06.08.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞானத்தைத் தொடர்ந்தும் கிரகியுங்கள், நீங்கள் இறுதியில் தந்தைக்குச் சமமானவர்களாகி, தந்தையின் பலம் முழுவதையும் ஜீரணித்துக் கொள்வீர்கள்.

கேள்வி:
எந்தச் சோடிச் சொற்களின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதனால், நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக முடியும்;?

பதில்:
எழுச்சியும் வீழ்ச்சியும். சதோபிரதானும் தமோபிரதானும். சிவாலயமும் விலைமாதர் இல்லமும். இந்தச் சோடிச் சொற்களின் விழிப்புணர்வை நீங்கள் கொண்டிருந்தால், சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானத்தை மிகச்சரியாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில் ஞானம் இருப்பதில்லை; உங்கள் இதயத்தைத் திருப்திப்படுத்தக்கூடிய விடயங்களையே அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றார்கள். பக்தி மார்க்கம் உங்கள் இதயத்தைத் திருப்திப்படுத்தும் மார்க்கமாகும்.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் மிகவும் மேன்மையானவர்களாக இருந்தீர்கள்! இது எழுச்சியும் வீழ்ச்சியும் நிறைந்த ஒரு நாடகம். நீங்கள் மிக மேன்மையானவர்களும் தூய்மையானவர்களுமாக இருந்தமை இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இப்பொழுது மிகவும் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டீர்கள். நீங்கள் தேவர்களின் முன்னிலையில் சென்று கூறுகிறீர்கள்: நீங்கள் உயர்ந்தவர்கள். நாங்களோ தாழ்ந்தவர்கள். நீங்களே அதி மேன்மையானவர்களாகவும், பின்னர் அதிதாழ்ந்தவர்களாகவும் ஆகுபவர்;கள் என்பதை முன்னர் நீங்கள் அறிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது உங்களுக்குக் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் மிகவும் மேன்மையானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். தூய்மையானவர்கள் உயர்வானவர்கள் எனப்படுகின்றார்கள். அது விகாரமற்ற உலகமென அழைக்கப்படுகின்றது. அங்கே உங்கள் இராச்சியம் இருந்தது, நீங்கள் இப்பொழுது அதனை மீண்டும் ஸ்தாபிக்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு ஒரு சமிக்ஞையைக் கொடுக்கின்றார்: நீங்களே அதிமேன்மையான சிவாலயமான, சத்தியயுக வாசிகள். பின்னர் பல பிறவிகள் எடுத்ததால், அரைக்கல்பத்தின் பின்னர் நீங்கள் விகாரத்தினுள் வீழ்ந்து, தூய்மையற்றவர்களாகவும், விகாரமானவர்களாகவும் ஆகினீர்கள். அரைக்கல்பத்திற்கு நீங்கள் விகாரம் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் விகாரமற்றவர்களாகவும் சதோபிரதானாகவும் ஆகவேண்டும். நீங்கள் இரண்டு சொற்களை மாத்திரம் நினைவுசெய்தால் போதும். இப்பொழுது இது தமோபிரதான் உலகமாகும். இலக்ஷ்மியும் நாராயணனும் சதோபிரதான் உலகின் அடையாளங்கள். இது 5000 வருடங்களுக்கான விடயம். உங்கள் இராச்சியம் சதோபிரதான் பாரதத்தில் இருந்தது. பாரதம் அதிமேலானதாக இருந்தது, அது இப்பொழுது மிகவும் தாழ்ந்து விட்டது. நீங்கள் விகாரமற்றவர்களில் இருந்து விகாரம் நிறைந்தவர்கள் ஆகுவதற்கு, உங்களுக்கு 84 பிறவிகள் எடுத்துள்ளன. அங்கும் உங்கள் கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்தாலும், அது முற்றிலும் விகாரமற்றது என்றே