21.12.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய உங்கள் பற்றரியை (மின்கலத்தை) ஞானத்தினதும் யோகத்தினதும் சக்திகளால் சக்தியூட்டிக்; கொள்ளுங்கள். தண்ணீரில் நீராடுவதால் அன்றி இதனூடாகவே உங்களை சதோபிரதான் ஆக்கிக் கொள்ளுங்கள்.
கேள்வி:
இந்நேரத்தில் மனித ஆத்மாக்கள் அனைவரையும், இலக்கு இன்றி அலைய வைப்பது யார்? ஏன் அவன் உங்களை அலைய வைக்கிறான்?
பதில்:
இராவணனே அனைவரையும் இலக்கு இன்றி அலைய வைக்கிறான் ஏனெனில் அவனுமே இலக்கு இன்றி அலைகின்றான். அவனுக்கென ஒரு சொந்த வீடு இல்லை. எவருமே இராவணனை ‘பாபா’ என்று அழைக்க மாட்டார்கள். பரந்தாமமான தனது வீட்டிலிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் இலக்கைக் காட்டுவதற்காகவே தந்தை வருகின்றார். இப்பொழுது உங்களுக்கு உங்கள் வீட்டைத் தெரியும் என்பதால், நீங்கள் அலைந்து திரிவதில்லை. நீங்களே தந்தையிடமிருந்து முதலில் பிரிந்தீர்கள் என்பதால், நீங்களே முதலில் வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
ஓம் சாந்தி.
இனிமையான குழந்தைகளே, என்ன நடக்க நேரிட்டாலும், இவரினுள் பிரவேசித்திருக்கும் சிவபாபா எங்களை நிச்சயமாக தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்பதை, இங்கமர்ந்திருக்கும் போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அதுவே ஆத்மாக்களின் வீடு. குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகச் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள் ஏனெனில் எல்லையற்ற தந்தை எங்களை அழகாக்குவதற்காக வந்திருக்கிறார். அவர் எங்களுக்கு ஆடைகளை அணிவிக்கின்றார் என்றல்லை. இதுவே யோக சக்தி, நினைவு சக்தி என அழைக்கப்படுகிறது. ஓர் ஆசிரியர் பெற்றிருக்கின்ற அந்தஸ்திற்கு ஏற்பவே, அவர் தனது மாணவர்கள் ஓர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதற்கு, அவர்களுக்கு ஊக்கமளிக்கின்றார். மாணவர்கள் தமது கற்றலின் மூலம் தாம் என்னவாகுவோம் என்பதனைப் புரிந்து கொள்வார்கள். உங்களது பாபாவே உங்களது ஆசிரியரும் உங்களது சற்குருவும் ஆவார் என்பதை நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். இது ஒர் புதிய விடயம் ஆகும். நாங்கள் எங்கள் பாபாவை ஆசிரியராகவும் நினைவு செய்கிறோம். இவ்வாறு ஆகுவதற்கே அவர் எமக்குக் கற்பிக்கிறார். எங்கள் எல்லையற்ற தந்தை எங்களைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கே வந்திருக்கிறார். இராவணனுக்கெனச் சொந்தமான ஒரு வீடு இல்லை. இராமருக்கு ஒரு வீடு உள்ளது. சிவபாபா எங்கே இருக்கிறார்? பரந்தாமத்தில், என நீங்கள் உடனே கூறுவீர்கள். இராவணனை பாபா என அழைக்க முடியாது. இராவணன் எங்கே வாழ்கிறான்? எவருக்கும் தெரியாது. இராவணன் பரந்தாமத்தில் வாழ்வதாக நீங்கள் கூறமாட்டீர்கள்: இல்லை. அது அவனிடம் இலக்கு எதுவும் இல்லாதிருப்பதைப் போன்றதாகும். அவன் தொடர்ந்தும் அலைந்துதிரிவதுடன் உங்களையும் அலைந்துதிரியச் செய்கிறான். நீங்கள் இராவணனை நினைவு செய்கின்றீர்களா? இல்லை. அவன் சமயநூல்களைக் கற்குமாறும், பக்தி செய்யுமாறும் வேறும் பலவற்றைக் கூறி உங்களை அதிகளவு அலைந்து திரியச்செய்கிறான். தந்தை கூறுகிறார்;;: அது இராவணனின் இராச்சியமாகிய பக்தி மார்க்கம் என