21.04.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 26.08.84 Om Shanti Madhuban
உங்களின் இலக்கிற்கேற்ப வெற்றியைப் பெறுவதற்கு, சுயநல நோக்கங்களுக்காக அன்றி, ஒவ்வொரு பணியையும் சேவைக்காகச் செய்யுங்கள்.
இன்று, பாபா திரிமூர்த்தி சந்திப்பைக் காண்கிறார். ஞான சூரியன், ஞானச்சந்திரன் மற்றும் ஞான நட்சத்திரங்களின் சந்திப்பு இடம்பெறுகிறது. பிராமண உலகின் இந்த திரிமூர்த்தி சந்திப்பு குறிப்பாக மதுவனத்தின் குடையின்கீழ் இடம்பெறுகிறது. அண்ட வெளியில் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நிகழுகிறது. நீங்கள் சூரியனையும் சந்திரனையும் சந்திப்பது, இந்த எல்லையற்ற மதுவனத்தின் குடையின் கீழ் ஆகும். நட்சத்திரங்களான நீங்கள் இவர்கள் இருவரையும் சந்திக்கும்போது, ஞான சூரியனிடமிருந்து விசேடமான சக்தியின் ஆசீர்வாதங்களையும் ஞானச் சந்திரனிடமிருந்து விசேடமான அன்பு ஆசீர்வாதங்களையும் பெறுகிறீர்கள். அதன் மூலம் நீங்கள் அன்பானவர்களாகவும் வெளிச்சவீடுகளாகவும் ஆகுகிறீர்கள். இந்த இரண்டு சக்திகளும் சதா உங்களுடன் இருக்க வேண்டும். தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் பெறப்படும் இந்த இரண்டு ஆசீர்வாதங்களும் உங்களை சதா வெற்றி சொரூபங்கள் ஆக்குகின்றன. நீங்கள் அனைவரும் இத்தகைய மேன்மையான வெற்றி நட்சத்திரங்கள் ஆவீர்கள். வெற்றி நட்சத்திரங்களான நீங்கள், அனைவருக்கும் வெற்றி நட்சத்திரங்கள் ஆகுவதற்கான செய்தியைக் கொடுக்கிறீர்கள். எந்தத் துறையில் உள்ள ஆத்மாக்கள் எத்தகைய பணியைச் செய்தாலும், அவர்கள் அனைவரினதும் பிரதானமான இலக்கு, அவர்களின் பணியில் வெற்றியாளர் ஆகுவதே ஆகும். ஏன் அவர்கள் வெற்றியை விரும்புகிறார்கள்? ஏனெனில், அனைவரும் தமக்கூடாக அமைதியையும் சந்தோஷத்தையும் பெற வேண்டும் என அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் தமக்காக ஒரு பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்ற சுயநலமான நோக்கத்துடன் செய்தாலென்ன அல்லது தற்காலிகமான வசதிகளுடன் அதைச் செய்தாலென்ன, சுயத்திற்காகவும் மற்றவர்களுக்காகவும் அவர்களின் இலக்கானது, அமைதியையும் சந்தோஷத்தையும் அடைவதே ஆகும். அவர்கள் அனைவரினதும் இலக்கு நல்லதே. ஆனால், அவர்களின் சுயநல நோக்கங்களால் அவர்களால் தமது இலக்கை நிறைவேற்ற முடியாமல் போகிறது. அவர்களின் இலக்கிற்கும், அந்த இலக்கிற்குத் தேவையான தகைமைகளுக்கும் இடையில் வேறுபாடு ஏற்படும்போது, அவர்களால் வெற்றி பெற முடியாமல் போகிறது. இத்தகைய ஆத்மாக்களுக்கு அவர்களின் பிரதானமான இலக்கை அடைவதற்கான இலகுவான வழிமுறையானது, ‘ஒரு வார்த்தையை சிறிது மாற்றுவதன் மூலம் நீங்கள் வெற்றி என்ற மந்திரத்தைப் பெறுவீர்கள்’ என்று கூறுங்கள். ‘சுயநல நோக்கங்களுக்குப் பதிலாக (ஸ்வர்த்), அது அனைவரின் சேவைக்காக இருக்க வேண்டும் (சர்வா கீ சேவா அர்த்)’. சுயநல நோக்கங்கள் உங்களின் இலக்கிலிருந்து உங்களை அப்பால் எடுத்துச் செல்லும். சேவைக்காக எதையும் செய்வது இலகுவாக உங்களின் இலக்கை வெற்றிகரமாக அடைவதற்கு உதவும். நீங்கள் லௌகீக அல்லது அலௌகீகப் பணிக்குக் கருவி ஆகும்போது, உங்களின் தனிப்பட்ட பணியில் நீங்கள் இலகுவாக வெற்றியையும் திருப்தியையும் பெறுவீர்கள். சகல பிரிவுகளையும் (துறைகளையும்) சேர்ந்தவர்களுக்கு இந்த ஒரு வார்த்தையின் வேறுபாட்டின் மந்திரத்தைக் கூறுங்கள்.
