21.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எல்லையற்ற தந்தையே உங்கள் தந்தையும், ஆசிரியரும், உங்கள் சற்குருவும் எனவும், அவர் சர்வவியாபியாக இருக்க முடியாது எனவும் நிரூபியுங்கள்.
கேள்வி:
இக்காலத்தில் ஏன் உலகில் மிக அதிகளவில் துன்பம் உள்ளது? துன்பத்திற்கான காரணம் என்ன?
8பதில்:
இக்காலத்தில் முழு உலகின் மீதும் ராகுவின் சகுனங்கள் (சைத்தான்) நிலவுவதாலேயே துன்பம் உள்ளது. விருட்சத்தின் பிரபுவான தந்தை வரும்பொழுது அனைவர் மீதும் வியாழ சகுனங்கள் இருக்கின்றன. சத்திய, திரேதா யுகங்களில் வியாழ சகுனங்களே உள்ளன. அங்கு இராவணனின் பெயரோ, சுவடோ இருப்பதில்லை. இதனாலேயே அங்கு துன்பம் இருப்பதில்லை. தந்தை சந்தோஷ தாமத்தை ஸ்தாபனை செய்வதற்கு வந்துள்ளதால், அங்கு துன்பம் இருக்க முடியாது.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் என்றும், தொலைதூரத்தில் உள்ள உங்கள் வீட்டிலிருந்து இங்கு வந்துள்ளீர்கள் என்றும் உங்களுக்குத் தெரியும் என்பதால், இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இங்கு வந்து உங்கள் பாகங்களை நடிப்பதற்காகச் சரீரங்களில் பிரவேசித்துள்ளீர்கள். ஆத்மாக்களே பாகத்தை நடிக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இங்கமர்ந்திருந்து உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்கிறீர்கள். ஏனெனில் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நினைவு செய்வதன் மூலம் உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். இதனை யோகம் என்று அழைக்க முடியாது. சந்நியாசிகள் யோகம் கற்பிக்கின்றார்கள். ஒரு மாணவன் தனது ஆசிரியருடன் யோகம் செய்கின்றான். குழந்தைகள் தங்கள் தந்தையுடன் யோகம் செய்கிறார்கள். இது ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்குமான ஒரு சந்திப்பாகும். அதாவது இது குழந்தைகளுக்கும் தந்தைக்குமான ஒரு சந்திப்பாகும். இது நன்மை பயக்கும் சந்திப்பாகும். ஏனையவை நன்மை பயப்பதில்லை. இது தூய்மையற்ற உலகம். நீங்கள் கண்காட்சிகளிலும், நூதனசாலைகளிலும் விளங்கப்படுத்தும்பொழுது, ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் அறிமுகத்தைக் கொடுப்பது சரியாகும். ஆத்மாக்கள் அனைவரும் குழந்தைகள், அவர் பரந்தாமத்தில் வசிக்கின்ற பரமாத்மாவாகிய பரமதந்தை. ஒரு குழந்தை தனது லௌகீகத் தந்தையைப் பரமதந்தை என அழைப்பதில்லை. மக்கள் துன்பத்தின்பொழுதே பரமதந்தையை நினைவுசெய்வார்கள்: ஓ பரமாத்மாவே, பரமதந்தையே! பரமதந்தை பரந்தாமத்தில் வசிப்பவர். நீங்கள் ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் ஞானத்தை விளங்கப்படுத்துகிறீர்கள். ஆனால்; வெறுமனே இரு தந்தையர் உள்ளனர் என்பதை நீங்கள் விளங்கப்படுத்தக்கூடாது. அவரே தந்தையும் அத்துடன் ஆசிரியரும் என்பதையும் நிச்சயமாக நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நாங்கள் அனைவரும் சகோதரர்களே, அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். பக்தி மார்க்கத்தில், அனைவரும் தந்தையாகிய கடவுளை நினைவுசெய்கிறார்கள். ஏனெனில் கடவுளிடமிருந்தே பக்தியின் பலன் பெறப்படுகிறது. அதாவது குழந்தைகள் தந்தையிடமிருந்தே தங்கள் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். கடவுள் குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களுடைய பக்தியின் பலனைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு எதனைக் கொடுக்கின்றார்? அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். எனினும் நீங்கள் தந்தை யார் என்பதை மட்டும் நிரூபிக்கக்கூடாது. அவர் தந்தையும், அத்துடன் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்ற ஒரேயொருவரும் ஆவார். அவர் சற்குருவும் ஆவார். சர்வவியாபகர் என்ற எண்ணம் மறந்து போகுமளவிற்கு நீங்கள் விளங்கப்படுத்தவும் வேண்டும். பாபா ஞானக்கடல் என்பதையும் அத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர் இங்கு வந்து எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவர்களிடம் கூறுங்கள்: அவர் எங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்ற ஆசிரியரும் ஆவார். எனவே, அவர் எவ்வாறு சர்வவியாபி ஆவார்? தந்தை குழந்தைகளிடமிருந்து வேறுபட்டிருப்பது போன்று, ஆசிரியரும் மாணவர்களிடமிருந்து நிச்சயமாக வேறுபட்டிருக்க வேண்டும். ஆத்மாக்கள் பரமாத்மாவான தந்தையை நினைவுசெய்து அவரைப் புகழ்கின்றார்கள். தந்தையே மனித உலகின் விதையாவார். அவர் வந்து மனித உலகின் ஆரம்பம், மத்தி இறுதியின் ஞானத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். நாங்களே சுவர்க்கவாசிகளாகுகிறோம். அத்துடன் இரு தந்தையர் உள்ளனர் என்றும் அவர் விளங்கப்படுத்தியுள்ளார். உங்கள் லௌகீகத் தந்தை உங்களைப் பராமரிக்கின்றார், பின்னர் நீங்கள் கற்பதற்காக உங்கள் ஆசிரியரிடம் செல்ல வேண்டும். 60 வயதுக்குப் பின்னர் ஓய்வு ஸ்திதிக்குச் செல்வதற்காக நீங்கள் ஒரு குருவை ஏற்க வேண்டும். தந்தை, ஆசிரியர், சற்குரு ஆகியோர் வெவ்வேறானவர்களே. இந்த எல்லையற்ற தந்தை ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். அவர் ஞானக்கடல். அவரே, மனித உலகின் விதையும், சத்தியமும், உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமுமாவார். அவர் சந்தோஷக்கடலும், அமைதிக்கடலுமாவார். உலகில் பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளதால், அவரைப்; புகழ ஆரம்பிக்க வேண்டும். அவர் சர்வவியாபியாக இருந்தால், அவர் எவ்வாறு எங்கள் ஆசிரியராகி, எங்களுக்குக் கற்பிக்க முடியும்? அவர் சற்குருவும் ஆவார், அவர் வழிகாட்டியாகி, அனைவரையும் வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். அவர் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார், அதாவது, அவர் உங்களுக்கு நினைவுசெய்வதைக் கற்பிக்கின்றார். பாரதத்தின் புராதன இராஜயோகமும் நினைவுகூரப்படுகின்றது. பழைய உலகிற்கும், புதிய உலகிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியான சங்கமயுகமே அனைத்திலும் அதி புராதனமானது. 5000 வருடங்களுக்கு முன்னரும் தந்தை வந்து உங்களைத் தனக்குரியவராக்கியுள்ளார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் எங்கள் ஆசிரியரும், சற்குருவும் ஆகினார். அவர் எங்கள் பாபா மாத்திரம் அல்ல, அவர் ஞானக்கடல், அதாவது, அவர் எங்களுக்குக் கற்பித்தலைக் கொடுக்கும் ஆசிரியருமாவார். அவரே விருட்சத்தின் பிரபுவான, விதை என்பதால், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை அவர் விளங்கப்படுத்துகின்றார். அவர் பாரதத்திற்கு வரும்பொழுது, பாரதத்தின் மீது வியாழ சகுனங்கள்; இருக்கின்றன. சத்தியயுகத்தில் உள்ள அனைவரும் என்றென்றும் சந்தோஷமாக இருக்கும் தேவர்கள் ஆவார்கள். அங்கே அனைவர் மீதும் வியாழ சகுனங்கள்; உள்ளன. பின்னர் உலகம் தமோபிரதானாகும்பொழுது, அனைவர் மீதும் இராகுவின் சகுனங்கள்; நிலவுகின்றன. விருட்சத்தின் பிரபுவை எவரும் அறியார்;. நீங்கள் அவரை