14.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்குக் குற்றமற்ற கண்களைக் கொடுப்பதற்காக வந்துள்ளார். நீங்கள் மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றிருப்பதனால், உங்கள் கண்கள் ஒருபொழுதும் குற்றமானதாக ஆகக்கூடாது.
கேள்வி:
தந்தை எல்லையற்ற துறவிகளாகிய உங்களுக்கு என்ன ஸ்ரீமத்தைக் கொடுத்துள்ளார்?
8பதில்:
தந்தையின் ஸ்ரீமத்: உங்கள் புத்தியின் யோகத்தை நீங்கள் இந்நரகத்திலிருந்தும், நரகவாசிகளிடமிருந்தும் அகற்றி, சுவர்க்கத்தை நினைவுசெய்ய வேண்டும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதும், உங்கள் புத்தியிலிருந்து நரகத்தைத் துறந்திடுங்கள். பழைய உலகமே நரகம். உங்கள் புத்தி பழைய உலகை மறக்க வேண்டும். நீங்கள் ஓர் எல்லைக்குட்பட்ட வீட்டைத் துறந்து, இன்னொன்றிற்குச் செல்வதாக இருக்கக்கூடாது. நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது இது உங்கள் ஓய்வு ஸ்திதியாகும். நீங்கள் அனைத்தையும் துறந்து வீடு திரும்ப வேண்டும்.ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகின்றார். வேறு எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை. இவரது (பிரம்மா) பெயரும் குறிப்பிடப்படவில்லை. அந்தத் தந்தையே தூய்மையாக்குபவர். எனவே, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காக அவர் நிச்சயமாக இங்கு வருவார். அவர் இங்கு தூய்மையாகுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றார். கடவுள் சிவன் பேசுகின்றார் என்றே கூறப்படுகின்றது. கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார் என்று கூறப்படுவதில்லை. உங்களிடம் சின்னம் (டியனபந) உள்ளதால், நிச்சயமாக நீங்கள் இதனை விளங்கப்படுத்த வேண்டும். படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் இரகசியங்கள் அனைத்தும் இந்த பட்ஜில் காட்டப்பட்டுள்ளன. இந்த பட்ஜ் எதிலும் குறைவானது அல்ல. அது சமிக்ஞைக்கான ஒரு விடயமாகும். உங்கள் முயற்சிகளுக்கேற்ப, நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக ஆஸ்திகர்களாக இருக்கின்றீர்கள். “வரிசைக்கிரமம்” என்று நிச்சயமாகக் கூறப்படும். படைப்பவரின் அல்லது படைப்பின் ஞானத்தை விளங்கப்படுத்த முடியாத சிலர் உள்ளனர். எனவே, அவர்களைச் சதோபிரதான் புத்தியைக் கொண்டவர்கள் என அழைக்க முடியாது. சதோபிரதான் புத்தி, ரஜோ புத்தி, பின்னர் தமோ புத்தியும் உள்ளது. ஒருவரது புரிந்துணர்விற்கு ஏற்பவே அவர் பட்டத்தைப் பெறுகின்றார்: இவர் சதோபிரதான் புத்தியைக் கொண்டிருக்கின்றார், இவர் ரஜோ புத்தியைக் கொண்டிருக்கின்றார். எவ்வாறாயினும், நீங்கள் பின்னர்; மனம் தளர்ந்துவிடுவீர்கள் என்பதால், இது உங்களுக்குக் கூறப்படுவதில்லை. அது வரிசைக்கிரமமே. முதற்தரமானவர்களின் பெறுமதி மிகவும் சிறந்தது. இப்பொழுது நீங்கள் உண்மையான சற்குருவைக் கண்டுள்ளீர்கள், இப்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் சற்குருவைக் கண்டுகொண்டதால், அவர் உங்களை முற்றிலும் உண்மையானவர்கள் ஆக்குகின்றார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். தேவர்கள் உண்மையானவர்கள். பின்னர் அவர்கள் பாவப் பாதையில் சென்றதால், பொய்யானவர்கள் ஆகுகின்றனர். தேவர்களாகிய நீங்களே சத்தியயுகத்தில் வசிக்கின்றீர்கள். அங்கே வேறு எவரும் இருப்பதில்லை. ‘இது எவ்வாறு சாத்தியம்?’ என்று வினவுகின்ற சிலரும் உள்ளனர். ஏனெனில், அவர்களிடம் ஞானம் இல்லை. நீங்கள் நாஸ்திகர்களிலிருந்து ஆஸ்திகர்களாகிவிட்டீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் மிகச்சரியான ஞானத்தை அறிவீர்கள். பெயருக்கும், உருவத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றைப் பார்க்கவும் முடியாது. ஆகாயம் வெற்றிடமான வெளியாகும். எனினும், அது ஆகாயம் என்பதை உங்களால் உணர முடியும். உங்களிடம் அந்த ஞானம் உள்ளது. உங்கள் புத்தியிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. ஒரேயொரு தந்தையே படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். ‘இங்கு, நீங்கள் படைப்பவரினதும், படைப்பினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைப் பெற முடியும்’ என நீங்கள் எழுதவும் வேண்டும். அத்தகைய பல சுலோகங்கள் உள்ளன. நாளுக்கு நாள், புதிய கருத்துக்களும், புதிய சுலோகங்களும் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. ஆஸ்திகராக வேண்டுமாயின், நீங்கள் நிச்சயமாகப் படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தைக் கொண்டிருப்பது அவசியம். பின்னர், நீங்கள் நாஸ்திகராக இருப்பதை நிறுத்தி விடுவீர்கள். நீங்கள் ஆஸ்திகரிலிருந்து உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இங்கு ஆஸ்திகர்களாக இருக்கின்றீர்கள். ஆயினும், உங்கள் முயற்சிக்கேற்ப, அது வரிசைக்கிரமமே. மனிதர்களே இதனை அறிந்திருக்க வேண்டும். மிருகங்களுக்கு இது தெரியாது. அதியுயர்வான மனிதர்களே பின்னர், தாழ்ந்தவர்கள் ஆகுகின்றார்கள். இந்நேரத்தில் எந்த மனிதரிடமும் படைப்பவரினதும், படைப்பினதும் ஞானம் இல்லை. அவர்களது புத்தி ‘கோட்ரேஜ்’ பூட்டினால் முழுமையாகப் பூட்டப்பட்டுள்ளது. நீங்கள் உலகின் அதிபதிகளாகுவதற்காகத் தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள் என்பதை உங்களது முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே நீங்கள் அறிவீர்கள். அங்கே நீங்கள் 100மூ தூய்மையாக இருக்கின்றீர்கள். அங்கே தூய்மையும், அமைதியும், செழிப்பும் உள்ளன. உங்களுக்கு ஆசீர்வாதங்கள் வழங்கப்படுகின்றன. எவ்வாறாயினும், இவ்வார்த்தைகள் பக்தி மார்க்கத்திற்குரியவை. இக்கல்வியின் மூலம் நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகின்றீர்கள். நீங்கள் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். குமார்களும், குமாரிகளும் கற்பதற்காகப் பாடசாலைக்குச் செல்கின்றார்கள். அவர்கள் சேர்ந்திருப்பதனால் சீரழிந்துபோகின்றனர். ஏனெனில் கண்கள் குற்றமுள்ளவை. குற்றமுள்ள கண்களைக் கொண்டிருப்பதனாலேயே அவர்கள் முகத்திரையை (முக்காடு) அணிகின்றனர். அங்கே (சத்தியயுகத்தில்) குற்றமுள்ள கண்கள் இல்லாததனால், முகத்திரை அணிய வேண்டியதில்லை. இலக்ஷ்மியும், நாராயணனும் முகத்திரைக்குப் பின்னால் இருப்பதை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருக்கின்றீர்களா? அங்கே எவரும் அத்தகைய அசுத்தமான எண்ணங்களையும் கொண்டிருக்க மாட்டார்கள். இங்கே, இது இராவண இராச்சியம். இக்கண்கள் மிக அசுரத்தனமானவை. தந்தை வந்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது ஞானக் கண்ணைக் கொடுக்கின்றார். ஆத்மாவே