24.04.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களது இந்த வாழ்க்கை தேவதேவியர்களது வாழ்க்கையை விடவும் மிகவும் மேலானது. ஏனெனில், படைப்பவரையும் படைப்பையும் மிகச்சரியாக அறிந்துகொள்வதன் மூலம் நீங்கள் இப்போது ஆஸ்திகர்களாகியுள்ளீர்கள்.

கேள்வி:
முழுச் சக்கரத்தில் வேறெப்பொழுதும் இல்லாத, கடவுளின் சங்கமயுகத்துக் குடும்பத்தின் சிறப்பியல்பு என்ன?

8பதில்:
இந்த நேரத்தில், கடவுள் தந்தையாகிக் குழந்தைகளாகிய உங்களைப் பராமரிக்கிறார். அவர் ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கின்றார். சற்குருவாகி உங்களை அழகிய மலர்களாக்கித் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். சத்தியயுகத்தில், தேவ குடும்பம் இருக்கும். ஆனால், இவ்வாறானதொரு கடவுளின் குடும்பம் இருக்காது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது எல்லையற்ற சந்நியாசிகளும் இராஜயோகிகளும் ஆவீர்;கள். நீங்கள் ஓர் இராச்சியத்திற்காகக் கற்கின்றீர்கள்.

ஓம் சாந்தி.
இது ஒரு பாடசாலை அல்லது ஒரு பட்சலாவாகும் (கல்விக்கூடமாகும்). இப் பாடசாலை யாருக்கானதாகும்? ஆத்மாக்களுக்கான பாடசாலையாகும். சரீரம் இல்லாது ஆத்மாவினால் நிச்சயமாக எதையுமே கேட்க முடியாது. இது ஆத்மாக்களுக்கான பாடசாலை என்று கூறப்படும்போது, சரீரம் இல்லாது ஆத்மாக்களால் எதையுமே புரிந்துகொள்ள முடியாது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆகையால், நீங்கள் ‘உயிருள்ளவர்கள்’ என்பதைக் கூறவேண்டும்; பாடசாலைகள் அனைத்துமே உயிருள்ளவர்களுக்கானவை. அதனாலேயே இது ஆத்மாக்களின் பாடசாலை என்றும், பரமாத்மாவான பரமதந்தை வந்து கற்பிக்கின்றார் என்றும் கூறப்படுகிறது. அது பௌதீகமான கல்வியாகும். ஆனால், இதுவோ எல்லையற்ற தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்ற, ஆன்மீகக் கல்வியாகும். எனவே இது தந்தையான கடவுளின் பல்கலைக்கழகமாகும். இங்கே கடவுளின் வாசகங்கள் இருக்கின்றன. இது பக்தி மார்க்கம் அல்ல. இது ஒரு கல்வியாகும். பாடசாலையில் ஒருவர் கற்கின்றார். ஆலயம் போன்றவற்றில் பக்தியே இடம்பெறுகின்றது. இங்கே உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? கடவுள் பேசுகிறார். வேறு எந்தப் பாடசாலையிலும் கடவுள் பேசுவதில்லை. இவ் இடத்தில் மாத்திரமே கடவுள் பேசுகின்றார். அதிமேலானவராகிய கடவுளே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். அவரால் மட்டுமே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்க முடியும். ஏனையவை அனைத்தும் பக்தியேயாகும். பக்தி மூலம் சற்கதியைப் பெற முடியாது என்று அதனையிட்டுத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். பரமாத்மா ஒருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அவர் வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். ஆத்மா சரீரத்தின் மூலம் செவிமடுக்கின்றார். வேறெந்த ஞானத்திலும் கடவுளின் வார்த்தைகள் இருப்பதில்லை. பாரதத்தில் மட்டுமே சிவனுடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கடவுள் அசரீரியானவர் என்பதால், எவ்வாறு அவர்கள் சிவனுடைய பிறந்தநாளைக் கொண்டாட முடியும்? அவர் ஒரு சரீரத்தில் பிரவேசிக்கும் போதே பிறந்தநாள் இருக்க முடியும்;. தந்தை கூறுகிறார்: நான் ஒருபோதும் கருப்பைக்குள் பிரவேசிப்பதில்லை. நீங்கள் அனைவரும் கருப்பைக்குள் பிரவேசிக்கிறீர்கள். நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்;கள். இலக்ஷ்மியும் நாராயணனும் அதிகபட்ச