07.08.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உணர்வுள்ள நிலையில் தந்தையை நினைவுசெய்யுங்கள். எதுவுமேயற்றதைப் போன்றதொரு ஸ்திதிக்குச் செல்வதோ அல்லது உறக்கத்திற்குச் செல்வதோ யோகம் அல்ல.
கேள்வி:
இங்கு உங்கள் கண்களை மூடியவாறு அமர்வதற்கு நீங்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை?
பதில்:
நீங்கள் உங்களுடைய கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தால், திருடனால் உங்கள் கடையிலிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச் செல்ல முடியும். திருடியாகிய மாயை, உங்கள் புத்தியை எதனையும் கிரகிக்க அனுமதிக்க மாட்டாள். நீங்கள் உங்களுடைய கண்களை மூடியவாறு யோகத்தில் அமர்வீர்களாயின், உறங்கி விடுவீர்கள், நீங்கள் எதனையும் அறிந்துகொள்ள மாட்டீர்கள். எனவே, உங்கள் கண்களைத் திறந்தவாறே அமர்ந்திருங்கள். நீங்கள் உங்களுடைய வேலையைச் செய்யும்பொழுதும், உங்கள் புத்தியினால் தந்தையை நினைவுசெய்யுங்கள். இதில் ஹத்தயோகம் என்ற கேள்விக்கே இடமில்லை.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: இவரும் ஒரு குழந்தையே. சரீரதாரிகள் அனைவரும் அவருடைய குழந்தைகளே. எனவே, ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார்: ஆத்மாவே பிரதானமானவர். இதனை மிக நன்கு புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இங்கு முன்னால் அமர்ந்திருக்கும்பொழுது, உங்களை உங்கள் சரீரங்களிலிருந்து நீக்கி, காணாமல் போய்விடக்கூடாது. (கூடு விட்டுக் கூடு பாய்வதைப் போன்ற மந்திர வித்தை பற்றி அவ்வாறு கூறப்படுகின்றது.) உங்களைச் சரீரத்திலிருந்து விடுவித்து, காணாமல் போவது நினைவு யாத்திரைக்கான ஸ்திதியல்ல. இங்கு நீங்கள் விழிப்பாக அமர்ந்திருக்க வேண்டும். நீங்கள் நடக்கும்பொழுதும், நடமாடும்பொழுதும், அமர்ந்திருக்கும்பொழுதும், உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கின்றபொழுது ‘உணர்வற்றவராகுங்கள்’ என்று தந்தை உங்களுக்குக் கூறுவதில்லை. இங்கு அமர்ந்திருக்கும்பொழுது பலர் காணாமல் போய்விடுகிறார்கள். நீங்கள் இங்கு விழிப்புடன் அமர்ந்திருக்க வேண்டும். நீங்கள் தூய்மையாகவும் வேண்டும். தூய்மை இல்லாமல் உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாது. உங்களால் எவருக்கும் நன்மை செய்யவும் முடியாது, உங்களால் பிறருக்கு இதனைக் கூறவும் இயலாது. தாங்களே தூய்மையாக இல்லாமல் மற்றவர்களை அவ்வாறு ஆகுமாறு கூறுபவர்கள் பண்டிதர்கள் போன்றவர்கள். நீங்கள் உங்களைப் புத்திசாலிகளாகக் கருதக்கூடாது. இல்லையேல், உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தும். நீங்கள் உங்கள் கண்களை மூடி எதுவுமேயற்றதைப் போன்றதொரு ஸ்திதிக்குச் செல்ல முடியும் என்று எண்ணாதீர்கள். அது நினைவுசெய்யும் ஸ்திதியல்ல. இங்கு, நீங்கள் உணர்வுள்ள நிலையில் இருந்து தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தூங்கிவிழுவது நினைவு செய்வதல்ல. குழந்தைகளாகிய உங்களுக்குப் பல கருத்துக்கள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் ஏழாவது