25.08.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.01.85 Om Shanti Madhuban
சத்தியத்தின் மூலம் வெளிப்படுத்துகை.
இன்று, சக்தி தினத்தில், சக்திசாலியான தந்தை தனது சக்திவாய்ந்த குழந்தைகளைப் பார்க்கிறார். இன்றைய தினமே தந்தை பிரம்மா விசேடமான குழந்தைகளுக்கு சக்தியை ஆசீர்வாதமாகக் கொடுத்த விசேடமான தினம் ஆகும். இன்றைய தினமே, பாப்தாதா தனது சக்தி சேனையை உலக மேடையில் கொண்டு வந்த தினம் ஆகும். எனவே, அது சக்திகள் பௌதீக ரூபத்தில் புலப்படும் வகையில் தமது பாகங்களை நடிக்கும் தினம் ஆகும். தந்தை சிவன் சக்திகளினூடாக வெளிப்படுத்தப்படுகிறார். அவர் தொடர்ந்து தனது பாகத்தை மறைமுகமான முறையில் நடிக்கிறார். அவர் சக்திகளைப் புலப்படுகின்ற வெற்றியாளர்களாக உலகிற்கு வெளிப்படுத்துகிறார். குழந்தைகள் பாப்தாதாவிடமிருந்து சமமானவர்களாக இருப்பதற்கான ஆசீர்வாதத்தைப் பெற்ற தினம் இன்றே ஆகும். இன்றைய தினமே, குறிப்பாக அன்பான குழந்தைகள் தமது அன்பான ரூபத்தால் அவரின் கண்களில் அமிழ்ந்திருக்கும் தினம் ஆகும். இன்றைய தினமே, குறிப்பாக சக்திசாலி, அன்பான குழந்தைகளுடனான இனிமையான சந்திப்பினூடாக அழியாத சந்திப்பிற்கான ஆசீர்வாதத்தை பாப்தாதா வழங்கும் தினம் ஆகும். இன்றைய தினம், எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரின் இதயங்களில் தோன்றும் முதல் எண்ணத்தால் அமிர்தவேளையில் இனிமையான சந்திப்பைக் கொண்டாடும் தினம் ஆகும். இதயத்தில் மிக இனிமையான புகழ்ச்சிப் பாடல்களைப் பாடும், குறிப்பாக அன்பில் அலைகளில் மிதந்திடும் தினம் ஆகும். இன்று, அமிர்தவேளையில், பல குழந்தைகளின் அன்பு முத்துக்களின் மாலைகளில், ஒவ்வொரு முத்தின் மத்தியிலும் பாபா இருந்தார். அதில் ‘இனிய பாபா’ என்ற வார்த்தைகள் பிரகாசிப்பதை பாபா பார்த்தார். அங்கு எத்தனை மாலைகள் இருந்தன? இந்தப் பழைய உலகில் ஒன்பது இரத்தினங்களின் அட்டியலைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் பாப்தாதாவிடமோ அலௌகீக, தனித்துவ, விலைமதிப்பற்ற இரத்தினங்களின் பல அட்டியல்கள் உள்ளன. சத்தியயுகத்திலும் நீங்கள் இத்தகைய அட்டியல்களை அணிய மாட்டீர்கள். பாப்தாதா மட்டுமே, அதுவும் இந்த நேரத்தில் மட்டுமே குழந்தைகளால் கொடுக்கப்பட்ட இத்தகைய அட்டியல்களை அணிந்துள்ளார். இன்று, பல பந்தனங்களில் உள்ள கோபிகைகளின் அன்பு நிறைந்த இனிய பாடல்களையும் பிரிவின் வேதனை நிறைந்த பாடல்களையும் கேட்பதற்கான தினம் ஆகும். அதற்குப் பிரதிபலனாக, பாப்தாதா அன்பான, நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட, அன்பிலே திளைத்திருக்கும் ஆத்மாக்களுக்கு, வெளிப்படுத்துகைக்கான முரசங்கள் இப்போது அடிக்கப்போகின்றன என்ற நல்ல செய்தியைக் கொடுக்கிறார். ஆகவே, ஓ இலகுயோகிகளே, சந்திக்க முடியாமல் இருப்பவர்களே, இந்தச் சில நாட்கள் இப்போது முடிவிற்கு வந்துள்ளன. பௌதீகமான இனிய வீட்டில் இனிமையான சந்திப்பு நிச்சயமாக நிகழும். அந்தப் புண்ணிய தினம் நெருங்கி வருகிறது.
