26.06.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையே பூந்தோட்டத்தின் அதிபதி. பூந்தோட்டக்காரர்களாகிய நீங்கள் பூந்தோட்டத்தின் அதிபதியிடம் மிகச்சிறந்த, நறுமணமுள்ள மலர்களை அழைத்து வர வேண்டும். வாடிய மலர்களை அழைத்து வராதீர்கள்.

கேள்வி:
தந்தையின் பார்வை எக்குழந்தைகள் மீது வீழ்;கின்றது, எவர் மீது வீழ்வதில்லை?

8பதில்:
சிறந்த நறுமணத்தைக் கொடுக்கும் மலர்களையும், முட்கள் பலவற்றை மலர்களாக்குகின்ற சேவையைச் செய்பவர்களையும் பார்ப்பதில் தந்தை பூரிப்படைகின்றார். தந்தையின் பார்வை அவர்கள் மீதே வீழ்;கின்றது. அசுத்தமான மனோபாவத்தைக் கொண்டவர்கள் மீதும், ஏமாற்றுகின்ற கண்களைக் கொண்டவர்கள் மீதும் தந்தையின் பார்வை வீழ்வதில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, மலர்களாகி, ஏனைய பலரையும் மலர்கள் ஆக்குங்கள். ஏனெனில், அப்பொழுது மாத்திரமே நீங்கள் திறமையான பூந்தோட்டக்காரர்கள் என அழைக்கப்படுவீர்கள்.

ஓம் சாந்தி.
பூந்தோட்டத்து அதிபதியாகிய தந்தை இங்கிருந்து தனது மலர்களைப் பார்க்கின்றார். ஏனெனில், நிலையங்களில் மலர்களும், பூந்தோட்டக்காரர்களும் உள்ளனர். உங்கள் சொந்த நறுமணத்தை வீசுவதற்காகவே, நீங்கள் இங்கு பூந்தோட்டத்து அதிபதியிடம் வருகின்றீர்கள். நீங்கள் மலர்கள். இராவணனே முட்காட்டின் விதை என்பதை நீங்களும் அறிவீர்கள், தந்தையும் அறிவார். உண்மையில், ஒரேயொருவரே முழு விருட்சத்தினதும் விதை. எனினும், பூந்தோட்டத்தை முட்காடாக மாற்றுபவனும் நிச்சயமாக இருக்கின்றான். அவனே இராவணன். எனவே, தந்தை விளங்கப்படுத்துகின்ற விடயங்கள் சரியா என நீங்கள் இப்பொழுது தீர்மானியுங்கள். தந்தையே தேவர்களின் பூந்தோட்டத்தின் விதையாவார். இப்பொழுது நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் எவ்வகையான மலர் என்பதனை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். பூந்தோட்டத்து அதிபதியும் மலர்களைப் பார்ப்பதற்காக இங்கு வருகின்றார். ஏனைய அனைவரும் பூந்தோட்டக்காரர்கள். பூந்தோட்டக்காரரில் பல வகையினர் உள்ளனர். அப் பூந்;தோட்டங்களிலும் (பௌதீகமாக) பல வகையான பூந்தோட்டக்காரர்கள் உள்ளனர். சிலருக்கு 500 ரூபாவும், சிலருக்கு 1000 ரூபாவும், சிலருக்கு 2000 ரூபாவும் வழங்கப்படுகின்றது. உதாரணமாக, முகல் தோட்டத்தின் பூந்தோட்டக்காரர் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும்; அவரது ஊதியம் மிக உயர்ந்ததாக இருக்கும். இது ஓர் எல்லையற்ற பூந்தோட்டமாகும். இங்கு, பலவகையான பூந்தோட்டக்காரர்கள் வரிசைக்கிரமமாக உள்ளனர். மிகச்சிறந்த பூந்தோட்டக்காரர்கள் தங்கள் பூந்தோட்டங்களை மிக அழகானவையாக ஆக்குகிறார்கள்; அவர்கள் மிகச்சிறந்த பூமரங்களை வளர்ப்பார்கள். அரசாங்க இல்லத்தின் (புழஎநசnஅநவெ ர்ழரளந) முகல் பூந்தோட்டம் மிக அழகானது. இது ஓர் எல்லையற்ற பூந்தோட்டமாகும். ஒரேயொரு பூந்தோட்டத்து அதிபதியே இருக்கின்றார். முட்காட்டின் விதை இராவணன் ஆவான், பூந்தோட்டத்தின் விதை சிவபாபா ஆவார். நீங்கள் தந்தையிடமிருந்து உங்களது ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இராவணனிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை; அவன் உங்களைச் சாபமிடுவது போன்றே உள்ளது. சபிக்கப்படும்பொழுது, நீங்கள் அனைவரும் உங்களுக்குச் சந்தோஷத்தை அருள்கின்றவரையே நினைவுசெய்கிறீர்கள். ஏனெனில், அவரே நிலையான சந்தோஷத்தைக் கொடுப்பவரான, சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். பல வகையான பூந்தோட்டக்காரர்கள் உள்ளனர். பூந்தோட்டத்து அதிபதி தனது பூந்தோட்டக்காரர்கள் சிறிய பூந்தோட்டத்தையா, பெரிய பூந்தோட்டத்தையா உருவாக்குகின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்கு வருகின்றார். அவர்கள் எவ்வகையான மலர்கள் என்பதையும் அவர் தன் மனதில் வைத்திருக்கின்றார். சிலவேளைகளில் மிகச்சிறந்த பூந்தோட்டக்காரர்கள் இங்கு வருகின்றனர். அவர்கள் அழைத்து வருகின்ற மலர்கள் மிகச்சிறந்த அலங்காரமாக உள்ளனர். எனவே, பூந்தோட்டத்து அதிபதி பூரிப்படைகின்றார். ஓ! இப் பூந்;தோட்டக்காரர் மிகச் சிறந்தவர். அவர் மிகச்சிறந்த மலர்களை அழைத்து வந்திருக்கின்றார். அவர் எல்லையற்ற தந்தை, இவை அவரது எல்லையற்ற விடயங்களாகும். பாபா உங்களுக்குக் கூறுபவை முற்றிலும் உண்மையானவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இதயபூர்வமாகப் புரிந்து கொள்கின்றீர்கள். அரைக் கல்பத்துக்கு இராவண இராச்சியம் இருக்கிறது. இராவணனே பூந்தோட்டத்;தை முட்காடாக ஆக்குகின்றான். காட்டில் முட்களைத் தவிர வேறு எதுவுமே கிடையாது. அவை பெருமளவு துன்பத்தையே விளைவிக்கின்றன. பூந்தோட்டத்தின் மத்தியில் முட்கள் இருப்பதில்லை. ஒன்று (முள்) கூட இருக்காது. இராவணன் உங்களைச் சரீர உணர்வுடையவர்கள் ஆக்குகின்றான் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சரீர உணர்வே அனைத்திலும் பெரிய முள்ளாகும். சிலரின் பார்வை முற்றிலும் காமம் நிறைந்ததாகவும், சிலரின் பார்வை அரைவாசிக் காமம் நிறைந்ததாகவும் காணப்படுவதை பாபா நேற்றிரவும் விளங்கப்படுத்தினார். வருகின்ற புதியவர்களில் சிலர் முதலில் இப்பாதையை மிக நன்றாகப் பின்பற்றுவதுடன், தாங்கள் காமத்தில் ஈடுபட மாட்டோம் எனவும், தூய்மையாகவே இருப்போம் எனவும் நம்புகின்றார்கள். அந்நேரத்தில் அவர்கள், மயானத்தில் ஒருவர் அனுபவம் செய்யும் விருப்பமின்மையைப் போன்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் வீடு திரும்பியதுமே, தீயவர்கள் ஆகுகின்றனர்; அவர்கள் பார்வை அழுக்காகி விடுகின்;றது. நீங்கள் பலரை மிகச்சிறந்த மலர்களாகக் கருதி, அவர்களை இங்கு பூந்தோட்டத்து அதிபதியிடம் அழைத்து வந்து, கூறுகின்றீர்கள்: பாபா, இவர் மிகச்சிறந்த மலர். சில பூந்தோட்டக்காரர்கள் இங்கு வந்து, ‘இவர் இத்தகைய நல்ல மலர்’ என பாபாவின் காதினுள் மெதுவாகக் கூறுகின்றனர். ஒரு பூந்தோட்டக்காரர் நிச்சயமாக அவரது பூந்தோட்டத்து அதிபதியிடம் கூறுவார். பாபா ஒவ்வொருவரது இதயத்திலுள்ள இரகசியங்களையும் அறிவார் என்றில்லை. பூந்தோட்டக்காரர்களாகிய நீங்கள் பாபாவிடம் ஒவ்வொருவரது