06.10.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     18.02.85     Om Shanti     Madhuban


சங்கமயுகமே உங்களின் சரீரம், மனம், செல்வம், நேரத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதற்கான யுகம் ஆகும்.


இன்று, உலக உபகாரியான தந்தை தனது ஒத்துழைக்கும் குழந்தைகளைப் பார்க்கிறார். தந்தையை வெளிப்படுத்துவதற்கான ஆழ்ந்த விருப்பம் ஒவ்வொரு குழந்தையின் இதயத்திலும் உள்ளது. அனைவருக்கும் இந்த ஒரு மேன்மையான எண்ணம் உள்ளது. அனைவரும் இந்தப் பணியில் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் ஈடுபட்டுள்ளார்கள். ஒரேயொரு தந்தையின் மேலுள்ள அன்பால், அவர்கள் சேவை செய்வதையும் விரும்புகிறார்கள். இரவு பகலாக, தமது பௌதீகச் செயல்களிலும் தமது கனவுகளிலும் அவர்கள் தந்தையையும் சேவையையும் மட்டுமே காண்கிறார்கள். தந்தை சேவை செய்வதை விரும்புகிறார். இதனாலேயே, அன்பான, ஒத்துழைக்கும் குழந்தைகளும் சேவை செய்வதை விரும்புகிறார்கள். இதுவே அத்தாட்சி. அதாவது, அன்பின் நடைமுறை வடிவம் ஆகும். இத்தகைய ஒத்துழைக்கும் குழந்தைகளைக் காண்பதில் தந்தை களிப்படைகிறார். நீங்கள் உங்களின் சரீரங்கள், மனங்கள், செல்வம் மற்றும் நேரத்தைத் தகுதிவாய்ந்த முறையில் மிகுந்த அன்புடன் பயன்படுத்துகிறீர்கள். பாவக்கணக்கிற்குள் செல்வதை நீங்கள் புண்ணியக் கணக்காக மாற்றுகிறீர்கள். அத்துடன் உங்களின் நிகழ்காலத்தை மேன்மையாக்குவதுடன், உங்களின் எதிர்காலத்திற்காகவும் சேமிக்கிறீர்கள். சங்கமயுகமே ஒன்றுக்காகப் பலமில்லியன்களைச் சேமிப்பதற்கான யுகம் ஆகும். உங்களின் சரீரத்தைச் சேவைக்காகப் பயன்படுத்துவதன் மூலம் 21 பிறவிகளுக்குச் சம்பூரணமாக நோயிலிருந்து விடுபட்டுள்ள சரீரத்தைப் பெறுவதற்கான யுகம் இதுவேயாகும். உங்களின் சரீரம் பலவீனமாக இருக்கக்கூடும். அதில் நோய் இருக்கலாம். உங்களால் வார்த்தைகளால் அல்லது செயல்களால் சேவை செய்ய முடியாதிருக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் உங்களால் இறுதிக்கணம் வரை உங்களின் மனதால் சேவை செய்ய முடியும். உங்களின் அதீந்திரிய சுகத்தினதும் அமைதியினதும் சக்தியை உங்களின் முகத்தாலும் கண்களாலும் வெளிப்படுத்த முடியும். அதன் மூலம், உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் உங்களைப் பார்ப்பவர்களும், இவர் அற்புதமானதொரு நோயாளி என்று கூறுவார்கள். நோயாளியைப் பார்க்கும்போது மருத்துவர்களும் மலர்ச்சி அடைவார்கள். பொதுவாக, மருத்துவர்களே நோயாளிகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பார்கள். அத்துடன் மற்றவர்களும் நோயாளிகளுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்படி செய்வார்கள். ஆனால், அவர்கள் கொடுப்பதற்குப் பதிலாக, அதை அவர்கள் பெறுவதை அனுபவம் செய்ய வேண்டும். உங்களில் எவரேனும் எந்தளவிற்கு நோயுற்றிருந்தாலும், உங்களின் தெய்வீகப் புத்தி ஆரோக்கியமாக இருந்தால், உங்களால் இறுதிக்கணம் வரை சேவை செய்ய முடியும். ஏனெனில், அந்தச் சரீரத்தால் செய்த சேவையின் பலனை நீங்கள் 21 பிறவிகளுக்குப் பெறுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களின் சரீரத்தால் செய்வதைப் போன்று, உங்களின் மனதாலும் அமைதி சொரூபம் ஆகுங்கள். ஒவ்வோர் எண்ணத்திலும் சதா