09.06.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     10.12.84     Om Shanti     Madhuban


பழைய கணக்குகளை முடிப்பதன் அடையாளம்.


(இந்தியாவில் உள்ள போபாலில் 02.12.1984 அன்று, அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து, மரணத்தை ஏற்படுத்தக்கூடிய 40 தொன் தீங்கான வாயுக்கள் வெளிப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். அந்தச் சம்பவத்தின் பின்னர் பாப்தாதா இந்த முரளியைக் கூறினார்)

இன்று, பாப்தாதா இந்த பௌதீக சரீரத்தை ஆதாரமாகக் கொண்டு, பௌதீக உலகில் உள்ள பௌதீகக் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். தற்சமயம் உலகிலுள்ள குழப்பத்தின் மத்தியில், அதாவது, துன்ப சூழலின் மத்தியில், ஆட்ட, அசைவின்றி இருக்கும் தனது குழந்தைகளை பாப்தாதா பார்க்கிறார். குழப்பத்தின் மத்தியில் வசித்தாலும், பற்றற்றவர்களாகவும் தந்தையிடம் அன்புடையவர்களாகவும் இருக்கும் தாமரை மலர்களை அவர் பார்க்கிறார். பயமான சூழலின் மத்தியிலும் சக்தி சொரூபங்களாக இருக்கும் பயமற்ற குழந்தைகளை அவர் பார்க்கிறார். உலகை மாற்றுபவர்களான கவலையற்ற சக்கரவர்த்திகளை அவர் பார்க்கிறார். நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள். உங்களின் மீது கவலைக்குரிய சூழலின் சிறிதளவு ஆதிக்கமேனும் ஏற்பட முடியாது. தற்சமயம், உலகிலுள்ள பெரும்பாலான ஆத்மாக்கள் குறிப்பாகக் கவலையையும் பயத்தையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் கவலைப்படும் அளவிற்கு, நீங்கள் அவர்களுக்காக சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அந்தக் கவலையை, அவர்களுக்காகத் தூய மற்றும் சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் சொரூபமாக மாற்றியுள்ளீர்கள். பயப்படுவதற்குப் பதிலாக, நீங்கள் சந்தோஷப் பாடல்களைப் பாடுகிறீர்கள். நீங்கள் இந்தளவு மாற்றத்தை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? நீங்கள் சதா மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருந்து, நல்லாசிகளாலும் தூய உணர்வகளாலும் உங்களின் மனதினூடாகச் சேவை செய்வதன் மூலம், அனைவருக்கும் ஒரு துளி அமைதியையும் சந்தோஷத்தையும் வழங்குபவர்கள். நீங்கள் அமரத்துவ ரூபம் ஆகி, அகால மரணத்தை அனுபவிக்கும் ஆத்மாக்களுக்கு, அமைதியினதும் சக்தியினதும் ஒத்துழைப்பை வழங்குபவர்கள். ஏனெனில், தற்சமயம், இது அகால மரணத்திற்கான பருவகாலம் ஆகும். சடுதியாக சூறாவளிகளும் புயல்களும் ஏற்படுவதைப் போன்று, மரணப்புயல்களும் பலரையும் ஒருமித்து, சடுதியாகவும் மிகவும் விரைவாகவும் எடுத்துச் செல்கின்றன. அகால மரணத்திற்கான புயல்கள் இப்போதே ஆரம்பித்துள்ளன. குறிப்பாக பாரதத்தில், ஒவ்வொரு கல்பத்திலும் உள்நாட்டுக் கலகங்களும் இயற்கை அனர்த்தங்களுமே மாற்றத்திற்கான கருவிகள் ஆகும். வெளிநாட்டில் மாற்றத்தின் ரூபம் வேறுவிதமாக இருக்கும். எவ்வாறாயினும், பாரதத்தில், குறிப்பாக இந்த இரண்டு விடயங்களுமே கருவியாக இருக்கும். நீங்கள் இந்த இரண்டினதும் ஒத்திகைகளைப் பார்க்கிறீர்கள். இரண்டும் ஒரே வேளையில் தமது பாகங்களை நடிக்கின்றன.

ஒரே வேளையில் ஏன், எவ்வாறு பல மரணங்கள் ஏற்படுகின்றன எனக் குழந்தைகளான நீங்கள் வினவுகிறீர்கள். இதற்கான காரணம் என்ன? சம்பூரணத்திற்கான காலம் நெருங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள். அத்துடன் அதை அனுபவமும் செய்கிறீர்கள். துவாபர யுகத்திலும் கலியுகத்திலும் ஆத்மாக்கள் அனைவராலும் செய்யப்பட்ட பாவச் செயல்களினதும் பாவங்களினதும் கணக்குகள் இன்னமும் எஞ்சியுள்ளன. அவை முற்றாக நிறைவு பெற வேண்டும். ஏனெனில், அனைவரும் இப்போது வீடு திரும்ப வேண்டியுள்ளது. துவாபர யுகத்தில் செய்யப்பட்ட செயல்களினதும் பாவங்களினதும் பலனும் ஒரு பிறவியில் தீர்க்கப்படாவிட்டால், அவை அடுத்த பிறவியிலும் தீர்க்க வேண்டிய கணக்குகளாகவோ அல்லது பேறுகளாகவோ தொடரும். எவ்வாறாயினும், இது இப்போது இறுதிப் பகுதி ஆகும். பாவக்கணக்குகளும் அதிகளவில் உள்ளன. இதனாலேயே, ஆத்மாக்கள் பலரின் பழைய கணக்குகள், விரைவான பிறப்பினாலும் விரைவான மரணத்தினாலும் தண்டனையின் மூலம் தீர்க்கப்படுகின்றன. ஆகவே, தற்சமயம், மரணம் வேதனையானது. அத்துடன் பெரும்பாலானோர் அதிகளவு வலியுடனும் துன்பத்துடனுமே பிறப்பும் எடுக்கிறார்கள். இறப்பும் இலகுவானதல்ல. பிறப்பும் இலகுவானதல்ல. எனவே, வேதனையான மரணமும் வேதனையான பிறப்புமே கர்மக்கணக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகும். சிறிய எறும்புகள், பெரிய எறும்புகள், நுளம்புகள் போன்றவற்றை அழிப்பதற்குப் பல வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நுளம்புகளும் பல வகையான கிருமிகளும் எறும்புகளும் ஒரே வேளையில் அந்த வழிமுறைகளால் அழிக்கப்படுவதைப் போன்று, இன்றைய மனிதர்களும் நுளம்புகளையும் எறும்புகளையும் போன்று அகால மரணம் அடைகிறார்கள். இந்த விடயத்தில் மனிதர்களுக்கும் எறும்புகளுக்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. இந்தக் கணக்குகளாலும், எல்லா வேளைக்குமாக அவை முடிவடைவதாலும், அகால மரணத்தின் புயல்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன.

