28.09.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையின் ஸ்ரீpமத்தைப் பின்பற்றி உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். பிறரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதன் மூலம், உங்கள் அலங்காரத்தைக் பாழாக்கிக்(கலைத்து) கொள்ளாதீர்கள். உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு தந்தையைவிடத் திறமையான மந்திரவாதிகள் ஆவீர்கள்?

பதில்:
நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது இலக்ஷ்மி நாராயணன் போல் ஆகுவதற்காக உங்களை அலங்கரிக்கின்றீர்கள். இங்கு அமர்ந்திருக்கும் போது உங்களை நீங்கள் மாற்றிக் கொள்கின்றீர்கள்: இதுவும் மந்திரவித்தையாகும். அல்பாவை மாத்திரம் நினைவு செய்வதன் மூலமே நீங்கள் அலங்கரிக்கப்படுகின்றீர்கள். அதனைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே அல்லாது, அதற்கு உங்கள் கை, கால்களை நீங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. யோகத்தின் மூலம், நீங்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும், அழகானவர்களாகவும் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களான நீங்கள், உங்கள் சரீரம் இரண்டுமே தூய்மையாகுகின்றன. அதுவும் ஓர் அற்புதமே.

ஓம் சாந்தி.
தந்தையை விடத் திறமையான மந்திரவாதிகளான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இங்கு என்ன செய்கின்றீர்கள் என்பதை, ஆன்மீக மந்திரவாதி இங்குமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இங்கு நீங்கள் அமர்ந்திருக்கும்போது எவ்வித சப்தமும் அசைவும் இருப்பதில்லை. தந்தை, அதாவது, மணவாளன் மணவாட்டிகளுக்கு இந்த வழிமுறையை காட்டுகின்றார். இங்கு நீங்கள் அமர்ந்திருக்கும்போது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று அன்பிற்கினியவர் உங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆகுவதற்கு உங்களை அலங்கரிக்கின்றீர்கள். எவராவது இதனை நம்புவார்களா? நீங்கள் அனைவரும் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். ஆனால் உங்களுடைய முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: அவ்வாறாகவே நீங்கள் அலங்கரிக்கப்பட வேண்டும். அதுவே உங்களுடைய எதிர்கால அமரத்துவ உலகிற்கான இலக்கும் இலட்சியமும் ஆகும். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது என்ன செய்கின்றீர்கள்? வைகுந்த அலங்காரத்திற்கான முயற்சியை நீங்கள் செய்கின்றீர்கள். இதனை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்? நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது உங்களை மாற்றுகின்றீர்கள். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போதும், நடமாடித் திரியும் போதும் தந்தை உங்களுக்கு மன்மனாபவ என்ற ஒரு திறவுகோலைக் கொடுத்துள்ளார். அதைத் தவிர, வேறு பயனற்ற விடயங்களைப் பற்றிச் செவிமடுப்பதாலோ அல்லது பேசுவதாலோ உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களை அலங்காரம் செய்வதில் கவனம் செலுத்துங்கள். எவராவது எதையாவது செய்கின்றார்களா, இல்லையா என்பதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள்? உங்களுடைய முயற்சியில் ஈடுபட்டிருங்கள். இது புரிந்துணருகின்ற ஒரு விடயமாகும். ஒரு புதிய நபர் இதனைச் செவிமடுக்கும்போது அவர் நிச்சயமாக வியப்படைவார். உங்களில் சிலர் தங்களை அலங்கரிக்கின்றார்;கள், ஏனையோரோ தங்கள் அலங்காரத்தைக் கலைத்துக் கொள்கின்றார்கள்;. அவர்கள் பிறரைப் பற்றி சிந்திப்பதிலே, தொடர்ந்தும் தங்கள் நேரத்தை வீணாக்குகின்றார்கள். உங்களில் மாத்திரமே கவனம் செலுத்தி, நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை மாத்திரமே பாருங்கள் என்று குழந்தைகளாகிய உங்களிடம்; தந்தை கூறுகின்றார். அவர் உங்களுக்கு ஒரு சுருக்கமான வழியையே கொடுத்திருக்கின்றார். 