18.12.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். எனவே, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரம்மாவை நம்பாமலிருக்கின்ற அல்லது நீங்கள் சிவபாபாவுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை என்றுமே கொண்டிராதீர்கள்.
பதில்:
பிறரிடம் எதையாவது செய்யுமாறு கூறுவதற்கு முன்னர் தாங்கள் முதலில் அனைத்தையும் பயிற்சியில் இடுபவர்கள் இயல்பாகவே அனைவராலும் நேசிக்கப்படுகின்றனர். முதலில் நீங்கள் இந்த ஞானத்தை உங்களுக்குள் கிரகித்து, பின்னர் ஏனைய பலருக்கும் சேவை செய்ய வேண்டும். அப்பொழுதே நீங்கள் அனைவரினதும் அன்பைப் பெறுவீர்கள். நீங்கள் ஒன்றைச் செய்யாமல், ஆனால் பிறரிடம் செய்யுமாறு கூறுவீர்களாயின், யார் உங்களை நம்புவார்கள்? நீங்கள் ஒரு பண்டிதரைப் போன்றே இருப்பீர்கள்.
ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார், அதாவது, பரமதந்தை ஆத்மாக்களாகிய உங்களிடம் வினவுகின்றார்: நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்களா? பாபாவிற்கெனச் சொந்தமாக ஓர் இரதம் இல்லை. தந்தை இந்த நெற்றியின் மத்தியில் வசிக்கின்றார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. தந்தையே கூறியுள்ளார்: நான் இவரது நெற்றியின் மத்தியில் அமர்ந்திருக்கின்றேன். நான் இவரது சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளேன். இவரது ஆத்மா இந்த நெற்றியின் மத்தியில் இருக்கின்றார், எனவே தந்தையும் வந்து இங்கேயே அமர்கின்றார். பிரம்மா இங்கிருப்பதனால், சிவபாபாவும் இங்கேயே இருக்கின்றார். பிரம்மா இங்கு இல்லாதிருந்தால், சிவபாபாவும் இங்கு இருந்திருக்க மாட்டார். எவராவது, தான் பிரம்ம பாபாவையன்றி சிவபாபாவை மாத்திரமே நினைவுசெய்வதாகக் கூறுவாராயின், சிவபாபாவினால் எவ்வாறு அவருடன் பேச முடியும்? நீங்கள் சிவபாபா மேலே இருப்பதாக நினைவுசெய்து வந்தீர்கள். இப்பொழுது நீங்கள் இங்கு தந்தையுடன் இருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சிவபாபா மேலேயே இருக்கின்றார் என நீங்கள் இப்பொழுது எண்ண மாட்டீர்கள். சிவபாபா மேலே இருந்தார் என்றே நீங்கள் பக்தி மார்க்கத்தில் கூறினீர்கள், ஆனால் அவரது உருவம் இங்கேயே வழிபடப்படுகின்றது. இவ்விடயங்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தை ஞானக்கடலும், ஞானம் நிறைந்தவரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, அவர் எங்கிருந்து இந்த ஞானத்தைப் பேசுகின்றார்? அவர் பிரம்மாவின் சரீரத்தின் மூலமாகவே அதனைப் பேசுகின்றார். பலரும் தாங்கள் பிரம்மாவை நம்புவதில்லை எனக் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் சிவபாபா கூறுகின்றார்;: நான் இவரது வாயின் மூலமே ‘என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்’ என உங்களுக்குக் கூறுகின்றேன். இது புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். பிரம்மாவும் கூறுகின்றார்: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். தன்னை நினைவுசெய்யுமாறு இவர் உங்களுக்குக் கூறவில்லை. சிவபாபா இவர் மூலம் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். நான் இந்த வாயினூடாகவே உங்களுக்கு இந்த மந்திரத்தைக் கொடுக்கின்றேன். பிரம்மா இங்கு இல்லாதிருந்தால், எவ்வாறு என்னால் உங்களுக்கு இந்த மந்திரத்தைக் கொடுக்;க முடியும்? பிரம்மா