17.03.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 15.03.84 Om Shanti Madhuban
ஹோலிப் பண்டிகை, தூய்மையாகி, மற்றவர்களையும் தூய்மையாக்குவதற்கான ஞாபகார்த்தம் ஆகும்.
அதிபுனிதமான தந்தை, புனித அன்னங்களுடன் ஹோலிப்பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். சங்கமயுகம் முழுவதும் ஹோலி தினம் என்று அழைக்கப்படுகிறது. சங்கமம், ஹோலி தினம் ஆகும். அதிபுனிதமான தந்தை, புனிதமான குழந்தைகளுடன் ஹோலி தினத்தைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். உலகம் கொண்டாடும் ஹோலி ஓரிரு தினங்களுக்கே நிலைத்திருக்கும். ஆனால், புனித அன்னங்களான நீங்கள் சங்கமயுகம் முழுவதும் ஹோலியைக் கொண்டாடுகிறீர்கள். அவர்கள் நிறங்களை ஒருவர்மீது ஒருவர் வீசுகிறார்கள். ஆனால், நீங்கள் தந்தையின் சகவாசம் என்ற நிறத்தால் நிறமூட்டப்பட்டுத் தந்தையைப் போன்று ஆகுகிறீர்கள். அதாவது, நீங்கள் எல்லா வேளைக்கும் ஹோலி ஆகுகிறீர்கள். எல்லைக்குட்பட்டதில் இருந்து எல்லையற்றதற்குச் செல்வதன் மூலம், நீங்கள் எல்லா வேளையும் புனிதமானவர் ஆகுகிறீர்கள். அதாவது, தூய்மையானவர் ஆகுகிறீர்கள். இந்த ஹோலிப்பண்டிகை, அதாவது, தூய்மை ஆகுவதற்கான பண்டிகையைக் கொண்டாடுவதற்கான உற்சாகத்தைக் கொண்டிருப்பதற்கான நினைவூட்டுதலாக உள்ளது. அந்தச் சம்பிரதாயங்களில் கொண்டாடப்படும் இந்த ஞாபகார்த்த நடைமுறைகள் அனைத்தினதும் சாரம், தூய்மை ஆகுவதே ஆகும். அவர்கள் ஹோலியைக் கொண்டாடும்போது, புனிதம் அடைவதற்காக, தூய்மையின்மையும் தீங்கானவை அனைத்தும் முதலில் எரிக்கப்படும். அது நெருப்பில் அழிக்கப்படும். தூய்மையின்மை முற்றிலும் அழிக்கப்படும்வரை, உங்களால் தூய்மை நிறத்தால் நிறமூட்டப்பட முடியாது. அது வெவ்வேறானவர்கள் என்ற உணர்வுகள் அனைத்தையும் மறக்கும் பண்டிகையின் ஞாபகார்த்தம் ஆகும். அத்துடன், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர், நாம் அனைவரும் ஒன்றே என்பதை நினைப்பதற்கான பண்டிகை ஆகும். இது சமமாக இருக்கும் மனோபாவத்தை, அதாவது, சகோதரர்களாக இருப்பதைக் குறிக்கும் பண்டிகை ஆகும். லௌகீகமாகவும் இந்தச் சமநிலையாக இருக்கும் அனுபவத்தைப் பெறுவதற்காக, இளையவர்கள், முதியவர்கள், ஆண் பெண் அனைவரும் ஒன்றாக இதைக் கொண்டாடுவார்கள். உண்மையில், சமமாக இருக்கும் சகோதரத்துவம் என்ற விழிப்புணர்வானது, அழியாத நிறத்தின் அனுபவத்தைக் கொடுக்கிறது. சமமானவர்கள் என்ற இந்த ரூபத்தில் நீங்கள் ஸ்திரமாக இருக்கும்போது, அழியாத சந்தோஷத்தின் பிரகாசத்தை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். ஆத்மாக்கள் அனைவரையும் இந்த அழியாத நிறத்தால் நிறமூட்டச் செய்வதற்காக உங்களின் உற்சாகம் எல்லா வேளையும் நிலைத்திருக்கும். அவர்கள் நிறங்களை