25.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்களை அலங்கரிப்பதைப் போன்றே, நீங்களும் பிறரை அலங்கரிக்க வேண்டும். நாள் முழுவதும் சேவை செய்யுங்கள். உங்களிடம் வருகின்ற எவருக்குமே விளங்கப்படுத்துங்கள். எதனைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

கேள்வி:
பல மில்லியன் கணக்கானோரில் ஏன் ஒரு கைப்பிடி அளவினர் மாத்திரமே இந்த ஞானத்தை புரிந்து கொண்டு கிரகிக்கின்றனர்?

பதில்:
நீங்கள் கூறுகின்ற அனைத்துமே புதியவை என்பதாலாகும். பரமாத்மா ஒரு புள்ளியானவர் என்று நீங்கள் கூறுவதை அவர்கள் கேட்கும் போது, அவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். ஏனெனில், அவர்கள் சமயநூல்களில் இவ்விடயங்களை கேள்விப்பட்டதில்லை. மிகவும் நீண்ட காலமாக அவர்கள் செய்த பக்தி, அவர்களை ஈர்ப்பதால், அவர்களால் விரைவில் புரிந்து கொள்ள முடிவதில்லை. வெளிப்படுகின்ற சில விட்டில் பூச்சிகள் கூறுகின்றார்கள்: பாபா, நான் நிச்சயமாக உலக அதிபதி ஆகுவேன். நான் அத்தகையதொரு பாபாவை இனங்கண்டிருப்பதால், நான் எவ்வாறு அவரை விட்டுச் செல்ல முடியும்? அனைத்தையும் அவரிடம் அர்ப்பணிப்பதற்கு அவர்கள் உற்சாகம் கொண்டிருக்கின்றார்கள்.

பாடல்:
தொலைதூர வாசி அந்நிய பிரதேசத்திற்கு வந்துள்ளார்.

ஓம் சாந்தி.
இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்குத் தாங்கள் பிரயாணிகள் என்பதும், இது அவர்களுக்குரிய இடம் அல்ல என்பதும் மிக நன்றாகத் தெரியும். இந்த எல்லையற்ற நாடகம் ஒரு பெரிய மேடையில் இடம்பெறுகின்றது. அது அணையாது எரிந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய விளக்குகளைக் கொண்டுள்ளது, நாங்கள் அனைவரும் நடிகர்கள் என்பதும், எங்களுக்கான பாகத்தை நடிப்பதற்காக, எங்களுக்குரிய நேரத்தில், வரிசைக்கிரமமாக நாங்கள் இங்கு வருகிறோம் என்பதும் ஆத்மாக்களுக்குத் தெரியும். முதலில் நீஙகள்; வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்கள். பின்னர் இங்கு வருவீர்கள். இவ் விடயங்கள் புரிந்து கொள்ளப்பட்டு, மிகத் தெளிவாகக் கிரகிக்கப்பட வேண்டும். ஒரு நாடகத்தில் நடிகர்கள் ஒருவர் ஒருவருடைய தொழிலை அறியாதிருந்தால், அவர்களை எவ்வாறு நீங்கள் அழைப்பீர்கள்? நாடகத்தின் ஆரம்பம், மத்தி இறுதியை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் இவ்வாறு ஆகுகின்றீர்கள். ஆகவே இந்த ஞானம் தனித்துவமானதாகும். தந்தை ஞானம் நிறைந்தவரான, விதையாவார். நீங்கள் அப் பொதுவான விதைகளையும், விருட்சத்தையும் அறிவீர்கள். முதலில் சிறிய இலைகள் வெளிப்படும், பின்னர் மரம் வளர்ந்து மிகப் பெரியதாகும். அதற்கு நீண்ட காலமெடுக்கும். இந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை ஒரு தடவையே வருகிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இந்த நாடகம் அநாதியானதும், அழிவற்றதுமாகும். தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவரும், சுவர்க்கக் கடவுளும் ஆவார். தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு இங்கு வரவேண்டும். தொலைதூர வாசி, அந்நிய பிரதேசத்திற்கு வந்துள்ளார் என்று ஒரு பாடல் உள்ளது. இராவணனின் இந்த இராச்சியம் அந்நியமானது. இராவணனின் இராச்சியத்துக்குள் இராமர் வரவேண்டும். இந்த ஞானம் உங்களுடைய புத்தியில் மாத்திரமே உள்ளது. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் அனைவரும் பிரயாணிகள். நீங்கள் அனைவரும் உங்கள் பாகத்தை நடிப்பதற்காக சேர்ந்து இங்கு கீழே இறங்கி வருவதில்லை. முதலில் வருபவர்கள் தேவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அப்போது வேறு எவரும் இங்கு இருப்பதில்லை. மிகச் சிலரே இருப்பார்கள். பின் விரிவாக்கமும் இடம்பெறும். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சரீரத்திலிருந்து நீங்கி, அங்கு செல்கின்றீர்கள். அப் புத்தியைத் தந்தை உங்களுக்குத் தந்துள்ளார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியையும், விதையையும் தெரியும். விதை உச்சியிலும், முழு விருட்சமும் கீழே பரந்து விரிந்துள்ளது. விருட்சம் இப்போது முற்றாக உக்கிய நிலையை அடைந்துள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது இந்த விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை தெரியும். முன்னர், மக்கள் படைப்பரையும் படைபின் ஆரம்பம் மத்தி இறுதியை தெரியுமா என்று ரிஷிகளிடமும் முனிவர்களிடமும் வினவும் போது அவர்கள் பதிலளிப்பதுண்டு: நேற்றி, நேற்றி (இதுவுல்லை, அதுவுமில்லை). அவர்கள் இதனை அறியாதிருந்தால், அது எவ்வாறு தொன்று தொட்டு நீடித்திருக்க முடியும்)? இவ் விடயங்கள் அனைத்தும் மிக நன்றாகக் கிரகித்துக் கொள்ளப்பட வேண்டும். அவை மறக்கப்படக் கூடாது. நீங்கள் கற்கவேண்டும். இக் கல்வியின் மூலமும், யோக சக்தியின் மூலமுமே நீங்கள் ஒரு அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் நிச்சயம் தூய்மையானவர்களாகவும் ஆகவேண்டும். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களைத் தூய்மையாக்க முடியாது. எவராவது அழியக்கூடிய செல்வத்தைத் தானம் செய்தால், அவர் தனது அடுத்த பிறவியை இராஜ குடும்பத்தில் அல்லது மிகவும் நல்ல குடும்பத்திலும் எடுக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நல்ல குடும்பத்தில் பிறக்கின்றீர்கள். புதிய உலகம் மிகச் சிறியதாகும். சத்தியயுகத்தில் அது தேவர்களின் ஒரு சிறிய கிராமம் போன்று இருக்கும். முன்னர், மும்பாய் மிகச் சிறியதாக இருந்தது. அது இப்போது எவ்வளவு விரிவடைந்துள்ளதென்று பாருங்கள்! சகல ஆத்மாக்களும் தத்தமது சொந்தப் பாகத்தை நடிக்கிறார்கள்: அனைவரும் பிரயாணிகள். தந்தை ஓரு முறையே இங்கு வரும் ஒரு பிரயாணியாவார். நீங்களும் இங்கு ஒருமுறையே வரும் பிரயாணிகள் ஆவீர்கள். நீங்கள் இங்கு ஒருமுறை வந்து, பல பிறவிகளை எடுக்கும் வேளையில், தொடர்ந்தும் உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள். அமரத்துவ உலகிற்குச் செல்வதற்காக நீங்கள் இப்போது அமரத்துவ கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். அவர்கள் 21 சந்ததிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். ஒரு சந்ததி என்பது முதுமை அடையும் வரைக்குமான வாழ்நாளாகும். பின்னர் நீங்கள் தானாகவே இன்னொரு சரீரத்தை எடுப்பீர்கள். அங்கு அகால மரணம் இடம்பெற மாட்டாது. அதுவே அமரத்துவமான உலகமாகும். அங்கு மரணம் என்ற வார்த்தையே கிடையாது. திடீர் மரணம் ஏற்படாது. நீPங்கள் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுப்பீர்கள். அங்கு துன்பம் என்ற கேள்விக்கு இடமில்லை. ஒரு பாம்பு (அது