24.02.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 26.04.84 Om Shanti Madhuban
தனித்துவமான ஆன்மீக ஒன்றுகூடலில் உள்ள சகல பொக்கிஷங்களினதும் பேறுகள்.
இன்று, பாப்தாதா சந்திப்பிற்காகக் குழந்தைகளிடம் உள்ள அன்பைப் பார்க்கிறார். நீங்கள் அனைவரும் ஏன் வெகு தொலைவில் இருந்து வந்துள்ளீர்கள்? நீங்கள் ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளீர்கள். அதாவது, நீங்கள் ஓர் ஒன்றுகூடலுக்குள் வந்துள்ளீர்கள். இந்த ஆன்மீக ஒன்றுகூடலே தனித்துவமான ஒன்றுகூடல் ஆகும். இந்த ஒன்றுகூடலின் சந்திப்பு தனித்துவமானது. அத்துடன் விசித்திர (சரீரம் அற்ற) ஆத்மாக்கள் விசித்திர தந்தையைச் சந்திக்கும் சந்திப்பு ஆகும். இது கடலினதும் நதிகளினதும் ஒன்றுகூடல் ஆகும். இது இறை குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் சந்திக்கும் ஒன்றுகூடல் ஆகும். ஒரு நேரத்திற்கான இந்தச் சந்திப்பு, பல தடவைகளுக்கான பேறுகளை உங்களுக்குத் தருகிறது. இந்த ஒன்றுகூடலில் திறந்த பொக்கிஷங்களும் திறந்த பொக்கிஷக் களஞ்சியங்களும் உள்ளன. நீங்கள் எதையும் செலவழிக்காமல் நீங்கள் விரும்பிய அளவு பொக்கிஷங்களை உங்களின் உரிமையாகப் பெற்றுக் கொள்ள முடியும். இதுவும் அதிர்ஷ்ட இலாபமே. நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களால் பாக்கியத்தின் மேன்மையான அதிர்ஷ்ட இலாபத்தைப் பெற முடியும். அதிர்ஷ்ட இலாபத்திற்குரிய சீட்டினை இப்போது நீங்கள் வாங்குவதாகவும், பின்னரே வெற்றி இலக்கம் அறிவிக்கப்படுவதாகவும் இருக்க மாட்டாது. இப்போது நீங்கள் எதை எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, உங்களின் பாக்கிய ரேகையைத் திடசங்கற்பத்துடன் எந்தளவிற்கு நீண்டதாக நீங்கள் வரைய விரும்புகிறீர்களோ, அதை உங்களால் செய்ய முடியும். உங்களால் ஒரு விநாடியில் அதிர்ஷ்ட இலாபத்தைக் கோர முடியும். இந்த ஒன்றுகூடலில், உங்களால் பல பிறவிகளுக்கு இராஜ அந்தஸ்திற்கான உரிமையைக் கோர முடியும். அதாவது, இந்த ஒன்றுகூடலில் உங்களால் பல பிறவிகளுக்கு உலகின் அரசராகக்கூடிய, இராஜயோகி ஆகமுடியும். உங்களுக்கு விரும்பிய அளவு பேறுகளுக்கான ஆசனத்தை உங்களால் பதிவு செய்து கொள்ள முடியும். இந்த ஒன்றுகூடலில், அனைவரும் விசேடமான பொன்னான வாய்ப்பைப் பெறுகிறார்கள். அந்தப் பொன்னான வாய்ப்பானது: உங்களின் இதயபூர்வமாக ‘எனது பாபா’ எனக் கூறி, தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருங்கள். இந்த ஒன்றுகூடலில் நீங்கள் விசேடமான பரிசையும் பெறுகிறீர்கள். அந்தப் பரிசானது, சிறியதொரு சந்தோஷமான, சம்பூரணமான உலகம் ஆகும். அதில் எல்லா வேளையும் நீங்கள் விரும்பியதைப் பெற முடியும். இந்தச் சிறிய உலகம் தந்தைக்குள் உள்ளது. இந்த