31.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது அல்லாவைக் கண்டுவிட்டதால், நீங்கள் சரியான வழியில் செல்ல வேண்டும், அதாவது, உங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும். நீங்கள் உங்களை ஒரு சரீரமெனக் கருதுவது தலைகீழாக நிற்பதைப் போன்றதாகும்.
கேள்வி:
எந்த ஒரு விடயத்தைப் புரிந்து கொள்வதால், உங்களால் எல்லையற்ற விருப்பமின்மையை வளர்த்துக் கொள்ள முடியும்?
8பதில்:
பழைய உலகம் இப்பொழுது பயனற்றதாகும். அது இடுகாடாகப் போகின்றது. நீங்கள் இந்த விடயத்தைப் புரிந்து கொண்டதும் உங்களால் எல்லையற்ற விருப்பமின்மையை வளர்த்துக் கொள்ள முடியும். புதிய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். முழு உலகும் இந்த உருத்திர ஞான யாகத்தில் அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்த ஒரு விடயத்தை புரிந்துகொள்வதன் மூலம் உங்களால் எல்லையற்ற விருப்பமின்மையை வளர்த்துக் கொள்ள முடியும். உங்கள் இதயம் இப்பொழுது இந்த இடுகாட்டிலிருந்து விலகிச்; சென்று விட்டது.ஓம் சாந்தி.
உண்மையிலேயே, இது இரட்டை ஓம் சாந்தியாகும், ஏனெனில் இரண்டு ஆத்மாக்கள் இருக்கிறார்கள். இரண்டு ஆத்மாக்களினதும் ஆதிதர்மம் அமைதியாகும். தந்தையின் தர்மம் அமைதியாகும். குழந்தைகள் அங்கே அமைதியாக வசிக்கிறார்கள், அவ்விடம் அமைதிதாமம் என அழைக்கப்படுகிறது. தந்தையும் அங்கே வசிக்கிறார். தந்தை எப்பொழுதும் தூய்மையானவராக இருக்கிறார், ஆனால் மனிதர்கள் அனைவரும் மறுபிறவி எடுத்துத் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். பரமாத்மாவாகிய பரமதந்தையே ஞானக்கடலும் அமைதிக்கடலும் ஆவார் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். இது அவருடைய புகழாகும். அவர் அனைவருடைய தந்தையும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். எனவே, அனைவரும் நிச்சயமாகத் தந்தையின் ஆஸ்திக்கான உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தந்தையிடமிருந்து என்ன ஆஸ்தியைப் பெறுகிறீர்கள்? தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவராவார், எனவே அவர் உங்களுக்கு நிச்சயமாக உங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பார் என்பதையும், அவர் நரகத்திலேயே அதனைக் கொடுப்பார் என்பதையும் குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள். இராவணனே உங்களுக்கு நரக ஆஸ்தியைக் கொடுத்தான். இந்நேரத்தில், அனைவரும் நரகவாசிகளாக இருக்கிறார்கள். எனவே, நீங்கள் நிச்சயமாக இராவணனிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற்றீர்கள். சுவர்க்கம் நரகம் இரண்டும் இருக்கின்றன. யார் இதனைச் செவிமடுக்கிறார்கள்? ஆத்மாக்கள். அறியாமைப் பாதையிலும் ஆத்மாவே அனைத்தையும் செய்தாலும், சரீர உணர்வின் காரணமாக, சரீரமே அனைத்தையும் செய்கின்றதென மக்கள் நம்புகிறார்கள். தங்களுடைய ஆதிதர்மம் அமைதி என்பதையும், தாங்கள் அமைதிதாமத்து வாசிகள் என்பதையும் அவர்கள் மறந்து விடுகின்றார்கள். சத்திய பூமியே பின்னர் பொய்மைப்பூமி ஆகுகின்றது என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பாரதம் சத்திய பூமியாக இருந்தது, பின்னர் அது இராவண இராச்சியமாகிய, பொய்மைப்பூமி ஆகியது. இது ஒரு பொதுவான விடயமாகும். மனிதர்களால் ஏன் அதைப் புரிந்து கொள்ள முடியாதுள்ளது? ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகிவிட்டதால், அவர்கள் கல்லுப் புத்தியுடையவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மக்கள் பூஜிப்பவர்களாகும் பொழுது, அவர்கள் பாரதத்தைச் சுவர்க்கமாகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்ததாகவும் ஆக்கியவரை அவதூறு செய்கிறார்கள். இதில் யாரையும் குற்றஞ்சாட்ட முடியாது. நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், நீங்கள் எவ்வாறு பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களிலிருந்து பூஜிப்பவர்கள் ஆகினீர்கள் என்பதையும் தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர், பாரதத்தில் ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். இது நேற்றைய விடயமே, ஆனால் மனிதர்கள் இதை மறந்து விட்டார்கள். மக்கள் அமர்ந்திருந்து, பக்தி மார்க்கத்திற்கான அச் சமயநூல்கள் போன்ற அனைத்தையும் உருவாக்கினார்கள். சமயநூல்கள் பக்தி மார்க்கத்திற்குரியவை, ஞான மார்க்கத்திற்கு உரியவையல்ல. ஞான மார்க்கத்தில் சமயநூல் எதுவும் உருவாக்கப்படவில்லை. தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, நீங்கள் தேவ அந்தஸ்தை அடையுமாறு செய்வதற்குக் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தை இந்தக் கல்வியை உங்களுக்குக் கற்பிக்கிறார், பின்னர் இந்த ஞானம் மறைந்துவிடுகிறது. சத்தியயுகத்தில் சமயநூல்கள் எதுவும் இருப்பதில்லை, ஏனெனில் அது ஞான மார்க்கத்திற்குரிய உங்கள் வெகுமதியாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பின்னர் நீங்கள் அரைக்கல்பத்திற்கு இராவணனிடமிருந்து, 'காக்கை எச்சத்தைப் போன்ற சந்தோஷம்" எனச் சந்நியாசிகள் அழைக்கின்ற, குறுகிய காலத்து ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இங்கே துன்பத்தைத் தவிர வேறெதுவும் இல்லை; இது துன்ப பூமி என அழைக்கப்படுகிறது. கலியுகத்திற்கு முன்னர் துவாபரயுகம் இருக்கின்றது, அது பாதி துன்ப பூமி என அழைக்கப்படுகிறது. இது இறுதித் துன்ப பூமி ஆகும். ஆத்மா 84 பிறவிகளை எடுக்கையில் கீழிறங்குகிறார். தந்தை உங்களை ஏணியில் மேலேறச் செய்கிறார், ஏனெனில் சக்கரம் நிச்சயமாகச் சுழல வேண்டும். புதிய உலகம் இருந்த பொழுது, அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. அங்கே துன்பத்தின் சுவடேனும் இருக்கவில்லை, அதனாலேயே ஒரு சிங்கமும் ஓர் ஆடும் ஒரே தடாகத்தில் ஒன்றாக நீர் அருந்துவதாக அவர்கள் காட்டியுள்ளார்கள். அங்கே வன்முறை என்ற கேள்விக்கே இடமில்லை. அது 'அதி மேன்மையான அகிம்சா தேவ தர்மம்" என அழைக்கப்படுகிறது. இங்கே, வன்முறை இருக்கிறது. காம வாளைப் பயன்படுத்துவதே முதலாவது வன்முறையாகும். சத்தியயுகத்தில் விகாரமானவர்கள் எவரும் இருப்பதில்லை. மக்கள் அவர்களின் (தேவர்கள்) புகழைப் பாடுகிறார்கள். 'நீங்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள்" என அவர்கள் இலக்ஷ்மி நாராயணனின் புகழைப் பாடுகிறார்கள். இது கலியுக உலகாகும். அதைச் சத்தியயுகமென அழைக்க முடியாது. இவ்விதமாகவே நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. சத்தியயுகம் சிவாலயமாகும். அங்கே அனைவரும் தூய்மையாக இருக்கிறார்கள், அவர்களுடைய விக்கிரகங்கள் இப்பொழுதும் இருக்கின்றன. சிவாலயத்தை உருவாக்கிய சிவபாபாவின் உருவமும் இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உண்மையில், அவருக்கு ஒரு பெயர் மாத்திரமே உள்ளது. தந்தை தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. அவரே கூறுகிறார்: நான் உங்களுக்கு எனது அறிமுகத்தைக் கொடுப்பதற்காகவும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொடுப்பதற்காகவும் வரவேண்டும். நான் வந்து, உங்களுக்குச் சேவை செய்ய வேண்டும். 'ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!" என நீங்கள் என்னைக் கூவியழைக்கிறீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் என்னைக் கூவியழைப்பதில்லை. விநாசம் முன்னிலையில் இருப்பதால் அனைவரும் இப்பொழுது கூவி அழைக்கிறார்கள். இது அதே மகாபாரத யுத்தம் என்பது பாரத மக்களுக்குத் தெரியும். பின்னர் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனை இடம்பெறும். தந்தையும் கூறுகிறார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குவதற்கு வந்துள்ளேன். இந்நாட்களில், பேரரசர்கள் அல்லது சக்கரவர்த்திகள் போன்றவர்கள் எவரும் இல்லை. இப்பொழுது மக்களாட்சியே உள்ளது. பாரத மக்களாகிய நாங்கள் வளமுடையவர்களாக இருந்தோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகளில் நாங்கள் வசித்தோம். ஆரம்பத்தில், உலகம் புதியதாக இருக்கிறது, பின்னர் புதியது பழையதாகுகிறது. அனைத்தும் நிச்சயமாகப் பழையதாகுகிறது. உதாரணமாக, ஒரு புதிய வீடு கட்டப்படுகிறது, பின்னர் அதன் ஆயுட்காலம் குறைவடைகிறது. இது புதியது, அது அரைவாசி பழையது, மற்றையது மத்தியதரமுடையது எனக் கூறப்பட முடியும். அனைத்தும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்கிறது. கடவுள் பேசுகிறார். கடவுள் என்றால் கடவுளே! கடவுள் என அழைக்கப்படுபவர் யார் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. இங்கே அரசர்களோ அல்லது அரசிகளோ எவரும் இல்லை. இங்கே, ஜனாதிபதிகளும், பிரதம மந்திரிகளும் அவர்களுடைய பல அமைச்சர்களும் இருக்கிறார்கள். சத்தியயுகத்தில், அரசர்களையும் அரசிகளையும் போலவே பிரஜைகளும் இருக்கிறார்கள். தந்தை உங்களுக்கு வேறுபாட்டைக் கூறியுள்ளார். சத்தியயுகத்தின் அதிபதிகள் அமைச்சர்களையோ அல்லது ஆலோசகர்களையோ கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஆலோசகர்கள் தேவையில்லை. இந்நேரத்திலேயே அவர்கள் சிவபாபாவிடமிருந்து சக்தியைப் பெற்று, அந்த அந்தஸ்தைப் பெற்றார்கள். இந்நேரத்திலேயே நீங்கள் தந்தையிடமிருந்து கட்டளைகளைப் பெறுகிறீர்கள். அதன்மூலம் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். பின்னர் நீங்கள் எவரிடமிருந்தும் ஆலோசனை பெறமாட்டீர்கள். அங்கே ஆலாசகர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். நீங்கள் பாவப் பாதையில் செல்லும் பொழுதே, உங்கள் விவேகம் அனைத்தும் முடிவடையும் பொழுதே, ஆலோசகர்கள் வருகிறார்கள். விகாரமே பிரதான விடயமாகும். சரீர உணர்வின் மூலமே விகாரங்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றில், காமமே முதல் இலக்க விகாரமாகும். தந்தை கூறுகிறார்: காமமே உங்கள் கொடிய எதிரி. நீங்கள் அதை வெல்ல வேண்டும். தந்தை பல தடவைகள் விளங்கப்படுத்தியுள்ளார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாவில் நல்ல, தீய சம்ஸ்காரங்கள் உள்ளன. இங்கேயே நீங்கள் உங்களுடைய செயல்களுக்காக வருந்தவேண்டும், சத்தியயுகத்தில் அல்ல. அது சந்தோஷ தாமம் ஆகும். தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களை அமைதி தாமத்தினதும் சந்தோஷ தாமத்தினதும் வாசிகளாக்குகிறார். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடன் நேரடியாகப் பேசுகிறார். அவர் உங்கள் அனைவருக்கும் கூறுகிறார்: நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையை உங்கள் புத்தியில் வைத்து இங்கே அமருங்கள். சரீர உணர்வைத் துறவுங்கள். இந்தச் சரீரம் அழியக்கூடியது, ஆத்மாக்களாகிய நீங்கள் அழிவற்றவர்கள். வேறு எவரும் இந்த ஞானத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த ஞானத்தைக் கொண்டிராததால், அவர்கள் பக்தியை ஞானமெனக் கருதுகிறார்கள். பக்தி வேறுபட்டது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஞானத்தின் மூலம் சற்கதியைப் பெறுகிறீர்கள். பக்தி மார்க்கத்தின் சந்தோஷம் தற்காலிகமானது, ஏனெனில் அவர்கள் பாவாத்மாக்களாகி, விகாரத்தில் ஈடுபடுகிறார்கள். அரைக்கல்பத்திற்கு நீங்கள் பெற்ற எல்லையற்ற ஆஸ்தி முடிவடைந்துவிட்டது. தந்தை உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியைக் கொடுப்பதற்காக இப்பொழுது மீண்டும் வந்துள்ளார், அதிலிருந்து நீங்கள் தூய்மை, சந்தோஷம், அமைதி உட்பட அனைத்தையும் பெறுகிறீர்கள். இந்தப் பழைய உலகம் இடுகாடாகப் போகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது உங்கள் இதயங்களை இந்த இடுகாட்டிலிருந்து அகற்றி, அவற்றைப் புதிய உலகமாகிய தேவதைகளின் உலகத்துடன் இணையுங்கள். ஒரு லௌகீகத் தந்தை ஒரு புதிய வீட்டைக் கட்டும்பொழுது, அவருடைய குழந்தைகள் தங்கள் புத்தியின் யோகத்தைப் பழைய வீட்டிலிருந்து அகற்றி, புதிய வீட்டுடன் இணைப்பது போன்றது. தந்தை தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தாலும், அவருடைய புத்தி புதிய வீட்டிலேயே இருக்கும். அவை எல்லைக்குட்பட்ட விடயங்களாகும். எல்லையற்ற தந்தை சுவர்க்கமாகிய புதிய உலகைப் படைக்கிறார். அவர் கூறுகிறார்: பழைய உலகுடனான உங்கள் தொடர்பைத் துண்டித்து, உங்கள் தந்தையாகிய என்னுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்துங்கள். நான் உங்களுக்காக சுவர்க்கமாகிய புதிய உலகைப் படைப்பதற்காக வந்துள்ளேன். இப் பழைய உலகம் முழுவதும் இப்பொழுது உருத்திர ஞான யாகத்தில் அர்ப்பணிக்கப்படவுள்ளது. இம் முழு விருட்சமும் தமோபிரதானாகவும் உக்கியும் போயுள்ளது. அது இப்பொழுது மீண்டும் புதியதாகுகிறது. எனவே, இவை புதிய உலகிற்கான விடயங்களெனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஒருவர் நோயுற்று, கைவிடப்படும் பொழுது, அவரால் அந்நோயிலிருந்து குணமாக முடியாது என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. அதுபோலவே, இவ்வுலகம் இப்பொழுது பயனற்றதாகி விட்டது. இந்த உலகம் இடுகாடாகாப் போவதால், அதனை நீங்கள் ஏன் நினைவு செய்ய வேண்டும்? இது எல்லையற்ற துறவறமாகும். அந்த ஹத்தயோக சந்நியாசிகள் தங்களுடைய வீடுகளையும் தொழில்களையும் துறக்கிறார்கள். நீங்கள் பழைய உலகம் முழுவதையும் துறக்கிறீர்கள். பழைய உலகம் புதிய உலகமாக மாறுகின்றது. தந்தை கூறுகிறார்: நான் உங்கள் கீழ்ப்படிவான சேவகர். நான் குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதற்காக வந்துள்ளேன். நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள்: பாபா, நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டோம். இத் தூய்மையற்ற உலகிற்கு ஒரு தூய்மையற்ற சரீரத்தில் வாருங்கள்! நீங்கள் எனக்கு எவ்வகையான அழைப்பை விடுக்கின்றீர்கள் எனப் பாருங்கள்! நீங்கள் தொடர்ந்தும் எரிக்கின்ற இராவணனே உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குபவன். அவன் மிகவும் பலமான