20.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞானக்கடலைக் கடைகின்ற பழக்கத்தைப் பதித்துக் கொள்ளுங்;கள். அதிகாலை வேளையில் ஏகாந்தத்தில் ஞானக்கடலைக் கடையுங்கள், பல புதிய கருத்துக்கள் உங்கள் புத்தியில் பிரவேசிக்கும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்கள் ஸ்திதியை முதற்தரமானதாக ஆக்குவதற்கு, நீங்கள் சதா எவ்விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

8பதில்:
1. ஒரேயொரு தந்தை உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களை மாத்திரம் செவிமடுங்கள். இவ்வுலகின் வேறு எவற்றையும் செவிமடுக்க வேண்டாம். 2. நீங்கள் வைத்திருக்கின்ற சகவாசத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். நன்றாகக் கற்று, ஞானத்தைக் கிரகிப்பவர்களின் சகவாசத்தை மாத்திரம் வைத்திருங்கள், உங்கள் ஸ்திதி முதற்தரமானதாக ஆகும். சில குழந்தைகளின் ஸ்திதியைப் பார்க்கையில், நாடகத்தில் ஏதாவது மாற வேண்டும் என்கின்ற எண்ணத்தை பாபா கொண்டிருக்கின்றார், ஆனால் பின்னர் அவர் கூறுகின்றார்: ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது.

ஓம் சாந்தி.
ஒரேயொரு எல்லையற்ற தந்தை மாத்திரமே அமர்ந்திருந்து எல்லையற்ற குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் அவர்களுக்குக் கற்பிக்கின்றார். ஏனைய மனிதர்கள் அனைவரும் கற்று, செவிமடுப்பவற்றில் எதனையும் நீங்கள் செவிமடுக்கவோ அல்லது கற்கவோ வேண்டியதில்லை, ஏனெனில், இது மாத்திரமே இறை கல்வி, நீங்கள் அதை இந்நேரத்தில் கற்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் கடவுளுடன் மாத்திரமே கற்க வேண்டும். தந்தை உங்களுக்கு வாய் மூலம் கற்பிப்பவற்றை, நீங்கள் கற்க வேண்டும். அம்மக்கள் முழு உலகமும் கற்கின்ற, பலவிதமான புத்தகங்களை எழுதுகின்றார்கள். பல்வேறு விதமான புத்தகங்களை அவர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் ஒரேயொருவரை மாத்திரம் செவிமடுத்துப் பின்னர் அதை ஏனையோருக்குக் கூற வேண்டும் என்று கூறுகின்றீர்கள், ஏனெனில் அவரிடமிருந்து நீங்கள் செவிமடுப்பவற்றில் மாத்திரமே நன்மை இருக்கின்றது. எவ்வாறாயினும், பல புத்தகங்கள் இருப்பதால், பல புதியவர்களும் தொடர்ந்தும் வெளிப்படுகிறார்கள். ஒரே தந்தை மாத்திரம் உங்களுக்கு நீதியான விடயங்களைக் கூறுகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும்; அவ்வளவுதான். நீங்கள் அவரைச் செவிமடுக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகச் சிறிதளவையே விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு விபரமாக விளங்கப்படுத்துகின்றார், பின்னர் அதே விடயத்திற்குத் திரும்ப வருகின்றார். பாபா உபயோகப்படுத்துகின்ற ‘மன்மனபவ’ என்னும் வார்த்தை சரியாக இருந்தபொழுதிலும், பாபா அதைக் கூறவில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள், நான் உங்களுக்குக் கூறுகின்ற உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிய ஞானத்தைக் கிரகியுங்கள். தேவர்களாகப் போகின்ற நாங்கள் எண்ணிக்கையில் அதிகரிப்போம் என்பது