18.08.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 16.01.85 Om Shanti Madhuban
பாக்கிய யுகத்தில் இறைவனின் ஆஸ்தியும் ஆசீர்வாதங்களும் என்ற பேறுகள்.
இன்று, உலக விருட்சத்தின் விதையான தந்தை, மரத்தின் அத்திவாரமாக விளங்கும், முழு விருட்சமும் வளர்வதற்குக் காரணமான அத்திவாரமாக இருக்கும் தனது குழந்தைகளைப் பார்க்கிறார். சாரத்தின் சொரூபங்களாக இருந்து, வளர்ச்சியை ஏற்படுத்துகின்ற விசேடமான ஆத்மாக்களை அவர் பார்க்கிறார். அதாவது, விருட்சத்தின் ஆதார ரூபங்களாக விளங்கும் ஆத்மாக்களை அவர் பார்க்கிறார். விதையானவரிடமிருந்து நேரடியாகத் தாம் பெற்ற சகல சக்திகளையும் கிரகித்துள்ள விசேடமான ஆத்மாக்களை அவர் பார்க்கிறார். உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரிலும், வெகு சில ஆத்மாக்கள் மட்டுமே இந்த விசேடமான பாகத்தைப் பெற்றுள்ளனர். விதையானவருடன் உறவுமுறையை ஏற்படுத்தியதால் மேன்மையான பேறுகளுக்கான பாகத்தைப் பெற்ற வெகு சில ஆத்மாக்களே உள்ளனர்.
இன்று, பாப்தாதா இத்தகைய மேன்மையான, பாக்கியசாலிக் குழந்தைகளின் பாக்கியத்தைப் பார்த்தார். குழந்தைகளான நீங்கள் இரண்டு வார்த்தைகளை நினைவு செய்கிறீர்கள்: பகவான் (இறைவன்), பாக்கியம் (அதிர்ஷ்டம்). அனைவரும் தமது கர்மாவிற்கேற்பவே பாக்கியத்தைப் பெறுகிறார்கள். ஆத்மாக்களான நீங்களும் துவாபர யுகத்தில் இருந்து கர்மம் மற்றும் பாக்கியம் என்ற கணக்குகளை ஏற்படுத்தி வந்தீர்கள். ஆனால், இந்தப் பாக்கிய யுகத்தில், கடவுளே உங்களுக்குப் பாக்கியத்தைக் கொடுக்கிறார். மேன்மையான செயல்கள் என்ற பேனாவால் மேன்மையான பாக்கிய ரேகையை வரைவதற்கான வழிமுறையைக் குழந்தைகளான உங்களுக்கு அவர் கொடுக்கிறார். இந்தப் பேனாவால், நீங்கள் விரும்பியவாறு பிறவி பிறவியாக, மேன்மையான, தெளிவான பாக்கிய ரேகையை வரைந்து கொள்ள முடியும். வேறெந்த நேரத்திற்கும் இந்த ஆசீர்வாதம் கிடையாது. இந்த நேரத்தில் மட்டுமே, நீங்கள் விரும்பியதை, நீங்கள் விரும்பிய அளவிற்குப் பெறுகின்ற ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. ஏன்? இறைவன் குழந்தைகளான உங்களுக்குப் பெருந்தன்மையான இதயத்துடன் பாக்கியப் பொக்கிஷங்களைக் கொடுக்கிறார். நீங்கள் அதற்கு எந்தவிதமான முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அது ஒரு திறந்த பொக்கிஷக் களஞ்சியம். அதற்கு எந்தவிதமான பூட்டுகளோ அல்லது சாவிகளோ கிடையாது. அது, நீங்கள் விரும்பியளவிற்குப் பல பொக்கிஷங்களை உங்களால் எடுத்துக் கொள்ளக்கூடிய நிரம்பிவழியும், எல்லையற்ற பொக்கிஷக் களஞ்சியம் ஆகும். அது