30.06.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     19.12.84     Om Shanti     Madhuban


அதி மேன்மையான, இலகுவான தெளிவான பாதை.
 


இன்று, பாப்தாதா, விசேடமாக, எப்பொழுதுமே தமது சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றுகின்ற தனது அன்பான சகபாடிகளைப் பார்க்கின்றார். சகபாடி என்றால், எப்பொழுதுமே உங்களுடன் இருக்கின்ற ஒருவரும், ஒவ்வொரு செயலிலும், எண்ணத்திலும் சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றுபவரும், ஒவ்வொரு அடியிலும் பாத அடிகளை வைத்து முன்னேறிச் செல்பவரும், தனது சொந்த வழிகாட்டல்களுக்கு ஏற்பவோ அல்லது பிறரின் வழிகாட்டல்களுக்கு ஏற்பவோ ஒரு அடியையேனும் எடுத்து வைக்காத ஒருவரும் ஆவார். சதா சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள், இதனை ஓர் இலகுவான பாதையாகவே அனுபவம் செய்வார்கள், ஏனெனில், மேன்மையான சகபாடியான தந்தை இப்பாதை முழுவதும் தொடர்ந்தும் தனது பாத அடிகளை பதித்திருப்பதால், இதனை தெளிவாகவும் சுத்தமாக ஆக்குகின்றார். அவரது பாத அடிகளில்; உங்கள் பாதங்களை பதித்து, தொடர்ந்து பயணிக்க மட்டுமே வேண்டும். இப்பாதை சரியானதா, இலகுவானதா அல்லது தெளிவானதா என சிந்திக்க வேண்டியதும் இல்லை. தந்தை எங்கே தனது பாத அடிகளை பதித்துள்ளாரோ, எவ்வாறாயினும் அது மேன்மையான பாதையே ஆகும். பாத அடிகளை பதித்து ஒவ்வொரு அடியிலும் பலமில்லியன்களை பெறுங்கள். இது மிகவும் இலகுவாகும். தந்தை சகவாசத்தின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக, பௌதிக உலகில் அவதரித்து, உங்கள் சகபாடி ஆகுகிறார், தனது செயல்கள் என்ற பாத அடிகளை பதித்து, பௌதீக ஊடகத்தினுடாக உங்களுக்கு அதனை செய்து காட்டுகின்றார். உங்களுக்கு இலகுவாக இருப்பதற்காகவே, அவர் பௌதீகமானவரை தனது ஊடகமாக ஆக்குகின்றார். பௌதீக வடிவத்தில், அவரை பின்பற்றி உங்கள் பாத அடிகளை அவரது பாத அடிகளில் பதிப்பது இலகுவாகும். அல்லவா? மேன்மையான சகபாடி, தனது சகபாடிகளுக்கு மிகவும் இலகுவான பாதையையே காட்டியுள்ளார், ஏனெனில், சகபாடியான தந்தைக்கு, தான் சகபாடியாக ஆக்கியுள்ள சகபாடிகள், அதிகளவு தேடித்திரிந்து களைத்து போயிருப்பது அவருக்குத் தெரியும். அவர்கள் மனந்தளர்ந்தும் பலவீனமாகவும் இருக்கின்றார்கள். அது கடினமானது என எண்ணியதாலேயே அவர்கள் மனந்தளர்ந்தார்கள். ஆகையாலேயே, இது அனைத்திலும் மிகவும் இலகுவானதாகும். உங்கள் அடிகளை அவரது பாத அடிகளில் வைத்தால் மட்டும் போதும். பாபா உங்களுக்கு இந்த இலகுவான வழிமுறையை காட்டுகின்றார். அவரது பாத அடிகளில், உங்கள் பாத அடிகளை வைக்க வேண்டியதே