21.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை ஒருவரே உங்களுக்கு வாழ்க்கைத் தானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் வாழ்க்கைத் தானத்தைப் பெறக்கூடிய வகையில் அத்தகையதொரு ஞானத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கின்றார். உங்களுக்கு வாழ்க்கைத் தானத்தைச் கொடுக்கின்ற அத்தகையதொரு தந்தையை அன்புடன் நினைவு செய்யுங்கள்.

கேள்வி:
எதன் அடிப்படையில் உங்களுடைய பொக்கிஷக் களஞ்சியங்;கள் அனைத்தும் 21 பிறவிகளுக்கு நிறைந்திருக்கும்?

8பதில்:
சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் பெறுகின்ற ஞானமே வருமானத்திற்கான வழியாகும். இக் கல்வியின் அடிப்படையிலேயே, உங்களுடைய அனைத்துப் பொக்கிஷக் களஞ்சியங்களும் நிரம்புகின்றன. இக்கல்வியின் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். அங்கே வேறு எதையும் பெற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்காது. எதுவுமற்றிருந்த ஆத்மாக்களாகிய நீங்கள் மகத்துவமானவர் ஆகுவதற்கான அத்தகைய ஞானத்தை பாபா உங்களுக்குத் தானம் செய்கிறார்.

ஓம் சாந்தி.
கடவுள் பேசுகின்றார். சிவபாபா உங்களுக்குக் கற்பிப்பதற்காக வருகின்றார் என்பதை சாலிகிராம்கள் ஆகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் மாத்திரமே, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்தவர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது எதுவும் புதிதாக இருப்பதில்லை. நீங்கள் இப்பொழுது அனைத்தையும் புரிந்துகொண்டுள்ளீர்கள். மனிதர்கள் அனைத்தையும் மறந்துவிட்டனர். அவர்கள், தங்களுக்குக் கற்பித்த ஒருவருக்குப் பதிலாக, கல்வியில் முதலாம் இலக்கத்தைப் பெற்றவரின் பெயரைப் புகுத்திவிட்டார்கள். நீங்கள் கற்கும் போது இந்த விடயத்தை நிரூபிக்க வேண்டும். இது பாரதத்துச் சமயநூல்களின் விடயம் மாத்திரமேயன்றி, வேறு எந்தச் சமயநூல்களினதும் அல்ல. பாரதத்து நூல்களில் தவறு ஏற்பட்டுள்ளது. உங்களைத் தவிர வேறு எவராலும் இவற்றை நிரூபிக்க முடியாது. இது அநாதியாக நிச்சயிக்கப்பட்ட நாடகம் என்பதும், இது மீண்டும் இடம்பெறும் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். மனிதர்களைச் சீர்திருத்துவதற்கு நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள். மனிதர்கள் சீர்திருத்தப்படும் போது உலகம் தானாகவே சீராகிவிடும். சத்தியயுகம் புதிய சீராக்கப்பட்ட உலகமாகும். கலியுகமோ பழைய சீரற்ற உலகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இதனை நன்றாகப் புரிந்து கொண்டு, அவற்றைக் கிரகித்து, ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாகவும் ஆகுகின்றீர்கள். இது மென்மேலும் நன்றாக ஆய்வுசெய்யப்படல் (சநகiநென) வேண்டும். பாபா இதனை பற்றி அதிகளவு ஆய்வு (சநகiநென) செய்த பின்னரே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களைச் சீர்திருத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்களைச் சீர்திருத்திய பின்னர், நான் உங்களைச் சீர்திருத்த