06.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழும் போதும், நீங்கள் எதனாலும் கவரப்படாத அத்தகைய நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுங்கள். உங்களுக்கு எதுவுமே உரியதல்ல என்ற அத்தகைய ஆண்டிகள் ஆகுங்கள்.
கேள்வி:
உங்கள் முயற்சியின் மூலம் குழந்தைகளாகிய உங்களின் இலக்கு என்ன?
8பதில்:
நீங்கள் மரணிக்கும் போது, உலகமும் உங்களுக்கு மரணிக்கிறது. இதுவே உங்கள் இலக்காகும். சரீரத்துடனான பற்றுக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் எதனையும் நினைவு செய்யாத அத்தகைய ஆண்டிகள் ஆகுங்கள், ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரமற்றவராகி வீடு திரும்ப வேண்டும். இத்தகைய முயற்சி செய்பவர்கள் மாத்திரமே ஆண்டிகளிலிருந்து இளவரசர்களாக மாறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்களே செல்வந்தரிலிருந்து ஏழையாகவும், ஏழையிலிருந்து செல்வந்தராகவும் ஆகுகிறீர்கள். நீங்கள் செல்வந்தராக இருக்கும் போது எவருமே ஏழையாக இருக்கமாட்டார்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய உங்களிடம் தந்தை வினவுகிறார்: ஆத்மாவா அல்லது சரீரமா செவிமடுக்கிறார்? (ஆத்மா). ஓவ்வொரு ஆத்மாவும் நிச்சயமாகச் சரீரத்தினூடாகவே செவிமடுக்கின்றார். குழந்தைகள் எழுதுகிறார்கள்: இன்ன, இன்னாரின் ஆத்மா பாப்தாதாவை நினைவு செய்கின்றார். இன்ன இன்னாரின் ஆத்மா இன்று இன்ன இடத்திற்குச் செல்கிறார். 'நான் ஓர் ஆத்மா" என்பது உங்களுக்குள் பதிந்துவிட்டதைப் போன்றுள்ளது, ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும். நீங்கள் எங்கு பார்த்தாலும், அங்கே ஓர் ஆத்மாவும் ஒரு சரீரமும் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் இவரினுள் (பிரம்மா) இரு ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆத்மா என அழைக்கப்படுகிறார் மற்றையவர் பரமாத்மா என அழைக்கப்படுகிறார். பரமாத்மாவே கூறுகிறார்: இந்த சரீரத்தில் இவரின் சொந்த ஆத்மாவும் இருக்கின்றார். நான் இவரின் சரீரத்தினுள் பிரவேசிக்கிறேன். நான் அவரினுள் பிரவேசிக்கிறேன். ஓர் ஆத்மாவினால் ஒரு சரீரமின்றி இருக்க முடியாது. இப்பொழுது தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதும் போது நீங்கள் தந்தையை நினைவு செய்வீர்கள்;;;;, நீங்கள் தூய்மையாகி, அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் எந்தளவு தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டு;கிறீர்களோ, அத்துடன் நீங்கள் சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவராகுவதுடன், மற்றவர்களையும் அவ்வாறு ஆக்குகின்றீர்களோ அதற்கேற்பவே நீங்கள் கோருகின்ற அந்தஸ்தும் உயர்ந்தாகவே இருக்கும்;. நீங்கள் இதையிட்டுக் குழப்பமடைந்தால், நீங்கள் வினவலாம். நான் ஓர் ஆத்மா என்பது நிச்சயம் பிராமணர்களாகியுள்ள குழந்தைகளிடம் மாத்திரமே தந்தை பேசுகின்றார். அவர் வேறு எவருக்கும் கூறுவதில்லை. அவர் தனது குழந்தைகளை மாத்திரமே விரும்புகிறார். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைகளையே விரும்புகிறார். அவர்கள் மற்றவர்களை விரும்பினாலும், அவர்களுடைய புத்தி அவர்கள் தங்களுடைய குழந்தைகள் அல்ல என்பதில,; விழிப்புடன் இருக்கின்றது. நான் குழந்தைகளாகிய உங்களுடன் மாத்திரமே பேசுகின்றேன், ஏனெனில் குழந்தைகளாகிய உங்களுக்கே நான் கற்பிக்க வேண்டும். பின்னர் மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டியது உங்களுடைய கடமையாகும். சிலர் உடனே புரிந்து கொள்கிறார்களாயினும், ஏனையவர்கள் சிறிதளவே புரிந்துகொண்டு பின்னால் சென்றுவிடுகிறார்கள். இங்கு பெருமளவு வளர்ச்சி ஏற்படுவதை அவர்கள் பார்க்கும் போது 'இவர்களிடம் என்ன உள்ளதெனச் சென்று பார்ப்போம்" என்று அவர்கள் வருவார்கள். 'என்னை நினைவுசெய்யுங்கள்" எனத் தந்தை, ஆத்மாக்கள் அனைவருக்கும் கூறுகிறார் என்பதை விளங்கப்படுத்துங்கள். தந்தை மாத்திரமே ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மையாக்குகிறார். அவர் கூறுகிறார்: என்தைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். என்மீது கலப்படமற்ற நினைவைக் கொண்டிருங்கள். அப்பொழுதே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகுவீர்கள். நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். என்னுடைய நினைவின் மூலமே ஆத்மாக்கள் தூய்மையாகுவார்கள். இதனாலேயே அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். தந்தை மாத்திரமே தூய்மையற்ற இராச்சியத்தை தூய இராச்சியமாக மாற்றி, உங்களை விடுதலை செய்கின்றார். அவர் உங்களை எங்கு அழைத்துச் செல்கின்றார்? சாந்தி தாமத்திற்கும் பின்னர் சந்தோஷ தாமத்திற்கும். தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். 84 பிறவிகளின் சக்கரத்தை விளங்கப்படுத்துவது இலகுவானது. நீங்கள் படங்களைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இதனாலேயே பாபா தொடர்ந்தும் கூறுகிறார்: நூதனசாலைகளைக் கோலாகலமாகத் திறவுங்கள். பின்னர், அக் கோலாகலம் மக்களைக் கவரும். அனேகமானோர் வருவார்கள். அவர்களிடம் கூறுங்கள்: தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் நாங்கள் இவ்வாறு ஆகுகின்றோம். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். நீங்கள் நிச்சயமாக ‘பட்ஜை’ அணிய வேண்டும். நீங்கள் ஆண்டிகளிலிருந்து இளவரசர்களாக மாறுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முதலில், நீங்கள் கிருஷ்ணராக ஆகுவீர்கள். நீங்கள் கிருஷ்ணர் போன்று ஆகும்வரை, உங்களால் நாராயணன் போன்று ஆக முடியாது. நீங்கள் ஒரு குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து வரும்போதே நீங்கள் 'நாராயணன்" என்ற பெயரைப் பெறுவீர்கள். இரண்டு வடிவங்களும் இதில் (பட்ஜ்) உள்ளது. நீங்கள் இவ்வாறு ஆகுகின்றீர்கள். நீங்கள் அனைவரும் இப்பொழுது ஆண்டிகளாக இருக்கின்றீர்கள். இந்த பிரம்ம குமாரர்கள், குமாரிகளும் ஆண்டிகளே. அவர்களிடம் எதுவுமில்லை. ஆண்டிகளாக இருப்பது என்பதன் அர்த்தம் எதுவுமற்றவராக இருப்பதாகும். நாங்கள் சிலரை ஆண்டிகள் என