இன்றைய தினம், ஒவ்வொரு குழந்தையும் தமது இதயங்களில் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பதன் மூலம் இலகுவான வெற்றி என்ற உடனடிப் பலனை அடையும் தினம் ஆகும். இன்றைய தினம் எத்தனை மகத்தானது என்பதைக் கேட்டீர்களா? இத்தகைய மகத்தான தினத்தில், குழந்தைகள் அனைவரும் எங்கிருந்தாலும், அவர்கள் வெகு தொலைவில் இருந்தாலும், அவர்கள் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். பாப்தாதாவை வெளிப்படுத்தும் சேவைக்காக ஒவ்வொரு குழந்தையினதும் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் பிரதிபலனாக, பாப்தாதா அன்பு நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். ஏனெனில், பெரும்பாலான குழந்தைகளில், அவர்களின் இதயபூர்வமான சம்பாஷணைகளில் சேவை செய்வதற்கான அன்பான, உற்சாகம் நிறைந்த அலைகள் உள்ளன. இரண்டு விடயங்கள் உள்ளன: சத்தியங்கள், வெளிப்படுத்துகை. பாப்தாதா இவற்றைக் கேட்கும்போது என்ன செய்கிறார்? இவ்வாறு கூறுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், இதயங்களுக்குச் சௌகரியம் அளிக்கும் தந்தையால் ஒரே வேளையில் பலரின் இதய ஒலியைக் கேட்கக்கூடியதாக உள்ளது. சத்தியங்கள் செய்பவர்களை பாப்தாதா பாராட்டுகிறார். எவ்வாறாயினும், எப்போதும் அமிர்தவேளையில் இந்தச் சத்தியங்களைத் தொடர்ந்து மீட்டல் செய்யுங்கள். ஒரு முறை சத்தியம் செய்த பின்னர், அதை அங்கேயே விட்டுவிடாதீர்கள் - நான் இதைச் செய்ய வேண்டும், நான் இவ்வாறு ஆகவேண்டும். எப்போதும் இந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உங்களுக்குள் வைத்திருங்கள். இத்துடன், செயல்களைச் செய்யும்போது, நேரக்கட்டுப்பாட்டு வேளை என்ற வழிமுறையால் உங்களின் நினைவின் ஸ்திதியை நீங்கள் தொடர்ந்து வெற்றிகரமாகப் பேணுகிறீர்கள். அதேபோன்று, எதைச் செய்யும்போதும், உங்களைச் சோதிப்பதற்கும் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். இந்த முறையில், அவ்வாறு குறிக்கப்பட்ட நேரம் தொடர்ந்து நீங்கள் செய்த சத்தியத்தை வெற்றி ரூபமாக மாற்றும்.
வெளிப்படுத்துகைக்காக ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்கும் தனது வலது கரமான குழந்தைகளுடன் பாப்தாதா அன்பாகக் கைகுலுக்குகிறார். எப்போதும் தந்தைக்குச் சமமான விசேடமான அதியன்பிற்குரிய குழந்தையாக இருப்பதுடன், உற்சாகம் என்ற தைரியத்துடனும், நீங்கள் பாப்தாதாவிடமிருந்து பலமில்லியன் மடங்கு உதவியைத் தொடர்ந்து பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள். கீழ்ப்படிவானவர் (சுபாட்ரா) என்றால் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் (பாட்ரா) என்று அர்த்தம்.