இங்கு இல்லாதிருந்தால் உங்களால் எவ்வாறு சிவபாபாவைச் சந்திக்க முடியும்? உங்களால் எவ்வாறு எனக்கு அருகில் அமர்ந்திருக்க முடியும்? அவர்கள் என்னிடமிருந்து தங்கள் முகங்களை அப்பால் திருப்பி விடுமளவிற்கு, மாயை பல நல்ல மகாராத்திகளிடத்திலும் அத்தகைய எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றாள். தாங்கள் பிரம்மாவை நம்புவதில்லை எனக் கூறுபவர்களின் நிலை என்னவாகும்? உங்கள் முகங்களை பாபாவிடமிருந்து முற்றிலும் அப்பால் திருப்பிவிடும் அளவிற்கு மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். நீங்கள் இப்பொழுது சிவபாபாவிற்கு முன்னால் இருக்கின்றீர்கள். நீங்கள் நேரடியாக அவர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். எனவே, உங்களில் சிலர், பிரம்மாவால் எப்பலனும் இல்லை எனக் கூறுவீர்களாயின், உங்கள் நிலை என்னவாகும்? நீங்கள் சீரழிவையே அனுபவம் செய்வீர்கள். தந்தையாகிய கடவுளை மக்கள் கூவியழைக்கும்பொழுது, தந்தையாகிய கடவுள் அவர்களைச் செவிமடுக்கின்றாரா? “ஓ விடுதலையளிப்பவரே, வாருங்கள்!” என அவர்கள் கூறுகின்றார்கள். அவர் மேலிருந்தவாறு உங்களுக்கு விடுதலையளிப்பாரா? ஒவ்வொரு கல்பத்திலும் அதி மங்களகரமான சங்கமயுகத்திலேயே தந்தை வருகின்றார். அவர் எவரினுள் வருகினறாரோ அவரையே நீங்கள் நிராகரித்தால், இதனை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? ஒரு சதமும் பெறுமதியற்றவர்கள் ஆகுவதில், உங்களை முதலாம் இலக்கத்தவர் ஆக்குமளவிற்கு மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். சில நிலையங்களில் அத்தகைய குழந்தைகளும் உள்ளனர். இதனாலேயே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தந்தை கூறுகின்றார். பாபா அவர்களுக்குக் கொடுத்துள்ள ஞானத்தை அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கின்றபொழுதிலும், அவர்கள் பண்டிதர்களைப் போன்றே உள்ளனர். பாபா அடிக்கடி பண்டிதரின் கதையைக் கூறுவது வழக்கம். தற்பொழுது, நீங்கள் தந்தையின் நினைவின் மூலம் நச்சுக்கடலில் இருந்து பாற்கடலுக்குச் செல்கின்றீர்கள். அவர்கள் பக்தி மார்க்கத்தில் பல கதைகளை உருவாக்கியுள்ளனர். இராம நாமத்தை உச்சரிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஆற்றைக் கடக்க முடியும் எனப் பண்டிதர் ஒருவர் தனது சீடர்களுக்கு ஒரு தடவை கூறினார். எவ்வாறாயினும், அந்த நாமத்தை உச்சரிப்பதன் மூலம் அவராலேயே தனது கணக்கில் எதையும் சேகரிக்க முடியவில்லை. தாங்கள் விகாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு, பிறரை விகாரத்தில் ஈடுபடக்கூடாது எனக் கூறுபவர்கள் பிறரில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்? சில இடங்களில், ஞானத்தைக் கொடுப்பவர்களை விடவும் ஞானத்தைச் செவிமடுத்து, வேகமாக முன்னேறுகின்ற சிலரும் உள்ளனர். மற்றவர்களுக்கு அதிகச் சேவை செய்பவர்களே, நிச்சயமாக அனைவராலும் அதிகளவு நேசிக்கப்படுவார்கள். அந்தப் பண்டிதர் போலியானவர். எனவே, அவரை யார் நேசிப்பார்கள்? பாபாவை நடைமுறையில் நினைவு செய்பவர்களை நோக்கியே அன்பு செல்கின்றது. நல்ல மகாராத்திகளையும் மாயை விழுங்கிவிடுகின்றாள். பாபா விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இன்னமும் உங்கள் கர்மாதீத ஸ்திதியை உருவாக்கவில்லை. யுத்தத்திற்கான ஆயத்தங்கள் அனைத்தும் தயாராகும் வரை அது உருவாக்கப்பட