அழைப்பதில்லை. இந்த பாபா அனைவரிலும் மிகப் பெரிய ஆண்டி ஆவார். நீங்கள் இங்கு முழுமையான ஆண்டிகளாக வேண்டும். வீட்டில் வாழும் போதும், உங்கள் கவர்ச்சிகள் அனைத்தையும் துண்டிக்க வேண்டும். நாடகத்திற்கு ஏற்ப, நீங்கள் உங்கள் கவர்ச்சி;கள் அனைத்தையும் துண்டித்து விட்டீர்கள். தங்கள் புத்தியில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் மாத்திரமே, அவர்களிடமிருந்த அனைத்தையும் பாhபாவிடம் கொடுத்து விட்டதை அறிந்து கொள்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ஓ கடவுளே! நீங்கள் கொடுத்தவை அனைத்தும் உங்களுடையதே, என்னுடையதல்ல. அது பக்தி மார்க்கம். அந்நேரத்தில், பாபா தூரவே இருந்தார். பாபா இப்பொழுது மிக அண்மையில் உள்ளார். அவர் உங்கள்; முன்னால் இருக்கும் போது, நீங்கள் அவருக்குரியவர்களாக வேண்டும். 'பாபா!" என நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் பாபாவின் சரீரத்தைப் பார்க்க வேண்டியதில்லை. உங்கள் புத்தி மேலே செல்கின்றது. இது பாபா கடனாக எடுத்துள்ள சரீரமாக இருந்தாலும், நீங்கள் சிவபாபாவுடனேயே பேசுகின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இது அவரால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இரதமாகும். இது அவருக்குரியது அல்ல. வாடகைக்கு எடுப்பவர் எவ்வளவு பெரியவரோ அதற்கேற்பவே வாடகையும் அதிகமாகக் கிடைக்கும். ஓர் அரசருக்குக் கட்டடம் தேவைப்படுமாயின், சொந்தக்காரர் 1000 ரூபாவுக்கு பதிலாக 4000 ரூபா கேட்பார். ஏனெனில் அவர் செல்வந்தர் என்பது அவருக்குத் தெரியும். தங்களிடமிருந்து அதிக பணம் அறவிடப்படுவதாக அரசர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள். அவர்கள் பணத்தைப் பற்றி அக்கறைப்படுவதுமில்லை. அவர்கள் தாமே எவருடனும் பேசுவதில்லை (பணத்தைப் பற்றி). அவர்களுடைய பிரத்தியேக காரியதரிசிகளே அதைப்பற்றிப் பேசுவார்கள். இப்பொழுது, இலஞ்சமின்றி எக்காரியமும் நடைபெறுவதில்லை. பாபா மிகவும் அனுபவசாலி. அவர்கள் மிகவும் இராஜரீகமானவர்கள். அவர்கள் விரும்பியதை தெரிவு செய்தவுடன் தங்களுடைய காரியதரிசியை அதனை விலைபேசி எடுத்துவருமாறு கூறுவார்கள். கடைக்காரர் சக்கரவர்த்திக்கும் சக்கரவர்த்தினிக்கும் சகல பொருட்களையும் காட்சிப்படுத்தி வைத்திருப்பார். அவர்கள் இருவரும் தங்களுக்கு விருப்பமானவற்றை கண்ணால் சாடை காட்டுவார்கள். காரியதரிசி கடைக்காரரிடம் விலைபேசுவதுடன் தனது தரகுப் பணத்தையும் எடுத்துக் கொள்வார். சில அரசர்கள் பணத்தையும் எடுத்துச் செல்வார்கள், காரியதரிசியிடம் கடைக்காரருக்கு பணத்தைக் கொடுக்குமாறு பணிப்பார்கள். பாபா அனைவருடனும் தொடர்பைக் கொண்டிருந்தவர். அவர்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். அரசர்கள் தனாதிகாரிகளை வைத்திருப்பதைப் போன்று சிவபாபாவும் தனாதிகாரியை வைத்திருக்கிறார்: அவர் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர். பாபாவுக்கு இவற்றில் எவ்விதப் பற்றுமில்லை. இவருக்கு இவருடைய பணத்தில் எவ்விதப் பற்றுமில்லை, இவர் அதனை