13.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எப்பொழுதும் தந்தையை நினைவுசெய்கின்ற எண்ணங்களைக் கொண்டிருப்பதுடன், ஞானக் கடலையும் கடைந்தால் புதிய கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிப்படும்;, நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்.

கேள்வி:
இந்த நாடகத்தில் யாருடைய அற்புதம் அதிமகத்துவம் வாய்ந்தது, ஏன்?

பதில்:
1.சிவபாபாவின் அற்புதமே அதிமகத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அவர் ஒரு விநாடியில் உங்களைத் தேவதைகள் ஆக்குகின்றார். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்கான அத்தகையதொரு கல்வியை அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். உலகிலுள்ள வேறெவராலும் அன்றி, தந்தையால் மாத்திரமே உங்களுக்கு இக் கல்வியைக் கற்பிக்க முடியும். 2.மூன்றாவது ஞானக் கண்ணை உங்களுக்குக் கொடுத்து, உங்களை இருளில் இருந்து ஒளிக்குள் அழைத்துச் சென்று, தடுமாற்றங்களில் இருந்து உங்களைக் காப்பாற்றுவது தந்தையின் பணியாகும். அத்தகையதோர் அற்புதமான பணியை வேறு எவராலும் நிறைவேற்ற முடியாது.


ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் உங்களை ஆத்மாக்கள் என்று கருதியவாறே செவிமடுக்கின்றீர்கள். தந்தை மறைமுகமாக இருப்பதைப் போன்றே, ஞானமும் மறைமுகமானது. ஆத்மா என்றால் என்ன என்றோ அல்லது பரமாத்மாவான பரமதந்தை யார் என்பதையோ எவராலும் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் உங்களை ஆத்மாக்கள் என உறுதியாகக் கருதுகின்ற பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை ஆத்மாக்களாகிய எங்களுக்கு ஞானத்தைப் பேசுகின்றார். இதனைப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்தி, பின் செயற்பட வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் உங்களுக்குரிய தொழில்களையும்; செய்ய வேண்டும். உங்களை ஒருவர் அழைப்பாராயின், அவர் நிச்சயமாக உங்கள் பெயரினாலேயே உங்களை அழைக்கின்றார். உங்களுக்கு ஒரு பெயரும் வடிவமும் உள்ளன என்பதாலேயே உங்களால் பேச முடிகின்றது. நீங்கள் எதனையும் செய்யலாம், ஆனால் உங்களை ஆத்மாக்கள் என்பதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும், அசரீரியான ஒரேயொருவருக்கே அனைத்துப் புகழும் உரியது. சரீரியான தேவர்களுக்குப் புகழ் இருந்தால், அது தந்தை அவர்களைப் புகழுக்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கியதாலேயே ஏற்பட்டது. அவர்கள் புகழுக்குத் தகுதியானவர்களாக இருந்தார்கள், தந்தை மீண்டும் அவர்களைப் புகழுக்குத் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்குகின்றார். இதனாலேயே அசரீரியான ஒரேயொருவருக்கே புகழ் உள்ளது. அது பற்றிச் சிந்திக்கும்பொழுது, தந்தைக்குப் பெரும் புகழ் உள்ளது, அவர் அதிகளவு சேவையும் செய்கிறார். அவர் சகல சக்திகளும் நிறைந்தவர்; அவரால் எதனையும் செய்ய முடியும். நாங்கள் அவரைச் சிறிதளவே புகழுகின்றோம். அவருக்குப் பெருமளவு புகழ் உள்ளது. இஸ்லாமியரும் கூறுகின்றார்கள்: கடவுள் அல்லாவே இக் கட்டளையை இட்டார். இப்பொழுது, எவர் முன்னிலையில் அவர் இக் கட்டளையை இடுகின்றார்? மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்ற குழந்தைகளின் முன்னிலையிலேயே அவர் இக் கட்டளையை இடுகின்றார். கடவுள் அல்லா இக் கட்டளையை வேறு ஒருவருக்குக் கொடுத்திருப்பார். குழந்தைகளாகிய