21.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களுடைய இக்கல்வியே உங்கள் வருமானத்தின் மூலாதாரமாகும். இக்கல்வியினூடாக, நீங்கள் 21 பிறவிகளுக்கான ஒரு வருமானத்துக்கு வழிவகுத்துக் கொள்கின்றீர்கள்.
கேள்வி:
முக்தி தாமத்துக்குச் செல்வது ஒரு வருமானமா அல்லது ஓர் இழப்பா?
பதில்:
பக்தர்களுக்கு அது வருமானமாகும். ஏனெனில், அரைக்கல்பமாக அவர்கள் அமைதியையே வேண்டுகின்றார்கள். அதிகளவு முயற்சியின் பின்னரும், அவர்களுக்கு அமைதி கிடைக்கவில்லை. அவர்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து அமைதியைப் பெறுகின்றார்கள், அதாவது, அவர்கள் முக்தி தாமத்துக்குச் செல்கின்றார்கள். ஆகவே, அதுவே அவர்களின் அரைக் கல்பத்தின் முயற்சிக்கான பலனாகும். இதனாலேயே அது ஓர் இழப்பல்ல, அது வருமானமே என்று கூறப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் ஜீவன் முக்தி தாமத்துக்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். இப்பொழுது உங்களுடைய புத்தியில் முழு உலக வரலாறும் புவியியலும் நடனமாடுகின்றன.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: ஆத்மாவே அனைத்து விடயங்களையும் புரிந்துகொள்கின்றார். இந்நேரத்தில், தந்தை ஆன்மீக உலகிற்குக் குழந்தைகளாகிய உங்களை அழைத்துச் செல்கின்றார். அது ஆன்மீக தேவ உலகம் எனவும் இது மனிதர்களின் உலகமாகிய, பௌதீக உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. தேவர்களின் உலகம் இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அது தெய்வீகமான மனிதர்களின் ஒரு தூய உலகமாக இருந்தது. இப்பொழுது மனிதர்கள் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளதால், அவர்கள் அத்தேவர்களைப் புகழ்ந்து வழிபடுகின்றார்கள். விருட்சத்தில், உண்மையில் முதலில், ஒரேயொரு தர்மமே இருக்கின்றது என்கின்ற விழிப்புணர்வை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் பல்வகை ரூபத்தை விளங்கப்படுத்தும் பொழுது, விருட்ச படத்தையும் விளங்கப்படுத்துங்கள். ஒரேயொரு தர்மமே இருந்தது என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இவ்விருட்சத்தின் விதை மேலே உள்ளார். தந்தையே விருட்சத்தின் விதையாவார். விதை எவ்வாறாக உள்ளதோ, பழமும் அவ்வாறே இருக்கும். அதாவது, அதிலிருந்து வெளிப்படுகின்ற இலைகளும் இருக்கும். அதுவும் ஓர் அற்புதமாகும். மிகவும் சிறிதான ஒன்று பெரும் பலனைத் தருகின்றது! அதன் வடிவம் தொடர்ந்து பெரிதும் மாற்றமடைகின்றது. இம்மனித உலக விருட்சத்தை எவரும் அறிய மாட்டார்கள். இது கல்ப விருட்சம் என அழைக்கப்படுகின்றது. இது கீதையில் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் இலக்க தர்மத்தின் சமயநூல் கீதையே என்பதை அனைவரும் அறிவார்கள். சமயங்கள் வரிசைக்கிரமமாக ஸ்தாபிக்கப்படுவதைப் போன்றே, சமயநூல்களும் வரிசைக்கிரமாகவே உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். வேறு எவரும் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை. விருட்சத்தில் முதலில் எந்தச் சமயம் உள்ளது, பின்னர் எவ்வாறு ஏனைய சமயங்கள் வளர்கின்றன என்பது உங்களுடைய புத்திகளில் உள்ளது. இது பாரிய நாடகம் என்று அழைக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களுடைய புத்திகளில் முழு விருட்சமும் உள்ளது. எவ்வாறு விருட்சம் வளர்கின்றது என்பதே பிரதான விடயமாகும். தேவர்களுக்கான (விருட்சத்தின்) அடிமரம் இப்பொழுது இல்லை. இன்னமும் அனைத்துக் கிளைகளும் சிறு பிரிவுகளும் இருப்பினும், ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் அத்திவாரம் கிடையாது. ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்பட்டு, ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன என்பது நினைவு கூரப்படுகின்றது. தேவ விருட்சம் மிகவும் சிறிதாகவே இருக்கும் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரியும். அந்நேரத்தில், ஏனைய சமயங்கள் எவையும் இருக்க மாட்டாது. முதலில் விருட்சம் சிறிதாக இருந்து பின்னர் அது தொடர்ந்தும் வளர்கின்றது. அது படிப்படியாக வளர்ந்து, இப்பொழுது மிகவும் பெரிதாகிவிட்டது. இப்பொழுது அதன் ஆயுட்காலம் முடிவடைந்துள்ளது. இதை விளங்கப்படுத்துவதற்கு ஆலமரத்தின் உதாரணமும் மிகவும் சிறந்ததாகும். இதுவும் கீதையின் ஞானமாகும். தந்தை இங்கே அமர்ந்து, இதைத் தனிப்பட்ட முறையில் உங்களுடன் பேசுகின்றார், அதனூடாகவே நீங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுகிறீர்கள். பின்னர், பக்தி மார்க்கத்தில், கீதை என்ற சமயநூல் மீண்டும் எழுதப்படுகின்றது. இந்நாடகம் அநாதியாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். அதுவே மீண்டும் இடம்பெறுகின்றது. பின்னர், ஒவ்வொரு சமயமும் ஸ்தாபிக்கப்படும் போது, அவை தமக்கென சமயநூலைக் கொண்டிருக்கும். சீக்கிய சமயம் தனது சொந்த சமயநூலைக் கொண்டிருக்கும், கிறிஸ்தவர்களும் பௌத்தர்களும் தங்களது சொந்த சமயநூல்களைக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது உங்கள் புத்தியில் முழு உலக வரலாறும் புவியியலும் நடனமாடுகின்றன. புத்தி ஞான நடனமாடுகின்றது. முழு விருட்சம் பற்றியும், எவ்வாறு சமயங்கள் வருகின்றன என்பதும், எவ்வாறு விருட்சம் வளர்கின்றது என்பதும், பின்னர் எவ்வாறு எங்களுடைய ஒரு தர்மம் ஸ்தாபிக்கப்பட்டு ஏனைய அனைத்தும் அழிக்கப்படுகின்றன என்பதும் உங்களுக்குத் தெரியும். அவர்கள் பாடுகின்றார்கள்: ஞான சூரியன் உதிக்கும் பொழுது…. இப்பொழுது காரிருள் சூழ்ந்துள்ளது. இப்பொழுது பல மனிதர்கள் இருப்பினும், அந்நேரத்தில் அவர்கள் அனைவரும் அங்கு இருக்கமாட்டார்கள். அவர்கள் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் இருக்கவில்லை. மீண்டும் ஒருமுறை ஒரே தர்மம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். தந்தை மாத்திரமே வந்து இந்த ஞானத்தைப் பேசுகின்றார். ஒரு வருமானத்தை சம்பாதிப்பதற்காகவே குழந்தைகளாகிய நீங்கள் வந்து ஞானத்தை நன்றாகக் கற்கின்றீர்கள். தந்தையே இங்கு ஆசிரியராக வருகின்றார், எனவே அரைக் கல்பத்துக்கான உங்கள் வருமானத்துக்கு வழிவகுப்படுவதால், நீங்கள் மிகவும் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது கற்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இது அழியாத ஞான இரத்தினங்களுக்கான கல்வியாகும். பக்தி அழியாத ஞான இரத்தினங்களுக்குரியது எனக் கூறப்படுவதில்லை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் கற்பவற்றின் ஊடாக இழப்பே ஏற்படுகின்றது; அவர்கள் இரத்தினங்கள் ஆகுவதில்லை. ஒரு தந்தை மாத்திரமே ஞான இரத்தினங்களின் கடல் என்று அழைக்கப்படுகின்றார். மற்றையது