20.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இங்கு நீங்கள் இல்லறப் பாதையின் அன்பைப் பெறுகின்றீர்கள். ஏனெனில் தந்தை தனது இதயத்திலிருந்து எனது குழந்தைகளே எனக் கூறுகின்றார். தந்தையிடமிருந்து நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். சரீரதரரியான ஒரு குருவினால் இந்த அன்பைக் கொடுக்க முடியாது.
கேள்வி:
இந்த ஞானத்தைக் கிரகித்துள்ள கூர்மையான புத்தியைக் கொண்ட குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?
பதில்:
பிறருக்கு ஞானத்தைக் கூறுவதில் அவர்கள் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய புத்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களை நோக்கி அலைந்து திரியாது. கூர்மையான புத்தியைக் கொண்டவர்கள் கற்கும்போது ஒருபோதும் கொட்டாவி விடுவதில்லை. அவர்கள் பாடசாலையில் ஒருபோதும் தங்கள் கண்களை மூடியவாறு, அமர்ந்திருப்பதில்லை. பித்துப்பிடித்தவர்கள் போன்று அமர்ந்திருக்கும் குழந்தைகளாலும், இங்கும் அங்கும் அலைந்து திரியும் புத்தியை கொண்டிருப்பவர்களாலும் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியாது. தந்தையை நினைவு செய்வதற்கு அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.ஓம் சாந்தி.
இது தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சந்திப்பாகும். இது ஒரு குருவும் அவருடைய மாணவர்களும் அல்லது சீடர்களும் சந்திக்கும் ஒன்றுகூடல் அல்ல. அக் குருமார், அவர்களை தனது சீடர்களாகவோ அல்லது மாணவர்களாகவோ பார்க்கின்றார்கள். தம்மை விட அவர்களை அக்குருமார் குறைவாகவே பார்க்கின்றார்கள். அத்தகைய ஒரு பார்வையை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஆத்மாவைப் பார்ப்பதில்லை. அவர்கள் சரீரத்தை மாத்திரம் பார்ப்பதால், அவர்களுடைய சீடர்களும் சரீர உணர்விலேயே அமர்ந்திருப்பார்கள். சீடர்கள், அவரைத் தங்கள் குருவாகவே கருதுவார்கள். அவர்களுடைய பார்வை: அவர் எங்கள் குரு ஆவார். அவர்கள் தங்கள் குருவின் மீது மரியாதையைக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு பெருமளவு வேறுபாடு உள்ளது. இங்கு, தந்தை குழந்தைகளின் மீது மரியாதையைக் கொண்டிருக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு தான் கற்பிக்கவேண்டும் என்று அவருக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களுக்கு உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதையும், எல்லையற்ற வரலாறு, புவியியலைப் பற்றியும் அவர் விளங்கப்படுத்த வேண்டும். அந்தக் குருமாரின் இதயத்தில் (தமது சீடர்களின் மீது) அவர்கள் தனது குழந்தைகள் போன்றதொரு அன்பைக் கொண்டிருப்பதில்லை. தந்தை குழந்தைகளின் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறார். குழந்தைகளும், தந்தையின் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறார்கள். பாபா உங்களுக்கு உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கூறுகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மக்கள் எதனைக் கற்பிக்கிறார்கள்? அவர்கள் அரைக் கல்பமாக சமய நூல்கள் போன்றவற்றைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பக்தி மார்க்கத்தில் பௌதீகமான சடங்குகளைச் செய்வதுடன், காயத்ரி மந்திரம் போன்றவற்றையும் கற்பிக்கிறார்கள். தந்தை வந்துள்ளார், அவர் தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். நாங்கள் தந்தையை சற்றேனும் அறிந்திருக்கவில்லை. நாங்கள் அவரைச் சர்வவியாபி என்று அழைத்தோம். ‘கடவுள் எங்கே இருக்கிறார்?’ என்று எப்பொழுது நீங்கள் அவர்களைக் கேட்டாலும் அவர் சர்வவியாபி என்று அவர்கள் உடன் பதிலளிப்பார்கள். மக்கள் உங்களிடம் வந்து, “நீங்கள் இங்கு எதனைக் கற்பிக்கின்றீர்கள்?” என்று அவர்கள் உங்களைக் கேட்கும்போது அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் இராஜயோகத்தைக் கற்பிக்கின்றோம், அதன் மூலம் நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகின்றீர்கள் அதாவது அரசர்கள் ஆகுகின்றீர்கள். மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆக்குகின்ற கற்பித்தலைக் கொடுக்கிறோம் என்று கூறுகின்ற ஆன்மீக ஒன்றுகூடல் வேறு எதுவுமில்லை. தேவர்கள் சத்தியயுகத்தில் இருக்கின்றார்கள். மனிதர்கள் கலியுகத்தில் இருக்கின்றார்கள். இப்பொழுது நாங்கள் உலக சக்கரத்தின் இரகசியத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறோம். இதன் மூலம் நீங்கள் பூகோளத்தை ஆள்பவர்கள் ஆகுவீர்கள். தூய்மையாகுவதற்கான மிகச்சிறந்த வழிமுறையொன்றையும் நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம். அவ்வாறான வழிமுறையை வேறு எவராலும் உங்களுக்குக் கற்பிக்க முடியாது. இது இலகு இராஜ யோகமாகும். தந்தையே தூய்மைப்படுத்துபவர். அவர் சர்வ சக்திவான் என்பதால், அவரை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். ஏனெனில் யோகம் அக்கினியாகும். ஆகவே இங்கு உங்களுக்குப் புதிய விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன. இது ஞானப் பாதையாகும். தந்தை ஒருவர் மாத்திரமே ஞானக் கடலாவார். ஞானமும், பக்தியும் வெவ்வேறானவை. தந்தை உங்களுக்கு ஞானத்தைக் கற்பிப்பதற்காக வரவேண்டும், ஏனெனில் அவர் மாத்திரமே ஞானக் கடலாவார். அவர் தானே வந்து, உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார்: அனைவரதும் தந்தை நானே. நான் பிரம்மா மூலம் முழு உலகத்தையும் தூய்மையாக்குகிறேன். சத்தியயுகமே தூய உலகமாகும். கலியுகம் தூய்மையற்ற உலகமாகும். ஆகவே இது கலியுகத்தின் முடிவினதும், சத்தியயுகத்தின் ஆரம்பத்தினதும் சங்கமம் ஆகும். இதுவே லீப் யுகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த யுகத்தில் நாங்கள் பாய்ந்து செல்லுகிறோம். எங்கு பாய்கிறோம்? நாங்கள் பழைய உலகிலிருந்து, புதிய உலகிற்குப் பாய்கின்றோம். அந்த மக்கள் ஏணியில் படிப்படியாக இறங்கி வருகிறார்கள். இங்கு நாங்கள் அழுக்கான உலகிலிருந்து, புதிய உலகிற்குப் பாய்ச்சல் எடுக்கின்றோம். நாங்கள் நேரடியாக மேலே செல்கிறோம். நாங்கள் பழைய உலகை விட்டுப் புதிய உலகிற்குச் செல்கிறோம். இது ஒரு எல்லையற்ற விடயமாகும். எல்லையற்ற பழைய உலகில் பல மக்கள் இருக்கிறார்கள். சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்ற புதிய உலகில் மிகக் குறைவான மனிதர்களே இருக்கின்றார்கள். அங்குள்ள அனைவரும் தூய்மையாக இருக்கின்றார்கள். கலியுகத்தில் அனைவரும் தூய்மையற்றவர்கள். இராவணன் உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குகிறான். நாங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறோம்: இப்பொழுது நீங்கள் இராவணனின் இராச்சியத்தில் இருக்கிறீர்கள். அதாவது, பழைய உலகில் இருக்கிறீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட இராம இராச்சியத்தில் இருந்தீர்கள். நாங்கள் சக்கரத்தைச் சுற்றி, 84 பிறவிகளை எடுத்து, இப்பொழுது கீழே இறங்கிவிட்டோம் என்று எங்களால் உங்களுக்குக் கூற முடியும். மிகச் சிறந்தவர்களும், விவேகமானவர்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள். இது ஒருவரின் புத்தியில் பதியாத போது, அவர் பித்துப்பிடித்தவர் போல் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர்கள் கவனமாகச் செவிமடுக்க மாட்டார்கள். ‘நீங்கள் பித்துப்பிடித்தவர் போலுள்ளீர்கள்’ என்று கூறப்படுகின்றது. சந்நியாசிகள் தங்கள் கதைகளைக் கூறிக்கொண்டு இருக்கும்போது, எவராவது தூங்கினால் அல்லது அவரது கவனம் வேறெங்காவது சென்றால், அந்த நபரிடம் திடீரென ஒரு கேள்வியைக் கேட்பார்கள்: நான் என்ன கூறினேன்?; எவருமே பித்துப்பிடித்தவர்கள் போன்று அமர்ந்திருக்காததை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தொடர்ந்தும் தந்தை அனைவரையும் பார்க்கின்றார். மிகச் சிறந்த புத்திசாலிக் குழந்தைகள் ஒருபோதும் கற்கும்போது கொட்டாவி விடுவதில்லை. ஒரு பாடசாலையில் எவரும் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதில்லை. அவர்கள் ஞானத்தை சிறிதளவேனும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்குத் தந்தையை நினைவு செய்வது மிகவும் கஷ்டமாகும். அவர்களின் பாவங்கள் எவ்வாறு அழிக்கப்படும்? கூர்மையான புத்தியைக் கொண்டவர்கள் அனைத்தையும் மிக நன்றாகக் கிரகித்து, ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். ஒருவரிடம் ஞானம் இல்லையென்றால், அவர்களுடைய புத்தி நண்பர்கள், உறவினர்களை நோக்கி அலைந்து திரியும். இங்கு தந்தை கூறுகிறார்: நீங்கள் ஏனையவை அனைத்தையும் மறந்துவிட வேண்டும். இறுதியில் எதுவுமே நினைவு செய்யப்படக்கூடாது. பிரம்மதத்துவத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட சந்நியாசிகள் போன்றவர்களை பாபா கண்டிருக்கிறார். அவர்கள் அதிகாலையில் அமர்ந்திருந்து பிரம்ம தத்துவத்தை நினைவு செய்தவாறே, தங்கள் சரீரத்தை விடுகின்றார்கள். அவர்களது மௌனத்தில் அதிகளவு தாக்கமுள்ளது. எவ்வாறாயினும் அவர்களால் பிரம்ம தத்துவத்தினுள் இரண்டறக் கலக்க முடியாது. எவ்வாறாயினும், அவர்கள் ஒரு தாயின் கருப்பையின் மூலமே பிறக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: உண்மையில் கிருஷ்ணரே மகாத்மா என அழைக்கப்படுகின்றார், மக்கள் புரிந்து கொள்ளாததால் அவ்வாறு கூறுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஸ்ரீகிருஷ்ணர் முற்றாக விகாரமற்றவர். அவர் ஒரு சந்நியாசி என்று அழைக்கப்படுவதில்லை. ஆனால் அவர் தேவரென்று அழைக்கப்படுகிறார். அவர் சந்நியாசி என்று அழைக்கப்பட்டாலும் அல்லது தேவரென்று அழைக்கப்பட்டாலும் அது அர்த்தமுடையதே ஆகும். அவர் எவ்வாறு ஒரு தேவர் ஆகினார்? அவர் சந்நியாசியிலிருந்து, தேவர் ஆகினார். அவர் எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருந்ததால், பின்னர் அவர் புதிய உலகிற்குச் சென்றார். அந்த மக்கள் எல்லைக்குட்பட்ட