03.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அபுவே அனைத்திலும் அதி மகத்;தான யாத்திரைத் தலமாக இருக்கின்ற இரகசியத்தை அனைவருக்கும் கூறுங்கள். இங்கேயே கடவுள் அனைவருக்கும் சற்கதியை அருளினார்.
கேள்வி:
எந்த ஒரு விடயத்தைப் மக்கள் புரிந்துகொண்டால், இங்கு மக்கள் கூட்டம் வரும்;?
பதில்:
தந்தை முன்னர் எங்களுக்குக் கற்பித்த இராஜயோகத்தை மீண்டும் ஒருமுறை கற்பிக்கின்றார் என்பதையும், அவர் சர்வவியாபி அல்ல என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியதே பிரதான விடயம். தந்தை இங்கு இந்நேரத்தில் அபுவிற்கு வந்து, உலகில் அமைதியை ஸ்தாபிக்கின்றார். இதன் உயிரற்ற ஞாபகார்த்தமே தில்வாலா ஆலயம் ஆகும். ஆதிதேவர் இங்கு உயிருள்ள வடிவில் அமர்ந்திருக்கிறார். இதுவே உயிருள்ள தில்வாலா ஆலயம். இதனை அவர்கள் புரிந்துகொண்டால், அபு புகழப்படுவதுடன், இங்கு மக்கள்கூட்டமும்; வரும். அபுவின் பெயர் பிரபல்யமடைந்தால், பலர் இங்கு வருவார்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு யோகம் கற்பிக்கப்படுகின்றது. ஏனைய அனைத்து இடங்களிலும், அவர்கள் தாங்களாகவே இதனைக் கற்றுக் கொள்கிறார்கள். தந்தை அவர்களுக்குக் கற்பிப்பதில்லை; அவர்கள் ஒருவருக்கொருவர் அதனைக் கற்பிக்கிறார்கள். இங்கு, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார்;: பகலுக்கும், இரவுக்கும் இடையேயான வித்தியாசம் உள்ளது. அங்கு அவர்கள் தொடர்ந்தும் பல நண்பர்கள்;, உறவினர்கள் போன்றோரை நினைவுசெய்கின்றார்கள். அதனால் அவர்களால் அந்தளவு நினைவுசெய்ய முடியாதுள்ளது. இதனாலேயே மிக அரிதாகவே, அவர்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்றார்கள். இங்கு நீங்கள் மிக விரைவாக ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். எவ்வாறாயினும், முற்றிலும் எதுவுமே தெரியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். சிவபாபா எங்களுக்குப் பின்வருமாறு கூறுவதனால், சேவை செய்கிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். இங்குள்ள இவரில் பிரசன்னமாயிருக்கும், தந்தையை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். சிவபாபா, பிரம்மாவின் சரீரத்தின் மூலம் எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை கூட பலருக்கு இல்லை. “எவ்வாறு நான் இதில் நம்பிக்கை கொள்ள முடியும்?” என்று ஏனைய மக்கள் கூறுவதைப் போன்றே, இங்கும் உள்ளது. முழு நம்பிக்கை இருந்திருந்தால், அவர்கள் தந்தையைப் பெருமளவு அன்புடன் தொடர்ந்தும் நினைவுசெய்வதுடன், தங்களைப் பெருமளவு சக்தியால் நிரப்பிக் கொண்டு, பெருமளவு சேவையும் செய்வார்கள். ஏனெனில் முழு உலகமும் தூய்மையாக்கப்பட வேண்டும். அவர்களின் யோகத்திலும், அவர்களின் ஞானத்திலும் பின்னடைவு உள்ளது. அவர்கள் அதனைச் செவிமடுக்கிறார்கள், ஆனால் அவர்களால் அதனைக் கிரகிக்க முடியாதுள்ளது. அவர்கள் அதனைக் கிரகித்திருந்தால், அவர்களால் அதனைப் பிறர் கிரகிப்பதற்குத் தூண்டவும் முடியும்;. அந்த மக்கள் தொடர்ந்தும் மாநாடுகள் போன்றவற்றை நடத்துகிறார்கள், உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். ஆனால் உலகில் எப்பொழுது அமைதி நிலவியது