உங்களுக்கு மாத்திரம் தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் அசரீரி உலகையும், புதிய உலகையும் நினைவுசெய்கின்றீர்கள். அதிமேலான தந்தையே, அனைவரிலும் முதன்மையானவர். பின்னர் அதிமேலான இலக்ஷ்மியும் நாராயணனும் இராச்சியத்தை ஆட்சிசெய்கின்ற, புதிய உலகம் உள்ளது. படங்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன. எனவே அந்த அடையாளங்கள் இன்னமும் எஞ்சியுள்ளன. இதுவே ஒரேயொரு படமாகும். இராமரின் படமும் உள்ளது, ஆனால் இராம இராச்சியம் சுவர்க்கம் என்று அழைக்கப்பட மாட்டாது; அது அரைவாசியாகும். அதிமேலான தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். இங்கு, புத்தகங்கள் போன்ற எவையும் தேவை இல்லை. இப் புத்தகங்கள் தொடரப் போவதில்லை, எனவே நீங்கள் உங்களுடைய அடுத்த பிறவியில் கற்க முடியும். இக்கல்வி இப்பிறவிக்கானதாகும். இதுவும் அமரத்துவக் கதையாகும். தந்தையும் உங்களுக்குப்; புதிய உலகிற்காக, உங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாற்றுவதற்காகக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். இப்பொழுது உங்களுக்கு 84 பிறவிகளின் சக்கரமும் தெரியும். இதுவே கற்பதற்கான காலம் ஆகும். உங்கள் புத்தி சதா கடைந்து கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஏனையோர்களுக்குக் கற்பிக்கவும் வேண்டும். அதிகாலையில் எழுந்து ஞானக்கடலைக் கடையுங்கள். அதிகாலை வேளையில் மிகச்சிறந்த கடைதல் இடம்பெற முடியும். ஏனையோர்களுக்கு விளங்கப்படுத்துபவர்கள் மாத்திரம் கடைவார்கள்;; அவர்கள் தலைப்புக்களையும் கருத்துக்களையும் அதிலிருந்து பிரித்தெடுப்பார்கள். நீங்கள் பிறவிபிறவியாகப் பக்திக்குரிய விடயங்களையே செவிமடுத்தீர்கள். நீங்கள் இந்த ஞானத்தைப் பிறவிபிறவியாகச் செவிமடுக்க மாட்டீர்கள். தந்தை இந்த ஞானத்தை உங்களுக்கு ஒருமுறையே கொடுக்கின்றார், பின்னர் நீங்கள் இந்த ஞானத்தை மறந்து விடுகின்றீர்கள். பக்திமார்க்கத்தில் பல்வேறு புத்தகங்கள் உள்ளன. அவர்கள் வெளிநாட்டிலிருந்தும் புத்தகங்களைப் பெறுகின்றார்கள். இவை அனைத்தும் முடிவடையவுள்ளன. சத்தியயுகத்தில் எப்புத்தகங்களும் தேவையில்லை. அவை அனைத்தும் கலியுகத்துக்கு உரியவை. நீங்கள் இங்கு பார்க்கின்ற வைத்தியசாலைகள், சிறைகள், நீதிபதிகள் போன்றவை அங்கு இருக்க மாட்டாது. அது முற்றிலும் வேறுபட்ட ஓர் உலகமாகும். அது இந்த அதே உலகாக இருக்கும், ஆனால் புதியவற்றிற்கும் பழையவற்றிற்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கும். அது சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த அதே உலகம் பின்னர் நரகம் ஆகுகின்றது. அம்மக்கள் கூறுகின்றார்கள்: இன்னார் சுவர்க்கவாசி ஆகிவிட்டார். ஒரு சந்நியாசியைப் பற்றி கூறும்பொழுது, அவர் பிரம்ம தத்துவத்தில் இரண்டறக் கலந்துவிட்டார் அல்லது அவர் நிர்வாணாவுக்குச் சென்றார் என்று அவர்கள் கூறுவார்கள். எவ்வாறாயினும், எவரும் நிர்வாணாவுக்குச் செல்வதில்லை. எவ்வாறு உருத்திர மாலை உருவாக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். உருத்திர