அனைத்தையும் செவிமடுக்கின்றார், அனைத்தையும் கூறுகின்றார், அனைத்தையும் செய்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது சீர்திருத்தப்படுகின்றீர்கள். ஆத்மாவே சீரழிந்தவராகுவதுடன், பாவாத்மாவாகவும் ஆகிவிட்டார். குற்றமுள்ள கண்களைக் கொண்டவர்கள் பாவாத்மாக்கள் எனப்படுகின்றனர். தந்தையைத் தவிர வேறு எவராலுமே அக்குற்றமுள்ள கண்களைச் சீர்திருத்த முடியாது. தந்தை மாத்திரமே ஞானத்தின் மூலமாக உங்கள் கண்களைக் குற்றமற்றதாக்குகின்றார். நீங்கள் மாத்திரமே இந்த ஞானத்தை அறிவீர்கள். இந்த ஞானம் சமயநூல்களில் இல்லை. தந்தை கூறுகின்றார்: அந்த வேதங்கள், உபநிடதங்கள், சமயநூல்கள் போன்றவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. தபஸ்யா, செபித்தல், யாத்திரைகள் போன்றவற்றின் மூலம் என்னைக் கண்டுகொள்ள முடியாது. அது அரைக் கல்பமாகத் தொடரும் பக்தி மார்க்கமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இச்செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்: வாருங்கள், நாங்கள் படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தை உங்களுக்குக் கொடுப்போம். நாங்கள் பரமாத்மாவான பரமதந்தையின் சுயசரிதையை உங்களுக்குக் கூறுவோம். மனிதர்கள் இவை எதனையுமே அறியார்கள். இவையே பிரதான வார்த்தைகள். சகோதர, சகோதரிகளே வாருங்கள். வந்து, படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைச் செவிமடுங்கள். வந்து இதனைக் கற்றால் நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள். இந்த ஞானத்தைப் பெறுவதன் மூலமும், சக்கரத்தைப் புரிந்துகொள்வதன் மூலமும் நீங்கள் சத்தியயுகத்தை ஆட்சிசெய்கின்ற சக்கரவர்த்திகளாகவும், சக்கரவர்த்தினிகளாகவும் ஆகமுடியும். இலக்ஷ்மி, நாராயணனும் இக்கல்வியின் மூலமே அவ்வாறு ஆகினார்கள் நீங்களும் இக்கல்வியின் மூலமே அவ்வாறு ஆகுகின்றீர்கள். இந்த அதி மங்களகரமான சங்கமயுகம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தந்தை பாரதத்திற்கே வருகின்றார். அவர் ஏன் வேறு எந்த இடத்திற்கும் வரவேண்டும்? தந்தை அழிவற்ற சத்திரசிகிச்சை நிபுணர். எனவே, அவர் நிச்சயமாக எப்பொழுதும் இருக்கக்கூடிய ஓர் இடத்திற்கே வரவேண்டும். கடவுள் தனது பாதங்களைப் பதித்த இடம் ஒருபொழுதும் அழிக்கப்பட மாட்டாது. இந்த பாரதம் தேவர்களுக்காக உள்ளது. அது மாற்றமடைகின்றது. எவ்வாறாயினும், பாரதம் சத்திய பூமியாக இருந்தது, அந்தப் பாரதமே, பின்னர் பொய்மையான பூமியாகுகின்றது. பாரதம் மாத்திரமே சகலதுறை பாகத்தையும் கொண்டதாகும். இவ்வாறு நீங்கள் வேறு எந்தத் தேசத்திற்கும் கூறமாட்டீர்கள். சத்தியமான கடவுள் வந்து, சத்திய பூமியை உருவாக்குகின்றார். பின்னர், இராவணன் அதனைப் பொய்மையான பூமியாகுகின்றான். அதன்பின்னர் அங்கு சிறிதளவு சத்தியமேனும் எஞ்சியிருக்கவில்லை என்பதாலேயே, உங்களால் உண்மையான குரு எவரையும் காண முடியாதுள்ளது. அம்மக்கள் சந்நியாசிகள், அவர்களைப் பின்பற்றுபவர்களோ இல்லறத்தவர்கள். எனவே, அவர்களை எவ்வாறு ‘பின்பற்றுபவர்கள் என அழைக்க முடியும்? இப்பொழுது தந்தையே கூறுகின்றார்: குழந்தைகளே, தூய்மையாகுவதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். இப்பொழுது நீங்கள் தேவர்களாக வேண்டும். சந்நியாசிகள் முற்றிலும் விகாரமற்றவர்கள் அல்ல. அவர்களில் சிலர் பிறவியிலிருந்தே பிரம்மச்சாரிகளாக