12.09.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இரவும் பகலும், உங்களுக்குள் “பாபா, பாபா” என சிந்தித்தால், நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். பாபாவே உங்களுக்குக் குபேர (மிகவும் செல்வந்த அரசர்) பொக்கிஷங்களை கொடுக்கிறார் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்கும்.

கேள்வி:
பாபா எத்தகைய குழந்தைகளை நேர்மையான மலர்களென அழைக்கின்றார்? அத்தகைய குழந்தைகளுக்கான அறிகுறிகள் என்ன எனக் கூறுங்கள்?

பதில்:
நேர்மையான மலர்கள் ஒருபோதும் மாயையின் ஆதிக்கத்திற்கு உள்ளாக மாட்டார்கள். அவர்கள் மாயையோடு எந்த முரண்பாட்டையும் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நேர்மையான மலர்கள் கடைசியில் வந்தாலும் கூட வேகமாகச் செல்வதற்கான முயற்சியைச் செய்வார்கள். அவர்கள் மூத்தவர்களையும் முந்திச் செல்வதற்கான இலட்சியத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் குறைகளை அகற்றுவதற்கான முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அவர்கள் ஏனையோரின் குறைகளைப் பார்க்க மாட்டார்கள்.

ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகின்றார். அவர் ஆன்மீகத் தந்தை ஆவார். ஏனெனில், சிவனே பரமாத்மா ஆவார். தினமும் தந்தை உங்களுக்குப் புதிய விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். கீதையை உரைக்கின்ற பல சந்நியாசிகள் முதலானோர் இருக்கின்றார்கள். அவர்களால் தந்தையை நினைவு செய்வதற்கு முடியாது. “பாபா” என்ற வார்த்தை அவர்களுடைய உதடுகளில் இருந்து வெளிப்பட முடியாது. இவ்வார்த்தை குடும்பப் பாதையில் இருப்பவர்களுக்கு மாத்திரமேயாகும். அவர்களோ துறவறப் பாதையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒளித்தத்துவத்தை மாத்திரம் நினைவு செய்கின்றார்கள். அவர்கள் சிவபாபா என ஒருபொழுதும் கூறுவதில்லை. நீங்கள் சென்று சோதித்துப் பார்க்கலாம். சிம்மியானந்தா போன்ற மகத்துவமான ஞானம் நிறைந்த சந்நியாசிகள் கீதையை உரைக்கின்ற போது, அவர்கள் கிருஷ்ணரைக் கீதையின் கடவுளெனக் கருதுகிறார்கள், அல்லது அவருடன் யோகம் செய்கிறார்கள் என்றல்ல. இல்லை. அவர்கள் ஒளித் தத்துவத்துடன் மாத்திரமே யோகத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தினதும், தத்துவங்களினதும் ஞானத்தைக் கொண்டிருக்கின்றார்கள். எவரும் கிருஷ்ணரை “பாபா” என அழைப்பது சாத்தியமில்லை. எனவே கீதையை உரைக்கின்ற பாபா கிருஷணரல்லர். அனைவரும் சிவனை “பாபா” என அழைக்கின்றனர். ஏனெனில் அவர் அனைத்து ஆத்மாக்களினதும் தந்தை ஆவார். அனைத்து ஆத்மாக்களும் அவரைப் பரமதந்தை, பரமாத்மா என அழைக்கின்றனர். அவர் அதி மேலானவரும், அதி உயர்ந்தவரும் ஆவார். ஏனெனில்;, அவர் பரந்தாமத்தில் வசிக்கின்றார். நீங்கள் அனைவரும் கூட பரந்தாமத்தில் வசிப்பவர்களே. ஆனால் அவர் பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். அவர் ஒரு போதும் பிறவி எடுப்பதில்லை. அவரே கூறுகின்றார்: எனது பிறப்பு தெய்வீகமானதும், தனித்துவமுமானதுமாகும் வேறு எவராலும் ஒரு இரதத்தினுள் புகுந்து நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதற்கான வழியைக் காட்ட