சகல துன்பங்களும் வேதனைகளும் குழப்பங்களும், உலகெங்கும் உள்ள பல்வகையான குழப்பங்களும் இந்த ‘சுவர்த்’ (சுயநல நோக்கங்கள்) என்ற ஒரு வார்த்தையாலேயே ஆகும். இதனாலேயே, சேவை செய்வதற்கான நோக்கம் முடிந்துவிடுகிறது. ஒருவரின் தொழில் என்னவாக இருந்தாலும், அவர் தனது பணியைச் செய்வதற்கு ஆரம்பிக்கும்போதெல்லாம், அவருக்குள் ஏற்படும் எண்ணம் என்ன? அவர் சுயநலமில்லாமல் சேவை செய்யும் எண்ணத்தையே கொண்டிருக்கிறார். எவ்வாறாயினும், தொடர்ந்து முன்னேறும்போது, அவரின் இலக்கும் அதற்கான தகைமைகளும் மாறுகின்றன. எனவே, என்ன விகாரம் வந்தாலும், அதற்கான பிரதானமான காரணம் அல்லது விதையானது, சுயநல நோக்கங்களே. ஆகவே, சென்று, அவர்களின் இலக்கை நிறைவேற்றுவதற்கு வெற்றிக்கான திறவுகோலைக் கொடுங்கள். மக்கள் பொதுவாக மற்றவர்களுக்கு ஒரு சாவியைப் பரிசளிப்பார்கள். எனவே, நீங்கள் அனைவருக்கும் வெற்றிக்கான திறவுகோலை வழங்குவதற்காகச் செல்கிறீர்கள். மக்கள் அனைத்தையும் கொடுப்பார்கள். ஆனால், எவரும் தமது பொக்கிஷங்களின் சாவியை மற்றவர்களுக்குக் கொடுப்பதில்லை. நீங்கள் சென்று, வேறு எவரும் கொடுக்காத ஒன்றை அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். அவர்கள் சகல பொக்கிஷங்களுக்குமான சாவியைப் பெறும்போது,அவர்களின் வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. அச்சா. இன்று, பாபா உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவே வந்துள்ளார்.
நீங்கள் தொடர்ந்து 21 பிறவிகளுக்கு இராச்சிய திலகத்தைப் பெறுவீர்கள். நீங்கள் சங்கமயுகத்தின் பெயர்சூட்டும் விழாவின் போதே, விழிப்புணர்விற்கான திலகத்தை பாப்தாதாவிடமிருந்து ஏற்கனவே பெற்றுவிட்டீர்கள். பிராமணர்கள் விழிப்புணர்வின் திலகத்தை அணிபவர்கள். தேவர்கள் இராச்சிய திலகத்தை அணிபவர்கள். மத்திய ரூபம், தேவதை ரூபம் ஆகும். அவர்களின் திலகம், சம்பூர்ண ரூபத்தின் திலகம், சமமான ரூபத்தின் திலகம் ஆகும். பாப்தாதா உங்களுக்கு என்ன திலகத்தை இடுவார்? சம்பூரணமும் சமமாகவும் இருப்பதன் சொரூபத்தின் திலகம். அத்துடன் அவர் சகல சிறப்பியல்புகளின் இரத்தினங்கள் பதித்த கிரீடத்தையும் உங்களுக்குச் சூட்டுகிறார். நீங்கள் இத்தகைய திலகத்தையும் கிரீடத்தையும் அணிந்திருக்கும் தேவதை ரூபங்கள் ஆவீர்கள். அத்துடன் இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் சிம்மாசனத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். பாப்தாதா இந்த அலௌகீக அலங்காரத்துடன் இந்த விழாவைக் கொண்டாடுகிறார். நீங்கள் உங்களின் கிரீடங்களை அணிந்திருக்கிறீர்கள், அல்லவா? கிரீடம், திலகம் மற்றும் சிம்மாசனம். இது ஒரு விசேடமான வைபவம் ஆகும். நீங்கள் அனைவரும் இந்த வைபவத்தைக் கொண்டாடுவதற்கு வந்துள்ளீர்கள், அல்லவா? அச்சா.
