15.01.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பாபா ஓர் இனிமையான மலையாக இருப்பதனால், குழந்தைகளாகிய நீங்களும் இனிமையான தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்து அதி இனிமையானவராக ஆகவேண்டும்.
கேள்வி:
நீங்கள் எவ்வழிமுறையினால் உங்களையும், அத்துடன் உங்களுடைய அனைத்தையும் பாதுகாப்பானதாக ஆக்குகின்றீர்கள்?
பதில்:
நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, வைக்கோலைப் போன்ற பெறுமதியையே கொண்ட இச்சரீரம் உட்பட, என்னிடமுள்ள அனைத்தையும் நான் உங்களிடம் கொடுக்கின்றேன், எதிர்கால சத்தியயுகத்தில் அனைத்தையும் உங்களிடமிருந்து பெறுவேன். எனவே, இவ்வாறாக நீங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றீர்கள். நீங்கள் அனைத்தையும் பாபாவின் பாதுகாப்பில் வைத்திருக்கின்றீர்கள். இது சிவபாபாவின் பாதுகாப்பு வங்கியாகும். நீங்கள் பாபாவின் பாதுகாப்பில் இருந்து, அமரத்துவமானவர்கள் ஆகுகின்றீர்கள். அத்துடன் மரணத்தையும் நீங்கள் வெற்றிகொள்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவிற்குரியவராக இருப்பதனால், பாதுகாக்கப்படுகின்றீர்கள். எவ்வாறாயினும், உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் கேட்கின்றார்: நீங்கள் உங்களுடைய அதி மேன்மையான, மங்களகரமான உங்களது எதிர்கால முகங்களைப் பார்க்கின்றீர்களா? அதி மேன்மையான, மங்களகரமான உங்களது ஆடைகளை நீங்கள் பார்க்கின்றீர்களா? நீங்கள் எதிர்காலத்தில் புதிய சத்தியயுகத்து இலக்ஷ்மி, நாராயணனின் வம்சத்திற்குச் செல்வீர்கள் என்பதனை, அதாவது, சந்தோஷ தாமத்திற்குச் சென்று, அதி மேன்மையானவர்கள் ஆகுவீர்கள் என்பதனைப் புரிந்துகொள்கின்றீர்களா? மாணவர்கள் கற்கும்பொழுது, தாங்கள் இன்னார் இன்னாராக ஆகுவோம் என்பது அவர்களது புத்தியில் இருக்கின்றது. நீங்களும்கூட, விஷ்ணுவின் வம்சத்திற்குச் செல்வீர்கள் என்பதனை அறிவீர்கள்; விஷ்ணுவின் இரட்டை வடிவம் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆவர். இப்பொழுது உங்களது புத்தி அலௌகீகமாக உள்ளது. இவ்விடயங்கள் வேறு எவரது புத்தியிலும் சுழல்வதில்லை. இங்கே, நீங்கள் உண்மையான தந்தையாகிய சிவபாபாவின் சகவாசத்தில்; இருக்கின்றீர்கள் என்பதனை அறிவீர்கள். அதிமேலான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் அதி இனிமையானவர். நீங்கள் இனிமையிலும் இனிமையான அத்தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்ய வேண்டும். ஏனெனில் தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை நினைவுசெய்வதனால் மாத்திரமே நீங்கள் அதி மேன்மையானவர்கள் ஆகுவீர்கள், ஞான இரத்தினங்களைக் கிரகிப்பதன் மூலம் உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்குப் பல் கோடீஸ்வரர்களாகவும் ஆகுவீர்கள். இது தந்தை உங்களுக்கு இந்த ஆசீர்வாதங்களைக் கொடுப்பதைப் போன்றதாகும். இனிமையிலும் இனிமையான மணவாட்டிகளும், இனிமையிலும் இனிமையான தகுதிவாய்ந்த குழந்தைகளும் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர். தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளைக் காண்பதில் பூரிப்படைகின்றார். நீங்கள் அனைவரும் இந்நாடகத்தில் உங்களது