19.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் ஆயுட்காலம் அதிகரிப்பதுடன், உங்கள் பாவமும் அழிக்கப்படுகின்றது. நினைவில் நிலைத்திருக்கின்ற ஒருவரின் ஸ்திதியும், நடத்தையும், அவர் பேசுகின்ற முறையும் முதற்தரமாக இருக்கும்.

கேள்வி:
தேவர்களை விடவும் குழந்தைகளாகிய நீங்கள் ஏன் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும்?

பதில்:
நீங்கள் மிகவும் பெரியதொரு அதிர்ஷ்டலாபச் சீட்டை வென்றிருக்கின்றீர்கள் என்பதாலாகும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். சத்தியயுகத்தில் தேவர்களே தேவர்களுக்குக் கற்பிப்பார்கள். இங்கே, மனிதர்கள் மனிதர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். ஆனால், பரமாத்மாவே ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இப்பொழுது சுய தரிசனச் சக்கரதாரிகள் ஆகுகின்றீர்கள். உங்களுக்குள் சகல ஞானமும் உள்ளது. தேவர்களிடம் இந்த ஞானம் இருப்பதில்ல

பாடல்:
மணவாட்டிகளே, விழித்தெழுங்கள்! புதிய யுகம் உதயம் ஆகுகின்றது.ை

ஓம் சாந்தி.
தேவர்கள் புதுயுகத்தில் இருக்கின்றார்கள். அவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்களது குணங்கள் தெய்வீகமானவை. அவர்கள் இரட்டை அகிம்சாவாதிகளான வைஷ்ணவர்கள். மனிதர்கள் தற்காலத்தில் இரட்டை வன்முறையாளர்களாக இருக்கின்றார்கள்: அவர்கள் பெருமளவு சண்டை சச்சரவுகள் செய்வதுடன் காம வாளையும் பயன்படுத்துகின்றார்கள். இதுவே விகாரம் கொண்டவர்கள் வாழும் மரண பூமி என அழைக்கப்படுகின்றது. அதுவோ தேவர்கள் வாழும் தேவர் உலகம் என்று அழைக்கப்படுகின்றது. அவர்கள் இரட்டை அகிம்சாவதிகளாக இருந்தார்கள். அவர்களின் இராச்சியம் இருந்தது. சக்கரத்தின் எல்லை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருப்பின், உங்களால் அதனைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாது. இக்காலத்தில், அவர்கள் சக்கரத்தின் காலப்பகுதியைக் தொடர்ந்தும் குறைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். சிலர் அது 7000 வருடங்கள் என்றும், வேறும் சிலர் அது 10,000 வருடங்கள் என்றும் கூறுகின்றார்கள். தந்தையே அதிமேலான கடவுள் என்றும், அவரது குழந்தைகளாகிய நாங்களே அமைதி தாமத்தில் வசிக்கின்றோம் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாங்களே பாதையைக் காட்டும் வழிகாட்டிகள். கீதையில், ‘மன்மனாபவ’ என்பது குறிப்பிடப்பட்டிருப்பினும், இந்த யாத்திரையைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதன் அர்த்தம் என்ன? உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். இது எவரது புத்தியிலும் புகுவதில்லை. தந்தை வந்து விளங்கப்படுத்தும்பொழுதே இது அவர்களின் புத்தியில் புகும். இப்பொழுது நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். இங்கு மனிதர்கள் இருக்கின்றார்கள், ஆனால் தேவர்கள் சத்தியயுகத்திலேயே இருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது உண்மையாகவே மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகிக் கொண்டு இருக்கின்றீர்கள். இதுவே