இன்னமும் கூறப்படுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் முற்றிலும் விகாரமற்றவர் என்று கூறப்படுகின்றார். அவர் மிக அழகானவராக இருந்தார், ஆனால் இப்பொழுது அவலட்சணம் ஆகிவிட்டார். நீங்கள் இங்கமர்ந்திருப்பதால், நீங்களே சிவாலய உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். அங்கு வேறு எந்தச் சமயமும் இருக்கவில்லை. அப்பொழுது எங்கள் இராச்சியமே இருந்தது. ஆனால் பின்னர் அது இரண்டு கலைகளினால் குறைவடைந்தது. கலைகள் படிப்படியாகக் குறைவடைந்து, திரேதாயுகத்தில் இரண்டு கலைகள் குறைவடைந்தன. பின்னர் நீங்கள் படிப்படியாக வீழ்ச்சியடைவதால், விகாரமானவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகினீர்கள். இது விகாரமான உலகம் என அழைக்கப்படுகின்றது. மக்கள் தொடர்ந்தும் நச்சாற்றில் மூழ்கி மூச்சுத் திணறுகின்றார்கள். அங்கு நீங்கள் பாற்கடலில் வாழ்ந்தீர்கள். இப்பொழுது நீங்கள் உலக வரலாற்றையும் புவியியலையும், உங்கள் 84 பிறவிகளின் கதையையும் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் அவர்களின் இராச்சியத்தில் இருந்தபொழுது, விகாரமற்றவர்களாக இருந்தோம். அங்கு தூய இராச்சியம் இருந்தது, அது முழுமையான சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. பின்னர் திரேதாயுகத்தில் அது அரைச் சுவர்க்கமாகியது. இது உங்கள் புத்தியில் உள்ளது. தந்தையே வந்து உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இராவணன் மத்திய காலப்பகுதியில் வந்தான். இறுதியில் இந்த விகார உலகம் அழியவுள்ளது. பின்னர் நீங்கள் ஆரம்ப காலத்திற்குத் திரும்பிச் செல்வதற்குத் தூய்மையாக வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதிச் சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்களைச் சரீரங்கள் எனக் கருதாதீர்கள். நீங்கள் பக்தி மார்க்கத்தில் சத்தியம் செய்தீர்கள்: பாபா, நீங்கள் வரும்பொழுது நான் உங்களுக்கு மாத்திரமே உரியவனாக இருப்பேன். ஆத்மாக்கள் தந்தையுடனேயே பேசுகின்றனர். கிருஷ்ணர் தந்தையல்ல. அசரீரியான சிவபாபாவே ஆத்மாக்களின் தந்தையாவார். நீங்கள் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியை எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்தும், பாரதம் எல்லையற்ற ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்தும் பெறுகின்றது. இதனாலேயே சத்திய யுகம் சிவாலயம் என்று அழைக்கப்படுகின்றது. சிவபாபா வந்து தேவ தர்மத்தை ஸ்தாபித்தார். இது எப்பொழுதும் நினைவுகூரப்பட வேண்டும். இது சந்தோஷத்திற்குரிய ஒரு விடயம். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சிவாலயத்திற்குத் திரும்பிச் செல்கின்றோம். எவராவது ஒருவர் மரணித்தால், அந்த நபர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டதாக மக்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் உண்மையில் அங்கு எவரும் செல்வதில்லை. அவ்விடயங்கள் யாவும் உங்கள் இதயத்தைச் சந்தோஷப்படுத்துவதற்குப் பக்தி மார்க்கத்தில் கூறப்பட்ட பொய்க் கதைகள். நீங்களே உண்மையில் சுவர்க்கத்திற்குச் செல்லவுள்ளீர்கள். அங்கு நோய்கள் போன்ற எதுவுமே இருப்பதில்லை. அங்கு நீங்கள் சதா முகமலர்ச்சியுடன் இருப்பீர்கள். தந்தை சிறு குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துவதைப் போன்று, அனைத்தையும் மிக