18.10.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுங்கள்: ஓ, தீய ஆவிகளே, உங்களால் என்னிடம் வர முடியாது. அவற்றைப் பயமுறுத்துங்கள், அப்பொழுது அவை ஓடிவிடும்.
கேள்வி:
இறை போதையைக் கொண்டிருக்கும் குழந்தைகளுடைய வாழ்க்கையின் அழகு என்ன?
பதில்:
சேவையே அவர்களுடைய வாழ்க்கையின் அழகாகும். கடவுளின் அதிர்ஷ்ட இலாபச் சீட்டை வென்றுவிட்ட போதை உங்களுக்கு இருக்கும்பொழுதே, சேவை செய்வதில் அந்த ஆர்வம் இருக்கும். எவ்வாறாயினும், உங்களுக்குள் தீய ஆவிகள் இல்லாதபோதே அம்பு இலக்கைத் தாக்கும்.
கேள்வி:
சிவபாபாவின் குழந்தைகள் என்று அழைக்கப்படுவதற்கான உரிமையைக் கொண்டிருப்பவர்கள் யார்?
பதில்:
கடவுளே தங்களுடைய தந்தை என்றும் தாங்களே அதிமேலான தந்தையின் குழந்தைகள்;; என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்களும் ஆகும். அத்தகைய போதையைக் கொண்டிருப்பவர்களும், தகுதிவாய்ந்தவர்களுமே சிவபாபாவின் குழந்தைகள் என்று அழைக்கப்படுவதற்கான ஓர் உரிமையைக் கொண்டிருப்பவர்கள் ஆவர். அவர்களுடைய நடத்தை சிறந்ததாக இல்லாமலும், அவர்களுடைய செயற்பாடுகள் இராஜரீகமாக இல்லாமலும் இருந்தால், அவர்களைச் சிவபாபாவின் குழந்தைகள் என்று அழைக்க முடியாது.ஓம் சாந்தி.
நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்கிறீர்களா? நீங்கள் சுவர்க்க இராச்சியத்தை நினைவுசெய்கிறீர்களா? நீங்கள் இங்கமர்ந்திருக்கும்பொழுது, இது உங்களுடைய புத்தியில் புகவேண்டும்: நாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள்;, நாங்கள் தினமும் தந்தையை நினைவுசெய்;கின்றோம். அவரை நினைவுசெய்யாமல், எங்கள் ஆஸ்தியைக் கோர முடியாது. எந்த ஆஸ்தியை? தூய்மையின் ஆஸ்தியை! எனவே நீங்கள் மிகப்பொருத்தமான முயற்சியை அதற்காகச் செய்ய வேண்டும். விகாரமுடைய எதுவும் எங்கள் முன்னிலையில் வர முடியாது. அது காமத்திற்;கான ஒரு கேள்வியோ, ஒரு தீய ஆவிக்கான கேள்வியோ அல்ல, ஆனால் தீய ஆவிகள் எவையுமே எங்களிடம் வர முடியாது. அத்தகைய தூய பெருமை இருக்க வேண்டும். நாங்கள் அதிமேலான கடவுளின் குழந்தைகள், ஆகவே குழந்தைகளாகிய நாங்களும் அதிமேலானவர்கள். எங்களுடைய நடத்தையும் ஏனையோர்களுடனான தொடர்புகளும் இராஜரீகமாக இருக்க வேண்டும். ஒருவரின் நடத்தையிலிருந்து அவர் முற்றாக ஒரு சதப் பெறுமதியும் அற்றவர் என்பதைத் தந்தையால் புரிந்துகொள்ள முடியும். தந்தையினுடைய குழந்தை என்று அழைக்கப்படுவதற்கான உரிமையும் அவருக்கு இல்லை. ஒரு லௌகீகத் தந்தையும் தனது குழந்தை தகுதியற்றவர் என்பதைப் பார்க்கும்பொழுது, அவ்வாறே உணர்கிறார். அந்த ஒரெயொருவரும் தந்தையே. தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும், ஆனால் சிலர் எதையுமே புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். எல்லையற்ற தந்தையே எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்ற நம்பிக்கையும் போதையும் இருப்பதில்லை. குழந்தைகளாகிய உங்கள் புத்தி மிகவும் மேன்மையானதாக இருக்க வேண்டும். நாங்கள் அத்தகையதொரு மேன்மையான தந்தையின் குழந்தைகள் ஆவோம்! தந்தை எங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்துகின்றார். உள்ளார்த்தமாகச் சிந்தியுங்கள்: நாங்கள் அத்தகைய அதிமேன்மையானதொரு தந்தையின் குழந்தைகள். எனவே, எங்களுடைய நடத்தை