29.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒருவரது பெயரிலும், உருவத்திலும் சிக்கிக் கொள்வதே மிகவும் கடுமையான நோயாகும். அகநோக்குடையவராகி, இந்நோயைச் சோதித்துப் பார்த்து, அதிலிருந்து விடுதலை அடையுங்கள்.

கேள்வி:
‘பெயர், உருவம்’ என்ற நோயை முடித்து விடுவதற்கான வழி என்ன? இந்நோயினால் எத்தகைய இழப்பு ஏற்படுகின்றது?

8பதில்:
‘பெயரும் உருவமும்’ என்ற நோயை முடித்துவிடுவதற்கு, ஒரேயொரு தந்தை மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். நினைவுசெய்யும்பொழுது உங்கள் புத்தி சரீரதாரிகளிடம் அலைபாயுமாயின் தந்தையிடம் அதனை நேர்மையாகக் கூறிவிடுங்கள். தந்தையிடம் அதைப் பற்றிக் கூறுவதால், அவர் உங்களை மன்னித்து விடுவார். சத்திர சிகிச்சை நிபுணரிடம் உங்களது நோயை மறைக்காதீர்கள். நீங்கள் பாபாவிடம் அதனைக் கூறினால், பின்னர் எச்சரிக்கப்படுவீர்கள். உங்களது புத்தி ஒருவரது பெயரிலும், உருவத்திலும் பற்றிக் கொண்டிருக்குமாயின் அதனைத் தந்தையுடன் தொடர்புபடுத்த முடியாது. அத்தகைய ஆத்மாக்கள் சேவை செய்வதற்குப் பதிலாக அவச்சேவையே செய்கின்றனர். அவர்கள் தந்தையை அவமதிக்கின்றனர். இவ்வாறாகத் தந்தையை அவமதிப்பவர்கள் கடுந்தண்டனையைப் பெறுபவர்கள் ஆகுகின்றார்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறவுள்ளீர்கள் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனிடமிருந்து ஆஸ்தியைப் பெற முடியாது. சகோதரனாயினும் அல்லது சகோதரியாயினும் எவருக்குமே ஒருவரது ஸ்திதியும் தெரியாது. பாப்தாதா அனைத்துச் செய்திகளையும் பெறுகின்றார். இது நடைமுறை ரீதியானது: நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள் என்பதையும், எந்தளவிற்கு ஒருவரது பெயரிலோ அல்லது உருவத்திலோ அகப்பட்டிருக்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்: ஆத்மாவாகிய எனது மனோபாவம் எங்கே ஈர்க்கப்படுகின்றது? ஓவ்வோர் ஆத்மாவிற்கும் தான் ஓர் ஆத்மா எனத் தன்னைக் கருத வேண்டும் என்பது தெரியும். எனது மனோபாவம் சிவபாபாவை நோக்கி மாத்திரம் உள்ளதா அல்லது வேறெவரதும் பெயர் அல்லது உருவத்தை நோக்கி உள்ளதா? இயன்றவரை உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்வதுடன், ஏனைய அனைவரையும் தொடர்ந்தும் மறந்திடுங்கள். உங்கள் இதயத்திடம் வினவுங்கள்: எனது இதயம் தந்தையைத் தவிர வேறு எங்கேனும் செல்கின்றதா? எனது புத்தி வியாபாரம், இல்லற விடயங்கள் போன்றவற்றில் அல்லது நண்பர்கள், உறவினர்கள் மீது திசைதிரும்புகின்றதா? நீங்கள் அகநோக்குடையவராகி, உங்களில் இதனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் இங்கு வந்து அமர்ந்திருக்கும்பொழுது உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். இங்கு, எவராவது ஒருவர் உங்கள் முன்னிலையில் யோகத்தில் அமர்ந்திருந்தால், அவரும் சிவபாபாவின் நினைவிலேயே அமர்ந்திருக்க வேண்டும். அவர் தனது குழந்தைகளை நினைவுசெய்வதாக இருக்கக்கூடாது. நீங்கள் சிவபாபாவை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் சிவபாபாவின் நினைவிலேயே இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். பின்னர் ஒருவர் அவரது கண்கள் திறந்தவாறு அல்லது கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தாலும் இது புத்தியால் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயம். நீங்கள் உங்களது