மாட்டாது. ஒருபுறம் அவர்கள் யுத்தத்திற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருப்பார்கள், மறுபுறம், நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைந்திருப்பீர்கள். இரண்டுமே தொடர்புபட்டுள்ளது. பின்னர் யுத்தம் முடிவடைந்து நீங்கள் இடமாற்றம் செய்யப்படுவீர்கள். அனைத்திற்கும் முதலில் உருத்திரரின் மாலை உருவாக்கப்படுகின்றது. இவ்விடயங்கள் பற்றி வேறு எவருக்கும் தெரியாது. இந்த உலகம் மாற வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இன்னமும் 40,000 வருடங்களுக்கு இந்த உலகம் தொடர வேண்டும் என அவர்கள் எண்ணுகின்றார்கள், ஆனால் விநாசம் உங்கள் முன்னால் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சிறுபான்மையினராக உள்ளீர்கள், அவர்களோ பெரும்பான்மையினராக உள்ளனர், எனவே, உங்களை யார் நம்புவார்கள்? உங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்பொழுது, பலரும் உங்கள் யோக சக்தியினால் ஈர்க்கப்படுவார்கள். எந்தளவிற்கு உங்களிடமிருந்து துருவை அகற்றுகின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் சக்தியினால் நிரப்பப்படுவீர்கள். பாபா அனைத்தையும் அறிந்தவர் என்றில்லை; இல்லை. அவர் உங்கள் அனைவரதும் ஸ்திதியை அறிவார். தந்தை தனது குழந்தைகளின் ஸ்திதியை அறிய மாட்டாரா? அவர் அனைவரது ஸ்திதியையும் அறிவார். உங்களால் இப்பொழுது கர்மாதீத ஸ்திதியை அடைய முடியாது. நீங்கள் பல கடும் தவறுகளைச் செய்வது இன்னமும் சாத்தியமானதாகவே உள்ளது. சில மகாராத்திகளும் தவறு செய்கிறார்கள். நீங்கள் பேசும் விதம், செயற்படும் விதம், நீங்கள் நடந்துகொள்ளும் விதம் அனைத்தும் புலப்படவே செய்கின்றது. நீங்கள் இப்பொழுது உங்கள் நடத்தையைத் தெய்வீகமானதாக்க வேண்டும். தேவர்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர்கள், எனவே நீங்களும் அவர்களைப் போன்று ஆகவேண்டும். எவ்வாறாயினும் மாயை எவரையும் தனியே விட்டு வைப்பதில்லை. அவள் அனைவரையும் “தொட்டாற்சிணுங்கி” செடியைப் போன்று ஆக்குகின்றாள். ஐந்து மாடிகள் உள்ளன. நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்பொழுது மேல் மாடியிலிருந்து (அதி உச்சியிலிருந்து) கீழே விழுகின்றீர்கள். நீங்கள் கீழே விழுந்து மரணிக்கின்றீர்கள். இந்நாட்களில், மக்கள் தங்களைத் தாங்களே கொல்வதற்காகப் பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் 20ம் மாடியில் இருந்து கீழே வீழும்பொழுது, முழுமையாகவே முடிவடைந்து விடுகின்றார்கள். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் வலியை அனுபவிக்க முடியாது. தங்களைத் தாங்களே தீ மூட்டிக்கொள்கின்ற சிலரும் இருக்கின்றார்கள். எவராவது அவர்களைக் காப்பாற்றினால் அவர்கள் அதிகளவு வலியையே அனுபவம் செய்கிறார்கள். சரீரங்கள் எரிக்கப்படும்பொழுது, ஆத்மாக்கள் ஓடிவிடுகிறார்கள். இதனாலேயே அவர்கள் தற்கொலை செய்கின்றார்கள். தற்கொலை செய்வதன் மூலம் தாங்கள் வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் விடுபட முடியும் என மக்கள் எண்ணுகின்றார்கள். இதனைச் செய்வதற்குத் தாங்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக அவர்கள் உணரும்பொழுது, அவர்களுக்கு அனைத்துமே முடிவடைந்து விடுகின்றது. சிலர் வைத்தியசாலையில் அதிகளவு வலியை அனுபவிக்கின்றார்கள். அவர்களை அவ்வலியிலிருந்து விடுவிக்க