பாப்தாதா, இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த வெற்றி நட்சத்திரங்கள் அனைவருக்கும் வெற்றிமாலையை அணிவிக்கிறார். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றி அடைவதற்கான உரிமையைப் பெற்றுள்ள விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். இதனாலேயே, ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றி உங்களின் பிறப்புரிமை ஆகும். சதா இந்த நம்பிக்கையுடனும் போதையுடனும் தொடர்ந்து பறந்திடுங்கள். குழந்தைகளான நீங்கள் அனைவரும், உங்களின் நினைவினதும் அன்பினதும் மாலைகள் தினமும் முறையாக, மிகுந்த அன்புடன் தந்தையை அடையச் செய்கிறீர்கள். இதைப் பிரதிசெய்து, பக்தர்கள் தினமும் தமது தேவர்களுக்கு நிச்சயமாக மாலை போடுகிறார்கள். உண்மையான அன்பிலே தங்களை மறந்திருக்கும் குழந்தைகள் நிச்சயமாகத் தினமும் அமிர்தவேளையில், மேன்மையான அன்பு எண்ணங்கள் மற்றும் ஆன்மீக ரோஜாக்கள் என்ற மிகவும் அழகான இரத்தினங்கள் பதித்த மாலைகளை பாப்தாதாவிற்குப் போடுகிறார்கள். ஆகவே, பாப்தாதா குழந்தைகள் அனைவரின் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளார். பக்தர்கள் முதல் வேலையாகத் தமது விசேடமான இஷ்ட தெய்வங்களை மாலைகளால் அலங்கரிக்கிறார்கள். அவர்களுக்குப் பூக்களைப் படைக்கிறார்கள். அதேபோன்று, ஞான ஆத்மாக்களான அன்பான குழந்தைகள், தமது ஊக்கம் உற்சாகம் என்ற மலர்களை பாப்தாதாவிற்குப் படைக்கிறார்கள். அன்பான குழந்தைகளின் அன்பிற்குப் பிரதிபலனாக, பாப்தாதா அந்தக் குழந்தைகளுக்குப் பலமில்லியன் மடங்கு அன்பு, ஆசீர்வாதங்கள், சக்திகளின் மாலைகளை அணிவிக்கிறார். பாப்தாதா அனைவரினதும் சந்தோஷ நடனத்தையும் பார்க்கிறார். நீங்கள் அனைவரும் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பதன் மூலமும் மற்றவர்களைப் பறக்கச் செய்வதற்கான திட்டங்களை உருவாக்குவதன் மூலமும் நீங்கள் அனைவரும் பறக்கிறீர்கள். குழந்தைகளான நீங்கள் அனைவரும் குறிப்பாகத் தந்தையிடமிருந்து நினைவை ஏற்றுக் கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் உங்களின் பெயரால் நினைவைப் பெறுவதில் முதலாம் இலக்கத்தவர் ஆகுங்கள். பல பெயர்கள் உள்ளன. எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக நினைவைப் பெறுவதற்கான தகுதிவாய்ந்தவர்கள். அச்சா.
