04.04.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். இந்த நாடகத்திலிருந்து எந்தவொரு ஆத்மாவையும் விடுவிக்க முடியாது. அநாதியான முக்தியை எவராலும் பெற முடியாது.

கேள்வி:
அதிமேலான தூய்மையாக்குபவரான தந்தை எவ்வாறு கள்ளங்கபடமற்ற பிரபு ஆவார்?

8பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் அவருக்கு ஒரு கைப்பிடி அரிசியைக் கொடுத்து, அதற்குப் பதிலாக ஒரு மாளிகையைப் பெறுகிறீர்கள். இதனாலேயே தந்தை கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்கப்படுகிறார். நீங்கள் கூறுகிறீர்கள்: சிவபாபா எனது குழந்தை. அவர் உங்களிடமிருந்து எதனையும் பெறுவதில்லை. ஆனால் எப்பொழுதும் உங்களுக்கு கொடுத்துக் கொண்டேயிருக்கும் அத்தகைய குழந்தையாவார். பக்தி மார்க்கத்தில் அவர்கள் கூறுகிறார்கள்: எவர் என்ன செயலைச் செய்தாலும், அதன் பலனை அவர் பெறுவார். எனினும், பக்தி மார்க்கத்தில் அவர்கள் எதனைப் பெற்றாலும் அவை அனைத்தும் தற்காலிகமானதே. ஞானமார்க்கத்தில் நீங்கள் அனைத்தையும் புரிந்துணர்வுடன் செய்வதனாலேயே எல்லா வேளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடன் இதயபூர்வமாக உரையாடு;கின்றார்;. அல்லது ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்று நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் இராஜயோகம் கற்கவே வந்துள்ளீர்கள். இதனாலேயே உங்கள் புத்தி தந்தையிடம் செல்ல வேண்டும். இது ஆத்மாக்களுக்கான கடவுளின் ஞானம் ஆகும். கடவுள் சலிகிராம்களுடன் பேசுகிறார். ஆத்மாக்களாகிய நீங்களே செவிமடுக்க வேண்டும் என்பதால், நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும். முன்னர், நீங்கள் சரீர உணர்வுடையவராக இருந்தீர்கள். தந்தை இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்திலே வந்து குழந்தைகளாகிய உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்குகின்றார். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்விற்கும், சரீர உணர்விற்குமிடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொண்டீர்கள். ஆத்மாவே சரீரத்தினூடாகத் தனது பாகத்தை நடிக்கின்றார் எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ஆத்மாவே கற்கின்றார், சரீரம் அல்ல. எவ்வாறாயினும், சரீர உணர்வுடையவராக இருப்பதால், இன்ன இன்னார் அவர்களுக்குக் கற்பிக்கின்றார் என அவர்கள் நினைக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பவர் அசரீரியானவரே ஆவாh.; அவரின் பெயர் சிவன்;. சிவபாபா தனக்கென ஒரு சொந்த சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. ஏனைய அனைவரும் கூறுகின்றார்கள்: இது என்னுடைய சரீரம். இதனைக் கூறியது யார்? ஆத்மாவே கூறினார்: இது என்னுடைய சரீரம். எனினும், அவை அனைத்தும் உலகிலுள்ள பௌதீகக் கல்வியேயாகும். அவற்றில் பல்வேறுபட்ட பாடங்கள் உள்ளன. பீ.