14.02.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சிவஜெயந்தியே கீதை ஜெயந்தி என்றும் அதன் பின்னர் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இடம்பெறுகின்றது என்பதையும் பாரதமக்களுக்கு நிரூபியுங்கள்.
கேள்வி:
எந்தவொரு சமயத்தின் ஸ்தாபனைக்கும் பிரதானமாக அடிப்படையாக உள்ளது என்ன? சமய ஸ்தாபகர்கள் மேற்கொள்ளாத, ஆனால் தந்தை மாத்திரமே மேற்கொள்ளும் பணி எது?
பதில்:
எந்தச் சமய ஸ்தாபனைக்கும் தூய்மை சக்தி அவசியமாகும். தூய்மையின் சக்தியின் அடிப்படையிலேயே எல்லா சமயங்களும் ஸ்தாபிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், எந்தச் சமய ஸ்தாபகர்களினாலும் எவரையும் தூய்மையாக்க முடியாது. ஏனெனில் சமயங்கள் ஸ்தாபிக்கப்படும் போது, இது மாயையின் உலகமாக இருப்பதால் அவர்கள்;; அனைவருமே தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள். தூய்மையற்றவர்களை தூய்மையாக்க வேண்டியது தந்தையின் கடமை மாத்திரமே ஆகும். அவர் மாத்திரமே தூய்மை ஆகுவதற்கான ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார்.பாடல்:
இப் பாவ உலகிலிருந்து எங்களை அகற்றி, ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!
ஓம் சாந்தி.
பாவ உலகம் எது, புண்ணிய உலகம் அதாவது தூய உலகம் எது என்பதை இப்பொழுது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உண்மையில், இப் பாரதமே பாவ உலகமாகும், பின்னர் பாரதமே புண்ணிய உலகம் அதாவது சுவர்க்கம் ஆகுகின்றது. வைகுந்தமாக இருந்த பாரதம் இப்பொழுது ஆழ்நரகமாகியுள்ளது. ஏனெனில் அவர்கள் தொடர்ந்தும் காம சிதையில் எரிகின்றார்கள். அங்கே, எவரும் காமச் சிதையில் எரிவதில்லை. அங்கே காமச் சிதை இருப்பதில்லை. சத்தியயுகத்தில் காமச்சிதை உள்ளது என்று நீங்கள் கூறமாட்டீர்கள். இவ் விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அனைத்திற்கும் முதல் ஒரு கேள்வி எழுகின்றது. தூய்மையற்றும் சந்தோஷமற்றும் உள்ள பாரதம் நிச்சயமாக தூய்மையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அவர்கள் ஆதி சனாதன இந்து சமயத்தைப் பற்றியும் பேசுகின்றார்கள், ஆனால் யார் ஆதிசனாத மக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்? ‘ஆதி’ என்பதன் அர்த்தம் என்ன? ‘அநாதி’ என்பதன் அர்த்தம் என்ன? ஆதி என்றால் சத்தியயுகம் என்று அர்த்தமாகும். சத்தியயுகத்தில் இருந்தவர்கள் யார்? அப்பொழுது இலக்ஷ்மியும் நாராயணனும் இருந்தார்கள் என்பதை அனைவருமே அறிந்துள்ளார்கள். நிச்சயமாக, அவர்களும் எவரோ ஒருவரது குழந்தைகளாகவே இருந்திருக்க வேண்டும். ஆகையாலேயே அவர்கள் சத்தியயுகத்தின் அதிபதிகள் ஆகுகின்றார்கள். அவர்கள் சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்ற பரமாத்மாவான பரமதந்தையின் குழந்தைகளாக இருந்தார்கள். ஆனால் இந்த நேரத்தில் (கலியுகத்தில்) அவர்கள் தம்மை அவரது குழந்தைகளாகக் கருதுவதில்லை. அவர்கள் தம்மை அவரது குழந்தைகள் என்று கருதியிருந்தால், அவர்களுக்கு தந்தையை தெரிந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு அவரைத் தெரியாது. கீதையில் இந்துசமயம் குறிப்பிடப்படவில்லை. கீதையில் பாரதம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இந்து மகாசபையை சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். ஸ்ரீமத் பகவத் கீதையே சமயநூல்கள் அனைத்திற்கும் தாயான இரத்தினமாகும். அவர்கள் கீதை ஜெயந்தியையும் அத்துடன் சிவஜெயத்தியையும் கொண்டாடுகின்றார்கள். எப்பொழுது சிவஜெயந்தி என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அதன் பின்னர் கிருஷ்ண ஜெயந்தி இடம்பெறுகின்றது. சிவஜெயந்தியின் பின்னர், கீதை ஜெயந்தி இடம்பெறுகின்றது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். கீதை ஜெயந்தியின் பின்னர், கிருஷ்ண ஜெயந்தி இடம்பெறுகின்றது. கீதை ஜெயந்தியின் மூலமே தேவ தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. கீதை ஜெயந்திக்கு மகாபாரதத்துடன் தொடர்புள்ளது. அதில் யுத்தம் பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. யுத்தகளத்தில் மூவகையான சேனையினர் உள்ளனர் என்று அவர்கள் காட்டுகின்றார்கள். அவர்கள் யாதவர்களையும், கௌரவர்களையும், பாண்டவர்களையும் காட்டுகின்றார்கள். யாதவர்களே ஏவுகணைகளைத் தயாரித்தவர்கள். அவர்கள் மது அருந்தியவாறே ஏவுகணைகளை வெளிப்படுத்துகின்றார்கள். இப்பொழுது உண்மையிலேயே ஏவுகணைகள் இப்பொழுது கண்டுபிடிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் தமது சொந்த குலத்தை அழிப்பதற்காக, ஒருவரையொருவர் பயப்படுத்துகின்றார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள்;. ஐரோப்பிய மக்களும் அதே யாதவர்கள் என்பதால், அது அவர்களின் ஒன்று கூடலாகும். அவர்கள் தம் மத்தியில் யுத்தம் புரிந்து தம்மைத்தாமே அழித்தார்கள். முழு ஜரோப்பாவும் அதில் உள்ளடக்கப்படுகின்றது. இஸ்லாமியர்கள், பௌதர்கள், கிறிஸ்தவர்கள் அனைவருமே இதில் அடங்குகின்றார்கள். இங்கே கௌரவர்களும் பாண்டவர்களும் உள்ளார்கள். கௌரவர்களும் அழிக்கப்பட்டதால், பாண்டவர்கள் வெற்றியீட்டினார்கள். இப்பொழுது எழுகின்ற கேள்வி: இலகு இராஜயோகத்தையும் இலகு ஞானத்தையும் கற்பித்து, உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்கிய கீதையின் கடவுள் யார் அதாவது தூய உலகை ஸ்தாபித்தவர் யார்? அதனைச் செய்ய ஸ்ரீகிருஷ்ணர் வந்தாரா? கௌரவர்கள் கலியுகத்தில் இருந்தார்கள். கௌரவர்களதும் பாண்டவர்களது காலத்தில் எவ்வாறு ஸ்ரீகிருஷ்ணரால் வர முடியும்? அவர்கள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகின்றார்கள். சத்தியயுக ஆரம்பத்தில் அவர் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவராக இருந்தார். ஸ்ரீகிருஷ்ணரின் பின்னர், 14 சுவர்கக்கலைகள் நிறைந்த இராம ஜெயந்தி இடம்பெற்றது. கிருஷ்ணர் அரசர்களுக்கெல்லாம் அரசராக அதாவது இளவரசர்களுக்கெல்லாம் இளவரசராக இருந்தார். விகாரம் நிறைந்த இளவரசர்களும் ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுகின்றார்கள். ஏனெனில் அவர் 16 சுவர்கக்கலைகளும் நிறைந்த, சத்தியயுகத்தின் சம்பூரணமான