தெளிப்பான்களின் மூலம் தெளிக்கிறார்கள். உங்களின் தெளிப்பான்கள் என்ன? உங்களின் தெய்வீகப் புத்தியானது இந்த அழியாத நிறத்தால் நிரம்பியுள்ளது. சகவாசத்தின் நிறத்தின் அனுபவங்கள் உங்களுக்கு உள்ளன. எனவே, உங்களின் தெளிப்பான்கள் அனுபவங்கள் எனும் வெவ்வேறு நிறங்களால் நிரம்பியுள்ளது, அல்லவா? உங்களின் நிரம்பியுள்ள புத்தி என்ற தெளிப்பானின் மூலம், உங்களின் திருஷ்டியின் மூலமும், உங்களின் மனோபாவத்தின் மூலமும் உங்களின் உதடுகளின் மூலமும் உங்களால் இந்தச் சகவாசம் என்ற நிறத்தால் எந்தவோர் ஆத்மாவின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். அதன் மூலம் அவர்கள் எல்லா வேளையும் புனிதமானவர்கள் ஆகுவார்கள். அவர்கள் ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் நீங்களோ அனைவரையும் ஹோலி ஆக்குகிறீர்கள். ஒவ்வொரு நாளையும் நீங்கள் ஹோலி தினம் ஆக்குகிறீர்கள். குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்கு மட்டும் சந்தோஷமான மனோநிலையை உருவாக்குவதற்கு அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் நீங்களோ, புனிதமானவர்களாகி, எல்லா வேளையும் சந்தோஷமான மனோநிலையைப் பேணுவதன் மூலம் எல்லா வேளைக்கும் கொண்டாடுகிறீர்கள். நீங்கள் அந்த மனோநிலையை உருவாக்க வேண்டியதில்லை. ஏனெனில், அது என்றென்றும் நிலைத்திருக்கும். உங்களின் மனோநிலை எப்போதும் புனிதமாக இருக்கும்போது, வேறெந்த மனோநிலையும் வரமுடியாது. புனிதமான மனோநிலையைக் கொண்டிருத்தல் என்றால் சதா இலேசானவராக, இயல்பாகவே கவலையற்றவராக, சதா சகல பொக்கிஷங்களாலும் நிறைந்தவராக, எல்லையற்ற சுய இராச்சியத்திற்கான உரிமையைக் கோரியவராக இருத்தல் என்று அர்த்தம். உங்களின் மனோநிலைகள் வெவ்வேறாக மாறுகின்றன. சிலவேளைகளில் சந்தோஷமாகவும், சிலவேளைகளில் அதிகம் சிந்திப்பதாகவும், சிலவேளைகளில் இலேசானதாகவும் சிலவேளைகளில் சுமையாகவும் இருக்கிறது. எனவே, அவ்வாறு மாறுகின்ற மனோநிலைகள் அனைத்தும் முடிந்து, நீங்கள் சதா சந்தோஷமான, புனிதமான மனோநிலை உடையவர்கள் ஆகுகிறீர்கள். இத்தகைய அநாதியான பண்டிகையை நீங்கள் தந்தையுடன் கொண்டாடுகிறீர்கள். எனவே, நீங்கள் முதலில் அழிக்கிறீர்கள். பின்னர் கொண்டாடுகிறீர்கள். அதன்பின்னர் சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள். இதன் ஞாபகார்த்தமாகவே, அவர்கள் எரிக்கிறார்கள். நிறங்களை ஒருவர்மீது ஒருவர் வீசுகிறார்கள். அதன்பின்னர் ஒன்றுகூடி சந்தோஷமாகச் சந்திக்கிறார்கள். நீங்கள் அனைவரும் தந்தையின் சகவாசம் என்ற நிறத்தால், ஞானம் என்ற நிறத்தால், சந்தோஷம் என்ற நிறத்தால் நிறமூட்டப்படுகிறீர்கள். பல்வகை நிறங்களால் நீங்கள் ஹோலியைக் கொண்டாடுகிறீர்கள். இந்த