துறவறத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் எல்லையற்றதற்குச் செல்ல முடியாது. அவர்கள் விகாரத்தின் மூலம், எல்லைக்குட்பட்டதற்குள் மறுபிறப்பு எடுக்க வேண்டும். அவர்களால் எல்லையற்றதன் அதிபதிகளாக முடியாது. அவர்களால் ஓர் அரசனாகவோ அல்லது ஓர் அரசியாகவோ ஆக முடியாது, ஏனெனில் அவர்களின் தர்மம் வேறாகும். துறவறதர்மம், தேவதர்மம் அல்ல. தந்தை கூறுகின்றார்: நான் அதர்மத்தை அழித்து, தேவதர்மத்தை ஸ்தாபிக்கின்றேன். விகாரமும் அதர்மமே. இதனாலேயே தந்தை கூறுகிறார்: நான் அதர்மத்தை அழித்து, தேவ தர்மத்தை ஸ்தாபிக்கிறேன். விகாரமும் அதர்மமாகும். இதனாலேயே தந்தை கூறுகிறார்: அவை அனைத்தையும் அழித்து, ஆதியும், அநாதியுமான ஒரேயொரு தேவதர்மத்தை ஸ்தாபிப்பதற்காக நான் வரவேண்டும். பாரதத்தில் சத்தியயுகம் இருந்தபோது, ஒரேயொரு தர்மமே இருந்தது. பின்னர் இந்த தர்மம், அதர்மமாகிவிட்டது. இப்பொழுது நீங்கள் ஆதியும், அநாதியுமான தேவ தர்மத்தை மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கிறீர்கள். ஒவ்வொருவரும் எவ்வளவுக்கு அதிகமாக முயற்சி செய்கின்றார்களோ, அதற்கேற்பவே, அவர்கள் பெறும் அந்தஸ்தும் உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன், வீட்டில் வாழலாம். ஆனால், அவ்வாறு வாழும்போது, நடந்து உலாவித் திரியும்போதெல்லாம் இயன்றளவு இதனை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். பக்தர்கள் அதிகாலையில் எழுந்து, ஏகாந்தத்தில் இருந்தவாறு, உருத்திரமாலையை உருட்டுகின்றார்கள். நீங்கள் முழு நாளிற்கான கணக்கை வைத்திருக்கிறீர்கள்: இந்த நேரத்தில் நான் இந்தளவு நினைவு செய்தேன். மொத்தமாக, நாள் முழுவதும் நான் இவ்வளவு நேரம் நினைவு செய்தேன் என்று நீங்கள் கணக்கிடுவீர்கள். அவர்கள் உண்மையான பக்தர்களாக இல்லாவிட்டாலும், அந்த மக்கள் காலையில் எழுந்து, உருத்திரமாலையை உருட்டுகின்றார்கள். சிலருடைய புத்தி தொடர்ந்தும் வெளியே அனைத்து இடங்களிலும் அலைந்து திரியும். பக்தி செய்வதால் எவ்வித நன்மையுமில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இது ஞானமாகும். இதன் மூலம் அதிகளவு நன்மையுள்ளது. இப்போது இது உங்களுடைய மேலேறும் ஸ்திதியாகும். தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகிறார்: மன்மனாபவ! இந்த வார்த்தைகளும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் எவராலும் இதன் அர்த்தத்தை உங்களுக்குக் கூற முடியாது. உங்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று எவரும் தெரிந்திருக்க மாட்டார்கள். உண்மையில் அதன் அர்த்தம் எழுதப்பட்டுள்ளது: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். அனைத்து சரீர சம்பந்தமான சமயங்களையும் துறந்து, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இவை கடவுளின் வாக்கியங்களாகும். எவ்வாறாயினும், அவர்களின் புத்தியைப் பொறுத்தவரை, கிருஷ்ணரே கடவுளாவார். அவர் மறுபிறவி எடுக்கும் சரீரதாரியாவார். எவ்வாறு அவரைக் கடவுளென அழைக்க முடியும்? ஆகவே சந்நியாசி போன்றவர்கள் எவரும் தந்தையினதும், குழந்தையினதும் காட்சியைக் காண மாட்டார்கள். காந்திஜியை பாபுஜி (தந்தை) என்று அழைத்தாலும், அது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான உறவுமுறை என்று நீங்கள் கூற மாட்டீர்கள். அவர் ஒரு