28.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் அன்னங்களாக ஆகுவதற்கே முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அன்னங்கள் ஆக வேண்டும். அதாவது, இலக்~;மி நாராயணனைப் போன்று முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆக வேண்டும்.

கேள்வி:
இந்த ஞானப் பாதையில் விரைவாகச் செல்வதற்கு இலகுவான வழி என்ன?

பதில்:
ஞானப் பாதையில் விரைவாகச் செல்வதற்கு, ஏனைய எண்ணங்கள் அனைத்தையும் துறந்து, தந்தையின் நினைவில் மாத்திரம் நீங்கள் நிலைத்திருந்தால் உங்கள் பாவங்கள் அழிந்து, குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும். நினைவு யாத்திரை மாத்திரமே உயர்ந்த அந்தஸ்திற்கு அடிப்படையாக உள்ளது. இதன் மூலமே, நீங்கள் சிப்பிகளில் இருந்து வைரங்களாக மாற்றமடைய முடியும். உங்களைச் சிப்பிகளில் இருந்து வைரங்களாக அதாவது தூய்மையற்றவரில் இருந்து தூய்மையானவராக மாற்றுவதே தந்தையின் கடமையாகும். தந்தையால் இதனைச் செய்யாதிருக்கவே முடியாது.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இவ்வுலகில் சிலர் அன்னங்களாகவும், சிலர் நாரைகளாகவும் உள்ளார்கள். இலக்~மியும் நாராயணனும் அன்னங்கள் ஆவார்கள். நீங்களும் அவர்களைப் போன்று ஆக வேண்டும். ‘நாங்கள் தேவ சமுதாயத்தின் ஒரு அங்கம் ஆகுகின்றோம்’ என்று நீங்கள் கூறலாம். தந்தை கூறுவார்: நீங்கள் தேவ சமுதாயத்தினர் ஆகுகின்றீர்கள், நான் உங்களை அன்னங்கள் ஆக்குகின்றேன். நீங்கள் இன்னமும் முழுமை அடையவில்லை. நீங்கள் அவ்வாறு ஆக வேண்டும். அன்னங்கள் முத்துக்களைப் பொறுக்குகின்றன. நாரைகளோ குப்பைகளையே பொறுக்கின்றன. நாங்கள் இப்பொழுது அன்னங்கள் ஆகுகின்றோம். ஆகையாலேயே தேவர்கள் மலர்கள் என்றும் ஏனையோர் முட்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் அன்னங்களாகவே இருந்தீர்கள், நாளடைவில் வீழ்ச்சி அடைந்ததால், நாரைகள் ஆகியுள்ளீர்கள், அரைக் கல்பத்திற்கு, நீங்கள் அன்னங்களாகவும், அரைக் கல்பத்திற்கு நீங்கள் நாரைகளாகவும் இருக்கின்றீர்கள். அன்னங்கள் ஆகுவதில் மாயையின் பல தடைகள் உள்ளன. நீங்கள் வீழ்ச்சி அடையவதற்கு ஏதோ ஒன்று காரணமாகின்றது. சரீர உணர்வே வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும். இச் சங்கமயுகத்தின் போதே, குழந்தைகளாகிய நீங்கள் மாற வேண்டும். நீங்கள் அன்னங்கள் ஆகும் பொழுது, அன்னங்கள் அன்றி வேறு எவரும் இருக்க மாட்டார்கள். அன்னங்கள், அதாவது தேவர்கள் புதிய உலகிலேயே உள்ளார்கள். பழைய உலகில், ஒரு அன்னமேனும் இருக்க முடியாது. சந்நியாசிகள் இருந்தாலும், அவர்கள் எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள் ஆவார்கள். நீங்கள் எல்லையற்ற சந்நியாசிகள். பாபா எல்லையற்ற துறவறத்தை உங்களுக்குக் கற்பித்துள்ளார். வேறு சமயத்தைச் சேர்ந்த எவருமே தேவர்களைப் போன்று தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆகுவதில்லை. தந்தை இப்பொழுது ஆதி சனாதன தேவ தேவியர் தர்மத்தை ஸ்தாபிக்கவே வந்துள்ளார். நீங்களே புதிய உலகில் முதன்முதலில் சந்தோஷத்தை அனுபவிக்கின்றீர்கள். வேறு எவரும் புதிய உலகிற்குச் செல்வதில்லை. அந்தத் தேவர்களின் தர்மம் இப்பொழுது மறைந்து விட்டது. இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் இவ்விடயங்களை செவிமடுத்து புரிந்து