அதேபோன்று, தர்மராஜ்புரியிலும் தண்டனைக்குரிய பாகம் இறுதியில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்தத் தண்டனை, ஆத்மாக்கள் தனித்தனியே தமது கர்மக்கணக்குகளைத் தீர்க்கும்போதே ஏற்படுகின்றன. ஆத்மாக்களுக்குப் பல வகையான கர்மக்கணக்குகள் இருந்தாலும், மூன்று விசேடமான வகைகள் உள்ளன. ஆத்மா தனக்காக வேதனைப்படும் கணக்குகள். உதாரணமாக, நோய்கள். ஆத்மாக்கள் தமது சரீரங்களில் ஏற்படும் நோய்களினூடாகத் தமது கணக்குகளைத் தீர்ப்பார்கள். இன்னொன்று, ஏதாவதொரு வகை தீய ஆவியின் ஆதிக்கத்தினால் ஒருவரின் தலை மந்தம் அடைதல். அந்த வகையான தண்டனையால் ஆத்மாக்கள் கர்மக்கணக்குகளின் வேதனையை அனுபவம் செய்வார்கள். இன்னுமொரு கணக்கானது, உறவுகளின் மூலமும் தொடர்புகளின் மூலமும் பெறும் துன்பம் ஆகும். அது எவ்வாறு செயற்படும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். மூன்றாவது, இயற்கை அனர்த்தங்களின் மூலம் கர்மக்கணக்குகளைத் தீர்த்தல். ஆகவே, கர்மக்கணக்குகள் மூன்று வகைகளின் அடிப்படையில் தீர்க்கப்படுகின்றன. எனவே, சில கர்மக்கணக்குகள் உறவுகளின் மூலமும் தொடர்புகளின் மூலமும் அல்லது இயற்கை அனர்த்தங்களின் மூலம் தர்மராஜ்புரியில் தீர்க்கப்பட மாட்டாது. அவை, இங்கே பௌதீக உலகிலேயே தீர்க்கப்படுகின்றன. அனைவரின் பழைய கணக்குகளும் முற்றுப்பெற வேண்டும். ஆகவே, கர்மக்கணக்குகளைத் தீர்க்கும் இந்தப் பொறிமுறை, இப்போது துரித கதியில் இடம்பெற வேண்டும். இவை அனைத்தும் இந்த உலகிலேயே இடம்பெற வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? இவை கர்ம தத்துவத்தின் கர்மக்கணக்குகள் ஆகும். இப்போது, உங்களையே சோதித்துப் பாருங்கள்: பிராமண ஆத்மாவான நான், துரித கதியில் தீவிர முயற்சி செய்வதன் மூலம் எனது கடந்தகாலக் கர்மக்கணக்குகளைத் தீர்த்துவிட்டேனா? அல்லது இன்னமும் சில சுமைகள் எஞ்சியுள்ளனவா? பழைய கணக்குகளில் சில இன்னமும் எஞ்சியுள்ளனவா? அல்லது அவை அனைத்தும் முடிந்துவிட்டனவா? அதன் விசேடமான அடையாளங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குள் மேன்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது மேன்மையான செயல்களைச் செய்வதற்கு, உங்களின் ஏதாவது சம்ஸ்காரங்கள் அல்லது சுபாவம் தடையை ஏற்படுத்துமாயின், நீங்கள் விரும்பிய அளவைச் செய்ய முடியாமல் அல்லது நீங்கள் செய்ய விரும்பியதைச் செய்ய முடியாமல் இருந்தால், உங்களின் மனதில், ‘எனது விருப்பத்திற்கு மாறாக இது ஏன் நிகழ்ந்தது என எனக்குத் தெரியவில்லை, என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை’ என நீங்கள் நினைத்தால் அல்லது கூறினால், உங்களுக்கு மேன்மையான விருப்பம் இருந்தது, உங்களுக்குத் தைரியமும் உற்சாகமும் இருந்தன. எனினும் நீங்கள் ஏதாவதொன்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளீர்கள் என நீங்கள் உணர்ந்தால், நீங்கள் எதையாவது செய்திருக்கக்கூடாது எனக் கூறினால், நீங்கள் அதைப் பற்றி நினைக்காவிட்டாலும் அது நிகழ்ந்துவிட்டிருந்தால், உங்களின் சொந்தப் பழைய சுபாவத்தினதும் சம்ஸ்காரங்களினதும் ஆதிக்கத்திற்கு நீங்கள் உட்பட்டுள்ளீர்கள், தீய சகவாசத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளீர்கள், அல்லது சூழலினதும் அதிர்வலைகளினதும் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளீர்கள் என்றே அர்த்தம். ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்த மூன்று ஸ்திதிகளில் ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால், உங்களின் விருப்பத்திற்கு மாறாக ஏதாவது நிகழ்வதற்கு, நீங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அதைச் செய்ய முடியாமல் இருந்தால், ஏதாவதொன்றின் ஆதிக்கத்திற்கு உட்படுவதனால் உங்களால் வெற்றி பெற முடியாவிட்டால், ஏதோவொரு கடந்த காலக்கணக்கின் சுமை இன்னமும் எஞ்சியிருப்பதன் அடையாளமே அதுவாகும். இந்த அடையாளங்களை உங்களில் சோதித்துப் பாருங்கள். பறக்கும் ஸ்திதியின் அனுபவத்தில் இருந்து ஏதாவது வகையான சுமை உங்களைக் கீழே கொண்டு வருகிறதா? கணக்குகளைத் தீர்த்தல் என்றால், ஒவ்வொரு பேற்றிலும் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்ய வேண்டும். சிலவேளைகளில் மட்டும் பேறு இருந்தால், அந்தச் ‘சிலவேளைகளில்’ என்றால் கணக்கு இன்னமும் எஞ்சியுள்ளது என்றே அர்த்தம் ஆகும். ஆகவே, இந்த முறையில் உங்களைச் சோதித்துப் பாருங்கள். துன்ப உலகில், துன்பமான சந்தர்ப்பங்கள் என்ற மலைகள் நிச்சயமாக வெடிக்கப் போகின்றன. அத்தகைய வேளையில், பாதுகாப்பான வழிமுறை, ‘தந்தையின் பாதுகாப்புக் குடையே’ ஆகும். உங்களிடம் ஏற்கனவே இந்தப் பாதுகாப்புக் குடை உள்ளதல்லவா? அச்சா.

