29.09.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 16.02.85 Om Shanti Madhuban
உங்களின் ஒவ்வொரு மூச்சிலும் ஒலிக்கும் சந்தோஷ சங்கீதம், இந்த மேன்மையான பிறப்பின் பரிசு ஆகும்.
இன்று, கள்ளங்கபடமற்ற பிரபுவும் (போலாநாத்), கள்ளங்கபடமற்ற பொருளாளருமான தந்தை, தனது அதிகபட்ச அன்பான, சகல பொக்கிஷங்களின் அதிபதிகளான, சதா ஒத்துழைக்கும் இலகு யோகிக் குழந்தைகளுடன் சந்திப்பைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். நீங்கள் இப்போது அதிபதிகள். எதிர்காலத்திலும் அதிபதிகள் ஆகுவீர்கள். தற்சமயம், நீங்கள் குழந்தைகள். அதனால் உலகைப் படைப்பவரின் அதிபதிகள். அத்துடன் நீங்கள் எதிர்கால உலகிலும் அதிபதிகளாக இருப்பீர்கள். அதிபதிகளாக இருக்கும் தனது குழந்தைகளைக் காண்பதில் பாப்தாதா களிப்படைகிறார். இதுவே குழந்தையாகவும் அதிபதியாகவும் இருக்கும் அலௌகீக போதையும் சந்தோஷமும் ஆகும். நீங்கள் சதா பாக்கியசாலிகளாகவும் நிறைந்தவர்களாகவும் இருக்கும் மேன்மையான ஆத்மாக்கள், அல்லவா? இன்று, தந்தையின் அவதாரத்தின் பிறந்தநாளை மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் குழந்தைகள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள். பாப்தாதா கூறுகிறார்: தந்தையின் பிறந்தநாள், குந்தைகளின் பிறந்தநாளாகவும் உள்ளது. இதனாலேயே இது அற்புதமானதொரு பிறந்தநாள் ஆகும். பொதுவாக, ஒரே நாளில் ஒரு தந்தையினதும் அவரின் குழந்தையினதும் பிறந்தநாள் இருக்காது. ஒரேநாளில் அது வருமா? ஒரு தந்தையின் பிறந்தநாளும், அவரின் குழந்தையின் பிறந்தநாளும் ஒன்றாக இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா? இது அலௌகீகப் பிறந்தநாள். குழந்தை பிரம்மாவின் உடலில் தந்தை பிரவேசித்த அந்தக் கணத்தில், அதே தினத்தில், அதே வேளையில், பிரம்மாவின் அலௌகீகப் பிறப்பு ஏற்பட்டது. எனவே, இந்தப் பிறந்தநாட்கள் ஒன்றாக உள்ளன, அப்படியல்லவா? பிரம்மாவின் பிறந்தநாளுடன், இது விசேடமான பிராமணர்களினதும் பிறந்தநாள் ஆகும். ஆகவே, பிரம்மாவின் தெய்வீகப் பிறப்பினதும் சிவபாபாவின் அவதாரத்தினதும் நாள், நேரம், திசைகள் அனைத்தும் ஒன்றேயாகும். தந்தை சிவனும் குழந்தை பிரம்மாவும் என்றிருந்தாலும், அதாவது, பரமாத்மாவும் மகாத்மாவும் என்றிருந்தாலும், பிரம்மா தந்தைக்குச் சமமானவர் ஆகினார். சமம் ஆகியதால், அவர்கள் ஒன்றிணைந்த ரூபம் ஆகினார்கள். பாப்தாதா என்று நீங்கள் கூறும்போது, இரண்டு வார்த்தைகளையும் சேர்த்தே கூறுகிறீர்கள். பிரித்து அல்ல. அதேபோன்று, விசேடமான பிராமணர்களும் பிரம்மாகுமார்கள், பிரம்மாகுமாரிகள் எனும் ரூபத்தில் பாப்தாதாவுடன் அவதரித்துள்ளார்கள்.