மாலையும் உள்ளது; விஷ்ணு இராச்சியத்துக்குரிய மாலை உருவாக்கப்படுகின்றது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் மாலையின் இரகசியத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் செய்கின்ற முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, மாலையில் கோர்க்கப்படுகின்றீர்கள். எல்லாவற்றிற்கும் முதலில், இது இறைகல்வி என்கின்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருப்பது அவசியம். அவர் பரமதந்தையும் பரம ஆசிரியரும் ஆவார். நீங்கள் உங்கள் புத்தியில் உள்ள ஞானத்தை ஏனையோருக்கும்; கொடுக்க வேண்டும். நீங்கள் ஏனையோரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்க வேண்டும். ஞானக்கடலைக் கடையுங்கள். அவர்கள் தினமும் காலையில், புதிதாக அச்சடிக்கப்பட்ட தினசரிச்; செய்தித்தாள்களைக் கொண்டிருக்கின்றார்கள். அது பொதுவான ஒன்றாகும். இங்கு, ஒரு கருத்து நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதிவாய்ந்தது. அதைச் சிலர் மிக நன்றாகப் புரிந்துகொள்கின்றார்கள், சிலர் அதைக் குறைவாகப் புரிந்துகொள்கின்றார்கள். நீங்கள் எவ்வளவுக்குப் புரிந்துகொண்டு, ஏனையோருக்கு இப்பொழுது விளங்கப்படுத்துகின்றீர்கள் என்பதற்கேற்பவே புதிய உலகில் ஓர் அந்தஸ்து பெறப்படுகின்றது. ஞானக்கடலைக் கடைவதற்குப் பெருமளவு ஏகாந்தம் தேவைப்படுகின்றது. இராமதீதர் தான் எழுதும்பொழுதெல்லாம், தனது சிஷ்யரை இரண்டு மைல்களுக்கு அப்பால் செல்லும்படியும், இல்லாவிட்டால், அவ்வதிர்வலைகள் அவரைப் பாதிக்கும் என்றும் கூறுவார் என்று காட்டுகின்றார்கள். இப்பொழுது நீங்கள் சம்பூரணம் ஆகுகின்றீர்கள். முழு உலகும் குறைபாடுடைய ஒரு புத்தியைக் கொண்டிருக்கின்றது. இக்கல்வியினூடாக, நீPங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றீர்கள். இது அத்தகையதொரு மேன்மையான கல்வி. எவ்வாறாயினும், உங்களை வரிசைக்கிரமமாக அமர வைக்க முடியாது. பின்னால் அமர்ந்திருப்பதால், நீங்கள் தோல்வியடைந்து, பின்னர் மூச்சுத்திணறிச் சூழலைப் பாழாக்குவீர்கள். உண்மையில், உங்கள் அனைவரையும் வரிசைக்கிரமமாக அமர வைக்க வேண்டும் என்று நியதி கூறுகின்றது. எவ்வாறாயினும், வெல்லமும்; அது உள்ள பையுமே வெல்லம் எவ்வளவு இனிமையானது என்பதை அறியும். இது மிகவுயர்ந்த ஞானம் ஆகும். உங்கள் வகுப்புக்களை வேறுபிரிக்க முடியாது. உண்மையில், உங்களுக்கு அடுத்ததாக அமர்ந்திருக்கின்ற நபரைச் சிறிதளவு கூடத் தீண்டாத அத்தகைய விதத்தில் நீங்கள் வகுப்பில் அமர்ந்திருக்க வேண்டும். ஒலிவாங்கியினூடாக ஒலியை வெகு தூரத்திற்கப்பால் கேட்கச் செய்ய முடியும். தந்தை கூறுகின்றார்: இவ்வுலகின் எவ்விடயத்தையும் செவிமடுக்கவோ அல்லது கற்கவோ வேண்டாம். அவர்களின் சகவாசத்தைக் கூட வைத்திருக்க வேண்டாம். நீங்கள் நன்றாகக் கற்பவர்களின் சகவாசத்தை மாத்திரம் வைத்திருக்க வேண்டும். எங்கு சிறந்த சேவை செய்யப்பட முடியுமோ, எங்கு அருங்காட்சியகங்கள் போன்றவை உள்ளனவோ, அங்கு, மிகவும் திறமையான யோகியுக்த் புத்திரிகள் தேவைப்படுகின்றார்கள். தந்தையும் விளங்கப்படுத்துகின்றார்: நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. சிலவேளைகளில், நாடகத்தில் உள்ள ஏதாவது மாற வேண்டும் என்று பாபா எண்ணுகிறார். எவ்வாறாயினும், எம்மாற்றமும் இருக்க முடியாது. இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. சில குழந்தைகளின் ஸ்திதியைப் பார்க்கையில், ஏதாவது மாற வேண்டும் என்ற எண்ணத்தை பாபா கொண்டிருக்கின்றார். அவர்கள் இப்பொழுது உள்ளது போன்று, சுவர்க்கத்திற்குச் செல்வார்களா? பின்னர் இந்த எண்ணம் ஏற்படுகிறது: சுவர்க்கத்தில் முழு இராச்சியமும் தேவைப்படுகின்றது; பணிப்பெண்கள், வேலையாட்களுடன் சுடலையாண்டிகளும் இருப்பார்கள். நாடகத்தில் எம்மாற்றமும் இருக்க முடியாது. கடவுள் பேசுகின்றார்: இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது; என்னால் கூட, அதை மாற்ற முடியாது. கடவுளை விட உயர்வானவர் எவரும் இல்லை. “கடவுளால் என்னதான் செய்ய முடியாது?” என்று மக்கள் கூறுகின்றார்கள். ஆனால் கடவுளே கூறுகின்றார்: என்னால் எதுவுமே செய்ய முடியாது. இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. தடைகள் ஏற்படும்பொழுது கூட, அவரால் எதையும் செய்ய முடியாது. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நான் என்ன செய்ய முடியும்? பல புத்திரிகள் கூவியழைக்கின்றார்கள்: துகிலுரியப்படுவதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்! தந்தையால் என்ன செய்ய முடியும்? தந்தை கூறுவார்: அது நாடகத்தின் நியதி. இது ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம். அது கடவுளுடைய சித்தம் என்று எண்ணாதீர்கள். அது கடவுளின் கரங்களில் இருந்திருந்தால், பின்னர், ஒரு விசேட, அன்பிற்கினிய குழந்தை தனது சரீரத்தை விட்டு நீங்க இருக்கும்பொழுது, பாபா அக்குழந்தையைக் காப்பாற்றியிருப்பார். பலர் இவ்விதமாகச் சந்தேகங்களைக் கொண்டிருக்கின்றார்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார், எனவே, நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், அப்பொழுது கடவுளால் தனது குழந்தைகளைக் கூடக் காப்பாற்ற முடியாதா? அவர்கள் இவ்விதமாகப் பெருமளவில் முறைப்பாடு செய்கின்றனர். அவர்கள் கூறுகின்றார்கள்: சாதுக்களால், புனிதர்களால் சிலரின் உயிரைக் காப்பாற்ற முடிகின்றது, சிலரை உயிர்ப்பிப்பதால் அவர்கள் எழுந்து சிதையிலிருந்து வெளியேறுகின்றார்கள். கடவுள் அந்நபரைத் திரும்ப அனுப்பினார், மரணம் அவரை அழைத்துச் சென்றது, ஆனால் கடவுள் அவரில் கருணை கொண்டார் என்றும் அவர்கள் கூறுவார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டதே நடைபெறுகின்றது. தந்தையால் எதையும் செய்ய முடியாது. இதுவே நாடகத்தின் நியதி என்று அழைக்கப்படுகின்றது. உங்களுக்கு நாடகத்தைப் பற்றித் தெரியும். அவர்கள் கூறுவார்கள்: நடைபெற இருந்ததே நடைபெற்றது. எனவே நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர் உங்களைக் கவலையிலிருந்து விடுவிக்கின்றார். விநாடி விநாடியாக நடைபெற்ற அனைத்தையும் நாடகம் என்று புரிந்துகொள்ள வேண்டும். ஆத்மா தனது சரீரத்தை நீக்கி