கொள்கின்றீர்கள். இவற்றை வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அவை அனைத்தும் மனிதர்களின் கட்டளைகளாகும். அவர்கள் அனைவரும் விகாரத்தின் மூலமே பிறக்கின்றார்கள். சத்தியயுகத்தில் விகாரம் என்ற கேள்விக்கு இடமில்லை. தேவர்கள் தூய்மையானவர்கள். அங்கே, அனைத்தும் யோக சக்தியினாலேயே நடைபெறுகின்றது. இங்கேயுள்ள தூய்மையற்ற மனிதர்களுக்கு அங்கே குழந்தைகள் எவ்வாறு பிறக்கின்றார்கள் என்பது தெரியாது. அது விகாரமற்ற உலகம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கே விகாரம் என்ற கேள்விக்கு இடமில்லை. மிருகங்கள் எவ்வாறு பிறக்கின்றன என்று அவர்கள் வினவுகின்றார்கள். அவர்களிடம் கூறுங்கள்: அங்கே, யோக சக்தி மாத்திரமே உள்ளது. விகாரம் என்ற கேள்விக்கு இடமில்லை. அவர்கள் 100 வீதம் விகாரமற்றவர்கள். நாங்கள் எப்பொழுதும் மங்களகரமான விடயங்களைப் பற்றியே பேசுகின்றோம். அவ்வாறாயின், மங்களமற்ற விடயங்களைப் பற்றி ஏன் நீங்கள் பேசுகின்றீர்கள்? இது விலைமாதர் இல்லம் என்று அழைக்கப்படுகின்றது. அதுவோ சிவாலயம் என்று அழைக்கப்படுகின்றது. சிவபாபாவே அந்த சிவாலயத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். சிவபாபா அதி மேலான கோபுரம் ஆவார். சிவாலயங்களில் அவர்கள் மிகவும் உயர்ந்த கோபுரங்களைக் கட்டுகின்றார்கள். சிவபாபா உங்களை சந்தோஷ கோபுரங்கள் ஆக்குகின்றார். அவர் உங்களைச் சந்தோஷ கோபுரத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இதனாலேயே நீங்கள் பாபாவை அதிகளவு நேசிக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்திலும், நீங்கள் சிவபாபாவின் மீது அன்பு கொண்டிருக்கின்றீர்கள். மக்கள் அதிகளவு அன்புடனேயே சிவபாபாவின் ஆலயத்திற்குச் செல்கின்றார்கள். ஆனால் அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர் ஆகுகின்றீர்கள். நீங்கள் இன்னமும் முழுமை அடையவில்லை. உங்கள் இராச்சியம் முற்றாக ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே உங்களுக்கான பரீட்சை இடம்பெறும். அப்பொழுது, அனைத்தும் முடிவடைந்து, குறித்த நேரத்திற்கு சிலர் என்ற ரீதியில் ஆத்மாக்கள் அனைவரும் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாக இறங்கி வருவார்கள். உங்;கள் இராச்சியம் ஆரம்பத்தில் இருந்து தொடங்குகின்றது. ஏனைய சமயங்களில் அவர்களது இராச்சியம் ஆரம்பம் முதல் இருப்பதில்லை. உங்களுடையது ஓர் இராச்சியமாகும். உங்களுக்கு மாத்திரமே இவ்விடயங்கள் தெரியும். குழந்தைகள் பெனாரஸிற்கு சேவைக்காகச் சென்றார்கள். பிறருக்கு விளங்கப்படுத்துகின்ற போதை அவர்களுக்கு உள்ளது. எவ்வாறாயினும், அவர்களால் நன்றாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடி அளவினரே புரிந்து கொள்வார்கள் என்று நினைவு கூரப்பட்டுள்ளது. அரிதாகவே ஒரு சிலர் அன்னம் ஆகுகின்றார்கள். அவர்கள் இவ்வாறு ஆகாவிட்டால், அதிகளவு தண்டனை அனுபவம் செய்யப்படுகின்றது. சிலர் 95 வீதம் தண்டனையையும் 5வீதம் மாற்றத்தையும் மாத்திரமே ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். உயர்வானதும், குறைவானதுமான புள்ளிகள் உள்ளன. எவருமே தன்னை அன்னம் என்று அழைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் அனைவருமே முயற்சி செய்கின்றீர்கள். ஞானம் முடிவடையும் போது, யுத்தம் ஆரம்பமாகும். நீங்கள் முழு