இலகுவாக்குகின்றார். நீங்கள் வெளியில் எங்கு வாழ்ந்தாலும், உங்களால் ஓர் அந்தஸ்தைக் கோரமுடியும். இதில் தூய்மையே முதலாவதும், பிரதானமானதும் ஆகும். உங்கள் உணவும், பானமும் தூய்மையாக இருக்கட்டும். மக்கள் எப்பொழுதாவது சிகரெட்டை அல்லது புகையிலை போன்றவற்றைத் தேவர்களுக்குப் போக்காகப் படைக்கின்றார்களா? அவர்கள் எப்பொழுதாவது முட்டையையோ, புகையிலையையோ கிராந்திற்கு முன்னால் படைக்கின்றார்களா? அவர்கள் கிராந்தைக் குரு கோபிந்தின் சரீரம் போல் புனிதமாகக் கருதுகின்றார்கள். அவர்களுக்குக் கிராந்தின் மீது அதிக மரியாதை உள்ளது. சீக்கியர்கள் அதனைத் தங்கள் குருவின் சரீரத்தைப் போல் புனிதமானதாகக் கருதுகின்றார்கள். எவ்வாறாயினும் குரு நானக் அமர்ந்திருந்து கிராந்தை எழுதவில்லை; நானக் அவதாரமே எடுத்தார். சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, அதன்பின்னரே, அவர்கள் கிராந்தை எழுதினார்கள். ஒருவரின் பின்னர், தொடர்ந்து பலரும் சீக்கிய சமயத்திற்கு வந்தனர். முன்னர் கிராந்த்; மிகவும் சிறியதாக இருந்ததுடன், கையால் எழுதப்பட்டதாகவும் இருந்தது. இப்பொழுது அவர்கள் கீதையைக் கிருஷ்ணரின் வடிவமெனக் கருதுகின்றார்கள். குரு நானக்கின் கிராந்த்; நினைவுகூரப்படுவதைப் போன்று, கிருஷ்ணரின் கீதையும் நினைவுகூரப்படுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றார்கள்: “கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார்.” இது அறியாமை என அழைக்கப்படுகின்றது. ஒரேயொரு பரமாத்மா பரமதந்தையிடம் மாத்திரமே ஞானம் உள்ளது. கீதையின் மூலமே சற்கதி கிடைத்தது. தந்தையிடம் மாத்திரமே அந்த ஞானம் உள்ளது. ஞானத்தின் மூலம் பகலும், பக்தியின் மூலம் இரவும் உள்ளது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஆத்மாக்கள் தூய்மையாக்கப்பட வேண்டும் என்பதால், அதற்கான முயற்சி செய்யப்பட வேண்டும். இந்த ஞானம் முற்றாகப் பறந்து விடுமளவிற்கு, மாயையின் அத்தகைய பலமான புயல்கள் வீசும். பின்னர் உங்களால் மற்றவர்களுடன் ஞானத்தைப் பேச முடியாமல் போய் விடுகின்றது. முதலாவது விகாரமான காமம், உங்களுக்குப் பெருமளவு தொல்லையைத் தருகின்றது. அதனை விடுவதற்கே அதிகக் காலம் எடுக்கின்றது. உண்மையில், அது ஒரு விநாடியில் பெறப்படுகின்ற ஜீவன்முக்தி எனும் விடயமாகும். ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அதிபதி (வாரிசு) ஆகுகின்றார். சிவபாபா வந்துள்ளார் என்பதை நீங்கள் இனங்கண்டுள்ளதால், ஓர் ஆஸ்திக்கு உரிமையைக் கோருகின்றீர்கள். கீதை சிவபாபாவினால் உரைக்கப்பட்டது. அவரே கூறினார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நான் இந்தச் சாதாரணச் சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். கிருஷ்ணர் சாதாரணமானவர் அல்ல. அவர் பிறப்பெடுக்கும்பொழுது, எங்கும் ஒளி வீசியது. அதன்; ஆதிக்கம் பெருமளவு இருந்ததாலேயே ஸ்ரீ கிருஷ்ணர் இன்றுவரை நினைவுகூரப்படுகின்றார். எவ்வாறாயினும் சமயநூல்;கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்துக்குரியவை. ஆங்கிலத்தில் அவை தத்துவ ஞானம் என அழைக்கப்படுகின்றன. ஆன்மீகத் தந்தையால் மாத்திரமே, ஆன்மீக ஞானத்தைக் கொடுக்க முடியும். அவரே கூறுகின்றார்: நானே உங்கள் ஆன்மீகத் தந்தை. நானே ஞானக் கடல். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் கற்கின்றீர்கள். நீங்களும் ஞானத்தைக் கிரகிக்கின்றீர்கள். அதன்பின்னர் இறுதியில் நீங்கள் தந்தையைப் போலாகுவீர்கள். எந்தளவிற்கு நீங்கள் கிரகிக்கின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. தந்தையை நினைவுசெய்வதன் மூலம் அந்தப் பலத்தை நீங்கள் அதிகரித்துக்கொள்வீர்கள். நினைவு என்பது கூர்மைச் சக்தி என அழைக்கப்படுகின்றது. வாட்;களிலும் வித்தியாசம் உள்ளது. ஒரு வாள் 100 ரூபாய்களுக்கும், இன்னொன்று 3 முதல் 4 ஆயிரம் ரூபாய்களுக்கும் வாங்கப்படுகின்றது. பாபாவுக்கு இதில் அனுபவம் உள்ளது. வாளுக்கு அதிக மரியாதை வழங்கப்படுகின்றது. குரு கோபிந்தின் வாட்களுக்குப் பெருமளவு மரியாதை வழங்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் யோக பலத்தைக் கொண்டிருப்பதுவும் அவசியமாகும். ஞான வாளிலும் சக்தி இருக்க வேண்டும். அந்தச் சக்தி இருக்கும்பொழுதே, மக்கள் விரைவாகப் புரிந்துகொள்வார்கள். நீங்கள்; நாடகத்தி;ற்கு ஏற்ப தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தந்தையை நினைவுசெய்கின்றீர்களோ, அந்த நினைவின் மூலம் உங்கள் பாவங்களும் அதிகளவு அழிக்கப்படுகின்றன. தூய்மையாக்குபவரான தந்தை உங்களுக்கு வழிமுறைகளைக் காட்டுகின்றார். பின்னர், அவர் ஒரு சக்கரத்தின் பின்னரும் வந்து, இதே வழிமுறையில் ஞானத்தைக் கொடுப்பார். அவர் இவரை அனைத்தையும் துறக்கச் செய்து, தனது இரதம் ஆக்குகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஈர்க்கப்பட்டதால், நீங்கள் அனைவரும் அங்கே ஓடி வந்தீர்கள். அத்தகைய கவர்ச்சி தந்தையிடம் இருந்தது. இப்பொழுது நீங்களும் அதேபோன்று முழுமையடைய வேண்டும். நீங்களும் வரிசைக்கிரமமாக அவ்வாறு ஆகுவீர்கள். நிச்சயமாக ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது! நீங்கள் சத்தியயுக ஆரம்பத்திலிருந்து கலியுக இறுதிவரை உலகச் சக்கரத்;தைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். இப்பொழுது இது சங்கமயுகம். உங்களைத் தூய்மையாக்குவதற்குத் தந்தை நிச்சயமாக வரவேண்டும். தூய்மை என்றால் சதோபிரதான் என அர்த்தம். உங்களுக்குள் கலப்படம் தொடர்ந்தும் படிப்படியாகக் கலந்து விட்டது. இப்பொழுது, எவ்வாறு அந்தக் கலப்படத்தை அகற்ற முடியும்? ஆத்மா உண்மையானவராக இருக்கும்பொழுது, ஆபரணமும் உண்மையாக உள்ளது. அதாவது, சரீரங்கள் அழகாக உள்ளன. ஆத்மாக்கள் பொய்யானவர்களாக ஆகும்பொழுது, சரீரங்களும் தூய்மையற்றதாகுகின்றன. இவரும் ஞானத்தைப் பெறுவதற்கு முன்னர் தலைவணங்கி வழிபாடு செய்தார். அவர் இலக்ஷ்மி நாராயணனின் மிகப்பெரிய, எண்ணெய் வர்ணப் படத்தைக் கதியில் வைத்திருப்பதுண்டு. அவர் பெருமளவு அன்புடன் அவரை நினைவுசெய்வார். அவர் வேறு எவரையும் நினைவுசெய்யவில்லை. அவரின் எண்ணங்கள் வெளியில் வேறு எங்காவது அலைந்தால் தன்னைத் தானே அறைந்து கொள்வார். மனம் ஏன் அலைகின்றது? நான் ஏன் ஒரு காட்சியையும் பெறுவதில்லை? அவர் பக்தி மார்க்கத்தில் இருந்தார், ஆனால் அவருக்கு விஷ்ணுவின் காட்சி கிடைத்ததுமே அவர் நாராயணன் ஆகவில்லை. நிச்சயமாக முயற்சி செய்யப்பட வேண்டும். இலக்கும் குறிக்கோளும் முன்னாலேயே உள்ளன. இப்பொழுது எவருடைய உயிரற்ற விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவோ, அவர்கள் முன்னர் உயிருள்ள