என்பதும், எவ்வாறு அந்த அமைதி உருவாகியது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. எவ்வகையான அமைதி நிலவியதோ, அவ்வகையான அமைதியே தேவைப்படுகிறது. இப்பொழுது உலகில் அமைதியும், சந்தோஷமும் ஸ்தாபிக்கப்படுகின்றன என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். தந்தை இப்பொழுது வந்திருக்கின்றார். இந்த தில்வாலா ஆலயம் எவ்வாறுள்ளது என்று பாருங்கள். ஆதிதேவர் இங்கு இருக்கின்றார், உலக அமைதிக்கான காட்சி மேலே சித்தரிக்கப்பட்டுள்ளது. உங்களை மக்கள் ஒரு மாநாடு போன்றவற்றிற்கு அழைக்கும்பொழுது, நீங்கள் அவர்களிடம் வினவ முடியும்: உலகில் எவ்வாறான அமைதியை நீங்கள் விரும்புகிறீர்கள்? இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் உலகில் அமைதி நிலவியது. அதன் மிகச்சரியான ஞாபகார்த்தம் தில்வாலா ஆலயத்தில் உள்ளது. அமைதியின் மாதிரி உலகத்தில் இருக்க வேண்டும். இலக்ஷ்மி, நாராயணனின் படத்திலிருந்து கூட அவர்கள் எதனையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் கல்லுப் புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும்: உலகில் இலக்ஷ்மி, நாராயணனே முதலில் அமைதிக்கான மாதிரிகள் என எங்களால் உங்களுக்கு கூற முடியும், அவர்களுடைய இராச்சியத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், தில்வாலா ஆலயத்திற்குச் சென்று பாருங்கள். அதன் மாதிரி மாத்திரமே காட்டப்படும், ஆகவே அபுவிற்கு வந்து, அதனைப் பாருங்கள். இந்த ஆலயத்தின் ஞாபகார்த்தத்தைக் கட்டியவர்களுக்கும் இது தெரியாது, ஆனால் அவர்கள் இதனைத் தில்வாலா ஆலயம் என்று பெயரிட்டுள்ளார்கள். அவர்கள் அதனில் ஆதிதேவரை அமர்த்தி, மேலே சுவர்க்கத்தைக் காட்டியுள்ளார்கள். அது உயிரற்ற ரூபமாகும். நீங்கள் உயிருள்ள ரூபத்தில் இருக்கிறீர்கள். இதுவே உயிருள்ள தில்வாலா ஆலயம் என அழைக்கப்பட முடியும். எவ்வாறாயினும், அங்கு எவ்வளவு மக்கள்கூட்டம் இருக்கும் என உங்களால் கூற முடியாது. மக்கள் குழப்பமடைந்து வினவுவார்கள்: இது என்ன? அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்குப் பெருமளவு முயற்சி தேவை. புரிந்துகொள்ளாத குழந்தைகள் பலரும்; இருக்கிறார்கள். கடவுளின் வீட்டில் அவருக்கு அருகே இருப்பவர்கள் கூட எதனையும் புரிந்துகொள்வதில்லை! அனைத்து வகையான மக்களும் கண்காட்சியைப் பார்க்கச் செல்கிறார்கள். பல மதப் பிரிவுகளும், அவற்றின் கிளைகளும் உள்ளன. வைஷ்ணவ சமயத்தவர்களும் இருக்கிறார்கள். வைஷ்ணவ சமயம் என்பதன் அர்த்தத்தைக் கூட அவர்கள் புரிந்துகொள்வதில்லை. கிருஷ்ணரின் இராச்சியம் எங்கு உள்ளது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. கிருஷ்ணரின் இராச்சியம் வைகுந்தமாகிய, சுவர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. பாபா கூறியுள்ளார்: நீங்கள் எங்கு பேசுவதற்கு அழைக்கப்பட்டாலும், அங்கு சென்று, அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும்: உலகில் எப்பொழுது அமைதி நிலவியது? இந்த அபுவே அனைத்திலும் அதி மகத்தான யாத்திரைத் தலமாகும், ஏனெனில் இங்குதான் தந்தை உலகிலுள்ள அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். அபு மலைகளில் இதன் மாதிரி