மிகவும் மேன்மையானதாக இருக்க வேண்டும். தேவர்களுடைய புகழே எங்களுடைய புகழாக இருக்க வேண்டும். பிரஜைகளுக்கு புகழ் எதுவும் இல்லை. இலக்ஷ்மியும் நாராயணனும் மாத்திரமே காட்டப்பட்டுள்ளார்கள். ஆகவே, குழந்தைகளாகிய நீங்களும் அத்தகைய சிறந்த சேவையைச் செய்ய வேண்டும். இலக்ஷ்மி நாராயணன் இருவரும் அந்தச் சேவையைச் செய்தார்கள். அத்தகையதொரு மேன்மையான புத்தி தேவைப்படுகிறது. சில குழந்தைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் மாயையால் தோற்கடிக்கப்படும்பொழுது, அவர்கள் மேலும் அதிகமாகச் சீரழிந்துவிடுகிறார்கள். இல்லாவிட்டால், உள்ளுற அதிகளவு போதை இருக்க வேண்டும்: நாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். தந்தை கூறுகிறார்: தொடர்ந்தும் எனது அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். சேவையினூடாகவே நீங்கள் அழகானவர் ஆகுவீர்கள். அப்பொழுதே உங்களால் தந்தையின் இதயத்தில் அமர முடியும். ஒரு குழந்தை, தந்தையின் இதயத்தில் அமரக்கூடிய அத்தகைய குழந்தையாக இருக்க வேண்டும். ஒரு தந்தை தனது குழந்தைகள் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறார். அவர் தன் தலைமேல் அவர்களை அமர வைக்கிறார். அவருக்குத் தன் குழந்தைகளின் மீது அத்தகைய பற்றுள்ளது, ஆனால் அது மாயையின் எல்லைக்குட்பட்ட பற்று ஆகும். இது எல்லையற்றதாகும். தனது குழந்தைகளைப் பார்ப்பதில் சந்N;தாஷமடையாத ஒரு தந்தை இருப்பாரா? தாயும் தந்தையும் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பார்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்பொழுது, அந்த பாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாபா எங்கள் கீழ்ப்படிவான ஆசிரியர் ஆவார். எல்லையற்ற தந்தை நிச்சயமாக ஏதோவொரு சேவையைச் செய்திருக்க வேண்டும் என்பதனாலேயே அவர் நினைவுகூரப்படுகிறார். இவை அத்தகைய அற்புதமான விடயங்கள்! அவர் அதிகளவு புகழப்படுகிறார்! இங்கு அமர்ந்திருக்கையில், உங்களுடைய புத்தியில் அந்தப் போதை இருக்க வேண்டும். சந்நியாசிகள் துறவறப்பாதைக்கு உரியவர்கள்;. அவர்களுடைய தர்மம் வேறுபட்டது. இந்த நேரத்தில் தந்தை இதையும் விளங்கப்படுத்துகிறார். துறவறப் பாதையைப் பற்றி நீங்கள்; அறிந்திருக்கவில்லை. நீங்கள் இல்லறப் பாதையில் வாழ்ந்துகொண்டு பக்தி போன்றவற்றைச் செய்து வந்தீர்கள். நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெறுகிறீர்கள், ஆனால் அந்த மக்கள் ஞானத்தைப் பெறப் போவதில்லை. நீங்கள் மிகவும் மேன்மையான கல்வியைக் கற்கின்றீர்கள், இங்கு நீங்கள் சாதாரணமாக தரையில் அமர்ந்திருக்கிறீர்கள். தில்வாலா ஆலயத்திலும், நீங்கள் தபஸ்யா செய்து கொண்டு கீழே அமர்ந்திருக்கிறீர்கள், மேலே, வைகுந்தம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கூரையில் வைகுந்தத்தைப் பார்க்கையில், மேலேயே சுவர்க்கம் இருக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். ஆகவே, இது ஒரு பாடசாலை என்று குழந்தைகளாகிய நீங்கள் உள்ளார்த்தமாக புரிந்துகொள்ள வேண்டும். இங்கு நீங்கள் கற்கின்றீர்கள். நீங்கள் எப்பொழுதாவது எங்கேயும் உலாவும் பொழுதோ அல்லது சுற்றுலாச் செல்லும்பொழுதோ உங்கள் புத்தியில் இந்த எண்ணங்கள் இருந்தால், நீங்கள் உங்களுக்குள் அதிகளவு களிப்படைவீர்கள். உலகிலுள்ள