10.08.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சக்கரம் முழுவதிலும் நீங்கள் சகலதுறைப் பாகங்களையும் நடித்துள்ளீர்கள். இப்பொழுது உங்கள் பாகங்கள் முடிவடைந்துள்ளதால், நீங்கள் வீடு திரும்ப வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எவ் வார்த்தைகளால் உங்கள் பாக்கியத்தைப் புகழ்கிறீர்கள்?
பதில்:
நாங்கள் உச்சிக்குடுமிகளான, பிராமணர்கள். அசரீரியான கடவுள் இங்கமர்ந்திருந்து எங்களுக்குக் கற்பிக்கிறார். உலகில் மனிதர்களே மனிதர்களுக்குக் கற்பிக்கிறார்கள். ஆனால் இங்கே, கடவுளே எங்களுக்குக் கற்பிக்கிறார். ஆகவே நாங்கள் மிகவும் பாக்கியசாலிகள்.
கேள்வி:
இந்த நாடகத்தில் யாருக்கு அதியுயர்ந்த பதவி உள்ளது?
பதில்:
அசரீரியான தந்தைக்கு. அவரே ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் தந்தையாவார். ஆத்மாக்கள் அனைவரும் நாடகத்தின் இழையினால் கட்டப்பட்டுள்ளார்கள். தந்தையின் பதவியே அனைத்திலும் அதியுயர்ந்த பதவியாகும்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களை வினவுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் அமைதி தாமமான உங்கள் வீட்டை நினைவுசெய்கிறீர்களா? அதனை நீங்கள் மறக்கவில்லை, அல்லவா? 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவடைந்துள்ளது. அது எவ்வாறு முடிவடைந்தது என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். இதனைச் சத்திய யுகத்திலிருந்து, கலியுக இறுதிவரை வேறு எவராலும் வினவ முடியாது. இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய குழந்தைகளாகிய உங்களைத் தந்தை மாத்திரமே வினவுகிறார்: இப்பொழுது நீங்கள் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் வீட்டிற்குச் சென்று, பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் செல்ல வேண்டும். இது சந்தோஷ தாமம் அல்ல. இது, துன்ப பூமியான, பழைய உலகம். ஆனால் அதுவோ, அமைதி தாமமும், சந்தோஷ தாமமும் ஆகும். இப்பொழுது நீங்கள் இந்தத் துன்பத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, முக்தி தாமத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். முக்தி தாமம், அதாவது, அமைதி தாமம் உங்கள் முன்னால் இருப்பது போன்றுள்ளது. அது உங்கள் வீடாகும். பின்னர் நீங்கள் தூய்மை, அமைதி, சந்தோஷம் மாத்திரமே உள்ள புதிய உலகிற்குச் செல்வீர்கள். இதனை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இதனையே மக்கள் பாடுகிறார்கள். மக்கள் தந்தையைக் கூவி அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! இந்தத் தூய்மையற்ற உலகிலிருந்து எங்களை அழைத்துச் செல்லுங்கள்! இங்கு அதிகளவு துன்பம் உள்ளது! எங்களைச் சந்தோஷத்திற்குள் அழைத்துச் செல்லுங்கள்! இது உங்களுக்கு நினைவு இருக்கிறதா? அனைவரும் சுவர்க்கத்தை நினைவுசெய்கிறார்கள். எவராவது தனது சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள்: “சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார்.” சென்றவர் யார்? ஆத்மாவே ஆவார். சரீரம் எங்குமே செல்வதில்லை. ஆத்மாவே செல்கிறார். