23.06.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     17.12.84     Om Shanti     Madhuban


சக்திமிக்க எண்ணங்கள் என்ற பொக்கிஷமாகிய ஞான முரளியே,
வீணானவற்றை முடிப்பதற்கான வழிமுறையாகும்
 


இன்று, பாப்தாதா தனித்துவமான, சங்கமயுகத்து ஆன்மிக ஒன்றுகூடலுக்குள் ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதற்காக வந்திருக்கின்றார். சக்கரம் முழுவதிலும் இந்த ஆன்மிக சந்திப்பாகிய இந்த ஒன்றுகூடலை இந்த ஒரு நேரத்தில் மாத்திரமே உங்களால் கொண்டிருக்க முடியும். சத்தியயுக உலகிலுமே, ஆத்மாக்கள் பரமாத்மாவை சந்திக்கின்ற மேன்மையானதொரு சந்திப்பு இடம்பெறுவதில்லை. ஆகையாலேயே இந்த யுகம் மகத்துவமான யுகம், மகத்துவமான சந்திப்பிற்கான யுகம், சகல பேறுகளுக்கான யுகம், சாத்தியமற்றவையும் சாத்தியமாகும் யுகம், மேன்மையான அனுபவங்களை இலகுவாகக் கொண்டிருப்பதற்கான யுகம், விசேடமான மாற்றத்தை ஏற்படுத்தும் யுகம், உலக நன்மைக்கான யுகம் மற்றும் இலகுவாக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான யுகம் எனப்படுகின்றது. அத்தகைய யுகத்தில், ஆத்மாக்களாகிய நீங்கள் மகத்துவமான பாகங்களைக் கொண்டிருக்கும் நடிகர்கள். நீங்கள் எப்பொழுதுமே அத்தகையதொரு மகத்துவமான போதையை கொண்டிருக்கிறீர்களா? முழு உலகமும் ஒரு விநாடிக்காகவேனும் தந்தையின் ஒரு கணப்பார்வைக்கான தாகத்துடன் இருக்கும் வேளையில், ஆத்மாக்களாகிய நீங்களோ அந்தத் தந்தைக்கு ஒரு விநாடியில் உரியவர்கள் ஆகும் உரிமையை கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு இந்த விழிப்புணர்வு உள்ளதா? இந்த விழிப்புணர்வு உங்களை இயல்பாகவே சக்திமிக்கதாக ஆக்குகின்றது. அத்தகைய சக்திமிக்க ஆத்மாக்களாக நீங்கள் ஆகியுள்ளீர்களா? ~சக்திமிக்கது| என்றால் வீணானவற்றை முடித்தவர்கள் என்று அர்த்தமாகும். வீணானது இருக்குமானால், எதுவுமே சக்திமிக்கதாக இருக்க முடியாது. உங்கள் மனதில் வீணான எண்ணங்கள் இருக்குமாக இருந்தால், அங்கே சக்திமிக்க எண்ணங்கள் நிலைத்திருக்க முடியாது. வீணானவை மீண்டும் மீண்டும் உங்களை கீழே தள்ளிவிடும். சக்திமிக்க எண்ணங்கள் சர்வசக்திவான் தந்தையை சந்திக்கின்ற அனுபவத்தை கொடுக்க உதவுவதுடன், மாயையை வெற்றி கொள்பவர்களாகவும் உங்களை ஆக்குகின்றது. அத்துடன் அவை சேவையாளர்களான உங்களை வெற்றி சொரூபங்களாகவும் ஆக்குகின்றது. வீணான எண்ணங்கள் உங்களது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் முடிக்கின்றன. அத்தகையவர்கள் எப்பொழுதும் ~ஏன்?|, ~என்ன?| என்ற குழப்பத்துடன் எப்பொழுதும் இருக்கின்றார்கள். ஆகையாலேயே அவர்கள் அற்ப விடயங்களினால் தம்மையிட்டு விரக்தி கொண்டிருக்கின்றார்கள். வீணான எண்ணங்கள், சதா சகல பேறுகளின் பொக்கிஷங்களின் அனுபவங்களைக் கொண்டிருப்பதிலிருந்து அவர்களை விலகச் செய்கின்றது. வீணான எண்ணங்கள் கொண்டிருப்பவர்களின் மனதின் தேவைகளும் ஆசைகளும் மிகவும் அதிகளவாகும். ~நான் இதனை செய்வேன். நான் அதனை செய்வேன்|. அவர்கள் அத்தகைய