01.09.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     21.01.85     Om Shanti     Madhuban


தெய்வீகப் புத்தியே இறை பிறந்த நாளுக்கான தங்கப்பரிசு.


இன்று,உலகைப் படைப்பவரான தந்தை, உலகின் கண்களாக, உலகின் ஒளிகளாக இருக்கும் தனது குழந்தைகளைப் பார்க்கிறார். மேன்மையான ஆத்மாக்களான நீங்கள், உலகின் ஒளிகள் ஆவீர்கள். அதாவது, நீங்கள் உலகிற்கு ஞானோதயமாக இருப்பவர்கள். பௌதீகமான ஒளி இல்லாவிட்டால், உலகமே இருக்காது. ஏனெனில், ஒளி என்றால் ஞானோதயம் என்று அர்த்தம். ஒளி இல்லாவிட்டால், இருளின் காரணத்தினால் உலகமே இருக்காது. அதேபோன்று, கண்களான நீங்கள் இல்லாவிட்டால், உலகில் எந்தவிதமான ஒளியும் இருக்காது. நீங்கள் இருப்பதனால், ஒளிகளான உங்களால், உலகமே உள்ளது. எனவே, உலகின் ஒளிகளாக இருக்கும் இத்தகைய குழந்தைகளை பாப்தாதா பார்க்கிறார். இத்தகைய குழந்தைகள் சதா புகழப்படுவதுடன், பூஜிக்கவும்படுகிறார்கள். இத்தகைய குழந்தைகளால் மட்டுமே உலக இராச்சிய பாக்கியத்திற்கான உரிமையைக் கோர முடியும். பிராமணர்களான நீங்கள் பிறப்பு எடுத்ததும், பாப்தாதா உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களின் தெய்வீகப் பிறந்தநாளில் இரண்டு விடேமான, தெய்வீகப் பரிசுகளைக் கொடுக்கிறார். இந்த உலகில், மனித ஆத்மாக்கள் மனித ஆத்மாக்களுக்குப் பரிசுகள் கொடுக்கிறார்கள். ஆனால், சங்கமயுகத்தில் பிராமணக் குழந்தைகளுக்குத் தந்தையே தெய்வீகப் பரிசுகளைக் கொடுக்கிறார். அவர் எதைக் கொடுக்கிறார்? ஒன்று தெய்வீகப் புத்தி. மற்றயது தெய்வீகக் கண். அதாவது, ஆன்மீக ஒளி. பிராமணக் குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இரண்டு பரிசுகளையும் உங்களின் பிறந்தநாளில் பெற்றுள்ளீர்கள். இந்த இரண்டு பரிசுகளையும் உங்களுடன் எல்லா வேளையும் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் சதா வெற்றி சொரூபங்கள் ஆகுகிறீர்கள். தெய்வீகப் புத்தியே குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரையும் தெய்வீக ஞான சொரூபமாகவும், தெய்வீக நினைவு சொரூபமாகவும் தெய்வீக தாரணை சொரூபமாகவும் ஆக்குகிறது. நீங்கள் தாரணை செய்வதற்கு உங்களுக்குக் கொடுக்கப்பட்ட விசேடமான பரிசு தெய்வீகப் புத்தி ஆகும். தெய்வீகப் புத்தியை சதா கொண்டிருத்தல் என்றால், நினைவின் சொரூபமாக இருத்தல் என்று அர்த்தம். உங்களின் தெய்வீகப் புத்தி, அதாவது, உங்களின் சதோபிரதான், தங்கப் புத்தியில் சிறிதளவேனும் ரஜோ அல்லது தமோ ஸ்திதிகளின் ஆதிக்கம் ஏற்பட்டால், தாரணையின் சொரூபம் ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் மாயையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிவிடுவீர்கள். இதனாலேயே, இலகுவாக இருக்கும் அனைத்தையும் கஷ்டமானதாக நீங்கள் உணர்கிறீர்கள். நீங்கள் இலகுவாகப் பரிசாக பெற்ற தெய்வீகப் புத்தியானது பலவீனம் அடைவதனால், நீங்கள் அதைச் சிரமமான