சொந்தப் பாகங்களை நடிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எல்;லையற்ற தந்தையும் இந்த எல்லையற்ற நாடகத்தில் உங்கள் முன்னிலையில் நேரடியாக இருக்கின்ற தனது பாகத்தை நடிக்கின்றார். இனிமையான தந்தையின் இனிமையான குழந்தைகளாகிய உங்களால் இனிமையிலும் இனிமையான தந்தையை நேரடியே பார்க்கக்கூடியதாக உள்ளது. ஆத்மாக்கள் சரீரத்தின் அங்கங்கள் மூலமாகவே ஒருவரையொருவர் பார்க்கின்றனர். எனவே, நீங்கள் இனிமையான குழந்தைகள். தான் குழந்தைகளாகிய உங்களை மிக இனிமையானவர்களாக ஆக்குவதற்காகவே வந்திருக்கின்றார் என்பதனைத் தந்தை அறிவார். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் அதி இனிமையானவர்கள். அவர்களது இராச்சியமும் இனிமையானது. உண்மையில், அவர்களது பிரஜைகள்கூட இனிமையானவர்களே. நீங்கள் ஆலயங்களுக்குச் செல்லும்பொழுது, அவர்கள் (விக்கிரகங்கள்) மிகவும் இனிமையானவர்களாக இருப்பதைக் காண்கின்றீர்கள். ஆலயம் திறக்கப்பட்டவுடனேயே நாங்கள் இனிமையான தேவர்களின் ஒரு கணத் தரிசனத்தைப் பெறுவோம் என நீங்கள் உணர்கிறீர்கள். அவர்களின் ஒரு கணத் தரிசனத்தைப் பெறுபவர்கள் தாங்கள் இனிமையான சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்ததைப் புரிந்துகொள்கின்றார்கள். சிவனே அனைவரையும் விட அதிஇனிமையானவர் என்பதனாலேயே பலர் சிவாலயங்களுக்குச் செல்கின்றனர். மக்கள் அந்த இனிமையிலும் இனிமையான சிவபாபாவைப் பெருமளவில் புகழ்கின்றனர். குழந்தைகளாகிய நீங்களும் அதி இனிமையானவர்களாக ஆகவேண்டும். அதி; இனிமையான தந்தை குழந்தைகளாகிய உங்கள் முன்னிலையில் நேரடியே அமர்ந்திருக்கின்றார். அவர் மறைமுகமானவர். வேறு எவராலுமே அவரைப் போன்று இனிமையானவராக இருக்க முடியாது. தந்தை ஓர் இனிமையான மலை போன்று இருக்கின்றார். இனிமையான தந்தையே இக்கசப்பான உலகிற்கு வந்து, அதனை இனிமையாக்குகின்றார். இனிமையிலும் இனிமையான பாபா உங்களை அனைவரையும் விட அதி இனிமையானவர்களாக ஆக்குகின்றார் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் தன்னைப் போன்றே எங்களையும் ஆக்குகின்றார். ஒருவர் எப்படியானவராக இருந்தாலும், அவர் தன்னைப் போன்றே மற்றவர்களையும் ஆக்குவார். எனவே, அத்தகைய இனிமையானவர்களாக ஆகவேண்டுமாயின், நீங்கள் இனிமையான தந்தையையும், இனிமையான ஆஸ்தியையும் நினைவுசெய்ய வேண்டும். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களைச் சரீரமற்றவர்களாகக் கருதி என்னை நினைவுசெய்தால், இந்த நினைவின் மூலமாக உங்களது துன்பம், வேதனைகள் அனைத்தும் அகற்றப்படும் என நான் சத்தியம் அளிக்கின்றேன்; நீங்கள் என்றும் ஆரோக்கியமானவர்களாகவும், என்றும் செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள். நீங்கள் அதிஇனிமையானவர்கள்; ஆகுவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இனிமையானவர்கள் ஆகும்பொழுது, இனிமையான சரீரங்களையும் பெறுவீர்கள். நீங்கள் அதியன்பிற்கினிய தந்தையின் குழந்தைகள் என்ற போதையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். எனவே, நீங்கள் பாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றவேண்டும். இனிமையிலும் அதி இனிமையான பாபா எங்களை