02.09.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இது உங்களுக்கு மரணித்து வாழ்வதற்குக்காகக் கற்பிக்கும் ஓர் அற்புதமான ஆன்மீக ஒன்றுகூடல் (சத்சங்கம்) ஆகும். மரணித்து வாழ்பவர்கள் மாத்திரமே அன்னங்கள் ஆகுகின்றார்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இருக்கும் ஒரேயொரு அக்கறை என்ன?

பதில்:
விநாசம் இடம்பெறுவதற்கு முன்னர் நீங்கள் முழுமையடைய வேண்டும். ஞானத்திலும் யோகத்திலும் உறுதியானவர்கள் ஆகுகின்ற குழந்தைகள் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்;கின்றார்கள். அவர்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. அவர்கள் ஜீனிகளைப் போல் தொடர்ந்தும் ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள். சேவை செய்வதுடன், அவர்களுக்குத் தங்களை முழுமையாக்கிக் கொள்கின்ற அக்கறையும் இருக்கின்றது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது சரீர வடிவில் இருப்பதுடன் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளும் ஆவீர்கள். ஏனெனில் நீங்கள் தத்தெடுக்கப்பட்டிருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரையும் சகோதர, சகோதரிகள் ஆக்குகின்றீர்கள் என உங்களைப் பற்றி அனைவரும் கூறுகின்றார்கள். உண்மையில், ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதரர்கள் என்பதைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். புதிய உலகம் படைக்கப்படும் பொழுது, அனைத்திற்கும் முதலில் உச்சிக்குடுமிகளாகிய பிராமணர்கள் தேவைப்படுகின்றார்கள். நீங்கள் சூத்திரர்களாக இருந்தீர்கள், இப்பொழுது, இடமாற்றம் செய்யப்படுகிறீர்கள். பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் பெயர் மிகப் பிரபல்யமானது. அதனுடன் தொடர்புபடுத்தும் பொழுது, நீங்கள் அனைவரும் குழந்தைகள் என்றும், சகோதர, சகோதரிகள் என்றும் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்கின்றீர்கள். தங்களைப் பிரம்மகுமார், குமாரிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் அனைவரும் நிச்சயமாகச் சகோதர, சகோதரிகள் ஆவார்கள்; அவர்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். எனவே அவர்கள் நிச்சயமாகச் சகோதர, சகோதரிகள் ஆவார்கள். நீங்கள் இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். புரிந்துணர்வு இல்லாதவர்களும் இருக்கின்றார்கள். குருட்டு நம்பிக்கையும் இருக்கின்றது. அவர்கள் எவரை வழிபடுகின்றார்களோ, அவர் மீது நம்பிக்கை வைக்கிறார்கள் அல்லது அவர் இன்னார் என்று நம்புகின்றார்கள், ஆனாலும் அவரைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனை வழிபடுகின்றார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுது வந்தார்கள், எவ்வாறு அவ்வாறு ஆகினார்கள், அவர்கள் எங்கே சென்றார்கள் என்பதெல்லாம் அவர்களில் எவருக்கும் தெரியாது. நேரு போன்றவர்களை அறிந்த மனிதர்களுக்கு அவரது வரலாறும் புவியியலும் கூடத் தெரிந்திருக்கும். அவர்களுக்கு எவராவது ஒருவரது சரிதை தெரியவில்லை என்றால் அதில் என்ன பயன் இருக்கின்றது? அவர்கள் அவர்களை வழிபடுகிறார்கள், ஆயினும், அவர்களது வாழ்க்கைச் சரிதையைப் பற்றி