17.04.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் காலையில் செல்வந்தராகவும் மாலையில் யாசிப்பவராகவும் ஆகுகின்றீர்கள். யாசிப்பவரிலிருந்து செல்வந்தர் ஆகுவதற்கும், தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுவதற்கும் இரு வார்த்தைகளை நினைவுசெய்யுங்கள்: மன்மனாபவ, மத்தியாஜிபவ.
கேள்வி:
கர்ம பந்தனத்திலிருந்து விடுதலை அடைவதற்கான வழி என்ன?
8பதில்:
1. நினைவு யாத்திரையும், ஞானத்தைக் கடைதலும் ஆகும். 2. ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளும் இருக்கட்டும். உங்கள் புத்தி எவராலும் ஈர்க்கப்படக்கூடாது. 3. உங்கள் யோகம் சர்வசக்திவான் பற்றரியுடன் இணைக்கப்பட்டிருக்கட்டும். உங்கள் மீது முழுக் கவனம் செலுத்துங்கள். தெய்வீகக் குணங்கள் என்ற இறக்கைகளை எப்பொழுதும் வைத்திருந்தால், நீங்கள் தொடர்ந்தும் கர்ம பந்தனங்களிலிருந்து விடுதலை ஆகுவீர்;கள்.ஓம் சாந்தி.
இது பாரதத்தின் கதை என்பதைத் தந்தை அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அது என்ன கதை? காலையில் செல்வந்தராகவும், மாலையில் யாசிப்பவராகவும் இருத்தல். இதைப் பற்றிய ஒரு கதை உள்ளது. அரசர் ஒருவர் காலையில் செல்வந்தராக இருந்தார். நீங்கள் செல்வந்தராக இருக்கும்பொழுது, இவற்றைப் பற்றிக் கேள்விப்பட மாட்டீர்கள். சங்கமயுகத்தில் மாத்திரமே செல்வந்தராக இருத்தலும், யாசிப்பவராக இருத்தலும் என்பவற்றைப் பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் கேட்கின்றீர்கள். இது உங்கள் இதயத்தினால் கிரகிக்கப்பட வேண்டும். உண்மையில், பக்தி உங்களை யாசிப்பவராகவும், ஞானம் உங்களைச் செல்வந்தராகவும் ஆக்குகின்றது. இந்தப் பகலும் இரவும் எல்லையற்றதாகும். யாசிப்பவரில்; இருந்து செல்வந்தராகுதல் என்பதும் ஓர் எல்லையற்ற விடயமே. எல்லையற்ற தந்தையே உங்களை அவ்வாறு ஆக்குகின்றார். தூய்மையற்ற ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மையாக்கக்கூடிய பற்றறி ஒன்றே உள்ளது. நீங்கள் அத்தகைய சுலோகங்களை நினைவுசெய்தால் சந்தோஷமாக இருப்பீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் காலையில் செல்வந்தர் ஆகுகின்றீர்கள், பின்னர் நீங்கள் மாலையில் யாசிப்பவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் எவ்வாறு இப்படி ஆகுகின்றீர்கள் என்பதைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அத்துடன் தந்தை உங்களுக்குத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுவதற்கான வழியையும், யாசிப்பவரிலிருந்து செல்வந்தராகுவதற்கான வழியையும் காட்டுகின்றார். ‘மன்மனபவ, மத்தியாஜிபவ’ ஆகியனவே இரண்டு வழிமுறைகள் ஆகும். இதுவே அதி மங்களகரமான சங்கமயுகம் என்பதையும்; குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும், உங்கள்; முயற்சிக்கு ஏற்ப, சுவர்க்கத்தில் வரிசைக்கிரமமாகச் செல்வந்தராக இருப்பீர்கள் என்ற உத்தரவாதம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாடசாலையிலும் இவ்வாறே இடம்பெறுகின்றது: வகுப்புக்கள்; வரிசைக்கிரமமாகவே மாற்றம் செய்யப்படுகின்றன. ஒரு பரீட்சை முடிவடைந்ததும், மாணவர்கள் வரிசைக்கிரமமாகச் சென்று அமர்கின்றார்கள். அது எல்லைக்குட்பட்ட விடயமாகும். இது எல்லையற்ற விடயமாகும். ஆத்மாக்கள் உருத்திர மாலையில் வரிசைக்கிரமமாக உள்ளார்கள்: மாலை அல்லது விருட்சம். விதை ஒரு விருட்சத்தினதாகும். பரமாத்மாவே மனித உலக விருட்சத்தின் விதையாவார். விருட்சம் எவ்வாறு