10.12.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் சர்வசக்திவான் தந்தையுடன் உங்கள் புத்தியின் யோகத்தை இணைப்பதனால்; சக்தியைப் பெறுகின்றீர்கள். நினைவின் மூலம், ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் மின்கலங்களுக்குச் சக்தியூட்ட முடிவதுடன், தூய்மையானவர்களாகவும், சதோபிரதானாகவும் ஆகுகின்றீர்கள்.
கேள்வி:
தேவ அந்தஸ்தை வெகுமதியாக அடைகின்ற எந்த முயற்சியைக் குழந்தைகளாகிய நீங்கள் சங்கமயுகத்தில் செய்கின்றீர்கள்?
பதில்:
சங்கமயுகத்தில் நாங்கள் குளிர்மையாகுவதற்கான முயற்சியைச் செய்கின்றோம்;. குளிர்மையாகுவதனாலும், தூய்மையானவர்கள் ஆகுவதனாலும், நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் குளிர்மையாகும்வரை, தேவர்கள் ஆகமுடியாது. சங்கமயுகத்தில் நீங்கள் குளிர்மைத் தேவிகளாகி (சீதளாதேவி), அனைவரையும் குளிர்மையாக்குவதற்கு அனைவர் மீதும் குளிர்ந்த ஞானத் துளிகளைத் தெளிக்கின்றீர்கள். நீங்கள் முதலில் உங்களைக் குளிர்மையாக்கி, பின்னர் மற்றவர்களின் தீயை அணைத்து அவர்களையும் குளிர்மையாக்க வேண்டும்.ஓம் சாந்தி.
முதலில், குழந்தைகளாகிய நீங்கள் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்: நாங்கள் அனைவரும் சகோதரர்கள், சிவபாபா எங்கள் அனைவரதும் தந்தையாவார். அவர் சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். நீங்கள் முழு உலகையும் ஆட்சிசெய்தபொழுது, அனைத்துச் சக்திகளையும் கொண்டிருந்தீர்கள். பாரதத்திலே தேவர்களின் இராச்சியம் இருந்தது. நீங்கள் தூய தேவர்களாக இருந்தீர்கள். உங்கள் குலம் முழுவதும், அதாவது, உங்கள் முழு வம்சமும் விகாரமற்றதாக இருந்தது. யார் விகாரம் அற்றவர்களாக இருந்தார்கள்? ஆத்மாக்களாகிய நீங்களே ஆவீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை விகாரமற்றவர்கள் ஆகுகின்றீர்கள். சர்வசக்திவானின் நினைவைக் கொண்டிருப்பதனால், நீங்கள் அவரிடமிருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் 84 பிறவிகளின் பாகத்தை நடிக்கின்றீர்;கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதான் சக்தியைக் கொண்டிருந்தீர்கள்; நாளுக்கு நாள், அது படிப்படியாகக் குறைவடைந்தது. சதோபிரதானாக இருப்பதிலிருந்து நீங்கள் தமோபிரதானாக வேண்டும். மின்கலத்தின் சக்தி முடிவடைந்தவுடன் வண்டி நின்று விடுகின்றது; மின்கலம் சக்தியிழந்து விட்டது. ஆத்மாவின் மின்கலம் முற்றாகச் சக்தியிழக்க மாட்டாது; சிறிதளவு சக்தி எஞ்சியிருக்கிறது. ஒருவர்; மரணிக்கும்பொழுது, ஒரு விளக்கு ஏற்றப்பட்டு அது அணைந்து விடாமல் எண்ணெயால் நிரப்பப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் முழுமையாகச் சக்தி நிறைந்தவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது உங்களுக்கு அச்சக்தி இல்லை எனக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சர்வசக்திவான் தந்தையுடன் உங்கள் புத்தியின் யோகத்தைச் கொண்டிருந்து, உங்களைச் சக்தியால் நிரப்பிக் கொள்ளுங்கள், ஏனெனில் உங்களிடம் சிறிதளவு சக்தியே எஞ்சியிருக்கிறது. உங்கள் சக்தி முழுமையாக