26.05.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     03.12.84     Om Shanti     Madhuban


அதிசக்திவாய்ந்த ஆசிரியரின் மேன்மையான கற்பித்தல்களைக் கிரகிப்பவர் ஆகுங்கள்.


இன்று, சர்வசக்திவான் தந்தை எங்கும் உள்ள தனது சக்தி சேனையைப் பார்க்கிறார். யார் மகாவீரர்கள் என்பதையும் யார் சதா சகல சக்திகளின் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்றும் யார் விசேடமான வெற்றி ஆத்மாக்கள் என்பதையும் அவர் பார்க்கிறார். யார் சதா ஆயுதங்களை வைத்திருப்பதில்லை என்பதையும், ஆனால் காலத்திற்கேற்ப, அவசியம் ஏற்படும்போது ஆயதங்களை வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவசியமான வேளையில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு யார் முயற்சி செய்கிறார்கள் என்பதையும் அவர் பார்க்கிறார். இதனாலேயே அவர்கள் சிலவேளைகளில் தாக்குகிறார்கள். சிலவேளைகளில் தோல்வி அடைகிறார்கள். அவர்கள் சிலவேளைகளில் தாக்குதல், சிலவேளைகளில் தோல்வி அடைதல் என்ற சுழற்சியுடன் தொடர்ந்து முன்னேறுகிறார்கள். உரிமையைக் கோரும் சேனையில் பாபா மூன்று வகையான குழந்தைகளைக் கண்டார். எவ்வாறாயினும், மேன்மையான வெற்றியாளர் ஆத்மாக்கள் சதா நேரத்திற்கு முன்னரே என்றும் தயாராக இருக்கிறார்கள். அவசியமான வேளையில் ஆயுதத்தைப் பிடித்திருப்பவர்களுக்குக் காலம் அவர்களின் ஆசிரியர் ஆகுகிறது. காலத்தைத் தமது ஆசிரியர் என்ற அடிப்படையில் முன்னேறுபவர்கள், சர்வசக்திவான் ஆசிரியரின் கற்பித்தல்களினூடாக என்றும் தயார் ஆகாதவர்கள், சிலவேளைகளில் நெருக்கடியான நேரத்தில் ஏமாற்றப்படுகிறார்கள். ஏமாற்றப்பட்ட பின்னர், அவர்கள் தமது சரியான உணர்விற்குத் திரும்புகிறார்கள். ஆகவே, நீங்கள் சர்வசக்திவான் ஆசிரியரின் மேன்மையான கற்பித்தல்களைக் கிரகிப்பவர் ஆகவேண்டும். நேரம் என்ற ஆசிரியரின் கற்பித்தல்களைக் கிரகிப்பவர் ஆகாதீர்கள்.

சில குழந்தைகள் பாப்தாதாவுடன் இதயபூர்வமான சம்பாஷணை மேற்கொள்கிறார்கள். அல்லது அவர்கள் தங்களுக்கிடையே இதயபூர்வமான சம்பாஷணை செய்கிறார்கள். சாதாரணமான முறையில் அவர்கள் கூறுகிறார்கள்: காலம் வரும்போது, அனைத்தும் சரியாகச் செயற்படும். காலம் வரும்போது நாம் அதைக் காட்டுவோம். அல்லது, காலம் வரும்போது நாம் அதைச் செய்வோம். எவ்வாறாயினும், உலகை மாற்றும் குழந்தைகளான உங்களுக்கு முழுமையான, மேன்மையான காலத்தை அழைக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களே பொன்னான காலை என்ற நேரத்தைக் கொண்டு வருவதற்கான கருவிகள் ஆவீர்கள். நீங்கள் படைப்பான காலத்தின் மாஸ்ரர் படைப்பாளிகள். நீங்கள் காலத்தை, அதாவது, யுகத்தை மாற்றுபவர்கள். நீங்கள் இரட்டை கால் (கால் - காலம், மரணம்) என்பதை வெற்றி கொள்பவர்கள். ஒரு ‘கால்’ என்பது