சரீரதாரியாவார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும் என்று உங்களுக்கு விளங்கப்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஒருவரில் அமர்ந்திருக்கும் தந்தையே எல்லையற்ற பாபுஜி (தந்தை) ஆவார். நீங்கள் லௌகீகத் தந்தை, பரலோகத் தந்தை ஆகிய இருவரிடமிருந்தும் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் பாபுஜியிடமிருந்து எதனையும் பெறவில்லை. நல்லது. பாரதம் சுதந்திரத்தைப் பெற்றது. ஆனால் அதனை ஓர் ஆஸ்தி என்று கூற முடியாது. அதனால் சந்தோஷம் கிடைக்க வேண்டும். இரண்டு ஆஸ்திகள் உள்ளன. ஒன்று எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்தும். மற்றையது எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்துமாகும். நீங்கள் பிரம்மாவிடமிருந்து ஆஸ்தியைப பெறுவதில்லை. அனைத்து மனிதர்களினதும் தந்தை அவரே என்றாலும், அவர் முப்பாட்டனார் என்றே அழைக்கப்படுகிறார். அவர் தானே கூறுகிறார்: நீங்கள் என்னிடமிருந்து எந்த ஆஸ்தியையும் பெறுவதில்லை. அவரிடமிருந்தும் நீங்கள் எந்த ஆஸ்தியையும் பெற முடியாது என்று இவரே கூறவதால், உங்களால் அந்த பாபுஜியிடமிருந்து எதனைப் பெற முடியும்? எதுவும் இல்லை! பிரித்தானியர்கள் விட்டுச் சென்று விட்டார்கள். இப்போது என்ன இருக்கிறது? உண்ணா விரதங்கள்! மறியல் போராட்டங்களும், வேலை நிறுத்தங்கள் போன்றவையும் தொடர்ந்து இடம்பெறுகின்றன. தொடர்ந்தும் அதிகளவு வன்செயல்கள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கு எவரிலும் பயமில்லை. அவர்கள் உயர் அதிகரிகளைக் கூடக் கொலை செய்கின்றார்கள். சந்தோஷததிற்குப் பதிலாக, இன்னும் அதிகளவு துன்பமே உள்ளது. இங்கு மாத்திரமே எல்லையற்ற விடயம் உள்ளது. தந்தை கூறுகிறார்: அனைத்திற்கும் முதலில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள்: நான் ஓர் ஆத்மா, சரீரமல்ல. தந்தை என்னைத் தத்தெடுத்திருக்கிறார். நான் தத்தெடுக்கப்பட்ட குழந்தையாவேன். ஞானக்கடலான தந்தை வந்து, உலக சக்கரத்தின் இரகசியத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப் பட்டுள்ளது. வேறு எவராலும் இவற்றை விளங்கப்படுத்த முடியாது. தந்தை கூறுகிறார்: உங்கள் சரீரத்தையும், சகல சரீர சம்பந்தமான சமயங்களையும் மறந்துவிடுங்கள். சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் நிச்சயமாக சதோபிரதான் ஆகவேண்டும். பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்பட்டுவிடும் என்பது உங்களுக்கும் தெரியும். புதிய உலகில் மிகச் சிலரே இருக்கிறார்கள். மில்லியன் கணக்கான ஆத்மாக்களுக்கும், 900,000 மாத்திரமேயுள்ள ஆத்மாக்களுக்குமிடையே அதிகளவு வித்தியாசம் உள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் எங்கே செல்வார்கள்? ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் மேலே இருந்தோம் என்பது இப்போது உங்கள் புத்;தியில் உள்ளது. பின்னர் நாங்கள் எங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கு வந்தோம். ஓர் ஆத்மா நடிகரென அழைக்கப்படுகிறார். ஆத்மா, இந்த சரீரம் மூலம் நடிக்கிறார். ஆத்மாக்களுக்கு அவரின் அங்கங்கள் தேவை. ஆத்மா மிகவும் சிறியவர். 