10.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் எவ்வளவு நேரம் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ, அதற்கேற்ப ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். இந்த நினைவின் மூலமாகவே நீங்கள் தொடர்ந்தும் தந்தைக்கு நெருக்கமாக வருகிறீர்கள்.
கேள்வி:
நினைவில் நிலைத்திருக்க முடியாத குழந்தைகள் எவ் விடயத்தையிட்டு வெட்கப்படுகின்றார்கள்;?
பதில்:
அவர்கள் நினைவு அட்டவணையை வைத்திருப்பதற்கு மிகவும் வெட்கப்படுகிறார்கள். தாங்கள் உண்மையை எழுதினால் பாபா என்ன கூறுவார் என அவர்கள் அதிசயிக்கின்றார்கள். எவ்வாறாயினும் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் அட்டவணைகளைத் தொடர்ந்தும் நேர்மையுடன் எழுதினால், அதில் உங்களுக்கு நன்மையே உள்ளது. அட்டவணையை எழுதுவதில் பெருமளவு நன்மையுள்ளது. பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, இதனைச் செய்வதற்கு மிகவும் வெட்கப்படாதீர்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே வந்து தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள். இப்பொழுது இங்கு உங்களுக்குச் செய்வதற்கு வேறெதுவும் இல்லை. நீங்கள் இங்கு வந்து தந்தையின் நினைவில் அமர்கின்றீர்கள். பக்திமார்க்கத்தில், உங்களுக்குத் தந்தையின் அறிமுகம் இருக்கவில்லை. இங்கு நீங்கள் தந்தையின் அறிமுகத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நானே குழந்தைகள் அனைவரதும் தந்தை. தந்தையை நினைவுசெய்வதால், நீங்கள் இயல்பாகவே உங்கள் ஆஸ்தியை நினைவுசெய்வீர்கள். நீங்கள் சிறு குழந்தைகள் அல்ல. உங்கள் வயது ஐந்து மாதங்கள் அல்லது இரண்டு மாதங்கள் என்று நீங்கள் எழுதினாலும், உங்கள் பௌதீக அங்கங்கள் பெரியவை. இங்கு நீங்கள் தந்தையினதும், ஆஸ்தியினதும் நினைவில் அமர்ந்திருக்க வேண்டும் என்று ஆன்மீகத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். தற்சமயம் சாதாரண ஆணிலிருந்து நாராயணனாக மாறும் முயற்சியில், சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, இங்கமர்ந்திருக்கும்பொழுது, எவ்வளவு நேரத்திற்கு பாபாவை நினைவுசெய்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுடைய அட்டவணையை எழுதும்பொழுது தந்தை புரிந்துகொள்வார். உங்களில் ஒவ்வொருவரும் எவ்வளவு நேரத்திற்கு நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள் என்பதைத் தந்தை அறிவார் என்றல்ல. உங்கள் சொந்த அட்டவணையிலிருந்து மாத்திரமே நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருந்தீர்களா அல்லது உங்கள் புத்தி வேறு திசைகளில் அலைந்து திரிந்ததா என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். பாபா இப்பொழுது வருவார் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளது, அதுவும் நினைவுசெய்தலே ஆகும். நீங்கள் அவரை எவ்வளவு நேரம் நினைவுசெய்தீர்கள்? உங்கள் அட்டவணையில் நீங்கள் இதனை நேர்மையுடன் எழுத வேண்டும். பொய்யை எழுதுவதால், நீங்கள் நூறு மடங்கு பாவத்தைச் சேர்த்துக் கொள்வதுடன், மேலும் இழப்பும் ஏற்படும். ஆகவே நீங்கள் உண்மையை எழுத வேண்டும். நீங்கள் அவரை அதிகளவு நினைவுசெய்யும்பொழுது, உங்கள் பாவங்கள் அதிகளவில் அழிக்கப்படுவதுடன், தொடர்ந்தும் பாபாவிற்கு