முடியாது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நான் எவ்வாறானவர், நான் எப்படிப்பட்டவர் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். நானே எனது அறிமுகத்தை கொடுக்கும் போது மாத்திரமே உங்களால் என்னை அறிந்து கொள்ள முடியும். ஒளித் தத்துவத்தையோ அல்லது தத்துவங்களையோ நம்புபவர்களால் எவ்வாறு கிருஷ்ணரைத் தங்களுடைய தந்தை எனக் கருத முடியும். ஆத்மாக்கள் அனைவருமே குழந்தைகள். எவ்வாறு அனைவருமே கிருஷ்ணரை ~தந்தை| என அழைக்க முடியும்? கிருஷ்ணர் அனைவருடைய தந்தை என்றோ அதனால் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்றோ அல்லது கிருஷ்ணர் சர்வவியாபகர் என்றோ கூற முடியாது. அனைவருமே கிருஷ்ணராக இருக்க முடியாது. அனைவரும் கிருஷ்ணராயின், அவர்களும் ஒரு தந்தையைக் கொண்டிருக்க வேண்டும். மனிதர்கள் அனைத்தையும் மறந்து விட்டார்கள். கடவுளை அறிந்து கொள்ளாததாலேயே, “பல மில்லியன்களில் மிகச்சிலரே என்னை அறிவார்கள்” எனக் கூறப்படுகின்றது. எவராலும் கிருஷ்ணரை இனங்காண முடியும். வெளிநாட்டு மக்களும் கூட அவரை அறிவார்கள். அவர்கள் பிரபு கிருஷ்ணர் என அவரை அழைக்கிறார்கள். அவர்களிடம் அவருடைய உருவம் உள்ளது. ஆனால் உண்மையில் அது மிகச் சரியான உருவம் அல்ல. அவர் அதிகளவில் பூஜிக்கப்படுகிறாரென பாரத மக்கள் மூலமாக அவர்கள் அறிந்து கொள்கிறார்கள், ஆகையாலேயே, கீதையில் எழுதப்பட்டுள்ளது: ~கடவுள் கிருஷ்ணர்|. கடவுளை பிரபு என அழைக்கலாமா? அவர்கள் பிரபு கிருஷ்ணர் எனக் கூறுகின்றனர். முக்கியஸ்தர்களுக்கே பிரபு என்ற பட்டம் கொடுக்கப்படுகின்றது. அவர்கள் இதனைப் பலருக்கும் கொடுக்கின்றார்கள். இது இருளடைந்த நரகம் எனப்படுகின்றது. அவர்கள் எந்த ஒரு தூய்மையற்ற மனிதரையும் பிரபு என அழைக்கிறார்கள். இன்றைய தூய்மையற்ற மக்களுக்கும் சிவன், மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையே பெருமளவு வித்தியாசம் உள்ளது. தந்தை கூறுகின்றார் இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுக்கின்ற ஞானம் பின்னர் மறைந்துவிடும். நானே வந்து புதிய உலகை ஸ்தாபனை செய்கின்றேன். இப்பொழுது நானே உங்களுக்கு ஞானத்தைத் தருகின்றேன். நான் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும் போது மாத்திரமே குழந்தைகளாகிய உங்களால் அதனைச் செவிமடுக்க முடியும். என்னைத்தவிர வேறு எவராலும் அதனை உரைக்க முடியாது. எவருக்குமே இது தெரியவும் மாட்டாது. அச் சந்நியாசிகளால் சிவபாபாவை நினைவு செய்ய முடியுமா? அசரீரியான கடவுளை நினைவு செய்யுமாறு அவர்களால் ஏனையோருக்குக் கூறவேனும் முடியாது. இவ்வாறு அவர்கள் கூறுவதை நீங்கள் எப்போதாவது செவிமடுத்திருக்கின்றீர்களா? மிக நன்றாகக் கற்ற பலரால் கூட எதனையும் புரிந்துகொள்ள முடியாது. மனிதர்கள் தொடர்ந்து கிருஷ்ணரைக் கடவுள் என அழைத்த போதிலும், கிருஷ்ணர் கடவுள் அல்லர் எனத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார். பெருமளவு வித்தியாசம் உள்ளது! தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். சிவபாபா இங்கிருந்து அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றார். இதனை அவர்கள் புரிந்து