உலகிற்குச் செல்வதாகவும் (உணர்வு ஸ்திதி) அவர்கள் இவ் உலகைப் பற்றிய விழிப்புணர்வு அறவே இல்லாது இருப்பதாகவும் சமயநூல்களில் காட்டப்பட்டுள்ளன. உங்களுக்கு உலகத்தைப் பற்றித் தெரியும்; இது ஓர் அசுத்த உலகம். எவருக்கும் தந்தையைத் தெரியாது. அவர்கள் தந்தையை அறிந்திருந்தால், உலகச் சக்கரத்தையும் அறிந்திருப்பார்கள். இந்தச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்றும், மனிதர்கள் எவ்வாறு மறுபிறவி எடுக்கிறார்கள் என்றும் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். சத்தியயுகத்தில், நீங்கள் முதியவர்கள் ஆகினாலும் உங்கள் முகம் சுருக்கமடையாது. சந்நியாசிகள் ஹத்தயோகம் செய்கின்றார்கள். அவர்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டு, குகைகளில் அமர்ந்திருக்கும்பொழுது, முதுமையடைந்து, சுருக்கமும் விழுகின்றது. தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கும்பொழுதும்; நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். எதுவுமேயற்றதைப் போன்றதொரு ஸ்திதிக்குச் செல்வது என்பது உண்மையில் ஒரு ஸ்திதியல்ல. நீங்கள் உங்களுடைய தொழில் போன்றவற்றைச் செய்வதுடன், உங்கள் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டும். நீங்கள் எதுவுமேயற்றதைப் போன்றதொரு ஸ்திதிக்கு செல்லக்கூடாது. உங்கள் வேலைகளைச் செய்கின்றபொழுதும், உங்கள் புத்தியின் மூலம் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் உங்களுடைய வேலையைச் செய்கின்றபொழுது, நிச்சயமாக உங்கள் கண்களைத் திறந்தவாறே செய்கின்றீர்கள். உங்கள் தொழில் போன்றவற்றில் தொடர்ந்தும் ஈடுபடுங்கள், ஆனால் உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கட்டும். நீங்கள் இதைப் பற்றிக் கவனயீனமானவர்கள் ஆகக்கூடாது. நீங்கள் உங்களுடைய கடையிலிருக்கும்பொழுது, உங்கள் கண்களை மூடிக்கொண்டு இருப்பீர்களாயின், எவராவது உங்கள் பொருட்களை களவாடிச் சென்று விட்டாலும், நீங்கள் அறியமாட்டீர்கள். அந்த ஸ்திதி சரியானதல்ல. சரீரத்திலிருந்து பற்றற்றவராகுவது ஹத்தயோகிகளினது பயிற்சி ஆகும். மாயாஐhல சக்தியுடையவர்களே அவ்வாறு செய்கிறார்கள். தந்தை இங்கிருந்து உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார்; நீங்கள் இதற்காக உங்கள் கண்களை மூடக்கூடாது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது, நீங்கள் நினைவுசெய்து வந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் மறந்து, ஒரேயொரு தந்தையை மட்டும் நினைவுசெய்யுங்கள். நினைவு யாத்திரை இல்லாமல் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. சூட்சும உலகிற்குப் போக் கொண்டு செல்பவர்கள் தங்களை அதில் இழக்கின்றார்கள். என்ன நடைபெறுகின்றது? அவர்கள் அங்கிருக்கும் வரை அவர்களுடைய பாவங்கள் அழிக்கப்பட முடியாது. அவர்களால் சிவபாபாவை நினைவுசெய்யவோ, பாபாவின் முரளியைச் செவிமடுக்கவோ முடியாது, எனவே இழப்பு ஏற்படுகின்றது. எவ்வாறாயினும், இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது, இதனாலேயே