25.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப் பிறவியின் பாவங்களை இலேசாக்கிக் கொள்வதற்கு, தந்தையிடம் உண்மையைக் கூறி, யோகத் தீயில் உங்கள் கடந்த காலப் பிறவிகளின் பாவங்களை முடித்து விடுங்கள்.

கேள்வி:
இறை உதவியாளர்கள் ஆகுவதற்கு, நீங்கள் எந்த ஒரு அக்கறையை கொண்டிருக்க வேண்டும்?

8பதில்:
நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து, நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தூய்மையாக வேண்டும் என்ற அக்கறையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இதுவே, பிரதான பாடமாகும். தூய்மையாகுகின்ற குழந்தைகளால்தான் தந்தையின் உதவியாளர்கள் ஆகமுடியும். தந்தை, தனியாக என்ன செய்வார்? இதனாலேயே, குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் சொந்த யோகசக்தியினால், உலகைத் தூய்மையாக்கி, தூய்மையான இராச்சியத்தை உருவாக்க வேண்டும். முதலில் உங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குங்கள்.

ஓம் சாந்தி.
புத்துணர்ச்சியுடையவர்கள் ஆகுவதற்காக நீங்கள் பாபாவிடம் வருகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களுடைய சொந்த இடங்களிலுள்ள நிலையங்களுக்குச் செல்லும்போது, உங்களால் இவ்வாறு நினைக்க முடியாது. பாபா மதுவனத்தில் இருக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. தந்தையின் முரளி, குழந்தைகளாகிய உங்களுக்காகக் கூறப்படுகிறது. நீங்கள் முரளியைச் செவிமடுப்பதற்காக மதுவனத்திற்கு வருகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் ‘முரளி’ என்ற வார்த்தையை கிருஷ்ணருடன் தொடர்புபடுத்தியுள்ளார்கள். முரளிக்கு வேறு எந்தக் கருத்துமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்களும் உண்மையில் மிகவும் விவேகமற்றவர்களாகி விட்டீர்கள் என்று உணர்கிறீர்கள். சுயம் இவ்வாறிருப்பதை வேறு எவரும் புரிந்து கொள்வதில்லை. “உண்மையில், நாங்கள் மிகவும் விவேகமற்றவர்களாகி உள்ளோம்” எனும் நம்பிக்கை நீங்கள் இங்கு வரும்போது உங்களுக்கு உங்கள் புத்தியில் ஏற்படுகிறது. நீங்கள் சத்திய யுகத்தில், மிகவும் விவேகமான உலக அதிபதிகளாக இருந்தீர்கள். மூடர்களால் உலக அதிபதிகள் ஆக முடியாது. இந்த இலக்ஷ்மியும், நாராயணனும், உலக அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் மிகவும் விவேகமானவர்களாக இருந்ததாலேயே, அவர்கள் பக்தி மார்க்கத்தில் பூஜிக்கப்படுகிறார்கள். உயிரற்ற விக்கிரகங்களினால் எதுவும் கூற முடியாது. மக்கள் சிவபாபாவை வழிபடுகின்றார்கள். ஆனால் அவர் எதையாவது கூறுகிறாரா? சிவபாபா ஒரு தடவையே வந்து பேசுகிறார். அவரை வழிபடுபவர்களுக்கு அவரே ஞானத்தைப் பேசும் தந்தை என்பது தெரியாது. கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்ததாக அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் வழிபடும் ஒருவரின் தொழில் என்ன என்பது எதுவும் அவர்களுக்குத் தெரியாது. ஆகவே தந்தை வரும்வரை, வழிபடுதல் போன்றன அனைத்தும் பலனற்றதாகும். குழந்தைகளாகிய உங்களிலும், பலர் வேதங்களையோ அல்லது சமயநூல்கள் எதனையுமோ கற்றிருக்க மாட்டீர்கள். ஒரேயொரு உண்மையான தந்தையே இப்போது உங்களுக்குக் கற்பிக்கிறார். உங்களுக்கு