31.03.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     11.05.84     Om Shanti     Madhuban


பிராமணர்களின் ஒவ்வோர் அடியினூடாகவும் எண்ணத்தினூடாகவும் செயலினூடாகவும் சட்டங்களை உருவாக்குதல்.


இன்று, உலகைப் படைப்பவர், புதிய உலகை உருவாக்குவதுடன், புதிய உலகின் அதிர்ஷ்டங்களான தனது குழந்தைகளைப் பார்க்கிறார். மேன்மையான, பாக்கியசாலி ஆத்மாக்களான உங்களின் பாக்கியம் உலகின் பாக்கியம் ஆகும். மேன்மையான குழந்தைகளான நீங்களே புதிய உலகின் ஆதாரங்கள் ஆவீர்கள். நீங்கள் புதிய உலகின் அதிர்ஷ்டத்திற்கும் இராச்சியத்திற்குமான உரிமையைக் கொண்டிருக்கும் விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். உங்களின் புதிய வாழ்க்கை உலகைப் புதுப்பிக்கிறது. இந்த உலகம் மேன்மையானதாகவும் சந்தோஷமும் அமைதியும் நிரம்பியதாகவும் ஆகவேண்டியுள்ளது. உங்கள் அனைவரினதும் இந்த மேன்மையான திடசங்கற்பமான எண்ணம் என்ற விரலினால், துன்பம் நிறைந்த கலியுக உலகம் சந்தோஷ உலகமாக மாறுகிறது. ஏனெனில், நீங்கள் சர்வசக்திவான் தந்தையின் ஸ்ரீமத்திற்கேற்ப ஒத்துழைப்பவர் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே, தந்தையுடன்கூடவே, உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் மேன்மையான யோகமும் உலகை மாற்றுகின்றன. இந்த வேளையில் மேன்மையான ஆத்மாக்களான உங்களின் இலகு யோகி மற்றும் இராஜ யோகி வாழ்க்கைகளின் ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு செயலும் புதிய உலகின் சட்டம் ஆகுகிறது. பிராமணர்களால் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் எல்லா வேளைக்கும் சட்டம் ஆகுகின்றன. ஆகவே, அருள்பவரின் குழந்தைகள், அருள்பவர்களாகவும் பாக்கியத்தை உருவாக்குபவர்களாகவும் சட்டத்தை உருவாக்குபவர்களாகவும் ஆகுகிறார்கள். கடைசிப் பிறவியிலும், அருள்பவரின் குழந்தைகளான உங்களின் விக்கிரகங்களிடம் இருந்து பக்தர்கள் எதையாவது தொடர்ந்து வேண்டுகிறார்கள். இப்போதும், சத்தியப்பிரமாணம் செய்யும்போது, அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னர், தலைமை நீதிபதி அனைவரையும் கடவுளை அல்லது இஷ்ட தெய்வங்களை நினைக்குமாறு கூறுகிறார். சட்டங்களை உருவாக்கும் குழந்தைகளான உங்களின் சட்டங்களின் சக்தியானது, இந்த இறுதிப் பிறவியிலும் செயற்படுகிறது. அவர்கள் தமது சொந்தப் பெயரால் சத்தியம் செய்வதில்லை. அவர்கள் தந்தைக்கு அல்லது உங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நீங்களே சதா ஆசீர்வாதங்களின் சொரூபங்கள் ஆவீர்கள். உங்களின் விக்கிரகங்களினூடாக அவர்கள் வெவ்வேறு தேவர்களிடமிருந்து வெவ்வேறு ஆசீர்வாதங்களை வேண்டுகிறார்கள். ஒருவர் சக்திதேவராக இருக்கிறார். இன்னொருவர் ஞானதேவியாக இருக்கிறார். நீங்கள் ஆசீர்வாதங்களை அருளும் ரூபங்கள் ஆகிவிட்டீர்கள். இதனாலேயே, பக்தியின் சம்பிரதாயங்கள் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை தொடர்கின்றன. பாப்தாதாவினூடாக நீங்கள் உங்களின் இதயங்களில் சதா