வேண்டிய அவசியம் இருக்க மாட்டாது. நீங்கள் அநாரியர்கள் (சீரற்றவர்கள்) ஆகிவிட்டீர்கள். இப்பொழுது நீங்கள் ஆரியர்கள் (சீர்திருந்தியவர்கள்) ஆக வேண்டும். அதாவது, தேவர்கள் ஆகவேண்டும். சத்தியயுகத்தில் மாத்திரமே அவ்வாறு இருக்கும். அவர்கள் அனைவரும் சீர்திருந்தியவர்கள். இப்பொழுது சீரற்றவர்கள் அவர்களை வழிபடுகின்றனர். அனைவரும் மனிதர்களே என்பதால், அவர்களை ஏன் சீர்திருந்தியவர்கள் என அழைக்கிறார்கள் என்பது எவருடைய புத்தியிலும் பிரவேசிக்கவில்லை. சீராகவிருந்த ஆரியர்களே இப்பொழுது அநாரியர்களாகி உள்ளனர். ஆரியர்;களும், அநாரியர்களும் இருக்கின்றனர். ஆனால், ஆரியசமாஜம் (ஒரு சமுதாயம்) என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்லது சிறுபிரிவு ஆகும். இவை அனைத்தையும் கல்ப விருட்சத்தின் படத்திலிருந்து மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இது மனித உலக விருட்சம், இதன் 5000 வருடங்களைக் கொண்டதாகும். இதுவே கல்ப விருட்சம் என அழைக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், நீங்கள் இக் கல்ப விருட்சத்தைப் பற்றிப் பேசும் போது, மக்களின் புத்தியில் இந்த விருட்சம் நிலைத்திருப்பதில்லை. இது உங்களுக்கு ஒரு விருட்சத்தின் ரூபத்தில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அம்மக்கள், கல்ப விருட்சத்தின் கால எல்லை நூறாயிரம் வருடங்களைக் கொண்டதாகக் கூறுகின்றனர். அது 5000 வருடங்களைக் கொண்டது எனத் தந்தை கூறுகின்றார். கல்பத்தின் கால எல்லை ஏதோ ஒரு குறிப்பிட்ட அளவுகாலம் எனச் சிலர் கூறுகின்றனர். ஏனையோர் இன்னுமொரு கால அளவு எனக் கூறுகின்றனர். எவராலும் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் தங்களுக்குள் சமயநூல்கள் பற்றி அதிகளவு விவாதிக்கின்றனர். இது உங்களுக்கான சம்பாஷணை ஆகும். நீங்கள் கருத்தரங்குகளையும் நடாத்துகின்றீர்கள். இதுவே சம்பாஷணை எனப்படும். நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குக் கேள்வியும் பதிலும் என்ற பகுதியைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் பாபா கூறியதிலிருந்து ஒரு விடயத்தை எடுத்து ஏனையோருக்குக் கூறுகின்றீhகள். வெளியுலக மக்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதையும் நீங்கள் செவிமடுக்க முடியும். பின்னர் நீங்கள் திரும்பி வந்து அவர்கள் எவ்வாறு தங்களுக்குள் விவாதிக்கின்றார்கள் என்பதை இங்குள்ள மக்களுக்குக் கூறலாம். அனைத்திற்கும் முதலில் கீதையின் கடவுள் யார் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தையாகிய கடவுளை மறந்துவிடுவதன் மூலம் அவர்களுடைய கணக்குகள் முழுமையான நட்டத்தை அடைந்துள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தை மீது அன்பு கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் பாபாவை நினைவு செய்கின்றீர்கள். பாபா ஒருவரே உங்களுக்கு வாழ்க்கைத் தானத்தைக் கொடுக்கின்றார். ஏதுமற்றிருந்த உங்களுக்கு மகத்துவமானவர்கள் ஆகுவதற்கான அத்தகைய ஞானதானத்தை அவர் கொடுக்கின்றார். எனவே நீங்கள் தந்தை மீது அன்பு கொண்டிருத்தல் வேண்டும். பாபா இவ்வாறான புதிய விடயங்களை எங்களுக்குக் கூறுகின்றார். நாங்கள் கிருஷ்ணரைப் பெருமளவு நினைவு செய்கின்றோம் இருப்பினும் அவர் எங்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. மக்கள் நாராயணனையும் நினைவு செய்கின்றார்கள். அவரை நினைவு செய்வதால் ஏதாவது நிகழ்ந்திருக்கின்றதா? நாங்கள் இன்னமும் ஏழ்மையில் இருக்கின்றோம். தேவர்கள் மிகவும் செழிப்பானவர்கள். இப்பொழுது அனைத்துமே செயற்கை ஆகியுள்ளது. எந்தவிதப் பெறுமதியுமற்ற பொருட்கள் கூட இப்பொழுது பெறுமதி கொண்டதாக ஆகியிருக்கின்றன. அங்கு, தானியங்கள் போன்றவற்றிற்கு என்ன விலையும் இருக்கலாம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஒவ்வொருவரும் தமக்கென சொந்தமாக சொத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நிறைவேறாத ஆசை என்று எதுவும் இல்லை. பாபா கூறுகின்றார்: நான் உங்கள் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புகின்றேன். உங்களுடைய பொக்கிஷக் களஞ்சியம் நிரம்பக்கூடிய அளவிற்கு அத்தகைய ஒரு ஞானத்தை நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன். ஞானம் வருமானத்தின் ஒரு மூலாதாரம் என்பது உங்கள் புத்தியில் இருக்கின்றது. ஞானமே அனைத்தும் ஆகும். நீங்கள் இக்கல்வி மூலமே மிகவும் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இக்கல்விக்கான பொக்கிஷக் களஞ்சியம் இருக்கின்றது. அங்கே. அவ்வாசிரியர்கள் உங்களுக்குக் கற்பிக்கின்றார்கள். அதன் மூலம் நீங்கள் தற்காலிகச் சந்தோசத்தைப் பெறுகின்றீர்கள் இக்கல்வியின் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கான சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்வதற்குக் காலம் எடுக்கும். எவராலும் இதை விரைவில் புரிந்து கொள்ளமுடியாது. பல மில்லியன்களில் ஒரு கைப்பிடி அளவினரே வெளிப்படுவார்கள். அரைச்சக்கரமாக மனிதர்கள் அனைவரும் தொடர்ந்தும் ஒருவரையொருவர் விழச் செய்தவாறே இருக்கிறார்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களை மேலேறச் செய்கின்றார். இந்த எல்லையற்ற கல்வியை உங்களுக்குக் கற்பிக்கின்ற ஒருவருடைய பெயரைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக, அவர்கள் கற்கின்ற ஒருவரின் பெயரைப் இட்டுள்ளார்கள். இவ் விடயங்களை உலகத்தவர் அறியார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: கடவுள் பேசுகிறார். அவர் எங்களுக்குக் கற்பித்தபின் சென்று விடுகின்றார். பின்னர் அவரைப் பற்றிய சமயநூல் எதுவும் இருக்கவில்லை. சத்தியயுகத்தில் சமயநூல்கள் எதுவும் இல்லை. அவை அனைத்தும் பக்திமார்க்கத்தின் சமயநூல்களாகும். விருட்சம் மிகவும் பெரியது. இவ்விருட்சத்தில் எண்ணற்ற கிளைகள் இல்லாதிருந்தால், விருட்சத்தின் எந்தச் சுவடுமே எஞ்சியிருக்காது. இவ்விடயங்கள் அனைத்தும் கிரகிக்கப்பட வேண்டும். நீங்கள் இவ்விடயங்களைக் கிரகிக்கின்றீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவர், கற்பித்து