27.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் சகல ஆத்மாக்களையும் அவர்களது கர்ம பந்தனங்களிலிருந்து மீட்கும் மீட்புப் படையினர். நீங்கள் கர்ம பந்தனங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
கேள்வி:
ஆத்மா மிகவும் சக்தி வாய்ந்ததாகும் வகையில் தொடர்ந்தும் நீங்கள் எதைப் பயிற்சி செய்ய வேண்டும்?
பதில்:
நேரம் கிடைக்கும்போதெல்லாம் சரீரத்திலிருந்து பற்றற்று விலகியிருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். பற்றற்று விலகுவதன் மூலம் ஆத்மா மீண்டும் சக்தியைப் பெற்று பலம் நிறைந்ததாகின்றார். நீங்களே பாதாள உலக இராணுவத்தினர். உங்களுக்குத் “தயவு செய்து கவனிக்கவும்”, அதாவது “தந்தையொருவரது நினைவில் நிலைத்திருந்து சரீரமற்றவர் ஆகுங்கள்’ என்ற வழிகாட்டல் கொடுக்கப்படுகிறது.ஓம் சாந்தி.
‘ஓம் சாந்தி’ என்பதன் அர்த்தத்தைத் தந்தை உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கிறார். இராணுவம் நிற்கும் இடங்களில் எல்லாம் அவர்களுக்கு ‘கவனிக்கவும்!’ என்று கூறப்படுகிறது. அவர்களது ‘கவனிக்கவும்’ என்பது மௌனத்தைக் குறிக்கிறது. இங்கேயும் தந்தை உங்களுக்குக் கூறுகிறார்: கவனிக்கவும்! அதன் அர்த்தம் தந்தை ஒருவரது நினைவிலேயே நிலைத்திருங்கள். நீங்கள் வாயால் பேசுகிறீர்கள். இல்லாவிட்டால், உண்மையில் நீங்கள் பேசுவதற்கு அப்பாற்பட்டவர்களாகவே இருக்க வேண்டும். கவனிக்கவும்! நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்களா? உங்களுக்குத் தந்தையின் வழிகாட்டல்கள் அல்லது ஸ்ரீமத் கிடைக்கிறது. நீங்கள் ஆத்மாக்களையும், தந்தையையும் அடையாளம் கண்டு விட்டீர்கள். தந்தையை நினைவுசெய்யாமல் நீங்கள் பாவத்தை வென்றவராக, அதாவது தூய்மையாகவும் சதோபிரதானமாகவும் ஆக முடியாது. இதுவே பிரதானமான விடயமாகும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். இவையெல்லாம் இந்த நேரத்தையே குறிக்கின்றனவாயினும், மக்கள் அவற்றை இன்னொரு காலப் பகுதிக்குக் கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் இராணுவத்தினர், நீங்களும் இராணுவத்தினரே. பாதாள உலக இராணுவத்தினரும் இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தே வாழ்கின்றார்கள். நீங்களும் பாதாள உலகத்தினரே. நீங்களும் மறைமுகமாகவே இருக்கின்றீர்கள். அதாவது, நீங்கள் தந்தையின் நினைவில் அமிழ்ந்திருக்கின்றீர்கள். இதுவே பாதாள உலகம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் மறைமுகமானவர்களாகையால் எவருமே உங்களை அடையாளம் காண முடியாது. உங்கள் நினைவு யாத்திரை மறைமுகமானது. தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், ஏனெனில், தந்தையின் நினைவால் மட்டுமே உதவியற்ற பரிதாபகரமான குழந்தைகளாகிய நீங்கள் நன்மையடைவீர்கள் என அவருக்குத் தெரியும். நீங்கள் உதவியற்ற பரிதாபகரமானவர்கள் என்றே அழைக்கப்படுவீர்கள். சுவர்க்கத்தில் உதவியற்ற பரிதாபகரமானவர்கள் எவரும் இல்லை. பந்தனத்தில் அகப்பட்டு இருப்பவர்களே உதவியற்ற பரிதாபகரமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். உங்களுக்கு மட்டுமே இது விளங்குகின்றது. தந்தை விளங்கப்படுத்தியிருக்கிறார்: