26.09.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் நடத்தையைச் சீராக்குவதற்காக நீங்கள் தந்தையிடம் வந்திருக்கிறீர்கள். உங்கள் நடத்தையை நீங்கள் இப்பொழுது தெய்வீகமானதாக்க வேண்டும்.

கேள்வி:
ஏன் உங்கள் கண்களை மூடியவாறு இங்கே அமர்ந்திருப்பதற்கு குழந்தைகளாகிய நீங்கள் அனுமதிக்கப்படுவதில்லை?

பதில்:
ஒரே பார்வையில் உங்களை அப்பால் அழைத்துச் செல்கின்ற தந்தை இங்கே உங்கள் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கின்றார் என்பதாலாகும். உங்கள் கண்கள் மூடியிருந்தால், உங்களால் எவ்வாறு ஒரே பார்வையில் அப்பால் செல்லமுடியும்? பாடசாலையில் நீங்கள் கண்களை மூடியவாறு அமர்வதில்லை. உங்கள் கண்களை நீங்கள் மூடினால் சோம்பல் வந்துவிடும். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பாடசாலையில் கற்கின்றீர்கள். இது உங்கள் வருமானத்திற்கான மூலாதாரமாகும். நீங்கள் நூறாயிரக் கணக்கான மில்லியன் வருமானத்தை ஈட்டுகிறீர்கள். ஒரு வருமானத்தைச் ஈட்டும் போது சோம்பலும், துன்பமும் இருக்க முடியாது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்குத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆன்மீகத் தந்தை பரந்தாமத்தில் இருந்து வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார்? அவர் ஆத்மாக்களுக்கு தந்தையுடன் யோகம் செய்வதற்குக் கற்பிக்கின்றார். இது நினைவு யாத்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. தந்தையை நினைவு செய்வதன் மூலம், இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் தூய்மையாகி அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கம் மிகவும் இலகுவானதாகும். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி எல்லையற்ற தந்தையாகிய உங்கள் அன்பிற்கினியவரை நினைவு செய்தால், பிறவி பிறவியாக நீங்கள் செய்த பாவங்கள் தொடர்ந்தும் அழிக்கப்படும். இதுவே யோக அக்கினி என அழைக்கப்படுகின்றது. இதுவே தந்தை 5000 வருடங்களுக்கு ஒருமுறை வந்து கற்பிக்கின்ற, பாரதத்தின் புராதன இராஜயோகமாகும். எல்லையற்ற தந்தை பாரதத்திற்கு வந்து, இந்த சாதாரண சரீரத்தில் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்த நினைவின் மூலமாகவே உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படுகின்றன, ஏனெனில் தந்தையே தூய்மையாக்குபவரும், சர்வசக்திவானும் ஆவார். ஆத்மாக்களாகிய உங்களின் பற்றரிகள் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டன. உங்கள் வீடான பரந்தாமத்திற்கு நீங்கள் சென்று பின்னர் சதோபிரதான் உலகிற்குச் செல்ல வேண்டுமாயின், சதோபிரதானாக இருந்த உங்கள் பற்றரிகளை நீங்கள் மீண்டும் எவ்வாறு சதோபிரதான் ஆக்க முடியும்? குழந்தைகளாகிய நீங்கள் இதனை மிக நன்றாக நினைவு செய்ய வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கின்றார். நீங்கள் நடந்து திரியும்பொழுதும், அமர்ந்திருக்கும்பொழுதும் இந்த நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கலாம். உங்கள் குடும்பத்துடன் வீட்டில் இருங்கள். உங்களால் இயன்றவரை ஒரு தாமரை மலர் போல் தூய்மையாக