09.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பிராமணர்கள் உச்சிக்குடுமிகளும், சூத்திரர்கள் பாதங்களும் ஆவார்கள். நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆகும்பொழுது, உங்களால் தேவர்கள் ஆக முடியும்.
கேள்வி:
உங்களிடம் உள்ள எந்தத் தூய உணர்வை மக்கள் எதிர்க்கின்றார்கள்?
பதில்:
இப்பழைய உலகம் முடிவடைந்து, புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதே உங்கள் தூய உணர்வுகளாகும். இதற்காக இப்பழைய உலகின் விநாசம் இடம்பெற உள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் மக்கள் இதையும் எதிர்க்கிறார்கள்.கேள்வி:
இந்த இந்திர சபையின் பிரதான நியதி என்ன?
பதில்:
தூய்மையற்ற சூத்திரர் எவரும் இந்த இந்திர சபையின் ஒன்றுகூடலுக்கு அழைத்து வரப்படக் கூடாது. இங்கு எவரேனும் தூய்மையற்ற எவரையாவது, அழைத்து வந்தால், அவரும் பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் பிரம்மகுமார்களும் குமாரிகளும் என்பதால், நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்களுக்காக, உங்கள் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பது ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். எவ்வாறாயினும், மாயை உங்களை இதையும், மறக்கச் செய்;கிறாள். நீங்கள் தேவர்களாகுவதற்கு விரும்புவதால், மாயை உங்களைப் பிராமணர்களிலிருந்து சூத்திரர்கள் ஆக்குகிறாள். சிவபாபாவை நினைவு செய்யாததால், பிராமணர்கள் சூத்திரர்கள் ஆகுகிறார்கள். நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படும் பொழுது, இப் பழைய உலகம் இருக்க மாட்டாது. இவ்வுலகிலிருந்து அனைவரும் அமைதி தாமத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். இவையே உங்கள் தூய உணர்வுகளாகும். எவ்வாறாயினும், இவ்வுலகம் அழிக்கப்படவுள்ளது என்று நீங்கள் கூறும்பொழுது, மக்கள் நிச்சயமாக உங்களை எதிர்ப்பார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: இந்த பிரம்மகுமாரிகள் என்ன கூறுகிறார்கள்? அவர்கள் தொடர்ந்தும் விநாசத்தைப் பற்றியே பேசுகிறார்கள். இவ் விநாசத்தினால் மாத்திரமே குறிப்பாகப் பாரதத்திற்கும் பொதுவாக உலகிற்கும் நன்மை ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியும். இது உலக மக்களுக்குத் தெரியாது. விநாசம் நடைபெறும்பொழுது, அனைவரும் முக்தி தாமத்திற்குச் செல்வார்கள். நீங்கள் இப்பொழுது இறை சமுதாயத்திற்;கு உரியவர்கள். முன்னர், நீங்கள் அசுர சமுதாயத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள். கடவுளே உங்களுக்குக் கூறுகின்றார்;: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். எவராலும் நிலையான நினைவில் இருக்க முடியாது என்பது தந்தைக்குத் தெரியும். எவராவது நிலையான நினைவில் இருந்திருந்தால், அவருடைய பாவங்கள் அழிக்கப்பட்டு, அவர் பின்னர் தன்னுடைய கர்மாதீத ஸ்திதியையும் அடைந்திருப்பார். தற்பொழுது, அனைவரும் முயற்சியாளர்களே. பிராமணர்கள் ஆகுபவர்களே தேவர்கள் ஆகுவார்கள். பிராமணர்களில் இருந்து, அவர்கள் தேவர்கள் ஆகுவார்கள். பிராமணர்களே உச்சிக்குடுமிகள் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகள் ஒரு