சந்தோஷத்துடன் இருக்கிறீர்கள். அத்துடன் திருப்தியின் சொரூபங்களாகவும் இருக்கிறீர்கள். இதனாலேயே, இப்போதும், தங்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக, அவர்கள் தேவ, தேவியர்களைச் சந்தோஷப்படுத்துகிறார்கள். ஏனெனில் அந்தத் தேவதேவியரே தங்களை எல்லா வேளையும் சந்தோஷப்படுத்துவார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். நீங்கள் அனைவரும் அனைத்திலும் மகத்தான பொக்கிஷமான திருப்தியைத் தந்தையிடமிருந்து பெற்றுள்ளீர்கள். இதனாலேயே, திருப்திக்காக, அவர்கள் திருப்தி தேவியை வழிபடுகிறார்கள். நீங்கள் அனைவரும் திருப்தியான ஆத்மாக்கள், திருப்தியின் தேவியான சந்தோஷி மா, அல்லவா? நீங்கள் அனைவரும் திருப்தியாக இருக்கிறீர்கள், அல்லவா? திருப்தியான ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் திருப்தியின் ரூபங்கள் ஆவீர்கள். நீங்கள் வெற்றியைத் தந்தையிடமிருந்து உங்களின் பிறப்புரிமையாகப் பெற்றுள்ளீர்கள். இதனாலேயே, அவர்கள் உங்களின் விக்கிரகங்களிடம் வெற்றித் தானத்தையும் வெற்றிக்கான ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களிடம் பலவீனமான புத்திகள் இருப்பதனாலும், அவர்கள் பலவீனமான ஆத்மாக்களாக இருப்பதனாலும், யாசக ஆத்மாக்களாக இருப்பதனாலும், அவர்கள் தற்காலிக வெற்றியையே வேண்டுகிறார்கள். உதாரணமாக, ஒரு யாசகன் ஒருபோதும் 1000 ரூபாயைக் கேட்கமாட்டார். எனக்கு பைசாக்களைக் கொடுங்கள். ஒன்று அல்லது இரண்டு ரூபாய் கொடுங்கள் என்றே கேட்பார். அதேபோன்று, சந்தோஷத்தையும் அமைதியையும் தூய்மையையும் இரக்கும் அந்த யாசகர்கள் உங்களிடம் தற்காலிக வெற்றியை மட்டுமே கேட்பார்கள். ‘எனது இந்தப் பணி நிறைவேற வேண்டும், இதில் நான் வெற்றி பெற வேண்டும்’ . எவ்வாறாயினும், வெற்றி சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களான உங்களிடமிருந்தே அவர்கள் இதை வேண்டுகிறார்கள். இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் தந்தையின் குழந்தைகளான நீங்கள், உங்களின் இதயங்களை வென்ற தந்தையிடம், உங்களின் இதயத்தில் உள்ளவற்றைக் கூறுகிறீர்கள். உங்களின் இதயத்தில் உள்ள அனைத்தையும் நீங்கள் அவருக்குக் கூறுகிறீர்கள். வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் நீங்கள் தந்தையுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் உண்மையான தந்தையின் உண்மையான குழந்தைகள் ஆகுகிறீர்கள். இப்போதும், மக்கள் தமது இதயத்திலுள்ள விடயங்களை உங்களின் விக்கிரகங்களின் முன்னால் சென்று கூறுகிறார்கள். தாம் மறைக்க வேண்டிய இரகசியங்களை, அவர்கள் தமது அதியன்பிற்குரிய உறவுகளிடமும் மறைப்பார்கள். ஆனால், தேவ தேவியர்களிடம் அவற்றை மறைக்க மாட்டார்கள். உலகின் முன்னால், நான் இத்தகையவன், நான் நேர்மையானவன், நான் மகத்தானவன் என அவர்கள் கூறுவார்கள். எவ்வாறாயினும், தேவர்களின் முன்னால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்? நான் எத்தகையவனோ, இவ்வாறே நான். எனக்குள் காமம் உள்ளது. நான் ஏமாற்றுபவன். ஆகவே, நீங்கள் இத்தகைய புதிய உலகின் பாக்கியம் ஆவீர்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் தூய உலக இராச்சியத்தின் பாக்கியம், உங்களின் பாக்கியத்தில் உள்ளது.

