24.06.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
காலை வகுப்பில் வாசிக்கப்பட வேண்டிய மாதேஷ்வரியின் இனிய மேன்மையான வாசகங்கள்
பாடல்:
இது என்னுடைய சிறிய உலகமாகும்…
ஓம் சாந்தி.
ஞானம் நிறைந்த, எல்லையற்ற தந்தை ஆத்மாக்களுடன் பேசுகின்றார். ஆத்மாக்களின் ஆதி ஸ்திதி இப்பொழுது வேறுபட்டுள்ளது. ஆத்மாக்கள் எப்பொழுதும் ஒரே ஸ்திதியில் இருப்பார்கள் என்று கூறமுடியாது. ஆத்மாக்கள் அநாதியானவர்களாயினும் அவர்கள் தமது ஸ்திதியை மாற்றிக் கொள்கின்றார்கள். காலம் கடந்து செல்லும் போது, அவர்களின் ஸ்திதியும் மாறுகின்றது. உண்மையில், ஆத்மாக்கள் அநாதியானவர்களும் அழிவற்றவர்களாயினும் அவர்கள் செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப ஆத்மாக்கள் பலனைப் பெறுகின்றார்கள். எனவே, ஆத்மாவே பொறுப்பானவர், அவரே அனைத்தையும் செய்பவர். எனவே, தந்தையும் இப்பொழுது ஆத்மாவுடனேயே பேசுகின்றார். பரமாத்மாவான பரமதந்தையே அனைவரதும் தந்தை என்பது இப்பொழுது அனைவரதும் புத்தியில் உள்ளது.
‘தந்தை’ என்று நாங்கள் கூறுவதால், நிச்சயமாக நாங்கள் அவரின் குழந்தைகளே. அவரும் தந்தை நாங்களும் தந்தையர் என்றல்ல. ஆத்மாக்களே பரமாத்மா என்று கூறுவதால், ஆத்மாக்கள் பரமதந்தைகள் என்றும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், தந்தையும் மகனும் என்ற உறவுமுறையின் அடிப்படையில், அவரே தந்தை எனக் கூறப்படுகின்றார். நாங்கள் அனைவரும் தந்தைகள் ஆயின், எங்களை தந்தை என்று அழைக்கப் போவது யார்? நிச்சயமாக இருவர் உள்ளனர்: தந்தையும் மகனும். மகன் இருந்தால் மாத்திரமே தந்தை என்ற உறவுமுறை இருக்கும். தந்தை இருந்தால் மாத்திரமே மகன் உறவுமுறை இருக்கும். எனவே, அவர் பரமாத்மாவான பரமதந்தை எனப்படுகின்றார். இப்பொழுது, தந்தை இங்கமர்ந்திருந்து எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இப்பொழுது உங்களுக்கு இருக்கின்ற ஸ்திதிக்கும், முன்னர் நீங்கள் கொண்டிருந்த ஸ்திதிக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாட்டை முடிக்கவே நான் இப்பொழுது வந்துள்ளேன். தந்தை எங்களுக்கு புரிந்துணர்வை கொடுத்து, நாங்கள் கொண்டிருந்த அந்த ஆதி ஸ்திதியை இப்பொழுது அடைய வேண்டும் என்று விளங்கப்படுத்துகின்றார். அதனை அடைவதற்காகவே தந்தை எங்களுக்கு இப்பொழுது ஞானத்தையும் சக்தியையும் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் மேன்மையான செயல்களைச் செய்வதற்கான சக்தியை நீங்கள் பெறுவீர்கள். இல்லாவிடின், உங்கள் செயல்கள் மேன்மையானவையாக இருக்க மாட்டாது. சிலர் தாம் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள், ஆனால் என்ன நிகழ்கின்றது என்று தெரியாது, தமது மனம் நல்லவை எவற்றை நோக்கியும் செல்வதில்லை என அவர்கள் கூறுகின்றார்கள். ஆத்மாவிடம் நல்ல செயல்களைச் செய்வதற்கான சக்தி இல்லாததால், ஆத்மா வேறுதிசை நோக்கிச் செல்கின்றார். எங்கள் ஸ்திதி தமோபிரதானாக உள்ளதால், அதிகளவு தமோ ஸ்திதியின் ஆதிக்கம் எங்களை அடக்குகின்றது. ஆகையால் புத்தி விரைவில் அந்தத் திசையை நோக்கிச் செல்வதால், புத்தி சரியான திசையில் செல்வதற்கு தடைகள் உருவாகின்றன. எனவே, தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னுடன் யோகம் செய்யுங்கள், நான் உங்களுக்குக் கொடுக்கும் புரிந்துணர்வின் அடிப்படையில், உங்களுக்குத் தடைகளாக உங்கள் முன்னிலையில் உள்ள பாவங்களின் சுமையையும், பந்தங்களினதும் பாதையை தொடர்ந்தும் துப்பரவு செய்யுங்கள். அதன் பின்னர், நீங்கள் தொடர்ந்தும் மேன்மையான செயல்களைச் செய்வீர்களாயின், நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்கான சக்தியை தொடர்ந்தும் பெறுவீர்கள். இதன் அடிப்படையில், உங்கள் ஆதி ஸ்திதியை நீங்கள் மீண்டும் ஒருமுறை அடைவீர்கள்.