'மன்மனாபவ!" என்ற ஒரேயொரு வார்த்தையே உள்ளது. நீங்கள் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள் ஆனால், உங்கள் புத்தி முழு உலகச்சக்கரமும் எவ்வாறு சுழல்கின்றது என்பதை புரிந்துள்ளது. இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒருமுறை உலகை அலங்கரிக்கின்றோம். நீங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது, பல பணிகளை மேற்கொள்கின்றீர்கள். இதில் உங்கள் கை, கால்கனை பயன்படுத்துதல் என்ற கேள்விக்கு இடமில்லை. இது உங்கள் எண்ணங்கள் சம்பந்தப்பட்ட விடயமாகும். நீங்கள் கூறுகின்றீர்கள்: இங்கு அமர்ந்திருக்கும்போது நாங்கள் அதிமேலான உலகிற்காக, எங்களை நாங்கள் அலங்கரித்துக் கொள்கின்றோம். மன்மனாபவ எனும் மந்திரம் மிகவும் மேன்மையானது. இந்த யோகத்தின் மூலமே உங்கள் பாவங்கள் தொடர்;ந்து அழிக்கப்படுகின்றன. நீங்கள் சுத்தமாகும் பொழுது, மிகவும் அழகானவர்களாக ஆகுகின்றீர்கள். ஆத்மா இப்பொழுது தூய்மையற்றவராக இருப்பதால், சரீரங்கள் அடைந்துள்ள நிலையை பாருங்கள். ஆத்மாவாகிய நீங்களும், உங்கள் சரீரமும் இப்பொழுது தூய்மையாகுகின்றன. இது ஓர் அற்புதமாகும்! எனவே, இவ்வாறாக உங்களை நீங்கள் அலங்கரிக்க வேண்டும். அத்துடன் தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். தந்தை உங்கள் அனைவருக்கும் ‘அல்பாவும் பீட்டாவும்’ என்ற ஒரே பாதையையே காட்டுகின்றார். அல்பா என்ற ஒரு விடயமே உள்ளது. தந்தையைத் தொடர்ந்து நினைவு செய்தால், உங்கள் அலங்காரம் முற்றிலும் மாற்றம் அடையும். நீங்கள் தந்தையை விடச் சிறந்த மந்திரவாதிகள். நீங்கள் அலங்கரிக்கப்படுவதற்கான வழிமுறைகள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் உங்களை அலங்கரித்துக்; கொள்ளாததால், நீங்கள் அநாவசியமாக உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள். பக்திமார்க்கத்தில் என்ன செய்தீர்கள் என்பதையாவது நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களுடைய அலங்காரத்தை நீங்கள் முற்றாகக் கலைத்துக் கொண்டதால், நீங்கள் என்னவாகியுள்ளீர்கள் என்று பாருங்கள்! தந்தையை நினைவு செய்வதுடன், நீங்கள் ஒரேயொரு வார்த்தையினால் அலங்கரிக்கப்படுகின்றீர்கள். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தி உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கின்றார். நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது என்ன செய்கின்றீர்கள்? நீங்கள் அமர்ந்திருக்கும் போது நினைவு யாத்திரையில் இருக்கின்றீர்கள். உங்கள் எண்ணங்கள் திசை திருப்பப்பட்டால், நீங்கள் அலங்கரிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் அலங்கரிக்கப்படுகின்றீர்கள். எனவே ஏனையோருக்கும் இப்பாதையைக் காட்ட வேண்டும். தந்தை இவ்வாறாக எங்களை அலங்கரிப்பதற்காக வந்துள்ளார். சிவபாபா, நீங்கள் எங்களை மிகவும் நன்றாக அலங்கரிப்பது உங்கள் அற்புதமே! நடக்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், உலாவித்திரியும் போதும் எங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். சிலர் தங்களை