26.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் செவிசாய்ப்பது இப்பொழுது நடைபெறுகின்றது. தந்தை உங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, உங்களைச் சந்தோஷத்திற்குள் அழைத்துச் செல்கின்றார். இப்பொழுது இது உங்கள் அனைவரதும் ஓய்வு ஸ்திதியாகும். நீங்கள் வீடு திரும்ப வேண்டும்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் யோகியுக்தாக இருப்பதற்கும், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்கும் ஏன் மீண்டும் மீண்டும் கட்டளைகளைப் பெறுகின்றீர்கள்?

பதில்:
ஏனெனில், இறுதி விநாசத்தின் காட்சிகள் இப்பொழுது உங்கள் முன்னிலையில் வரவுள்ளன. மில்லியன் கணக்கானோர் மரணிப்பார்கள்; இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும். அக்காட்சிகள் அனைத்தையும் பார்க்கும் நேரத்தில் உங்கள் ஸ்திதி நிலையானதாக இருப்பதற்கும், வேடனுக்குக் கொண்டாட்டம் இரைக்குத் திண்டாட்டம் என்பதை அனுபவம் செய்வதற்கும் நீங்கள் யோகியுக்தாக இருக்கவேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்ற யோகிக் குழந்தைகள் மாத்திரமே களிப்புடன் இருப்பார்கள். தாங்கள் தங்களுடைய பழைய சரீரங்களை நீக்கி, தங்களின் இனிய வீட்டிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என்பது அவர்களது புத்தியில் நிலைத்திருக்கும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்தவாறு இதயபூர்வமாக உங்களுடன் உரையாடி, ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஏனெனில், பக்தி மார்க்கத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் அவரைப் பெருமளவு நினைவுசெய்;தீர்கள். அனைவரும் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகள். அன்பிற்கினியவரான சிவபாபாவின் ரூபம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் அமர்ந்து, அதனைப் பூஜிக்கின்றார்கள். அவரிடமிருந்து அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். அனைவரும் அவரைப் பூஜிக்கின்றார்கள். சங்கராச்சாரியாரும் அவரைப் பூஜித்தார். அனைவரும் சங்கராச்சாரியாரை மகான் என நினைக்கின்றனர். அவர் ஒரு சமய ஸ்தாபகராக இருந்தபோதிலும், அவரும் மறுபிறவி எடுத்துக் கீழிறங்க வேண்டும். அனைவரும் இப்பொழுது தங்களது இறுதிப் பிறவியை அடைந்து விட்டனர். பாபா கூறுகின்றார்: இது இப்பொழுது இளையவர், முதியவர் ஆகிய உங்கள் அனைவரதும் ஓய்வு ஸ்திதியாகும். நான் உங்கள் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். தூய்மையற்ற உலகிற்கு வருமாறு நீங்கள் என்னைக் கூவியழைக்கின்றீர்கள். அவர்கள் அவர்மீது (சிவபாபா) பெருமளவு மதிப்பு கொண்டிருக்கின்றார்கள். “தூய்மையற்ற உலகிற்கும், அந்நிய இராச்சியத்திற்கும் வாருங்கள்.” அவர்கள் நிச்சயமாகச் சந்தோஷமற்றவர்களாகவே இருப்பதாலேயே அவர்கள் அவரைக் கூவியழைக்கின்றார்கள். அவர் துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர் என்பது நினைவுகூரப்படுகின்றது. எனவே, அவர் நிச்சயமாக அழுக்கான பழைய உலகில் ஒரு பழைய சரீரத்தில் அதுவும் ஒரு தமோபிரதான் சரீரத்தில் வரவேண்டும்;. சதோபிரதான் உலகில் எவருமே என்னை நினைவுசெய்வதும் இல்லை. நாடகத்திற்கேற்ப, நான் அனைவரையும் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றேன். அனைத்திற்கும் நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். சத்தியயுகத்தில் நிச்சயமாக