23.02.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சிவஜெயந்தியன்று நீங்கள் அசரீரியான தந்தையின் சுயசரிதையை அதிகளவு ஆடம்பரத்துடன் அனைவருக்கும் கூறவேண்டும். இந்த சிவஜெயந்தி வைரத்தைப் போன்று பெறுமதியானது.
கேள்வி:
பிராமணர்களாகிய உங்களின் உண்மையான தீபாவளி எப்போது, அது எவ்வாறானது?
பதில்:
உண்மையில் சிவ ஜெயந்தியே உங்களுடைய உண்மையான தீபாவளியாகும். ஏனெனில் சிவபாபா வந்து, ஆத்மாக்களாகிய உங்களின் ஒளியை ஏற்றுகிறார். ஒவ்வொரு வீட்டினதும் விளக்கு ஏற்றப்படுகின்றது, அதாவது, ஒவ்வோர் ஆத்மாவினதும் ஒளி ஏற்றப்படுகிறது. அம் மக்கள் பௌதீகமான விளக்கை ஏற்றுகிறார்கள். ஆனால் உங்களுடைய உண்மையான விளக்கு தந்தை சிவன் வரும்போதே ஏற்றப்படுகிறது. இதனாலேயே நீங்கள் சிவ ஜெயந்தியை மிகவும்; ஆடம்பரத்துடன் கொண்டாடுகிறீர்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். எவ்வாறாயினும், பாரதத்தில் மக்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஒரேயொருவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது; பின்னர் அவர் சர்வவியாபி என்று அவர்கள் கூறுகிறார்கள்! அது அனைவரினதும் பிறந்தநாள் அல்ல. எப்பொழுது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது? ஒரு குழந்தை கர்ப்பத்திலிருந்து வெளியே வரும்போது. சிவஜெயந்தி நிச்சயமாகக் கொண்டாடப்படுகிறது. ஆரிய சமாஜத்தினரும் அதனைக் கொண்டாடுகிறார்கள். இப்பொழுது நீங்கள் 83வது ஜெயந்தியைக் கொண்டாடுகிறீர்கள். அதாவது அவர் பிறந்ததிலிருந்து இப்பொழுது 83 வருடங்களாகும். அனைவரும் பிறந்தநாட்களை நினைவில் வைத்திருக்கிறார்;கள்: இந்த, நாளில் இன்னார், கருப்பையிலிருந்து வெளியே வந்தார்; (பிறந்தார்கள்). நீங்கள் சிவபாபாவின் 83வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறீர்கள். அவர் அசரீரியானவர். எவ்வாறு அவரது பிறந்த நாள் இருக்க முடியும்? பல பிரபல்யமான மக்கள் அழைப்பிதழ்களைப் பெறுகிறார்கள். குறைந்தபட்சம் அவர்களில் ஒருவராவது கேட்க வேண்டும்: அவரது பிறந்தநாளை நீங்கள் எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்? அவர் எவ்வாறு, எப்பொழுது பிறந்தார்?, அவரது சரீரத்திற்கு என்ன பெயர் வழங்கப்பட்டது?;. எவ்வாறாயினும், கல்லுப் புத்தியைக் கொண்டிருக்கும் மக்கள் ஒருபொழுதும் இவ்வாறு கேட்பதில்லை. நீங்கள் அவர்களுக்குக் கூற முடியும்: அவர் அசரீரியானவர்;; அவரது பெயர் சிவன். நீங்களே சாலிகிராம் குழந்தைகள். இந்தச் சரீரத்திலும் சாலிகிராம் ஒன்றுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். சரீரத்திற்கே பெயர் வழங்கப்படுகிறது. அவரே பரமாத்மா சிவன் ஆவார். நீங்கள் அதிகளவு பகட்டுடனும் ஆடம்பரத்துடனும் நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். சிவபாபா, பிரம்ம பாபாவின் சரீரத்தினுள் பிரவேசிக்கும் நாளே அவரின் பிறந்தநாள் என்று நினைவுகூரப்படுகிறது என்பதை நாளுக்கு நாள் நீங்கள்; அதிக ஆடம்பரத்துடன் தொடர்ந்து விளங்கப்படுத்துகிறீர்கள். அதற்குத் திகதியோ, நேரமோ இல்லை. அவர் கூறுகிறார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறேன். எவ்வாறாயினும், அது எப்பொழுது என்றோ அல்லது எக்கணத்திலென்றோ அவர் உங்களுக்குக் கூறுவதில்லை. அவர் உங்களுக்குச் சரியான திகதியையும், நேரத்தையும் கூறுவாராயின், அவர் இன்ன திகதியில் பிறந்தார் என்று கூறமுடியும். எவ்வாறாயினும் அவருக்கென ஒரு ஜாதகம் இல்லை. உண்மையில், அவரது ஜாதகமே அனைத்திலும் மேலானதாகும். அவருடைய பணியும் அனைத்திலும் மிக மேலானதாகும். கூறப்பட்டுள்ளது: கடவுளே, உங்கள் புகழ் எல்லையற்றது. ஆகவே, அவர் நிச்சயமாக எதனையாவது செய்திருக்க வேண்டும். பலருடைய புகழ் பாடப்படுகிறது. மக்கள் நேரு, காந்திஜி அனைவருடைய புகழையும் பாடுகிறார்கள். இந்த ஒரேயொருவருடைய புகழை எவராலும் உங்களுக்குக் கூற முடியாது. அவர் ஞானக்கடல், அமைதிக்கடல் என நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். அவர் ஒரேயொருவரே. ஆகவே, அவர் எவ்வாறு சர்வவியாபியாக முடியும்? எவ்வாறாயினும் அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் அதனைக் கொண்டாடும்போது, எவருக்கும் உங்களிடம் கேட்கின்ற தைரியமும் இல்லை. இல்லாவிட்டால், அவர்கள் உங்களுக்குக் கூற வேண்டும்: அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுவதினாலும், அவரது புகழ் பாடப்படுவதினாலும், நிச்சயமாக யாராவது வந்து, சென்றிருக்க வேண்டும். பல பக்தர்கள் உள்ளனர். அரசாங்கமும் இதனை நம்பாவிட்டால், அவர்கள் பக்தர்கள், சந்நியாசிகள், குருமார் போன்றவர்களின் முத்திரைகளை அச்சிடவும் மாட்டார்கள். அரசாங்கம் எவ்வாறோ அவ்வாறே மக்களும் ஆவார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தையின் சுயசரிதை நன்றாகத் தெரியும். உங்களுடையதைப் போன்ற தூய பெருமை வேறு எவருக்கும் இல்லை. சிவ ஜெயந்தி வைரத்தைப் போன்று பெறுமதி மிக்கது என்றும், ஏனைய ஜெயந்திகள் அனைத்தும் சிப்பி போன்ற பெறுமதி வாய்ந்தவை என்றும் நீங்கள் மாத்திரமே கூறுகிறீர்கள். தந்தை மாத்திரமே வந்து, உங்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாற்றுகின்றார். ஸ்ரீகிருஷ்ணரும் தந்தை மூலமே மேன்மையானவர் ஆகினார். இதனாலேயே, அவரது பிறப்பு வைரங்கள் போன்று பெறுமதியானவை என்று நினைவுகூரப்படுகிறது. முதலில் அவர் சிப்பி போன்ற பெறுமதியானவராக இருந்தார், பின்னர் பாபா அவரை வைரம் போன்று பெறுமதியானவர் ஆக்கினார். மக்களுக்கு இவ்விடயங்கள் தெரியாது. அவரை, அவ்வாறான உலக இளவரசர் ஆக்கியவர் யார்? எனவே மக்கள் கிருஷ்ணரின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள் என்று விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்த பின்னர், ஒரு கூடையில் கொண்டு செல்லப்பட்டார். கிருஷ்ணர் உலக இளவரசராக இருந்தார். ஆகவே, அவர் ஏன் பயப்பட வேண்டும்? அசுரரான கம்சன் எவ்வாறு அங்கு இருந்திருக்க முடியும்? அவ் விடயங்கள் அனைத்தும் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளன. இப்பொழுது நீங்கள் இவை அனைத்தையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். விளங்கப்படுத்துவதற்கு, மிகச்சிறந்த யுக்தி தேவைப்படுகிறது. அனைவராலும் ஒரேயளவிற்குக் கற்பிக்க முடியும் என்றில்லை. சாதுரியமாக விளங்கப்படுத்தாததால் அதிகளவு அவச்சேவை இடம்பெறுகிறது. சிவஜெயந்தி இப்பொழுது கொண்டாடப்படுகிறது. ஆகவே