30.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையைப் போன்று கருணை நிறைந்தவர்கள் ஆகுங்கள். கருணை நிறைந்த குழந்தைகள், அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிப்பதுடன் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற சேவையையும் செய்கின்றார்கள்.

கேள்வி:
தந்தையைத் தவிர வேறு எவராலும் பூர்த்தி செய்ய முடியாத முழு உலகிலும் உள்ள ஆசை என்ன?

8பதில்:
முழு உலகமும் அமைதியையும் சந்தோஷத்தையும் பெற விரும்புகின்றது. குழந்தைகள் அனைவரதும் அழைப்பைச் செவிமடுத்ததும் தந்தை வருகின்றார். பாபா எல்லையற்றவர் என்பதால், அவரது குழந்தைகள் சந்தோஷமற்றவரிலிருந்து சந்தோஷமானவர்களாக ஆக்குவது எவ்வாறு என்பதில் அவர் அதிகளவு அக்கறை கொண்டுள்ளார். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, பழைய உலகம் என்னுடையது, அனைவரும் என்னுடைய குழந்தைகள், நான் அனைவரையும் அவர்களுடைய துன்பத்திலிருந்து விடுவிப்பதற்காக வந்துள்ளேன். நானே முழு உலகினதும் அதிபதி. நான் அதனைத் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தூய்மையாக்குகின்றார். சகோதரர்களுக்கிடையில் அன்பு இருப்பது நல்லதேயாயினும், தந்தையின் மீது நிச்சயமாக அன்பிருக்க வேண்டும். தந்தையின் குழந்தைகள் அனைவரும் சகோதரர்களே. எவ்வாறாயினும், தந்தை ஒருவரே அனைவரையும் தூய்மையாக்குபவர். இதனாலேயே குழந்தைகள் அனைவரது அன்பும் தந்தை ஒருவரிடமே தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் சகோதரர்கள் என்பதால், நீங்கள் நிச்சயமாக பாலும் சீனியும் போன்று இருப்பது நல்லது. நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள்;. ஆத்மாவே அதிகளவு அன்பைக் கொண்டுள்ளார். நீங்கள் தேவ அந்தஸ்தைப் பெறுவதால், உங்களுக்கிடையில் பெருமளவு அன்பு இருக்க வேண்டும். நாங்கள் சகோதரர்கள் ஆகுகின்றோம். எங்களுடைய ஆஸ்தியை நாங்கள் தந்தையிடம் இருந்து பெறுகின்றோம். தந்தை வந்து எங்களுக்குக் கற்பிக்கிறார். இது ஒரு பாடசாலை அல்லது பெரியதொரு பல்கலைகழகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்துகொள்வார்கள். தந்தை அனைவருக்கும் திருஷ்டியைக் கொடுக்கின்றார் அதாவது, அவர் அனைவரையும் நினைவு செய்கின்றார். மனிதர்கள் அனைவரும், அதாவது முழு உலகிலுமுள்ள ஆத்மாக்கள் அனைவரும் எல்லையற்ற தந்தையை நினைவு செய்கின்றார்கள். பழைய, புதிய முழுஉலகமும் தந்தைக்குரியது. புதிய உலகம் தந்தைக்குரியது என்பதால் பழைய உலகமும் அவருக்குரியது அல்லவா? தந்தையே அனைவரையும் தூய்மையாக்குபவர். பழைய உலகமும் என்னுடையதே. நானே முழு உலகினதும் அதிபதி ஆவேன். நான் புதிய உலகை ஆட்சி செய்யாவிட்டாலும் அது என்னுடையதே ஆகும். எனது குழந்தைகள் அந்த எல்லையற்ற வீட்டில் மிகவும் சந்தோஷமாக உள்ளார்கள், பின்னர் அவர்கள் துன்பத்தையும் அனுபவிக்கின்றார்கள். இது ஒரு நாடகமாகும். இந்த எல்லையற்ற முழுவுலகமும் என்னுடைய வீடாகும். இது ஒரு பெரிய மேடை. முழு வீட்டிலும் தனது குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதைத் தந்தை அறிவார். அவர் முழு உலகையும் பார்க்கின்றார். அனைவரும் உயிர் வாழ்பவர்கள். குழந்தைகள் அனைவரும் இப்பொழுது சந்தோஷமற்று இருப்பதாலேயே அவர்கள் கூவியழைக்கின்றார்கள்: பாபா, அமைதியை அருள்பவரே, எங்களை இந்த அழுக்கான, சந்தோஷமற்ற உலகிலிருந்து, அமைதியான உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் தந்தையைக் கூவி