மதுவனத்தைச் சேர்ந்த நீங்கள் அனைவரும் சக்திசாலி ஆத்மாக்கள், அல்லவா? நீங்கள் களைப்பற்ற முறையில் சேவை செய்யும் பாகங்களையும், உங்களுக்காகக் கற்பதற்கான பாகங்களையும் நடிக்கிறீர்கள். நீங்கள் சேவையில் சக்திசாலிகள் ஆகி, உங்களின் எதிர்காலப் பல பிறவிகளுக்காகவும் நிகழ்காலத்திற்காகவும் உருவாக்கியுள்ளீர்கள். நீங்கள் எதிர்காலத்திற்காக மட்டும் உருவாக்கவில்லை. ஏனெனில், மதுவனத்தைச் சேர்ந்தவர்களின் பெயர் இப்போதும் பெருமைப்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் நிகழ்காலத்திற்காகவும் உருவாக்கியுள்ளீர்கள். எதிர்காலத்திற்காகவும் சேமித்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் பௌதீகமாக ஓய்வெடுத்து, இப்போது பருவகாலத்திற்குத் தயார் ஆகிவிட்டீர்கள். பருவகாலத்தின்போது சுகயீனம் அடையாதீர்கள். எனவே, நீங்கள் அந்தக் கணக்கையும் தீர்த்துவிட்டீர்கள். அச்சா.
இங்கு வந்துள்ள அனைவரும் அதிர்ஷ்டலாபத்தை வென்றுள்ளீர்கள். வருவதெனில், பலமில்லியன்மடங்கைச் சேமித்துள்ளீர்கள் என்று அர்த்தம். மதுவனத்தில், நீங்கள் ஆத்மாவிற்கும் சரீரத்திற்குமான புத்துணர்ச்சியைப் பெறுகிறீர்கள். அச்சா.
பாப்தாதா ஜகதீஷ் பாயைச் சந்திக்கிறார்:
சேவையில் சக்திகளுடன் ஒரு பாகத்தை நடிப்பதற்குக் கருவியாக இருத்தல் என்பது விசேடமான பாகம் ஆகும். நீங்கள் சேவையினூடாகப் பிறந்தீர்கள். நீங்கள் சேவையால் பராமரிக்கப்பட்டுள்ளீர்கள். இப்போது சதா சேவையில் தொடர்ந்து முன்னேறுங்கள். நாடகத்திற்கேற்ப, நீங்களே சேவையின் ஆரம்பத்தில் கருவியாகிய முதல் பாண்டவர் ஆவீர்கள். ஆகவே, இதுவும் விசேடமான ஒத்துழைப்பின் பிரதிபலன் ஆகும். நீங்கள் சதா ஒத்துழைப்பைப் பெறுகிறீர்கள். தொடர்ந்தும் பெறுவீர்கள். ஒவ்வொரு விசேடமான ஆத்மாவிற்கும் ஒரு சிறப்பியல்பு உள்ளது. இப்போது, சதா உங்களின் சிறப்பியல்பைப் பணியில் பயன்படுத்துங்கள். ஏனெனில், அந்தச் சிறப்பியல்பினூடாகவே நீங்கள் விசேடமான ஆத்மா ஆகுகிறீர்கள். நீங்கள் சேவைக்களஞ்சியத்திற்குச் செல்கிறீர்கள். வெளிநாட்டுக்குச் செல்வதெனில், சேவைக்களஞ்சியத்திற்குச் செல்லுதல் என்று அர்த்தம். சக்திகளுடன்கூடவே, பாண்டவர்களுக்கும் விசேடமான பாகங்கள் உள்ளன. நீங்கள் எப்போதும் வாய்ப்பைப் பெற்றீர்கள். தொடர்ந்தும் அதைப் பெறுவீர்கள். அதேபோன்று அனைவரையும் சிறப்பியல்பால் நிரப்புங்கள். அச்சா.