நடத்தையைப் பற்றியும் கூறுகின்றீர்கள்: பாபா, அவரது பார்வை நன்றாக இல்லை. அவரது நடத்தை இராஜரீகமாக இல்லை. அவரது பார்வை 10மூ முதல் 20மூ வரை சீர்திருத்தப்பட்டிருக்கின்றது. கண்களே உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்ற பிரதான விடயமாகும். பூந்தோட்டக்காரர்களாகிய நீங்கள் வந்து, பூந்தோட்டத்து அதிபதியிடம் அனைத்தையும் கூறுகின்றீர்கள். பாபா உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கின்றார்: எவ்வகையான மலர்களை அழைத்து வந்திருக்கின்றீர்கள் என என்னிடம் கூறுங்கள். சிலர் ரோஜாக்களையும், சிலர் மல்லிகைகளையும், சிலர் ‘அக்’ மலர்களையும் அழைத்து வருகின்றனர். அவர்கள் இங்கு மிக எச்சரிக்கையாக உள்ளனர். எனினும், அவர்கள் காட்டிற்குள் திரும்பிச் சென்றதும், வாடிவிடுகின்றனர். ஒவ்வொருவரும் எத்தகைய மலர் என பாபா பார்க்கின்றார். மாயை பூந்தோட்டக்காரர்களையும் மிகவும் பலமாக அறைவதால், பூந்தோட்டக்காரர்களும ;கூட முட்களாகி விடுகின்றனர். பூந்தோட்டத்து அதிபதி வரும்பொழுது, அவர் முதலில் பூந்தோட்டத்தையே பார்க்கின்றார். பின்னர், அவர் அமர்ந்திருந்து மலர்களை அலங்கரிக்கின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, எச்சரிக்கையாக இருங்கள்! தொடர்ந்தும் உங்கள் பலவீனங்களை அகற்றுங்கள். இல்லாவிடில், நீங்கள் அதிகளவில் வருந்துவீர்கள். பாபா உங்களை இலக்ஷ்மி, நாராயணனாக ஆக்குவதற்காக வந்திருக்கின்றார். நாங்கள் ஏன் அதற்குப் பதிலாக வேலையாட்கள் ஆகவேண்டும்? உங்களையே நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும்;: நான் மேன்மையானவராகவும். தகுதிவாய்ந்தவராகவும் ஆகுகின்றேனா? இராவணனே காட்டின் விதை என்பதையும், இராமரே பூந்தோட்டத்தின் விதை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தந்தை இங்கிருந்தவாறு, இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பாபா அப்பாடசாலைகளின் கல்வியை இப்பொழுதும் புகழ்கின்றார். அக்கல்வியும் சிறந்ததே. ஏனெனில், அதன் மூலமாக நீங்கள் வருமானத்தின் மூலாதாரத்தைப் பெறுகின்றீர்கள். அத்துடன் அங்கு, ஓர் இலட்சியமும் இலக்கும் உள்ளது. இதுவும் ஒரு பாடசாலையே ஆகும். நீங்களும் ஓர் இலட்சியத்தையும் இலக்கையும் கொண்டிருக்கின்றீர்கள். வேறு எந்த இடங்களிலும், அவர்கள் இலட்சியத்தையோ அல்லது இலக்கையோ கொண்டிருக்க மாட்டார்கள். நீங்கள் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக வேண்டும் என்ற ஒரே இலக்கைக் கொண்டிருக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில், சத்திய நாராயணன் ஆகுகின்ற கதையை மக்கள் பெருமளவில் செவிமடுக்கின்றார்கள். அவர்கள் கீதையைத் தங்களுக்கு உபதேசிப்பதற்காக, மாதத்தில் ஒருதடவை பிராமணப் புரோகிதர் ஒருவரை வரவழைக்கின்றார்கள். இந்நாட்களில் அனைவரும் கீதையை உரைக்கின்றார்கள். அவர்களில் எவருமே உண்மையான பிராமணர்களல்லர். நீங்கள் மாத்திரமே உண்மையான தந்தையின் குழந்தைகளாகிய, உண்மையான பிராமணர்கள், நீங்கள் உண்மையான கதையை