18.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


எங்கள் அன்பிற்கினிய பிதா ஸ்ரீஜி பிரஜாபிதா பிரம்மாவின் நினைவு நாளன்று காலை வகுப்பில் வாசிக்கப்பட வேண்டிய இனிமையான , பெறுமதி அளவிட முடியாத மேன்மையான வாசகங்கள்


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சம்பூர்ணமடைய வேண்டுமாயின், உங்களுக்குள் என்ன குறைபாடுகள் உள்ளன என்பதனை நம்பகத்தன்மையுடனும் நேர்மையுடனும் சோதித்துப் பாருங்கள். தந்தையிடமிருந்து ஆலோசனையை பெற்று அந்தக் குறைபாடுகளை தொடர்ந்தும் அகற்றிடுங்கள்.

ஓம்சாந்தி.
ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஒரேயொரு தந்தையின் மீது அன்பு உள்ளதாலேயே, ஆத்மாக்களையிட்டுக் கூறப்படுகின்றது: தீயினால் அவர்களை எரிக்க முடியாது, நீரினால் அவர்களை மூழ்கடிக்க முடியாது. அத்தகைய ஆத்மாக்கள் இப்பொழுது தந்தையுடன் யோகம் செய்கின்றார்கள். விட்டில்பூச்சிகள் தம்மை அர்ப்பணிக்கின்ற சுவாலை என்றும் அவர் அழைக்கப்படுகின்றார். சிலர் வெறுமனே அவரைச் சுற்றி நடனம் ஆடுகின்றார்கள், ஆனால் சிலரோ தம்மை எரித்து அர்ப்பணிக்கின்றார்கள். உண்மையில், முழு உலகமும் சுவாலையில் அர்ப்பணிக்கப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சுவாலையான தந்தையுடன் சேர்ந்து இருப்பதுடன், அவரின் உதவியாளர்களாகவும் இருக்கிறீர்கள். அனைவரும் நிலையங்கள் உள்ள இடங்களுக்குச் சென்று குழந்தைகளாகிய உங்களுடாக சுவாலையில் அர்ப்பணிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: என்னிடம் தம்மை அர்ப்பணிப்பவர்களிடம், நான் 21 தடவைகள் அவர்களிடம் என்னை அர்ப்பணிக்கின்றேன். விருட்சம் மெதுவாகவே வளர்கின்றது என்பதை குழந்தைகள் இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். தீபமாலையின் போது சிறிய பூச்சிகள் எவ்வாறு தம்மை அர்ப்பணிக்கின்றன என்பது பார்க்கப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு எந்தளவிற்கு யோகம் உள்ளதோ, அந்தளவிற்கு நீங்கள் சக்திகளை பெற்றுக் கொள்வதுடன், அதற்கேற்ப அதிகளவில் சுவாலையைப் போன்றவர்களாகவும் நீங்கள் ஆகுகின்றீர்கள். இப்பொழுது அனைவரது ஒளியும் அணைந்து போயிருப்பதால், எவரிடமும் எந்தச் சக்தியும் எஞ்சவில்லை. ஆத்மாக்கள் அனைவரும் பொய்யானவர்களாக ஆகியுள்ளார்கள். இக்காலத்தில், போலியான தங்கமும் உண்மையான தங்கத்தைப் போன்று தெரிகின்றது. ஆனால் அதற்கு பெறுமதி இல்லை. அவ்வாறே, ஆத்மாக்கள் பொய்யானவர்கள் ஆகியுள்ளார்கள். உண்மையான தங்கத்திலேயே மாசு கலக்கப்படுகின்றது. ஆத்மாக்களில் மாசு கலக்கப்பட்டிருப்பதாலேயே, பாரதமும் முழு உலகமும் மிகவும் சந்தோஷமற்றிருக்கின்றன. நீங்கள் இப்பொழுது மாசை யோகத்தீயில் எரித்து தூய்மையாக வேண்டும்.

குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிடமே வினவ வேண்டும்: தந்தையிடமிருந்து நான் அனைத்தையும் பெற்று விட்டேனா? எனக்குள் ஏதேனும் குறைபாடு உள்ளதா? இலக்ஷ்மியை திருமணம் செய்யும் தகுதி உள்ளது என்று கருதுகின்றீர்களா என நாரதரிடம் வினவப்பட்டதைப் போன்று உங்களுக்குள்ளும் நீங்கள் பார்க்க வேண்டும். தந்தை மேலும் வினவுகின்றார்: நீங்கள் இலக்ஷ்மியை திருமணம் செய்யும் தகுதியை அடைந்து விட்டீர்களா? நீங்கள் இன்னமும் அதிகளவு முயற்சி செய்ய வேண்டிய தேவை உள்ளளவிற்கு உங்களிடம் உள்ள குறைபாடு என்ன? சிலர் சிறிதளவேனும் முயற்சி செய்யாதிருக்கின்றார்கள், ஆனால் ஏனையோரோ மிக நன்றாக முயற்சி செய்கின்றார்கள். புதுக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது: உங்களுக்குள் ஏதேனும் குறைபாடு உள்ளதா என என்னிடம் கூறுங்கள். நீங்கள் இப்பொழுது சம்பூர்ணம் அடைய வேண்டும் என்பதால், தந்தை உங்களை சம்பூர்ணம் அடையச் செய்வதற்காக இங்கே வந்திருக்கின்றார். எனவே, உங்களை சோதித்துப் பாருங்கள்: இந்த இலக்ஷ்மி நாராயணனைப் போன்று நான் சம்பூர்ணம் அடைந்திருக்கின்றேனா? இதுவே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். ஏதேனும் குறைபாடு இருப்பின், அவற்றைப் பற்றி நீங்கள் தந்தையிடம் கூறவேண்டும்: என்னால் இந்தக் குறைபாடுகளை அகற்ற முடியவில்லை. பாபா, இதனை செய்வதற்கான ஒரு வழியை எனக்குக் காட்டுங்கள். சத்திரசிகிச்சை நிபுணரால் மாத்திரமே நோயைக் குணப்படுத்த முடியும். எனவே, இந்த அந்தஸ்தை அடைய முடியாதிருப்பதற்கு, உங்களின் எக்குறைபாடுகள் காரணமாக உள்ளன என உங்களுக்குள் நம்பகத்தன்மையுடனும் நேர்மையாகவும் பாருங்கள். தந்தை கூறுவார்: ஆம், அவர்களைப் போன்று அவ்வாறாகவே உங்களால் ஆக முடியும். உங்கள் குறைபாடுகளைப் பற்றி நீங்கள் பேசினால் மாத்திரமே தந்தையால் உங்களுக்கு அதற்கேற்ப ஆலோசனையை வழங்க முடியும். பலரும் தமக்குள் குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றார்கள். சிலரிடம் கோபம் உள்ளது, சிலரிடம் பேராசையோ அல்லது வீணான எண்ணங்களோ உள்ளதால், அவர்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாதுள்ளது. ஆகையால் அவர்களால் வேறு எவரையும் கிரகிக்க செய்யவும் முடியாதுள்ளது. தந்தை ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றார். ஆனால், உண்மையில், அந்தளவிற்கு விளங்கப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது கிரகிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மந்திரம் மிகவும் சிறந்தது என்பதால் தந்தை அதன் அர்த்தத்தைத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். அவர் பல நாட்களாக விளங்கப்படுத்துகின்றார், அது ஒரேஒரு விடயமே: நாங்கள் எல்லையற்ற தந்தையுடன் இணைந்து இவ்வாறு ஆக வேண்டும். ஐந்து விகாரங்களை வெற்றி கொள்வது என்ற விடயம் இந்த நேரத்தையே குறிக்கின்றது. உங்களுக்குத் துன்பம் விளைவிக்கின்ற தீய சக்திகளை அகற்றுவதற்கான வழிகளை தந்தை உங்களுக்குக் காட்டுவார். ஆனால் அதற்கு, நீங்கள் முதலில் இந்தத் தீய சக்திகள் உங்களை எவ்வாறு தொந்தரவு செய்கின்றன என்பதைக் கூறவேண்டும். அந்தத் தீயசக்திகள் உங்களிடம் இல்லை என்பதை நீங்கள் அறிந்திருந்தாலும், விகாரங்களே பிறவி பிறவியாக உங்களுக்குத் துன்பத்தை விளைவித்துள்ளன. எனவே, நீங்கள் தந்தையிடம் அனைத்தையும் கூறவேண்டும்: எனக்குள் இன்ன இன்னத் தீய சக்திகள் உள்ளன, எனவே என்னால் அவற்றை எவ்வாறு அகற்ற முடியும்? கோபம் என்ற தீய சக்தியை பற்றி உங்களுக்கு ஒவ்வொருநாளும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் கண்கள் உங்களை அதிகளவு ஏமாற்றுகின்றன. ஆகையாலேயே நீங்கள் ஆத்மாக்களைப் பார்க்கின்ற பழக்கத்தை மிக நன்றாகப் பயிற்சி செய்ய வேண்டும். நான் ஓர் ஆத்மா, அவரும் ஓர் ஆத்மா. சரீரம் ஒன்றிருந்தாலும், நீங்கள் நோயிலிருந்து விடுபடுவதற்கே இவை அனைத்தும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதரர்கள். அப்படித்தானே? எனவே நீங்கள் இந்தச் சரீரத்தைப் பார்க்கக் கூடாது. ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் அவருடன் திரும்பிச் செல்லவுள்ளோம். தந்தை எங்களை தன்னுடன் அழைத்துச் செல்லவே வந்திருக்கின்றார். நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும்: நான் அனைத்து தெய்வீகக் குணங்களும் நிறைந்தவராக ஆகிவிட்டேனா? எந்தத் தெய்வீகக் குணம் தவறவிடப்பட்டுள்ளது? ஓர் ஆத்மாவை பார்க்கும் போது, அந்த ஆத்மாவிடம் இது இல்லை என்பதை பார்க்கக் கூடியதாக இருக்கும். எனவே, நீங்கள் அமர்ந்திருந்து அவருக்கு கரண்ட் (சக்தியை) வழங்க வேண்டும், அப்பொழுதே அவரிடமிருந்து அந்த நோய் அகற்றப்படும். நீங்கள் எதனையும் மறைக்கக் கூடாது. உங்கள் குறைபாடுகளைப் பற்றி நீங்கள் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருந்தால், தந்தையும் தொடர்ந்து உங்களுக்கு விளங்கப்படுத்துவார். நீங்கள் தந்தையுடன் பேச வேண்டும். பாபா, நீங்கள் இவ்வாறானவர்! பாபா, நீங்கள் மிக இனிமையானவர்! எனவே, தந்தையை நினைவு செய்வதாலும், அவரை நீங்கள் புகழ்வதாலும், இந்தத் தீயசக்திகள் தொடர்ந்தும் ஓடோடிவிடுவதுடன் நீங்கள் சந்தோஷமானவராகவும் ஆகுகின்றீர்கள். பலவகையான தீய ஆவிகள் உள்ளன. தந்தை நேரடியாக உங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றார் என்பதால் நீங்கள் அவருக்கு அனைத்தையும் கூறவேண்டும். பாபா, நான் இந்த நிலையில் இருப்பதால், நான் இழக்கப்படுகின்றேன் என நினைக்கின்றேன். நான் இதனை உணர்கின்றேன். தந்தைக்கு கருணை உள்ளது. தந்தையான ஒரேயொரு கடவுள் மாத்திரமே உள்ளார். அவரால் மாத்திரமே மாயையின் தீய சக்தியை விரட்ட முடியும். இந்தத் தீய ஆவிகளை அகற்றுவதற்காக நீங்கள் பல வாசல்களுக்குச் செல்கின்றீர்கள். இவர் மாத்திரமே ஒரேயொருவர். ஐந்து விகாரங்களாகிய தீய சக்திகளை அகற்றுவது எவ்வாறு என அனைவருக்கும் காட்டுவதற்கான வழி குழந்தைகளாகிய உங்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. இந்த விருட்சம் மெதுவாகவே வளர்கின்றது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் முற்றாக தொலைந்து விடும் அளவில் மாயை உங்களை நாலாதிசையிலிருந்தும் சுற்றி வளைக்கின்றாள். நீங்கள் தந்தையின் கைகளை விட்டுவிடுகின்றீர்கள். உங்கள் அனைவருக்கும் தந்தையுடன் ஒரு தொடர்பு உள்ளது. குழந்தைகள் அனைவரும் வரிசைக்கிரமமான, கருவிகள் ஆவீர்கள்.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் பாபா மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அந்தச் சரீரங்களேனும் உங்களுடையது அல்ல. அவை அழியப்போகின்றன. நாங்கள் தந்தையிடம் செல்ல வேண்டும். அத்தகைய ஞான போதையை நீங்கள் கொண்டிருப்பதால், உங்களிடம் அதிகளவு காந்தச்சக்தி இருக்கும். நீங்கள் அந்தப் பழைய ஆடைய களைய வேண்டும் என்பதையும் நீங்கள் இங்கேயே இருக்கப் போவதில்லை என்பதையும் நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். அந்தச் சரீரங்கள் மீதுள்ள பற்று அகற்றப்படட்டும். நீங்கள் சேவைக்காக மாத்திரமே அந்தச் சரீரங்களில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு அவற்றின் மீது பற்று இல்லை. நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவே வேண்டும். இந்தச் சங்கமயுக நேரத்தில் நிச்சயமாக நீங்கள் முயற்சி செய்யவே வேண்டும். இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் 84 பிறவிச்சக்கரத்தைச் சுற்றி