மோகினிபென்னிடம் பேசுகிறார்: எப்போதும் ஒன்றிணைந்திருக்கும் விசேடமான பாகம் உங்களுடையது. நீங்கள் உங்களின் இதயத்தில் தந்தையுடன் இருக்கிறீர்கள். பௌதீகமான ரூபத்திலும் மேன்மையான சகவாசத்தின் ஆசீர்வாதம் உங்களுக்கு உள்ளது. இந்த ஆசீர்வாதத்தால், அனைவருக்கும் சகவாசத்தின் அனுபவத்தைக் கொடுங்கள். உங்களின் ஆசீர்வாதத்தால், மற்றவர்களும் இந்த ஆசீர்வாதத்தைப் பெறச் செய்யுங்கள். அனைவருக்கும் முயற்சியை அன்பாக மாற்றுகின்ற, முயற்சியில் இருந்து விடுபட்டு அன்பிலே திளைத்திருக்கும் விசேடமான அனுபவம் ஏற்பட வேண்டும். இதனாலேயே நீங்கள் செல்கிறீர்கள். வெளிநாட்டில் உள்ள ஆத்மாக்கள் முயற்சி செய்ய விரும்புவதில்லை. அவர்கள் களைத்துவிட்டார்கள். இத்தகைய ஆத்மாக்களுக்கு சதா சகவாசத்தின் இலகுவான அனுபவத்தை, அதாவது, அன்பிலே மூழ்கியிருக்கும் அனுபவத்தைக் கொடுங்கள். சேவை செய்வதற்கான வாய்ப்பு ஒரு பொன்னான அதிர்ஷ்டலாபம் ஆகும். நீங்கள் அதிர்ஷ்டலாபத்தை எப்போதும் வெல்லும் இலகு முயற்சியாளர் ஆவீர்கள். முயற்சியை அன்பாக மாற்றும் உங்களின் அனுபவத்தின் சிறப்பியல்பைப் பற்றி அனைவருக்கும் கூறி, அவர்களையும் அதன் சொரூபங்கள் ஆக்குங்கள். உங்களின் திடசங்கற்பமான எண்ணம் மிகவும் நல்லது. தினமும் அமிர்தவேளையில் அந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைத் தொடர்ந்து மீட்டல் செய்யுங்கள். அச்சா.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்: உங்களின் விசேடமான பாகங்களைப் பார்க்கும்போது நீங்கள் சதா மலர்ச்சியாக இருக்கிறீர்களா? நீங்கள் அதிமேலான தந்தையுடன் பாகத்தை நடிக்கும் விசேடமான நடிகர்கள் ஆவீர்கள். விசேடமான நடிகர்களின் ஒவ்வொரு செயலும் இயல்பாகவே விசேடமானது. ஏனெனில், தாம் விசேடமான நடிகர்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். அவர்களின் விழிப்புணர்விற்கேற்ப, இயல்பாகவே அவர்களின் ஸ்திதியும் ஆகிவிடும். ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு செயலும் விசேடமானவை. சாதாரணமான அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும். விசேடமான நடிகர்கள் அனைவரையும் கவருவார்கள். உங்களின் விசேடமான பாகத்தால் ஏனைய பல ஆத்மாக்கள் தமது சொந்தச் சிறப்பியல்புகளை அறிந்து கொள்வார்கள் என்ற விழிப்புணர்வை எப்போதும் பேணுங்கள். ஒரு விசேடமான ஆத்மாவைப் பார்க்கும்போது, தாமும் விசேடமானவர்கள் ஆகவேண்டும் என்ற உற்சாகம் அவர்களுக்குள் ஏற்படும். நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் இருக்கும் இடத்தின் சூழலில் எந்தளவிற்கு மாயை இருந்தாலும், சேற்றிலும் வைரம் ஒன்று பிரகாசிப்பதைப் போன்று, விசேடமான ஆத்மா ஒருவர் எந்த இடத்திலும் விசேடமான ஆத்மாவாகவே தோன்றுவார். வைரம் எப்போதும் வைரமாகவே இருக்கும். இந்த முறையில், சூழல் எத்தகையதாக இருந்தாலும், விசேடமான ஆத்மா ஒருவர் எப்போதும் தனது சிறப்பியல்பால் மற்றவர்களைக் கவருவார். நீங்கள் விசேடமான யுகத்தில் உள்ள விசேடமான ஆத்மாக்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
பம்பாயைச் சேர்ந்தவர்களுக்கு அன்பும் நினைவுகளும்: அனைத்திற்கும் முதலில் செய்திகள் பம்பாயைச் சேர்ந்தவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். பம்பாயைச் சேர்ந்தவர்கள் மிகவும் மும்முரமாக இருக்கிறார்கள். மிகவும் மும்முரமாக இருப்பவர்களுக்கு முன்கூட்டியே இந்தச் செய்தி கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிடின், தாம் மிகவும் மும்முரமாக இருந்தோம் என்றும் தமக்கு நீங்கள் கூறவில்லை என்றும் அவர்கள் முறைப்பாடு செய்யக்கூடும். எனவே, இப்பொழுதில் இருந்தே அவர்களை மிக நன்றாக விழித்தெழச் செய்யுங்கள். ஆகவே, பம்பாயைச் சேர்ந்தவர்களுக்குக் கூறுங்கள்: உங்களின் பிறப்பின் சிறப்பியல்பைத் தொடர்ந்து எப்போதும் பயன்படுத்துங்கள். இதனூடாக நீங்கள் இலகுவாக வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பிறப்பில் இருந்தே ஒரு சிறப்பியல்பைப் பெற்றுள்ளீர்கள். ஒவ்வொரு கணமும் ஒரு பணிக்காக அந்தச் சிறப்பியல்பைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள். உங்களின் சிறப்பியல்பை மேடையில் கொண்டுவாருங்கள். அதை உங்களுக்குள்ளேயே வைத்திருக்காதீர்கள். ஆனால், அதை மேடைக்குக் கொண்டுவாருங்கள். அச்சா.
