10.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, வீடு திரும்ப முன்னர் நீங்கள் கர்மாதீத நிலையை அடைய வேண்டும். இதனாலேயே உங்களுக்குள் மாசு எதுவும் இருக்கக்கூடாது. உங்களைத் தொடர்ந்தும் பரசோதித்துப் பார்த்து உங்களிடம் உள்ள பலவீனங்களை அகற்றி விடுங்கள்.
கேள்வி:
எந்த ஸ்திதியை உருவாக்குவதற்கு முயற்சி தேவைப்படுகிறது? அதற்கு எத்தகைய முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும்?
8பதில்:
உங்கள் கண்களால் காணும் எதுவும் உங்கள் முன்னால் தோன்றக் கூடாது. பார்த்தும் பார்க்காதீர்கள். நீங்கள் சரீரத்தில் வாழும் போதும், ஆத்ம உணர்வில் நிலைத்திருங்கள். இந்த ஸ்திதியை உருவாக்குவதற்;குக் காலம் எடுக்கும். தந்தையையும் வீ;ட்டையும் தவிர வேறு எதனையும் உங்கள் புத்தி நினைவு செய்யக் கூடாது. இந்த ஸ்திதியை அடைவதற்கு அகநோக்குடையவராகி, உங்களையே பரிசோதியுங்கள். உங்கள் சொந்த அட்டவணையை வைத்திருங்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, எப்பொழுதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள், அரசர்களையும் பிரஜைகளையும் கொண்ட உங்கள் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். அனைவருமே முயற்சி செய்கிறார்கள். அதிக முயற்சி செய்பவர்கள் ஒரு பெரிய பரிசைப் பெறுகின்றார்கள். இது பொதுவான நியதியாகும். இது எதுவும் புதிதல்ல. நீங்கள் அதனைத் தேவர்களின் பூந்தோட்டம் என்றோ அல்லது தேவ இராச்சியம் என்றோ அழைக்கலாம். இப்போது இந்;தப் பூந்தோட்டம் கலியுகத்துக்குரியது. இது ஒரு முட்காடாகும். இதிலும், சில விருட்சங்களில் அதிகளவு பழங்களும், சிலவற்றில் குறைந்தளவு பழங்களும் உள்ளன. சில மாம்பழங்கள் குறைந்தளவு பழரசத்தையும், சில வேறுவகையானதாகவும் உள்ளன. அங்கே பலவகைப்பட்ட மலர்கள்,பழங்களைக்கொண்ட விருட்சங்கள்; உள்ளன. இவ்விதமாகவே குழந்தைகளாகிய நீங்கள அனைவரும்;, செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக் கிரமமானவர்களே. உங்களில் சிலர் மிக நல்ல பழத்தையும், சிலர் ஓரளவு நல்ல பழத்தையும் கொடுக்கிறார்கள்;. அங்கே பல வகைப்பட்ட விருட்சங்கள் உள்ளன. இது பழங்களைத் தரும் தோட்டமாகும். முன்னைய கல்பத்தைப் போன்றே இந்த தேவ விருட்சம் அதாவது பூந்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப காலப்போக்கில் நீங்கள்; வரிசைக்கிரமமாக மிக இனிமையும், நறுமணமும், உள்ளவர்களாக ஆகுகின்றீர்கள். அங்கே பல வகைகள் உண்டு. அவர்களும் தந்தையின் முகத்தைப் பார்ப்பதற்குத் தந்தையிடம் வருகிறார்கள். எனவே பாபா உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லையற்ற பாபா உங்களை எல்லையற்ற அதிபதிகள் ஆக்குகிறார் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு அதிபதியாகுவதில் பெருமளவில் சந்தோஷம் இருக்கிறது. எல்லைக்குட்பட்ட அதிபதியின் அந்தஸ்தில் துன்பம் உள்ளது. சந்தோஷத்தினாலும் துன்பத்தினாலும் அமைக்கப்பட்ட இந்த நாடகம் பாரதமக்களுக்கே பொருத்தமானதாகும். பாபா குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: எல்லாவற்றிற்கும் முதலில் உங்கள் வீட்டைக் கவனியுங்கள். ஒரு அதிபதி; தனது வீட்டின் மீதே கவனத்தை வைத்திருப்பார். தந்தையும் ஒவ்வொரு குழந்தையிலும் என்ன நற்குணங்கள் உள்ளன, என்ன குறைபாடுகள் உள்ளன என்பதைக் கவனிப்பார். குழந்தைகளாகிய உங்களிடம், குறைகளை எழுதிக் கொண்டுவருமாறு பாபா கேட்டால், உங்கள் குறைபாடுகளென நீங்கள் கருதுவதை விரைவாக எழுதுவதற்குக் குழந்தைகள் தாமாகவே புரிந்து கொள்கிறார்கள். நிச்சயமாக ஏதோவொரு குறைபாடு இருக்கும். எவரும் இன்னும் முழுமையடையவில்லை. ஆம் நீங்கள் நிச்சயமாக அவ்வாறாக வேண்டும். ஒவ்வொரு சக்கரத்திலும் நீங்கள் அவ்வாறு ஆகினீர்கள் என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறாயினும் இந்நேரத்தில் உங்களிடம் குறைபாடுகள் உள்ளன. நீங்கள் அவற்றை பாபாவிடம் கூறுவதனால், அவர் அவற்றை எவ்வாறு நீக்குவதென விளங்கப்படுத்துவார். இப்பொழுது உங்களிடம் அதிகளவு குறைபாடுகள் உள்ளன. உங்களிடம் உள்ள பிரதான குறைபாடுகள் அனைத்தும் சரீர உணர்வினாலேயே ஆகும். அவை பெருமளவு துன்பத்திற்குக் காரணமாகிறது. அவை உங்கள் ஸ்திதியை முன்னேற்றிக்; கொள்வதற்கு அனுமதிப்பதில்லை. எனவே முழு முயற்சி எடுங்கள். நீங்களும் உங்கள் சரீரத்தைத் துறந்து இப்போது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் வீடு திரும்புவதற்கு முன்னர் இங்கே தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். கர்மாதீத நிலையை அடைவதன் கருத்தை பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். கர்மாதீத நிலையை அடைந்து திரும்ப வேண்டுமாயின், உங்களில் எவ்வித மாசும்; இருக்கக் கூடாது ஏனெனில் நீங்கள் வைரங்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் உயிர் வாழ்பவர்கள் என்பதால், உங்களில் என்ன மாசு உள்ளதென்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். ஒரு பௌதீக வைரத்தினால் அதன் மாசுகளை அகற்ற முடியாது. நீங்கள் உயிருள்ளவர்கள், எனவே உங்களால் உங்கள் மாசுகளை நீக்க முடியும். நீங்கள் சிப்பியிலிருந்து வைரத்தைப் போலாகுகின்றீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி நன்கு அறிவீர்கள். சத்திர சிகிச்சையாளர் உங்களை வினவுகிறார்: உங்களுக்குள் இருக்கும் எந்த மாசு தடைகளை ஏற்படுத்தி உங்கள் முன்னேற்றத்தையும் தடை செய்கின்றது.? நீங்கள் இறுதியில் மாசற்றவர்கள் ஆகவேண்டும். அந்த மாசுகள் அனைத்தும் இப்போது அகற்றப்பட வேண்டும். மாசுகள் நீக்கப்படாவிட்டால், வைரத்தின் பெறுமதி குறைவடையும். இவரும் ஒரு சாமர்த்தியமான வைரவியாபாரி. அவரது வாழ்நாள் முழுவதும் இந்தக் கண்களால் வைரத்தை பரிசோதனை செய்திருக்கின்றார். இவரைப் போன்று வைரத்தை பிரித்தறிவதில் அதிக ஆர்வமுள்ள வேறு வைரவியாபாரி இருந்திருக்க முடியாது. நீங்களும் வைரங்களாக ஆகுகின்றீர்கள். உங்களிடம் ஒன்றிரண்டு மாசுகள் இன்னமும் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீ;ங்கள் இன்னமும் முழுமை அடையவில்லை. நீங்கள் உயி;ர்வாழ்பவர்கள் என்பதனால், எவ்விதமான