17.11.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli    09.03.85     Om Shanti     Madhuban


பிராமண வாழ்க்கையில் தந்தைக்கும் சேவைக்குமான அன்பே வாழ்க்கைத் தானம் ஆகும்.


இன்று, குழந்தைகளான உங்கள் அனைவரினதும் முயற்சிக்கான ஆழ்ந்த அன்பை பாப்தாதா பார்த்தார். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்த தைரியத்தினதும் ஊக்கம் மற்றும் உற்சாகத்தினதும் அடிப்படையில் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். அனைவருக்கும் தைரியம் உள்ளது. அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு மேன்மையான எண்ணம் உள்ளது: நான் நிச்சயமாக நெருக்கமான இரத்தினமாக, கண்ணின் மணியாக ஆகவேண்டும். நான் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து, இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரால் நேசிக்கப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் சம்பூரணம் ஆகும் இலக்கும் உள்ளது. குழந்தைகள் அனைவரின் இதயங்களிலும் எழும் ஒலியானது ஒன்றே: அன்பிற்குப் பிரதிபலனாக, நாங்கள் சமமானவர்களாகவும் சம்பூரணமானவர்களாகவும் ஆகவேண்டும். இந்த இலக்கிற்கேற்ப, நீங்கள் அனைவரும் வெற்றிகரமாக முன்னேறுகிறீர்கள். உங்களில் எவரையாவது, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், உங்கள் அனைவரிடமிருந்தும் உற்சாகமான சத்தம் வெளிப்படுகிறது: நான் நிச்சயமாக சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகவேண்டும். அனைவரின் மேன்மையான ஊக்கத்தையும் உற்சாகத்தையும், அவர்களின் மேன்மையான இலக்கையும் பார்க்கையில் பாப்தாதா களிப்படைகிறார். அவர் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும், ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பதற்காகவும் ஒரு வழிகாட்டலைப் பின்பற்றுவதற்காகவும், ஒரு வீட்டிற்கும் ஓர் இராச்சியத்திற்கும் செல்கின்ற ஓர் இலக்குடனும் ஒரு தந்தையுடன் ஒரு வழிகாட்டலுடன் முன்னேறுவதற்கு அல்லது பறப்பதற்கு நன்றிகளைத் தெரிவிக்கிறார். ஒரேயொரு தந்தையும் பல தகுதிவாய்ந்த, யோகி குழந்தைகளும்! நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரை விட அதிகளவு சிறப்பியல்புகளுடன் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். கல்பம் முழுவதிலும், தமது ஊக்கத்திலும் உற்சாகத்திலும் ஒருபோதும் குறையாத தந்தையோ அல்லது குழந்தைகளோ ஒருபோதும் இருக்க மாட்டார்கள். இது வேறெந்த வேளையிலும் சாத்தியம் ஆகாது. இதனாலேயே, பாப்தாதா இத்தகைய குழந்தைகளையிட்டுப் பெருமைப்படுகிறார். குழந்தைகளும் இத்தகைய தந்தையையிட்டுப் பெருமைப்படுகிறார்கள். எங்கு நோக்கினாலும், உங்கள் அனைவருக்கும் உங்களின் இதயங்களில் விசேடமான ஒலியே உள்ளது: பாபாவும் சேவையும். எந்தளவிற்கு நீங்கள் தந்தையை விரும்புகிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சேவையையும் விரும்புகிறீர்கள். ஒவ்வொருவரின் பிராமண வாழ்க்கையிலும், இரண்டிற்குமான அன்பே வாழ்க்கைத் தானம் ஆகும். அவற்றில் சதா மும்முரமாக இருப்பதன் அடிப்படையில் நீங்கள் மாயையை வென்றவர் ஆகுகிறீர்கள்.