எண்ணிக்கையான பிறவிகளை எடுக்கிறார்கள். அவர்கள் 84 பிறவிகள் எடுக்கிறார்கள். அதன் பின் அவர் அவலட்சணமானவராக, கிராமத்துச் சிறுவனாக ஆகுகிறார். அவர்களை நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் என்றோ அல்லது இராதை, கிருஷ்ணர் என்றோ அழைக்கலாம். இராதையும் கிருஷ்ணரும் குழந்தைப் பருவத்தின் வடிவமாகும். அவர்கள் பிறப்பெடுக்கும் போது வைகுந்தம் என்றும் அழைக்கப்படுகின்ற, சுவர்க்கத்தில் பிறக்கின்றார்கள். அவர்களது முதல் தரமான பிறவியாகும். அதனால், அவரும் 84 பிறவிகளை எடுக்கின்றார். சியாமும் சுந்தரும், அதாவது பின்னர் சியாமாக மாறுகின்ற சுந்தர். கிருஷ்ணர் அனைவராலும் நேசிக்கப்படுகிறார். கிருஷ்ணர் புதிய உலகத்தில் பிறப்பெடுக்கிறார். பின்னர் அவர் மறுபிறவிகள் எடுக்கும்போது, பழைய உலகத்துக்குள் வந்து அவலட்சணமாகுகின்றார். இந்த நாடகம் அத்தகையதே. ஆரம்பத்தில் பாரதம் சதோபிரதானாகவும் அழகாகவும் இருந்தது. இப்போது அது தூய்மையற்றதாகியுள்ளது. தந்தை கூறுகிறார்: இந்த ஆத்மாக்கள் அனைவரும் என் குழந்தைகளே. அனைவரும் காமச் சிதையில் அமர்ந்திருந்ததால், எரிந்து இப்போது அவலட்சணமாகியுள்ளார்கள். நான் வந்து அனைவரையும் வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் செல்கிறேன். இந்த உலகச் சக்கரம் அத்தகையதாகும். பூந்தோட்டம் பின்பு முட்காடு ஆகுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் மிக அழகான உலக அதிபதிகளாக இருந்தீர்;கள்! இப்போது நீங்கள் அவ்வாறு ஆகுகின்றீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் 84 பிறவிகளை எடுத்த பின்னர், இப்போது மீண்டும் அவ்வாறு ஆகுகிறார்கள், அதாவது, அவ் ஆத்மாக்கள் இப்போது கற்கின்றார்கள். சத்தியயுகத்தில் தந்தையை நினைவுசெய்ய வேண்டிய அவசியமே இல்லாத அளவில், அங்கே அளவற்ற சந்தோஷம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். துன்பத்தின்போதே அனைவரும் கடவுளை நினைவுசெய்கின்றார்கள் என்று நினைவுகூரப்படுகிறது. யாரை அவர்கள் நினைவுசெய்கின்றார்கள்? தந்தையையாகும். நீங்கள் அவை அனைத்தையும் நினைவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பக்தி மார்க்கத்தில் மக்கள் பலரை நினைவுசெய்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது. கிருஷ்ணர் எப்போது வந்தாரென்றோ அவர் யாரென்றோ அவர்களுக்குத் தெரியாது. கிருஷ்ணருக்கும் நாராயணனுக்கும் இடையிலான வேறுபாட்டையேனும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சிவபாபாவே அதிமேலானவர். அவரையடுத்து பிரம்மா, விஷ்ணு, சங்கரர் உள்ளார்கள். அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மக்கள் அவர்கள் அனைவரையும் கடவுள் என்று அழைக்கிறார்கள். கடவுள் சர்வவியாபி என்று கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: ஐந்து விகாரங்களாகிய மாயையே சர்வவியாபியாகவும், அனைவரிடமும்; உள்ளாள். சத்தியயுகத்தில் விகாரம் ஏதும் இல்லை. முக்தி தாமத்திலும் ஆத்மாக்கள் தூய்மையாகவே இருக்கிறார்கள். அங்கே தூய்மையின்மை என்பதற்கே இடமில்லை. ஆகையால் படைப்பவராகிய தந்;தை வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்;கிறார். அவர் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துவதால் நீங்கள் ஆஸ்தீகர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் ஒருமுறை