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் தெரியும். வேறு எவருக்கும் அவற்றைத் தெரியாது. அமைதி தாமம் என்றால் என்ன என்பதும், சந்தோஷ தாமம் என்றால் என்ன என்பதும் பற்றிய ஞானம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் சந்தோஷ தாமத்தில் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் துன்ப பூமியில் இருக்கிறீர்கள். விநாடிகள், நிமிடங்கள், மணித்தியாலங்கள், நாட்கள், வருடங்கள் கடந்து சென்று விட்டன. இப்பொழுது 5000 வருடங்களில் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன. தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டுகிறார். இது மிகவும் இலகுவானது. இதனையிட்டுக் குழப்பமடைய வேண்டியதில்லை. ஓர் ஆத்மா எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கிறார் என்பதும் எவருக்கும் தெரியாது. எவருக்கும் நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான எதனையும் நினைவில் வைத்திருப்பது சிரமமாகும். இது 5000 வருடங்களுக்கான விடயம். வியாபாரிகள் தங்கள் கணக்குப் புத்தகங்களில் ஒரு சுவாஸ்திகாவை வரைந்து, அதனை கணேஷ் என்று அழைக்கின்றார்கள். கணேஷையும் ஒரு யானையின் தும்பிக்கையுடன் காட்டியுள்ளார்கள். மக்கள் பணத்தைச் செலவழித்து, படங்கள் போன்றவற்றை வரைகின்றனர். ஆனால் அது நேரத்தை வீணாக்குவதென அழைக்கப்படுகின்றது. உங்களிடம் அதிகளவு பலம் இருந்தது. ஒரு மோட்டார் வண்டியில் உள்ள எரிபொருள் தொடர்ந்தும் குறைவடைவதைப் போல் அதுவும் நாளுக்கு நாள் தொடர்ந்தும் குறைவடைகின்றது. இப்பொழுது நீங்கள் மிகவும் பலவீனமானவர்கள் ஆகிவிட்டீர்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் எவ்வாறு இருந்தது? அங்கே எல்லையற்ற சந்தோஷம் நிலவியது. அளவற்ற செல்வம் நிறைந்திருந்தது. அவர்கள் எவ்வாறு அந்த இராச்சியத்தைப் பெற்றார்கள்? அவர்கள் இராஜயோகத்தைக் கற்றிருந்தனர். இதில் யுத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. இவை ஞான ஆயுதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கே பௌதீகமாக எதுவுமில்லை. ஞான ஆயுதங்களே உள்ளன. கியானும், விக்யானும் என்ற ஆயுதங்கள், அதாவது, ஞானமும் நினைவும் மிகவும் சக்தி வாய்ந்தவை. நீங்கள் முழு உலகையும் ஆட்சிசெய்கிறீர்கள். தேவர்கள் அகிம்சாவாதிகள் என அழைக்கப்படுகின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது, மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான கற்பித்தல்கள் கொடுக்கப்படுகின்றன. நாங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து இந்த எல்லையற்ற ஆஸ்தியை 5000 வருடங்களுக்கு ஒருமுறை பெறுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். இது ஆத்மாக்களையே குறிக்கின்றது. இதில் பௌதீகமான யுத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகியதால், அவர்கள் தூய்மையாகுவதற்குத் தந்தையைக் கூவியழைக்கின்றார்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். இது உயிருள்ள மனிதர்களின் உலகம். அது ஆத்மாக்களின் உலகமாகும். அதனை உயிருள்ள மனிதர்களின் உலகம் என்று அழைக்க முடியாது. நீங்கள் தொலைதூர வாசிகள் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு செய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய எங்களின் வீடு பிரம்மாண்ட் ஆகும். நீங்கள் அங்கு வசிப்பவர்கள் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். அது சூரியன், சந்திரன் போன்ற எதுவும் இல்லாத, இந்த ஆகாய தத்துவத்திற்கு அப்பாலுள்ளது. அவ்விடத்து வாசிகளான நாங்கள், எங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கு வந்துள்ளோம். 