19.12.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்காகக் கற்கின்றீர்கள். நீங்கள் இதனைக் கற்று, பிறருக்கும் கற்பிக்க வேண்டும்.
கேள்வி:
பதில்:
விநாசம் இடம்பெறுவதற்குக் காரணமான மாயையின் ஞானத்தைக் கொண்டிருப்பதாலாகும். மக்கள் சந்திரனுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் அதுபற்றி அதிக ஞானத்தைக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வாறாயினும், எவருமே புதிய உலகத்தினதும், பழைய உலகத்தினதும் ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் அனைவரும் அறியாமை எனும் இருளில் இருக்கின்றார்கள். மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண் இல்லாமையினால் அவர்கள் குருடர்களாக உள்ளனர். இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விநாசம் பற்றிய எண்ணங்களையே தங்களது மூளையில் கொண்டிருக்கின்றார்கள், நீங்களோ சதா உங்கள் புத்;தியில் ஸ்தாபனைக்குரிய எண்ணங்களைக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை ஞானம் நிறைந்த குழந்;தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
ஓம் சாந்தி.
தந்தை இச்சரீரத்தின் மூலம் விளங்கப்படுத்துகிறார். இவர் ஒரு மனிதர் என்றே அழைக்கப்படுகிறார். இவரில் ஓர் ஆத்மா இருக்கின்றார். அத்துடன் நானும் வந்து இவரினுள் அமர்ந்து கொள்கின்றேன். முதலில் இதை உறுதியாக்கிக்கொள்ள வேண்டும். இவர் தாதா என அழைக்கப்படுகிறார். குழந்தைகளாகிய உங்களிடம் இந்த நம்பிக்கை மிக உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் இந்த நம்பிக்கையுடன் ஞானத்தைக் கடைய வேண்டும். இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவரது சரீரத்தில் தான் பிரவேசிப்பதாகத் தந்தை கூறுகின்றார். அனைத்துச் சமய நூல்களினதும் இரத்தினமாகிய, அதிமேன்மையான கீதை ஞானம் இதுவே என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீமத் என்றால் மேன்மையான வழிகாட்டல்களாகும். ஒரேயொரு கடவுள் மூலமே அதிமேன்மையான வழிகாட்டல்கள் கொடுக்கப்படுகின்றன. அவருடைய மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் தேவர்களாகின்றீர்கள். தந்தையே கூறுகின்றார்: சீர்கெட்ட வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் தூய்மையற்றவர்களாகும்போது, நான் வருகின்றேன். 'மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுதல்" என்பதன் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விகாரமுள்ள மனிதர்களை விகாரமற்ற தேவர்களாக மாற்றுவதற்காகத் தந்தை வருகின்றார். சத்தியயுகத்து தேவர்களும் மனிதர்களே, ஆயினும், அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது கலியுகத்தில் உள்ள, அனைவரும் அசுரக் குணங்களையே கொண்டிருக்கின்றனர். முழு உலகமும் மனித உலகமாகும். எவ்வாறாயினும், இங்கு நீங்கள் இறை புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். அவர்களோ, அசுரப் புத்தியையே கொண்டுள்ளனர். இங்கு நீங்கள் ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். அங்கு அவர்கள் பக்தியைக் கொண்டிருக்கின்றார்கள். ஞானமும் பக்தியும் ஒன்றிலிருந்து, மற்றையது வேறுபட்டதாகும். பக்திக்கான நூல்கள் பல உள்ளன. ஆனால் ஞானத்திற்கு, ஒரேயொரு நூல்; மாத்திரமே உள்ளது. ஞானக் கடலாகவுள்ள ஒருவருக்கு, ஒரு நூல் மாத்திரமே இருக்க முடியும். ஒரு சமயத்தை ஸ்தாபிக்கின்ற ஏனைய அனைவரும் அவர்களுடைய சமய நூல் என அழைக்கப்படுகின்ற ஒரு புத்தகத்தை மாத்திரமே வைத்திருக்கின்றார்கள். கீதையே முதலாவது சமய நூலாகும். முதலாவது தர்மம் ஆதிசனாதனதேவி தேவதா தர்மமேயன்றி, இந்து சமயம் அல்ல. கீதையின் மூலமே இந்து சமயம் ஸ்தாபனையாகியது எனவும், கிருஷ்ணரே கீதை ஞானத்தைக் கொடுத்தார் எனவும் மக்கள் நினைக்கின்றனர். அவர் அதை எப்பொழுது கொடுத்தார்? 'தொன்றுதொட்டு" என அவர்கள் கூறுவார்கள். கடவுள் சிவனால் பேசப்படும் மகாவாக்கியங்கள் வேறு எந்த சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. தந்தை இப்பொழுது எங்களுக்குக் கற்பிக்கின்ற கீதை ஞானத்தின் மூலமே மனிதர்கள் தேவர்களாகினார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இதுவே பாரதத்தின் புராதன இராஜயோகம் எனப்படுகின்றது. 'காமமே மிகக் கொடிய எதிரி" என இந்த கீதையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிரியே உங்களைத் தோற்கடித்தது. தந்தை உங்களை அந்த விகாரத்தை வெற்றிகொள்ளச் செய்கின்றார். அதன் மூலம் நீங்கள் உலகை வெற்றிகொள்வதுடன், உலகின் அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள். எல்லையற்ற தந்தை இங்கிருந்து இவர் மூலம் விளங்கப்படுத்துகின்றார். அவரே சகல ஆத்மாக்களினதும் தந்தையாவார். இவரோ அனைத்து மனிதர்களினதும் எல்லையற்ற தந்தையாவார். இவரது பெயர் பிரஜாபிதா பிரம்மா என்பதாகும். நீங்கள் மக்களிடம் பிரம்மாவின் தந்தையின் பெயரைக் கேட்கும்போது அவர்கள் குழப்பமடைவார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் நிச்சயமாக ஒரு தந்தையைக் கொண்டிருக்கின்றார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகில் தேவர்களாகக் காண்பிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மேலாக சிவன் காண்பிக்கப்படுகின்றார். சிவபாபாவின் குழந்தைகளான ஆத்மாக்கள் சரீரங்களை எடுக்கின்றார்கள், ஆனால் அவரோ எப்போதும் அசரீரியான பரமபிதா, பரமாத்மாவாகவே உள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மா சரீரத்தின் மூலமே பரம பிதா எனக் கூறுகின்றார். இது புரிந்துகொள்வதற்கு அத்தகைய இலகுவான விடயமாகும்! இது அல்பா, பீற்றாவிற்கான கல்வி எனப்படுகின்றது. உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? கீதை ஞானத்தை கொடுத்தவர் யார்? கிருஷ்ணரைக் கடவுள் என அழைக்க முடியாது, ஏனெனில், அவர் ஒரு சரீரதாரியாவார்;. கிருஷ்ணர் ஒரு கிரீடத்தைக் கொண்டிருக்கின்றார். ஆனால் சிவன் அசரீரியானவர், அவருக்குக் கிரீடம்; போன்றவை எதுவும் கிடையாது. அவர் மாத்திரமே ஞானக் கடல் ஆவார். பாபாவே உயிருள்ள விதையாவார். நீங்களும் உயிருள்ளவர்களே. நீங்கள் விருட்சங்கள் அனைத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவீர்கள். நீங்கள் தோட்டக்காரர்களாக இல்லாதிருப்பினும், எவ்வாறு விதைகள் விதைக்கப்பட்டு, அவற்றிலிருந்து விருட்சங்கள் வெளிப்படுகின்றன