04.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களைச் சீர்திருத்துவதில் கவனம் செலுத்துங்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். தந்தை எவரையிட்டும் குழப்பம் (ரிளநவ) அடைவதில்லை. ஆனால் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். ஆகையினால், பயப்படுதல் என்ற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி:
உங்கள் நேரத்தை வீணாக்காமலிருப்பதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் எதனை உங்களது விழிப்புணர்வில் கொண்டிருக்க வேண்டும்?

8பதில்:
இது சங்கமயுகக் காலப்பகுதியாகும். நீங்கள் மாபெரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வென்றிருக்கின்றீர்கள். தந்தை எங்களை வைரங்களைப் போன்ற தேவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் இவ்விழிப்புணர்வைக் கொண்டிருந்தால், உங்களது நேரத்தை வீணாக்க மாட்டீர்கள். இந்த ஞானமே உங்கள் வருமானத்திற்கான மூலாதாரம் என்பதால், நீங்கள் ஒருபோதும் உங்களது கல்வியைத் தவறவிடக்கூடாது. மாயை உங்களைச் சரீர உணர்விற்குக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வாள். எவ்வாறாயினும், நீங்கள் தந்தையுடன் நேரடியான யோகத்தைக் கொண்டிருப்பதால் உங்களது நேரம் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தப்படும்.

ஓம் சாந்தி.
இவர் உங்களது தந்தை என்பதையும், எதனையிட்டும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குச் சாபமிடுவதற்கோ, அல்லது உங்கள் மீது கோபம் கொள்வதற்கோ அவர் ஒரு சாதுவோ அல்லது மகாத்மா போன்ற எவருமோ அல்ல. அந்தக் குருமார் போன்றோருக்கு அதிகளவு கோபம் உள்ளது. எனவே, மக்கள் பயப்பட்டு, அவர்கள் தங்களைச் சபித்துவிடுவார்களோ என நினைக்கின்றனர். இங்கு அவ்வாறு எதுவுமே கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் பயப்படும்வகையில் எதுவுமே இல்லை. விஷமத்தனமான குழந்தைகளே தந்தையையிட்டுப் பயப்படுகின்றார்கள். லௌகீகத் தந்தை கோபப்படுவார், ஆனால் இங்கே, இத்தந்தை ஒருபோதும் கோபப்படுவதில்லை. அவர் விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தந்தையை நினைவுசெய்யாது விட்டால், உங்களது பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. நீங்கள் பிறவி பிறவியாக உங்களுக்கு ஓர் இழப்பையே ஏற்படுத்துவீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் உங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்காகத் தந்தை விளக்கம் கொடுக்கின்றார்; தந்தை குழப்பமடைகின்றார் என்றில்லை. தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்கு, நினைவு யாத்திரையில் கவனம் செலுத்துங்கள். அத்துடன், உங்களது புத்தியில் சுயதரிசனச் சக்கரத்தை வைத்திருப்பதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். நினைவே பிரதான விடயமாகும். உலகச் சக்கரம் பற்றிய ஞானம் மிக எளிதானது. அதுவே உங்களது வருமானத்திற்கான மூலாதாரமாகும். எவ்வாறாயினும், அதனுடன் கூடவே நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். இந்நேரத்தில் மக்கள் முற்றிலும் அசுர குணங்களையே கொண்டிருக்கின்றார்கள். சிறு குழந்தைகள்கூட அசுர குணங்களைக் கொண்டிருக்கின்றனர். எனினும், நீங்கள் அவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் உங்களிடமிருந்து அவற்றைக் கற்றுக்கொள்வார்கள். சத்தியயுகத்தில் அவர்கள் இவை எதனையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். இங்கே, குழந்தைகள் தங்களது பெற்றோரிடமிருந்து அனைத்தையும் கற்;கின்றார்கள். பாபா ஏழைகளைப் பற்றியே பேசுகின்றார். செல்வந்தர்களுக்கு இதுவே இங்கேயே சுவர்க்கம் போன்றுள்ளது; அவர்களுக்கு ஞானம் தேவையில்லை. இது ஒரு கல்வியாகும். கற்பித்து, உங்களைச் சீர்திருத்தக்கூடிய