17.02.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 22.04.84 Om Shanti Madhuban
ரூபம் அற்ற, தனித்துவமான தந்தையிடமிருந்து தனித்துவமான கல்வியும் தனித்துவமான பேறுகளும்.
இன்று, ஆன்மீகத் தந்தை தனது ஆன்மீகக் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். ஆன்மீகத் தந்தை, ஒவ்வொரு ஆத்மாவிடமும் எந்தளவு ஆன்மீகச் சக்தி உள்ளது, எந்தளவிற்கு அவர் சந்தோஷ சொரூபமாக இருக்கிறார் என்பதைப் பார்க்கிறார். ஆன்மீகத் தந்தை குழந்தைகளான உங்களுக்கு அழியாத சந்தோஷப் பொக்கிஷத்தை உங்களின் பிறப்புரிமையாகக் கொடுத்திருப்பதைப் பார்க்கிறார். எந்தளவிற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் ஆஸ்தியையும் உங்களின் வாழ்க்கையில் உங்களின் உரிமையையும் பெற்றுள்ளீர்கள் என்றும் பார்க்கிறார். நீங்கள் குழந்தையாகவும் பொக்கிஷங்களின் அதிபதியாகவும் ஆகிவிட்டீர்களா? தந்தையே அருள்பவர் ஆவார். அவர் ஒவ்வொரு குழந்தைக்கும் முழுமையான உரிமையைக் கொடுக்கிறார். எவ்வாறாயினும், ஒவ்வொரு குழந்தையும் தனது கிரகிக்கும் சக்திக்கேற்ப உரிமையைக் கோருகிறார். தந்தை ஒவ்வொரு குழந்தைக்காகவும் ஒரேயொரு தூய எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்: அதாவது, ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு குழந்தையும் பல பிறவிகளுக்கு சகல பொக்கிஷங்களால் நிரம்பியவராகி, முழுமையான ஆஸ்தியின் உரிமையைக் கோரவேண்டும். இந்தப் பேற்றுக்காகக் குழந்தைகள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் இருப்பதைக் கண்டு பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் ஒவ்வொருவரும் - இளையவரோ முதியவரோ, குழந்தையோ இளம்பருவத்தினரோ அல்லது வயது முதிர்ந்தவரோ, இனிமையான தாய்மார்களான நீங்கள், கற்றவர்களும் கல்லாதவர்களும், பௌதீகமாகப் பலவீனமாக இருந்தாலும் பலம்வாய்ந்த ஆத்மாக்களாக இருப்பவர்களும் யாராக இருந்தாலும், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரேயொரு இறைவனிடம் அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறீர்கள். இறைவனை அறிந்திருப்பதன் மூலம், நீங்கள் அனைத்தையும் அறிந்தவர் ஆகியுள்ளீர்கள் என்ற அனுபவம் உங்களுக்கு உள்ளது. பாப்தாதா எப்போதும் இத்தகைய அனுபவசாலி ஆத்மாக்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: ஓ குழந்தைகளே, தந்தையின் அன்பிலே திளைத்திருப்பவர்களே, சதா நினைவினால் உயிருடன் இருங்கள். சதா சந்தோஷம் மற்றும் அமைதியின் பேற்றினால் தொடர்ந்து பராமரிக்கப்படுங்கள். தொடர்ந்து அழியாத சந்தோஷ ஊஞ்சலில் ஆடுங்கள். உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும், உங்களின் ஆன்மீக சகோதர சகோதரிகளுக்கு, சந்தோஷத்தையும் அமைதியையும் பெறுவதற்கான இலகுவான வழிமுறையைக் கூறுங்கள். அதன் மூலம் அவர்களாலும் ஆன்மீகத் தந்தையிடமிருந்து தமது ஆன்மீக ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். அனைவருக்கும் இந்த ஒரு பாடத்தைக் கற்பியுங்கள்: ஆத்மாக்களான