14.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் வரிசைக்கிரமமாக சதோபிரதானாகும்போது இயற்கை அனர்த்தங்களின் வேகம், அதாவது, விநாசம் அதிகரித்து, இப் பழைய உலகம் முடிவடையும்.
கேள்வி:
முயற்சி செய்பவர்களாகிய நீங்கள், எந்த முயற்சியைச் செய்வதன் மூலம், தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியையும் பெற முடியும்?
பதில்:
உங்கள் முழு ஆஸ்தியையும் பெறுவதற்கு, அனைத்திற்கும் முதலில் தந்தையை உங்கள் வாரிசு ஆக்குங்கள். அதாவது, உங்களிடம் உள்ள அனைத்தையும் தந்தையிடம் அர்ப்பணித்து விடுங்கள்.1.தந்தையை உங்கள் குழந்தையாக்குங்கள், அப்பொழுது நீங்கள் உங்கள் முழு ஆஸ்திக்கான உரிமையைப் பெறுவீர்கள். 2. நீங்கள் முற்றிலும் தூய்மையாகும்போது உங்கள் முழு ஆஸ்தியையும் பெறுவீர்கள். நீங்கள் முழுமையாகத் தூய்மையாகாவிடின் தண்டனையை அனுபவம் செய்த பின்னர், சிறிதளவு வெகுமதியையே பெறுவீர்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள், ஒருவரின் நினைவில் மாத்திரம் அமர்ந்திருக்காமல் மூவரின் நினைவிலும் அமர்ந்திருக்க வேண்டும். மூவரும் ஒரேயொருவரே ஆயினும், அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார் என்பது உங்களுக்குத் தெரியும். எங்கள் அனைவரையும் அழைத்துச் செல்வதற்காகவே அவர் வந்துள்ளார். நீங்கள் மாத்திரமே இந்தப் புதிய விடயத்தைப் புரிந்து கொள்கிறீர்கள். ஏனைய அனைவரும் பக்தியைக் கற்பித்து, சமயநூல்கள் போன்றவற்றையும் வாசிக்கின்ற மனிதர்களே என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஒரேயொருவரை மனிதர் என்று அழைக்க முடியாது. அவரே அசரீரியானவர் என்பதால், அவர் இங்கு அமர்ந்திருந்து, அசரீரி ஆத்மாக்களுக்குக் கற்பிக்கிறார். ஆத்மா சரீரத்தின் மூலமாகச் செவிமடுக்கிறார். இந்த ஞானம் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கிறீர்கள். எல்லையற்ற தந்தை கூறியுள்ளார்: ஆன்மீகக் குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சமய நூல்கள் என்ற கேள்வியே இங்கு இல்லை. தந்தையே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் ஒரு மகத்துவமான ஆசிரியர். அவர் அதி மேலானவர் என்பதால், நீங்களும் அதி மேலான அந்தஸ்தைப் அடைவதற்கு அவர் உங்களுக்;கு உதவுகின்றார். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக நீங்களும் சதோப்பிரதான் ஆகும்போது, யுத்தம் ஆரம்பமாகும். இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். நீங்கள் நிச்சயமாக நினைவைக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். தந்தை, அதிமங்களகரமான சங்கமயுகத்தில் ஒரு முறை மாத்திரமே வந்து புதிய உலகிற்காக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சிறு குழந்தைகளாலும் தந்தையை நினைவு செய்ய முடியும். நீங்கள் விவேகமானவர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, தந்தையிடமிருந்து ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவபாபாவிடமிருந்தே புதிய உலகிற்கான அந்தஸ்தை