22.07.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சகோதரன், சகோதரி என்ற உணர்விலிருந்து விலகி, உங்களைச் சகோதரர்களாகவே கருதுங்கள், உங்கள் கண்கள் குற்றமற்றதாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் குற்றமற்ற பார்வையுள்ளவராகும்பொழுது மாத்திரமே கர்மாதீதம் ஆக முடியும்.
கேள்வி:
உங்கள் குறைபாடுகளை அகற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய வழிமுறை யாது?
பதில்:
உங்கள் நடத்தையின் பதிவேடொன்றை வைத்து, தினமும் உங்கள் அட்டவணையைக் குறித்துக் கொள்ளுங்கள். உங்கள் நடத்தையின் பதிவேட்டை வைத்திருப்பதனால், நீங்கள் உங்களுடைய பலவீனங்களை அறிந்து அவற்றை இலகுவாக அகற்ற முடியும். அக்குறைபாடுகளைப் படிப்படியாக அகற்றுவதனால், ஒரேயொரு தந்தையைத் தவிர வேறெவரையும் நினைவுசெய்யாத ஸ்திதியை அடைவீர்கள். பழையன எவற்றிலும் பற்று இல்லாதிருக்கட்டும். எதனையும் வேண்டுகின்ற உள்ளார்ந்த ஆசையைக் கொண்டிருக்காதீர்கள்.ஓம் சாந்தி.
ஒன்று மனித புத்தி, மற்றையது இறை புத்தி, பின்னர் ஒரு தெய்வீகப் புத்தி இருக்கும். மனித புத்தியானது அசுர புத்தியாகும். மக்கள் குற்றப் பார்வையையே கொண்டிருக்கின்றார்கள். ஒன்று குற்றமற்ற பார்வை, மற்றையது குற்றப்பார்வை; தேவர்கள் விகாரமற்றவர்களாகவும் குற்றமற்ற பார்வையை உடையவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் இங்கு கலியுகத்திலுள்ள மக்கள் விகாரமுள்ளவராகவும், குற்றப்பார்வை உடையவர்களாகவும் உள்ளனர்;; அவர்களின் எண்ணங்கள் விகாரமானவையாக உள்ளன. குற்றப்பார்வை உடைய மனிதர்கள் இராவணனின் சிறையில் இருக்கின்றனர். இராவண இராச்சியத்திலுள்ள அனைவரும் குற்றப்பார்வை உடையவர்களாக இருக்கின்றனர். குற்றமற்ற பார்வையுடைய ஒரு நபரேனும் இல்லை. நீங்கள் இப்பொழுது அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். பாபா இப்பொழுது குற்றப்பார்வை உடைய உங்களை மாற்றி, குற்றமற்ற பார்வையுடையவர்கள் ஆக்குகிறார். பல வகையான குற்றப்பார்வை உடைய மக்கள்; உள்ளனர். சிலர் அரைவாசியளவுக்கும், சிலர் வேறொரு வீதத்திலும் குற்றப்பார்வை உடையவர்களாக உள்ளனர். நீங்கள் குற்றமற்ற பார்வையுடையவராகும் பொழுது, உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைந்து, சகோதரப் பார்வை (சகோதர நோக்கு) உடையவர் ஆகுவீர்கள். ஆத்மா ஆத்மாவை நோக்கும்பொழுது சரீரம் இருக்காது, எனவே நீங்கள் எவ்வாறு குற்றப்பார்வை உடையவர்களாக முடியும்? எனவே தந்தை கூறுகிறார்: சகோதரன், சகோதரி என்ற உணர்விலிருந்து உங்களை நீக்குங்கள். உங்களைச் சகோதரர்களாகக் கருதுங்கள். இதுவும் ஒரு மிகவும் ஆழமான விடயம். இது ஒருபொழுதும் வேறெவரது புத்தியிலும் பிரவேசிக்க முடியாது. குற்றமற்ற பார்வை உடையவராக இருப்பது என்பதன் அர்த்தம் அவர்களில் எவரது புத்தியிலும் பிரவேசிக்க முடியாது. அவர்களது புத்தியில் இது பிரவேசித்திருப்பின், அவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, சரீரங்களை மறந்து விடுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையின் நினைவில் அச் சரீரத்தை நீக்க வேண்டும். ஆத்மாவாகிய நான் பாபாவிடம் செல்கிறேன். சரீர அகங்காரம் அனைத்தையும் துறந்து, உங்களைத் தூய்மையாக்குகின்ற தந்தையின் நினைவில் உங்கள் சரீரத்தை நீக்குங்கள். உங்களுக்குக் குற்றப்பார்வை இருக்குமேயானால் அது தொடர்ந்தும் உங்களை உள்ளார உறுத்தும். இலக்கு மிகவும் உயர்வானது. சிலர் மிகவும் நல்ல குழந்தைகளாக