குழந்தைகள் அனைவரினதும் சேவைக்கான ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த திட்டங்கள் அனைத்தும் எங்கும் இருந்து பாப்தாதாவை வந்தடைகின்றன. திட்டங்கள் அனைத்தும் அனைத்திலும் சிறப்பானவை. நாடகத்தின்படி, ஆரம்பத்தில் இருந்து அதிகளவு விரிவாக்கத்திற்காக நீங்கள் பயன்படுத்திய வழிமுறை, அனைத்திலும் சிறந்தது எனப்படுகிறது. பிராமணர்கள் வெற்றி இரத்தினங்களாக ஆகுவதற்கான பல வருட சேவைகள் இப்போது முடிந்துவிட்டன. நீங்கள் இப்போது பொன்விழாவை அடைந்துள்ளீர்கள். நீங்கள் ஏன் பொன்விழாவைக் கொண்டாடுகிறீர்கள்? நீங்கள் உலக வழக்கப்படி அதைக் கொண்டாடுகிறீர்களா? அல்லது, காலத்திற்கேற்ப, உலகிற்குத் துரித கதியில் செய்தியைக் கொடுக்கும் உற்சாகத்துடன் அதைக் கொண்டாடுகிறீர்களா? தூங்கும் ஆத்மாக்களை உரத்த சத்தத்தினால் விழித்தெழச் செய்வதற்கான வசதிகளை நீங்கள் எங்கும் உருவாக்குகிறீர்கள். அவர்கள் எங்கு கேட்டாலும், எங்கு பார்த்தாலும், இந்த ஒரு சத்தம் எங்கும் எதிரொலிக்க வேண்டும்: காலத்திற்கேற்ப, நாங்கள் இப்போது வரவிருக்கும் அழகிய யுகமான, சத்தியயுகத்தின், அழகிய காலப்பகுதியின் நல்ல செய்திகளுக்கான அழகிய செய்தியைப் பெறுகிறோம். இந்தப் பொன் விழாவினூடாக, வரவிருக்கும் சத்தியயுகத்தின் விசேட அறிக்கையை அல்லது செய்தியைக் கொடுப்பதற்கான ஆயத்தங்களை நீங்கள் செய்கிறீர்கள். சத்தியயுகம் வரவுள்ளது என்ற அலையின் ஒலி எங்கும் இப்போது பரவ வேண்டும். இருளின் பின்னர் காலைக் கதிரவன் தோன்றுவதைப் போன்ற காட்சிகள் எங்கும் தோன்ற வேண்டும். காலைச் சூரியன் எங்கும் ஒளியின் நல்ல செய்திகளைப் பரப்புகிறது. நீங்கள் இருளை மறந்து, ஒளிக்குள் வந்துள்ளீர்கள். எல்லா வேளையும் துன்பமும் அமைதியின்மையும் நிறைந்த செய்திகளைக் கேட்பதனால், உலகிலுள்ள ஆத்மாக்கள் விநாசத்தைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள். அத்துடன் மனவிரக்தி அடைந்து நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இந்தப் பொன்விழாவில், உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு, தூய நம்பிக்கைச் சூரியனின் அனுபவத்தைக் கொடுங்கள். விநாசத்தின் அலை இருப்பதைப் போன்று, சத்தியயுக உலக ஸ்தாபனையின் நல்ல செய்தியின் அலைகளை எங்கும் பரப்புங்கள். இந்த நம்பிக்கை நட்சத்திரம் அனைவரின் இதயங்களிலும் பிரகாசிக்க வேண்டும். ‘என்ன நிகழும்? என்ன நிகழும்?’ எனக் கேட்பதற்குப் பதில், ‘இதுவே நிகழும்’ என அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அலையைப் பரப்புங்கள். வரவிருக்கும் பொன்னுலகின் நல்ல செய்திகளைக் கொடுப்பதற்கு பொன்விழா ஒரு வழிமுறை ஆகவேண்டும். குழந்தைகளான நீங்கள் துன்ப உலகைப் பார்த்தாலும், எப்போதும் இயல்பாகவும் சத்தியயுகத்தின் விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள். சந்தோஷ உலகின் விழிப்புணர்வானது, துன்ப உலகினை நீங்கள் மறக்கச் செய்கிறது. நீங்கள் சந்தோஷ உலகிற்கும் அமைதிதாமத்திற்கும் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்வதில் முற்றிலும் மூழ்கியிருக்கிறீர்கள். நீங்கள் வீட்டுக்குச் சென்று, பின்னர் சந்தோஷ உலகிற்கு வரவேண்டும். போவதும் வருவதுமான விழிப்புணர்வு உங்களைச் சக்திசாலி ஆக்குகிறது. அத்துடன் உங்களை சந்தோஷமாக சேவைக்குக் கருவிகள் ஆக்குகிறது. மக்கள் இப்போது அதிகளவில் துக்கச்செய்திகளைக் கேட்டுள்ளார்கள். இப்போது, இந்த நல்ல செய்திகளுடன், துன்ப உலகில் இருந்து சந்தோஷ உலகிற்குச் சந்தோஷமாகச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள். அவர்களும் செல்ல வேண்டும் என்ற அலையை மற்றவர்களுக்கும் பரப்புங்கள். நம்பிக்கை இழந்திருப்பவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். மனவிரக்தி அடைந்த ஆத்மாக்களுக்கு நல்ல செய்திகளைக் கொடுங்கள். ஒரே வேளையில் அனைருக்கும் ஒரு நல்ல செய்தி சென்றடையும் வகையில் அந்த ஒலியைப் பரப்புவதற்கு விசேடமான செய்திமடல்களை அல்லது ஏதாவது வழிமுறைகளை உருவாக்கும் திட்டத்தைச் செய்யுங்கள். ஒருவர் எங்கிருந்தாலும், இந்த ஒரு விடயத்தை அனைவரும் அறிய வேண்டும். இத்தகைய செய்தியால், எங்கும் ஒரே ஒலி பரவ வேண்டும். நீங்கள் புதுமையை ஏற்படுத்த வேண்டும். உங்களின் ஞானம் நிறைந்த ரூபத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். தற்சமயம், நீங்கள் அமைதிநிறைந்த ஆத்மாக்கள், நீங்களே அமைதிக்கான பாதையைத் தமக்குக் காட்டக்கூடியவர்கள் என மக்கள் நினைக்கிறார்கள். இந்த நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்ந்து வெளிப்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், இப்போது, ‘இது மட்டுமே ஞானம் நிறைந்த தந்தையின் ஞானம்’ என்ற ஒலி பரவ வேண்டும். உதாரணமாக, இது மட்டுமே அமைதிக்கான இடம் என அவர்கள் இப்போது சொல்கிறார்கள். இப்போது அனைவரின் உதடுகளில் இருந்தும், உண்மையான ஞானம் என்றிருந்தால், அது இதுவே என்ற சத்தம் வெளிப்பட வேண்டும். அவர்கள் அமைதி மற்றும் அன்பு சக்திகளை அனுபவம் செய்வதைப் போன்று, சத்தியம் வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்போது, அனைத்தும் இயல்பாகவே வெளிப்படுத்தப்படும். எதையும் சொல்வதற்கான தேவை இருக்காது. எனவே, இப்போது நீங்கள் எவ்வாறு சத்தியத்தின் சக்தியை வெளிப்படுத்துவீர்கள்? நீங்கள் எதையும் சொல்லாமல், அவர்களாகவே, ‘உண்மையான ஞானம் என்றிருந்தால், இறைஞானம் என்றிருந்தால், சக்திவாய்ந்த ஞானம் என்றிருந்தால், அது இதுவே!’ எனக்கூறுவதற்கு நீங்கள் என்ன வழிமுறையைக் கடைப்பிடிப்பீர்கள்? இதற்கான வழிமுறையை பாபா வேறொரு வேளை உங்களுக்குக் கூறுவார். நீங்கள் அனைவரும் இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அடுத்த தடவை பாபா உங்களுக்கு அதைப் பற்றிக் கூறுவார். அன்பு மற்றும் அமைதிக்கான நிலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஞான விதை இப்போது விதைக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே அவர்களால் ஞானத்தின் பலனாக சுவர்க்க ஆஸ்திக்கான உரிமையைக் கோர முடியும்.