அதன் பின்னர் அதற்கேற்ப ஆத்மா ஒரு சரீத்தை பெறும்போது, உலகமும் அவ்வாறு ஆகுகின்றது. எனவே, பரமாத்மாவான பரமதந்தை அத்தகையதோர் உலகை உருவாக்குகின்றார். ஆகையாலேயே அவர் உலகைப் படைப்பவர் என்று அழைக்கப்படுகின்றார். எவ்வாறாயினும், முற்றாக அற்றுப்போன ஓர் உலகை அவர் உருவாக்குகிறார் என்றல்ல. அவர் அத்தகையதோர் உலகை இவ்வாறாகப் படைக்கின்றார். உலகைப் படைக்கும் கடவுள் என வேறு எவரையும் அழைக்க முடியாது. கிறிஸ்து வந்தார், புத்தர் வந்தார், அவர்கள் தமது புதிய சமயங்களை உருவாக்கினார்கள். ஆனால் உலகை மாற்றுதல் அல்லது உலகைப் படைத்தல் என்பது உலக சர்வசக்திவானான உலகைப் படைப்பவர் ஒருவரின் பணியே ஆகும். எனவே, அவரின் கடமையானது ஏனைய ஆத்மாக்கள் அனைவரது கடமையிலிருந்தும் வேறுபட்டதாகும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறாயினும், அவரும் ஏனைய ஆத்மாக்களைப் போன்றே வந்து, மனித உலகில் தனது கடமையை மேற்கொண்டு செயல்களைச் செய்கின்றார். அன்றேல், ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தமக்கென சொந்தச் செயல்கள் உள்ளன. இவை அனைத்தும் கடவுளின் செயல்கள் என்று கூறமுடியாது. ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவருக்குரிய கர்மக்கணக்குகள் உள்ளன, அவை தொடர்ந்து இடம்பெறுகின்றன. எவர் என்ன செய்கின்றார்களோ அதற்குரிய வெகுமதியை அவர்கள் பெறுகின்றார்கள். அதில், கிறிஸ்து, புத்தர், இஸ்லாமிய ஆத்மாக்கள், காந்தி போன்ற நல்ல ஆத்மாக்களும் உள்ளனர். வந்த நல்லவர்கள் அனைவரும், வந்து தமது பாகங்களை நடித்த பின்னர் சென்று விட்டனர். இவ்வாறாக, ஆத்மாக்களாகிய உங்களுக்கும் பல பிறவிகளின் பாகங்கள் உள்ளன. நீங்கள் சரீரத்தை நீக்கிய பின்னர் இன்னொன்றை எடுக்கின்றீர்கள். எவ்வாறாயினும் ஒருவருக்கு எத்தனைப் பிறவிகள் இருந்தாலும், ஆத்மா அப் பாகத்தின் கணக்கிற்கேற்ப நடிக்கின்றார். அவர் நடிப்பதன் முழு பதிவும் ஆத்மாவில் பதியப்பட்டுள்ளது. அது இங்கேயே நடிக்கப்படுகின்றது. ஆகையாலேயே இது குறுநாடகம் என்றும் நாடகம் என்றும் அழைக்கப்படுகின்றது. கடவுளும் இதில் ஒருமுறை நடிக்க வேண்டியுள்ளதாலேயே, அவரின் செயலுக்கான புகழ் அதி மேன்மையானதாகும். எவ்வாறாயினும், அவர் எதில் மேன்மையானவர்? அவர் வந்து எங்கள் உலகை மாற்றுகின்றார்.