மாத்திரமே ஆஸ்திகர்கள் ஆகுகிறீர்கள். உங்களது இந்த வாழ்க்கை தேவதேவியர்களது வாழ்க்கையை விடவும் மேன்மையானது. மானிடப்பிறவி விலைமதிப்பிட முடியாதது என்று பாடப்படுகிறது. எனவே அதிமங்களகரமான சங்கமயுகத்தின் போது உங்கள் வாழ்க்கை வைரம் போன்றதாகுகின்றது. இலக்ஷ்மியும் நாராயணனும் வைரம் போன்றவர்கள் என்று கூறப்படுவதி;ல்லை. உங்கள் பிறப்பே வைரம் போன்றதாகும். நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவர்களோ தேவர்களின் குழந்தைகள். இங்கே நீங்கள் உங்களைக் கடவுளின் குழந்தைகள் என்றும், கடவுளே உங்கள் தந்தையென்றும் கூறுகிறீர்கள். அவர் ஞானக்கடல் என்பதால் அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார். அதி மங்களகரமான சங்கமயுகத்தில் ஒரேயொரு தடவையே உங்களுக்கு இந்த ஞானம் கிடைக்கிறது. இந்த யுகத்திலேயே நீங்கள் அதிமேன்மையான மனிதர்களாக ஆகுகிறீர்கள். ஆனால், உலகத்தவருக்கு இதைப் பற்றித் தெரியாது. அனைவரும் அறியாமை என்ற கும்பகர்ண உறக்கத்தில் உறங்குகின்றார்கள். அனைவருக்கான விநாசமும் சற்று முன்னாலேயே உள்ளது என்பதாலேயே குழந்தைகளாகிய நீங்கள் எவருடனும் உறவுமுறை கொண்டிருக்கக்கூடாது. ‘உங்கள் இறுதிக்கணங்களில் நீங்கள் எதனை நினைவுசெய்கின்றீர்களோ’ என்று கூறப்படுகின்றது. உங்கள் இறுதிக் கணங்களில் சிவபாபாவை நினைவுசெய்தால் நீங்கள் நாராயணனின் குலத்தில் ஒருவர் ஆகுவீர்கள். இந்த ஏணி மிகவும் நல்லது. ‘நாங்கள் தேவர்களாக இருந்தோம், பின்பு சத்திரியர்களாகினோம்’ என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் இராவண இராச்சியமே உள்ளது. நாங்கள் எங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை மறந்து ஏனைய சமயங்களுக்குள் அகப்பட்டுக் கொண்டோம். உலகம் முழுவதுமே இலங்கை (லங்கா) ஆகும். வேறு எந்த பொன்னான இலங்கையும் இருக்கவில்லை. தந்தை கூறுகிறார்: உங்களை அவதூறு செய்ததை விடவும் நீங்கள் அதிகமாக என்னை அவதூறு செய்திருக்கிறீர்கள். நீங்கள் 8.4 மில்லியன் பிறவிகள் எடுப்பதாக உங்களைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால், நான் ஒவ்வொரு துணிக்கையிலும் இருக்கிறேன் என்று கூறி விட்டீர்கள். இவ்வாறு என்னை அவதூறு செய்பவர்களையும் நான் வந்து ஈடேற்றுகின்றேன். தந்தை கூறுகிறார்: உங்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. இது நாடகத்தின் விளையாட்டு. இந்த நாடகம் சத்தியயுக ஆரம்பத்திலிருந்து கலியுக முடிவு வரையில் இடம்பெறுவதும், மீண்டும் சுழல்வதும் ஆகும். தந்தையைத் தவிர வேறு எவராலும் இதனை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் அனைவரும் பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் கடவுளின் குழந்தைகள். நீங்கள் கடவுளின் குடும்பத்தில் இருக்கிறீர்கள். சத்தியயுகத்தில் தேவ குடும்பம் இருக்கும். கடவுளின் குடும்பத்தில் கடவுளே உங்களைப் பராமரித்து, கற்பித்து, உங்களை அழகிய மலர்களாக்கிய பின்னர், தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்காகக் கற்கின்றீர்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு அதிகக் காலம் எடுக்கவில்லை என்று கிரந்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதனாலேயே கடவுள் மந்திரவாதி என்று அழைக்கப்படுகிறார். நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுவது என்பது மாயாஜாலமே. சுவர்க்கம் நரகமாக மாறுவதற்கு 