திட்டங்களை, அதாவது, வீணான எண்ணங்களின் வேகம் விரைவாக இருப்பதால் அவர்கள் மிக விரைவாக அத்தகைய திட்டங்களை தீட்டுகிறார்கள். ஆகையால், அவர்கள் மிக மேன்மையான விடயங்களை எண்ணிய போதிலும், அவர்கள் சக்திமிக்கவர்களாக இல்லாததால், திட்டங்களுக்கும் நடைமுறையில் இடுவதற்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. ஆகையால், அவர்கள் விரக்தி அடைகின்றார்கள். சக்திமிக்க எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் எதனையும் தமது எண்ணங்களுக்கு ஏற்பவே செய்கின்றார்கள், அவர்களின் சிந்தனையும் செயலும்; ஒன்றாகவே இருக்கும். அவர்களின் எண்ணங்கள் மெதுவான வேகத்துடன் இருப்பதுடன், அவர்கள் தமது செயல்களில் வெற்றியும் ஈட்டுகின்றார்கள். வீணாண எண்ணங்கள் சக்;திவாய்ந்த புயலை போன்று ஓர் குழப்பத்தை உருவாக்குகின்றது. சக்திமிக்க எண்ணங்கள், வசந்தகாலம் போன்று, சதா உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்து, வெற்றியானவர்களாகவும் ஆக்குகின்றது. வீணான எண்ணங்கள் உங்கள் சக்தியை அதாவது ஆத்ம சக்தியையும் நேரத்தையும் நீங்கள் இழப்பதற்கு கருவியாகுகின்றது. சக்திமிக்க எண்ணங்கள், சதா ஆத்ம சக்தியை அதாவது சக்தியை சேமிக்க உங்களுக்கு உதவுகின்றது. அவை உங்கள் நேரத்தை பலனடையச் செய்கின்றன. வீணான எண்ணங்கள் உங்கள் படைப்பான போதிலும், வீணான படைப்பானது, படைப்பாளியான ஆத்மாவிற்கு விரக்தியை ஏற்படுத்துகின்றது, அதாவது, அவை சக்திசாலி ஆத்மாவான மாஸ்டர் சர்வசக்திவானை, தனது மரியாதையை இழக்கச் செய்கின்றது. சக்திமிக்க எண்ணங்களோ, உங்களுடைய மேன்மையான கௌரவமான நினைவு சொரூபமாக உங்களை சதா நிலைத்திருக்கச் செய்கின்றது. இந்த வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் போதும், சில குழந்தைகள் இப்பொழுதும் வீணான எண்ணங்களைப் பற்றி முறைபாடு செய்கின்றார்கள். இப்பொழுதும் வீணான எண்ணங்கள் ஏன் ஏற்படுகின்றன? இதற்கான காரணம் என்ன? உங்களுக்கு பாபா கொடுத்துள்ள ஞான முரளியே சக்திமிக்க எண்ணங்கள் என்ற பொக்கிஷமாகும். முரளியின் ஒவ்வொரு மேன்மையான வாசகமும் ஒரு சக்திமிக்க பொக்கிஷமாகும். சக்திமிக்க எண்ணங்களான இந்த பொக்கிஷத்திற்கு போதியளவு பெறுமதியை கொடுக்காததால், உங்களால் சக்திமிக்க எண்ணங்களை கிரகிக்க முடியாதுள்ளது, அப்பொழுது வீணான எண்ணங்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றன. நீங்கள் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு மேன்மையான வாசகத்தையும் தொடர்ந்தும் கடையும் போது, ஒரு சக்திமிக்க புத்திக்குள், வீணானவையால் பிரவேசிக்க முடியாது. உங்கள் புத்தி வெறுமையாக இருக்கும் போதே, அவ்விடம் வெற்றிடமாக இருப்பதால், வீணானவை பிரவேசிக்கின்றன. இடைவெளி இல்லாதிருந்தால், வீணானவையால் எவ்வாறு உட்பிரவேசிக்க முடியும்? சக்திமிக்க எண்ணங்களினால் புத்தியை மும்முரமாக வைத்திருக்கும் வழிமுறை தெரியாதிருத்தல் என்றால் வீணான எண்ணங்களை வரவேற்பது என்று அர்த்தமாகும்.

