22.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அழிவற்ற இரத்தினங்கள் உங்களை அரசர்களாக்குகின்றன. இது ஓர் எல்லையற்ற பாடசாலையாகும். நீங்கள் கற்று, உங்கள் புத்தியை ஞான இரத்தினங்களால் நிரப்பி ஏனையோருக்கும் கற்பியுங்கள்.

கேள்வி:
எக்குழந்தைகள் அனைவராலும் நேசிக்கப்படுகின்றனர்? உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக் கொள்வதற்கு எத்தகைய முயற்சி அவசியமானது?

8பதில்:
தங்களுடைய புத்தியை நிரப்பி, பலருக்கும் தானம் செய்கின்ற குழந்தைகள் அனைவராலும் நேசிக்கப்படுகின்றனர். உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக்கொள்வதற்கு, நீங்கள் பலரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறவேண்டும். இதில் செல்வம் என்ற கேள்விக்கே இடமில்லை. எனினும், நீங்கள் தொடர்ந்தும் ஞானச் செல்வத்தால் பலருக்கு நன்மை செய்ய வேண்டும். சந்தோஷமான, யோகிக் குழந்தைகள் மாத்திரமே தந்தையின் பெயரைப் போற்றச் செய்வார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்தவாறு ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முன்னர், நீங்கள் இவை எதனையுமே அறிந்திருக்கவில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப் படுத்துகின்றார். நாடகத்தின்படி, அவர் இந்நேரத்தில் உங்களுக்கு விளங்கப்படுத்துவது சரியானதாகவே உள்ளது. வேறு எவராலுமே உங்களுக்கு இதனை விளங்கப்படுத்த முடியாது. இப்பொழுது நாங்கள் வீடு திரும்ப வேண்டும். தூய்மையற்றவர்கள் வீடு திரும்ப முடியாது. நீங்கள் இந்நேரத்திலேயே இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஒரேயொரு தந்தையே அதனை உங்களுக்குக் கொடுக்கின்றார். முதலில், நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் பாபாவைக் கூவியழைத்த போதிலும், எதனையுமே நீங்கள் அறிந்திருக்கவில்லை. நேரம் வந்ததும், சடுதியாக பாபா இங்கு வந்துவிட்டார். அவர் இப்பொழுது தொடர்ந்தும் புதிய விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே நாங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக ஆகவேண்டும். இல்லையெனில், நீங்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடுவதுடன், உங்களது அந்தஸ்தும் அழிக்கப்படும். இங்கு, அரசர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் காணப்படும் அதிகளவு வித்தியாசத்தைப் போன்றே, அங்கும் அரசர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் வித்தியாசம் காணப்படும். அனைத்தும் உங்களது முயற்சியிலேயே தங்கியுள்ளது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நீங்களும்கூட தூய்மையற்றவர்களாகவே இருந்தீர்கள். இதனாலேயே நீங்கள் கூவியழைத்தீர்கள். இவையனைத்தும் இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. அறியாமைப் பாதையில் இது உங்களது புத்தியில் இருக்கவில்லை. தந்தை கூறுகின்றார்: தமோபிரதானாகியுள்ள ஆத்மாக்கள் சதோபிரதான் ஆகவேண்டும். இப்பொழுது நீங்கள் எவ்வாறு சதோபிரதான் ஆகலாம் என்பதை ஏணிப் படத்தைக் கொண்டு விளங்கப்படுத்தலாம். இதனுடன் கூடவே நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். இது ஓர் எல்லையற்ற பாடசாலையாகும். பாடசாலையில், நன்று, மிகநன்று, மிக மிக நன்று என்பதற்கான பதிவேட்டை