84 பிறவிகள் எடுக்கின்றன. அதன் பின், உங்கள் ஒரு விரல் நொடிப்பில் (ஒரு விநாடிப் பொழுதில்) நரகம் சுவர்க்கமாகுகிறது. ஒரு விநாடியில் ஜீவன்முக்தி கிடைக்கிறது. நான் ஓர் ஆத்மா. உங்களுக்கு ஆத்மாக்களையும் தெரியும். தந்தையையும் தெரியும். வேறெந்த மனிதருக்கும் ஆத்மா யாரென்று தெரியாது. பல குருமார்கள் இருந்தபோதிலும், சற்குரு ஒரேயொருவரே உள்ளார். சற்குரு அமரத்துவமானவர் என்று கூறப்படுகிறது. பரமாத்மாவான பரமதந்தையே ஒரேயொரு சற்குருவாக இருக்கிறார். ஆனால் குருமார்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எவருமே விகாரமற்றவர்கள் அல்ல. அவர்கள் அனைவருமே விகாரத்தின் மூலமே பிறக்கிறார்கள். இராச்சியம் இப்போது ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் அனைவரும் இங்கே ஓர் இராச்சியத்திற்காகக் கற்கின்றீர்கள். நீங்கள் இராஜயோகிகள், அதாவது எல்லையற்ற சந்நியாசிகளாவீர்கள். அந்த ஹத்தயோகிகள் எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள். தந்தை வந்து அனைவருக்கும் சற்கதியை அருளி, அனைவரையும் சந்தோஷப்படுத்துகிறார். நான் அமரத்துவ வடிவாகிய சற்குரு என்று அழைக்கப்படுகிறேன். அங்கே நாம் மீண்டும் மீண்டும் ஒரு சரீரத்தை விட்டு, இன்னொன்றை எடுப்பதில்லை. அங்கே மரணம் ஏற்படுவதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் அழிவற்றவர்கள். ஆனால், நீங்கள் தூய்மையற்றவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் ஆகுகிறீர்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படாதவர்கள் அல்ல. தந்தை மட்டுமே உங்களுக்கு நாடகத்தின் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். படைப்பவர் மட்டுமே உங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துவார். அந்தத் தந்தை ஒருவர் மட்டுமே ஞானக்கடலாவார். அவர் உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக, இரட்டைக்கிரீடம் அணிந்தவர்களாக ஆக்குகிறார். உங்கள் பிறவி ஒரு சிப்பியைப் போன்றிருந்தது. இப்போது நீங்கள் வைரங்களைப் போல் ஆகுகின்றீர்கள். தந்தை உங்களுக்கு ‘ஹம்சோ, சோஹம்’ என்ற மந்திரத்தையும் விளங்கப்படுத்தியிருக்கிறார். அவர்களோ, ஹம்சோ, சோஹம் என்றால் ஆத்மாவே பரமாத்மா என்றும், பரமாத்மாவே ஆத்மா என்றும் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: ஆத்மா எவ்வாறு பரமாத்மாவாக இருக்க முடியும்? தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அதன் அர்த்தம் என்னவெனில்: ஆத்மாவாகிய நான் இந்த நேரத்தில் ஒரு பிராமணனாக இருக்கிறேன். அதன் பின், ஆத்மாவாகிய நான், பிராமணனிலிருந்து தேவனாகுவேன். பின்பு சத்திரியனாகி, அதன் பின் சூத்திரனிலிருந்து பிராமணனாகுவேன். உங்கள் பிறப்பே அனைத்திலும் அதிமேன்மையானது. இது கடவுளின் வீடு. நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள்? தந்தையுடனும் தாயுடனும். அனைவரும் சகோதர, சகோதரிகள். தந்தை ஆத்மாக்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் அனைவரும் ஆஸ்திக்கு உரிமையுடைய என் குழந்தைகள். இதனாலேயே அனைவரும் பரமாத்மாவாகிய தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற முடியும். வயதானவர்கள், இளையவர்கள், சிறுவர்கள் அனைவருக்கும் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறும் உரிமையுள்ளது. ஆகையாலேயே நீங்கள் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.