தன்னுடைய பழைய சருமத்தை அகற்றும்போது) துன்பப்படுகின்றதா? அது அதிகளவு சந்தோஷத்தையே அனுபவம் செய்யும். நீங்கள் இப்பொழுது ஆத்மாவின் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றறார். புத்தி ஆத்மாவில் உள்ளது. சரீரம் முற்றாக வேறானதாகும். சரீரத்தில் ஆத்மா இல்லாத போது இயக்கம் இருக்க மாட்டாது. சரீரம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது, சரீரத்தினுள் ஓர் ஆத்மா எவ்வாறு பிரவேசிக்கின்றார் என்பது அனைத்தும் வியப்புக்குரியதே. தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, உங்கள் சுவர்க்கம் அற்புதமான உலகமாகும். இராவணனின் இராச்சியத்தில் அவர்கள் ஏழு அதிசயங்களைக் காட்டுகிறார்கள். இராமரின் இராச்சியத்தில், அரைக் கல்பத்திற்கு நிலைத்திருக்கும் ஒரு சுவர்க்க அதிசயமே இருக்கும். மக்கள் சுவர்க்கத்தைக் கண்டிருக்காதபோதும், ‘சுவர்க்கம்’ என்ற வார்த்தை நிச்சயம் அவர்களின் உதடுகளிலிருந்து வெளிவருகின்றது. உங்களுடைய புத்திக்கு இப்போது இது தெரியும். உங்களிற் சிலர் காட்சிகளையும் கண்டுள்ளீர்கள். பாபாவும் விநாசத்தினதும், அவரின் சொந்த இராச்சியத்தினதும் காட்சிகளைக்; கண்டுள்ளார். அர்ச்சுனனுக்கும் காட்சிகள் மூலம் அனைத்தும் காட்டப்பட்டன. இதுவே உண்மையில், கீதையின் அத்தியாயமாகும். பாபா உங்களிடம் கூறுகிறார்: குழந்தைகளே, இதுவே அதி மங்களகரமான சங்கமயுகமாகும். இப்பொழுதே நான் வந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றேன். உலகிலுள்ள வேறு எவருக்கும் இவ் விடயங்கள் தெரியாது. நீங்கள் அங்கு மிகவும் சௌகரியமாக வாழ்வீர்கள். இங்கு ஒருவர் மரணித்துவிட்டால் அந்த ஆத்மா அவ் இருளை உணரக்கூடாதென்று, சிட்டி விளக்கொன்றை ஏற்றி வைப்பார்கள். அவ்வாறான விடயங்கள் சத்திய யுகத்தில் இருக்க மாட்டாது. சத்திய யுகத்தில் ஆத்மாக்கள் அனைவரினதும் ஒளி ஏற்றப்பட்டிருக்கும், ஒவ்வொரு வீட்டிலும் ஒளி இருக்கும். இங்கு மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகளை ஏற்றுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: இவை அனைத்தையும் நீங்கள் அனைவரும் உங்கள் புத்தியில் மிகவும் நன்றாகக் கிரகித்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து தந்தையையும், இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் இராச்சியத்தை இதுவரை ஆட்சி செய்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீண்ட காலமாகப் பிரிந்து இருந்தவர்களுடன் தந்தை உரையாடி, கற்பிக்கின்றார். இந்த நேரத்தில் நடந்தவற்றையே அவர்கள் விழாக்களாகக் கொண்டாடுகின்றார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பாரதத்தில் மாத்திரமே அவர்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். சிவனே அதி மேலான கடவுளாவார். அவர் எவ்வாறு பாரதத்தில் வருகிறார்? தத்துவத்தின் உதவியைப் பெற்றே அவர் வரவேண்டியுள்ளது என்று அவரே கூறியுள்ளார். இவ்வாறாகவே அவரால் பேச முடியும். இல்லாவிடின், அவரால் எவ்வாறு குழந்தைகளாகிய உங்களை ஞானத்தால் அலங்கரிக்க முடியும்? நீங்கள் இப்பொழுது அலங்கரிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் பின்னர் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்காக மற்றவர்களை அலங்கரிக்கிறீர்கள். இது