05.04.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை சகல குழந்தைகளையும் நேசிக்கின்றாராயினும் தந்தையின் அறிவுரைகளை உடனடியாக ஏற்பவர்கள் தந்தையினால் ஈர்க்கப்படுகின்றார்கள். நற்குணங்கள் கொண்ட குழந்தைகள் தந்தையின் அன்பை ஈர்க்கிறார்கள்.

கேள்வி:
தந்தை என்ன ஒப்பந்தத்தைச் செய்துள்ளார்?

8பதில்:
ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவரையும் அழகிய மலர்களாக்கி, திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்ற ஒப்பந்தத்தைச் செய்துள்ளார். முழு உலகிலும் தந்தையைப் போன்ற ஒப்பந்தக்காரர் வேறு எவருமே இல்லை. அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்வதற்கு வருகின்றார். தந்தையால் சேவை செய்யாமலிருக்க முடியாது. எனவே, குழந்தைகளாகிய நீங்களும் சேவையின் அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும். நீங்கள் செவிமடுத்தவற்றைப் புறக்கணிக்கக்கூடாது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, இங்கு உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு அமர்ந்திருங்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே இதனைக் கூறுகிறார். வேறெந்த மனிதராலும் எவ்வாறு தங்களை ஆத்மாக்களாகக் கருதுவது என ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியாது. 5000 வருடங்களுக்குப் பின்னரே தந்தை வந்து, உங்களுக்கு இதனைக் கற்பிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். இதுவே அதி மங்களகரமான சங்கமயுகம் என்பதனை எவருமே அறியமாட்டார்கள். நீங்கள் அதி மங்களகரமான சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் நினைவு செய்ய வேண்டும். இதுவும் மன்மனாபவவே ஆகும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதால் என்னை நினைவு செய்யுங்கள். உங்களது 84 பிறவிகள் இப்பொழுது முடிவடைகின்றன. நீங்கள் இப்பொழுது சதோபிரதானாகி வீடு திரும்ப வேண்டும். சிலர் முற்றிலும் பாபாவை நினைவு செய்வதேயில்லை. தந்தை ஒவ்வொருவரது முயற்சிகளையும் மிக நன்றாக அறிவார். இதிலும், சிலர் இங்கிருப்பவர்கள், சிலர் வெளியில் இருப்பவர்கள். இங்கிருக்கின்ற குழந்தைகளை நான் பார்க்கின்ற பொழுதிலும், இனிய சேவாதாரிக் குழந்தைகளையே நான் நினைவு செய்வதை பாபா அறிவார். நான் அவர்களைப் பார்க்கும்பொழுது சிந்திக்கின்றேன்: இவர் எவ்வகையான மலர், இவர் என்ன நற்குணங்களைக் கொண்டிருக்கின்றார்? சிலர் எந்த நற்குணங்களையும் கொண்டிராத அத்தகையவர்கள். அத்தகைய குழந்தைகளைப் பார்த்து பாபா என்னதான் செய்வார்? தந்தை தூய ஆத்மாவாகிய ஒரு காந்தமாவார். எனவே, அவரிடம் நிச்சயமாக அந்த ஈர்ப்பு இருக்கும். எவ்வாறாயினும், அகத்திலிருப்பதை பாபா அறிவார். தந்தை தனது முழு அட்டவணையையும் உங்களுக்குக் காட்டுகின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் இதனைக் காட்ட வேண்டும். தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: நான் உங்களை உலகின் அதிபதிகளாக்குவதற்காகவே இங்கு வந்துள்ளேன். எனினும், அது