31.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். உங்கள் எதிர்மறையான எண்ணங்கள் அனைத்தும் முடிவடைந்து விடும். நீங்கள் எதற்கும் பயப்படமாட்டீர்கள். நீங்கள் கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

கேள்வி:
புதிய விருட்சம் எவ்விதம் வளரும்? எவ்வாறு வளரும்?

பதில்:
புதிய விருட்சம் ஒரு பேன் ஊர்ந்து செல்லும் வேகத்தில் மிக மெதுவாகவே வளரும். இந்த நாடகம் ஒர் பேனைப் போன்று ஊர்ந்து செல்லுகின்றது. அதே போன்று, நாடகத்துக்கு ஏற்ப இந்த விருட்சமும் மெதுவாகவே வளருகின்றது. ஏனெனில் மாயையிடமிருந்து நீங்கள் அதிகளவு எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு, முயற்சி தேவையாகும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகினால், நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன், சேவையிலும் விரிவாக்கம் ஏற்படும். நீங்கள் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்தால் உங்கள் படகு அக்கரை சேரும்.


ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகத் தந்தை அமரத்துவ வடிவமானவர். ஆன்மீகத் தந்தையே, பரமாத்மாவாகிய பரமதந்தை என்று அழைக்கப்படுகிறார். குழந்தைகளாகிய நீங்களும் அமரத்துவமான வடிவங்களே. சீக்கியர்களுக்கும் நீங்கள் நன்றாக விளங்கப்படுத்தலாம். உண்மையில் நீங்கள் எந்த மதத்தவர்களுக்கும் விளங்கப்படுத்தலாம். இந்த விருட்சம் மெதுவாகவே வளர்கின்றது என்று தந்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். பேன் ஊர்ந்து செல்லும் வேகத்தில் நாடகம் நகர்வதைப் போன்று, விருட்சமும் பேனின் வேகத்திலேயே வளர்கின்றது. இது வளர்வதற்கு ஒரு முழுச் சக்கரம் எடுக்கிறது. இப்போது இது உங்களின் புதிய விருட்சமாகும். குழந்தைகளாகிய நீங்கள் முழுச்சக்கரத்திலும் இருக்கின்றீர்கள். நீங்கள் 5000 வருடங்களாக இச்சக்கரத்தை சுற்றி வந்திருக்கின்றீர்கள். இச் சக்கரம் பேனைப் போன்று தொடர்ந்தும் ஊர்ந்து செல்கின்றது. முதலாவதாக நீங்கள் ஆத்மாவைப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு சிரமமான விடயம். மாயையின் எதிர்ப்புகள் இருப்பதனால், நாடகத்துக்கு ஏற்ப விருட்சம் படிப்படியாக வளர்கின்றதென்பதைத் தந்தை அறிவார். இப்பொழுது இது அவளுடைய இராச்சியமாக இருப்பினும், பின்னர் இராவணனுமே இருக்க மாட்டான். முதலில் குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக வேண்டும். ஆத்ம உணர்வுடைய குழந்தைகள் மிக நன்றாக சேவை செய்வதுடன், அவர்கள் அதிகளவு சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள். அவர்களின் புத்தியில் பயனற்ற, எதிர்மறையான எண்ணங்கள் இருப்பதில்லை. நீங்கள் மாயையை வெற்றி கொள்வதால், எவரும் உங்களை அசைக்க முடியாது. அங்கதனின் உதாரணமும் உண்டு. இதனாலேயே உங்களுக்கு “மகாவீர்கள்” (மகா போராளி) என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது மகாவீர் எவரும் இல்லை. பின்னர் நீங்கள் மகாவீர்கள் ஆகுவீர்கள், அதுவும் வரிசைக் கிரமமாக அவ்வாறு ஆகுவீர்கள். நல்ல