20.01.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 12.04.84 Om Shanti Madhuban
பிராமண வாழ்க்கையின் அத்திவாரம் தூய்மையே.
இன்று, பாப்தாதா புனித அன்னங்களைப் பார்க்கிறார். ஒவ்வொரு புனித அன்னமும் எந்தளவிற்குப் புனிதமானவர்கள் ஆகியுள்ளார்கள் என்றும், எந்தளவிற்கு ஒவ்வொருவரும் அன்னங்கள் ஆகியுள்ளார்கள் என்றும் பார்க்கிறார். எந்தளவிற்கு நீங்கள் தூய்மையை. அதாவது, புனிதமாகுவதற்குத் தேவையான சக்தியை உங்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறீர்கள்? அதாவது, உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் கடைப்பிடிக்கிறீர்கள்? ஒவ்வோர் எண்ணமும் புனிதமாக உள்ளதா, அதாவது, அது தூய்மை சக்தியால் நிரம்பியுள்ளதா? தூய்மை எண்ணங்களால், உங்களால் தூய்மையற்ற எண்ணங்களைக் கொண்டுள்ள எந்தவோர் ஆத்மாவையும் இனங்கண்டு மாற்ற முடிகிறதா? தூய்மை சக்தியால் உங்களால் எந்தவோர் ஆத்மாவினதும் பார்வை, மனோபாவம் மற்றும் செயல்களை மாற்ற முடிகிறதா? இந்த மகத்தான சக்தியுடன் நீங்கள் முகங்கொடுக்கும்போது, தூய்மையற்ற எண்ணங்களாலும் உங்களைத் தாக்க முடியாது. எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் தோல்வி அடையும்போதே, ஏனைய மனிதர்களாலும் அதிர்வலைகளாலும் தோற்கடிக்கப்படுகிறீர்கள். வேறு எவருடனும் உறவுமுறையில் அல்லது தொடர்பில் நீங்கள் தோற்றுப்போனால், நீங்கள் தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் பேணுவதில் தோற்றுவிட்டீர்கள் என்பதையே அது நிரூபிக்கிறது. இதனாலேயே நீங்கள் எதாவதொரு உறவுமுறையால் அல்லது தொடர்பால் தோற்கடிக்கப்படுகிறீர்கள். தூய்மையைப் பொறுத்தவரை தோற்றுப் போவதன் விதையானது, யாராவது ஒருவரின் ஆதிக்கத்திற்கு அல்லது அவரின் நற்குணங்கள், சுபாவம், ஆளுமை அல்லது சிறப்பியல்பின் ஆதிக்கத்திற்கு உட்படுவதாகும். தனிநபரின் சிறப்பியல்பு, நற்குணம் அல்லது சுபாவம், தந்தையால் வழங்கப்பட்ட ஒரு சிறப்பியல்பு ஆகும். அதாவது, அது இறைவனால் வழங்கப்பட்ட பரிசு ஆகும். யாராவது ஒருவரின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுவதெனில் ஏமாற்றப்படுதல் என்று அர்த்தம். ஏமாற்றப்படுதல் என்றால் துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்று அர்த்தம். தூய்மையின்மையின் சக்தியானது கானல் நீரைப் போன்றதொரு சக்தியே. இதைத் தொடர்புகளின் மூலமும் உறவுமுறைகளின் மூலமும் இலகுவாக அனுபவம் செய்ய முடியும். அது உங்களைக் கவருகிறது. நீங்கள் நல்லவற்றால் கவரப்பட்டதாக நினைக்கிறீர்கள். இதனாலேயே, ‘நான் இவரை மிகவும் விரும்புகிறேன். எனக்கு