ஏ போன்ற பல வேறுபட்ட பட்டங்கள் உள்ளன. இங்கு ஒரே ஒரு பெயரே உள்ளது. உங்களுக்குக் கற்பிப்பவரும் ஒரே ஒருவரே. ஒரே ஒரு தந்தையே வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே, நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவருடைய பெயர் என்ன? அவரின் பெயர் சிவன். அவர் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றில்லை. மனிதர்களின் சரீரங்களுக்கே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. ‘இது இன்னாரின் சரீரம்’ என்றே கூறப்படுகிறது. எனினும் சிவபாபா சரீரப் பெயரைக் கொண்டிருப்பதில்லை. மனிதர்களின் சரீரங்களுக்கே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு அசரீரியான தந்தையின் பெயரே சிவன் என்பதாகும். அவர் இங்கு வந்து உங்களுக்குக் கற்பிக்கும் பொழுது சிவன் என்பதே அவருடைய பெயர்;. இந்தச் சரீரம் அவருக்கு உரியதல்ல. ஒரே ஒரு கடவுளே உள்ளார். பத்துப் பன்னிரண்டு அல்ல. அவர் ஒருவரே என்றாலும் மக்கள் அவர் 24 அவதாரங்களைக் கொண்டுள்ளார் எனக் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: என்னை நீங்கள் அதிகளவு அலைந்து திரிய விட்டீர்கள். பரமாத்மா கற்களிலும் கூழாங்கற்களிலும் உள்ளார் என நீங்கள் கூறினீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகளவு அலைந்து திரிந்ததைப் போன்று, என்னையும் நீங்கள் அலைந்து திரியச் செய்தீர்கள். நாடகத்திற்கு ஏற்ப, அவர் மிகவும் சாந்தமாகவே பேசுகின்றார். அவர் விளங்கப்படுத்துகின்றார்: அனைவரும் என்னை அதிகளவு அவதூறு செய்தும், அவமதித்தும் விட்டார்கள். மக்கள் தாங்கள் தன்னலமற்ற சேவையைச் செய்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் தந்தை கூறுகிறார்: என்னைத் தவிர, வேறு எவராலும் தன்னலமற்ற சேவையைச் செய்ய முடியாது. ஏதேனும் ஒன்றை எவர் செய்தாலும் நிச்சயமாக அதன் பலனைப் பெறுவார். நீங்கள் இப்பொழுது பலனைப் பெறுகின்றீர்கள். கடவுளே பக்தியின் பலனைக் கொடுக்கின்றார் என நினைவு கூரப்படுகின்றது. ஏனெனில் கடவுளே ஞானக் கடலாவார். நீங்கள் அரைக்கல்பமாக பக்தி மார்க்கத்தில் கிரியைகள் செய்தீர்கள். இந்த ஞானம் ஒரு கல்வியாகும். ஒரே ஒரு தடவையே நீங்கள் இக்கல்வியைத் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். தந்தை ஒரே ஒரு தடவையே அதிமங்களகரமான சங்கம யுகத்தில் வந்து, உங்களை அதி மேன்மையான மனிதர்களாக்கிய பின் மீண்டும் சென்று விடுகின்றார். இது ஞானமும் அது பக்தியுமாகும். நீங்கள் அரைக்கல்பமாக பக்தி செய்தீர்கள். பக்தி செய்யாத எவரேனும் மரணித்தாலோ அல்லது நோயுற்றாலோ, அவர்கள் பக்தி செய்யாததாலேயே அவ்வாறு ஏற்பட்டதென நினைக்கிறார்கள். எனினும் அது அவ்வாறில்லை. தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்களே, அனைவரையும் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக்கி சகலருக்கும் ஜீவன் முக்தி வழங்க வேண்டும் என என்னைக் கூவியழைத்தீர்கள். எனவே, நான் இப்பொழுது வந்துள்ளேன். பக்தி ஞானத்திலிருந்து வேறுபட்டது. பக்தியின் மூலம் அரைக்கல்பத்திற்கு இரவும், ஞானத்தின் மூலம் அரைக்கல்பத்திற்கு பகலும் உள்ளது. இராம இராச்சியம், இராவண இராச்சியம் ஆகிய இரண்டும் எல்லையற்றது. இரண்டினது காலமும் சமமானது. இந்நேரத்தில் மக்கள் போகிகளாக (இந்திரிய சுகங்களில் ஈடுபடுபவர்கள்) இருப்பதனால் உலகில் மக்கள் தொகை அதிகமாகவுள்ளது. ஆனால் மக்களின் ஆயுட்காலம் குறைந்து விட்டது. அது மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான வழிகளை உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அத்தகைய பெரிய உலகை (சனத்தொகை) சிறியதாக்குவது தந்தையின் கடமையே என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை வந்து அதனைச் சிறியதாக்குகின்றார். நீங்கள் அழைத்தீர்கள்: பாபா வந்து அதர்மத்தை அழித்து அதாவது, உலக சனத்தொகையை இன்னமும் குறையுங்கள். அதனைத் தந்தை எந்தளவிற்குச் குறைந்ததாக ஆக்குகின்றார் என்பது உலகினருக்குத் தெரியாது. வெகுசில மக்களே எஞ்சியிருப்பார்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டிற்கு மீண்டும் திரும்பிச் சென்று, பின்னர் வரிசைக் கிரமமாக இங்கு கீழே இறங்கி வந்து தங்கள் பாகங்களை நடிப்பார்கள். நாடகத்தில் அவர்களுடைய பாகம் தாமதமாக இருந்தால் அவர்களும் தாமதமாகவே வீட்டிலிருந்து இங்கு வருவார்கள். ஒரு நாடகத்தில் நடிக்க இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் போன்ற வற்றில் ஈடுபட்டுப் பின்னர், தாமதமாகவே வந்து தங்கள் பாகங்களை தமக்குரிய நேரத்தில் நடிக்கின்றார்கள். இது போன்றதே உங்களுடையதுமாகும். தாமதமாக நடிக்கவேண்டியவர்கள் தாமதமாகவே வருவார்கள். நாடகத்தின் ஆரம்பத்தில் நடிக்க வேண்டிய நடிகர்கள் சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் இங்கு வருகின்றார்கள். நீங்கள் பார்ப்பீர்களாயின், தாமதமாக வரவேண்டியவர்கள் தொடர்ந்தும் வந்து கொண்டிப்பதை காணலாம். இறுதிவரைக்கும் கிளைகளும் கொப்புகளும் தொடர்ந்து வருகின்றன. இந்நேரத்தில் உங்களுக்கு ஞானவிடயங்கள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. காலையில் நீங்கள் நினைவில் அமர்ந்திருப்பது அப்பியாசம் ஆகும். ஆத்மா தனது தந்தையை நினைவு செய்ய வேண்டும். “யோகம்” என்ற வார்த்தையை மறந்து விடுங்கள். அதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: என்னால் யோகம் செய்ய முடிவதில்லை. தந்தை கூறுகிறார்: ஓ! உங்களால் உங்கள் தந்தையை நினைவு செய்ய முடியவில்லையா? இது நல்லதா? என்னை நீங்கள் நினைவு செய்யாவிட்டால், நீங்கள் எவ்வாறு தூய்மை ஆகுவீர்கள்? தந்தையே தூய்மையாக்குபவர். தந்தை வந்து உங்களுக்கு நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். இது பல்வேறு சமயங்களினதும் பல்வேறு மனிதர்களினதும் விருட்சமாகும். உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் நடிகர்களே. மனிதர்கள் அதிகளவினர் உள்ளார்கள். மக்கள் கணக்கிட்டுக் கூறுகிறார்கள்: ஒரு வருடத்தில் இந்தளவு மில்லியன் கணக்கானோர் பிறப்பார்கள். எனினும் அந்தளவிற்கு இங்கு இடம் உள்ளது என்றில்லை. இதனாலேயே தந்தை கூறுகிறார்: நான் இங்கு வந்து எண்ணிக்கைகளை மட்டுப்படுத்துகிறேன். ஆத்மாக்கள் அனைவரும் மேலிருந்து இங்கு வந்தவுடன், எனது வீடு வெறுமையாகிவிடும். இன்னமும் அங்கிருப்பவர்களும் கீழே வருவார்கள். விருட்சம் ஒருபோதும் முழுமையாக காய்ந்து போய்விடுவதில்லை. அது தொடர்ந்தும் வளருகின்றது, இறுதியில் மேலே அங்கே எவருமே இல்லாத போது, மீண்டும் அனைவரும் திரும்பிச் செல்வார்கள். புதிய உலகில் வெகு சிலரே இருப்பார்கள். ஆனால் இப்பொழுதோ பலர் இருக்கிறார்கள். அனைவருடைய சரீரமும் தொடர்ந்து மாற்றப்படும். ஒவ்வொரு சக்கரத்திலும் எடுத்த அதே