கொள்ளாததால், அவர்கள் சிவனைத் திரிமூர்த்தியில் காட்டவில்லை. மக்களைப் படைப்பவரும், மனித இனத்தின் தந்தையுமான பிரம்மாவை சித்தரிக்கிறார்கள். எவ்வாறாயினும் அவரைக் கடவுளென அழைக்க முடியாது. கடவுள் மக்களைப் படைப்பதில்லை. ஆத்மாக்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதால், அவர் வேறு எவர் மூலமாகவே மக்களை படைக்க வேண்டும். உங்களைத் தத்தெடுத்தது யார்? தந்தை உங்களை பிரம்மா மூலம் தத்தெடுத்துள்ளார். முதலில் நீங்கள் பிராமணர்கள் ஆகினால் மாத்திரமே உங்களால் தேவர்கள் ஆகமுடியும். நீங்கள் முன்பு எப்போதேனும் இந்த விடயங்களைச் செவிமடுத்திருக்க மாட்டீர்கள். மனித இனத்தின் தந்தைக்கு நிச்சயமாக ஒருபாகம் இருக்கின்றது. அவர் நிச்சயமாக நடித்தேயாக வேண்டும். இல்லையெனில் எங்கிருந்து பல மக்கள் வர முடியும்? அவர்கள் விகாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகளாக இருக்க முடியாது. விகாரத்தின் மூலம் பிறந்த அப் பிராமணர்கள் தங்கள் முதற் பெயர் 'பிராமணன்" எனக் கூறுவார்கள். ஒவ்வொருவருடைய பெயரும் வித்தியாசமானது. சிவபாபா அவரினுள் பிரவேசித்த பின்னரே அவர் பிரஜாபிதா பிரம்மா என்ற அப்பெயரால் அழைக்கப்பட்டார். இது ஒரு புதிய விடயமாகும். தந்தையே கூறுகின்றார்: எவரும் என்னை அறிய மாட்டார்கள். உலக சக்கரத்தையும் எவரும் அறிய மாட்டார்கள். இதனாலேயே ரிஷிகளும், முனிவர்களும் இதுவுமல்ல, அதுவுமல்ல எனக் கூறுகின்றார்கள். அவர்கள் கடவுளையும் அறியமாட்டார்கள், கடவுளின் படைப்பையும் அறியமாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: நான் வந்து எனது சொந்த அறிமுகத்தைக் கொடுத்த பின்னரே அவர்களால் என்னை அறிந்து கொள்ள முடியும். அந்த தேவர்கள் தாம் எவ்வாறு தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதை அறிய மாட்டார்கள். இந்த ஞானம் எதுவும் அவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் தங்கள் அந்தஸ்தை பெற்றபின்னர், அதன் பின்னர் ஞானத்திற்கான அவசியம் இல்லை. சற்கதி பெறவே ஞானம் தேவையாகும். அவர்கள் ஏற்கனவே சற்கதியை பெற்றிருப்பார்கள். இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிக ஆழமான விடயங்களாகும். விவேகமானவர்கள் மாத்திரமே இதனைப் புரிந்து கொள்வார்கள். எவ்வாறாயினும், வயோதிபத் தாய்மார் அந்தளவிற்கு விவேகத்தைக் கொண்டிருப்பது இல்லை. நாடகத்தின்படி நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தப் பாகத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். ஓ, கடவுளே, எனக்கு சிறந்ததொரு புத்தியைத் தாருங்கள்! என அவர்கள் கேட்க மாட்டார்கள். நான் அனைவருக்கும் ஒரே மாதிரிப் புத்தியைக் கொடுப்பதாக இருப்பின், அனைவருமே நாராயணன் ஆகுவார்கள். சிம்மாசனத்தில் ஒருவரின் மேல் ஒருவரென அனைவருமே அமர்வார்களா? ஆம், அவ்வாறு ஆகுவதே இலக்கும் குறிகோளும் ஆகும். சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆகுவதற்கான முயற்சியை ஒவ்வொருவரும் செய்கின்றார்கள். அவர்கள் தங்கள் முயற்சிக்கேற்ப அவ்வாறு ஆகுவார்கள். அனைவரும் நாராயணன் ஆகுவோமெனத் தங்கள் கரங்களை உயர்த்துவார்களாயின், பாபா தனக்குள் சிரித்துக் கொள்வார். எவ்வாறு அனைவரும் ஒரே மாதிரி ஆக