11.08.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     14.01.85     Om Shanti     Madhuban


ஆதியான சுயத்தைப் பற்றிய எண்ணங்களையும் தூய, சாதகமான எண்ணங்களையும் கொண்டிருத்தலே மற்றவர்களுக்கு நல்லாசிகளைக் (சுப சிந்தக்) கொண்டிருப்பதன் அடிப்படை ஆகும்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள விசேடமான குழந்தைகளைப் பார்க்கிறார். சதா ஆதியான சுயத்திற்கான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம் அனைவருக்கும் நல்லாசிகளைக் கொண்டிருக்கும் விசேடமான குழந்தைகள் யார்? சதா தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் இயல்பாகவே மற்றவர்களுக்காகவும் நல்லாசிகளைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களுக்காக நல்லாசிகளைக் கொண்டிருப்பவர் ஆகுவதற்கான அடிப்படை, தூய, சாதகமான எண்ணங்கள் ஆகும். ஆதி சுயத்தைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருத்தலே முதல் அடி ஆகும். ஆதி சுயத்தைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்றால்,பாப்தாதா உங்களுக்குக் கூறிய ‘நான் யார்?’ என்ற புதிரின் விழிப்புணர்வின் சொரூபமாக எப்போதும் இருத்தல் என்று அர்த்தம். உதாரணமாக, தந்தையினதும் தாதாவினதும் குணவியல்புகளையும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் மிகச்சரியாக அறிந்து கொள்ளுதல் என்று அர்த்தம். அவர்கள் இருவரையும் அறிந்து கொள்ளுதலே உண்மையில் அறிந்து கொள்ளுதல் எனப்படும். அதேபோன்று, உங்களையும் உங்களின் குணவியல்புகளையும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்வதே, அதாவது, உங்களின் ஆதியான, அநாதியான, மேன்மையான ரூபங்களில் அறிந்து கொண்டு, அந்த சுயரூபத்தைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருப்பதை, ஆதியான சுயத்தைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருத்தல் எனப்படும். ‘நான் பலவீனமானவன், நான் ஒரு முயற்சியாளன், நான் வெற்றி சொரூபம், நான் மாயையை வென்றவன் ஆகவில்லை’. இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருத்தல், ஆதியான ரூபத்தைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருத்தல் அல்ல. ஏனெனில், சங்கமயுக, அதிமேன்மையான பிராமண ஆத்மா என்றால் சக்திசாலி ஆத்மா என்று அர்த்தம். அந்தப் பலவீனம், முயற்சியின்மை அல்லது குறைவான முயற்சி சரீர உணர்வினாலேயே ஏற்படுகிறது. ‘சுயம்’ என்றால் ஆத்ம உணர்வு என்று அர்த்தம். நீங்கள் இந்த ஸ்திதியில் இருக்கும்போது, அத்தகைய பலவீனங்கள் வரமுடியாது. ஆகவே, சரீர உணர்வின் படைப்பைப் பற்றிச் சிந்திப்பது என்றால், ஆதி சுயத்தைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்கவில்லை என்றே அர்த்தம். ஆதி சுயத்தைப் பற்றிய எண்ணங்கள் என்றால், ‘தந்தை