ஓர் எல்லையற்ற, நிரம்பிவழியும் பொக்கிஷக் களஞ்சியம். தினமும், பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு நினைவூட்டுகிறார்: நீங்கள் விரும்பிய அளவை எடுத்துக் கொள்ளுங்கள்! உங்களின் கொள்ளளவுக்கேற்ப எடுக்காதீர்கள். ஆனால், பெரிய இதயத்துடன் திறந்த பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களில் எவரேனும் உங்களின் கொள்ளளவுக்கேற்ப எடுத்தால் தந்தையால் என்ன சொல்ல முடியும்? தந்தையும் பற்றற்ற பார்வையாளராக இருந்து அதை அவதானித்துப் புன்னகை செய்கிறார்: குழந்தைகள் சிறிதளவுடன் சந்தோஷம் அடையும் அளவிற்கு அப்பாவிகள். ஏன்? ஏனெனில், 63 பிறவிகளாக, சிறிதளவுடன் சந்தோஷம் அடைகின்ற பக்தர்களின் சம்ஸ்காரங்களைக் கொண்டிருந்தீர்கள். முழுமையான பேறுகளை எடுப்பதற்குப் பதிலாக, சிறிதளவை அதிகம் என்று நினைத்து, அதனால் திருப்தி அடைகிறீர்கள்.
அநாதியான தந்தையிடமிருந்து சகல பேறுகளையும் எடுப்பதற்கான நேரம் இதுவே என்பதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். எவ்வாறாயினும், பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு நினைவூட்டுகிறார்: சக்திசாலி ஆகுங்கள். இன்னமும் மிகவும் பிந்திவிடவில்லை. நீங்கள் பிந்தியே வந்தீர்கள். ஆனால் இன்னமும் ‘மிகவும் பிந்திவிட்டது’ என்ற காலம் வரவில்லை. இதனாலேயே, இப்போதும், தந்தையின் இரண்டு ரூபங்களிடமிருந்தும் பெறுவதற்கான நேரம் இதுவே ஆகும். தந்தையிடமிருந்து ஆஸ்தியும், சற்குருவிடமிருந்து ஆசீர்வாதங்களும். ஆகவே, உங்களின் மேன்மையான பாக்கியத்தை ஆசீர்வாதங்கள் மற்றும் ஆஸ்தி என்ற வடிவில் இலகுவாக உருவாக்கிக் கொள்ளுங்கள். ‘பாக்கியத்தை அருள்பவர் பாக்கியத்தைப் பகிர்ந்து அளித்தார். ஆனால் நான் இந்தளவை மட்டுமே பெற்றேன்’ என நீங்கள் பின்னர் சிந்திக்க மாட்டீர்கள். சர்வசக்திவான் தந்தையின் குழந்தைகள் ‘கொள்ளளவிற்கேற்ப’ என்று இருக்க முடியாது. தந்தையின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து நீங்கள் விரும்பியதை உங்களின் உரிமையாக எடுத்துக் கொள்ளும் ஆசீர்வாதம் இப்போது உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் பலவீனமாக இருந்தாலும், தந்தையின் உதவியால் உங்களால் உங்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மேன்மையானதாக ஆக்கிக் கொள்ள முடியும். ஏனெனில், ஒரு குழந்தை தைரியமாக இருக்கும்போது, தந்தையும் உதவி செய்கிறார். தந்தையின் திறந்த பாக்கியப் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து தந்தையின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு உங்களுக்கு மிகக் குறைந்தளவு நேரமே எஞ்சியுள்ளது.