உரைக்கின்றீர்கள். சத்திய நாராயணனின் கதையும், அமரத்துவக் கதையும், மூன்றாவது கண் பற்றிய கதையும் உள்ளன. கடவுள் பேசுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குகின்றேன். அம்மக்கள் கீதையை உரைத்து வருகின்றார்களாயினும், யார் அரசராகியுள்ளார்? உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குவதாகவும், ஆனால் தான் அவ்வாறு ஆகுவதில்லை எனவும் கூறக்கூடிய வேறு எவராவது இருக்கின்றார்களா? நீங்கள் இதனை முன்னர் எப்பொழுதாவது கேட்டிருக்கின்றீர்களா? ஒரேயொரு தந்தையே அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு இதனை விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கே இங்கு பூந்தோட்டத்து அதிபதியிடம் வருகின்றீர்கள் என்பதனை அறிவீர்கள். நீங்கள் பூந்தோட்டக்காரர்களாகவும், அத்துடன் மலர்களாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் நிச்சயமாகப் பூந்தோட்டக்காரர்கள் ஆகவேண்டும். பல வகையான பூந்தோட்டக்காரர்கள் உள்ளனர். நீங்கள் சேவை செய்யாவிடில், எவ்வாறு ஒரு சிறந்த மலராகுவீர்கள்;? நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வகையான மலர் என்பதையும், எவ்வகையான பூந்தோட்டக்காரர் என்பதையும் உங்கள் சொந்த இதயத்தைக் கேட்டுப் பார்க்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைக் கடைய வேண்டும். பல்வகையான பூந்தோட்டக்காரர்கள் இருப்பதை ஆசிரியர்களாகிய நீங்கள் அறிவீர்கள். மிகச்சிறந்த, பெரிய பூந்தோட்டங்களைக் கொண்டிருக்கின்ற, சிறந்த பூந்தோட்டக்காரர்கள் சிலரும் இங்கு வருகின்றார்கள். பூந்தோட்டக்காரர் சிறந்தவராயின், அவர் மிகச்சிறந்த பூந்தோட்டத்தையே உருவாக்குவார். அவர்களைப் பார்க்கும்பொழுதே இதயம் பூரிப்படையக்கூடிய, அத்தகைய மலர்களை அவர் அழைத்து வருகின்றார் சிலர் மலிவான மலர்களைக்கூட அழைத்து வருகின்றனர். அவர்கள் எத்தகைய அந்தஸ்தைக் கோருவார்கள் என்பதைப் பூந்தோட்டத்து அதிபதி புரிந்துகொள்கின்றார். இப்பொழுது, சொற்ப காலமே இன்னமும் எஞ்சியுள்ளது. ஒவ்வொரு முள்ளையும் மலராக மாற்றுவதற்கு, முயற்சி தேவையாகும். சிலர் மலராக மாறுவதற்குக்கூட விரும்ப மாட்டார்கள், அவர்கள் முள்ளாக இருக்கவே விரும்புகின்றார்கள். அவர்களது மனோபாவம் மிக அழுக்காக இருப்பதைக் கண்கள் காண்பிக்கின்றன. அவர்கள் இங்கே வரும்பொழுதும் எவ்வித நறுமணத்தையும் கொண்டிருப்பதில்லை. பூந்தோட்டத்து அதிபதி தன் முன்னிலையில் மலர்கள் இருப்பதையே விரும்புகின்றார். அவர்களைப் பார்க்கும்பொழுது, அவர் மிகவும் பூரிப்படைகின்றார். ஒருவரது மனோபாவம் தீயதாக இருப்பதைக் கண்டால், அவரை அவர் பார்க்கவும் மாட்டார். இதனாலேயே நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வகையான மலர் என்பதைப் பார்ப்பதற்கு அவர் பரீட்சிக்கின்றார். நீங்கள் எவ்வளவு நறுமணத்தைக் கொடுக்கின்றீர்கள்? நீங்கள் முள்ளிலிருந்து மலராக மாறிவிட்டீர்களா, இல்லையா? நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவிற்கு மலராகியிருக்கின்றீர்கள் என்பதையும், நீங்கள் முயற்சி