16.06.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     12.12.84     Om Shanti     Madhuban


விசேடமான ஆத்மாக்களின் கடமை.


இன்று, இதயங்களுக்குச் சௌகரியம் அளிக்கும் தந்தை, தனது சந்தோஷமான இதயமுள்ள குழந்தைகளைச் சந்திப்பதற்கு வந்துள்ளார். உலகம் முழுவதிலும், குழந்தைகளான நீங்கள் மட்டுமே சதா சந்தோஷமான இதயத்தைக் கொண்டிருப்பவர்கள். எஞ்சிய அனைவரும், ஏதாவதொரு வேளையில், ஏதாவதொரு விடயத்திற்காகத் தமது இதயங்களில் துன்பத்தையும் வலியையும் அனுபவம் செய்கிறார்கள். துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்பவரான தந்தை உங்களின் இதயங்களில் இருந்து வலியை நீக்குகிறார். அத்தகைய தந்தையின் குழந்தைகளான நீங்கள் சந்தோஷ சொரூபங்கள் ஆவீர்கள். அனைவரின் இதயங்களில் இருந்தும் அவர்களின் இதயங்களின் வேதனை, துயர அழுகையாக வெளிப்படுகிறது. ஆனால், சந்தோஷமான இதயத்தைக் கொண்டுள்ள குழந்தைகளான உங்கள் அனைவரின் இதயங்களில் இருந்தும் ‘ஆஹா, ஆஹா!’ என்ற ஒலியே வெளிப்படுகிறது. பௌதீக சரீரத்திற்குப் பலவகையான வேதனைகள் இருப்பதைப்போன்று, இன்றைய மனித ஆத்மாக்களுக்கும் அவர்களின் இதயங்களில் பல வகையான வேதனைகள் உள்ளன. சிலவேளைகளில், சரீரத்தின் மூலம் கர்ம வேதனையின் வலி காணப்படுகிறது. சிலவேளைகளில், உறவுகளிலும் தொடர்புகளிலும் துன்பத்தை அனுபவிக்கும் வலி காணப்படுகிறது. சிலவேளைகளில், அவர்கள் அதிகளவு செல்வத்தைப் பெற்றால் அல்லது அவர்களின் செல்வம் குறைவடைந்தால், அந்த இரு சந்தர்ப்பங்களிலும் கவலைப்படும் வலி காணப்படுகிறது. சிலவேளைகளில், இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் துன்பத்தின் வலி காணப்படுகிறது. இந்த முறையில், ஒரு வகையான வலியில் இருந்து, ஏனைய பல வகையான வலிகள் பிறக்கின்றன. இந்த முழு உலகமுமே வலியிலும் துன்பத்திலும் அழுகின்ற ஒன்றாக ஆகிவிட்டது. இத்தகைய வேளையில், சந்தோஷத்தை அருள்கின்ற, சந்தோஷத்தின் சொரூபங்களான குழந்தைகளான உங்களின் கடமை என்ன? அனைவரையும் பிறவி பிறவியாக வலியினதும் துன்பத்தினதும் கடன்களில் இருந்து விடுவித்தல். அந்தப் பழைய கடன்களே, வலி மற்றும் துன்பம் என்ற நோய்கள் ஆகியுள்ளன. இத்தகைய வேளையில், உங்கள் அனைவரினதும் கடமையானது அருள்பவர்கள் ஆகுவதே ஆகும். ஆத்மா ஒருவருக்கு எத்தகைய நோய் என்ற கடன் இருந்தாலும், அந்த ஆத்மாவிடம் குறைவாக இருக்கும் பேற்றினால் அவரை நிரப்புங்கள். ஓர் ஆத்மா தனது செயல்களின் விளைவால் சரீரத்தில் ஏற்பட்ட வேதனையால் வலியையும் துன்பத்தையும் கொண்டிருந்தால், அவரால் ஒரு கர்மயோகியாகி கர்மயோகம் செய்வதன் மூலம் அந்த வேதனையை இல்லாமல் செய்ய முடியும். அதேபோன்று, அவர்கள் கர்மயோகிகள் ஆகுவதற்கான சக்தியின் பேற்றினை மகாதானமாக நீங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதை அவர்களுக்கு ஓர் ஆசீர்வாதமாகக் கொடுங்கள். ஏனெனில் அவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் சக்தியற்றவர்களாகவும் வெறுமையானவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய ஆத்மாக்களுக்கு உங்களின் கர்ம யோகத்தின் சக்தியைப் பகிர்ந்தளியுங்கள். உங்களின் கணக்கில் இருந்து ஏதாவதொன்றை அவர்களின் கணக்கில் வரவு வையுங்கள். அப்போது மட்டுமே அவர்களால் நோய் என்ற கடனில் இருந்து விடுபட முடியும். நீண்ட காலத்திற்கு, நீங்கள் தந்தையின் நேரடி வாரிசுகளாக இருந்து, சகல சக்திகள் என்ற ஆஸ்தியைச் சேமித்துள்ளீர்கள். ஆகவே, இப்போது, உங்களின் சேமிப்புக் கணக்கில் இருந்து பெருந்தன்மையான இதயத்துடன் தானம் செய்யுங்கள். அப்போது மட்டுமே உங்களால் அவர்களின் இதயங்களில் வலியின் வேதனையை முடிக்க முடியும். இறுதிக்கணங்கள் நெருங்கி வருவதனால், ஆத்மாக்கள் அனைவரினதும் பக்தியின் சக்தியும் முடிவிற்கு வந்துள்ளது. துவாபர யுகத்தின் ரஜோகுணி ஆத்மாக்கள், தமது கணக்குகளில் சேமித்திருந்த தானத்தினதும் புண்ணியத்தினதும் பக்தியினதும் சக்திகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இதனாலேயே, அவர்களின் ஆத்மாக்களின் ஜீவனோபாயத்திற்கு ஏதாவதொரு வழிமுறையில் அமைதியை அல்லது ஏதாவதொன்றைப் பெற்றார்கள். எவ்வாறாயினும், தமோகுணி ஆத்மாக்கள் இப்போது ஆத்மாவின் ஜீவனோபாயத்திற்கு தற்காலிக சந்தோஷத்திற்கான எந்தவொரு வழிமுறையும் இன்றி வெறுமையாகி விட்டார்கள். அதாவது, அவர்கள் பக்தியின் பழத்தை உண்டு வெறுமையாகி விட்டார்கள். பக்தி இப்போது பெயரளவிலேயே உள்ளது. பக்தி இப்போது உங்களுக்கு எந்தவித பலனையும் கொடுப்பதில்லை. பக்தியின் மரம் இப்போது முழுமையாக வளர்ந்துவிட்டது. இந்த மரம் நிச்சயமாக பலவகை நிறங்களின் அழகைக் கொண்டுள்ளது. ஆயினும், அதில் சக்தி இல்லாததால், பழம் கிடைப்பதில்லை. பௌதீகமான மரம் ஒன்று, முழுமையாக வளர்ந்து, அதன் முழுமையான அழியும் நிலைக்கு வந்ததும், அதில் இருந்து பழத்தைப் பெற முடியாது. ஆனால் அது நிழலை மட்டுமே கொடுக்கும். அதேபோன்று, பக்தி மரமும் நிச்சயமாக அவர்களின் இதயங்களை மகிழ்விக்கும் நிழலைக் கொடுக்கிறது. ‘நாம் குருமார்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். நாம் முக்தி அடைவோம். நாம் யாத்திரைகள் செய்து, தானதருமங்கள் செய்தோம். நாம் ஏதாவது பேறுகளைப் பெறுவோம்.’ அவர்களின் இதயங்களை மகிழ்விப்பதற்கு எஞ்சியிருப்பது, இந்தச் சபலம் என்ற நிழல் மட்டுமே. ‘இப்பொழுதில்லையேல், ஏதாவதொரு வேளையில் நாம் அதைப் பெறுவோம்’. அப்பாவி பக்தர்கள் இந்த நிழலில் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தவிதப் பலனும் கிடைப்பதில்லை. இதனாலேயே, ஆத்மாவின் ஜீவனோபாயத்திற்கான அனைவரின் கணக்குகளும் வெறுமையாகவே உள்ளன. அத்தகைய வேளையில், நிரம்பிவழியும் ஆத்மாக்களான உங்களின் கடமையானது, இத்தகைய ஆத்மாக்களுக்கு உங்களின் சேமித்த கணக்கில் இருந்து தைரியம் என்ற ஒரு பங்கைக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துவதே ஆகும். நீங்கள் சேமித்து வைத்துள்ளீர்களா அல்லது உங்களுக்குப் போதுமானவற்றைச் சம்பாதித்து அதைப் பயன்படுத்தி முடித்துவிட்டீர்களா? உங்களுக்காக மட்டும் சம்பாதித்து, அதைப் பயன்படுத்தி முடித்தால், அதை இராஜயோகியாக இருத்தல் எனக் கூறமுடியாது. அதை சுய இராச்சியத்திற்கான உரிமையுடையவர் என்று அழைக்க முடியாது. ஓர் அரசனின் பொக்கிஷக் களஞ்சியம் சதா முழுமையாக நிரம்பியிருக்கும். தனது மக்களைப் பராமரிப்பது ஒரு மன்னனின் கடமையாகும். சுய இராச்சிய உரிமையுடைய ஒருவர் என்றால் சகல பொக்கிஷங்களாலும் முழுமையாக நிரம்பியிருப்பவர் என்று அர்த்தம். நீங்கள் முழுமையாகப் பொக்கிஷங்களால் நிரம்பி இருக்காவிட்டால், நீங்கள் பிரஜாயோகியே அன்றி, இராஜயோகி அல்ல. பிரஜை ஒருவர் சம்பாதித்து அதைப் பயன்படுத்தி முடித்துவிடுவார். செல்வந்தப் பிரஜைகள் தாம் சேமித்தவற்றில் சிறிதளவை வைத்திருப்பார்கள். ஆனால், மன்னர்களோ பொக்கிஷங்களின் அதிபதிகள் ஆவார்கள். ஆகவே, இராஜயோகி என்றால் சுய இராச்சிய உரிமையைக் கொண்டுள்ள ஆத்மா, அவரின் எந்தவொரு பொக்கிஷத்தினதும் சேமிப்புக் கணக்கும் வெறுமை ஆகாது என்றே அர்த்தம். எனவே, உங்களையே சோதித்துப் பாருங்கள்: உங்களின் பொக்கிஷங்கள் முற்றிலும் நிரம்பியுள்ளனவா? அருள்பவரின் குழந்தைகளே, நீங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா அல்லது உங்களுடன் மட்டும் இருக்கிறீர்களா? உங்களைப் பராமரிப்பதிலேயே உங்களின் காலம் கழிகிறதா? அல்லது, மற்றவர்களைப் பராமரிப்பதற்கு, உங்களின் காலமும் பொக்கிஷங்களும் முற்றிலும் நிரம்பியுள்ளனவா? இங்கு சங்கமயுகத்தில் ஆன்மீகப் பராமரிப்பிற்கான சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்பவர்கள், எதிர்காலத்தில் பிரஜைகளைப் பராமரிக்கும் உலக மன்னர்கள் ஆகுவார்கள். அரசன் அல்லது பிரஜை என்ற முத்திரை இங்கேயே குத்தப்படுகிறது. அந்தஸ்து அங்கே பெறப்படுகிறது. இங்கு முத்திரை குத்தப்படாவிட்டால், அங்கும் அந்தஸ்து கிடைக்காது. சங்கமயுகமே முத்திரை குத்தும் அலுவலகம் ஆகும். தந்தையிடமிருந்தும் பிராமணக் குடும்பத்திடமிருந்துமே முத்திரை பெறப்படுகிறது. ஆகவே, உங்களை மிகக் கவனமாகச் சோதித்துப் பாருங்கள். உங்களின் களஞ்சியத்தைச் சோதியுங்கள். அந்த வேளையில் நீங்கள் ஏதாவதொன்று குறைவாக இருந்து முழுமை அடைவதில் இருந்து ஏமாற்றப்படுவதாக இருக்கக்கூடாது. நீங்கள் பௌதீகமான