26.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அந்தச் சரீரங்களிலிருக்கும்பொழுதே, மரணித்து வாழ்வதற்கு, “நான் ஓர் ஆத்மா, நீங்களும் ஓர் ஆத்மா” என்பதைப் பயிற்சி செய்யுங்கள். உங்களுடைய இந்தப் பயிற்சியின் மூலமே பற்று துண்டிக்கப்படும்.

கேள்வி:
அதியுயர்ந்த இலக்கு எது? அந்த இலக்கை அடைபவர்களின் அடையாளங்கள் எவை?

பதில்:
சரீரதாரிகள் அனைவரிடமிருந்தும் உங்கள் பற்றைத் துண்டித்து, எப்பொழுதும்; சகோதரத்துவ விழிப்புணர்வைக் கொண்டிருப்பதே அதியுயர்ந்த இலக்காகும். ஆத்ம உணர்வில் இருப்பதைச் சதா பயிற்சி செய்பவர்களால் மாத்திரமே அந்த இலக்கை அடைய முடியும். நீங்கள் ஆத்ம உணர்வில் இல்லாதிருந்தால், உங்கள் சொந்தச் சரீரம் அல்லது உங்கள் நண்பர்களினதும் உறவினர்களினதும் சரீரங்கள் போன்ற ஏதோவோர் இடத்தில் தொடர்ந்தும் சிக்குண்டு விடுவீர்கள். நீங்கள் மற்றவர்களுடைய எதையேனும் விரும்புவீர்கள் அல்லது எவரேனும் ஒருவருடைய சரீரத்தை விரும்புவீPர்;கள், அதியுயர்ந்த இலக்கை அடையவுள்ளவர்கள் ஒரு பௌதீகச் சரீரத்தின் மீது அன்பு வைக்க முடியாது. அவர்களுடைய சரீர உணர்வு துண்டிக்கப்பட்டு விடும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: பாருங்கள், நான் குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் என்னைப் போல் ஆக்குவதற்கு வந்துள்ளேன். இப்பொழுது, உங்களைத் தன்னைப் போன்று ஆக்குவதற்கு இங்கு தந்தை எவ்வாறு வருவார்? அவர் அசரீரியானவர். அவர் கூறுகின்றார்: நான் அசரீரியானவர். நான் குழந்தைகளாகிய உங்களை என்னைப் போன்று ஆக்குவதற்கு வந்துள்ளேன், அதாவது, உங்களை அசரீரியானவர்களாக்கி, எவ்வாறு மரணித்து வாழ்வது என்று உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளேன். தந்தையும் தன்னை ஓர் ஆத்மாவாகவே கருதுகின்றார். அவருக்கு இந்தச் சரீர உணர்வு எதுவும் இல்லை. ஒரு சரீரத்தில் இருந்தபொழுதிலும், அவருக்குச் சரீரத்தின் விழிப்புணர்வு இருப்பதில்லை. இந்தச் சரீரம் அவருக்கு உரியதல்ல. குழந்தைகளாகிய நீங்களும் சரீர உணர்வை அகற்ற வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் என்னுடன் வீடு திரும்ப வேண்டும். நான் இந்தச் சரீரத்தைக் கடனாகப்; பெற்றுள்ளதைப் போன்று, ஆத்மாக்களும் தங்கள் பாகங்களை நடிப்பதற்காகச் சரீரங்களைக் கடனாகப் பெறுகிறார்கள். நீங்கள் பிறவிபிறவியாக ஒரு சரீரத்தைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது, நான் இந்தச் சரீரத்தில் உயிருடன் இருக்கின்றபொழுதிலும் பற்றற்று இருக்கின்றேன், அதாவது, நான் அதற்கு மரணித்து இருக்கின்றேன். உங்கள் சரீரத்தை நீக்குவதே மரணிப்பது என்று குறிப்பிடப்படுகின்றது. நீங்களும் உங்கள் சரீரத்திலிருந்து மரணித்து வாழ வேண்டும். நான் ஓர் ஆத்மா, நீங்களும் ஆத்மாக்களே. நீங்கள் என்னுடன் திரும்பி வரப் போகின்றீர்களா அல்லது நீங்கள் இங்கேயே அமர்ந்திருக்கப் போகின்றீர்களா? நீங்கள் பிறவிபிறவியாக ஒரு சரீரத்தின் மீது பற்று வைத்திருந்தீர்கள். நான் சரீரமற்றிருப்பதைப் போன்று, நீங்களும் வாழும்பொழுதே உங்களைச் சரீரமற்றவராகக் கருத வேண்டும். நாங்கள் இப்பொழுது பாபாவுடன் திரும்பிச் செல்ல வேண்டும். இது பாபாவின் பழைய சரீரம் என்பதால், ஆத்மாக்களாகிய நீங்களும் பழைய சரீரங்களைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பழைய சப்பாத்தைத் துறக்க