செய்கின்றீர்களா என்பதையும் நீங்களாகவே புரிந்துகொள்ளலாம். சிலர் மீண்டும் மீண்டும் கூறுகின்றார்கள்: “பாபா, நான் உங்களை மறந்து விடுகின்றேன்! என்னால் யோகத்தில் நிலைத்திருக்க முடியாதுள்ளது”. ஆனால், நீங்கள் நினைவைக் கொண்டிராவிட்டால், எவ்வாறு ஒரு மலராக முடியும்? பாபாவை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் ஒரு மலராகி, மற்றவர்களையும் மலர்களாக்க முடியும். அப்பொழுதே நீங்கள் ஒரு பூந்தோட்டக்காரர் என அழைக்கப்படுவீர்கள். பாபா தொடர்ந்தும் பூந்தோட்டக்காரர்கள் தேவை என வினவுகிறார். பூந்தோட்டக்காரர் எவராவது இங்கு இருக்கின்றீர்களா? நீங்கள் ஏன் ஒரு பூந்தோட்டக்காரர் ஆகமுடியாது? நீங்கள் உங்களது பந்தனங்களை விட்டுவிட வேண்டும். நீங்கள் சேவை செய்வதற்காக அக வலிமையையும், உற்சாகத்தையும் கொண்டிருக்க வேண்டும். உங்களது சிறகுகளை விடுவிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். நீங்கள் அதிகமாக நேசிக்கின்ற ஒருவரை விட்டு விலகுவீர்களா? நீங்கள் ஒரு மலராகாமலும், மற்றவர்களை மலர்களாக்குகின்ற தந்தையின் சேவையைச் செய்யாமலும் இருந்தால், எவ்வாறு உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும்? நீங்கள் கோருகின்ற உங்கள் அந்தஸ்து 21 பிறவிகளுக்கானது. சக்கரவர்த்திகளும், அரசர்களும், மிகுந்த செல்வந்தப் பிரஜைகளும் உள்ளனர். பின்னர், குறைந்த செல்வத்தையுடையவர்களும், பிரஜைகளும் வரிசைக்கிரமமாக உள்ளனர். இப்பொழுது நீங்கள் எவ்வாறு ஆகவேண்டும்? நீங்கள் இப்பொழுது முயற்சியைச் செய்வதால், என்னவாக ஆகுகின்றீர்களோ, அவ்வாறே ஒவ்வொரு கல்பத்திலும் ஆகுவீர்கள். இப்பொழுது நீங்கள் முழு விசையுடன் முயற்சி செய்யவேண்டும். நீங்கள் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக வேண்டும். சிறந்த முயற்சியாளர்கள் அனைத்தையும் பயிற்சி செய்வார்கள். நீங்கள் தினமும் உங்களது இலாப நட்டக் கணக்கைச் சோதித்துப் பார்க்க வேண்டும். இது 12 மாதங்களுக்கொரு தடவை செய்கின்ற விடயமல்ல. நீங்கள் வரவு செலவுக் கணக்கைத் தினமும் சோதித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் ஓர் இழப்பை ஏற்படுத்தக்கூடாது. இல்லாவிடில், நீங்கள் மூன்றாந் தரத்தவராகவே ஆகுவீர்கள். பாடசாலைகளிலும் அனைவரும் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். விருட்சத்தின் பிரபுவே விதை என்பதையும், அவர் வரும்பொழுது நாங்கள் வியாழ (குரு) சகுனங்களை அனுபவம் செய்கின்றோம் என்பதையும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பின்னர், இராவண இராச்சியம் வந்ததும், ராகுவின் சகுனத்தையே நாங்கள் அனுபவம் செய்கின்றோம். ஒன்று அதி உயர்ந்ததும், மற்றையது அதி தாழ்ந்ததும் ஆகும். சிவாலயம் முற்றாக விலைமாதர் இல்லமாக மாறுகின்றது. இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் மீது வியாழ சகுனம் உள்ளது. விருட்சம் முதலில் புதியதாகவே உள்ளது. அதன் அரை ஆயுட்காலத்தின் பின்னர், பழையதாக ஆரம்பிக்கின்றது. பூந்தோட்டத்தின் அதிபதி