ஓர் ஆசிரியர் தேவைப்படுகின்றார். எனவே, தந்தை ஏழைகளைப் பற்றிப் பேசுகின்றார்; அதாவது, அவர்களது நிலைமை எவ்வாறிருக்கின்றது, குழந்தைகள் எவ்வாறு சீரழிக்கப்படுகின்றார்கள் என்பது பற்றியாகும். குழந்தைகள் தொடர்ந்தும், தங்களது பெற்றோரைப் பார்த்தே கற்றுக்கொள்வதால், அவர்கள் அனைவரும் சிறு பராயத்திலேயே சீரழிந்து போகின்றார்கள். இந்த ஆன்மீகத் தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபுவும் ஆவேன். நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன்: மனிதர்களின் நிலைமை எப்படியாகி விட்டது எனப் பாருங்கள். உலகம் தமோபிரதானாக உள்ளது. அது தமோபிரதானாக இருப்பதற்கு ஓர் எல்லை உள்ளது. கலியுகம் ஆரம்பமாகி இப்பொழுது 1250 வருடங்களாகி விட்டன. அதை விடவும் ஒரு நாள் கூடுதலாகவோ, அல்லது குறைவாகவோ இல்லை. உலகம் முற்றிலும் தமோபிரதானாகியபோது, தந்தை வரவேண்டியிருந்தது. தந்தை கூறுகின்றார்: நான் நாடக பந்தனத்தினால் கட்டுப்பட்டிருக்கின்றேன். நான் வரவேண்டியுள்ளது. ஆரம்பத்தில், ஏழைகள் பலர் வந்தனர். செல்வந்தர்களும் வந்தார்கள். இரு வகையினரும் ஒன்றாகவே அமர்ந்திருப்பார்கள். நல்ல வசதியான செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்த புத்திரிகள் இங்கு ஓடோடி வந்தார்கள். அவர்கள் தங்களுடன் எதனையும் கொண்டுவரவில்லை. அதிகளவு குழப்பங்கள் ஏற்பட்டன. நாடகத்தில் எது நிகழ வேண்டுமோ, அது நிகழ்ந்தது. இவ்வாறெல்லாம் நிகழும் என எவருமே சிந்தித்துப் பார்க்கவில்லை. பாபாவும் நடந்தவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. அவர்களது வரலாறு மிக அற்புதமானது. அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளதே. பாபா அனைவரிடமும் கூறினார்: நீங்கள் ஞானாமிர்தத்தைப் பருகப் போகின்றீர்கள் எனக் கூறி, உங்களது வீட்டிலிருந்து கடிதம் கொண்டு வாருங்கள். பின்னர், அவர்களது கணவன்மார் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தபோது, நஞ்சைக் கேட்டார்கள். இக்குழந்தைகள் கூறினார்கள்: நாங்கள் ஞானாமிர்தத்தைப் பருகியுள்ளோம், எனவே, எவ்வாறு உங்களுக்கு நஞ்சைக் கொடுக்க முடியும்? அவர்களிடம் இது பற்றிய பாடலொன்று உள்ளது. இதுவே செயற்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. அவர்கள் சமயநூல்களில் கிருஷ்ணரின் தெய்வீகச் செயற்பாடுகளைப் பற்றி எழுதியிருக்கின்றார்கள். கிருஷ்ணரையிட்டு இவ்வாறு கூற முடியாது. எனவே, இவையனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாடகத்தில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. வேடிக்கைகள், விளையாட்டுக்கள் போன்றன உள்ளன. இங்கே, இரு தந்தையரும் கூறுகின்றனர்: நாங்கள் எதனையும் செய்யவில்லை. இது தொடர்ந்தும் நாடகத்தில் இடம்பெறும் விளையாட்டாகும். சிறு குழந்தைகள் வந்தனர். அவர்கள் இப்பொழுது வளர்ந்து விட்டார்கள். திரான்ஸ் தூதுவர்கள் குழந்தைகளுக்கென அத்தகைய அற்புதமான பெயர்களைக் கொண்டு வந்தார்கள். பின்னர், அவர்களிலும்; ஓடிவிட்டவர்கள் இருந்தனர்; அவர்களது பெயர்கள் தொடரவில்லை, அவர்களின் பழைய பெயர்களே தொடர்ந்தன. இதனாலேயே பிராமணர்களுக்கென ஒரு மாலை கிடையாது. உங்களிடம் எதுவுமே இல்லை. முன்னர், நீங்கள் மாலையின் மணிகளை உருட்டியதுண்டு. இப்பொழுது நீங்கள் மாலையின் மணிகளாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். அங்கே பக்தி கிடையாது. இந்த ஞானம் புரிந்துகொள்வதற்காகும். இது ஒரு விநாடிக்கான ஞானம். அவர் ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். நீங்கள் கடல் முழுவதையும் மையாக்கி, காடு முழுவதையும் எழுதுகோல் ஆக்கினாலும் அது முற்றுப்பெறாது. இருந்தபோதிலும், அது ஒரு விநாடிக்கான விடயமேயாகும். நீங்கள் இப்பொழுது அல்பாவை அறிவீர்கள், எனவே நிச்சயமாக பீற்றா என்ற இராச்சியத்தையும் நீங்கள் பெறவேண்டும். அந்த ஸ்திதியை உருவாக்குவதற்கு, அதாவது தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுவதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்களது எல்லையற்ற தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இதற்கு முயற்சி தேவையாகும். உங்களை முயற்சி செய்யத் தூண்டுவதற்கு ஆசிரியர் இருக்கின்றார். எனினும், அது ஒருவரது பாக்கியத்தில் இல்லாவிட்டால், ஆசிரியரால் என்ன செய்ய முடியும்? ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கின்றார்: அவர் உங்களிடம் இலஞ்சம் வாங்கி உங்களைச் சித்தியடையச் செய்கின்றார் என்றில்லை. பாப், தாதா இருவரும் ஒன்றாகவே இருப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள்; புரிந்துகொள்கின்றீர்கள். பாப்தாதா பல புத்திரிகளிடமிருந்து கடிதங்களைப் பெறுகின்றார்: சிவபாபா, மேஃபா பிரஜாபிதா பிரம்மா. நீங்கள் இந்த தாதா மூலமாகவே தந்தையிடமிருந்து உங்களது ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். திரிமூர்த்திகள் உள்ளனர். பிரம்மா மூலமாகவே ஸ்தாபனை இடம்பெறுகின்றது. பிரம்மாவைப் படைப்பவர் என அழைக்க முடியாது. அத்தந்தை எல்லையற்றதைப் படைப்பவராவார். பிரஜாபிதா பிரம்மாவும் எல்லையற்றவரே. பிரஜாபிதா பிரம்மா இருப்பாராயின், மக்களும் பலர் இருக்கவேண்டும். அவர்கள் அனைவரும் கூறுகின்றனர்: அவர் கொள்ளுப் பாட்டனார். சிவபாபா கொள்ளுப் பாட்டனார் என அழைக்கப்படுவதில்லை. அவர் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையாவார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களாவர். பின்னர், அவர்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றனர். எல்லையற்ற வம்சாவளி விருட்சத்திற்குப் பிரஜாபிதா பிரம்மாவே தலைவர் ஆவார். குலங்களுக்கு வம்சாவளி விருட்சம் இருப்பதைப் போன்று, இதுவும் எல்லையற்ற வம்சாவளி விருட்சமாகும். ஆதாம் பீபீ, ஆதாம் ஏவாள் என யாரை அழைப்பீர்கள்? நீங்கள் பிரம்மாவையும், சரஸ்வதியையுமே அவ்வாறு அழைப்பீர்கள். வம்சாவளி விருட்சம் இப்பொழுது மிகவும் பெரிதாகி விட்டது. முழு விருட்சமும் இப்பொழுது முற்றிலும் உக்கிய நிலையை அடைந்து விட்டதால் புதிதாக ஒன்று தேவைப்படுகின்றது. இது பல்சமய விருட்சம் எனப்படுகின்றது. பல்வேறு முகச்சாயல்கள் இருக்கின்றன – எந்த இருவரதும் முகச்சாயல்கள் ஒன்றாக இருக்க முடியாது. ஒவ்வொருவரது பாகத்தினதும் செயற்பாடுகள் வேறுபட்டவை. இவை மிக ஆழமான விடயங்களாகும். சிறுபுத்தி கொண்டவர்களால் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இது மிகவும் சிரமமானதாகும்;;. ஆத்மாவாகிய நான் சின்னஞ்சிறிய புள்ளியாவேன். பரமாத்மா பரமதந்தையும் சின்னஞ்சிறிய புள்ளியே. அவர் வந்து, இவருக்கருகில் அமர்ந்திருக்கின்றார். ஓர் ஆத்மா பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருப்பதில்லை. பாப், தாதா இருவரும் இணைந்து நடிக்கும் பாகம் மிக அற்புதமானது. பாபா மிகவும் அனுபவம் வாய்ந்த இவரது சரீரத்தை எடுத்திருக்கின்றார். பாபாவே விளங்கப்படுத்துகின்றார்: இவர் பாக்கிய இரதம் ஆவார். ஆத்மா இக்கட்டடத்தினுள், அதாவது, இந்த இரதத்தினுள் அமர்ந்திருக்கின்றார். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் - நான் எனது கட்டடத்தை அல்லது சரீரத்தை அத்தகைய தந்தைக்கு வாடகைக்குக் கொடுப்பேனா? இதனாலேயே பாக்கிய இரதம் என அழைக்கப்படும் இவரது சரீரத்தில் தந்தை அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களை வைரங்கள் போன்ற தேவர்களாக்குகின்றார். முன்னர், நீங்கள் இதனைப் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் சீரழிந்த புத்தியைக் கொண்டிருந்தீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். எனவே, நீங்கள் மிக