சிவன் மாத்திரமே நிச்சயமாகப் புகழப்பட வேண்டும். காந்தி ஜெயந்தியின்போது அவர்கள் காந்தியின் புகழை மாத்திரமே பாடுவார்கள். அவர்கள் வேறு எதனையும் சிந்திக்க மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் சிவ ஜெயந்தியைக் கொண்டாடுகிறீர்கள். ஆகவே அவரது புகழும், அவரது சுயசரிதையும், அவரது வாழ்க்கை வரலாறும் நிச்சயமாக இருக்க வேண்டும். அத் தினத்தில் நீங்கள் அவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மக்களுக்குக் கூறவேண்டும். தந்தை கூறுகிறார்: எப்பொழுது சிவஜெயந்தி ஆரம்பமாகியது என்று மக்கள் கேட்கவும் மாட்டார்கள். அதைப் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை. அவரது புகழ் எல்லையற்றது என்று பாடப்படுகிறது. மக்கள் சிவபாபாவைக் கள்ளங்கபடமற்ற பிரபு என்று அழைத்து, பெருமளவு அவரைப் புகழ்கிறார்கள். அவர் கள்ளங்கபடமற்ற பொருளாளர்;. அந்த மக்கள் சிவனையும், சங்கரரையும், ஒருவரென்றே கூறுகிறார்கள். அவர்கள் சங்கரரைக் கள்ளங்கபடமற்ற பிரபு என்று கருதுகிறார்கள். உண்மையில் கள்ளங்கபடமற்ற பிரபு சங்கர் அல்ல. அவர் மூன்றாவது கண்ணைத் திறந்தபோது விநாசம் ஏற்பட்டது என்றும், அவர் கசப்பான மலர்களை உண்பவர் என்றும் அவர்கள் அவரைப் பற்றிக் கூறுகிறார்கள். ஆகவே அவரை எவ்வாறு கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்க முடியும்? ஒரேயொருவரின் புகழ் மாத்திரமே உள்ளது. நீங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். பலர் அங்கு செல்கிறார்கள். ஆகவே நீங்கள் அங்கு சென்று, அவர்களுக்குச் சிவனின் சுயசரிதையைக் கூறவேண்டும். அவர்கள் கூறுகிறார்கள்: சிவபாபாவே கள்ளங்கபடமற்ற பொருளாளர். சிவனுக்கும் சங்கரருக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அவர்களுக்குக் கூறியுள்ளீர்கள். அவர்கள் சிவனைச் சிவாலயத்தில் வழிபடுகிறார்கள். ஆகவே நீங்கள் அங்கு சென்று அவர்களுக்கு சிவனின் சுயசரிதையைக் கூறவேண்டும். சுயசரிதையை அவர்கள் செவிமடுக்கும்போது, சிவனின் சுயசரிதையைக் கூறுவது எவ்வாறு சாத்தியம் என்று அவர்களின் தலை சுற்றுகிறது. ஆகவே, இது அற்புதமானது என்று மக்கள் நினைத்து இங்கு வருவார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: எங்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டவர்களுக்கு, அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையின் சுயசரிதையை நாங்கள் கூறுவோம்;. அவர்கள் இன்னமும் காந்தி போன்றவர்களின் சுயசரிதையைச் செவிமடுக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் சிவனைப் புகழும்போது சர்வவியாபி என்ற எண்ணம் மக்களின் புத்தியிலிருந்து நீங்கிவிடும். ஒருவருடைய புகழ் இன்னொருவருடையது போன்று இருக்க மாட்டாது. அவர்கள் அமைக்கும் கூடாரமோ அல்லது நடத்தும் கண்காட்சியோ சிவனின் ஆலயம் அல்ல. படைப்பவரே அமர்ந்திருந்து, படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களையும் உங்களுக்குக் கூறுகின்ற சிவனின் உண்மையான ஆலயம் இங்கேயே உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எழுதலாம்: நாங்கள், படைப்பவரின் சுயசரிதையையும், வரலாற்றையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களையும் உங்களுக்குக் கூறுவோம். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் எழுதவேண்டும். பிரபல்யமான மக்கள் இதனைப் பார்க்கும்போது, அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்: பரமாத்மாவாகிய பரமதந்தையின் சுயசரிதையைக் கண்காட்சிகளில் காட்டும் இவர்கள் யார்? படைப்பைப் பற்றி நீங்கள் அவர்களிடம் கூறினால், பிரளயம் இடம்பெற்று, புதிய படைப்பு பின்னர் உருவாகியதாக அவர்கள் நினைப்பார்கள். ஆனால் இல்லை, தந்தை வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மை ஆக்குகிறார் என்று நீங்கள் விளங்கப்படுத்தும்போது மக்கள் வியப்படைவார்கள். சிவாலயத்திற்குப் பலரும் வருவார்கள். ஒரு பெரிய மண்டபம் அல்லது கூடாரம் இருக்க வேண்டும். விடியற்காலையில் நீங்கள் படங்கள் போன்றவற்றுடன் சுற்றி வரலாம். ஆனால் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தை யார் ஸ்தாபித்தார்கள் என்பதை நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையான அசரீரியான சிவபாபா வந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். எவ்வாறு நீங்கள் சிவனின் ஆலயத்திற்குச் சென்று, சேவை செய்யலாம் என்பதை நீங்கள் கடைய வேண்டும். மக்கள் காலையில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவார்கள். காலையில் மணிகளும் அடிக்கப்படுகின்றன. சிவபாபாவும் விடியற்காலையில் வருகின்றார். அவர் நள்ளிரவில் வருவதில்லை. அந் நேரத்தில் மக்கள் உறங்கிக்கொண்டு இருப்பதால், உங்களால் அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்க முடியாது. சிலவேளைகளில் மாலையில் நேரம் இருக்கும். விளக்குகளும் ஒளி ஏற்றப்பட்டிருக்கும். அப்பொழுது நல்ல வெளிச்சமும் இருக்கும். சிவபாபா வந்து, ஆத்மாக்களாகிய உங்களை விழித்தெழச் செய்கிறார். ஒவ்வொரு வீட்டிலுமுள்ள விளக்குகளும் ஒளி ஏற்றப்படும்போது, அதாவது, ஆத்மாக்களின் ஒளி ஏற்றப்படும்போதே உண்மையான தீபாவளி ஆகும். அம் மக்கள் தங்கள் வீடுகளில் பௌதீக விளக்குகளை ஏற்றுகிறார்கள். எவ்வாறாயினும், இதுவே தீபாவளியின் சரியான கருத்தாகும். சிலருடைய விளக்குகள் ஏற்றப்படுவதேயில்லை. உங்கள் விளக்கு எவ்வாறு ஏற்றப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். எவராவது மரணித்தால், அவ்விடத்தில் இருள் இல்லாதிருப்பதற்;காக மக்கள் விளக்கை ஏற்றி வைக்கின்றார்கள். எவ்வாறாயினும் அனைத்திற்கும் முதலில் ஆத்மாக்களின் விளக்கு ஏற்றப்பட வேண்டும். அப்பொழுது இருள் இருக்கமாட்டாது. இல்லாவிட்டால் மக்கள் காரிருளில் இருக்கிறார்;கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு, ஒரு விநாடியில் இன்னொன்றை எடுக்கிறார். அதில் இருள் என்ற கேள்விக்கே இடமில்லை. அதுவே பக்தி மார்க்கத்தின் வழமையாகும். எண்ணெய் முழுவதும் எரிந்து முடிந்ததும், விளக்கு அணைந்துவிடுகிறது. அவர்களுக்கு இருள் என்பதன் அர்த்தமும் தெரியாது. பிரிந்து சென்ற ஆவிகளுக்கு உணவு கொடுப்பதன் அர்த்தமும் அவர்களுக்குப் புரிவதில்லை. முன்னர் அவர்கள் பிரிந்து சென்ற ஆத்மாக்களை வரவழைத்து, கேள்விகளைக் கேட்பார்கள். அவர்கள் இப்பொழுது