எத்தகையவரோ, அவ்வாறே மேன்மையான ஆத்மாவான நானும் ஆவேன்’ என்பதே ஆகும். ஆதி சுயத்தைப் பற்றி இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களால் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்க முடியும். தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்றால் ஞான இரத்தினங்களைக் கடைதல் என்று அர்த்தம். படைப்பவரினதும் படைப்பினதும் ஆழமான களிப்பூட்டும் இரகசியங்களால் உங்களைக் களிப்பூட்டிக் கொள்ளுதல் என்பதே அதன் அர்த்தம். ஒன்று வெறுமனே அவற்றை மீட்டல் செய்தல். மற்றையது, ஞானக் கடலின் அலைகளில் முன்னேறுதல். அதாவது, ஞானப் பொக்கிஷங்களின் அதிபதி என்ற போதையுடன் இருந்து, தொடர்ந்து ஞான இரத்தினங்களுடன் விளையாடுதல். ஞானத்தின் ஒவ்வொரு விலைமதிப்பற்ற வாசகத்தையும் அனுபவம் செய்தல் என்றால், சதா உங்களை விலைமதிப்பற்ற ஞானப் பொக்கிஷங்களால் மகத்தானவர் ஆக்கிக் கொள்வதாகும். இத்தகைய ஞானத்துடன் விளையாடுபவர்கள் மட்டுமே தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள். இத்தகைய தூய, சாதகமான எண்ணங்களுடன் இருப்பவர்கள், இயல்பாகவே வீணான எண்ணங்களில் இருந்தும் மற்றவர்களைப் பற்றிய எண்ணங்களில் இருந்தும் விலகி இருப்பார்கள். ஆதிசுயத்தைப் பற்றிய எண்ணங்களையும், தூய, சாதகமான எண்ணங்களையும் கொண்டிருக்கும் ஆத்மாக்கள், தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பதில் மும்முரமாக இருப்பதனால், வேறெந்த எண்ணங்களை உருவாக்குவதற்கும் ஒரு விநாடியோ அல்லது மூச்சோ அவர்களிடம் இருக்காது. இதனாலேயே, இத்தகைய ஆத்மாக்கள் மற்றவர்களைப் பற்றிச் சிந்திப்பதில் இருந்தும் வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பதில் இருந்தும் இலகுவாக பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களின் புத்திகளில் அதற்கான இடமும் இல்லை. அவர்களுக்கு அதற்கு நேரமும் இல்லை. அவர்களின் நேரத்தை தூய, சாதகமான எண்ணங்களிலேயே ஈடுபடுத்துவார்கள். அவர்களின் புத்திகள் சதா ஞான இரத்தினங்களால் நிரம்பியிருக்கும். அதாவது, தூய, சாதகமான எண்ணங்களால் நிறைந்திருக்கும். ஏனைய எண்ணங்கள் வருவதற்கு இடம் இல்லாதபோது, அவர் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அதாவது, ஒவ்வொரு வார்த்தையின் இரகசியத்தின் ஆழத்திற்குச் செல்லும் ஒருவர் என்று அர்த்தம். வெறுமனே அதன் சத்தத்தை இரசிக்கும் ஒருவர் அல்ல. சத்தத்தைக் கேட்பவர் என்றால் அந்த வார்த்தையின் அர்த்தத்திற்குள் செல்பவர் என்று அர்த்தம். உதாரணமாக, பௌதீகமான இசையைக் கேட்டு, நீங்கள் மிகவும் இரசிக்கிறீர்கள். அதேபோன்று, நீங்கள் ஞான முரளியின் சங்கீதத்தையும் இரசிக்கிறீர்கள். எவ்வாறாயினும், இரகசியங்களுடன் கூடவே சங்கீதத்தையும் புரிந்து