அலங்கரித்துப் பின் ஏனையோரையும் அலங்கரிக்கின்றார்கள். சிலர் தங்களையும் அலங்கரித்துக் கொள்வதில்லை, ஏனையோரது அலங்காரத்தையும் தொடர்ந்து கலைத்து விடுகின்றார்கள். அவர்கள் அநாவசியமான விடயங்களைப் பிறருக்குக் கூறி, அவர்களின் ஸ்திதியையும் குறைத்து விடுகின்றார்கள். பின்னர் அவர் தனது அலங்காரத்தை கலைத்துக் கொள்வதுடன் ஏனையோரது அலங்காரத்தையும் கலைக்கின்றார். எனவே தந்தை எங்களுக்குக் கொடுக்கின்ற வழிமுறைகள் பற்றிக் கவனமாகச் சிந்தியுங்கள். பக்திமார்க்க சமய நூல்களைக் கற்பதன் மூலம் இவ்வழிமுறைகளை நீங்கள் கற்பதில்லை. சமய நூல்கள் பக்திமார்க்கத்திற்குரியவை. ‘சமயநூல்களை நீங்கள் ஏன் நம்புவதில்லை?’ என உங்களிடம் கேட்கப்படும் போது, அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் அனைத்தையும் நம்புகின்றோம். நாங்கள் அரைக்கல்பத்திற்குப் பக்தி செய்தோம். நாங்கள் சமயநூல்களைப் படித்திருக்கின்றோம் என்பதால் நாங்கள் எவ்வாறு அவற்றை நம்பாமல் இருக்க முடியும்? இரவும், பகலும் உள்ளது. எனவே, நாங்கள் நிச்சயமாக இரண்டையும் ஏற்றுக் கொள்கின்றோம். இது எல்லையற்ற இரவும், பகலும் ஆகும். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். சிறிதளவு காலமே எஞ்சியுள்ளது. உங்களுடைய புத்தி பரந்ததாகவும் எல்லையற்றதாகவும் இருக்க வேண்டும். உங்களுக்குள் அதிகளவு அன்பு இருக்கட்டும். நேர்ம் மிகவும் பெறுமதியானது. ஆகையால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் சிப்பிகளில் இருந்து வைரங்களாக மாறுகின்றீர்கள். நீங்கள் இவை அனைத்தையும், அநாவசியமாகச் செவிமடுப்பதில்லை. இது ஒரு சமயக்கதையா? தந்தை உங்களுக்கு ஒரு வார்த்தை மாத்திரமே கூறுகின்றார். முக்கியஸ்தர்கள் அதிகம் பேசக் கூடாது. தந்தை உங்களுக்கு ஒரு விநாடியில் ஜீவன்முக்திக்கான பாதையைக் காட்டுகின்றார். அவர்கள் (இலக்ஷ்மி, நாராயணன்) அழகான அலங்காரத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அதனாலேயே பலர் தொடர்ந்தும் அவர்களுடைய விக்கிரகங்களை வழிபடுகின்றார்கள். ஒருவர் எவ்வளவு மகத்துவமானவராக இருக்கின்றாரோ, அந்தளவிற்கு அவர்களுக்கு ஆலயம் பெரியதாகக் கட்டப்படுவதுடன் அவர்கள் அதிகளவு அலங்கரிக்கப்படுகின்றார்கள். முன்னர், தேவர்களுடைய விக்கிரகங்களுக்கு வைர மாலை போடப்பட்டது. பாபா இதனை அனுபவம் செய்திருக்கின்றார். பாபாவே இலக்ஷ்மி நாராயணனுக்கு ஒரு வைர அட்டிகையைச் செய்திருக்கின்றார்;. உண்மையில் இங்குள்ள எவராலும் அவர்களுடைய ஆடை ஆபரணங்களைப் போன்று தயாரிக்க முடியாது. நீங்கள் இப்பொழுது உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக அவற்றைச் செய்கின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே நீங்கள் உங்கள் நேரத்தையோ அல்லது ஏனையோரது நேரத்தையோ வீணாக்காதீர்கள். தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவானதொரு வழிமுறையைக் காட்டுகின்றார். என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிந்துவிடும். நீங்கள் நினைவு செய்யாது விட்டால், உங்களை அதிகளவில் அலங்கரிக்க முடியாது. நீங்கள் அவ்வாறு ஆகப்போகின்றீர்கள். நீங்கள் தெய்வீக சுபாவம் உடையவராக ஆக வேண்டும். இதற்கு, நீங்கள் எதுவும் பேசவேண்டிய அவசியம் இல்லை. எவ்வாறாயினும், மக்கள் கல்லுப் புத்தியுடையவராக