களஞ்சியத்தைச் சேமிக்கும்போது, பலசரக்குப் பொருட்கள் அனைத்தையும் சேகரித்துவிட்டு, சிறியதொரு நெருப்புப்பெட்டியைத் தவறவிட்டால், அந்தத் தானியங்களை வைத்து என்ன செய்வீர்கள்? உங்களிடம் எண்ணற்ற பேறுகள் இருந்தாலும், ஒரு விடயத்தைப் பெறுவதைத் தவறவிட்டால், ஏதாவதொரு வகையில் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். அதேபோன்று, ஏதாவதொன்று தவறவிடப்பட்டால், சம்பூரணம் என்ற முத்திரையைப் பெறுவதற்கான உரிமையைப் பெறாமல் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். என்னிடம் நினைவின் சக்தி உள்ளது. எனவே, ஒரு நற்குணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என நினைக்காதீர்கள். நினைவின் சக்தி மகத்தானது. அது முதல் இலக்கத்தில் இருப்பதால் நல்லதே. எவ்வாறாயினும், நீங்கள் முழுமையாகச் சித்தி எய்துவதற்குப் பதிலாக, ஒரு நற்குணமாவது இல்லாமல் இருந்தால், நீங்கள் தோல்வி அடைவீர்கள். இதைச் சிறியதொரு விடயமாகக் கருதாதீர்கள். ஒவ்வொரு நற்குணத்தினதும் உறவுமுறையின் முக்கியத்துவம், ஆழமானதொரு கணக்காகும். பாபா அதைப் பற்றி உங்களுக்கு வேறொரு வேளையில் கூறுவார்.

இன்று, பாபா குறிப்பாக விசேடமான ஆத்மாக்களின் கடமை என்னவென்று உங்களுக்கு நினைப்பூட்டினார். உங்களுக்குப் புரிகிறதா? இந்த வேளையில், தலைநகர் டெல்லியில் இருந்து இங்கு வந்துள்ளார்கள். எனவே, இராச்சிய உரிமையைக் கொண்டவர்களுக்குப் பொருத்தமான விடயங்களைப் பற்றி பாபா உங்களுக்குக் கூறினார். இராச்சியத்தின் மாளிகையை நீங்கள் வெறுமனே பெற முடியாது! நீங்கள் பராமரிப்பை வழங்கி, பிரஜைகளை உருவாக்க வேண்டும். டெல்லியைச் சேர்ந்தவர்கள் முழுமூச்சாக ஆயத்தங்களைச் செய்கிறார்கள். நீங்கள் இராச்சியத்தின் தலைநகரில் இருக்க விரும்புகிறீர்கள். நீங்கள் தொலைவில் செல்ல விரும்பவில்லை, அல்லவா?

இப்போது குஜராத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக இருக்கிறார்கள். சங்கமயுகத்தில் மதுவனத்தில் நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் இராச்சியத்திலும் ஒன்றாக இருப்பீர்கள், அல்லவா? ஒன்றாக இருக்கும் திடசங்கற்பமான எண்ணம் உங்களுக்கு இருக்கிறதல்லவா? மூன்றாவது குழுவினர் இந்தோரைச் சேர்ந்தவர்கள். இன்-டோர் என்றால் வீட்டில் தங்கியிருப்பவர்கள் என்று அர்த்தம். எனவே, இந்தோர் பிராந்தியத்தைச் சேர்ந்த நீங்கள் இராச்சியத்தின் வீட்டில் இருப்பீர்கள், அல்லவா? இப்போதும், நீங்கள் தந்தையின் இதயம் என்ற வீட்டில் வசிக்கிறீர்கள். எனவே, நெருக்கத்தைப் பொறுத்தவரை உங்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. சதா உங்களின் பாக்கிய ரேகையை இந்த முறையில் தெளிவாக்கி, அதைத் தொடர்ந்து நீளும்படி செய்யுங்கள். நல்லது.