குட்டிக்கரணத்தைச் செய்யும்பொழுது, முதலில் உச்சிக்குடுமியாகிய, தலை இருக்கின்றது. பிராமணர்களுக்கு எப்பொழுதும் ஓர் உச்சிக்குடுமி இருக்கின்றது. நீங்கள் பிராமணர்கள். முன்னர், நீங்கள் சூத்திரர்களாக இருந்தீர்கள், அதாவது, நீங்கள் பாதங்களாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது உச்சிக்குடுமியாகிய, பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள், பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். முகம் தேவர்களையும், புயங்கள் சத்திரியர்களையும், வயிறு வைசியர்களையும், பாதங்கள் சூத்திரர்களையும் குறிப்பிடுவதாகக் கூறப்படுகின்றது. சூத்திரர்கள் என்றால் சீரழிந்த புத்தியாகிய, சூத்திர புத்தியை உடையவர்கள் என்று அர்த்தமாகும். தந்தையை அறியாதவர்கள் சீரழிந்த புத்தியுடையவர்கள் என்று கூறப்படுகிறார்கள். உண்மையில், அவர்கள் தொடர்ந்தும் தந்தையை மேலும்; அதிகளவு அவதூறு செய்கிறார்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: பாரதத்தில் அவதூறு உள்ள பொழுதெல்லாம், நான் வருகிறேன். தந்தை பாரதவாசிகளுடன் மாத்திரம் பேசுகின்றார். அதர்மம் தழைத்தோங்கும் பொழுதே….., தந்தை பாரதத்திற்கு மாத்திரம் வருகிறார். அவர் வேறு எங்கும் வருவதில்லை. பாரதம் மாத்திரமே அழிவற்ற தேசமாகும். தந்தையும் அழிவற்றவர்;. அவர் ஒருபொழுதும் பிறப்பு இறப்புச் சக்கரத்தினுள் வருவதில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து இந்த ஞானத்தை அழிவற்ற ஆத்மாக்களாகிய உங்களுக்கு மாத்திரமே கொடுக்கிறார். இச்சரீரம் அழியக்கூடியதாகும். இப்பொழுது நீங்கள் சரீர உணர்வை நீக்கிவிட்டு, உங்களை ஆத்மாக்களாகக் கருத ஆரம்பித்துள்ளீர்கள். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: ஹோலிப் பண்டிகையில், அவர்கள் “கோகி” ஐத் (நூலால் கோர்க்கப்பட்ட இனிப்புச் சப்பாத்தி) தயாரிக்கும் பொழுது, கோகி எரிந்துவிட்டாலும், நூலானது எரிவதில்லை. ஆத்மாவை ஒருபொழுதும் அழிக்க முடியாது. அந்த உதாரணம் இதன் அடிப்படையிலேயே உள்ளது. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. ஆத்மாக்கள் செயலின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: இல்லை, ஆத்மாக்களே தங்களின் சரீரங்களுக்கூடாக, நல்ல, தீய செயல்களைப் புரிகின்றார்கள். ஆத்மாக்கள் ஒரு சரீரத்தை நீக்கி மற்றொன்றைப் பெற்று, தங்களின் செயல்களுக்காகத் துன்பப்படுகிறார்கள். ஆகவே, ஆத்மாக்கள் அக் கர்மக் கணக்குகளைச் எடுத்துச் செல்கிறார்கள். இதனாலேயே அசுர உலகிலுள்ள மக்கள் பெருமளவு துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். அவர்களுடைய ஆயுட்காலமும் குறுகியதாக உள்ளது, ஆனால் மக்கள் அத்துன்பம் அனைத்தையும் சந்தோஷமாகக் கருதுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அவர்களுக்கு ‘விகாரமற்றவர்கள் ஆகுங்கள்’ என்று அதிகளவு கூறுகிறீர்கள், ஆனால்;, தங்;களால் நஞ்சின்றி இருக்க முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் அவர்கள் சூத்திர சமுதாயத்தினராக உள்ளார்கள்; அவர்கள் சூத்திர புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உச்சிக்குடுமியாகிய, பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். உச்சிக்குடுமியே, அனைத்திலும் உயர்வானதாகும்; அது தேவர்களை விடவும் உயர்வானதாகும். இந்நேரத்தில் நீங்கள் தந்தையுடன் இருப்பதால், நீங்கள் தேவர்களை விடவும் உயர்வானவர்கள். இந்நேரத்தில் தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை உங்கள் கீழ்ப்படிவான சேவகர் ஆகியுள்ளார். ஒரு (லௌகீக) தந்தை தனது குழந்தைகளின் கீழ்ப்படிவான சேவகர்;. அவர் குழந்தைகளைப் பெற்று, அவர்களைப் பராமரித்து, அவர்களுக்குக் கல்வியூட்டி, பின்னர் குழந்தைகள் வளர்ந்து, அவர் வயோதிபராகும் பொழுது, அவர் தனது குழந்தைகளுக்குத் தனது சொத்து அனைத்தையும் கொடுத்து விட்டு, குரு ஒருவரை ஏற்றுக் கொண்டு ஒதுங்கி ஓய்வு ஸ்திதிக்குள் செல்கிறார். முக்தி தாமத்திற்குச் செல்வதற்காக, அவர் ஒரு குருவை ஏற்றுக் கொள்கிறார். எவ்வாறாயினும், அவரால் முக்தி தாமத்திற்குச் செல்ல முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கிறார்கள். உதாரணமாக, தாய் நோய்வாய்ப்பட்டால், அப்பொழுது தந்தையே குழந்தையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஆகவே, பெற்றோர்களே குழந்தைகளின் சேவகர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தங்களின் சொத்து அனைத்தையும் கொடுக்கிறார்கள். எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நான் வரும்பொழுது, நான் சிறுகுழந்தைகளிடம் செல்வதில்லை. நீங்கள் அனைவரும் வளர்ந்து விட்டீர்கள். நான் இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கிறேன். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் ஆகும்பொழுது, நீங்கள் பிரம்மகுமார்களும் குமாரிகளும் என அழைக்கப்படுகிறீர்கள். அதற்குமுன்னர், நீங்கள் சூத்திரகுமார்கள்; குமாரிகளாக இருந்தீர்கள்;;; நீங்கள் விலைமாதர் இல்லத்தில் இருந்தீர்கள். தற்பொழுது, நீங்கள் விலைமாதர் இல்லத்தில் வசிப்பவர்கள் அல்லர். இங்கு விகாரமுடையவர்கள் வசிக்க முடியாது; அவர்களுக்கு உரிமை கிடையாது. நீங்கள் பிரம்மகுமாரர்களும் குமாரிகளும்; ஆவீர்கள். இந்த இடம் பிரம்மகுமாரர்களும் குமாரிகளும் வசிப்பதற்கானதாகும். சில குழந்தைகள் மிகவும் முட்டாள்களாக இருப்பதால், தூய்மையற்றவர்களும் விகாரத்தில் ஈடுபடுபவர்களும் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுவதுடன் இங்கு தங்குவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்பதையும், அவர்களால் இங்கு வர முடியாது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திரசபையின் கதை உள்ளது. இதுவே ஞான மழை பொழிகின்ற இந்திரசபை ஆகும். எந்த பிரம்மகுமார் குமாரியாவது இரகசியமாக, தூய்மையற்ற நபர் எவரையேனும் இந்த ஒன்றுகூடலில் அமர்வதற்கு அனுமதித்தால், அப்பொழுது அவர்கள் இருவருமே சபிக்கப்படுகிறார்கள்: நீங்கள் கல்லாகிப் போவீர்களாக! இதுவே உண்மையான இந்திரசபை ஆகும். இது சூத்திரகுமாரர் குமாரிகளின் ஆன்மீக ஒன்றுகூடல் அல்ல. தேவர்கள் தூய்மையானவர்களும், சூத்திரர்கள் தூய்மையற்றவர்களும் ஆவார்கள். தந்தை வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையான தேவர்கள் ஆக்குகிறார். நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். ஆகவே, இதுவே இந்திரசபை ஆகும். எவராவது அனுமதியின்றி, ஒரு விகாரமுடைய நபரை அழைத்து வந்தால், அவர் பெருமளவு தண்டனையைப் பெறுவதுடன் ஒரு கல்லுப் புத்தியைக் கொண்டிருப்பவராகவும் ஆகுகிறார். இங்கு நீங்கள் தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுகிறீர்கள். ஆகவே, அத்தகையவர்களை அழைத்து வருபவர்களும் சபிக்கப்படுகிறார்கள்: நீங்கள் ஏன் இரகசியமாக ஒரு விகாரமுடைய நபரை இங்கு அழைத்து வந்தீர்கள்? நீங்கள் இந்திரனிடமும் (தந்தை) கேட்கவில்லை. ஆகையால், அதிகளவு தண்டனை பெறப்படுகிறது. இவை மறைமுகமான விடயங்களாகும். இப்பொழுது நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். நியதிகள் மிகவும் கடுமையானவை. அவர்கள் தங்கள் ஸ்திதியிலிருந்து வீழ்ந்து, முற்றிலும் கல்லாகி விடுகிறார்கள். அவர்கள் கல்லுப்புத்தியைக் கொண்டிருப்பதுடன், தெய்வீகப் புத்தியை உடையவர்கள் ஆகுவதற்கான முயற்சியையேனும் செய்வதில்லை. இவ்விடயங்கள் மறைமுகமானவை, குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். இங்கு, பிரம்மகுமார்களும் குமாரிகளும் தங்குகிறார்கள், தந்தையே அவர்களைத் தேவர்கள் ஆக்குகிறார், அதாவது, அவர் கல்லுப்புத்தி உடையவர்களைத் தெய்வீகப்புத்தி உடையவர்கள் ஆக்குகிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகிறார்: எவரும் எந்த நியதிகளையும் மீறக்கூடாது. இல்லாவிட்டால், அவர்கள் காமம், கோபம், பேராசை, பற்று மற்றும் அகங்காரம் போன்ற ஐந்து விகாரங்களால் பீடிக்கப்படுவார்கள். இவையே அரைக் கல்பத்தின் ஐந்து பெரிய தீய ஆவிகளாகும். தீய ஆவிகளை விரட்டியடிப்பதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். தூய்மையானவர்களாகவும் சுத்தமானவர்களாகவும் இருந்த ஆத்மாக்கள் தூய்மையற்றவர்களாகவும், அசுத்தமானவர்களாகவும், சந்தோஷமற்றவர்களாகவும், நோய்வாய்ப்பட்டவர்களாகவும் ஆகிவிட்டார்கள். இவ்வுலகில் பெருமளவு துன்பம் உள்ளது. தந்தை வந்து ஞான மழையைப் பொழிகிறார். அவர் குழந்தைகளாகிய உங்கள் மூலமே அதனைச் செய்கிறார். அவர் உங்களுக்காக சுவர்க்கத்தை உருவாக்குகிறார். யோகசக்தி மூலம் நீங்கள் மாத்திரமே தேவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை அவ்வாறு ஆகுவதில்லை. தந்தை சேவகர்;. ஓர் ஆசிரியரும், மாணவர்களின் சேவகரே. அவர் அவர்களுக்குச் சேவை செய்து அவர்களுக்குக் கல்வியூட்டுகின்றார். ஆசிரியர் கூறுகிறார்: நான் உங்கள் அதி கீழ்ப்படிவான சேவகர்;. ஏனைய ஆசிரியர்கள் அவர்களைச் சட்டநிபுணர்;கள், பொறியியலாளர்கள் போன்றவர்கள் ஆக்குவதால், அவர்களும் சேவகர்கள் ஆவார்கள். அதேபோன்று, குருமார்களும் (ஆன்மீகப்) பாதையைக் காட்டுகிறார்கள். அவர்கள் சேவகர்களாகி, ஆத்மாக்களை முக்தி தாமத்திற்;கு அழைத்துச் செல்லும் சேவையைச் செய்கிறார்கள். எவ்வாறாயினும், இந்நாட்களில், அந்தக் குருமார்களில் எவராலும்; அங்கு எவரையும் அழைத்துச் செல்ல முடியாது, ஏனெனில் அவர்கள் தூய்மையற்று உள்ளார்கள். ஒரேயொரு சற்குரு மாத்திரம் சதா தூய்மையானவர். குருமார்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள். இந்த