இவர்களுக்குத் தெரியாது. அவர்கள் மனிதர்களின் வாழ்க்கைச் சரிதையைப் பற்றி அறிந்துள்ளார்கள், ஆனால் ஒருகாலத்தில் இங்கே வாழ்ந்து மறைந்த மகத்துவம் வாய்ந்தவர்களில் ஒருவரது வாழ்க்கைச் சரிதத்தைப் பற்றியேனும் அவர்கள் அறியாதுள்ளார்கள். சிவனை வழிபடுபவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவரை வழிபாடு செய்து, பின்னர் அவர் கூழாற்கற்களிலும் கற்களிலும் இருக்கின்றார் என்றும், அவர் ஒவ்வொரு அணுவிலும் இருக்கின்றார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அது ஒரு வாழ்க்கைச் சரிதையா? அது விவேகமானதல்ல. அவர்கள் தங்களைத் தாங்களே தூய்மையற்றவர்கள் என்றும் அழைக்கின்றார்கள். ‘தூய்மையற்றவர்கள்’ என்ற வார்த்தை மிகவும் சரியானதாகும்! தூய்மையற்றது என்றால் விகாரமானதென்று அர்த்தமாகும். நீங்கள் பிரம்மாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் என்பதால், நீங்கள் ஏன் பிரம்மகுமார், குமாரிகள் என்று அழைக்கப்படுகிறீர்கள் என உங்களால் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் பௌதீகமான படைப்புக்கள் அல்ல, ஆனால் வாய்வழித்தோன்றல்கள்;. பிராமணர்கள் சகோதர, சகோதரிகள். எனவே அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றப் பார்வையைக் கொண்டவர்களாக இருக்க முடியாது. காமம் நிறைந்த எண்ணங்களே மிகக் கீழ்த்தரமானவை. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுவதாக நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகளான, சகோதரர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இதுவும் உறுதியாக இருக்கின்றது. உலகத்தவருக்கு முற்றிலும் எதுவும் தெரியாது. அவர்கள் கூற வேண்டும் என்பதற்காகவே அதைக் கூறுகின்றார்கள். ஆத்மாக்கள் அனவைரினதும் தந்தை அந்த ஒரேயொருவரே என்பதை நீங்கள் விளங்கப்படுத்த முடியும். அனைவரும் அவரைக் கூவி அழைக்கின்றார்கள். நீங்கள் படங்களையும் காட்டியிருக்கின்றீர்கள். பிரபல சமய முக்கியஸ்தர்களும் இந்த அசரீரியான தந்தையை நம்புகின்றார்கள். அவரே ஆத்மாக்களின் அசரீரியான தந்தையாவார். அதன்பின்னர், பிரஜாபிதா பிரம்மாவே சரீர வடிவில் அனைவரினதும் தந்தை. அவர் மூலம் விரிவாக்கம் நடைபெறுகிறது. விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. அவர்கள் தொடர்ந்தும் வெவ்வேறு சமயங்களுக்குள் வருகின்றார்கள். ஆத்மா இந்தச் சரீரத்திலிருந்து பற்றற்று இருக்கின்றார். அவர்கள் சரீரத்தைப் பார்த்து ‘அவர் ஒரு அமெரிக்கர்’ என்றோ அல்லது ‘அவர் இன்னார்’ என்றோ கூறுகின்றார்கள். ஆத்மாவைப் பற்றி அவர்கள் இவ்வாறு கூறுவதில்லை. ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்திலேயே வசிக்கின்றார்கள். தங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே அவர்கள் அங்கிருந்து வருகின்றார்கள். அனைவரும் மறுபிறவி எடுக்கின்றார்கள் என்றும், புதிய ஆத்மாக்களும் தொடர்ந்தும் மேலிருந்து கீழே வருகின்றார்கள் என்றும் எந்தச் சமயத்தவர்களுக்கும் நீங்கள் கூற முடியும். எனவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்களும் மனிதர்களே. இந்த உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றியும், இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதைப் பற்றியும், அதனைப் படைப்பவர் யாரென்பதைப் பற்றியும், இது