அவர்கள் வைத்திருக்கின்றார்கள். சேவாதாரிக் குழந்தைகள் மிக இனிமையானவர்கள். அவர்களது பதிவேடு சிறந்ததாகும். பதிவேடு சிறந்ததாக இல்லையெனில், உற்சாகம் இருக்காது. அனைத்தும் கல்வியிலும், யோகத்திலும், தெய்வீகக் குணங்களிலுமே தங்கியுள்ளது. எல்லையற்ற தந்தையே இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முன்னர் நாங்கள் சூத்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம், இப்பொழுது நாங்கள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளோம். நாங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகிய பிராமணர்கள். பல குழந்தைகள் இதனை மறந்துவிடுகின்றனர். நீங்கள் தந்தையை நினைவு செய்வதால், பிரம்மாவையும் நீங்கள் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதையும் உங்களிடம் இருக்கவேண்டும். இதனை நீங்கள் மறக்கும் போது, நீங்கள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள், பின்னர் தேவர் குலத்தைச் சேர்ந்தவர்களாகுவீர்கள் என்ற போதை உங்களுக்கு எழமாட்டாது. பிராமண குலத்தை உருவாக்கியவர் யார்? நான் பிரம்மா மூலமாக உங்களை பிராமண குலத்திற்குரியவர்கள் ஆக்குகின்றேன். இது பிராமண வம்சமல்ல. இது ஒரு சிறிய குடும்பமாகும். இப்பொழுது நீங்கள் உங்களை பிராமணர்களாகக் கருதுவீர்களாயின், பின்னர் நீங்கள் தேவர்களாகுவீர்கள். நீங்கள் உங்களது வியாபாரத்தில் ஈடுபடும்போது, ஏனைய அனைத்தையும் மறந்துவிடுகின்றீர்கள். நீங்கள் ஒரு பிராமணர் என்பதைக் கூட மறந்து விடுகின்றீர்கள். உங்களது வியாபாரத்திலிருந்து நீங்கள் விடுபட்டவுடனேயே முயற்சி செய்வதில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சிலர் தங்களது வியாபாரத்தில் அதிகூடிய கவனம் செலுத்தவேண்டியுள்ளது. உங்களது வேலை முடிவடைந்தவுடன் உங்களில் கவனம் செலுத்துங்கள். நினைவில் அமர்ந்திருங்கள். உங்களிடம் மிகச் சிறந்த பட்ஜ் உள்ளது. அது இலக்ஷ்மி, நாராயணனதும், திரிமூர்த்தியினதும் படத்தைக் கொண்டிருக்கின்றது. பாபாவே எங்களை இவ்வாறு ஆக்குகின்றார். அதுவே இதுவாகும். இது மன்மனாபவ ஆகும். சிலர் இப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர், ஏனையவர்கள் அவ்வாறில்லை. பக்தி இப்பொழுது முடிவுக்கு வந்துவிட்டது. நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவு செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தை இப்பொழுது எல்லையற்ற ஆஸ்தியை உங்களுக்கு வழங்குவதால் நீங்கள் சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். சிலர் அதிகளவு அன்பையும், சிலர் குறைந்தளவு அன்பையும் கொண்டுள்ளார்கள். இது மிக இலகுவானது. ‘மன்மனாபவ’ என்ற பதம் கீதையின் ஆரம்பத்திலும், முடிவிலும் பயன்படுத்தப்படுகின்றது. கீதையின் அதே அத்தியாயமே இடம்பெறுகின்றது. அவர்கள் அதில் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்திவிட்டார்கள். பக்தி மார்க்கத்து உதாரணங்கள் அனைத்தும் இந்நேரத்திற்குரியவையே ஆகும். பக்தி மார்க்கத்தில், சரீர உணர்வைத் துறந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள் என எவருமே கூறமாட்டார்கள். தந்தை தான் வந்தவுடனேயே இக்கற்பித்தல்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். உங்கள் மூலமாகவே தேவ தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். ஓர் இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. இதில் போர் போன்ற எந்தக் கேள்விக்கும் இடமில்லை. தந்தை உங்களுக்கு இப்பொழுது கற்பிக்கும் தூய்மையானது அரைக் கல்பத்திற்கு நிரந்தரமாக நிலைத்திருக்கும். அங்கே இராவண இராச்சியம் கிடையாது. நீங்கள் இப்பொழுது விகாரங்களை வெற்றிகொள்கின்றீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்தது போன்றே இப்பொழுதும் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். இப்பழைய உலகம் எங்களுக்காக முடிவடைய உள்ளது. நாடகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. அங்கே, தங்கத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. முன்னர் எது இருந்ததோ, அது மீண்டும் இருக்கும். இதில் குழப்பமடைவதற்கான கேள்வியே இல்லை. அவர்கள் மாயையினதும், மந்திரவாதியினதும் விளையாட்டைக் காண்பிக்கின்றார்கள். அவர் திரான்ஸில் தங்கக் கட்டிகளைப் பார்த்தார். நீங்களும் வைகுந்தத்தில் தங்க மாளிகைகளைப் பார்க்கின்றீர்கள். நீங்கள் அவ்விடத்திலுள்ளவற்றை இங்கு கொண்டுவர முடியாது. அவை வெறும் காட்சிகளேயாகும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் இவ்விடயங்களை அறிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நான் உங்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றேன். அங்கே நீங்கள் இல்லாது அமைதியற்ற நிலை காணப்படுகின்றது. அமைதியற்ற தன்மையை உணரும் காலம் வரும்பொழுது நான் இப்பொழுது கீழே இறங்க வேண்டும் என்பதை உணர ஆரம்பிக்கின்றேன். குழந்தைகள் சந்தோஷமற்றிருப்பதால், கூவியழைக்கின்றனர். நான் அவர்கள்மீது கருணை கொண்டிருப்பதால், அவர்களிடம் நான் செல்லவேண்டும் என நினைக்கின்றேன். நாடகத்தில் அந்த நேரம் வரும்போதே நான் இந்த எண்ணத்தைக் கொண்டிருப்பதுடன், நான் இப்பொழுது செல்லவேண்டும் எனவும் உணர்கின்றேன். அவர்கள் ஒரு நாடகத்தை நடித்து, அதில் விஷ்ணுவின் அவதாரத்தைக் காண்பிக்கின்றார்கள். எவ்வாறாயினும், உண்மையில் விஷ்ணுவின் அவதாரம் இடம்பெறுவதில்லை. நாளுக்கு நாள் மக்களின் புத்தி தொடர்ந்தும் சீரழிக்கப்படுகின்றது. அவர்கள் எதனையுமே புரிந்துகொள்வதில்லை. ஆத்மாக்கள் தூய்மையற்றவர்களாகிவிட்டனர். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, தூய்மையாகுங்கள், அப்பொழுதே இராம இராச்சியம் இருக்க முடியும். குழந்தைகளுக்கு இராமரைத் தெரியாது. அவர்கள் சிவனை வழிபடும்போது, அவர் இராமர் என அழைக்கப்படுவதில்லை. சிவபாபா எனக் கூறுவது சரியானதாகவே தோன்றுகின்றது. பக்தியில் எந்த ஆர்வமும்(iவெநசநளவ) கிடையாது. இப்பொழுது உங்களிடம் இந்த ஆர்வம் இருக்கின்றது. தந்தையே கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நான் உங்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றேன். பின்னர், ஆத்மாக்களாகிய நீங்கள் இயல்பாகவே அங்கிருந்து சந்தோஷதாமத்திற்குச் செல்வீர்கள். அங்கு, நான் உங்களது சகபாடியாக இருக்கமாட்டேன். உங்களது ஸ்திதிக்கேற்ப, ஆத்மாக்களாகிய நீங்கள் சென்று, மற்றைய சரீரங்களுக்குள், மற்றைய கர்ப்பத்தினுள் பிரவேசிப்பீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அரசமிலையில் மிதந்து வந்ததாக அவர்கள் காண்பிக்கின்றனர். கடல் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர் ஒரு