இருப்பதனால், அனைத்தையும் விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. இது ஒரு விநாடிக்குரிய விடயமாகும். தந்தை கூறகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்கள் தந்தையை மறந்ததால், உங்கள் அலங்காரத்தை நீங்கள் முற்றாகக் கலைத்துக் கொண்டீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் நடந்து உலாவித் திரியும்போதெல்லாம் தொடர்ந்தும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். எவ்வாறாயினும் மாயை கொஞ்சமும் குறைந்தவள் அல்ல. சில குழந்தைகள் எழுதுகின்றார்கள்: பாபா உங்களுடைய மாயை எங்களை பெருமளவு துன்பப்படுத்துகின்றாள். ஓ, ஆனால், மாயை என்னுடையவள் அல்ல. இது ஒரு நாடகமே. நான் மாயையிடமிருந்து உங்களை விடுதலை செய்வதற்காகவே வந்துள்ளேன். எனவே அவள் எவ்வாறு என்னுடைய மாயையாக இருக்க முடியும்? இந்த நேரத்தில் இது முழுமையாக அவளுடைய இராச்சியமாக இருக்கின்றது. இரவும் பகலும் எவ்வாறு மாற்றமடைவதில்லையோ அது போன்றே எல்லையற்ற இரவும் பகலும் ஒரு விநாடியினாலும் மாறுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இவ்வாறாக, உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக உங்களை அலங்கரித்துக் கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உலக ஆட்சியாளராக விரும்பினால் தொடர்ந்து சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுங்கள். நீங்கள் குடும்பத்துடன் உங்கள் வீட்டில் வசிக்கலாம். இங்கு நீங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியின் மூலமே செய்ய வேண்டும். மனமும், புத்தியும் ஆத்மாவில் உள்ளன. இங்கு நீங்கள் எவ்விதமான உலகியல் வியாபாரத்திலும் ஈடுபடுவதில்லை. இங்கு நீங்கள் புத்துணர்வு பெற்றுக்கொள்ளவும், உங்களை அலங்கரித்துக் கொள்ளவுமே வருகின்றீர்கள். தந்தை அனைவருக்கும் ஒரே விடயங்களையே கற்பிக்கின்றார். நீங்கள் இங்கு நேரடியாக பாபாவிடம் இருந்து புதிய கருத்துக்களைச் செவிமடுக்கவே வருகின்றீர்கள், ஆனால் வீட்டிற்குத் திரும்பிச் சென்ற பின்னர், இங்கு செவிமடுத்தவற்றை மறந்து விடுகின்றீர்கள. இவ்விடத்தை விட்டுச் சென்றதும், உங்களது புத்தியில் உள்ளவற்றை உதறிவிடுகின்றீர்கள். நீங்கள் செவிமடுத்தவற்றைக் கடைவதில்லை. இங்கு நீங்கள் ஏகாந்தமாக இருப்பதற்கு பல இடங்கள் உள்ளன. வெளியில், பல மூட்டைப் பூச்சிகள் அலைந்து திரிகின்றன. அவர்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்து, இரத்தத்தைக் குடிக்கின்றார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: உங்களுடைய இந்த நேரம் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அதை வீணாக்காதீர்கள். உங்களை அலங்கரித்துக் கொள்வதற்கான பல வழி முறைகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. நான் அனைவரையும் ஈடேற்றுவதற்காகவே வந்துள்ளேன். நான் உங்களுக்கு உலக இராச்சியத்தைத் தருவதற்காகவே வந்துள்ளேன். எனவே இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் வேலைகளைச் செய்யும்போதும் தொடர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். பல ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவருமே பரமாத்மாவான பரமதந்தையின் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலர்கள் ஆவீர்கள். நீங்கள் இந்த உலகத்தின் பல சமயக் கதைகளை செவிமடுத்துள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது அவை அனைத்தையும் மறந்து