என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அவை உயிரற்றவை, இவரோ உயிருள்ளவர். ஆத்மாக்கள் உயிருள்ளவர்கள் எனக் கூறப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் மாத்தி;ரமே இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். வேறு எந்த ஆத்மாக்களும் இந்த ஞானத்தைக் கொண்டிருக்க முடியாது. எனவே, தந்தையே மனித உலக விருட்சத்தின் உயிருள்ள விதையாவார். இது உயிருள்ள படைப்பாகும். அவ்விதைகள் அனைத்தும் உயிரற்றவை. உயிரற்ற விதைகளால் தங்களுக்குள் எந்த ஞானத்தையும் கொண்டிருக்க முடியாது. அவரே முழு உலகினதும் ஞானம் அனைத்தையும் கொண்டுள்ள உயிருள்ள விதையாவார். முழு விருட்சத்தினதும் படைப்பு, பராமரிப்பு, விநாசம் பற்றிய ஞானம் அனைத்தையும் அவர் கொண்டுள்ளார். புதிய விருட்சம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது மறைமுகமாகும். தந்தை மறைமுகமான முறையில் வந்து, இந்த ஞானத்தையும் மறைமுகமான முறையிலேயே உங்களுக்குக் கொடுக்கின்றார். நாற்று இப்பொழுது நாட்டப்படுகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டனர். அச்சா, விருட்சத்தின் முதல் இலையாக வெளிப்படுபவர் யார்? கிருஷ்ணரே சத்தியயுகத்தில் முதல் இலையாவார். இலக்ஷ்மியும் நாராயணனும் அவ்வாறு அழைக்கப்படுவதில்லை. ஒரு புதிய இலை சிறிதாக இருந்து பின்னர் வளர்கின்றது. எனவே, இந்த உயிருள்ள விதையின் புகழ் பெருமளவு உள்ளது. ஏனைய இலைகளும் வெளிப்படுகின்றதாயினும், அவற்றின் புகழ் படிப்படியாகக் குறைந்து செல்கின்றது. நீங்கள் இப்பொழுது தேவர்களாகின்றீர்கள். நாங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும் என்பதே பிரதானமானதாகும். நாங்கள் அவர்களைப் போன்று ஆகவேண்டும். அவர்களின் உருவங்களும் உள்ளன. இந்த உருவங்கள் இருந்திருக்காவிட்டால், நீங்கள் எவ்வாறு இந்த ஞானத்தை உங்களுடைய புத்தியில் கொண்டிருக்க முடியும்? இப்படங்கள் மிகவும் பயனுடையவை. பக்தி மார்க்கத்தில் இப்படங்கள் பூஜிக்கப்படுகின்றன, ஞானமார்க்கத்திலோ, நீங்கள் எவ்வாறு அவர்களைப் போன்று ஆகவேண்டும் என்ற ஞானத்தை இப்படங்களிலிருந்து பெறுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில், நீங்கள் அவர்களைப் போன்று ஆகவேண்டும் என ஒருபோதும் நினைத்ததில்லை. பக்தி மார்க்கத்தில் பல ஆலயங்கள் கட்டப்படுகின்றன. அதிக ஆலயங்கள் யாருக்காகக் கட்டப்பட்டுள்ளன? அவை நிச்சயமாக சிவபாபாவுக்கே கட்டப்பட்டுள்ளன. அவருக்குப் பின், அவை அவருடைய படைப்புகளுக்காகும். முதலாவது படைப்பு இலக்ஷ்மி நாராயணன் ஆவர். சிவனுக்குப் பின்னர், அவர்களே அதிகளவில் பூஜிக்கப்படுகின்றனர். ஞானத்தைக் கொடுக்கின்ற தாய்மார்களாகிய நீங்கள் பூஜிக்கப்படுவதில்லை; நீங்கள் கற்கின்றீர்கள். நீங்கள் கற்றுக்கொண்டிருப்பதால் இப்பொழுது நீங்கள் பூஜிக்கப்படுவதில்லை. நீங்கள் கற்று முடிந்து, இக்கல்விக்கு மேலும் தேவையேற்படாத போதே நீங்கள் பூஜிக்கப்படுவீர்கள். நீங்கள் இப்பொழுது தேவர்களாகின்றீர்கள். சத்தியயுகத்தில் உங்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காகத் தந்தை வரமாட்டார். அத்தகையதொரு கல்வி அங்கிருப்பதில்லை. இக்கல்வி தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காகும். உங்களை, அவர்களைப் போன்று தூய்மையாக்குபவரே முதலில் பூஜிக்கப்படுகிறார், அதன் பின்னரே நீங்கள் வரிசைக்கிரமமாகப் பூஜிக்கப்படுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பின்னர் நீங்கள் கீழிறங்கி வரும்போது, பஞ்ச தத்துவங்களையும்கூட பூஜிக்கத் தொடங்குகின்றீர்கள். பஞ்ச தத்துவங்களைப் பூஜித்தல் என்றால், தூய்மையற்ற சரீரங்களைப் பூஜித்தல் என்பதாகும். உலகம் முழுவதும் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது என்ற ஞானத்தை நீங்கள் உங்கள் புத்தியில் கொண்டுள்ளீர்கள். தேவர்கள் தங்களின் இராச்சியத்தை எப்பொழுது, எவ்வாறு பெற்றார்கள்? எவருக்குமே இது தெரியாது. 'நூறாயிரக்கணக்கான வருடங்கள்" என அவர்கள் கூறுகின்றனர். நூறாயிரக்கணக்கான வருடங்களுக்குரிய எதுவும் எவருடைய புத்தியிலும் இருக்கமுடியாது. அது தொன்றுதொட்டு தொடர்வதாக அவர்கள் கூறுகிறார்கள். தேவ தர்மத்திற்குரியவர்களாக இருந்தவர்கள் ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பாரதத்தில் வசிப்பவர்கள் தங்களை இந்துக்கள் என அழைக்கின்றார்கள். ஏனெனில் தூய்மையற்றவர்களாகிய பின்னர் தங்களைத் தேவர்கள் என அழைப்பது அவர்களுக்குச் சரியாகப் படவில்லை. எவ்வாறாயினும், மக்களிடம் இந்த ஞானம் எதுவும் இல்லை. அவர்கள் தேவர்களை விடவும் உயர்வான பட்டங்களைத் தங்களுக்குக் கொடுக்கின்றார்கள். அவர்கள் தூய தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் பூஜித்து வணங்கினாலும், தங்களைத் தூய்மையற்றவர்களாக அவர்கள் கருதுவதில்லை. விஷேடமாக பாரதத்தில், அவர்கள் குமாரிகளை அதிகளவில் வணங்குகின்றார்கள்! அவர்கள் குமாரர்களை வணங்குவதில்லை. அவர்கள் ஆண்களைவிட பெண்களையே அதிகளவு வணங்குகின்றார்கள், ஏனெனில் இந்நேரத்தில் தாய்மார்களுக்கே முதலில் ஞானாமிர்தம் வழங்கப்படுகின்றது. தந்தை இவரினுள் பிரவேசிக்கின்றார். இந்த பிரம்மபாபாவே சிறந்த ஞான நதியாவார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் ஞான நதியும், ஆணும் ஆவார். பிரம்மபுத்ரா நதியே மிக நீண்ட நதியாகும், அது கல்கத்தாவில் கடலுடன் சங்கமிக்கின்றது. அங்கு சந்திப்பு இடம்பெறுகின்றது. எவ்வாறாயினும், இது சகல ஆத்மாக்களினதும், பரமாத்மாவினதும் சந்திப்பு என்பது அவர்களுக்குத் தெரியாது. நீரைக் கொண்ட அந்த நதி பிரம்மபுத்ரா நதி என அழைக்கப்படுகின்றது. அவர்கள் பிரம்மத்தைக் கடவுள் என அழைப்பதனால், பிரம்மபுத்ரா நதியைத் தூய்மையானது என நம்புகின்றார்கள். உண்மையில், கங்கைகள் தூய்மையாக்குபவையாக இருக்க முடியாது. இங்கு இடம்பெறுவது கடலினதும், நதியாகிய பிரம்மாவினதும் சந்திப்பாகும். தந்தை கூறுகின்றார்: எவர் மூலம் தத்தெடுத்தல் நிகழ்கின்றதோ, அவர் ஒரு பெண்ணல்ல. இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய, மிக ஆழமான விடயங்களாகும்; அவை பின்னர் மறைந்துவிடும். பின்னர், இவ்விடயங்களின் அடிப்படையிலேயே மனிதர்கள் சமய நூல்களை உருவாக்குகின்றனர். முதலில், அவர்கள் கையால் எழுப்பட்ட காகிதச் சுருள்களை வைத்திருந்தார்கள், பின்னர், அவர்கள் பெரிய புத்தகங்களை அச்சிட்டார்கள். அவர்கள் எந்த சமஸ்கிருத