உங்களுக்கே அவர் விளங்கப்படுத்துகின்றார். வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. இந்த ஞானம் மறைந்து விடும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பௌத்தர்களும் இதனைக் கூறுகின்றார்கள், அத்துடன் கிறிஸ்தவர்களும் இதனைக் கூறுகின்றார்கள், எனினும் அவர் கொடுத்த கட்டளை என்ன என்பதை எவருமே அறியார். தந்தை உங்களுக்கு அல்ஃபாவையும் பீற்றாவையும் விளங்கப்படுத்துகின்றார். தந்தையின் நினைவை ஆத்மாக்களினால் மறந்துவிட முடியாது. ஆத்மாக்களும் அழிவற்றவர்கள், நினைவும் அழிவற்றது ஆகும். தந்தையும் அழிவற்றவரே. ‘இதனை அல்லா கூறினார்’ என்றே அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர் யார், அவர் என்ன கூறினார்? அவர்கள் அதனை முற்றிலும் அறியாதவர்களாகவே உள்ளனர். கடவுள் அல்லா கற்களிலும் கூழாங்கற்களிலும் உள்ளார் என்று அவர்கள் கூறியுள்ளதால், அவர்கள் அவரை எவ்வாறு அறிந்திருக்க முடியும்? அவர்கள் பக்தி மார்க்கத்தில் பிரார்த்தனை செய்கின்றார்கள். எவர் வந்தாலும் அவர் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். கிறிஸ்துவும் புத்தரும் வரும்பொழுது, அவர்களைத் தொடர்ந்து அனைவரும் கீழிறங்கி வர வேண்டும். இதில் மேலேறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை வந்து அனைவரும் மேலேறுவதற்கு உதவுகின்றார். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அளிப்பவர். வேறு எவரும் சற்கதியை அளிக்க வருவதில்லை. ‘கிறிஸ்து வந்திருந்தால், அவர் யாருக்கு அமர்ந்திருந்து விளங்கப்படுத்தியிருப்பார்?’ என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு மிகவும் சிறந்ததொரு புத்தி தேவை. நீங்கள் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்து இரத்தினங்களைப் பிரித்தெடுக்க வேண்டும். ஆகையால் பாபா கூறுகின்றார்: ஞானக்கடலைக் கடைந்து கருத்துக்களைக் குறித்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அவற்றை வாசித்து, ஏதாவது தவற விடப்பட்டுள்ளதா என்று பாருங்கள். பாபாவின் பாகம் எதுவாயினும் அது தொடரும். தந்தை முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்று, அதே ஞானத்தையே பேசுகின்றார். ஒருவர் ஒரு சமயத்தை ஸ்தாபிக்க வரும்பொழுது, அச்சமயத்தை சேர்ந்தவர்கள், அவரைத் தொடர்ந்து கீழே வருவார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர்களால் எவ்வாறு ஏனையோரை மேலேறும் ஸ்திதிக்குச் செல்வதற்கு உதவ முடியும்? அவர்கள் ஏணியில் கீழிறங்க வேண்டும். முதலில் சந்தோஷமும் பின்னர் துன்பமும் உள்ளன. இந்த நாடகம் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஞானக்கடலைக் கடைய வேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் எவருக்கும் சற்கதியை அருள வருவதில்லை. அவர்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதற்கே வருகின்றார்கள். ஒரேயொரு ஞானக் கடல் மாத்திரமே உள்ளார். வேறு எவரிடமும் ஞானம் இல்லை. இந்த நாடகத்திலுள்ள இன்பமும் துன்பமும் என்ற பாகம் அனைவருக்கும் பொருந்துகிறது. உங்களுக்குத் துன்பத்தை விட இன்பமே அதிகமாக உள்ளது. நீங்கள் நாடகத்தில் உள்ள பாகங்களை நடிப்பதால், நிச்சயமாகச் சந்தோஷமும் இருக்கும். தந்தை துன்பத்தை உருவாக்க மாட்டார். தந்தை அனைவருக்கும் சந்தோஷத்தையே கொடுக்கின்றார். அந்த நேரத்தில் முழு உலகிலும்; அமைதியே நிலவும். துன்ப உலகில் அமைதி இருக்க