இருங்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்வதுடன் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். ஏனெனில் உலகிலுள்ள மக்கள் அசுர நடத்தையைக் கொண்டிருக்கின்றார்கள். உங்கள் நடத்தையை தெய்வீகமானதாக்குவதற்கே குழந்தைகளாகிய நீங்கள் இங்கே வந்திருக்கின்றீர்கள். இலக்ஷ்மி நாராயணனின் நடத்தை மிகவும் இனிமையானதாகும். அவர்களே பக்திமார்க்கத்தில் புகழப்படுகிறார்கள். எவ்வாறாயினும், எப்பொழுது பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது என்பதனை எவருமே அறியமாட்டார்கள். நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இராவண இராச்சியம் எப்பொழுது ஆரம்பமாகிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஆன்மீகத் தந்தையான ஞானக்கடலின் குழந்தைகள் என்பதனை அறிந்திருப்பதால் குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானம் முழுவதையும் உங்கள் புத்தியில் கொண்டிருக்க வேண்டும். ஆன்மீகத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிப்பதற்கே வருகின்றார். தந்தை சாதாரணமான ஒருவர் அல்ல என்பதும் உங்களுக்குத் தெரியும். அவர் ஆன்மீகத் தந்தை, உங்களுக்குக் கற்பிப்பதற்காகவே வந்திருக்கின்றார். அவர் எப்பொழுதும் பிரம்மலோகத்தில் வசிக்கின்றார். ஆனால் அனைவரினதும் லௌகீத் தந்தையர் இங்கேயே வாழ்கின்றார்கள். பரமாத்மா பரமதந்தையான எல்லையற்ற தந்தையே ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதில் நீங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில், மக்கள் பௌதீகத் தந்தையரைக் கொண்டிருந்தாலும், அவர்கள் பரமாத்மா பரமதந்தையையே கூவியழைக்கின்றார்கள். அவரின் மிகச்சரியான பெயர் சிவன் ஆகும். தந்தை தானே விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் சிவன் என்ற ஒரு பெயரை மாத்திரமே கொண்டிருக்கின்றேன். அவர்கள் அவரின் பெயரில் பல ஆலயங்களைக் கட்டி அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்திருந்தாலும் அவை யாவும் பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்களாகும். எனது மிகச்சரியான ஒரே பெயர் சிவன் என்பதாகும். குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மாக்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். உங்களை சாலிகிராம்கள் என அழைப்பதிலும் எந்தத் தவறும் இல்லை. பல சாலிகிராம்கள் இருக்கின்றனர். ஒரேயொரு சிவன் மட்டுமே உள்ளார். அவர் எல்லையற்ற தந்தையும், ஏனைய அனைவரும், குழந்தைகளும் ஆவார்கள். முன்னர், நீங்கள் உங்கள் எல்லைக்குட்பட்ட தந்தையுடன் வாழ்ந்த எல்லைக்குட்பட்ட குழந்தைகளாக இருந்தீர்கள். நீங்கள் ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை, ஆயினும் நீங்கள் பல வகையான பக்தியைச் செய்தீர்கள். நீங்கள் அரைக் கல்பத்திற்கு பக்தி செய்தீர்கள். துவாபர யுகத்துடன் பக்தி மார்க்கம் ஆரம்பமாகியது. அப்பொழுதே இராவண இராச்சியமும் ஆரம்பமாகியது. இது மிகவும் இலகுவான விடயமாயினும், மக்கள் இந்த இலகுவான விடயத்தை அறிந்துகொள்வதைச் சிரமமாகக் கருதுகின்றார்கள். இராவண இராச்சியம் எப்பொழுது ஆரம்பமாகியது என்பது எவருக்கும் தெரியாது. தந்தை மாத்திரமே