உங்களின் இதயபூர்வமான உரையாடல்களைத் தொடர்ந்து பாப்தாதா கேட்கிறார், அனைத்தையும் பார்க்கிறார். நீங்கள் அன்புடன் அமர்ந்திருந்து, பல விடயங்களைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். உங்களின் தலையை மிக நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள். குறைந்தபட்சம் வெண்ணெயை உண்பதற்காகக் கடைகிறீர்கள். நீங்கள் இப்போது பொன்விழாவிற்காகக் கடைகிறீர்கள். போஷாக்கான வெண்ணெய் மட்டுமே வெளிப்படும். அனைவரின் இதயங்களிலும் நல்ல அலை உள்ளது. உங்களின் இதயங்களில் உள்ள இந்த உற்சாகமான அலைகள் சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்குகின்றன. சூழல் உருவாக்கப்பட்டதும், நெருக்கமாக வருவதற்கான ஈர்ப்பு ஆத்மாக்களில் அதிகரிக்கின்றது. ‘நாம் இப்போது சென்று பார்க்க வேண்டும்’ என்ற அலை தொடர்ந்து பரவுகிறது. முதலில், ‘அவர்களிடம் என்னவுள்ளது என எனக்குத் தெரியவில்லை’ என அவர்கள் நினைத்தார்கள். அது நல்லது, நான் சென்று அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். இறுதியில், ‘இதுதான்!’ என அவர்கள் கூறுவார்கள். உங்களின் இதயங்களில் உள்ள ஊக்கமும் உற்சாகமும் இப்போது அவர்களில் உற்சாகத்தை உருவாக்குகின்றன. உங்களின் இதயங்கள் இப்போது நடனம் ஆடுகின்றன. ஆனால் அவர்களின் பாதங்களோ இப்போதே நடக்க ஆரம்பித்துள்ளன. இங்கு, ஒருவர் மிக நன்றாக நடனம் ஆடினால், தொலைவில் அமர்ந்திருப்பவர்களின் பாதங்களும் அவற்றுக்குத் தாளம் போட ஆரம்பிக்கும். இத்தகைய ஊக்கமும் உற்சாகமும் மிக்க சூழல், பலரின் பாதங்களையும் நடனம் ஆடச் செய்கின்றது. அச்சா.

சதா தங்களைப் பொன்னுலகின் உரிமையுள்ள ஆத்மாக்களாக அனுபவம் செய்பவர்களுக்கும், தமது ஸ்திதியை சத்தியயுகத்திற்குரியதாக ஆக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் சதா கொண்டிருப்பவர்களுக்கும், சதா கருணைநிறைந்தவர்களாக இருப்பதுடன், சத்தியயுகத்திற்கான பாதையை ஆத்மாக்கள் அனைவருக்கும் காட்டும் அன்பிலே மூழ்கியிருப்பவர்களுக்கும், சதா தந்தையின் ஒவ்வொரு பொன்வாசகத்தையும் தமது நடைமுறை வாழ்க்கைகளில் கடைப்பிடிப்பவர்களுக்கும், பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இத்தகைய ஆத்மாக்களுக்கும், எப்போதும் அன்பிலே மூழ்கியிருக்கும் வெற்றி இரத்தினங்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா பிரிஜ் இந்திரா தாதியைச் சந்திக்கிறார்:
அனைவரையும் அசையச் செய்யும் ஒரேயொருவர் உங்களையும் அசையச் செய்கிறார். ஒவ்வொரு விநாடியும் கரவன்ஹார் உங்களை ஒரு கருவியாக்கி, உங்களைக் கொண்டு அனைத்தையும் செய்விக்கிறார். கரவன்ஹாரின் கைகளில் சாவி உள்ளது. நீங்கள் அந்தச் சாவிக்கேற்ப அசைகிறீர்கள். நீங்கள் இயல்பாகவே சாவியைப் பெறுகிறீர்கள். நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும் பற்றற்ற தன்மையையும் அன்பையும் அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் கர்மக்கணக்குகளைத் தீர்த்தாலும், பற்றற்ற பார்வையாளராக