முடியாது. நீங்கள் மீண்டும் அமைதி தாமத்திற்குச் செல்லும்பொழுது மாத்திரமே, அமைதியைப் பெறுகின்றீர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் பாபாவுடன் இருக்கின்றீர்கள் என்பதை என்றுமே மறக்காதீர்கள். பாபா எங்களை அசுரர்களிலிருந்து தேவர்கள் ஆக்குவதற்கே வந்துள்ளார். தேவர்கள் சற்கதியில் வாழும்பொழுது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் ஆத்மலோகத்தில் இருக்கிறார்கள். உங்களைத் தேவதைகள் ஆக்குகின்ற, ஒரேயொரு எல்லையற்ற தந்தையே இந்த நாடகத்தின் அதிஉன்னதமான அற்புதம் ஆவார். இக்கல்வியினூடாக நீங்கள் தேவதைகள் ஆகுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில், மக்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தெடர்ந்தும் ஒரு மாலையை உருட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் அனுமனையும், சிலர் ஏனையோரையும் நினைவுசெய்கின்றார்கள். அவர்களை நினைவுசெய்வதனால் என்ன நன்மை உள்ளது? பாபா ‘மகாராத்தி’ என்று கூறியதால், அவர்கள் யானை மீது சவாரி செய்கின்ற ஒருவரைக் காட்டியுள்ளார்கள். தந்தையே இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். பிரமுகர் ஒருவர் ஓரிடத்திற்குச் செல்லும்பொழுது, கோலாகலமாக வரவேற்கப்படுகின்றார். நீங்கள் வேறெவருக்கும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். முழு விருட்சமுமே இந் நேரத்தில் அதன் உக்கிய நிலையை அடைந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைவரும் நஞ்சின் மூலம் பிறப்பெடுத்துள்ளனர். சத்தியயுகத்தில் நஞ்சு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற உணர்வு இப்பொழுது உங்களுக்கு இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களைப் பல் கோடீஸ்வரர்கள் ஆக்குகின்றேன். சுதாமாவும் (குசேலரும்) கோடீஸ்வரர் ஆகினார். நீங்கள் அனைத்தையும் உங்களுக்காகவே செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இக்கல்வியின் மூலம் நீங்கள் அதிமேன்மையானவர் ஆகுகின்றீர்கள். அனைவரும் அந்தக் கீதையைச் செவிமடுத்து, அதனைக் கற்கின்றார்கள். இவரும் அதனைக் கற்பதுண்டு, ஆனால் தந்தை அமர்ந்திருந்து ஞானத்தைப் பேசியபொழுது, இவர் வியப்படைந்தார். இவர் தந்தையின் கீதையினாலேயே சற்கதியைப் பெற்றார். மனிதர்கள் அமர்;ந்திருந்து எதனைப் படைத்தார்;கள்? ‘கடவுள் அல்லா இதனைக் கூறினார்’ என அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர்களுக்கு அல்லா யார் என்பது தெரியாது. தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களே யார் கடவுள் என்பதை அறியாதிருக்கும்பொழுது, தாமதித்து வருபவர்களுக்கு எவ்வாறு தெரியும்? சமயநூல்களுக்கெல்லாம் இரத்தினமாகத் திகழும் கீதையே பிழையாக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் ஏனைய சமயநூல்களில் என்ன உள்ளது? குழந்தைகளாகிய எங்களுடன் தந்தை பேசிய விடயங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. நீங்கள் இப்பொழுது தந்தை கூறுவதைச் செவிமடுத்துத் தேவர்கள் ஆகுகின்றீர்கள். நாங்கள் அனைவருமே இப்பழைய உலகின் கணக்கை முடிக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையாகுவோம். நாங்கள் என்னென்ன கணக்குகளைத் தீர்க்க வேண்டியுள்ளதோ அவை தீர்க்கப்படும். முதலில் செல்பவர்களும் நாங்களே, முதலில் வருபவர்களும் நாங்களே. ஏனைய அனைவரும் தண்டனையை அனுபவிப்பதன் மூலம் தமது