16.04.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்களைப் பயிற்சியில் இடுங்கள். ஒரு சத்தியத்தைச் செய்த பின்னர், நீங்கள் அதிலிருந்து விலகிச் செல்லக்கூடாது. கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டாம்.
கேள்வி:
உங்கள் கல்வியின் சாராம்சம் என்ன? நீங்கள் நிச்சயமாக எதனைப் பயிற்சி செய்ய வேண்டும்?
8பதில்:
உங்கள் கல்வி, ஓய்வு ஸ்திதிக்குச் செல்வதற்குரியது. சப்தத்திற்கு அப்பால் செல்வதே இந்தக் கல்வியின் சாராம்சமாகும். தந்தை மாத்திரமே அனைவரையும் வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் வீடு திரும்புவதற்கு முன்னர் சதோபிரதான் ஆகவேண்டும். இதற்கு, ஏகாந்தமான இடத்திற்குச் சென்று, ஆத்ம உணர்வைப் பயிற்சி செய்யுங்கள். சரீரமற்றிருக்கும் பயிற்சி மாத்திரமே ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்கும்.ஓம் சாந்தி.
உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்வதால், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள், இவ்வாறே நீங்கள் அத்தகைய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் இவ்வாறு ஒவ்வொரு கல்பத்திலும் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக ஆகுகிறீர்கள், பின்னர் 84 பிறவிகளை எடுப்பதால் நீங்கள் தமோபிரதான் ஆகுகின்றீர்கள். பின்னர் தந்தை உங்களுக்குக் கற்பித்தலைக் கொடுக்கின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் அவரைப் பக்தி மார்க்கத்திலும் நினைவுசெய்தீர்கள், ஆனால் அந்நேரத்தில் உங்களுடைய புத்தி மேலோட்டமான அறிவையே கொண்டிருந்தது. இப்பொழுது உங்களுடைய புத்தி ஆழமான, சீர்திருத்தப்பட்ட ஞானத்தைக் கொண்டிருக்கின்றது. நீங்கள் தந்தையை நடைமுறை ரீதியில் நினைவுசெய்ய வேண்டும். ஓர் ஆத்மா நட்சத்திரத்தைப் போன்றவர் என்றும், தந்தையும் நட்சத்திரத்தைப் போன்றவர் என்றும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர் மறுபிறவி எடுப்பதில்லை, ஆனால் நீங்கள் மறுபிறவி எடுகின்றீர்கள், அவ்வளவுதான். இதனாலேயே நீங்கள் தமோபிரதான் ஆகவேண்டியிருந்தது. நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மாயை மீண்டும் மீண்டும் உங்களை மறக்கச் செய்கின்றாள். இப்பொழுது நீங்கள் தவறுகள் செய்வதிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தவறுகள் எதனையும் செய்யக்கூடாது. நீங்கள் தொடர்ந்தும் இன்னும் தவறுகள் செய்தீர்களாயின், மேலும் அதிகமாகத் தமோபிரதானாக ஆகுவீர்கள். நீங்கள் வழிகாட்டலைப் பெறுகிறீர்கள்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்களுடைய மின்கலங்களைச் சக்தியூட்டுங்கள், நீங்கள் சதோபிரதானாகி, உலக அதிபதிகள் ஆகுவீர்கள். ஓர் ஆசிரியர் அனைவருக்கும் கற்பிக்கின்றார். மாணவர்கள் வரிசைக்கிரமமாகச் சித்தியடைகின்றார்கள். அவர்கள் பின்னர் வரிசைக்கிரமமாகச் சம்பாதிக்கிறார்கள். நீங்கள் வரிசைக்கிரமமாகச் சித்தியடைந்து, வரிசைக்கிரமமாக உங்களுடைய அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். உலக அதிபதிகளுக்கும், பிரஜைகளுக்கும், பணிப்பெண்களுக்கும், வேலையாட்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது. நல்ல, தகுதியான, கீழ்ப்படிவான, நம்பிக்கை நிறைந்த, நம்பத்தகுந்த மாணவர்கள், நிச்சயமாக ஆசிரியரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார்கள். உங்களுடைய