15.09.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 28.01.85 Om Shanti Madhuban
உலக சேவை செய்வதற்கான இலகுவான வழிமுறை, மனதினூடாக சேவை செய்வதாகும்.
இன்று, சர்வசக்திவான் தந்தை தனது சக்தி சேனையையும் பாண்டவ சேனையையும் ஆன்மீக சேனையையும் பார்க்கிறார். சேனையிலுள்ள மகாவீரர்கள் எந்தளவிற்குத் தமது ஆன்மீக சக்தியால் வெற்றியாளர்கள் ஆகியுள்ளார்கள் என்பதை அவர் பார்த்தார். பாபா குறிப்பாக மூன்று சக்திகளைப் பார்த்தார். எந்தளவிற்கு ஒவ்வொரு மகாவீரர் ஆத்மாவின் மனதின் சக்தி, சுய மாற்றத்தையும் சேவையையும் கிரகித்துள்ளது? அதேபோன்று, எந்தளவிற்கு வார்த்தைகளின் சக்தியும் செயல்களின் சக்தியும் - அதாவது, மேன்மையான செயல்களின் சக்தியும் - சேமிக்கப்பட்டுள்ளன? வெற்றி இரத்தினம் ஆகுவதற்கு, இந்த மூன்று சக்திகளும் அத்தியாவசியமானவை. மூன்று சக்திகளில் ஒன்று குறைவாக இருந்தாலும், தற்போதைய பேறும் வெகுமதியும் குறைந்துவிடும். வெற்றியாளர் ஆத்மா என்றால் மூன்று சக்திகளால் நிறைந்திருத்தல் என்று அர்த்தம். உலக சேவையாளர் ஆகி, அதனால் உலக இராச்சியத்திற்கான உரிமை உடையவர் அகுவதன் அடிப்படை, இந்த மூன்று சக்திகளாலும் நிறைந்திருத்தல் ஆகும். சேவையாளர் ஆகுவதற்கும் உலகச் சேவையாளர் ஆகுவதற்கும் இடையில், உலக அரசனுக்கும் சத்தியயுக அரசனுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. பல சேவையாளர்கள் உள்ளனர். ஆனால் வெகுசில உலகச் சேவையாளர்களே உள்ளனர். சேவையாளர் என்றால் மூன்று சக்திகளையும் தனது கொள்ளவிற்கேற்ப, வரிசைக்கிரமமாகக் கிரகித்திருப்பவர் என்று அர்த்தம். உலகச் சேவையாளர் என்றால் மூன்று சக்திகளாலும் நிறைந்திருப்பவர் என்று அர்த்தம். இன்று, பாபா ஒவ்வொருவரின் மூன்று சக்திகளினதும் சதவீதத்தைப் பார்த்தார்.
ஓர் ஆத்மா தனிப்பட்ட முறையில் உங்களின் முன்னால் இருந்தாலென்ன, உங்களுக்கு நெருக்கமாக இருந்தாலென்ன அல்லது தொலைவில் இருந்தாலென்ன, உங்களின் மனதின் அதிமேன்மையான சக்தியினூடாக, ஒரு விநாடியில் பேற்றினை வழங்கும் சக்தியை அந்த ஆத்மா அனுபவிக்கச் செய்ய முடியும். மனதின் சக்தியானது, குழப்பமான மனோநிலையுடன் இருக்கும் ஆத்மாவை, முற்றிலும் அசைக்க முடியாதவர் ஆகச் செய்கிறது. மனதின் சக்தி என்றால் நல்லாசிகளும் மேன்மையான உணர்வுகளும் என்று அர்த்தம். இந்த மேன்மையான உணர்வுகளால் உங்களால் சந்தேகப் புத்தியுடைய ஓர் ஆத்மாவை, அன்பும் பக்தியும் நிறைந்த