காலம். இரண்டாவது ‘கால்’ என்பது, நீங்கள் மரணத்தின் ஆதிக்கத்திற்கு உட்படாது இருத்தல். நீங்கள் வெற்றியாளர்கள். அமரர் ஆகுவீர்களாக என்ற ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இதனாலேயே, நீங்கள் அனைத்தையும் காலத்திற்கேற்பச் செய்பவர்கள் அல்ல. ஆனால் தந்தையின் கட்டளைகளைப் பின்பற்றுபவர்கள். ஞானம் அற்ற ஆத்மாக்களுக்கும் காலம் ஆசிரியர் ஆகும். உங்களின் ஆசிரியர், சர்வசக்திவான் தந்தை ஆவார். ஆயத்தங்கள் காலத்திற்கு முன்னரே செய்யப்பட வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அல்ல. நீங்கள் சகல சக்திகள் என்ற ஆயுதங்கள் தரித்த, என்றும் தயாராக உள்ள சேனையைச் சேர்ந்தவர்கள். ஆகவே, சதா சோதித்துப் பாருங்கள்: நான் சகல சக்திகள் என்ற ஆயுதங்களைக் கிரகித்துள்ளேனா? எந்தவொரு சக்தியும், அதாவது, எந்தவோர் ஆயுதமும் இல்லாவிட்டால், அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி மாயை உங்களைத் தாக்குவாள். ஆகவே, இதில் கவனக்குறைவானவர் ஆகாதீர்கள். ஏனைய அனைத்தும் நன்றே. இந்த ஒரு விடயத்திலேயே சிறிதளவு பலவீனம் காணப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த ஒரு பலவீனம் மாயை தாக்குவதற்கான வழிமுறை ஆகுகிறது. குழந்தைகள் தந்தையை நினைவு செய்யும்போது, அவர் எப்போதும் அவர்களுடன் இருப்பார் எனத் தந்தை சத்தியம் செய்திருப்பதைப் போன்று, மாயையும் சவால் விடுத்துள்ளாள்: எங்கு பலவீனம் உள்ளதோ, அங்கு நான் இருப்பேன். இதனாலேயே, பலவீனத்தின் சிறிதளவு சுவடேனும் மாயையின் சந்ததியை அழைத்துவிடும். நீங்கள் சர்வசக்திவானின் குழந்தைகள். எனவே, நீங்கள் சகல விடயத்திலும் நிரம்பியவர்கள் ஆகவேண்டும். தந்தை உங்களுக்கு வழங்கும் ஆஸ்தியின் உரிமையை அல்லது இறைகல்வியின் வெகுமதியை அல்லது ஆசிரியரிடமிருந்து நீங்கள் பெறும் பட்டத்தை எவ்வாறு விவரிப்பீர்கள்? ‘சகல தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர்’ என்று கூறுவீர்களா? அல்லது ‘தெய்வீகக் குணங்கள் நிரம்பியவர்’ என்று கூறுவீர்களா? முற்றிலும் விகாரமற்றவர், 16 சுவர்க்கக்கலைகள் நிரம்பியவர் என்றே கூறுகிறீர்கள். 14 சுவர்க்கக்கலைகள் என்று நீங்கள் கூறுவதில்லை. 100மூ சம்பூரணமான சந்தோஷத்தினதும் அமைதியினதும் ஆஸ்தி என்றே நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும், அல்லவா? அல்லது, ஒரு பலவீனத்தை அல்லது அரைப் பலவீனத்தை அனுமதிக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்களா? இந்தக் கணக்கு ஆழமானது. அவர் கள்ளங்கபடமற்ற பிரபு. ஆனால், அவர் கர்ம தத்துவத்தையும் அறிந்தவர். அவர் ஒரு தானியத்திற்குப் பலமடங்கினைக் கொடுக்கிறார். அதேவேளை ஒவ்வொரு தானியத்தின் கணக்கையும் வைத்திருக்கிறார். ஒரு பலவீனம் அல்லது