இதயத்திடம் வினவ வேண்டும்: பாபா எனக்கு விளங்கப்படுத்துவது என்ன? நாங்கள் அவரையே நினைவுசெய்ய வேண்டும். இங்கு அமர்ந்திருப்பவரும் சிவபாபாவின் நினைவிலேயே அமர்ந்திருப்பார். அவர் உங்களைப் பார்க்க மாட்டார். ஏனெனில், அவன் அல்லது அவள் எவரது ஸ்திதியையும் அறியார். பாபா ஒவ்வொருவரது செய்தியையும் பெறுகின்றார். சிறந்த குழந்தைகள் யாரென்பதையும், யாருடைய ரேகை தெளிவாக உள்ளதென்பதையும் அவர் அறிவார். அவர்களது புத்தியின் யோகம் வேறு எங்கும் செல்ல மாட்டாது. அத்தகையவர்களும் இருக்கின்றார்கள். சிலரது புத்தியின் யோகம் ஈர்க்கப்பட்டாலும், முரளியைச் செவிமடுக்கும்பொழுது அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள். அது தங்கள் தவறு என்பதையும், தங்கள் பார்வையும், மனோபாவமும் உண்மையில் தவறானவையாக இருந்தன என்;பதையும், அவை இப்பொழுது சரியாக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்கின்றார்கள். நீங்கள் தவறான எந்த ஒரு மனோபாவத்தையும் கைவிட வேண்டும். தந்தை இதனை விளங்கப்படுத்துகின்றார். ஒரு சகோதரனால் இன்னொரு சகோதரனுக்கு இதனைக் கூறமுடியாது. ஒவ்வொருவரதும் பார்வையும், மனோபாவமும் எவ்வாறிருக்கின்றன என்பதைத் தந்தை மாத்திரம் பார்க்கின்றார். நீங்கள் அனைவரும் உங்களது இதயத்தின் நிலைமையைத் தந்தையிடம் கூறுகின்றீர்கள். நீங்கள் சிவபாபாவுடன் எதையாவது பகிரும்பொழுது, தாதாவும் புரிந்துகொள்கின்றார். ஒவ்வொருவரும் கூறுவதைச் செவிமடுப்பதாலும், அவர்களைப் பார்ப்பதாலும் அவர் புரிந்துகொள்கின்றார். அவர் எதையாவது செவிமடுக்கும்வரை, ஒருவர் என்ன செய்கின்றார் என்பதை அவரால் எவ்வாறு கூறமுடியும்? அவர்களது செயற்பாடுகளிலிருந்தும், அவர்கள் செய்யும் சேவையிலிருந்தும் அவரால் புரிந்துகொள்ள முடியும்: இவரிடம் சரீர உணர்வு அதிகளவில் உள்ளது, இவரிடம் குறைவாக உள்ளது. இவரது செயற்பாடு சரியானதல்ல் அவர் ஒருவரது பெயரிலும், வடிவத்திலும் அகப்பட்டிருக்கின்றார். பாபா வினவுகின்றார்: உங்கள் புத்தி எவர் மீதாவது ஈர்க்கப்படுகின்றதா? சிலர் பாபாவிடம் நேர்மையாகக் கூறுகின்றார்கள், சிலரோ அது பற்றி பாபாவிடம் கூறாதளவிற்கு மற்றவர்களின் பெயரிலும், உருவத்திலும் அகப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களுக்கு ஓர் இழப்பையே ஏற்படுத்துகின்றார்கள். தந்தையிடம் கூறுவதால் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள், அத்துடன் எதிர்காலத்திலும் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும். தங்களது மனோபாவத்தையிட்டு, வெட்கப்பட்டு அதன் காரணமாக பாபாவிடம் நேர்மையாக அது பற்றிக் கூறாத பலர் இருக்கின்றனர். உதாரணமாக, ஒருவர் தவறாக எதையாவது செய்துவிட்டு, சத்திரசிகிச்சை நிபுணரிடம் அதைக் கூறாமல் மறைப்பாராயின், அந்நோய் மேலும் அதிகரிக்கின்றது. இங்கும் அவ்வாறே. தந்தைக்கு அது பற்றிக் கூறினால் நீங்கள் இலேசாகிவிடுகிறீர்கள். இல்லையெனில், அது உங்களுக்குள்ளேயே இருக்குமாயின் அது ஒரு சுமையாகி விடுகின்றது. தந்தைக்கு அதனைக் கூறுவதால், நீங்கள் மீண்டும் அதனைச் செய்ய மாட்டீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் உங்களையிட்டு எச்சரிக்கையாக இருப்பீர்கள். ஆனால் பாபாவிடம் அதனைக் கூறாவிட்டால் அது தொடர்ந்து அதிகரிக்கும். இன்ன இன்னார் எந்தளவிற்கு மிகவும் நன்றாகச் சேவை செய்கின்றார் என்பதும், அவரது