உண்மையைக் கற்பிப்பவர் ஒரேயொரு தந்தை மாத்திரமே என்பதை நீங்கள் உண்மையாகவே புரிந்து கொள்கிறீர்கள். தந்தை, சத்தியம் என்று அழைக்கப்படுகிறார். சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான உண்மைக் கதையை அவர் உங்களுக்குக் கூறுகிறார். கருத்து சிறந்தது. உண்மையான தந்தை வருகிறார் ஆனால் நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவதற்கு விரும்பினால், நிச்சயமாக அவர் சத்திய யுகத்தை ஸ்தாபிக்க வேண்டும், பழைய கலியுக உலகை அவர் படைக்க மாட்டார். தாம் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவோம் என்பது கதையைச் செவிமடுக்கும் போது, எவரது புத்தியிலும் இருக்க மாட்டாது. உங்களை ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாற்றுவதற்கு, இப்பொழுது உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கப்படுகிறது. இது ஒன்றும் புதியது அல்ல. தந்தை கூறுகிறார்: ஒவ்வொரு சக்கரத்திலும் நான் வந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். எவ்வாறு நான் ஒவ்வொரு யுகத்திலும் வர முடியும்? பிரம்மாவின் படத்தை அவர்களுக்குக் காட்டி, இவரே, இரதம் என்று விளங்கப்படுத்தலாம். இதுவே அவரது பல பிறவிகளில், இறுதித் தூய்;மையற்ற பிறப்பாகும். இப்போது அவர் தூய்மையாகிக் கொண்டிருக்கிறார். நாங்களும் தூய்மையாகிக் கொண்டிருக்கிறோம். யோக சக்தி இன்றி, எவராலும் தூய்மையாக முடியாது; பாவங்கள் அழிக்கப்பட முடியாது. நீரில் குளிப்பதால், எவரும் தூய்மையாக முடியாது. இது யோகத் தீயாகும். நீர் நெருப்பை அணைக்கும். ஆனால் தீ எரியும். ஆகவே நீர் நெருப்பல்ல. அதன் மூலம் உங்கள் பாவங்களை அழிக்க முடியாது. இவரே அதிகளவு குருமாரை ஏற்றுக் கொண்டிருந்தார், அத்துடன் அதிகளவு சமயநூல்களையும் கற்றிருந்தார். இப்பிறவியில் அவர் ஒரு பண்டிதரைப் போன்று இருந்தார். ஆனால், அதனால் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. அவர் தூய்மையாகவோ அல்லது புண்ணியாத்மாவாகவோ ஆகவில்லை. அவர் தொடர்ந்தும் பாவங்களைச் செய்தார். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: குழந்தைகள் என்று தம்மை கருதுபவர்கள், தாம் செய்த பாவங்கள் போன்றவற்றை பாபாவிடம் கூற வேண்டும். பாபா, உங்கள் முன்னிலையில் நேரடியாக இருப்பதால், பாவச் சுமைகள் இலேசாகிவிடும். நீங்கள் இப் பிறவியிலேயே இலேசாகி விடுவீர்;கள். பின்னர் நீங்கள் உங்கள் தலையிலுள்ள பல பிறவிகளின் பாவச் சுமைகளை நீக்குவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். தந்தை உங்களுக்கு யோகத்தைப் பற்றி விளங்கப்படுத்துகிறார். யோகத்தின் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந் நேரத்தில் மாத்திரமே நீங்கள்; இவ் விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். சத்திய யுகத்தில் எவரும் இவ் விடயங்களைக் கூற மாட்டார்கள். முழு நாடகமும் முன்னரே நிச்சயிக்கப்பட்டதாகும். முழு நாடகமும், விநாடிக்கு விநாடி தொடர்ந்து மாறுகிறது. ஒரு விநாடி அடுத்த விநாடியைப் போன்றிருக்க முடியாது. உங்களுடைய ஆயுளும் விநாடிக்கு விநாடி தொடர்ந்தும் குறைவடைகின்றது. குறைவடைந்து கொண்டிருக்கும் உங்கள் ஆயுளுக்கு