27.03.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இது இப்பொழுது உங்களுடைய ஓய்வுபெறும் ஸ்திதியாகும், ஏனெனில் நீங்கள் சப்தத்திற்கு அப்பால் உள்ள வீட்டுக்குச் செல்ல வேண்டும். எனவே, நினைவில் நிலைத்திருந்து தூய்மையாகுங்கள்.
கேள்வி:
உயர்ந்த இலக்கை அடைவதற்கு, எவ்விடயத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்?
8பதில்:
உங்களுடைய கண்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அவை மிகவும் ஏமாற்றக்கூடியவை. குற்றப்பார்வை பெருமளவு சேதத்தை விளைவிக்கின்றது, ஆகவே, இயலுமானவரை, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். சகோதரத்துவப் பார்வையைப் பயிற்சி செய்யுங்கள். அதிகாலையில் எழுந்து, ஏகாந்தத்தில் அமர்ந்து, உங்களுடன் பேசுங்கள். கடவுளின் கட்டளை: இனிமையான குழந்தைகளே, காமமே கொடிய எதிரி. ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இங்கு கற்பிப்;பவர் ஒரு மனிதர் அல்லர் எனப் புரிந்துகொண்டுள்ளீர்கள். இதைப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் மாத்திரம் இங்கு வர முடியும். இங்கு உங்களுக்குக் கற்பிப்பவர் கடவுளே ஆவார். இங்கு, கடவுளை இனங்கண்டு கொள்ளல் இருக்க வேண்டும். கடவுள் என்னும் பெயர் மிகவும் மகத்தானது, பின்னர் அவர் பெயருக்கும் ரூபத்துக்கும் அப்பாற்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றார்கள்! உண்மையில், நடைமுறை ரீதியில், அவர் அப்பாற்பட்டவர். அவர் அத்தகைய ஒரு சின்னஞ்சிறிய புள்ளியாவார். ஓர் ஆத்மா ஒரு நட்சத்திரம் என்று கூறப்படுகின்றது. அந்த நட்சத்திரங்கள் சின்னஞ்சிறியவை அல்ல. ஒரு நட்சத்திரமாகிய, இந்த ஆத்மா உண்மையில் சின்னஞ் சிறியவர். தந்தையும் ஒரு புள்ளியாவார். தந்தை என்றென்றும் தூய்மையானவர். அவருடைய புகழ்: ஞானக்கடலும் அமைதிக்கடலும். இதைப் பற்றிக் குழப்பமடைவற்கான கேள்வியே கிடையாது. பிரதான விடயம் தூய்மையாகுவதாகும். விகாரத்தின் காரணமாகச் சண்டை உள்ளது. அவர்கள் தூய்மையாகுவதற்காகத் தூய்மையாக்குபவரைக் கூவியழைக்கின்றார்கள். எனவே, நிச்சயமாக நீங்கள் தூய்மையாக வேண்டும். இதைப் பற்றி நீங்கள் குழப்பம் அடையக்கூடாது. கடந்த காலத்தில் நடந்தவை அனைத்தும், அங்கு இருந்த தடைகள் அனைத்தும், புதியதாக ஏற்படவில்லை. அப்பாவிகள் துன்புறுத்தப்பட வேண்டும். இவ்விடயங்கள் ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் இருப்பதில்லை. வேறு எங்கும் குழப்பம் இருக்காது. இங்கு, குறிப்பாக இவ்விடயத்தின் காரணமாகக் குழப்பம் உள்ளது. தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்கு வருவதால், அதிகளவு குழப்பம் உள்ளது. தந்தை இங்கு அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: ஓய்வு ஸ்திதியின்பொழுதே, நான் வருகின்றேன். ஓய்வு ஸ்திதி என்னும் நியதி இங்கேயே ஆரம்பமாகியது. எனவே, ஓய்வு ஸ்திதியில் உள்ளவர்கள், நிச்சயமாகச் சப்தத்திற்கு அப்பால் இருப்பார்;கள். சப்தத்திற்கு அப்பால் செல்வதற்கு, நீங்கள் தந்தையை முழுமையாக நினைவுசெய்து, தூய்மையாக வேண்டும். தூய்மையாகுவதற்கு ஒரேயொரு வழியே உள்ளது. நீங்கள் திரும்பிச் செல்ல விரும்பினால், நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். திரும்பிச் செல்ல வேண்டியவர்கள், இரண்டு அல்லது நான்கு பேர்கள் மாத்திரமல்ல் தூய்மையற்ற முழு உலகுமே மாற வேண்டும். இந்நாடகத்தைப் பற்றி எவருக்கும் தெரியாது. இதுவே சத்தியயுகத்திலிருந்து கலியுகம் வரையிலான நாடகச் சக்கரம் ஆகும். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்து நிச்சயமாகத் தூய்மையானவராகவும் ஆகுங்கள். அப்பொழுது மாத்திரமே உங்களால் அமைதிதாமத்துக்கும் சந்தோஷ தாமத்துக்கும் செல்ல இயலும். ஒரேயொருவரே முக்தியையும் சற்கதியையும் அருள்பவர் என்பது நினைவுகூரப்படுகின்றது. சத்தியயுகத்தில் வெகுசிலரே இருக்கின்றார்கள், அவர்கள் தூய்மையாக இருக்கின்றார்கள். கலியுகத்தில், எண்ணற்ற சமயங்கள் உள்ளன, அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். இது இலகுவான ஒன்று, தந்தை உங்களுக்கு முன்னதாகவே கூறுகின்றார். நிச்சயமாகக் குழப்பம் இருக்கும் என்பதைத் தந்தை அறிவார். அவர் இதை அறிந்திராதுவிட்டால், நீங்கள் ஞான அமிர்தத்தைப் பருகச் செல்ல விரும்புகிறீர்கள் எனக் கூறுகின்ற கடிதத்தை நீங்கள் கொண்டு வர வேண்டும் என்கின்ற திறமையான வழிமுறையை அவர் ஏன் உருவாக்கியிருப்பார்? இச்சண்டை நடைபெற வேண்டும் என்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என அவர் அறிவார். வியப்படையவுள்ளவர்கள், அவரை இனங்கண்டு, இந்த ஞானத்தை மிக நன்றாகப் பெறுவார்கள்! அவர்கள் ஏனையோருக்கு ஞானத்தையும் கொடுக்கின்றார்கள், பின்னர், ஓ மாயையே! நீ அவர்களை உன்னை நோக்கி ஈர்க்கின்றாய்! இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. எவராலும் நிச்சயிக்கப்பட்டுள்ளதைத் தடுக்க முடியாது. மக்கள் இவ் வார்த்தைகளைக் கூறுகின்றார்கள், ஆனாலும் அவர்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. குழந்தைகளே, இது மிகவும் மேன்மையான கல்வி. கண்கள் மிகவும் ஏமாற்றக்கூடியவை, கேட்கவும் வேண்டாம்! உலகம் தமோபிரதானதாகும். கல்லூரிகளில் அவர்கள் மிகவும் தீயவர்களாக இருக்கின்றார்கள். வெளிநாடுகளிலுள்ள நிலைமையைப் பற்றிக் கேட்கவும் வேண்டாம்! சத்தியயுகத்தில் அத்தகைய விடயங்கள் இருப்பதில்லை. சத்தியயுகம் இருந்ததிலிருந்து நூறாயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன என அம்மக்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் நேற்று உங்களுக்கு உங்கள் இராச்சியப் பாக்கியத்தைக் கொடுத்துச்; சென்றேன். நீங்கள் அனைத்தையும் இழந்தீர்கள். உலகிலும் ஒரு தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு அதிகளவு சொத்தைக் கொடுத்தேன். நீங்கள் அனைத்தையும் இழந்தீர்கள். ஒரு குறுகிய காலத்திற்குள் சொத்து அனைத்தையும் இழக்கின்ற அத்தகைய குழந்தைகளும் இருக்கின்றார்கள். எல்லையற்ற தந்தையும் கூறுகின்றார்: உங்களுக்கு அதிகளவு செல்வத்தைக் கொடுத்து நான் சென்றேன். நான் உங்களை உலகின் அத்தகைய தகுதிவாய்ந்த அதிபதிகள் ஆக்கினேன், இப்பொழுது, நாடகத்திற்கேற்ப, இது உங்கள் நிலைமை ஆகிவிட்டது! நீங்கள் என்னுடைய அதே குழந்தைகள், இல்லையா? நீங்கள் மிகவும் செல்வந்தராக இருந்தீர்கள்! இது நீங்கள் விளங்கப்படுத்துகின்ற, ஓர் எல்லையற்ற விடயமாகும். தினமும் ‘ஒரு