கொள்பவர்களே, ஞானப் பொக்கிஷங்களின் அதிபதிகள் ஆகி, ஞானத்தைக் கடைவதில் மூழ்கியிருப்பார்கள். ஞானத்தில் மூழ்கியிருப்பவர்களின் முன்னால் எந்தவிதத் தடைகளும் வரமாட்டாது. அதேபோன்று, தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் இயல்பாகவே அனைவருக்கும் நலம்விரும்பிகள் ஆகுகிறார்கள். முதலில் ஆதி சுயத்தைப் பற்றிய எண்ணங்கள். பின்னர், தூய, சாதகமான எண்ணங்கள். இத்தகைய ஆத்மாக்கள் மற்றவர்களுக்காக நல்லாசிகள் உடையவர்கள் ஆகுகிறார்கள். ஏனெனில், இரவு பகலாகத் தூய, சாதகமான எண்ணங்களைப் பேணுபவர்களால் ஒருபோதும் மற்றவர்களுக்காகத் தீய எண்ணங்களையோ அல்லது தீங்கான பார்வையையோ கொண்டிருக்க முடியாது. அவர்களின் ஆதி சம்ஸ்காரங்களும் சுபாவமும் தூயதாக இருப்பதனால், அவர்களின் மனோபாவத்தாலும் பார்வையாலும் இயல்பாகவே அனைத்தையும் தூய முறையில் பார்க்கின்ற, சிந்திக்கின்ற பழக்கத்தை அவர்கள் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆகவே, அவர்கள் எப்போதும் அனைவருக்காகவும் நல்லாசிகளையே கொண்டிருப்பார்கள். ஏனைய ஆத்மாக்களில் பலவீனமான சம்ஸ்காரங்களைக் கண்டாலும், அந்த ஆத்மாவைப் பற்றி, ‘இவர் எப்போதும் இப்படித்தான்’ என்ற தூய்மையற்ற அல்லது வீணான எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டார்கள். இத்தகைய பலவீனமான ஆத்மாக்களுக்கு எப்போதும் ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளைக் கொடுத்து, அவர்களைச் சக்திசாலிகள் ஆக்கி, உயரே பறக்கச் செய்வார்கள். தமது நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் அவர்கள் எப்போதும் இத்தகைய ஆத்மாக்களுடன் ஒத்துழைப்பார்கள். மற்றவர்களுக்காக நல்லாசிகளைக் கொண்டிருத்தல் என்றால், நம்பிக்கை இழந்தவர்களையும் நம்பிக்கை உடையவர்களாக ஆக்குதல் என்று அர்த்தம். தமது தூய, சாதகமான எண்ணங்கள் என்ற பொக்கிஷங்களால், அவர்கள் பலவீனமானவர்களையும் நிரம்பியவர்களாக்கி, அவர்களை முன்னேறச் செய்வார்கள். இவருக்கு எந்தவொரு ஞானமும் இல்லை, இவர் ஞானத்திற்கே தகுதி இல்லாதவர், இவரால் ஞானப் பாதையைப் பின்பற்ற முடியாது என்று அவர்கள் நினைக்க மாட்டார்கள். மற்றவர்களுக்காக நல்லாசிகள் வைத்திருக்கும் ஒருவர், பாப்தாதாவிடமிருந்து தான் பெற்ற சக்திகளால் அவர்களுக்கு ஆதாரம் என்ற காலைக் கொடுத்து, முடமானவர்களையும் நடக்கச் செய்வதற்குக் கருவி ஆகுவார். நல்லாசிகளைக் கொண்டிருக்கும் ஓர் ஆத்மா, நல்லாசிகளைக் கொண்டிருத்தல் என்ற தனது ஸ்திதியால் மனவிரக்தி அடைந்துள்ள ஆத்மாக்களுக்கு தில்குஷ் (இதயத்தில் சந்தோஷம்) தோளியைக் கொடுத்து ஆரோக்கியமானவர்கள் ஆக்குவார். நீங்கள் தில்குஷ் தோளியை உண்டுள்ளீர்கள், அல்லவா? அதை மற்றவர்களுக்கு எவ்வாறு கொடுப்பது என்பதையும் நீங்கள் அறிவீர்கள், அல்லவா? ஏனைய ஆத்மாக்களின் பலவீனங்களை அறிந்திருந்தபோதும், நல்லாசிகளைக் கொண்டுள்ள ஓர் ஆத்மா, அந்த ஆத்மாக்கள் தமது