உங்கள் இறை பணியாகும். மக்கள் அசரீரியான பரமாத்மாவைப் பற்றிப் புரிந்துகொள்வதில்லை. அசரீரியானவர் எவ்வாறு கரங்;களையும் பாதங்களையும் கொண்டிருக்க முடியும்? கிருஷ்ணருக்குக் கரங்களும்; பாதங்களும் உள்ளன. அவருக்கு அனைத்தும் உள்ளன. பக்தி மார்க்கத்திலே அவர்கள் பல சமயநூல்களை எழுதியிருக்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது பல படங்கள் போன்றன உள்ளன. நீங்கள் ஒரு படத்தைப் பார்க்கும்பொழுது, அப் படத்திலிருந்து எதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். மேலும் பல படங்கள் உருவாக்கப்படும். படத்தின் உச்சியில் நீங்கள் ஆத்மாக்களையும் காட்ட வேண்டும். ஆத்மாக்கள் மாத்திரமே இருக்கின்றனர், வேறு எதுவுமே தெரிவதில்லை, அதன்பின்னர் சூட்சும உலகமும், அதன் கீழே மனித உலகையும் காட்டுங்கள். அத்துடன்; இறுதியில் அவர்கள் எவ்வாறு ஏறுகின்றார்கள் என்பதையும் நீங்கள் காட்ட வேண்டும். நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புக்களும் உருவாக்கப்படும். உங்களிடம் உள்ள படங்களுக்கு ஏற்ப நீங்கள் இப்பொழுது அதிகளவு சேவை செய்ய வேண்டும். பின்னர் மக்கள் விரைவில் புரிந்து கொள்ளும் வகையில் அத்தகைய படங்கள் உருவாக்கப்படும். விருட்சம் மிகவும் விரைவாக தொடர்ந்தும் வளரும். கடந்த கல்பத்தில் ஒருவர் எந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டாரோ, அப்பொழுது என்ன முடிவு அறிவிக்கப்பட்டதோ, அதுவே இப்பொழுதும் வெளிப்படும். இறுதியில் இங்கு வருபவர்கள் வெற்றி மாலையின் மணியாக முடியாது என்றல்ல. அவர்களாலும் அவ்வாறு ஆக முடியும். தீவிர பக்தியைச் செய்பவர்கள் அவர்களது பக்தியில் இரவும் பகலும் ஈடுபட்டிருப்பார்கள். அப்பொழுதே அவர்களால் காட்சிகளைக் காண முடியும். அத்தகையவர்களும் இங்கேயே உருவாகுகின்றார்கள். அவர்கள் இரவு பகலாக முயற்சி செய்து தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவார்கள். அனைவரும் வாய்ப்பு உள்ளது. இறுதியில் வருபவர்கள் தவறவிடப்படுவார்கள் என்றல்ல. எவருமே ஆஸ்தியைப் பெறுவதைத் தவறவிடாத வகையிலேயே நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. சகல திசைகளுக்கும் இச்செய்தி கொடுக்கப்பட வேண்டும். ஒரு நபர் தவறவிடப்பட்டார் என்றும், அதனால் அவர் முறைப்பாடு செய்தார் என்றும் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் படங்கள் போன்றன பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும். நீங்கள் தொடர்ந்தும் அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்வீர்கள். அனைவருமே தந்தை வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்வார்கள். அவர்கள் முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் ஓடுவார்கள். உங்கள் பெயர் தொடர்ந்தும் போற்றப்படும். சத்திய யுகமே புதிய யுகம் என்றழைக்கப்படுகின்றது. ‘புது யுகம்’ என்றழைக்கப்படும் ஒரு செய்திப் பத்திரிகை இருக்கின்றது. அவர்கள் புது டெல்கியைப் பற்றிக் கூறுகின்றார்கள், அப்படியாயின், இப்பழைய துறைமுகமோ, குப்பைகளோ புதிய டெல்கியில் இருக்க முடியாது. இப்பொழுது