ஒன்றை நீங்கள் பார்க்க விரும்பினால், அப்பொழுது சென்று, தில்வாலா ஆலயத்தில் அதைப் பாருங்கள். உலகில் எவ்வாறு அமைதி ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கான மாதிரி அங்கு உள்ளது. அதைக் கேட்டு அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள். ஜெயின்கள்கூட இதனைக் கேட்பதில் சந்தோஷப்படுவார்கள். எங்கள் தந்தையான, பிரஜாபிதா பிரம்மாவே ஆதிதேவர் என நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள், இருப்பினும், அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் கூறுகிறார்கள்: பிரம்மகுமாரிகள் கூறுவனவற்றை எங்களால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அபுவை மிக உயர்வாகப் புகழ்ந்து, அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அபுவே அனைத்து யாத்திரைத் தலங்களிலும் அதி மகத்தானது. நீங்கள் பம்பாயிலுள்ள மக்களுக்கும் விளங்கப்படுத்த முடியும்: அபு மலையே அனைத்து யாத்திரைத் தலங்களிலும் மிகப் பெரியது. ஏனெனில் பரமாத்மா பரமதந்;தை, அபுவிற்கு வந்து, சுவர்க்கத்தை ஸ்தாபித்தார். சுவர்க்கப் படைப்பின் மாதிரியும், ஆதிதேவரினது மாதிரியும் அபுவில் உள்ளன. மக்கள் எவரும் இதனைப் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுது நாங்கள் இதனை அறிந்துள்ளோம். ஆனால் உங்களுக்கு இது தெரியாது, இதனாலேயே நாங்கள் இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றோம். அனைத்துக்கும் முதலில் அவர்களைக் கேளுங்கள்: உலகில் எவ்வாறான அமைதியை நீங்கள் விரும்புகிறீர்கள்? நீங்கள் எப்பொழுதாவது அதனைப் பார்த்திருக்கிறீர்களா? இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தில் உலகில் அமைதி நிலவியது. அங்கு ஒரேயொரு ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே இருந்தது. அவர்களின் வம்சத்தின் இராச்சியம் அங்கு இருந்தது. வாருங்கள், நாங்கள் உங்களுக்கு அவர்களின் இராச்சியத்தின் மாதிரியை அபுவில் காட்டுவோம். இது பழைய, தூய்மையற்ற உலகம். இதைப் புதிய உலகம் என்று அழைக்க முடியாது. புதிய உலகின் மாதிரி இங்கேயே உள்ளது. இப்பொழுது புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. உங்களுக்கு இது தெரியும், அதனாலேயே நீங்கள் அவர்களுக்குக் கூறுகிறீர்கள். அனைவருக்கும் இது தெரியாது, அவர்களால் பிறர் புரிந்துகொள்ளும் வகையில் பிறருக்குக் கூறவும் முடியாது. இது மிகவும் இலகுவானதொன்றாகும். சுவர்க்க இராச்சியம் மேலே உள்ளது, ஆதாம் என்று அழைக்கப்படுகின்ற, ஆதிதேவர் கீழே அமர்ந்திருக்கிறார். அவரே முப்பாட்டனார். நீங்கள் அவர்களுக்கு இந்தப் புகழைக் கூறும்பொழுது, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். இது மிகச்சரியானது. அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் கிருஷ்ணரைப் புகழ்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது. கிருஷ்ணர் உலக அதிபதியாக, வைகுந்தத்தின் சக்கரவர்த்தியாக இருந்தார். அதன் மாதிரியொன்றைப் பார்ப்பதற்கு நீங்கள் விரும்பினால், அபுவிற்;கு வாருங்கள். நாங்கள் உங்களுக்கு வைகுந்தத்தின் மாதிரியொன்றைக் காட்டுவோம். நீங்கள் அதி மங்களகரமான சங்கம