விட்டு, பின்னர் மறைந்து விடுகின்றார். கற்பவர்கள் பின்னர் வந்து உலக அதிபதிகள் ஆகுகின்றார்கள். இவை அத்தகைய புதிய விடயங்களாகும். எவரினது புத்தியிலும் எந்தவொரு விடயமேனும் இருப்பதில்லை. மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்களே. சிலர் சித்தி எய்துகிறார்கள், ஏனையவர்கள் சித்தியடைவதில்லை. இது ஒரு முக்கியமான, எல்லையற்ற பரீட்சையாகும். இப்பொழுது நீங்கள் நன்றாகக் கற்றால், பின்னர் ஒவ்வொரு சக்கரத்திலும் நீங்கள் நன்றாகக் கற்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நன்றாகக் கற்பவர்கள் மாத்திரமே உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவார்கள். அனைவரும் வரிசைக்கிரமமாகவே மீண்டும் திரும்புவார்கள். வகுப்பு முழுவதும் மாற்றப்படுகின்றது. அவர்கள் அங்கு சென்று வரிசைக்கிரமமாகவே அமர்வார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாவிலேயே நல்ல, தீய சம்ஸ்காரங்கள் உள்ளன. சரீரம் வெறும் களிமண்ணே ஆகும். ஆத்மா செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது. 100வீதம் சதோபிரதானமானவர் யார் என்பதும், 100வீதம் தமோபிரதானமானவர் யார் என்பதும் உங்களுக்குப் புரிகின்றது. எல்லாவற்றிக்கும் முதலில் நீங்கள் ஏழைகளை ஈடேற்ற வேண்டும். அவர்களே முதலில் வருவார்கள். குருமாரின் மிகச்சிறந்த விசேடமான சீடர்கள் வரும்போது, அவர்களின் புத்தியும் திறக்கப்படும். தங்களின் சொந்த இலைகளே இப்பொழுது தங்களை விட்டு விலகிச் செல்கிறார்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். இதற்கு உரியவர்கள் மீண்டும் தோன்றுவார்கள். தந்தை வந்து புதிய விருட்சத்தை வளர்க்க ஆரம்பிக்கிறார். ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் வருவார்கள். அவர்கள் தங்கள் சொந்தப் பாரதத்திற்கே மீண்டும் வருவார்கள். அவர்களே பாரதவாசிகளாக இருந்தவர்கள். எங்கள் கிளைக்கு உரியவர்கள் அனைவரும் மீண்டும் வருவார்கள். மேலும் முன்னேறுகையில் தொடர்ந்தும் நீங்கள் அனைத்தையும் புரிந்து கொள்வீர்கள். இப்பொழுது அனைவரும் வெளியிலுள்ள மக்களிடமிருந்து அதிர்;ச்சியையே தொடர்ந்தும் பெறுகிறார்கள். வெளியிடத்து மக்கள் எங்கிருந்தாலும் மற்றவர்கள் அவர்களைத் தொடர்ந்தும் விரட்டிவிடுவார்கள். தாங்கள் மிக்க செல்வந்தராகியுள்ளதாகவும், இங்குள்ள மக்கள் ஏழைகள் ஆகியுள்ளார்கள் எனவும் மக்கள் சிந்திக்கிறார்கள். இறுதியில் அனைவரும் மீண்டும் தங்கள் சொந்தத் தர்மத்துக்கே செல்ல வேண்டும். இறுதியில் அனைவரும் தங்கள் வீட்டிற்கே ஓடுவார்கள். வெளிநாட்டில் ஒருவர் மரணித்தால் அவரை பாரதத்திற்கே கொண்டுவருவார்கள். ஏனெனில் பாரதமே முதற்தரமான தூய பூமியாகும். புதிய உலகம் பாரதத்திலேயே இருந்தது. இந்நேரத்தில் இவ்வுலகை விகாரமற்ற உலகம் என அழைக்க முடியாது. இது விகார உலகமாகும். இதனாலேயே மக்கள் கூவியழைக்கின்றார்கள்: ஓ! தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! இது அதே உலகமாக இருந்த போதிலும் தூய்மையான ஒருவர் கூட இந்நேரத்தில் இல்லை. தூய ஆத்மாக்கள் அசரீரி உலகிலேயே இருப்பார்கள். அதுவே மகா பிரம்ம தத்துவமாகும். ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையாகி மீண்டும் அங்கே செல்வார்கள். பின்னர் அவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்கு வரிசைக்கிரமமாக கீழிறங்குவார்கள். இதுவே ஆதி சனாசன தேவிதேவதா தர்மத்தின் அத்திவாரமாகும். பின்னர் மூன்று கிளைகள் தோன்றுகின்றன. இதுவே தேவ தர்மமாகும். இது ஒரு கிளையல்ல. முதலாவதாக இந்த அத்திவாரமும், பின்னர் மூன்று கிளைகளும் தோன்றும். நான்கு சமயங்களுமே முக்கியமானவையாகும். பிராமண தர்மமே மிகச்சிறந்த தர்மமாகும். அதுவே அதிகளவு போற்றப்படுகின்றது. இங்கு நீங்கள் வைரங்கள் போல் ஆகுகின்றீர்கள். இங்கு தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதால் நீங்களே மகத்துவமானவர்கள். பிராமணர்களாகிய நீங்களே தேவர்களை விட அதிகளவு ஞானம் நிறைந்தவர்கள். இது ஓர் அற்புதமே! நாங்கள் பெறுகின்ற ஞானம் எங்களுடனேயே வரும். பின்னர் அங்கு நாங்கள் இந்த ஞானத்தை மறந்து விடுகின்றோம். நீங்கள் முன்னர் என்ன கற்றீர்கள் என்பதையும், இப்போது என்ன கற்கிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஜ.சி.எஸ் க்கு கற்பவர்கள் எதனைக் கற்கிறார்கள்? பின்னர் அவர்கள் எதனைக் கற்பார்கள்? அதில் அதிகளவு வேறுபாடு உள்ளது! நீங்கள் மேலும் முன்னேறுகையில் புதிய கருத்துக்கள் பலவற்றைச் செவிமடுப்பீர்கள். பாபா இப்பொழுது உங்களுக்குக் கூறமாட்டார். பின்னர் செவிமடுப்பதே உங்கள் பாகமாகும். ஞானத்தின் பாகம் முடிவடையும் காலத்தில் நீங்கள் பாபாவின் ஞானத்தைக் கிரகித்திருப்பீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. பின்னர் எங்கள் பாகங்கள் சுவர்க்கத்தில் ஆரம்பமாகும். அவருடைய (சிவபாபாவின்) பாகம் முடிவடைந்து விடும். இதனை நீங்கள் உங்கள் புத்தியில் நன்றாகக் கிரகிக்க வேண்டியது அவசியமாகும். இதனைத் தொடர்ந்தும் கடையுங்கள். தொடர்ந்தும் தந்தையை நீங்கள் நினைவு செய்யுங்கள். நீங்கள் நினைவைக் கொண்டிராவிட்டால் குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். தந்தையை நீங்கள் நினைவு செய்வதனால் சரீர உணர்வு முடிவடைந்து விடும். சந்நியாசிகளுமே இந்த ஸ்திதியைப் பயிற்சி செய்து தங்கள் சரீரங்களை இந்த ஸ்திதியிலேயே நீக்கி விடுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர்களின் பாதை வேறுபட்டது. இதனாலேயே அவர்கள் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும். அவர் பிரம்ம தத்துவத்துடன் கலந்து விட்டார் என்றும், அவர் மீண்டும் திரும்பி இங்கே வரமாட்டார் என்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் நினைக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எவராலும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இறுதியில் நடிகர்கள் அனைவரும் மேடைக்கு வரும்போதே அனைவரும் வீட்டுக்குத் திரும்பி செல்வார்கள். அது ஓர் எல்லைக்குட்பட்ட, அழியக்கூடிய