சேவை செய்பவர்கள் மகாவீர்கள் வரிசையில் அடங்குவார்கள். தற்போது நீங்கள் போராளிகள் பின்னர், மகா போராளிகள்; ஆகுவீர்கள். உங்களுக்கு சிறிதளவேனும் சந்தேகம் இருக்கக் கூடாது. பலர் கர்வம் கொண்டு எவரையும் மதிப்பதில்லை. நீங்கள் மிகவும் பணிவாகவே மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தவேண்டும். அமிர்ஸ்டாரில் உள்ள சீக்கியர்களுக்கு நீங்கள் சேவையாற்றலாம். நீங்கள் அனைவருக்கும் ஒரேயொரு செய்தியை மாத்திரம் கொடுக்க வேண்டும்: தந்தையை நினைவு செய்வதன் மூலம் ஆத்மாவில் உள்ள மாசு அகற்றப்படும். அம் மக்கள் கூறுகின்றார்கள்: பிரபுவை நினைவு செய்யுங்கள். சாகிப்பின் (பிரபு) புகழும் உள்ளது: அசரீரியானவரே சத்தியமானவரும் அமரத்துவப் பிரபுவும் ஆவார். இப்போது யார் அமரத்துவ வடிவமானவர்? அவர்கள் கூறுகின்றார்கள்: சற்குருவே அமரத்துவமானவர். ஒர் ஆத்மா அமரத்துவ வடிவமானவர். ஓர் ஆத்மாவுக்கு ஒருபோதும் மரணம் ஏற்படுவதில்லை. ஆத்மாக்கள் பாகங்களை பெற்றிருக்கின்றார்கள். எனவே அவர்கள் தமது பாகங்களை நடிக்க வேண்டும் என்பதால், ஒர் ஆத்மாவுக்கு எவ்வாறு மரணம் ஏற்பட முடியும்? ஓர் ஆத்மா அமரத்துவ வடிவமானவரே. கீதையைக் கற்றவர்கள் சொற்பொழிவாற்றுவதைப் போன்று, நீங்களும் சீக்கியரிடம் சென்று சொற்பொழிவு ஆற்றலாம். பக்தி மார்க்கத்தில் அதிகளவு சம்பிரதாயங்கள் உள்ளன என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு சிறிதளவு ஞானமேனும் இல்லை. ஒரேயொரு தந்தையே ஞானக் கடலாவார். மனிதர்களை ஞானமுள்ளவர்கள் என்று அழைக்க முடியாது. தேவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருப்பதனால் அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் தங்களது ஆஸ்தியைத் தந்தையிடமிருந்தே பெற்றுக் கொண்டார்கள். இந்த இராஜயோகத்தின் மூலம் நீங்களும் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: சற்குருவே அமரத்துவமானவர். அந்தத் தந்தை ஒருவரே சத்தியமானவர். அவரே தூய்மையாக்குபவர். நீங்கள் இரு தந்தையரின் அறிமுகத்தையும் கொடுக்க வேண்டும். பேசுவதற்கு இரு நிமிடங்கள் கிடைத்தாலும் அதுவும் அதிகமேயாகும். ஒரு நிமிடம் அல்லது ஒரு விநாடி கிடைத்தாலுமே அதுவும் அதிகளவேயாகும். முன்னைய கல்;பத்தில் அம்பினால் தாக்கப்பட்டவர்களே மீண்டும் தாக்கப்படுவார்கள். இது பெரியதொரு விடயமல்ல. நீங்கள் செய்தியையே கொடுக்க வேண்டும். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: சற்று சிந்தித்துப் பாருங்கள், குருநானக் வரும் போது, அவர், ‘நீங்கள் வீடு திரும்ப வேண்டும். அதற்காக நீங்கள் தூய்மை ஆகவேண்டும்’ என்ற செய்தியைக் கொடுப்பதில்லை. அந்த ஆத்மாக்கள் மேலிருந்து வருகின்றார்கள். அவர்களின் மதம் தொடர்ந்தும் விரிவடைகின்றது. அவர்கள் தொடர்ந்தும் கீழ் இறங்குகிறார்கள். உண்மையில் மனிதர்கள் எவரும் ஜீவன் முக்தியை அருள்பவராக முடியாது. தந்தை ஒருவரே ஜீவன் முக்தியை அருள்பவராவார். மனிதர்கள் மனிதர்களே. அவர்கள் இன்ன இன்ன சமயங்களுக்கே உரியவர்கள் என்று விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். தூய்மையாகுங்கள். குருநானக் கூறியுள்ளார்: அவர் அழுக்குத் துணிகளை துவைக்கின்றார். இது பின்னரே சமய நூல்களை எழுதியவர்களால் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மிகச் சிலரே இருந்தனர். அந்த வெகுசிலருக்கு அவர்கள் எதனை அமர்ந்திருந்து விளங்கப்படுத்துவார்கள்? இப்போது தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். சமய நூல்கள் பின்னரே எழுதப்பட்டன. சத்தியயுகத்தில் சமய நூல்கள் எதுவும் இல்லை. அவர்களுக்கு முதலில் விளங்கப்படுத்துங்கள்: தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழியும். நிச்சயமாக விநாசம் இடம்பெற வேண்டும். அவர்களை வினவுங்கள்: யாரை நீங்கள் சர்வவியாபி என்று அழைப்பீர்கள்? “ஏக் ஓம்கார்” என்று உங்களால் போற்றப்படுபவரே தந்தையாவார். அவரின் குழந்தைகளாகிய நாங்களும் அமரத்துவ வடிவங்களே ஆவோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிம்மாசனம் உள்ளது. நாங்கள் ஒரு சிம்மாசனத்தை விட்டுச் சென்று இன்னொன்றில் அமர்வோம். நாங்கள் 84 சிம்மாசனங்களில் அமர்வோம். இப்பொழுது இது பழைய உலகமாகும். அங்கு அதிகளவு குழப்பங்கள் உள்ளன. இவ்விடயங்கள் புதிய உலகில் இருப்பதில்லை. அங்கு ஒரேயொரு தர்மம் மாத்திரமே உள்ளது. தந்தை உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றார். எவருமே உங்களைத் தாக்க முடியாது. சமய ஸ்தாபகர்கள் தத்தமது சமயங்களை ஸ்தாபிப்பதற்காக துவாபரயுகத்தில் வருகின்றார்கள். அவர்களின் சமயம் வளரும் போது, அவர்கள் சக்தியைப் பெறுவதால், யுத்தம் என்பது குறிப்பிடப்படுகின்றது. முதலில் இஸ்லாமியர்கள் வெகுசிலரே இருந்தனர். உங்களது சமயமும் இங்கேயே ஸ்தாபிக்கப்பட்டது. அவர்கள் துவாபர யுகத்தில் வருகின்றார்கள். அந்நேரத்திலேயே அவர்களின் சமயம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அதன் பின்னர் ஒருவர் பின் ஒருவராக தொடந்தும் கீழே வருகின்றார்கள். இவ்; விடயங்கள் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நாடகத்திற்கு ஏற்ப, சிலரால் எவற்றையுமே கிரகித்துக் கொள்ள முடியாது. நிச்சயமாக அவர்களின் அந்தஸ்து மிகவும் குறைவாகவே இருக்கும் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். இது ஒரு சாபம் அல்ல. மகாவீர்களின் (மகாவீரர்கள்) மாலை உருவாக்கப்பட்டுள்ளது. நாடகத்திற்கு ஏற்ப, ஒரே முயற்சியை அனைவருமே செய்ய முடியாது. முன்னரும் கூட அவர்கள் இதனைச் செய்யவில்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் ஏன் குற்றம் சுமத்தப்படுகின்றோம். தந்தையும் கூறுகின்றார்: இது உங்களது தவறல்ல. உங்களது பாக்கியத்தில் அது இல்லை என்றால், தந்தையால் என்ன செய்ய முடியும்? என்ன அந்தஸ்தை ஒவ்வொருவரும் பெறத் தகுதியுடையவர் என்பதை அவர் அறிவார். சீக்கியர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: சாகிப்பை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுவீர்கள். அவர்களது சமயம் ஸ்தாபிக்கப்படும் போதே, அவர்கள் சந்தோஷத்தைப் பெறுகின்றார்கள். இப்பொழுது