இந்த வேளையில், தந்தை உங்கள் மீது வைத்திருக்கும் அன்பினால், ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தந்தை உங்களின் சகபாடியாக இருக்கிறார். ஆனால், சிறிது காலத்தின் பின்னர், சகபாடியாக இருப்பதற்குப் பதிலாக, அனைத்தையும் பற்றற்ற பார்வையாளராக அவதானிக்கும் அவரின் பாகம் ஆரம்பம் ஆகிவிடும். நீங்கள் சகல சக்திகளால் நிரம்பியவர்கள் ஆகுகிறீர்களோ அல்லது உங்களின் கொள்ளளவிற்கேற்ப நிரம்பியவர்கள் ஆகுகிறீர்களோ, அவர் இந்த இரண்டு ஸ்திதிகளையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகவே இருந்து அவதானிப்பார். ஆகவே, இந்த மேன்மையான நேரத்தில், நீங்கள் பாப்தாதாவிடமிருந்து பெற்ற ஆஸ்தி, ஆசீர்வாதங்கள், ஒத்துழைப்பு, சகவாசம் என்ற பாக்கியத்தின் பேறுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பேறுகளை இட்டுக் கவனக்குறைவானவர் ஆகாதீர்கள்: இன்னமும் பல வருடங்கள் எஞ்சியுள்ளன! உலக மாற்றத்திற்கான காலப்பகுதியையும் பேறுகளுக்கான காலப்பகுதியையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இத்தகைய கவனக்குறைவான சிந்தனையால் பின்னால் தங்கிவிடாதீர்கள். உங்களின் பிராமண வாழ்க்கையில், சகல பேறுகளுக்கான இந்த வார்த்தைகளை சதா நினைவில் வைத்திருங்கள் - நீண்ட காலப்பகுதிக்குப் பேறுகளைப் பெறுதல் : ‘இப்பொழுதில்லையேல் எப்போதும் இல்லை.’ இதனாலேயே, உங்களுக்கு இரண்டு வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கும்படி கூறப்பட்டது: பகவான், பாக்யா. அப்போது நீங்கள் எப்போதும் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாக இருப்பீர்கள். பாபாவும் தாதாவும் தமக்கிடையே இதயபூர்வமான சம்பாஷணை செய்கிறார்கள்: குழந்தைகள் ஏன் தமது பழைய பழக்கவழக்கங்களின் பலவந்தத்திற்கு உள்ளாகுகிறார்கள்? தந்தை உங்களைப் பலசாலிகள் (மஜ்பூத்) ஆக்குகிறார். ஆனால் குழந்தைகளான நீங்களோ பலவந்தத்திற்கு (மஜ்பூர்) உள்ளாகுகிறீர்கள். அவர் உங்களுக்கு தைரியம் என்ற கால்களையும் இறக்கைகளையும் கொடுத்து,உங்களைத் தன்னுடன் பறக்கச் செய்கிறார். எனினும், நீங்கள் ஏன் மேலேயும் கீழேயும், கீழேயும் மேலேயும் செல்கிறீர்கள்? களிப்படையும் யுகத்திலும் நீங்கள் தொடர்ந்து குழப்பத்திற்கு உள்ளாகுகிறீர்கள். இது உங்களின் பழைய பழக்கங்களின் பலவந்தத்திற்கு உட்படுதல் எனப்படுகிறது. நீங்கள் பலசாலிகளா அல்லது பலவந்தத்திற்கு உட்படுபவர்களா? தந்தை உங்களை இலேசாகவும் ஒளியாகவும் ஆக்குகிறார். சகல சுமைகளையும் தானே நீக்குவதன் மூலம் உங்களுக்குத் தனது ஒத்துழைப்பையும் கொடுக்கிறார். எவ்வாறாயினும், சுமைகளைச் சுமக்கின்ற பழக்கம் உங்களுக்கு இருப்பதனால், நீங்கள் அந்தச் சுமைகளை எடுத்துக் கொள்கிறீர்கள். அதன்பின்னர் நீங்கள் என்ன பாடலைப் பாடுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ‘கே’ என்ற பாடலைப் பாடுகிறீர்கள். கியா? (என்ன) கியூ (ஏன்) கேஸே? (எப்படி). நீங்கள் இன்னொரு பாடலையும் பாடுகிறீர்கள்: புநஇ பந (அதை எதிர்காலத்திற்கு விட்டுவிடுங்கள்!) அவை பக்திப்பாடல்கள். உரிமையுள்ள ஒருவர் பாடும் பாடல், ‘நான் பெற்றுவிட்டேன்!’ என்பதாகும். எனவே, நீங்கள் என்ன பாடலைப் பாடுகிறீர்கள்? நாள் முழுவதும் நீங்கள் என்ன பாடலைப் பாடுகிறீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். பாப்தாதா குழந்தைகளான உங்களை நேசிக்கிறார். இந்த அன்பினால், அவர் எப்போதும் நினைக்கிறார்: ஒவ்வொரு குழந்தையும் எப்போதும் நிரம்பியிருக்க வேண்டும், சக்திசாலியாக இருக்க வேண்டும், பலமில்லியன் மடங்கு பாக்கியசாலியாக இருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.
