07.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஏனெனில், நினைவே வாள் முனை. இதில் உங்களை நீங்கள் ஏமாற்றக்கூடாது.

கேள்வி:
உங்கள் கதாபாத்திரத்தைச் (உhயசயஉவநச) சீர்திருத்துவதற்காகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு எப்பாதையைக் காட்டுகின்றார்?

8பதில்:
குழந்தைகளே, உங்கள் அட்டவணையை நேர்மையாக வைத்திருங்கள். ஓர் அட்டவணையை வைத்திருப்பதால் மாத்திரமே உங்கள் கதாபாத்திரம் சீர்திருத்தப்படும். நீங்கள் ஒவ்வொருவருமே நாள் முழுவதும் உங்கள் கதாபாத்திரம் எவ்வாறிருந்தது எனச் சோதித்துப் பார்க்க வேண்டும்: நான் எவருக்காவது துன்பம் விளைவித்தேனா? நான் பயனற்ற விடயங்களைப் பேசினேனா? என்னை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை எவ்வளவு நேரம் நினைவுசெய்தேன்? நான் எத்தனை பேரை என்னைப் போல் ஆக்கினேன்? அத்தகையதோர் அட்டவணையை வைத்திருப்பவர்களது கதாபாத்திரம் தொடர்ந்தும் சீர்திருத்தப்படுகின்றது. எதையாவது செய்பவர்கள் அதன் பலனைப் பெறுவார்கள், ஆனால் எதையுமே செய்யாதவர்கள் வருத்தப்படுவார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், ஏனெனில், அவர் இங்கு உங்கள் முன்னிலையில் நேரடியாக இருக்கின்றார். குழந்தைகள் அனைவரும் தங்கள் ஆதிதர்மத்தில் ஸ்திரமாக இருந்து தந்தையை நினைவுசெய்கிறார்கள் எனக் கூறமுடியாது; அவர்களது புத்தி நிச்சயமாக எங்காவது ஈர்க்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் நீங்களாகவே புரிந்துகொள்ள முடியும். சதோபிரதான் ஆகுவதே பிரதான விடயம். நினைவு யாத்திரை இன்றி, உங்களால் அவ்வாறு ஆகமுடியாது. குழந்தைகள் காலையில் யோகத்தில் அமரும்பொழுது, பாபா அவர்களை ஈர்த்தாலும், அவர் அவர்களை வரிசைக்கிரமமாகவே ஈர்க்கின்றார். நினைவில், நீங்கள் அமைதியாக அமர்ந்திருந்து, உலகையும் மறந்து விடுகின்றீர்கள், ஆனால், கேள்வி எழுகின்றது: நீங்கள் நாள் முழுவதும் என்ன செய்கின்றீர்கள்? காலையில் ஒரு மணித்தியாலத்திற்கோ அல்லது அரை மணித்தியாலத்திற்கோ நினைவு யாத்திரையில் இருப்பதன் மூலம் ஆத்மா தூய்மையாகி, அவர் ஆயுட்காலமும் அதிகரிக்கின்றது. ஆனால், நீங்கள் நாள் முழுவதும் பாபாவை எவ்வளவுக்கு நினைவு செய்கின்றீPர்கள்? எந்தளவிற்கு நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுகின்றீர்கள்? பாபா அனைத்தையும் அறிவார் என்றில்லை. நீங்கள் உங்களது இதயத்தைக் கேட்க வேண்டும்: நான் நாள் முழுவதும் என்ன செய்தேன்? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்களது அட்டவணைகளை எழுத வேண்டும். உங்களில் சிலர் அதனைச் சரியான முறையில் எழுதுகின்றீர்கள், ஏனையோர் அதனைத் தவறான முறையிலேயே எழுதுகின்றீர்கள். நீங்கள் உணர்வீர்கள்: நான் சதா சிவபாபாவுடனேயே இருந்தேன், நான் சிவபாபாவை மாத்திரம் நினைவுசெய்து கொண்டிருந்தேன். எவ்வாறாயினும், உண்மையில் நீங்கள் அந்த நினைவில்தான் இருந்தீர்களா? முழுமையான