இலக்ஷ்மியும், நாராயணனும் பெற்றுக்கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மியும், நாராயணனும் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றிவந்து, இப்பொழுது பிரம்மாவும், சரஸ்வதியும் ஆகியுள்ளார்கள். அவர்கள் பின்னர் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவார்கள். இப்பொழுது அவர்கள் முயற்சி செய்கிறார்கள்;. உங்களிடம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உள்ளது. இனிமேலும்; நீங்கள் தேவ தேவியரின் விக்கிரகங்களின் முன்னால், மூட நம்பிக்கையுடன் தலை வணங்க மாட்டீர்கள். மக்கள் தேவ தேவியரின் விக்கிரகங்களின் முன்னால் சென்று, தாங்கள் தூய்மையற்றவர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நீங்கள் சகல நற்குணங்களும் நிறைந்தவர்கள். ஆனால் நாங்களோ பாவம் நிறைந்தவர்களும், விகாரமுள்ளவர்களும், நற்குணங்கள் அற்றவர்களும் ஆவோம். நீங்கள் யாரைப் புகழ்ந்து பாடினீர்களோ, அவர்களைப் போன்று ஆகுகிறீர்கள். நீங்கள் வினவுகிறீர்கள்: பாபா, சமய நூல்கள் போன்றவற்றை வாசிப்பது எப்பொழுது ஆரம்பமாகியது? தந்தை கூறுகிறார்: இராவணனின் இராச்சியம் ஆரம்பமாகிய காலத்திலிருந்தே ஆகும். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை ஆகும். இங்கு அமர்ந்திருக்கும்போது, உங்கள் புத்தி முழு ஞானத்தையும் கிரகிக்கவேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்தச் சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்வீர்கள். பக்தி சம்ஸ்காரத்தை, நீங்கள் உங்களுடன் எடுத்துச்செல்ல மாட்டீர்கள். பக்தி சம்ஸ்காரங்கள் உடையவர்கள் பழைய உலகில் மனிதர்களுக்கே பிறப்பார்கள். அதுவும் அவசியமாகும். நீங்கள் ஞானச் சக்கரத்தை உங்கள் புத்தியில் சுழற்ற வேண்டும். அத்துடன் நீங்கள் பாபாவையும் நினைவு செய்ய வேண்டும். பாபாவும் எங்கள் தந்தையாவார். நீங்கள் தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பாபா எங்கள் ஆசிரியரும் ஆவார். ஆகவே இந்தக் கல்வி எங்கள் புத்தியில் பதியும். உலகச் சக்கரத்தின் ஞானமும் எங்கள் புத்தியில் உள்ளது. இதன் மூலம் நாங்கள் பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுகிறோம். (நினைவு யாத்திரை இடம்பெற்றது). ஓம் சாந்தி. ஞானமும், பக்தியும். தந்தை ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். பக்தியைப் பற்றிய அனைத்தையும், அதாவது அது எப்பொழுது ஆரம்பமாகியது, எப்பொழுது அது முடிவடையும் என்பதை அவர் அறிவார். மனிதர்களுக்கு அது தெரியாது. தந்தை மாத்திரமே வந்து, அவை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். சத்திய யுகத்தில், தேவர்களாகிய நீங்களே உலக அதிபதிகளாக இருந்தீர்கள். அங்கு பக்தி என்ற கேள்விக்கே இடமிருக்கவில்லை. ஆலயம் எதுவும் அங்கு இருக்கவில்லை. அனைவரும் தேவர்களாகவே இருப்பார்கள். உலகம் அரைவாசி பழையதாகிய பின்னர், அதாவது, 2500 வருடங்கள் கடந்த பின்னர், திரேதாயுகமும், துவாபர யுகமும் சங்கமிக்கும்போது, இராவணன் வருகிறான். நிச்சயமாக ஒரு சங்கமம் இருக்கவேண்டும். தேவர்கள் பாவப் பாதையில் விழுகின்ற போது அதாவது திரேதாயுகத்தினதும் துவாபரயுகத்தினதும்; சங்கமத்தின் போதே இராவணன் வருகிறான். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இது தெரியாது. தந்தை கலியுகத்தின் இறுதியும், சத்திய யுகத்தின் ஆரம்பமும் சங்கமிக்கும்போது வருகிறார். ஆனால் இராவணனோ, திரேதாயுகத்தினதும் துவாபரயுகத்தினதும் சங்கமத்தின் போது வருகிறான். அந்தச் சங்கமத்தை, நன்மையளிக்கும் சங்கமம் என்று அழைக்க முடியாது. அதனை உபகாரமற்ற சங்கமம் என்றே அழைக்கலாம். தந்தைக்கு மாத்திரமே நன்மையளிப்பவர் என்ற பெயர் உள்ளது. உபகாரமற்ற யுகம் துவாபர யுகத்துடன் ஆரம்பமாகிறது. தந்தை உணர்வுள்ள விதையாவார். முழு விருட்சத்தினதும் ஞானம் அவரிடம் உள்ளது. விதை உணர்வுள்ளதாக இருந்தால், அதிலிருந்து விருட்சம் எவ்வாறு வெளித்தோன்றுகிறது என்பதை அவ்விதை விளங்கப்படுத்தும். எவ்வாறாயினும், அது உணர்வற்றது என்பதால், அதனால் எதனையும் கூற முடியாதுள்ளது. ஒரு விதை விதைக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து சிறிய கன்று வெளிப்படும் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும். பின்னர் அது வளர்ந்து, பழம் கொடுக்க ஆரம்பிக்கிறது. எவ்வாறாயினும், உணர்வுள்ள ஒரேயொருவராலேயே உங்களுக்கு அனைத்தையும் கூற முடியும். உலகில் இப்பொழுது, மக்கள் தொடர்ந்தும் பல வகையான விடயங்களில் ஈடுபடுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் எதனையாவது கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் சந்திரனுக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் இந்த விடயங்கள் அனைத்தையும் செவிமடுக்கிறீர்கள். அவர்கள் ஆய்வு செய்து, அந்த இடம் எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, நூறாயிரக் கணக்கான மைல்கள் மேல்நோக்கி உயர்ந்த இடமான சந்திரனுக்குச் செல்கிறார்கள். அவர்கள் கடலுக்கு அடியில் என்ன உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, கடலுக்கு அடியில் ஆழமாகச் செல்கிறார்கள். ஆனால் அவர்களால் அதன் எல்லையை அடைய முடியவில்லை. நீர் மாத்திரமே அங்கு நிறைந்துள்ளது. அவர்கள் ஆகாய விமானத்தில் மேலே செல்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு அங்கு சென்று திரும்புவதற்குப் போதிய எரிபொருள் தேவைப்படுகிறது. வானமும் எல்லையற்றது. கடலும் எல்லையற்றது. அவர் (சிவபாபா) எல்லையற்ற ஞானக்கடலாக இருப்பதைப் போன்றே, இது எல்லையற்ற நீர்க் கடலாகும். ஆகாயமும் எல்லையற்றதாகும். பூமியும் எல்லையற்றதாகும் நீங்கள் தொடர்ந்தும் கூறிக் கொண்டே போகலாம்! கடலுக்குக் கீழே நிலமுள்ளது. மலைகள் எதில் நிற்கின்றன? பூமியில். அவர்கள் பூமியைத் தோண்டும்போது, மலைகள் வெளித்தோன்றுகின்றன. அதன் கீழ் நீருள்ளது. கடலும் நிலத்தின் மேலேயே உள்ளது. நீரினதும், நிலத்தினதும் எல்லையை எவராலும் அடைய முடியாது. கடவுள் எல்லையற்றவர், மாயையும் எல்லையற்றது என்று மக்கள் கூறினாலும், எல்லையற்ற தந்தையான, பரமாத்மாவாகிய பரமதந்தையே முடிவற்றவர் என்று நீங்கள் கூறமாட்டீர்கள். எவ்வாறாயினும் கடவுள் முடிவற்றவராக இருக்க முடியாதென்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் ஆம். இந்த வானம் எல்லையற்றது. ஐந்து தத்துவங்களான பூமி, நீர், தீ, காற்று, ஆகாயம் உள்ளன –.