நாங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்கள். நாம் ஒரேயொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாம் அனைவரும் எமது பாகங்களை ஒரே மேடையில் நடிக்கிறோம். ஆத்மாக்களான எங்கள் அனைவரினதும் ஆதி தர்மம் அமைதியும் தூய்மையும் ஆகும். இந்தப் பாடத்தினால் நீங்கள் சுய மாற்றத்தையும் உலக மாற்றத்தையும் ஏற்படுத்துகிறீர்கள். இது நிகழும் என்ற உத்தரவாதம் உள்ளது. இது இலகுவானதல்லவா? இது சிரமம் இல்லையல்லவா? கல்லாதவர்களும் இந்தப் பாடத்தின் மூலம் ஞானம் நிறைந்தவர்கள் ஆகியுள்ளார்கள். இது ஏனெனில், படைப்பவரான தந்தையை அறிந்திருப்பதன் மூலம் நீங்கள் இயல்பாகவே படைப்பவரிடமிருந்து படைப்பை அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அனைவரும் ஞானம் நிறைந்தவர்கள், அல்லவா? ஆத்மா, பரமாத்மா, உலகச் சக்கரம் என்ற இந்த மூன்று வார்த்தைகள் மூலமும் நீங்கள் படைப்பவரினதும் படைப்பினதும் முழுக்கல்வியையும் கற்றுள்ளீர்கள். இந்த மூன்று வார்த்தைகளால் நீங்கள் என்னவாகி உள்ளீர்கள்? நீங்கள் என்ன சான்றிதழைப் பெற்றுள்ளீர்கள்? நீங்கள் கலைப்பட்டம் அல்லது முதுமானிப்பட்டத்தின் சான்றிதழைப் பெறவில்லை. நீங்கள் திரிகாலதரிசி, ஞானசொரூபம் என்ற பட்டங்களைப் பெற்றுள்ளீர்கள், அல்லவா? உங்களின் வருமானத்தின் ஆதாரம் என்ன? நீங்கள் எதைப் பெற்றுள்ளீர்கள்? நீங்கள் உண்மையான ஆசிரியரிடமிருந்து பிறவி பிறவியாக அழியாத பேற்றினைப் பெறுவதற்கான உத்தரவாதத்தைப் பெற்றுள்ளீர்கள். உண்மையில், நீங்கள் சதா வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள் அல்லது சதா செல்வந்தர்களாக இருப்பீர்கள் என ஒரு ஆசிரியரால் உத்தரவாதம் அளிக்க முடியாது. அவர் உங்களுக்குக் கற்பித்து, உங்களை இயலுமை உடையவர்களாக ஆக்குகிறார். குழந்தைகளும் இறை மாணவர்களுமான நீங்கள், தந்தையிடமிருந்தும் ஆசிரியரிடமிருந்தும் சத்தியயுகத்திலும் திரேதாயுகத்திலும் 21 பிறவிகளுக்குச் சந்தோஷம், அமைதி, செல்வம், ஆனந்தம், அன்பு, சந்தோஷமான குடும்பம் என்பவற்றைப் பெறுகிறீர்கள். நீங்கள் பெறக்கூடும் என்பதல்ல. நிச்சயமாக நீங்கள் இவற்றைப் பெறுவீர்கள். இதற்கு உத்தரவாதம் உள்ளது. ஏனெனில், தந்தை அநாதியானவர். ஆசிரியர் அநாதியானவர். ஆகவே, அநாதியான ஒரேயொருவரிடம் இருந்து பெறும் பேறும் அழியாதது. நீங்கள் உண்மையான தந்தையிடமிருந்தும் உண்மையான ஆசிரியரிடமிருந்தும் சகல பேறுகளின் உரிமையையும் பெற்றுள்ளீர்கள் எனச் சந்தோஷமான பாடலைப் பாடுகிறீர்கள். இவர் தனித்துவமான தந்தை எனப்படுகிறார். தனித்துவமான மாணவர்கள், தனித்துவமான கல்வி மற்றும் தனித்துவமான பேறுகள். ஒருவர் எந்தளவிற்குக் கற்றிருந்தாலும், எவருக்கும் தனித்துவமான (விசித்திர - ரூபம் அற்ற) தந்தையினதும் ஆசிரியரினதும் கல்வியையும் ஆஸ்தியையும் தெரியாது. உங்களால் அதன் புகைப்படத்தை எடுக்க முடியாது. எனவே, எவ்வாறு அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள்? தந்தையும் ஆசிரியரும் அதிமேலானவர்கள். அவர் எதைக் கற்பிக்கிறார் என்றும் யாருக்கு