24.03.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     09.05.84     Om Shanti     Madhuban


ஸ்திரமான, நிலையான வேகத்தில் பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யும் பாடல்களைச் சதா பாடுங்கள்.


இன்று, அமிர்தவேளையில் இருந்து, இதயங்களுக்குச் சௌகரியம் அளிக்கும் தந்தை, அன்பான குழந்தைகளின் இதயங்களின் பாடல்களைச் செவிமடுத்தார். நீங்கள் அனைவரும் பாடல்களைப் பாடுகிறீர்கள். நீங்கள் அனைவரும் பாடுகின்ற பாடல்களின் வரிகளும் ஒன்றாகவே உள்ளன. அவை ‘பாபா’ என்பதே ஆகும். நீங்கள் அனைவரும் ‘பாபா’ என்ற பாடல்களையே பாடுகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல்களைத் தெரியுமா? நீங்கள் தொடர்ந்து இரவு பகலாக இந்தப் பாடல்களைப் பாடுகிறீர்களா? வரிகள் ஒன்றாக இருந்தாலும், உங்கள் ஒவ்வொருவரினதும் தாளமும் சுருதியும் வெவ்வேறாக உள்ளன. சிலர் சந்தோஷ ராகம் இசைக்கிறார்கள். சிலர் பறப்பதுடன், மற்றவர்களையும் பறக்கச் செய்யும் ராகங்களை இசைக்கிறார்கள். சில குழந்தைகள் இசைப்பயிற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். சிலவேளைகளில் அவர்கள் மிகவும் நன்றாக இருக்கிறார்கள். சிலவேளைகளில், முழுமையாகப் பயிற்சி செய்யாததால், அவர்கள் பாடுவது தளம்புகிறது. ஒரு தாளம் இன்னொன்றுடன் கலந்துவிடுகிறது. உதாரணமாக, இங்கு பாடல்களின் சுருதிகளைக் கேட்கும்போது, சில பாடல்கள் உங்களை நடனமாடச் செய்கின்றன. சில பாடல்கள் உங்களை அன்பிலே திளைத்திருக்கச் செய்கின்றன. சில பாடல்கள் அழைப்பதாக உள்ளன. சில பாடல்கள் பேறுகளுக்குரியதாக உள்ளன. வெவ்வேறு தாளங்களையும் சுருதிகளையும் உடைய பதிவுசெய்யப்பட்ட பாடல்களை பாப்தாதாவும் கேட்கிறார். சிலர் தற்காலத்தில் உள்ள விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களைப் போன்று நிலையாகவும் இயல்பாகவும் பாடல்களைப் பாடுகிறார்கள். அவர்களின் விழிப்புணர்வெனும் ஆளியானது சதா போடப்பட்டுள்ளது. இதனாலேயே, அவர்களின் பாடல்கள் இயல்பாகவும் நிலையாகவும் ஒலிக்கின்றன. சிலரின் சங்கீதம் ஆளியைப் போட்டால் மட்டுமே இசைக்கிறது. நீங்கள் அனைவரும் இதயபூர்வமாகப் பாடுகிறீர்கள். ஆனால் சிலரின் சங்கீதம் ஸ்திரமாகவும் இயல்பாகவும் உள்ளது. ஆனால் ஏனையோரின் சங்கீதமோ அவர்கள் அதை இசைக்கும்போது மட்டுமே ஒலிக்கிறது. எவ்வாறாயினும், சுருதிகள் வேறுபட்டவை. சிலவேளைகளில் ஒரு வகையாகவும் சிலவேளைகளில் வேறொரு வகையாகவும் உள்ளன. ஒரேயொரு பாபாவே உங்கள் அனைவரின் இதயங்களிலும் அமிழ்ந்துள்ளார் என்ற குழந்தைகளின் பாடல்களைக் கேட்பதில் பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் ஒரேயொருவரிடம் அன்பு வைத்துள்ளீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தைக்காக அனைத்தையும் செய்கிறீர்கள். உங்களின் உறவுமுறைகள் அனைத்தும் ஒரேயொரு தந்தையுடனேயே உள்ளன. உங்களின் விழிப்புணர்விலும் பார்வையிலும் ஒரேயொரு தந்தை மட்டுமே உள்ளார். உங்களின் உதடுகளில் ஒரேயொரு பெயர் மட்டுமே உள்ளது. நீங்கள் தந்தையை உங்களின் உலகம் ஆக்கியுள்ளீர்கள். தந்தையின் நினைவின் மூலம் நீங்கள் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேமிக்கிறீர்கள்.

குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் நெற்றியிலும் மேன்மையான பாக்கிய நட்சத்திரம் பிரகாசிக்கிறது. இத்தகைய மேன்மையான விசேடமான ஆத்மாக்களும் உலகின் முன்னால் உதாரணங்கள் ஆகியுள்ளார்கள். நீங்கள் கிரீடத்தையும் திலகத்தையும் பெற்றுள்ளதுடன், இதய சிம்மாசனத்திலும் அமர்ந்துள்ளீர்கள். தந்தையே உங்களின் நற்குணங்களின் பாடல்களைப் பாடும் வகையில் நீங்கள் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரின் பெயர்களின் மாலையின் மணிகளைத் தந்தை உருட்டுகிறார். நீங்கள் அனைவரும் இத்தகைய மேன்மையான பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள், அல்லவா? அவ்வாறாயின், பாடல்களைப் பாடும்போது, ஏன் சுருதி மாறிக் கொண்டே உள்ளது? ஏன் சுருதி மாறுகிறது? ஏன் நீங்கள் சிலவேளைகளில் பேறுகளின் பாடல்களையும் சிலவேளைகளில் முயற்சிக்கான பாடல்களையும், சிலவேளைகளில் அழைக்கும் பாடல்களையும் சிலவேளைகளில் மனவிரக்திக்குரிய பாடல்களையும் பாடுகிறீர்கள்? நீங்கள் ஏன் சதா பறப்பதுடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யும் பாடல்களைப் பாடுகிறீர்கள்?

நீங்கள் எத்தகைய பாடல்களைப் பாட வேண்டுமெனில்,

• அந்தப் பாடல்களைக் கேட்பவர்களுக்கும் இறக்கைகள் முளைத்துப் பறக்க ஆரம்பிக்க வேண்டும்
• முடமாக இருப்பவர்களுக்குக் கால்கள் முளைத்து, நடனம் ஆட ஆரம்பிக்க வேண்டும
• தமது துன்பப் படுக்கைகளில் இருந்து எழுந்திருந்து, அவர்கள் சந்தோஷப் பாடல்களைப் பாட ஆரம்பிக்க வேண்டும்
• மனவிரக்தி அடைந்த ஆத்மாக்கள் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த பாடல்களைப் பாட ஆரம்பிக்க வேண்டும்
• யாசிக்கும் ஆத்மாக்கள் பொக்கிஷங்களால் நிரம்பி, ‘நான் அனைத்தையும் கண்டுவிட்டேன், நான் அனைத்தையும் அடைந்துவிட்டேன்’ என்ற பாடலைப் பாட ஆரம்பிக்க வேண்டும்

உலகிற்கு இந்த வகையான சேவையே தேவையாக உள்ளது. இதன் மூலமே அவர்கள் வெற்றி பெறுவார்கள். தற்காலிக வெற்றியைப் பெறுவதற்காக மக்கள் அதிகளவில் அலைந்து திரிகிறார்கள். அதற்காக அவர்கள் தமது நேரத்தையும் பணத்தையும் அதிகளவில் செலவிடுகிறார்கள்.

