28.07.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     07.01.85     Om Shanti     Madhuban


புது வருடத்திற்கான விசேடமான எண்ணம் - மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர் ஆகுங்கள்.
 


இன்று, பாக்கியத்தை அருள்பவரான தந்தை, மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர்களான தனது குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். பாக்கியத்தை அருள்பவரான தந்தை, ஒவ்வொரு குழந்தையினதும் அட்டவணையைப் பார்க்கிறார். மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர்களான நீங்கள் ஒவ்வொருவரும், பாக்கியத்தை அருள்பவரிடமிருந்து நீங்கள் பெற்றுள்ள சகல பொக்கிஷங்களாலும் எந்தளவிற்குப் பாக்கியத்தை அருள்பவரைப் போன்று ஆகியுள்ளீர்கள்? நீங்கள் ஞானத்தை அருள்பவர்கள் ஆகியுள்ளீர்களா? நீங்கள் நினைவின் சக்தியை அருள்பவர்கள் ஆகியுள்ளீர்களா? காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப,நீங்கள் அனைவரும் சகல சக்திகளையும் அருள்பவர்கள் ஆகியுள்ளீர்களா? நீங்கள் நற்குணங்களை அருள்பவர்கள் ஆகியுள்ளீர்களா? நீங்கள் ஆன்மீகப் பார்வையையும் ஆன்மீக அன்பையும் அருள்பவர்கள் ஆகியுள்ளீர்களா? காலத்திற்கேற்ப, நீங்கள் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒத்துழைப்பை அருள்பவர்கள் ஆகியுள்ளீர்களா? பலவீனமானவர்களுக்கு உங்களின் மேன்மையான சகவாசத்தையும் தொடர்பையும் அருள்பவர்கள் ஆகியுள்ளீர்களா? பேறுகள் இல்லாத ஆத்மாக்களை முழுமையாகத் திருப்தியுள்ள ஆத்மாக்கள் ஆக்குகின்ற ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அருள்பவர்கள் ஆகிவிட்டீர்களா? ஒவ்வொரு மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவரினதும் இந்த அட்டவணையை பாபா பார்த்தார்.

பாக்கியத்தை அருள்பவர் என்றால் ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் எண்ணத்தாலும் வழங்குபவர் என்று அர்த்தம். பாக்கியத்தை அருள்பவர் என்றால் பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டவர் என்று அர்த்தம். கொடுப்பது என்று வரும்போது, அவரின் இதயம் கடலைப் போன்று பெரியதாக இருக்கும். பாக்கியத்தை அருள்பவர் என்றால் தந்தையைத் தவிர வேறு எந்தவோர் ஆத்மாவிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் ஆசையற்றவர், சதா கொடுப்பவர் என்று அர்த்தம். தந்தை எடுக்காமல், கொடுப்பதைப் போன்று, ஒருவர் ஆன்மீக அன்பையும் ஒத்துழைப்பையும் வழங்கினால், ஒன்றுக்குப் பதிலாக, அவர் பலமில்லியன் மடங்கைக் கொடுப்பார். ஒரு குழந்தை தன்னிடமுள்ள வைக்கோல் போன்ற பழையவை அனைத்தையும் அருள்பவரிடம் கொடுத்தால், அருள்பவர் அதற்குப் பதிலாக அதிகளவில் கொடுப்பார். அதனால், பெறுவது கொடுப்பதாக மாறும். இத்தகைய மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர்கள், ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வோர் அடியிலும் கொடுப்பவர்கள். மகா அருள்பவர் என்றால் பாக்கியத்தை அருள்பவர் என்று அர்த்தம். சதா கொடுப்பதனால், அவர்கள் சதா சுயநலமற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் தந்தையைப் போன்று, எந்தவித சுயநலமான நோக்கத்திற்கும் அப்பாற்பட்டவர்களாகவும் அனைவரிடமும் அன்பானவர்களாகவும் இருப்பார்கள். அனைவரும் இயல்பாகவே பாக்கியத்தை அருள்பவர்களுக்கு மரியாதை அளிக்கும் பதிவேடு காணப்படும். பாக்கியத்தை அருள்பவர் இயல்பாகவே அனைவரின் கண்களிலும் அருள்பவராக இருப்பார். அதாவது, இத்தகையதோர் ஆத்மா மகானாக இருப்பார். எந்தளவிற்கு நீங்கள் ஒவ்வொருவரும் இத்தகைய பாக்கியத்தை அருள்பவர்கள் ஆகியுள்ளீர்கள்? பாக்கியத்தை அருள்பவர் என்றால் இராஜ குலத்தைச் சேர்ந்த ஒருவர் என்று அர்த்தம். அருள்பவர் என்றால் தந்தையைப் போன்று பராமரிப்பவர், சதா அன்பினதும் ஒத்துழைப்பினதும் பராமரிப்பை வழங்குபவர் என்று அர்த்தம். பாக்கியத்தை அருள்பவர் என்றால் எப்போதும் நிரம்பியிருப்பவர் என்று அர்த்தம். எனவே, உங்களையே சோதித்துப் பாருங்கள்: நீங்கள் எடுப்பவரா அல்லது கொடுக்கின்ற ஒரு மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவரா?