சுழல்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கின்றது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியவர்கள் மனிதர்களே. உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். தேவர்களுக்கு இது தெரியாது. மனிதர்கள் மாத்திரமே இதைக் கற்று, பின்னர் தேவர்கள் ஆகுகின்றார்கள். தந்தையே மனிதர்களைத் தேவர்களாக மாற்றுபவர். தந்தை உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுத்து, படைப்பைப் பற்றிய அறிமுகத்தையும் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் விதையானவராக இருப்பவராகிய தந்தையின் விதைகள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இது தலைகீழான விருட்சத்தைப் பற்றித் தந்தை அறிந்திருப்பதைப் போன்று நாங்களும் இதை இப்பொழுது அறிவோம். மனிதர்களால் ஒருபொழுதும் இதை மனிதர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. எவ்வாறாயினும் தந்தை இதை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் ஆகும்வரை, உங்களால் இங்கே வர முடியாது. ஒருவர் முழுப் பாடநெறியையும் பெற்று, அனைத்தையும் புரிந்து கொள்ளாமல் எவ்வாறு அவன் அவ்வது அவள் பிராமணர்களின் ஒன்றுகூடலின் மத்தியில் அமர முடியும்? இதுவும் இந்திரசபை என்றே அழைக்கப்படுகின்றது. இந்திரன் மழையைப் பொழிவதில்லை. இது இந்திரசபை என்றே அழைக்கப்படுகின்றது. நீங்களே தேவதைகளாக வேண்டியவர்கள். பலவகைப்பட்ட தேவதைகளும் நினைவுகூரப்பட்டிருக்கின்றார்கள். சில குழந்தைகள் அழகாக இருப்பதனால், கூறப்படுகின்றது: இவர் ஒரு தேவதை போன்றவர். சிலர் முகப்பவுடர் போன்றவற்றைப் பூசுவதனால், அழகானவர்கள் ஆகுகின்றார்கள். சத்தியயுகத்தில் நீங்கள் இளவரசிகளான, தேவதைகள் ஆகுகின்றீர்கள். இப்பொழுது, நீங்கள் ஞானக்கடலில் நீராடித் தேவதைகளாக, அதாவது, தேவர்கள் ஆகுகின்றீர்கள். என்னவாக இருந்ததிலிருந்து நீங்கள் என்னவாக ஆகுகின்ற்Pர்கள் என்று உங்களுக்குத் தெரியும். என்றென்றும் தூய்மையானவரும், என்றென்றும் அழகான தந்தையுமான பயணி உங்களையும் தன்னைப் போன்று, ஆக்குவதற்கு, ஓர் அவலட்சணமான சரீரத்தில் பிரவேசிக்கின்றார். எனவே, இப்பொழுது யாரால் உங்களை அழகானவராக்க முடியும்? பாபாவே உங்களை அவ்வாறு ஆக்க வேண்டும். உலகச் சக்கரம் சுழல வேண்டும். இப்பொழுது நீங்கள் அழகானவர்களாக வேண்டும். ஒரேயொரு தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்ற ஞானக்கடல்;. அவரே ஞானக்கடலும் அன்புக்கடலும் ஆவார். அந்தத் தந்தையைப் பற்றிப் பாடப்படும் புகழானது, ஒரு ளெலகீகத் தந்தையின் புகழாக இருக்க முடியாது. அது ஒரேயொரு எல்லையற்ற தந்தையின் புகழ் மாத்திரமே ஆகும். அனைவரும் அவரை மாத்திரமே கூவி அழைக்கின்றார்கள்: வந்து எங்களை அந்தப் புகழுக்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குங்கள். இப்பொழுது நீங்கள் வரிசைக்கிரமமாக உங்கள் முயற்சிக்கு ஏற்ப, அவ்வாறு ஆகுகின்றீர்கள். கற்பதில் அனைவரும் ஒரேவிதமாக இருக்க முடியாது; பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு காணப்படுகின்றது. பலரும் உங்களிடம் வருவார்;கள். நிச்சயமாக