ஆதி சனாதன தேவிதேவதா தர்மமே இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் அவர்கள் தொடர்ந்தும் சமயநூல்களைக் கற்று, கீழிறங்குகின்றனர். புதைசேற்றினுள் வீழ்பவர்கள் சந்தோஷமற்றவர்களாக ஆகுகின்றனர். இது துன்ப உலகமாகும். அதுவோ சந்தோஷ பூமியாகும். ஏழை, அப்பாவித் தாய்மாருக்கு எதுவுமே தெரியாது என்பதனால், தந்தை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்தி, அதனை இலகுவானதாக ஆக்குகின்றார். தாங்கள் வீடு திரும்ப வேண்டுமா அல்லது தொடர்ந்தும் மறுபிறவி எடுக்க வேண்டுமா என்பதை எவருமே அறியமாட்டார்கள். இப்பொழுது அனைத்துச் சமயத்தைச் சார்ந்;தவர்களும் உள்ளனர். முதலில், சுவர்க்கம் இருந்தது. எனவே அங்கும் ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. முழுச் சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது. இவ்விடயங்கள் வேறு எவரது புத்தியிலும் இருக்க மாட்டாது. சக்கரத்தின் காலப்பகுதி நூறாயிரக்கணக்கான வருடங்கள் என அவர்கள் கூறுகின்றனர். அது காரிருள் எனப்படுகின்றது. ஞானம் பேரொளியாகும். இப்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் உங்களது புத்தியில் ஞானோதயத்தைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் எந்த ஆலயத்திற்குச்; சென்றாலும், சிவபாபாவிடம் செல்வதாகவே கூறுவீர்கள். நாங்கள் இந்த இலக்ஷ்மி, நாராயணன் ஆகுகின்றோம். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் இவ்வாறு நிகழ்வதில்லை. அவ்விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. நீங்கள் இப்பொழுது படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் அறிவீர்கள். ரிஷிகளும், முனிவர்களும் தங்களுக்குத் தெரியாது எனக் கூறுகிறார்கள். நீங்களும் முன்னர் இதனை அறிந்திருக்கவில்லை. இந்நேரத்தில், உலகம் முழுவதிலும் பக்தியே இடம்பெறுகின்றது. இது பழைய உலகம். பல மனிதர்கள் இருக்கின்றார்கள். புதிய உலகமாகிய சத்தியயுகத்தில் பிரிவினையற்ற, ஒரேயொரு தர்மமே இருந்தது. பின்னர், பிரிவுபட்ட சமயங்கள் இருந்தன. பல சமயங்களுக்;கிடையிலும் முரண்பாடு காணப்படுகின்றது; ஒவ்வொருவருக்கிடையிலும் முரண்பாடு காணப்படுகின்றது. நாடகத்திற்கேற்ப, அவர்களது கொள்கை (pழடiஉல) அவ்வாறிருக்கின்றது. அவர்கள் எவரையாவது பிரித்துவிட்டால் யுத்தம் ஏற்பட்டு விடுகின்றது. பிரிவினை ஏற்படுத்தப்படுகின்றது. தந்தையை அறியாததனால் மக்கள் கல்லுப் புத்தி உடையவர்களாகி விட்டனர். இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகின்றார்: தேவ தர்மம் மறைந்து விட்டது. அது தங்கள் இராச்சியமாக இருந்ததென்பது எவருக்குமே தெரியாது. நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். சிவபாபா எங்களது கீழ்ப்படிவான சேவகர். முக்கியஸ்தர் ஒருவர் தனது கடிதங்களில் கையொப்பமிடும்போது, கீழ்ப்படிவான சேவகன் என்றே எப்பொழுதும் எழுதுவார். தந்தையும் கூறுகின்றார்: நான் ஒரு கீழ்ப்படிவான சேவகர். தாதாவும் கூறுகின்றார்: நான் ஒரு கீழ்ப்படிவான சேவகன். நான் 5000 வருடங்களுக்குப் பின்னரும் ஒவ்வொரு கல்பத்திலும் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் மீண்டும் வருவேன். நான் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்கின்றேன். நீங்கள் என்னைத் தொலைதூரதேச வாசி என