18.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையே சகல உறவுமுறைகளினதும் அன்பு எனும் சக்கரின் (அதிகளவு இனிப்பானவர்) ஆவார். ஒரேயொரு இனிமையான அன்பிற்;கினியவரை நினைவு செய்தால், உங்கள் புத்தி ஏனைய அனைத்துத் திசைகளிலிருந்தும் விலகிவிடும்;
கேள்வி:
கர்மாதீத் ஆகுவதற்கு, இலகுவான முயற்சியும், வழியும் என்ன?
8பதில்:
சகோதரத்துவம் என்ற உங்கள் பார்வையை உறுதியாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். தந்தை ஒருவரைத் தவிர ஏனைய அனைத்தையும் உங்கள் புத்தியிலிருந்து மறந்திடுங்கள். சரீர உறவுமுறைகள் எதனையுமே நீங்கள் நினைவு செய்யாத போதே உங்களால் கர்மாதீத் அடைய முடியும். உங்களை ஆத்மாக்கள், அதாவது சகோதரர்கள் என்று கருதுவதே உங்கள் முயற்சியின் இலக்காகும். உங்களைச் சகோதரர்கள் என்று கருதுவதன் மூலம், சரீர உணர்வுப் பார்வையும், சகல விகாரமான எண்ணங்களும் முடிவடையும்ஓம் சாந்தி.
இரட்டை ஓம் சாந்தி. அது எவ்வாறு இரட்டை என்பது, குழந்தைகளாகிய உங்களது புத்தியில் மாத்திரமே உள்ளது. தந்தையும் அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகிறார். முதலில் உங்களுக்குத் தந்தையின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும், ஏனெனில் அவரே தந்தையும், ஆசிரியரும், அத்துடன் குருவும் ஆவார். உலகைப் பொறுத்தவரை, இம் மூவரும் வெவ்வேறானவர்கள். நீங்கள் இளமையாக இருக்கும் போது உங்களுக்கு ஓர் ஆசிரியர் இருப்பார். 60 வயதிற்குப் பின்னர் ஒரு குரு ஏற்றுக் கொள்ளப்படுகின்றார். எவ்வாறாயினும், அவர் இங்கு வரும்போது, மூன்று வகையான சேவையையும் ஒரே நேரத்தில் செய்கின்றார். அவர் கூறுகிறார்: இளைஞர்கள், முதியவர்கள் அனைவருமே இங்கு கற்கலாம். சிறுவர்களது மூளை மிகவும் நல்லதும், புத்துணர்வானதும் ஆகும். இளையவர், முதியவர் அனைவருமே உயிருள்ள ஆத்மாக்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஓர் ஆத்மா உயிருள்ள ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். ஆத்மாவிற்கும், உயிருள்ள சரீரத்திற்குமிடையே ஒரு வேறுபாடு உள்ளது. இங்கு குழந்தைகளாகிய உங்களுக்கு ஆத்மாவையும், பரமாத்மாவையும் பற்றிய ஞானம் வழங்கப்படுகிறது. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆனால் இங்கு சரீரங்கள் சீரழிவின் மூலமே உருவாக்கப்படுகின்றன. அங்கு சீரழிவு என்ற வார்த்தைக்கே இடமில்லை. அது முற்றிலும் விகாரமற்ற உலகம் என்று நினைவு கூரப்படுகிறது. ‘மேன்மையான’ ‘சீரழிவான’ என்ற வார்த்தைகள் உள்ளன. தந்தை மாத்திரமே இவ் விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். ஆத்மாக்களாகிய எங்களுடைய தந்தையே எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்ற உறுதியான நம்பிக்கையைக் குழந்தைகள் கொண்டிருக்க வேண்டும். அதி மங்களகரமான சங்கமயுகத்திலேயே தந்தை வருகிறார். ஆகவே அவர் உங்களை மிகவும் கீழான நிலையிலிருந்து அதி;மேன்மையானவர் ஆக்குகின்றார் என்பதை இது நிரூபிக்கின்றது. இந்த உலகம் மிகவும் இழிவானதும், தமோபிரதானும் ஆகும். இது ஆழ் நரகம்; என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது நாங்கள் வீடு திரும்பவேண்டும். இதனாலேயே நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும். உங்களை மீண்டும் அழைத்துச் செல்வதற்குத் தந்தை வந்துள்ளார். நாங்கள் சகோதரர்கள் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள். இந்த சரீரம் எஞ்ச மாட்டாது. விகார பார்வை முடிந்துவிடும். இது மிகவும் உயர்ந்த இலக்காகும். இதற்கு அதிக முயற்சி தேவை என்பதால் வெகு சிலரே இந்த இலக்கை அடைகின்றார்கள். இறுதியில், எதுவுமே நினைவு செய்யப்படக்கூடாது. அதுவே கர்மாதீத ஸ்திதி என்று அழைக்கப்படுகின்றது. இச் சரீரம் கூட அழியக்கூடியது. நீங்கள் அதன் மீதுள்ள பற்றையும் அகற்ற வேண்டும். உங்கள் பழைய உறவுமுறைகளுடன் நீங்கள் எவ்விதப் பற்றையும் கொண்டிருக்கக்கூடாது. இப்போது நீங்கள் புதிய உறவுமுறைகளுக்குள் செல்லவேண்டும். கணவன் மனைவிக்கிடையேயுள்ள பழைய அசுர உறவுமுறை மிகவும் அசுத்தமானதாகும். தந்தை கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதினால், சரீர உணர்வு இருக்க மாட்டாது. ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே உள்ள கவர்ச்சி நீக்கப்பட்டுவிடும். எழுதப்பட்டுள்ளது: இறுதியில் ஒரு பெண்ணை நினைப்பவன், அத்தகைய எண்ணங்களுடனேயே மரணிக்கின்றான்….. இதனாலேயே கூறப்பட்டுள்ளது: “இறுதிக் கணங்களில், உங்கள் வாயில் கங்கை நீரும், கிருஷ்ணரின் நினைவும் இருக்கட்டும்;”. பக்தி மார்க்கத்தில் அவர்கள் கிருஷ்ணரை நினைவு செய்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: கடவுள் கிருஷ்ணர் பேசுகிறார். இங்கு தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்கள் சரீரத்தைக்கூட நினைவு செய்யக்கூடாது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதுடன், தொடர்ந்து உங்கள் இதயத்தை அனைத்திலுமிருந்தும் அகற்றிடுங்கள். சகல உறவுமுறைகளிலும், அந்த ஒருவரின் (கடவுளின்); அன்பு, சக்கரின் (அதிஇனிமையானது) போன்றதாகும். அவரே அனைவருக்கும், மிகவும் இனிமையான அனபிற்;கினியவராவார். அன்பிற்கினியவர் ஒருவரே. ஆனால் பக்தி மார்க்கத்தில் அவர்கள் அவருக்குப் பல பெயர்களை வழங்கியுள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் அதிகளவு விரிவாக்கம் உள்ளது: யாகம் வளர்த்தல், தபஸ்யா செய்தல், தானம் செய்தல், யாத்திரையில் செல்லுதல், விரதம் அனுஷ்டித்தல், சமய நூல்களை வாசித்தல் அனைத்தும் பக்தியின் சம்பிரதாயங்கள் ஆகும். ஞானத்தில் எந்தச் சம்பிரதாயங்களும் இல்லை. மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக நீங்கள் இவற்றைக் குறித்துக் கொள்கிறீர்கள். எனினும் உங்களுடைய குறிப்புக்கள் (தாள்கள்) எதுவுமே எஞ்ச மாட்டாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் அமைதி தாமத்திலிருந்து வந்தீர்கள். நீங்கள் அமைதி நிறைந்தவர்களாக இருந்தீர்கள். நீங்கள் அமைதி மற்றும் தூய்மை என்ற ஆஸ்திகளை அமைதிக் கடலிடமிருந்து பெறுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் ஆஸ்தியைப் கோருகிறீர்கள். நீங்கள் ஞானத்தையும் பெறுகின்றீர்கள். உங்களுடைய