தற்சமயம், ஆத்மாக்கள் அனைவரும் முயற்சி செய்வதில் களைப்படைந்து விட்டார்கள். அவர்களுக்கு வெற்றி தேவைப்படுகிறது. அவர்கள் தற்காலிகப் பேறுகளால் திருப்தி அடைகிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு விடயத்தில் திருப்தி அடையும்போது, ஏனைய பல விடயங்கள் தோன்றுகின்றன. முடமான ஒருவர் நடக்க ஆரம்பித்தார். ஆனால், அவருக்கு வேறு பல ஆசைகளும் தோன்றின: இது நிகழ வேண்டும், அது நிகழவேண்டும். எனவே, தற்காலத்திற்கேற்ப, குழந்தைகளான உங்களின் சேவைக்கான வழிமுறையானது, வெற்றி சொரூபம் ஆகுவதே ஆகும். அழியாத, அலௌகீக, ஆன்மீக வெற்றியையும் ஆன்மீக அற்புதங்களையும் செய்து காட்டுங்கள். இந்த அற்புதம் சிறியதொரு விடயமா? உலகிலுள்ள ஆத்மாக்களில் 99மூ இனர் கவலைச் சிதைகளில் இறந்து போயுள்ளார்கள். இவ்வாறு இறந்தவர்களை உயிர்ப்பியுங்கள். அவர்களுக்கு ஒரு புது வாழ்வைக் கொடுங்கள். அவர்களிடம் பேறு எனும் ஒரு கால் உள்ளது. ஆனால், எண்ணற்ற ஏனைய பேறுகளைப் பொறுத்தவரை, அவர்கள் முடமாகவே இருக்கிறார்கள். இத்தகைய ஆத்மாக்களுக்கு சகல அழியாத பேறுகள் எனும் கால்களைக் கொடுங்கள். குருடர்களை திரிநேத்ரி ஆக்குங்கள். அவர்களுக்கு மூன்றாம் கண்ணைக் கொடுங்கள். மேன்மையான நிகழ்காலத்தையும் தமது வாழ்க்கைகளின் எதிர்காலத்தையும் பார்க்கக்கூடிய வகையில் அவர்களுக்குப் பார்வையைக் கொடுங்கள். இந்த வெற்றியை உங்களுக்குக் கொடுக்க முடியாதா? இந்த ஆன்மீக அற்புதத்தை உங்களால் நிகழ்த்த முடியாதா? உங்களால் ஒரு யாசகரைச் சக்கரவர்த்தியாக மாற்ற முடியாதா? இத்தகைய வெற்றியை நிறைவேற்றும் சேவையைச் செய்வதற்கான சக்தியை நீங்கள் தந்தையிடமிருந்து பெறவில்லையா? இப்போது, சரியான வழிமுறையைக் கடைப்பிடிக்கும் சொரூபங்கள் ஆகுவதன் மூலம் வெற்றி சொரூபங்கள் ஆகுங்கள். வெற்றி சொரூபங்கள் ஆகுவதன் மூலம் இந்தச் சேவைக்குக் கருவிகள் ஆகுங்கள். ஒரு வழிமுறை என்றால், முயற்சி செய்யும் வேளையில் நீங்கள் முயற்சி செய்யும் வழிமுறையே ஆகும். இப்போது, வெற்றி சொரூபம் ஆகுவதன் மூலமும் சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதன் சொரூபமாக இருக்கும் பெறுபேற்றின் மூலம் சேவை செய்வதன் மூலமும் உலகின் முன்னால் வெளிப்படுத்தப்படுங்கள். இந்த ஒரேயொரு இறை பல்கலைக்கழகமே அழியாத வெற்றியைக் கொடுக்க முடியும், இவர்கள் வெறுமனே செய்து காட்டுபவர்கள் அல்ல, ஆனால் அனைவரையும் வெற்றி சொரூபமாகவும் ஆக்குபவர்கள் என்ற சத்தம் உலகம் முழுவதும் உரத்தும் தெளிவாகவும் கேட்க வேண்டும். இந்த ஓரிடம் மட்டுமே உள்ளது. நீங்கள் வெற்றி சொரூபங்கள் ஆகியுள்ளீர்கள், அல்லவா?

அனைத்திற்கும் முதலில், இந்தப் பெயரை பம்பாயில் பெருமைப்படுத்துங்கள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் இருந்து விடுபடுங்கள். இன்று, நான் இந்தப் பாடத்தில் முயற்சி செய்தேன். இன்று, நான் அந்தப் பாடத்தில் முயற்சி செய்தேன். இது சிரமத்துடனான முயற்சி ஆகும். இப்போது, இந்தச் சிரமத்தில் இருந்து விடுபட்டு, சக்திவாய்ந்த பேறுகளின் சொரூபம் ஆகுங்கள். இதுவே, வெற்றி சொரூபம் ஆகுதல் என்பதன் அர்த்தம் ஆகும். இப்போது, வெற்றி சொரூபங்களான ஞானி மற்றும் யோகி ஆத்மாக்கள் ஆகுங்கள். அத்துடன் மற்றவர்களையும் அவ்வாறு ஆக்குபவர்கள் ஆகுங்கள். நீங்கள் இறுதிவரை தொடர்ந்து முயற்சி செய்து, எதிர்காலத்திலும் வெகுமதியைப் பெறுவீர்களா? நீங்கள் நிச்சயமாக இப்போதே முயற்சிக்கான உடனடிப்பலனை உண்ண வேண்டும். இப்போது, உடனடிப்பழத்தை உண்ணுங்கள். பின்னர், எதிர்காலப் பழத்தை உண்ணுங்கள். எதிர்காலப் பழத்திற்காகக் காத்திருந்து, உடனடிப் பழத்தை இழக்காதீர்கள். இறுதியில் நீங்கள் பழத்தைப் பெறுவீர்கள் என்று நினைத்து, தவறாக வழிநடத்தப்படாதீர்கள். ‘ஒரு மடங்கைச் செய்து, பலமில்லியன் மடங்கைப் பெறுங்கள்’. இது நிகழ்காலத்தையே குறிக்கிறது. வேறொரு நேரத்தை அல்ல. பம்பாயைச் சேர்ந்த நீங்கள் என்னவாக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் நம்பிக்கையை மட்டும் கொடுப்பவர்கள், இல்லையல்லவா? வெற்றியைத் தரும் பாபா மிகவும் பிரபல்யமானவர். இவர் வெற்றியைத் தருகின்ற பாபா, அவர் வெற்றிகரமான யோகி என அவர்கள் கூறுகிறார்கள். பம்பாயைச் சேர்ந்தவர்களும் இலகுவான வெற்றி யோகிகள் ஆவார்கள். அதாவது, நீங்கள் சகல வெற்றியையும் பெற்றுள்ளீர்கள். அச்சா.

