29.01.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் அமைதிக் கோபுரத்திற்கும் சந்தோஷக் கோபுரத்திற்கும் செல்ல வேண்டும். அதனால், தொடர்ந்தும் நீங்கள் உங்கள் பழைய சுபாவத்தையும், நடத்தையையும் மாற்றிச் சீர்திருத்த வேண்டும்.
கேள்வி:
உங்கள் தலை (புத்தி) சதா புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கான வழி என்ன?
பதில்:
தந்தை உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களைக் கடையுங்கள். ஞானக்கடலைக் கடைவதனால், உங்கள் தலை (புத்தி) புத்துணர்ச்சி அடைகிறது. எப்பொழுதும் புத்துணர்ச்சியடைந்து இருப்பவர்களால் மற்றவர்களுக்கும் சேவையாற்ற முடியும். ஞானத்தைக் கடைவதன் மூலம் சர்வசக்திவானாகிய தந்தையோடு அவர்களுக்குத்; தொடர்பு இருப்பதால், அவர்களது (பற்றரி) மின்கலம் சதா சக்தியேற்றப்பட்டிருக்கிறது.
பாடல்:
அன்புள்ள கடவுளே, பார்வையற்றவர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்!
ஓம் சாந்தி.
இந்தப் பாடல் மனிதர்களால் பாடப்பட்டது. ஆனால், அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. அவர்களுடைய ஏனைய பிரார்த்தனைகளைப் போலவே இதுவும் ஒரு பிரார்த்தனையே. அவர்களுக்குப் பரமாத்மாவைத் தெரியாது. அவர்கள் பரமாத்மாவை அறிந்து கொள்வார்களாயின், அனைத்தையும் அறிந்துகொள்வார்கள். பரமாத்மாவைப் பற்றி அவர்கள் கூறுகின்றபொழுதிலும், அவரது வாழ்க்கைச் சரிதத்தைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. எனவே, அவர்கள் பார்வையற்றவர்கள், இல்லையா? உங்களுக்கு இப்பொழுது மூன்றாவது ஞானக்கண் கிடைத்திருப்பதால், நீங்கள் திரிநேற்றி என்று அழைக்கப்படுகிறீர்கள். உலக மக்கள் ‘திரிநேற்றி, திரிகாலதரிசி, திரிமூர்த்தி’ என்னும் வார்த்தைகளைக் கூறுகின்றபொழுதிலும், அவர்களுக்கு அவற்றின் அர்த்தம் தெரியாது. அதேபோல, விஞ்ஞானத்திற்கும் மௌனத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்று அவர்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளை அவர்கள் கேட்டாலும், அவர்களுக்கே அவற்றுக்கான பதில்கள் தெரியாது. அவர்கள் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், இதற்கு முன்னர் எப்பொழுது அமைதி நிலவியது? அமைதியை ஏற்படுத்தியது யார்? அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஆனால், அவர்கள் இந்தக் கேள்விகளைத் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே, அவற்றை அறிந்தவரும் உங்களுக்குக் கூறக்கூடியவருமான ஒருவர் இருக்க வேண்டும். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அமைதிக் கோபுரமும் சந்தோஷக் கோபுரமும் இருக்கின்றன் எல்லாவற்றுக்கும் ஒரு கோபுரம் இருக்கின்றது. அசரீரி உலகமே ஆத்மாக்களாகிய நாங்கள் வாழும் அமைதிக் கோபுரமாகும். அதுவே மௌனக்கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. அதன்பின்னர் சத்தியயுகத்தில் சந்தோஷக்கோபுரம், அமைதிக்கோபுரம், செழுமைக்கோபுரம் என்பன இருக்கின்றன. வேறு எவருமே, ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரினதும் வீடு முக்திதாமமே என்று சரியாகக் கூற மாட்டார்கள். தந்தை மாத்திரமே இந்த விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அவ்வாறான ஒருவரே ஆசிரியராக இருக்க வேண்டும். அவரே ஞானக்கோபுரம். அவர் உங்களை அமைதிக் கோபுரத்திற்கும், சந்தோஷக் கோபுரத்திற்கும் அழைத்துச் செல்கிறார். பின்னர் இது துன்ப உலகக் கோபுரமாக