21.07.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 02.01.85 Om Shanti Madhuban
அதிமேன்மையான அன்பு, உறவுமுறை, சேவை.
இன்று, பாப்தாதா குழந்தைகள் அனைவரினதும் அன்பு நிறைந்த பரிசுகளைப் பார்த்தார். ஒவ்வொரு குழந்தையினதும் நினைவெனும் அன்பு நிறைந்த பரிசானது வெவ்வேறு வகையினதாக இருந்தது. ஒரேயொரு பாப்தாதாவிற்குப் பல குழந்தைகளிடமிருந்து பெரிய எண்ணிக்கையிலான பரிசுகள் கிடைத்தன. உலகில் வேறு எவரும் இத்தகைய பரிசுகளை, இத்தகைய எண்ணிக்கையில் பெற மாட்டார்கள். இந்தப் பரிசுகள் இதயங்களில் இருந்து இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவருக்கு வழங்கப்பட்டிருந்தன. மனிதர்கள் பௌதீகப் பரிசுகளை வழங்குவார்கள். ஆனால், சங்கமயுகத்தில், தந்தை தனித்துவமானவர். பரிசுகள் தனித்துவமானவை. எனவே, பாப்தாதா குழந்தைகள் அனைவரிடமிருந்தும் அன்பான பரிசுகளைக் காண்பதில் களிப்படைந்தார். ஒரு குழந்தையின் பரிசும் பாபாவை வந்தடையாமல் விடவில்லை. நிச்சயமாக அவற்றின் மதிப்பு வேறுபட்டன. சில குழந்தைகளின் பரிசுகள் பெரும் மதிப்புடையவையாக இருந்தன. ஏனைய குழந்தைகளின் பரிசுகள் குறைந்தளவு மதிப்பைக் கொண்டவையாக இருந்தன. குழந்தை எந்தளவிற்குச் சகல உறவுமுறைகளிலும் துண்டிக்காத அன்பைக் கொண்டிருந்தாரோ, அந்தளவிற்குப் பரிசு பெறுமதிமிக்கதாக இருந்தது. இதயபூர்வமான ஒவ்வொரு பரிசினதும் அடிப்படை, அவர்களின் வரிசைக்கிரமமான அன்பும் உறவுமுறையுமே ஆகும். இரண்டு தந்தையர்களும் பெறுமதிவாய்ந்த, வரிசைக்கிரமமான பரிசுகளின் மாலையைச் செய்தார்கள். மாலையைப் பார்க்கும்போது, மதிப்பில் வேறுபாடு ஏற்படுவதற்கான பிரதானமான காரணம் என்னவென்று அவர்கள் சோதித்தார்கள். அவர்கள் எதைக் கண்டார்கள்? அனைவரிடமும் அன்பு இருந்தது. அனைவரும் ஓர் உறவுமுறையைக் கொண்டிருந்தார்கள். அனைவரும் சேவை செய்கிறார்கள். ஆனால், அன்பெனும் பாடத்தில், ஆரம்பத்தில் இருந்து இப்போதுவரை, உங்களின் எண்ணங்களிலோ அல்லது கனவுகளிலோ உங்களின் புத்திகள் எந்தவொரு நபரையோ அல்லது பௌதீக வசதிகளை இட்டோ கவரப்படக்கூடாது. நீங்கள் சதா ஒரேயொரு தந்தையின் நிலையான, துண்டிக்காத அன்பிலே அமிழ்ந்திருக்கிறீர்களா? இந்த உலகைத் தவிர உங்களால் வேறொரு நபரை அல்லது பொருளைப் பார்க்க முடியாத அளவிற்கு, - எல்லையற்ற அன்பின் வானமும் எல்லையற்ற அனுபவங்களின் கடலும் - உங்களை அன்பின் அனுபவத்தின் கடலில் அமிழ்த்திக் கொள்ளுங்கள். இந்த