19.11.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தையை மாத்திரம் செவிமடுத்துப் பின்னர் அவர் கூறியதை ஏனையோருக்கும் கூறுங்கள்.
கேள்வி:
நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்த வேண்டிய என்ன புரிந்துணர்வைத் தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார்?
பதில்:
நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற புரிந்துணர்வை பாபா ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கொடுத்துள்ளார். ஒரேயொரு தந்தையின் நினைவிலேயே நீங்கள் நிலைத்திருக்க வேண்டும். இந்த ஒரு விடயத்தையே நீங்கள் அனைவருக்கும் கூற வேண்டும், ஏனெனில் நீங்கள் முழு உலகிலுமுள்ள உங்கள் சகோதரர்கள் அனைவருக்கும் நன்மையளிக்க வேண்டும். நீங்கள் மாத்திரமே இந்தச் சேவைக்கான கருவிகள் ஆவீர்கள்.
ஓம் சாந்தி.
பொதுவாக, நீங்கள் ஏன் “ஓம்சாந்தி” என்று கூறுகிறீர்கள்? இது உங்களுடைய அறிமுகத்தைக் கொடுப்பதாகும். ஆத்மாக்கள் தங்கள் சொந்த அறிமுகத்தைக் கொடுப்பார்கள். ஆத்மாக்களே தங்கள் சரீரங்களினூடாகப் பேசுகிறார்கள். ஓர் ஆத்மா இல்லாமல் ஒரு சரீரத்தினால் எதையும் செய்ய முடியாது. ஆகவே, ஆத்மாக்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்கிறார்கள்: நான் ஓர் ஆத்மர் நான் பரமாத்மாவாகிய பரமதந்தையின் குழந்தை. ஆத்மாவே பரமாத்மா என அந்த மக்கள் கூறுகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இவ் விடயங்கள் அனைத்தும் விளங்கப்படுத்தப்படுகின்றன. தந்தை “குழந்தாய், குழந்தாய்” எனக் கூறுவார், இல்லையா? ஆன்மீகத் தந்தை கூறுகிறார்: ஓ ஆன்மீகக் குழந்தைகளே! உங்கள் பௌதீகப் புலன் அங்கங்களினூடாக, நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: முதலில் ஞானமும், பின்னர் பக்தியும் உள்ளன. முதலில் பக்தியும், பின்னர் ஞானமும் உள்ளன என்றில்லை. முதலில் பகலாகிய ஞானமும், பின்னர் இரவாகிய பக்தியும் உள்ளன. ஆகவே, பகல் மீண்டும் எப்பொழுது ஆரம்பமாகும்? பக்தியில் விருப்பமின்மை உள்ளபொழுதே ஆகும். கியானும், விக்கியானும் (மௌனம்) உள்ளன என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைக் கற்கின்றீர்கள். பின்னர் நீங்கள் சத்திய, திரேதா யுகங்களில் இந்த ஞானத்தின் வெகுமதியைப் பெறுவீPர்கள். இந்த நேரத்தில் பாபா உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார், பின்னர் சத்தியயுகத்தில் அதனைக் கற்பதன் வெகுமதியைப் பெறுவீPர்கள். இது புரிந்துகொள்ளப்பட வேண்டியதொன்றாகும். இப்பொழுது தந்தை உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் கியானுக்கு அப்பால் மௌனதாமமாகிய, உங்கள் வீடான, விக்கியானுக்குள் (மௌனம்) செல்வீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது கியான் என்றோ அல்லது பக்தி என்றோ அழைக்கப்படுவதில்லை. அது விக்கியான் என்றே அழைக்கப்படுகிறது. நீங்கள் கியானுக்கு அப்பால் மௌன தாமத்திற்;குச் செல்கிறீர்கள். உங்கள் புத்தியில் இந்த ஞானம் அனைத்தையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். எந்த இடத்திற்காக, தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார்? அவர் அதனை எதிர்காலப் புதிய உலகிற்காகக் கொடுக்கின்றார். நீங்கள் புதிய