யுகத்தில் உங்களை உலக அதிபதிகள் ஆக்கிய, இராஜயோகத்தைக் கற்றீர்கள் என்பதன் மாதிரியையும் காட்டுங்கள். சங்கம யுகத்தின் தபஸ்யாவையும் காட்டுங்கள். நடைமுறையில் இடம்பெற்றவற்றின் ஞாபகார்த்தங்களையும் காட்டுங்கள். இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தை ஸ்தாபித்த சிவபாபாவின் படமும் உள்ளது, அம்பாள் ஆலயமும் உள்ளது. அம்பாளுக்கு 10 அல்லது 20 கரங்கள் இருப்பதில்லை. அவருக்கு இரண்டு கரங்கள் மாத்திரமே இருக்க முடியும். வாருங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டுவோம். அபுவிலுள்ள வைகுந்தத்தையும் காட்டுங்கள். அபுவிலேயே தந்தை வந்து உலகில் சுவர்க்கத்தை உருவாக்கி, சற்கதியை அருளினார். அபுவே அனைத்திலும் அதிமகத்துவமான, யாத்திரைத் தலம். ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைத்துச் சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சற்கதியை அருள்கிறார். வாருங்கள், அபுவிலுள்ள அவரின் ஞாபகார்த்தத்தை நாங்கள் உங்களுக்குக் காட்டுவோம். நீங்கள் அபுவைப் பெருமளவு புகழலாம். நாங்கள் உங்களுக்கு அனைத்து ஞாபகார்த்தங்களையும் காட்டுவோம். புராதன பாரதத்தின் இராஜயோகத்தை யார் கற்பித்தார்கள் என்பதையும், அது எவ்வாறானது என்பதையும் கிறிஸ்தவர்களும் அறிய விரும்புகிறார்கள். அவர்களிடம் கூறுங்கள்: அபுவிற்கு வாருங்கள். நாங்கள் அதனை உங்களுக்குக் காட்டுவோம். வைகுந்தத்தின் மாதிரியும் கூரையில் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொன்றை உங்களால் உருவாக்க முடியாது. ஆகவே நீங்கள் இதனை மிகத்தெளிவாகக் காட்ட வேண்டும். உல்லாசப் பயணிகளும் சுற்றித் திரிகிறார்கள். அவர்களும் வந்து புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் அபுவின் பெயர் பிரபல்யமடைந்தால், பலர் வருவார்கள். அபு மிகவும் பிரபல்யமடையும். உலகில் எவ்வாறு அமைதியை உருவாக்க முடியும் என எவராவது உங்களைக் கேட்டால், அல்லது மாநாடு போன்றவற்றிற்கு உங்களை அழைத்தால், நீங்கள் அவர்களைக் கேட்க வேண்டும்: உலகில் எப்பொழுது அமைதி நிலவியதென்று உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள், உலகில் எவ்வாறு அமைதி நிலவியது என்று நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவோம். நாங்கள் உங்களுக்கு மாதிரிகள் போன்றவற்றையும் காட்டுவோம். அவ்வாறான மாதிரிகள் வேறு எங்கும் இருக்க மாட்டாது. அபுவே அனைத்திலும் மகத்துவமானதும், அதியுயர்ந்ததுமான யாத்திரைத் தலம் ஆகும். தந்தை இங்கு வந்து, உலகில் அமைதியை ஏற்படுத்தி, அனைவருக்கும் சற்கதியை அருளினார். வேறு எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. உங்கள் மத்தியிலும் இது வரிசைக்கிரமமாகவே உள்ளது. பெரிய மகாராத்திகள் அருங்காட்சியகங்கள் போன்றவற்றைக் கவனித்து வந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தெளிவாக விளங்கப்படுத்துகிறார்களா, இல்லையா என்பதை பாபா அறிந்துகொள்கிறார். பாபா அனைத்தையும் புரிந்துகொள்கிறார். ஒவ்வொருவரும், அவர்கள் எங்கு இருந்தாலும், யார், என்ன முயற்சி செய்கிறார்கள் என்பதையும், ஒவ்வொருவரும் என்ன அந்தஸ்தைப் பெறுவார்கள் என்பதையும்; அவர் அறிவார். இந் நேரத்தில் எவராவது