பணியாக உணர்கிறீர்கள். எப்பொழுதெல்லாம் நீங்கள் எதையும் கஷ்டமானதாக அல்லது சிரமமான பணியாக உணர்கிறீர்களோ, அப்போது உங்களின் தெய்வீகப் புத்தியானது நிச்சயமாக ஏதாவதொரு மாயையின் வடிவத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது. அதனாலேயே உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்படுகிறது. தெய்வீகப் புத்தியுடைய ஒருவர், ஒரு விநாடியில் பாப்தாதாவின் ஸ்ரீமத்தைக் கிரகித்து, சதா சக்திசாலி, சதா அசைக்க முடியாத, மாஸ்ரர் சர்வசக்திவான் ஸ்திதியை அனுபவம் செய்வார். ஸ்ரீமத் என்றால் உங்களை மேன்மையாக்கும் வழிகாட்டல்கள் ஆகும். அப்போது உங்களால் எதையும் கஷ்டமானதாக அனுபவம் செய்ய முடியாது. ஸ்ரீமத் என்பது உங்களை எப்போதும் இலகுவாகவும் பறக்கச் செய்யும் வழிகாட்டல்கள் என்று அர்த்தம். எவ்வாறாயினும், அவற்றைக் கிரகிப்பதற்கு உங்களுக்கு நிச்சயமாக ஒரு தெய்வீகப் புத்தி தேவை. எனவே சோதித்துப் பாருங்கள்: நீங்கள் எப்போதும் உங்களின் பிறந்தநாள் பரிசை உங்களுடன் வைத்திருக்கிறீர்களா? தெய்வீகப் புத்தியெனும் உங்களின் பரிசைச் சிலவேளைகளில் மாயை பறித்து, உங்களைத் தனதாக்கிக் கொள்கிறாளா? நீங்கள் சிலவேளைகளில் மாயையின் ஆதிக்கத்தைப் பற்றி அப்பாவிகளாக இருக்கிறீர்களா? அதனால், உங்களின் இறை பரிசைத் தொலைத்துவிடுகிறீர்களா? உங்களின் இறைபரிசைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் கெட்டித்தனமும் மாயையிடம் உள்ளது. எனவே, அவள் கெட்டிக்காரியாகி, உங்களை அப்பாவிகள் ஆக்கிவிடுகிறாள். ஆகவே, நீங்கள் கள்ளங்கபடமற்ற பிரபுவின் கள்ளங்கபடமற்ற குழந்தைகளாக இருந்தாலும், மாயையைப் பற்றி அப்பாவிகளாக இருக்காதீர்கள். மாயையைப் பற்றி அப்பாவியாக இருத்தல் என்றால், மறக்கின்ற ஒருவர் என்று அர்த்தம். தெய்வீகமான, இறை புத்தி என்ற பரிசானது சதா பாதுகாப்புக் குடையாக இருக்கிறது. ஆனால் மாயை தனது சொந்த நிழலைத் தருவாள். அப்போது குடை பறந்துவிடும். நிழல் (ஆதிக்கம்) மட்டுமே எஞ்சியிருக்கும். எனவே, எப்போதும் சோதித்துப் பாருங்கள்: என்னுடன் எப்போதும் தந்தையின் பரிசு உள்ளதா? அடையாளப் பரிசாக இருக்கும் தெய்வீகப் புத்தி ஒரு உயர்த்தி போலத் தொழிற்படும். நீங்கள் மேன்மையான எண்ணங்கள் என்ற ஆளியைப் போட்டதும், ஒரு விநாடியில் அந்த ஸ்திதியில் ஸ்திரமாகிவிடுவீர்கள். உங்களின் தெய்வீகப் புத்தியின் முன்னால் மாயையின் நிழல் இருந்தால், அந்தப் பரிசு ஒரு உயர்த்தி போலச் செயற்படாது. பௌதீகமான ஓர் உயர்த்தி வேலை செய்யாவிட்டால் என்ன நிகழும்? உங்களால் மேலேயோ அல்லது கீழேயோ செல்ல முடியாதிருக்கும். நீங்கள் மத்தியில் சிக்கிக் கொள்வீர்கள். உண்மையான சுய மரியாதை இருப்பதற்குப் பதிலாக, உங்களுக்கு மனவிரக்தி ஏற்படும். நீங்கள் எவ்வளவுதான் ஆளியை அழுத்தினாலும், உங்களின் இலக்கை அடையும் பேற்றினை உங்களால் அனுபவம் செய்ய