பிறவிகளையே இப்பொழுதும் எடுப்பார்கள். உலக நாடகம் எவ்வாறு தொடர்கிறது என்பதைத் தந்தையைத் தவிர வேறுஎவராலும் விளங்கப்படுத்த முடியாது. இதனை குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் முயற்சிக்கு ஏற்ப வரிசைக் கிரமமாகப் புரிந்து கொள்கிறீர்கள். எல்லையற்ற நாடகம் மிகவும் பெரியது. பல விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எல்லையற்ற தந்தையே ஞானக் கடலாவார். ஏனைய அனைவரும் எல்லைக்குட்பட்டவர்கள். அவர்கள் வேதங்கள், சமய நூல்கள் போன்றவற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்களால் அந்தளவிற்கு உருவாக்க முடியாது. நீங்கள் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்தும் எழுதினால் அது மிக நீண்டதொரு கீதை ஆகிவிடும். அனைத்துமே அச்சிட வேண்டியிருந்தால், கீதை இந்தக் கட்டிடத்தை விடவும் மிகப் பெரியதாக இருக்கும். இதனாலேயே அவர்கள் இவ்வாறு போற்றியுள்ளார்கள். நீங்கள் கடலை மையாக்கினாலும்……… பின்னர் அவர்கள் சிட்டுக்குருவிகள் கடலை விழுங்கிவிட்டதாகவும் கூறுகிறார்கள். சிட்டுக்குருவிகளான நீங்களே இப்பொழுது முழுஞானக் கடலையும் விழுங்குகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஞானத்தின் மூலம் அனைத்தையும் அறி;ந்து கொண்டீர்கள். நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் கற்பதற்காகவே இங்கு வருகிறீர்கள். எதுவும் குறைவானதோ அல்லது அதிகமானதோ என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் அதிக முயற்சி செய்தால், நீங்கள் உருவாக்கும் வெகுமதியும் அதிகமாகவே இருக்கும். நீங்கள் ஒவ்வொருவரும், எந்தளவு முயற்சி செய்கின்றீர்கள் என்பதையும் எந்தளவிற்கு தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். மாணவர்களும் பாடசாலையில் பரீட்சை ஒன்றில் சித்தி எய்துவதும் வரிசைக்கிரமமானதே. சூரிய, சந்திர வம்சங்கள் ஆகிய இரண்டும் உருவாக்கப்படுகின்றன. சித்தி எய்தத் தவறியவர்கள் சந்திர வம்சத்தில் வருவார்கள். இராமர் ஏன் அம்பு வில்லுடன், காட்டப்பட்டுள்ளார் என்பதை எவருமே அறியார். அவர்கள் வரலாற்றை வன்முறையாக்கியுள்ளார்கள். இந்நேரத்தில், இங்கு வன்முறையைத் தவிர வேறெதுவுமில்லை. ஒவ்வொருவரும் செய்யும் செயல்களுக்கு ஏற்பவே, அவர்கள் பலனைப் பெறுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உதாரணத்திற்கு ஒருவர் ஒரு வைத்தியசாலையைக் கட்டினால், அவரது அடுத்த பிறவியில் அவர் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதுடன் அப் பிறவியில் ஆரோக்கியமாகவும் இருப்பார். தர்மசாலைகளை அல்லது பாடசாலைகளைக் கட்டுபவர் அரைச்சக்கரத்திற்கு தற்காலிக சந்தோஷத்தைப் பெறுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு வரும் போது பாபா வினவுகிறார்: உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? நீங்கள் கூறுகிறீர்கள்: மூன்று பௌதீகக் குழந்தைகளும் ஒரேயொரு சிவபாபாவும். ஏனெனில் அவர் உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதுடன் ஓர் ஆஸ்தியையும் எடுக்கின்றார். கணக்கும் உள்;ளது. அவர் உண்மையில்; எதனையும் எடுக்க விரும்புவதில்லை. ஏனெனில் அவர் அருள்பவர் ஆவார். அவரே கள்ளங்கபடமற்ற