சிவபாபாவுக்கு கொடுத்துவிட்டார், எனவே சிவபாபாவின் செல்வத்தில் இவர் எவ்வாறு பற்றைக் கொண்டிருக்க முடியும்? இவர் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர். இக்காலத்தில், பெருமளவு செல்வத்தைக் கொண்டிருப்பவர்களை அரசாங்கம் விசாரணை செய்கிறது. மக்கள் வெளிநாட்டிலிருந்து வரும் போது, அவர்களை மிக அவதானமாக ஆராய்கிறார்கள். நீங்கள் எவ்வாறு ஆண்டிகளாக ஆகவேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். நீங்கள் எதைப்பற்றியும் நினைவு செய்யக் கூடாது. ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரமற்றவர்களாக வேண்டும். இந்தச் சரீரத்தையும் உங்களுக்குரியதெனக் கருதாதீர்கள். எதுவும் என்னுடையதாக இருக்கக் கூடாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் எவ்வாறு ஆண்டிகள் ஆகவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். சரீரத்துடனான பற்றுக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் மரணிக்கும் போது, உலகமும் உங்களுக்கு மரணிக்கிறது. இதுவே உங்கள் இலக்காகும். பாபா கூறுவதெல்லாம் சரியென்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். சிவபாபாவுக்கு நீங்கள் எதனைக் கொடுக்கிறீர்களோ, அதன் பலனை நீங்கள் உங்கள் அடுத்த பிறவியில் பெறுவீர்கள். இதனாலேயே, கடவுள் இவை அனைத்தையும் கொடுத்தார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் உங்கள் முன்னைய பிறவியில் நல்ல செயல்களைச் செய்ததால், நீங்கள் அதற்கான பலனைப் பெற்றீர்கள். சிவபாபா மற்றவர்களுடைய எதனையும் வைத்திருப்பதில்லை. மக்கள் அரசர்களுக்கும், நிலச்சொந்தக்காரர்களுக்கும் பரிசுகளைக் கொடுக்கிறார்கள். சிலர் அந்தப் பரிசுகளை ஏற்றுக்கொள்கிறார்கள், சிலர் ஏற்பதில்லை. அங்கு, நீங்கள் தான தர்மங்களையோ அல்லது புண்ணியங்களையோ செய்வதில்லை. ஏனெனில், அனைவரும் ஏராளமான செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள், எனவே நீங்கள் யாருக்குத் தானமளிப்பிர்கள்? அங்கு ஏழைகளே இருப்பதில்லை. நீங்கள் செல்வந்தர்களிலிருந்து ஏழைகளாகவும், ஏழைகளிலிருந்து செல்வந்தர்களாகவும் ஆகுகிறீர்கள். மக்கள் கடவுளிடம் கேட்கிறார்கள்: இவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுங்கள்! கருணை காட்டுங்கள்! இதனைச் செய்யுங்கள்!. முன்னர், மக்கள் சிவபாபாவிடம் மாத்திரமே கேட்டார்கள். பின்னர், அவர்கள் கலப்படமுடையவர்களாக ஆகியதால் அனைவருக்கும் முன்னால் சென்று 'எங்களுடைய புத்தியை நிரப்புங்கள்!" என்று கூறுகிறார்கள். அவர்கள் அத்தகைய கல்லுப்புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் கல்லுப் புத்தியுடையவர்களை தெய்வீகப் புத்தியுடையவர்களாக மாற்றுகிறாரென அவர்கள் கூறுகிறார்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நினைவு கூரப்படுகிறது: நீங்கள் அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமாயின், கோபிவல்லாவின் (கோப கோபியரின் தந்தை) கோபியர் கோபிகைகளிடம் வினவுங்கள். ஒருவர் அதிகளவு