அனைத்தும் நிலைகுலைந்துள்ளது. சத்தியயுகத்தில் தத்துவங்கள் அனைத்தும் ஒழுங்குமுறையில் இருக்கின்றது. இங்கு, பஞ்ச தத்துவங்களும் தமோபிரதானாகவே இருக்கின்றன. அங்கு, அனைத்தும் சதோபிரதானாகவிருக்கும். ஆகவே அங்கு ஒவ்வொரு தத்துவத்திடம் இருந்தும் சந்தோஷம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. அங்கு துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அது சுவர்க்கம் எனப்பட்டது. நாங்கள் இப்பொழுது தமோபிரதானாகி விட்டோம் என்பவை போன்ற இவ் இவ்விடயங்களை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நாம் இப்பொழுது நமது இலட்சியத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம் நாங்கள் சதோபிரதானாகுவதற்கான முயற்சியைச் செய்வோம். ஏனைய அனைவரும் காரிருளில் இருக்கின்றார்கள். நாங்களே ஒளியினுள் இருக்கின்றோம். நாம் மேலே செல்ல, ஏனையவர்கள் வீழ்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கடைய வேண்டும். சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் அதனைக் கடைய மாட்டார். பிரம்மாவே இதனைக் கடைய வேண்டும். நீங்கள் அனைத்தையும் கடைந்து மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள். சிலர் கடைவதேயில்லை. அவர்கள் பழைய உலகை மாத்திரமே நினைவு செய்கின்றார்கள். பாபா கூறுகின்றார்: முற்றாகவே பழைய உலகை மறந்துவிடுங்கள். எவ்வாறாயினும், நீங்கள் செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப வரிசைக்கிரமமாகவே இராச்சியமானது உருவாக்கப்படுகின்றது என்பது பாபாவிற்குத் தெரியும். தந்தை கூறுகின்றார்: நான் ஓர் இராச்சியத்தை ஸ்தாபித்த பின்னர் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவேன். அம்மக்கள் தமது சொந்தச் சமயத்தை உருவாக்குவதற்காகவே வருகின்றார்கள். அந்தச் சமயத்தைச் சார்;ந்தவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வருவார்கள். உங்களால் எவ்வாறு அவர்களைப் புகழ முடியும்? அனைத்துப் புகழும் “வைரத்தைப் போன்ற வாழ்க்கை மற்றும் சிப்பிப் போன்ற வாழ்க்கை” என்பதிலேயே நினைவு செய்யப்படுகின்றது. நீங்கள் உச்சியில் இருந்து வீழ்ந்து அடித்தளத்தை அடைகின்றீர்கள். நீங்கள் ஓர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வென்றிருப்பதனால் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தேவர்களை விடவும் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். கடவுள் இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். அங்கு, தேவர்களே தேவர்களுக்குக் கற்பிப்பார்கள். இங்கு மனிதர்களே மனிதர்களுக்குக் கற்பிப்பார்கள். ஆனால் பரமாத்மாவான பரமதந்தையே ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதில் ஒரு வித்தியாசம் இருக்கின்றது, இல்லையா? பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது இராமரின் இராச்சியத்தைப் பற்றியும், இராவணனின் இராச்சியத்தைப் பற்றியும் அறிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் எவ்வளவிற்கு அதிகமாக ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்களோ அவ்வளவிற்கு அதிகமாக ஓர் உயர்ந்த அந்தஸ்தை உங்களால் கோர முடியும். மக்கள் அறியாமை மார்க்கத்தில் செய்வன அனைத்தும் தவறானவை. இளைய பிராயத்தில் புத்தியானது குழந்தையைப் (முதிர்ச்சியடையாதது) போன்றதாகவே இருக்கும். பின்னரே அது முதிர்ச்சி அடைகின்றது. திருமண நிச்சயதார்த்தம் 16 அல்லது 17 வயதிலேயே நடைபெறுகின்றது. தற்காலத்தில் உலகம் மிகவும் அழுக்கடைந்துள்ளது. அவர்கள் மடியில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கே திருமணத்தைச் செய்விக்கின்றார்கள். பின்னர் அவர்களின் கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பமாகும். அங்கு, திருமணங்கள் மிகவும் இராஜரீகமாகவே இருக்கும். அவை பற்றிய காட்சிகள் அனைத்தையும் நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்கையில், நீங்கள் அவற்றைப் பற்றிய காட்சிகள் அனைத்தையும் கொண்டிருப்பீர்கள். முதல் தரமான யோகிக் குழந்தைகளின் ஆயுட்காலமானது தொடர்ந்தும் அதிகரிக்கும். தந்தை கூறுகின்றார்: யோகத்தின் மூலம் உங்கள் ஆயுளை அதிகரியுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் யோகத்தைக் கொண்டிருப்பதில்லை. நீங்கள் நினைவில் இருப்பதற்குப் பிரயத்தனத்தைச் செய்தாலும், உங்களால் நினைவுசெய்ய முடியவில்லை. நீங்கள் மீண்டும் மீண்டும் அதனை மறந்து விடுகின்றீர்கள். உண்மையில், இங்கிருப்பவர்களின் அட்டவணையானது மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். வெளியில் இருப்பவர்கள் நாளாந்த விடயங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்வதன் மூலம் சதோபிரதான் ஆக வேண்டும். நீங்கள் உணவு சமைக்கும்பொழுதும், உங்கள் வேலைகளைச் செய்யும்பொழுதும் என்னைக் குறைந்தபட்சம் 8 மணித்தியாலங்களுக்காவது நினைவு செய்யுங்கள். ஏனெனில் அப்பொழுதே உங்களால் இறுதியில் கர்மாதீத நிலையினை அடைய முடியும். சிலர் தாம் ஆறு அல்லது எட்டு மணித்தியாலங்கள் யோகம் செய்கின்றோம் என்று கூறுகின்றார்கள், ஆனால் பாபா அதனை நம்ப மாட்டார். பலரும் தாம் அட்டவணையை எழுதாது இருப்பதனால் வெட்கப்படுகின்றார்கள். அவர்களால் அரை மணித்தியாலமேனும் நினைவில் இருக்க முடிவதில்லை. முரளியைச் செவிமடுப்பது என்பது நினைவல்ல. அது ஒரு வருமானத்தைப் பெற்றுக் கொள்வதாகும். நினைவுசெய்யும்பொழுதே நீங்கள் செவிமடுப்பதை நிறுத்தி விடுகின்றீர்கள். சிலர் தாம் நினைவில் இருந்தவாறே முரளியைச் செவிமடுத்ததாக எழுதுகின்றார்கள். எவ்வாறாயினும், அது நினைவுசெய்வது அல்ல. பாபா தானே கூறுகின்றார்: நான் மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றேன். நான் பாபாவின் நினைவில் இருந்தவாறே உணவை உண்பதற்கு அமருகின்றேன்: பாபா நீங்கள் ஓர் அபோக்தா. “பாபா நீங்களும் உண்கின்றீர்கள், நானும் உண்கின்றேன்’ என எவ்வாறு நான் கூறுவது?”