காலத்திற்கேற்ப, எப்போதும் ஆஸ்திக்கும் ஆசீர்வாதங்களுக்குமான உரிமையைக் கொண்டிருப்பவர்களுக்கும், திறந்த பாக்கியப் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து தமது முழுமையான பாக்கியத்தை உருவாக்குபவர்களுக்கும், கொள்ளளவிற்கேற்ப (யதா-சக்தி) என்பதில் இருந்து சகல சக்திகளும் நிரம்பியவர்கள் (சர்வசக்தி) என்று மாறுபவர்களுக்கும், மேன்மையான செயல்கள் எனும் பேனாவால் முழுமையான பாக்கிய ரேகையை வரைபவர்களுக்கும், சகல பேறுகளின் சொரூபங்களான இருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், இந்த நேரத்தின் முக்கியத்தை அறிந்திருப்பவர்களுக்கும், உங்களை நிரம்பியவர்கள் ஆக்குவதற்காக பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
1. நீங்கள் எப்போதும் உங்களின் அலௌகீகப் பிறப்பையும் அலௌகீக வாழ்க்கையையும் அலௌகீகத் தந்தையையும் அலௌகீக ஆஸ்தியையும் நினைவு செய்கிறீர்களா? தந்தை அலௌகீகமானவராக இருப்பதைப் போன்று, உங்களின் ஆஸ்தியும் அலௌகீகமானது. பௌதீகத் தந்தை உங்களுக்கு எல்லைக்குட்பட்ட ஆஸ்தியைக் கொடுக்கிறார். அலௌகீகத் தந்தையோ உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். எனவே, எப்போதும் அலௌகீதத் தந்தையினதும் ஆஸ்தியினதும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். நீங்கள் சிலவேளைகளில் உங்களின் லௌகீக வாழ்க்கையின் ஞாபகங்களுக்குள் செல்வதில்லை, அல்லவா? நீங்கள் மரணித்து வாழ்கிறீர்கள், அல்லவா? பௌதீகமாக இறப்பவர்கள் ஒருபோதும் தமது முன்னைய பிறவியை நினைவில் வைத்திருக்காததைப் போன்று, அலௌகீக வாழ்க்கையும் அலௌகீகப் பிறப்புகளையும் எடுத்திருப்பவர்களால் ஒருபோதும் தமது லௌகீகப் பிறப்புகளை நினைக்க முடியாது. இப்போது, யுகமும் மாறிவிட்டது. உலகம் கலியுகமாக உள்ளது. ஆனால் நீங்களோ சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். அனைத்தும் மாறிவிட்டன. நீங்கள் சிலவேளைகளில் கலியுகத்திற்குள் செல்வதில்லை, அல்லவா? இதுவும் ஓர் எல்லையே. நீங்கள் எல்லையைக் கடந்ததும், எதிரியின் கைகளுக்குள் சிக்கிவிடுவீர்கள். எனவே, நீங்கள் எல்லை கடப்பதில்லை, அல்லவா? நீங்கள் அலௌகீக வாழ்க்கை வாழும் சங்கமயுக மேன்மையான ஆத்மா என்ற விழிப்புணர்வுடன் எப்போதும் இருங்கள். நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்? சகல வர்த்தகர்களிலும் மிகப் பெரிய வர்த்தகர் ஆகுங்கள். ஓரடியில் பலமில்லியன்கள் வருமானத்தை நீங்கள் சேமிக்கும் வகையில் ஒரு வர்த்தகர் ஆகுங்கள். நீங்கள் எப்போதும் எல்லையற்ற தந்தைக்குச் சொந்தமானவர் ஆகுவீர்கள். ஆகவே, தொடர்ந்து எல்லையற்ற சேவையில் எல்லையற்ற ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தொடர்ந்து முன்னேறுங்கள்.