மிகவும் இலகுவானது. ஆனால் மக்களின் புத்தி மிகவும் மந்தமாகியுள்ளதால், அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அதற்கு காலமெடுக்கும். நீங்கள் அனைத்தையும் கண்காட்சிகளில் விளங்கப்படுத்துகிறீர்கள். வருபவர்களுக்கு நீங்கள் எவ்வாறு விளங்கப்படுத்துகின்றீர்கள் என்பது அனைத்தும் நாடகத்தில் ஒரு பாகமாகும். அதில் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, நாங்கள் அதிக பிரயத்தனம் செய்கின்றோம் (நாங்கள் அதிக முயற்சி செய்கிறோம்.) ஆனால் பலமில்லியன் அளவினரில் ஒரு கைப்பிடி அளவினரே வெளிப்படுகின்றார்கள். அது எவ்வாறாயினும் நிகழும். பரமாத்மா ஒரு புள்ளி என்று நீங்கள் கூறுகிறீர்கள். இவ் விடயங்கள் சமயநூல்களில் எழுதப்படவில்லை. இதனாலேயே, மக்கள் குழப்பமடைகிறார்கள். நீங்களும், முன்னர் இதனை நம்பவில்லை. சிலர் இவற்றை புரிந்து கொள்ள ஏறத்தாழ இரண்டு வருடங்கள் எடுத்தார்கள். அவர்கள் சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் திரும்பி வருகின்றார்கள். பக்தி உங்களை ஈர்ப்பதால் உங்களால அதனை அவ்வளவு இலகுவாகத் துறக்க முடியாது. அதுவும் நாடகத்தின் ஒரு பாகமாகும். பிராமணர்களாகிய உங்களைத் தவிர, வேறு எவருக்கும் இது தெரியாது. பல-வடிவ சொரூபத்தின் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இது உங்களுடைய குட்டிக்கரணமாகும். நீங்கள் கல்பத்தைச் சுற்றி வருகின்றீர்கள். இதுவே கதம்ப நாடகம் என்று அழைக்கப்படுகின்றது. உங்களிடம் இதனுடைய ஞானம் உள்ளது. அவர்கள் அந்தக் கல்லூரிகளில் கற்பவற்றைப் பாருங்கள்! இங்கு அவ்வாறில்லை. விஞ்ஞானம் தொடர்ந்தும் விரிவடைந்து, அதனூடாக விநாசம் இடம்பெறும். அதனை நீங்கள் இப்போது விளங்கப்படுத்திய போதிலும், இது மிகவும் நல்லது, இதனை ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்த வேண்டும் என்று அரிதாக சிலரே கூறுகின்றார்கள். அவர்களுக்கு அதிகளவு வேலை இருந்தாலும், அவர்கள் கூறுவார்கள்: நான் நிச்சயம் எனது ஆஸ்தியை பாபாவிடமிருந்து பெற வேண்டும்;. இது ஒரு எல்லையற்ற வருமானமாகும். பாபா கூறுகிறார்: எனது புத்தியில் முழு விருட்சத்தின் ஞானமும் உள்ளது. இப்போது நீங்களும் அதனைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்தும் விடயங்கள் அனைத்தும் மிகவும் சரியானவையாகும். ஒரு விநாடி அடுத்த விநாடியைப் போன்று இருக்காது. இது மிகவும் சூட்சுமமானது. நீங்கள் பல முறை கல்பத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள். இந்த நாடகம் ஒரு பேனைப் போன்று தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. சக்கரத்தை ஒருமுறை சுற்றுவதற்கு 5000 ஆண்டுகள் எடுக்கின்றது. முழு நாடகமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதனைத் தெரிந்திருக்க வேண்டும். அங்கு பசுக்கள்கூட முதல் தரமானவையாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்திறகு ஏற்ப, உங்களுடைய தளபாடங்கள் இருக்கும். உங்களுடைய கட்டடங்களும் அவ்வாறே இருக்கும். அங்கு ஏராளமான கோலாகலம் இருக்கும். ஆத்மாவே சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார். ஆத்மாவாகிய நான் இப்போது திருப்தியாக உள்ளேன். நீங்கள் கூற மாட்டீர்கள்: கடவுள் இப்போது திருப்தியாக உள்ளார். அவர் வினவுவார்;: உங்களுடைய ஆத்மா இப்போது