84 பிறவிகளுக்கு நாங்கள் எங்கள் பாகங்களை நடிக்கிறோம். அனைவரும் 84 பிறவிகள் எடுக்க முடியும் என்றில்லை. ஆத்மாக்கள் மெதுவாகத் தொடர்ந்தும் மேலிருந்து கீழிறங்குகிறார்கள். நாங்கள் சகல பாகங்களையும் நடித்தவர்கள். சகல வகையான வேலைகளையும் செய்பவர்கள் சகல துறை வல்லுனர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நீங்களும் சகலதுறை வல்லுனர்கள். உங்களுடைய பாகங்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை உள்ளன. இது இப்பொழுது இந்தச் சக்கரத்தின் முடிவாகும். எனினும், ஆத்மாக்கள் இன்னமும் தொடர்ந்தும் மேலே இருந்து கீழிறங்குகிறார்கள். பல குழந்தைகள் இன்னமும் மேலே இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் இறங்குகிறார்கள். வளர்ச்சி தொடர்ந்தும் இடம்பெறுகிறது. “ஹம்சோ” என்பதன் அர்த்தத்தைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அம்மக்கள் ஒவ்வோர் ஆத்மாவும், பரமாத்மாவே என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு நாடகத்தைப் பற்றியோ, அதன் கால எல்லை எவ்வளவு என்றோ அல்லது அதன் ஆரம்பம், மத்தி, இறுதியையோ தெரியாது. தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: தற்பொழுது, நீங்கள் அந்தச் சரீரங்களிலுள்ள பிராமணர்கள். சிவபாபா உங்களை பிரஜாபிதா பிரம்மா மூலம் தத்தெடுத்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் குறைந்தபட்சம் இந்தளவையேனும் நினைவுசெய்ய வேண்டும்: தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரே அதிமேலான கடவுள்;. ஆத்மாக்கள் அனைவரும் இந்த நாடகம் என்ற இழையினால் கட்டப்பட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்றும், பின்னர் நீங்கள் சத்திரிய தர்மத்திற்குள் சென்றீர்கள் என்றும், அதாவது, நீங்கள் சூரிய வம்சத்திலிருந்து சந்திர வம்சத்திற்குள் சென்று, இத்தனை பிறவிகளை எடுத்தீர்கள் என்பதும் நீங்கள்; அறிந்ததே. இவ்விடயங்கள் அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் நீங்கள் இந்த ஞானம் எதனையும் கொண்டிருக்கவில்லை. இது குலங்களின் குத்துக்கரணம் என்று தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் சூத்திரர்களிலிருந்து, இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். பின்னர், நீங்கள் பிராமணர்களிலிருந்து தேவர்கள் ஆகுவீர்கள். அவர்கள் பல்ரூப வடிவங்களைக் காட்டியுள்ளார்கள். எவ்வாறு நீங்கள் கீழிறங்கி வந்தீர்கள், பின்னர் எவ்வாறு பிராமண குலத்திற்குள் வந்து, தேவ வம்சத்திற்குள் சென்றீர்கள் என்ற அனைத்து ஞானத்தையும் உங்கள் புத்தியில் கொண்டிருக்கிறீர்கள். பிராமணர்களாகிய நீங்களே இப்பொழுது உச்சிக்குடுமிகள். உச்சிக்குடுமியே