06.06.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எங்கள் பாபா தந்தையாகவும் ஆசிரியராகவும்; சற்;குருவாகவும் இருக்கிறார் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள். இதை நினைவு செய்வது “மன்மனாபவ” என்றிருப்பாகும்.

கேள்வி:
உங்கள் கண்களில் மாயையின் தூசு படியும்போது நீங்கள் செய்யும் முதல் தவறு என்ன?

8பதில்:
நீங்கள் கற்பதை நிறுத்துவதே மாயை உங்களைச் செய்ய வைக்கும் முதல் தவறாகும். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். தந்தையின் சொந்தக் குழந்தைகள் தந்தையின் கற்பித்தல்களைக் கற்காமல் நிறுத்துவது அதிசயமே. இந்த ஞானம் உங்களை உள்ளார்ந்த சந்தோஷத்தில் சதா நடனமாடச் செய்கிறது. எவ்வாறாயினும், மாயையின் ஆதிக்கமும் சளைத்ததல்ல. அவள் நீங்கள் கற்பதை நிறுத்தச் செய்கிறாள். கற்பதை நிறுத்துவது என்றால், வகுப்புக்குச் சமூகமளிக்காமல் இருப்பதாகும்;.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். புரிந்துணர்வு குறைந்தவர்களுக்கே விளக்கம் கொடுக்கப்படுகிறது. சிலர் மிகவும் விவேகமுள்ளவர்கள் ஆகிவிடுகிறார்கள். பாபா மிகவும் அற்புதமானவர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது, எங்கள் எல்லையற்ற பாபா எங்கள் எல்லையற்ற ஆசிரியராகவும் இருக்கிறார் என்பதை உள்ளுரப் புரிந்துகொள்கிறீர்கள். அவர் உங்களுக்கு எல்லையற்ற கற்பித்தல்களைக் கொடுக்கிறார். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது மாணவர்களாகிய உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். பின்னர் அவர் நிச்சயமாக உங்களைத் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்வார். இது ஒரு பழைய அழுக்கான உலகம் என்பதும், குழந்தைகளை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பதும், தந்தைக்குத் தெரியும். எங்கே அழைத்துச் செல்வது? வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வது! உதாரணமாக, ஒரு குமாரிக்குத் திருமணமாகும் போது, அவளது புகுந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல வருவார்கள். இப்பொழுது நீங்கள் இங்கமர்ந்திருக்கிறீர்கள். எங்கள் எல்லையற்ற தந்தையே எங்களுக்கு எல்லையற்ற கற்பித்தல்களைக் கொடுப்பவர் என்பது நிச்சயமாக உங்களுக்குள் தோன்ற வேண்டும். பாபா எவ்வளவு மகிமை வாய்ந்தவரோ அந்தளவிற்கு அவர் கொடுக்கும் கற்பித்தல்களும் மகிமை வாய்ந்ததாக இருக்கும். படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை எங்களை இந்த அழுக்கான உலகிலிருந்து வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உள்;ர இதை நினைவு செய்வதும் மன்மனாபவ என்றிருப்பதாகும். நீங்கள் நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும், இருக்கும் போதும் இது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். அற்புதமான விடயங்களை நீங்கள் நினைவு செய்வீர்கள். நன்றாகக் கற்பதாலும், தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதாலும் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் புத்தியில் சுழன்று கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில், தந்தையை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் ஆசிரியரைக் கண்டு கொள்கிறீர்கள். இவர் உங்கள் எல்லையற்ற ஆன்மீகத் தந்தை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இலகுவாகத் தந்தையை நினைவு செய்வதற்கு பாபா உங்களுக்கு ஒரு வழிமுறையைக் காட்டுகிறார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். அரைச்சக்கரத்தில் நீங்கள் செய்த