10.10.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் யாத்திரை புத்தியால் செய்யப்படுவதாகும். இதுவே ஆன்மீக யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. உங்களை சரீரங்களாக அல்லாது, நீங்கள் ஆத்மாக்களாக உங்களைக் கருதுகிறீர்கள், சரீரங்களாக அல்ல. உங்களைச் சரீரமாகக் கருதுவது என்பது தலைகீழாகத் தொங்குவதாகும்.

கேள்வி:
மாயையின் பகட்டால் மக்கள் எத்தகையதொரு மரியாதையைப்; பெற்றுக்கொள்கிறார்கள்?

பதில்:
அசுரத்தனமான மரியாதை. இன்றைக்கு ஒருவரை மக்கள் சிறிதளவு கௌரவிப்பார்கள். ஆனால், நாளைக்கே அவரை அவமரியாதை செய்து தூற்றுவார்கள். மாயை எல்லோரையுமே அவமரியாதை செய்து, தூய்மையற்றவர்களாக ஆக்கியுள்ளாள். உங்களைத் தெய்வீக மரியாதை கொண்டவர்களாக்குவதற்குத் தந்தை வந்திருக்கிறார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மாக்களாகிய உங்களிடம் கேட்கிறார்: நீ;ங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உலக ஆன்மீகப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறோம் என்று கூறுவீர்கள். ‘ஆன்மீக’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. பல உலகப் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. எனினும், ஆன்மீகப் பல்லைக்கழகம் இது ஒன்று தான் உலகத்தில் இருக்கிறது. உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரேயொருவரே ஆவார். அவர் உங்களுக்கு என்ன கற்பிக்கிறார்? ஆன்மீக ஞானம். எனவே, இது ஆன்மீகப் பாடசாலையாகிய ஆன்மீகப் பல்கலைக்கழகம். உங்களுக்கு ஆன்மீக ஞானம் கற்பிப்பவர் யார்? இந்த நேரத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே இது தெரியும். ஆன்மீகத் தந்தை மட்டுமே உங்களுக்கு ஆன்மீக ஞானம் கற்பிக்கிறார். இதனாலேயே அவர் ஆசிரியர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆன்மீகத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். சரி, அடுத்து என்ன நடக்கும்? இந்த ஆன்மீக ஞானத்தால் உங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை நீங்கள் ஸ்தாபிக்கிறீர்;கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஒரேயொரு மதத்தின் ஸ்தாபனையும் ஏனைய மதங்களின் அழிவும் இடம்பெறுகிறது. இந்த ஆன்மீக ஞானத்திற்கும் ஏனைய மதங்கள் எல்லாவற்றுக்கும் இடையிலுள்ள சம்பந்தம் என்னவென்று இப்பொழுது உங்களுக்குத் தெரியும். இந்த ஆன்மீக ஞானத்தின் மூலமே ஒரேயொரு மதம் ஸ்தாபிக்கப்படுகிறது. இலக்ஷ்மியும் நாராயணரும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். அது ஆன்மீக உலகம் என்று அழைக்கப்படும். நீங்கள் இந்த ஆன்மீக ஞானத்தின் மூலம் இராஜயோகம் கற்கிறீர்கள். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. நல்லது, ஏனைய மதங்களோடு என்ன சம்பந்தம் இருக்கிறது? ஏனைய மதங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும். ஏனெனில், நீங்கள் தூய்மையாகும் பொழுது உங்களுக்குப் புதியதொரு உலகம் வேண்டும். எண்ணற்ற பல சமயங்கள் முடிவடைந்து, ஒரேயொரு தர்மமே எஞ்சியிருக்கும். அது உலகத்தில் அமைதியின் இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. இப்போது அமைதியின்மையின் தூய்மையற்ற இராச்சியம் நிலவுகிறது. அதன் பின், அமைதியின் தூய இராச்சியம் இருக்கும். இப்போது எண்ணற்ற பல சமயங்கள் இருக்கின்றன. அளவற்ற அமைதியின்மை