நாடகமாகும். ஆனால் இதுவோ அழிவற்ற, எல்லையற்ற நாடகமாகும். நீங்கள் இதனை மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். இந்நாடகம் தொடர்ந்தும் ஒரு பேன் போன்று ஊர்ந்து செல்கின்றது. அம்மக்கள் சிறு நாடகங்களை உருவாக்குகின்றார்கள். அவர்கள் பொய்யான சினிமாப்படங்களைத் தயாரிக்கின்றார்கள். அதில் சில நல்ல விடயங்களும் உள்ளன. உதாரணத்திற்கு அவர்கள் விஷ்ணுவின் அவதாரத்தையும் காட்டுகின்றார்கள். எவரும் மேலிருந்து கீழிறங்கி வருவது என்றில்லை. இலக்ஷ்மி நாராயணன் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக வருகின்றார்கள். ஆனால் எவருமே மேலிருந்து அவதாரம் செய்வதில்லை. தந்தை இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். அப்பொழுதே மாத்திரமே உங்களால் இந்த விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். முன்னர் நீங்களும் சீரழிந்த புத்தியைக் கொண்டிருந்தீர்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்திய போதே உங்கள் நெற்றி திறக்கப்பட்டது. நீங்கள் நீண்டகாலமாகச் செவிமடுத்த அனைத்தும் பயனற்றதாகும். பதிலாக நீங்கள் தொடர்ந்தும் மிக மோசமாகக் கீழே வீழ்ந்துள்ளீர்கள். இதனாலேயே அனைவரையும் அதனை எழுதச் செய்கின்றீர்கள். இதனை அவர்கள் எழுதி கொடுக்கும் போதே, அவர்களின் புத்தியில் சிறிதளவாவது புகுந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். வெளியிலிருந்து மக்கள் வரும் போது ஒரு படிவத்தை நிரப்புமாறு அவர்களிடம் கேட்கிறீர்கள். அதனால், அவர்கள் உங்கள் குலத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை உங்களால் கூறமுடியும். தந்தையை அறிந்து கொள்வதே பிரதான விடயமாகும். உண்மையில் அவர்களுக்குத் தந்தையே ஒவ்வொரு சக்கரத்திலும் கற்பிக்கின்றார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவு காலமாக அவர்கள் தூய்மையாக உள்ளனர் என நீங்கள் அவர்களிடம் வினவ வேண்டும். அவர்கள் அந்தளவு விரைவாகச் சீர்திருந்துவதில்லை. மாயை மீண்டும் மீண்டும் அவர்களைப் பற்றிப் பிடிக்கின்றாள். அவள் எவரையாவது பலவீனமானவர்கள் எனக் கண்டதும் அவர்களை விழுங்கி விடுகிறாள். சில மகாராத்திகளைக் கூட மாயை விழுங்கி விடுகிறாள். சமயநூல்களில் உள்ள உதாரணங்களும் இந்நேரத்திற்குரியவையே ஆகும். ஆலயங்களிலும் கூட அவர்கள் மகாராத்திகள், குதிரைப் படைகள், காலாட்படை போன்றவற்றைக் காட்டியுள்ளார்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் சொந்த ஞாபகார்த்தங்களைப் பார்க்கலாம். அதேபோல் நீங்களும் அவ்வாறு ஆகும்போது பக்தி முடிவடைந்து விடும். நீங்கள் எவரை வீழ்ந்து வணங்க முடியாது. நீங்கள் அவர்களிடம் வினவுவீர்கள்: அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள்? அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுங்கள்! பாபா குழந்தைகளாகிய உங்களை ஞானம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளார். இதனாலேயே நீங்கள் அவர்களிடம் இவ்வாறான வினாக்களை வினவ முடியும். எனவே