14.07.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 31.12.84 Om Shanti Madhuban
புதிய ஞானத்தினூடாகவும் புதிய வாழ்க்கையினூடாகவும் புதுமையின் பிரகாசத்தைக் காட்டுங்கள்.
இன்று, எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரும், இந்தப் புதிய ஞானத்தால், புதிய யுகத்தில், புதிய வாழ்க்கையைக் கொடுக்கும் பாப்தாதாவுடன் புது வருடத்தைக் கொண்டாடுவதற்காகத் தமது பௌதீக அல்லது தேவதை ரூபங்களில் இந்த அதிமேலான, அதிபுனிதமான புதிய ஆன்மீக ஒன்றுகூடலில் வந்துள்ளார்கள். குழந்தைகள் அனைவரினதும் இதயங்களின் ஊக்கமும் உற்சாகமும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் செய்த சத்தியம் என்ற தூய எண்ணங்களும் அவர்களின் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் பாப்தாதாவை வந்தடைந்துள்ளன. பாப்தாதா சகல படைப்பாளிகளுக்கும், விசேடமான உலகை மாற்றும் ஆத்மாக்களுக்கும், எப்போதும் பழைய சம்ஸ்காரங்கள், பழைய ஞாபகங்கள், பழைய மனோபாவம், இந்தப் பழைய உலகின் பழைய சரீரங்களின் விழிப்புணர்விற்கு அப்பால் இருப்பவர்களுக்கும் சகல பழைய விடயங்களை வழியனுப்பி வைப்பவர்களுக்கும் எல்லா வேளைக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அவர் கடந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு சுய இராச்சியத் திலகத்தை இடுகிறார். வழியனுப்பி வைத்ததற்காக உங்களைப் பாராட்டுவதுடன், பாபா குழந்தைகள் அனைவருக்கும் புது வருடத்திற்கு விசேடமானதொரு பரிசையும் வழங்குகிறார்: ‘நீங்கள் எப்போதும் தந்தையின் சகவாசத்தில் இருப்பீர்களாக. நீங்கள் சமமானவராகவும் இருப்பீர்களாக. இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மேன்மையான ஆன்மீக போதையை எப்போதும் கொண்டிருப்பீர்களாக’. பாபா இந்த ஆசீர்வாதம் என்ற பரிசை வழங்குகிறார்.
வருடம் முழுவதும், இந்தச் சக்திவாய்ந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்: நீங்கள் தந்தையுடன் இருக்கிறீர்கள். நீங்கள் தந்தைக்குச் சமமானவர். அப்போது, நீங்கள் இயல்பாகவே ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் எண்ணத்திலும் வழியனுப்பி வைத்ததற்கான பாராட்டுக்களைத் தொடர்ந்து அனுபவம் செய்வீர்கள். நீங்கள் பழையதை வழியனுப்பி வைக்காவிட்டால், உங்களால் புதியதற்கான பாராட்டுக்களைப் பெற முடியாது. இதனாலேயே, இன்று நீங்கள் பழைய உலகிற்கு விடை அளித்ததைப் போன்று, வருடத்துடன்கூடவே, பாபா உங்களுக்குக் கூறியுள்ள பழைய விடயங்கள் அனைத்திற்கும் விடை கொடுங்கள். இது புதிய யுகம் ஆகும். பிராமணர்களின் அழகான புதிய உலகம், புதிய உறவுகள், புதிய குடும்பம் ஆகும். புதிய பேறுகள் உள்ளன. அனைத்தும் புதியதே. நீங்கள் மற்றவர்களைப் பார்க்கும்போது, ஆத்மாவை ஆன்மீகப் பார்வையுடன் பார்க்கிறீர்கள். நீங்கள் ஆன்மீக விடயங்களையே நினைக்கிறீர்கள். ஆகவே, அனைத்தும் புதியவை, அல்லவா? சம்பிரதாயங்கள் புதியவை. அன்பு புதியது. அனைத்தும் புதியவை. எனவே, புதுமைக்காக சதா பாராட்டுக்கள். இவை ஆன்மீகப் பாராட்டுக்கள் எனப்படுகின்றன. அவை ஒரு