உலகில் வாழ்பவர் எப்போதும் பேறுகளினதும், சந்தோஷத்தினதும் அலௌகீக ஊஞ்சல்களில் ஆடுகிறார். இந்த உலகில் வாழ்பவர், எப்போதும் சரீரங்களின் சேறு எனும் தூய்மையின்மைக்கு அப்பாற்பட்டிருப்பதுடன், சதா தேவதைகளைப் போன்று பறக்கும் ஸ்திதியில் தொடர்ந்து பறக்கிறார். அவர்கள் சதா இரத்தினங்களுடன் விளையாடுகிறார்;கள். அவர்கள் சதா இறை சகவாசத்தை அனுபவம் செய்கிறார்;கள்: நான் உங்களுடனேயே உண்கிறேன். நான் நீங்கள் கூறுவதையே கேட்கிறேன். நான் உங்களுடனேயே பேசுகிறேன். உங்களுடன் சகல உறவுமுறைகளுக்குமான பொறுப்பை நான் நிறைவேற்றுகிறேன். நான் உங்களின் ஸ்ரீமத்திற்கேற்பவும் அறிவுறுத்தல்களுக்கேற்பவும் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கிறேன். அவர்கள் சதா ஊக்கமும் உற்சாகமும் மிக்க இந்தப் பாடல்களைத் தொடர்ந்து பாடுகிறார்;கள். நீங்கள் இத்தகையதோர் உலகை இந்தச் சந்திப்பிற்கான ஒன்றுகூடலில் காண்கிறீர்கள். இந்த மேன்மையான ஒன்றுகூடலில் நீங்கள் தந்தையைக் கண்டுகொள்கிறீர்கள், உலகையும் கண்டுகொள்கிறீர்கள். எனவே, நீங்கள் இத்தகையதோர் ஒன்றுகூடலுக்கு வந்துள்ளீர்கள், அல்லவா? ஒன்றுகூடலை அவதானிக்கும்போது, நீங்கள் ஒரு பேற்றில் மட்டும் மூழ்கி இருப்பதனால் ஏனைய பல பேறுகளைப் பெறாமல் விடுவதாக இருக்கக்கூடாது. சகல பேறுகளையும் பெற்றபின்னர் இந்த ஆன்மீக ஒன்றுகூடலில் இருந்து திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் அதிகளவைப் பெற்றுள்ளீர்கள் என்ற சந்தோஷத்துடன் திரும்பிச் செல்லாதீர்கள். அனைத்தையும் பெற்றபின்னர் திரும்பிச் செல்லுங்கள். இப்போதும், ஒன்றுகூடலில் சகல பேறுகளையும் பெற்றுவிட்டீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். பொக்கிஷங்கள் திறந்திருப்பதனால், நிரப்பிக் கொண்டு திரும்பிச் செல்லுங்கள். திரும்பிச் சென்ற பின்னர், ‘நான் இதைச் செய்திருக்கலாம், நான் செய்ய வேண்டியளவு செய்யவில்லை’ எனக் கூறாதீர்கள். நீங்கள் இவ்வாறு கூறமாட்டீர்கள், அல்லவா? ஆகவே, இந்த ஒன்றுகூடலின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? ஒன்றுகூடலைக் கொண்டாடுவதெனில், மகான் ஆகுதல் என்று அர்த்தம். வெறுமனே வந்து போவதல்ல. ஆனால், முழுமையான பேற்றின் சொரூபம் ஆகுதல். நீங்கள் இத்தகையதோர் ஒன்றுகூடலைக் கொண்டாடினீர்களா? கருவி சேவையாளர்கள் என்ன நினைக்கிறீர்கள்? வளர்ச்சி வழிமுறையையும் மாற்றுகிறது. வளர்ச்சி இருத்தல் அவசியம். ஒவ்வொரு வழிமுறையாலும் நிரம்பியவராகவும் திருப்தியுடனும் இருப்பதும் அத்தியாவசியம் ஆகும். இப்போது, குறைந்தபட்சம், நீங்கள் தந்தையும் குழந்தையும் என்ற உறவுமுறையில் சந்திப்பதுடன் நெருங்கியும் வருகிறீர்கள். பின்னர், ஒரு கணநேரத் தரிசனமே உங்களுக்குக் கிடைக்கும். அச்சா.