நீங்கள் அப் போதையைக் கொண்டிருக்க வேண்டும். எட்டுப் பேர் மாத்திரம் சிறப்புச்சித்தி எய்துகிறார்கள். இது ஒரு முக்கியமான பரீட்சையாகும். நீங்களே உங்களைச் சோதிக்க வேண்டும்: ஆத்மாவாகிய நான் தூய்மையாகி விட்டேனா? நீங்கள் யோகத்தைக் கொண்டிருக்கும் போதே மின்கலம் (பற்றரி) சக்தியூட்டப்படும். நீங்கள் தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருந்தால் சதோபிரதான் ஆகுவீர்கள். தமோபிரதான் ஆத்மாக்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இதுவும் நாடகமே. அங்கு துன்பத்தை விளைவிக்கும் எதுவுமே இல்லை. பசுக்கள் கூட அங்கு மிக அழகாக இருக்கும். கிருஷ்ணருடன் மிக அழகான பசுக்களையே காட்டுகின்றனர். பிரபல்யமானவர்களின் தளபாடங்களும் மிக அழகாக இருக்கும். பசுக்கள் அதிகளவு பாலைக் கொடுக்கின்றன. இதனாலேயே அங்கு பாலாறு ஓடிக்கொண்டிருக்கின்றது. அவை இங்கு ஓடுவதில்லை. இப்பொழுது நீங்கள் ஞானம் நிறைந்தவர் ஆகியுள்ளீர்கள். இவ்வுலகம் சீரழிந்துள்ளது என நீங்கள் கருதுகிறீர்கள். இவ்வுலகிலுள்ள குப்பைகள் அனைத்தும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். அப்போதே குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும் போது, அனைவரும் சுத்தமாகவும் தூய்மையாகவும் ஆகுவார்கள். நாங்கள் எங்கள் இராச்சியத்திற்குச் செல்கின்றோம். இதுவே சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. இப்பெயரைக் கேட்டதுமே நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பழைய சீரழிந்த உலகைச் சீரமைப்பதற்காக, உங்களைச் சீராக்குங்கள். தந்தையின் நினைவினால் உங்கள் புத்தியைத் சீராக்குங்கள்.

2. இதயபூர்வமான ஒரு சம்பாஷணையை உங்கள் மத்தியில் கொண்டிருங்கள். விவாதம் செய்தல் போன்றவற்றில் ஈடுபடாதீர்கள். ஞானத்தைத் தானம் செய்து, அனைவரது பொக்கிஷக் களஞ்சியத்தையும் நிரப்புங்கள்.

ஆசீர்வாதம்:
அன்பிற்கு பிரதியுபகாரமாக, உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி, முழுமையாகவும் சம்பூர்ணமாகவும், தந்தைக்குச் சமமானவராகவும் ஆகுவீர்களாக.

நீங்கள் நேசிக்கின்ற ஒருவரிடம் எந்தப் பலவீனத்தை பார்க்கும் பொழுதும் உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாதிருப்பதே அன்பின் அடையாளமாகும், நீங்கள் நேசிக்கின்ற ஒருவரின் தவறை உங்கள் சொந்தத் தவறாகவே கருதுவீர்கள். குழந்தைகளைப் பற்றி தந்தை ஏதோ ஒன்றைப் பற்றி கேள்விப்படும் போது, அதனை தனக்குரியதாகவே அவர் உணர்கின்றார். குழந்தைகள் தன்னைப் போன்று முழுமையாகவும் சம்பூர்ணமாகவும் இருப்பதைப் பார்க்கவே தந்தை விரும்புகின்றார். இந்த அன்பிற்கு பிரதியுபகாரமாக, உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். பக்தர்கள் தமது தலையை வெட்டி அவர் முன்னிலையில் வைப்பதற்கும் தயாராக உள்ளார்கள். நீங்கள் தலையை வெட்ட வேண்டியதில்லை. ஆனால் இராவணனின் தலையை வெட்டிவிடுங்கள்.

சுலோகம்:
உங்கள் ஆன்மிக அதிர்வுகளினால் சக்திமிக்க சூழலை உருவாக்குகின்ற சேவையை செய்வதே மிக மேன்மையான சேவையாகும்.