எவருக்கும் எல்லையற்ற தந்தையைத் தெரியாது. தந்தையின் குழந்தை ஆகிய பின்னர் அவருடைய வாழ்க்கைச் சரிதையை அறியாத அத்தகைய முட்டாளை நீங்கள் எப்பொழுதாவது பார்த்துள்ளீர்களா? அறியாததால், அவர்கள் கடவுள் சர்வவியாபி என்று கூறுகிறார்கள். அவர்கள் கடவுளைப் பற்றிக் கூறுகிறார்கள்: அவர் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவரும், பூஜிப்பவரும் ஆவார். குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுற அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும்: நாங்கள் மிகவும் மேன்மையானவர்களாகவும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருந்தோம். பின்னர், நாங்களே எங்களை பூஜிப்பவர்கள் ஆகினோம். சிவபாபா உங்களை மிகவும் மேன்மையானவர்களாக ஆக்கினார், பின்னர், நாடகத்திற்கேற்ப, நீங்களே அவரைப் பூஜிக்க ஆரம்பித்தீர்கள். எப்பொழுது பக்தி ஆரம்பித்தது என்பது உலகிற்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார்: இங்கு நீங்கள் அமர்ந்திருக்கையில், உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதை அறிந்ததால் உங்களுக்குள் சந்தோஷம் இருக்க வேண்டும். கடவுளே வந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் ஒருபொழுதும் இதைக் கேட்டிருக்கவும் மாட்டீர்கள்: கிருஷ்ணரே கீதையின் கடவுள், ஆகவே கிருஷ்ணரே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்று அந்த மக்கள் எண்ணுகிறார்கள். நல்லது, அது கிருஷ்ணர் என்று நீங்கள் எண்ணினாலும், உங்களுடைய ஸ்திதி மிகவும் மேன்மையாகவே இருக்க வேண்டும். மனிதர்களின் கட்டளைகள் பற்றியும் கடவுளின் வழிகாட்டல்கள் பற்றியும் ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது. தேவர்களுக்கு வழிகாட்டல்களைப் பெறவேண்டிய அவசியமில்லை. மக்கள் கடவுளின் வழிகாட்டல்களை விரும்புகிறார்கள். தேவர்கள் ஏற்கெனவே தங்களின் முன்னைய பிறவியில் வழிகாட்டல்களைப் பெற்று, அதனூடாக அவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைந்தார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மேன்மையாகுவதற்காக இப்பொழுது ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். கடவுளின் வழிகாட்டல்களுக்கும், மனிதர்களின் கட்டளைகளுக்கும் இடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. மனிதர்களின் கட்டளைகள் கூறுவது என்;ன? கடவுளின் வழிகாட்டல்கள் கூறுவது என்ன? ஆகவே, நீங்கள் நிச்சயமாகக் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் நீங்கள் எவரையாவது சந்திக்கச் செல்லும்பொழுது, நீங்கள் உங்களுடன் எதையும் எடுத்துச் செல்வதில்லை. நீங்கள் ஒருவருக்கு என்ன வெகுமதியைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவதும் இல்லை. மனிதர்களின் கட்டளைகளுக்கும் கடவுளின் வழிகாட்டல்களுக்கும் இடையிலான இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானதாகும்.