08.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் பக்தியின் பலனைப் பெறுவதற்காக நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள். அதிகளவு பக்தி செய்தவர்கள் ஞானத்தில் முன்னேறிச் செல்வார்கள்.
கேள்வி:
சத்தியயுக இராச்சியத்தில் அவசியமற்றதும், கலியுக இராச்சியங்களில் அவசியமானவையுமான இரு விடயங்கள் யாவை?
8பதில்:
கலியுக இராச்சியங்களில், உங்களுக்கு ஆலோசகர்களும், குருமார்களும் தேவை. இவர்கள் எவரும் சத்தியயுகத்தில் இருக்க மாட்டார்கள். அங்கே எவருடைய ஆலோசனையையும் பெற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில், சத்தியயுக இராச்சியம் சங்கமயுகத்தில் தந்தையின் ஸ்ரீமத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் பெறுகின்ற ஸ்ரீமத் 21 சந்ததிகளுக்கு நீடிக்கிறது என்பதால், அனைவரும் சற்கதியில் இருக்கிறார்கள், இதனாலேயே அங்கு குருமார்களுக்கான தேவை இருக்க மாட்டாது.ஓம் சாந்தி.
“ஓம் சாந்தி” என்பதன் அர்த்தம் என்ன? உங்களுடைய ஆதிதர்மத்தில் ஸ்திரமாக இருத்தல் அல்லது உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு இங்கு அமர்ந்திருத்தல் ஆகும். அப்பொழுது நீங்கள் அமைதி நிறைந்தவர்களாக அமர்ந்திருப்பீர்கள். இதுவே உங்கள் ஆதிதர்மத்தில் ஸ்திரமாக இருத்தல் என்று அழைக்கப்படுகின்றது. கடவுள் பேசுகிறார்: உங்கள் ஆதிதர்மத்தில் ஸ்திரமாக அமர்ந்திருங்கள். உங்கள் தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற கல்வியைக் கற்பிக்கிறார், ஏனெனில், தந்தையே உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுப்பவர். இக்கல்வி மூலம் நீங்கள் சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு இங்கு அமர்ந்திருங்கள். உங்களை வைரங்கள் போன்று ஆக்குவதற்காக எல்லையற்ற தந்தை இங்கு வந்துள்ளார். தேவர்கள் மாத்திரமே வைரங்கள் போன்றவர்கள். எப்பொழுது, அவர்கள் அவ்வாறு ஆகுகிறார்கள்? எவ்வாறு அவர்கள் அவ்வாறான மேன்மையான மனிதர்கள் ஆகுகிறார்கள்? ஒரேயொரு தந்தையைத் தவிர, வேறு எவராலும் உங்களுக்கு இதனைக் கூற முடியாது. பிராமணர்களாகிய நீங்களே பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். பின்னர், நீங்கள் தேவர்கள் ஆகவேண்டும். பிராமணர்களே உச்சிக்குடுமிகள். நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்களே பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள்;; நீங்கள் பௌதீகப் படைப்புக்கள் அல்ல. கலியுகத்தவர்கள் அனைவரும் பௌதீகப் படைப்புக்கள். சாதுக்கள், புனிதர்கள், ரிஷிகள், முனிவர்கள் போன்றவர்கள் அனைவரும் துவாபர யுகத்திலிருந்து பௌதீகமாகப் படைக்கப்பட்டவர்கள். இப்பொழுது, பிரஜாபிதா பிரம்மகுமாரர்களும், குமாரிகளுமாகிய நீங்கள் மாத்திரமே வாய்வழித் தோன்றல்கள் ஆகியுள்ளீர்கள். இதுவே உங்களது அதிமேன்மையான குலம். இது தேவ குலத்தை விட அதிக மேன்மையானது, ஏனெனில் உங்களுக்குக் கற்பித்து, உங்களை மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆக்குகின்ற தந்தையே வந்துள்ளார். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் இங்கு வரமாட்டார்கள் என்பதால், அவர் இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஞான மார்க்கத்திற்கு உரியவர்கள் மாத்திரமே இங்கு வருகிறார்;கள். நீங்கள் உங்கள் பக்தியின் பலனைப் பெறுவதற்காக, எல்லையற்ற தந்தையிடம் இங்கு வருகிறீர்கள். பக்தியின் பலனை யார் பெறுவார்கள்? அதிகளவு பக்தியைச் செய்தவர்கள் மாத்திரமே, கல்லுப் புத்தியை உடையவர்களிலிருந்து தெய்வீக புத்தியுடையவர்களாக மாறுவார்கள். அவர்களே வந்து, ஞானத்தைப் பெறுவார்கள். கடவுள் மாத்திரமே வந்து பக்தியின் பலனைக் கொடுக்க வேண்டும். இவ்விடயங்கள் மிகவும் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இப்பொழுது நீங்கள் கலியுகத்தவர்களிலிருந்து சத்தியயுகத்தவர்களாகவும், விகாரமுடையவர்களிலிருந்து விகாரமற்றவர்களாகவும் ஆகுகிறீர்கள், அதாவது, நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகிறீர்கள். இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆகுவதற்காக நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். அவர்கள் இறைவனும் இறைவியும் என்பதால் அவர்களுக்கு கற்பிப்பவர் நிச்சயமாகக் கடவுளாகவே இருக்க வேண்டும். கடவுள் பேசுகிறார், ஆனால் கடவுள் என்று அழைக்கப்படுபவர் யார்? ஒரேயொரு கடவுளே உள்ளார்;; நூறாயிரக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருப்பதில்லை. கடவுள் கூழாங்கற்கள், கற்கள் போன்றவற்றில் இருப்பதில்லை. தந்தையை அறியாததால், பாரதம் மிகவும் ஏழையாகி விட்டது. பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர்களுடைய குழந்தைகள் போன்றோரே இராச்சியத்தின் அதிபதிகளாக இருந்தார்கள். இராச்சியத்தின் அதிபதிகள் ஆகுவதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் அவ்வாறில்லை. பாரதத்தில் அவர்களது இராச்சியம் இருந்தது. அது தேவர்களின் இராச்சியமாக இருந்தபொழுது, அங்கு சூரிய, சந்திர வம்சங்கள் இருந்தபொழுது, அங்கு வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்நேரத்தில் ஏனைய சமயங்கள் அனைத்தும் உள்ளன, ஆனால் அந்தத் தர்மம் இல்லை. அதுவே அது அடிமரம் என அழைக்கப்பட்ட, அத்திவாரமாக இருந்தது. இந்நேரத்தில் மனித உலக விருட்சத்தின் அடிமரம் முழுவதும் எரிக்கப்பட்டு விட்டது. விருட்சத்தின் ஏனைய பகுதிகள் இன்னும் உள்ளன. இப்பொழுது அவர்கள் அனைவரதும் ஆயுட்காலங்களும் முடிவுக்கு வருகின்றன. இதுவே மனித உலகின் பல்வகை விருட்சம் ஆகும். பல்வேறு பெயர்கள், உருவங்கள், தேசங்கள், காலம் ஆகியவற்றைக் கொண்டவர்கள் உள்ளார்கள்; அவர்கள் அனைவரும் உள்ளார்கள். விருட்சம் மிகவும் பெரியது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒவ்வொரு கல்பத்திலும் இவ் விருட்சம் முற்றிலும் உக்கி, தமோபிரதான் ஆகும்பொழுதே நான் வருகிறேன். நீங்கள் என்னைக் கூவி அழைத்தீர்கள்: பாபா, வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குங்கள். “ஓ தூய்மையாக்குபவரே” என்று நீங்கள் கூறும்பொழுது, அசரீரியான தந்தையையே நீங்கள் நினைவு செய்கிறீர்கள். அந்நேரத்தில், சரீரதாரியான தந்தையை நீங்கள் ஒருபொழுதும் நினைவுசெய்ய மாட்டீர்கள். ஒரேயொருவரே தூய்மையாக்குபவரும், சற்கதியை அருள்பவரும் ஆவார். அது சத்தியயுகமாக இருந்தபொழுது, நீங்கள் சற்கதியில் இருந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். ஏனைய அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். ஒரேயொரு கடவுளே அனைவரிலும் அதி மேன்மையானவரும், அதியுயர்வானவரும் என நினைவுசெய்யப்படுகிறார். உங்கள் பெயர் அதியுயர்வானதும், உங்கள் தேசமும் அதியுயர்வானதும் ஆகும். அவர் பரந்தாமமாகிய, அனைத்திலும் உயர்வான இடத்தில் வசிக்கிறார். இது புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவான விடயம். சத்திய, திரேதா, துவாபர மற்றும் கலியுகங்கள் உள்ளன, அதன்பின்னர் சங்கமயுகம் உள்ளது. இது எவருக்கும் தெரியாது. பக்தி மார்க்கமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ‘பாபா, ஏன் அப் பக்தி மார்க்கம் மீண்டும் உருவாக்கப்பட்டது?’ என்று நீங்கள் வினவ முடியாது. அது அநாதியானது. நான் இங்கமர்ந்திருந்து, நாடகத்தின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். அதனை நான் உருவாக்கியிருந்தால், அது எபபொழுது உருவாக்கப்பட்டது என்று நான் உங்களுக்குக் கூற முடியும். தந்தை கூறுகிறார்: அது அநாதியாக ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. அது எப்பொழுது ஆரம்பித்தது என்ற கேள்விக்கே இடமில்லை. அது இன்ன இன்ன நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று நீங்கள் கூறினால், அது இன்ன இன்ன நேரத்தில் முடிவடையும் என்பதையும் நீங்கள் கூற முடியும், ஆனால், இல்லை; இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சதாகாலமும் சுழலும். நீங்கள் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரின் படத்தை உருவாக்குகிறீர்கள். அவர்கள் தேவர்கள். அவர்கள் திரிமூர்த்தியைக் காட்டுகிறார்கள், ஆனால் அவர்கள் அதில் சிவனை அதிமேலானவராகக் காட்டுவதில்லை. அவர்கள் அவரை வேறாக்கியுள்ளார்கள். இப்பொழுது பிரம்மா மூலம் ஸ்தாபனை நடைபெறுகிறது. நீங்கள், உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். ஓர் இராச்சியத்தில் அனைத்து வகையான அந்தஸ்துக்களும் இருக்கின்றன. ஜனாதிபதி, பிரதம மந்திரி, முதலமைச்சர் என்று இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆலோசனை வழங்குபவர்கள். சத்திய யுகத்தில் ஆலோசனை வழங்குவதற்கு எவரும் தேவைப்பட மாட்டார்கள். இந் நேரத்தில், நீங்கள் பெறுகின்ற ஸ்ரீமத் என்ற ஆலோசனையானது அழிவற்றதாகுகிறது. தற்பொழுது ஆலோசனை வழங்குவதற்கு எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று பாருங்கள்! அவர்கள் பலர் இருக்கிறார்கள்! அவர்கள் ஆலோசனை வழங்குவதற்குப் பணம் செலவழித்து, அமைச்சர்கள் போன்றோர்களாக ஆகுகிறார்கள். அவர்கள் அனைவரும் சீரழிந்துள்ளார்கள் என்றும், அவர்களுக்குப் பணம்தான் வேண்டும் என்று அரசாங்கமே கூறுகிறது. இது கலியுகம். அங்கு இவ்வாறு இருக்க மாட்டாது. அங்கு ஆலோசகர்களுக்கான தேவை இல்லை. இந்த வழிகாட்டல்கள் 21 பிறவிகளுக்குத் தொடர்கின்றன, அத்துடன், நீங்கள் சற்கதியையும் பெறுகின்றீர்கள். அங்கு குருமார்களுக்கான தேவையுமில்லை. சத்திய யுகத்தில் ஆலோசகர்கள் அல்லது குருமார்கள் இருக்க மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். அது 21 சந்ததிகளுக்கு, 21 பிறவிகளுக்கு முதுமை அடையும்வரை, அழிவற்றதாகும். பாம்பு ஒரு தோலை நீக்கி, இன்னொன்றைப் பெறுவது போல், நீங்கள் வயது முதிர்ந்தவராகி, உங்கள் சரீரத்தை