வளர்கின்றது, அது எவ்வாறு பழையதாகுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முன்னர் உங்களுக்கு இது தெரியாது. தந்தை வந்து இதனை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். இப்பொழுது இது அதி மங்களகரமான சங்கமயுகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்கள் என்ற இறக்கைகளையும் கொண்டிருக்க வேண்டும். உங்களின் மீது முழுக் கவனம் செலுத்துங்கள். நினைவு யாத்திரையில் செல்வதன் மூலமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். வேறு வழியேதும் இல்லை. சர்வசக்திவான் பற்றரியான தந்தையுடன் முழுமையாக யோகம் செய்யுங்கள். அவரது பற்றறி ஒருபொழுதும் சக்தியை இழக்க மாட்டாது. ஏனெனில், அவர் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்லாது, எப்பொழுதும் கர்மாதீத் ஸ்திதியிலேயே உள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் கர்ம பந்தனங்களுக்கு உட்படுகின்றீர்கள். பந்தனங்கள் மிகவும் வலிமையானவை. அந்தக் கர்மக் கணக்குகளிலிருந்து விடுபடுவதற்கு ஒரேயொரு வழியே உள்ளது: நினைவு யாத்திரையாகும். இதனைத் தவிர வேறு வழியேதும் இல்லை. உதாரணத்திற்கு இந்த ஞானம் உங்கள் எலும்புகளையும் நெகிழ வைக்கின்றது. உண்மையில், பக்தியும் உங்களை நெகிழ வைக்கின்றது. ஒருவர் கூறுவார்: இந்த ஆதரவற்றவன் ஒரு பக்தன்; அவன் எவரையும் ஏமாற்றவோ மோசடி செய்யவோ மாட்டான். எவ்வாறாயினும் பக்தர்கள் மத்தியிலும் ஏமாற்றுதல் இடம்பெறுகின்றது. பாபா இதனை அனுபவம் செய்துள்ளார். ஓர் ஆத்மா தனது சரீரத்தினால் தனது வியாபாரத்தை மேற்கொள்ளும்பொழுது, இப்பிறவிக்கான அனைத்தும் அவரது விழிப்புணர்வில் உள்ளது. ஒருவர் நான்கு அல்லது ஐந்து வயதிலிருந்து தனது வாழ்க்கைச் சரிதையை நினைவில் வைத்திருப்பார். சிலர் 10 அல்லது 20 வருடங்களுக்கான விடயங்களையுமே மறப்பதுண்டு. நீங்கள் பிறவி பிறவியாக பெயரையும் வடிவத்தையும் நினைவில் வைத்திருக்க முடியாது. ஆனால் இந்த ஒரு பிறவியின் சில விடயங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். மக்கள் இன்னமும் தமது புகைப்படங்கள் போன்றவற்றை வைத்திருக்கின்றார்கள். தமது ஏனைய பிறவிகளின் எதனையும் அவர்களால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியாது. ஒவ்வோர் ஆத்மாவிற்கும் வெவ்வேறு பெயரும், வடிவமும், இடமும், நேரமும், அவர் நடிக்கின்ற பாகமும் உள்ளன. பெயர், வடிவம் அனைத்தும் தொடர்ந்தும் மாறுகின்றது. ஓர் ஆத்மா எவ்வாறு ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றார் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. ஆத்மா நிச்சயமாக 84 பிறவிகளையும், 84 பெயர்களையும் 84 தந்தையரையும் பெற்றிருக்கின்றார். இறுதியில் அனைத்து உறவுமுறைகளும் தமோபிரதான் ஆகுகின்றன. இந்நேரத்தில் உங்களுக்கு உள்ள பல உறவுமுறைகளைப் போன்று வேறெந்த நேரத்திலும் இருப்பதில்லை. கலியுகத்தின் உறவுமுறைகள் அனைத்தும் பந்தனங்களே என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பல குழந்தைகளைப் பெறுகின்றார்கள். அதன்பின்னர் அவர்களும் திருமணம் செய்து தமக்கெனப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இந்த நேரத்திலேயே நீங்கள் அதிகபட்ச உறவுமுறைகளை, அதாவது மாமா, சித்தப்பா போன்றவர்களைக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் உறவுமுறைகள் அதிகரிப்பதற்கு