30.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இராஜரிஷிகள். நீங்கள் ஓர் இராச்சியத்தை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும், அத்துடன், நிச்சயமாகத் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும்.

கேள்வி:
ஒரு மேன்மையான மனிதராகுவதற்கு, நீங்கள் என்ன முயற்சி செய்ய வேண்டும்? எதில் நீங்கள் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும்?

பதில்:
நீங்கள் ஒரு மேன்மையான மனிதர் ஆகவேண்டுமாயின், ஒருபோதும் உங்கள் கல்வியுடன் முகங்; கோணாதீர்கள். சண்டை சச்சரவுகள் எதுவும் கல்வியுடன் தொடர்புபட்டவையல்ல. கற்பவர்கள் பிரபுக்களாக ஆகுவார்கள். எனவே, நீங்கள் எப்பொழுதும் உங்களது முன்னேற்றம் குறித்து அக்கறையாக இருக்க வேண்டும். உங்களது நடத்தையில் நீங்கள் பெரும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் தேவர்களைப் போன்று ஆகவேண்டும் என்பதால் உங்கள் நடத்தை இராஜரீகமானதாக இருக்க வேண்டும். நீங்கள் மிகவும் இனிமையானவர் ஆகவேண்டும். அனைவரும் இனிமையாக உணரக்கூடியதும், எவருக்கும் துன்பம் விளைவிக்காதவையுமான வார்த்தைகள் மாத்திரமே உங்களது உதடுகளிலிருந்து வெளிவரட்டும்.


ஓம் சாந்தி.
தந்தை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துவதுடன், உங்களிடம் கேட்கின்றார்: உங்களது புத்தி எங்கு ஒருமுகப்பட்டிருக்கின்றது? மனிதர்களின் புத்தி சிலவேளைகளில் ஓரிடத்திலும், சிலவேளைகளில் இன்னோரிடத்திலும் அலைபாய்கின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்களது புத்தி அலைபாய்வதை நிறுத்த வேண்டும். உங்களது புத்தியை ஒன்றில் மாத்திரம் ஒருமுகப்படுத்துங்கள். எல்லையற்ற தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். முழு உலகமும் இப்பொழுது தமோபிரதானாக உள்ளதென்பதை ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் தாங்கள் செய்துள்ள முயற்சிக்கேற்ப சதோபிரதானாக இருந்து, இப்பொழுது தமோபிரதானாகிவிட்டனர். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும். எனவே, உங்களது புத்தியைத் தந்தையுடன் தொடர்புபடுத்துங்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். தாங்கள் வீடு திரும்பவேண்டும் என்பதனை வேறு எவருமே அறியமாட்டார்கள். குழந்தைகளே, உங்களது தந்தையாகிய என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள் என்ற வழிகாட்டல்களை வேறு எவருமே பெறுவதில்லை. தந்தை அத்தகைய இலகுவான விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். வேறு எவராலும் இவ்வாறு விளங்கப்படுத்த முடியாது. தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். அவர் யாரில் பிரவேசித்துள்ளாரோ, அவரும் செவிமடுக்கின்றார். தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுவதற்கும், அவ் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்குமான அதிசிறந்த வழிகாட்டல்களைத் தந்தை கொடுக்கின்றார். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருந்தீர்கள். பின்னர் 84 பிறவிகளையெடுத்து, இப்பொழுது சிப்பிகளைப் போன்று ஆகிவிட்டீர்கள். நீங்கள் வைரங்களைப் போன்று இருந்தீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகவேண்டும். பாபா மிக எளிமையான விடயமொன்றை உங்களுக்குக் கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாக்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். சரீரம் திரும்பிச் செல்ல மாட்டாது. நீங்கள் தந்தையுடன் சந்தோஷமாகத் திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் மாத்திரமே நீங்கள் மேன்மையானவர் ஆகுவீர்கள். தூய ஆத்மாக்கள் அசரீரி உலகிற்குச் சென்று, பின்னர் திரும்பும்போது, புதிய சரீரங்களைப் பெறுவார்கள். உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கின்றது. எனவே, நீங்கள் இந்த ஓர் அக்கறையையே கொண்டிருக்க வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். அதில் பெருமளவு நன்மையுள்ளது. மிக நன்றாகக் கற்கின்ற மாணவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். இதுவும் ஒரு கல்வியே. நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் ஒரேவிதமாகவே கற்கின்றீர்கள். தந்தையும் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்கு ஒரேவிதமாகக் கற்பிக்கின்றார். கடந்து செல்கின்ற நேரம் நாடகம் எனப்படுகின்றது. தந்தையினதும், குழந்தைகளினதும் செயற்பாடுகள் நாடகத்திற்கேற்பவே தொடர்கின்றன. தந்தை உங்களுக்கு மிகச்சரியான புத்திமதியைக் கொடுக்கின்றார். குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா, நாங்கள் மீண்டும் மீண்டும் உங்களை மறந்து விடுகின்றோம். அவை மாயையின் புயல்கள். மாயை உங்களது ஒளியை அணைக்கின்றாள். தந்தை சுவாலை என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் சர்வசக்திவான் என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை உங்களுக்குக் கூறுகின்றார். ஞானம் நிறைந்தவராகிய அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை பிரம்மா கூறுகின்றார்: நானும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். தந்தை கூறுவார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன், பிரம்மாவும் இதில் உள்ளடக்கப்படுகின்றார். இதைப் பற்றிக் குழப்பமடைய வேண்டிய அவசியமேயில்லை. இது மிக இலகுவான இராஜயோகம். நீங்கள் இராஜரிஷிகள். தூய ஆத்மாக்கள் ரிஷிகள் என அழைக்கப்படுகின்றனர். உங்களைப் போன்ற ரிஷிகள் வேறு எவருமே இருக்க முடியாது. சரீரமன்றி, ஆத்மாவே ரிஷி என அழைக்கப்படுகின்றார்;. ஓர் ஆத்மா இராஜரிஷியான, ஒரு ரிஷி ஆவார். நீங்கள் எங்கிருந்து உங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள்? தந்தையிடமிருந்தே. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நாங்கள் சிவபாபாவிடமிருந்து எங்களது இராச்சியப் பாக்கியத்தைப் பெறுகின்றோம். தந்தை உங்களுக்கு நினைவூட்டியுள்ளார்: நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள், பின்னர் மறுபிறவி எடுக்கையில் தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள். தேவர்களின் விக்கிரகங்கள் இருக்கின்றன. ஓர் ஒளியானது ஒளியுடன் கலப்பதாக மக்கள் நினைக்கின்றனர். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: எந்தவொரு மனிதரும் ஒளியுடன் இரண்டறக் கலப்பதில்லை. எவராலுமே முக்தியையோ அல்லது ஜீவன்முக்தியையோ அடைய முடியாது. எனவே, நாள் முழுவதும் குழந்தைகளாகிய நீங்கள் இத்தகைய எண்ணங்களை அகத்தே கொண்டிருக்க வேண்டும். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகச் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். யார் உங்களுக்குக் கற்பிக்கின்றார் எனப் பாருங்கள்! அவர்கள் கிருஷ்ணரையும், கிருஷ்ணப் பிரபு என்றே அழைக்கின்றனர். கடவுள் ஒருபோதுமே பிரபு என அழைக்கப்படுவதில்லை. அவர் தந்தையாகிய கடவுள் என்றே அழைக்கப்படுகின்றார். அவர் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள். அவர் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கின்ற, தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என்பது உங்கள் இதயத்தைத் தொடுகின்றது. சத்தியயுகத்தில் வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. இத்தேவர்களின் விக்கிரகங்கள் உள்ளன. அவர்கள் ஆதி சனாதன தேவதேவியர் என அழைக்கப்படுகின்றனர்; அவர்கள் உலகின் அதிபதிகளாக இருந்தனர். அவர்கள் சத்தியயுகத்தவர்கள் எனப்படுகின்றனர். நீங்களோ சங்கம யுகத்தவர்கள். பாபா உங்களைத் தர்மவான்களாக ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் தர்மவான்கள் ஆகுகின்றீர்கள். விகாரம் நிறைந்தவர்கள் அதர்மவான்கள் எனப்படுகின்றனர். ‘அதர்மம்’ என்றால், எந்தவோர் அடியும் சரியானதல்ல என்பதாகும். அத்தேவர்கள் தூய்மையானவர்கள். அவர்கள் தூய்மையின் ஒளியுடன் காட்டப்படுகின்றனர். அவர்கள் சிவாலயத்திலிருந்து கீழிறங்கி, விபச்சார விடுதிக்கு வருகின்றார்கள். ‘தந்தையாகிய சுவர்க்கக் கடவுள்’ எனும் தந்தையின் அறிமுகத்தை மிகத்தெளிவாக நீங்கள் கொடுக்கும்வரை, இங்குள்ள புதியவர்களால் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இரு வார்த்தைகள் உள்ளன: சுவர்க்கம் நரகம், இன்பமும் துன்பமும், சுவர்க்கமும், நரகமும். பாரதத்தில் சந்தோஷமே இருந்தது என்பதையும், இப்பொழுது துன்பமே நிலவுகின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தந்தை வந்து, உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். துன்ப காலம் இப்பொழுது முடிவடையப் போகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷப் பரிசைக் கொண்டு வருகின்றார். அவர் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அதனாலேயே அனைவரும் அவரை வணங்குகின்றனர். சந்நியாசிகள் போன்றோரும் தபஸ்யா செய்கின்றனர். அவர்களும் ஏதோவோர் ஆசையை நிச்சயமாகக் கொண்டிருக்கின்றனர். சத்தியயுகத்தில் அத்தகைய விடயங்கள் எதுவும் கிடையாது. அங்கே வேறு சமயத்தவர் எவருமே இல்லை. இப்பொழுது நீங்கள் புதிய உலகிற்குச் செல்வதற்காக முயற்சி செய்கின்றீர்கள். அது சந்தோஷதாமம் என்பதையும், மற்றையது அமைதிதாமம் என்பதையும், இது துன்பதாமம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். மேன்மையான மனிதர்களாகுவதற்காகவே நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் மிக நன்றாக முயற்சி செய்யவேண்டும். நீங்கள் ஒருபோதும் கல்வியுடன் முகம் கோணக்கூடாது. உங்களால்; ஒருவருடன் ஒத்துப் போக முடியவில்லை எனில், அதற்காகக் கல்வியை நிறுத்தி விடக்கூடாது. சண்டை சச்சரவுகளுக்கு இக்கல்வியுடன் சம்பந்தம் கிடையாது. கற்பவர்கள் பிரபுக்கள் ஆகுவார்கள். நீங்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவீர்களாயின், எவ்வாறு பிரபுக்கள் ஆகுவீர்கள்? நீங்கள் அவ்வாறு செய்யும்போது, உங்களது நடத்தை தமோபிரதான் ஆகுகின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்த முன்னேற்றத்தையிட்டு அக்கறை கொண்டிருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று ஆகவேண்டுமாயின், தந்தையே அவர்களை அவ்வாறு ஆக்கினார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தந்தை கூறுகின்றார்: நீங்களே அந்த இராச்சியத்தை ஆட்சிசெய்தீர்கள். நீங்களே இப்பொழுது மீண்டும் அவ்வாறு ஆகவேண்டும். தந்தை சங்கமயுகத்தில் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் அவ்வாறு