ஆகவே, பிரம்மா என்ற பெயரும் குமார்கள், குமாரிகள் என்ற பெயரும் தந்தையினதும் குழந்தைகளினதும் ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வே ஆகும். எனவே, பிராமண வாழ்க்கையில் குழந்தைகள் அவதரித்த பிறந்தநாளைக் (ஆண்டுவிழா) கொண்டாடுவதற்கே பாப்தாதா வந்துள்ளார். நீங்கள் அனைவரும் அவதாரங்கள், அல்லவா? அவதாரமாக இருத்தல் என்றால், ‘நான் தெய்வீக வாழ்க்கை வாழும் ஒரு பிராமண ஆத்மா’ என்ற மேன்மையான விழிப்புணர்வுடன் இருத்தல் ஆகும். ஆகவே, இது ஒரு புதுப்பிறவி, அல்லவா? நீங்கள் அந்த பௌதீகச் சரீரங்களில் மேன்மையான விழிப்புணர்வுடன் அவதரித்து, உலக நன்மை என்ற பணியில் கருவிகள் ஆகியுள்ளீர்கள். எனவே, நீங்கள் அவதாரங்கள், அல்லவா? தந்தை அவதரித்ததைப் போன்று, நீங்கள் அனைவரும் உலக மாற்றம் என்ற பணிக்காக அவதரித்துள்ளீர்கள். மாற்றம் அடைவதற்கு, அவதாரம் நிகழ்கிறது. எனவே, இது அவதாரங்களின் ஒன்றுகூடல். தந்தையினுடையதைப் போன்றே, இது பிராமணக் குழந்தைகளான உங்களின் அலௌகீகப் பிறந்தநாளும் ஆகும். எனவே, குழந்தைகள், தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுவார்களா? அல்லது, தந்தை, குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவாரா? அல்லது, நீங்கள் அனைவரும் ஒன்றாக இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடுவீர்களா? பக்தர்கள் தொடர்ந்து ஞாபகார்த்தங்களையே கொண்டாடுகிறார்கள். ஆனால், நீங்களோ தனிப்பட்ட முறையில் தந்தையுடன் கொண்டாடுகிறீர்கள். இத்தகைய மேன்மையான பாக்கியம், இத்தகைய ஒவ்வொரு கல்பத்துக்கும் உரிய அழியாத பாக்கிய ரேகை வரையப்படுகிறது. உங்களின் பாக்கியம் கடவுளுடன் உள்ளது என்ற விழிப்புணர்வை எப்போதும் வைத்திருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் பாக்கியத்தை அருள்பவரிடமிருந்து நேரடியாகப் பாக்கியத்தை அடையும் பாக்கியம் உள்ளது. நீங்கள் இரட்டைக்கதாநாயகர்கள். ஹீரோ பாகத்தை நடிப்பவர்கள். அத்துடன் ஹீரா (வைரம்) போன்ற பெறுமதியான வாழ்க்கை வாழ்பவர்கள். எனவே, நீங்கள் இரட்டை ஹீரோக்கள், அல்லவா? கதாநாயக பாகத்தை நடிக்கும் ஆத்மாக்களான உங்களின் மீதே முழு உலகின் பார்வையும் உள்ளது. இன்று, இந்த இறுதிப் பிறவியில், கல்பத்தின் இறுதிக் காலப்பகுதியில், பாக்கியசாலி ஆத்மாக்களான உங்களின் நினைவானது, ஞாபகார்த்த வடிவில் இப்போதும் உள்ளது. தந்தையினதும் பிராமணர்களினதும் வார்த்தைகள் புராணங்களின் வடிவில் ஞாபகார்த்தங்கள் ஆகியுள்ளன. அதனால், இன்றும், அவர்கள் ஓரிரு வார்த்தைகளைக் கேட்கும் தாகத்துடன் இருக்கிறார்கள். சில வார்த்தைகளைக் கேட்பதன் மூலம், அவர்கள் அமைதியையும் சந்தோஷத்தையும் அனுபவம் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