காணப்படுகிறது! அனைவரும் தூய்மையற்றவர்கள். இது இராவண இராச்சியமாகும். இப்போது ஐந்து விகாரங்களும் நிச்சயமாகத் துறக்கப்பட வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவற்றை நீங்கள் உங்களோடு கொண்டு செல்லப் போவதில்லை. ஆத்மா ஒருவர் தன்னுடன் நல்ல சம்ஸ்காரங்களையும் தீய சம்ஸ்காரங்களையும் கொண்டு செல்கிறார். தந்தை இப்போது உங்களுக்குத் தூய்மையாகுவதைப் பற்றிக் கூறுகிறார். அந்தத் தூய உலகத்தில் துன்பம் எதுவும் இல்லை. இந்த ஆன்மீக ஞானத்தை உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? ஆத்மாக்கள் எல்லோருக்கும் தந்தையாக இருக்கும் ஆன்மீகத் தந்தையாவார். ஆன்மீகத் தந்தை உங்களுக்கு எதைக் கற்பிப்பார்? ஆன்மீக ஞானத்தையாகும். இதில் புத்தகங்கள் (நூல்கள்) போன்றவற்றிற்கான அவசியமில்லை. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்து தூய்மையாக வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கு நோக்கி இட்டுச் செல்லும். இது நினைவு யாத்திரையாகும். ‘யாத்திரை’ என்ற வார்த்தை மிகவும் நல்லது. அவையெல்லாம் பௌதீகமான யாத்திரைகள். இதுவோ ஆன்மீக யாத்திரையாகும். அந்த யாத்திரையில் நீங்கள் பாத யாத்திரையாகச் செல்ல வேண்டியிருப்பதோடு, உங்கள் கால்களையும் பாதங்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். இங்கே, நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. தந்தையின் நினைவில் இருந்தால் போதும். எங்கே வேண்டுமானாலும் நீங்கள் உலாப் போகலாம், உட்காரலாம், நடந்து திரியலாம், ஆனால், உங்களை ஆத்மா என்று கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். அது ஒன்றும் கஷ்டமானதல்ல. தந்தையை நினைவு செய்தால் போதும். இதுவே நிஜமாகும். முன்பு நீங்கள் பிழையான வழியில் சென்றீர்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதற்குப் பதிலாகச் சரீரம் என்று கருதினீர்கள். எனவே அது தலைகீழாகத் தொங்குவதாகும். உங்களை ஆத்மாவாகக் கருதுவதே நேராக நிமிர்ந்து நிற்பதாகும். அல்லா வரும் போது அவர் வந்து உங்களைத் தூய்மையாக்குகிறார். அல்லாவின் உலகம் தூய்மையானது. இராவணனின் உலகம் தூய்மையற்றது. சரீர உணர்வு காரணமாக எல்லோரும் தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இப்போது நீங்கள் ஒரேயொரு தடவை ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும். எனவே, நீங்களே அல்லாவின் குழந்தைகளாவீர்கள். நீங்கள் அல்லாஹ{ (நானே அல்லா) என்று கூற மாட்டீர்கள். நீங்கள் எப்போதும் மேல் நோக்கியே சுட்டிக் காட்டுகிறீர்;கள். எனவே, அவரே அல்லா என்பதை இது நிரூபிக்கிறது. எனவே, இங்கே நிச்சயமாக வேறு ஏதோ ஒன்று இருக்க வேண்டும். நான் அந்தத் தந்தையாகிய அல்லாவின் குழந்தையாவேன். நாங்கள் சகோதரர்களாவோம். ‘அல்லாஹ{’ என்று கூறுவது நாங்கள் எல்லோரும் தந்தையர் என்று அர்த்தப்பட்டு விடும். அது எதிர்மாறான அர்த்தமாகி விடும். ஆனால் அவ்வாறல்ல! ஒரேயொரு தந்தையே இருக்கிறார். அவரையே நீங்கள் நினைவு செய்ய வேண்டும். அல்லா என்றும் தூய்மையானவர். அல்லாவே இங்கிருந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். மக்கள் அற்ப விடயங்களுக்கெல்லாம் மிகவும் குழப்பமடைகிறார்கள். அவர்கள் சிவனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணருக்கு அத்தகையதொரு அந்தஸ்தைக் கொடுத்தவர் யார்? சிவபாபா. ஸ்ரீகிருஷ்ணரே