திருப்தியாக உள்ளாரா? நீங்கள் பதிலளிப்பீர்கள்: ஆம் பாபா! ஆத்மா இப்போது திருப்தியாக உள்ளார். இந்த முழு நாடகமும் தொடர்ந்துள்ளது. தந்தை விளங்கப்படுத்துவன அனைத்தும் நாடகத்தின் காட்சிகளாகும். தந்தை இப்பொழுது உங்களை புதுப்பிக்கின்றார்;. உங்களுடைய சரீரம் கல்ப விருட்சம் (நீண்ட ஆயுட்காலம்) போலாகின்றது. அதன் பெயரே அமரத்துவமான பூமி என்பதாகும். ஆத்மாக்களும் அமரத்துவமானவர்கள். அவர்கள் மரணத்தை அனுபவம் செய்ய மாட்டார்கள். பாபா ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகிறார். இந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அமரத்துவமான ஆத்மாவுடன் அவர் பேசுகிறார். ஆத்மா அவரின் காதுகளால் கேட்கிறார். ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிப்பதற்காகத் தந்தை வந்துள்ளார். தந்தையின் பார்வை எப்போதும் ஆத்மாக்களாகிய உங்கள் மேல் உள்ளது. தந்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: எப்போதும் சகோதரத்துவம் என்ற பார்வையைக் கொண்டிருங்கள். நான் எனது சகோதரனுடன் பேசுகிறேன். அப்போது எந்தவிதமான குற்றப் பார்வையும் இருக்கமாட்டாது. இதற்கு மிகச் சிறந்த பயிற்சி தேவை. நான் ஓர் ஆத்மா, இந்தப் பல்வேறு பிறவிகளை எடுக்கும்போது நான் எனது பாகத்தை நடித்துள்ளேன். நான் ஒரு தூய தர்ம ஆத்மாவாக இருந்தேன். இப்போது நான் தூய்மையற்றவராகியுள்ளேன். தங்கத்துடன் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் வரும் ஆத்மாக்களை எவ்வாறு அழைக்கலாம்? அவர்களில் சிறு விகிதத்திற்குத் தங்கம் இருக்கும். இங்கிருந்து அவர்கள் தூய்மையடைந்து சென்றாலும், அவர்களிடம் குறைந்த சக்தியே இருக்கும். ஒன்று, இரண்டு பிறவிகள் மாத்திரம் எடுப்பதால் என்ன பலனுண்டு?...பாபா கூறும் முரளிகள் பொக்கிஷங்களாகும். பாபா தொடர்ந்து இவற்றை உங்களுக்குத் தருகிறார். நீங்கள் தொடர்ந்து அவரை நினைவு செய்யவேண்டும். நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் என்றென்றும் ஆரோக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். மௌனத்தில் அமர்ந்திருப்பதிலும், அதிக நன்மையுள்ளது. மன்மனாபவ! ஒருவருக்கும் இதன் அர்த்தமேனும்; தெரியாது. தந்தை உங்களுக்கு அனைத்தினதும் கருத்துக்களை விளங்கப்படுத்துகிறார். இங்கு அவர்கள் செய்யும் அனைத்திலும் எவ்வித அர்த்தமும் இல்லை. ஒருவருக்கொருவர் காமவாளை உபயோகிப்பதே எவ்வித அர்த்தமுமில்லாத செயலாகும். இதன் மூலம் அவர்கள் ஆரம்பம் முதல், மத்தியூடாக, இறுதி வரைக்கும் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். இதுவே மிகத் தீமையான வன்முறையாகும். இதனாலேயே இவ்விடம் நரகம் என்று அழைக்கப்படுகிறது. எவருமே சுவர்க்கம், நரகம் என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அது முதலாவது இலக்கமாகும். நரகமே கடைசி இலக்கமாகும். இந்த உலக நாடகத்தில் நீங்கள் நடிகர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நேற்றி, நேற்றி (எங்களுக்குத் தெரியாது) என்று நீங்கள் கூறமாட்டீர்கள். ஸ்ரீமத்திற்கேற்ப நீங்கள் மிக அழகிய படங்களை உருவாக்குகிறீர்கள். மக்கள் அதனைப் பார்க்கும்போது