அழைக்கப்படுகிறது. இராமரின் இராச்சியம் இருக்க வேண்டும் என்று காந்திஜியும் கூறுவதுண்டு. எங்களது சிவபாபா இந்த இரதத்தினுள் பிரவேசித்திருக்கின்றார். அவரே சிரேஷ்ட தந்தையாவார். குழந்தாய், குழந்தாய் என அழைத்து அவர் ஆத்மாக்களாகிய எங்களிடம் உரையாடுகிறார். ஆன்மீகத் தந்தை இப்பொழுது உங்களது புத்தியில் இருக்கிறார், அத்துடன் ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீகத் தந்தையின் புத்தியில் இருக்கின்றீர்கள். எங்களது தொடர்பு அசரீரி உலகத்துடனேயே உள்ளது. ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்ட காலமாக பிரிந்திருந்தனர். அங்கு ஆத்மாக்கள் தந்தையுடனேயே இருக்கின்றனர். பின்னர் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக அவரிடமிருந்து பிரிகின்றனர். அந்த நீண்ட காலத்திற்கான கணக்கு இருக்க வேண்டும். தந்தை இங்கமர்ந்திருந்து இவற்றை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இப்பொழுது இக் கல்வியைக் கற்கின்றீர்கள். நன்றாகக் கற்பவர்களுமே வரிசைக்கிரமமாகவே உள்ளனர். அவர்கள்தான் என்னிடமிருந்து முதலில் பிரிந்தவர்கள். அவர்களே என்னை அதிகளவு நினைவு செய்பவர்களும் மீண்டும் என்னிடம் முதலில் வருபவர்களும் ஆவார்கள். முழு உலகச் சக்கரத்தின் ஆழமான இரகசியங்களைக் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். வேறு எவருக்குமே இதனைத் தெரியாது. இதனை ஆழமான ஞானமென்றோ அல்லது தெளிவான ஞானமென்றோ அழைக்கலாம். தந்தை எங்களுக்கு விளங்கப்படுத்தும் போது மேலே அமர்ந்திருப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இவை அனைத்தையும் விளங்கப்படுத்தவே அவர் கீழே இறங்கி வருகின்றார் என்பதும் உங்களுக்குத் தெரியும். நானே கல்ப விருட்சத்தின் விதையாவேன். இந்த மனித விருட்சம், கல்ப விருட்சமென்றும் அழைக்கப்படுகிறது. இதைப் பற்றி எதனையும் உலக மக்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமை என்னும் கும்பகர்ண உறக்கத்தில் இருக்கின்றனர். ஆகவே அவர்களை விழித்தெழச் செய்வதற்குத் தந்தை வந்திருக்கிறார். ஏனைய அனைவரும் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கையில் குழந்தைகளாகிய உங்களைத் தந்தை விழித்தெழச் செய்துள்ளார். நீங்களும் கும்பகர்ணனைப் போல் அந்த அசுர உறக்கத்தில் இருந்தீர்கள். தந்தை வந்து உங்களை விழித்தெழச் செய்தார். தந்தை கூறினார்: குழந்தைகளே விழித்தெழுங்கள்! நீங்கள் கவலையீனமானவர்களாகி இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அது அறியாமையின் உறக்கம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் வேறுவகை உறக்கம் உள்ளது. சத்திய யுகத்திலும் அவர்கள் உறங்குகின்றனர். இந்நேரத்தில் நீங்கள் அனைவரும் அறியாமை என்னும் உறக்கத்தில் உறங்குகின்றீர்கள். உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதன் மூலம் உங்கள் அனைவரையும் விழித்தெழச் செய்வதற்காகவே தந்தை வந்திருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் விழித்தெழுப்பப் பட்டுள்ளீர்கள். தந்தை வந்துவிட்டார் என்பதும், தன்னுடன் எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இந்த சரீரத்தாலோ அல்லது ஆத்மாவாலோ எந்தப் பயனும் இப்பொழுது