மூன்றாவது வகையான குழந்தைகள், இரவு பகலாக அன்பிலே திளைத்திருப்பவர்கள். அவர்கள் அன்பைச் சேவையாகவே கருதுகிறார்கள். அவர்கள் களத்தில் வருவதில்லை. ஆனால், நிச்சயமாக, ‘எனது பாபா, எனது பாபா!’ என்ற பாடலைப் பாடுகிறார்கள். அவர்கள், நான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், நான் எதைச் செய்பவனாக இருந்தாலும், நான் உங்களுடையவன் எனத் தந்தையிடம் மிக இனிமையாகப் புகழ்ந்து பேசி வசப்படுத்துகிறார்கள். இத்தகைய அன்பான ஆத்மாக்களும் இருக்கிறார்கள். இத்தகைய அன்பான குழந்தைகளுக்கு பாப்தாதா நிச்சயமாக அன்பின் பலனைக் கொடுப்பார். அத்துடன் அவர் தைரியத்தையும் கொடுக்கிறார்: நீங்கள் இராச்சிய உரிமையுள்ளவர்கள் ஆகவேண்டும். நீங்கள் இராச்சியத்திற்குள் வருபவர்கள் ஆகவேண்டும். நீங்கள் அன்பானவர்களாக மட்டும் இருந்தால், அதுவும் பரவாயில்லை. நீங்கள் இராச்சிய உரிமையைக் கோர விரும்பினால், கற்பதன் மூலம் பெறுகின்ற அன்புடனும் சக்தியுடனும், அதாவது, ஞான சக்தியுடன் சேவை செய்வதால் பெறப்படும் சக்தியும் அத்தியாவசியமே. ஆகவே, தைரியமாக இருங்கள். தந்தை எப்போதும் உங்களின் உதவியாளராகவே இருக்கிறார். உங்களின் அன்பின் பிரதிபலனாக, நீங்கள் நிச்சயமாக ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உங்களுக்குள் சிறிதளவு தைரியம் இருந்து, நீங்கள் கவனம் செலுத்தினால், உங்களால் இராச்சிய உரிமையுடையவர் ஆகமுடியும். இன்றைய இதயபூர்வமான சம்பாஷணையின் பதிலைக் கேட்டீர்களா? பாபா சூட்சும வதனத்தில் இருந்து, இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகள் அனைவரின் பிரகாசத்தைப் பார்த்தார். கடைசியாக வந்த வெளிநாட்டுக் குழந்தைகள், ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் விரைவாக முன்னேறுவதன் மூலம், விரைவாகச் சென்று, முதலாவதாக வருகிறார்கள்.
வெளிநாடுகளில் இருப்பதனால் அவர்கள் எந்தளவிற்குத் தொலைவில் இருக்கிறார்களோ, அந்தளவிற்கு இதயத்திற்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். எனவே, இன்று, அவர்கள் மிக நல்ல ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் சம்பாஷணை செய்கிறார்கள். சில குழந்தைகள் மிகவும் இனிமையானவர்கள். அவர்கள் தமது இனிமையான பேச்சினால் தந்தையைக் களிப்பூட்ட முயற்சி செய்கிறார்கள். அவர்கள் இந்த விடயங்களை மிகவும் அப்பாவித்தனமாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். நீங்கள் சத்தியம் செய்ய வேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள். இவ்வாறே அவர்கள் அவரைக் குதூகலப்படுத்த முயற்சி செய்கிறார்கள். தந்தை என்ன சொல்வார்? நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்களாக! நீங்கள் வெற்றிநிறைந்தவராக இருப்பீர்களாக! நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்களாக! விடயங்கள் மிகவும் நீண்டதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளன. அவர் உங்களுக்கு எத்தனை விடயங்களைத்தான் கூறுவார்? எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் மிகவும் சுவாரசியமான முறையில் மிக நல்ல விடயங்களைக் கூறுகிறீர்கள். அச்சா.