ஞானத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த யுத்தமே இறுதியானதாகும். எவரும் இன்னமும் 100வீதம் நிறைவடையவில்லை. நீங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் இச்செய்தி சென்றடையச் செய்ய வேண்டும். பெரும் புரட்சி இடம்பெறும். பெரிய ஸ்தாபனங்களைக் கொண்டிருக்கின்ற அனைவருமே தளம்பலடைய ஆரம்பிப்பார்கள். பக்தியின் சிம்மாசனம் ஆட்டங்காணும். இப்பொழுது இது பக்தர்களின் இராச்சியமாகும். நீங்கள் அவர்களை வெற்றி கொள்வீர்கள். இப்பொழுது மக்களை மக்கள் ஆட்சி செய்யும் காலமாகும், பின்னர் இது மாறி, இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாகும். நீங்கள் தொடர்ந்தும் காட்சிகளைக் காண்பீர்கள். ஆரம்பத்தில், எவ்வாறு இராச்சியம் இயங்கும் என்பதை பலரும் காட்சிகளாகக் கண்டனர். எவ்வாறாயினும், காட்சிகள் கண்டவர்கள் இப்பொழுது இங்கில்லை. நாடகத்தில் ஒவ்வொருவரின் பாகமும் எதுவோ அதுவே தொடரும். இதில் எவரையும் நாம் புகழத் தேவையில்லை. தந்தையும் கூறுகின்றார்: என்னை ஏன் புகழ்கின்றீர்கள்? தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவது எனது கடமையாகும். ஓர் ஆசிரியரின் கடமை உங்களை கற்றவர் ஆக்குவதாகும். கடமையைச் செய்கின்ற ஒருவரை புகழ்வது ஏன்? பாபா கூறுகின்றார்: நானும் நாடகத்திற்குத் கட்டுப்பட்டுள்ளேன். அவ்வாறாயின் அது எவ்வாறு எனது சக்தியாகலாம்? இது எனது கடமையே. ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் நான் வந்து, தூய்மையற்றவரில் இருந்து தூய்மையாகுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றேன். உங்களைத் தூய்மையாக்காது என்னால் இருக்க முடியாது. எனது பாகம் மிகச்சரியானதாகும். என்னால் ஒரு விநாடி முன்னரோ அல்லது பின்னரோ வர முடியாது. நான் எனது சேவைக்கான பாகத்தைக் குறித்த நேரத்திற்கு, முற்றிலும் நேர்த்தியாகச் செய்கின்றேன். கடந்து செல்கின்ற ஒவ்வொரு கணத்திலும், நாடகம் என்னை எதனையாவது செய்யச் செய்கின்றது. அது எனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. இதில் புகழ்தல் என்ற கேள்விக்கு இடமில்லை. நான் ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றேன். என்னை நீங்கள் ‘ஓ தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ என்று கூவி அழைக்கின்றீர்கள். மக்கள் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள். ஒவ்வொரு பலவீனத்தையும் துறப்பதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். நீண்ட காலத்திற்குத் தூய்மையாகவிருந்த பின்னர், நாளடைவில் நீங்கள் மாயையினால் அறையப்படும் போது, உங்கள் முகத்தை நீங்கள் அழுக்காக்கிக் கொள்கின்றீர்கள். இவ்வுலகம் தமோபிரதான் ஆகும். எதிரியான மாயை பல எதிர்ப்புகளை உருவாக்குவாள். சந்நியாசிகளும் விகாரத்தின் மூலமே பிறக்கின்றார்கள். எவரும் ஒளியுடன் இரண்டறக் கலப்பதில்லை. எவராலும் வீடு திரும்ப முடியாது. ஆத்மா அழியாதவர், அவரது பாகமும் அழியாததாகும். அவ்வாறாயின், எவ்வாறு ஒளி, ஒளியுடன் இரண்டறக் கலக்க முடியும்? மக்கள் இருக்கும் அளவிற்கு அபிப்பிராயங்களும் இருக்கின்றன. அவை யாவும் மனிதக் கட்டளைகளாகும். ஒரேயொரு இறை வழிகாட்டல் மாத்திரமே உள்ளது. இங்கே தேவர்களின் வழிகாட்டல்களும் இருக்க முடியாது. தேவர்கள் சத்தியயுகத்திலேயே