ஆத்மாக்களான நீங்களே, அதிமேன்மையான பாக்கியத்தை உருவாக்குபவர்களும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களும் சட்டத்தை உருவாக்குபவர்களும் ஆவீர்கள். உங்கள் அனைவரிடமும் உங்களின் கைகளில் சுவர்க்க இராச்சியம் என்ற பூகோளம் உள்ளது. இதுவே வெண்ணெய் ஆகும். இதுவே இராச்சிய பாக்கியம் என்ற வெண்ணெய் ஆகும். உங்கள் ஒவ்வொருவரின் தலைமீதும் தூய்மையின் மகத்துவத்தின் ஒளிக்கிரீடம் உள்ளது. நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளீர்கள். உங்களிடம் சுய இராச்சிய திலகம் உள்ளது. எனவே, நீங்கள் யார் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் யார் என்ற புதிரை நீங்கள் தீர்த்துவிட்டீர்கள், அல்லவா? இந்தப் பாடத்தை நீங்கள் முதல் நாளில் கற்றீர்கள், அல்லவா? நான் யார்? நான் அது அல்ல. நான் இது. இதிலேயே, ஞானக்கடலின் ஞானம் அனைத்தும் அடங்கியுள்ளது. நீங்கள் இப்போது அனைத்தையும் அறிவீர்கள், அல்லவா? சதா இந்த ஆன்மீக போதையை உங்களுக்குள் வைத்திருங்கள். நீங்கள் மேன்மையான ஆத்மாக்கள். நீங்கள் மிகவும் மகத்தானவர்கள். உங்களின் ஒவ்வோர் எண்ணமும் வார்த்தையும் செயலும் ஒரு ஞாபகார்த்தம் ஆகுகின்றன. அது ஒரு சட்டம் ஆகுகிறது. இந்த மேன்மையான விழிப்புணர்வுடன் அனைத்தையும் செய்யுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? முழு உலகின் பார்வையும் ஆத்மாக்களான உங்களின் மீதே உள்ளது. நான் செய்யும் எதுவும் உலகிற்கு ஒரு சட்டமாகவும் ஒரு ஞாபகார்த்தமாகவும் ஆகும். நான் குழப்பம் அடைந்தால், உலகமும் குழப்பம் அடையும். நான் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்தால், உலகமும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும். புதிய உலகின் படைப்பிற்குக் கருவிகள் ஆகியுள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும் இந்தளவு பொறுப்பு உள்ளது. எவ்வாறாயினும், அந்தப் பொறுப்பு எத்தனை மகத்தானதாக இருந்தாலும், அது உங்களை இலேசாகவும் ஆக்குகிறது. ஏனெனில், சர்வசக்திவான் தந்தை உங்களுடன் இருக்கிறார். அச்சா.

சதா திருப்தியான ஆத்மாக்களுக்கும், சதா மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர்களாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் இருக்கும் குழந்தைகளுக்கும், சதா பேறுகளின் சொரூபங்களாகவும் திருப்தியாகவும் இருக்கும் ஆத்மாக்களுக்கும், நினைவினூடாகத் தமது ஒவ்வொரு செயலையும் ஞாபகார்த்தம் ஆக்கும் மேன்மையான பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும், பாக்கியத்தை உருவாக்குபவரும் ஆசீர்வாதங்களை அருள்பவருமான பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குமார்களின் வெவ்வேறு குழுக்களைச் சந்திக்கிறார்:

1. நீங்கள் அனைவரும் மேன்மையான குமார்கள், அல்லவா? நீங்கள் சாதாரணமான குமார்கள் அல்ல. ஆனால் மேன்மையான குமார்கள். நீங்கள் மேன்மையான பணிக்காக உங்களின் சரீரத்தின் வலிமையையும் மனதின் சக்தியையும் பயன்படுத்துபவர்கள். நீங்கள் உங்களின் சக்தியை அழிக்கும் பணிக்காகப் பயன்படுத்துவதில்லை. விகாரங்களினூடான ஒரு செயல் அழிவை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், இறை பணியோ மேன்மையான பணி ஆகும். எனவே, நீங்கள் உங்களின் சக்திகள் அனைத்தையும் இறைபணியில் பயன்படுத்தும் மேன்மையான குமார்கள் ஆவீர்கள். நீங்கள் உங்களின் சக்திகளை வீணான பணிக்காகப் பயன்படுத்துவதில்லை, இல்லையா? உங்களின் சக்திகளை எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற புரிந்துணர்வை நீங்கள் இப்போது பெற்றுள்ளீர்கள். இந்தப் புரிந்துணர்வினால், நீங்கள் சதா மேன்மையான பணிகளைச் செய்கிறீர்கள். எப்போதும் இத்தகைய மேன்மையான பணிகளைச் செய்வதில் ஈடுபட்டிருப்பவர்கள், மேன்மையான பேறுகளுக்கான உரிமையைப் பெற்றுக் கொள்வார்கள். நீங்கள் இத்தகைய உரிமைகளைக் கோரியுள்ளீர்களா? நீங்கள் மேன்மையான பேறுகளைப் பெறுவதை அனுபவம் செய்கிறீர்களா? அல்லது, நீங்கள் இன்னமும் அதைப் பெற வேண்டியுள்ளதா? நீங்கள் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்களைச் சேமிக்கும் அனுபவம் உங்களுக்கு இருக்கிறதல்லவா? ஓர் அடியில் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேமிப்பவர்கள் மிக மேன்மையானவர்கள். இத்தகைய செல்வத்தைச் சேமிப்பவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். தற்காலத்தில், கோடீஸ்வரர்களுக்கும் பல்கோடீஸ்வரர்களுக்கும் குறுகிய கால சந்தோஷமே காணப்படுகிறது. ஆனால், உங்களுடையது என்றும் நிலைத்திருக்கும் சொத்து ஆகும். மேன்மையான குமார் என்பதன் வரைவிலக்கணத்தைப் புரிந்து கொண்டீர்களா? எப்போதும் மேன்மையான பணிக்கு ஒவ்வொரு சக்தியையும் பயன்படுத்துபவர் என்று அர்த்தம். உங்களின் வீணான கணக்கு எல்லா வேளைக்கும் முடிந்துவிட்டது. உங்களின் மேன்மையான கணக்கில் நீங்கள் சேமித்துள்ளீர்களா? அல்லது, இரண்டு கணக்குகளும் ஒரே வேளையில் திறந்துள்ளனவா? ஒரு கணக்கு முடிந்துவிட்டது. இப்போது, இரண்டையும் பயன்படுத்துவதற்கான நேரம் இல்லை. அது எல்லா வேளைக்கும் முடிந்துவிட்டது. ஒரே வேளையில் இரண்டும் இருந்தால், நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களால் சேமிக்க முடியாது. நீங்கள் எதையும் வீணாக்காவிட்டால், ஆனால், அதைச் சேமித்தால், எந்தளவை நீங்கள் சேமித்துள்ளீர்கள்? எனவே, நீங்கள் வீணான கணக்கை முடித்து, மேன்மையான கணக்கில் சேமித்துள்ளீர்கள்.

2. குமார் வாழ்க்கை என்பது சக்திவாய்ந்த ஒரு வாழ்க்கை ஆகும். ஒரு குமார் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியதை உங்களால் செய்ய முடியும். உங்களால் உங்களை மேன்மையாக்க முடியும். அல்லது உங்களைக் கீழே கொண்டுவரவும் முடியும். இந்தக் குமார் வாழ்க்கை என்பது ஒருவர் மேன்மையாக அல்லது கீழாக வருகின்ற வாழ்க்கை ஆகும். இத்தகைய வாழ்க்கையில், நீங்கள் இப்போது தந்தைக்குச் சொந்தமாகியுள்ளீர்கள். தற்காலிகமான வாழ்க்கைச் சகபாடியுடன் கர்மக்கணக்குகளின் பந்தனத்தில் கட்டுப்படுவதற்குப் பதிலாக, நீங்கள் இப்போது நிஜ சகபாடியைக் கண்டுள்ளீர்கள். நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள். நீங்கள் இப்போது வரும்போது, தனித்து வந்தீர்களா? அல்லது ஒன்றிணைந்த ரூபத்தில் வந்தீர்களா? (ஒன்றிணைந்து) நீங்கள் பயணச்சீட்டிற்குப் பணம் செலவழிக்கவில்லை, அல்லவா? எனவே, அதுவும் ஒரு சேமிப்பே. உண்மையில், நீங்கள் பௌதீகமான சகபாடியை அழைத்து வரவேண்டியிருந்தால், பயணச்சீட்டிற்குப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அவளின் பயணப் பொதியையும் நீங்கள் சுமக்க வேண்டியிருக்கும். நீங்கள் சம்பாதித்து, தினமும் அவளுக்கு ஊட்ட வேண்டியிருக்கும். இந்தச் சகபாடியோ உண்பதே இல்லை. அவர் நறுமணத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறார். உங்களின் உணவு குறைவதில்லை. ஆனால், அது அதிக சக்தியால் நிறைகிறது. எனவே, உங்களுக்கு எந்தவிதமான செலவோ அல்லது முயற்சியையோ வைக்காத சகபாடி உங்களிடம் இருக்கிறார். அவர் என்றென்றும் நிலைத்திருக்கும் சகபாடி ஆவார். நீங்களும் அவரின் சம்பூரணமான ஒத்துழைப்பைப் பெறுகிறீர்கள். அவர் உங்களைக் கடினமாக உழைக்க விடுவதில்லை. ஆனால் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார். சிரமமான பணியொன்று உங்களுக்கு முன்னால் வரும்போது, நீங்கள் அவரை நினைவு செய்வதுடன், அவரிடமிருந்து உதவியையும் பெறுகிறீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள், அல்லவா? அவரே பக்தர்களுக்கு அவர்களின் பக்திக்கான பலனைத் தருபவராக இருக்கும்போது, அவர் தனது சகபாடி ஆகும் ஒருவருக்குத் தனது சகவாசத்தைக் கொடுக்க மாட்டாரா? குமார்கள் ஒன்றிணைந்தவர்கள் ஆகியுள்ளார்கள். ஆனால், இந்த ஒன்றிணைந்த ரூபத்தில், நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகியுள்ளீர்கள். உங்களுக்குள் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை. நீங்கள் கவலையற்றவர். ‘இன்று, குழந்தைக்குச் சுகமில்லை’ ‘இன்று, குழந்தை பாடசாலைக்குச் செல்லவில்லை’ என்ற எந்தவிதமான சுமையும் உங்களுக்குக் கிடையாது. நீங்கள் சதா பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். ஒரேயொருவரின் பந்தனத்தில் கட்டுண்டு இருப்பதனால், நீங்கள் பல பந்தனங்களில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். உண்டு, பருகிக் களித்திருங்கள்! நீங்கள் செய்வதற்கு வேறு என்ன உள்ளது? நீங்களே அதைத் தயாரித்து உண்கின்றீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களால் உண்ண முடியும். நீங்கள் சுதந்திரமானவர்கள். நீங்கள் மிக மேன்மையானவர்கள் ஆகியுள்ளீர்கள். உலகிலுள்ள எஞ்சியவர்களுடன் ஒப்பிடும்போது, நீங்கள் நல்லவர்கள். உலகின் சிக்கல்களில் இருந்து நீங்கள் விடுபட்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள், அல்லவா? ஆத்மா மட்டுமன்றி, சரீரத்தைப் பொறுத்தவரையிலும் நீங்கள் கர்மக்கணக்குகளில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் இந்தளவிற்குப் பாதுகாப்பானவர்கள். ஒரு ஞானி சகபாடி வேண்டும் என நீங்கள் ஆசைப்படுவதில்லை, அல்லவா? யாராவது ஒரு