கர்ப்பத்தில் மிகவும் சௌகரியமாக அமர்ந்திருக்கின்றார். பாபா கூறுகின்றார்: நான் ஒரு கர்ப்பத்தினுள் பிரவேசிப்பதில்லை. நான் ஒருவருக்குள் பிரவேசிக்கின்றேன். நான் ஒரு குழந்தையாக ஆகுவதில்லை. எனக்குப் பதிலாக அவர்கள் கிருஷ்ணரைக் குழந்தையாகக் கருதி, அவரினால் தங்களைக் களிப்பூட்டிக்கொள்கின்றார்கள். கிருஷ்ணரே ஞானத்தைக் கொடுத்ததாக அவர்கள் நம்புகின்றார்கள். இதனாலேயே அவர்கள் அவர்மீது பெருமளவு அன்பு கொண்டிருக்கின்றார்கள். நான் அனைவரையும் என்னுடன் அழைத்துச் சென்று, பின்னர் உங்களை அங்கு அனுப்புவேன். பின்னர், எனது பாகம் முடிவடைந்து விடும். அரைக் கல்பமாக எனக்கு எப்பாகமும் இருக்கவில்லை. பின்னர், பக்தி மார்க்கத்திலேயே எனது பாகம் ஆரம்பமாகின்றது. இதுவும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப் பட்டிருக்கின்றது. இப்பொழுது இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டு, அதனை விளங்கப்படுத்துவது குழந்தைகளாகிய உங்களுக்கு இலகுவாக இருக்கின்றது. நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது, சந்தோஷம் ஏற்படுவதுடன், உயர்ந்ததோர் அந்தஸ்தையும் நீங்கள் பெறுவீர்கள். மக்கள் அமர்ந்திருந்து இதனைச் செவிமடுக்கும்போது அவர்கள் இதனை விரும்புவார்கள். எனினும், அவர்கள் வெளியில் சென்றதுமே அதனை மறந்துவிடுகின்றார்கள். அவர்கள் சிறைப் பறவைகள் போன்றவர்கள். அவர்கள் ஏதோவொரு விஷமத்தனத்தைச் செய்துவிட்டு சிறைக்குச் சென்றவாறு இருக்கின்றார்கள். உங்களது நிலைப்பாடும் அது போன்றே இருக்கின்றது. நீங்கள் கருப்பையில் இருக்கும்போது ஒரு சத்தியம் செய்கின்றீர்கள். பின்னர், நீங்கள் செய்த சத்தியமெல்லாம் அங்கேயே நின்றுவிடுகின்றன. மக்கள் பாவம் செய்யாதிருப்பதற்காகவே அக்கதைகள் யாவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஓர் ஆத்மா தனது சம்ஸ்காரங்களைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறார்கள். இதனாலேயே சிலர் தங்களது குழந்தைப் பருவத்திலேயே பண்டிதராக ஆகிவிடுகின்றனர். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவை என மக்கள் நினைக்கின்றனர். எவ்வாறாயினும், அவை தாக்கத்திற்கு உட்படுவதில்லை. ஆத்மா நல்ல, தீய சம்ஸ்காரங்களைக் கொண்டு செல்வதாலேயே கடந்த கால செயல்களுக்கான கர்ம வேதனை இருக்கின்றது. இப்பொழுது நீங்கள் தூய சம்ஸ்காரங்களை உங்களுடன் கொண்டுசெல்கின்றீர்கள். நீங்கள் கற்று, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக் கொள்கின்றீர்கள். பாபா சகல ஆத்மாக்களையும் வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்கின்றார். வெகு சிலரே எஞ்சியிருப்பார்கள். அவர்கள் இறுதிவரை தொடர்ந்தும் கீழிறங்குவார்கள். இறுதியில் வரவேண்டியிருப்பவர்கள் மாத்திரமே இங்கு இருப்பார்கள். மாலை இருக்கின்றது. மாலை தொடர்ந்தும் வரிசைக்கிரமமாக உருவாக்கப்படும். ஏனைய அனைவரும் தொடர்ந்தும் இறுதிவரை சுவர்க்கத்திற்கு வருவார்கள். பாபா உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். சிலரால் அதைக் கிரகிக்க முடிகின்றது, ஏனையவர்களால் அது முடிவதில்லை. அவர்களது ஸ்திதி அத்தகையதாக இருப்பதால், அதற்கேற்பவே அவர்கள் ஓர் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் கருணை