இளவரசர் என்றும் தாங்களோ விகாரம் நிறைந்தவர்கள் என்பதையும் அவர்கள் அறிந்துள்ளார்கள். நிச்சயமாக, இளவரசர்கள் இவ்வாறு கூறுவார்கள். இப்பொழுது சிவஜெயந்தி வரவுள்ளது. ஆலயங்களில் அவரது (பரமாத்மாவின்) மிகப் பெரிய உருவம் உள்ளது. அது அசரீரியான சிவனின் ஆலயமாகும். அவர் மாத்திரமே பரமாத்மாவான பரமதந்தை என்று அழைக்கப்படுகின்றார். பிரம்மாவும் விஷ்ணுவும் சங்கரரும் தேவர்கள் ஆவார்கள். சிவஜெயந்தி பாரதத்தில் மாத்திரமே கொண்டாடப்படுகின்றது. சிவஜெயந்தி இப்பொழுது வரவுள்ளது. சிவன் மாத்திரமே ஞானக் கடல் அதாவது உலகைத் தூய்மையாக்கின்ற பரமாத்மாவான பரமதந்தை என்று அழைக்கப்படுகின்றார் என்பதை நீங்கள் விளங்கப்படுத்தி அதனை நிரூபிக்க வேண்டும். காந்திஜியும் இதனைப் பாடுவதுண்டு, ஆனால் அவர் கிருஷ்ணரின் பெயரை குறிப்பிடவில்லை. எனவே, இப்பொழுது எழுகின்ற கேள்வி: இது கீதைஜெயந்தியை பிறப்பிக்கும் சிவஜெயந்தியா அல்லது கீதை ஜெயந்தியை பிறப்பிக்கும் கிருஷ்ண ஜெயந்தியா? கிருஷ்ண ஜெயந்தி சத்தியயுகத்திலேயே இடம்பெறுகின்றது என்று கூறப்படுகின்றது. சிவனின் ஜெயந்தி எப்பொழுது என்பது எவருக்கும் தெரியாது. சிவனே அசரீரியான பரமாத்மாவான பரமதந்தையாவார். அவர் சங்கமயுகத்திலேயே உலகைப் படைத்தார். சத்தியயுகத்தில், கிருஷ்ணரின் இராச்சியமே நிலவியது. எனவே நிச்சயமாக சிவஜெயந்தி அதற்கு முன்னரே இடம்பெற்றிருக்க வேண்டும். பிராமண குலத்தின் அலங்காரங்களும், சேவை செய்வதற்கு தயாராக உள்ளவர்களும்; இவ்விடயங்களைத் தமது புத்தியில் கிரகித்து, சிவஜெயந்தியின் மூலமே கீதை ஜெயந்தி இடம்பெறுகின்றது என்பதை பாரதமக்களுக்கு எவ்வாறு விளங்கப்படுத்தி அதனை நிரூபிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பின்னர் கீதையிலிருந்து கிருஷ்ண ஜெயந்தி, அதாவது அரசர்களுக்கெல்லாம் அரசர்களின் ஜெயந்தி இடம்பெறுகின்றது. கிருஷ்ணர் தூய உலகின் அரசர் ஆவார். அது அங்குள்ள இராச்சியமாகும். கிருஷ்ணர் அங்கு பிறப்பெடுத்து கீதையை கூறவில்லை, ஆகையால், சத்தியயுகத்தில் மகாபாரத யுத்தம் இடம்பெற்றிருக்க முடியாது. அது நிச்சயமாக சங்கமயுகத்திலேயே இடம்பெற்றிருக்க வேண்டும். இவ்விடயங்களை குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். பாண்டவர்களதும் கௌரவர்களதும் ஒன்றுகூடல் மிகவும் பிரபல்யமாகும். ஸ்ரீகிருஷ்ணரே பாண்டவர்களின் தலைவர் எனக் காட்டுகின்றார்கள். அவர் இலகு இராஜயோகத்தையும், இலகு ஞானத்தையும் கற்பித்தார் என நம்புகின்றார்கள். உண்மையில், யுத்தம் போன்றவற்றிற்கான எந்தக் கேள்விக்கும் இடமில்லை. பரமாத்மாவான பரமதந்தை பாண்டவர்களுக்கு இலகு இராஜயோகத்தைக் கற்பித்ததார், அவர்களே வெற்றியீட்டினார்கள். அவர்களே 21 பிறவிகளுக்கு சூரிய, சந்திர வம்சத்திற்குரியவர்கள் ஆகினார்கள். ஆகையால், எல்லாவற்றிற்கும் முதலில் இந்து மகாசபையினருக்கு விளங்கப்படுத்துங்கள். லோக் சபா, ராஜ்சபா (வெவ்வேறான அரசியல் கட்சிகள்) போன்ற வேறு பல குழுவினரும் உள்ளனர். இந்து மகாசபையே பிரதானமானது. யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் ஆகிய