14.11.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வுடன் சேவை செய்யுங்கள், நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு அடியிலும் வெற்றி பெறுவீர்கள்.
கேள்வி:
எவ்விழிப்புணர்வைக் கொண்டிருந்தால் சரீர உணர்வு அற்றுப்போகும்?
பதில்:
நீங்கள் ஓர் இறை சேவகன் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். ஒரு சேவகன் ஒருபொழுதும் சரீர உணர்வைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் எந்தளவிற்கு யோகத்தில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் சரீர உணர்வு அகற்றப்படும்.
கேள்வி:
நாடகத்தின்படி, சரீர உணர்வுடையவர்கள் என்ன தண்டனையைப் பெறுகிறார்கள்?
பதில்:
இந்த ஞானம் அவர்களின் புத்தியில் பதிவதில்லை. செல்வந்தர்கள் அவர்களின் செல்வம் காரணமாக சரீர உணர்வுடையவர்களாக இருக்கின்றனர். இதனாலேயே அவர்களால் இந்த ஞானத்தைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதுவே அவர்கள் பெறுகின்ற தண்டனையாகும். ஏழைகளால் இந்த ஞானத்தை இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.
ஓம் சாந்தி.
நீங்கள் நினைவு செய்தால் இவ்வாறு ஆகுவீர்கள் என பிரம்மா மூலமாக ஆன்மீகத் தந்தை உங்களுக்கு அறிவுரை கூறுகின்றார். நீங்கள் சதோபிரதானாகி உங்கள் வைகுந்த இராச்சியத்திற்குச் செல்வீர்கள். அவர் உங்களுக்கு மாத்திரம் கூறுவதில்லை, இந்த ஓசையானது பாரதத்தை மாத்திரமன்றி வெளிநாட்டவர்;கள் அனைவரையும் சென்றடையும். பலர் காட்சிகளையும் காண்பார்கள். யாருடைய காட்சிகளை அவர்கள் பெறுவார்கள்? நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் ஒரு இளவரசன் ஆகவேண்டுமாயின், பிரம்மாவிடமோ அல்லது பிராமணர்களிடமோ செல்ல வேண்டும் என்ற காட்சியை பிரம்மா மூலமாகவே தந்தை கொடுக்கின்றார். ஐரோப்பியர்களும் அவரைப் புரிந்துகொள்ள விரும்புகின்றனர். பாரதம் வைகுந்தமாக இருந்தது, எனினும், அந்நேரத்தில் அது யாருடைய இராச்சியமாக இருந்தது என்பது எவருக்கும் தெரியாது. பாரதம் சுவர்க்கமாக இருந்தது. இது இலகு இராஜயோகம் என்பதையும் இதன் மூலமாகவே பாரதம் சுவர்க்கமாகின்றது என்பதையும் நீங்கள் இப்பொழுது அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். வெளிநாட்டவர்களின் புத்தி ஓரளவு சிறந்தது, அவர்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள். எனவே, சேவாதாரிக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு வழிகாட்டல்கள் கொடுக்கப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் புராதன இராஜ யோகத்தைக் கற்பிக்கவேண்டும். பல மக்கள் அருங்காட்சியகங்களுக்கும் கண்காட்சிகளுக்கும் உங்களிடம் வருவார்கள். நீங்கள் மிகச் சிறந்த பணியைச் செய்வதாக அவர்கள் தங்கள் கருத்தை எழுதுவார்கள். எவ்வாறாயினும், அவர்களே புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சிறிதளவு புரிந்துகொண்டாலும் வருவார்கள். எனினும், ஏழைகளே புரிந்துகொள்ள முயற்சிப்பதுடன் தங்களது பாக்கியத்தைச் சிறந்ததாக ஆக்கிக்கொள்கின்றனர். செல்வந்தர்கள் எந்த முயற்சியையும் செய்வதில்லை. அவர்கள் மிகவும் சரீர உணர்வுடையவர்களாக இருப்பதால், நாடகத்தின்படி பாபா அவர்களுக்குத் தண்டனை கொடுப்பது போன்றுள்ளது. எவ்வாறாயினும், அவர்களினூடாகவே ஓசையை நீங்கள் பரப்ப வேண்டும். வெளிநாட்டவர்கள் இந்த ஞானத்தைப் பெறுவதில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இதனைச் செவிமடுப்பதால் அவர்கள் மிகவும் சந்தோஷமடைவார்கள். நீங்கள் அரசாங்க