ஆகுகின்றீர்கள். கலியுகம் எல்லா நேரங்களிலும் தொடரும் என்றல்ல. கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் வருகின்றது. நிச்சயமாக இச்சக்கரம் தொடர்ந்தும் சுழலும். சத்திய யுகத்தில் சிறிதளவு மக்களே இருந்தனர். எனவே, இப்பொழுதும் நிச்சயமாகச் சிறிதளவு மக்களே மீண்டும் இருக்க வேண்டும். இவ் விடயங்கள் புரிந்துகொள்வதற்கு இலகுவானவை. பாபா உங்களுக்குக் கடந்த காலக் கதையைக் கூறுகின்றார். அது ஒரு குறுங்கதை. உண்மையில், அது நீண்டது, ஆனால் சுருக்கமாகப் புரிந்துகொள்ளக்கூடியது. 84 பிறவிகளின் இரகசியம் உள்ளது. முன்னர், நீங்களும் இதனை அறிந்திருக்கவில்லை. நீங்கள் கற்கின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இது சங்கமயுகத்துக் கல்வி. சக்கரத்தில், நாடகம் இப்பொழுது சுற்றி வந்துவிட்டது. பின்னர் அது சத்தியயுகத்துடன் மீண்டும் ஆரம்பமாகும். இப்பழைய உலகம் மாற வேண்டும். கலியுகத்துக் காடு முடிவடைந்து, பின்னர் சத்தியயுகத்துப் பூந்தோட்டம் உருவாகும். தெய்வீகக் குணங்களைக் கொண்டவர்கள் மலர்கள் எனப்படுகின்றார்கள். அசுர குணத்தைக் கொண்டவர்கள் முட்கள் என அழைக்கப்படுகின்றார்கள். உங்களில் எக்குறைபாடுகளும் இல்லையா என்பதை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். நாங்கள் இப்பொழுது தேவர்களாக ஆகுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதால், நிச்சயமாகத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். தந்தையானவர் தந்தையாகவும், ஆசிரியராகவும் சற்குருவாகவும் வருவதால், நீங்கள் நிச்சயமாக உங்கள் குணாதிசயங்களைச் (உhயசயஉவநச) சீர்திருத்த வேண்டும். மக்கள் கூறுகின்றனர்: அனைவரது குணாதிசயங்களும் சீரழிந்துவிட்டன. எவ்வாறாயினும் குணாதிசயங்கள் என்றால் என்ன என்பதை அவர்களும் அறியார்கள். அத்தேவர்களின் குணாதிசயங்கள் நன்றாக இருந்தன என்பதை நீங்கள் விளங்கப்படுத்தலாம். அவர்கள் ஒருபோதும் எவருக்கும் துன்பம் விளைவித்ததில்லை. ஒருவரது நடத்தை (டிநாயஎழைரச) நன்றாக இருக்கும்போது, அவர்கள் கூறுகின்றனர்: அவர் ஒரு தேவியைப் போன்றவர்; அவரது வார்த்தைகள் மிக இனிமையானவை! தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தேவர்களாக்குகின்றேன். எனவே, நீங்கள் மிக இனிமையானவர்கள் ஆகவேண்டும். தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். ஒருவர் எத்தகையவரோ, அவ்வாறே உங்களையும் ஆக்குவார். நீங்கள் அனைவரும் ஆசிரியர்களாக வேண்டும். ஆசிரியர்களின் குழந்தைகள் ஆசிரியர்களே. நீங்கள் பாண்டவ சேனையினர். அனைவருக்கும் பாதையைக் காண்பிப்பதே வழிகாட்டிகளின் கடமை. நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதுடன், வீட்டில் உங்களது குடும்பத்துடன் வசிக்கவும் வேண்டும். நீங்கள் வீட்டிலும் சேவை செய்யலாம். வருபவர்களுக்குக் கற்பிக்கப்படும். தங்கள் இடத்தில் கீதை பாடசாலையைத் திறந்து, தொடர்ந்தும் பலருக்குச் சேவை செய்கின்ற பலர் இருக்கின்றனர். நீங்கள் இங்கேயே வந்து அமர்ந்திருக்க வேண்டும் என்றில்லை. இது குமாரிகளுக்கு மிக இலகுவானது. நீங்கள் ஒரு சில மாதங்களுக்குச் சுற்றித் திரிந்துவிட்டு, பின்னர் வீடு திரும்பலாம். நீங்கள் உங்களது வீட்டையும், குடும்பத்தையும் துறக்க வேண்டியதில்லை. உங்கள் குடும்பத்தினர் உங்களை அழைக்கும்போது, அங்கே நீங்கள் செல்வதற்குத் தடை செய்யப்படவில்;லை. இதில் இழப்பு அல்லது பலவீனம் என்ற கேள்விக்கே