பாவங்கள் இந்த நினைவின் மூலம் அழிக்கப்படும். தூய்மையாகுவதற்காகப் பிறவி, பிறவியாக நீங்கள் பக்தி, பிராயச்சித்தம், தவம் போன்றவற்றைச் செய்து வந்தீர்கள். மக்கள் ஆலயத்திற்குச் சென்று பக்தி செய்கிறார்கள்., தொன்றுதொட்டே தாங்கள் அவற்றைச் செய்துவருவதாக அவர்கள் நம்புகிறார்கள். சமயநூல்களை எப்பொழுது கேட்க ஆரம்பித்தீர்கள் என்று அவர்களை வினவினால், தொன்று தொட்டே கேட்டுக் கொண்டிருப்பதாகப் பதிலளிப்பார்கள். மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. சத்திய யுகத்தில் சமயநூல்கள் எதுவுமேயில்லை. இதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் வியப்படைய வேண்டும். தந்தையைத் தவிர வேறு எவருமே இந்த விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. அவரே தந்தையும் ஆசிரியரும் சற்;குருவும் ஆவார். அந்த ஒரேயொருவரே எங்கள் பாபா ஆவார். அவருக்கென தந்தையோ தாயோ இல்லை. சிவபாபா இன்னாரின் குழந்தை என்று எவருமே கூற முடியாது. உங்கள் புத்தி மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை நினைவு செய்ய வேண்டும். இது மன்மனாபவ என்பதாகும். ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கின்றாராயினும், அவர் எவரிடமும் எதையுமே கற்றுக் கொண்டதில்லை. எவருமே அவருக்குக் கற்பித்ததில்லை. அவர் ஞானம் நிறைந்தவர். அவரே மனித உலக விருட்சத்தின் விதையாக இருப்பவர். அவரே ஞானக்கடலாவார். அவர் உயிருள்ளவராக இருப்பதால், அவரால் உங்களுக்கு எல்லாவற்றையும் கூறமுடிகிறது. அவர் கூறுகிறார்: குழந்தைகளே, ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் உள்ள சகல இரகசியங்களையும், நான் பிரவேசித்து இருப்பவரின் மூலமாக உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். முடிவைப் பற்றிப் பின்னரே உங்களுக்குக் கூறப்படும். அந்த நேரத்தில் இறுதி நேரம் நெருங்கி விட்டதென்பதை நீங்களும் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமாக உங்கள் கர்மாதீத ஸ்திதியையும் அடைந்து விடுவீர்கள். நீங்கள் அதன் அடையாளங்களையும் காண்பீர்கள். பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். பல தடவைகள் இதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், நீங்கள் தொடர்ந்தும் பார்ப்பீர்கள். முன்னைய கல்பத்தில் கற்றதைப் போன்றே நீங்கள் கற்கின்றீர்கள். உங்கள் இராச்சியத்தை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். அதன் பின், அதனை இழந்தீர்;கள். இப்பொழுது மீண்டும் அதனைப் பெறுகிறீர்கள். தந்தை உங்களுக்கு மீண்டும் ஒருமுறை கற்பிக்கின்றார். இது மிக இலகுவானது. உண்மையாகவே நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பாபா வந்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். பாபா உங்களுக்கு அறிவுரை கூறுகிறார்: இவையே உங்களுக்குள் இருக்க வேண்டியவையாகும். பாபா எங்கள் தந்தையும் ஆசிரியரும் ஆவார். ஆசிரியரை என்றுமே மறக்க முடியுமா? நீங்கள் தொடர்;ந்தும் ஆசிரியரிடம் கற்;கின்றீர்கள். மாயை சில குழந்தைகளைத் தவறுகள் பலவற்றைச் செய்ய வைக்கிறாள். இது அவள் அவர்களது கண்களில் மண்ணைத் தூவி அவர்களைக் கற்பதிலிருந்து நிறுத்தி விடுவது போன்றதாகும்;. கடவுள் கற்பித்த போதிலும், அவர்கள் இவ்வாறானதொரு கல்வியைத் துறந்து விடுகிறார்கள்;! கல்வியே பிரதானமானதாக இருந்த போதிலும், கற்பதை நிறுத்துவது யார்? தந்தையின் குழந்தைகளே! குழந்தைகளுக்குள்ளே அளவற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு அனைத்தினது ஞானத்தையும் கொடுக்கிறார். அவர் ஒவ்வொரு