அதனை (புத்தியை) மும்முரமாக வைத்திருக்கும் ஒரு வியாபாரி ஆகுங்கள். இரவு பகலாக, இந்த ஞான இரத்தினங்களின் வியாபாரி ஆகுங்கள். உங்களுக்கு நேரம் இல்லாதிருக்கும் போது, வீணான எண்ணங்களுக்கு இடைவெளி இருக்க மாட்டாது. ஆகையால், பிரதான விடயம், சதா உங்கள் புத்தியை சக்திமிக்க எண்ணங்களினால் நிரப்பி வைத்திருங்கள். இதற்கு அடிப்படையாக இருப்பது ஒவ்வொருநாளும் முரளியை செவிமடுப்பதும், உங்களுக்குள் அமிழ்த்திக் கொள்வதும், அதன் சொரூபம் ஆகுவதும் ஆகும். அந்த மூன்று ஸ்திதிகளும் உள்ளன. நீங்கள் அதனை செவிமடுப்பதில் அதிகளவு மகிழ்ச்சியடைகின்றீர்கள், அதனை செவிமடுக்காது உங்களால் இருக்க முடியாது. இதுவும் ஒரு ஸ்திதியாகும். இந்த ஸ்திதியில் இருப்பவர்கள், செவிடுக்கும் போது, செவிமடுக்க விரும்புகின்றார்கள். செவிமடுக்கும் அந்த ஆர்வம் இருப்பதால், அந்த நேரத்தின் இனிமையில் அவர்கள் களிப்படைகின்றார்கள். அவர்கள் செவிமடுக்கும் போது போதை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ~மிக நன்று| ~மிக நன்று| என்ற சந்தோஷப் பாடலையும் பாடுகிறார்கள். எவ்வாறாயினும், செவிமடுத்தல் முடிவடைந்தவுடன், அந்த ஆர்வமும் முடிவடைகின்றது, ஏனெனில், அவர்கள் அதனை தமக்குள் அமிழ்த்திக் கொள்வதில்லை. அமிழ்த்திக் கொள்ளும் சக்தியை பயன்படுத்தி தமக்குள் சக்திமிக்க எண்ணங்களை நிறைத்துக் கொள்ளாது விடுவதால், வீணான எண்ணங்கள் தொடர்ந்தும் அவர்களிடம் வருகின்றது. அதனை தமக்குள் அமிழ்த்திக் கொள்பவர்கள் சதா நிறைந்திருப்பதால், அவர்கள் வீணான எண்ணங்களில் இருந்து அப்பால் இருக்கிறார்கள். எனினும் அவர்கள் சொரூபங்கள் ஆகுவதில்லை, அவர்கள் தாம் சக்திமிக்கவர்களாக ஆகுவதும் இல்லை, பிறரை சக்திமிக்கவர்களாக ஆக்குவதுமில்லை. எனவே அந்த பலவீனம் காணப்படுகின்றது. அவர்கள் வீணான எண்ணங்கள் கொண்டிருப்பதில் இருந்து பாதுகாப்பாக உள்ளதுடன், தொடர்ந்தும் தூய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களால் சக்தி சொரூபங்களாக ஆக முடிவதில்லை. சொரூபங்கள் ஆகுபவர்கள் சதா நிறைந்திருப்பதுடன் சதா சக்திசாலிகளாக இருக்கின்றார்கள், அவர்கள் தமது சக்திமிக்க கதிர்களினால் ஏனையோரின் வீணானவற்றையும் முடிக்கிறார்கள். ஆகையால், உங்களிடம் வினவுங்கள்: நான் யார்? செவிமடுப்பவர்களில் ஒருவரா, தமக்குள் அமிழ்;த்திக் கொள்பவரா அல்லது சொரூபம் ஆகுபவரா? ஒரு சக்திமிக்க ஆத்மா ஒரு விநாடியில் வீணானவற்றை சக்திமிக்கதாக மாற்றுவார். எனவே, நீங்கள் சக்திமிக்க ஆத்மாக்கள், அல்லவா? ஆகையால், வீணானவற்றை மாற்றுங்கள். இப்பொழுதும், நீங்கள் தொடர்ந்தும் வீணானவற்றில் உங்கள் சக்தியையும் நேரத்தையும் விரயம் செய்பவராயின், பின்னர் எப்பொழுது நீங்கள் சக்திசாலிகள் ஆகப் போகிறீர்கள்? நீண்டகாலத்திற்கு சக்திமிக்கவர்களாக இருப்பவர்களாலேயே ஒரு சம்பூர்ணமான இராச்சியத்தை நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்ய முடியும். உங்களுக்குப் புரிகிறதா?