முடிவடைந்திருந்தால், உங்களுடைய சரீரங்கள் இருக்க மாட்டாது. தந்தையை நினைவு செய்வதனால், ஆத்மாக்களாகிய நீங்கள் முற்றிலும் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். சத்தியயுகத்தில் உங்களின் மின்கலங்கள் முழுமையாகச் சக்தியூட்டப்பட்டிருக்கின்றன. பின்னர் உங்கள் கலைகள், அதாவது, மின்கலங்களின் சக்தி படிப்படியாகக் குறைவடைகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் கலியுக இறுதியை அடைகின்ற நேரத்தில் மிகச்சிறிதளவு சக்தியே எஞ்சியிருக்கிறது. அது நீங்கள் ஏழைகளாகவும், சக்தியற்றவர்களாகவும் ஆகிவிட்டதைப் போன்று உள்ளது. தந்தையை நினைவு செய்வதனால், ஆத்மாக்களாகிய நீங்கள் சக்திநிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். ஆகவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் ஒரேயொருவரை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். கடவுளே அதிமேலானவர்; ஏனைய அனைவரும் படைப்பின் ஒரு பகுதியாவர். ஒரு படைப்பானது எல்லைக்குட்பட்ட ஆஸ்தியை மாத்திரமே ஒரு படைப்பிடமிருந்து பெற முடியும். எல்லையற்ற தந்தை மாத்திரமே படைப்பவர்; ஏனைய தந்தையர் அனைவரும் எல்லைக்குட்பட்டவர்கள். எல்லையற்ற தந்தையை நினைவுசெய்வதனால், நீங்கள் ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஆகவே, பாபா புதிய உலகமாகிய, சுவர்க்கத்தை எங்களுக்காக ஸ்தாபிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் இதயங்களில் அறிந்துகொள்ள வேண்டும். நாடகத் திட்டத்திற்கேற்ப சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்களே அங்கே சென்று ஆட்சிசெய்வீர்;கள். நான் என்றென்றும் தூய்மையானவர். நான் ஒரு கருப்பையின் மூலம் பிறப்பெடுப்பதில்லை. தேவர்கள் பிறப்பெடுப்பதைப் போல நான் பிறப்பெடுப்பதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுப்பதற்காக, இவர் ஓய்வுபெறுகின்ற, 60வது வயதை அடைகின்றபொழுது நான் இவரது சரீரத்தினுள் பிரவேசிக்கிறேன். பின்னர் இவர் முதல் இலக்கத் தமோபிரதான் ஆத்மாவாக இருப்பதிலிருந்து முதல் இலக்கச் சதோபிரதான் ஆத்மாவாக ஆகுகின்றார். கடவுளே அதிமேலானவர், பின்னர் சூட்சுமவதனத்தில் வசிக்கின்ற பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இருக்கின்றனர். எங்கிருந்து இந்த பிரம்மா, விஷ்ணு, சங்கரர் வந்தார்கள்? அவை அனைத்தும் நீங்கள் காண்கின்ற காட்சிகளே. சூட்சும உலகம் மத்தியில் இருக்கின்றது. அங்கே பௌதீகச் சரீரங்கள் எதுவும் இருப்பதில்லை. அச்சூட்சும சரீரங்களைத் தெய்வீகக் காட்சி மூலம் மாத்திரமே காண முடியும். பிரம்மா வெள்ளை ஆடை தரித்துள்ளார் ஆனால் விஷ்ணு வைரங்களாலும், இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளார். சங்கரர், கழுத்தைச் சுற்றிய பாம்புடன் இருப்பதாக அவர்கள் சித்தரித்துள்ளார்கள், ஆனால் சங்கரர் அவ்வாறு இருக்க முடியாது. அமர்நாத்திலே சங்கரர் பார்வதிக்கு அமரத்துவக் கதையைக் கூறுவதாக அவர்கள் சித்தரித்துள்ளார்கள். சூட்சும வதனத்தில் மனித உலகம் இல்லை, எனவே எவ்வாறு அவர் அங்கே ஒரு கதையைக் கூறியிருக்க