அனைவருமே கீழே இறங்கியுள்ளார்கள். சற்குரு அமரத்துவமானவர் என்பதை நீங்கள் நம்புகின்றீர்கள். எனவே நீங்கள் குருவென யாரை அழைக்கின்றீர்கள்? ஒரேயொரு குருவே ஜீவன்முக்தியை அருள்பவர். பக்தியை கற்பிப்பதற்கு பல குருமார்கள் தேவையாகும். தந்தை ஒருவரே ஞானத்தைக் கற்பிப்பவர். தாய்மார்களாகிய நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம்: தூய்மையின் அடையாளமாக நீங்கள் ஒரு கைச்சங்கிலியை அணிந்திருக்கின்றீர்கள். சுவர்க்க வாயிலைத் திறப்பவர்கள் நீங்களே என்பதால், அவர்கள் தாய்மார்களாகிய உங்களை நம்புவார்கள். தாய்மார்களாகிய நீங்கள் ஞானக்கலசத்தைப் பெற்றுள்ளீர்கள். அதன் மூலமே அனைவரும் ஜீவன்முக்தியைப் பெறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்களை மகாவீர்கள் என்று அழைக்கின்றீர்கள். நீங்கள் அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் எங்கள் வீட்டில், குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு, சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்றோம். இரவுக்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. சடாமுடியும் தூய்மையின் அடையாளமாகும். அமரத்துவ வடிவமானரும், தூய்மையாக்குபவருமான தந்தையின் புகழை நீங்கள் முழுமையடையச் செய்ய வேண்டும். சாதுக்களும் சந்நியாசிகளும் கூறுகின்றார்கள்: நாங்கள் கடவுளுக்குத் தலை வணங்குகின்றோம். பின்னர் அவர்கள் அவரை சர்வவியாபி என்று கூறுகின்றார்கள். அது பிழையாகும். நீங்கள் தந்தையின் புகழை அதிகளவு பாடவேண்டும். நீங்கள் தந்தையின் புகழுடன் அக்கரை சேர்கின்றீர்கள். ‘இராமா இராமா’ என்று கூறுவதன் மூலம் உங்கள் படகு அக்கரை சேரும் என்ற கதை உள்ளது. தந்தையும் கூறுகின்றார்: தந்தையை நினைவு செய்வதனால், நீங்கள் நச்சுக்கடலை தாண்டிச் செல்வீர்கள். நீங்கள் அனைவரும் முக்தி அடைய வேண்டும். நீங்கள் அமிர்;ஸ்டாரிக்குச் சென்று சொற்பொழிவாற்றலாம். சத்தியமானவரும், அமரத்துவ வடிவமுமான அசரீரியானவரை நீங்கள் கூவி அழைக்கின்றீர்கள். எவ்வாறாயினும், அவர் இப்பொழுது கூறுகின்றார்: உங்கள் சரீரத்தையும் சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். தந்தையை நினைவு செய்வதால், உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். உங்கள் இறுதி எண்ணங்கள், உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்கின்றது. சிவபாபாவே அசரீரியானவரும் அமரத்துவ வடிவம் ஆனவரும் ஆவார். ஆத்மாக்களாகிய நீங்களும் அசரீரியானவர்களே, தந்தை கூறுகின்றார்: எனக்கென ஒரு சரீரம் இல்லை. நான் ஒரு சரீரத்தைக் கடனாகப் பெறுகின்றேன். இராவணனை வெற்றி கொள்வதற்காகவே நான் தூய்மையற்ற உலகிற்கு வந்துள்ளேன். நான் இங்கேயே வழிகாட்டல்களைக் கொடுக்கின்றேன், ஏனெனில் தூய்மையற்றவர்கள் பழைய உலகத்திலேயே உள்ளனர். புதிய உலகில் ஒரேயொரு தேவதர்மமே உள்ளது. அந்நேரத்தில் ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருக்கின்றார்கள். பின்னர் வரிசைக்கிரமமாக, அனைவருமே