முடியும்? அவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகவே இருப்பார்கள். முதலாம், இரண்டாம், மூன்றாம் எட்வேட் என போன்று முதலாம், இரண்டாம், மூன்றாம் நாராயணனும் இருக்கின்றார்கள். நீங்கள் ஒரே மாதிரி இலக்கையும், குறிகோளையும் கொண்டிருந்த போதிலும், உங்கள் செயல்கள் மாறாது விடின், எத்தகைய அந்தஸ்தை நீங்கள் கோருவீர்கள் என உங்கள் ஒவ்வொருவருக்குமே தெரியும். நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். பாபா வரிசைக்கிரமமான மலர்களைக் கொண்டு வருகின்றார். அவர்களுக்கு அவரால் வரிசைக்கிரமமாக கொடுக்க முடியும், ஆயினும் அவர் அதனைச் செய்வதில்லை. காரணம் உங்களில் சிலர் நம்பிக்கை இழந்து விடுவீர்கள். எத்தகைய குழந்தைகள் அதிகளவு சேவை செய்கின்றார்கள், யார் சிறந்த மலர்களாக இருக்கின்றார்கள் என்பதை பாபா அறிவார் என்பதுடன், அவர்களைப் பார்க்கின்றார். ஏனைய அனைவரும் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். பழையவர்கள் பலர் இங்கு அமர்ந்திருக்கின்றார்கள். ஆனால், அத்துடன் சில புதிய நல்ல மலர்களும் இருக்கின்றார்கள். அவர் கூறுவார்: இவர் முதல் இலக்க, ஒரு நேர்மையான மலர் ஆவார். அவர் எவ்வித முரண்பாட்டையோ, அல்லது பொறாமை போன்றவற்றையோ கொண்டிருக்கவில்லை. பலர் இன்னமும் ஏதேனும் ஒரு குறைபாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். எவரையும் முழுமையானவர் எனக் கூற முடியாது. நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிரம்பப் பெற்றவர்கள் ஆகுவதற்கு பெருமளவு முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இது வரையில் எவரும் முழுமையடையவில்லை. இப்பொழுது கூட சில நல்ல குழந்தைகளும் தமக்குள் அதிகளவு பொறாமையை கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் குறைகளும் உள்ளது. நீங்கள் எத்தகைய முயற்சியை செய்கின்றீர்கள் என்பதைத் தந்தை அறிவார். உலக மக்கள் எதனை அறிவார்கள்? அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. மிகச் சில மக்களே புரிந்து கொள்கின்றார்கள். ஏழைகளும் விரைவாகப் புரிந்து கொள்கின்றார்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளார். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நாங்கள் தந்தையிடம் வந்திருக்கின்றோம். நாங்கள் நிச்சயமாக பாபாவிடம் இருந்து புதிய உலக ஆஸ்தியைப் பெறுவோம். அது நூறிலிருந்து ஒன்றுவரை வரிசைக் கிரமமாக உள்ளது, ஆனால், நீங்கள் தந்தையை அறிந்து கொண்டு ஞானத்தை சிறிதளவு செவிமடுத்தாலுமே நிச்சயமாக நீங்கள் சுவர்க்கம் செல்வீர்கள். 21 பிறவிகளுக்கு சுவர்க்கம் செல்வதென்பது சிறிய விடயமல்ல. ஒருவர் மரணிக்கும் போது அவர் 21 பிறவிகளுக்குச் சுவர்க்கம் செல்கின்றாரென அவர்கள் கூறுவது போன்றதல்ல. சுவர்க்கம் எங்கு இருக்கின்றது? தவறான புரிந்துணர்வுகள் பெருமளவு இருக்கின்றன. மிகச் சிறந்த முக்கியமான மக்கள் கூட இன்னார், இன்னார் சுவர்க்கம் சென்று விட்டதாகக் கூறுகின்றார்கள். அவர்கள் சுவர்க்கம் எனக் கூறும் போது, எதைக் குறிப்பிடுகின்றார்கள் என்று புரிந்து கொள்வதில்லை. நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். நீங்களும் மனிதர்களே, ஆனால் நீங்கள் பிராமணர்கள் ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் உங்களைப் பிராமணர்களென அழைக்கின்றீர்கள். பிராமணர்களாகிய உங்களுக்கு ஒரேயொரு பாப்தாதாவே இருக்கின்றார். 