அனைத்திலும் அதியுயர்ந்தது. உங்கள் குலத்தைப் போன்று உயர்ந்த குலத்தவரென்று வேறு எவர் கருதப்படுவார்;? தந்தையான கடவுளே வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள். குறைந்தபட்சம் உங்கள் பாக்கியத்தையேனும் சற்றுப் புகழுங்கள்! வெளியே, மனிதர்கள் அனைவருக்கும் மனிதர்களே கற்பிக்கிறார்கள். இங்கு அசரீர்pயான தந்தை கற்பிக்கிறார். அந்தத் தந்தை சக்கரத்தில் ஒரு முறையே வந்து, உங்களுக்கு ஞானத்தை வழங்குகிறார். அனைவரும் கற்கிறார்கள். சிலர் சட்டநிபுணர் ஆகுவதற்கான கல்வியைக் கற்று, சட்டநிபுணர் ஆகுகிறார்கள். அங்கு, தொடர்ந்தும் மனிதர்களுக்கு மனிதர்களே கற்பிக்கிறார்கள். இவை கடவுளின் வாசகங்கள். மனிதர்களை ஒருபொழுதுமே கடவுள் என்று அழைக்க முடியாது. அந்த ஒரேயொருவரே அசரீரியானவர். அவர் இங்கு வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். ஒரு கல்வியைச் சூட்சும வதனத்திலோ அல்லது அசரீரி உலகிலோ கற்க முடியாது. இங்கேயே கல்வி இடம்பெறுகிறது. இதனையிட்டுக் குழப்பமடைய வேண்டியதில்லை. ஒரு பாடசாலையிலுள்ள மாணவர்கள், தாங்கள் குழப்பமடைந்திருப்பதாகவோ அல்லது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றோ எப்பொழுதாவது கூறுவார்களா? அவர்கள் கற்று, தங்கள் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வாறு சத்தியயுக ஆரம்பத்தில் உலக அதிபதிகள் ஆகினார்கள்? தந்தை மூலமாகவே அவர்கள் நிச்சயமாக அவ்வாறு ஆகினார்கள். தந்தை சத்தியத்தையே கூறுவார். கடவுள் தவறான எதனையும் உங்களுக்குக் கூறமாட்டார். இது மிகவும் முக்கியமானதொரு பரீட்சை. இது இந் நேரத்தில் மக்கள் மக்களை ஆட்சிசெய்யும் காலம். அரசர்களோ அல்லது அரசிகளோ இல்லை. அவர்கள் சத்திய யுகத்தில் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது கலியுகத்தின் இறுதியில் அவர்கள் இல்லை. இது மக்களாட்சி என அழைக்கப்படுகின்றது. அவர்கள் கௌரவர்களையும், பாண்டவர்களையும் பற்றிக் கீதையில் எழுதியிருக்கிறார்கள். எவ்வாறாயினும் நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள். நீங்கள் அனைவருக்கும் ஆன்மீக வீட்டிற்கான பாதையைக் காட்டுகிறீர்கள். அதுவே ஆத்மாக்களாகிய உங்களின் ஆன்மீக வீடாகும். ஆத்மாக்கள் பிறவி எடுத்து, தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இந்த விடயங்கள் தெரியாது. சாதுக்கள் அல்லது புனிதர்கள் போன்ற எவருக்கும் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ தெரியாது. அவர்கள் நூறாயிரக் கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். எவ்வாறாயினும் அதனைக் கணக்கிட முடியவில்லை: அதனை அரைக்கு அரைவாசியாகப் பிரிக்க முடியாது. அரைவாசிக் காலம் முழுவதும் சந்தோஷ உலகமும், அரைவாசிக் காலம் முழுவதும் துன்ப பூமியும் ஆகும். இது தூய்மையற்ற, விகாரம் நிறைந்த உலகம். ஆனால் அதுவோ விகாரமற்றது. தந்தை அதிமேலானவராயினும், அவர் மிகவும் சாதாரணமானவர்! மக்கள் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் போன்றவர்களைச் சந்திக்கும்பொழுது, அவர்களுக்கு அதிகளவு மரியாதை செலுத்துகிறார்கள். தூய்மையற்ற உலகில், தூய்மையற்ற மனிதர்கள், தூய்மையற்ற