சம்பூரணமாக நிரம்பியிருக்கும் தமது கடமையை எப்போதும் நிறைவேற்றுபவர்களுக்கும், தமது மேன்மையான அருள்கின்ற சம்ஸ்காரங்களால் அனைவரின் வலியையும் நீக்குபவர்களுக்கும், எப்போதும் சுய இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டிருந்து ஆன்மீகப் பராமரிப்பை வழங்குபவர்களுக்கும், சகல பொக்கிஷங்களின் பொக்கிஷக் களஞ்சியங்களைச் சம்பூரணமாக நிரப்புவர்களுக்கும், மாஸ்ர்ர அருள்பவர்களுக்கும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களுக்கும், இத்தகைய மேன்மையான இராஜயோகி ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
1) நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை சதா பற்றற்ற பார்வையாளர் என்ற ஆசனத்தில் ஸ்திரமாக அமர்ந்திருக்கும் ஆத்மாவாக அனுபவம் செய்கிறீர்களா? பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியே அதிமேன்மையானதும் சிறப்பானதுமான ஆசனம் ஆகும். இந்த ஆசனத்தில் அமர்ந்தவண்ணம் அனைத்தையும் செய்வதும் பார்ப்பதும் மகத்தான களிப்பான விடயம். ஆசனம் ஒன்று நல்லதாக இருக்கும்போது, அதில் அமர்ந்திருப்பதை நீங்கள் விரும்புவீர்கள். ஆசனம் நன்றாக இல்லாவிட்டால், அதில் அமர்ந்திருப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். பற்றற்ற பார்வையாளர் என்ற இந்த ஆசனம், அதிமேன்மையான ஆசனம் ஆகும். நீங்கள் எப்போதும் இந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களா? இந்த உலகில், அவர்கள் ஆசனத்தில் பின்னால் துரத்திச் செல்வார்கள். உங்களுக்கு நல்லதோர் ஆசனம் கிடைத்துள்ளது. எவராலும் உங்களை இந்த ஆசனத்தில் இருந்து அப்பால் நகர்த்த முடியாது. இன்று ஓர் ஆசனம் இருந்தாலும், அது நாளை இருக்கமாட்டாது என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. உங்களிடம் அழியாத ஆசனம் உள்ளது. எனவே, நீங்கள் எந்தவிதப் பயமும் இன்றி அதில் அமர்ந்திருக்க முடியும். எனவே, நீங்கள் சதா பற்றற்ற பார்வையாளர் என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களா? குழப்பம் அடைபவர்களால் நிலையாக அமர்ந்திருக்க முடியாது. சதா இந்த ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருங்கள்.இது ஒரு சௌகரியமான ஆசனம். இதில் அமர்ந்த வண்ணம் நீங்கள் விரும்பியதைப் பார்க்கவும் அனுபவம் செய்யவும் முடியும்.

2) நீங்கள் முழு உலகிலும் பலமில்லியன்களில் கையளவினரான, அந்தக் கையளவினரிலும் வெகுசில அதிர்ஷ்டசாலிகளான விசேடமான ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? தந்தைக்குச் சொந்தமான பலமில்லியன்களில் கையளவினர் மட்டுமே என்ற புகழ்ச்சி உங்களுக்கே பொருந்தும். சதா இந்த சந்தோஷம் உங்களுக்கு உள்ளதா? உலகிலுள்ள பல ஆத்மாக்கள் தந்தையைக் காண்பதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆனால் நீங்களோ அவரைக் கண்டுவிட்டீர்கள். தந்தைக்குச் சொந்தமாகுதல் என்றால் அவரை அடைதல் என்று அர்த்தம். உலகம் அவரைத் தேடுகிறது. நீங்கள் இப்போது அவருக்குச் சொந்தமானவர்கள். பக்தி மார்க்கத்தின் பேறுக்கும் ஞானப் பாதையின் பேறுக்கும் இடையில் மகத்தான வேறுபாடு உள்ளது. ஞானம் என்பது கல்வி. பக்தி என்பது கல்வி அல்ல. அது ஆன்மீக, தற்காலிகமான களிப்பூட்டும் விடயம். ஆனால் ஞானம் என்றால் நிரந்தரமான பேறு என்று அர்த்தம். ஆகவே, எப்போதும் இந்த விழிப்புணர்வில் இருந்து, மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குங்கள். நீங்கள் ஒருபோதும் நினைத்திராத விடயங்களை நடைமுறையில் நீங்கள் பெற்றுள்ளீர்கள். தந்தை ஒவ்வொரு மூலையிலிருந்தும் தனது குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துத் தனக்குச் சொந்தமாக்கியுள்ளார். ஆகவே, இந்த சந்தோஷத்தில் இருங்கள்.