இது ஒவ்வொரு மனித ஆத்மாவும் தத்தமது பாகத்தை நடிக்கும் கர்மஷேத்திரமாகும். கடவுளுக்கும் அதில் ஒரு பாகம் உள்ளது. ஆனால் ஆத்மாக்களைப் போன்று பிறப்பு இறப்பிற்குள் அவர் வருவதில்லை. ஆத்மாக்களைப் போன்று அவருக்கு செயல்களின் பிழையான கணக்கொன்று இருப்பதில்லை. அவர் கூறுகின்றார்: நான் ஆத்மாக்களாகிய உங்களை விடுவிக்கவே வருகின்றேன், இதனாலேயே, பந்தனத்தில் இருந்து உங்களை விடுவிக்கும் முக்தியையும் சற்கதியையும் அளிப்பவரான முக்தியளிப்பவர் என்று நான் அழைக்கப்படுகின்றேன்.
அவர் ஆத்மாக்களின் மீதுள்ள மாயையின் பந்தனத்தை அகற்றி ஆத்மாக்களை தூய்மையாக்குகின்றார். அவர் கூறுகின்றார்: ஆத்மாக்களை சகல பந்தனங்களிலிருந்தும் அகற்றி அவர்களை திரும்பவும் அழைத்துச் செல்வதே எனது கடமையாகும். எனவே உலகின் அநாதியான வழக்கங்களும் நியதிகளும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மனித உலகின் மக்கள் தொகை எவ்வாறு அதிகரிக்கின்றது? அது குறைகின்ற காலப்பகுதியும் உள்ளது. அது அதிகரிக்கும் போது, தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்றல்ல, இல்லை. குறைந்தும் செல்கின்றது. உலகிலுள்ள அனைத்திற்கும் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. எங்கள் சரீரங்களிற்கும் ஒழுங்குமுறை உள்ளது: அது முதலில் ஒரு குழந்தையாக உள்ளது. அதன் பின்னர் சிறுபராயம், இளமை பின்னர் முதுமையை அடைகின்றது. அது விரைவில் முதுமை அடைவதில்லை. அது படிப்படியாக முதுமை அடைந்து பின்னர் தளர்வடைகின்றது. எனவே அனைத்தின் வளர்ச்சிக்கும் அதன் பின்னர் முடிவடைவதற்கும் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. இவ்வாறாகவே, உலக சந்ததிகளையிட்டும் ஓர் ஒழுங்குமுறை உள்ளது. இடம்பெற்ற வாழ்க்கையின் ஸ்திதிகளும், அதுபோன்றே பிறவிகளுக்கான ஸ்திதிகளும், பின்னர்; சந்ததிகளுக்கான ஸ்திதிகளும் உள்ளன. அவ்வாறே, சமயங்கள் அனைத்திற்குமான ஸ்திதிகளும் உள்ளன. முதல் சமயம் உச்சளவு பலத்தை கொண்ட ஒன்றாக உள்ளது. ஏனைய அனைத்தினதும் பலம் தொடர்ந்தும் படிப்படியாக குறைவடைகின்றன. சமயங்கள் பிளவுபடுதல், அவற்றின் தொடர்ச்சி, இவையனைத்தும் ஓர் ஒழுங்குமுறையுடனேயே இடம்பெறுகின்றன. எனவே இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயங்கள் ஆகும்.