நீங்கள் அனைவரும் சந்திப்பெனும் மேளாவைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளீர்கள். இந்தச் சந்திப்பெனும் மேளா எத்தகையதெனில், ஒரு காட்சி எத்தனை வேதனையைத் தருவதாக இருந்தாலும், நீங்கள் மேளாவில் இருந்தால், அது ஒரு விளையாட்டைப் போன்றே காட்சி தரும். உங்களுக்குப் பயமாக இருக்காது. நீங்கள் தொடர்ந்து சந்திப்பிற்கான பாடல்களைப் பாடுவதுடன் சந்தோஷ நடனமும் ஆடுவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்குத் தைரியம் என்ற ஒத்துழைப்பை வழங்குவீர்கள். இது பௌதீக நடனம் அல்ல. ஆனால் சந்தோஷ நடனம் ஆகும். நீங்கள் சதா இந்த மேளாவைக் கொண்டாடுகிறீர்கள், அல்லவா? நீங்கள் சந்திப்பெனும் மேளாவிலும் இருக்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் மதுவன மேளாவிற்கு வந்துள்ளீர்கள். இத்தகைய மேளாவைக் கொண்டாடும் குழந்தைகளைக் கண்டு பாப்தாதாவும் களிப்படைகிறார். மதுவனத்தின் அலங்காரங்கள் மதுவனத்தை வந்தடைந்துள்ளனர். அச்சா.

சக்தி ரூபங்களாகி, சதா தமது சொந்தக் கர்மக்கணக்குகளைத் தீர்ப்பதுடன், மற்றவர்களும் தமது கர்மக்கணக்குகளைத் தீர்ப்பதற்கு உதவும் ஆத்மாக்கள் அனைவருக்கும், சதா துன்பமும் வேதனையும் நிறைந்த சூழலில் இருந்தாலும், பற்றற்றவர்களாகவும் தந்தையிடம் அன்பானவர்களாகவும் இருக்கும் ஆன்மீகத் தாமரை மலர்களுக்கும், சகல ஆத்மாக்களுக்கும் சதா தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா ஆசிரியர்களிடம் பேசுகிறார்: நீங்கள் சேவையாளர்கள். ஆசிரியர்கள் அல்ல. சேவையில் துறவறமும் தபஸ்யாவும் அமிழ்ந்துள்ளன. ஒரு சேவையாளர் ஆகுவதெனில், சுரங்கத்தின் உரிமையைப் பெறுதல் என்று அர்த்தம். ஒவ்வொரு விநாடியும் நீங்கள் நிரம்பி வழிவதே சேவை ஆகும். நீங்கள் நிரம்பியவர்கள் ஆகுகிறீர்கள். அதனால் தொடர்ந்து அரைக்கல்பத்திற்கு அதில் இருந்து உண்கிறீர்கள். நீங்கள் முயற்சி செய்யத் தேவையற்ற சேவையாளர்கள் ஆவீர்கள். அதிலும், நீங்கள் ஆத்மாவின் விழிப்புணர்வில் உங்களை ஸ்திரப்படுத்தி, ஆத்மாக்களுக்குச் சேவை செய்யும் ஆன்மீகச் சேவையாளர்கள் ஆவீர்கள். இதுவே ஆன்மீகச் சேவையாளர் எனப்படுகிறது. பாப்தாதா எப்போதும் இத்தகைய ஆன்மீகச் சேவையாளர்களுக்கு ‘ஆன்மீக ரோஜா’ என்ற பட்டத்தை வழங்குகிறார். ஆகவே, நீங்கள் அனைவரும் ஒருபோதும் வாடாத ஆன்மீக ரோஜாக்கள் ஆவீர்கள். நீங்கள் உங்களின் ஆன்மீக நறுமணத்தால் அனைவரையும் புத்துணர்ச்சி ஆக்குபவர்கள்.