அறியாவிட்டால், அவரிடமிருந்து நீங்கள் எவ்வாறு ஆஸ்தியைப் பெற முடியும்;? நீங்கள் இங்கமர்ந்திருக்கும்பொழுதும் சரீரமற்றிருங்கள். ஆத்மாக்களும், வீடும் வெவ்வேறானவை என்ற ஞானத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். பொம்மை, அதாவது ஐந்து தத்துவங்களால் உருவாக்கப்பட்ட சரீரத்தினுள் ஓர் ஆத்மா பிரவேசிக்கின்றார். ஒவ்வொருவருடைய பாகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் விளங்கப்படுத்த வேண்டிய விடயம் யாதெனில் தந்தையே பரம தந்தையும், பரம ஆசிரியரும் என்பதாகும். லௌகீகத் தந்தை, ஆசிரியர், குரு ஆகியோரின் வேறுபாட்டைக் காட்டும்பொழுது, அவர்கள் விரைவில் புரிந்துகொள்வதுடன் உங்களுடன் விவாதம் செய்யவும் மாட்டார்கள். ஆத்மாக்களின் தந்தை முழு ஞானத்தையும் கொண்டுள்ளார். இது ஒரு சிறப்பியல்பாகும். அவர் மாத்திரமே எங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். முன்னர் முனிவர்களும், ரிஷிகளும் கூறுவதுண்;டு: “எங்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ தெரியாது”. ஏனெனில் அக்காலத்தில் அவர்கள் சதோ ஸ்திதியில் இருந்தார்கள். அனைத்தும் சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கின்றது. இது நிச்சயமாகப் புதியதிலிருந்து பழையதாகுகின்றது. இந்த உலகச் சக்கரத்தின் கால எல்லையையும் உங்களுக்குத் தெரியும். மக்கள் அதன் கால எல்லையை மறந்து விட்டார்கள். எனினும், அவர்கள் பக்தி மார்க்கத்திற்காகவே சமயநூல்கள் போன்ற அனைத்தையும் ஆக்கியுள்ளார்கள். அவர்கள் பல பொய்களை எழுதியுள்ளார்கள். அனைவரினதும் தந்தை ஒரேயொருவரே. சற்கதியை அருள்பவரும் ஒரேயோருவரே. பல குருமார்கள் உள்ளனர். ஆனால் சற்கதியை அருள்பவரான சற்குரு ஒருவரே இருக்க முடியும். நீங்கள் எவ்வாறு சற்கதியைப் பெறுகிறீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே சற்கதி எனக் கூறப்படுகிறது. அங்கு வெகு சில மனிதர்களே உள்ளனர். இப்பொழுது பல மனிதர்கள் உள்ளனர். அங்கு தேவர்களின் இராச்சியம் மாத்திரமே இருக்கின்றது. பின்னர் அவர்களின் வம்சம் வளரத் தொடங்குகின்றது: முதலாம் இலக்ஷ்மி நாராயணன், இரண்டாம், மூன்றாம் இலக்ஷ்மி நாராயணன் போன்று வளர்ச்சி இடம்பெற்றது. முதலாம் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருக்கின்றபொழுது, அங்கு வெகு சில மக்களே இருக்கின்றார்கள். நீங்கள் மாத்திரமே இவ்வாறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையான கடவுள் ஒரேயொருவரே என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே புரிந்துகொண்டீர்கள். அவர் எல்லையற்ற தந்தையாவார். நீங்கள் எல்லைக்குட்பட்ட தந்தையரிடமிருந்து ஓர் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆனால் நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து 21 சந்ததிகளுக்கான சுவர்க்க இராச்சியம் எனும் ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். 21 சந்ததிகள் என்றால்; வயோதிப காலம் வரை (முழுமையான நீண்ட ஆயுள்), உங்கள் சரீரத்தை விட்டு நீங்கும் வரை வாழ்வீர்கள். அங்கு நீங்கள் ஆத்மாக்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இங்கு சரீர உணர்வுடையவராக இருப்பதனால், ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு நீங்கி இன்னொன்றை எடுக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. இப்பொழுது சரீர உணர்வுடையவரை ஆத்ம உணர்வுடையவர் ஆக்குபவர் யார்? இந்நேரத்தில் எவரும் ஆத்ம