மௌனத்தில் நிலைத்திருப்பதால், நீங்கள் இவ்வுலகையும் மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் எப்படியோ சிவபாபாவின் நினைவிலேயே இருப்பதாக எண்ணி, உங்களையே ஏமாற்றக்கூடாது. நீங்கள் சரீர சமயங்கள் அனைத்தையும் மறந்துவிட வேண்டும். சிவபாபா எங்களை ஈர்த்து, எங்களை முழு உலகையும் மறக்கச் செய்கின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை உங்களை ஈர்க்கின்றார். சகல ஆத்மாக்களும் தந்தையை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். வேறு எவரும் நினைவுசெய்யப்படக்கூடாது. எவ்வாறாயினும், நீஙகள் ஒவ்வொருவரும் உண்மையில் அவரை நினைவு செய்கின்றீர்களா, இல்லையா என உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நான் எந்தளவிற்கு பாபாவை நினைவுசெய்கின்றேன்? காதலியினதும், அன்பிற்கினியவரினதும் உதாரணம் இருப்பதைப் போன்று, இது ஆன்மீகக் காதலியும், அன்பிற்கினியவரும் ஆவர். இங்கு அனைத்தும் தனித்துவமானது. மற்றையது பௌதீகமானது, இதுவோ ஆன்மீகமானது. தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்கு நீங்கள் எவ்வளவு நேரம் செலவு செய்தீர்கள், தந்தையின் சேவையில் எவ்வளவு நேரம் இருந்தீர்கள் என நீங்கள் பார்க்க வேண்டும். பின்னர், நீங்கள் மற்றவர்களுக்கும் பாபாவை நினைவு செய்யுமாறு நினைவூட்ட வேண்டும். நினைவின்றி, ஆத்மாவிலுள்ள துரு அகற்றப்பட முடியாது. பக்தி மார்க்கத்தில் நீங்கள் பலரை நினைவுசெய்கின்றீர்கள், ஆனால் இங்கு, நீங்கள் ஒரேயொருவரை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் சின்னஞ்சிறிய புள்ளிகள். எனவே, பாபாவும் மிகவும் சின்னஞ்சிறிய, சூட்சுமமான புள்ளியே. ஞானமோ மிகப் பெரியது. ஸ்ரீ இலக்ஷ்மி, நாராயணனாக அல்லது உலகின் அதிபதியாக ஆகுவதென்பது உங்களது மாமியார் வீட்டிற்குப் போவது போன்றதல்ல! தந்தை கூறுகின்றார்: உங்களை அதி திறமைசாலி எனக் கருதி உங்களை ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களையே கேளுங்கள்: ஆத்மாவின் துரு அகற்றப்படுவதற்காக, நான் எவ்வளவு நேரம் என்னை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்தேன்? எத்தனை பேரை நான் என்னைப் போல் ஆக்கினேன்? நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கென இந்த அட்டவணையை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் வெகுமதியைப் பெறுவார்கள், இதைச் செய்யாதவர்கள் வருத்தப்படுவார்கள். நாள் முழுவதும் உங்களது கதாபாத்திரம் எவ்வாறிருந்தது என நீங்கள் சோதிக்க வேண்டும். நான் எவருக்காவது துன்பம் விளைவித்தேனா? நான் எவருடனாவது பயனற்ற விடயங்களைப் பேசினேனா? உங்கள் அட்டவணையை வைத்திருப்பதால் உங்கள் கதாபாத்திரம் சீர்திருத்தப்படும். தந்தை உங்களுக்குப் பாதையைக் காட்டியுள்ளார். ஒரு காதலியும், அன்பிற்கினியவரும் ஒருவரையொருவர் நினைவுசெய்கின்றனர். ஒருவர் மற்றவரை நினைத்தவுடனேயே அவர் முன்னால் மற்றவர் தோன்றுகின்றார். இருவரும் பெண் நண்பிகளாக