அவர் கற்பிக்கிறார் என்றும் பாருங்கள்! அவர் மிகவும் சாதாரணமானவர்! இது மனிதர்களைத் தேவர்களாக மாற்றும் கல்வி ஆகும். உங்களின் நடத்தையை எல்லா வேளைக்கும் நல்லதாக மாற்றும் கல்வி. இதைக் கற்பவர்கள் யார்? வேறு எவரும் கற்பிக்க முடியாதவற்றைத் தந்தை கற்பிக்கிறார். உலகத்தில் கற்பிப்பதைத் தந்தையும் கற்பித்தால் அதில் என்ன வேறுபாடு உள்ளது? அவர் நம்பிக்கை இழந்த ஆத்மாக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். அவர் அசாத்தியமானவற்றைச் சாத்தியம் ஆக்குகிறார். இதனாலேயே, இறைவனின் லீலைகளை அவர் மட்டுமே அறிவார் என்ற புகழ் உள்ளது. நம்பிக்கை இழந்துள்ள குழந்தைகள் நம்பிக்கை உடையவர்கள் ஆகுவதைக் கண்டு பாப்தாதா களிப்படைகிறார். நல்வரவாகுக! தந்தையின் வீட்டின் அலங்காரங்களே நல்வரவாகுக! அச்சா.
மேன்மையான பேறுகளின் அனுபவத்தின் உரிமையைக் கொண்டிருப்பதாக சதா தங்களைக் கருதிக் கொள்ளும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், ஞானத்தின் சொரூபமாக இருந்து, இந்த ஒரு பிறவியில் பல பிறவிகளுக்கான பேறுகளைப் பெறுவதற்கு மற்றவர்களைத் தூண்டும் குழந்தைகளுக்கும், ஒரு பாடத்தைக் கற்று மற்றவர்களுக்குக் கற்பிக்கும் மேன்மையான குழந்தைகளுக்கும், சதா ஆசீர்வாதங்களை அருள்பவரான தந்தையின் ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்படும் பாக்கியசாலிக் குழந்தைகளுக்கும், அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
17ஃ02ஃ19 மதுவனம் அவ்யக்த பாப்தாதா ஓம் சாந்தி 24ஃ04ஃ84
தற்போதைய பிராமண வாழ்க்கை வைரங்களைப் போன்று பெறுமதி மிக்கது.
இன்று, பாப்தாதா தனது அதிமேன்மையான குழந்தைகளைப் பார்க்கிறார். உலகிலுள்ள தமோகுணி, தூய்மையற்ற ஆத்மாக்களுடன் ஒப்பிடுகையில், நீங்கள் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். உலகிலுள்ள ஆத்மாக்கள் சத்தமிட்டு அழைக்கிறார்கள். அலைந்து திரிகிறார்கள். பேறுகளைப் பெறாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனை அழியக்கூடிய பேறுகள் இருந்தாலும், நிச்சயமாக அவர்களிடம் ஏதாவதொன்று குறைவாகவே உள்ளது. பிராமணக் குழந்தைகளான உங்களிடம்;, சகல பேறுகளையும் அருள்பவரின் குழந்தைகளிடம் எந்தவிதக் குறைவும் இல்லை. நீங்கள் சதா பேறுகளின் சொரூபங்களாகவே இருக்கிறீர்கள். உங்களிடம் தற்காலிக சந்தோஷம், தற்காலிக சௌகரியங்கள் அல்லது தற்காலிக இராச்சியத்திற்கான உரிமைக்கான வசதிகள் இல்லாவிட்டாலும், நீங்கள் ஒரு சிப்பியேனும் இல்லாத சக்கரவர்த்திகள் ஆவீர்கள். நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள். நீங்கள் மாயையை வென்றவர்கள். சுய இராச்சிய அதிகாரத்தைக் கொண்டுள்ள சடப்பொருளை வென்றவர்கள். நீங்கள் சதா இறை பராமரிப்பால் பராமரிக்கப்படுபவர்கள். சந்தோஷ ஊஞ்சல்களிலும் அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சல்களிலும் ஆடுபவர்கள். அழிகின்ற செல்வத்தால் செல்வந்தவர்கள் ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் அழியாத