18.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் தூய உலகிற்குச் செல்வதால், தூய்மையற்ற சரீரதாரிகள் எவர் மீதும் அன்பு செலுத்தக்கூடாது. ஒரேயொரு தந்தை மீதே அன்பு செலுத்துங்கள்.
கேள்வி:
நீங்கள் எதனையிட்டுச் சலிப்படையக்கூடாது? ஏன்?
பதில்:
நீங்கள் உங்களது அப்பழைய சரீரத்;தையிட்டுச் சற்றேனும் சலிப்படையக்கூடாது. ஏனெனில்; அச்சரீரம் மிக, மிகப் பெறுமதி வாய்ந்தது. ஆத்மா அச்சரீரத்தில் இருந்தவாறு தந்தையை நினைவுசெய்வதன் மூலம் மிகப்பெரிய அதிர்ஷ்ட இலாபச்சீட்டைப் பெறுகின்றார். நீங்கள் தந்தையின் நினைவில் இருந்தால், தொடர்ந்தும் சந்தோஷப் போஷாக்கைப் பெறுகிறீர்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் தூரதேச வாசிகளாக உள்ளீர்கள், பின்னர் நீங்கள் தூரதேசத்துக்குச் செல்கின்ற, பயணிகள் ஆகுவீர்கள். நாங்கள் ஆத்மாக்கள், இப்பொழுது தூர தேசத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றோம். ஆத்மாக்களாகிய நீங்கள் தூரதேச வாசிகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். தூர தேசத்தில் வசிக்கின்ற தந்தையையும் நீங்கள் கூவியழைத்தீர்கள்: வந்து, எங்களையும் தூர தேசத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இப்பொழுது, தூர தேசத்தில் வசிக்கின்ற தந்தை குழந்தைகளாகிய உங்களை அங்கு அழைத்துச் செல்கின்றார். நீங்கள் ஆன்மீகப் பயணிகள், ஏனெனில் நீங்கள் அச்சரீரங்களில் இருக்கின்றீர்கள். ஆத்மாவே பயணம் செய்கின்றார். சரீரம் இங்கு இருக்கும். ஆத்மாவே பயணம் செய்வார். ஆத்மாக்களாகிய நீங்கள் எங்கு செல்வீர்கள்? உங்கள் ஆன்மீக உலகிற்கு. இது பௌதீக உலகம், அது ஆன்மீக உலகமாகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் உங்களது பாகங்களை நடிப்பதற்காக எந்த வீட்டிலிருந்து வந்தீர்களோ, அங்கு இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். இது மிகப் பெரிய மேடை. ஒவ்வொருவரும் இம்மேடையில் தத்தமது பாகங்களை நடித்து, பின்னர் வீடு திரும்ப வேண்டும். நாடகம் முடிவடையும்பொழுதே உங்களால் திரும்பிச் செல்ல முடியும். இப்பொழுது நீங்கள் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். உங்களது புத்தியின் யோகம் உங்கள் வீட்டுடனும், இராச்சியத்துடனும் உள்ளது. இதனை மிக உறுதியாக நினைவுசெய்யுங்கள், ஏனெனில் உங்கள் இறுதி எண்ணங்களே உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும் என நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது இங்கு கற்கின்றீர்கள். கடவுள் சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த அதி மங்களகரமான சங்கம யுகத்தைத் தவிர, வேறு எக்காலத்திலும் கடவுளால் உங்களுக்குக் கற்பிக்க முடியாது. 