உள்ளார்கள். எனவே இவ்விடயங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். மனிதருக்கு எதுவும் தெரியாததாலேயே அவர்கள் கடவுளைக் கூவி அழைக்கின்றார்கள்: கருணை கொள்ளுங்கள்! தந்தை கூறுகின்றார்: உங்களை பூஜீக்கும் அளவிற்கு உங்களை நான் மிகவும் தகுதியானவர் ஆக்குகின்றேன். இப்பொழுது உங்களுக்கு பூஜிக்கப்படும் தகுதி இ;ல்லை. நீங்கள் இப்பொழுது அவ்வாறு ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள் என்பதும் பின்னர் பக்தி மார்க்கத்தில் நீங்கள் போற்றப்படுவீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். எங்கள் ஆலயங்கள் கட்டப்படும். சண்டிக்கா தேவிக்கு ஒரு மேலா இடம்பெறுவதை நீங்கள் அறிவீர்கள். சண்டி என்றால் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதவர் என்று அர்த்தமாகும். இருப்பினும், உலகைத் தூய்மையாக்குவதற்கு அவரும் ஓரளவிற்கு உதவி செய்துள்ளார். இது ஒரு சேனையாகும். நீங்கள் தண்டனை போன்றவற்றை அனுபவம் செய்தாலும், உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இங்குள்ள ஒரு சுதேசி கூட, தான் பாரதத்தின் அதிபதி என்றே கூறுகின்றார். இக்காலத்தில், ஒருபுறத்தில், பாரதமே அனைத்திலும் மிகச் சிறந்த இடம் என்று புகழ்ந்து போற்றிய போதிலும், மறுபுறத்தில், பாரதம் அடைந்துள்ள நிலையைப் பாருங்கள் என்றும் பாடுகின்றார்கள். இரத்த ஆறுகள் தொடர்ந்தும் ஓடும். ஒரு பதிவுநாடாவில் (பாடல்) அவர்கள் போற்றுகின்றார்கள், மற்றையதில் தூற்றுகின்றார்கள். அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை. தந்தை இப்பொழுது உங்களுக்கு மிகச்சரியாக விளங்கப்படுத்துகின்றார். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை மனிதர் அறியாதுள்ளார்கள். அவர்கள் ‘அற்புதம்! என்று கூறுவார்கள். இவர்கள் கடவுளையே தமது ஆசிரியர் ஆக்கியுள்ளார்கள்’ என்று கூறுகின்றார்கள். ஆனால் கடவுள் பேசுகின்றார்: நான் உங்களை அரசருக்கெல்லாம் அரசன் ஆக்குகின்றேன். கீதையில் அவர்கள் ஒரு மனிதரைக் குறிப்பிட்டுள்;ளதால், கீதையையே அவர்கள் பொய்யாக்கி விட்டார்கள். ‘கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார்;’ என்று கூறுவதானால், அது மனிதக் கட்டளை என்றே அர்த்தமாகும். கிருஷ்ணர் எவ்வாறு இங்கு வரமுடியும்? அவர் சத்தியயுகத்தின் இளவரசன் ஆவார். அவர் இத் தூய்மையற்ற உலகிற்கு வர விரும்புவாரா? குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தந்தையைத் தெரியும். அதிலும் அரிதாகவே சிலர் அவரை மிகச்சரியாக அறிந்துள்ளீர்கள். கற்கள் அல்ல, இரத்தினங்களே உங்கள் உதடுகளில் இருந்து வெளிப்பட வேண்டும். உங்களையே வினவுங்கள்: நான் இவ்வாறு ஆகியுள்ளேனா? நீங்கள் குப்பையிலிருந்து விரைவில் வெளியேற விரும்பினாலும், அது அவ்வளவு விரைவாக இடம்பெற முடியாது. அதற்கு அதிகளவு காலம் எடுக்கும் என்பதுடன், நீங்கள் அதிகளவு முயற்சியும் செய்ய வேண்டும். விளங்கப்படுத்துபவர்கள் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். விளக்கங்கள் பின்னர் மிகவும் சாதூர்யமாகவே இடம்பெறும். அப்பொழுது உங்கள் அம்பு தாக்கும். இப்பொழுது நீங்கள் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த ஒருவரே (கடவுள்) உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் அவருடன் கற்கின்றீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் போது, நீங்கள் மகா