நிறங்கள் ஒவ்வொன்றினாலும் நீங்கள் நிறமூட்டப்படும்போது, தந்தைக்குச் சமமானவர் ஆகுகிறீர்கள். சமமானவர்கள் அனைவரும் ஒன்றுசேரும்போது, அவர்கள் எவ்வாறு சந்திப்பார்கள்? பௌதீகமாக, அவர்கள் சந்திக்கும்போது, ஒருவரையொருவர் கட்டியணைப்பார்கள். ஆனால், நீங்கள் எவ்வாறு சந்திப்பீர்கள்? நீங்கள் சமமானவர் ஆகும்போது, அந்த அன்பிலே நீங்கள் திளைத்திருக்கிறீர்கள். எனவே, அவ்வாறு திளைத்திருக்கும் அனுபவமே சந்திப்பு ஆகுகிறது. இந்தச் சம்பிரதாயங்கள் அனைத்தும் எப்போது ஆரம்பமாகின? உங்களின் கொண்டாட்டம் அழியாததாக இருக்கிறது. ஆனால் அவர்கள் அழியும் ஞாபகார்த்தத்தை உருவாக்கியுள்ளார்கள். அந்தக் கொண்டாட்டத்தினால் அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். சிந்தித்துப் பாருங்கள். உங்களின் உற்சாகம் அழியாததாக இருக்க வேண்டும். ஏனெனில், நிலையான உற்சாகத்தைக் கொண்டிருப்பதில் நீங்கள் அனுபவசாலிகள் ஆகியுள்ளீர்கள். ஆனால் அவர்களோ, இதன் ஞாபகார்த்த தினத்தைக் கொண்டாடி, அதில் இருந்து வரும் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். உங்களின் உற்சாகத்தினதும் சந்தோஷத்தினதும் ஞாபகார்த்தம், இறுதிவரை எண்ணற்ற ஆத்மாக்களுக்கு சந்தோஷத்தின் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் இப்போது உற்சாகம் நிறைந்த வாழ்க்கையை, சம்பூரணமான சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையை உருவாக்கியுள்ளீர்கள்.
இதுவே நாடகத்தின் அற்புதமான சங்கமயுகப் பாகம் ஆகும். அதாவது, நீங்கள் உங்களின் அழியாத உற்சாகத்தைக் கொண்டாடுவதுடன், உங்களின் சொந்த ரூபங்களையும் உங்களால் பார்க்க முடிகிறது. ஒருபுறம், நீங்கள் மேன்மையான உயிர்வாழும் ஆத்மாக்கள். மறுபுறம், நீங்கள் உங்களின் சொந்த ரூபங்களைப் பார்க்கிறீர்கள். ஒருபுறம், நீங்கள் நினைவின் சொரூபங்கள் ஆகுகிறீர்கள். மறுபுறம், உங்களின் ஒவ்வொரு மேன்மையான செயலின் ஞாபகார்த்தத்தையும் நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் புகழத்தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதுடன், சென்ற கல்பத்தில் இருந்து புகழையும் செவிமடுக்கிறீர்கள். இது ஓர் அற்புதமே! உங்களின் விழிப்புணர்வினால், அது எவ்வாறு உங்களின் புகழ் ஆகுகிறது என்று பாருங்கள். உண்மையில், ஒவ்வோர் ஆத்மாவும் எப்போதும் தனது மேன்மையான செயல்களின் ஞாபகார்த்த ரூபங்களை வெவ்வேறு பெயரிலும் ரூபத்திலும் பார்க்கிறார். ஆனால், அவருக்கு அதைத் தெரியாது. உதாரணமாக, காந்திஜி வேறொரு பெயரிலும் உருவத்திலும் தனது சினிமாப்படத்தைப் பார்ப்பார். ஆனால் அதைத் தான் என அவர் உணர மாட்டார். உங்களால் உங்களின் ரூபங்களை இனங்கண்டு கொள்ள முடிகிறது. அது