இருந்து கர்மக்கணக்குகளைப் பார்ப்பதனால், நீங்கள் சகபாடியுடன் களிப்புடன் இருக்கிறீர்கள். அப்படித்தானே? நீங்கள் சகபாடியுடன் களிப்புடன் இருக்கிறீர்கள். ஆனால் இந்தக் கர்மக் கணக்குகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதை ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து பார்க்கிறீர்கள். களிப்புடன் இருப்பதனால், அது எதுவும் இல்லாதது போல உணரப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்து ஸ்தாபனைக்குக் கருவிகளாக இருந்தவர்கள், அமர்ந்திருந்தாலென்ன அல்லது அசைந்து கொண்டிருந்தாலென்ன, மேடையில் இருந்தாலென்ன அல்லது வீட்டில் இருந்தாலென்ன, மகாவீர் குழந்தைகள் எப்போதும் தமது மேன்மையான ஸ்திதியில் இருக்கிறார்கள். அத்துடன் சேவை மேடையிலும் இருக்கிறார்கள். அவர்கள் இரட்டை ஸ்ரேஜ் (ளவயபந) இல் இருக்கிறார்கள். ஒன்று அவர்களின் மேன்மையான ஸ்திதி. மற்றையது சேவை மேடை. எனவே, நீங்கள் நாள் முழுவதும் எங்கே இருக்கிறீர்கள்? கட்டடத்திலா அல்லது மேடையிலா? நீங்கள் கட்டிலில், மெத்தையில் இருக்கிறீர்களா அல்லது மேடையில் இருக்கிறீர்களா?நீங்கள் எங்கிருந்தாலும், சேவை மேடையிலேயே இருக்கிறீர்கள். இது இரட்டை மேடை (ஸ்திதியும் மேடையும்) ஆகும். இதையே நீங்கள் அனுபவம் செய்கிறீர்கள், அப்படியல்லவா? உங்களின் கணக்குகளை ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள். கடந்தகாலத்தில் அந்தச் சரீரத்தால் நீங்கள் எதைச் செய்திருந்தாலும், அவை அனைத்தும் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதை ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள். இது கர்ம வேதனை என்று அழைக்கப்படுவதில்லை. வேதனையில் துன்பம் உள்ளது. எனவே, இது வேதனை என நீங்கள் கூறமாட்டீர்கள். ஏனெனில், வலி அல்லது துன்பத்தின் உணர்வு இங்கில்லை. உங்கள் அனைவருக்கும் அது கர்மவேதனை இல்லை. கர்மயோகத்தின் சக்தியால், அது சேவை செய்வதற்கான வழிமுறை ஆகியுள்ளது. இது கர்ம வேதனை இல்லை. ஆனால் இது சேவைக்கான திட்டம் ஆகும். வேதனையும் சேவைத்திட்டமாக மாறியுள்ளது. அது அவ்வாறுதானே? இதனாலேயே, நீங்கள் சதா சகவாசத்தின் மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறீர்கள். பிறப்பில் இருந்தே, ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே உங்களின் ஆசையாக இருந்தது. இந்த ஆசை பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் நிறைவேறியுள்ளது. அது பௌதீக ரூபத்திலும் இப்போது அவ்யக்த ரூபத்திலும் நிறைவேறியுள்ளது. எனவே, பிறப்பில் இருந்து வந்த இந்த ஆசை ஓர் ஆசீர்வாதம் போன்றது. அச்சா. நீங்கள் சாகார் பாபாவின் சகவாசத்தை அனுபவம் செய்த அளவிற்கு வேறு எவருக்கும் அத்தகைய அனுபவம் இல்லை. பாபாவுடன் இருக்கும் விசேடமான பாகத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இது சிறிய விடயம் அல்ல. அனைவரின் பாக்கியமும் அவர்களுக்கே உரியது. நீங்களும், ‘வா ரே மீ!’ (எனது அற்புதம்) எனக் கூற முடியும்.