அவர்கள் அங்கு செல்கிறார்கள். அவர்கள் பின்னர் கீழே வந்து, முரளியைச் செவிமடுக்கின்றார்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: சென்று விரைவாகத் திரும்பி வாருங்கள்! அங்கேயே இருக்காதீர்கள்! அத்தகைய களிப்பூட்டும் விளையாட்டுக்களுக்கு பாபா ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார். இவ்வாறு சுற்றுவது இலட்சியமின்றி அலைவதைப் போன்றதாகும். பக்தி மார்க்கத்தில் பெருமளவு அலைச்சலும், அழுகையும் உள்ளன. ஏனெனில் அது இருண்ட பாதையாகும். மீரா வைகுந்தத்திற்குத் திரான்சில் சென்றார். அது யோகமோ அல்லது கல்வியோ அல்ல. அவர் அதன் மூலம் சற்கதியை அடைந்தாரா? அவர் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதியுடையவர் ஆகினாரா? அவரது பல பிறவிகளின் பாவங்கள்; அழிக்கப்பட்டனவா? முற்றிலும் இல்லை! தந்தையின் நினைவின் மூலம் மட்டுமே பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்;பட முடியும். காட்சிகள் போன்றவற்றைக் காண்பதில் எந்த நன்மையும் இல்லை. அது பக்தியாகும். அது நினைவோ அல்லது ஞானமோ அல்ல. பக்திமார்க்கத்தில் இவ்விடயங்களைக் கற்பிப்பதற்கு எவருமில்லை. எனவே அவர்கள் எவ்வளவு காட்சிகளைப் பெற்றிருந்தாலும் அவர்களால் சற்கதியைப் பெற முடியாது. ஆரம்பத்தில், குழந்தைகள் தாங்களாகவே திரான்சில் சென்றார்கள். மம்மாவும் பாபாவும் திரான்சில் செல்லவில்லை. ஆரம்பத்தில், பாபா ஸ்தாபனையினதும், விநாசத்தினதும் காட்சியைக் கண்டார். அதன் பின் எதுவும் நடைபெறவில்லை. நான் எவரையும் மேலே அனுப்புவதில்லை. ஆம், நான் (பிரம்மா) அவர்களுடன் கீழே அமர்ந்து கூறுகின்றேன்: 'பாபா, இவரின் நூலை (புத்தி) இழுங்கள்". அது நாடகத்தில் இருப்பின், அவருடைய நூல் (புத்தி) இழுக்கப்படும். இல்லாவிடில், அது இழுக்கப்படாது. பலர் காட்சிகளைப் பெறுகிறார்கள். அனேகமானோர் ஆரம்பத்தில் காட்சிகளைப் பெற்றார்கள், பலர் இறுதியில் காட்சியைப் பெறுவார்கள். அது இரைக்கு மரணமும், வேடனுக்குச் சந்தோஷமுமாகும். எண்ணற்ற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இங்கேயே தங்கள் சரீரங்களை விட்டுச் செல்ல வேண்டும். எவரும் தனது சரீரத்தையோ அல்லது எதனையோ சத்தியயுகத்திற்கோ அல்லது மௌன தாமத்திற்கோ எடுத்துச் செல்ல முடியாது. எண்ணற்ற மனிதர்கள் இருக்கிறார்கள். அனைவரும் அழிக்கப்படவுள்ளனர். இப்பொழுது பிரம்மா மூலம் ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. புதல்விகளாகிய நீங்கள் கிராமங்களுக்குச் சென்று, பெருமளவு சேவை செய்கிறீர்கள். 'உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள்" என நீங்கள் அவர்களுக்குக் கூறுகிறீர்கள். இராஜயோகத்தை எவ்வாறு கற்பிப்பது எனச் சந்நியாசிகளுக்குத் தெரியாது. தந்தையைத் தவிர வேறு எவரால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். பின்னர் நீங்கள் உங்கள் இராச்சியத்தைப் பெற்று எல்லையற்ற சந்தோஷத்துடன் இருப்பீர்கள். அங்கு நினைவுசெய்ய வேண்டிய அவசியமிருக்காது; அங்கு துன்பத்தின் சுவடு