செல்வத்தினால் செல்வந்தர்கள் ஆகியுள்ளீர்கள். உங்களிடம் இரத்தினங்கள் பதித்த கிரீடம் இல்லை. ஆனால், நீங்கள் தந்தையாகிய இறைவனின் தலைமீதுள்ள கிரீடம் ஆகியுள்ளீர்கள். உங்களிடம் இரத்தினங்கள் பதித்த அலங்காரங்கள் இல்லை. ஆனால், நீங்கள் சதா ஞான இரத்தினங்களும் தெய்வீகக் குணங்கள் என்ற இரத்தினங்களும் பதித்த அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளீர்கள். அழியக்கூடிய ஒரு வைரம் எத்தனை பெரியதாக அல்லது ஒப்பற்றதாக இருந்தாலும் அல்லது எத்தனை பெறுமதிமிக்கதாக இருந்தாலும், ஒரு ஞான இரத்தினத்துடன் அல்லது ஒரு தெய்வீகக்குணம் என்ற இரத்தினத்துடன் ஒப்பிடும்போது, அதன் மதிப்பு எம்மாத்திரம்? இந்த இரத்தினங்களின் முன்னால், அது ஒரு கல்லைப் போன்றதே. ஏனெனில் அது அழியக்கூடியது. 900,000 பெறுமதிமிக்க அட்டியலுடன் ஒப்பிடும்போது, நீங்கள் அனைவரும் தந்தையின் கழுத்தின் அட்டியல் ஆகியுள்ளீர்கள். இறைவனின் கழுத்து அட்டியலுடன் ஒப்பிடும்போது, 900,000 பெறுமதியான அல்லது ஒன்பது மடங்கு அல்லது எண்ணற்ற மடங்கு மில்லியன்கள் பெறுமதியான அட்டியல்களும் எந்தவித மதிப்பும் அற்றவை. பிரம்மாபோஜனத்துடன் ஒப்பிடும்போது, முப்பத்தாறு வகையான உணவுகள் எதுவுமே இல்லை. ஏனெனில், நீங்கள் இந்த உணவை நேரடியாக பாப்தாதாவிற்குப் படைத்து, அதை இறை பிரசாதம் ஆக்குகிறீர்கள். இந்தக் கடைசிப்பிறவியிலும், பக்தர்கள் பிரசாதத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். நீங்கள் சாதாரணமான உணவை உண்பதில்லை. நீங்கள் பிரபு பிரசாதத்தை உண்கிறீர்கள். இதன் ஒவ்வொரு தானியமும் பலமில்லியன்களை விடப் பெறுமதிவாய்ந்தது. நீங்களே அதிமேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். உங்களிடம் இத்தகைய மேன்மையான, ஆன்மீக போதை இருக்கிறதா? தொடர்ந்து முன்னேறும்போது, உங்களின் மகத்துவத்தை நீங்கள் மறப்பதில்லை, அல்லவா? நீங்கள் உங்களைச் சாதாரணமானவர்களாகக் கருதுவதில்லை, அல்லவா? நீங்கள் வெறுமனே செவிமடுப்பவர்களோ அல்லது பேசுபவர்களோ இல்லையல்லவா? நீங்கள் சுயமரியாதை உள்ளவர்கள் ஆகிவிட்டீர்களா? வெறுமனே செவிமடுப்பவர்கள் அல்லது பேசுபவர்கள் எண்ணற்றவர்கள் உள்ளார்கள். சுயமரியாதை உடையவர்கள் பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரே. நீங்கள் யார்? நீங்கள் பலரில் ஒருவரா அல்லது பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரில் ஒருவரா? பெறுகின்ற வேளையில் கவனக்குறைவாக இருக்கும் குழந்தை என்ன வகையான விவேகத்தைக் கொண்டிருக்கிறார் என பாப்தாதா கூறுவார்? நீங்கள் அடைகின்ற, பெறுகின்ற பாக்கியத்தை அனுபவம் செய்யாவிட்டால், அதாவது, இந்த வேளையில் நீங்கள் மகாபாக்கியசாலிகள் ஆகாவிட்டால், எப்போது நீங்கள் அவ்வாறு ஆகப்போகிறீர்கள்? சங்கமயுகத்தில், மேன்மையான பேறுகளைக் கொண்ட இந்த வேளையில், சதா இந்த சுலோகத்தை நினைவு செய்யுங்கள்: இப்பொழுதில்லையேல், எப்போதும் இல்லை! உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.