நன்றாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் உங்களது நேரத்தை வீணாக்கக்கூடாது. பாடசாலையில் உங்களது நேரத்தை வீணாக்கினால் தோல்வியடைகிறீர்கள். தந்தை உங்களுக்கு மாபெரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெகுமதியாகக் கொடுக்கின்றார். ஒருவர் அரசருக்குப் பிறக்கும்போது, அது அவர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வென்றது போன்றதாகும். ஏழைகளுக்கு, அது அதிர்ஷ்ட இலாபச்சீட்டு எனக் கூற முடியாது. இதுவே அதிமேலான அதிர்ஷ்ட இலாபச் சீட்டாகும். நீங்கள் இதில் உங்களது நேரத்தை வீணாக்கக்கூடாது. மாயையுடன் குத்துச்சண்டை இடம்பெறுவதை பாபா அறிவார். மாயை மீண்டும் மீண்டும் உங்களைச் சரீர உணர்வுடையவர்கள் ஆக்குகின்றாள். நீங்கள் தந்தையுடன் நேரடியான யோகத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். அவர் உங்கள் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கின்றார். இதனாலேயே, நாடகத்தின்படி, நீங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக இங்கு வருகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற விடயங்களை நீங்கள் கிரகிக்க வேண்டும். இந்நேரத்திலேயே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பின்னர் அது மறைந்துவிடும். பல ஆத்மாக்கள் அமைதிதாமத்திற்குச் செல்வார்கள், பின்னர் அரைக் கல்பத்தின் பின்னர் பக்தி மார்க்கம் ஆரம்பமாகும். அரைக்கல்பமாக நீங்கள் வேதங்களையும், சமயநூல்களையும் கற்று வந்தீர்கள், நீங்கள் பக்தி செய்து வந்தீர்கள். பிரதான விடயம் உங்களுக்கு இப்பொழுது விளங்கப்படுத்தப்படுகின்றது: தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்களது பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். இந்த ஞானமே உங்களது வருமானத்திற்கான மூலாதாரம். இதன் மூலம் நீங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள், நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அங்கே, நீங்கள் அனைத்துச் சந்தோஷத்தையும் கொண்டிருக்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார்: நான் உங்களுக்குச் சுவர்க்கம் எனும் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுத்தேன். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் அனைத்தையும் இழந்து விட்டீர்கள்! நீங்கள் இராவணனின் அடிமைகள் ஆகினீர்கள். இது இராமரதும், இராவணனதும் அற்புதமான நாடகமாகும். அது மீண்டும் இடம்பெறும். இது அநாதியானதும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதுமான ஒரு நாடகமாகும். நீங்கள் சுவர்க்கத்தில் சதா ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருக்கின்றீர்கள். இங்கே, மக்கள் தங்களது ஆரோக்கியத்திற்காக, அதுவும் ஒரு பிறவிக்காகப் பெருமளவில் செலவு செய்கின்றார்கள். ஆனால், அரைக் கல்பத்திற்குச் சதா ஆரோக்கியமானவராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன செலவு ஏற்படுகின்றது? ஒரு சதம்கூட இல்லை. தேவர்கள் சதா ஆரோக்கியமானவர்கள். நீங்கள் சதா ஆரோக்கியமானவராக ஆகுவதற்காகவே இங்கு வந்திருக்கின்றீர்கள். ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவராலுமே அனைவரையும் சதா ஆரோக்கியமானவர்கள் ஆக்க முடியாது. நீங்கள் இப்பொழுது சகல நற்குணங்களும் நிறைந்தவர்களாகுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் உள்ளீர்கள். தந்தை உங்களைப் புதிய உலகின் அதிபதிகளாக்குகின்றார். நாடக நியதிப்படி, நீங்கள் ஒரு பிராமணராகாது, உங்களால் தேவராக முடியாது. சங்கமயுகத்தில் நீங்கள் தந்தையிடம் வந்து, அதிமேலான மரியாதைக் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற, அதிமேன்மையான மனிதர்களாகாமல் உங்களால் தேவராக முடியாது. அச்சா.