அவை அனைத்தும் தமோப்பிரதான் ஆகுகின்றன. ஆத்மாக்களும் தமோப்பிரதான் ஆகுகின்றார்கள். பின்னர் தந்தை வந்து அவர்களை சதோப்பிரதான் ஆக்குகிறார். ஆத்மாக்கள் சின்னஞ் சிறியவர்கள். அவர்கள் 84 பிறவிகளை எடுக்கிறார்கள். இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. இது ஒரு முடிவில்லாத, அநாதியான நாடகமாகும். அது அநாதியாகத் தொடர்கிறது. அது எப்பொழுது ஆரம்பமாகியது என்று உங்களால் கூறமுடியுமானால், அதற்கு ஒரு முடிவும் இருக்கவே வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் புதிய உலகம் எவ்வாறு ஆரம்பமாகுகின்றது என்றும், பின்னர் எவ்வாறு அது பழையதாகுகின்றது என்றும் விளங்கப்படுத்த வேண்டும். இது தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும், 5000 வருடங்களைக் கொண்ட சக்கரமாகும்.. உங்களுக்கு இப்போது இது தெரியும். ஆனால் அந்த மக்கள் பொய்யானவற்றை எழுதியிருக்கிறார்கள். சமயநூல்களில் சத்திய யுகத்தின் காலம் பல நூறாயிரக் கணக்கான வருடங்கள் என்று எழுதப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் அதனைச் செவிமடுக்கும்போது, அதை உண்மையெனக் கருதுகிறார்கள். கடவுள் எப்போது வந்து, தனது சொந்த அறிமுகத்தைக் கொடுப்பார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இதனைத் தெரியாததால், நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும்வரை, கலியுகம் இன்னும் 40000 ஆண்டுகள் இருக்குமென்று அவர்கள் தொடர்ந்து கூறுவார்கள். இப்பொழுது நீங்கள், சக்கரம் 5000 வருடங்கள் என்றும், பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகள் அல்ல என்றும் அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்குக் கருவிகளாக ஆகியுள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில் பல சம்பிரதாயங்கள் உள்ளன. மக்களிடம் பணம் இருக்கும்போது, அவர்கள் அதிகளவு செலவு செய்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: உங்களுக்கு அதிகளவு செல்வத்தைக் கொடுத்தபின்னர் நான் சென்றுவிடுகிறேன். எல்லையற்ற தந்தை நிச்சயமாக உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியை வழங்குவார். அதன் மூலம் நீங்களே சந்தோஷத்தைப் பெறுவதுடன், உங்களுடைய ஆயுட் காலமும் நீண்டதாக இருக்கும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: எனது அன்பிற்கினிய குழந்தைகளே, நீங்;கள் நீடூழி வாழ்வீர்களாக! உங்களுடைய ஆயுட்காலம் 150 ஆண்டுகளாக இருப்பதுடன், மரணம் ஒருபோதும் சம்பவிக்காது. தந்தை உங்களுக்கு ஓர் ஆசீர்வாதத்தைக் கொடுத்து, உங்கள் ஆயட்காலத்தையும் நீடிக்கச் செய்கிறார். நீங்கள் அமரத்துவமானவர்களாக இருப்பீர்கள். அங்கு அகால மரணம் ஒருபோதும் இருக்க