ரூபங்களில் இருந்தனர். தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்கே வந்துள்ளார். அவர் உங்களைச் சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக மாற்றுகின்றார். நீங்களும் அவர்களின் இராச்சியத்தில் இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுவதற்காக முயற்சி செய்வதால், அவர்களை மிக நன்றாகப் பின்பற்ற வேண்டும். பிரம்மா ஒரு தேவர் என்று அழைக்கப்படுவதில்லை. விஷ்ணுவை ஒரு தேவர் என அழைப்பது சரியானது. மக்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் ‘குரு பிரம்மா, குரு விஷ்ணு….’ என்று கூறுகின்றார்கள். இப்பொழுது விஷ்ணு யாரின் குரு? அனைவரையுமே அவர்கள் தொடர்ந்தும் குரு என அழைக்கின்றார்கள். அவர்கள் ‘பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள்’ என்று கூறுகின்றார்கள். அவர்கள் இவரைக் குரு என்றும், அவரைப் பரமாத்மா என்றும் அழைக்கின்றார்கள். தந்தையே அனைவரிலும் அதி மகத்துவமானவர். பிறருக்குக் கற்பிப்பதற்காகவே நாங்கள் அவரிடமிருந்து இதைக் கற்கின்றோம். சற்குரு உங்களுக்கு எதனை விளங்கப்படுத்துகிறாரோ, பின்னர் அதனை நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். உங்கள் குருவே உங்கள் தந்தையும், ஆசிரியரும் என்று நீங்கள் கூற மாட்டீர்கள்; இல்லை. ஆகையால் நீங்கள் இந்த ஞானம் முழுவதையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நாங்கள் சிவாலயத்தில் இருந்தோம். இப்பொழுது விலைமாதர் இல்லத்தில் உள்ளோம். நாங்கள் மீண்டும் ஒருமுறை சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும். அவர்கள் தாம் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலப்பதாகக் கூறினாலும் அல்லது ஒளி, ஒளியுடன் கலப்பதாகக் கூறினாலும் ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உங்களுக்கென்று ஓரு சொந்தப் பாகம் பதிவாகியுள்ளது. நீங்கள் அனைவரும் நடிகர்கள். உங்கள் சொந்தப் பாகங்களை நீங்கள் நடிக்க வேண்டும். அவை என்றுமே அழிக்கப்பட முடியாதவை. முழு உலகத்தைச் சேர்ந்த சகல ஆத்மாக்களும் தங்கள் பாகங்களை நடிக்க வேண்டும். புதிதாக ஒரு படப்பிடிப்பு நடைபெறுவதைப் போன்றுள்ளது. எனினும் இந்த அநாதியான படம்பிடித்தல், ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது. இது நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கும், ஓர் அற்புதமான நட்சத்திரம். இது ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை. முன்னர், உங்களுக்கு இந்த ஞானம் இருக்கவில்லை. உலக அதிசயம்! “சுவர்க்கம்” என்ற வார்த்தையைக் கேட்டதும் உங்கள் இதயங்கள் சந்தோஷமடைகின்றன. இப்பொழுது இது சத்தியயுகம் அல்ல. இது இப்பொழுது கலியுகமாகும். ஆகவே மறுபிறப்பும் கலியுகத்திலேயே இடம்பெறுகின்றது. நீங்கள் அனைவரும் நிச்சயமாக அங்கு செல்லவேண்டும். ஆனால் தூய்மையற்ற ஆத்மாக்களால் அங்கு செல்ல முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது யோக சக்தியினால் தூய்மையாகுகின்றீர்கள். தந்தையாகிய கடவுளே தூய உலகை ஸ்தாபிக்கின்றார். பின்னர் இராவணன் அதை நரகமாக்குகிறான். இதனைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. மக்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். அது அநாதியாக