05.06.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, முதலில், அனைவரிலும் மிக உறுதியாக நீங்கள் பதியச் செய்ய வேண்டிய மந்திரம்: நீங்கள் ஓர் ஆத்மா. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நினைவுசெய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்.

கேள்வி:
நீங்கள் இப்பொழுது செய்கின்ற உண்மையான சேவை என்ன?

8பதில்:
தூய்மையற்றதாகி விட்ட பாரதத்தைத் தூய்மையாக்குவதே உண்மையான சேவையாகும். நீங்கள் எவ்வாறு பாரதத்திற்குச் சேவை செய்கிறீர்கள் என மக்கள் உங்களைக் கேட்டால், அவர்களிடம் கூறுங்கள்: ஸ்ரீமத்திற்கேற்ப, நாங்கள் பாரதத்திற்கு ஆன்மீகச் சேவை செய்கின்றோம். அதன் மூலம் அது இரட்டைக் கிரீடம் உடையதாகுகின்றது. நீங்கள் பாரதத்தில் முன்னர் இருந்த அமைதியையும் செழிப்பையும்; ஸ்தாபிக்கின்றீர்கள்.

ஓம் சாந்தி.
முதலாவது பாடம்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அதுவே “மன்மனாபவ” ஆகும். இது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்யும்பொழுது, அனைத்திற்கும் முதலில் அவர்களுக்கு அல்பாவைப் பற்றிக் கற்பியுங்கள். யாராவது வரும்பொழுது, அவர்களை வேறு எப்படத்திற்கும் அல்லாது, சிவபாபாவின் படத்திற்கு முன்னால் அழைத்துச் செல்லுங்கள். எல்லாவற்றிற்கும் முதலில், அவர்களைத் தந்தையின் படத்திற்கு முன்னால் அழைத்துச் சென்று கூறுங்கள்: பாபா கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். நானே உங்களது பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம குருவும் ஆவேன். அனைவருக்கும் இப்பாடத்தைக் கற்பியுங்கள். இங்கேயே நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் தந்தையாகிய, என்னை நினைவுசெய்யுங்கள். ஏனெனில்; நீங்கள் தூய்மையற்றவர்களாகி விட்டீர்கள், நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை தூய்மையானவர்களாகவும் சதோபிரதானாகவும் ஆகவேண்டும். அனைத்தும் இப்பாடத்தில் உள்ளடங்குகிறது. ஆனால் நீங்கள் அனைவரும் இதனைச் செய்வதில்லை. பாபா கூறுகிறார்: அனைத்திற்கும் முதலில் அவர்களை சிவபாபாவின் படத்தின் முன்னிலையில் அழைத்துச் செல்லுங்கள். இவர் எங்களுடைய எல்லையற்ற பாபா ஆவார். பாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதினால், உங்கள் படகு அக்கரை சேரும். என்னை நினைவுசெய்யும்பொழுது, நீங்கள் தூய உலகைச் சென்றடைவீர்கள். ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு தடவை இப்பாடத்தை உறுதியாக்குங்கள்: நீங்கள் தந்தையை நினைவுசெய்தீர்களா? பாபா என்றால் பாபாதான். அத்துடன் அவர் படைப்பைப்; படைப்பவர். அவர் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்தவர், ஏனெனில் அவரே மனித குல விருட்சத்தின் விதையாவார். முதலில் அவர்களை இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்குமாறு தூண்டுங்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்கிறீர்களா? தந்தை மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நாங்களும் தந்தையிடமிருந்தே இந்த ஞானத்தைப் பெற்றுள்ளோம். அதனையே நாங்கள் உங்களுக்குக் கொடுக்கின்றோம். முதலில் இந்த மந்திரத்தை அவர்களில் உறுதியாக்குங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் பிரபுவுக்கும் அதிபதிக்கும் சொந்தமாகுவீர்கள். நீங்கள் இதனையே விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் அதனைப் புரிந்துகொள்ளும்வரை, அவ்விடத்திலிருந்து செல்ல அவர்களை அனுமதிக்காதீர்கள். தந்தையின் அத்தகைய அறிமுகத்தைக் கொடுக்கக்கூடிய இரண்டு அல்லது நான்கு