இடமில்லை. உண்மையில், பெருமளவு உற்சாகம் இருக்கவேண்டும்: நானும் இப்பொழுது திறமைசாலி ஆகவேண்டும். நான் எனது குடும்ப அங்கத்தவரை என்னைப் போன்று ஆக்கி, அவர்களை என்னுடன் அழைத்து வருவேன். வீட்டில் வசித்தவாறே சேவை செய்து, மிகவும் திறமைசாலிகள் ஆகுகின்ற பலர் இருக்கின்றனர். தந்தை பிரதான விடயத்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் உங்களுக்கு நன்மை செய்ய வேண்டும். வீட்டில் வசிப்பவர்கள் இங்கே வசிப்பவர்களை விடவும் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும். நீங்கள் வீடு செல்வதற்கு ஒருபோதுமே தடைசெய்யப்படவில்லை. நீங்கள் அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு நன்மை பயக்கின்ற பழக்கத்தை விருத்தி செய்துள்ளவர்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. நீங்கள் சிறந்த ஞானத்தையும், யோகத்தையும் கொண்டிருந்தால், எவராலுமே உங்களை அவமரியாதை செய்ய முடியாது. யோகம் இல்லையெனில், மாயை உங்களை அறைகிறாள். எனவே, நீங்கள் நிச்சயமாக வீட்டில் வாழ்ந்துகொண்டே ஒரு தாமரை மலர் போன்று ஆக வேண்டும். பாபா உங்களுக்குச் சுதந்திரம் அளிக்கின்றார்: நீங்கள் வீட்டிலும் வசிக்கலாம். எவ்வாறு அனைவரும் இங்கு வந்து தங்க முடியும்? எத்தனை பேர் இங்கு வந்தாலும், அத்தனை கட்டடங்கள் அவர்களுக்காகக் கட்டப்பட வேண்டும். முன்னைய கல்பத்தில் நிகழ்ந்தவை தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் நிகழும். குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும். நாடகத்தில் இல்லாமல் எதுவுமே நிகழாது. யுத்தங்கள் இடம்பெறுதல், மக்கள் மரணித்தல் அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. கடந்தவை மீண்டும் நிகழும். நான் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்கு விளங்கப்படுத்திய அதே விடயங்களையே இப்பொழுதும் உங்களுக்கு விளங்கப்படுத்துவேன். மக்கள் என்னதான் நினைத்தாலும், எனக்காக நிச்சயிக்கப்பட்டிருக்கின்ற அதே பாகத்தையே நான் நடிப்பேன். நாடகத்தில் எதுவுமே கூடவோ அல்லது குறையவோ இருக்க முடியாது. முன்னைய கல்பத்தில் கற்றவர்களே மீண்டும் கற்பார்கள். ஒவ்வொருவரதும் செயற்பாடுகளை, அதாவது ஒவ்வொருவரும் எந்தளவிற்குக் கற்கின்றார்கள், என்ன அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதன் காட்சியை நீங்கள் தொடர்ந்தும் காண்பீர்கள். சிறந்த சேவை செய்கின்ற ஒருவர் திடீரென ஒரு விபத்தைச் சந்திப்பாராயின், அவர் ஒரு நல்ல வீட்டில் சென்று பிறவியெடுப்பார்; அவர் மிகவும் சந்தோஷமாக இருப்பார். அவர் எந்தளவிற்கு மற்றவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கின்றாரோ, அந்தளவு சந்தோஷத்தை அவரும் தொடர்ந்து பெறுவார். இவ் வருமானம் ஒருபோதுமே இழக்கப்பட மாட்டாது. வெற்றி இருக்குமிடத்தில் சத்தியயுகத்தில் பிறப்பு இருக்கும். நீங்கள் பலருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திருந்தால், வாயில் தங்கக் கரண்டியைப் பெறுவீர்கள். அதைவிடக் குறைவாயின், வெள்ளியே கிடைக்கும். அதை விடவும் குறைவாயின் செப்பாகும். நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள், இல்லையா? எந்தளவிற்கு நீங்கள் யோகம் செய்கின்றீர்கள்? அரசர்கள், அரசிகள், பிரஜைகள் உள்ளனர்; அனைவரும் உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் நன்றாகக் கற்காமலும், தெய்வீகக் குணங்களைக் கிரகிக்காமலும் இருப்பீர்களாயின், உங்களது அந்தஸ்து குறைக்கப்படும். உங்களது நல்ல, தீய செயல்கள் நிச்சயமாக உங்கள் முன்னிலையில் தோன்றும். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவிற்குச் சேவை செய்கின்றீர்கள் என்பதையும், இப்பொழுது சரீரத்தை நீக்க நேரிட்டால் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதையும் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது கற்று, உங்களைச் சீர்திருத்துகின்றீர்கள். சிலர் சீரழிந்துவிடுகிறார்கள். எனவே, கூறப்படுகின்றது: அது அவர்களது பாக்கியத்தில் இல்லை. பாபா உங்களை மிக மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். பிரபுவின் வீட்டிலிருந்து எவருமே வெறுங்கையுடன் திரும்பிச் செல்லக்கூடாது. பிரபு இப்பொழுது நேரடியே உங்கள் முன்னிலையில் இருக்கின்றார். நீங்கள் ஒருவருக்கு ஒரு சில ஞான வார்த்தைகளைப் பேசினாலும், அவர் நிச்சயமாகப் பிரஜைகளில் ஒருவர் ஆகுவார். தேவ தர்மத்தைச் சார்ந்தவர்கள் இப்பொழுதும்கூட தொடர்ந்தும் வருகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் இப்பொழுது தூய்மையற்றிருப்பதால், தங்களை இந்துக்கள் என அழைக்கின்றனர். பாபாவிடம் உள்ளதைப் போன்றே உங்களது புத்தியில் இந்த ஞானம் இருக்கின்றது. தந்தையே ஞானக்கடலாவார். இப்புவியியலும், வரலாறும் எவ்வாறு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது என்பதை அவர் உங்களுக்குக் கூறுகின்றார். மாணவர்கள் எந்தளவிற்குக் கற்கின்றார்கள் என்பதிலிருந்து, அவர்கள் எத்தனை புள்ளிகளுடன் சித்தியெய்துவார்கள் என்பதனை ஆசிரியர்களும் அறிவார்கள். இதனை ஒவ்வொருவரும் தாங்காகவே அறிவார்கள். சிலர் தெய்வீகக் குணங்களிலும், சிலர் யோகத்திலும், சிலர் ஞானத்திலும் பலவீனமாக இருப்பார்கள். பலவீனமாக இருப்பதனாலேயே அவர்கள் தோல்வியடைகின்றனர். இன்று அவர்கள் ஒன்றில் பலவீனமாக இருந்தால், நாளை அவர்களால் பலசாலிகள் ஆகமுடியாது என்றில்லை; அவர்களால் தொடர்ந்தும் முன்னேறிச் செல்ல முடியும். நீங்கள் ஒவ்வொரு பாடத்திலும் தோல்வி அடைகின்றீர்கள் என்பதையும், இன்னார் இன்னார் உங்களை விடவும் திறமைசாலி என்பதையும், நீங்களே உணர்வதனால், உங்களாலும் கற்றுத் திறமைசாலியாக முடியும். நீங்கள் சரீர உணர்வைக் கொண்டிருப்பீர்களாயின், எதைக் கற்பீர்கள்;? நான் ஓர் ஆத்மா என்பதை உறுதியாக்குங்கள். தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கின்றார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர் உங்களால் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் எந்தளவிற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகிவிட்டீர்கள் என உங்களது நாடியைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை இப்பொழுது பெறுகின்றீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலுமே இராஜயோக ஞானத்தை உங்களுக்குக் கற்பிக்க முடியாது. குழந்தைகளே, தொடர்ந்தும் இதனைக் கற்றிடுங்கள். குழந்தைகள் கேட்கின்றனர்: எங்களது குலத்தில் எத்தனை பிராமணர்கள் உள்ளனர்? நாங்கள் எவ்வாறு கூறமுடியும்? அவர்கள் தொடர்ந்தும் வருவதும், போவதுமாக இருக்கின்றனர். புதியவர்கள் இப்பொழுது தொடர்ந்தும் வெளிப்படுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் குணாதிசயங்களைத் தெய்வீகமானதாக்குங்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, உங்களுக்கும், ஏனைய அனைவருக்கும் நன்மை செய்யுங்கள். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள்.