நீக்கி, மீண்டும் ஒரு குழந்தை ஆகுவீர்கள். மிருகங்களின் உதாரணம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் கல்லுப்புத்தியை உடையவர்கள் என்பதால், அவர்கள் எவ் விவேகமும் அற்றவர்கள். தந்தை பிராமணர்களாகிய உங்களுக்கு, இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு, விளங்கப்படுத்துகிறார். கடவுள் வந்து, அழுக்கான ஆடைகளைக் கழுவுகின்றார் என்பதை அனைவரும் கிராந்த்;திலிருந்து கேட்கின்றார்கள் அல்லது வாசிக்கின்றார்கள். ‘வந்து, அழுக்கான ஆடைகளைக் கழுவுங்கள், ஆத்மாக்களாகிய எங்களைச் சுத்தமாக்குங்கள்’ என மக்கள் கடவுளைக் கூவி அழைக்கிறார்கள். ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரினதும் தந்தை வந்து, எங்களது ஆடைகளைச் சுத்தப்படுத்துகின்றார். அவர் சரீரங்களைக் கழுவ வேண்டியதில்லை. அவர் ஆத்மாக்களையே கழுவ வேண்டும், ஏனெனில், ஆத்மாக்களே தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளனர். ‘வந்து தூய்மையற்ற ஆத்மாக்களைத் தூய்மையாக்குங்கள்’. தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் இங்கு வரவேண்டியுள்ளது. நான் மாத்திரமே ஞானக் கடலும், தூய்மைக்கடலும் ஆவேன். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியையும், உங்கள் லௌகீகத் தந்தையிடமிருந்து, ஓர் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியையும் பெறுகிறீர்கள். ஓர் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியால், பெருமளவு துன்பம் உள்ளது, இதனாலேயே நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்கள். பெருமளவு துன்பம் உள்ளது. இராவணனான, ஐந்து விகாரங்களே உங்கள் கொடிய எதிரிகள் என்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். அவை ஆரம்பித்ததிலிருந்து, மத்தி ஊடாக இறுதிவரை உங்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றன. ஓ இனிய குழந்தைகளே, இந்தப் பிறவியில் நீங்கள் பிராமணர்களாகி, காம விகாரத்தை வென்றால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். தேவர்கள் ஆகுவதற்கு, நீங்கள் தூய்மையைக் கிரகிக்கிறீர்கள். ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு பாபா வந்துள்ளார். இதுவே, அதி மங்களகரமான சங்கமயுகம். இந்த யுகத்தில் நீங்கள் முயற்சி செய்து, தூய்மையானவர்கள் ஆகவேண்டும். எவ்வாறாயினும், முன்னர் எத்தனை பேர் தூய்மையாகி, சூரிய, சந்திர வம்ச குலங்களுக்கு உரியவர்கள் ஆகினார்களோ, அவர்கள் நிச்சயமாக, மீண்டும் அவ்வாறு ஆகுவார்கள். அதற்குக் காலம் பிடிக்கிறது. தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறையைக் காட்டுகிறார். இப்பொழுது நீங்கள்; தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். இங்கு நீங்கள் யாரிடம் வந்துள்ளீர்கள்? அவரே அசரீரியானவர். அவர் ஒரு சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளார். அவரே உங்களுக்குக் கூறுகிறார்: இவருடைய பல பிறவிகளில் இதுவே அவருடைய இறுதிப் பிறவி. ஆகவே, இதுவே அனைவரது சரீரங்களையும் விட, பழைய சரீரமாகும். நான் இராவணனின் பழைய, அசுர உலகிற்குள் வந்து, தனது சொந்தப் பிறவிகளைப் பற்றியே அறியாதவரின் சரீரத்திற்குள் பிரவேசிக்கிறேன். இதுவே அவரது பல