மிக இனிமையானவர்களாக ஆக்குகின்றார். அதியன்பிற்கினிய தந்தை கூறுகின்றார்: உங்களது உதடுகள் மூலமாக எப்பொழுதும் இரத்தினங்களே வெளிப்பட வேண்டும். கசப்பான கற்கள் எதுவுமே உங்களது உதடுகளிலிருந்து வெளிவரக்கூடாது. நீங்கள் எந்தளவிற்கு இனிமையானவர்களாக ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகத் தந்தையின் பெயரைப் போற்றச்செய்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைப் பின்பற்றும்பொழுது, ஏனைய அனைவரும் உங்களைப் பின்பற்றுவார்கள். பாபா உங்களது ஆசிரியருமாவார். எனவே, ஆசிரியர் குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயமாகக் கற்பித்தல்களைக் கொடுப்பார். குழந்தைகளே, தினமும் உங்களது நினைவு அட்டவணையை வைத்திருங்கள். வியாபாரிகள் தினமும் இரவில் தங்களது கணக்குகளைச் சரிபார்க்கின்றனர். அதுபோன்றே நீங்களும் தந்தையுடன் பெரியதோர் வியாபாரம் செய்கின்ற வியாபாரிகளே. நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகத் தந்தையிடமிருந்து எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுவீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். தினமும் உங்களைச் சோதித்துப் பாருங்கள். நாரதருக்கு, இலக்ஷ்மியைத் திருமணம் செய்வதற்கான தகுதி இருக்கின்றதா எனப் பார்ப்பதற்கு, அவரது முகத்தைக் கண்ணாடியில் பார்க்குமாறு கூறப்பட்டதைப் போன்றே, அவர்களைப் (இலக்ஷ்மி, நாராயணன்) போன்று ஆகுவதற்கான தகுதி உங்களிடம் இருக்கின்றதா என்பதை நீங்களும் பார்க்க வேண்டும். இல்லையெனின், உங்களிடம் என்ன குறைபாடுகள் உள்ளன என்பதனைச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில், குழந்தைகளாகிய நீங்கள் சம்பூர்ணமாக வேண்டும். தந்தை உங்களைச் சம்பூர்ணமானவர்களாக ஆக்குவதற்கே வந்திருக்கின்றார். எனவே, உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியாத வகையில் உங்களிடம் என்ன பலவீனங்கள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்துகொள்வதற்கு, நேர்மையாகச் சோதித்துப் பார்க்க வேண்டும். தந்தை அத்தீய ஆவிகளை விரட்டுவதற்கான வழிமுறைகளைத் தொடர்ந்தும் உங்களுக்குக் காண்பிக்கின்றார். தந்தை இங்கிருந்தவாறு, ஆத்மாக்கள் அனைவரையும் பார்க்கின்றார். அவர் சிலரது பலவீனங்களைப் பார்க்கும்பொழுது, அவர்களது தடைகள் அகற்றப்படுவதற்கான மின்சாரத்தை (சக்காஷ்) அவர்களுக்கு வழங்குகின்றார். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தந்தைக்கு உதவி செய்து, தொடர்ந்தும் அவரைப் புகழ்கின்றீர்களோ, அந்தளவிற்குத் தீய ஆவிகள் உங்களை விட்டு நீங்குவதுடன், மிகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள். எனவே, உங்களை முழுமையாகச் சோதித்துப் பாருங்கள்: நாள் முழுவதும் எனது எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலம் நான் எவருக்காவது துன்பம் விளைவித்தேனா? நீங்கள் ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து, உங்கள் நடத்தையைச் சோதித்துப் பார்க்க வேண்டும். உங்களால் மற்றவர்களது நடத்தையையும் பார்க்க முடியும், ஆனால் அதற்கு முதலில் உங்களை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் மற்றவர்களைப் பார்க்கும்பொழுது, உங்களைப் பார்க்க