சதா சேவை செய்வதற்கான அன்பையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பவர்களுக்கு, தகுதிவாய்ந்தவராகி, சகல பேறுகளையும் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுபவர்களுக்கு, பாப்தாதாவின் மேன்மையான, தெய்வீகச் செயல்களைத் தமது சொந்தச் செயல்களினூடாக வெளிப்படுத்துபவர்களுக்கு, தமது சொந்த தெய்வீக வாழ்க்கைகளினூடாக தந்தை பிரம்மாவின் வாழ்க்கைக் கதையைத் தெளிவாகக் காட்டுபவர்களுக்கு, இத்தகைய பாப்தாதாவின் சதா, சகபாடிக் குழந்தைகளுக்கு, சக்திவான் பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதாவின் முன்னால் அமர்ந்திருக்கும் தாதிஜியையும் தாதி ஜான்கியையும் பாப்தாதா சந்திக்கிறார்:
இன்று, உங்களின் நண்பியான தீதி, விசேடமான அன்பையும் நினைவுகளையும் அனுப்பியுள்ளார். இன்று, அவரும் சூட்சுமவதனத்திற்கு வந்திருந்தார். ஆகவே, தீதி தனது நினைவுகளை அனைவருக்கும் அனுப்பியுள்ளார். அவர் தனது ஒன்றுகூடலை (முன்னோடிக் குழுவினர்) பலமானது ஆக்குகிறார். அவர்களின் பணி, தொடர்ந்து உங்களுடையதுடன் சேர்த்து வெளிப்படுத்தப்படும். அவர்கள் இப்போது உறவுமுறையிலும் நெருக்கமாக இருக்கிறார்கள். நாட்டைப் பொறுத்தவரையிலும் நெருக்கமாக இருக்கிறார்கள். இதனாலேயே, அவர்களும் ஏதாவதொரு காரணத்திற்காகத் தமக்கிடையே சிறு குழுக்களாகச் சந்தித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு கிடையாது. ஆனால் தாம் ஒன்றுகூடி, புதியதொரு பணியைச் செய்ய வேண்டும் என்ற தொடுகை அவர்களின் புத்திகளில் ஏற்படுகிறது. ‘உலகின் நிலைமைகளுக்கேற்ப, எவராலும் செய்ய முடியாததை, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்ய வேண்டும்.’ அவர்கள் இந்தத் தொடுகையால் நிச்சயமாகச் சந்திக்கிறார்கள். எவ்வாறாயினும், இப்போது அந்தக் குழுவில் சில இளையவர்களும் சில பழையவர்களும் இருக்கிறார்கள். சகல வகையான குழந்தைகளும் சென்றுள்ளார்கள்: பௌதீகமாகச் சேவை செய்வதில் ஆர்வம் உடையவர்கள் சென்றுள்ளார்கள். இராச்சிய ஸ்தாபனைக்காகத் திட்டமிடும் புத்திகளைக் கொண்டிருப்பவர்கள் சென்றுள்ளார்கள். அவர்களுடன், தைரியத்தையும் உற்சாகத்தையும் அதிகரிப்பவர்களும் சென்றுள்ளார்கள். இன்று, பாப்தாதா முழுக் குழுவிலும் இந்த மூன்று வகையான குழந்தைகளையும் பார்த்தார். மூன்று வகையினரும் தேவைப்படுகிறார்கள். சிலர் திட்டம் இடுபவர்கள். ஏனையோர் நடைமுறையில் அவற்றைச் செய்பவர்கள். சிலர் தைரியத்தை அதிகரிப்பவர்கள். நல்லதொரு குழுவொன்று உருவாகியுள்ளது. எவ்வாறாயினும், இரண்டு குழுக்களும் ஒரேவேளையில் வெளிப்படுத்தப்படுவார்கள். இப்போது, வெளிப்படுத்துகை என்ற சிறப்பியல்பானது முகில்களின் பின்னால் உள்ளது. முகில்கள் கலைந்து செல்கின்றன. ஆனால் அவை முழுமையாக விலகிச் செல்லவில்லை. நீங்கள் மாஸ்ரர் ஞான சூரியன் என்ற சக்திவாய்ந்த ஸ்திதியை அடையும் அளவிற்கு, தொடர்ந்து முகில்கள் விலகிச் செல்லும். அவை நீக்கப்பட்ட அடுத்த விநாடியே, முரசங்கள் அடிக்கும். தற்சமயம், அவை விலகியவண்ணம் உள்ளன. அந்தக் குழுவினரும் அதிகளவு ஆயத்தங்களைச் செய்கிறார்கள். நீங்கள் இளைஞர் பேரணிக்கான