முடியாதிருக்கும். எனவே, உயர்த்தி என்ற இந்தப் பரிசை நீங்கள் பாழாக்கிவிட்டுப் பின்னர், முயற்சியெனும் ஏணியில் ஏறவேண்டியிருக்கும். அப்போது நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? உங்களின் தைரியம் என்ற கால்கள் செயற்படுவதில்லை. எனவே, இலகுவானது ஒன்றைக் கஷ்டமானது ஆக்கியது யார்? எப்படி? நீங்கள் கவனக்குறைவானவர் ஆகினீர்கள். நீங்கள் மாயையின் நிழலுக்குள் சென்றீர்கள். அதனாலேயே, ஒரு விநாடி எடுக்கும் இலகுவானது ஒன்றைச் சிரமமான பணியாகவும் நீண்ட நேரம் எடுக்கும் ஒன்றாகவும் அனுபவம் செய்கிறீர்கள். தெய்வீகப் புத்தி என்ற பரிசானது, அலௌகீகமான விமானம் ஆகும். இந்தத் தெய்வீக விமானத்தின் ஆளியைத் தட்டிவிட்டால், உங்களால் நீங்கள் விரும்பிய இடத்திற்கு ஒரு விநாடியில் செல்ல முடியும். உங்களின் எண்ணங்களே அந்த ஆளி. விஞ்ஞானிகளால் ஒரு உலகையே சுற்றி வரமுடியும். உங்களால் மூன்று உலகங்களுக்குப் பயணம் செய்ய முடியும். ஒரு விநாடியில், உங்களால் உலக உபகாரி என்பதன் சொரூபமாகி, முழு உலகிற்கும் ஒளியையும் சக்தியையும் கொடுக்க முடியும். உங்களின் தெய்வீகப் புத்தி என்ற விமானத்தால் மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமானவர் ஆகுங்கள். அவர்கள் விமானத்தில் சென்று இமாலய மலையிலும் நதிகளிலும் சாம்பலைத் தூவினார்கள். அது எதற்காக? அவை எங்கும் பரவவேண்டும் என்பதற்காக. அவர்கள் சாம்பலைத் தூவுகிறார்கள். ஆனால், உங்களின் தெய்வீகப் புத்தி என்ற விமானத்தால், உங்களால் அதியுயர்ந்த உச்சி என்ற ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்தி, உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒளி மற்றும் சக்தியின் நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் ஒத்துழைப்பு அலைகளைப் பரப்ப முடியும். உங்களின் பறக்கும் விமானம் சக்திவாய்ந்தது, அல்லவா? அதை எப்படிப் பயன்படுத்துவது என்று மட்டுமே நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

பாப்தாதாவிடமிருந்து தெளிவான, மேன்மையான வழிகாட்டல்கள் என்ற உபகரணம் மட்டுமே உங்களுக்குத் தேவை. தற்காலத்தில், தெளிவான எரிபொருளுக்குப் பதிலாக, இரட்டைத் தெளிவான எரிபொருள் கிடைக்கிறது. எனவே, இதுவே பாப்தாதாவிடமிருந்து பெறப்படும் இரட்டைத் தெளிவான உபகரணம் ஆகும். உங்களின் சொந்தக் கட்டளைகள் அல்லது மற்றவர்களின் கட்டளைகள் என்பவற்றின் ஆதிக்கம் என்ற சிறிதளவு குப்பை அதில் இருந்தாலும் என்ன நிகழும்? நீங்கள் மேலே செல்வீர்களா அல்லது கீழே வருவீர்களா? ஆகவே, சோதித்துப் பாருங்கள்: உங்களின் புத்தியெனும் விமானத்தில் எப்போதும் இரட்டைத் தெளிவான பெற்றோல் உள்ளதா? அதில் எந்தவிதமான குப்பையும் செல்லவில்லை, அல்லவா? இல்லாவிடின், இந்த விமானமே சதா சந்தோஷத்தைக் கொடுப்பது. சத்தியயுகத்தில் ஒருபோதும் விபத்துக்கள் நிகழ முடியாது. ஏனெனில், உங்களின் மேன்மையான