மறந்துவிடுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குச் சேவை செய்ய வேண்டும். மற்றவர்களுக்குச் சேவை செய்வதென்றால், உங்களுக்குச் சேவை செய்வதாகும். நீங்கள் சிவபாபாவின் சேவையைச் செய்யவில்லை. சிவபாபாவே சேவைக்காக வந்துள்ளார். பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் பெறுமதி வாய்ந்தவர்கள். நீங்கள் சிவபாபாவின் வங்கியில் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள். பாபாவின் பாதுகாப்பில் இருப்பதால், நீங்கள் அமரத்துவமானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் மரணத்தை வெற்றி கொள்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் சிவபாபாவிற்குச் சொந்தமாக இருப்பதால், பாதுகாப்பாக இருக்கின்றீர்கள். எவ்வாறாயினும், உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். உலக மக்கள் எவ்வளவு செல்வத்துடனும், செழிப்புடனும் வாழ்ந்தாலும், அவையனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்; அதில் எதுவுமே எஞ்சியிருக்காது. குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது எதுவுமேயில்லை. உங்களது சரீரம் கூட உங்களிடம் இல்லை. நீங்கள் அதனையும் தந்தையிடம் கொடுத்துவிட வேண்டும். இது, எதுவுமில்லாதவர்கள் அனைத்தையும் கொண்டிருப்பது போன்றதாகும். நீங்கள் எதிர்காலப் புதிய உலகிற்காக எல்லையற்ற தந்தையுடன் ஒரு பேரத்தைச் செய்தீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, வைக்கோலைப் போன்ற பெறுமதியையே கொண்ட இச்சரீரம் உட்பட, என்னிடமுள்ள அனைத்தையும் உங்களிடம் கொடுத்து, அங்கே அனைத்தையும் உங்களிடமிருந்து பெறுவேன். எனவே இது, நீங்கள் பாதுகாப்பாக இருப்பதைப் போன்றது. அனைத்தும் பாபாவின் பாதுகாப்பில் பாதுகாக்கப்படுவது போன்றது. இன்னமும் சிறிதளவு காலமே எஞ்சியிருக்கின்றது, பின்னர் நீங்கள் உங்களது சொந்த இராச்சியத்திற்குச் செல்வீர்கள் என்பதையிட்டு, குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அகத்தே கொண்டிருக்க வேண்டும். எவராவது உங்களிடம் கேட்டால், அவர்களிடம் கூறுங்கள்: ஆகா! நாங்கள் எல்லையற்ற சந்தோஷம் என்ற எங்களது ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகிறோம். நாங்கள் என்றும் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகுகின்றோம். எங்களது ஆசைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகின்றன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். நீங்கள் யோக சக்தியுடன் மிகச்சிறிதளவை ஒருவருக்கு விளங்கப்படுத்தினாலும், அம்பானது விரைவில் அவரைத் தாக்கும். அம்பினால் தாக்கப்பட்டவர்கள் முற்றிலும் உணர்வற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். முதலில் அவர்கள் உணர்வற்றவர்களாகி, பின்னர் பாபாவிற்குச் சொந்தமாகிவிடுவார்கள். அவர்கள் தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்வதால், தந்தையும் அந்த ஈர்ப்பை உணர்கின்றார். சிலர் அவரை நினைவு செய்வதேயில்லை. பாபா கருணை கொள்கின்றார். இருந்தபொழுதிலும், அவர் கூறுவார்: குழந்தைகளே, முன்னேற்றம் அடைவீர்களாக! முன்னால் ஓர் இலக்கத்தைக் கோரிக்கொள்ளுங்கள். எந்தளவிற்கு நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகின்றீர்களோ, அந்தளவிற்கு நெருக்கமானவராகி, எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுவீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். எனவே, நீங்கள் ஒரே தந்தையை நினைவுசெய்ய வேண்டும். ஒரு தந்தையை மாத்திரமன்றி, அவருடன் கூடவே, இனிய வீட்டையும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் இனிய வீட்டை மாத்திரமன்றி, உங்களுக்குச் சகல பொக்கிஷங்களும், சொத்துக்களும் தேவைப்படுவதால், இனிய சுவர்க்க பூமியையும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இயன்றவரை அகநோக்கில் இருக்க வேண்டும். அதிகமாகப் பேசாதீர்கள். மௌனமாக இருங்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: இனிய குழந்தைகளே, அமைதியின்மையைப் பரப்பாதீர்கள். வீட்டில் உங்களது குடும்பத்துடன் வசிக்கும்பொழுது, பெருமளவு அமைதியுடன் இருங்கள். அகநோக்கில் இருங்கள். மிக இனிமையாகப் பேசுங்கள். எவருக்கும் எத் துன்பத்தையும் விளைவிக்காதீர்கள். கோபப்படாதீர்கள். உங்களிடம் கோபம் என்ற தீய ஆவி இருந்தால், உங்களால் நினைவிலிருக்க முடியாது. தந்தை மிக இனிமையானவராக இருப்பதனால், அவர் குழந்தைகளாகிய உங்களுக்கும் விளங்கப்படுத்துகிறார்: உங்கள் புத்தியைத் தடுமாற விடாதீர்கள். புறநோக்கில் இருக்காதீர்கள். அகநோக்கில் இருங்கள். தந்தை மிக வசீகரமானவரும், தூய்மையானவரும் ஆவார். அவர் குழந்தைகளாகிய உங்களையும் தன்னைப் போன்று தூய்மையானவர்களாக ஆக்குகின்றார். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தந்தையை நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவிற்கு வசீகரமானவர்கள் ஆகுவீர்கள். இப்பொழுதும் மக்கள் தொடர்ந்தும் உயிரற்ற விக்கிரகங்களைப் பூஜிக்கின்ற அளவிற்கு தேவர்கள் மிக வசீகரமானவர்களாக இருந்தனர். எனவே, தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் மீண்டும் ஒருமுறை அவ்வாறு வசீகரமானவர்களாக ஆகவேண்டும். நீங்கள் இறுதியில், எந்தச் சரீரதாரியையோ அல்லது எந்தப் பொருளையோ நினைவுசெய்யக்கூடாது. நினைவில் இருக்கும்பொழுது, தொடர்ச்சியாக அன்புக்கண்ணீர் பெருகக்கூடிய அளவிற்குத் தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்யுங்கள். பாபா, ஓ இனிய பாபா, நான் உங்களிடமிருந்து அனைத்தையும் பெற்றுவிட்டேன். பாபா, நீங்கள் என்னை மிக வசீகரமானவராக ஆக்குகின்றீர்கள். ஆத்மாக்கள் வசீகரமானவர்கள் ஆகுகின்றனர். தந்தை மிக மிக அழகானவராகவும், தூய்மையானவராகவும் இருப்பதால், நீங்களும் அதே போன்று தூய்மையாக வேண்டும். தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்யுங்கள்: பாபா, வேறு எவருமன்றி, நீங்கள் மாத்திரமே என் முன்னிலையில் வரவேண்டும். தந்தையைப் போன்று அழகானவர் வேறு எவருமேயில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் அந்த அன்பிற்கினியவரின் காதலி ஆகுகின்றீர்கள். எனவே, நீங்கள் அந்த அன்பிற்கினியவரைப் பெருமளவில் நினைவுசெய்ய வேண்டும். அந்த லௌகீகக் காதலரும், காதலியும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதில்லை