புத்தியுடையவராக மாற்ற முடியும். இந்த மேன்மையான உணர்வுகளால் உங்களால் ஆத்மாவின் வீணான உணர்வுகளைச் சக்திவாய்ந்த உணர்வுகளாக மாற்ற முடியும். இந்த மேன்மையான உணர்வுகளால், உங்களால் ஆத்மாவின் சுபாவத்தையும் மாற்ற முடியும். மேன்மையான உணர்வுகளின் சக்தியால், உங்களால் ஆத்மா ஒருவர் அன்பினதும் பக்தியினதும் பலனை அனுபவம் பெறச் செய்ய முடியும். மேன்மையான உணர்வுகளால் உங்களால் ஆத்மாவைக் கடவுளுக்கு நெருக்கமாகக் கொண்டுவர முடியும். மேன்மையான உணர்வுகளால் உங்களால் ஆத்மாவின் பாக்கியரேகையை மாற்ற முடியும். தைரியமற்ற ஆத்மாவையும் மேன்மையான உணர்வுகளால் மிகவும் தைரியமுடையவராக மாற்ற முடியும். இந்த மேன்மையான உணர்வுகளின் வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களின் மனதால் உங்களால் எந்தவோர் ஆத்மாவிற்கும் சேவை செய்ய முடியும். தற்போதைய நேரத்திற்கேற்ப, மனதினூடான சேவை மிகவும் அத்தியாவசியமானது. எவ்வாறாயினும், மனதினூடான சேவையானது, மனதின் ஸ்திதியானது, அதாவது, எண்ணங்கள் சதா மேன்மையாகவும் அனைவருக்கும் சுயநலமற்றவதாகவும் இருப்பவர்களால் மட்டுமே செய்ய முடியும். மற்றவர்களை உயர்த்த வேண்டும் என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். உங்களை இகழ்பவர்களையும் உயர்த்தும் மேன்மையான உணர்வு உங்களுக்குள் இருக்க வேண்டும். எப்போதும் அருள்பவருக்கான உணர்வுகள் இருக்க வேண்டும். உங்களின் சுய மாற்றத்தினூடாகவும் மேன்மையான உணர்வுகளினூடாகவும் நீங்கள் சதா மற்றவர்களை மேன்மையான செயல்களைச் செய்யும்படி தூண்ட வேண்டும். ‘இவர் எதையாவது செய்ய வேண்டும், அப்போது நானும் அதைச் செய்வேன். இவர் எதையாவது செய்ய வேண்டும், அப்போது நானும் எதையாவது செய்வேன்’ அல்லது, ‘இவர் குறைந்தபட்சம் எதையாவது செய்ய வேண்டும்’ ‘வேறு எவரும் இதைச் செய்ய முடியாது’ என்ற உணர்வுகளுக்கு அப்பால் நீங்கள் செல்ல வேண்டும். எவ்வாறாயினும், கருணை உணர்வுகளையும் ஒத்துழைக்கும் உணர்வுகளையும் சக்தியூட்டும் உணர்வுகளையும் கொண்டிருத்தல் என்றால் மனதின் மூலம் சேவை செய்யும் சேவையாளர் எனப்படுவார். ஓரிடத்தில் இருந்தவண்ணம், உங்களால் உங்களின் மனதினூடாக எல்லா இடங்களுக்கும் சேவை செய்ய முடியும். வார்த்தைகளினூடாகவும் செயல்களினூடாகவும் சேவை செய்வதற்கு, நீங்கள் பௌதீகமாக அங்கு செல்ல வேண்டும். ஆனால், உங்களின் மனதினூடாக நீங்கள் எங்கிருந்தாலும் சேவை செய்ய முடியும்.