இவரின் நற்குணங்களும் சுபாவமும் மிகவும் விருப்பம். எனக்கு இவரின் ஞானம் பிடிக்கும். இவர் யோகம் செய்தால் எனக்கு விருப்பம். இவரிடமிருந்து நான் சக்தியையும் ஒத்துழைப்பையும் பெறுகிறேன். எனக்கு இவரிடமிருந்து அன்பு கிடைக்கிறது’ என்ற வார்த்தைகளை நீங்கள் கூறுகிறீர்கள். அல்லது இவ்வாறு நினைக்கிறீர்கள். நீங்கள் தற்காலிகமான பேற்றையே பெறுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள். நீங்கள் அத்திவாரமான அருள்பவரை, விதையானவரை மறந்துவிட்டு, பலவர்ணக் கிளையைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுகிறீர்கள். அவ்வாறாயின், உங்களின் நிலைமை எவ்வாறிருக்கும்? அத்திவாரம் உங்களுக்கு இல்லாதபோது, கிளை உங்களை ஊஞ்சலாடச் செய்யுமா அல்லது விழச் செய்யுமா? நீங்கள் விதையானவரிடமிருந்து, அதாவது, அருள்பவரிடமிருந்து சகல உறவுமுறைகளின் இனிமையையும் சகல பேறுகளையும் பெறும்வரை, நீங்கள் தொடர்ந்து வெவ்வேறு கிளைகளின் கானல் நீரைப் போன்ற பேறுகளால் ஏமாற்றப்படுவீர்கள். சிலவேளைகளில் மனிதர்களால், சிலவேளைகளில் சடப்பொருளாலான சௌகரியங்களால், சிலவேளைகளில் சூழலின் அதிர்வலைகளால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். இந்த முறையில் ஆதிக்கத்திற்கு உட்படுதல் என்றால், என்றும் நிலைத்திருக்கும் பேறுகளைப் பெறாமல் விடுதல் என்று அர்த்தம். உங்களிடம் தூய்மை சக்தி இருக்கும்போது, உங்களுக்கு என்ன ஸ்திதி வேண்டுமோ, என்ன பேறுகள் வேண்டுமோ, எந்தப் பணியில் நீங்கள் வெற்றி பெற விரும்புகிறீர்களோ, அவை அனைத்தும் உங்களுக்கு முன்னால் நீங்கள் விரும்பும்போது ஒரு பணியாளைப் போன்று வந்து நிற்கும். கலியுகத்தின் இறுதியிலும், ரஜோபிரதான் தூய்மையின் சக்தியைக் கிரகித்துள்ள, பெயரளவில் மகாத்மாக்களாக இருப்பவர்களுக்கு இயற்கையின் கூறுகள் பணியாளர்களாகச் சேவகம் செய்வதை நீங்கள் காண்கின்றீர்கள். இப்போதும், மகாத்மாக்கள் என்ற அவர்களின் பெயர் தொடர்கிறது. இப்போதும், அவர்கள் பூஜிக்கப்படுகிறார்கள். தூய்மையற்ற ஆத்மாக்கள் அவர்களுக்கு முன்னால் தலைவணங்குகிறார்கள். எனவே, இறுதியில் உள்ள தூய்மை சக்தி எத்தனை மகத்தானது என்றும் இறைவனிடமிருந்து நீங்கள் பெற்ற சதோபிரதான் தூய்மை எத்தனை சக்திவாய்ந்தது என்றும் நினைத்துப் பாருங்கள். இந்த மேன்மையான தூய்மைச் சக்தியின் முன்னால், தூய்மையின்மை உங்களுக்குத் தலைவணங்க மட்டும் அன்றி, உங்களின் காலடிகளின் கீழேயே உள்ளது. தூய்மையின்மையின் அசுர சக்தி, ஒரு சக்தியின் காலடியில் காட்டப்படுகிறது. தோல்வி அடைந்து உங்களின் காலடிகளில் கீழ் இருக்கும் ஒன்றால் எவ்வாறு உங்களைத் தோற்கடிக்க முடியும்?