மாசுகளையுமே, முயற்சி செய்வதன் மூலம் உங்களால் அகற்றி விட முடியும். நீங்கள் நிச்சயமாக வைரத்தைப் போல் ஆகவேண்டும். நீங்கள் முழு முயற்சி செய்தாலேயே அவ்வாறு ஆக முடியும். தந்தை கூறுகிறார்: இறுதியில், உங்கள் சரீரத்தை விட்டுச் செல்லும் நேரத்தில், வேறு எவரையேனும் நினைவு செய்யாதவாறு உங்கள் ஸ்திதி மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இது தெளிவானதாகும். நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்ற அனைவரையும் மறந்து, தந்தை ஒருவருடன் மாத்திரமே உறவு முறையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இப்போது வைரத்தைப் போலாகுகிறீர்கள். இது ஓரு நகைக் கடையாகும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு நகைவியாபாரி.. வேறு எவரும் இதனைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்கள் முயற்சிக்கேற்ப உலக அதிபதிகள் ஆகுவீர்கள் என்பது உங்கள் ஒவ்வொருவருடைய இதயத்திலும் உள்ளதெனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்கள் நிச்சயமாக முயற்சி செய்திருக்க வேண்டும். அவர்கள் உங்கள் மத்தியிலும் உள்ளனர். குழந்தைகளாகிய நீங்களே அதிகளவு முயற்சி செய்யவேண்டும். இதனாலேயே மற்றவர்கள் மலர்களைப் பார்ப்பது போல, பாபா தொடர்ந்தும் ஒவ்வொரு குழந்தையாகப் பார்க்கின்றார். இந்த மலர் எவ்வளவு நறுமணமுடையது? குறிப்பாக இது எதனைப் போன்றது? இம் மலரில் இன்னமும் என்ன மாசு உள்ளது? நீங்கள் உயிர்வாழ்பவர்கள் என்பதால் உங்களைத் தந்தையிடமிருந்து பிரித்து, உங்கள் புத்தியின் யோகத்தை வேறெங்கேனும் அலைபாயவைக்கும், உங்களுக்குள்ளேயிருக்கும் மாசுகள் என்னவென்பதை உயிர்வாழும் வைரங்களாகிய நீங்களே புரிந்து கொள்ள முடியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். வேறு எவரையுமே நினைவு செய்யக் கூடாது. வீட்டில் குடும்பத்துடன் வாழும் போதும் தந்தை ஒருவரை மாத்திரமே நினைவு செய்யுங்கள். வெளியில் சென்று சேவை செய்ய ஆயத்தமானவர்களுக்காக பத்தி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. பழையவர்கள் மிக நன்றாகச் சேவை செய்வது கவனிக்கப்பட்டுள்ளது சில புதியவர்களும் சேர்க்கப்படுகிறார்கள். பழையவர்களின் பத்தியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவர்கள் பழையவர்களாயினும், நிச்சயமாக அவர்களிடமும் குறைபாடுகள் உள்ளன. பாபா எதிர்பார்க்கின்ற அந்த ஸ்திதியை நீங்கள் உருவாக்கிவிட்டீர்களா, இல்லையா என்பதனை நீங்கள் இதயபூர்வமாக புரிந்து கொள்ள முடியும்;. உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். மிகப் பெரிய மாசு சரீர உணர்வே ஆகும். இதனாலேயே உங்கள் புத்தி சரீரத்தை நோக்கி ஈர்க்கப்படுகி;ன்றது. நீங்கள் சரீரத்தில் இருக்கும் போதே, ஆத்ம உணர்வுக்கு வரவேண்டும். உங்கள் கண்களால் காணும் எதுவுமே உங்கள் முன்னால் தோன்றாதவாறு உங்கள் ஸ்திதியை நீங்கள் உருவாக்க வேண்டும். தந்தையையும், அமைதிதாமத்தையும் தவிர வேறு எதனையும் உங்கள் புத்தி நினைவு செய்யக் கூடாது. நீங்கள் எதனையுமே