அரைப் பலவீனம் இருக்குமாயின், பேற்றினைப் பொறுத்தவரையிலும், நீங்கள் ஒரு பிறப்பு அல்லது அரைப்பிறப்பு பிந்தியே வரவேண்டியிருக்கும். அப்போது உங்களால் ஸ்ரீ கிருஷ்ணருடன் ஒன்றாக வரமுடியாது. அல்லது இராஜ குடும்பத்தில் ஒருவராகவோ முதல் உலகச் சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியுமான இலக்ஷ்மி, நாராயணனின் நெருங்கிய உறவினராகவோ உங்களால் ஆகமுடியாது. யுகம் 1-1-1 என்பதில் ஆரம்பம் ஆகுவதைப் போன்று, முதல் இலக்க ஆத்மாக்களால் மட்டுமே புதிய உறவுமுறைகள், புதிய சடப்பொருள், முதல் இலக்கப் புதிய ஆத்மாக்களின் சந்தோஷத்தைப் பெற முடியும். புதியது என்றால் மேலே இருந்து கீழே வந்துள்ள புதிய ஆத்மாக்கள் என்று அர்த்தம். புதிய இராச்சியம், புதிய காலத்தின் சந்தோஷம், முதலாம் இலக்க சதோபிரதான் இயற்கையின் சந்தோஷம். முதலாம் இலக்கம் என்றால் மாயையை வென்றவர்கள் என்று அர்த்தம். அப்போது கணக்கு மிகச்சரியாக இருக்கும். ஆசீர்வாதத்தையும் ஆஸ்தியையும் பெறுவதற்கு நீங்கள் தந்தையிடம் செய்துள்ள சத்தியமானது, நீங்கள் அவருடனேயே வாழ்வீர்கள், அவருடனேயே திரும்பிச் செல்வீர்கள், தந்தை பிரம்மாவுடன் இராச்சியத்திற்குத் திரும்பி வருவீர்கள் என்பதாகும். நீங்கள் பின் தொடர்ந்து செல்வீர்கள் எனச் சத்தியம் செய்யவில்லை. நீங்கள் சமமானவர் ஆகவேண்டும். நீங்கள் அவருடனேயே வாழ வேண்டும். முழுமையும் சமமான நிலையும் சதா சகவாசம் என்ற வெகுமதிக்கான உரிமையைக் கோரச் செய்கிறது. ஆகவே, நீங்கள் நிரம்பியவராகவும் சமமானவராகவும் ஆகுவதற்கான நேரத்தைக் கவனக்குறைவானவராகி வீணாக்கிவிட்டு, இறுதிக்கணத்தில் அதை உணர்ந்தவர் ஆகினால் நீங்கள் எதைப் பெறுவீர்கள்?

எனவே, இன்று, பாபா அனைவரினதும் சகல சக்திகள் என்ற ஆயுதங்களைச் சோதித்தார். பாபா பெறுபேற்றினைக் கொடுத்தார்: பாபா மூன்று வகையான குழந்தைகளைக் கண்டார். நீங்கள் மேற்கொண்டு முன்னேறுகையில், கவனக்குறைவெனும் இந்த விஷமத்தனத்தில் சிறிதளவை அனுமதிக்கலாம் என நீங்கள் நினைக்கக்கூடும். ஏனெனில், குறைந்தபட்சம் அந்தளவாவது தந்தை உதவி செய்வார் என நீங்கள் நினைக்கலாம். எவ்வாறாயினும், அந்த இக்கட்டான காலப்பகுதிகளில் இந்த விஷமத்தனம் உங்களை ஏமாற்றாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விஷமத்தனத்தைப் பற்றிக் குழந்தைகள் முறைப்பாடு செய்து, நாம் அதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை! என்று கூறக்கூடாது. ஆகவே, இக்கட்டான வேளைகள் உங்களின் முன்னால் வருகின்றன என்பதை உணருங்கள். பல்வேறு வகையான குழப்பங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும். இவையே வரப்போகும் நேரத்தின் அறிகுறிகள். இது, நீங்கள் விரைவாக நிறைந்தவர் ஆகுவதற்கு நாடகம் கொடுக்கும் சமிக்ஞை ஆகும். உங்களுக்குப் புரிகிறதா?

