17.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நினைவு செய்தல், மேலும் நினைவைத் தூண்டுகின்றது. தன்னை அன்புடன் நினைவு செய்யும் குழந்தைகளினால் ஈர்க்கப்படுவதைத் தந்தையும் அனுபவம் செய்கிறார்.
கேள்வி:
உங்கள் முதிர்ச்சி ஸ்திதியின் அடையாளம் என்ன? அந்த ஸ்திதியை அடைவதற்கான முயற்சி என்ன?
8பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் முதிர்ச்சி ஸ்திதியை அடையும் பொழுது, உங்கள் பௌதீக உறுப்புக்கள் அனைத்தும் சாந்தமாகி விடும். நீங்கள் உங்கள் பௌதீக உறுப்புக்கள் மூலம் தவறான செயல்கள் எதையும் செய்ய மாட்டீர்கள். உங்கள் ஸ்திதி ஆட்ட அசைக்க முடியாததாகி விடும். இந்நேரத்தில்; நீங்கள் அசைக்க முடியாத ஸ்திதியைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் பௌதீக உறுப்புக்கள் 21 பிறவிகளுக்குக் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த ஸ்திதியை அடைவதற்கு நீங்கள் உங்களைச் சோதியுங்கள். அதைக் குறித்துக் கொள்வதனால் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பீர்கள். உங்கள் பௌதீக உறுப்புக்களை யோகசக்தியின் மூலம் மாத்திரமே உங்களால் கட்டுப்படுத்த முடியும். யோகம் மாத்திரமே உங்கள் ஸ்திதியை முதிர்ச்சியடையச் செய்யும்.ஓம் சாந்தி.
இது நினைவு யாத்திரையாகும். குழந்தைகள் அனைவருமே இந்த நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கிறார்கள். இப்பொழுது இங்கே குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அருகில் இருக்கிறீர்கள். அதேபோல், குழந்தைகள் எங்கே இருந்தாலும் அவர்கள் தந்தையை நினைவு செய்கிறார்கள். அதனால், அவர் இயல்பாகவே நெருங்கி வருகிறார். அதேபோல, சில நட்சத்திரங்கள் சந்திரனுக்கு மிக அருகாமையில் இருப்பதால், அவை மிகவும் ஒளி விட்டுப் பிரகாசிக்கின்றன. சில, அருகாமையில் இருக்கின்றன, ஏனையவை தொலைவில் இருக்கின்றன, குறிப்பிட்ட நட்சத்திரமொன்று அருகாமையில் இருப்பதால், மிகப் பிரகாசமாக ஒளிர்வதையும், இன்னொன்று முற்றிலும் பிரகாசமின்றி இருப்பதையும் உங்களால் பார்க்க முடியும். நீங்களும் இவ்வாறு போற்றப்படுகிறீர்கள்: நீங்களே ஞான யோக நட்சத்திரங்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஞான சூரியனைக் கண்டு கொண்டீர்கள். தந்தை சேவாதாரிக் குழந்தைகளை மாத்திரம் நினைவு செய்கிறார். தந்தை சர்வசக்திவானாக இருக்கிறார். அந்தத் தந்தையை நீங்கள் நினைவு செய்யும் பொழுது, அந்த நினைவு, மேலும் நினைவைத் தூண்டுகிறது. அவ்வாறான சேவாதாரிக் குழந்தைகள் எங்கிருந்தாலும், ஞான சூரியனாகிய தந்தையும் அவர்களை நினைவு செய்கிறார். குழந்தைகளும் அவரை நினைவு செய்கிறார்கள். தன்னை நினைவு செய்யாத குழந்தைகளைத் தந்தை நினைவு செய்வதில்லை. தந்தையின் நினைவு அவர்களைச் சென்றடைவதில்லை. நினைவு நிச்சயமாக நினைவைத் தூண்டுகிறது. குழந்தைகளும் பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா, நீங்கள் என்னை நினைவு செய்கிறீர்களா என்று குழந்தைகள் வினவுகிறார்கள். தந்தை கூறுகிறார்: ஏன் இல்லை? இவ்விதமாக உங்களைத் தந்தை ஏன் நினைவு செய்ய மாட்டார்? மிகத் தூய்மையானவர்களும் தந்தையின் மீது அளவற்ற அன்பு கொண்டவர்களுமாகிய குழந்தைகள் இந்த வகையில் தந்தையின் நினைவையும் ஈர்க்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை இவ்வாறு வினவ முடியும்: நான் எந்தளவுக்கு பாபாவை நினைவு செய்கிறேன்? ஒரேயொருவரின் நினைவில் நிலைத்திருக்கும் பொழுது, நீங்கள் இப் பழைய உலகை மறந்து விடுகிறீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்து, பின்னர் அவரைச் சென்று சந்திக்கிறீர்கள். அவரைச் சந்திக்கும் நேரம் இப்பொழுது வந்துள்ளது. தந்தை உங்களுக்கு நாடகத்தின் இரகசியங்களையும் விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களைத் தனது ஆன்மீகக் குழந்தைகள் ஆக்குகிறார். எவ்வாறு தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதென்று அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். தந்தை ஒரேயொருவரே. அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். எவ்வாறாயினும், தங்கள் சொந்த முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக அனைவரும் அந்த நினைவைப் பெறுகிறார்கள். அவரை நீங்கள் எவ்வளவுக்கு அதிகமாக நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக பாபா உங்கள் முன்னிலையில் நிற்பதைப் போல் இருக்கும். இவ்வாறே நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். நீங்கள் பாபாவை எந்தளவுக்கு