உங்கள் சக்திமிக்க வடிவத்தினால், பிறரை சக்திமிக்கவர்களாக ஆக்குவதற்கான நேரம் இதுவாகும். உங்களுக்குள் இருக்கின்ற அனைத்து வீணானவற்றையும் முடியுங்கள். உங்களிடம் இதற்கான தைரியம் உள்ளது, அல்லவா? மஹாராஷ்ராவைப் போன்று, நீங்களும் மகத்துவமானவர்கள் (மஹான்). அல்லவா? நீங்கள் மகத்துவமான எண்ணங்களை கொண்டிருப்பவர்கள், அப்படித்தானே? நீங்கள் பலவீனமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் அல்ல. நீங்கள் ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். அது நடக்கின்றது. இதுவே மகத்துவமான எண்ணங்களைக் கொண்டிருப்பதாகும். நீங்கள் அத்தகைய மகத்துவமான ஆத்மாக்கள், அல்லவா? பஞ்சாபிலிருந்து வந்தவர்கள் என்ன நினைக்கிறார்கள்? பஞ்சாபை சேர்ந்தவர்கள் தைரியசாலிகளும் துணிச்சலானவர்களும் ஆவார்கள். அல்லவா? மாயையின் சக்தியுடையவர்கள் அரசாங்கத்திடம் சவால் விடுகிறார்கள், இறை சக்தியுடையவர்கள் மாயையிடம் சவால் விடுகின்றார்கள். நீங்கள் மாயைக்கு சவால் விடுபவர்கள், அல்லவா? நீங்கள் பயந்தவர்கள் அல்ல, அல்லவா? அது அவர்களது இராச்சியம் என அவர்கள் கூறுவதைப் போன்றே, நீங்கள் மாயையிடம் சவால் விடுவதுடன், உங்கள் இராச்சியம் வரவுள்ளது என்றும் நீங்கள் உறுமுகிறீர்கள். நீங்கள் அத்தகைய தைரியசாலிகளும் துணிச்சலானவர்களும் ஆவீர்கள். அல்லவா? பஞ்சாபை சேர்ந்தவர்களும் தைரியசாலிகளும் துணிச்சலானவர்களும் ஆவார்கள். மகாராஷ்ராவை சேர்ந்தவர்கள் மகத்துவமானவர்கள், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் மகத்துவமானவர்கள், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் சிறப்பியல்பு அவர்கள் அளவற்ற நம்பிக்கையும் பக்தியுணர்வும் (பாவனா) கொண்டவர்கள். அதனால், அவர்கள் தமது பாவனாவிற்கு ஏற்ற பலனை இலகுவாகப் பெறுகிறார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பாவனாவாகிய மகத்துவமான பழத்தை உண்பவர்கள். ஆகையாலேயே நீங்கள் சந்தோஷத்தில் சதா நடனமாடுகிறீர்கள். ஆகவே, சந்தோஷம் என்ற பழத்தை உண்பவர்களான நீங்களே பாக்கியசாலி ஆத்மாக்கள் ஆவீர்கள். மஹாராஷ்ராவை சேர்ந்தவர்கள், மகத்துவமான எண்ணங்களை கொண்டிருப்பவர்கள், பஞ்சாபை சேர்ந்தவர்கள், மகத்துவமான சவாலை விடுப்பவர்களும் மகத்துவமான இராச்சியத்திற்கான உரிமையை கொண்டிருப்பவர்களும் ஆவார்கள். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் மகத்துவமான பலனை அனுபவிப்பவர்கள். நீங்கள் மூவரும் மகத்துவமானவர்கள், அல்லவா?