செயல்களின் மேன்மையான வெகுமதி அங்கு உங்களுக்குக் கிடைக்கும். கர்ம வேதனையால் நீங்கள் துன்பத்தை அனுபவிக்கும் வகையிலான எந்தவிதச் செயல்களும் அங்கு செய்யப்படமாட்டாது. அதேபோன்று, சங்கமயுக இறைபரிசான தெய்வீகப் புத்தி, எப்போதும் துன்பத்தில் அல்லது ஏமாற்றுகையில் இருந்து விடுபட்டிருக்கும். தெய்வீகப் புத்தியைக் கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். அவர்கள் துன்பத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் பாதுகாப்பாகவே இருப்பார்கள். அவர்கள் இன்னல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள். ஆகவே, இந்த இறைபரிசின் முக்கியத்துவத்தை அறிந்து, சதா இந்தப் பரிசை உங்களுடன் வைத்திருங்கள். இந்தப் பரிசின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? உங்கள் அனைவருக்கும் இந்தப் பரிசு கிடைத்ததா? அல்லது, உங்களில் சிலருக்கு அது கிடைக்கவில்லையா? நீங்கள் அனைவருமே அதைப் பெற்றுள்ளீர்கள், அல்லவா? அதை எவ்வாறு நீங்கள் பார்த்துக் கொள்கிறீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. எப்போதும் இதை அமிர்தவேளையில் சோதித்துப் பாருங்கள். சிறிதளவு பலவீனம் இருந்தாலும், அதை அமிர்த வேளையில் சரியாக்கிக் கொள்வதன் மூலம், உங்களின் முழு நாளும் சக்திவாய்ந்தாக இருக்கும். உங்களால் அதைச் சரியாக்க முடியாவிட்டால், யாராவது ஒருவரின் மூலம் அதைச் சரியாக்கிக் கொள்ளுங்கள். எவ்வாறாயினும், அமிர்த வேளையில் சரியாக்கி விடுங்கள். அச்சா. பாபா வேறொரு வேளையில் தெய்வீகப் பார்வையைப் பற்றிச் சொல்லுவார். இதை தெய்வீகப் பார்வை, தெய்வீகக் கண்கள் அல்லது ஆன்மீக ஒளி என எவ்வாறு அழைத்தாலும், அவை அனைத்தும் ஒரே விடயமே. இந்த வேளையில், உங்கள் அனைவரிடமும் தெய்வீகப் புத்தி என்ற இந்தப் பரிசு உள்ளதல்லவா? உங்களிடம் தங்கப் பாத்திரம் உள்ளதல்லவா? இதுவே தெய்வீகப் புத்தி என்பதாகும். நீங்கள் அனைவரும் உங்களின் தெய்வீகப் புத்தியுடன், உங்களின் நிஜத் தங்கம் என்ற பாத்திரத்துடன் மதுவனத்திற்கு வந்துள்ளீர்கள், அல்லவா? நிஜத் தங்கத்தில் வெள்ளியோ அல்லது செம்போ கலந்துவிடவில்லை, அல்லவா? சதோபிரதான் என்றால் நிஜத்தங்கம் என்று அர்த்தம். அதுவே தெய்வீகப் புத்தி எனப்படுகிறது. அச்சா, நீங்கள் எங்கிருந்து வந்திருந்தாலும், ஞான நதிகளான நீங்கள் சகல திசைகளில் இருந்தும் வந்து கடலுடன் கலக்கிறீர்கள். இது நதிகளும் கடலும் கலக்கும் சங்கமம் ஆகும். நீங்கள் மகத்தான சந்திப்பைக் கொண்டாட வந்துள்ளீர்கள், அல்லவா? நீங்கள் சந்திப்பைக் கொண்டாடுவதற்கு வந்துள்ளீர்கள். பாப்தாதா சகல ஞான நதிகளைக் காண்பதிலும் எவ்வாறு நீங்கள் மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வெகு தொலைவில் இருந்து சந்திப்பைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளீர்கள் என்பதைக் கண்டும் களிப்படைகிறார். அச்சா.