5000 வருடங்கள் முழுவதிலும் ஒரேயொரு தடவை மாத்திரமே, அசரீரியான கடவுளாகிய தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இந்த உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்கள். இக்கல்வி மிக இலகுவானது; இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். முழு உலகமும் அவ்வீட்டை விரும்புகின்றது. அனைவரும் முக்தி தாமத்திற்குச் செல்ல விரும்புகின்றார்கள். எனினும், அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்நேரத்தில் மக்களின் புத்தி எவ்வாறுள்ளது எனவும், உங்கள் புத்தி இப்பொழுது எப்படியாகி விட்டது எனவும் பாருங்கள்: அத்தகைய பெரும் வேறுபாடு உள்ளது! நீங்கள் உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, சுத்தமான புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய மிகச்சிறந்த ஞானத்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்து, நிச்சயமாகச் சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகவேண்டும் என்பது உங்கள் இதயங்களில் உள்ளது. இங்கிருந்து, முதலில் நீங்கள் உங்கள் வீட்டிற்குச் செல்வீர்கள். எனவே, நீங்கள் சந்தோஷமாகச் செல்ல வேண்டும். சத்தியயுகத்தில் தேவர்கள் எவ்வாறு சந்தோஷமாகத் தங்கள் சரீரங்களை நீக்கி இன்னுமொரு சரீரத்தை எடுக்கின்றார்களோ, அதேபோன்று நீங்களும் இப் பழைய சரீரங்களைச் சந்தோஷத்துடன் நீக்க வேண்டும். அது மிகவும் பெறுமதியான சரீரம் என்பதால், நீங்கள் அதனையிட்டுச் சலிப்படையக்கூடாது. ஆத்மா அச்சரீரத்தின் மூலமாகவே தந்தையிடமிருந்து ஓர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வென்றெடுக்கின்றார். நாங்கள் தூய்மையாகும்வரை எங்களால் வீடு திரும்ப முடியாது. நீங்கள் தந்தையைத் தொடர்ந்து நினைவு செய்யும்பொழுது மாத்திரமே, அந்த யோக சக்தி மூலம் பாவச் சுமைகள் அகற்றப்படும். இல்லையெனில் பெருமளவு தண்டனையைப் பெற நேரிடும். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். லௌகீக உறவுமுறைகளில் ஒரு குழந்தை அழுக்கான, தூய்மையற்ற செயல் எதையாவது செய்தால், அவர் நியதிக்கு மாறாகத் தூய்மையற்றவராகிய காரணத்தால் அவரது தந்தை கோபமுற்றுத் தடியினால் அடிக்கவும் செய்வார். ஒருவர் நியதிக்கு மாறாக எவரையாவது நேசித்தாலும் பெற்றோர் அதனை விரும்புவதில்லை. இந்த எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் இனிமேலும் இங்கு வாழ வேண்டியதில்லை. நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். விகாரமுள்ள, தூய்மையற்ற எவரும் அங்கு இருக்க மாட்டார்கள். தூய்மையாக்குகின்ற ஒரேயொரு தந்தை மாத்திரமே வந்து, எங்களை அவ்வாறு தூய்மையாக்குகின்றார். தந்தையே கூறுகின்றார்: எனது பிறப்பு தெய்வீகமானதும், தனித்துவமானதும் ஆகும். நான் செய்வது போன்று எந்த ஆத்மாவும் ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்க முடியாது. சமய ஸ்தாபகர்களின் ஆத்மாக்களும் ஒரு சரீரத்தில் பிரவேசித்தாலும், அது வேறுபட்ட விடயமாகும். நான் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்ல வருகின்றேன். அவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக மேலிருந்து கீழே வருகின்றார்கள். நீங்கள் முதலில் எவ்வாறு புதிய உலகிற்குச் செல்வீர்கள் என்பதையும் நான் உங்களுக்குக் கூறி, பின்னர் அனைவரையும் என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். சத்திய யுகத்துப் புதிய உலகில் நாரைகள் கிடையாது. தந்தை நாரைகளின் மத்தியில் வந்து, உங்களை