பதிவேடு எவ்வளவுக்குச் சிறந்ததாக இருக்கின்றதோ, நீங்கள் அந்தளவுக்குப் புள்ளிகளைப் பெறுவீர்கள். இதனாலேயே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுகிறார்: எந்தத் தவறுகளையும் செய்யாதீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்தில் தோல்வியடைந்தீர்கள் என எண்ண வேண்டாம். தாங்கள் சேவை செய்யாத காரணத்தினாலேயே தோல்வியடைந்திருக்க வேண்டும் என்பது பலர் இதயத்தில் புகுகின்றது. தந்தை தொடர்ந்தும் உங்களை எச்சரிக்கிறார்: சதோபிரதானாகவும், சத்தியயுகத்தவராகவும் இருந்த நீங்கள் தமோபிரதானாகவும், கலியுகத்தவராகவும் ஆகியுள்ளீர்கள். உலக வரலாறு மீண்டும் ஒருமுறை தொடர்கின்றது. தந்தை உங்களுக்குச் சதோபிரதானாகுவதற்கு மிக இலகுவான வழியைக் காட்டுகிறார். என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் மேலே ஏறும்பொழுது சதோபிரதானாகுவீர்கள். நீங்கள் மெதுவாக மேலே ஏறுவீர்கள், இதனாலேயே நீங்கள் பாபாவை மறக்கக்கூடாது. எவ்வாறாயினும் மாயை உங்களை மறக்கச் செய்கிறாள். அவள் உங்களைக் கீழ்ப்படிவற்றவராக்குகிறாள். தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற வழிகாட்டல்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் சத்தியம் செய்தாலும், பின்னர் அந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை. 'நீங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது, உங்களுடைய சத்தியத்தை மீறுகிறீர்கள்"; எனத் தந்தை உங்களுக்குக் கூறுவார். தந்தைக்குச் சத்தியம் செய்த பின்னர் நீங்கள் அதைப் பயிற்சியில் இடவேண்டும். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தலை வேறு எவராலும் கொடுக்க முடியாது. நிச்சயமாக ஒரு மாற்றம் இருக்க வேண்டும். படமும் மிக நல்லது. பிராமண குலத்தினராகிய நீங்கள் பின்னர் விஷ்ணுவின் குலத்தினராகுவீர்கள். இது புதிய இறை மொழியாகும். நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேறு எவரும் இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்க மாட்டார்கள். தங்களை ஆன்மீக ஸ்தாபனங்கள் என அழைத்துக் கொள்கின்ற ஸ்தாபனங்கள் சில இருக்கின்றன. எவ்வாறாயினும், உங்களுடையதைத் தவிர வேறெந்த ஆன்மீக ஸ்தாபனமும் இருக்க முடியாது. அதிகளவு போலி உள்ளது. இது புதியதொன்றாகும். உங்களிற் சிலரே இருக்கிறீர்கள். வேறு எவராலும் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. முழு மரமும் இருந்தாலும், அதன் அடிமரம் இல்லை. பின்னர், அடிமரம் மாத்திரமே இருக்கும். எந்தக் கிளைகளோ அல்லது சிறுகிளைகளோ இருக்காது. அவை அனைத்தும் முடிவடைந்து விடும். எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற விளக்கத்தைக் கொடுக்கிறார். இப்பொழுது முழு உலகத்திலும் இராவணனின் இராச்சியம் இருக்கிறது. இது லங்காவாகும் (ஒரு தீவு). அந்த லங்கா கடலின் மறுபுறத்தில் இருக்கிறது. எல்லையற்ற உலகமும் கடலில் இருக்கிறது. சுற்றி வர நீர் இருக்கின்றது. அந்த விடயங்கள் எல்லைக்குட்பட்டவை, தந்தை உங்களுக்கு எல்லையற்ற விடயங்களைக் கற்பிக்கிறார். தந்தையொருவரே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது ஒரு கல்வியாகும். உங்களுடைய பெறுபேறுகள் அறிவிக்கப்படும்வரை நீங்கள் கற்பதில் ஈடுபடுகிறீர்கள், பின்னர் நீங்கள் ஒரு தொழிலைப் பெறுகிறீர்கள். உங்களுடைய புத்தி அதிலேயே தொழிற்படுகிறது. தனது