சக்திசாலி ஆகுங்கள். நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் அருள்பவர் ஆகுவதன் மூலம், உங்களால் தொடர்ந்து சந்தோஷம் மற்றும் அமைதியின் சக்திக்கதிர்களைச் சூழலில் பரப்ப முடியும். உங்களின் படைப்பான சூரியன், எங்கும் தனது ஒளிக்கதிர்களைப் பரப்பும்போது, மாஸ்ரர் படைப்பவர்களும் மாஸ்ரர் சர்வசக்திவான்களும் சட்டத்தை உருவாக்குபவர்களும் ஆசீர்வாதங்களையும் பாக்கியத்தையும் அருள்பவர்களுமான உங்களால் பேறுகளின் கதிர்களைப் பரப்ப முடியாதா? நீங்கள் ஓரிடத்தில் இருந்தாலும் உங்களின் எண்ணத்தின் சக்தியால், அதாவது, உங்களின் மனதால், உங்களின் அதிர்வலைகளால் உங்களால் எங்கும் ஒரு சூழலை உருவாக்க முடியும். இந்தப் பிறவியில் குறுகிய காலத்திற்கு உங்களின் மனதால் இந்த வகையான சேவையைச் செய்வதன் மூலம், உங்களின் மனம் எப்போதும் அமைதியாக, சந்தோஷமான நிலையில், களிப்பான நிலையில் 21 பிறவிகளுக்கு நிலைத்திருக்கும். அதன்பின்னர், அடுத்த அரைக்கல்பத்தில், பக்தியின் மூலமும் உங்களின் விக்கிரகங்களின் மூலமும் மன அமைதியைக் கொடுப்பதற்கு நீங்கள் கருவிகள் ஆகுவீர்கள். அந்த விக்கிரகங்களும் அதிகளவு அமைதியையும் சக்தியையும் வழங்குவதாகவே இருக்கும். எனவே, ஒரு பிறவியில் உங்களின் மனதால் சேவை செய்வதன் மூலம், நீங்கள் உயிர்வாழும் ரூபத்தில் அல்லது உங்களின் விக்கிரகங்களினூடாகக் கல்பம் முழுவதும் அமைதி சொரூபம் ஆகுவீர்கள்.

அதேபோன்று, தமது செல்வத்தால் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகுபவர்கள், 21 பிறவிகளுக்கு எண்ணற்ற செல்வத்தின் அதிபதிகள் ஆகுவார்கள். அத்துடன், இத்தகைய ஆத்மாக்கள் துவாபர யுகத்தில் இருந்து இன்றுவரை ஒருபோதும் செல்வத்தை யாசிப்பவர்கள் ஆகமாட்டார்கள். அவர்கள் 21 பிறவிகளுக்குத் தமது இராச்சிய பாக்கியத்தைக் கோருவார்கள். அந்தச் செல்வம் தூசு போன்றே கருதப்படும். அதாவது, அவர்கள் அவற்றில் அதிகளவை மிக இலகுவாகப் பெறுவார்கள். உங்களின் பிரஜைகளின் பிரஜைகளும், அதாவது, உங்களின் பிரஜைகளுக்குச் சேவை செய்பவர்களும் எல்லையற்ற செல்வத்தின் அதிபதிகள் ஆகுவார்கள். அவர்களும் தமது 63 பிறவிகளில் ஒன்றிலேனும் செல்வத்தை யாசிப்பவர்களாக ஒருபோதும் ஆகமாட்டார்கள். அவர்கள் மிகுந்த களிப்புடன் ரொட்டியும் பருப்பும் உண்பவர்கள் ஆகுவார்கள். அவர்கள் ஒருபோதும் ரொட்டிக்காக(பாண்) யாசிக்க மாட்டார்கள். எனவே, இந்த ஒரு பிறவியில் நீங்கள் உங்களின் செல்வத்தை அருள்பவருக்காகப் பயன்படுத்தினால், அருள்பவர் என்ன செய்வார்? அவர் அதைச் சேவைக்காகப் பயன்படுத்துவார். நீங்கள் அதைத் தந்தையின் பண்டாரியில் (பாபாவின் பெட்டி) போடுகிறீர்கள். தந்தை அதைச் சேவைக்காகப் பயன்படுத்துகிறார். எனவே, அந்தச் செல்வத்தைச் சேவைக்காக அல்லது அருள்பவருக்காகப் பயன்படுத்துதல் என்றால் கல்பம் முழுவதற்கும் யாசகராக இருப்பதில் இருந்து பாதுகாக்கப்படுதல் என்று அர்த்தம். இப்போது எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் அதைப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களால் துவாபர, கலியுகங்களில் சௌகரியமாக உண்ண முடியும். எனவே, நீங்கள் உங்களின் சரீரம், மனம், செல்வம், நேரத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள்.

