09.04.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சதோபிரதான் ஆகுவதற்கு, தந்தையை அன்புடன் நினைவு செய்யுங்கள். தெய்வீகப் பிரபுவான சிவபாபா உங்களைத் தெய்வீக உலகின் அதிபதிகள் ஆக்குவதற்காக வந்துள்ளார்.

கேள்வி:
எந்த ஒரு விடயத்தைக் கிரகிப்பதனால், குழந்தைகளாகிய நீங்கள் புகழுக்குத் தகுதியானவர் ஆகுகின்றீர்கள்?

8பதில்:
நீங்கள் மிக மிகப் பணிவானவர் ஆகும்பொழுதாகும். எதனையிட்டும் நீங்கள் அகங்காரம் கொண்டிருக்கக்கூடாது. மிகவும் இனிமையானவர் ஆகுங்கள். நீங்கள் அகங்காரம் கொண்டால் பகை உருவாகுகின்றது. உங்கள் தூய்மையின் அடிப்படையிலேயே நீங்கள் உயர்ந்தவராகவும், தாழ்ந்தவராகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் தூய்மையானவராக இருக்கும்பொழுது, உங்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகின்றது, நீங்கள் தூய்மையற்றவர் ஆகும்பொழுது, நீங்கள் அனைவருக்கும் தலைவணங்க வேண்டும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தான் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதைத் தந்தை புரிந்துகொள்கிறார். பக்தி மார்க்கத்தில் அவர்கள் வெவ்வேறு பெயர்களில் ஏராளமான படங்களை உருவாக்கியுள்ளார்கள் என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நேபாளத்தில், அவர்கள் தெய்வீகப் பிரபுவின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவருக்கு ஒரு பெரிய ஆலயத்தை அவர்கள் கட்டியுள்ளார்கள். ஆனால் உண்மையில் அங்கு எதுவுமே இல்லை. அங்கு நான்கு கதவுகளும் நான்கு விக்கிரகங்களுமே உள்ளன. நான்காவது அறையில் அவர்கள் கிருஷ்ணரை வைத்துள்ளார்கள். ஒருவேளை அதையும் அவர்கள் இப்பொழுது மாற்றியிருக்கக்கூடும். நிச்சயமாக சிவபாபாவே தெய்வீகப் பிரபு என்று அழைக்கப்பட வேண்டியவர். அவர் மாத்திரமே மனிதர்களைத் தெய்வீகப் புத்தி உடையவர்களாக ஆக்குகின்றார். எனவே, முதலில் கடவுளே அதிமேலானவர் என்றும், பின்னர் முழு உலகமும் உள்ளது என்பதையும் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். சூட்சும உலகில் எந்த ஓர் உலகமும் இல்லை. அதன்பின்னர் இலக்ஷ்மியும் நாராயணனும் அல்லது விஷ்ணுவும் உள்ளனர். உண்மையில், விஷ்ணு ஆலயமும் தவறானதாகும். நான்கு கரங்களைக் கொண்ட, விஷ்ணு என்று எந்த மனிதரும் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அது இலக்ஷ்மி நாராயணனின் உருவமாகும். அவர்கள் இணைந்த வடிவமான விஷ்ணுவாகக் காட்டப்பட்டுள்ளார்கள். நாராயணனில் இருந்து இலக்ஷ்மி வேறுபட்டவர். அவர்கள் சூட்சும உலகில், விஷ்ணுவை நான்கு கரங்களுடன் காட்டியுள்ளார்கள், அதாவது, இலக்ஷ்மி நாராயணன் இருவரையும் ஒருவராக்கி, நான்கு கரங்களுடன் ஒரு விக்கிரகத்தை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் அவ்வாறாக எவரும் இல்லை. ஆலயங்களில் அவர்கள் காட்டுகின்ற நான்கு கரங்களைக் கொண்ட விக்கிரகம் சூட்சும உலகத்திற்கு உரியது. நான்கு கரங்களையுடைய விக்கிரகத்தை அவர்கள் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றுடன் காட்டியுள்;ளார்கள். அவ்வாறு எதுவுமே இல்லை. குழந்தைகளாகிய