அவர்களால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இப் படங்கள் உருவாக்கப்படுவதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இறுதியில் நீங்கள் நினைவில் நிலைத்திருப்பீர்கள். உலகச் சக்கரத்தையும் நீங்கள் உங்கள் புத்தியில் கொண்டிருப்பீர்கள். யார் புதிய உலகத்தை உருவாக்குபவர் என்பதையும், யார் அதனைப் பழையதாக்குபவர் என்பதையும், நீங்கள் மாத்திரம் அறிவீர்கள். அனைவரும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதியை கடந்து செல்ல வேண்டும். இப்போது கலியுகமாகும். தந்தை வந்து, எங்களைச் சுவர்க்கத்திற்கு அதிபதிகள் ஆக்குகிறார் என்பது எவருக்கும் தெரியாது. அது எவரினது எண்ணங்களிலும் புகுவதில்லை. முழு உலகச் சக்கரத்தினதும் ஆரம்பம், மத்தி முடிவு பற்றிய ஞானம் இப்பொழுது உங்களிடம் உள்ளது. படைப்பவரான தந்தை இவரில் அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நானே ஆத்மாக்களாகிய உங்களின் தந்;தையாவேன். நானே எல்லையற்ற ஆசிரியராவேன். இந்தச் சங்கம யுகமே மிக மங்களகரமான, மேன்மையான யுகமாகும். சத்திய யுகமோ, கலியுகமோ அதி மேன்மையானவை என்று அழைக்கப்படுவதில்லை. தந்தை வந்து, இராஜயோகத்தைக் கற்பிக்கும் இந்தச் சங்கம யுகத்தில் மாத்திரமே நீங்கள் மிக மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். நாளுக்கு நாள் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துவது மிக இலகுவாக இருக்கும். விருட்சம் தொடர்ந்து வளரும். சுவாலையில் தங்களை அர்ப்பணிப்பதற்குப் பல விட்டில்பூச்சிகள் வருகிறார்கள். அவ்வாறான ஒரு தந்தையை யார்தான் விட்டுச் செல்வார்கள்? பாபா, உங்களுடன் அமர்ந்திருப்பதற்கே நான் விரும்புகிறேன். இவை அனைத்தும் உங்களுடையவையே. ஏன் நாங்கள் அவ்வாறு மேன்மையான ஒரு தந்தையை விட்டுச் செல்லவேண்டும் என்று அவர்கள் கூறுவார்கள். பலருக்கு இந்த ஆர்வம் உள்ளது. நான் உலக இராச்சியத்தை பாபாவிடமிருந்து பெறுகிறேன். ஆகவே ஏன் நான் அவரைவிட்டு விலகிச் செல்லவேண்டும்? இங்கு, நான் சுவர்க்கத்தில் அமர்ந்திருக்கிறேன். இங்கு மரணம்கூட உங்களுக்கு வராது. ஆனால் தந்தையிடமிருந்து நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறவேண்டும். தந்தை கூறுவார்: நீங்கள் அதனைச் செய்யக்கூடாது. இங்கு வருவதற்கு நீங்கள் ஆர்வத்தைக் காட்டுவீர்கள். ஆனால் அனைவரும் இங்கு வந்து அமர்ந்திருப்பது என்பது நாடகத்தில் இல்லை. நீங்கள் அந்த விசையையும், ஆர்வத்தையும் உணர்வீர்கள். ஏனெனில் இவை அனைத்தும் முடிவடையப்போகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். எவர்களுடைய பாகத்தில் இவை உள்ளனவோ, அவர்கள் தொடர்ந்த இவை அனைத்தையும் கேட்பார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் எல் எல் பீ அல்லது ஐ சி எஸ் க்குக ;(சட்ட பட்டப்படிப்பும், இந்திய சிவில் சேவையும்) கற்கிறீர்கள். ஆனால் அதன் மூலம் எதனைப் பெறுகின்றீர்கள்? நாளை நீங்கள் உங்கள் சரீரத்தை நீக்கினால். நீங்கள் எதனைப் பெறுவீர்கள்? எதுவுமே இல்லை! அது அழியக்கூடிய அறிவாகும். இதுவோ அழிவற்ற தந்தை உங்களுக்குத் தரும் அழிவற்ற ஞானமாகும். மிகக் குறுகிய நேரமே எஞ்சியுள்ளது. இப் பிறவியிலேயே நீங்கள் தமோப்பிரதானிலிருந்து சதோப்பிரதான் ஆகவேண்டும். நினைவில் இருப்பதன் மூலம் மாத்திரமே நீங்கள் அவ்வாறு ஆகலாம். சகல சரீர சமயங்களையும் துறந்து, தொடர்ந்து