அன்னங்கள் ஆக்குகின்றார். நீங்கள் இப்பொழுது அன்னங்கள் ஆகிவிட்டீர்கள்; நீங்கள் முத்துக்களையே தெரிவு செய்கின்றீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இந்த இரத்தினங்களைப் பெற மாட்டீர்கள். இப்பொழுது நீங்கள் இந்த ஞான இரத்தினங்களைப் பொறுக்கி, அன்னங்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் எவ்வாறு நாரைகளிலிருந்து அன்னங்கள் ஆகுகின்றீர்கள் என்பதைத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். அவர் இப்பொழுது உங்களை அன்னங்கள் ஆக்குகின்றார். தேவர்கள் அன்னங்கள் எனவும், அசுரர்கள் நாரைகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். நீங்கள் இப்பொழுது குப்பைகளை நீக்கி, முத்துக்களைத் தெரிவு செய்வதற்கு மக்களைத் தூண்டுகின்றீர்கள். நீங்கள் மாத்திரமே பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். ஒவ்வோர் அடியிலும் பல மில்லியன்கள் இருக்கின்றன. சிவபாபா பல மில்லியன்களைக் கொண்டிருப்பதற்கு அவருக்குப் பாதங்கள் கிடையாது. அவர் உங்களைப் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆக்குகின்றார். தந்தை கூறுகிறார்: நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கு வந்திருக்கின்றேன். இவ்விடயங்கள் அனைத்தும் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். சுவர்க்கம் இருந்ததை மக்கள் புரிந்துகொள்கின்றார்கள். எனினும், அது எப்பொழுது இருந்தது, அல்லது மீண்டும் எப்பொழுது வரும் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானோதயம் பெற்றுள்ளீர்கள். அம்மக்கள் அனைவரும் இருளில் உள்ளனர். இலக்ஷ்மியும், நாராயணனும் எப்பொழுது அல்லது எவ்வாறு உலக அதிபதிகள் ஆகினார்கள் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அது 5000 வருடங்களுக்கான விடயமாகும். தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் உங்களுடைய பாகங்களை நடிப்பதற்காக இங்கு வருவதைப் போன்றே, அவ்வாறே, நானும் வருகின்றேன். நீங்கள் என்னை வரவழைத்துக் கூறினீர்கள்: ஓ, பாபா, வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள்! நீங்கள் வேறு எவருக்கும் ஒருபொழுதும் இவ்வாறு கூறியிருக்க மாட்டீர்கள். ‘வந்து எங்கள் அனைவரையும் தூய்மையாக்குங்கள்’ என உங்கள் சமய ஸ்தாபகருக்கேனும் கூறியிருக்க மாட்டீர்கள். கிறிஸ்துவையோ அல்லது புத்தரையோ தூய்மையாக்குபவர் என அழைக்க முடியாது. குரு என்பவர் சற்கதியை அருள்பவர். அம்மக்கள், (சமய ஸ்தாபகர்கள்) இங்கு கீழிறங்கி வருகின்றார்கள். பின்னர் அனைவரும் அவர்களைப் பின்பற்ற வேண்டும். அமரத்துவ ரூபமான தந்தை ஒருவரே வீடு திரும்புவதற்கான பாதையை உங்களுக்குக் காண்பித்து, அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். உண்மையில் 'சற்குரு" எனும் வார்த்தை சரியானது. நீங்கள் பேசும் வார்த்தைகளை விடச் சீக்கியர்கள் பேசும் வார்த்தைகள் மிகச்சரியாக இருக்கின்றன. ‘அமரத்துவமான சற்குரு’ என அவர்கள் மிக உரத்துக் கூறுகின்றனர். அவர்கள் இதனை மிகவும் சத்தமாக ஓதுகின்றனர். அவர்கள் கூறுகின்றார்கள்: சற்குருவே அமரத்துவ ரூபமானவர். அவருக்கு உருவம் இல்லையெனின், எவ்வாறு அவர் சற்குருவாகி, அனைவருக்கும் சற்கதியை அருள முடியும்? அந்தச் சற்குருவே வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார்: உங்களைப் போன்று நான் பிறப்பெடுப்பதில்லை. ஏனைய இடங்கள் அனைத்திலும் சரீரதாரிகளே அமர்ந்திருந்து ஞானத்தை உரைக்கின்றனர். ஆனால், இங்கோ சரீரமற்ற ஆன்மீகத் தந்தையே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கின்றது. மக்கள் இந்நேரத்தில் செய்பவையெல்லாம் தவறானவை. ஏனெனில், அவர்கள் இராவணனின் கட்டளைகளையே பின்பற்றுகின்றார்கள். ஒவ்வொருவரிலும் ஐந்து விகாரங்கள் உள்ளன. இப்பொழுது இது இராவண இராச்சியம். தந்தை இங்கிருந்து இவ்விடயங்களை விபரமாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இல்லையெனில், முழு உலகச் சக்கரத்தையும் பற்றி நீங்கள் எவ்வாறு அறிந்திருப்பீர்கள்? இச்சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதனை உங்களுக்கு விளங்கப்படுத்துமாறு நீங்கள் பாபாவைக் கேட்பதில்லை. தந்தை நீங்கள் கேட்காமல் தானாகவே தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் ஒரு கேள்வியேனும் கேட்க வேண்டியதில்லை. கடவுள் தந்தையாவார். தானாகவே அனைத்தையும் உங்களுக்குக் கூறுவதும், தானாகவே அனைத்தையும் செய்வதும் தந்தையின் கடமையாகும். ஒரு (லௌகீக) தந்தை தனது குழந்தைகளைத் தானே பாடசாலையில் சேர்த்துவிடுகின்றார். அவர் அவர்களைத் தொழில் செய்ய வைத்து, அவர்களை 60 வயதுக்குப் பின்னர் அனைத்தையும் நீக்கிவிட்டுக் கடவுளை மாத்திரம் நினைவுசெய்து, பக்திப்பாடல்கள் பாடி, வேதங்கள் சமயநூல்களைக் கற்று, வழிபாடு செய்யுமாறு கூறுகின்றார். நீங்கள் அரைக் கல்பமாக பூஜிப்பவர்களாக இருந்து, இப்பொழுது அரைக்கல்பத்திற்குப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் எவ்வாறு தூய்மையாகலாமென உங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் வழிபாடு முழுமையாக நிறுத்தப்படுகின்றது. அவர்கள் அனைவரும் பூஜிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். நீங்களோ ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அவர்கள் இருளில் உள்ளனர். ஆனால் நீங்களோ வெளிச்சத்திற்கு (பகல்), அதாவது, சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். கீதையில் எழுதப்பட்டுள்ளது: மன்மனாபவ! இவ்வார்த்தை மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. கீதையைக் கற்பவர்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். எழுதப்பட்டிருப்பது மிக இலகுவானது. மக்கள் கீதையைத் தங்கள் வாழ்க்கை முழுவதும் கற்கின்றார்கள். ஆனால் அவர்கள் எதையும் புரிந்துகொள்ளவில்லை. அதே கீதையின் கடவுளே இப்பொழுது இங்கிருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாகுகின்றீர்கள். நாங்கள் இப்பொழுது கடவுளிடமிருந்து கீதையைச் செவிமடுத்து, பின்னர் அதனைப் பிறருக்கு உரைத்து, தூய்மையானவர்கள் ஆகுகின்றோம். தந்தையின் மேன்மையான வாசகங்கள் உள்ளன. இது அதே இலகு இராஜயோகமாகும். மக்கள் மூட நம்பிக்கையில் அதிகளவு மூழ்கிவிடுவதனால் நீங்கள் கூறுவதைச் செவிமடுப்பதில்லை. நாடகத்தின்படி அவர்களின் பாக்கியம் ஆரம்பமாகும்பொழுதே அவர்களால் உங்களிடம் வரமுடியும். ஏனைய சமயத்தவர்கள் எவருமே நீங்கள் கொண்டிருக்குமளவு பாக்கியத்தைக் கொண்டிருக்கவில்லை. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: உங்களின் இந்தத் தேவ தர்மமே பெருமளவு சந்தோஷத்தைத் தருகின்றது. தந்;தை கூறுவது சரி என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். சமயநூல்களில் அவர்கள் அங்கு கம்சன், இராவணன் போன்றோரையும் காட்டியுள்ளனர். அங்குள்ள சந்தோஷத்தைப் பற்றி அவர்கள் எவரும் அறியமாட்டார்கள். அவர்கள் தேவர்களை வழிபட்டபொழுதிலும் அவர்களின் புத்தியில் எதுவும் பதிவதில்லை. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் என்னை நினைவு செய்கின்றீர்களா? ஒரு லௌகீகத் தந்தை தனது குழந்தைகளிடம் 'என்னை நினைவுசெய்யுங்கள்" எனக் கூறியதாக நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? ஒரு லௌகீகத் தந்தை தன்னை நினைவுசெய்வதற்கு முயற்சி செய்யுமாறு உங்களிடம் எப்பொழுதாவது கேட்டிருக்கின்றாரா? எல்லையற்ற தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்துகொள்வதன் மூலம் நீங்கள் உலகை ஆட்சி செய்பவர்கள் ஆகுகின்றீர்கள். முதலில் நீங்கள் வீடு திரும்புவீர்கள். பின்னர், இங்கு நடிகர்களாகக் கீழிறங்குவீர்கள். இப்பொழுது எவராலும் ஒருவரைப் புதிய ஆத்மா என்றோ அல்லது பழைய ஆத்மா என்றோ கூற முடியாதுள்ளது. புதிய ஆத்மாக்கள் நிச்சயமாகப் பிரபல்யமானவர்கள் ஆகுவார்கள். இப்பொழுதும் சிலர் எவ்வளவு பிரபல்யமானவர்களாக இருக்கின்றார்கள் எனப் பாருங்கள். பல மனிதர்கள் வருகின்றார்கள். மக்களில் பலர் எதிர்பாராமல் வருகின்றனர். அந்தத் தாக்கம் இருக்கின்றது. பாபாவும் இவரில் எதிர்பாராமலே வருகின்றார். எனவே அந்தத் தாக்கம் இருக்கின்றது. ஒரு புதிய ஆத்மா வரும்பொழுது, பழைய ஆத்மாக்களிலும்; தாக்கம் இருக்கின்றது. கொப்புக்களும் கிளைகளும் தொடர்ந்து வெளிப்படும்பொழுது, அவர்களுக்குப் புகழ் ஏற்படும். அவர்கள் ஏன் மிகவும் புகழ்பெற்றவர்களாக உள்ளனர் என்பதை எவரும் அறியமாட்டார்கள். அவர்கள் புதிய ஆத்மாக்கள் என்பதால் அவர்களில் கவர்ச்சி உள்ளது. இப்பொழுது எத்தனை போலியான கடவுள்மார் உள்ளனர் எனப் பாருங்கள்! இதனாலேயே நினைவுகூரப்படுகின்றது: சத்தியப்படகு ஆடலாம், ஆனால் அது மூழ்காது. கடவுளே படகோட்டி என்பதால் பல புயல்களும் வரும். குழந்தைகளும் தளம்பல் அடைகின்றனர், படகு பல புயல்களினால் பாதிக்கப்படுகின்றது. ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குப் பலரும் செல்கின்றார்கள், ஆனால் அங்கு புயல்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கு அப்பாவிப் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இருந்தபொழுதிலும், ஸ்தாபனை நிச்சயமாக இடம்பெறவே வேண்டும். தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார்: ஓ ஆத்மாக்களே, நீங்கள் அத்தகைய கூர்மையான முட்களாகி விட்டீர்கள்! நீங்கள் ஒரு முள்ளாகி