தொலைவில் உள்ள உறவுமுறையை நெருக்கமான உறவுமுறையாக மாற்றுவதற்கான வயரற்ற ஆன்மீகக் கருவி மனதின் மூலம் செய்யும் சேவையே. தொலைவில் இருந்தவண்ணம், உங்களால் ஓர் ஆத்மாவிற்கு செய்தியைக் கொடுத்து, தந்தைக்குச் சொந்தமாகுவதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அவருள் உருவாக்க முடியும். அதன் மூலம், மகா சக்தி ஒன்று தன்னை அழைப்பதாகவோ அல்லது விலைமதிப்பற்ற தூண்டுதல்களால் தூண்டப்பட்டதாகவோ அந்த ஆத்மா உணர்வார். சில ஆத்மாக்களுக்குத் தனிப்பட்ட முறையில் செய்தியைக் கொடுப்பதன் மூலம் நீங்கள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உருவாக்குவதைப் போன்று,உங்களின் மனதின் சக்தியால், அந்த ஆத்மாவும் தன்னுடன் தனிப்பட்ட முறையில் யாரோ பேசுவதாக உணருவார். நீங்கள் தொலைவில் இருந்தாலும், நீங்கள் அவருக்கு முன்னால் இருப்பதாகவே அந்த ஆத்மா உணருவார். உலகச் சேவையாளர் ஆகுவதற்கான இலகுவான வழிமுறை, மனதினால் சேவை செய்வதே ஆகும். இந்தப் பௌதீக உலகிற்கு அப்பால் செய்மதிக் கோள்களை அனுப்புவதன் மூலம் தமது பணிகளைச் சக்திவாய்ந்தது ஆக்குவதற்கு விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பௌதீகத்தில் இருந்து சூட்சுமத்திற்குச் செல்கிறார்கள். ஏன்? ஏனெனில் சூட்சுமம் மிகவும் சக்திவாய்ந்தது. மனதின் சக்தியும் அகநோக்கிலேயே தங்கியுள்ளது. இது, நீங்கள் விரும்பியவுடனேயே விரும்பிய இடத்திற்குச் செல்வதற்கு உதவுகிறது. விஞ்ஞானத்தினால் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் செல்பவர்கள் இலேசாகிறார்கள். அதேபோன்று, சக்திவாய்ந்த மனச்சக்தியைக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள் இயல்பாகவும் எப்போதும் இலேசான, ஒளியான ரூபத்தை அனுபவம் செய்கிறார்கள். விண்கலத்தில் இருப்பவர்கள், உயரே இருப்பதனால் பூமியின் எந்தப் பாகத்தையும் புகைப்படம் எடுக்கக்கூடியதாக இருப்பதைப் போன்று, மௌன சக்தியால், மனதின் சக்தியால் அகநோக்கு என்ற கலத்தில் இருந்தவாறு, உங்களால் ஓர் ஆத்மாவை மேன்மையான ஆத்மா ஆகுவதற்கும் நல்ல நடத்தையுடையவர் ஆகுவதற்கும் தூண்ட முடியும். விஞ்ஞானிகள் அனைத்திற்கும் அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள். ஆனால், உங்களால் எந்தவிதச் செலவும் இன்றிக் குறுகிய நேரத்தில் அதிகளவு சேவை செய்ய முடியும். தற்காலத்தில், வெவ்வேறு இடங்களில் பறக்கும் தட்டுக்களை மக்கள் காண்கிறார்கள். இதைப் பற்றிய செய்திகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஓர் ஒளியையே மக்கள் காண்கிறார்கள். அதேபோன்று, எதிர்காலத்திலும் உங்களின் மனதினால் சேவை செய்யும் ஆத்மாக்களான உங்களையும், ஒளிப்புள்ளிகள் வந்து, தனித்துவமான அனுபவத்தைக் கொடுத்த பின்னர் செல்வதாக ஆத்மாக்கள் அனுபவம் செய்வார்கள். அது என்ன? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் செல்வதற்கு முன்னர் எதைக் கொடுத்தார்கள்? இந்த வகையான கலந்துரையாடல்கள் அதிகரிக்கும். அனைவரின் பார்வையும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை நோக்கிச் செல்வதைப் போன்று, பூமியிலுள்ள நட்சத்திரங்களையும் அவர்கள் எங்கும் தெய்வீக ஒளிகளாக அனுபவம் செய்வார்கள். தமது மனங்களால் சேவை செய்பவர்களின் சக்தி அத்தகையதே. உங்களுக்குப் புரிகிறதா? இன்னமும் அதிகளவு மகத்துவம் உள்ளது. ஆனால் பாபா இன்று இந்தளவை மட்டுமே சொல்லப் போகிறார். இப்போது மனதினூடான சேவையின் வேகத்தை அதிகரியுங்கள். அப்போது மட்டுமே 900000 பேர் தயார் ஆகுவார்கள். பொன்விழா நடக்கும் இப்போது உள்ள எண்ணிக்கை என்ன? சத்தியயுகத்தின் வைர விழாவரை குறைந்தபட்சம் 900000 பேர் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் யாரை உலகச் சக்கரவர்த்திகள் ஆட்சி செய்வார்கள்? 900000 நட்சத்திரங்கள் நினைவுகூரப்படுகின்றன. ஆத்மாக்களை நட்சத்திரங்களின் ரூபத்தில் அவர்கள் அனுபவம் செய்தால் மட்டுமே, 900000 நட்சத்திரங்கள் நினைவுகூரப்படும். ஆகவே, இப்போது நட்சத்திரங்களின் அனுபவத்தைக் கொடுங்கள். அச்சா. எங்கும் இருந்து மதுவனவாசிகள் ஆகுவதற்காக வந்திருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். அத்துடன் சந்திப்பிற்கான கொண்டாட்டத்திற்கும் வாழ்த்துக்கள். இந்த அழியாத அனுபவத்தின் வாழ்த்துக்களை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். உங்களுக்குப் புரிகிறதா?
சதா மகாவீர்களாக இருப்பதுடன் தமது மனங்களின் சக்தியின் மகத்துவத்தால் மேன்மையான சேவை செய்பவர்களுக்கும், மேன்மையான உணர்வுகளும் மேன்மையான ஆசைகளும் என்ற வழிமுறையைப் பயன்படுத்தி எல்லையற்ற சேவையில் வெற்றி பெறுபவர்களுக்கும், தமது மேன்மையான ஸ்திதியால் எங்கும் உள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும் மேன்மையான தூண்டுதல்களைக் கொடுக்கும் உலகச் சேவையாளர்களுக்கும், தூய உணர்வகளால் ஆத்மாக்கள் அனைவருக்கும் சதா பக்தியின் பலனைக் கொடுப்பவர்களுக்கும், மற்றவர்களை உயர்த்தும் இத்தகைய உலக உபகாரிகளுக்கும், உலகிற்குச் சேவை செய்யும் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா குறிப்பாகக் குமார்களுடன் பேசுகிறார்.
குமார்களான நீங்கள் பிரம்மாகுமார்கள் ஆகியுள்ளீர்கள். ஆனால், பிரம்மாகுமர்கள் ஆகியபின்னர், நீங்கள் என்னவாக வேண்டும்? சக்திசாலி குமார்கள். நீங்கள் சக்திசாலி ஆகும்வரை, உங்களால் வெற்றியாளர் ஆகமுடியாது. சக்திசாலி குமார்கள் எப்போதும் ஞானம் நிறைந்தவர்களாகவும் சக்திசாலி ஆத்மாக்களாகவும் இருப்பார்கள். ஞானம் நிறைந்தவர் என்றால், படைப்பவரைப் பற்றி அறிதல், படைப்பைப் பற்றி அறிதல், அத்துடன் மாயையின் பல்வகை ரூபங்களையும் அறிதல் என்று அர்த்தம். இந்த முறையில் ஞானம் நிறைந்தவர்களாகவும் சக்திசாலிகளாகவும் உள்ளவர்கள் எப்போதும் வெற்றியாளர்களாகவே இருப்பார்கள். உங்களின் வாழ்க்கையில் ஞானத்தைக் கிரகித்தல் என்றால், ஞானத்தை உங்களின் ஆயுதம் ஆக்கிக் கொள்ளுதல் என்று அர்த்தம். தமது ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் சக்திசாலிகளாக