நீங்கள் அவர்களைப் பிராமணர்களாக்க வேண்டும். சிலர் நன்றாகக் கற்கின்றார்கள். ஏனையோர் குறைவாகவே கற்கின்றார்கள். தங்கள் கல்வியில் மிகச் சிறந்தவர்களாக இருப்பவர்களால் மற்றவர்களுக்கும் கற்பிக்க முடியும். பல்வேறு கல்லூரிகள் போன்றவை கட்டப்படுகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். பாபாவும் கூறுகின்றார்: இந்தக் கல்லூரியில் படைப்பவரதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தைத் தாங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று எவருமே புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு கல்லூரியைத் திறவுங்கள். தந்தை பாரதத்தில் மாத்திரமே வருகின்றார். அதனால் கல்லூரிகள் தொடர்ந்தும் பாரதத்திலேயே திறக்கப்படுகின்றன. நீங்கள் மேலும் முன்னேறும் பொழுது, அவை வெளிநாடுகளிலும் தொடர்ந்தும் திறக்கப்படும். ஏனைய பலரும் வந்து கற்பதற்கான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அதிகம் தேவைப்படுகின்றன. பின்னர், கல்வி முடிவடைந்ததும் அனைவரும் தேவ தர்மத்திற்கு மாற்றம் செய்யப்படுவார்;கள்; அதாவது, அவர்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவார்;கள். நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை என நினைவுகூரப்பட்டுள்ளது. இங்கு இது மனித உலகமாகும், அதுவோ தேவர்களின் உலகமாகும். தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. பகலில் தேவர்கள் இருக்கின்றார்கள். இரவிலோ மனிதர்களே இருக்கின்றார்கள். அனைவரும் வழிபாடு செய்கின்ற, பக்தர்கள். இப்பொழுது நீங்கள் பூஜிப்பவர்களில் இருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். சத்தியயுகத்தில் சமயநூல்கள் அல்லது பக்தி பற்றிய எந்தக் குறிப்பிடப்படவில்லை. அங்கே அனைவருமே தேவர்கள். மனிதர்கள் பக்தர்கள் ஆவார்;கள். மனிதர்களே பின்னர் தேவர்கள் ஆகுபவர்கள். அது தெய்வீக உலகமாகும், இதுவோ அசுர உலகம் என அழைக்கப்படுகின்றது. இராம (கடவுளின்) இராச்சியமும், இராவண இராச்சியமும் இருக்கின்றன. முன்னர்; இராவண இராச்சியம் என்றால் என்னவென்றோ அல்லது எப்பொழுது இராவணன் வந்தான் என்றோ உங்கள் புத்தி அறிந்திருக்கவில்லை; உங்களுக்கு எதுவும் தெரியாது. இலங்கை கடலுக்கடியில் மூழ்கியது என அவர்கள் கூறுகின்றார்கள். துவாரகையைப் பற்றியும் அவர்கள் அவ்வாறே கூறுகின்றார்கள். இந்த முழு இலங்கையும் மூழ்கப் போகின்றது என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். உலகம் முழுவதுமே எல்லையற்ற இலங்கை (தீவு) ஆகும். அவை அனைத்தும் மூழ்கி, எங்கும் நீPரே சூழ்ந்;திருக்கும். எவ்வாறாயினும், சுவர்க்கம் மூழ்குவதில்லை. அங்கே அபரிமிதமான செல்வம் இருந்தது. சோமநாதர் ஆலயத்தில் இருந்து மாத்திரம் முஸ்லீம்கள் ஏராளமான செல்வத்தைக் கொள்ளையடித்ததாகத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இப்பொழுது, அங்கே எதுவுமே இல்லாதிருப்பதைப் பாருங்கள்! பாரதத்தில் அதிகளவு செல்வம் இருந்தது. பாரதமே சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது நீங்கள் அதைச் சுவர்க்கம் என அழைப்பீர்களா? அது இப்பொழுது நரகமாகும். பின்னர் அது சுவர்க்கமாகும். சுவர்க்கத்தைப் படைப்பவர் யார்? நரகத்தைப் படைப்பவர் யார்? இப்பொழுது