03.04.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் புத்துணர்ச்சி அடைவதற்கே தந்தையிடம் வருகின்றீர்கள். இங்கு, நீங்கள் உலக அதிர்வலைகளில் இருந்து தொலைவில் இருப்பதுடன் சத்திய சகவாசத்தையும் பெறுகின்றீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களின் முன்னேற்றத்திற்காக பாபா சதா உங்களுக்குக் கொடுக்கும் அறிவுரை என்ன?
8பதில்:
இனிய குழந்தைகளே, உங்கள் மத்தியில் லௌகீக விடயங்களைப் பற்றி வம்பளக்காதீர்கள். ஒருவர் உங்களுக்கு எதையாவது கூற வரும்பொழுது, அதைக் கேட்டும் கேட்காதீர்கள். நல்ல குழந்தைகள் தங்களுடைய சேவைக்கான பணியைப் பூர்த்திசெய்த பின்னர் பாபாவின் நினைவில் மூழ்கியிருக்கிறார்;கள். எவ்வாறாயினும், சில குழந்தைகள்; பயனற்ற, வீணான விடயங்களை மிகவும் சந்தோஷத்துடன் பேசி, அவற்றைச் செவிமடுக்கின்றார்கள். இதில் அதிகளவு நேரம் வீணாக்கப்படுவதால் முன்னேற்றம் இல்லாதுள்ளது.ஓம் சாந்தி.
‘இரட்டை ஓம் சாந்தி’ என்று கூறப்பட்டிருந்தாலும், அது சரியானதாகும். அதன் அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நான் ஓர் அமைதியான ஆத்மா. எனது தர்மம் அமைதி என்பதால், காடுகளில் அலைந்து திரிவதால், என்னால் அமைதியை அடைய முடியாது. தந்தை கூறுகின்றார்: நானே அமைதியாவேன். இது மிகவும் இலகுவானதாகும், ஆனால் மாயையுடன் யுத்தம் புரிய வேண்டியிருப்பதால், சற்று சிரமமாக உள்ளது. எல்லையற்ற தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடல். சரீரதாரிகளை ஒருபொழுதும் ஞானக்கடல்கள் என்று அழைக்க முடியாது. படைப்பவர் மாத்திரமே படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அதைப் பெறுகிறீர்கள். சில மிகச்சிறந்த, விசேடமான குழந்தைகளும் இதை மறக்கின்றார்கள், ஏனெனில் தந்தையின் நினைவு பாதரசம் போன்றதாகும். நிச்சயமாகப் பாடசாலையில், மாணவர்கள் வரிசைக்கிரமமாக இருப்பார்கள். எப்பொழுதும் பாடசாலையில் இலக்கங்கள் தரப்படுகின்றன. சத்தியயுகத்தில், உங்களுக்கும்; ஒருபொழுதும் ஓர் இலக்கம் கொடுக்கப்பட மாட்டாது. இது ஒரு பாடசாலை, இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதற்கு, பரந்ததொரு புத்தி தேவையாகும். அரைக்கல்பத்திற்குப் பக்தி நிலவுகின்றது, பக்தியின் பின்னர், ஞானக்கடல் ஞானத்தைக் கொடுப்பதற்காக வருகின்றார். ஒருபொழுதும் பக்திமார்க்கத்திற்கு உரியவர்களால் ஞானத்தைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அவர்கள் அனைவரும் சரீரதாரிகள். சிவபாபா பக்தியை மேற்கொள்கின்றார் என்று நீங்கள் கூற மாட்டீர்கள். அவர் யாரிடம் பக்தியைக் கொண்டிருப்பார்? ஒரேயொரு தந்தை மாத்திரமே தனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டிருக்காதவர். அவர் எவரையும் வழிபடுவதில்லை. ஆனால் மனிதர்கள் அனைவரும் படைப்புக்கள் என்பதால் அவர்கள் யாரோ ஒருவரை வழிபடுகின்றார்கள். ஒரே தந்தை மாத்திரம் படைப்பவர், ஆனால் உங்கள் கண்களினால் நீங்கள் பார்க்கின்ற படங்கள் போன்ற