உங்களிடம் சக்கரம் உள்ளது. நேபாளத்தில் அவர்கள் விஷ்ணுவின் பெரியதொரு உருவத்தைப் பாற்கடலில் காட்டியுள்ளார்கள். வழிபாட்டு நாட்களில் அதனுள் சிறிதளவு பாலை அவர்கள் ஊற்றுகிறார்கள். தந்தை உங்களுக்கு அனைத்தையும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார். இவ்வாறாக விஷ்ணுவைப் பற்றிய விளக்கத்தை வேறெவராலும் விளங்கப்படுத்த முடியாது. அவரை அவர்களுக்குத் தெரியாது. கடவுளே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சிவபாபாவே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். அவர் ஒருவரேயாயினும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். இப்பொழுது நீங்கள் பல பெயர்களைப் பயன்படுத்த மாட்டீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் அதிகளவு தடுமாறித் திரிகின்றார்கள். நீங்களும் அதிகளவில் தடுமாறித் திரிந்துள்ளீர்கள். இப்பொழுது ஆலயங்களை நீங்கள் பார்த்தால், அசரிரீயான பரமாத்மாவான பரமதந்தையே அதிமேலான பரமாத்மாவான கடவுள் என்று அவர்களுக்கு விளங்கப்படுத்துவீர்கள். ஆத்மா சரீரத்தின் மூலம், ‘ஓ பரமதந்தையே!’ என்று கூறுகின்றார். அவரை ‘ஞானக்கடல் என்றும் சந்தோஷக் கடல்’ என்றும் புகழ்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில், அந்த ஒரேயொருவருக்குப் பல உருவங்களை உருவாக்குகிறார்கள். ஞான மார்க்கத்தில், ஞானக் கடலான ஒரேயொருவரே உள்ளார். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்;பவரும் ஆவார். உங்கள் புத்தியில் முழுச் சக்கரமும் உள்ளது. பரமாத்மாவே அதிமேலானவர். ‘என்னை நினைவுசெய்து, சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்பது நினைவுகூரப்படுகிறது. அதாவது, ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்தால், சரீர வலி, வேதனை அனைத்துமே அகற்றப்படும். பின்னர் நீங்கள் ஜீவன்முக்தி என்ற அந்தஸ்தை அடைவீர்கள். இதுவே ஜீவன்முக்தி என்று அறியப்படுகின்றது. நீங்கள் இந்தச் சந்தோஷம் என்ற ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். இதனை நீங்கள் தனித்துப் பெறுவதில்லை; நிச்சயமாக ஓர் இராச்சியமே இருக்கும். தந்தை ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார் என்பதே அதன் அர்த்தமாகும். சத்தியயுகத்தில், அரசர், அரசி, மற்றும் பிரஜைகள் இருப்பார்கள்; அனைவருமே இருப்பார்கள். நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெற்றுக் கொள்வதால் நீங்கள் சென்று சிறந்த குலத்தில் பிறப்பீர்கள். நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். ஸ்தாபனை இடம்பெறும்பொழுது, அசுத்தமான ஆத்மாக்கள் தண்டனை பெற்று வீடு திரும்புவார்கள். அவர்கள் தத்தமது பிரிவிற்குச் சென்று அங்கே வசிப்பார்கள். அத்தகைய பல்வேறு ஆத்மாக்கள் அனைவரும் தொடர்ந்தும் வாருவார்கள், பின்னர் அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும். அவர்கள் எவ்வாறு மேலிருந்து வருகின்றார்கள் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். ஒரேநேரத்தில் இரு இலைகளுக்குப் பதிலாக, ஒரேநேரத்தில் பத்து இலைகள் உருவாக வேண்டும் என்றில்லை; இல்லை. நியதிக்கு ஏற்ப, இயல்பாகவே