28.03.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, முட்காட்டை அழித்து, பூந்தோட்டத்தை உருவாக்குவதே தந்தையின் கடமையாகும். இதில் முதற்தரமான குடும்பக்கட்டுப்பாடும் அடங்கியுள்ளது.
கேள்வி:
குடும்பக்கட்டுப்பாட்டுக்கான முதற்தரமான சமயநூல் எது? அது எவ்வாறாகும்?
8பதில்:
குடும்பக்கட்டுப்பாட்டுக்கான முதற்தரமான சமயநூல் கீதையாகும், ஏனெனில் கீதையின் ஊடாகவே தந்தை எண்ணற்ற சமயங்களை அழித்து, ஒரே தர்மத்தை ஸ்தாபித்தார். கீதையில் மாத்திரமே கூறப்பட்டுள்ளது: கடவுள் பேசுகிறார்: காமமே கொடிய எதிரி. நீங்கள் காம விகாரத்தை வெற்றி கொள்ளும் போது, குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம் தானாகவே இடம்பெறுகின்றது. இது ஒரேயொரு தந்தையுடைய பணி மாத்திரமே அன்றி வேறு எந்த மனிதரதும் அல்ல.ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகின்றார்: தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நிச்சயமாக இவ் உலகம் அசுர உலகம் என்றே அழைக்கப்படும். புதிய உலகம் தேவ உலகம் என்றே அழைக்கப்படுகின்றது. தெய்வீக உலகில் மிகக் குறைந்தளவு மக்களே வாழ்கிறார்கள். நீங்கள் இந்த இரகசியத்தை எவருக்கேனும் விளங்கப்படுத்த வேண்டும். இதனை நீங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பாகவுள்ள மந்திரிகளுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: கீதையின் வாசகங்களுக்கு ஏற்ப, ஒரே ஒரு தந்தைக்கு மாத்திரமே குடும்பக்கட்டுப்பாட்டுக்கான கடமை உள்ளது. கீதையை அனைவரும் நம்புகிறார்கள். கீதையே குடும்பக்கட்டுப்பாட்டுக்கான சமயநூலாகும். கீதையின் மூலம் தந்தை புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். நாடகத்துக்கு ஏற்ப இது இயல்பாகவே அவருடைய பாகமாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை மாத்திரமே வந்து ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார்;. அதாவது அவர் தூய தேசத்தை ஸ்தாபிக்கின்றார். நீங்கள் உங்களையே அத் தேவ தர்மத்தினர் என அழைக்கின்றீர்கள். கீதையில் கடவுள் உங்களுக்குத் தெளிவாகக் கூறுகிறார்: நான் வந்து, சமயங்கள் பலவற்றையும் அழித்து ஒரே ஒரு தர்மத்தை ஸ்தாபிக்கின்றேன். பின்னர் இதன் மூலம் முதற்தரமான குடும்பக்கட்டுப்பாடு இடம்பெறுகின்றது. உலகம் முழுவதும் வெற்றிக் குரல் ஒலிப்பதுடன், ஒரே ஒரு ஆதி சனாசன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படும். இப்பொழுது பெருமளவில் மனிதர்கள் இருப்பதனால் அதிகளவு குப்பைக் காணப்படுகின்றது. அங்கு மிருகங்களும் பறவைகளும் முதற்தரமாக இருப்பதனால் நீங்கள் அவற்றைப் பார்த்ததும் உங்கள் மனம் சந்தோஷம் அடையும். அங்கு பயம் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை இங்கமர்ந்து விளங்கப்படுத்துகின்றார்: குடும்பக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துமாறு, அதாவது, தூய்மையற்ற குடும்பங்களை திருப்பி அழைத்துச் சென்று, தூய குடும்பங்களை ஸ்தாபிக்கும்படி நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள். நீங்கள் அனைவரும் பொதுவாகக் கூறுவது: பாபா, வந்து தூய்மையற்ற உலகை அழித்து ஒரு புதிய தூய உலகை உருவாக்குங்கள். இத்திட்டம் தந்தைக்கானது மாத்திரமே! ஆதனை நீங்கள் பார்த்ததும் சந்தோஷம் அடைகின்றீர்கள். இலக்ஷ்மி நாராயணனை நீங்கள் பார்த்ததுமே சந்தோஷம் அடைகின்றீர்கள். அங்கு அரசன், அரசி, பிரஜைகள் அனைவரும் முதற்தரமானவர்கள். எனவே குடும்பக்கட்டுப்பாட்டுக்கான