தகைமைகள் எவை என்பதும், அவர் எவ்வாறு சேவை செய்கின்றார் அல்லது எவர் மீதாவது அவர் பற்று கொண்டுள்ளாரா என்பதையும் தந்தை அறிவார். பாபா ஒவ்வொருவரதும் ஜாதகத்தைப் பார்க்கின்றார். அவர் அந்நபர் மீது அதிகளவு அன்பு கொண்டிருப்பதால், அவரை ஈர்க்கின்றார். உங்களில் சிலர் மிகச்சிறந்த சேவை செய்கின்றீர்கள். அவர்களது புத்தியின் யோகம் ஒருபொழுதும் எங்கும் ஈர்க்கப்படுவதில்லை. ஆம், முன்னர் அது ஈர்க்கப்படுவதுண்டு. ஆனால் இபபொழுது நீங்கள் எச்சரிக்கையாக இருக்கின்றீர்கள். நீங்கள் பாபாவிடம் கூறுகின்றீர்கள்: பாபா, நான் இப்பொழுது எச்சரிக்கையாக இருக்கின்றேன். முன்னர், நான் பல தவறுகள் செய்ததுண்டு. சரீர உணர்வுடையவர் ஆகுவதால், நீங்கள் தவறுகளையே செய்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஆகையால், உங்களது அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. எவரும் அதைப் பற்றி அறியாதிருந்தாலும், உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். இதயத்தில் பெருமளவு நேர்மையும், சுத்தமும் இருந்தாலே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும். இலக்ஷ்மி, நாராயணனின் ஆத்மாக்களில் சுத்தம் இருப்பதைப் போன்று உங்களது புத்தியிலும் பெருமளவு சுத்தம் உள்ளது. இதனாலேயே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரினீர்கள். சிலரது மனோபாவம் ஒருவரது பெயரிலும், உருவத்திலும் அகப்பட்டிருப்பதால் அவர்களால் ஆத்ம உணர்வில் இருக்க முடியாமலிருப்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. இதனால் அவர்கள் அந்தஸ்தும் குறைக்கப்படுகின்றது. அரசரிலிருந்து ஆண்டிகள் வரை அந்தஸ்து வரிசைக்கிரமமாகவே உள்ளது. ஏன் இவ்வாறு நிகழ்கின்றது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் நிச்சயமாக வரிசைக்கிரமமாகவே அவ்வாறு ஆகுகின்றீர்கள். உங்கள் சுவர்க்கக் கலைகள் தொடர்ந்து குறைவடைகின்றன. 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்திருந்தவர்கள், 14 சுவர்க்கக் கலைகளுடையவர்கள் ஆகுகின்றனர். இவ்வாறாக உங்களது சுவர்க்கக் கலைகள் படிப்படியாகக் குறைவடைகின்றன. நீங்கள் 14 சுவர்க்கக் கலைகளைக் கொண்டிருந்தாலும், அதுவும் சிறந்ததே. பின்னர், நீங்கள் பாவப் பாதையில் செல்லும்பொழுது, விகாரமுடையவர்கள் ஆகுகின்றீர்கள். உங்கள் ஆயுட்காலம் குறைவடைகின்றது. பின்னர் நீங்கள் தொடர்ந்தும் ரஜோவாகவும், தமோகுனியாகவும் ஆகுகின்றீர்கள். அது அவ்வாறு குறைவடையும்பொழுது, நீங்கள் பழையவர்களாகுகின்றீர்கள். சரீரங்களை எடுப்பதன் மூலம் ஆத்மாக்கள் பழையவராகுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவரிலிருந்து எவ்வாறு கீழிறங்கிச் சாதாரண மனிதராகுகின்றீர்கள் என்பது பற்றிய ஞானம் முழுவதும் உங்களுக்குள் உள்ளது. தேவர்களின் வழிகாட்டல்கள் என எதுவும் கிடையாது. ஒரு தடவை நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பெற்றுவிட்டால், பின்னர் 21 பிறவிகளுக்கு நீங்கள் வழிகாட்டல்களைப் பெற வேண்டிய அவசியம் கிடையாது. இந்த இறை வழிகாட்டல்கள் 21 பிறவிகளுக்கு நீடித்திருக்கின்றன. பின்னர், இராவண இராச்சியத்தில் நீங்கள் இராவணனின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். தேவர்கள் பாவப் பாதையில் செல்வதையும் அவர்கள் காட்டுகின்றார்கள். ஏனைய சமயத்தவர்களுக்கு அவ்வாறு