நிறைந்தவர்களாகவும், உபகாரிகளாகவும் ஆகவேண்டும். நாடகம் அவ்வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. எவருமே குற்றஞ்சாட்டப்பட முடியாது. நீங்கள் முன்னைய கல்பத்தில் கற்ற அளவிற்கே இப்பொழுதும் கற்பீர்கள். உங்களால் அதைவிடக் கூடுதலாகக் கற்க முடியாது. நீங்கள் எந்தளவிற்கு முயற்சி செய்யத் தூண்டப்பட்டாலும், அதில், எந்த வேறுபாடுமே இருக்க முடியாது. நீங்கள் இந்த ஞானத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது அதில் வேறுபாடு இருக்க முடியும். அது வரிசைக்கிரமமானது. அரசர்களுக்கும், ஏழைகளுக்குமிடையில் வேறுபாடு உள்ளது. இந்த அழிவற்ற ஞான இரத்தினங்கள் உங்களை அரசர்களாக்குகின்றது. நீங்கள் முயற்சி செய்யாவிட்டால், ஏழைகளாகவே ஆகுவீர்கள். இது ஓர் எல்லையற்ற பாடசாலையாகும். அங்கே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது தரப்பினர் இருப்பார்கள். பக்தியில், கல்வி என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கே, கீழிறங்குதலே நிகழ்கின்றது. இது மிக அழகானது. அவர்கள் இசைக் கருவிகளை இசைத்து, புகழ் பாடுகின்றார்கள். இங்கோ, நீங்கள் மௌனமாக இருக்க வேண்டும். நீங்கள் பக்திப் பாடல்கள் போன்ற எதனையும் உரத்துப் பாடுவதில்லை. நீங்கள் அரைக் கல்பமாக பக்தி செய்துவந்தீர்கள். பக்தியில் பெருமளவு பகட்டு உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்தப் பாகத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். சிலர் வீழ்ந்துவிடுகின்றார்கள், சிலர் மேலேறுகின்றார்கள். சிலரின் பாக்கியம் சிறந்தது, சிலர் குறைந்தளவு பாக்கியத்தையே கொண்டிருக்கின்றனர். பாபா உங்கள் ஒவ்வொருவரையும் அதேயளவு முயற்சி செய்யத் தூண்டுகின்றார். அதே கல்வி, அதே ஆசிரியர், ஏனைய அனைவரும் அதிபதிகள். முக்கியஸ்தர் ஒருவர் தனக்கு நேரமில்லையெனக் கூறினால், அவரிடம் கேளுங்கள்: “நாங்கள் உங்களது வீட்டிற்கு வந்து கற்பிக்க வேண்டுமா?” ஏனெனில், அவர்கள் தங்களுக்கான சொந்த அகங்காரத்தைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் ஒருவரைப் பிடித்துவிட்டீர்களாயின், அது மற்றவர்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஞானம் சிறந்ததென அவர் மற்றவர்களுக்குக் கூறினால், அவர் பிரம்ம குமாரிகளினால் நிறமூட்டப்பட்டுவிட்டதாகவும், இதனாலேயே இது சிறந்ததென அவர் கூறுகின்றார் எனவும் அவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் மிகச் சிறந்த யோக சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். ஞான வாளில் யோக சக்தி இருக்கவேண்டும். அவர்கள் சந்தோஷமாகவும் யோகிகளாகவும் இருந்தால், தந்தையின் பெயரைப் போற்றச் செய்வார்கள். அது வரிசைக்கிரமமானது. ஓர் இராச்சியம் உருவாக்கப்பட வேண்டும். தந்தை கூறுகின்றார்: கிரகிப்பதற்கு இது மிக இலகுவானது. நீங்கள் எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அவர்மீது அன்பு கொண்டிருப்பீர்கள். அந்தளவிற்கு அங்கு ஈர்ப்பு இருக்கும். ஊசி சுத்தமாக இருக்குமாயின், அது காந்தத்தை நோக்கிக் கவரப்படும். அது துருப்பிடித்திருந்தால், கவரப்படமாட்டாது. இங்கும் அவ்வாறேயாகும். நீங்கள் சுத்தமாகும்போது, முதலாம் இலக்கத்தைக் கோரிக் கொள்வீர்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலமாகவே துரு அகற்றப்படும். அது