மரணித்தால், அவரால் ஒருபொழுதும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாதிருக்கும். நினைவு யாத்திரைக்குத் தேவையான முயற்சியை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் தந்தை உங்களுக்குப் புதிய விடயங்களை விளங்கப்படுத்துகிறார்: இவ்வாறு அவர்களுக்கு விளங்கப்படுத்தி, அவர்களை இங்கு அழைத்து வாருங்கள். இங்கு ஞாபகார்த்தம் நிரந்தரமாக இருக்கின்றது. தந்தை கூறுகிறார்: நான் இங்கு இருக்கிறேன், ஆதிதேவர் இங்கு இருக்கிறார், வைகுந்தமும் இங்கு உள்ளது. அப்பொழுது அபுவிற்குப் பெருமளவு புகழ் ஏற்படும். அபு என்னவாக ஆகுமென்று உங்களால் கூற முடியாது! உதாரணத்திற்கு, குருஷேத்திரத்தை மீண்டும் மிகச்சிறந்ததாக ஆக்குவதற்கு, அவர்கள் தொடர்ந்தும் மில்லியன்கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள். பலர் அங்கு கூடுகிறார்கள். அங்கு அதிகளவு துர்நாற்றமும், குப்பைகளும் உள்ளன. கேட்கவே வேண்டாம்! அங்கு அதிகளவு மக்கள்கூட்டம் உள்ளது. பக்தர்கள் கூட்டத்தைக் கொண்ட பஸ் (டிரள) ஒன்று ஆற்றில் மூழ்கியதாகச் செய்தியும் வந்தது. அவை அனைத்தும் துன்பமாகும், தொடர்ந்தும் அகால மரணம் உள்ளது. அங்கு அவ்வாறு எதுவும் இருக்காது. உங்களால் இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்த முடியும். அவர்களுடன் பேசுபவர் மிகவும் விவேகமானவராக இருக்க வேண்டும். தந்தை உங்கள் மீது ஞானத்தை இறைத்து, அதனை உங்கள் புத்தியில் பதியச் செய்கிறார். உலகம் இவ் விடயங்களைப் புரிந்துகொள்வதில்லை. தாங்கள் புதிய உலகிற்கு ஒரு சுற்றுலா செல்வதாக அவர்கள் நினைக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: இப்பழைய உலகம் இப்பொழுது முடிவடையவுள்ளது. இன்னும் 40,000 ஆண்டுகள் எஞ்சியுள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள். முழுச் சக்கரமும் 5000 வருடங்களை உடையது என அவர்களுக்குக் கூறுங்கள். பழைய உலகின் மரணம் முன்னால் உள்ளது. இது காரிருள் என்று அழைக்கப்படுகிறது. மக்கள் கும்பகர்ண உறக்கத்தில் உறங்குகிறார்கள். கும்பகர்ணன் அரைக் கல்பத்திற்கு உறங்கிக்கொண்டும், அரைக் கல்பத்திற்கு விழித்துக் கொண்டும் இருக்கின்றான். நீங்களும் கும்பகர்ணர்களாக இருந்தீர்கள். இந்நாடகம் மிகவும் அற்புதமானது. அனைவராலும் இவ் விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. சிலர் தங்கள் பாவனாவால் (டிhயஎயெ) வருகிறார்கள். ஏனைய அனைவரும் அங்கு செல்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, அவர்களும் செல்கிறார்கள். அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது: நாங்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கும் சிவபாபாவிடம் செல்கிறோம். அந்த எல்லையற்ற தந்தையை நினைவுசெய்வதனால், நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அவ்வளவுதான்! ஆகவே அவர்களும் கூறுகிறார்கள்: சிவபாபா, நாங்கள் உங்கள் குழந்தைகள், எனவே நாங்கள் நிச்சயமாக உங்களிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவோம். அவர்களுடைய படகுகள் பின்னர் அக்கரைக்குச் செல்கின்றன. அவர்களின் நம்பிக்கைக்குப் பிரதிபலனாக, அவர்கள் எவ்வளவைப் பெறுகின்றார்கள் என்று