இப்போது, காலத்திற்கேற்ப, நீங்கள் மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர் என்ற பாகத்தை நடிக்க வேண்டும். ஏனெனில், காலம் நெருங்கி வருகிறது. அதாவது, நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும். இப்போதும், நீங்கள் உங்களுக்காக எடுத்துக் கொள்ள விரும்பினால், உங்களால் ஓர் அருள்பவர் ஆகமுடியுமா? இப்போது கொடுப்பதெனில் பெறுதல் என்று அர்த்தம். நீங்கள் எந்தளவிற்குக் கொடுக்கிறீர்களோ, அதற்கேற்ப அந்தளவிற்கு அது இயல்பாகவே தொடர்ந்து அதிகரிக்கும். எந்த வகையான எல்லைக்குட்பட்ட விடயங்களையும் எடுப்பவர் ஆகாதீர்கள். இப்போதும், உங்களின் எல்லைக்குட்பட்ட எதிர்பார்ப்புகளை நீங்கள் நிறைவேற்ற விரும்பினால், எவ்வாறு நீங்கள் உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவீர்கள்? ‘எனக்குச் சிறிதளவு பெயர்(பெருமை), சிறிதளவு மரியாதை, மதிப்பு, அன்பு, சக்தி தேவை.’ இப்போதும், உங்களிடம் இந்த சுயநலமான நோக்கங்கள் இருந்தால், அதாவது, உங்களுக்காக நீங்கள் இந்த ஆசைகளைக் கொண்டிருந்தால், எப்போது நீங்கள் முற்றிலும் ஆசைகள் என்ற அறிவே அற்றவர்கள் ஆகப்போகிறீர்கள்? அந்த எல்லைக்குட்பட்ட ஆசைகள் ஒருபோதும் நீங்கள் நல்லவர் ஆகுவதற்கு அனுமதிக்காது. அந்த ஆசைகள் இராஜரீக யாசகரின் அடையாளங்கள் ஆகும். உரிமை உடைய ஒருவரிடம் அவை அனைத்தும் இயல்பாகவே வந்துசேரும். ‘எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் (சய்யே, சய்யே)’ என்ற பாடல்களை அவர்கள் பாட மாட்டார்கள். ‘நான் அதைப் பெற்றுவிட்டேன், நான் இவ்வாறு ஆகிவிட்டேன்’ என்ற பாடல்களையே அவர்கள் பாடுவார்கள். எல்லையற்ற அருள்பவர்களுக்கு, எல்லைக்குட்பட்ட எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் ஒரு நிழல் போல அவர்களுக்குப் பின்னாலேயே இருக்கும். நீங்கள் விரும்பியதை அடைந்து விட்டீர்கள் என்ற பாடலை நீங்கள் பாடும்போது, எவ்வாறு இன்னமும் எல்லைக்குட்பட்ட பெயர், மரியாதை, கௌரவம், பெருமை என்பவற்றை அடையவேண்டும் என்ற ஆசை இருக்க முடியும்? வேறு வார்த்தைகளில் கூறினால், பாடலை மாற்றுங்கள்! பாக்கியத்தை அருள்பவர்களான உங்களின் முன்னால் பஞ்சபூதங்களும் பணியாட்கள் ஆகும்போது, நீங்கள் சடப்பொருளையும் மாயையையும் வென்றவர்கள் ஆகும்போது, அந்த எல்லைக்குட்பட்ட ஆசைகள் அனைத்தும் சூரியனின் முன்னால் ஒரு விளக்கைப் போன்றே உங்களுக்குத் தோன்றும். நீங்களே சூரியன் ஆகியபின்னர், விளக்குகளுக்கான தேவை என்ன? நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவதற்கான அடிப்படை, அந்தக் குறிப்பிட்ட விடயத்தை அதிகபட்சம் தொடர்ந்து கொடுப்பதே ஆகும். மரியாதை கொடுங்கள். அதை எடுக்காதீர்கள். மதிப்பளியுங்கள். மதிப்பை எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களின் பெயர் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், தந்தையின் பெயரைத் தானம் செய்யுங்கள். இயல்பாகவே உங்களின் பெயர் பெருமைப்படுத்தப்படும். கொடுப்பதே பெறுவதற்கான அடிப்படை ஆகும். பக்தி மார்க்கத்தில் ஒரு நடைமுறை தொடர்கிறது: ஒருவரிடம் ஏதாவது இல்லாவிட்டால், அதை அதிகமாகப் பெறுவதற்கு அந்தக் குறிப்பிட்ட விடயத்தைத் தானம் செய்யும்படி கூறுவார்கள். அப்போது கொடுப்பது பெறுகின்ற வடிவத்தைப் பெறும். அதேபோன்று, அருள்பவரின் குழந்தைகளான