இலைகள் உருவாகுகின்றன. இது மிகப் பெரிய விருட்சம். ஒரேநாளில் நூறாயிரக்கணக்கில் வளர்ச்சி ஏற்படுவதாக அவர்கள் காட்டுகின்றார்கள். முதலில் தூய்மையாக்குபவரான கடவுளே அதிமேலானவர் என்பதை விளங்கப்படுத்துங்கள். அவரே துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தையும் அருள்பவர். அவர் வந்து சந்தோஷமற்றிருக்கின்ற நடிகர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். இராவணனே உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பவன். தந்தை வந்திருப்பதால் தாம் வந்து இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவர்கள் அறியாதுள்ளார்கள். பலரும் இதனைப் புரிந்துகொள்கிறார்கள், எனினும் பின்னர் அவர்கள் சென்று விடுகின்றார்கள். அதுபோன்றே நீங்கள் நீராடும்பொழுது, உங்கள் கால் வழுக்கினால், நீரில் விழுந்து விடுகின்றீர்கள். பாபா அனுபவசாலியாவார். இது நச்சுக்கடல். பாபா உங்களைப் பாற்கடலுக்கு அழைத்துச் செல்கின்றார். ஆனால் முதலையான மாயை நல்ல மகாராத்திகளைக் கூட விழுங்கி விடுகின்றாள். நீங்கள் தந்தையின் மடியில் இருக்கும்பொழுது, மரணித்து, இராவணனின் மடிக்குச் செல்கின்றீர்கள், அதாவது மரணித்துவிடுகின்றீர்கள். அதிமேலான தந்தையே படைப்பைப் படைக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் சூட்சும உலகம் சென்று, காட்சிகளைக் காண்கின்றபொழுதிலும், சூட்சும லோகத்தின் வரலாறோ அல்லது புவியியலோ கிடையாது; அங்கே நீங்கள் நான்கு கரங்கள் கொண்ட வடிவத்தைக் காண்கின்றீர்கள். அந்த வடிவம் இருப்பதால் அது உங்கள் புத்தியில் உள்ளது. ஆகையால் அதன் காட்சியை நீங்கள் நிச்சயமாகக் கண்டபொழுதிலும், உண்மையில் அவ்வாறான எதுவும் இல்லை. அவை பக்தி மார்க்கத்தின் உருவங்கள். இப்பொழுதும், பக்தி மார்க்கம் இன்னமும் தொடர்கிறது. பக்தி மார்க்கம் முடிவடையும்பொழுது, அந்த உருவங்கள் இருக்க மாட்டாது. அவ் விடயங்கள் அனைத்தும் சுவர்க்கத்தில் மறக்கப்பட்டிருக்கும். நான்கு கரங்களையுடைய அந்த வடிவத்தின் இரு வடிவங்களே இலக்ஷ்மியும் நாராயணனும் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. இலக்ஷ்மியையும் நாராயணனையும் வழிபடுதல், நான்கு கரங்களை உடைய உருவத்தை வழிபடுதலாகும். இலக்ஷ்மி நாராயணனின் ஆலயமும் நான்கு கரங்களையுடைய உருவத்தின் ஆலயமாகும். இரண்டும் ஒன்றே. இவ்விருவரைப் பற்றிய ஞானம் வேறு எவருக்குமே இல்லை. அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதனை விஷ்ணுவின் இராச்சியம் என்று அழைப்பதில்லை. அவர் பராமரித்தலை மேற்கொள்கின்றார். அவர் முழு உலகிற்கும் அதிபதி ஆகையால், அவர் முழு உலகத்தையும் பராமரிக்கின்றார். கடவுள் சிவன் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதி தந்தையை நினைவுசெய்தால், யோகத் தீ மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதனை நீங்கள் விபரமாக விளங்கப்படுத்த வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: இதுவே கீதையாகும். ஆனால்;, அவர்கள் கீதையில் கிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். அது தவறாகும். அவர்கள் அனைவரையும் அவதூறு செய்ததாலேயே