படங்கள் இருக்க வேண்டும். ஆகவே, இதனை நீங்கள் மிகத்தெளிவாக விளங்கப்படுத்தும்பொழுது அது அவர்கள் புத்திகளில் புகும். நாங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும், ஏனெனில் அவர் மாத்திரமே சர்வசக்திவான். அவரை நினைவுசெய்வதனால், எங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தையின் புகழ் தெளிவானது. அனைத்திற்கும் முதலில் நிச்சயமாக விளங்கப்படுத்த வேண்டியது: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தொடர்ந்தும் என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். சரீரத்தின் அனைத்து உறவுமுறைகளையும் மறந்துவிடுங்கள். நான் சீக்கியன், நான் இன்ன இன்னார்: அவை அனைத்தையும் மறந்து ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அனைத்திற்கும் முதலில் இந்த ஒரு பிரதான விடயத்தை அவர்களின் புத்தியில் பதியச் செய்யுங்கள். தந்தையே தூய்மை, அமைதி, சந்தோஷத்திற்கான ஆஸ்தியை உங்களுக்குத் தருபவர். தந்தையே உங்கள் நடத்தையைச் சீர்திருத்துகிறார். இவ்வாறாக, முதலாவது பாடத்தை நீங்கள் அவர்களைப் புரிந்துகொள்ளச் செய்யவில்லை என்ற கரிசனையைத் தந்தை கொண்டிருக்கின்றார். எவ்வாறாயினும் இதுவே மிகவும் முக்கியமானது. அவர்கள் புத்தியில் நீங்கள் அதனை புகுத்துமளவிற்கு, அவர்கள் அதனை நினைவுசெய்வார்கள். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்கு ஐந்து நிமிடங்கள் எடுத்தாலும் நீங்கள் அவ்விடத்தை விட்டுச் செல்லக்கூடாது. அவர்கள் தந்தையின் புகழைப் பெருமளவு ஆர்வத்துடன் செவிமடுப்பார்கள். தந்தையின் இப் படமே மிகவும் பிரதானமானது. இந்தப் படத்திற்கு முன்னால் ஒரு நீண்ட வரிசையே நிற்கவேண்டும். அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுங்கள். பின்னர் படைப்பினதும், இச்சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பது பற்றிய ஞானமும் உள்ளது. நீங்கள் சரக்குச் சாமான்களை, அரைத்து மிக மிருதுவாக்குவதைப் போல், நீங்கள் இறை பணியைச் செய்பவர்கள் ஆதலால் இவ்விடயங்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் அவர்களின் புத்தியில் மிக நன்றாகப் பதியச் செய்ய வேண்டும். தந்தையைத் தெரிந்துகொள்ளாததால் அவர்கள் அனைவரும் அனாதைகள் ஆகிவிட்டார்கள். நீங்கள் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்: பாபாவே, எங்களது பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம குருவும் ஆவார். இம் மூவராகவும், அவரை அழைப்பதன் மூலம், சர்வவியாபி என்ற கருத்து அவர்களது புத்தியிலிருந்து அகற்றப்படும். முதலில் அவர்களது புத்தியில் இதனைப் பதியச் செய்யுங்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும், அப்பொழுதே நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக இயலும். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அவர்களுக்குத் தந்தையை நினைவூட்டும்பொழுது நீங்களும் அதனால் பயனடைவீர்கள்; நீங்களும் “மன்மனாபவ”வாக இருப்பீர்கள். நீங்கள் தூதுவர்கள் என்பதால், தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பாபாவே எங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் என்பது எந்தவொரு மனிதருக்குமே தெரியாது. அவர்கள் தந்தையின் அறிமுகத்தைச்; செவிமடுக்கும்பொழுது, மிகவும் சந்தோஷமடைவார்கள். கடவுள் பேசுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் அகற்றப்படும். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். கீதையுடன் அவர்கள் மகாபாரத யுத்தத்தையும் காட்டியிருக்கிறார்கள். இப்பொழுது, வேறெந்த யுத்தம் பற்றிய கேள்விக்கும் இடமில்லை. உங்கள் யுத்தம் தந்தையை நினைவுசெய்வதிலேயே உள்ளது. கல்வி வேறுபட்டது. ஆனால் நினைவிலேயே போராட வேண்டியுள்ளது. ஏனெனில் அனைவரும் சரீர உணர்வில் உள்ளார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்பவர்களாக, ஆத்ம உணர்வுடையவர்களாக ஆகுகின்றீர்கள். முதலில், அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் என்பதை அவர்களில் உறுதியாக்குங்கள். நாங்கள் அவர் கூறுவதைக் கேட்பதா அல்லது நீங்கள் கூறுவதைக் கேட்பதா? தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் மேன்மையானவர்களாகுவதற்கு, ஸ்ரீமத்தை முற்றாகப் பின்பற்ற வேண்டும். இந்தச் சேவையையே நாங்கள் செய்கின்றோம். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றினால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தையின் வழிகாட்டல்கள்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற உலகச் சக்கரமும் அவரது வழிகாட்டலில் உள்ளது. நீங்கள் தூய்மையாகி அவரை நினைவுசெய்யும்பொழுது, அவர் கூறுகிறார்: நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வேன். பாபாவே எல்லையற்ற ஆன்மீக வழிகாட்டியாவார். மக்கள் அவரைக் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, எங்களைத் தூய்மையாக்கி, தூய்மையற்ற உலகிலிருந்து எங்களை அப்பால் அழைத்துச் செல்லுங்கள்! அவர்கள் பௌதீக வழிகாட்டிகள், ஆனால் இவரோ ஆன்மீக வழிகாட்டி. சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்;: நடமாடியும் உலாவியும் திரியும்பொழுது, தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். இதில் நீங்கள் உங்களைக் களைப்படையச் செய்ய வேண்டியதில்லை. குழந்தைகள் சிலவேளைகளில் அதிகாலையிலேயே இங்கு வந்து அமர்ந்திருப்பதை பாபா பார்க்கிறார், எனவே நிச்சயமாக அவர்கள் களைப்படைந்து விடுகிறார்கள். இது ஓர் இலகுவான பாதை. நீங்கள் பலவந்தமாக இங்கு வந்து அமர்ந்திருக்கக்கூடாது. நீங்கள் உலாவித் திரிந்தாலும், சுற்றுலா சென்றாலும் உங்களால் பெருமளவு ஆர்வத்துடன் தந்தையை நினைவுசெய்ய முடியும். பாபாவையிட்டு உள்ளார்த்தமாகப் பெருமளவு உற்சாகம் இருக்க வேண்டும். சதா தந்தையை நினைவுசெய்பவர்கள் மாத்திரமே, தொடர்ச்சியாக உற்சாகமாக இருப்பார்கள். நீங்கள் நினைவுசெய்கின்ற ஏனைய அனைத்தையும் உங்கள் புத்தியிலிருந்து அகற்ற வேண்டும். தந்தை மீது மிகவும் ஆழமான அன்பு இருக்கட்டும், நீங்கள் தொடர்ந்தும் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்கள். தந்தையின் நினைவில் உங்களை ஈடுபடுத்தும்பொழுது நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகுவீர்கள். பின்னர் உங்கள் சந்தோஷத்திற்கு முடிவே இருக்காது. அந்த அனைத்து விடயங்களும் இங்கேயே கூறப்படுகின்றன. இதனாலேயே நினைவுகூரப்படுகிறது: தந்தையாகிய கடவுள் கற்பிக்கின்ற அதீந்திரிய சுகத்தைப் பற்றிக் கோப கோபிகைகளிடம் கேளுங்கள். கடவுள் பேசுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள். தந்தையின் புகழை நீங்கள் அவர்களுக்குக் கூறவேண்டும். ஒரேயொரு தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் சற்கதி என்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அனைவரும் நிச்சயமாகச் சற்கதியைப் பெறுவார்கள். முதலில் அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். தந்தை உங்களுக்குச் சற்கதியைக் கொடுக்கிறார் என்பதை உங்கள் புத்தியில் கொண்டிருக்க வேண்டும். எவ் இடங்கள் அமைதி தாமம் என்றும், சந்தோஷ தாமம் என்றும் அழைக்கப்படுகின்றன