27.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் அட்டவணையை வைத்திருங்கள், அப்பொழுது நீங்கள் முன்னோக்கியா அல்லது பின்னோக்கியா செல்கின்றீர்கள் என்பதை உங்களால் கூறமுடியும். சரீர உணர்வே உங்களைப் பின்னோக்கி நகர்த்துகின்றது. ஆத்ம உணர்வு ஸ்திதியோ உங்களை முன்னேறச் செய்கின்றது.

கேள்வி:
சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் வருகின்ற ஆத்மாக்களுக்கும், தாமதமாக வருகின்ற ஆத்மாக்களுக்குமிடையிலான பிரதான வேறுபாடு என்ன?

பதில்:
சத்தியயுகத்தின் ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுப்பதால், ஆரம்பத்தில் வருகின்ற ஆத்மாக்கள் சந்தோஷத்தை விரும்புகின்றனர். தாமதமாக வருகின்ற ஆத்மாக்களுக்கு எவ்வாறு சந்தோஷத்தைக் கேட்பது என்பது கூடத் தெரியாது, அவர்கள் அமைதியை மாத்திரமே கேட்பார்கள். ஒவ்வோர் ஆத்மாவும் எல்லையற்ற தந்தையிடமிருந்து அமைதி, சந்தோஷம் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றார்.

ஓம் சாந்தி.
கடவுள் பேசுகிறார். “கடவுள் பேசுகிறார்” என நீங்கள் கூறும்பொழுது, குழந்தைகளாகிய உங்களது புத்தியில் கிருஷ்ணர் வருவதில்லை. சிவபாபா மாத்திரமே உங்களது புத்தியில் வருகின்றார். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே பிரதான விடயம். ஏனெனில், தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் உங்களது ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் உங்களை சிவபாபாவின் சீடர்கள் எனக் கூற மாட்டீர்கள். இல்லை, நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள். எப்பொழுதும் உங்களைக் குழந்தைகளாகவே கருதுங்கள். அவரே தந்தையும், ஆசிரியரும் அத்துடன் குருவுமாவார் என்பதனை வேறு எவருமே அறியார்;. குழந்தைகளாகிய உங்களில் பலரும் இதனை மறந்துவிடுகிறீர்கள். இந்தளவிற்காவது நீங்கள் நினைவுசெய்வீர்களாயின்;, அது மகா பாக்கியமாகும். நீங்கள் பாபாவை மறந்துவிட்டு, உங்கள் சரீரங்களின் லௌகீக உறவினர்களை நினைவுசெய்கிறீர்கள். உண்மையில், ஏனைய அனைவரும் உங்கள் புத்தியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஒரேயொரு தந்தையின் நினைவு மாத்திரமே இருக்க வேண்டும். “நீங்களே தாயும், தந்தையும்” என நீங்கள் கூறுகின்றீர்கள். வேறு எவரையாவது நினைவுசெய்தால், நீங்கள் சற்கதியை அடைவதாகக் கூறப்பட மாட்டாது. நீங்கள் சரீர உணர்விலிருக்கும்பொழுது, சீரழிவே ஏற்படுகின்றது. நீங்கள் ஆத்ம உணர்விலிருக்கும்பொழுது சற்கதி கிடைக்கின்றது. நீங்கள் எல்லா நேரங்களிலும் தொடர்ந்தும் மேலேறி, பின் கீழிறங்குகின்றீர்கள். சிலவேளைகளில் நீங்கள் முன்னோக்கியும், சிலவேளைகளில் பின்னோக்கியும் செல்கின்றீர்கள். பலர் சரீர உணர்வுடையவர்கள் ஆகுகிறார்கள். இதனாலேயே பாபா எப்பொழுதும் கூறுகிறார்: உங்கள் அட்டவணையை வைத்திருங்கள், எனவே நீங்கள் முன்னோக்கியா அல்லது பின்னோக்கியா செல்கின்றீர்கள் என்பதை உங்களால் கூறமுடியும். நினைவிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. நீங்கள் தொடர்ந்தும் மேலேறி, கீழிறங்குகின்றீர்கள். முன்னேறிச் செல்கையில், சில