27.04.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பரலோகத் தந்தையிடமிருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் பெறுவதற்கு, வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போது உங்களிடமுள்ள அனைத்தையும் பரிமாற்றம் செய்யுங்கள். இது மிகப் பெரியதொரு வியாபாரமாகும்.
கேள்வி:
நாடகத்தின் ஞானம் எவ்விடயத்தில்; குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு உதவுகிறது?
பதில்:
உங்கள் சரீரம் நோயுற்று இருக்கும்போது, நாடகத்தின் ஞானம் உங்களுக்கு அதிகளவில் உதவுகின்றது, ஏனெனில் இந்த நாடகம் இவ்வாறே மீண்டும் அதேமாதிரி இடம்பெறும் என்பது உங்களுக்குத் தெரியும். இதனையிட்டு அழுது புலம்ப வேண்டிய அவசியமில்லை. கர்மக் கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். 21 பிறவிகளின் சந்தோஷத்துடன் ஒப்பிடும்போது, இந்தத் துன்பத்தின் அனுபவம் எதுவுமே இல்லை. ஞானம் முழுமையாக இல்லாதிருந்தால்; உங்களுக்கு அசௌகரியம் ஏற்படுகின்றது.
ஓம் சாந்தி.
கடவுள் பேசுகிறார்: ஒரேயொருவரான கடவுள் தனக்கெனச் சொந்தச் சரீரம் இல்லாதவர்;. கடவுளுக்குப் பெயர், வடிவம், இடம், காலம் இல்லை என்றில்லை; இல்லை. கடவுள் தனக்கெனச் சொந்தச் சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. ஏனைய ஆத்மாக்கள் அனைவருக்கும் அவர்களுக்கென சொந்தச் சரீரம் உண்டு. இப்பொழுது தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, இங்கமர்ந்திருக்கும்போது உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். எவ்வாறாயினும், ஆத்மாவே செவிமடுத்து, ஒரு பாகத்தை நடித்து சரீரத்தின் மூலம் செயற்படுகிறார். ஆத்மாவிலேயே சம்ஸ்காரங்களும் உள்ளன. சரீரத்தின் மூலமாக ஆத்மாவே நல்ல, தீய செயல்களின் பலனை அனுபவம் செய்கிறார். ஒரு சரீரமின்றி எவராலும் எதனையும் (விளைவின் வேதனையை) அனுபவம் செய்ய முடியாது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு இங்கு அமர்ந்திருங்கள். பாபா எங்களுக்கு ஞானத்தை உரைக்கின்றார். ஆத்மாவாகிய நான் இச்சரீரத்தின் மூலம் செவிமடுக்கின்றேன். கடவுள் பேசுகின்றார்: மன்மனாபவ! உங்கள் சரீரம் உட்பட, சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். கீதையின் கடவுளான ஒரேயொரு தந்தையே இதனை உங்களுக்குக் கூறுகின்றார். கடவுள் என்றால் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்ட ஒரேயொருவர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எனது பிறப்பு அலௌகீகமானது. நான் இவரில் பிரவேசிப்பது போன்று வேறெவரும் இவ்வாறாகப் பிறப்பு எடுப்பதில்லை. இதனை நீங்கள் மிகவும் நன்றாக நினைவில் கொண்டிருக்க வேண்டும். கடவுள் அனைத்தையும் செய்கிறரார் என்றோ, அவர் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவரும், பூஜிக்கப்படுபவரும் என்றோ, அல்லது அவர் கற்களிலும், கூழாங்கற்களிலும் இருக்கின்றார் என்றோ இல்லை. ஒரு முதலையாகவும் ஒரு மீனாகவும் அவதாரம் எடுத்துள்ளாரென்றும், பரசுராமன் (கோடரியுடன் இராமர்) போன்ற 24 அவதாரங்களையும் அவர்கள் காட்டியுள்ளார்கள். கடவுள் பரசு இராம அவதாரம் எடுத்துக் கோடரியினால் வன்முறையில் ஈடுபடுவாரா என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அது பிழையாகும். கடவுள் சர்வ வியாபி என்று கூறியது போலவே, சக்கரத்தின் கால எல்லையையும் நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்று அவர்கள் எழுதியுள்ளார்கள். இது காரிருள் என அழைக்கப்படுகிறது. அதாவது அவர்களிடம் ஞானம் இல்லை. ஞானத்தின் மூலமே ஒளி கிடைக்கிறது. இப்பொழுது அறியாமை என்ற காரிருள் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பேரொளிக்குள் இருக்கிறீர்கள். உங்களுக்கு அனைவரையும் நன்றாகத் தெரியும். ஞானத்தைக் கொண்டிராதவர்கள் தொடர்ந்தும் வழிபாடு போன்றவற்றைச் செய்கின்றார்கள். இப்பொழுது உங்களுக்கு அனைவரையும் தெரியும் என்பதால் எவரையும் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் இப்பொழுது வழிபாடு செய்வதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்த நீங்கள் பின்னர் பூஜை செய்யும் மனிதர்களாகி விட்டீர்கள். மனிதர்கள் அசுர கட்டளைகளைக் கொண்டுள்ளனர். இதனாலேயே பாடப்பட்டுள்ளது: மனிதர்கள் தேவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். “மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.” அவர் உங்களை ஒரு விநாடியில் தேவர்கள் ஆக்குகிறார். தந்தையை நீங்கள் இனங்கண்டு கொண்டதும் அவரை சிவபாபா என்று அழைக்க ஆரம்பித்து விட்டீர்கள். “பாபா” என்று கூறுவதன் மூலம், நீங்கள் உலக அதிபதிகளும், சுவர்க்க அதிபதிகளும் ஆகுகின்றீர்கள் என்பதை உங்கள் இதயம் புரிந்துகொள்கின்றது. அந்த ஒரேயொருவரே எல்லையற்ற தந்தை. இப்பொழுது நீங்கள் வந்து உடனடியாகவே தந்தைக்கு உரியவர்களாகியுள்ளீர்கள். அப்பொழுது தந்தை கூறுகிறார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதும் பரலோகத் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் லௌகீக ஆஸ்தியை நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்கள். இப்பொழுது லௌகீக ஆஸ்தியுடன், பரலோகத் தந்தையிடமிருந்து பெற்ற ஆஸ்தியைப் பரிமாற்றம் செய்யுங்கள். இது நல்லதொரு வியாபாரமாகும். ஒரு லௌகீக ஆஸ்தி எவ்வாறு இருக்கும்? இது ஓர் எல்லையற்ற ஆஸ்தியாகும். அதனை ஏழைகளும் விரைவில் பெறக்கூடியதாக உள்ளது. அவர் ஏழைகளை ஏற்றுக் கொள்கிறார். தந்தையே ஏழைகளின் பிரபு. நினைவுகூரப்படுகின்றது: நானே ஏழைகளின் பிரபு. அனைத்திலும் பாரதமே மிக ஏழ்மையானது. நான் பாரதத்தில் வருகிறேன். நான் வந்து அதனைச் செல்வம் மிக்கதாக்குகிறேன். பாரதத்தின் புகழ் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது அனைத்திலும் மிகச் சிறந்த யாத்திரைத் தலம் ஆகும். எனினும், சக்கரத்தின் கால எல்லை மிக நீண்டது எனக் கூறுவதனால், அவர்கள் இதனை முற்றிலும், மறந்து விட்டார்கள். செல்வமிக்கதாக இருந்த அந்த பாரதமே இப்பொழுது ஏழ்மை நிலையை அடைந்துவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். முன்னர் இங்கிருந்தே தானியம் போன்ற அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கமாகும். அந்தப் பாரதம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்துள்ளதால் அவர்கள் உதவுகிறார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். அது அவ்வாறாக உள்ளது. ஒரு முக்கியஸ்தர் தோல்வியுறும்போது, அவருக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என மக்கள் தங்களுக்கிடையில் தீர்மானிப்பார்கள். இப்பாரதமே