அருகாமையில் வருவீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இறுதியில் உங்கள் நினைவு முடிவடையும்பொழுது, நீங்கள் பாபாவிடம் செல்வீர்கள். பின்னர் புதிய உலகில் தங்கள் பாகங்களை நடிப்பதற்குச் சிலர் விரைவாகக் கீழே செல்வார்கள். ஏனையோர், தொடர்ந்தும் மேலேயே இருப்பார்கள். அங்கு உங்களுக்கு எந்த எண்ணங்களும் இருக்க மாட்டாது. அது நீங்கள் சந்தோஷத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் அப்பாற்பட்டிருக்கின்ற முக்திதாமம் ஆகும். நீங்கள் இப்பொழுது சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் பாவங்களும் அழிக்கப்படும். ஒரு நினைவு அட்டவணையை வைத்திருப்பதனால் உங்களால் ஞானத்தை நன்றாகக் கிரகிக்க முடியும். ஓர் அட்டவணையை வைத்திருப்பதனால் மாத்திரமே நன்மை உள்ளது. நீங்கள் நினைவில் நிலைத்திருக்காததாலேயே உங்கள் அட்டவணையை எழுத மிகவும் வெட்கப்படுகின்றீர்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். “பாபா என்ன கூறுவார்?” ஒருவேளை அவர் முரளியில் அனைவருக்கும் கூறுவார். தந்தை கூறுகின்றார்: இதைப் பற்றி வெட்கப்படுதல் என்னும் கேள்வியே கிடையாது. நீங்கள் நினைவு செய்கின்றீர்களா, இல்லையா என்பது உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திற்கும் தெரியும். நன்மை அளிப்பவரான, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் உங்கள் அட்டவணையைக் குறித்துக் கொண்டால் அதில் நன்மை இருக்கும். பாபா வரும்வரை நீங்கள் காத்திருந்து அமர்ந்திருக்கும்பொழுது, உங்கள் நினைவு அட்டவணை எவ்வாறிருந்தது? நீங்கள் வேறுபாட்டைப் பார்க்க வேண்டும். நேசிக்கப்படும் ஒருவர் பெருமளவு நினைவுசெய்யப்படுகின்றார். ஒரு குமாருக்கும் குமாரிக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்படும்பொழுது, தங்களின் இதயங்களில் ஒருவரையொருவர் நினைவுசெய்கின்றார்கள். ஒருவரையொருவர் பார்க்காதிருந்தாலும், தாங்கள் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றோம் என்பது அவர்களுக்குத் தெரியும், திருமணம் செய்தபின்னர், அந்த நினைவு உறுதியாகுகின்றது. சிவபாபாவே உங்கள் எல்லையற்ற தந்தை என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவரை நீங்கள் பார்க்காதிருந்தாலும், அவரை உங்கள் புத்தியினால் புரிந்துகொள்ள முடியும். சரி. அத் தந்தை பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்பட்டவராக இருந்தால் நீங்கள் ஏன் அவரை வழிபடுகின்றீர்கள்? நீங்கள் ஏன் அவரை நினைவுசெய்கிறீர்கள்? பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்ட எதுவும் அல்லது முடிவில்லாத எதுவும் இருக்க முடியாது. நிச்சயமாகப்; பார்க்கக்கூடியதைப் பற்றியே பேச முடியும். உங்களால் ஆகாயத்தைப் பார்க்க முடிவதால், அது முடிவில்லாதது என்று உங்களால் கூறமுடியாது. “ஓ கடவுளே!” எனப் பக்தி மார்க்கத்தில் மக்கள் கடவுளை நினைவுசெய்து கூறுகின்றார்கள். ஆதலால் அவரை நீங்கள் முடிவில்லாதவர் என அழைக்க முடியாது. “ஓ கடவுளே” எனக் கூறுவதனால் உடனடியாகவே நீங்கள் அவரை நினைவுசெய்கின்றீர்கள், எனவே நிச்சயமாக அவர் இருக்கின்றார். ஆத்மாக்களைப் புரிந்துகொள்ள முடியுமே தவிர, அவர்களைப் பார்க்க முடியாது. ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒரேயொரு தந்தையே இருக்கின்றார்;, நீங்களும் அவரை அறிந்துகொள்;ள வேண்டும். தந்தையே வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் நீங்கள் முன்னர் அறிந்திருக்கவில்லை. அவர்கள் கீதையில் கிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். கிருஷ்ணரை இக்கண்களால் பார்க்க முடியும். அவரையிட்டுக் கூறும்பொழுது, அவர் பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றோ அல்லது முடிவில்லாதவர் என்றோ கூறமுடியாது. கிருஷ்ணர் ஒருபொழுதும் கூறுவதில்லை: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அவர் உங்கள் முன்னிலையில் உள்ளார். அவரை பாபா என அழைக்கவும் முடியாது. தாய்மார்கள் கிருஷ்ணரை ஒரு சிறு குழந்தையாகவே கருதி, அவரைத் (அவரது விக்கிரகத்தை) தங்கள் மடிகளில் அமர வைக்கின்றார்கள். கிருஷ்ணரின் பிறந்த நாள் அன்று அவர்கள் அவரைத் தொட்டிலில் இட்டு ஆட்டுகின்றார்கள். அவர் எப்பொழுதும் சிறு குழந்தையாகவே இருக்கின்றாரா? அவர் நடனமாடுவதாகவும் காட்டியுள்ளதால், அவர் நிச்சயமாகச் சிறிது வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். அவர் வளர்ந்து பெரியவராகினாரோ அல்லது அவருக்கு என்ன நிகழ்ந்தது என்றோ அல்லது அவர் எங்கு சென்றார் என்றோ எவருக்குமே தெரியாது. அவர் எப்பொழுதும் ஒரு சிறிய சரீரத்தைக் கொண்டிருந்திருக்க முடியாது. இவ்விடயங்களைப் பற்றி மக்கள் சிந்திப்பதே இல்லை. இவ் வழிபாட்டு முறையே தொடர்கின்றது. அவர்கள் எவருக்கும் எந்த ஞானமும் இல்லை. கம்சன் என்ற அசுர அரசனின் உலகில் கிருஷ்ணர் பிறப்பெடுப்பதாக அவர்கள் காட்டுகிறார்கள். இப்பொழுது அசுர அரசனான கம்சனின் தேசம் என்ற கேள்வியே கிடையாது. எவருமே இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. கிருஷ்ணர் எங்கும் பிரசன்னமாகியிருப்பதாகப் பக்தர்கள் கூறுகின்றார்கள், பின்னர் அவர்கள் அவரை நீராட்டி, அவருக்கு உணவும் ஊட்டுகின்றார்கள். அவர் இப்பொழுது (கிருஷ்ணரின் விக்கிரகம்) எதையும் உண்பதில்லை. அவர்கள் அவரது விக்கிரகத்திற்கு முன்னால் உணவு அனைத்தையும் படைத்த பின்னர் தாங்களே அதனை உண்கின்றார்கள். அதுவும் பக்தி மார்க்கமே. அவர்கள் ஸ்ரீநாத் ஆலயத்தில் அதிகளவு போக் (பிரசாதம்) படைத்தபொழுதிலும் அவர் அதில் எதையும் உண்பதில்லை. அதனைப் படைப்பவர்களே அதனை உண்கின்றார்கள்! இறைவியர்கள் வழிபாட்டிலும் அவர்கள் அதே விடயங்களையே செய்கின்றார்கள். அவர்கள் இறைவியர்களின் விக்கிரகங்களைச் செய்து, அவற்றை வழிபட்ட பின்னர், அவற்றை நீரினுள் மூழ்கடிக்கிறார்கள். அவர்கள் விக்கிரகங்களில் உள்ள ஆபரணங்களை அகற்றிய பின்னர் அவற்றை நீரினுள் மூழ்கடிக்கிறார்கள். பின்னர் அங்குள்ள பலர் தங்களால் எடுக்கக்கூடிய அனைத்தையும் எடுத்துச் செல்கின்றார்கள். இறைவியர்களே அதிகளவில் வழிபடப்படுகின்றனர். அவர்கள் இலக்ஷ்மி, துர்க்கா ஆகிய இருவரின் சிலைகளைச் செய்கின்றார்கள். சிரேஷ்ட தாயும் இங்கே உள்ளார். அவரைப் பிரம்மபுத்திரா (பிரம்மாவின் குழந்தை) என அழைக்கின்றார்கள். அவர்கள் அவரது இப் பிறப்பின் ரூபத்தையும், அவரது எதிர்கால ரூபத்தையும் வழிபடுகின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இது