இப்பொழுது நீங்கள் ஒரு தடையை (டிசயமந) பிரயோகித்து, யோகத்தின் மூலம் உங்கள் ஆயுளை அதிகரித்துக் கொள்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது யோக சக்தியின் மூலம் உங்கள் ஆயுளை அதிகரித்துக் கொள்ள வேண்டும். பாபா, யோகத்தை அதிகளவு வலியுறுத்துகின்றார். எனினும் சிலர் சற்றேனும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நான் உங்களை மறந்து விடுகிறேன். இதனாலேயே, பாபா கூறுகிறார்: யோகம் என்பது வேறு எதுவுமில்லை. அது நினைவு யாத்திரையாகும். தந்தையை நினைவு செய்வதன் மூலம். உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அழிக்கப்படும். உங்களுடைய இறுதி எண்ணம் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். இதனையிட்டு ஓர் உதாரணமும் உள்ளது. ஒருவர் இன்னொருவரிடம் ‘நீ ஒரு எருமை’ என்று கூறினாராம். அதன் பின்னர் அந்நபர் தன்னை ஒரு எருமையாகவே கருத ஆரம்பித்தார். ஒருநாள் ஒரு கதவினூடாக வெளியேறுமாறு அவரிடம் கேட்கப்பட்ட போது, அவர் கூறினார்: நான் ஒரு எருமை என்பதால், எவ்வாறு என்னால் இந்தக் கதவினூடே வெளியேற முடியும்? அது உண்மையாகவே அவர் ஒரு எருமையாகி விட்டதைப் போன்றதாகும். இது அவர்கள் உருவாக்கிய ஓர் உதாரணமாகும். இல்லாவிடில், அவ்வாறு எவரும் இல்லை. இது ஒரு சரியான உதாரணமல்ல. ஏதாவது ஓர் உண்மையின் அடிப்படையிலேயே ஓர் உதாரணம் கொடுக்கப்படும். தந்தை இந் நேரத்தில் உங்களுக்கு விளங்கப்படுத்திய விடயங்கள் சம்பந்தமான விழாக்களை இந்நேரத்தில் பக்தி மார்க்கத்தில் மக்கள் கொண்டாடுகிறார்கள். அவர்கள் பல மேலாக்கள் போன்வற்றை நடாத்துகின்றனர். ஆனால் இப்பொழுது இடம்பெறுபவையே, பின்னர் விழாக்கள் ஆகுகின்றன. இங்கு நீங்கள் மிகவும் சுத்தமாக ஆகுகிறீர்கள். மக்கள் மேலாக்களின் போது, அதிகளவு அழுக்கடைகின்றனர். அவர்கள் தமது பாவங்கள் அழியும் என்று நினைத்து, தங்கள் சரீரங்களின் மீது சேற்றை பூசிக் கொள்கின்றனர். பாபா, அவை அனைத்தையும் செய்துள்ளார். நாஸீக்கிலுள்ள நீர் மிகவும் அழுக்கானது. மக்கள் அங்கு சென்று, தங்கள் மேல் சேற்றை பூசிக் கொள்கிறார்கள். தங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். பின்னர் அந்த சேற்றைக் கழுவுவதற்கு அவர்கள் நீரைப் பயன்படுத்துகிறார்கள். சில மகராஜாக்கள் போன்றவர்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்போது, ஒரு பாத்திரத்தில் கங்கை நீரை எடுத்துச் சென்று, நீராவிக் கப்பலில் அருந்துவதுண்டு. முன்னர் ஆகாய விமானமோ, மோட்டார் கார் போன்றவையோ இருக்கவில்லை. கடந்த 100, 150 ஆண்டுகளில் அவர்கள் கண்டுபிடித்த அனைத்துப் பொருட்களையும் பாருங்கள். இந்த விஞ்ஞானம் அனைத்தும் சத்திய யுக ஆரம்பத்தின்போது உதவியாக இருக்கும். அங்கு அரண்மனைகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு அவர்களுக்கு அதிக நாட்கள் தேவைப்படாது. உங்களது புத்தி இப்போது தெய்விPகப் புத்தி ஆகுகின்றது, ஆகவே அதனால் அனைத்து வேலைகளையும் இலகுவாகச் செய்யக்கூடியதாக இருக்கும். இங்கு உங்களுக்குச் செங்கட்டிகள் இருப்பது போன்று, அங்கு உங்களுக்கு தங்கக் கட்டிகள் இருக்கும். இதனைச் சித்தரிக்கும் மாயை பற்றிய கதை ஒன்று உள்ளது. (சூட்சும