நாளுக்கு மட்டும் அல்ல. ஆனால் நீங்கள் சதா ஆன்மீகப் பாராட்டுக்களுடன் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். நீங்கள் பாப்தாதாவினதும் முழு பிராமணக் குடும்பத்தினதும் பாராட்டுக்களாலும் ஆசீர்வாதங்களாலும் பராமரிக்கப்படுவதுடன் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். உலகிலுள்ள எவராலும் இத்தகைய புது வருடத்தைக் கொண்டாட முடியாது. அவர்கள் தற்காலிகமான காலத்திற்கே கொண்டாடுகிறார்கள். நீங்கள் அநாதியாக, எல்லா வேளைக்கும் அதைக் கொண்டாடுகிறீர்கள். அங்கோ மனித ஆத்மாக்கள் மனிதர்களுடன் கொண்டாடுகிறார்கள். ஆனால் மேன்மையான ஆத்மாக்களான நீங்களோ, தந்தையான இறைவனுடன் கொண்டாடுகிறீர்கள். நீங்கள் பாக்கியத்தை அருள்பவருடனும் ஆசீர்வாதங்களை அருள்பவருடனும் கொண்டாடுகிறீர்கள். இதனாலேயே, கொண்டாடுவதெனில், உங்களின் மடிகளை எல்லா வேளையும் பொக்கிஷங்களாலும் ஆசீர்வாதங்களாலும் நிரப்பிக் கொள்வதாகும். அவர்களுடையது, கொண்டாடுவதும் இழப்பதும். ஆனால் இங்கோ, நீங்கள் உங்களின் மடிகளை நிரப்புகிறீர்கள். இதனாலேயே,நீங்கள் அதை பாப்தாதாவுடன் கொண்டாடுகிறீர்கள், அல்லவா? அவர்கள் ‘சந்தோஷமான புது வருடம்’ எனக் கூறுகிறார்கள். நீங்களோ, ‘என்றும் சந்தோஷமான புது வருடம்’ என்று கூறுகிறீர்கள். இன்று நீங்கள் சந்தோஷமாக இருப்பதாகவும், நாளை ஒரு துன்பச் சூழ்நிலை உங்களை சந்தோஷமற்றவர்கள் ஆக்குவதாகவும் ஆகக்கூடாது. என்ன வகையான துன்பம் நிறைந்த சூழ்நிலை வந்தாலும், அத்தகைய வேளையிலும், சந்தோஷம் மற்றும் அமைதியின் சொரூபமாக இருக்கும் உங்களின் ஸ்திதியால் நீங்கள் அருள்பவர், மாஸ்ரர் சந்தோஷக்கடல் என்ற பாகங்களை நடித்து, அனைவருக்கும் அமைதியினதும் சந்தோஷத்தினதும் கதிர்களைக் கொடுக்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் துன்பம் நிறைந்த சூழ்நிலைகளின் எந்தவிதமான ஆதிக்கத்திற்கும் அப்பாற்பட்டுள்ளீர்கள். நீங்கள் சதா என்றும் சந்தோஷமாக இருப்பதை அனுபவம் செய்கிறீர்கள். எனவே, இந்த புதிய வருடத்தில் நீங்கள் என்ன புதுமையை ஏற்படுத்துவீர்கள்? நீங்கள் கருத்தரங்குகளையும் மேளாக்களையும் நடத்துவீர்கள். அனைவரும் இப்போது அந்தப் பழைய வழக்கங்கள், சம்பிரதாயங்களாலும் பழைய வழிமுறைகளாலும் செயற்பாடுகளாலும் களைப்படைந்துவிட்டார்கள். புதியது ஏதாவது நிகழ வேண்டும் என அனைவரும் உணர்கிறார்கள். என்ன புதுமை இருக்க வேண்டும் என்றோ அல்லது அது எவ்வாறு நிகழ வேண்டும் என்பதையோ அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஏதாவது புதுமைக்கு ஆசைப்படுபவர்களுக்கு இந்தப் புதிய ஞானத்தாலும் புதிய வாழ்க்கையாலும் புதுமையின் பிரகாசத்தின் அனுபவத்தைக் கொடுங்கள். இது நல்லது என்றாயினும் அவர்கள் குறைந்தபட்சம் புரிந்து கொள்வார்கள். எவ்வாறாயினும், இது புதியது, இந்தப் புதிய ஞானமே புதிய உலகைக் கொண்டு வரும் என்ற அனுபவம் இன்னமும் மறைமுகமாகவே உள்ளது. அது நிகழ வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, புதிய வாழ்க்கை என்ற நடைமுறை உதாரணத்தை