ஆன்மீக ஒன்றுகூடலைக் கொண்டாடும் அனைவருக்கும், சகல பேறுகளின் முழுமையான உரிமைகளைக் கோருபவர்களுக்கும், சதா சந்தோஷம் மிக்க சம்பூரணமான உலகில் இருப்பவர்களுக்கும், சதா பேறுகளினதும் சந்தோஷத்தினதும் பாடல்களைப் பாடுபவர்களுக்கும், சதா மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்களுக்கும், கீழ்ப்படிவான, தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும், நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
ஆசிரியர்களுக்கு:
நீங்கள் சதா நினைவினதும் சேவையினதும் சமநிலையைப் பேணுவதுடன், சதா தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைக் கோருபவர்களும் ஆவீர்கள். எங்கு சமநிலை உள்ளதோ, அங்கு நீங்கள் இயல்பாகவே தந்தையிடமிருந்து நல்லாசிகளைப் பெறுவது மட்டுமன்றி, ஆசீர்வாதங்களையும் பெறுகிறீர்கள். எங்கு சமநிலை இல்லையோ, அங்கு ஆசீர்வாதங்கள்; இருக்காது. ஆசீர்வாதங்களைக் கொண்டிராது விட்டால், வருந்தியுழைக்க நேரிடும். ஆசீர்வாதங்களைப் பெறுவதெனில், நீங்கள் பேறுகள் அனைத்தையும் பெறுவதாகும். நீங்கள் இத்தகைய ஆசீர்வாதங்களைப் பெறும் சேவையாளர்கள், அல்லவா? நீங்கள் சதா ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்கள். நிலையான, ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பவர்கள். ஒரேயொருவரின் வழிகாட்டல்களின்படி செயற்படுபவர்கள். நீங்கள் இத்தகைய குழுவினர், அல்லவா? நீங்கள் ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றும்போது, அங்கு சதா வெற்றி ஏற்படும். எனவே, நீங்கள் ஆசீர்வாதங்களை அருள்பவரான, தந்தையிடமிருந்து ஒவ்வோர் அடியிலும் சதா ஆசீர்வாதங்களைப் பெறுபவர்கள். நீங்கள் இத்தகைய உண்மையான சேவையாளர்கள். சதா உங்களை இலேசாகவும் ஒளியாகவும் கருதித் தொடர்ந்து சேவை செய்யுங்கள். நீங்கள் எந்தளவிற்கு இலேசாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்குச் சேவையிலும் இலேசான தன்மை காணப்படும். சேவையில் இலேசான தன்மை இருக்கும் அளவிற்கு, இலகுவாக உங்கள் அனைவராலும் பறக்கக்கூடியதாக இருப்பதுடன், மற்றவர்களையும் பறக்கச் செய்ய முடியும். இலேசாகவும் ஒளியாகவும் இருந்தவண்ணம் சேவை செய்வதும், நினைவில் இருந்தவண்ணம் சேவை செய்வதுமே வெற்றிக்கான அடிப்படை ஆகும். நீங்கள் நிச்சயமாக அந்தச் சேவைக்கான உடனடிப் பலனைப் பெறுகிறீர்கள்.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
சங்கமயுகமே சகல பேறுகளையும் என்றென்றும் பெறுவதற்கான யுகம் ஆகும். சங்கமயுகமே மேன்மை அடைவதற்கும் மற்றவர்களை மேன்மையாக்குவதற்குமான யுகம் ஆகும். எனவே, இத்தகைய யுகத்தில் தமது பாகங்களை நடிக்கும் ஆத்மாக்கள் மிக மேன்மையானவர்கள் ஆகியுள்ளார்கள். எனவே, நீங்கள் சங்கமயுகத்தில் மேன்மையான ஆத்மாக்கள் என்ற விழிப்புணர்வு உங்களுக்கு எப்போதும் உள்ளதா? சகல பேறுகளின் அனுபவமும் உங்களுக்கு உள்ளதா? ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையிடமிருந்து பெறும் பேறுகளால் முழுமையாகவும் நிரம்பியும் இருப்பதாகக் கருதுகிறீர்களா? நீங்கள் உங்களையும் பராமரித்து, அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கக்கூடிய வகையில் நிரம்பியவர்கள் ஆகுங்கள். தந்தையின் பொக்கிஷக் களஞ்சியங்கள் நிரம்பி வழியும் எனக் கூறப்படுவதைப் போன்று, குழந்தைகளான உங்களின் பொக்கிஷக் களஞ்சியங்களும் எப்போதும் நிரம்பியுள்ளன. அவை ஒருபோதும் வெறுமை ஆகமுடியாது. நீங்கள் ஒருவருக்குக் கொடுக்கும் அளவிற்கேற்ப, அது அதிகரிக்கிறது. சங்கமயுகத்தின் சிறப்பியல்பு