என்பதை பாபா உங்களுக்குக் கூறியிருக்கின்றார்; அவர்கள் ஒருவரையொருவர் ஒருமுறை பார்ப்பார்கள், அவ்வளவே! தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்களது படகு அக்கரைக்குச் செல்லும். நாங்கள் யார் மூலமாக வைரங்கள் போன்று ஆகுகின்றோமோ, அந்த இனிய தந்தை மீது பெருமளவு அன்பைக் கொண்டிருக்கின்றோம். பெருமளவு அன்புடன் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்களுக்குப் புல்லரிக்க வேண்டும். உங்களிடமுள்ள குறைபாடுகளை நீக்கி, ஓர் தூய, பெறுமதி மிக்க வைரமாகுங்கள். மிகச் சிறிதளவு மாசு இருந்தாலும், உங்களது பெறுமதி குறைந்துவிடும். நீங்கள் உங்களை ஓர் பெறுமதி வாய்ந்த வைரமாக்க வேண்டும். தந்தையின் நினைவு உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும். நீங்கள் அவரை மறந்துவிடவே கூடாது, அவரது நினைவு உண்மையிலேயே உங்களைத் தொந்தரவு செய்வதாக இருக்கவேண்டும். நீங்கள் 'பாபா, பாபா" என்று கூறும்பொழுது, அகத்தில் அந்தக் குளிர்ச்சியை உணர வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து மிகப் பெரிய ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். அனைவரும் முயற்சி செய்கின்றார்கள். பெரும் முயற்சி செய்பவர்கள் பெரும் வெகுமதியைப் பெறுகிறார்கள்; இதுவே நியதியாகும். அதனைத் தேவ இராச்சியம் என்றோ அல்லது பூந்தோட்டம் என்றோ அழைத்தாலும், ஸ்தாபனை இடம்பெறுகிறது. தோட்டத்திலுள்ள மலர்களும் வரிசைக்கிரமமானவையே. சில தோட்டங்கள் மிகச்சிறந்த பழங்களைக் கொடுக்கின்றன. மற்றையவை மிகக் குறைந்த பழங்களையே கொடுக்கின்றன. இங்கும் அவ்வாறே உள்ளது. நீங்கள் முன்னைய கல்பத்தில் இருந்ததைப் போன்றே இனிமையானவர்களாகவும், நறுமணம் நிறைந்தவர்களாகவும் உங்களது முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக ஆகுகின்றீர்கள். பல்வகையான மலர்கள் உள்ளன. நீங்கள் எல்லையற்ற தந்தை மூலம் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். சுவர்க்கத்தின் அதிபதிகளாகுவதில் பெருமளவு சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகின்றது. எனவே, தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களைப் பார்க்கின்றார். அதிபதியின் பார்வை வீட்டின்மீதே உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் என்ன தெய்வீகக் குணங்களையும், என்ன குறைபாடுகளையும் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை அவர் பார்க்கின்றார். குழந்தைகளாகிய நீங்களும் இதனை அறிவீர்கள், இதனாலேயே பாபா கூறுகின்றார்: நீங்களே உங்கள் குறைபாடுகளை எழுதிக்கொள்ள வேண்டும். எவருமே இன்னமும் சம்பூர்ணமடையவில்லை. எனினும், ஆம், நீங்கள் அவ்வாறு ஆகவே வேண்டும். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் அவ்வாறு ஆகியிருக்கின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: சரீர உணர்வே பிரதான பலவீனமாகும். சரீர உணர்வு உங்களைப் பெருமளவு தொந்தரவு செய்;கின்றது. அது உங்களது ஸ்திதியை முன்னேற அனுமதிக்காது. நீங்கள் உங்களது சரீரத்தையும் மறந்துவிட வேண்டும். நீங்கள் இப்பழைய சரீரத்தை மறந்து வீடு திரும்ப வேண்டும். நீங்கள் இங்கிருந்து செல்வதற்கு