இருந்தாலும், மாயையின் காரணமாக அவர்கள் நிச்சயமாக ஏதோவொரு தவறைச் செய்கின்றார்கள். இன்னமும் எவராலும் கர்மாதீதம் அடைய முடியவில்லை. இறுதியிலேயே நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள், பின்னர் உங்களால் குற்றமற்ற பார்வை உடையவராக முடியும். அப்பொழுது அந்த ஆன்மீக, சகோதர அன்பு இருக்கும். மிகச்சிறந்த ஆன்மீக, சகோதர அன்பு இருக்குமிடத்தில் அந்தக் குற்றப் பார்வை இருப்பதில்லை. அப்பொழுது மாத்திரமே உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும். தந்தை உங்களுக்கு முழுமையான இலக்கையும் இலட்சியத்தையும் காட்டுகின்றார். உங்களில் ஏதோவொரு குறை இருப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய பதிவேட்டை வைத்திருக்கும்பொழுது, உங்கள் குறைகளைப் பற்றி அறிந்துகொள்வீர்கள். உங்களிற் சிலர் ஒரு பதிவேட்டை வைத்திருக்காமலே சீர்திருத்தப்படுவது சாத்தியமே. எவ்வாறாயினும், பலவீனமானவர்கள் நிச்சயமாகத் தங்கள் பதிவேட்டை வைத்திருக்க வேண்டும். பலவீனமானவர்கள் பலர் இருக்கிறார்கள். எவ்வாறு தங்கள் பதிவேட்டை எழுதுவது என அறியாத சிலரும் உள்ளனர். வேறெவரையுமே நினைவுசெய்யாத அளவுக்கு உங்கள் ஸ்திதி இருக்க வேண்டும். ஆத்மாவாகிய நான் சரீரமின்றியே வந்தேன், இப்பொழுது நான் சரீரமற்றவராகி, வீடு திரும்ப வேண்டும். இதைப் பற்றி ஒரு கதையுமுண்டு, தனது கைத்தடியின் ஆதாரத்தைக் கூடப் பெற வேண்டாம் என ஒருவருக்குக் கூறப்பட்டது, ஏனெனில் இறுதியில் அவர் அதையே நினைவுசெய்வார். நீங்கள் எதன் மீதும் பற்று வைக்கக்கூடாது. பழைய பொருட்களில் பலருக்குப் பற்றுண்டு. நீங்கள் தந்தையைத் தவிர வேறெதனையும் நினைவுசெய்யக்கூடாது. இலக்கு அதியுயர்வானது! கூழாங்கற்களை நினைவுசெய்வதற்கும் சிவபாபாவை நினைவுசெய்வதற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. நீங்கள் எதையாவது வேண்டுகின்ற விருப்பத்தைக் கொண்டிருக்கக்கூடாது. ஒவ்வொருவரும் நிச்சயமாகக் குறைந்தபட்சம் ஆறு மணித்தியாலங்கள் சேவை செய்ய வேண்டும். பொதுவாக அரசாங்க சேவை எட்டு மணித்தியாலங்களுக்கு இருக்கிறது. ஆனால் நீங்கள் நிச்சயமாகப் பாண்டவ அரசாங்கத்தின் சேவையைக் குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு மணித்தியாலங்கள் செய்ய வேண்டும். விகாரங்களை உடைய மனிதர்களால் ஒருபொழுதும் பாபாவை நினைவுசெய்ய முடியாது. சத்தியயுகத்தில் அது விகாரமற்ற உலகமாக இருக்கின்றது. தேவர்களின் புகழ் நினைவுகூரப்படுகின்றது: தெய்வீக குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள், 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள். குழந்தைகளாகிய உங்களின் ஸ்திதி முழுமையாக அப்பால் இருக்க வேண்டும். அழுக்கான பொருட்கள் மீது நீங்கள் பற்று வைக்கக்கூடாது. உங்கள் சரீரத்தின் மீது கூட பற்று இருக்கக்கூடாது; அந்தளவிற்கு நீங்கள் ஒரு யோகி ஆக வேண்டும். நீங்கள் உண்மையாகவே அத்தகைய யோகியாக இருக்கும்பொழுது, புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். எவ்வளவிற்கு அதிகமாக நீங்கள் தொடர்ந்தும் சதோபிரதான் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். அத்தகைய சந்தோஷத்தை, நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் கொண்டிருந்தீர்கள். சத்தியயுகத்திலும், நீங்கள் அந்தச் சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் அந்தச் சந்தோஷத்தை