கல்பமும் அதை உங்களுக்குக் கொடுக்கிறார். தந்தை கூறுகிறார்: இவ்வாறாயினும் என்னை நினைவு செய்யுங்கள். நீங்களே கல்பம், கல்பமாக இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டு கிரகிப்பவர்கள். அந்த ஒNருயொருவருக்குத் தந்தையில்லை. அவரே எல்லையற்ற தந்தையாவார். அதனால் அவர் அற்புதமான ஒரு தந்தை ஆவார். என்னிடம் கூறுங்கள்: எனக்கெனத் தந்தை இருக்கிறாரா? சிவபாபா யாருடைய குழந்தை? இந்தக் கல்வியை வேறெந்தக் காலத்திலும் கற்க முடியாது என்பதாலும் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இதைக் கற்கிறீர்கள் என்பதாலும் இந்தக் கல்வி மிக அற்புதமானதாகும். தந்தையை நினைவு செய்வதனாலேயே நீங்கள் படிப்படியாகத் தூய்மையாகுகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இல்லாவிடின் நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். கர்ப்பச் சிறையில் பெருந்தண்டனை அனுபவிக்கப்பட வேண்டி உள்ளது. அங்கே விசாரணைக்குழு அமர்த்தப்பட்டு, அனைத்தைப் பற்றிய காட்சிகளையும் நீங்கள் பெறுவீர்கள். ஒருவர் என்ன செய்தார் என்பதைப் பற்றிய காட்சிகள் கொடுக்கப்படாமல் எவரையும் தண்டிக்க முடியாது. இல்லாவிடின், நீங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறீர்கள் என்று குழப்பம் அடைவீர்கள். யார் குறிப்பிட்ட பாவங்களைச் செய்திருக்கிறார்கள், யார் அந்தத் தவறுகளைச் செய்திருக்கிறார்கள் என்று தந்தைக்குத் தெரியும். நீங்கள் செய்தவற்றின் அனைத்துக் காட்சிகளையும் அவர் உங்களுக்குக் காட்டுகிறார். அந்த நேரத்தில், எத்தனையோ பல பிறவிகளின் பாவங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவதைப் போலவே இருக்கும். அந்தப் பிறவிகளின் கௌரவத்தையெல்லாம் நீங்கள் இழப்பதைப் போலிருக்கும். அதனால், தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் மிக நல்ல முயற்சி செய்ய வேண்டும். 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவராகுவதற்குத் தந்தையின் நினைவில் இருப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எவருக்காவது துன்பம் கொடுத்திருக்கிறீர்களா என்று உங்களைச் சோதித்துப் பாருங்கள். நாங்கள் சந்தோஷத்தை அருள்பவராகிய தந்தையின் குழந்தைகள். நாங்கள் மிக அழகானவர்கள் ஆக வேண்டும். இந்தக் கல்வியே உங்களுடன் தொடர்ந்து வரப் போகிறது. மக்கள் கற்றுச் சட்டத்தரணிகள் போன்றவர்களாக ஆகுகிறார்கள். இத் தந்தையின் ஞானம் சத்தியமானதும் தனித்துவமானதும் ஆகும். இந்தப் பாண்டவ அரசாங்கம் மறைமுகமானது ஆகும். உங்களைத் தவிர வேறு எவராலும் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இந்தக் கல்வி அற்புதமானது. ஆத்மாவே செவிமடுக்கிறார். தந்தை மீண்டும், மீண்டும் உங்களுக்குக் கூறுகிறார்: கற்பதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்;கள்! நீங்கள் கற்பதை மாயை நிறுத்தி விடுகிறாள். தந்தை கூறுகிறார்: அவ்வாறு செய்யாதீர்கள், கற்பதை நிறுத்தாதீர்கள்! பாபா சகல அறிக்கைகளையும் பெறுகின்றார்.. ஒருவர் எத்தனை நாள் வகுப்புக்குச் சமூகமளிக்காதிருந்தார் என்பதைப் பதிவேட்டில் இருந்து அவர் புரிந்து கொள்கிறார். ஒருவர் கற்பதை நிறுத்தும் போது, அவர் தந்தையையும் மறந்துவிடுகிறார். உண்மையில் அவர் மறக்கப்படக்கூடியவர் அல்ல. அந்த ஒரேயொருவரே அற்புதமான தந்தையாவார். இதை ஒரு நாடகம் போல் அவர் விளங்கப்படுத்துகிறார். ஒருவரிடம் ஒரு நாடகத்தைப் பற்றிக் கூறினால், அவரால் மிகச் சுலபமாக அதை நினைவில் வைத்திருக்க முடியும். அவர் ஒருபோதும் அதை மறந்துவிட