வாகங்களையும் கொண்டிருக்கவில்லை. இது மிக இலகுவான விடயமாகும். நான் இவர் மூலமாகவே உங்களுக்கு இ;ராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். பின்னர், இந்த உலகம் அழிக்கப்பட்டு, சமய நூல்கள் எதுவும் எஞ்சியிருக்காது. பக்தி மார்க்கத்தில் இச்சமயநூல்கள் மீண்டும் உருவாக்கப்படும். சமய நூல்கள் ஆரம்பத்திலிருந்து தொடர்வதாக மக்கள் எண்ணுகின்றார்கள். அதுவே அறியாமை இருள் எனப்படுகின்றது. பாபா இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். அதன் மூலமாக நீங்கள் ஒளிக்குள் வருகின்றீர்கள். சத்தியயுகத்தில் உள்ள அனைவரும் தூய இல்லறப் பாதைக்குரியவர்கள். கலியுகத்தில், அவர்கள் தூய்மையற்ற இல்லறப் பாதைக்குரியவர்கள். இதுவும் நாடகத்திற்கேற்பவே இடம்பெறுகிறது. பின்னர், தனிவழிப் பாதையும் உள்ளது. அது துறவறத்துக்கான (சந்நியாசிகள்) சமயம் என அழைக்கப்படுகின்றது, ஏனெனில் அவர்கள் சென்று காட்டில் வசிக்கின்றார்கள். அது எல்லைக்குட்பட்ட துறவறம் ஆகும். அவர்கள் இன்னமும் இந்தப் பழைய உலகிலேயே வசிக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவருமே தந்தையிடமிருந்து மூன்றாவது கண்ணாகிய ஞானக் கண்ணைப் பெற்றிருக்கின்றீர்கள், எனவே நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாகின்றீர்கள். இதைவிட உயர்ந்த ஞானம் வேறு எதுவும் இருக்க முடியாது. அது மாயையின் ஞானமாகும். அதன் மூலமாக விநாசமே இடம்பெறுகின்றது. மக்கள் சந்திரனுக்குச் சென்று ஆராய்ச்சி செய்கின்றார்கள். அது எதுவும் உங்களுக்குப் புதிதல்ல. அவையனைத்தும் மாயையின் பகட்டாகும். அவர்கள் அதிக பகட்டைக் காண்பிப்பதுடன் அற்புதங்கள் செய்வதற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றனர். பெரும் அற்புதங்களைக் காட்டுவதனால், அவர்கள் ஓர் இழப்பையே ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அவர்கள் விநாசத்திற்கான சிந்தனைகளை மாத்திரமே தங்களுடைய மூளையில் கொண்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் எதை உருவாக்குகின்றார்கள் எனப் பாருங்கள்! அவற்றால் உலகம் அழியப்போகின்றது என்பது, அவற்றை உருவாக்குபவர்களுக்குத் தெரியும். அவர்கள் தொடர்ச்சியாக அனைத்தையும் சோதித்துப் பார்க்கின்றனர். 'இரண்டு பூனைகள் சண்டையிட்டபோது, மூன்றாவது பூனை வெண்ணெயை உண்டது" எனக் கூறப்படுகின்றது. கதை மிகச் சிறியதாயினும், நாடகம் மிக நீண்டது. அவர்களின் பெயர்கள் போற்றப்படுகின்றன. அவர்களின் மூலமாக விநாசம் இடம்பெறுவது நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவராயினும் ஒருவர் அதற்குக் கருவியாகவே வேண்டும். வைகுந்தம் இருந்தது, ஆனால் தாங்களோ அல்லது இஸ்லாமியர்களும், பௌத்தர்களுமோ அந்நேரத்தில் இருக்கவில்லை என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது. நூறாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னர் தேவதர்மம் இருந்ததாக பாரத மக்கள் கூறுகின்றனர். எனவே, அவர்கள் புத்துக்கள்(மூடர்கள்)! தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வந்து மிகவும் விவேகமற்றிருப்பவர்களை மிகவும் விவேகமுள்ளவர்கள் ஆக்குகின்றார். எவ்வாறாயினும், அது