உங்களுக்கு இது தெரியும். இராவண இராச்சியம் எவ்வளவு காலத்திற்குத் தொடர்கின்றது என்றும் காட்டப்பட்டுள்ளது. இராவண இராச்சியத்தில் பல்வேறு சமயங்கள் இருக்கின்றன. இராம இராச்சியத்தில் (கடவுள்) சூரிய வம்சமும், சந்திர வம்சமும் மாத்திரமே இருக்கின்றன. இப்பொழுது நீங்கள் கற்கின்றீர்கள். இக் கல்வி வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. அம்மக்கள் இராவண இராச்சியத்தில் இருக்கின்றார்கள். இராம இராச்சியம் சத்தியயுகத்தில் இருக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறேன். பின்னர் நீங்கள் தகுதியற்றவர்கள் ஆகுகிறீர்கள். ஏன் நீங்கள் தகுதியற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள்? ஏனெனில் நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறீர்கள். தேவர்களின் தகுதிவாய்ந்த தன்மையின் புகழும், உங்களின் தகுதியற்ற தன்மையும் நினைவுகூரப்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தபொழுது, அது புதிய உலகமாக இருந்தது. அப்பொழுது மிகச்சொற்ப மனிதர்களே இருந்தார்கள். நீங்கள் மாத்திரமே உலகம் முழுவதற்கும் அதிபதிகளாக இருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்குப் பெருமளவு சந்;தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் இல்லங்களையும் குடும்பங்களையும் பிரிக்கின்;றீர்கள் என்று அம்மக்கள் கூறுகின்றார்கள், பின்னர் அவர்களே வந்து இந்தக் கல்வியைப் பெறுகிறார்கள். இங்கே வரும்பொழுது, இந்த ஞானம் மிகவும் நல்லது என்று அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். அனைத்தினதும் அர்த்தத்தையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். உங்களைச் சகோதர சகோதரிகளாகக் கருதாமல், எவ்வாறு தூய்மை இருக்க முடியும்? அனைத்தும் தூய்மையிலேயே தங்கியுள்ளது. மிகவும் சீரழிந்ததும் தூய்மையற்றதுமான தூய்மையற்ற பூமிக்குள் தந்தை வருகின்றார். அவர்களது உணவும் பானமும் கூடத் தூய்மையற்றே இருக்கின்றன. தந்தை கூறுகின்றார்: பல பிறவிகளைக் கடந்து வந்து, அதன் இறுதிப் பிறவியில் இருப்பவரின் சரீரத்தில், நான் பிரவேசிக்கின்றேன். இவர் 84 பிறவிகளை எடுக்கின்றார். இறுதியாக இருந்தவர் முதலாமவர் ஆகுகிறார், பின்னர் முதலாமவராக இருந்தவர் இறுதி இலக்கம் ஆகுகிறார். ஒருவரைப் பற்றியே இந்த உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வம்சம் உருவாக்கப்படவுள்ளது. நீங்கள் தொடர்ந்தும் எவ்வளவுக்கு அதிகமாகப் புரிந்துகொள்கிறீர்களோ, அவ்வளவுக்கு மக்கள் உங்களிடம் வருவார்கள். இது இன்னமும் ஒரு மிகச்சிறிய விருட்சமாகவே இருக்கின்றது. அது பல புயல்களையும் அனுபவம் செய்கிறது. சத்தியயுகத்தில், புயல்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. புதிய ஆத்மாக்கள் தொடர்ந்தும் மேலிருந்து கீழே வருகிறார்கள். இங்கே அவர்கள் புயல்களை அனுபவம் செய்தவுடன் வீழ்ச்சி அடைகிறார்கள். அங்கே, மாயையின் புயல்களே இல்லை. இங்கே, வெறுமனே அமர்ந்திருக்கும் பொழுது, மக்கள் மரணிக்கிறார்கள். மாயையுடனான உங்கள் யுத்தமும் உள்ளது அவளும் உங்களைத் துன்புறுத்துகிறாள். இது சத்தியயுகத்தில் இடம்பெறாது. வேறு எந்தச் சமயத்திலும் இவ்விடயங்களில் எதுவும் இடம்பெறுவதில்லை. இராம இராச்சியத்தைப் பற்றியும், இராவண இராச்சியத்தைப் பற்றியும் வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது. ஆன்மீக ஒன்றுகூடல்களுக்கு மக்கள் சென்றாலும், அங்கே வாழ்வது, மரணிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே, குழந்தைகள் தத்தெடுக்கப்படுகிறார்கள். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்றும், அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். இந்த ஆஸ்தியைப் பெறும்பொழுது, நீங்கள் வீழ்ச்சி அடைவீர்களானால், அப்பொழுது ஆஸ்தியும் முடிவடைந்து விடும். நீங்கள் அன்னத்திலிருந்து நாரையாக மாறுகிறீர்கள். எவ்வாறாயினும், தந்தை கருணை நிறைந்தவர் ஆகையால், அவர் தொடர்ந்;;தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சிலர் மீண்டும் மேலேறுகிறார்கள். ஸ்திரமாக இருப்பவர்கள் அனுமானாகிய, மகாவீரர் எனக் கூறப்படுகிறார்கள். நீங்கள் மகாவீரர்களும், மகா வீரிணிகளும் ஆவீர்கள்; அது வரிசைக்கிரமமாகவே இருக்கிறது. அனைவரிலும் உறுதியானவர்கள் மகாவீரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆதிதேவரும் மகாவீரர் என அழைக்கப்படுகிறார், அவரிலிருந்தே பின்னர் உலகை ஆட்சிசெய்கின்ற, இந்த மகாவீரர்கள் பிறப்பெடுக்கிறார்கள். இராவணனை வெற்றி கொள்வதற்காக நீங்கள் வரிசைக்கிரமமாக முயற்சி செய்கிறீர்கள். இராவணனே ஐந்து விகாரங்களும் ஆவான். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். தந்தை இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ள பூட்டைத் திறக்கின்றார். பின்னர்; பூட்டுக்கள் முழுமையாகப் பூட்டப்பட்டு விடும். இங்கேயும், சிலரது பூட்டுக்கள் திறக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் சென்று சேவை செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: சென்று சேவை செய்யுங்கள்! சாக்கடையில் வீழ்ந்துள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுங்கள். நீங்களும் சாக்கடைக்குள் விழுந்து விடுவதாக இருக்கக்கூடாது. நீங்களும் அதற்குள்ளேயிருந்து வெளிவந்து, மற்றவர்களையும் அதிலிருந்து வெளியேற்ற வேண்டும். நச்சு ஆற்றிலே எல்லையற்ற துன்பம் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் எல்லையற்ற சந்தோஷம் இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும். உங்களுக்கு அளவிட முடியாத சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒரேயொருவரைப் பற்றிய புகழ்; பாடப்படுகிறது. துன்பத்தைக் கொடுக்கின்ற இராவணனைப் பற்றி ஏதேனும் புகழ் இருக்கிறதா? இராவணன் அசுரன் என்றே அழைக்கப்படுகிறான். தந்தை கூறுகிறார்: நீங்கள் இராவண இராச்சியத்தில் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் இங்கே அளவிட முடியாத சந்தோஷத்தைப் பெறுவதற்கு வந்துள்ளீர்கள், உங்களுக்கு அத்தகைய அளவிட முடியாத சந்தோஷம் கிடைக்கிறது. எனவே, உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் பதவிகள் வரிசைக்கிரமமானவை. ஒவ்வொரு நடிகருடைய பதவிகளும்; வேறுபட்டது. கடவுள் அனைவரிலும் இருக்க