3) நீங்கள் அனைவரும் உங்களை ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்களாகவும் ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்களாகவும் அனுபவம் செய்கிறீர்களா? உங்களுக்கென ஒரேயொரு தந்தை மட்டுமே இருக்கும்போது, உங்களுக்கு வேறு எவரும் இருக்காதபோது, உங்களின் ஸ்திதி இலகுவாக நிலையானது ஆகும். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? உங்களுக்கென வேறு எவரும் இல்லாதபோது, உங்களின் புத்தி எங்கு செல்லும்? அது வேறெங்கும் செல்வதற்கான எல்லை எதுவும் இல்லை. ஒரேயொருவரே உள்ளார். இரண்டு அல்லது நான்கு விடயங்கள் இருந்தால், அதைப் பற்றி நீங்கள் நினைப்பதற்கு சிறிதளவு காரணம் இருக்கும். ஆனால் ஒரேயொரு பாதையே இருந்தால், நீங்கள் எங்கு செல்வீர்கள்? எனவே, இங்கும், பாதையைக் காட்டுவதற்கான இலகுவான வழிமுறை, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருப்பதும், ஒரேயொரு வழிகாட்டலைப் பின்பற்றுவதும், நிலையான ஸ்திதியையும் ஒரேயொரு குடும்பத்தையும் கொண்டிருப்பதாகும். ஆகவே, சதா ஒரேயொருவரை நினையுங்கள். நீங்கள் முதல் இலக்கத்தவர் ஆவீர்கள். ஒரேயொருவரின் கணக்கை அறிந்திருப்பதே, நீங்கள் அனைவரும் செய்ய வேண்டிய விடயம் ஆகும். நீங்கள் எங்கிருந்தாலும், ஒரேயொருவரின் நினைவு உங்களுக்குள் இருக்கும்போது, நீங்கள் எப்போதும் அவருடனேயே இருப்பீர்கள். தொலைவில் அல்ல. தந்தையின் சகவாசம் உங்களுக்கு இருக்கும்போது, மாயையின் சகவாசம் உங்களுக்கு இருக்கமாட்டாது. தந்தையிடமிருந்து நீங்கள் விலகிச் செல்லும்போதே, மாயை வருவாள். அவள் வெறுமனே வரமாட்டாள். அப்பால் செல்லாதீர்கள். மாயையும் வரமாட்டாள்! ஒரேயொருவரிலேயே முக்கியத்துவம் உள்ளது.

பாப்தாதா அரைக்குமார்களைச் சந்திக்கிறார்:
வீட்டில் உங்களின் குடும்பங்களுடன் வசிக்கும்போது, நீங்கள் எப்போதும் அலௌகீக மனோபாவத்துடன் இருக்கிறீர்களா? நீங்கள் ஒவ்வொருவரும் இல்லற வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவராக, எப்போதும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழ்வதை அனுபவம் செய்கிறீர்களா? நம்பிக்கைப் பொறுப்பாளர் என்றால், சதா சந்தோஷமாக இருப்பவர் என்று அர்த்தம். ஆனால், இல்லறப் பொறுப்பாளர் என்றால் சதா சந்தோஷமற்றிருப்பவர் என்று அர்த்தம். நீங்கள் யார்? எப்போதும் சந்தோஷமாக இருப்பவர்கள். நீங்கள் இப்போது துன்ப உலகை விட்டு வந்துள்ளீர்கள். அதில் இருந்து அப்பால் வந்துள்ளீர்கள். நீங்கள் இப்போது சங்கமயுக சந்தோஷ உலகில் இருக்கிறீர்கள். நீங்கள் லௌகீக இல்லறங்களை உடையவர்கள் அல்ல. அலௌகீக இல்லறங்களை உடையவர்கள். உங்களுக்கிடையே அலௌகீக மனோபாவமும் அலௌகீகப் பார்வையும் இருக்க வேண்டும்.

