02.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். நான் ஓர் ஆத்மா, சரீரமல்ல. இதுவே முதற் பாடமாகும். அனைவருக்கும் இப்பாடத்தை மிக நன்றாகக் கற்பியுங்கள்.
கேள்வி:
ஞானத்தை உரைப்பதற்கான வழி என்ன? எவ்வழிமுறையினால் நீங்கள் ஞானத்தை உரைக்க வேண்டும்?
8பதில்:
ஞான விடயங்களைக் கடமைக்காக அன்றி, அதிக சந்தோஷத்துடன் பேசுங்கள், ஒன்றாக அமர்ந்திருந்;து உங்கள் மத்தியில் ஞானத்தைக் கலந்துரையாடுங்கள். ஞானத்தைக் கடைந்து பின்னர் அதை ஏனையோருக்கும் உரையுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி ஆத்மாக்களுக்கு ஞானத்தை உரைத்தால், உங்களைச் செவிமடுப்பவர்களும் சந்தோஷமடைவார்கள்.ஓம் சாந்தி.
தந்தை கூறுகின்றார்: சரீர உணர்வைக் கொண்டிருக்காது, இங்கு ஆத்ம உணர்வில் அமர்ந்திருங்கள், ஏனெனில் ஆத்மாவிலேயே நல்ல, தீய சம்ஸ்காரங்கள் பதிவுசெய்யப்;பட்டுள்ளன. ஆத்மாவே அனைத்தினாலும் பாதிக்கப்படுகின்றார். ஆத்மாவே தூய்மையற்றவர் என்று கூறப்படுகின்றார். “தூய்மையற்ற ஆத்மா” என்று கூறப்படும்பொழுது, அவர் நிச்சயமாக ஓர் உயிருள்ளவராக இருப்பதுடன்;, சரீரத்துடன் இருக்கும் ஆத்மாவாகவும் இருப்பார். கூறப்படுகின்ற முதலாவது விடயம்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி இங்கு அமர்ந்திருங்கள். உங்களை ஒரு சரீரமாகக் கருதாதீர்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி இங்கு அமர்ந்திருங்கள். ஆத்மாவே இப்புலன்களை இயங்கச் செய்கின்றார். மீண்டும் மீண்டும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதால், நீங்கள் பரமாத்மாவை நினைவுசெய்வீர்கள். நீங்கள் உங்களுடைய சரீரத்தை நினைவுசெய்தால், உங்களுடைய சரீரத்தின் தந்தையையே நினைவுசெய்வீர்கள். இதனாலேயே தந்தை கூறுகிறார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதுவே முதற் பாடமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் அழிவற்றவர்களும் சரீரங்கள் அழியக்கூடியவையும் ஆகும். “நான் ஓர் ஆத்மா” என்ற முதற் பாடத்தை நீங்கள் நினைவுசெய்யாத பொழுது, நீங்கள் பலவீனமானவர்கள் ஆகுகிறீர்கள். இந்நேரத்தில், “நான் ஓர் ஆத்மா, சரீரமல்ல” என்ற பாடத்தைத் தந்தை உங்களுக்குக் கற்பிக்;கின்றார். இதை முன்னர் உங்களுக்கு எவரும் கற்பித்ததில்லை. உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குவதற்கும் உங்களுக்கு ஞானத்தைக்; கொடுப்பதற்கும் தந்தை வந்துள்ளார். அவர் கொடுக்கின்ற முதலாவது ஞானம்: ஓ ஆத்மாக்களே, இது பழைய உலகம் ஆதலால், நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆவீர்கள். கண்காட்சிகளில் குழந்தைகளாகிய நீங்கள் பலருக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள். மக்கள் வினாக்களை வினவுகின்றார்கள்;, ஆகவே நீங்கள் பகலில் உங்களுடைய ஓய்வு நேரத்தின்பொழுது, ஒன்றாகச் சந்தித்து, யார் என்ன வினாக்களை வினாவினார்கள், நீங்கள் அவர்களுக்கு என்ன விளங்கப்படுத்தினீர்கள் என்கின்ற செய்திகளைக் கேட்டறியுங்கள். பின்னர், ஒருவர் மற்றவருடன் பேசி அது எவ்வாறு விளங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சிந்தியுங்கள். அனைவரினதும் விளங்கப்படுத்தும் விதம் ஒன்றாக இருக்காது. பிரதான விடயம்: அவர்கள் தங்களை ஆத்மாக்களாகவா அல்லது சரீரங்களாகவா கருதுகின்றார்கள் என்பதாகும். அனைவருக்கும் நிச்சயமாக, இரு தந்தையர்கள் உள்ளனர். அச்சரீரதாரிகள் அனைவரும் ஒரு லௌகீகத் தந்தையையும் ஒரு பரலோகத் தந்தையையும் கொண்டுள்ளார்கள்;. ஓர் எல்லைக்குட்பட்ட தந்தை பொதுவானவர் ஆவார். இங்கு, நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டுள்ளீர்கள். அவர் இங்கு அமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்;கின்றார். அவர் மாத்திரமே தந்தையும் ஆசிரியரும் சற்குருவும் ஆவார். நீங்கள் இதை உறுதியாக்கிக்கொள்ள வேண்டும். நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்துபவர்களுடன் அமர்ந்திருந்;து உங்கள் மத்தியில் மக்கள் உங்களிடம் வினவிய வினாக்களைக் கலந்துரையாட வேண்டும். திறமைசாலிகளும் இக்குழுவில் அமர்ந்திருக்க வேண்டும். உங்களுக்கு பகலில் நேரம் உள்ளது. நீங்கள் உண்டதால் தூக்கத்தை உணர்கின்றீர்கள் என்பதல்ல. அதிகளவில் உண்பவர்கள் தூக்கத்தையும் சோம்பலாக இருப்பதையும் உணர்கின்றார்கள். நீங்கள் பகற்பொழுதில் ஒரு வகுப்பைக் கொண்டிருக்க வேண்டும்: இன்ன இன்னார் இவ்வினாக்களை வினவினார்கள், இவையே நான் அளித்த பதில்கள் ஆகும். அவர்கள் பல்வேறு விதமான வினாக்களை வினவுகிறார்கள்; அவர்கள்; சரியான பதில்களையே விரும்புகிறார்கள். நீங்கள் அவர்களைக் கவர்ந்திPர்களா, அவர்களைத் திருப்திப்படுத்தினீர்களா என்று நீங்கள் சோதிக்க வேண்டும். இல்லாதுவிடின், நீங்கள் திருத்தங்களைச் செய்ய வேண்டும். திறமைசாலிகளும் அமர்ந்திருக்க வேண்டும். நீங்கள் மதியபோசனம் அருந்தியதால், விரைவில் தூங்கிவிடுகின்றீர்கள் என்பதல்ல. தேவர்கள் சந்தோஷத்தைக் கொண்டிருப்பதால், மிகச் சிறிதளவு உணவையே உண்கின்றார்கள். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு எதுவும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் அதிக சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். பிராமணர்கள் ஆகுவதில் பெருமளவு சந்தோஷம் உள்ளது. நீங்கள் பிராமணர்கள் ஆகும் பொழுது, சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். தேவர்கள் சந்தோஷத்தைக் கொண்டுள்ளார்கள் ஏனெனில் அவர்கள் செல்வம், மாளிகைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைத்தையும் கொண்டிருக்கின்றார்கள். எனவே, அவர்களுக்குச் சந்தோஷமே போதுமானதாகும். சந்தோஷத்தில், அவர்கள் மிகச் சிறிதளவு, சூட்சும உணவையே உண்கின்றார்கள். இதுவும் ஒரு நியதியாகும். பெருமளவு உண்பவர்கள் அதிகளவு தூக்கத்தை உணர்கின்றார்கள். தூக்கத்தின் போதையைக் கொண்டிருப்பவர்களால் ஏனையோருக்கு விளங்கப்படுத்த இயலாதிருக்கின்றது. இது அதைச் செய்வதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்பதைப் போன்றுள்ளது. நீங்கள் பெருமளவு