பக்தியாகும். இலக்கோ அல்லது இலட்சியமோ இருப்பதில்லை. அதில் வருமானம் ஈட்டப்படுவதில்லை. ஒரு வருமானத்தை ஈட்டுவதற்காகவே அவர்கள் பாடசாலையில் கற்கின்றார்கள். அதன் பின்னர், அவர்கள் பக்தியை மேற்கொள்ள ஒரு குருவிடம் செல்கின்றார்கள். சிலர் இளம் வயதிலேயே ஒரு குருவை பின்பற்றுகின்றார்கள், ஏனையோர் தாங்கள் முதுமையடையும் பொழுது ஒரு குருவை ஏற்கின்;றார்கள். சிலர் இளம் வயதில் துறவறத்தை மேற்கொள்கின்றார்கள். பலரும் கும்பமேளாவுக்குச் செல்கின்றார்கள். அவை எதுவும் சத்தியயுகத்தில் இருக்கமாட்டாது. குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் இப்பொழுது உங்கள் விழிப்புணர்வில் கொண்டிருக்கின்றீர்கள். படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அவர்கள் சக்கரத்தின் ஆயுட்காலத்தை நீடித்துள்ளார்கள். கடவுள் சர்வவியாபி என்று அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்களிடம் முற்றாகவே ஞானம் எதுவும் இல்லை. தந்தை வந்து உங்களை அறியாமை என்ற உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்கின்றார். நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் ஞானத்தைக் கிரகிக்கின்றீர்கள். உங்கள் பற்றரி தொடர்ந்தும் சக்தியூட்டப்படுகின்றது. ஞானத்தினூடாக வருமானமும் பக்தியினூடாக இழப்பும் உள்ளது. இழப்பிற்கான நேரம் முடிவடையும் பொழுது, வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு தந்தை உங்களைத் தூண்டுவதற்காக வருகின்றார். முக்திக்குள் செல்வதும் ஒரு வருமானமேயாகும். அனைவரும் தொடர்ந்தும் அமைதியை வேண்டுகின்றார்கள். “ஓ அமைதியை அருள்பவரே” என்று கூறுகையில், அவர்களின் புத்தி தந்தையிடம் செல்கின்றது. அவர்கள் கூறுகின்றார்கள்: உலகில் அமைதி நிலவவேண்டும், ஆனால் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பது எவருக்கும் தெரியாது. அமைதி தாமம் சந்தோஷ தாமத்திலிருந்து வேறுபட்டதாகும். அவர்கள் அதையேனும் அறியமாட்டார்கள். முதல் இலக்கத்துக்குரியவராக இருந்தவரும் எதையும் அறிந்திருக்கவில்லை. உங்களிடம்; இப்பொழுது முழு ஞானமும் உள்ளது. இந்த கர்மஷேத்திரத்தில் உங்களுடைய செயல்களை செய்வதற்கான பாகத்தை நடிப்பதற்காக நீங்கள் வந்திருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? பிரம்மலோகத்திலிருந்து. அசரீரி உலகிலிருந்து உங்களுடைய பாகங்களை நடிப்பதற்கு இப்பௌதீக உலகிற்கு நீங்கள் வந்தீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் வேறோரிடத்தில் வசிப்பவர்கள். பஞ்ச தத்துவங்களினாலான இச்சரீரம் இங்கேயே இருக்கும். எங்களுக்கு ஒரு சரீரம் இருக்கும் பொழுதே, எங்களால் பேச முடியும். நாங்கள் உயிர்வாழும் நடிகர்கள் ஆவோம். இந்நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி உங்களுக்குத் தெரியாது என இனிமேலும் நீங்கள் கூறமாட்டீர்கள். முன்னர், அது உங்களுக்குத் தெரியாது. உங்கள் தந்தையையோ உங்கள் வீட்டையோ அல்லது உங்கள் ரூபத்தையோ நீங்கள் மிகச்சரியாக அறிந்திருக்கவில்லை. எவ்வாறு ஆத்மாக்கள் தொடர்ந்தும் தங்கள் பாகத்தை நடிக்கின்றார்கள் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இதை நினைவுசெய்துள்ளீர்கள். முன்னர், நீங்கள் இதை நினைவு செய்யவில்லை. உண்மையான தந்தை மாத்திரம் உங்களுக்கு