ஏற்ப, உங்களுக்குப் பந்தனங்களும் அதிகரிக்கின்றன. ஒரேநேரத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளனர் என்றும், அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனர் என்றும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. எத்தனை உறவினர் உள்ளனர் எனச் சிந்தியுங்கள். இந்நேரத்தில் உங்கள் உறவினர்களே, அனைவரிலும் குறைந்தளவில் உள்ளனர். நீங்கள் உங்கள் உறவுமுறைகள் அனைத்தையும் தந்தை ஒருவருடனேயே கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் புத்தியின் யோகம் ஒரேயொருவர் மீது அன்றி, வேறு எவரின் மீதும் இணைக்கப்படுவதில்லை. சத்தியயுகத்தில் இதனிலும் பார்க்க அதிகளவினர் இருப்பார்கள். இந்த நேரத்தில் உங்கள் பிறப்பு வைரம் போன்றது. அதியுயர்வான தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கின்றார். இப்பொழுதே நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காக வாழும்பொழுதே அவரின் மடிக்குச் செல்கின்றீர்கள். நீங்கள் தந்தையின் மடிக்குச் சென்றிருக்கின்றீர்கள். அவரிடமிருந்தே நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பிராமணர்களாகிய உங்களிலும் பார்க்க உயர்வானவர் வேறு எவரும் இல்லை. உங்கள் அனைவரது யோகமும் ஒரேயொரு தந்தையோடு மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒருவருக்கொருவர் எந்த உறவுமுறைகளையும் கொண்டிருப்பதில்லை. சகோதர, சகோதரிகள் என்ற உறவுமுறையும் உங்களை வீழ்த்துகின்றது. அனைத்து உறவுமுறைகளும் ஒரேயொருவருடனே இருக்க வேண்டும். இது புதியதொன்றாகும். நீங்கள் தூய்மையாகி வீடு திரும்ப வேண்டும். இவ்வாறாக ஞானத்தைக் கடைவதனால், நீங்கள் பிரகாசிக்க ஆரம்பிக்கின்றீர்கள். சத்தியயுகத்தின் பிரகாசத்திற்கும் கலியுகத்தின் பிரகாசத்திற்கும் இடையில் பகலுக்கும் இரவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. பக்தி மார்க்கத்தின்பொழுது, இராவண இராச்சியம் உள்ளது. இறுதியில் விஞ்ஞானத்தின் அகங்காரம் அதிகளவு உள்ளது. அவர்கள் சத்தியயுகத்துடன் போட்டியிட முயற்சி செய்கின்றார்கள். ஒரு குழந்தை மக்களிடம் வினவிய செய்தி பற்றி எழுதியுள்ளார்: நீங்கள் சுவர்க்கத்திலா அல்லது நரகத்திலா இருக்கின்றீர்கள்?’ நான்கு அல்லது ஐந்து பேர் தாம் சுவர்க்கத்தில் இருப்பதாகவும் பதில் எழுதியிருந்தார்கள் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார். அவர்களின் புத்தியில் பகலிற்கும் இரவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது. சிலர் தாம் நரகத்திலேயே உள்ளதாக நம்புகின்றார்கள், பின்னர் அவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: நீங்கள் சுவர்க்கவாசியாக ஆக விரும்புகின்றீர்களா? சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர் யார்? இவை மிகவும் இனிமையான விடயங்கள். நீங்கள் இவற்றைக் குறித்துக் கொள்கின்றீர்கள். ஆனால் அக் குறிப்புக்கள் வெறுமனே உங்கள் குறிப்புப் புத்தகங்களிலேயே உள்ளன. தேவையானபொழுது நீங்கள் அவற்றை நினைவுசெய்வதில்லை. பரமாத்மாவான பரமதந்தை சிவனே உங்களைத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நினைவுசெய்வதனால், வருமானம் ஈட்டப்படும், அல்லவா? நினைவுசெய்தல் என்ற முறை இப்பொழுது தோன்றியுள்ளது. நீங்கள் நினைவுசெய்வதனால், மிகவும் மேன்மையானவர்களாகவும்;, தூய்மையானவர்களாகவும், சுத்தமானவராகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, ஓர் அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். நீங்கள் பாபாவிடமும் வினவலாம். உலகில், உறவுமுறைகளினாலும், சொத்துக்களினாலும் சண்டைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. இங்கே