பிறவிகளின் இறுதியாகும். அவரது ஓய்வுஸ்திதியில் இருக்கும்பொழுதே, நான் அவருக்குள் பிரவேசிக்கிறேன். மக்கள் எப்பொழுதும் ஓய்வுஸ்திதியிலேயே குருமார்களை ஏற்றுக்கொள்வார்கள். கூறப்படுகிறது: உங்களுக்கு 60 வயது ஆகுமபொழுது, நீங்கள் ஒரு கைத்தடியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் வீட்டில் இருந்தால், உங்களுடைய குழந்தைகள் உங்களுக்கு ஒரு கைத்தடியைக் கொடுத்து விடுவார்கள். ஆகவே, உங்கள் வீட்டிலிருந்து ஓடிவிடுங்கள். தங்கள் தந்தையைத் தடியால் அடிப்பதற்கு அதிகக் காலம் எடுக்காத அத்தகையவர்களே குழந்தைகள் ஆவார்கள். தாங்கள் அவரது செல்வத்தைப் பெற முடியும் என்பதால், அவர்கள் அவர் எப்பொழுது மரணிப்பார் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்;கள். ஓய்வுஸ்திதியில் உள்ளவர்களின் ஆன்மீக ஒன்றுகூடல்கள் பல உள்ளன. அனைவருக்கும் சற்கதியை அளிப்பவர் ஒரேயொருவரே என்பதும், அவர் சங்கமயுகத்தில் மாத்திரமே வருகிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் சத்தியயுகத்தில் சற்கதியில் இருக்கும்பொழுது, ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருக்கிறார்கள். அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என அழைக்கப்படுகிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் சற்கதியை அருள்பவராக இருக்கவும் முடியாது, ஸ்ரீ என்றோ அல்லது ஸ்ரீஸ்ரீ என்றோ எவரையும் அழைக்கவும் முடியாது. தேவர்களே ஸ்ரீ, அதாவது, மேன்மையானவர்கள் ஆவார்கள். அவர்கள் ஸ்ரீ இலக்ஷ்மி, ஸ்ரீ நாராயணன் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களை அவ்வாறு ஆக்கியவர் யார்? சிவபாபா மாத்திரமே ஸ்ரீ ஸ்ரீ என்று அழைக்கப்பட வேண்டும். நீங்கள் செய்துள்ள தவறுகளைத் தந்தை உங்களுக்குக் காட்டுகிறார். நீங்கள் பல்வேறு குருமாரை ஏற்றுக் கொண்டிருந்தீர்கள், அது மீண்டும் இடம்பெறும். நீங்கள் மீண்டும் அதே குருமாரை ஏற்றுக் கொள்வீர்கள். அதே சக்கரம் மீண்டும் மீண்டும் சுழலும். நீங்கள் சுவர்க்கத்தில் இருக்கும்பொழுது, சந்தோஷ தாமத்தில் இருக்கிறீர்கள். அங்கு தூய்மை, சந்தோஷம், அமைதி ஆகியன இருக்கும்;; அங்கு சண்டைகள் இருக்க மாட்டாது. ஏனைய அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். சத்திய யுகம், நூறாயிரக்கணக்கான வருடங்களைக் கொண்டது என்று அவர்கள் கூறினாலும், தந்தை கூறுகிறார்: நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை; அது 5000 வருடங்களுக்கான விடயமேயாகும். அவர்கள் மனிதர்களின் 84 பிறவிகளைப் பற்றியும் பேசுகிறார்கள். நாளுக்கு நாள், நீங்கள் ஏணியிலிருந்து தொடர்ந்தும் இறங்கி வரும்பொழுது, தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நிச்சயிக்கப்பட்டுள்ள நாடகத்தில் இதுவும் உள்ளது. நாடகத்தைப் படைப்பவரை, இயக்;குனரை, அல்லது பிரதான நடிகரை அறியாத ஒரு நடிகரைப் பற்றி என்ன கூறப்பட முடியும்? தந்தை கூறுகிறார்: இந்த எல்லையற்ற நாடகத்தை எம் மனிதரும் அறியார. தந்தை வந்து, இதனை விளங்கப்படுத்துகிறார். கூறப்படுகின்றது: ஆத்மாக்கள் சரீரங்களைப் பெற்று, தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள். எனவே இது ஒரு நாடகமாகும்; நாடகத்தின் பிரதான நடிகர்கள் யார்? எவராலும் இதனை