பிராமண வாழ்க்கையில் தோற்கடிக்கப்படுவதெனில், பெயரளவில் மட்டும் பிராமணராக இருத்தல் என்று அர்த்தம். இதில் கவனக்குறைவானவர் ஆகாதீர்கள். பிராமண வாழ்க்கையின் அத்திவாரம், தூய்மை சக்தியே ஆகும். அத்திவாரம் பலவீனமாக இருந்தால், பேறுகளின் 21 மாடிக்கட்டடம் எவ்வாறு நிலைத்திருக்கும்? அத்திவாரமே ஆடினால், பேறுகளின் அனுபவம் எல்லா வேளையும் இருக்காது. அதாவது, உங்களால் அசைக்கமுடியாதவராகவும் இருக்க முடியாது. இந்த யுகத்தினதும் பிறப்பினதும் மகத்தான பேற்றினையும் உங்களால் அனுபவம் செய்ய முடியாது. நீங்கள் இந்த யுகத்தினதும் மேன்மையான பிறப்பினதும் புகழைப் பாடும் ஞானம் நிறைந்த பக்தர்களாகவே ஆகுவீர்கள். அதாவது, உங்களுக்குப் புரிந்துணர்வு இருக்கும். ஆனால், நீங்கள் அவ்வாறு ஆகமாட்டீர்கள். இதுவே ஞானம்நிறைந்த பக்தர் எனப்படுகிறது. பிராமணர் ஆகியபின்னர், சகல பேறுகளினதும் சகல சக்திகளினதும் ஆஸ்தியையும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் அனுபவம் செய்யாவிட்டால், உங்களை என்னவென்று அழைப்பது? எதுவும் அற்ற ஆத்மா என்றா அல்லது பிராமண ஆத்மா என்றா? இந்தத் தூய்மையை அதன் வேறுபட்ட ரூபங்களுடன் மிக நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களின் மீதே கண்டிப்பாக இருங்கள். வெறுமனே அனைத்தையும் செய்பவராக இருக்காதீர்கள். நீங்கள் கருவி ஆத்மாக்களுடனும் தந்தையுடனும் கெட்டிக்காரர்களாக இருப்பதற்கு முயற்சி செய்கிறீர்கள். ‘இது எல்லா வேளையும் நிகழுகிறது. யார் இதுவரை இவ்வாறு ஆகியுள்ளார்கள்?’ அல்லது, ‘இது தூய்மையின்மை இல்லை. ஆனால் மகத்துவம். இது சேவைக்குரிய ஒரு வழிமுறை’ என நீங்கள் கூறுகிறீர்கள். ‘நான் கவரப்படவில்லை. ஆனால் ஒத்துழைப்பைப் பெறுகிறேன். அவனோ அல்லது அவளோ உதவியாளராக இருப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்’. நீங்கள் தந்தையை மறந்தவுடனேயே, மாயையின் குண்டு உங்களைத் தாக்குகிறது. அல்லது, உங்களை விடுவிப்பதற்காக, ‘நான் இதைச் செய்யவில்லை. ஆனால், மற்றவரே அதைச் செய்கிறார்’ என நீங்கள் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் தந்தையை மறந்தால், நீங்கள் அவரை அவரின் தர்மராஜின் ரூபத்தில் சந்திப்பீர்கள். உங்களால் ஒருபோதும் தந்தை என்ற உறவுமுறையின் சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. ஆகவே, எதையும் மறைக்காதீர்கள். இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மற்றவர்களைக் குறைசொல்லாதீர்கள். கானல்நீரின் கவர்ச்சியால் ஏமாற்றப்படாதீர்கள். தூய்மை என்ற இந்த அத்திவாரத்தில், பாப்தாதா தர்மராஜினூடாக நூறுமடங்கு, பலமில்லியன் மடங்கு தண்டனையை வழங்குவார். இதில் எந்தவிதச் சலுகைகளும் கிடையாது. இதில் அவரால் கருணைநிறைந்தவர் ஆகமுடியாது. ஏனெனில், நீங்களே யாராவது ஒருவரால் கவரப்பட்டுத் தந்தையுடனான உறவுமுறையைத் துண்டித்தீர்கள். இறைவனின் ஆதிக்கத்தில் இருந்து அப்பால் சென்று, ஆத்மாக்களின் ஆதிக்கத்திற்கு உட்படுதல் என்றால் உங்களுக்குத் தந்தையைத் தெரியாது, நீங்கள் தந்தையை இனங்கண்டு கொள்ளவில்லை என்றே அர்த்தம். தந்தை இத்தகைய ஆத்மாக்களின் முன்னால் தந்தையின் ரூபத்தில் இருக்க மாட்டார். ஆனால் தர்மராஜின் ரூபத்திலேயே இருப்பார். எங்கு