முடியாதென்பதால், அவர்கள் மரணிப்பதற்காக அவர்களுக்கு ஒரு மாத்திரையைக் கொடுப்பதே சிறந்தது என வைத்தியர்கள் அறிவார்கள். எவ்வாறாயினும், அந்த முறையில் ஒரு மாத்திரையைக் கொடுப்பது மகாபாவம் என்பதையும் அவர்கள் உணர்கின்றார்கள். வலியைச் சகித்துக் கொள்வதை விட, எனது சரீரத்தை நீக்கிச் செல்வதே சிறந்தது என ஆத்மாவே கூறுகின்றார். ஆனால் அந்தச் சரீரத்தை நீங்கிச் செல்வதற்கு யார் அனுமதிப்பார்கள்? இது முடிவற்ற துன்ப உலகமாகும். அதுவோ முடிவற்ற சந்தோஷ உலகமாகும். நீங்கள் இப்பொழுது துன்ப பூமியில் இருந்து சந்தோஷ பூமிக்குத் திரும்பிச் செல்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். எனவே, நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். தந்தை சங்கமயுகத்திலே மாத்திரம் உலகம் மாற வேண்டியுள்ளபொழுது, வருகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களைச் சகல விதமான துன்பத்திலிருந்தும் விடுவித்து, தூய புதிய உலகிற்கு அனுப்புவதற்கு வந்துள்ளேன். தூய உலகில் வெகு சிலரே இருக்கின்றார்கள், ஆனால் இங்கோ ஏராளமானோர் உள்ளனர். நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டதனால், “ஓ தூய்மையாக்குபவரே!” எனக் கூவி அழைக்கின்றீர்கள். இந்த அழுக்கான உலகில் இருந்து மீண்டும் உங்களை வீட்டுக்குத் திரும்பவும் அழைத்துச் செல்லுமாறு மகா காலனையே அழைக்கின்றீர்கள் என்பதை நீங்கள் உணரவில்லை. பாபா நிச்சயம் வருவார். அனைவரும் மரணிக்கும்பொழுதே அமைதி நிலவும். மக்கள் தொடர்ந்தும் அமைதியை வேண்டுகின்றார்கள். அமைதி தாமத்தில் மாத்திரமே அமைதி இருக்கின்றது. ஏராளமான மனிதர்கள் வாழும் இவ்வுலகில் எவ்வாறு அமைதி நிலவ முடியும்? சத்திய யுகத்தில் அமைதியும், சந்தோஷமும் இருந்தன. கலியுகத்தில் இப்பொழுது பல சமயங்கள் உள்ளன. அவை அழிக்கப்பட்டு, ஒரு தர்மம் ஸ்தாபிக்கப்படும்பொழுதே அமைதியும் சந்தோஷமும் நிலவ முடியும். துன்ப அழுகுரல்களின் பின்னர், வெற்றி முழக்கம் கேட்கும். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, மரணச் சந்தை எவ்வளவு சூடு பிடித்திருக்கும் என்பதைக் காண்பீர்கள்! அவர்கள் எவ்வாறு கொல்லப்படுகின்றார்கள் எனப் பாருங்கள்! குண்டுகளினாலேயே தீ மூட்டப்படுகின்றது! அவர்கள் மேற்கொண்டு முன்னேறுகையில், நிகழ்கின்ற விடயங்களைக் காணும்பொழுது, எதிர்காலத்தில் நிச்சயமாக விநாசம் நிகழும் எனப் பலர் கூறுவார்கள். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு தொடர்;ந்து சுழல வேண்டும் என்பதையும், எவ்வாறு விநாசம் இடம்பெற வேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பதுடன், ஒரு தர்மத்தின் ஸ்தாபனையையும் நிகழச் செய்கின்றார். ஏனைய எண்ணற்ற சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. இது கீதையில் காட்டப்படவில்லை. எனவே, கீதையைக் கற்றதன் பெறுபேறு என்ன? பிரளயம் ஏற்பட்டு, ஏறக்குறைய எல்லா இடங்களுமே நீரினால் மூடப்பட்டதாக அவர்கள் காட்டுகின்றார்கள். எவ்வாறாயினும், முழு உலகமுமே மூடப்படவில்லை. பாரதமே தூய, அழிவற்ற பூமியாகும். அதிலும், அபுவே தந்தை வந்து அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற, அதி தூய்மையான யாத்திரை ஸ்தலமாகும். தில்வாலா ஆலயம் மிகச்சிறந்த ஒரு ஞாபகார்த்தம். அது அதிகளவு