23.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்த ஞானம் முழுமையான மௌனத்திற்கானது. இதில் எதுவுமே கூற வேண்டியதில்லை. மௌனக் கடலான தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்யுங்கள்.

கேள்வி:
உங்கள் முன்னேற்றத்திற்கான அடிப்படை எது? உங்களால் எப்பொழுது தந்தையின் கற்பித்தல்களைக் கிரகிக்க இயலும்;?

8பதில்:
உங்கள் முன்னேற்றத்திற்கான அடிப்படையாக இருப்பது அன்பாகும். ஒரேயொரு தந்தையின் மீது உங்களுக்கு உண்மையான அன்பு இருக்க வேண்டும். நீங்கள் அண்மையில் வாழ்ந்தாலும், முன்னேற்றம் இல்லாதிருந்தால், நிச்சயமாக அன்பு குறைவாக உள்ளது. அன்பு இருந்தால் நீங்கள் தந்தையை நினைவுசெய்வீர்கள். தந்தையை நினைவு செய்வதால், அவரது கற்பித்தல்கள் அனைத்தையும் உங்களால் கிரகிக்க முடியும். முன்னேற்றம் அடைவதற்கு, உங்கள் அட்டவணையை நேர்மையாக எழுதுங்கள். தந்தையிடம் எதனையும் மறைக்காதீர்கள். ஆத்ம உணர்வில் இருந்தவாறு தொடர்ந்தும் உங்களைத் சீர்த்திருத்திக் கொள்ளுங்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளே, உங்களை ஆத்மாக்கள் என்று கருதியவாறே இங்கே அமர்ந்திருந்து தந்தையை நினைவுசெய்யுங்கள். பாபா உங்களிடம் வினவுகின்றார்: ஒரு கூட்டத்தினரின் மத்தியில் நீங்கள் சொற்பொழிவாற்றும்போது, நீங்கள் அவர்களிடம் ‘உங்களை நீங்கள் ஆத்மாக்கள் என்றா அல்லது சரீரங்கள் என்றா கருதுகின்றீர்கள்?’ என்று சதா வினவுகின்றீர்களா? உங்களை ஆத்மாக்கள் என்று கருதியவாறு இங்கே அமர்ந்திருங்கள். ஆத்மாவே மறுபிறப்பெடுகின்றார். உங்களை ஆத்மாக்கள் என்று கருதி பரமாத்மாவான பரமதந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தையை நினைவுசெய்வதன் மூலம், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதுவே யோகத் தீ என்று அழைக்கப்படுகின்றது. அசரீரியான தந்தை அசரீரியான குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்வதன் மூலம், உங்கள் பாவங்கள் அழிந்து, நீங்கள் தூய்மையானவர் ஆகுவீர்கள். பின்னர் நீங்கள் முக்தியையும் ஜீவன்முக்தியையும் பெறுவீர்கள். நிச்சயமாக அனைவரும் முக்தியின் பின்னர் ஜீவன்முக்தியைப் பெறுகின்றார்கள். எனவே ‘இங்கே அமர்ந்திருக்கும்போது, நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள்’ என்று உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. சகோதர சகோதரிகளே, உங்களை ஆத்மாக்கள் என்று கருதியவாறே இங்கமர்ந்திருந்து தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை இக் கட்டளையைக் கொடுத்துள்ளார். இதுவே நினைவு யாத்திரையாகும். தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் இணைத்தால், பிறவிபிறவியாக உள்ள உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் மீண்டும் மீண்டும் இதனை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி, அவர்களுக்கு விளங்கப்படுத்தினாலே, ஆத்மா அழிவற்றவர் என்றும், சரீரமே அழிவது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். அழிவற்ற ஆத்மா அழிகின்ற சரீரத்தைப் பெற்று, தனது பாகத்தை நடிக்கின்றார். அதன் பின்னர் சரீரத்தை நீக்கி வேறொன்றை எடுக்கின்றார். ஆத்மாக்களின் ஆதி தர்மம் அமைதியாகும். ஆத்மாக்கள் தமது சொந்தத் தர்மத்தை அறியாதுள்ளார்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதுவே பிரதான