20.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை முட்களை மலர்களாக மாற்றுவதற்கு வந்துள்ளார். சரீர உணர்வே மிகப்பெரிய முள் ஆகும். இதன் மூலமாகவே ஏனைய விகாரங்கள் அனைத்தும் வருகின்றன. எனவே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்.

கேள்வி:
தந்தையின் எப்பணிகளைப் புரிந்து கொள்ளாததனால் பக்தர்கள் அவரைச் சர்வவியாபகர் என்று கருதுகின்றார்கள்?

8பதில்:
தந்தை பல ரூபங்களைக் கொண்டவர், அவர் தேவை ஏற்படும்பொழுதெல்லாம் ஒரு விநாடியில் எக் குழந்தையிலாவது பிரவேசித்து அவர் முன்னிலையிலுள்ள ஆத்மாவிற்கு நன்மையளிக்கின்றார். அவர் பக்தர்களுக்குக் காட்சிகளை அருள்கின்றார். அவர் சர்வவியாபகர் அல்லர், ஆனால் அதிவேகமான ரொக்கட் ஆவார். வந்து செல்வதற்குத் தந்தைக்கு அதிக நேரம் எடுப்பதில்லை. இதைப் புரிந்து கொள்ளாததாலேயே, பக்தர்கள் அவரைச் சர்வவியாபகர் என்று கூறுகின்றார்கள்.

ஓம் சாந்தி.
இது ஒரு சிறிய பூந்தோட்டமாகும். இது மனிதர்களின் பூந்தோட்டமாகும். நீங்கள் ஒரு பூந்தோட்டத்திற்குச் செல்லும்பொழுது, அதில் பல்வேறு பழைய மரங்களும் இருக்கின்றன. சில இடங்களில் விரியாத மொட்டுக்களும், சில இடங்களில் பாதி விரிந்த மொட்டுக்களும் உள்ளன. இதுவும் ஒரு பூந்தோட்டமாகும். நீங்கள் இங்கு முட்களிலிருந்து மலர்களாக மாறுவதற்கு வருகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நாங்கள் முட்களிலிருந்து மலர்களாக மாறுகின்றோம். முட்கள் காட்டில் இருக்கின்றன, மலர்கள் ஒரு பூந்தோட்டத்தில் உள்ளன. சுவர்க்கம் பூந்தோட்டமும் நரகம் காடும் ஆகும். இது தூய்மையற்ற முட்களின் காடு எனவும் அது பூந்தோட்டம் எனவும் தந்தை விளங்கப்படுத்துகின்றார். அங்கு பூந்தோட்டம் இருந்தது, அது இப்பொழுது முட்காடாக ஆகியுள்ளது. சரீர உணர்வே அனைத்திலும் மிகப்பெரிய முள் ஆகும். அதன் பின்னரே ஏனைய அனைத்து விகாரங்களும் வருகின்றன. அங்கு, நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருக்கின்றீர்கள். தனது ஆயுட்காலம் இப்பொழுது முடிவடைந்துவிட்டது என்றும், தான் தனது பழைய சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுப்பார் என்ற ஞானம் ஆத்மாவிடம் உள்ளது. தான் சென்று கர்ப்ப மாளிகையில் வசிப்பார் என்ற காட்சியை ஆத்மா பெறுகிறார். அவர் பின்னர் ஒரு மொட்டு ஆகிப் பின்னர், மொட்டிலிருந்து ஒரு மலர் ஆகுவார். ஆத்மாவிடம் இந்த ஞானம் உள்ளது. எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கின்றது என்ற ஞானத்தை அவர் கொண்டிருக்கமாட்டார். இது ஒரு பழைய சரீரம், அவர் இப்பொழுது அதை மாற்றவேண்டும் என்ற ஞானத்தையே அவர் கொண்டிருப்பார். அவர் அச்சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார். கலியுக உலகின் சம்பிரதாயங்கள் போன்றவை எவையும் அங்கிருக்க மாட்டாது. இங்கு, சமுதாயத்தின் அபிப்பிராயமும், குடும்பக் கோட்பாடும் கருதப்பட வேண்டியுள்ளதால், ஒரு வித்தியாசம் உள்ளது. அவ்விடத்தின் மரியாதைக் கோட்பாடே உண்மையான மரியாதைக் கோட்பாடு என்று கூறப்படுகின்றது. இங்கு, மரியாதைக் கோட்பாடு பொய்யானது ஆகும். அப்படியிருந்தும் உலகம் உள்ளது. அது அசுர உலகமாக இருக்கும்போதே தந்தை வருகின்றார். தேவ உலகம் ஸ்தாபிக்கப்படும் வேளை விநாசம் இடம்பெறும். ஆகவே, இது நிச்சயமாக அசுர சமுதாயமாகும், தெய்வீகக் குணங்களைக் கொண்டவர்களின் சமுதாயம் இதிலேயே