இரவு வகுப்பு:
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை இனங்காண்கின்றீர்கள். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதையும், அவரிடமிருந்து நீங்கள் எல்லையற்றதோர் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆனால், சிரமம் யாதெனில் மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். குழந்தைகள் பயப்படும் அளவுக்கு அவள் ஏதேனும் ஒரு தடையை உருவாக்குகிறாள். அதிலும் கூட, விகாரத்தில் விழுவதே முதல் தரமான மாயையாகும். உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றி விடுகின்றன. இதில், உங்கள் கண்களை அகற்றுவது என்பதல்ல. தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானம் என்ற கண்ணைக் கொடுத்துள்ளார். ஞானத்திற்கும் அறியாமைக்கும் இடையில் யுத்தம் இடம்பெறுகிறது. தந்தை ஞானமும், மாயை அறியாமையும் ஆகும். இந்த யுத்தம் மிகப் பலம் வாய்;ந்தது. யாராவது ஒருவர் வீழ்ச்சியடையும்போது, அவர் அதனை புரிந்துகொள்வதில்லை. ஆனால், பின்பு, தான் வீழ்ச்சியடைந்து விட்டேன் என்றும், தனக்குத் தானே மிகப்பெரிய இழப்பொன்றை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் உணர்ந்து கொள்கிறார். ஒரு தடவை மாயை உங்களை ஏமாற்றி விட்டால், அதன் பின், மேலெழுவது உங்களுக்கு மிகச் சிரமமாக ஆகுகின்றது. பல குழந்தைகள் தாங்கள் திரான்ஸில்; செல்வதாகக் கூறுகிறார்கள். ஆனால், அதிலும் மாயை குறுக்கிடுகிறாள். அது அவர்களுக்குத் தெரிவதும் இல்லை. மாயை அவர்களைத் திருடச் செய்து பொய் சொல்லவும் வைக்கிறாள். மாயையால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்ன? கேட்கவே வேண்டாம்! அவள் உஙகளைத் தீயவர் ஆக்குகின்றாள். மலர்கள் ஆகிக் கொண்டிருக்கும்போது நீங்கள் அழுக்காகி விடுகிறீர்;கள். உங்களை மீண்டும் மீண்டும் விழச் செய்யுமளவுக்கு மாயை மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கிறாள். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, நான் மீண்டும் மீண்டும் உங்களை மறந்து விடுகிறேன். உங்களை முயற்சி செய்யத் தூண்டுபவர் தந்தையொருவரே. ஆனால், எவராவது ஒருவரது பாக்கியத்தில் அது இல்லையென்றால், அவர்களால் முயற்சி செய்ய முடியாது. இந்த விடயத்தில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படவோ அல்லது பிரத்தியேகமாக கற்பிக்கவோ முடியாது. ஏனைய கல்வியில் பிரத்தியேக வகுப்பு எடுப்பதற்காக குறிப்பாக ஓர் ஆசிரியர் அழைக்கப்படுகின்றார். இங்கே, உங்கள் பாக்கியத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்வதற்காக உங்கள் அனைவருக்கும் ஒரேயளவுக்கே கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வளவைக் கற்பிக்க முடியும்? எத்தனையோ குழந்தைகள் இருக்கிறார்கள். ஏனைய கல்வியில், சில முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகளைப் பொறுத்தவரை, அவர்களால் அதிகளவு பணத்தைச் செலவிடக்கூடியதாக இருப்பதால், அவர்களுக்குப் பிரத்தியேக வகுப்புகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஒருவர் மந்தமாக இருப்பது ஆசிரியருக்குத் தெரியும்போது, அவரைப் புலமைப்பரிசிலைப் பெறும் தகுதி வாய்ந்தவராக்குவதற்காக