21.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வு உங்களை உலக அதிபதிகளாகவும் சரீர உணர்வு உங்களை ஏழ்மையானவர்களாகவும் ஆக்குகின்றது. ஆகையால், ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்களாக.

கேள்வி:
நீங்கள் சரீரமற்றவராக ஆகுவதற்கு, உங்களுக்கு அதிகளவு உதவுகின்ற பயிற்சி எது?

பதில்:
உங்களை எப்பொழுதும் ஒரு நடிகராகக் கருதுங்கள். நடிகர் ஒருவர் தனது பாகம் முடிந்தவுடன் தனது ஆடையை மாற்றிக் கொள்வதைப் போன்று, குழந்தைகளாகிய நீங்களும் இப் பயிற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் செயல்களைச் செய்து முடிந்தவுடனேயே, உங்கள் ஆடையை (சரீரத்தை) அகற்றி விட்டு, சரீரமற்றவர் ஆகுங்கள். சகோதர ஆத்மாக்கள் என்ற பயிற்சியைத் தொடர்ந்தும் செய்யுங்கள். இதுவே தூய்மை ஆகுவதற்கு இலகுவான வழியாகும். சரீரத்தைத் தொடர்ந்து பார்க்கும் பொழுது குற்றமான எண்ணங்கள் ஏற்படுகின்றன. ஆகையால், சரீரமற்றவராகுவீர்களாக.

ஓம் சாந்தி.
நீங்கள் மிகவும் விவேகம் அற்றவராக ஆகிவிட்டதால், குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். 5000 வருடங்களுக்கு முன்னரும் இது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளதுடன், எவ்வாறு தெய்வீகச் செயல்களைச் செய்ய வேண்டும் என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தேவ தர்மத்திற்கு உரியவராகி, பின்னர் நாடகத்திற்கு ஏற்பத் தொடர்ந்தும் மறுபிறப்பெடுத்தீர்கள். இது இராவணனின் தமோபிரதான் இராச்சியம் என்பதால், உங்கள் கலைகள் குறைவடைந்து இப்பொழுது நீங்கள் கலைகள் எதுவுமே அற்ற நிலையை அடைந்துள்ளீர்கள். இந்த இராவண இராச்சியம், முதலில் சதோபிரதானாக இருந்தது. பின்னர் அது சதோ, இரஜோ, தமோ நிலைகளைக் கடந்தது. அது இப்பொழுது முற்றிலும் தமோபிரதான் ஆகியுள்ளது. அது இ;ப்பொழுது அதன் இறுதியை அடைந்துள்ளது. இராவண இராச்சியம் அசுர இராச்சியம் என அழைக்கப்படுகின்றது. பாரதத்தில் இராவணனை எரிக்கும் வழக்கம் உள்ளது. பாரத மக்கள் மாத்திரமே இராவண இராச்சியம், இராம இராச்சியத்தையிட்டுப் பேசுகின்றார்கள். இராம இராச்சியம் சத்தியயுகத்தில் உள்ளது. இராவண இராச்சியம் கலியுகத்தில் உள்ளது. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். முற்றாகப் புரிந்து கொள்ளாததால், மிகவும் நல்ல குழந்தைகளும் தமது பாக்கியத்தை இழப்பதைக் கண்டு பாபா வியப்படைகின்றார். இராவணனின் குறைபாடுகள் அவர்களைப் பற்றிக் கொண்ட போதிலும் அவர்கள் தெய்வீகக் குணங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள். நீங்களே அத் தேவர்கள் எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் 84 பிறவிகளை அனுபவம் செய்திருக்கின்றீர்கள். வித்தியாசமும் நீங்கள் எவ்வாறு தமோபிரதான் ஆகினீர்கள் என்பதும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது இராவண இராச்சியம் ஆகும். இராவணன் கொடிய எதிரி என்பதால் அவன் பாரதத்தைக் கடனாளியாகவும், தமோபிரதானாகவும் ஆக்கியுள்ளான். இராம இராச்சியத்தில் அதிகளவானோர் இருப்பதில்லை. அங்கே ஒரே ஒரு தர்மம் மாத்திரமே உள்ளது. இங்கே, அனைவரின் மீதும் தீய ஆவிகளின் ஆதிக்கம் உள்ளது: கோபம், பேராசை, பற்று ஆகிய தீய ஆவிகள் உள்ளன. நீங்கள் அழிவற்றவர்கள் என்பதனையும் சரீரமே அழிவது என்பதனையும் நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் சற்றேனும் ஆத்ம உணர்வில் இருப்பதில்லை. அதிகளவு சரீர உணர்வு உள்ளது. சரீர உணர்விற்கும் ஆத்ம உணர்விற்கும் இடையில் இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. ஆத்ம உணர்வுடைய தேவர்கள் முழு உலகத்திற்கும் அதிபதிகள் ஆகுகின்றார்கள். சரீர உணர்வுடையவராகியதால் அவர்கள் ஏழ்மை நிலையை அடைந்துள்ளார்கள். பாரதம் தங்கச் சிட்டுக்குருவியாக இருந்தது. அவர்கள் இதனைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அதன் அர்த்தத்தை அவர்கள் அறியவில்லை. சிவபாபா உங்கள் புத்தியை தெய்வீகம் ஆக்கவே வருகின்றார். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். இந்த இலக்ஷ்மியும் நாராயணனுமே உலக அதிபதிகளாக இருந்தார்கள் அவர்களுக்கு அவர்களின் இராச்சியத்தைக் கொடுத்தது யார் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அவர்கள் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற அவர்கள் எத்தகைய செயல்களைச் செய்கின்றார்கள்? அது கர்மம் சம்பந்தப்பட்ட விடயமாகும். மக்கள் அசுர செயல்களில் ஈடுபடும் பொழுது அச் செயல்கள் பாவச் செயல்கள் ஆகுகின்றன. சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையானவையாகும். அங்கே கர்ம கணக்கிருப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: புரிந்து கொள்ளாததால் அவர்கள் பல இடையூறுகளை விளைவிக்கின்றார்கள். அவர்கள் சிவனும் சங்கரரும் ஒருவரே எனக் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் சிவனை மாத்திரமே அசரீரியானவர் எனக் காட்டுகிறார்கள், ஆனால் சங்கரரை பார்வதியுடன்; காட்டுகின்றார்கள். எனவே, அவர்கள் இருவரின் செயற்பாடுகளும் வெவ்வேறானவையாகும். அமைச்சரும் ஜனாதிபதியும் எவ்வாறு ஒருவராக இருக்க முடியும்? ஒவ்வொருவரின் அந்தஸ்த்தும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறாயின் அவர்கள் கூறுவது போன்று எவ்வாறு சிவனும் சங்கரரும் ஒருவராக இருக்க முடியும்? இராம சமுதாயத்தில் ஒருவர் ஆகாதவர்களால், இதனைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அசுர சமுதாயம் உங்களை இகழ்ந்து, உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். ஏனெனில், அவர்களிடம் ஐந்து விகாரங்களும் உள்ளன. தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். அவர்கள் மிகவும் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் எந்த விகாரங்களும் அற்றவர்களாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அனைவரும் விகாரத்தின் மூலமே பிறப்பெடுக்கின்றார்கள். சந்நியாசிகளும் விகாரத்தின் மூலமே பிறப்பெடுக்கின்றார்கள். அதன் பின்னர் அவர்கள் துறவறத்தை மேற்கொள்கின்றார்கள். சத்தியயுகத்தில் இவ்விடயங்கள் இடம் பெறுவதில்லை. சந்நியாசிகள் சத்தியயுகத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கிருஷ்ணர் எங்கும் இருக்கின்றார் என்றும் ராதையும் எங்கும் இருக்கின்றார் என்றும் கூறுவதைப் போன்று சத்தியயுகமும் எக்காலத்திலும் உள்ளது என அவர்கள் கூறுகின்றார்கள். பல அபிப்பிராயங்களும், எண்ணற்ற சமயங்களும் உள்ளன. இப்பொழுது நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்ற தெய்வீக வழிக்காட்டல்கள் அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றன. நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள் ஆவீர்கள். பின்னர் நீங்கள் விஷ்ணுவின் குலத்தினராகவும், அதன் பின்னர் சந்திர வம்சத்தினராகவும் ஆகுகின்றீர்கள். அவை இரண்டும், வம்சங்கள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் 'பிராமண குலம்" என்ற கூற்றே உள்ளது. இதனை வம்சம் என்று அழைக்க முடியாது. இங்கே இராச்சியம் இருப்பதில்லை. இதனை நீங்கள் மாத்திரமே புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் மத்தியிலும், சிலர் மாத்திரமே இதனைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். சிலர் தம்மை