நீங்கள் மனிதர்களாக இருந்தபொழுது, அசுர கட்டளைகளைப் பின்பற்றினீர்கள். இப்பொழுது, நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். அதில் அதிகளவு வேறுபாடுள்ளது. அந்தச் சமயநூல்கள் போன்றவை அனைத்தும் மனிதர்களால் எழுதப்பட்டவை. தந்தை சமயநூல்களை வாசித்த பின்னர் இங்கு வருகிறாரா? தந்தை கூறுகிறார்: நான் ஒரு தந்தையின் குழந்தையா? நான் ஒரு குருவுடன் கற்ற சிஷ்யரா? ஆகவே, இவ்விடயங்கள் அனைத்தும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். உங்களுக்குக் குரங்குப் புத்தி உள்ளது என்பதை அவர் அறிந்;தாலும், நீங்களே ஓர் ஆலயத்தில் இருப்பதற்குத் தகுதியானவர்களாகப் போகின்றவர்கள்;. மனிதர்களின் கட்டளைகளைப் பின்பற்றுபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் கடவுளின் வழிகாட்டலைப் பின்பற்றுவதால், நீங்கள் என்னவாக ஆகுகிறீர்கள் என்பதையும், அவரே உங்களுக்குக் கற்பிக்;கின்றார் என்பதையும், அவர்களுக்குக் கூறுங்கள். கடவுளே பேசுகிறார். நாங்கள் அவருடன் கற்பதற்குச் செல்கிறோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் ஒரு மணித்தியாலத்திற்;கு அல்லது முக்கால் மணித்தியாலத்திற்கு அவரிடம் செல்கிறோம். நீங்கள் வகுப்பில் அதிகளவு நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. நடக்கும்பொழுதும் உலாவித் திரியும்பொழுதும் உங்களால் நினைவுயாத்திரையில் இருக்க முடியும். ஞானம், யோகம் இரண்டும் மிக இலகுவானவை. அல்பா என்பது ஓர் எழுத்து மாத்திரமே. பக்தி மார்க்கத்தில், பல சமயநூல்கள் உள்ளன. நீங்கள் அவை அனைத்தையும் சேகரித்திருந்தால், வீடு முழுவதும் சமயநூல்களால் நிறைந்திருக்கும். அதில் அதிகளவு செலவு ஏற்பட்டிருக்கும். இப்பொழுது தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவான ஒன்றைக் காண்பிக்கிறார்: தந்தையை நினைவுசெய்யுங்கள். அதனால் நிச்சயமாக உங்களுக்குச் சுவர்க்க இராச்சியமான தந்தையின் ஆஸ்தி கிடைக்கும். நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. நீங்கள் அதை மறந்துவிட்டீர்களா? அதுவும் நாடகத்தின் நியதி என்றே கூறப்படுகிறது. இப்பொழுது தந்தை வந்துவிட்டார். 5000 வருடங்களுக்கு ஒருமுறை உங்களுக்குக் கற்பிப்பதற்கு அவர் வருகிறார். எல்லையற்ற தந்தையின் ஆஸ்தி உண்மையிலேயே புதிய உலகமாகிய சுவர்க்கமாகவே இருக்கும், அவ்வாறிருக்காதா? இது மிகவும் இலகுவானதொரு விடயமாகும். நூறாயிரக் கணக்கான வருடங்கள் என்று கூறப்பட்டுள்ளதினால், அவர்களுடைய புத்தி பூட்டப்பட்டுள்ளதுடன் அது திறக்கப்படாது போன்றுள்ளது. அத்தகைய இலகுவான ஒரு விடயத்தை மக்கள் புரிந்துகொள்ள இயலாதளவுக்கு அது பூட்டப்பட்டுள்ளது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒரு விடயமே போதுமானது. நீங்கள் அதிகளவு கற்பிக்க வேண்டியதில்லை. இங்கு, உங்களால் எவரையேனும் ஒரு விநாடியில் ஒரு சுவர்க்கவாசியாக்க முடியும். எவ்வாறாயினும், இது ஒரு பாடசாலை, இதனாலேயே உங்களுடைய கல்வி சதா காலமும் தொடர்கிறது. ஞானக்கடலாகிய தந்தை உங்களுக்கு அதிகளவு ஞானத்தைக் கொடுக்கிறார், நீங்கள் கடலை மையாக்கி, காடுகள் முழுவதையும் எழுதுகோல்கள் ஆக்கினாலும் ஞானத்துக்கு முடிவு இல்லை. நீங்கள் ஞானத்தைக் கிரகிக்க ஆரம்பித்து எவ்வளவு காலமாகிவிட்டது? நீங்கள் பக்தி செய்ய ஆரம்பித்து அரைக்கல்பம் ஆகிவிட்டது. நீங்கள் ஒரு பிறவியில் மாத்திரமே ஞானத்தைப் பெறுகிறீர்கள். புதிய உலகிற்காக, தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். ஒரு லௌகீகப் பாடசாலையில் நீங்கள் நீண்டகாலமாகக் கற்கிறீர்கள். நீங்கள் ஐந்து வயதிலிருந்து சுமார் 20 அல்லது 22 வயதுவரை தொடர்ச்சியாகக் கற்கிறீர்கள். நீங்கள் சிறிதளவு