உங்களுடன் திரும்ப எடுத்துச் செல்ல முடியாது. முதலில் உங்கள் அனைத்து உறவுமுறைகளும் புதியதாக இருந்தன. தற்போது உங்கள் உறவுமுறைகள் பழையனவாகும். நீங்கள் எந்தவொரு பழைய உறவுமுறைகளையும் சிறிதளவேனும் நினைவு செய்யக் கூடாது. உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை இறுதி இலக்கிற்;கு அழைத்துச் செல்லும் என்று கூறப்படுகின்றது. இது இக்காலத்திற்கே பொருத்தமானதாகும். கலியுகத்து மக்கள் அப் பாடலை இயற்றியுள்ளார்கள் ஆனால் அதன் கருத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பிரதான விடயமாக பாபா விளங்கப்படுத்துவது: நீங்கள் ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரையேனும் நினைவு செய்யக் கூடாது. ஒரேயொரு தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, ஒரு தூய வைரமாக ஆகமுடியும். சில கற்கள் மிகப் பெறுமதிவாய்ந்தவை. பவளங்களும் பெறுமதி வாய்ந்தவை. தந்தை குழந்தைகளாகிய உங்களை தன்னிலும், மிகப் பெறுமதிவாய்ந்தவர்களாக ஆக்குகின்றார். நீங்கள் உங்களைப் சோதிக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: அகநோக்குடையவராகி உங்களைச் சோதித்துப் பாருங்கள். நான் என்ன குறைபாடுகளைக் கொண்டுள்ளேன்? எந்த அளவிற்கு நான் ஆத்ம உணர்வில் இருக்கின்றேன்? பாபா, தொடர்ந்தும் முயற்சி செய்வதற்குப் பலவழிமுறைகளை விளங்கப்படுத்துகின்றார். முடியுமான அளவிற்கு ஒரேயொருவரை நினைவு செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் எவ்வளவு தான் அழகாகவும் அன்பாகவும் இருந்தாலும், நீங்கள் வேறெவரையும் நினைவு செய்யக் கூடாது. இந்த உலகில் உள்ள எதுவுமே நினைவு செய்யப்படலாகாது. சிலர் தங்கள் குழந்தைகள் மீது பெருமளவு பற்று வைத்திருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: அவர்கள் மீதுள்ள பற்று முழுவதையும் அகற்றி, ஒரேயொருவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அன்பான தந்தையுடன் மாத்திரம் யோகம் செய்யுங்கள். நீங்கள் அனைத்தையும் அவரிடமிருந்து பெறுகிறீர்கள். அவருடன் யோகம் செய்வதனால் நீங்கள் அன்பானவர்கள் ஆகுவீர்கள். ஆத்மாவே அழகானவர் ஆகுகின்றார். தந்தை தூய்மையும் அழகானவரும் ஆவார். ஆத்மாவைத் தூய்மையாகவும், அழகாகவும் ஆக்குவதற்குத் தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் அதிகளவு என்னை நினைவு செய்யும் பொழுது, மிக அழகானவர்களாக ஆகுகிறீர்கள். மக்கள் இப்பொழுதும் உங்களை தேவ ரூபத்தில் வழிபாடு செய்யும் அளவிற்கு அழகானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் மிகவும் அழகானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்கு இராச்சியத்தை ஆட்சி செய்தீர்கள், பின்னர் அரைக் கல்பத்திற்கு வழிபாடு செய்யப்பட்டீர்கள். நீங்களே, பூஜை செய்பவர்கள் ஆகி, உங்கள் சொந்த ரூபங்களை வழிபடுகின்றீர்கள். நீங்களே அனைவரிலும் மிகமிக அழகானவர்கள் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும் அழகான தந்தையை மிக நன்றாக நினைவு செய்தால் மாத்திரமே