உங்களின் ரூபம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் பண்டிகைகளின் ரூபத்தில் உற்சாகமான நாட்களின் ஞாபகார்த்தத்தைக் கொண்டாடுகிறீர்கள். இதில் சகல ஞானமும் அடங்கியுள்ளதல்லவா? இரட்டை வெளிநாட்டவர்களின் ரூபங்கள் ஆலயங்களின் உள்ளனவா? உங்களின் சொந்த ரூபங்களை தில்வாலா ஆலயத்தில் நீங்கள் கண்டீர்களா? அல்லது பாரதத்தின் குழந்தைகளின் ரூபங்கள் மட்டுமே அங்குள்ளனவா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்த ரூபத்தைக் கண்டுள்ளீர்களா? அது உங்களின் ரூபம் என நீங்கள் இனங்கண்டுள்ளீர்களா? ஓர் அர்ச்சுனனின் உதாரணம் இருப்பதைப் போன்று, சித்திரங்களும் ரூபங்களும் வெகு சிலரின் ஞாபகார்த்தங்களாகவே உள்ளன. ஆனால், அவை உங்கள் அனைவரினதும் ஞாபகார்த்தம் ஆகும். சில சித்திரங்களே இருப்பதனால், அவை உங்களுடையவை அல்ல என நினைக்காதீர்கள். ஒரு மாதிரி உருவே காட்டப்பட்டாலும், அவை உங்கள் அனைவரினதும் ஞாபகார்த்தங்கள் ஆகும். நினைவில் (யாத்) இருப்பவர்களுக்கு நிச்சயமாக தங்களுக்கென்று ஒரு ஞாபகார்த்தம் (யாத்கர்) உருவாக்கப்படும். உங்களுக்குப் புரிகிறதா? உங்கள் அனைவரினதும் பெரிய தெளிப்பான்கள் நிரம்பியிருக்கின்றனவா? அல்லது, ஒரு தடவை பயன்படுத்தியதும் வெறுமை ஆகும்படியாக அது சிறிய தெளிப்பானா? அதை நீங்கள் மீண்டும் மீண்டும் நிரப்ப வேண்டியுள்ளதா? நீங்கள் இத்தகைய முயற்சி செய்ய வேண்டியதில்லை. அழியாத நிறத்தால் அனைவரையும் நிறமூட்டுங்கள். மற்றவர்களைப் புனிதமாக்கும் ஹோலியைக் கொண்டாடுங்கள். உங்களுக்கு ஏற்கனவே ஹோலி நிகழ்ந்துவிட்டதா? அல்லது இப்போதுதான் அதைக் கொண்டாடப் போகிறீர்களா? ஹோலி நிகழ்ந்ததெனில், நீங்கள் புனிதமானவர்கள் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம். நீங்கள் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள், அல்லவா? இந்த நிறத்தைக் கழுவ வேண்டியதில்லை. அவர்கள் பௌதீகமான நிறங்களைச் சந்தோஷமாக ஒருவர் மீது ஒருவர் வீசுகிறார்கள். ஆனால், அவற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்தும் கொள்கிறார்கள். எவ்வாறாயினும், உங்களின் இந்த நிறம் எத்தகையதெனில், ‘இதை மேலும் தெளியுங்கள்!’ என ஒவ்வொருவரும் கூறுவார்கள். எவரும் இதையிட்டுப் பயப்பட மாட்டார்கள். ஆனால், அவர்கள் அந்த நிறங்களையிட்டுப் பயப்படுவார்கள். அது தமது கண்களுக்குள் சென்றுவிடுமோ எனப் பயப்படுவார்கள். ஆனால், இங்கோ, ‘நீங்கள் விரும்பிய அளவிற்கு என்னை நிறமூட்டுங்கள் - எந்தளவிற்கு அதிகமோ, அந்தளவிற்கு அது சிறந்தது!’ எனக் கூறுவார்கள். எனவே, இந்த முறையில் ஹோலியைக் கொண்டாடுங்கள். நீங்கள் புனிதமானவர்கள் ஆகியுள்ளீர்கள். இந்த ஹோலியானது, தூய்மையாகி, மற்றவர்களையும் தூய்மையாக்குவதன் ஞாபகார்த்தம் ஆகும்.