அழைத்தீர்கள். தேவர்களிடம் உங்களால் எதனையும் கூறமுடியாது. அந்த ஒரேயொருவரே அனைவரதும் தந்தையாவார். அவர் முழு உலகின்மீதும் அக்கறை கொண்டுள்ளார். இது ஒரு எல்லையற்ற வீடாகும். இந்நேரத்தில் இந்த எல்லையற்ற வீட்டில் அனைவரும் சந்தோஷமற்று இருப்பதாலேயே அவர்கள் அமைதியை அருள்பவரையும், சந்தோஷத்தை அருள்பவரையும் கூவி அழைக்கின்றார்கள் என்பதைத் தந்தை அறிவார். மக்கள் இரண்டு விடயங்களைக் கேட்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் சந்தோஷ ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.தந்தை வந்து எங்களுக்குச் சந்தோஷத்தையும் அமைதியையும் கொடுக்கின்றார். வேறு எவரும் எங்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கமாட்டார்கள். தந்தை மாத்திரமே அந்தக் கருணையைக் கொண்டிருக்கின்றார். அவர் எல்லையற்ற தந்தையாவார். பாபாவின் குழந்தைகளாகிய நாங்கள் தூய்மையாக இருந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தூய்மையற்றவர்கள் ஆகியதால் நாங்கள் இப்பொழுது சந்தோஷமற்றவர்களாக ஆகிவிட்டோம். காமச்சிதையில் அமர்ந்ததனால் ஆத்மாக்கள் அவலட்சணமாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகிவிட்டார்கள். உங்களுக்கு அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்த தந்தையை நீங்கள் மறந்து விட்டதே பிரதான விடயமாகும். மக்கள் பாடுகின்றார்கள்: நீங்களே தாயும், நீங்களே தந்தையும், நாங்கள் அதிக சந்தோஷத்துடன் இருந்தோம். இப்பொழுது பெருமளவு துன்பம் இருந்தபோதிலும் நீங்கள் இப்பொழுது அதைப் பெறுகிறீர்கள். இந்த உலகம் தமோப்பிரதான் ஆகும். மக்கள் நச்சுக்கடலில் தொடர்ந்தும் மூச்சுத் திணறுகிறார்கள். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். இது ஆழ்நரகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: இந்நேரத்தில், நீங்கள் நரகவாசிகளா அல்லது சுவர்க்கவாசிகளா? ஒருவர் மரணிக்கும்போது, அவர் சுவர்க்கவாசியாகிவிட்டாரென அவர்கள் உடனடியாக கூறுகிறார்கள் அதாவது அவர் அனைத்துத் துன்பங்களுக்கும் அப்பால் சென்றுவிட்டார். எனவே, அவர்கள் ஏன் நரக உணவு வகைகளை அவருக்குப் படைக்கிறார்கள்? அவர்கள் இதனைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, நான் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன். என்னிடம் மாத்திரமே இந்த ஞானம் உள்ளது. நான் ஞானக்கடல்; ஆவேன். இன்ன இன்னார் சமய நூல்களின் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் கூறினாலும், அவர்களும் ஆத்மாக்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்குத் தந்தையைப் பற்றி எதுவும் தெரியாது. உங்களை உலக அதிபதிகளாக்குகின்ற தந்தை கூழாங்கற்களிலும், கற்களிலும் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். கடவுள் வியாசகர் என்ன எழுதியுள்ளாரெனப் பாருங்கள்! மக்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் முற்றிலும் அநாதைகளாகி, தங்களுக்கிடையே தொடர்ந்தும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறார்கள். எவருக்கும் படைப்பவராகிய தந்தையையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றியோ தெரியாது. தந்தை தனது சொந்த அறிமுகத்கை;; கொடுப்பதுடன், உங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களையும் விளங்கப்படுத்துகிறார். வேறு எவராலும் உங்களுக்கு இவ்விடயங்களைக் கூற முடியாது. எவரிடமாவது