ஞானக் கடல் என்பது இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் தன்னிடம் உள்ளவற்றைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுப்பதற்காகவே வருகின்றார். சமயநூல்கள் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை. ஞானம், பக்தி, ஆர்வமின்மை என்பன உள்ளன என்பதனை நீங்கள் இ;ப்பொழுது அறிந்துள்ளீர்கள். இவையே மூன்று பிரதான விடயங்களாகும். சந்நியாசிகளும் ஞானம், பக்தி, ஆர்வமின்மை என்பவற்றை அறிந்துகொண்டிருந்தாலும், அவர்கள் கொண்டிருக்கும் ஆர்வமின்மை எல்லைக்குட்பட்டது. அவர்களால் எல்லையற்ற ஆர்வமின்மையைக் கற்பிக்க முடியாது. இரு வகையான ஆர்வமின்மை உள்ளது. ஒன்று எல்லைக்குட்பட்டது, மற்றையது எல்லையற்றதாகும். ஒன்று ஹத்த யோகிகளின் ஆர்வமின்மை, மற்றையது எல்லையற்ற ஆர்வமின்மையாகும். உங்களுடையது இராஜயோகமாகும். அவர்களோ தமது வீடு, வியாபாரம் போன்றவற்றை விட்டு வெளியேறி காடுகளில் வாழும் சந்நியாசிகள் ஆவார்கள். அந்த ஹத்த யோகிகள், தூய்மையாக இருப்பதற்காக தமது வீடு வியாபாரம் போன்றவற்றைத் துறக்கிறார்கள். அதுவும் நல்லதே. தந்தை கூறுகிறார்: பாரதம் மிகவும் தூய்மையாக இருந்தது. இதனைப் போன்று தூய்மையாக வேறெந்த நாடும் இருக்கவில்லை. பாரதத்தின் புகழ் மிகவும் மேன்மையானதாகும். பாரத மக்களுக்கே இது தெரியாது. தந்தையை மறப்பதால் நீங்கள் அனைத்தையும் மறக்கின்றீர்கள். அதாவது, நீங்கள் நாஸ்திகர்களாகவும் அநாதைகளாகவும் ஆகுகின்றீர்கள். சத்திய யுகத்தில் அதிகளவு அமைதியும் சந்தோஷமும் உள்ளது. இப்பொழுது, அதிகளவு அமைதியின்மையும், துன்பமும் உள்ளது. எவ்வாறாயினும் பரந்தாமம் அமைதிதாமம் ஆகும். அங்கேயே ஆத்மாக்களாகிய நாங்கள் வாழ்கின்றோம். ஆத்மாக்கள் தமது எல்லையற்ற பாகத்தை நடிப்பதற்காக வீட்டிலிருந்து கீழே வருகின்றார்கள். இது எல்லையற்ற தந்தை உங்களை புதிய உலகிற்கு அழைத்துச் செல்வதற்காக வருகின்ற மங்களகரமான சங்கமயுகமாகும். தந்தை வந்து உங்களை அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். கடவுளே அதி மேலானவர் என அழைக்கப்படுகின்றார். எவ்வாறாயினும், அவர் யார் என்பதையோ, யாரைக் கடவுள் என அழைப்பது என்பதையோ எவருமே அறியாதிருக்கின்றார்கள். அவர்கள் பெரியதொரு லிங்கத்தின் விக்கிரகத்தை வைத்து, அதனையே அசரீரியான கடவுள் என நம்புகின்றார்கள். அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை என்பதனை அவர்கள் எவருமே அறிந்திருக்கவில்லை. அவர்கள் அவரையே வழிபடுகின்றார்கள். அவர்கள் எப்பொழுதும் 'சிவபாபா" என அழைக்கின்றார்கள். அவர்கள் 'உருத்திர பாபா" என்றோ 'பபுல்நாத் பாபா" என்றோ அழைப்பதில்லை. நீங்களும் எழுதுகின்றீர்கள்: நீங்கள் சிவபாபாவை நினைவு செய்கின்றீர்களா? உங்கள் ஆஸ்தியை நீங்கள் நினைவு செய்கின்றீர்களா? உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் மாட்டி வைக்க வேண்டிய சுலோகம்: சிவபாபாவை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழியும். ஏனெனில் ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவார். இந்தத் தூய்மையற்ற உலகில் உள்ள ஒருவரேனும் தூய்மையானவராக இருக்கமுடியாது. தூய்மையான உலகில் எவரேனும் தூய்மையற்றவராக