உலகத்திலிருந்து, தங்கக் கட்டி கொண்டு வருவது). சத்திய யுகத்தில் உண்மையில் தங்கக் கட்டிகள் உள்ளன என்று காட்டுவதற்கு அவர்கள் அமர்ந்திருந்து, ஒரு நாடகத்தை உருவாக்கினார்கள். அதுவே சத்தியயுகம் என்று அழைக்கப்படுகிறது. இது கலியுகம் என்று அழைக்கப்படுகிறது. அனைவரும் சுவர்க்கத்தை நினைவு செய்கின்றனர். அவர்களது விக்கிரகங்கள் எப்போதும் இருக்கின்றன. இதனாலேயே, அவர்கள், புராதன, ஆதி தேவிதேவதா தர்மத்தையிட்டுப் பேசுகிறார்கள். பின்னர் அவர்கள் இந்து சமயத்தையிட்டும் பேசுகிறார்கள். அவர்கள் விகாரமுள்ளவர்களாக ஆகுவதால், தங்களைத் தேவர்கள் என்று அழைப்பதற்குப் பதிலாக, இந்துக்கள் என்று அழைக்கிறார்கள். எவ்வாறு அவர்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியும்? நீங்கள் தூதுவர்கள் என்பதால், நீங்கள் எங்கு சென்றாலும் இதனை விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் தந்தையின் அறிமுகத்தை ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் கூறுவதைச் சரி என்று அதாவது உண்மையில் உங்களுக்கு இரண்டு தந்தைமார் உள்ளனர் எனபதைச் சிலர் உடனடியாகப் புரிந்து கொள்வார்கள். கடவுள் சர்வவியாபி என்று கூறுவார்கள். நீங்கள் ஒரு தந்தையிடமிருந்து, எல்லைக்குட்பட்ட ஆஸ்தியையும், பரலோகத் தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு எல்லையற்ற ஆஸ்தியையும் பெறுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். இந்நேரத்தில், உங்களிடம் இந்த ஞானம் உள்ளது. அங்கு, உங்களிடம் இந்த ஞானம் இருக்க மாட்டாது. உங்களால் பிறவிபிறவியாக 21 சந்ததிகளுக்கு இராச்சியத்தை ஆளக்கூடிய வகையில் இந்த ஆஸ்தியைச் சங்கம யுகத்தில் மாத்திரமே நீங்கள் பெறுகின்றீர்கள். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். இப்போது உங்களிடம் இந்த ஞானம் உள்ளது. புத்தியில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களுக்கு, ஏதாவது சந்தேகம் இருக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து, எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். சிவபாபா வரும்போது, நிச்சயமாக அவர் உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்க வேண்டும். இதனாலேயே பாபா கூறுகிறார்: இந்த பட்ஜ் (டியனபந) மிகவும் நல்லது. நீங்கள் நிச்சயம் இதனை அணிய வேண்டும். இந்தச் செய்தியை நீங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்க வேண்டும். சிலர் உங்களை நம்புவார்கள். சிலர் நம்ப மாட்டார்கள். விநாசம் இடம்பெறும்போது, கடவுள் வந்துள்ளார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்போது உங்களிடமிருந்து செய்தியைப் பெற்றுக் கொண்டவர்கள் நினைவு கூருவார்கள்: வெள்ளை ஆடை அணிந்த அத்தேவதைகள் யார்? சூட்சும உலகத்திலும் நீங்கள் தேவதைகளைக் காண்கின்றீர்கள். அப்படியில்லையா? யோக சக்தியின் மூலம் மம்மாவும், பாபாவும் அத்தகைய தேவதைகள் ஆகுவதால். நீங்களும் அவ்வாறு ஆக முடியும் என நீங்கள் அறிவீர்கள். தந்தை இவரினுள் பிரவேசித்து, இவ் விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் நேரடியாக உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். பாபா