அந்தஸ்து உங்கள் முன்னிலையிலுள்ளது. தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. இது ஆன்மீPக ஞானமாகும். இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடு;ப்பதற்காக, ஆன்மீகத் தந்தை ஒருமுறையே வருகிறார். அவர் தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகிறார். பாபா இங்கு அமாந்திருந்து, காலையில் குழந்தைகளுக்கு அப்பியாசம் நடத்துகிறார். உண்மையில் இதனை அப்பியாசம் என்று அழைக்க முடியாது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை நினைவு செய்யுங்கள். இது மிகவும் இலகுவானது. நீங்கள் ஆத்மாக்கள். நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்? பரந்தாமத்திலிருந்து. வேறு எவரும் இதனை உங்களிடம் வினவ மாட்டார்கள். பரலோகத் தந்தை மாத்திரமே குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் பரந்தாமத்திலிருந்து வந்து, உங்கள் பாகத்தை நடிப்பதற்காக அச் சரீரங்களினுள் பிரவேசித்தீர்கள். நீங்கள் உங்கள் பாகங்களை நடித்;துள்ளீர்கள். நாடகமும் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. ஆத்மா தூய்மையற்றவர் ஆகியபொழுது, அவரது சரீரமும் தூய்மையற்றதாகியது. தங்கத்;தில் கலப்பு உலோகம் கலக்கப்படுகிறது ஆகவே அது பின்னர் உருக்கப்படும். அந்தச் சந்நியாசிகள் ஒருபோதும் இக் கருத்தை விளங்கப்படுத்த மாட்டார்கள். அவர்களுக்குக் கடவுளையும் தெரியாது. தந்தையுடன் யோகம் செய்தல், என்பதையும் அவர்கள் நம்பமாட்டார்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றவற்றை, வேறு எவராலும் உங்களுக்குக் கற்பிக்க முடியாது. இங்கு, நீங்கள் நடைமுறையில் முயற்சி செய்யவேண்டும். தந்தை உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார். நினைவுகூரப்படுகிறது: சர்வ சக்திவானான அவரே தூய்மையாக்குபவர். அவர் மாத்திரமே ஸ்ரீ ஸ்ரீ என்று அழைக்கப்படுகிறார். தேவர்களும் ஸ்ரீ என்று அழைக்கப்படுகிறார்கள். அங்கு ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையானவை என்பதால், அது அவர்களுக்குப் பொருந்தும். ஆத்மா, செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை என்று எவராலும் கூற முடியாது. ஆத்மாவே 84 பிறவிகளை எடுக்கிறார். எவ்வாறாயினும், ஞானம் இல்லாததால், மக்கள் அதர்மமானவர் ஆகியுள்ளார்கள். தந்தை ஒருவர் மாத்திரமே வந்து, உங்களைத் தர்மம் நிறைந்வர்கள் ஆக்குகிறார். இராவணன் உங்களை அதர்மம் நிறைந்தவர் ஆக்குகிறான். உங்களிடம் படங்கள் உள்ளன. பத்து தலைகளையுடைய இராவணன் இருப்பதில்லை. இராவணன் சத்திய யுகத்தில் இருப்பதில்லை. இது மிகவும் தெளிவானது. எவ்வாறாயினும் உங்களுடைய ஞானத்தைக் கேட்பவர்களைப் பொறுத்தவரையில், அவர்களே இவ்விடத்தைச் சேர்ந்த மரக்கன்றுகள் எனப்படுகின்றார்கள். சிலர் சிறிதளவே செவிமடுப்பார்கள், மற்றவர்கள் அதிகளவு செவிமடுப்பார்கள். பக்தி மார்க்கத்தில் எந்தளவுக்கு விரிவாக்கமுள்ளது என்று பாருங்கள். பல வகையான பக்தர்கள் உள்ளனர். ஆரம்பத்தில், பெண்கள் கடத்தப்பட்டதாக