சந்தோஷத்துடன் ஞானத்தின் இவ்விடயங்களைப் பற்றிச் செவிமடுத்துப் பேசவேண்டும். அது விளங்கப்படுத்துவதற்கும் மிக இலகுவானதாகும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே பிரதான விடயமாகும். பிரம்மாவை எவருக்கும் தெரியாது. பிரஜாபிதா பிரம்மாவும் மக்கள் பலரும் இருக்கின்றார்கள். பிரஜாபிதா பிரம்மா எதைப் போன்று இருப்பார்? நீ;ங்கள் இதை மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: அவருடைய ஓய்வுபெறும் ஸ்திதியான பல பிறவிகளின் இறுதியில் நான் அவரில் பிரவேசிக்கின்றேன். வேறு எங்கிருந்து நான் ஓர் இரதத்தைப் பெறுவேன்? இந்த இரதம் சிவபாபாவுக்கென நினைவுகூரப்பட்டு வருகின்றது. அவர் எவ்வாறு இரதத்தில் பிரவேசிக்கின்றார் என்பதைப் பற்றி மக்கள் குழப்பம் அடைகின்றார்கள். நிச்சயமாக ஓர் இரதம் தேவைப்படுகின்றது. அது கிருஷ்ணருடைய இரதமாக இருக்கமுடியாது, எனவே அவர் நிச்சயமாக பிரம்மாவினூடாக விளங்கப்படுத்துவார். அவர் மேலிருந்து பேசமாட்டார். எங்கிருந்து பிரம்மா வந்தார்? முழுமையாக 84 பிறவிகளையும் எடுத்தவரினுள் அவர் பிரவேசிக்கின்றார் என்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். இவருக்கே அது தெரியாது, ஆனால் நான் அவருக்குக் கூறுகின்றேன். கிருஷ்ணருக்கு ஓர் இரதம் தேவையில்லை. நீங்கள் கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்பொழுது, பகீரதனாகிய, “பாக்கிய இரதம்” என்னும் விடயம் மறைந்துவிடுகிறது. கிருஷ்ணர் பகீரதன் என அழைக்கப்பட மாட்டார். அவருடைய முதற்பிறவி ஓர் இளவரசர் என்பதாகும். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள் ஞானக்கடலைக் கடைய வேண்டும். சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளவையும் இவ்விடயங்களும் ஒன்றல்ல என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், கடையப்பட்ட ஞானாமிர்தத்தைக் கொண்டுள்ள கலசம் இலக்ஷ்மிக்குக் கொடுக்கப்பட்டது என்பது சரியானதாகும். அவர் ஏனையோருக்கு அமிர்தத்தைப் பருகக் கொடுத்தார், அப்பொழுதே சுவர்க்க வாயில்கள் திறந்தன. எவ்வாறாயினும், பரமாத்மாவாகிய பரமதந்தைக்கு ஞானக்கடலைக் கடையத் தேவையில்லை. அவர் விதை ஆவார். அவர் தன்னில் ஞானத்தைக் கொண்டுள்ளார். அவருக்கு மாத்திரமே தெரியும். உங்களுக்கும் அது தெரியும். நீங்கள் இப்பொழுது நிச்சயமாக இதை மிகத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். இவ்விடயங்களை நீங்கள் புரிந்துகொள்ளும் வரையில், எவ்வாறு நீங்கள் தேவ அந்தஸ்தைக் கோருவீர்கள்? நீங்கள் புத்துணர்ச்சி அடைவதற்காக ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஏனைய அனைவருக்கும் எதுவுமே தெரியாது. தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார்: பக்தி மார்க்கத்திலிருந்து இப்பொழுது உங்களுடைய நங்கூரம் உயர்த்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது ஞானப்பாதையில் செல்கின்றீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குக் கொடுக்கும் ஞானம் பின்னர் மறைந்துவிடுகிறது. இவர் அசரீரியானவரும் மற்றவர் லௌகீகத் தந்தையும் ஆவார். இது உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் மாயை உங்களைக் கவர்ந்து அசுத்தத்தில்; தள்ளித் தூய்மையற்றவர்கள் ஆக்குகிறாள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, காமச்சிதையில் அமர்ந்ததால், நீங்கள் முழுமையாக இடுகாட்டிற்குள் சென்றுவிட்டீர்கள். பின்னர், இங்கு நிச்சயமாக தேவதைகளின் பூமி இருக்கும். அங்கு அரைக் கல்பத்திற்கு தேவதைகளின் பூமியும் பின்னர் அரைக் கல்பத்திற்கு இடுகாடுமே இருக்கும். இப்பொழுது, அனைவரும் இடுகாட்டிற்குள் புதைக்கப்படவுள்ளனர். உங்களால் மிக நன்றாக ஏணிப் படத்தையும் விளங்கப்படுத்த முடியும். இது தூய்மையற்ற இராச்சியம், அது நிச்சயமாக அழியப்போகின்றது. இப்பொழுது இந்த பூமியில் இடுகாடே உள்ளது. பின்னர் இந்த பூமி மாற்றமடையும். அதாவது, கலியுக உலகம் சத்திய யுகமாகும். பின்னர் அது இரு கலைகளால் குறைவடையும். தத்துவங்களின் கலைகளும் தொடர்ந்து குறைவடையும், பின்னர் அவை குழப்பத்தை உருவாக்கும். உங்களால் அனைவருக்கும் மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். அவர்கள் புரிந்துகொள்ளாதுவிடின், அவர்கள் எப்பெறுமதியுமற்ற, சிப்பிகளைப் போன்றவர்கள் ஆவார்கள். தந்தை இங்கு அமர்ந்து உங்களுக்குப் பெறுமதியைக் கூறுகின்றார். “ஒரு வைரத்தைப் போன்ற பிறவி” என்பது நினைவு கூரப்படுகின்றது. முன்னர் நீங்கள்; தந்தையையும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் சிப்பிகளைப் போன்று இருந்தீர்கள். இப்பொழுது தந்தை வந்து உங்களை வைரங்கள் போன்று ஆக்குகிறார். தந்தையிடமிருந்தே நீங்கள் வைரம் போன்றதொரு பிறவியைப் பெறுகின்றீர்கள். எனவே, நீங்கள் ஏன் ஒரு சிப்பியைப் போன்று ஆகுகின்றீர்கள்? நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். பரமாத்மாவிடமிருந்து ஆத்மாக்கள் நீண்ட காலம் பிரிந்திருந்தார்கள் என்பது நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் அமைதி தாமத்தில் இருக்கும்பொழுது, அச்சந்திப்பில் எந்த நன்மையும் இருக்காது. அது தூய்மைக்கும் அமைதிக்குமான ஓர் இடமாகும். இங்கு, நீங்கள் சரீரங்களில் உள்ள ஆத்மாக்கள், தனது சொந்த சரீரத்தைக் கொண்டிருக்காத பரமாத்மாவாகிய தந்தை ஒரு சரீரத்தைத் தத்தெடுத்துக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். உங்களுக்குத் தந்தையைத் தெரியும், நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா! தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தையே! ஒரு லௌகீகத் தந்தை “குழந்தைகளே, வாருங்கள், நான் உங்களுக்குத் தோளி தருவேன்” என்று கூறும்பொழுதும், அனைவரும் விரைவாக ஓடிவருவார்கள். இத் தந்தையும் கூறுகின்றார்: குழந்தைகளே, வாருங்கள், நான் உங்களை வைகுந்தத்தின் அதிபதிகள் ஆக்குவேன், நிச்சயமாக அனைவரும் ஓடி வருகிறார்கள். மக்கள் கூவியழைக்கின்றார்கள்: வந்து தூய்மையற்றவர்களாகிய எங்களைத் தூய்மையானவர்கள் ஆக்கி, எங்களை உலகின் அதிபதிகளாக, அதாவது, தூய உலகின் அதிபதிகளாக ஆக்குங்கள். உங்களுக்கு இந்நம்பிக்கை உள்ளது, எனவே நீங்கள் அவர் என்ன கூறுகின்றார் என்பதைச் செவிமடுக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்களே அவரை அழைத்தவர்கள் ஆவீர்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்காகவே இங்கு வருகின்றேன். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் என்னை அழைத்தீர்கள், நான் இப்பொழுது வந்துவிட்டேன். தந்தையே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். கங்கை நீரால் நீங்கள் தூய்மையாக முடியாது. அரைக் கல்பமாக, நீங்கள் ஒரு தவறான புரிந்துணர்வினால் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். நீங்கள் கடவுளைத் தேடிக்கொண்டிருந்தீர்கள், ஆனால் உங்களில் எவரும் எதையும் புரிந்துகொண்டதில்லை. தந்தை கூறுகிறார்: ஓ குழந்தைகளே, எனவே, குழந்தைகளாகிய நீங்களும் அந்த உற்சாகத்துடன் கூறவேண்டும்: ஓ பாபா! எவ்வாறாயினும், அது அந்தளவு உற்சாகத்துடன் வெளிப்படுவதில்லை. இது ஆத்ம உணர்வு அல்ல, சரீர உணர்வு என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது தந்தையின் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தையை நினைவுசெய்வதால், நிச்சயமாக நீங்கள் எல்லையற்ற இராச்சியத்தை நினைவுசெய்வீர்கள். அத்தகையதொரு தந்தைக்கு மிகுந்த அன்புடன் நீங்கள் பதிலளிக்க வேண்டும். உங்களுடைய அழைப்பின் பேரில் தந்தை வந்துள்ளார். நாடகத்திற்கேற்ப, அது ஒரு நிமிடமேனும் முன்னராகவோ அல்லது பின்னராகவோ இருக்க முடியாது. அனைவரும் கூறுகிறார்கள்: ஓ தந்தையே, கருணை காட்டுங்கள்! எங்களை விடுவியுங்கள்! நாங்கள் அனைவரும் இராவணனின் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ளோம். இப்பொழுது, எங்களுடைய வழிகாட்டி ஆகுங்கள்! எனவே, தந்தை வழிகாட்டியும் ஆகுகின்றார். அனைவரும் அவரைக் கூவியழைக்கின்றார்கள்: ஓ முக்தியளிப்பவரே! ஓ வழிகாட்டியே! வந்து எங்கள் வழிகாட்டி ஆகுங்கள்! எங்களை உங்களுடன் திரும்ப அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். தந்தை சத்தியயுகத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது கலியுகம், அங்கு மில்லியன் கணக்கான மனிதர்கள் உள்ளனர். சத்தியயுகத்தில், தேவர்கள் வெகு சிலரே இருந்தார்கள், எனவே விநாசம் நிச்சயமாக அதற்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும். அதுவும் உங்கள் முன்னால் உள்ளது. அந்நேரம் நினைவுகூரப்படுகின்றது: அவர்கள் விஞ்ஞானத்தின் அகங்காரத்தை உடையவர்கள். அவர்களின் புத்தியால் பல்வேறு கண்டுபிடிப்புக்களை அவர்கள் தொடர்ந்தும் கண்டுபிடிக்கின்றார்கள். அது யாதவ சமுதாயம் ஆகும். பின்னர் வரலாறு மீண்டும் நடைபெற வேண்டும். இப்பொழுது சத்தியயுகத்தின் வரலாறு மீண்டும் நடைபெறும். புதிய உலகில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். இத்தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழியப்போகின்றது என்பதை நீங்;கள் விளங்கப்படுத்துகிறீர்கள். உங்களுடைய