இல்லை. தேவர்கள் பாவப் பாதையில் செல்லும்பொழுது, ஏனைய சமயத்தவர்கள் கீழே இறங்குகின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இவ்வுலகம் பழையதாகும். நாடகத்தில் இதுவே எனது பாகம். நான் பழைய உலகை மீண்டும் புதியதாக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். உலக மக்கள் எதனையுமே அறியமாட்டார்கள். நீங்கள் அதிகளவு விளங்கப்படுத்துகின்றீர்கள். இருந்தபொழுதிலும், சிலர் மிகச்சிறந்த ஆர்வம் காட்டுகின்றனர், சிலரோ தொடர்ந்தும் தங்களது சொந்த அபிப்பிராயங்களை உங்களுக்குக் கூறுகின்றனர். இலக்ஷ்மி, நாராயணன் இருந்தபொழுது, அங்கே தூய்மை, அமைதி, சந்தோஷம் இருந்தன் அங்கு அனைத்தும் இருந்தன. தூய்மையே பிரதான விடயம். சத்தியயுகத்துத் தேவர்கள் தூய்மையாக இருந்தார்கள் என்பதை மக்கள் அறியார்கள். தேவர்களுக்கும் குழந்தைகள் இருந்தனர் என அவர்கள் கூறுகின்றனர். எனினும், அங்கு எவ்வாறு யோக சக்தி மூலம் படைப்பு இடம்பெறுகின்றது என்பதனை எவருமே அறியார். அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் உங்களது வாழ்க்கை முழுவதும் தூய்மையைக் கடைப்பிடித்தால், எவ்வாறு உங்களுக்குக் குழந்தைகள் போன்றோர் இருக்க முடியும்? நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்: இந்நேரத்தில் தூய்மையாகுவதனால், நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய்மையாக இருக்கின்றீர்கள். அதாவது, நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், விகாரமற்ற உலகை ஸ்தாபிக்கின்றோம். தந்தையிடமிருந்தே ஸ்ரீமத் கிடைக்கின்றது. மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு அதிகக் காலம் எடுக்கவில்லை என நினைவுகூரப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் அனைவரும் மனிதர்கள், பின்னர் தேவர்களாகுவீர்கள். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் தேவர்களின் அரசாங்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். தூய்மையே இதில் அதி பிரதான விடயமாகும். ஆத்மாக்களே தூய்மையாக வேண்டும். ஆத்மாக்களே கல்லுப் புத்தியைக் கொண்டிருக்கின்றனர். இதனை அவர்களுக்கு மிகத்தெளிவாகக் கூறுங்கள். தந்தையே வைகுந்தம் என அழைக்கப்பட்ட, சத்தியயுகத்துத் தேவர்களின் அரசாங்கத்தை ஸ்தாபித்தார். தந்தையே மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றார். மனிதர்கள் தூய்மையற்றவர்களாக இருந்தனர். எனவே, அவர்கள் எவ்வாறு தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாக்கப்பட்டனர்? அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறினார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் எவருக்காவது இதனைக் கூறுவீர்களாயின், அது அவர்களது மனதைத் தொடும். இப்பொழுது, நீங்கள் எவ்வாறு தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுவீர்கள்? நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். உங்களது புத்தியை ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து, அதனை ஒரேயொருவருடனான யோகத்தில் மாத்திரம் தொடர்புபடுத்துங்கள். ஏனெனில், அப்பொழுது மாத்திரமே உங்களால் மனிதர்களிலிருந்து தேவர்களாக முடியும். இவ்வாறே நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் விளங்கப்படுத்தியவை அனைத்தும் நாடகத்திற்கேற்ப முற்றிலும் சரியானவையே. நீங்கள் இதனைப் புரிந்துகொள்கின்றீர்களாயினும், மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கான