எதிரியாவான். இராவணன் வந்ததால், ஆரம்பத்திலிருந்து, மத்தியினூடாக, இறுதிவரை நீங்கள் துன்பத்தையே பெற்றுள்ளீர்கள். மக்கள் தொடர்ந்தும் நச்சுக்கடலில் மூழ்குகிறார்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: நஞ்சைத் துறந்து, ஞான அமிர்தத்தை அருந்துங்கள். நீங்கள் இராவண இராச்சியத்தில், அரைக்கல்பத்திற்கு விகாரத்தினால் மிகவும் சந்தோஷமற்றவர்களாக இருந்தீர்கள். நீங்கள் அமர்ந்திருந்து கடவுளை அவமதிக்கும் அளவிற்கு மிகவும் பித்துப்பிடித்தவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் உங்களைத் தூய உலகின் அதிபதிகள் ஆக்குகின்றவரை அதிகளவுக்கு அவமதிக்கின்றீர்கள் என்பது ஓர் அற்புதமாகும். மனிதர்களையிட்டு, அவர்கள் 8.4 மில்லியன் உயிரினங்களில் பிறவிகள் எடுக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் என்னையோ சர்வவியாபி என அழைக்கிறீர்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர் உங்களுக்குக் களிப்பூட்டும் விதத்தில் விளங்கப்படுத்துகிறார். ஆத்மாவில் நல்ல, தீய சுபாவமும் சம்ஸ்காரங்களும் உள்ளன. ஆத்மா கூறுகிறார்: நான் 84 பிறவிகளை அனுபவம் செய்கிறேன். ஆத்மாவே ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றைப் பெறுகிறார். இப்பொழுதே தந்தை அதை விளங்கப்படுத்துகிறார். நாடகத் திட்டத்திற்கேற்ப, தந்தை வந்து, தலைகீழாக உள்ளவர்களை நேராக்குகிறார். தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: இங்கே தலைகீழாக அமர வேண்டாம். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் உங்களை நேராக்குபவரான அல்லாவை (கடவுள்) இப்பொழுது கண்டுவிட்டீர்கள். இராவணன் உங்களைத் தலைகீழாக மாற்றுகிறான். பின்னர், சரியாக்கப்படுவதால், உங்களால் நேராக நிற்க முடியும். இது நாடகமாகும். தந்தை மாத்திரமே அமர்ந்திருந்து இந்த ஞானத்தை விளங்கப்படுத்துகிறார். பக்தி பக்தியும், ஞானம் ஞானமும் ஆகும். பக்தி முற்றிலும் வேறுபட்டது. மந்திர ஏரி ஒன்று இருக்கிறது, அதில் நீராடுவதால் நீங்கள் தேவதைகள் ஆகுகிறீர்கள் எனக் கூறப்படுகிறது. பின்னர், பார்வதிக்கு அமரத்துவக் கதை கூறப்பட்டதென அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது அமரத்துவக் கதையைச் செவிமடுக்கிறீர்கள். பார்வதி ஒருவருக்கு மாத்திரமா இக் கதை கூறப்பட்டது? இது எல்லையற்ற விடயமாகும். சத்தியயுகம் அமரத்துவ பூமியாகும், கலியுகம் மரண பூமியாகும். இது முட்காடென அழைக்கப்படுகிறது. மக்களுக்குத் தந்தையைத் தெரியாது. 'ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே! ஓ கடவுளே!" என அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களுக்கு அவரைத் தெரியாது. நீங்களும் அவரை அறிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது வந்து, உங்களை நேராக்குகிறார்;. கடவுள் அல்லா எனவும் அழைக்கப்படுகிறார். அல்லா உங்களுக்குக் கற்பித்து, உங்களுக்குக் கடவுளின் அந்தஸ்தைக் கொடுக்கிறார். எவ்வாறாயினும், ஒரேயொரு கடவுள் மாத்திரமே இருக்கிறார். இலக்ஷ்மியும் நாராயணனும் மறுபிறவி எடுப்பதால், அவர்களை இறைவியும் இறைவரும் என அழைக்க முடியாது, நானே அவர்களுக்குக் கற்பித்து, அவர்களைத் தெய்வீகக் குணங்கள் உடையவர்கள் ஆக்கினேன். நீங்கள் அனைவரும் சகோதரர்கள்; நீங்கள் தந்தையின் ஆஸ்திக்கான ஓர் உரிமையைக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்கள் காரிருளில் இருக்கிறார்கள். அவர்கள் அசுர