நீங்கள், கொடுக்கின்ற தேவர்கள் ஆகப் போகிறீர்கள். மக்கள் தொடர்ந்து உங்கள் அனைவரின் புகழையும் அருள்பவர்கள், அமைதியை அருள்பவர்கள், செல்வத்தை அருள்பவர்கள் என்று பாடுகிறார்கள். எடுப்பவர்கள் என உங்களின் புகழை அவர்கள் பாடுவதில்லை. எனவே, இன்று, பாபா இந்த அட்டவணையைப் பார்த்தார். எத்தனை பேர் தேவர்கள் (கொடுப்பவர்கள்) ஆகப் போகிறார்கள்? எத்தனைபேர் எடுப்பவர்கள் ஆகப் போகிறார்கள்? உலக எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் முடிந்துவிட்டன. இப்போது, ஆன்மீக வாழ்க்கையின் எல்லையற்ற ஆசைகளைப் பொறுத்தவரை, நீங்கள் அவற்றை ஞானத்தின் ஆசைகள் என்றே கருதுகிறீர்கள், அப்படியல்லவா? அவை உங்களுக்குள் இருக்கவேண்டும், அப்படியல்லவா? எவ்வாறாயினும், எல்லைக்குட்பட்ட ஆசை இருக்கும் ஒருவரால் மாயையை எதிர்க்க முடியாது. இதை நீங்கள் கேட்பதனால் பெற முடியாது. யாராவது ஒருவரிடம் உங்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று கூறமுடியாது. அல்லது மற்றவர்கள் உங்களை மதிக்கும்படி செய்ய முடியாது. எதையாவது கேட்டு நீங்கள் பெற்றால், அது தவறான பாதை. ஆகவே, உங்களின் இலக்கை நீங்கள் எவ்வாறு அடைவீர்கள்? எனவே, மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர் ஆகுங்கள். அப்போது, அனைவரும் இயல்பாகவே உங்களிடம் வருவார்கள். கௌரவத்தைக் கேட்பவர்கள் (ஷான்) கவலைப்படுவார்கள் (பரிஷான்). ஆகவே, மாஸ்ரர் அருள்பவர் என்ற கௌரவத்தைப் பேணுங்கள். ‘எனது, எனது!’ என்று சொல்லாதீர்கள். அனைத்தும் உங்களுடையதே. ‘இது உங்களுடையது(பாபா)’ என நீங்கள் கூறும்போது, அனைவரும் உங்களிடம் ‘இது உங்களுடையது’ என்று கூறுவார்கள். ‘எனது, எனது!’ என நீங்கள் கூறும்போது, உங்களிடம் வருகின்ற எதையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள். ஏனெனில், எங்கு திருப்தி இல்லையோ, அங்கு பேறு இருந்தாலும் இல்லாததைப் போன்றே இருக்கும். திருப்தி இருந்தால், சிறிதளவு இருந்தாலும் அது அனைத்திற்கும் சமமாக இருக்கும். ஆகவே, ‘உங்களுடையது, உங்களுடையது’ என்று கூறுவதன் மூலம், நீங்கள் பேறுகளின் சொரூபம் ஆகுவீர்கள். உள்ளே குவிந்திருக்கும் ஒரு கட்டடத்திற்குள்ளே (டோம்) நீங்கள் ஒலி எழுப்பினால், அது எதிரொலிக்கும். அதேபோன்று, இந்த எல்லையற்ற டோமிற்குள், உங்களின் இதயபூர்வமாக நீங்கள் ‘எனது’ எனக் கூறினால், அதே ‘எனது’ என்ற ஒலியானது அனைவரிடமிருந்தும் உங்களிடம் திரும்பி வரும். ‘எனது’ என நீங்கள் கூறுவீர்கள். அவர்களும் ‘எனது’ என்று கூறுவார்கள். ஆகவே, உங்களின் இதயபூர்வமாக அன்புடன் எந்தளவிற்கு ‘உங்களுடையது(பாபா)’ எனக் கூறுகிறீர்களோ(உங்களின் சொந்த நோக்கங்களுக்காக இல்லாமல்), இதயபூர்வமான அன்புடன் கூறுகின்ற நபருக்கு அனைவரும் ‘உங்களுடையது’ என்று கூறுவார்கள். இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம், உங்களின் எல்லைக்குட்பட்ட ‘எனது’ என்பது எல்லையற்றதாக மாறும். எனவே, எடுப்பவர்களாக இருப்பதற்குப் பதிலாக, நீங்கள் மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர்கள் ஆகுவீர்கள். எனவே, இந்த வருடம், சதா மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவராக இருக்கும் விசேடமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். உங்களுக்குப் புரிகிறதா?