குருவின் மகத்துவம் எனப் பாடப்படுகின்றது. இதனாலேயே குரு பிரம்மா, குரு விஷ்ணு... எனக் கூறப்படுகின்றது. நிச்சயதார்த்தங்களை நடாத்துகின்ற குருமார் மனிதர்களேயாவர். நீங்கள் பிரம்மாவிற்கன்றி, சிவனுக்கே நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருக்கின்றீர்கள். எனவே, நீங்கள் சிவனையே நினைவு செய்ய வேண்டும். முகவரின் படத்திற்கான தேவையே இல்லை. நிச்சயதார்த்தம் ஒரு தடவை நிச்சயிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் நினைவு செய்கின்றனர். எனவே, இடையிலுள்ள இவர் ஒரு தரகைப் பெற்றுக்கொள்கின்றார். அவர் நிச்சயதார்த்தம் நிச்சயிக்கப்படுவதற்காகவும், அத்துடன் அவரைத் (சிவபாபா) தன்னில் பிரவேசிக்க அனுமதிப்பதற்காகவும் எதையோ பெறுகின்றார். அவர்(சிவபாபா) இச்சரீரத்தைக் கடனாக எடுப்பதால் அந்த ஈர்ப்பும் இருக்கின்றது. இதனாலேயே அவர் குழந்தைகளாகிய உங்களுக்கும் விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் எந்தளவிற்கு மற்றவர்களுக்கு நன்மை செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகளவு வெகுமதியைப் பெற்றுக் கொள்வீர்கள். இவை ஞான விடயங்களாகும். தொடர்ந்தும் மற்றவர்களுக்கு ஞானத்தைக் கொடுங்கள், நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். பணத்திற்கான தேவையே இல்லை. மம்மா எப்பணத்தையும் கொண்டிருக்காத போதிலும், அவர் பலருக்கு நன்மை செய்தார். நாடகத்தில் ஒவ்வொருவரும் தமக்கென ஒரு பாகத்தைக் கொண்டிருக்கின்றனர். செல்வந்தர் ஒருவர் செல்வத்தைக் கொடுத்தாலோ அல்லது நூதனசாலையொன்றைத் (மியூசியம்) திறந்தாலோ அவர் பலரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகின்றார். எனவே, அவர் செல்வந்தர் என்ற நல்ல அந்தஸ்தைப் பெறுகின்றார். செல்வந்த மக்கள் பல வேலைக்காரர்களையும், பணிப்பெண்களையும் வைத்திருப்பார்கள். செல்வந்தர்களிடம் பெருமளவு பணம் இருப்பதால், அவர்கள் அதனைக் கடனாகக் கொடுக்கின்றனர். செல்வந்தராக ஆகுவது நல்லது. ஏழைகளே பின்னர் செல்வந்தராகின்றனர். இப்பொழுது செல்வந்தர்கள் அந்தளவு தைரியத்தைக் கொண்டிருப்பதில்லை. இந்த பிரம்மா உடனடியாகவே அனைத்தையும் கொடுத்துவிட்டார். “அக்கரங்கள் எப்பொழுதும் கொடுத்துக் கொண்டேயிருக்கும்…” எனக் கூறப்படுகின்றது. பாபா அவரில் பிரவேசித்தார். எனவே அவர் அனைத்தையுமே கொடுத்துவிட்டார். நீங்கள் கராச்சியில் எவ்வாறு வாழ்ந்தீர்கள்? உங்களிடம் பெரிய வீடுகள், கார்கள், பஸ் போன்றவை அனைத்துமே இருந்தன. தந்தை இ;ப்பொழுது கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதையை நீங்கள் அதிகளவில் கொண்டிருக்க வேண்டும்! தந்தை உங்களுக்குப் பல பொக்கிஷங்களைக் கொடுக்கின்றார். நீங்கள் அவற்றைக் கிரகிப்பதில்லை. அவற்றை எடுப்பதற்குரிய சக்தியை நீங்கள் கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களது புத்தியை நிரப்பிக்கொள்ளுங்கள். அம்மக்கள் சங்கரிடம் சென்று கூறுகின்றார்கள்: எங்களது புத்தியை நிரப்பிவிடுங்கள்! பாபா இங்கு பலரது புத்தியை நிரப்புகின்றார். எனினும் அவர்கள் வெளியில் சென்றதுமே வெறுமையாகிவிடுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு மிக உயர்ந்த பொக்கிஷங்களைக் கொடுக்கின்றேன். நான் உங்களது புத்தியை ஞான இரத்தினங்களால் நிரப்புகின்றேன். எனினும், உங்களது புத்தி