உண்மையைக் கூறுவதினூடாக, நீங்;கள் சத்தியுகத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் சீக்கிய கிரந்தத்தின் ஒரு பாகமான சுக்மணியில் (அமைதிப் பதிகம்) சத்தியம் பற்றி எழுதியுள்ளார்கள். சத்தியயுகமே சத்தியம் என்று அழைக்கப்படுகின்றது. தேவர்கள் அனைவரும் உண்மை பேசுபவர்கள் ஆவார்கள். தந்தையே உங்களுக்குச் சத்தியத்தைக் கற்பிப்பவர் ஆவார். அவர் எவ்வளவு புகழப்படுகின்றார் என்று பாருங்கள்! நினைவுகூரப்படுகின்ற அவருடைய புகழ் உங்களுக்குப் பயனுள்ளதாகும். மக்கள் சிவபாபாவைப் புகழ்கின்றார்கள். விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அவருக்கு மாத்திரம் தெரியும். தந்தை உங்களுக்கு உண்மையைக் கூறுவதால், குழந்தைகளாகிய நீங்கள் சத்தியமானவர்கள் ஆகுகிறீர்கள். சத்தியபூமியும் உருவாக்கப்படுகின்றது. பாரதம் சத்தியபூமியாக இருந்தது. இதுவே முதல் இலக்க, அதிமேலான யாத்திரைத்தலமாகும், ஏனெனில் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார். ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்பட்டு, ஏனைய அனைத்தும் அழிக்கப்படுகின்றன. சூட்சும உலகில் எதுவுமேயில்லை என்று தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அவ் விடயங்கள் அனைத்தும் மக்கள் காண்கின்ற காட்சிகளே ஆகும். பக்தி மார்க்கத்திலும் அவர்கள் காட்சிகளைக் காண்கின்றார்கள். காட்சிகள் இல்லையெனில், எவ்வாறு அந்த ஆலயங்கள் போன்றவை அனைத்தும் கட்டப்பட்டிருக்க முடியும்? ஏன் வழிபாடு இடம்பெறுகின்றது? அவர்கள் காட்சிகளைக் கண்டு, அதிலுள்ளவர்களை உயிருள்ள வடிவில் உணர்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பக்திமார்க்கத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் போன்றவை அனைத்தும், நீங்கள்; பார்த்தவை, கேட்டவை அனைத்தும் மீண்டும் மீண்டும் இடம்பெறும். சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. ஞானமும் பக்தியும் என்ற நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் கூறப்படுகின்றது: ஞானம், பக்தி, விருப்பமின்மை. எவ்வாறாயினும், அவர்களுக்கு சற்றேனும் எவ்விபரமும் தெரியாது. ஞானம் பகலும் பக்தி இரவும் எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். இரவில் விருப்பமின்மை ஏற்பட்டுப் பின்னர் அது பகலாகின்றது. பக்தியில் துன்பம் உள்ளதாலேயே, அதில் விருப்பமின்மை ஏற்படுகின்றது. சந்தோஷத்தில் விருப்பமின்மை உள்ளது என நீங்கள் கூறமுடியாது. துன்பம் காரணமாக, துறவறமும் மேற்கொள்ளப்படுகின்றது. தூய்மையில் சந்தோஷமிருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதனாலேயே அவர்கள் தங்களுடைய மனைவியரைத் துறந்து அவர்களை விட்டுச் செல்கின்றார்கள். இந்நாட்களில், அவர்கள் செல்வந்தர்களாகவும் ஆகியுள்ளார்கள், ஏனெனில் செல்வமின்றி ஒருவரால் சந்தோஷத்தைப் பெற முடியாது. மாயை அவர்களைத் தாக்கி, அவர்களைக் காடுகளிலிருந்து திரும்பவும் நகரத்துக்குள் அழைத்து வருகின்றாள். விவேகானந்தரும் இராமகிருஷ்;ணரும் கடந்த காலத்தில் வாழ்ந்த இரு பெரும் சந்நியாசிகள் ஆவார்கள். இராமகிருஷ்ணர் துறவறத்தின் சக்தியைக் கொண்டிருந்தார், ஆனால் விவேகானந்தரே பக்தியைப் பற்றிய அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்தி அதனைப் பயிற்சி செய்தவர் ஆவார். அவர்கள் இருவரிடம் சமயப் புத்தங்கள் இருந்தன. ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதும்பொழுது, அவர் முழுமையாக மன ஓருமைப்பாட்டில் அமர்கின்றார். இராமகிருஷ்ணர் தனது சுயசரிதையை எழுதும் பொழுது, தன்னுடைய சீடரை மிகவும் தொலைவில் சென்று அமருமாறு கூறினார். அவர் மிகவும் பிரசித்தி பெற்ற, மிகவும் கண்டிப்பான ஒரு சந்நியாசியாவார். உங்களுடைய மனைவியை உங்களுடைய தாய் என்று அழைக்க வேண்டும் என்று தந்தை கூறுவதில்லை. தந்தை கூறுகின்றார்: அவளையும் ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். சந்நியாசிகள் வேறுபட்டவர்கள். அவர் (இராமகிருஷ்ணர்) தன் மனைவியைத்; தன்னுடைய தாயாகக்; கருதினார். அவர் தன்னுடைய தாயைப் புகழ்ந்தார். இது ஞான மார்க்கமாகும். விருப்பமின்மை வேறொன்றாகும். விருப்பமின்மை காரணமாக, அவர் தனது மனைவியைத் தன் தாயாகக் கருதினார். “தாய்” என்னும் வார்த்தை பயன்படுத்தப்படும்பொழுது, தவறான பார்வை இருக்கமுடியாது. சகோதரி என்னும் உறவுமுறையில் தவறான பார்வை இருக்க முடியும். ஒரு தாயைப் பற்றித் தீய எண்ணங்கள் எவையும் ஒருபோதும் இருக்க மாட்டாது. ஒரு தந்தையும் தன் மகளிடம் தவறான பார்வையைக் கொண்டிருக்க முடியும், ஆனால் ஒருபொழுதும் ஒரு தாயை பற்றிய தவறான பார்வை இருக்க மாட்டாது. ஆகவே, சந்நியாசி தன் மனைவியையே தன்னுடைய தாயாகக் கருத ஆரம்பித்தார். அவரையிட்டு அவர்கள் வினவ மாட்டார்கள்: எவ்வாறு உலகம் தொடரும்? எவ்வாறு படைப்பு நடைபெறும்? அவர் விருப்பமின்மையைக் கொண்டிருந்த ஒரு நபராக இருந்தார், அவர் தன் மனைவியையே ஒரு தாயாகக்; கருதினார். அவர் எவ்வளவு புகழப்படுகின்றார் என்று பாருங்கள்! இங்கு, சகோதரர், சகோதரி என்னும் விழிப்புணர்விலும், பலரின் பார்வை ஈர்க்கப்படுகின்றது. இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்களைச் சகோதரர்களாகக் கருதுங்கள். இது ஞானத்திற்கான ஒரு விடயமாகும். அது ஒரு நபருக்குரிய விடயமாகும். இங்கு, பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகிய, பல சகோதர, சகோதரிகள் உள்ளார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகின்றார். இவரும் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றுள்ளார். துறவுப்பாதைக்குரிய அத்தர்மம் வேறுபட்டதொன்றாகும். அது ஆண்களுக்குரியதாகும். அது எல்லைக்குட்பட்ட விருப்பமின்மை ஆகும், நீங்களோ எல்லையற்ற உலகம் முழுவதிலும் விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றீர்கள். தந்தை சங்கமயுகத்தில் மாத்திரம் வந்து உங்களுக்கு எல்லையற்ற விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது இப் பழைய உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். இது ஒரு மிகவும் அழுக்கான, தூய்மையற்ற உலகமாகும். இங்குள்ள சரீரங்கள் தூய்மையாக இருக்க முடீயாது. சத்தியயுகத்தில் மாத்திரம் ஆத்மாக்கள் ஒரு புதிய சரீரத்தைப் பெறுவார்கள். இங்கு ஆத்மா தூய்மையாகினாலும், அவர் தன்னுடைய கர்மாதீத ஸ்திதியை அடையும்வரை, அவருடைய சரீரம் தூய்மையற்றதாகவே இருக்கின்றது. தங்கத்தில் கலப்படம் இருக்கும் போதே அதிலிருந்து செய்யப்படும் ஆபரணத்திலும் கலப்படம் இருக்கின்றது. கலப்படம் அகற்றப்படும்பொழுது ஆபரணமும் நிஜத் தங்கத்தினாலானதாக இருக்கும். இலக்ஷ்மியினதும் நாராயணனினதும் ஆத்மாக்கள், சரீரங்கள் ஆகிய