இருப்பார்கள், அல்லவா? இன்று, இராவணுத்தினர் எதன் அடிப்படையில் சக்திசாலிகளாக இருக்கிறார்கள்? அவர்களிடம் ஆயுதங்களும் துவக்குகளும் இருப்பதனால், அவர்கள் பயமற்றவர்களாக இருக்கிறார்கள். ஞானம் நிறைந்தவர்கள் நிச்சயமாகச் சக்திசாலிகளாக இருப்பார்கள். அத்துடன் அவர்கள் மாயையைப் பற்றிய முழுமையான ஞானத்தையும் கொண்டிருப்பார்கள். ‘என்ன நிகழும்? எவ்வாறு அது நிகழும்? மாயை எப்படி வந்தது என எனக்குத் தெரியாது’. - என்றால் நீங்கள் ஞானம் நிறைந்தவர் இல்லை என்பதே இதன் அர்த்தம். ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள். விவேகிகள் தமது நோயை முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள். ஒருவருக்குக் காய்ச்சல் வரும்போது, அவர் முன்கூட்டியே தனக்குள் எதுவோ நிகழ்கிறது என்பதை அறிந்து கொண்டு, முன்கூட்டியே மருந்துகளை எடுத்து, தன்னைச் சரியாக்கி, நோயிலிருந்து விடுபடுவார். அந்தளவு விவேகம் இல்லாமல் இருப்பவருக்கு காய்ச்சலும் வரும். அவர் அதனுடன் அங்கும் இங்கும் செல்வதனால் காய்ச்சலும் அதிகரிக்கும். மாயை இந்த முறையிலும் வருவாள். ஆனால், அவள் வருவதற்கு முன்னர் நீங்கள் புரிந்துகொண்டு, தொலைவில் இருந்தே அவளைத் துரத்திவிட வேண்டும். எனவே, நீங்கள் இத்தகைய விவேகமான, சக்திவாய்ந்த குமார்கள், அல்லவா? நீங்கள் சதா வெற்றியாளர்கள், அல்லவா?அல்லது, மாயை வருகிறாள். அவளைத் துரத்துவதற்கு உங்களுக்கு நேரம் எடுக்கிறதா? தொலைவில் இருந்தே சக்தியைக் காணும்போது, எதிரி ஓடிவிடுவான். அவர்கள் வந்து, பின்னர் நீங்கள் அவர்களைத் துரத்த வேண்டியிருந்தால், உங்களின் நேரம் வீணாகிவிடும். பலவீனம் என்ற பழக்கமும் உருவாகும். ஒருவர் மீண்டும் மீண்டும் நோயுற்றால், அவர் பலவீனம் ஆகிவிடுவார், இல்லையா? அல்லது, ஒருவர் தனது படிப்பில் தோல்வி அடைந்தால், அவர் பலவீனமான மாணவன் என்று சொல்லப்படுகிறார். அதேபோன்று, மாயை மீண்டும் மீண்டும் வந்து உங்களைத் தொடர்ந்து தாக்கினால், தோல்வி அடையும் பழக்கத்தை நீங்கள் விருத்தி செய்து கொள்வீர்கள். மீண்டும் மீண்டும் தோல்வி அடைவதால், நீங்கள் பலவீனம் ஆகிவிடுவீர்கள். ஆகவே, பலசாலி ஆகுங்கள்! இத்தகைய பலசாலி ஆத்மாக்கள் எப்போதும் பேறுகளை அனுபவம் செய்வார்கள். அவர்கள் தமது நேரத்தைப் போராடுவதில் வீணாக்குவதில்லை. அவர்கள் சந்தோஷமாகத் தமது வெற்றியைக் கொண்டாடுவார்கள். எனவே, எந்தவிதமான பலவீனமும் இருக்கக்கூடாது. குமார் புத்தி என்றால் நல்லதும் ஆரோக்கியமானதும் ஆகும். அரைக்குமார் ஆகுவதன் மூலம், புத்தி பிரிக்கப்பட்டுவிடும். குமார்கள் ஒரு விடயத்தை மட்டுமே செய்ய வேண்டும். அவர்கள் தமது சொந்த வாழ்க்கையைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டியுள்ளது. ஆனால் மற்றவர்களுக்கோ பல பொறுப்புகள் உள்ளன. நீங்கள் பொறுப்புகளில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். இவ்வாறு சுதந்திரமாக இருப்பவர்கள் முன்னால் செல்வார்கள். சுமையுடன் இருப்பவர்கள் மெதுவாகவே செல்வார்கள். சுதந்திரமாக