நன்மையடையும் போது, அவர் மிகச் சந்தோஷமடைகிறார். எனவே குழந்தைகளாகிய நீங்களும் மிகச் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் 100வீத சந்தோஷத்தைக் கொண்டிருந்தீர்கள் பின்னர் அது தொடர்ச்சியாக குறைவடைந்தது. இப்பொழுது உங்களிடம் எதுவுமில்லை. முதலில், நீங்கள் எல்லையற்ற இராச்சியத்தைக் கொண்டிருந்தீர்கள். பின்னர் தற்காலிகமாக, எல்லைக்குட்பட்ட இராச்சியமே இருக்கிறது. பிர்லாவிடம் எவ்வளவு செல்வம் உள்ளதெனப் பாருங்கள்! அவர் தொடர்ந்து ஆலயங்களைக் கட்டினார். அதிலிருந்து எதுவுமே பெறப்படவில்லை. அவர் ஏழைகளுக்கு எதுவும் கொடுப்பதில்லை. அவர் மக்கள் சென்று தலைவணங்குவதற்கு ஆலயங்களைக் கட்டினார். ஆம், ஒருவர் ஏழைகளுக்கு தானம் செய்வாராயின், அவர் அதற்கான பலனைத் திரும்பப் பெறுவார். அனேக மக்கள் சென்று ஓய்வு எடுப்பதற்கான தர்மசாலையை ஒருவர் கட்டுவாராயின் பின்னர், அவருடைய அடுத்த பிறவியில், அவர் தற்காலிகமான சந்தோஷத்தைப் பெறுவார். ஒருவர் வைத்தியசாலையைக் கட்டுவாராயின், அவரும் ஒரு பிறவிக்குத் தற்காலிகமான சந்தோஷத்தைப் பெறுவார். எனவே, எல்லையற்ற தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இந்த அதி மங்களகரமான சங்கமயுகத்திற்கு பெருமளவு புகழ் உள்ளது. நீங்கள் அதியுயர்ந்த கோட்பாடுகளைப் பின்பற்றும் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதுடன் நீங்கள் பெருமளவு புகழப்படுகிறீர்கள். கடவுள் வரும்போது அவர் பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே கற்பிக்கிறார். அவர் மாத்திரமே ஞானக் கடல். அவரே இந்த முழு மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவர் முழு நாடகத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியினது இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் உங்களுக்கு என்ன கற்பித்தார் என மக்கள் உங்களிடம் வினவும்போது அவர்களிடம் கேளுங்கள்: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசராக்குகின்றேன் என்று கடவுள் கீதையில் கூறியிருப்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? நீங்;கள் இதன் அர்த்தத்தை இந்நேரத்தில் புரிந்துகொள்கிறீர்கள். தூய்மையற்ற அரசர்கள் தூய்மையான அரசர்களை வணங்குகிறார்கள் இதனாலேயே தந்தை கூறுகிறார்: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசராக்குகிறேன். இந்த இலக்ஷ்மியும் நாராயணரும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். திரேதாயுகத்திலும், கலியுகத்திலும், அனைவரும் சுவர்க்கத்தின் தேவர்களைத் தலை வணங்கி வழிபட்டார்கள். நீங்கள் இவற்றை இந்நேரத்தில் புரிந்துகொள்கிறீர்கள். பக்தர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சமயநூல்களிலுள்ள கதைகளை கற்;பதுடன் செவிமடுத்தும் கொள்கிறார்கள். தந்தை வினவுகிறார்: அரைக் கல்பமாக நீங்கள் கற்று, செவிமடுத்த கீதையிலிருந்து ஏதாவது பேற்றை அனுபவம் செய்தீர்களா? நீங்கள் அதிலிருந்து எந்த நிறைவையும் பெறவில்லை. இப்பொழுது நீங்கள் நிறைவடைந்திருக்கிறீர்கள். இந்தப் பாகம் ஒருமுறையே