அதனைச் செய்வதில்லை. அவர்கள் இங்கும் வருகிறார்கள். சிலசமயங்களில் அவர்கள் ஏதாவது கூறுவார்கள். “நீங்கள்; சந்தோஷமாக இருக்கிறீர்களா?” என்று அந்த ஆத்மாவைக் வினவினால், “ஆம்” என்று அவர் பதிலளிப்பார். இங்கிருந்து செல்பவர்கள் நிச்சயமாக ஒரு சிறந்த வீட்டில் பிறப்பெடுப்பார்கள் என்பது நிச்சயமே. அவர்கள் நிச்சயமாக ஞானத்தைப் பெறாதவர்களின் குடும்பத்திலேயே பிறப்பெடுப்பார்கள். அவர்கள் பிராமணக் குடும்பத்தில் பிறப்பெடுக்க மாட்டார்கள். ஏனெனில் கியானி பிராமணர்கள் விகாரத்தில் ஈடுபட மாட்டார்கள். அவர்கள் தூய்மையானவர்கள். எவ்வாறாயினும், அந்த ஆத்மா சென்று, ஒரு சிறந்த, சந்தோஷமான குடும்பத்தில் பிறப்பெடுப்பார். அவர்களின் பிறப்பு, அவர்களின் ஸ்திதிக்கு ஏற்றவாறே இருக்கும் என்று தர்க்க சாஸ்திரமும் கூறுகிறது. ஆத்மா ஒரு சிறிய சரீரத்தில் இருப்பதால், பேச முடியாது இருந்தாலும், பின்னர் அவர்கள் தங்கள் பிரகாசத்தைக் காட்டுவார்கள். சில குழந்தைகள் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்ற சம்ஸ்காரத்தைத் தங்களுடன் எடுத்துச் சென்று, அவர்கள்; குழந்தைப் பருவத்திலேயே அதில் ஈடுபடுவது போன்று, வளர்ந்து வருகின்ற குழந்தையும், ஞானத்தின் பிரகாசத்தை நிச்சயமாகக் காட்டுவார்;. ஆத்மாக்கள் இங்கிருந்து ஞானத்தைக் கொண்டு செல்லும்போது அவர்கள் நிச்சயமாகப் புகழப்படுவார்கள். நீங்கள் சிவனின் பிறப்பைக் கொண்டாடுகிறீர்கள். அம் மக்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.. அவர் சர்வவியாபி என்றால் எவ்வாறு நீங்கள் அவரின் பிறந்த நாளைக் கொண்டாடலாம் என்று நீங்கள் அவர்களை வினவ வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கற்கின்றீர்கள். அவரே தந்தையும், ஆசிரியரும் சற்குருவும் ஆவார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் சற் ஸ்ரீ அகல் (சத்தியம், மேன்மையானவர் மற்றும் அமரத்துவமானவர்) என்று சீக்கியர்களும் கூறுவதாக பாபா விளங்கப்படுத்தியுள்ளார். உண்மையில் சகல ஆத்மாக்களும் அமரத்துவமான ரூபங்கள், ஆனால் அவர்கள் ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுப்பதால், நீங்கள் பிறப்பு, இறப்பைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆத்மா ஒன்றே. ஆத்மா 84 பிறவிகளை எடுக்கின்றார். சக்கரம் முடிவுக்கு வரும்போது, நானே வந்து, நான் யார் என்பதையும், எவ்வாறு நான் இவரில் பிரவேசிக்கிறேன் என்பதையும் உங்களுக்குக் கூறுவதன் மூலம்; நீங்களாகவே புரிந்துகொள்ள முடியும். முன்னர் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. கடவுள் இவரில் பிரவேசித்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துகொண்டுள்ளீர்கள். ஆனால் அவர் எப்பொழுது, எவ்வாறு அதைச் செய்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. நாளுக்கு நாள் இவ் விடயங்கள் தொடர்ந்தும் உங்கள் புத்தியில் புகுந்துவிடுகின்றன. நீங்கள் தொடர்ந்தும் புதிய விடயங்களைச் செவிமடுக்கிறீர்கள். முன்னர் நீங்;கள் இரு தந்தைகளி;ன் இரகசியத்தை விளங்கப்படுத்தவில்லை. முன்னர் நீங்கள் சிறு குழந்தைகள் போன்று இருந்தீர்கள். இப்பொழுதும் பலர் கூறுகிறார்கள்: பாபா, நான் உங்கள் இரண்டு நாள் வயதுக் குழந்தை, நான் உங்களுடைய