அவர்களின் முன்னால் நடைமுறையாகக் காட்டுங்கள். அதன் மூலம் அவர்களால் புதிய பிரகாசத்தை அனுபவம் செய்ய முடியும். ஆகவே, புதிய ஞானத்தை வெளிப்படுத்துங்கள். ஒவ்வொரு பிராமணரின் வாழ்க்கையினூடாகவும் புதுமை அனுபவம் செய்யப்படும்போது, அவர்களால் புதிய உலகின் கணநேர தரிசனத்தைப் பெற முடியும். நீங்கள் எத்தகைய நிகழ்ச்சியைச் செய்தாலும், அனைவரும் புதுமையை அனுபவம் செய்ய வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருங்கள். ‘இதுவும் நல்லதொரு பணியே’ என்ற கூற்றை அவர்கள் கூறுவதற்குப் பதிலாக, இந்தப் புதிய ஞானம் புதிய உலகைக் கொண்டு வரும் என்பதை அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? புதிய உலகை ஸ்தாபனையின் அனுபவத்தின் அலையைப் பரப்புங்கள். ‘புதிய உலகம் வரவுள்ளது. அதாவது, எமது நல்லாசிகளின் பலனை நாம் அனைவரும் பெறவுள்ள நேரம் வந்துள்ளது’. இத்தகைய ஊக்கமும் உற்சாகமும் அவர்களின் மனங்களில் உருவாக்கப்பட வேண்டும். நம்பிக்கை இழந்துள்ள இடத்தில், அவர்களில் நல்லாசிகள் என்ற தீபங்களை ஏற்றுங்கள். (மண்ணால் செய்த விளக்குகள்). பெரியதொரு நாளைக் கொண்டாடும்போது, அவர்கள் தீபங்களை ஏற்றுவார்கள். தற்காலத்தில், இராஜரீக மெழுகுவர்த்திகளும் உள்ளன. ஆகவே, ஒவ்வொருவரின் மனதிலும் இந்தத் தீபத்தை ஏற்றுங்கள். இத்தகையதொரு புதிய வருடத்தைக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் மேன்மையான உணர்வுகளின் பலனைப் பரிசாகக் கொடுங்கள். அச்சா.
சதா மற்றவர்களுக்குப் புதிய வாழ்வினதும் புதிய யுகத்தினதும் கணநேர தரிசனத்தைக் கொடுப்பவர்களுக்கும் புதிய ஊக்கம் மற்றும் உற்சாகத்தின் வாழ்த்துக்களைத் தெரிவிப்பவர்களுக்கும், அனைவரையும் என்றும் சந்தோஷமாக ஆக்குபவர்களுக்கும் புதிய படைப்பின் அனுபவத்தை உலகிற்கு வழங்குபவர்களுக்கும் அதிமேன்மையான புதிய யுகத்தை மாற்றுகின்ற அனைவருக்கும், உலக உபகாரிகளுக்கும் சதா தந்தையின் சகவாசத்தை அனுபவம் செய்பவர்களுக்கும் சதா தந்தையின் சகபாடிகளாக இருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
புதிய வருடத்திற்கான புதிய ஊக்கமும் புதிய உற்சாகமும் எல்லா வேளையும் நிலைத்திருக்க வேண்டும் என்ற திடசங்கற்பமான எண்ணம் உங்கள் அனைவருக்கும் உள்ளதா? இதுவே புதிய யுகம். எனவே, ஒவ்வோர் எண்ணமும் அனைத்திலும் புதியதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தையும் அனைத்திலும் புதியதாக இருக்க வேண்டும். இது புதிய ஊக்கம், புதிய உற்சாகம் என்று அழைக்கப்படுகிறது. உங்களிடம் இத்தகைய திடசங்கற்பமான எண்ணம் உள்ளதா? தந்தை அநாதியானவராக இருப்பதைப் போன்று, தந்தையிடம் இருந்து பெறும் பேறுகளும் அநாதியானவை. ஆகவே, உங்களின் திடசங்கற்பமான எண்ணங்களினூடாக உங்களால் அழியாத பேறுகளைப் பெற முடியும். எனவே, நீங்கள் உங்களின் வேலைத்தலங்களுக்குத் திரும்பிச் சென்றதும், இந்த அழியாத திடசங்கற்பமான எண்ணத்தை மறக்காதீர்கள். மறப்பதெனில், பேறுகள் இல்லாதிருப்பதாகும். ஆனால், திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பதெனில் சகல பேறுகளையும் கொண்டிருத்தல் என்று அர்த்தம்.