இவ் வழிமுறை நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: பரலோகத் தந்தை முதற்தரமான சத்தியயுகக் குடும்பக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளுகின்றார். அவர் முட்காட்டை அழிக்கின்றார். இந்த வைக்கோற் போர் தீ மூட்டப்படும். இது தந்தையின் பணி மாத்திரமேயாகும். உங்களால் எதனையும் செய்ய முடியாது. நீங்கள் எவ்வளவு செய்தாலும் இதில் எவரும் வெற்றியடைய முடியாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் நண்பன் எனக் கருதும் காம விகாரமே கொடிய எதிரியாகும். அதன் நண்பர்களாக ஆகும் பலர் உள்ளனர். தந்தை ஒரு கட்டளையைப் பிறப்பிக்கின்றார்: அதனை நீங்கள் வெற்றி கொள்ள வேண்டும். “காமமே கொடிய எதிரி” எனத் தந்தை கூறுகிறார் என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதை அவ் அப்பாவிகள் அறியவும் மாட்டார்கள். தந்தை இதனை நாடகத்துக்கேற்ப ஒவ்வொரு சக்கரத்திலும் செய்கின்றார். அது மீண்டும் நிகழ வேண்டும். சத்திய யுகத்தில் வெகு சில மனிதர்களே இருப்பார்கள். இதனையிட்டுக் கவலைப்படுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை இப்பணியை நடைமுறைரீதியாகவே மேற்கொள்கின்றார். அம்மக்கள் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள். அத்துடன் கல்வி மந்திரிக்கும் விளங்கப்படுத்துங்கள். இப்பொழுது மக்களின் நடத்தை மிக மோசமாக உள்ளது. தேவர்களிடம் நன்னடத்தைகள் இருந்தன. பேசும் போதும் கவலையற்றவர்களாக இருங்கள். அவர்களிடம் கூறுங்கள்: இது மந்திரிகளாகிய உங்கள் எவரின் பணியும் அல்ல. இது அதிஉயர்ந்த தந்தையின் பணியாகும். இத் தேவர்களின் இராச்சியத்தில் ஒரே தர்மமும் ஒரே இராச்சியமும் ஒரே மொழியும் இருந்தன. அங்கு வெகு சில மனிதர்களே இருந்தனர். எவ்வாறாயினும் உங்களில் வெகு சிலருக்கு மாத்திரமே எவ்வாறு சாதுரியமாகப் பேசுவது என்பது தெரியும் உங்களிடம் அந்த ஆன்மீக அதிகாரம் இல்லை. நீங்கள் இலக்ஷ்மி நாராயணனின் படங்களை அவர்களுக்குக் காட்ட வேண்டும். தந்தை இக் குடும்பக்கட்டுப்பாட்டு முறையை மேற்கொண்டார். அவர் அதனை மீண்டும் செய்கின்றார். அவரின் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பாபா கூறுகின்றார்: இலக்ஷ்மி நாராயணனின் படத்தை வாசலில் வைத்து, அதில் மின்விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள். அத்துடன் அதிகாலையில் நீங்கள் உலாவச் செல்லும்; போது, இந்த ~டிரான்ஸ் லைட்| படத்தையும் வைத்திருங்கள். அப்பொழுதே அதனை எவராலும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுகின்றோம். அரசனும் அரசியும் எப்படியோ பிரஜைகளும் அவ்வாறே இருப்பார்கள். தேவ வம்சம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஏனையவை அனைத்தும் அழிக்கப்படும். நீ;ங்கள் கூறுகின்றீர்கள்;: ஓ தூய்மையாக்குபவரே! வாருங்கள். வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். தந்தையினால் மாத்திரமே உங்களை அவ்வாறு ஆக்கமுடியும். ஒரே தேவ தர்மம் மாத்திரமே தூய்மையானதாக இருந்தது. ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. அவர்களுக்குக் கூறுங்கள்: இத் திட்டம் சிவபாபாவின் கரங்களிலேயே உள்ளது. இத்திட்டங்கள் சத்தியயுகத்துக்காகவே ஆகும். அங்கு தேவகுலத்தவர்களே இருப்பார்கள். சூத்திரர்கள் அங்கு இருப்பதில்லை. இது முதற்தரமான திட்டமாகும். ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படும். வந்து, தந்தையின் இத்திட்டங்களைப் புரிந்து கொள்ளுங்கள். இதனை அவர்கள் உங்களிடமிருந்து கேட்கும் போது பலர் தங்களை உங்களுக்கு அர்ப்பணித்து விடுவார்கள். அந்த மந்திரிகள் முதலானவர்கள் எவ்வாறு விகாரமற்ற திட்டங்களைக் கொண்டிருக்க முடியும்? அதிமேலான கடவுளாகிய தந்தை இத்திட்டங்களைச் செயற்படுத்தவே வந்துள்ளார். அவர் எண்ணற்ற ஏனைய சமயங்கள் அனைத்தையும் அழிக்கின்றார். எல்லையற்ற தந்தையின் கரங்களிலேயே அனைத்தும் உள்ளது. அவர் பழைய விடயங்களைப் புதியதாக்குகின்றார். தந்தை புதிய உலகை ஸ்தாபித்து, பழைய உலகை அழிக்கின்றார். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: சகோதர, சகோதரிகளே இந்த உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, தந்தை உங்களுக்கு இதனைக் கூறுகின்றார். சத்தியயுக ஆரம்பத்தில் அதிகளவு மனிதர்கள் இருக்கவில்லை. அங்கு எவருமே குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டம் போன்றன பற்றிப் பேசுவதுமில்லை. எல்லாவற்றிக்கும் முதலில், வந்து உலக ஆரம்பம் மத்தி, இறுதியைப் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள். ஒரே ஒரு தந்தை மாத்திரமே சற்கதியை அருள்பவர். சற்கதி என்றால் சத்தியயுகத்து மனிதர்கள் என்பதாகும். ஆரம்பத்தில் மிகக் குறைந்தளவு தேவர்களே இருந்தார்கள். அங்கு முதற்தரமான தர்மமும் இருந்தது. பாபாவிடம் மலர்களைப் பற்றிய முதற்தரமான திட்டங்கள் இருந்தது. காமமே கொடிய எதிரியாகும். இக்காலங்களில் மக்கள் இதற்காக தங்கள் உயிரைக் கூட விடுகின்றார்கள். காதலித்த ஒருவரைத் திருமணம் செய்வதற்கு அவர்களின் பெற்றோர் மறுப்புத் தெரிவிக்கும் போது, அவர்கள் குடும்பத்தில் பெருமளவு குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றார்கள். இது ஓர் அழுக்கான உலகம். அனைவரும் ஒருவருக்கொருவர் முட்களைப் போல் குத்துகிறார்கள். சத்தியயுகத்தில் பூ மழை பொழிகிறது. எனவே இவ்விதமாக ஞானக்கடலைக் கடையுங்கள். பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் சமிக்ஞைகளைக் கொடுக்கின்றார். அவற்றை நீங்கள் மெருகூட்ட வேண்டும். அவர்கள் பலவகையான படங்களை உருவாக்குகிறார்கள். நாடகத்திற்கு ஏற்ப நிகழ்பவை எதுவானாலும் சிறந்ததே. எவருக்கேனும் இதை விளங்கப்படுத்துவது சுலபமாகும். அனைவரது கவனமும் தந்தையின் மீதே ஈர்க்கப்படுமாறு செய்யுங்கள். இப் பணி தந்தையினுடையது மாத்திரமேயாகும். தந்தை இப்பொழுது மேலே இருக்கின்றார். அவர் இப்பணியைச் செய்யமாட்டார். அவர் கூறுகின்றார்: தர்மத்திற்கு அவதூறு ஏற்படும் பொழுதும், அசுர இராச்சியம் இருக்கும் பொழுதும் நான் வந்து, அவை அனைத்தையும் அழித்து, தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றேன். மக்கள் அறியாமை எனும் உறக்கத்தில் உறங்குகின்றார்கள். இவை அனைத்தும் அழிக்கப்படும். விகாரமற்றவர்களின் குடும்பம் மாத்திரமே வந்து, இராச்சியத்தை ஆட்சி செய்யும். பிரம்மா மூலமே ஸ்தாபனை ஏற்பட்டதென நினைவுகூரப்படுகின்றது. எதனுடைய? இக் குடும்பத்தினுடையது ஆகும். இது திட்டமிடப்படுகிறது. பிரம்மகுமார்களும் குமாரிகளும் தூய்மையாக ஆகுவதனால் அவர்களுக்கென ஒரு புதிய தூய உலகம் நிச்சயமாகத் தேவைப்படுகிறது. இந்த அதிமங்களகரமான சங்கம யுகம் மிகவும் குறுகிய காலமாகும். இக் குறுகிய காலப்பகுதியிலேயே அத்தகைய சிறந்த திட்டமிடுதல் இடம் பெறுகிறது. தந்தை உங்கள் அனைவரது கர்மக் கணக்குகளையும் தீர்க்க உதவி செய்து உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இங்குள்ள குப்பைகள் அனைத்தையும் அங்கு