நம்பிக்கைப் பொறுப்பாளராக இருப்பதன் அடையாளம், சதா பற்றற்றவராகவும் தந்தையிடம் அன்பானவராகவும் இருப்பதாகும். நீங்கள் அன்பாகவும் பற்றற்றவராகவும் இல்லாவிட்டால், நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர் அல்ல. இல்லற வாழ்க்கை என்றால் பந்தன வாழ்க்கை வாழ்தல் என்று அர்த்தம். நம்பிக்கைப் பொறுப்பாளர் வாழ்க்கை என்றால் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருத்தல் என்று அர்த்தம். நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுவதன் மூலம், உங்களின் பந்தனங்கள் அனைத்தும் இலகுவாக முடிவடைந்துவிடுகின்றன. நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபடும்போது, சதா சந்தோஷமாக இருப்பீர்கள். இத்தகைய ஆத்மாக்களிடம் துன்ப அலைகள் வரமுடியாது. இது ‘எனது வீடு, எனது குடும்பம், எனது வேலை’ என நீங்கள் நினைத்தால், அந்த விழிப்புணர்வானது மாயையை வரவேற்கும். எனவே, ‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என்று மாற்றுங்கள். ‘உங்களுடையது’ என்று நீங்கள் சொல்லும்போது,துன்பம் முடிவடைந்துவிடும். ‘எனது’ என்று சொல்லுவதெனில், குழப்பம் அடைதல் என்று அர்த்தம் ‘உங்களுடையது’ என்று சொல்லுவதெனில், களிப்புடன் இருத்தல் என்று அர்த்தம். இப்போது நீங்கள் களிப்பாக இல்லாவிட்டால், எப்போது நீங்கள் களிப்புடன் இருக்கப்போகிறீர்கள்? சங்கமயுகம் களிப்பான யுகம் ஆகும். ஆகவே, எப்போதும் களிப்புடன் இருங்கள். உங்களின் கனவுகளிலோ அல்லது எண்ணங்களிலோ எந்தவிதமான வீணானதன்மையும் இருக்கக்கூடாது. நீங்கள் அரைக்கல்பமாக அனைத்தையும் வீணாக்கிவந்தீர்கள். வீணாக்குவதற்கான காலம் இப்போது முடிவடைந்துவிட்டது. இது இப்போது வருமானத்தைச் சம்பாதிக்கும் காலம் ஆகும். நீங்கள் சக்திசாலியாக இருக்கும் அளவிற்கு, உங்களால் அதற்கேற்ப சேமிக்க முடியும். சௌகரியமாக 21 பிறவிகளுக்கு நீங்கள் உண்ணக்கூடிய அளவிற்குச் சேமியுங்கள். மற்றவர்களுக்கும் உங்களால் கொடுக்கக்கூடிய வகையில் அதிகளவு களஞ்சியத்தை வைத்திருங்கள். ஏனெனில், நீங்கள் அருள்பவரின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் எந்தளவிற்குச் சேமிக்கிறீர்களோ, அந்தளவிற்கு நிச்சயமாக உங்களுக்குள் சந்தோஷமும் இருக்கும்.

வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் அன்பில் எப்போதும் திளைத்திருங்கள். எங்கு அன்பு உள்ளதோ, அங்கு எந்தவிதமான தடைகளும் இருக்க முடியாது. பகல் இருக்கும்போது இரவு இருக்க முடியாது. இரவு இருக்கும்போது, பகல் இருக்க முடியாது. எனவே, இது அன்பிற்கும் தடைகளுக்கும் பொருந்தும். அன்பு மிகவும் சக்திவாய்ந்தது. அது தடைகளை எரிக்க வல்லது. நீங்கள் அத்தகைய அன்பைக் கொண்டுள்ள ஆத்மாக்கள் ஆவீர்கள். அதனால் நீங்கள் தடைகளில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். தடையொன்று எத்தனை பெரியதாக இருந்தாலும், மாயை ஒரு தடையாக வந்தாலும், அன்புள்ளவர்கள் அந்தத் தடையை, வெண்ணெயில் ஒரு தலைமுடியை இழுப்பதைப் போன்று இலகுவாக வெற்றி கொள்வார்கள். அன்பானது சகல பேறுகளையும் நீங்கள் அனுபவிக்கச் செய்யும். தந்தை எங்கிருக்கிறாரோ, அங்கு நிச்சயமாகப் பேறும் இருக்கும். தந்தையின் பொக்கிஷங்கள், குழந்தைகளின் பொக்கிஷங்களே.