ஆதி இரத்தினங்கள், எப்போதும் ‘மகன் தந்தையைக் காட்டுகிறார்’ எனக் கருவிகளாக இருக்கிறார்கள். நீங்கள் உங்களின் ஒவ்வொரு செயலாலும் தந்தையின் நடத்தையை வெளிக்காட்டும் தெய்வீகக் கண்ணாடி ஆவீர்கள். உங்களின் அல்லது மற்றவர்களின் காட்சியைக் காட்டுவதற்கு ஒரு கண்ணாடி அவசியம். எனவே, நீங்கள் அனைவரும் தந்தையின் காட்சியை அருளும் கண்ணாடிகள் ஆவீர்கள். விசேடமான கருவி ஆத்மாக்களைக் கண்டதும் அனைவரும் எதை நினைவு செய்கிறார்கள்? நீங்கள் பாப்தாதாவை நினைக்கிறீர்கள். தந்தை என்ன செய்தார், அவர் எவ்வாறு நடந்தார்... நீங்கள் அவை அனைத்தையும் நினைவு செய்கிறீர்கள், அல்லவா? எனவே, நீங்கள் தந்தையை வெளிப்படுத்தும் கண்ணாடிகள் ஆவீர்கள். இத்தகைய விசேடமான குழந்தைகளை பாப்தாதா எப்போதும் தனக்கு முன்னாலேயே வைத்திருக்கிறார். அவர் உங்களைத் தனது தலைக்கிரீடங்கள் ஆக்கியுள்ளார். நீங்கள் தலைக்கிரீடத்தின் பிரகாசிக்கும் இரத்தினங்கள் ஆவீர்கள். அச்சா.

ஜகதீஷ்பாயைச் சந்திக்கிறார்:
நீங்கள் தந்தையிடமிருந்து ஆசீர்வாதமாகப் பெற்ற சிறப்பியல்புகள் அனைத்தையும் பயன்படுத்துவதன் மூலம் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். அது நல்லது. சஞ்சய் என்ன செய்தார்? அவர் அனைவருக்கும் திருஷ்டி கொடுத்தார், அல்லவா? எனவே, நீங்கள் ஞான திருஷ்டியைக் கொடுக்கிறீர்கள். இது தெய்வீக திருஷ்டி. ஞானம் தெய்வீகமானதல்லவா? ஞான திருஷ்டி மிகவும் சக்திவாய்ந்தது. அது ஓர் ஆசீர்வாதமும் ஆகும். வேறு எவ்வாறு அனைவரும் இத்தகைய பெரியதொரு உலக பல்கலைக்கழகத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்? வெகு சிலர் அதைக் கேட்கிறார்கள். ஆனால், இலக்கியங்களால் அது தெளிவாகின்றது. இதுவும் நீங்கள் பெற்ற ஓர் ஆசீர்வாதம் ஆகும். இது விசேட ஆத்மாவின் சிறப்பியல்பு. ஒவ்வொரு ஸ்தாபனத்தின் சிறப்பியல்பும் சகல வசதிகளாலும் வெளிப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், இலக்கியங்கள், படங்கள் என என்ன வசதிகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஸ்தாபனத்தின் அல்லது உலகப் பல்கலைக்கழகத்தின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆகுகின்றன. இதுவும் ஓர் அம்பே. ஓர் அம்பு ஒரு பறவையைக் கொண்டு வருவதைப் போன்று, இந்த