இங்கு, பாரதத்தில், அவர்கள் பல கதைகளை உருவாக்கியுள்ளார்கள். ஏனெனில், கதைகளைக் கேட்பதில் அவர்களுக்கு ஆர்வம் உள்ளது. எனவே, ஒவ்வொரு பண்டிகையைப் பற்றியும் அவர்கள் கதைகளை உருவாக்கியுள்ளார்கள். உங்களின் வாழ்க்கைச் சரிதங்களில் இருந்து பல சிறுகதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சில கதைகள் ராக்கியைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ளன. சில கதைகள் ஹோலியைப் பற்றி உள்ளன. சில கதைகள் உங்களின் வாழ்க்கையைப் பற்றி, உங்களின் பிறப்பைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ளன. சில கதைகள் உங்களின் இராச்சியத்தைப் பற்றி உள்ளன. ஆனால் அந்தக் கதைகள் அனைத்தும் உங்களின் வாழ்க்கைச் சரிதங்களே. துவாபர யுகத்தில், தனிப்பட்ட உறவுமுறைகளுக்கு அதிகளவு நேரம் செலவிட வேண்டிய தேவை இருக்கவில்லை. மக்கள் சுதந்திரமாக இருந்தார்கள். உங்களின் கணக்கீட்டின்படி, சனத்தொகையும் மிகச் சிறியதாக இருந்தது. செல்வம் ரஜோபிரதானாக இருந்தது. உங்களின் ஸ்திதியும் ரஜோபிரதானாக இருந்தது. இதனாலேயே, கதைகள், சமயக்கதைகள், பக்திப் பாடல்கள் என்ற வழிமுறைகள் அனைத்தும் உங்களை மும்முரமாக வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்டன. சில வழிமுறைகள் தேவைப்பட்டன! உங்கள் அனைவருக்கும் நேரம் இருந்தது. எனவே, நீங்கள் சேவை செய்கிறீர்கள் அல்லது நினைவில் இருக்கிறீர்கள். ஆனால், அவர்கள் அந்த வேளையில் என்ன செய்ய முடியும்? அவர்கள் பிரார்த்தனை செய்வதற்கு அல்லது கட்டுக்கதைகளைக் கூறவும் பாடல்களைப் பாடவும் ஆரம்பித்தார்கள். அவர்களின் புத்திகள் சுதந்திரமாக இருந்ததால், அவர்கள் பல அற்புதமான, அழகான கதைகளை உருவாக்க ஆரம்பித்தார்கள். குறைந்தபட்சம், அது சிறப்பானதே. ஏனெனில் அவர்கள் அதிகளவு தூய்மையின்மைக்குள் செல்வதில் இருந்து பாதுகாக்கப்பட்டார்கள். தற்காலத்தில், ஐந்து வயதுப் பிள்ளையையும் விகாரத்தில் ஈடுபடச் செய்வதற்கான விடயங்கள் உள்ளன. ஆனால், அந்த வேளையில் குறைந்தபட்சம் சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இவை அனைத்தும் உங்களின் ஞாபகார்த்தங்களே ஆகும். அவர்கள் உங்களின் ஞாபகார்த்தத்தைக் கொண்டாடுகிறார்கள், உங்களைப் பற்றிய பாடல்களைப் பாடுகிறார்கள் என்ற போதையும் சந்தோஷமும் உங்களுக்கு உள்ளதல்லவா? அவர்கள் அதிகளவு அன்புடன் பாடல்களைப் பாடுகிறார்கள். நீங்கள் அன்பு சொரூபங்கள் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே, அவர்கள் அதிகளவு