இருக்க முடியாது. சமய நூல்களில் எல்லா இடங்களிலும் தூய்மையற்றவர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. இராவணன் திரேதாயுகத்தில் இருந்தார் என்றும் சீதை கடத்தப்பட்டார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் கம்சன், ஜரசந்தன், ஹிரணியன் (அசுரர்களின் பெயர்கள்) போன்றவர்களையும் கிருஷ்ணருடன் காட்டியுள்ளார்கள். அவர்கள் கிருஷ்ணர் மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்கள். அவை எதுவுமே சத்தியயுகத்தில் இருக்க முடியாது. அவர்கள் பொய்யாக அவர்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். அவர்கள் கடவுளையும் தேவர்களையும் இழிவுபடுத்தியுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்தும் அனைவரையும் அவதூறு செய்கின்றார்கள். ஆகையால், தந்தை இப்பொழுது கூறுகின்றார்: இந்த நினைவு யாத்திரை ஆத்மாக்களைத் தூய்மைப்படுத்துவதற்காகும். நீங்கள் தூய்மையாகிய பின்னரே நீங்கள் தூய உலகிற்குச் செல்ல வேண்டும். தந்தை 84 பிறவிச் சக்கரத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இது இப்பொழுது உங்கள் இறுதிப் பிறவியாகும். நீங்கள் திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும். உங்கள் சரீரம் வீடு திரும்பாது. ஆத்மாக்கள் மாத்திரமே வீடு திரும்புவார்கள். ஆகையால், இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, இங்கே நீங்கள் அமர்ந்திருக்கும் பொழுது, உங்களை சரீரங்கள் என்றல்லாது, ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். ஏனைய சத்சங்கங்களில் நீங்கள் சரீர உணர்வுடனேயே அமர்ந்திருக்கின்றீர்கள். இங்கே. தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வில் அமர்ந்திருங்கள். ஞானக்கடலான நான் இந்த சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பதைப் போன்று, நீங்களும் அதேபோன்று ஆகவேண்டும். அவர் எல்லையற்ற தந்தைக்கும் எல்லைக்குட்பட்ட தந்தைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளங்கப்படுத்துகின்றார். எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு முழு ஞானத்தையும் விளங்கப்படுத்துகின்றார். முன்னர் இது உங்களுக்குத் தெரியாது. அவர் இப்பொழுது உங்களுக்கு அனைத்தையும் கூறுகின்றார். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதனையும், உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்;தி, இறுதியையும், அதன் கால அளவையும் அவர் விளங்கப்படுத்துகின்றார். பக்தி மார்க்கத்தில் ஒவ்வொரு சக்கரத்தின் கால எல்லையும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் எனக் கூறியதன் மூலம் நீங்கள் காரிருளினுள் இருந்தீர்கள். நீங்கள் தொடர்ந்தும் கீழே இறங்கினீர்கள். மக்கள் கூறுகின்றார்கள்: எந்தளவிற்கு அதிகமாக நாங்கள் பக்தி செய்கின்றோமோ, அந்தளவிற்கு அதிகமாக தந்தையை நாங்கள் இங்கே ஈர்க்கின்றோம். தந்தை வந்து எங்களைத் தூய்மையாக்குகின்றார். நீங்கள் தூய்மையற்றவர்களாக இருக்கும்பொழுது, மிகவும் சந்தோஷமற்றிருப்பதால் நீங்கள் தந்தையை ஈர்க்கிறீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: தந்தையை வருமாறு நாங்கள் அழைத்தோம். 