. சிலவேளைகளில் பாபா உங்களுடன் இருக்கின்றார் என நீங்கள் கூறுகின்றீர்கள். நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். முரளி என்ற பாடம் முற்றாகவே வேறுபட்டதாகும். நீங்கள் நினைவு செய்வதன் மூலம் தூய்மையாகுவதுடன் உங்கள் ஆயுட்காலமும் அதிகரிக்கும். எவ்வாறாயினும், நீங்கள் முரளியைச் செவிமடுத்தபொழுது, அதில் பாபா உங்களுடன் இருந்தார் என்று அர்த்தமல்ல. முரளியைச் செவிமடுக்கும்பொழுது உங்கள் பாவங்கள் அழியப் போவதில்லை. இதற்கு முயற்சி தேவை. சில குழந்தைகளால் பாபாவை நினைவுசெய்ய முடிவதில்லை என்பதை பாபா அறிவார். நினைவில் நிலைத்திருக்கும் குழந்தைகளின் ஸ்திதி, நடத்தை, பேசும் விதம் போன்றன முற்றாகவே வேறுபட்டதாக இருக்கும். நினைவுசெய்வதன் மூலமே நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், மாயை உங்களை முற்றாகவே மூடர்கள் ஆக்கக்கூடியவள். இந்நோயானது பலரையும் தாக்குகின்றது. முன்னர் இல்லாத பற்று வெளிப்பட்டு, அவர்கள் அதில் சிக்கிக் கொள்கின்றார்கள். இதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. முரளியைச் செவிமடுத்தல் என்பது வேறுபட்ட ஒரு விடயமாகும். அதுவே வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழியாகும். இதன் மூலம் உங்கள் ஆயுட்காலமானது அதிகரிப்பதில்லை. நீங்கள் தூய்மையாகவும் மாட்டீர்கள், உங்கள் பாவங்கள் அழியவும் மாட்டாது. பலரும் முரளியைச் செவிமடுத்தபொழுதிலும் தொடர்ந்தும் விகாரத்தினுள் வீழ்ந்தவாறே இருக்கின்றார்கள். அவர்கள் உண்மையைப் பேசுவதும் இல்லை. தந்தை கூறுகின்றார்: உங்களால் தூய்மையாக இருக்க முடியாவிடின் ஏன் இங்கு வருகின்றீர்கள்? அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா நான் அஜாமில் (மகாபாவி). நான் இங்கு வந்தாலேயே என்னால் தூய்மையாக முடியும். இங்கு வருவதால் ஏதேனும் மாற்றம் இடம்பெற முடியும். இல்லாவிடின் நான் எங்கு செல்வது? இதுவே ஒரேயொரு பாதையாகும். அத்தகையவர்களும் இங்கு வருகின்றார்கள். ஒரு கட்டத்தில் அம்பானது இலக்கினைத் தாக்கும் ‘தூய்மையற்ற எவரும் இங்கு வரமுடியாது’ என்று பாபாவும் இவ்விடத்தைப் பற்றிக் கூறுகின்றார். இது இந்திர சபையாகும். தற்சமயம் அவர்கள் இங்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். ஒரு நாள் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்படும்: அவர்கள் உறுதியான உத்தரவாதத்தைக் கொடுத்தாலே வர அனுமதிக்கப்படுவார்கள். அப்பொழுது இந்த நிறுவனத்திற்கு தூய்மையற்ற எவரும் வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். இது யாருடைய ஒன்றுகூடல் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாங்கள் இறைவன், ஈஸ்வரர், சோமநாதர், பபுல்நாதருடனேயே அமர்ந்திருக்கின்றோம். அவரே எங்களைத் தூய்மையாக்குகின்றார். இப்பொழுது, இறுதியில் பலரும் வருவார்கள், எவராலும் தடைகள் போன்றவற்றை உருவாக்க முடியாது. இத்தர்மத்திற்கு உரியவர்கள் மீண்டும் வெளிவருவார்கள். ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்களும் இந்துக்களே. பிரிவுகளும், குழுக்களும் பிரிக்கப்பட்டுள்ளார்கள். தேவர்கள் சத்திய யுகத்திலேயே இருக்கின்றனர். இங்கு, அனைவரும் இந்துக்களே. உண்மையில், இந்து சமயம் என்று எதுமேயில்லை. இந்துஸ்தான் என்பது நாட்டின் பெயராகும். குழந்தைகளாகிய நீங்கள் நடக்கும்பொழுதும் உலாவரும் பொழுதும் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக வேண்டும். மாணவர்கள் தமது கல்வியை நினைவுசெய்ய வேண்டும். உங்கள் புத்தியில் முழுச் சக்கரமும் உள்ளது. உங்களுக்கும் தேவர்களுக்குமிடையில் ஒரு சிறிதளவு வேற்றுமை இருக்கின்றது. நீங்கள் உறுதியான சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகியதும் நீங்கள் விஷ்ணுவின்; குலத்தில் ஒருவர் ஆகுவீர்கள். நீங்கள் அவ்வாறு ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தேவர்களின் ஸ்திதியே இறுதி ஸ்திதியாகும். நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடைந்தவுடனேயே உங்களால் உங்கள் இறுதி நிலையை அடைய முடியும். சிவபாபாவே உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குகின்றார். அவரினுள் ஞானம் இருக்கின்றது. அவரே உங்களை அவ்வாறு ஆக்குகின்றார், நீங்களே அவ்வாறு ஆகுகின்றீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகின்றீர்கள், பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். தற்சமயம் அந்த ஆபரணங்களை எவ்வாறு உங்களுக்குக் கொடுக்க முடியும்? நீங்களோ இப்பொழுது முயற்சியாளர்கள். பின்னர் நீங்கள் விஷ்ணுவின் குலத்தில் ஒருவர் ஆகுவீர்கள். சத்தியயுகமே விஷ்ணுவின் குலமாகும். ஆகவே நீங்கள் அவர்களைப் போல் ஆக வேண்டும். நீங்கள் மிக இனிமையானவர்கள் ஆக வேண்டும். தீய வார்த்தைகள் பேசுவதை விட பேசாதிருப்பது மேல். ஒரு தம்பதியினர் சண்டையிட்டுக் கொண்டபொழுது ஒரு சந்நியாசி அவர்களில் ஒருவரின் வாயில் ஒரு முத்தை இட்டுக் கொள்ளும்படியும், அதனை எடுக்காதபொழுது, எந்தப் பின்விளைவும் ஏற்பட மாட்டாது என்றொரு உதாரணம் கொடுக்கப்படுகின்றது. ஐந்து விகாரங்களையும் வெல்வது என்பது மாமியார் வீட்டிற்குச் செல்வதைப் போன்றதல்ல! சிலர் எவ்வாறு தாம் பெருமளவு கோபத்தைக் கொண்டிருந்தாகவும், இப்பொழுது அவர்கள் எவ்வாறு ஒரு சிறிதளவு கோபத்தையே கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் தமது அனுபவமாகப் பகிர்ந்து கொண்டார்கள். நீங்கள் மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். நேற்று நீங்கள் அத்தேவர்களின் புகழைப் பாடினீர்கள். இன்று நீங்களே அத்தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமாகவே அவ்வாறு ஆகுவீர்கள். பாபா சேவை செய்பவர்களின் பெயரையே நிச்சயமாகக் குறிப்பிடுவார். நீங்கள் மற்றவர்களுக்குப் பாதையைக் காட்ட வேண்டும். முன்னர் எங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது நாங்கள் பெருமளவு ஞானத்தைப் பெற்றிருக்கின்றோம். நற்குணங்களை நன்றாகக் கிரகிக்காதவர்களின் மேல் முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன: பாபா இவர் பெருமளவு கோபத்தைக் கொண்டவராக இருக்கின்றார். பாபாவிற்கும் அது தெரியும். உங்களால் ஆன்மீகச் சேவை செய்ய இயலாவிடின், பௌதீகச் சேவையும் செய்யப்பட வேண்டும். நீங்கள் பாபாவின் நினைவில் நிலைத்திருந்து சேவை செய்தீர்களாயின், அதுவும் ஒரு மகத்தான பாக்கியமே. தொடர்ந்தும் ஒருவருக்கு மற்றவர் நினைவுபடுத்துங்கள். நினைவின் மூலமே நீங்கள் பெருமளவு சக்தியைப் பெற்றுக் கொள்வீர்கள். நினைவில் இருப்பவர்கள் தமது