குமாரிக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா? அது நன்மை இல்லை. தீங்கு செய்தலே. ஏன்? நீங்கள் ஒரு பந்தனத்தைக் கட்டுவீர்கள். பின்னர் அதில் இருந்து பல பந்தனங்கள் ஆரம்பம் ஆகும். அந்த ஒரு பந்தனம் பல பந்தனங்களை உருவாக்கும். அதனால் நீங்கள் உதவியைப் பெற மாட்டீர்கள். அது ஒரு சுமையாகவே இருக்கும். பார்க்கும்போது அது ஓர் உதவி போன்று தோன்றினாலும், உண்மையில் அது பல விடயங்களின் பந்தனமே. நீங்கள் அதை ஒரு சுமையாகக் கருதும் அளவிற்கு அது சுமையாகவே இருக்கும். எனவே, நீங்கள் பல சுமைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். உங்களின் கனவுகளிலேனும் இதைப் பற்றி ஒருபோதும் நினைக்காதீர்கள். இல்லாவிடின், விழித்தெழுவதையும் சிரமமாகக் கருதும் அளவிற்கு அது ஒரு சுமையாக ஆகிவிடும். சுதந்திரமாக இருக்கும் நீங்கள் பந்தனத்தில் கட்டுண்டால், பலமில்லியன் மடங்கு சுமைகள் ஏற்படும். அந்த அப்பாவிகளோ தெரியாமல் கட்டுப்படுகிறார்கள். ஆனால் நீங்களோ தெரிந்த பின்னர் உங்களைக் கட்டிக் கொள்கிறீர்கள். எனவே, இங்கு அதிக வருந்துகையின் சுமை காணப்படும். உங்களில் எவரும் பலவீனமானவர் இல்லையல்லவா? பலவீனமானவர்கள் சத்கதி அடைய மாட்டார்கள். அவர்கள் இந்த இடத்திற்கும் உரியவர்களாக இருக்க மாட்டார்கள். அந்த இடத்திற்கும் உரியவர்களாக இருக்க மாட்டார்கள். நீங்கள் சத்கதியை அனுபவம் செய்துள்ளீர்கள், அல்லவா? சத்கதி என்றால் மேன்மையான சத்கதி என்று அர்த்தம். சிறிதளவு எண்ணமேனும் உங்களுக்கு ஏற்படுகிறதா? உங்களுடைய புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. நீங்கள் சிறிதளவேனும் தளம்பல் அடைந்தால், உங்களின் புகைப்படம் எடுக்கப்படும். எந்தளவிற்கு நீங்கள் பலசாலி ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் மேன்மை அடையும்.

3. நீங்கள் அனைவரும் சக்திசாலி குமார்கள், அல்லவா? நீங்கள் சக்திசாலிகளா? சக்திசாலி ஆத்மாக்கள் சதா என்ன வகையான எண்ணங்களை உருவாக்குகிறார்களோ, என்ன வார்த்தைகளைப் பேசுகிறார்களோ, என்ன செயல்களைச் செய்கிறார்களோ, அவை அனைத்தும் சக்திவாய்ந்தவையாகவே இருக்கும். வீணானவை அனைத்தையும் முடிப்பவர் என்பதே சக்திசாலி என்பதன் அர்த்தம். நீங்கள் உங்களின் வீணான கணக்குகளை முடித்து, உங்களின் சக்திசாலிக் கணக்கில் சேமிப்பவர்கள். உங்களிடம் ஒருபோதும் எந்தவொரு வீணானதன்மையும் இல்லையல்லவா? உங்களுக்குள் வீணான எண்ணம் இருந்தால், நீங்கள் வீணான வார்த்தைகளைப் பேசினால் அல்லது நேரத்தை வீணடித்தால், ஒரு விநாடியில் நீங்கள் எந்தளவை இழப்பீர்கள்? சங்கமயுகத்தில், ஒரு விநாடியும் மிகவும் முக்கியமானது. இது ஒரு விநாடி அல்ல. ஆனால், ஒரு விநாடி ஒரு பிறவிக்குச் சமமானது. நீங்கள் ஒரு விநாடியை இழக்கவில்லை. ஆனால், ஒரு பிறவியை இழக்கிறீர்கள். நீங்கள் நேரத்தின் அருமையை உணர்ந்த சக்திசாலி ஆத்மாக்கள், அல்லவா? நீங்கள் சக்திவாந்த தந்தையின் குழந்தைகள், நீங்கள் சக்திசாலி ஆத்மாக்கள் என்ற விழிப்புணர்வை எப்போதும் வைத்திருங்கள். நீங்கள் சக்திவாய்ந்த