மூவகை சேனைகளும் நினைவு கூரப்பட்டுள்ளது. அவர்கள் சங்கமயுகத்திலேயே இருந்தார்கள். சத்தியயுகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. கிருஷ்ணரின் பிறப்பிற்கான ஆயத்தங்கள் இப்பொழுது இடம்பெறுகின்றன. கீதை நிச்சயமாக சங்கமயுகத்தில் பேசப்பட்டதால்;, சங்கமயுகத்தில் இப்பொழுது யாரை நீங்கள் காட்ட வேண்டும்? கிருஷ்ணரால் இங்கு வரமுடியாது. அவர் ஏன் தூய உலகை விட்டு தூய்மையற்ற உலகிற்குள் வரவேண்டும்? உண்மையில், இந்த நேரத்தில், கிருஷ்ணர் இருப்பதில்லை. அவர் இப்பொழுது தனது 84 ஆவது பிறவியில் இருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். கிருஷ்ணர் எங்கும் இருக்கின்றார் அதாவது அவர் சர்வவியாபி என அவர்கள் நினைக்கின்றார்கள். அனைவரும் கிருஷ்ணரே என்று கிருஷ்ண பக்தர்கள் கூறுகின்றார்கள். அதாவது கிருஷ்ணர் அவ் வடிவங்களை எடுக்கின்றார் எனக் கூறுகின்றார்கள். ராதையின் பாதையைச் சேர்ந்தவர்கள், ராதையே அனைவரிலும் இருக்கின்றார் - நானும் ராதை நீங்களும் ராதை எனக் கூறுகின்றார்கள். பல கட்டளைகள் வெளிப்பட்டுள்ளன. சிலர் கடவுள் சர்வ வியாபி எனக் கூறுகிறார்கள். சிலர் கிருஷ்ணர் சர்வ வியாபி என்று கூறுகிறார்கள். சிலர் ராதை சர்வவியாபி எனக் கூறுகின்றார்கள். இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அந்தத் தந்தை உலக சர்வ சக்திவான் என்பதால், அவர்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்தும் அதிகாரத்தை அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்றார். இந்து மகாசபையிடம் விளங்கப்படுத்துங்கள். அவர்களால் இவற்றை புரிந்து கொள்ள முடியும். அவர்கள் தம்மை சமயப்பற்றுள்ளவர்கள் என்று கருதுகின்றார்கள். அரசாங்கம் எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்திலும் நம்பிக்கைக் கொள்ளவில்லை. அவர்களும் குழப்பம் அடைந்திருக்கின்றார்கள். பரமாத்மாவான சிவன் அசரீரியான ஞானக்கடலாவார். வேறு எவரையும் ஞானக் கடல் என அழைக்க முடியாது. அவர் இங்கு நேரடியாக வந்து ஞானத்தைக் கொடுக்கும் பொழுதே இராச்சியம் ஸ்தாபிக்கப்பட முடியும். அதன் பின்னர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. உங்கள் இராச்சியத்தை நீங்கள் இழக்கும் போது, அவர் மீண்டும் ஒருமுறை நேரடியாக வருவார். பரமாத்மா சிவனே அசரீரியான ஞானக் கடல் என்றும் சிவஜெயந்தியே கீதை ஜெயந்தியை பிறப்பிக்கின்றது என்றும் நீங்கள் நிரூபிக்க வேண்டும். இதன் அடிப்படையில் நீங்கள் நாடகங்களை உருவாக்கும் போது, மக்களின் புத்தியிலிருந்து கிருஷ்ணர் என்ற விடயம் அகற்றப்படும். அசரீரியான பரமாத்மா சிவன் மாத்திரமே தூய்மையாக்குகின்றவர் என அழைக்கப்படுகின்றார். சமயநூல்கள் அனைத்தும் மனிதரின் கட்டளைக்கு ஏற்ப மனிதர்களால் எழுதப்பட்டுள்ளது. பாபாவிடம் எந்த சமயநூல்களும் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் நேரடியாக வந்து குழந்தைகளாகிய உங்களை யாசிப்பவர்களில் இருந்து இளவரசர்கள் ஆக்கிய பின்னர் நான் போய் விடுகின்றேன். என்னால் மாத்திரமே