மாட்டார். இவரும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். மிக இளம் வயதிலேயே இவருக்கு ஆர்வமின்மையின் எண்ணங்கள் இருந்தது. அவர் இவ்வாறு கூறுவது வழக்கம்: இந்த உலகில் அளவற்ற துன்பம் இருக்கிறது. எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கிடைக்குமாயின், அதிலிருந்து ஐம்பது ரூபாய் வட்டியாக என்னால் பெற்றுக்கொள்ள முடியும். அதுவே விடுதலை பெற்றிருப்பதற்கு எனக்குப் போதுமாக இருக்கும். வீடு, வியாபாரம்; என்பனவற்றைப் பராமரிப்பது சிரமமானது. நல்லது! ஒருமுறை பாபா ‘சௌபாக்கிய சுந்தரி’ என்ற திரைப்படத்தைப் பார்த்தார். அதன் பின், முன்னர் ஏற்பட்ட ஆர்வமின்மை எண்ணங்கள் எல்லாம் அகன்று விட்டன. அவருக்குத் திருமணம் செய்வது, அதைச் செய்வது, இதைச் செய்வது என்ற பல எண்ணங்கள் தோன்றி விட்டன. மாயை அவரை ஒரு தடவை அறைந்ததும் எல்லாமே இல்லாது போய் விட்டது. அதனால் தந்தை இப்பொழுது கூறுகிறார்: இந்த உலகம் ஆழ்நரகமாகும். அதற்குள்ளே அந்தத் திரைப்படங்களும் சினிமாவும் ஆழ்நரகமாகும். அவற்றைப் பார்ப்பதால் எல்லோருடைய மனோநிலையும் பாழாகிவிடுகின்றது. ஆண்கள் பத்திரிகைகள் பார்க்கும் போது, அழகிய பெண்களின் படங்களைப் பார்த்தால் அவர்களது மனோநிலை அவர்கள் பால் ஈர்க்கப்படுகிறது. ஈர்க்கப்பட்டு, ‘இவள் மிக அழகானவள்.’ என்ற சிந்தனைகள் அவர்களது புத்தியில் ஏற்படுகிறது. உண்மையில், உங்களுக்கு அத்தகைய எண்ணங்கள் தோன்றக்கூடாது. பாபா கூறுகிறார்: இந்த உலகம் அழிக்கப்பட உள்ளது. அதனாலேயே, நீங்கள் ஏனைய அனைத்தையும் மறந்து, சதா என்னை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். ஏன் அவ்வாறான படங்கள் போன்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்? அவை அனைத்தும் உங்கள் மனோநிலையைச் சீரழிப்பதே ஆகும். நீங்கள் பார்க்கின்ற எல்லாமே இடுகாட்டில் புதைக்கப்பட உள்ளன. அந்தக் கண்களால் பார்க்கும் எதையுமே நினைவு செய்யாதீர்கள். அவற்றிலிருந்து உங்கள் பற்றை அகற்றுங்கள். இந்தச் சரீரங்கள் எல்லாம் பழையதும் அழுக்கானதுமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகுகிறீர்கள், ஆனால் உங்கள் சரீரங்கள் இன்னமும் அழுக்கானவையாகவே இருக்கின்றன. எனவே, நீங்கள் ஏன் அதில் கவனம் செலுத்த விரும்புகிறீர்கள்? நீங்கள் தந்தையை மாத்திரமே பார்க்க வேண்டும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இலக்கு மிகவும் உயர்ந்தது. வேறு எவராலும் உலக அதிபதியாகுவதற்கு முயற்சி செய்ய முடியாது. வேறு எவருடைய புத்தியிலும் இது பதிய முடியாது. மாயையின் ஆதிக்கமும் சளைத்ததல்ல. விஞ்ஞானிகளின் புத்தி அதிகளவு தொழிற்படுகின்றது. ஆனால், உங்களுடையது மௌனமேயாகும். எல்லோரும் முக்தியையே விரும்புகிறார்கள். ஆனால், உங்கள் இலக்கு ஜீவன்முக்தியை அடைவதாகும். தந்தையும் இதை விளங்கப்படுத்தியுள்ளார். குருமார்கள் போன்றோரால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும் போது, தூய்மையாக இருந்து இராச்சியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பெருமளவு நேரத்தை வீணாக்கினீர்கள். நீங்கள் எத்தனை தவறுகள் செய்தீர்கள் என்று இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தவறுகள் செய்யும் போது, நீங்கள் விவேகமற்றவர்களாகவும் கல்லுப்புத்தி கொண்டவர்களாகவும் ஆகினீர்கள். இந்த ஞானம் மிக அற்புதமானதென்றும் இதன் மூலம் நீங்கள் ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து உன்னதமான ஒரு நிலைக்கு வருவீர்கள் என்றும் உள்ளுர நீங்கள் உணர்கிறீர்கள். கல்லுப்புத்தி கொண்டவர் என்ற நிலையிலிருந்து தெய்வீகப் புத்தி கொண்டவராக மாறுகிறீர்கள். எனவே, உங்கள் பாபா எல்லையற்ற பாபாவாக இருப்பதனால், உங்கள் சந்தோஷத்தின் அளவு அதிகரிக்க வேண்டும். அவருக்கென ஒரு தந்தையில்லை. அவர் உங்கள் ஆசிரியராகவும் இருக்கிறார். ஆனால், அவருக்கென ஓர் ஆசிரியர் இல்லை. ‘இவர் எவரிடமிருந்து கற்றார்?’ என்று மக்கள் கேட்கிறார்கள். இதையிட்டு அவர்கள் அதிசயிக்கிறார்கள். அவர் ஒரு குருவிடமே இதனைக் கற்றிருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அவ்வாறாயின், அந்தக் குருவுக்கு இன்னும் பல சீடர்களும் இருந்திருப்பார்களே. ஒரேயொரு சீடன் மட்டுமா அவருக்கு இருந்திருப்பார்? ஒரு குருவுக்குப் பல சீடர்கள் இருப்பார்கள். அகா கானுக்கு எத்தனை சீடர்கள் என்று பாருங்கள்! அவரை வைரங்களுக்கு நிகராக நிறுக்கும் அளவுக்கு அவர்கள் தங்கள் குருவிடம் அளவற்ற மதிப்பை வைத்திருக்கிறார்கள். சற்குருவை நீங்கள் எதற்கு நிகராக நிறுப்பீர்கள்? அந்த ஒரேயொருவர் எல்லையற்ற சற்குரு ஆவார். அவர் நிறை என்ன? அவர் ஒரு வைரத்தின் நிறைகூட இருக்கமாட்டார். அத்தகைய விடயங்களைப்;;;;;;;;;;;; பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும். இது மிகச் சூட்சுமமான விடயமாகும். எல்லோரும் ‘ஓ கடவுளே!’ என்று கூறினாலும், அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார் என்று அவர்களுக்குத் தெரியாது. இவர் மிகச் சாதாரணமானவராக அமர்ந்திருக்கிறார். எல்லோருடைய முகங்களையும் பார்ப்பதற்காகவே இவர் கதியில் அமர்ந்திருக்கிறார். அவர் குழந்தைகளாகிய உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார். குழந்தைகளாகிய உங்கள் உதவியின்றி ஸ்தாபனை இடம்பெற முடியாது. அதிகமாக உதவி செய்யும் குழந்தைகள் நிச்சயமாக அதிகளவு நேசிக்கப்படுவார்கள். அதிகளவில் வருமானம் ஈட்டும் குழந்தை நிச்சயமாக உயர்ந்த அந்தஸ்தொன்றைப் பெற்றுக் கொள்வார்;. அவர் மீது அதிகளவு அன்பும் இருக்கும். குழந்தைகளாகிய உங்களைப் பார்க்கும் போது பாபா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். ஆத்மாவும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். ஒவ்வொரு கல்பமும் குழந்தைகளைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு கல்பமும் குழந்தைகளே உதவியாளர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் பெருமளவு நேசிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு கல்பமும் இந்த அன்பு இணைக்கப்படுகிறது. நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் புத்தியில் தந்தையின் நினைவு இருக்கட்டும். அவர் உங்கள் எல்லையற்ற தந்தையாக இருக்கிறார். அவருக்கென ஒரு தந்தையோ அல்லது ஆசிரியரோ இல்லை. அனைவராலும் நினைவு செய்யப்படுபவராக இருக்கின்ற அந்த ஒரேயொருவரே அனைத்துமாக இருக்கிறார். சத்தியயுகத்தில் எவருமே அவரை நினைவு செய்வதில்லை. உங்கள் படகு 21 பிறவிகளுக்குக் கரை சேர்கிறது என்பதையிட்டு நீங்கள் அளவற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் தந்தையின் சேவையைச் செய்யுங்கள், அவ்வளவே. இத்தகைய தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள்: தந்தையிடமிருந்து நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளலாம். தந்தை எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார். அவர் எங்கள் எல்லோரையும் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்கிறார். முழுச்சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது. வேறு எவருமே இத்தகையதொரு சக்கரத்தை உருவாக்க முடியாது. எவருமே அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதுமில்லை. பாபா