யுத்தத்தைக் காண்பீர்கள். கேட்கவும் வேண்டாம்! பலரும் யுத்தத்தில் மரணிப்பார்கள். அந்த ஆத்மாக்கள் அனைவரும் எங்கு செல்வார்கள்? அவர்கள் அனைவரும் ஒன்றாகவே பிறப்பெடுப்பார்களா? மரம் வளரும் போது, அது பல கிளைகளையும், சிறுகிளைகளையும், இலைகளையும் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் பலர் பிறக்கும் அதேவேளை பலர் இறந்தும் போகின்றார்கள். எவருமே வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது. மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. இந்த விபரங்கள் அனைத்திற்கும் செல்வதற்கு பதிலாக முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிந்து உங்கள் குப்பையும் அகற்றப்படும். பின்னர், வேறு எதுவும் எஞ்சாது. இவ்விடயங்களைப் பற்றி சிந்திக்காதீர்கள். முதலில் உங்கள் சுய முயற்சியில் ஈடுபட்டால் உங்களால் அவர்களைப் போன்றவர் ஆக முடியும். பிரதான விடயம் நினைவு யாத்திரையும், அனைவருக்கும் செய்தியை கொடுப்பதுமே ஆகும். ஒரேயொரு தூதுவரே உள்ளார். சமயங்களை ஸ்தாபித்தவர்களைக் கூட தூதுவர்கள் என்றோ அல்லது குருமார் என்றோ அழைக்க முடியாது. ஒரேயொரு சற்குருவே ஜீவன்முக்தியை அளிப்பவர் ஆவார். எவ்வாறாயினும், பக்தி மார்க்கத்தில், மக்கள் தம்மை ஓரளவிற்கு சீராக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் தானமும் செய்கின்றார்கள். யாத்திரையில் செல்லும் போதும் தானம் செய்கின்றார்கள். எனவே, இந்த இறுதிப் பிறவியில் தந்தை உங்களை வைரம் போன்றவர் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது அளவிட முடியாத பெறுமதி வாய்ந்த வாழ்க்கை என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் நீங்கள் அதற்கேற்ற முயற்சி செய்ய வேண்டும். ‘அது எனது தவறல்ல’ என்று நீங்கள் கூறலாம். ஓ! ஆனால் நான் உங்களை அழகாக்கவே வந்துள்ளேன். ஆகவே நீங்கள் ஏன் அவ்வாறு ஆகுவதில்லை? உங்களைத் தூய்மையாக்குவது எனது கடமையாகும். எனவே நீங்கள் ஏன் அதற்கான முயற்சியைச் செய்வதில்லை? உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்ற தந்தையை நீங்கள் இனங்கண்டுள்ளீர்கள். இலக்ஷ்மியையும் நாராயணனையும் அவ்வாறு ஆக்கியவர் யார்? உலகிற்கு இது தெரியாது. தந்தை சங்கமயுகத்தில் வருகின்றார். இப்பொழுது நீங்கள் கூறுகின்ற விடயங்களை எவராலும் புரிந்து கொள்ள முடியாது. எவ்வாறாயினும் நீங்கள் மேலும் முன்னேறும் போது, பலரும் உங்களிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (சந்நியாசிகள்) தமது வாடிக்கையாளர்களை இழப்பார்கள். தந்தை கூறுகின்றார்: நான் அந்த வேதங்களினதும் சமயநூல்களினதும் சாரம்சத்தையே கூறுகின்றேன். பக்தி மார்க்கத்தில் பல குருமார்கள் உள்ளனர். சத்தியயுகத்தில் அனைவரும் தூய்மையானவர்கள் ஆவார்கள். அதன் பின்னர் அவர்கள் தூய்மையற்றவர் ஆகுகின்றார்கள். இப் பழைய உலகம் முடிவடைய உள்ளதால், தந்தை இப்பொழுது வந்து, எல்லையற்ற துறவறத்தை மேற்கொள்ளும்படி உங்களைத் தூண்டுகின்றார். ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: இந்த இடுகாட்டில் இருந்து உங்கள் புத்தியை அகற்றி, என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிந்து விடும். இப்பொழுது இது தீர்வுக் காலமாகும். அனைவரது கர்மக் கணக்கும் இப்பொழுது தீர்க்கப்பட உள்ளது. உலகில் உள்ள ஆத்மாக்கள் அனைவரும் தமக்குள் தமது பாகத்தின் பதிவைக் கொண்டிருக்கின்றார்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை ஏற்று, தனது பாகத்தை நடிக்கின்றார். எனவே, ஆத்மாக்கள் அழியாதவர்கள், அவர்களது பாகமும் அழியாதது ஆகும். இதில் எந்த வேறுபாடும் இருக்க முடியாது. அவை அதே போல மீண்டும், மீண்டும் இடம்பெறுகின்றன. இது மிகப் பெரிய எல்லையற்ற நாடகமாகும். அது வரிசைக்கிரமமானதாகும். சிலர் ஆன்மீக சேவை செய்கின்றார்கள். ஏனையோர் பௌதீக சேவை செய்கின்றார்கள். சிலர் கூறுகின்றார்கள்: பாபா, நான் உங்களது சாரதி ஆகினால், நானும் அங்கு விமானத்திற்கு அதிபதி ஆவேன். முக்கியஸ்தர்கள் இதுவே தமது சுவர்க்கம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பெரிய மாளிகைகளையும் ஆகாய விமானங்களையும் வைத்துள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: அவை யாவும் செயற்கையானவையாகும். அது மாயையின் ஆடம்பரம் என அழைக்கப்படுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் எதைக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள் எனப் பாருங்கள்! அவர்கள் கப்பல்கள் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். அங்கே அக்கப்பல்கள் போன்றவற்றினால் எப் பயனும் இருக்கப் போவதில்லை. அவர்கள் அணுகுண்டுகளையும் தயாரிக்கின்றார்கள். அவற்றாலும் அங்கே எப்பயனும் இருக்கப் போவதில்லை. சந்தோஷத்தைக் கொடுக்கின்ற பொருட்கள் மாத்திரமே பயனளிக்கும். விஞ்ஞானம் விநாசம் இடம்பெற உதவி செய்கின்றது. அதே விஞ்ஞானமே நீங்கள் புதிய உலகை கட்டவும் உதவி செய்கின்றது. இந்த அற்புதமான நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தீர்வுக்காலமான இந்த நேரத்தில், நீங்கள் இப் பழைய உலகின் மீது எல்லையற்ற துறவறத்தை கொண்டிருக்க வேண்டும். இந்த இடுகாட்டிலிருந்து உங்கள் புத்தியை அகற்றிடுங்கள். நினைவில் நிலைத்திருந்து, உங்கள் கர்மக் கணக்கு முழுவதையும் தீர்த்திடுங்கள்.

2. கற்கள் அன்றி, ஞான இரத்தினங்களே எப்பொழுதும் உங்கள் உதடுகளில் இருந்து வெளிப்படட்டும். முழுமையான அன்னங்கள் ஆகுங்கள். முட்களை மலர்கள் ஆக்குகின்ற சேவையை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
சதா கவனமாக இருப்பதன் மூலம், மாயை உட்புகாதவராக ஆகி, மாயையின் சகல இராஜரீக வடிவங்களின் நிழலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்களாக.

தற்காலத்தில், மாயை உங்களது உண்மையான புரிதலையும், உணர்ந்து கொள்ளும் சக்தியையும் மறையச் செய்து, பிழையானதையும் சரியானதென அனுபவம் செய்யச் செய்கின்றாள். ஒருவர் மாயாஜால வித்தைகளை செய்யும் போது, ஒருவரது கட்டுப்பாட்டை இழக்கச் செய்கின்றார். அவ்வாறே, இராஜரீக மாயையும் உங்களை உண்மை என்னவென்பதை புரிந்து கொள்ள அனுமதிப்பதில்லை. ஆகையாலேயே பாப்தாதா உங்களை ~கவனம்| என்பதனை இரட்டிப்பாக கோடிட்டுக் கொள்ளச் செய்கின்றார். மாயையின் நிழலிலிருந்தும் பாதுகாப்பாக இருக்குமளவில் நீங்கள் மிகவும் கவனமாக இருந்து, மாயை உட்புகாதவர் ஆகுங்கள். குறிப்பாக உங்கள் மனதையும் புத்தியையும் தந்தையின் பாதுகாப்பு குடையின் வைத்திருங்கள்.

சுலோகம்:
இலகு யோகிகளை பார்க்கும் போது, பிறருக்கும் இலகுவாக யோகம் செய்ய முடியும்.