இதற்கேற்பவே தந்தையும் கூறுகின்றார்: எனக்கும் இதில் ஒரு பாகம் உள்ளது. நானும் ஓர் ஆத்மாவே. நான் கடவுளே அன்றி வேறெதுவும் அல்ல. நானும் ஓர் ஆத்மாவே, ஆனால் எனது பணி மிகவும் மகிமை வாய்ந்ததும் மேன்மையானதும் ஆகும். ஆகையாலேயே நான் கடவுள் என்று அழைக்கப்படுகின்றேன். நீங்கள் ஓர் ஆத்மா என்பதைப் போன்றே, நானும் அவ்வாறானவரே. நீங்கள் மனிதர்களாக உள்ளதைப் போன்றே, உங்கள் குழந்தையும் ஒரு மனிதரே. அதில் எவ் வேறுபாடும் இருப்பதில்லை. அவ்வாறே நானும் ஓர் ஆத்மாவே. ஆத்மாக்களின் இடையில் வேறுபாடு இல்லை. ஆனால் பணிகளைப் பொறுத்தவரையில், மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. ஆகையாலேயே எனது பணிக்கும் ஏனைய அனைவரது பணிகளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது எனப்படுகின்றது. நான் எல்லைக்குட்பட்ட எந்த ஒரு சமயத்தையும் ஸ்தாபிக்கும் ஒருவர் அல்ல. நான் உலகைப் படைப்பவர்;. ஆனால் ஏனைய அனைவரும் சமயங்களைப் படைப்பவர்கள். அவர்கள் தத்தமது நேரத்திற்கு ஏற்ப, தமது கடமையை நிறைவேற்றுவதைப் போன்று நானும் எனது சொந்த நேரத்தில் வருகின்றேன். எனது பணி எல்லையற்றது. எனது பணி ஏனைய அனைவரது பணியையும் விட மகிமையானதும், வேறுபட்டதும்; ஆகும். ஆகையாலேயே கூறப்படுகின்றது: உங்கள் பணி தனித்துவமானது. அவர் சர்வசக்திவான் என்றும் அழைக்கப்படுகின்றார். மாயையின் பந்தனத்திலிருந்து ஆத்மாக்களை விடுவித்து புது உலகின் மரக்கன்றை நாட்டுவதே அதி சக்திவாய்ந்த பணியாகும். ஆகையாலேயே ஆங்கிலத்தில், அவர் ‘தந்தையான சுவர்க்கக் கடவுள்’ என்று அழைக்கப்படுகின்றார். கிறிஸ்தவ சமயத்தின் தந்தை கிறிஸ்து எனப்படுகின்றார். அவரை ‘தந்தையான சுவர்க்கக் கடவுள்’ என்று அழைக்க முடியாது. கடவுள் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர் ஆவார். எனவே, சுவர்க்கம் ஓர் உலகம் ஆகும், சுவர்க்கம் ஒரு சமயம் அல்ல. எனவே, அவர் ஓர் உலகை ஸ்தாபிக்கின்ற ஒருவர் ஆவார், அந்த உலகில் ஒரே தர்மமும், ஒரே இராச்சியமுமே நிலவுகின்றது. பஞ்சதத்துவமும் மாற்றமடையும் என்பதாலேயே ‘தந்தையான சுவர்க்கக் கடவுள்’ என தந்தை அழைக்கப்படுகின்றார்.
இரண்டாவதாக, கடவுள் சத்தியமானவர் என்று கூறப்படுகின்றது. எனவே, என்ன சத்தியம்? எதில் சத்தியம் உள்ளது? இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். உண்மையை பேசுவர்கள் கடவுள் எனப்படுகின்றார்கள் என சிலர் நினைக்கின்றார்கள். கடவுள் வேறு எதுவும் அன்றி, உண்மையை கூற வேண்டியவர் ஆவார். எவ்வாறாயினும், ‘கடவுள் சத்தியமானவர்’ என்றால், கடவுள் வந்து எங்களுக்கு அனைத்தைப் பற்றிய உண்மையையும் கூறினார் என்றே அர்த்தமாகும். ‘கடவுள் சத்தியமானவர்’ என்றால், கடவுளே எங்களுக்கு உண்மையைக் கூறுகின்றார் என்று அர்த்தமாகும். அவரிடம் அந்த உண்மை உள்ளது என்பதாலேயே அவர் ‘ஞானக்கடலும், பேரானந்தக்கடலுமான ஞானம் நிறைந்தவரும்’ ‘கடவுளுக்கே தெரியும்’ என்றும் கூறப்படுகின்றது. எனவே, அதனை