இடம்பெறுகின்றது என்று அவர்கள் கூறுகின்றனர், ஆனாலும் அது எப்பொழுது ஆரம்பித்தது என்று எவருக்கும் தெரியாது. ஏனெனில் அவர்கள் நூறாயிரம் வருடங்கள் எனக் கூறுவதால் அதனை அரைப் பங்காகப் பிரிக்க முடியாதுள்ளது. கலியுகம் இன்னமும் 40,000 வருடங்கள் நீடிக்கவுள்ளது என அவர்கள் கூறுகிறார்கள். எனவே மக்கள் காரிருளில் இருக்கிறார்கள். அறியாமை உறக்கத்திலிருந்து விழித்தெழுவது அவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது; அவர்கள் தாமாக எழுவதில்லை. இது இப்பொழுது சங்கமயுகம், இப்பொழுதே தந்தை வந்து உங்களுக்குத் தூய்மையாகுகின்ற பாதையைக் காட்டுகின்றார். தூய்மையாகும்பொழுது, தூய உலகம் ஸ்தாபிக்கப்பட்டு, இந்தத் தூய்மையற்ற உலகம் அழிக்கப்படும். இப்பொழுது உலகம் மிகவும் பெரிதாகவுள்ளது. சத்தியயுகத்தில், உலகம் மிகவும் சிறியதாகவே இருக்கும். நீங்கள் இப்பொழுது நிச்சயமாக மாயையை வெற்றிகொண்டு தூய்மையாக வேண்டும். தந்தை கூறுகிறார்: மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். நீங்கள் தூய்மையாகுவதிலேயே அவள் பல தடைகளை ஏற்படுத்துகிறாள். தூய்மையாகுவதற்கான தைரியத்தை நீங்கள் பேணுகின்றீர்கள். ஆனால் மாயை வந்து உங்களை என்னவாக்குகின்றாள் என்ற நிலைமையைப் பாருங்கள். அவள் உங்களைக் குத்தி, கீழே வீழ்த்துகின்றாள். அதனால் நீங்கள் சேமித்துள்ள அனைத்தும் முடிவடைகின்றது. பின்னர் நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். சிலர் வீழ்ந்து விடுகின்றார்கள். பின்னர் அவர்கள் தங்கள் முகங்களையேனும் காட்டுவதில்லை. எனவே, அவர்களால் மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியாது. முழு முயற்சி செய்யப்பட வேண்டும். நீங்கள் தோல்வியடையக்கூடாது. இதனாலேயே சிலர் தூய திருமணமும் செய்கிறார்கள். திருமணம் செய்த பின்னர், அத் தம்பதியினரால் தூய்மையாக இருப்பது அசாத்தியம் என்று சந்நியாசிகள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: அது சாத்தியம், ஏனெனில் அதில் பெரும் பேறு உள்ளது. நீங்கள் இந்த ஒரு இறுதிப் பிறவியில் தூய்மையாகினால், சுவர்க்கத்தில் ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். அத்தகையதொரு பெரும் பேற்றைப் பெறுவதற்காக, இந்த ஒரு பிறவியில் நீங்கள் தூய்மையாக இருக்க முடியாதா? குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, நிச்சயமாக நாங்கள் தூய்மையாக இருப்போம். சீக்கியர்கள் தூய்மைக்கான ஒரு காப்பு அணிவார்கள். நூல் போன்ற எதனையும் நீங்கள் இங்கே கட்ட வேண்டிய அவசியமில்லை. இது புத்திக்கான விடயம். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். புத்திரிகள் ஞானத்தைப் பலருக்கும் கொடுக்கின்றார்கள். எனினும் அந்த முக்கியஸ்தர்களின் புத்தியில் அது இருப்பதில்லை. தந்தை கூறுகிறார்: அனைத்திற்கும் முதலில், இவர்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்பதை மிகத்தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். நாங்கள் சிவபாபாவிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றோம். நாங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாக வேண்டும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். வேறு எவராலும் இதனைக் கூறமுடியாது. அனைத்திற்கும் முதலில் நீங்கள் இதனை