ஒவ்வொருவரும் செய்யும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. ஒவ்வொருவரும் செய்கின்ற முயற்சியை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். பாபா எழுதுகின்றார்: ஒவ்வொருவரது தொழிலையும் எழுதி, அதனை பாபாவிற்கு அனுப்பிவையுங்கள். அல்லது, அவர்களை அதனை எழுதி பாபாவிற்கு அனுப்பச் செய்யுங்கள். உஷாராகவும், விவேகமாகவும் உள்ள பிராமண ஆசிரியர்கள் அவர்கள் என்ன தொழில் செய்கின்றார்கள் என்பதையும், அவர்களது வருமானம் என்ன என்பதையும் அவர்கள் அனைவரையும் எழுதச் செய்ய வேண்டும். தந்தை தன்னைப் பற்றிய அனைத்தையும் உங்களுக்குக் கூறுவதுடன், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் ஒவ்வொருவரது ஸ்திதியையும் அறிவார். பல்வகையான மலர்கள் உள்ளன. (பாபா பல வகையான மலர்களைக் காட்டினார்). பாருங்கள், இது அத்தகைய இராஜரீகமான மலர். இது அதிகளவு நறுமணத்தைக் கொண்டது, இது மலரும்பொழுது, முதற்தரமான அழகைக் கொண்டிருக்கும். நீங்களும் இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். எனவே, தந்தை தொடர்;ந்தும் அனைவரையும் பார்க்கின்றார். அவர் அனைவருக்கும் சேர்;ச்லைற்றைக் கொடுக்கிறார் என்றில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் எத்தகையவர்களோ, அதற்கேற்பவே உங்களிடம் பாபாவை ஈர்த்துக்கொள்வீர்கள். எந்த நற்குணங்களையும் கொண்டிராதவர்களால் எவ்வாறு பாபாவிடமிருந்து எதையாவது ஈர்க்க முடியும்? அத்தகையவர்கள் அங்கு சென்று, சில சதங்கள் பெறுமதியான அந்தஸ்தையே பெறுவார்கள். பாபா உங்கள் ஒவ்வொருவரது நற்குணங்களையும் பார்ப்பதுடன், உங்களுக்கு அன்பையும் கொடுக்கின்றார். அவ்வன்பினால் அவரது கண்கள் கசிகின்றன. இந்த சேவாதாரிக் குழந்தைகள் அதிகளவு சேவை செய்கின்றார்கள். அவர்களால் சேவைசெய்யாமல் ஓய்வெடுக்க முடியாது. சிலருக்கு எவ்வாறு சேவை செய்வதெனவும் தெரியாது. அவர்கள் யோகத்தில் அமர்வதும் கிடையாது. அவர்கள் ஞானம் எதனையும் கிரகிப்பதுமில்லை. பாபா உணர்கிறார்: அவர்கள் என்ன அந்தஸ்தைக் கோருவார்கள்? எவருமே மறைந்திருக்க முடியாது. சிறந்த புத்தியைக் கொண்ட, நிலையத்தைப் பராமரிக்கும் குழந்தைகள் தங்களது அட்டவணையை அனுப்ப வேண்டும். அப்பொழுதே, ஒவ்வொருவரும் எந்தளவிற்கு முயற்சியாளர்களாக இருக்கின்றார்கள் என்பதனை பாபா அறிந்துகொள்வார். பாபா ஞானக்கடலாவார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். ஒவ்வொருவரும் எந்தளவிற்கு முயற்சி செய்கின்றார்கள், எந்தளவிற்கு நற்குணங்கள் கொண்டவர்கள் ஆகுகின்றார்கள் என்பது விரைவாக அறிந்து கொள்ளப்படுகின்றது. பாபா அனைவரையும் நேசிக்கின்றார். இது பற்றிய பாடலொன்று உள்ளது: உங்கள் மலர்களுக்கும் உங்கள் முட்களுக்குமான அன்பு உள்ளது. அது வரிசைக்கிரமமானது. எனவே, பாபா உங்களிடம் கூறுவதை உடனடியாகவே செய்யக்கூடியவகையில் நீங்கள் தந்தைமீது அதிகளவு அன்பு கொண்டிருக்க வேண்டும். நீங்கள் பாபாவை நேசிப்பதை அப்பொழுது அவரும் புரிந்துகொள்வார். அவர் அந்த ஈர்ப்பை உணர்வார். நீங்கள் தந்தையை முற்றாகப் பற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்கு