கல்வியில் கவனம் செலுத்துவது மாணவரின் கடமையாகும். அமரும்பொழுதும், நடமாடும் பொழுதும், உலாவும்பொழுதும் நீங்கள் நினைவில் இருக்க வேண்டும். இந்தக் கல்வி மாணவர்களாகிய உங்களின் புத்தியில் இருக்கிறது. மாணவர்கள் பரீட்சையில் தோல்வியடையாமல் இருப்பதற்குப்; பரீட்சைக் காலத்தில் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். வீட்டில் சத்தத்தின் காரணமாக அதிர்வுகள் அசுத்தமானவை ஆகையால், அவர்கள் கற்பதற்காகக் குறிப்பாகக் காலையில் பூங்காவிற்குச் செல்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: ஆத்ம உணர்வுடையவராக இருக்கும் பயிற்சியை ஏற்படுத்திக் கொண்டீர்களாயின்;, நீங்கள் மறக்க மாட்டீர்கள். ஏகாந்தமான இடங்கள் பல இருக்கின்றன. ஆரம்பத்தில், நீங்கள் வகுப்பை முடித்துவிட்டு, மலைகளுக்குச் செல்வீர்கள். இப்பொழுது, நாளுக்கு நாள் ஞானம் ஆழமாகச் செல்கிறது. மாணவர்கள் தங்களுடைய இலக்கையும் குறிக்கோளையும் நினைவு செய்கிறார்கள். இந்தக் கல்வி ஓய்வு ஸ்திதிக்குச் செல்வதற்குரியது. ஒரேயொருவரைத் தவிர வேறெவராலும் உங்களுக்குக் கற்பிக்க முடியாது. சாதுக்கள், புனிதர்கள் அனைவரும் உங்களுக்குப் பக்தியைக் கற்பிக்கிறார்கள். தந்தையொருவர் மாத்திரமே உங்களுக்குச் சத்தத்திற்கு அப்பால் இருக்கும் வழியைக் காட்டுகிறார். தந்தையொருவர் மாத்திரமே அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இது இப்பொழுது உங்களுடைய எல்லையற்ற ஓய்வு ஸ்திதி என்பது எவருக்கும் தெரியாது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் அனைவரும் ஓய்வு பெறும் நிலையில் இருக்கிறீர்கள். முழு உலகமும் ஓய்வுபெறும் நிலையில் இருக்கிறது. ஒருவர் கற்கிறாரோ இல்லையோ அனைவரும் வீடு திரும்ப வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகிற்குச் சென்று, அவர்களுடைய சொந்தப் பிரிவுகளுக்குச் செல்வார்கள். உருவாக்கப்பட்ட ஆத்மாக்களின் விருட்சம் அற்புதமானதாகும். இந்த முழு நாடகத்தின் சக்கரமும் நிச்சயமாக மிகச்சரியானது. சிறிதளவு வேறுபாடும் இருக்க முடியாது. முட்கடிகாரமும், சிலிண்டர் (மணல்) கடிகாரமும் இருக்கின்றன. முட்கடிகாரம் மிகச்சரியானது. இங்கும்கூட, சிலருடைய புத்தியின் யோகம் முட்கடிகாரத்தைப் போன்றதாகவும், மற்றவர்களுடையது சிலிண்டர் கடிகாரத்தைப் போன்றும் உள்ளது. சிலரால் சிறிதளவேனும் யோகத்தைக் கொண்டிருக்க முடியாதுள்ளது. அது கடிகாரம் சிறிதளவேனும் தொழிற்படாமல் இருப்பதைப் போன்றதாகும். நீங்கள் முழுமையான முட்கடிகாரத்தைப் போல் ஆகவேண்டும். அப்பொழுது மாத்திரமே நீங்கள் இராச்சியத்திற்குள் செல்வீர்கள், சிலிண்டர் கடிகாரத்தைப் போல் இருப்பவர்கள் பிரஜைகளின் பகுதியினராக ஆகுவார்கள். நீங்கள் ஒரு முட் கடிகாரமாகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். 'பலமில்லியன்களில் கைப்பிடியளவு" எனக் கூறப்படுகிறது. அது இராஜரீக அந்தஸ்தைப் பெறுபவர்களை மாத்திரமே குறிக்கிறது. அவர்களே வெற்றி மாலையில் கோர்க்கப்படுகிறார்கள். உண்மையிலேயே முயற்சி தேவைப்படுகிறது என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நான் உங்களை மீண்டும் மீண்டும் மறக்கிறேன். பாபா விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் எவ்வளவு பலமானவர்கள் ஆகுகிறீர்களோ, அவ்வளவு சக்தியுடன் மாயை உங்களுடன் சண்டையிடுவாள். அவர்கள் மல்யுத்தத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பலமானவர் பலமானவரை இனங்காண்கிறார். இங்கும் அப்படியே. மகாவீரர் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களும் வரிசைக்கிரமமாகவே இருக்கிறார்கள். மாயை மிக நல்ல மகாராத்திகளுக்கு மிகப் பலமான புயல்களைக் கொண்டு வருகிறாள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். 