இத்தனை நாள் குழந்தை. முன்னைய சக்கரத்தில் எது நிகழ்ந்ததோ, அதேபோன்று, அவை அனைத்தும் நிகழ்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இது மகத்துவமான ஞானமாகும். இதனைப் புரிந்துகொள்வதற்குக் காலம் எடுக்கிறது. ஆத்மாக்கள் பிறப்பை எடுத்துப், பின்னர் மரணிக்கின்றனர். அவர்கள் இங்கு இரண்டு மாதங்களுக்கோ அல்லது எட்டு மாதங்களுக்கோ இருப்பார்கள். பின் மரணி;த்து விடுவார்கள். அவர்கள் உங்களிடம் வரும்போது, இது சரியென்று கூறுவார்கள். அவர் எங்களுடைய தந்தை, நாங்கள் அவருடைய குழந்தைகள். நீங்கள் கூறுகின்ற அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பலர் தூண்டப்;பட்டுள்ளதாகக் குழந்தைகள் எழுதுகிறார்கள். பின்னர் அவர்கள் வெளியே சென்றவுடன், அனைத்தும் முடிவடைந்து, அவர்கள் மரணித்துவிடுகிறார்கள். அதன்பின்னர் அவர்கள் வருவதேயில்லை. எனவே அவர்களுக்கு என்ன நிகழ்ந்திருக்கும்? அவர்கள் வந்து இறுதியில் புத்துணர்ச்சி பெறுவார்கள் அல்லது அவர்கள் பிரஜைகளில் ஒருவராகுவார்கள். இவ்விடயங்கள் அனைத்தும் விளங்கப்படுத்தப்பட வேண்டும்: எவ்வாறு நாங்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறோம்? சிவபாபா எவ்வாறு சற்கதியை அளிக்கிறார். சிவபாபா சுவர்க்கம் என்ற பரிசைக் கொண்டு வருகிறார். அவரே கூறுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பி;த்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். ஆகவே அவர் நிச்சயமாக உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவார். அவரின் சுயசரிதையை எங்களால் உங்களுக்குக் கூறமுடியும். அவர் எவ்வாறு சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார் என்பதையும், எவ்வாறு அவர் இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பதையும் வந்து கற்றுக்கொள்ளுங்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார். ஆகவே குழந்தைகளும் அவ்விதமாக விளங்கப்படுத்த மாட்டார்களா? மிகவும் நன்றாக விளங்கப்படுத்தக்கூடியவர்கள் தேவைப்படுகின்றனர். மக்கள் சிவாலயங்களில் மிகவும் நன்றாகக் கொண்டாடுவார்கள். ஆகவே நீங்கள் அங்கு சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். சிவனின் சுயசரிதையை இலக்ஷ்மி நாராயணனின் ஆலயத்தில் வைத்து அவர்களுக்குக் கூறினால், எவரும் அதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் அதனை நினைத்துப் பார்க்கவும் மாட்டார்கள். நான் அதை அவர்களின் புத்தியில் நன்றாகப் பதியக் கூடியதாகச் செய்யவேண்டும். பலர் இலக்ஷ்மி நாராயணனின் ஆலயத்திற்குச் செல்வார்கள். இலக்ஷ்மி, நாராயணனினதும், இராதை கிருஷ்ணரினதும் இரகசியங்களை நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இந்த இரு தம்பதிகளுக்கும் தனியான ஆலயங்;கள் இருக்கக்கூடாது. கிருஷ்ண ஜெயந்தியன்று நீங்கள் கிருஷ்ணரின் ஆலயத்திற்குச் செல்லலாம்: கிருஷ்ணர் ஏன் அவலட்சணமானவராகவும், அழகானவராகவும் நினைவுகூரப்படுகிறார்? அவர்கள் கூறுகின்றார்கள்: அவர் ஒரு கிராமத்துச் சிறுவனாக இருந்தார், அதனால் அவர் கிராமத்தில் பசுக்களையும், ஆடுகளையும் மேய்த்தார். பாபா தொப்பியையோ அல்லது சப்பாத்தையோ அணியாத ஒரு