முடியும்? சூட்சும வதனம் காட்சிகளுக்காகவே இருக்கின்றது. முற்றிலும் தூய்மையானவர்கள் ஆகியவர்களின் காட்சிகளை நீங்கள் காண்கிறீர்கள். அவர்களே பின்னர் சத்தியயுகத்திற்குச் செல்லும் பொழுது சுவர்க்க அதிபதி ஆகுபவர்கள். ஆகவே, அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கோரினார்கள் என்பது உங்கள் புத்தியிலே பதிய வேண்டும். அங்கே யுத்தங்கள் போன்றவை இருப்பதில்லை. தேவர்கள் எவ்வாறு வன்முறையாளர்களாக இருக்க முடியும்? எவராவது நம்புகிறார்களோ, இல்லையோ தந்தையை நினைவுசெய்வதனால், நீங்கள் அந்த இராச்சியத்தை இப்பொழுது கோருகின்றீர்கள். கீதையிலே குறிப்பிடப்பட்டுள்ளது: “உங்கள் சரீரத்தையும், உங்கள் சரீர சமயங்கள் அனைத்தையும் மறந்து, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்”. பற்று வைப்பதற்குத் தந்தைக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. தந்தை கூறுகிறார்: நான் இச் சரீரத்தை ஒரு குறுகிய காலத்திற்குக் கடனாகப் பெறுகின்றேன். இல்லாவிடின், எவ்வாறு நான் இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்க முடியும்? நான் இந்த விருட்சத்தின் உணர்வுள்ள விதையாவேன். நான் மாத்திரமே இந்த விருட்சத்தின் ஞானத்தைக் கொண்டுள்ளேன். மக்கள் இந்த உலகின் கால எல்லையையோ அல்லது எவ்வாறு அது படைக்கப்படுகிறது, பராமரிக்கப்படுகிறது, அழிக்கப்படுகின்றது என்றோ அறியார்கள். அவர்களின் கல்விகள் எல்லைக்குட்பட்டவை. தந்தை உங்களுக்கு இந்த எல்லையற்ற கல்வியைக் கற்பித்து, குழந்தைகளாகிய உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். எந்தச் சரீரதாரியையும் கடவுள் என்று ஒருபொழுதும் அழைக்க முடியாது. அவர்கள் (பிரம்மா, விஷ்ணு, சங்கரர்) தங்களுக்கெனச் சூட்சுமச் சரீரங்களைக் கொண்டுள்ளனர், அவர்களையும் கடவுள் என அழைக்க முடியாது. இந்தச் சரீரம் தாதாவினுடைய ஆத்மாவின் சிம்மாசனமாகும். இந்தச் சிம்மாசனம் இப்பொழுது அமரத்துவ ரூபமான, தந்தையின் சிம்மாசனமாகிய, அமரத்துவ சிம்மாசனமாகும். அமிர்தசரசிலே அமரத்துவ சிம்மாசனம் என அழைக்கப்;படுகின்ற, ஒரு சிம்மாசனம் இருக்கின்றது. முக்கிய பிரமுகர்கள் அந்த அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்வதற்காக அழைக்கப்படுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது ஆத்மாக்கள் அனைவரினதும் அமரத்துவ சிம்மாசனமாகும். ஒவ்வொர் ஆத்மாவிலும் நல்ல, தீய சமஸ்காரங்கள் உள்ளன, இதனாலேயே கூறப்படுகின்றது: இது உங்கள் செயல்களின் பலன். ஒரேயொரு தந்தையே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. பாபா சமயநூல்களிலிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துவதில்லை. சமயநூல்களில் இவ்விடயங்கள் எவையும் குறிப்பிடப்படவில்லை. இதனாலேயே மக்கள் எரிச்சலடைந்து நாங்கள் ஏன் சமயநூல்களை நம்புவதில்லை என எங்களைக் கேட்கின்றார்கள். சாதுக்கள், புனிதர்கள், சந்நியாசிகள் கங்கையில் நீராடச் செல்லும்பொழுது, தூய்மையானவர்கள் ஆகுகின்றார்களா? இன்னமும் எவராலும் வீடு திரும்ப முடியாதுள்ளது. அனைவரும் இறுதியில் பூச்சிக்கூட்டம் போல அல்லது