2. நீங்கள் சதா இலேசான, ஒளியான ஸ்திதியை அனுபவம் செய்கிறீர்களா? இலேசான, ஒளியான ஸ்திதியின் அடையாளம், சதா பறக்கும் ஸ்திதியில் இருப்பதாகும். பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்களால் ஒருபோதும் மாயையால் கவரப்பட முடியாது. பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்கள் சதா வெற்றியாளர்களாக இருப்பார்கள். பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்களின் புத்திகள் சதா நம்பிக்கையைக் கொண்டிருப்பதுடன் கவலையற்றதாகவும் இருக்கும். பறக்கும் ஸ்திதியில் இருத்தல் என்றால் என்ன அர்த்தம்? பறக்கும் ஸ்திதி என்றால், அதிமேலான ஸ்திதி என்று அர்த்தம். நீங்கள் பறக்கும்போது,மேலே செல்கிறீர்கள், அல்லவா? உங்களை அதிமேலான ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் அதியுயர்ந்த ஆத்மாக்களாகக் கருதியவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள். பறக்கும் ஸ்திதியில் இருத்தல் என்றால் புத்தியின் பாதங்கள் தரையில் படாதிருத்தல் என்று அர்த்தம். தரைக்கு மேலே இருத்தல் என்றால் எந்தவிதமான சரீர விழிப்புணர்விற்கும் அப்பாற்பட்டிருத்தல் என்று அர்த்தம். சரீர விழிப்புணர்வு என்ற தரைக்கு மேலே இருப்பவர்கள், தரையுடன் எந்தவிதமான உறவுமுறையும் இல்லாத சதா தேவதைகள் ஆவார்கள். நீங்கள் இப்போது சரீர விழிப்புணர்வையும் ஆத்ம உணர்வு ஸ்திதியையும் அறிவீர்கள். இரண்டினதும் வேறுபாட்டை நீங்கள் அறிந்திருக்கும்போது, உங்களால் சரீர உணர்வுடையவர் ஆகமுடியாது. நீங்கள் செய்ய விரும்பியதை மட்டுமே நீங்கள் செய்கிறீர்கள், அப்படியல்லவா? ஆகவே, நீங்கள் ஒரு தேவதை என்ற விழிப்புணர்வை எப்போதும் பேணுங்கள். தேவதை என்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் சதா தொடர்ந்து பறப்பீர்கள். நீங்கள் பறக்கும் ஸ்திதிக்குள் செல்லும்போது, கீழேயுள்ள தரையால் உங்களைக் கவரமுடியாது. நீங்கள் அண்டவெளிக்குச் செல்லும்போது, புவியீர்ப்பு விசையின் இழுவை இல்லாததைப் போன்று, நீங்கள் தேவதை ஆகியதும், சரீரம் என்ற பூமி உங்களைக் கவரமாட்டாது.