மனிதர்களையே பார்க்கின்றனர். தூய்மையானவர்கள் மறைமுகமானவர்கள். புறத்தே எதுவும் புலப்படாது. தந்தை ஞானம் நிறைந்தவர் என்றும், பேரானந்தம் மிக்கவர் என்றும் அழைக்கப்படுகிறார். தந்தை அனைத்தும் நிறைந்தவர். இதனாலேயே அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு மனிதனினதும் பதவியின் புகழ் வேறானதாகும். ஓர் ஆலோசகர், ஆலோசகர் என்றே அழைக்கப்படுகிறார். ஒரு பிரதம மந்திரி, பிரதம மந்திரி என்றே அழைக்கப்படுகிறார். அந்த ஒரேயொருவரோ அதிமேலான கடவுள். அசரீரியான தந்தையினுடையதே அதியுயர் பதவியாகும். நாங்கள் அனைவரும் அவருடைய குழந்தைகள். நாங்கள் அனைவரும் தந்தையுடன் அங்கு பரந்தாமத்தில் வசிக்;கிறோம். அதுவே எங்கள் வீடாகும். இங்கு ஒவ்வொருவரும் அவரவருக்குரிய சொந்த, தனிப்பட்ட பாகத்தைப் பெற்றிருக்கிறார்கள். சிலர் ஒரு பிறவிக்குத் தங்கள் பாகத்தை நடித்து விட்டு வீட்டிற்குத் திரும்புகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இதுவே மனித உலகின் பல்வகை விருட்சம்;. இரண்டு ஒரேமாதிரியாக இருக்க முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் ஒரேமாதிரியாக இருந்தபொழுதிலும், இரண்டு சரீரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவர்கள் ஒரேமாதிரியான முகங்களைக் கொண்ட இருவரை நாடகங்களில் காட்டுகிறார்கள். தனது கணவன் யார் என்ற குழப்பம் அவளுக்குள்ளது. இது ஓர் எல்லையற்ற நாடகம். இங்கு இரண்டு பேர் ஒரேமாதிரி இருக்க முடியாது. ஒவ்வொருவருடைய முகச்சாயலும் வேறானது. அவர்களுடைய வயது ஒன்றாக இருந்தாலும், அவர்களின் முகச்சாயல்கள் ஒரேமாதிரியானவையாக இருக்க முடியாது. முகச்சாயல் தொடர்ந்து ஒவ்வொரு பிறவியிலும் மாற்றமடைகின்றது. இது அவ்வாறானதோர் எல்லையற்ற நாடகமாகும். ஆகவே நீங்கள் அதனை அறிந்;திருக்க வேண்டும். முழு உலகினதும் ஆரம்பம், மத்தி. இறுதியின் ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. நாடகத்தில் தங்கள் பாகம் எதுவோ, அதனையே ஒவ்வொருவரும் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் ஒருவருக்காக இன்னொருவர் நடிக்க முடியாது. இது ஓர் எல்லையற்ற நாடகமாகும். ஆத்மாக்கள் தொடர்ந்தும் பிறப்பு எடுக்கின்றார்கள். ஒவ்வொருவருடைய முகச் சாயலும் வேறானது. முகச்சாயல்கள் அந்தளவுக்குப் பல வகையானதாக உள்ளது. இந்த ஞானம் அனைத்தும் உங்கள் புத்தியினால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இங்கு நூல்கள் போன்ற எதுவுமில்லை. கீதையின் கடவுள் தனது கரங்களில் புத்தகம் ஒன்றைக் கொண்டு வருகிறாரா? அவர் ஞானக்கடலாவார். அவர் ஒரு புத்தகத்தைக் கொண்டுவரவில்லை. பக்தி மார்க்கத்திலேயே அவர்கள் சமயநூல்களை எழுதுகிறார்கள். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இரண்டு விநாடிகள் ஒரேமாதிரியாக இருக்க முடியாது. அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சக்கரம் முடிவடைந்ததும், அது பின்னர் மீண்டும் ஆரம்பிக்கும். நீங்கள் இப்பொழுது கற்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது தந்தையையும், படைப்பையும் தெரியும். நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக அசரீரி உலகிலிருந்து இங்கு வந்துள்ளீர்;கள். இந்த நாடக மேடை மிகவும் பெரியதாகும். எவராலும் அதனை அளவிட முடியாது. எவராலும் அதன் எல்லையை அடைய முடியாது. எவராலும் கடலின் அல்லது ஆகாயத்தின் எல்லையை அடைய முடியாது. அதனாலேயே அவை முடிவற்றவை என்று கூறப்படுகிறது. முன்னர் அவர்கள் இவ்விடயங்களைக் கண்டுபிடிப்பதற்கு அதிகளவு முயற்சிக்கவில்லை. ஆனால் இப்பொழுது அவர்கள் முயற்சிக்கிறார்கள். இப்பொழுது விஞ்ஞானமும் உள்ளது. அது எப்பொழுது மீண்டும் ஆரம்பிக்கும்? அவர்களது பாகங்களில் உள்ளபொழுதாகும். ஆகவே இவ் விடயங்கள் எதனைப் பற்றியும் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. ஞானத்தைக் கூறியவரின் பெயரை எழுதுவதற்குப் பதிலாக அவர்கள் ஞானத்தைச் செவிமடுத்தவரின் பெயரைப் புகுத்தியுள்ளார்கள். இவர் ஓர் அவலட்சணமான ஆத்மா. ஆனால் அந்த ஒரேயொருவரோ அழகான ஆத்மா ஆவார். அவலட்சணமான ஆத்மா அந்த ஒரேயொருவரைச் செவிமடுத்து அழகானவர் ஆகினார். ஞானத்தின் மூலம் நீங்கள் அத்தகையதொரு மேன்மையான அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். இது ஒரு கீதைப் பாடசாலை. யார் உங்களுக்குக் கற்பிக்கின்றார்? கடவுள் உங்களுக்கு அமரத்துவ உலகிற்கான இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். அதனாலேயே இது அமரத்துவக் கதை என்று அழைக்கப்படுகிறது. அவர் நிச்சயமாக இதனைச் சங்கம யுகத்தில் கூறியிருப்பார். முன்னைய கல்பத்தில் இதனைக் கற்றவர்கள் வந்து மீண்டும் இதனைக் கற்று, வரிசைக்கிரமமாகத் தங்கள் அந்தஸ்தைப் பெறுவார்கள். எத்தனை தடவைகள் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்? எண்ணற்ற தடவைகள். இந்த நாடகம் எப்பொழுது ஆரம்பமாகியது என்று எவராவது உங்களைக் கேட்டால், நீங்கள் கூறுகிறீர்கள்: அது அநாதியாகவே தொடர்ந்துள்ளது. கணக்கிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. வினவ வேண்டும் என்ற எண்ணமே இருக்க முடியாது. சமயநூல்களில் பக்தி மார்க்கத்திற்கான அனைத்துக் கதைகளும் உள்ளன. அவற்றை அவர்கள் தொடர்ந்தும் வாசிக்கிறார்கள். இங்கு பல மொழிகள் உள்ளன. ஆனால் சத்திய யுகத்தில் பல மொழிகள் இல்லை. இப்பொழுது நீங்கள் ஒரு தர்மத்தையும், ஒரு மொழியையும், ஓர் இராச்சியத்தையும் ஸ்தாபிக்கிறீர்கள் அந்த மக்கள், அமைதியை நிலைநாட்டுவதற்கான ஆலோசனை கூறுபவர்களுக்குத் தொடர்ந்தும் பரிசுகளை வழங்குகின்றார்கள். சிவபாபா, முழு உலகிலும் எவ்வாறு அமைதியை ஸ்தாபிப்பது என்ற ஆலோசனையை உங்களுக்கு வழங்குகின்றார். அவருக்கு நீங்கள் என்ன பரிசைக் கொடுப்பீர்கள்? உண்மையில் அந்த ஒரேயொருவரே உங்களுக்கு ஒரு பரிசை வழங்குகிறார். அவர் ஒன்றையும் எடுப்பதில்லை. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அது அவர்களுடைய இராச்சியமாக இருந்தமை நேற்றைய விடயமாகும். ஆனால் இப்பொழுது வசிப்பதற்குப் போதிய இடமேனும் இல்லை. அங்கு இரண்டு அல்லது மூன்று மாடிக் கட்டடங்கள் அமைக்க வேண்டிய தேவையில்லை. அங்கு மரக் கட்டடங்கள் போன்றவற்றிற்கான தேவையுமில்லை. அங்கு தங்கத்தினாலும், வெள்ளியினாலும் ஆக்கப்பட்ட கட்டடங்கள் இருக்கின்றன. அங்கு விஞ்ஞானத்தின் சக்தியினால் மிக