'மாயை உங்களுக்கு எவ்வளவு தொல்லைகளைக் கொடுத்து, புயல்களைக் கொண்டு வந்தாலும், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் தோற்கடிக்கப்படக்கூடாது. உங்களுடைய எண்ணங்களில் புயல்கள் வந்தாலும், நீங்கள் அந்தச் செயல்களைப் பௌதீக அங்கங்களினால் செய்யக்கூடாது. உங்களை விழச் செய்வதற்காக புயல்கள் வருகின்றன. மாயையுடன் யுத்தம் இல்லாவிட்டால், நீங்கள் எவ்வாறு பலமான மல்யுத்த வீரர் என அழைக்கப்பட முடியும்? நீங்கள் மாயையின் புயல்களில் அக்கறை காட்டக்கூடாது. எவ்வாறாயினும், முன்னேறும்பொழுது, நீங்கள் உங்களுடைய பௌதீக அங்கங்களின் ஆதிக்கத்திற்குட்பட்டவராகி, உடனடியாக வீழ்ந்துவிடுகிறீர்கள். இந்தத் தந்தை உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் பௌதீகப் புலனங்கங்களின் மூலம் எந்தப் பாவச் செயல்களையும் செய்யக்கூடாது. நீங்கள் சட்டத்திற்கு முரணான செயல்கள் செய்வதை நிறுத்தாவிட்டால், சில சதங்கள் பெறுமதியான அந்தஸ்தையே பெறுவீர்கள். நீங்கள் தோல்வியடைவீர்கள் என்பதை உள்ளார்த்தமாகப் புரிந்துகொள்கிறீர்கள். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நீங்கள் நினைவுசெய்தால், அந்த நினைவு ஒருபொழுதும் அழியாது. நீங்கள் என்னைச் சிறிதளவு நினைவுசெய்தாலும், சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் என்னைச் சிறிதளவு நினைவுசெய்வதால் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதையும், என்னை அதிகளவு நினைவுசெய்வதால் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள். ஒவ்வொருவரும் எவ்வாறு ஆகுவார்களென்பது தொடர்ந்தும் மறைந்திருக்க முடியாது. உங்களுக்கு இப்பொழுது இதய வழுவல் ஏற்பட்டால் நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதை உங்களாலேயே புரிந்துகொள்ள முடியும். நீங்கள் பாபாவிடமும் வினவலாம். நீங்கள் முன்னேறிச் செல்கையில், இதை நீங்களே புரிந்துகொள்வீர்கள். விநாசம் முன்னே நிற்கிறது. புயல்கள், மழை, இயற்கை அனர்த்தங்கள் முதலியன வருவதற்கு முன்னர் முதலில் அவை உங்களிடம் கூறிவிட்டு வருவதில்லை. இராவணன் ஏற்கனவே இங்கே அமர்ந்துள்ளான். இது மிகப்பெரிய பரீட்சையாகும். சித்தியடைபவர்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள். அரசர்கள் மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும். அதனால் அவர்களால் அவர்களுடைய பிரஜைகளைப் பராமரிக்கக்கூடியதாக இருக்கும். மிகச் சிலரே ஐஊளு பரீட்சையில் சித்தியடைகிறார்கள். தந்தை உங்களுக்குக் கற்பித்து, சுவர்க்கத்தின் சதோபிரதான் அதிபதிகளாக்குகிறார். நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகினீர்கள் என்பதும், நீங்கள் இப்பொழுது தந்தையின் நினைவின் மூலம் சதோபிரதானாக வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் தூய்மையாக்குபவரான தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! இது அதே கீதையின் பாகமாகும். இந்த கீதை இரட்டைக்கிரீடம் உடையவர் ஆகுவதற்கானது. தந்தையே உங்களை அவ்வாறு ஆக்குகிறார். நீங்கள் ஞானம் அனைத்தையும் உங்கள் புத்தியில் கொண்டிருக்கிறீர்கள். புத்திசாலிகளால், நன்றாகக் கிரகிக்கக்கூடியதாக இருக்கும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