அறிந்து கொள்வது நிச்சயமாக பயன்தரக்கூடியதாகும். அல்லவா? எனவே, அவர் அறிந்துள்ளது என்ன? இன்னார் இதனைத் திருடினார் என்பது கடவுளுக்கு தெரியும் என்றல்ல. அவர் அனைத்தையும் அறிந்திருந்த போதிலும், இவ்வுலகம் எவ்வாறு வீழ்ச்சியடைந்தது என்பதையும், அது எவ்வாறு மேன்மையடைய முடியும் என்பதையும், இவ் உலகச் சக்கரம் பற்றிய அனைத்தையும் அறிந்திருக்கும் உண்மையின் அடிப்படையிலேயே அவருக்கான புகழ் உள்ளது. ஆகையாலேயே ‘கடவுளே அறிவார்’ எனக் கூறப்படுகின்றது. எனவே, கடவுளின் புகழ் மனிதரின் புகழிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் ஏனைய அனைவரிலிருந்தும் அவர் அறிந்தவை வேறுபட்டதாகும். மனிதர்கள் எல்லைக்குட்பட்டவற்றையே அறிந்துள்ளனர். மனிதர்கள் எல்லைக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றது ஆனால் கடவுளோ அனைத்தையும் அறிந்தவர் என்றும் ஆங்கிலத்தில், மழெறடநனபந-கரடட அதாவது அவர் ஞானம் நிறைந்தவர், அவர் அனைத்தையும் அறிந்தவர் என்றும் கூறப்படுகின்றது. எனவே, அனைத்தையும் அறிந்தவராலேயே உண்மையை அறிந்திருக்க முடியும். அனைத்தையும் பற்றிய மிகச்சரியான ஞானத்தைக் கொண்ட ஒருவராலேயே அதனை அனைவருக்கும் கொடுக்க முடியும். அவர் ஞானத்தை அறிந்திருந்தும் வேறெவருக்கும் அதனைக் கொடுக்காதிருந்தால், அதனால் எங்களுக்கு என்ன பலன்? அவர் அறிந்திருக்கட்டும். ஆனால் இல்லை! அவர் அறிந்திருப்பவற்றினால் நாங்கள் நன்மை அடைந்துள்ளோம் என்பதாலேயே நாங்கள் அவரின் தகைமைகளின் புகழைப் பாடுகின்றோம். நாங்கள் அவரைத் தேடித் திரிகின்றோம். ஏதாயினும் நிகழ்ந்தால், நாங்கள் கூறுகின்றோம்: ஓ கடவுளே, நீங்களே இதனை இப்பொழுது செய்ய வேண்டும். கருணை கொள்ளுங்கள்! இரக்கம் காட்டுங்கள்! எங்கள் துன்பதை அகற்றுங்கள்! ஆகையால், நாங்கள் எதனையேனும் அவரிடம் வேண்டுகின்றோம். நாங்கள் அவருடன் ஒரு உறவுமுறை கொண்டிருக்கின்றோம். அல்லவா? ஆகையாலேயே அவர் ஏதோ ஒரு நன்மையை எங்களுக்கு செய்துள்ளதைப் போன்று அவ்வாறாக அவரை நினைவுசெய்கின்றோம். அவர் எங்களுக்கு எதையுமே எப்பொழுதுமே செய்யாதிருந்தால் நாங்கள் ஏன் அவருக்காக இவ்வளவு பிரயத்தனம் செய்ய வேண்டும்? ஒரு கஷ்டத்தின் போது எவரேனும் உதவி செய்திருந்தால், உங்கள் இதயத்தில் நீங்கள் உணர்வீர்கள்: இவர் சரியான நேரத்தில் எனக்கு அதிகளவு உதவி செய்து, சரியான நேரத்தில் என்னைக் காப்பாற்றினார். அப்பொழுது உங்கள் இதயத்தில் அவரையிட்டு அன்பான உணர்வு ஏற்படும். எனவே, கடவுள் சரியான நேரத்தில் உங்களுக்கு உதவியதால், நீங்களும் அவர்மீது அத்தகைய அன்பைக் கொண்டிருக்கின்றீர்கள். எவ்வாறாயினும், ஒருவருக்கு ஏதேனும் நன்மை நிகழ்ந்தால், அது கடவுள் செய்தார் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இதனையே கடவுள் செய்கின்றார், அவ்வளவே. எவ்வாறாயினும், அவரின் பணி மகத்துவமனாது. அது உலகிற்கான பணியாகும். அது உலகின் விடயமாகும். ஆனால் ஒருவர் பணத்தை பெறும் போது, அது