உணர்வில் இல்லை. தந்தையே வந்து உங்களை ஆத்ம உணர்வு உடையவராக்குகின்றார். அங்கு ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் முதிர்ச்சியடைந்த சரீரத்தை விட்டு நீங்கிய பின்னர் குழந்தைகள் ஆகுவீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். பாம்பின் உதாரணமும் உள்ளது. பாம்பினதும், ரீங்காரமிடும் வண்டு (பிரம்மாரி) போன்றவற்றினதும் உதாரணங்களும் இந்நேரத்திற்கே பொருந்தும். அவை பின்னர் பக்தி மார்க்கத்திலும் பயன்படுத்தப்பட்டன. உண்மையில் பிராமண ஆசிரியர்களாகிய நீங்களே அழுக்கில் உள்ள பூச்சிகளுக்கு ஞானத்தை ரீங்காரமிட்டு, மனிதர்களைத் தேவர்களாக மாற்றுபவர்கள். தந்தையிடம் ஞானம் உள்ளது. அவர் மாத்திரமே ஞானக்கடலும் அமைதிக்கடலும் ஆவார். அனைவரும் தொடர்ந்தும் அமைதியை வேண்டி நிற்கின்றனர்: ஓ அமைதியை அருள்பவரே! அவர்கள் யாரைக் கூவியழைக்கின்றனர்? அவர்கள் அமைதிக்கடலான, அமைதியை அருள்கின்ற, ஒNருயொருவரின் புகழை அர்த்தம் புரியாமல் பாடுகின்றார்கள். அவர்கள் அவ்வாறு கூறியபொழுதிலும், அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை. தந்தை கூறுகிறார்: அந்த வேதங்கள் சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. நீங்கள் 63 பிறவிகளுக்குப் பக்தி செய்ய வேண்டும். பல சமயநூல்கள் உள்ளன. சமயநூல்களை வாசிப்பதனால் நீங்கள் என்னைக் கண்டு கொள்ள மாட்டீர்கள். நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள்: வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். இது குப்பபைகளின் தமோபிரதான் உலகம். அதில் எப்பயனும் இல்லை. பெருந் துன்பம் உள்ளது. எங்கிருந்து துன்பம் வந்தது? தந்தை உங்களுக்குப் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுத்தார். பின்னர் நீங்கள் எவ்வாறு ஏணியிலிருந்து கீழிறங்கினீர்கள்? ஞானமும் பக்தியும் நினைவுகூரப்படுகின்றன. தந்தை உங்களுக்கு ஞானத்தை உரைக்கிறார், ஆனால் இராவணன் உங்களுக்குப் பக்தியைக் கற்பிக்கின்றான். உங்களால் தந்தையையோ அல்லது இராவணனையோ பார்க்க முடியாது. இக்கண்களாலும் பார்க்க முடியாது. ஆத்மாவைப் புரிந்துகொள்ள முடியும். நாங்கள் ஆத்மாக்கள். ஆத்மாக்களுக்கு நிச்சயமாகத் தந்தை இருக்கின்றார். தந்தை பின்னர் ஆசிரியராகவும் ஆகுகின்றார். அவரைப் போன்று வேறு எவருமில்லை. நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்கு சற்கதியைப் பெறுகின்றீர்கள். எனவே பின்னர் குருவை ஏற்க வேண்டிய அவசியமில்லை. தந்தையே அனைவரினதும் தந்தையும், உங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியரும் ஆவார். அவரே அனைவருக்கும் சற்கதியைக் கொடுக்கின்ற, பரம குருவான சற்குருவும் ஆவார். இம்மூவரில் எவரையும் சர்வவியாபி எனக் கூறமுடியாது. அவர் உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிய இரகசியங்களைக் கூறுகின்றார். மக்கள் அவரை நினைவு செய்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! அனைவருக்கும் சற்கதி அருள்பவரே, வாருங்கள்! அனைவரினதும் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருளுங்கள்;! ஓ தந்தையான கடவுளே! ஓ விடுதலையளிப்பவரே! பின்னர் “எங்கள் வழிகாட்டியுமாகி எங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்! இந்த இராவண இராச்சியத்திலிருந்து எங்களை விடுவியுங்கள்”. இராவண இராச்சியம் லங்காவில் இல்லை. இப்பொழுது இந்தப் பூமி முழுவதும் இராவண இராச்சியமே நிலவுகின்றது. சத்தியயுகத்தில் மாத்திரமே இராம