எப்போதும் உங்களைப் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலி ஆத்மாக்களாகக் கருதுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நினைவால் நிரம்பியிருக்கும்போது, அந்த அடிகள் ஒவ்வொன்றும் பலமில்லியின் மடங்கு வருமானத்தால் நிறைந்திருக்கும். ஆகவே, எப்போதும் உங்களைத் தினமும் அளக்க முடியாதளவு வருமானத்தைச் சம்பாதிக்கும் பலமில்லியன்மடங்கு பாக்கியசாலி ஆத்மாக்களாகக் கருதிக் கொள்ளுங்கள். எப்போதும், ‘ஆஹா எனது மேன்மையான பாக்கியமே!’ என்ற சந்தோஷத்துடன் இருங்கள். சந்தோஷமாக இருக்கும் உங்களைப் பார்க்கும் மற்றவர்களும் தொடர்ந்து ஊக்கத்தைப் பெறுவார்கள். இது சேவை செய்வதற்கான இலகுவான வழிமுறையாகும். நினைவிலும் சேவையிலும் சதா போதையுடன் இருப்பவர்கள், பாதுகாப்பாகவும் வெற்றியாளராகவும் இருப்பார்கள். நினைவும் சேவையும் ஏற்படுத்தும் சக்தியால் நீங்கள் சதா தொடர்ந்து முன்னேறுவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாக எப்போதும் நினைவிற்கும் சேவைக்கும் இடையே சமநிலையைப் பேண வேண்டும். இந்தச் சமநிலை நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறச் செய்யும். அவர்களின் தைரியத்தினால், தைரியசாலிக் குழந்தைகள் சதா உதவியைப் பெறுகிறார்கள். குழந்தைகள் தைரியமான ஓரடியை எடுத்து வைக்கும்போது, அவர்கள் தந்தையிடமிருந்து ஆயிரம் அடிகள் உதவியைப் பெறுகிறார்கள்.
நள்ளிரவின் பின்னர், 01.01.85 அன்று, இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகள் புதுவருடத்திற்காக சந்தோஷப் பாடல் ஒன்றைப் பாடினார்கள். பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தந்தை மீதுள்ள அன்பினால் குழந்தைகள் நினைவிற்கான பாடல்களைப் பாடி, அன்பிலே அமிழ்ந்திருப்பதைப் போன்று, தந்தையும் குழந்தைகளின் அன்பிலே திளைத்திருக்கிறார். தந்தை அதியன்பிற்குரியவர். அத்துடன் காதலரும் ஆவார். ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்பிலும் தந்தை அன்பு கொள்கிறார். எனவே, உங்களின் சொந்தச் சிறப்பியல்பை நீங்கள் அறிவீர்களா? தந்தை உங்களின் மீது அன்பு கொள்ளும் வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சிறப்பியல்பை அறிவீர்களா?
முழு உலகிலும், இத்தகைய தந்தையின் அன்பான குழந்தைகள் வெகுசிலரே இருக்கிறார்கள். ஆகவே, பாப்தாதா புது வருடத்திற்காகப் பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களைத் தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து மிகுந்த அன்புடன் அன்பான குழந்தைகள் அனைவருக்கும் வழங்குகிறார். நீங்கள் அனைவரும் ஒரு பாடலைப் பாடியதைப் போன்று, பாப்தாதாவும் குழந்தைகளான உங்களின் சந்தோஷப் பாடல்களைப் பாடுகிறார். தந்தையின் பாடல் மனதிலே பாடப்படுகிறது. உங்களின் பாடல்கள் வார்த்தைகளால் பாடப்படுகின்றன. உங்களின் பாடல்களைக் கேட்டோம். ஆனால், உங்களுக்கும் தந்தையின் பாடல்கள் கேட்டதா?