அத்தகையதோர் அற்புதமான நாடகம்! இவ்விடயங்களைச் சமயநூல்களில் குறிப்பிட முடியாது. இது நடைமுறைரீதியான செயலாகும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடம் ஞானம் உள்ளது. உருவாக்கப்பட்டுள்ள உருவங்களில் அதிகமானவை ஆத்மாக்களுடையதே என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். உருத்திர யாகம் உருவாக்கப்படும்பொழுது நூறாயிரக்கணக்கான சாலிகிராம்களும் உருவாக்கப்படுகின்றன. அவர்கள் ஒருபொழுதும்; நூறாயிரக்கணக்கான இறைவியர்களின் உருவங்களை உருவாக்குவதில்லை. எனினும் வழிபடுபவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்களோ, அத்தனை இறைவிகளின் விக்கிரகங்களை உருவாக்குவார்கள், ஆனால்; அதேநேரத்தில் அவர்கள் நூறாயிரக்கணக்கான சாலிகிராம்களை உருவாக்குகின்றார்கள். அதற்காக அவர்கள் ஒரு நிச்சயிக்கப்பட்ட நாளையோ அல்லது ஒரு மங்களகரமான நேரத்தையோ கொண்டிருப்பதில்லை. எவ்வாறாயினும் இறைவியரை வழிபடுவதற்கு அவர்களிடம் ஒரு நிர்ணயிக்கப்பட்ட நேரம் உள்ளது. உருத்திரரதும், சாலிகிராம்களினதும் யாகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு வியாபாரி கொண்டிருக்கும்பொழுது அவர் ஒரு பிராமணப் புரோகிதரை வரவழைக்கின்றார். ஒரேயொரு தந்தையே உருத்திரர் என அழைக்கப்படுகின்றார். உருத்திரருடன் அவர்கள் பல சாலிகிராம்களையும் உருவாக்குகின்றனர், அவ்வியாபாரிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான சாலிகிராம்களை உருவாக்குமாறு அவர்களிடம்; கூறினாலும், அவர்களிடம் அதற்கான ஒரு நிர்ணயிக்கப்பட்ட நேரமோ அல்லது ஒரு திகதியோ இல்லை. அவர்கள் சிவஜெயந்தியில் உருத்திரரை வழிபடுகிறார்கள் என்றில்லை. இல்லை. பொதுவாக அவர்கள் வியாழக்கிழமையையே மங்களகரமான தினம் என நிர்ணயித்துள்ளார்கள். தீபாவளியில் அவர்கள் ஒரு தட்டில் இலக்ஷ்மியின் விக்கிரகத்தை வைத்து அதனை வழிபட்ட பின்னர் அதனை அகற்றி விடுகின்றார்;கள். அது இரட்டை ரூபமான, மகாலக்ஷ்மி என அழைக்கப்படுகின்றது. இவ்விடயங்களைப் பற்றி மக்களுக்குத்; தெரியாது. இலக்ஷ்மி எங்கிருந்து பணத்தைப் பெற முடியும்;? அவருக்கு ஒரு பங்காளி தேவை. இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் ஒரு தம்பதியர், அவர்களுக்கு மகாலக்ஷ்மி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இறைவியர்கள் எப்பொழுது தோன்றினார்கள்? மகாலக்ஷ்மி எப்பொழுது தோன்றினார்? இவ்விடயங்கள் எதையும் மக்கள் அறிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்கள் அனைவராலும் இவ்விடயங்களை ஒரேயளவிற்குக் கிரகிக்க முடியாதுள்ளது. பாபா அதிகளவிற்கு விளங்கப்படுத்திய பின்னர் வினவுகின்றார்: நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்கின்றீர்களா? நீங்கள் ஆஸ்தியை நினைவு செய்கின்றீர்களா? இதுவே பிரதான விடயம். அவர்கள் பக்தி மார்க்கத்தில் அதிகளவு பணத்தை வீணாக்குகின்றார்கள். இங்கு, உங்கள் ஒரு சதமேனும் வீணாக்கப்படுவதில்லை. செழிப்பானவர் ஆகுவதற்காகவே நீங்கள் சேவை செய்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் பெருமளவு பணத்தைச் செலவழிக்கிறார்கள், அவர்கள் கடனாளிகள் ஆகுகின்றார்கள். அனைத்தும் மண்ணோடு மண்ணாகுகின்றது. இதில் அத்தகைய பெருமளவு