என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்தில் வசிக்கின்றார்கள். அதுவே இனிய வீடும், மௌன வீடும், மௌனக் கோபுரமுமாகும். அவற்றை இக்கண்களால் காணமுடியாது. விஞ்ஞானிகளின் புத்தி, அவர்களின் பௌதீகக் கண்களால் காண்கின்ற அனைத்து விடயங்கள் மீதும் தொழிற்படும். எவராலும் அக்கண்களால், ஓர் ஆத்மாவைப் பார்க்க முடியாது. அவர்களால் ஓர் ஆத்மாவைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களால் ஓர் ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஆகவே அவர்களால் எவ்வாறு தந்தையைப் பார்க்க முடியும்? இது புரிந்துகொள்வதற்கான ஒரு விடயம். அவற்றை இக்கண்களால் பார்க்க முடியாது. கடவுள் பேசுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். இதனை யார் கூறினார்? அவர்களால் இதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாததால், கிருஷ்ணர் கூறியதாகக் கூறுகிறார்கள். மக்கள் கிருஷ்ணரை அதிகளவு நினைவுசெய்கிறார்கள். நாளுக்கு நாள் தொடர்ந்தும் அவர்கள் கலப்படமாகிக் கொண்டிருக்கிறார்கள். பக்தியிலும் முதலில் அவர்கள் சிவனையே வழிபட்டார்கள். அது கலப்படமற்ற பக்தியாகும். பின்னர் இலக்ஷ்மி நாராயணனது பக்தி உருவாகியது. கடவுளே அதிமேலானவர். அவர் உங்களுக்கு விஷ்ணு ஆகுவதற்கான ஆஸ்தியைக் கொடுக்கிறார்;;. நீங்கள் சிவனது குலத்தவர்களாகிப் பின்னர் விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். முதலாவது பாடம் மிக நன்றாகக் கற்கப்படும்பொழுதே மாலை உருவாக்கப்படுகின்றது. தந்தையை நினைவுசெய்வது உங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்வதைப் போன்றதல்ல! உங்கள் மனதையும் புத்தியையும் அனைத்திலுமிருந்து அகற்றி, ஒரு திசையில் நிலைநிறுத்துங்கள். அக் கண்களால் நீங்கள் பார்க்கும் அனைத்திலிருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தை அகற்றுங்கள். தந்தை கூறுகிறார்: தொடர்ந்தும் என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். இதனையிட்டு நீங்கள் குழப்பமடையக்கூடாது. தந்தை இந்த இரதத்தில் அமர்ந்திருக்கின்றார். அவர் அசரீpரியானவர் எனப் புகழப்படுகின்றார். அவர் இவரினூடாக மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகின்றார்: “மன்மனாபவவாக” இருங்கள். நீங்கள் அனைவரையும் ஈடேற்றுகிறீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். உணவு சமைப்பவர்களுக்குக் கூறுங்கள்: சிவபாபாவின் நினைவில் இருந்தவாறே உணவைத் தயாரியுங்கள், அப்பொழுது அவ்வுணவை உண்பவர்களது புத்தி தூய்மையாகும். நீங்கள் ஒருவருக்கொருவர் நினைவுபடுத்த வேண்டும். ஒவ்வொருவரும் சிறிது நேரத்திற்கு நினைவில் இருக்கிறார்கள்: சிலர் அரை மணித்தியாலத்திற்கும், வேறு சிலர் பத்து நிமிடங்களுக்கும் நினைவில் இருக்கிறார்கள். அச்சா. நீங்கள் ஒரு ஐந்து நிமிடங்களுக்கேனும் அன்புடன் தந்தையை நினைவுசெய்தால் இராச்சியத்திற்கு வருவீர்கள். அரசர்களும் அரசிகளும் அனைவரையும் எப்பொழுதும் நேசிக்கிறார்கள். நீங்களும் அன்புக் கடல்கள் ஆகுகிறீர்கள். இதனாலேயே நீங்கள் அனைவரிலும் அன்பைக் கொண்டிருக்கிறீர்கள். அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை. தந்தையே அன்புக் கடல். எனவே குழந்தைகளாகிய நீங்களும் அத்தகைய அன்பைக் கொண்டிருப்பீர்கள். அப்பொழுது மாத்திரமே நீங்கள் அங்கேயும் அத்தகைய அன்பைக் கொண்டிருப்பீர்கள். அரசர்களும் அரசிகளும் பெருமளவு அன்பைக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகளும் பெருமளவு அன்பைக் கொண்டிருக்கின்றார்கள். அன்பு எல்லையற்றதாகும். இங்கு அன்பு என்பதே