இல்லை. இரண்டும் தூய்மையற்றதாகி விட்டன. அவற்றில் கலப்படம் கலந்துவிட்டது. நீங்கள் அதனை ஒன்பது கரட் தங்கம் என்றோ அல்லது குறைந்தளவு தங்கம் என்றோ அழைக்கலாம். உண்மையான தங்கம் 24 கரட்களைக் கொண்டுள்ளது. தந்தை உங்கள் அனைவரையும் 24 கரட் தங்கமாக்க விரும்புகிறார். அவர் உங்களை உண்மையான சத்தியயுக ஆத்மாக்களாக்குகின்றார். பாரதமே தங்கச் சிட்டுக்குருவி என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது அதனை நீங்கள் கற்களும் கூழாங்கற்களுமான இரும்புச் சிட்டுக்குருவி என்றே அழைப்பீர்கள். இருப்பினும் அது உயிருடனேயே உள்ளது. இவ் விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆத்மாக்களைப் புரிந்து கொள்வதைப் போன்று, பரமாத்மாவையும் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் பிரகாசமான நட்சத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆத்மா சின்னஞ்சிறிய நட்சத்திரமாவார். ஆத்மாவைப் பார்ப்பதற்கு வைத்தியர்கள் அதிகளவு முயற்சி செய்துள்ளார்கள். எவ்வாறாயினும். தெய்வீகப் பார்வை இல்லாது, ஆத்மாவை எவராலும் பார்க்க முடியாது. ஆத்மா மிகவும் சூட்சுமமானவர் ஆவார். சிலர் ஆத்மா கண்களினூடாக வெளியேறுவதாகவும், சிலர் ஆத்மா வாயினூடாக வெளியேறுவதாகவும் கூறுகின்றார்கள். ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீங்கிச் செல்லும் போது எங்கு செல்கின்றார்? அவர் இன்னொரு சரீரத்துக்;குள் பிரவேசிக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அமைதிதாமத்திற்குச் செல்லவுள்ளீர்கள். தந்தை வந்திருக்கின்றார் என்பதும், அவர் உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்பதும் உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஒருபுறம் கலியுகமும், மறுபுறம் சத்தியயுகமும் உள்ளது. நாங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றோம். இது ஓர் அற்புதமாகும்! இங்கே பில்லியன் எண்ணிக்கையான மனிதர்கள் வாழ்கின்ற போதிலும், சத்தியயுகத்தில், 900,000 பேரே இருப்பார்கள். ஏனையோருக்கு என்ன நடக்கின்றது? விநாசம் இடம்பெறுகின்றது! தந்தை புதிய உலகத்தைப் படைப்பதற்காக மாத்திரமே வருகின்றார். பிரம்மாவின் மூலம் படைப்பு நிறைவேற்றப்படுகின்றது. அதன் பின்னர் இணைந்த ரூபத்தின் மூலம் பராமரித்தல் இடம்பெறுகின்றது. அதன் அர்த்தம் நான்கு கரங்களுடன் மனிதர்கள் உள்ளனர் என்பதல்ல. அது அழகாக இருக்க மாட்டாது. நான்கு கரங்களுடன் உள்ள தோற்றம் ஸ்ரீ இலக்ஷ்மியினதும், ஸ்ரீ நாராயணனினதும் இணைந்த உருவத்தைக் குறிக்கின்றது என்று பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ‘ஸ்ரீ’ என்றால் மேன்மையானவர் என்று அர்த்தமாகும். திரேதாயுகத்தில் இரண்டு கலைகள் குறைவாகவே உள்ளன. உங்களுக்கு இப்பொழுது கொடுக்கப்படுகின்ற ஞானத்தின் விழிப்புணர்வைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இரண்டு வார்த்தைகளை நினைவுசெய்வதே பிரதான விடயமாகும்: தந்தையை நினைவு செய்யுங்கள்! இதனை வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. தந்தை ஒருவரே சர்வசக்திவானாகிய, தூய்மையாக்குபவர் ஆவார். அவர்கள் பாடுகின்றார்கள் ‘பாபா நீங்கள் எங்களுக்கு வானம், பூமி உட்பட அனைத்தையும் கொடுத்தீர்கள். எங்களுக்கு