வேண்டும். நான் இவரில் எந்தப் பற்றையும் கொண்டிராததைப் போன்று, நீங்களும் அந்தப் பழைய சப்பாத்துக்களிலிருந்து உங்கள் பற்றைத் துறக்க வேண்டும். நீங்கள் பற்று வைக்கின்ற பழக்கத்தைக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு அந்தப் பழக்கம் இல்லை. நான் மரணித்து வாழ்பவர். நீங்களும் மரணித்து வாழ வேண்டும். நீங்கள் என்னுடன் வீடு திரும்பிச் செல்ல விரும்பினால், இதனைப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்குச் சரீரத்தின் விழிப்புணர்வு அதிகளவுக்கு உள்ளது, கேட்கவும் வேண்டாம்! சரீரம் நோய்வாய்ப்பட்டிருக்கும்பொழுதும், ஆத்மா அதனை விட்டு விடுவதில்லை. நீங்கள் அதன் மீதுள்ள உங்கள் பற்றைத் துண்டிக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக பாபாவுடன் வீடு திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் உங்களை அச் சரீரங்களிலிருந்து வேறுபட்டவராகக் கருத வேண்டும். இதுவே மரணித்து வாழ்தல் என அழைக்கப்படுகின்றது. உங்கள் வீட்டை நினைவுசெய்யுங்கள். நீங்கள் பிறவிபிறவியாக ஒரு சரீரத்தில் வசித்து வருகிறீர்கள், இதனாலேயே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் மரணித்து வாழ வேண்டும். நான் இவரினுள் மாத்திரமே தற்காலிகமாகப் பிரவேசிக்கின்றேன். எனவே, நீங்கள் மரணித்து விட்டீர்கள் என்று கருதியவாறு, அதாவது, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறு முன்னேறும்பொழுது எந்தச் சரீரதாரிகள் மீதும் பற்று இருக்க மாட்டாது. பொதுவாக அனைவரும் யாராவதொருவரில் பற்று வைத்திருக்கிறார்கள், அந்த நபரைப் பார்க்காமல் அவர்களால் இருக்க முடியாது. நீங்கள் முற்றுமுழுதாகச் சரீரதாரிகளின் நினைவை அகற்ற வேண்டும், ஏனெனில் இலக்கு மிகவும் உயர்ந்தது. உண்ணும்பொழுதும் பருகும்பொழுதும் கூட நீங்கள் இந்தச் சரீரத்தில் இல்லாதது போன்றிருக்க வேண்டும். நீங்கள் இந்த ஸ்திதியை உறுதியாக்க வேண்டும், ஏனெனில், அப்பொழுது மாத்திரமே உங்களால் எட்டு மணிகளின் மாலையில் இடம்பெற முடியும். முயற்சி செய்யாது உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் வாழும்வரை உங்களை அந்த இடத்துவாசியாகவே கருத வேண்டும். பாபா இவரினுள் தற்காலிகமாக இருப்பதைப் போன்று, நாங்களும் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பாபா பற்றில்லாமல் இருப்பதைப் போன்று எங்களுக்கும் பற்று இருக்கக்கூடாது. குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே தந்தை இந்தச் சரீரத்தில் இருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். எனவே சரீரதாரிகள் மீது நீங்கள் பற்று வைக்கக்கூடாது. “இவர் மிகவும் நல்லவர், இவர் மிகவும் இனிமையானவர்.” ஆத்மாவினுடைய புத்தி அங்கே ஈர்க்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: சரீரத்தைப் பார்க்காதீர்கள்;. ஆத்மாவைப் பாருங்கள். சரீரத்தைப் பார்ப்பதனால் நீங்கள் சிக்குண்டு விடுகிறீர்கள். இலக்கு மிகவும் உயர்ந்தது. நீங்கள் பிறவிபிறவியாகப் பற்றையும் வைத்திருந்தீர்கள். பாபாவிற்கு எவ்விதப் பற்றும் இல்லை, இதனாலேயே நான் உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளேன். தந்தையே கூறுகிறார்: நான் இந்தச் சரீரத்தில் சிக்குண்டு விடுவதில்லை. நீங்கள் அவற்றில் சிக்குண்டுள்ளீர்கள். நான் உங்களை விடுவிப்பதற்காகவே வந்துள்ளேன். உங்கள் 84 பிறவிகள் இப்பொழுது