உங்களால் எடுத்துச் செல்ல முடியாது. அழுக்கடைந்த ஆத்மாக்களால் அங்கு செல்லமுடியாது. இதனாலேயே தந்தை வந்து உங்களை அழகானவர்களாக்கி மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இத்தகைய விடயங்களைப் பற்றி ஞானக்கடலைக் கடையுங்கள். தொடர்ந்தும் உங்களுக்குப் புரிந்துணர்வு ஏற்படும். தந்தை கூறுகின்றார்: ஒரே தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக ஒத்திகைகளை நான் மேற்கொள்கிறேன். இக்குடும்பக்கட்டு;பாட்டை யார் மேற்கொண்டார்கள்? தந்தை கூறுகிறார்: முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே நான் எனது கடமையைச் செய்கின்றேன். நீங்கள் கூவியழைத்தீர்கள்: தூய்மையற்ற குடும்பத்தை மாற்றி, தூய குடும்பத்தை ஸ்தாபனை செய்யுங்கள். இந்நேரத்தில் அனைவரும் தூய்மையற்றிருக்கிறார்கள். அவர்கள் திருமண வைபவங்களுக்காக நூறாயிரக்கணக்கில் செலவழிக்கின்றார்கள். அவர்கள் அதிகளவில் கொண்டாடிய பின்னர், தூய்மையானவரிலிருந்து, தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த இறைபணியை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். அனைவரும் அசுரத் தூக்கத்தில் உள்ளார்கள். அவர்களை விழித்தெழச் செய்ய வேண்டும். அழகானவர்களாக ஆகி, பிறரையும் அவ்வாறாக்கி, தந்தையின் அன்பை அவர்களும் பெறக்கூடியவர்களாக ஆக்குங்கள். நீங்கள் சேவை எதனையும் செய்யாதிருந்தால், நீங்கள் எதனைப் பெறுவீர்கள்? சக்கரவர்த்திகளாக ஆகியவர்கள் நிச்சயமாக நற்செயல்களைச் (கர்மா) செய்திருக்க வேண்டும். தாங்கள் அரசன், அரசியாகவோ அல்லது நீங்கள் ஒரு பணிப்பெண்ணாகவோ அல்லது சேவகனாகவோ ஆகலாம் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும். எனவே நீங்கள் அனைவரும் முன்னைய பிறவியில் அத்தகைய செயலை நிச்சயமாகச் செய்திருக்க வேண்டும். தீய செயல்களைச் செய்வதனால் ஒரு மோசமான பிறவியையே பெறுவீர்கள். கர்ம தத்துவம் (செயல்கள்) தொடர்கிறது. தந்தை இப்பொழுது நீங்கள் நல்ல செயல்கள் செய்வதற்குக் கற்பிக்கின்றார். அங்கேயும் கூட நீங்கள் முன்னைய பிறவியில் செய்த உங்களின் செயல்களுக்கு ஏற்பவே அவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பதை நீங்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்வீர்கள். ஆனால் என்ன செயல்களைச் செய்தீர்கள் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. செயல்கள் நினைவு கூரப்படுகின்றது. அதிக நற்செயல்களைச் செய்வதற்கேற்பவே, உயர்ந்த அந்தஸ்தையும் ஒருவரால் பெறமுடியும். மேன்மையான செயல்களைச் செய்வதனாலேயே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகலாம். நல்ல செயல்களை நீங்கள் செய்யாதிருந்தால், வீட்டைச் சுத்தம் செய்பவராகி விடுவதுடன் பிறருக்கு தலை வணங்க வேண்டியும் நேரிடும். அதனையே செயல்களின் பலன் எனக் கூறப்படுகிறது. கர்மத்தின் கோட்பாடுகள் தொடர்கிறது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் நீங்கள் நல்ல செயல்களைச் செய்வீர்கள். ஒரு சக்கரவர்த்திக்கும், பணிப்பெண்கள், சேவகர்கள் ஆகியோருக்கிடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது தந்தையைப் பின்பற்றுங்கள். நீங்கள் எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், உயர்ந்ததோர் அந்தஸ்தை நீங்கள் பெறுவீர்கள். தந்தையுமே உங்களுக்குக் காட்சிகளைக் கொடுப்பார். மம்மா, பாபா, அத்துடன் குழந்தைகள் அனைவருமே மிகமேன்மையானவர்கள் ஆகிவிட்டார்கள். அதுவும் கூட அவர்களின் நற்செயல்களினாலே