நீங்கள் அழகானவர்கள்; ஆகுவீர்கள். நீங்கள் தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யக் கூடாது. எனவே உங்களைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் பெருமளவு அன்புடன் தந்தையை நினைவு செய்தீர்களா? தந்தையின் நினைவில் இருக்கும் போது அன்புக் கண்ணீர் சொரிய வேண்டும். பாபா, உங்களைத் தவிர வேறு எவரும் என்னுடையவரல்ல. அங்கு வேறு எவருடைய நினைவோ அல்லது மாயையின் புயலோ இருக்கக் கூடாது. பல புயல்கள் வரும். உங்களை நீங்கள் மிகக் கவனமாக சோதித்துப் பார்க்க வேண்டும்;: தந்தையைத் தவிர வேறு எவரிடமாவது எனது அன்பு செல்கிறதா?; எதுவாயினும் எவ்வளவு அழகாக இருந்தாலும், நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் அன்புக்கினிய ஒரே ஒருவரின் காதலிகள் ஆவீர்கள். ஒரு அன்புக்கினியவரும் காதலியும் ஒருவரையொருவர் காணும் போது, அவ்வளவு தான்! அவர்கள் திருமணம் செய்து கொள்ளாது, பிரிந்து வாழ்ந்தாலும்; புத்தியானது ஒருவரையொருவர் நினைவு செய்யும். இப்போது நீங்கள் அன்பிற்கினியவரின் காதலி என்பதனைப் புரிந்து கொள்கிறீர்கள். பக்தி மார்க்கத்திலும் நீங்கள் அந்த அன்புக்கினியவரை பெருமளவு நினைவு செய்தீர்கள். இங்கும் அவர் உங்கள் முன்னால் இருப்பதனால், நீங்கள் அவரைப் பெருமளவு நினைவு செய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள் படகு அக்கரையைச் சென்றடையும். இங்கே அதனைப் பற்றிய சந்தேகம் என்ற கேள்வியே இல்லை. அனைவரும் கடவுளைச் சந்திப்பதற்காகப் பக்தி செய்கிறார்கள். இங்கே சில குழந்தைகள் தங்கள் எலும்புகளாலும் சேவை செய்கின்றார்கள். அவர்கள் சேவை செய்வதற்குத் தவிப்பார்கள்;. அவர்கள் கடினமாக உழைப்பார்கள்.; முக்கியஸ்தர்கள் அந்தளவிற்குப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்கள். எனினும் உங்கள் முயற்சி வீணாக மாட்டாது. சிலர் புரிந்து கொண்டு தகுதிவாய்ந்தவர்களாகி பாபாவின் முன்னால் வருகின்றார்கள். எவராவது ஒருவர் தகுதிவாய்ந்தவரா இல்லையா என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் குழந்தைகளாகிய உங்களிடமிருந்து திருஷ்டியைப் பெறுகின்றார்கள், அத்துடன் குழந்தைகளாகிய நீங்களே அவர்களை அலங்கரிக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு வந்தவர்களை அலங்கரித்தீர்கள். பாபா உங்களை அலங்கரித்தார், பின்னர் நீங்கள் மற்றவர்களை அலங்கரித்து இங்கு அழைத்து வருகிறீர்கள். நீங்கள் அலங்கரிக்கப்பட்டதைப் போன்று, மற்றவர்களை நீ;ங்கள் அலங்கரிக்கும் போது தந்தை நன்றியைத் தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும் உங்களை நீங்கள் அலங்கரித்ததை விடவும், மற்றவர்களை அதிகளவு அலங்கரிக்க உங்களால் முடியும். ஒவ்வொருவருடைய பாக்கியமும் வேறுபட்டது. இங்கு புரிந்து கொள்வதற்காக வந்தவர்களில் சிலர் அவர்களுக்கு விளங்கப்படுத்தியவரிலும் பார்க்கப் புத்திசாலி; ஆகிவிடுகிறார்கள்;. இவரிலும் பார்க்க நன்றாகத் தங்களால் விளங்கப்படுத்த முடியுமென அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும் என்ற