முடிவடைந்துள்ளன. ஆகவே, இப்பொழுது உங்கள் சரீர உணர்வை அகற்றுங்கள். ஆத்ம உணர்வில் இல்லாததால், நீங்கள் தொடர்ந்தும் எங்கேயாவது சிக்கி விடுகிறீர்கள். நீங்கள் எதையாவது அல்லது எவரையாவது விரும்பினாலோ அல்லது நீங்கள் எவரது சரீரத்தை விரும்பினாலோ நீங்கள் வீட்டிலிருக்கும்பொழுதும் தொடர்ந்தும் அவரை நினைவுசெய்வீர்;கள்;. ஒரு சரீரத்தின் மீது அன்பிருந்தால் நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள். சிலர் இவ்வாறு அதிகளவில் சீரழிந்துள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: கணவன், மனைவி எனும் உறவுமுறையைத் துண்டித்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்: அவர் ஓர் ஆத்மா, நானும் ஓர் ஆத்மா. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதால், சரீர உணர்வு தொடர்ந்தும் அகற்றப்படும். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இந்த விடயத்தை மிக நன்றாகக் கடைய முடியும். ஞானக் கடலைக் கடையாமல் உங்களால் அந்த உற்சாகத்துடன் முன்னேறிச் செல்ல முடியாது. நீங்கள் நிச்சயமாகத் தந்தையுடன் வீடு திரும்பிச் செல்ல வேண்டும் என்பது உறுதியாக இருக்க வேண்டும். நினைவே பிரதான விடயமாகும். 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவடைந்து விட்டது, அது மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் அந்தப் பழைய சரீரங்களின் மீதான உங்கள் பற்றை அகற்றாது விட்டால் நீங்கள் உங்கள் சொந்தச் சரீரத்தில், அல்லது உங்கள் நண்பர்களினதும், உறவினர்களினது சரீரங்களில் சிக்கிக் கொள்வீர்கள். நீங்கள் உங்கள் இதயத்தில் எவர் மீதும் பற்று வைக்கக்கூடாது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். ஆத்மாவாகிய நான் அசரீரியானவர், தந்தையும் அசரீரியானவர். பக்தி மார்க்கத்தில் அரைக் கல்பத்திற்கு நீங்கள் தந்தையை நினைவுசெய்து வந்தீர்கள். நீங்கள் “ஓ பிரபு!” என்று கூறும்பொழுது உங்கள் முன்னால் சிவலிங்கம் வருகின்றது. நீங்;கள் ஒரு சரீரதாரியையிட்டு “ஓ பிரபு!” என்று கூற முடியாது. அனைவரும் சிவாலயங்களுக்குச் சென்று, அவரைப் பரமாத்மாவாகக் கருதி வழிபடுகிறார்கள். அதிமேலான கடவுள் ஒரேயொருவரே, அவரே அதிமேலானவர், அதாவது, பரந்தாமத்தில் வசிப்பவர். பக்தி முதலில் கலப்படமற்றிருந்தது. அது ஒரேயொருவர் மீதான பக்தியாக இருந்தது. பின்னர் அதுவும் கலப்படமாகிவிட்டது. தந்தை மீண்டும் மீண்டும் .குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற விரும்பினால், அப்பொழுது இதனைப் பயிற்சி செய்யுங்கள். சரீர உணர்வைத் துறவுங்கள். சந்நியாசிகளும் விகாரங்களைத் துறக்கிறார்கள். முன்னர், அவர்கள் சதோபிரதானாக இருந்தார்கள், ஆனால் அவர்களும் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்;டார்கள். ஒரு சதோபிரதான் ஆத்மா தூய்மையற்ற ஆத்மாக்களை ஈர்க்கின்ற கவர்ச்சியைக் கொண்டுள்ளார், ஏனெனில் அந்த ஆத்மா தூய்மையானவராக இருக்கின்றார். மறுபிறவி எடுக்கின்றபொழுதும், அந்த ஆத்மாக்கள் தூய்மையானவர்களாக இருப்பதால், ஏனையோரைக் கவர்கின்றார்கள், இதனாலேயே பலர் அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் எவ்வளவுக்கு அதிகமாகத் தூய்மைச் சக்தியைக் கொண்டிருக்கிறார்களோ, அந்தளவுக்கு அவர்களைப் பின்பற்றுபவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். இத் தந்தை