அவர் அத்தகைய கவர்ச்சியைக் கொண்டிருக்கின்றார். எவ்வாறாயினும், துரு அகற்றப்படும்வரை அந்த ஈர்;ப்பு இருக்காது. நான் ஒவ்வொருவரையும் பார்க்கின்றேன். பாபா சேவாதாரிக் குழந்தைகளை விரும்புகின்றார். தந்தை சேவை செய்வதற்காகவே இங்கு வருகின்றார். அவர் தூய்மையற்றவர்;களைத் தூய்மையாக்குகின்றார். இதனை நீங்கள் அறிவீர்கள், ஆனால் உலக மக்கள் அறியார்கள். இப்பொழுது உங்களில் வெகு சிலரே இருக்கின்றீர்கள். நீங்கள் யோகம் செய்யாவிடில், அந்த ஈர்ப்பு இருக்கமாட்டாது. உங்களில் வெகு சிலரே அந்த முயற்சியைச் செய்கின்றீர்கள். நீங்கள் ஏதோ ஒன்றில் சிக்கிவிடுகின்றீர்கள். இது, நீங்கள் செவிமடுப்பவை அனைத்திற்கும் வெறுமனே தொடர்;ந்தும் “உண்மை, உண்மை” எனக் கூறுகின்ற ஆன்மீக ஒன்றுகூடல் அல்ல. ஒரேயொரு கீதை மாத்திரமே அனைத்துச் சமயநூல்களினதும் இரத்தினமாகும். கீதையில் மாத்திரமே இராஜயோகம் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை மாத்திரமே உலகின் அதிபதி ஆவார். இந்த கீதையின் மூலமாக உங்களது செல்வாக்கு பரவும் என்பதையும், ஆனால் அந்தப் பலமும் இருக்க வேண்டும் என்பதையும் நான் தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றேன். யோக சக்தியின் பெருமளவு பலம் இருக்கவேண்டும். எனினும், நீங்கள் இதில் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றீர்கள். இப்பொழுது சிறிது காலமே எஞ்சியுள்ளது. நீங்கள் இனிமையானவர்கள் ஆகினால், மற்றவர்;களும் உங்களுடன் இனிமையாக இருப்பார்;கள். நீங்கள் என்னை நேசித்தால், நானும் உங்களை நேசிப்பேன். இது ஆத்மாவின் அன்பாகும். ஒரேயொரு பாபாவின் நினைவில் நிலைத்திருங்கள். இந்த நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சிலர் முற்றிலும் பாபாவை நினைவு செய்வதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இங்கு பக்தி என்ற கேள்விக்கே இடமில்லை. இது பாபாவின் இரதமாகும். சிவபாபா இவர் மூலம்; உங்களுக்குக் கற்பிக்கின்றார். சிவபாபா தனது பாதங்களைக் கழுவி அந்நீரைப் பருகுமாறு உங்களிடம் கேட்கவில்லை. பாபா தனது பாதங்களைத் தொடுவதற்குக்கூட உங்களை அனுமதிப்பதில்லை. இது ஒரு கல்வியாகும். அவரது பாதங்களைத் தொடுவதால் என்னதான் நிகழும்? தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். பல மில்லியன்களில் ஒரு கைப்பிடியளவினர் மாததிரமே இதனைப் புரிந்துகொள்வார்கள். முன்னைய கல்பத்தில் வந்தவர்கள் மாத்திரம் இதனைப் புரிந்துகொள்வார்கள். கள்ளங்கபடமற்ற பிரபுவாகிய தந்தை வந்து, அப்பாவித் தாய்மாருக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து, அவர்;களை ஈடேற்றுகின்றார். பாபா உங்களை மிக உயர்;வாக, முக்திக்கும், ஜீவன்முக்திக்கும் அழைத்துச் செல்கின்றார். தந்தை கூறுகின்றார்: விகாரங்களைத் துறந்துவிடுங்கள். இதன் காரணமாகவே குழப்பம் ஏற்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்களைப் பரீட்சித்துப் பாருங்கள். நான் என்ன குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றேன்? வியாபாரிகள் தங்களது