அன்புடன் பாடல்களைப் பாடுகிறார்கள். ஹோலியின் ஞாபகார்த்தம் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? எப்போதும் சந்தோஷமாக இருங்கள். எப்போதும் இலேசாக இருங்கள். இதுவே கொண்டாடுதல் ஆகும். அச்சா. உங்களின் மனோநிலை பாழாகுவதற்கு அனுமதிக்காதீர்கள். எப்போதும் புனிதமான மனோநிலையை, இலேசான மனோநிலையை, சந்தோஷமான மனோநிலையைக் கொண்டவராக இருங்கள். நீங்கள் அனைவரும் மிகவும் விவேகிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் மதுவனத்திற்கு வந்த முதல் நாளில் ஒரு புகைப்படம் எடுங்கள். இப்போது, நீங்கள் இங்கிருந்து செல்வதற்குத் தயார் ஆகும்போது, அதன் புகைப்படத்தையும் எடுங்கள். இரண்டு புகைப்படங்களையும் எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு சமிக்ஞை மூலம் புரிந்து கொள்கிறீர்கள். எனினும் நீங்கள் பாப்தாதாவின் வீட்டின் அலங்காரங்களே. நீங்கள் வரும்போது, மதுவனத்தின் பிரகாசம் மிகவும் அழகாக ஆகுவதைப் பாருங்கள். நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் தேவதைகள் இருப்பதைப் போன்று அழகாக உள்ளது. நீங்களே அலங்காரங்கள் என்பதை பாப்தாதா அறிவார். அச்சா.
ஞான நிறத்தால் நிறமூட்டப்பட்ட அனைவருக்கும், சதா தந்தையின் சகவாசத்தின் நிறமூட்டப்பட்டிருப்பவர்களுக்கும், தந்தையைப் போன்று நிரம்பியவர்கள் ஆகுபவர்களுக்கும், அழியாத நிறத்தால் நிறமூட்டப்பட்டிருப்பவர்களுக்கும், எப்போதும் ஹோலி தினத்தைக் கொண்டாடுபவர்களுக்கும், புனித அன்னங்களான ஆத்மாக்களுக்கும், சதா சந்தோஷமாகவும் புனிதமாகவும் இருக்கும் இத்தகைய ஆத்மாக்களுக்கு பாப்தாதா பாராட்டுகிறார். உங்களை சதா நிரம்பியவர்கள் ஆக்குவதற்காகப் பாராட்டுக்கள். அத்துடன் சதா நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பேணுவதற்கும் பாராட்டுக்கள். சதா அன்பிலே திளைத்திருப்பதுடன் சதா சந்தோஷமான சந்திப்பைக் கொண்டாடும் சகல திசைகளிலும் உள்ள சகல குழந்தைகளுக்கும், இத்தகைய விசேடமான குழந்தைகளுக்கு அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
தனிப்பட்ட சந்திப்புக்கள்
1.நீங்கள் சதா உங்களைத் தந்தையின் ஆஸ்திக்கு உரிமை உடையவராகக் கருதுகிறீர்களா? உரிமையைக் கொண்டிருத்தல் என்றால் சக்திசாலி ஆத்மாவாக இருத்தல், இந்தப் புரிந்துணர்வுடன் செயற்படுதல் என்று அர்த்தம். எந்த வகையான பலவீனமும் எஞ்சியிருக்கவில்லை, அல்லவா? சதா உங்களைத் ‘தந்தையைப் போன்றே நானும்’ என்ற விழிப்புணர்வுடன் முன்னேறச் செய்யுங்கள். தந்தை