இருந்தாலும், ஒருவர் மற்றவரின் காட்சியைக் காண முடிகின்றது. இருவரும் ஆண் நண்பர்களாக இருந்தாலும் ஒருவர் மற்றவரின் காட்சியைக் காண முடிகின்றது. சிலரின் நண்பர்கள் அவர்களின் சகோதரர்களை விடவும் மிக நெருக்கமானவர்களாக உள்ளார்கள். சில நண்பர்கள் தங்களது சகோதரர்கள் மீது கூட கொண்டிருக்காதளவு அதிக அன்பை ஒருவருக்கொருவர் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பெருமளவு அன்புடன் ஒருவரையொருவர் ஈடேற்றுகின்றனர். பாபா அனுபவசாலி. தந்தை அதிகாலையில் உங்களை அதிகளவில் ஈர்க்கின்றார். அவர் சதா தூய்மையான காந்தம் என்பதால் உங்களை ஈர்க்கின்றார். தந்தை எல்லையற்றவர். நீங்கள் மிக வசீகரமான குழந்தைகள் என்பதை அவர் புரிந்துகொள்கின்றார். எனவே, அவர் மேலும் பலமாக உங்களை ஈர்க்கின்றார். எவ்வாறாயினும், இந்த நினைவு யாத்திரை மிகவும் அத்தியாவசியமானது. பிரயாணம் செய்யும்பொழுது, நீங்கள் எங்கு சென்றாலும், அமர்ந்திருக்கும்பொழுதும், நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும், உண்ணும்பொழுதும் பாபாவை நினைவுசெய்ய முடியும். ஒரு காதலியும், அன்பிற்கினியவரும் எங்கிருந்தாலும், ஒருவரையொருவர் நினைவுசெய்கின்றார்கள். இங்கும் அவ்வாறே. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். வேறு எவ்வாறு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்? வேறெந்த வழியும் கிடையாது. இது மிகவும் சூட்சுமமானது. இது வாள் முனையில் நடப்பது போன்றது. நினைவே வாள் முனை. நீங்கள் நினைவுசெய்ய மறந்துவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறுகின்றீர்கள். அது ஏன் வாளைப் போன்றது எனக் கூறப்படுகின்றது? ஏனெனில், இதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தூய்மையாகுகிறீர்கள். இது மிக நுணுக்கமானது. அம்மக்கள் தீயில் நடப்பது போன்று, உங்கள் புத்தியின் யோகமும் தந்தையை நோக்கியே இருக்க வேண்டும். தந்தை இங்கு வந்து, எங்களுக்கு எங்கள் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவர் மேலே இல்லை. அவர் இங்கு கீழிறங்கி வந்துவிட்டார். அவர் கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கின்றேன்;. தந்தை மேலிருந்து கீழே வந்துள்ளார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். உயிருள்ள வைரம் இக் கொள்கலனிற்குள் அமர்ந்திருக்கின்றார். நீங்கள் பாபாவுடன் இருப்பதாக நினைத்து வெறுமனே சந்தோஷப்படாதீர்கள். பாபா இதை அறிவார். அவர் உங்களை அதிகளவில் ஈர்க்கின்றார். எவ்வாறாயினும், அது வெறும் அரை மணித்தியாலத்திற்கு அல்லது முக்கால் மணித்தியாலத்திற்கு மாத்திரமே. நீங்கள் எஞ்சிய நாள் முழுவதையும் வீணாக்கினால், என்ன நன்மை இருக்கும்? குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய அட்டவணைகளை வைத்திருப்பதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். உங்களால் விரிவுரைகள் ஆற்ற