பலவீனங்களை மறக்கும்படி செய்து, தனது சிறப்பியல்பின் சக்தியைக் கொடுத்து, அவர்களையும் சக்திசாலிகள் ஆக்குவார். அவர்கள் எவரையும் வெறுப்புடன் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு எப்போதும் வீழ்ந்துள்ள ஆத்மாக்களை உயர்த்தும் பார்வையே இருக்கும். அவர்கள் வெறுமனே தூய எண்ணங்களைக் கொண்டிருக்கும் அல்லது தாம் சக்திசாலி ஆத்மாக்கள் ஆகும் முதல் ஸ்திதியில் இருக்க மாட்டார்கள். மற்றவர்களுக்காக நல்லாசிகளைக் கொண்டிருத்தல் என்றால் அதுவல்ல. மற்றவர்களுக்காக நல்லாசிகளைக் கொண்டிருத்தல் என்றால், உங்களின் ஆன்மீக உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் உங்களின் மனதினூடாகவும் வார்த்தைகளினூடாகவும் ஆத்மாக்கள் பலருக்குச் சேவை செய்வதற்கு உங்களின் பொக்கிஷங்களைப் பயன்படுத்துதல் என்று அர்த்தம். மற்றவர்களுக்காக நல்லாசிகளைக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள், முதலாம் இலக்கச் சேவையாளர்கள், உண்மையான சேவையாளர்கள் ஆவார்கள். நீங்கள் மற்றவர்களுக்காக நலலாசிகளைக் கொண்டிருக்கும் இத்தகைய ஆத்மாக்கள் ஆகியுள்ளீர்களா? உங்களின் மனோபாவம் எப்போதும் தூயதாக இருக்க வேண்டும். உங்களின் பார்வை எப்போதும் தூயதாக இருக்க வேண்டும். மேன்மையான பிராமணர்களின் உலகமும் அப்போது தூய்மையானதாகவே தென்படும். மக்கள் பொதுவாகப் பேசும்போது, நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள் என்று கூறுவார்கள். பிராமண ஆத்மாக்கள், தூய பிறப்பைக் கொண்டவர்கள். நீங்கள் மிகவும் தூய நேரத்தில் பிறந்துள்ளீர்கள். பிராமணர்களின் பிறப்பின் கணமும் காலப்பகுதியும் தூய்மையானவை. அதிர்ஷ்ட திசைகளும் தூய்மையானவை. உங்களின் உறவுமுறைகளும் தூய்மையானவை. உங்களின் எண்ணங்களும் செயல்களும் தூய்மையானவை. இதனாலேயே, பிராமண ஆத்மாக்களுக்கு, அவர்களின் பௌதீக ரூபங்களில் மட்டுமன்றி, அவர்களின் கனவுகளிலேனும் தூய்மையின்மையின் பெயரோ சுவடோ இருக்காது. நீங்கள் மற்றவர்களுக்காக நல்லாசிகளைக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள் அல்லவா? நீங்கள் குறிப்பாக நினைவு தினத்திற்காக வந்துள்ளீர்கள். நினைவு தினம் என்றால் சக்தி தினம் என்று அர்த்தம். எனவே, நீங்கள் விசேடமான சக்திசாலி ஆத்மாக்கள், அல்லவா? பாப்தாதாவும் கூறுகிறார்: சதா சக்திசாலி ஆத்மாக்களான உங்களுக்கு சக்தி தினக் கொண்டாட்டத்திற்காக நல்வரவுகள். சர்வசக்திவான் பாப்தாதா எப்போதும் சக்திசாலிக் குழந்தைகளை வரவேற்கிறார். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