மாட்டாது. நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். அதனாலேயே அது சற்தோஷ தாமம் என்று அழைக்கப்படுகிறது. ஆயுட்காலம் நீண்டிருப்பதுடன், நீங்கள் அதிகளவு செல்வத்தையும், சந்தோஷத்தையும் பெறுகிறீர்கள். ஏழ்மையிலிருந்து நீங்கள் கிரீடம் சூட்டப்பட்டவர்கள் ஆகுகிறீர்கள். உங்கள் புத்தியில் உள்ளது: தேவ தர்மத்தை ஸ்தாபிப்பதற்குத் தந்தை வந்துள்ளார். நிச்சயமாக அது ஒரு சிறு விருட்சமாகும். ஒரு தர்மமும், ஓர் இராச்சியமும், ஒரு மொழியுமே அங்குள்ளது. அதுவே உலகில் அமைதி நிலவுதல் என்று அழைக்கப்படுகிறது. முழு உலகினதும் நடிகர்கள் நாங்களே. உலகில் உள்ள எவருக்கும் இது தெரியாது. அவர்களுக்கு இது தெரியுமாயின், நாங்கள் எப்பொழுது எங்கள் பாகங்களை நடிக்க ஆரம்பித்தோம் என்று அவர்களால் கூற முடியும். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இவ்வாறு கூறும் பாடல் ஒன்று உள்ளது: பாபாவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட அனைத்தையும், வேறு எவராலும் உங்களுக்குக் கொடுக்க முடியாது. அவர் உங்களுக்கு முழு பூமியையும், முழு வானத்தையும், உலக இராச்சியம் முழுவதையும் கொடுக்கிறார். இந்த இலக்ஷ்மியும், நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். பின்னர் வந்த அரசர்கள் அனைவரும் பாரதத்தின் அரசர்களாக இருந்தார்கள். பாடப்பட்டுள்ளது: பாபா எங்களுக்குக் கொடுப்பவற்றை, வேறு எவராலும் கொடுக்க முடியாது. தந்தையே வந்து, அதனை நாங்கள் பெறுவதற்கு உதவி செய்கிறார். ஆகவே இந்த ஞானம் முழுவதும், நீங்கள் எவருக்கேனும் விளங்கப்படுத்தக் கூடியதாக, உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். அந்தளவிற்கு நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாரால் விளங்கப்படுத்த முடியும்? பந்தனங்களிலிருந்து விடுபட்டவர்களாலேயே முடியும். எவராவது பாபாவிடம் வரும்போது, பாபா வினவுவார்: உங்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளார்கள்? அவர்கள் கூறுவார்கள்: எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். ஆறாவது குழந்தை சிவபாபா ஆவார். ஆகவே அவரே நிச்சயமாக மூத்த குழந்தை ஆவார்;. நீங்கள் சிவபாபாவிற்கு உரியவரானால், சிவபாபா உங்களைத் தனது குழந்தை ஆக்கி, உலக அதிபதிகள் ஆக்குவார். குழந்தைகள் வாரிசுகள் ஆகுகிறார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் சிவபாபாவின் முழுமையான வாரிசுகளாவார்கள். அவர்களுடைய முன்னைய பிறவியில் அவர்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் சிவபாபாவிடம் கொடுத்தார்கள். ஆகவே குழந்தைகள் நிச்சயமாக ஆஸ்தியைப் பெறவேண்டும். பாபா கூறினார்: வேறு எவரையும் உங்கள் வாரிசு ஆக்காது, என்னை உங்கள் வாரிசு ஆக்குங்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, இவை அனைத்தும் உங்களுடையதே. உங்களுடையவை அனைத்தும் என்னுடையதே. நான் என்னிடம் இருந்த அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்ததால், நீங்கள் முழு உலகின் இராச்சியத்தையும் எனக்குக் கொடுக்கிறீர்கள். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அர்ச்சுனனுக்கு விநாசத்தின் காட்சியும், நான்கு கரங்களுடைய ரூபமும் காட்டப்பட்டது. அர்ச்சுனன் வேறு எவருமல்ல. இவரே அக்காட்சிகளைக் கண்டார். பாருங்கள், நான் இந்த இராச்சியத்தைப் பெறுகிறேன். ஆகையால், நான் ஏன் சிவபாபாவை எனது வாரிசு ஆக்கக் கூடாது? பின்னர் அவர் என்னைத் தனது வாரிசு ஆக்குகிறார். இது ஒரு சிறந்த பேரமாகும். அவர் எவரிடமும் எதனையும் கேட்கவில்லை. இவர் அனைத்தையும் மறைமுகமாகக் கொடுத்தார். மறைமுகமான தானம் என்று இது அழைக்கப்படும். அவருக்கு என்ன நடந்தது என்பதை மற்றவர்கள் எவ்வாறு அறிவார்கள்? அவர் ஆர்வமின்மையைக் கொண்டிருந்து, ஒரு சந்நியாசி ஆகிவிட்டாரோ என்று சிலர் எண்ணினார்கள். ஆகவே இந்த புத்திரிகளும் கூறுகிறார்கள்: எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளார்கள் நான் ஒரேயொருவை எனது இன்னொரு குழந்தை ஆக்குவேன். இவர் அனைத்தையும் பாபாவிடம் கையளித்தார். அதன் மூலம் பலருக்கு சேவை செய்யப்பட்டது. பாபாவைப் பார்க்கையில், அனைவருக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டது. ஆகவே அவர்கள் தங்கள் வீடுகளைத் துறந்து, பாபாவிடம் ஓடி வந்தார்கள் அந்த நேரத்திலிருந்து குழப்பம் ஆரம்பமானது. தங்கள் வீடுகளையும், குடும்பத்தையும் விட்டு வருவதற்கான தைரியத்தை அவர்கள் காட்டினார்கள். அவர்களுக்கு நிச்சயமாக ஏகாந்தம் தேவைப்பட்டதால், ஒரு சூளை(பத்தி) உருவாக்கவேண்டியிருந்ததாகச் சமய நூல்களில் எழுதப்பட்டுள்ளது. தந்தையைத் தவிர, வேறு எவரையும் நினைவு செய்யக்கூடாது. எந்த நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ நினைவு செய்யக்கூடாது. ஏனெனில் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ள ஆத்மாக்கள் நிச்சயமாகத் தூய்மையாக்கப்பட வேண்டும். தந்தை கூறுகிறார்: குடும்பத்துடன் வீட்டில் வாழும்போது, தூய்மையாகுங்கள். இதனால் கஷ்டம் உள்ளது. அவர்கள் கூறுவதுண்டு: இந்த ஞானம் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தக்கூடியதாகும். ஏனெனில் அவர்களில் ஒருவர் தூய்மையாகி, மற்றவர் தூய்மையாகாவிட்டால். அங்கு வன்முறை இடம்பெறும். இது திடீரென வந்த ஒரு புதிய விடயமாக இருந்ததால், அந்த மக்கள் அனைவரும் அடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள். அனைவரும் திகைப்படைந்து, கேட்டார்கள்: பலர் ஓடிவிடுவதற்கு என்ன நிகழ்ந்தது? மக்கள் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் நிச்சயமாக ஏதோவொரு சக்தி உள்ளது என்று கூறினார்கள். முன்னர் ஒருபோதும் அவர்கள் தங்கள் வீட்டைவிட்டு ஓடியதில்லை. அந்த விடயங்கள் அனைத்தும் இந்த நாடகத்தில் சிவபாபாவின் தெய்வீகச் செயல்களாகும். சிலர் வெறும் கையுடனும் ஓடினார்கள். அதுவும் நாடகமாகும். அவர்கள் தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் விட்டு ஓடினார்கள். அவர்கள் வேறு எதனைப் பற்றியும் சற்றேனும் சிந்திக்கவில்லை. அனைத்தையும் செய்வதற்கு அவர்களிடம் சரீரம் மாத்திரமே