மஹாராஷ்ரா என்றால் அனைத்திலும் மகத்துவமானவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு எண்ணமும் மகத்துவமானதாகும். உங்கள் வடிவம் மகத்துவமானதாகும், உங்கள் செயற்பாடுகள் மகத்துவமானதாகும், உங்கள் சேவை மகத்துவமானதாகும். நீங்கள் அனைத்திலும் மகத்துவமானவர்கள். எனவே, இன்று, மகத்துவான மூன்று நதிகளும் சந்தித்துள்ளன. மகத்துவமான நதிகளான நீங்கள் சந்திக்கின்றீர்கள், அல்லவா? மகத்துவமான நதிகளதும் மகத்துவமான கடலினதும் சந்திப்பாகும். ஆகையாலேயே சந்திப்பிற்கான ஒன்றுகூடலுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் இன்று, இந்த ஒன்றுகூடலைக் கொண்டாட வேண்டும். அப்படித்தானே? அச்சா. சதா சக்திமிக்கவர்களாக இருப்பவர்களுக்கும், ஒவ்வொரு மேன்மையான வாசகங்களினதும் சொரூபங்களாக இருப்பவர்களுக்கும், நீண்டகாலமாக சக்திசாலிகளாக இருப்பவர்களுக்கும் ஏனைய ஆத்மாக்களை சக்திமிக்கவர்களாக ஆக்குபவர்களுக்கும் சகல சக்திகளும் நிறைந்த பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.

பாப்தாதா தாதிகளை சந்திக்கின்றார்:
மகா மண்டலியினர் (குழு) இங்கே அமர்ந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஓம்மண்டலி இருந்தது. இறுதியில் அது மகாமண்டலி (மகத்துவமான குழு) ஆகியது. இது அனைத்து மகத்துவமான ஆத்மாக்களின் மண்டலியாகும், அல்லவா? அவர்கள் தம்மை மகாமண்டலேஸ்வரர்கள் என அழைத்துக் கொள்கின்றார்கள். நீங்கள் உங்களை மகா சேவாதாரிகள் என அழைத்துக் கொள்கின்றீர்கள். உங்களை மகாமண்டலேஸ்வரர் அல்லது மகாமண்டலேஸ்வரி என நீங்கள் அழைப்பதில்லை. ஆனால் நீங்கள் மகாசேவாதாரிகள் ஆவீர்கள். எனவே இது மகா சேவாதாரிகளின் மகாமண்டலியாகும். மகா சேவாதாரி என்றால், ஒவ்வொரு எண்ணத்தினூடாகவும் சேவைக்கு இயல்பானதொரு கருவியாக இருப்பவர் என்று அர்த்தமாகும். ஒவ்வொரு எண்ணத்திலும் சேவை தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. இயல்பான யோகிகள் இயல்பான சேவையாளர்கள் ஆவார்கள். சோதியுங்கள்: சேவை இயல்பாகவே இடம்பெறுகின்றதா? அவ்வாறாயின், ஒரு எண்ணமோ அல்லது ஒரு விநாடியோ சேவை இடம்பெறாது கடந்து செல்லாத அனுபவத்தைப் பெறுவீர்கள். நடக்கும் போது, நடமாடித்திரியும் போதெல்லாம் ஒவ்வொரு பணியை ஆற்றும் போதும், உங்கள் ஒவ்வொரு மூச்சிலும் ஒவ்வொரு விநாடியும் சேவை அமிழ்ந்திருக்கும். இதுவே இயல்பான சேவையாளர் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் அவ்வாறானவர்கள், அல்லவா? விசேடமான நிகழ்ச்சிக்கு ஏற்ப சேவை செய்யும் ஸ்திதி இப்பொழுது முடிவடைந்துள்ளது. நீங்கள் இயல்பாக சேவை செய்வதற்கான