இயல்பாகவும் ஸ்திரமாகவும் பறப்பதற்கான பாடல்களைச் சதா பாடுகின்றவர்களுக்கும், வெற்றி சொரூபங்களாகி, மற்றவர்களையும் அழியாத, ஆன்மீக வெற்றியைப் பெறச் செய்பவர்களுக்கும், ஆன்மீக அற்புதங்களைச் செய்து காட்டும் அற்புதமான ஆத்மாக்களுக்கும், முழுமையான வெற்றி சொரூபங்களாக இருக்கும் இலகு யோகி ஆத்மாக்களுக்கும், மற்றவர்களுக்கு சகல பேறுகளின் வெற்றியின் அனுபவத்தைக் கொடுப்பவர்களுக்கும், வெற்றி சொரூபங்களாக இருக்கும் குழந்தைகளுக்கும், இலகு யோகிகளாகவும் ஞான சொரூபங்களாகவும் இருப்பவர்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குமாரிகளின் வெவ்வேறு குழுக்களைச் சந்திக்கிறார்

1.நீங்கள் சதா ஆன்மீக நினைவில் இருக்கும் ஆன்மீகக் குமாரிகள் அல்லவா? சரீர உணர்வைக் கொண்டிருக்கும் குமாரிகள் பலர் இருக்கின்றனர். ஆனால், நீங்கள் ஆன்மீகக் குமாரிகள். நீங்கள் சதா ஆத்மாவின் விழிப்புணர்வைப் பேணுபவர். ஆத்மாக்களை ஆத்மாவாகப் பார்க்கும் ஒருவரே ஆன்மீகக் குமாரி என்று அழைக்கப்படுகிறார். எனவே, நீங்கள் எத்தகைய குமாரிகள்? நீங்கள் சரீர உணர்வைக் கொண்டிருப்பவர்கள் இல்லையல்லவா? சரீர உணர்வுடையவர் ஆகுவதெனில், மாயைக்குள் வீழ்தல் என்று அர்த்தம். ஆனால், ஆன்மீக விழிப்புணர்வைப் பேணுவதெனில் தந்தைக்கு நெருக்கம் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் வீழ்பவர்கள் அல்ல. ஆனால், தந்தையுடன் இருப்பவர்கள். தந்தையுடன் இருப்பவர்கள் யார்? ஆன்மீகக் குமாரிகளால் மட்டுமே தந்தையுடன் இருக்க முடியும். தந்தை பரமாத்மாவாக இருப்பதுடன், ஒருபோதும் சரீர உணர்வுடையவர் ஆகாததைப் போன்று, நீங்களும் சரீர உணர்வுடையவர்கள் ஆகாதவர்கள். தந்தையை நேசிப்பவர்கள் தினமும் அவரை அன்புடன் நினைவு செய்கிறார்கள். அவர்கள் ஞானத்தை அன்புடன் கற்கிறார்கள். அன்புடன் செய்யப்படும் எந்தவொரு பணியும் எப்போதும் வெற்றிநிறைந்ததே. உங்களுக்குச் சொல்லப்பட்டதால் நீங்கள் எதையாவது செய்தால், சிறிது நேரத்திற்கு வெற்றி கிடைக்கும். தமது சொந்த மனங்களில் அன்புடன் செயற்படுபவர்கள் நிலையாகச் செயற்படுவார்கள். தந்தை யார் என்பதையும் மாயை யார் என்பதையும் நீங்கள் ஒரு தடவை அனுபவம் செய்துவிட்டால், அனுபவசாலியாக இருப்பதனால், நீங்கள் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள். மாயை பல்வகை ரூபங்களில் வருவாள். அவள் ஆடைகளின் ரூபத்தில் வருவாள். பெற்றோர்கள் மீதுள்ள பற்றின் ரூபத்தில் வருவாள். சினிமாவின் ரூபத்தில் வருவாள். சுற்றுலாக்காட்சிகளைப் பார்த்தல் போன்ற ரூபத்தில் வருவாள். குமாரிகள் தனக்கே சொந்தமாக வேண்டும் என மாயை கூறுகிறாள். நீங்கள் தனக்கே சொந்தமாக வேண்டும் எனத் தந்தை கூறுகிறார். எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்?