3. நீங்கள் சதா ஒத்துழைக்கும் கர்மயோகிகள், இயல்பான யோகிகள், சதா யோகிகள் என்ற ஸ்திதியை அனுபவம் செய்கிறீர்களா? ஏதாவதொன்று இலகுவாக இருக்கும்போது, அது எப்போதும் நிலைக்கிறது. அது இலகுவாக இல்லாவிட்டால், அது எப்போதும் இருக்காது. எனவே, நீங்கள் சதா யோகிகளா அல்லது வேறுபாடு உள்ளதா? யோகி என்றால் சதா நினைவில் திளைத்திருப்பவர் என்று அர்த்தம். நீங்கள் இறைவனுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருக்கும்போது, சகல உறவுமுறைகளும் பேணப்படுவதனால், இயல்பான நினைவு காணப்படும். சகல உறவுமுறைகளும் இருக்கும்போது, ஒரேயொருவரின் நினைவு காணப்படும். ஒரேயொருவர் மட்டுமே இருக்கும்போது, சதா நினைவு காணப்படும். எனவே, வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்கு சகல உறவுமுறைகளிலும் சொந்தமானவர் ஆகுங்கள். ஒரேயொரு தந்தைக்குச் சகல உறவுமுறைகளிலும் சொந்தமானவர் ஆகுவதே சதா யோகி ஆகுவதற்கான இலகுவான வழிமுறை ஆகும். உங்களுக்கென வேறெந்த உறவுமுறையும் இல்லாதபோது, உங்களின் நினைவு எங்கு செல்லும்? தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் இலகு யோகி ஆத்மாக்கள் என்ற விழிப்புணர்வை எப்போதும் பேணுங்கள். சதா தந்தைக்குச் சமமானவர் ஆகுவதன் மூலமும், ஒவ்வோர் அடியிலும் அன்பினதும் சக்தியினதும் சமநிலையைப் பேணுவதன் மூலம் இயல்பாகவே வெற்றி உங்களின் முன்னால் வரும். வெற்றி உங்களின் பிறப்புரிமை. நீங்கள் உங்களை மும்முரமாக வைத்திருப்பதற்கு வேலை செய்ய வேண்டியுள்ளது. எனினும், ஒன்று கடின உழைப்பு. மற்றயது விளையாட்டைப் போன்றது. நீங்கள் தந்தையிடமிருந்து சக்திகள் என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பதனால், எங்கு சக்தி உள்ளதோ, அங்கு அனைத்தும் இலகுவானது ஆகும். குடும்பத்திற்கும் தந்தைக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும். அப்போது நீங்கள் இயல்பாகவே ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். எங்கு ஆசீர்வாதங்கள் உள்ளதோ, அங்கு பறக்கும் ஸ்திதி இருக்கும். உங்களின் சொந்த விருப்பத்திற்கு மாறாக, இலகுவான வெற்றி ஏற்படும்.
4. உங்களுக்கு எப்போதும் தந்தையினதும் ஆஸ்தியினதும் விழிப்புணர்வு உள்ளதா? உங்களின் தந்தை யார் என்ற விழிப்புணர்வும், நீங்கள் என்ன ஆஸ்தியைப் பெற்றுள்ளீர்கள் என்ற விழிப்புணர்வும் இயல்பாகவே உங்களைச் சக்திசாலிகள் ஆக்கும். ஒரு பிறவியில் பல பிறவிகளுக்கான வெகுமதியை உங்களால் உருவாக்கக்கூடிய வகையில் நீங்கள் அழியாத ஆஸ்தியைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் முன்னர் எப்போதாவது இத்தகைய ஆஸ்தியைப் பெற்றுள்ளீர்களா? நீங்கள் இதை இப்போதே பெறுகிறீர்கள். எஞ்சிய கல்பத்தில் ஒருபோதும் அதைப் பெறமாட்டீர்கள். ஆகவே, தந்தையினதும் உங்களின் ஆஸ்தியினதும் சதா விழிப்புணர்வுடன் தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களின் ஆஸ்தியை நினைவு செய்வதன் மூலம், சதா சந்தோஷம் ஏற்படும். தந்தையை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் சதா சக்திசாலிகள் ஆகுவீர்கள். சக்திசாலி ஆத்மா எப்போதும் மாயையை வென்றவராக இருப்பார். எங்கு சந்தோஷம் உள்ளதோ, அங்கு வாழ்க்கை இருக்கும். சந்தோஷம் இல்லாவிட்டால் அது என்ன வாழ்க்கை? அந்தச் சூழ்நிலையில், உங்களுக்கு ஒரு வாழ்க்கை இருந்தாலும், அதில் உயிர் இல்லாதது போன்றே இருக்கும். உயிர்வாழ்ந்தாலும், இறந்தது போன்றே இருக்கும். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் உங்களின் ஆஸ்தியை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்களிடம் சந்தோஷம் காணப்படும். உங்களிடம் சதா இந்த சந்தோஷம் உள்ளதா? பலமில்லியன்களில் கையளவினர் மட்டுமே இத்தகைய ஆஸ்தியைப் பெறுகிறார்கள். நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள். இந்த விழிப்புணர்வை ஒருபோதும் இழக்காதீர்கள். எந்தளவிற்கு அதிகமான நினைவு உள்ளதோ, அதற்கேற்ப பேறுகளும் காணப்படும். சதா நினைவு இருக்கும். சதா பேறுகளின் சந்தோஷமும் இருக்கும்.
