள் உங்களிடம் பல தடவைகள் ஒவ்வொரு சக்கரத்திலும் வந்திருக்கிறோம். இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. பாபா, நாங்கள் உங்களை ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒருமுறை சந்தித்து, இந்த ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறோம். மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் சரீரதாரிகளாக இருக்க, உங்களுக்குக் கற்பிப்பவரோ சரீரமற்றவராக இருக்கிறார். இந்தச் சரீரம் அவருக்குரியதல்ல. அவரே சரீரமற்றவர். அவர் இங்கே வந்து, ஒரு சரீரத்தைத் தனக்காக எடுத்துக் கொள்கிறார். சரீரம் ஒன்று இல்லாமல் எவ்வாறு அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்க முடியும்? அவர் ஆன்மாக்கள் அனைவரதும் தந்தையாவார். பக்தி மார்க்கத்தில், எல்லோரும் அவரைக் கூவி அழைத்து, உண்மையாகவே அவர்கள் உருத்திராட்ச மாலையை உருட்டுகிறார்கள். உச்சியில் மலர் (குஞ்சம்) காணப்படுகிறது. அதனையடுத்து, இரட்டை மணிகள் காணப்படுகின்றன. அவை இரண்டும் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. மக்கள் ஏன் முதலில் அந்த மலரை வணங்குகிறார்கள் என்பதையும் யாரது மணிமாலையை நீங்கள் உருட்டுகிறீர்கள் என்பதையும் இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்;கள். மக்கள் தேவர்களின் மணிமாலையை உருட்டுகிறார்களா அல்லது உங்களுடைய மணிமாலையை உருட்டுகிறார்களா? தேவர்களின் மணிமாலையையா அல்லது உங்களுடைய மணிமாலையையா? அதனை தேவர்களுடையது என்று கூற முடியாது. அது, தந்தை இங்கிருந்து கற்பிக்கின்ற பிராமணர்களுடையதே ஆகும். பிராமணர்களிலிருந்து பின்பு நீங்கள் தேவர்களாகுகிறீர்கள். இப்போது நீங்கள் கற்கின்றீர்கள். அதன் பின் அங்கே நீங்கள் சென்றதும் தேவ அந்தஸ்தை அடைவீர்கள். பிராமணர்களாகிய உங்களுடையதே மணிமாலையாகும். அது, தந்தையிடம் கற்று, முயற்சி செய்து, தேவர்களாகிய உங்களுடையதேயாகும். அது உங்களுக்குக் கற்பிப்பவருடைய மகத்துவம் ஆகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவோ சேவையாற்றி இருக்கிறார். அங்கே, எவரும் தந்தையை நினைப்பது கூட இ;ல்லை. பக்தி மார்க்கத்தில், நீங்கள் மணிமாலையொன்றை உருட்டி வந்தீர்கள். அந்த மலரே இப்போது வந்து, உங்களை மலர்களாக்குகிறார். அதாவது, உங்களை அவர் தன் மணிமாலையின் மணிகளாக்குகிறார். நீங்கள் அழகானவர்களாகுகிறீர்கள். இப்போது உங்களுக்கு ஆத்மாவைப் பற்றிய ஞானம் கிடைக்கின்றது. இப்போது உங்கள் புத்திகளில் முழு உலகத்தின் ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு பற்றிய ஞானம் இருக்கிறது. உங்கள் புகழ் மட்டுமே உள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் இங்கிருந்து உங்களைப் போல் மற்றவர்களையும் பிராமணர்களாக்குகிறீர்கள். அதன் பின், அவர்களை சுவர்க்கவாசிகளாகிய தேவர்களாக்குகிறீர்கள். தேவர்கள் சுவர்க்கத்தில் வாழ்கிறார்கள். நீங்கள் தேவர்களாகும் போது, அங்கே உங்களுக்குக் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய ஞானம் எதுவும் இருக்காது. பிராமணக் குழந்தைகளாகிய நீங்களே இப்போது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். வேறு யாரும் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்வதில்லை. நீங்கள் மிக, மிக பாக்கியசாலிகள். ஆனாலும், மாயை உங்களை மறக்கச் செய்து விடுகிறாள். இந்த பாபா உங்களுக்குக் கற்பிக்கவில்லை. அவரும் ஒரு மனிதரே ஆவார். அவரும் கற்கிறார். இவரே இறுதியானவராவார். முதல் இலக்கத் தூய்மையற்றவராக இருந்தவரே முதல் இலக்கத் தூய்மையானவர் ஆகுகிறார். அவர் மிகவும் சந்தோஷமானவர் ஆகுகிறார். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்களுக்கு முன்னால் இருக்கிறது. தந்தை உங்களை மிகவும் மேன்மையானவர் ஆக்குகிறார். நீடூழி வாழ்வீர்களாக! உங்களுக்குப் புத்;திர பாக்கியம் கிடைக்கட்டுமாக! இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. தந்தை கூறுகிறார்: இந்த ஆசீர்வாதங்களை நான் கொடுப்பதாக இருந்தால், தொடர்ந்து அவற்றை நான் எல்லோருக்கும் கொடுக்க வேண்டியிருக்கும். நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்காகவே இங்கே வருகிறேன். கற்பதாலேயே நீங்கள் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்கிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, வெகு நாட்களுக்கு முன்பு தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. தந்தை சம்பூரணமானவராக இருப்பதைப் போல், உங்களையும் சம்பூரணமானவராக்கிக் கொள்ளுங்கள். தூய்மையைக் கிரகித்து, உங்கள் நடத்தையைச் சீர்திருத்திக் கொள்ளுங்கள். உண்மையான அமைதியையும் சந்தோஷத்தையும் அனுபவம் செய்யுங்கள்.

