20.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, வெற்றியும் தோல்வியும் நிறைந்த உங்கள் வரலாற்றை நினைவு செய்யுங்கள். இது இன்பமும் துன்பமும் நிறைந்த நாடகமாகும். முக்காற் பங்கு சந்தோஷமும், காற் பங்கு துன்பமும் உள்ளன. இன்பமும் துன்பமும் சமமாக இருப்பதில்லை.

கேள்வி:
எவ்வாறு இந்த எல்லையற்ற நாடகம் மிக அற்புதமானதாக உள்ளது?

பதில்:
முழு உலகத்திலும் ஒவ்வொரு விநாடியும் என்ன இடம்பெறுகின்றதோ அது மீண்டும் மீண்டும் அவ்வாறே இடம்பெறும் என்பதாலேயே இந்த எல்லையற்ற நாடகம் மிகவும் அற்புதமானதாகும். இந்த நாடகம் ஒரு பேனைப் போன்று ஊர்ந்து செல்கின்றது. அது தொடர்ந்தும் நகர்கின்றது. ஒரு நகர்வு அடுத்த நகர்வைப் போன்றிருக்க மாட்டாது. ஆகையாலேயே இந்த நாடகம் மிகவும் அற்புதமானது. மனிதர்கள் எப் பாகங்களை நடித்தாலும் - அது நல்லதோ அல்லது தீயதோ - அவை நிச்சயிக்கப்பட்டவை. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள்.

ஓம் சாந்தி.
‘ஓம் சாந்தி’ என்பதன் அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகியுள்ளீர்கள். ‘நான் ஓர் ஆத்மா’ என்ற அறிமுகத்தை ஆத்மாவே கொடுக்கின்றார். ஆத்மாக்களின் ஆதி தர்மம் அமைதியாகும். இது ஆத்மாக்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிகழ்விற்கான நேரமாகும். வீடு செல்வதற்கான இந்த நிகழ்வை உங்களுக்கு கூறியவர் யார்? இதனை நிச்சயமாக தந்தையே உங்களுக்குக் கூறுவார். ஓ ஆத்மாக்களே, பழைய உலகம் இப்பொழுது முடிவடையவுள்ளது. நடிகர்கள் அனைவரும் இப்பொழுது இங்கே வந்துள்ளார்கள். வெகுசில ஆத்மாக்களே மேலே எஞ்சியுள்ளார்கள். அனைவரும் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பின்னர் அப்பாகங்கள் மீண்டும் மீண்டும் நடிக்கப்பட வேண்டும். உண்மையில், குழந்தைகளாகிய நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். முதலில் நீங்கள் சத்தியயுகத்திற்கு வந்தீர்கள், பின்னர், மறுபிறவிகள் எடுத்து, இப்பொழுது உங்களுக்கு உரிமையில்லாத இராச்சியத்தில் இருக்கின்றீர்கள்;. ஆத்மாக்களாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். வேறு எவருக்கும் இது தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள். தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் கீழே வந்து, இப்பொழுது இராவணனின் அந்நிய இராச்சியத்தில் வீழ்ந்துள்ளீர்கள். நீங்கள் உங்களுக்குரிய இராச்சியப் பாக்கியத்தை இழந்துள்ளீர்கள். இற்றைக்கு 5000 வருடங்களின் முன்னர், நீங்கள் சத்தியயுகத்தில் தேவதர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்கு ஆட்சிசெய்தீர்கள், ஏனெனில் நீங்கள் அரைக்கல்பத்திற்கு ஏணியில் இறங்க வேண்டியிருந்தது, சத்தியயுகத்திலிருந்து நீங்கள் திரேதாயுகத்திற்குச் சென்று, பின்னர் துவாபர யுகத்திற்கும் கலியுகத்திற்கும் செல்ல வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் வெற்றி தோல்வியின் வரலாற்றை நினைவுசெய்யுங்கள். சத்தியயுகத்தில் நீங்கள் சந்தோஷ உலகின் சதோபிரதான் வாசிகளாக இருந்தீர்கள் என்பதை அறிவீர்கள். அதன்பின்னர், மறுபிறவிகள் எடுத்ததால், நீங்கள் துன்ப உலகில் உக்கிய நிலையை அடைந்துள்ளீர்கள். ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்டகாலம் பிரிந்திருந்ததால், ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையிடமிருந்து மீண்டும் ஒருமுறை ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நீண்டகாலம் பிரிந்து இருந்தீர்கள். நீங்களே முதன்முதலில் பிரிந்து சென்று, அதன் பின்னர் உங்கள் சந்தோஷப் பாகங்களைத் தொடர்ந்தும் நடித்தீர்கள். அதன்பின்னர் உங்கள் இராச்சியப் பாக்கியம் அபகரிக்கப்பட்டது. நீங்கள் துன்ப பாகங்களை நடிக்க ஆரம்பித்தீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அமைதியும் சந்தோஷமும் நிறைந்த இராச்சியப் பாக்கியத்தை அடைய வேண்டும். உலகில் அமைதி நிலவ வேண்டும் என ஆத்மாக்கள் கூறுகின்றார்கள். இந்நேரத்தில் தமோபிரதானாக இருப்பதால், உலகில் அமைதியின்மை நிலவுகின்றது. இது அமைதியும் அமைதியின்மையும், இன்பமும் துன்பமும் நிறைந்த ஒரு நாடகமாகும். 5000 வருடங்களின் முன்னர் உலகில் அமைதி நிலவியது என்பது உங்களுக்குத் தெரியும். அசரீரியான உலகமே அமைதி தாமம் ஆகும். ஆத்மாக்கள் வாழும் அவ் இடத்தில் அமைதியின்மை என்ற கேள்விக்கே இடமில்லை. சத்தியயுகத்தில் உலகில் அமைதி நிலவியது, பின்னர், நீங்கள் கீழே வீழ்ந்ததால், அமைதியின்மை நிலவியது. இப்பொழுது உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று அனைவருமே விரும்புகின்றார்கள். பெரும் தத்துவமான பிரம்ம தத்துவத்தை உலகம் என்று அழைக்க முடியாது. அது ஆத்மாக்களாகிய நீங்கள் வாழ்கின்ற, பிரம்மாந்தம் ஆகும். ஆத்மாக்களின் ஆதிதர்மம் அமைதியாகும். ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கினால், அமைதி அடைகின்றார், இன்னொரு சரீரத்தை எடுத்தால் மாத்திரமே அவரால் ஒலியெழுப்பவோ அல்லது அசையவோ முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு ஏன் வந்துள்ளீர்கள்? நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, எங்களுடைய அமைதி உலகிற்கும் சந்தோஷ உலகிற்கும் எங்களை அழைத்துச் செல்லுங்கள். அமைதி தாமத்திலோ அல்லது முக்தி தாமத்திலோ சந்தோஷம் அல்லது துன்பத்திற்கான பாகம் இருப்பதில்லை. சத்தியயுகமே சந்தோஷ உலகமாகும். கலியுகமே துன்ப உலகமாகும். நீங்கள் எவ்வாறு கீழிறங்கினீர்கள் என்பது ஏணிப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் ஏணியில் கீழிறங்குகின்றீர்கள். நீங்கள் ஒருமுறை மாத்திரமே மேலேறுகின்றீர்கள். நீங்கள் தூய்மையாகும்பொழுது மேலேறுகின்றீர்கள். தூய்மையற்றவர் ஆகும்பொழுது, கீழிறங்குகின்றீர்கள். தூய்மையாகாமல் உங்களால் மேலேற முடியாது. ஆகையாலேயே நீங்கள் கூவி அழைக்கின்றீர்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். நீங்கள் முதலில் தூய அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். அதன்பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். முதலில் சந்தோஷம் உள்ளது, பின்னர் துன்பம் உள்ளது. சந்தோஷமே அதிகளவில் உள்ளது. சமமாக