அவ்யக்த முரளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:
கேள்வி: ஒருமுகப்படுத்தும் சக்தி என்ன அனுபவங்களைக் கொடுக்கும்?
பதில்: ஒருமுகப்படுத்தும் சக்தியால், நீங்கள் அதிபதி ஆகுவதற்கான சக்தியைப் பெறுவீர்கள். அதன் மூலம்:
1) நீங்கள் இலகுவாகத் தடைகளில் இருந்து விடுபட்ட ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் போராட வேண்டியதில்லை.
2) நீங்கள் இயல்பாகவே வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருப்பதை அனுபவம் செய்வீர்கள்.
3) நீங்கள் இயல்பாகவே நிலையான, ஸ்திரமான தேவதை ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள்.
4) நீங்கள் இயல்பாகவே அனைவருக்காகவும் அன்பு, நலம்விரும்புதல், மரியாதைக்குரிய மனோபாங்கைக் கொண்டிருப்பீர்கள்.
கேள்வி: சம்பூரணம் அடையும் காலத்திற்கு நீங்கள் நெருங்கி வரும்போது, தந்தை பிரம்மாவைப் போன்று என்ன சுயமரியாதை உங்களிடமும் இருக்கும்?
பதில்: தேவதை ஸ்திதிக்கான சுய மரியாதை. நடக்கும்போதும் உலாவரும்போதும், எந்தவிதமான சரீர உணர்வும் அற்ற தேவதை ரூபத்தை அவர் கொண்டிருந்தார். தந்தை பிரம்மா செயல்களைச் செய்யும்போதும், மற்றவர்களுடன் உரையாடும்போதும் வழிகாட்டல்களை வழங்கும்போதும், ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும்போதும், அவர் சரீரத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்து, சூட்சுமமான ஒளிரூபத்தின் அனுபவத்தைக் கொடுத்தார். அவர் உங்களுடன் பேசினாலும், அவர் அங்கு இல்லாததைப் போன்றிருந்தது. அவர் பார்த்தாலும், அவரின் திருஷ்டி அலௌகீகமாக இருந்தது. அவர் சரீரத்தின் உணர்விற்கே அப்பாற்பட்டிருந்தார். அதனால், மற்றவர்களுக்கும் சரீரத்தின் உணர்வு ஏற்படவில்லை. பற்றற்ற ரூபமே அவர்களுக்குப் புலப்பட்டது. இதுவே, சரீரத்தில் இருந்தாலும் தேவதை ரூபமாக இருத்தல் எனப்படுகிறது.
கேள்வி: நீங்கள் தேவதை ரூபத்தைப் பெற்று, ஒரு தேவதையாகி, சூட்சும வதனத்திற்குச் செல்ல வேண்டும். எனவே, நீங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?
பதில்: மனதை ஒருமுகப்படுத்துதல். உங்களின் மனதை உங்களின் கட்டளைகளுக்கேற்ப செயற்பட வையுங்கள். முதலாம் இலக்க பிரம்மாவின் ஆத்மா, பௌதீக ரூபத்தில் இருந்தவண்ணம் தேவதை ரூபத்தின் அனுபவத்தைக் கொடுத்து தேவதை ஆகியதைப் போன்று, நீங்களும் தேவதை ஸ்திதியை அனுபவம் செய்வதுடன், இந்த அனுபவத்தை மற்றவர்களுக்கும் கொடுங்கள். ஏனெனில், உங்களால் தேவதை ஆகாமல் ஒரு தேவர் ஆகமுடியாது.