உலகிற்குச் செல்வதற்கு முன்னர், உங்கள் வீட்டிற்;கு முதலில் செல்வீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கும் முக்திதாமத்திற்;கு நீங்கள் செல்ல வேண்டும். நீங்கள் நிச்சயமாக அங்கு செல்வீர்கள். நீங்கள் மாத்திரமே இந்தப் புதிய விடயங்களைச் செவிமடுக்கிறீர்கள். வேறு எவராலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நிச்சயமாக ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஓர் ஆன்மீகத் தந்தை இருப்பது அவசியம். ஆன்மீகத் தந்தையும் ஆன்மீகக் குழந்தைகளும் உள்ளனர். ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் ஆன்மீகத் தந்தை மாத்திரமே இருக்கிறார். அவர் வந்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தை எவ்வாறு வருகிறார் என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நானும் சடப்பொருளின் ஆதாரத்தைப் பெற வேண்டியுள்ளது. இப்பொழுது நீங்கள் தந்தையை மாத்திரமே செவிமடுக்க வேண்டும். தந்தையைத் தவிர வேறெவரையும் செவிமடுக்காதீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் செவிமடுத்த பின், உங்கள் சகோதரர்களுக்கும் அதனைக் கூறுகிறீர்கள். நீங்கள் நிச்சயமாக ஏதோவொன்றைக் கூற வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள், ஏனெனில் அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். ஒருவரின் புத்தி அங்கு செல்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தை விளங்கப்படுத்தும்பொழுது, உங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. முன்னர், நீங்கள் எதையும் புரிந்துகொள்ளவில்லை. பக்தி மார்க்கத்தில் உங்களுக்குப் புரிந்துணர்வு இல்லாததினால், இராவணனின் பிடிக்குள் சிக்கியபொழுது, உங்களுக்கு என்ன நிகழ்ந்தது எனப் பாருங்கள்! நீங்கள் மிகவும் அழுக்காகினீர்கள்! நீங்கள் மது அருந்தியபொழுது, என்னவாக ஆகினீர்கள்? மது மென்மேலும் அழுக்கைப் பரப்புகிறது. நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. கல்பம் கல்பமாக, நீங்கள் அதைக் கோரி வந்தீர்கள். ஆகவே, நீங்கள் நிச்சயமாகத் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். கிருஷ்ணரின் தெய்வீகக் குணங்களைப் பற்றிய புகழ் அதிகளவில் உள்ளது. வைகுந்தத்தின் அதிபதி மிகவும் இனிமையானவர்! நீங்கள் அதைக் கிருஷ்ணரின் வம்சம் எனக் கூறமாட்டீர்கள்; அது இலக்ஷ்மி நாராயணனினது, அதாவது, விஷ்ணுவின் வம்சம் என்றே கூறப்படுகிறது. ஒரேயொரு தந்தையினால் மாத்திரம் சத்தியயுகத்து இராச்சிய வம்சத்தை ஸ்தாபிக்க முடியும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். இந்தப் படங்கள் இல்லாமலும் உங்களால் இதை விளங்கப்படுத்த முடியும். தொடர்ந்தும் பல ஆலயங்கள் கட்டப்படுகின்றன. ஞானமுள்ளவர்கள் தொடர்ந்தும் ஓடிச் சென்று ஏனையோருக்கு நன்மையளித்து அவர்களைத் தங்களுக்குச் சமமாக்குவார்கள். உங்களைச் சோதித்து வினவுங்கள்: நான் இந்த ஞானத்தை எத்தனை பேருக்குக் கொடுத்துள்ளேன்? சிலர் மிகவும் விரைவாக ஞான அம்பினால் தாக்கப்படுகிறார்கள். பீஷ்மபிதாமகர் போன்றோர் கூறினார்கள்: நான் குமாரிகளின் அம்புகளினால் தாக்கப்பட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் தூய்மையான