குழந்தைகள் களைப்படைந்து, பின்னர் அழுகின்றனர்: பாபா, இவ்வாறு நிகழ்கின்றது! நான் உங்களை நினைவுசெய்ய மறந்து விடுகின்றேன். நீங்கள் சரீர உணர்விற்கு வந்துவிட்டால் பின்னோக்கியே செல்வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் ஏதோவொரு பாவத்தைச் செய்துகொண்டேயிருக்கிறீர்கள். நினைவிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. நினைவின் மூலமாக உங்களது ஆயுட்காலம் அதிகரிக்கின்றது. இதனாலேயே ‘யோகம்’ என்ற வார்த்தை மிகவும் பிரபல்யமானது. ஞானம் என்ற பாடம் மிக இலகுவானது. ஞானத்தையோ அல்லது யோகத்தையோ கொண்டிராத பலர் இருக்கின்றனர். இது பெருமளவு இழப்பையே ஏற்படுத்துகின்றது. பலரால் முயற்சி செய்ய முடியாதுள்ளது. நீங்கள் எவ்வாறு கற்கின்றீர்கள் என்பது வரிசைக்கிரமமானதாகவே இருக்கும். நீங்கள் எவ்வாறு கற்கின்றீர்கள் என்பதிலிருந்து எந்தளவிற்குப் பிறருக்குச் சேவை செய்கின்றீர்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. நீங்கள் அனைவருக்கும் சிவபாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரேயொரு எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். தாயும், தந்தையும், குழந்தைகளாகிய நீங்களுமே பிரதானமானவர்கள். இது இறை குடும்பமாகும். தாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதும், தாங்கள் அவரிடமிருந்தே தங்களது ஆஸ்தியைப் பெறவேண்டும் என்பதும் வேறு எவரது புத்தியிலும் இல்லை. நீங்கள் ஒரேயொரு தந்தையை, அதாவது, அசரீரியான சிவபாபாவை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். அவரது அறிமுகத்தை இவ்வாறாகக் கொடுங்கள்: அவரே எல்லையற்ற தந்தை. அவர் எவ்வாறு சர்வவியாபகராக இருக்க முடியும்? நீங்கள் எவ்வாறு உங்களது ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுவீர்கள்? எவ்வாறு நீங்கள் தூய்மையாகுவீர்கள்? உங்களால் அவ்வாறு ஆகமுடியாது. தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றார்: மன்மனாபவ! என்னை நினைவுசெய்யுங்கள்! எவருமே இதனை அறியார்;. உண்மையில் அனைவருமே கிருஷ்ணரையும் அறிந்திருப்பார்கள் என்றில்லை. மயிலிறகினாலான கிரீடத்தை அணிந்த ஒருவர் எவ்வாறு இங்கு வர முடியும்? இது மிக மேன்மையான ஞானம். மேன்மையான ஞானத்தில் சில சிரமங்கள் நிச்சயமாக இருக்கவே செய்யும். இது இலகு ஞானம் என்றும் அழைக்கப்படுகின்றது. தந்தையிடமிருந்து உங்களது ஆஸ்தியைப் பெறுவது மிக இலகுவானது. சில குழந்தைகள் ஏன் இதனைச் சிரமமானதாக எண்ணுகின்றார்கள்? ஏனெனில் அவர்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாமலிருப்பதாலாகும். பாபா குழந்தைகளாகிய உங்களுக்குச் சீரழிவு, சற்கதி ஆகியவற்றின் இரகசியங்களைக் கூறியிருக்கின்றார். இந்நேரத்தில் அனைவரும் சீரழிவிற்குள் செல்கின்றார்கள். மனிதர்களின் கட்டளைகள் உங்களைச் சீரழிவிற்கே கொண்டு செல்கின்றன. இவையோ கடவுளின் வழிகாட்டல்கள் ஆகும். இதனாலேயே இவ்வேறுபாட்டைக் காட்டுகின்ற படத்தை பாபா உருவாக்கியுள்ளார். தான் ஒரு நரகவாசியா அல்லது சுவர்க்கவாசியா என்பதனை ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே கேட்டுப் பார்க்கலாம். இப்பொழுது