தன்னுள் கொண்டிருக்கும் ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்களும் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மேலே செல்லும்போது, ஞானத்தின் பாகமும் முடிவடைகிறது. நீங்கள் பெற்றுள்ள சந்தோஷம் என்ற பாகத்தை அதன் பின்னர் நடிப்பீர்கள். அத்துடன் இந்த ஞானத்தையும் மறந்துவிடுகிறீர்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் எங்கு சென்றாலும், ஒரு தூதுவராக இருக்கிறீர்;கள் என்பதற்கு அறிகுறியாக, இந்த பட்ஜை சதா அணிந்திருக்க வேண்டும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து நகைத்தாலும் பரவாயில்லை. நீங்கள் அவர்களுக்குச் சரியான விடயங்களைக் கூறுவதால், ஏன் அவர்கள் உங்களைப் பார்த்து நகைக்க வேண்டும்? அவரே எல்லையற்ற தந்தையாவார். அவரது பெயர் சிவபாபா. அவரே நன்மை பயப்பவர். அவர் வந்து, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். இதுவே அதி மங்களகரமான சங்கம யுகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானம் அனைத்தையும் பெற்றிருக்கிறீர்கள். ஆகவே ஏன் நீங்கள் இவற்றை மறக்கின்றீர்கள்? இது முற்றிலும் மிகச் சரியானது. நீங்கள் முன்னேறிச் செல்லும் போது தந்தையையும், உங்களுடைய ஆஸ்தியையும், அதாவது அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு வந்து, முரளியைக் கேட்ட பின்னர் திரும்பிச் செல்கிறீர்கள். நீங்கள் இவற்றை மற்றவர்களுக்கும் கூறவேண்டும். பிராமண ஆசிரியர்கள் மற்றவர்களைத் தங்களைப் போன்று ஆக்கவேண்டும். அப்போதுதான் அவர்களால் பலருக்கு நன்மை செய்ய முடியும். ஓர் ஆசிரியர் சென்றுவிட்டால், இன்னொரு ஆசிரியரால் நிலையத்தை நடத்த முடியாதா? எந்த ஞானமும் கிரகிக்கப்படவில்லையா? மாணவர்களுக்குக் கற்பதிலும், மற்றவர்களுக்குக் கற்பிப்பதிலும் ஆர்வம் இருக்க வேண்டும். முரளி மிகவும் இலகுவானது. எவராலும் ஞானத்தைக் கிரகித்து, வகுப்பை நடாத்த முடியும். தந்தை இங்கு அமர்ந்திருக்கிறார். தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார்: நீங்கள்; எதனையிட்டும் எவ்வித சந்தேகமும் கொண்டிருக்கக் கூடாது. தந்தை ஒருவருக்கு மாத்திரமே அனைத்தும் தெரியும். உங்களுக்கு ஒரேயொரு இலட்சியமும் இலக்கும் உள்ளது. இதனையிட்டுக் கேள்வி கேட்கவேண்டிய தேவை இல்லை. நான் அதிகாலையில் அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு யாத்திரைக்கு உதவுகிறேன். நான், எல்லையற்ற குழந்தைகள் அனைவரையும் நினைவு செய்கிறேன். குழந்தைகளாகிய உங்கள் நினைவின் உதவியுடன் முழு உலகமும் தூய்மையாக்கப்பட வேண்டும். இதற்கே நீங்கள் உங்கள் விரலைக் கொடுக்கின்றீர்கள். முழு உலகமும் தூய்மையாக ஆக்கப்பட வேண்டும். ஆகவே தந்தை குழந்தைகள் அனைவரின் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறார். அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். அவர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றார். தந்தையும் எல்லையற்றதிலேயே இருப்பார். நான் முழு உலகத்தையும் தூய்மையாக்க வந்துள்ளேன். நான் முழு உலகமும் தூய்மையாகும் வகையில் ஒரு மின்சக்தியைப் கொடுக்கிறேன். இப்போது பாபா அமர்ந்திருந்து, நினைவு