19.07.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நினைவில் நிலைத்திருந்து உங்கள் பாவங்களை அழிப்பதற்காகவே, நீங்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள். ஆகவே, உங்கள் புத்தியின் யோகம் விரயமாகாதிருப்பதில் முழுக்கவனம் செலுத்துங்கள்.

கேள்வி:
இறுதியில் சிரமத்தை ஏற்படுத்துகின்ற சூட்சுமமான விகாரம் எது?

பதில்:
பேராசை என்ற விகாரத்தின் சூட்சும வடிவம் இருந்தாலும், பேராசையினால் நீங்கள் எதனையும் உங்களுடன் வைத்துக் கொண்டிருந்தாலும் இறுதியில் நீங்கள் அதனை நினைவு செய்வீர்கள் என்பதால் அது சிரமத்தை விளைவிக்கும். இதனாலேயே பாபா கூறுகிறார்;;;: குழந்தைகளே, உங்களுடன் எதனையும் வைத்திருக்காதீர்கள். எண்ணங்கள் அனைத்தையும் அமிழ்த்தி நினைவில் நிலைத்திருப்பதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எனவே ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.

ஓம் சாந்தி.
பாபா தினமும் குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டுகிறார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள் ஏனெனில் உங்கள் புத்தி அங்குமிங்கும் அலைந்து திரிகின்றது. அறியாமைப் பாதையில் சமயக்கதைகள் போன்றவற்றைச் செவிமடுக்கையில், அவர்களின் புத்தி வெளியே அலைந்து திரிகின்றது. இங்கேயும் புத்தி அலைந்து திரிகிறது. இதனாலேயே ஆத்ம உணர்வில் இருக்குமாறு தினமும் உங்களுக்குக் கூறப்படுகிறது. அம்மக்கள் கூறுகிறார்கள்: நாங்கள் கூறுவதில் கவனம் செலுத்தி, அதனைக் கிரகியுங்கள். சமயநூல்களில் எழுதியுள்ள வாசகங்களில் கவனம் செலுத்துங்கள். இங்கே தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்க வேண்டும். சிவபாபா உங்களுக்குக் கற்பிப்பதற்காக இங்கு வருகிறார். தங்களுக்கு சிவபாபாவே கற்பிக்கிறார் என்று கருதுகின்ற வேறு எக் கல்லூரியும் இல்லை. அத்தகைய ஒரு கல்லூரி அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே இருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது, பரமாத்மாவாகிய பரமதந்தை உங்களுக்குக் கற்பிப்பதற்காக இங்கு வருகிறார் என்பதை புரிந்து கொள்கிறீர்கள். சிவபாபா எங்களுக்குக் கற்பிப்பதற்காக வருகின்றார். அவர் விளங்கப்படுத்துகின்ற முதலாவது விடயம்: நீங்கள் தூய்மையாக வேண்டும். ஆகவே சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். எனினும் மாயை உங்களை மீண்டும் மீண்டும் மறக்கச் செய்கிறாள். இதனாலேயே தந்தை உங்களை எச்சரிக்கின்றார். எவருக்கேனும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டுமானால், கடவுள் யார், கடவுள் எங்கு உள்ளார், துன்பத்தை அகற்றி சந்தோஷத்தை அருள்பவராகிய தூய்மையாக்குபவர் யார் என்பதே நீங்கள் விளங்கப்படுத்த வேண்டிய முதலாவது விடயமாகும். அனைவருமே அவரை நினைவு செய்கிறார்கள். அவர்களுக்கு கஷ்டங்கள் வரும் போது கூறுகிறார்கள்: ஓ கடவுளே, கருணை காட்டுங்கள்! எவரேனும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின், அவர்கள் கூறுகிறார்கள்: ஓ, கடவுளே! ஓ, கடவுளே! துன்பத்திலிருந்து எங்களுக்கு விடுவியுங்கள். அனைவரும் துன்பத்தில் உள்ளார்கள். சத்தியயுகம் சந்தோஷ உலகம் என்றும், கலியுகம் துன்ப உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இது தெரியும், இருப்பினும்;, மாயை உங்களை மறக்கச் செய்கிறாள். நீங்கள் நினைவு செய்வதற்கு உங்களைத் தூண்டுகின்ற இந்த வழக்கம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், நாள்முழுவதும் நினைவைக் கொண்டிருக்காத பலர் உள்ளனர். அவர்கள் ஒரு நிமிடமேனும் நினைவு செய்யாததால், அவர்களை நினைவு செய்யத் தூண்டவே அவர்கள் இங்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். நினைவு செய்தல் உறுதியாக இருப்பதற்கு, உங்களுக்கு பல வழிமுறைகள் கொடுக்கப்படுகின்றது. தந்தையை நினைவுசெய்வதன் மூலம் நாங்கள் சதோபிரதான் ஆக வேண்டும். சதோபிரதானாகுவதற்கு முதற்தரமான, உண்மையான வழிமுறையை தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். ஒரேயொருவரே தூய்மை ஆக்குபவர். அவர் வந்து உங்களுக்கு வழிமுறையை கூறுகின்றார். தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்கும் போது, குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமைதியாக அமர்ந்திருக்கின்றீர்கள். உங்கள் புத்தியின் யோகம் அங்குமிங்கும் அலைந்து திரியும் போது, நீங்கள் அமைதியாக இருப்பதில்லை. அதாவது நீங்கள் அமைதியற்று இருக்கின்றீர்கள். எப்பொழுதும் உங்கள் புத்தியின் யோகம் அங்குமிங்கும் அலைந்து திரியும் போது அது விரயமாக்கப்படுகின்றது, ஏனெனில் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. பாவங்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றது என்பது, உலகிலுள்ளவர்களுக்குத் தெரியாது. இவை மிகவும் சூட்சுமமான விடயங்களாகும். தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: எனது நினைவில் நிலைத்திருங்கள். எனவே உங்கள் நினைவு என்ற நூல் இணைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் வெற்றி கிட்டும். உங்கள் புத்தி சிறிதளவேனும் அங்குமிங்கும் அலைந்தால், அந்த நேரம் வீணாக்கப்படுவதுடன் பலனும் இருக்கமாட்டாது. தந்தையின் வழிகாட்டல்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் என்னை நினைவு செய்யாதுவிட்டால், அதில் பலனில்லை. அதன் மூலம் என்ன நிகழும்? நீங்கள் விரைவில் சதோபிரதான் ஆகமாட்டீர்கள். அவ்வாறாயின், அப் பழக்கம் உறுதியாகி, அது தொடர்ந்து நிகழும். ஆத்மா தனது இப்பிறவியின் பாவங்களை அறிவார். அவற்றைத் தங்களால் நினைவு செய்ய முடியவில்லை என சிலர் கூறிய போதிலும் பாபா கூறுகின்றார்: நீங்கள் மூன்று நான்கு வயதிலிருந்தே அனைத்தையும் நினைவு செய்கிறீர்கள். நீங்கள் பின்னர் செய்கின்ற பாவங்களின் அளவிற்கு, ஆரம்பத்தில் நீங்கள் செய்வதில்லை. நாளுக்குநாள் உங்கள் கண்கள் குற்றமானதாகுகின்றது. திரேதாயுகத்தில், அதில் இரு கலைகள் குறைவடைகின்றது. இரு கலைகள் குறைவதற்கு சந்திரனுக்கு எவ்வளவு காலம் எடுக்கிறது? அது