சதோ, இரஜோ, தமோ நிலைகளைக் கடக்கின்றார்கள். அதிகளவு சந்தோஷத்தைப் பெறுபவர்கள் அதிகளவு துக்கத்தையும் பெறுகின்றார்கள். நீங்கள் தந்தையின் செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்: தந்தையை நினைவு செய்தால், உங்களால் வீட்டிற்குச் செல்ல முடியும். அனைவரும் கீழே வந்து, விருட்சம் பூரணமடைந்தவுடன் அனைவரும் ஜீவன்முக்தியைப் பெறுகின்றார்கள். உங்களிடம் வருகின்ற எவருக்கும், நீங்களும் அதிகளவு அன்புடனும், பொறுமையுடனும் இவ்வாறு விளங்கப்படுத்தலாம். நீங்கள் படங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உண்மையில், படங்கள் புதியவர்களுக்கே தேவையாகும். நீங்கள் எந்த சமயத்தவருக்கும் விளங்கப்படுத்தலாம். எனினும், அம்பு இலக்கைத் தாக்கும் அளவிற்கு குழந்தைகளுக்கு போதியளவு யோகம் இல்லாதுள்ளது. அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, நான் தோல்வி அடைந்து விட்டேன். மாயை அவர்களின் முகத்தை முற்றிலும் அவலட்சணம் ஆக்கியுள்ளாள். தாம் தேவர்களாக இருந்தோம் என்பதைக்கூட அவர்கள் உணர்வதில்லை. அவர்கள் இப்பொழுது அசுரர்களாக மாறியுள்ளார்கள். இப்பொழுது, பாபா கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையின் செய்தியை அனைவருக்கும் தொடர்ந்தும் கொடுங்கள். ஒளி ஊடுருவும் கருவியில் பயன்படுத்தும் வில்லைகளில் எழுதுங்கள்: திரிமூர்த்தியான பரமாத்மா, பரமதந்தை சிவன் கூறுகின்றார்: என்னை மாத்திரமே சதா நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழியும். நீங்கள் முக்தியையும் ஜீவன்முக்தியையும் பெறுவீர்கள். நீங்கள் அனைவருக்கும் இந்த செய்தியைக் கொடுக்க வேண்டும். வில்லைகளும் உருவாக்கப்பட வேண்டும். அவற்றின்; மூலம், மனதை ஒழுக்கமடையச் செய்யும் மன்மனாபவ என்ற மந்திரத்தை கொடுக்க முடியும். இக் கல்விக்கு அதிகளவு காலம் எடுக்காது. நீங்கள் முன்னேறிச் செல்லும் போது, அனைவருமே புரிந்து கொள்வார்கள். எதனையிட்டும் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் கவலையில் இருந்து விடுபட வேண்டும். பாருங்கள், மனிதர் மரணத்திற்கு அதிகளவு அஞ்சுகின்;றார்கள். இங்கே பயம் பற்றிய கேள்விக்கே இடமில்லை. மரணம் இப்பொழுது ஏற்படக்கூடாது என்றும் நீங்களும் கூறுகிறீர்கள். நாங்கள் எங்கள் பரீட்சையை இன்னமும் முடிக்கவில்லை. நாங்கள் எங்கள் யாத்திரையை இன்னமும் நிறைவு செய்யவில்லை. எனவே, நாங்கள் ஏன் இச்சரீரங்களை துறக்க வேண்டும்? நீங்கள் அத்தகைய இனிமையான விடயங்களைத் தந்தையிடம் கூற வேண்டும். அது உங்களுக்குள் நல்ல பழக்கங்களை ஏற்படுத்தும். நீங்கள் இங்கே வந்து, படங்களின் முன்னிலையில் அமர வேண்டும். நீங்கள் பாபாவிடம் இருந்து உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். ஆகையால், நீங்கள் அத்தகைய தந்தையை அதிகளவு நினைவு செய்ய வேண்டும். நீங்கள் அவரை நினைவு செய்யாதிருந்தால், அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். தான் இவ்வாறு ஆகுவேன் என்பதை பாபா மிகவும் உறுதியாக நினைவு