கருவிகள் ஆகியுள்ளீர்கள். அந்த வாய்ப்பை நீங்கள் பிறருக்கு வழங்கிவிட்டீர்கள். அவர்கள் நிகழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை நடைமுறை ஆக்கியுள்ளார்கள், ஆனால் உங்கள் அனைவரதும் சேவையானது, இயல்பான சேவையாளராக இருப்பதாகும். ஒரு நிகழ்ச்சி இடம்பெறுகின்ற போது சேவை செய்பவர்கள் என்றல்ல. எப்பொழுதுமே ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகும். நீங்கள் சதா சேவைக்கான ஸ்திதியில் இருப்பவர்கள். நீங்கள் அத்தகைய குழுவினர், அல்லவா? சுவாசிக்காது ஒரு சரீரத்;தினால் இயங்க முடியாததைப் போன்றே, சேவை செய்யாது ஆத்மாக்களான உங்களால் இருக்க முடியாது. சுவாசம் இயல்பாக தொடர்ந்திருக்கும். அல்லவா? அவ்வாறாகவே சேவையும் இயல்பாக தொடர்ந்திருக்கும். சேவையே ஆத்மாக்களின் சுவாசமாகும். அது அப்படியல்லவா? நீங்கள் எத்தனை மணித்தியாலத்திற்கு சேவை செய்தீர்கள் என உங்களால் கணக்கிட முடியுமா? உங்கள் தர்மமும், கர்மமும் சேவையே ஆகும். நீங்கள் நடப்பதும் சேவை, நீங்கள் பேசுவதும் சேவை, நீங்கள் என்ன செய்தாலும் அது சேவையே என்பதால் நீங்கள் சதா சேவையாளர்களான இயல்பான சேவையாளர் ஆவீர்கள், உங்கள் எண்ணங்கள் அனைத்திலும் சேவை அமிழ்ந்திருக்கின்றது. நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலும் சேவை அமிழ்ந்துள்ளது, ஏனெனில் இப்பொழுது வீணாவை முடிவடைந்துள்ளது. எனவே சக்திமிக்கது என்றால் சேவை என்று அர்த்தமாகும். அத்தகையவர்கள் மகாமண்டலியின் மகா ஆத்மாக்கள் எனப்படுகின்றார்கள். அச்சா.

உங்கள் சகபாடிகள் அனைவருமே பாப்தாதாவின் முன்னிலையிலேயே அமர்ந்திருக்கின்றார்கள். ஓம்மண்டலியை சேர்ந்தவர்கள், மகாமண்டலியை சேர்ந்த அனைவரும், ஆரம்பத்திலிருந்து சேவை செய்பவர்கள், சதா சேவையாளர்கள் ஆவார்கள். மகாமண்டலியை சேர்ந்த மகாத்மாக்கள் அனைவரும் பாப்தாதாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறார்கள். முதலில் ஆரம்பித்து வைப்பதற்கான பொறுப்பை ஏற்பவர்களே மகா மண்டலியை சேர்ந்தவர்கள், அப்படித்தானே? நீங்கள் பொறுப்பை ஏற்றிருக்கின்றீர்கள், அல்லவா? எதனைப் பற்றியும் சிந்திக்காது, வேறு எந்த சிந்தனையும் இல்லாது, நீங்கள் திடசங்கற்ப எண்ணம் கொண்டிருந்ததுடன் நீங்கள் கருவிகளாகவும் ஆகினீர்கள். இதுவே மகாத்மாக்கள் எனப்படுகின்றது. நீங்கள் பெரும் பணிக்கு கருவிகள் ஆகினீர்கள். குறைந்தபட்சம் நீங்கள் முன்னுதாரணமாக ஆகியுள்ளீர்கள். முன்னுதாரணம் எதனையும் பார்க்காது நீங்கள் உலகிற்கு முன்னுதாரணங்கள் ஆகினீர்கள். உடனடி தானமே மகாபுண்ணியமாகும். நீங்கள் அத்தகைய மகா ஆத்மாக்கள் ஆவீர்கள்.