இருக்கின்றது. மக்கள் அனைத்திலும் வளமற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நீங்;கள் தூய்மை, அமைதி, சந்தோஷம் என்னும் உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அதுவே இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தின் மகத்துவமாகும். இது நன்மையளிக்கும் யுகம் என்று அழைக்கப்படுகிறது. கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் உள்ளது. அது சந்தோஷக் கோபுரமாகும். மற்றையது அமைதிக் கோபுரம். இது துன்பக் கோபுரமாகும். இங்கே அளவற்ற துன்பம் இருக்கிறது. இப்பொழுது சகல வகையான துன்பங்களும் ஒன்று சேர்ந்து வருகின்றன. துன்ப மலைகள் வீழவுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. பூகம்பங்கள் போன்றவை வரும்பொழுது அனைவரும் விரக்தி ஓலமிடுகிறார்கள். இன்னும் சிறிதளவு காலமே இருக்கின்றதென்று தந்தை விளங்கப்படுத்தியிருக்கிறார். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்குக் குழந்தைகளாகிய உங்களுக்குக் காலம் எடுக்கிறது. முழுமையாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அவரை ஒரு புள்ளியாகக் கருத வேண்டுமா? அவர்கள் அவரை என்னவாகக் கருத வேண்டும்? ஆ, ஆனால், ஓர் ஆத்மா எவ்வாறானவரோ பரமாத்மாவும் அவ்வாறானவரே. உங்களுக்கு ஓர் ஆத்மா எவ்வாறானவர் என்பது தெரியும். ஆத்மா ஓர் அதிர்ஷ்ட நட்சத்திரம்; ஆத்மா மிக மிகச் சூட்சுமமானவர். இந்தக் கண்களால் நீங்கள் ஆத்மாவைக் காண முடியாது. தந்தை இந்த விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இவ் விடயங்களைக் கடைவதனால், உங்கள் புத்தி புத்துணர்ச்சி அடைகிறது. நீங்கள் எங்கே சென்றாலும், புதிய உலகில் அமைதி, சந்தோஷம், தூய்மை ஆகிய கோபுரங்கள் இருக்கின்றன என்று விளங்கப்படுத்துங்கள். தந்தை உங்கள் பழைய சுபாவத்தையும் நடத்தையையும் மாற்றி, உங்களைப் புதிய உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். மக்கள் இதைப் பாடினாலும், வேதங்கள், சமயநூல்கள், கீதை போன்றவற்றைக் கற்றாலும், எதையுமே அவர்கள் புரிந்துகொள்வதி;ல்லை. அவர்கள் ஏணியில் தொடர்ந்தும் கீழேயே இறங்குகிறார்கள். அவர்கள் தங்களைச் சமயநூல்களின் அதிகாரிகளாகக் கருதினாலும், அவர்கள் கீழே இறங்கிச் செல்ல வேண்டிள்ளது. முதலில் சகல ஆத்மாக்களும் சதோபிரதானாக இருக்கிறார்கள். பின்னர் அவர்களது மின்கலங்களில் (பற்றரி) படிப்படியாகக் சக்தி குறைகின்றது. இந்த நேரத்தில் அனைவருடைய மின்கலங்களும் முற்றிலும் சக்தியிழந்து போயிருக்கின்றன. இப்பொழுது மீண்டும் மின்கலங்களிற்குச் சக்தியேற்றப்படுகிறது. தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள்! தந்தையே சர்வசக்திவான். அவரை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, மின்கலம் சக்தியால் நிறைகின்றது. உங்கள் மின்கலத்திற்குச் சக்தியேற்றப்படுவதை நீங்கள் இப்பொழுது உணர்கிறீர்கள். சிலரது மின்கலங்களிற்குச் சக்தியேற்ற முடியாதுள்ளது. அவர்கள் சீர்திருந்துவதற்குப் பதிலாக மேலும் சீர்கெடுகின்றார்கள். தந்தைக்கு அவர்கள் சத்தியமும் செய்கின்றார்கள்: பாபா, நான் ஒருபொழுதும் விகாரத்தில் ஈடுபட மாட்டேன். நான் உங்களிடமிருந்து நிச்சயமாக 21 பிறவிகளுக்கான என் ஆஸ்தியைப் பெறுவேன். இருப்பினும், அவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்! தந்தை கூறுகிறார்: காம விகாரத்தை வெல்வதனால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். அதன்பின்னர் நீங்கள் விகாரத்தில் ஈடுபடுவீர்களானால், சகல விவேகமும் இழக்கப்பட்டு விடும். காமமே கொடிய