ஊழியர்களின் மூலம் பெருமளவு முயற்சி செய்கின்றீர்கள், எனினும், அவர்களுக்கு நேரமிருப்பதில்லை. அவர்கள் வீட்டிலிருக்கும்பொழுதே காட்சிகளைப் பெற்றாலும் எதுவுமே அவர்களின் புத்தியில் பதிவதில்லை. ஆகவே, பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு அறிவுரை கூறுகின்றார்: சிறந்த அபிப்பிராயங்களைச் சேகரித்து, அதன் பின்னர் அவர்களின் அபிப்பிராயங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை உருவாக்குங்கள். பின்னர் நீங்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கி, அவர்களுக்குக்; கூறலாம்: அனைவரும் இதனை எந்தளவிற்கு விரும்புகின்றனர் எனப் பாருங்கள்! வெளிநாட்டவர்களும், பாரத மக்களும் இலகு இராஜ யோகத்தைப் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். இலகு இராஜயோகத்தின் மூலம் பாரதம் தேவர்களின் சுவர்க்க இராச்சியத்தைக் கோரிக்கொள்கின்றது. ஆகவே, மாநாடுகள் போன்றவை இடம்பெறத்தக்கதாக அரசாங்க இல்லத்தில் நீங்கள் ஏன் அருங்காட்சியகத்தை தயார்செய்யக்கூடாது? குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவர்களின் புத்தி அந்தளவிற்கு விரைவில் மென்மையாகாததால் அதற்குக் காலம் எடுக்கும். அவர்களின் புத்தியில் ஒரு கோட்றிச் பூட்டு போடப்பட்டுள்ளது. ஓசை இப்பொழுதே பரப்பப்படுமாயின், புரட்சி ஏற்பட்டுவிடும். ஆம், அது நிச்சயமாக இடம்பெறும். அவர்களிடம் கூறுங்கள்: ஓர் அரசாங்க இல்லத்தில் மியூசியம் இருக்குமாயின் வெளிநாட்டவர்கள் பலரும் வந்து புரிந்துகொள்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள், ஆகவே நீங்கள் இதனைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆத்ம உணர்வில் இருப்பவர்கள், ஏழை மக்களை எவ்வாறு புரியவைத்து அவர்களைத் தந்தையிடமிருந்து ஆஸ்தியைக் கோர வைப்பது என்பதைப் பற்றிச் சிந்திப்பார்கள். எவ்வித செலவுமின்றி இராச்சியத்தை நீங்கள் கோரிக்கொள்ளலாம் என எழுதுங்கள். எனவே, சில நல்ல குழந்தைகள் வரும்பொழுது அவர்கள் தங்களது அபிப்பிராயத்தைக் கூறுவார்கள். திறப்பு விழாவிற்கு பிரதி பிரதம மந்திரி வருகின்றார். பிரதம மந்திரியும் ஜனாதிபதியும்கூட பின்னர் வருவார்கள். ஏனெனில் இந்த ஞானம் எவ்வளவு அற்புதமானதென்றும், இவ்வாறே உண்மையான அமைதி ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர்களுக்குக் கூறப்படும். அது நிச்சயமாகச் சரியானதாகவே தோன்றுகின்றது. அது சரியானதெனத் தென்படுமளவிற்கு விளக்கம் உள்ளது. இன்று அது சரியாகத் தோன்றவில்லையாயினும், நிச்சயமாக நாளை சரியானதாகத் தோன்றும். பாபா தொடர்ந்தும் உங்களுக்குக் கூறுகின்றார்: முக்கியஸ்தர்களிடம் செல்லுங்கள். நீங்கள் மேலும் முன்னேறும்போது, அவர்களும் புரிந்துகொள்வார்கள். மனிதர்களின் புத்தி தமோபிரதான் ஆகிவிட்டது. இதனாலேயே அவர்கள் தவறான செயல்களைச் செய்கின்றனர். நாளுக்கு நாள் அவர்கள் மேலும் தமோபிரதானாகின்றனர். அந்த விகாரமான வியாபாரத்தை நிறுத்தி, முன்னேற்றமடையுங்கள் எனக் கூறுவதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த முயற்சிக்கின்றீர்கள். உங்களைத் தூய தேவர்களாக்குவதற்காகவே தந்தை வந்துள்ளார். அரசாங்க இல்லத்தில் ஒரு மியூசியம் இருக்கின்ற நாள் நிச்சயமாக வரும். அவர்களிடம் கூறுங்கள்: எங்களது சொந்தச் செலவுகளை நாங்களே கவனித்துக்கொள்வோம். அரசாங்கம் எந்தப் பணமும் கொடுக்காது. ஒவ்வொரு அரசாங்க