உங்கள் கடமையாகும். உங்களை முன்னேறச் செய்வதும், உங்களை கரைசேர்ப்பதும், ஒவ்வொரு அடியிலும் உங்களை சக்தியினால் நிரப்பச் செய்வதும், உங்கள் களைப்பை அகற்றுவதும் உங்கள் சகபாடியின் கடமையாகும். வேறு எங்கும் உங்கள் பாத அடிகளை வைக்காதீர்கள். உங்கள் அடிகளை அவரது பாத அடிகளில் வைப்பது கடினமானது அல்ல, அல்லவா? உங்கள் பாத அடிகளை வைப்பது என்றால் ஒரு எண்ணத்தைக் கொண்டிருப்பது என்று அர்த்தமாகும். சகபாடி என்னவெல்லாம் கூறுகின்றாரோ, உங்களை எவ்வாறெல்லாம் முன்னேறச் செய்கின்றாரோ, அவ்வாறாகவே நீங்கள் செய்வதாகும். உங்கள் சொந்த புத்தியை நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள். உங்கள் சொந்த புத்தியை பயன்படுத்துதல் என்றால், விரக்தியினால் அழுவதாகும். எனவே, இவ்வாறாக, உங்கள் பாத அடிகளை எவ்வாறு எடுத்து வைப்பது என்பது உங்களுக்குத் தெரியும், அப்படித்தானே? இது கடினமா? அனைத்து பொறுப்புகளையும் பொறுப்பேற்பவர், பொறுப்பேற்கிறார். எனவே, எந்த ஒரு பொறுப்பையும், அவரிடம் எவ்வாறு ஒப்படைப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்கு பாதையை காட்டுவதற்காக, பௌதிகமானவரை மாதிரியாக வைத்திருக்கும் போது, அப்பாதையை பின்பற்றுவது ஏன் சிரமமாக இருக்க வேண்டும்? ஒரு விநாடிக்கான விடயம் என்பதே இலகுவான வழிமுறையாகும். தந்தை பிரம்மா பௌதிக வடிவில் என்ன செய்தாரோ, எவ்வாறு செய்தாரோ அவற்றையே நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் தந்தையை பின்பற்ற மட்டுமே வேண்டும்.

ஒவ்வொரு எண்ணத்தையும் ஆராயுங்கள். எனது எண்ணம் தந்தையினது போன்றே உள்ளதா? பிரதி செய்வது எவ்வாறு என உங்களுக்குத் தெரியுமா? உலகிலுள்ள ஆத்மாக்கள் நீங்கள் பிரதி செய்வதை தடுப்பார்கள். ஆனால், இங்கோ, நீங்கள் பிரதி செய்ய மட்டுமே வேண்டும். எனவே, இது இலகுவானதா அல்லது சிரமமானதா? நீங்கள் இலகுவான, எளிமையான, தெளிவான பாதையை கண்டுபிடித்திருப்பதால், அதனை பின்பற்ற வேண்டியது மட்டுமே. நீங்கள் ஏன் ஏனைய பாதைகளுக்குச் செல்கின்றீர்கள்? ஏனைய பாதைகள் வீணான எண்ணங்களின் பாதைகளாகும். அவை பலவீனமான எண்ணங்களுக்கான பாதைகள் ஆகும். அவை கலியுக கவர்ச்சிகளின் வெவ்வேறான எண்ணங்களின் பாதைகள் ஆகும். அப் பாதைகளை பின்பற்றுவதால், நீங்கள் குழப்பங்கள் என்ற காட்டையே சென்றடைவீர்கள். உங்களைச் சுற்றி பல முட்கள் இருப்பதால், நீங்கள் முயற்சி செய்யும் போது உங்களால் அதிலிருந்து வெளியே வர முடியாதுள்ளது. அம் முட்கள் எவையாகும்? சிலவேளைகளில் நீங்கள் ~என்ன நடக்குமோ?| என்ற முள்ளால் குத்தப்படுகின்றீர்கள். சிலவேளைகளில் நீங்கள் ~ஏன்?