வினவுங்கள்: ஈஸ்வரர், கடவுள், படைப்பவர் என அழைக்கப்படுபவரை உங்களுக்குத் தெரியுமா? கடவுளை அறிந்துக் கொள்வதற்காகவா அவர் கூழாங்கற்களிலும் கற்களிலும் இருக்கிறாரென கூறப்படுகிறார்? எல்லாவற்றிற்கும் முதலில் சுயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மனிதர்கள் தமோபிரதானாக இருக்கும் போது, மிருகங்கள் போன்றன அனைத்தும் தமோபிரதானாகவே இருக்கும். மனிதர்கள் சதோபிரதானாக இருக்கும் போது, அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். மனிதர்கள் எவ்வாறோ அவ்வாறே அவர்களின் தளபாடங்களும் உள்ளன. செல்வந்தர்களின் தளபாடங்கள் சிறப்பானவையாகும். நீங்கள் மிகவும் சந்தோஷமான உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள், எனவே உங்களிடம் உள்ளவை உங்களுக்கு சந்தோஷத்தையே கொடுக்கின்றன. அங்கு துன்பத்தைக் கொடுக்கும் எதுவும் இல்லை. இந்த நரகம் அழுக்கான உலகமாகும். கடவுள் ஒரேயொருவரே என்பதைத் தந்தை வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். அவர் சுவர்க்கத்தைப் படைக்கிறார். மக்கள் தேவர்களின் புகழைப் பாடுகின்றார்கள்: நீங்கள் சகல நற்குணங்களும் நிறைந்தவர்கள். மக்கள் ஆலயத்துக்குச் சென்று தேவர்களின் புகழைப் பாடித் தம்மை அவதூறு செய்கிறார்கள்,ஏனெனில் அவர்கள் அனைவரும் சீரழிந்துள்ளார்கள். மேன்மையானவர்களும், சுவர்க்கவாசிகளுமான இலக்ஷ்மியையும் நாராயணனையும் அனைவரும் வழிபடுகின்றார்கள். சந்நியாசிகளும் அவர்களை வழிபடுகின்றார்கள். சத்தியயுகத்தில் அவ்வாறில்லை. உங்கள் துறவறம் எல்லையற்றது. எல்லையற்ற தந்தை வந்து உங்களை எல்லையற்ற துறவறத்தை மேற்கொள்வதற்குத் தூண்டுகின்றார். அது எல்லைக்குட்பட்ட துறவறமாகிய ஹத்த யோகமாகும். அந்த சமயம் வேறானது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் சமயத்தை மறந்து ஏனைய சமயங்களில் உங்களைப் புகுத்திக் கொண்டீர்கள். நீங்கள் உங்களுடைய பாரதத்தை ஹிந்துஸ்தான் எனப் பெயரிட்டீர்கள், பின்னர் அதனை இந்து சமயம் என அழைத்தீர்கள். உண்மையில், எவரும் இந்து சமயத்தை ஸ்தாபிக்கவில்லை. தேவதர்மம், இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் என நான்கு சமயங்கள் உள்ளன. இந்த முழு உலகமும் ஒரு தீவென்றும், அங்கு இராவணனின் இராச்சியம் இருந்தது என்றும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இராவணனை பார்த்திருக்கிறீர்களா? எவருடைய கொடும்பாவியை மீண்டும் மீண்டும் எரிக்கின்றீர்களோ அவனே பழைய எதிரியாவான். அவர்கள் ஏன் அவனை எரிக்கிறார்கள் என்பதையேனும் மக்கள் புரிந்துகொள்வதில்லை. அவன் யார், எப்பொழுதிருந்து அவர்கள் அவனை எரிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஆரம்பத்திலிருந்தே நிகழ்வதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஓ! அவ்வாறாயினும் ஒரு கணக்கு இருக்க வேண்டும். எவருக்கும் உங்களைத் தெரியாது. நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள். நீங்கள் யாருடைய குழந்தைகள் என எவராவது உங்களிடம்; வினவினால் அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் பிரம்ம குமாரர்கள், குமாரிகள் எனவே நாங்கள் நிச்சயமாக அவருடைய குழந்தைகள். பிரம்மா யாருடைய குழந்தை? சிவபாபாவின். நாங்கள் அவருடைய பேரக்குழந்தைகள். ஆத்மாக்கள் அனைவரும் அவரின் குழந்தைகளே. பின்னர், சரீர ரீதியில் நாங்கள் முதலில் பிராமணர்களாகின்றோம். பிரஜாபிதா