அனைத்தும் படைப்பாகும். இவ்விடயங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் மறக்கப்படுகின்றன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: தந்தை இல்லாது, உங்களால் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற முடியாது. நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். பாரதத்தில் 5000 வருடங்களுக்கு முன்னர் அவர்களுடைய இராச்சியம் இருந்தது. சூரிய, சந்திர வம்சங்கள் 2500 வருடங்களுக்கு நீடித்தன. இது நேற்றைய விடயமே என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் அறிவீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு எதையும் கூற முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரம் தூய்மையாக்குபவர்;. விளங்கப்படுத்துவதற்கு அதிகளவு நேரம் எடுக்கின்றது. தந்தையே கூறுகின்றார்: பல மில்லியன் எண்ணிக்கையினரில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரம் புரிந்துகொள்வார்கள். இச்சக்கரமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஞானமும் முழு உலகத்திற்கும் உரியது. ஏணியும் மிகச் சிறந்ததாக இருப்பினும் சிலர் தங்களுக்கென அகங்காரத்தைக் (நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது) கொண்டுள்ளார்கள். திருமணங்களுக்காக மண்டபங்களை வாடகைக்குப் பெறுபவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்தி அவர்களுக்குத் திருஷ்டியைக் கொடுக்க வேண்டும் என்று பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, இவ்விடயங்களை அனைவரும் விரும்புவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்த வேண்டும். பாபா எவரிடமும் செல்ல மாட்டார். கடவுள் பேசுகின்றார்: பூஜிப்பவர்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் என அழைக்க முடியாது. கலியுகத்தில் எவரும் தூய்மையானவர்கள் அல்ல. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களான அதிமேன்மையானவர்களால், பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவதர்மத்தின் ஸ்தாபனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் அரைக் கல்பத்திற்குப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும், அரைக் கல்பத்திற்குப் பூஜிப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த பாபா பல குருமார்களை ஏற்றிருந்தார். குருமார்களை ஏற்பது பக்தி மார்க்கம் என்பதை அவர் இப்பொழுது புரிந்துகொள்கின்றார். தன்னைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகின்ற சற்;குருவை அவர் இப்பொழுது கண்டுவிட்டார். அவர் ஒருவரை மாத்திரம் இவ்வாறு ஆக்குவதில்லை, அவர் உங்கள் அனைவரையும் இவ்வாறு ஆக்குகின்றார். ஆத்மாக்கள் அனைவரும் சதோபிரதானான, பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றார்கள். இப்பொழுது அவர்கள் தமோபிரதான் பூஜிப்பவர்களாக உள்ளார்கள். இக்கருத்துக்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். பாபா கூறுகின்றார்: கலியுகத்தில், தூய்மையான, பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஒருவரேனும் இருக்க