அனைத்திலும் அதி புராதனமானது. பாரதமே சுவர்க்கமாக இருந்தது. முதலில் அங்கு ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. அவர்கள் அதன் கால எல்லையை நீடித்து விட்டதனால் குழப்பம் அடைந்துள்ளார்கள். அவர்கள் பாரதத்திற்குப் பெருமளவில் உதவி செய்கின்றார்கள். தந்தையும் பாரத்திற்கே வரவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்தே உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். இவர் (பிரம்மா) செய்தது போன்று நீங்கள் உங்கள் லௌகீகத் தந்தையிடமிருந்து பெற்ற உங்கள் ஆஸ்தியைப் பரலோகத் தந்தையிடமிருந்து பெற்ற ஆஸ்தியுடன் பரிமாற்றம் செய்கிறீர்கள். பாருங்கள், நீங்கள் உங்கள் பரலோகத் தந்தையிடமிருந்து ஒரு கிரீடத்தையும் ஒரு சிம்மாசனத்தையும் பெறுகிறீர்கள். இந்த இராச்சியத்திற்கும், அந்தக் “கழுதைத்தனத்துக்கும்” இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. கூறப்பட்டுள்ளது: தந்தையைப் பின்பற்றுங்கள். பட்டினியால் மரணித்தல் என்ற கேள்வியே இல்லை. தந்தை கூறுகிறார்: அனைத்தையும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகப் பாராமரியுங்கள். தந்தை வந்து உங்களுக்கு ஓர் இலகுவான பாதையைக் காட்டுகின்றார். குழந்தைகள் பல சிரமங்களை எதிர் கொண்டதால், அவர்கள் தந்தையைக் கூவியழைக்கிறார்கள்: ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே, கருணை காட்டுங்கள். சந்தோஷம் நிலவுகின்ற காலத்தில் எவருமே தந்தையை நினைவுசெய்வதில்லை. துன்பம் சூழும் நேரத்திலேயே அனைவரும் அவரை நினைவுசெய்கிறார்கள். தந்தை இப்பொழுது தன்னை எவ்வாறு நினைவுசெய்வது என்பதை உங்களுக்குக் காட்டுகின்றார். உங்களுக்கு அவரை எவ்வாறு நினைவு செய்வது என்பதும் தெரியாது. நானே வந்து உங்களுக்குக் காட்டுகிறேன். குழந்தைகளே, உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, பரலோகத் தந்தையை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பாபாவை நினைவுசெய்வதனால் சந்தோஷத்தைப் பெறுவதுடன் சரீரத்தின் சகல வேதனைகளும் முடிவடைந்து விடும். ஆத்மாக்களாகிய நீங்களும், உங்கள் சரீரங்கள் ஆகிய இரண்டும் தூய்மை ஆகிவிடும். நீங்கள் அதி தூய்மையாக இருந்தீர்கள். பின்னர், மறுபிறவிகள் எடுக்கையில், ஆத்மாக்கள் துருவினால் மூடப்பட்டு விட்டனர். பின்பு, அவர்கள் கலப்படம் கலந்த தங்கத்தைப் போன்றதொரு பழைய சரீரத்தைப் பெற்றார்கள். தூய தங்கத்தினால் செய்யப்பட்ட ஆபரணம் தூயதாகவே இருக்கும். அதில் அத்தகைய பிரகாசம் இருக்கும். கலப்படம் கலந்த ஆபரணம் மங்கிவிடும். தந்தை கூறுகிறார்: உங்களுக்குள்ளும் கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அது அகற்றப்பட வேண்டும். அது எவ்வாறு அகற்றப்படும்? தந்தையுடன் யோகம் செய்யுங்கள். உங்களுக்கு கற்பிக்கின்ற அந்த ஒரேயொருவருடன் யோகம் செய்ய வேண்டும். அந்த ஒரேயொருவரே தந்தை, ஆசிரியர், சற்குரு அனைத்தும் ஆவார். அவரை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்;படும். அவரும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவரும், சர்வசக்திவான் என்றும் அழைக்கிறீர்கள். தந்தை உங்களுக்கு ஒவ்வொரு சக்கரத்திலும் அவ்வாறே விளங்கப்படுத்துகின்றார். இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, நீண்ட