இல்லத்திலும்; உங்களுடைய சொந்தச் செலவில் மியூசியத்தை கட்ட முடியும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறவேண்டும். அது ஓர் அரசாங்க இல்லத்தில் ஆரம்பித்தால், ஏனைய அனைத்துக் கட்டடங்களிலும் இடம்பெறும். எவ்வாறாயினும், இந்த ஞானத்தை விளங்கப்படுத்துவதற்கும் ஒருவர் தேவைப்படுவார். அவர்களிடம் கூறுங்கள்: யாராவது வந்து உங்களுக்குப் பாதையைக் காட்டுவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் ஒரு சதமேனும் செலவழிக்காமல் உங்கள் வாழ்க்கையை உருவாக்குவதற்கான பாதையை நாம் காட்டுவோம். இவ்விடயங்கள் எதிர்காலத்தில் நடக்கும். தந்தை குழந்தைகளாகிய உங்கள் மூலமாகவே இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். தங்களை மகாவீர்களாகக் கருதுகின்ற மிக நல்ல குழந்தைகளையும் மாயை பற்றிக்கொள்கின்றாள். இலக்கு மிக உயர்வானது. நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தக் குத்துச் சண்டையும் சற்றும் குறைந்ததல்ல. இது அதி சக்தி வாய்ந்த குத்துச் சண்டையாகும். இதுவே இராவணனை வெற்றி கொள்வதற்கான யுத்த களமாகும். நீங்கள் சற்றேனும் சரீர உணர்வைக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் இந்தச் சேவையை அல்லது அந்தச் சேவையைச் செய்கின்றீர்கள் என நினைக்கக்கூடாது. நீங்கள் இறை சேவகர்கள். நீங்கள் அனைவருக்கும் இச்செய்தியைக் கொடுக்கவேண்டும். இதற்குப் பெருமளவு மறைமுகமான முயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் ஞானத்தாலும், யோக சக்தியாலும் உங்களுக்கே விளங்கப்படுத்துங்கள். இதில், நீங்கள் மறைமுகமாக இருந்து, ஞானக்கடலையும் கடையுங்கள். அப்பொழுதே உங்கள் போதை அதிகரிக்கும். ஒவ்வொரு கல்பத்திலும் பாரத மக்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றார்கள் என்பதை நீங்கள் அன்புடன் விளங்கப்படுத்த வேண்டும். 5000 வருடங்களுக்கு முன்னர் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. இப்பொழுது இது விபச்சார விடுதி எனப்படுகின்றது. சத்தியயுகம் சிவாலயமாக இருந்ததுடன் அது சிவபாபாவினாலேயே ஸ்தாபிக்கப்பட்டது. இது இராவணனால் ஸ்;தாபிக்கப்பட்ட இராச்சியமாகும். வேறுபாடு இரவு பகலைப் போன்றது. தாங்கள் உண்மையில் என்னவாகிவிட்டோம் என்பதைக் குழந்தைகள் உணர்கின்றனர். தந்தை உங்களைத் தனக்குச் சமமானவர்களாக்குகின்றார். ஆத்ம உணர்வுக்கு வருவதே பிரதான விடயமாகும். ஆத்ம உணர்விலிருந்து, இன்று நான் இன்ன இன்ன பிரதம மந்திரியிடம் சென்று விளங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருங்கள். நான் அவருக்கு திருஷ்டி கொடுத்தால் அவரால் ஒரு காட்சியைப் பெறமுடியும். நீங்கள் அவருக்கு திருஷ்டி கொடுக்கலாம். நீங்கள் ஆத்ம உணர்வில் இருந்தால், உங்கள் மின்கலம் தொடர்ந்தும் நிரம்பும். நீங்கள் ஆத்ம உணர்விலிருந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறு தந்தையுடன் யோகம் செய்தால் மாத்திரமே உங்கள் மின்கலம் நிரப்பப்படும். ஏழைகள் தந்தையைப் பெருமளவு நினைவு செய்வதனால் அவர்களின் மின்கலம் மிக விரைவில் நிரப்பப்படும். நீங்கள் ஞானத்தில் மிகவும் திறமைசாலிகளாக இருக்கலாம். ஆனால், யோகம் குறைவாக இருந்தால்; உங்கள் மின்கலம் நிரம்பாது. ஏனெனில், சரீரத்தின் அகங்காரம் பெருமளவு இருப்பதாலாகும். யோகம் இல்லையென்பதே அதன் அர்த்;தமாகும். இதனாலேயே ஞான அம்புகளில் சக்தி இருப்பதில்லை. வாளிலும் சக்தி இருக்கின்றது. ஒரு வாள் 10 