கருத்துக்களைத் தொடர்ந்தும் தினமும் பெறுகின்றீர்கள். எவ்வாறு நாங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாகலாம் என்பதே பிரதான விடயம். தந்தை கூறுகின்றார்: சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தை அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகிய, பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள். தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். முதலில் பிராமணர்கள் ஆகாமல் எங்களால் எவ்வாறு தேவர்களாக முடியும்? இந்த பிரம்மாவும் முழுமையாக 84 பிறவிகளையும் எடுத்து, பின்னர் முதலாம் இலக்கப் பிறவியையும் எடுக்க வேண்டும். தந்தை வந்து அவரில் பிரவேசிக்கின்றார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயம். சரீர உணர்விற்கு வருவதால் நீங்கள் எங்காவது பற்றைக் கொண்டிருக்கின்றீர்கள். அனைவராலும் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக முடியாது. நீங்கள் உங்களை முழுமையாகச் சோதித்துப் பார்க்க வேண்டும். நான் சரீர உணர்வுடையவர் ஆகுகின்றேனா? நான் பாவச் செயல்களைச் செய்கின்றேனா? எனது நடத்தை அநீதியாக உள்ளதா? பலர் இத்தகைய தவறைச் செய்வதால், இறுதியில் அவர்கள் நிச்சயமாகப் பெருமளவு தண்டனையைப் பெறுகின்றார்கள். நீங்கள் உங்களது கர்மாதீத ஸ்திதியை அடையாது விட்டாலும், கர்மாதீத ஸ்திதியை அடைபவர்களது துன்பம் அனைத்தும் அகற்றப்படுகின்றது. அவர்கள் தண்டனையிலிருந்து விடுபட்டிருக்கின்றார்கள். இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: அரசர்கள் வரிசைக்கிரமமாகவே உருவாக்கப்படுகின்றனர். நிச்சயமாக, குறைந்தளவு முயற்சியை செய்வதாலேயே சிலர் தண்டனையை அனுபவிக்க நேரிடுகின்றது. ஆத்மாக்களே கருப்பை என்ற சிறையில் தண்டனையை அனுபவம் செய்கின்றனர். ஆத்மா கருப்பையில் உள்ளபொழுது, அவர் கூறுகின்றார்: என்னை வெளியில் விட்டுவிடுங்கள்! நான் மீண்டும் பாவச் செயல்களைச் செய்ய மாட்டேன். ஆத்மாவே தண்டனையை அனுபவம் செய்கின்றார். ஆத்மாவே செயற்பட்டு, பாவச் செயல்களையும் செய்கின்றார். இச்சரீரத்தினால் எவ்விதப் பயனுமில்லை. பிரதான விடயமானது: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும். அதனால் உண்மையில் ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார் என்பதனை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் மீண்டும் இந்த ஞானத்தைப் பெற மாட்டீர்கள். ஆத்ம உணர்விலுள்ள ஒருவர் ஒவ்வொருவரையும் சகோதரராகவே பார்ப்பார். சரீரம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் ஆத்ம உணர்விற்கு வந்துவிட்டால், சரீரங்களின் மீது எவ்விதப் பற்றும் இருக்க மாட்டாது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இது மிக மேன்மையான ஸ்திதியாகும். ஒரு சகோதரனும், சகோதரியும் ஒருவரிலொருவர் சிக்கிக் கொண்டால், பெருமளவு அவச்சேவை இடம்பெறுகின்றது. ஆத்ம உணர்வுடையவராக இருப்பீர்களாக! இதற்கே முயற்சி தேவை. கல்வியில் வெவ்வேறு பாடங்கள் உள்ளன. நான் இவற்றில் தோல்வியடைந்து விடுவேன் என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு தோல்வியடைவதால், நீங்கள் ஏனைய பாடங்களிலும் பின்தங்கிவிடுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது உங்களது புத்தியின் யோக சக்தியினால், தங்கப் பாத்திரங்கள் போன்று ஆகுகின்றீர்கள். யோகம் இல்லாவிட்டால், உங்களுக்கு அந்தளவிற்கு ஞானமும் இருக்க மாட்டாது. உங்களுக்கு அத்தகைய பலமும் இருக்க மாட்டாது, யோக சக்தி இல்லாதிருக்கும். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. நீங்கள் எந்தளவிற்கு உங்களது ஸ்திதியை அதிகரிக்க வேண்டும் என்பதை பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாவாகிய நான் நாள் முழுவதும் சட்டத்திற்கு முரணான செயல் எதையாவது செய்கின்றேனா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். உங்களிடம் அத்தகைய பழக்கம் ஏதாவது இருக்குமாயின், உடனடியாகவே நீங்கள் அதனை விட்டுவிட வேண்டும். எவ்வாறாயினும், மாயை இரண்டு அல்லது மூன்று நாட்களின் பின்னர் உங்களைத் தவறுகள் செய்ய வைத்து விடுகிறாள். அத்தகைய சூட்சும விடயங்கள் எல்லா நேரங்களிலும் தொடர்கின்றன. இந்த ஞானம் முழுவதும் மறைமுகமானது. மனிதர்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் அவர்களிடம் கூறுங்கள்: எங்களுக்குத் தேவையான அனைத்தையும், செலவீனங்களையும் நாங்களே ஈடுசெய்து கொள்கின்றோம். எங்களுக்காகப் பிறர் செலவு செய்வதனால், என்ன செய்ய முடியும்? இதனாலேயே பாபா எப்பொழுதும் கூறுவதுண்டு: எதையும் கேட்பதைவிட மரணிப்பதே மேலாகும். நீங்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்வதெல்லாம் பால் போன்றது, நீங்கள் கேட்டுப் பெறுவதெல்லாம் நீர் போன்றது. நீங்கள் எதையாவது கேட்டுப்பெறும்பொழுது, அவர்கள் உங்களுக்கு நிர்ப்பந்தத்திலேயே அதனைக் கொடுக்கின்றார்கள். அது அவர்கள் எதையாவது தியாகம் செய்தே உங்களுக்குக் கொடுப்பதைப் போல் உள்ளதால் அது நீரைப் போல் ஆகிவிடுகின்றது. நீங்கள் எதையாவது பலவந்தமாகக் கேட்டால், அது இரத்தத்தைப் போன்றதாகும். சிலர் பெருமளவு விரக்தியை ஏற்படுத்துகின்றார்கள். அவர்கள் கடனாளிகள் ஆகுவதால், அது இரத்தத்தைப் போன்றதாகுகிறது. கடன்பட வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் எதையாவது தானம் செய்துவிட்டு, பின்னர் மீண்டும் அதனைப் பெறுவீர்களாயின், அதற்கு உதாரணமாக, அவ்வாறு செய்த அரிச்சந்திர அரசனின் கதையும் உள்ளது. (அவர் தான் தானம் செய்தவற்றைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்.) அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் பங்கை ஒருபுறம் வைத்து விடுங்கள், அது உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும். இறுதியில் நீங்கள் தந்தையின் நினைவை மாத்திரமே கொண்டிருக்கும் வகையிலும், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதை நினைவுசெய்யும் வகையிலும் குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு முயற்சி செய்யவேண்டும். அதன் பின்னரே நீங்கள் உங்களது சரீரத்தை விடவேண்டும். அப்பொழுதே உங்களால் பூகோளத்தை ஆளும் அரசராக முடியும். உங்களால் இறுதியில் பாபாவை நினைவுசெய்யக்கூடியதாக இருக்கும் எனவும், உங்கள் ஸ்திதி இறுதியில் அவ்வாறு இருக்கும் என்பதுமல்ல் இல்லை. நீங்கள் இப்பொழுதிருந்து இறுதிவரை முயற்சி செய்து, அந்த ஸ்திதியை மிகவும் பலப்படுத்துங்கள். இறுதியில் உங்களது மனோபாவம் வேறு எதன்மீதும் ஈர்க்கப்படுவதாக இருக்கக்கூடாது. பாபாவை நினைவுசெய்வதால் உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அகற்றப்படும். தூய்மை என்ற விடயத்திற்கு