தொடர்ந்தும் படிப்படியாகக் குறைவடைகின்றது. பின்னர் சந்திரனும் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தது எனப்படுகின்றது. இவ்வாறு சூரியனையிட்டுக் கூறப்படுவதில்லை. சந்திரனைப் பொறுத்தவரை, இது ஒருமாதத்திற்கான விடயமாகும். ஆனால், இங்கோ இது ஒரு கல்பத்திற்கான விடயமாகும். நாளுக்குநாள், நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்குகின்றீர்கள். பின்னர் நினைவு யாத்திரையின் மூலம் நீங்கள் மேலேறுகின்றீர்கள். பின்னர் மேலேறுவதற்கு நினைவு செய்யவேண்டிய அவசியமில்லை. சத்தியயுகத்தின் பின்னர் நீங்கள் கீழிறங்க வேண்டும். சத்தியயுகத்திலும் நீங்கள் பாபாவை நினைவு செய்வீர்களாயின் நீங்கள் கீழிறங்க வேண்டியதில்லை. எனினும் நாடகத்திற்கேற்ப நீங்கள் கீழிறங்க வேண்டும். இதனாலேயே நீங்கள் பாபாவை நினைவு செய்வதில்லை. நீங்கள் நிச்சயமாகக் கீழிறங்க வேண்டும். பின்னர் நீங்கள் மேலேற வேண்டும் என்பதால், தந்தை உங்களுக்கு நினைவு செய்வதற்கான வழிமுறையைக் காட்டுகின்றார். எழுச்சிக்கான ஸ்திதி இப்பொழுது ஆரம்பித்துள்ளதால், தந்தை உங்களுக்குச் சங்கமயுகத்தில் கற்பிக்கின்றார். பின்னர் நாங்கள் எங்கள் சந்தோஷதாமத்திற்குச் செல்ல வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் சந்தோஷதாமத்திற்குச் செல்லவேண்டும் என்பதால் என்னை நினைவு செய்யவேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் உலகிலிருந்து வேறுபட்டவர்கள். வைகுந்தம் இவ்வுலகிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வைகுந்;தம் முன்பு இருந்தது. ஆனால், அது இப்பொழுது இல்லை. சக்கரத்தின் கால எல்லையை நீடிப்பதனால் அவர்கள் இதனை மறந்து விட்டார்கள். வைகுந்தம் இப்பொழுது மிகவும் அருகில் இருப்பதை குழந்தைகளாகிய நீங்கள் உணர்கின்றீர்கள். இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. நினைவு யாத்திரையில் ஏதேனும் குறைபாடு இருக்கும் போது, இன்னமும் நேரம் உள்ளது என நீங்கள் எண்ணுகிறீர்கள். தேவையான அளவிற்கு, நினைவு யாத்திரையில் இருப்பதில்லை. நாடகத் திட்டத்திற்கேற்ப செய்தியை நீங்கள் அனைவருக்கும் சென்றடையச் செய்கின்றீர்கள். நீங்கள் செய்தியை பிறருக்குக் கொடுக்காவிட்டால், நீங்கள் சேவை செய்யவில்லை என்றே அர்த்தமாகும். செய்தியை நீங்கள் உலகம் முழுவதற்கும் சென்றடையச் செய்ய வேண்டும்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். சமய நூலான கீதை ஒன்றில் மாத்திரமே மேன்மையான வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது கீதையைக் கற்றவர்களுக்குத் தெரியும். எனினும் அவை கிருஷ்ணரின் வாசகங்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். எனவே அவர்கள் யாரை நினைவு செய்வார்கள்? அவர்கள் சிவனை வழிபட்ட போதிலும், அவர்களிடம் மிகச் சரியான ஞானம் இல்லாததால், ஸ்ரீமத்தைப் பின்பற்ற முடியாதுள்ளது. இந்நேரத்தில் நீங்கள் கடவுளின் வழிகாட்டலைப் பெறுகின்றீர்கள். ஆனால், முன்னரோ நீங்கள் மனிதர்களின் வழிகாட்டல்களையே