உள்ளார், அதன்பின்னர் பூந்தோட்டக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. நீங்கள் அவர்களைப் பூந்தோட்டத்து அதிபதியிடம் அழைத்து வருகின்றீர்கள். ஒவ்வொரு பூந்தோட்டக்காரரும் மலர்களை அழைத்து வருகின்றார்;. சிலர் பாபாவிடம் வருவதற்குப் பரிதவிக்கின்ற, அத்தகைய நல்ல மலர்களை அழைத்து வருகிறார்கள். சில புதல்விகள் வருவதற்குச் சாதுரியமான வழிகளைக் கண்டு பிடிக்கின்றார்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் மிகச்சிறந்த மலர்களை அழைத்து வந்திருக்கின்றீர்கள். பூந்தோட்டக்காரர் இரண்டாந் தரத்தவராயினும், மலர்கள் பூந்தோட்டக்காரரை விடவும் சிறந்தவையாக உள்ளன. அவர்கள் தங்களை மேன்மையான உலக அதிபதிகளாக்குகின்ற சிவபாபாவிடம் வருவதற்குப் பரிதவிக்கின்றார்கள். அவர்கள் வீட்டில் அடி வாங்கினாலும், சிவபாபாவிடம் தங்களைப் பாதுகாக்குமாறு வேண்டுகின்றனர். அவர்களே உண்மையான திரௌபதிகள் என அழைக்கப்படுகின்றனர். கடந்த காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் மீண்டும் இடம்பெற வேண்டும். நேற்று நீங்கள் கூவியழைத்தீர்கள். இன்று பாபா வந்து, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வழிகளை உங்களுக்குக் காட்டுகின்றார். ஞானத்தை இவ்விதமாக ரீங்காரமிடுங்கள். நீங்களே ரீங்காரமிடும் வண்டுகள், அவர்கள் பூச்சிகள். அவர்களுக்கு ஞானத்தைத் தொடர்ந்தும் ரீங்காரமிடுங்கள். அவர்களிடம் கடவுள் கூறியதாகக் கூறுங்கள்: காமமே உங்கள் கொடிய எதிரி. அதனை வெற்றிகொள்வதனால், நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். சிலவேளைகளில் கள்ளங்கபடமற்றவர்களின் வார்த்தைகள் அவர்களைத் தாக்கியதன் காரணமாக அவர்கள் சாந்தமாகி, கூறுகிறார்கள்: 'சரி, நீங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. உங்களை அத்தகைய தேவர்களாக்குபவரிடம் நீங்கள் செல்லலாம். அது எனது பாக்கியத்தில் இல்லையாயினும் நீங்கள் செல்லலாம்.” திரௌபதிகள் இவ்வாறே கூவியழைக்கின்றார்கள். பாபா அவர்களுக்கு எழுதுகின்றார்: இந்த ஞானத்தை அவர்களுக்கு ரீங்காரமிடுங்கள். எவ்வாறாயினும், சில பெண்கள் சூர்ப்பனகை, பூதகி (பெண் அரக்கிகள்;) என்றும் அழைக்கப்படுகின்றார்கள். ஆண்கள் அவர்களுக்கு ஞானத்தை ரீங்காரமிட்டுவிட்டு, தாங்கள் பூச்சிகளாகி விடுகின்றனர். அவர்களால் விகாரமின்றி இருக்க முடியாது. பூந்தோட்டத்து அதிபதியிடம் பல்வேறு வகையினரும் வருகின்றனர், கேட்கவும் வேண்டாம்! சில குமாரிகள்கூட முட்களாகி விடுகின்றனர். இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்களது ஜாதகத்தைப் (பிறந்தது முதல் நீங்கள் செய்த செயல்கள்) பற்றி என்னிடம் கூறுங்கள். நீங்கள் அவற்றைத் தந்தையிடம் கூறாமல் மறைத்தால், அவை அதிகரிக்கும். நீங்கள் பொய் பேசக்கூடாது. உங்கள் மனோபாவம் மேலும் சீர்கெட்டுவிடும். எவ்வாறாயினும், தந்தையிடம் கூறுவதால், நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். நீங்கள் உண்மையே பேசவேண்டும். இல்லாவிடில், நீங்கள் கடுமையான