பாருங்கள்! பக்தி மார்க்கத்தில் தற்காலிகச் சந்தோஷமே உள்ளது. இங்கு நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அது அவர்களின் நம்பிக்கைக்குப் பிரதிபலனான, தற்காலிகச் சந்தோஷம். இங்கு நீங்கள் உங்கள் நம்பிக்கைக்குப் பிரதிபலனை 21 பிறவிகளுக்குப் பெற்றுள்ளீர்கள். எவ்வாறாயினும், காட்சிகள் போன்றவற்றில் எதுவுமில்லை. தங்களுக்கு ஒரு காட்சி கிடைக்க வேண்டும் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆகவே, அவர்கள் எதனையும் புரிந்துகொள்ளவில்லை என்று பாபா புரிந்துகொள்கிறார். உங்களுக்கு ஒரு காட்சி கிடைக்கவேண்டும் என நீங்கள் விரும்பினால், சென்று தீவிர பக்தி செய்யுங்கள். அதிலிருந்து நீங்கள் எதனையும் பெற மாட்டீர்கள். ஒருவேளை உங்களுடைய அடுத்த பிறப்பில் நீங்கள் நன்றாக இருக்கக்கூடும். ஒரு சிறந்த பக்தர் ஒரு சிறந்த பிறவியைப் பெறுவார். இது தனித்துவமானது. இப் பழைய உலகம் மாறுகின்றது. தந்தையே உலகை மாற்றுபவர். ஞாபகார்த்தம் இங்கு உள்ளது. ஆலயம் மிகவும் பழையது. ஏதாவது உடைந்தால், அது திருத்தப்படுகிறது. இருப்பினும், உண்மையான அழகு இழக்கப்படுகிறது. அவ் விடயங்கள் அனைத்தும் அழியக்கூடியவை. ஆகவே தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, உங்கள் சொந்த நன்மைக்காக, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது கற்பதற்கான ஒரு விடயமாகும். எவ்வாறாயினும் மதுராவில் அவர்கள் உருவாக்கியுள்ள மதுவனம், குன்ஜி கலி போன்றவற்றின் மாதிரிகள் உண்மையில் ஏதுவுமேயில்லை; கோப கோபியரின் விளையாட்டுக்களும் எதுவுமில்லை. இவ் விடயங்களை விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் பெருமளவு முயற்சி செய்யவேண்டும். அமர்ந்திருந்து, ஒவ்வொரு கருத்தையும் மிகவும் நன்றாக விளங்கப்படுத்துங்கள். மாநாடுகளில், யோகம் செய்பவர்களும் எவராவது உங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். வாளுக்குச் சக்தி இல்லையென்றால், அம்பு இலக்கைத் தாக்க மாட்டாது. தந்தை கூறுகிறார்: அதற்கு இன்னமும் காலம் பிடிக்கும். பரமாத்மா சர்வவியாபி அல்ல என்று இப்பொழுது அவர்கள் நம்பியிருந்தால், இங்கு அதிகக் கூட்டம் வந்திருக்கும். எவ்வாறாயினும் இப்பொழுது இது அதற்கான காலமல்ல. தந்தையே இராஜயோகத்தைக் கற்பித்தார், இந்நேரத்தில் அவர் அதனைக் கற்பிக்கிறார் என்ற ஒரு பிரதான விடயத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்; அதற்குப் பதிலாக, அவர்கள் தற்சமயம் அவலட்சணமாக உள்ளவரின் பெயரைப் புகுத்தியிருக்கிறார்கள். இது அத்தகைய பெரிய தவறாகும். இதனாலேயே, உங்கள் படகு மூழ்கியது. தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: இக் கல்வி உங்கள் வருமானத்திற்கான மூலாதாரம் ஆகும். எவ்வாறு மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவது என உங்களுக்குக் கற்பிப்பதற்காகத் தந்தையே வருகிறார். இதனால் நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகுவது அவசியம், இதற்காக நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். அது வரிசைக்கிரமமானது. அனைத்து