8.4 மில்லியன் பிறவிகள் இல்லை. ஒவ்வொருவரும் 8.4 மில்லியன் பிறப்புகளை எடுப்பாரானால், அந்தப் பாகம் எவ்வாறு மீள இடம்பெற முடியும்? நீங்கள் எதனையும் ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டீர்கள். அது உங்கள் ஞாபகத்திற்கு அப்பாலானதாகவே இருக்கும். உங்களால் 84 பிறவிகளைக்கூட ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. நீங்கள் அவற்றை மறந்துவிடுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தந்தையை நினைவு செய்வதுடன், நிச்சயமாகத் தூய்மையாகவும் வேண்டும். உங்களுடைய பாவங்கள் இந்த யோகத்தீயின் மூலம் அழிந்துவிடும். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து, எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்ற நம்பிக்கையும் உங்களுக்கு உள்ளது. நீங்கள் சுவர்க்க வாசிகள் ஆகுவதற்கு, இப்போது தந்தை கூறியிருக்கிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். ஏனெனில் நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். நீங்கள் தந்தையைக் கூவி அழைத்தீர்கள். ஆகவே உங்களைத் தூய்மையாக்குவதற்காகத் தந்தை வந்திருக்கிறார். தேவர்கள் தூய்மையானவர்கள். ஆனால் மனிதர்கள் தூய்மையற்றவர்கள். நீங்கள் தூய்மையாகி, அமைதி தாமத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா அல்லது சந்தோஷ தாமத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா? சந்நியாசிகள், சந்தோஷம் காகத்தின் எச்சம் போன்றது, ஆகவே தங்களுக்கு அமைதி வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆகவே அவர்களால் ஒருபோதும் சத்திய யுகத்திற்குச் செல்ல முடியாது. சத்திய யுகத்தில் இல்லறப் பாதைக்கான தர்மம் இருந்தது. தேவர்கள் விகாரமற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் மறுபிறவி எடுத்து, பின்னர் தூய்மையற்றவர்களாக ஆகினார்கள். தந்தை இப்போது கூறுகிறார்: நீங்கள் விகாரமற்றவர்களாக ஆகவேண்டும். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல விரும்பினால், என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் ஒரு தூய தர்மாத்மா ஆகுவீர்கள். பின்னர் நீங்கள் அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் செல்வீர்கள். அங்கு அமைதியும், சந்தோஷமும் இருந்தன. இப்போது துன்ப பூமியாகும். தந்தை வந்து, மீண்டும் ஒருமுறை சந்தோஷதாமத்தை ஸ்தாபித்து, துன்ப பூமியை அழிக்கிறார். விக்கிரகங்களும் உங்கள் முன்னால் உள்ளன. அவர்களைக் கேளுங்கள்: இப்போது நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? இப்போது கலியுகத்தின் முடிவாகும். விநாசம் முன்னால் உள்ளது. ஒரு சிறிய துண்டு மாத்திரமே எஞ்சியிருக்கும். அங்கு பல கண்டங்கள் இருக்கமாட்டாது. தந்தை மாத்திரமே இங்கு அமர்ந்திருந்து, உலகின் வரலாற்றையும், புவியியலையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது ஒரு பாடசாலையாகும். கடவுள் பேசுகிறார்: அனைத்திற்கும் முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கவேண்டும். இப்பொழுது நீங்கள் கலியுகத்தலிருந்து, சத்தியயுகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு சந்தோஷமன்றி வேறு எதுவுமில்லை. ஒருவரை நினைவு செய்வது கலப்படமற்று நினைவு செயதலாகும். நீங்கள் உங்கள் சரீரத்தையும் மறக்க வேண்டும். நீங்கள் அமைதி தாமத்திலிருந்து வந்தீர்கள். நீங்கள் அமைதி