நிரப்பப்படுவதும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. பின்னர் நீங்கள் மற்றவர்களுக்குத் தானம் செய்வதால் அனைவராலும் நேசிக்கப்படுகின்றீர்கள். உங்களிடம் எதுவுமே இல்லையெனில், எதைத்தான் நீங்கள் கொடுப்பீர்கள்? நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைப் புரிந்துகொண்டு, மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், யோகத்திற்கு முயற்சி தேவைப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் யுத்த களத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் மாயையை வெற்றிகொள்வதற்குச் சண்டையிடுகின்றீர்கள். நீங்கள் தோல்வியடைவீர்களாயின், சந்திர வம்சத்தவராகவே ஆகுவீர்கள். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். குழந்தைகளே, நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும்: பாபா, நீங்கள் பெருமளவு ஆஸ்தியை எங்களுக்குக் கொடுக்கின்றீர்கள். இது உங்களது புத்தியில் நாள் முழுவதும் நிலைத்திருக்குமாயின், அமர்ந்திருக்கும்போதும், உலாவித் திரியும்போதும் உங்களால் அதனைக் கிரகிக்க முடியும். யோகமே பிரதான விடயமாகும். யோகத்தின் மூலமாகவே நீங்கள் உலகைத் தூய்மையாக்குகின்றீர்கள். பின்னர், நீங்கள் எடுத்துக்கொள்கின்ற ஞானத்திற்கேற்ப இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். பணம் முதலான அனைத்தும் சாம்பலாகிவிடும். இந்த அழியாத வருமானம் மாத்திரமே உங்களுடன் வரும். தாங்கள் பாபாவிடமிருந்து முழு ஆஸ்தியையும் பெறுவோம் என விவேகமான குழந்தைகள் கூறுவார்கள். சிலரின் பாக்கியத்தில் அது இல்லையெனில், அவர்கள் ஒரு சில சதங்கள் பெறுமதியான அந்தஸ்தையே பெற்றுக்கொள்வார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய கல்வியினதும், தெய்வீகக் குணங்களினதும் மிகச்சரியான பதிவேடொன்றை வைத்திருங்கள். மிக மிக இனிமையானவராகுங்கள். நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்கள் என்ற போதையைப் பேணுங்கள்.

2. அனைவரதும் அன்பையும், ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கு, உங்களுடைய புத்தியை ஞான இரத்தினங்களால் நிரப்பி, அவற்றை அனைவருக்கும் தானமாகக் கொடுங்கள். பலருக்கு நன்மை செய்வதற்கு ஒரு கருவியாகுங்கள்.

ஆசீர்வாதம்:
ஞானம் நிறைந்த ஆத்மாவாகவிருந்து, தந்தையின் மீது கொண்டிருக்கும் அன்பினால் உங்கள் பிரதான பலவீனத்தை அர்ப்பணிப்பவர் ஆகுவீர்களாக.

இன்று வரையிலும் கூட, உங்களில் பெரும்பான்மையினர், ஐந்து விகாரங்களின் வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பதை பாப்தாதா பார்க்கின்றார். ஞானம் நிறைந்த ஆத்மாக்களுமே சிலவேளைகளில் தமது தெய்வீகக் குணங்கள் மற்றும் சிறப்பியல்புகள் பற்றிய அகங்காரத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய பிரதானமான சொந்த பலவீனங்களையும் சம்ஸ்காரங்களையும் அறிவீர்கள். எனவே, தந்தையின் மீதுள்ள அன்பினால் அப் பலவீனத்தை அர்ப்பணிப்பதே அன்பிற்கான அத்தாட்சியாகும். அன்பான ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் தந்தையின் மீதுள்ள அன்பினால் தமது வீணான எண்ணங்களையுமே அர்ப்பணிக்கின்றார்கள்.

சுலோகம்:
சுயமரியாதை என்ற ஆசனத்தில் ஸ்திரமாக நிலைத்திருந்து, அனைவருக்கும் மரியாதை கொடுப்பவரே மரியாதைக்கு தகுதியான ஆத்மா ஆவார்.