சமுதாயத்துக்கு உரியவர்கள். கலியுகம் இன்னும் அதன் ஆரம்ப பருவத்தைத் தொடர்கின்றது எனவும், இன்னும் பல வருடங்கள் எஞ்சியுள்ளன எனவும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அந்தளவிற்கு அறியாமை என்னும் ஆழ்ந்த உறக்கத்தில் உறங்குகிறார்கள். அதுவும் நாடகத்தில் உள்ளது. ஒளியில் துன்பம் எதுவும் இருப்பதில்லை. இரவின் இருளிலேயே துன்பம் இருக்கிறது. உங்களால் மாத்திரமே இதைப் புரிந்து கொண்டு, மற்றவர்களுக்கு இதை விளங்கப்படுத்த முடியும். ஏல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் இரு தந்தையர் உள்ளனர். எல்லைக்குட்பட்ட தந்தை எல்லைக்குட்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கிறார். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கிறார். மக்கள் சிவராத்திரியைக் கொண்டாடுவதால், தந்தை நிச்சயமாகச் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு வரவேண்டும். கடந்து சென்றுவிட்ட சுவர்க்கம் இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது. இந்த உலகம் இப்பொழுது தமோபிரதான் நரகமாகும். நாடகத் திட்டத்திற்கேற்ப, மிகச்சரியான நேரத்தில், நான் எனது பாகத்தை நடிப்பதற்காக வருகிறேன். நான் அசரீரியானவர். எனக்கு நிச்சயமாகப் பேசுவதற்கு வாயொன்று தேவைப்படுகிறது. ஓர் எருதின்; வாயைப் பயன்படுத்த முடியாது. தனது பல பிறவிகளின் இறுதியில், ஓய்வு ஸ்திதியில் இருப்பவரின் வாயை நான் பயன்படுத்துகிறேன். தனது சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரிந்திராத இவரின் சரீரத்தில் நான் பிரவேசிக்கிறேன். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடன் நேரடியாகப் பேசுவதைப் போல், நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். இந்த இடுகாடு மீதான பற்று எதனையும் அகற்றுங்கள். நீங்கள் ஒருபொழுதும் உங்கள் செயல்களுக்காக வருந்தாதவாறு அத்தகைய சம்ஸ்காரங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.2. தந்தை ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ள நாடகத்தில் ஸ்திரமாக இருப்பதால், அவர் ஒருபொழுதும் எவரையும் குறைகூற மாட்டார். அவர் தன்னை இகழ்பவர்களையும் ஈடேற்றுகிறார். அவ்வாறே தந்தையைப் போல் ஆகுங்கள். இந்த நாடகத்தில் எவரையும்; குறைகூற முடியாது. அது சரியாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசீர்வாதம்:
உங்கள் நல்லாசிகள் என்ற விதைகளை ஆத்மாக்கள் அனைவரிலும் விதைக்கின்ற ஓர் மாஸ்டர் அருள்பவர் ஆகுவீர்களாக.பலனுக்காக காத்திருக்காது, ஆனால் உங்கள் நல்லாசிகள் என்ற விதைகளை ஒவ்வொரு ஆத்மாவிலும் தொடர்ந்தும் விதையுங்கள். சரியான நேரத்தில் ஆத்மாக்கள் அனைவரும் நிச்சயமாக விழித்தெழ வேண்டும். எவரேனும் எதிர்ப்பு தெரிவித்தாலும் உங்கள் கருணையான உணர்வுகளை நீங்கள் கைவிடல் ஆகாது. இந்த எதிர்ப்பு, அவமதிப்பு, அவதூறு என்பன உரத்தைப் போன்று செயற்பட்டு நல்ல பழங்களை பெற்றுத்தரும். உங்களை அவர்கள் எந்தளவிற்கு அவமதிக்கின்றார்களோ அந்தளவிற்கு அவர்கள் உங்கள் புகழைப் பாடுவார்கள். ஆகையாலேயே மாஸ்டர் அருள்பவர்களாக, நீங்கள் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் உங்கள் மனோபாவம், அதிர்வுகள், வார்த்தைகளினால் தொடர்ந்தும் கொடுங்கள்.
சுலோகம்:
அன்பு, சந்தோஷம், அமைதி, பேரானந்தக்கடலில் எப்பொழுதும் அமிழ்ந்திருக்கும் குழந்தைகளே உண்மையான தபஸ்விகள் ஆவார்கள்.