13.11.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுதல் என்றால் தந்தைக்கு மரியாதை அளிப்பது என்று அர்த்தமாகும். தங்கள் சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்றுபவர்கள் அவரை அவமரியாதை செய்கின்றார்கள்.
கேள்வி:
வீட்டில், தங்கள் குடும்பங்களுடன் வாழ்பவர்களுக்கு எவ்விடயத்தில் பாபா ஆட்சேபனை தெரிவிப்பதில்லை, ஆனால், அவர்களுக்கு எவ்வழிகாட்டலைக் கொடுக்கின்றார்?
பதில்:
பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, அனைவருடனும் தொடர்பை வைத்திருங்கள். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்யலாம். நீங்கள் மக்களின் தொடர்பில் வர வேண்டும். நீங்கள் நிற ஆடைகளை அணிய வேண்டுமாயின், அணியுங்கள். பாபா இதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை. ஆனால் தந்தை கொடுக்கின்ற ஒரேயொரு வழிகாட்டலானது: குழந்தைகளே, உங்கள் சரீர உறவினர்கள் அனைவர் மீதும், உங்கள் சொந்தச் சரீரங்களின் மீதுமுள்ள பற்றை அகற்றி, என்னை நினைவுசெய்யுங்கள்.
ஓம் சாந்தி.
சிவபாபா இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், அதாவது, தனக்குச் சமமானவர்கள் ஆகுவதற்கு, அவர் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றார். நான் ஞானக் கடலாக இருப்பதைப் போன்று, குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும். உங்கள் அனைவராலுமே அவ்வாறு ஆகமுடியாது என்பது இனிய குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த, தனிப்பட்ட முயற்சியைச் செய்ய வேண்டும். பாடசாலையில் பல மாணவர்கள் கற்கிறார்கள், ஆனால், அவர்கள் அனைவரும் திறமைச்சித்தி அடைவதில்லை. இருப்பினும், அவர்கள் அனைவரையும் அவர்களுடைய ஆசிரியர் முயற்சி செய்யத் தூண்டுகிறார். குழந்தைகளாகிய நீங்களும் முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் என்னவாக ஆகுவீர்கள் எனத் தந்தை வினவும்பொழுது, நீங்கள் அனைவரும் பதிலளிக்கின்றீர்கள்: நாங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாகவும், சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் ஆகுவதற்காகவே இங்கு வந்துள்ளோம். அது சரி, ஆனால் நீங்கள் உங்கள் செயற்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். தந்தையே அதிமேலானவர். அவரே ஆசிரியரும், குருவும் ஆவார். எவருக்கும் இந்தத் தந்தையைத் தெரியாது. சிவபாபாவே எங்கள் பாபாவும், ஆசிரியரும், சற்குருவும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், உண்மையில் அவர் எவ்வாறானவர் எனப் புரிந்துகொள்வது சிரமமாகும். நீங்கள் தந்தையை அறிந்து கொண்டாலும், ஆசிரியராகவும் குருவாகவும் இருக்கும் அவரது பாகத்தை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் மீது மரியாதை கொண்டிருக்கவும் வேண்டும். மரியாதை கொண்டிருப்பது என்பதன் அர்த்தம் என்ன? மரியாதை கொண்டிருத்தல் என்றால் தந்தை கற்பிப்பதை, நன்றாகக் கற்பதாகும். தந்தை மிகவும் இனிமையானவர். உங்களுக்குள் சந்தோஷப் பாதரசம் உயர்ந்திருக்க வேண்டும். சந்தோஷப் பரவசம் இருக்க வேண்டும்! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே வினவ வேண்டும்: நான் அத்தகைய சந்தோஷத்தைக் கொண்டுள்ளேனா? அனைவரும் ஒரேமாதிரி இருக்க முடியாது. ஒவ்வொருவரும் எவ்வாறு கற்கிறார்கள் என்பதிலும் பெரும் வேறுபாடு உள்ளது. அந்தப் பாடசாலைகளிலும் கூட பெருமளவு வேறுபாடு உள்ளது. அங்கு ஒரு சாதாரணமான ஆசிரியரே கற்பிக்கின்றார், ஆனால் இங்கோ இவர் அசாதாரணமானவர். இவரைப் போல வேறோர் ஆசிரியர் இருக்க முடியாது. அசரீரியான தந்தையே ஆசிரியராகவும் ஆகுகின்றார் என்பது எவருக்குமே தெரியாது. “ஸ்ரீ கிருஷ்ணர்” என்ற பெயரை அவர்கள் பயன்படுத்தியபொழுதிலும் அவர் தந்தையாக இருக்க முடியாது என்பதையேனும் அவர்கள் அறியவில்லை. கிருஷ்ணர் ஒரு தேவர். “கிருஷ்ணர்” என்ற பெயர் பலருக்கு உள்ளது. எவ்வாறாயினும், மக்கள் “கிருஷ்ணா” என்று கூறியவுடன் ஸ்ரீ கிருஷ்ணரின் ரூபமே அவர்களின் முன் தோன்றுகின்றது. அவர் ஒரு சரீரதாரி. இச் சரீரம் அந்த ஒரேயொருவருக்கு உரியதல்ல என்பது உங்களுக்குத் தெரியும். அவரே கூறுகின்றார்: நான் அதனைக் கடனாகப் பெற்றுள்ளேன். முன்னர் இவர் ஒரு மனிதர், இப்பொழுதும் இவர் ஒரு மனிதNர் இவர் கடவுள் அல்ல. அசரீரியான ஒரேயொருவர் மாத்திரமே கடவுள். அவர் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குப் பல இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும், உங்களுக்குத் தந்தையையும், ஆசிரியரையும் இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்வது சாத்தியமாக இல்லை; ஏனெனில் நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். உங்கள் புத்தி சரீரதாரிகள் மீது ஈர்க்கப்படுகின்றது. இவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்ற நம்பிக்கை இன்னமும் உங்;கள் புத்;தியில் இல்லை. நீங்கள் மேலும் மறந்து விடுகிறீர்கள். மாணவர்கள் தங்கள் ஆசிரியரை எப்பொழுதாவது மறப்பார்களா? விடுதியில் வசிப்பவர்கள் ஒருபொழுதும் மறப்பதில்லை. விடுதியில் வசிக்கின்ற மாணவர்கள் நிச்சயமாக உறுதியாக நினைவுசெய்கின்றார்கள், ஆனால் இங்கோ, நீங்கள் அந்த உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் விடுதியில் உங்கள் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகவே அமர்ந்திருக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் மாணவர்;களாக இருந்தபொழுதிலும், அந்த உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை. உங்களின் தனிப்பட்ட சொந்த முயற்சிக்கு ஏற்ப உங்கள் அந்தஸ்தை நீங்கள் ஒவ்வொருவரும் பெறுகிறீர்கள் என்பதை பாபா அறிவார். அக் கல்வியில், சிலர் சட்டநிபுணர்கள் ஆகுகிறார்கள், ஏனையோர்; பொறியியலாளர்களாக அல்லது மருத்துவர்களாக ஆகுகின்றார்கள். இங்கே நீங்கள் உலக அதிபதிகளாக ஆகுகின்றீர்கள். ஆகவே, அவ்வாறான மாணவர்களின் புத்தி எவ்வாறிருக்க வேண்டும்? அவர்களது நடத்தையும், பேசுகின்ற முறையும் மிக நன்றாக இருக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் ஒருபொழுதும் அழக்கூடாது; நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஒருபொழுதும் விரக்தியில் அழக்கூடாது. விரக்திக் கூக்குரலிடுவதே மிக மோசமான அழுகையின் ரூபமாகும். தந்தை கூறுகின்றார்: அழுபவர்கள் இழக்கிறார்கள். அவர்கள் அதிமேன்மையான உலக இராச்சியத்தை இழந்து விடுகிறார்கள். ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்காகவே நீங்கள் வந்துள்ளதாகக் கூறுகிறீர்கள், ஆனால் நீங்கள் அதற்கேற்ப நடந்து கொள்வதில்லை. அனைவரும் வரிசைக்கிரமமாக முயற்சி செய்கிறார்கள். சிலர் மிக நன்றாகச் சித்தியடைந்து ஒரு புலமைப்பரிசிலையும் பெறுகிறார்கள், ஆனால் ஏனையோர் சித்தியடைவதில்லை. அனைவரும் வரிசைக்கிரமமானவர்களே. உங்கள் மத்தியிலும் கூட, சிலர் கற்கிறார்கள், சிலர் கற்பதே இல்லை. கிராமங்களிலிருந்து வரும் மக்கள் கற்பதை விரும்புவதில்லை, எவ்வாறாயினும் நீங்கள் அவர்களைப் புல் வெட்டுமாறு கேட்டால், அவர்கள் அதனைச் சந்தோஷமாகச் செய்வார்கள். அவர்கள் அதனை ஒரு சுதந்திரமான வாழ்க்கை என்று கருதுகின்றார்கள். கற்பதை ஒரு பந்தனம் என அவர்கள் கருதுகிறார்கள். செல்வந்த நிலச் சொந்தக்காரர்கள் உட்பட, அவ்வாறான பலர் இருக்கின்றார்கள். தாங்கள் சுதந்திரமாகவும், மிகவும் சந்தோஷமாகவும் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள், குறைந்தபட்சம் அது ஒரு தொழில் என அழைக்கப்படுவதில்லை. ஏனையோர் அலுவலகம் போன்றவற்றில் ஒரு வேலையைச் செய்ய வேண்டும். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கே கற்பிக்கின்றார். நீங்கள் ஒரு தொழிலைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் உங்களுக்குக் கற்பிப்பதில்லை. இக் கல்வி மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகவுள்ளீர்கள். இக்கல்வி மிக மேன்மையானது. நீங்கள் முற்றிலும் சுதந்திரமான, உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். இது மிக எளிதான ஒரு விடயம். இந்தக் கல்வி மூலம் மாத்திரமே நீங்கள் அத்தகைய மேன்மையான, சக்கரவர்த்திகளாகவும், சக்கரவர்த்தினிகளாகவும், தூய்மையானவர்களாகவும் ஆக முடியும். எந்தச் சமயத்தைச் சேர்ந்த மக்களும் இங்கு வந்து கற்கலாம் என நீங்கள் கூறுகிறீர்கள். இந்தக் கல்வி மிகவும் மேன்மையானது என்று அவர்கள் புரிந்துகொள்வார்கள். உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காகவே தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். உங்கள் புத்தி இப்பொழுது மிகவும் பரந்ததாகவும், சூட்சுமமாகவும் ஆகிவிட்டது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக உங்கள் புத்தி எல்லைக்குட்பட்ட புத்தியிலிருந்து இப்பொழுது ஓர் எல்லையற்ற புத்தியாகி விட்டது. நீங்கள் ஏனையோரை உலக அதிபதிகள் ஆக்குகின்றீர்கள் என்ற பெருஞ் சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் அங்கும் தொழில்களும் உள்ளன. அங்கு பணிப்பெண்கள், லேலையாட்கள்; போன்ற அனைவரும் தேவைப்படுகிறார்கள். கற்காதவர்கள் கற்றவர்களின் சுமையைச் சுமப்பார்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் நன்றாகக் கற்றால் இவ்வாறு ஆக முடியும். நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள் எனக் கூறுகிறீர்கள், ஆனாலும், நீங்கள் கற்காவிட்டால், என்னவாக ஆகுவீர்கள்? நீங்கள் கற்காவிட்டால், தந்தையை அந்தளவு மரியாதையுடன் நினைவுசெய்யவில்லை என்றே அர்த்தமாகும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அதிகளவு நினைவுசெய்தால் உங்கள் பாவங்களும் அதிகளவில் அழிக்கப்படும். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் உங்கள் வழிகாட்டல்களுக்கு ஏற்பவே செயல்படுவோம். தந்தை இவரினூடாக எங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுப்பார். எவ்வாறாயினும், சிலர் இவரின் வழிகாட்டல்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அவர்கள் தொடர்ந்தும் மனிதர்களின் பழைய, தீய வழிகாட்டல்களையே பின்பற்றுகிறார்கள். சிவபாபா இந்த இரதத்தினூடாக வழிகாட்டல்களைக் கொடுப்பதை அவர்கள் கண்டபொழுதிலும், தொடர்ந்தும் தங்கள் சொந்தக் கட்டளைகளையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் சதப் பெறுமதியான, சிப்பிப் பெறுமதியான வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்றுகிறார்கள். இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுவதனால், இப்பொழுது நீங்கள் பெறுமதியற்ற சிப்பி போலாகி விட்டீர்கள். இப்பொழுது சிவபாபாவாகிய இராமர் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். நம்பிக்கை வைப்பதன் மூலம் வெற்றி உள்ளது. இதில் ஒருபொழுதும் இழப்பு ஏற்படுவதில்லை. தங்கள் புத்தியில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு மாத்திரமே தந்தை எந்த இழப்பையும் இலாபமாக மாற்றி விடுவார். தங்கள் புத்தியில் சந்தேகத்தைக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்தும் உள்ளார மூச்சுத் திணறுவார்கள். தங்கள் புத்தியில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஒருபொழுதும் மூச்சுத் திணற மாட்டார்கள்; அத்துடன் அவர்கள் ஒருபொழுதும் இழப்பை அனுபவம் செய்ய முடியாது. பாபாவே ஓர் உத்தரவாதத்தைக் கொடுக்கின்றார்: நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றும்பொழுது ஒருபொழுதும் இழப்பு எதுவும் ஏற்படாது. மனிதர்களின் கட்டளைகள், சரீரதாரிகளின் கட்டளைகள் என அழைக்கப்படுகின்றன. இங்கே, மனிதர்களின் கட்டளைகள் மாத்திரமே உள்ளன. மனித அறிவுறுத்தல்களும், கடவுளின் அறிவுறுத்தல்களும், தேவர்களின் அறிவுறுத்தல்களும் உள்ளன என நினைவுகூரப்பட்டுள்ளன. நீங்கள் இப்பொழுது கடவுளின் அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளீர்கள். அதன் மூலம் நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக ஆகுகிறீர்கள். பின்னர், அங்கே சுவர்க்கத்தில், நீங்கள் சந்தோஷத்தை மாத்திரம் அனுபவம் செய்கிறீர்கள்; அங்கு துன்பம் எதுவும் இல்லை; அங்கு சதா சந்தோஷமே உள்ளது. இந்நேரத்தில் நீங்கள் அந்த உணர்வை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் எதிர்காலத்தை உணர்கிறீர்கள். இது இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகின்ற, அதிமங்களகரமான சங்கமயுகமாகும். தந்தை கூறுகின்றார்: நான் கல்பம் கல்பமாக, சங்கமயுகத்தில் வருகிறேன். அந்த ஒரேயொருவரை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். நீங்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, எவ்வாறாயினும், வீட்டில் உங்கள் குடும்பத்துடன் இருங்கள். நீங்கள் ஆடைகள் போன்றவற்றை மாற்றவேண்டும் என யார் கூறுவது? நீங்கள் விரும்பியவற்றை அணியுங்கள்! நீங்கள் பலரின் தொடர்பில் வரவேண்டும். நிற ஆடைகளை நீங்கள் அணிவதற்கு எந்த ஆட்சேபனையும்; இல்லை. நீங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியும்! அதனால் எப்பிரச்சனையும் இல்லை. தந்தை கூறுகின்றார்: சரீர உணர்வையும், சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து விடுங்கள். நீங்கள் விரும்பியவற்றை நீங்கள் அணிய முடியும். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். இந்த உறுதியான நம்பிக்கை இருக்கட்டும். ஆத்மாக்களே தூய்மையானவர்களாகவும் தூய்மையற்றவர்களாகவும் ஆகுகின்றார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஒரு மகாத்மா என்பவரை மகா ஆத்மா என அழைக்கின்றார்கள். “மகா பரமாத்மா” என ஒருபொழுதும் கூறுவதில்லை. அவ்வாறு கூறுவது சரியாகப்படவில்லை. இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய, நல்ல கருத்துக்கள் ஆகும். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதி அளிக்கின்ற சற்குரு. அங்கு ஒருபொழுதும் அகால மரணம் ஏற்படுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது, பாபா உங்களை மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆக்குகின்றார் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். முன்னர் இது உங்கள் புத்தியில் இருக்கவில்லை. சக்கரத்தின் கால எல்லை எவ்வளவு என்பதையேனும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. உங்களுக்கு இப்பொழுது அனைத்தும் நினைவூட்டப்பட்டுள்ளது. ஓர் ஆத்மாவே பாவாத்மா அல்லது புண்ணியாத்மா என அழைக்கப்படுகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் அறிவீர்கள். ‘பாவ பரமாத்மா’ என்று ஒருபொழுதும் கூறப்படுவதில்லை. கடவுள் சர்வவியாபி என்று கூறுவது மிகவும் விவேகமற்றது! தந்தை இங்கமர்ந்திருந்து, இதனை விளங்கப்படுத்துகின்றார். தந்தை மாத்திரமே உங்களைப் பாவாத்மாக்களில் இருந்து புண்ணியாத்மாக்களாக மாற்றுவதற்காக 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அவர் ஒருவரை மாத்திரம் மாற்றுவதில்லை; அவர் குழந்தைகள் அனைவரையும் மாற்றுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை மாற்றுகின்ற எல்லையற்ற தந்தையாவேன். நான் நிச்சயமாகக் குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுப்பேன். சத்தியயுகத்தில், தூய ஆத்மாக்கள் மாத்திரமே உள்ளனர். இராவணனை வெற்றி கொள்வதன் மூலமே நீங்கள் தூய, புண்ணியாத்மாக்கள் ஆகுகின்றீர்கள். மாயை எத்தனை தடைகளை ஏற்படுத்துகின்றாள் என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். அவள் உங்களை முழுமையாக மூச்சுத் திணற வைக்கிறாள். மாயையுடன் எவ்வாறு ஒரு யுத்தம் இடம்பெறுகின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எவ்வாறாயினும் அவர்கள் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையிலான ஒரு யுத்தத்தையும், அவர்களின் சேனைகள் போன்றவற்றையும் காட்டியுள்ளார்கள். எவருக்கும் இந்த யுத்தத்தைப் பற்றித் தெரியாது; இது மறைமுகமானது. உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். ஆத்மாக்களாகிய நீங்கள் மாயையுடனேயே யுத்தம் செய்ய வேண்டும். ‘காமமே உங்கள் கொடிய எதிரி’ எனத் தந்தை கூறுகின்றார். நீங்கள் யோகசக்தியின் மூலம் அதனை வெற்றி கொள்கின்றீர்கள். எவரும் யோகசக்தி என்பதன் அர்த்தத்;தைப் புரிந்துகொள்வதில்லை. சதோபிரதானாக இருந்தவர்களே, தமோபிரதான் ஆகியுள்ளார்கள். தந்தையே கூறுகின்றார்: நான் இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். இவர் தமோபிரதான் ஆகிவிட்டார், உங்களுக்கும் அது பொருந்துகிறது. பாபா இதனை ஒருவருக்கு மாத்திரம் கூறுவதில்லை; அவர் இதனை அனைவருக்கும் வரிசைக்கிரமமாகக் கூறுகின்றார். வரிசைக்கிரமமாக, யார், எவ் இலக்கத்தைப் பெறுவார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, மேலும் அதிகளவு அறிந்து கொள்வீர்கள். உங்களுக்கு மாலை பற்றிய காட்சியும் கொடுக்கப்படும். பாடசாலையில் உள்ள குழந்தைகளை