பாக்கியசாலி ஆத்மாக்களான உங்களின் மேன்மையான செயல்கள், இப்போதும் தெய்வீகச் செயல்களின் வடிவில் நினைவு செய்யப்படுகின்றன. பாக்கியசாலி ஆத்மாக்களான உங்களின் மேன்மையான உணர்வுகளைக் கொண்ட மேன்மையான எண்ணங்களும் மேன்மையான நல்லாசிகளும் ஆசீர்வாதங்களின் வடிவில் நினைவுகூரப்படுகின்றன. எந்தவொரு தேவரின் முன்னாலும் சென்று மக்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறார்கள். பாக்கியசாலி ஆத்மாக்களான உங்களின் மேன்மையான விழிப்புணர்வின் ஞாபகார்த்தம் இப்போதும் நினைவின் ரூபத்தில் நினைவுகூரப்படுகிறது. மக்கள் நினைவினை அதிகளவில் புகழுகிறார்கள். அவர்கள் மாலையின் பெயரை அல்லது வடிவத்தை நினைவு செய்தாலும், விழிப்புணர்வின் ஞாபகார்த்தம் நினைவின் வடிவில் தொடர்கிறது. எனவே, நீங்கள் எவ்வாறு அதிபாக்கியசாலிகள் ஆகினீர்கள்? நீங்கள் பாக்கியத்தை அருள்பவரால் பாக்கியசாலிகள் ஆகினீர்கள். எனவே, உங்களின் பிறப்பு எத்தனை அதிர்ஷ்டம் வாய்ந்தது என்றும் தெய்வீகமானது என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டீர்களா? பாப்தாதாவான இறைவன், இத்தகைய பாக்கியசாலிக் குழந்தைகளுக்கு, அவர்களின் தெய்வீகப் பிறப்புக்காக வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். சதா வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். இவை ஒரு தினத்திற்கான வாழ்த்துக்கள் அல்ல. இந்தப் பாக்கியப் பிறப்பு, ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு கணமும் பாராட்டுக்கள் நிறைந்தது. உங்களின் இந்த மேன்மையான பிறப்பை நீங்கள் அறிவீர்கள், அல்லவா? ஒவ்வொரு மூச்சிலும் சந்தோஷ சங்கீதம் இசைக்கிறது. நீங்கள் மூச்சு விடுவதாக அன்றி, அது சந்தோஷ சங்கீதமாக உள்ளது. உங்களால் அந்த சங்கீதத்தைக் கேட்க முடிகிறதல்லவா? இயற்கையான அந்த சங்கீதம் எத்தனை மேன்மையானது! இந்தத் தெய்வீகப் பிறப்பின் சந்தோஷ சங்கீதம் என்றால், இந்தத் தெய்வீகப் பிறப்பின் மேன்மையான பரிசு உங்களின் மூச்சே ஆகும். நீங்கள் பிராமணப் பிறப்பை எடுத்ததும், நீங்கள் சந்தோஷ சங்கீதத்தைப் பரிசாகப் பெற்றீர்கள், அல்லவா? நீங்கள் சங்கீதம் இசைக்கும்போது, உங்களின் விரல்கள் மேலேயும் கீழேயும் போய்வருகின்றன, அல்லவா? அதேபோன்று, மூச்சு விடுவதும் மேலேயும் கீழேயும் (உள்ளேயும் வெளியேயும்) செல்கிறது. எனவே, மூச்சு விடுதல் என்றால் சங்கீதம் இசைத்தல் என்று அர்த்தம். மூச்சை நிறுத்தமுடியாது. எனவே, சங்கீதத்தையும் நிறுத்தமுடியாது. அனைவரின் சந்தோஷ சங்கீதமும் நன்றாக இசைக்கிறதல்லவா? இரட்டை வெளிநாட்டவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் கள்ளங்கபடமற்ற பிரபுவிடமிருந்து சகல பொக்கிஷங்களையும் எடுத்து, உங்களின் பொக்கிஷக் களஞ்சியங்களை நிரப்பிவிட்டீர்கள், அல்லவா? எனவே, உங்களின் பொக்கிஷக் களஞ்சியங்கள் 21 பிறவிகளுக்கு நிரம்பியிருக்கும். அவற்றை நிரப்புவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. நீங்கள் உங்களின் வெகுமதியைச் சௌகரியமாகப் பெறுவீர்கள். இப்போது நீங்கள் செய்யும் முயற்சி, 21 பிறவிகளுக்கான வெகுமதியை உங்களுக்குப் பெற்றுத்தரும். 