சம்பாதித்து அதிகளவு செலவழித்தால், இழப்பு இருக்கும், இல்லையா? தந்தை உங்களை மிகவும் செல்வந்தர்களாக ஆக்குகிறார். பின்னர் நீங்கள் கடனாளிகள் ஆகுகிறீர்கள். இப்பொழுது பாரதத்தின் நிலைமை என்ன என்பதைப் பாருங்கள்! நீங்கள் போதையுடன் விளங்கப்படுத்த வேண்டும். தாய்மார்கள் மிகவும் உஷாராக வேண்டும். உங்களையிட்டு நினைவுகூரப்படுகிறது: தாய்மார்களுக்கு வந்தனங்கள். “தாய்நாட்டுக்கு வந்தனங்கள்” என்று கூறப்படவில்லை. மனிதர்களுக்கு வந்தனங்கள் செலுத்தப்படுகின்றன. பந்தனத்திலிருந்து விடுபட்ட குழந்தைகளால் மாத்திரம் இந்தச் சேவையைச் செய்ய இயலும். முன்னைய கல்பத்தில், அவர்கள் பந்தனத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆகியதைப்; போன்றே, இப்பொழுதும் அவர்கள் தொடர்ந்தும் விடுபடுகிறார்கள். அப்பாவிகள் அதிகளவு துன்புறுத்தப்படுகிறார்கள். நீங்கள் தந்தையைக் கண்டுவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆகவே நீங்கள் இப்பொழுது தந்தையின் சேவையைச் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தங்களுக்குப் பந்தனங்கள் உள்ளன என்று கூறுபவர்கள் செம்மறியாடுகளைப் போன்றவர்கள். அரசாங்கத்தால் நீங்கள் இறைசேவை செய்ய முடியாது என உங்களிடம் கூற முடியாது. உங்களுக்குப் பேசுவதற்குத் தைரியம் தேவையாகும். ஞானமுள்ளவர்களால் இலகுவில் பந்தனத்திலிருந்து விடுபட்டவராக முடியும். நீதிபதிகளுக்கும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். நான் ஆன்மீக சேவை செய்ய விரும்புகிறேன். ஆன்மீகத் தந்தை எங்களுக்குக் கற்பிக்கிறார். கிறிஸ்தவர்கள் “எங்களை விடுவியுங்கள்! எங்களுக்கு வழிகாட்டி ஆகுங்கள்!” என்றே கூறுகிறார்கள். அவர்களின் புரிந்துணர்வு பாரத மக்களை விடவும் அதிகமாக உள்ளது. குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலும், மிகவும் விவேகிகளாக உள்ளவர்கள் சேவை செய்வதில் மிக்க ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். இறைசேவை செய்வதால், மாபெரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டைத் தாங்கள் வெற்றி கொள்வோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அதிர்ஷ்ட இலாபச்சீட்டு போன்றவற்றைச் சிலர் புரிந்துகொள்வதில்லை. பின்னர் அவர்கள் அங்கு சென்று பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகுகிறார்கள். அவர்கள் தங்கள் இதயங்களில் உணர்கிறார்கள்: நான் ஒரு பணிப்பெண்ணாக அல்லது சுடலையாண்டியாக ஆகினாலும் நல்லது, ஏனெனில் குறைந்தபட்சம் நான் சுவர்க்கத்தில் இருப்பேன். அவர்களுடைய செயற்பாடுகளும் பார்ப்பதற்கு அவ்வாறே உள்ளன. உங்களுக்கு எல்லையற்ற தந்தை விளங்கப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த தாதாவும் விளங்கப்படுத்துகின்றார். இவரினூடாகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். சிலர் இந்தளவுக்கேனும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இங்கிருந் சென்றதும் அனைத்தும் முடிவடைந்துவிடுகின்றது. இங்கு அமர்ந்திருக்கையில், அவர்கள் எதையும் புரிந்துகொள்ளவில்லையெனத் தோன்றுகிறது. அவர்களுடைய புத்தி வெளியே அலைகின்றது, அவர்கள் தொடர்ந்தும் தடுமாறுகிறார்கள். ஒரு தீய ஆவியேனும் அகற்றப்படவில்லை. உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? நீங்கள் என்னவாக