குமாரர்களும் குமாரிகளும் ஆவர், அதாவது, அவர்கள் குழந்தைகள் ஆவார்கள். நீங்கள் அனைவரும் குழந்தைகள். ஆகவே, நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளாகிய, சகோதரர்களும் சகோதரிகளும் எனக் கூறுகிறீர்கள். இது ஒரு தூய உறவுமுறையாகும். நீங்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்;. தந்தை உங்களைத் தத்தெடுத்துள்ளார். சிவபாபா உங்களை பிரஜாபிதா பிரம்மாவினூடாகத் தத்தெடுத்தார். உண்மையில், நீங்கள் “தத்தெடுக்கப்பட்ட” என்னும் வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது. எவ்வாறாயினும், நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள். அனைவரும் என்னைக் கூவியழைக்கிறார்கள்: சிவபாபா, சிவபாபா, வாருங்கள்! எவ்வாறாயினும், அவர்களுக்குப் புரிந்துணர்வு இல்லை. ஆத்மாக்கள் அனைவரும் சரீரங்களை ஏற்றுத் தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள். ஆகவே, சிவபாபாவும் நிச்சயமாக ஒரு சரீரத்தினூடாகத் தனது பாகத்தை நடிப்பார். சிவபாபா ஒரு பாகத்தை நடிக்கவில்லை என்றால், அவரால் பயன் இருக்காது; அவருக்குப் பெறுமதியும் இருக்காது. அவர் முழு உலகையும் சற்கதியடையச் செய்யும்பொழுதே, அவருக்குப் பெறுமதி கிடைக்கிறது. அதனாலேயே பக்திமார்க்கத்தில் அவர்கள் அவருடைய புகழைப் பாடுகிறார்கள். அவர்கள் சற்கதி அடைந்ததும், அவர்களுக்குத் தந்தையை நினைவுசெய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தந்தையான, கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள்; ஆசிரியர் மறைந்துவிடுகிறார். அவர்கள் கூறவேண்டும் என்பதற்காகவே ஒரேயொரு பரமதந்தையே அனைவரையும் தூய்மையாக்குபவர் என்று கூறுகிறார்கள். அந்த ஒரேயொருவரே சற்கதி அருள்பவர் என்பதையும் அவர்கள் கூறுவதில்லை. அனைவருக்கும்; சற்கதி அளிப்பவர் ஒரேயொருவரே என்பது நினைவுகூரப்பட்டாலும், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமலேயே அதைக் கூறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது கூறுபவையெல்லாம் அர்த்தமுள்ளவை. இரவாகிய பக்தி, பகலாகிய ஞானத்திலிருந்து வேறுபட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பகலுக்குரிய காலமும், பக்திக்குரிய காலமும் உள்ளன. இவை எல்லையற்ற விடயங்கள். குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். அரைக்கல்பத்திற்குப் பகலும், மற்றைய அரைக்கல்பத்திற்கு இரவும் உள்ளன. தந்தை கூறுகிறார்: நான் இரவைப் பகலாக மாற்றுவதற்கே வருகிறேன். அரைக்கல்பத்திற்கு இராவண இராச்சியம் உள்ளது என்பதும், அதில் பல வகையான துன்பம் உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியும். பின்னர் தந்தை வந்து உங்களுக்குச் சந்தோஷம் மாத்திரமே இருக்கின்ற புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். இது சந்தோஷத்தையும், துன்பத்தையும் பற்றிய ஒரு நாடகம் என்று கூறப்பட்டுள்ளது. சந்தோஷம் என்றால் இராமர் எனவும், துன்பம் என்றால் இராவணன் எனவும் அர்த்தமாகும். நீங்கள் இராவணனை வெற்றிகொள்ளும்பொழுது, இராம இராச்சியம் ஆரம்பமாகுகிறது. அரைக்கல்பத்திற்குப் பின்னர், இராவணன் வந்து இராம இராச்சியத்தை வெற்றிகொண்டு, அதை ஆட்சிசெய்கிறான். இப்பொழுது