பாவம் உள்ளதோ, அங்கு தந்தை இருக்கமாட்டார். ஆகவே, கவனக்குறைவானவர் ஆகாதீர்கள். இதைச் சிறியதொரு விடயமாகக் கருதாதீர்கள். ஒருவரின் ஆதிக்கத்திற்கு உட்படுதல், ஆசைகளைக் கொண்டிருத்தல் என்றால், காமம் என்ற விகாரத்தின் சுவடு உள்ளதென்று அர்த்தம். ஏதாவது ஆசை இல்லாவிட்டால் நீங்கள் கவரப்பட மாட்டீர்கள். அந்த ஆசையே காமம் என்ற விகாரம் ஆகும். அதுவே மகத்தான எதிரி ஆகும். அது இரண்டு ரூபங்களில் வருகிறது. ஆசைகள் உங்களை அடிமையாக்கும். அல்லது அவை உங்களுக்குத் துயரத்தைக் கொடுக்கும். எனவே, ‘காமம் என்ற விகாரமே நரகத்தின் வாயில்’ என்ற சுலோகத்தை நீங்கள் உச்சரிப்பதைப் போன்று, எந்த வகையான தற்காலிக ஆசையும் கானல் நீரைப் போன்று ஏமாற்றக்கூடியது என்பதை உங்களின் வாழ்க்கையில் தாரணை ஆக்கிக் கொள்ளுங்கள். ஆசை என்றால் ஏமாற்றக்கூடியது. ஆகவே, இந்த விகாரத்திற்கு, அதாவது, இந்த ஆசைக்குக் கண்டிப்பாக இருங்கள். காளியின் ரூபத்தை எடுங்கள். அன்பான ரூபத்தை எடுத்து, ‘அவர் உதவியற்றிருக்கிறார், அவர் நல்லவர், அவருக்குச் சிறிதளவே இது உள்ளது, அது சரியாகிவிடும்’ என்று கூறாதீர்கள். இல்லை! விகாரங்களுக்கு எதிராக உக்கிர ரூபம் எடுங்கள். மற்றவர்களுக்கு எதிராக அல்ல. ஆனால் உங்களுக்காக. அப்போது மட்டுமே உங்களால் உங்களின் பாவங்களை அழித்து, தேவதை ஆகமுடியும். உங்களால் யோகம் செய்ய முடியாவிடின், சோதித்துப் பாருங்கள்: நிச்சயமாக, மறைந்திருக்கும் ஏதோவொரு விகாரம் உங்களைத் தன்னை நோக்கி இழுக்கிறது. பிராமண ஆத்மாவால் யோகம் செய்யாமல் இருப்பது என்பது சாத்தியம் இல்லை. பிராமணர் என்றால் ஒரேயொருவருக்குச் சொந்தமானவர் என்று அர்த்தம். நீங்கள் அனைவரும் ஒன்றே. அவ்வாறாயின், நீங்கள் எங்கே செல்வீர்கள்? வேறு எதுவும் இல்லையென்றால், நீங்கள் வேறு எங்கே செல்வீர்கள்? அச்சா.
வெறுமனே பிரம்மச்சரியம் மட்டுமல்ல. ஏனெனில், காமம் என்ற விகாரத்திற்கு ஏனைய குழந்தைகளும் இருக்கிறார்கள். பாப்தாதா ஒரு விடயத்தையிட்டு வியப்படைகிறார். ஒரு பிராமணர் தனக்கு இன்னொரு பிராமண ஆத்மாவில் வீணான பார்வையும் விகாரத்தின் மனோபாவமும் உள்ளதென்று கூறுகிறார். இது குடும்பம் என்ற குலத்தை அவமதிப்பதாகும். ‘சகோதரி’ அல்லது ‘சகோதரன்’ என்று நீங்கள் கூறிவிட்டுப் பின்னர் என்ன செய்கிறீர்கள்? ஒருவர் தனது லௌகீக சகோதரியின் மீது தூய்மையற்ற பார்வையை அல்லது தூய்மையற்ற எண்ணங்களைக் கொண்டிருந்தால், அவர் தனது குடும்பத்தின் பெயரையே அவமதிப்பவர் என்றே சொல்லப்படுகிறது. எனவே, இங்கு அது என்னவென்று சொல்லப்படும்? ஒரு பிறவிக்குக் குடும்பத்தை இகழ்பவர்கள் என்று மட்டுமன்றி, பிறவி பிறவியாக இகழ்பவர்கள் என்றே கூறப்படும். அவர்கள் தமது இராச்சிய பாக்கியத்தை எட்டி உதைபவர்கள். இத்தகைய பலமில்லியன் மடங்கு பாவத்தை ஒருபோதும் செய்யாதீர்கள். இது வெறுமனே பாவச் செயல் மட்டுமல்ல. ஆனால், இது அதிகபட்சம் பாவகரச் செயல் ஆகும். ஆகவே, சிந்தித்து, புரிந்து, கவனமாக இருங்கள்! இந்தப் பாவம் உங்களை மரண அரக்கர்கள் போன்று பிடித்துக்கொள்ளும். தற்சமயம், நீங்கள் மிகவும் சுகமான, சௌகரியமான வாழ்க்கை வாழ்வதாக நினைப்பீர்கள். யார் உங்களைப் பார்க்கிறார்கள்? எவருக்கு என்ன தெரியும்? எவ்வாறாயினும், பாவத்திற்கு