கொண்டிருந்தீர்கள். அவ் இரண்டிற்கும் பகலிற்கும் இரவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது. கடவுள் சர்வவியாபி என மனிதர்களின் வழிகாட்டல்கள் கூறுகின்றன. ஆனால், கடவுளின் வழிகாட்டல்கள் கூறுகின்றன: இல்லை! தந்தை கூறுகின்றார்: நான் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கவே வந்துள்ளேன். எனவே இது நிச்சயமாக நரகமே ஆகும். இங்கு அனைவரிலும் ஐந்து விகாரங்கள் உள்ளன. இது விகாரமான உலகம் என்பதாலேயே அதனை விகாரமற்றதாக்குவதற்காகவே நான் வந்துள்ளேன். கடவுளின் குழந்தைகள் ஆகியவர்கள் இவ்விகாரங்களைக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் படங்களில் இராவணனை பத்துத்தலைகளுடன் காட்டுகின்றார்கள். இராவணனின் உலகம் விகாரமற்றது என எவராலும் ஒருபொழுதும் கூறமுடியாது. இது இப்பொழுது இராவணனின் இராச்சியமாதலால் அனைவரிலும் ஐந்து விகாரங்களும் உள்ளன என்பதனை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகத்தில் இராம இராச்சியம் நிலவுவதால், அங்கு விகாரங்கள் எதுவுமே இல்லை. இந்நேரத்தில், மக்கள் மிகவும் சந்தோஷமற்று இருக்கிறார்கள். சரீரம் அதிகளவு வேதனையை அனுபவம் செய்கின்றது. இது துன்பபூமியாகும். சந்தோஷதாமத்தில் சரீரம் எவ்வித துன்பத்தையும் அனுபவம் செய்வதில்லை. இங்கே வைத்தியசாலைகள் பல நிறைந்தே காணப்படுகின்றன. இவ்விடத்தைச் சுவர்க்கம் எனக்கூறுவது பெரியதொரு தவறாகும். எனவே, நீங்கள் இதனைப் புரிந்து கொண்ட பின்னர், பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். அக்கல்வி பிறருக்கு விளங்கப்படுத்துவதற்கானது அல்ல. நீங்கள் உங்கள் பரீட்சையில் சித்தி எய்தி வேலை செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள். இங்கே, நீங்கள் அனைவருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும். ஒரேயொரு தந்தையால் மாத்திரம் இச்செய்தியைக் கொடுக்க முடியாது. மிகவும் திறமைசாலிகள் ஆசிரியர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். திறமை குறைந்தவர்கள் மாணவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் அனைவருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும். அவர்களிடம் வினவுங்கள்: உங்களுக்கு கடவுளைத் தெரியுமா? அவரே அனைவரினதும் தந்தையாவார். எனவே, தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே பிரதான விடயமாகும். ஏனெனில் எவருமே அதனை அறியார். தந்தையே அதிமேலானவர். அவர் ஒருவரே உலகம் முழுவதையும் தூய்மையாக்குபவர். முழு உலகுமே தூய்மையாக இருந்தது, அதில் பாரதம் மாத்திரமே இருந்தது. ஏனைய சமயத்தவர்கள் எவருமே தாங்கள் புதிய உலகத்துக்கு வந்துள்ளதாகக் கூறமாட்டார்கள். அவர்கள் தங்களுக்கு முன்னதாக எவரோ இருந்திருக்க வேண்டும் என நம்புகிறார்கள். கிறிஸ்துவும் நிச்சயமாக எவரோ ஒருவரில் பிரவேசித்திருக்க வேண்டும். அவருக்கு முன்னர் யாராவது நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: நான் இந்த பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். பிரம்மாவின் சரீரத்தில் கடவுள் பிரவேசித்துள்ளார் என்பதை