சிறிதளவும் இருக்காது. உங்கள் ஆயுட்காலம் நீண்டதாகவும், உங்கள் சரீரங்கள் நோயற்றவையாகவும் இருக்கும். இங்கு, பெருமளவு துன்பம் இருக்கின்றது. தந்தை உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பதற்காகவே இந்த நாடகத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதல்ல. இது சந்தோஷம் துன்பம், வெற்றி தோல்வி போன்றவற்றைக் கொண்ட, ஓர் ஆதி, அநாதியான நாடகம். சந்நியாசிகளுக்கு இவை தெரியாது. எனவே எவ்வாறு அவர்களால் எதனையாவது விளங்கப்படுத்த முடியும்? அவர்கள் பக்தி மார்க்கத்திற்கான சமயநூல்களைக் கற்கிறார்கள். 'உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள்" என உங்கள் ஒவ்வொருவருக்கும்; கூறப்பட்டுள்ளது. சந்நியாசிகள் தங்களை ஆத்மாக்களாகக் கருதி, பிரம்ம தத்துவத்தை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தைப் பரமாத்மாவாகக் கருதுகிறார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தின் ஞானத்தை மட்;டுமே கொண்டிருக்கிறார்கள். உண்மையில், பிரம்ம தத்துவம் ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கும் வசிப்பிடம், ஆனால் தாங்கள் தத்துவத்துடன் இரண்டறக் கலப்பார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய ஞானம் முற்றிலும் தலைகீழானது. இங்கு, எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். கடவுள் நாற்பதாயிரம் வருடங்களுக்குப் பின் வருவார் என அவர்கள் கூறுகிறார்கள். அது அறியாமை இருள் என அழைக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நானே புதிய உலகத்தை ஸ்தாபிப்பவரும், பழைய உலகத்தை அழிப்பவரும் ஆவேன். நானே ஸ்தாபனைப் பணியை முன்னெடுத்துச் செல்கின்றேன்; விநாசம் முன்னால் உள்ளது. இப்பொழுது விரைந்து தூய்மையாகுங்கள்! அப்பொழுதே உங்களால் தூய உலகிற்குச் செல்ல முடியும். இது ஒரு பழைய தமோபிரதான் உலகம்; இது இலக்ஷ்மி நாராயணரின் இராச்சியம் அல்ல. அவர்களுடைய இராச்சியம் புதிய உலகில் இருந்தது; அது இப்பொழுது இல்லை. அவர்கள் தொடர்ச்சியாக மறுபிறவி எடுத்துள்ளார்கள். சமயநூல்களில் பல விதமான விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. கிருஷ்ணர் அர்ஜுனனின் குதிரை இரதத்தில் அமர்ந்திருப்பதாக அவர்கள் காட்டியுள்ளார்கள். கிருஷ்ணர் அர்ஜுனனுக்குள் அமர்ந்திருந்தார் என்பதல்ல. கிருஷ்ணர் சரீரதாரியாக இருந்தார். யுத்தம் என்ற கேள்விக்கே இடமிருக்கவில்லை. அவர்கள் பாண்டவ சேனை, கௌரவ சேனை எனப் பிரிந்திருந்தார்கள். எவ்வாறாயினும், இங்கு அவ்விடயங்கள் இடம்பெறுவதில்லை. அவை பக்திமார்க்கத்திற்கான எண்ணற்ற சமயநூல்கள். அவை சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அங்கு, அது உங்கள் ஞானத்தின் வெகுமதியான, உங்கள் இராச்சியமாகும். அங்கு, சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. தந்தை புதிய உலகத்தை ஸ்தாபிக்கின்றார், எனவே புதிய உலகத்தில் நிச்சயமாகச் சந்தோஷம் இருக்கும். தந்தை ஒரு பழைய வீட்டைக் கட்டுவாரா? தந்தை ஒரு புதிய வீட்டையே கட்டுவார். அவ்வுலகம் சதோபிரதான் உலகம் என அழைக்கப்படுகின்றது. இந்த உலகம் இப்பொழுது