05.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் உங்களுடனேயே பேசி, தூய்மை ஆகவேண்டியதே உங்கள் கடமையாகும். பிற ஆத்மாக்களைப் பற்றிச் சிந்திப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
கேள்வி:
உங்கள் புத்தியில் நீங்கள் எந்த எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம், உங்கள் பழைய பழக்கவழக்கங்கள் அனைத்தையும் உங்களால் துண்டித்துக் கொள்ள முடியும்?
பதில்:
நாங்களே எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதால் நாங்கள் உலக அதிபதிகள் ஆக வேண்டும். நாங்கள் தேவர்கள் ஆகவேண்டும். இது உங்கள் புத்திக்குள் பிரவேசிக்கும் போது, உங்கள் பழைய பழக்கவழக்கங்கள் அனைத்தும் துண்டிக்கப்படும். அவற்றை அழித்து விடுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டாலும், கூறப்படாவிட்டாலும் கூட அவை இயல்பாகவே துறக்கப்படும். உங்கள் பிழையான உணவு, பானம், மதுபானம் ஆகியவற்றை நீங்களாகவே துறந்து விடுவீர்கள். அற்புதம்! என்று நீங்கள் கூறுவீர்கள். நாங்கள் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகவேண்டும். நாங்கள் 21 பிறவிகளுக்கு எங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றோம் என்பதால் நாங்கள் ஏன் தூய்மையாக இருக்கக் கூடாது?ஓம் சாந்தி.
தந்தை தொடர்ந்தும் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றார்: நீங்கள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்களா? உங்கள் புத்தி ஏனைய திசைகளில் அலைவதில்லை. அப்படித்தானே? ஆகையால் நீங்கள் தந்தையை அழைக்கின்றீர்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தை எவருக்கும் விளங்கப்படுத்தலாம். நீங்கள் பிறருக்கு இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழலுகின்றது என்பதை விளங்கப்படுத்தினால், அவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். அவர்கள் தூய்மை ஆகாது விட்டாலும், அவர்கள் ஞானத்தைக் கற்பார்கள். இது பெரியதொரு விடயம் அல்ல. அதாவது 84 பிறவிச்சக்கரமும், ஒவ்வொரு யுகத்தின் கால எல்லையும், ஒவ்வொரு யுகத்திலும் எத்தனை பிறவிகள் உள்ளன போன்றவையும் இலகுவானதாகும்! இதற்கு நினைவு செய்தலுடன் எந்தத் தொடர்பும் இல்லை. இது கல்வியாகும். தந்தை சரியான விடயங்களையே உங்களுக்குக் விளங்கப்படுத்துகின்றார். அதாவது, இது சதோபிரதான் ஆகுகின்ற விடயமாகும். அது நினைவு செய்தலின் மூலமே இடம்பெறுகின்றது. நீங்கள் நினைவு செய்யாது விட்டால் குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். உங்களால் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாதுள்ளதாலேயே, கூறப்பட்டுள்ளது: கவனியுங்கள்! உங்கள் புத்தியின் யோகம் தந்தையோடு இருக்கட்டும். இது புராதன யோகம் என்று அழைக்கப்படுகின்றது. அனைவரும் ஆசிரியருடனேயே யோகம் செய்வார்கள். நினைவு செய்தலே பிரதான விடயமாகும். நினைவு யாத்திரையில் இருப்பதன் மூலமே உங்களால் சதோபிரதான் ஆக முடியும். சதோபிரதான் ஆகிய பின்னர் நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். எவ்வாறாயினும் கல்வி மிகவும் இலகுவானது. பிறந்த குழந்தையால் கூட அதனைப் புரிந்து கொள்ள