21 பிறவிகளுக்கு, நீங்கள் சதா முழுமையான ரூபத்தில் இருப்பீர்கள். எனவே, நீங்கள் என்ன முயற்சியைச் செய்தீர்கள்? அதற்கு முயற்சி தேவையா? முயற்சி என்றால்;, உங்களை ஓர் உயிராக, அதாவது, இந்த இரதத்தில் உள்ள ஆத்மாவாகக் கருதுவதாகும். இது முயற்சி என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் இந்த முயற்சியைச் செய்தீர்கள், அல்லவா? இந்த முயற்சியின் பலனாக, நீங்கள் 21 பிறவிகளுக்கு சதா சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பீர்கள். இப்போதும், சங்கமயுகம் களிப்பிற்குரிய யுகம் ஆகும். குழப்பத்திற்குரிய யுகம் அல்ல. இது களிப்பிற்குரிய யுகம். எதையிட்டும் குழப்பம் ஏற்பட்டால், அதற்குக் காரணம், இந்த சங்கமயுகத்தில் நீங்கள் சிலவேளைகளில் உங்களின் பாதங்களைக் கலியுகத்தை நோக்கித் திருப்புவதே ஆகும். உங்களின் எண்ணங்கள், அதாவது, உங்களின் புத்தியெனும் பாதங்கள் சங்கமயுகத்தில் இருந்தால், நீங்கள் சதா களிப்புடன் இருப்பீர்கள். சங்கமயுகம் இருவரின் சந்திப்பு நிகழும் யுகம் ஆகும். தந்தையும் குழந்தைகளும் சந்திப்பதற்கான யுகமே சங்கமயுகம் ஆகும். எங்கு சந்திப்பு நிகழ்கிறதோ, அங்கு களிப்பு இருக்கும். எனவே, இது களிப்புடன் கொண்டாடும் பிறப்பு, அப்படியல்லவா? குழப்பம் அடைவதற்கான பெயரோ அல்லது சுவடோ இங்கில்லை. களிப்பான வேளையில், மிகுந்த ஆன்மீகக் களிப்புடன் கொண்டாடுங்கள். இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் இரட்டைக் களிப்புடன் இருப்பவர்கள், அல்லவா? இத்தகைய களிப்பான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். உலகில் குழப்பம் அடையும் பல ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அவ்வாறில்லை. ஏற்கனவே அவ்வாறானவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் உங்களில் சிலரே களிப்புடன் கொண்டாடுகிறீர்கள். உங்களின் இந்த மேன்மையான பிறப்பை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? பொதுவாக, சோதிடர்கள் நாள், நேரம், திசைகளின் அடிப்படையில் உங்களின் அதிர்ஷ்டத்தைக் கூறுவார்கள். உங்களின் திசைகள் என்ன? நாள் என்ன? தந்தையின் பிறந்தநாளுடன் இது பிராமணர்களின் பிறந்தநாளும் ஆகும். எனவே, இறைவனின் பிறந்தநாளே உங்களுடைய பிறந்தநாளும் ஆகும்.
இறைவனின் அவதாரம், அதாவது, தெய்வீகப் பிறப்பின் கணமே உங்களின் பிறப்பின் கணமும் ஆகும். இது மேன்மையான கணம். இது சகுனங்கள் என்று அழைக்கப்படும் மேன்மையான ரேகை ஆகும். எனவே, உங்களின் பிறந்தநாள் தந்தையின் பிறந்த நாளை ஒத்தது என்ற ஊக்கத்தையும் உற்சாகத்தையும் எப்போதும் உங்களின் இதயத்தில் வைத்திருங்கள். பிரம்மாவால் பிராமணர்கள் இன்றி எதையும் செய்ய முடியாது. பிரம்மா இன்றித் தந்தை சிவனால் எதையும் செய்ய முடியாது. எனவே, அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள், அல்லவா? ஆகவே, எப்போதும் பிறந்த நாளினதும் பிறந்த நேரத்தினதும் முக்கியத்துவத்தை நினைவில் வைத்திருங்கள். ஆத்மாக்களான நாங்களும் கடவுள் அவதரித்த அதே வேளையில் அவதரித்தவர்கள். பெயரும் அதே ஒலியைக் கொண்டுள்ளது: பிரம்மா, பிராமணர்கள். பிரம்மாகுமார்கள், பிரம்மாகுமாரிகள். பெயரின் ஒலியும் மேன்மையானது. இத்தகைய மேன்மையான பிறப்பையும் வாழ்க்கையையும் கொண்ட குழந்தைகளைக் காண்பதில் தந்தை எப்போதும் களிப்படைகிறார். குழந்தைகள் கூறுகிறார்கள்: ஆஹா பாபா, ஆஹா! தந்தை கூறுகிறார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! எவருக்கும் இத்தகைய குழந்தைகள் இருக்க மாட்டார்கள்.