இராச்சியம் உள்ளது. பக்தி மார்க்கத்தில் மக்கள் அதிகக் குழப்பம் அடைந்துள்ளார்கள். இப்பொழுது நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவதற்கு ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். சத்திய யுகத்தில் பாரதம் மேன்மையானதாகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்ததாகவும் இருந்தது. இப்பொழுதும், அவர்கள் தொடர்ந்து அத்தேவர்களை வழிபடுகிறார்கள்;. பாரதத்தின் மீது வியாழ சகுனங்கள் நிலவியபொழுது, அது சத்திய யுகமாக இருந்தது. இப்பொழுது அதன் மீது ராகு சகுனங்கள் நிலவுவதனால் பாரதத்தின் நிலைமை என்னவாகியுள்ளதெனப் பாருங்கள்! அனைவரும் அதர்மம் நிறைந்தவர் ஆகிவிட்டனர். தந்தை உங்களைத் தர்மம் நிறைந்தவர் ஆக்குகின்றார்;, இராவணன் உங்களை அதர்மம் நிறைந்தவர்கள் ஆக்குகின்றான். மக்கள் தங்களுக்கு இராம இராச்சியம் வேண்டும் எனக் கூறுவதால், அவர்கள் இராவண இராச்சியத்திலே நரகவாசிகளாக உள்ளார்கள் என்பதே அதன் அர்த்தமாகும்;. இராவண இராச்சியம் நரகம் என அழைக்கப்படுகிறது. சுவர்க்கமும் நரகமும் அரைக்கு அரைவாசியாகும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இராம இராச்சியம் எது என்பதையும், இராவண இராச்சியம் எது என்பதையும் அறிவீர்கள். எனவே, அனைத்திற்கும் முதலில், நீங்கள் ஏனையோரைப் புத்தியில் நம்பிக்கையுள்ளவர்களாக ஆக்க வேண்டும். அவரே எங்கள் தந்தையும், ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்களும் ஆவோம். அனைவரும் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கு உரிமையுள்ளவராயினும் நீங்கள் அதனைப் பெற்று விட்டீர்கள். தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களைச் சந்தோஷதாமத்தின் அதிபதிகள் ஆக்கினார். ஏனையோர் அமைதிதாமத்திற்குச் சென்றார்கள். விருட்சத்தின் பிரபு உயிருள்ளவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். அவரே சத்தியமானவரும், உயிருள்ளவரும், ஆனந்த சொரூபமானவரும் ஆவார். ஆத்மா சத்தியமானவரும், உயிருள்ளவருமாவார். தந்தையும் சத்தியமானவரும், உயிருள்ள விருட்சத்தின் பிரபுவும் ஆவார். இது ஒரு தலைகீழான விருட்சம். இதன் விதை மேலேயுள்ளது. நீங்கள் தமோபிரதானாகியதும், தந்தையே வந்து இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் வந்து உங்களைச் சதோபிரதானாக்குகிறார். வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறுகின்றது. வரலாறு, புவியியல் என்பவற்றிற்கான ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இந்தி வார்த்தைகளையே நீங்கள் உபயோகிக்க வேண்டும். அனைவரும் ஆங்கிலம் கற்கிறார்கள். கடவுள் சம்ஸ்கிருதத்தில் கீதையைக் கூறியதாக அவர்கள் நம்புகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தின் இளவரசர். அங்கு இம் மொழியே இருந்தது என்று எதிலும் எழுதப்பட்டிருக்கவில்லை. ஒரு மொழி இருந்தது. ஓர் அரசரின் மொழி அந்த அரசருக்குரியதாகும். சத்தியயுக அரசருக்குரிய மொழி அவரவருக்குரியதாக இருக்கும். அங்கு சம்ஸ்கிருதம் இருக்கவில்லை. சத்தியயுகத்தின் பழக்க வழக்கங்கள் கலியுக மக்களின் பழக்க வழக்கங்களிலிருந்து வேறுபட்டவை. கலியுக சமுதாயத்தின் பழக்க வழக்கங்களை விரும்பாத நீங்கள் அனைவரும் மீராக்களே. நீங்கள் கலியுகத்துப் பழக்க வழக்கங்களைத் துறந்தபொழுது, பெருமளவு சண்டை சச்சரவுகள் நிலவியன. பாபா உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுத்;திருக்கிறார்: மிகக்கொடிய எதிரியாகிய காமத்தை