சிங்கம் வந்துவிட்டது’ என்று கத்திய ஒரு பையனின் கதை உள்ளது. ஆனால் ஒருபொழுதும் சிங்கம் வரவில்லை. ஒருநாள் உண்மையிலேயே சிங்கம் வந்தது. மரணம் வரவுள்ளது என்று நீங்களும் கூறுகின்றீர்கள், மக்கள் கூறுகின்றார்கள்: தினமும் நீங்கள் இதைக் கூறுகின்றீர்கள், ஆனால் விநாசம் நடைபெறவில்லை. நிச்சயம் ஒருநாள் விநாசம் நடைபெறும் என உங்களுக்குத் தெரியும். அவர்கள் இதிலிருந்து அக் கதையை உருவாக்கியுள்ளார்கள். அது அவர்களின் குற்றமல்ல என்று எல்லையற்ற தந்தை கூறுகின்றார். முன்னைய கல்பத்திலும் அதே விடயமே நடைபெற்றது. அது 5000 வருடங்களுக்கான ஒரு விடயமாகும். பாபா பல தடவைகள் கூறியுள்ளார்: நீங்கள் தொடர்ந்தும் எழுத முடியும்: பாரதத்தில் தேவ தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு, மிகச்சரியாக இதேவழியில் 5000 வருடங்களுக்கு முன்னரும் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. பாபா வந்துவிட்டார் என மக்கள் வந்து புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மிகத்தெளிவாக அதை எழுதுங்கள். சுவர்க்க இராச்சியமே தந்தையிடமிருந்தான ஆஸ்தியாகும். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் முதலில், புதிய உலகில், புதிய பாரதத்தில், சுவர்க்கம் இருக்கின்றது. சுவர்க்கம் பின்னர் நரகம் ஆகுகின்றது. இது ஒரு மிகப்பெரிய எல்லையற்ற நாடகம். அதில் அனைவரும் நடிகர்கள். எங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நாங்கள் நடித்து, இப்பொழுது வீடு திரும்பிச் செல்கின்றோம். முன்னர், நாங்கள் அதிபதிகளாக இருந்தோம், இப்பொழுது நாங்கள் ஏழைகள் ஆகிவிட்டோம். இப்பொழுது நாங்கள் பாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, அதிபதிகள் ஆகுகின்றோம். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகவும் வேண்டும். தூய்மையாகுவதன் காரணத்தால், வன்முறைகள் உள்ளன. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு விளங்கப்படுத்துகின்றார், ஆனால் பின்னர், நீங்கள் வெளியே செல்லும்பொழுது, விவேகமற்றவர்கள் ஆகுகின்றீர்கள். இந்த ஞானத்தால் வியப்படைந்து, ஞானத்தைக் கேட்டு, ஞானத்தைப் பேசி, ஏனையோருக்கும் ஞானத்தைக் கொடுத்தவர்கள் உள்ளனர்; பின்னர், ஓ மாயையே! அவர்கள் முன்னர்; இருந்ததைப் போன்றே, ஆகுகின்றார்கள். உண்மையில், அவர்கள் மேலும் தீயவர்களாக ஆகுகின்றார்கள். அவர்கள் காம விகாரத்தில் சிக்கி விட்டவர்களாகி, வீழ்கின்றார்கள். சிவபாபா இப் பாரதத்தைச் சிவாலயம் ஆக்குகின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் முயற்சி செய்ய வேண்டும். அந்த எல்லையற்ற பாபா மிகவும் இனிமையான பாபா. இதை அனைவரும் அறிந்திருந்தால், பலரும் இங்கு வருவார்கள். இங்கு எதனையும் கற்க இயலாதிருக்கும். கற்பதற்கு உங்களுக்கு ஏகாந்தம் தேவைப்படுகின்றது. காலைப் பொழுதுகள் சப்தம் சந்தடியற்றவையும் அமைதியானவையும் ஆகும். நாங்கள் எங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்கின்றோம். நினைவினூடாக அல்லாமல் எவ்வாறு எங்கள் பாவங்கள் அழிக்கப்படும்? இந்த ஓர் அக்கறையையே நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர்களாகவும், ஏழைகளாகவும் ஆகிவிட்டீர்கள், எனவே