சற்றேனும் சீராக்கிக் கொள்வதில்லை. அவர்களிடம் ஏதாயினும் ஒரு தீய ஆவி உள்ளது. பேராசை கோபம் போன்ற தீய ஆவிகள் உள்ளன. சத்தியயுகத்தில் எந்தத் தீய ஆவிகளும் இருப்பதில்லை. தேவர்கள் சத்தியயுகத்திலேயே இருக்கின்றார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷமானவர்கள். தீய ஆவிகளே துன்பத்தை விளைவிக்கின்றது. காமம் என்ற தீய ஆவி அதன் ஆரம்பம் முதல், அதன் மத்தியினூடாக இறுதி வரை துன்பத்தை விளைவிக்கின்றது. இங்கே நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். இது உங்கள் மாமியாரின் வீட்டிற்கு போவது போன்றதல்ல! தந்தை உங்களுக்குத் தொடர்ந்து கூறுகின்றார்: உங்களை நீங்கள் சகோதர சகோதரிகள் எனக் கருதினால் குற்றப் பார்வை இருக்க முடியாது. அனைத்திற்கும் தைரியமே தேவையாகும். சிலர் கூறுகின்றார்கள்: உங்களுக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லாவிடில் வீட்டை விட்டு வெளியேறிவிடுங்கள்! ஆகவே தைரியம் அவசியமாகும். உங்களை நீங்கள் சோதித்தும் பார்க்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பல மில்லியம் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். இவை அனைத்தும் அழியப் போகின்றன. அனைத்தும் துசாகப் போகின்றது. சிலர் மிகவும் தைரியத்துடன் முன்னேறிச் செல்லுகின்றார்கள். சிலரிடம் தைரியம் இருந்த போதிலும் பின்னர் சித்தி எய்துவதில்லை. ஒவ்வொரு சூழ்நிலைகளைப் பற்றியும் தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும் நீங்கள் எதுவும் செய்யாதிருந்தால், நீங்கள் முழுமையான யோகத்தில் இருப்பதில்லை என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. பாரத்தின் புராதன இராஜயோகம் மிகவும் பிரபல்யமானது. இந்த யோகத்தின் மூலமே நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். கல்வி வருமானத்திற்கான வழியாகும். கற்பதன் மூலமே நீங்கள் வரிசைக்கிரமமாக உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலுள்ள உறவுமுறையிலும் புத்தி விஷமத்தனத்தை விளைவிக்கின்றது. எனவே தந்தை உங்களை அதிலும் உயர்வாக அழைத்துச் செல்லுகின்றார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். பிறரையும் சகோத ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். நாங்கள் அனைவரும் சகோதரர்களாயின், வேறு எந்தப் பார்வையும் இருக்க முடியாது. சரீரத்தைப் பார்க்கும் பொழுதே குற்றமான எண்ணங்கள் தோன்றுகின்றன. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சரீரமற்றவராகுவீர்களாக. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்களாக. உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். சரீரத்தின் மூலம் நீங்கள் உங்கள் பாகத்தை நடித்த பின்னர் நீங்கள் சரீரத்திலிருந்து விடுபட வேண்டும். அந்த நடிகர்கள் தமது பாகத்தை நடித்து முடித்த பின்னர் தமது ஆடையை மாற்றிக் கொள்கின்றார்கள். நீங்களும் இப்பொழுது உங்கள் பழைய ஆடைகளை கழற்றி புதியவற்றை அணிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், ஆத்மாக்களும் சரீரங்களும் தமோபிரதானவையாகும். தமோபிரதான் ஆத்மாக்களினால் முக்திக்குச் செல்ல முடியாது. அவர்கள் தூய்மையாகும் பொழுதே அவர்களால் அங்கு செல்ல முடியும். தூய்மையற்ற ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியாது. இன்ன இன்னார் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்து விட்டார்கள் எனக் கூறுதல் பொய்யாகும். ஒருவரேனும் அங்கு செல்ல முடியாது. அங்கே ஒரு வம்சாவளி விருட்சம் உருவாக்கப்பட்டிருப்பதைப் போன்றதாகும் அது