ஏனையோரைக் குத்தும்பொழுது, நீங்களும் குத்தப்படுகின்றீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்திற்குமான பதிலை நீங்களே பெறுகின்றீர்கள். அங்கு உங்களுக்குத் துன்பத்தை விளைவிக்கக்கூடிய எவ்வித அழுக்கும் கிடையாது. அதனாலேயே அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. மக்கள் சுவர்க்கத்தையும், நரகத்தையும் பற்றிப் பேசுகின்றார்கள். எனினும், அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என அவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவ்வாறு கூறுவது தவறாகும். அசரீரி உலகைச் சுவர்க்கம் என அழைக்க முடியாது. அது முக்தி தாமம் ஆகும். அந்நபர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டதாக அவர்கள் பின்னர் கூறுகின்றனர். இங்கு ஒரு வீடு இருப்பதைப் போன்று, முக்தி தாமமே ஆத்மாக்களின் வீடு என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் செல்வந்தர்கள் பெரிய ஆலயங்களைக் கட்டுவிக்கின்றார்கள். சிவனுக்கு எவ்வாறு ஆலயங்கள் கட்டப்பட்டன எனப் பாருங்கள். அவர்கள் இலக்ஷ்மி நாராயணனுக்கும் ஆலயங்களைக் கட்டுகின்றனர். அங்கு பல உண்மையான இரத்தினங்கள் போன்றவையும் இருக்கின்றன. அங்கு பெருமளவு செல்வம் உள்ளது. இப்பொழுது அனைத்தும் போலியாகி விட்டன. முன்னர், நீங்கள் அதிகளவு நிஜ ஆபரணங்களை அணிந்தீர்கள். இப்பொழுது அரசாங்கத்திற்குப் பயப்படுவதனால், மக்கள் நிஜ ஆபரணங்களை மறைத்து விட்டு, போலியான நகைகளையே அணிகின்றார்கள். அங்கு சத்தியத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அங்கு பொய்மை எதுவும் கிடையாது. இங்கு அவர்களிடம் நிஜ ஆபரணங்கள் இருந்தாலும் அவற்றை மறைத்தே வைத்திருக்கின்றார்கள். நாளுக்கு நாள், தங்கம் தொடர்ந்தும் மேலும் மேலும் விலை அதிகரிக்கின்றது. அங்கு அது சுவர்க்கமாகும். நீங்கள் அனைத்தையும் புதிதாகவே பெறுகின்றீர்கள். புதிய உலகில் அனைத்தும் புதிதாகவே இருப்பதுடன், செல்வமும் தாராளமாக இருக்கும். இப்பொழுது எவ்வாறு அனைத்தினதும் விலை அதிகரித்து விட்டது எனப் பாருங்கள். அசரீரி உலகில் ஆரம்பித்து அனைத்து இரகசியங்களும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. தந்தையைத் தவிர, வேறு எவரால் உங்களுக்கு அசரீரி உலகின் இரகசியங்களைக் கூறமுடியும்? பின்னர் நீங்கள் ஆசிரியர்களாகவும் ஆகவேண்டும். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழலாம். ஆனால் தாமரை மலரைப் போன்று தூய்மையாக இருங்கள். நீங்கள் மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்கினால், அதி உயர்ந்த ஓர் அந்தஸ்தைப் பெற முடியும். இங்கு வாழ்பவர்களை விடவும் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்;தைப் பெறமுடியும்; அது வரிசைக்கிரமமானது. வெளியில் (நிலையத்திலன்றி, வீட்டில்) வாழும்பொழுதும், நீங்கள் மாலையில் கோர்க்கப்பட முடியும். ஒரு வாரப் பாடத்தை எடுத்த பின்னர் நீங்கள் வெளிநாட்டிற்கோ, வேறெங்குமோ செல்ல முடியும். முழு உலகும் செய்தியைப் பெறவேண்டும். தந்தை வந்து கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! அத் தந்தையே