இன்னுமொரு பாகத்தை நடிப்பதற்குச் சென்றார். எவ்வாறு உங்களால் ஓர் அநாதியான பாகத்தை மாற்ற முடியும்? உங்கள் ஸ்திதி சிறிதளவு பலவீனமாக இருந்தாலும், நீங்கள் ஏதோவொன்றைப் பற்றிச் சில எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், நியதியை மாற்ற முடியாது. மக்கள் என்ன கூறினாலும், எங்கள் புத்தியில் நாடகத்தின் இரகசியம் உள்ளது. நாங்கள் எங்களுடைய பாகங்களை நடிக்க வேண்டும். கவலைப்படுவதற்கு எதுவுமேயில்லை. உங்கள் ஸ்திதி இன்னமும் பலவீனமாக இருக்கையிலேயே, இந்த அலைகளிற் சில இருக்கும். இந்நேரத்தில், நீங்கள் அனைவரும் கற்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் சரீரதாரிகள். நான் மாத்திரமே சரீரமற்றவர். நான் சரீரதாரிகளாகிய உங்கள் அனைவருக்கும் கற்பிக்கின்றேன். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், ஆனால் சிலவேளைகளில் இந்த பிரம்மாவும் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு அமர்கின்றார். அந்தத் தந்தையின் பாகமும், பிரஜாபிதா பிரம்மாவின் பாகமும் அற்புதமானவை. இத் தந்தை ஞானக்கடலைக் கடைந்து உங்களுடன் பேசுகின்றார். இது அத்தகைய அற்புதமான ஞானம்! நீங்கள் உங்களுடைய புத்தியைப் பெருமளவு பயன்படுத்த வேண்டும். பாபா காலையில் ஞானக்கடலைக் கடைகின்றார். உங்கள் ஆசிரியரைப் போன்று, நீங்களும் அவ்வாறு ஆக வேண்டும். எவ்வாறாயினும், அதில் நிச்சயமாக ஒரு வேறுபாடு உள்ளது. ஓர் ஆசிரியர் ஒருபொழுதும் மாணவர்களுக்கு 100மூ புள்ளிகளை வழங்க மாட்டார். அவர் எப்பொழுதும் சிறிதளவு குறைவாகவே வழங்குவார். அவர் அதிமேலானவரும் நாங்கள் சரீரதாரிகளும் ஆவோம். எனவே, நாங்கள் எவ்வாறு பாபாவைப் போன்று 100மூ ஆக முடியும்? இவை மிகவும் ஆழமான விடயங்களாகும். சிலர் அவற்றைச் செவிமடுத்து, அவற்றைக் கிரகித்து, சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள், ஆனால் மற்றவர்கள் கூறுகின்றார்கள்: பாபா எப்பொழுதும் ஒரே விடயங்களையே கூறுகின்றார், எப்பொழுதும் ஒன்றையே திரும்பத் திரும்பக் கூறுகின்றார். புதிய குழந்தைகள் வரும்பொழுது, நான் ஆரம்பக் கருத்துக்களையே கூற வேண்டியுள்ளது. சிலவேளைகளில், சில புதிய கருத்துக்களும் பிறருக்கு விளங்கப்படுத்துவதற்காக வெளிப்படுகின்றன. எவ்வாறாயினும், குழந்தைகள் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும். சஞ்சிகைகள் அச்சடிக்கப்படுகின்றன. முன்னைய கல்பத்திலும் அதே விடயங்களே எழுதப்பட்டிருக்கும். நீங்கள் செய்தித்தாள்களில் அச்சிட வேண்டுமாயின், மக்கள் அவற்றை வாசிக்கும்பொழுது, குழப்பமடையக்கூடிய வகையில் எதுவுமே எழுதப்படவில்லை என்பதில் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் சஞ்சிகைகளை வாசிக்கின்றீர்கள். ஏதாவது உறுதியாக இல்லாது விட்டால், கூறப்படும்: இன்னமும் எவரும் முழுமையாகவும் சம்பூரணமாகவும் ஆகவில்லை. மிகச்சரியாக 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுவதற்குக் காலம் எடுக்கின்றது. இப்பொழுது பெருமளவு சேவை செய்யப்பட வேண்டும்;; பெருமளவு பிரஜைகள் உருவாக்கப்பட வேண்டும். பலவிதமான