தமது நேரத்தைச் சேவைக்காகப் பயன்படுத்துபவர்கள், உலகச் சக்கரத்தின் அதிமேன்மையான நேரமான சத்தியயுகத்தில் முதலில் வருவார்கள். அவர்கள் இன்றும் பக்தர்கள் தொடர்ந்து புகழ் பாடுகின்ற காலப்பகுதியில், சதோபிரதான் யுகத்தில் வருவார்கள். அவர்கள் சுவர்க்கத்தின் புகழைப் பாடுகிறார்கள், அல்லவா? எனவே, அவர்கள் சதோபிரதான் பகுதியில் வரும்போது, 1-1-1 என்ற நேரத்தில் வருவார்கள். அதாவது, அவர்கள் சத்தியயுகத்தின் முதல் பிறவியில் வருவார்கள். அவர்கள் இத்தகைய மேன்மையான வேளைக்கான உரிமையைக் கோரிக் கொள்வார்கள். அவர்களே முதலாம் இலக்க ஆத்மாக்களுடன் தமது வாழ்க்கைகளைக் கழிப்பவர்கள் ஆகுவார்கள். அவர்கள் அந்த ஆத்மாக்களுடன் படிப்பவர்களாகவும் விளையாடுபவர்களாகவும் பயணம் செய்பவர்களாகவும் இருப்பார்கள். சங்கமயுகத்தில் தமது நேரத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துபவர்கள், முழுமையான, தங்க, அழகான நேரத்தின் உரிமையை மேன்மையான பலனாகப் பெறுவார்கள். உங்களின் நேரத்தைப் பயன்படுத்துவதில் நீங்கள் கவனக்குறைவானவர் ஆகினால், முதலாம் இலக்க ஆத்மாவுடன் வருவதற்குப் பதிலாக, அதாவது, ஸ்ரீ கிருஷ்ணருடன் சுவர்க்கத்தில் முதல் வருடத்தில் வருவதற்குப் பதிலாக, நீங்கள் வரிசைக்கிரமமாகப் பிந்தியே வருவீர்கள். இது நீங்கள் கொடுக்கும் நேரத்தின் முக்கியத்துவம் ஆகும். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்கள்? எதைப் பெறுகிறீர்கள்? ஆகவே, எல்லா வேளையும் நான்கு விடயங்களையும் சோதித்துப் பாருங்கள்: நீங்கள் நான்கையும் - உங்களின் சரீரம்,மனம்,செல்வம்,நேரம் - உங்களால் முடிந்தளவிற்குப் பயன்படுத்துகிறீர்களா? உண்மையில் உங்களால் முடிந்தளவிற்கு நீங்கள் இந்த நான்கையும் பயன்படுத்தாமல் இருப்பதில்லை, அல்லவா? உங்களின் கொள்ளளவிற்கேற்ப அவற்றை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம், உங்களின் பேறும் கொள்ளளவிற்கேற்பவே அமையும். அது நிறையாது. பிராமண ஆத்மாக்களான நீங்கள் அனைவருக்கும் என்ன செய்தியைக் கொடுக்கிறீர்கள்? ‘சம்பூரணமான சந்தோஷமும் அமைதியும் உங்களின் பிறப்புரிமை’. உங்களின் கொள்ளவிற்கேற்ப அது உங்களின் பிறப்புரிமை என நீங்கள் சொல்ல மாட்டீர்கள். அது உங்களின் முழுமையான உரிமை என்றே நீங்கள் கூறுவீர்கள். உங்களுக்கு முழு உரிமை இருப்பதனால், முழுமையான பேறுகளைப் பெறுவதே உண்மையில் பிராமண வாழ்க்கை வாழ்தல் எனப்படும். அது நிறைந்திருக்காவிட்டால், நீங்கள் ஒரு போராளியே. சந்திரவம்சம் அரைவாசியிலேயே வரும். எனவே, உங்களின் கொள்ளவிற்கேற்ப என்றால் நிறையாமல் இருத்தல் என்று அர்த்தம். ஆனால் பிராமண