முடியும். இந்த நினைவிலேயே மாயையுடன் யுத்தம் இடம்பெறுகின்றது. நீங்கள் தந்தையை நினைவு செய்ய முயற்சிக்கிறீர்கள், ஆனால் மாயை உங்களைத் தன்பால் ஈர்த்து மறந்துவிடச் செய்கின்றாள். சிவபாபா உங்களுக்குள் இருக்கின்றார் என்றோ அல்லது நீங்களே சிவன் என்றோ கூறுவதில்லை. இல்லை. “நான் ஓர் ஆத்மா. நான் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும்” சிவபாபா உங்களுக்குள் பிரவேசித்து விட்டார் என்றில்லை. அது சாத்தியமில்லை. தந்தை கூறுகின்றார்: நான் வேறு எவரிலேனும் பிரவேசிப்பதில்லை. நான் இந்த இரதத்தை மாத்திரம் செலுத்தி, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். ஆம். ஒரு குழந்தை மந்தமான புத்தியைக் கொண்டிருந்தாலும் ஆழமான தேடுதலுடன் வரும் ஒருவருக்கு அவர் விளங்கப்படுத்த நேர்ந்தால், நான் சேவைக்காக அக் குழந்தைக்குள் பிரவேசித்து அந்த நபருக்கு திருஷ்டி கொடுக்கின்றேன். ஆனால் அவருக்குள் என்னால் எந்த நேரமும் இருக்க முடியாது. பல வடிவங்களை ஏற்று என்னால் எவருக்கும் நன்மை செய்ய முடியும். எனினும் சிவபாபா தனக்குள் பிரவேசித்து, இவ்வாறு கூறினார் என எவராலும் கூற முடியாது. இல்லை. சிவபாபா குழந்தைகளுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். தூய்மை ஆகுவதே பிரதான விடயம், அப்பொழுதே உங்களால் தூய உலகிற்கு செல்ல முடியும். 84 பிறவிகளின் சக்கரம் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் முன்னிலையில் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்தளவு ஞானத்தைக் கொடுக்க முடியாது. ஆத்மாக்களே ஞானத்தைப் பெறுகின்றார்கள். இதுவே மூன்றாவது ஞானக் கண் எனப்படுகின்றது. ஆத்மாவே இன்பத்தையும் துன்பத்தையும் உணர்கின்றார். ஆத்மா இச்சரீரத்தைப் பெற்றுள்ளார். ஆத்மாவே ஒரு தேவர் ஆகுகின்றார். ஒருவர் சட்டநிபுணராகவோ அல்லது ஒரு வியாபாரியாகவோ ஆகும்போது, ஆத்மாவே அவ்வாறு ஆகுகின்றார். எனவே தந்தை இப்பொழுது இங்கிருந்து ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுவதுடன் தனது சொந்த அறிமுகத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்கள் தேவர்களாக இருந்த போது, மனிதர்களாகவே இருந்தீர்கள். ஆனால் தூய ஆத்மாக்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர்கள் என்பதால் உங்களைத் தேவர்கள் என அழைக்க முடியாது. நீங்கள் தேவர்கள் ஆகவேண்டுமாயின், இப்பொழுது, நீங்கள் நிச்சயமாகத் தூய்மை ஆகவேண்டும். அதற்காக நீங்கள் பாபாவை நினைவு செய்ய வேண்டும். பொதுவாகக் கூறப்பட்டுள்ளது: பாபா நான் சரீர உணர்வுடையவராக ஆகியதால் இந்தத் தவறைச் செய்து விட்டேன். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நிச்சயமாக நீங்கள் தூய்மையாகவே வேண்டும். எவ்விதப் பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். இங்கு நீங்கள் நற்பண்புகள் அனைத்தும் நிறைந்தவராக வேண்டும். தூய்மையாகுவதால் நீங்கள் முக்தி தாமத்திற்குச் செல்வீர்கள். வேறு எக் கேள்வியும் கேட்க வேண்டிய அவசியமில்லை. உங்களுடனேயே பேசுங்கள். ஏனைய ஆத்மாக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: இரண்டு மில்லியன் ஆத்மாக்கள் போரில் மரணித்து