பிரபு. ஏனெனில் நீங்கள் அவருக்கு ஒரு கைப்பிடி அரிசியைக் கொடுத்து, பதிலுக்கு ஒரு மாளிகையைப் பெறுகிறீர்கள். அவரே தூய்மையாக்குபவரும், ஞானக்கடலுமாவார். இப்பொழுது தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு பக்திமார்க்கத்தில் உள்ள சமய நூல்களின் சாரம்சத்தை விளங்கப்படுத்துகின்றேன். பக்தியின் பலன் அரைச்சக்கரத்திற்கு நீடிக்கும். இந்த சந்தோஷம் காக்கையின் எச்சத்தைப் போன்றது என சந்நியாசிகள் கூறுகிறார்கள். இதனாலேயே அவர்கள் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் விட்டுவிலகிக் காட்டிற்குள் சென்று விடுகிறார்கள். பின்னர் தாங்கள் நரகத்திற்குச் செல்லவேண்டும் என்பதால் அவர்கள் சுவர்க்க சந்தோஷத்தை தாங்கள் விரும்பவில்லை என்று கூறுகின்றார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் அநாதியான முக்தியையே விரும்புகிறார்கள். எனினும் இது எல்லையற்ற நாடகம் என்பதை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். இந்த நாடகத்திலிருந்து எந்த வொரு ஆத்மாவும் விடுபட முடியாது. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. இதனாலேயே “நிச்சயிக்கப்பட்டதே இடம் பெறுகிறது” என்பது நினைவு கூரப்படுகின்றது. இதனாலேயே அவர்கள் பக்தி மார்க்கத்தில் கவலையடைகிறார்கள். கடந்த காலத்தில் என்ன இடம் பெற்றதோ அவை மீண்டும் இடம் பெறும். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகிறீரகள். இச்சக்கரம் ஒருபோதும் முடிவதில்லை. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அதில் உங்கள் முயற்சியை எவ்வாறு உங்களால் நிறுத்த முடியும்? நீங்கள் கூறுகிறீர்கள் என்பதற்காக அதிலிருந்து உங்களால் வெளியேற முடியாது. அநாதியான முக்தியைப் பெறுவதும், ஒளியினுள் அமிழ்ந்திருப்பதும் பிரம்மதத்துவத்துடன் இரண்டறக் கலந்துவிடுதல் ஆகிய அனைத்தும் ஒரே விடயமாகும். எண்ணற்ற அபிப்பிராயங்களும் எண்ணற்ற சமயங்களும் உள்ளன. பின்னர் மக்கள் கூறுகிறார்கள்: உங்களின் வழிகளும் முறைகளும் உங்களுக்கு மாத்திரமே தெரியும். நீங்கள் எங்களுக்குக் கொடுக்கின்ற ஸ்ரீமத்தின் மூலமாக நாங்கள் ஜீவன் முக்தியைப் பெறுகிறோம். அதனை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். நீங்கள் வரும் போது நாங்கள் இவ்விடயங்களை அறிந்து தூய்மையாகி, நாங்கள் கற்பதுடன் ஜீவன் முக்தியும் பெறுகிறோம். நீங்கள் ஜீவன்முக்தியைப் பெற்றதும், எவருமே என்னைக் கூவியழைப்பதில்லை. இந்நேரத்தில் அனைவர் மீதும் மலைபோன்ற துன்பங்கள் குவிகின்றன. காரணம் இன்றி இரத்தம் சிந்துவதை அவர்கள் காட்டியுள்ளார்கள். அத்துடன் அவர்கள் கோவர்த்தன மலையைக் காட்டியுள்ளார்கள். அந்த மலை ஒரு விரலால் உயர்த்தப்படுவதையும்; காட்டியுள்ளார்கள். இதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியும். வெகுசில குழந்தைகளாகிய நீங்களே இத் துன்ப மலையை அகற்றுகிறீர்;கள். உங்களால் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியும். நீங்களே அனைவரது மனதையும் ஒழுக்கமடையச் செய்யும் மந்திரத்தைக் கொடுக்க வேண்டும். துளிசிதாசர் சந்தனத்தைத் தேய்த்து திலகம் கொடுத்தார் என்று அவர்கள் கூறுகின்றார்கள்...... குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் சொந்த