பாரதம் தமோபிரதான் ஆகியுள்ளது. இப்பொழுது இது கலியுக உலகின் இறுதி. இது தமோபிரதான் கலியுகம் என்று அழைக்கப்படுகின்றது. சதோபிரதானாக இருந்தவர்களே 84 பிறவிகளை எடுத்துள்ளார்கள். நீங்கள் நிச்சயமாகப் பிறப்பு, மறுபிறப்புக்குள் செல்ல வேண்டும். நீங்கள் முழுமையாக உங்கள் 84 பிறவிகளையும் எடுத்ததும் தந்தை வரவேண்டும். ஒருவர் மாத்திரம் முதல் இலக்கத்தை அடைதல் என்பதல்ல் அவரது முழு இராச்சியமே இருந்தது. அது மீண்டும் நிச்சயமாக இருக்க வேண்டும். தந்தை அனைவருக்கும் கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மா என்று கருதித் தந்தையை நினைவுசெய்தால் யோக அக்கினியில் உங்கள் பாவங்கள் அழியும். காமச் சிதையில் அமர்ந்ததால் அனைவரும் அவலட்சணம் ஆகியுள்ளார்கள். இப்பொழுது, நீங்கள் எவ்வாறு அவலட்சணமானவரிலிருந்து அழகானவர் ஆகமுடியும்? இப்பொழுது தந்தை மாத்திரமே இதனை உங்களுக்குக் கற்பிக்கின்றார். கிருஷ்ணரின் ஆத்மா நிச்சயமாகப் பல்;வேறு பெயர்களையும் வடிவங்களையும் எடுத்த பின்னர் வருகிறார். இலக்ஷ்மியும் நாராயணனுமாக இருந்தவர்கள் 84 பிறவிகளின் பின்னர் அவ்வாறு ஆகுவார்கள். எனவே தந்தை வந்து, இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியின்பொழுது இவரினுள் பிரவேசிக்கின்றார். அவர் பின்னர் சதோபிரதான் உலகிற்கு அதிபதி ஆகுகின்றார். நீங்கள் தெய்வீகப் பிரபுவையும், சிவனையும் வழிபடுகின்றீர்கள். சிவனே நிச்சயமாக அவர்களைத் தெய்வீகப் பிரபுக்கள் ஆக்கியுள்ளார். ஆசிரியரும் இருக்கவே வேண்டும். அவர் ஞானக் கடல். நீங்கள் இப்பொழுது சதோபிரதான் தெய்வீகப் பிரபுக்களாக ஆகவேண்டும். ஆகையால் தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்யுங்கள். அவரே அனைவரதும் துன்பத்தையும் அகற்றுபவர். தந்தையே அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்கின்றார். இது முட்காடாகும். தந்தை அதனைப் பூந்தோட்டம் ஆக்குவதற்கு வந்துள்ளார். தந்தை தனது சொந்த அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார்: தனது சொந்தப் பிறவிகளைப் பற்றியே அறியாதவரான இவரின் இந்தச் சாதாரண, பழைய சரீரத்தினுள் நான் பிரவேசிக்கின்றேன். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். எனவே, இது இறை பல்கலைக்கழகமாகும். உங்கள் இலக்கும் இலட்சியமும் அரசர்களும் அரசிகளும் ஆகுவதாகும் என்பதால், நிச்சயமாகப் பிரஜைகளும் உருவாக்கப்படுவார்கள். மக்கள் யோகத்தைப் பற்றி அதிகளவு பேசுகின்றார்கள். துறவறப் பாதையைச் சேர்ந்தவர்கள் சகல வகையான ஹத்தயோகங்களையும் மேற்கொள்கின்றார்கள்; அவர்களால் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. தந்தை ஒரேவகையான யோகத்தையே கற்பிக்கின்றார். ‘உங்களை ஆத்மா என்று கருதி, உங்கள் தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள்’ என்று அவர் கூறுகின்றார். உங்கள் 84 பிறவிகள் முடிவடைந்துள்ளன, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள், ஏனைய அனைவரையும் ஒருபுறம் வையுங்கள்;. பக்தி மார்க்கத்தில், நீங்கள் பாடினீர்கள்: நீங்கள் வரும்பொழுது, நாங்கள் எங்களை உங்களுடனேயே இணைத்துக் கொள்வோம். ஆகையால் நீங்கள் நிச்சயமாக