இந்தப் புது வருடத்தில், நிச்சயமாக எப்போதும் ஒவ்வொரு செயலிலும் ஏதாவதொரு சிறப்பியல்பைக் காட்டுங்கள். ஒவ்வோர் எண்ணமும் சிறப்பானதாக இருக்க வேண்டும். அது சாதாரணமானதாக இருக்கக்கூடாது. ஏன்? விசேடமான ஆத்மாக்களின் ஒவ்வோர் எண்ணமும் வார்த்தையும் செயலும் எப்போதும் சிறப்பானதாக இருக்கும். சதா ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தொடர்ந்து முன்னேறுங்கள். ஊக்கமும் உற்சாகமும் உங்களின் விசேடமான இறக்கைகள் ஆகும். இந்த இறக்கைகளுடன் உங்களால் நீங்கள் விரும்பிய அளவிற்கு உயரே பறக்க முடியும். இந்த இறக்கைகள் உங்களுக்குப் பறக்கும் ஸ்திதியின் அனுபவத்தைக் கொடுக்கும். இந்த இறக்கைகளுடன் பறக்கும்போது, எந்தவிதத் தடையும் உங்களை வந்தடையாது. மக்கள் அண்ட வெளிக்குச் செல்லும்போது, அங்கு புவியீர்ப்பு விசையின் இழுவை இருக்காது. அதேபோன்று, பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்களைத் தடைகள் எதுவும் செய்யாது. தொடர்ந்து சதா ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறி, மற்றவர்களையும் பறக்கச் செய்யத் தூண்டுவதே விசேடமான சேவை ஆகும். சேவையாளர்கள் இந்தச் சிறப்பியல்புடன் சதா முன்னேற வேண்டும்.
ஒளி மற்றும் சக்தி வீடெனும் உங்களின் மேன்மையான ஸ்திதியால் இறைவனை வெளிப்படுத்துவதற்குக் கருவி ஆகுங்கள்.
தந்தையை வெளிப்படுத்துவதற்கு முன்னர், உங்களுக்குள்ளே உங்களுக்கான புகழ் அனைத்தையும் வெளிப்படுத்துங்கள். அப்போது மட்டுமே உங்களால் தந்தையை வெளிப்படுத்த முடியும். இதற்கு, தீவிர, எரிமலை ரூபம் என்றால், அதாவது, ஒளி - சக்தி வீட்டின் ஸ்திதி என்றால் என்னவென்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த முயற்சியில் ஈடுபட்டிருங்கள். குறிப்பாக நினைவு யாத்திரையைச் சக்திவாய்ந்ததாக ஆக்கிக் கொள்ளுங்கள். ஞான சொரூபத்தின் அனுபவசாலி ஆகுங்கள்.
பெரும்பாலான பக்தர்களின் ஆசையானது, ஒரு விநாடிக்கேனும் ஒளியைப் பார்க்க வேண்டும் என்பதே ஆகும். குழந்தைகளான உங்களின் கண்களே, அவர்களின் அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறை ஆகுகிறது. உங்களின் கண்களினூடாக, தந்தையின் ஒளிரூபத்தின் காட்சியை அருள வேண்டும். உங்களின் கண்கள் கண்களாக அன்றி, ஒளிப்பிளம்புகளாகத் தென்பட வேண்டும்.
வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களை நீங்கள் காண்பதைப் போன்று, உங்களின் கண்களும் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாகத் தென்பட வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் ஒளி ரூபத்தில் ஸ்திரமாக இருந்தால் மட்டுமே அதைக் காண முடியும். செயல்களில் இலேசான தன்மை இருக்க வேண்டும். உங்களின் ரூபம் ஒளியாக இருக்க வேண்டும். உங்களின் ஸ்திதி ஒளியாக இருக்க வேண்டும். விசேட ஆத்மாக்களான நீங்கள் இத்தகைய முயற்சியைச் செய்தால் அல்லது இத்தகைய ஸ்திதியைக் கொண்டிருந்தால், வெளிப்படுத்துகை இடம்பெறும். நீங்கள் செயல்களைச் செய்யும்போதும் பேசும்போதும், களிப்பூட்டுபவராக இருந்து தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்ளும்போதும் பற்றற்றவராக இருக்கும் பயிற்சியைச் செய்யுங்கள். உறவுமுறைகளை உருவாக்கிச் செயற்படுவது இலகுவாக இருப்பதைப் போன்று, பற்றற்றவர் ஆகுவதும் இலகுவாக இருக்க வேண்டும். அந்தப் பயிற்சி இருக்க வேண்டும். விடயங்கள் உச்சக்கட்டத்தை அடையும்போது, முடிவு ஒரு விநாடியில் நிகழும். இதுவே ஒளி ஸ்திதியின் முயற்சி ஆகும்: ஒரு கணம் ஆழமான உறவுமுறையை ஏற்படுத்துவதும் அடுத்த கணம், நீங்கள் அந்தத் தொடர்பில் இருந்த அளவிற்குப் பற்றற்றவராக இருந்து, வெளிச்சவீடாக ஆகுவதும் ஆகும். இதைப் பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் ஒளி- சக்தி வீட்டிற்குரிய ஸ்திதியை உருவாக்குவீர்கள். ஆத்மாக்கள் பலர் காட்சிகளைப் பெறுவார்கள். இதுவே வெளிப்படுத்துகைக்கான வழிமுறை ஆகும்.
வெளிப்படுத்துகைக்கான முரசங்கள் ஒலிப்பதற்கு எஞ்சியிருக்கும் இறுதிப்பருவகாலம் இதுவே ஆகும். மௌனம் நிலவும்போது எங்கும் சத்தம் ஒலிக்கும். மௌனத்தினூடாக முரசங்கள் ஒலிக்கும். வாய் என்ற முரசங்கள் அடிக்கும்போது, வெளிப்படுத்துகை இடம்பெற மாட்டாது. வெளிப்படுத்துகைக்கான முரசங்கள் ஒலிக்கும்போது, வாய் என்ற முரசங்கள் அடிப்பதை நிறுத்திவிடும். விஞ்ஞானத்தை மௌனம் வென்றதாக நினைவுகூரப்படுகிறது. அது வார்த்தைகளால் அல்ல. இப்போது, வெளிப்படுத்துகை என்ற சிறப்பியல்பு முகில்களின் பின்னால் இருந்து வெளிப்படட்டும். முகில்கள் கலைந்து செல்கின்றன. ஆனால் அவை இன்னமும் முற்றாகக் கலைந்து செல்லவில்லை. நீங்கள் எந்தளவிற்கு மாஸ்ரர் ஞான சூரியன் மற்றும் ஒளி - சக்தி வீடு என்ற சக்திவாய்ந்த ஸ்திதியை அடைகிறீர்களோ, அந்தளவிற்கு இந்த முகில்கள் தொடர்ந்து கலைந்து செல்லும். முகில்கள் முற்றாகக் கலைந்த அடுத்த விநாடியே, முரசங்கள் ஒலிக்கும்.
எங்கும் நெருப்பு எரியும்போது, அனைவரும் குளிர்மையான இடத்தை நோக்கி ஓடுவார்கள். அதேபோன்று, அமைதி சொரூபமாகி, அனைவருக்கும் அமைதியின் யாககுண்டத்தின் அனுபவத்தைக் கொடுங்கள். உங்களின் மனதினூடாகச் சேவை செய்வதன் மூலம், உங்களால் அமைதியின் யாக குண்டத்தை வெளிப்படுத்த முடியும். அமைதிக் கடலின் குழந்தைகள் எங்கிருந்தாலும், அந்த இடம் அமைதியின் யாக குண்டம் போன்று இருக்க வேண்டும்.