உறவுமுறைகள் இருப்பதில்லை. நீங்கள் ஒரேயொரு தந்தையை அன்றி வேறு எவருக்கும் உரியவர் அல்ல. தந்தையே எல்லையற்றதின் அதிபதி ஆவார். இது மிகவும் இலகுவான ஒன்றாகும். அப்புறத்தில் சுவர்க்கமும், இப்புறத்தில் நரகமும் உள்ளன. சுவர்க்கவாசிகள் நல்லவர்களா அல்லது நரகவாசிகள் நல்லவர்களா? விவேகமானவர்கள் சுவர்க்கவாசிகளே நல்லவர்கள் என்று கூறுவார்கள். தங்களுக்குத் தந்தையைத் தெரியாததால், தாம்; சுவர்க்கவாசிகளைப் பற்றியோ அல்லது நரகவாசிகளைப் பற்றியோ அக்கறை கொள்வதில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். சிலர் தந்தையின் மடியில் இருந்து இறங்கி, மாயையின் மடிக்குச் செல்கின்றார்கள். அது ஓர் அற்புதமே! தந்தையும் அற்புதமானவர், இந்த ஞானமும் அற்புதமானது. அனைத்தும் அற்புதமானது. இந்த அற்புதங்களைப் புரிந்துகொண்டிருப்பவர்கள், இந்த அற்புதங்களைத் தமது புத்தியுடன் இணைத்திருப்பவர்களாகவே இருப்பார்கள். இராவணன் அற்புதமானவன் அல்ல, அவனது படைப்பும் அற்புதமானதல்ல. இரவிற்கும் பகலுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. கிருஷ்ணர் காளிதாவிற்குச் (ஐந்து தலை நாகம் வாழும் குளம்) சென்றதால், நாகம் தீண்டி அவர் அவலட்சணம் ஆகினார் என்று அவர்கள் சமயநூல்களில் எழுதியுள்ளார்கள். இப்பொழுது உங்களால் இவ்விடயங்கள் அனைத்தையும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்த முடியும். எவராவது ஒருவர் கிருஷ்ணரது படத்தைக் கண்டு அதனைக் கற்றால் அவர் புத்துணர்ச்சி அடைவார். இது 84 பிறவிகளின் கதையாகும். இது கிருஷ்ணரின் கதையாக இருப்பது போன்று, அது உங்களது கதையும் ஆகும். நீங்களும் சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள், அல்லவா? பின்னர் நீங்கள் திரேதாயுகத்திற்கும் செல்கின்றீர்கள். வளர்ச்சி தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. திரேதாயுகத்தில் அரசர்கள் ஆகவுள்ளவர்கள் மாத்திரமே திரேதாயுகத்திற்கு வருவார்கள் என்றில்லை. கற்காதவர்கள் கற்றவர்களுக்குத் தலைவணங்க வேண்டும். பாபா மாத்திரமே இந்த நாடகத்தின் இரகசியங்களை அறிந்துள்ளார். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்ற அனைவருமே நரகவாசிகளாகவே உள்ளனர் என்றும், நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்தினராக உள்ளீர்கள் என்பதையும் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது அதிமேன்மையானவர் ஆகுகின்றீர்கள். நீங்கள் வெளியே வாழ்வதற்கும், இங்கு வந்து ஏழு நாட்கள் தங்கி இருப்பதற்கும் பெருமளவு வித்தியாசம் உள்ளது. நீங்கள் நாரைகளின் சகவாசத்திலிருந்து வெளியேறி அன்னங்களின் சகவாசத்தில் பிரவேசிக்கின்றீர்கள். பிறரைப் பாழாக்குகின்ற பலரும் உள்ளனர். பல குழந்தைகள் முரளியில் அக்கறை செலுத்துவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: கவனயீனமாக இருக்காதீர்கள். நீங்கள் நறுமணம் கமழும் மலர்கள் ஆக வேண்டும். ஒரேயொரு விடயம் உங்களுக்கு போதுமானதாகும். அது நினைவு யாத்திரையாகும். இங்கே, நீங்கள் பிராமணர்களின் சகவாசத்தை மாத்திரமே கொண்டிருக்கின்றீர்கள். அதியுயர்வானவர்களுக்கும் அதிதாழ்ந்தவர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. குழந்தைகள் எழுதுகின்றார்கள்: பாபா, நாரைக் கூட்டத்தின் சகவாசத்தில், ஒரு தனி அன்னமாகிய நான் என்ன செய்வேன்? நாரைகள் முட்களைப் போன்று