நடிக்கப்படுகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். கடவுளே கூறுகிறார்: நான் இந்தச் சரீரத்தினுள் பிரவேசிக்கிறேன். தந்தை இவரினூடாகப் பேசுகிறார், எனவே அவர் நிச்சயமாக இவரினுள் பிரவேசிப்பார். மேலிருந்து அவர் வழிகாட்டல்களைக் கொடுப்பாரா? அவர் கூறுகிறார்: நான் நேரடியாகவே இங்கு வந்துள்ளேன். இப்பொழுது நீங்கள் இதனைச் செவிமடுக்கிறீர்கள். இந்த பிரம்மாவும் எதனையும் அறிந்திருக்கவில்லையாயினும், இப்பொழுது அவரும் தொடர்ந்தும் புரிந்துகொள்கிறார். எவ்வாறாயினும், கங்கை நீரினால் உங்களைத் தூய்மையாக்க முடியாது. இது ஞானத்திற்கான விடயமாகும். தந்தை உங்களுக்கு முன்னால் நேரடியாகவே அமர்ந்திருக்கிறார், எனவே உங்களுடைய புத்தி மேலே செல்ல வேண்டியதில்லை. இது அவருடைய இரதம். பாபா இவரைச் சப்பாத்து என்றும் கொள்கலன் என்றும் அழைக்கிறார். அவர் இக்கொள்கலனி;லுள்ள வைரம் ஆவார். அவர் முதற்;தரமானவர். அவர் பொன்னாலான கொள்கலனில் வைக்கப்பட வேண்டியவர். அவர் ஒரு தங்கயுகக் கொள்கலனை உருவாக்குகிறார். பாபா கூறுகிறார்: ஆடைகளில் உள்ள அழுக்கு, சலவைசெய்பவர் அதனை அடிக்கும் போது நீங்கிவிடுகிறது. இது மாயாஜாலம் என அழைக்கப்படுகிறது. இது மாயாஜால மந்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த மாயாஜால மந்திரத்தினால் நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெறுகிறீர்கள், இதனாலேயே அவரும் 'மந்திரவாதி" என அழைக்கப்படுகிறார். நீங்கள் ஒரு விநாடியில் இவ்வாறு ஆகுவீர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது இந்த விடயங்களை நடைமுறை ரீதியாகவே செவிமடுக்கிறீர்கள். முன்பு, நீங்கள் சத்திய நாராயணரின் கதையைச் செவிமடுக்கும்போது அதனைப் புரிந்துகொண்டீர்களா? அக்காலத்தில், கதையைச் செவிமடுக்கும் பொழுது, நீங்கள் வெளிநாடுளையும், நீராவிக்கப்பல் போன்றவற்றையுமே நினைவு செய்தீர்கள். மக்கள் சத்திய நாராயணரின் கதையைச் செவிமடுத்த பின்னரே அவர்களுடைய பயணங்களை மேற்கொண்டாலும், பின்னர் அவர்கள் திரும்புகிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் இந்த அழுக்கான உலகிற்கு மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. பாரதம் அமரத்துவ பூமியாக அதாவது தேவர்களின் இராச்சியமான சுவர்க்கமாக இருந்தது. இந்த இலக்ஷ்மியும் நாராயணரும் உலக அதிபதிகளாக இருந்தார்கள், அவர்களுடைய இராச்சியத்தில் தூய்மை, அமைதி, சந்தோஷம் என்பன இருந்தன. உலகமும் இதையே வேண்டுகிறது: உலகில் அமைதி நிலவவேண்டும். அனைவரும் ஐக்கியமாகி ஒன்றாக வேண்டும். எவ்வாறு அனைத்துச் சமயங்களும் ஐக்கியமாகி ஒன்றாக முடியும்? ஒவ்வொருவரின் சமயமும், ஒவ்வொருவரின் முகச்சாயலும் வேறுபட்டது, எனவே எவ்வாறு அவர்கள் ஒன்றாக முடியும்? அதுவே சாந்திதாமமும், சந்தோஷ தாமமும் ஆகும். அங்கு ஒரு தர்மமும் ஓர் இராச்சியமுமே உள்ளது. முரண்பாடுகள் ஏற்படும் வகையில் அங்கு வேறு எந்தச் சமயங்களும் இல்லை. அதுவே உலகில் அமைதி நிலவுகிறது என அழைக்கப்படுகிறது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். அனைத்துக் குழந்தைகளும் ஒரே