இருந்தால் அதனால் எந்த நன்மையும் இல்லை. அதனால் எப்பயனும் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட இந்த நாடகத்தில், முக்காற்பங்கு சந்தோஷமும், காற்பங்கு துன்பமும் உள்ளன. சிறிதளவு துன்பமே உள்ளது. ஆகையாலேயே இது சந்தோஷமும் துன்பமும் நிறைந்த நாடகம் என்று அழைக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் அவரை அறிந்துகொள்ள முடியாது என்பது தந்தைக்குத் தெரியும். நான் எனது சொந்த அறிமுகத்தையும், உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் அறிமுகத்தையும் உங்களுக்குக் கொடுத்துள்ளேன். நான் உங்களை நாஸ்தீகர்களில் இருந்து ஆஸ்தீகர்கள் ஆக்கியுள்ளேன். நீங்கள் மூவுலகையும் அறிவீர்கள். பாரதமக்கள் கல்பத்தின் காலஎல்லையை அறியாதுள்ளார்கள். பாபா மீண்டும் ஒருமுறை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். தந்தை மறைமுகமான ஆடையில் அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார். பாபாவும் மறைமுகமானவரே. மக்கள் தம்மைப் பௌதீகமாகவே அறிந்துள்ளார்கள், எனினும் அவர்களுக்கு ஆத்மாக்களைத் தெரியாது. ஒவ்வோர் ஆத்மாவும் அழிவற்;றவர், சரீரம் அழியக்கூடியது. நீங்கள் ஒருபொழுதும் ஆத்மாவையோ அல்லது ஆத்மாவின் தந்தையையோ மறந்துவிடக்கூடாது. நாங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றோம். நீங்கள் தூய்மையானவர் ஆகும்பொழுது, உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். இந்த இராவண இராச்சியத்தில் நீங்கள் தூய்மையற்றவராக இருப்பதாலேயே தந்தையைக் கூவி அழைக்கின்றீர்கள். உங்களுக்கு இரு தந்தையர்; உள்ளனர். பரமாத்மாவான பரமதந்தையே ஆத்மாக்கள் அனைவரினதும் ஒரேயொரு தந்தை. சகோதரர்கள் அனைவரும் தந்தையல்ல. பாரதத்தில் அதர்மம் தழைத்தோங்கும்பொழுதே, சகல சமயங்களைச் சேர்ந்த ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையான பரலோகத் தந்தையை அனைவரும் மறக்கும்பொழுதே, அவர் வருகின்றார். இதுவும் ஒரு நாடகமே. நாடகத்தில் நிகழ்பவை அனைத்தும் மீண்டும் இடம்பெறும். ஆத்மாக்களாகிய நீங்கள் பல தடவைகள் உங்கள் பாகங்களை நடிப்பதற்கு வந்து, திரும்பவும் சென்றுள்ளீர்கள். இந்த நாடகம் அநாதியாக, ஒரு பேனைப் போன்று ஊர்ந்து செல்கின்றது. அது என்றும் முடிவடைவதில்லை. அது தொடர்ந்தும் நகர்கின்றது. ஆனால் ஒரு நகர்வு அடுத்ததைப் போன்று இருப்பதில்லை. இது மிகவும் அற்புதமான நாடகம். விநாடிக்கு விநாடி உலகில் நடைபெறுகின்ற அனைத்தும் மீண்டும் இடம்பெறும். ஒவ்வொரு சமயத்தினதும் பிரதான நடிகர்கள் காட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் தமது சொந்தச் சமயத்தை ஸ்தாபிக்கின்றார்கள். அவர்கள் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதில்லை. பரமதந்தை மாத்திரமே ஒரு சமயத்தையும், ஓர் இராச்சியத்தையும், ஒரு வம்சத்தையும் ஸ்தாபிக்கின்றார். அவர்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிக்கின்றார்கள், பின்னர் அனைவரும் அவர்களைத் தொடர்ந்து கீழே வரவேண்டும். மீண்டும் அனைவரையும் அழைத்துச் செல்பவர் யார்? தந்தையாவார். சிலர் மிகச் சிறிய பாகங்களை நடித்த பின்னர் அவை முடிவடைகின்றன. பூச்சிகளும், கிருமிகளும் போன்று, அவர்கள் தோன்றிய பின்னர் உடனடியாக மரணித்து விடுகின்றார்கள். அவர்களுக்கு நாடகத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லாததைப் போன்றுள்ளது. உங்கள் கவனம் எங்கு செல்கின்றது? ‘ஓ தந்தையான கடவுளே!