உங்களின் சிறப்பியல்பும் ஆகும். நீங்கள் சகல பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் சங்கமயுக ஆத்மாக்கள் ஆவீர்கள். இந்த விழிப்புணர்வைப் பேணுங்கள். சங்கமயுகமே அதிமேன்மையான யுகம் ஆகும். எனவே, இந்த யுகத்தில் தமது பாகங்களை நடிப்பவர்களும் அதிமேன்மையானவர்கள், அப்படியல்லவா? உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரும் உங்களுடன் ஒப்பிடும்போது சாதாரணமானவர்களே. ஆத்மாக்களான நீங்கள் அலௌகீகமானவர்களும் தனித்துவமானவர்களும் ஆவீர்கள். அந்த ஆத்மாக்களுக்கு ஞானம் இல்லை. ஆனால் நீங்களோ ஞானோதயம் பெற்றவர்கள். அவர்கள் சூத்திரர்கள். நீங்களோ பிராமணர்கள். அவர்கள் துன்ப பூமியைச் சேர்ந்தவர்கள். நீங்களோ சங்கமயுகத்தைச் சேர்ந்தவர்கள். சங்கமயுகமும் ஒரு சந்தோஷ பூமியே. நீங்கள் பலவகையான துன்பங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். பற்றற்ற பார்வையாளர்களாக, இப்போது இந்த உலகம் சந்தோஷமற்றிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். ஆனால், அவர்களுடன் ஒப்பிடுகையில், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். உங்களால் வேறுபாட்டை உணர முடிகிறதல்லவா? ஆகவே, சதா நீங்களே மேன்மையான சங்கமயுகத்தின் மேன்மையான ஆத்மாக்கள், சந்தோஷ சொரூபங்களான ஆத்மாக்கள் என்ற விழிப்புணர்வைப் பேணுங்கள். உங்களுக்குள் சந்தோஷமும் மகத்துவமும் இல்லாவிடின், அது வாழ்க்கை இல்லை!
நீங்கள் எப்போதும் நினைவின் சந்தோஷத்துடன் இருக்கிறீர்கள், அல்லவா? சந்தோஷமே மகத்தான ஆசீர்வாதமும் மருந்தும் ஆகும். எப்போதும் இந்த மருந்தையும் சந்தோஷ ஆசீர்வாதத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பதனால், சரீரத்தின் கர்மக் கணக்குகள் உங்களை இழுக்காது. நீங்கள் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருந்து, சரீரத்தின் கர்மக் கணக்குகளைத் தீர்க்கிறீர்கள். கர்ம வேதனை எத்தனை கடுமையாக இருந்தாலும், அதுவும் சிலுவையில் அறைவதில் இருந்து முள்ளாக மாறும். அது பெரிய விடயம் போன்று தோன்றாது. இவை கர்மக் கணக்குகள் என்ற புரிந்துணர்வு உங்களுக்கு உள்ளது. அதனால் சந்தோஷத்துடன் தமது கர்மக் கணக்குகளைத் தீர்ப்பவர்களுக்கு அனைத்தும் இலகுவானதாகும். ஞானம் அற்ற ஆத்மாக்கள் விரக்தியில் அழுவார்கள். ஆனால், ஞானோதயம் பெற்ற ஆத்மாக்களோ எப்போதும் ‘ஆஹா இனிய பாபா! ஆஹா நாடகம்!’ என்ற விழிப்புணர்வுடன் இருப்பார்கள். சதா சந்தோஷப் பாடல்களைப் பாடுங்கள். வாழ்க்கையில் நீங்கள் எதை அடைய வேண்டும் என விரும்பினீர்களோ, அதைப் பெற்று விட்டீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் விரும்பிய சகல பேறுகளையும் நீங்கள் இப்போது பெற்றுவிட்டீர்கள். சகல பேறுகளினதும் நிரம்பிவழியும் பொக்கிஷம் உங்களிடம் உள்ளது. எங்கு பொக்கிஷக் களஞ்சியங்கள் எப்போதும் நிரம்பி வழிகின்றனவோ, அங்கு சகல துன்பமும் வேதனையும் முடிந்துவிடுகின்றன. உங்களின் பாக்கியத்தைப் பார்த்தவண்ணம் எப்போதும் மலர்ச்சிநிறைந்தவராக இருங்கள்: ஆஹா எனது மேன்மையான பாக்கியமே! எப்போதும் இந்தப் பாடலை உங்களின் மனதில் தொடர்ந்து பாடுங்கள். உங்களின் பாக்கியம் மிகவும் மகத்தானது. உலகிலுள்ள மக்கள் குழந்தைகள், செல்வம், செழிப்பைத் தமது பாக்கியமாகப் பெறுகிறார்கள். ஆனால், நீங்கள் இங்கே எதைப் பெறுகிறீர்கள்? நீங்கள் பாக்கியத்தை அருள்பவரையே உங்களின் பாக்கியமாகப் பெற்றுள்ளீர்கள். பாக்கியத்தை அருள்பவர் உங்களுக்குச் சொந்தமாக இருக்கும்போது, வேறு என்ன