பிரம்மாவும் உள்ளார். எவ்வாறு அனேகமான மக்கள் படைக்கப்பட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதுவே தத்தெடுத்தல் ஆகும். சிவபாபா உங்களை பிரம்மா மூலம் தத்தெடுக்கின்றார். மேலாவும் உள்ளது. உண்மையில், பிரம்மபுத்திர என்ற பெரிய ஆறு கடலுடன் சேரும் இடத்தில் மேலா இடம்பெற வேண்டும். அந்தச் சங்கமத்தில் மேலா இடம்பெற வேண்டும். இந்த மேலா இங்கு நடைபெறுகின்றது. பிரம்மா இங்கு அமர்ந்திருக்கிறார். அவரே தந்தையும் சிரேஷ்ட தாயும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் ஆண் என்பதால், தாய்மாரைப் பராமரிப்பதற்காக மம்மா நியமிக்கப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு ஜீவன்முக்தியைக் கொடுக்கின்றேன்.அந்தத்தேவர்கள் இரட்டை அகிம்சாவாதிகள், ஏனெனில் இராவணன் அங்கு இருப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு பக்தியின் மூலம் இரவும், ஞானத்தின் மூலம் பகலும் உள்ளது. தந்தை ஒருவர் மாத்திரமே ஞானக்கடல். அவர் சர்வவியாபி என மக்கள் கூறுகிறார்கள். தந்தையே வந்து விளங்கப்படுத்துகிறார். அவர் தனது குழந்தைகளுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். கடவுள் சிவனின் வாசகங்கள் உள்ளன. மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள் எனவே அவர் நிச்சயமாக எவரிலாவது பிரவேசிக்கிறார். அவர் கூறுகிறார்: நான் ஒரு சடப்பொருளின் ஆதாரத்தை எடுக்க வேண்டும். நான் ஒரு இளம் குழந்தையின் ஆதாரத்தை எடுப்பதில்லை. கிருஷ்ணர் ஒரு இளம் குழந்தை. நான் இவரின் பல பிறவிகளின் கடைசிப் பிறவியிலேயே, அவர் ஓய்வுபெறும் நிலையிலிருந்தபோதே இவரினுள் பிரவேசிக்கிறேன். மக்கள் ஓய்வுபெறும்; நிலையிலிருக்கும் போதே கடவுளை நினைவு செய்கிறார்கள். எவ்வாறாயினும், எவரும் கடவுளை மிகச்சரியாக அறிந்து கொள்வதில்லை. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: அதர்மம் மேலோங்கும் போது நான் பாரதத்தில் மாத்திரமே வருகின்றேன். பாரதத்தின் புகழ் எல்லையற்றது. மக்கள் எவ்வளவு சரீர அகங்காரத்தைக் கொண்டுள்ளார்கள் எனப் பாருங்கள்! நான் இன்னார்! இதுவே நான்! தந்தை வந்து உங்களை ஆத்ம உணர்வுடையவராக்குகிறார். ஆன்மீகத் தந்தை இங்கு அமர்ந்து இனிய குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தின் இரகசியங்கள் அனைத்தையும் கூறுகின்றார். இது பழைய உலகம், சத்தியயுகமே புதிய உலகம். சத்தியயுகத்தில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது. அது 5000 வருடங்களுக்குரிய விடயமாகும். சக்கரத்தின் கால எல்லை, நூறாயிரம் வருடங்கள் என வியாசகர் சமய நூல்களில் எழுதியுள்ளார். உண்மையில், சக்கரம் 5000 வருடங்களுக்கானதே. மக்கள் முற்றிலும் அறியாமையில் உள்ளார்கள். கும்பகர்ணத் தூக்கத்தில் உறங்குகின்;றார்கள். இதனைச் செவிமடுக்கும் புதியவர்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நான் என்னுடைய குழந்தைகளிடமே பேசுகின்றேன். நீங்களே பக்தி செய்ய ஆரம்பித்தவர்கள். நீங்களே உங்களை அறைந்து கொண்டீர்கள். தந்தை உங்களைப் பூஜிப்பதற்குத் தகுதிவாய்ந்தவராக்கினார் பின்னர் நீங்கள் பூஜிப்பவர்களாகிவிட்டீர்கள். இதுவும் நாடகமே. சில மென்மையான இதயம் கொண்டவர்கள் நாடகத்தைப் பார்க்கும் போது அழத்தொடங்கிவிடுவார்கள். தந்தை கூறுகின்றார்: அழுகின்றவர்கள் இழப்பை ஏற்படுத்துபவர். சத்தியயுகத்தில் அழுகை என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கும், நீங்கள் அழக்கூடாது