அழைக்கின்றீர்கள். இதன் அர்த்தத்தை எவருமே அறியார். அவர்கள் சமயநூல்கள் பலவற்றைக் கற்கின்றார்கள். ஆயினும் அவர்கள் அவற்றின் அர்த்தத்;தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை வந்து, வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை உங்களுக்குக் கூறுகின்றார். இந்நேரத்தில், இது இராவண இராச்சியம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மக்கள் தொடர்ந்தும் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர். இந்நாடகமும் அவ்வாறே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவர் குழந்தைகளாகிய உங்களை ஆழ் நரகத்திலிருந்து விடுவித்து, சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அது அல்லாவின் பூந்தோட்டம் எனப்படுகின்றது. இது முட்காடு. ஆனால் சத்தியயுகமோ பூந்தோட்டமாகும். நீங்கள் அங்கே சதா சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்; நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவராகவும், என்றென்றும் செல்வந்தராகவும் ஆகுகின்றீPர்கள். அரைக் கல்பத்திற்குச் சந்தோஷமும், மற்றைய அரைக் கல்பத்திற்குத் துன்பமும் உள்ளது. சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது; அதற்கு முடிவே இல்லை. அனைவரதும் அதிமேலான தந்தை வந்து, அனைவரையும் அமைதிதாமத்திற்கும், சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்கின்றார். நீங்கள் சந்தோஷதாமத்திற்குச் செல்லும்போது, ஏனைய அனைவரும் அமைதிதாமத்தில் இருக்கிறார்கள். அரைக் கல்பத்திற்குச் சந்தோஷமும், அரைக் கல்பத்திற்குத் துன்பமும் நிலவுகின்றன. அதிலும், பெரும் பகுதி சந்தோஷமானதாகவே இருக்கின்றது. அது அரைக்கு அரைவாசியாக இருக்குமாயின், அதில் என்ன சுவை இருக்கும்? பக்தி மார்க்கத்திலும், நீங்கள் மிகவும் செல்வந்தராகவே இருந்தீர்கள். நீங்கள் எந்தளவிற்குச் செல்வந்தராக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது நினைவுசெய்கின்றீர்கள். மிகவும் செல்வந்தர்களாக இருந்தவர்கள் கடனாளிகளாகும்போது, தாங்கள் என்ன வைத்திருந்தார்கள் என்பதையும், தங்களிடம் எந்தளவு செல்வம் இருந்ததென்பதையும் நினைவுசெய்வார்கள். பாரதம் எந்தளவிற்குச் செல்வம் நிறைந்ததாக இருந்தது என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார்; அது வைகுந்தமாக இருந்தது. அது இப்பொழுது எந்தளவிற்;கு ஏழ்மையாகி விட்டதெனப் பாருங்கள்! அது இப்பொழுது முற்றிலும் ஏழ்மையானதாகி விட்டது. ஏழைகள் மீது கருணை காட்டப்படுகின்றது; அவர்கள் இப்பொழுது இரக்கின்றார்கள். முன்பு வளமாக இருந்தவர்கள் இப்பொழுது கடனாளிகளாகி விட்டனர். இதுவும் நாடகமே. வருகின்ற ஏனைய சமயங்கள் அனைத்தும் கிளைகளேயாகும். பல சமயங்களையும் சார்ந்த மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. பாரத மக்களே 84 பிறவிகளையும் எடுக்கின்றார்கள். ஒரு குழந்தை ஏனைய சமயங்கள் பற்றிய அனைத்தையும் கணக்கிட்டு, பாபாவிற்கு அனுப்பினார். எவ்வாறாயினும், அதிகளவில் அதற்குள் செல்வதால் எந்த நன்மையுமே ஏற்படாது. அதுவும் நேரத்தை வீணாக்குவதாகும். அந்த நேரத்தில் நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருந்தால் ஒரு வருமானம் சம்பாதிக்கப்பட்டிருக்கும். முழு முயற்சி செய்து உலகின் அதிபதிகள் ஆகுவதே எங்கள் பிரதான விடயம். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், நீங்கள், இப்பொழுது தமோபிரதானாகி விட்டீர்கள். 84 பிறவிகளையும் எடுத்துள்ள நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறவேண்டும். அரைக்கல்பமாக நீங்கள் தந்தையை நினைவுசெய்தீர்கள். தந்தை இப்பொழுது வந்துள்ளார் என்பதால் உங்கள் செவிமடுத்தல் இப்பொழுது இடம்பெறுகிறது. தந்தை மீண்டும் ஒருமுறை உங்களைச் சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அது பாரதத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பற்றிய கதை போன்றுள்ளது. இப்பொழுது இது தூய்மையற்ற உலகம். அனைத்தும் இப்பொழுது பழைய உறவுமுறைகளாகும். நீங்கள் இப்பொழுது புதிய உறவுமுறைகளுக்குச் செல்ல வேண்டும். இந்நேரத்தில் சகல நடிகர்களும் பிரசன்னமாகி இருக்கின்றார்கள். இதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். பல ஆத்மாக்கள் இருக்கின்றனர்; அவர்களை (ஆத்மாக்களை) ஒருபோதும் அழிக்க முடியாது. எல்லாவற்றிற்கும் முதலில், மில்லியன் கணக்கான ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். அனைத்துச் சரீரங்களும் அழிக்கப்படும். இதனாலேயே மக்கள் ஹோலிகாவைக் கொண்டாடுகின்றார்கள். நாங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தோம், நாங்கள், பின்னர் பூஜிப்பவர்களாகி, இப்பொழுது மீண்டும் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே ஞானம், சமயநூல்கள் போன்ற எதுவுமில்லை. அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும். யோகியுக்தாக இருந்து, ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்கள் பூகம்பங்களினால் அனைத்தும் எவ்வாறு அழிக்கப்படுகின்றது என்பதைப் பார்ப்பார்கள். எவ்வாறு கிராமங்கள் அழிக்கப்படுகின்றன என்பதும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்றது. மும்பாய் முன்னர் அந்தளவு பெரிதாக இருக்கவில்லை. அவர்கள் கடலை வற்றச் செய்துவிட்டார்கள். அது மீண்டும் கடலாகும். அக்கட்டடங்கள் போன்ற எதுவுமே எஞ்சியிருக்காது. சத்தியயுகத்தில், இனிய நீர்நிலைகளுக்கு அருகிலேயே மாளிகைகள் இருக்கும்; அவை உவர் நீருக்கருகில் இருக்க மாட்டாது. எனவே, இவை எதுவுமே எஞ்சியிருக்க மாட்டாது. கடலின்; ஒரு பேரலையால் அனைத்துமே அழிக்கப்பட்டுவிடும். பல அனர்த்தங்கள் இடம்பெறும். மில்லியன் கணக்கானோர் மரணிப்பார்கள். தானியம் எங்கிருந்து வரும்? அனர்த்தங்கள் இடம்பெறும் என்பதை அம்மக்களும் புரிந்துகொள்கின்றார்கள். மக்கள் மரணிப்பார்கள். யோகியுக்தாக இருப்பவர்கள் மாத்திரமே களிப்புடன் இருப்பார்கள். வேடனுக்குக் கொண்டாட்டம், இரைக்குத் திண்டாட்டம். பனிமழையின்போது பலர் மரணிப்பார்கள். இயற்கை அனர்த்தங்கள் பல இடம்பெறும். இவையனைத்தும் அழிக்கப்படும். அவை இயற்கை அனர்த்தங்கள் எனப்படுகின்றன. அவற்றை இறை அனர்த்தங்கள் என அழைக்க முடியாது. நீங்கள் அவற்றுக்காகக் கடவுளை எவ்வாறு குற்றஞ் சாட்டலாம்? சங்கரர் தனது கண்ணைத் திறந்ததனால் விநாசம் இடம்பெற்றது என்றல்ல. அக்கதைகள் யாவும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. ஏவுகணைகளும் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவர்கள் ஏவுகணைகள் மூலம் அனைத்தையும் அழித்துவிடுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் எவ்வாறு நெருப்பு, வாயு, நஞ்சுகள் என்பன பயன்படுத்தப்படும் என்பதை