எஞ்சியுள்ளது? நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? நீங்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டுச் செயற்படுவதில்லை, அல்லவா? உங்களின் மூத்தவர்கள் கூறுவதைக் கேட்டு நீங்கள் செயற்படுதல், நீங்கள் செவிமடுப்பதைக் கேட்டுச் செயற்படுதல் எனப்படுகிறது. எனவே, அதைக் கேட்பதனால் மட்டும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? அல்லது உங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்துகொள்கிறீர்களா? நீங்கள் அனைவரும் அனுபவசாலிகளா? சங்கமயுகம் அனுபவம் செய்வதற்கான யுகம் ஆகும். இந்த யுகத்தில் உங்களால் சகல பேறுகளையும் அனுபவம் செய்ய முடியும். நீங்கள் இப்போது எதை அனுபவம் செய்கிறீர்களோ, அது சத்தியயுகத்தில் உங்களுக்குக் கிடைக்காது. இப்போது உங்களிடம் உள்ள விழிப்புணர்வானது சத்தியயுகத்தில் அமிழ்ந்து போய்விடும். இங்கு, நீங்கள் தந்தையைக் கண்டடைந்திருப்பதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்கள். அங்கு, தந்தை என்ற கேள்விக்கே இடமில்லை. சங்கமயுகம் மட்டுமே இதை அனுபவம் செய்வதற்கான ஒரேயொரு யுகம் ஆகும். எனவே, நீங்கள் அனைவரும் இந்த யுகத்தில் அனுபவசாலிகள் ஆகிவிட்டீர்கள். அனுபவசாலி ஆத்மாக்களால் மாயையால் ஏமாற்றப்பட முடியாது. நீங்கள் ஏமாறும்போதே துன்பத்தை அனுபவிக்கிறீர்கள். அனுபவ அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் ஏமாறுவதில்லை. அவர்கள் சதா வெற்றியைத் தொடர்ந்து பெறுவார்கள். அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள். எனவே, தற்போதைய பருவகாலத்தின் ஆசீர்வாதத்தை நினைவுசெய்யுங்கள்: நீங்கள் சகல பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் திருப்தி ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள் மற்றவர்களையும் திருப்தி அடையச் செய்பவர்கள். அச்சா.
பாப்தாதா வருமானவரி உத்தியோகத்தருடன் பேசுகிறார்:
நீங்கள் உங்களின் வீட்டிற்கு வந்திருப்பதைப் புரிந்துகொண்டுள்ளீர்கள், அல்லவா? இது யாரின் வீடு? இது இறைவனின் வீடு. எனவே, இது அனைவரினதும் வீடு. ஆகவே, இது உங்களின் வீடும் அல்லவா? நீங்கள் வீட்டிற்கு வந்திருப்பது நல்லதே. அதைவிடச் சிறப்பானதாக நீங்கள் வேறு எதைச் செய்வீர்கள்? அனைத்திலும் சிறந்ததைச் செய்யுங்கள். அனைத்திலும் அதியுயர்ந்தவர் ஆகுங்கள். இதுவே வாழ்க்கையின் இலக்கு ஆகும். இப்போது, அனைத்திலும் சிறந்ததாக எதை நீங்கள் செய்வீர்கள்? பாபா கூறிய ஒரு பாடத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், முழுக்கல்வியும் இந்த ஒரு பாடத்திலேயே அடங்கியுள்ளது. இது ஓர் அற்புதமான உலகப் பல்கலைக்கழகம் ஆகும். அதைப் பார்க்கும்போது, அது ஒரு வீடும் ஆகும். ஆனால் தந்தை, உண்மையான ஆசிரியரும் ஆவார். இது ஒரு வீடும் அதேவேளை பல்கலைக்கழகமும் ஆகும். இதனாலேயே, மக்களால் இது ஒரு வீடா அல்லது பல்கலைக்கழகமா என்று புரிந்துகொள்ள முடிவதில்லை. எவ்வாறாயினும், இது ஒரு வீடும் அதேவேளை பல்கலைக்கழகமும் ஆகும். ஏனெனில், இங்கு அதிமேன்மையான பாடம் கற்பிக்கப்படுகிறது. கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் கற்பிப்பதன் இலக்கு என்ன? குழந்தைகளின் நடத்தையை அபிவிருத்தி செய்வதற்கும், அவர்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு அவர்களைத் தகுதியாக்குவதற்கும் தமது குடும்பங்களை மிக நன்றாகப் பராமரிப்பதற்குமே ஆகும். இதுவே அதன் இலக்கு, அப்படியல்லவா? எனவே, அந்த இலக்குகள் அனைத்தும் இங்கு பூர்த்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொருவரும் நல்லதொரு நடத்தை உடையவர் ஆகுகிறார்.