இரண்டும் சதோபிரதானாக இருக்கின்றன. ஆத்மாக்களாகிய நீங்கள், உங்களுடைய சரீங்கள் ஆகிய இரண்டும் தமோபிரதானாகவும் அவலட்சணமாகவும் உள்ளன. காமச்சிதையில் அமர்ந்ததால் ஆத்மாக்கள் அவலட்சணமாகியுள்ளனர். தந்தை கூறுகின்றார்: நான் வந்து உங்களை அவலட்சணத்திலிருந்து அழகானவர்கள் ஆக்குகிறேன். இவை அனைத்தும் ஞானத்தின் விடயங்கள் ஆகும்; தண்ணீர் போன்றவற்றின் கேள்வியே கிடையாது. காமச்சிதையில் அமர்ந்ததால் அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளனர். ஆகவே, ஒரு ராக்கி கட்டப்படுவதால், தூய்மையாகுவதற்காக நீங்கள் ஒரு சத்தியத்தைச் செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஆத்மாக்களுடனேயே பேசிக் கொண்டிருக்கின்றேன், நீங்கள் எப்பொழுதும் நினைவுசெய்கின்ற நானே, ஆத்மாக்களின் தந்தை: பாபா, வந்து எங்களைச் சந்தோஷ தாமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்! எங்கள் துன்பத்தை அகற்றுங்கள்! கலியுகத்தில், எல்லையற்ற துன்பம் உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: காமச்சிதையில் அமர்ந்ததால் நீங்கள் அவலட்சணமாகவும் தமோபிரதானாகவும் ஆகியுள்ளீர்கள். நான் இப்பொழுது உங்களைக் காமச் சிதையிலிருந்து அகற்றி ஞானச்சிதையில் அமர்த்துவதற்கு வந்துள்ளேன். நீங்கள் இப்பொழுது தூய்மையாகிச் சுவர்க்கத்துக்குச் செல்ல வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை உங்களை ஈர்க்கின்றார். பாபாவிடம் ஒரு தம்பதியினர் வந்தபொழுது, அவர்களில் ஒருவர் அந்த ஈர்ப்பை உணர்ந்தார், மற்றவர் அந்த ஈர்ப்பை உணரவில்லை. அக்கணவன் உடனடியாகவே “நான் இந்த இறுதிப்பிறவியில் காமச்சிதையில் அமராமல், தூய்மையாகுவேன்” என்று கூறினார். அதனால் நம்பிக்கை இருந்தது என்று அர்த்தமல்ல. நம்பிக்கையிருந்திருந்தால், அவர்கள் எல்லையற்ற தந்தைக்கு ஒரு கடிதத்தை எழுதி ஒரு தொடர்பைப் பேணியிருப்பார்கள். அவர்கள் தூய்மையாக இருப்பதையும் ஆனால், அவர்கள் முற்றிலும் தங்கள் சொந்த வியாபாரத்தில் மூழ்கியிருந்தார்கள் என்பதையும் பாபா கேள்வியுற்றார். அவர்கள் தந்தையின் எந்த நினைவையும் கொண்டிருக்கவில்லை. அத்தகைய தந்தையை நீங்கள் அதிகளவு நினைவுசெய்ய வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவரையொரு மிகவும் நேசிக்கின்றார்கள். ஒரு மனைவி தனது கணவனை அதிகளவு நினைவுசெய்கின்றாள்! எல்லையற்ற தந்தையையே அதிகளவு நினைவுசெய்ய வேண்டும். ஒரு பாடல் உள்ளது: நீங்கள் என்னிடம் அன்பு வைத்;தாலென்ன அல்லது நிராகரித்தாலென்ன, நான் ஒருபொழுதும் உங்களுடைய கரத்தை விட்டு நீங்கமாட்டேன். நீங்கள் இங்கு வந்து வாழ வேண்டும் என்றல்ல. அது துறவறமாகி விடும். அது நீங்கள் உங்களுடைய வீட்டையும் குடும்பத்தையும் விட்டு இங்கு வந்து தங்கிவிட்டீர்கள் என்றாகிவிடும். உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வசிப்பதுடன் தூய்மையானவர்களாகவும் ஆகுங்கள். இச்சூளை(பத்தி) ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தது, அதனூடாகப் பலர் சென்று சேவை செய்யத் தயாராகினர். அவர்களைப் பற்றி மிகச் சிறந்த கதையுள்ளது. தந்தைக்குரியவராகி யக்ஞத்தில் தங்கியிருந்தும், எந்த ஆன்மீகச்சேவையும் செய்யாதவர்கள் சென்று பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகுவார்கள். அவர்கள் இறுதியில், தங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, ஒரு