இருந்தாலும், விகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கே அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றார்கள். அத்தகைய பலர் உள்ளனர். வெளிநாடுகளிலும் அவ்வாறான பலர் உள்ளனர். அவர்கள் முதுமையடையும்பொழுது, தம்மைப் பராமரிப்பதற்காக ஒருவரைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்கள் மரணிக்கும்பொழுது சிறிதளவு செல்வத்தை அவளுக்கு (மனைவி) விட்டுச் செல்கின்றனர். எஞ்சியிருகின்ற செல்வம் தானதர்மங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு, அவர்கள் தங்களது குழந்தைகள் மீது அதிகளவு பற்று வைத்திருக்கின்றார்கள். 60 வயதின் பின்னர், அவர்கள் அனைத்தையும் தங்கள் குழந்தைகளிடம் ஒப்படைக்கின்றார்கள். எனினும், தாம் இல்லாதபொழுது, அனைத்தும் மிகச்சரியாகப் பராமரிக்கப்படுகின்றனவா எனக் கவனிப்பதற்காக அவர்களைக் கண்கானிக்கின்றார்கள். எவ்வாறாயினும், இன்றைய குழந்தைகள் கூறுகின்றனர்: தந்தை ஓய்வு ஸ்திதிக்குச் சென்றுள்ளது நல்லதாகும். இப்பொழுதாவது எனக்குத் திறவுகோல் கிடைத்ததே. பெற்றோர் உயிருடன் இருக்கும்பொழுதே குழந்தைகள் அனைத்தையும் அழித்து விடுகின்றனர். பின்னர், அவர்கள் தங்களது தந்தையிடம் கூறுகின்றனர்: இங்கிருந்து வெளியேறுங்கள்! தந்தை விளங்கப்படுத்துகின்றார்: கண்காட்சிகளில் எழுதுங்கள்: சகோதர, சகோதரிகளே, வந்து, படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தைச் செவிமடுங்கள். இந்த உலகச் சக்கரத்தின் ஞானத்தை அறிந்திருப்பதால், நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்கின்ற தேவர்களான, சக்கரவர்த்திகளாகவும், சக்கரவர்த்தினிகளாகவும் ஆகுவீர்கள். இந்த பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: இது பல பிறவிகளின் இறுதிப் பிறவியின் இறுதிக் காலமாகும். நான் இவருக்குள் மாத்திரமே பிரவேசிக்கின்றேன். பிரம்மாவிற்கு எதிர்நிலையிலுள்ளவர் விஷ்ணு ஆவார். விஷ்ணு ஏன் நான்கு கரங்களுடன் காட்டப்பட்டிருக்கின்றார்? அதில் இரண்டு ஆணினதும், இரண்டு பெண்ணினதும் ஆகும். இங்கு நான்கு கரங்களுடன் ஒரு மனிதன் இருக்க முடியாது. விஷ்ணு என்றால், இலக்ஷ்மியும் நாராயணனும் என்பதே அதன் விளக்கமாகும். அவர்கள் பிரம்மாவையும் நான்கு கரங்களுடனேயே காட்டுகின்றார்கள்: இரண்டு கரங்கள் பிரம்மாவினுடையதும், இரண்டு கரங்கள் சரஸ்வதியினுடையதும் ஆகும். இருவரும் எல்லையற்ற துறவிகள்;. நீங்கள் துறவறம் பூண்டு வேறொரு இடத்திற்குச் செல்கின்றீர்கள் என்றில்லை, இல்லை. தந்தை கூறுகின்றார்: வீட்டில் வாழும்பொழுதும், உங்கள் புத்தியிலிருந்து நரகத்தை நீங்கள் துறந்துவிட வேண்டும். நரகத்தை மறந்துவிடுவதுடன் சுவர்க்கத்தை உங்கள் புத்தியினால் நினைவுசெய்யுங்கள். உங்கள் புத்தியின் யோகத்தைச் நரகத்திலிருந்தும், நரகவாசிகளிடமிருந்தும் அகற்றி, உங்கள் புத்தியின் யோகத்தைச் சுவர்க்கவாசிகளாகிய தேவர்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். கற்பவர்களின் புத்தியில், தாம் சித்தியெய்தி, அவ்வாறு ஆகுவோம் என்பது உள்ளது. முன்னர், மக்கள் தங்களது ஓய்வு ஸ்திதியை அடைந்ததும், குருமாரை ஏற்றுக் கொள்வார்கள். தந்தை கூறுகின்றார்: இவர் தனது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில், இவரின் ஓய்வு ஸ்திதியின்பொழுதே, நான் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். கடவுள் பேசுகின்றார்: நான் இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியிலேயே இவருக்குள் பிரவேசிக்கின்றேன். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரு பாகத்தை நடித்தவருக்குள் மாத்திரமே நான் பிரவேசிக்கின்றேன். ஏனெனில், இவர் முதலாம் இலக்கத்திற்குச் செல்ல வேண்டும். பிரம்மா விஷ்ணுவாகவும், விஷ்ணு பிரம்மாவாகவும் ஆகுகின்றார். அவர்கள் இருவரையும் நான்கு கரங்களுடன் காட்டியுள்ளனர். கணக்குள்ளது: பிரம்மாவும் சரஸ்வதியும் பின்னர் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் பின்னர் பிரம்மாவும் சரஸ்வதியும் ஆகுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இக்கணக்கை விரைவில் காட்டுகின்றீர்கள். 84 பிறவிகள் எடுத்து, இந்தச் சாதாரண பிரம்மாவாகவும், சரஸ்வதியாகவும் ஆகுகின்ற இலக்ஷ்மி நாராயணனே விஷ்ணு என்பதன் அர்த்தமாகும். பாபா பின்னரே அவருக்கு பிரம்மா எனப் பெயரிட்டார். எவ்வாறாயினும், பிரம்மாவின் தந்தை யார்? சிவபாபா என்று எவரும் நிச்சயமாகக் கூறுவார்கள். அவர் எவ்வாறு உருவாக்கப்பட்டார்? அவர் தத்தெடுக்கப்பட்டார். தந்தை கூறுகின்றார்: நான் இவருக்குள் பிரவேசிப்பதால், நீங்கள் எழுத வேண்டும்: கடவுள் சிவன் பேசுகின்றார்: தனது சொந்தப் பிறவிகளைப் பற்றியே அறியாத பிரம்மாவிற்குள் நான் பிரவேசிக்கின்றேன். நான் அவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியின் முடிவிலே அவருக்குள் பிரவேசிக்கின்றேன். அவர் தனது ஓய்வு ஸ்திதியில் உள்ள்பொழுதே, நான் அவருக்குள் பிரவேசிக்கின்றேன். முழு உலகமும் பழையதாகவும், தூய்மையற்றதாகவும் ஆகும்பொழுதே நான் வருகின்றேன். இது மிகவும் இலகுவான விளக்கமாகும். முன்னர் மக்கள் 60 வயதிலேயே குருமாரை ஏற்பதுண்டு. இப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே குருமாரை ஏற்கின்றார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களிடமிருந்தே இதனைக் கற்றுக்கொண்டனர். ஓ! ஆனால், குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு குருவை ஏற்றுக் கொள்வதற்கான தேவை என்ன? ஒரு குழந்தை தனது குழந்தைப் பருவத்திலேயே மரணித்து விட்டால், அவர் சற்கதியைப் பெறுவார் என அவர்கள் நம்புகின்றனர். எவருமே இங்கு சற்கதி பெற முடியாது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். தந்தை உங்களுக்கு இப்பொழுது மிக இலகுவாக விளங்கப்படுத்தி, உங்களை மேன்மையானவர்களாகவும் ஆக்குகின்றார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் தொடர்ந்தும் ஏணியிலிருந்து கீழிறங்கினீர்கள். அது இராவண இராச்சியம். அப்பொழுது விகார உலகம் ஆரம்பமாகுகின்றது. நீங்கள் அனைவரும் குருமார்களை ஏற்றிருந்தீர்கள். இவரே கூறுகின்றார்: நான் பல குருமாரை ஏற்றிருந்தேன். அனைவருக்கும் சற்கதியை அருளுகின்ற கடவுளை அவர்கள் அறியார்கள். பக்தியின் சங்கிலியும் மிகவும் உறுதியாகியுள்ளது. சங்கிலிகளில் சில தடிப்பானவையும், சில மிக மெல்லியவையும் ஆகும். பாரமான ஒன்றை உயர்த்த வேண்டுமாயின், அவர்கள் அதனைத் தடிப்பான சங்கிலியில் கட்டி, பின்னர் அதனை உயர்த்துகின்றனர். இங்கும் அவ்வாறே. சிலர் விரைவாகவே உங்களிடம் வந்து, செவிமடுத்து, நன்றாகக் கற்கின்றார்கள். சிலர் எதனையுமே புரிந்துகொள்வதில்லை. மாலையின் மணிகள் வரிசைக்கிரமமாகவே