சதா தெய்வீகப் புத்தி என்ற தங்கப் பரிசைப் பயன்படுத்துபவர்களுக்கும் தந்தையைப் போல எப்போதும் புத்திசாலிகளாக இருந்து, மாயையின் கெட்டித்தனத்தை அறிபவர்களுக்கும், சதா தந்தையின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருந்தவண்ணம் மாயையின் நிழலில் இருந்து தொலைவில் இருப்பவர்களுக்கும், சதா ஞானக் கடலுடன் இனிமையான சந்திப்பைக் கொண்டாடுபவர்களுக்கும், சிரமமான எதையும் இலகுவாக்கும் உலக உபகாரிகளுக்கும், மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா தனிப்பட்ட முறையில் குழுக்களைச் சந்திக்கிறார்:
1. உங்களின் பார்வையை மாற்றியதால், உங்களின் உலகமும் மாறியதல்லவா? உங்களின் பார்வை மேன்மை அடையும்போது, உங்களின் உலகமும் மேன்மையடையும். இப்போது தந்தையே உங்களின் உலகம். இந்த உலகம் தந்தைக்குள் அமிழ்ந்துள்ளது. இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் எங்கு பார்த்தாலும், எதைக் கேட்டாலும், தந்தை உங்களுடன் இருப்பதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? முழு உலகிலும் அவரைப் போல அன்பானவர் எவரும் இருக்க முடியாது. உங்களுடன் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணத்திலும் இருப்பவரும் வேறு எவரும் இருக்க முடியாது. வெளியுலகில், மற்றவர்கள் எவ்வளவு அன்பானவர்களாக இருந்தாலும், அவர்களால் உங்களுக்கு எப்போதும் சகவாசத்தைத் தர முடியாது. இவரோ உங்களின் கனவுகளிலும் உங்களுடனேயே இருக்கிறார். இத்தகைய சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றும் சகபாடியை நீங்கள் கண்டுள்ளீர்கள். இதனாலேயே, உங்களின் உலகம் மாறியுள்ளது. நீங்கள் இப்போது லௌகீகத்திலும் அலௌகீகத்தை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? லௌகீக உலகில் நீங்கள் எத்தகைய உறவுமுறையைக் கண்டாலும், இயல்பாகவே நிஜ உறவுமுறையே நினைவு செய்யப்படுகிறது. அந்த ஆத்மாக்களும் அதனூடாகச் சக்தியைப் பெறுகிறார்கள். தந்தை எப்போதும் உங்களுடன் இருக்கும்போது, நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருக்கிறீர்கள். அது சரியாக இருக்குமா இல்லையா என்று கூட நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. தந்தை உங்களுடன் இருக்கும்போது, அனைத்தும் நன்றாகவே இருக்கும். எனவே, அவரின் சகவாசத்தை அனுபவம் செய்வதன் மூலம், தொடர்ந்து பறவுங்கள். சிந்திப்பது தந்தையின் கடமையே. அவரின் சகவாசத்தில் திளைத்திருப்பதே உங்களின் கடமையாகும். ஆகவே, பலவீனமான எண்ணங்களும் முடிவடைந்துவிட்டன. எப்போதும் கவலையற்ற சக்கரவர்த்தியாக இருங்கள். நீங்கள் இப்போதும் சக்கரவர்த்தி. எல்லா வேளைக்கும் சக்கரவர்த்தி.

2. எப்போதும் உங்களை வெற்றி நட்சத்திரங்களாகக் கருதுங்கள். ஏனைய ஆத்மாக்களுக்கும் வெற்றிக்கான சாவியைத் தொடர்ந்து கொடுங்கள். இந்தச் சேவையால் ஆத்மாக்கள் அனைவரும் சந்தோஷப்படுவார்கள். அவர்களின் இதயபூர்வமான ஆசீர்வாதங்களையும் உங்களுக்குக் கொடுப்பார்கள். தந்தையிடமிருந்தும் ஏனைய அனைவரிடமிருந்தும் பெறப்படுகின்ற ஆசீர்வாதங்களே உங்களை முன்னேறச் செய்யும்.

விசேடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மையான வாசகங்கள் - ஒத்துழைப்பவராகி, மற்றவர்களை ஒத்துழைக்கச் செய்யுங்கள்.

பிரஜைகள் தமது மன்னரிடம் அன்பாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருப்பதைப் போன்று, உங்களின் பௌதீகப் புலன்களும் விசேடமான சக்திகளும் எப்போதும் அன்பாகவும் ஒத்துழைப்பவையாகவும் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே உங்களின் சேவைச் சகபாடிகளிலும் லௌகீக நண்பர்களிலும் உறவினர்களிலும் உங்களின் சேவையின் தாக்கம் ஏற்படும். உங்களுடைய பௌதீகப் புலன்கள் அனைத்தையும் நீங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும்போதே, உங்களின் ஏனைய சகபாடிகள் அனைவரும் உங்களின் பணியில் ஒத்துழைப்பார்கள். நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ, அவர்களின் ஒவ்வொரு பணியிலும் நிச்சயமாக நீங்கள் அவர்களுடன் ஒத்துழைப்பீர்கள். ஆழ்ந்த அன்பைக் கொண்ட ஆத்மாவின் அடையாளம், அவர் எப்போதும் தந்தையின் மேன்மையான பணியில் ஒத்துழைப்பார். அவர் ஒத்துழைப்பவராக இருக்கும் அளவிற்கு, அவர் இலகு யோகியாகவும் இருப்பார். எனவே, இரவு பகலாக, பாபாவிற்கும் சேவைக்குமான இந்த ஒரேயொரு ஆழ்ந்த அக்கறை மட்டுமே இருக்க வேண்டும். வேறு எதுவும் இருக்கக்கூடாது. இத்தகைய ஆத்மாக்களால் மாயையுடன் ஒத்துழைக்க முடியாது. அவர்கள் மாயையிடமிருந்து விலகியே இருப்பார்கள்.

மற்றவர்கள் எவ்வளவுதான் தங்களை வேறொரு பாதைக்குரியவர்கள் எனக் கருதினாலும், கடவுளின் அன்பு, அவர்களை ஒத்துழைப்பவர்கள் ஆக்கி, ‘ஒற்றுமையாக இருத்தல்’ என்ற ஓர் இழையில் கட்டி அவர்களையும் முன்னேறச் செய்கிறது. அனைத்திற்கும் முதலில், அன்பானது உங்களை ஒத்துழைக்கச் செய்கிறது. உங்களை ஒத்துழைப்பவராக்கும் அதே வேளையில் அது இயல்பாகவே உங்களை ஓர் இலகு யோகியாகவும் ஆக்குகிறது. இறையன்பே மாற்றத்தின் அத்திவாரம் ஆகும். அதாவது, அதுவே வாழ்க்கையில் மாற்றத்திற்கான விதை ஆகும். ஆத்மாக்களில் இறையன்பின் அனுபவம் எனும் விதையை விதைத்தால் அது இயல்பாகவே ஒத்துழைப்பவராகும் மரத்தை உருவாக்குகிறது. சரியான நேரத்தில், அது இலகுயோகியாகும் பழத்தையும் கொடுக்கும். ஏனெனில், மாற்றத்திற்கான விதை நிச்சயமாகப் பழத்தைக் கொடுக்கும். அனைவரின் மனங்களிலும் உள்ள நல்லாசிகளினதும் தூய உணர்வகளினதும் ஒத்துழைப்பானது, எந்தவொரு பணியிலும் நீங்கள் வெற்றியடையச் செய்யும். ஏனெனில், நல்லாசிகள், தூய உணர்வுகள் என்ற கோட்டையானது ஆத்மாக்களை மாற்றுவதற்கு உதவும். அனைவரின் ஒத்துழைப்பினால் சூழல் என்ற கோட்டை உருவாக்கப்படுகிறது. இறையன்பெனும் ஓர் இழை இருந்தாலும், பலரின் அபிப்பிராயங்கள் இருந்தபோதும், ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணமே காணப்படும். இப்போது, சகல அதிகாரங்களையும் (தொழில் துறைகள்) ஒத்துழைப்பவர் ஆக்குங்கள். அவர்கள் இவ்வாறு ஆகுகிறார்கள். ஆனால் இப்போது அவர்களை நெருக்கமாகக் கொண்டுவந்து, அவர்களைத் தொடர்ந்தும் அதிகமாக ஒத்துழைக்கச் செய்யுங்கள். ஏனெனில், வெளிப்படுத்துகைக்கான நேரம் இப்போது நெருங்கி வருகிறது. முன்னர், நீங்கள் சிரமப்பட்டு அவர்களை ஒத்துழைப்பவர்கள் ஆக்கினீர்கள். ஆனால் இப்போது அவர்களாகவே முன்வந்து ஒத்துழைக்கிறார்கள். எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒத்துழைப்பார்கள்.