எனத் தந்தைக் கூறுகின்றார். துவாபர கலியுகத்திலேயே மக்கள் அழுகிறார்கள். சத்தியயுகத்து மக்கள் ஒருபோதும் அழுவதில்லை. இறுதியில் எவருக்கும் அழுவதற்கு நேரம் இருக்காது. தொடர்ந்தும், அவர்கள் திடீரென மரணித்து விடுவார்கள். அவர்களால் 'ஓ இராமா!" என்று அவலக் குரல் எழுப்பவும் முடியாது. சிறிதளவு துன்பமேனும் ஏற்படாத வகையில் விநாசம் இடம்பெறும், ஏனெனில் வைத்தியசாலைகளும் அப்போது இருக்கமாட்டாது. இதனாலேயே அவர்கள் அத்தகைய விடயங்களைச் செய்கிறார்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நான் இராவணனை வெற்றிகொள்வதற்கு குரங்குகளின் சேனையாகிய உங்களைப் பயன்படுத்துகின்றேன். தந்தை இப்பொழுது உங்களுக்கு இராவணனை வெற்றிகொள்வதற்கான வழியைக் காட்டியுள்ளார். சீதைகள் அனைவரும் இராவணனின் சங்கிலியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இவை அனைத்து விடயங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கடவுள் பேசுகின்றார்: 'தீயனவற்றைக் கேட்காதீர்கள்" எனத் தந்தை தனது குழந்தைகளுக்கு மாத்திரம் கூறுகின்றார். உங்களுக்கு நன்மை ஏற்படுத்தாத விடயங்களிற்கு செவிசாய்க்காதீர்கள். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்களே மேன்மையானவர்களாக ஆகுகின்றீர்கள். இங்கு, அவர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஸ்ரீ என்ற பட்டத்தைக் கொடுக்கின்றார்கள். நல்லது, தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக்; கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற வெற்றியும் தோல்வியுமான இந்த எல்லையற்ற நாடகம் மிகவும் அற்புதமானது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போன்று கருணை நிறைந்தவர்களாகுங்கள். அனைவரையும் துன்பத்தில் இருந்துவிடுவித்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். தூய்மையாகுவதற்கு ஒரேயொரு தந்தையின் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருங்கள்.

2. 'அழுகின்றவர்கள் இழப்பார்கள்" எனத் தந்தை கூறுகின்றார். இதனாலேயே நீங்கள் எந்தச் சூழலிலும் அழக்கூடாது.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் முழுமையான தூய, சுத்தமான, ஆத்மா ஆகுவதன் மூலம், அதிமேலான பூஜிக்கத்தகுதியான ஆத்மா ஆகி, கடவுளின் அன்பிற்கு உரிமை கோருபவர் ஆகுவீர்களாக.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் இந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: நான் இச் சரீரமாகிய கோயிலில் அமர்ந்திருக்கும் ஓர் பூஜிக்கத்தக்க ஆத்மா ஆவேன். அத்தகைய பூஜிக்கத்தக்க ஆத்மாக்கள், அனைவராலும் நேசிக்கப்படுகிறார்கள். அவர்களின் உயிரற்ற விக்கிரகங்கள் கூட அனைவராலும் நேசிக்கப்படுகின்றன. மக்கள் தம்மத்தியில் சண்டையிட்டாலும் கூட, அவர்கள் விக்கிரகங்களின் மீது அன்பு கொண்டுள்ளார்கள் ஏனெனில் அவ்விக்கிரங்களிடம் தூய்மை உள்ளன. எனவே, உங்களிடம் வினவுங்கள்: எனது மனமும், புத்தியும் முற்றிலும் சுத்தமாகவும் தூய்மையாகவும் ஆகியுள்ளனவா? அவற்றில் சற்றேனும் அசுத்தம் கலக்கப்படவில்லை, அல்லவா? இவ்வாறாக முற்றிலும் தூய்மையாக உள்ளவர்கள் கடவுளின் அன்பிற்கு உரிமை கொண்டுள்ளார்கள்.

சுலோகம்:
உங்களுக்குள் ஞானப்பொக்கிஷங்களை கிரகித்து, ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலையும் புரிந்துணர்வுடன் செய்யும் போதே நீங்கள் ஓர் ஞான ஆத்மா ஆகுவீர்கள்.