எவருமே நம்புவதில்லை. ஆ! ஆனால் பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார்கள். பிராமணர்கள் எங்கிருந்து வருவார்கள்? அவர்கள் நிச்சயமாக பிரம்மாவிலிருந்தே வரவேண்டும். அச்சா, பிரம்மாவின் தந்தையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அவர் முப்பாட்டனார். அவருக்கு ஒரு பௌதீகத் தந்தை இல்லை. பிரம்மாவின் பௌதீகத் தந்தை யார்? எவராலும் உங்களுக்கு இதனைக் கூறமுடியாது. பிரம்மா நினைவு கூரப்படுகின்றார். அவரும் பிரஜாபிதா பிரம்மா ஆவார். அதே போல நீங்கள் அசரீரியான சிவபாபாவைப் பற்றிப் பேசுகின்றீர்கள். அவருடைய தந்தை யார்? அப்போது பௌதீக பிரஜாபிதா பிரம்மாவின் தந்தை யார்? சிவபாபா எவராலும் தத்தெடுக்கப்படுவதில்லை. ஆனால் இவர் தத்தெடுக்கப்படுகிறார். சிவபாபா இவரைத் தத்தெடுத்துள்ளார் எனக்கூறப்படுகிறது. சிவபாபா விஷ்ணுவைத் தத்தெடுத்துள்ளார் எனக் கூறப்படுவதில்லை. பிரம்மா, பின்னர் விஷ்ணு ஆகுகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் தத்தெடுக்கப்படவில்லை. சங்கர் எவ்விதப் பாகத்தையும் கொண்டிராதவராகக் காட்டப்படுகிறார். பிரம்மா விஷ்ணுவாகவும்;, விஷ்ணு பிரம்மாவாகவும் ஆகுகின்றார். இது 84 பிறவிகளின் சக்கரமாகும். சங்கர் எங்கிருந்து வந்தார்? அவருடைய படைப்புகள் எங்கே! தந்தையின் படைப்பும் உள்ளது. அவரே அனைத்து ஆத்மாக்களின் தந்தையாவார். ஆனால் மனிதர்கள் அனைவரும் பிரம்மாவின் படைப்பாகும். எனவே, சங்கரரின் படைப்பு எங்கே? மனித உலகம் சங்கர் மூலமாக உருவாக்கப்பட்டதல்ல. தந்தை இங்கு வந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். ஆனால் அதற்குப் பதிலாக குழந்தைகளாகிய நீங்கள் அவற்றை மீண்டும் மீண்டும் மறந்து விடுகிறீர்கள். ஒவ்வொருவரின் புத்தியும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. எந்தளவிற்கு நீங்கள் விவேகமாக உள்ளீர்களோ, அந்தளவிற்கு, அதிகமாக ஆசிரியரின் கற்பித்தல்களை உங்களால் கிரகிக்க முடியும். இது ஓர் எல்லையற்ற கல்வியாகும் நீங்கள் எந்தளவிற்குக் கற்கின்றீர்களோ அதற்கேற்பவே வரிசைக்கிரமமாக நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கு ஒரே கல்வியே உள்ளபோதிலும், ஒரு வம்சம் உருவாக்கப்படுகின்றது. நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பது உங்கள் புத்திக்குத் தெரிய வேண்டும். ஓர் அரசன் ஆகுவதற்கு முயற்சி தேவையாகும். அரசர்களுக்கு பணிப்பெண்களும் வேலைக்காரர்களும் தேவையாகும். யார் பணிப்பெண்களாகவும் வேலைக்காரர்களாகவும் ஆகுவார்கள்? இதனை உங்களாலும் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவரும் அவர்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக பணிப்பெண்களையும் வேலைக்காரர்களையும் கொண்டிருப்பார்கள். எனவே, நீங்கள் பிறவி, பிறவியாக பணிப்பெண்களாகவும், வேலைக்காரர்கவும் ஆகும் வகையில் கற்காதீர்கள். நீங்கள் மேன்மையானவர்களாகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எனவே தந்தையை நினைவு