வாழ்க்கை என்றால் ஒவ்வொரு விடயத்திலும் நிறைந்தவராக இருத்தல் என்று அர்த்தம். எனவே, உங்களுக்குப் புரிகிறதா? குழந்தைகள் கொடுக்கும் ஒத்துழைப்பின் அட்டவணைகளை பாப்தாதா பார்த்தார். நீங்கள் அனைவரும் ஒத்துழைக்கிறீர்கள். நீங்கள் ஒத்துழைக்கும் போதே, இலகு யோகிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒத்துழைக்கும், இலகு யோகிகள், மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சகல உரிமைகளும் கொண்டதோர் ஆத்மாவாக மாற்றுகிறார். அவ்வாறிருக்கும்போது, நீங்கள் ஏன் கொள்ளவிற்கேற்ற ஒருவர் ஆகுகிறீர்கள்? அல்லது, யாராவது ஒருவர் அவ்வாறு ஆகுவார் என நீங்கள் நினைக்கிறீர்களா? பலர் அவ்வாறு ஆகப் போகிறார்கள். நீங்கள் அவ்வாறானவர் இல்லையா? இந்த நேரமே உங்களின் முழுமையான உரிமைகளையும் கோருவதற்கான நேரம் ஆகும். இன்னமும் ‘மிகவும் தாமதமாகிவிட்டது’ என்ற பலகை போடப்படவில்லை என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பிந்தி வருபவர்கள், அதாவது, பிந்தி வந்தவர்களாலும் முன்னேறிச் செல்ல முடியும். இதனாலேயே, இப்போதும் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது. ‘மிகவும் தாமதமாகிவிட்டது’ என்ற பலகை போடப்பட்ட பின்னர், பொன்னான வாய்ப்பிற்குப் பதிலாக, நீங்கள் வெள்ளி வாய்ப்பையே பெறுவீர்கள். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்களே பொன்னான வாய்ப்பைப் பெறுபவர்கள், அப்படியல்லவா? நீங்கள் சத்தியயுகத்திற்குள் வராவிட்டால், பிராமணர் ஆகிய பின்னர் நீங்கள் என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்? இதனாலேயே, அன்பான குழந்தைகளான உங்களுக்கு, தந்தையின் அன்பால், தற்சமயம் ஒன்றுக்குப் பதிலாகப் பலமில்லியன் மடங்கினைப் பெறுகின்ற வாய்ப்பு உள்ளது என பாப்தாதா இப்போதும் நினைவூட்டுகிறார். தற்சமயம், நீங்கள் கொடுக்கும் அளவிற்கே பெறுவீர்கள் என்பதல்ல. இது ஒன்றுக்குப் பலமில்லியன் மடங்கு ஆகும். பின்னர், நீங்கள் செய்யும் அளவிற்கே பெறுவீர்கள் என்ற கணக்கே இருக்கும். எவ்வாறாயினும், இந்த வேளையில், கள்ளங்கபடமற்ற பிரபுவின் நிரம்பிவழியும் பொக்கிஷக் களஞ்சியம் திறந்துள்ளது. உங்களில் எத்தனை பேர் இருந்தாலும், நீங்கள் விரும்பிய அளவை எடுத்துக் கொள்ள முடியும். பின்னர், சத்தியயுகத்தின் முதலாம் இலக்க ஆசனம் வெறுமையாக இல்லை என்றே உங்களுக்குச் சொல்லப்படும். ஆகவே, தந்தையைப் போன்று நிரம்பியவர்கள் ஆகுங்கள். முக்கியத்துவத்தை உணர்ந்து, மகான் ஆகுங்கள். இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் பொன்னான வாய்ப்பைப் பெறுபவர்கள், அல்லவா? நீங்கள் மிகுந்த