நீங்களும் கலங்கரை விளக்கங்கள் என்றே அழைக்கப்படுகிறீர்கள். தந்தையும் கலங்கரை விளக்கம் என்றே அழைக்கப்படுகிறார். தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: அமைதி தாமத்தை ஒரு கண்ணிலும், சந்தோஷ தாமத்தை மறு கண்ணிலும் வைத்திருங்கள். நீங்கள் கலங்கரை விளக்கங்கள் போன்றவர்கள். நடந்தும், அமர்ந்தும், உலாவியும் திரியும்போதெல்லாம் ஒளியாக இருங்கள். அனைவருக்கும் அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்குமான பாதையைத் தொடர்ந்தும் காட்டுங்கள். ஒவ்வொருவருடைய படகும் இந்தத் துன்ப உலகத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனாலேயே, அவர்கள் ‘ஓ படகோட்டியே, என் படகைக் கரைசேருங்கள்!’ என்று கூறுகிறார்கள். அனைவருடைய படகுகளும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறாயின், அவர்களை மீட்பது யார்? அது மீட்புப் படை அல்ல. அவர்களுக்கு அப்பெயரே கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் நீங்களே மீட்புப்படையினர், நீங்களே அனைவரையும் மீட்கின்றீர்கள். அனைவரும் ஐந்து விகாரங்களின் சங்கிலியில் சிக்கியுள்ளனர். ஆகையாலேயே அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களை விடுவியுங்கள்! எங்களை மீட்டிடுங்கள்! தந்தை கூறுகின்றார்: இந்த நினைவு யாத்திரையினூடாக உங்களால் கரைசேர முடியும். இந்த நேரத்தில் அனைவரும் சிக்கியுள்ளார்கள். தந்தையும் பூந்தோட்டத்தின் அதிபதி என அழைக்கப்படுகின்றார். இவை யாவும் இந்நேரத்தையே குறிக்கின்றன. நீங்கள் மலர்கள் ஆக வேண்டும். இந்நேரத்தில் அனைவரும் வன்முறையை பிரயோகிப்பதால் முட்களாகவே உள்ளனர். நீங்கள் இப்பொழுது வன்முறை அற்றவர்களாக வேண்டும். நீங்கள் இப்பொழுது தூய்மையானவராக வேண்டும். தூய ஆத்மாக்கள் மாத்திரமே ஒரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்காக வருகின்றார்கள். அவர்கள் தூய்மையற்றவர்களாக இருக்க முடியாது. ஆத்மாக்கள் முதலில் வரும்போது, அவர்கள் தூய்மையாக இருப்பதால், அவர்களின் ஆத்மாவோ அல்லது அவர்களின் சரீரமோ துன்பத்தைப் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் எப்பாவத்தையும் சேர்;த்திருப்பதில்லை. நாங்கள் தூய்மையாக இருக்கும்போது, நாம் எப் பாவமும் செய்வதில்லை, பிறரும் எப்பாவமும் செய்வதில்லை. நீங்கள் அனைத்தையிட்டும் சிந்திக்க வேண்டும். ஆத்மாக்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிக்கவே மேலிருந்து கீழே வருகின்றார்கள். அதன் பின்னர் அந்த வம்சம் தொடர்கின்றது. சீக்கிய சமயத்தின் வம்சமும் உள்ளது. சந்நியாசிகளுக்கு ஒரு வம்சம் இருப்பதில்லை. அவர்கள் அரசர்கள் ஆகுவதில்லை. சீக்கிய சமயத்தில், மகாராஜாக்கள் போன்றோர் உள்ளனர். எனவே அவர்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிக்க வரும் போது, வருகின்ற ஆத்மா புதியவராவார். கிறிஸ்து வந்து கிறிஸ்தவ சமயத்தை ஸ்தாபித்தார். புத்தர் பௌத்த சமயத்தை ஸ்தாபித்தார். ஆபிரகாம் இஸ்லாம் சமயத்தை ஸ்தாபித்தார். அந்தச் சமயங்கள் அனைத்தும் அவர்களின் ஸ்தாபகர்களின் பெயரைக் கொண்டிருக்கின்றன (சமயத்தின் பெயரும், ஸ்தாபகரின் பெயரும் ஒத்த ஓசை