விட்டார்கள். அவ் ஆத்மாக்கள் அனைவரும் எங்கு சென்றார்கள்? அவர்கள் எங்கு சென்றாலும் அதைப் பற்றி நீங்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? உங்கள் நேரத்தை நீங்கள் ஏன் வீணாக்குகின்றீர்கள்? வேறு எந்தக் கேள்வியும் கேட்க வேண்டிய அவசியமில்லை. தூய்மையாகி தூய உலகின் அதிபதியாகுவதே உங்கள் கடமையாகும். வேறு விடயங்களுக்குள் செல்வதனால் நீங்கள் குழப்பமடைவீர்கள். ஒருவர் தகுந்த பதிலைப் பெறாது விட்டால் அவர் குழப்படைந்து விடுகின்றார். தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! உங்கள் சரீரத்தையும் சரீர உறவுகள் அனைத்தையும் துறந்து விடுங்கள். நீங்கள் என்னிடம் வரவேண்டும். ஒருவர் மரணித்த பின்னர், அவருடைய சரீரம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது, அவருடைய முகம் மயானத்திற்கு மறுபுறமாகவும், பாதங்கள் மயானத்தை நோக்கிய வண்ணமும் இருக்கும். பின்னர் அவர்கள் மயானத்தை அண்மித்;ததும் அவருடைய முகம் மயானத்தை நோக்கி இருக்கும் வகையில், அவரைத் திருப்பி விடுகிறார்கள். உங்கள் வீடு மேலே உள்ளது. தூய்மையற்ற எவரும் மேலே செல்ல முடியாது. தூய்மையாகுவதற்கு உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைக்கப்பட வேண்டும். நீங்கள் அமைதி தாமத்திற்குத் தந்தையிடம் செல்ல வேண்டும். நீங்கள் தூய்மையற்றிருந்ததால் அழைத்தீர்கள்: வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள். எங்களுக்கு விடுதலையளிங்கள்! தந்தை கூறுகின்றார்: இப்பொழுது தூய்மையாகுங்கள்! ஒவ்வொரு சக்கரத்திலும் அதே மொழியிலேயே தந்தை விளங்கப்படுத்துகின்றார். அவர் இவரின் மொழியிலே விளங்கப்படுத்துகின்றார். இக்காலத்தில், இந்தி ஒரு பொது மொழியாகியுள்ளது. அவர் தனது மொழியை மாற்ற முடியும் என்றில்லை. இல்லை. தேவர்களின் மொழி சமஸ்கிருதம் அல்ல. சமஸ்கிருதம் இந்து சமயத்தினரது மொழியல்ல. அது இந்தி மொழியே ஆகும். எனவே அவர் ஏன் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த வேண்டும்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இங்கிருக்கும் போது, தந்தையின் நினைவில் அமர்ந்திருங்கள். வேறு எதிலும் ஈடுபடாதீர்கள். பல நுளம்புகள் வெளி வருகின்றன. எனவே அவை அனைத்தும் எங்கு செல்லும்? எங்கேனும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டவுடனேயே பலர் மரணித்து விடுகின்றார்கள். அப்பொழுது அவ் ஆத்மாக்கள் அனைவரும் எங்கே செல்கின்றார்கள்? அதனைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? தந்தை உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுத்துள்ளார்: உங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சியைச் செய்யுங்கள். பிறரையிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். அன்றேல் நீங்கள் வேறு பல விடயங்களில் அக்கறை செலுத்திக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவ்வளவே. எதற்காக நீங்கள் என்னை அழைத்தீர்களோ அதற்கான வழிமுறையை தொடருங்கள். நீங்கள் உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோரிக் கொள்ள வேண்டும். வேறு விடயங்களில் ஈடுபடாதீர்கள். இதனாலேயே பாபா