உங்களுக்குக் கூறமுடியாது. இந்த எல்லையற்ற நாடகம் எவ்வாறு ஒரு பேனைப் போன்று, தொடர்ந்தும் நகர்ந்து செல்கின்றது என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும்;; அது தொடர்ந்தும் நகர்ந்து செல்கின்றது. வந்து எங்களுக்கு விளங்கப்படுத்தி, அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற, அதிமேலான பாபாவே பிரதானமானவர். சத்தியயுகத்தில் வேறு எவருமில்லை; அங்கு வெகுசிலரே இருக்கிறார்கள். அச் சிலரே அனைவரிலும் அதிகபட்ச பக்தியைச் செய்திருப்பார்கள். அதிகளவு பக்தியைச் செய்துள்ளவர்கள் உங்களின் கண்காட்சிகளுக்கும், அருங்காட்சியகங்களுக்கும் வருவார்கள். சிவனை மாத்திரம் வழிபடுதல், கலப்படமற்ற பக்தி என்று அழைக்கப்படுகின்றது; பின்னர் பலரை வழிபட்டதால், அவர்கள் கலப்படமானவர்கள் ஆகினார்கள். இப்பொழுது பக்தி முற்றிலும் தமோபிரதானாகும். ஆரம்பத்தில் பக்தி சதோபிரதானாக இருந்தது. பின்னர் ஏணியிலிருந்து இறங்கி வரும்பொழுது, நீங்கள் தமோபிரதான் ஆகினீர்கள். உங்கள் நிலைமை அவ்வாறு ஆகும்பொழுது, அனைவரையும் சதோபிரதான் ஆக்குவதற்குத் தந்தை வருகிறார். இப்பொழுதே நீங்கள் இந்த எல்லையற்ற நாடகத்தை அறிந்து கொள்கின்றீர்கள்;. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எல்லையற்ற தந்தையிடமிருந்து, எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். இந்நேரத்தில் தூய்மை என்ற ஆஸ்தியை நீங்கள் பெறும்பொழுதே, அதாவது, நீங்கள் காமத்தை வென்றவர்கள் ஆகும்பொழுதே உங்களால் உலகை வென்றவர்கள் ஆகமுடியும்.2. எல்லையற்ற தந்தையுடன் கற்று, உங்களைச் சிப்பியிலிருந்து ஒரு வைரம் ஆக்குங்கள். எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுங்கள். உங்களை மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆக்குகின்ற தந்தை, உங்கள் முன் நேரடியாக அமர்ந்திருக்கிறார் என்ற போதையைக் கொண்டிருங்கள். இப்பொழுது, இது எங்கள் அதிமேன்மையான பிராமணக் குலமாகும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருப்பதாலும், எப்பொழுதும் முகமலர்ச்சியுடனும் கவலையற்றவராகவும் இருப்பதாலும் இலகு வெற்றியை அனுபவம் செய்வீர்களாக.இலகு வெற்றியே நம்பிக்கையின் அறிகுறியாகும். எவ்வாறாயினும், அனைத்து விடயங்களிலும் நம்பிக்கை இருக்க வேண்டும், தந்தையில் மாத்திரம் நம்பிக்கை என்றில்லாது, சுயத்திலும், பிராமணக் குலத்திலும், நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நம்பிக்கை இருக்க வேண்டும். உங்கள் நம்பிக்கை அற்ப விடயங்களில் அசைவதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது, ஆனால் வெற்றி எனும் நியதியைத் தடுக்க முடியாது எனும் விழிப்புணர்வைச் சதா கொண்டிருக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கையைக் கொண்டுள்ள புத்தியுடைய குழந்தைகள் எப்பொழுதும் “என்ன நடைபெற்றது? அல்லது அது ஏன் நடைபெற்றது?” எனும் அத்தகைய கேள்விகளுக்கு அப்பால் இருக்கின்றார்கள். அவர்கள் எப்பொழுதும் கவலையற்றவராகவும் முகமலர்ச்சியுடையவராகவும் இருக்க வேண்டும்.
சுலோகம்:
நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, உடனடியாக ஒரு தீர்மானத்தை எடுத்து, அனைத்தையும் உறுதியாகத் தீர்மானித்து விடுங்கள்.