வந்திருக்கின்றீர்கள் என்பதை புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ அந்தளவிற்கு இயற்கையும் உங்களுக்கு சேவகன் ஆகும். சந்நியாசிகள் எவரிடமும் எதற்காகவும் வேண்டுவதில்லை. அவர்கள் யோகிகள், அல்லவா? தாம் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக்கலக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது தர்மம் அத்தகையதாகும். அவர்கள் தமது நம்பிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள்: இவ்வளவே, நான் இப்பொழுது போகின்றேன். நான் இந்தச் சரீரத்தை நீங்கிச் செல்கின்றேன். எவ்வாறாயினும், அவர்களின் பாதை தவறானதாகும், அவர்களால் அவ்வாறு செல்ல முடியாது. அவர்கள் அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில், தேவர்களை சந்திப்பதற்காக, சிலர் தற்கொலையும் செய்கின்றார்கள். ~ஆத்மாவின் தற்கொலை| என நீங்கள் கூற முடியாது. அது நடக்க முடியாது. ஆனால், ஆம், சரீரத்தின் தற்கொலை இடம்பெற முடியும். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் அதிகளவு ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சேவை செய்தால், நீங்கள் தந்தையையும் நினைவுசெய்வீர்கள். சகல இடங்களிலும் சேவை செய்ய வேண்டி உள்ளது. ஆகையால் நீங்கள் எங்கும் சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம், ஒருவரும் உங்களை எதிர்க்க மாட்டார்கள். நீங்கள் யோகத்தில் நிலைத்திருந்தால், நீங்கள் அமரத்துவமாக இருப்பதைப் போன்றிருக்கும். நீங்கள் வேறு எந்த எண்ணங்களையும் சற்றேனும் கொண்டிருக்க மாட்டீர்கள், ஆனால் அந்த ஸ்திதி உறுதியாக இருக்க வேண்டும். முதலில், நீங்கள் உங்களுக்குள் பார்க்க வேண்டும்: எனக்குள் ஏதேனும் குறைபாடு உள்ளதா? உங்களில் எந்தக் குறைபாடும் இல்லையெனின், உங்களால் மிகச் சிறப்பாகச் சேவை செய்ய முடியும். தந்தை மகனைக் காட்டுவார், மகன் தந்தையை காட்டுவார். தந்தை உங்களை தகுதியானவர் ஆக்கியுள்ளார், குழந்தைகளாகிய நீங்கள் புதியவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களைத் திறமைசாலிகள் ஆக்கியுள்ளார். மிக நன்றாக சேவை செய்த பின்னர், மிக நல்ல குழந்தைகள் பலர் இங்கே வந்திருக்கின்றார்கள் என்பதை பாபா அறிவார். படங்களைப் பயன்படுத்தி பிறருக்கு விளங்கப்படுத்துதல் மிகவும் இலகுவாகும், ஆனால் படங்கள் இல்லாது விளங்கப்படுத்துதல் கடினமாகும். இரவுபகலாக, ஒருவரின் வாழ்வை எவ்வாறு தகுதியானது ஆக்குவது என சிந்தியுங்கள், அவ்வாறு செய்யும் போது, உங்கள் வாழ்விலும் முன்னேற்றம் இருக்கும். சந்தோஷம் நிலவுகின்றது, ஒவ்வொருவருக்கும் தமது சொந்த கிராமத்து மக்களையும் தமக்குச் சமமானவர்களையும் ஈடேற்றுவதற்கான உற்சாகம் உள்ளது. மேலும் தந்தை கூறுகின்றார்: புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பமாகின்றது. நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடாது, நீங்கள் சுற்றிப் பயணிக்க வேண்டும். சந்நியாசிகளும் தமது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் வேளையில் ஒரு நபரை கதியில் அமர்த்துகின்றார்கள் (பொறுப்பை கையளித்து விடுகிறார்கள்). இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் வளர்ச்சியடைகின்றார்கள், சிறியளவில் புகழப்படுகின்ற பல புதியவர்கள் வெளிப்பட்டுள்ளார்கள். ஆகையால் அவர்களிலும் சற்று சக்தி விருத்தி செய்யப்படுகின்றது. பழைய இலைகளும் பிரகாசிக்க ஆரம்பிக்கின்றன. சில ஆத்மாக்களை பொறுத்தவரையில் அவர்கள் முன்னேற்றம் அடையும் வகையில் பிறிதொரு ஆத்மா அவர்களுக்குள் பிரவேசிக்கின்றார். தந்தை அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, நீங்கள் எப்பொழுதும் முன்னேறிக் கொண்டிருக்க வேண்டும்.