'சரீரத்தையும், சரீரத்துக்கான தர்மங்களையும் மறந்து என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்" எனக் கடவுளால் பேசப்படும் மகா வாக்கியங்கள் கூறுகின்றன என நீங்கள் சந்நியாசிகளிடம் கூற முடியும். 'என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்" எனக் கிருஷ்ணரா கூறினார்? நீங்கள் கிருஷ்ணரையா நினைவு செய்கின்றீர்கள்? அவர்கள் ஒரு போதும் 'ஆமாம்" எனக் கூறமாட்டார்கள். அப்பொழுதே வெளிப்பாடு இடம்பெறும். அவர்களிடம் செல்கின்ற கள்ளங்கபடமற்ற அப்பாவிகள் எதையும் அறிய மாட்டார்கள். அவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்கள் முன்னிலையில் கோபப்படுவார்கள். துர்வாசருடைய பெயர் (பெருங் கோபமுடைய ஒரு முனிவர்) நினைவுகூரப்படுகின்றது. அவர்கள் பெருமளவு அகங்காரத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் பின்பற்றுபவர்கள் பலர் இருக்கின்றார்கள். இது பக்தி மார்க்கத்து இராச்சியமாகும். அவர்களிடம் கேள்வி கேட்பதற்கு எவருக்கும் சக்தி கிடையாது. இல்லையெனில் நீங்கள் அவர்களிடம் கேட்கலாம்: நீங்கள் சிவபாபாவைப் பூஜிக்கின்றீர்கள். எனவே யாரைக் கடவுளென அழைக்கின்றீர்கள். கடவுள் கற்களிலும் கூழாங்கற்களிலும் இருக்கின்றாரா? அவர்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் பின்னர் புரிந்து கொள்வார்கள். அவர்கள் இப்பொழுது அதிகளவு போதையைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே பூஜிப்பவர்கள். அவர்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களென அழைக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: அபூர்வமாக ஒரு சிலரே என்னை அறிவார்கள். குழந்தைகளாகிய உங்களிலும் கூட ஒரு சிலரே நான் யார் என்பதையும் நான் எவ்வாறானவன் என்பதையும் மிகச் சரியாக அறிவீர்கள். உள்ளார்த்தமாக நீங்கள் மிகவும் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். பாபா உங்களுக்கு சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் குபேரனுடைய பொக்கிஷத்தைப் பெறுகின்றீர்கள். அலாவுதீனின் விளக்குப் பற்றிய நாடகமும் காட்டப்படுகின்றது. விளக்கைத் தேய்க்கும்போது பெருமளவு பொக்கிஷம் வெளிப்படுகின்றது. அப்படிப்பட்ட பல நாடகங்கள் காட்டப்படுகின்றன. கடவுளை நண்பனாகக் கொண்டிருந்த ஒரு சக்கரவர்த்தி என்ன செய்தார் என்பதைப் பற்றிய ஒரு கதை உள்ளது. அவர் பாலத்தின் மேல் வந்த முதலாவது மனிதருக்குத் தன்னுடைய இராச்சியத்தை ஒரு நாளுக்குக் கொடுப்பார். இவை யாவும் வெறும் கதைகளே. கடவுள் குழந்தைகளாகிய உங்களுடைய நண்பர் எனத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார். அவர் இவரினுள் பிரவேசித்து உங்களுடன் உண்டு. பருகி விளையாடுகிறார். சிவபாபாவினதும், பிரம்மபாபாவினதும் இரதம் ஒன்றேயாகும். ஆதலால் நிச்சயமாக சிவபாபாவும் உங்களுடன் விளையாட வேண்டும். நீங்கள் விளையாடும் பொழுது தந்தையை நினைவுசெய்வீர்களாயின் இருவரும் அவரினுள் இருக்கின்றனர் என்பதே அதன் அர்த்தமாகும். 