கடவுளின் செயல் என்றல்ல. நாங்களும் நல்ல செயல்களைச் செய்கின்றோம் என்பதால் அச் செயல்களுக்கான பலனை நாங்கள் பெறுகின்றோம். நல்ல, தீய செயல்களுக்கான கணக்கு உள்ளது என்பதால் நாங்கள் தொடர்ந்தும் அவற்றிற்கான பலன்களைப் பெறுகின்றோம். எவ்வாறாயினும், கடவுள் வந்து எங்களுக்கு கற்பிப்பது என்ற செயல்கள் பற்றிய பலன் வேறுபட்டதாகும். உங்கள் புத்தியின் அடிப்படையில் தற்காலிகமான சந்தோஷத்தையும் அனுபவம் செய்ய முடியும். ஆனால் அவரிடமிருந்து நாங்கள் பெறுகின்ற ஞானத்தின் ஊடாக நாங்கள் நிரந்தரமான சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றோம். எனவே, கடவுளின் பணி வேறுபட்டதாகும். எனவே கூறப்படுகின்றது: நானே வந்து உங்களுக்கு கர்மத்தின் மிகச் சரியான ஞானத்தைக் கற்பிக்கின்றேன். இதுவே ‘கர்மயோகம் மிகவும் மேன்மையானது’ என்று குறிப்பிடப்படுகின்றது. செயல்களையோ அல்லது வீட்டையோ, குடும்பத்தையோ துறப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. உங்கள் செயல்களை நீங்கள் எவ்வாறு தூய்மையாக்கலாம் என்ற ஞானத்தையே நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன். எனவே, உங்கள் செயல்களை நீங்கள் தூய்மையாக்க வேண்டும். அவற்றை நீங்கள் துறக்க வேண்டியதில்லை. செயல்கள் அநாதியானவையாகும். இந்த கர்மஷேத்திரமும் அநாதியானது. மனிதர்கள் இருக்கும் இடத்தில், செயல்களும் இருக்கும், ஆனால் அச் செயல்களை நீங்கள் எவ்வாறு மேன்மையானது ஆக்கலாம் என்றே நான் வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றேன். அதன் ஊடாக, உங்கள் செயல்களின் கணக்கு நடுநிலை ஆகுகின்றது. நடுநிலையான செயல்கள் என்றால் தீயவை எதனையும் உங்கள் கணக்கில் சேமிக்காதிருத்தல் ஆகும். அச்சா.
பாப்தாதாவினதும் மம்மாவினதும், மிகச் சிறந்த, மிகவும் எச்சரிக்கையாகவுள்ள இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். அச்சா.
ஆசீர்வாதம்:
சதா ஆர்வமும் உற்சாகமும் கொண்டிருப்பதன் மூலமும், உங்கள் மனதில் சந்தோஷபாடல்களைப் பாடுவதனாலும் சந்தோஷம் என்ற அநாதியான பாக்கியத்தை பெறுவீர்களாக.சந்தோஷம் என்ற பாக்கியத்தைக் கொண்டிருக்கின்ற குழந்தைகள் அநாதியான வழிமுறைகளினால் அழிவற்ற வெற்றியை பெறுகிறீர்கள். ~~ஆஹா, ஆஹா!|| என்ற சந்தோஷ பாடல்கள் சதா உங்கள் மனதில் வெளிப்படுகின்றன. ஆஹா பாபா! ஆஹா பாக்கியம்! ஆஹா இனிய குடும்பம்! ஆஹா அழகான நேரமான மேன்மையான சங்கமயுகம்! ஒவ்வொரு செயலும், ~ஆஹா ஆஹா!|| என்பதால், நீங்கள் அநாதியான சந்தோஷ பாக்கியத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். ~~ஏன் எனக்கு?|| என்பது என்றுமே உங்கள் மனதில் பிரவேசிக்க முடியாது. ~~ஏன்?|| என்பதற்கு மாறாக நீங்கள் ~ஆஹா ஆஹா!|| என்றும் ~நான்| என்பதற்கு மாறாக நீங்கள் ~பாபா, பாபா!| என்றும் கூறுகிறீர்கள்.
சுலோகம்:
உங்கள் எண்ணங்களில், அழிவற்ற அரசாங்க முத்திரையை இட்டுக் கொண்டால், நீங்கள் பலசாலியாக நிலைத்திருப்பீர்கள்.