பாப்தாதா குமார்களைச் சந்திக்கிறார்:
குமார் வாழ்க்கை என்றால் சக்திவாய்ந்த வாழ்க்கையாகும். எனவே, பிரம்மாகுமார்கள் என்றால் ஆன்மீக சக்திவாய்ந்தவர்கள். பௌதீகமாகச் சக்திவாய்ந்தவர்கள் அல்ல. ஆனால், ஆன்மீக சக்திவாய்ந்தவர்கள். குமார் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியதை உங்களால் செய்ய முடியும். எனவே, குமார்களான நீங்கள் அனைவரும் உங்களின் குமார் வாழ்க்கையில் உங்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கியுள்ளீர்கள். நீங்கள் அதை என்னவாக்கியுள்ளீர்கள்? நீங்கள் அதை ஆன்மீகம் ஆக்கியுள்ளீர்கள். நீங்கள் இறைவாழ்க்கைகளைக் கொண்டுள்ள பிரம்மாகுமார்கள் ஆகியதும், இத்தகைய மேன்மையான வாழ்க்கைகளைக் கொண்டவர்கள் ஆகினீர்கள். உங்களின் வாழ்க்கைகள் அதிமேன்மையானவை ஆகின. அதனால் நீங்கள் துன்பம், ஏமாற்றம், அலைந்து திரிதல் என்பவற்றில் இருந்து எல்லா வேளைக்குமாக விலகிவிட்டீர்கள். இல்லாவிடின், பௌதீக வலிமையைக் கொண்டுள்ள குமார்கள் தொடர்ந்து அலைந்து திரிவார்கள். அவர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு, மற்றவர்களுக்குத் துன்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துவார்கள். எனவே, நீங்கள் பல விடயங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் பாதுகாக்கப்பட்டதைப் போன்று, மற்றவர்களையும் பாதுகாக்கும் உற்சாகமும் உங்களுக்கு உள்ளது. நீங்கள் சதா உங்களுக்குச் சமமானவர்களைப் பாதுகாப்பவர்கள். அத்துடன் நீங்கள் பெற்றுள்ள சக்திகளையும் மற்றவர்களுக்குக் கொடுங்கள். நீங்கள் எல்லையற்ற சக்திகளைப் பெற்றுள்ளீர்கள், அல்லவா? எனவே, அனைவரையும் சக்திசாலிகள் ஆக்குங்கள். உங்களை ஒரு கருவியாகக் கருதியவண்ணம் சேவை செய்யுங்கள். நான் ஒரு சேவையாளன் என்பதல்ல. பாபா அதை என்னைக் கொண்டு செய்விக்கிறார். நான் வெறுமனே ஒரு கருவி. உங்களுக்குள் ‘நான்’ என்ற உணர்வு இருப்பதில்லை. ‘நான்’ என்ற உணர்வு எதுவும் இல்லாதவர்களே உண்மையான சேவையாளர்கள் ஆவார்கள்.