நாட்கள் தொலைந்திருந்து, இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளாகிய நீங்கள் 5000 வருடங்களின் பின்னர் வந்து என்னைச் சந்தித்துள்ளீர்கள். இதனாலேயே நீங்கள் நீண்ட நாள் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டவர்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். இப்பொழுது அந்தச் சரீரத்தின் அகங்காரத்தைத் துறந்து ஆத்ம உணர்வுடையவராகுங்கள். தந்தையைத் தவிர வேறெவராலும் கொடுக்க முடியாத, ஆத்ம ஞானம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் எவருக்குமே ஆத்ம ஞானம் இல்லை. சந்நியாசிகள், புனிதர்கள், குருமார்கள் போன்ற எவருமே இதனை அறியமாட்டார்கள். இப்பொழுது அவர்களிடம் அத்தகைய வல்லமை இல்லை. அனைவருடைய வல்லமையும் குறைக்கப்பட்டுள்ளது. முழு விருட்சமும், முற்றிலும் உக்கிய நிலையை அடைந்துள்ளது. இப்பொழுது புதியதொன்று ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தை வந்து பல்வகை விருட்சத்தின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகிறார்: முன்னர், நீங்கள் இராம இராச்சியத்தில் இருந்தீர்கள். பின்னர் பாவப் பாதையில் நீங்கள் சென்றபோது இராவண இராச்சியம் ஆரம்பமாகியது, பின்னர் ஏனைய சமயங்களும் தோன்றின, அதாவது பக்திமார்க்கம் ஆரம்பித்தது. முன்னர் நீங்கள் இதனை அறிந்திருக்கவில்லை. சென்று எவரிடமும் வினவுங்கள்: உங்களுக்கு படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் தெரியுமா? எவராலும் உங்களுக்குக் கூற முடியாது. தந்தை பக்தர்களுக்குக் கூறுகிறார்: இப்பொழுது நீங்களே தீர்மானியுங்கள். நீங்கள் பலகைகளிலும் எழுதலாம்: நாடகத்தின் இயக்குனரையும், படைப்பவரையும், கதாநாயகரையும் தெரியாத நடிகரை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்? ஆத்மாக்களாகிய நாங்கள் இங்கு வந்து, வெவ்வேறு பாகங்களை நடிப்பதற்காகவே சரீரங்களை ஏற்றுள்ளோம். எனவே, இது நிச்சயமாக ஒரு நாடகமாகும். கீதையே தாய், சிவன் தந்தை, ஏனைய அனைத்தும் படைப்புக்களும் ஆகும். கீதையின் மூலமாகவே புதிய உலகம் படைக்கப்பட்டுள்ளது. புதிய உலகம் எவ்வாறு உருவாக்கப்பட்டதென எவருக்கும் தெரியாது. முதன் முதலில், நீங்கள் மாத்திரமே புதிய உலகில் இருந்தீர்கள். இப்பொழுது இது அதி மங்களகரமான சங்கம யுக உலகமாகும். இது பழைய உலகமும் அல்ல, புதிய உலகமும் அல்ல. இதுவே சங்கமயுகம் ஆகும். இதுவே பிராமணர்களின் உச்சிக்குடுமியாகும். பல்வகை ரூபத்தில் அவர்கள் சிவபாபாவையோ அல்லது உச்சிக்குடுமி பிராமணர்களையோ காட்டவில்லை. நீங்கள் உச்சிக்குடுமியை மேலே காட்டியுள்ளீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். தேவர்களின் பின் சத்திரியர்கள் உள்ளார்கள். துவாபர யுகத்தில் அவர்கள் வயிற்றை வழிபடுபவர்கள் (பல்வகை ரூபத்தில் காட்டும்போது வைசியர்கள் வயிற்றினால் குறிப்பிடப்படுகிறார்கள்). பின்னர் அவர்களே சூத்திரர்கள் ஆகுகிறார்கள். இது ஒரு குத்துக்கரணமாகும். நீங்கள் குத்துக்கரணத்தை நினைவுசெய்ய வேண்டும். இதுவே உங்களுக்கான 84 பிறவிகளின் யாத்திரை. நீங்கள் அனைத்தையும் ஒரு விநாடியில் நினைவுசெய்கிறீர்கள். நாங்கள் இவ்வாறே சக்கரத்தைச் சுற்றி வருகிறோம். இந்த வடிவம் சரியானது, அந்த வடிவம் பிழையானது. தந்தையைத் தவிர வேறு