மேல் பாவம் சேமிக்கப்படுகிறது. இந்தப் பாவங்கள் உங்களை உண்பதற்கு வரும். இதன் பெறுபேறு எத்தனை கடுமையானது என்பதை பாப்தாதா அறிவார். ஒருவர் மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் தனது சரீரத்தை விடுவதைப் போன்று, இந்தப் பாவங்கள் சரீரத்தை விடும்போது, புத்தியில் மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும். இந்தப் பாவத்தின் மரண அரக்கர்கள் எப்போதும் உங்களின் முன்னால் நிற்பார்கள். முடிவு மிகக் கொடூரமானதாகவே இருக்கும். ஆகவே, இந்த வேளையில், தவறுதலாகவேனும் இத்தகைய பாவத்தைச் செய்யாதீர்கள். பாப்தாதா தனக்கு முன்னாலுள்ள குழந்தைகளுக்கு மட்டும் சொல்லவில்லை. ஆனால், அவர் எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரையும் சக்திசாலிகள் ஆக்குகிறார். அவர் உங்களை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்கிறார். புத்திசாலிகளாகவும் ஆக்குகிறார். உங்களுக்குப் புரிகிறதா? இன்னமும், இந்தப் பாடத்தில் அதிகளவு பலவீனம் காணப்படுகிறது. அச்சா.
தமக்குக் கொடுக்கப்பட்ட சமிக்கைகளைப் புரிந்து கொள்பவர்களுக்கும், தமது பாவகரமான எண்ணங்களுக்கும் பாவச் செயல்களுக்கும் காளியின் ரூபத்தை எடுப்பவர்களுக்கும், பல்வேறு வழிகளில் ஏமாற்றப்படுவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்பவர்களுக்கும், சக்திசாலி ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பிரம்மாச்சாரி ஆகுங்கள் - எண்ணங்களிலும் செயல்களிலும் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுபவர் ஆகுங்கள்.
பிரம்மாச்சாரி என்றால் தந்தை பிரம்மாவின் செயற்பாடுகளைப் பின்பற்றுபவர் என்று அர்த்தம். உங்களின் எண்ணங்களினதும் வார்த்தைகளினதும் செயல்களினதும் ஒவ்வொரு பாதச்சுவடும் தந்தை பிரம்மாவின் பாதச்சுவடுகளில் வைக்கப்பட வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தந்தை பிரம்மாவின் செயற்பாடுகள் புலப்பட வேண்டும். உங்களின் எண்ணங்களும் வார்த்தைகளும் செயல்களும் பிரம்மாச்சாரியினுடையதைப் போன்று இருக்க வேண்டும். இந்த முறையில் பிரம்மாச்சாரியாக இருப்பவர்கள், எப்போதும் அகநோக்கில் இருப்பார்கள். அவர்களின் முகத்திலும் நடத்தையிலும் அதீந்திரிய சுகம் காணப்படும். பிரம்மாச்சாரிகளின் ஒவ்வொரு செயலும் பிரம்மா பாபாவின் செயல்களை வெளிப்படுத்தும். அவர்களின் வார்த்தைகள் பிரம்மாவின் வார்த்தைகளை ஒத்ததாகவே இருக்கும். அவர்கள் அனைத்தையும் செய்யும் முறையானது, தந்தை பிரம்மா அனைத்தையும் செய்ததை ஒத்ததாகவே இருக்கும். தந்தை பிரம்மா தனக்குரியதாக்கிக் கொண்ட சம்ஸ்காரம், அவர் தனது சரீரத்தைத் துறக்கும்போது அனைவருக்கும் நினைவூட்டியவை, அதாவது, அவர் அசரீரியாகவும் விகாரமற்றவராகவும் அகங்காரமற்றவராகவும் ஆகிய சம்ஸ்காரம், பிராமணர்களான உங்களினதும் இயல்பான சம்ஸ்காரமாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே உங்களை பிரம்மாச்சாரிகள் என்று அழைக்க முடியும். உங்களின் சம்ஸ்காரங்களும் சுபாவமும் தந்தைக்குச் சமமாக இருக்கும் புதுமையைக் கொண்டிருக்க வேண்டும். அது உங்களின் சுபாவம் எனச் சாக்குப்போக்குச் சொல்லாதீர்கள். ஆனால், உங்களின் சுபாவம் தந்தையின் சுபாவத்தை ஒத்ததாக இருக்க வேண்டும்.