இ ஓ பரமாத்மாவான பரமதந்தையே!’ என அனைவரும் கூறுகின்ற படைப்பவரிடமே செல்கின்றது. அவரே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை. முதலில் ஆதி சனாதன தர்மமே இருந்தது. இது மிகவும் பெரிய, எல்லையற்ற விருட்சமாகும். பல அபிப்பிராயங்கள் உள்ளதுடன், அத்தகைய பல்வேறு விடயங்களும் தோன்றியுள்ளன. அவற்றைக் கணக்கிடுவது கூட கடினமாக உள்ளது. அத்திவாரம் இல்லாதுள்ளது. ஏனைய அனைவரும் இன்னமும் இங்குள்ளனர். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஏனைய அனைத்துச் சமயங்களும் இங்குள்ளபொழுதே, நான் வருகின்றேன். ஆனால் ஒரேயொரு தர்மம் மாத்திரம் இருப்பதில்லை. அத்திவாரம் மறைந்துள்ளது. அவற்றின் உருவங்கள் மாத்திரம் எஞ்சியுள்ளன. ஒரேயொரு அநாதியான தர்மம் மாத்திரமே இருந்தது. பின்னரே ஏனைய அனைத்தும் வந்தன. சுவர்க்கத்திற்குச் செல்லாத பலர் திரேதாயுகத்தில் உள்ளனர். நீங்கள் இப்பொழுது சுவர்க்கமான, புதிய உலகிற்குச் செல்லவே முயற்சி செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை நினைவுசெய்தால், சுவர்க்கத்திற்குச் செல்வதுடன், தூய்மையாகித் தெய்வீகக் குணங்களையும் கிரகிப்பீர்கள். எவ்வாறாயினும் விருட்சத்தில் பல கிளைகளும், பிரிவுகளும் உள்ளன. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது விருட்சத்தையும், சுவர்க்கத்தில் எவ்வாறு அந்த அநாதியான தேவர்கள் இருந்தனர் என்பதும் தெரியும். இப்பொழுது சுவர்க்கம் இல்லை. இப்பொழுது நரகமே உள்ளது. ஆகையாலேயே தந்தை ஒரு கேள்விப் படிவத்தைத் தயாரித்துள்ளார்: நீங்கள் சத்தியயுகத்துச் சுவர்க்கவாசியா? அல்லது கலியுக நரகவாசியா? நீங்கள் சத்தியயுகத்திலிருந்து, கலியுகத்திற்குக் கீழிறங்கி வருகின்றீர்கள். அவ்வாறாயின், பின்னர் எவ்வாறு மேலே செல்வீர்கள்? தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: நீங்கள் எவ்வாறு தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள்? உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி என்னை நினைவுசெய்தால், இந்த யோகத்தீயில் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். முன்னைய கல்பத்திலும் நான் உங்களுக்கு ஞானத்தைக் கற்பித்து உங்களைத் தேவர்கள் ஆக்கினேன். நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். பின்னர், உங்களை நிச்சயமாகச் சதோபிரதான் ஆக்கிய ஒருவர் இருக்க வேண்டும். எந்த மனிதரும் தூய்மையாக்குபவராக இருக்க முடியாது. மக்கள் ‘தூய்மையாக்குபவரே! ஓ கடவுளே!’ என்று கூறும் பொழுது அவர்களின் புத்தி மேல் நோக்கிச் செல்கின்றது. அவர் அசரீரியானவர். ஏனைய அனைவரும் நடிகர்கள். அவர்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கின்றார்கள். நான் மறுபிறவிக்கு அப்பாற்பட்டவன். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அதனை எவருக்கும் தெரியாது. உங்களுக்கும் அது தெரிந்திருக்கவில்லை. நீங்கள் இப்பொழுது சுயதரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் ஆத்மாவின் தர்மத்தில் ஸ்திரமாக இருக்கின்றீர்கள். நீங்கள்; ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழலுகின்றது என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆகையாலேயே நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். வேறெவருக்கும் இந்த ஞானம் இல்லை. எனவே, நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். தந்தையே எங்களது ஆசிரியர். அவர் மிகவும் இனிய பாபா ஆவார். பாபாவைத் தவிர இனிமையானவர் எவரும் இல்லை. பரலோகத் தந்தையின் குழந்தைகளாகிய நீங்கள் அப்பாற்பட்ட உலகில் (பரலோகம்) வாழ்கின்ற ஆத்மாக்கள். தந்தையும் பரந்தாமத்திலேயே வாழ்கின்றார். ஒரு லௌகீகத் தந்தைக்குக் குழந்தைகள் உள்ளனர். அவர் அவர்களைப் பராமரிக்கின்றார், அவர்களே வாரிசுகள் என்பதால் இறுதியில் அனைத்தையும் அவர்களுக்கே கொடுக்கின்றார். அதுவே நியதி. அதுபோன்றே, நீங்களும் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது அனைவரும் சப்தமற்ற தங்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அங்கே, அமைதியுள்ளது, பின்னர் அசைவும், அதன்பின்னர் பேச்சும் உள்ளது. சில குழந்தைகள் சூட்சும உலகிற்குச் சென்று காட்சிகளைக் காண்கின்றார்கள். அப்பொழுது ஆத்மாக்கள் சரீரத்திலிருந்து நீங்குவதில்லை. நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை அனைத்தும் விநாடிக்கு விநாடி மீண்டும் இடம்பெறுகின்றது. ஒரு விநாடி அடுத்த விநாடியைப் போன்றிருப்பதில்லை. ஒரு மனிதர் எப்பாகத்தை நடிக்கின்றாரோ - அது நல்லதோ அல்லது தீயதோ - அது நிச்சயிக்கப்பட்டது. சத்தியயுகத்தில் நல்லதொரு பாகம் உள்ளது. கலியுகத்தில் தீய பாகம் உள்ளது. கலியுகத்தில் மக்கள் மிகவும் சந்தோஷமற்றுள்ளார்கள். இராம இராச்சியத்தில் தீய விடயங்கள் இடம்பெறுவதில்லை. இராம இராச்சியமும், இராவண இராச்சியமும் ஒரேநேரத்தில் இருக்க முடியாது. நாடகத்தை அறியாததால், அவர்கள் கடவுள் சந்தோஷம், துன்பம் இரண்டையும் கொடுக்கின்றார் என்று கூறுகின்றார்கள். சிவபாபாவை எவருக்கும் தெரியாததைப் போன்றே இராவணனையும் எவருக்கும் தெரியாது. அவர்கள் ஒவ்வொரு வருடமும் சிவனின் பிறப்பைக் கொண்டாடுவதைப் போன்றே, இராவணனின் இறப்பையும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகின்றார்கள். எல்லையற்ற தந்தை இப்பொழுது தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார்: உங்களை ஆத்மாக்கள் என்று கருதி, உங்கள் தந்தையான, என்னை நினைவுசெய்யுங்கள். தந்தை மிகவும் இனிமையானவர். பாபா அமர்ந்திருந்து தன்னைத்தானே புகழ்ந்து பாட மாட்டார். அவரிடமிருந்து சந்தோஷத்தைப் பெற்றவர்கள், அவரின் புகழ் பாடுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தையே அன்புக்கடல். சத்தியயுகத்தில், நீங்கள் அன்பானவரும், இனிமையானவருமாக