நீங்கள் எவ்வாறு இரட்டைக்கிரீடம் உடையவராக ஆகமுடியும்? தந்தை உங்களுக்கு ஒரு மிகவும் இலகுவான விடயத்தையே விளங்கப்படுத்துகின்றார். குழப்பங்கள் ஏற்படும். அதைப் பற்றிப் பயப்படுவதற்கு எதுவுமேயில்லை. இத் தந்தை மிகவும் எளிமையானவர். அவர் அதே முறையிலேயே ஆடை அணிகின்றார். வெளிப்புறமாக எவ் வித்தியாசமும் இல்லை. சந்நியாசிகள் குறைந்தபட்சம் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் நீங்கிச் சென்று காவியுடைகளை அணிகின்றார்கள், ஆனால் இவரின் ஆடை எப்பொழுதும் இதேபோன்றது. தந்தை இவரினுள் பிரவேசித்துள்ளார்; வேறு எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு தந்தை தனது குழந்தைகளை அன்புடன் கவனித்துப் பராமரிப்பதைப் போன்றே, இவரும் அதையே செய்கின்றார். அகங்காரத்திற்கான கேள்வி எதுவும் சிடையாது. இவர் மிகவும் சாதாரணமாக வாழ்கின்றார். எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும்;, தங்கியிருப்பதற்குக் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். அவையும் சாதாரணமானவையாகவே இருக்கின்றது. எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தையே காந்தம் ஆவார். இது ஒரு சிறிய விடயமா? புத்திரிகள் தூய்மையாகும்பொழுது, பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றார்கள். இங்கு ஒரு சக்தியுள்ளது என்று அம்மக்கள் கூறுகின்றார்கள், ஆனால் அது என்ன சக்தி என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. தந்தையே சர்வசக்திவான். அவர் அனைவரையும் தன்னைப் போன்று ஆக்குகின்றார், ஆனால் அனைவரும் ஒரேமாதிரி ஆகமுடியாது. அப்படியிருந்தால், அனைவரின் முகச்சாயல்களும் ஒதேமாதிரியாக இருக்கும், அவர்களுடைய அந்தஸ்தும் ஒன்றாக இருக்கும். இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. 84 பிறவிகளிலும், ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் பெற்றுள்ள, அதே 84 முகச்சாயல்களையே பெறுகின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் அந்த அதே முகச்சாயல்களையே பெறுவீர்கள். அதில் எவ்வேறுபாடும் இருக்க முடியாது. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட்டு, கிரகிக்கப்பட வேண்டும். விநாசம் நிச்சயமாக நடைபெற வேண்டும். உலகில் இந்நேரத்தில் அமைதி இருக்க முடியாது. அவர்கள் தங்கள் மத்தியில் தொடர்ந்தும் சண்டை இடுகின்றார்கள். மரணம் உங்கள் தலைக்கு மேல் உள்ளது. நாடகத்திற்கேற்ப, ஒரேயொரு ஆதிசனாதன தேவதர்மம் ஸ்தாபிக்கப்பட்டு, ஏனைய அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் அணுக்குண்டுகளை உற்பத்தி செய்கின்றார்கள். இயற்கை அனர்த்தங்களும் ஏற்படும். பெரிய பாறைகள் வீழ்ந்து கட்டடங்கள் போன்றவை அனைத்தும் அழிக்கப்படும். அவர்கள் எவ்வளவு உறுதியாகக் கட்டடங்களைக் கட்டினாலும் அல்லது அத்திவாரங்கள் எவ்வளவு உறுதியானவையாக இருந்தாலும், அவற்றில் எதுவும் எஞ்சியிருக்காது. அத்தகைய கட்டடங்கள் பூமியதிர்ச்சியில் கூட விழ மாட்டா என்று அவர்கள் எண்ணுகின்றார்கள். எவ்வாறாயினும், கூறப்பட்டுள்ளது: நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் நூறு மாடிகளையுடைய கட்டடங்களைக் கட்டினாலும், விநாசம் நிச்சயமாக