பாப்தாதா குழுக்களை சந்திக்கின்றார்:
மகாராஷ்ரா மற்றும் பஞ்சாப் குழுவினருக்கு: நீங்கள் அனைவரும் பயமற்றவர்கள், அப்படித்தானே? ஏன்? ஏனெனில் நீங்கள் எவர் மீதும் பகையுணர்வு இல்லாது, எப்பொழுதும் அதிலிருந்து விடுபட்டிருக்கின்றீர்கள். எவரையிட்டும் நீங்கள் வெறுப்பு கொள்வதில்லை. நீங்கள் ஆத்மாக்கள் அனைவரையிட்டும் சகோதரத்துவத்தின் நல்லாசிகளுடனும், தூய உணர்வுடனும் இருக்கின்றீர்கள். அத்தகைய நல்லாசிகளும் தூய உணர்வுகளும் கொண்டிருக்கும் ஆத்மாக்கள் பயமற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் எதனையிட்டும் பயப்படுபவர்கள் அல்ல. நீங்கள் யோகயுத் ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தால், நீங்கள் எந்தவொரு பாதகமாக சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருப்பீர்கள். எனவே நீங்கள் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பவர்கள், அப்படித்தானே? தந்தையின் பாதுகாப்பு குடையில் நிலைத்திருப்பவர்கள் எப்பொழுதும் பாதுகாப்பாகவே இருக்கின்றார்கள். நீங்கள் அப் பாதுகாப்பு குடையில் இருந்து வெளியேறினால், நீங்கள் பயந்தவர்கள் ஆகுவீர்கள். பாதுகாப்பு குடையின் கீழ் நீங்கள் பயமற்றிருக்கின்றீர்கள். யார் என்ன செய்வார்களாயினும், தந்தையின் நினைவே ஒரு கோட்டை ஆகும். எவராலும் ஒரு கோட்டைக்குள் பிரவேசிக்க முடியாது. அவ்வாறே, நினைவு என்ற கோட்டைக்குள் இருக்கும் போது, நீங்கள் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள்: குழப்பத்தின் போதும், ஆட்ட அசைக்க முடியாது, பயந்தவர்கள் அல்ல. நீங்கள் பார்த்தவை பெரிய விடயமே அல்ல. அது வெறும் ஒத்திகையே. உண்மையில் இடம்பெறப் போவது வேறு ஒன்றாகும். ஒத்திகை இடம்பெறுவது ஒன்றை உறுதியாக்குவதற்காகும். எனவே, நீங்கள் உறுதியாகவும், தைரியசாலிகளாகவும் ஆகிவிட்டீர்களா? நீங்கள் தந்தை மீது அன்பு கொண்டிருக்கின்றீர்கள் என்பதால், சூழ்நிலை எவ்வாறாக இருப்பினும் நீங்கள் இங்கு வந்தடைந்திருக்கின்றீர்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றி கொண்டவர்கள். அன்பு தடைகளிலிருந்து விடுபடுவதற்கு உங்களுக்கு சக்தியை கொடுக்கின்றது. ~எனது பாபா!| என்ற மகாமந்திரத்தை நினைத்தாலே போதும். இதனை நீங்கள் மறந்தால், நீங்கள் தோற்கடிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் எப்பொழுதும் இதனை நினைவு செய்தால், நீங்கள் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பீர்கள்.

நீங்கள் சதா ஆட்ட அசைக்க முடியாதவர்களாக உங்களை அனுபவம் செய்கின்றீர்களா? ஆட்ட அசைக்க முடியாத உங்கள் ஸ்திதிக்கு, எத்தகைய குழப்பமும் தடைகளை உருவாக்க முடியாது. நீங்கள் தடைகளிலிருந்து விடுபட்ட ஆத்மாக்கள் ஆகியுள்ளீர்கள் அதாவது ஆட்ட அசைக்க முடியாதவர்கள். தடைகளை அழிக்கின்ற ஆத்மாக்கள், தடைகளை தடைகளாகக் கருதாது, அவற்றை ஒரு விளையாட்டாகவே தாண்டிச் செல்வார்கள். நீங்கள் எப்பொழுதும் விளையாடும் பொழுது களிப்படைகிறீர்கள். ஒரு சூழ்நிலையை தாண்டிச் செல்வதற்கும் ஒரு