எவராலும் சரியான படத்தைச் செய்ய முடியவில்லை. தந்தை இவரினூடாக விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இவ்வாறே குத்துக்கரணம் அடிக்கிறீர்கள். உங்கள் யாத்திரை ஒரு வினாடியில் இடம்பெறுகின்றது. சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குத்; தந்தையே கற்பிக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். இந்தச் சத்தியத்தின் சகவாசமே (சத்சங்) உண்மையான தந்தை ஆவார். ஏனைய சகவாசம் பொய்யானது. தந்தை சத்திய பூமியை ஸ்தாபிக்கின்றார். மனிதர்கள் அத்தகைய சக்தியைக் கொண்டிருக்கவில்லை. அதனைக் கடவுளால் மாத்திரமே செய்ய முடியும். கடவுள் மாத்திரமே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். இது பரமாத்மாவின் புகழ் என்பது சாதுக்களுக்கும் புனிதர்களுக்கும் தெரியாது. அந்த அமைதிக்கடலே உங்களுக்கு அமைதியைக் கொடுக்கின்றார். நீங்கள் காலையிலும் இந்தப் பயிற்சியைச் செய்கிறீர்கள். நீங்கள் சரீரத்தில் இருந்து விடுபட்டுத் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கிறீர்கள். நீங்கள் மரணித்து வாழ்வதற்கே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் உங்களையே தந்தைக்கு அர்ப்பணிக்கின்றீர்கள். இதுவே பழைய உலகமும், பழைய ஆடையும் என்பதால் நீங்கள் அதில் விருப்பமின்மையைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதனை விட்டு விலகிச் செல்ல விரும்புகிறீர்கள். நீங்கள் எதையும் நினைவுசெய்யக்கூடாது. நீங்கள் அனைத்தையும் மறந்து விட்டீர்கள். கடவுளே அனைத்தையும் கொடுத்தார் என நீங்களே கூறுகிறீர்கள். ஆகவே, இப்பொழுது அதனை மீண்டும் அவரிடமே கொடுத்து விடுங்கள். பின்னர், கடவுள் உங்களுக்குக் கூறுகிறார்: ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுங்கள். கடவுள், நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுவதில்லை. நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகிய பின்னர் எப்பாவமும் செய்ய மாட்டீர்கள். முன்பு பாவாத்மாக்களின் கொடுக்கல் வாங்கல் பாவாத்மாக்களுடனேயே இருந்தது. இப்பொழுது சங்கம யுகத்தில் உங்கள் பரிமாற்றங்கள் பாவாத்மாக்களுடன் அல்ல, நீங்கள் பாவாத்மாக்களுக்குத் தானம் செய்தால், அந்தப் பாவம் உங்கள் கணக்கிலேயே சேமிக்கப்படும். நீங்கள் கடவுளின் பெயரால் பாவாத்மாக்களுக்குக் கொடுக்கிறீர்கள். தந்தை எதனையுமே எடுப்பதில்லை. தந்தை கூறுவார்: நீங்கள் சென்று ஒரு நிலையத்தைத் திறந்தால் பலர் நன்மையடைவார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நாடகத்திற்கேற்ப, எது நிகழ்ந்ததோ அது தொடர்ந்தும் அதேபோன்று மீண்டும் இடம்பெறும். எனவே, அழுது புலம்புவது என்ற கேள்விக்கே இடமில்லை. கர்மக் கணக்குகள் தீர்க்கப்படுவதும் நல்லதே. மூலிகை வைத்தியர்கள் கூறுகிறார்கள்: அனைத்து நோய்களும் வெளித்தோன்றும். தந்தையும் கூறுகிறார்: எஞ்சியிருக்கின்ற கர்மக் கணக்குகள் அனைத்தும் யோகத்தினால் அல்லது தண்டனையினால் தீர்க்கப்பட வேண்டும். தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். தண்டனையிலும் பார்க்க நோய் போன்றவற்றின் மூலம் கணக்குகளைத் தீர்ப்பதே சிறந்தது. 