விடுதலையளிப்பவரும், வழிகாட்டியும் ஆவார். நீங்கள் அங்கு சென்றால், பத்திரிகைகள் மூலம் பிரபல்யமாகுவீர்கள். மற்றவர்களும் இதனை இலகுவானதாகக் காண்பார்கள்: ஆத்மாவும், சரீரமும் இரு வேறுபட்ட விடயங்களாகும். மனமும், புத்தியும் ஆத்மாவிலேயே உள்ளன, சரீரமோ உயிரற்றது. ஆத்மாவே ஒரு நடிகர் ஆகுகின்றார். ஆத்மாவே சிறப்பியல்பைக் கொண்டுள்ளார், எனவே நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இங்கு வாழ்பவர்கள் வெளியில் வாழ்பவர்கள் நினைவுசெய்யுமளவிற்கு அவரை நினைவுசெய்வதில்லை. அவரைப் பெருமளவில் நினைவுசெய்து, தொடர்ந்தும் மற்றவர்களைத் தங்களுக்குச் சமமாக்குபவர்களும், தொடர்ந்தும் முட்களை மலர்களாக மாற்றுபவர்களும், ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்;கள். முன்னர் நீங்களும் முட்களாகவே இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை இப்பொழுது ஒரு கட்டளை பிறப்பிக்கின்றார்: காமமே கொடிய எதிரி. அதனை வெற்றிகொள்ளுங்கள், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், வெறுமனே இந்த எழுதப்பட்ட வார்த்தைகளிலிருந்து எவரும் எதனையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். தந்தை இப்பொழுது அனைத்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சதா ஞான இரத்தினங்களையே தேர்ந்தெடுக்கும் அன்னங்கள் ஆகுங்கள். குப்பைகளை நீக்கி, முத்துக்களை மாத்திரம் தேர்ந்தெடுங்கள். ஒவ்வோர் அடியிலும் பல மில்லியன் வருமானத்தைச் சம்பாதித்து, பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுங்கள்.2. உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு, ஓர் ஆசிரியராகி ஏனைய பலருக்கும் சேவை செய்யுங்கள். தாமரை மலரைப் போன்று தூய்மையாகி, மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்குங்கள். முட்களை மலர்களாக மாற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பரிசோதனை செய்கின்ற ஓர் ஆத்மாவாக இருந்து, இலகுயோகம் எனும் ஆன்மீக முயற்சியைச் (சாதனா) செய்வதனால், வசதிகள் (சாதன்) அனைத்தையும் வெற்றிகொள்வீர்களாக.
வசதிகள் அனைத்தையும் கொண்டிருந்து, அவற்றின் மூலம் பரிசோதனை செய்யும்பொழுதும், உங்கள் யோகத்தின் ஸ்திதி தளம்பலடையாதிருக்கட்டும். ஒரு யோகியாக இருந்து பரிசோதனை செய்வதென்றால் பற்றற்றவராக இருப்பது என அறியப்பட்டுள்ளது. அனைத்தையும் பெயரளவில் கொண்டிருக்கும்பொழுதும் அதனால் கவரபப்படாமல் இருந்து, அதனைப் பயன்படுத்துங்கள். ஏதாவது ஆசைகள் (இச்சா) இருந்தால், அந்த ஆசைகள் உங்களை நல்லவராக (அச்சா) அனுமதிக்க மாட்டாது. உங்கள் நேரம் முயற்சி செய்வதில் செலவழிக்கப்படும். அந்நேரத்தில், நீங்கள் உங்களுடைய ஆன்மீக முயற்சியைச் செய்வதற்கு முயற்சி செய்வீர்கள், ஆனால் வசதிகள் உங்களைக் கவரும். ஆகவே இலகு யோகம் எனும் ஆன்மீக முயற்சியைச் செய்யும்பொழுது, பரிசோதனை செய்கின்ற ஓர் ஆத்மாவாக இருந்து, வசதிகளை, அதாவது, சடப்பொருளை வெற்றிகொள்பவர்கள் ஆகுங்கள்.சுலோகம்:
“எனது” என்னும் உறவுமுறைகள் அனைத்தையும் முடித்து விடுவது என்றால் ஒரு தேவதை ஆகுவது என்று அர்த்தமாகும்.