விரைவாகக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இங்கு விஞ்ஞானம் மூலம் சந்தோஷமும், துக்கமும் உள்ளன. முழு உலகமும் அதன் மூலம் அழிக்கப்படவுள்ளது. இது ‘பொம்பீயின் (Pழஅpநi) வீழ்ச்சி’ என்று அழைக்கப்படுகின்றது. மாயையி;ன் பகட்டு அதிகம் உள்ளது. செல்வந்தர்களுக்கு இது சுவர்க்கம் போன்று இருக்கிறது. இதனாலேயே அவர்கள் நீங்கள் கூறுவனவற்றைச் செவிமடுப்பதில்லை. முன்னர் நீங்களும் எதனையும் அறிந்திருக்கவில்லை. தந்தை இங்கு வந்து உங்களுக்கு நேரடியாகக் கற்பிக்கிறார். வெளியே, குழந்தைகள் மற்றவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களை நினைவுசெய்கிறார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நாளுக்கு நாள் நீங்கள் தொடர்ந்தும் நினைவு யாத்திரையில் உறுதியானவர்கள் ஆகுவீர்கள். பின்னர் நீங்கள் வேறெதனையும் நினைவுசெய்ய மாட்டீர்கள். நீங்கள் உங்கள் வீட்டையும், இராச்சியத்தையுமே நினைவுசெய்வீர்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் தொழில் போன்றவற்றை நினைவு செய்ய மாட்டீர்கள். மக்கள் அமர்ந்திருந்தவாறு, இதய வழுவலால் மரணிப்பது போன்று நீங்கள் சடுதியாக மரணிப்பீர்கள். அப்பொழுது துக்கம் என்ற கேள்விக்கே இடமிருக்காது. அங்கு வைத்தியசாலைகள் போன்ற எதுவும் இருக்க மாட்டாது. தந்தையை நீங்கள் அறிந்தவுடன், நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் உங்களுக்கு இந்த உரிமை உள்ளது. அனைவருக்கும் இந்த உரிமை இல்லை. ஏனெனில் அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் ஆன்மீக வழிகாட்டியாகி, அனைவருக்கும் ஆன்மீக வீட்டிற்கான பாதையைக் காட்டுங்கள். ஞானம், யோகம் என்ற ஆயுதங்களுடன் நீங்கள் முழு உலகையும் ஆட்சிசெய்ய வேண்டும். இரட்டை அகிம்சாவாதி ஆகுங்கள்.2. 84 பிறவிகளிலும் சகலதுறைப் பாகங்களையும் நடித்தவர்கள் இந்நேரத்தில் சகலதுறை வல்லுனர்களாகவும் ஆகவேண்டும். நீங்கள் அனைத்து வகையான வேலைகளையும் செய்ய வேண்டும். எல்லையற்ற, பல்வகை நாடகத்தில், ஒவ்வொரு நடிகரினதும் பாகத்தையும் அவதானிக்கும்பொழுதும், நீங்கள் முகமலர்ச்சியுடன் இருக்கவேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பகுத்தறியும் சக்தி மூலம் தந்தையை இனங்காண்பதால், சகல உரிமைகளையும் கோருகின்ற, ஒரு விசேட ஆத்மா ஆவீர்களாக.பாப்தாதா ஒவ்வொரு குழந்தையினதும் சிறப்பியல்புகளையும் பார்க்கின்றார். அவர்கள் சம்பூரணமானவர்களாக ஆகாது விட்டாலும் இன்னமும் முயற்சியாளர்களாக இருந்தாலும், ஒரு சிறப்பியல்பையேனும் கொண்டிராத ஒரு குழந்தை கூட இல்லை. உங்கள் ஒவ்வொருவரினதும் முதன்மையான சிறப்பியல்பு என்னவெனில் நீங்கள் பல மில்லியன்களில் ஒரு கைப்பிடியினர் எனும் பட்டியலில் இருக்கின்றீர்கள். தந்தையை இனங்கண்டு, “எனது பாபா” என்று கூறி, அனைத்து உரிமைகளையும் கோருவது பகுத்தறியும் சக்தியுடைய ஒரு புத்தியின் சிறப்பியல்பு ஆகும். இம் மேன்மையான சக்தியே உங்களை ஒரு விசேடமான ஆத்மா ஆக்கியுள்ளது.
சுலோகம்:
உங்கள் மேன்மையான செயல்களே உங்கள் மேன்மையான பாக்கியம் எனும் இரேகையை வரைவதற்கான எழுதுகோல் ஆகும். ஆகவே, நீங்கள் விரும்பியளவிற்கு உங்கள் பாக்கியத்தை உருவாக்குங்கள்.