முழு உலகமும் தூய்மையற்றுள்ளது. சத்தியயுகம் தூய உலகம் என்றும், கலியுகம் தூய்மையற்ற உலகம் என்றும் சத்தியயுகம் மாத்திரமே முழுமையான சுவர்க்கம் என்று கூறப்படுகிறது. திரேதாயுகத்தில் இரு கலைகள் குறைவாகவுள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களைப் புரிந்துகொண்டு, அவற்றைக் கிரகிக்கிறீர்கள். உலக மக்களுக்கு எதுவும் தெரியாது. முழு உலகமும் சுவர்க்கத்திற்குச் செல்லும் என்பதல்ல. முன்னைய கல்பத்தில் அங்கிருந்த பாரத மக்களே, மீண்டும் ஒருமுறை வந்து, சத்திய, திரேதா யுகங்களில் தேவர்கள் ஆகுவார்கள். பின்னர், துவாபர யுகத்தில், அவர்கள் தங்களை இந்துக்கள் என்று அழைக்க ஆரம்பிப்பார்கள். உண்மையில், இப்பொழுதும், மேலிருந்து கீழே இந்து சமயத்திற்குள் வருகின்ற ஆத்மாக்களும் தங்களை இந்துக்கள் என்றே அழைக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் தேவர்கள் ஆகவும் மாட்டார்கள், அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்லவும் மாட்டார்கள். அவர்கள் துவாபர யுகத்தின் பின்னர், தங்களுக்குரிய நேரத்தில் கீழே வந்து, தங்களை இந்துக்கள் என்று அழைப்பார்கள். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பாகங்களைக் கொண்டிருக்கும் நீங்கள் மாத்திரமே தேவர்கள் ஆகுகிறீர்கள். இது நாடகத்திலுள்ள ஒரு மிகப்பெரிய யுக்தியாகும். இது பலருடைய புத்தியில் இல்லாததால், அவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு இயலாதுள்ளது. இதுவே சத்திய நாராயணனின் கதை ஆகும். அம் மக்கள் பொய்க்கதைகளைக் கூறுகிறார்கள். அவர்களின் மூலம் எவரும் இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுவதில்லை. இங்கு நீங்கள் நடைமுறைரீதியில் அவ்வாறு ஆகுகிறீர்கள். கலியுகத்தில், பொய்மையைத் தவிர, வேறு எதுவுமேயில்லை. “மாiயும் பொய், சரீரமும் பொய்….” என்று கூறப்பட்டுள்ளது. இராவண இராச்சியம் பொய்யானதாகும். தந்தை சத்தியபூமியைப் படைக்கிறார். பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். எவ்வாறாயினும், நீங்கள் செய்கின்ற முயற்சிக்கேற்ப, உங்களுக்கும் வரிசைக்கிரமமாக இது தெரியும், ஏனெனில் இது ஒரு கல்வியாகும். மிகவும் குறைவாகக் கற்பவர்கள் சித்தியடைய மாட்டார்கள். இக்கல்வி ஒருமுறை மாத்திரம் இடம்பெறுகிறது. பின்னர், கற்பது சிரமமாக இருக்கும். ஆரம்பத்தில் கற்று, பின்னர் தங்கள் சரீரங்களை நீங்;கிச் சென்றவர்கள், அச் சம்ஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்துச் சென்றார்கள். ஆகவே, அவர்கள் மீண்டும் இங்கு வந்து கற்றுக் கொண்டிருப்பார்கள். எவ்வாறாயினும், அவர்களின் பெயர்களும் ரூபங்களும் மாறியுள்ளன. ஆத்மாக்களே முழுமையாக 84 பிறவிகளின் பாகத்தைப் பெறுபவர்கள், அவர்கள் அதனைப் பல்வேறு பெயர்கள், ரூபங்கள், நேரம், காலம் மற்றும் இடங்களில் நடிக்கின்றார்கள். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா அத்தகையதொரு பெரிய சரீரத்தைப் பெறுகிறார். ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா உள்ளார். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா ஒரு சின்னஞ்சிறிய நுளம்பில் கூட இருக்கிறது. இவை அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய, மிகவும் சூட்சுமமான விடயங்களாகும். இவ்விடயங்களை நன்றாகப் புரிந்துகொள்கின்ற குழந்தைகள் மாத்திரமே மாலையின் மணிகள் ஆகுவார்கள். ஏனையோர் ஒரு சில சதங்கள் பெறுமதியான ஓர் அந்தஸ்தைக் கோருவார்கள். இப்பொழுது உங்கள் பூந்தோட்டம் உருவாக்கப்படுகிறது. முன்னர், நீங்கள் முட்களாக இருந்தீர்கள். தந்தை கூறுகிறார்: காம விகாரத்தின் முள் மிகவும் தீங்கானது. அதன் ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக இறுதிவரை அது துன்பத்தை விளைவிக்கிறது. துன்பத்திற்;கான பிரதான காரணம் காமம் ஆகும். காமத்தை வெற்றிகொள்வதால் மாத்திரமே நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள், இதனையே பலர் சிரமமாகக் கருதுகின்றார்கள். பெருஞ் சிரமத்துடனேயே அவர்கள் தூய்மை ஆகுகிறார்கள். முன்னைய கல்பத்தில் தூய்மையாகியவர்கள் மீண்டும் தூய்மை ஆகுவார்கள். யார் முயற்சி செய்கிறார்கள் என்பதும், யார் அதிமேன்மையான தேவர்கள் ஆகுவார்கள் என்பதும் புரிந்துகொள்ளப்படுகிறது. நீங்கள் ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணனாகவும் ஒரு சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் மாறுகிறீர்கள். புதிய உலகில் கணவன், மனைவி இருவரும் தூய்மையானவர்கள்; இப்பொழுது அவர்கள் தூய்மையற்றவர்கள். அவர்கள் தூய்மையாக இருந்தபொழுது, அவர்கள் சதோபிரதானாக இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். இ;ங்கு இருவரும் முயற்சி செய்ய வேண்டும். சந்நியாசிகளால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. அத் துறவறப் பாதைக்குரிய தர்மம் முற்றிலும் வேறுபட்டதாகும். கடவுள் இங்கு ஆண், பெண் இருபாலாருக்கும் கற்பிக்கின்றார். அவர் இருபாலாரிடமும் கூறுகிறார்: இப்பொழுது, சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாறிப் பின்னர் இலக்ஷ்மி நாராயணன் ஆகுங்கள். அனைவரும் அவ்வாறு ஆக மாட்டார்கள். இலக்ஷ்மி நாராயணனின் வம்சமும் உள்ளது. அவர்கள் எவ்வாறு தங்களுடைய இராச்சியத்தைக் கோரினார்கள் என்பது எவருக்கும் தெரியாது. சத்தியயுகத்தில், அது அவர்களின் இராச்சியமாக இருந்தது. மக்கள் இதைப் புரிந்து கொள்கிறார்கள், ஆனால் சத்தியயுகம் நூறாயிரக்கணக்கான வருடங்களை உடையது என்று கூறப்பட்டுள்ளதால், அது அறியாமையே ஆகும். தந்தை கூறுகிறார்: இது ஒரு முட்காடும், அது ஒரு பூந்தோட்டமும் ஆகும். இங்கு வரும் முன்னர், நீங்கள் அசுரர்களாக இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் அசுரர்களிலிருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள். யார் உங்களை அவ்வாறு ஆக்குபவர்? எல்லையற்ற தந்தையே ஆவார். அது தேவர்களின் இராச்சியமாக இருந்தபொழுது, அங்கு வேறு எவரும் இருக்கவில்லை. நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்கிறீர்கள். புரிந்துகொள்ளாதவர்கள் தூய்மையற்றவர்கள் என்று கூறப்படுகிறார்கள். இது பிரம்மகுமார்களினதும் குமாரிகளினதும் ஒன்றுகூடல் ஆகும். மக்கள் அசுரச் செயல் எதையாவது செய்தால், அவர்கள் தங்களைத் தாங்களே சபித்துக் கொண்டு, கல்லுப்புத்தி உடையவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணன் ஆகுகின்ற, தங்கமான புத்தியை உடையவர்கள் அல்லர். அவர்கள் இதற்கான அத்தாட்சியைப் பெறுகிறார்கள். அவர்கள் சென்று மூன்றாம் தரப் பணிப்பெண்களாகவும் வேலையாட்;களாகவும் ஆகுவார்கள். இப்பொழுதும், அரசர்களுக்குப் பணிப்பெண்களும் வேலையாட்களும் உள்ளார்கள். சிலரின் செல்வம் மண்ணில் புதையுண்டிருக்கிறது என்பது நினைவுகூரப்படுகிறது…. தீயைக்; கக்குகின்ற குண்டுகளும் நச்சு வாயுக்குண்டுகளும் கூட இருக்கும். நிச்சயமாக மரணம் வரவே வேண்டும். மனிதர்களுக்கோ அல்லது ஆயுதங்களுக்கோ தேவை இருக்காத அத்தகைய விடயங்களை அவர்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்காவது அமர்ந்திருக்கையில், அவர்களால் குண்டுகளை வீச இயலும், விரைவில் அனைவரையும் மரணிக்கச் செய்கின்ற, அத்தகையதொரு வழிகளில் அவை நஞ்சைப் பரப்பும். பல மில்லியன்;கணக்கான மக்கள் மரணிப்பார்கள். இது ஒரு சிறிய விடயமல்ல. சத்தியயுகத்தில், மிகச்சொற்ப மக்களே இருக்கிறார்கள். ஏனைய அனைவரும் ஆத்மாக்களாகிய எங்கள் வசிப்பிடமாகிய, அமைதி தாமத்திற்குச் சென்றிருப்பார்கள். சுவர்க்கம் சத்தியயுகத்திலும், நரகம் இந்தக் கலியுகத்திலும் உள்ளது. இச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகுவதால், இது துன்பபூமி ஆகுகிறது. பின்னர் தந்தை உங்களைச் சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். பரமாத்மாவாகிய பரமதந்தையே இப்பொழுது அனைவருக்கும் சற்கதியை அருள்வதால், சந்தோஷம் இருக்க வேண்டும். மக்கள் பயப்படுகிறார்கள், ஆனால் மரணத்தினூடாகவே அவர்கள் முக்தியையும் சற்கதியையும் பெறுவார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பூந்தோட்டத்திற்;குச் செல்வதற்கு, உங்களுக்குள் இருக்கின்ற காமம், கோபம் என்னும் முட்களை அகற்றுங்கள். நீங்கள் சபிக்கப்படக்கூடிய வகையில் அத்தகைய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.2. சத்தியபூமியின் அதிபதிகள் ஆகுவதற்கு, சத்திய நாராயணனின் உண்மைக் கதையைச் செவிமடுப்பதுடன் ஏனையவர்களுக்கும் கூறுங்கள். இப்பொய்;மையான பூமியிலிருந்து அப்பால் விலகிச் செல்லுங்கள்.
ஆசீர்வாதம்:
சுயதரிசன சக்கரத்தினால் மாயையின் அனைத்து சுழற்சிகளையும் முடித்துவிடுவதன் மூலம் மாயையை வென்றவர் ஆகுவீர்களாக.ஒருவர் தன்னை அறிந்திருப்பதென்பது தனது காட்சியைக் காண்பதாகும்.; சக்கரத்தின் ஞானத்தை அறிந்திருப்பதென்பது சுயதரிசன சக்கரதாரியாக இருப்பதாகும். நீங்கள் ஒரு சுயதரிசன சக்கரதாரி ஆகும்பொழுது மாயையின் சுழற்சியும் இயல்பாகவே முடிவடைந்துவிடும். சரீரஉணர்வின் சுழற்சி, உறவுமுறைகளின் சுழற்சி, பிரச்சனைகளின் சுழற்சி இவை யாவும் மாயையின் பல சுழற்சிகளாகும். 63 பிறவிகளாக இந்தளவு சுழற்சிக்குள் நீங்கள் தொடர்ந்தும் அகப்பட்டுக் கொண்டீர்கள். இப்பொழுது ஒரு சுயதரிசன சக்கரதாரி ஆகுவதன் மூலம் நீங்கள் மாயையை வென்றவர் ஆகமுடியும். ஒரு சுயதரிசன சக்கரதாரியாக இருப்பதென்பது ஞானம், யோகம் என்ற இறக்கைகளினால் பறக்கும் ஸ்திதிக்குள் செல்வதாகும்.
சுலோகம்:
சரீரமற்ற ஸ்திதியில் இருக்கும்போது எந்தவொரு பாதகமான சூழ்நிலையையும்; இலகுவாகக் கடந்து செல்ல முடியும்.