இலாப, நட்டங்களை அறிந்துகொள்வதற்காக, தினமும் தங்களது கணக்குகளைப் பார்க்கின்றனர். நீங்களும் உங்களை உலகின் அதிபதிகளாக ஆக்குகின்ற, அதியன்பிற்கினிய பாபாவை எவ்வளவு நேரம் நினைவு செய்தீர்கள் என்ற கணக்கை வைத்திருக்க வேண்டும். நீங்கள் மிகச் சிறிதளவு நேரமே அவரை நினைவு செய்தீர்கள் என்பதைக் கண்டுகொண்டால், உங்களையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும்: அத்தகைய பாபாவை நான் நினைவு செய்யவில்லையா? எங்களது பாபாவே அனைவரிலும் அதியற்புதமானவர். முழு உலகிலும் சுவர்க்கமே அதியற்புதமானது. சுவர்க்கம் நூறாயிரக்கணக்கான வருடங்கள் நீடிப்பதாக அம்மக்கள் கூறுகின்றனர், நீங்களோ கல்பம் 5000 வருடங்களைக் கொண்டதெனக் கூறுகின்றீர்கள். பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. மிகவும் பழைய பக்தர்களிடம் பாபா தன்னை அர்ப்பணிக்கின்றார். அவர்கள் பெருமளவு பக்தி செய்துள்ளனர். பாபா இப்பிறவியில் கீதையைக் கற்றதுடன், நாராயணனின் படத்தையும் வைத்திருந்தார். அவர் இலக்ஷ்மியை ஒரு பணிப்பெண்ணாக இருப்பதிலிருந்து விடுவித்தார். எனவே, அவர் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருந்தார். நாங்கள் எங்களது சரீரத்தை விடுத்து, சத்தியயுகத்தில் வேறொன்றைப் பெறுவதைப் போன்றே, பாபாவும் தான் சென்று, ஓர் அழகிய இளவரசர் ஆகுவார் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருந்தார். அவர் தொடர்ந்தும் உங்களையும் முயற்சி செய்யத் தூண்டுகின்றார். நீங்கள் எப்படி வெறுமனே இவ்வாறு ஆகமுடியும்? நீங்கள் பாபாவை மிக நன்றாக நினைவு செய்வீர்களாயின், சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள். சிலர் கற்பதுமில்லை, தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதுமில்லை. அவர்கள் ஒரு கணக்கைக்கூட வைத்திருப்பதில்லை. மேன்மையானவர்கள் ஆகவுள்ளவர்கள் மாத்திரமே எப்பொழுதும் தங்கள் அட்டவணையை வைத்திருப்பார்கள். அவ்வாறில்லாதவர்கள் பகட்டாக வெளியில் மாத்திரம் காட்டிக்கொள்வார்கள். அவர்கள் 15 முதல் 20 வரையான நாட்களுக்குப் பின்னர் அட்டவணை எழுதுவதை நிறுத்திவிடுகின்றார்கள். இங்கு பரீட்சைகள் போன்ற அனைத்தும் மறைமுகமானவை. தந்தை ஒவ்வொருவரது தகைமைகளையும் அறிவார். நீங்கள் உடனடியாகவே தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவீர்களாயின், அனைத்துக் கட்டளைகளையும் பின்பற்றுகின்ற, கீழ்ப்படிவானவர் என அழைக்கப்படுவீர்கள். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது பெருமளவு சேவை செய்ய வேண்டும். மிகச்சிறந்த பல குழந்தைகள் தந்தையை விவாகரத்துச் செய்துவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். அந்த ஒரேயொருவர் ஒருபொழுதும் எவரையும் விவாகரத்துச் செய்ததில்லை. நாடகத்திற்கேற்ப, பெரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கே இவர் வந்துள்ளார். நானே அனைவரிலும் அதியுயர்ந்த ஒப்பந்தக்காரர். நான் அனைவரையும் அழகானவர்களாக்கி, அவர்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். அந்த