நீங்கள் மாயையை வெல்கின்றீர்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமுள்ளது. இது உங்களுடைய இறை மொழியாகும். கடவுள் எவ்வாறு பேசுகிறார் என்பதை வேறு எவராலும் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? இதுவே தந்தையாகிய கடவுளின் மொழி என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் ஞானம் நிறைந்தவர் என்பதலால், அவர் ஞானத்தினால் நிரம்பிய ஒரேயொருவராகிய, ஞானக்கடல் என்று கூறப்படுகின்றது, எனவே நிச்சயமாக அவர் இந்த ஞானத்தை எவருக்காவது கொடுப்பார். பாபா எவ்வாறு ஞானத்தைக் கொடுக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தையும் உலகச் சக்கரத்தின் ஞானத்தையும் கொடுக்கிறார். பின்னர், இந்த ஞானத்தைப் பெறுவதனால், நாங்கள் பூகோளத்தை ஆட்சிபுரிபவர்கள் ஆகுகிறோம். சுயதரிசனச் சக்கரம் உள்ளது. நினைவுசெய்வதனால், எங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. இது உங்கள் வன்முறையற்ற நினைவுச் சக்கரம் ஆகும். அந்தச் சக்கரம் வன்முறைக்குரியது; அது ஒருவரின் தலையை வெட்டுவதற்கானது. அறியாமையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் ஒருவரின் தலையை ஒருவர் வெட்டுகிறார்கள். சுயதரிசனச் சக்கரத்தை அறிந்துகொள்வதன் மூலம், நீங்கள் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக அதன் இறுதிவரை நீங்கள் துன்பத்தை அனுபவம் செய்கின்ற காமமே, உங்களுடைய மிகப்பெரிய எதிரியாகும். அது துன்பச் சக்கரம் ஆகும். தந்தை உங்களுக்குச் சக்கரத்தின் ஞானத்தை விளங்கப்படுத்துகிறார். அவர் உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குகிறார். அவர்கள் சமயநூல்களில் பல்வேறு கதைகளை உருவாக்கியுள்ளார்கள். நீங்கள் இப்பொழுது அவை அனைத்தையும் மறந்துவிட வேண்டும். நீங்கள் ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்ய வேண்டும், ஏனெனில் நீங்கள் உங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடமிருந்தே கோர முடியும். தந்தையை நினைவுசெய்து, உங்கள் ஆஸ்தியை அவரிடமிருந்து கோரிக்கொள்ளுங்கள். அது மிகவும் இலகுவானது! எல்லையற்ற தந்தை புதிய உலகை ஸ்தாபிப்பதனால், அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு அவரை நினைவுசெய்யுங்கள். இதுவே “மன்மனாபவ”, “மத்தியாஜிபவ” என்பவற்றின் அர்த்தம். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்வதால், குழந்தைகளாகிய உங்களின் சந்தோஷப் பாதரசம் உயரும். நாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள்;. தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். நாங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தோம், நாங்கள் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை அந்த அதிபதிகள் ஆகுவோம். நாங்களே பின்னர் நரகவாசிகள் ஆகியவர்கள். நாங்கள் சதோபிரதானாக இருந்தோம், இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டோம். நாங்களே பக்தி மார்க்கத்தில் சென்றவர்கள்;. நாங்கள் முழுச் சக்கரத்தையும் சுற்றி வந்தோம். பாரத மக்களாகிய நாங்கள் முதலில் சூரிய வம்சத்திற்கும், பின்னர் சந்திரவம்சத்திற்கும் உரியவர்களாகி, பின்னர் வைசிய வம்சத்திற்குள் இறங்கி வந்தோம். பாரத