சேவையாளர் ஆகுவதெனில், மிக மேன்மையான பாக்கியத்தைப் பெறுவதாகும். சேவையாளர் என்றால் தந்தைக்குச் சமமானவர் என்று அர்த்தம். தந்தை எவ்வாறு சேவையாளராக இருக்கிறாரோ, அவ்வாறே நீங்கள் கருவி சேவையாளர்கள் ஆவீர்கள். தந்தை எல்லையற்ற ஆசிரியர் ஆவார். நீங்கள் கருவி ஆசிரியர்கள் ஆவீர்கள். எனவே, நீங்கள் தந்தைக்குச் சமமாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். இந்த மேன்மையான பாக்கியத்தினூடாக, எப்போதும் தொடர்ந்து மற்றவர்களுக்கு அழியாத பாக்கியத்தின் ஆசீர்வாதத்தை வழங்குங்கள். முழு உலகிலும் மிகச் சில ஆத்மாக்களுக்கே இத்தகைய பாக்கியம் இருக்கும். இந்த விசேடமான பாக்கியத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்தவண்ணம், சக்திசாலி ஆகுங்கள். அத்துடன் மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குங்கள். தொடர்ந்து மற்றவர்களைப் பறக்கச் செய்யுங்கள். சதா உங்களை முன்னேறச் செய்வதுடன், மற்றவர்களையும் முன்னேறச் செய்யுங்கள். அச்சா.

தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மையான அவ்யக்த வாசகங்கள்.
மாயையை வென்றவர் ஆகுவதுடன், இயற்கையை வென்றவராகவும் ஆகுங்கள்.

குழந்தைகளான நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். ஆனால், நீங்கள் இயற்கையை வென்றவர்கள் ஆகவும் வேண்டும். ஏனெனில், இப்போது அதிகளவில் இயற்கையில் குழப்பங்கள் ஏற்படும். சிலவேளைகளில், கடல் நீர் அதன் ஆதிக்கத்தைக் காட்டும். சிலவேளைகளில், நிலம் அதன் ஆதிக்கத்தைக் காட்டும். நீங்கள் இயற்கையை வென்றவர்கள் ஆகினால், எந்தவிதமான இயற்கையின் குழப்பமும் உங்களை அசைக்காது. நீங்கள் சகல விளையாட்டுக்களையும் சதா ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து அவதானிப்பீர்கள். நீங்கள் உங்களின் தேவதை ரூபத்தில் இருக்கும் அளவிற்கு, அதாவது, உங்களின் மேன்மையான ஸ்திதியில் இருக்கும் அளவிற்கு, நீங்கள் இயல்பாகவே சகல குழப்பங்களுக்கும் அப்பாற்பட்டு இருப்பீர்கள். இயற்கையை வென்றவர் ஆகுவதற்கு முன்னால், உங்களின் பௌதீகப் புலன்களை வென்றவர்கள் ஆகுங்கள். அப்போது மட்டுமே உங்களால் இயற்கையை வென்றவர் ஆகி, உங்களின் கர்மாதீத் ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து, உலக இராச்சியத்திற்கான உரிமையைக் கோர முடியும். எனவே, உங்களையே கேட்டுப் பாருங்கள்: உங்களின் பௌதீகப் புலன்கள் அனைத்தும் ‘ஜீ ஹஸ{ர், ஜீ ஹஜிர்’ (ஆமாம், எனது பிரபுவே, உங்கள் முன் உள்ளேன்) எனக் கூறுகின்றனவா? உங்களின் ஆலோசகர்களும் அமைச்சர்களும் உங்களை ஏமாற்றவில்லை, அல்லவா?

குழந்தைகளான உங்களிடம் மகத்தான தூய்மை சக்தி உள்ளது. உங்களின் தூய எண்ணங்களால், அதாவது, உங்களின் தூய மனோபாவத்தால், உங்களால் இயற்கையையே மாற்ற முடியும். உங்களின் எண்ணங்களில் தூய்மை சக்தி இருப்பதன் நடைமுறை அத்தாட்சியானது, இயற்கையின் மாற்றம் ஆகும். எனவே, சுய மாற்றத்துடன்கூடவே, உங்களால் இயற்கையையும் மனிதர்களையும் மாற்ற முடியும். தூய்மையற்ற மனித ஆத்மாக்களிடமிருந்தும் தூய்மையற்ற சூழல் மற்றும் தூய்மையற்ற பஞ்சபூதங்களின் அதிர்வலைகளில் இருந்தும் உங்களைப் பாதுகாப்பதற்கான இலகுவான வழிமுறை, இறைகோட்பாடுகளே ஆகும். கோட்பாடுகளை மீறாதீர்கள். நீங்கள் சிரமப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். உங்களின் எண்ணங்களில், வார்த்தைகளில் அல்லது செயல்களில் கோட்பாடுகளின் கோட்டிற்கு வெளியே செல்வதனாலேயே நீங்கள் சிரமப்பட வேண்டியுள்ளது.