அன்பிற்கினிய குழந்தைகளே, நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் போது, நீங்கள் யோக சக்தியின் பலத்தைப் பெறுவீர்கள். அதன் பின்னர் நீங்கள் எவருக்காவது சிறிதளவு விளங்கப்படுத்தினாலும், அவரால் விரைவில் புரிந்து கொள்ள முடியும். இதுவும் ஞான அம்பாகும். அப்படித்தானே? எவராவது ஒருவர் அம்பினால் தாக்கப்படும் போது, அவர் காயப்படுகின்றார். முதலில், அவர் காயப்படுகின்றார், அதன் பின்னர் அவர் பாபாவிற்கு உரியவர் ஆகுகின்றார். எனவே, ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, வழிகளைக் கண்டுபிடியுங்கள். இரவில் உறங்கச் செல்வதும், காலையில் விழித்தெழுவதும் என்று வெறுமனே இருக்கக்கூடாது. இல்லை, அதிகாலையில் விழித்தெழுந்து அதிகளவு அன்புடன் பாபாவை நினைவுசெய்யுங்கள். இரவில் நினைவுடன் உறங்கச் செல்லுங்கள். நீங்கள் பாபாவை நினைவு செய்யாத போது, அவரால் எவ்வாறு உங்கள் மீது அன்பு செலுத்த முடியும்? அந்தளவிற்கு ஓர் ஈர்ப்பு இருக்க மாட்டாது. நாடகத்திற்கு அமைய, அனைவரும் வரிசைக்கிரமமாக இருப்பார்கள் என்பதை பாபா அறிந்திருந்த போதும், அவரால் மௌனமாக அமர்ந்திருக்க முடியாது. நீங்கள் முயற்சி செய்வதற்கானத் துண்டுதல்களை அவர் உங்களுக்குக் கொடுக்கின்றார். அல்லவா? தவறினால், அதிகளவு மனவருத்தம் இருக்கும். பாபா எங்களுக்கு எவ்வளவு விளங்கப்படுத்தினார்! அநாவசியமாக அதனைச் செய்தீர்களே என்று நீங்கள் வருத்தப்படுவீர்கள். அதாவது நீங்கள் மாயையினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுவிட்டீர்கள். தந்தை கருணை உணர்வை கொண்டிருக்கின்றார். அவர் தன்ளை சீராக்காது விடின், அவரின் நிலைமை என்னவாகும்? அவர் அழுவார், தன்னையே அடித்துக் கொண்டு தண்டனையை அனுபவம் செய்வார், ஆகையாலேயே தந்தை மீண்டும் மீண்டும் கற்பித்தல்களை உங்களுக்குக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, நீங்கள் நிச்சயமாக சம்பூர்ணம் அடைய வேண்டும். உங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களை சோதித்துப் பார்க்க வேண்டும். அச்சா.