| என்ற முள்ளால் குத்தப்படுகின்றீர்கள். சிலவேளைகளில், ~எப்படி?| என்ற முள்ளால் குத்தப்படுகின்றீர்கள். சிலவேளைகளில் உங்கள் சொந்த பலவீனமான சம்ஸ்காரங்கள் என்ற முள்ளால் குத்தப்படுகிறீர்கள். எங்கு நீங்கள் பார்த்தாலும், நீங்கள் முட்களையே பார்க்கின்றீர்கள். அதன் பின்னர் கூவியழைக்கின்றீர்கள்: சகபாடியே, இப்பொழுது வந்து என்னை காப்பாற்றுங்கள்!| அப்பொழுது சகபாடி கூறுகிறார்: உங்கள் பாத அடிகளை எனது பாத அடிகளில் வைப்பதற்குப் பதிலாக, நீங்கள் ஏன் வேறொரு பாதையில் சென்றீர்கள்? சகபாடி, தானே தனது சகவாசத்தை வழங்க முன்வரும் போது, அந்த சகபாடியை நீங்கள் ஏன் விட்டுச் செல்கிறீர்கள்? விலகிச் செல்வது என்றால், உங்கள் ஆதாரத்தையே கைவிடுவது என்று அர்த்தமாகும். உங்கள் சொந்த விருப்பத்தில் நீங்கள் ஏன் விலகிச் செல்கிறீர்கள்? எல்லைக்குட்பட்ட சகவாசத்தின் கவர்ச்சிகளான, சில உறவுமுறைகள் அல்லது வசதிகளின் கவர்ச்சிகள், தம்பால் உங்களை ஈர்க்கின்றன. அந்த கவர்ச்சியினால், அந்த வசதிகளை அல்லது அழியக்கூடிய உறவுமுறைகளை உங்கள் சகபாடியாக அல்லது உங்கள் ஆதாரமாக நீங்கள் ஆக்கிக் கொண்டு, உங்கள் அநாதியான சகபாடியிடமிருந்து நீங்கள் விலகிச் செல்வதால், உங்கள் ஆதாரத்தை நீங்கள் இழக்கின்றீர்கள். அரைக்கல்பத்திற்கு, நீங்கள் அந்த எல்லைக்குட்பட்ட ஆதாரங்களை உங்கள் ஆதாரமாகக் கருதினீர்கள். அவை உண்மையான ஆதாரங்களா அல்லது புதைமணலா என்பதை அனுபவம் செய்திருக்கின்றீர்கள். அவை உங்களை சிக்க வைத்தனவா அல்லது விழச் செய்தனவா அல்லது அவை உங்கள் இலக்கிற்கு உங்களை அழைத்துச் சென்றனவா? நீங்கள் அதனை மிகத் தெளிவாக அனுபவம் செய்திருக்கின்றீர்கள், அல்லவா? அவற்றை நீங்கள் வெறுமனே ஒரு பிறவிக்கு மாத்திரமல்லாது, 63 பிறவிகளுக்கு அனுபவம் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு இன்னமும் ஓரிரு பிறவிகள் தேவையா? ஒருமுறை ஏமாற்றப்பட்ட ஒருவர் இரண்டாம் முறையும் ஏமாற்றப்படக் கூடாது. மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படும் ஒருவர் அபாக்கியசாலி எனப்படுகின்றார். இப்பொழுது, பாக்கியத்தை அருள்பவரும், தந்தை பிரம்மாவும் மேன்மையான பாக்கியம் என்ற நீண்ட ரேகையை அனைத்து பிராமணர்களின் ஜாதகத்திலும் வரைந்துள்ளார். பாக்கியத்தை அருள்பவரே உங்கள் பாக்கியத்தை உருவாக்கியுள்ளார். பாக்கியத்தை அருள்பவரே உங்கள் தந்தை என்பதால், ஒவ்வொரு பிராமண குழந்தைக்கும், முழு பாக்கிய பொக்கிஷக்களஞ்சியத்தையும் ஆஸ்தியாக வழங்கியுள்ளார். ஆகையால் சிந்தித்துப் பாருங்கள்: பாக்கிய பொக்கிஷ களஞ்சியத்தின் அதிபதியின் குழந்தைக்கு என்ன குறை இருக்க முடியும்?

