16.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அப்பொழுது விகார எண்ணங்கள் ஓடிவிடும்; உங்களால் தந்தையின் நினைவைக் கொண்டிருக்க முடிவதுடன், ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதானாகவும் ஆகுவீர்கள்.

கேள்வி:
உலகிலுள்ள மக்கள் முற்றிலும் அறியாத பாதை எது?

பதில்:
தந்தையைக் கண்டுபிடிப்பதற்கான பாதையை அல்லது எவ்வாறு ஜீவன்முக்தியை அடைவது என்பதை எவரும் அறியமாட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் “அமைதி”, “அமைதி!” என்று கூறுகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் கருத்தரங்குகளை நடாத்துகிறார்கள். எப்பொழுது அல்லது எவ்வாறு உலகில் அமைதி இருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. உங்களால் அவர்களை வினவ முடியும்: நீங்கள் எப்பொழுதாவது உலகில் அமைதியை அனுபவம் செய்ததுண்டா? எவ்வாறு அமைதி இருக்க முடியும்? உலகில் அமைதி தந்தையால் ஸ்தாபனை செய்யப்பட்டு வருகின்றது. வந்து இதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எல்லாவற்றிற்கும் முதலில் நீங்கள் ஆத்மாக்கள் என்ற பார்வையை உறுதிசெய்து கொள்ளுங்கள். நாங்கள் ஒருவர் மற்றவரைச் சகோதரர்களாகப் பார்க்கின்றோம். அதேபோன்று, தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களை, ஆத்மாக்களாகிய உங்களை நான் பார்க்கின்றேன். ஆத்மாவே சரீரத்தின் பௌதீகப் புலன்களினூடாகச் செவிமடுத்துப் பேசுகிறார். ஆத்மாவின் சிம்மாசனம் நெற்றியாகும். தந்தை ஆத்மாக்களாகிய உங்களைப் பார்க்கிறார். இந்தச் சகோதரர் தனது சகோதரர்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். நீங்களும் உங்கள் சகோதரர்களைப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில் இந்தப் பார்வை உறுதியாக்கப்பட வேண்டும். பின்னர் குற்ற எண்ணங்கள் முடிவடைந்து இந்தப் பழக்கம் பதிக்கப்படும். ஆத்மாவே செவிமடுக்கின்றார், ஆத்மாவே அசைவுகளை மேற்கொள்கிறார். இப்பார்வை உறுதியாகும்பொழுது, ஏனைய அனைத்து எண்ணங்களும் பறந்துவிடும். இது முதற்தர பாடம் ஆகும். தெய்வீகக் குணங்களும் இதனூடாக இயல்பாகக் கிரகிக்கப்படும். நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்பொழுதே உங்கள் பௌதீகப்புலன்கள் விஷமத்;தை விளைவிக்கின்றன. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்குப் பெருமளவு முயற்சியைச் செய்யுங்கள், நீங்கள் சக்தியை விருத்தி செய்து கொள்வீர்கள். சர்வசக்திவானாகிய தந்தையின் சக்தியினூடாக மாத்திரமே ஆத்மாக்கள் சதோபிரதானாக ஆகுகின்றனர். எவ்வாறாயினும் தந்தை சதோபிரதானானவர். எல்லாவற்றிற்கும் முதலில் இப்பார்வை உறுதியாக்கப்படும் பொழுது மாத்திரமே நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் என்பது புரிந்துகொள்ளப்படும். ஆத்ம உணர்வு உடையவர்களாக இருப்பதற்கும், சரீர உணர்வுடையவர்களாக இருப்பதற்கும் இடையில் பகலுக்கும் இரவிற்குமான வித்தியாசம் இருக்கின்றது. ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகும்பொழுது மாத்திரமே நாங்கள் தூய்மையானவர்களாகவும் சதோபிரதானானவர்களாகவும் ஆகுவோம். இதைப் பயிற்சி செய்வதால், விகார எண்ணங்கள் முடிவடையும். மக்கள் பூமியின் நட்சத்திரங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் உண்மையில் நட்சத்திரங்கள், எங்கள் சரீரங்களை நாங்கள் செயல்களைப் புரிவதற்காகவே பெற்றுள்ளோம். நாங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளதுடன் மீண்டும் ஒருமுறை நாங்கள் சதோபிரதான் ஆக வேண்டும். அதி மங்களகரமான சங்கமயுகத்தில் தந்தை வரவேண்டும். அவர் கிறிஸ்துவின் சரீரத்தில் பிரவேசிக்கின்றார் என்று ஒருபொழுதுமே கூறப்பட மாட்டாது. அவர் (கிறிஸ்து) இரஜோபிரதான் காலத்திலேயே வருகின்றார். கடவுள் கிறிஸ்துவின் அல்லது புத்தரின் சரீரத்தில் பிரவேசிப்பார் என்பது சாத்தியமல்ல. அவர் ஒருமுறையே வருகின்றார், அவர் புதிய உலகை ஸ்தாபிப்பதற்குப் பழைய உலகில் வருகின்றார். தமோபிரதான் உலகை மாற்றி, அதைச் சதோபிரதானாக ஆக்குவதற்கு அவர் நிச்சயமாகச் சங்கமயுகத்தில் வருவார். அவரால் வேறெந்த நேரத்திலும் வர முடியாது. அவர் வந்து புதிய உலகை ஸ்தாபிக்க வேண்டும். அவர் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என அழைக்கப்படுகின்றார். நாடகத்திற்கேற்ப, ‘சங்கமயுகம்’ என்ற பெயர் உள்ளது. கிருஷ்ணர் தந்தை அல்லது தூய்மையாக்குபவர் என அழைக்கப்பட மாட்டார். அவருடைய புகழ் முற்றிலும் வேறுபட்டது. பாபா தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: எல்லாவற்றிற்கும் முதலில், எவருக்கேனும் இலக்கையும் இலட்சியத்தையும் விளங்கப்படுத்துங்கள். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தபொழுது, ஒரே தர்மமும் ஒரே இராச்சியமும் இருந்தது. அது ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஆகும். அங்கு பிரிவினையற்ற ஒரே தர்மமே இருந்தது. சுவர்க்கத்தை ஸ்தாபிப்பது தந்தையின் பணி மாத்திரமே. எவ்வாறு அவர் அதைச் செய்கிறார் என்பதும் தெளிவானதாகும். சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார்: அனைத்துச் சரீர மதங்களையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். இலக்ஷ்மி நாராயணனின் படத்தின் முழு விளக்கத்தையும் கொடுங்கள். சிவபாபாவின் உருவமும் உள்ளது. அவருடைய புகழைக் காண்பிப்பதற்கு மிகச்சிறந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே சாதாரண ஆணிலிருந்து நாராயணன் ஆகுகின்ற உண்மையான கதையாகும். இது இராதை கிருஷ்ணரின் கதை என அழைக்கப்பட மாட்டாது; இது சத்திய நாராயணனின் கதை என அழைக்கப்படுகின்றது. அவர் உங்களைச் சாதாரண ஆணிலிருந்து நாராயணன் ஆக்குகின்றார். முதலில், அவர் ஒரு சிறு குழந்தையாக இருந்திருப்பார். ஒரு சிறு குழந்தையை ஓர் ஆண் என அழைக்க முடியாது. கூறப்பட்டுள்ளது: “நர (ஆண்) நாராயணனும் நாரி (பெண்) இலக்ஷ்மியும்”;. குழந்தைகளாகிய நீங்கள் இப்படத்தை விளங்கப்படுத்த வேண்டும். சந்நியாசிகளால் ஆதிசனாதன, தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபிக்க முடியாது. சங்கராச்சாரியார் இரஜோபிரதான் காலத்திலேயே வருகின்றார்;; அவரால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. தந்தை சங்கமயுகத்திலேயே வருகின்றார். அவர் கூறுகின்றார்: நான்; இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியின் இறுதியில், இவரில் பிரவேசிக்கின்றேன். உச்சியில் திரிமூர்த்தி