தூய்மைக்கான சத்தியத்தைச் செய்வதெனில், வெறுமனே பிரம்மச்சாரியாக இருப்பது மட்டுமல்ல. ஆனால், நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிரம்மாவைப் போன்று தூய்மையின் அதிர்வலைகளால் நிறைந்திருக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மேன்மையான வாசகமாக இருக்க வேண்டும். அவை சாதாரணமானவையாக இருக்க முடியாது. ஆனால், தனித்துவமான ஆன்மீகத்துடன் இருக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு எண்ணமும் தூய்மையின் முக்கியத்துவத்தால் நிறைந்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கர்மயோகியின் செயலாகப் பார்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு செயலும் யோகத்தால் நிறைந்திருக்க வேண்டும். இதுவே பிரம்மச்சாரியாகவும் பிரம்மாச்சாரியாகவும் ஆகுதல் எனப்படுகிறது.
பிரம்மாபாபா சாதாரணமான சரீரத்தில் இருந்தாலும், அவர் அதிமேன்மையானவராகவே தென்பட்டார் என்பதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள் அல்லது கேட்டிருப்பீர்கள். இப்போதும், சூட்சும ரூபத்திலும், சாதாரணமாக இருந்தாலும், அதிமேன்மையானவராக இருக்கும் பிரகாசம் அவரிடம் உள்ளது. எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள். நீங்கள் சாதாரணமான வேலையைச் செய்து கொண்டிருந்தாலும், உங்களின் ஸ்திதி மேன்மையானதாக இருக்க வேண்டும். உங்களின் முகம் மேன்மையான வாழ்;க்கையின் ஆதிக்கத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அனைவரும் தந்தையைக் காண வேண்டும். இதுவே பிரம்மாச்சாரியாக இருத்தல் எனப்படுகிறது.
தந்தை பிரம்மா முரளியின் மீது விசேடமான அன்பு வைத்திருந்தார். இதனாலேயே, அவர் முரளிதார் ஆகினார். எதிர்கால ஸ்ரீ கிருஷ்ணரும் முரளியை (புல்லாங்குழல்) வாசிப்பதாகக் காட்டப்படுகிறார். எனவே, தந்தை விரும்பியதை நாமும் விரும்புவது உண்மையான அன்பின் அடையாளம் ஆகும். இதுவே தந்தை பிரம்மாவை நேசித்தல், அதாவது, பிரம்மாச்சாரியாக இருத்தல் எனப்படுகிறது.
நீங்கள் எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னரும், எந்த வார்த்தைகளைப் பேசுவதற்கு முன்னரும், எந்த எண்ணங்களைச் சிந்திப்பதற்கு முன்னரும், அவை தந்தை பிரம்மாவினுடையதை ஒத்ததா என முதலில் சோதித்துப் பாருங்கள். அதன்பின்னர், அந்த எண்ணத்தை நினையுங்கள். அந்த வார்த்தையைப் பேசுங்கள். உங்களின் பௌதீக அவயவங்களால் அந்தச் செயலைச் செய்யுங்கள். நீங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் அது நிகழ்ந்துவிட்;டது எனக் கூறாதீர்கள். தந்தை பிரம்மா எதைப் பற்றியாவது சிந்தித்தபின்னரே அல்லது அதைப் பற்றிப் பேசிய பின்னரே செய்யும் சிறப்பியல்பைக் கொண்டிருந்தார். அதேபோன்று தந்தை பிரம்மாவைப் பின்பற்றுபவர்கள் பிரம்மாச்சாரிகள் ஆவார்கள்.