21 பிறவிகளின் சந்தோஷத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அத்துன்பம் எதுவுமேயல்ல என்பது போல் அனுபவம் செய்யப்படும். ஏனெனில் அங்கு அதிகளவு சந்தோஷம் உள்ளது. முழு ஞானமும் இல்லாவிடின் நோயின் அசௌகரியங்களும் இருக்கும். எவராவது நோயுற்றால், அவர் கடவுளைப் பெருமளவில் நினைவுசெய்வார். அதுவும் நல்லதே. நீங்கள் ஒரேயொருவரையே நினைவுசெய்ய வேண்டும். அவரும் உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார். அம்மக்கள் குருமார் போன்றவர்களை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் பல குருமார்களைக் கொண்டுள்ளார்கள். நீங்கள் ஒரு சற்குருவை மாத்திரமே அறிவீர்கள். அவரே சர்வசக்திவான். தந்தை கூறுகிறார்: அந்த வேதங்கள், கிரந்தங்கள் போன்றவற்றை நான் அறிவேன். அவையே பக்தி மார்க்கத்துச் சம்பிரதாயங்கள். அவற்றின் மூலம் எவருமே என்னை அடைய முடியாது. தந்தை பாவாத்மாக்களின் உலகிற்குள் வருகிறார். அங்கு எவ்வாறு புண்ணியாத்மாக்கள் இருக்க முடியும்? 84 பிறவிகள் முழுமையாக எடுத்தவரின் சரீரத்திலேயே நான் பிரவேசிக்கிறேன். இவரே அனைத்தையும் முதலில் செவிமடுக்கிறார். பாபா கூறுகிறார்: நீங்கள் இங்கே நினைவு யாத்திரையில் மிக நன்றாக நிலைத்திருக்க முடியும். இங்கும் புயல்கள் வந்தாலும், தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் முன்னைய சக்கரத்திலும் இவ்வாறு ஞானத்தைக் கேட்டீர்கள். நீங்கள் தொடர்ந்தும் நாளாந்தம் செவிமடுக்கிறீர்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. பழைய உலகமும் அழிக்கப்பட வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அதிகாலையில் எழுந்து, சரீரத்திலிருந்து விடுபடுவதற்கான அப்பியாசத்தைச் செய்யுங்கள். பழைய உலகையோ அல்லது பழைய ஆடையையோ நினைவு செய்யாதீர்கள். நீங்கள் அனைத்தையும் மறந்து விட வேண்டும்.
2. சங்கமயுகத்தில், பாவாத்மாக்களுடன் உங்கள் கொடுக்கல் வாங்கல் இருக்கக்கூடாது. கர்மக் கணக்குகளைச் சந்தோஷமாகத் தீர்த்து விடுங்கள். அழுது புலம்பாதீர்கள். தந்தையிடம் அனைத்தையும் அர்ப்பணித்து, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக அனைத்தையும் பராமரியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் நன்மை பயக்கும் உணர்வுகளுடன் எச் சூழ்நிலையையும் பார்ப்பதனால் அல்லது அதைப் பற்றிக் கேள்விப்படுவதனால், பிறரைப் பார்ப்பதிலிருந்து விடுவிக்கப்படுவீர்களாக.
ஓன்றுகூடல் பெரிதாகும் அளவுக்குச் சூழ்நிலைகளும் பெரிதாக இருக்கும். எவ்வாறாயினும், உங்கள் பாதுகாப்பு பார்த்தும் பாராமல் இருப்பதிலும், கேட்டும் கேளாமல் இருப்பதிலுமே தங்கியுள்ளது. உங்களுக்காகத் தூய்மையான, ஆக்கபூர்மான எண்ணங்களைக் கொண்டிருங்கள். தனக்காகத் தூய்மையான ஆக்கபூர்வமான எணண்ங்களைக் கொண்டிலுருக்கும் ஆத்மாவானவர் பிறரைப் பார்ப்பதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கின்றார். எக் கரணத்தினாலும் நீங்கள் பிறரைச் செவிமடுக்க வேண்டியிருந்து உங்களைப் பொறுப்பானவராகக் கருதும்பொழுது. அனைத்துக்கும் முதலல் உங்கள் பிரேக்கைச் சக்தி மிக்கதாக ஆக்குங்கள். நீங்கள் பார்த்தவை, கேள்வியுற்றவை அதிகளவு நன்மையையே கொண்டு வந்துள்ளன. அப்பொழுது ஒரு முற்றுப்புள்ளியை இடுங்கள்.
சுலோகம்:
ஓவ்வோர் அடியிலும் தங்கள் திருப்தியான, சந்தோஷமான வாழ்க்கையுடன் சேவை செய்பவர்களே உண்மையான சேவையாளர்கள் ஆவார்கள்.