இருந்தது. நினைவு யாத்திரையின் மூலமே ஆத்மாக்களைத் தூய்மையாக்க முடியும். அப்பொழுதே தூய ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியும். தூய்மையற்ற ஆத்மாக்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. அது நியதி அல்ல. முக்தி தாமத்தில் தூய ஆத்மாக்கள் மாத்திரமே தேவைப்படுகின்றனர். தூய்மையாகுவதில் பல தடைகள் உள்ளன. முன்னர் ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் செல்வதற்கு எவருக்கும் தடை இருக்கவில்லை. அவர்கள் தாங்கள் வேண்டிய இடங்களுக்குச் செல்வார்கள். இங்கு தூய்மையின் காரணமாகத் தடைகள் இருந்தன. தூய்மையாகாது நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தர்மராஜ் மூலம் தண்டனைகள் இருக்கும். மிகக் குறைவான வெகுமதியே கிடைக்கும். நீங்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றால், நீங்கள் ஓர் உயர்;ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, நீங்கள் என்னிடம் வரவேண்டும். நீங்கள் அந்தப் பழைய சரீரத்தை விட்டு, ஒரு தூய ஆத்மாவாக வீட்டிற்குத் திரும்பவேண்டும். பின்னர் ஐந்து தத்துவங்களும் புதியதாகி, சதோப்பிரதான் ஆகியதும், நீங்கள் ஒரு புதிய சதோப்பிரதான் சரீரத்தைப் பெறுவீர்கள். அனைத்தும் மாற்றமடைந்து புதியதாகும். பாபா வந்து, இந்த ஒருவரில் அமர்ந்திருப்பது போன்று, ஆத்மாக்களும் சென்று, எவ்வித சிரமமும் இன்றி, கருப்பை என்ற மாளிகையில் அமர்வார்கள். பின்னர் நேரம் வரும்போது, அவர் வெளியே வருவார். ஆத்மா தூய்மையானவர் என்பதால், எங்கும் ஒளிக்கதிர் பரவியது போன்று இருக்கும். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மாவைத் தூய்மையாக்குவதற்கு, ஏகாந்தமாக, பத்தியில் நிலைத்திருங்கள். தந்தையைத் தவிர வேறு எந்த நண்பர்களையோ, உறவினர்களையோ நினைவு செய்யாதீர்கள்.
2. உங்கள் புத்தியில் முழு ஞானத்தையும் வைத்திருப்பதுடன், பந்தனத்திலிருந்து விடுபட்டு, மற்றவர்களுக்குச் சேவை செய்யுங்கள். தந்தையுடன் உண்மையானதொரு பேரத்தைச் செய்யுங்கள். தந்தை அனைத்தையும் மறைமுகமாகக் கொடுத்தது போன்று, நீங்களும் மறைமுகமான தானத்தைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
கருவி என்ற உணர்வுடனும் பணிவுடனும் சேவை செய்வதால் மேன்மையான வெற்றியின் சொரூபம் ஆகுவீர்களாக.
சேவையாளர் என்றால் தந்தையைப் போன்று சதா கருவியாகவும் பணிவாகவும் இருப்பதாகும். பணிவைக் கொண்டிருப்பதே அதிமேன்மையான வெற்றிக்கு வழிமுறையாகும். எந்த ஒரு சேவையிலும் வெற்றியை அடைவதற்கு கருவி என்ற உணர்வை ஏற்றுக்கொள்வதுடன் பணிவும் வேண்டும். இவ்வாறு செய்வதனால் நீங்கள் சதா சேவையில் களிப்பைக்கொண்டிருபீர்கள். சேவையில் எத்தகைய களைப்பும் இருக்கமாட்டாது. எவ்விதமான சேவையைப் பெற்றுக்கொண்டாலும் இந்த இரு சிறப்பியல்புகளையும் பயன்படுத்துவதால் வெற்றியைப் பெற்று வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.சுலோகம்:
ஒரு விநாடியில் சரீரமற்றவராகுவதற்கான பயிற்சியை செய்வதனால் நீங்கள் சூரியவம்சத்தில் ஒருவர் ஆகுவீர்கள்.