இரவு வகுப்பு – 05ஃ01ஃ1969
குழந்தைகளாகிய நீங்கள் இவ் வகுப்பில் அமர்ந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு உங்களுடைய ஆசிரியர் யார் என்று தெரியும். மாணவர்கள் தமது ஆசிரியர் யார் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால் இங்கே நீங்கள் இதனை மறந்து விடுகின்றீர்கள். குழந்தைகள் மீண்டும் மீண்டும் ஆசிரியரை மறந்து விடுவதை அவர் அறிவார். நீங்கள் இத்தகைய ஆன்மீகத் தந்தையை முன்னர் கண்டிருக்கவில்லை. நீங்கள் அவரைச் சங்கமயுகத்திலேயே சந்திக்கின்றீர்கள். கலியுகத்திலும், சத்தியயுகத்திலும் நீங்கள் லௌகீகத் தந்தையரையே கொண்டிருக்கின்றீர்கள். இதுவே குழந்தைகளாகிய நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள்; ஆகுகின்ற சங்கமயுகம் என்பதில் குழந்தைகளாகிய நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். எனவே தந்தையை நினைவுசெய்வதன் மூலம், நீங்கள் மூவரையும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் ஆசிரியரை நினைவு செய்யும்பொழுதும், மூவரையும் நினைவுசெய்ய வேண்டும். குருவை நினைவுசெய்யும்பொழுதும், மூவரையும் நினைவுசெய்ய வேண்டும். இதனை நீங்கள் நிச்சயமாக நினைவுசெய்ய வேண்டும். தூய்மையாகுவதே பிரதான விடயம். தூய்மையானவர்கள் சதோபிரதானானவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் சத்தியயுகத்தில் வாழ்கின்றார்கள். நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள். இப்பொழுது இது சங்கமயுகமாகும். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் தந்தையுடன் வசிக்கின்றீர்கள், அல்லவா? அவரே உண்மையிலேயே முக்திதாமத்திற்கும், ஜீவன்முக்தி தாமத்திற்கும் பாதையைக் காட்டுகின்ற உண்மையான சற்குரு என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாடகத் திட்டத்திற்கேற்ப நாங்கள் முயற்சி செய்து, தந்தையை பின்பற்றுகின்றோம். நாங்கள் இங்கே கற்பித்தல்களைப் பெற்று, அவரைப் பின்பற்றுகின்றோம். இவர் கற்பதைப் போன்றே, குழந்தைகளாகிய நீங்களும் அதேபோன்ற முயற்சியைச் செய்கின்றீர்கள். நீங்கள் தேவர்கள் ஆக வேண்டுமாயின், தூய செயல்களைச் செய்ய வேண்டும். எக் குப்பையும் எஞ்சியிருக்கக்கூடாது. தந்தையை நினைவுசெய்வதே பிரதான விசேடமான விடயம். நீங்கள் தந்தையையும், அவரது கற்பித்தல்களையும், நினைவு யாத்திரையையும் மறக்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். தந்தையை மறப்பதால், நீங்கள் ஞானத்தையும் மறக்கின்றீர்கள். நீங்கள் ஒரு மாணவர் என்பதையும் மறக்கின்றீர்கள். நீங்கள் மூவரையும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்தால், நிச்சயமாக ஆசிரியரையும், சற்குருவையும் நினைவுசெய்வீர்கள். நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்யும்பொழுது உங்களுக்குத் தெய்வீகக் குணங்களும் தேவையாகும். தந்தையின் நினைவில் மந்திர வித்தை (அயபiஉ) உள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கும் மந்திர வித்தையைக் வேறு எவராலும் கற்பிக்க முடியாது. இப்பிறவியிலேயே நாங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்றோம். தமோபிரதான் ஆகுவதற்கு முழுச் சக்கரம் எடுக்கின்றது. நாங்கள் இப்பொழுது இந்த ஒரு பிறவியில் சதோபிரதான் ஆக வேண்டும். ஒவ்வொருவரும் செய்கின்ற முயற்சியிலேயே அது தங்கியுள்ளது. முழு உலகமும் முயற்சி செய்கின்றது என்றல்ல. ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள். சமய ஸ்தாபகர்கள் எவ்வாறு வருகின்றார்கள் என்பதைக் குழந்தைகள் காட்சிகளாகக் கண்டுள்ளனர். அவர்கள் தமது பாகங்களை அந்தந்த ஆடையில் நடித்துள்ளனர். அவர்கள் தமோபிரதான் ஸ்திதிக்குச் செல்கின்றார்கள். நீங்கள் சதோபிரதான் ஆகுவதைப் போன்றே, ஏனைய அனைவரும் இவ்வாறு ஆகுவார்கள் என்பதை உங்கள் புரிந்துணர்வும் கூறுகின்றது. நீங்கள் தந்தையிடமிருந்து தூய்மை என்ற தானத்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அனைவரும் கூவி அழைக்கின்றார்கள்: எங்களை இங்கிருந்து விடுதலை செய்து, எங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். எங்கள் வழிகாட்டி ஆகுங்கள். நாடகத் திட்டத்திற்கு ஏற்ப அனைவரும் வீடு திரும்ப வேண்டும். நீங்கள் பல தடவைகள் வீடு திரும்பியுள்ளீர்கள். சிலர் 5000 வருடங்கள் முழுவதும் வீட்டில் இருப்பதில்லை. சிலர் 5000 வருடங்கள் முழுவதும் வீட்டிலேயே இருக்கின்றார்கள். அவர்கள் இறுதியிலேயே இங்கே வருகிறார்கள். எனவே அவர்கள் 4999 வருடங்கள் அமைதிதாமத்தில் இருந்துள்ளார்கள் என்று கூறப்படுகின்றது. நாங்கள் இவ் உலகில், இந்த பூமியில் 4999 வருடங்கள் இருந்துள்ளோம் என்று நாங்கள் கூறுவோம். நீங்கள் 83 அல்லது 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. மிகவும் திறமைசாலிகள் நிச்சயமாக முதலில் வந்திருப்பார்கள். அச்சா. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு அன்பும், நினைவுகளும், இரவு வந்தனங்களும்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சதோபிரதான் ஆகுவதற்கு, நினைவு யாத்திரை மூலம் உங்கள் மின்கலத்திற்குச் சக்தியூட்டுங்கள். தவறு செய்வதிலிருந்து விடுபடுங்கள். உங்கள் பதிவேட்டை நன்றாக வைத்திருங்கள். தவறுகள் செய்யாதீர்கள்.2. சட்டத்திற்கு முரணான செயல்களைச் செய்யாதீர்கள். மாயையின் புயலையிட்டுக் கவலைப்படாதீர்கள். ஆனால் உங்கள் பௌதீகப் புலன்களை வெற்றி கொள்ளுங்கள். முட்கடிகாரம் (டநஎநச) போன்று மிகச்சரியான முயற்சியைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய உறவுமுறையினதும்; பேறுகளினதும் விழிப்புணர்வில் எப்பொழுதும் சந்தோஷமாக நிலைத்திருக்கின்ற, ஓர் இலகு யோகி ஆவீர்களாக.உங்கள் உறவுமுறையும் பேறுகளுமே இலகு யோகத்திற்கான அடிப்படை ஆகும். ஓர் உறவுமுறையின் அடிப்படையிலேயே அன்பு வளர்கின்றது, எங்கு பேறுகள் இருககின்றனவோ, அங்கு இலகுவில் மனமும் புத்தியும் செல்கின்றன. உங்கள் உறவுமுறையில் “என்னுடையது” எனும் உரிமையுடன் அதனை நினைவுசெய்யுங்கள். உங்கள் இதயத்திலிருந்து “எனது பாபா” என்று கூறுங்கள், உங்கள் விழிப்புணர்வில் தந்தையிடமிருந்து நீங்கள் பெற்றுள்ள சக்திகள், ஞானம், தெய்வீகக் குணங்கள், சந்தோஷம், அமைதி, பேரானந்தம், அன்பு எனும் பொக்கிஷங்கள் வெளிப்படட்டும். இதிலிருந்து எல்லையற்ற சந்தோஷம் இருப்பதுடன், நீங்கள் ஓர் இலகுயோகியாகவும் ஆகுவீர்கள்.
சுலோகம்:
சரீர உணர்வு எதனிலிருந்தும் விடுபட்டவராகுங்கள், அப்பொழுது ஏனைய உறவுமுறைகள் அனைத்தும் இயல்பாகவே முடிவடைந்து விடும்.