வானத்தையும் கடலையும் தவிர வேறு எந்தக் கவர்ச்சிகளும் இருக்கக்கூடாது. இந்த முறையில் அன்புப் பரிசுகள் பெறுமதிவாய்ந்தவை, வரிசைக்கிரமமானவை. எத்தனை வருடங்கள் கடந்து சென்றனவோ, அத்தனை வருடங்களின் அன்பின் பெறுமதி இயல்பாகவே தொடர்ந்து சேமிக்கப்படுகின்றன. பாபாவிற்கு வெளிப்படுத்தப்படும் பரிசும் அத்தகைய மதிப்பைக் கொண்டதாகவே இருக்கும். பாப்தாதா ஒவ்வொருவரிலும் மூன்று சிறப்பியல்புகளைக் கண்டார்:
1. துண்டிக்காத அன்பு: உங்களின் அன்பு இதயபூர்வமானதா? அல்லது காலத்திற்கேற்ப, ஒரு தேவைக்கேற்ப உள்ளதா? அல்லது உங்களின் சொந்த சுய நோக்கங்களுக்காக ஏற்படுகிறதா? உங்களின் அன்பு சதா உங்களின் ரூபத்தில் வெளிப்படுகிறதா அல்லது நேரத்திற்கேற்ப அது வெளிப்பட்டு, எஞ்சிய வேளையில் அமிழ்ந்துள்ளதா? அது வெறுமனே இதயத்திற்கு இன்பம் அளிக்கும் அன்பா? அலலது இதயபூர்வமான ஆழமான அன்பா? அன்பெனும் பாடத்தில் பாபா இந்த விடயங்கள் அனைத்தையும் சோதித்தார்.
2. உறவுமுறை: முதலில், சகல உறவுமுறைகளும் உள்ளனவா? அல்லது குறிப்பிட்ட சில உறவுமுறைகள் மட்டுமே உள்ளனவா? ஓர் உறவுமுறையின் அனுபவம் இல்லாவிட்டாலும், நீங்கள் சம்பூரணம் ஆகுவதில் ஏதாவது குறைவாகவே இருக்கும். அதன்பின்னர், அவ்வப்போது, தவறவிடப்பட்ட அந்த உறவுமுறையானது தன்னை நோக்கி உங்களை ஈர்க்கும். உதாரணமாக, நீங்கள் தந்தை, ஆசிரியர், சற்குருவுடன் ஒரு விசேடமான உறவுமுறையை ஏற்படுத்தியுள்ளீர்கள். ஆனால், அவரை உங்களின் பேரக்குழந்தையாக ஆக்கும் சிறியதோர் உறவுமுறையை ஏற்படுத்தத் தவறினால், அந்த உறவுமுறை உங்களை ஈர்க்கும். எனவே, உறவுமுறைகளைப் பொறுத்தவரை, நீங்கள் சகல உறவுமுறைகளையும் ஏற்படுத்தியுள்ளீர்களா? இரண்டாவதாக, தந்தையுடனான ஒவ்வோர் உறவுமுறையும் 100மூ ஆனதா அல்லது சில உறவுமுறைகளில் 100மூ உம், ஏனைய உறவுமுறைகளில் 50மூ உம், ஆக உள்ளதா? அல்லது அது வரிசைக்கிரமமாக உள்ளதா? சதவீதம் முழுமையான சதவீதத்தில் உள்ளதா? அல்லது அந்தச் சதவீதம் சிறிதளவு அலௌகீகத்திற்கும் சிறிதளவு லௌகீகத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறதா? மூன்றாவதாக, நீங்கள் சகல உறவுமுறைகளினதும் ஆன்மீக இனிமையை சதா அனுபவம் செய்கிறீர்களா? அல்லது தேவை ஏற்படும்போது மட்டுமே அதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் சதா சகல உறவுமுறைகளினதும் இனிமையைச் சுவைப்பவரா அல்லது சிலவேளைகளில் மட்டும் அதைச் சுவைப்பவரா?