உங்களால் பார்க்க முடியும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இறுதியில், அனைவரும் சடுதியாக மரணித்து விடுவதால், எக் குழந்தையும் உயிர் பிழைத்து, கஷ்டப்பட மாட்டார். எனவே, அவர்கள் இயற்கை அனர்த்தங்கள் மூலம் விரைவாக மரணித்து விடுவார்கள். இவையனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். அவர்கள் ஒருபோதுமே அழிக்கப்படுவதோ, சிறிதாக அல்லது பெரிதாக ஆகுவதோ இல்லை. அனைத்துச் சரீரங்களும் இங்கேயே அழிக்கப்படும். ஆத்மாக்கள் அனைவரும் இனிய வீட்டிற்குச் செல்வார்கள். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றார். நீங்களும் அதிமங்களகரமான இச்சங்கமயுகத்தில் அதிமேலானவர்கள் ஆகுகின்றீர்கள். உண்மையில், சிவபாபாவை மாத்திரமே ஸ்ரீ ஸ்ரீ என அழைக்க முடியும். தேவர்கள் ஸ்ரீ என்று அழைக்கப்படுகின்றார்கள். தற்போது, அவர்கள் தொடர்ந்து அனைவரையும் ஸ்ரீ என அழைக்கின்றனர். அவர்கள் கூறுகின்றார்கள்: ஸ்ரீமதி இன்னார் இன்னார், ஸ்ரீ இன்னார் இன்னார். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். விகாரத்தில் ஈடுபடுவது ஸ்ரீமத்தா? இது சீரழிந்த உலகம். தந்தை இப்பொழுது இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் கலப்படம் அகற்றப்படும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதும், ஒரு தாமரை மலரைப் போல் தூய்மையாக வாழுங்கள். ஆத்மாக்களாகிய உங்களிடம் இப்பொழுது சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானம் இருக்கின்றது. ஆனால்;, அந்த அணிகலன்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட முடியாது. இன்று, நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஆனால் நாளை மாயை உங்களை அறைந்ததும் ஞானம் முழுவதும் பறந்து விடும். இதனாலேயே பிராமணர்களாகிய உங்களின் மாலை உருவாக்கப்பட முடியாது. மாயை உங்களை அறைந்து, உங்களில் பலரை விழச் செய்கிறாள். எனவே மாலை எவ்வாறு உருவாக்கப்பட முடியும்? சகுனங்கள் தொடர்ந்தும் மாற்றமடையும். உருத்திர மாலை சிறந்ததாகும். விஷ்ணு மாலையும் இருக்கின்றது. எனினும், பிராமணர்களின் மாலை இருக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டல்கள் கொடுக்கப்படுகின்றன: உங்கள் சரீரத்தையும், சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். தந்தை அசரீரியானவர். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. இவரின் ஓய்வுபெறும் வயதான 60 வயதிலேயே இவரில் அந்த ஒரேயொருவர் வரவேண்டும். ஒருவரது ஓய்வு ஸ்திதியிலேயே குருமார்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். நானே சற்குரு. ஆனால், நான் மறைமுகமானவர். அவர்கள் பக்தி மார்க்கத்து குருமார்கள். நானோ ஞான மார்க்கத்தைச் சேர்ந்தவர். பிரஜாபிதா பிரம்மாவிற்கு எவ்வாறு பல குழந்தைகள் இருக்கின்றார்கள் எனப் பாருங்கள். உங்கள் புத்தி எல்லைக்குட்பட்டதில் இருந்து விடுபட்டு, எல்லையற்றதற்குள் சென்று விட்டது. மக்கள் முக்திக்குச் சென்று, பின்னர் ஜீவன்முக்தியை அடைகின்றார்கள். நீங்களே முதலில் வருகின்றீர்கள். ஏனையவர்கள் பின்னரே வருகின்றார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முதலில் சந்தோஷத்தை அனுபவம் செய்து, பின்னர் துன்பத்தையும் அனுபவம் செய்ய வேண்டும். இது உலக நாடகம். இதனாலேயே, ஓ கடவுளே! இது உங்கள் தெய்வீக லீலையே