குத்துகின்றன. நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். எப்பொழுதும் ஓர் அன்னமாகவே இருங்கள். நாரைகளின் சகவாசத்தினால் ஒரு நாரையாகாதீர்கள். ஒரு கூற்றுள்ளது: இந்த ஞானத்தினால் வியப்படைந்தவர்கள், அதனைப் பிறருக்குக் கூறிய பின்னர் ஓடிவிட்டார்கள். சிறிதளவு ஞானம் இருந்தாலும் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். ஆனால் பகலுக்கும் இரவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கும். பாரிய தண்டனைக்கு உள்ளாக நேரிடும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனது வழிகாட்டல்களைப் பின்பற்றாமல், தூய்மையற்றவர் ஆகினால், நூறுமடங்கு தண்டனையைப் பெறுகின்றீர்கள். உங்களது அந்தஸ்தும் குறைக்கப்படும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் இவ்விடயங்களை மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் இந்தளவையேனும் நினைவுசெய்தால், நிச்சயமாக உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முயற்சி செய்வீர்கள். நீங்கள் முயற்சி செய்யாதிருந்தால், ஒரு காதால் கேட்டு மறுகாதால் விட்டுவிடுகின்றீர்கள் என்பதும், நீங்கள் தந்தையுடன் யோகம் செய்வதில்லை என்பதும் புரிந்துகொள்ளப்படுகின்றது. இங்கே வாழும்பொழுது, உங்களது புத்தியின் யோகம் உங்கள் குழந்தைகளுடன் இணைந்திருக்கின்றது. தந்தை கூறுகின்றார்: அவை அனைத்தையும் மறந்துவிடுங்கள். இதுவே ஆர்வமின்மை என்று அழைக்கப்படுகின்றது. இதிலும் ஒரு விகிதாசாரம் உள்ளது. உங்கள் எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றன. நீங்கள் எவருடனாவது காதல் வயப்பட்டிருந்தால், உங்கள் புத்தி அவரைப் பற்றிக் கொள்கின்றது. பாபா தினமும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இக்கண்களால் நீங்கள் பார்ப்பவை அனைத்தும் அழிக்கப்பட உள்ளது. உங்கள் புத்தியின் யோகம் புதிய உலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கட்டும். உங்கள் புத்தியின் யோகத்தை எல்லையற்ற உறவுமுறைகளுடனும் இணைத்திருங்கள். இந்த அன்பிற்கினியவர் அற்புதமானவர். பக்தி மார்க்கத்தில், மக்கள் பாடுகின்றார்கள்: நீங்கள் வரும்பொழுது, உங்களைத் தவிர வேறெவரையும் நாங்கள் நினைவு செய்ய மாட்டோம். இப்பொழுது நான் வந்திருக்கின்றேன் என்பதால் நீங்கள் உங்கள் புத்தியின் யோகத்தை எங்குமிருந்தும் அகற்றி விட வேண்டும். அவை அனைத்தும் மண்ணாகப் போகின்றன. அது உங்கள் புத்தியின் யோகத்தை நீங்கள் மண்ணோடு இணைத்திருப்பதைப் போலத் தோன்றுகின்றது. உங்களது புத்தியின் யோகம் என்னுடன் இணைந்திருந்தால், நீங்கள் அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தை உங்களை அதிகளவு விவேகமானவர் ஆக்குகின்றார். மக்களுக்குப் பக்தி என்றால் என்னவென்பதோ அல்லது ஞானம் என்றால் என்னவென்பதோ தெரியாது. நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள் என்பதால் பக்தி என்றால் என்ன என்பதையும் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். பக்தியில் எவ்வளவு துன்பம் உள்ளது என்பதையும் நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். மக்கள் பக்தி செய்து, தாம் அதிகளவு சந்தோஷத்துடன் இருப்பதாகக் கருதுகின்றார்கள். எனினும் பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: கடவுள் எங்கள் பக்திக்கான பலனைக் கொடுப்பதற்காக வருவார். கடவுள் எவ்வாறு பலனைக் கொடுப்பார் என்பதோ அல்லது அவர் அதை