தூய்மையற்றும், தமோபிரதானாகவும் இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது இராவணனின் அந்நிய இராச்சியத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். சிவபாபா இராமர் என அழைக்கப்படுகிறார். அவர்கள் 'இராமா, இராமா" என இராம நாமத்தை உச்சரித்து, இராமரின் பெயரில் தானம் செய்கின்றார்கள். இப்பொழுது, இராமருக்கும் சிவபாபாவுக்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் இருக்கின்றது. சிவபாபா இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள். இப்பொழுது நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அங்கு திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்து தூய்மையாகும்வரை உங்களால் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. உங்களுக்குள் வெகுசிலரே தந்தையை மிகச்சரியாக நினைவுசெய்கிறீர்கள். உங்கள் உதடுகளின் மூலம் எதனையும் கூறுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. பக்திமார்க்கத்தில் மக்கள் 'இராமா, இராமா" என அவர்களின் உதடுகளின் மூலம் கூறுகிறார்கள். எவரேனும் இதனை உச்சரிக்காவிட்டால் அவர்கள் அவரை ஒரு நாஸ்;திகர் என அழைக்கிறார்கள். அவர்கள் மிகவும் உரத்துப் பாடுகிறார்கள். விருட்சம் வளர்வதால், பக்தி மார்க்கத்திற்கான சம்பிரதாயங்களும் வளர்ச்சியடைகின்றன. விதையானவர் மிகவும் சின்னஞ்சிறியவர். உங்களிடம் எதுவுமில்லை, நீங்கள் எந்த ஒலியையும் எழுப்புவதுமில்லை. ‘உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள்’ என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் உதடுகளின் மூலம் எதனையும் கூறவேண்டியதில்லை. குழந்தைகள் தங்கள் புத்தியின் மூலம் தங்களின் பௌதீகத் தந்தையை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் அமர்ந்திருந்து, ''பாபா, பாபா" என்று கூறுவதில்லை. ஆத்மாக்களின் தந்தை யார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்களே. ஆத்மாக்களுக்கு வேறெந்தப் பெயரும் இல்லை. எவ்வாறாயினும், சரீரங்களின் பெயர்கள் மாறுகின்றன. ஓர் ஆத்மா ஆத்மாவே. அவரோ பரமாத்மா. அவரின் பெயர் சிவன். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் எனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டிருந்தால், நானும் பிறப்பு, மறுபிறப்பு எடுக்க வேண்டும். பின்னர் உங்களுக்குச் சற்கதியை யார் அருள்வார்? பக்திமார்க்கத்தில் மக்கள் என்னை நினைவுசெய்கிறார்கள். பல ரூபங்கள் இருக்கின்றன. இப்பொழுது நீங்கள் நரகவாசிகளிலிருந்து சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் நரகத்தில் பிறப்பு எடுத்திருந்தாலும், சுவர்க்கம் செல்வதற்காக மரணிப்பீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்கே இங்கு வந்திருக்கிறீர்கள். ஒரு பாலம் கட்டப்படுவதற்கு முன், அவர்கள் அத்திவார விழாவை நடத்தி, அதன் பின்பே பாலம் தொடர்ந்தும் கட்டப்படுகின்றது. தந்தை சுவர்க்க ஸ்தாபனையின் ஆரம்ப விழாவை (அத்திவார விழா) முன்னரே நடாத்தி விட்டார். இப்பொழுது ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்குக் காலம் எடுக்கின்றதா? அரசாங்கம் ஒன்றைக் கட்ட ஆரம்பித்தால், அவர்களால் அதனை ஒரு மாதத்துக்குள் கட்டி முடிக்க இயலும். கட்டப்பட்ட வீடுகளை நீங்கள் வெளிநாடுகளில் வாங்க முடியும். சுவர்க்கத்தில் உங்கள் புத்தி ஆழமாகவும், சூட்சுமமானதாகவும், சதோபிரதானாகவும் இருக்கும். விஞ்ஞானிகள் மிகச் சாதுரியமான புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிக விரைவாக விடயங்களைக் கட்டுவார்கள். அங்கு, இரத்தினங்களால் பதிக்கப்பட்ட சுவர்கள் இருக்கும். இந்நாட்களில், அவர்கள் போலியான நகைகளை மிக விரைவாகத் தயாரிக்கிறார்கள். அவை உண்மையானவற்றை விட அதிகளவில் பிரகாசிக்கின்றன. இந்நாட்களில், மிக விரைவாகப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களும் அவர்களிடம் இருக்கின்றன. அங்கு, ஒரு வீட்டைக் கட்டுவதற்கு நீண்டகாலம் எடுக்காது. அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்குக் காலம் எடுக்கின்றது. பொன் நகரமாகிய, துவாரகை கடலின் கீழிருந்து தோன்றும் என்பதல்ல. எனவே, தந்தை கூறுகின்றார்: உண்ணுங்கள், பருகுங்கள், ஆனால் தந்தையை நினைவுசெய்யுங்கள். அதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். வேறு வழிமுறை இல்லை. நீங்கள் பிறவிபிறவியாகக் கங்கையில் நீராடுகிறீர்கள், ஆனால் எவராலும் முக்தியையோ ஜீவன்க்தியையோ அடைய முடியவில்லை. இங்கு, தந்தை நீங்கள் தூய்மையாகுவதற்கான வழிமுறையினைக் காட்டுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் தூய்மையாக்குபவர். நீங்கள் கூவி அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குகின்ற பாபாவே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். நாடகத்தின் இறுதியின்பொழுது, நடிகர்கள் அனைவரும், தயாரிப்பாளரும் மேடையில் தோன்றுகின்றனர்; அவர்;கள் அனைவரும் மேடையில் நிற்கின்றார்கள். இங்கும் அதேபோல் நடைபெறுகின்றது. ஆத்மாக்கள் அனைவரும் கீழே வந்த பின்னர் நீங்கள் திரும்பிச் செல்ல ஆரம்பிப்பீர்கள். இன்னமும் நீங்கள் தயாராகவில்லை. இன்னமும் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை நீங்கள் அடையவில்லை. எனவே எவ்வாறு விநாசம் இடம்பெற முடியும்? புதிய உலகிற்காக உங்களுக்குக் கற்பிக்கவே தந்தை வந்திருக்கிறார். அங்கு, மரணம் இல்லை; நீங்கள் மரணத்தை வெல்கிறீர்கள். உங்களை மரணத்தை வெல்லச் செய்பவர் யார்? மரணங்களுக்கு எல்லாம் மரணமாக இருப்பவர். அவர் பெருந்தொகையானோரைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். நீங்கள் பெருமளவு சந்தோஷத்துடன் திரும்புகின்றீர்கள். தந்தை இப்பொழுது அனைவரின் துன்பத்தையும் அகற்ற வந்துள்ளார். இதனாலேயே மக்கள் அவரின் புகழைப் பாடுகின்றார்கள்: தந்தையாகிய கடவுளே, எங்களைத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள்! எங்களை அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்லுங்கள். எவ்வாறாயினும், தந்தை இப்பொழுது சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லும்பொழுது, விருட்சம் மிகச்சிறிதாக