தற்காலத்தில், மதுவனத்தில், மூன்று இடங்களில் இருந்து வந்துள்ள நதிகள் சந்திக்கின்றன. திரிவேணி நதியின் மேளா நடைபெறுகிறதல்லவா? குறிப்பாக இந்த மூன்று இடங்களில் இருந்தும் ஆழ்ந்த அன்புடன் வந்துள்ள குழந்தைகளின் அன்பைக் காண்பதில் பாப்தாதா களிப்படைகிறார். உங்களுக்கு வார்;த்தைகளின் மொழி தெரியாது. ஆனால் நீங்கள் அன்பின் மொழியை அறிவீர்கள். கர்நாடகாவில் இருந்து வந்திருப்பவர்கள் அன்பின் மொழியை அறிவார்கள். பஞ்சாபில் இருந்து வந்திருப்பவர்கள் எதை அறிவார்கள்? பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் சவால் விடுப்பதில் கெட்டிக்காரர்கள். எனவே, அரசர்களின் தெய்வீக பூமியின் (இராஜஸ்தான்) சவால், துயர அழுகுரல்களுக்குப் பதிலாக வெற்றி முழக்கங்களை ஏற்படுத்தும். குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வீர்கள்? குஜராத்தைச் சேர்ந்தவர்கள் சதா ஊஞ்சல்களில் ஆடுகிறார்கள். நீங்களும் பௌதீகமாக சங்கமயுகத்தில் அண்மித்திருக்கும் பாக்கியம் என்ற ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். நீங்களே அனைவரிலும் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் என்ற சந்தோஷ ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். எனவே, குஜராத் என்றால் வெவ்வேறு வகையான ஊஞ்சல்களில் ஆடுபவர்கள் என்று அர்த்தம். இது ஒரு பல்வகைக் குழு ஆகும். அனைவரும் பல்வகையை விரும்புகிறார்கள். ஒரு பூங்கொத்தில், பல்வகையான நிறங்களையும் அழகையும் நறுமணத்தையும் கொண்ட பல்வகை மலர்கள் இருப்பதை நீங்கள் விரும்புவீர்கள். அச்சா.

சகல திசைகளில் இருந்தும் வந்து சதா விழிப்பாக இருக்கும் சக்திசாலி ஆத்மாக்கள் அனைவருக்கும், சகல சக்திகள் என்ற ஆயுதங்களை எப்போதும் வைத்திருப்பவர்களுக்கும், சம்பூரணமாகவும் நிரம்பியவர்களாகவும் ஆகி, ஆத்மாக்கள் அனைவருக்கும் சக்திகளின் ஒத்துழைப்பை வழங்குபவர்களுக்கும், மேன்மையான நேரத்தையும் மேன்மையான யுகத்தையும் கொண்டு வருபவர்களுக்கும், முதலாம் இலக்க யுகத்தை மாற்றுபவர்கள் ஆகி, முழுமையான இராச்சியத்திற்கான முதலாம் இலக்கப் பாக்கியத்தின் உரிமையைப் பெறும் அதி மேன்மையான குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா பஞ்சாபில் இருந்து வந்துள்ள குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் ஒவ்வோர் அடியிலும் நினைவின் சக்தியுடன் சதா முன்னேறி, பலமில்லியன்கள் வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள், அல்லவா? ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் சேமிக்கப்படுகின்றனவா என்பதை நீங்கள் தொடர்ந்து சோதிக்கிறீர்களா? நினைவில் எடுத்து வைக்கும் அடிகள் அளப்பரிய பேறுகளைப் பெற்றுத்தரும். நினைவில் எடுத்து வைக்காத அடிகள், அளப்பரிய பேறுகளைக் கொண்டுவர மாட்டாது. அவற்றில் எந்தவித வருமானமும் இருக்கமாட்டாது. எனவே, நீங்கள் ஒவ்வோர் அடியிலும் சேமிப்பதன் மூலம் வருமானத்தைச் சம்பாதிக்கும் குழந்தைகள், அல்லவா? வருமானத்தைச் சம்பாதிக்கும் குழந்தைகள், வருமானத்தைக் கொண்டு வருபவர்கள் எனப்படுகிறார்கள். ஒரு வகையினர், உண்டு, பருகி, அனைத்தையும் வீணாக்குபவர்கள். மற்றைய வகையினர், வருமானத்தைச் சம்பாதிப்பவர்கள். நீங்கள் எத்தகைய குழந்தைகள்? அங்கு, குழந்தைகள் தமக்காகவும் தமது தந்தைக்காகவும் சம்பாதிக்கிறார்கள். இங்கு, தந்தைக்கு எதுவும் வேண்டியதில்லை. நீங்கள் உங்களுக்காகவே சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வோர் அடியிலும் சதா சம்பாதித்துச் சேமிக்கும் குழந்தைகளா என்பதைச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில், காலம் இக்கட்டானவை ஆகுகின்றன. உங்களின் வருமானத்தைச் சம்பாதித்திருக்கும் அளவிற்கு, நீங்கள் தொடர்ந்து மிக இலகுவாக மேன்மையான வெகுமதியை அனுபவம் செய்வீர்கள். எதிர்காலத்திலும், எவ்வாறாயினும் உங்களுக்குப் பேறுகள் கிடைக்கும். எனவே, இப்போது சங்கமயுகத்திலும் இந்த வருமானத்தின் பேறு இருக்கும். எதிர்காலத்திலும் இருக்கும். எனவே, நீங்கள் அனைவரும் சம்பாதிப்பவர்களா அல்லது உண்டு அதை முடித்துவிடுபவர்களா?