அவர்கள் கேள்விப்பட்டனர். அவர்கள், கிருஷ்ணரும் பெண்களைக் கடத்தியதாகக் கூறுகின்றார்கள். அவ்வாறாயின், அவர்கள் அவ்வாறான கிருஷ்ணரை ஏன் நேசித்து, வழிபடுகின்றார்கள்? தந்தை இங்கு அமர்ந்திருந்து, கிருஷ்ணரே முதல் இளவரசர் என்பதை விளங்கப்படுத்துகிறார். அவர் மிகவும் விவேகமானவர் ஆக இருக்க வேண்டும். முழு உலகிற்கும் அதிபதியான ஒருவர் விவேகம் குறைந்தவராக இருப்பாரா? அங்கு அவர்களுக்கு ஆலோசகர்கள் போன்றவர்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு ஆலோசனை பெறவேண்டிய தேவை இருக்காது. ஆலோசனையைப் பெற்று, அவர் சம்பூரணமானவர் ஆகினார். ஆகவே வேறு என்ன ஆலோசனை அவருக்கு வேண்டும்? அரைக் கல்பத்திற்கு உங்களுக்கு எவருடைய ஆலோசனையும் பெறவேண்டிய தேவை இருக்கமாட்டாது. சுவர்க்கம், நரகம் என்ற பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இந்த இடம் சுவர்க்கமாக முடியாது. கல்லுப்புத்தியை உடையவர்கள் இதனைச் சுவர்க்கமென்று கருதுகிறார்கள். ஏனெனில் இங்கு அவர்களுக்கு செல்வங்களும், மாளிகைகளும் இருக்கின்றன. எவ்வாறாயினும் புதிய உலகமே சுவர்க்கம் என்பது உங்களுக்குத் தெரியும். சுவர்க்கத்தில் அனைவரும் சற்கதியில் இருப்பார்கள். சுவர்க்கமும், நரகமும் ஒரேநேரத்தில் இருக்கமாட்டாது. சுவர்க்கம் என்று எது அழைக்கப்படுகிறது? எவ்வளவு காலத்திற்கு அது நீடித்திருக்கும்? தந்தை உங்களுக்கு இவ் விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். அது ஒரேயொரு உலகமாகும். புதிய உலகம் சத்திய யுகம் என்று அழைக்கப்படுகின்றது. பழைய உலகம் கலியுகம் என்று அழைக்கப்படுகின்றது. பக்தி மார்க்கம் இப்போது முடிவடைகின்றது. பக்திக்குப் பின், ஞானம் இருக்கவேண்டும். உயிர் வாழ்வன அனைத்தும் தங்கள் பாகங்களை நடிக்கும் போதே, தூய்மையற்றவை ஆகியுள்ளன. நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுவீர்கள் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். முக்கால்வாசி சந்தோஷமும், கால்வாசி துக்கமும் உள்ளது. இதிலும், நீங்கள் தமோபிரதான் ஆகும்போது அதிகளவு துன்பம் உள்ளது. அது அரைவாசி, அரைவாசியாக இருந்தால், எவ்வாறு நீங்கள் அதனை அனுபவிப்பீர்கள்? சுவர்க்கமாக இருக்கும்போது, துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இல்லாதிருக்கும் பொழுதே மகிழ்ச்சி இருக்கும். இதனாலேயே அனைவரும் சுவர்க்கத்தை நினைவு செய்கிறார்கள். இப் பழைய உலகினதும், புதிய உலகினதும் எல்லையற்ற நாடகத்தைப் பற்றி எவருக்கும் தெரியாது. பாரத மக்களுக்கு மாத்திரமே தந்தை விளங்கப்படுத்துகிறார். ஏனைய அனைவரும் சக்கரத்தின் மறு பாதியில் வருகின்றார்கள். அரைக் கல்பத்திற்கு, சூரிய, சந்திர வம்சத்தைச் சேர்ந்த நீங்கள் மாத்திரமே இருக்கின்றீர்கள். நீங்கள் தூய்மையாக இருப்பதால், நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதுடன், உலகமும் புதியதாக உள்ளது. அங்கு அனைத்தும் புதியனவே: உணவு, நீர், நிலம் அனைத்தும் புதியனவே. நீங்கள் மேலும் முன்னேறும்போது, சத்திய யுகத்தில் அனைத்தும் எவ்வாறு இருக்கும் என்ற