இல்லை, துன்புறுத்தலே உள்ளது. அங்கே காம வாளால் ஏற்படுகின்ற எந்த வன்முறையும் இல்லை. இதனாலேயே பாரதத்தின் எல்லையற்ற புகழ் நினைவு கூரப்படுகின்றது. பாரதம் தூயதாக இருந்ததைப் போன்று வேறெந்தப் பூமியும் இருந்ததில்லை. இதுவே மிகப்பெரிய யாத்திரை ஸ்தலம். தந்தை இங்கு வந்து (பாரதத்தில்) அனைவருக்கும் சேவை செய்கிறார்; அவர் அனைவருக்கும் கற்பிக்கின்றார். கல்வியே பிரதான விடயமாகும். பாரதத்திற்கு நீங்கள் எவ்வாறு சேவை செய்கிறீர்கள் என்று சிலர் உங்களை வினவுகிறார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: பாரதம் தூய்மையாக வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். ஏனெனில் அது இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டது. எனவே நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், பாரதத்தைத் தூய்மையாக்குகிறோம். நாங்கள் அனைவருக்கும் கூறுவது: தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாகுவீர்கள். இந்த ஆன்மீகச் சேவையையே நாங்கள் செய்கின்றோம். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், பாரதத்தில் இரட்டைக் கிரீட ஆட்சி நிலவியபொழுது இருந்த அமைதியையும், செழிப்பையும் நாடகத் திட்டத்திற்கேற்ப, முன்னைய கல்பத்தில் செய்தவாறே மீண்டும் ஒருமுறை உருவாக்குகின்றோம். இவ் வார்த்தைகளை மிக நன்றாக நினைவுசெய்யுங்கள். மக்கள் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் நாங்கள் அதனை உருவாக்குகின்றோம். கடவுள் பேசுகிறார்: தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் தந்தையாகிய, என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் எவருமே அந்தளவுக்கு பாபாவை நினைவுசெய்வதில்லை என்பதனை பாபா அறிவார். இதற்கும் முயற்சி தேவைப்படுகின்றது. நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் உங்களுடைய கர்மாதீத நிலையை அடைவீர்;கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகவேண்டும். அவர்கள் எவருமே அதன் அர்த்தத்தைப் புத்தியில் கொண்டிருப்பதில்லை. சமயநூல்களிலே அவர்கள் பல விடயங்களை எழுதியிருக்கிறார்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: நீங்கள் கற்றவை அனைத்தையும் மறந்து உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அது மட்டுமே உங்களுடன் வரும். வேறு எதுவுமே உங்களுடன் வரப்போவதில்லை. தந்தையினுடைய கல்வி மாத்திரமே உங்களுடன் வரும். நீங்கள் அதற்காகவே முயற்சி செய்கின்றீர்கள். சிறு குழந்தைகளைக் குறைவானவர்களாகக் கருதாதீர்;கள். அவர்கள் இளையவர்களாக இருக்குமளவுக்கு அவர்களால் அதிகளவில் தந்தையின் பெயரைப் புகழடையச் செய்யமுடியும். சிறிய புதல்விகள் அமர்ந்திருந்து வயதானவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, அற்புதங்களை நிகழ்த்துவார்கள். நீங்கள் அவர்களையும் உங்களுக்குச் சமமானவர்களாக்க வேண்டும். எவராவது அவர்களிடம் ஏதாவது கேட்டால் அவர்கள் பதிலளிக்கத்தக்க வகையில் அவர்களை நீங்கள் தயார்;ப்படுத்த வேண்டும். பின்னர் அவர்களை நிலையங்கள் அல்லது நூதனசாலைகள் உள்ள இடங்களுக்கு அனுப்புங்கள். அத்தகைய குழுக்களை உருவாக்குங்கள். இதுவே அத்தகைய சேவை செய்வதற்கு உகந்த நேரம். வயதில் குறைந்த புத்திரிகள் அமர்ந்திருந்து வயதானவர்களுக்கு விளங்கப்படுத்துவது மிகவும் அற்புதமான விடயமாகும். நீங்கள் யாருடைய குழந்தைகள் என்று எவராவது உங்களை வினவினால், அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள், அவர் அசரீரியானவர். அவர் பிரம்மாவின் சரீரத்தினுள் பிரவேசித்து எங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்தக் கல்வியினூடாக நாங்கள் இலக்ஷ்மி நாராயணனாக வேண்டும். சத்திய யுக ஆரம்பத்தில் இலக்ஷமி நாராயணனது இராச்சியம் இருந்தது. அவர்களை அவ்வாறானவர்கள் ஆக்கியது யார்? அவர்கள் நிச்சயமாகவே அவ்வாறான செயல்களைச் செய்திருக்க வேண்டும். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குச் செயல்கள், நடுநிலையான செயல்கள், பாவச் செயல்கள் போன்றவற்றின் தத்துவங்களைப் பற்றிக் கூறுகின்றார். சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் மாத்திரமே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். தந்தை கூறுகின்றார்: அவர்களை ஒரு பிரதான விடயத்தைப் புரிந்துகொள்ளுமாறு செய்யுங்கள். முதலில் அவர்கள் அல்பாவைப் புரிந்துகொள்ளும்பொழுது, பல வினாக்களை வினவ மாட்டார்கள். அவர்கள் அல்பாவைப் புரிந்துகொள்ளாமல், ஏனைய அனைத்துப் படங்களையும் விளங்கப்படுத்தினால் உங்களது தலைகளே உருளும். அல்பாவே முதலாவது விடயம் ஆகும். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றோம். இவ்வாறு கூறுகின்ற பலர் வெளிப்படுவார்கள்: நாங்கள் அல்பாவைப் புரிந்து கொண்டுள்ளோம். எனவே நாங்கள் ஏன் ஏனைய இப்படங்கள் அனைத்தையும் பார்வையிட வேண்டும்? அல்பாவைப் புரிந்துகொண்டதால் நாங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு விட்டோம். தானத்தைப் பெற்றவுடனே அவர்கள் சென்றுவிடுவார்கள். நீங்கள் முதல் தரமான தானத்தைக் கொடுக்கிறீர்கள். தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்ததும் அவர்கள் எவ்வளவிற்கு அதிகமாகத் தந்தையை நினைவுசெய்கிறார்களோ, அந்தளவிற்கு அதிகமாகத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதற்கு, உள்ளார்த்தமாக, பாபாவை நினைவு செய்கின்ற உற்சாகம்; இருக்கட்டும். உலாவியும் நடமாடியும் திரியும்பொழுது, பலவந்தமாக அல்லாது, தந்தையை ஆர்வத்துடன் நினைவுசெய்யுங்கள்;, உங்கள் புத்தியை அனைவரிலிருந்தும் துண்டித்து ஒரேயொருவருடன் இணையுங்கள்.

2. தந்தை அன்புக்கடலாக இருப்பதைப் போன்று, நீங்களும் தந்தையைப் போலவே அன்புக்கடல் ஆகுங்கள். அனைவரையும் ஈடேற்றுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து அனைவருக்கும் தந்தையை நினைவுபடுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பற்றை அழிப்பவராக இருப்பதால் நினைவு சொரூபமாகி, அதன்மூலம் துன்பத்தினதும் அமைதியின்மையினதும் பெயர், சுவடு அனைத்தையும் முடித்து விடுவீர்களாக.

ஒரேயொருவரின் விழிப்புணர்வில் சதா நிலைத்திருப்பவர்கள் தங்கள் ஸ்திதியை நிலையானதாகவும் ஸ்திரமானதாகவும் (ஏக்ராஸ்) ஆக்குகின்றார்கள். நிலையான, ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பது என்றால் ஒரேயொருவரிடமிருந்தே உறவுமுறைகள் அனைத்தினதும், பேறுகள் அனைத்தினதும் இனிமையை (ராஸ்;) அனுபவம் செய்தல் என்று அர்த்தமாகும். சகல உறவுமுறைகளிலும் தந்தையைத் தங்களுக்குரியவராக ஆக்குபவர்களும், நினைவு சொரூபங்களாக இருப்பவர்களும் இலகுவில் பற்றை அழிப்பவர்களாக ஆகுகின்றார்கள். பற்றை அழிப்பவர்களால் பணத்தைச் சம்பாதிப்பதிலோ, தங்கள் செல்வத்தைப் பராமரிப்பதிலோ அல்லது எவராவது நோய்வாய்ப்பட்டவர் ஆகுவதிலோ துன்ப அலைகள் எதனையும் உணர மாட்டார்கள். ஒரு பற்றை அழிப்பவர் என்றால் துன்பத்தின் அல்லது அமைதியின்மையின் பெயரையோ அல்லது சுவட்டையோ கொண்டிராதவர் என்று அர்த்தமாகும்;; அவர் சதா கவலையற்றவர் ஆவார்.

சுலோகம்:
கருணைமிக்கவராகி, தொடர்ந்தும் அனைவருக்கும் ஆசீர்வாதங்களைக் கொடுப்பவரே, ஒரு மன்னிப்பைக் கொடுக்கின்ற நபர் ஆவார்.