5000 வருடங்கள் ஆகியதும், மக்கள் முற்றிலும் சந்தோஷமிழந்து தமோபிரதான் ஆகியதும் தந்தை வருகின்றார். இந்தக் கல்வி இப்பழைய உலகத்திற்கானது அல்ல. ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகித்து அதனை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். நான் ஞானக்கடலாக இருப்பதைப் போன்று, நீங்கள் ஞான நதிகள் ஆவீர்கள். இந்த ஞானம் இந்த உலகிற்கானதல்ல. இது அழுக்கான உலகமாகும். இங்கு அழுக்கான சரீரங்களே உள்ளன. நீங்கள் அவற்றைத் துறந்துவிட வேண்டும். இங்கு சரீரம் தூய்மையாக முடியாது. நானே ஆத்மாக்களின் தந்தையாவேன். நான் ஆத்மாக்களைத் தூய்மையாக்கவே வந்துள்ளேன். மனிதர்களால் இவை எதனையும் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் முற்றிலும் கல்லுப் புத்தியையே கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆவார்கள். அதனாலேயே அவர்கள் கூவியழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! ஆத்மாவே தூய்மையற்றவர் ஆகியுள்ளார். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். ஆத்மாவே பக்தியும் செய்கின்றார். ஆத்மாவே சரீரம் ஒன்றை எடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது ஆத்மாக்களாகிய உங்களைத் திரும்பவும் அழைத்துச்செல்லவே வந்திருக்கின்றேன். எல்லையற்ற தந்தையாகிய நான் உங்கள் அழைப்பை ஏற்றே வந்திருக்கின்றேன். நீங்கள் என்னை அதிகளவு கூவி அழைத்தீர்கள். இப்பொழுதும் மக்கள் தொடர்ந்தும் கூவி அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! ஓ தந்தையாகிய கடவுளே, வந்து எங்களை பழைய உலகின் துன்பங்களில் இருந்தும், அசுரனிடமிருந்தும் விடுவியுங்கள்;. அப்பொழுதே எங்கள் அனைவராலும் வீடு திரும்ப முடியும். எங்கள் வீடு எங்கிருக்கின்றது என்பதும், எவ்வாறு, எப்பொழுது நாங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதும் எவருக்குமே தெரியாது. முக்தி அடைவதற்காக மக்கள் பெரும்பாடு படுகின்றனர். அவர்கள் பல குருமார்களை ஏற்றுள்ளனர். அவர்கள் பிறவி பிறவியாக பெரும்பாடு படுகிறார்கள். அந்த குருமார்களுக்கு ஜீவன் முக்தியின் சந்தோஷத்தைப் பற்றித் தெரியாது. அவர்கள் முக்தியை மாத்திரமே வேண்டுகிறார்கள். உலகில் எவ்வாறு அமைதி நிலவும் என்றுகூட அவர்கள் வினவுகின்றார்கள். சந்நியாசிகள் முக்தியைப் பற்றி மாத்திரமே அறிந்துள்ளார்கள். அவர்களுக்கு ஜீவன் முக்தியைப் பற்றித் தெரியாது. எவ்வாறாயினும் தந்தையே முக்தி, ஜீவன் முக்தி என்ற இரண்டையும் ஆஸ்தியாக அருள்கின்றார். நீங்கள் ஜீவன் முக்தி தாமத்தில் இருக்கும்பொழுது ஏனைய அனைவரும் முக்தி தாமத்தில் இருப்பார்கள். அவ்வாறு ஆகுவதற்காகவே குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்களே அதிகூடிய சந்தோஷத்தையும் அதிகூடிய துன்பத்தையும் அனுபவித்தவர்கள் ஆவீர்கள். ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்த நீங்களே கர்மத்திலும், தர்மத்திலும் சீரழிந்திருக்கின்றீர்கள். நீங்கள் தூய, இல்லறப் பாதையைச் சேர்ந்தவர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் தூய இல்லறப் பாதையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஒருவர் வீட்டையும் வியாபாரத்தையும் துறத்தல் என்பது சந்நியாச தர்மமாகும். முதலில் சந்நியாசிகள் மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள். நீங்களும் முதலில் மிகவும் நல்லவர்களாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: இது நாடகத்தின் விளையாட்டாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்தக் கல்வி புதிய உலகிற்கானதாகும். நாடகத்திற்கு ஏற்ப, நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை, இந்தத் தூய்மையற்ற உலகில் தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்க வேண்டும். கல்பமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குரியதல்ல. நானும் சர்வவியாபி அல்ல. இவ்வாறு கூறி நீங்கள் என்னை வெறுமனே இழிவுபடுத்தினீர்கள். எவ்வாறாயினும். நான் வந்து உங்களை ஈடேற்றுகின்றேன். சிவபாபாவைப் போன்று இகழப்பட்டவர் வேறு எவரும் இல்லை. தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். இருந்தும் நீங்கள் தொடர்ந்தும் அவரைச் சர்வவியாபி என அழைக்கின்றீர்கள்! அவதூறு உச்சக் கட்டத்தை அடையும்பொழுதே நான் வந்து உங்களை ஈடேற்றுகின்றேன். இதுவே, நான் வந்து உங்களைத் தூய்மையாக்குகின்ற மங்களகரமான, நன்மையளிக்கும் சங்கமயுகமாகும். தூய்மையாகுவதற்கு நான் உங்களுக்கு மிகவும் இலகுவான வழியைக் காட்டுகின்றேன். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகளவு தடுமாறித் திரிந்தீர்கள். நீங்கள் ஒரு குளத்திற்குச் சென்று, அதில் நீராடினால் தூய்மையாகலாம் என நம்பி, அதில் நீராடினீர்கள். அந்தத் தண்ணீருக்கும் தூய்மையாக்குபவரான தந்தைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். இதுவோ ஞான மார்க்கமாகும். மனிதர்கள் காரிருளில் இருக்கின்றார்கள். அவர்கள் கும்பகர்ண உறக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள். விநாச காலத்தில் கடவுள் மீது அன்பில்லாத புத்தி அழிக்கப்பட்டுவிடும் என்பதை நீங்கள் அறிந்திருப்பதுடன் அது நினைவு செய்யப்பட்டும் உள்ளது. இப்பொழுது நீங்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக அன்பான புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். அவை இன்னமும் நிறைவடையவில்லை (அன்பான புத்தி), ஏனெனில் மாயை உங்களை மீண்டும் மீண்டும் மறக்கச் செய்கின்றாள். இது ஐந்து விகாரங்களுடனான யுத்தமாகும். ஐந்து விகாரங்களும் இராவணன் என அழைக்கப்படுகின்றன. இராவணன் கழுதைத் தலையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளான். ஒரு பாடசாலையில் நீங்கள் ஒருபோதும் கண்களை மூடியவாறு அமர்ந்திருக்க மாட்டீர்கள் என பாபாவும் விளங்கப்படுத்துகிறார். பக்தி மார்க்கத்தில் கடவுளை நினைவு செய்வதற்கு மக்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. அவர்களிடம் கண்களை மூடிக் கொண்டிருக்குமாறு வேண்டப்படுகிறது. இங்கே தந்தை கூறுகின்றார்: இது ஒரு பாடசாலையாகும். ஒரே பார்வையில் கடவுள் ஆத்மாக்களை அப்பால் அழைத்துச் செல்வார் என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவரை மந்திரவாதி என