உடையன). தேவ தர்மம் அவ்வாறானது அல்ல. அசரீரியான தந்தையே வந்து தேவ தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் ஒரு சரீரதாரி அல்ல. ஏனைய சமய ஸ்தாபகர் அனைவரது சரீரத்திற்கும் ஒரு பெயர் உள்ளது. ஆனால் அவர் ஒரு சரீரதாரி அல்ல. புதிய உலகிலேயே வம்சம் தொடர்கின்றது. எனவே, தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் நிச்சயமாக உங்களை ஆன்மீக இராணுவத்தினர் என்று கருத வேண்டும். அந்த இராணுவத் தளபதிகள் போன்றோர் ‘கவனிக்கவும்’ என்று கூறும்போது அனைவரும் உடனடியாக நிமிர்ந்து நிற்கின்றார்கள். அவர்கள் தத்தமது குருமார்களை நினைவுசெய்தோ அல்லது மௌனமாகவோ நிற்கின்றார்கள். எவ்வாறாயினும், அது பொய்யான மௌனமாகும். நாங்கள் ஆத்மாக்கள் என்பதும், எங்களது ஆதி தர்மம் அமைதி என்பதும் உங்களுக்குத் தெரியும். அவ்வாறாயின் நாங்கள் யாரை நினைவு செய்வது? நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் ஞானத்துடன் நினைவில் நிலைத்திருப்பதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. வேறு எவருக்கும் இந்த ஞானம் இல்லை. தாம் அமைதி சொரூபங்களாகிய ஆத்மாக்கள் என்பதையும், தமது சரீரத்தில் இருந்து விடுபட்ட நிலையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளாமல் உள்ளார்கள். இங்கே, நீங்கள் உங்களை ஆத்மாக்கள் என்று கருதித் தந்தையை நினைவு செய்வதற்கான சக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் எவ்வாறு உங்களை ஆத்மாக்கள் என்று கருதியவாறு சரீரத்திலிருந்து விடுபட்டு அமர்ந்திருப்பது என்பதை தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். நாங்கள் அவ்விடத்தின் வாசிகள் ஆவோம். நாங்கள் எங்கள் வீட்டை பல நாட்கள் மறந்திருந்தோம். தாம் வீடு திரும்ப வேண்டும் என்பதை வேறு எவரும் புரிந்து கொள்ளவில்லை. தூய்மையற்ற ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியாது. அவர்கள் யாரை நினைவு செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு அவர்களுக்கு எவரும் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஒரேயொருவரை மாத்திரமே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். வேறு எவரையும் நினைவுசெய்வதில் என்ன நன்மை உள்ளது? உதாரணமாக, பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் தொடர்ந்தும் ‘சிவ சிவா’ என்று கூறுகின்றார்கள். ஆனால் அவ்வாறு செய்வதனால், என்ன நடக்கும் என்பதை எவரும் அறியாதுள்ளார்கள். சிவனை நினைவுசெய்வதனால் தமது பாவங்கள் அழியும் என்பதை எவரும் அறியாதுள்ளார்கள். ஆம், நீங்கள் ஓசையைச் செவிமடுப்பீர்கள். ஓசை இருக்குமே அன்றி, அவற்றினால் எந்த நன்மையும் இருக்க மாட்டாது. அந்தக் குருமாருடன் பாபாவிற்கு அதிகளவு அனுபவம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: ஓ அர்ஜுனா, அவை அனைத்தையும் துறந்திடுங்கள். நீங்கள் சற்குருவை இனங்கண்டு விட்டீர்கள் என்பதால் அவற்றிற்கான அவசியம் ஏதுமில்லை. சற்குரு உங்களைக் கரையேற்றுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் அசுர உலகிற்கு அப்பால் உங்களை அழைத்துச் செல்கின்றேன். நீங்கள் நச்சுக்கடலைத் தாண்டிச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். படகோட்டி படகைச் செலுத்த வேண்டும். ஆனால் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக இப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பிராணேஸ்வர் பாபா என்று அழைக்கப்படுகின்றார். அதாவது, (உயிர் வாழ) மூச்சைத் தானமாக வழங்குகின்ற பாபா. அவர் உங்களை அமரத்துவமானவர் ஆக்குகின்றார். ஆத்மாவே உயிர் எனப்படுகின்றது. ஓர் ஆத்மா சரீரத்தை நீக்கும்போது, உயிர் போய்விட்டது என்று கூறுகின்றார்கள். அதன்பின்னர், அந்த உடலை அவர்கள் வைத்திருக்க அனுமதிப்பதில்லை. ஓர் ஆத்மா சரீரத்தில் இருக்கும்போதே, சரீரம் ஆரோக்கியமாக உள்ளது என்று கூறுகின்றார்கள். ஆத்மா இல்லாத சரீரம் துர்நாற்றம் வீசும். ஆகையால் அதனை வைத்திருந்து என்ன செய்வது? மிருகங்கள் அவ்வாறு செய்வதில்லை. குரங்குகள் மாத்திரமே அவ்வாறு செய்யும். குரங்குகள் மாத்திரமே தம் குட்டி மரணித்தால், அந்தச் சடலம் துர்நாற்றம் வீச ஆரம்பித்தாலும் அதனை எடுக்க விடுவதில்லை. அதனைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும். அவை மிருகங்கள். ஆனால் நீங்களோ மனிதர்கள். ஓர் ஆத்மா சரீரத்தை நீக்கி விட்டுச் சென்றால், அவர்கள் கூறுவார்கள்: அதனை விரைவில் எடுங்கள்! அந்த ஆத்மா சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்று மக்கள் கூறுவார்கள். ஒரு சடலத்தை எடுக்கும்போது, முதலில், கால்கள் மயானத்தை நோக்கி உள்ளன. பின்னர், மயானத்திற்குள்; செல்வதற்கு முன்னர், அவர்கள் சடங்குகளை முடித்த பின்னர், சடலத்தை மறுபுறம் திருப்பி, முகம் மயானத்தை நோக்கி இருக்குமாறு வைக்கின்றார்கள். அதன்பின்னர், அந்த ஆத்மா சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார், என்று அவர்கள் நம்புவதாலேயே அவ்வாறு செய்கின்றார்கள். நீங்கள் கிருஷ்ணரின் உருவத்தை மிகச்சரியாகக் காட்டியுள்ளீர்கள்: அவர் நரகத்தை உதைத்துத் தள்ளுகின்றார். இது கிருஷ்ணரின் சரீரம் அல்ல. அவரின் பெயர், வடிவம் அனைத்தும் மாறுகின்றன. தந்தை பல விடயங்களை விளங்கப்படுத்திய பின்னர் கூறுகின்றார்: மன்மனாபவ! நீங்கள் வந்து இங்கே அமரும்போது, கவனம் செலுத்துங்கள்! உங்கள் புத்தி தந்தையோடு இணைக்கப்பட்டிருக்கட்டும். நீங்கள் என்றென்றும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உயிர் வாழும் வரை, நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழியும். நீங்கள் நினைவு செய்யாதிருந்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் நினைவுசெய்ய அமரும்போது, என்றுமே கண்களை மூடாதீர்கள். சந்நியாசிகள் தங்கள் கண்களை மூடிக் கொண்டே அமருகின்றார்கள். சிலர் பெண்களின் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டார்கள். அவர்கள் தமது கண்களைத் துணியால் மூடிக் கட்டுகின்றார்கள். நீங்கள் இங்கே அமரும் போது, படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் சுயதரிசனச் சக்கரத்தை நீங்கள் சுழற்ற வேண்டும். நீங்கள் கலங்கரை விளக்கங்கள். இதுவே துன்ப உலகமாகும். ஒரு கண்ணில், துன்ப பூமியும், மற்றைய கண்ணில் சந்தோஷ பூமியும் உள்ளது. நீங்கள் உலாவித் திரியும் போதெல்லாம், உங்களை