செய்கின்றார். ஆகையாலேயே இவ்வாறு ஆகுவேன் என்பதையிட்டு அவர் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார். அதனைக் காணும் போது அவரின் போதை அதிகரிக்கின்றது. நீங்களும் இவ்வாறு ஆக வேண்டும். பாபா, நான் உங்களை நினைவு செய்து, நிச்சயமாக இவ்வாறு ஆகுவேன். உங்களுக்கு வேறு எதுவும் செய்ய இல்லாதிருந்தால், இப்படங்களின் முன்னால் வந்து அமருங்கள். நாங்கள் இந்த ஆஸ்தியைத் தந்தையிடமிருந்தே பெறுகின்றோம். இதனை மிகவும் உறுதியாக்கிக் கொள்ளுங்கள். இந்த வழி எதிலும் குறைந்ததல்ல. எவ்வாறாயினும், அது உங்கள் பாக்கியத்தில் இல்லாதிருந்தால், நீங்கள் நினைவு செய்ய மாட்டீர்கள். பாபா கூறுகின்றார்: இங்கே வரும் போது இதனை அதிகளவு பயிற்சி செய்யுங்கள். அப்பொழுது தீய சகுனம் இருக்குமாயின், அவை அகற்றப்படும். நீங்கள் ஏணிப் படத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். எவ்வாறாயினும் அது உங்கள் பாக்கியத்தில் இல்லாதிருந்தால், உங்களால் ஸ்ரீமத்தைப் பின்பற்ற முடியாது. பாபா வழிகாட்டுகின்றார், மாயையோ இடையூறு செய்கின்றாள். பாபா உங்களுக்கு பல விவேகமான வழிகளைக் காட்டுகின்றார். தொடர்ந்தும் தந்தைiயும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். நிச்சயமாக தந்தையிடம் இருந்து ஆஸ்தியை பெறுவோம் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கும் கோபியரிடமும், கோபிகைகளிடமும் அதிதீந்திரிய சுகத்தைப் பற்றி கேளுங்கள் என்று அவர் கூறுகின்றார். பாபா சுவர்க்கத்தை ஸ்தாபித்து, அதற்கு எங்களை அதிபதிகள் ஆக்குகின்றார். படங்களும் அவ்வாறே தயாரிக்கப்பட்டுள்ளன. பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையில் உள்ள உறவுமுறை என்ன என்பதை நீங்கள் அவர்களுக்கு நிரூபிக்கின்றீர்கள். இது எவருக்குமே தெரியாது. பிரம்மாவின் படத்தைப் பார்க்கும் போது மக்கள் குழப்பம் அடைகின்றார்கள். ஸ்தாபனை இடம்பெறுவதற்கு காலம் எடுக்கும். கர்மதீத நிலையை அடைவதற்கும் காலம் எடுக்கும். நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தீவிர பக்தி செய்பவர்களுமே காட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் விக்கிரங்களின்; முன்னால் சென்று அமர்கின்றார்கள். நீங்கள் இவ்வாறு ஆகுவதால் நீங்கள் இதனை நினைவு வேண்டும். உங்களிடம் சின்னமும் (பட்ஜ்) உள்ளது. நாராயணின் விக்கிரத்தின் மீது எவ்வாறு அளவுகடந்த அன்பைக் கொண்டிருந்தார் என்ற தனது உதாரணத்தையும் பாபா கொடுக்கின்றார். அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவு செய்வதைத் தவிர வேறு எதனையும் நினைவு செய்யாதீர்கள். பாபா கூறுகின்றார்: நான் உங்களது கீழ்ப்படிவான சேவகன். நீங்கள் ஏன் என் முன்னால் தலைவணங்கி நிற்கின்றீர்கள்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

 
தாரணைக்கான சாராம்சம்:
1. பணிவு என்ற தெய்வீகப் பண்பைக் கிரகியுங்கள். உங்களுக்கு சற்றேனும் அகங்காரம் இருக்கக்கூடாது. மாயை உங்களை அசைக்க முடியாதளவிற்கு நீங்கள் அத்தகையதொரு மகாவீர் ஆகவேண்டும்.