3. சேவையில்: பாபா குறிப்பாக சேவையில் எதைச் சோதித்தார்? முதலில், வெளிப்படையான சோதனை: நீங்கள் சகல வகையான சேவைக்கணக்குகளிலும், அதாவது, எண்ணங்களினூடாக, வார்த்தைகளினூடாக, செயல்களினூடாக, சரீரம், மனம், செல்வத்தினூடாகச் சேமித்துள்ளீர்களா? இரண்டாவதாக, இந்த ஆறு வழிமுறைகளிலும் - சரீரம், மனம், செல்வம், எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் - உங்களால் முடிந்தளவினைச் செய்தீர்களா? அல்லது உங்களால் முடியுமான அளவை உங்களால் செய்ய முடியவில்லையா? உங்களின் ஸ்திதிக்கேற்ப மட்டுமே உங்களால் செய்ய முடிந்ததா? ஒருநாள், உங்களின் ஸ்திதி நன்றாக இருந்தது. எனவே, சேவையின் சதவீதமும் நன்றாக இருந்தது. ஆனால், ஏதாவதொரு காரணத்தினால், அடுத்தநாள் உங்களின் ஸ்திதி பலவீனம் அடைந்தது. எனவே, சேவையின் சதவீதமும் பலவீனம் ஆகியது. அது இருக்க வேண்டிய அளவில் இருக்கவில்லை, அப்படியல்லவா? இந்தக் காரணத்தினால், உங்களின் கொள்ளளவிற்கேற்ப நீங்கள் வரிசைக்கிரமம் ஆகினீர்கள்.
மூன்றாவதாக, நீங்கள் தந்தையிடமிருந்து, ஞானம், சக்திகள், நற்குணங்கள், சந்தோஷம், மேன்மையான நேரம், தூய எண்ணங்கள் என்ற பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள். இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தாலும் நீங்கள் சேவை செய்தீர்களா? அல்லது இந்தப் பொக்கிஷங்களில் சிலவற்றால் மட்டுமே நீங்கள் சேவை செய்தீர்களா? இந்தப் பொக்கிஷங்களில் ஒன்றினாலேனும் நீங்கள் சேவை செய்யாமல் விட்டிருந்தால், பொக்கிஷங்களைப் பெருந்தன்மையுடன் பயன்படுத்தாமல் விட்டிருந்தால், நீங்கள் கஞ்சத்தனமாக இருந்து, அவற்றில் சிறிதளவை மட்டும் பயன்படுத்தியிருந்தால், அது பெறுபேற்றில் ஒரு வேறுபாட்டை உருவாக்கும்.
நான்காவதாக, நீங்கள் உங்களின் இதயபூர்வமாக சேவை செய்தீர்களா? அல்லது அது ஒரு கடமை என நினைத்துச் செய்தீர்களா? நீங்கள் சேவையில் ஓடுகின்ற கங்கைநதியா? அல்லது சிலவேளைகளில் ஓடி, சிலவேளைகளில் நின்றுவிடுகின்ற நதியா? உங்களுக்குத் தோன்றும்போது நீங்கள் சேவை செய்கிறீர்களா? உங்களுக்குத் தோன்றாதபோது, சேவை செய்யவில்லையா? நீங்கள் இவ்வாறு நின்றுவிடுகின்ற குளங்கள் இல்லையல்லவா?
இந்த மூன்று விடயங்களுக்கேற்ப ஒவ்வொருவரின் பெறுமதியையும் பாபா சோதித்தார். எனவே, நீங்களும் ஒவ்வொருவரும் சரியான வழிமுறையுடன் உங்களைச் சோதித்துப் பாருங்கள். இந்தப் புது வருடத்தில், எல்லா வேளைக்கும் இடைவெளிகளை நிரப்புகின்ற, சம்பூரணம் ஆகுகின்ற, தந்தையின் முன்னால் முதலாம் இலக்கப் பெறுமதிவாய்ந்த பரிசைக் கொடுக்கின்ற திடசங்கற்பத்தைக் கொண்டிருங்கள். எவ்வாறு சோதித்துப் பின்னர், மாறுவது என்பதை நீங்கள் அறிவீர்கள், அல்லவா? பெறுபேற்றுக்கேற்ப, உங்களில் பெரும்பாலானோர் ஏதாவதொரு பாடத்தில் உங்களின் கொள்ளளவிற்கேற்பச் செயற்படுகிறீர்கள். நீங்கள் முழுமையான சக்தி சொரூபங்கள் ஆகவில்லை. ஆகவே, இப்போது கடந்தது கடந்ததாக இருக்கட்டும். நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சம்பூரணமானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் ஆக்குங்கள்.