இந்த ஞானத்தை உங்களுக்கு நேரடியாகக் கொடுக்க முடியும். கீதையை உரைப்பவர்கள் அதனை உரைத்தாலும், கடவுள் அவர்கள் முன்னிலையில் இல்லை. கீதையின் கடவுள் முன்னிலையிலேயே இருந்தார் என்றும், அவர் சுவர்க்கத்தைப் படைத்த பின்னர் திரும்பிச் சென்று விட்டார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அந்தக் கீதையை செவிமடுப்பதன் மூலம் அவர்களால் சுவர்க்க வாசிகள் ஆகிவிட முடியுமா? ஒருவர் மரணிக்கும் பொழுது அவருக்கு கீதையை அவர்கள் வாசிக்கின்றார்கள். அவர்கள் வேறு எந்த சமயநூல்களையும் வாசிப்பத்தில்லை. கீதையின் மூலமாகவே சுவர்க்கம் படைக்கப்பட்டது என அவர்கள் நம்புவதால் அவர்கள் அதனை மாத்திரமே வாசிக்கின்றார்கள். எனவே ஒரேயொரு கீதை மாத்திரமே இருக்க வேண்டும். ஏனைய சமயங்கள் அனைத்தும் பின்னரே வருகின்றன. வேறு எவருமே, தாம் சுவர்க்க வாசிகள் ஆகுவோம் என்று கூற முடியாது. அவர்கள் மக்களுக்கு கங்கை நீரை அருந்தக் கொடுக்கின்றார்கள். அவர்கள் யமுனை நீரைக் கொடுப்பதில்லை. கங்கை நீருக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பல வைஷ்ணவர்கள் அங்கே சென்று கலசத்தில் அந்த நீரைக் கொண்டு வருகின்றார்கள். அந்த நீரில் ஒரு துளியை தாம் அருந்துகின்ற நீருடன் கலந்து அதனை அருந்துவதன் மூலம் தமது நோய்கள் நீங்குகின்றன என அவர்கள் கூறுகின்றார்கள். உண்மையில், ஞான அமிர்த அருவியிலிருந்தே உங்கள் துன்பங்கள் 21 பிறவிகளுக்கு அகற்றப்படுகின்றன. உயிருள்ள ஞான கங்கையில் நீராடுவதன் மூலம் மக்களால் சுவர்க்க வாசிகள் ஆக முடியும். எனவே நிச்சயமாக இறுதி நேரத்தில் ஞான கங்கைகள் வெளிப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும் நீர் நிறைந்த ஆறுகளும் உள்ளன. நீரை அருந்துவதன் மூலம் எவருமே தேவராக முடியும் என்றில்லை. இங்கே, எவராயினும் சிறிதளவு ஞானத்தை செவிமடுத்திருந்தாலும், அவர் சுவர்க்கத்திற்கான உரிமையைக் கோருகின்றார். இவர்கள் ஞானக் கடலான சிவபாபாவின் ஞான கங்கைகள். கீதை ஞானத்தை அருள்பவரான ஞானக்கடல், ஒரேயொரு சிவனே அன்றி கிருஷ்ணர் அல்ல. சத்தியயுகத்தில் எவருமே தூய்மையற்றவர்கள் இல்லை. அவர்களுக்கு ஞானம் கொடுக்க வேண்டியதில்லை. கடவுள் இங்கமர்ந்திருந்து இவை யாவற்றையும் விளங்கப்படுத்துகின்றார். ஓ அர்ஜுனா! அல்லது ஓ சஞ்ஜெய்! அப் பெயர்கள் பிரபல்யமாகி உள்ளன. அவர் எழுதுவதில் அதிகளவு திறமையானவர் என்பதால் கருவியாகினார். இப்பொழுது, சிவஜெயந்தி வர இருப்பதால் நீங்கள் இதனை பெரிய எழுத்தில் எழுத வேண்டும். சிவன் அசரீரியானவர். அவர் பேரானந்தமிக்க ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். கிருஷ்ணரை ஞானம் - நிறைந்தவர் என்றோ பேரானந்தமிக்கவர் என்றோ அழைக்க முடியாது. பரமாத்மா சிவன் மாத்திரமே ஞானத்தைக் கொடுக்கின்றார். அவருக்கு மாத்திரமே கருணை உள்ளது. அவரது ஞானம் அவரது கருணையினாலாகும். ஒரு மாஸ்டருக்குக் கருணை உள்ளதாலேயே அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அதன் மூலம் நீங்கள் சட்டநிபுணராகவோ அல்லது பொறியியலாளராகவோ ஆகுகின்றீர்கள். சத்தியயுகத்தில் பேரானந்தத்திற்கான அவசியம் இல்லை. எனவே, எல்லாவற்றிற்கும் முதலில், அசரீரி ஞானக்கடலான சிவஜெயந்தியா கீதை ஜெயந்தியை உருவாக்கின்றார் அல்லது சத்தியயுக சரீர கிருஷ்ண ஜெயந்தியா கீதை ஜெயந்தியை உருவாக்கின்றார் என்பதனை நீங்கள் நிரூபிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இதனை நிரூபிக்க வேண்டும். வருகின்ற சமய தூதர்கள், எவரையும் தூய்மையாக்குவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் துவாபரயுகத்தில் இருந்து மாயையின் ஆட்சியே நிலவுவதால், அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள். மக்கள் விரக்தி அடையும் பொழுது, அவர்கள் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று கூறுகின்றார்கள். அதன் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சமயங்கள் விரிவடைகின்றன. சமயங்கள் தூய்மையின் சக்தியினால் ஸ்தாபிக்கப்படுகின்றன, அதன் பின்னர் அவை தூய்மையற்றவை ஆக வேண்டும். பிரதான நான்கு சமயங்கள் உள்ளன. அவற்றினூடாக ஸ்தாபனை நிகழுகின்றது. கிளைகளும் அரும்புகளும் தோன்றுகின்றன. சிவஜெயந்தியே கீதைஜெயந்தியை உருவாக்குகின்றது என்பது நிரூபிக்கப்படும் பொழுது ஏனைய அனைத்து சமயநூல்களும் பயனற்றவை என்பது நிரூபிக்கப்படும். ஏனெனில் அவை மனிதர்களினால் எழுதப்பட்டவையாகும். உண்மையில், பாரதத்தின் சமயநூல் ஒரேயொரு கீதையேயாகும். அதி அன்பிற்கினிய தந்தை விளங்கப்படுத்தி அதனை உங்களுக்கு மிகவும் இலகுவாக்கியுள்ளார். அவரின் வழிகாட்டல்கள் அனைத்திலும் அதி மேன்மையானவையாகும். அசரீரி ஞானக்கடலின் ஜெயந்தியா கீதை ஜெயந்தியை பிறப்பிக்கின்றது அல்லது சத்தியயுக சரீர கிருஷ்ண ஜெயந்தியா கீதை ஜெயந்தியை பிறப்பிக்கின்றது என்பதனை நீங்கள் இப்பொழுது நிரூபிக்க வேண்டும். இதனை செய்வதற்கு நீங்கள் பெரிய மாநாட்டைக் கூட்ட வேண்டும். இது நிரூபிக்கப்படுமானால், பண்டிதர்கள் அனைவரும் உங்களிடம் வந்து இந்த இலக்கைப் பெற்றுக் கொள்வார்கள். சிவஜெயந்திக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். இந்து மகாசபையைச் சேர்ந்தவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். அவர்களுடையது மிகப் பெரிய நிறுவனமாகும். சத்தியயுகத்தில் ஆதிசனாதன தேவதேவியரின் தர்மம் இருந்தது. வேறு எந்த சபைகளும் (கூட்டத்தினர்) அங்கு இருப்பதில்லை. சங்கமயுகத்திலேயே சபைகள் உள்ளன. ஆதிசனாதன சபை உண்மையில் பிராமணர்கள் அல்லது பாண்டவர்களே என்பதனை நீங்கள் முதலில் நிரூபிக்க வேண்டும். பாண்டவர்கள் வெற்றியீட்டிய பின்னர் சுவர்க்க வாசிகள் ஆகினார்கள். ஆதிசனாதன தேவதேவியர் சபா (தர்மம்) இப்பொழுது உள்ளது என எவராலும் கூறமுடியாது. அதனை தேவர்களின் சபை என்று உங்களால் கூறமுடியாது. அவர்களுக்கு ஓர் இராச்சியம் உள்ளது. அச் சபைகள் கல்பத்தின் சங்கமயுகத்தில் இருந்தது. அவற்றில் ஒன்று பாண்டவ சபை, அது பிராமணர்களின் ஆதிசனாதன சபை என்றும் அழைக்கப்படுகின்றது. எவருக்கும் இது தெரியாது. கிருஷ்ணரின் பெயரைக் கொண்ட