இருப்பவர்கள், இலேசாக இருப்பார்கள். அதனால் அவர்கள் விரைவாகச் செல்வார்கள். எனவே, நீங்கள் விரைவான வேகத்துடன் அசைவதுடன், நிலையாகவும் ஸ்திரமாகவும் இருப்பவர்களா? நிலையான வேகம் என்றால் நிலையாகவும் ஸ்திரமாகவும் இருத்தல் என்று அர்த்தம். ஆறு மாதங்களுக்குப் பின்னரும் நீங்கள் முன்னர் இருந்ததைப் போன்றே தொடர்ந்து செயற்படுவதாக இருக்கக்கூடாது. அதைத் துரிதகதி என்று அழைக்க முடியாது. துரிதகதியில் செல்பவர்கள், இன்று இருந்த நிலையில் இருந்து நாளை இன்னமும் முன்னேறி இருப்பார்கள். அதற்கு அடுத்தநாள், அவர்கள் மேலும் முன்னேறி இருப்பார்கள். இதுவே துரிதகதியைக் கொண்டவர் என்று அழைக்கப்படும். எனவே, எப்போதும் உங்களைப் பலம்வாய்ந்த குமார்களாகக் கருதிக் கொள்ளுங்கள். நீங்கள் பிரம்மாகுமார்கள் ஆகியுள்ளீர்கள் என்ற சந்தோஷத்துடன் மட்டும் இருந்து, பலசாலி ஆகாவிட்டால், உங்களால் வெற்றி பெற முடியாது. பிரம்மாகுமார் ஆகுவது மிகவும் நல்லதே. ஆயினும், பலம்வாய்ந்த பிரம்மாகுமார்கள் சதா நெருக்கமாக இருப்பார்கள். இப்போது நெருக்கமாக இருப்பவர்கள், இராச்சியத்திலும் நெருக்கமாக இருப்பார்கள். தற்சமயம், உங்களின் ஸ்திதி நெருக்கமாக இல்லாவிட்டால், இராச்சியத்திலும் நெருக்கம் இருக்கமாட்டாது. இந்த நேரத்தின் பேறு, எல்லா வேளைக்கும் வெகுமதியை உருவாக்குகிறது. ஆகவே, எப்போதும் பலசாலியாக இருங்கள். இந்த முறையில் சக்திசாலி ஆகுபவர்களால் உலக உபகாரிகள் ஆகமுடியும். பௌதீக சக்தியோ அல்லது ஆன்மீக சக்தியோ, குமார்களிடம் சக்தி உள்ளது. எவ்வாறாயினும், அது உலக நன்மைக்கான சக்தியா அல்லது, மேன்மையான உலகை அழிப்பதற்கான பணியில் பயன்படுத்தப்படும் சக்தியா? எனவே, நீங்கள் நன்மை செய்யும் குமார்கள், அல்லவா? நீங்கள் தீங்கு விளைவிப்பவர்கள் அல்ல. எப்போதும் உங்களின் எண்ணங்களில் அனைவருக்கும் நன்மை செய்யும் உணர்வுகள் இருக்க வேண்டும். உங்களின் கனவுகளில்கூட, நலம்விரும்பும் உணர்வுகள் இருக்க வேண்டும். இதுவே மேன்மையான முறையில் சக்திசாலியாக இருத்தல் எனப்படுகிறது. குமார்களால் தமது சக்தியால் தாம் விரும்பும் எதையும் செய்ய முடியும். ஆகவே, எண்ணங்களும் செயல்களும் ஒரே வேளையில் இடம்பெற வேண்டும். இன்று நீங்கள் நினைப்பதும், பின்னர் செயலைச் செய்வதுமாக இருக்கக்கூடாது. எண்ணமும் செயலும் ஒரே வேளையில் ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய சக்தி இருக்க வேண்டும். இத்தகைய சக்தியுடைய ஆத்மாக்களால் மட்டுமே ஆத்மாக்கள் பலருக்கு நன்மை செய்ய முடியும். எனவே, நீங்கள் சதா சேவையில் வெற்றியாளர்கள். அல்லது, நீங்கள் முரண்பாடுகளை உருவாக்குபவர்களா? உங்களின் எண்ணங்களிலும் உங்களின் செயல்களிலும் எப்போதும் அனைவருடனும் நன்றாக இருங்கள். எதையிட்டும் எந்தவிதமான முரண்பாடும் இருக்கக்கூடாது. எப்போதும் உங்களை உலக உபகாரிக் குமார்களாகக் கருதுங்கள். அப்போது நீங்கள் செய்யும் எத்தகைய செயல்களும் நலம்விரும்பும் உணர்வுகளால் நிரம்பியிருக்கும். அச்சா.