இந்தத் தெய்வீக நாளிற்கான விசேட பரிசாக, அன்பான குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதா இரண்டு பொன்னான வாசகங்களைக் கொடுக்கிறார். முதலில், எப்போதும் உங்களுக்காக இந்த எண்ணத்தைக் கொண்டிருங்கள்: ‘நான் தந்தையின் கண்களின் இரத்தினம்.’ கண்களின் இரத்தினம் என்றால், எப்போதும் கண்களில் அமிழ்ந்திருப்பவர் என்று அர்த்தம். கண்களில் அமிழ்ந்திருக்கும் ரூபம் புள்ளி ஆகும். கண்களில், புள்ளியே (கண்மணி) அற்புதம். எனவே, கண்களின் இரத்தினம் என்றால் தந்தையில் அமிழ்ந்திருக்கும் புள்ளி என்று அர்த்தம். நான் அன்பிலே அமிழ்ந்துள்ளேன். எனவே, முதலில், நான் கண்களின் இரத்தினம் என்ற பொன்னான வாசகங்களை நினைவு செய்யுங்கள். இரண்டாவதாக, ‘எனக்கு எப்போதும் தந்தையின் சகவாசம் உள்ளது. தந்தையின் கரங்கள் என்மீது உள்ளன.’ உங்களிடம் அவரின் சகவாசமும் உள்ளது. அவரின் கரமும் உள்ளது. ஆசீர்வாதங்கள் என்ற கரங்களும் ஒத்துழைப்பெனும் சகவாசமும் எப்போதும் உங்களிடம் உள்ளன. எனவே, உங்களிடம் எப்போதும் தந்தையின் சகவாசமும் அவரின் கரமும் உள்ளன. அவரின் சகவாசத்தைப் பெறுவதற்கு நீங்கள் உங்களின் கரத்தைக் கொடுக்க வேண்டியதில்லை. அது சதா உங்களிடம் உள்ளது. இரண்டாவது பொன்னான வாசகம்: உங்களிடம் எப்போதும் அவரின் சதா சகவாசமும் அவரின் சதா கரமும் உள்ளன. உங்களின் தெய்வீகப் பிறந்த நாளுக்கான இன்றைய பரிசு இதுவேயாகும். அச்சா.
எங்கும் உள்ள சதா மேன்மையான, பாக்கியசாலிக் குழந்தைகளுக்கும், ஒவ்வொரு மூச்சிலும் சந்தோஷ சங்கீதத்தை சதா அனுபவிக்கும் குழந்தைகளுக்கும், இரட்டை ஹீரோ குழந்தைகளுக்கும், சதா இறைவனினதும் தமது பாக்கியத்தினதும் விழிப்புணர்வின் சொரூபங்களாக இருப்பவர்களுக்கும், சகல பொக்கிஷக் களஞ்சியங்களால் எப்போதும் நிரம்பி வழியும் பொக்கிஷக் களஞ்சியங்களைக் கொண்டுள்ள குழந்தைகளுக்கும், கள்ளங்கபடமற்ற பிரபுவும் அமரத்துவத் தந்தையுமான, பாக்கியத்தை அருள்பவரிடமிருந்து தெய்வீகப் பிறப்பிற்குப் பற்பல வாழ்த்துக்களும் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா தாதிகளைச் சந்திக்கிறார்:
எல்லையற்ற பாபாவின் அன்புக் கரங்கள் மிகப் பெரியவை. நீங்கள் அனைவரும் இந்த அன்புக் கரங்களின் அன்பு அரவணைப்பில் இருக்கிறீர்கள். குழந்தைகளான நீங்கள் அனைவரும் எப்போதும் தந்தையின் கரங்களில், அவரின் கரங்களின் மாலையில் இருக்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆவீர்கள். நீங்கள் பிரம்மாவுடன் பிறப்பெடுக்கும் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். நேரத்தில் வேறுபாடு இல்லை. இதனாலேயே, பிரம்மா பல முகங்களுடன் காட்டப்பட்டுள்ளார். பிரம்மா ஐந்து முகங்களுடன் அல்லது மூன்று முகங்களுடன் காட்டப்பட்டுள்ளார். ஏனெனில், பிரம்மாவுடன் கூடவே பிராமணர்களும் இருக்கிறார்கள். எனவே, நீங்கள் மூன்று முகங்களைக் கொண்டிருப்பவர்களா? அல்லது