இது சத்தியயுகமல்ல. ஆனால் மக்கள் எதனையுமே புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் சத்தியயுகத்தைக் கற்பனையான ஒன்றாகவே கருதுகிறார்கள். எண்ணற்ற கட்டளைகள் பல உள்ளன. எண்ணற்ற கட்டளைகள் மூலமாகச் சீரழிவே ஏற்படுகின்றது. ஒரேயொருவரின் வழிகாட்டல்கள் மூலமாகவே சற்கதி கிடைக்கின்றது. இது ஒரு மிகச் சிறந்த சுலோகம்: மனிதர்கள் மனிதர்களைச் சீரழிக்கின்றார்கள், கடவுள் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்;கின்றார். எனவே, நீங்கள் இதனைக் கூறும்பொழுது, தூய வார்த்தைகளையே பேசுகின்றீர்கள். நீங்கள் தந்தையின் புகழைப் பாடுகின்றீர்கள். அவரே அனைவரதும் தந்தை. அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குப் பல தடவைகள் விளங்கப்படுத்தியுள்ளார். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் ஓர் ஊர்தியில் அதிகாலையில் சமயநூல்களை எங்கும் எடுத்துச் செல்கின்றீர்கள். ஆனால், கலியுகத்தின் இறுதி இப்பொழுது வரவுள்ளதால், சுவர்க்கக் கடவுளாகிய தந்தையே எங்களை இந்த அந்தஸ்தை அடையுமாறு செய்கின்றார். நீங்கள் விளங்கப்படுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டும். நீங்கள் விமானத்திலிருந்தும் துண்டுப் பிரசுரங்களை வீசலாம். நாங்கள் ஒரேயொரு தந்தையின் புகழை மாத்திரமே பாடுகின்றோம். அவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உங்களுக்குச் சற்கதியை அருள்கின்றேன். எனவே, உங்களைச் சீரழிவிற்குள் அழைத்துச் செல்பவர் யார்? அரைக் கல்பத்திற்குச் சுவர்க்கமும், அரைக் கல்பத்திற்கு நரகமும் உள்ளன எனக் கூறப்படுகின்றது. இராவண இராச்சியம் என்றால் அசுர இராச்சியம் என்பதாகும். இங்கு, இராவணனின் தவறான கட்டளைகளைப் பின்பற்றுவதால், நீங்கள் தொடர்ந்தும் வீழ்கின்றீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். நாங்கள் தந்தை மூலமாக உலகின் அதிபதிகள் ஆகுகின்றோம். நீங்கள் உங்களது சரீரத்தின் மீதுள்ள பற்றையும் நீக்கிவிட வேண்டும். அன்னங்களும், நாரைகளும் ஒன்றாக இருந்தால், எவ்வாறு பற்று நீக்கப்பட முடியும்? ஒவ்வொருவரது சந்தர்;ப்ப சூழ்நிலையும் கருத்திற் கொள்ளப்படுகின்றன. நீங்கள் தைரியத்தைக் கொண்டிருப்பதுடன், உங்கள் ஜீவனோபாயத்துக்கு வேண்டிய அனைத்தையும் உங்களால் செய்யக்கூடியதாக இருப்பின், ஏன் பெருமளவு சிக்கல்களில் அகப்பட்டுக்கொள்கின்றீர்கள்? வயிறு அதிகளவைக் கேட்பதில்லை. இரு சப்பாத்திகளைச் சாப்பிடுங்கள், வேறு எந்த அக்கறையும் இல்லை. இருந்தபொழுதிலும், நீங்கள் உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும்வகையில் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்வீர்கள் என உங்களுக்குள் சத்தியம் செய்யுங்கள். இதற்காக உங்களது வியாபாரத்தைச் செய்யக்கூடாது என்பதல்ல. நீங்கள் வியாபாரம் செய்யாவிட்டால், எங்கிருந்து பணத்தைப் பெறுவீர்கள்? நீங்கள் எதற்காகவும் பிச்சையெடுக்கப் போவதில்லை. இது உங்களது வீடு, நீங்கள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்தே உண்கின்றீர்கள். நீங்கள் சேவை எதுவும் செய்யாமல் வெறுமனே உண்பீர்களாயின், அது