மகாராஷ்டிரா பிராந்தியம் இன்று வந்துள்ளார்கள். எனவே, நீங்கள் மகான் ஆகவேண்டும், அல்லவா? மகாராஷ்டிரா என்றால் சதா மகத்தானவர்கள் என்றும் அனைவருக்கும் அருள்பவர்கள் என்றும் அர்த்தம். மகாராஷ்டிரா என்றால் எப்போதும் நிரம்பியுள்ள பூமி என்று அர்த்தம். அந்த இடம் நிரம்பியதாக இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் மகாத்மாக்களான நீங்கள் நிரம்பியவர்கள். ஆகவே, மகாராஷ்டிரா என்றால் மகாதானி ஆத்மாக்கள் என்று அர்த்தம்.

மற்றைய குழுவினர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உத்தரப்பிரதேசத்திலும், தூய்மையாக்கும் கங்கைக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே, நீங்கள் எப்போதும் பேறுகளின் சொரூபங்கள். ஆவீர்கள். இதனாலேயே, உங்களால் தூய்மையாக்குபவர்கள் ஆகமுடியும். அத்துடன் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தூய்மையின் பொக்கிஷக்களஞ்சியங்கள் ஆவார்கள். நீங்கள் அனைவருக்கும் தூய்மையின் துளியை வழங்கும் மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர்கள் ஆவீர்கள். எனவே, நீங்கள் இருவரும் மகத்தானவர்கள், அல்லவா? மகாத்மாக்களைப் பார்க்கும்போது பாப்தாதாவும் களிப்படைகிறார்.

இரட்டை வெளிநாட்டவர்கள் இரட்டை போதையுடன் இருப்பவர்கள். ஒன்று நினைவின் போதை. மற்றையது சேவையின் போதை. உங்களில் பெரும்பாலானோருக்கு எப்போதும் இந்த இரட்டைப் போதை உள்ளது. இந்த இரட்டைப் போதை உங்களை ஏனைய சகல வகையான போதைகளில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கிறது. எனவே, இந்த இரண்டு ஓட்டப்பந்தயங்களிலும் இரட்டை வெளிநாட்டவர்கள் நல்லதொரு இலக்கத்தைப் பெறுகிறார்கள். நீங்களும் தொடர்ந்து உங்களின் கனவுகளிலும் பாபாவினதும் சேவையினதும் பாடல்களைப் பாடுகிறீர்கள். எனவே, இதுவே மூன்று நதிகளின் சங்கமம் ஆகும். நீங்களே கங்கை, ஜமுனை, சரஸ்வதி ஆவீர்கள். மதுவனம் அல்லாவினால் (அலஹாபாத் - உத்தரப்பிரதேசத்தில் உள்ளதொரு நகரம்) பலன் நிறைந்தது (அபாத்) ஆக்கப்பட்டதோர் உண்மையான இடம் ஆகும். அல்லாவினால் பலன் நிறைந்தது ஆக்கப்பட்ட இடத்தில் மூன்று நதிகளின் சங்கமம் நிகழுகிறது. நல்லது.