மூதாதையராக இருக்கும் உங்களின் பதவியில் சதா ஸ்திரமாக இருந்து, உங்களின் எண்ணங்களினூடாக ஐந்து விகாரங்களுக்கும் அரைக்கல்பத்திற்கு விடைபெற்றுச் செல்லுமாறு கட்டளை இடுங்கள். இயற்கையை சதோபிரதானாகி, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்படி கூறுங்கள். அவள் உங்களின் கட்டளைகளுக்கேற்ப அனைத்தையும் செய்வாள். அப்போது இயற்கை உங்களை ஏமாற்ற மாட்டாள். எவ்வாறாயினும், அனைத்திற்கும் முதலில், உங்களுக்குள் சகல உரிமைகளையும் கொண்டவர் ஆகுங்கள். உங்களின் சொந்த சுபாவத்திலும் சம்ஸ்காரங்களிலும் நீங்கள் தங்கியிருக்கக்கூடாது. உங்களிடம் சகல உரிமைகளும் இருக்கும்போது, அனைத்தும் உங்களின் கட்டளைகளுக்கேற்ப செயற்படும். இயற்கை, அதாவது, பஞ்ச பூதங்களும் இன்று விஞ்ஞான சக்தியால் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகின்றன. எனவே, இயற்கையாலும் சூழ்நிலைகளாலும் இறைவனின் குழந்தைகளான, மாஸ்ரர் படைப்பாளர்களான, மாஸ்ரர் சர்வசக்திவான்களான உங்களின் முன்னால் பணியாட்கள் ஆகமுடியாதா? விஞ்ஞானத்தின் அணு சக்தியால் பெரியதொரு பணியைச் செய்ய முடியுமாயின், ஆத்மாக்களினதும் பரமாத்மாவினதும் சக்தியால் எதை அடைய முடியாது? உங்களால் இலகுவாக இயற்கையினதும் சூழ்நிலைகளினதும் ரூபத்தையும் குணங்களையும் மாற்ற முடியும். ஒரு விநாடியில் சகல வகையான தடைகளையும் தூய்மையற்ற சுபாவத்தின் அனர்த்தங்களையும் வெற்றி கொள்வதற்கு, ‘ஆஹா, நானே!’ என்ற ஒரேயொரு விடயத்தில் நம்பிக்கை வையுங்கள். போதையைக் கொண்டிருங்கள். நான் ஒரு மேன்மையான பிராமண ஆத்மா. இந்த விழிப்புணர்வைப் பேணுங்கள். நீங்கள் சக்தி சொரூபம் ஆகுவீர்கள்.

இயற்கையிடமிருந்து பரீட்சைத்தாள் வரும்போதெல்லாம், ‘இது ஏன் நிகழ்ந்தது? இது என்ன?’ என்ற கேள்விகளைக் கேட்டு நீங்கள் தளம்பல் அடைகிறீர்கள். குழப்பத்திற்கு உள்ளாகுவதெனில் தோல்வி அடைதல் என்று அர்த்தம். என்ன நிகழ்ந்தாலும், உங்களுக்குள் ‘ஆஹா, இனிய நாடகமே!’ என்ற ஒலியே வெளிப்பட வேண்டும். ‘என்ன நிகழ்ந்தது?’ என்ற துயரமான எண்ணம் சிறிதளவேனும் உங்களுக்குள் தோன்றக்கூடாது. நாடகத்தின் ஞானத்தால் உங்களை வலிமையானவர் ஆக்கிக் கொள்ளுங்கள். மாயையை வென்றவராகவும், இயற்கையை வென்றவராகவும் ஆகுவதற்கு, விஸ்தாரத்தில் இருந்து விடுபடும் சக்தியைக் கிரகியுங்கள். இதற்கு, பார்த்தும் பார்க்காதிருங்கள். கேட்டும் கேட்காதிருங்கள்! ஒரு கணம் பௌதீகமாக இருப்பதையும், அடுத்த கணம் சூட்சுமமாக இருப்பதையும் அடுத்த கணம் அசரீரியாக இருப்பதையும் பயிற்சி செய்யுங்கள். இயற்கையின் குழப்பத்தைப் பார்க்கும்போது, இயற்கையின் பிரபு ஆகுங்கள். முற்றுப்புள்ளி இடும் உங்களின் ஸ்திதியால், இயற்கையின் குழப்பத்தை நிறுத்துங்கள். தமோகுணி ஸ்திதியை சதோகுணி ஸ்திதியாக மாற்றும் பயிற்சியை அதிகரியுங்கள்.