முடியாது. விகாரத்தினூடாகவே அனைவரும் பிறவி எடுக்கின்றார்கள். இது இராவண இராச்சியம். இலக்;ஷ்மியும் நாராயணனுமே மறுபிறவிகள் எடுத்தபொழுதிலும், அங்கு இராவணன் இல்லாததால், அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவே உள்ளார்கள். மக்கள் இவ்விடயங்களைப் பேசுகின்றார்கள், ஆனால் எப்பொழுது இராம இராச்சியம் நிலவியது அல்லது எப்பொழுது இராவண இராச்சியம் நிலவியது என்று அவர்களுக்குத் தெரியாது. இந்நேரத்தில், எவ்வளவு சபைகள் (அரசியற் கட்சிகள்) உள்ளன என்று பாருங்கள்: இது இன்ன சபை, இது இன்ன சபை. அவர்கள் ஒருவரிடமிருந்து ஒன்றைப் பெற்ற பின்னர், அதனை விட்டுவிட்டு வேறொன்றுக்குச் செல்கின்றார்கள். இந்நேரத்தில், நீங்கள் தெய்வீகப்புத்தியை உடையவர்கள் ஆகுகின்றீர்கள். அதிலும், சிலர்; 20மூ இவ்வாறு ஆகுகின்றார்கள், ஏனையோர் 50மூ இவ்வாறு ஆகுகின்றார்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இன்னமும் மேலே எஞ்சியிருக்கின்ற ஆத்மாக்களும் கீழே வருகின்றார்கள். ஒரு சாகச வித்தையில், (சர்க்கஸ்) சிலர் மிகச்சிறந்த நடிகர்களாகவும் (சாகசம் செய்பவர்கள்) ஏனையோர்கள் சாதாரணமாகவும் உள்ளார்கள். இது ஓர் எல்லையற்ற விடயம். அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இங்;கு குழந்தைகளாகிய நீங்கள் புத்துணர்ச்சி அடைவதற்கு வருகின்றீர்கள், சோம்பலாக அமர்ந்திருப்பதற்கு அல்ல. உலக அதிர்வலைகளில் சதா இருக்கின்ற, அத்தகைய கல்லுப்புத்தி உடையவர்களைச் சிலர் அழைத்து வருகின்றார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், மாயையை வெற்றி கொள்கின்றீர்கள். மாயை மீண்டும் மீண்டும் உங்களுடைய புத்தியை ஏனைய திசைகளை நோக்கித் திருப்புகின்றாள். இங்கு, பாபா அதனைத் தன்பால் ஈர்க்கின்றார். பாபா ஒருபொழுதும் பிழையானவற்றைக் கூற மாட்டார். தந்தையே சத்தியம் ஆவார். இங்கு நீங்கள் சத்திய சகவாசத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஏனைய அனைவரும் பொய்யான சகவாசத்தில் இருக்கின்றார்கள். அதை ஒரு சத்சங்கம் (சத்திய சகவாசம், ஆன்மீக ஒன்றுகூடல்) என்று அழைப்பது மகா தவறாகும். ஒரேயொரு தந்தை மாத்திரம் சத்தியமானவர் என்பது உங்களுக்குத் தெரியும். மக்கள் உண்மையான பரமாத்மாவைப் பூஜிக்கின்றார்கள், ஆனால் தாங்கள் யாரைப் பூஜிக்கின்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகவே, அது குருட்டு நம்பிக்கை என்று அழைக்கப்படுகின்றது. அகா கானை (யுபய முயn) பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர் எனப் பாருங்கள். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் பெருமளவு அன்பளிப்புக்களைப் பெறுகின்றார். அவர் வைரங்களுக்குச் சமமாக நிறுக்கப்படுகின்றார். பொதுவாக, என்றுமே எவரும் வைரங்களுடன் நிறுக்கப்படுவதில்லை. சத்தியயுகத்தில், உங்களுக்கு இரத்தினங்களும் வைரங்களும் கற்களைப் போன்று இருக்கின்றன, நீங்கள் தொடர்ந்தும் இவற்றைக் கட்டடங்களில் பதிக்கிறீர்கள். இங்கு, எவருக்கும் வைரங்கள் தானம் செய்யப்படுவதில்லை. மக்களிடம் பெருமளவு பணம் உள்ளது, இதனாலேயே அவர்கள் தானம் அதைத் செய்கின்றார்கள். எவ்வாறாயினும். அத் தானமானது பாவாத்மாக்களுக்குச் செய்யப்படுவதனால் தானம் செய்பவரும் சில கர்மாவைச் சேர்த்துக் கொள்கின்றார். அவர்கள் அஜாமிலைப் போன்று பாவாத்மாக்கள் ஆகுகின்றார்கள். இங்கு அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருப்பவர் மனிதரல்லர், கடவுளே ஆவார். இதனாலேயே பாபா கூறியுள்ளார்: உங்களுடைய படங்களில் எப்பொழுதும் எழுதப்பட்டிருக்க வேண்டும்: கடவுள் பேசுகின்றார். எப்பொழுதும் எழுதுங்கள்: திரிமூர்த்தி கடவுள் சிவன் பேசுகின்றார். நீங்கள் “கடவுள்” என்று கூறும்பொழுதும் மக்கள் குழப்பமடைகின்றார்கள். கடவுள் அசரீரியானவர், இதனாலேயே நீங்கள் நிச்சயமாக ‘திரிமூர்த்தி’ எனவும் எழுத வேண்டும்: அதில் சிவபாபா மாத்திரம் இருப்பதில்லை. மூன்று பெயர்கள் உள்ளன: பிரம்மா, விஷ்ணு, சங்கரர். பிரம்ம தேவருக்கு வந்தனங்கள், பின்னர் அவர்களும் அவரைக் குரு என்றும் அழைக்கி;ன்றார்கள். அவர்கள் சிவனும் சங்கரரும் ஒருவரே என்று கூறுகின்றார்கள். உங்களுக்கு எவ்வாறு சங்கரர் ஞானத்தைக் கொடுப்பார்? அமரத்துவக் கதையும் உள்ளது. நீங்கள் அனைவரும் பார்வதிகள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தை உங்கள் அனைவருக்கும் ஞானத்தைக் கொடுக்கின்றார். கடவுள் உங்கள் பக்திக்கான பலனை உங்களுக்குக் கொடுக்கின்றார். சிவபாபா மாத்திரம் உள்ளார், ஈஸ்வரர் அல்லது பகவான் என்பனவுமே இல்லை. ‘சிவ பாபா’ என்ற வார்த்தைகள் மிகவும் இனிமையானவை. தந்தையே கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, ஆகவே அவர் பாபா, அல்லவா? ஆத்மாக்கள் சம்ஸ்காரங்களினால் நிறைந்துள்ளார்கள் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் செயலின் விளைவுகளுக்கு பாதிக்கப்படாதவர்கள் அல்ல. ஆத்மா பாதிக்கப்படாதவராக இருந்தால், எவ்வாறு அவர் தூய்மையற்றவர் ஆகுவார்? அவர் நிச்சயமாகப் பாதிக்கப்படுகின்றார், ஏனெனில் இதனாலேயே அவர் தூய்மையற்றவர் ஆகுகின்றார்; அவர் சீரழிந்தவரும் ஆகுகின்றார். தேவர்கள் மேன்மையானவர்கள். அவர்களுடைய புகழ் பாடப்படுகின்றது: நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தினாலும் நிறைந்தவர்கள், நாங்களோ சீரழிந்த பாவிகள் ஆவோம். ஆகவே, நீங்கள் உங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது. இப்பொழுது தந்தை இங்கமர்ந்திருந்து மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றார். கிரந்தத்தில் இப்புகழ் குரு நானக்கினால் இருக்கின்றது. சீக்கியர்கள் கூறுகின்றார்கள்: சத் ஸ்ரீ அகால். அமரத்துவ ரூபமானவரே உண்மையான சற்;குரு. எனவே, நீங்கள் அவரை மாத்திரம் நம்ப வேண்டும். அவர்கள் கூறுவது ஒன்று, செய்வது வேறொன்றாகும். அவர்களுக்கு எதன் அர்த்தமும் தெரியாது. அமரத்துமானவராகிய, சற்குருவான தந்தை இங்கமர்ந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள். உங்களிற் சிலர் இங்கு