முன்னர், தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் செல்ல வேண்டியிருப்பதனால், எந்த மாசுக்களையும் உங்களுக்குள் கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் வைரங்களாக ஆகுகின்றீர்கள். உங்களில் என்ன மாசுக்கள் உள்ளன என்பதனை நீங்கள் அறிவீர்கள். அப் பௌதீகமான வைரங்களில்கூட மாசுக்கள் உள்ளன. எனினும் அவை உயிரற்றவையாக இருப்பதனால் அம்மாசுக்களை அகற்ற முடியாது. அம் மாசுக்கள் வெட்டியகற்றப்பட வேண்டும். நீங்கள் உயிர்வாழும் வைரங்கள். எனவே, உங்களிடமுள்ள மாசுக்களை முழுமையாக அகற்றி இறுதியிலே மாசற்றவர்களாக ஆகவேண்டும். நீங்கள் மாசுக்களை அகற்றாவிட்டால், உங்கள் பெறுமதி குறைக்கப்பட்டுவிடும். நீங்கள் உயிர்வாழ்பவர்களாக இருப்பதனால் உங்களால் அம்மாசுக்களை அகற்ற முடியும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இயன்றவரை அகநோக்குடனும், அமைதியாகவும் இருங்கள். அதிகம் பேசாதீர்கள். அமைதியின்மையைப் பரப்பாதீர்கள். மிக இனிமையாகப் பேசுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். கோபப்படாதீர்கள். புறநோக்கு உடையவராகுவதால், உங்கள் புத்தியைத் தடுமாற விடாதீர்கள்.2. சம்பூர்ணமடைவதற்கு, உங்களிடம் என்ன பலவீனங்கள் உள்ளன என்பதை நேர்மையாகச் சோதித்துப் பாருங்கள். ஒரு பற்றற்ற பார்வையாளராகி, உங்களது நடத்தையைச் சோதித்துப் பாருங்கள். தீய ஆவிகளை விரட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு சக்திமிக்க ஆத்மாவாக இருந்து, புரிந்துணரும் சக்தி மூலம் இனிய அனுபவங்களைக் கொண்டிருப்பீர்களாக.
புரிந்துணரும் சக்தி உங்களை மிகவும் இனிய அனுபவங்களைக் கொண்டிருக்குமாறு செய்கின்றது. சிலவேளைகளில், உங்களைத் தந்தையின் கண்களில் உள்ள ஓர் இரத்தினமாக அனுபவம் செய்யுங்கள், அதாவது, உங்களைத் தந்தையின் கண்களில் அமிழ்ந்திருக்கும் ஒரு மேன்மையான புள்ளியாக அனுபவம் செய்யுங்கள். சிலவேளைகளில், நெற்றியின் மத்தியிலுள்ள ஒரு பிரகாசிக்கும் இரத்தினமாக இருங்கள். சிலவேளைகளில், உங்களைப் பிரம்மாவின் கரமான, தந்தை பிரம்மாவின் ஒத்துழைக்கின்ற வலது கரமாக அனுபவம் செய்யுங்கள், சிலவேளைகளில், உங்களை ஓர் அவ்யக்த தேவதை ரூபத்தில் அனுபவம் செய்யுங்கள். இந்தப் புரிந்துணரும் சக்தியை அதிகரியுங்கள், நீங்கள் சக்திமிக்கவர்கள் ஆகுவீர்கள். பின்னர் நீங்கள் ஒரு சிறிய குறையைக் கண்டாலும், அதனை மாற்றுவீர்கள்.
சுலோகம்:
அனைவரின் இதயத்திலிருந்தும் தொடர்ந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள், அப்பொழுது உங்கள் முயற்சிகள் இலகுவாகும்.
தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தந்தை பிரம்மா குறிப்பாக விதை ரூப ஸ்திதியைப் பயிற்சி செய்ததைப் போன்று, அதாவது, சக்திமிக்க ஸ்திதியைப் பயிற்சி செய்து முழு உலகிற்கும் சக்காஷைக் கொடுத்ததைப் போன்றே, அதேவிதமாக, தந்தையைப் பின்பற்றுங்கள், ஏனெனில் அந்த ஸ்திதி வெளிச்ச வீட்டினதும், சக்தி வீட்டினதும் வேலையைச் செய்கின்றது. முழு விருட்சமும் இயல்பாக விதையிலிருந்து நீரைப் பெறுவதைப் போன்று, அதேவிதமாக, நீங்கள் விதை ரூப ஸ்திதியில் உங்களை ஸ்தாபிக்கின்றபொழுது, உலகமும் இயல்பாகவே ஒளி எனும் நீரைப் பெறும்.