நம்பிக்கையையும் ஆன்மீக போதையையும் கொண்டிருப்பதன் அடிப்படையிலும், நாடகத்தில் அனைத்தும் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருப்பதன் மூலமும் தந்தை பிரம்மா ஒரு விநாடியில் அனைத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்தினார். அவர் எதையும் தனக்கென வைத்திருக்கவில்லை. ஆனால், அவை அனைத்தையும் உபயோகமான முறையில் பயன்படுத்தினார். நீங்கள் இதன் நடைமுறை அத்தாட்சியைக் கண்டீர்கள். கடைசி நாளிலும், அவர் கடிதங்கள் எழுதியும் மேன்மையான வாசகங்களைப் பேசியும் தனது சரீரத்தினூடாகச் சேவை செய்தார். அவரின் கடைசி நாளிலும், அவர் தனது நேரத்தையும் எண்ணங்களையும் சரீரத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினார். எனவே, பிரம்மாச்சாரி ஆகுவதெனில், அனைத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்துதல் என்று அர்த்தம். உபயோகமான முறையில் எதையாவது பயன்படுத்துதல் என்றால் அதை ஒரு மேன்மையான நோக்கத்திற்காகப் பயன்படுத்துதல் என்று அர்த்தம்.
தந்தை பிரம்மா சதா மலர்ச்சிநிறைந்தவராகவும் அதேவேளை முதிர்ச்சியுடனும் நேர்மையாகவும் இருந்ததைப் போன்று, அவர் இரண்டிற்கு இடையேயும் நிலையான சமநிலையைப் பேணியதைப் போன்று, நீங்களும் தந்தையைப் பின்பற்ற வேண்டும். எதையிட்டும் ஒருபோதும் குழப்பம் அடையாதீர்கள். அல்லது எந்தவொரு சூழ்நிலையாலும் உங்களின் மனோநிலை மாறுவதற்கு அனுமதிக்காதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தந்தை பிரம்மாவை சதா பின்பற்றுவதெனில் பிரம்மாச்சாரியாக இருத்தல் என்று அர்த்தம்.
தந்தை பிரம்மாவின் மிக விருப்பத்திற்குரிய சுலோகம், ‘குறைந்தளவு செலவினூடாக மகத்தான பெருமையை அடையுங்கள்’ என்பதே ஆகும். எனவே, குறைந்தளவு செலவினூடாக மகத்தான பெருமையை அடைவதன் மூலம் இதைச் செய்து காட்டுங்கள். குறைந்தளவு செலவு இருக்க வேண்டும். ஆனால். நீங்கள் செலவழித்ததில் இருந்து கிடைக்கும் பேறு மிகவும் அழகானதாக இருக்க வேண்டும். நீங்கள் அதிகளவில் செய்து முடிக்க வேண்டும். ஆனால் அதற்குக் குறைந்தளவு செலவே ஏற்பட வேண்டும். உங்களின் சக்தி அல்லது எண்ணங்களில் அதிகளவைப் பயன்படுத்தக்கூடாது என்பதே இதன் அர்த்தம். நீங்கள் அதிக வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால், நீங்கள் பேசும் குறைந்தளவு வார்த்தைகளினூடாக மகத்தான தெளிவு ஏற்பட வேண்டும். உங்களின் எண்ணங்கள் குறைவாக இருக்க
வேண்டும். ஆனால் அவை சக்திவாய்ந்தவையாக இருக்க வேண்டும். இதுவே குறைந்தளவு செலவில் மகத்தான பெருமையை அடைதல், அதாவது, சிக்கனத்தின் அவதாரமாக இருத்தல் எனப்படுகிறது.
தந்தை பிரம்மா, வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குரியவராக இருப்பதை நடைமுறையில் காட்டினார். அதேபோன்று, தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுபவர்கள், அவரைப் பின்பற்ற வேண்டும். தந்தையைப் போன்று, ஒருபோதும் விரக்தி அடையாமல், எப்போதும் உங்களின் இதயத்தில் சந்தோஷத்துடன் இருக்கும் திடசங்கற்பமான எண்ணத்துடன் இருங்கள். மாயை உங்களை அசைக்க முயற்சி செய்தாலும், நீங்கள் தளம்பல் அடையக்கூடாது. மாயை இமாலய மலை போன்ற பெரியதொரு உருவத்தை எடுத்தாலும், அந்த வேளையில், ஒரு பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடாமல், மலைக்கு மேலே பறந்து செல்லுங்கள். பறக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பவர்களுக்கு, அந்த மலை ஒரு விநாடியில் பஞ்சு போன்று ஆகிவிடும்.