இருக்கும், பின்னர் விரிவாக்கம் இடம்பெறும். இப்பொழுது மற்றைய சமயங்கள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் அந்த ஒரு தர்மம் இல்லை. பெயர், ரூபம், இராச்சியம் போன்ற அனைத்தும் மாறுகின்றன. ஆரம்பத்தில் நீங்கள் இரட்டைக் கிரீடத்தைக் கொண்டிருந்தீர்கள். பின்னர் நீங்கள் ஒற்றைக் கிரீடம் உடையவர்கள் ஆகினீர்கள். சோமநாதர் ஆலயம் கட்டப்பட்டபொழுது, பெருமளவு செல்வம் இருந்தது. அதுவே மிகப்பெரிய ஆலயம். அது கொள்ளையடிக்கப்பட்டது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். ஒவ்வோர் அடியிலும் தந்தையைத் தொடர்ச்சியாக நினைவுசெய்வதனால் நீங்கள் பல மில்லியன்களைச் சேமிப்பீர்கள். தந்தையை நினைவுசெய்வதனால் உங்களால் அதிகளவு வருமானத்தைச் சம்பாதிக்க இயலுகின்றது. எனவே நீங்கள் ஏன் அத்தகைய தந்தையை நினைவுசெய்வதற்கு மறக்கிறீர்கள்? நீங்கள் தந்தையை எந்தளவுக்கு அதிகமாக நினைவுசெய்கிறீர்களோ, எந்தளவுக்கு அதிகமாகச் சேவை செய்கின்றீர்களோ, அந்தளவுக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். பல நல்ல குழந்தைகள் முன்னேறிச் செல்லும்பொழுது, வீழ்கிறார்கள். உங்கள் முகத்தை நீங்கள் அழுக்காக்கினால், சம்பாதித்துள்ள வருமானம் அனைத்தும் இழக்கப்படும். நீங்கள் ஒரு பெரிய அதிர்ஷ்ட இலாபத்தை இழப்பீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இல்லறத்தைப் பராமரிக்கும்பொழுது, உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் வைத்திருங்கள். கவனயீனமானவராகி, தவறு செய்யாதீர்கள். தூய்மையைக் கிரகிப்பதினால், உங்களுக்கும் பிறருக்கும் நன்மையை ஏற்படுத்துங்கள்.2. நினைவு யாத்திரையிலும், இந்தக் கல்வியிலும் வருமானம் சம்பாதிக்கப்படுகிறது. திரான்ஸ் என்பது அலைந்து திரிவது மட்டுமே: அதில் எந்த நன்மையும் இல்லை. எந்தளவிற்குச் சாத்தியமோ, அந்தளவிற்கு விழிப்பாக இருங்கள். தந்தையை நினைவுசெய்து உங்கள் பாவங்களை அழியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து, தந்தையிடமிருந்து சக்தியைப் பெறுவதால், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வைக் காண்பீர்களாக.தீவிரமான சந்தர்ப்ப, சூழ்நிலைகளின் பின்னர் மாத்திரமே முடிவானது வரும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அனைத்து வகையான குழப்பங்களும் இருக்கும்பொழுது, குடும்பத்தில் முரண்பாடு இருக்கும், மனதில் பல பிரச்சனைகள் இருக்கும், இறுதியான ஆபத்து வேளைகளும் இருக்கும். எவ்வாறாயினும், தந்தையின் சகபாடிகளாக இருப்பவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் தந்தையே பொறுப்பாவார். அத்தகைய நேரத்தில், உங்கள் மனதைத் தந்தையுடன் வைத்திருங்கள், உங்களால் தீர்மானத்தை எடுக்கும் சக்தி மூலம் அனைத்தையும் வெற்றிகொள்ள இயலும். ஒரு பற்றற்ற பார்வையாளராகி, தந்தையின் சக்தியைப் பெறுவதால், உங்களால் சகல சூழ்நிலைகளையும் இலகுவில் வெற்றிகொள்ள முடியும்.
சுலோகம்:
இப்பொழுது, சகல ஆதாரங்களையும் ஒருபுறம் வைத்து விட்டு, வீடு திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்.