ஒரேயொரு ஒப்பந்தக்காரரே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் இப்பொழுது உங்கள் முன்னிலையில் அமர்ந்துள்ளார். சிலர் அதிகளவு நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள், ஏனையோருக்கு முற்றிலும் நம்பிக்கை கிடையாது. இன்று அவர்கள் இங்கிருக்கின்றார்கள், ஆனால் நாளையே அவர்கள் சென்று விடுவார்கள், அவர்களது நடத்தை அத்தகையதாக இருப்பதே அதற்குக் காரணமாகும். அவர்களது மனச்சாட்சி நிச்சயமாக அவர்களுக்குள்ளே உறுத்தும்: பாபாவுடன் வாழும் பொழுது, நான் பாபாவிற்காக என்ன செய்கின்றேன்? நீங்கள் எந்தச் சேவையையும் செய்யாவிடில், எதைப் பெறுவீர்கள்? சப்பாத்தி செய்வது மரக்கறி சமைப்பது, இவற்றை நீங்கள் முன்னரும் செய்தீர்கள். ஆனால் புதிதாக எதைச் செய்திருக்கின்றீர்கள்? நீங்கள் சேவையின் அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும். நான் பலருக்கும் பாதையைக் காட்டினேன். இந்நாடகம் ஓர் அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் நடப்பவை அனைத்தையும் நடைமுறையில் பார்க்கின்றீர்கள். சமயநூல்களில் அவர்கள் கிருஷ்ணரின் தெய்வீகச் செயற்பாடுகளைப் பற்றி எழுதியுள்ளார்கள். எனினும், அவை உண்மையில் ஒரேயொரு தந்தையின் தெய்வீகச் செயற்பாடுகளேயாகும். அவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். வேறு எவராலுமே அந்த ஒரேயொருவரைப் போன்ற செயற்பாடுகளைச் செய்ய முடியாது. நீங்கள் நற் செயல்களைச் செய்ய வேண்டும். உண்மையில், ஒருவரைக் கடத்துதல் போன்றவை நினைவு செய்வதற்கு உகந்த செயற்பாடல்ல. ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். அவர் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் உங்களது தீய பழக்கங்களைத் துறக்க வேண்டும். இல்லாவிடில், நீங்கள் என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள்? அன்பிற்கினியவர் உங்கள் நற்குணங்களைப் பார்த்து, அன்புகொள்வார். அவரது சேவையைச் செய்பவர்கள் மீது அவர் அன்பு கொள்கின்றார். எச் சேவையும் செய்யாதவர்களால் என்ன பயன்? இவ்விடயங்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் மகாபாக்கியசாலிகள். உங்களைப் போன்ற பாக்கியசாலிகள் வேறு எவருமேயில்லை. நீங்கள் சுவர்க்கத்திற்குச் சென்றாலும், உங்கள் வெகுமதியை உயர்;வானதாக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், உங்கள் அந்தஸ்து குறைக்கப்படும். இது கல்பம் கல்பமாகத் தொடரும் விடயமாகும். நீங்கள் பெறுவதைக் கொண்டு (அதுவே போதும் என) வெறுமனே சந்தோஷப்படக்கூடாது. நீங்கள் மிகச்சிறந்த முயற்சியைச் செய்யவேண்டும். நீங்கள் எத்தனை பேரை உங்களைப் போன்று ஆக்கியுள்ளீர்கள் என்ற சேவையின் அத்தாட்சியையும் நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் பிரஜைகள் எங்கே? தந்தையும், ஆசிரியருமானவர் அனைவரையும் முயற்சி செய்யத் தூண்டுகின்றார். எவ்வாறாயினும், அது ஒருவரது பாக்கியத்தில் இருக்க வேண்டும். தந்தை தனது அமைதி இல்லத்தை விட்டு, தூய்மையற்ற இவ்வுலகிற்கு, தூய்மையற்ற சரீரத்திற்குள் வருவதே