நீங்கள் மாயையை விரட்டுவதில் கெட்டிக்காரர்களா? நீங்கள் பயப்படுகின்ற பலவீனமானவர்கள், இல்லையல்லவா? நீங்கள் நண்பர்களின் சகவாசத்தில் சினிமாவிற்குச் செல்ல மாட்டீர்கள், அல்லவா? ஒருபோதும் சகவாசத்தினால் நிறமூட்டப்படாதீர்கள். எப்போதும் துணிவானவராக, அமரத்துவமானவராக, அழியாதவராக இருங்கள். எப்போதும் உங்களின் வாழ்க்கையை மேன்மையானது ஆக்கிக் கொள்ளுங்கள். சாக்கடைக்குள் விழாதீர்கள். சாக்கடை என்ற வார்த்தையின் ஒலியைப் பாருங்கள்! தந்தை கடலாக இருக்கிறார். எனவே, சதா கடலின் அலைகளில் இருங்கள். உங்களின் குமாரி வாழ்க்கையில் நீங்கள் ஞானத்தைக் கண்டுள்ளீர்கள். பாதையைக் கண்டுள்ளீர்கள். இலக்கைக் கண்டுள்ளீர்கள். இவை அனைத்தையும் பார்க்கும்போது, சந்தோஷம் ஏற்படுகிறது. நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள். இன்றைய உலகின் நிலைமையைப் பாருங்கள். வலியையும் துன்பத்தையும் தவிர வேறு எதுவும் இல்லை. சாக்கடைக்குள் விழுந்த பின்னரும், வேதனையைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதிகளவில் வேதனையே காணப்படுகிறது. இது இன்றைய உலகம் ஆகும். இன்று ஒருபெண் திருமணம் செய்தாள். நாளையே அவள் தன்னை எரித்து இறந்து விட்டாள் என நீங்கள் கேள்விப்படுகிறீர்கள், அல்லவா? இன்று அவள் திருமணம் செய்தாள். அடுத்த நாள், அவள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டாள். முதலில் அவள் சாக்கடைக்குள் விழுந்தாள். அதன்பின்னர் அவள் மேலும் காயப்பட்டாள். மேலும் அதிகமாகத் துயரத்திற்கு உள்ளாகினாள். எனவே, அந்த முறையில் நீங்களும் பாதிக்கப்பட விரும்புகிறீர்களா? ஆகவே, நீங்கள் தந்தையால் பாதுகாக்கப்பட்ட பாக்கியசாலி ஆத்மாக்கள் என உங்களைச் சதா கருதுங்கள். நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள், இப்போது தந்தைக்குச் சொந்தமானவர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறதல்லவா? விழுவதில் இருந்தும் பாதிக்கப்படுவதில் இருந்தும் நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள் என்பதில் பாப்தாதா களிப்படைகிறார். ஆகவே, சதா அழியாதவராக இருங்கள்.