இன்று, பாபா ஆன்மீக அப்பியாசத்தைக் கற்பித்து, ஞானத்தைப் பேசி, நீங்கள் கவனயீனமாக இருக்கக் கூடாது எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு எச்சரித்தும் உள்ளார். தீய அல்லது தவறான வார்த்தைகளைப் பேசாதீர்கள். மௌனமாக இருந்து, தந்தையை நினைவு செய்யுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களது பாவங்களை அழிப்பதற்கும், உங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்கும், நினைவு யாத்திரையில் முழுக்கவனம் செலுத்துங்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்.

2. தேவர்களாக ஆகவேண்டுமாயின், சங்கமயுகத்தில் அதிமேலான மரியாதைக் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற, அதிமேன்மையான மனிதர்களாகுவதற்கு முயற்சி செய்யுங்கள். கவனயீனமாக இருந்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய மனதையும், புத்தியையும் அனுபவம் எனும் ஆசனத்தில் ஸ்தாபித்து, ஒரு முதல் இலக்க, விசேடமான ஆத்மாவாக ஆகுவீர்களாக.

தாங்கள் விசேடமான, முதல் இலக்க ஆத்மாக்களாக ஆகவேண்டும் எனும் எண்ணத்தைப் பிராமண ஆத்மாக்கள் அனைவரும் தங்களினுள் கொண்டிருக்கின்றனர். எவ்வாறாயினும், எண்ணத்திற்கும் பயிற்சிக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை முடிப்பதற்கு நீங்கள் அந்த விழிப்புணர்வை உங்களுடைய அனுபவமாக ஆக்க வேண்டும். நீங்கள் கேட்டுள்ளவற்றையும், நீங்கள் அறிந்தவற்றையும் நினைவுசெய்வதைப் போன்றே, அதேவழியில், அந்த ஸ்திதியையும் அனுபவம் செய்யுங்கள். இதற்கு, சுயத்தினதும், நேரத்தினதும் முக்கியத்துவத்தை அறிந்து, உங்கள் மனதையும், புத்தியையும் அனுபவம் எனும் ஆசனத்தில் நிலைநிறுத்துங்கள், அப்பொழுது நீங்கள் ஒரு முதல் இலக்க, விசேடமான ஆத்மாவாக ஆகுவீர்கள்.

சுலோகம்:
தீய விடயங்களுக்கான பொறாமையைத் துறந்து, நல்லவற்றிற்கான ஓட்டப் பந்தயத்தில் ஓடுங்கள்.


மாதேஷ்வரியின் மேன்மையான இனிய வாசகங்கள்
பரமாத்மாவின் முன்னிலையில் குமாரிகளினதும் தாய்மாரினதும் துறவறம் ஒரு மறைமுக வடிவமாகும்.

இக் குமாரிகளும் தாய்மார்களும் ஏன் துறவறத்தை மேற்கொண்டார்கள் என்பதை உலக மக்கள் இப்பொழுது அறிந்திருக்க வேண்டும். இது எவ்விதமான ஹத்தயோகமோ அல்லது செயல்களைத் துறந்திருத்தலோ அல்ல. ஆனால், நிச்சயமாக முற்றிலும் இலகுயோகமும், இராஜயோகமும், கர்ம யோகமும் துறவறமும் ஆகும். கடவுளான பரமாத்மாவே வந்து, நீங்கள் மரணித்து வாழ்ந்து, சரீரத்தின் மனதையும், பௌதீகப் புலன்கள் அனைத்தையும் துறப்பதற்கு உங்களைத் தூண்டுகின்றார். அதாவது நீங்கள் நிச்சயமாக ஐந்து விகாரங்களினதும் முழுமையான துறவறத்தைக் கொண்டிருக்க வேண்டும். கடவுள் வந்து கூறுகின்றார்: தானம் ஒன்றைச் செய்தால், சகுனம் அகற்றப்படும். அரைக் கல்பமாக இருந்த மாயையின் சகுனங்கள் ஆத்மாக்களைத் தூய்மையற்றவர்களாக ஆக்கியுள்ளன. ஆத்மாக்கள் மீண்டும் தூய்மையாக்கப்பட வேண்டும். பாருங்கள், தேவர்களின் ஆத்மாக்கள் மிகவும் தூய்மையாகவும் பிரகாசமாகவும் உள்ளன. ஓர் ஆத்மா தூய்மையாக இருக்கும்போது, அவர் நோயிலிருந்து விடுபட்ட தூய