நீங்கள் பரிசுகளைச் சேமிக்கிறீர்கள். பின்னர் எந்தப் பரிசுகள் பெறுமதிவாய்ந்தவை எனச் சோதிக்கிறீர்கள். பாப்தாதாவும் குழந்தைகளுடன் அதே விளையாட்டை விளையாடுகிறார். நீங்கள் அனைவரும் உங்களின் கொள்ளளவிற்கேற்ப, ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த அனைத்திலும் சிறந்த எண்ணத்தை,சக்திவாய்ந்ததோர் எண்ணத்தைத் தந்தையின் முன்னால் வைத்தீர்கள். இப்போது, உங்களின் கொள்ளளவிற்கேற்ப என்றிருப்பதற்குப் பதிலாக, அதைச் சதா சக்திசாலி ஆக்கும் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.
சதா அன்பாக இருக்கும் அனைவருக்கும் - இதயபூர்வமான அன்புடன் இருப்பவர்களுக்கும், சகல உறவுமுறைகளிலும் அன்பாக இருப்பவர்களுக்கும், ஆன்மீக இனிமையை அனுபவம் செய்த ஆத்மாக்களுக்கும், சகல பொக்கிஷங்களாலும் சக்திசாலி ஆகியிருப்பவர்களுக்கும், சதா சேவையாளர்களுக்கும், தங்களைச் சகல விடயங்களிலும் கொள்ளளவிற்கேற்ப என்பதில் இருந்து சதா சக்திசாலிகள் என்று மாற்றிக் கொள்பவர்களுக்கும், குறிப்பாக அன்பான மற்றும் நெருக்கமான உறவுமுறையைக் கொண்டுள்ள ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா தாதி ஜான்கியுடன் பேசுகிறார்:
மதுவனத்தின் அலங்காரம் மதுவனத்தை வந்தடைந்துள்ளது. நல்வரவாகுக! நீங்கள் பாப்தாதாவினதும் மதுவனத்தினதும் விசேடமான அலங்காரம் ஆவீர்கள். விசேடமான அலங்காரம் வரும்போது என்ன நிகழுகிறது? பிரகாசம் ஏற்படுகிறது. எனவே, பாப்தாதாவும் மதுவனமும் இந்த விசேடமான அலங்காரத்தைக் காண்பதில் களிப்படைகிறார்கள். நீங்கள் தந்தையின் அன்பையும் உறவுமுறையையும் விசேடமான சேவையில் வெளிப்படுத்தினீர்கள். இந்த விசேட சேவையானது அனைவரின் இதயங்களையும் நெருக்கமாகக் கொண்டுவரும். பெறுபேறு எப்போதும் நல்லதே. எவ்வாறாயினும், ஒவ்வொரு கணத்திற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்பைக் கொண்டுள்ள பெறுபேறு உள்ளது. எனவே, நீங்கள் தந்தையின் அன்பை உங்களின் முகத்தினூடாகவும் கண்களினூடாகவும் வெளிப்படுத்தும் விசேடமான சேவையைச் செய்தீர்கள். ஞானத்தைச் செவிமடுப்பவர்களாக அவர்களை ஆக்குவது பெரிய விடயம் அல்ல. ஆனால் அவர்களை அன்பானவர்கள் ஆக்குவதே விசேடமான சேவை ஆகும். நீங்கள் எப்போதும் தொடர்ந்து இதைச் செய்வீரகள். நீங்கள் எத்தனை