போதை ஏற்படும் போது, அவர்கள் சென்று மற்றவர்களுக்குச் சேவை செய்கிறார்கள். அவர்கள் பாபாவினதும் தாதாவினதும் இதயத்தில் அமர்ந்து விடுவார்கள். பழையவர்களிலும் பார்க்க புத்திசாலியான பல புதியவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் முட்களில் இருந்து மிக நல்ல மலர்கள் ஆகுகிறார்கள். இதனாலேயே பாபா அமர்ந்திருந்து ஒவ்வொருவராக சோதிக்கின்றார்: இவர்களில் என்ன பலவீனம் உள்ளது? இவர் இந்தப் பலவீனத்தை நீக்கினால், இவரினால் நல்ல சேவை செய்ய முடியும்;. பாபா பூந்தோட்டத்தின் அதிபதியாவார். பலர் சென்று பின்வரிசையில் அமர்வதனால், பாபாவிற்கு எழுந்து சென்று பின்னால் உள்ளவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. மிக நல்ல மகாராத்திகள் முன்னால் அமர வேண்டும். இதில் மனக்குழப்பம் அடைவதென்ற கேள்விக்கு இடமில்லை. அவர்கள் குழப்பமடைந்து முகம் கோணத் தொடங்கினால், அது அவர்கள் தங்கள் பாக்கியத்துடன் முகம் கோணுகிறார்கள் என்பதாகும். முன்னால் அமர்ந்துள்ள மலர்களைப் பார்க்கையில் அளவற்ற சந்தோஷம் உள்ளது. இவர் மிகவும் நல்லவர். இவரிடம் சில குறைபாடுகள் உள்ளன. இவர் மிகவும் சுத்தமானவர். இவரினுள் இன்னும் கலப்படம் சேர்ந்திருக்கிறது. ஆகவே நீங்கள் அனைத்துக் குப்பைகளையும் அகற்ற வேண்டும். தந்தையைப் போன்று யாராலும் உங்களின் மீது அன்பு செலுத்த முடியாது. ஓர் மனைவி தனது கணவன் மீது அன்பு வைத்திருக்கிறாள் ஆனால் அவள் கணவன் அவள் மீது அந்தளவு அன்பு வைத்திருப்பதில்லை. அவர் இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியையும் தேடிக்கொள்வார். ஒரு பெண்ணின் கணவன் மரணித்தால், அவள் துன்பத்தில் அழுது புலம்புவாள். எவ்வாறாயினும் ஒரு ஆண் தனது ஒரு காலணியைத் தொலைத்தால், அவர் வேறொன்றை எடுப்பார்;. சரீரம் ஒரு காலணி என அழைக்கப்படுகிறது. சிவபாபாவிடமும் நீண்ட காலணி உண்டு. பாபாவை நினைவு செய்வதனால் நீங்கள் முதல் தரமாக ஆகுவீர்கள் என்பதனை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாகரீகமான சிலரிடம் 4 அல்லது 5 ஜோடி காலணிகள் இருக்கும்.. ஒர் ஆத்மாவிடம் ஒரு காலணி மாத்திரமே உண்டு. கால்களுக்கு ஒரு ஜோடி காலணிகள் மாத்திரமே தேவை. எனினும் அதிகளவில் வைத்திருத்தல் நாகரீகமாகிவிட்டது. தந்தையிடமிருந்து எந்த ஆஸ்தியைக் கோருகிறீர்கள் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாங்கள் இப்போது வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுகின்றோம். சுவர்க்கம் “உலக அதிசயம்” என அழைக்கப்படுகிறது. நிச்சயமாக தந்தையாகிய சுவர்க்கக் கடவுளே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். தற்போது நீங்கள் ஸ்ரீமத்தை பின்பற்றி, உங்களுக்காக நடைமுறை ரீதியில் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறீர்கள். இங்கு மக்கள் பெரிய மாளிகைகள் போன்ற வற்றைக் கட்டுகிறார்கள். அவை அனைத்துமே அழியப் போகின்றது. நீங்கள் அங்கு என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுக்கு இங்கு எதுவுமில்லை