2. சதோபிரதானாகுவதற்கு, உங்கள் புத்தியை ஒரேயொரு தந்தையுடன் இணைத்திடுங்கள். உங்கள் புத்தியை அலைபாயவிடாதீர்கள். தந்தையைப் போன்று ஓர் ஆசிரியராகி, அனைவருக்கும் பாதையைக் காண்பியுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சந்தோஷப் பொக்கிஷங்களால் நிறைந்திருந்து, சந்தோஷமற்ற ஆத்மாக்களுக்குச் சந்தோஷ தானத்தைக் கொடுக்கின்ற, ஒரு புண்ணியாத்மா ஆகுவீர்களாக.

இந்நேரத்தில் உலகில் ஒவ்வொரு கணத்திலும் துன்பம் உள்ளது, ஆனால் நீங்களோ ஒவ்வொரு கணத்திலும் சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறீர்கள். எனவே சந்தோஷமற்ற ஆத்மாக்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பதே அனைத்திலும் மகத்தான புண்ணியம் ஆகும். சந்தோஷமாக இருப்பதற்கு உலக மக்கள் அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றார்கள், ஆனால் நீங்கள் அழிவற்ற சந்தோஷம் எனும் பொக்கிஷத்தை இலகுவாகப் பெற்றுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் பெற்றுள்ளவற்றைத் தொடர்ந்தும் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதைப் பகிர்ந்து கொள்வது என்றால் அதை அதிகரிப்பது என்று அர்த்தமாகும். உங்களுடன் தொடர்பில் வருபவர்கள் நீங்கள் சந்தோஷத்தைக் கொண்டிருக்கும் வகையில் சில மேன்மையான பேற்றைப் பெற்றுள்ளீர்கள் என்பதை அனுபவம் செய்யட்டும்.

சுலோகம்:
ஓர் அனுபவசாலி ஆத்மா ஒருபொழுதும் எதனாலும் ஏமாற்றப்பட மாட்டார். அத்தகைய ஆத்மா எப்பொழுதும் வெற்றியாளராக இருக்கின்றார்.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தந்தை பிரம்மாவைப் போன்று, உங்கள் ஸ்திதியை ஆட்ட, அசைக்க முடியாததாக ஆக்குவதற்கு, எந்தச் சந்தர்ப்பதிலும் எந்தச் சூழலிலும் ஒவ்வொருவரின் ஆலோசனைக்கும் மரியாதை கொடுங்கள். கருவிகளாக இருப்பவர்கள் அனுபவசாலிகள் ஆதலால், அவருடைய ஆலோசனையைக் கேட்க நேரிட்டால், ஒருபொழுதும் குழப்பம் அடையாதீர்கள். அவர்களுடைய வழிகாட்டல்களில் ஏதேனும் தெளிவாக இல்லையெனில், குழப்பத்திற்குள் வராதீர்கள். நீங்கள் அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வீர்கள் என அவர்களிடம் மென்மையாகக் கூறுங்கள், அப்பொழுது உங்கள் ஸ்திதி நிலையானதாகவும், உறதியாகவும், ஆட்ட ஆசைக்க முடியாததாகவும் இருக்கும்.