முடியாது. தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, உங்களுக்குத் தந்தையையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் தெரியும். நீங்கள் கற்பதற்கேற்ப, வரிசைக்கிரமமாகப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு எல்லையற்ற கல்வியாகும். குழந்தைகளாகிய நீங்கள் இதில் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். ஒரு நாளேனும் நீங்கள் இக்கல்வியைத் தவற விடக்கூடாது. நாங்கள் மாணவர்கள், தந்தையாகிய கடவுளே எங்களுக்குக் கற்பிப்பவர். குழந்தைகளாகிய உங்களுக்கு எப்பொழுதும் இந்தப் போதை இருக்க வேண்டும். கடவுள் பேசுகிறார். அவர்கள் பெயரை மாற்றி கிருஷ்ணருடைய பெயரைப் புகுத்தி உள்ளார்கள். கிருஷ்ணர் கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ளதால், அவர்கள் தவறுதலாக அவற்றைக் கடவுள் கிருஷ்ணருடைய வாசகங்கள் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். தந்தை ஸ்தாபிக்கும் சுவர்க்கத்தில் அவர் முதல் இலக்கத்துக்குரியவர். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக நீங்கள் உங்களுக்;கு நன்மை செய்கிறீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கும் தொடர்ந்தும் நன்மை செய்கிறீர்கள். அத்தகையவர்கள் சேவை செய்யாதுவிட்டால், ஒருபொழுதும் சந்தோஷத்தை உணர மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்திலும் யோகத்திலும் உறுதியானவர்கள் ஆகும்பொழுது, ஜீனிகள் போல வேலை செய்வீர்கள். பின்னர் நீங்கள் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் மரணம் வரும் முன்னர் சித்தியடைய வேண்டும். நீங்கள் பெருமளவு சேவை செய்ய வேண்டும். இறுதியில், யுத்தம் இடம்பெறும். இயற்கை அனர்த்தங்களும் ஏற்படும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இறுதியாக இருப்பவரில் இருந்து முதலாமவர் ஆகுவதற்கு, ஒரு மகாவீரரைப் போல் முயற்சி செய்யுங்கள். மாயையின் புயல்களில் தளம்பல் அடையாதீர்கள். தந்தையைப் போல் கருணை மிக்கவராகி, மனிதர்களின் புத்தியின் பூட்டைத் திறக்கும் சேவையைச் செய்யுங்கள்.

2. தினமும் ஞானக்கடலில் நீராடி, தேவதைகள் ஆகுங்கள். இக்கல்வியை ஒரு நாளேனும் தவற விடாதீர்கள். நீங்கள் இறை மாணவர்கள் என்கின்ற போதையைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
“எனது பாபா” என இதயபூர்வமாகக் கூறுவதன் மூலம் உண்மையான பேரத்தைச் செய்து உங்களை அர்ப்பணித்து மரணித்து வாழ்வீர்களாக.

ஒரு பிரம்மகுமார் அல்லது குமாரி ஆகுவதென்பது உங்களை அர்ப்பணிப்பதாகும். நீங்கள் “எனது பாபா” என இதயபூர்வமாகக் கூறும்போது “குழந்தாய் அனைத்தும் உங்களுடையதே!” என பாபா கூறுகிறார். நீங்கள் வீட்டில் வாழ்ந்தாலும், அல்லது நிலையத்தில் இருந்தாலும் நீங்கள் இதயபூர்வமாக “எனது பாபா எனக் கூறும்போது தந்தை உங்களைத் தனக்குரியவர் ஆக்குகின்றார். இதுவே இதயத்தினால் செய்யும் பேரமாகும். வார்த்தைகளினால் செய்யும் ஒரு பௌதீக பேரம் அல்ல. அர்ப்பணிப்பது என்பது ஸ்ரீமத்தின் கோட்டிற்குள் இருப்பதாகும். இவ்விதமாக அர்ப்பணித்தவர்களே மரணித்து வாழும் பிராமணர்;கள்.

சுலோகம்:
“எனது”என்ற வார்த்தை மீது உங்களுக்கு அன்பு இருக்குமாயின், அனைத்து “எனது” என்பதையும் ஒரேயொரு எனது பாபாவினுள் அமிழ்த்திவிடுங்கள்.