இருக்கின்றார். பிரம்மா யோகத்தில் அமர்ந்திருக்கின்றார். சங்கரரைப் பற்றிய கேள்வி முற்றிலும் வேறுபட்டதாகும். ஒருவரால் எருதை ஓட்ட முடியாது. விளங்கப்படுத்துவதற்கு தந்தை இங்கு வர வேண்டும். விநாசமும் இங்கு நடைபெறுகின்றது. மக்கள் உலகில் அமைதி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அது நடைபெற இருக்கும்பொழுதே இது அவர்களின் புத்தியில் பதிகின்றது. படங்களைப் பயன்படுத்தி உங்களால் மிகவும் சிறப்பாக விளங்கப்படுத்த முடியும். சிவனையும் தேவர்களையும் வழிபடுபவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் உடனடியாகவே இதை ஏற்றுக் கொள்வார்கள். எவ்வாறாயினும், இயற்கையை அல்லது விஞ்ஞானத்தை நம்புபவர்களின் புத்திகளில் இது இருக்காது. ஏனைய மதங்களுக்குரியவர்களின் புத்திகளிலும் இது இருக்க மாட்டாது, மதம் மாற்றப்பட்டவர்கள் மீண்டும் வெளிப்படுவார்கள். நீங்;கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. தேவ தர்மத்திற்குரியவர்களும், பெருமளவு பக்தி செய்பவர்களும் தங்களின் சொந்தச் சமயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள். எனவே, தேவர்களை வழிபடுபவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். முக்கியமான பிரமுகர்கள் இங்கு ஒருபொழுதும் வரமாட்டார்கள். உதாரணமாக, பல்வேறு ஆலயங்களைக் கட்டியுள்ள பிர்லா இருக்கின்றார். அவருக்கு ஞானத்தைச் செவிமடுப்பதற்குக் கூட நேரம் இல்லை. நாள் முழுவதும், அவருடைய புத்தி வியாபாரத்தில் சிக்கியுள்ளது. அவர் பெருமளவு பணத்தைப் பெறுகின்றார், எனவே அவர் ஆலயங்களைக் கட்டியதால் செல்வத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார் எனவும், அது தேவர்களிடமிருந்து கிடைக்கின்ற ஆசீர்வாதம் எனவும் அவர் நினைக்கின்றார். மக்கள் உங்களிடம் வரும்பொழுது, அவர்களுக்கு இலக்ஷ்மி நாராயணனின் படத்தைக் காண்பியுங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: உலகில் அமைதி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அந்த உலகில் அமைதி இராச்சியம் (இலக்ஷ்மி நாராயணின்) இருந்தது. இந்நேரத்திலிருந்து இந்நேரம் வரை சூரியவம்ச இராச்சியத்தில் பெருமளவு அமைதி இருந்தது. பின்னர் அது இரு கலைகளால் குறைந்தது. அனைத்தும் இப்படத்தில் தங்கியுள்ளது. உங்களுக்கு இப்பொழுது உலகில் அமைதி இருக்க வேண்டும். நீங்கள் எங்கு செல்வீர்கள்? உங்களுக்கு முற்றிலும் வீட்டைத் தெரியாது. ஆத்மாக்களாகிய நாங்கள் அமைதி சொரூபங்கள். நாங்கள் அசரீரி உலகில் வசிக்கின்றோம்;; அது அமைதிதாமம் ஆகும். அது இந்த உலகில் இல்லை. அது அசரீரி உலகம் என அழைக்கப்படுகின்றது, இதுவோ (மக்கள் இருக்கின்ற) உலகம் என அழைக்கப்படுகின்றது. உலகில் அமைதியானது புதிய உலகத்திலேயே இருக்கும். இங்கு அமர்ந்திருப்பவர்களே உலகின் அதிபதிகள். ஏழைகள் இவ்விடயங்களை மிகவும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். சிலர் கூறுகின்றார்கள்: இப்பாதை மிகவும் சிறந்ததாகும். நாங்கள் பாதையைத் தேடிக் கொண்டிருந்தோம். அவர்களுக்குப் பாதையைத் தெரியாதுவிடின், அவர்கள் எதைத் தேடிக் கொண்டிருப்பார்கள்? தந்தையைக் கண்டுபிடிப்பதற்கான