முக்கியத்துவம் உடையது, ஆனால் அதனைக் கட்டியவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை. குறைந்தபட்சம் அவர்கள் விவேகம் உள்ளவர்களாகவேனும் இருந்தார்கள். துவாபர யுகத்தில், மிகவும் விவேகம் உள்ள சிலர் இருந்திருக்க வேண்டும். கலியுகத்தில் அனைவரும் தமோபிரதானாக உள்ளனர். நீங்கள் அமர்ந்திருக்கின்ற இதுவே அனைத்திலும் அதி மேன்மையான ஆலயமாகும். நீங்கள் உயிருடன் இருக்கின்றீர்கள் என்பதையும், அது உங்கள் உயிரற்ற ஞாபகார்த்தம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், அத்தகைய ஆலயங்கள் சிறிது காலத்திற்குத் தொடர்ந்து கட்டப்படும், பின்னர் அவை முழுமையாக அழிக்கப்படுவதற்கான காலம் வரும். ஆலயங்கள் அனைத்தும் முழுமையாக இடிந்து விழும்; ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் மரணம் ஏற்படும் (றாழடநளயடந னநயவா). அனைவரும் அழிக்கப்பட்ட மகாபாரத யுத்தம் நினைவுகூரப்படுகின்றது. தந்தை சங்கம யுகத்திலேயே வருகின்றார் என்பதையும், அவருக்கு ஓர் இரதம் தேவை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மா சரீரத்தில் பிரவேசிக்கும்பொழுதே அசைவு இருக்க முடியும். பின்னர் அவர் சரீரத்தை நீக்கிச் செல்லும்பொழுது, சரீரம் உயிரற்றதாகுகின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது வீட்டிற்குச் செல்கின்றீர்கள். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனைப் போல் ஆகவேண்டும். எனவே அவர்களிடமுள்ள தெய்வீகக் குணங்கள் உங்களுக்கும் அவசியமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்நாடகத்தைப் பற்றி அறிவீர்கள். இது மிகவும் அற்புதமான நாடகம்! தந்தை இங்கிருந்து இந்நாடகத்தின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்துகின்றார். தந்தை விதையாகிய, ஞானம் நிறைந்தவர். தந்தை மாத்திரமே முழு விருட்சத்தினதும் ஞானத்தைக் கொடுப்பதற்கு வருகின்றார்: அதில் (நாடகத்தில்) என்ன நிகழ்கிறது, நீங்கள் எவ்வளவு காலமாக அதில் உங்கள் பாகங்களை நடித்து வருகின்றீர்கள் என்பனவாகும். அரைக் கல்பத்திற்குத் தெய்வீக இராச்சியமும், மற்றைய அரைக் கல்பத்திற்கு அசுர இராச்சியமும் இருக்கின்றன. நல்ல குழந்தைகள் தங்களின் புத்தியில் இந்த ஞானம் முழுவதையும் வைத்திருக்கின்றனர். தந்தை, ஆசிரியர்களான உங்களைத் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகின்றார். ஆசிரியர்களும் வரிசைக்கிரமமானவர்கள். சிலர் ஆசிரியர்களாகி, பின்னர் சீரழிந்து விடுகின்றார்கள். பல குழந்தைகளுக்கும் கற்பித்த பின்னர் அவர்களே இல்லாமல் போய்விட்டார்கள். இளம் குழந்தைகள் பலவகையான சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்த ஞானத்தை மிகச்சரியாகப் புரிந்துகொள்ளாமல், தங்கள் நடத்தையைச் சீர்திருத்தாமல் இருப்பவர்கள், பலரையும் சந்தோஷமற்றவர்கள் ஆக்குவதற்குக் கருவிகள் ஆகுகின்றனர். அசுரர்கள் எவ்வாறு இரகசியமாக ஒன்றுகூடலினுள் வந்தார்கள் எனச் சமயநூல்களில் காட்டப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வெளியில் சென்று, துரோகிகளாகிப் பெருமளவு தொந்தரவுகளையும் ஏற்படுத்தினார்கள். இவ்விடயங்கள் அனைத்தும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. அவர்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவராகிய, படைப்பவராகிய, அதிமேலான தந்தையை எதிர்க்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் அமைதிக் கோபுரங்களும், சந்தோஷக் கோபுரங்;களும் ஆவீர்கள். நீங்கள் மிகவும் இராஜரீகமானவர்கள். தற்பொழுது