செய்வதால், உண்மையான அமைதி கிடைக்கின்றது. உங்கள் புத்தி அங்குமிங்கும் சிறிதளவேனும் அலைந்து திரிந்தால் நேரம் வீணாக்கப்பட்டு குறைவான வருமானத்தையும் சம்பாதிப்பீர்கள். உங்களால் சதோபிரதானாகவும் முடியாது. உங்கள் கைகளால் தொடர்ந்து வேலை செய்து கொண்டே, இதயபூர்வமாகத் தந்தையை நினைவு செய்யுங்கள் என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சுற்றுலா சென்றாலும் சரீரத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, உங்கள் புத்தியில் தந்தையின் நினைவு இருக்கட்டும். உங்களுடன் எவராவது இருந்தாலும், நீங்கள் வம்பளக்கக்கூடாது. இதற்கு ஒவ்வொருவரின் இதயமே சாட்சியாகும். நீங்கள் அத்தகைய ஸ்திதியுடன் சுற்றுலாச் செல்ல வேண்டும் என பாபா விளங்கப்படுத்துகின்றார். குருமார்கள் முற்றிலும் மௌனமாக நடந்து செல்வார்கள். நீங்கள் எந்நேரமும் ஞானத்தைப் பேசுவதில்லை. எனவே நீங்கள் மௌனமாகவிருந்து, சிவபாபாவை நினைவு செய்வதில் விரைந்தோடுங்கள். உதாரணமாக, பாபா கூறுகின்றார்: உண்ணும்போது பாபாவை நினைவுசெய்யுங்கள். உங்கள் அட்டவணையைப் பாருங்கள். பாபா நினைவு செய்வதை எவ்வாறு மறந்து விடுகின்றார் என்பதைத் தனது சொந்த அட்டவணையுடன் உங்களுக்குக் கூறுகின்றார். நான் பாபாவை நினைவு செய்வதற்கு முயற்சிக்கின்றேன். அத்துடன் நான் பாபாவிடம் கூறுகின்றேன்: பாபா, நான் எந்நேரமும் நினைவில் நிலைத்திருப்பேன். ஆனால் நீங்கள் எனது இருமலையும், எனது சர்க்கரையை குறைத்து விடுங்கள். நான் எனக்காகச் செய்யும் முயற்சியை உங்களுக்கும் கூறுகின்றேன். ஆனால் நான் நினைவு செய்ய மறந்துவிடுகின்றேன். எனவே, இருமல் எவ்வாறு குறைக்கப்படும்? நான் பாபாவுடன் உரையாடியதைப்பற்றி நேர்மையாக நான் உங்களுக்குக் கூறுவேன். பாபா குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகிறார். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிடம் கூறுவதில்லை. ஏனெனில் நீங்கள் வெட்கப்படுகிறீர்கள். நீங்கள் தரையைச் சுத்தம் செய்யும் போதும் அல்லது உணவு தயாரிக்கும் போதும், அதனை சிவபாபாவின் நினைவில் செய்தால் நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். இந்த வழிமுறையும் தேவைப்படுகிறது. நீங்கள் அதிலிருந்தும் நன்மையடைவீர்கள். நீங்கள் நினைவில் இருக்கும்போது, ஏனையோரும் ஈர்க்கப்படுகின்றார்;கள். ஒருவருக்கொருவர் அந்த ஈர்ப்புள்;;;ளது. நீங்கள் நினைவில் நிலைத்திருக்கும் அளவிற்கு, மரண அமைதியும் நிலைத்திருக்கும். நாடகத்திற்கேற்ப ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றீர்கள். நினைவு யாத்திரை மிகவும் நன்மையளிப்பதாகும். இதையிட்டு பொய் பேச வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் சத்தியமான தந்தையின் குழந்தைகள் என்பதால் நேர்மையுடன் பழக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அனைத்தையும் பெறுகிறீர்கள். நீங்கள் உலக இராச்சியத்தையே பெறுகிறீர்கள். எனவே நீங்கள் பேராசையுடன், ஏன் பத்து, இருபது சேலைகளைச் சேகரித்து வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் தொடர்ந்தும் பலவற்றைச் சேகரித்தால், மரணிக்கும் தருணத்திலும் அதனையே நீங்கள் நினைவுசெய்வீர்கள். இதனாலேயே உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது: ஊன்றுகோலையும் துறந்துவிடுங்கள் என மனைவி கணவரிடம் கூறினார். இன்றேல் இறுதியிலும் அதனையே நினைவு செய்வார். எதனையும் நினைவு செய்யக்கூடாது. இல்லாவிட்டால், நீங்களே உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துவீர்கள். பொய் பேசுவதால், நீங்கள் நூறு மடங்கு பாவத்தைச் சேமித்துக் கொள்கிறீர்கள். சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் எப்பொழுதும் நிரம்பியவாறே உள்ளது. எனவே அளவுக்கு அதிகமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவரிடமிருந்து அனைத்தும் திருடப்பட்டாலும், அவருக்கு அனைத்தும் வழங்கப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து இராச்சியத்தையே பெறும் போது, உங்களுக்கு ஆடைகள் போன்றவை கிடைக்காதா? அநாவசியமாகச் செலவுகளைச் செய்யாதீர்கள். ஏனெனில் சுவர்க்கத்தின் ஸ்தாபனைக்கு உதவிசெய்பவர்கள் பலவீனமான, அப்பாவித் தாய்மார்களே. ஆகையால் அவர்களின் பணம் அவ்வாறாக வீணாக்கப்படக்கூடாது. அவர்கள் உங்களைப் பராமரிக்கிறார்கள் என்பதால் உங்களின் கடமையும் அவர்களைப் பராமரிப்பதாகும். இல்லாவிடின் நூறுமடங்கு பாவம் உங்கள் மீது சேமிக்கப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கும்பொழுது, உங்கள் புத்தி சிறிதளவேனும் அங்கும் இங்கும் அலைந்து திரியக்கூடாது. எப்பொழுதும் தொடர்ந்தும் உங்களின் வருமானத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்;. மயான அமைதி நிலவும் வகையில் உங்களின் நினைவு இருக்கட்டும்.

2. உங்களின் சரீரத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, சுற்றுலாச் செல்லும்போதும் உங்களின் சகபாடிகளுடன் வம்பளக்காது அமைதியாக இருந்து, தந்தையின் நினைவில் விரைந்தோடுங்கள். தந்தையின் நினைவில் உணவை உண்ணுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் திருப்தி என்ற சிறப்பியல்பைக் கொண்டிருப்பதனால், மாலையில் கோர்க்கப்படுகின்ற ஒரு திருப்திமணி ஆகுவீர்களாக.

சங்கமயுகம் திருப்திக்கான யுகமாகும். தம்முடன் திருப்தியாக இருந்து, தமது உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் எப்பொழுதும் திருப்தியாக இருந்து பிறரை திருப்திபடுத்துபவர்களே மாலையில் கோர்க்கப்படுகின்றார்கள். ஏனெனில் உறவுமுறைகளினூடாகவே மாலை உருவாக்கப்படுகின்றது. ஒரு மணி அடுத்த மணியோடு தொடர்பு கொள்ளாதிருந்தால், மாலை உருவாக்கப்பட முடியாது. ஆகையால், திருப்திமணியாக இருங்கள், எப்பொழுதும் திருப்தியாகவிருந்து, அனைவரையும் திருப்திபடுத்துங்கள். ஒரு குடும்பம் என்பதன் அர்த்தம் திருப்தியாகவிருந்து அனைவரையும் திருப்திபடுத்துவதாகும். எவ்வகையான முரண்பாடுகளும் இல்லாதிருக்கட்டும்.

சுலோகம்:
தடைகளின் கடமை வருவதாகும், தடைகளை அழிப்பவராக இருப்பது உங்கள் கடமையாகும்.