2. மனதை ஒழுக்கமடையச் செய்யும் மன்மனாபவ என்ற மந்திரத்தை அனைவருக்கும் கொடுங்கள். அதிகளவு அன்புடனும் பொறுமையுடனும் அனைவருக்கும் ஞானத்தைக் கூறுங்கள். சகல சமயங்களைச் சார்ந்தவர்களுக்கும் தந்தையின் செய்தியைக் கொடுங்கள்.

ஆசீர்வாதம்:
ஒவ்வொரு மேன்மையான எண்ணத்தையும் பயிற்சியில் இடுகின்ற ஒரு மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுவீர்களாக.

எவரது எண்ணங்களும் செயல்களும் ஒன்றாக உள்ளதோ, அவர்களே ஒரு மாஸ்டர் சர்வசக்திவான் என்று அர்த்தமாகும். உங்கள் எண்ணங்கள் மிகவும் மேன்மையாக இருப்பினும், உங்கள் செயல்கள் உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இல்லாதிருப்பின், உங்களை மாஸ்டர் சர்வசக்திவான் என அழைக்க முடியாது. எனவே, உங்கள் மேன்மையான எண்ணங்கள் பயிற்சியில் இடப்படுகின்றனவா என பரீட்சித்துப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட கணத்தில், தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட சக்தியை பயன்படுத்த முடிவதே மாஸ்டர் சக்திவானின் அடையாளமாகும். தேவையான அக்கணத்தில் குறிப்பிட்ட சக்தியை பயன்படுத்த கூடியவகையில் உங்கள் பௌதீக மற்றும் சூட்சும சக்திகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்.

சுலோகம்:
ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் தமக்குள் கோபத்தைக் கொண்டிருக்கும் போது, அவர்கள் தந்தையின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்கள்.


தந்தை பிரம்மாவிற்கு சமமாக ஆகுவதற்கான விசேட முயற்சி
தந்தை பிரம்மாவைப் போன்று தடைகளை அழிப்பவராகவும், ஆட்ட அசைக்க முடியாதவராகவும் இருந்து, சகல தடைகளையும் தாண்டிச் செல்லுங்கள். தடைகளை ஒரு தடையாகக் கருதாது, ஆனால் அதனை ஒரு விளையாட்டெனக் கருதுங்கள். மலைகளையும், கடுகுகளைப் போன்று அனுபவம் செய்யுங்கள். ஏனெனில், ஞானம் நிறைந்த ஆத்மாக்கள், முன்கூட்டியே இவை அனைத்தும் வரும் என்பதையும் இவை நடக்கும் என்பதையும் அறிவார்கள். எனவே, ~ஏன்?| அல்லது ~எதற்கு?| என்ற கேள்விகளினால் என்றுமே குழப்பம் அடையாதீர்கள்.