ஐந்து முகங்களைக் கொண்டிருப்பவர்களா? முகமும் ஒத்துழைக்கும். தந்தைக்கும் போதை உள்ளது. எதையிட்டு? எந்தவொரு தந்தையாலும் இந்த முழு உலகிலும் தேடினாலும் இத்தகைய குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியுமா? (இல்லை). தந்தை கூறுவார்: என்னால் இத்தகைய குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாது. குழந்தைகள் கூறுகிறார்கள்: எங்களால் இத்தகையதொரு தந்தையைக் கண்டுபிடிக்க முடியாது. இது நல்லது. குழந்தைகளே வீட்டின் அழகு ஆவார்கள். தந்தை மட்டும் இருந்தால் அந்த வீட்டில் அழகு இருக்காது. இதனாலேயே, குழந்தைகளே இந்த உலகெனும் வீட்டின் அழகு ஆவார்கள். இத்தனை பிராமணர்களில் அழகை ஏற்படுத்துவதற்குக் கருவிகள் ஆகியவர்கள் யார்? குழந்தைகளான நீங்களே அவ்வாறு ஆகியவர்கள், அல்லவா? குழந்தைகளின் அழகைக் காண்பதில் தந்தையும் களிப்படைகிறார். உங்களை விட அதிகமான மாலைகளின் மணிகளைத் தந்தை உருட்ட வேண்டியுள்ளது. நீங்கள் ஒரேயொரு தந்தையையே நினைக்கிறீர்கள். ஆனால் தந்தையோ, பல மாலைகளின் மணிகளை உருட்ட வேண்டியுள்ளது. பக்தி மார்க்கத்தில் அவருக்குப் படைக்கப்பட்ட பல மாலைகளின் மணிகளை அவர் உருட்ட வேண்டியுள்ளது. ஒரு நாளேனும் ஒரு குழந்தையின் மாலையை உருட்டாமல் இருப்பது என்பது தந்தைக்குச் சாத்தியமில்லை. எனவே, தந்தையும் தீவிர பக்தர், அப்படியல்லவா? தந்தை ஒவ்வொரு குழந்தையினதும் சிறப்பியல்புகளினதும் நற்குணங்களினதும் மாலையின் மணிகளை உருட்டுகிறார். எத்தனை தடவைகள் அவர் அவற்றை நினைக்கிறாரோ, அந்தளவிற்கு அவர்களின் நற்குணங்களும் சிறப்பியல்புகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன. தந்தை மாலையை உருட்டுகிறார். ஆனால், அவர் குழந்தைகளான உங்களுக்கு அந்த மாலையின் பலனைத் தந்துள்ளார். அவர் தனக்காக அதை எடுத்துக் கொள்வதில்லை. அச்சா. பாப்தாதா எப்போதும் குழந்தைகளான உங்களுடனேயே இருக்கிறார். அவரால் ஒரு கணமேனும் குழந்தைகளான உங்களிடமிருந்து பிரிந்திருக்க முடியாது. அவர் விரும்பினாலும் அவரால் பிரிந்திருக்க முடியாது. ஏன்? குழந்தைகள் அவரை அதிகளவில் நினைவு செய்கிறார்கள். எனவே, அவர் அதற்கான பதிலைக் கொடுக்க வேண்டும், அல்லவா? அவரை நினைப்பதன் பலனை அவர் கொடுக்க வேண்டும், அல்லவா? எனவே, அவரால் ஒரு விநாடியேனும் குழந்தைகள் இல்லாமல் இருக்க முடியாது. தந்தை எப்போதும் உங்களுடனேயே இருக்கும், அவர் ஒருபோதும் குழந்தைகளிடமிருந்து பிரியாதிருக்கும் அற்புதத்தை நீங்கள் ஒருபோதும் கண்டிருக்க மாட்டீர்கள். இத்தகைய எந்தவொரு தந்தையையும் குழந்தையையும் நீங்கள் ஒருபோதும் கண்டிருக்க மாட்டீர்கள். மிக நல்லதொரு பூந்தோட்டம் தயாராகியுள்ளது. நீங்கள் அனைவருமே பூந்தோட்டம் போன்றவர்கள், அல்லவா? ஒவ்வொருவரின் நறுமணமும் அழகானதும் தனித்துவமானதும் ஆகும். இதனாலேயே, அல்லாவின் பூந்தோட்டம் நினைவு செய்யப்படுகிறது.