நீங்கள் கொடுக்காதது எதுவும் இல்லை! முழு உலக இராச்சியத்தையும் எங்களுக்கு நீங்கள் கொடுத்தீர்கள்’. இலக்ஷ்மியும் நாராயணனுமே அந்த உலகின் அதிபதிகள் ஆவார்கள். இந்த நாடகத்தின் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. உங்கள் முயற்சிக்கேற்ப, நீங்கள் வரிசைக்கிரமமாக முற்றிலும் விகாரமற்றவர்களாக ஆகுகின்றீர்கள். நீங்கள் விகாரமற்றவர்களில் இருந்து விகாரம் நிறைந்தவர்களாகவும், விகாரமானவர்களில் இருந்து விகாரமற்றவராகவும் ஆகினீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். உங்கள் 84 பிறவிகளின் பாகத்தை நீங்கள் எண்ணற்ற தடவைகள் நடித்திருக்கின்றீர்கள். அதன் எண்ணிக்கையை அளவிட முடியாது. சனத்தொகையைக் கணக்கிடலாம், ஆனால் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக எத்தனை தடவைகள் மாறினீர்கள் என்பதையோ சதோபிரதானில் இருந்து தமோபிரதானாக எத்தனை தடவைகள் மாறினீர்கள் என்பதையோ உங்களால் கணக்கிட முடியாது. பாபா கூறுகின்றார்; இச்சக்கரம் 5000 வருடங்களுக்கானதாகும். இதுவே மிகச்சரியான காலஎல்லை ஆகும். அது நூறாயிரம் வருடங்களாக இருந்திருப்பின், உங்களால் எதனையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. நீங்கள் இப்பொழுது தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றீர்கள். நீங்கள் ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் பழைய உலகை உங்கள் பௌதீகக் கண்களால் பார்க்கின்றீர்கள். புதிய உலகை நீங்கள் பார்ப்பதற்கு, உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஞானம் என்ற மூன்றாவது கண்ணையே நீங்கள் பயன்படுத்த வேண்டும். இவ் உலகம் எப்பயனும் அற்றது. அது பழையதொரு உலகமாகும். புதிய உலகிற்கும் பழைய உலகிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்! நீங்களே புதிய உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பின்னர், 84 பிறவிகளை எடுக்கும் போது, நீங்கள் இவ்வாறு ஆகியுள்ளீர்கள்! இவ் விடயங்களை நீங்கள் மிகவும் நன்றாக நினைவு செய்ய வேண்டும். அதன் பின்னரே நீங்கள் எவ்வாறு இவ்வாறு ஆகினீர்கள் என்பதைப் பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். பிரம்மா விஷ்ணுவாகவும், பின்னர் விஷ்ணு பிரம்மாவாகவும் ஆகுகின்றார். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும்; உள்ள வேறுபாட்டை உங்களால் பார்க்க முடியும். விஷ்ணு மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு அமர்ந்துள்ளார். ஆனால் பிரம்மாவோ மிகவும் சாதாரண வடிவத்தில் அமர்ந்துள்ளார். இந்த பிரம்மாவே அந்த விஷ்ணு ஆகுகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், சங்கரருக்கும் இடையில் உள்ள உறவுமுறையை, எவருக்குமே மிகவும் இலகுவாக விளங்கப்படுத்த முடியும். இலக்ஷ்மி நாராயணனின் இணைந்த ரூபமே விஷ்ணு என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவர் விஷ்ணு, பின்னர் சாதாரண மனித பிரம்மாவாக ஆகுகின்றார். விஷ்ணு சத்தியயுகத்திற்கு உரியவராவார், ஆனால் பிரம்மா இவ் இடத்திற்கு உரியவர் ஆவார். பிரம்மாவிலிருந்து விஷ்ணு ஆகுவதற்கு ஒரு விநாடியே தேவை என்றும், ஆனால் விஷ்ணுவில் இருந்து பிரம்மா ஆகுவதற்கு 5000 ஆண்டுகள் எடுக்கின்றன என்றும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். உங்களுக்கும் இது பொருந்தும். பிரம்மாவாக ஆகுபவர் ஒரேயொருவர் மாத்திரமல்ல. தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. இங்கே மனிதர்கள் பற்றியோ அல்லது குருமார்கள் பற்றியோ எதுவும் கூறப்படுவதில்லை. சிவபாபாவே இவரின் குரு ஆவார், பிராமணர்களாகிய உங்களது குருவும் சிவபாபாவே ஆவார். அவரே சற்குரு என்று அழைக்கப்படுகின்றார். ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபாவை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என எவருக்கும் கூறுவது இலகுவாகும். சிவபாபா புதிய உலகம் என்ற சுவர்க்கத்தைப் படைக்கின்றார். கடவுள் சிவனே அதிமேலானவர் ஆவார். அவரே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஆவார். ஆகையால் கடவுள் குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகின்றார்: உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள்! நினைவு செய்தல் மிகவும் இலகுவாகும். ஒரு குழந்தை பிறந்தவுடன் ‘அம்மா’ என்ற வார்த்தை அக்குழந்தையின் வாயில் இருந்து மிகவும் விரைவாக வெளிப்படுகின்றது. அவர் தனது பெற்றோரைத் தவிர வேறு எவரிடமும் செல்வதில்லை. ஆம், தாய் மரணித்து விட்டால் அது வேறு விடயமாகும். முதன் முதலில் தாயும் தந்தையுமே உள்ளனர். அதன் பின்னரே நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர். அவர்களிலும் தம்பதியினர் உள்ளனர்: மாமியும் மாமாவும் உள்ளனர். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இப்பொழுது நீங்கள் அனைவரும் சகோதரர்கள், உங்கள் முன்னைய உறவுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. உங்களை நீங்கள் சகோதரர்கள் என்று கருதினால் நீங்கள் ஒரேயொரு தந்தையை நினைவு செய்வீர்கள். தந்தையும் கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள்! அவரே எங்களது மிகவும் சிரேஷ்டமான, அனைவரதும் எல்லையற்ற தந்தையாவார். அந்த சிரேஷ்ட பாபா உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கவே வந்துள்ளார். பாபா மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: மன்மனாபவ! உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். இதனை மறந்து விடாதீர்கள்! சரீர உணர்விற்கு வருவதாலேயே நீங்கள் மறக்கின்றீர்கள். முதன் முதலில் உங்களை ஆத்மாக்கள் என்று நீங்கள் கருத வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் சாலிகிராம்கள் ஆவோம். நாங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: நானே தூய்மையாக்குபவர். என்னை நினைவு செய்வதனால் வெறுமையாகிவிட்ட உங்கள் பற்றரி நிறைந்து, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் கங்கை நீரில் பிறவிபிறவியாக மூழ்கிக் கொண்டிருக்கின்றீர்கள், ஆனாலும் உங்களால் தூய்மையாக முடியவில்லை. அந்த தண்ணீர் எவ்வாறு தூய்மையாக்குபவர் ஆக இருக்க முடியும்? ஞானத்தின் மூலமாக மாத்திரமே உங்களால் ஜீவன்முக்தியை அடைய முடியும். இந் நேரத்தில், உலகம் பொய்மையானதும், பாவாத்மாக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. உங்கள் கொடுக்கல் வாங்கல்களும் பாவத்மாக்களுடனேயே உள்ளன. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் நீங்கள் பாவாத்தமாக்கள் ஆகினீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துணர்வைப் பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் இலக்ஷ்மியும் நாராயணனாகவுமே முயற்சிக்கின்றீர்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் பக்தி செய்வதை நிறுத்தியுள்ளீர்கள். ஞானத்தின் மூலமே ஜீவன்முக்தியைப் பெறமுடியும். அந்த தேவர்கள் ஜீவன்முக்தி பெற்றிருந்தார்கள். இவர் தனது பல பிறவிகளின் இறுதிப்பிறவியில் இருக்கின்றார். தந்தை அனைத்தையும் மிகவும் இலகுவாக விளங்கப்படுத்தியுள்ளார்! குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் இம் முயற்சியை ஒவ்வொரு கல்பத்திலும் செய்கின்றீர்கள். நீங்கள் பழைய உலகைப் புதிய உலகமாக மாற்ற வேண்டும். கடவுள் மந்திரவாதியும், நகைவியாபாரியும், வியாபாரியும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவர் மந்திரவாதியாவார். அவர் பழைய உலகம் என்ற நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுகின்றார். ஆகையால், அதிகளவு வித்தை காட்டப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள், அத்துடன் நீங்கள் இப்பொழுது, நரகத்தில் வசிக்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சுவர்க்கம், நரகம் இரண்டும் வெவ்வேறானது. இந்தச் சக்கரம் 5000 வருடங்களுக்கானதாகும். அது நூறாயிரம் ஆண்டுகளுக்கானது என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் இவ்விடயங்களை மறந்துவிடக் கூடாது. கடவுளின் வாசகங்கள் உள்ளன. மறுபிறவிக்கு அப்பாற்பட்ட யாரோ ஒருவர் நிச்சயமாக இருக்க வேண்டும். கிருஷ்ணர் தனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டுள்ளார். ஆனால் சிவனுக்குச் சரீரமில்லை. ஆகையால் ஞானத்தை அவர் கொடுப்பதற்கு, அவருக்கு நிச்சயமாக எவரோ ஒருவரின் வாய் தேவையாக உள்ளது. அவர் உங்களுக்குக் கற்பிப்பதற்கே இங்கே வருகின்றார். நாடகத்திற்கு ஏற்பத் தந்தையிடம் ஞானம் முழுவதும் உள்ளது. அவர் துன்ப உலகைச் சந்தோஷ உலகமாக மாற்றுவதற்காகச் சங்கமயுகத்தில் ஒரேயொரு முறை மாத்திரமே வருகின்றார். நீங்கள் அமைதி, சந்தோஷம் என்ற உங்கள் ஆஸ்தியை நீங்கள் நிச்சயமாகப் பெறுகின்றீர்கள். இதனையே நீங்கள் மீண்டும் பெற விரும்புகின்றீர்கள். ஆகையினாலேயே நீங்கள் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள். இந்த ஞானத்தைத் தந்தை உங்களுக்கு எவ்வளவு இலகுவாகக் கொடுக்கின்றார் என்று பாருங்கள். இங்கே நீங்கள் அமர்ந்திருக்கும் போது, தந்தையையும் இந்தக் குத்துக்கரணத்தையும் நினைவுசெய்யுங்கள், ஏனெனில், இதுவும் மன்மனாபவ ஆகும். தந்தை மாத்திரமே இந்த ஞானம் முழுவதையும் கொடுக்கின்றார். நீங்கள் எல்லையற்ற தந்தையைச் சந்திக்கச் செல்கின்றீர்கள் என்றும், தந்தை எங்களுக்கு அமைதிதாமத்தினதும், சந்தோஷதாமத்தினதும் பாதையைக் காட்டுகின்றார் என்றும் நீங்கள் பிறரிடம் கூறுகின்றீர்கள். இங்கு அமர்ந்திருக்கும் போது, உங்கள் வீட்டையும் நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். நீங்கள் தந்தையையும், வீட்டையும், புதிய உலகையும் நினைவுசெய்ய வேண்டும். இப்பழைய உலகம் நிச்சயமாக அழிய