சங்கமயுகத்தில் மட்டுமே, இயற்கை, ஒத்துழைக்கும் தனது பாகத்தை ஆரம்பிக்கிறாள். அவள் இயற்கையின் பிரபுவையும் மாஸ்ரர் இயற்கை பிரபுக்களையும் ஒவ்வொரு வழிமுறையிலும் வரவேற்பாள். அவள் நன்றி தெரிவிப்பதுடன், ஒவ்வொரு வழிமுறையிலும் தன்னை ஒப்படைப்பாள். இதனாலேயே, ஒவ்வொரு இயற்கையின் கூறும் ஒரு தேவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தேவர் என்பவர் அருள்பவர், வழங்குபவர் என்று அர்த்தம். எனவே, இறுதியில், இயற்கையின் கூறுகள் உங்களுடன் ஒத்துழைக்கும் அருள்பவர்கள் ஆகும். எங்கும் எத்தகைய இயற்கையின் குழப்பங்கள் இருந்தாலும், மாஸ்ரர் இயற்கையாக இருக்கும் உங்களுக்கு இயற்கை, உங்களின் பணியாட்களாகச் சேவகம் செய்யும். நீங்கள் இயற்கையை வென்றவர்கள் ஆகவேண்டும். அவ்வளவே. இயற்கை அப்போது தனது அதிபதிகளுக்கு ஒத்துழைப்பெனும் மாலையைச் சூட்டுவாள். பிராமணர்களான, இயற்கையை வென்றவர்களான நீங்கள் எங்கு காலடி பதிக்கிறீர்களோ அல்லது எங்கு உங்களின் இடங்கள் உள்ளனவோ, அங்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படமாட்டாது. அப்போது, அனைவரும் உங்களிடமிருந்து சூட்சுமமான மற்றும் பௌதீகமான ஆதாரத்தைப் பெறுவதற்கு ஓடோடி வருவார்கள். உங்களின் இடங்கள் புகலிடம் ஆகிவிடும். அனைவரின் உதடுகளில் இருந்தும், ‘அன்பான இறைவா, உங்களின் விளையாட்டு அற்புதமானது! நீங்கள் மகத்தானவர்! நீங்கள் மிகவும் மகத்தானவர்! நீங்கள் அனைவரும் பெற்றீர்கள். ஆனால் எங்களுக்குத் தெரியாது! நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம்!’ என்ற வார்த்தைகள் வெளிப்படும். இந்த ஒலியானது சகல திசைகளில் இருந்தும் வெளிப்படும். அச்சா. ஓம் சாந்தி.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரேயொரு தந்தையை உங்களின் உலகமாக்கி, ஒரேயொருவரால் ஈர்க்கப்பட்டவராக இருப்பதன் மூலம், எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்தும் விடுபட்டிருப்பீர்களாக.

வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் அனுபவத்தில் சதா இருங்கள். ‘ஒரேயொரு பாபாவே எனது உலகம். வேறு எந்தக் கவர்ச்சியோ எந்தவிதமான கர்ம பந்தனங்களோ இல்லை.’ உங்களின் பலவீனமான சம்ஸ்காரங்களின் எந்தவித பந்தனங்களும் இருக்கக்கூடாது. எவரின் மேலாவது ‘எனது’ என்ற உரிமையைக் கொண்டிருப்பவர்களுக்கு கோபம் அல்லது அகங்காரம் இருக்க முடியும். அதுவும் கர்ம பந்தனமே. எவ்வாறாயினும், பாபா உங்களின் உலகமாக இருக்கும்போது, இந்த விழிப்புணர்வு இருக்கும்போது, ‘எனது, எனது’ என்ற சகலதும் ‘எனது பாபா’ என்பதில் அமிழ்ந்துவிடும். நீங்கள் இலகுவாகக் கர்ம பந்தனங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

சுலோகம்:
மகாத்மா என்பவர் எல்லையற்ற மனோபாவத்தையும் பார்வையையும் கொண்டிருப்பார்.