தந்தையைப் போன்றே குழந்தைகளும் இருப்பார்கள். தந்தை முழுமையாகவும் சம்பூரணமாகவும் இருப்பதைப் போன்று, குழந்தைகளும் சதா நிரம்பியவர்களாக இருப்பார்கள். நீங்கள் அனைவரும் தைரியசாலிகள், அல்லவா? நீங்கள் பயப்படுபவர்கள் இல்லையல்லவா? நீங்கள் பயப்படவில்லை, அல்லவா? உங்களின் எண்ணங்களிலேனும் சிறிதளவு பயம் காணப்பட்டதா? இது எதுவும் புதியதல்ல. இது பல தடவைகள் நிகழ்ந்துள்ளன. இது பல தடவைகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. இது இப்போது மீண்டும் நிகழுகிறது. எனவே, பயப்பட வேண்டியதில்லை. சக்திகளும் பயமற்றவர்கள், அல்லவா? சக்திகளான நீங்கள் எப்போதும் வெற்றியாளர்கள், எப்போதும் பயமற்றவர்கள். நீங்கள் தந்தையின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பதனால், பயமற்றவர்களாக இருக்கிறீர்கள். உங்களைத் தனித்தவராகக் கருதும்போதே, பயம் ஏற்படும். பாதுகாப்புக் குடையின் கீழ் பயம் இருக்க முடியாது. எப்போதும் பயமற்றவராக இருங்கள். ‘சக்திகளின் வெற்றி’ என்பது சதா நினைவுகூரப்படுகிறது. நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களான பெண்சிங்கங்கள் அல்லவா? சிவசக்திகளுக்கும் பாண்டவர்களுக்கும் வெற்றி ஏற்படாவிட்டால், வேறு யார் வெற்றி பெறுவார்கள்? பாண்டவர்களும் சக்திகளும் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றி பெறுவார்கள். குழந்தைகளான உங்களின் மீது தந்தை அன்பு வைத்திருக்கிறார். தந்தையால் நேசிக்கப்படும் குழந்தைகளுக்கும் தந்தையின் நினைவில் இருக்கும் குழந்தைகளுக்கும் எதுவும் நிகழ முடியாது. நினைவில் பலவீனம் ஏற்படுமாயின், நீங்கள் சிறிதளவு பாதிக்கப்படுவீர்கள். நினைவெனும் பாதுகாப்புக் குடை உங்களிடம் இருக்கும்போது, உங்களுக்கு எதுவும் நிகழ முடியாது. ஏதாவதொரு முறையால் பாப்தாதா உங்களைப் பாதுகாப்பார். அவர் பக்தர்களுக்கே ஆதாரமாக இருக்கும்போது, குழந்தைகளுக்கு அவர் சதா ஆதாரமாக இருப்பார்.