'பாபா, தாதா" என இருவர் உள்ளனர். எவ்வாறாயினும் இதை எவருமே புரிந்துகொள்வதில்லை. அவர் ஒரு இரதத்தில் வந்ததாலேயே அவர்கள் ஒரு குதிரையையும் இரதத்தையும் சித்தரித்துள்ளார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். சிவபாபா கிருஷ்ணருக்குள்ளிருந்து கொடுக்கின்றார் என்பதல்ல. 'கடவுள் கிருஷ்ணர் பேசுகிறார்" என அவர்கள் கூறகிறார்கள். 'கடவுள் பிரம்மா பேசுகிறார்" என அவர்கள் கூறுவதில்லை. இல்லை. இவர் ஒரு இரதம். 'கடவுள் சிவன்" பேசுகிறார் எனக் கூறப்படுகிறது. தந்தை இங்கிருந்து அவருடைய அறிமுகத்தை உங்களுக்குக் கொடுப்பதுடன் உலக சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றியும் அதன் கால எல்லையையும் உங்களுக்கு கூறுகிறார். இவ்விடயங்கள் எவருக்கும் தெரியாது. விவேகமானவர்கள் தங்களுடைய புத்தியை பயன்படுத்துகிறார்கள். சந்நியாசிகள் அனைத்தையும் துறக்க வேண்டும். உங்கள் சரீரம் உட்பட முழு உலகத்தையும் நீங்கள் துறக்கின்றீர்கள். அது உங்களுடைய பழைய தோலாகும். நீங்கள் புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் இவ்விடத்துவாசிகள் அல்ல. நாங்கள் எங்களுடைய பாகங்களை நடிப்பதற்கே இங்கே வருகிறோம். நாங்கள் ஆதியில் பரந்தாம வாசிகள். மேலே உள்ள அசரீரியான விருட்சம் எவ்வாறானது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் அங்கேயே வசிக்கிறார்கள். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. பலமில்லியன் கணக்கான மனித ஆத்மாக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் எங்கே வசிக்கிறார்கள்? அசரீரியான உலகில். எவ்வாறாயினும், வானத்து நட்சத்திரங்கள் ஆத்மாக்கள் அல்ல. மக்கள் அந்த நட்சத்திரங்களைத் தேவர்கள் என்றும் அழைத்துள்ளனர். ஆயினும் அவை தேவர்கள் அல்ல. நாங்கள் சிவபாபாவை ஞானசூரியன் என அழைக்கிறோம். அந்த நட்சத்திரங்களை தேவர்கள் என அழைக்க முடியாது. சமயநூல்களில் ஏராளமான பிழையான விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை யாவும் நீங்கள் தொடர்ந்தும் கீழே வருவதற்குக் காரணமாக இருந்த பக்திமார்க்கத்தின் விரிவாக்கம் ஆகும். நீங்கள் 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருப்பின் நிச்சயமாகக் கீழே இறங்கிவர வேண்டும். இதுவே கலியுக உலகம். சத்தியயுகமே பொன்யுகம் என அழைக்கப்படுகிறது. அங்கே யார் வசிக்கிறார்கள்? தேவர்கள். அவர்கள் எங்கு சென்றார்களென எவருமே அறிய மாட்டார்கள். அவர்கள் மறுபிறவி எடுத்தார்களென நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். மறுபிறவி எடுக்கையில் அவர்கள் தேவர்களிலிருந்து இந்துக்களாக மாறினார்கள், அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகினார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். வேறு எவருடைய சமயமும் இவ்வாறு மாறுவதில்லை. அவர்களுடைய சமயம் ஏன் மாறியது என எவருக்குமே தெரியாது. தந்தை கூறுகிறார்: அவர்கள் தங்களுடைய தர்மத்திலும், கர்மத்திலும் சீரழிந்தவர்கள் ஆகினார்கள். அவர்கள் தேவர்களாக இருந்தபொழுது தூய்மையான தம்பதிகளாக இருந்தனர். பின்னர் அவர்கள் இராவண இராச்சியத்தில் தூய்மையற்றவர்கள் ஆகினார்கள், எனவே அவர்களை இனியும் தேவர்களென அழைக்க முடியாது. இதனாலேயே அவர்களுக்கு ‘இந்து’ என்ற பெயர் கொடுக்கப்பட்டது. கடவுள் கிருஷ்ணர் தேவதர்மத்தை ஸ்தாபிக்கவில்லை. நிச்சயமாக சிவபாபாவே வந்து அதை ஸ்தாபித்திருக்க வேண்டும். மக்கள் சிவனின் பிறப்பை அல்லது சிவராத்திரியைக் கொண்டாடுகின்றார்களாயினும், அவர் இங்கே வந்த பொழுது என்ன செய்தார் என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். 