எல்லையற்ற கிரீடத்தைக் கொண்டிருக்கும் தந்தை பிரம்மாவைப் போன்றவராகி, வெளிப்படுத்துகையின் ஒளியையும் சக்தியையும் பரவச் செய்யுங்கள். அதன் மூலம் நம்பிக்கை அனைத்தையும் இழந்த ஆத்மாக்கள் அனைவராலும் நம்பிக்கைக் கதிர்களைக் காணக்கூடியதாக இருக்கும். அனைவரின் விரலும் அந்த விசேட இடத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஆகாயத்தை நோக்கி மேலே சுட்டிக்காட்டுபவர்களும் யாரையாவது தேடிக் கொண்டிருப்பவர்களும் இந்த ஆசீர்வாதங்களின் இடத்தில் பூமியின் நட்சத்திரங்கள் வெளிப்படுத்தப்படுவதை அனுபவம் செய்வார்கள். அவர்கள் சூரியன், சந்திரன், பால்வெளியின் நட்சத்திரங்களை இங்கே அனுபவம் செய்ய வேண்டும். ஒன்றுதிரட்டிய முறையில், சக்திவாய்ந்த ஒளி- சக்தி வீடாகி அதிர்வலைகளைப் பரப்பும் சேவையைச் செய்யுங்கள். அனைவரும் தமது மாஸ்ரர் படைப்பாளிகள், எப்போது சம்பூரணமும் முழுமையும் அடைந்து தங்களை வரவேற்பார்கள் எனக் காத்திருக்கிறார்கள். பஞ்சபூதங்களும் அவர்களை வரவேற்கும். எனவே, அவர்கள் உங்களை வெற்றி மாலையுடன் வரவேற்கும் நாள் வரவேண்டும். வெற்றி முரசங்கள் அடிக்கும்போது, வெளிப்படுத்துகைக்கான முரசங்களும் அடிக்கும். அவை அடிக்கவே வேண்டும்.
பாரதம் தந்தையின் அவதாரபூமி ஆகும். பாரதமே வெளிப்படுத்துகைக்கான ஒலி உரத்துக் கேட்பதற்குக் கருவியான தேசம் ஆகும். வெளிநாடுகளின் ஒத்துழைப்பானது பாரதத்தில் வெளிப்படுத்துகையை ஏற்படுத்தும். பாரதத்தின் வெளிப்படுத்துகைக்கான ஒலி வெளிநாடுகளைச் சென்றடையும். இந்த உலகில் வார்த்தைகளினூடாக விளைவொன்றை ஏற்படுத்தக்கூடிய பலர் உள்ளார்கள். ஆனால், உங்களின் வார்த்தைகளின் சிறப்பியல்பானது, உங்களின் வார்த்தைகள் மற்றவர்களுக்குத் தந்தையை நினைவூட்ட வேண்டும். உங்களின் ஒவ்வோர் எண்ணத்தின் வெற்றியும் ஆத்மாக்களுக்கு சத்கதியின் பாதையைக் காட்ட வேண்டும்: இது உங்களின் தனித்துவம் ஆகும். இதுவரை, இராஜயோகி ஆத்மாக்கள் மேன்மையானவர்கள், இராஜயோகம் மேன்மையானது, அவர்களின் செயல்கள் மேன்மையானவை, அவர்களின் மாற்றம் மகத்தானது என்பதே பிரபல்யமாக உள்ளது. அதேபோன்று, சர்வசக்திவானே உங்களுக்கு நேரடியாகக் கற்பிக்கிறார் என்பதை இப்போது வெளிப்படுத்துங்கள். பௌதீக உலகில் இப்போது ஞானசூரியன் தோன்றியுள்ளார் என்பதை வெளிப்படுத்துங்கள்.