கிராமவாசியாக இருந்ததாக உணர்கிறார். தான் எவ்வாறு இருந்தார் என்பதையும், பின்னர் பாபா எவ்வாறு வந்து தன்னில் பிரவேசித்தார் என்பதையும் இப்பொழுது நினைவுகூருகிறார். ஆகவே தந்தையின் இலக்கு அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும்: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். அவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். இராமச்சந்திரனின் சுயசரிதையையும் நீங்கள் அவர்களுக்குக் கூறலாம். அவருடைய இராச்சியம் எப்பொழுது ஆரம்பமாகியது என்பதையும், அது இருந்ததிலிருந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். நீங்கள் சிவனின் ஆலயத்தில் சிவனின் சுயசரிதையைக் கூறவேண்டும். இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்தில் இலக்ஷ்மி நாராயணனின் புகழைக் கூறவேண்டும். இராமரின் ஆலயத்திற்;குச் செல்லும்போது நீங்கள் இராமரின் சுயசரிதையை அவர்களுக்குக் கூறுவீர்கள். நீங்கள் இப்பொழுது தேவ தர்மத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சியைச் செய்கின்றீர்கள். எவரும் இந்து சமயத்தை ஸ்தாபிக்கவில்லை. எவ்வாறாயினும், இந்து சமயம் இல்லை என்று நீங்கள் அவர்களுக்கு நேரடியாகக் கூறினால், அவர்கள்; குழம்பிப் போய்விடுவார்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று அவர்கள் நினைப்பார்கள். நாங்கள் ஆதி சனாதன தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள், அது இபபொழுது இந்து சமயம் என்று அழைக்கப்படுகிறது என நீங்;கள் அவர்களுக்குக் கூறலாம். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சிவனின் பிறந்தநாளை மிகுந்த, கோலாகலமாகவும் ஆடம்பரத்துடனும் கொண்டாடுங்கள். சிவனின் ஆலயத்தில் சிவனின் சுயசரிதையை மக்களுக்குக் கூறுங்கள். இலக்ஷ்மி நாராயணனினதும், இராதை, கிருஷ்ணரினதும் புகழை இலக்ஷ்மி நாராயணனின் ஆலயத்தில் கூறுங்கள். அனைவருக்கும் சாதுரியமாக விளக்கத்தைக் கொடுங்கள்.2. அறியாமை என்ற இருளிலிருந்து பாதுகாக்கும்பொருட்டு, ஆத்மாவின் விளக்கை, சதா ஞானம் என்ற எண்ணெய் மூலம் ஏற்றிவையுங்கள். பிறரை அறியாமை இருளிலிருந்து அகற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்கள் மேன்மையான விழிப்புணர்வு மூலம் உங்கள் ஸ்திதியையும் சூழலையும் மேன்மையாக்குவதால், அனைவருடனும் ஒத்துழைப்பாக இருப்பீர்களாக.
யோகம் என்றால் மேன்மையான விழிப்புணர்வில் நிலைத்திருப்பதாகும். “மேன்மையான ஆத்மாவாகிய நான், மேன்மையான தந்தையின் குழந்தை”. நீங்கள் இவ்விழிப்புணர்வைக் கொண்டிருக்கும்பொழுது, உங்கள் ஸ்திதி மேன்மையாகுகின்றது. ஒரு மேன்மையான ஸ்திதியின் மூலம் இயல்பாகவே ஒரு மேன்மையான சூழல் உருவாக்கப்படுகின்றது. அது பல ஆத்மாக்களையும் கவர்கின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் எங்கிருந்து யோகத்தில் நிலைத்திருந்தவாறு எதனைச் செய்தாலும், சூழலும், சுற்றுப்புறமும் பிறருக்கு ஒத்துழைப்பைக் கொடுக்கின்றன. அத்தகைய ஒத்துழைப்பான ஆத்மாக்களே தந்தையாலும், உலகத்தாலும் நேசிக்கப்படுகின்றார்கள்.
சுலோகம்:
அசைக்க முடியாத ஸ்திதி எனும் ஆசனத்தில் அமர்ந்திருப்பதால், நீங்கள் இராச்சிய சிம்மாசனத்தைப் பெறுவீர்கள்.