நிலையங்களும் வரிசைக்கிரமமானவை. முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகிறது. இது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போலல்ல! சத்திய யுகம், சுவர்க்கம் என்று அழைக்கப்படுகிறது என அவர்களுக்குக் கூறுங்கள். எவ்வாறாயினும், அங்கு எவ்வாறு இராச்சியம் தொடர்கிறதென நீங்கள் அறிய விரும்பினால், தேவர்களின் குழுவொன்றைப் பார்க்க விரும்பினால், அப்பொழுது அபுவிற்கு வாருங்கள். வேறு எங்கும் இராச்சியத்தைக் கூரையில் காட்டியிருக்கவில்லை. அஜ்மீரில் சுவர்க்கத்தின் மாதிரி ஒன்று இருந்தாலும், அது வேறொன்றாகும். இங்கேயே ஆதிதேவரும் இங்கு இருக்கிறார். சுவர்க்கத்தை யார் ஸ்தாபித்தார், எவ்வாறு அது ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கான மிகச்சரியான ஞாபகார்த்தம் இதுவாகும். “உயிருள்ள தில்வாலா ஆலயம்” என்ற பெயரைத் தற்சமயம் நாங்கள் எழுத முடியாது. மக்கள் இதனைத் தாங்களாகப் புரிந்துகொள்ளும்பொழுது, அவர்கள் கூறுவார்கள்: நீங்கள் இதனை எழுத முடியும். எவ்வாறாயினும் நாங்கள் அதனை இப்பொழுது செய்ய முடியாது. இப்பொழுது, சிறிய விடயங்களுக்குக் கூட அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்! பெருமளவு கோபம் உடைய பலரும் இருக்கிறார்கள்; அவர்களுக்குச் சரீர உணர்வு உள்ளது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர, வேறு எவராலும் ஆத்ம உணர்வுடையவர்களாக இருக்க முடியாது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய பாக்கியத்தில் எது உள்ளதோ, அதனைப் பெறுவீர்கள் என்று எண்ணாதீர்கள். ஒரு முயற்சியாளர் அவ்வாறு கூறமாட்டார்; அவர் தொடர்ந்தும் முயற்சி செய்வார். பின்னர் அவர் சித்தியடையாது விட்டால், அவர் கூறுவார்: எனது பாக்கியம் அவ்வளவே! அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். உங்கள் பாக்கியத்தில் உள்ளதைப் பெறுவீர்கள் என என்றுமே எண்ணாதீர்கள். விவேகமானவர்கள் ஆகுங்கள்.2. ஞரனத்தைச் செவிமடுத்து, அதன் சொரூபம் ஆகுங்கள். நினைவுச் சக்தியைக் கிரகித்து, பின்னர் சேவை செய்யுங்கள். அனைத்திலும் அதி மகத்துவம் வாய்ந்த யாத்திரைத் தலமான, அபுவின் புகழை அனைவருக்கும் கூறுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையுடன் வசிப்பதனாலும், அவரைப் போன்று ஆகுவதனாலும் எந்தக் கவர்ச்சியின் ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்படுவீர்களாக.தந்தையின் நினைவு இருக்குமிடத்தில், அதாவது, அவரது சகவாசம் இருக்குமிடத்தில் சரீர உணர்வு எழ முடியாது. தந்தையுடன் தங்கியிருப்பவர்கள் அல்லது தந்தையுடன் நெருக்கமாக இருப்பவர்கள் உலகின் விகார அதிர்வலைகள் எதனிலிருந்தும், அதாவது, எந்தக் கவர்ச்சியின் ஆதிக்கத்திலிருந்தும் தொலைவில் இருக்கின்றனர். அவருடன் வசிப்பவர்கள் அவருடன் இருப்பதனால் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுகின்றனர். தந்தை அதிமேலானவராக இருப்பதைப் போன்று, அதேவழியில், குழந்தைகளின் ஸ்திதியும் அதிமேலானது ஆகுகின்றது, எந்தச் சூழ்நிலையிலும் அவர்களைக் கீழிருக்கும் எதனாலும் ஆதிக்கம் செலுத்த முடியாது.
சுலோகம்:
உங்கள் மனமும், புத்தியும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்பொழுது, சரீரமற்றவர் ஆகுவது இலகுவானதாகும்.