அட்டவணையைப் பேணவும் வேண்டும். உங்களால் அட்டவணையில் இருந்து அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். பாபா தொடர்ந்தும் அனைவரையும் எச்சரிக்கின்றார். பலரும் உலகில் அமைதி இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஒரு கட்டத்தில் உலகில் அமைதி இருந்தது. சத்தியயுகத்தில் அமைதியின்மையை உருவாக்கக்;கூடிய எதுவுமேயில்லை. இங்கு, முழு உலகினையும் இனிமையாக்கும் இனிய தந்தையும், இனிய குழந்தைகளுமே இருக்கின்றார்கள். இவ்வுலகானது அத்தனை இனிமையானதாக இப்பொழுது இல்லை. எங்கும் மரணத்தினைத் தவிர வேறு எதுவுமேயில்லை. இந்நாடகமானது பல தடைவைகள் நடைபெற்றது, இது தொடர்ந்தும் பல தடவைகள் நடைபெறும். இதற்கு முடிவேயில்லை. சக்கரமானது தொடர்ந்தும் சுழலுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, உங்கள் ஆயுட் காலம் நீடிக்கப்பட வேண்டுமாயின், நீங்கள் நிச்சயமாக நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க வேண்டும். நினைவு செய்வதனால் மாத்திரமே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். ஆகையால், நிச்சயமாக குறைந்தபட்சம் 8 மணித்தியால நினைவுயாத்திரைக்கான அட்டவணையை தயாரியுங்கள்.

2. தேவர்களைப் போன்று இனிமையானவர் ஆகுங்கள். தீய அல்லது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பேசாமல் இருப்பதே மேலாகும். ஆன்மீக அல்லது பௌதீக சேவை செய்யும் போது, தந்தையின் நினைவில் நிலைத்திருத்தல் மகா பாக்கியமாகும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கடவுளின் இனிமையை அனுபவம் செய்வதால், நிலையான, ஸ்திரமான ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கின்ற, ஒரு மேன்மையான ஆத்மா ஆவீர்களாக.

கடவுளின் இனிமையை அனுபவம் செய்கின்ற குழந்தைகள் உலகின் சுவைகள் அனைத்தையும் எதிரானதாகவே காண்கின்றார்கள். ஒரு சுவை இனிமையாக இருக்கும்பொழுது, உங்கள் கவனம் அந்தவொன்றில் மாத்திரம் செல்லும், இல்லையா? உங்கள் மனம் இலகுவில் அந்தவொன்றில் செல்லும்; அதற்கு எந்த முயற்சியும் கிடையாது. தந்தையின் அன்பு, தந்தையின் உதவி, தந்தையின் சகவாசம், தந்தையிடமிருந்தான பேறுகள் ஆகியவை உங்கள் ஸ்திதியை நிலையானதாகவும் ஸ்திரமானதாகவும் ஆகுமாறு செய்யும். அத்தகைய நிலையான, ஸ்திரமான ஸ்திதியை உடைய ஆத்மாக்கள் மாத்திரமே மேன்மையானவர்கள்

சுலோகம்:
உங்களில் குப்பைகள் அனைத்தையும் அமிழ்த்தி, இரத்தினங்களைக் கொடுப்பதே ஒரு மாஸ்டர் கடல் ஆகுவதாகும்.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தந்தை பிரம்மா சந்தோஷத்திற்குரிய சௌகரியங்கள் எதனிலுமோ, தனது ஓய்விலோ அல்லது வேறு ஏதாவது ஆதாரங்களையோ பற்றிக் கொண்டிருக்கவில்லை. அவர் எப்பொழுதும் சரீரத்தின் விழிப்புணர்விற்கு அப்பால் இருந்தார், அதாவது, அவர் எப்பொழுதும் சுவாலைக்கான அன்பில் அமிழ்ந்திருந்தார். அதேபோன்று, தந்தையைப் பின்பற்றுங்கள். சுவாலை ஒளியின் வடிவம் ஆதலால், அது ஒளியினதும் சக்தியினதும் வடிவமாகும், அதேவிதமாக, சுவாலையைப் போன்று, நீங்களும் ஒளியினதும் சக்தியினதும் ரூபம் ஆகவேண்டும்.