யாத்திரையைக் கற்பிக்கின்றார் என்பதையும், அதன் மூலம் முழு உலகத்திலும் அமைதி நிலவும் என்பதையும், முழுமையான யோக சக்தி உள்ளவர்கள் புரிந்து கொளகிறார்கள். குழந்தைகள் நினைவில் அமர்ந்திருக்கும்போது, அவர்கள் உதவியைப் பெறுகிறார்கள். உதவி செய்யக்கூடிய குழந்தைகளும் தேவைப்படுகிறார்கள். புத்தியில் நம்பிக்கையுள்ள, இறை உதவியாளர்கள் மாத்திரமே தந்தையை நினைவு செய்வார்கள். உங்களது முதலாவது பாடம் தூய்மையாகுதலாகும். அதாவது, குழந்தைகளாகிய நீங்கள் தந்தையுடன் கருவிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் தந்தையைக் கூவி அழைத்தீர்கள்: ஓ, தூய்மையாக்குபவரே, வாருங்கள்! அவர் தனியாக என்ன செய்வார்? அவருக்கு உதவியாளர்கள் தேவை. நீங்கள் உலகைத் தூய்மை ஆக்கிய பின்னர் முழு உலகையும் ஆட்சி செய்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவ்வாறான நம்பிக்கை, உங்கள் புத்தியில் இருக்கும்போது, நீங்கள் அந்தப் போதையைக் கொண்டிருப்பீர்கள். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் யோக சக்தியினால், உங்களுக்கான இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்தப் போதை உங்களுக்குள் அதிகரிக்கவேண்டும். இது ஆன்மீகம் சம்பந்தமானது. ஒவ்வொரு கல்பத்திலும் பாபா எங்களை ஆன்மீக சக்தியினால் உலக அதிபதிகள் ஆக்குகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சிவபாபா வந்து, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் இந்த நினைவு யாத்திரை பற்றிய அக்கறையை மாத்திரமே உங்கள் தலையில் கொண்டுள்ளீர்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யும்போது, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நீங்கள் சதா ஆரோக்கியமானவர்களாக ஆகும்பொருட்டு அதிகளவு வருமானத்தைச் சம்பாதிப்பதற்காக, தந்தை உங்களைத் தூண்டுகிறார். இப்போது நீங்கள் அனைத்தையும் மறந்துவிட வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்போது திரும்பிச் செல்கின்றோம். ஆத்ம உணர்வில் இருப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. உண்ணும்போதும், அருந்தும்போதும், நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியாதா? ஆடைகளைத் தைக்கும்போதும், உங்களது புத்தியின் யோகம் தந்தையுடன் தொடர்புபட்டு இருக்கவேண்டும். இது மிகவும் இலகுவானது. 84 பிறவிகளின் சக்கரம் இப்போது முடிவடைந்துவிட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்களாகிய எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காகத் தந்தை இப்போது வந்துள்ளார். இந்த உலக வரலாறும், புவியியலும் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது. இவ் விடயங்கள் முன்னைய கல்பத்திலும் இடம்பெற்றன. இது இப்போது மீண்டும் இடம்பெறுகிறது. இவ்வாறு மீண்டும் இடம்பெறுவதன் இரகசியத்தைத் தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். ஒவ்வொருவரும் தொடர்ந்து தங்கள் பாகங்களை நாடகத்தில் நடிக்கும் ஒரு பாகத்தினைப் பெற்றுள்ளார்கள். குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது: தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். பின்னர் உங்கள் சரீரங்கள் துறக்கப்படும். இப்பொழுது