பாதையை அறிந்தவர்கள் அல்லது எவ்வாறு ஜீவன்முக்தி அடைவது என்பதை அறிந்தவர்கள் எவருமே இல்லை. அவர்கள் தொடர்ந்தும் “அமைதி”, “அமைதி” என்று கூறுகின்றார்கள், ஆனால் எப்பொழுது அல்லது எவ்வாறு அமைதி இருந்தது என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு கருத்தரங்குகளை நடாத்துகிறார்கள். நீங்கள் அவர்களை வினவ வேண்டும்: நீங்கள் எப்பொழுதாவது உலகில் அமைதியை அனுபவம் செய்ததுண்டா? அல்லது: எவ்வாறு உலகில் அமைதி இருக்கிறது? நீங்கள் ஏன் குழப்பம் அடைகின்றீர்கள்? நீங்கள் தொடர்ந்தும் கருத்தரங்குகளை நடாத்துகிறீர்கள், ஆனால் எங்கிருந்தும் உங்களுக்கு ஒரு பதில் கிடைக்க மாட்டாது. தந்தையால் இப்பொழுது உலகில் அமைதி ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. கிறிஸ்துவிற்கு 3000 வருடங்களுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்தது எனவும், அங்கு அப்பொழுது அமைதி இருந்தது எனவும் நீங்கள் கூறுகின்றீர்கள். அங்கும் அமைதியின்மை இருந்தால், பின்பு நீங்கள் எங்கு அமைதியைக் கண்டு பிடிப்பீர்கள்? நீங்கள் இதை மிகவும் நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். இந்நேரத்தில், அவர்கள் உங்களுக்குப் பேசுவதற்கு நீண்ட நேரம் தர மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் உங்களைச் செவிமடுப்பதற்கான நேரம் இன்னமும் வரவில்லை. செவிமடுப்பதற்கான பாக்கியத்தையும் அவர்கள் கொண்டிருக்க வேண்டும். பல மில்லியன் தடவைகள் பாக்கியசாலிகளாகிய குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே தந்தையைச் செவிமடுப்பதற்கான உரிமையைக் கோருகிறீர்கள். தந்தையைத் தவிர எவருமே உங்களுக்கு எதையும் கூறமுடியாது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே கூறுகின்றார். இது இராவண இராச்சியம், எனவே இங்கு எவ்வாறு அமைதி இருக்க முடியும்? இராவண இராச்சியத்தில், அனைவரும் தூய்மையற்றவர்கள். அவர்கள் கூவியழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! இலக்ஷ்மி நாராயணனுடையதே தூய உலகாக இருந்தது. இராம இராச்சியத்திற்கும் இராவண இராச்சியத்திற்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. சூரிய வம்சமும், சந்திர வம்சமும், பின்னர் அங்கு இராவண வம்சமும் இருக்கின்றன. இந்நேரத்தில், இராவண சமுதாயமாகிய கலியுகம் இருக்கின்றது. முக்கிய பிரமுகர்கள் கூடத் தொடர்ந்தும் ஒருவர் மற்றவர் மீது கடுங்கோபம் அடைகின்றார்கள். அவர்களுக்குப் பெருமளவு அகங்காரம் உள்ளது: நான் இன்ன இன்னார். எனவே இலக்ஷ்மி நாராயணனின் படத்தைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். அவர்களுக்குக் கூறுங்கள்: அவர்களுடைய இராச்சியத்தின்பொழுது மாத்திரமே உலகில் அமைதி இருந்தது. அந்நேரத்தில் அங்கு வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. அங்கு மாத்திரமே உலகில் அமைதி இருக்க முடியும். எனவே, இதுவே பிரதானமான படம் ஆகும். பல படங்களைப் பயன்படுத்தி நீங்கள் விளங்கப்படுத்தும்பொழுது, மக்களின் எண்ணங்கள் ஏனைய திசைகளில் செல்கின்றன. அவர்கள் புரிந்துகொண்டிருக்கின்ற விடயங்களைக் கூட அவர்கள் மறந்து விடுகின்றார்கள். இதனாலேயே கூறப்படுகின்றது: சமையற்கார்கள் அதிகமானால் சாம்பாரும் நாசம். பல படங்கள் இருக்கும்பொழுது, நீங்கள் வேடிக்கையான மாதிரிகளை அல்லது சம்பாஷணைகளைக் கெர்ணடிருப்பீர்கள், அவர்களுடைய புத்திகளும் பிரதான விடயத்தை மறக்கின்றன. அரிதாகச் சிலரால் மாத்திரமே தந்தை ஸ்தாபனையை மேற்கொள்கின்றார்; என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. 