விடயமாகும். முதன்முதலில் குழந்தைகளாகிய நீங்கள் இந்த முயற்சியைச் செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தை ஆத்மாக்களாகிய உங்களிடம் இதனைக் கூறுகின்றார். இதற்கு நீங்கள் எந்தச் சமயநூலையும் எடுக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் கீதையின் உதாரணத்தை எடுத்துக் காட்டினால், அவர்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் கீதையை மாத்திரமே உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றீர்கள்; நீங்கள் ஏன் வேதங்களைக் குறிப்பிடுவதில்லை? பாபா கூறியுள்ளார்: வேதங்கள் எந்தச் சமயத்தின் சமயநூல் என அவர்களிடம் வினவுங்கள். (ஆரிய சமயம்) ஆரிய சமயம் என்று நீங்கள் எதனை அழைக்கிறீர்கள்? இந்து சமயம் என ஒன்றில்லை. ஆதி சனாதன தேவதேவியர் தர்மமே தேவ தர்மம் ஆகும். அவ்வாறாயின் ஆரிய சமயம் எது? ஆரிய சமயம் ஆரிய சமாஜத்தின் சமயமாகும். ஆரிய சமயம் எனற பெயரில் எந்தச் சமயமும் இல்லை. ஆரிய சமயத்தை ஸ்தாபித்தவர் யார்? உண்மையில், நீங்கள் கீதையையுமே குறிப்பிடக்கூடாது. உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, தந்தையை நினைவுசெய்வதே முதலாவது விடயம், அப்பொழுது நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். இந்த நேரத்தில், அனைவரும் தமோபிரதானாக உள்ளார்கள். முதன் முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு தந்தையை மாத்திரமே புகழ வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்தாலே, உங்களால் இதனைக் கூற முடியும். இவ் விடயத்தில் சில குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளார்கள். பாபா எப்பொழுதும் கூறுகின்றார்: உங்கள் நினைவு யாத்திரையின் அட்டவணையை வைத்திருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் இதயத்தையே வினவ வேண்டும்: நான் எந்தளவிற்கு நினைவில் நிலைத்திருக்கின்றேன்? குழந்தைகளாகிய உங்கள் இதயத்தில் உள்ளார்ந்த சந்தோஷம் இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் உள்ளார சந்தோஷமாக இருந்தால், நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தும்போது, அதில் ஒரு தாக்கம் இருக்கும். நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டிய முதலாவது, பிரதான விடயம்: சகோதர சகோதரிகளே, உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடலிலும் எவரும் இதனைக் கூறுவதில்லை. உண்மையில், அந்த ஒன்றுகூடல்கள் எதுவுமே ஆன்மீகமானது அல்ல. ஆனால் உண்மையில், ஒரேயொருவரினதே சத்தியத்தின் சகவாசம் ஆகும். ஏனைய அனைத்தும் பொய்யான சகவாசமாகும். இங்கே, இது முற்றிலும் புதியதாகும். எந்தச் சமயமும் வேதங்களின் மூலம் ஸ்தாபிக்கப்படவில்லை. எனவே, நாங்கள் ஏன் வேதங்களைக் குறிப்பிட வேண்டும்? எவரிடமும் இந்த ஞானம் இல்லை. அவர்கள் ‘நேற்றி, நேற்றி (இதுவும் அல்ல, அதுவும் அல்ல), அதாவது, எங்களுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். எனவே, அவர்கள் நாஸ்தீகர்கள் என்றே அதன் அர்த்தமாகும். தந்தையே இப்பொழுது கூறுகின்றார்: ஆஸ்தீகர்கள் ஆகுங்கள். உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். இவ் விடயங்களில் சிறிதளவு கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வேதங்களில் அல்ல. பல வேதங்கள், உபநிடதங்கள் உள்ளன. அவை