ஆதி சுயத்தின் எண்ணங்களின் ஆன்மீக போதையில் சதா இருப்பவர்களுக்கும் தூய, சாதகமான எண்ணங்களின் பொக்கிஷங்களால் நிரம்பியிருப்பவர்களுக்கும், மற்றவர்களுக்காக நல்லாசிகளைக் கொண்டிருப்பதுடன், தாங்கள் முதலில் பறப்பதன் மூலம் ஆத்மாக்கள் அனைவரையும் பறக்கச் செய்பவர்களுக்கும், எப்போதும் தந்தையைப் போன்று அருள்பவர்களாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆகி அனைவரையும் சக்திசாலி ஆக்குபவர்களுக்கும், இத்தகைய சக்திசாலி, சமமான குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா தாய்மார்களின் குழுவைச் சந்திக்கிறார்:
1) தாய்மார்களே, நீங்கள் எப்போதும் உங்களின் மேன்மையான பாக்கியத்தைப் பார்த்து, சந்தோஷமாக இருக்கிறீர்கள், அல்லவா? பாதங்களின் தூசாக இருந்த நீங்கள் தலைக்கிரீடம் ஆகியுள்ளீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு எப்போதும் உள்ளதல்லவா? உங்களின் சந்தோஷப் பொக்கிஷம் ஒருபோதும் களவாடப்படவில்லை, அல்லவா? மாயை திருடுவதில் கெட்டிக்காரி. நீங்கள் எப்போதும் துணிச்சலாகவும் புத்திசாலித்தனமாகவும் இருந்தால், மாயையால் எதுவும் செய்ய முடியாது. உண்மையில், அவள் ஒரு பணியாள் ஆகிவிடுவாள். எதிரியில் இருந்து அவள் ஒரு வேலைக்காரி ஆகிவிடுவாள். நீங்கள் இத்தகைய மாயையை வென்றவர்களா? நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். அதாவது, நீங்கள் சதா அவரின் சகவாசத்தில் இருந்து, ஆன்மீக நிறத்தால் நிறமூட்டப்படுகிறீர்கள். தந்தையின் சகவாசம் இல்லாவிட்டால், ஆன்மீக நிறமும் இருக்காது. எனவே, நீங்கள் அனைவரும் தந்தையின் சகவாசத்தால் நிறமூட்டப்பட்டிருக்கும் பற்றை வென்றவர்களா? அல்லது, சிறிதளவு பற்று உள்ளதா? உங்களின் பிள்ளைகளிடம் பற்று இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் உங்களின் பேரக்குழந்தைகளிடம் பற்று உள்ளது. குழந்தைகளுக்குச் சேவை செய்வது முடிந்துவிட்டது. மற்றவர்களுக்குச் சேவை செய்வது இப்போது ஆரம்பமாகிவிட்டது. அது குறைவதில்லை. ஒன்றன் பின் ஒன்றாக ஒரு வரிசை தொடர்கிறது. எனவே, நீங்கள் எந்தவொரு பந்தனத்திலிருந்தும் விடுபட்டுவிட்டீர்களா? தாய்மார்களுக்கு இத்தகைய மேன்மையான பேறு உள்ளது. சம்பூரணமாக வெறுங்கையுடன் இருந்தவர்கள், இப்போது சகல பொக்கிஷங்களும் நிறைந்த செல்வந்தவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்கள் அனைத்தையும் இழந்திருந்தீர்;கள். இப்போது மீண்டும் ஒருமுறை தந்தையிடமிருந்து சகல பேறுகளையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே, தாய்மார்களான நீங்கள் என்னவாக இருந்து இப்போது என்னவாகி உள்ளீர்கள்? நான்கு சுவர்களுக்குள் இருந்தவர்கள், உலக அதிபதிகள் ஆகிவிட்டார்கள். தந்தை உங்களைத் தனக்குச் சொந்தமானவர்களாக ஆக்கியதாலேயே இத்தகைய மகத்தான அதிர்ஷ்டம் கிடைத்தது என்ற போதை உங்களுக்கிருக்கிறதா? கடவுள் வந்து உங்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும்போது, வேறு எங்கும் இத்தகைய மேன்மையான அதிர்ஷ்டம் ஒருபோதும் கிடைக்க முடியாது. எனவே, உங்களின் சொந்த பாக்கியத்தைப் பார்க்கும்போது நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறீர்கள், அல்லவா? மாயை ஒருபோதும் இந்தப் பொக்கிஷத்தைத் திருடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