84 பிறவிகளும் இவருடையதே. இதில் ஒருவர் மாத்திரமே சித்தரிக்கப்பட்டுள்ளார். எவ்வாறு நீங்கள் அனைவரும் காண்பிக்கப்பட முடியும்? சமயநூல்களில் கூட, ஒரு அர்ச்சுனரின் பெயர் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பாடசாலையில், ஓர் ஆசிரியர் ஒருவருக்கு மாத்திரம் கற்பிக்க மாட்டார். இதுவும் ஒரு பாடசாலை. கீதையில், அவர்கள் ஒரு பாடசாலையின் உருவத்தைக் காண்பிக்கவில்லை. எவ்வாறு ஒரு சிறு குழந்தையாகிய கிருஷ்ணரால், கீதையைப் பேச முடியும்? அது பக்தி மார்க்கமாகும். உங்களுடைய இந்தப் பதக்கங்களும் (டீயனபநள) பெருமளவு வேலையைச் செய்ய முடியும். அவை அனைத்திலும் சிறந்தவை. எல்லாவற்றிற்கும் முதலில், சிவபாபாவின் படத்திற்கு முன்னால் நீங்கள் மக்களைக் கொண்டு வர வேண்டும், பின்னர் இலக்ஷ்மி நாராயணனின் படத்திற்கு முன்னால் கொண்டுவர வேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் அமைதியைக் கேட்கிறீர்கள், ஆனால் அது ஒவ்வொரு கல்பத்திலும் தந்தையால் மாத்திரம் ஸ்தாபிக்கப்படுகின்றது. உங்களுக்கு இப்பொழுது இச் சக்கரத்தைத் தெரியும். முன்னர், நீங்களும் சீரழிந்த புத்திகளைக் கொண்டிருந்தீர்கள். தந்தை இப்பொழுது உங்களைச் சுத்தமான புத்தியை உடையவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் எழுத வேண்டும்: பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர எவராலுமே, எவருக்கும் சற்கதியை அருள முடியாது. அவர்களால் உலகில் அமைதியைக் கொண்டுவர முடியாது. தந்தை மாத்திரம் அனைத்தையும் செய்கின்றார். அவரையே அனைவரும் நினைவுசெய்கின்றார்கள். இவையே இரு பிரதான படங்கள். அவர்கள் இதை முழுமையாகப் புரிந்து கொள்ளும்வரை நீங்கள் அவர்களிலிருந்து அப்பாற்செல்லக் கூடாது. அவர்கள் இதைப் புரிந்து கொள்ளாதுவிடின், அவர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அச்சமயத்தில், நேரம் வீணாக்கப்பட்டு விடுகின்றது. அது அவர்களின் புத்தியில் இல்லை என்பதை நீங்கள் பார்த்தால், அதை விட்டுவிடலாம். மிகவும் சிறப்பாக விளங்கப்படுத்துகின்ற மக்கள் தேவைப்படுகின்றார்கள். அவர்கள் தாய்மார்களாக இருந்தால், அது மிகவும் சிறப்பாகும், ஏனெனில் மக்கள் அவர்களுடன் குழப்பம் அடைவதில்லை. யார் விளங்கப்படுத்துவதில் திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். மோகினி, மனோகர், கீதா உள்ளனர்….