கணக்குகளைத் தீரப்பார்கள். அவ்விடயங்களுக்குள் அதிகளவு செல்லாதீர்கள். தந்தையே அனைவருக்கும் சற்கதியை அளிப்பவர் என்ற நம்பிக்கையை முதலில் அனைவரும் கொண்டிருப்பதற்கு உதவுங்கள். ஒரேயொரு தந்தையே ஆசிரியரும் சற்குருவும் ஆவார். அவர் சரீரமற்றவர். ஆத்மாவினுள் எவ்வளவு ஞானம் பதிந்துள்ளது? அவரே ஞானக்கடலும், சந்தோஷக்கடலும் ஆவார். அவருக்கான புகழ் அதிகளவு உள்ளது. அவரும் ஓர் ஆத்மாவே. அந்த ஆத்மா வந்து ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். பரமாத்மாவான பரமதந்தையைத் தவிர வேறெந்த ஆத்மாவையும்; புகழ முடியாது. அவர்கள் அனைவரும் சரீரதாரிகளையே புகழ்கின்றார்கள். அவர் பரமாத்மா. அசரீரியான தந்தையைத் தவிர, சரீரமற்றுள்ள வேறு எந்த ஆத்மாக்களையும் புகழ முடியாது. ஆத்மாவினுள்ளேயே ஞான சம்ஸ்காரங்கள் உள்ளன. தந்தைக்குள் ஞான சம்ஸ்காரங்கள் எவ்வளவு இருக்கின்றன? அவரே அன்புக் கடலும், ஞானக்கடலும் ஆவார். இப் புகழ் ஓர் ஆத்மாவிற்கு உரியதாக இருக்க முடியுமா? இப் புகழ் எந்த மனிதருக்கோ அல்லது கிருஷ்ணருக்கோ உரியதல்ல. அவர் முதல் இலக்க இளவரசர். தந்தையிடம் முழு ஞானமும் உள்ளது. அவர் அதனைக் குழந்தைகளாகிய எங்களுக்கு எங்கள் ஆஸ்தியாக வழங்குகின்றார். ஆகையாலேயே அவர் போற்றப்படுகின்றார். சிவனின் பிறப்பு வைரத்தின் பெறுமதியைப் போன்றது. சமயத்தை ஸ்தாபிப்பவர்கள் வரும்பொழுது, அவர்கள் என்ன செய்கின்றார்கள்? உதாரணமாக கிறிஸ்து வந்தபொழுது கிறிஸ்தவ சமயம் இருக்கவில்லை. அவரால் எந்த ஞானத்தைப் பிறருக்குக் கொடுக்க முடியும்? அதிகபட்சம் அவர் கூறுவார்: நன்நடத்தை கொண்டிருங்கள்! அவ்வாறாகப் பல மனிதர்கள் தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் எவ்வாறு சற்கதியை அடைய முடியும் என்ற ஞானத்தை எவராலுமே கொடுக்க முடியாது. அவர்கள் அனைவருமே தத்தமது தனிப்பட்ட பாகங்களைப் பெற்றுள்ளார்கள். அவர்கள் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்தே செல்ல வேண்டும். அவர்; முதல் வரும்பொழுது எவ்வாறு கிறிஸ்தவ ஆலயம் ஒன்று கட்டப்பட முடியும்? அவர்களில் பலர் இருக்கும்பொழுதே, பக்தி ஆரம்பமாகிய பின்னர், ஒரு தேவாலயம் கட்டப்படுகின்றது. ஒரு தேவாலயத்தைக் கட்டுவதற்கு அதிகளவு பணம் தேவையாக உள்ளது. யுத்தத்திற்கும் பணம் தேவைப்படுகின்றது. ஆகையால் தந்தை இது மனித உலக விருட்சம் என்று விளங்கப்படுத்துகின்றார். ஒரு விருட்சம் நூறாயிரம் ஆண்டுகள் வயதானதாக இருக்க முடியுமா? அதைக் கணக்கிட முடியாது. தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, நீங்கள் மிகவும் விவேகமற்றவர் ஆகினீர்கள்! நீங்கள் இப்பொழுது விவேகமானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் முதலில் வந்து ஆரம்பத்தில் இராச்சியத்தை ஆட்சிசெய்யத் தயார் ஆகுவீர்கள். அவர்கள் தனியாக வருகின்றார்கள், அவர்களின் எண்ணிக்கை பின்னரே அதிகரிக்கின்றது. தேவர்களே விருட்சத்தின் அத்திவாரம் ஆவார்கள். அவர்களிலிருந்து மூன்று பிரிவுகள் தோன்றுகின்றன. சிறு பிரிவுகள் பின்னர் தோன்றுகின்றன. வளர்ச்சி இடம்பெறுகின்றது, பின்னர் அவர்கள் போற்றப்படுகின்றார்கள். எவ்வாறாயினும் எப் பயனும் இல்லை. அனைவருமே கீழிறங்க வேண்டும். நீங்கள் இப்பொழுது முழு ஞானத்தையும் பெறுகின்றீர்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: கடவுள் ஞானம் நிறைந்தவர். ஆனால்; இந்த ஞானம் என்னவென்பதை