'சிவபுராணம்" எனும் ஒரு சமயநூல் உள்ளது. உண்மையில், சிவபாபா பேசிய ஒரேயொரு சிவனின் கீதையே உள்ளது. வேறு எந்தச் சமய நூல்களும் இல்லை. நீங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடுவதில்லை. உங்களுடைய சமய நூல்கள் எதுவும் ஆக்கப்படுவதில்லை. நீங்கள் புதிய உலகிற்குச் செல்கிறீர்கள். சத்தியயுகத்தில் சமய நூல்கள் அல்லது கீதை முதலியவை இருப்பதில்லை. அங்கே அவற்றை யார் கற்பார்கள்? வேதங்களும் சமயநூல்களும் ஆரம்பகாலம் தொட்டே இருந்ததாக மக்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது. சத்தியயுகத்தில் சமயநூல்கள் எதுவும் இருப்பதில்லை. தந்தை தேவர்களை உருவாக்கினார். அவர்கள் எல்லோரும் சற்கதி அடைந்தார்கள் எனவே அவர்களுக்கு சமயநூல்களை கற்பதற்கான தேவையில்லை. அங்கே சமயநூல்கள் எதுவும் இருப்பதில்லை. தந்தை இப்பொழுது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானத் திறவுகோலை கொடுத்துள்ளார். அதன் மூலம் உங்கள் புத்தியின் பூட்டு திறந்துள்ளது. முன்னர் அந்தப் பூட்டு முற்றுமுழுதாகப் பூட்டப்பட்டு இருந்ததால் உங்களுக்கு எதுவும் புரியவில்லை அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எவர் மீதும் பொறாமை கொள்ளாதீர்கள். உங்களுடைய குiறாபாடுகளை நீக்கி முழுமையானவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். கற்பதால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுங்கள்.

2. உங்களுடைய சொந்தச் சரீரம் உட்பட அனைத்தையும் துறவுங்கள். எவ்வகையான வன்முறையிலும் ஈடுபடாதீர்கள். எவ்விதமான அகங்காரமும் கொள்ளாதீர்கள்.


ஆசீர்வாதம்:
~என்னுடையது| என்பதை ~உங்களுடையது| என மாற்றுவதனால், சந்தோஷ பொக்கிஷம் நிரம்பியவர்கள் ஆகி, கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுவீர்களாக.

~அனைத்தும் உங்களுடையதே| எனக் கூறிய குழந்தைகள் கவலையற்றவர்களாக இருக்கிறார்கள். ~எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உங்களுடையதே|. நீங்கள் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் போது, நீங்கள் கவலையற்றவர்கள் ஆகுகிறீர்கள். அனைவருமே தமது வாழ்வில் கவலையற்றவர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். கவலையில்லாத இடத்தில், சதா சந்தோஷம் நிறைந்திருக்கும். ~உங்களுடையது| எனக் கூறுவதன் மூலம், கவலையற்றவர்கள் ஆகுவதால், நீங்கள் சந்தோஷ பொக்கிஷம் நிறைந்தவர்கள் ஆகுகிறீர்கள். கவலையற்ற சக்கரவர்த்திகளாகிய உங்களிடம், எண்ணிக்கையற்ற, முடிவில்லாத, அழிவற்ற பொக்கிஷங்கள் உள்ளது. அவை சக்தியயுகத்தில் இருக்க மாட்டாது.

சுலோகம்:
உங்களுடைய பொக்கிஷங்களை சேவைக்காக பயன்படுத்துவது என்றால் உங்களுடைய சேமிப்புக் கணக்கை அதிகரித்துக் கொள்வதாகும்.