என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள் சரீரங்களுக்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. கற்றுக் கொண்டிருக்கும் போதே சிலர் மரணித்துவிடுவதால், உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியது தந்தையின் கடமையாகும். அக் கல்வியின் மூலம் நீங்கள் என்ன வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள் என்பதும், இக் கல்வியின் மூலம் நீங்;கள் என்ன வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் எப்போதும் நிரம்பி வழிகின்றது. இங்கு பல குழந்தைகள் தொடர்ந்தும் பராமரிக்கப்படவுள்ளனர். கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. நீங்கள் பட்டினியால் மரணிக்க மாட்டீர்கள். ஒரு லௌகீகத் தந்தை, தனது குழந்தைகள் உண்பதற்கு எதுவும் இல்லை என்பதை கண்டால், அவரும் எதனையும் உண்ணமாட்டார். தனது குழந்தைகள் கஷ்டப்படுவதைக் கண்டு எந்தத் தந்தையும் சகித்துக்கொள்வதில்லை. முதலில் குழந்தைகள், பின்னர் தந்தையும் ஆவார். தாயாரே கடைசியில் உண்பார். கடைசியாக எஞ்சி இருப்பதையே அவர் உண்பார். எங்களுடைய பண்டாரியும் அவ்வாறானவரே. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 
தாரணைக்கான சாராம்சம்:
1.சகோதரத்துவ பார்வையை உறுதியாக்குங்கள். ‘ஆத்மாவாகிய நான், எனது சகோதரனுடன் உரையாடுகின்றேன்’ என்பதை பயிற்சி செய்து, குற்றமான எப்பார்வையையும் மாற்றுங்கள்.

2.தந்தை ஞான பொக்கிஷத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். ஆகவே நினைவில் நிலைத்திருந்து, அப் பொக்கிஷங்களினால் உங்கள் புத்தியின் மடியை நிரப்புங்கள். மௌமாக அமர்ந்திருந்து, அழியாத வருமானத்தை சேமியுங்கள்.

ஆசீர்வாதம்:
ஒவ்வொரு செயலையும் செய்யும் போது, திரிகாலதரிசி என்ற ஆசனத்தில் ஸ்திரமாக அமர்ந்திருக்கும் ஒரு சக்திமிக்க ஆத்மா ஆகுவீர்களாக.

ஒவ்வொரு செயலையும் செய்யும் போது, திரிகாலதரிசி என்ற ஆசனத்தில் எப்போதும் ஸ்திரமாக அமர்ந்திருக்கும் குழந்தைகள் பல சூழ்நிலைகள் இடம்பெறவுள்ளன என்பதை அறிந்திருப்பார்கள். சூழ்நிலைகள் உங்களுடாகவோ, பிறரினூடாகவோ மாயை அல்லது சடப்பொருளினூடாகவோ பல வழிகளிலும் வரும், அவை நிச்சயமாக வரும். எவ்வாறாயினும், உங்கள் ஆதி ஸ்திதியானது சக்திமிக்கதாக இருந்தால், உங்கள் ஆதி ஸ்திதியோடு ஒப்பிடும் போது, ஒவ்வொரு வெளிச்சூழ்நிலைகளும் எதுவுமே இல்லை. எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னர், அதனை சோதித்து, அச்செயலின் முக்காலத்தையும் பற்றி அதாவது ஆரம்பம், மத்தி, இறுதியை புரிந்த பின்னர் அச் செயலை செய்தால், நீங்கள் சக்திமிக்கவர்கள் ஆகி, அனைத்து பாதகமான சூழ்நிலைகளுக்கும் அப்பால் செல்வீர்கள்.

சுலோகம்:
சகல சக்திகளினாலும், ஞானத்தினாலும் நிறைந்திருப்பதே சங்கமயுகத்தின் வெகுமதியாகும்.


தந்தை பிரம்மாவிற்கு சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தந்தை பிரம்மா விரிவாக்கத்தை அதன் சாராம்சத்திற்குள் அமிழ்த்தி தன்னை முழுமையாக்கினார். அவ்வாறே, சாராம்சத்தின் வடிவின் ஸ்திதியில் நிலைத்திருந்து, அனைத்து வீணானவற்றிலிருந்தும் விடுபட்டிருங்கள். விதை வடிவில் உங்களை ஸ்திரமாக்கிய பின்னர் நேரத்தையும் தந்தையையும் அறிந்து கொள்ளும் விதையை அனைத்து ஆத்மாக்களிலும் விதையுங்கள். அப்பொழுது அந்த விதையிலிருந்து இலகுவாக மிகவும் நல்ல பழம் வெளிப்படும்.