புள்ளிகள் (அயசமள) உள்ளன என்றும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஒருவர் ஒரு கருவியாகி, ஏனைய பலரும் ஞானத்தைப் பெறுவதற்கு ஆயத்தங்கள் செய்யும்பொழுது, அவர் அதன் பலனைப் பெறுகின்றார். இப்பொழுது பழைய உலகம் முடிவடையவுள்ளது. இங்கு, தற்காலிகச் சந்தோஷமே இருக்கின்றது. அனைவருக்கும் நோய்கள் போன்றவை உள்ளன. பாபா அனைத்து விடயங்களிலும் அனுபவசாலி. அவர் உலகியல் விடயங்களைப் பற்றியும் விளங்கப்படுத்துகின்றார். பாபா கூறினார்: அற்புதமான விடயங்களைச் செய்தித்தாள்களிலும் சஞ்சிகைகளிலும் எழுதுங்கள், அதனால் பிரம்மகுமாரிகள் இதை முற்றிலும் மிகச்சரியாக எழுதியுள்ளார்கள் என்று மக்கள் எண்ணுகிறார்;கள். இந்த யுத்தமும் மிகச்சரியாக 5000 வருடங்களுக்கு முன்னர் அதேபோன்று நடைபெற்றது. எவ்வாறு? வந்து இதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் பெயர் போற்றப்படுவதுடன் மக்கள் இதைச் செவிமடுக்கும்பொழுது சந்தோஷமும் அடைவார்கள். இது மகத்தானதொன்று! எவ்வாறாயினும், அது முதலில் சிலரின் புத்தியில் இருக்க வேண்டும். இதை எழுதுபவர்கள் பின்னர் ஏனையோருக்கு விளங்கப்படுத்தவும் வேண்டும். எவ்வாறு விளங்கப்படுத்துவது என அறியாதவர்களால் அதைப் பற்றி எழுதவும் முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தை உங்களுக்குக் கூறுகின்றவற்றையும், கற்பிக்கின்றவற்றையும் மாத்திரமே செவிமடுத்து, கற்றுக் கொள்ளுங்கள். வேறு எவற்றையும் கற்கவோ அல்லது செவிமடுக்கவோ தேவையில்லை. நீங்கள் வைத்திருக்கின்ற சகவாசத்தையிட்டு மிக மிக எச்சரிக்கையாக இருங்கள். அதிகாலையில் ஏகாந்தத்தில் அமர்ந்து ஞானக்கடலைக் கடையுங்கள்.

2. நாடகத்தின் நியதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனவே, சதா கவலையற்று இருங்கள். எதைப் பற்றியும் எச்சந்தேகத்தையும் கொண்டிருக்காதீர்கள். மக்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை, நீங்கள் நாடகத்தில் அசைக்க முடியாதவர்களாக இருக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ‘ஹோலி” எனும் வார்த்தையின் அர்த்தத்தில் உங்களை ஸ்தாபித்து, உண்மையான ஹோலியைக் கொண்டாடுகின்ற, ஒரு தீவிர முயற்சியாளர் ஆவீர்களாக.

ஏற்கெனவே எது நடைபெற்றுள்ளதோ, எது கடந்து விட்டதோ, அதை முழுமையாக முடித்து விடுவது என்று நீங்கள் சத்தியம் செய்வதே ஹோலியைக் கொண்டாடுவது என்பதன் அர்த்தம் ஆகும். கடந்ததைக் கடந்த காலத்தின் இன்னுமொரு பிறப்பிற்கு உரித்தான ஒன்று என உணருங்கள். நீங்கள் அத்தகையதொரு ஸ்திதியைக் கொண்டிருக்கும்பொழுது, உங்கள் முயற்சியின் வேகம் தீவிரமாக ஆகும். உங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ கடந்த காலத்தில் நடைபெற்ற எதனையும் உங்கள் எண்ணங்களிலோ அல்லது உங்கள் இதயத்திலோ வைத்திருக்க வேண்டாம். இதுவே உண்மையான ஹோலியைக் கொண்டாடுவது, அதாவது, உங்களை உறுதியாக நிறமூட்டுவது என்று அர்த்தம் ஆகும்.

சுலோகம்:
கடவுளிடமிருந்து நேரடியாக ஒரு மேன்மையான வாழ்விற்கான பராமரிப்பையும் கல்வியையும், ஸ்ரீமத்தையும் பெறுபவர்களினதே அதிமேன்மையான பாக்கியம் ஆகும்.