விடுங்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் என்னை நினைவு செய்ததுடன் ஒரு சத்தியமும் செய்துள்ளீர்கள்: நான் உங்களுக்கு மாத்தி;ரம் உரியவனாகுவேன். பல காதலர்களுக்கு ஒரே ஒரு அன்பிற்கினியவரே இருக்கின்றார். நான் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக்கலந்து விடுவேன் என பக்திமார்க்கத்தில் அவர்கள் கூறுகின்றார்கள். அவை அனைத்தும் அநாவசியமான விடயங்களாகும். ஒரு மனிதனாலேனும், அநாதியான முக்தியைப் பெற்றுக்கொள்ள முடியாது. இது அநாதியான ஒரு நாடகமாகும். அனைவரும் நடிகர்கள். அதில் சிறிதளவேனும் வித்தியாசம் இருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்;: ஒரு அல்பாவை மாத்திரம் நினைவு செய்தால், நீங்கள் அலங்கரிக்கப்படுவீர்கள். நீங்கள் இப்பொழுது அவ்வாறு ஆகுகின்றீர்கள். நீங்கள் பல தடவைகள் உங்களை அலங்கரித்திருக்கின்றீர்கள் என்பதை இப்பொழுது நினைவு செய்கின்றீர்கள். பாபா நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் வருவதால், நாங்களும் நீங்கள் கூறுவதை மாத்திரமே செவிமடுப்போம். இக் கருத்துக்கள் மிக ஆழமானவை. பாபா உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த வழிமுறையைக் காண்பித்துள்ளார். அப்படிப்பட்ட தந்தையிடம் நான் சரணடைய வேண்டும். அனைத்துக் காதலர்களும், அன்பிற்கினியவர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். இங்கு ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒரேயொரு அன்பிற்கினியவர் மாத்திரமே இருக்கின்றார். இங்கு பௌதீகமாக எதுவும் கிடையாது. எவ்வாறாயினும், சங்கமயுகத்தில் மாத்திரமே, தந்தையின் மூலம் இவ் வழிமுறைகள் உங்களுக்குக் காட்டப்படுகின்றது. நீங்கள் எங்கு சென்றாலும், என்ன உண்டாலும், எதை அருந்தினாலும், எங்கு பயணம் செய்தாலும் என்ன வேலையைச் செய்தாலும்;, தொடர்ந்தும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். ஆத்மாக்கள் அனைவரும் ஓர் அன்பிற்கினியவரது காதலர்கள் ஆவார்கள். அவ்வளவே! தொடர்ந்தும் அவரை நினைவு செய்யுங்கள். சில குழந்தைகள் கூறுகின்றார்கள்: நான் 24 மணி நேரமும் தொடர்ந்து பாபாவையே நினைவு செய்கின்றேன். எவ்வாறாயினும், முழு நேரமும் எவராலும் நினைவைக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் அதிகபட்சம் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரமே நினைவு செய்ய முடியும். அதைவிட அதிகளவு நினைவு செய்வதாக அவர்கள் எழுதும் போது, அதனை பாபா நம்புவதில்லை. நீங்கள் ஏனையோருக்கு நினைவூட்ட வில்லையெனில், நீங்கள் நினைவில் இருக்கின்றீர்கள் என்பதை பாபா எவ்வாறு புரிந்து கொள்வார்? இதில் ஏதாவது கஷ்டம் இருக்கின்றதா? இதில் ஏதாவது செலவு இருக்கின்றதா? ஒன்றுமே இல்லை! தொடர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களுடைய பாவங்கள் துண்டிக்கப்படும். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். தூய்மையற்றவர்களால் அமைதி தாமத்திற்கோ, சந்தோஷதாமத்திற்கோ செல்ல முடியாது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள், உங்களை சகோதரர்களாகக் கருதுங்கள். 