எந்தச் சமயத்தின் சமயநூல்கள்? மக்கள் தத்தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கின்றார்கள். நீங்கள் எவர் கூறுவதையும் செவிமடுக்கக்கூடாது. தந்தை உங்களுக்கு அனைத்தையும் இலகுவாக விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஆத்மாக்கள் என்று கருதி, தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் தூய்மையானவர் ஆகுவீர்கள். ஆகையாலேயே நீங்கள் உலக வரலாற்றையும் புவியியலையும் அறிந்திருக்க வேண்டும். உங்களிடம் உள்ள இந்தத் திரிமூர்த்தி மற்றும் சக்கரப் படங்கள் பிரதானமானவை. சகல சமயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தேவ தர்மமே அனைத்திலும் முதலாவதாகும். பாபா கூறியுள்ளார்: திரிமூர்த்தி மற்றும் சக்கரம் ஆகிய படங்களைப் பெரிதாகச் செய்து, பலரும் வந்து போகின்ற டெல்கியின் பிரதான இடங்களில் வையுங்கள். அவை தகரத்தில் செய்யப்பட வேண்டும். ஏணிப்படம் ஏனைய சமயங்கள் அனைத்தையும் எடுத்துக் காட்டுவதில்லை. இவ்விரு படங்களும் பிரதானமானவை. இவற்றையே நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தையின் அறிமுகமே முதலாவது விடயம். தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். இந்த நம்பிக்கையை நீங்கள் அவர்களில் ஏற்படுத்தாது விட்டால், நீங்கள் கூறுகின்ற ஏனைய அனைத்தையும் அவர்களில் எவராலும் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் ஒரேயொரு தந்தையை புரிந்துகொள்ளாவிட்டால், ஏனைய படங்களை அவர்களுக்கு விளங்கப்படுத்துதல் பயனற்றது. அல்ஃபாவை புரிந்துகொள்ளாவிட்டால், அவர்களால் எதனையும் புரிந்துகொள்ள முடியாது. தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்காமல் வேறு எதனையும் பற்றி பேசாதீர்கள். நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து மாத்திரமே பெற்றுக் கொள்கின்றீர்கள். மிகவும் இலகுவான இவ்விடயங்களைக் குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியாதிருப்பதை இட்டு பாபா வியப்படைகின்றார்! ஆத்மாக்களாகிய உங்களின் தந்தை சிவன் ஆவார். நீங்கள் அவரிடமிருந்தே ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் உங்கள் மத்தியில் சகோதர்கள் ஆவீர்கள். நீங்கள் இதனை மறக்கும்போது, தமோபிரதான் ஆகுகின்றீர்கள். இப்பொழுது தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். படைப்பவரையும் படைப்பையும் அறிந்து கொள்ளுதலே பிரதான விடயம். எவருக்கும் அவற்றைப் பற்றித் தெரியாது. ரிஷிகளுக்கும் முனிவர்களுக்குமே அதனைப் பற்றி தெரியாது. எனவே, அனைத்திற்கும் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து அனைவரையும் ஆஸ்தீகர்கள் ஆக்குங்கள். தந்தை கூறுகின்றார்: என்னை அறிந்துகொள்வதனால், நீங்கள் அனைத்தையும் அறிந்துகொள்வீர்கள். என்னை அறியாதிருந்தால், உங்களால் எதனையும் புரிந்துகொள்ள முடியாது. எனவே நீங்கள் உங்கள் நேரத்தை அநாவசியமாக வீணாக்குகின்றீர்கள். நாடகத்திற்கு ஏற்ப, உருவாக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் சிறப்பானதாகும். எவ்வாறாயினும், நீங்கள் அதிகளவு முயற்சியைச் செய்தாலும், எவரது புத்தியிலும் அவை நிலைத்திருப்பதில்லை. குழந்தைகள் வினவுகின்றார்கள்: பாபா, நாங்கள் விளங்கப்படுத்தும் முறையில் தவறேதும் உள்ளதா? பாபா உடனடியாகப் பதிலளிக்கின்றார்: ஆம் குழந்தைகளே, தவறொன்று உள்ளது. அவர்கள் அல்பாவைப் புரிந்துகொள்ளாது விட்டால், அவர்களை உடனடியாகவே வெளியே அனுப்பி விடுங்கள். அவர்களிடம் கூறுங்கள்;: நீங்கள் தந்தையை அறியும்வரை, உங்கள் புத்தியில் எதுவுமே நிலைத்திருக்காது. நீங்கள் ஆத்ம உணர்வு ஸ்திதியில் நிலைத்திராது விட்டால், உங்கள் கண்கள் குற்றமானவையாக இருக்கும். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதும்போதே அவை குற்றமற்றவை ஆகுகின்றன. நீங்கள் ஆத்ம உணர்வுடன் இருந்தால், உங்கள் கண்கள் உங்களை ஏமாற்ற மாட்டாது. நீங்கள் ஆத்ம உணர்வில் இல்லாதிருந்தால், மாயை உங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுவாள். ஆகையாலேயே நீங்கள் முதலில் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். பாபா கூறுகின்றார்: உங்கள் அட்டவணையை என்னிடம் காட்டினால், என்னால் அறிந்து கொள்ள முடியும். இப்பொழுதும், நீங்கள் பொய் சொன்னாலோ, பாவம் செய்தாலோ அல்லது கோபப்பட்டாலோ நீங்கள் உங்கள் சொந்த உண்மையை அழித்துக் கொள்கின்றீர்கள். பாபா உங்கள் அட்டவணையைப் பார்க்கும்போதே, நீங்கள் உண்மையை எழுதியுள்ளீர்களா அல்லது அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா என்பதைப் புரிந்துகொள்கின்றார். பாபா குழந்தைகள் அனைவருக்கும் கூறுகின்றார்: உங்கள் அட்டவணையை எழுதுங்கள். யோகத்தில் நிலைத்திருக்காத குழந்தைகளால் அந்தளவு சேவை செய்ய முடியாது; அவர்களாhல் தங்களைச் சக்தியால் நிரப்பிக் கொள்ள முடியாது. பாபா கூறுகின்றார்: பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடி அளவினரே வெளிப்படுவார்கள். எவ்வாறாயினும், நீங்களே யோகத்தில் நிலைத்திருக்காதிருந்தால், உங்களால் எவ்வாறு பிறரிடம் கூற முடியும்? சந்நியாசிகள் சந்தோஷத்தைக் காகத்தின் எச்சத்தைப் போன்றது என்று கூறுகின்றார்கள். அவர்கள் சந்தோஷம் என்ற பெயரைக் கூட குறிப்பிடுவதில்லை. அதிகளவு பக்தி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் அதிகளவு சப்தமும் உள்ளது. ஆனால் உங்கள் ஞானம் மிகவும் மௌனம் அல்லது நிசப்தமானதாகும். அவர்களிடம் தந்தை மாத்திரமே மௌனக்கடல் என்று கூறுங்கள். உங்களை நீங்கள் ஆத்மாக்கள் என்று கருதி, தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! இவ் வார்த்தையைச் சொல்லவும் வேண்டாம். இந்தி மொழி இந்துஸ்தானுக்கு உரியது. எனவே, இன்னொரு மொழியான சம்ஸ்கிருதம் ஏன் உள்ளது? இப்பொழுது அந்த மொழிகளை ஒதுக்குங்கள். முதன் முதலில் ‘உங்களை ஆத்மாக்களென கருதுங்கள்’ என்ற சொற்பொழிவை ஆற்றுங்கள். தம்மை ஆத்மாக்கள் என்று கருத முடியாதவர்களும், நினைவில் நிலைத்திருக்காதவர்களும் பலர் உள்ளனர். அவர்கள் எவராலும் தமது இழப்பைப் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. தந்தையை நினைவுசெய்வதில் மாத்திரம் நன்மை உள்ளது. வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடலிலும் ‘உங்களை ஆத்மாக்கள் என்று கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள்’ என்று அவர்கள் கூறுவதில்லை. குழந்தைகள் எப்பொழுதாவது, தந்தையை நினைவுசெய்வதற்கு ஓரிடத்தில் அமர்கிறார்;களா? அவர்கள் இயல்பாகவே நடந்தும் உலாவியும் திரியும்போதெல்லாம் தமது தந்தையின் நி;னைவைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்விலிருப்பதைப் பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் அதிகளவு பேசுகின்றீர்கள், ஆனால் நீங்கள் அந்தளவு பேசக்கூடாது. நினைவு யாத்திரையே பிரதான