நீங்கள் வீடு திரும்பவேண்டும் என்பதால், நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும் என்பது ஆத்மாக்களாகிய உங்கள் புத்தியில் இப்போது உள்ளது. சத்திய யுகத்தில், நீங்கள் இதனைக் கூறமாட்டீர்கள். அங்கு நீங்கள் கூறுவீர்கள்: நீங்கள் ஒரு பழைய சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கவேண்டும். அங்கு துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கு, இது துன்ப பூமியாகும். இது ஒரு பழைய சரீரம். ஆகவே நீங்கள் இதனை நீக்கி, வீடு திரும்பவேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் தந்தையை சதா நினைவு செய்யவேண்டும். அசரீரியான தந்தை மாத்திரமே ஞானக் கடலாவார். அவரே வந்து, அனைவருக்கும் சற்கதியைக் கொடுக்கிறார். தந்தை கூறுகிறார்: நான் சாதுக்களையும் ஈடேற்றுகிறேன். இப்பொழுது நீங்கள் தந்தை ஒருவருடன் யோகம் செய்யவேண்டும். ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் தந்தை ஒருவரிடமிருந்து ஆஸ்தியைக் கோரும் உரிமையுள்ளது. உங்களை ஆத்மாக்களாகக் கருதி, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகி, சதா தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் தொடர்ந்து அழிக்கப்படும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக, இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. முரளியைக் கேளுங்கள். பின்னர் அதனை மற்றவர்களுக்குக் கூறுங்கள். நீங்கள் கற்பதுடன், மற்றவர்களுக்கும் கற்பியுங்கள். நன்மைபயப்பவர்கள்; ஆகுங்கள். உங்களுடைய பட்ஜ், நீங்கள் ஒரு தூதுவர் என்பதற்கான அடையாளமாகும். ஆகவே சதா உங்கள் பட்ஜை அணிந்திருங்கள்.

2. உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு, நினைவு யாத்திரையில் அமர்ந்திருங்கள். தந்தையின் பார்வை எல்லையற்றிருப்பதுடன், முழு உலகையும் தூய்மையாக்குவதற்கு அவர் மின்சக்தியைப் பாய்ச்சுவதைப் போன்று தந்தையைப் பின்பற்றி, அவரது உதவியாளர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் தொடர்பிலும் உறவுமுறையிலும் வரும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் நீங்கள் மகாதானியாகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாவுமாகி தானம் செய்வீர்களாக.

நாள்முழுவதும் உங்கள் தொடர்பிலும் அல்லது உறவுமுறையிலும் எவர் வந்தாலும் ஏதாவது ஒரு சக்தி, ஞானக்கருத்து, நற்குணம் என்பவற்றில் ஒன்றை தானமாகக் கொடுங்கள். உங்களிடம் ஞானம், சக்திகள், நற்குணங்கள் ஆகிய பொக்கிஷங்கள் உள்ளன. ஆகவே தானம் கொடுக்காத நாளே இல்லாதவாறு இருக்கட்டும், அப்போது நீங்கள் மகாதானி என்று கூறப்படுவீர்கள். தானம் என்பதன் வார்த்தையின் ஆன்மீக அர்த்தம் ஒத்துழைப்பு ஆகும். உங்களின் மேன்மையான ஸ்திதியின் சூழலாலும் மனோநிலையின் அதிவலைகளாலும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒத்துழைப்பு வழங்குங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மா என அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
பாப்தாதாவுக்கும் குடும்பத்துக்கும் நெருக்கமானவர்களுடைய முகங்கள் திருப்தி, ஆன்மீகம், சந்தோஷத்துடன் புன்னகை செய்யும்.