முடியும் என்றும், அதனால் நீங்கள் அட்டவணையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் எண்ணாதீர்கள். இத்தவறைச் செய்யாதீர்கள். மகாராத்திகளும் தங்கள் அட்டவணையை வைத்திருக்க வேண்டும். மகாராத்திகள் பலர் இல்லை; வெகுசிலர் மாத்திரமே இருக்கின்றனர். பலர் பெயரிலும், உருவத்திலும், பெருமளவு நேரத்தை வீணாக்குகின்றனர். இலக்கு மிக உயர்வானது. தந்தை அனைத்தையும் மாணவர்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், எனவே, நீங்கள் பாபா இன்ன இன்ன கருத்துக்களை எங்களுக்கு விளங்கப்படுத்தவில்லை என எண்ண முடியாது. நினைவும், உலகச் சக்கரத்தின் ஞானமுமே பிரதான விடயங்கள். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறெவருமே இவ்வுலகச் சக்கரத்தின் 84 பிறவிகளைப் பற்றி அறியார். நீங்களே விருப்பமின்மையைக் கொண்டவர்கள். இம் மரண பூமியில் நீங்கள் இனியும் வாழப் போவதில்லை என்பதை அறிவீர்கள். திரும்பிச் செல்வதற்கு முன்;னர் நீங்கள் தூய்மையாக வேண்டும். உங்களுக்குத் தெய்வீகக் குணங்களும் நிச்சயமாகத் தேவை. நீங்கள் மாலையில் வரிசைக்கிரமமாகவே கோர்க்கப்படவுள்ளீர்கள், பின்னர், நீங்கள் வரிசைக்கிரமமாக இராச்சியத்தில் ஒருவர் ஆகுவீர்கள். பின்னர், நீங்கள் வரிசைக்கிரமமாகப் பூஜிக்கப்படுவீர்கள். பல தேவர்கள் பூஜிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அத்தகைய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன! அவர்கள் சண்டிகா (சுடலையாண்டி) தேவிக்கு ஒரு மேலா வைக்கின்றார்கள். ஒரு பதிவேட்டை வைத்திருக்காதவர்கள் சீர்திருத்தப்பட மாட்டார்கள் என்பதால், அவர்கள் சண்டிகா என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் எதனையும் செவிமடுப்பதோ அல்லது ஏற்றுக்கொள்வதோ இல்லை. இவை இங்கே எல்லையற்ற விடயங்கள். நீங்கள் முயற்சி செய்யாவிட்டால் தந்தை கூறுவார்: நீங்கள் தந்தையைக் கூடச் செவிசாய்ப்பதில்லை! உங்களது அந்தஸ்து குறைக்கப்படும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள்மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். பாபா காலையில் வந்து, நினைவு யாத்திரைக்கு முயற்சி செய்வதற்கு உங்களை அதிகளவில் தூண்டுகின்றார். இலக்கு மிக உயர்வானது. ஞானம் ஓர் எளிமையான பாடம் எனக் கூறப்படுகின்றது. 84 பிறவிகளின் சக்கரத்தை நினைவுசெய்வது ஒரு பெரிய விடயமல்ல. எனினும், பலர் தோல்வியடைகின்ற, நினைவு யாத்திரையே அதிபிரதான விடயம். இதிலேயே உங்கள் போராட்டம் உள்ளது. நீங்கள் நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள், ஆனால், மாயை உங்களை விழச் செய்கின்றாள். ஞானத்தில் போராட்டம் என்ற கேள்விக்கே இடமில்லை. அது உங்கள் வருமானத்திற்கான மூலாதாரம். இது தூய்மையாகுவதற்கானது. இதனாலேயே நீங்கள் தந்தையைக் கூவியழைக்கின்றீர்கள்: வந்து, எங்களைத் தூய்மையாக்குங்கள்! நீங்கள் கூறுவதில்லை: வந்து, எங்களுக்குக் கற்பியுங்கள்! நீங்கள் கூறுகின்றீர்கள்: வந்து, எங்களைத் தூய்மையாக்குங்கள்! எனவே, நீங்கள் இக்கருத்துக்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் முழுமையான இராஜயோகிகள் ஆகவேண்டும். ஞானம் மிக எளிமையானது. நீங்கள் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். உங்களது பேச்சில் இனிமையும் இருக்க வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அதுவும் உங்கள் கர்மத்திற்கேற்ப என்றே கூறப்படுகின்றது. நீங்கள் ஆரம்பத்திலிருந்தே பக்தி செய்துவந்தீர்கள். எனவே, அதுவும் நல்ல கர்மம் என்றே கூறப்படுகின்றது. இதனாலேயே சிவபாபாவும் இங்கமர்ந்திருந்து மிகவும் தெளிவாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எந்;தளவிற்கு அதிகமாகப் பக்தி செய்தீர்களோ, அந்தளவிற்கு சிவபாபாவும் பூரிப்படைந்திருப்பார். எனவே, நீங்கள் இப்பொழுது ஞானத்தையும் விரைவாகப் பெற வேண்டும். மகாராத்திகள் தங்கள் புத்தியில் இக்கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். நீங்கள் தொடர்ந்தும் அனைத்துக் கருத்துக்களையும் குறித்துக் கொண்டால், பின்னர் உங்களால் அதில் நல்ல கருத்துக்களை வேறாக்க முடியும். உங்களால் கருத்துக்களின் ஆழத்தை அறிய முடியும். எனினும், எவருமே இம்முயற்சியைச் செய்வதில்லை. எவராவது அரிதாகவே கருத்துக்களைக் குறித்து, அதிலிருந்து நல்ல கருத்துக்களை வேறாகப் பிரித்தறிகின்றார்கள். பாபா எப்பொழுதும் கூறுகிறார்: நீங்கள் விரிவுரையாற்றுவதற்கு முன்னர், கருத்துக்களை எழுதி, பின்னர் அவற்றைச் சோதித்துப் பாருங்கள். எவருமே இம்முயற்சியைச் செய்வதில்லை. எவருமே சகல கருத்துக்களையும் நினைவுசெய்வதில்லை. சட்டநிபுணர்களும் தங்களது நாட்குறிப்பேடுகளில் (னயைசல) சகல கருத்துக்களையும் எழுதுகிறார்கள். இது உங்களுக்கு முற்றிலும் அவசியமானது. நீங்கள் தலைப்புக்களை எழுதி, அவற்றைக் கற்று, பின்னர் அவற்றைத் திருத்த வேண்டும். நீங்கள் இந்தளவு முயற்சி செய்யாவிட்டால், உங்களால் பாய்ந்து (விரைந்து) செல்ல முடியாது. உங்கள் புத்தியின் யோகம் தொடர்ந்தும் ஏனைய திசைகளில் அலைபாயும். உங்களிற் வெகு சிலரே இலகுவாக முன்னேறுகின்றீர்கள். சேவையைத் தவிர வேறு எதுவுமே உங்களது புத்தியில் இல்லை. நீங்கள் மாலையில் மணியாக வேண்டுமாயின், முயற்சி செய்ய வேண்டும். தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். அவை உங்கள் இதயத்தைத் தொடுகின்றன. உங்களில் எவராவது நினைவில் இல்லாவிட்டால், அது உங்களுக்கே தெரியும். நீங்;கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தாலும், இவ்விடயங்களைக் குறித்துக்கொள்வதற்காக உங்கள் சட்டைப்பையில் உங்கள் நாட்குறிப்பேட்டை வைத்திருக்க வேண்டும். நீங்களே முக்கியமாக இவ்விடயங்களை அதிகளவு குறித்துக் கொள்ள வேண்டியவர்கள். நீங்கள் கவனயீனமாக இருந்தாலோ அல்லது உங்களை அதிதிறமைசாலி எனக் கருதினாலோ, அப்பொழுது மாயையும் குறைந்;தவள் அல்ல: அவள் தொடர்ந்தும் உங்களைக் குத்துவாள். இலக்ஷ்மி, நாராயணனாக ஆகுவதென்பது உங்களது