சுவர்க்கத்தின் முதல் இளவரசர் ஆவார். எல்லையற்ற தந்தை இவருக்கு இராச்சிய பாக்கியத்தைக் கொடுக்கிறார். ஸ்ரீகிருஷ்ணரே தந்தை ஸ்தாபிக்கின்ற சுவர்க்கம் என்னும் புதிய உலகத்தின் முதல்தரமான இளவரசனாவார். தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்குத் தூய்மையாகும் வழியைக் காடடுகிறார். விஷ்ணு தாமம், வைகுந்தம் (பரடைஸ்) என்றெல்லாம் அழைக்கப்படும் சுவர்க்கம் இப்போது கடந்த காலமாகி விட்டது. பின்பு, அது எதிர்காலமாக ஆகும். சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். இதை நீங்கள் கிரகித்து, மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்ட வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆசிரியர் ஆகவேண்டும். ஆசிரியராகுவதன் மூலம் நீங்கள் இலக்ஷ்மியாகவோ, நாராயணராகவோ ஆகி விடுவீர்கள் என்று நினைத்து விடாதீர்கள். இல்லை. ஆசிரியராகுவதன் மூலம் நீங்கள் பிரஜைகளை உருவாக்குவீர்கள். எவ்வளவுக்கு நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறீர்களோ அவ்வளவுக்கு உயர்ந்த அந்தஸ்தொன்றைப் பெற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கு அந்த விழிப்புணர்வு இருக்கும். தந்தை கூறுகிறார்: நீங்கள் புகையிரதத்தில் பயணம் செய்யும் போது, மக்களிடம் உங்கள் பட்ஜ்யைக் காட்டி விளங்கப்படுத்தலாம்: தந்தையே தூய்மையாக்குபவரும் விடுதலை அளிப்பவரும் ஆவார். அவரே உங்களைத் தூய்மையாக்குபவர் ஆவார். (பக்தி மார்க்கத்தில்) பலரையும் நினைவு செய்ய வேண்டியுள்ளது. யானைகள், குதிரைகள், மீன், முதலைகள் போன்றவை எல்லாம் அவதாரங்கள் என்றும் கூறுகிறார்கள். தொடர்ந்து அவற்றை வழிபாடு செய்கிறார்கள். கடவுள் எங்கும் நிறைந்தவர் என்றும், அவர் எல்லோருக்குள்ளும் இருக்கிறார் என்றும், எல்லோருக்கும் அவர்கள் உணவளிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். நல்லது, கடவுள் ஒவ்வொரு துரும்பிலும் இருக்கிறார் என்றால் எப்படி அவருக்கு உணவளிப்பார்கள்? அவர்கள் எல்லாவிதமான புரிந்துணர்வையும் இழந்தவர்களைப் போல் இருக்கிறார்கள். இலக்ஷ்மி, நாராயணரும் தேவர்களும் இந்த வேலையைச் செய்யப் போவதில்லை. அவர்கள் (பக்தர்கள்) எறும்புகள், இன்னார், இன்னார் என்று பல வகையில் உணவளிக்கிறார்கள். எனவே, தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் மத சார்பான அரசியலாளர்கள். நீங்கள் ஒரு மதத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இராச்சியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இராணுவம் இருக்கிறது. ஆனால், நீங்கள் மறைமுகமானவர்கள். உங்களுடையது ஆன்மீகப் பல்கலைக்கழகம். உலகத்து மனிதர்கள் எல்லாம் அந்த மதங்களை விட்டு விட்டுத் தங்கள் வீட்டுக்குச் செல்வார்கள். சகல ஆத்மாக்களும் திரும்பிச் செல்வார்கள். அதுவே ஆத்மாக்கள் வாழும் வீடாகும். இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் கற்கிறீர்கள். அதன் பின், நீங்கள் சென்று சத்தியயுகத்தில் ஆட்சி புரிவீர்கள். அங்கே வேறெந்த மதங்களும் இருக்காது. பாடலில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது: நீங்கள் எங்களுக்குத் தருவதை வேறு யாராலும் தரமுடியாது. வானம், பூமி எல்லாமே உங்களுடையதாகின்றது. நீங்கள் உலகம் முழுவதற்குமே அதிபதிகளாகுகிறீர்கள். இதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். புதிய உலகத்தில் நீங்கள் இந்த விடயங்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவீர்கள். இது ஆன்மீக ஞானம் எனப்படுகிறது. ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒருமுறை நீங்கள் இராச்சியத்தைப் பெற்று, அதன் பின் அதனை இழக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கிறது. 84 பிறவிகள் என்ற இந்த சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. அதனால் நீங்கள் கற்க வேண்டும். காரணம், அப்போது தான் உங்களால் விலகிச் செல்ல முடியும். நீங்கள் கற்கவில்லையென்றால் உங்களால் புதிய உலகத்திற்குச் செல்ல முடியாது. அங்கே எல்லைக்குட்பட்ட எண்ணிக்கையானவர்களே இருக்கிறார்கள். நீங்கள் அங்கே சென்று நீங்கள் செய்த முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் கற்பதில்லை. எல்லோரும் கற்பதாக இருந்தால், அவர்களும் தங்கள் அடுத்த பிறவியில் இராச்சியத்தைப் பெற்று விடுவார்கள். கற்பவர்களின் எண்ணிக்கைக்கு ஒரு எல்லை இருக்கிறது. சத்திய, திரேதா யுகங்களுக்குச் செல்கின்றவர்களே கற்பார்கள். உங்கள் பிரஜைகளில் பலர் தொடர்ந்து உருவாக்கப்படுகிறார்கள். பிற்காலத்தில் வருகின்றவர்களால் தங்கள் பாவங்களை அழிக்க முடியாதிருக்கும். அவ்வாத்மாக்கள் பாவாத்மாக்களாக இருந்தால், அவர்கள் தண்டனை அனுபவித்து மிகவும் குறைந்த ஓர் அந்தஸ்தையே பெற்றுக் கொள்வார்கள். அது அவமரியாதையாக இருக்கும். இந்த நேரத்தில் மாயையின் மரியாதையைப் பெற்றுக் கொள்பவர்கள் அவமரியாதை செய்யப்படுவார்கள். இது இறை மரியாதை. அதுவோ, அசுரத்தனமான மரியாதை. இறை மரியாதைக்கும் அதாவது, தெய்வீகமான மரியாதைக்கும் அசுரத்தனமான மரியாதைக்கும் இடையில் இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வேறுபாடு இருக்கிறது. நாங்கள் அசுரத்தனமான மரியாதையைக் கொண்டவர்களாக இருந்தோம். இப்போது மீண்டும் ஒருமுறை இறை மரியாதை கொண்டவர்களாகுகிறோம். அசுரத்தனமான மரியாதையால்;, நீங்கள் முழுப்பிச்சைக்காரர்கள் ஆகுகிறீர்கள். இது முட்களின் உலகம் என்பதால், அது அவமரியாதையேயாகும், இல்லையா? அதன் பின், நீங்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள் ஆகுகிறீர்கள். அரசனும் அரசியும் எவ்வாறோ பிரஜைகளும் அவ்வாறே. எல்லையற்ற தந்தை உங்களை மிகவும் மரியாதைக்குரியவர்களாக ஆக்குகிறார். எனவே, நீங்கள் அந்தளவு முயற்சி செய்ய வேண்டும். எல்லோரும் கூறுகிறார்கள்: சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகும் அளவுக்கு அல்லது சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகும் அளவுக்கு என்னை நான் மிகவும் மரியாதைக்குரியவர் ஆக்கப் போகிறேன். அவர்களை விட மேலான மரியாதை வேறு எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை. சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகும் சமயக்கதைகளை மக்கள் செவிமடுக்கிறார்கள். அமரத்துவக் கதையும், மூன்றாவது கண்ணின் கதையும் ஒன்றே ஆகும்;. இந்த நேரத்தில் தான் நீங்கள் அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்;கள். அதன் பின், நீங்கள் 84 பிறவிகள் எடுத்து, கீழிறங்கி வருகிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் முதலாம் இலக்கப் பிறவியை எடுப்பீர்கள். உங்கள் முதலாம் இலக்கப் பிறவியில் மிக உயர்ந்த அந்தஸ்தை