இன்று, குஜராத் பிராந்தியம் வந்துள்ளது. குஜராத்தின் சிறப்பியல்பு என்ன? குஜராத்தின் சிறப்பியல்பு என்னவென்றால், இளையவர்களும் முதியவர்களும் அனைவரும் நிச்சயமாக சந்தோஷ நடனம் ஆடுவார்கள் என்பதே ஆகும். பௌதீகமாக சிறியவர்கள் அல்லது பெரியவர்கள் என்பதை அனைவரும் மறந்துவிடுவார்கள். அவர்கள் அனைவரும் நடனத்திற்கான தமது அன்பிலே மூழ்கிவிடுவார்கள். அவர்கள் இரவு முழுவதும் இதில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே, நீங்கள் அன்பிலே ஆடுவதில் உங்களை மறந்திருப்பதைப் போன்று, நீங்கள் ஞானத்தின் சந்தோஷ நடனத்திலும் திளைத்திருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் இந்த அழியாத அன்பிலே உங்களை மறந்திருக்கும் பயிற்சியில் முதலாம் இலக்கத்தவர்களாக இருக்கிறீர்கள், அல்லவா? நல்லதொரு விரிவாக்கம் இடம்பெற்றுள்ளது. இந்தத் தடவை, பிரதான இடத்திற்கு (மதுவனம்) அண்மையில் உள்ள இரண்டு பிராந்தியங்களும் வந்துள்ளார்கள். ஒருபுறம் குஜராத்தும் மறுபுறம் இராஜஸ்தானும் உள்ளன. இரண்டும் அண்மையில் உள்ளன. பணி முழுவதும் குஜராத்துடனும் இராஜஸ்தானுடனும் தொடர்புடையவை. எனவே, நாடகத்திற்கேற்ப, இரண்டு இடங்களும் ஒத்துழைப்பவர்களாக இருக்கும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். இருவரும் நெருக்கமாக இருப்பதுடன் ஒவ்வொரு பணியிலும் ஒத்துழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். சங்கமயுகத்தின் இராச்சியம் இராஜஸ்தானிலேயே உள்ளது, அப்படியல்லவா? நீங்கள் எத்தனை அரசர்களைத் தயார் செய்துள்ளீர்கள்? இராஜஸ்தானின் அரசர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். எனவே, அரசர்கள் தயாரா அல்லது நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? அரசர்களின் ஊர்வலம் இராஜஸ்தானில் இடம்பெறுகின்றன. எனவே, இராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் முழுமையானதோர் ஊர்வலத்தைத் தயாரித்து அழைத்து வரவேண்டும். அப்போது மட்டுமே அனைவரும் மலர்களைப் பொழிவார்கள். அவர்கள் அந்த ஊர்வலத்தை மிகுந்த ஆடம்பரமாகச் செய்கிறார்கள். எனவே, அரசர்களின் எத்தனை ஊர்வலங்கள் வரும்? எங்கெல்லாம் நிலையங்கள் உள்ளதோ, அங்கிருந்து குறைந்தபட்சம் ஓர் அரசராவது வரவேண்டும். அப்போது பல அரசர்கள் இருப்பார்கள். 25 இடங்களில் இருந்து 25 அரசர்கள் வந்தால், அது அழகான ஊர்வலமாக இருக்கும். நாடகத்தின்படி, சேவைக்கான சிம்மாசனம் இராஜஸ்தானிலேயே உள்ளது. எனவே, இராஜஸ்தானுக்கும் விசேடமானதொரு பாகம் உள்ளது. இராஜஸ்தானில் இருந்தே சேவைக்கான விசேடமான குதிரைகள் வெளிப்பட்டன. பாகம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் நடைபெறவேண்டும், அவ்வளவே.