சரீரத்தைப் பெறுகின்றார். நீங்கள் முதலில் ஒன்றைப் பெற்றாலே துறவறமும் சாத்தியமாகும். ஏழை ஒருவரின் குழந்தை செல்வந்தர் ஒருவரினால் தத்தெடுக்கப்பட்டால், அவர் ஏதோ ஒன்றைக் கண்டதாலேயே அச் செல்வந்தரைத் தத்தெடுக்க அனுமதிக்கின்றார். ஆனால் செல்வந்தர் ஒருவரின் குழந்தை ஏழையான ஒருவரினால் தத்தெடுக்கப்படுவதில்லை. எனவே, இங்கே, இது ஓர் அநாதை இல்லம் அல்ல. இங்கே, மிகவும் செல்வம் நிறைந்தவர்கள் உள்ளனர். மிகவும் செல்வந்தக் குடும்பங்களில் இருந்து வந்த தாய்மார்களும், குமாரிகளும் இருந்தபோதிலும், உலக மக்கள் அவர்கள் மீண்டும் தத்தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதையே விரும்புகின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் மாயையின் செல்வத்தையும் உலகியல் உடைமைகள் போன்றவற்றையும் முற்றாக துறக்குமளவிற்கு இங்கு அவர்கள் எதனைப் பெற்றார்கள்? அவர்கள் அங்கிருந்ததை விட அதிகளவு அமைதியையும் சந்தோஷத்தையும் நிச்சயமாக இங்கே பெற்றிருக்க வேண்டும். அதனாலேயே அவர்கள் அந்தச் செல்வத்தையும் உலகியல் உடைமைகளையும் ஒதுக்கினார்கள். இது கோபிசந் அரசனும் மீராவும் தமது இராஜா, இராணி வாழ்க்கையை, அதாவது, தமது இராச்சியத்தைத் துறந்ததைப் போன்றதாகும். இது இறை அதீந்திரிய சுகமும், அலௌகீக சந்தோஷமுமாகும். இதற்கு முன்னால் உலகியல் உடைமைகள் எதுவுமேயில்லை. இங்கே மரணித்து வாழ்ந்தால், அமரத்துவ உலகில் பிறவிபிறவியாக தாம் இராச்சியத்தைக் கோருவார்கள் என்பதை அறிந்ததாலேயே அவர்கள் தமது எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கு முயற்சி செய்கின்றார்கள். கடவுளுக்கு உரியவராக இருத்தல் என்றால், அவருடையவராகி, அவரிடமே அனைத்தையும் அர்ப்பணிப்பதாகும். அதற்குப் பிரதிபலனாக அவர் அழியாததோர் அந்தஸ்தைக் கொடுக்கின்றார். எனவே, கடவுள் தானே சங்கமயுகத்தில் வந்து, உங்களுடைய இந்த ஆசையைப் பூர்த்தி செய்கின்றார். ஏனெனில் உங்கள் சரீரம், மனம், செல்வம் அனைத்துமே விநாசத்தீயில் எரிந்து சாம்பலாகவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வாறாயின், கடவுளின் பெயரில் அவற்றை ஏன் தகுதியானதொரு வழியில் பயன்படுத்தக்கூடாது? நீங்கள் இப்பொழுது இந்த இரகசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்: அனைத்தும் அழியவுள்ளபோது, நான் எடுத்துக் கொண்டவற்றை வைத்து என்ன செய்யப் போகின்றேன்? சந்நியாசிகளையும் மண்டலேஸ்வர்களைப் போன்று மாளிகைகளைக் கட்டி அதில் அமர வேண்டும் என்றில்லை. எனினும், கடவுளின் பெயரில் விதைகளை விதைத்தால், நீங்கள் அங்கே பிறவிபிறவியாக அவருக்கு உரியவர்கள் ஆகுகின்றீர்கள். இது மறைமுகமானதோர் இரகசியமாகும். கடவுள் அருள்பவர். நீங்கள் ஒரு மடங்கை வழங்கினால், மாறாக நீங்கள் நூறு மடங்கைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும், இந்த ஞானப் பாதையில், நீங்கள் முதலில் சகித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்தளவிற்குச் சகித்துக் கொள்கின்றீர்களோ இறுதியில் அந்த தாக்கம் இருக்கும். ஆகையால், இப்போதே முயற்சியைச் செய்யுங்கள். அச்சா.