வேறுபாடு உள்ளது. இந்நேரத்தில், நீங்கள் எதனைச் செய்தாலும் இறை சேவைக்காக சிவபாபாவிடம் கொடுக்கின்றீர்கள். சிவபாபா எதையும் உண்பதில்லை. நீங்களே அதனை உண்கின்றீர்கள். பிராமணர்களாகிய நீங்களே இடையில் உள்ள நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். நீங்கள் எதையும் பிரம்மாவிற்குக் கொடுப்பதில்லை. நீங்கள் சிவபாபாவிற்கே கொடுக்கின்றீர்கள். சிலர் கூறுகின்றார்கள்: பாபா, உங்களுக்காக நான் ஒரு வேஷ்டியும், சட்டையும் கொண்டு வந்துள்ளேன். பாபா கூறுகின்றார்: நீங்கள் இவருக்குக் கொடுப்பதனால் எதையும் சேகரிக்க மாட்டீர்கள். நீங்கள் சிவபாபாவின் நினைவில் இவருக்குக் கொடுக்கும்பொழுது மாத்திரமே சேகரிப்பீர்கள். சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்தே பிராமணர்கள் பராமரிக்கப்படுகின்றார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்ன அனுப்ப வேண்டும் என்று பாபாவிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் எதையும் பெற மாட்டார். பிரம்மாவை நினைவுசெய்வதனால், நீங்கள் எதையும் சேகரிக்க மாட்டீர்கள். பிரம்மாவும் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்தே பெற வேண்டும் என்பதால் அவர் சிவபாபாவை மாத்திரமே நினைவுசெய்வார். உங்களிடமிருந்து அவர் ஏன் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஒரு பிரம்மகுமாருக்கு அல்லது பிரம்மகுமாரிக்குக் கொடுப்பதும் பிழையாகும். நீங்கள் ஒருவரிடமிருந்து எதையாவது ஏற்றுக் கொண்டு, அதை அணிந்தால் சதா அந்த நபரையே நினைவுசெய்வீர்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அது சிறியதாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் அது மிக நன்றாக இருந்தால், அது அந்த நபரையே மேன்மேலும் உங்களுக்கு நினைவூட்டும். “எனக்கு இன்னார் இதனைக் கொடுத்தார்”. அவர்கள் எதையும் சேகரித்துக்கொள்ள மாட்டார்கள், அது ஓர் இழப்பு ஆகுகிறது. சிவபாபா கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். எனக்கு ஆடைகள் போன்ற எதுவுமே தேவையில்லை. குழந்தைகளுக்கே ஆடைகள் போன்றவை தேவை. அவர்கள் அவற்றைச் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்தே பெறுவார்கள். எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. இவருக்கு சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்து பெறும் உரிமை உள்ளது. இவருக்கு இராச்சியத்திற்கான உரிமையும் உள்ளது. தந்தையின் வீட்டிலேயே குழந்தைகளாகிய நீங்கள் உண்டு, பருகுகிறீர்கள். நீங்கள் சேவையும் செய்து, ஒரு வருமானத்தையும் ஈட்டுகின்றீர்கள். நீங்கள் அதிகளவு சேவை செய்தால், அதிகளவு வருமானத்தை ஈட்டுகின்றீர்கள். நீங்கள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்தே உண்டு, பருகுகிறீர்கள். நீங்கள் அவருக்குக் கொடுக்காவிட்டால் எதையும் சேகரிக்க மாட்டீர்கள். நீங்கள் சிவபாபாவிற்கு மாத்திரமே கொடுக்க வேண்டும். பாபா, உங்கள் மூலம் நாங்கள் எங்களின் எதிர்கால 21 பிறவிகளுக்குப் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுவோம். எங்கள் பணம் முடிவடைந்து விடும். எனவே நாங்கள் சக்திவாய்ந்தவராக உள்ள ஒரேயொருவருக்கே கொடுக்கின்றோம். தந்தை