ஸ்தாபிக்கப்படுகின்றது. பிறவி பிறவியாக நீங்கள் செய்த பாவங்கள் யோக சக்தியாலேயே அழிக்கப்படும் என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிறவியில் நீங்கள் செய்துள்ள பாவங்களைப் பற்றியும் நீங்கள் பாபாவிற்குக் கூறவேண்டும். அதிலும், விகாரத்தைப் பற்றியதே பிரதான விடயம் ஆகும். நினைவு செய்வதில் சக்தி உள்ளது. தந்தை சர்வசக்திவான் ஆவார். அனைவரினதும் தந்தையாகிய ஒரேயொருவருடன்; யோகம் செய்வதாலேயே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மியும் நாராயணனும் சர்வசக்திவான்கள.; முழு உலகிலும் அவர்களுடைய இராச்சியமே இருந்தது. அது புதிய உலகமாகும்; அனைத்துமே புதியதாக இருக்கும். இப்பொழுது நிலமும் வளமற்றதாகிவிட்டது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகப்போகின்றீர்கள். எனவே நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்களைப் போன்றே அவர்கள் கொண்டிருக்கின்ற சந்தோஷமும் இருக்கும். இது உங்கள் அதிமேலான பல்கலைக்கழகம் ஆகும். உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பவரும் அதிமேலானவர்; அதிமேலானவர்கள் ஆகுவதற்கே குழந்தைகளாகிய நீங்கள் கற்கின்றீர்கள். நீங்கள் மிகவும் சீரழிந்தவர்களாக இருந்தீர்கள். முழுமையாக அடிமட்டத்தில் இருப்பவர்களில் இருந்து நீங்கள் அதிமேலானவர்கள் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். தந்தை தானே கூறுகின்றார்: நீங்கள் சுவர்க்கத்திற்குத் தகுதிவாய்ந்தவர்கள் அல்லர். தூய்மையற்றவர்களால் அங்கு செல்ல முடியாது. நீங்கள் அடிமட்டத்தில் இருப்பதன் காரணமாக, நீங்கள் மேலான தேவர்களுக்கு முன்னால் புகழ் பாடுகிறீர்கள். நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று, தேவர்களின் மகத்துவத்தைப் பற்றியும் உங்கள் சீரழிவைப் பற்றியும் பேசுகின்றீர்கள். பின்னர் நீங்கள் மேன்மையானவர்களாக ஆகுவதற்குக் கருணையை வேண்டுகின்றீர்கள், நீங்கள் சென்று அவர்களின் முன்னால் தலை வணங்குகின்றீர்கள். அவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் அவர்களைப் போன்று ஆகவேண்டும் என்பதற்காக ஆலயங்களுக்குச் சென்று அவர்களை வழிபடுகின்றீர்கள். எவ்வாறாயினும், யார் அவர்களை அவ்வாறு ஆக்கினார்கள் என்பது எவருக்கும் தெரியாது. இத்தேவ விருட்சத்தின் நாற்றானது எவ்வாறு நாட்டப்படுகின்றது என்கின்ற முழு நாடகமும் உங்கள் புத்திகளில் இப்பொழுது இருக்கின்றது. தந்தை சங்கமயுகத்தில் வருகின்றார். இது தூய்மையற்ற உலகாகும். இதனாலேயே மக்கள் தந்தையைக் கூவியழைக்கின்றார்கள்: வந்து தூய்மையற்றவர்களாகிய எங்களைத் தூய்மையாக்குங்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாகுவதற்கே முயற்சி செய்கிறீர்கள். ஏனைய அனைவரும் தங்கள் கர்மக்கணக்குகளைத் தீர்த்து சாந்திதாமத்திற்குத் திரும்பிச் செல்வார்கள். தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற மன்மனபவ என்னும் மந்திரமே பிரதான விடயமாகும். பல்வேறு குருமார்கள் பல்வேறு மந்திரங்களைக் கொடுக்கின்றார்கள். தந்தையிடம் ஒரு மந்திரமே உள்ளது. தந்தை பாரதத்திற்கு வந்து உங்களுக்கு ஒரு மந்திரத்தைக் கொடுத்தார், அதன் மூலம் நீங்கள் தேவர்கள் ஆகினீர்கள். கடவுள் பேசுகின்றார். அம்மக்கள் வாசகங்களை உரைத்தாலும், அவர்கள் முற்றிலும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. உங்களால் அவற்றின் அர்த்தத்தை