மிக மிக இனிமையான, நீண்டகாலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட அன்பிற்கினிய குழந்தைகளே, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் இதய ஆழத்திலிருந்து அதிகளவு அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.

மேன்மையான அவ்யக்த வாசகங்கள் - அவ்யக்த பாப்தாதா

விஞ்ஞானம் சீரமைக்கப்படுவதைப் போன்று, உங்கள் மௌனசக்தி அதாவது, உங்கள் ஸ்திதி சீரமைக்கப்படுகின்றதா? சீரமைக்கப்பட்ட ஒன்றின் சிறப்பியல்பு என்ன? சீரமைக்கப்பட்ட ஒன்று எண்ணிக்கையின் அடிப்படையில் குறைவாக இருக்கலாம், ஆனால் தரத்தின் அடிப்படையில் அது சக்திவாய்ந்ததாக இருக்கும். சீரமைக்கப்படாத ஒன்று எண்ணிக்கையில் அதிகளவாகவும், ஆனால் தரத்தில் குறைவாகவும் இருக்கும். எனவே, இங்கும், நீங்கள் சீரமைக்கப்படுவதால், குறைந்த எண்ணங்களினதும், குறைவான சக்தியினதும் பயன்பாட்டில் குறைந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் பணியானது நூறுமடங்கு அதிகளவாகவும் எடையற்றதாகவும் இருக்கும். கீழே வராதிருப்பதே எடையற்ற ஒன்றினது அடையாளமாகும். விரும்பாதிருந்தாலும் அது இயல்பாகவே மேலேயே இருக்கும். இதுவே சீரமைக்கப்பட்டதன் தகுதியாகும். எனவே, உங்களுக்குள் இந்த இரண்டு சிறப்பியல்புகளையும் நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? சுமையாக இருப்பதால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. எடையற்றிருப்பதால், நீங்கள் குறைந்தளவு முயற்சியே செய்ய வேண்டியேற்படும். எனவே, இவ்வாறாக இயல்பான மாற்றம் இடம்பெறுகின்றது. இந்த இரண்டு சிறப்பியல்புகளிலும் எப்பொழுதும் கவனம் செலுத்துங்கள். இவற்றை உங்கள் முன்னிலையில் வைத்திருங்கள். அப்பொழுது நீங்கள் எந்தளவிற்கு சீராகியுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். சீரமைக்கப்பட்ட எதுவும் அதிகளவு அலைந்து திரிவதில்லை. அது விரைவாக வேகத்தை அதிகரித்துக் கொள்ளும். குப்பையுடன் கலந்த, சீரமைக்கப்படாத ஒன்றினால் வேகத்தை அதிகரித்துக் கொள்ள முடியாது. அதற்கு, தடைகள் இல்லாது முன்னேற முடியாதுள்ளது. ஒருபுறம், நீங்கள் மென்மேலும் சீராகுகின்றீர்கள். மறுபுறம், அதற்கேற்ப அற்ப விடயங்கள், தவறுகள், சம்ஸ்காரங்களினால் அபராதம் அதிகரித்துச் செல்கின்றது. ஒரு பக்கம் இக் காட்சியும் மறுபக்கம் சீராக்கப்படுதலின் காட்சியும் உள்ளது. இரண்டினது வலுவும் உள்ளது. சீரமைக்கப்படாது விட்டால் அபராதம் விதிக்கப்படும். என்பதை புரிந்து கொள்ளுங்கள். இரண்டினது காட்சியும் ஒரேநேரத்தில் தெரியும். அது உச்சத்தில் செல்லும் போது, இதுவும் மிகவும் தென்படும் வடிவில் செல்லும். இப்பொழுது மறைமுகமான கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே, இரண்டினது காட்சியும் வெளிப்படுத்தப்படுவதன் அடிப்படையில், இலக்கங்கள் உருவாக்கப்படும்.