நடைபெறவுள்ளது. இவை எவையும் எஞ்சியிருக்காது. உங்களுடைய சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். வெளிநாட்டில் என்ன நடைபெறுகின்றது எனப் பாருங்கள்! அது இராவணனின் பகட்டு என்று அழைக்கப்படுகின்றது. மாயை கூறுகின்றாள்: நானும் குறைந்தவள் அல்ல. அங்கு, நீங்கள் வைரங்களாலும் இரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட மாளிகைகளைக் கொண்டிருப்பீர்கள். அங்கு, அனைத்தும் தங்கத்திலானதாக இருக்கும். அங்கு, இரண்டு மாடி அல்லது மூன்று மாடிக் கட்டடங்கள் எதனையும்; கட்டத் தேவையில்லை. அங்கு நிலத்திற்கு எப் பெறுமதியும் இருக்க மாட்டாது. உங்கள் முன்னிலையில் அனைத்தும் பிரசன்னமாக இருக்கும். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் அனைவருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் மிகச்சிறந்த வழிகாட்டிகளாகி, புத்துணர்ச்சி அடைவதற்கு இங்கு வருகிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் வருவார்கள். பலர் வந்துள்ளார்கள். நான் அவர்கள் அனைவரையும் மீண்டும் பார்க்க இயலுமா அல்லது இயலாதா, அவர்கள் அனைவரும் இங்கு தங்கியிருக்க இயலுமா அல்லது இயலாதா என்பது எனக்குத் தெரியாது. பலர் வந்துள்ளார்கள், ஆனால் ஞானத்தால் வியப்படைந்து பின்னர் ஓடியவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் எழுதுகின்றார்கள்: பாபா, நான் வீழ்ந்து விட்டேன். ஆ! நீங்கள் சம்பாதித்துள்ள அனைத்தையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். உங்களால் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர இயலாது. இதுவே மிகப்பெரிய கீழ்ப்படியாமை ஆகும். அம்மக்கள் ஒரு கட்டளையைப் பிறப்பிக்கின்றார்கள்: இன்ன நேரத்திற்குப் பின்னர் எவரும் வெளியே செல்லக்கூடாது, இல்லாதுவிடின், அவர்கள் சுடப்படுவார்கள். தந்தையும் கூறுகின்றார்: நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால், சுடப்படுவீர்கள். கடவுளின் கட்டளை: எச்சரிக்கையாக இருங்கள். இந்நாட்களில், மக்கள் அமர்ந்திருக்கும்பொழுதே மரணிக்கும் வகையில், வாயு போன்ற அத்தகைய விடயங்களை அவர்கள் உருவாக்குகின்றார்கள். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன, ஏனெனில், இறுதியில், வைத்தியசாலைகள் போன்றவை எவையும் எஞ்சியிருக்காது. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி, விரைவாக இன்னுமொன்றைப் பெறுகின்றார். அவருடைய அனைத்துத் துன்பங்களும், வேதனையும் முடிவடைகின்றன. அங்கு எவ்வேதனையும் இருக்காது. ஆத்மாக்கள் விடுபட்டிருக்கின்றார்கள். தனது முழு ஆயுட்காலத்தையும் வாழ்ந்து முடிக்கும்பொழுது, ஓர் ஆத்மா தன் சரீரத்தை விட்டு நீங்குகின்றார். அங்கு, மரணம் இருக்காது. இராவணனும் அங்கு இருப்பதில்லை, எனவே, மரணம் எவ்வாறு அங்கு வர முடியும்? அவை கடவுளுடையது அல்லாது, இராவணனின் தூதுவர்கள். கடவுளின் குழந்தைகள் மிகவும் அன்பானவர்கள். ஒரு தந்தையால் தனது குழந்தைகளுடைய வேதனையைப் பார்த்துச் சகிக்க முடியாது. நாடகத்திற்கேற்ப, நீங்கள் முக்காற் பங்கு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். உங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்ற