பணிக்குக் கருவிகள் ஆவீர்கள். நீங்கள் எப்போதும் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். பலவீனமானவர்களால் பறக்க முடியாது. சக்திசாலிகளே தொடர்ந்து பறப்பார்கள். எனவே, உங்களின் ஸ்திதி என்ன? பறக்கும் ஸ்திதியா அல்லது ஏறுகின்ற ஸ்திதியா? ஏறும்போது உங்களுக்கு மூச்சு வாங்கும். நீங்கள் களைப்படைவதுடன், சுவாசிக்கவும் கஷ்டப்படுவீர்கள். எவ்வாறாயினும், பறக்கும் ஸ்திதியில், நீங்கள் இலக்கை அடைவதுடன், ஒரு விநாடியில் வெற்றி சொரூபமாகவும் ஆகுவீர்கள். ஏறுகின்ற ஸ்திதியில், நீங்கள் நிச்சயமாகக் களைப்படைவீர்கள். அத்துடன் சுவாசிக்கவும் கஷ்டப்படுவீர்கள். ‘நான் என்ன செய்வது? இதை நான் எப்படிச் செய்வது?’ என்று கேட்பது, சுவாசிக்கக் கஷ்டப்படுவதாகும். பறக்கும் ஸ்திதியில் நீங்கள் இவை அனைத்திற்கும் அப்பால் செல்கிறீர்கள். நீங்கள் எதையாவது செய்வதற்கான தொடுகைகைளப் பெறுகிறீர்கள். அது ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. எனவே, நீங்கள் ஒரு விநாடியில் வெற்றி இலக்கை அடைபவர்கள். நீங்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? தந்தை தனது குழந்தைகள் சிரமப்படுவதில் இருந்து விடுபட்டிருப்பதையே விரும்புகிறார். தந்தை உங்களுக்கு வழிமுறையைக் காட்டுவதுடன், அவர் உங்களை இலேசாகவும் ஒளியாகவும் ஆக்குகிறார். அவ்வாறிருக்கும்போது, நீங்கள் ஏன் கீழே வருகிறீர்கள்? ‘என்ன நிகழும்? எவ்வாறு இது நிகழும்?’ இது ஒரு சுமையாகும். எப்போதும் நன்மையே ஏற்படும். அனைத்தும் எப்போதும் மேன்மையானதாகவே இருக்கும். வெற்றி உங்களின் பிறப்புரிமை என்ற விழிப்புணர்வுடன் எப்போதும் முன்னேறுங்கள்.

4. ஒரு பரீட்சைத்தாளைக் கொடுப்பதற்கு குமார்கள் சண்டையிட வேண்டியுள்ளது. நீங்கள் தூய்மை ஆகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதுமே, மாயை உங்களுடன் சண்டையிட ஆரம்பித்து விடுகிறாள். குமார் வாழ்க்கை என்பது மேன்மையான வாழ்க்கை ஆகும். நீங்கள் மகாத்மாக்கள். குமார்கள் இப்போது அற்புதங்களைக் காட்ட வேண்டியுள்ளது. தந்தைக்குச் சமமானவராகி, மற்றவர்களையும் தந்தையின் சகபாடிகள் ஆக்குவதே அனைத்திலும் மகத்தான அற்புதம் ஆகும். நீங்கள் தந்தையின் சகபாடிகள் ஆகியிருப்பதைப் போன்று, நீங்கள் மற்றவர்களையும் தந்தையின் சகபாடிகள் ஆக்க வேண்டும். நீங்கள் மாயையின் சகபாடிகளைத் தந்தையின் சகபாடிகள் ஆக்கும் சேவையாளர்கள் ஆவீர்கள். ஆசீர்வாதங்களை அருளும் உங்களின் ரூபங்களாலும் உங்களின் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் அவர்களைத் தந்தைக்கு உரியவர்கள் ஆக்குங்கள். இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் சதா வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஒரு மேன்மையான வழிமுறையைப் பயன்படுத்தும்போது, நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். குமார் என்றால் சதா அசைக்க முடியாதவர், தளம்பல் அடையாதவர் என்று அர்த்தம். அசைக்க முடியாத ஆத்மாக்கள் மற்றவர்களையும் அசையாதவர்கள் ஆக்குகிறார்கள்.