கர்நாடகாவிலும் அதிகளவு விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. இப்போது, கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், விரிவாக்கத்தில் இருந்து சாரத்திற்குள் செல்லவேண்டும். பாலை வெண்ணெய் எடுப்பதற்காகக் கடையும்போது, முதலில் அதிகளவு விரிவாக்கம் (அளவு) காணப்படும். அதன்பின்னர், சாரத்தில் இருந்து வெண்ணெய் பிரித்தெடுக்கப்படும். எனவே, கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் விரிவாக்கத்தில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுக்க வேண்டும். சாரத்தின் சொரூபமாகி, மற்றவர்களையும் அவ்வாறு ஆக்குங்கள். அச்சா.
தமது மேன்மையான சுயமரியாதையில் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், சகல பேறுகளின் பொக்கிஷக் களஞ்சியங்களாக இருப்பவர்களுக்கும், சங்கமயுகத்தின் மேன்மையான சுய இராச்சியத்தின் மகத்தான பாக்கியத்தின் உரிமையை சதா பெற்றிருக்கும் ஆத்மாக்களுக்கும், ஆன்மீக போதையினதும் சந்தோஷத்தினதும் சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் அனைவரும் உங்களை சுய இராச்சிய உரிமையுள்ள மேன்மையான ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? நீங்கள் சுய இராச்சிய உரிமையைப் பெற்றுள்ளீர்களா? உரிமையுள்ள இத்தகைய ஆத்மாக்கள் சக்திசாலிகளாக இருப்பார்கள், அப்படியல்லவா? இராச்சியம் என்பது அதிகாரம் என்று சொல்லப்படுகிறது. அதிகாரம் என்றால் சக்தி என்று அர்த்தம். இன்றுள்ள அரசாங்கமும் அரச அதிகாரத்தைக் கொண்ட கட்சி எனப்படுகிறது. எனவே, அரச அதிகாரம் என்றால் சக்தி என்று அர்த்தம். ஆகவே, சுய இராச்சியமும் மகத்தான சக்தி ஆகும். இத்தகைய சக்தியை நீங்கள் பெற்றுள்ளீர்களா? உங்களின் பௌதீகப் புலன்கள் அனைத்தும் உங்களின் சக்திகளுக்கேற்ப இயங்குகிறதா? அரசன் ஒருவர் எப்போதும் தனது இராஜ சபையைக் கூட்டி, அனைவரிடமும் இராச்சியம் எவ்வாறு இயங்குகிறது எனக் கேட்பார். எனவே, சுய இராச்சிய உரிமையைக் கொண்டுள்ள அரசர்களான உங்களின் செயற்பாடுகள் நன்றாக நடைபெறுகின்றனவா? அல்லது, உயர்வு தாழ்வுகள் உள்ளதா? உங்களின் இராச்சியத்தில் உள்ள பணியாட்கள் எவரும் உங்களை ஏமாற்றவில்லை, அல்லவா? சிலவேளைகளில், கண்கள் உங்களை ஏமாற்றுகின்றன. சிலவேளைகளில் காதுகள் உங்களை ஏமாற்றுகின்றன. சிலவேளைகளில் உங்களின் கைகள் உங்களை ஏமாற்றுகின்றன. சிலவேளைகளில் உங்களின் கால்கள் உங்களை ஏமாற்றுகின்றன. நீங்கள் இந்த வகையில் ஏமாற்றப்படுவதில்லை, அல்லவா? இராச்சிய அதிகாரம் நன்றாக இருந்தால், ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணத்திலும் பலமில்லியன்கள் வருமானம் காணப்படும். இராச்சிய