மிகப் பெரிய ஆசீர்வாதமாகும். இல்லாவிடில், படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தை யாரால் உங்களுக்குக் கொடுக்க முடியும்? சத்தியயுகத்தில் இராம இராச்சியமும், கலியுகத்தில் இராவண இராச்சியமும் உள்ளன என்பது எவரது புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. இராம இராச்சியத்தில் ஒரேயொரு இராச்சியமே இருந்தது, இராவண இராச்சியத்திலோ எண்ணற்ற இராச்சியங்கள் உள்ளன. இதனாலேயே நீங்கள் கேட்கின்றீர்கள்: நீங்கள் நரகவாசிகளா, சுவர்க்கவாசிகளா? எவ்வாறாயினும், தாங்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை. இது முட்காடு, அதுவோ பூந்தோட்டம் ஆகும். எனவே, இப்பொழுது நீங்கள் தாயையும், தந்தையையும், விசேட அன்பிற்கினிய குழந்தைகளையும் பின்பற்ற வேண்டும், அப்பொழுதே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். தந்தை பெருமளவில் விளங்கப்படுத்துகின்றார். எனினும், புரிந்துகொள்ள வேண்டியவர்கள் மாத்திரமே புரிந்துகொள்வார்கள். சிலர் இதனைக் கேட்டு, ஞானக்கடலை மிக நன்றாகக் கடைகின்றார்கள். ஏனையோரோ தாங்கள் கேட்டவற்றை அலட்சியம் செய்கிறார்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்கின்றீர்களா என எங்கும் எழுதப்பட்டுள்ளது. அப்பொழுது நிச்சயமாக உங்கள் ஆஸ்தியையும் நீங்கள் நினைவு செய்வீர்கள். உங்களிடம் தெய்வீகக் குணங்கள் இருந்தால், நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் கோபம், அல்லது அசுர குறைபாடுகளைக் கொண்டிருந்தால் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. அங்கே தீய ஆவிகள் கிடையாது. இராவணனும் அங்கே இருக்கமாட்டான், எனவே இராவணனின் தீய ஆவிகள் எவ்வாறு அங்கு இருக்க முடியும்? சரீர உணர்வு, காமம், கோபம், பேராசை போன்றவையே மிகப் பெரிய தீய ஆவிகளாகும். அவற்றை அகற்றுவதற்கு ஒரேயொரு வழிமுறையே உள்ளது: அது பாபாவின் நினைவேயாகும். நீங்கள் பாபாவின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலமே அனைத்துத் தீய ஆவிகளும் ஓடிவிடும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு:

பல குழந்தைகள் மற்றவர்களைத் தங்களைப் போன்று ஆக்குவதும், தங்களது பிரஜைகளை உருவாக்குவதுமான சேவை செய்ய விரும்புகின்றார்கள். தங்களது மூத்த சகோதரர்;கள் சேவை செய்வது போன்றே அவர்களும் செய்ய விரும்புகின்றார்கள். அதிகத் தாய்மார்கள் இருக்கின்றனர். ஞானக்கலசம் தாய்மார்மீதே வைக்கப்பட்டுள்ளது, எனினும் இது இல்லறப் பாதையாகும். இருபாலாரும் தேவைப்படுகின்றனர். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றனர் என பாபா கேட்கின்றார். நீங்கள் சரியாகப் பதில் கூறுகின்றீர்களா இல்லையா என அவர் பார்க்கின்றார். எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர், அத்துடன் இன்னுமொருவர் சிவபாபா ஆவார். சிலர் கூறவேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். சிலர் உண்மையிலேயே அவரைத் தங்கள் குழந்தையாக ஆக்குகின்றனர். அவரைத் தங்கள் வாரிசாக ஆக்குபவர்கள் வெற்றிமாலையில் கோர்க்கப்படுவார்கள். உண்மையிலேயே