மீண்டும், மீண்டும் கூறுகின்றார்: கவனம் செலுத்துங்கள்! உங்கள் புத்தி வேறு எங்கும் செல்லாதிருப்பதைச் சோதியுங்கள். நீங்கள் கடவுளின் ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். வேறு எதிலுமே நன்மையில்லை. தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். இதனை உறுதியாக நினைவு செய்யுங்கள்: எங்கள் பாபா எங்கள் பாபாவும் எங்கள் ஆசிரியரும் வழிகாட்டியும் ஆவார். நிச்சயமாக இதனை நீங்கள் உங்கள் இதயத்தில் கொண்டிருக்க வேண்டும்: தந்தை தந்தையே, அவர் எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் எங்களுக்கு யோகம் கற்பிக்கின்றார். ஒரு ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கும் போது, உங்கள் புத்தியின் யோகம் ஆசிரியருடனும் கல்வியிடனும் மாத்திரமே இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் தந்தைக்கு உரியவர்கள். நீங்கள் குழந்தைகள் என்பதனால் நீங்கள் இங்கமர்ந்திருந்து ஆசிரியருடன் கற்கின்றீர்கள். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், நீங்கள் தந்தைக்கு உரியவர்கள் என்பதால், நீங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். சிவபாபாவை நீங்கள் நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் சதோபிரதானும் ஆகுகின்றீர்கள். வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. மக்கள் காரிருளினுள் உள்ளார்கள். ஞானத்திற்கு எவ்வளவு வலிமை உள்ளது எனப் பாருங்கள்! நீங்கள் இந்த வலிமையை எங்கிருந்து பெறுகின்றீர்கள்? இந்த வலிமையை நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்று அதன் மூலம் நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். அப்போது இக்கல்வி இலகுவாக இருக்கும். ஏனைய கல்விகளை கற்பதற்கு பல மாதங்கள் எடுக்கின்றது. ஆனால், இங்கு இது ஏழு நாட்களுக்கான பாடநெறியாகும். இவ்வாறு செய்வதனால் நீங்கள் அனைத்தையும் புரிந்து கொள்கிறீர்கள். பின்னர் அனைத்தும் உங்கள் புத்தியில் தங்கியுள்ளது. சிலருக்கு நீண்டகாலம் எடுக்கின்றது. சிலருக்குக் குறுகிய காலம் எடுக்கும். சிலர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்து கொள்கின்றார்கள். தந்தையை நினைவு செய்து தூய்மையாகுவதே பிரதான விடயமாகும். இதுவே சிரமமாகும், இல்லையெனில் கல்வி மிகவும் எளிமையானதே. நீங்கள் சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும். ஒருநாள் பாடத்தை எடுத்த பின்னருமே உங்களால் அனைத்தையும் புரிந்து கொள்ளமுடியும். ஆத்மாக்களாகிய நாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். ஆகையால் நிச்சமாக நாங்களே உலக அதிபதிகள். இது உங்கள் புத்தியில் பிரவேசிக்கின்றது. நீங்கள் தேவர்கள் ஆக விரும்பினால் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். இதனைத் தங்கள் புத்தியில் கொண்டிருப்பவர்கள் உடனடியாகவே தங்கள் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் துறந்து விடுகின்றார்கள். அவ்வாறு செய்யுங்கள் என்று நீங்கள் அவர்களுக்குக் கூறினாலோ, கூறாது விட்டாலோ அவர்கள் தாங்களாகவே தங்கள் பிழையான உணவு, பானம், மதுபானம் போன்றவற்றைத் துறந்து விடுகின்றார்கள். அற்புதம்! நான் இவ்வாறு (இலக்ஷ்மி நாராயணன்) ஆக வேண்டும். 