இங்கும் கொண்டிருந்து, பின்னர் அந்தச் சந்தோஷத்தை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள், பின்னர் சத்தியயுகத்தில் சற்கதியைப் பெறுவீர்கள். நீங்கள் இதையிட்டு ஞானக்கடலைப் பெருமளவில் கடைய வேண்டும். தந்தையே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். நீங்கள் தந்தையின் குழந்தைகள் எனக் கூறுவதால், நீங்கள் எவருக்கும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடாது. நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்திற்கான பாதையைக் காட்ட வேண்டும். நீங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை எனில், நிச்சயமாகத் துன்பத்தையே கொடுக்கிறீர்கள். இதுவே நீங்கள் சதோபிரதானாகுவதற்காக முயற்சி செய்கின்ற, அதிமங்களகரமான சங்கமயுகம் ஆகும். முயற்சியாளர்களும் வரிசைக்கிரமமானவர்களே. குழந்தைகள் சிறப்பான சேவை செய்யும்பொழுது தந்தை அவர்களைப் புகழ்கிறார்: இந்தக் குழந்தை ஒரு நல்ல யோகி, சேவாதாரிக் குழந்தைகளால் ஒரு விகாரமற்ற வாழ்வை வாழ முடியும். சிறிதேனும் வீணான எண்ணங்களைக் கொண்டிராதவர்கள் இறுதியில் தங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவார்கள். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே குற்றமற்ற பார்வை உடையவர்கள் ஆகுகிறீர்கள். மனிதர்களை ஒருபொழுதும் தேவர்களென அழைக்க முடியாது. குற்றப்பார்வையை உடையவர்கள் நிச்சயமாகப் பாவம் செய்வார்கள். சத்தியயுகம் தூய உலகமாகும், ஆனால் இது தூய்மையற்ற உலகமாகும். மக்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் பிராமணர்கள் ஆகும்பொழுது மாத்திரமே, அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஞானம் மிகவும் நல்லது, ஆனால் எனக்கு நேரம் கிடைக்கும்பொழுதே, நான் வருவேன். அவர்கள் ஒருபொழுதும் வர மாட்டார்கள் என்பதை பாபா அப்பொழுது புரிந்துகொள்கிறார். அது தந்தையை அவமதிப்பது போலாகும். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதால், அதனை நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டும். நீங்கள் நாளைக்கென எதையும் பிற்போட்டால், மாயை உங்கள் மூக்கைப் பற்றிப் பிடித்து, உங்களைச் சாக்கடைக்குள் வீசுகிறாள். “நாளை, நாளை” என்று நீங்கள் கூறும்பொழுது மரணம் வரும். ஒரு மங்களகரமான பணியைச் செய்வதை நீங்கள் தாமதிக்கக்கூடாது. மரணம் உங்கள் தலைமேல் உள்ளது. பலர் சடுதியாக மரணிக்கிறார்கள். இப்பொழுது குண்டுகள் விழுமானால் பலர் மரணிப்பார்கள். பூமியதிர்ச்சிகளும் ஏற்படும், ஆனால் அதைப் பற்றி நீங்கள் முற்கூட்டியே அறிந்திருக்க மாட்டீர்கள். நாடகத்திற்கு ஏற்ப, இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும், ஆனால் எவரும் அதைப் பற்றி அறியார். பெருமளவு சேதம் ஏற்படுத்தப்படுகிறது. அப்பொழுது அரசாங்கம் போக்குவரத்துக் கட்டணங்கள் போன்றவற்றை அதிகரிக்கிறது. மக்கள் பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் (அரசாங்கம்) அனைத்துக்கும் செலுத்தும் வகையில், தாங்கள் எவ்வாறு தங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம் என அப்பொழுது சிந்திக்கிறார்கள். தானியங்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: குற்றமற்ற பார்வை உடையவர்கள் தூய ஆத்மாக்கள் என்று கூறப்படுகின்றார்கள். இவ்வுலகம் குற்றப் பார்வையை உடையது. நீங்கள் இப்பொழுது குற்றமற்ற பார்வையுடையவர்கள் ஆகுகின்றீர்கள். இதற்கு முயற்சி தேவைப்படுகிறது. ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவது, உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல! பெருமளவுக்குக் குற்றமற்ற பார்வையை உடையவர்களாக ஆகுபவர்களே, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். நீங்கள் ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், குற்றமற்ற பார்வையைக் கொண்டிராதவர்களும், ஞானத்தைப் பெறாதவர்களும் தாழ்ந்த அந்தஸ்தையே பெறுவார்கள். இந்நேரத்தில், மனிதர்கள் அனைவரும் குற்றப் பார்வையையே கொண்டிருக்கின்றார்கள். சத்தியயுகத்தில் அவர்கள் குற்றமற்ற பார்வையைக் கொண்டிருக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளான, தேவர்களாக விரும்பினால், அப்பொழுது நீங்கள் மிக, மிகக் குற்றமற்ற பார்வையை உடையவர்கள் ஆகுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள், ஏனெனில் அப்பொழுது மாத்திரமே நீங்கள் 100மூ ஆத்ம உணர்வுடையவர்களாக முடியும். இதன் அர்த்தத்தை நீங்கள் எவருக்கேனும் விளங்கப்படுத்த வேண்டும். சத்தியயுகத்தில், பாவம் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களும், முழுமையான குற்றமற்ற பார்வை உடையவர்களும் ஆவார்கள். சந்திர வம்சம் கூட, இரு கலைகள் குறைந்ததாக இருக்கின்றது. சந்திரனில் இறுதியாக ஒரு சிறு பிறைக்கீற்றே எஞ்சியிருக்கிறது; அது முற்றாக தேய்ந்து விடுவதில்லை. (முழுமையாக மறைந்து விடுவதில்லை) அவர்கள் கூறுகிறார்கள்: அது மறைந்து விட்டது. மேகங்கள் காரணமாக அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. தந்தை கூறுகிறார்: உங்களுடைய ஒளியும் கூட, முற்றாக அணைக்கப்படுவதில்லை; சிறிதளவு ஒளி எஞ்சியிருக்கின்றது. நீங்கள் பரம மின்கலத்திலிருந்து (பற்றரி) சக்தியைப் பெறுகிறீர்கள். அவரே வந்து, தன்னுடன் எவ்வாறு யோகம் செய்வது என உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஓர் ஆசிரியர் கற்பிக்கும்பொழுது உங்கள் புத்தியின் யோகம் அந்த ஆசிரியருடனேயே உள்ளது. அந்த ஆசிரியர் கொடுக்கின்ற வழிகாட்டல்களுக்கேற்பவே நீங்கள் கற்பீPர்கள். ‘நாங்களும் கற்று ஆசிரியர்களாகவோ, சட்டநிபுணர்களாகவோ ஆகுவோம்.” அதில் கருணை அல்லது ஆசீர்;வாதங்கள் போன்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் தலைவணங்க வேண்டிய தேவையுமில்லை. ஆம், எவராவது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட முறைப்படி ‘ஹரி ஓம்” அல்லது ‘ராமா, ராமா” என்று வந்தனம் கூறினால், பதிலுக்கு நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும். இது மரியாதை செலுத்தும் ஒரு விடயமாகும். நீங்கள் உங்கள் அகங்காரத்தைக் காட்டக்கூடாது. ஒரேயொரு தந்தையையே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியும். ஒருவர் பக்தியைத் துறக்கும்பொழுது, பெரும் குழப்பம் ஏற்படுகிறது. பக்தியைத் துறந்தவரை, அவர்கள் ஒரு நாஸ்திகர் எனக் கருதுகின்றனர். நீங்கள் ஒரு நாஸ்திகர் என்றால் என்ன எனப் புரிந்துகொள்வதற்கும், அவர்கள் ஒரு நாஸ்திகரைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கும் இடையில் அதிக வேறுபாடு உள்ளது. அவர்கள் தந்தையை அறியாததால், அநாதைகளாக உள்ளனர் என்பதால், அவர்களை நாஸ்திகர் என நீங்கள் கூறுகிறீர்கள். இதனாலேயே அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். ஒவ்வோர் இல்லத்திலும், சச்சரவும் அமைதியின்மையும் உள்ளன. அமைதியின்மையும் கோபத்தின் ஒரு வெளிப்பாடே ஆகும். அங்கு அத்தகைய எல்லையற்ற அமைதி நிலவுகிறது. பக்தியின் மூலம் தாங்கள் பெருமளவில் அமைதியைப் பெறுகிறார்கள் என மக்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அது தற்காலிகமானதாகும். நீங்கள் சதா காலத்திற்குமான அமைதியை விரும்புகிறீர்கள். பிரபுவும் அதிபதியுமானவருக்கு உரியவராகிய பின்னர், அநாதைகளாகும்பொழுது நீங்கள் அமைதியிலிருந்து அமைதியின்மைக்குச் செல்கிறீர்கள். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சந்தோஷம் எனும் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து, எல்லைக்குட்பட்ட சந்தோஷம் என்னும் ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். உண்மையில், அது காமவாளின் துன்ப ஆஸ்தியே. அதன் மூலம் துன்பத்திற்கு மேல் துன்பமேயன்றி வேறெதுவுமில்லை. இதனாலேயே, தந்தை கூறுகிறார்: அதன் ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக இறுதிவரை நீங்கள் துன்பத்தையே பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: “தூய்மையாக்குபவராகிய, தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள்!” இது இலகுவான நினைவும், உலகச் சக்கரத்தின் இலகு ஞானமும் என அழைக்கப்படுகிறது. உங்களை ஆதி சனாதன தேவதேவியர் தர்மத்திற்கு உரியவராகக் கருதினால், நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். சுவர்க்கத்தில் அனைவரும் குற்றமற்ற பார்வை உடையவர்களாக இருந்தார்கள். சரீர உணர்வைக் கொண்டவர்கள், குற்றப்பார்வை உடையவர்கள் எனக் கூறப்படுகின்றனர். குற்றமற்ற பார்வை உடையவர்களில் விகாரங்கள் இருப்பதில்லை. தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவதால், அனைத்தையும் மிகவும் இலகுவாக்குகிறார், ஆனால், குழந்தைகள் குற்றப்பார்வை உடையவர்களாக இருப்பதால், இந்தளவைக் கூட நினைவுசெய்வதில்லை. எனவே அவர்கள் அழுக்கான உலகை மாத்திரமே நினைவுசெய்கின்றனர். தந்தை கூறுகிறார்: இந்த உலகை மறந்து விடுங்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் சரீரத்தின் மீது சிறிதளவேனும் பற்றில்லாத வகையில், அத்தகைய யோகிகள் ஆகுங்கள். அழுக்கான விடயங்கள் மீது கவரப்படாதீர்கள். உங்கள் ஸ்திதி தொலைவில் அப்பால் செல்லட்டும். உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர்ந்திருக்கட்டும்.2. மரணம் உங்கள் தலைமீது உள்ளதால், ஒரு மங்களகரமான பணி செய்வதைத் தாமதப்படுத்தாதீர்கள். நாளைக்கென எதனையும் பிற்;போடாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் நோயுற்றிருக்கும் உணர்வில் இருப்பதற்குப் பதிலாக ஆத்ம உணர்வில் இருந்து, சந்தோஷமாக உங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்துக் கொள்வீர்களாக.அனைவருடைய சரீரமும் இப்பொழுது பழையதாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு சிறிய அல்லது பெரிய நோய் உள்ளது. எவ்வாறாயினும், உங்கள் சரீரமானது உங்கள் மனதைப் பாதித்தால், நீங்கள் இரட்டை நோயாளிகள் ஆகி, நோயுற்றிருக்கும்; உணர்வைக் கொண்டவர்கள் ஆகுகின்றீர்கள். ஆகவே, உங்கள் மனமானது நோயுற்றிருக்கும் எந்த உணர்வுகளையும் கொண்டிராதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் என அழைக்கப்படுவீர்கள். என்றுமே நோயிற்கான பயம் எதனையும் கொண்டிராதீர்கள். சிறிதளவு பழத்தை மருந்து வடிவில் எடுத்து, நோய்க்கு விடை கொடுங்கள். உங்கள் கர்மக் கணக்குகளைச் சந்தோஷமாகத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
சுலோகம்:
ஓவ்வொரு தெய்வீகக் குணத்தையும், ஒவ்வொரு சக்தியையும் அனுபவம் செய்வது என்றால், ஓர் அனுபவ சொரூபமாக இருப்பதாகும்.