ஆகும். புத்திரிகளில் பலர் கர்மாவைப் பற்றிப் புரிந்து கொள்ளாதிருக்கின்றார்கள். இறுதியில் அனைவரும் காட்சிகளைக் காண்பார்கள். நீங்கள் நன்றாகக் கற்றால் நீங்கள் ஒரு பிரபுவாக ஆகுவீர்கள். நீங்கள் அழுது புலம்பினால் சீரழிந்து விடுவீர்கள். இது உலகியல் கல்வியிலும் நிகழ்கிறது. கடவுள் பேசுகிறார்: இந்நேரத்தில் முழு உலகமும் காமச் சிதையில் எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணைப் பார்க்கும் போது தங்களுடைய ஸ்திதி சீரழிகின்றது என அவர்கள் கூறுகிறார்கள். அங்கே, இவ்வாறாக மக்களின் ஸ்திதி சீரழிவதில்லை. தந்தை கூறுகின்றார்: பெயரையும் ரூபத்தையும் பார்க்காதீர்கள். ஒவ்வொருவரையும் சகோதரர்களாகப் பாருங்கள். இலக்கு மிக உயர்ந்தது. நீங்கள் உலக அதிபதிகள் ஆக வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு உலக அதிபதிகள் ஆகினார்கள் என்பதை எவரும் தங்கள் புத்தியில் ஒருபொழுதும் கொண்டிருக்க மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகிறேன். இலக்ஷ்மி நாராயணன் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள். இந்நாட்களில் இளரத்தம் என்று நீங்கள் கருதுகின்றவர்கள் தொடர்ந்து என்ன செய்கிறார்கள் எனப் பாருங்கள். காந்திஜி இதனைக் கற்பித்தாரா? இராம இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கானதொரு வழி இருக்க வேண்டும். இது தந்தை பணி மாத்திரமே ஆகும். தந்தை என்றென்றும் தூய்மையானவர். நீங்கள் 21 பிறவிகளுக்கே தூய்மையாக இருப்பீர்கள். பின்னர் 63 பிறவிகளுக்குத் தூய்மையற்றவர்களாக ஆகிவிடுகிறீர்கள். இதனை விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: குழந்தைகளே தூய்மையாகுங்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் ஸ்திதியை சதா ஸ்திரமாகவும் அசைக்க முடியாததாகவும் ஆக்குவதற்கு எவரது பெயரையோ ரூபத்தையோ பார்க்காதீர்கள். ஒவ்வொருவரையும் சகோதரர்களாகவே பாருங்கள். உங்கள் பார்வையைத் தூய்மையாக்குங்கள். பிறருக்கு விளங்கப்படுத்தும் போது, ஆன்மீக அதிகாரத்தைக் கொண்டிருங்கள்.2. தந்தையின் அன்பைப் பெறுவதற்கு, தந்தையைப் போன்று அதே வியாபாரத்தைச் செய்யுங்கள். அசுர உறக்கத்தில் இருப்பவர்களை விழித்தெழச் செய்யுங்கள். அழகானவர்களாகி பிறரையும் அவ்வாறு ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
குழந்தையும் அதிபதியும் என்ற விழிப்புணர்வுடன் சுயராச்சியமுடையவராகி, அனைத்து பொக்கிஷங்களையும் உங்களுக்குரியது ஆக்குவீர்களாக.இந்த நேரத்தில், நீங்கள் வெறும் குழந்தைகள் மாத்திரம் அல்ல, குழந்தைகள் என்பதுடன் அதிபதிகளும் ஆவீர்கள்: ஒன்று சுயராச்சியத்தின் அதிபதியாக இருப்பது. மற்றையது தந்தையின் ஆஸ்திக்கு அதிபதியாக இருப்பதும் ஆகும். நீங்கள் சுயராச்சியமுடையவர்கள் என்பதால், அனைத்து பௌதீக புலன்களையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள். எவ்வாறாயினும், அவ்வப்பொழுது, நீங்கள் அதிபதியாக இருக்கின்ற விழிப்புணர்வை மறந்து விடும் போது, உங்கள் மனம் உங்களை கட்டுப்படுத்துகின்றது. ஆகையாலேயே தந்தையின் மந்திரம் ~மன்மனபவ| என்பதாக உள்ளது. நீங்கள் ~மன்மனபவ| என்பதில் நிலைத்திருக்கும் போது, எந்த வீணானவையும் உங்களை ஆதிக்கம் செலுத்த மாட்டாது என்பதால் அனைத்து பொக்கிஷங்களையும் உங்களுக்குரியது என்ற அனுபவத்தைப் பெறுவீர்கள்.
சுலோகம்:
கடவுளின் அன்பு என்ற ஊஞ்சலில் பறக்கின்ற ஸ்திதியின் சந்தோஷத்தை அனுபவம் செய்வதே மிக மேன்மையான பாக்கியமாகும்.