தந்தையின் வெளிப்படுத்துகையானது விரைவாக ஏற்பட வேண்டும் என நீங்கள் நினைத்தால், இது விரைவாக நிகழ்வதற்கான வழிமுறையானது: ஒவ்வொருவரும் சுயத்திற்கும் மற்றவர்களுக்கும் சாதகமான மனோபாவத்தைக் கிரகிக்க வேண்டும் என்பதே ஆகும். ஞானம் நிறைந்தவர் ஆகுங்கள். ஆனால், உங்களின் மனதில் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிராதீர்கள். எதிர்மறையான எதுவும் குப்பையே. ஆகவே, உங்களின் மனோபாவத்தையும் அதிர்வலைகளையும் சூழலையும் சக்திவாய்ந்தது ஆக்குங்கள். எங்கும் உள்ள சூழல் சம்பூரணமாகத் தடைகளில் இருந்து விடுபட்டு, கருணைநிறைந்ததாகி, நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் நிறைந்திருக்கும்போது, உங்களின் ஒளி - சக்தி ஸ்திதியானது வெளிப்படுத்துகை நிகழுவதற்குக் கருவி ஆகும். நிலையான சேவைக்கும் தபஸ்யாவிற்கும் இடையில் உள்ள சமநிலையினூடாக வெளிப்படுத்துகை நிகழும். சேவைக்கான கலந்துரையாடல்களை நீங்கள் உருவாக்குவதைப் போன்று, சகல விட்டில் பூச்சிகளும் உங்களின் விசேட இடங்களுக்கு, ‘பாபா, பாபா!’ எனக் கூறியவண்ணம் வந்தடையும் வகையில் தபஸ்யா செய்யுங்கள். விட்டில் பூச்சிகள் வந்து ‘பாபா, பாபா’ எனக் கூறும்போது, வெளிப்படுத்துகை இடம்பெறுகிறது எனக் கூற முடியும்.
ஊடகத்துறையின் மூலம் வெளிப்படுத்துகைக்கான ஒலியைப் பரப்பக்கூடிய மைக்குகளைத் தயாராக்குங்கள். கடவுள் ஏற்கனவே வந்துவிட்டார், கடவுள் ஏற்கனவே வந்துவிட்டார் என நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, அது பொதுவானது என அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இப்போது மற்றவர்கள் அதை உங்களின் சார்பாகக் கூற வேண்டும். அதிகாரம் படைத்தவர்கள் இதைக்கூற வேண்டும். அனைத்திற்கும் முதலில், அவர்கள் உங்களைச் சக்திகள் என வெளிப்படுத்த வேண்டும். சக்திகள் வெளிப்படுத்தப்படும்போது, நிச்சயமாகத் தந்தை சிவனும் வெளிப்படுத்தப்படுவார்.
ஆசீர்வாதம்:
நீங்கள் யோகம் செய்து, யோகத்தைக் கொண்டு நடத்துவதுடன், யோகத்துடன் பரிசோதனை செய்யும் சிறப்பியல்பை உடைய ஆத்மா ஆகுவீர்களாக.குழந்தைகளான நீங்கள் யோகம் செய்வதிலும், யோகத்தைக் கொண்டு நடத்துவதிலும் கெட்டிக்காரர்களாக இருப்பதை பாப்தாதா பார்த்துள்ளார். எனவே, யோகம் செய்வதிலும், யோகத்தைக் கொண்டு நடத்துவதிலும் நீங்கள் கெட்டிக்காரர்களாக இருப்பதைப் போன்று, யோகத்துடன் பரிசோதனை செய்வதிலும் மற்றவர்களைப் பரிசோதனை செய்வதற்குத் தூண்டுவதிலும் கெட்டிக்காரர்கள் ஆகுங்கள். யோகத்துடன் பரிசோதனை செய்யும் வாழ்க்கையே இப்போது தேவைப்படுகிறது. அனைத்திற்கும் முதலில், சோதித்துப் பாருங்கள்: எனது சம்ஸ்காரங்களை மாற்றுவதில் நான் எந்தளவிற்குப் பரிசோதனை செய்கிறேன்? இது ஏனெனில், மேன்மையான உலகை உருவாக்குவதற்கு மேன்மையான சம்ஸ்காரங்களே அத்திவாரம் ஆகும். அத்திவாரம் உறுதியாக இருந்தால், ஏனைய விடயங்களும் இயல்பாகவே பலம்வாய்ந்தவை ஆகும்.
சுலோகம்:
அனுபவசாலி ஆத்மாக்களால் ஒருபோதும் எந்தவிதமான சூழலின் ஆதிக்கத்துக்கு உட்படவோ அல்லது எந்தவொரு சகவாசத்தினால் நிறமூட்டப்படவோ முடியாது.