காட்சிகள் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கப்படும். ஆரம்பத்தில் உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தன. ஆகவே இறுதியிலும் உங்களுக்கு அவை கிடைக்கும். மிகவும் நெருக்கமாக நீங்கள் வரும்போது, நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். வெளிநாட்டிலிருந்து ஒருவர் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பிவந்தால், அவர் மிகவும் சந்தோஷமாக இருப்பார். ஒருவர் வெளிநாட்டில் மரணித்தால், அவரது உடல் விமானம் மூலம் சொந்த நாட்டிற்குக் கொண்டுவரப்படுகிறது. மிகவும் தூய்மையானதும், மிகவும் முதற்தரமானதுமான பூமியுமாக பாரதம் இருந்தது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்கும் பாரதத்தின் புகழ் தெரியாது. அது உலக அதிசயமாக இருந்தது. அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது. மக்கள் காட்டும் அதிசயங்கள், நரகத்தின் அதிசயங்களாகும். சுவர்க்கத்திலுள்ள அதிசயங்களுக்கும், நரகத்திலுள்ள அதிசயங்களுக்கும் பகலுக்கும், இரவுக்கும் இடையேயுள்ள வேறுபாடு உள்ளது. நரகத்தின் அதிசயங்களைப் பார்ப்பதற்கு பலர் செல்கின்றார்கள். பல ஆலயங்கள் உள்ளன. அங்கு ஆலயங்கள் இருக்கமாட்டாது. அங்கே இயற்கை அழகு இருக்கும். அங்கு வெகு சில மனிதர்களே இருப்பார்கள். வாசனைப் பொருட்கள் எதுவும் தேவைப்படாது. நீங்கள் ஒவ்வொருவரும் முதற்தரமான பூந்தோட்டத்திற்கு உரியவர்;களாக இருப்பீர்கள். அங்கு முதற்தர பூக்கள் பூத்திருக்கும். அங்கு காற்றும் முதற்தரமானதாக இருக்கும். வெப்பமான சுவாத்தியம் போன்றவற்றினால் நீங்கள் கஷ்டப்பட மாட்டீர்கள். சதா வசந்தகாலமாகவே இருக்கும். ஊதுபத்தி போன்றவையும் தேவைப்படாது. சுவர்க்கம் என்ற பெயரைக் கேட்டவுடன், உங்களுக்கு வாய் ஊறும். நீங்கள் சுவர்க்கம் பற்றி அறிந்துள்ளதால் அவ்வாறான சுவர்க்கத்திற்கு நாங்கள் விரைவாகச் செல்லவேண்டும் என நீங்கள் கூறுவீர்கள். எவ்வாறாயினும், உங்கள் இதயம் கூறுகிறது: இந்நேரத்தில் நாங்கள் எல்லையற்ற தந்தையுடன் இருக்கின்றோம். தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை நாங்கள் மீண்டும் பெறமாட்டோம். இங்கு மனிதர்கள் மனிதர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். அங்கு தேவர்கள் தேவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். இங்கு, தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். பகலுக்கும், இரவுக்குமிடையேயான வேறுபாடு உள்ளது. நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் 84 பிறவிகளைப் எடுத்துள்ளீர்கள். உங்களுக்கு மாத்திரமே உலகின் புவியியலும், வரலாறும் தெரியும்: நாங்கள் பல தடவைகள் இராச்சியத்தைப் பெற்றுக்கொண்டோம். பின்னர் இராவண இராச்சியத்திற்குள் மீண்டும் சென்றுவிட்டோம். தந்தை இப்போது கூறுகிறார்: ஒரு பிறவிக்குத் தூய்மையானவர்கள் ஆகுங்கள். நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். ஏன் நீங்கள் அவ்வாறு ஆகக்கூடாது? எவ்வாறாயினும், மாயை, சகோதர, சகோதரிகளுக்கிடையே தூய்மையற்ற பார்வையை இருக்கச் செய்கிறாள். இதனால் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகவும், சகோதரர்களாகவும் கருதும்போது (தூய பார்வை), பிரச்சனைகள் இருக்க மாட்டாது. சரீர உணர்வை அகற்றுங்;கள். இதற்கு முயற்சி தேவை. இது மிகவும் இலகுவானது. அது சிரமம் என்று நீங்கள் யாருக்கும் கூறினால், அவருடைய இதயம் விலகிச் சென்றுவிடும். இதனாலேயே இது இலகுவான நினைவு என்று அழைக்கப்படுகிறது. ஞானம் மிகவும் இலகுவானது. நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை அறிந்திருக்க வேண்டும். அனைத்திற்கும் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் ஆத்மாவிலுள்ள துரு அகற்றப்படுகிறது. பின்னர் நீங்கள் தூய உலகம் என்ற ஆஸ்தியைப் பெறுவீர்கள். அனைத்திற்கும் முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். பாரதத்தின் புராதன யோகம் பற்றி மக்கள் பேசுகிறார்கள். அதன் மூலம் பாரதம் உலக இராச்சியத்தைப் பெற்றது. புராதனமானது என்பது எத்தனை ஆண்டுகளுக்கு முந்தியதாகும்? நூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தியது என்று அவர்கள் கூறுகிறார்கள். அது 5000 ஆண்டுகளுக்கான விடயமென்பது உங்களுக்குத் தெரியும். தந்தை மீண்டும் ஒருமுறை அதே இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனையிட்டுக் குழப்பமடைய வேண்டிய தேவையில்லை. உங்களிடம் வினவப்படுகின்றது: ஆத்மாக்களாகிய உங்களின் வசிப்பிடம் எங்குள்ளது? நெற்றிப் புருவத்தின் மத்தியில் வசிப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஆகவே, நீங்கள் ஆத்மாவைப் பார்க்கவேண்டும். நீங்கள் இந்நேரத்தில், இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். பின்னர், அங்கு ஞானத்திற்கான தேவையில்லை. நீங்கள் ஒரு தடவை முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெற்றுக்கொண்டதும் அவ்வளவுதான். முக்தியைப் பெற்றவர்கள், அவர்களுக்குரிய நேரத்தில் ஜீவன்முக்திக்குள் சென்று, சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள். அனைவரும் முக்தியினூடாக, ஜீவன்முக்திக்குள் செல்கின்றார்கள். நீங்கள் இங்கிருந்து அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். வேறு உலகம் எதுவுமில்லை. நாடகத்திற்கேற்ப, அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். விநாசத்திற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. குண்டுகள் தயாரிப்பதற்கு அவர்கள் அதிகளவு பணத்தைச் செலவு செய்கிறார்கள். அவர்கள் அவற்றைத் தயாரிப்பது, அவற்றை வைத்திருப்பதற்காக அல்ல. யுத்த பொருட்கள் அனைத்தும் விநாசத்திற்காகும். இவை சத்திய, திரேதா யுகங்களில் இருக்கமாட்டாது. உங்களுடைய 84 பிறவிகளும் இப்போது முடிவடைந்துவிட்டன. நாங்கள் எங்கள் சரீரத்தை விடுத்து, வீட்டிற்குத் திரும்புவோம். தீபாவளியின் போது அனைவரும் நல்ல, புத்தாடைகளை அணிகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்களும் புதியவர்கள் ஆகுகிறீர்கள். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். ஓர் ஆத்மா தூய்மையாகும்போது, முதற்தர சரீரத்தினைப் பெறுகிறார். இந் நேரத்தில் மக்கள் செயற்கையான நாகரீகத்தைப் பின்பற்றுகிறார்கள். அழகாக இருப்பதற்கு அவர்கள் பவுடர் போன்றவற்றை உபயோகிக்கிறீர்கள். அங்கு இயற்கை அழகு இருக்கும். ஆத்மாக்கள் என்றும் அழகானவர்களாக ஆகுகின்றார்கள். பாடசாலையில் அனைவரும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவதற்கு நீங்களும் முயற்சி செய்கிறீர்கள். இது உங்கள் இறை குலமாகும். பின்னர் சூரிய வம்சமும், சந்திர வம்சமம் இருக்கும். பிராமணர்களாகிய உங்களுக்கு ஓர் இராச்சியமில்லை. இப்பொழுது நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். கலியுகத்தில் இப்போது எந்த இராச்சியமுமில்லை. சில இராச்சியங்கள் எஞ்சியிருக்கலாம். ஏனெனில் அது ஒருபோதும் இல்லை என்றாகுவதில்லை. இப்பொழுது நீங்கள் அவ்வாறு ஆகுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களைச் சகோதரர்களாகவும், அந்த ஒரேயொருவரைத் தந்தையாகவும் பார்க்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: ஒருவரை ஒருவர் சகோதரர்களாகப் பாருங்கள். மூன்றாவது கண் என்ற ஞானத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? சகோதரராகிய ஆத்மா கேட்கிறார்: ஆத்மா எங்கு வசிக்கிறார்? நீங்கள் கூறுகிறீர்கள்: இங்கு, நெற்றிப் புருவத்தின் மத்தியில் என நீங்கள் கூறுகிறீர்கள். இது சாதாரண விடயமாகும். நீங்கள் தந்தையைத் தவிர, வேறு எதனையும் நினைவு செய்யக்கூடாது. இறுதியில், நீங்கள் தந்தையின் நினைவுடனேயே, உங்கள் சரீரத்தையும் விடுவீர்கள். நீங்கள் இப் பயிற்சியை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சத்தியயுகத்தில் முதற்தரமான அழகிய சரீரத்தைப் பெறுவதற்கு, இப்பொழுது ஆத்மாவைத் தூய்மை ஆக்குங்கள். துருவை அகற்றுங்கள். செயற்கை நாகரீகத்தைப் பின்பற்றாதீர்கள்.2. சதா தூய்மையாக இருப்பதற்கு, தந்தை ஒருவரைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாமல் இருப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் சரீரத்தையும் மறக்கவேண்டும். சகோதரத்துவப் பார்வையை உறுதியாகவும், இயல்பாகவும் ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் திடசங்கல்ப எண்ணங்களின் சபதத்தின் மூலம் மற்றவர்களின் மனோநிலையை மாற்றுவதனால் ஒரு மகாத்மா ஆகுவீர்களாக.மகத்துவத்திற்கு பிரதான அடிப்படை தூய்மையாகும். தூய்மைக்கான சபதத்தை சத்தியத்தின் ரூபமாக கடைப்பிடித்தல் என்றால் மகாத்மா ஆகுவதாகும். சபதத்தின் திடசங்கல்ப்ப எண்ணம் எதுவாயினும் மனோநிலையை மாற்றும். தூய்மைக்கான சபதத்தை கடைபிடித்தல் என்றால் உங்கள் மனோபாவத்தை மேன்மையாக்குவதாகும். ஒரு சபதத்தை கடைப்பிடித்தல் என்றால் முன்னெச்சரிக்கைளை பௌதீக முறையில் கடைப்பிடிப்பதுடன் உங்கள் மனதில் இந்த எண்ணத்தை உறுதியாக வைத்திருப்பதுமாகும். தூய்மைக்கான சபதத்தை மேற்கொண்டதும் உங்கள் மனோநிலையை நீங்கள் ஒவ்வொரு ஆத்மாவும் சகோதரர்கள் என்ற, சகோதரத்துவ மனோநிலையை உருவாக்குகின்றீர்கள். இத்தகைய மனோநிலையை கொண்ட பிராமணர்கள் மகாத்மாக்கள் ஆகுகின்றனர்.
சுலோகம்:
வீணானதை நிறுத்துவதற்கு உங்கள் உதடுகளில் திடசங்கல்பம் எனும் பொத்தானை (பட்டன்) இடுங்கள்.