~எனது பாக்கியம் என்ன?| என்றேனும் நீங்கள் சிந்திக்கக் கூடாது. ஏனெனில் பாக்கியத்தை அருள்பவரே உங்கள் தந்தை ஆகியுள்ளதால், பாக்கியம் என்ற சொத்தைப் பொறுத்தவரையில், ஒரு குழந்தைக்கு என்ன குறை இருக்க முடியும்? பாக்கிய பொக்கிஷத்திற்கு நீங்கள் அதிபதிகள் ஆகியுள்ளீர்கள், அல்லவா? அந்தளவு பாக்கியசாலிகள் என்றுமே தோல்வி அடைய முடியாது. ஆகையால், உங்கள் பாத அடிகளை அவரின் பாத அடிகளில் பதிப்பதே இலகுவான வழியாகும். உங்களை நீங்கள் குழப்பிக் கொண்டதால், உங்கள் சகபாடியின் சகவாசத்தை நீங்கள் கைவிட்டீர்கள். நீங்கள் இந்த ஒரு விடயத்தை மாத்திரம் சதா நினைவு செய்யுங்கள்: நான் மேன்மையான சகபாடியின் சகவாசத்தில் இருக்கின்றேன். இதனை நீங்கள் சரிபார்த்தால், நீங்கள் எப்பொழுதுமே உங்களையிட்டு திருப்தியாக இருப்பீர்கள். இலகுவான வழியை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இலகுவான வழியை சிரமமாக ஆக்காதீர்கள்? உங்கள் எண்ணங்களிலேனும் எதனையும் சிரமமாக அனுபவம் செய்யாதீர்கள். அத்தகைய திடசங்கற்ப எண்ணங்களை எவ்வாறு கொண்டிருப்பது என்பது உங்களுக்குத் தெரியும், அப்படித்தானே? அல்லது நீங்கள், உங்களுடைய இடங்களுக்குச் சென்ற பின்னர், அது சிரமமாக உள்ளது எனக் கூறப் போகிறீர்களா? இலகுயோகிகள் என நீங்கள் அழைக்கப்பட்ட போதிலும், நீங்கள் விடயங்களை சிரமமாக அனுபவம் செய்வதை பாப்தாதா கண்டிருக்கின்றார். நீங்கள் உரிமையானவர்கள் என உங்களை நீங்கள் கருதிய போதிலும், நீங்கள் தங்கியிருப்பவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் பாக்கியத்தை அருள்பவரின் குழந்தைகளாக இருப்பினும், நீங்கள் பாக்கியத்தைக் கொண்டிருக்கிறீர்களா அல்லது இல்லையா என கேள்வி எழுப்புகிறீர்கள். ~~ஒருவேளை இவ்வளவுதான் எனது பாக்கியமோ!||, ஆகையால், உங்களை அறிந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு கணமும், உங்களை ஒரு சகபாடியாகக் கருதி எப்பொழுதும் முன்னேறிச் செல்லுங்கள். அச்சா.

தமது ஒவ்வொரு அடியையும் அவரின் பாதஅடிகளில் எடுத்து வைப்பவர்களுக்கும், தந்தையை பின்பற்றுபவர்களுக்கும், ஒவ்வொரு எண்ணத்திலும் சகபாடியின் சகவாசத்தை சதா அனுபவம் செய்பவர்களுக்கும், தமது அன்பிற்கான பொறுப்பை நிறைவேற்றுபவர்களுக்கும், வேறெவருக்கும் அன்றி ஒரேயொருவருக்கே எப்பொழுதும் உரியவராக இருப்பவர்களுக்கும், இலகு யோகிகளுக்கும், மேன்மையான பாக்கியசாலிகளான, விசேடமான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

குமாரிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் தனிப்பட்ட சந்திப்பு:
1. அற்புதம் நிகழ்த்துபவர்களே குமாரிகள். நீங்கள் சாதாரண குமாரிகள் அல்ல. நீங்கள் அலௌகிக குமாரிகள்;. இவ்வுலகிலுள்ள லௌகீக குமாரிகள் செய்வது என்ன, அலௌகிக குமாரிகள் செய்வது என்ன? இரவுக்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. அவர்களும் சரீர உணர்வில் இருப்பதுடன், மற்றவர்களையும் சரீர உணர்வில் வீழ்த்துவார்கள், ஆனால் நீங்களோ சதா ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பதுடன், நீங்களும் பறந்து மற்றவர்களையும் பறக்கச் செய்வீர்கள். நீங்கள் அத்தகைய குமாரிகள் அப்படித்தானே? நீங்கள் தந்தையை கண்டு கொண்டுவிட்டதால், ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருக்கின்றீர்கள். முன்னர், அது பெயரளவில் மாத்;திரமே இருந்தது, இப்பொழுது நடைமுறையில் உள்ளது. பக்தி மார்க்கத்திலும், நீங்கள் பாடுவதுண்டு: நாங்கள் அனைத்து உறவுமுறைகளையும் தந்தையுடன் கொண்டிருக்கின்றோம். இப்பொழுதோ தந்தையுடன் அனைத்து உறவுமுறைகளையும் கொண்டிருப்பதன் இனிமையை நடைமுறையில் நீங்கள் பெறுகிறீர்கள். நீங்கள் அத்தகைய அனுபவத்தைக் கொண்டவர்கள், அல்லவா? ஒரேயொரு தந்தையிடமிருந்து நீங்கள் அனைத்து இனிமையையும் பெறும் போது, உங்கள் எண்ணங்கள் வேறெங்கும் செல்ல முடியாது. அத்தகைய நம்பிக்கையுடைய வெற்றி இரத்தினங்கள், எப்பொழுதும் நினைவுகூரப்படுவதுடன், பூஜிக்கப்படுகிறார்கள். நீங்கள் வெற்றி ஆத்மாக்கள் அதாவது நினைவு திலகத்தை எப்பொழுதும் இட்டிருப்பவர்கள் என்பதை அறிவீர்களா? இத்தனை குமாரிகளாகிய நீங்கள் என்ன அற்புதத்தை நிகழ்த்துவீர்கள்? உங்கள் ஒவ்வொரு செயலிலும் தந்தை தென்படட்டும் நீங்கள் பேசுகின்ற வார்த்தைகள், அவற்றில் தந்தை தென்படும் வகையில் அவை இருக்கட்டும். உலகில் உள்ள சிலர் மிக நன்றாகப் பேசுவார்கள், அவருக்கு அதனைக் கற்பித்தது யாராக இருக்கும் என அனைவரும் நினைப்பார்கள். அவர்களின் பார்வை அவரின் மீதே செல்லும். அவ்வாறாகவே உங்கள் ஒவ்வொரு செயலிலும் தந்தை வெளிப்படட்டும். தாரணையின் சொரூபமாகவும், தெய்வீகத்தின் சொரூபமாகவும் இருப்பதே உங்கள் விசேடமாகும். அனைவரும் சொற்பொழிவாற்றுபவர்கள் ஆகுகின்றர்கள். ஆனால் தமது ஒவ்வொரு செயல்களினாலும் சொற்பொழிவாற்றுபவர்கள் பல மில்லியன் ஆத்மாக்களில் ஒரு கைப்பிடி அளவினர் மாத்திரமே ஆவார்கள். எனவே, நீங்கள் அத்தகைய சிறப்பியல்பை வெளிப்படுத்துவீர்கள், அல்லவா? உங்கள் செயற்பாட்டின் ஊடாக தந்தையின் வடிவத்தைக் காட்டுங்கள். அச்சா.

2. இது குமாரிகளின் பெரியதொரு குழுவாகும். ஒரு சேனை தயார்படுத்தப்பட்டுள்ளது. அம்மக்கள் ~~இடம்;, வலம்|| என அணிவகுக்கிறார்கள். நீங்கள் மிகச்சரியானதை மாத்திரமே செய்பவர்கள். இந்த சேனை மிகவும் மேன்மையானது. நீங்கள் அமைதியினூடாக வெற்றியாளர் ஆகுகிறீர்கள். நீங்கள் சுயாட்சியை அமைதியினூடாக பெறுகிறீர்கள். நீங்கள் எந்த குழப்பத்தையும் உருவாக்க வேண்டியதில்லை. எனவே, மிகவும் சக்திவாய்ந்த சக்திசேனையின் சக்திகள் ஆவீர்கள். நீங்கள் சேனையை விட்டுச் செல்பவர்கள் அல்ல. உங்களை எவராலுமே, உங்கள் கனவிலேனும் அசைக்க முடியாது. நீங்கள் எவரது சகவாசத்தினாலும், என்றுமே ஆதிக்கம் செலுத்தப்பட முடியாதவர்கள். சதா தந்தையின் சகவாசத்தில் நிலைத்திருப்பவர்களை வேறு எந்த சகவாசத்தினாலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆகையால், உங்களுடைய முழு குழுவுமே தைரியசாலிகளின் குழுவாகும், அல்லவா? தைரியசாலிகள் என்ன செய்வார்கள்? அவர்கள் யுத்தகளத்திற்குச் செல்வார்கள். எனவே, நீங்கள் அனைவரும் தைரியசாலிகள், எனினும் நீங்கள் இன்னமும் களத்திற்குச் செல்லவில்லை. தைரியசாலிகள் யுத்தகளத்திற்குச் செல்லும் போது, அத்தகைய துணிச்சலை வெளிப்படுத்தும் போது, இசைக்குழுவினர் இசைப்பதை கண்டிருப்பீர்கள். நீங்கள் களத்திற்குச் செல்லும் போது, சந்தோஷ இசை இசைக்கப்படும். குமாரிகள் எப்பொழுதும் மேன்மையான