என்பதனை உங்கள் இதயம் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழ்கின்ற போதிலும், அனைத்தும் பாபாவிற்குரியவை என்பதைப் புரிந்து கொள்கிறீ;ர்கள். எதுவும் உங்களுடையதல்ல, நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு எதுவும் சொந்தமல்ல. பாபாவே அதிபதி ஆவார். அனைத்தும் பாபாவிற்கு உரியவை. வீட்டிலும் இந்த உணர்வைப் பேணுங்கள்.. செல்வந்தர்களின் புத்தியில் இந்த விடயங்கள் புக மாட்டாது. பாபா கூறுகின்றார்: நம்பிக்கைப்பொறுப்பாளராக வாழுங்கள். நீங்கள் எதனைச் செய்தாலும் பரவாயில்லை, பாபாவிற்குத் தொடர்ந்தும் சமிக்;ஞை காட்டுங்கள். (பாபா அதனைப் பற்றி அறிந்து கொள்ளட்டும்) “பாபா, நான் வீடு ஒன்றைக் கட்டலாமா? என அவர்கள் எழுதும் போது, பாபா பதில் கூறுவார்: வேண்டுமானால் கட்டுங்கள், ஆனால் நம்பிக்கைப் பொறுப்பாளராக இருங்கள். தந்தை இங்கமர்ந்திருக்கிறார். தந்தை வீடு திரும்பும் போது, நீங்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து திரும்பிச் செல்வீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் இராச்சியத்திற்குச் செல்வீர்கள். நான் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களைத் தூய்மையாக்குவதற்கு வரவேண்டும். நான் எனக்குரிய நேரத்தில் வருகிறேன். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் பற்றை அனைவரிலும் இருந்து அகற்றி, அன்பான ஓரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அகநோக்குடையவராகி, உங்களைச் சோதித்துக் குறைபாடுகளை அகற்றிவிடுங்கள். பெறுமதிமிக்க வைரம் ஆகுங்கள்.2. குழந்தைகளாகிய உங்களைத் தந்தை அலங்கரித்துள்ளதைப் போன்று, நீங்கள் மற்றவர்களையும் அலங்கரிக்க வேண்டும். முட்களை மலர்களாக்கும் சேவையில் உங்களை ஈடுபடுத்துங்கள். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருங்கள்.
ஆசீர்வாதம்:
ஒரேயொருவரின் அன்பில் மூழ்கியிருந்து, ஒரேயொரு தந்தையை உங்கள் ஆதாரமாக ஆக்கி, அனைத்து கவர்ச்சிகளிலிருந்தும் விடுபடுவீர்களாக.ஒரேயொரு தந்தையின் அன்பில் மூழ்கியிருக்கின்ற குழந்தைகள் திருப்தியாகவும் அனைத்து பேறுகள் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களால் எந்த ஒரு வகையான ஆதரத்தினாலும் கவரப்பட முடியாது. அவர்கள் இலகுவாக ஒரேயொரு தந்தைக்கே அன்றி வேறு எவருக்கும் உரியவர்கள் அல்ல என்ற அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஒரேயொரு தந்தையே அவர்களின் உலகமாக இருப்பதுடன் அவர்கள் அனைத்து உறவுமுறையின் இனிமையையும் ஒரேயொரு தந்தையிடம் அனுபவம் செய்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், அவர்களின் சகல பேறுகளுக்கும் அடிப்படையாக இருப்பது, ஒரேயொரு தந்தையே அன்றி உடமைகளோ வசதிகளோ அல்ல. ஆகையாலேயே அவர்கள் இலகுவாக கவர்ச்சிகளில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள்.
சுலோகம்:
உங்களை ஒரு கருவியாகக் கருதி, சதா இலேசாகவும்-ஒளியாகவும் இருந்தால், நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள்.