அதிகாரம் நன்றால் இல்லாவிட்டால், ஒவ்வொரு விநாடியும் பலமில்லியன்கள் வருமானத்தை நீங்கள் இழப்பீர்கள். ஒன்றுக்கான பேறு, பலமில்லியன்களாக இருப்பதனால், நீங்கள் இழந்தால், ஒன்றுக்குப் பலமில்லியன்கள் வருமானத்தை இழப்பீர்கள். நீங்கள் எந்தளவைப் பெற்றாலும், அந்தளவிற்கு அதை இழக்கிறீர்கள். சரியான கணக்கு காணப்படுகிறது. எனவே, நாள் முழுவதும் உங்களின் இராச்சியத்தின் செயற்பாடுகளைச் சோதித்துப் பாருங்கள். உங்களின் ஆலோசகர்களான கண்கள், நன்றாகச் செயற்பட்டார்களா? உங்களின் ஆலோசகர்களான காதுகள் நன்றாகச் செயற்பட்டார்களா? அனைவரின் திணைக்களங்களும் நன்றாகச் செயற்பட்டனவா இல்லையா? நீங்கள் இதைச் சோதிக்கிறீர்களா? அல்லது களைப்புடன் நித்திரைக்குச் செல்கிறீர்களா? உண்மையில், நீங்கள் எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னரும், உங்களைச் சோதித்துப் பார்த்தபின்னர் அந்தச் செயலைச் செய்ய வேண்டும். முதலில் சிந்தித்த பின்னர் செயல்படுங்கள். நீங்கள் முதலில் செயல்பட்ட பின்னர் சிந்திப்பதாக இருக்கக்கூடாது. முழுமையான பெறுபேற்றினைப் பெறுவது வேறுபட்ட விடயம். ஆனால் ஞானி ஆத்மாவோ முதலில் சிந்தித்த பின்னரே செயலாற்றுவார். எனவே, நீங்கள் ஒவ்வொரு செயலையும் கவனமாக ஆராய்ந்த பின்னரே செய்கிறீர்களா? நீங்கள் முதலில் சிந்திப்பவர்களா? அல்லது பின்னர் சிந்திப்பவர்களா? ஞானி ஆத்மா ஒருவர் பின்னர் சிந்தித்தால், அவரை ஞானி என்று அழைக்க முடியாது. இதனாலேயே, நீங்கள் சதா சுய இராச்சிய உரிமையைக் கொண்டுள்ள ஆத்மாக்கள் ஆவீர்கள். இந்த சுய இராச்சிய உரிமையுடன், நீங்கள் நிச்சயமாக உலக இராச்சிய உரிமையைக் கொண்டிருப்பவர்கள் ஆகவேண்டும். நீங்கள் இவ்வாறு ஆகுவீர்களா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. உங்களிடம் சுய இராச்சியம் இருந்தால், நிச்சயமாக உங்களிடம் உலக இராச்சியமும் இருக்கும். எனவே, உங்களின் சுய இராச்சியத்தில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லையல்லவா? துவாபர யுகத்தில் இருந்து, நீங்கள் சிக்கல்கள் உள்ள இடங்களையே சுற்றி வந்தீர்கள். நீங்கள் இப்போது சிக்கல்கள் நிறைந்த இடத்தை விட்டு விட்டீர்கள். இப்போது, ஒருபோதும் சிக்கல்கள் நிறைந்த எந்தவோர் இடத்திலும் காலடி பதிக்காதீர்கள். இது சிக்கல் நிறைந்த இடம். நீங்கள் அதில் ஒரு தடவையாயினும் காலடி பதித்தால், அது வெளிவர முடியாத ஒரு சிக்கலான பாதை போன்று ஆகிவிடு;ம. அதன்பின்னர் அதிலிருந்து வெளிவருதல் மிகவும் கடினம். ஆகவே, எப்போதும் ஒரேயொரு பாதையைப் பின்பற்றுங்கள். ஒன்று இருக்கும் இடத்தில் சிக்கல்கள் இருக்கமாட்டாது. ஒரு பாதையைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பார்கள்.