நீங்கள் அவரை நினைவு செய்தால் மாத்திரமேயாகும். பாபா உங்களுக்கு அனைத்தையும் மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார்! என்னை நினைவு செய்வதால் உங்கள் புத்தி தங்கப் பாத்திரமாகி, உங்களால் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகிக்ககூடியதாக இருக்கும். இந்த நினைவு யாத்திரையில் இருப்பதால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் முரளியைச் செவிமடுக்காத போது, ஞானம் உங்களுடைய புத்தியிலிருந்து மறைந்துவிடும். தந்தை கருணை நிறைந்தவராக இருப்பதனால், உங்களை ஈடேற்றுவதற்கான வழிமுறைகளைக் கூறுகின்றார். அவர் இறுதிவரை உங்களுக்குக் கற்பிப்பார். அச்சா, இன்று போக் படைக்கின்ற நாளாகும். போக்கைப் படைத்துவிட்டு விரைவாகத் திரும்பி வாருங்கள்! வைகுந்தத்திற்குச் சென்று தேவர்களின் காட்சிகளைப் பெறுவது பயனற்றதாகும். இதைப் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு ஆழமான சீரான புத்தி தேவைப்படுகின்றது. தந்தை இந்த இரதத்தின் மூலமாகக் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! நான் மாத்திரமே உங்களுடைய தந்தையான தூய்மையாக்குபவர் ஆவேன். 'நான் உங்களுடன் உண்டு, உங்களுடனேயே அமர்ந்து கொள்கின்றேன்” என்ற விளக்கம் இந்நேரத்தையே குறிக்கின்றது. இது மேலே எவ்வாறு இடம்பெற முடியும்? அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக, அதாவது, விகாரமுடைய மனிதர்களிலிருந்து விகாரமற்ற மனிதர்களாக மாற்றுதவதற்காக, தந்தை இந்த தாதாவினுள் பிரவேசித்து, கீதை ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். எனவே, சதா இந்த நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்;. ஸ்ரீமத்தைப் பின்பற்றி, மேன்மையானவர்களாகவும், நற்குணங்கள் நிறைந்தவர்களாகவும் ஆகுங்கள்.
2. நினைவு யாத்திரை மூலம் உங்கள் புத்தியை ஒரு தங்கப் பாத்திரமாக்குங்கள். இந்த ஞானத்தை சதா உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இதற்கு, நீங்கள் நிச்சயமாக முரளியைச் செவிமடுக்கவும், கற்கவும் வேண்டும்.
ஆசீர்வாதம்:
சரீர நோயின் எவ்விதமான எண்ணங்களிலிருந்தும் விடுபட்டிருப்பதன் மூலம், உங்களையிட்டு தூய ஆக்கபூர்வமான எண்ணங்களை கொண்டிருப்பதுடன் ஞானத்தினது எண்ணங்களையும், பிறரையிட்டு தூய ஆக்கபூர்வமான எண்ணங்களையும் கொண்டிருப்பீர்களாக.
சரீர நோய் ஏற்படுவது ஒன்று, அந்த நோயினால் தடுமாற்றம் அடைவது இன்னொன்றாகும். நோய் ஏற்படுவது நிச்சயிக்கப்பட்டது, ஆனால் உங்கள் மேன்மையான ஸ்திதியில் தடுமாற்றம் அடைவது என்றால் அந்த பந்தனத்தில் கட்டுண்டு விடுவதாகும். எந்தச் சரீர நோயின் எண்ணங்களிலிருந்தும் விடுபட்டு, சுயத்தையிட்டு தூய ஆக்கபூர்வமான எண்ணங்களையும், ஞான எண்ணங்களை கொண்டிருப்பவர்கள் பிறரையிட்டு தூய ஆக்கபூர்வமான எண்ணங்களை கொண்டிருப்பவர்கள் ஆவார்கள். இயற்கையை பற்றி அளவுக்கு அதிகமாக நினைப்பது என்றால் நீங்கள் கவலையின் வடிவத்தை எடுப்பதாகும். இந்த பந்தனத்திலிருந்து விடுபடுவதே கர்மாதீத் ஸ்திதி எனப்படுகின்றது.
சுலோகம்:
அன்பு சக்தியானது மலை போன்ற பெரிய பிரச்சினைகளையும் நீரைப் போன்று இலேசாக ஆக்கிவிடும்.