சதா மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர்களாக இருப்பவர்களுக்கும், சதா அனைவருக்கும் கொடுக்க விரும்புவர்களுக்கும், தேவர்கள் ஆகப் போகின்றவர்களுக்கும், சதா ‘உங்களுடையது, உங்களுடையது’ என்ற பாடலைப் பாடுபவர்களுக்கும், ஏதாவது குறைவாக இருக்கும் ஆத்மாக்களை நிரம்பியவர்களாகவும் மனநிறைவுடையவர்களாகவும் ஆக்குபவர்களுக்கும், நிரம்பியும் சம்பூரணமாகவும் உள்ள ஆத்மாக்களுக்கும், பாக்கியத்தை அருள்பவரும் ஆசீர்வாதங்களை அருள்பவருமான பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:
சேவை செய்வதன் மூலம், சேவையாளர்கள் சக்திசாலிகள் ஆகுவதுடன், மற்றவர்களைச் சக்தியால் நிரப்புவதற்கும் கருவிகள் ஆகுவார்கள். உண்மையான ஆன்மீக சேவை எப்போதும் உங்களின் சொந்த முன்னேற்றத்திற்கும் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கும் உங்களைக் கருவி ஆக்குகிறது. மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கு முன்னர், நீங்கள் முதலில் உங்களுக்கே சேவை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு ஞானத்தைக் கூறுவதெனில், நீங்கள் அதை முதலில் செவிமடுத்தல் என்று அர்த்தம். ஏனெனில், அது முதலில் உங்களின் காதுகளுக்குள் பிரவேசிக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு ஞானத்தைக் கூற வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் அதை முதலில் கேட்க வேண்டும். ஆகவே, சேவை செய்வதனால் இரட்டை நன்மை உள்ளது: நீங்களும் நன்மை அடைகிறீர்கள், மற்றவர்களும் நன்மை பெறுகிறார்கள். சேவையில் மும்முரமாக இருத்தல் என்றால் இலகுவாக மாயையை வென்றவர் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் மும்முரமாக இல்லாவிட்டால், மாயை வருவாள். சேவையாளர்கள் என்றால் மும்முரமானவர்கள் என்று அர்த்தம். சேவையாளர்களுக்கு வேறெதற்கும் நேரம் கிடையாது. உங்களுக்கு நேரம் இல்லாதபோது, எவ்வாறு மாயை வருவாள்? சேவையாளராக இருத்தல் என்றால், இலகுவாக வெற்றியாளர் ஆகுதல் என்று அர்த்தம். சேவையாளர்களால் இலகுவாக மாலையில் பிரவேசிக்க முடியும். ஏனெனில், அவர்கள் இலகுவாக வெற்றியாளர்கள் ஆகுகிறார்கள். ஆகவே, வெற்றியாளர் ஆத்மாக்கள் வெற்றி மாலைக்குள் பிரவேசிப்பார்கள். சேவையாளர்கள் என்றால் புது போஷாக்கான உணவை உண்பவர்கள் என்று அர்த்தம். புதிய உணவை உண்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ‘புதிய பழங்களையும் காய்கறிகளையும் உண்ணுங்கள் என மருத்துவர்கள் எப்போதும் கூறுவார்கள். ஆகவே, சேவை செய்வதெனில் விற்றமின்களை உட்கொள்ளல்’ என்று அர்த்தம். நீங்கள் இத்தகைய சேவையாளர்கள், அல்லவா? சேவைக்கு அதிகளவு முக்கியத்துவம் உள்ளது. இப்போது, இவற்றைச் சோதித்துப் பாருங்கள். இத்தகைய சேவையை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? சிலருக்கு எவ்வளவு குழப்பம் இருந்தாலும், சேவை அவர்களை சந்தோஷ நடனம் ஆட வைக்கும். ஒருவர் எத்தகைய நோயுற்றிருந்தாலும், சேவை அவரை ஆரோக்கியம் ஆக்கும். சேவை செய்வதனால் உங்களுக்கு நோய் வரும் என்பதில்லை. இல்லை. சேவை நோயுற்றிருப்பவர்களையும் ஆரோக்கியம் ஆக்குகிறது. இத்தகைய அனுபவம் இருக்க வேண்டும். நீங்கள் அத்தகைய விசேடமான சேவையாளர்கள். விசேடமான ஆத்மாக்கள். பாப்தாதா எப்போதும் சேவையாளர்களை ஒரு மேன்மையான உறவுமுறையுடனேயே பார்க்கிறார். ஏனெனில், நீங்கள் சேவை செய்வதற்காகத் துறவிகளாகவும் தபஸ்விகளாகவும் ஆகியுள்ளீர்கள். உங்களின் துறவறத்தையும் தவத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா எப்போதும் களிப்படைகிறார்.