பாக்கியத்தை கொண்டிருப்பவர்கள். குமாரிகள் சேவை செய்வதற்கான நல்ல வாய்ப்புகளை கொண்டிருக்கிறார்கள். இன்னமும் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஏனெனில் வெகுசில சேவையாளர்களினால், அதிகளவு சேவை செய்ய வேண்டியுள்ளது. சேவை செய்பவர்களாகிய நீங்கள் வெளியில் செல்லும் போது, எவ்வளவு சேவை இடம்பெறும்! குமாரிகள் என்ன அற்புதத்தை நிகழ்த்தப் போகிறார்கள் எனப் பார்ப்போம். அனைவரும் சாதாரண பணியையே செய்கிறார்கள். ஆனால், நீங்கள் விசேட பணியை செய்ய வேண்டும். குமாரிகளே ஒரு வீட்டின் அலங்காரங்கள் ஆவார்கள். உலகில் உள்ளோர் குமாரிகளைப் பற்றி என்ன கருதினாலும், பரலோக வீட்டில் குமாரிகள் மகத்துவமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். குமாரிகள் இருக்கும் போது, ஒரு நிலையம் அழகாக உள்ளது. தாய்மாருக்கும் விசேடமான உயர்த்தி கிடைக்கின்றது. முதலில் தாய் குரு. தந்தை, தாய்குருவை முன்னால் நிறுத்தியுள்ளார், அதனாலேயே எதிர்காலத்தில், தாய்மாரின் (பெண்களின்) பெயர் முதலில் உள்ளது. அச்சா.

பாப்தாதா ஆசிரியர்களை சந்திக்கின்றார்:
ஆசிரியர்கள் என்றால் தந்தைக்குச் சமமானவர்கள் என்று அர்த்தமாகும். தந்தை எவ்வாறோ, கருவி சேவையாளர்களும் அவ்வாறானவர்களே. தந்தை கருவியாகியுள்ளதால், சேவை செய்பவர்களும் கருவி ஆத்மாக்கள் ஆவார்கள். உங்களை ஒரு கருவி எனக் கருதுவதால், நடைமுறை ரீதியாக, தந்தைக்கு சமமானவர் என்ற சம்ஸ்காரங்களை நீங்கள் இயல்பாகவே விருத்தி செய்கின்றீர்கள். உங்களை ஓர் கருவி ஆத்மா என நீங்கள் கருதாத போது, உங்களால் தந்தைக்குச் சமமானவர் ஆக முடியாது. எனவே, முதலில், கருவி ஆகுதலாகும், அடுத்ததாக, சதா பற்றற்றவராகவும், அன்பானவர்களாகவும் ஆகுதலாகும். இதுவே தந்தையின் சிறப்பியல்பாகும். அவர் அன்பானவர் ஆகுவதுடன், பற்றற்றவராகவும் உள்ளார். அவர் பற்றற்றவராக இருக்கும் போதே அன்பானவராகவும் இருக்கின்றார். எனவே, தந்தைக்குச் சமமானவர் ஆகுதல் என்றால், முற்றிலும் பற்றற்றவராகவும் முற்றிலும் அன்பானவர்களாகவும் இருப்பதாகும். பிறரிடமிருந்து பற்றற்றவராகவும், தந்தையிடம் அன்புடையவராகவும் இருப்பதாகும். இதுவே சமமாக இருப்பதாகும். இவை தந்தையின் இரண்டு சிறப்பியல்புகளாகும். எனவே, தந்தைக்குச் சமமாகவுள்ள சேவையாளர்களும் அவ்வாறானவர்களே. இந்த சிறப்பியல்பை சதா உங்கள் விழிப்புணர்வில் வைத்திருப்பதால், நீங்கள் இலகுவாக தொடர்ந்தும் முன்னேறிச் செல்வீர்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. நீங்கள் எங்கே ஒரு கருவியாக இருக்கிறீர்களோ, வெற்றியின் உத்தரவாதம் அங்குள்ளது. அங்கு, ~எனது| என்ற உணர்வு இருக்க முடியாது. ~எனது| என்ற உணர்வு எங்குள்ளதோ, அங்கே வெற்றி இருக்க மாட்டாது. கருவியாக இருப்பது என்ற உணர்வைக் கொண்டிருப்பதே, வெற்றிக்கான திறவுகோலாகும். எல்லைக்குட்பட்ட, லௌகீக ~எனது| என்பதை நீங்கள் கைவிட்டிருப்பதால், வேறு எங்கிருந்து ஏனைய ~எனது| வர முடியும்? ~எனது| எனக் கூறுவதற்குப் பதிலாக, ~~பாபா, பாபா!