மாதிரிக் கற்பதில்லை, அது வரிசைக்கிரமமானதே என்பது உங்களுக்குத் தெரியும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. குழந்தைகள் மிகவும் விவேகிகள் ஆக்கப்படுகிறார்கள்! இது இறை பல்கழைக்கழகம். பக்தர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் 'கடவுள் பேசுகிறார்" என்பதைப் பலமுறை கேட்டிருக்;கிறார்கள் ஏனெனில் கீதை பாரத மக்களின் சமய நூல். கீதைக்கு எல்லையற்ற புகழ் உள்ளது. கீதையே சமய நூல்கள் அனைத்தினதும் இரத்தினம் ஆகும்.கீதையே சமயநூல்கள் அனைத்திலும் பார்க்க அதி மேலானதும் ஆகும். அனைத்து சமயநூல்களினதும் இரத்தினம் என்றால் அதி மேன்மையானது என்பதாகும். தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவரும் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாகிய ஒரேயொரு கடவுளே ஆவார். பாரத மக்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் புரிந்துகொள்ளாமலேயே அனைவரும் சகோதரர்கள் எனக் கூறுகிறார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: நாங்கள் சகோதரர்கள். நாங்கள் சாந்திதாம வாசிகள். எங்கள் பாகத்தை இங்கு நடிக்கும் போதும், நாங்கள் எங்கள் தந்தையையும் வீட்டையும் மறந்துவிடுகிறோம். பாரதத்திற்கு முழு உலக இராச்சியத்தைக் கொடுத்த தந்தையை அனைவரும் மறந்துவிடுகிறோம். தந்தையே இந்த இரகசியங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதற்கு, 'இதுவே கடவுள் உங்களுக்கு கற்பித்து, அதன் மூலம் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர் ஆக்குகின்ற அதி மங்களகரமான சங்கமயுகம்" என்ற விழிப்புணர்வைக் கொண்டிருங்கள். நாங்கள் இப்பொழுது நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதிபற்றிய ஞானத்தைக் கொண்டிருக்கிறோம்.2. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆதலால், உங்கள் சரீரத்தைப் பொறுத்த வரையிலும் முழுமையான ஆண்டிகள் ஆகுங்கள். உங்கள் சரீரத்தை மறந்து, உங்களை ஒரு சரீரமற்ற ஆத்மாவாகக் கருதுங்கள்.
ஆசீர்வாதம்:
ஆசீர்வாதம்: தந்தையைப் போன்று கருணை நிறைந்தவராகி, அனைவரையும் மன்னித்து, அனைவர் மீதும் அன்பு செலுத்துவதன் மூலம் மாஸ்ரர் அருள்பவர் ஆகுவீர்களாக.தந்தை கருணை நிறைந்தவர் எனக்கூறப்படுவது போன்று, குழந்தைகளாகிய நீங்களும் மாஸ்ரர் கருணை நிறைந்தவர். கருணை நிறைந்தவர்களால் மாத்திரமே மற்றவர்களுக்கு நன்மை அளிப்பதுடன் தங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களையும் மன்னித்து விடுவார்கள். அவர்கள் மாஸ்ரர் அன்புக்கடல்கள். அவர்களிடம் அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை. இந்நேரத்தில் செல்வத்திலும் பார்க்க அன்பிற்கே அதிக தேவை உள்ளது. ஆகவே மாஸ்ரர் அருள்பவராகி தொடர்ந்தும் அனைவருக்கும் அன்பைக் கொடுங்கள். எவரையும் வெறுங்கையுடன் அனுப்பாதீர்கள்.
சுலோகம்:
நீங்கள் தீவிர முயற்சியாளராக விரும்பினால், எங்கு ஆசை உள்ளதோ அங்கு நீங்கள் நிச்சயமாக ஒரு வழியைக் கண்டுபிடிப்பீர்கள்.