அம்பு ஆத்மாக்களை அண்மையில் கொண்டுவரும். நீங்கள் நாடகத்தில் பெற்ற பாகத்தில் இதுவும் உள்ளது. மக்கள் பல கேள்விகளைக் கேட்கிறார்கள். எனவே, மக்கள் கேட்கும் கேள்விகளைத் தெளிவுபடுத்தும் வகையில் பதில் அளிப்பதற்கான வழிமுறைகள் இருப்பது அவசியமாகும். உதாரணமாக, உங்களால் அவருக்கு அனைத்தையும் தனிப்பட்ட முறையில் சொல்ல முடியும். ஆனால், இந்தப் புத்தகங்களும் நல்ல வழிமுறையே. இதுவும் அத்தியாவசியமானது. ஆரம்பத்தில் இருந்து தந்தை பிரம்மா எவ்வாறு மிகுந்த ஆர்வத்துடன் இந்த வழிமுறையை உருவாக்கினார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். இரவு பகலாக, அவரே அமர்ந்திருந்து எழுதுவார். அவர் அட்டைகளைச் செய்து உங்கள் அனைவருக்கும் கொடுத்தார், அப்படியல்லவா? நீங்கள் அவற்றை இரத்தினங்களால் அலங்கரித்தீர்கள். எனவே, அவரும் இதைச் செய்து காட்டினார், அல்லவா? இதுவும் நல்ல வழிமுறையே. கருத்தரங்குகளின் பின்னர், தொடர்நடவடிக்கைக்காக நீங்கள் செய்யும் ஆவணங்களும் அத்தியாவசியமானவை. தொடர் நடவடிக்கைக்காக சில வழிமுறைகள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன. இது முதலாவதற்கு, இது இரண்டாவதற்கு, இது மூன்றாவதற்கு. இதிலிருந்து, இந்த உலக பல்கலைக்கழகம் மிகவும் ஒழுங்குமுறையாகச் செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். எனவே, இது நல்லதொரு வழிமுறையாகும். நீங்கள் முயற்சி செய்யும்போது, அது சக்தியால் நிரம்புகிறது. நீங்கள் இப்போது பொன்விழாவிற்கான திட்டங்களைச் செய்கிறீர்கள். பின்னர் நாம் கொண்டாடுவோம். நீங்கள் எத்தனை திட்டங்களைச் செய்கிறீர்களோ, அவற்றில் அதிகளவு சக்தி நிரப்பப்படும். ஒவ்வொருவரின் ஒத்துழைப்பாலும், ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த ஒவ்வொருவரின் எண்ணங்களாலும் வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. நீங்கள் மீண்டும் அதைச் செய்ய வேண்டும். அவ்வளவே. அனைவரும் இப்போது அதிகளவில் பொன் விழாவைப் பற்றி நினைக்கிறார்கள். முதலில், அது பெரிய பணி போன்று தோன்றியது. ஆனால் பின்னர் அது இலகுவாகியுள்ளது. எனவே, இலகுவான வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. ஒவ்வொருவரின் நெற்றியிலும் வெற்றி எழுதப்பட்டுள்ளது.

குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் அனைவரும் இலேசாகவும் ஒளியாகவும் இருக்கிறீர்களா? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களைப் பாரமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் எப்போதும் இலேசாகவும் ஒளியாகவும் இருந்தால், சங்கமயுகத்தின் சந்தோஷ நாட்கள், ஆன்மீகக் களிப்பிற்கான நாட்கள், பயனுள்ள முறையில் கழியும். உங்களுக்குள் சிறிதளவு சுமையையும் நீங்கள் எடுத்துக் கொண்டால் என்ன நிகழும்? குழப்பம் இருக்குமா அல்லது களிப்பாக இருக்குமா? பாரமான உணர்விருந்தால், குழப்பமே இருக்கும். இலேசான தன்மை இருந்தால், மகிழ்ச்சியாக இருக்கும். சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் பெறுமதிவாய்ந்தது. அது மிகவும் மகத்தானது. இதுவே இத்தகைய பெரிய வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான காலம் ஆகும். எனவே, இந்த நேரத்தைப் பயனுள்ள முறையில் சம்பாதிப்பதற்காகப் பயன்படுத்துங்கள். சகல இரகசியங்களையும் புரிந்து கொண்ட (ராஸியுக்த்), யோகியுக்தாக இருக்கும் ஆத்மாக்கள் சதா பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வார்கள். எனவே, அதிகளவில் நினைவில் இருந்து, படிப்பிலும் சேவை செய்வதிலும் முன்னேறுங்கள். நீங்கள் நிற்பவர்கள் அல்ல. இந்தக் கல்வியும் இதை உங்களுக்குக் கற்பிக்கும் ஒரேயொருவரும் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும். சகல இரகசியங்களை அறிந்து கொண்டவர்களும் யோகியுக்தாக இருப்பவர்களும் எப்போதும் முன்னணியில் இருப்பார்கள். நீங்கள் தந்தையிடமிருந்து எத்தகைய சமிக்ஞைகளைப் பெற்றாலும், இரண்டு முறைகளாலும் தொடர்ந்து முன்னேறுங்கள். கருவிகள் ஆகியிருக்கும் விசேட ஆத்மாக்களின் சிறப்பியல்புகளையும் தாரணையையும் கிரகித்து, அவற்றைப் பின்பற்றித் தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் எந்தளவிற்குத் தந்தைக்கு நெருக்கமாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்குக் குடும்பத்திற்கு நெருக்கமாக இருப்பீர்கள். நீங்கள் குடும்பத்திற்கு நெருக்கமாக இல்லாவிட்டால், உங்களால் மாலையில் கோர்க்கப்பட முடியாது. அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் மனோபலத்தால் நிரம்பியவராகி, நீங்கள் இந்தப் பிறவியில் பெற்ற சகல சக்திகளையும் பயன்படுத்துவீர்களாக.

இந்த இனிய நாடகம் மிக நல்லதொரு முறையில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவராலும் அதை மாற்ற முடியாது. எவ்வாறாயினும், நாடகத்தில் இந்த மேன்மையான பிராமணப் பிறப்பில் நீங்கள் பல சக்திகளைப் பெற்றுள்ளீர்கள். தந்தை அவற்றை உங்களுக்கு விருப்பத்துடன் கையளித்துள்ளார். எனவே, உங்களிடம் மனோபலம் உள்ளது. இந்த சக்தியைப் பயன்படுத்துங்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம், உங்களின் சரீர பந்தனத்தில் இருந்து பற்றற்றவராகி, கர்மாதீத் ஸ்திதியில் ஸ்திரமடையுங்கள்: நான் பற்றற்றவன், நான் ஓர் அதிபதி. நான் தந்தையால் கருவி ஆக்கப்பட்டுள்ள ஓர் ஆத்மா. உங்களின் மனதையும் புத்தியையும் இந்த விழிப்புணர்வில் ஸ்திரப்படுத்துங்கள். நீங்கள் மனோபலம் நிரம்பியவர் எனப்படுவீர்கள்.

சுலோகம்:
உங்களின் இதயபூர்வமாக சேவை செய்யுங்கள். ஆசீர்வாதங்களின் கதவு திறக்கும்.
 


ஓம் சாந்தி
விசேட அறிக்கை: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. அனைவரும் ஒன்றுகூடி சர்வதேச யோகத்தை மாலை 6.30 இலிருந்து 7.30 வரை செய்வோம். காட்சிகளை அருளும் ரூபமாகி, உங்களின் தெய்வீக ரூபத்தை அனுபவம் செய்வதுடன் மற்றவர்களுக்கும் இந்த அனுபவத்தைக் கொடுங்கள்.