எதிரி. ஒருவரையொருவர் பார்ப்பதனால் காமத்தீ ஏற்படுகின்றது. தந்தை கூறுகிறார்: காமச்சிதையில் அமர்ந்திருப்பதால், நீங்கள் அவலட்சணமானவர்கள் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது நான் உங்களை அழகானவர்கள் ஆக்குகிறேன். தந்தை மாத்திரமே இவ் விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இந்தக் கல்வியால் உங்கள் புத்தி திறந்து கொள்கின்றது. மக்கள் விருட்சத்தைப் பற்றியும் பேசுகிறார்கள். இது கல்ப விருட்சமாகும். இதுவே மனித உலகின் பல்வகை விருட்சமாகும். இது தலைகீழான விருட்சம் என அழைக்கப்படுகின்றது. பல்வேறு சமயங்கள் இருக்கின்றன. மில்லியன் கணக்கான ஆத்மாக்கள் அனைவரும் அழிவற்ற பாகங்களைப் பெற்றுள்ளார்கள். இருவருக்கு ஒரே பாகம் இருக்க முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாவது ஞானக்கண்ணைப் பெற்றுள்ளீர்கள். எத்தனை ஆத்மாக்கள் இருக்கிறார்கள் என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அது, நூலில் பொம்மை மீன் தொங்குவதைப் போல் இருக்கும்;; அவை நூல் மூலம் கீழ் இறங்குகின்றன. இதுவும் அவ்வாறே இருக்கின்றது. நாங்களும் நாடகம் எனும் நூலில் கட்டப்பட்டுள்ளோம். நாங்கள் இவ்விதமாக இறங்கி வருகிறோம், இப்பொழுது சக்கரமும் முடிவுக்கு வந்து விட்டது. நாங்கள் திரும்பவும் மேலே செல்ல வேண்டும். இப்Nபொழுதே குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் புரிந்துணர்வைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்கள் மேலிருந்து இறங்கி வருகின்றனர். அவர்கள் இங்கே வரிசைக்கிரமமாகச் வந்து சேர்கிறார்கள். நீங்கள் இந்த நாடகத்தின் நடிகர்கள். படைப்பவரும், இயக்குனரும், பிரதான நடிகருமானவர் இருக்கிறார். சிவபாபாவே பிரதானமானவர். ஏனைய நடிகர்கள் யார்? பிரம்மா, விஷ்ணு, சங்கரர். பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பல விக்கிரகங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அவற்றின் அர்த்தம் தெரியாது. அவர்கள் நூறாயிரக்கணக்கான வருடங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இப்பொழுது தந்தை வந்து உங்களுக்குச் சகல ஞானத்தையும் கொடுக்கின்றார். சத்தியயுகத்தில் உங்களுக்கு இந்த ஞானம் இருக்காது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இங்கே செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதைப் போலவே, அங்கேயும் தூய்மை, அமைதி, சந்தோஷம் உள்ள இராச்சியம் தொடர்கிறது. தந்தை அற்புதமானவர்! அவரும் அத்தகைய சின்னஞ்சிறிய புள்ளி வடிவானவரே! நீங்கள் ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். அதேபோல், இவரது ஆத்மாவும் தந்தையிடமிருந்து சகல ஞானத்தையும் பெற்றுக் கொள்கிறார். பாபா எவ்வகையிலும் அளவில் பெரியவராக இருக்கப் போவதில்லை. அவர் புள்ளி வடிவானவர். ஆத்மாக்களாகிய நீங்களும் புள்ளிகளே. ஆத்மாக்களாகிய உங்களால் ஞானம் அனைத்தும் கிரகிக்கப்படுகிறது. ஒரு கல்பத்தின் பின்னர் தந்தை மீண்டும் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பார். இது பதிவு செய்யப்பட்டு, மீண்டும் மீண்டும் இயக்கப்படுகின்ற, ஒரு பதிவுநாடா போன்றது. ஆத்மாவுக்குள் முழுப் பாகமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிசயமானவை இயற்கை என்று அழைக்கப்படுகின்றன. இந்த அநாதியான நாடகத்தில் ஒரு நபரேனும் தனது பாகத்திலிருந்து விடுதலை பெற முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாகத்தை நடித்தேயாக வேண்டும். இவை மிக அற்புதமான