திட்டங்களைச் செய்வதைப் போன்று, அவர்களும் தற்சமயம் இளைஞர்களே. அவர்களும் தங்களுக்கிடையே திட்டம் இடுகிறார்கள். பாரதத்தில் பல அரசியல் கட்சிகள் என்றிருந்த சிறப்பியல்பு இப்போது மாறி, கட்சிகள் குறைவடைந்து ஒரு கட்சியே முன்னேறிச் செல்கிறது, அப்படியல்லவா? புற ஒற்றுமையிலும் முக்கியத்துவம் உள்ளது. ஒற்றுமையின்மை என்பது பலவீனம் அடைந்து, ஒற்றுமை பலம்வாய்ந்தது ஆகுகிறது. இதுவே ஸ்தாபனையின் இரகசியத்தில் ஒத்துழைப்பின் பாகம் ஆகும். அவர்கள் தமது மனங்களில் ஒத்திசைந்து போகவில்லை. ஆயினும், கட்டாயத்தின்பேரில் அவ்வாறு ஆகுகிறார்கள். கட்டாயத்தின்பேரில் சந்திப்பதும் அர்த்தபூர்வமானது. ஸ்தாபனையின் ஆழமான நடைமுறை, சம்பிரதாயங்கள் தெளிவாகுவதற்கான நேரம் இப்போது நெருங்கி வருகிறது. அப்போது நீங்கள் அனைவரும், முன்னோடிக் குழுவினர் என்ன செய்கின்றனர், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என நீங்கள் இப்போது கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என அவர்கள் கேட்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் இருவருமே நாடகத்திற்கேற்ப முன்னேறிச் செல்கிறீர்கள்.
ஜகதம்பாவே சந்திரன் ஆவார். அதனால் ஆரம்பத்தில் இருந்தே சந்திரனான ஜகதாம்பாவுடன் தீதிக்கு ஒரு விசேடமான பாகம் இருந்தது. பணியில் மம்மாவுடன் சேர்ந்திருக்கும் பாகம் அவருடையது. மம்மா சந்திரன் (குளிர்மையானவர்). இவர் தீவிரமானவர். இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்திசைகின்றன. இப்போது, அவர் சிறிது வளரட்டும். ஜகதாம்பா இப்போது குளிர்மை என்ற சகாஷைக் கொடுக்கிறார். ஆனால் திட்டமிடுவதற்கும் முன்னேறுவதற்கும் அவருக்கு ஒரு சகபாடி தேவையாக உள்ளது. புஷ்பசாந்தாவிற்கும் தீதிக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு தொடர்பு இருந்தது. இங்கும், அவர்கள் இருவரும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். பாவு (தாதா விஷ்வகிஷோர்) முதுகெலும்பாக இருக்கிறார். இங்கும், பாண்டவர்கள் முதுகெலும்பாக இருக்கிறார்கள். சக்திகள் முன்னணியில் இருக்கிறார்கள். எனவே, அந்தக் குழுவும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் ஒரு குழு ஆகும். திட்டமிடுதலைச் செய்பவர்கள் இப்போது சிறிதளவு களத்திற்குள் வருவார்கள். அதன்பின்னர் வெளிப்படுத்துகை இடம்பெறும். அச்சா.
பாப்தாதா இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகளைச் சந்திக்கிறார்:
பிந்தி வந்திருக்கும் நீங்கள் அனைவரும் விரைவாகச் செல்கிறீர்கள். உங்களுக்கு முதலாவதாக வருகின்ற ஊக்கமும் உற்சாகமும் உள்ளதல்லவா? எவரும் இரண்டாம் இலக்கத்தில் இல்லை. இலக்கு சக்திவாய்ந்ததாக இருக்கும்போது, இயல்பாகவே தகைமைகளும் சக்திவாய்ந்தாகவே இருக்கும். உங்கள் அனைவருக்கும் முன்னேறுவதற்கான ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் சொல்கிறார்: சதா இலேசாகவும் ஒளியாகவும் இருங்கள். உங்களின் பறக்கும் ஸ்திதியால் நிச்சயமாக முதல் இலக்கத்தவர் ஆகுங்கள். தந்தை அதிமேலானவராக இருப்பதைப் போன்று, ஒவ்வொரு குழந்தையும் அதிமேலானவர் ஆவார்.