எவரும் அறியார். நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பாக்கிய இரதம் நிச்சயமாகத் தேவை. தந்தை இந்தச் சாதாரண சரீரத்தினுள் பிரவேசிக்கும்பொழுதே, இவர் அதிர்ஷ்டசாலி ஆகுகின்றார். சத்தியயுகத்தில் அனைவரும் பல மில்லியன் மடங்குகள் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் இப்பொழுது ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெறுகின்றீர்கள். அதன் மூலமே நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஞானத்தை ஒருமுறை மாத்திரமே பெறுகின்றீர்கள். மக்கள் பக்தி மார்க்கத்தில் இருளில் தடுமாறுகின்றார்கள். ஞானம் பகற் பொழுதாகும். பகற் பொழுதில் தடுமாற்றம் இருக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: எவ்வாறாயினும், உங்கள் வீட்டில் ஒரு கீதாப் பாடசாலையை ஆரம்பியுங்கள். ‘எங்களால் நடத்த முடியாது’ என்று பிறருக்குத் தமது இடத்தைக் கொடுக்கின்ற பலர் உள்ளனர். அதுவும் நல்லதே. இங்கே பெருமளவு மௌனம் இருக்க வேண்டும். இது அனைத்திலும், அதிபுனிதமான வகுப்புக்களாக இருப்பதால், நீங்கள் அமைதியாக அமர்ந்திருந்து தந்தையை நினைவுசெய்யலாம். நாங்கள் இப்பொழுது மௌன தாமத்திற்குச் செல்ல விரும்புகிறோம். ஆகையால், பெருமளவு அன்புடன் தந்தையை நினைவுசெய்யுங்கள். சத்தியயுகத்தில், நீங்கள் 21 பிறவிகளுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுகிறீர்கள். எல்லையற்ற தந்தையே உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுப்பவர். ஆகையால் அத்தகைய தந்தையை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு அகங்காரம் இருக்கக்கூடாது. அது உங்களைக் கீழே வீழ்த்திவிடும். நீங்கள் பெருமளவுக்குப் பொறுமையாக இருக்க வேண்டும். எந்தப் பிடிவாதமும் (பௌதீக விசை) இருக்கக்கூடாது. சரீர உணர்வே விசை ஆகும். நீங்கள் மிகவும் இனிமையானவர் ஆகவேண்டும். தேவர்கள் மிகவும் இனிமையானவர்கள். அவர்களிடம் அதிகளவு கவர்ச்சியுள்ளது. தந்தை உங்களை அவர்களைப் போன்றவர் ஆக்குகின்றார். ஆகையால், அத்தகைய தந்தையை அதிகளவு நினைவுசெய்ய வேண்டும். எனவே குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் மீண்டும் இதனை நினைவுசெய்து முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். இவர் இந்தச் சரீரத்தை நீக்கியவுடன் அவ்வாறு (நாராயணன்) ஆகுவார்; என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். நீங்கள் உங்கள் இலக்கினதும் இலட்சியத்தினதும் படத்தைப் பார்க்க வேண்டும். அங்கு கற்பிப்பவர்கள் லௌகீக ஆசிரியர்கள். இங்கோ, ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்ற அசரீரியான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாலே நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். இவர் எவ்வாறு பிரம்மாவிலிருந்து விஷ்ணு ஆகுகின்றார், விஷ்ணுவிலிருந்து எவ்வாறு பிரம்மாவாகுகின்றார் என்ற போதை இவருக்கு உள்ளது. நீங்கள் இந்த அற்புதமான விடயங்களைச் செவிமடுத்து, அவற்றைக் கிரகித்து, பின்னர் அவற்றைப் பிறருக்குக் கூறுகின்றீர்கள். தந்தை உங்கள் அனைவரையும் உலக அதிபதிகள் ஆக்குகின்றார். எவ்வாறாயினும், யார் இராச்சியத்தை ஆட்சிசெய்வதற்குத் தகுதியானவர்கள் ஆகுவார்கள் என்பது புரிந்துகொள்ளப்படும். குழந்தைகளை ஈடேற்ற வேண்டியது தந்தையின் கடமையாகும். தந்தை உங்கள் அனைவரையும் உலக அதிபதிகள் ஆக்குகின்றார்;. தந்தை கூறுகின்றார்: நான் உலக அதிபதி