வகுப்பு மாற்றம் செய்யும்பொழுது, அவர்களுக்குப் பெறுபேறுகள் கொடுக்கப்படும்பொழுது அவர்களால் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். பாபா ஒரு குழந்தையிடம் வினவினார்: உங்கள் பரீட்சைத்தாள்கள்; எங்கிருந்து வந்தன? குழந்தை பதிலளித்தார்: இலண்டனில் இருந்து. இப்பொழுது உங்கள் பரீட்சைத்தாள்கள்; எங்கிருந்து வரும்? உங்கள் பரீட்சைத்தாள்கள்; மேலிருந்தே வரும்;; நீங்கள் அனைத்தினது காட்சிகளையும் காண்பீர்கள். இது அத்தகைய அற்புதமான கல்வி. உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதை எவரும் அறியார். அவர்கள் கூறுகின்றார்கள்: கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார். அனைவரும் வரிசைக்கிரமமாகக் கற்பதால், அவர்களின் சந்தோஷமும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. நீங்கள் அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய விரும்பினால், கோப, கோபியரைக்; கேளுங்கள் என நினைவு கூரப்பட்டுள்ளது. இதுவே இறுதி ஸ்திதியாகும். ஒரு குழந்தை என்றுமே விழ மாட்டார் என்பதைத் தந்தை அறிந்திருந்தபொழுதிலும், என்ன நடக்கும் என்பதை எவராலும் ஒருபொழுதும் கூற முடியாது என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அவர்கள் கற்பதில்லை; அது அவர்களின் பாக்கியத்தில் இல்லை. அவர்களுக்கு ‘உங்கள் வீட்டை ஆயத்தம் செய்வதற்காகச் செல்லுங்கள்’ என்று சிறிதளவு தூண்டலைக்; கொடுத்தால், அவர்கள் அவ் உலகிற்கு விரைந்து செல்வார்கள். அவர்கள் ஓர் உச்சத்திலிருந்து மறு உச்சத்திற்குச் செல்கின்றார்கள். அவர்களின் நடத்தையும், அவர்கள் பேசும் பண்பும் அதற்கேற்பவே உள்ளன. தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கிடைத்தால், தாங்கள் தனியாகச் சென்று வாழலாம் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்களின் நடத்தையிலிருந்து இது புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை இல்லாது, பரிதவிப்பில் இங்;கே அமர்ந்திருக்கின்றார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். ஞானத்தின் முதல் எழுத்தையே புரிந்துகொள்ளாத பலர் உள்ளனர். சிலர் கற்பதற்காக அமர்வதும் இல்லை; மாயை அவர்கள் கற்பதை அனுமதிப்பதில்லை. அத்தகைய ஆத்மாக்கள் சகல நிலையங்களிலும் உள்ளார்கள். அவர்கள் ஒருபொழுதும் கற்பதற்காக வருவதில்லை. இது ஓர் அற்புதமாகும். இது அத்தகைய மேன்மையான ஞானமாகும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார்! பாபா அவர்களை ஒன்றைச் செய்ய வேண்டாம் என்று கூறும்பொழுது, அவர்கள் அதைச் செவிமடுக்காது, பிழையான செயல்களையே செய்கின்றார்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. எனவே மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை சகல வகையினரும் தேவைப்படுகிறார்கள். அந்;தஸ்தில் வேறுபாடு உள்ளது. இங்கும், அந்தஸ்து வரிசைக்கிரமமானது. அவ்வாறாயின் என்ன வித்தியாசம் உள்ளது? அங்கே, ஆயுட்காலம் நீண்டதாகும், அத்துடன் சந்தோஷமும் உள்ளது, ஆனால் இங்கோ, ஆயுட்காலம் குறுகியது, அத்துடன் துன்பமும் உள்ளது. இந்த அற்புதமான விடயங்கள் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளன. இந்த நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள்! ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரே பாகத்தையே நடிக்கின்றீர்கள். நீங்கள் கல்பம் கல்பமாகத் தொடர்ந்தும் அதனையே நடிக்கின்றீர்கள். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா அத்தகைய பெரிய பாகத்தால் நிரப்பப்பட்டுள்ளார்! ஆத்மாக்கள் ஒரேமாதிரியான முகச்சாயல்களைப் பெறுவதுடன், அதே செயற்பாட்டையும் செய்கின்றார்கள். உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டதே நடக்கின்றது. இச் சக்கரம் மீண்டும் மீண்டும் சுழலும். நீங்கள் சதோபிரதான், சதோ, இரஜோ, தமோ ஆகிய ஸ்திதிகளினூடாகச் செல்வீர்கள். இதில் குழப்பம் அடைவதற்கு எதுவுமில்லை. சரி, நீங்கள் உங்களை ஓர் ஆத்மா எனக் கருதுகின்றீர்களா? ஆத்மாக்களின் தந்தை சிவபாபா என்பதை நீங்கள் புரிந்துகொள்;கின்றீர்கள். சதோபிரதான் ஆகுபவர்களே மீண்டும் ஒருமுறை தமோபிரதான் ஆகுகின்றார்கள். அதன்பின்னர், தந்தையை நினைவுசெய்வதனால், நீங்கள் மீண்டும் சதோபிரதான் ஆகுவீர்கள். இது மிகவும் நல்லது. இத்துடன் நீங்கள் அவர்களுக்குக் கூறுவதை நிறுத்தி விட வேண்டும். எல்லையற்ற தந்தையே இந்த சுவர்க்க ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார் என்று அவர்களிடம் கூறுங்கள். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். தந்தை ஞானத்தைக் கொடுக்கின்றார். இதில் சமயநூல்கள் போன்ற கேள்விக்கு இடமில்லை. ஆரம்பத்தில் சமயநூல்கள் எங்கிருந்து வந்தன? விரிவாக்கம் இடம்பெறும்பொழுதே சமயநூல்கள் உருவாக்கப்படுகின்றன. சத்தியயுகத்தில் சமயநூல்கள் இருப்பதில்லை. சம்பிரதாய வழக்கங்கள் எதுவும்; இல்லை. பெயரும், ரூபமும் மாற்றமடையும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இபபோது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் என்றும் விரக்தியினால் அழக்கூடாது. நீங்கள் உலக அதிபதிகளாகப் போகின்றவர்கள் என்பதால்; உங்கள் செயற்பாடும், நீங்கள் பேசுகின்ற முறையும் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பது உங்கள் புத்தியில் இருக்கட்டும். நீங்கள் என்றுமே அழக்கூடாது.
2. புத்தியில் நம்பிக்கை உடையவராகவிருந்து, தொடர்ந்தும் தந்தையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள். என்றுமே குழப்பமடையவோ, மூச்சுத்திணறவோ வேண்டாம். நம்பிக்கை மூலம் வெற்றி ஏற்படுகிறது. ஆகவே, உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றாதீர்கள்;; அவை சதப் பெறுமதியானவை மாத்திரமே ஆகும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய முயற்சிகளில் சுய முன்னேற்றத்தை அனுபவம் செய்து, ஒரு வெற்றி நட்சத்திரம் ஆகுவீர்களாக.
தங்கள் முயற்சிகளில் சுய முன்னேற்றத்தையும் வெற்றியையும் அனுபவம் செய்பவர்களே வெற்றி நட்சத்திரங்கள். தங்கள் தனிப்பட்ட முயற்சிகளில் அவர்கள் ஒருபொழுதுமே “இது நடைபெறுமா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது”, “என்னால் இதனைச் செய்ய முடியுமா அல்லது இல்லையா” என்னும் அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் தோல்வியின் சிறிதளவு சுவட்டையேனும் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் வெற்றியைத் தங்களில் ஓர் உரிமையாக அனுபவம் செய்கின்றார்கள்; அவர்கள் தொடர்ந்தும் இலகுவாகவும் இயல்பாகவும் வெற்றி பெறுகின்றார்கள்.சுலோகம்:
ஒரு சந்தோஷ சொரூபமாகச் சந்தோஷத்தைக் கொடுங்கள், உங்கள் முயற்சிகளில் ஆசீர்வாதங்கள் சேர்க்கப்படும்.