முயற்சியின் மூலம் உங்கள் இராச்சிய திலகத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஓர் இராச்சியத்திற்காகக் கற்கின்றீர்கள். தந்தை ஒருவரே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அதன் மூலம் நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது வீட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். இது ஓர் இராஜசபையல்ல. அரசர்களும், சக்கரவர்த்திகளும் சந்திக்கும் இடமே சபையாகும். இது ஒரு பாடசாலை. பிராமண ஆசிரியர்கள் எவரும், இங்கு விகாரமானவர்களை அழைத்து வரக்; கூடாது என விளங்கப்படுத்தப் பட்டுள்ளது. தூய்மையற்றவர்கள் சூழலை மாசடையச் செய்து விடுவார்கள். இதனாலேயே அவர்கள் இங்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் தூய்மையாகியதும் அனுமதிக்கப்படுவார்கள். இப்பொழுது சிலரை இங்குவர அனுமதிக்கப்பட வேண்டும். நீங்கள் இங்கிருந்து சென்று தூய்மையற்றவர்களாகினால், உங்களால் எதனையுமே கிரகிக்க முடியாது. இது உங்களையே சபிப்பதாகும். விகாரங்கள் இராவணனின் வழிகாட்டலாகும். நீங்கள் இராமரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதை நிறுத்தி, இராவனனின் அசுரத்தனமான வழிகாட்டல்களைப் பின்பற்றி விகாரமாகவும், கல்லாகவும் ஆகுவீர்கள். இவ்வாறான பல பயங்கரமான கதைகள் கருட புராணத்தில் எழுதப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: மனிதர்கள் மனிதர்களாக மாத்திரமே ஆகுவார்கள். அவர்கள் மிருகங்கள் போன்றனவாக ஆகமாட்டார்கள். ஒரு கல்வியில் குருட்டு நம்பிக்கை என்று எதுவுமில்லை. இது உங்கள் கல்வி. மாணவர்கள் கற்று, சித்தி எய்தி பணம் சம்பாதிக்கின்றார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மனதை ஒழுக்கமடையச் செய்யும் மந்திரத்தை எல்லோருக்கும் கொடுங்கள். கல்வியில் முயற்சி செய்வதன் மூலம் இராச்சிய திலகத்தைக் கோரிக் கொள்ளுங்கள்;. இந்தத் துன்ப மலையை அகற்றுவதற்கு உங்கள் விரலையும் கொடுங்கள்.

2. இந்த சங்கம யுகத்தில் அதி மேன்மையான மனிதர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். தந்தையை நினைவு செய்வதற்கான அப்பியாசத்தைச் செய்யுங்கள். யோகத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம் குழப்பமடையாதீர்கள்.

ஆசீர்வாதம்:
தூய்மை என்ற இறை ஞானத்தின் புதுமையை கிரிகிப்பதன் மூலம் நீங்கள் பற்றிலிருந்து முற்றாக விடுபடுவீர்களாக.

தூய்மையே இந்த இறை ஞானத்தின் புதுமையாகும். ஆன்மிக போதையைக் கொண்டிருக்கும் போது, நெருப்பும் பஞ்சும் தீப்பற்றாது இணைந்திருக்க முடியும் என நீங்கள் கூறுகிறீர்கள். தூய்மையாகாது உங்களால் ஒரு யோகியாகவோ கியானியாகவோ ஆக முடியாது என நீங்கள் உலகிற்கு சவால் விட்டுக் கூறுகிறீர்கள். எனவே, தூய்மை என்றால் முற்றிலும் பற்றிலிருந்து விடுபடுவதாகும். எந்த ஒரு மனிதரின் மீதோ அல்லது பொருளின் மீதோ எப்பற்றும் இல்லாதிருக்கட்டும். அத்தகைய தூய்மை இருக்கும் போதே உங்களால் சடப்பொருளை தூய்மைப்படுத்தும் சேவையை செய்ய முடியும்.

சுலோகம்:
தூய்மையே உங்கள் வாழ்வின் பிரதான அத்திவாரமாகும். நீங்கள் மரணிக்க நேர்ந்தாலும் உங்கள் தர்மத்தைக் கைவிடாதீர்கள்.