என்றென்றும் தூய்மையானவரும் மறைமுகமானவரும் ஆவார். அவர் இணைந்துள்ளார், ஆனால் சக்தி அனைத்தும் அவருடையதே, இவருடையதல்ல (பிரம்மா). ஆரம்பத்தில் உங்களைக் கவர்ந்தவரும் அவரே, இந்தப் பிரம்மா அல்ல. ஏனெனில் அந்த ஒரேயொருவர் என்றென்றும் தூய்மையானவர். நீங்கள் இவருக்குப் பின்னால் ஓடவில்லை. இவர் கூறுகிறார்: நான் 84 பிறவிகளாக அதிகளவுக்கு இல்லறப் பாதையில் இருந்தேன். இவரால் உங்களை ஈர்க்க முடியாது. தந்தை கூறுகிறார்: நானே உங்களை ஈர்த்தேன். சந்நியாசிகள் தூய்மையானவர்களாக இருந்தபொழுதிலும்;, அவர்களில் எவருமே என்னைப் போன்று தூய்மையாக இருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கச் சமயநூல்கள் முதலியவற்றை உரைக்கிறார்கள். நான் வந்து வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை உங்களுக்குக் கூறுகின்றேன். விஷ்ணுவின் தொப்பூழ்க் கொடியிலிருந்து பிரம்மா வெளித்தோன்றுகின்ற படத்தை அவர்கள் காட்டியிருக்கிறார்கள், பின்னர் அவர்கள் பிரம்மாவினுடைய கரங்களில் சமயநூல்களைக் காட்டுகிறார்கள். இப்பொழுது, பிரம்மாவினூடாகச் சமயநூல்களின் இரகசியங்களை விஷ்ணு உங்களுக்குக் கூறமாட்டார். அம்மக்கள் விஷ்ணுவையும் கடவுளாகக் கருதுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் இப் பிரம்மாவினூடாக உங்களுடன் பேசுகின்றேன். நான் விஷ்ணுவினூடாக உங்களுடன் பேசுவதில்லை. பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்குமிடையில் பெரும் வேறுபாடு உள்ளது. பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார், 84 பிறவிகளின் பின்னர் இந்தச் சங்கமம் இருக்கின்றது. இது புதியதொன்று ஆகும். இவை அத்தகைய அற்புதமான விடயங்கள். இவை விளங்கப்படுத்தப்பட வேண்டும். இப்பொழுது தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் மரணித்து வாழ வேண்டும். நீங்கள் இந்தச் சரீரங்களில் வசிக்கிறீர்கள். இல்லையா? நீங்கள் ஆத்மாக்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதனையும், நீங்கள் பாபாவுடன் வீடு திரும்பிச் செல்வீர்;கள் என்பதையும்; புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அந்தச் சரீரங்கள் போன்றவற்றை உங்களுடன் எடுத்துச் செல்ல மாட்டீர்கள். பாபா இப்பொழுது வந்துள்ளார். எனவே, அனைத்தையும் புதிய உலகிற்கு மாற்றம் செய்யுங்கள். மக்கள் தங்களது மறு பிறவியில் ஏதாவதொன்றைப் பெறுவதற்காகத் தானங்கள் மற்றும் புண்ணிய கருமங்களைச் செய்கிறார்கள். நீங்களும் அனைத்தையும் புதிய உலகிலேயே பெறுவீர்கள். முன்னைய கல்;பத்தில் இதனைச் செய்தவர்கள் மாத்திரமே இதனைச் செய்வார்கள். அதில் எதுவும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது. நீங்கள் தொடர்ந்தும் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிப்பீர்கள். எதனையும் கூற வேண்டிய அவசியம் இல்லை. இருந்தும் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் செய்தவற்றையிட்டு நீங்கள் எவ்வித அகங்காரமும் கொள்ளக்கூடாது. ஆத்மாவாகிய நான் இந்தச் சரீரத்தை நீக்கி, வீடு திரும்புவேன். பின்னர் நான் புதிய உலகிற்குச் சென்று, ஒரு புதிய சரீரத்தைப் பெறுவேன். நினைவுகூரப்படுகின்றது: இராமர் சென்றார், இராவணனும் சென்றுவிட்டான். இராவணனது குடும்பம் மிகவும் பெரியது. நீங்கள் ஒரு கைப்பிடி அளவினரே. இவை அனைத்தும் இராவணனின் சமுதாயமே. உங்களுடைய இராமரின் சமுதாயம், 