பிராமணர்கள் எவரும் இல்லை. பிரம்மாவின் பெயர் என்பதால் பிராமணர்களின் உச்சிகுடுமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிராமணர்களாகிய உங்களின் சபை பிரம்மாவின் பெயரைக் கொண்டது. இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துவதற்கு விவேகமான எவரேனும் ஒருவரே தேவையாகும். அவர் ஞானோதயம் உடையவராக இருக்க வேண்டும். அசரீரி சிவன் மாத்திரமே தெய்வீகக் கண்ணை அருள்பவரான, கீதையின் ஞானத்தை அருள்பவர் ஆவார். இவ்விடயங்கள் அனைத்தையும் கிரகித்தப் பின்னர் மாநாடுகளை நடாத்துங்கள். இவற்றை நிரூபிக்க முடியும் என உணருகின்றவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து சந்திக்க வேண்டும். ஒரு யுத்தகளத்தில் தளபதிகளதும். கட்டளைத் தளபதிகளதும் சபை உள்ளது. இங்கே, ஒரு மகாராத்தியே கட்டளைத் தளபதி என்று அழைக்கப்படுகின்றார். பாபாவே படைப்பவரும் இயக்குனரும் ஆவார். அவர் சுவர்க்கத்தைப் படைக்கின்றார் என்பதால் அவர் அதற்கான வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: ஒரு மகாசபையைக் கூட்டி அதற்கு இத் தலைப்பை இடுங்கள். கீதையின் கடவுள் யார் என்பது நிரூபிக்கப்படும் பொழுது, அனைவரும், அவருடன் யோகம் செய்ய வேண்டும் என்பதனை புரிந்து கொள்வார்கள். பாபா கூறுகின்றார்: நான் ஒரு வழிகாட்டியாகவே வந்திருக்கின்றேன். நீங்கள் குறைந்தபட்சம் பறப்பதற்கேனும் தகுதி அடைய வேண்டும்! உங்கள் இறக்கைகளை மாயை துண்டித்துள்ளாள். யோகம் செய்வதன்; மூலம், ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகி பறப்பீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1.ஞான அமிர்தத்தினால், அனைவரையும் நோயிலிருந்து விடுவித்து, அவர்களை சுவர்க்க வாசியாக்குகின்ற சேவையை செய்யுங்கள். மனிதர்களை தேவர்கள் ஆக்க வேண்டும். தந்தையைப் போன்று ‘மாஸ்டர் கருணை நிறைந்தவர்’ ஆகுங்கள்.2.ஞானோதயத்தினால் விவேகமானவர் ஆகி, சிவஜெயந்தியின் போது, சிவஜெயந்தியே கீதை ஜெயந்தி என்பதை, அதாவது, கீதையின் ஞானத்தின் மூலமே ஸ்ரீகிருஷ்ணர் பிறக்கின்றார் என்பதை நிரூபியுங்கள்.
ஆசீர்வாதம்:
தந்தையின் அன்பில் உங்கள் இதயம் நிறைந்திருப்பதன் மூலம், உண்மையான அன்பான ஆத்மாவாகி அனைத்து கவர்;ச்சிகளிலிருந்தும் விடுபட்டிருப்பீர்களாக.
தந்தை குழந்தைகள் அனைவருக்கும் சமமான அன்பையே கொடுக்கின்றார், ஆனால் குழந்தைகள் அந்த அன்பை தமது சக்திக்கு ஏற்பவே எடுத்துக் கொள்கிறார்கள். நாள் ஆரம்பமாகும் நேரமான அமிர்தவேளையின் போதே, தந்தையின் அன்பை எடுப்பவர்கள் ஏனைய எவரது அன்பினாலும் கவரப்படுவதில்லை. ஏனெனில், அவர்களின் இதயத்தில் கடவுளின் அன்பு உள்ளது. அவர்கள் தமது இதயத்தை அன்பினால் முழுமையாக நிரப்பாது விட்டால், அவர்களின் இதயத்தில் சற்று இடைவெளி இருப்பதால், மாயை வெவ்வேறு வடிவங்களின் அன்பினால் அவர்களை கவர்ந்திழுப்பாள். ஆகையால், உண்மையான அன்புள்ளவர்களாகி, கடவுளின் அன்பில் நிறைந்திருங்கள்.
சுலோகம்:
தமது சரீரத்திற்கும், பழைய உலகிற்கும், சரீரத்தின் பழைய உறவுமுறைகளுக்கும் அப்பால் பறப்பவர்களே இந்திரபிரசத் வாசிகள் எனப்படுகிறார்கள்.