மக்களாகிய நாங்கள் தேவர்களாக இருந்து பின்னர், கீழே வீழ்ந்தோம். இப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தெரியும். நீங்கள் பாவப் பாதையில் செல்லும்பொழுது, மிகவும் அழுக்காகுகின்றீர்கள்;! அவர்கள் ஆலயங்களில் அத்தகைய அவலட்சணமான உருவங்களையும் உருவாக்கியுள்ளார்கள். முன்னர், அவர்கள் அத்தகைய வடிவங்களுடன் கடிகாரங்களையும் உருவாக்குவது வழக்கம். முன்னர் நீங்கள் மிகவும் அழகாக இருந்தீர்கள் என்பதையும், பின்னர் மறுபிறவி எடுக்கையில் மிகவும் அழுக்காகினீர்கள் என்பதையும் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள்! நீங்கள் சத்தியயுகத்தின் அதிபதிகளாக இருந்தபொழுது, தெய்வீகக் குணங்களைக் கொண்ட மனிதர்களாக இருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு அசுர குணங்களே உள்ளன, இல்லாவிடின்;, வேறெந்த வேறுபாடும் இல்லை. ஒரு வாலுடனோ அல்லது ஒரு தும்பிக்கையுடனோ எந்த மனிதர்களும் இருப்பதில்லை. இவ்விடயங்கள் வெவ்வேறு தேவர்களின் அடையாளங்கள். சுவர்க்கம் மறைந்து விட்டது, அந்தப் படங்கள் அடையாளங்களாக எஞ்சியிருக்கின்றன. சந்திர வம்சத்தின் அடையாளமும் உள்ளது. இப்பொழுது நீங்கள் மாயையை வெல்வதற்கு யுத்தம் செய்கிறீர்கள். யுத்தம் செய்கையில் நீங்கள் சித்தியடையாததற்கான அடையாளமே அம்பும் வில்லும் ஆகும். உண்மையில், பாரத மக்கள் தேவ குலத்திற்கு உரியவர்கள்;, இல்லாவிடின், அவர்களை எந்தக் குலம் எனக் கணக்கிடுவது? எவ்வாறாயினும், பாரத மக்கள் தங்கள் குலத்தைப் பற்றி அறியாததனால், அவர்கள் தங்களை இந்துக்கள் என அழைக்கிறார்கள். இல்லாவிடின், நீங்கள் அனைவரும் ஒரே குலத்திற்குரியவர்கள். பாரதத்திலுள்ள அனைவரும் எல்லையற்ற தந்தையால் ஸ்தாபிக்கப்பட்ட, தேவ குலத்திற்;கு உரியவர்கள். பாரதத்துக்கு ஒரு சமயநூல் மாத்திரம் உள்ளது. தேவ வம்சம் ஸ்தாபிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து ஏனைய கிளைகள் வெளிப்படுகின்றன. தந்தை தேவ தர்மத்தை ஸ்தாபிக்கிறார். நான்கு பிரதான சமயங்கள் உள்ளன, தேவ தர்மமே அவற்றின் அத்திவாரம் ஆகும். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் முக்திதாமவாசிகள்;. பின்னர் நீங்கள் உங்களுடைய தேவ கிளைக்குள் (அடிமரம்) செல்கிறீர்கள். பாரதத்திற்கு ஒரு வரையறை (அத்திவாரம்) மாத்திரமே உள்ளது; இது வேறெந்தச் சமயங்களுக்கும் கிடையாது. நீங்கள் ஆதியில் (முதன்முதலில்) தேவ தர்மத்துக்கு உரியவர்கள். பின்னர், நாடகத் திட்டத்திற்கேற்ப, அதிலிருந்து ஏனைய சமயங்கள் வெளிப்படுகின்றன. பாரதத்தின் ஆதிதர்மம், தந்தையினால் ஸ்தாபிக்கப்பட்ட தேவதர்மம் ஆகும். பின்னர் அதிலிருந்து புதிய இலைகள் வெளிப்படுகின்றன. இந்த முழு விருட்சமும் கடவுளின் விருட்சம் ஆகும். தந்தை கூறுகிறார்: நான் இவ்விருட்சத்தின் விதை ஆவேன். இதுவே அத்திவாரம், அதிலிருந்து கிளைகள் வெளிப்படுகின்றன. ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதே பிரதான விடயம். அனைவரும் நினைவுசெய்யும் ஒரேயொருவரே, ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். தந்தை கூறுகிறார்: உங்கள் பௌதீகக் கண்கள் மூலம் நீங்கள் பார்க்கின்ற அனைத்தையும் நீங்கள் மறந்துவிட வேண்டும். இந்த விருப்பமின்மை எல்லையற்றது, ஆனால் அவர்களுடைய விருப்பமின்மையோ எல்லைக்குட்பட்டது. தங்கள் வீடுகளில் அவர்கள் ஆர்வமின்மையைக் கொண்டுள்ளார்கள். நீங்கள் பழைய உலகம் முழுவதிலும் ஆர்வமின்மையைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் பக்திசெய்வதைப் பூர்த்தி செய்யும்;பொழுது, உங்களுக்குப் பழைய உலகில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. பின்னர் நாங்கள் அமைதிதாமத்தினூடாகப் புதிய உலகிற்;குச் செல்கிறோம். தந்தை கூறுகிறார்: இந்தப் பழைய உலகம் எரிக்கப்படவுள்ளது. உங்கள் இதயம் இந்தப் பழைய உலகில் பற்று வைக்கக்கூடாது. நீங்கள் தகுதிவாய்ந்தவர்கள் ஆகும்வரை, இங்கு தங்க வேண்டும். உங்கள் கணக்குகள் அனைத்தையும் நீங்கள் தீர்க்க வேண்டும். அரைக்கல்பத்திற்காக, நீங்கள் சந்தோஷத்தைச் சேகரித்துக் கொள்கிறீர்கள். அது அமைதிதாமம் எனவும், மற்றையது சந்தோஷதாமம் எனவும் அழைக்கப்படுகின்றன. முதலில், சந்தோஷமும், பின்னர் துன்பமும் உள்ளன. புதிய ஆத்மாக்கள் அனைவரும் வீட்டிலிருந்து கீழே வருகிறார்கள் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். உதாரணமாக, கிறிஸ்துவின் ஆத்மா முதலில் வரும்பொழுது, அவர் எந்தத் துன்பத்தையும் அனுபவம் செய்வதில்லை. இந்த நாடகம் முதலில் சந்தோஷத்தையும், பின்னர் துன்பத்தையும் பற்றியதாகும். புதிதாக வருபவர்கள் சதோபிரதானாகவே இருக்கிறார்கள். உங்களுடைய சந்தோஷத்தின் அனுபவம் அவர்களினுடையதை விடவும் கூடுதலாக உள்ளதைப் போன்றே, உங்களுடைய துன்ப அனுபவமும் கூடுதலாகவே உள்ளது. இவை அனைத்தையும் புரிந்துகொள்வதற்கு நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். தந்தை இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பின்னர் நீங்கள் ஏனைய ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் இந்தச் சரீரத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன். இவருடைய பல பிறவிகளின் இறுதியில் நான் இந்தச் சரீரத்தில் பிரவேசிக்கிறேன், அதாவது, நான் ஒரு தமோபிரதான் சரீரத்தில் பிரவேசிக்கிறேன். பின்னர் அவர் முதலில் வருபவர் ஆகுகிறார். முதலாம் இலக்கத்திற்குரியவர்; இறுதி இலக்கத்திற்கு உரியவராகவும், இறுதி இலக்கத்திற்குரியவர் முதலாம் இலக்கத்திற்கு உரியவராகவும் ஆகுகிறார். இதுவும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். முதலாவதாக உள்ளவருக்குப் பின்னர் யார் வருகிறார்? மம்மா! அவரும் தனது பாகத்தை நடிக்க வேண்டும்! அவர் பலருக்கும் கற்பித்தல்களைக் கொடுத்துள்ளார். பின்னர், குழந்தைகளாகிய நீங்கள், ஏனைய பலருக்கும் கற்பிப்பதில் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். கற்;பவர்களும் உங்களை விட திறமைசாலிகளாகும் அத்தகைய முயற்சியைச் செய்கிறார்கள். தங்கள் ஆசிரியர்களை விடவும் திறமைசாலிகள் ஆகுகின்ற மாணவர்கள் பலர் நிலையங்களில் உள்ளார்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அவதானிக்கப்படுகிறார்கள்;. ஒவ்வொருவருடைய நடத்தையிலிருந்தும் உங்களால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். மாயை சிலரை முழுமையாக