2.நீங்கள் அனைவரும் மேன்மையான குமாரிகள், அல்லவா? நீங்கள் சாதாரணமான குமாரிகளில் இருந்து மேன்மையான குமாரிகள் ஆகியுள்ளீர்கள். மேன்மையான குமாரிகள் மேன்மையான பணியைச் செய்வதற்கு எப்போதும் கருவிகளாக இருக்கிறார்கள். நீங்கள் உங்களை மேன்மையான பணிக்குக் கருவிகளாக இருப்பதாக எப்போதும் அனுபவம் செய்கிறீர்களா? உங்களின் மேன்மையான பணி என்ன? உலக நன்மை. ஆகவே, நீங்கள் உலகிற்கு நன்மையை ஏற்படுத்தும் உலக உபகாரி குமாரிகள் ஆவீர்கள். நீங்கள் வீடுகளில் வசிக்கும் குமாரிகள் அல்ல. நீங்கள் பொறுப்புக் கூடைகளைச் சுமக்கும் குமாரிகள் அல்ல. ஆனால், உலக உபகாரி குமாரிகள். குமாரிகள் தமது குலத்திற்கே நன்மை செய்பவர்கள். இந்த முழு உலகமும் உங்களின் குலமே. எனவே, இது எல்லையற்ற குலம். சாதாரணமான குமாரிகள் தமது சொந்த எல்லைக்குட்பட்ட குலங்களுக்கு நன்மை செய்கிறார்கள். ஆனால், மேன்மையான குமாரிகள் உலகம் என்ற குலத்திற்கே நன்மை செய்கிறார்கள். நீங்கள் இத்தகையவர்கள், அல்லவா? நீங்கள் பலவீனமானவர்கள் இல்லையல்லவா? நீங்கள் பயப்படுபவர்கள் இல்லையல்லவா? தந்தை எப்போதும் உங்களுடனேயே இருக்கிறார். தந்தை உங்களுடன் இருக்கும்போது, பயப்பட வேண்டிய அவசியமில்லை. இது நல்லதே. உங்களின் குமாரி வாழ்க்கையில் பாதுகாப்பாக இருப்பது மகத்தான பாக்கியம் ஆகும். தவறான பாதையில் சென்று பின்னர் அங்கிருந்து திரும்பி வருவதும் காலத்தை வீணாக்குவதே ஆகும். எனவே, உங்களின் காலமும் சக்திகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. நீங்கள் அலைந்து திரியும் முயற்சியில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். நீங்கள் அதிகளவில் நன்மை பெற்றுள்ளீர்கள். ஆஹா, எனது மேன்மையான பாக்கியமே! இதைப் பார்த்து, எப்போதும் மலர்ச்சியாக இருங்கள். எந்தவொரு பலவீனத்தாலும் உங்களின் மேன்மையான சேவையைத் தவறவிடாதீர்கள்.

3. குமாரி என்றால் மகத்தானவர் என்று அர்த்தம். தூய ஆத்மா எப்போதும் மகாத்மா என்றே அழைக்கப்படுவார். இன்றுள்ள மகாத்மாக்கள் எவ்வாறு மகத்தானவர்கள் ஆகினார்கள்? அவர்கள் தூய்மை ஆகுகிறார்கள். அவர்களின் தூய்மையால் அவர்கள் மகாத்மாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எவ்வாறாயினும், மகாத்மாக்களான உங்களின் முன்னால் அவர்கள் எதுவுமே இல்லை. உங்களின் மகத்துவம், ஞானம் நிறைந்த அழியாத மகத்துவம் ஆகும். அவர்கள் ஒரு பிறவியில் மகத்தானவர்கள் ஆகுகிறார்கள். அதன்பின்னர், தமது அடுத்த பிறவியிலும் அதேபோன்று அவர்கள் மகத்தானவர்கள் ஆகவேண்டியுள்ளது. நீங்கள் பிறவி பிறவியாக மகாத்மாக்கள் ஆவீர்கள். தற்சமயத்தின் மகத்துவத்துடன், நீங்கள் பிறவி பிறவியாக மகத்தானவர் ஆகுவீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு மகத்தானவர் ஆகுவீர்கள். என்ன நிகழ்ந்தாலும், நீங்கள் இப்போது தந்தைக்குச் சொந்தமானவர்கள். எனவே, நீங்கள் எப்போதும் அவருடையவராகவே இருப்பீர்கள். நீங்கள் அந்தளவு பலம் வாய்ந்தவர்கள், அல்லவா? நீங்கள் பலவீனமாகினால், மாயை உங்களை உண்டுவிடுவாள். பலம்வாய்ந்தவர்களை அன்றி, பலவீனமானவர்களை மாயை உண்டுவிடுவாள். கவனமாக இருங்கள். அனைவரின் புகைப்படமும் இங்கு எடுக்கப்பட்டுள்ளது. பலம்வாய்ந்தவராக இருங்கள். பயப்படுபவர் ஆகாதீர்கள். நீங்கள் எந்தளவிற்குப் பலம்வாய்ந்தவராக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சந்தோஷத்தையும் சகல பேறுகளையும் அனுபவம் செய்வீர்கள். நீங்கள் பலம்வாய்ந்தவராக இல்லாவிட்டால், எல்லா வேளையும் சந்தோஷம் இருக்காது. எப்போதும் உங்களை மகாத்மாக்கள் என்று கருதுங்கள். மகாத்மாக்களால் சாதாரணமான பணிகளைச் செய்ய முடியாது. மகாத்மாக்கள் எவருக்கும் முன்னால் தலைவணங்குவதில்லை. எனவே, நீங்கள் மாயைக்கு முன்னாலும் தலைவணங்குவதில்லை. குமாரிகள் என்றால் கரங்கள் என்று அர்த்தம். குமாரிகள் சக்திகள் ஆகுவதெனில் சேவையில் வளர்ச்சி உள்ளது என்று அர்த்தம். நீங்கள் உலக சேவையாளர்களாகி. உலகிற்கே நன்மை செய்யும் விசேடமான ஆத்மாக்கள் என்பதையிட்டுத் தந்தை களிப்படைகிறார்.