விளையாட்டிற்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. அப்படித்தானே? நீங்கள் தடைகளை அழிக்கும் ஆத்மாக்களாகும் போது, சூழ்நிலைகள் ஒரு விளையாட்டாகவே அனுபவம் செய்யப்படும். ஒரு மலை ஒரு கடுகு விதை போன்றே அனுபவம் செய்யப்படும். நீங்கள் அத்தகைய தடைகளை அழிப்பவர்கள் ஆவீர்கள். பயந்தவர்கள் அல்ல. ஞானம் நிறைந்த ஆத்மாக்களுக்கு முன்கூட்டியே வரவுள்ள அனைத்தும், நடக்க இருப்பவை பற்றியும்; தெரியும். உங்களுக்கு முன்கூட்டியே தெரியும் போது, எதுவுமே பெரிய விடயமாக இருக்க மாட்டாது. எதுவும் சடுதியாக இடம்பெறும் போதே, சிறிய விடயமும் பெரிதாக தெரியும். முன்கூட்டியே உங்களுக்குத் தெரியும் போது, பெரிய விடயங்களும் சிறிதாகவே தெரியும். நீங்கள் அனைவரும் ஞானம் நிறைந்தவர்கள், அப்படித்தானே? நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள், எவ்வாறாயினும், பாதகமாக சூழ்நிலைக்கான நேரம் வரும் போது, நீங்கள் ஞானம்நிறைந்த ஸ்திதியை மறந்து விடக்கூடாது. நீங்கள் எண்ணற்ற தடவைகள் செய்தவற்றையே திரும்பவும் செய்கிறீர்கள். எதுவும் புதியது அல்ல என்கின்ற போது, அனைத்தும் இலகுவாகும். நீங்கள் அனைவரும் கோட்டையின் (சூளையில்) மிக முழுமையாக சுடப்பட்ட செங்கற்கள் ஆவீர்கள். ஒவ்வொரு செங்கட்டியும் மிகவும் அவசியமானதாகும். ஒரு செங்கட்டி அசைந்தாலும், அது முழு சுவரையும் அசைத்து விடும். செங்கட்டிகளான நீங்கள் ஆட்டஅசைக்க முடியாதவர்கள். உங்களை ஒருவர் எவ்வளவு அசைக்க முயற்சித்தாலும், உங்கள் அசைக்க முயற்சிப்பவர்களே அசைவார்கள். நீங்கள் அசையக்கூடாது. ஒவ்வொரு நாளும் பாப்தாதா தடைகளை அழிக்கின்ற ஆட்டஅசைக்க முடியாத ஆத்மாக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கின்றார், அத்தகைய குழந்தைகள் மாத்திரமே தந்தையிடம் இருந்து பாராட்டுக்கள் பெறுவதற்கு உரிமையுடையவர்கள். பாப்தாதாவும் முழு குடும்பத்தினரும் அத்தகைய ஆட்ட அசைக்க முடியாத ஆத்மாக்களை காண்பதில் பூரிப்படைகிறார்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
சக்திமிக்க ஸ்திதியை முடுக்கியுள்ள ஓர் அவ்யக்த தேவதையாகி வீணானவை என்ற இருளை முடிப்பவர் ஆகுவீர்களாக.

நீங்கள் பௌதீகமாக ஒரு ஒளியை ஏற்றும் போது, இருள் அகன்றுவிடுகின்றது. அவ்வாறே, ஒரு சக்திமிக்க ஸ்திதி ஒரு ஆளியாகும். இந்த ஆளியை முடுக்கிவிடும் போது, வீணானவை என்ற இருள் அகன்று விடும். அப்பொழுது நீங்கள் வீணான ஒவ்வொரு எண்ணத்தையும் முடித்து, அதிலிருந்து விடுப்பட்டவர் ஆகுவீர்கள். உங்கள் ஸ்திதி சக்திமிக்கதாக இருக்கும் போது, நீங்கள் மகாதானியாகவும், ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகுகின்றீர்கள், ஏனெனில், அருள்பவர் என்றால் சக்திமிக்கவராக இருப்பது என்று அர்த்தமாகும். சக்திமிக்கவர்களால் மாத்திரமே கொடுக்க முடியும், சக்தி இருக்குமிடத்தில் வீணானவை முடிவடைகின்றன. எனவே, இதுவே அவ்யக்த தேவதைகளின் மேன்மையான கடமையாகும்.

சுலோகம்:
சத்தியத்தின் அடிப்படையில் ஆத்மாக்கள் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுபவர்களே பாக்கியசாலி ஆத்மாக்கள் ஆவார்கள்.