பிச்சையெடுத்து வாழ்வதைப் போன்றதாகும். பின்னர், நீங்கள் 21 பிறவிகளுக்குச் சேவகம் செய்ய வேண்டிவரும். அரசன் முதல் ஆண்டி வரையான அனைவரும் இங்கேயும் அங்கேயும் இருக்கின்றனர். ஆனால்;, அங்கே நிலையான சந்தோஷம் இருக்கிறது. இங்கோ சதா துன்பமே உள்ளது. அவர்கள் அனைவரும் தங்களின் சொந்தப் பதவியைக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் தந்தையுடன் முழுமையான யோகத்தைக் கொண்டிருந்து, சேவையையும் செய்ய வேண்டும். நீங்கள் உங்களது சொந்த இதயத்தைக் கேட்டுப் பாருங்கள்: நான் எந்தளவிற்கு யக்ஞத்திற்குச் சேவை செய்கின்றேன்? அனைத்துக் கணக்குகளும் ஏற்கனவே கடவுளிடம் உள்ளது எனக் கூறப்படுகின்றது. நீங்கள் இவ்விதமாகச் செயற்படுவதால்; என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து அவதானிக்க வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதையும், ஸ்ரீமத்தைப் பின்பற்றாவிடில் உங்கள் அந்தஸ்து அதிகளவு குறைக்கப்படுகின்றது என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கண்காட்சிகளில் உங்களிடம் எச்சமயத்தைச் சேர்ந்த எவராயினும் வரும்பொழுது, அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற அமைதி, சந்தோஷம் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். எல்லையற்ற தந்தையே அமைதியை அருள்பவர். அவர் மாத்திரமே அமைதியை அருள்பவர் எனப்படுகின்றார். இப்பொழுது, உயிரற்ற விக்கிரகங்கள் உங்களுக்கு அமைதியைக் கொடுக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: உங்களது ஆதிதர்மம் அமைதி. நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்ல விரும்புகின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: சிவபாபா, எங்களுக்கு அமைதியைக் கொடுங்கள். எனவே தந்தை ஏன் அதைக் கொடுக்காமல் விடப் போகின்றார்? தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்காமல் விடுவாரா? நீங்கள் கூறுகின்றீர்கள்: சிவபாபா, எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள். அவரே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர், எனவே அவர் உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்காமல் விடுவாரா? நீங்கள் அவரை நினைவுசெய்யாமலும், அவரிடம் எதனையுமே கேட்காதுமிருந்தால், அவர் எதனை உங்களுக்குக் கொடுப்பார்? பாபா மாத்திரமே அமைதிக் கடல். உங்களுக்குச் சந்தோஷம் தேவை என்பதால் தந்தை கூறுகின்றார்: நீங்கள் அமைதியைப் பெற்ற பின்னர் சந்தோஷத்திற்குச் செல்வீர்கள். முதலில் வருபவர்களே சந்தோஷத்தைப் பெறுவார்கள். தாமதமாக வருபவர்களுக்குச் சந்தோஷத்தை எவ்வாறு கேட்பது என்பதுகூடத் தெரியாது. அவர்கள் முக்தியை மாத்திரமே கேட்பார்கள். முதலில் அனைவரும் முக்திக்குச் செல்வார்கள். அங்கே துன்பம் எதுவுமே இருக்க மாட்டாது. நீங்கள் முக்தி தாமத்திற்குச் சென்று, பின்னர் ஜீவன்முக்தி தாமத்திற்குச் செல்வீர்கள் என்பதையும், ஏனைய அனைவரும் முக்தியில் இருப்பார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இது