வண்ணாத்திப்பூச்சிகளைக் கண்டீர்கள்? தீச்சுடருக்குத் தங்களை அர்ப்பணிக்கும் ஆசையைக் கொண்ட எத்தனை விட்டில்பூச்சிகளைக் கண்டீர்கள்? உங்களின் கண்களின் மொழியால் விட்டில் பூச்சிகளைத் தீச்சுடரிடம் வரும்படி சமிக்ஞை செய்வதற்கான விசேடமான நேரம் இதுவாகும். அவர்கள் சமிக்ஞையைப் பெறுவார்கள். அவர்கள் தொடர்ந்து பின்பற்றுவார்கள். அவர்கள் அங்கு பறந்துசெல்வார்கள். எனவே, இந்த விசேடமான சேவை அத்தியாவசியமானது. நீங்களும் இந்தச் சேவையைச் செய்துள்ளீர்கள். இதுவே பெறுபேறு, அப்படியல்லவா? ஒவ்வோர் அடியிலும், ஆத்மாக்கள் பலரின் சேவை அமிழ்ந்திருப்பது நல்லதே. நீங்கள் எத்தனை அடிகளை எடுத்துவைத்தீர்கள்? நீங்கள் எத்தனை அடிகளை எடுத்து வைத்தீர்களோ, அத்தனை ஆத்மாக்களுக்குச் சேவை செய்தீர்கள். உங்களின் சுற்றுப்பயணம் நன்றாக இருந்தது. இது இப்போது அவர்களின் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்குமான பருவகாலம் ஆகும். என்ன நிகழ்ந்ததோ அது அனைத்திலும் சிறந்ததே ஆகும். பாப்தாதாவின் அதியன்பிற்குpரய குழந்தைகளின் ஒவ்வொரு செயலின் ரேகையில் இருந்தும் ஆத்மாக்களின் பலரின் செயலின் ரேகையானது மாறும். எனவே, நீங்கள் உங்களின் ஒவ்வொரு செயலின் ரேகையாலும் ஆத்மாக்கள் பலரின் பாக்கிய ரேகையை வரைந்தீர்கள். பின்பற்றுவதெனில் அவர்களின் பாக்கியத்தை வரைவதாகும். எனவே, நீங்கள் எங்கு சென்றாலும், உங்களின் செயல்கள் என்ற பேனாவால் பலரின் பாக்கிய ரேகையை நீங்கள் தொடர்ந்தும் வரைகிறீர்கள். எனவே, விசேடமான அதியன்பிற்குரிய குழந்தைகளின் அடிகள், அதாவது, செயல்கள், பாக்கிய ரேகையை வரையும் சேவை செய்வதற்குக் கருவி ஆகுகின்றன. எனவே, இப்போது எஞ்சியுள்ள இறுதி ஒலியானது, ‘இதுவே அது, இதுவே அது! இவரே நாம் தேடுகின்ற அந்த ஒருவர்!’ என்பதாகும். தற்சமயம், இவரா அல்லது அவரா என அவர்கள் தடுமாறுகிறார்கள். எவ்வாறாயினும், ஒரேயொரு ஒலியே வெளிப்பட வேண்டும்: இவரே அந்த ஒருவர். அந்தக் காலம் இப்போது நெருங்கி வருகிறது. அவர்களின் பாக்கிய ரேகை அதிகரிக்கும்போது, சிறிதளவு பூட்டப்பட்டிருக்கும் அவர்களின் புத்திகளும் திறக்கும். சாவி போடப்பட்டுள்ளது. அவர்களின் பூட்டுகள் சிறிதளவு திறந்துள்ளன. ஆனால் அவர்கள் இன்னமும் சிறிதளவு தடங்கலுடன் இருக்கிறார்கள். அந்த நாளும் வரும்.