விளங்கப்படுத்த முடியும். அவர்கள் கும்பமேலாவுக்குச் செல்வதால், அங்கும் நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த முடியும். இது தூய்மையற்ற உலகமாகிய நரகமாகும். சத்தியயுகமே சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட தூய உலகமாக இருந்தது. தூய்மையற்ற உலகில் தூய்மையானவர்கள் எவரும் இருக்க முடியாது. மக்கள் தூய்மையாகுவதற்காகக் கங்கையில் நீராடச் செல்கின்றார்கள், ஏனெனில் சரீரமே தூய்மையாக்கப்பட வேண்டும் எனவும் ஆத்மா சதா தூய்மையானவர் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள். அவர்கள் ஆத்மாவே பரமாத்மா என்று கூறுகின்றார்கள். உங்களாலும்; எழுத முடியும்: ஞானத்தில் நீராடுவதால், ஆத்மா தூய்மையாகுவார், நீரில் நீராடுவதால் அல்ல. நீங்கள் தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் நீரில் நீராடுகின்றீர்கள். மக்கள் ஒவ்வொரு நாளும் ஆறுகளில் நீராடச் செல்கின்றார்கள். அவர்கள் அந்நீரைப் பருகவும் செய்கின்றார்கள். இப்பொழுது, அனைத்து விடயங்களும் நீரினால் செய்யப்படுகின்றன. இவை அத்தகைய இலகுவான விடயங்கள், ஆனால் இது எவருடைய புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. ஞானத்தினூடாகவே, ஜீவன்முக்தி ஒரு விநாடியில் பெறப்படுகின்றது. கூறப்பட்டுள்ளது: நீங்கள் கடல் முழுவதையும் மையாகவும் காட்டை பேனையாகவும் பூமியைக் கடதாசியாகவும் மாற்றினாலும்கூட, ஞானத்திற்கு முடிவு இருக்க முடியாத வகையில், பெருமளவு ஞானம் உள்ளது. தந்தை தொடர்ந்தும் வேறுபட்ட கருத்துக்களை ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: இன்று நான் உங்களுக்கு மிகவும் ஆழமான விடயங்களை கூறிக் கொண்டிருக்கின்றேன். குழந்தைகள் கூறுகின்றார்கள்: நீங்கள் ஏன் எங்களுக்கு முன்னர் கூறவில்லை? ஆ, நான் எவ்வாறு உங்களுக்கு முன்கூட்டியே கூறமுடியும்? ஒரு கதை ஆரம்பத்திலிருந்து சரியான ஒழுங்கில் கூறப்படுகிறது. பிற்காலத்திற்கான ஒரு பகுதி எவ்வாறு முன்னரே கூறப்பட முடியும்? தந்தை உங்களுக்கு இதைத் தொடர்ந்தும் கூறுகின்றார். சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்கள் உங்களுக்குத் தெரியும். எவராவது உங்களை வினவினால், உடனடியாக உங்களால் அவர்களுக்குப் பதிலளிக்க முடியும். இந்த ஞானத்தைப் புத்தியில் கொண்டுள்ள நீங்கள் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். மக்கள் உங்களிடம் வரும்போது, அவர்கள் சரியான விளக்கத்தைப் பெறாவிடின், அவர்கள் சென்று, இங்கே தாம் சரியான விளக்கத்தைப் பெறவில்லை என்றும், பயனற்ற படங்களே இங்கு வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறுவார்கள். ஆகவே, மிகவும் நன்றாக விளங்கப்படுத்தக் கூடியவர்களே தேவைப்படுகின்றனர். இல்லாவிடின், அம்மக்களால் முற்றாகப் புரிந்துகொள்ள இயலாதிருக்கும். விளங்கப்படுத்துபவருக்கே, முழுமையாகப் புரியாதிருந்தால், அது ஒத்தது ஒத்ததை நாடுவதைப் போன்றதாகும். தந்தை கூறுகின்றார்: புத்திக்கூர்மையுடையவராக இல்லாதிருப்பதையும் நான் பார்க்கின்றேன். அப்பொழுது, நான் அவரில் சிலவேளைகளில், வந்துள்ள நபர் மிகவும் விவேகமாக இருப்பதையும், ஆனால் குழந்தை (விளங்கப்படுத்துபவர்);அந்தளவிற்கு புத்திக்கூர்மையுடையவராக இல்லாதிருப்பதையும் நான் பார்க்கிறேன். அப்பொழுது