21 பிறவிகளுக்கான எனது இராச்சிய பாக்கியத்தை நான் பெறுகின்றேன். ஆகையால் நான் ஏன் தூய்மை ஆகக் கூடாது? நீங்கள் இதில் உறுதியாக இருக்க வேண்டும். நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். எனினும் 84 பிறவிச் சக்கரத்தின் ஞானத்தை ஒரு விநாடியில் பெற்றுக் கொள்ள முடியும். அதனைப் பார்ப்பதன் மூலமே உங்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு புதிய விருட்சம் நிச்சயமாகச் சிறியதாகவே இருக்கும். இப்பொழுது விருட்சம் மிகவும் பெரியதாகவும், தமோபிரதானாகவும் ஆகிவிட்டது. நாளை அது புதியதாகவும் சிறியதாகவும் ஆகிவிடும். இந்த ஞானத்தை வேறு எங்கும், வேறு எக்காலத்திலும் உங்களால் பெற முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஒரு கல்வியாகும். இப்பொழுது நீங்கள் பெறுகின்ற முதலாவது கற்;பித்தல்: தந்தையை நினைவு செய்யுங்கள்! தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கையை உறுதியாகக் கொண்டிருக்க வேண்டும். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். வேறு எந்த மனிதராலும் இதனைக் கூற முடியாது. ஓர் ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கும் போது நீங்கள் நிச்சயமாக அவரை நினைவு செய்வீர்கள். அவரே எல்லையற்ற தந்தையுமாவார். அவர் எங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். ஆனால் ஆத்மாக்கள் எவ்வாறு தூய்மை ஆக முடியும்? இதனை வேறு எவராலுமே உங்களுக்குக் கூறமுடியாது. அவர்கள் தங்களைக் கடவுள் என அழைத்தாலோ அல்லது வேறு ஏதாவது என்று அழைத்தாலும் அவர்களால் உங்களைத் தூய்மையாக்க முடியாது. இக்காலத்தில் பலர் கடவுள் ஆகியுள்ளார்கள்! மக்கள் குழப்படைந்துள்ளார்கள். எண்ணிக்கையற்ற சமயங்கள் தோன்றியுள்ளதால் ‘எது சரியென எவ்வாறு எங்களால் கூற முடியும்?” என அவர்கள் கூறுகின்றார்கள். உங்களின் கண்காட்சிகளையும் அருங்காட்சியகங்களையும் அவர்கள் அங்குரார்ப்பணம் செய்தாலும் அவர்களால் எதனையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. உண்மையில் ஏற்கனவே அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு விட்டது. முதலில் அடிக்கல் நாட்டப்படுகின்றது, அதன் பின்னர் கட்டடம் தயாராகிய பின்னர், அதன் அங்குரார்ப்பணம் இடம்பெறுகின்றது. அடிக்கல் நாட்டுவதற்கும் கூட மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். தந்தையே இந்;த ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். ஆனால் புதிய உலகின் அங்குரார்ப்பணம் நிச்சயமாக இடம்பெறும். அந்த அங்குரார்ப்பணத்தை வேறு எவரும் செய்து வைக்க வேண்டிய அவசியமில்லை. அங்குரார்ப்பணம் தானாகவே இடம்பெறும். நாங்கள் இங்கு கற்றதன் பின்னர் புதிய உலகிற்குசு; செல்வோம். ஸ்தாபனைக்கான முயற்சியை நீங்கள் இப்பொழுது மேற்கொள்கின்றீர்கள்; என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். விநாசம் இடம்பெறும் பொழுது இவ் உலகம் மாற்றமடையும். அப்பொழுது நீங்கள் அங்கு சென்று, புது உலகை ஆட்சி புரிவீர்கள். தந்தை சத்திய உலகின் ஸ்தாபனையை மேற் கொள்கின்றார். நீங்கள் வரும் போது, சுவர்க்க