மாமியார் வீட்டிற்குப் போவது போன்றதல்ல! பெரிய இராச்சியமொன்று ஸ்தாபிக்கப்படுகின்றது. பல மில்லியன்களில் ஒரு கைப்பிடியளவினரே வெளிப்படுவார்கள். பாபாவும் அதிகாலை 2.00 மணிக்கு எழுந்து, சில விடயங்;களை எழுதி, அவற்றைக் கற்பதுண்டு. அவர் சில கருத்துக்களை மறந்து விடுவதால், உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக, அமர்ந்திருந்து அக்குறிப்புக்களைப் பார்ப்பதுண்டு, எனவே, உங்கள் நினைவு யாத்திரை எவ்வளவு தூரத்திலுள்ளது என்பதையும், கர்மாதீத ஸ்திதி எவ்வளவு தூரத்திலுள்ளது என்பதையும் அப்பொழுது நீங்களே புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எவரையும் அநாவசியமாகப் புகழக்கூடாது. பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. கர்ம வேதனையும் உள்ளது. நீங்கள் தந்;தையை நினைவுசெய்ய வேண்டும். அச்சா, பிரம்மபாபா அன்றி, சிவபாபாவே முரளியைப் பேசுகின்றார் என எண்ணுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு எப்பொழுதும் கூறப்படுகின்றது: சிவபாபாவே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என எப்பொழுதும் கருதுங்கள். சிலவேளைகளில் இக்குழந்தையும் இடையில் பேசுகின்றார். தந்தை அனைத்தையும் மிகச்சரியாகவே பேசுவார். இவர் நாள் முழுவதும் பல எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார். இவருக்குப் பல குழந்தைகளின் பொறுப்பு உள்ளது. குழந்தைகள் பெயரிலும், உருவத்திலும் சிக்கி, விஷமத்தனம் செய்கின்றார்கள். பாபா பல குழந்தைகளிலும் அக்கறை கொண்டிருக்கின்றார். இவையனைத்தும் நாடகமாக இருந்தாலும், பாபா குழந்தைகளுக்காகக் கட்டடங்கள் கட்டி, அவர்களுக்கு வசதிகளும் செய்து கொடுக்க வேண்டியுள்ளது. இது பாபாவின் நாடகமும், இவரது நாடகமும், உங்களது நாடகமும் ஆகும். நாடகத்தில் இல்லாமல் எதுவுமே நிகழ மாட்டாது. நாடகம் விநாடிக்கு விநாடி தொடர்கின்றது. நீங்கள் நாடகத்தை நினைவுசெய்தால், தளம்பலடைய மாட்டீர்கள், நீங்கள் ஆட்ட அசைக்க முடியாதவராகவும், ஸ்திரமாகவும் இருப்பீர்கள். பல புயல்கள் வரும். சில குழந்தைகள் உண்மையைக் கூறுவதில்லை. அவர்களுக்குப் பல கனவுகள் வருகின்றன் மாயை இருக்கின்றாள். இதற்கு முன்னர் கனவு காணாதவர்களுக்குக்கூட கனவுகள் வரும். குழந்தைகள் தங்களது ஆஸ்தியைக் கோரும்பொருட்டு, நினைவுக்காக முயற்சி செய்ய வேண்டும் என்பதனைத் தந்தை புரிந்துகொள்கின்றார். சில குழந்தைகள் முயற்சி செய்யும்பொழுது களைப்படைந்து விடுகின்றார்கள். இலக்கு மிக உயர்வானது. பாபா 21 சந்ததிகளுக்கு உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். எனவே, நீங்களும் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் வசீகரமான தந்தையை நினைவுசெய்ய வேண்டும். பாபா உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார் என்பது உங்கள் இதயங்களில் உள்ளது. அத்தகைய தந்தையை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுசெய்ய