வெல்லுங்கள். நீங்களும் உலகை வென்றவர்களின் படத்தை உங்கள் முன்னால் வைத்துள்ளீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து, உலகில் எவ்வாறு அமைதியை ஸ்தாபிக்கலாம் என்பதற்கான புத்திமதியைப் பெறுகிறீர்கள். “அமைதியை அருள்பவர்” எனக் கூறும்பொழுது தந்தை ஒருவரே நினைவுசெய்யப்படுகிறார். ஒவ்வொரு சக்கரத்திலும் தந்தையே வந்து, உலகில் அமைதியை ஸ்தாபிக்கின்றார். சக்கரத்தின் கால எல்லை மிக நீண்டதாக ஆக்கப்பட்டதால், மக்கள் கும்பகர்ண உறக்கத்தில், உறங்குவது போலுள்ளது. முதலில், அந்த ஒரேயொருவரே எங்கள் தந்தையும், எங்கள் ஆசிரியரும் என்பதில் மனிதர்களிடையில் உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். ஆசிரியரை நீங்கள் எவ்வாறு சர்வவியாபி என அழைக்க முடியும்? தந்தை வந்து எவ்வாறு எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரின் சுயசரிதையையும் நீங்கள் அறிவீர்கள். தந்தை நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுவதற்கு வந்துள்ளார். அவரே ஆசிரியரும், எங்களைத் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்பவரும் ஆவார். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆத்மா தனது முழுப் பாகத்தையும் நடித்ததன் பின்னர் வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறார். உங்களை வீட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்வதற்கு உங்களுக்கு வழிகாட்டியும் தேவைப்படுகிறார். அவர் உங்கள் வழிகாட்டியாகி, உங்களைத் துன்பத்தில் இருந்து விடுதலை செய்து, உங்கள் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்குச் அழைத்துச் செல்கிறார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கலியுகத்துப் பழக்க வழக்கங்களையும், சமுதாயத்தின் அபிப்பிராயங்களையும் துறந்து, இறை குலப் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். சரீரமற்ற தந்தை உங்களுக்குக் கூறுவதைப் போன்று, சரீரமற்றிருக்கும் ஸ்திதியைப் பயிற்சி செய்வதை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.2. எல்லையற்ற தந்தையே, தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அனைவருக்கும் இவ் வித்தியாசத்தை விளங்கப்படுத்துங்கள். எல்லையற்ற தந்தை சர்வவியாபகர் அல்ல என்பதை நிரூபியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்கள் லௌகீக, அலௌகீக வாழ்வுகளில் சதா பற்றற்றிருந்து, கடவுளின் சகவாசத்தை அனுபவம் செய்வதால், ஒரு பற்றை வென்றவர் ஆகுவீர்களாக.சதா பற்றற்றிருப்பதன் அடையாளம் கடவுளின் அன்பை அனுபவம் செய்வதாகும், நீங்கள் அந்த அன்பைக் கொண்டிருக்கும் அளவிற்கேற்ப அவரது சகவாசத்தை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் பிரிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் ஒன்றாக இருக்கும்பொழுது, அன்பானது அனுபவம் செய்யப்படுகின்றது. தந்தை உங்களுடன் இருப்பதால், உங்களுடைய சுமைகள் அனைத்தையும் நீங்கள் தந்தையிடம் கையளித்து, உங்களை இலேசாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பற்றை அழித்தவர்; ஆகுவதற்கு இதுவே ஒரேயொரு வழியாகும். எவ்வாறாயினும், முயற்சி எனும் விடயத்தில், “சதா” எனும் வார்த்தையை அடிக்கோடிடுங்கள். உங்கள் லௌகீக, அலௌகீக வாழ்வுகளில் சதா பற்றற்றிருங்கள், அப்பொழுது நீங்கள் அவரது சகவாசத்தைச் சதா அனுபவம் செய்வீர்கள்.
சுலோகம்:
விகாரமுடைய பாம்புகளை உங்கள் படுக்கையாக்குங்கள், நீங்கள் ஓர் இலகுயோகி ஆகுவீர்கள்.