அவரைத் தங்களது வாரிசாக்குபவர்கள் தாங்களே வாரிசாகிவிடுகிறார்கள். நேர்மையான இதயத்தையிட்டு பிரபு பூரிப்படைகின்றார். ஆனால் ஏனைய அனைவரும் கூறவேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகின்றனர். இந்நேரத்தில் பரலோகத் தந்தையே அனைவருக்கும் ஓர் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். இதனாலேயே 21 பிறவிகளுக்கு நீங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்ற அந்த ஒரேயொருவரை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். இவை அனைத்தும் இங்கே இருக்கப் போவதில்லை என்ற ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் உண்மையிலேயே அவரை உங்களது வாரிசாக்கிவிட்டீர்களா அல்லது அதைச் செய்வதைப் பற்றிச் சிந்திக்கின்றீர்களா என்பதையும், பாபாவை உங்களது வாரிசாக்கிக் கொள்ளல் என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்கின்றீர்களா என்பதையும் தந்தை பார்க்கின்றார். பலரால் இதனைப் புரிந்துகொண்டு, பாபாவைத் தங்கள் வாரிசாக்க முடியாதுள்ளது. ஏனெனில், அவர்கள் மாயையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். இந்நேரத்தில் நீங்கள் கடவுளின் அல்லது மாயையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுள்ளீர்கள். கடவுளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் அவரைத் தங்களது வாரிசாக்கிக் கொள்வார்கள். 8 மணிகளின் மாலையும், 108 மணிகளின் மாலையும் உள்ளன. எட்டு மணிகளும் நிச்சயமாக அற்புதங்களைச் செய்வார்கள். அவர்கள் உண்மையாகவே பாபாவைத் தங்கள் வாரிசாக்கியிருப்பார்கள். அவர்கள் அவரைத் தங்கள் வாரிசாக்கினாலும், தங்கள் ஆஸ்தியையும் கோருகிறார்கள். அத்தகைய மேன்மையான வாரிசை உருவாக்கியவர்கள் அதுபோன்ற மேன்மையான செயல்களையே செய்வார்கள். நீங்கள் எப்பாவச் செயல்களையும் செய்யக்கூடாது. அனைத்து விகாரங்களும் பாவச் செயல்களாகும். தந்தையை மறந்து வேறொருவரை நினைவு செய்வதும் ஒரு பாவச் செயலேயாகும். தந்தை என்றால் தந்தைதான். தந்தை இவ்வாய் மூலமாகக் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் இவ்வழிகாட்டலைப் பெற்றுள்ளீர்கள். எனவே, நீங்கள் அவரை முழுமையாக நினைவுசெய்ய வேண்டும். இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. நீங்கள் ஒரேயொரு தந்தையை நினைவு செய்தால், மாயை பெருமளவில் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டாள். எவ்வாறாயினும், மாயையும் மிகவும் சக்திவாய்ந்தவள். மாயை உங்களைப் பாவச் செயல்களைச் செய்ய வைக்கிறாள் என நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவள் மகத்தான மகாராத்திகளைக்கூட நிலத்தில் விழச் செய்கின்றாள். நாளுக்கு நாள், நிலையங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்தும் அதிகரிக்கும். கீதை பாடசாலைகளும், அருங்காட்சியகங்களும் தொடர்ந்தும் திறக்கப்படும். முழு உலகிலுமுள்ள மனிதர்கள் தந்தை கூறுவதையும், பிரம்மா கூறுவதையும் ஏற்றுக் கொள்வார்கள். பிரம்மா மாத்திரமே பிரஜாபிதா பிரம்மா (மக்களின் தந்தை) என அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்கள் மக்கள் என அழைக்கப்படுவதில்லை. மனித உலகை உருவாக்குபவர் யார்? பிரஜாபிதா பிரம்மா என்ற பெயர் குறிப்பிடப்படுகின்றது. இவர்; சரீரதாரி, மற்றையவர் அசரீரியானவர்;. அவர் அநாதியானவர்;. இவரும் அநாதியானவர்; என அழைக்கப்படுகின்றார். அவர்கள் இருவரதும் பெயர்கள் அதியுயர்வானவை. அந்த ஒரேயொருவர் ஆன்மீகத் தந்தையும், இவர் பிரஜாபிதாவும் (மக்களின் தந்தை) ஆவர். அவர்கள் இருவரும் இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார்கள். அவர்களே அதியுயர்வானவர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு போதை உடையவர்களாக இருக்க வேண்டும்! நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்! எவ்வாறாயினும், நீங்கள் சந்தோஷமாகவோ, போதையுடனோ இருப்பதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. அத்தகைய மாணவர்;கள் தொடர்;ந்தும் ஞானக்கடலைக் கடைந்தால், அவர்களால் சேவை செய்யவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும். எனினும், ஒருவேளை அதற்குக் காலம் எடுக்கலாம். நீங்கள் உங்களது கர்மாதீத ஸ்திதியை அடையும்பொழுது மாத்திரமே உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். அச்சா.

ஆன்மீக பாப்தாதா ஆன்மீகக் குழந்தைகளுக்கு அன்பையும், நினைவையும், இரவு வணக்கத்தையும் கூறுகின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒவ்வொரு இரவும் உங்களது கணக்கைச் சோதித்துப் பாருங்கள்: நாள் முழுவதும் அதி இனிமையான பாபாவை நான் எவ்வளவு நேரம் நினைவு செய்தேன்? வெளிப்பகட்டிற்காக மட்டும் உங்கள் கணக்கினை வைத்திருக்காது மறைமுகமான முயற்சியைச் செய்யுங்கள்.

2. தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற ஞானக்கடலைக் கடைந்து, சேவையின் அத்தாட்சியைக் கொடுங்கள். நீங்கள் செவிமடுத்தவற்றைப் புறக்கணிக்காதீர்கள். உங்களில் ஏதாவது அசுர குணங்கள் இருக்கின்றனவா எனச் சோதித்து, அவ்வாறிருந்தால் அவற்றை அகற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
சுயநலம், பொறாமை, எரிச்சலில் இருந்து விடுபட்டிருப்பதன் மூலம் கோபத்திலிருந்தும் விடுபட்டிருப்பீர்களாக.

உங்களுக்கென்ற திட்டங்களுடன் உங்களை சேவைக்காக நீங்கள் அர்ப்பணித்திருக்கக்கூடும், ஆனால் அந்தத் திட்டங்கள், ஆசைகளாக மாற அனுமதிக்காதீர்கள். உங்கள் எண்ணங்கள் ஆசைகளாக மாறும் போதே எரிச்சல் உண்டாகின்றது. உங்கள் திட்டங்களை சுயநலத்திற்காக அன்றி, பிறர்நலத்திற்காக அர்ப்பணியுங்கள். நீங்கள் கூறியதால், அது நடக்க வேண்டும் என நினைக்காதீர்கள். உங்களை அர்ப்பணியுங்கள், ஆனால் ~ஏன்?| அல்லது ~என்ன?| என்பதற்குள் செல்லாதீர்கள். ஏனெனில் அவ்வாறிருக்கும் போது, பொறாமை, வெறுப்பு என்ற வடிவிலுள்ள ஏனைய சகபாடிகள் உள்ளன. சுயநலம் மற்றும் பொறாமையினாலேயே கோபம் ஏற்படுகின்றது என்பதால் அவை அனைத்திலிருந்தும் விடுபடுங்கள்.

சுலோகம்:
அமைதி தூதுவர்களாக இருந்து, அனைவருக்கும் அமைதியை கொடுப்பதே உங்கள் தொழில் ஆகும்.