கணக்குத் தீர்க்கும் காலம் எனப்படுகின்றது. அனைவரதும் கர்மக்கணக்குகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும். விலங்குகளுக்குக் கூட கர்மக்கணக்குகள் உள்ளன. சில அரசர்களுடன் தங்கியிருக்கின்றன. அவற்றிற்குப் பெருமளவு பராமரிப்புக் கொடுக்கப்படுகின்றது. பந்தயக் குதிரைகள் அதி வேகமாகச் செல்லக்கூடியவையாயின் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால், அவையும் மிக நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. அவற்றின் எஜமானர் நிச்சயமாக அவற்றை நேசிப்பார். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அங்கே ஓட்டப் பந்தயங்கள் எதுவும் இருக்க மாட்டாது. அவை பின்னரே ஆரம்பிக்கின்றன. இவையனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். நீங்கள் இப்பொழுது நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் அறிவீர்கள். ஆரம்பத்தில் வெகு சிலரே இருப்பார்கள். நாங்கள் தொடர்ந்தும் உலகை ஆட்சிசெய்வோம். நீங்கள் இவ்வாறு ஆகமுடியுமா இல்லையா என உங்கள் ஒவ்வொருவராலும் புரிந்துகொள்ள முடியும். நான் ஏனைய பலருக்கும் நன்மை செய்கின்றேனா? நீங்கள் இதற்காக முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், நீங்கள் இப்பொழுது தந்தையைக் கண்டுகொண்டீர்கள். உலக மக்கள் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் விநாசத்திற்காகத் தொடர்ந்தும் எவற்றை உருவாக்குகின்றார்கள் எனப் பாருங்கள். அனைத்தும் தீயில் எரியக்கூடியதாக அவர்கள் அத்தகைய குண்டுகளைத் தயாரிக்கின்றார்கள். தீயானது எந்தளவிலும் குறைந்ததாக இருக்க மாட்டாது. தீயை அணைப்பதற்கு எவருமே எஞ்சியிருக்க மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் பல குண்டுகளைத் தயாரிக்கின்றார்கள். குண்டுகள் சூழலுக்குள் வந்தவுடனேயே அனைவரையும் கொல்லக்கூடியதாக அவர்கள் அவற்றினுள் வாயுக்களையும், நஞ்சையும் இடுகின்றார்கள். மரணம் முன்னாலேயே உள்ளது. எனவே தந்தை கூறுகின்றார்: உங்களுக்கு வேண்டுமாயின், உங்கள் ஆஸ்தியைக் கோரிக்கொள்ளுங்கள். முயற்சி செய்யுங்கள். உங்களது வியாபாரத்தில் அளவுக்கதிகமாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அதிகளவு அக்கறை கொண்டிருக்க வேண்டும். பாபா இவரை விடுதலையாக்கி விட்டார். இவ்வுலகம் இப்பொழுது அழுக்காக உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அதனால் உங்களது பாவங்கள் அழிக்கப்படுவதுடன், தந்தையிடமிருந்து உங்களது ஆஸ்தியையும் பெற முடியும். நீங்கள் பெருமளவு அன்புடன் அவரை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனின் படத்தைப் பார்த்தவுடனேயே உங்களது இதயம் சந்தோஷமடைகின்றது. இதுவே எங்களது இலக்கும், குறிக்கோளும் ஆகும். நீங்கள் அவர்களைப் பூஜித்து வந்தபொழுதிலும், நீங்களும் அவர்களைப் போன்று ஆகமுடியும் என்பதை அறிந்திருக்கவில்லை. நேற்று நான் பூஜிப்பவராக இருந்தேன், இன்று நான் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக ஆகுகின்றேன். பாபா வந்ததும், அவர் பூஜித்தலை நிறுத்திவிட்டார். தந்தை அவருக்கு விநாசத்தினதும், ஸ்தாபனையினதும் காட்சியொன்றைக் கொடுத்தார். நாங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றோம். இவையனைத்தும் அழிக்கப்பட