இருக்கின்றீர்கள். அங்கும் விகாரங்கள் இருக்கின்றன என்று எவராவது கூறினால், அங்கே இராவண இராச்சியம் இருப்பதில்லை என்று அவரிடம் கூறுங்கள். துவாபரயுகத்திலேயே இராவண இராச்சியம் ஆரம்பமாகியது. அனைத்தும் உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் வரலாற்றையும், புவியியலையும் வேறெவரும் அறியார். இந்நேரத்தில் மாத்திரமே அது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். தேவர்களை விட மேலானவர்கள் எவரும் இல்லை. ஆகையாலேயே, அங்கே குருமார்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இங்கே பல குருமார்கள் உள்ளனர். ஒரேயொரு சற்குரு மாத்திரமே உள்ளார். சீக்கியர் அமரத்துவ சற்குருவைப் பற்றிப் பேசுகின்றார்கள். சற்குரு மாத்திரமே அமரத்துவ உருவமானவர். அவரே மரணத்திற்கெல்லாம் மரணமான, மகாகாலனாவார். அந்த மரணம் வந்து, ஒரேயொருவரையே எடுத்துச் செல்கின்றது. தந்தை கூறுகின்றார்: நான் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கின்றேன். உங்கள் அனைவரையும் நான்; தூய்மையாக்கி, முதலில் அமைதி தாமத்திற்கும் பின்னர் சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்கின்றேன். எனக்குரியவர்களாகிப் பின்னர் மாயைக்கு உரியவர்கள் ஆகுகின்றவர்கள் பற்றிக் கூறும்பொழுது ‘சற்குருவை இகழ்பவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது’ என்று கூறப்படுகின்றது. அவர்களால் சுவர்க்கத்தின் முழுச் சந்தோஷத்தையும் பெற முடியாது. அவர்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுவார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, எனக்கு அவதூறு ஏற்படுத்தாதீர்கள். நான் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவதால் நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடாது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களைச் சந்தோஷ உலகின் அதிபதிகள் ஆக்கவே வந்துள்ளேன். தந்தையே அன்புக் கடலாவார். ஆனால் மனிதர்களோ துன்பம் கொடுப்பதிலேயே கடல்களாக உள்ளார்கள். அவர்கள் காமவாளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கின்றார்கள். அங்கே இவ்விடயங்கள் இடம்பெற மாட்டாது. அங்கே, இராம இராச்சியமே உள்ளது. குழந்தைகள் யோகசக்தியினால் பிறக்கின்றார்கள். இந்த யோகசக்தியினால், நீங்கள் முழு உலகத்தையும் தூய்மையாக்குகின்றீர்கள். நீங்கள் போராளிகள், ஆனால் எவரும் அறியாதவர்கள். நீங்கள் மிகவும் பிரபல்யமானவர் ஆகுகின்றீர்கள், பின்னர் பக்தி மார்க்கத்தில், இறைவிகளான உங்களுக்குப் பல ஆலயங்கள் கட்டப்படுகின்றன. அமிர்தக் கலசம் தாய்மார்களின் தலையில் வைக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. ‘தாய்ப் பசு’ என்றே கூறப்படுகின்றது. இதுவே ஞானம். தண்ணீர் என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் சிவசக்தி சேனையினர். அவர்கள் உங்களைப் பிரதிசெய்து, குருமார் ஆகியுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது சத்தியப் படகில் அமர்ந்துள்ளீர்கள். ‘எனது படகை அக்கரைக்குச் சேருங்கள்’ என்று மக்கள் பாடுகின்றனர். உங்கள் படகை அக்கரை சேர்க்கின்ற, படகோட்டியை நீங்கள் இப்பொழுது கண்டுள்ளீர்கள். அவர் உங்களை விலைமாதர் இல்லத்திலிருந்து சிவாலயத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அவர் தோட்டத்தின் அதிபதி என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் முட்காட்டைப் பூந்தோட்டம் ஆக்குகின்றார். அங்கே, சந்தோஷத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் இங்கேயோ துன்பமே உள்ளது. நீங்கள் அச்சடிக்க வேண்டும் என்று பாபா கூறிய துண்டுப் பிரசுரத்தில் எழுதப்பட்டுள்ளது. ‘உங்கள் இதயத்தையே கேளுங்கள்: நீங்கள் சுவர்க்க வாசியா? அல்லது நரகவாசியா?’ நீங்கள் பல கேள்விகளைக் கேட்கலாம். ஊழல் நிறைந்துள்ளது என்று அனைவருமே கூறுகின்றார்கள். ஒரு நேரத்தில், நிச்சயமாக, மேன்மையானவர்களும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் தேவர்களாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் இப்பொழுது இல்லை. தேவ தர்மம் மறையும் பொழுதே, கடவுள் ஒரே தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு வர வேண்டும். அதாவது, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், உங்களுக்காக நீங்கள் சுவர்க்கத்தை ஸ்;தாபிக்கின்றீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. துன்பக்கடல் அல்லாது தந்தையைப் போன்று ஓர் அன்புக்கடல் ஆகுங்கள். தந்தைக்கு அவதூறு விளைவிக்கத்தக்க எச்செயல்;களையும் செய்யாதீர்கள். மிக இனிமையானவரும் அன்பானவரும் ஆகுங்கள்.

2. யோக சக்தியினால் தூய்மையானவராகி, பிறரையும் அவ்வாறு ஆக்குங்கள். முட்காட்டைப் பூந்தோட்டமாக மாற்றுகின்ற சேவையைச் செய்யுங்கள். உங்கள் இனிய பாபாவே தந்தையும், ஆசிரியரும் என்பதால் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள். அவரைப் போன்று இனிமையானவர் வேறு எவரும் இல்லை.

ஆசீர்வாதம்:
நீங்கள் மரணித்து வாழ்ந்து, சிறப்பியல்புகளின் சம்ஸ்காரங்களை உங்கள் இயல்பான சுபாவமாக்கி, சாதாரணமானவற்றை முடித்து விடுவீர்களாக.

ஒருவர் என்ன சுபாவத்தைக் கொண்டுள்ளாரோ, அது இயல்பாகவே செயற்படுகின்றது – நீங்கள் எதனையும் சிந்திக்கத் தேவையில்லை, ஆக்குவதற்குத் தேவையில்லை, செய்யவும் தேவையில்லை, ஆனால் அது இயல்பாகவே நடைபெறுகின்றது. அதேபோன்று, விசேட ஆத்மாக்களின் சிறப்பியல்புகளைக் கொண்டிருப்பதே, மரணித்து வாழ்ந்து, ஒரு புதிய பிறப்பை எடுத்துள்ள, பிராமணர்களின் சுபாவம் ஆகும். சிறப்பியல்புகளுக்குரிய இச்சம்ஸ்காரமானது உங்கள் இயல்பான சுபாவம் ஆகட்டும், அப்பொழுது ‘இது எனது சுபாவம்’ என்பது ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் வெளிப்படும். சாதாரணமானவை கடந்த காலத்தின் சுபாவமே அன்றி, தற்போதைய நேரத்தின் சுபாவமல்ல, ஏனெனில் நீங்கள் இப்பொழுது ஒரு புதிய பிறப்பை எடுத்துள்ளீர்கள். புதிய பிறவியின் சுபாவமானது சிறப்பியல்புகளுக்கு உரியதாகும், அது சாதாரணமானவைக்கு உரியதல்ல.

சுலோகம்:
கற்களுடன் அல்லாமல், சதா ஞான இரத்தினங்களுடன் விளையாடுபவர்களே, இராஜரீகமானவர்கள் ஆவர்.