நீங்கள் சதா தைரியம் மற்றும் ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளுடன் பறப்பவர்கள், அல்லவா? ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் இறக்கைகள் சதா உங்களைப் பறக்கச் செய்வதுடன், மற்றவர்களுக்குப் பறக்கும் வழிமுறையைக் காட்டுவதற்கும் உதவுகிறது. இந்த இரண்டு இறக்கைகளும் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும். ஓர் இறக்கை பலவீனமடைந்தாலும், உங்களால் உயரே பறக்க முடியாது. இதனாலேயே, இரண்டும் அத்தியாவசியமானவை. தைரியம் அத்துடன் ஊக்கமும் உற்சாகமும். தைரியம் அசாத்தியமானதையும் சாத்தியம் ஆக்குகிறது. கஷ்டமான ஒன்றையும் தைரியம் இலகுவானது ஆக்குகிறது. கீழே இருந்து உயரே மேலே பறப்பதற்கு அது வழிவகுக்கிறது. எனவே, நீங்கள் சதா இந்த முறையில் பறக்கின்ற அனுபவசாலி ஆத்மாக்கள், அல்லவா? கீழே வருவதன் மூலம் நீங்கள் எதைப் பெற்றீர்கள் என்பதைக் கண்டுள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து கீழே வந்தீர்கள். ஆனால், இப்போது பறக்கும் ஸ்திதிக்குரிய நேரம் ஆகும். இது உயரப் பாய்தலுக்கான நேரமும் அல்ல. நீங்கள் ஒரு விநாடியில் நினைத்துப் பின்னர் பறப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து இத்தகைய சக்தியைத் தந்தையிடமிருந்து சதா பெறுவீர்கள்.

நீங்கள் சதா உங்களை மாஸ்ரர் ஞான சூரியர்களாகக் கருதுகிறீர்களா? அறியாமை இருளை சதா அழிப்பதே ஞான சூரியனின் பணி ஆகும். சூரியன் அதன் ஒளியால், இரவைப் பகலாக மாற்றுகிறது. அதேபோன்று, மாஸ்ரர் ஞான சூரியர்களான நீங்களே உலகின் இருளை நீக்குபவர்கள். அலைந்து திரியும் ஆத்மாக்களுக்குப் பாதையைக் காட்டுபவர்கள். அத்துடன் இரவைப் பகலாக மாற்றுபவர்கள், அப்படியல்லவா? உங்களின் இந்தப் பணியை நீங்கள் சதா நினைவு செய்கிறீர்களா? உங்களின் லௌகீகத் தொழிலை நீங்கள் மறக்க முயற்சித்தாலும் உங்களால் மறக்க முடியாது. அது இந்த ஒரு பிறவிக்குரிய அழியும் பணி ஆகும். அது அழியும் தொழில் ஆகும். ஆனால், இந்தத் தொழிலான மாஸ்ரர் ஞான சூரியர்களாக இருத்தல், எல்லா வேளைக்கும் உங்களுடையதாக உள்ளது. ஆகவே, எப்போதும் அதை உங்களின் அழியாத தொழிலாகவும், இருளை நீக்கி ஒளியை ஏற்படுத்தும் கடமையாகவும் கருதுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களுக்குள் இருள் முடிந்து ஒளி ஏற்படும். ஏனெனில் ஒளியை வழங்குபவர்கள், எவ்வாறாயினும் தாமும் ஒளியால் நிறைந்தவர்கள் ஆகுவார்கள். எனவே, எப்போதும் இந்தப் பணியை நினைவு செய்து, தினமும் உங்களைச் சோதித்துப் பாருங்கள்: ஒளியாக இருக்கும் நான், மாஸ்ரர் ஞான சூரியனா? தீயணைக்கும் வீரர் நெருப்பினால் பாதிக்கப்படாததைப் போன்று, எப்போதும் இருளை நீக்குபவர்களால் தாங்களே இருளுக்குள் செல்ல முடியாது. ஆகவே, எப்போதும் ‘நான் மாஸ்ரர் ஞான சூரியன்’ என்ற போதையுடனும் சந்தோஷத்துடனும் இருங்கள்.