பாப்தாதா ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:
ஆசிரியர்கள் என்றால் எப்போதும் நிரம்பியிருப்பவர்கள் என்று அர்த்தம். எனவே, நீங்கள் முழுமையை அனுபவம் செய்பவர்கள், அல்லவா? நீங்கள் பொக்கிஷங்கள் அனைத்தாலும் நிரம்பியிருக்கும்போது, உங்களால் மற்றவர்களுக்கும் சேவை செய்ய முடியும். நீங்களே முழுமையாக நிரம்பியிருக்காவிட்டால், மற்றவர்களுக்கு எதைக் கொடுப்பீர்கள்? சேவையாளர்கள் என்றால் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியிருப்பவர்கள் என்று அர்த்தம். நிரம்பியிருக்கும் போதையும் சந்தோஷமும் உங்களுக்குள் எப்போதும் உள்ளது. ஒரு பொக்கிஷமேனும் குறைவாக இல்லை. உங்களிடம் சக்திகள் இருந்து நற்குணங்கள் இல்லாமல் அல்லது நற்குணங்கள் இருந்து சக்திகள் இல்லாமல் இருக்கக்கூடாது. அது அவ்வாறு இருக்கக்கூடாது. நீங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியுள்ளீர்கள். உங்களுக்கு என்ன சக்தி தேவையோ, அந்த சக்தியை நீங்கள் அழைத்ததும் அது வரும். அதுவே நிரம்பியிருத்தல் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் அத்தகையவரா? நினைவிற்கும் சேவைக்குமான சமநிலையைப் பேணுபவர்கள், - சிலவேளைகளில் அதிக நினைவும் சிலவேளைகளில் அதிக சேவையும் என்றல்ல - நீங்கள் இரண்டிலும் சமமாக இருந்து, இரண்டிலும் சமநிலையைப் பேணும்போது, நிரம்பியிருப்பதற்கான ஆசீர்வாதங்களின் உரிமையைப் பெறுவீர்கள். நீங்கள் இத்தகைய சேவையாளர்களா? உங்களின் இலக்கு என்ன? சகல தெய்வீகக்குணங்களும் நிறைந்தவர்கள். ஒரு குணமாயினும் இல்லாமல் போனால், நீங்கள் நிரம்பியவர்கள் இல்லை. ஒரு சக்தியேனும் இல்லாவிட்டால், உங்களை நிரம்பியவர்கள் என்று அழைக்க முடியாது. நீங்கள் சதா நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அனைத்திலும் நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். இத்தகையவர்களே தகுதிவாய்ந்த சேவையாளர்கள் ஆவார்கள். உங்களுக்குப் புரிகிறதா? ஒவ்வோர் அடியிலும் நிரம்பியவர்கள் ஆகுங்கள். இத்தகைய அனுபவசாலி ஆத்மாக்கள் அனுபவத்தின் அதிகாரிகள் ஆவார்கள். எப்போதும் தந்தையின் சகவாசத்தை அனுபவம் செய்யுங்கள்.
பாப்தாதா குமாரிகளைச் சந்திக்கிறார்:
நீங்கள் சதா அதிர்ஷ்டசாலி குமாரிகள், அல்லவா? நீங்கள் சதா உங்களின் நெற்றியில் உங்களின் பிரகாசிக்கும் பாக்கிய நட்சத்திரத்தை அனுபவம் செய்கிறீர்களா? பாக்கிய நட்சத்திரம் உங்களின் நெற்றியில் பிரகாசிக்கிறதா? அல்லது, அது பிரகாசிக்கப் போகிறதா? தந்தைக்குச் சொந்தமாக இருத்தல் என்றால் நட்சத்திரம் பிரகாசிக்கிறது என்று அர்த்தம். எனவே, நீங்கள் இவ்வாறு ஆகிவிட்டீர்களா அல்லது ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டும் என நீங்கள் இன்னமும் சிந்திக்கிறீர்களா? நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கப் போகின்றவர்களா அல்லது அதை நடைமுறையில் செய்பவர்களா? யாராவது உங்களின் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய முயற்சித்தால், உங்களின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுமா? நீங்கள் தந்தையுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்தபின்னர் வேறொரு