அவரிடமிருந்து மாத்திரமே உங்கள் ஆஸ்தியைப் பெற்;றீர்கள். அரைக் கல்பத்திற்குச் சுவர்க்கமும், பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பமாகும்பொழுது, நரகமும் உள்ளது. இவ்வாறே நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். உங்களை ஒரு சரீரம் என்று கருதாதீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், நீங்கள் நடிக்கின்ற பாகம் முழுவதும் ஆத்மாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது, சிவபாபாவை நினைவுசெய்தால் உங்கள் படகு அக்கரையை அடைய முடியும். சந்நியாசிகள் தூய்மையாகும்பொழுது, அதிகளவு மரியாதையைப் பெறுகின்றனர்; அனைவரும் அவர்களுக்குத் தலை வணங்குகின்றார்கள். உங்கள் தூய்மையின் அடிப்படையிலேயே நீங்கள் தாழ்ந்தவராகவும், உயர்ந்தவராகவும் ஆகுகின்றீர்கள். தேவர்களே அனைவரிலும் அதியுயர்ந்தவர்கள். சந்நியாசிகள் ஒரு பிறவியில் தூய்மையாகினாலும், பின்னர் தங்கள்; அடுத்த பிறவியில் விகாரத்தின் மூலமே பிறக்கின்றார்கள். சத்தியயுகத்தில் தேவர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது கற்பதுடன், பிறருக்கும் கற்பிக்கின்றீர்கள். சிலர் கற்றாலும் பிறருக்குக் விளங்கப்படுத்த முடியாதுள்ளனர். ஏனெனில், அவர்கள் ஞானத்தைக் கிரகிப்பதில்லை. பாபா கூறுவார்: உங்கள் பாக்கியத்தில் அது இல்லாதிருந்தால் தந்தையால் என்ன செய்ய முடியும்? தந்தையால் அமர்ந்திருந்து அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் அருள முடியுமாயின், அனைவருமே ஒரு புலமைப்பரிசிலைப் பெறுவார்கள். பக்தி மார்க்கத்திலேயே அவர்கள் ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றார்கள். சந்நியாசிகளும் அதனையே செய்கின்றார்கள். அவர்கள் ஒரு சந்நியாசியிடம் சென்று “எனக்கொரு மகன் வேண்டும். தயவுசெய்து எனக்கு இந்த ஆசீர்வாதத்தை அருளுங்கள்” என்று கூறுகின்றார்கள். ‘நல்லது, உங்களுக்கு ஒரு மகன் பிறக்கட்டும!;’ ஒரு மகள் பிறந்தால், ‘அது விதி’ என்று கூறுவார்கள். ஒரு மகன் பிறந்தால், அவர்கள் அவரது புகழ் பாடி, அவரது காலடியில் விழுவார்;கள். எவ்வாறாயினும், ஒரு குழந்தை மரணித்தால், அவர்கள் அழுது புலம்ப ஆரம்பித்து, தமது குருவை அவமதிக்கின்றார்கள். அப்பொழுது குரு கூறுவார்;: அது விதியாகும். அவர்கள் கூறுவார்கள்: இதனை முன்னரே நீங்கள் ஏன் எங்களுக்குக் கூறவில்லை? மரணித்த ஒருவர் மீண்டும் உயிர் பெற்றால், அதுவும் விதி என்றே கூறப்படும். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆத்மா எங்கோ ஒளிந்திருப்பதால், வைத்தியர்கள் அவர் மரணித்து, பின்னர் மீண்டும் உயிர் பெற்றுள்ளார் என்று எண்ணுகின்றார்கள். மரணச் சிதையிலிருந்தும் கூட சிலர் எழுந்து விடுவதுண்டு. ஒரு சந்நியாசியில் ஒருவர் நம்பிக்கை கொண்டிருக்கும்பொழுது, அவர்கள் அனைவருமே அவரைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் பணிவாக இருக்க வேண்டும்; உங்களுக்குச் சற்றேனும் அகங்காரம் இருக்கக்கூடாது. இந்நாட்களில், நீங்கள் எவர் மீதாயினும் சற்றேனும் அகங்காரம் காட்டினால், பகை அதிகரிக்கின்றது. நீங்கள் மிகவும் இனிமையானவராகவே