இராச்சியத்தை நீங்கள் பெறுவீர்கள். ஆனால் திறப்பு விழாவை மேற்கொள்வது யார்;? தந்தை சுவர்க்கத்திற்குச் செல்வதில்லை. நீங்கள் மேலும் முன்னேறுகையில், சுவர்க்கத்தில் என்ன இருக்கும் என்பதையும் இறுதியில் என்ன இருக்கும் என்பதையும் பார்ப்பீர்கள். நீங்கள் முன்னேற்றம் அடையும் பொழுது இவை அனைத்தையும் புரிந்து கொள்வீர்கள். தூய்மையாகாது, உங்களால் கௌரவமாக சுவர்க்கத்திறகுச் செல்ல முடியாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்தளவு அந்தஸ்தையேனும் உங்களால் கோர முடியாது. ஆகவே தந்தை கூறுகின்றார்: அதிகளவு முயற்சி செய்யுங்கள்! உங்கள் வியாபாரம் போன்றவற்றை நீங்கள் செய்யுங்கள், ஆனால் அதிகளவு பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றீர்கள்? அதனை உங்களால் உண்ண முடியாது! உங்களுடைய குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் கூட அதிலிருந்து உண்ண முடியாது. அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும். ஆகவே புத்திசாலித்தனமாக சிறிதளவை சேமிப்பில் வைத்துக் கொண்டு ஏனைய அனைத்தையும் அங்கு மாற்றுங்கள். அனைவராலும் அதனை மாற்ற முடியும் என்றில்லை. ஏழைகள் அனைத்தையும் உடனடியாக மாற்றி விடுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் தமது அடுத்த பிறவிக்காக அனைத்தையும் மாற்றிவிடுகின்றார்கள், ஆனால் அது மறைமுகமானது, இதுவோ நேரடியானதாகும். தூய்மையற்ற மனிதர்கள் தூய்மையற்ற மனிதர்களுடனேயே கொடுக்கல் வாங்கல்களை வைத்துக் கொள்கின்றார்கள். இப்பொழுது தந்தை வந்துள்ளார் என்பதால் நீங்கள் தூய்மையற்றவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை இனிமேலும் வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் பிராமணர்கள். நீங்கள் பிராமணர்களுக்கு உதவி செய்ய வேண்டும். சேவை செய்பவர்களுக்கு எவ்வித உதவியும் தேவையில்லை. ஏழைகள், செல்வந்தர் போன்றோரும் இங்கு வருகின்றார்கள். ஆனால் கோடீஸ்வரர்கள் மிகவும் அரிதாகவே வருகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு ஆவேன். பாரதம் மிகவும் ஏழ்மையான நாடாகும். தந்தை கூறுகின்றார்: நான் பாரதத்திற்கே வருகிறேன், அதிலும் மிகவும் உயர்ந்த யாத்திரை ஸ்தலமான இந்த அபுவிலேயே தந்தை வந்து முழு உலகிற்கும் ஜீவன்முக்தியை வழங்குகின்றார். இது நரகமாகும். எவ்வாறு நரகம் சுவர்க்கமாக மாறுகின்றது என உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நீங்கள் ஞானம் முழுவதையும் உங்கள் புத்தியில் கொண்டிருக்கிறீர்கள். தூய்மையாகுவதற்கான அத்தகையதொரு வழிமுறையை தந்தை காட்டுவதனால், அனைவரும் நன்மை அடைகின்றார்கள். சத்தியயுகத்தில் இழப்புக்களோ அல்லது அழுது, புலம்புவது போன்ற கேள்விக்கோ இடமில்லை. இந்நேரத்தில் தந்தையின் புகழ் ஞானக்கடலும், சந்தோஷக் கடலுமாகும். தந்தையின் புகழே தற்போது உங்களுடைய புகழுமாகும். நீங்களும் பேரானந்தக் கடலாகுகின்றீர்கள். நீங்கள் பலருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றீர்கள். பின்னர் ஆத்மாக்களாகிய நீங்கள் அந்த சம்ஸ்காரங்களை புதிய உலகிற்கு எடுத்துச் செல்கின்றீர்கள், அங்கு உங்கள் புகழ் மாற்றமடைகின்றது. அனைத்து