5. நீங்கள் அனைவரும் வெற்றியாளர் குமார்கள், அல்லவா? தந்தை உங்களுடன் இருக்கும்போது, நீங்கள் சதா வெற்றியாளராகவே இருப்பீர்கள். எப்போதும் தந்தையின் ஆதாரத்துடன் நீங்கள் எந்தப் பணியைச் செய்தாலும், அதில் குறைந்தளவு முயற்சியுடன் மகத்தான பேற்றினைப் பெறுவீர்கள். நீங்கள் சிறிதளவேனும் தந்தையிடமிருந்து விலகிச் சென்றால், அதிகளவு முயற்சியும் குறைந்தளவு பேறுமே கிடைக்கும். எனவே, சிரமப்படுவதில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறை, ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணத்திலும் தந்தையின் சகவாசத்தைக் கொண்டிருப்பதே ஆகும். இந்தச் சகவாசம் இருக்கும்போது, உங்களின் வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. நீங்கள் தந்தையின் இத்தகைய சகபாடிகள் அல்லவா? உங்களின் அடிகள், தந்தையின் கட்டளைகளுக்கேற்ப இருக்க வேண்டும். உங்களின் அடிகள், தந்தையின் பாதச்சுவடுகளில் வைக்கப்பட வேண்டும். உங்களின் பாதங்களை இங்கே வைப்பதா அல்லது அங்கே வைப்பதா, இது சரியா தவறா என்று சிந்திக்க வேண்டியதில்லை. புதிய பாதையாக இருந்தால், நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆனால், உங்களின் அடிகளை அவரின் பாதச்சுவடுகளில் வைப்பதனால், நீங்கள் எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை. எப்போதும் உங்களின் அடிகளைத் தந்தையின் பாதச்சுவடுகளில் வைத்தவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள். இலக்கு நெருக்கமாகும். தந்தை அனைத்தையும் உங்களுக்கு இலகுவானது ஆக்குகிறார். ஸ்ரீமத்தே பாதச்சுவடு ஆகும். உங்களின் அடிகளை ஸ்ரீமத்தின் பாதச்சுவடுகளில் வையுங்கள். நீங்கள் எப்போதும் முயற்சி செய்வதில் இருந்து விடுபட்டிருப்பீர்கள். நீங்கள் முழுமையான வெற்றியை உங்களின் உரிமையாகப் பெறுவீர்கள். இளைய குமார்களாலும் அதிகளவு சேவை செய்ய முடியும். ஒருபோதும் விஷமத்தனம் செய்யாதீர்கள். உங்களின் நடத்தை, பேசும் முறை, தொடர்பாடல் என்பவை, அனைவரும் நீங்கள் எந்தப் பாடசாலைக்குச் செல்கிறீர்கள் எனக் கேட்கும்படியாக இருக்க வேண்டும். அதனால் சேவை செய்யப்படும், அல்லவா? அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் அதிபதியாகவும் குழந்தையாகவும் இருக்கும் விழிப்புணர்வினால், ஸ்ரீமத் என்ற கடிவாளங்களை இறுக்கி, அதன்மூலம் உங்களின் மனதைக் கட்டுப்படுத்துவீர்களாக.

மனம் விரைவாக ஓடும் குதிரையைப் போன்றது என உலக மக்கள் கூறுவார்கள். ஆனால் உங்களின் மனம் அங்கும் இங்கும் ஓடமுடியாது. ஏனெனில், ஸ்ரீமத் என்ற கடிவாளங்கள் மிகவும் பலம்வாய்ந்தவை. உங்களின் மனமும் புத்தியும் பக்கக்காட்சிகளைப் பார்ப்பதில் ஈடுபட்டால், உங்களின் கடிவாளங்கள் தளர்வாகிவிடும். அதனால் உங்களின் மனம் விஷமத்தனம் செய்யும். ஆகவே, எந்தவொரு சூழ்நிலை வந்தாலும், அல்லது உங்களின் மனம் விஷமத்தனம் செய்தாலும், ஸ்ரீமத் எனும் கடிவாளங்களை இறுக்குங்கள். நீங்கள் உங்களின் இலக்கை அடைவீர்கள். ‘நான் ஒரு குழந்தையும் அதிபதியும் ஆவேன்’இந்த விழிப்புணர்வுடன் உங்களால் உங்களின் மனதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர் ஆகமுடியும்.

சுலோகம்:
எது நடந்தாலும் அது நல்லதே, என்ன நடக்க இருக்கிறதோ அது சிறப்பானதே என்ற நம்பிக்கையை எப்போதும் வைத்திருங்கள். நீங்கள் ஆட்ட, அசைக்க முடியாதவராக இருப்பீர்கள். ஓம் சாந்தி