2. உலகத்தின் ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு பற்றிய ஞானத்தை உங்கள் புத்தியில் வைத்துக் கொண்டு, மக்களைப் பிராமணர்களாக்கி, அதன் பின் தேவகர்களாக்கும் சேவையைச் செய்யுங்கள். உங்கள் மேன்மையான பாக்கியத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

ஆசீர்வாதம்:
வசதிகளுடன் இல்லறத்தில் வாழும் போதும், ஒரு தாமரை மலர் போன்று அன்பாகவும் பற்றற்றவராகவும் நிலைத்திருக்கின்ற ஓர் எல்லையற்ற விருப்பமின்மை கொண்டிருப்பவர் ஆகுவீர்களாக.

உங்களுக்கு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால், அவற்றை பெரிய இதயத்துடன் பயன்படுத்துங்கள். அந்த வசதிகள் நீங்கள் பயன்படுத்துவதற்கானவையே, ஆனால் அதில் உங்கள் ஆன்மிக முயற்சிகளை அமிழ்த்திவிட அனுமதிக்காதீர்கள். முற்றாக சமநிலை இருக்கட்டும். வசதிகள் தீங்கானவை அல்ல. அவை உங்கள் கர்மாவினதும் யோகாவினதும் பலனாகும். எவ்வாறாயினும், வசதிகளுடன் இல்லறத்தில் வாழும் போது, ஒரு தாமரையை போன்று பற்றற்றவராகவும் தந்தையின் மீது அன்புடையவராகவும் இருங்கள். அவற்றை பயன்படுத்தும் போது, அவற்றின் செல்வாக்கிற்கு உள்ளாகாதீர்கள். எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவம் வசதிகளில் அமிழாதிருக்கட்டும். இது முதலில் உங்களில் வெளிப்படட்டும் அதன் பின்னர் சூழலில் பரவட்டும்.


சுலோகம்:
விரக்தியுடன் இருக்கும் ஒருவரை அவரது ஆன்மிக மரியாதையில் நிலைத்திருக்கச் செய்ய அவருக்கு உதவுவதே மிகச் சிறந்த சேவை ஆகும்.