ரூபாயாகவும் இன்னொரு வாள் 50 ரூபாயாகவும் இருக்கலாம். குரு கோவிந் சிங்கினது வாள் (சீக்கியர்களின் 10வது குரு) நினைவு கூரப்படுகின்றது. இதில் வன்முறை என்ற கேள்விக்கே இடமில்லை. தேவர்கள் இரட்டை அஹிம்சாவாதிகள். இன்று, பாரதம் இவ்வாறு இருக்கின்றது, ஆனால் நாளை அது அவ்வாறு ஆகிவிடும், ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்யவேண்டும். நேற்று, நீங்கள் இராவண இராச்சியத்தில் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தீர்கள். இன்று, நீங்கள் பரமதந்தை பரமாத்மாவுடன் இருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் இறை குடும்பத்திற்குரியவர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் தேவ குடும்பத்திற்கு உரியவர்களாக இருப்பீர்கள். கடவுளே இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் கடவுளிடமிருந்து பெருமளவு அன்பைப் பெறுகின்றீர்கள். அரைக்கல்பமாக இராவணனின் அன்பைப் பெற்றதால், நீங்கள் குரங்குகள் ஆகினீர்கள். இப்பொழுது, எல்லையற்ற தந்தையின் அன்பினைப் பெறுவதால் நீங்கள் தேவர்களாகின்றீர்கள். அது 5000 வருடங்களுக்கான கேள்வியாகும். அவர்கள் நூறாயிரக்கணக்கான வருடங்களைப்பற்றிப் பேசியுள்ளார்கள். இவரும் உங்களைப் போன்று பூஜிப்பவராகவே இருந்தார். அவர் விருட்சத்தின் உச்சியில் நிற்கின்றார். சத்தியயுத்தில், உங்களிடம் எல்லையற்ற செல்வம் இருந்தது. அத்துடன், கட்டப்பட்ட ஆலயங்களிலும் எல்லையற்ற செல்வம் இருந்தது. அந்த ஆலயங்கள் பின்னர் கொள்ளையடிக்கப்பட்டன. பல ஆலயங்கள் உள்ளன. பிரஜைகளுக்கும் ஆலயங்கள் உள்ளன. தற்சமயம் பிரஜைகளே உண்மையில் அதி செல்வந்தர்களாக உள்ளனர். ஆட்சியாளர்கள் பிரஜைகளிடமிருந்தே கடன் வாங்குகின்றனர். இது மிக அழுக்கான உலகமாகும். கல்கத்தாவே அனைத்திலும் அதி அழுக்கான பிரதேசமாகும். அதனை மாற்றுவதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்யவேண்டும். ஒருவர் எதைச் செய்கின்றாரோ, அதற்கான பலனைப் பெற்றுக் கொள்கின்றார். சரீர உணர்வு இருக்குமாயின், நீங்கள் வீழ்ந்துவிடுவீர்கள். மன்மனாபவ என்பதன் அர்த்தத்தை மக்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் வெறுமனே செய்யுள்களை மனப்பாடம் செய்கின்றனர். அவர்கள் எந்த ஞானத்தையும் கொண்டிருப்பதில்லை. பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே ஞானத்தைக் கொண்டுள்ளீர்கள். வேறு எந்த மார்க்கத்தை சார்ந்தவர்களாலும் தேவர்களாக முடியாது. பிரஜாபிதா பிரம்ம குமார் அல்லது குமாரியான பிராமணர் ஆகாமல் ஒருவரால் எவ்வாறு தேவராக முடியும்? முன்னைய கல்பத்தில் இவ்வாறு ஆகியவர்களே மீண்டும் அவ்வாறு ஆகுவார்கள். அதற்குக் காலம் எடுக்கும். விருட்சம் வளர்ந்து மிகவும் பெரிதாகின்றது. ஓர் எறும்பைப் போன்று ஊர்வதிலிருந்து, நீங்கள் பறக்கும் ஸ்திதியை அடைவீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, தந்தையை நினைவு செய்வதுடன் சுயதரிசனச் சக்கரத்தையும் சுழற்றுங்கள். 