உருவாக்கப்படுகின்றன. பக்தி மார்க்கத்தில், மக்கள் மாலையின் மணிகளை உருட்டினாலும் அவர்களிடம் எந்த ஞானமும் இல்லை. அவர்களின் குரு மாலையின் மணிகளை உருட்டுமாறு அவர்களிடம் கூறுகின்றார். அவர்கள் ஒரு ஹார்மோனியம் இசைக்கப்படுவதைப் போன்று, தொடர்ந்தும் “ராமா, ராமா” என நாமத்தை உச்சரிக்கின்றனர். அது இனிமையான ஓசையெழுப்புகின்றது, அவ்வளவே. இராமர் யாரென்பதையோ, கிருஷ்ணர் யாரென்பதையோ அவர்கள் எப்பொழுது வருகின்றார்கள் என்பதையோ அவர்கள் அறியார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்கள் கிருஷ்ணரையும் துவாபரயுகத்தில் காட்டியுள்ளனர். அவ்வாறு அவர்களுக்குக் கற்பித்தவர் யார்? குருமார்கள்! கிருஷ்ணர் துவாபர யுகத்தில் வந்திருந்தால், அவரைத் தொடர்ந்து கலியுகம் வந்து, அவர்கள் எவ்வாறு தமோபிரதான் ஆகியிருக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: நான் தமோபிரதானானர்களைச் சதோபிரதான் ஆக்குவதற்காகவே சங்கமயுகத்தில் வருகின்றேன். நீங்கள் அத்தகைய குருட்டு நம்பிக்கையுடையவர்கள் ஆகுகின்றீPர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: முட்களிலிருந்து மலர்களாகுபவர்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள். அவர்கள் கூறுவார்கள்: இது முற்றிலும் உண்மையானது. சிலர் நன்றாகப் புரிந்துகொண்டு உங்களிடம் கூறுகின்றனர்: நீங்கள் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றீர்கள். 84 பிறவிகளின் கதையும் சரியானது. ஒரேயொரு தந்தையே ஞானக்கடல். அவர் வந்து, உங்களுக்கு முழு ஞானத்தையும் கொடுக்கின்றார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சற்குருவான தந்தையின் நினைவினால், உங்கள் புத்தியைச் சதோபிரதானாக்குங்கள். உண்மையானவராகுங்கள். ஆஸ்திகராகி, மற்றவர்களையும் ஆஸ்திகர்களாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.2. இப்பொழுது இது உங்கள் ஓய்வு ஸ்திதியாகும். எனவே, எல்லையற்ற துறவிகளாகி, உங்கள் புத்தியின் யோகத்தை ஏனைய அனைவரிடமிருந்தும் அகற்றிவிடுங்கள். தூய்மையாகுவதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் “அனைத்தும் உங்களுடையது” என்று கூறுவதனாலும், “என்னுடையது” எனும் உணர்வின் சிறிதளவு சுவட்டையும் முடித்து விடுவதாலும், இலேசாகவும் ஒளியாகவும் ஆகுவீர்களாக.எவ்விதமான “என்னுடையது” என்ற உணர்வும் - அது “எனது சுபாவமாக”, சம்ஸ்காரங்களாக இருந்தாலென்ன, “எனது சுபாவம்” – எனும் எதுவும் அதாவது, “என்னுடையது” என்றால் ஒரு சுமையாகும், ஒரு சுமையைக கொண்டிருப்பவர்களால் பறக்க முடியாது. “என்னுடையது” எனும் இந்த உணர்வு உங்களை அசுத்தமானவர்கள் ஆக்குகின்றது, இதனாலேயே நீங்கள் இப்பொழுது “உங்களுடையது, உங்களுடையது” என்று கூறிச் சுத்தமானவர்கள் ஆகவேண்டும். ஒரு தேவதை என்றால் “என்னுடையது” என்ற உணர்வின் சிறிதளவு சுவட்டையேனும் கொண்டிராதவர் என்ற அர்த்தம் ஆகும். உங்கள் எண்ணங்களிலேனும் “என்னுடையது” எனும் உணர்வு இருந்தால், அப்பொழுது நீங்கள் அசுத்தமாகி விட்டீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். “என்னுடையது’ எனும் இந்த உணர்வின் சுமையை முடித்து விட்டு, இலேசாகவும் ஒளியாகவும் ஆகுங்கள்.
சுலோகம்:
பாப்தாதாவைத் தங்கள் கண்களில் அமிழ்த்தியிருப்பவர்களே, உலகின் ஒளிகள் ஆவார்கள்.