விழுங்கிவிடும் வகையில், அவர்களின் மூக்கைப் பிடிக்கின்றாள்; அவர்கள் விகாரத்தில் வீழ்கிறார்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், பலரைப் பற்றிக் கேள்விப்படுவீர்கள். நீங்கள் வியப்படைவீர்கள். “இவர் எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தார், அவர் ஏன் சென்று விட்டார்? அவர் எங்களைத் தூய்மையாகுமாறு கூறுவது வழக்கம், இப்பொழுது அவரே அழுக்காகி விட்டார்”. உங்களால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள இயலும். பலர் அழுக்காகுகிறார்கள். பாபா கூறியுள்ளார்: மிகச் சிறந்த மகாராத்திகளையும் மாயை பெருமளவு தொல்லைப்படுத்துவாள். நீங்கள் மாயையைத் தொல்லைப்படுத்தி, அவளை வெற்றிகொள்வது போன்றே, மாயையும் செய்கிறாள். அத்தகைய முதற்தரமான களிப்பூட்டும் பெயர்களைத் தந்தை உங்களுக்குக் கொடுத்தார், ஆனால் ஓ மாயையே! அவர்கள் ஞானத்தால் வியப்படைந்து, அதை ஏனையோருக்குக் கூறிப் பின்னர் ஓடிவிடுகிறார்கள்! அவர்கள் வீழ்கின்றார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள்! இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது ஒரு யுத்தகளம். மாயையுடனான உங்கள் யுத்தம் மிகவும் மகத்தானது! அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் கர்மக் கணக்குகள் அனைத்தையும் இங்கேயே தீர்த்து, அரைக்கல்பத்திற்கான சந்தோஷத்தைச் சேகரியுங்கள். இப்பழைய உலகின் மீது உங்கள் இதயத்தை இணைக்காதீர்கள். உங்கள் பௌதீகக் கண்களால்; பார்க்கின்ற அனைத்தையும் மறந்து விடுங்கள்.2. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள்;. ஆகவே, அவளையிட்டு, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் கல்வியில் விரைவாகப் பாய்ந்து சென்று, முன்னேறுங்கள். ஒரு தந்தையை மாத்திரம் செவிமடுத்து, அவரிடமிருந்து செவிமடுத்துள்ளவற்றை மாத்திரமே ஏனையோருக்குக் கூறுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மகாதானியாகி, உங்கள் சதா ஸ்திரமான மனோநிலை மூலம் ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒரு துளிச் சந்தோஷத்தையும், அமைதியையும், அன்பையும் கொடுப்பீர்களாக.
குழந்தைகளாகிய உங்களின் மனோநிலை எப்பொழுதும் ஸ்திரமானதாகவும், சந்தோஷத்திற்குரியதாகவும் இருக்கட்டும். சிலசமயங்களில் உங்களுக்கு “மாறுகின்ற மனோநிலை” இருப்பதாகவும், சிலசமயங்களில் உங்கள் மனோநிலை மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் இல்லாதிருக்கட்டும். சதா மகாதானிகளாக இருப்பவர்களின் மனோநிலை ஒருபொழுதும் மாறுவதில்லை. ஒரு தேவர் ஆகுவதெனில் ஓர் அருள்பவர் ஆகுவது என்று அர்த்தமாகும். உங்களுக்கு எவர் எதனைக் கொடுத்தாலும் மகாதானிக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் ஒரு துளிச் சந்தோஷத்தையும், ஒரு துளி அமைதியையும், ஒரு துளி அன்பையும் கொடுக்க வேண்டும். உங்கள் சரீரங்கள் மூலம் சேவை செய்வதுடன், உங்கள் மனங்கள் மூலம் சேவை செய்வதிலும் மும்முரமாக இருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் இரட்டைப் புண்ணியத்தைச் சேகரித்துக் கொள்வீர்கள்.சுலோகம்:
உங்கள் சிறப்பியல்புகள் கடவுளிடமிருந்தான ஒரு பிரசாதம். அவற்றை உங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தாமல், அவற்றைப் பகிர்ந்துகொள்வதனால், அவற்றைப் பலமடங்குகள் ஆக்குங்கள் (பெருக்குங்கள்).