சதா ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளுடன் பறப்பவர்கள் மட்டுமே பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வார்கள். இந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் வழிமுறை, கரன்கரவன்ஹார் தந்தை உங்கள் மூலம் நீங்கள் செய்யும் எந்தவொரு சேவையையும் செய்விக்கிறார் என்று கருதுவதே ஆகும். நீங்கள் வெறும் கருவி ஆவீர்கள். அதைச் செய்விக்கும் ஒரேயொருவர், உங்களின் மூலம் அதைச் செய்விக்கிறார். உங்களை அசையச் செய்கிறார். இதை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் சதா இலேசாக இருந்து, தொடர்ந்து பறப்பீர்கள். சதா இந்த ஸ்திதியைத் தொடர்ந்து அதிகரியுங்கள்.
பிரியாவிடை வேளையில்:
இந்த சக்தி தினமானது சதா உங்களைத் தொடர்ந்து சக்திசாலிகள் ஆக்குகிறது. இந்தச் சக்தி தினத்தில் வந்திருக்கும் நீங்கள் எப்போதும் சக்திசாலி ஆகுவதற்கான இந்த விசேட ஆசீர்வாதத்தை உங்களுடன் வைத்திருங்கள். எந்தவொரு சூழ்நிலை வந்தாலும், இந்தத் தினத்தையும் இந்த ஆசீர்வாதத்தையும் நினையுங்கள். இந்த விழிப்புணர்வு உங்களுக்கு சக்தி தரும். உங்களின் புத்தியெனும் பறக்கும் வாகனத்தின் மூலம் ஒரு விநாடியில் மதுவனத்திற்கு வாருங்கள். நீங்கள் எவ்வாறிருந்தீர்கள், என்னவாக இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் பெற்ற ஆசீர்வாதத்தையும் நினையுங்கள். மதுவனவாசி ஆகுவதன் மூலம் நீங்கள் ஒரு விநாடியில் சக்தியைப் பெறுவீர்கள். மதுவனத்திற்கு எவ்வாறு வருவது என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? இது இலகுவானது. நீங்கள் இதை பௌதீக வடிவில் கண்டுள்ளீர்கள். பரந்தாமத்திற்கு வருவது உங்களுக்குச் சிரமமாக இருக்கக்கூடும். ஆனால் மதுவனத்திற்கு வருவது கஷ்டம் இல்லை. எனவே, ஒரு விநாடியில், ரிக்கற் இல்லாமல் எந்தவிதச் செலவும் இல்லாமல் மதுவனவாசி ஆகுங்கள். மதுவனம் தொடர்ந்து உங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். இங்கிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் உள்ளது. எவருக்கும் எந்தவிதமான பலவீனங்களும் இல்லையல்லவா? அதேபோன்று, இந்த விழிப்புணர்வு உங்களைச் சக்திசாலி ஆக்கும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இறைபணியில் ஒத்துழைப்பதன் மூலம் அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்று, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.அனைவரின் ஊக்கமும் உற்சாகமும் இருக்கும்போது, வெற்றி நெருங்கி வந்து உங்களின் கழுத்து மாலையாகும். எந்தவொரு பெரிய பணிக்கும் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பெனும் விரல் அவசியமாகும். ஒவ்வொருவருக்கும் சேவை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்களால் அதைச் செய்ய முடியாது அல்லது அவர்களுக்கு நேரம் இல்லை என யாரும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. நடக்கும்போதும் உலாவரும்போதும், 10 நிமிடங்களுக்காயினும் சேவை செய்யுங்கள். உங்களின் ஆரோக்கியம் நன்றாக இல்லாவிட்டால், வீட்டில் இருந்தவண்ணம் சேவை செய்யுங்கள். உங்களின் மனதின் மூலம், உங்களின் சந்தோஷமான மனோபாவத்தின் மூலம், சந்தோஷம் தரும் உங்களின் ஸ்திதியின் மூலம், சந்தோஷமான உலகை உருவாக்குங்கள். இறைவனின் பணியில் ஒத்துழையுங்கள். நீங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.
சுலோகம்:
சடப்பொருளின் பிரபு என்ற ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருங்கள். இக்கட்டான சூழ்நிலைகளால் நீங்கள் குழப்பம் அடைய மாட்டீர்கள்.