பாரத தேசத்தில் அரசியல்வாதிகள் எதை விரும்புகிறார்கள்? பாபுஜி பாரதத்திற்காக எதை விரும்பினார்? பாரதம் வெளிச்சவீடு ஆகவேண்டும், பாரதம் உலகிலேயே ஆன்மீகச் சக்தியின் நிலையம் ஆகவேண்டும் என்றே அவர் விரும்பினார். அந்தப் பணி இங்கு மறைமுகமான முறையில் நடைபெறுகிறது. ஒரு தம்பதியேனும் இராமர், சீதையைப் போன்று ஆகினால், அந்த ஒரு இராமர், சீதையால் அது இராம இராச்சியம் ஆகிவிடும். அவ்வாறாயின், பலர் இராமரையும் சீதைகளையும் போன்று ஆகினால், என்ன நிகழும்? எனவே, இந்தப் பாடம் சிரமமானது அல்ல. இது மிகவும் இலகுவானது. நீங்கள் இந்தப் பாடத்தை உறுதியாக்கினால், உண்மையான ஆசிரியரிடமிருந்து நீங்கள் ஆன்மீகச் சான்றிதழைப் பெறுவீர்கள். அத்துடன் வருமானத்தின் மூலாதாரத்திற்கான உத்தரவாதத்தையும் பெறுவீர்கள். எவ்வாறாயினும், இது உண்மையில் அற்புதமானது! பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் இங்கு கற்கிறார்கள். அத்துடன் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் இங்கு கற்கிறார்கள். அனைவரும் ஒரே வகுப்பிலேயே கற்கிறார்கள். ஏனெனில் இங்கு ஆத்மாக்களுக்கே கற்பிக்கப்படுகிறது. சரீரங்களைப் பார்ப்பதில்லை. ஆத்மாக்களுக்கே கற்பிக்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு 5 வயதாக இருந்தாலும், அவராலும் இந்தப் பாடத்தைக் கற்க முடியும், அப்படியல்லவா? ஒரு குழந்தையால் பல பணிகளைச் செய்ய முடியும். இந்தப் பாடம் வயதானவர்களுக்கும் அவசியமானது. இல்லாவிடின், அவர்கள் வாழ்க்கையில் மனத்தளர்வு அடைவார்கள். கல்லாத தாய்மார்களுக்கும் மேன்மையான வாழ்க்கை தேவை. ஆகவே, உண்மையான ஆசிரியர் அனைவருக்கும் கற்பிக்கிறார். ஒருவர் எந்தளவிற்கு விவிவிஐபி ஆக இருந்தாலும், உண்மையான ஆசிரியருக்கு, அனைவரும் மாணவர்களே. அவர் அனைவருக்கும் ஒரே பாடத்தையே கற்பிக்கிறார். எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் இந்தப் பாடத்தைக் கற்பீர்கள், அல்லவா? நீங்கள் நன்மை பெறுவீர்கள். எதையாவது செய்பவர்கள் அதற்கான பலனைப் பெறுவார்கள். நீங்கள் எதையாவது செய்யும் அளவிற்கு, அதற்கேற்ற நன்மையைப் பெறுவீர்கள். ஏனெனில், இங்கு, நீங்கள் ஒன்றிற்காகப் பலமில்லியன் மடங்கினைப் பலனாகப் பெறுகிறீர்கள். அழிகின்ற விடயங்களைப் பொறுத்தவரை இது அவ்வாறில்லை. இந்த அழிவற்ற கல்வியில், நீங்கள் ஒன்றிற்காகப் பல மில்லியன் மடங்கினைப் பெறுகிறீர்கள். ஏனெனில் அவரே அருள்பவர் ஆவார்.