அன்புடன் முன்னேறுவதனாலும், நீங்கள் அன்பாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருப்பதாலும், முழுமையான இலக்கைக் கொண்டிருப்பதன் மூலம் அனைத்திலும் முழுமையைக் கிரகிக்கும் இலக்கைக் கொண்டிருங்கள். உங்களிடம் அன்பு இல்லாவிட்டால், நீங்கள் எவ்வாறு இங்கு வந்திருப்பீர்கள்? இங்கு நீங்கள் பறந்து வந்ததைப் போன்று, சதா பறக்கும் ஸ்திதியில் பறந்து கொண்டே இருங்கள். உங்களின் சரீரத்தால் பறக்கும் பயிற்சி உங்களுக்கு இருக்கிறதல்லவா? ஆத்மாவும் சதா பறந்து கொண்டே இருக்கட்டும். இது பாப்தாதாவின் அன்பாகும். அச்சா.

சதா வெற்றி சொரூபங்களாக இருப்பதுடன் தமது எண்ணங்களையும் நேரத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துபவர்களுக்கும், ஒவ்வொரு செயலாலும் சேவை செய்வதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பவர்களுக்கும், தங்களைச் சம்பூரணமாக்கித் தமது முழுமையான உரிமைகளை அடைபவர்களுக்கும், தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொன்னான வாய்ப்பை எப்போதும் எடுத்துக் கொள்பவர்களுக்கும், தந்தையைப் பின்பற்றும் இத்தகைய தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கும் முதலாம் இலக்கக் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா காத்மண்டுவில் இருந்து வந்த ஒரு குழுவையும் இரட்டை வெளிநாட்டவர்களையும் சந்திக்கிறார்:
நீங்கள் அனைவரும் எப்போதும் உங்களை விசேடமான ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? முழு உலகிலும் இத்தகைய விசேடமான ஆத்மாக்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? பலமில்லியன்களில் கையளவினரின் புகழே உள்ளது. அவர்கள் யார்? அது நீங்களே, அப்படியல்லவா? எனவே, நீங்கள் எப்போதும் உங்களை இத்தகைய மேன்மையான ஆத்மாக்களாக, பலமில்லியன்களின் கையளவினராக, அந்தக் கையளவினரிலும் வெகுசிலராகக் கருதுகிறீர்களா? இத்தகைய மேன்மையான ஆத்மாக்கள் ஆகுவீர்கள் என நீங்கள் உங்களின் கனவிலும் நினைத்ததில்லை. எவ்வாறாயினும், நீங்கள் அதை பௌதீக வடிவில் அனுபவம் செய்கிறீர்கள். எனவே, இந்த மேன்மையான பாக்கியம் எப்போதும் உங்களின் விழிப்புணர்வில் உள்ளதா? ஆஹா, எனது மேன்மையான பாக்கியமே! இறைவனே உங்களின் பாக்கியத்தை உருவாக்கியுள்ளார். இறைவனே நேரடியாக உங்களின் பாக்கிய ரேகையை வரைந்துள்ளார். எனவே, உங்களின் பாக்கியம் அத்தனை மேன்மையானது. இந்த மேன்மையான பாக்கியத்தை நீங்கள் உணரும்போது, உங்களின் புத்திகளின் பாதங்கள் தரையில் பதிந்திருக்க மாட்டாது. அப்படியல்லவா? எந்த நிலையிலும், தேவதைகள் தரையில் கால் பதிப்பதில்லை. அவர்கள் எப்போதும் மேலேயே