தந்தையின் வழிகாட்டல்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். இது உங்களுடைய இறுதிப்பிறவி. தந்தை கூறுகின்றார்: வீட்டில் உங்களுடைய குடும்பத்துடன் தங்கி, இந்த இறுதிப்பிறவியில் தூய்மை ஆகுங்கள். தந்தையின் நினைவினூடாக மாத்திரம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் தலைமேல் பல பிறவிகளின் பாவங்கள் உள்ளன. நீங்கள் நிச்சயமாகத் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக வேண்டும். தந்தையே சர்வசக்திவான். சமயநூல்களைக் கற்கும் அனைவரும் அதிகாரிகள் என அழைக்கப்படுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நானே அனைவருக்கும் அதிகாரி. நான் உங்களுக்குப் பிரம்மாவினூடாக, சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தைக் கூறுகின்றேன்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீரில் நீராடுவதால், எவ்வாறு நீங்கள் தூய்மையானவர்கள் ஆக முடியும்? எங்காவது சிறிதளவு நீர் இருந்தபொழுது, அவர்கள் அதையும் ஒரு யாத்திரைத் தலம் என்று நம்பி, விரைவாக அங்கு நீராடுவார்;கள். அது தமோபிரதான் நம்பிக்கை என்று அழைக்கப்படுகின்றது. உங்களுடையது சதோபிரதான் நம்பிக்கை ஆகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இதில் பயப்படுவதற்கு எதுவுமேயில்லை. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மையாகுவதற்குக் கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளைகளை ஒருபொழுதும் மீறாதீர்கள். மிக, மிக எச்சரிக்கையாக இருங்கள். தூய்மையாகி நீங்கள் பாப், தாதா இருவரிடமிருந்தும் பெற்றுள்ள பராமரிப்பின் பிரதிபலனைக் கொடுங்கள்.2. நாடகத்தின் நியதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதை அறிந்து, சதா கவலையற்று இருங்கள். விநாசம் இடம்பெறுவதற்கு முன்னர் தந்தையின் செய்தி அனைவரையும் அடையுமாறு செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் “பாபா” எனும் ஒரு வார்த்தையின் விழிப்புணர்வு மூலம் நினைவிலும் சேவையிலும் ஈடுபட்டிருக்கின்ற, ஓர் உண்மையான யோகியாகவும் உண்மையான சேவகராகவும் ஆவீர்களாக.குழந்தைகளாகிய நீங்கள் “பாபா” எனும் வார்த்தையை உங்கள் வாய் மூலமோ அல்லது உங்கள் மனதிலோ மீண்டும் மீண்டும் கூறுகின்றீர்கள். நீங்கள் அவரின் குழந்தைகள் ஆதலால், நீங்கள் “பாபா” எனும் வார்த்தையை நினைவுசெய்வது உங்களுக்குச் சேவையாகும் அல்லது அதைச் சிந்திப்பதும் உங்கள் உதடுகள் மூலம் “பாபா இதனைக் கூறினார், பாபா இதனைக் கூறியுள்ளார்” என்று மீண்டும் மீண்டும் கூறுவதும் யோகமாகும். எவ்வாறாயினும், சிலர் தங்கள் இதயத்திலிருந்து “பாபா” எனும் இந்த வார்த்தையைக் கூறுகின்றார்கள், ஆனால் சிலர் அதனை ஞானத்தினால் தங்கள் புத்தி (மூளைகள்) மூலம் கூறுகின்றார்கள். தங்கள் இதயங்களிலிருந்து அதனைக் கூறுபவர்கள் தங்கள் இதயங்களில் சந்தோஷத்தினதும் சக்தியினதும் வடிவில் உடனடிப் பலனைப் பெறுகின்றார்கள். தங்கள் புத்திகளைப் பயன்படுத்துபவர்கள் அதனைப் பேசுகின்ற நேரத்தில் சந்தோஷத்தைப் பெற்றாலும், அது சதாகாலமும் நீடிப்பதில்லை.
சுலோகம்:
சுவாலையான கடவுளிடம் தங்களை அர்ப்பணிப்பவர்களே உண்மையான விட்டில் பூச்சிகள் ஆவார்கள்.