4. குமாரிகளான நீங்கள் இளையவர்களோ அல்லது வயதானவர்களோ, குமாரிகளான நீங்கள் அனைவரும் 100 பிராமணர்களை விட அதிமேன்மையானவர்கள். நீங்கள் உங்களை இவ்வாறு கருதுகிறீர்களா? ‘100 பிராமணர்களை விட மகத்தான குமாரிகள்’ என்பது ஏன் நினைவுகூரப்படுகிறது? ஒவ்வொரு குமாரியும் நிச்சயமாகக் குறைந்தபட்சம் 100 பிராமணர்களையேனும் தயாராக்குவார். இதனாலேயே, நீங்கள் 100 பிராமணர்களை விட மகத்தானவர்கள் எனப்படுகிறீர்கள். 100 என்பது எதுவுமே இல்லை. நீங்கள் உலகிற்கே சேவை செய்பவர்கள். குமாரிகளான நீங்கள் அனைவரும் 100 பிராமணர்களை விட அதிமேன்மையானவர்கள். நீங்கள் ஆத்மாக்கள் அனைவரையும் மேன்மையாக்கும் மேன்மையான ஆத்மாக்கள். உங்களுக்கு இந்த போதை உள்ளதா? நீங்கள் கல்லூரிகள் அல்லது பாடசாலைகளைச் சேர்ந்த குமாரிகள் அல்ல. நீங்கள் இறை உலகப் பல்கலைக்கழகத்தின் குமாரிகள் ஆவீர்கள். நீங்கள் எத்தகைய குமாரிகள் என மக்கள் கேட்கும்போது, நீங்கள் இறை உலகப் பல்கலைக்கழகத்தின் குமாரிகள் என்று சொல்லுங்கள். குமாரிகளான நீங்கள் ஒவ்வொருவரும் சேவையாளர் ஆகுவீர்கள். எத்தனை நிலையங்களை நீங்கள் திறப்பீர்கள்? குமாரிகளைப் பார்க்கும்போது, கரங்கள் பல தயாராகி உள்ளன எனத் தந்தை களிப்படைகிறார். நீங்கள் வலது கரங்கள், அல்லவா? நீங்கள் இடது கரங்கள் இல்லை. நீங்கள் இடது கையால் எதையாவது செய்யும்போது, அதில் சிறிது தளம்பல் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. உங்களின் வலது கையால் நீங்கள் பணியைச் செய்யும்போது, அது விரைவாகப் பூர்த்தியாகுவதுடன், நன்றாகவும் செய்யப்படும். எனவே, குமாரிகளான நீங்கள் அனைவரும் தயார் என்றால், எத்தனை நிலையங்கள் திறக்கப்படும்? உங்களை அனுப்பும் இடத்திற்கு நீங்கள் செல்வீர்கள், அல்லவா? உங்களை இருக்கச் சொல்லும் இடத்தில் நீங்கள் இருப்பீர்கள், அல்லவா? குமாரிகளான நீங்கள் மகத்தானவர்கள். எப்போதும் மகத்தானவர்களாக இருங்கள். சகவாசத்தின் ஆதிக்கத்திற்கு உள்ளாகாதீர்கள். யாராவது உங்களை நிறமூட்ட முயற்சி செய்தால், நீங்கள் உங்களின் நிறத்தால் அவனை அல்லது அவளை நிறமூட்டுங்கள். உங்களின் பெற்றோர்கள் உங்களுக்கு பந்தனத்தை உருவாக்க முயற்சித்தாலும், நீங்கள் பந்தனத்தில் கட்டுப்படுபவர்கள் இல்லை. எப்போதும் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருங்கள். எப்போதும் பாக்கியசாலியாக இருங்கள். குமாரி வாழ்க்கை என்றால் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஒரு வாழ்க்கை ஆகும். பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்கள் ஒருபோதும் பூஜிப்பவர்கள் ஆக மாட்டார்கள். நீங்கள் சதா இந்த போதையைப் பேணுபவர்கள். அச்சா.