நான் அவரில் பிரவேசித்து உதவிசெய்கின்றேன். ஏனெனில் தந்தை சின்னஞ் சிறிய ரொக்கட் ஆவார், அவருக்கு வந்து செல்வதற்கு அதிக நேரம் எடுக்கமாட்டாது. இதனையே அம்மக்கள் அவர் பல ரூபங்களைக் கொண்டவராகவும்; சர்வவியாபியாகவும் இருக்கின்றார் எனக் கருதுகிறார்கள். தந்தை இங்கமர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சிலர் சிறப்பானவர்கள் என்பதால், அவர்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்தக் கூடிய ஒரு நபர் தேவையாகும். இந்நாட்களில், சில குழந்தைகளால், குழந்தைப் பருவத்திலேயே சமய நூல்களை மனப்பாடமாகக் கூறமுடிகின்றது ஏனெனில் அந்த ஆத்மாக்கள் அச்சம்ஸ்காரங்களைக் கொண்டு வருகின்றார்கள். ஆத்மா எங்காவது பிறப்பெடுத்துப் பின்னர் அங்கு வேதங்கள், சமயநூல்கள் போன்றவற்றைக் கற்க ஆரம்பிக்கின்றார். உங்கள் இறுதி எண்ணங்களே உங்களுடைய இலக்குக்கு உங்களை அழைத்துச் செல்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆத்மா அச்சம்ஸ்காரங்களைக் கொண்டு செல்கின்றார். உண்மையிலேயே சுவர்க்க வாசல் திறக்கப்படும் அந்த நாள் வந்துவிட்டது என்று குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட்டுப் பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். சுவர்க்கம் புதிய உலகில் இருக்கின்றது என்பது மக்களுக்குத் தெரியாது. நீங்கள் சத்திய நாராயணனின் உண்மைக் கதையையும் அமரத்துவப் பிரபுவின்; கதையையும் செவிமடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். அது ஒரு கதையும் அதைக் கூறுபவர் அந்த ஒருவரும் ஆவார். அதுபற்றிய சமய நூலையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். அனைத்து உதாரணங்களும் உங்களுக்குப் பொருந்துகின்றன, ஆனால் பின்னர் அவர்கள் அவற்றை பக்தி மார்க்கத்தில் இட்டுள்ளார்கள். எனவே, தந்தை சங்கமயுகத்திலேயே வந்து அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இது ஒரு மிகவும் முக்கியமான, எல்லையற்ற விளையாட்டாகும். எல்லாவற்றிற்கும் முதலில், இராம இராச்சியமாகிய, சத்திய திரேதா யுகங்களும் பின்னர் இராவண இராச்சியமும் உள்ளது. இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது அநாதியானதும் அழிவற்றதும் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள். தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ள ஞானத்தை. வேறெவரும் கொண்டிருப்பதில்லை. ஆத்மாக்கள் அனைவரினதும் பாகம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆத்மா ஒரு பாகத்தை நடிக்க வேண்டியுள்ள வேளையில்;;, அவர் அந்நேரத்தில் வருவார், விரிவாக்கம் தொடர்ந்து நடைபெறும். குழந்தைகளாகிய உங்களுக்கான பிரதான விடயம் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதேயாகும். நீங்கள் கூவியழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! குழந்தைகளாகிய நீங்களே கூவியழைப்பவர்கள். தந்தையும் கூறுகின்றார்: எனது குழந்தைகள் காமச்சிதையில் அமர்ந்ததால், எரிக்கப்பட்டுவிட்டார்கள். இவை உண்மையான விடயங்கள்;. இது அமரத்துவமான ஆத்மாவின் சிம்மாசனமாகும். அவர் அதைக் கடனாகப் பெற்றுள்ளார். யார் பிரம்மா என்று மக்கள் வினவுகின்றார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: பாருங்கள், கடவுள் பேசுகின்றார் எனவும் அவர் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கிறார் எனவும் எழுதப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட அந்த ஸ்ரீ கிருஷ்ணர் 84 பிறவிகளை எடுத்துப் பின்னர் சாதாரணமானவர் ஆகுகின்றார். அச் சாதாரணமானவர் பின்னர் கிருஷ்ணர் ஆகுகின்றார். அவர் கீழே தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றார். அவர் அவ்வாறு ஆகப் போகின்றார் என்பது அவருக்குத் தெரியும். திரிமூர்த்திப்படத்தை மக்கள் பலரும் பார்த்துள்ளார்கள். எவ்வாறாயினும், அது ஓர் அர்த்தத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்தாபனையை மேற்கொள்பவரே பின்னர் அதைப் பராமரிக்கவும் செய்வார். ஸ்தாபனையின் பெயர், ரூபம், இடம், காலம் என்பன பராமரிப்பின்; பெயர், ரூபம், இடம், காலம் என்பவற்றிலிருந்து வேறுபட்டவையாகும். இவ்விடயங்களை மிகவும் இலகுவாக விளங்கப்படுத்த முடியும். இவர் கீழே தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றார், பின்னர் மீண்டும் அவ்வாறு ஆகுவார். அவர் 84 பிறவிகளை எடுத்து இவ்வாறு ஆகுகின்றார். இது ஒரு விநாடிக்கான அத்தகைய இலகுவான ஞானம் ஆகும்! நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்கின்ற ஞானத்தை உங்களுடைய புத்திகளில் கொண்டிருக்கின்றீர்கள். அந்த தேவர்களே 84 பிறவிகளை எடுக்க வேண்டியவர்கள். வேறு எவராவது அவ்வாறு எடுக்கின்றார்களா? இல்லை. 84 பிறவிகளின் இரகசியம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தேவர்களே முதலில் வருகின்றார்கள். ஓர் இழையில் மீனைக் கொண்டுள்ள ஒரு விளையாட்டுப் பொருள் உள்ளது. மீன் கீழேயும் மேலேயும் செல்கின்றது. அதுவும் ஓர் ஏணி போன்றதாகும். ரீங்காரமிடும் வண்டினதும், ஆமை போன்றவற்றினதும் உதாரணங்கள் இந்நேரத்துக்கே பொருந்தும். ஒரு ரீங்காரமிடும் வண்டு எவ்வளவு விவேகத்தைக் கொண்டுள்ளது என்று பாருங்கள்! மக்கள் தங்களை மிகவும் திறமைசாலிகளாகக் கருதுகின்றார்கள், ஆனால் தந்தை கூறுகின்றார்: அவர்கள் ரீங்காரமிடும் வண்டைப் போன்று அவ்வளவு விவேகத்தைக் கொண்டிருப்பதில்லை. ஒரு பாம்பு அதன் பழைய தோலை நீக்கிப் புதியதொன்றை எடுக்கின்றது. குழந்தைகள் மிகவும் விவேகிகளாக ஆக்கப்படுகின்றனர் - விவேகிகளாகவும் தகுதிவாய்ந்தவர்களாகவும். ஓர் ஆத்மா தூய்மையற்றவராக இருக்கும்பொழுது, அவர் தகுதிவாய்ந்தவர் அல்லர். எனவே அவர் தூய்மையாக்கப்பட்டுப் பின்னர்; தகுதிவாய்ந்தவர் ஆக்கப்படுகின்றார். அது தகுதிவாய்ந்த உலகமாகும். உலகம் முழுவதையும் நரகத்திலிருந்து சுவர்க்கமாக மாற்றுவது தந்தையினுடைய பணி மாத்திரம் ஆகும்.. சுவர்க்கம் என்றால் என்ன என்பது மக்களுக்குத் தெரியாது. சுவர்க்கம் தேவர்களின் இராச்சியம் ஆகும். சத்தியயுகத்தில் இது தேவர்களின் இராச்சியம் ஆகும். நீங்கள் சத்தியயுகத்துப் புதிய உலகை ஆட்சி செய்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நாங்களே 84 பிறவிகளை எடுத்தவர்கள். நீங்கள் இராச்சியத்தைப் பெற்றுப் பின்னர் அதை எண்ணற்ற தடவைகள் இழந்தீPர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இராமரின் வழிகாட்டல்களைப் பின்பற்றியதால், இராச்சியத்தைக் கோரினீர்கள், இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றியதால் அதை இழந்தீர்கள். மீண்டும் மேலேறுவதற்காக இப்பொழுது நீங்கள் இராமரின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். நீங்கள் அவற்றைக் கீழே