தேனீக்கூட்டம் வீடு திரும்புவார்கள். ராணித் தேனீ இருக்கின்றது, ஏனைய அனைத்துத் தேனீக்களும் அவளைப் பின்தொடர்கின்றன. அதேபோல் தந்தை வீடு திரும்புகின்றபொழுது, ஆத்மாக்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்வார்கள். அது அசரீரி உலகில் ஆத்மாக்களின் கூட்டம் இருப்பதைப் போன்றுள்ளது, இங்கேயோ மனிதர்களினால் கூட்டம் நிறைந்துள்ளது. இங்கே இருக்கின்ற இந்தக் கூட்டமும் ஒருநாள் வீடு திரும்ப வேண்டும். தந்தை வந்து ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். சிவனின் திருமண ஊர்வலத்தின் புகழ்ச்சி இருக்கின்றது. நீங்கள் புத்திரர்களாகவோ அல்லது புத்திரிகளாகவோ, இருந்தபொழுதிலும் தந்தை வந்து குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் நினைவு யாத்திரையைக் கற்பிக்கின்றார். ஆத்மாக்கள் முதலில் தூய்மையாகாமல் வீடு திரும்ப முடியாது நீங்கள் தூய்மையாகிய பின்னர், உங்கள் மௌன தாமத்திற்கு முதலில் சென்று, பின்னர் படிப்படியாக, வரிசைக்கிரமமாகக் கீழே வருவீர்கள். உலக சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கும். ஓர் இராச்சியம் உருவாக்கப்பட வேண்டும். ஆகவே, ஒரேநேரத்தில் அனைவரும் ஒன்றாகக் கீழே வர மாட்டார்கள்; விருட்சம் படிப்படியாகத் தொடர்ந்தும் வளரும். தந்தை எல்லாவற்றுக்கும் முதலில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். முதலில் பிராமணர்கள் ஆகுபவர்களே, தேவர்களாக ஆகப் போகின்றவர்கள். பிரஜாபிதா பிரம்மா (மக்களின் தந்தை) இருப்பதனால். மக்களிடையே சகோதரர்களும், சகோதரிகளும் இருப்பார்கள். பலர் இங்கே பிரம்மகுமார், பிரம்மகுமாரிகளாக ஆகுகின்றார்கள். அவர்களால் நிறைய புள்ளிகளைக் கோர முடியும் என அவர்களுக்கு நிச்சயமாகப் புத்தியில் நம்பிக்கை இருப்பதால், அது நிச்சயம் அவ்வாறு ஆகும். உங்களில் உறுதியாக இருப்பவர்கள் அங்கே முதலில் செல்வார்கள், பலவீனமானவர்கள் பின்னர் செல்வார்கள். ஆத்மாக்கள் அனைவரும் முதலில் அசரீரி உலகில் வசிக்கிறார்கள், பின்னர் அவர்கள் கீழே வருகின்றபொழுது, சனத்தொகை அதிகரிக்கிறது. ஓர் ஆத்மாவினால் எவ்வாறு சரீரமில்லாது தனது பாகத்தை நடிக்க முடியும்? இது நடிகர்களின் உலகம், அது தொடர்ந்தும் நான்கு யுகங்களினூடாகச் சுழல்கின்றது. சத்தியயுகத்தில் நாங்கள் தேவர்களாக இருந்தோம், பின்னர் நாங்கள் சத்திரியர்கள், வைசியர்கள், பின்னர் சூத்திரர்களாக ஆகினோம். இது இப்பொழுது அதிமங்களகரமான சங்கமயுகமாகும். இந்த யுகம் தந்தை வருகின்றபொழுது, இப்பொழுது மாத்திரமே இருக்கின்றது. எல்லையற்ற தந்தை மாத்திரமே இந்த எல்லையற்ற ஞானத்தைக் கொடுக்கின்றார். சிவபாபாவுக்குப் பெயர் கொடுப்பதற்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. இந்தச் சரீரம் இந்த தாதாவுக்கு உரியது. பாபா குறுகிய காலத்திற்கு அதைக் கடனாகப் பெற்றுள்ளார். தந்தை கூறுகின்றார்: உங்களுடன் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய் தேவை. தந்தைக்கு ஒரு வாய் இல்லாவிடின் எவ்வாறு தந்தையால் தனது குழந்தைகளுடன் பேச முடியும்? நான் இந்த வாய் மூலம் உங்களுக்கு