சர்வசக்திவான். எனவே, குழந்தைகளும் மாஸ்ரர் சர்வசக்திவான்களே. எப்போதும் இந்தச் சந்தோஷத்துடன் இருங்கள். ஏனெனில், எஞ்சிய கல்பம் முழுவதும் இப்போது உங்களுக்கு இருக்கும் இந்தச் சந்தோஷம் இருக்கமாட்டாது. இப்போது, உங்களுக்குத் தந்தையிடமிருந்து பேறு கிடைக்கிறது. ஆனால், பின்னரோ, ஆத்மாக்கள் ஆத்மாக்களிடமிருந்தே பேறுகளைப் பெறுவார்கள். தந்தையிடமிருந்து நீங்கள் பெறும் பேறுகளை ஆத்மாக்களிடமிருந்து பெற முடியாது. ஆத்மாக்கள் அனைத்தும் அறிந்தவர்கள் இல்லை. எனவே, ஆத்மாக்களிடமிருந்து பெறும் எந்தவொரு பேறும் தற்காலிகமானதே. ஆனால், தந்தையிடமிருந்து நீங்கள் எல்லா வேளைக்குமான அழியாத பேற்றினைப் பெறுகிறீர்கள். நீங்கள் இப்போது தந்தையிடமிருந்து அழியாத சந்தோஷத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் சதா சந்தோஷத்தில் தொடர்ந்து நடனம் ஆடுகிறீர்கள், அல்லவா? சதா சந்தோஷ ஊஞ்சலில் தொடர்ந்து ஆடுங்கள். நீங்கள் கீழே வந்ததும், அழுக்கானவர் ஆகுகிறீர்கள். ஏனெனில், நிலத்தில் அழுக்கு உள்ளது. நீங்கள் எப்போதும் ஊஞ்சல்களில் இருந்தால், எப்போதும் சுத்தமாக இருப்பீர்கள். சுத்தமானவர் ஆகாமல், உங்களால் தந்தையைச் சந்திக்க முடியாது. தந்தை சுத்தமானவராக இருப்பதைப் போன்று, அவரைச் சந்திப்பதற்கான வழிமுறையும், சுத்தமாக ஆகுவதே ஆகும். எனவே, சதா ஊஞ்சல்களில் இருப்பவர்கள் சதா சுத்தமாக இருப்பார்கள். உங்களிடம் ஊஞ்சல் இருக்கும்போது, ஏன் நீங்கள் கீழே வருகிறீர்கள்? உண்ணுங்கள், பருகுங்கள், நடவுங்கள். அனைத்தையும் ஊஞ்சலில் இருந்தவண்ணமே செய்யுங்கள். அது பெரியதொரு ஊஞ்சல் ஆகும். கீழே வருகின்ற நாட்கள் முடிந்துவிட்டன. இப்போது, ஊஞ்சல் ஆடுவதற்கான நாட்கள் ஆகும். எனவே, நீங்கள் சதா சந்தோஷம், அன்பு, ஞானம், ஆனந்தம் என்ற ஊஞ்சல்களில் தந்தையுடன் சதா ஆடுகின்ற மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். எப்போதும் இதை நினைவில் வைத்திருங்கள். எப்போதும் இதை நினையுங்கள். எந்தவொரு சூழ்நிலை வந்தாலும், இந்த ஆசீர்வாதத்தை நினையுங்கள். இந்த ஆசீர்வாதத்தின் அடிப்படையில், நீங்கள் மீண்டும் ஒருதடவை சகவாசத்தை அனுபவம் செய்வதுடன் ஊஞ்சலிலும் ஆடுவீர்கள். இந்த ஆசீர்வாதம் சதா பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறை ஆகும். ஆசீர்வாதத்தை நினைவு செய்வதெனில் ஆசீர்வாதங்களை அருள்பவரை நினைத்தல் என்று அர்த்தம். உங்களிடம் ஆசீர்வாதம் இருக்கும்போது, எந்தவிதமான முயற்சியும் தேவையில்லை. இலகுவாக உங்களுக்கு சகல பேறுகளும் கிடைக்கும்.