ஆகுகிறீர்கள்? சிலர் செல்வந்தர்களின் பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகுவார்கள், இல்லையா? இப்பொழுதும், செல்வந்தர்களுக்குப் பல பணிப்பெண்களும் வேலையாட்களும் உள்ளார்கள். நீங்கள் சேவையில் முழுமையாகப் பறந்துகொண்டிருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அமைதியை ஸ்தாபிப்பதற்குக் கருவிகள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் அமைதியையும் சந்தோஷத்தையும் உலகில் ஸ்தாபிக்கிறீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், இதை நடைமுறைரீதியில் ஸ்தாபிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதில் எந்த விதமான அமைதியின்மையும் இருக்க முடியாது. இங்கும் அத்தகைய பல சிறந்த வீடுகளை பாபா பார்த்துள்ளார். ஒரு வீட்டில், அன்புடன் ஒன்றாக வாழ்கின்ற, ஆறு அல்லது ஏழு மருமகள்கள் இருப்பார்கள். அங்கு முழுமையான அமைதி நிலவும். தாங்;கள் சுவர்க்கத்தில் இருப்பதாக அவர்கள் கூறுவது வழக்கமாகும். அங்கு எந்த விதமான முரண்பாடுகளும் இல்லை. அனைவரும் கீழ்ப்படிவாகவே உள்ளார்கள். அந்த நேரத்தில், பாபாவும் துறவறத்திற்கான எண்ணங்களைக் கொண்டிருந்தார். அவர் உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருந்தார். இது இப்பொழுது எல்லையற்ற விருப்பமின்மையாகும். எதுவும் நினைவுசெய்யப்படக் கூடாது. பாபா பெயர்கள் அனைத்தையும் மறந்து விடுவார். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா? பாபா கூறுகிறார்: நான் அனைவரையும் மறக்க வேண்டும். மறக்கவும் வேண்டாம், நினைவுசெய்யவும் வேண்டாம். எல்லையற்ற விருப்பமின்மை உள்ளது. அனைவரையும் மறந்துவிட வேண்டும். நாங்கள் இந்த இடத்தில் வசிப்பவர்கள் அல்லர். தன்னுடைய சுவர்க்க ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்குத் தந்தை வந்துள்ளார். எல்லையற்ற தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். ஏனையோர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு இந்த பட்ஜ் மிகவும் சிறந்ததாகும். எவராவது அதைக் கேட்டால், அவருக்குக் கூறுங்கள்: எல்லாவற்றுக்கும் முதலில், அதைப் புரிந்துகொண்டு, பின்னர் அதை எடுத்துச் செல்லுங்கள். இந்த பட்ஜ்ஜைப் புரிந்துகொள்வதால், உங்களால் உலக இராச்சியத்தைப் பெற முடியும். சிவபாபா இந்த பிரம்மாவினூடாக வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள். கீதையைக் கற்பவர்களும் தேவதர்மத்துக்கு உரியவர்களும் இதை மிகவும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். சிலர் வினவுகிறார்கள்: ஏன் தேவர்கள் வீழ்கிறார்கள்? ஆ! ஆனால் இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கிறார்கள், எனவே அவர்கள் கீழிறங்கி வருவார்கள், இல்லையா? சக்கரம் சுழல வேண்டும். நிச்சயமாக அது ஒவ்வொருவரின் இதயத்திலும் புகுகிறது: ஏன் என்னால் சேவை செய்ய இயலாதுள்ளது? நிச்சயமாக, என்னில் ஏதோ குறை உள்ளது. மாயையின் தீய ஆவிகள் உங்களின் மூக்கைப் பற்றிக் கொள்கிறது. இப்பொழுது நீங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.