வேண்டும். எனவே, நாங்கள் ஏன் தந்தையை நினைவுசெய்யக்கூடாது? உள்ளே, நீங்கள் தொடர்ந்தும் ஒரேயொருவரின் புகழை மாத்திரம் பாடுகிறீர்கள். பாபா, நீங்கள் மிக இனிமையானவர். அவர் மாத்திரமே ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரதும் தந்தை என்பதையும், நாங்கள் அவரிடமிருந்தே எங்களது ஆஸ்தியைப் பெறுகின்றோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில் நாங்கள் அவரை நினைவுசெய்வதுண்டு. அவர் பரந்தாம வாசியாவார். இதனாலேயே அவரது உருவமும் உள்ளது. அவர் வந்திருக்காவிட்டால், அவரது உருவம் ஏன் இருக்கப் போகின்றது? அவர்கள் சிவனின் பிறந்ததினத்தையும் கொண்டாடுகிறார்கள். அவர் பரமாத்மாவான பரமதந்தை என அழைக்கப்படுகின்றார். ஏனைய அனைவரும் மனிதர்கள் அல்லது தேவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். முதலில், ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது. ஏனைய சமயங்கள் பின்னரே வந்தன. எனவே, அத்தகைய தந்தையை நீங்கள் அதிகளவு அன்புடன் நினைவுசெய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பெருமளவில் சத்தமிடுகின்றார்கள். அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. யார் வந்தாலும் அவர்கள் தொடர்ந்தும் புகழ்கின்றார்கள். அவர்கள் அதிகளவு புகழைக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வாறு அவர்கள் தந்தையைப் புகழ்வார்கள்? நீங்கள் கிருஷ்ணர், நீங்கள் வியாசர்; நீங்கள் இன்ன இன்னார்! எவ்வாறாயினும் அது அவதூறு ஆகும். மக்கள் தந்தையை அதிகளவு அவதூறு செய்கின்றார்கள்! தந்தை கூறுகின்றார்: நாடகத்தின்படி, அவர்கள் அனைவரும் என்னை அவதூறு செய்வார்கள். பின்னர், நான் வந்து, அவர்கள் அனைவரையும் ஈடேற்றுகின்றேன். நான் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றேன். நான் புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளேன். இது வெற்றி, தோல்விகளைக் கொண்ட நாடகமாகும். இது 5000 வருடங்களுக்கான நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். அதில் சிறிதளவு வேறுபாடுகூட இருக்க முடியாது. தந்தையைத் தவிர வேறு எவராலுமே நாடகத்தின் இரகசியங்களை உங்களுக்குக் கூறமுடியாது. தொடர்ந்தும் மனிதக் கட்டளைகள் பல தோன்றுகின்றன. தேவர்களிடமிருந்து நீங்கள் வழிகாட்டல்களைப் பெற முடியாது. ஏனைய அனைத்தும் மனிதக் கட்டளைகளே. ஒவ்வொருவரும் தங்களது சொந்த விவேகத்தைக் காண்பிக்கின்றார்கள். இனியும் நீங்கள் வேறு எவரையும் நினைவுசெய்யக்கூடாது. ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் உங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். பக்தர்கள் இம்முயற்சியைச் செய்வது போன்று, நீங்களும் இம்முயற்சியைச் செய்யவேண்டும்; அவர்கள் பெருமளவு நம்பிக்கையுடன் பக்தி செய்கின்றார்கள். அவர்களுடைய பக்தியைப் போன்றே ஞான மார்க்கத்திலும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் குறைந்த முயற்சியுடன் எதையாவது செய்கின்றார்களா? குருமார்கள் கூறுகின்றனர்: தினமும் 100 தடவைகள் மணி மாலையை