ஒப்பந்தத்தைச் செய்தால் என்ன நிகழும்? அவ்வாறாயின், நீங்கள் உங்களின் பாக்கியத்தைப் பார்க்க வேண்டும். கோடீஸ்வரருக்குச் சொந்தமாகிய பின்னர் எவரும் ஏழைக்குச் சொந்தக்காரர் ஆக மாட்டார். ஏழைகள் செல்வந்தர்களுக்குச் சொந்தம் ஆகுவார்கள். செல்வந்தவர்கள் ஏழைகளுக்குச் சொந்தம் ஆகமாட்டார்கள். தந்தைக்குச் சொந்தமாகிய பின்னர், உங்களின் எண்ணங்கள் வேறெங்கும் செல்ல முடியாதபடி நீங்கள் உறுதியானவர்களா? நீங்கள் பாபாவின் சகவாசத்தில் இருக்கும் அளவிற்கு, உங்களின் நிறமும் விரைவானதாக இருக்கும். உங்களின் சகவாசம் பலவீனமாக இருந்தால், உங்களின் மீது பூசப்படும் வர்ணமும் பலவீனமானதாகவே இருக்கும். ஆகவே, கல்வி மற்றும் சேவை என்ற இரண்டின் சகவாசமும் உங்களுக்குத் தேவை. நீங்கள் எப்போதும் உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் தளம்பல் அடைய மாட்டீர்கள். உங்களின் நிறம் விரைவானதாக இருக்கும்போது, பல கரங்களுடன் பல நிலையங்களைத் திறக்க முடியும். குமாரிகள் பந்தனங்களில் இருந்து விடுபட்டிருப்பவர்கள். நீங்கள் மற்றவர்களின் பந்தனங்களையும் முடித்துவைப்பவர்கள், அல்லவா? நீங்கள் சதா தந்தையுடன் உறுதியான பேரத்தைச் செய்பவர்கள். உங்களுக்குத் தைரியம் இருக்கும்போது, நீங்கள் தந்தையின் உதவியையும் பெறுவீர்கள். உங்களிடம் தைரியம் இல்லாவிட்டால், குறைந்தளவு உதவியையே நீங்கள் பெறுவீர்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் இறைவனின் பிரியத்தைப் பெறுகின்ற, தற்போதும் எதிர்காலத்திலும் இராஜரீக அதியன்பிற்குரியவர் ஆகுவீர்களாக.சங்கமயுகத்தில், பாக்கியசாலிக் குழந்தைகளான நீங்களே இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரிடமிருந்து அன்பையும் பிரியத்தையும் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள். பலமில்லியன்களில் கையளவினர் மட்டுமே இறைவனிடமிருந்து இந்த அன்பையும் பிரியத்தையும் பெறுவார்கள். இந்த தெய்வீக அன்பாலும் பிரியத்தாலும், நீங்கள் இராஜரீக அதியன்பிற்குரியவர்கள் ஆவீர்கள். இராஜரீக அதியன்பிற்குரியவர்கள் என்றால் இப்போது அரசர்களாகவும் (இராஜரீகம்) எதிர்காலத்திலும் அரசர்களாகவும் இருப்பவர்கள். எதிர்காலத்தில் அவ்வாறு ஆகுவதற்கு முன்னர், நீங்கள் இந்த வேளையில் சுய இராச்சியத்திற்குரியவர்கள் ஆகியுள்ளீர்கள். எதிர்கால இராச்சியத்தின் புகழ் ‘ஓர் இராச்சியம், ஒரு தர்மம்’ என்றிருப்பதைப் போன்று, ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சகல பௌதீகப் புலன்களை ஒரு குடையின் கீழ் ஒன்றுசேர்க்கும் இராச்சியம் உள்ளது.
சுலோகம்:
தமது முகங்களினூடாகத் தந்தையின் குணவியல்புகளை வெளிப்படுத்துபவர்கள், இறைவனால் நேசிக்கப்படுவார்கள்.
குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. எனவே, அனைவரும் மாலை 6.30 இலிருந்து 7.30வரை ஒன்றுசேர்ந்து, ஒன்றுதிரட்டிய சர்வதேச யோகம் செய்து, விதையான தந்தையுடன் உங்களின் மூதாதை ரூபத்தின் விழிப்புணர்வில் ஸ்திரமாகுங்கள். அதன்மூலம், முழு உலகிற்கும் அன்பையும் சக்தியையும் வழங்கும் சேவையைச் செய்யுங்கள். நாள் முழுவதும், சுய மரியாதையைப் பயிற்சி செய்யுங்கள்: நான் ஒரு மூதாதை ஆத்மா.