விடயம். யோகத் தீயின் மூலமே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இந்த நேரத்தில் அனைவருமே சந்தோஷம் இழந்துள்ளனர். தூய்மையாகுவதனால் மாத்திரம் சந்தோஷம் பெறப்படுகின்றது. நீங்கள் ஆத்ம உணர்வில் இருந்தவாறு பிறரோடு பேசினால், அம்பு இலக்கைத் தாக்கும். சிலர் தாம் விகாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு மற்றவர்களை விகாரத்தில் ஈடுபடாதீர்கள் என்று கூறினால், அம்பு இலக்கைத் தாக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் யாத்திரையில் நிலைத்திருக்காததால் அம்பு இலக்கைத் தாக்காது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது, கடந்தது கடந்ததாக இருக்கட்டும். முதலில் உங்களைச் சீர்திருத்துங்கள். உங்கள் இதயத்திடம் வினவுங்கள்: நான் எந்தளவிற்கு என்னை ஓர் ஆத்மா என்று கருதுகின்றேன்? என்னை உலக அதிபதி ஆக்குகின்ற தந்தையை எந்தளவிற்கு நான் நினைவுசெய்கின்றேன்? நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதால், நாங்கள் நிச்சயமாக உலக அதிபதிகள் ஆகவேண்டும். அந்த அன்பிற்கினியவரே வந்து இப்பொழுது உங்கள் முன்னிலையில் உள்ளதால் அவர் மீது நீங்கள் அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். அன்பு என்றால் நினைவு செய்தல் ஆகும். ஒரு தம்பதியினர் திருமணம் செய்யும்போது, மனைவி தனது கணவன் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்பொழுது நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள். ஆனால் திருமணம் செய்யவில்லை. நீங்கள் விஷ்ணு தாமத்திற்குச் செல்லும் போது திருமணம் செய்வீர்கள். நீங்கள் முதலில் சிவபாபாவிடம் செல்வீர்கள். அதன் பின்னர் உங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்வீர்கள். நிச்சயதார்த்தம் செய்யப்படுவதில் உள்ள உங்கள் சந்தோஷம் குறைந்ததல்லை! நீங்கள் எவருக்காவது நிச்சயதார்த்தம் செய்யப்படும்பொழுது, அந்த நினைவு உறுதியாகுகின்றது. சத்தியயுகத்திலும் நிச்சயாதார்த்தங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் அங்கே என்றுமே நிச்சயதார்த்தம் முறிவதில்லை. அங்கே அகால மரணமும் ஏற்படுவதில்லை. அவை இங்கேயே இடம்பெறுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன், வாழும்பொழுதும் தூய்மையாக இருக்க வேண்டும். நீங்கள் அண்மையில் வாழ்ந்தாலும், அந்தளவிற்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அந்த அன்புடன் இங்கே வருகின்றவர்கள், அதிகளவு முன்னேற்றம் அடைகின்றார்கள். நினைவு இல்லாதிருந்தால், அந்தளவிற்கு அன்பும் இல்லாதுள்ளது. அப்பொழுது உங்களால் அவரது கற்பித்தல்களைக் கிரகிக்கவும் முடியாது. கடவுள் பேசுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள், ‘காமமே கொடிய எதிரி, அதன் ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதி வரை அது துன்பத்தை விளைவிக்கின்றது’ என்ற செய்தியை அனைவருக்கும்; கொடுக்க வேண்டும். நீங்களே சத்தியயுகத்தின் தூய அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது வீழ்ந்து அழுக்கானவர் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது இந்த இறுதி பிறவியில் மீண்டும் ஒருமுறை தூய்மையாகுங்கள். காமச் சிதையில் அமர்கின்ற பந்தனத்தை இரத்துச் செய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் யோக யுக்த் முறையில் பேசும்போது, அது