இருக்க வேண்டும். நேபாளத்திலும் ஒலி பரவும். இப்பொழுது இது குழந்தைகளாகிய உங்களைப் புகழ்வதற்கான காலம் அல்ல. இல்லாவிட்டால், அவர்களின் இடங்கள் அனைத்தும் வீழ்ச்சியடைந்து விடும். பிரபல்யமானவர்கள் விழித்தெழுந்து, இதனைப் பற்றிக் கூட்டங்களில் பேசினால், அவர்களைப் பின்பற்றி ஏனைய பலரும் வருவார்கள். ‘பிரம்மகுமார்கள், பிரம்மகுமாரிகளைத் தவிர வேறெவராலும் பாரதத்தின் புராதன இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது’ என்று உங்களைப் போற்றிப் பேசுகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது அத்தகைய எவருமோ இன்னமும் வெளிப்படவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் திறமைசாலிகளாகவும் அற்புதமானவர்களாகவும் இருக்க வேண்டும். எவ்வாறு சொற்பொழிவாற்ற வேண்டும் என்பதை நீங்கள் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சேவை செய்வதற்கான வழிகளைத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். பாபா பேசிய முரளியை ஒவ்வொரு கல்பத்திலும் அவர் ஒரேமாதிரி மிகச்சரியாகவே பேசியிருப்பார். அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ‘இது ஏன் இவ்வாறுள்ளது?’ என்ற கேள்வி எழமுடியாது. நாடகத்திற்கு ஏற்பவே எதனையும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். நான் உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றேன். மக்கள் பல கேள்விகளைக் கேட்பார்கள். அவர்களிடம் கூறுங்கள்: முதலில் “மன்மனபவ” ஆகுங்கள். தந்தையை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் அனைத்தையும் அறிவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சேவை செய்வதற்கான வழிமுறைகளைக் கற்று, மிகவும் திறமைசாலிகளாகவும், அற்புதமானவர்களாகவும் ஆகுங்கள். ஞானத்தைக் கிரகித்து, மற்றவர்களையும் அதைக் கிரகிக்கத் தூண்டுங்கள். கற்பதனால், உங்கள் சொந்தப் பாக்கியத்தை உருவாக்குங்கள்.

2. எதையிட்டும் சிறிதளவு அகங்காரத்தையும் காட்டாதீர்கள். மிக, மிக இனிமையானவராகவும், பணிவானவராகவும் ஆகுங்கள். முதலையாகிய, மாயையையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் நேரத்திற்கேற்ப ஒவ்வொரு பணியிலும் வெற்றியடைகின்ற, ஒரு கியானி (ஞானி), யோகி ஆத்மாவாக ஆவீர்களாக.

ஞானம் என்றால் புரிந்துகொள்வதாகும். ஒரு விவேகியானவர் தனது பணிகளைப் புரிந்துணர்வுடன் சரியான நேரத்தில் மேற்கொண்டு, அவற்றில் வெற்றியையும் அடைகின்றார். விவேகமான நபர் ஒருவரின் அறிகுறி ஒருபொழுதும் ஏமாற்றப்படுவதில்லை என்பதே ஆகும், ஒரு யோகியின் அறிகுறியானது சுத்தமான, தெளிவான புத்தியைக் கொண்டவராக இருப்பதாகும். சுத்தமான, தெளிவான புத்தியையுடையவர்கள் “இது எவ்வாறு நடைபெற்றது என்று எனக்குத் தெரியாது!” என்று ஒருபொழுதுமே கூற மாட்டார்கள். ஞானமுள்ள யோகி ஆத்மாக்களால் அத்தகைய வார்த்தைகளைக் கூற முடியாது. அவர்கள் ஒவ்வொரு செயலிலும் ஞானத்தையும் யோகத்தையும் பயன்படுத்துகின்றார்கள்.

சுலோகம்:
தங்களுடைய ஆதியும் அநாதியுமான சமஸ்காரங்களையும் சுபாவங்களையும் அறிந்திருப்பவர்கள் மாத்திரமே ஆட்ட ஆசைக்க முடியாதவர்களாக இருக்க இயலும்.