பாப்தாதா பங்களுரைச் சேர்ந்த ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியைச் சந்திக்கிறார்:
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? எதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்கள்? அனுபவமே அனைத்திலும் சிறந்த அதிகாரம். ஆத்ம உணர்வுடன் இருத்தலே முதல் அனுபவம் ஆகும். ஆத்ம உணர்வில் இருக்கும் அனுபவம் இருக்கும்போது, நீங்கள் இயல்பாகவே இறையன்பையும் இறை பேறுகளையும் அனுபவம் செய்கிறீர்கள். எந்தளவிற்கு அதிகமாக உங்களுக்கு அனுபவம் இருக்கிறதோ, அந்தளவிற்கு நீங்கள் சக்திசாலிகள் ஆகுவீர்கள். நீங்கள் பல பிறவிகளின் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கான தீர்ப்பை வழங்கும் ஒருவர், அல்லவா? அல்லது, நீங்கள் யாரேனும் ஒருவருக்கு அவரின் ஒரு பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கான தீர்ப்பை அளிக்கும் நீதிபதியா? அது உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருத்தல். இது ஆன்மீக நீதிபதியாக இருத்தல். இந்த வகையான நீதிபதி ஆகுவதற்கு கற்கவோ அல்லது நேரம் ஒதுக்கவோ வேண்டியதில்லை. நீங்கள் ஆத்மா மற்றும் பரமாத்மா என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே கற்க வேண்டும். அவ்வளவுதான்! நீங்கள் இதை அனுபவம் செய்தால், ஆன்மீக நீதிபதியாக ஆகுவீர்கள். தந்தையே அனைவரையும் பல பிறவிகளுக்குத் துன்பத்தில் இருந்து விடுவிப்பவர். இதனாலேயே, அவர் சந்தோஷத்தை அருள்பவர் என்று அழைக்கப்படுகிறார். எனவே, தந்தையைப் போன்றே குழந்தைகளும் இருப்பார்கள். இரட்டை நீதிபதி ஆகுவதன் மூலம், நீங்கள் ஆத்மாக்கள் பலருக்கும் நன்மை செய்வதற்கான கருவி ஆகுவீர்கள். அவர்கள் ஒரு வழக்குக்காக வருவார்கள். ஆனால் பல பிறவிகளின் வழக்கை வென்று திரும்பிச் செல்வார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். எனவே, ஆன்மீக நீதிபதி ஆகுங்கள் என்பதே தந்தையின் அறிவுறுத்தல் ஆகும். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் சர்வசக்திவான் தந்தையை உங்களுடன் ஒன்றிணைத்து வைத்திருக்கும் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.சர்வசக்திவான் தந்தையுடன் ஒன்றிணைந்திருக்கும் குழந்தைகள் சகல சக்திகளுக்கான உரிமைகளையும் வைத்திருக்கிறார்கள். எங்கு சகல சக்திகளும் உள்ளதோ, அங்கு வெற்றி ஏற்படாமல் இருப்பது அசாத்தியமே. நீங்கள் சதா தந்தையுடன் ஒன்றிணைந்தவராக இல்லாவிட்டால், வெற்றியும் குறைவாகவே இருக்கும். சகவாசத்தின் பொறுப்பை எப்போதும் நிறைவேற்றும் அழியாத சகபாடியை நீங்கள் உங்களுடன் சதா ஒன்றிணைத்து வைத்திருந்தால், வெற்றி உங்களின் பிறப்புரிமை ஆகும். ஏனெனில், மாஸ்ரர் சர்வசக்திவான்களின் முன்னாலும் பின்னாலும் எப்போதும் வெற்றி இருக்கும்.
சுலோகம்:
ஒருபோதும் விகாரம் என்ற அழுக்கைத் தொடாதவர்களே உண்மையான வைஷ்ணவர்கள்.