ஓர் கலங்கரை விளக்கமாகக் கருத வேண்டும். பாபா உங்களுக்கு வெவ்வேறு உதாரணங்களினால் விளங்கப்படுத்துகின்றார். உங்களையும் நீங்கள் பராமரித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கலங்கரை விளக்கம் ஆகுவதால் நீங்கள் உங்களுக்கு நன்மை செய்கின்றீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் தெருவில் மக்களைக் காணும்போது, அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். உங்களை அறிந்த பலரையும் நீங்கள் சந்திக்கின்றீர்கள். அவர்கள் ‘இராமா இராமா’ என்று ஒருவருக்கொருவர் கூறுகின்றார்கள். அவர்களிடம் கூறுங்கள்: இது துன்ப பூமி என்பதும், அது அமைதி தாமமும், சந்தோஷ உலகமும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அமைதி உலகிற்கும் சந்தோஷ உலகிற்கும் செல்ல விரும்புகின்றீர்களா? இம்மூன்று படங்களையும் எவருக்கும் மிகவும் இலகுவாக விளங்கப்படுத்தலாம். ‘நாங்கள் உங்களுக்கு இந்த சமிக்ஞையைக் கொடுக்கின்றோம்’. ஒரு கலங்கரை விளக்கமும் சமிக்ஞைகளைக் கொடுக்கின்றது. இராவணனின் சிறையில் சிக்கிக் கொண்டுள்ள படகு இதுவேயாகும். மனிதர்களால் மனிதர்களை மீட்க முடியாது. அவை யாவும் போலியான எல்லைக்குட்பட்ட விடயங்கள் ஆகும். ஆனால் இதுவோ எல்லையற்ற விடயமாகும். அவை சமூகத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் அல்ல. உண்மையில், இதுவே உண்மையான சேவையாகும். அனைவரது படகும் கரையேற்றப்பட வேண்டும். உங்கள் புத்தி வினவுகின்றது: நாங்கள் எவ்வாறு மனிதர்களுக்குச் சேவை செய்வது? முதன் முதலில் அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் முக்தி தாமத்திற்குச் செல்வதற்கும், தந்தையை அடைவதற்கும் குருமார்களை ஏற்றுக் கொள்கின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எவரையும் அடைய முடியாது. தந்தையை அடைவதற்கான வழியை அவரே காட்டுகின்றார். சமயநூல்கள் போன்றவற்றைக் கற்பதன் மூலம் கடவுளை அடைய முடியும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அந்த நம்பிக்கையுடன் வாழ்வதனால், அவர்கள் நாளடைவில் ஏதோ ஒரு வடிவில் கடவுளை அடைகின்றார்கள். நீங்கள் தந்தையை எப்பொழுது அடையலாம் என்பதைத் தந்தையே உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் இதைப் படங்களில் காட்டியுள்ளீர்கள்: நீங்கள் ஒரேயொருவரையே நினைவுசெய்ய வேண்டும். சமயநூல்களை ஸ்தாபிப்பவர்கள் அனைவரும் இவ்வாறான சமிக்சைகளைக் கொடுக்கின்றார்கள். நீங்கள் இக் கற்பித்தல்களைக் கொடுத்ததால், அவர்களும் இவ்வாறாகவே சமிக்ஞைகளைக் கொடுக்கின்றார்கள். – ‘பிரபுவின் பெயரை உச்சரியுங்கள்’. அந்தத் தந்தையே சற்குரு. இன்றேல் பல வகையான கற்பித்தல்களைக் கொடுக்கின்ற பலரும் உள்ளனர். அவர்கள் குருமார்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். சரீரமற்றவர்கள் ஆகுவதற்கான கற்பித்தல்கள் எவருக்குமே தெரியாது. நீங்கள் கூறுவீர்கள்: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். அம்மக்கள் சிவாலயத்திற்குச் செல்லும்போது, எப்பொழுதும் சிவனை நோக்கி ‘பாபா’ என்று கூறும் வழக்கம் அவர்களிடம் உள்ளது. அவர்கள் வேறு எவரையும் ‘பாபா!’ என்று கூறுவதில்லை. எவ்வாறாயினும், அவர்கள் அசரீரியானவர்கள் அல்ல. அவர்கள் சரீரதாரிகள். சிவன் அசரீரியானவர், அவரே உண்மையான பாபா. அவர் அனைவரதும் பாபா. ஆத்மாக்கள் அனைவரும் சரீரமற்றவர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்பொழுது, இந்த விழிப்புணர்வுடன் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் எவ்வாறு சிக்கிக் கொண்டீர்கள் என்பதை அறிவீர்கள். பாபா இப்போது வந்து பாதையை உங்களுக்குக் காட்டுகின்றார். ஏனைய அனைவரும் இன்னமும் சிக்கியுள்ளார்கள். அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அனைவரும் தண்டனையை அனுபவம் செய்த பின்னர் விடுதலை அடைவார்கள். பாபா சில குழந்தைகளுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துவது: நீங்கள் தண்டனையை அனுபவம் செய்த பின்னர் சிறிதளவு வெகுமதியைப் பெற வேண்டும். அதிகளவு தண்டனையைப் பெறுபவர்கள் தமது அந்தஸ்தை அழித்துக் கொண்டு சிறிதளவு வெகுமதியைப் பெறுகின்றார்கள். நீங்கள் சிறிதளவு தண்டனையைப் பெறுவீர்களாயின், நல்லதொரு வெகுமதியைப் பெறுவீர்கள். இது ஒரு முட்காடாகும். அனைவரும் முட்களைப் போன்று ஒருவரையொருவர் குத்துகின்றார்கள். சுவர்க்கம் அல்லாவின் தோட்டம் என அழைக்கப்படுகின்றது. ஒரு காலத்தில், வைகுந்தம் இருந்தது என கிறிஸ்தவர்களும் கூறுகின்றார்கள். அதனையிட்டுக் காட்சிகளும் பெறப்பட்டன. இந்தத் தர்மத்திற்குரியவர் மீண்டும் அவரது தர்மத்திற்கே வருகின்றார் என்பது சாத்தியமாகும். ஒருவர் எதனையாவது காண்பதால் என்ன நடக்கப் போகின்றது? தந்தையை இனங்காண்பதுடன் இந்த ஞானத்தை எடுக்கும் வரை அதைப் பார்ப்பதால் மாத்திரம் எவருமே அங்கு செல்ல முடியாது. எவராலும் அங்கு செல்ல முடியாது. அங்கே வெகுசில தேவர்கள் மாத்திரமே இருக்கின்றார்கள். இப்பொழுது பல இந்துக்கள் உள்ளனர். ஆனால் ஆதியில் அவர்கள் தேவர்களாக இருந்தார்கள். எவ்வாறாயினும் அவர்கள் தூய்மையானவர்களும், இவர்கள் தூய்மையற்றவர்களும் ஆவார்கள். தூய்மையற்றவர்களைத் தேவர்கள் என அழைப்பது சரியாக இருக்க மாட்டாது. இந்த ஓரு தர்மத்தையிட்டே கூற முடியும்: தர்மம் சீரழிந்ததால், அவர்களின் செயல்களும் சீரழிந்தன. அவர்கள் அதனை ஆதி சனாதன இந்து தர்மம் என்று கூறுகின்றார்கள். அவர்கள் தேவ தர்மத்திற்கென ஒரு பகுதியை ஒதுக்கவில்லை (சனத்தொகை கணக்கெடுப்பு படிவத்தில்) தந்தையே குழந்தைகளாகிய எமது அதி அன்பிற்கினியவராவார். அவர் எங்களை எதுவுமே இல்லாதிருந்தவர்களில் இருந்து சிறிதளவு உடையவர்கள் ஆக்கியுள்ளார்கள். தந்தை எவ்வாறு வருகின்றார் என்று நீங்கள் விளங்கப்படுத்தலாம். தேவர்களே தமோபிரதான் உலகில் கால் பதிக்காத போது, தந்தையால் எவ்வாறு வர முடியும்? தந்தை அசரீரியானவர். அவருக்கெனப் பாதம் இல்லை. ஆகையினாலேயே அவர் இவருக்குள் பிரவேசிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இறை உலகில் அமர்ந்துள்ளீர்கள். ஆனால் ஏனையோரோ அசுர உலகத்திலேயே உள்ளனர். இந்தச் சங்கமயுகம் மிகவும் குறுகியது. நீங்கள் தேவ உலகிலோ, அசுர உலகிலோ இல்லை என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். நாங்கள் இறைவனின் உலகில் இருக்கின்றோம். தந்தை எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: அது எனது வீடாகும். நான் எனது வீட்டை விட்டு உங்களுக்காக இங்கு வருகிறேன். பாரதம் சந்தோஷ தாமம் ஆகும்போது, நான் அங்கு செல்வதில்லை. நான் உலக அதிபதி ஆகுவதில்லை. நீங்களே அவ்வாறு ஆகுகின்றீர்கள். நான் பிரம்ம லோகத்திற்கே அதிபதி. அனைவரும் பிரம்ம லோகத்திற்கே திரும்பிச் செல்கின்றார்கள். இப்பொழுதும் அவர்கள் அங்கே அதிபதிகளாகவே அமர்ந்துள்ளார்கள். இன்னமும் கீழே வரவிருப்பவர்கள் கீழே வருவார்;கள். ஆனால், அவர்கள் உலக அதிபதிகளாக மாட்டார்கள். பாபா அதிகளவு விளங்கப்படுத்துகின்றார். சில மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள் என்பதால் அவர்களுக்குப் புலமைப்பரிசில் கிடைக்கின்றது. அவர்கள் இங்கு வரும்போது, தாம் தூய்மையாக வேண்டும் என்பார்கள், ஆனால் திரும்பிச் செல்லும்போது அவர்கள் தூய்மையற்றவர் ஆகுவது ஒரு அற்புதமேயாகும். அத்தகைய பலவீனமானவர்களை இங்கே அழைத்து வராதீர்கள்! அவர்களை இங்கே அழைத்து வரும் முன்னர், அவர்களைப் பற்றி அறிய வேண்டியது பிராமண ஆசிரியரின் கடமையாகும். ஆத்மாக்களே சரீரங்களை எடுத்து, தமது பாகங்களை நடிக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் அழியாத பாகங்களைப் பெற்றுள்ளார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கலங்கரை விளக்கமாகி, அனைவருக்கும் அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்குமான பாதையைக் காட்டுங்கள். துன்ப உலகிலிருந்து அனைவரது படகையும் அகற்றும் சேவையைச் செய்யுங்கள். உங்களுக்கும் நன்மை செய்யுங்கள்.
2. உங்களது அமைதி வடிவத்தில் உறுதியாக நிலைத்திருப்பதுடன், உங்கள் சரீரத்திலிருந்து விலகியிருக்கின்ற பயிற்சியையும்; செய்யுங்கள். உங்கள் கண்களைத் திறந்தவாறு நினைவுpல் நிலைத்திருங்கள். படைப்பவரையும், படைப்பையும் உங்கள் புத்தியினால் நினைவுசெய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த அலௌகீக வாழ்க்கையில் உறவுமுறைகளின் சக்தி மூலம் அழிவற்ற அன்பையும் ஒத்துழைப்பையும் பெறுகின்ற, ஒரு மேன்மையான ஆத்மா ஆகுவீராக.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த அலௌகீக வாழ்க்கையில் உறவுமுறைகளின் சக்தியின் பெறுபேற்றை இரு வழிகளில் பெற்றுள்ளீர்கள். ஒன்று, அனைத்து உறவுமுறைகளையும் தந்தையுடன் கொண்டிருப்பது, இரண்டாவதாக தெய்வீகக் குடும்பத்துடன் உறவுமுறைகளைக் கொண்டிருப்பதுவுமாகும். இவ் உறவுமுறைகளில் தன்னலமற்ற, அழிவற்ற அன்பையும் ஒத்துழைப்பையும் நீங்கள் சதா தொடர்ந்தும் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். எனவே நீங்கள் உறவுமுறைகளின் சக்தியைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் இந்த மேன்மையான அலௌகீக வாழ்க்கையில் சகல சக்திகளும் நிரம்பிய ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாக்கள் ஆவீர்கள். இதனாலேயே நீங்கள் வேண்டுகோள் விடுக்கும் ஆத்மாக்கள் அல்ல, ஆனால் சதா சந்தோஷத்தில் நிலைத்திருப்பவர்கள்.சுலோகம்:
சரீரமற்றவராகி, ஒரு பற்றற்ற பார்வையாளராகத் திட்டங்களைத் தீட்டுங்கள். நீங்கள் தொடர்ந்தும் உங்கள் ஸ்திதியை ஒரு விநாடியில் தெளிவாக்குவீர்கள்.