தாமத்திற்குத் திரும்பவேண்டும். தூய்மையற்றவர்கள் எவரும் அங்கு செல்ல முடியாது. தந்தையை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் தூய்iயாகி, பின்னர் முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் அமர்ந்திருந்து, இதனை மிகத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். முன்னர் உங்களிடம் இந்தப் படங்கள் அனைத்தும் இருக்கவில்லை. அனைத்தும், படங்களின்றி, இரத்தினச்சுருக்கமாக உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டன. இந்தப் பாடசாலையில் நீங்கள் மனிதர்களிலிருந்து, தேவர்களாக மாறவேண்டும். இது புதிய உலகிற்கான ஞானமாகும். தந்தை மாத்திரமே இதனைத் தருகிறார். தந்தையின் பார்வை குழந்தைகளாகிய உங்கள் மேலுள்ளது. அவர் ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கிறார். எல்லையற்ற தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்று நீங்களும் விளங்கப்படுத்த வேண்டும். அவருடைய பெயர் சிவபாபாவாகும். ‘எல்லையற்ற பாபா’ என்று நீங்கள் கூறும்போது, பல பாபாக்கள் இருப்பதால், அவர்கள் தடுமாறுகின்றார்கள். ஒரு மாநகர சபை மேயர் (மாநகர பிதா) கூட பாபா என்று அழைக்கப்படுகிறார். தந்தை கூறுகிறார்: நான் இவரில் பிரவேசிக்கிறேன். இருந்தபோதும் எனது பெயர் சிவன் என்பதேயாகும். நான் இந்த இரதத்தின் மூலம் உங்களுக்கு ஞானத்தைத் தருகிறேன். நான் இவரைத் தத்தெடுத்து, பிரஜாபிதா பிரம்மா என்று பெயரிட்டிருக்கிறேன். அவரும் என்னிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பழைய உலகிலிருந்து புதிய உலகிற்குப் பாய்ந்து செல்வதற்கான தருணம் இதுவாகும். ஆகவே பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருங்கள். அதனை உங்கள் புத்தியிலிருந்து அகற்றிவிடுங்கள்.2. கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். பாடசாலைகளில் மாணவர்கள் தங்கள் கண்களை முடியவாறு அமர்ந்திருப்பதில்லை. கல்வி கற்கும் நேரத்தில் உங்கள் புத்தி அங்கும், இங்கும் அலையாதவாறும், கொட்டாவி விடாது இருப்பதிலும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் செவிமடுப்பன எவையானாலும், தொடர்ந்து அவற்றைக் கிரகியுங்கள்.
ஆசீர்வாதம்:
நேரத்திற்கு ஏற்ப உங்களை சோதித்து, உங்களை மாற்றிக் கொள்வதால், சதா மேன்மையானதொரு வெற்றி ஆத்மா ஆகுவீர்களாக.
உண்மையான இராஜயோகிகள் ஒருபோதும் பாதகமான சூழ்நிலையினால் குழப்பமடைய மாட்டார்கள். எனவே, நேரத்திற்கு ஏற்ப, இவ்வாறாக உங்களைச் சோதியுங்கள். அவ்வாறு சோதித்த பின்னர் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களை சோதித்து மட்டுமே பார்ப்பீர்களாயின், நீங்கள் விரக்தியடைவதால், ~எனக்கு இந்த பலவீனம் உள்ளது, அதனை சரிபடுத்த முடியுமா அல்லது முடியாதா| என நினைப்பீர்கள். ஆகையால், உங்களை சோதித்து பார்த்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அனைத்தையும் நேரத்திற்கு ஏற்ப செய்பவர்கள் சதா வெற்றியாளர்கள் ஆவார்கள். எனவே சதா வெற்றியாளரான மேன்மையானதொரு ஆத்மாவாகி, உங்கள் தீவிர முயற்சிகளினால் முதல் இலக்க ஆத்மா ஆகுங்கள்.சுலோகம்:
உங்கள் மனதையும் புத்தியையும் கட்டுப்படுத்தும் பயிற்சியை செய்தால், உங்களால் ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆக முடியும்.