பாப்தாதா இராஜஸ்தான் பிராந்தியத்தைச் சந்திக்கிறார்:
இராஜஸ்தானின் சிறப்பியல்பு என்ன? பிரதான நிலையம் இராஜஸ்தானிலேயே உள்ளது. ஆகவே, பிராந்தியத்தின் சிறப்பியல்பு என்னவோ, அதுவே இராஜஸ்தான்வாசிகளின் சிறப்பியல்பாகவும் இருக்கும், அப்படியல்லவா? நீங்கள் இராஜஸ்தானில் விசேட வைரங்களை வெளிப்படுத்தப் போகிறீர்களா? அல்லது நீங்களே விசேடமான வைரங்களா? நீங்களே அனைவரிலும் அதிவிசேடமானவர்கள். எவ்வாறாயினும், சேவைக் களத்திலும் உலகின் பார்வையிலும், சேவைக்கு விசேட கருவிகளை நீங்கள் உருவாக்க வேண்டும். நீங்கள் இத்தகைய சேவையைச் செய்துள்ளீர்களா? இராஜஸ்தான் அனைத்திலும் முதல் இலக்கத்தவர் ஆகவேண்டும்: எண்ணிக்கை, தரம், சேவையின் சிறப்பியல்பு. அனைத்திலும் முதல் இலக்கத்தினர் ஆகவேண்டும். பிரதான நிலையம் முதல் இலக்கத்திலேயே உள்ளது. ஆனால் அதன் ஆதிக்கம் இராஜஸ்தான் முழுவதும் பரவ வேண்டும். தற்சமயம், மகாராஷ்டிராவும் குஜராத்துமே எண்ணிக்கையைப் பொறுத்தவரை முதல் இலக்கத்தில் உள்ளன. இப்போது, இராஜஸ்தானும் முதல் இலக்கமாகக் கணக்கிடப்பட வேண்டும். ஆகவே, இந்த வருடம் ஆயத்தங்களைச் செய்யுங்கள். அடுத்த வருடம் மகாராஷ்டிராவிற்கும் குஜராத்திற்கும் முன்னணியில் செல்லுங்கள். புத்தியில் நம்பிக்கையுடன் இருப்பவர்கள் வெற்றியாளர்கள் ஆகுவார்கள். இங்கு பல அனுபவசாலி இரத்தினங்கள் இருக்கிறார்கள். நீங்கள் சேவையை முன்னேற்றினால், அது நிச்சயமாக அதிகரிக்கும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இறைவனினதும் உங்களின் பாக்கியத்தினதும் விழிப்புணர்வுடன் சந்தோஷமாகவும் பாக்கியசாலியாகவும் இருந்து, மற்றவர்களின் பாக்கியத்தையும் உருவாக்குவீர்களாக.அமிர்தவேளையில் இருந்து இரவுவரை, உங்களின் வெவ்வேறு பாக்கியங்களை உங்களின் விழிப்புணர்வில் கொண்டுவந்து, தொடர்ந்து இந்தப் பாடலைப் பாடுங்கள்: ஆஹா எனது மேன்மையான பாக்கியமே! இறைவனினதும் தமது பாக்கியத்தினதும் விழிப்புணர்வில் இருப்பவர்களால் மட்டுமே மற்றவர்களின் பாக்கியத்தை உருவாக்க முடியும். ‘பிராமணர்’ என்றால் சதா பாக்கியசாலியாக இருத்தல், சதா சந்தோஷப் பாக்கியத்தைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். பிராமண ஆத்மாக்களின் சந்தோஷத்தைக் குறைப்பதற்கு எவருக்கும் தைரியம் கிடையாது. ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருப்பதுடன் சந்தோஷப் பாக்கியத்தையும் கொண்டிருக்கிறார்கள். பிராமண வாழ்க்கையில் இருந்து சந்தோஷம் இல்லாமல் போவதென்பது சாத்தியம் இல்லை: நீங்கள் உங்களின் சரீரத்தை விட்டாலும், உங்களின் சந்தோஷம் மறைய முடியாது.
சுலோகம்:
மாயையின் ஊஞ்சல்களைக் கைவிட்டு, சதா அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் தொடர்ந்து ஆடுங்கள்.