900,000 பேரை மாத்திரம் கொண்ட மிகச்சிறிய சமுதாயமாக இருக்கும். நீங்களே பூமியின் நட்சத்திரங்கள்: தாயும், தந்தையும் குழந்தைகளாகிய நீங்களும். எனவே, தந்தை மீண்டும் மீண்டும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். மரணித்து வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஒருவரைப் பார்க்கும்பொழுது, அந்த நபர்; மிகவும் நல்லவர் அல்லது அவர் மிக இனிமையாக விளங்கப்படுத்துகின்றார் என்பது உங்கள் புத்தியில் பிரவேசித்தால், அதுவும் மாயையின் தாக்குதலே ஆகும். மாயை உங்களைத் தூண்டுகிறாள். அது அவரது பாக்கியத்தில் இல்லாவிட்டால், மாயை அவருக்கு முன்னால் வருகிறாள். நீங்கள் எவ்வளவு தான் அவருக்கு விளங்கப்படுத்தினாலும் அவர் கோபப்படுவார். சரீர உணர்வே அவ்வாறு அவரைச் செயற்பட வைக்கின்றது என்பதை அவர் புரிந்துகொள்ள மாட்டார். நீங்கள் மேலதிகமாக விளங்கப்படுத்த முயற்சி செய்;தால் அவர் துண்டித்துக் கொள்வார். எனவே, நீங்கள் அனைவருடனும் அன்புடன் தொடர்புகொள்ள வேண்டும். உங்கள் இதயம் எவர் மீதாவது பற்று வைத்தால், கேட்கவும் வேண்டாம்! நீங்கள் பித்துப் பிடித்தவர் போல ஆகுகிறீPர்கள். மாயை உங்களை முற்றுமுழுதாக விவேகமற்றவர்;கள் ஆக்குகிறாள்;. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் எவரது பெயரிலும் ரூபத்திலும் சிக்கிக் கொள்ளக்கூடாது. நான் ஓர் ஆத்மா. நான் சரீரமற்ற ஒரேயொரு தந்தையை மாத்திரமே நேசிக்க வேண்டும். இதுவே ஒரேயொரு முயற்சி. எவர் மீதும் பற்றில்லாது இருக்கட்டும். நீங்கள் வீட்டில் அமர்ந்திருக்கும்;பொழுது உங்களுக்கு ஞானம் கொடுத்தவரைத் தொடர்ந்தும் நினைவுசெய்வதாக இருக்கக்கூடாது; அவர் மிகவும் இனிமையானவர், அவர் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். ஆ! ஆனால் ஞானமே மிகவும் இனிமையானது. ஆத்மாவே இனிமையானவர். சரீரம் இனிமையானதல்ல. ஆத்மாவே பேசுகின்றார். ஒரு சரீரத்தின் மீது பித்துப்பிடித்தவர்கள் ஆகாதீர்கள். இந்நாட்களில், பக்தி மார்க்கத்தில் இது அதிகளவில் இடம்பெறுகின்றது. அவர்கள் அன்னை “ஆனந்தமாயியை” நினைவுசெய்யும்பொழுது தொடர்ந்தும் “மா! மா!” (தாயே! தாயே!) என்று கூறுகிறார்கள். அச்சா. தந்தை எங்கிருக்கிறார்? நீங்கள் தந்தையிடமிருந்தா அல்லது தாயிடமிருந்தா உங்கள் ஆஸ்தியைப் பெறப் போகிறீர்கள்? தாய் எங்கிருந்து பணத்தைப் பெறுகிறார்? “மா, மா” என்று கூறுவதனால், உங்கள் பாவங்கள் எதுவும் அழிக்கப்பட மாட்டாது. தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். பெயர், ரூபத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் அல்லது மேலும் அதிகப் பாவங்கள் செய்யப்படும். ஏனெனில் நீங்கள் தந்தைக்குக் கீழ்ப்படிவற்றவர்கள் ஆகினீர்கள். பல குழந்தைகள் தந்தையை மறந்துவிட்டார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளாகிய உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வதற்காக நான் வந்துள்ளேன். ஆகவே நிச்சயமாக நான் உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வேன். ஆகவே, என்னை நினைவுசெய்யுங்கள். என்னை நினைவு செய்வதால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பலரை நினைவு செய்து வந்தீர்கள். ஆனால்;, தந்தை இல்லாமல் உங்களால் என்ன செய்ய முடியும்;? தாயை (மாயியை) நினைவுசெய்யுமாறு தந்தை கூறுவதில்லை! தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள். நான் தூய்மையாக்குபவர். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். தந்தையின் வழிகாட்டல்களுக்கேற்ப நீங்கள் தொடர்ந்தும் ஏனையோருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் தூய்மையாக்குபவர்கள் அல்ல. நீங்கள் ஒரேயொருவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். என்னுடையவர் தந்தை ஒருவரே அன்றி, வேறெவரும் இல்லை. பாபா, நான் உங்களுக்கு மாத்திரமே என்னை அர்ப்பணிப்பேன். நீங்கள் சிவபாபாவிற்கு மாத்திரம் உங்களை அர்ப்பணிக்க வேண்டும். ஏனைய அனைவரின் நினைவும் துறக்கப்பட வேண்டும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் தொடர்ந்தும் பலரை நினைவுசெய்கிறார்கள். இங்கு உங்களுக்கு ஒரேயொரு சிவபாபா அன்றி, வேறெவரும் இல்லை. இருந்தபொழுதிலும் சிலர் தங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுகிறார்கள், எனவே அவர்கள் எந்த முக்தியை அல்லது சற்கதியைப் பெறுவார்கள்? அவர்கள் குழப்பமடைகிறார்கள்: ஒரு புள்ளியை நான் எவ்வாறு நினைவுசெய்ய முடியும்? ஓ! ஆனால், நீங்கள் ஓர் ஆத்மா என்பதை நீங்கள் நினைவுசெய்கிறீர்கள், இல்லையா? ஓர் ஆத்மா ஒரு புள்ளி. உங்கள் தந்தையாகிய நானும் ஒரு புள்ளியே. நீங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். மாயியும் (ஆனந்தமாயி) ஒரு சரீரதாரியே. நீங்கள் சரீரமற்றவரிடமிருந்தே உங்கள் ஆஸ்தியைப் பெறவுள்ளீர்கள். ஆகவே, ஏனைய அனைத்தையும் துறந்து உங்கள் புத்தியின் யோகத்தை ஒரேயொருவருடன் மாத்திரம் இணைத்துக்கொள்ளுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சரீர உணர்வு எதனையும் முடிப்பதற்கு, நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும், உங்கள் சரீரத்திலிருந்து மரணித்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்;; பற்றற்றவராகுங்கள். நான் சரீரத்தில் இல்லை. சரீரத்தை அன்றி, ஆத்மாக்களையே பாருங்கள்.

2. நீங்கள் ஒருபொழுதும் எவரது சரீரத்தின் மீதும் பித்துப் பிடித்தவர்கள் ஆகாதீர்கள். சரீரமற்ற ஒரேயொரு தந்தை மீது அன்பு கொள்ளுங்கள். ஒரேயொருவருடன் மாத்திரம் உங்கள் புத்தியின் யோகத்தை இணைத்துக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பிராமண வாழ்வில் பொக்கிஷங்கள் அனைத்தையும் ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்துவதால், எப்பொழுதும் பேறுகள் அனைத்தும் நிறைந்துள்ள, ஒரு திருப்தி இரத்தினம் ஆவீர்களாக.

திருப்தியாக இருப்பதே, பிராமண வாழ்வில் அனைத்திலும் அதிமகத்தான பொக்கிஷம் ஆகும். எங்கே பேறுகள் அனைத்தும் உள்ளனவோ, அங்கே திருப்தி இருக்கின்றது, எங்கே திருப்தி இருக்கின்றதோ, அங்கே அனைத்தும் உள்ளது. திருப்தி இரத்தினங்களாக இருப்பவர்களே பேறுகள் அனைத்தினதும் சொரூபங்களாக உள்ளனர். அவர்களின் பாடலானது: நான் அடைய வேண்டியதை அடைந்து விட்டேன். நீங்கள் பெற்றுள்ள பொக்கிஷங்கள் அனைத்தையும் ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்துவதே, பேறுகள் அனைத்தினாலும் நிறைந்திருப்பதற்கான வழியாகும், ஏனெனில் நீங்கள் அவற்றை எந்தளவிற்கு அதிகமாக ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு அந்தப் பொக்கிஷங்கள் அதிகரிக்கும்.

சுலோகம்:
ஒரு புனித அன்னமானவர் எப்பொழுதும் குறைபாடுகள் எனும் கற்களை அன்றி, சிறப்புக்கள் எனும் முத்துக்களையே தேர்ந்தெடுக்கின்றார்.