விடயங்கள். அவற்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு, கிரகிக்கும்பொழுது, உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர்கின்றது. நீங்கள் அத்தகைய புலமைப்பரிசிலைப் பெறுகிறீர்கள். எனவே, நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் மற்றவர்களையும் உங்களுக்குச் சமமானவர்களாக்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஆசிரியர்கள். ஓர் ஆசிரியர் உங்களுக்குக் கற்பித்து, உங்களையும் தன்னைப் போல் ஓர் ஆசிரியராக ஆக்குவார். நீங்களும் ஒரு குருவாக வேண்டும் என்பதல்ல் இல்லை. நீங்கள் இராஜயோகம் கற்பிப்பதால், நீங்கள் ஆசிரியர்கள். பின்னர் வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்;கள். நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்கிறீர்கள். அம்மக்கள் இதை அறிந்து கொள்ளவும் இல்லை, அவர்களால் சற்கதியை அருளவும் முடியாது. அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஒரேயொரு தந்தையே. அவரே விடுதலை செய்பவரும் வழிகாட்டியும் ஆவார். அங்கேயிருந்து நீங்கள் செல்லும்பொழுது, அந்த நேரத்தில் தந்தை உங்கள் வழிகாட்டி ஆகுவதில்லை. இப்பொழுது தான் தந்தை உங்கள் வழிகாட்டி ஆகுகின்றார். உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் கீழிறங்கி வந்ததும், உங்கள் வீட்டையும் மறந்து விடுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் பாண்டவர்களான, வழிகாட்டிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் பாதையைக் காட்டுகிறீர்கள்: நீங்கள் சரீரமற்றவர்களாகுவீர்களாக. உங்கள் பெயரும் பாண்டவ சேனை என்பதேயாகும். நீங்கள் சரீரதாரிகள். நீங்கள் தனியாக இருக்கும்பொழுது, உங்களை ஒரு சேனை என்று அழைக்க முடியாது. சரீரம் ஒன்றில் இருந்து கொண்டே மாயையை நீங்கள் வெல்லும்பொழுதே, சேனை என்று அழைக்கப்படுகிறீர்கள். மக்கள் யுத்தம் போன்ற விடயங்களைப் பற்றி எழுதியுள்ளார்கள். இவை எல்லையற்ற விடயங்கள். அம்மக்;கள் மாநாடுகள் போன்றவற்றை நடாத்துவதுடன், சமஸ்கிருதக் கல்லூரிகள் போன்றவற்றையும் திறக்கிறார்கள். அவர்கள் அதிகளவு பணத்தைச் செலவிடுகிறார்கள். பணத்தை அதிகளவு செலவிட்டதால், ஏறத்தாழ வெறுமையானவர்கள் ஆகிவிட்டார்கள். தங்கம், வெள்ளி, வைரங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. பின்னர் உங்களுக்காக அனைத்தும் புதியதாக வெளிப்படும். எனவே, நடந்து செல்லும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்ய வேண்டும். உங்கள் பாகங்கள் சதா காலமும் தொடர்கின்றன் அவை ஒருபொழுதும் முடிவடையாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களுக்கு உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றியே தெரியாது. முதலில் வருபவராகிய இவருக்கும் 84 பிறவிகளைப் பற்றிய கணக்கை அவர் கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். உங்களிடம் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷத்தின் கோபுரங்கள் இருக்கும். எனவே, உங்களுக்கு அதிகளவு போதை இருக்க வேண்டும். தந்தை எங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். எவ்வளவுக்கு நீங்கள் நெருங்கி வருகிறீர்களோ அவ்வளவுக்கு அதிகச் சிரமங்கள் ஏற்படும். விருட்சம் வளர வேண்டும். விருட்சமொன்று பலவீனமாக இருக்கும்பொழுது, ஒரு புயலில் இலகுவில் வீழ்ந்து விடுகிறது. இது நடைபெறவே வேண்டும். உங்கள் இலக்கினதும் குறிக்கோளினதும் படம் உங்களுக்கு முன்னாலேயே