நீ;ங்கள் பெறுகிறீர்கள். இராமர் உங்களை மரியாதைக்குரியவர்கள் ஆக்குகிறார். இராவணனோ உங்களை அவமரியாதைக்குரியவர்கள் ஆக்குகிறான். ஞானத்தின் மூலமே நீ;ங்கள் முக்தியையும் ஜீவன் முக்தியையும் அடைகிறீர்கள். அரைச்சக்கர காலமாக இராவணனின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை. இந்த விடயங்கள் இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் பதிகிறது. ஆனால், அதுவும் வரிசைக்கிரமமாகவே. இந்த வகையில், ஒவ்வொரு சக்கரமும் நீங்கள் உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக விவேகமுள்ளவர்களாகுகிறீர்கள். மாயை உங்களைத் தவறுகள் செய்ய வைக்கிறாள். அதன் பின், நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய மறந்து விடுகிறீர்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் இப்போது உங்கள் ஆசிரியராகி இருக்கிறார். அப்படியிருந்தும் கூட சிலர் சமூகமளிக்காது, கற்காது இருக்கிறார்கள். அவர்களுக்கு வாசலுக்கு வாசல் அலையும் பழக்கம் இருக்கிறது. தங்கள் கல்வியில் கவனம் செலுத்தாதவர்கள் வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் சலவைத்தொழில் போன்றவற்றைச் செய்கிறார்கள். அதற்குப் கல்வியறிவு போன்றன தேவையில்லை. வியாபாரத்தில் மக்கள் பல்கோடீஸ்வரர்களாகுகிறார்கள். தொழில் ஒன்றின் மூலம் அவர்கள் அந்தளவுக்குச் செல்வந்தர்களாக முடியாது. அதற்கு நிர்ணயிக்கப்பட்ட வருமானம் ஒன்றே கிடைக்கும். உங்கள் கல்வி உலக ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்கானதாகும். இங்கே, நீங்கள் பாரதவாசிகள் என்று கூறுகிறீர்கள். அதன் பின் பிற்காலத்தில் நீங்கள் உலக அதிபதிகள் என்று அழைக்கப்படுவீர்கள். அங்கே வேறெந்த சமயமும் இல்லை. தேவ தர்மம் மட்டுமே இருக்கிறது. தந்தை உங்களை உலக அதிபதிகளாக்குகிறார். எனவே நீங்கள் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். உங்களுக்குள் எவ்விதமான விகாரங்களின் தீய ஆவிகளும் இருக்கக் கூடாது. அந்தத் தீய ஆவிகள் மிக மோசமானவை. காமம் நிறைந்த ஒருவரது ஆரோக்கியம் தொடர்ந்தும் குறைவடைந்து வருகிறது. அவர்கள் தங்கள் பலத்தை இழக்கிறார்கள். காம விகாரம் உங்கள் பலம் எல்லாவற்றையும் முற்றிலும் அழித்து விட்டது. அதன் விளைவாக உங்கள் ஆயுள் தொடர்;ந்தும் குறைந்து வந்திருக்கிறது. நீங்கள் போகிகள் (புலனின்பத்தில் மூழ்குபவர்கள்) ஆகினீர்கள். காமம் நிறைந்தவர்கள் புலனின்பத்தில் மூழ்கி நோய்வாய்ப்படுபவர்களாவர். அங்கே விகாரங்கள் எதுவுமே இல்லை. எனNவு, யோகிகள் எப்Nபுhதும் ஆரோக்கியமானவர்கள். அவர்களது ஆயுள் 150 வருடங்கள். அங்கே எவருக்கும் மரணம் வருவதில்லை. இதையிட்டுக் கதையொன்றையும் கூறுகிறார்கள். ஒரு நபரிடம் துன்பம் முதலில்; வேண்டுமா அல்லது சந்தோஷம் முதலில் வேண்டுமா என்று கேட்கப்பட்டது. சந்தோஷம் முதலில் வேண்டும் என்று பதிலளிக்குமாறு அவருக்குக் கூறப்பட்டது. ஏனெனில், ஒரு தடவை அவர் சந்தோஷத்திற்குள் போய் விட்டார் என்றால் அதன் பின் அவரை மரணம் நெருங்க முடியாது. அங்கே மரணம் யாரையும் நெருங்கவே முடியாது. இதையிட்டு சமயக்கதையொன்றை உருவாக்கியுள்ளனர். தந்தை விளங்கப்படுத்துகிறார்: சந்தோஷ தாமத்தில் மரணம் இல்லை. அங்கே இராவண இராச்சியம் இல்லை. அதன் பின், நீங்கள் விகாரமானவர்களாகும் போதே உங்களுக்கு மரணம் வருகிறது. ஒருவரை மரணம் கொண்டு சென்றது, அதன் பின், இப்படி நடந்தது