பாப்தாதா தம்பதிகளைச் சந்திக்கிறார்:
நீங்கள் சதா சுய இராச்சிய உரிமையைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களா? உங்களையே ஆட்சி செய்வது என்றால், சதா உரிமையைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். உரிமையுள்ளவர்களால் ஒருபோதும் தங்கியிருக்க முடியாது. நீங்கள் தங்கியிருந்தால், உங்களால் சகல உரிமைகளையும் கொண்டிருக்க முடியாது. இரவு வந்தால், அது பகல் அல்ல. பகல் இருக்கும்போது, அது இரவு அல்ல. அதேபோன்று, சகல உரிமைகளையும் கொண்டுள்ள ஆத்மாக்களால் எந்தவொரு பௌதீகப் புலன்கள், மனிதர்கள் அல்லது பௌதீகமான வசதிகளில் தங்கியிருக்க முடியாது. உங்களிடம் இத்தகைய உரிமைகள் உள்ளனவா? நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆகியதும் அது உங்களை என்னவாக்குகிறது? சகல உரிமைகளையும் கொண்டுள்ளவர்கள். எனவே, நீங்கள் சுய இராச்சிய உரிமையுள்ள ஆத்மாக்கள் என்ற சக்திவாய்ந்த விழிப்புணர்வுடன், உங்களால் இலகுவாகத் தொடர்ந்து வெற்றியாளர் ஆகமுடியும். உங்களின் கனவுகளிலேனும் தோல்வியின் சிறிதளவு எண்ணமும் இருக்கக்கூடாது. இது சதா வெற்றியாளர் ஆகுதல் என்று அழைக்கப்படுகிறது. மாயை ஓடிவிட்டாளா? அல்லது நீங்கள் அவளைத் துரத்துகிறீர்களா? அவள் திரும்பியே வர முடியாதபடி நீங்கள் அவளைத் துரத்திவிட்டீர்களா? யாராவதொருவர் திரும்பி வரக்கூடாது என நீங்கள் நினைத்தால், அவரை எங்கேயாவது தொலைவில் விட்டுவிடுவீர்கள். எனவே, அந்தளவு தொலைவிற்கு அவளை நீங்கள் துரத்திவிட்டீர்களா? அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் பிராமண வாழ்க்கையில் ஒரேயொரு தந்தையை உங்களின் உலகமாக்கி, இயல்பான, இலகுவான யோகி ஆகுவீர்களாக.பிராமண வாழ்க்கையில் குழந்தைகள் அனைவரும், வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்குரியவர்களாக இருப்போம் எனச் சத்தியம் செய்துள்ளார்கள். தந்தை உங்களின் உலகமாக இருக்கும்போது, வேறு எவரும் இல்லாதபோது, நீங்கள் சதா இயல்பான, இலகுவான யோகி ஸ்திதியில் இருப்பீர்கள். வேறு எவராவது இருக்கும்போதே நீங்கள் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். புத்தி எங்கும் அலைபாய வேண்டாம். அது அங்கேயே இருக்கட்டும். ஒரேயொரு தந்தையே உங்களுக்கு அனைத்துமாக இருக்கும்போது, உங்களின் புத்தி வேறெங்கும் செல்ல முடியாது. இந்த முறையில், நீங்கள் இலகுவாக இலகுயோகியாகவும் சுய இராச்சிய உரிமையுடையவராகவும் ஆகுவீர்கள். உங்களின் முகத்தில் ஆன்மீகத்தின் நிலையான, ஸ்திரமான பிரகாசம் இருக்கும்.
சுலோகம்:
தந்தையைப் போன்று அவ்யக்தாகவும் சரீரமற்றவராகவும் ஆகுவதே, அவ்யக்த பராமரிப்பின் நடைமுறை அத்தாட்சி ஆகும்.
ஓம் சாந்தி
விசேட குறிப்பு: இன்று, மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை, சர்வதேச யோகா தினம். சகல சகோதர, சகோதரிகளும் உங்களுடைய குடும்பங்களுடன் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை, ஒன்றுதிரட்டிய முறையில் இயற்கைக்கும் சகல ஆத்மாக்களுக்கும் அமைதியினதும் சக்தியினதும் சகாஷைக் கொடுக்கும் சேவையைச் செய்யுங்கள்.