|| எனக் கூறுங்கள், அப்பொழுது நீங்கள் சதா பாதுகாப்பாக இருக்கின்றீர்கள். இது எனது நிலையம் அல்ல, ஆனால் பாபாவின் நிலையம் ஆகும். எனது மாணவன் அல்ல, ஆனால் பாபாவின் மாணவன் ஆகும். ~எனது| முடிவடைந்து, மாறாக, அது ~உங்களுடையது| ஆகுகின்றது. ~உங்களுடையது| எனக் கூறுவது என்றால் பறப்பதாகும். கருவி ஆசிரியர்களாக இருப்பது என்றால், பறக்கின்ற ஸ்திதிக்கு எடுத்துக் காட்டாக இருப்பது என்று அர்த்தமாகும். பறக்கின்ற ஸ்திதிக்கு நீங்கள் எடுத்துக் காட்டாக இருப்பதைப் போன்றே, ஏனையோரும் அவ்வாறு ஆகட்டும். உங்களையும் அறியாமலே, யாருக்கெல்லாம் நீங்கள் கருவிகள் ஆகுகிறீர்களோ அவர்கள் அந்த அதிர்வுகளை இயல்பாகவே பெறுவார்கள். எனவே, கருவி ஆசிரியர்கள், சேவையாளர்கள் சதா பற்றற்றவர்களும் சதா அன்பானவர்களும் ஆவார்கள். நீங்கள் எப்பொழுதெல்லாம், ஒரு பரீட்சைத்தாளுக்கு முகங்கொடுக்கிறீர்களோ, அதில் நீங்கள் சித்தியெய்துபவர்கள். நீங்கள் நம்பிக்கையுடைய புத்தியை கொண்ட வெற்றியாளர்கள்.

குழுக்களை சந்தித்தல்:
1. ஒளியாகவும், இலேசாகவும் உள்ள ஒரு தேவதையாக உங்களை நீங்கள் அனுபவம் செய்திருக்கின்றீர்களா? ஒரு தேவதை என்றால் ஒரேயொரு தந்தையை மாத்திரம் உலகமாகக் கொண்டிருப்பவர் என்று அர்த்தமாகும். அத்தகைய தேவதைகள் எப்பொழுதும் தந்தையால் நேசிக்கப்படுகிறார்கள். தேவதைகள் என்றால் சரீரங்கள் அல்லது சரீர உறவினர்கள் என எதனாலும் கவரப்படாதவர்கள் என்று அர்த்தமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் பெயரளவில் மாத்திரமே சரீரத்தில் இருந்தவாறு சரீர உறவினருடன் உரையாடுகிறீர்கள். ஆனால் பற்றுடன் அல்ல, ஏனெனில், தேவதைகள் வேறு எவருடனும் உறவுமுறை கொண்டிருப்பதில்லை. தேவதைகள் ஒரேயொரு தந்தையுடன் மாத்திரமே உறவுமுறை கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அத்தகைய தேவதைகள் ஆவீர்கள், அப்படித்தானே? ஒரு நிமிடம் நீங்கள் செயல்களை செய்வதற்காக உங்கள் சரீரத்திற்குள் வருகிறீர்கள். அடுத்த கணம் உங்கள் சரீரத்திலிருந்து நீங்கள் பற்றற்றவராக ஆகுகிறீர்கள். தேவதைகள் ஒரு விநாடி இங்கே இருக்கிறார்கள், அடு;த்த கணம் வேறொங்கோ இருப்பார்கள், ஏனெனில், அவர்கள் பறப்பவர்கள். அவர்கள் செயல்களை செய்வதற்காகவே, சரீரத்தின் ஆதாரத்தை எடுக்கிறார்கள், அதன் பின்னர் அவர்கள் மேலே சென்று விடுகிறார்கள். இதனை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? எங்கேனும் ஒரு கவர்ச்சி இருந்தால், ஒரு பந்தனம் ஏதேனும் இருந்தால், பந்தனம் உள்ளவர்களால் பறக்க முடியாது. அவர்கள் கீழே வந்துவிடுவார்கள். தேவதைகள் என்றால் சதா பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்கள் அல்லாது தளம்பல் அடைபவர்கள் அல்ல. நீங்கள் சதா மேலே இருக்கின்ற ஸ்திதியில் அதாவது தேவதைகளின் உலகில் இருப்பவர்கள். எனவே, நீங்கள் தேவதைகள் ஆகும் போது, நினைவு சொரூபமாக ஆகும் போது, ஏனைய அனைத்து உறவுமுறைகளும் முடிவடைகின்றன. நீங்கள் அத்தகைய பயிற்சியை கொண்டிருக்கின்றீர்கள், அப்படித்தானே? நீங்கள் செயல்களை செய்கிறீர்கள், அதன் பின்னர் பற்றற்றவர் ஆகுகிறீர்கள். ஒரு உயர்த்தியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஒரு விநாடி நீங்கள் கீழே இருக்கிறீர்கள், அடுத்த கணம் நீங்கள் மேலே செல்கிறீர்கள். நீங்கள் கீழே வருகிறீர்கள், உங்கள் செயல்களை செய்கிறீர்கள், அதன் பின்னர் ஆளியை முடுக்கி, மீண்டும் மேலே செல்கிறீர்கள். அத்தகைய பயிற்சியை செய்யுங்கள். அச்சா.