மக்களின் புத்திகளில் இருக்;கும். ஞான வாளில் யோக சக்தி இருக்க வேண்டும். குழந்தைகள் முதலாவதாகவும், பிரதானமாகவும் கூறுகின்றார்கள்;: பாபா, நாங்கள் அதிகளவு முயற்சி செய்தபோதிலும், அரிதாக சிலரே வெளிப்படுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: யோகத்தில் நிலைத்திருந்து விளங்கப்படுத்துங்கள். யோக யாத்திரையில் நிலைத்திருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் இராவணனினால் தோற்கடிக்கப்பட்டு, விகாரமானவர் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது விகாரமற்றவர் ஆகுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதனால், உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பாபா உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார். பாபா பல வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார், ஆனால் சில குழந்தைகளால் அவற்றைச் சரியாகப் பற்றிக்; கொள்ள முடியாததால், ஏனைய விடயங்களில் ஈடுபடுகின்றார்கள். தந்தையின் செய்தியைக் கொடுப்பதே பிரதான விடயமாகும். எவ்வாறாயினும், நீங்களே தந்தையின் நினைவில் நிலைத்திருக்க முடியாது விட்டால், பிறருக்கு எவ்வாறு உங்களால் கூற முடியும்? நீங்கள் ஏமாற்ற முடியாது. விகாரத்தில் ஈடுபடாதீர்கள் என்று நீங்கள் பிறரிடம் கூறிய பின்னர், நீங்கள் ஈடுபட்டால், உங்கள் மனச்சாட்சி நிச்சயமாக உங்களை உறுத்தும். அத்தகைய ஏமாற்றுக்காரர்களும் இருக்கின்றார்கள்! ஆகையாலேயே பாபா கூறுகின்றார்: அல்பாவை அறிந்து கொள்வதே பிரதான விடயம். அல்பாவை அறிந்திருப்பதால், நீங்கள் அனைத்தையும் அறிந்து கொள்வீர்கள். ஆனால் அல்பாவை அறியாதிருந்தால், உங்களால் எதனையும் புரிந்துகொள்ள முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்ற உள்ளார்ந்த சந்தோஷத்தைப் பேணி, பிறருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். அனைவருக்கும் ஒரேயொரு தந்தையின் புகழைக் கூறுங்கள்.

2. ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதை அதிகளவு பயிற்சி செய்யுங்கள். நீங்கள் அதிகளவு பேசக்கூடாது. கடந்தது கடந்ததாக இருக்கட்டும். முதலில் உங்களைச் சீரானவர் ஆக்குங்கள். நேர்மையுடன் உங்கள் நினைவு யாத்திரைக்கான அட்டவணையை வைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் முற்றிலும் தூய்மையாக இருப்பதுடன், உங்கள் எண்ணங்களும் தூய, ஞான சொரூபமாகவும் சக்தி சொரூபமாகவும் இருப்பதாக.

தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கு, உங்கள் தூய்மையின் அத்திவாரத்தை உறுதியாக்குங்கள். அத்திவாரத்திற்காக பிரம்மச்சரியம் எனும் சத்தியத்தைச் செய்வது ஒரு பொதுவான விடயம். எனவே அத்துடன் சந்தோஷம் அடையாதீர்கள். நீங்கள் அந்தத் தூய்மையை உங்கள் பார்வையிலும் மனோபாவத்திலும் கொண்டிருப்பதை மேலும் அதிகமாக அடிக்கோடிடுங்கள். அத்துடன், உங்கள் எண்ணங்கள் தூய, ஞான சொரூபமாகவும் சக்தி சொரூபமாகவும் இருக்கட்டும். உங்கள் எண்ணங்களில் இன்னமும் பெருமளவு பலவீனம் உள்ளது. இப் பலவீனத்தை முடித்து விடுங்கள், நீங்கள் அப்பொழுது ஒரு முழுமையான தூய ஆத்மா என்று கூறப்படுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் பார்வையில் அனைவருக்குமான கருணையும் நல்லாசிகளும் இருக்கட்டும், அப்பொழுது அகங்காரத்தின் அல்லது அவமரியாதையின் சுவடு எதுவும் இருக்க முடியாது.