இருக்கிறது. வேறெந்தப் படங்களையும் நீங்கள் வைத்துக் கொள்ள முடியாது. பக்தி மார்க்கத்தில் மக்கள் பல்வேறு படங்களை வைத்திருக்கிறார்கள். ஞான மார்க்கத்தில் ஒரேயொருவரே இருக்கிறார். உங்கள் புத்தியில் ஞானம் இருக்கிறது. ஆனால், ஒரு புள்ளியை எவ்வாறு நீங்கள் புகைப்படம் பிடிக்க முடியும்? ஆத்மா ஒரு நட்சத்திரம். இவையும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயங்கள். ஓர் ஆத்மாவை இக் கண்களால் காண முடியாது. பலரும் கூறுகிறார்கள்: பாபா, எனக்கு ஒரு காட்சி கிடைக்க வேண்டும்; நான் வைகுந்தத்தைப் பார்க்க விரும்புகிறேன். எவ்வாறாயினும், வெறுமனே அதைப் பார்ப்பதால் நீங்கள் அதன் அதிபதிகளாகி விட முடியாது. இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்று வி;ட்டார் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் சுவர்க்கம் எங்கே இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. சுவர்க்கத்திற்குச் சென்று வந்த ஆத்மாக்களால் தான் அவ்வாறு கூற முடியும். ஆத்மா அனைத்தையும் நினைவுகூருகிறார். நீங்கள் அதிமேலான அந்தஸ்தைப் பெறும்வகையில் அதிமேலான தந்தை உங்களுக்கு இப்பொழுது கற்பிக்கின்றார். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, நிச்சயமாகச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணர் ஆகுவீர்கள். அமைதி வேண்டும் என்று கேட்பவர்களுக்கு விளங்கப்படுத்துவது உங்கள் கடமையாகும். நீங்கள் கூறுவது மிகச்சரியாக இருக்கிறது என்று பலரும் புரிந்துகொள்வார்;கள். அந்தக் காலமும் வரும். பீஷ்ம பிதாமகர் போன்றோர் குமாரிகளின் ஞான அம்புகளால் தாக்கப்பட்டார் என்று எழுதப்பட்டுள்ளது. அர்ச்சுனர் அம்பெய்து கங்கை தோன்றியது என்பதல்ல. இவ்வாறானவற்றைக் கேட்டு விட்டு, அவர்கள் அங்கே கங்கை தோன்றியது என்று கூறுகிறார்கள். அவர்கள் கௌமுக்கையும் (பசுவின் வாய்) உருவாக்கியுள்ளனர். உங்கள் ஞாபகார்த்தமும் இங்கே இருப்பதைக் குழந்தைகளாகிய உங்களால் பார்க்க முடிகின்றது. அது உயிரற்ற தில்வாலா, இது உயிருள்ளதாகும். அவர்கள் மேலே கூரையில் வைகுந்தத்தைக் காட்டியிருக்கிறார்கள். கீழே அவர்கள் தபஸ்யா செய்கிறார்கள். மேலே இராச்சியத்தின் உருவங்கள் காணப்படுகின்றன. ஆகவே சுவர்க்கம் மேலே இருக்கிறதென்று மக்கள் நம்புகிறார்கள். குண்டுகளை உற்பத்தி செய்பவர்கள் கூட தாங்கள் அவற்றைத் தங்கள் சொந்த அழிவுக்காகவே தயாரிப்பதைப் புரிந்துகொள்கிறார்கள். இதைச் செய்தால், நிச்சயமாக விநாசம் இடம்பெறும் என்று அவர்கள் கூறுகிறார்கள். மகா யுத்தத்திலும் இதேவிதமாக இடம்பெற்றதாக எழுதப்பட்டும் இருக்கிறது. அனைவரும் அழிக்கப்பட்டார்கள். சத்தியயுகத்தில் ஒரேயொரு தர்மமே இருக்கிறது. எனவே, நிச்சயமாக ஏனைய அனைவரும் அழிக்கப்படுவார்கள். பக்தி செய்வதால் நாடகத் திட்டத்திற்கேற்ப, அவர்கள் தொடர்ந்தும் கீழே வருகிறார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கும் தெரியும். உண்மையில், இங்கே ஆசீர்வாதம் பெறுதல் போன்ற கேள்விக்கே இடமில்லை. நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருப்பதே இடம்பெறுகின்றது. எதிர்பாராத ஏதேனும் இடம்பெற்றால், அதுவே இறைவன் சித்தம் என்று கூறுகிறார்கள். நீங்கள் அவ்வாறு கூற மாட்டீர்கள். அது நாடகத்தின் நியதி என்று தான் நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் அதைக் கடவுள் சித்தம் என்று கூற மாட்டீர்கள். கடவுளுக்கும் நாடகத்தில் ஒரு பாகம் இருக்கிறது. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதைத் தந்தையால் மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். தந்தையொருவரே ஞானம் நிறைந்தவர். அனைவரின் இதயத்திலும் என்ன இருக்கிறது என அவருக்குத் தெரியும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆயினும், நாங்களே செய்வது அனைத்துக்கும் தண்டனை பெற்றுக் கொள்பவர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களைத் தண்டிக்க மாட்டார். இது இயல்பாகவே ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுத் தொடர்ந்து செல்கின்ற நாடகம். தந்தை மாத்திரமே உங்களுக்கு அதன் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை விளங்கப்படுத்துபவர். பின்னர் நீங்கள் அதனை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இறுதியில் வேறு எதையுமே நீங்கள் நினைவுசெய்யாத வகையில் உங்கள் ஸ்திதி இருக்க வேண்டும்; உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள்: இதுவே கர்மாதீத ஸ்திதி என்று அழைக்கப்படுகிறது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. புலமைப்பரிசிலைப் பெறுவதற்கு, பெரும் முயற்சி செய்யுங்கள். ஓர் ஆசிரியராகி, மற்றவர்களுக்கும் இராஜயோகத்தைக் கற்பியுங்கள். ஒரு வழிகாட்டியாகி, அனைவருக்கும் வீட்டுக்கான பாதையைக் காட்டும் சேவையைச் செய்யுங்கள்.2. சர்வசக்திவானாகிய தந்தையின் நினைவால் உங்கள் மின்கலத்துக்குச் சக்தியேற்றுங்கள். தந்தைக்கு ஒரு சத்தியம் செய்தபின்னர், ஒருபொழுதும் காமத்தால் தோற்கடிக்கப்படாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பிரபுவின் சகவாசத்தைச் சதா வைத்திருப்பதால், இணைந்த ரூபத்தை அனுபவம் செய்கின்ற, ஒரு விசேட நடிகர் ஆவீர்களாக.
குழந்தைகள் தங்கள் இதயங்களிலிருந்து “பாபா” என்று கூறும்பொழுது, இதயங்களுக்குச் சௌகரியம் அளிபப்பவரான, திலாராம் பிரசன்னமாகுகின்றார். இதனாலேயே பிரபு பிரசன்னமாகி உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், விசேடமான ஆத்மாக்கள் இணைந்துள்ளார்கள். மக்கள் கூறுகின்றார்கள்: நான் எங்கு பார்த்தாலும் உங்களை மாத்திரமே பார்க்கின்றேன். குழந்தைகளாகிய நீங்களும் கூறுகின்றீர்கள்: நாங்கள் என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் தந்தை எங்களுடன் இருக்கின்றார். அவர் கரன்கரவன்கார் (ஒன்றைச் செய்பவரும், அதைப் பிறர் செய்யத் தூண்டுபவரும்) என அழைக்கப்படுகின்றார். எனவே கரன்காரும் (ஒன்றைச் செய்பவர்) கரவன்காரும் (தூண்டுபவர்) இணைந்துள்ளனர். இவ் விழிப்புணர்வுடன் தங்கள் பாகங்களை நடிப்பவர்கள் விசேட நடிகர்கள் ஆகுகின்றனர்.
சுலோகம்:
உங்களை ஒரு விருந்தாளியாகக் கருதி, இப் பழைய உலகில் தங்கினால், “வெளியே செல்லவும்” என்று உங்களால் பழைய சம்ஸ்காரங்களுக்கும் எண்ணங்களுக்கும் கூற இயலும்.
தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
நேரத்திற்கேற்ப, தந்தை பிரம்மாவைப் போன்று, இப்பொழுது சதா ஆட்ட அசைக்க முடியாதவர்களாகவும், சகல பொக்கிஷங்களாலும் நிறைந்தவர்களாகவும் ஆகுங்கள். சிறிது குழப்பம் இருந்தாலும், உங்களால் சகல பொக்கிஷங்களையும் அனுபவம் செய்ய முடியாது. நீங்கள் தந்தையிடமிருந்து பல்வேறு பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள். சதா ஆட்ட, அசைக்க முடியாதவராக இருப்பதே, இப் பொக்கிஷங்களை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருப்பதற்கான வழி ஆகும். அசைக்க முடியாதவர்களாக இருப்பதால், நீங்கள் சதா தொடர்ந்தும் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள்.