2. நீங்கள் அனைவரும் ஆன்மீக ரோஜாக்கள் ஆவீர்கள். அப்படித்தானே? நீங்கள் மல்லிகைகளா அல்லது நீங்கள் ரோஜாக்களா? ரோஜாக்களே மலர்களிலேயே அதிமேன்மையான மலர் எனப்படுவதைப் போன்றே, ஆன்மிக ரோஜாக்கள் மேன்மையான ஆத்மாக்கள் என்று அர்த்தமாகும். எப்பொழுதும் தமது ஆன்மிகத்தைப் பேணுபவர்களும், எப்பொழுதும் ஆன்மிக போதையை பேணுபவர்களும், எப்பொழுதும் ஆன்மிக சேவை செய்பவர்களுமே ஆன்மிக ரோஜாக்கள் ஆவார்கள். நீங்கள் அத்தகைய ஆன்மிக ரோஜாக்கள் ஆவீர்கள். தற்போதைய நேரத்திற்கு ஏற்ப, ஆன்மிகத்திற்கான தேவை உள்ளது. ஆன்மிகம் அற்றிருப்பதாலே அத்தனை கலகங்களும், சண்டைகளும் இடம்பெறுகின்றன. எனவே, ஆன்மிக ரோஜாக்கள் ஆகி, ஆன்மிக நறுமணத்தை பரப்புங்கள். இது பிராமண வாழ்வின் தொழிலாகும். இந்தத் தொழிலில் சதா மும்முரமாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தை பிரம்மாவை போன்று, சகல பந்தனத்திலிருந்தும் விடுதலையடைந்து, ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்பவர் ஆகுவீர்களாக.

செயல்களை செய்யும் போது, தந்தை பிரம்மா எந்த கர்ம பந்தனத்திலும் சிக்கிக் கொள்ளவில்லை. உறவுமுறைகளின் பொறுப்புகளை நிறைவேற்றும் போதும், அவர் அந்த உறவுமுறைகளின் எந்த பந்தனத்திலும் தன்னை கட்டுண்ட அனுமதிக்கவில்லை. அத்துடன் அவர் செல்வத்தினதும் வசதிகளினதும் பந்தனங்களில் இருந்தும் விடுபட்டவராகவே இருந்தார். அவர் தனது பொறுப்புகளை கவனித்துக் கொண்ட போதிலும், அவர் ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்தார். அவ்வாறே தந்தையை பின்பற்றுங்கள். எந்த கடந்தகால கர்மகணக்குகளிலும் கட்டுண்டு விட வேண்டாம். எந்த சம்ஸ்காரங்கள் அல்லது சுபாவங்கள் அல்லது ஈர்க்கப்படுதல் அல்லது ஒடுக்கப்படுதலின் செல்வாக்கிற்கு உள்ளாகாதீர்கள். அப்பொழுதே, நீங்கள் கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டவர் என்றும் ஜீவன்முக்தியை அனுபவம் செய்பவர் என்றும் அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் குடும்பத்தின் சகல பாதகமான சூழ்நிலைகளையும் உங்கள் ஆத்ம உணர்வு மனோபாவத்தினால் மாற்றுங்கள்.