சக்திவாய்ந்தவர். அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு அனைத்தையும் கொடுக்கின்றார். மக்கள் கடவுளின் பெயரால் மறைமுகமாகவும் கொடுக்கின்றார்கள். எதையும் மறைமுகமாகக் கொடுப்பதால் அந்தளவு சக்தி இருப்பதில்லை. அவர் நேரடியாக உங்கள் முன்னிலையில் இருப்பதனால் நீங்கள் இப்பொழுது பெருமளவு சக்தியைப் பெறுகின்றீர்கள். உலக சர்வ சக்திவான் இப்பொழுது உள்ளார். நீங்கள் கடவுளின் பெயரால் எதையாவது தானம் செய்யும்பொழுது, தற்காலிகமாக எதையாவது பிரதிபலனாகப் பெறுகின்றீர்கள். இங்கே தந்தையே உங்கள் முன்னிலையில் நேரடியாக இருக்கிறார், அவரே அனைத்தையும் கொடுப்பவர் என்பதையும் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவரும் அனைத்தையும் சிவபாபாவிற்கே கொடுத்து, அதற்குப் பதிலாக முழு உலக இராச்சியத்தையும் பெற்றார். இந்தச் சரீரதாரியின் மூலமே நீங்கள் அவ்யக்த ரூபத்தின் காட்சிகளைக் கண்டீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சிவபாபா இவரினுள் பிரவேசித்துக் குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றார். மனிதர்களிடமிருந்து எதனையும் பெற விரும்பும் எண்ணத்தை நீங்கள் ஒருபொழுதும் கொண்டிருக்கக்கூடாது. அவர்களிடம் கூறுங்கள்: அதனை சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திற்கு அனுப்புங்கள். இவருக்குக் கொடுப்பதனால், நீங்கள் எதனையும் அதற்குப் பிரதிபலனாகப் பெறமாட்டீர்கள். நீங்கள் மேலும் அதிகளவு இழப்பையே அடைவீர்கள். ஒருவர் ஏழையாக இருந்தால், அவர் ஒருவேளை மூன்று முதல் நான்கு ரூபாய்கள் வரை பெறுமதியானதையே கொடுப்பார். ஆனால் அவர் அதனைச் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இடுவாராயின், அதற்குப் பதிலாக அவர் பல மில்லியன்களைப் பெறுவார். நீங்கள் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தக்;கூடாது. இறைவிகளே பொதுவாக வழிபடப்படுகின்றனர். ஏனெனில் இறைவிகளாகிய நீங்களே ஞானத்தைக் கொடுப்பதற்குக் கருவிகள் ஆகுகின்றீர்கள். சகோதரர்களும் விளங்கப்படுத்தினாலும், பொதுவாகத் தாய்மார்களே ஆசிரியர்கள் ஆகி, பிறருக்கு இப்பாதையைக் காட்டுகின்றார்கள். இதனாலேயே இறைவிகளே அதிகளவு நினைவுகூரப்பட்டார்கள். இறைவிகள் அதிகளவு வழிபடப்படுகின்றனர். நீங்கள் அரைக்கல்பத்திற்குப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்;கின்றீர்கள். முதலில், நீங்கள் முழுமையாகப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் இரண்டு கலைகளை இழந்ததால், நீங்கள் அரைவாசி பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகினீர்கள். திரேதாயுகம் இராம வம்சம் என அழைக்கப்படுகின்றது. அவர்கள் நூறாயிரக்கணக்கான வருடங்கள் பற்றிப் பேசுவதால், எதனையும் கணக்கிட முடியாதுள்ளது. குழந்தைகளாகிய உங்களது புத்திக்கும், பக்தி மார்க்கத்திற்குரியவர்களின் புத்திக்கும் இடையில் பகலுக்கும் இரவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது. உங்களுக்கு இறை புத்தி உள்ளது, ஆனால் அவர்களோ அசுர புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த முழுச் சக்கரமும் 5000 வருடங்களுக்கானது என்பதும், அது தொடர்ந்தும் சுழல்கின்றது என்பதும் உங்கள் புத்தியில் உள்ளது. இரவில் இருப்பவர்கள் அது