பின்னர் புதிய உலகிற்குச் சென்று, அங்கு ஆட்சி செய்வீர்கள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் பயணிகள், இல்லையா? நீங்கள் தொலை தேசத்திலிருந்து உங்களுடைய பாகங்களை நடிப்பதற்கு இங்கு வருகிறீர்கள். நீங்கள் அமரத்துவ பூமிக்;குச் செல்ல வேண்டும் என்பது இப்பொழுது உங்களுடைய புத்தியில் உள்ளது. இந்த மரணபூமி முடிவடையவுள்ளது. தந்தை அதிகளவு விளங்கப்படுத்துகிறார்; நீங்கள் இதை மிகவும் நன்றாகக் கிரகித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இதைத் தொடர்ந்தும் ஜீரணிக்க வேண்டும். தந்தையும் விளங்கப்படுத்தியுள்ளார்: கர்ம வேதனையின் நோய்களும் வெளிப்படும். மாயை உங்களைத் தொந்தரவு செய்வாள், ஆனால் நீங்கள் குழப்பமடையக் கூடாது. ஏதாவது சிறிய விடயம் நடைபெற்றாலும், மக்கள் மிகவும் குழப்பமடைகிறார்கள்! நோய்வாய்ப்படும் பொழுது, மக்கள் கடவுளை மேலும் அதிகமாக நினைவுசெய்கிறார்கள். பெங்காலில், ஒரு நபர் நோய்வாய்ப்படும்பொழுது, இராம நாமத்தைச் செபிக்குமாறு அவருக்குக் கூறப்படுகிறது. அவர்கள் ஒருவர் மரணிக்க இருப்பதைப் பார்க்கும்பொழுது, அவரைக் கங்கையாற்றுக்கு எடுத்துச் சென்று, அவரை “ஹரி” என்னும் நாமத்தைச் செபிக்கும்படி செய்கிறார்கள். எனவே பின்னர் அவர்கள் அவரைத் திரும்பவும் அழைத்து வந்து அவரைத் தகனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவரைக் கங்கையில் இட்டு விடுங்கள்! அவர் பெரிய முதலைகளுக்கும் மீன்களுக்கும் இரையாகுவார். அந்தச் சரீரமேனும் பயனுள்ளதாக இருக்கும்! பார்சிகள் ஒரு கிணற்றின் மேல் சரீரத்தை வைக்கிறார்கள், அந்த எலும்புகளும் பயனுள்ளவை ஆகுகின்றன. தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைத்தையும் மறந்து, என்னை நினைவுசெய்ய வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எபபோதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பந்தனத்திலிருந்து விடுபட்டவராகி, பாரதத்தின் உண்மையான சேவையைச் செய்யுங்கள். போதையுடன் விளங்கப்படுத்துங்கள்: ஆன்மீகத் தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். இப்பொழுது நாங்கள் ஆன்மீக சேவையில் இருக்கின்றோம். இறைசேவை செய்வதற்கான உற்சாகம் இருக்கட்டும்.
2. கர்மவேதனையின் நோயினால்; அல்லது மாயையின் புயல்களால் குழப்பமடையவோ அல்லது உபத்திரப்படவோ வேண்டாம். தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ள ஞானத்தைத் தொடர்ந்தும் ஜீரணித்து, தந்தையின் நினைவில் மலர்ச்சியுடன் இருங்கள்.
ஆசீர்வாதம்:
அனைத்து உறவுமுறைகளையும் அத்துடன் சந்தோஷத்தின் சகல பேறுகளையும் அனுபவம் செய்கின்ற ஓர் திருப்தியான ஆத்மா ஆகுவீராக.
உண்மையான காதலர்கள் ஒவ்வொரு பாதகமான சூழ்நிலையிலும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் சதா சந்தோஷமாகவே இருப்பார்கள். சில குழந்தைகள் அவரைத் தமது தந்தையாகவோ, தமது மணவாளனாகவோ அல்லது தமது குழந்தையாகவோ அனுபவம் செய்த போதிலும், தாம் விரும்பியளவு பேற்றினை அனுபவம் செய்வதில்லை. எனவே, அந்த அனுபவத்துடன், சகல உறவுமுறைகளை கொண்டிருக்கும் பேற்றையும் அனுபவம் செய்யுங்கள். அத்தகைய பேற்றைக் கொண்டிருந்து அதனை அனுபவம் செய்பவர்கள் சதா திருப்தியாக இருப்பார்கள். அவர்கள் எவ்விதத்திலும் எந்தக் குறைபாட்டையும் உணரமாட்டார்கள். பேறு எங்குள்ளதோ, அங்கே நிச்சயமாகத் திருப்தி இருக்கும்.சுலோகம்:
ஒரு கருவி ஆகினால், சேவையின் வெற்றியில் உங்களுக்கு ஒரு பங்கிருக்கும்.