2) நீங்கள் அனைவரும் புண்ணியாத்மாக்கள் ஆகிவிட்டீர்களா? மற்றவர்களுக்குச் சக்தியைக் கொடுப்பதே மகத்தான புண்ணியம் ஆகும். எனவே, எப்போதும் ஆத்மாக்கள் அனைவருக்கும் புண்ணியாத்மா ஆகுங்கள். அதாவது, நீங்கள் பெற்றுள்ள பொக்கிஷங்கள் அனைத்தினதும் மகாதானி ஆகுங்கள். எந்தளவிற்கு நீங்கள் இவற்றை மற்றவர்களுக்குத் தானம் செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் பொக்கிஷங்கள் பலமில்லியன் மடங்குகள் அதிகரிக்கும். எனவே, இவ்வாறு கொடுப்பது பெறுகின்ற வடிவத்தைப் பெறுகிறது. இத்தகைய உற்சாகம் உங்களுக்கு இருக்கிறதா? இந்த உற்சாகத்தின் நடைமுறை ரூபம்,சதா சேவையில் தொடர்ந்து முன்னேறுவதாகும். உங்களின் சரீரம், மனம், செல்வத்தை நீங்கள் சேவைக்காகப் பயன்படுத்தும் அளவிற்கு, நீங்கள் இப்போது ஒரு மகாதானியாகவும் புண்ணியாத்மாகவும் ஆகுவீர்கள். அத்துடன் எதிர்காலத்தில் எல்லா வேளைக்குமாக நீங்கள் சேமித்துக்கொள்வீர்கள். அனைத்தையும் சேமிப்பதற்கான வாய்ப்பை நீங்கள் பெறுவதும் நாடகத்தில் உங்களின் பாக்கியமே. எனவே, நீங்கள் இந்தப் பொன்னான வாய்ப்பைப் பெறுபவர்கள், அல்லவா? நீங்கள் எதைப்பற்றியாவது சிந்தித்துப் பின்னர் அதைச் செய்தால், அது வெள்ளி வாய்ப்பே. ஆனால் பெரிய இதயத்துடன் நீங்கள் பெருந்தன்மையாக எதையாவது செய்தால், அது பொன்னான வாய்ப்பு ஆகும். ஆகவே, நீங்கள் அனைவரும் முதலாம் இலக்க வேந்தர்கள் ஆகியுள்ளீர்கள்.

பாப்தாதா இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளைச் சந்திக்கிறார்: தினமும் பாப்தாதா அன்பான குழந்தைகளுக்கு அன்பின் பிரதிபலனைக் கொடுக்கிறார். குழந்தைகளுக்கு ஓர் எண்ணம் தோன்றியதும், அது வார்த்தைகளில் சொல்லப்படும் முன்னரே, தந்தை அதன் பிரதிபலனை முன்கூட்டியே கொடுக்கிறார். அந்தளவிற்குக் குழந்தைகளின் மீது தந்தை அன்பு வைத்துள்ளார். சங்கமயுகத்தில், அவர் உங்களுக்குக் கல்பம் முழுவதற்குமான அன்பையும் நினைவுகளையும் கொடுக்கிறார். உங்களின் மடிகள் பிறவி பிறவியாக அன்பாலும் நினைவுகளாலும் நிரம்பியிருக்கும் வகையில் அவர் உங்களுக்கு அதிகளவு அன்பையும் நினைவுகளையும் கொடுக்கிறார். அன்பான ஆத்மாக்களுக்கு பாப்தாதா சதா ஒத்துழைப்பைக் கொடுத்து அவர்களை முன்னேறச் செய்கிறார். தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ள அன்பின் சொரூபமாக நீங்கள் ஆகி, இன்னொருவரை அன்பானவர் ஆக்கினால், அந்த நபரும் தந்தைக்குச் சொந்தமானவர் ஆகுவார். அன்பே அனைவரையும் ஈர்க்கிறது. குழந்தைகள் அனைவரின் அன்பும் தொடர்ந்து தந்தையை வந்தடைகிறது. அச்சா.