உங்கள் எல்லையற்ற பாபா என்பதையும், அவர் உங்களுக்கு ஒரு எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுக்கிறார் என்பதையும், அவர் உங்களைத் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்பதையும், இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்த வகையில் நீங்கள் விளங்கப்படுத்துவீர்களானால், கடவுள் சர்வவியாபி என்று எவருமே கூறமாட்டார்கள். அவர் தந்தையாகவும் ஆசிரியராகவும் இருக்கிறார். எனவே, அவர் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? எல்லையற்ற தந்தை ஞானம் நிறைந்தவர். அவருக்கு முழு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் தெரியும். தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார்: இக் கல்வியை மறந்துவிடாதீர்கள்! இக் கல்வி மகத்தானதாகும். பாபா பரம தந்தை, பரம ஆசிரியர், பரம குருவாகவும் இருக்கிறார். அந்தக் குருமார்கள் அனைவரையும் அவர் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்வார். இத்தகைய அற்புதமான விடயங்களை நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். இது எல்லையற்ற நாடகம் என்று அவர்களுக்குக் கூறுங்கள். ஒவ்வொரு நடிகனும் தனது சொந்தப் பாகத்தையும் பெற்றிருக்கிறார். எல்லையற்ற தந்தையிடமிருந்து நீங்கள் எல்லையற்ற இராச்சியத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். சுவர்க்கம் இருந்தது. அது நிச்சயமாக மீண்டும் இருக்கும். கிருஷ்ணர் புதிய உலகின் அதிபதியாவார். இப்பொழுது இது பழைய உலகமாகும். அவர் நிச்சயமாக புதிய உலகின் அதிபதி ஆகுவார். இது தெளிவாகப் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இப்பொழுது உங்கள் பாதங்கள் நரகத்தை நோக்கியும் முகம் சுவர்க்கத்தை நோக்கியும் இருக்கின்றன, என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இதையே நீங்கள் நினைவு செய்கிறீர்கள். இதை நினைவு செய்வதன் மூலம் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கை நோக்கி உங்களை இட்டுச் செல்லும். இவை மிக அழகான விடயங்கள். இவற்றை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் கண்களால் பார்க்கும் அனைத்தின் மீதிருக்கும் உங்கள் பற்றை அகற்றுங்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரமே பாருங்கள். உங்கள் மனோநிலையைத் தூய்மையாக்குவதற்கு, அழுக்கான சரீரங்கள் மீது உங்கள் கவனம் ஈர்க்கப்படுவதை அனுமதிக்காதீர்;கள்.

2. நன்றாகக் கற்று, தந்தை உங்களுக்குக் கற்பிக்கும் இந்தத் தனித்துவமான, உண்மையான ஞானத்தைக் கற்பியுங்கள். என்றுமே இந்தக் கல்வியைத் தவற விடாதீர்கள்.

ஆசீர்வாதம்:
தந்தையின் ஆசீர்வாதக் கரங்களை சதா உங்கள் தலைமேல் அனுபவம் செய்து, மாஸ்டர் தடைகளை அழிப்பவர் ஆகுவீர்களாக.

கணேசர் தடைகளை அழிப்பவர் என அழைக்கப்படுகிறார். அனைத்து சக்திகளும் நிறைந்தவர்களால் தடைகளை அழிப்பவர்கள் ஆக முடியும். ஒவ்வொரு சக்தியையும் அச்சந்தர்ப்பதிற்கு ஏற்ப பயன்படுத்தும் போது, எந்தத் தடையும் நிலைத்திருக்க முடியாது. மாயை எத்தனை வடிவங்களை எடுத்த போதிலும், ஞானம் நிறைந்தவர்களாக இருங்கள். ஒரு ஞானம் நிறைந்த ஆத்மாவை என்றுமே மாயையினால் தோற்கடிக்க முடியாது. பாப்தாதாவின் ஆசீர்வாதக் கரங்கள் உங்கள் தலைமேல் இருக்கும் போது வெற்றி திலகம் இடப்படுகின்றது. கடவுளின் கரமும், அவரின் சகவாசமும் உங்களை தடைகளை அழிப்பவராக ஆக்குகிறது.

சுலோகம்:
தெய்வீகக் குணங்களை தாமும் கிரகித்து, பிறக்கும் தானம் செய்பவர்களே தெய்வீகக் குணங்களின் சொரூபங்கள் ஆவார்கள்.