2. நீங்கள் அனைவரும் ஒரே நம்பிக்கை, ஒரே ஆதாரம் என்பதுடன் சதா முன்னேறும் மேன்மையான ஆத்மாக்கள், அல்லவா? புத்திகளில் நம்பிக்கை வைத்திருக்கும் குழந்கைள், ஒரே வலிமையையும் ஒரே ஆதாரத்தையும் கொண்டிருப்பவர்கள், இந்தச் சாகார் முரளிகளே மதுவனத்தில் இருந்து நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறும் முரளிகள் என்பதையும், அது மட்டுமே ஸ்ரீமத் என்பதையும் அறிவார்கள். மதுவனத்தைத் தவிர வேறு எங்கேயும் உங்களால் தந்தையைச் சந்திக்க முடியாது. ஒரேயொரு தந்தையின் இந்தக் கல்வியில் எப்போதும் நம்பிக்கை இருக்க வேண்டும். மதுவனத்தில் இருந்து செல்கின்ற கல்வியின் பாடம், உங்களின் கல்வி ஆகும். வேறெந்தக் கல்வியும் கிடையாது. போக் படைக்கும்போது, சிலவேளைகளில் செய்தியாளராக இருக்கும் பாகம் இருந்தால், அது முற்றிலும் தவறானது. அதுவும் மாயையே. அதை ஒரு வலிமையும் ஓர் ஆதாரமும் என்று கூற முடியாது. மதுவனத்தில் இருந்து வரும் முரளியில் கவனம் செலுத்துங்கள். இல்லாவிடின், நீங்கள் வேறு பாதைகளில் போய்விடக்கூடும். பாபாவின் முரளி மதுவனத்தில் மட்டுமே கூறப்படுகிறது. பாபா மதுவனத்திற்கு மட்டுமே வருகிறார். ஆகவே, ஒவ்வொரு குழந்தையும் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிடின், மாயை உங்களை ஏமாற்றிவிடுவாள். (11ஃ04ஃ82)
ஆசீர்வாதம்:
நீங்கள் திரிகாலதரிசி ஆசனத்தில் அமர்ந்திருந்து, உங்களின் திடசங்கற்ப சக்தியால் வெற்றி அடைவீர்களாக.திடசங்கற்பம் என்ற சக்தியானது, எந்தவிதமான கவனக்குறைவெனும் சக்தியையும் இலகுவாக மாற்றிவிடும் ஒரு மேன்மையான சக்தியாகும். எங்கு திடசங்கற்பம் உள்ளதோ, அங்கு வெற்றி இருக்கும் என்பது பாப்தாதாவின் ஆசீர்வாதம் ஆகும். நீங்கள் காலத்திற்கேற்ப சரியான முறையில் வெற்றி சொரூபம் ஆகவேண்டும். நீங்கள் எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னரும், அதன் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிச் சிந்தித்துவிட்டுப் பின்னர் அந்தச் செயலைச் செய்யுங்கள். அல்லது அதைச் செய்வதற்கு உதவுங்கள். அதாவது, திரிகாலதரிசி எனும் ஆசனத்தில் அமர்ந்திருங்கள். கவனக்குறைவுகள் அனைத்தும் முடிந்துவிடும். எண்ணத்தின் விதையானது சக்திவாய்ந்ததாகவும் திடசங்கற்பத்தால் நிரம்பியதாகவும் இருக்க வேண்டும். அப்போது உங்களின் வார்த்தைகளிலும் செயல்களிலும் இலகுவாக வெற்றி கிடைக்கும்.
சுலோகம்:
எப்போதும் திருப்தியாக இருந்து, மற்றவர்களையும் திருப்திப்படுத்துபவர்கள் திருப்தி இரத்தினங்கள் ஆவார்கள்.
அறிவித்தல்: இன்று, மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. எனவே, அனைவரும் சூட்சுமவாசிகளாகி, தெய்வீகப் புத்தியெனும் வாகனத்தினால் நல்லாசிகள், தூய உணர்வுகள் எனும் ஒத்துழைப்பு அலையைப் பரப்பும் சேவையைச் செய்யுங்கள்.