மாலை உங்கள் கைகளினால் உருவாக்கப்படப் போவதில்லை. உங்கள் நடத்தைக்கு ஏற்பவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இலக்கத்தைக் கோரப் போகின்றீர்கள். உங்கள் இலக்கம் நிச்சயிக்கப்படுகின்ற காலம் வந்து விட்டதால், இரண்டு விடயங்களும் தெளிவாகத் தெரிகின்றன. ஆகையால், இவை இரண்டையும் பார்க்கையில், ஒரு பற்றற்ற பார்வையாளராக, மலர்ச்சியாக இருங்கள். ஒரு விளையாட்டின் உச்சக்கட்டமே அதிகளவு விரும்பப்படுகின்றது, அக் காட்சி அதிகளவு கவரப்படும். இப்பொழுதும், இழுபறி போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனைப் பார்த்து களிப்படைகின்றீர்கள், அப்படித்தானே? அல்லது, நீங்கள் கருணை கொள்கின்றீர்களா? ஒருபுறம் பார்க்கும் போது, நீங்கள் சந்தோஷப்படுகின்றீர்கள். இன்னொருபுறம் பார்க்கையில் நீங்கள் கருணை கொள்கிறீர்கள். இருபக்கத்திற்கும் இடையில் விளையாட்டு இடம்பெறுகின்றது. இந்த விளையாட்டு சூட்சும உலகிலிருந்து மிகவும் தெளிவாகத் தெரிகின்றது, ஒருவர் எவ்வளவு அதிகளவு உயரத்தில் உள்ளாரோ, அவரால் கீழே உள்ள அனைத்தையும் மிகத் தெளிவாக பார்க்க முடியும். ஒரு மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு சிலவற்றை பார்க்க முடியும். ஆனால் ஏனைய விடயங்களைப் பார்க்க முடியாது. ஒரு பற்றற்ற பார்வையாளராக அனைத்தையும் நீங்கள் உயரத்திலிருந்து பார்த்தால், அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடியும். எனவே, இன்று, சூட்சும உலகில், பாபா தற்காலத்தின் விளையாட்டுக்களை பார்த்துக் கொண்டிருந்தார். அச்சா.

ஆசீர்வாதம்:
மேலிருந்து அவதரித்த ஓர் அவதாரமாகுவதன் மூலம் ஆசீர்வாதங்களை அருள்கின்ற சொரூபமாக சேவை செய்வீர்களாக.

சூட்சும உலகிலிருந்து சேவை செய்வதற்காகத் தந்தை கீழே வருவதைப் போன்று நீங்களும் சேவை செய்வதற்காக சூட்சும உலகிலிருந்து வந்திருக்கின்றீர்கள். இந்த அனுபவத்துடன் சேவை செய்யும் போது, நீங்கள் எப்பொழுதும் பற்றற்றவராக இருப்பதுடன், தந்தையை போன்றே உலகத்தவரால் நேசிக்கப்படுகின்றீர்கள். மேலிருந்து கீழே இங்கே வருவது என்றால் சேவை செய்வதற்காக அவதரித்த ஓர் அவதாரம் என்றே அர்த்தமாகும். அனைவருமே ஓர் அவதாரம் வந்து தம்மை அவருடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். எனவே நீங்களே அனைவரையும் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கின்ற உண்மையான அவதாரமாவீர்கள். நீங்கள் ஓர் அவதாரம் எனக் கருதியவாறு சேவை செய்யும் போது, நீங்கள் ஆசீர்வாதங்களை அருளுகின்ற ஒரு சொரூபம் ஆகுவதால் பலரின் ஆசைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

சுலோகம்:
ஒருவர் உங்களுக்கு நல்லதை அல்லது தீயதைக் கொடுத்தாலும், நீங்கள் அனைவருக்கும் அன்பையும் ஒத்துழைப்பையுமே கொடுத்து, கருணை கொண்டிருக்க வேண்டும்.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:

கடவுளின் அன்பில் சதா திளைத்திருந்தால், நீங்கள் மாஸ்டர் அன்புக் கடலான அன்பு சொரூபம் ஆகுவீர்கள். அன்பைக் கொடுப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய மாட்டீர்கள், ஆனால் நீங்கள் அன்பின் சொரூபம் ஆகுவீர்கள். நாள் முழுவதும் அன்பு அலைகள் இயல்பாகவே பொங்கி எழும். ஞான சூரியக் கதிரும் ஒளியும் அதிகரிக்கும் அளவிற்கு ஏற்ப, அன்பு அலைகள் அதிகளவு பொங்கி எழும்.