ஆகுவதில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து இவரின் வாயின் மூலம் ஞானத்தைப் பேசுகின்றார். அவர்கள் ஆகாயத்திலிருந்து கேட்கும் குரல் (ஆகாசவாணி – வானொலி) பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை மேலிருந்து வந்து, இந்த கௌமுக்கின் ஊடாகப் (பசுவின் வாய்) பேசுவதே உண்மையான ஆகாஷ்வாணி ஆகும். வார்த்தைகள் இந்த வாயின் மூலமே வெளிப்படுகின்றன. குழந்தைகள் மிகவும் இனிமையானவர்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, இன்று எங்களுக்குத் தோலி (பிரசாதம்) கொடுங்கள். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் அதிகளவு தோலியைப் பெற்றுக் கொள்வீர்கள். தாங்களே குழந்தைகளும் சேவகர்களும் என்று நல்ல குழந்தைகள் கூறுவார்கள். குழந்தைகளைக் காணும்பொழுது, பாபா மிகவும் சந்தோஷப்படுகின்றார். இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பல குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை வெறுமனே தூக்கி எறியப்படுமா? முன்னைய கல்பத்தில் நடந்தவையே மீண்டும் இடம்பெறும். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், அது சாத்தியமல்ல. நீங்களே உலகில் அமைதியை நிலைநாட்டுபவர்கள். நீங்கள் உலக இராச்சியத்திற்கான பரிசைப் பெறுவீர்கள். அதனைத் தந்தையே உங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்கள் யோக சக்தியின் மூலம் உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். பௌதீகச் சக்தியினால், உலகின்; அழிவே இடம்பெறும். மௌனச் சக்தியின் மூலம் நீங்கள் வெற்றி அடைகிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் ஸ்திதி பொறுமை மிக்கதாக இருக்கட்டும். தந்தையைப் பின்பற்றுங்கள். என்றுமே எதனையிட்டும் அகங்காரம் கொள்ளாதீPர்கள். தேவர்களைப் போல் இனிமையானவர் ஆகுங்கள்.

2. சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, தொடர்ந்தும் ஞானத்தைக் கடையுங்கள். ஞானக் கடலைக் கடையுங்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகளும், அவரது சேவகர்;களும் என்ற விழிப்புணர்வுடன் சேவையில் ஈடுபட்டிருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு கணத்தையும் இறுதிக் கணமாகக் கருதுவதால், சதா ஆன்மீக மகிழ்;ச்சியில் நிலைத்திருக்கின்ற, ஒரு விசேட ஆத்மா ஆவீர்களாக.

சங்கமயுகம் ஆன்மீக மகிழ்ச்சியில் நிலைத்திருப்பதற்கான யுகம் ஆதலால், ஒவ்வொரு கணமும் நீங்கள் தொடர்ந்தும் ஆன்மீக மகிழ்ச்சியை அனுபவம் செய்ய வேண்டும். என்றுமே எந்தச் சூழ்நிலையைப் பற்றியோ அல்லது ஏதாவது பரீட்சையைப் பற்றியோ குழப்பம் அடையாதீர்கள், ஏனெனில் இது அகால மரணத்திற்குரிய நேரமாகும். மகிழ்ச்சியில் இருப்பதற்குப் பதிலாக, ஒரு குறுகிய காலமேனும் நீங்கள் குழப்பம் அடைந்து, அது உங்கள் இறுதிக் கணமாகவும் இருந்தால், அப்பொழுது இறுதிக் கணங்கள் எவையாக இருக்கும்? இதனாலேயே உங்களுக்குத் தயாராக இருத்தல் எனும் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. எந்த விநாடியும் ஏமாற்றக்கூடும், எனவே நீங்கள் உங்களை ஒரு விசேடமான ஆத்மாவாகக் கருதி, சதா ஆன்மீக மகிழ்ச்சியில் நிலைத்திருந்தவாறே, ஒவ்வோர் எண்ணத்தையும் உருவாக்கி, ஒவ்வொரு வார்த்தையையும் பேசி, ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்.

சுலோகம்:
அசைக்க முடியாதவர்கள் ஆகுவதற்கு, வீணான அல்லது தூய்மையற்ற எதனையும் முடித்து விடுங்கள்.