தனிப்பட்ட முறையில் முன்னால் அமர்ந்திருந்தாலும் கூட, நீங்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. இங்கிருந்து சிலர் வெளியேறியதுமே, அனைத்தும் முடிவடைந்து விடுகின்றன. பாபா குழந்தைகளாகிய நீங்கள் உலக வம்பளத்தலைச் செவிமடுப்பதைத் தடுக்கின்றார். சில குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக அத்தகைய விடயங்களைச் செவிமடுத்துப் பேசுகின்றார்கள். அவர்கள் தந்தையின் மேன்மையான வாசகங்களை மறக்கின்றார்கள். உண்மையில், சிறந்த குழந்தைகள் தங்களின் சேவைப் பணியைப் பூர்த்திசெய்து பின்னர் தங்களின் சொந்தப் போதையில் மூழ்கியிருப்பார்கள். கிருஷ்ணருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மிகச் சிறந்த தொடர்புள்ளது என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். கிருஷ்ணரின் இராச்சியம் உள்ளது. அவர்களுடைய பெயர்கள் பின்னர் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றன. நீங்கள் “வைகுந்தம்” என்று கூறியதுமே, நீங்கள் உடனடியாகக் கிருஷ்ணரை நினைவுசெய்கின்றீர்கள். ஏனெனில் கிருஷ்ணர் சிறுகுழந்தை ஆதலால், நீங்கள் இலக்ஷ்மி நாராயணனைக் கூட நினைவுசெய்வதில்லை. சிறு குழந்தைகள் தூய்மையானவர்கள். எவ்வாறு ஒரு குழந்தை பிறப்பெடுக்கின்றது என்ற காட்சிகளை நீங்கள் கண்டிருந்தீர்கள். அங்கு மருத்துவ தாதிகள் சமூகமளிக்கின்றார்கள், அவர்கள் குழந்தையை விரைவாக எடுத்து அதைப் பராமரிக்கின்றார்கள். குழந்தைப் பருவம், இளமைப் பருவம், வயோதிபப் பருவம் போன்றவற்றின் பாகங்கள் வேறுபட்டவை. நடப்பவை அனைத்தும் நாடகம் என்று கூறப்படுகின்றது. அதைப் பற்றிய எண்ணங்கள் கிடையாது. இந்நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டதாகும். எனது பாகமும் நாடகத் திட்டத்திற்கமைய நடிக்கப்பட்டு வருகின்றது. மாயையின் அவதாரமும் தந்தையின் அவதாரமும் உள்ளன. சிலர் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள், ஏனையோர் இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். இராவணன் என்றால் என்ன? நீங்கள் எப்பொழுதாவது அவனைப் பார்த்ததுண்டா? நீங்கள் அவனுடைய படங்களைப் பார்த்துள்ளீர்கள். இது சிவபாபாவின் (புள்ளி) ரூபமாகும். இராவணனின் ரூபம் என்ன? ஐந்து விகாரங்களின் தீய ஆவிகள் வரும்பொழுது, அவை இராவணன் என்று அழைக்கப்படுகின்றன. இது அசுரர்களின் உலகமாகிய, தீய ஆவிகளின் உலகமாகும். இப்பொழுது நீங்கள் சீர்திருத்தப்படுகின்றீர்கள் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். இங்கு, சரீரங்களும் அசுர குணமுடையவை. நீங்கள் படிப்படியாகச் சீராகுவதால், ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர், நீங்கள் அச்சரீரங்களை நீக்கி, சதோபிரதான் சரீரங்களைப் பெறுவீர்கள். நீங்கள் தூய சரீரங்களைப் பெறுவீர்கள். அது ஆத்மாக்கள் தூய்மையாகும்பொழுதே ஆகும். தங்கம் தூய்மையாக இருக்கும்பொழுது, அதிலிருந்து செய்யப்படுகின்ற நகையும் தூய்மையாக இருக்கும். அவர்கள் தங்கத்திற்கு