சேவையாளர்கள் அனைவரும் சதா சேவைக்கான கருவிகள் ஆகியுள்ளார்கள். எப்போதும் உங்களை ஒரு கருவியாகக் கருதித் தொடர்ந்து சேவையில் முன்னேறுங்கள். ‘எனது’ என்ற உணர்வு உங்களுக்குள் இல்லையா எனச் சோதித்துப் பாருங்கள். நான் ஒரு சேவையாளன். தந்தை கரவன்ஹார். நான் ஒரு கருவி. தூண்டுகின்ற ஒருவர் என்னைக் கொண்டு செய்விக்கிறார். என்னை அசையச் செய்பவர் என்னை அசைவிக்கிறார். இந்த மேன்மையான உணர்வு உங்களுக்குள் இருந்தால், நீங்கள் எப்போதும் பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருப்பீர்கள். நானே அனைத்தையும் செய்பவனாக இருந்தால், என்னால் பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருக்க முடியாது. ஆகவே, சதா பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருப்பதற்கான இலகுவான வழிமுறையானது: கரவன்ஹாரே என்னை அனைத்தையும் செய்ய வைக்கிறார். இந்த விழிப்புணர்வைப் பேணுங்கள். அப்போது மகத்தான சேவை இடம்பெறும். சேவை இலகுவாகவும் இடம்பெறும். எந்தவிதமான முயற்சியும் இருக்கமாட்டாது. நான் என்ற உணர்வு வலைக்குள் நீங்கள் சிக்கிக் கொள்வதில்லை. அனைத்திற்கும் நீங்கள் ‘பாபா, பாபா’ எனக் கூறினால், வெற்றி ஏற்படும். இத்தகைய சேவையாளர்கள் எப்போதும் முன்னேறிச் செல்வதுடன், மற்றவர்களையும் முன்னேறச் செய்வார்கள். இல்லாவிடின், நீங்களே சிலவேளைகளில் பறக்கும் ஸ்திதியிலும், சிலவேளைகளில் ஏறுகின்ற ஸ்திதியிலும், சிலவேளைகளில் நடக்கும் ஸ்திதியிலும் இருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து தளம்பல் அடைவதுடன், உங்களால் மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்க முடியாதிருக்கும். நீங்கள் எப்போதும் வெறுமனே ‘பாபா, பாபா’ என்று கூறுபவர்கள் அன்றி, அதை நிஜத்தில் பயிற்சி செய்பவர்கள். இத்தகைய சேவையாளர்கள் எப்போதும் பாப்தாதாவிற்கு நெருக்கமாக இருப்பார்கள். எப்போதும் தடைகளை அழிப்பவர்களாக இருப்பார்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் தைரியம், ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளுடன் பறக்கும் ஸ்திதியில் பறக்கின்ற தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக.

பறக்கும் ஸ்திதியின் இரண்டு இறக்கைகள், தைரியமும் ஊக்கமும் உற்சாகமும் ஆகும். எந்தவொரு பணியிலும் வெற்றி பெறுவதற்கு, தைரியத்தையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருத்தல் மிகவும் அத்தியாவசியம் ஆகும். எங்கு ஊக்கமும் உற்சாகமும் இல்லையோ, அங்கு களைப்பு காணப்படும். களைப்படைபவர்களால் வெற்றி பெற முடியாது. தற்காலத்திற்கேற்ப, உங்களிடம் பறக்கும் ஸ்திதி இல்லாவிட்டால், உங்களால் உங்களின் இலக்கைச் சென்றடைய முடியாது. ஏனெனில், முயற்சி என்பது இந்த ஒரு பிறவியிலேயே செய்யப்பட வேண்டும். ஆனால் பேறு என்பது 21 பிறவிகளுக்கு மட்டுமன்றி, கல்பம் முழுவதற்கும் உரியது. ஆகவே, காலத்தின் புரிந்துணர்வு உங்களின் விழிப்புணர்வில் இருக்கும்போது, உங்களின் முயற்சிகள் இயல்பாகவே தீவிரம் அடையும்.

சுலோகம்:
அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்பவர்களே காமதேனுக்கள் ஆவார்கள். (அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் பசு).