நூறாயிரக்கணக்கான வருடங்களுக்குரியது என்றும், பகலில் இருப்பவர்கள் அது 5000 வருடங்களுக்குரியது என்றும் கூறுகின்றார்கள். அரைக்கல்பத்திற்கு நீங்கள் பக்தி மார்க்கத்தில் பொய்யான விடயங்களையே கேட்டீர்கள். அத்தகைய விடயங்கள் சத்தியயுகத்தில் இருக்க மாட்டாது. அங்கே, நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் நேரடியாகக் கட்டளைகளைப் பெறுகின்றீர்கள். இதுவே ஸ்ரீமத் பகவத் கீதை. ‘ஸ்ரீமத்’ என்ற வார்த்தை வேறெந்தச் சமயநூலிலும் குறிப்பிடப்படவில்லை. இந்தக் கீதையின் யுகமான, அதி மங்களகரமான சங்கமயுகம் ஒவ்வொரு 5000 வருடங்களும் வருகின்றது. அது நூறாயிரக்கணக்கான வருடங்களுக்குரியது என்ற கேள்விக்கே இடமில்லை. சங்கமயுகத்தைப் பற்றி, வருகின்ற எவருக்கும் விளங்கப்படுத்துங்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்குப் படைப்பவரது, அதாவது, அவரைப் பற்றியும் அவரது படைப்பைப் பற்றியுமான அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். அப்பொழுதும், அவர் கூறுகின்றார்: அச்சா, தந்தையை நினைவுசெய்யுங்கள்! உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாதிருந்தால், உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதால் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. 21 பிறவிகளுக்கு, பல மில்லியன்கள் வருமானத்தைச் சேகரிப்பதற்கு உங்களிடமுள்ள அனைத்தையும் ஒரு தகுதிவாய்ந்த முறையில் நேரடியாக, இறை சேவைக்குப் பயன்படுத்துங்கள். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகி, சிவபாபாவின் பெயரால் சேவை செய்யுங்கள்.2. நீங்கள் நினைவில் அமர்ந்திருக்கும்பொழுது, உங்கள் புத்தி எங்கு செல்கின்றது என்று சோதியுங்கள். உங்கள் நினைவிற்கான ஓர் உண்மையான அட்டவணையை வைத்திருங்கள். சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கு, தந்தையினதும், உங்கள் ஆஸ்தியினதும் நினைவில் நிலைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஆசைகளின் அறிவையே அறியாதவராகி, உங்கள் அழிவற்ற பேறுகளின் விழிப்புணர்வு மூலம் உங்கள் மேன்மையான பாக்கியம் எனும் சந்தோஷத்தில் நிலைத்திருப்பீர்களாக.
பாக்கியத்தை அருள்பவரையே தங்கள் தந்தையாகக் கொண்டுள்ளவரின் பாக்கியம் எத்தகையதாக இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள்! அந்தப் பாக்கியம் உங்கள் பிறப்புரிமை எனும் சந்தோஷத்தை எப்பொழுதும் கொண்டிருங்கள். “ஆகா, எனது மேன்மையான பாக்கியம்! ஆகா, பாக்கியத்தை அருள்பவராகிய தந்தையே!” இப் பாடலைத் தொடர்ந்தும் பாடிச் சந்தோஷத்தில் பறவுங்கள். உங்களுடன் பல பிறவிகளுக்கு இருக்கின்ற அழிவற்ற பொக்கிஷத்தை நீங்கள் பெற்று விட்டீர்கள். அதனை எவராலும் உங்களிடமிருந்து அபகரிக்கவோ அல்லது கொள்ளையடிக்கவோ முடியாது. உங்களுக்கு ஆசைகள் இல்லாதிருப்பதே அத்தகைய பெரும் பாக்கியம். நீங்கள் பேறுகள் அனைத்தையும் பெற்றுள்ளதால், மனச் சந்தோஷத்தை கண்டு விட்டீர்கள். எதுவுமே குறைவாக இல்லை, எனவே நீங்கள் ஆசைகளின் அறிவையே அறியாதவர்கள் ஆகுகின்றீர்கள்.சுலோகம்:
பாவச்செயல்களைச் செய்கின்ற காலம் கடந்து விட்டது, ஆனாலும் இன்னமும் வீணான எண்ணங்களும், வார்த்தைகளும் உங்களைப் பெருமளவு ஏமாற்றுகின்றன.