பாப்தாதா தாய்மார்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் சக்தி சேனையினர், அல்லவா? தாய்மார்களான நீங்கள் உலகத் தாய்மார்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இனியும் எல்லைக்குட்பட்ட தாய்மார்கள் அல்ல. எப்போதும் உங்களை உலகத் தாய்மார்களாகக் கருதுங்கள். நீங்கள் எல்லைக்குட்பட்ட இல்லறங்களில் அகப்பட்டவர்கள் அல்ல. நீங்கள் எல்லையற்ற சேவையைச் செய்வதில் சதா சந்தோஷத்துடன் ஈடுபட்டிருப்பவர்கள். தந்தை இத்தகைய மேன்மையான அந்தஸ்தை வழங்கியுள்ளார். அவர் உங்களைப் பணிப்பெண்களில் இருந்து தனது தலைக்கிரீடமாக மாற்றியுள்ளார். ஆஹா, எனது மேன்மையான பாக்கியமே! அவ்வளவே! தொடர்ந்து இந்தப் பாடலைப் பாடுங்கள். தாய்மார்களான உங்களுக்குத் தந்தை இந்தப் பணியை மட்டுமே கொடுத்துள்ளார். ஏனெனில், தாய்மார்களான நீங்கள் அதிகளவில் அலைந்து திரிந்து களைப்படைந்து விட்டீர்கள். தாய்மார்களின் களைப்பைக் கண்டதனால், உங்களை அந்தக் களைப்பில் இருந்து விடுவிப்பதற்காகத் தந்தை வந்துள்ளார். அவர் 63 பிறவிகளின் களைப்பை இந்த ஒரு பிறவியில் முடிவடையச் செய்துள்ளார். அவர் அதை ஒரு விநாடியில் முடித்துவிட்டார். நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்கள். உங்களின் களைப்பு முடிவடைந்துவிட்டது. தாய்மார்கள் ஊஞ்சலை விரும்புவார்கள். மற்றவர்களை ஊஞ்சலில் ஆட்டுவதையும் விரும்புவார்கள். எனவே, தாய்மார்களான உங்களுக்குத் தந்தை சந்தோஷ ஊஞ்சல்களையும் அதீந்திரிய சுகத்தையும் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த ஊஞ்சல்களில் ஆடுங்கள். கணவன் இருப்பதனால், நீங்கள் சதா சந்தோஷமாகவும் பாக்கியசாலியாகவும் ஆகியுள்ளீர்கள். (நீங்கள் விதவைகள் இல்லை) நீங்கள் அமரர் தந்தையின் அமரர் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். பாப்தாதாவும் குழந்தைகளைக் காண்பதில் களிப்படைகிறார். நல்லது.

ஆசீர்வாதம்:
நீங்கள் செல்வந்தராகி, நிரம்பியிருக்கும் உணர்வுடன் சதா திருப்தியை அனுபவம் செய்வீர்களாக.

சுய இராச்சியத்தின் செல்வமானது, ஞானம், நற்குணங்கள் மற்றும் சக்திகள் ஆகும். இந்த சகல வகையான செல்வங்களுடனும் சுய இராச்சிய உரிமையைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும் திருப்தியாக இருப்பார்கள். எந்தவிதமான பேறும் குறைவாக இருக்கும் பெயரோ அல்லது சுவடோ அவர்களிடம் இருக்காது. எல்லைக்குட்பட்ட ஆசைகளே அறியாதவர்களாக இருத்தல் என்றால் செல்வந்தராக இருத்தல் என்று அர்த்தம். அவர்கள் எப்போதும் அருள்பவர்களாக இருப்பார்கள். ஒருபோதும் யாசகர்களாக இருக்க மாட்டார்கள். நிலையான, துண்டிக்கப்படாத, சந்தோஷமான, அமைதிநிறைந்த சுய இராச்சியத்திற்கான உரிமை உடையவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்களின் துண்டிக்க முடியாத அமைதியை எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையாலும் அழிக்க முடியாது.

சுலோகம்:
முக்காலங்களையும் மூவுலகங்களையும் ஞானக்கண்ணுடன் பார்ப்பவர்கள், மாஸ்ரர் ஞானம் நிறைந்தவர்கள் ஆவார்கள்.