உள்ளது. நீங்கள் முன்னேறிச் செல்லும் போது, நீங்கள் சுவர்க்கத்தை அதிகளவில் நினைவு செய்வீர்கள். அது மீண்டும் மீண்டும் சுவர்க்கத்திற்குச் செல்வதைப் போன்றதாகும். ஆரம்பத்தில், புத்திரிகள் சேர்ந்திருந்து, மீண்டும் மீண்டும் வைகுந்தத்திற்குச் (சுவர்க்கத்திற்கு) செல்வதுண்டு. முக்கியஸ்தர்களின் குடும்பத்தவர்கள் எவரும் இதனைப் பார்த்தால், அவர்கள் தமது குழந்தைகளையும் அனுப்புவதுண்டு. அந்த நேரத்தில் அது ஓம் நிவாஸ் என்று அழைக்கப்பட்டது. பல குழந்தைகள் வந்தனர், எனவே குழப்பமும் ஏற்பட்டது. அவர் குழந்தைகளுக்குக் கற்பிப்பார், அவர்கள் உடனடியாகவே திராஸ்ஸில் செல்வதுண்டு. காட்சிகளினதும் திரான்ஸ்ஸினதும் பாகங்கள் இப்பொழுது நிறுத்தப்பட்டுள்ளன. அதனை அவர்கள் ஓர் இடுகாடென்றே நினைத்துக் கொள்வார்கள். அனைவரையும் கீழே படுக்கச் செய்து கூறப்படும்: சிவபாபாவை நினைவு செய்யுங்கள்! அதன் பின்னர் அவர்கள் திரான்ஸில் செல்வதுண்டு. குழந்தைகளாகிய நீங்களும் இப்பொழுது மந்திரவாதிகளே. உங்களைப் பார்க்கின்ற எவருமே உடனடியாகத் திரான்ஸில் செல்கின்றார்கள். இந்த மந்திரவித்தை மிகவும் அற்புதமானதாகும்! தங்களை அர்ப்பணிக்கத் தயாராக உள்ள, தீவிரபக்தி செய்கின்றவர்களுக்கு மாத்திரமே காட்சி கொடுக்கப்படுகின்றது. தந்தையே இங்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கல்வி புகட்டி, உங்களை உயர்ந்ததோர் அந்தஸ்தை எய்தச் செய்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் முன்னேற்றம் அடையும் போது, நீங்கள் பல காட்சிகளைக் காண்பீர்கள். நீங்கள் தந்தையிடம் இப்பொழுது வினவினாலும் அவரால் யார் ரோஜாவாகப் போகின்றார், யார் மல்லிகையாகப் போகின்றார், யார் எந்த வாசனையுமே அற்ற மலர்களாகப் போகின்றார் என்பதை உங்களுக்குக் கூற முடியும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் சகல சரீர உறவுகளையும் இரத்துச் செய்து, ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். தந்தையை நினைவுசெய்து, உங்கள் முழு ஆஸ்திக்கும் உரிமையுடையவர்கள் ஆகுங்கள்.
2. உங்கள் கொடுக்கல் வாங்கல்களை இனிமேல் நீங்கள் பாவாத்மாக்களுடன் வைத்திருக்கக்; கூடாது. அனைவரையும் அறியாமை என்ற உறக்கத்தில் இருந்து எழச் செய்து அவர்களுக்கு அமைதிதாமத்தினதும் சந்தோஷதாமத்தினதும் பாதையைக் காட்டுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் புத்தியில் தாமரை மலரின் அடையாளத்தை வைத்திருப்பதால் உங்களை ஒரு உதாரணமாகக் கருதுவதுடன் அன்பானவராகவும் பற்றற்றவராகவும்; ஆகுவீர்களாக.
இல்லறத்தில் வாழ்பவர்களின் அடையாளம் தாமரை மலராகும். ஆகவே இதை பயிற்சியிலிட்டு தாமரை ஆகுங்கள். இதனை பயிற்யிலிடாவிட்டால் உங்களை தாமரை ஆக முடியாது. ஆகவே உங்கள் புத்தியில் தாமரை மலரின் அடையாளத்தை வைத்திருந்து உங்களை ஒரு எடுத்துக்காட்டாக கருதியவாறு முன்னேறிச் செல்லுங்கள். சேவை செய்யும் போது பற்றற்றும் அன்பாகவும் இருங்கள். அன்பானவராக மாத்திரம் இருக்காதீர்கள். முதலில் பற்றற்றவராகி பின்னர் அன்பானவராகுங்கள். ஏனெனில் அன்பு சில வேளைகளில் பற்றாக மாற்றம் அடையும். ஆகவே எத்தகைய சேவை செய்யும் போதும் பற்றற்றவராகவும் அன்பாகவும் இருங்கள்.சுலோகம்:
அன்பின் பாதுக்காப்புக் குடையின் கீழ் மாயை வர முடியாது.