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் மாற்றமடைந்து தேவர்களாகிப் பின்னர் சத்திரியர் ஆகுவீர்கள். சூரிய வம்சம் சந்திர வம்சம் எனும் பதங்களை எவருமே புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு விளங்கப்படுத்த நீங்கள் முயற்சி செய்யவேண்டும். எவ்வாறாயினும், அவர்களுக்குப் புரியவில்லையெனில், அவர்களுக்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதே அதன் அர்த்தமாகும். எவ்வாறாயினும், அவர்கள் வருவார்கள். பிரம்மகுமாரிகளைப் பற்றி வெளியில் தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளார்கள் என அவர்கள் நினைக்கின்றனர். எனினும், அவர்கள் உள்ளே வந்து, நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதைப் பார்த்ததும் கூறுவார்கள்: இவர்கள் மிக நல்ல பணியையே செய்கின்றார்கள். மனிதர்களின் நடத்தையைச் சீர்திருத்துகின்றார்கள்;. தேவர்களின் நடத்தை எவ்வளவு அழகாக இருக்கின்றது எனப் பாருங்கள்! அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். பாபா கூறுகின்றார்: காமமே உங்கள் கொடிய எதிரி. அந்த ஐந்து விகாரங்களினாலேயே உங்கள் நடத்தை சீரழிந்துவிட்டது. நீங்கள் விளங்கப்படுத்தும்பொழுது, அவர்கள் நல்லவர்களாகின்றனர், ஆனால் அவர்கள் வெளியே சென்றவுடன் அனைத்தையும் மறந்துவிடுகின்றனர். ஒரு கழுதையை நீங்கள் எத்தனை தடவைகள் அலங்கரித்தாலும் அது மீண்டும் அழுக்காகின்றது என இதனாலேயே கூறப்பட்டுள்ளது. பாபா எவரையும் அவதூறு செய்யவில்லை, அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்கள் செயல்கள் தெய்வீகமானதாக இருக்கட்டும். நீங்கள் ஏன் கோபமடைந்து குரைக்க ஆரம்பிக்கின்றீர்கள்? சுவர்க்கத்தில் கோபம் கிடையாது. தந்தை தனிப்பட்ட முறையில் எதையாவது விளங்கப்படுத்தும்பொழுதெல்லாம் அவர் ஒருபொழுதும் கோபமடைந்ததில்லை. பாபா அனைத்தையும் பெருமளவு சீர்திருத்தத்துடன் விளங்கப்படுத்துகின்றார். நாடகம் நியதிக்கேற்ப மிகச் சரியாகவே நகர்கின்றது. நாடகத்தில் ஒருபொழுதும் எந்தத் தவறும் இருப்பதில்லை. அது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். முன்னர் இடம்பெற்ற எந்தப் பாகமும் 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இடம்பெறும். சரிந்து வீழ்ந்த மலைகள் மீண்டும் எவ்வாறு உருவாகும் எனச் சிலர் வியப்படைகின்றனர். நீங்கள் ஒரு நாடகத்தைப் பார்க்கும்போது, ஒரு மாளிகை இடிந்து விழலாம். பின்னர் நாடகம் மீண்டும் இடம்பெறும்பொழுது அந்த மாளிகை இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அதுபோன்றே, இவையனைத்தும் அவ்வாறே மீண்டும் நடைபெறும். புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு மூளை தேவைப்படுகின்றது. சிலரது புத்தியினால் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். இது உலகின் வரலாறும் புவியியலும் ஆகும். இராம இராச்சியத்தில் தேவர்களின் இராச்சியமே இருந்தது. அவர்களே பூஜிக்கப்பட்டவர்கள். நீங்களே பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாயும் பின்னர் நீங்களே பூஜிப்பவர்களாகவும் ஆகுகின்றீர்கள் என்பதைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். 'ஹம் சோ" என்பதன் அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்களே தேவர்களாகிப் பின்னர் சத்திரியர் போன்றோர் ஆகுகின்றீர்கள். இது குத்துக்கரண விளையாட்டாகும். இதனை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த முயற்சி செய்யவேண்டும். உங்கள் வியாபாரங்களை நிறுத்துங்கள் என பாபா கூறுவதில்லை. இல்லை. சதோபிரதான் ஆகுங்கள். வரலாறினதும் புவியியலினதும் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதனை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். மன்மனாபவ ஆகுவதே பிரதான விடயமாகும். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்தால் சதோபிரதான் ஆகுவீர்கள். நினைவு யாத்திரை முதற்தரமானதாகும். தந்தை கூறுகின்றார்: நான் குழந்கைளாகிய உங்கள் அனைவரையும் என்னுடன் திரும்ப அழைத்துச் செல்வேன். சத்தியயுகத்தில், வெகு சில மனிதர்களே இருப்பார்கள். கலியுகத்தில், எண்ணற்ற மனிதர்கள் உள்ளனர். யார் அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்வார்? முழுக்காட்டையும் யார் சுத்தப்படுத்துவார்? தோட்டத்து அதிபதி. தந்தை படகோட்டி என்றும் அழைக்கப்படுகின்றார். அவரே அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவித்து அக்கரைக்குக் கொண்டு செல்கின்றார். இக்கல்வி மிக இனிமையானது. ஏனெனில் இந்த ஞானமே உங்கள் வருமானத்திற்கான மூலாதாரமாகும். நீங்கள் எல்லையற்ற பொக்கிஷங்களைப் பெறுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தைச் சார்;ந்தவர்கள் எதையுமே பெறுவதில்லை. இங்கு எவரது பாதத்தையும் வணங்குதல் என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கு, மக்கள் குருமார்களின் முன் சென்று அவர்களை வீழ்ந்து வணங்குகின்றனர். தந்தை அவை அனைத்திலுமிருந்து உங்களை விடுவிக்கின்றார். அத்தகைய தந்தையை நீங்கள் நினைவு செய்யவேண்டும். அவரே உங்கள் தந்தை, ஆகவே, நீங்கள் நிச்சயமாக உங்கள் ஆஸ்தியை உங்கள் பாபாவிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இந்த சந்தோஷத்தைக் கொண்டுள்ளீர்கள். ஒருவர்; எழுதினார்: நாங்கள் ஓர் செல்வந்தரிடம் சென்றபொழுது, நாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்தமையால் சங்கடப்பட்டோம். பாபா கூறுகின்றார்: நீங்கள் ஏழைகளாக இருப்பது மிகவும் நல்லது. ஏனெனில், செல்வந்தராக இருந்தீர்களாயின், நீங்கள் இங்கு வந்திருக்கவே மாட்டீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இறை குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற சந்தோஷத்திலும் போதையிலும் சதா நிலைத்திருங்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் அவரின் அன்பைப் பெறுகின்றீர்கள். இந்த அன்பின் மூலமாகவே நீங்கள் தேவர்களாகின்றீர்கள்.
2. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட இந்நாடகத்தை மிகச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். இதில் எத்தவறும் இருக்க முடியாது. நடந்து முடிந்த எந்தப் பாகமும் மீண்டும் இடம்பெறும். இவ்விடயத்தை ஒரு தெளிவான புத்தியுடன் புரிந்துகொண்டால் நீங்கள் ஒருபொழுதும் கோபப்படமாட்டீர்கள்.
ஆசீர்வாதம்:
மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகி, ஒரு மகாதானியாக மேன்மையான ஞான பொக்கிஷங்களை தானம் செய்வீர்களாக.
தந்தை ஞானக்கடலாக இருப்பதைப் போன்றே, நீங்கள் மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகி சதா ஞானத்தை அனைவருக்கும் தொடர்ந்தும் தானம் செய்ய வேண்டும். குழந்தைகளாகிய உங்களிடம் அத்தகைய ஞான பொக்கிஷங்கள் உள்ளன. அந்த பொக்கிஷங்களால் உங்களை நிரப்பி, உங்கள் நினைவின் அனுபவத்தினால் பிறருக்கு சேவை செய்யுங்கள். ஒரு மகாதானியாகி, தொடர்ந்தும் நீங்கள் பெற்ற பொக்கிஷங்களை தானம் செய்யுங்கள், ஏனெனில், இந்த பொக்கிஷங்களை நீங்கள் எந்தளவிற்கு தானம் செய்கிறீர்களோ அந்தளவிற்கு அவை அதிகரிக்கும். மகாதானி என்றால் கொடுப்பது அல்ல மென்மேலும் உங்களை நிரப்பிக் கொள்வது என்றே அர்த்தமாகும்.சுலோகம்:
ஜீவன் முக்தி அடைவதுடன், உங்கள் சரீரத்தில் இருந்து பற்றற்றவர் ஆகுங்கள், ஏனெனில் சரீரமற்றவர் ஆகுதலே முயற்சியின் இறுதி ஸ்திதியாகும்.