காலத்திற்குக் காலம், சேவையின் வடிவங்கள் மாறுகின்றன. அவை தொடர்ந்தும் மாறும். நீங்கள் இப்போது அதிகளவில் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில், மக்கள் தாங்களாகவே இது மேன்மையானதொரு பணி என்றும், தாமும் இதில் உங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். உண்மையான இதயத்துடனும் அன்புடனும் ஒத்துழைப்பவர்கள், தந்தையிடமிருந்து பலமில்லியன்மடங்கு ஒத்துழைப்பைப் பெறுவதற்கான உரிமையைப் பெறுகிறார்கள். ஒத்துழைப்பிற்கான கணக்கைத் தந்தை முழுமையாகத் தீர்க்கிறார். பெரியதொரு பணியையும் இலகுவாகச் செய்வதற்கான உருவம், மலையை விரலினால் உயர்த்துவது போன்ற படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது ஒத்துழைப்பின் அடையாளம். எனவே, ஒவ்வொருவரும் உங்களின் முன்னால் ஒத்துழைக்கும் ஆத்மாவாக வரவேண்டும். தேவைப்படும் நேரத்தில் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். இதற்கான தேவையே இப்போது உள்ளது. இதற்கு நீங்கள் சக்திவாய்ந்ததோர் அம்பை எய்ய வேண்டும். சக்திவாய்ந்த அம்பில் ஒத்துழைப்பு, சந்தோஷம், ஆத்மாக்கள் அனைவருக்கும் நல்லாசிகள் என்ற உணர்வு காணப்படும். அச்சா.
 
ஆசீர்வாதம்:
நீங்கள் புதுமை, அன்பு என்ற அதிகாரத்துடன் மற்றவர்களை அர்ப்பணிக்கத் தூண்டும் மகாத்மா ஆகுவீர்களாக.

உங்களுடன் யார் தொடர்பில் வந்தாலும். இந்த உறவுமுறையில் வரும்போது, அவர்களுக்குள் அர்ப்பணித்த புத்தி உருவாகி, ‘தந்தை கூறிய அனைத்தும் சத்தியமே’ என்று சொல்லும் வகையில் அவர்களை உறவுமுறைக்குள் கொண்டுவாருங்கள். இதுவே அர்ப்பணித்த புத்தி எனப்படுகிறது. அவர்களின் கேள்விகளும் அப்போது முடிவிற்கு வந்துவிடும். உங்களின் ஞானம் நல்லது என்று மட்டும் அவர்கள் சொல்லாமல், இது புதிய உலகை உருவாக்கும் புதிய ஞானம் என்று சொல்ல வேண்டும். இந்த ஒலி ஏற்பட்டால் மட்டுமே கும்பகர்ணன் விழித்தெழுவான். எனவே, புதுமை என்ற மகத்துவத்தினாலும் அன்பு மற்றும் அதிகாரத்தின் சமநிலையாலும் இந்த முறையில் அவர்களை அர்ப்பணிக்கச் செய்யுங்கள். அப்போது மட்டுமே மைக்குகள் தயாராகி உள்ளார்கள் எனச் சொல்ல முடியும்.

சுலோகம்:
ஒரேயொரு கடவுளுக்கு அன்பானவர் ஆகுங்கள். நீங்கள் உலகினால் நேசிக்கப்படுவீர்கள்.