எனக் கூறப்படுகின்றது. உங்கள் புத்தி அடி முதல் நுனிவரை தொடர்ந்தும் சுற்றி வருகின்றது. நீங்கள் பாதையைக் காட்டு;கின்ற கலங்கரை விளக்கங்கள். நீங்கள் தந்தையின் குழந்தைகள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகுவீர்கள். புகையிரதங்களிலும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். எல்லையற்ற தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. தந்தை பாரதத்திற்கே வருகின்றார். அவர்கள் பாரதத்தில் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றனர். எனினும், அது எப்பொழுது என்பதை எவரும் அறியமாட்டார்கள். அவர்களுக்கு நேரமோ அல்லது திகதியோ தெரியாது. ஏனெனில், அவர் ஒரு கருப்பை மூலம் பிறவியெடுப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் இங்கே சரீரமற்றவர்களாகவே வந்தீர்கள், நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் சரீரமற்றவர்களாகவே திரும்பிச் செல்லவேண்டும். சதா தொடர்ந்தும் என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அகற்றப்படும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

 
தாரணைக்கான சாராம்சம்:
1. கலங்கரை விளக்கமாகி, அனைவருக்கும் பாதையைக் காட்டுங்கள். உங்கள் புத்தியை எல்லைக்குட்பட்டதிலிருந்து அகற்றி, எல்லையற்றதில் வைத்திருங்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர் ஆகுங்கள்.

2. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். எனவே, உங்கள் ஓய்வு ஸ்திதியில், சதோபிரதானாகுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு செயலையும் கவனமாகக் கருத்திற் கொண்ட பின்னரே செய்வதால், வருந்துதலிலிருந்து விடுபட்டிருக்கின்ற, ஒரு ஞானம் நிறைந்த ஆத்மா ஆவீர்களாக.

உலகில் கூறப்படுகின்றது: முதலில் சிந்தித்துப் பின் செயற்படுங்கள். செயற்படுவதற்கு முன்னர் சிந்திக்காதவர்கள், எதையாவது செய்தபின்னர் அதைப் பற்றிச் சிந்திப்பவர்கள் வருந்த நேரிடும். ஓன்றைப் பற்றிப் பின்னர் சிந்திப்பது வருந்துதலின் ஒரு வடிவம், ஆனால் அதனைப் பற்றி முதலிலேயே சிந்திப்பது ஒரு ஞானமுள்ள ஆத்மாவின் தகுதியாகும். துவாபர, கலியுகங்களில் பல வகையான வருந்துதல்கள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது, சங்கமயுகத்தில் நீங்கள் கவனத்துடன் கருத்திற்கொள்கின்ற எண்ணங்களைக் கொண்டிருந்து, பின்னரே செயற்படுவதால், ஒரு விநாடியேனும் உங்கள் மனதில்; எவ்விதமான வருந்துதலும் இருப்பதில்லை. அப்பொழுது நீங்கள் ஒரு ஞானம்நிறைந்த ஆத்மா என அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
சுலோகம்: கருணை மிக்கவர்களாக இருந்து, தெய்வீகக் குணங்கள் அனைத்தையும் தானம் செய்பவர்களே மாஸ்டர் அருள்பவர்கள்.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
குறிப்பாக அமிர்தவேளையில் தந்தை பிரம்மாவைப் போன்று, உங்களை ஒரு சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்தாபிப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அதாவது, தந்தையைப் போன்றே விதை ரூபமாக இருங்கள். நேரம் மேன்மையான நேரமாக இருப்பதால், உங்கள் ஸ்திதியும் மேன்மையாக இருக்க வேண்டும். இதுவே விசேட ஆசீர்வாதங்களுக்கான நேரமாகும். இந்த நேரத்தை மிகச்சரியான வழியில் பயன்படுத்துங்கள், அது நாள் முழுவதும் உங்கள் நினைவு ஸ்திதியில் ஒரு (நல்ல) தாக்கத்தை ஏற்படுத்தும்.