குழந்தைகள் போன்றோர்களும் உயிருடன் இருக்க மாட்டார்கள். அவர்களில் எவரும் உங்களுடைய வாரிசுகளாகவோ அல்லது மணம்முடிக்கவோ மாட்டார்கள். அதிக காலம் கடந்து சென்றுவிட்டது, ஒரு குறுகிய காலம் மாத்திரமே எஞ்சியுள்ளது. மிகக் குறுகிய காலமே உள்ளது, அதன் கணக்கு உள்ளது. முன்னர், நீங்கள் இதைக் கூறவில்லை. இப்பொழுது சிறிதளவு காலமே எஞ்சியுள்ளது. ஆரம்பத்தில் இங்கிருந்து தமது சரீரங்களை நீக்கியுள்ளவர்கள் தாங்கள் செய்த முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, இன்னுமொரு பிறவியை எடுத்துள்ளார்கள். சிலர் இங்கும் வந்திருப்பார்கள். அந்த ஆத்மா இங்கிருந்து சென்றுள்ளவரே எனக் காணக்கூடியதாகவும் இருக்கும். அவர் ஞானத்தைத் தவிர எதனாலும் களிப்படைய மாட்டார். அவர் அங்கு (ஒரு நிலையத்திற்கு) செல்வார் என்று தனது பெற்றோருக்கும் கூறுவார். இவ்விடயங்கள் இலகுவில் புரிந்துகொள்ளப்படுகின்றன. விநாசம் நிச்சயமாக நடைபெற வேண்டும். யுத்தத்திற்கான முன்னேற்பாடுகளையும் உங்களால் பார்க்க முடியும். அவர்களின் அரைவாசி வருமானம் யுத்தம் போன்றவற்றிற்கான போர்த் தளபாடங்களில் பயன்படுத்தப்படுகின்றது. எவ்வகையான ஆகாய விமானங்கள் போன்றவற்றை அவர்கள் தயாரிக்கின்றார்கள் என்று பாருங்கள். அவர்கள் கூறுகிறார்கள்: வீட்டில் அமர்ந்திருக்கும்போதே அனைத்தும் அழிக்கப்படும். அவர்கள் தொடர்ந்தும் அத்தகைய விடயங்களைச் செய்கின்றார்கள். வைத்தியசாலைகள் போன்றவை எவையும் எஞ்சியிருக்க மாட்டாது. அது நாடகத்தில் அவர்கள் இச் சமிக்ஞைகளைத் தந்தையிடமிருந்து பெறுவதைப் போன்றுள்ளது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மக்கள் நோயில் வாய்ப்படுகிறார்கள் என்பதாக அது இருக்கக்கூடாது என அவர்கள் உணர்கின்றார்கள். அனைவரும் நிச்சயமாக மரணிக்க வேண்டும். “இராமர் சென்றதும் இராவணனும் சென்றான்”. யோகத்தில் நிலைத்திருந்து தமது ஆயுட்காலத்தை அதிகரிப்பவர்கள், நிச்சயமாக ஒரு நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டிருப்பார்கள். பிரம்ம தத்துவத்திற்குச் செல்வதற்காகத் தங்களின் சரீரங்களைச் சந்தோஷமாக நீக்குகின்ற பிரம்ம கியானிகளின் உதாரணங்களைப் போன்று, அவர்கள் சொந்த விருப்பத்தில், தங்களுடைய சரீரங்களைச் சந்தோஷமாக நீக்;குவார்கள். எவ்;வாறாயினும், அவர்களில் எவரும் பிரம்ம தத்துவத்திற்குச் செல்லவும் மாட்டார்கள், அவர்களின் பாவங்கள் அழிக்கப்படுவதுமில்லை. இன்னமும், அவர்கள் இங்கு மறுபிறவி எடுக்கின்றார்கள். உங்களுடைய பாவங்களை அழிப்பதற்கான வழியைத் தந்தை உங்களுக்குக் காண்பிக்கின்றார். சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். வேறு எவரையும் நினைவுசெய்யாதீர்கள். நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணனைக்கூட நினைவுசெய்யக் கூடாது. இம்முயற்சியைச் செய்வதால், நீங்கள் அந்த அந்தஸ்தைக் கோரிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது. எங்களுடைய முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, அந்த அந்தஸ்தைக் கோருவதற்காக, நாங்கள் கற்றுக் கொண்டிருக்கின்றோம். சங்கம யுகமாகிய இந்நேரத்தில், தந்தையால் ஸ்தாபிக்கப்படுகின்ற அவர்களுடைய வம்சம் தொடர்கின்றது. அது, மக்களின் புத்திகளில் மிகச்சரியாக இருக்கின்ற வகையில் நீங்கள் சொற்பொழிவுகளை ஆற்ற வேண்டும். இந்நேரத்தில், நாங்கள் இறை சமுதாயமும் சகோதர சகோதரிகளாகிய பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களும் ஆவோம். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவோம். பிரம்மா குமாரர்களும் குமாரிகளும் மணம் முடிப்பதில்லை. எவ்வாறு சிலர் வீழ்கின்றார்கள் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். காமத்தீ அவர்களை எரிக்கின்றது. எவ்வாறாயினும், நீங்கள் ஓருமுறை வீழ்ந்தால். நீங்கள் சம்பாதித்துள்ள வருமானம் முழுவதும் இழக்கப்பட்டுவிடும் என்கின்ற பயம் உள்ளது. நீங்கள் காமத்தால் தோற்கடிக்கப்பட்டால், உங்களுடைய அந்தஸ்து அழிக்கப்படும். வருமானம் மிகவும் மகத்தானதாகும். மக்கள் பல மில்லியன்களைச் சம்பாதிக்கின்றார்கள். ஒரு குறுகிய காலத்திற்குள் அவை அனைத்தும் அழியப்போகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. குண்டுகளை உற்பத்தி செய்பவர்களுக்கு, இவ்வுலகம் அழியப்போகின்றது என்பது தெரியும். யாரோ தங்களைத் தூண்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும், எனவே தாங்கள் அவற்றைத் தொடர்ந்தும் செய்வதாகவும் அவர்கள் நம்புகின்றார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்குள்; ஞானத்தை அரையுங்கள், அதாவது, ஞானக்கடலைக் கடையுங்கள். உங்கள் மத்தியில் ஞானத்தைக் கலந்துரையாடுவதுடன், ஏனையோருக்கும் விளங்கப்படுத்துங்கள். சோம்பேறித்தனத்தைத் துறவுங்கள்.2. ஆத்ம உணர்வுடையவர்களாகி, அதிக உற்சாகத்துடன் தந்தையை நினைவு செய்யுங்கள். சிப்பிகளிலிருந்து வைரங்கள் ஆகுவதற்காகவே நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள் என்ற போதையில் எப்பொழுதும் நிலைத்திருங்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள்.
ஆசீர்வாதம்:
ஆசீர்வாதம்: உங்கள் மனதையும் புத்தியையும் உங்கள் மேன்மையான ஸ்திதிகள் என்ற ஆசனத்தில் ஸ்திரமாக அமர்த்தி தபஸ்யாவின் சொரூபம் ஆகுவீர்களாக.ஒரு தபஸ்வி எப்பொழுதும் ஏதோ ஒரு ஆசனத்தில் அமர்ந்தே தபஸ்யா செய்வார். தபஸ்வி ஆத்மாக்களாகிய உங்களது ஆசனம் தேவதை ஸ்திதியான ஸ்திரமான ஸ்திதியாகும். இந்த மேன்மையான ஸ்திதிகளில் உங்களை ஸ்திரப்படுத்துதல் என்றால் ஆசனத்தில் அமர்வதாகும். பௌதீக சரீரம் பௌதீக ஆசனத்தில் அமர்கின்றது, ஆனால் நீங்கள் உங்கள் மனதையும் புத்தியையும் இந்த மேன்மையான ஆசனத்தில் அமர்த்துகிறீர்கள். அந்த தபஸ்விகள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள், ஆனால் நீங்கள் உங்களை நிலையான ஸ்திரமான ஸ்திதியில் நிலைத்திருக்கச் செய்கிறீர்கள். அவர்களுடையது ஹத்தயோகம் ஆனால் உங்களுடையதோ இலகுயோகமாகும்.
சுலோகம்:
அன்புக்கடலான தந்தையின் குழந்தைகளான நீங்கள் அன்பு கங்கையினால் நிறைந்துள்ளீர்கள்.