கிரீடத்தைப் பெறுவார்கள். அவர்களின் குலங்களும் உள்ளன. அவர்களால் பிரஜைகளில் ஒருவராக முடியாது. வெளியிலிருந்து வரும் ஒருவர் வீட்டில் வசிக்கும் ஒருவராக முடியாது. அந்த வல்லபாச்சாரிப் பிரிவுக்குரியர்கள் ஒருபொழுதும் வெளிலுள்ளவர்களை உள்ளே வர அனுமதிப்பதி;ல்லை. இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஞானம் ஓரு விநாடிக்குரியதாகும். ஆகவே, தந்தை ஏன் ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார்? அவர் உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார், உங்களுக்கு இறுதிவரையில் தொடர்ந்தும் விளங்கப்படுத்துவார். இராச்சியம் ஸ்தாபிக்கப்படும்பொழுது, நீங்கள் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். பின்னர், ஞானம் முடிவுறும், அது ஒரு விநாடிக்குரிய விடயமாகும், ஆனால் அதை இன்னமும் விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து நீங்கள் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள், எல்லையற்ற தந்தையோ உங்களை உலக அதிபதிகளாக்குகின்றார். நீங்கள் சந்தோஷதாமத்துக்குச் செல்வீர்கள், ஏனைய அனைவரும் அமைதி தாமத்துக்குச் செல்வார்கள். அங்கு, சந்தோஷத்தைத் தவிர, எதுவுமேயில்லை. தந்தை வந்துவிட்டார், இராஜயோகக் கல்வியினூடாக நாங்கள் புதிய உலகின் அதிபதிகளாகின்றோம் என்ற உத்தரவாதத்தைக் கொண்டிருக்கின்றோம். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த அழுக்கான தூய்மையற்ற உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருந்து, ஆத்மாவைத் தூய்மையாக்குவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். ஒரேயொரு தந்தையால் மாத்திரம் கவரப்பட்டவராக இருங்கள்.2. ஞானத்தைக் கிரகிப்பதால், உங்களுடைய பற்றரிக்குச் சக்தியூட்டுங்கள். ஞான இரத்தினங்களால் உங்களைச் செல்வந்தராக ஆக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது இது ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான நேரமாகும். ஆகவே, இழப்பிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
ஆசீர்வாதங்களை அருள்பவருடனும் தந்தையுடனும் இரட்டை உறவுமுறையைக் கொண்டிருப்பதன் மூலம் இரட்டைப் பேறுகளைப் பெற்று சதா சக்திவாய்ந்த ஆத்மா ஆகுவீர்களாக.
அனைத்து சக்திகளும் தந்தையிடமிருந்தான ஆஸ்தியும், ஆசீர்வாதங்கள் ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்தானதும் ஆகும். ஆசீர்வாதங்களை அருள்பவரும் தந்தையும்: இந்த இரட்டை உறவு முறையினால் குழந்தைகளான நீங்கள் அனைவரும் உங்கள் பிறப்பிலிருந்தே இந்த மேன்மையான பேற்றை கொண்டுள்ளீர்கள். உங்கள் பிறவியிலிருந்து தந்தை உங்களை தனது குழந்தையாகவும் அனைத்து சக்திகளுக்கும் அதிபதியாகவும் ஆக்குகின்றார். அத்துடன் பிறப்பெடுத்த கணத்திலிருந்து ஆசீர்வாதங்களை அருள்பவராக அவர் உங்களை மாஸ்டர் சர்வசக்திவான் ஆக்கி “அனைத்து சக்திகளையும் கொண்டிருப்பீர்களாக” என்ற ஆசீர்வாதத்தையும் வழங்குகின்றார். இத்தகைய இரட்டை உரிமையை ஒருவரிடமிருந்து பெறுவதன் மூலம் நீங்கள் சதா சக்திவாய்ந்தவர் ஆகின்றீர்கள்.சுலோகம்:
உங்கள் சரீரத்திலிருந்து பற்றற்றவராகவும் அத்துடன் பழைய சுபாவங்கள் சம்ஸ்காரங்களிலிருந்தும் பற்றற்றவராகவும் ஆகுதல் என்றால் சரீரமற்றவர் ஆகுவதாகும்.