கேள்வி: நீங்கள் விரும்பாத, தங்கியிருக்கும் ஸ்திதி எது?
பதில்: எதையாவது செய்வதற்குத் தாம் விரும்புவதில்லை, எதைப் பற்றியாவது நினைக்க விரும்புவதில்லை, ஆனால் அது நிகழுகிறது என சில குழந்தைகள் கூறுகிறார்கள். அதைச் செய்யக்கூடாது என அவர்கள் அறிவார்கள். எனினும் அது நிகழுகிறது. இது மனதில் தங்கியிருக்கும் ஸ்திதி ஆகும். நீங்கள் இத்தகைய ஸ்திதியை விரும்புவதில்லை. நீங்கள் எதையாவது செய்ய விரும்பினால், அதை முழுமனதுடன் செய்யுங்கள். ஆனால், எதையாவது நீங்கள் செய்ய விரும்பாவிட்டாலும், அதைச் செய்யும்படி உங்களின் மனம் சொன்னால், அது அதிபதியாக இல்லாத நிலையே ஆகும்.
கேள்வி: எந்த விடயத்தில் நீங்கள் தந்தை பிரம்மாவைப் பின்பற்ற வேண்டும்?
பதில்: தந்தை பிரம்மாவிடமிருந்து, ஒரு தேவதை உங்களின் முன்னால் நிற்பதாகவும், ஒரு தேவதை உங்களுக்கு திருஷ்டி கொடுப்பதாகவும் நீங்கள் அனுபவம் செய்தீர்கள். அதேபோன்று தந்தை பிரம்மாவைப் பின்பற்றுங்கள். மனதின் ஒருமுகப்படுத்தும் சக்தியானது இலகுவாக நீங்கள் ஒரு தேவதை ஆகுவதற்கு உதவும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மாயையையும் வீணான எதையும் அறியாதவராகி, தெய்வீகத் தன்மையை அனுபவிக்கும் மகாத்மா ஆகுவீர்களாக.மகாத்மா அல்லது ஒரு சாது என்பவர் மாயையை அல்லது வீணான எதையும் அறியாதவராகவே இருப்பார். தேவர்கள் அவற்றை அறியாதவர்களாக இருப்பதைப் போன்று, உங்களிலும் அந்த சம்ஸ்காரங்கள் வெளிப்பட வேண்டும். வீணானவை அனைத்தையும் அறியாதிருப்பதன் சொரூபம் ஆகுங்கள். ஏனெனில், பொதுவாகவே வீணானவற்றின் விசையானது, சத்தியம் மற்றும் சரியானது என்பவற்றின் உணர்வுகள் அனைத்தையும் முடித்துவிடுகிறது. ஆகவே, அனைத்திலும் கள்ளங்கபடமற்றவராக இருங்கள்: காலம், மூச்சு, வார்த்தைகள், செயல்கள். நீங்கள் வீணானவை அனைத்தையும் அறியாதவர் ஆகும்போது, இயல்பாகவே தெய்வீகத் தன்மையை அனுபவம் செய்வீர்கள். அத்துடன் மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தைக் கொடுப்பீர்கள்.
சுலோகம்: முதல் பிரிவிற்குள் செல்வதற்கு, உங்களின் அடிகளைத் தந்தை பிரம்மாவின் பாதச்சுவடுகளில் வையுங்கள்.
சுலோகம்:
அன்பினால் தங்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பவர்களுக்கு வெற்றி அவர்களின் கழுத்து மாலை ஆகும்.
அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. எனவே, சர்வதேச யோகா தினத்திற்காக, அனைவரும் ஒன்றுசேர்ந்து மாலை 6.30 இலிருந்து 7.30 வரை உங்களின் தேவதை ரூபத்தால் முழு உலகிற்கும் சகாஷ் வழங்கும் சேவையைச் செய்யுங்கள். நாள் முழுவதும், நடக்கும்போதும் உலாவரும்போதும், உங்களை ஓர் அசரீரி ஆத்மா என்று கருதிக் கொள்ளுங்கள். செயல்களைச் செய்யும்போது, உங்களை ஒரு தேவதை என்றும் கர்மயோகி என்றும் கருதுங்கள்.