முயற்சி தேவைப்படுகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கல்வியில் அத்தகைய முயற்சி செய்ய வேண்டியதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இதில் மிக நன்றாகக் கவனம் செலுத்த வேண்டும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: தினமும் உங்களை வினவுங்கள்: நான் சட்டத்திற்கு முரணான செயல்கள் எதனையாவது செய்தேனா? நான் ‘பெயரிலும் உருவத்திலும்’ சிக்கியுள்ளேனா? நான் எவரையாவது பார்த்து, பித்துப் பிடித்தவன் ஆகுகிறேனா? நான் எனது பௌதீக அங்கங்களால் நீதியற்ற செயல்களைச் செய்தேனா? நீங்கள் பழைய, தூய்மையற்ற சரீரத்தின் மீது, சிறிதளவேனும் அன்பு வைத்திருக்கக்கூடாது. அதுவும் சரீர உணர்வே ஆகும். நீங்கள் எவ் வகையான கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரேயொரு தந்தைமீதே உண்மையான அன்பைக் கொண்டிருப்பதுடன், மற்றவர்கள் அனைவர் மீதும் கவர்ச்சிகளேதுமற்ற அன்பைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் குழந்தைகள் போன்றோரைக் கொண்டிருந்தாலும், எவர் மீதும் எவ்விதக் கவர்ச்சியும் இருக்கக்கூடாது. நீங்கள் காண்பவை அனைத்தும் அழிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, அதன் மீதுள்ள அன்பு முழுவதும் அகற்றப்பட வேண்டும். உங்களது அன்பு ஒருவர் மீது மாத்திரமே இருக்க வேண்டும். நீங்கள் எவரினதும் பெயர் மீதுள்ள கவர்ச்சியிலிருந்தும் கூட விடுபட்டிருக்க வேண்டும். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் மனோபாவத்தை மிகவும் சுத்தமானதாகவும், தூய்மையானதாகவும் ஆக்குங்கள். தவறான அல்லது அநீதியான செயல்கள் எதையும் செய்யாதீர்கள். மிக, மிக எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் புத்தி எங்கேனும் பற்றைக் கொண்டிருக்க அனுமதிக்காதீர்கள்.

2. ஒரேயொரு தந்தை மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். பெயரளவில் மாத்திரம் அனைவர் மீதும் அன்பு கொண்டிருந்து, கவர்ச்சியிலிருந்து விடுபட்டிருங்கள். சரீரத்தின் மீதும் பற்றில்லாத வகையில், அத்தகையதோர் ஆத்ம உணர்வு ஸ்திதியை உருவாக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கர்ம பந்தனங்களைச் சேவையின் பந்தங்களாக மாற்றுவதனால், அனைவரிடமும் பற்றற்றவராகவும் கடவுளிடம் அன்பானவராகவும் இருப்பீர்களாக.

கடவுளின் அன்பே பிராமண வாழ்வின் அடிப்படை, ஆனால் நீங்கள் பற்றற்றிருக்கும்பொழுதே உங்களால் அதனைப் பெற முடியும். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்தாலும், அது சேவைக்காகவே ஆகும். கர்மக் கணக்குகளின் அல்லது கர்ம பந்தனங்களின் காரணமாக நீங்கள் அங்கு இருக்கின்றீர்கள் என்று ஒருபொழுதுமே எண்ணாதீர்கள், அது சேவைக்காகவே ஆகும். சேவையின் பந்தத்தால்; நீங்கள் கட்டப்பட்டிருப்பதால், உங்கள் கர்ம பந்தனங்கள் முடிவடைகின்றன. சேவையின் உணர்வுகள் எதுவும் இல்லாதபொழுது, உங்களைக் கர்ம பந்தனங்கள் ஈர்க்கின்றன. கர்ம பந்தனங்கள் இருக்குமிடத்தில், துன்ப அலைகளே இருக்கின்றன. ஆனால் சேவையிலோ சந்தோஷமே உள்ளது. எனவே கர்ம பந்தனங்களைச் சேவையின் பந்தங்களாக மாற்றி, பற்றற்றவராகவும், அன்பானவராகவும் இருங்கள். நீங்கள் கடவுளால் நேசிக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
ஒரு மேன்மையான ஆத்மா தனது சொந்த ஆதி ஸ்திதி மூலம் ஒவ்வொரு பாதகமான சூழ்நிலையையும் வெற்றி கொள்கின்றார்.