அவர்களின் புத்தியில் இருக்குமாறு செய்ய வேண்டும்: பாரதம் விகாரமற்றதாக இருந்தது, அது இப்பொழுது விகாரமாகி விட்டதால், அது எவ்வாறு மீண்டும் விகாரமற்றதாக ஆக முடியும்? கடவுள் பேசுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அவ்வளவே! நீங்கள் இந்தளவையேனும் கூறினால், அதுவே மகா பாக்கியமாகும். எனினும் உங்களால் இந்தளவையேனும் கூற முடியாதுள்ளது; நீங்கள் மறந்து விடுவீர்கள். தந்தை திறப்பு விழாவை மேற்கொண்டதால், கருவிகளாகிய நீங்கள் மீதியைச் செய்கிறீர்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அத்திவாரம் இடப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது சேவைத் தளங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இது கீதைக்குப் பொருத்தமாக உள்ளது. கீதையிலும் கூறப்படுகின்றது: ஓ குழந்தாய், காமத்தை வென்றால் நீங்கள் 21 பிறவிகளுக்கு உலகை வென்றவர்களாகுவீர்கள். நீங்கள் இவ்வாறு ஆகாவிட்டாலும் பிறருக்காவது அதனை விளங்கப்படுத்துங்கள். பிறரை ஈடேற்றுபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் பின்னர் வீழ்ந்து விடுகின்றார்கள். காமமே மிகப்பெரிய எதிரி; அது உங்களை நேரடியாகச் சாக்கடைக்குள் வீழச் செய்கின்றது. காமத்தை வென்ற குழந்தைகள் மாத்திரமே உலகை வென்றவர்கள் ஆகுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த இறுதிப் பிறவியில் உங்கள் பேறுகள் அனைத்தையும் உங்கள் முன்னிலையில் வைத்து, நிச்சயமாகத் தூய்மையாகுங்கள். மாயையின் தடைகளால் தோற்கடிக்கப்படாதீர்கள்.

2. உங்கள் இலக்கையும் குறிக்கோளையும் உங்கள் முன் வைத்து, முழு முயற்சி செய்யுங்கள். தந்தை பிரம்மா முயற்சி செய்து, சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறியதைப் போன்று, அவரைப் பின்பற்றிச் சிம்மாசனத்தில் அமருங்கள். ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுக்காகவும் பிறருக்காகவும் தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருந்து, எதிர்மறையானவற்றை ஆக்கபூர்வமானவையாக மாற்றுவீர்களாக.

சதா சக்திவாய்ந்தவராக இருப்பதற்கு, இரு விடயங்களை நினைவுசெய்யுங்கள்: தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களை உங்களுக்காகவும் பிறருக்காகவும் கொண்டிருங்கள். உங்களுக்கான தூய, ஆக்கபூர்வமான எண்ணங்கள் மூலம் உங்களால் எதிர்மறையானவற்றை ஆக்கபூர்வமானவையாக மாற்ற முடியும். உங்களுக்காகத் தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பது, பிறருக்காகத் தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பதுடன் தொடர்புபட்டுள்ளது. உங்களுக்கான தூய, ஆக்கபூர்வமான எண்ணங்கள் இல்லாது விட்டால், நீங்கள் பிறருக்காகத் தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருக்க முடியாது. தற்சமயத்தில், இந்த இரண்டிலும் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால், வார்த்தைகள் மூலம் மக்களால் உங்களைப் புரிந்துகொள்ள முடியாது. எனவே உங்கள்; தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைப் பயன்படுத்தி, அவர்களுக்கு அதிர்வலைகளைக் கொடுங்கள். அப்பொழுது அவர்கள் மாற்றமடைவார்கள்.

சுலோகம்:
ஞான இரத்தினங்களுடனும், தெய்வீகக் குணங்களுடனும், சக்திகளுடனுமே விளையாடுங்கள், சேற்றுடன் அல்ல.