84 பிறவிகளின் பாகங்கள் இப்பொழுது முடிவடைகின்றது. நீங்கள் இப்பொழுது உங்கள் பழைய ஆடைகளை நீக்க வேண்டும். நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது எனப் பாருங்கள். நீங்கள் செய்கின்ற முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக இதனை அறிவீர்கள். இவ்வுலகில் வேறு எவருமே எதனையும் புரிந்து கொள்ளமாட்டார்கள். நீங்கள் தந்தையின் வழிக்காட்டல்களைப் பின்பற்றுகின்றீர்களா என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் கேட்டுக்கொள்ள முடியும். நீங்கள் அவற்றைப் பின்பற்றுவீர்களாயின், நீங்கள் மிகவும் நன்றாக அலங்கரிக்கப்படுவீர்கள். ஒருவருக்கொருவர் பிழையான விடயங்களைப் பேசிக்கொள்வதாலும், அவற்றை செவிமடுப்பதாலும் சிலர் தங்கள் அலங்காரத்தைக் கலைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் ஏனையோரது அலங்காரத்தையும் கலைத்து விடுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு அழகானவர்கள் ஆகலாம் என்பது பற்றி சதா அக்கறை கொண்டிருத்தல் வேண்டும். வேறு எதுவாயிருப்பினும் அது நல்லது. எதுவித தொந்தரவும் இல்லாது உங்கள் வயிற்றுக்கு இரு சப்பாத்திகள் கிடைக்கக் கூடியதாக இருக்கும். உண்மையில் வயிற்றுக்கு அதிகளவு தேவைப்படாது. நீங்கள் சந்நியாசிகளாக இருப்பினும், நீங்கள் இராஜயோகிகள். நீங்கள் அதி உயர்ந்தவர்களோ, அல்லது அதிகளவு தாழ்ந்தவர்களோ அல்ல. நீங்கள் உணவு உண்ணலாம் ஆனால், அதிக பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்காதீர்கள். ஒருவருக்கொருவர் நினைவூட்டுங்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்கின்றீர்களா? நீங்கள் உங்கள் ஆஸ்தியை நினைவு செய்கின்றீர்களா? உலக இராச்சியத்தின் அலங்காரத்தை நினைவு செய்கின்றீர்களா? இங்கு அமர்ந்திருப்பதன் மூலம் உங்கள் வருமானம் எப்படி இருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த வருமானத்தின் மூலம் அதாவது நினைவுயாத்திரை செய்தாலே நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இதில் வேறு எவ்விதக் கஷ்டமும் கிடையாது. பக்திமார்க்கத்தில் மக்கள் தொடர்ந்து பெருமளவு தடுமாறி அலைகின்றனர். தந்தை இப்பொழுது உங்களை அலங்கரிப்பதற்காக வந்துள்ளார். எனவே உங்களை நீங்கள் நன்றாகப் பராமரித்துக் கொள்ளுங்கள். மறந்து விடாதீர்கள். மாயை உங்களை மறக்குமாறு செய்கின்றாள். பின் நீங்கள் அதிகளவு நேரத்தை வீணாக்குகின்றீர்கள். நேரம் உங்களுக்கு மிகவும் பெறுமதிமிக்கதாக இருக்கின்றது. கற்பதற்கு முயற்சி செய்வதன் மூலம், மக்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் ஆக முடியும். பாபா உங்களுக்கு வேறு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கவில்லை. அவர் மிகவும் எளிமையாகக் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். புத்தகங்கள் எதனையும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாபா ஏதாவது புத்தகங்களைப் பயன்படுத்தினாரா? தந்தை கூறுகின்றார்: நான் வந்து உங்களை பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் உங்களைத் தத்தெடுக்கின்றேன். அவர் மக்களின் தந்தை ஆவார். எனவே எவ்வாறு, அவ்வாறான பெரியதோர் பௌதீகப் படைப்பு உருவாக்கப்பட முடியும்? குழந்தைகள் தத்தெடுக்கப் படுகின்றனர். நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியை பெற உள்ளீர்கள். தந்தை பிரம்மாவின் மூலம் உங்களைத் தத்தெடுக்கின்றார். இதனாலேயே அவர் தாயும் தந்தையும் என்று அழைக்கப்படுகின்றார். தந்தை வருவது மிகச் சரியானது என்பதை நீங்களும் அறிவீர்கள். அவர் மிகச் சரியான நேரத்தில் வந்து மிகச் சரியான நேரத்தில் திரும்பிச் செல்வார். உலகம் நிச்சயமாக மாற வேண்டும். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு விவேகத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் எதையெல்லாம் கற்றுக் கொள்கின்றார்களோ, அவற்றைத் தங்கள் புத்தியில் கடைதல் வேண்டும். நீங்கள் இந்தச் சம்ஸ்காரங்களையும் உங்களுடன் எடுத்தே செல்கின்றீர்கள். தந்தை எவ்வாறு இச் சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கின்றாரோ, அவ்வாறே ஆத்மாக்களாகிய நீங்களும் இச்சம்ஸ்காரங்களினால் நிரப்பிக் கொள்கின்றீர்கள். பின் நீங்கள் இங்கு வரும்போது அதே பாகத்தை மீண்டும்(சநிநயவ) நடிப்பீர்கள். உங்கள் முயற்சிக்கேற்ப இங்கு நீங்கள் வரிசைக்கிரமமாக வருகின்றீர்கள். என்னை அலங்கரிப்பதற்காக எவ்வளவு முயற்சி நான் செய்தேன்? என உங்கள் இதயத்தைக் கேட்டுப்பாருங்கள். நான் எங்காவது எனது நேரத்தை வீணாக்கியிருக்கின்றேனா? தந்தை உங்களை எச்சரிக்கின்றார்: உங்கள் நேரத்தை பயனற்ற விடயங்களில் வீணாக்காதீர்கள். தந்தையின் ஸ்ரீமத்தை நினைவு செய்யுங்கள். மனித வழிக்காட்டல்களைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் பழைய உலகிலேயே இருக்கின்றீர்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் என்பதை தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். இந்தப் பழைய உலகில் அதிகளவு துன்பம் உள்ளது. இப்பாகமும் கூட நாடகத்திற்கேற்பவே பெறப்பட்டுள்ளது. நாடகத்தின்படி பல தடைகளும் ஏற்படுகின்றன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே இது ஞானத்தையும், பக்தியையும் பற்றிய ஒரு நாடகமாகும். இது ஓர் அற்புதமான நாடகமாகும். அழிவற்ற முழுப்பாகமும் சின்னஞ் சிறிய ஆத்மாவில் நிரப்பப்பட்டுள்ளது. அவர் அதைத் தொடர்ந்தும் நடிக்கின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அனைத்தையும் துறந்து, இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று எவ்வாறு அலங்கரிக்கபட முடியும் என்பதைப் பற்றி மாத்திரமே அக்கறைப்படுங்கள்.

2. உங்களிடமே கேளுங்கள்.

3. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலமும், மன்மனாபவ எனும் திறவுகோலைப் பயன்படுத்துவதன் மூலமும் நான் மிகவும் நன்றாக என்னை அலங்கரிக்கின்றேனா?

4. தவறான விடயங்களைப் பேசுவதாலும், செவிமடுப்பதாலும் நான் எனது அலங்காரத்தைப் கலைத்துக் கொள்கின்றேனா?

5.நான் அனைவருடனும் அன்போடு தொடர்பு கொள்கின்றேனா?

6. நான் எனது பெறுமதிமிக்க நேரத்தை எங்காவது வீணாக்குகின்றேனா?
நான் தெய்வீக சுபாவம் கொண்டுள்ளேனா?


ஆசீர்வாதம்:
சுய மாற்றத்தினூடாக உலக மாற்றத்துக்கான பணியில் உங்கள் இதயத்தின் தெரிவினால்; வெற்றிபெறுவதுடன் வெற்றி சொரூபமும் ஆகுவீர்களாக.

சுயமாற்றத்தினூடாக உலக மாற்றத்தை ஏற்படுத்தும் சேவையில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை ஈடுபடுத்தியுள்ளீர்கள். இந்த உலகம் மாற்றப்பட வேண்டும் என்று உங்கள் ஒவ்வொருவருடைய மனதிலும் ஆர்வமும் உற்சாகமும் உள்ளதுடன் மாற்றம் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கையும் உள்ளது. தைரியம் உள்ளபோது ஆர்வமும் உற்சாகமும் இருக்கும். சுயமாற்றத்தினால் மட்டுமே உலக மாற்றத்திற்கான பணியில் உங்கள் இதயத்தின் தெரிவினால்; வெற்றியடைய முடியும். எவ்வாறாயினும் மனோபாவம், அதிர்வலைகள், வார்த்தைகள் ஆகிய மூன்றும் ஒரே சமயத்தில் சக்திமிக்கதாக உள்ளபோதே இந்த வெற்றியை அடைய முடியும்.

சுலோகம்:
உங்கள் வார்த்தைகளில் அன்பும் ஒழுக்கமும் உள்ளபோது பேச்சின் சக்தி அதிகரிக்கும்.