5.நீங்கள் அனைவரும் இறைவிகள், அல்லவா? குமாரி என்றால் இறைவி என்று அர்த்தம். தவறான பாதையில் செல்பவர்கள் பணிப்பெண்கள் ஆகுகிறார்கள். மகாத்மாக்கள் ஆகுபவர்கள், இறைவிகள் ஆகுகிறார்கள். பணிப்பெண் தலைவணங்க வேண்டும். நீங்கள் அனைவரும் இறைவிகள். பணிப்பெண்கள் ஆகுபவர்கள் அல்ல. இறைவிகள் அதிகளவில் பூஜிக்கப்படுகிறார்கள். இதுவே உங்களின் வழிபாடு, அல்லவா? நீங்கள் இளையவரோ வயதானவரோ, நீங்கள் அனைவரும் இறைவிகளே. நீங்கள் மகத்தான, தூய ஆத்மாக்கள் என்பதை எல்லா வேளையும் நினைவு செய்யுங்கள். தந்தைக்குச் சொந்தமாக இருத்தல் சிறிய விடயம் அல்ல. அவ்வாறு கூறுதல் இலகுவாக உள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் யாருக்குச் சொந்தமானவர்கள்? நீங்கள் எந்தளவிற்கு மேன்மையானவர்கள் ஆகியுள்ளீர்கள்? ஆத்மாக்களான நீங்கள் எந்தளவிற்கு விசேடமானவர்கள் ஆகியுள்ளீர்கள்? தொடர்ந்து முன்னேறும்போது, ஆத்மாக்களான நீங்கள் எத்தனை மகத்தானவர்கள் என்றும் எவ்வளவு மேன்மையானவர்கள் என்றும் நீங்கள் நினைவு செய்கிறீர்கள்;. பாக்கியசாலி ஆத்மாக்கள் எப்போதும் தமது பாக்கியத்தை நினைவு செய்வார்கள். நீங்கள் யார்? ஒரு பெண்தெய்வம். பெண்தெய்வம் எப்போதும் புன்னகை புரிவார். அவர் அழமாட்டார். நீங்கள் பெண்தெய்வத்தின் விக்கிரத்தின் முன்னால் சென்றதும், எதைக் காண்கிறீர்கள்? அவர் எப்போதும் புன்னகை செய்வதை. அவர் சதா அருள்பவர். தனது கண்களாலும் கைகளாலும் அருள்புரிந்து கொண்டே இருப்பார். ஒரு தேவி அல்லது இறைவி என்றால் அருள்பவர் என்று அர்த்தம். நீங்கள் எதைக் கொடுக்கப் போகிறீர்கள்? நீங்கள் அனைவருக்கும் சந்தோஷம், அமைதி, ஆனந்தம், அன்பு என்ற பொக்கிஷங்களை வழங்கும் இறைவிகள் ஆவீர்கள். நீங்கள் அனைவரும் வலது கரங்கள். வலது கரம் என்றால் மேன்மையான செயல்களைச் செய்பவர் என்று அர்த்தம். 

ஆசீர்வாதம்:
நீங்கள் வீணான எண்ணங்களின் காரணத்தை அறிவதன் மூலம், வீணான எண்ணங்கள் அனைத்தையும் முடிக்கும் தீர்வுகளின் சொரூபம் ஆகுவீர்களாக.

வீணான எண்ணங்கள் தோன்றுவதற்கு இரண்டு பிரதானமான காரணங்கள் உள்ளன. 1) அகங்காரம் (அபிமான்) 2) அவமதிக்கப்பட்ட உணர்வு (அப்மான்). எனக்கு ஏன் குறைவாகக் கொடுக்கப்பட்டுள்ளது? நானும் இந்த அந்தஸ்தைப் பெற வேண்டும். என்னையும் முன்னால் வைக்க வேண்டும். இதில், நீங்கள் ஒன்றில் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறீர்கள். அல்லது அகங்காரம் கொள்கிறீர்கள். உங்களின் பெயர், மரியாதை, கௌரவம், முன்னேறுதல் அல்லது சேவை என்பவற்றைப் பொறுத்தவரை, அகங்காரத்தை அல்லது அவமதிக்கப்பட்டதாக உணர்தலே வீணான எண்ணங்களுக்கான காரணம் ஆகும். அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கான தீர்வைக் காணுதலே தீர்வுகளின் சொரூபம் ஆகுதல் ஆகும்.

சுலோகம்:
மௌன சக்தியால் இனிமையான இல்லத்திற்குப் பயணித்தல் மிகவும் இலகுவானது.