எல்லையற்ற ஞானத்தைக் கொடுக்கின்றேன். இதனாலேயே அவரது வாய் “கௌமுக்”; (பசுவின் வாய்) என அழைக்கப்படுகின்றது. நீர் மலைகளில் எங்கிருந்தும் வெளியாக முடியும், எனவே நீர் வெளியாகும் இடங்களில் இங்கே அவர்கள் “கௌமுக்கை” உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் அதைக் கங்கை நீர் எனக் கருதி, அதைப் பருகுகிறார்கள். அவர்கள் அந்த நீருக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இந்த உலகிலுள்ள அனைத்துமே பொய்யானது. ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றார். எவ்வாறாயினும், பொய்மையான மக்கள் தந்தையின் இந்த ஞானத்தைப் பொய்யென்று கருதுகிறார்கள். பாரதம் சத்தியயுகத்தில் இருந்தபொழுது, அது சத்தியபூமி என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது அந்தப் பாரதம் பழையதாகி விட்டது. அனைத்துமே பொய்மையாகி விட்டது. அத்தகைய பெரும் வித்தியாசம் உள்ளது! தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை அதிகளவு அவதூறு செய்துள்ளீர்கள்! நீங்கள் என்னைச் சர்வவியாபி என அழைப்பதனால், என்னை அவமதித்து, அவதூறும் செய்துள்ளீர்கள். நீங்கள் சிவபாபாவைக் கூவியழைத்தீர்கள்: இப்பழைய உலகிலிருந்து எங்களை அப்பால் அழைத்துச் செல்லுங்கள். தந்தை கூறுகின்றார்: காமச் சிதையில் அமர்ந்ததால் எனது குழந்தைகள் அனைவரும் ஏழைகளாகி விட்டார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் பேசிக் கூறுகின்றார்: நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் இதை நினைவுசெய்கின்றீர்களா? அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இதை விளங்கப்படுத்துகின்றார். அவர் இதை முழு உலகிற்கும் விளங்கப்படுத்துவதில்லை, ஏனெனில் தந்தை கூறுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கின்றீர்கள். இதனைப் பற்றி உலகிற்கு என்ன தெரியும்;? காமமே மிகப்பெரிய முள்ளாகும். இந்த உலகின் பெயரே தூய்மையற்ற உலகமாகும், ஆனால் சத்தியயுகம் 100மூ தூய உலகமாகும். மனிதர்கள் அத் தூய தேவர்களின் முன்னால் சென்று தலைவணங்குகிறார்கள். பல பக்தர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தபொழுதிலும், விகாரத்தில் ஈடுபடாமல் இருக்கிறார்கள் என்றில்லை. பலர் குழந்தைப் பருவத்திலிருந்தே பிரம்மச்சாரிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே அழுக்கான உணவுகளையும் உண்பதில்லை. சந்நியாசிகளும் கூறுகின்றார்கள்: விகாரமற்றவர்கள் ஆகுங்கள்! சந்நியாசிகள் தங்கள் குடும்பங்களையும் வீடுகளையும் துறக்கின்றார்கள்; பின்னர் அவர்கள் தங்கள் அடுத்த பிறவியில் இல்லறத்தினருக்குப் பிறந்து, மீண்டும் ஒருமுறை தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் துறந்து, காடுகளுக்குச் செல்கின்றார்கள். எவ்வாறாயினும், தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவது அவர்களுக்குச் சாத்தியமா? இல்லை; தூய்மையாக்குபவராகிய தந்தையின் ஸ்ரீமத் கொடுக்கப்படாமல் எவரும் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக முடியாது. பக்திமார்க்கம் கீழிறங்குவதற்கான பாதையாகும். எனவே எவ்வாறு அவர்கள் தூய்மையானவர்களாக ஆகமுடியும்? அவர்கள் தூய்மையாகியிருந்தால் அவர்களால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவும், பின்னர் சுவர்க்கத்துக்குச் செல்லவும் முடியும். சத்தியயுகத்துத் தேவர்கள் எப்பொழுதாவது தங்களது வீடுகளையும், குடும்பங்களையும் துறக்கிறார்களா? சந்நியாசிகளின் துறவறம் எல்லைக்குட்பட்டது. ஆனால் உங்கள் துறவறம் எல்லையற்றது. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் உட்பட, நீங்கள் முழு உலகையும் துறக்கின்றீர்கள். சுவர்க்கம் இப்பொழுது உங்களுக்காகவே ஸ்தாபிக்கப்படுகின்றது. உங்கள் புத்தி இப்பொழுது சுவர்க்கத்தை நோக்கியுள்ளது. மக்கள் இன்னமும் நரகத்தில் தொங்கியவாறு இருக்கின்றார்கள். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் நினைவில் இருக்கின்றீர்கள். குளிர்மைத் தேவிகள் ஆகுவதற்கு, நீங்கள் ஞானச் சிதையில் அமர்த்தப்பட்டுள்ளீர்கள். “குளிர்மை” எனும் வார்த்தைக்கு எதிர்ப்பதமாக “நெருப்பு” (வெப்பம்) என்ற வார்த்தை உள்ளது. நீங்கள் குளிர்மைத் தேவிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். உங்களில் ஒருவர் மாத்திரம் இருப்பதில்லை. நிச்சயமாகப் பாரதத்தைக் குளிர்மையாக்கிய பலர் இருக்கவேண்டும். தற்பொழுது, அனைவரும் காமச்சிதையில் எரிந்து கொண்டிருக்கின்றார்கள். இங்கேயே நீங்கள் குளிர்மைத் தேவிகள் எனப் பெயரிடப்பட்டுள்ளீர்கள். நீங்களே அனைவர் மீதும் ஞானம் எனும் குளிர்ந்த துளிகளைத் தெளித்து, அனைவரையும் குளிர்மையாக்கும் தேவிகள். பக்தர்கள் நீர்த் துளிகளைத் தெளிப்பதற்காகச் செல்கின்றார்கள், ஆனால் இங்கே ஆத்மாக்கள் மீது ஞானத்துளிகள் தெளிக்கப்படுகின்றன. ஆத்மாக்கள் தூய்மையாகும்பொழுது அவர்கள் குளிர்மையடைகின்றார்கள். முழு உலகிலுள்ள ஆத்மாக்களும் காமச்சிதையில் அமர்ந்ததால், இப்பொழுது அவலட்சணமானவர்கள் ஆகிவிட்டார்கள். குழந்தைகளாகிய உங்களிடம்; இப்பொழுது ஞானக் கலசம் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கலசத்தினால்;, நீங்களும் குளிர்மையாகுவதுடன், மற்றவர்களையும் குளிர்மையாக்குகின்றீர்கள். இவரும் குளிர்மை ஆகியுள்ளார். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக வசிக்கின்றார்கள். அது உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் நீங்கிச்; செல்வதென்ற கேள்வியே இல்லை. எவ்வாறாயினும், ஆரம்பத்தில் அந்த மாட்டுக் தொழுவம் உருவாக்கப்பட்டபொழுது சிலர் நிச்சயமாகத் தங்கள் வீடுகளை நீங்கிச் சென்றார்கள். எதற்காக? ஞானச்சிதையில் அமர்ந்து குளிர்மை ஆகுவதற்காக ஆகும். இங்கே நீங்கள் குளிர்மையாகும்பொழுது மாத்திரமே அங்கே உங்களால் தேவர்கள் ஆகமுடியும். குழந்தைகளாகிய உங்கள் புத்தியின் யோகம் உங்கள் பழைய வீடுகளை நோக்கிச் செல்லக்கூடாது. நீங்கள் அனைவரும் தந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல இருப்பதால், உங்கள் புத்தி தந்தையைப் பற்றிக் கொள்ள வேண்டும். தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, நான் உங்கள் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு உங்கள் வழிகாட்டியாக வந்துள்ளேன். நீங்களே சிவசக்தி பாண்டவ சேனை. நீங்களே சர்வசக்திவான் சிவனிடமிருந்து சக்தியைப் பெறுபவர்கள். பரமாத்மாவினால் மரணித்;த மக்களை உயிர்ப்பிக்க முடியும் என மக்கள் நினைக்கிறார்கள் எவ்வாறாயினும், தந்தை கூறுகின்றார்: எனது அன்புக்குரிய குழந்தைகளே, இந்த நாடகத்தில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அவரது சொந்த அநாதியான பாகம் நடிப்பதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. நானே படைப்பவரும், இயக்குநரும், பிரதான நடிகருமாவேன். இந்த நாடகத்தில் எவரது பாகத்தையும் என்னால் மாற்ற முடியாது. பரமாத்மாவின் கட்டளைகளின்படியே ஒவ்வோர் இலையும் அசைகின்றது என மக்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும், பரமாத்மாவே கூறுகின்றார்: நானும் நாடகத்தில் தங்கியிருக்கின்றேன்;. நான் அதனால் கட்டுப்பட்டுள்ளேன். எனது கட்டளைகளின் படி இலைகள் அசைகின்றன என்றில்லை. சர்வவியாபி என்ற கருத்து பாரத மக்களை முற்றிலும் ஏழைகள் ஆக்கிவிட்டது. தந்தை கொடுக்கின்ற ஞானத்தின் மூலம் பாரதம் மீண்டும் ஒருமுறை கிரீடம் அணிந்ததாக ஆகுகின்றது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஆரம்பத்திலேயே, சூரிய வம்சம்சத்திற்குள் செல்வதற்கு, உங்கள் புத்தி நம்பிக்கையைக் கொண்டிருந்து முழுப் புள்ளிகளையும் கோரட்டும். ஓர் உறுதியான பிராமணர் ஆகுங்கள். இந்த எல்லையற்ற ஞானத்தை உங்கள் உணர்விலே வைத்திருங்கள்.
2. ஞானச்சிதையில் அமர்ந்திருந்து குளிர்மையானவர்கள், அதாவது, தூய்மையானவர்கள் ஆகுங்கள். ஞானம், யோகம் மூலம் காமத் தீயை அணையுங்கள். உங்கள் புத்தியின் யோகம் சதா ஒரேயொரு தந்தையுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்;டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அற்புதங்களைக் காட்டுவதற்குப் பதிலாக, அழிவற்ற பாக்கியத்தையுடைய பிரகாசிக்கும் நட்சத்திரங்களை உருவாக்குகின்ற, ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.இறுதியில் மேலிருந்து கீழே வந்துள்ளதால், இந்நாட்களில், சிலர் தற்காலிகமான சக்திகளைக் கொண்டுள்ளனர். அவர்களின் தூய்மையின் பெறுபேறாக அவர்கள் ஒரு சதோபிரதான் ஸ்திதியைக் கொண்டிருந்து, எல்லைக்குட்பட்ட தற்காலிகமான அற்புதங்களைக் காட்டுகின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் சதோ, இரஜோ, தமோ எனும் மூன்று ஸ்திதிகளையும் ஒரு குறுகிய காலத்தில் கடந்து செல்வதால், அந்த வெற்றி சதாகாலமும் நீடிப்பதில்லை, தூய ஆத்மாக்களாகிய நீங்கள் எப்பொழுதும் வெற்றி சொரூபங்கள், அற்புதங்களைக் காட்டுவதற்குப் பதிலாக, நீங்கள் ஆத்மாக்களைப் பிரகாசிக்கும் ஒளியையுடைய, புள்ளி ரூபங்களாக ஆக்குகின்றீர்கள். நீங்கள் அழிவற்ற பாக்கியத்தையுடைய பிரகாசிக்கும் நட்சத்திரங்களை உருவாக்குகின்றீர்கள், இதனாலேயே அனைவரும் உங்களிடமிருந்து ஒரு துளியைப் பெறுவதற்கு வருவார்கள்.
சுலோகம்:
எல்லையற்ற விருப்பமின்மை எனும் சூழல் இருக்கட்டும், நீங்கள் ஒத்துழைப்பவர்களாகவும் இலகுயோகிகளாகவும் ஆகுவீர்கள்.