அமிர்தவேளையில் பிரியாவிடை கொடுக்கும்போது, பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் அன்பையும் நினைவுகளையும் வழங்கினார்.
ஒவ்வொரு பணியும் புண்ணியமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணியும் எப்போதும் வெற்றிநிறைந்ததாக இருக்க வேண்டும். அதற்காகக் குழந்தைகள் அனைவருக்கும் பாராட்டுகள். உண்மையில், சங்கமயுகத்தில் ஒவ்வொரு நாளும் புண்ணியமானது, மேன்மையானது. ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பது. இதனாலேயே, ஒவ்வொரு நாளுக்கும் அதற்குரிய முக்கியத்துவம் உள்ளது. இந்தத் தினத்தில், ஒவ்வோர் எண்ணமும் புண்ணியமானதாக இருக்க வேண்டும். அதாவது, அது தூய்மையாலும் சாதகத்தன்மையாலும் நிறைந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்காகப் புண்ணியமான எண்ணங்கள் இருக்க வேண்டும். அதாவது, உங்களின் எண்ணங்கள் நல்லாசிகளால் நிறைந்திருக்க வேண்டும். ஒவ்வோர் எண்ணமும் புண்ணியமானதாக இருக்க வேண்டும். அதாவது, அது சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே, ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் செயலிலும் குறிப்பாக இந்தத் தினத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் உணர்ந்தவராக இருங்கள். இந்த விழிப்புணர்வுடன் இருத்தல் என்றால், ஒவ்வொரு விநாடியும் பாப்தாதாவின் அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுதல் என்று அர்த்தம். எனவே, பாபா இந்த நேரத்தில் அன்பையும் நினைவுகளையும் கொடுக்கவில்லை. எதையாவது நடைமுறையில் செய்வதென்றால், அன்பையும் நினைவுகளையும் பெறுதல் என்று அர்த்தம். இன்று நாள் முழுவதும், தொடர்ந்து இந்த அன்பையும் நினைவுகளையும் பெற்றுக் கொண்டே இருங்கள். அதாவது, நினைவில் இருந்தவண்ணம், உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் அன்பு அலைகளில் தொடர்ந்து முன்னேறுங்கள். அச்சா. அனைவருக்கும் விசேடமான நினைவுகளும் காலை வணக்கங்களும்.