மக்கள் கூறுகின்றனர். ஆஹ்! அதுவும் நினைவுகூரப்பட்டுள்ளது (மந்திரவாதியான கடவுள்). தேவர்களும் ஒரு பார்வையில் அப்பால் கொண்டுசெல்லப்பட்டார்கள்;. மனிதர்களை தேவர்கள் ஆக்குபவர், நிச்சயமாக மந்திரவாதியே ஆவார். தந்தை இங்கமர்;ந்திருந்து உங்கள் மின்கலத்திற்கு வலுவூட்டுகின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் கண்களை மூடிக் கொண்டிருந்தால், அதனை என்னவென்று அழைப்பது? ஒரு பாடசாலையில் நீங்கள் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதில்லையே. அவ்வாறாயின் நீங்கள் சோம்பலாக உணர்வீர்கள். இந்தக் கல்வி உங்கள் வருமானத்திற்கான மூலாதாரம், அதாவது நூறாயிரக் கணக்கான மில்லியன்களைக் கொண்ட வருமானமாகும். வருமானத்தைச் சம்பாதிக்கும்போது கொட்டாவி விடமாட்டீர்கள். இங்கே ஆத்மாக்களாகிய நீங்கள் சீராக்கப்பட வேண்டும். இலட்சியத்தினதும் குறிக்கோளினதும் உருவம் உங்கள் முன்னிலையில் உள்ளது. அவர்களின் இராச்சியம் எதுவென்பதை நீங்கள் காண வேண்டுமானால், தில்வாலா ஆலயத்திற்குச் செல்லுங்கள். அந்த ஆலயம் உயிரற்றது. ஆனால் இந்த ஆலயம் உயிருள்ள தில்வாலா ஆலயமாகும். அங்கே தேவர்களும் சுவர்க்கமும் சித்தரிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் சற்கதி அருள்பவர் அபுவிற்கு வருகின்றார். இதனாலேயே அபு அதி மகத்தான யாத்திரைத் தலமாகும். தந்தை இங்கு வந்தே, சமய ஸ்தாபகர்கள், குருமார்கள் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். இதுவே அதி மகத்தான யாத்திரைத் தலமாகும். எவ்வாறாயினும் அது மறைமுகமாகவே உள்ளது. இதனை எவரும் அறியமாட்டார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடம் உள்ள சம்ஸ்காரங்களைக் கிரகியுங்கள். தந்தையைப் போன்று ஞானக்கடல் ஆகுங்கள். ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள்.

2. ஆத்மாக்களாகிய உங்கள் பற்றரிகளை சதோபிரதான் ஆக்குவதற்கு, நடந்து திரியும் பொழுதெல்லாம் நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். தெய்வீக நடத்தையைக் கிரகியுங்கள். மிக மிக இனிமையானவர் ஆகுங்கள்.


ஆசீர்வாதம்:
ஞானச் செல்வத்தினால், நீங்கள் கோடானுகோடிஸ்வரர்கள் ஆகி, சகல பௌதீக வசதிகளும் உடையவர்கள் ஆகுவீர்களாக.

ஞானச் செல்வம் உங்களை இயல்பாகவே பௌதீக செல்வத்தை அடையச் செய்கின்றது. எங்கு ஞானச் செல்வம் உள்ளதோ, அப்பொழுது சடப்பொருள் இயல்பாகவே உங்கள் சேவகன் ஆகுகிறது. ஞானச் செல்வத்தினால், நீங்கள் இயல்பாகவே சகல பௌதீக வசதிகளையும் பெற்றுக் கொள்கிறீர்கள். எனவே, ஞானச் செல்வமே, அனைத்து வகைச் செல்வங்களுக்கும் அரசனாகும். அரசன் எங்கு இருக்கிறாரோ, அங்கே சகல பௌதீக வசதிகளும் இயல்பாகவே பெறப்படுகிறது. இந்த ஞானச் செல்வமே உங்களை கோடானுகோடிஸ்வரர்கள் ஆக்குவதுடன், கடவுளுடனும், ஏனையோருடனுமான உறவுமுறையில் வெற்றியையும் பெற்றுத் தருகிறது. உங்களை பல பிறவிகளுக்கு இராஜாதிராஜாக்கள் ஆக்குமளவிற்கு, ஞானச் செல்வம் அந்தளவு சக்தியை கொண்டுள்ளது.

சுலோகம்:
~நான் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றியாளன்|. இந்த ஆன்மிக போதையை வெளித்தோன்றும் அளவிற் கொண்டிருந்தால் நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள்.