என்றெல்லாம் அவர்கள் பல சமயக்கதைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மரணத்தையும் கண்களால் காண முடியாது, ஆத்மாவையும் கண்களால் காண முடியாது. அவையெல்லாம் கட்டுக்கதைகள் எனப்படுகின்றன. வெறுமனே செவிக்கின்பத்திற்காக பல கதைகளும் இருக்கின்றன. தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: அங்கே அகால மரணமே இல்லை. அவர்களது ஆயுள் நீண்டது. அவர்கள் தூய்மையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்கள். எனினும், எவ்விதமான கலைகளும் எஞ்சியிருக்காத அளவுக்குப் படிப்படியாகக் கலைகள் குறைந்து வருகின்றன. ‘நான் நற்குணமற்றவன். என்னிடம் நற்குணமேதும் இல்லை.’ ‘நிர்க்குணம்’ (நல்ல குணங்களற்றவர்கள்) என்று அழைத்துக் கொள்ளும் சிறுவர் நிறுவனம் ஒன்று இருக்கிறது. அவர்கள் கூறுகிறார்கள்: எங்களிடம் நற்குணங்கள் ஏதும் இல்லை. எங்களை நற்குணம் கொண்டவர்களாக்குங்கள். எங்களை சகல நற்குணங்களாலும் நிறைந்தவர்களாக்குங்கள். தந்தை இப்போது கூறுகிறார்: நீங்கள் தூய்மையாக வேண்டும். எல்லோரும் இறக்க வேண்டும். சத்தியயுகத்தில் அதிக மக்கள்; இருக்க மாட்டார்கள். இப்போது அதிக மக்கள் இருக்கிறார்கள். அங்கே யோக சக்தியாலேயே குழந்தைகள் பிறக்கின்றன. இங்கே, மக்கள் தொடர்ந்து எத்தனையோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். தந்தை இப்போதும் கூறுகிறார்: தந்தையை நினைவு செய்யுங்கள். அந்தத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்களும் உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரை நினைவு செய்கிறீர்கள். சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் உங்களுக்கு என்ன கற்பிக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் தந்தையாகவும் ஆசிரியராகவும் இருப்பவரோடு யோகம் செய்ய வேண்டும். ஞானம் மிகவும் மேன்மையானது. இப்போது இது உங்கள் எல்லோருக்கும் ஒரு மாணவ வாழ்க்கையாகும். சிறுவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து கற்கும் இப்படியொரு பல்கலைக்கழகத்தை எப்போதேனும் நீங்கள் பார்த்திருக்கிறர்;களா? இது அனைவருக்கும் ஓர் ஆசிரியர் கற்பிக்கின்ற, அத்துடன் பிரம்மாவுமே கற்கின்ற ஒரு பாடசாலை ஆகும். இது ஓர் அற்புதம்! சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கிறார்! இந்த பிரம்மாவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். சிறுவர்கள், வயதானவர்கள் என எவரும் இங்கே கற்கலாம். நீங்களும் இந்த ஞானத்தைக் கற்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது மற்றவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். நாளுக்கு நாள் காலம் குறுகிக் கொண்டே வருகிறது. நீங்கள் இப்போது எல்லையற்றதற்குள் சென்று விட்டீர்கள். இந்த 5000 வருட சக்கரம் எவ்வாறு கடந்து சென்றுள்ளது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். முதலில், ஒரேயொரு மதமே இருந்தது. இப்போது பல மதங்களும் இருக்கின்றன. இப்போது இதை ஓர் ஆட்சியதிகாரம் என்று கூற முடியாது. இது மக்களாட்சி என்றே அழைக்கப்படுகிறது. மிக ஆரம்பத்தில், மதம் மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்கியது. நீங்கள் முழு உலகத்திற்கும் அதிபதிகளாக விளங்கினீர்கள். இப்போது மக்கள் அதர்மவாதிகளாகி இருக்கிறார்கள்: அவர்களிடம் தர்மமே