யாருக்குக் கொடுப்பார் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. தந்தை உங்களுக்குப் பக்திக்கான பலனைக் கொடுக்கவே வந்துள்ளார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அவரிடமிருந்தே நீங்கள் உலக இராச்சியம் என்ற பலனைப் பெறுகின்றீர்கள். இந்த வழிகாட்டல்களே, அனைத்திலும் அதி உயர்ந்த வழிகாட்டல்கள் என்று அழைக்கப்படுகின்றன. அனைவரும் இந்த வழிகாட்டல்களைப் பெறுகின்றார்கள். சிலரால் அவற்றைப் பின்பற்ற முடிகின்றது. ஆனால் ஏனையோரால் பின்பற்ற முடியவில்லை. எல்லையற்ற இராச்சியம் உருவாக்கப்படவுள்ளது. நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது உங்கள் நிலைமை எவ்வாறு ஆகியுள்ளது என்பதையும் இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்கள். மாயை முற்றாக உங்களை அழிக்கின்றாள். இது சடலங்களின் உலகம் போன்றது. பக்தி மார்க்கத்தில் நீங்கள் எவற்றையெல்லாம் செவிமடுத்தீர்களோ அவற்றை நீங்கள் ‘உண்மை, உண்மை’ என்று கூறினீர்கள். எவ்வாறாயினும், ஒரேயொரு தந்தையே உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரமே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். வெளியில் இருந்து வந்த ஒருவர் இங்கு அமர்ந்திருந்தால், அவர் எதனையும் புரிந்துகொள்ள மாட்டார். அவர் கூறுவார்;: இங்கே அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பது எதுவுமே எனக்குப் புரியவில்லை. முழு உலகமும் கடவுள் சர்வவியாபி என்று கூறுகின்றது. ஆனால் இவர்களோ அவர் தமது தந்தை என்று கூறுகின்றார்கள். அவர் தொடர்ந்தும் ஆமோதிக்காது தலையை அசைத்து மறுப்பார். நீங்கள் தொடர்ந்தும் ‘ஆம், ஆம்’ என்று கூறுவீர்கள். இதனாலேயே புதியவர்கள் இங்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நறுமணம் கமழும் மலர்கள் ஆகுவதற்கு, நீங்கள் வைத்திருக்கின்ற சகவாசத்தில் அதிகளவு எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அன்னங்களின் சகவாசத்தையே கொண்டிருங்கள். அன்னங்களாகவே இருங்கள். முரளியையிட்டுக் கவனயீனமாக இருக்காதீர்கள்.2. கர்ம பந்தனங்களிலிருந்து விடுதலையடைவதற்கு, சங்கமயுகத்தில் ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருங்கள். ஒருவருக்கொருவர் எந்த ஓர் உறவுமுறைகளையும் கொண்டிருக்காதீர்கள். எல்லைக்குட்பட்ட உறவுமுறையில் காதல் வயப்படுவதால், உங்கள் புத்தியின் யோகமானது எவர் மீதும் பற்றிக்கொள்வதை அனுமதிக்காதீர்கள். ஒரேயொருவரை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் ஸ்திரமானவராகவும் ஒரு திருப்தி ஆத்மாவாகவும் இருக்கும்பொழுது, பாதகமான சூழ்நிலைகள் அனைத்தினதும் விளையாட்டுக்களை அவதானிப்பீர்களாக.ஒரு பாதகமான சூழ்நிலை உங்களை எவ்வளவுக்கு அசைக்க நேர்ந்தாலும் ஒரு பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் ஸ்திரமானவர் ஆகுங்கள், அப்பொழுது நீங்கள் அனைத்தையும் ஒரு பொம்மலாட்டம் போன்று அனுபவம் செய்வீர்கள்; அது உண்மையானதல்ல. உங்கள் கௌரவத்தைப் பேணியவாறு விளையாட்டை அவதானியுங்கள். ஒரு திருப்தி இரத்தினமாகவும், திருப்தியாகவும் இருப்பதே சங்கமயுகத்தின் மேன்மையான கௌரவம் ஆகும். இந்தக் கௌரவத்தைப் பேணுகின்ற ஆத்மாக்கள் ஒருபொழுதும் விரக்தியடைய மாட்டார்கள். திருப்தியே பாப்தாதாவிடமிருந்தான சங்கமயுகத்தின் விசேட வெகுமதி ஆகும்.
சுலோகம்:
உங்கள் மனதின் சந்தோஷமானது உங்கள் முகத்தில் தெளிவாகத் தென்படும்வகையில், மிகவும் சந்தோஷமான இதயத்தையுடையவர்கள் ஆகுங்கள்