அவருக்கு அவர் கற்பிக்கின்றார். இந்தத் தந்தை அவ்வாறு செய்வதில்லை. இந்தத் தந்தை அனைவருக்கும் ஒரேயளவையே கற்பிக்கின்றார். ஏனைய ஆசிரியர்கள் மேலதிக முயற்சியைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகிறார்கள். இவரோ எவரையும் மேலதிக முயற்சி செய்யச் செய்வதில்லை. மேலதிக முயற்சி செய்வதற்கு ஒருவரைத் தூண்டுவதென்றால், அதற்காக ஆசிரியருக்கு மேலதிகமாகப் பணம் செலுத்தப்பட்டிருப்பினும், அந்த ஆசிரியருக்குக் கருணை உள்ளது என்றே அர்த்தமாகும். அவர் குறிப்பாக நேரம் ஒதுக்கி, மாணவர்களுக்குக் கற்பிக்கின்றார், ஆகையால் அவர்கள் மேலதிகமாகக் கற்று திறமைசாலிகளாக முடியும். இங்கே, மேலதிகமாகக் கற்றல் என்ற கேள்விக்கு இடமில்லை. இவர் அனைவருக்கும் ஒரே விடயத்தையே கூறுகிறார். ‘மன்மனாபவ’ என்னும் மகா மந்திரம் ஒன்றை மாத்திரமே அவர் கொடுக்கின்றார். தந்தையின் நினைவின் மூலம் என்ன நடக்கிறதென்று குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தையொருவரே தூய்மையாக்குபவர். அவரை நினைவுசெய்வதால் நீங்கள் தூய்மையாகுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அச்சா. இரவு வணக்கம்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உலகம் முழுவதும் இப்போது ஒரு மயானமாகப் போகிறது. விநாசம் முன்னால் நிற்கிறது. அதனால், எவருடனும் எவ்விதமான உறவும் வைத்துக்கொள்ளாதீர்கள். இறுதிக் கணங்களில் தந்தையொருவரையே நினைவுசெய்யுங்கள்.

2. அவலட்சணமானவரிலிருந்து அழகானவர் ஆகுவதற்கும் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுவதற்குமான சங்கமயுகம் இதுவாகும். அதிமேன்மையான மனிதர்களாகுவதற்கான நேரம் இதுவாகும். எப்போதும் இந்த விழிப்புணர்வைக் கொண்டிருந்து, உங்களைச் சிப்பியிலிருந்து வைரமாக்கிக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஏனையோரின் கட்டளைகளைப் பின்பற்றுவதிலிருந்து விடுபட்டவராகி, வீணான செய்திகளைச் செவிமடுத்து, அதில் உங்கள் ஆர்வத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, ஒரு முற்றுப்புள்ளியை இடுவீர்களாக.

முன்னேறிச் செல்லும்பொழுது, சில குழந்தைகள் ஸ்ரீமத்துடன் ஏனைய ஆத்மாக்களின் கட்டளைகளைக் கலந்து விடுகின்றார்கள். அதனால் ஒரு பிராமணர் உலகச் செய்திகளைக் கூறும்பொழுது, அவர்கள் பெருமளவு ஆர்வத்துடன் அதைச் செவிமடுக்கின்றார்கள். உங்களால் அதனையிட்டு எதுவும் செய்ய முடியாதிருப்பினும், நீங்கள் அதனைச் செவிமடுக்கின்றீர்கள். எனவே அந்தச் செய்தி உங்கள் புத்திக்குள் செல்வதுடன், நேரமும் வீணாக்கப்படுகின்றது. ஆகவே, தந்தையின் கட்டளைகள்: கேளுங்கள், ஆனால் கேட்காதீர்கள். ஒருவர் வந்து உங்களிடம் எதனைக் கூறினாலும், அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை இடுங்கள். ஒருவரைப் பற்றிய எதனையேனும் நீங்கள் கேட்டாலும், உங்கள் பார்வையிலோ அல்லது உங்கள் எண்ணங்களிலோ அந்த நபர் மீதான வெறுப்புணர்வுகள் எதனையும் கொண்டிராதீர்கள். அப்பொழுது நீங்கள் ஏனையோரின் கட்டளைகளிலிருந்து விடுபட்டவர் என்று கூறப்படுவீர்கள்.

சுலோகம்:
தங்கள் கனவுகளிலும் கூட பெரிய இதயங்களைக் கொண்டிருப்பவர்களின் இதயங்களில் எல்லைக்குட்பட்ட சம்ஸ்காரங்கள் வெளிப்பட முடியாது.