நற்பண்புகளும் நிறைந்தவர் என நீங்கள் அழைக்கப்படுவீர்கள். இப்பொழுது நீங்கள் நரகத்தில் இருக்கின்றீர்கள். இது முட்காடு என அழைக்கப்படுகின்றது. தந்தை மாத்திரமே பூந்தோட்டத்தின் அதிபதி என்றும் படகோட்டி என்றும் அழைக்கப்படுகின்றார் சந்தோஷமற்றிருப்பதனால் மக்கள் பாடுகின்றார்கள்: எங்கள் படகை அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள்! எனவே ஆத்மாக்கள் அழைக்கின்றார்கள். அவர்கள் அவரின் புகழைப் பாடிய போதிலும் அவர்கள் எதனையுமே புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் மனதில் தோன்றுவதையெல்லாம் கூறுகின்றார்கள். அவர்கள் அதிமேலான கடவுளை தொடர்ந்தும் அவதூறு செய்கின்றார்கள். நீங்கள் ஆஸ்திகர் என உங்களைக் கூறுவீர்கள். அவனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவர் தந்தையே ஆவார், இப்பொழுது எங்களுக்கு அவரைத் தெரியும். தந்தையே தனது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். நீங்கள் இப்பொழுது பக்தி செய்வதில்லை என்பதால் உங்களை அவர்கள் அதிகளவு தொந்தரவு செய்கின்றார்கள். அவர்களோ பெரும்பான்மையாக உள்ளனர், ஆனால் நீங்கள் சிறுபான்மையாகவே உள்ளீர்கள். நீங்கள் பெரும்பான்மை ஆகும்போது, அவர்களும் ஈர்க்கப்பட்டு, அவர்களின் புத்தியின் பூட்டு திறக்கப்படும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் சொந்த முன்னேற்றத்தில் மாத்திரம் அக்கறை செலுத்துங்கள். வேறு எதிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள். நினைவிலும், கல்வியிலும் முழுக் கவனம் செலுத்துங்கள். உங்கள் புத்தியை அலைந்துதிரிய அனுமதிக்காதீர்கள்.2. தந்தை இப்பொழுது இங்கே நேரடியாக வந்துள்ளார். ஆகையால், விவேகத்துடன் உங்களிடம் உள்ள அனைத்தையும் மாற்றம் செய்யுங்கள். தூய்மையற்ற ஆத்மாக்களுடன்; கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் கௌரவமாக சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமாயின், நிச்சயமாக தூய்மையாக வேண்டும்.
ஆசீர்வாதம்:
யோகத்தினால் உயர்வான ஸ்திதியை அனுபவம் செய்து, இலேசான-ஒளியான தேவதை ஆகுவீர்களாக.இராஜயோகி குழந்தைகளாகிய நீங்கள், யோகத்தில் ஓர் உயர்வான ஸ்திதியை அனுபவம் செய்வதனால், பின்னர் ஹத்த யோகிகள் தமது சரீரத்தை உயர்வாக இருக்கச் செய்கின்றார்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உயர்வானதொரு ஸ்திதியில் இருப்பதால், யோகிகள் உயரமான இடத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். உங்கள் மனதின் ஸ்திதியின் இடம் உயர்வாக உள்ளது, ஏனெனில் நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் ஆகியுள்ளீர்கள். எப்பொழுதுமே கூறப்படுகின்றது: தேவதைகள் தமது பாதங்களை நிலத்தில் பதிப்பதில்லை. புத்தி என்ற பாதத்தை நிலத்தில் பதிக்காதிருப்பவர்களும், சரீர உணர்வற்றவர்களுமே தேவதைகள் ஆவார்கள். தேவதைகளுக்கு பழைய உலகத்தின் மீது பற்று இருப்பதில்லை.
சுலோகம்:
இப்பொழுது உங்கள் ஆசீர்வாதக் கணக்கை நிரப்பிக் கொண்டால், உங்கள் உயிரற்ற விக்கிரங்களிடமிருந்து பல பிறவிகளுக்கு அனைவருமே தொடர்ந்தும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வார்கள்.