இருப்பார்கள். எனவே, உங்களின் புத்தியின் பாதங்கள் எங்கே உள்ளன? அவை நிலத்தில் இல்லை. சரீர உணர்வே நிலம் (பூமி) ஆகும். நீங்கள் சரீர உணர்வெனும் நிலத்திற்கு அப்பால் இருப்பவர்கள். இது தேவதையாக இருத்தல் எனப்படுகிறது. எனவே, உங்களிடம் எத்தனை பட்டங்கள் உள்ளன? பாக்கியசாலிகள். தேவதைகள். நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்டவர்கள். மேன்மையான பட்டங்கள் அனைத்தும் உங்களுடையவையே. எனவே, தொடர்ந்து இந்த சந்தோஷ நடனம் ஆடுங்கள். நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்டவர்கள் நிலத்தில் கால் பதிப்பதில்லை. அவர்கள் எப்போதும் ஊஞ்சல்களிலேயே இருப்பார்கள். ஏனெனில், 63 பிறவிகளாக நிலத்தில் இருக்கும் பயிற்சியே அவர்களிடம் உள்ளது. இப்போது, நீங்கள் நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்டவர்கள் ஆகியிருப்பதனால், எப்போதும் நிலத்திற்கு மேலே இருங்கள். அழுக்கடையாதீர்கள். எப்போதும் சுத்தமாக இருங்கள். நேர்மையான, சுத்தமான இதயங்களைக் கொண்டிருப்பவர்கள், சதா தந்தையுடனேயே இருப்பார்கள். ஏனெனில், தந்தை சதா சுத்தமானவர். எனவே, தந்தையுடன் இருப்பவர்களும் சதா சுத்தமானவர்களே. நீங்கள் சந்திப்பைக் கொண்டாடுவதற்காக ஒன்றுகூடலுக்குள் வந்திருப்பது மிகவும் நல்லதே. உங்களின் அன்பே சந்திப்பைக் கொண்டாடுவதற்காக உங்களை இங்கு அழைத்து வந்துள்ளது. பாப்தாதா குழந்தைகளைக் காண்பதில் களிப்படைகிறார். ஏனெனில், குழந்தைகள் இல்லாவிட்டால், தந்தை மட்டும் தனித்து என்ன செய்வார்? உங்களின் சொந்த வீட்டுக்கு நல்வரவுகள்! பக்தர்கள் யாத்திரையில் செல்லும்போது, பல கஷ்டமான பாதைகளையும் கடந்து செல்ல வேண்டியிருக்கும். நீங்கள் காத்மண்டுவில் இருந்து பேரூந்தில் வந்துள்ளீர்கள். நீங்கள் களிப்புடனேயே இங்கு வந்து சேர்ந்துள்ளீர்கள். அச்சா.

இலண்டன் குழு: நீங்கள் அனைவரும் தந்தையின் மாலையின் மணிகளும் அன்பு இழையில் கோர்க்கப்பட்டுள்ளவர்களும், அல்லவா? மாலைக்கு ஏன் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? ஏனெனில், அன்பு இழையே அதிமேன்மையான நூல் ஆகும். எனவே, நீங்கள் அனைவரும் இப்போது அன்பு இழையால் தந்தைக்குச் சொந்தமானவர்கள் ஆகியுள்ளீர்கள். இதன் ஞாபகார்த்தமே மாலை ஆகும். வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருப்பவர்களே, மாலையின் மணிகளாக அன்பு இழையில் கோர்க்கப்படுவார்கள். ஒரேயொரு இழையே உள்ளது. ஆனால் பல மணிகள் உள்ளன. எனவே, இதுவே ஒரேயொரு தந்தையிடம் அன்பு கொண்டிருப்பதன் அடையாளம் ஆகும். ஆகவே, நீங்கள் உங்களை