இ;ல்லை. அவர்கள் எல்லோருக்குள்ளேயும் ஐந்து விகாரங்களே இருக்கின்றன. எல்லையற்ற தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்போது பொறுமையோடு இருங்கள். இன்னும் குறுகியதொரு காலத்திற்கே நீங்கள் இராவண இராச்சியத்தில் இருப்பீர்கள். நன்றாகப் கற்;பீர்களானால், சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். இது துன்ப உலகம். உங்களுடைய அமைதி தாமத்தையும் சந்தோஷ உலகையும் நினைவு செய்யுங்கள். தொடர்ந்தும் துன்ப உலகை மறவுங்கள். ஆத்மாக்களின் தந்தை உங்களுக்கு வழிகாட்டல் தருகிறார்: ஓ ஆன்மீகக் குழந்தைகளே! அந்த உறுப்புகள் மூலம் ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இதைக் கேட்டீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சத்தியயுகத்தில் சதோபிரதானாக இருந்த போது, உங்கள் சரீரங்களும் சதோபிரதானாகவும் முதல்தரமானதாகவும் இருந்தன. நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள். மறுபிறவிகள் எடுத்ததால் நீங்கள் இப்போது என்னவாகியிருக்கிறீர்கள் என்று பாருங்கள். இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வேறுபாடு காணப்படுகிறது. பகலில் நாம் சுவர்க்கத்தில் இருந்தோம். இரவில் நாம் நரகத்தில் இருக்கிறோம். இதுவே பிரம்மாவினதும் பிராமணர்களினதும் இரவும் பகலும் என்று அழைக்கப்படுகிறது. 63 பிறவிகளாக இரவின் இருளில் தடுமாறித் திரிந்தீPர்கள். நீங்கள் அலைந்து திரிந்து கொண்டிருந்தீர்கள். எவராலும் கடவுளைக் கண்டுகொள்ள முடியவில்லை. இது ஒரு முடிவு காண முடியாத விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. எனவே தந்தை முழு உலகத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய செய்திகளைக் கூறுகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. வாசலுக்கு வாசல் அலைந்து திரியும் பழக்கத்தைத் துறந்து, கடவுளின் கற்பித்தல்களை அவதானத்துடன் கற்றுக் கொள்ளுங்கள். ஒருபோதும் வகுப்புக்குச் சமூகமளிக்காமல் இருக்க வேண்டாம். நிச்சயமாகத் தந்தையைப் போல் ஓர் ஆசிரியராகுங்கள். கற்று, மற்றவர்களுக்கும் கற்பியுங்கள்.

2. சத்திய நாராயணரின் சத்தியக் கதையைக் கேட்டு, சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகுங்கள். உங்களை நீங்கள் மரியாதைக்குரியவர்கள் ஆக்கவேண்டும். ஒருபோதும் தீய ஆவிகளின் (விகாரங்களின்) ஆதிக்கத்திற்கு உட்பட்டு, அதன் மூலம் உங்கள் மரியாதையை இழக்காதீர்கள்


ஆசீர்வாதம்:
சகல கடந்தகால விடயங்களையும், மனோபாவங்களையும் முடித்து விடுவதன் மூலம், முழுமையாக வெற்றி அடையும் ஒரு சுத்தமான ஆத்மா ஆகுவீர்களாக

சுத்தமான புத்தியையும், சுத்தமான மனோபாவத்தையும் கொண்டிருப்பதுடன், சுத்தமான செயல்களை செய்வதுமே சேவையில் வெற்றியீட்டுவதற்கு இலகுவான வழியாகும். நீங்கள் எப்பணியை ஆரம்பிக்கும் முன்னரும், முதலில் உங்கள் புத்தியில் எந்த கடந்தகால செயல்களின் விழிப்புணர்வும் இல்லாதுள்ளதா என்பதை சோதியுங்கள். பழைய சுபாவத்துடனும் பழைய பார்வையுடனும் அந்த ஆத்மாவை பார்ப்பதனாலும், அவ் ஆத்மாவும் அவ்வாறாக பேசுவதனாலும், நீங்கள் முழுமையான வெற்றியை அடைய முடியாது. எனவே, கடந்த காலத்தின் அனைத்து விடயங்களையும் மனோபாவத்தையும் முடித்து ஒரு சுத்தமான ஆத்மா ஆகும் போதே உங்களால் வெற்றியடைய முடியும்.

சுலோகம்:
சுய மாற்றத்தை ஏற்படுத்துபவர்களே வெற்றி மாலை சூடப்படுகின்றார்கள்.