அவ்யக்த பாப்தாதா குமார்களைச் சந்திக்கிறார்:
குமார் வாழ்க்கை மேன்மையான வாழ்க்கை ஆகும். உங்களின் குமார் வாழ்க்கையில் தந்தைக்கு உரியவராக இருக்கும் உங்களின் மேன்மையான வாழ்க்கையைப் பார்த்து சதா சந்தோஷமாக இருங்கள். அத்துடன் தொடர்ந்து மற்றவர்களுக்கும் இவ்வாறு சந்தோஷமாக இருக்கும் வழிமுறையைப் பற்றிக் கூறுங்கள். பந்தனத்தில் இருந்து மிகவும் விடுபட்டிருப்பவர்கள், குமார்களும் குமாரிகளுமே. குமார்களால் தாம் விரும்பும் எந்தவொரு பாக்கியத்தையும் தமக்காக உருவாக்கிக் கொள்ள முடியும். நீங்கள் தைரியம் மிக்க குமார்கள், அல்லவா? நீங்கள் பலவீனமான குமார்கள் அல்ல. மற்றவர்கள் தங்களை எந்தளவிற்குக் கவர முயற்சி செய்தாலும், மகாவீரர் ஆத்மாக்கள் தந்தையைத் தவிர வேறு எவரை நோக்கியும் கவரப்பட மாட்டார்கள். நீங்கள் மிகவும் துணிவும் தைரியமும் மிக்கவர்கள். மாயை தனது பல்வேறு ரூபங்களினூடாக உங்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி செய்வாள். ஆனால், நீங்கள் நம்பிக்கை உள்ள புத்திகளை உடையவர்கள். அதனால் வெற்றி பெறுபவர்கள். நீங்கள் பயப்படுபவர்கள் அல்ல. இது நல்லது. ஆஹா எனது மேன்மையான பாக்கியமே! எப்போதும் இந்த விழிப்புணர்வைப் பேணுங்கள். எவரும் என்னைப் போன்று ஆக முடியாது. இப்போதும் இந்த போதையைப் பேணுங்கள். எங்கு இறை போதை உள்ளதோ, அப்போது நீங்கள் மாயையிடமிருந்து அப்பால் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் சேவையில் மும்முரமாக இருக்கிறீர்கள், அல்லவா? இதுவும் அத்தியாவசிமே. நீங்கள் எந்தளவிற்குச் சேவையில் மும்முரமாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் இலகு யோகியாக இருப்பீர்கள். எவ்வாறாயினும், சேவையானது நினைவினால் நிரம்பியிருக்கும்போது அங்கு பாதுகாப்பு இருக்கும். நினைவு இல்லாவிடின், அங்கு பாதுகாப்பு இருக்கமாட்டாது.

நீங்கள் சதா தடைகளில் இருந்து விடுபட்டிருக்கும் குமார்கள், அல்லவா? மாயை உங்களைத் தன்பால் கவருவதில்லை, அல்லவா? குமார்களைத் தனக்குச் சொந்தமாக்குவதற்கு மாயை மிகக் கடுமையாக முயற்சி செய்கிறாள். மாயை குமார்களை விரும்புகிறாள். அவர்கள் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என மாயை நினைக்கிறாள். எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் துணிவானவர்களும் தைரியசாலிகளும் அல்லவா? நீங்கள் மாயையின் அடிமைகள் அல்ல. ஆனால் நீங்கள் மாயைக்கே சவால் விடுப்பவர்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்கு மாயையின் அடிமைகளாக இருந்தீர்கள். அதனால் எதைப் பெற்றீர்கள்? நீங்கள் அனைத்தையும் இழந்தீர்கள்! இதனாலேயே, நீங்கள் இப்போது இறைவனுக்குச் சொந்தமானவர்கள். இறைவனுக்குச் சொந்தமாக இருத்தல் என்றால், சுவர்க்கத்திற்கான உரிமையைக் கோருதல் என்று அர்த்தம். ஆகவே, குமார்கள் அனைவரும் வெற்றியாளர் குமார்கள் ஆவார்கள். நீங்கள் பலவீனம் அடையாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். மாயை குமார்களின் மீது மேலதிக அன்பு வைத்திருக்கிறாள். இதனாலேயே, உங்களைத் தனக்குச் சொந்தமாக்குவதற்கு அவள் ஒவ்வொரு வழிமுறையிலும் முயற்சி செய்கிறாள். ஆனால், நீங்கள் அனைவரும் ஒரு தீர்மானம் செய்துள்ளீர்கள். இப்போது நீங்கள் தந்தைக்குச் சொந்தமாக இருப்பதனால், கவலைகளில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். நீங்கள் சதா தடைகளில் இருந்து விடுபட்டிருப்பீர்களாக. நீங்கள் பறக்கும் ஸ்திதியில் இருப்பீர்களாக.