கருத்தரங்கிற்காக அவ்யக்த பாப்தாதாவின் விசேடமான செய்தி:
பாப்தாதா கூறினார்: குழந்தைகள் கருத்தரங்கு வைக்கிறார்கள். கருத்தரங்கு (சம்மேளன் - சாம் மிலன்) என்றால் அனைவருக்குமான சந்திப்பு என்று அர்த்தம். கருத்தரங்கிற்கு வருபவர்கள், தந்தைக்குச் சமமாக ஆகாவிட்டாலும், நிச்சயமாக உங்களை ஒத்தவர்கள் ஆக்கப்பட வேண்டும். வருபவர்கள் அனைவரும் எதையாவது கூறினார்கள் என்றில்லாமல், ஏதாவது ஒன்றாக ஆகித் திரும்பிச் செல்ல வேண்டும். இது அருள்பவரின் வீடு. இங்கு வருபவர்கள் எங்களுக்கு உதவி செய்ய வந்துள்ளார்கள் என்றோ அல்லது எங்களுக்குத் தமது ஒத்துழைப்பைக் கொடுக்க வந்துள்ளார்கள் என்றோ நினைக்கக்கூடாது. ஆனால், இது எதையாவது எடுப்பதற்கான இடம், அதற்குக் கொடுக்க வேண்டியதில்லை என அவர்கள் நினைக்க வேண்டும். இங்கு, நீங்கள் சந்திப்பவர்கள், சிறியவர்களோ பெரியவர்களோ, அந்த வேளையில் இங்கிருப்பவர்கள், தமது திருஷ்டியால், சூழலால், தமது உறவுமுறைகளாலும் தொடர்புகளாலும் மாஸ்ரர் அருள்பவர்கள் ஆகவேண்டும் என நம்ப வேண்டும். ஒவ்வொருவருக்கும் எதையாவது கொடுத்தே நீங்கள் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். இது ஒவ்வொருவரின் இலக்காக இருக்க வேண்டும். வருபவர்களுக்கு நிச்சயமாக மரியாதை வழங்கப்படும். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரேயொரு தந்தைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பாபா கூறினார்: எனது வெளிச்சவீடான குழந்தைகள் அனைவரும் தமது மனங்களால் சேவை செய்வதன் மூலம் எங்கும் ஒளியைப் பரப்பினால் வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. பௌதீகமான வெளிச்சவீடு பலருக்கு வழிகாட்டுகிறது. எனவே, வெளிச்சவீடும் சக்திவீடுமான குழந்தைகளான உங்களால் மகத்தான அற்புதங்களைச் செய்ய முடியும். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் இறை சேவையில் கட்டுண்டு, நெருக்கமான உறவுமுறைக்குள் வருவதன் மூலம், இராஜ குடும்பத்தில் ஒருவர் ஆகுவதற்கான உரிமையைக் கொண்டிருப்பீர்களாக.
இறைசேவையின் பந்தனம் உங்களை நெருங்கிய உறவுமுறைக்குள் கொண்டுவருகிறது. நீங்கள் சேவை செய்வதற்கேற்ப, அந்த சேவையின் பலன் உங்களை நெருங்கிய உறவுமுறைக்குள் கொண்டுவரும். இங்கு சேவையாளர்களாக இருப்பவர்கள், அங்கு இராஜ குடும்பத்தின் அங்கம் வகிப்பதற்கான உரிமையைப் பெறுவார். இங்கு நீங்கள் கடினமாக உழைக்கும் அளவிற்கு, அங்கு சௌகரியமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பீர்கள். ஆனால், இங்கு சௌகரியமாக அமர்ந்திருப்பவர்கள் அங்கு வேலை செய்ய வேண்டியிருக்கும். தந்தையிடம் ஒவ்வொரு செயலினதும் ஒவ்வொரு விநாடிக்கான கணக்கு உள்ளது.
சுலோகம்:
சுய மாற்றத்தினூடாக துரித கதியில் உலக மாற்றத்திற்கான அதிர்வலைகளைப் பரப்புங்கள்.
அறிவித்தல்:
இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. உங்களின் அசரீரி ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தவண்ணம் பரந்தாமத்தில் உங்களின் அதியுயர்ந்த ஸ்திதியை அனுபவம் செய்தவாறு மாலை 6.30 இலிருந்து 7.30வரை ஒன்றுதிரட்டிய முறையில் சர்வதேச யோகம் செய்யுங்கள். இனிமையான மௌனத்தில் அமர்ந்திருந்து, அமைதியின் சகாஷைக் கொடுக்கும் சேவையைச் செய்யுங்கள்.