சாகார் தந்தை பிரம்மாவினூடாக நீங்கள் தூய்மையின் ஆளுமையைத் தெளிவாக அனுபவம் செய்தீர்கள். இது தபஸ்யாவை அனுபவம் செய்வதன் அடையாளம் ஆகும். அதேபோன்று, இந்த ஆளுமை உங்களின் முகத்தினூடாகவும் உங்களின் ரூபத்தினூடாகவும் மற்றவர்களால் அனுபவம் செய்யப்பட வேண்டும். தந்தை பிரம்மா பௌதீக ரூபத்தில் கர்ம யோகியின் சின்னமாக விளங்கினார். ஒருவர் எத்தனை மும்முரமாக இருந்தாலும், எவராலும் தந்தை பிரம்மாவைப் போன்று மும்முரமாக முடியாது. உங்களுக்கு எத்தனை பொறுப்புக்கள் இருந்தாலும், தந்தை பிரம்மாவினுடையதைப் போன்ற பொறுப்புக்கள் உங்கள் எவருக்கும் கிடையாது. எனவே, தந்தை பிரம்மா தனது பொறுப்புக்களை நிறைவேற்றும் அதேவேளை கர்மயோகியாக இருந்ததைப் போன்று, அவர் தன்னைச் செய்பவராகக் கருதி, கரன்ஹாராகச் சகல செயல்களையும் செய்ததைப் போன்று, - அவர் தன்னைத் தூண்டுகின்ற ஒருவராக (கரவன்ஹார்) கருதவில்லை - தந்தையைப் பின்பற்றுங்கள். நீங்கள் செய்யும் செயல் எத்தனை பெரியதாக இருந்தாலும், நடன ஆசிரியர் உங்களை நடனமாடச் செய்வதற்கேற்ப நடனம் ஆடுகிறீர்கள் என்று நினையுங்கள். அப்போது நீங்கள் களைப்படைய மாட்டீர்கள் அல்லது குழப்பம் அடைய மாட்டீர்கள். ஆனால் என்றும் சந்தோஷமாக இருப்பீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சத்தியத்தின் சக்தியுடன் சதா சந்தோஷத்தில் நடனமாடும் மகத்தான, சக்திசாலி ஆத்மா ஆகுவீர்களாக.
எங்கு சத்தியம் உள்ளதோ, அங்கு ஆத்மா நடனம் ஆடுவார் எனக் கூறப்படுகிறது. சத்தியம் நிறைந்தவர்கள், அதாவது, சத்தியத்தின் சக்தியைக் கொண்டிருப்பவர்கள் சதா நடனம் ஆடுவார்கள். அவர்கள் ஒருபோதும் வாடுவதில்லை. குழப்பம் அடைவதோ, பயப்படுவதோ அல்லது பலவீனம் அடைவதோ இல்லை. அவர்கள் சதா சந்தோஷத்தில் நடனம் ஆடுவார்கள். அவர்கள் சக்திசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் அனைத்திற்கும் முகங்கொடுக்கும் சக்தியைக் கொண்டிருப்பார்கள். சத்தியம் ஒருபோதும் தளம்பல் அடைவதில்லை. அது அசைக்க முடியாதது. சத்தியப்படகு ஆடும், ஆனால் அது ஒருபோதும் அமிழாது. எனவே, சத்தியத்தின் சக்தியைக் கிரகிக்கும் ஆத்மாக்கள் மகாத்மாக்கள் ஆவார்கள்.சுலோகம்:
ஒரு விநாடியில் மும்முரமான மனதையும் புத்தியையும் நிறுத்துவதே அதிமேன்மையான பயிற்சி ஆகும்.
தந்தை பிரம்மாவிற்குச் சமமாக ஆகுவதற்கான விசேட முயற்சி.
தந்தை பிரம்மா எப்போதும் இறையன்பில் திளைத்திருப்பதைப் போன்று, உங்களின் பிராமண வாழ்க்கையின் அடிப்படையும் இறையன்பே ஆகும். இறையன்பே உங்களின் சொத்து ஆகும். இந்த அன்பானது உங்களின் பிராமண வாழ்க்கையில் முன்னேறச் செய்கிறது. எனவே, சதா அன்புக்கடலில் அமிழ்ந்திருங்கள்.