உருட்டுங்கள். எனவே, அவர்கள் தங்களது சிறு அறைக்குச் சென்று, அமர்ந்திருந்து அதனைச் செய்கின்றனர். மாலையின் மணிகளை உருட்டுவதற்கு அவர்களுக்குப் பல மணித்தியாலங்கள் எடுக்கின்றது. பொதுவாக, மக்கள் இராம நாமத்தை உச்சரிக்கின்றனர். இங்கே, நீங்கள் தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். நீங்கள் பெருமளவு அன்புடன் அவரை நினைவுசெய்ய வேண்டும். பாபாவே அனைவரிலும் அதிஇனிமையானவர். அவர் கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்பொழுதே உங்களால் மற்றவர்களுக்குப் பாதையைக் காட்ட முடியும். தந்தையைப் போன்று இனிமையானவர் வேறு எவருமே இருக்க முடியாது. இனிய பாபாவை நீங்கள் ஒரு கல்பத்தின் பின்னர் கண்டிருக்கின்றீர்கள். எனவே, அத்தகைய இனிய தந்தையை நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள் என எவராலும் கூறமுடியாது. தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். எனவே, நீங்களும் நிச்சயமாகச் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், துருவை அகற்ற வேண்டுமாயின், நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவரை நினைவுசெய்ய இயலாத அளவிற்கு உங்களுக்கு என்ன சிரமம் உள்ளது? தந்தையை நினைவுசெய்வது ஏன் சிரமமாக உள்ளது என்பதற்கான காரணத்தை பாபாவிற்குக் கூறுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, அதிர்ஷ்ட நட்சத்திரங்களாகிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் நிச்சயமாக உங்களது சரீரத்தின் ஜீவனோபாயத்திற்கான செயல்களைச் செய்ய வேண்டும். ஆனால்;, சிக்கல்களில் அதிகளவில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்வதை மறந்து விடுமளவிற்கு உங்கள் வியாபாரம் போன்றவற்றைப் பற்றிய கவலைகள் இல்லாதிருக்கட்டும்.

2. மனிதக் கட்டளைகள் அனைத்தையும் துறந்து, தந்தையொருவரின் வழிகாட்டல்களை மாத்திரம் பின்பற்றுங்கள். ஒரேயொரு தந்தையின் புகழை மாத்திரம் பாடுங்கள். தந்தை மீது மாத்திரம் அன்பு கொண்டிருங்கள். ஏனைய அனைவரிடமிருந்தும் உங்களது பற்றை நீக்கி விடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஞானத்தின் ஒளி மற்றும் சக்தி மூலம் பிழையானதைச் சரியானதாக மாற்றுகின்ற, ஒரு ஞானம் மிக்க ஆத்மாவாக இருப்பீர்களாக.

ஞானமே ஒளியும் சக்தியும் எனக் கூறப்படுகின்றது. ‘இது பிழை அல்லது இது சரி, இது இருள் அல்லது இது ஒளி, இது வீணானது அல்லது இது சக்தி வாய்ந்தது’ என்ற ஒளி, அதாவது, ஞானோதயம் அவர்களிடம் இருந்தால், அப்பொழுது ஏதாவதொன்றைப் பிழை என்று புரிந்துகொள்பவர்கள் தவறான செயற்பாடுகளைச் செய்வதை அல்லது தவறான எண்ணங்களைக் கொண்டிருப்பதை விரும்ப மாட்டார்கள். “ஞானம் மிக்க ஆத்மாக்கள்” என்றால் ஞானம் எனும் விவேகத்தின் சொரூபங்கள் என அர்த்தமாகும். அவர்களிடம் பிழையானதைச் சரியானதாக மாற்றுகின்ற சக்தி இருப்பதால், ‘இது இவ்வாறு இருந்திருக்க வேண்டும்’ என்று ஒருபொழுதும் கூற மாட்டார்கள்.

சுலோகம்:
பிறருக்காகவும் தங்களுக்காகவும் சதா தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் வீணான எண்ணங்கள் எதிலிருந்தும் விடுபட்டவர்கள் ஆகுகின்றார்கள்.