மாலையின் மணிகளாகக் கருதுகிறீர்கள், அல்லவா? அல்லது, 108 இற்குள் வெகு சிலரே வருவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 108 என்ற இலக்கம் பெயரளவிலே உள்ளதா? தந்தையின் அன்பில் அமிழ்ந்திருப்பவர்கள், பாபாவின் கழுத்து மாலையின் முத்துக்கள் ஆகுகிறார்கள். நீங்கள் ஒரேயொருவரின் அன்பிலே திளைத்திருப்பவர்கள். அன்பிலே திளைத்திருக்கும் இந்த ஸ்திதியானது, உங்களைத் தடைகளில் இருந்து விடுபடச் செய்கிறது. தடைகளில் இருந்து விடுபட்டுள்ள ஆத்மாக்கள் மட்டுமே புகழப்படுகிறார்கள். பூஜிக்கப்படுகிறார்கள். யார் அதிகளவில் புகழ் பாடுவது? பாபா ஒரு குழந்தையையேனும் புகழாவிட்டால், அந்தக் குழந்தை முகங்கோணுவார். எனவே, பாபா ஒவ்வொரு குழந்தையையும் புகழுகிறார். ஏனெனில், ஒவ்வொரு குழந்தையும் அதைத் தனது உரிமையாகவே கருதுகிறார். அந்த உரிமை இருப்பதனால், அவர்கள் நிச்சயமாக அதைத் தமது உரிமையாகக் கருதுகிறார்கள். தந்தையின் வேகம் மிகத் துரிதமானது. வேறு யாருக்கும் இத்தகைய துரித கதி கிடையாது. அவரால் ஒரு விநாடியில் பலரைத் திருப்திப்படுத்த முடியும். எனவே, தந்தை எப்போதும் குழந்தைகளுடன் மும்முரமாகவே இருக்கிறார். குழந்தைகளும் தந்தையுடன் மும்முரமாக இருக்கிறார்கள். தந்தையின் வர்த்தகம் குழந்தைகளுடனேயே உள்ளது.

நீங்கள் அழியாத இரத்தினங்கள் ஆகியுள்ளீர்கள். அதற்காகப் பாராட்டுக்கள்! நீங்கள் 10 அல்லது 15 வருடங்களாக மாயையை வென்றவர்களாக இருப்பதனால், அதற்காக வாழ்த்துக்கள். எவ்வாறாயினும், இப்போது சங்கமயுகம் முழுவதற்கும் உயிருடன் இருங்கள். நீங்கள் அனைவரும் பலசாலிகள். இத்தகைய உறுதியான, அசைக்கமுடியாத குழந்தைகளைக் காண்பதில் பாப்தாதா களிப்படைகிறார். ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்பும் அவரைத் தந்தைக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஒரு குழந்தையேனும் சிறப்பியல்பு இல்லாதவர் என்று இல்லை. இதனாலேயே, ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்பைக் காணும்போதும் பாப்தாதா எப்போதும் களிப்படைகிறார். இல்லாவிடின், ஏன் நீங்கள் மட்டுமே பலமில்லியன்களில் கையளவினராகவும், அந்தக் கையளவினரிலும் வெகு சிலராகவும் ஆகவேண்டும்? உங்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக ஒரு சிறப்பியல்பு உள்ளது. சிலர் ஒரு வகையான இரத்தினங்கள். ஏனையோர் வேறொரு வகையான இரத்தினங்கள். வெவ்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டுள்ள ஒன்பது இரத்தினங்கள் நினைவுகூரப்படுகின்றன. ஒவ்வோர் இரத்தினமும் விசேடமான, தடைகளை அழிப்பவர் ஆவார். எனவே, நீங்கள் அனைவரும் தடைகளை அழிப்பவர்களே.

இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகளின் அன்பிற்கும் நினைவிற்கும் கடிதங்களுக்கும் பாப்தாதா பதில் அளிக்கிறார்:
பாபா அன்பான குழந்தைகள் அனைவரின் அன்பையும் பெற்றுக் கொண்டார். ஒவ்வொருவரின் இதயத்தின் ஊக்கமும் உற்சாகமும் தந்தையை வந்தடைந்துள்ளன. நீங்கள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுவதைப் போன்று, பாப்தாதாவிடமிருந்தும் குடும்பத்திடமிருந்தும் சதா முன்னேறுவதற்கான விசேடமான ஆசீர்வாதங்களை நீங்கள் பெறுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து இந்த ஆசீர்வாதங்களுடன் முன்னேறுவீர்கள். நீங்கள் தொடர்ந்து மற்றவர்களையும் முன்னேறச் செய்வீர்கள். நீங்கள் சேவையில் நன்றாக ஓடுகிறீர்கள். நீங்கள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் ஓடுவதைப் போன்று, தொடர்ந்து அழியாத முன்னேற்றத்தைச் செய்யுங்கள். எனவே, நீங்கள் முன்னால் நல்லதோர் இலக்கத்தைப் பெறுவீர்கள். நீங்கள் அனைவரும் தயவுசெய்து தனிப்பட்ட முறையில் பெயரினாலும் சிறப்பியல்பாலும் நினைவுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப்போதும், குழந்தைகள் அனைவரும் தனிப்பட்ட முறையில் தமது சொந்தச் சிறப்பியல்புகளுடன் பாப்தாதாவின் முன்னால் இருக்கிறார்கள். ஆகவே, பலமில்லியன் மடங்கு அன்பும் நினைவுகளும் உரித்தாகட்டும்.

தாதி சந்திரமணி பஞ்சாப் செல்வதற்காக விடைபெறுகிறார்: குழந்தைகள் அனைவருக்கும் அன்பையும் நினைவுகளையும் வழங்குங்கள். அத்துடன் பறக்கும் ஸ்திதிக்குச் செல்வதற்கான விசேடமான செய்தியையும் கொடுங்கள். மற்றவர்களைப் பறக்கச் செய்வதற்கு, சக்திவாய்ந்த ஒரு ரூபத்தைக் கிரகியுங்கள். சூழல் எத்தகையதாக இருந்தாலும், உங்களின் பறக்கும் ஸ்திதியால் பறக்கும் அனுபவத்தைப் பல ஆத்மாக்களுக்கு உங்களால் கொடுக்க முடியும். ஆகவே, விசேடமாக அனைவருக்கும், நினைவும் சேவையும் தொடர்ந்து ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுங்கள். அவர்கள் அனைவரும் நீண்ட காலம் பிரிந்திருந்து, இப்போது கண்டெடுக்கப்பட்ட விசேடமான குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் நல்ல சிறப்பியல்புகளைக் கொண்ட ஆத்மாக்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் சிறப்பியல்பிற்காக அன்பையும் நினைவுகளையும் கொடுங்கள். நீங்கள் இரட்டைப் பாகத்தை நடிப்பது நல்லதே. எங்கு தேவை உள்ளதோ அங்கு அந்த வேளையில் செல்வதே எல்லையற்ற ஆத்மாக்களின் அடையாளங்கள் ஆகும். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் சேவையில் உள்ள தடைகளை உங்களின் சுய முன்னேற்றத்திற்கான ஏணியாகக் கருதியவண்ணம் தடைகள் அற்ற, உண்மையான சேவையாளராக உயரே செல்வீர்களாக.

உங்களின் பிராமண வாழ்க்கையைச் சதா தடைகளில் இருந்து விடுபடச் செய்வதற்கான வழிமுறை, சேவையே ஆகும். அத்துடன் சேவையிலேயே அதிகமான தடைகளின் பரீட்சைத்தாள்களும் வரும். தடைகளற்ற சேவையாளர் உண்மையான சேவையாளராகக் கருதப்படுவார். தடைகள் வருவது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவை வரும். தொடர்ந்து வரும். ஏனெனில், அவை உங்களை அனுபவசாலிகள் ஆக்கும் தடைகளும் பரீட்சைத்தாள்களும் ஆகும். அவற்றைத் தடைகளாகக் கருதாதீர்கள். ஆனால், உங்களின் அனுபவங்களை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளாகப் பாருங்கள். நீங்கள் அவற்றை அனுபவ ஏணியாகக் கருதுவீர்கள். அத்துடன் தொடர்ந்து உயரே ஏறுவீர்கள்.

சுலோகம்:
தடைகளின் ரூபத்தை எடுக்காதீர்கள். ஆனால் தடைகளை அழிப்பவர் ஆகுங்கள்.