மிகவும் சிறந்த குழந்தைகள் இருக்கின்றார்கள். எனவே, எல்லாவற்றிற்கும் முதலில், இலக்ஷ்மி நாராயணனின் படம் மூலம் அதை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: இவ்விடயங்களை மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஏனெனில், அப்பொழுது மாத்திரமே உங்களால் அமைதி உலகிற்குச் செல்ல முடியும். நீங்கள் பின்னர் முக்தி, ஜீவன்முக்தி ஆகிய இரண்டையும் பெறுவீர்கள். அனைவரும் முக்திக்குள் சென்று, பின்னர் தங்கள் பாகங்களை நடிப்பதற்கு வரிசைக்கிரமமாகக் கீழே வருவார்கள். நீங்கள் அந்தப் பகட்டுடன் அதை விளங்கப்படுத்த வேண்டும். இது முதற்தரமான படமாகும். அவர்கள் அமைதி உலகின் அதிபதிகளாக இருந்தார்கள். விவேகமானவர்களின் புத்திகளில் இவ்விடயங்கள் இருக்கும். இது நல்லது என்று கூறி உங்கள் பாதங்களில் அவர்கள் வீழ்ந்தாலும் அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. மாயை அவர்களை மாத்திரம் விட்டுவிட மாட்டாள். தந்தை உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகிறார், எனவே நீங்கள் அவரை அதிகளவுக்கு நினைவுசெய்ய வேண்டும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் சதோபிரதானாகவும் ஆகுவீர்கள். இங்கு வருவதால், நீங்கள் சந்தோஷப் புல்லரிப்பைக் கொண்டிருக்கிறீர்கள்: நான் இதேபோன்று ஆகுகின்றேன். நான் இங்கு உள்ளே வந்து இலக்ஷ்மி நாராயணனைப் பார்க்கும்பொழுது, மிகவும் சந்தோஷம் அடைகின்றேன். ஓஹோ! பாபா என்னை இப்படி ஆக்குகிறார்! ஆகா பாபா! ஆகா! ஒரு குடும்பத்தில், ஒருவரின் தந்தை உயர்ந்த பதவியைக் கொண்டிருந்தால், தங்களுடைய தந்தை ஓர் ஆலோசகர் எனக் குழந்தைகள் மிகவும் சந்தோஷம் அடைகின்றார்கள். தந்தை உங்களை அவ்வாறு ஆக்குகிறார் என்று நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். அவள் உங்களைப் பெருமளவு எதிர்க்கின்றாள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். தெய்வீகக் குணங்களும் கிரகிக்கப்பட வேண்டும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருப்பீர்களாக! ஒருவர் மற்றவரைச் சகோதரர்களாகப் பாருங்கள், நீங்கள் உங்களுடைய மனைவியையும் ஆத்மாவின் வடிவில் பார்ப்பீர்கள். பின்னர் அங்கு குற்றப்பார்வை இருக்காது. ஏனையவர்களைச் சகோதரப் பார்வையில் நீங்கள் பார்க்காதபொழுது, மனத்தில் புயல்கள் ஏற்படுகின்றன. இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. மிகவும் சிறந்த பயிற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக ஆக வேண்டும். இறுதியில் கர்மாதீத ஸ்திதி; அடையப்படும். சேவை செய்கின்ற குழந்தைகள் மாத்திரம் தந்தையின் இதய சிம்மாசனத்தில் இருக்க முடியும். தாமதித்து வந்தவர்களால் கூட, விரைவாக முன்னேறிச் செல்ல முடியும்; அவர்கள் விரைவாகச் செல்ல முடியும். குழந்தைகளாகிய நீங்கள் வரலாற்றின் ஆரம்பத்தையும், எவ்வாறு அவர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டையும் குடும்பத்தையும் துறந்தார்கள் என்பதையும் கேட்டுள்ளீர்கள். அவர்கள் இரவில் ஓடிச் சென்றார்கள். பின்னர் பாபா பல குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியிருந்தது. இது ஒரு பத்தி (சூளை) என அழைக்கப்படுகின்றது. பின்னர் ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாகப் பத்தியிலிருந்து வெளிவந்தார்கள். எவ்வாறு அற்புதமான சுவர்க்கத்தின் அதிபதிகளாக பாபா உங்களை ஆக்குகிறார் என்பது ஓர் அற்புதமே. தந்தையாகிய கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் மிகவும் எளிமையானவர்! அவர் குழந்தைகளாகிய உங்களுக்குத் தினமும் பெருமளவு விளங்கப்படுத்துகிறார், அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு நம்ஸ்தேயும் (வந்தனங்கள்) கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் என்னிலும் பார்க்க மிகவும் மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள். நீங்களே ஏழ்மையானவர்களாக இருப்பவர்களிலிருந்து இரட்டைக் கிரீடம் அணிந்த உலகின் அதிபதிகளாக ஆகுபவர்கள். எனவே, தந்தை மிகவும் உற்சாகத்துடன் வருகின்றார். அவர் எண்ணற்ற தடவைகள் வந்திருப்பார். இன்று, நீங்கள் இராமராகிய என்னிடமிருந்து இராச்சியத்தைக் கோருகின்றீர்கள், பின்னர் நீங்கள் இராவணனிடம் இராச்சியத்தை இழப்பீர்கள். இது ஒரு விளையாட்டாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அதிர்ஷ்ட நட்சத்திரங்களுக்குத் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குவதற்கு, ஒரேயொரு சர்வசக்திவானாகிய தந்தையிடமிருந்து சக்தியைப் பெறுங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். சதா தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்: ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள்.

2. அனைவருக்கும் தந்தையினதும் இலக்கினதும் (இலக்ஷ்மி நாராயணன்) படங்களை விபரமாக விளங்கப்படுத்துங்கள். ஏனைய விடயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சேவையில் அனைவரினதும் நல்லாசிகள் எனும் சேர்க்கை மூலம் சக்திநிறைந்த பலனைப் பெற்று, ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் என்ன சேவையைச் செய்தாலும், அது ஆத்மாக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு உணர்வினாலும், சந்தோஷ உணர்வுகளாலும், நல்லாசிகளாலும் நிறைந்திருக்கட்டும். அப்பொழுது அனைத்துப் பணிகளும் இலகுவாக வெற்றியடையும். ஆரம்ப நாட்களில், எவரேனும் ஒரு விசேட பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தால், குடும்பத்திலுள்ள அனைவரினதும் ஆசீர்வாதங்களுடன் செல்வார். எனவே, தற்போதைய சேவையிலும் இதன் சேர்க்கை தேவைப்படுகின்றது. எப்பணியையும் ஆரம்பிப்பதற்கு முன்னர், அனைவரினதும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள். அனைவரினதும் திருப்தி எனும் சக்தியால் உங்களை நிரப்புங்கள், அப்பொழுது சக்திவாய்ந்த பலன் வெளிப்படும்.

சுலோகம்:
“ஆம். எனது பிரபுவே” என்று தந்தை கூறுவதைப் போன்று, நீங்களும் “ஆம், எனது பிரபுவே! ஆம், எனது பிரபுவே!” என்று கூறுங்கள், நீங்கள் புண்ணியத்தைச் சேமிப்பீர்கள்.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தந்தை பிரம்மா எப்பொழுதும் கடவுளின் அன்பில் மூழ்கியிருப்பார். தந்தையைத் தவிர, வேறு எதனையும் அவர் பார்க்கவில்லை. அவரது எண்ணங்களில் பாபா இருந்தார், அவரது வார்த்தைகளில் பாபா இருந்தார், அவரது செயல்களில் பாபா இருந்தார், அவர் தந்தையின் சகவாசத்தைக் கொண்டிருந்தார். அன்பில் மூழ்கியிருக்கின்ற இந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து நீங்கள் எவ்வார்த்தையையும் பேசும்பொழுது, இநத் அன்பான வார்த்தைகள் ஏனையோரை அன்பினால் கட்டுவிடும். அன்பில் அமிழ்ந்திருக்கின்ற இந்த ஸ்திதியில் நிலைத்திருங்கள், அப்பொழுது “பாபா” எனும் ஒரு வார்த்தையானது மந்திரவித்தை போன்று வேலை செய்யும்.