நோய்க்குள்ளாவீர்கள். தந்தை கூறுகின்றார்: விகாரத்தில் ஈடுபடுபவர்களின் முகங்கள் அவலட்சணமானவை. தூய்மையற்றவராகுதல் என்றால், உங்கள் முகத்தை அழுக்காக்கிக்கொள்ளல் என்பதாகும். கிருஷ்ணர் அவலட்சணமானவர் என்றும், அழகானவர் என்றும் அழைக்கப்படுகின்றார். அவர்கள் கிருஷ்ணரைக் கடும் நீல நிறத்தில் சித்தரித்துள்ளார்கள். அவர்கள் இராமரையும், நாராயணனையும் நீல நிறத்திலேயே சித்தரித்துள்ளார்கள். அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் நாராயணன் வெள்ளை நிறமாகவுள்ள அழகான படத்தை வைத்திருக்கின்றீர்கள். அதுவே உங்களது இலட்சியமும் இலக்கும், ஆகும். நீங்கள் கடும் நீல நிறமாகவுள்ள நாராயணனாக ஆக விரும்பவில்லை. நாராயணன் ஆலயத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்றவரல்ல. விகாரத்தில் ஈடுபடுவதனால் அவர்களது முகங்கள் அவலட்சணமாகுகின்றன. ஆத்மாக்களே அழகற்றவர்கள் ஆகுகின்றனர். நீங்கள் கலியுகத்திலிருந்து சத்தியயுகத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் தங்கச் சிட்டுக்குருவியாக வேண்டும். காளிதேவி கல்கத்தாவின் காளியாக நினைவுசெய்யப்படுகின்றார். அவர்கள் அவருடைய அத்தகையதொரு பயங்கர ரூபத்தைக் காட்டியுள்ளார்கள், கேட்கவே வேண்டாம்! தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் சிறகுகளை விடுவிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களைப் பந்தனத்திலிருந்து விடுவித்து, திறமையான பூந்தோட்டக்காரர் ஆகுங்கள். முட்களை மலர்களாக மாற்றுகின்ற சேவையைச் செய்யுங்கள்.

2. எந்தளவிற்கு நீங்கள் ஒரு நறுமணமுள்ள மலராகியிருக்கின்றீர்கள் என உங்களையே சோதித்துப் பாருங்கள். உங்களது மனோபாவம் தூய்மையாக உள்ளதா? உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றுகின்றனவா? உங்களது நடத்தை பற்றிய அட்டவணையை வைத்திருந்து, உங்கள் குறைபாடுகளை அகற்றிவிடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரே தர்மம் எனும் சம்ஸ்காரங்களால் தூய்மை எனும் மேன்மையான தாரணையைக் கிரகித்து, ஒரு சக்திவாய்ந்த சக்கரவர்த்தி ஆகுவீர்களாக.

தூய்மையே உங்கள் சுய இராச்சியத்தின் தர்மம், அதாவது, தாரணை ஆகும். ஒரே தர்மம் என்றால் ஒரே தாரணை என்பதாகும். ஏந்தத் தூய்மையின்மையும், அதாவது, வேறெந்தச் சமயமும் உங்கள் எண்ணங்களிலோ அல்லது கனவுகளிலோ இல்லாதிருக்கட்டும், ஏனெனில் தூய்மை இருக்குமிடத்தில் தூய்மையின்மையின் பெயரோ அல்லது சுவடோ, அதாவது, வீணானவை அல்லது பாவகரமானவை எதுவும் இருக்காது. முழுமையான தூய்மை எனும் அத்தகைய சம்ஸ்காரங்களால் தங்களை நிரப்புபவர்களே சக்திவாய்ந்த சக்கரவர்த்திகள் ஆகுகின்றார்கள். தற்சமயத்தில் நீங்கள் கிரகிக்கின்ற மேன்மையான சம்ஸ்காரங்களின் அடிப்படையிலேயே எதிர்கால உலகம் உருவாக்கப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் கிரகிக்கின்ற சம்ஸ்காரங்களே எதிர்கால உலகிற்கான அத்திவாரம் ஆகும்.

சுலோகம்:
ஒரேயொரு கடவுளுக்கான உண்மையான அன்பைக் கொண்டிருப்பவர்களே வெற்றி இரத்தினங்கள் ஆகுகின்றார்கள்.