உங்களை விடவும் இராஜரீகமானவர்கள் வேறு எவருமே இல்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாக இருப்பதனால், மிகவும் இனிமையாகத் தொடர்பாட வேண்டும்! நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடாது. இல்லாவிடில், இறுதியில் நீங்கள் அதனை நினைப்பதுடன், பின்னர் அதற்கான தண்டனையையும் அனுபவிக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். சில குழந்தைகள் சூட்சும உலகில் பிரம்மாவின் காட்சியைக் காண்கிறார்கள். நீங்களும் சூட்சும உலகவாசிகள் ஆகவேண்டும். நீங்கள் “மூவி”யில் (அழஎநை - மௌனத் திரைப்படம் போன்று அசைவுகள் நிறைந்த சூட்சும உலகம்) இருப்பதைப் பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் மிகக்குறைவாகவும், மிக இனிமையாகவும் பேசவேண்டும். இவ்விதமாக முயற்சி செய்வதால், நீங்கள் அமைதிக் கோபுரங்கள் ஆகுவீர்கள். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். பின்னர் நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். பக்தி மார்க்கம் சத்தம் நிறைந்தது (வயடமநை). நீங்கள் இப்பொழுது மௌனத்தைப் பேண வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் பெருமளவு இனிமையுடனும், இராஜரீகத்துடனும் தொடர்பாட வேண்டும். அமைதிக் கோபுரமாகவும், சந்தோஷக் கோபுரமாகவும் ஆகுவதற்கு, நீங்கள் மிகக் குறைவாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். நீங்கள் “மூவி” யில் (அழஎநை- மௌனத் திரைப்படம் போன்று அசைவுகள் நிறைந்த சூட்சும உலகம்) இருப்பதைப் பயிற்சி செய்ய வேண்டும், சத்தத்திற்குள் (வயடமiபெ) வராதீர்கள்.
2. உங்கள் நடத்தையைத் தெய்வீகமானதாக்குங்கள். நீங்கள் “தொட்டாற் சிணுங்கி” செடி போன்று ஆகக்கூடாது. யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரே நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைய வேண்டும். விகாரமற்றவர்களாகி, பிறரையும் விகாரமற்றவர்கள் ஆக்கும் சேவையைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையைப் போன்று கர்மாதீதம் ஆகி, உங்கள் செயல்கள்;, உங்கள் உறவுமுறைகள் இரண்டிலும் சுயநல உணர்வுகளிலிருந்து விடுபட்டிருப்பீர்களாக.
அனைவரையும் விடுவிப்பதே குழந்தைகளாகிய உங்களின் சேவையாகும். எனவே, பிறரை விடுவிக்கையில், உங்களை எந்தப் பந்தனத்திலும் கட்டாதீர்கள். நீங்கள் எல்லைக்குட்பட்ட “எனது” என்பதிலிருந்து விடுபட்டிருக்கும்பொழுது, உங்களால் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்ய முடியும். லௌகீக, அலௌகீக வாழ்க்கைகளிலும், தங்கள் செயல்களிலும், தங்கள் உறவுமுறைகளிலும் எந்தச் சுயநலமான உள்நோக்கங்களிலிருந்தும் விடுபட்டிருக்கும் குழந்தைகளாலேயே தந்தையைப் போன்று கர்மாதீத ஸ்திதியை அனுபவம் செய்ய முடியும். எனவே, நீங்கள் எந்தளவிற்கு எந்தக் கர்ம பந்தனத்திலிருந்தும் விடுபட்டவர்கள் ஆகிவிட்டீர்கள் எனச் சோதியுங்கள். எந்த வீணான சுபாவம் அல்லது சம்ஸ்காரங்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருப்பதிலிருந்து விடுபட்டவர்கள் ஆகிவிட்டீர்களா? கடந்த காலத்துச் சம்ஸ்காரங்கள் அல்லது சுபாவம் உங்கள் எவ்வகையிலேனும் ஆதிக்கம் செலுத்துகின்றதா?சுலோகம்:
சமமானவர்களும் முழுமையானவர்களும் ஆகுவதற்கு, உங்களை அன்பு கடலானவரில் அமிழ்த்துங்கள்.