வீழ்வதற்காகப் பெற்றுக் கொள்ளவில்லை. தந்தை மிக நன்றாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆனால் பக்திமார்க்கத்தில் உள்ளவர்களின் புத்திகள் மாறுவது மிகவும் சிரமமானதாகும். பக்திமார்க்கத்தில் பெருமளவு பகட்டு உள்ளது. அது ஒரு புதை குழி ஆகும், அனைவரும் அதில் அவர்களுடைய கழுத்து வரைக்கும் மூழ்குகின்றார்கள். இது அனைவருக்குமான இறுதிக்காலம் ஆகும்பொழுது, நான் வந்து அனைவரையும் ஞானத்தினால் அப்பால் அழைத்துச் செல்கின்றேன். நான் வந்து குழந்தைகளாகிய உங்களினூடாகவே பணியை மேற்கொள்கின்றேன். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே பாபாவுடன் சேவை செய்கின்றவர்கள், நீங்கள் கடவுளின் உதவியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். இதுவே அனைத்திலும் மிகச் சிறந்த சேவை ஆகும். குழந்தைகள் ஸ்ரீமத்தைப் பெறுகின்றார்கள்: இதையும் அதையும் செய்யுங்கள். பின்னர், அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே வெளிப்படுகின்றார்கள். இவை புதிய விடயங்கள் அல்ல. எவ்வாறாயினும், முன்னைய கல்பத்தில் பல தேவர்கள் வெளிப்பட்டார்கள், அவ்வளவு பேரும் மீண்டும் வெளிப்படுவார்கள். இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவருக்கும் செய்தியைச் சென்றடையச் செய்ய வேண்டும். இது மிகவும் இலகுவானதாகும். பக்தி முழுச் சக்தியுடன் இருக்கும்பொழுது கல்பத்தின் சங்கமயுகத்தில் கடவுள் வருகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை வந்து அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்கின்றார். இப்பொழுது உங்கள் மீது வியாழ சகுனம் உள்ளது. அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்கின்றார்கள், ஆனால் அது கற்பதற்கேற்ப, வரிசைக்கிரமமாக உள்ளது. சிலர் மீது மங்களகரமான சகுனம் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சனியின் சகுனத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தகுதிவாய்ந்தவர்களாகவும் விவேகிகளாகவும் ஆகுவதற்கு, தூய்மையாகுங்கள். முழு உலகையும் நரகத்திலிருந்து சுவர்க்கமாக மாற்றுவதற்கு, தந்தையுடன் சேவை செய்யுங்கள். கடவுளின் உதவியாளர் ஆகுங்கள்.

2. கலியுக உலகின் சம்பிரதாயங்களையும், சமூகத்தின் அபிப்பிராயத்தையும், குடும்பக் கோட்பாடுகளையும் துறந்து, உண்மையான மரியாதைக் கோட்பாடுகளைப் பின்பற்றுங்கள். தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகி, தேவ சமுதாயத்தை ஸ்தாபியுங்கள்.

ஆசீர்வாதம்:
புயல்களைப் பரிசுகளாகக் கருதுவதன் மூலம் இலகுவாக அனைத்துப் புயல்களையும் கடந்து உங்களை அர்ப்பணித்து முழுமை அடைவீர்களாக.

அனைவருடைய இலக்கும் இலட்சியமும் சம்பூரணமடைவதற்கு சிறு விடயங்களையிட்டுப் பயப்படாதீர்கள். நீங்கள் விக்கிரகங்கள் ஆகவேண்டும். ஆதலால் நிச்சயமாக சில சுத்தியலால் அடி (hயஅஅநசiபெ) இருக்கும். முன்னால் இருப்பவர்களே அதிக புயல்களைக் கடக்க நேரிடும். எவ்வாறாயினும் நீங்கள் இப்புயல்களை புயல்களாகக் கருதாது பரிசுகளாகப் பார்க்க வேண்டும். இப்புயல்கள் உங்களை அனுபவம் செய்வதற்காகப் பரிசுகள் ஆகுகின்றன.எஎனவே தடைகளை வரவழையுங்கள். அனுபசாலி ஆகி தொடர்ந்தும் முன்னேறுங்கள்.

சுலோகம்:
கவனயீனத்தை முடித்துவிடுவதற்கு உங்கள் மீது ஆக்கபூர்வமான எண்ணங்களை வைத்திருந்து தொடர்ந்தும் உங்களைச் சோதியுங்கள்.