மேலும் கலப்படத்தைச் சேர்க்கின்றார்கள். கல்பத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் தொடர்ந்தும் சுழல்கின்றது. மக்களுக்கு முற்றிலுமே எதுவும் தெரியாது. ரிஷிகளும் முனிவர்களும் கூட, “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல) என்று கூறிச் சென்றார்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். நாங்கள் கூறுகின்றோம்: நீங்கள் இலக்ஷ்மி நாராயணனைக் கேட்டிருந்தாலும், அவர்களும் “நேற்றி, நேற்றி” என்றே கூறுவார்கள். எவ்வாறாயினும், இவ்வினாவை ஒருபொழுதும் அவர்களிடம் வினவ முடியாது. அவர்களை யார் வினவுவார்கள்? இவ்வினா குருமார்கள் போன்றவர்களிடம் மாத்திரம் வினவப்படுகின்றது. நீங்கள் அவர்களிடம் இவ்வினாவை வினவ முடியும். அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக நீங்கள் அதிகளவு பிரயத்தனம் செய்கின்றீர்கள். உங்களுடைய தொண்டையும் நோகும். தன்னைப் புரிந்;துகொண்டுள்ள, தனது குழந்தைகளுடன் மாத்திரம் தந்தை பேசுகின்றார். அவர் அமர்ந்திருந்து தனது தலையைத் தேவையில்லாமல் ஏனையோருடன்; அடித்துக் கொள்ள மாட்டார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுடைய சேவைப் பணியைப் பூர்த்திசெய்து உங்களுடைய சொந்தப் போதையில் மூழ்கியிருங்கள். வீணான விடயங்களைச் செவிமடுக்கவோ அல்லது பேசவோ வேண்டாம். ஒரே தந்தையின் மேன்மையான வாசகங்களை மாத்திரம் உங்களுடைய புத்தியில் வைத்திருங்கள். அவரை மறக்காதீர்கள்.2. சதா சந்தோஷமாக இருப்பதற்கு, படைப்பவரினதும் படைப்பினதும் ஞானம் சதா உங்கள் புத்தியில் சுழலட்டும், அதாவது, இதை மாத்திரம் தொடர்ந்தும் கடையுங்கள். எதைப் பற்றியும் எந்த எண்ணங்களையும் கொண்டிருக்க வேண்டாம். இதற்காக, நாடகத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டு. உங்களுடைய பாகத்தை நடியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய விழிப்புணர்வில் அருள்பவரின் வெகுமதியை வைத்திருப்பதால், பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்து, ஒரு கவரும் ரூபம் ஆவீர்களாக.சில குழந்தைகள் தங்களுக்குச் சிலரிடம் பற்று கிடையாது எனவும், ஆனால் தாங்கள் அந்த நபரின் தெய்வீகக் குணங்களை விரும்புவதாக அல்லது அவன் அல்லது அவள் சேவைக்கான பல சிறப்பியல்புகளைக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் சதா ஒரு நபரின் மீது அல்லது ஒரு பொருளின் மீது உங்கள் எண்ணங்களைக் கொண்டிருப்பதுவும் கவர்ச்சியின் ஒரு ரூபமாகும். நீங்கள் எவரதும் சிறப்பியல்பு, தெய்வீக்குணங்கள் அல்லது சேவையைக் காணும்பொழுது, அருள்பவரை மறக்காதீர்கள். அது அருள்பவரிடமிருந்தான ஒரு வெகுமதி ஆகும். இவ் விழிப்புணர்வானது உங்களைப் பற்றிலிருந்து விடுவிப்பதுடன், கவரும் ரூபமாகவும் ஆக்குகின்றது. அப்பொழுது நீங்கள் எவராலும் ஆதிக்கம் செலுத்தப்பட மாட்டீர்கள்.
சுலோகம்:
அலைந்து திரியும் ஆத்மாக்களுக்கு அவர்களுடைய இலக்கைக் காட்டி, அவர்களைக் கடவுளைச் சந்திக்குமாறு செய்கின்ற, அத்தகைய ஓர் ஆன்மீக சமுக சேவையாளர் ஆகுங்கள்.