பாப்தாதா மொரிஸியசைச் சேர்ந்த ஒரு குழுவைச் சந்திக்கிறார்
நீங்கள் அனைவரும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள், அல்லவா? நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டத்தைப் பெற்றுள்ளீர்கள்? இதைவிட மகத்தான அதிர்ஷ்டம் வேறு எவருக்கும் கிடைக்காது. ஏனெனில், பாக்கியத்தை அருள்பவரான தந்தையே உங்களுக்குரியவர் ஆகியுள்ளார். நீங்கள் அவரின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். பாக்கியத்தை அருள்பவரே உங்களுடையவர் ஆகியிருக்கும்போது, இதைவிட மகத்தான அதிர்ஷ்டம் வேறென்ன இருக்க முடியும்? எனவே, நீங்கள் மேன்மையான, அதிர்ஷ்டசாலி பிரகாசிக்கும் நட்சத்திரங்கள், அல்லவா? நீங்கள் ஏனைய அனைவரையும் அதிர்ஷ்டசாலிகள் ஆக்குபவர்கள். ஏனெனில், நல்லது எதையும் கண்டவுடன், உங்களால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. உங்களால் நினைவு செய்யாமல் இருக்க முடியாமல் இருப்பதைப் போன்று, சேவை செய்யாமலும் இருக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையும் பலரின் ஒளிகளையும் எரியச் செய்து, ஒரு ஒளிமாலையை உருவாக்குவார். தீபமாலை என்பது இராச்சியத் திலகத்தின் அடையாளம் ஆகும். எனவே, தீபமாலையை உருவாக்குபவர்கள், இராச்சியத்திலகத்தைப் பெறுவார்கள். சேவை செய்வதெனில் இராச்சிய திலகத்தைக் கொண்டிருப்பவர் என்று அர்த்தம். சேவைக்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பவர்களால் மற்றவர்களுக்கும் ஊக்கம், உற்சாகத்தின் இறக்கைகளைக் கொடுக்க முடியும்.

கேள்வி:
எந்தப் பிரதானமான தாரணையின் அடிப்படையில் உங்களால் இலகுவாக வெற்றி பெற முடியும்?

பதில்:
உங்களைப் பணிவான இதயம் கொண்டவர் ஆக்குங்கள். பணிவாக இருந்து, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நற்குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் இலகுவாக வெற்றி பெறுவீர்கள். தங்களைச் சரியென்று நிரூபிக்க முயற்சி செய்பவர்கள் பிடிவாதக்காரர்கள் ஆகுகிறார்கள். அதனால் அவர்களால் ஒருபோதும் பிரபல்யம் ஆகமுடியாது. பிடிவாதக்காரர்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. பிரபல்யம் ஆகுவதற்குப் பதிலாக, அவர்கள் தொலைவில் சென்றுவிடுகிறார்கள்.

கேள்வி:
உலகினாலும் இறை குடும்பத்தினாலும் புகழப்படுவதற்கான உரிமையை எப்போது நீங்கள் பெறுவீர்கள்?

பதில்:
உங்களுக்கான சகல கேள்விகளும் மற்றவர்களுக்கான சகல கேள்விகளும் முடிவடையும்போது. நீங்கள் மற்றவர்களை விட உங்களை எதிலும் குறைந்தவர் இல்லை எனக் கருதுவதுடன், உங்களைப் புரிந்துணர்வின் அதிகாரியாகக் கருதுவதைப் போன்று, புரிந்து கொள்வதிலும் செய்வதிலும் உரிமையைக் கோருங்கள். அப்போது உலகினாலும் இறை குடும்பத்தினாலும் புகழப்படுவதற்கான உரிமையை நீங்கள் பெறுவீர்கள். எதையும் கேட்பவர் ஆகாதீர்கள். ஆனால் ஓர் அருள்பவர் ஆகுங்கள். அச்சா. ஓம் சாந்தி.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஸ்ரீமத்திற்கேற்ப சேவையில் திருப்தி என்ற சிறப்பியல்பை அனுபவம் செய்து, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் என்ன சேவை செய்தாலும், மாணவர்கள் யாராவது வந்தாலென்ன வராவிட்டாலென்ன, உங்களுக்குள் திருப்தியாக இருங்கள். நான் திருப்தியாக இருந்தால், செய்தி நிச்சயமாக வேலைசெய்யும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். ஆகவே, சந்தோஷமற்றவர் ஆகாதீர்கள். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டால், பரவாயில்லை. குறைந்தபட்சம் அது உங்களின் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளது. அவர்களும் செய்தியைப் பெற்றிருப்பார்கள். நீங்கள் திருப்தியாக இருந்தால், அந்தச் செலவும் பயனுள்ளதாக அமையும். நீங்கள் ஸ்ரீமத்திற்கேற்ப பணியைச் செய்தீர்கள். ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படிவதும் வெற்றி சொரூபம் ஆகுவதே ஆகும்.

சுலோகம்:
பலவீனமான ஆத்மாக்களுக்குச் சக்தி கொடுங்கள். நீங்கள் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.