குமார்கள் எப்போதும் சக்திசாலிகள். எங்கு சக்தி உள்ளதோ, அங்கு பேறு இருக்கும். நீங்கள் எப்போதும் சகல பேறுகளினதும் சொரூபங்கள் ஆவீர்கள். ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதனால், நீங்கள் மாயையின் பல்வகை ரூபங்களையும் அறிவீர்கள். ஆகவே, தொடர்ந்து உங்களின் பாக்கியத்தை அதிகரியுங்கள். எப்போதும் ஒரு விடயத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: குமார் வாழ்க்கை என்றால் சுதந்திரமான வாழ்க்கையாகும். ஜீவன்முக்தி அடைந்தவர்கள், சங்கமயுகத்தின் பேறுகளைக் கொண்டிருப்பார்கள். சதா தொடர்ந்து முன்னேறி, மற்றவர்களையும் முன்னேறச் செய்யுங்கள். குமார்கள் எப்போதும் சந்தோஷ நடனம் ஆடவேண்டும்: ஆஹா குமார் வாழ்க்கையே! ஆஹா பாக்கியமே! ஆஹா நாடகமே! ஆஹா பாபா! தொடர்ந்து இந்தப் பாடலைப் பாடுங்கள். சந்தோஷமாக இருங்கள். பலவீனம் வரமாட்டாது. சேவை செய்வதன் மூலமும் நினைவில் இருப்பதன் மூலமும் உங்களைத் தொடர்ந்து சக்தியால் நிரப்பிக் கொள்ளுங்கள். குமார் வாழ்க்கை என்றால் இலேசான வாழ்க்கை ஆகும். இந்த வாழ்க்கையில் உங்களின் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளுதல், அனைத்திலும் மகத்தான பாக்கியம் ஆகும். நீங்கள் பல பந்தனங்களில் கட்டுப்படுவதில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். சதா உங்களை இலேசானவராகவும் ஒளியாகவும் கருதி, தொடர்ந்து பறக்கும் ஸ்திதியில் பறந்து கொண்டே இருங்கள். நீங்கள் முன்னால் ஓரிலக்கத்தைப் பெறுவீர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் கோபத்துடன் இருக்கும் ஆத்மாக்களுக்குக் கருணையெனும் குளிர்ந்த நீரால் நற்குணங்களைத் தானம் செய்யும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மா ஆவீர்களாக.

உங்களுக்கு முன்னால் கோப அக்கினியில் எரியும் ஒருவர் வந்து, உங்களை இகழ்ந்து, அவமதித்தால், உங்களின் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் உங்களின் மனோபாவத்தாலும் ஸ்திதியாலும் அந்த ஆத்மாவிற்கு நற்குணத்தின் தானத்தையும் சகித்துக் கொள்ளும் சக்தி என்ற ஆசீர்வாதத்தையும் கொடுங்கள். கோபமான ஆத்மாக்கள் புற ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பார்கள். எனவே, கருணையெனும் குளிர்ந்த நீரால் இத்தகைய ஆத்மாக்களை அமைதிநிறைந்தவர்கள் ஆக்குங்கள். ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாக்களான உங்களின் கடமை இதுவே ஆகும். உயிர்வாழும் ரூபத்தில் நீங்கள் இத்தகைய சம்ஸ்காரங்களால் நிரம்பியிருப்பதனாலேயே, பக்தர்கள் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் மூலமாக இத்தகைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.

சுலோகம்:
நினைவின் மூலம் சகல சக்திகளின் பொக்கிஷங்களை அனுபவம் செய்பவர்கள், சகல சக்திகளாலும் நிரம்பியிருப்பார்கள்.