நீங்கள் அனைவரும் ஆதி இரத்தினங்கள். ஒவ்வொரு இரத்தினத்திற்கும் அதிகளவு பெறுமதி உள்ளது. ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு பணியிலும் ஒவ்வோர் இரத்தினமும் தேவைப்படுகிறார். எனவே, நீங்கள் அனைவரும் இன்றும் இரத்தினங்களின் வடிவில் பூஜிக்கப்படும் மேன்மையான இரத்தினங்கள் ஆவீர்கள். நீங்கள் இப்போது பல ஆத்மாக்களுக்குத் தடைகளை அழிப்பவராக இருக்கும் சேவையைச் செய்கிறீர்கள். இதனாலேயே, இரத்தினங்களான நீங்கள் ஒவ்வொருவரும் மிகவும் பெறுமதிவாய்ந்தவர்கள் என்ற ஞாபகார்த்தம் உள்ளது. ஒவ்வோர் இரத்தினத்திற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்பு உள்ளது. சிலர் தடைகளை அழிப்பவர்கள். சிலர் வேறு வகையான இரத்தினங்கள். எனவே, இப்போது இறுதிக் கணங்களிலும், ஞாபகார்த்தத்தின் பௌதீக ரூபம் சேவை செய்கிறது. நீங்கள் இத்தகைய சேவையாளர்கள் ஆகியுள்ளீர்கள். உங்களுக்குப் புரிகிறதா?
கருத்தரங்கிற்காக வந்திருக்கும் வெளிநாட்டு விருந்தினர்களை அவ்யக்த பாப்தாதா சந்திக்கிறார்:
நீங்கள் அனைவரும் எங்கு வந்துள்ளீர்கள்? நீங்கள் தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளீர்கள். இதை நீங்கள் உணர்கிறீர்களா? தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளது விருந்தினர்களா அல்லது குழந்தைகளா? நீங்கள் உரிமையுள்ள குழந்தைகளா அல்லது விருந்தினரா? நீங்கள் தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளீர்கள். உரிமையுள்ள குழந்தைகளே எப்போதும் தந்தையின் வீட்டுக்கு வருகிறார்கள். இப்பொழுதில் இருந்து, உங்களை விருந்தினராகக் கருதாதீர்கள்;. ஆனால், தந்தையின் குழந்தைகளான மகாத்மாக்களாகக் கருதி, முன்னேறுங்கள். நீங்கள் பாக்கியசாலிகள் என்பதனால் இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள். இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இங்கு வருகின்ற பாக்கியம் உங்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இப்போது, எப்போதும் தந்தையுடன் இருங்கள்: நினைவில் இருப்பதென்றால், அவருடன் இருத்தல் என்று அர்த்தம். தனியாகச் செல்லாதீர்கள். நீங்கள் எங்கு ஒன்றிணைந்த ரூபத்தில் சென்றாலும், நீங்கள் செய்யும் எத்தகைய செயல்களையும் ஒன்றிணைந்த ரூபத்தில் இருந்தவண்ணம் செய்தாலும், எப்போதும் அவற்றை இலகுவானதாகவும் வெற்றிநிறைந்ததாகவும் நீங்கள் அனுபவம் செய்வீர்கள். நீங்கள் செல்வதற்கு முன்னர், அவருடன் எப்போதும் இருப்பீர்கள் என்ற எண்ணத்தை நிச்சயமாக வைத்திருங்கள். நீங்கள் முயற்சி செய்வீர்கள் என்றோ அல்லது அதைப் பற்றிச் சிந்திப்பீர்கள் என்றோ இல்லை. ஆனால் நீங்கள் இதைச் செய்ய வேண்டும். ஏனெனில் திடசங்கற்பமே வெற்றியின் திறவுகோல். எனவே, எப்போதும் இந்தத் திறவுகோலை