அங்கேயுள்ளது. பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். அவர்கள் கீதையில் பிராமணர்களின் பெயரை எங்கேனும் குறிப்பிடவில்லை. அவர் (சிவபாபா) இப் பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தில் தான் பிரவேசிப்பதாக விளங்கப்படுத்துகின்றார். ஆகையால், தத்தெடுத்தல் நிச்சயமாகத் தேiவாயாகும். அந்த பிராமணர்கள் விகாரம் நிறைந்தவர்கள். ஆனால் நீங்கள் விகாரமற்றவர்கள். விகாரமற்றவர்கள் ஆகும் பொழுது நீங்கள் பல துன்புறுத்தல்களைச் சகிக்க நேரிடும். பெயரையும், வடிவத்தையும் பார்க்கும் பொழுது பலரும் தீய எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். சகோதர சகோதரிகள் என்ற உறவுமுறை கொண்டவர்களும் விழுந்து விடுகின்றார்கள். அதன் பின்னர் அவர்கள் எழுதுகின்றார்கள்: பாபா, நான் விழுந்து விட்டேன். நான் எனது முகத்தை அழுக்காக்கிக் கொண்டேன். தந்தை கூறுகின்றார்: அற்புதம்! நான் கூறினேன்: ஒரு சகோதரனும் சகோதரியுமாக வாழுங்கள். அதன் பின்னர் நீங்கள் மீண்டும் தவறான செயல்களைச் செய்தீர்கள்! அதன் பின்னர் அதற்காக கடுமையான தண்டனைகளைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். உண்மையில், ஒருவர் தீய செயல்களில் ஈடுபடும் பொழுது அவர் சிறையில் அடைக்கப்படுகின்றார். நான் ஸ்தாபித்த பாரதம் மிகவும் தூய்மையானதாகும். அதன் பெயரே சிவாலயமாகும். எவரிடமும் இந்த ஞானம் இல்லை. சமயநூல்கள் போன்றன யாவும் பக்தி மார்க்கத்தின் பௌதீக சம்பிரதாயமாகும். சத்தியயுகத்தில், அனைவரும் ஜீவன் முக்தி அடைந்திருப்பதால் அவர்கள் முயற்சி செய்யத் தேவையில்லை. இங்கே அனைவரும் சீரழிந்திருப்பதால், அவர்கள் முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான முயற்சியைச் செய்கின்றார்கள். அவர்கள் கங்கையில் நீராடுகின்றார்கள். ஆனால் கங்கை நீர் அவர்களுக்கு ஜீவன்முக்தியைப் பெற்றுத் தருமா? அவர்களை அது தூய்மையாக்குமா? அவர்களுக்கு எதுவுமே தெரியாது. உங்கள் மத்தியில், நீங்கள் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். சிலர் தாமே இதனை புரிந்து கொள்ளாத போது, பிறருக்கு அவர்களால் என்ன விளங்கப்படுத்த முடியும்? அதனாலேயே பாபா அவர்களை எங்கும் அனுப்புவதில்லை. நீங்கள் தொடர்ந்து பாடுகின்றீர்கள்: பாபா, நீங்கள் வரும் பொழுது நான் உங்கள் வழிகாட்டல்களைப் பின்பற்றி ஒரு தேவர் ஆகுவேன். தேவர்கள் சத்தியயுகத்திலும் திரேதாயுகத்திலும் வசிக்கின்றார்கள். இங்கே, காம விகாரத்திலேயே அதிகளவு மக்கள் சிக்குண்டுள்ளார்கள். அவர்களால் காமம் என்ற விகாரம் இல்லாதிருக்க முடியாது. அவர்கள் அதனைத் தமது தாய் தந்தையிடமிருந்து ஆஸ்தியாகப் பெற்றுக் கொண்டது போலுள்ளது. இங்கே, நீங்கள் உங்கள் ஆஸ்தியைத் இராமரிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றீர்கள். நீங்கள் தூய்மை என்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அங்கே விகாரம் என்ற கேள்விக்கு இடமில்லை. கிருஷ்ணரை கடவுள் என பக்தர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் அவரை 84 பிறவிகள் எடுப்பவராகவே காட்டுகின்றீர்கள். ஆனால் கடவுள் அசரீரிரயானவர். அவரின் பெயர் சிவனாகும். தந்தை உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அவர் கருணையும் கொண்டிருக்கின்றார். அவர் கருணைமிக்கவர். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சிறந்தவர்களும், விவேகமானவர்களும் ஆவீர்கள். நீங்கள் அதிகளவு பிரகாசமானவர்கள். ஞான, யோக சக்தியுடையவர்கள் பிறரை ஈர்க்கின்றார்கள். அதிகளவு கல்வி கற்றவர்கள் மிகவும் மதிக்கப்படுகின்றார்கள். கல்வி அறிவற்றவர்கள் மதிக்கப்படுவதில்லை. இந்த நேரத்தில் அனைவரும் அசுர சமுதாயத்தினர். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. சிவனுக்கும் சங்கரருக்கும் உள்ள வேறுபாடு மிகவும் தெளிவாகியுள்ளது. அவர் அசரீர உலகில் இருக்கின்றார். இவர் சூட்சும உலகில் இருக்கின்றார். அவர்கள் இருவரும் எவ்வாறு ஒருவராக இருக்க முடியும்? இது தமோபிரதான் உலகமாகும். இராவணன் அசுர சமுதாயத்திற்கு உரிய எதிரியாவான். அவன் உங்களையும் தன்னைப் போன்று ஆக்குகின்றான். தந்தை இப்பொழுது உங்களை தன்னைப் போன்று ஆக்கி, உங்களைத் தேவ சமுதாயத்திற்கு உரியவர் ஆக்குகின்றார். இராவணன் அங்கிருப்பதில்லை. அவன் அரைக் கல்பத்திற்கு எரிக்கப்படுகின்றான். இராம இராச்சியம் சத்தியயுகத்தில் இருக்கின்றது. காந்திஜி இராம இராச்சியத்தை விரும்பினார். ஆனால் அவரால் எவ்வாறு இராம இராச்சியத்தை ஸ்தாபிக்க முடியும்? அவர் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கான கற்பித்தல்களை எவருக்கும் கொடுக்கவில்லை. தந்தை மாத்திரமே சங்கமயுகத்தில் கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்களாக! இது மேன்மையாகுவதற்கான யுகமாகும். தந்தை தொடர்ந்தும் மிகவும் அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் தந்தையை மிக்க அன்புடன் மீண்டும் மீண்டும் நினைவு செய்ய வேண்டும்: பாபா, இது உங்கள் அற்புதமாகும்! நாங்கள் மிகவும் கல்லுப் புத்தி உடையவர்களாக இருந்தோம். நீங்கள் இப்பொழுது எங்களை மேன்மையானவர்கள் ஆக்குகின்றீர்கள். உங்கள் வழிகாட்டல்களை மாத்திரமே நாங்கள் பின்பற்றுவோம். வேறு எவரது வழிகாட்டல்களையும் நாங்கள் பின்பற்ற மாட்டோம். இறுதியில் அனைவரும் கூறுவார்கள்: பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் தெய்வீக வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். பாபா மிகவும் நல்லவிடயங்களை உங்களுக்குக் கூறுகின்றார். அவர் ஆரம்பம,; மத்தி, இறுதியின் அறிமுகத்தைக் கொடுப்பதுடன் உங்கள் நடத்தையையும் சீராக்குகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் பார்வையைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் ஆக்கிக் கொள்வதற்கு, எவருடைய பெயரையும் வடிவத்தையும் பார்க்காதீர்கள். சரீரமற்றவராகுவதற்குப் பயிற்சி செய்யுங்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதிச் சகோதர ஆத்மாக்களுடன் பேசுங்கள்.

2. அனைவரிடமும் மரியாதையைப் பெறுவதற்கு, ஞானத்தினதும், யோகத்தினதும் சக்திகளைக் கிரகியுங்கள். தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆகுங்கள். உங்கள் நடத்தையை விருத்தி செய்யும் சேவையைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
சோம்பேறித்தனத்திலும், கவலையீனத்திலும் இருந்து விடுபட்டு, ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் உலக நன்மைக்கான பொறுப்பை நிறைவேற்றுவீர்களாக.

நீங்கள் புதியவராயினும் பழையவராயினும், ஒரு பிராமணன் என்றால் உலக நன்மைக்கான பொறுப்பை ஏற்பவர் என்றே அர்த்தமாகும். உங்களுக்குப் பொறுப்பு இருக்கும் போதெல்லாம், நீங்கள் அதனை விரைவில் நிறைவேற்றுகின்றீர்கள், ஆனால் பொறுப்பு இல்லாதபோது, நீங்கள் கவனயீனமாகுகின்றீர்கள். பொறுப்பெடுத்தல் சோம்பேறித்தனத்தையும் கவனயீனத்தையும் முடிக்கின்றது. ஆர்வமும் உற்சாகமும் உள்ளவர்கள் களைப்பற்றவர்கள்: அவர்கள் தொடர்ந்தும் தமது முகங்களினாலும் செயற்பாடுகளினாலும் பிறரின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தொடர்ந்தும் அதிகரிக்கச் செய்கின்றார்கள்.

சுலோகம்:
நேரத்திற்கு ஏற்ப சக்திகளைப் பயன்படுத்துதல் என்றால் ஞானம் நிறைந்த யோக ஆத்மாவாக இருப்பது என்று அர்த்தமாகும்.