வேண்டும். பாபாவே அனைவரிலும் அதி வசீகரமானவர். அந்த பாபா அற்புதங்களைச் செய்கின்றார். அவர் உங்களுக்கு உலக ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் “பாபா, பாபா, பாபா!” எனக் கூறியவாறு, அவரது புகழை உள்ளாரப் பாடவேண்டும்! தந்தையை நினைவுசெய்பவர்கள் அவரிடமிருந்து அந்த ஈர்ப்பை உணர்வார்கள். நீங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கே, இங்கு தந்தையிடம் வருகின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, எத்தவறையும் செய்யாதீர்கள். சகல நிலையங்களையும் சார்ந்த குழந்தைகள் இங்கு வருவதை பாபா பார்க்கின்றார். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கின்றேன்: எவ்வகையான சந்தோஷத்தை நீங்கள் அனுபவம் செய்கின்றீர்கள்? பாபா இவை அனைத்தையும் பார்க்கின்றார். நீங்கள் எந்தளவிற்கு பாபாவை நேசிக்;கின்றீர்கள் என்பதை அவர் உங்கள் முகங்களிலிருந்து பார்க்கின்றார். நீங்கள் தந்தையின் முன்னால் வரும்பொழுது, அவர் உங்களை ஈர்க்கின்றார். இங்கமர்ந்திருக்கும்பொழுது, நீங்கள் அனைத்தையும் மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் பாபாவைத் தவிர வேறு எதனையும் நினைவுசெய்யக்கூடாது. நீங்கள் முழு உலகையும் மறந்துவிட வேண்டும். அந்த ஸ்திதி மிக இனிமையானதும் அலௌகீகமானதுமாகும். நீங்கள் வந்து, தந்தையின் நினைவில் அமரும்பொழுது, அன்புக் கண்ணீர் சிந்துகின்றீர்கள். பக்தி மார்க்கத்திலும் உங்களுக்குக் கண்ணீர் வருவதுண்டு. ஆனால், பக்தி மார்க்கமானது ஞான மார்க்கத்திலிருந்து வேறுபட்டது. இது உண்மையான தந்தை மீதான உண்மையான அன்பாகும். இங்கே அனைத்தும் தனித்துவமானது. நீங்கள் இங்கு சிவபாபாவிடமே வருகின்றீர்கள். அவர் நிச்சயமாக ஓர் இரதத்தைச் செலுத்துவார். அங்கு, ஆத்மாக்களால் சரீரங்களின்றி, சந்திக்க முடியும், ஆனால் இங்கு, அனைவரும் சரீரதாரிகள். இவர்கள் பாப், தாதா என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் அவரைப் பெருமளவு அன்புடன் புகழ வேண்டும். பாபா எங்களுக்கு எதனைக் கொடுக்கின்றார்? பாபா வந்துவிட்டார் என்பதையும், அவர் இக்காட்டிலிருந்து எங்களை அப்பால் அழைத்துச் செல்கின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். 'கடவுள் விஷ்ணு மங்களகரமான சகுனங்களைக் கொண்டு வருகிறார்" எனக் கூறப்படுகின்றது. அனைவருக்கும் நன்மையளிக்கின்ற கடவுள் ஒரேயொருவரே. அனைவரும் நன்மை பெறுகின்றனர். ஒரேயொரு தந்தையே இருக்கின்றார், ஆகவே நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். என்னால் ஏன் எவருக்கும் நன்மை செய்ய முடியவில்லை? நிச்சயமாக அங்கு ஏதாவது குறை இருக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் நினைவுச் சக்தியைக் கொண்டிராமையினால், உங்கள் வார்த்தைகளில் அக் கவர்ச்சி இருப்பதில்லை. இதுவும் நாடகமே. இப்பொழுது, அச்சக்தியை மிக நன்றாகக் கிரகியுங்கள். நினைவு யாத்திரையே சிரமமானது. நான் எனது சகோதரருக்கு ஞானத்தைக் கொடுக்கின்றேன். நான் அவருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுகின்றேன். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். நீங்கள் அநேகமாக மீண்டும் மீண்டும் அவரை மறக்கின்றீர்கள் என்பதை பாபா உணர்கிறார். தந்தை அனைவரையும் அவருடைய குழந்தையாகவே கருதுகின்றார், இதனாலேயே அவர் 'குழந்தாய், குழந்தாய்!" எனக் கூறுகின்றார். அவர் அனைவரதும் தந்தையாவார். அவரது பாகம் அற்புதமானது. இவை யாருடைய வார்த்தைகள் எனச் ஒரு சில குழந்தைகளே புரிந்துகொள்கிறார்கள். பாபா மாத்திரமே 'குழந்தாய், குழந்தாய்!" எனக் கூறுவார். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்கு வந்துள்ளேன். பாபா உங்களுக்கு அனைத்தையும் கூறுகின்றார். நான் குழந்தைகளாகிய உங்களிடமிருந்து வேலையைப் பெற வேண்டும். இந்த ஞானம் மிகவும் அற்புதமானதும், சுவையானதும் ஆகும். இந்த ஞானம் மிகவும் சாதுரியமானதும் நுணுக்கமானதும் ஆகும். நீங்கள் வைகுந்த அதிபதி ஆகுவதற்கு, அத்தகைய ஞானமும் தேவைப்படுகிறது. அச்சா. நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். உங்கள் உதடுகள் மூலமாக, ஒருபொழுதும் தீய அல்லது தவறான வார்த்தைகளைப் பேசாதீர்கள். அனைத்தையும் அன்புடன் செய்யுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதிகாலையில் ஏகாந்தத்தில் இருந்து, அன்புடன் தந்தையை நினைவுசெய்யுங்கள். முழு உலகையும் மறந்துவிடுங்கள்.

2. தந்தையைப் போன்று அனைவருக்கும் நன்மைபயப்பவர் ஆகுங்கள். பலவீனங்கள் அனைத்;தையும் அகற்றிவிடுங்கள். உங்கள் மீது ஒரு கண் வைத்திருங்கள். உங்களது சொந்தப் பதிவேட்டைப் பாருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மூன்று வகையான விழிப்புணர்வின் திலகத்தின் மூலம் உங்கள் ஸ்திதியை மேன்மையாக்குவதால், ஆட்ட, அசைக்க முடியாதவர்கள் ஆகுவீர்களாக.

பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் மூன்று வகையான விழிப்புணர்வுகளின் திலகத்தைக் கொடுத்துள்ளார். ஒன்று சுயத்தின் விழிப்புணர்வும், இரண்டாவது தந்தையின் விழிப்புணர்வும், மூன்றாவது மேன்மையான கர்மத்தின் விழிப்புணர்வும், அதாவது, நாடகத்தின் விழிப்புணர்வும் ஆகும். இம்மூன்று வகையான விழிப்புணர்வுகளையும் சதா அறிந்துள்ளவர்கள் ஒரு மேன்மையான ஸ்திதியைக் கொண்டுள்ளனர். ஓர் ஆத்மாவாக இருக்கின்ற விழிப்புணர்வுடன், நீங்கள் தந்தையின் விழிப்புணர்வையும் கொண்டிருக்கின்றீர்கள், தந்தையுடன், நாடகத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதும் முக்கியமானது, ஏனெனில் உங்கள் கர்மாவில் நாடகத்தின் ஞானத்தை நீங்கள் கொண்டிருந்தால், அப்பொழுது எந்தத் தளம்பலும் இருக்க மாட்டாது. வருகின்ற வெவ்வேறு சூழ்நிலைகள் அனைத்திலும் நீங்கள் ஆட்ட அசைக்க முடியாதவராக இருப்பீர்கள்.

சுலோகம்:
உங்கள் பார்வை அலௌகீகமாகவும், உங்கள் மனம் குளிர்மையாகவும், உங்கள் புத்தி கருணை மிக்கதாகவும் இருக்கட்டும்.