உங்களுடன் வைத்திருங்கள். உங்களுக்கு என்ன பொக்கிஷம் தேவைப்பட்டாலும், உங்களுக்கு அந்த எண்ணம் தோன்றியதும் நீங்கள் அந்தப் பொக்கிஷத்தைப் பெறும் வகையில் இந்தச் சாவி உள்ளது. எப்போதும் இந்தச் சாவியை உங்களுடன் வைத்திருங்கள். அதாவது, எப்போதும் வெற்றி பெறுங்கள். இப்போது நீங்கள் விருந்தாளிகள் அல்ல. ஆனால், உரிமையுள்ள ஆத்மாக்கள். உரிமையுள்ள இத்தகைய குழந்தைகளைக் காண்பதில் பாப்தாதா களிப்படைகிறார். உங்களுக்கு எத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டிருந்தாலும், சதா அந்த அனுபவங்களின் பொக்கிஷங்களைப் பகிருங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக அவற்றைப் பகிர்கிறீர்களோ, அந்தளவிற்கு அவை அதிகரிக்கும். எனவே, ஒரு மகாதானி ஆகுங்கள். அவற்றை உங்களுடனேயே வைத்திருக்காதீர்கள். அச்சா.
அதிகாலை 3.30 மணிக்கு விடைபெறும் வேளையில்:
குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் காலைவணக்கங்களும். நீங்கள் இந்த இரவை அழகான சந்திப்பில் கழித்ததைப் போன்று, சதா இரவு பகலையும் தந்தையின் சந்திப்பின் களிப்பில் கொண்டாடுங்கள். சங்கமயுகம் முழுவதிலும், நீங்கள் தந்தையிடமிருந்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற வேண்டும். நீங்களும் முன்னேறித் தொடர்ந்து மற்றவர்களையும் முன்னேறச்செய்யுங்கள். சதா ஒரு மகாதானியாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் இருங்கள். அத்துடன் ஆத்மாக்கள் அனைவருக்கும் தானத்தையும் ஆசீர்வாதத்தையும் வழங்குங்கள். அச்சா.
இத்தகைய உலக உபகாரிகளுக்கும், சதா கருணைநிறைந்தவர்களுக்கும், அனைவருக்கும் சதா நல்லாசிகளைக் கொண்டிருப்பவர்களுக்கும், அன்பும் நினைவும் காலை வணக்கங்களும் உரித்தாகட்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இனங்காணும் சக்தியால், சுய மாற்றத்தை ஏற்படுத்தும் தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக.
எந்தவொரு மாற்றத்திற்குமான இலகுவான அடிப்படை, இனங்காணும் சக்தியே. உங்களுக்குள் இனங்காணும் சக்தி வரும்வரை, உங்களால் அனுபவசாலி ஆகமுடியாது. நீங்கள் அனுபவசாலி ஆகும்வரை, விசேடமான பிராமண வாழ்க்கையின் அத்திவாரம் உறுதியாக இருக்க முடியாது. அத்துடன் ஊக்கம், உற்சாகத்துடனான எந்தவிதச் செயலும் இருக்காது. இனங்காணும் சக்தி உங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனுபவசாலி ஆக்குவதனால், நீங்கள் தீவிர முயற்சியாளர் ஆகுகிறீர்கள். இனங்காணும் சக்தி இலகுவாக உங்களில் எல்லா வேளைக்கும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சுலோகம்:
உங்களின் பௌதீக ரூபத்தில் அன்பு வெளிப்பட்டு, தந்தை பிரம்மாவைப் போன்றவர் ஆகுங்கள்.