அதிகமாக நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்கள் பௌதீக உறுப்புக்கள் குறைவாகவே விஷமத்தனத்தை விளைவிக்கும். பௌதீக உறுப்புக்கள் விஷமத்தனம் செய்யும் பொழுது, அது மாயை என அழைக்கப்படுகிறது. பௌதீக உறுப்புகளால் தீய செயல்கள் எதுவும் செய்யப்படக்கூடாது. இங்கே, நீங்கள் யோக சக்தி மூலம் பௌதீக உறுப்புக்களை வெற்றிகொள்ள வேண்டும். அம்மக்கள் மருந்துகளால் தங்கள் உறுப்புக்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். பாபா, ஏன் என்னால் இந்த உறுப்புக்களைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது எனக் குழந்தைகள் வினவுகிறார்கள். தந்தை கூறுகிறார்: தந்தையை நீங்கள் அதிகளவு நினைவு செய்யும் பொழுது, உங்கள் பௌதீக உறுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இதுவே கர்மாதீத ஸ்த்தி என அழைக்கப்படுகிறது. இதனை நினைவு யாத்திரை மூலம் மாத்திரமே அடைய முடியும். அதனாலேயே, பாரதத்தின் புராதன இராஜயோகம் நினைவுகூரப்படுகிறது. கடவுளால் மாத்திரமே அதைக் கற்பிக்க முடியும். கடவுள் தன் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார். யோக சக்தி மூலம் விகாரமான இப் பௌதீக உறுப்புக்களை வெற்றி கொள்வதற்கு நீங்கள் முயற்சிசெய்ய வேண்டும். இறுதியில் நீங்கள் முழுமை அடைவீர்கள். உங்கள் முதிர்ச்சி ஸ்திதியை நீங்கள் அடையும் பொழுது, உங்கள் பௌதீக உறுப்புக்கள் எதுவும் விஷமத்தனம் செய்யாது. இப்பொழுது விஷமத்தனங்கள் அனைத்தையும் முடிவடையச் செய்வதனால், 21 பிறவிகளுக்கு உங்கள் எப் பௌதீக உறுப்புக்களும் உங்களை ஏமாற்ற மாட்டாது. பின்னர் 21 பிறவிகளுக்கு உங்கள் பௌதீக உறுப்புக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. காமமே பிரதான விடயமாகும். நினைவில் இருப்பதால், உங்கள் பௌதீக உறுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இப்பொழுது உங்கள் பௌதீக உறுப்புக்களைக் கட்டுப்படுத்துவதால், அரைச்சக்கர காலத்திற்குப் பரிசொன்றைப் பெறுகிறீர்கள். உங்களால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுவிட்டால், பாவங்கள் தொடர்ந்தும் எஞ்சியிருக்கும். யோகசக்தியின் மூலம் தொடர்ந்தும் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தொடர்ந்தும் தூய்மையாகுவீர்கள். இதுவே முதல் இலக்கப் பாடமாகும். தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கே நீங்கள் தந்தையைக் கூவி அழைக்கிறீர்கள். அதனால், தந்தையே வந்து உங்களைத் தூய்மையாக்குகிறார். தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவர் ஆவார். தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இதுவும் ஞானமே. ஒன்று யோகத்தைப் பற்றிய ஞானமும், மற்றையது 84 பிறவிச் சக்கரத்தைப் பற்றிய ஞானமுமாகும். இரு வகையான ஞானம் இருக்கின்றது. அதனையடுத்து, தெய்வீக குணங்கள் என்ற பாடம் இயல்பாகவே இவை இரண்டிலும் அமிழ்;ந்திருக்கிறது. நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும் என்பதால், நிச்சயமாக நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் உங்களைச் சோதிக்க வேண்டும். அதைக் குறித்துக் கொள்வதன் மூலம், உங்களையிட்டு நீங்கள் எச்சரிக்கையாக இருப்பீர்கள். உங்களைச் சோதிப்பதனால் தவறுகள் எதுவும் செய்ய மாட்டீர்கள். தந்தையே கூறுகிறார்;: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். பாபாவே தூய்மையாக்குபவர் என நீங்கள் அறிந்திருந்ததனால் தான் நீங்கள் என்னைக் கூவி அழைத்தீர்கள். அவரே வரும் பொழுது மாத்திரமே அவர் உங்களுக்கு இவ் வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது இவ் வழிகாட்டல்களைப் பயிற்சிசெய்ய வேண்டும். நீங்கள் அச் சரீரங்கள் மூலம் பாகமொன்றை நடிக்கிறீர்கள். அதனால், நிச்சயமாகத் தந்தை இவருக்குள் பிரவேசிக்க வேண்டும். இவை மிக அற்புதமான விடயங்கள். திரிமூர்த்திப் படம் மிகத் தெளிவானது! பிரம்மா தபஸ்யா செய்து இவ்வாறு ஆகுகிறார். 84 பிறவிகளின் பின்னர் அவர் இவ்வாறு ஆகுகிறார். நீங்கள் உங்கள் புத்தியில் இதையும் வைத்திருக்க வேண்டும்: பிராமணர்களாகிய நாங்கள் தேவர்களாக இருந்தோம். பின்னர், 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்தோம். நாங்கள் இப்பொழுது இங்கே மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுவதற்கே வந்துள்ளோம். தேவ வம்சம் முடிவடையும் பொழுது, பக்தி மார்க்கத்தில் அவர்கள் அதிகளவு அன்புடன் நினைவு செய்யப்படுகிறார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு அந்த அந்தஸ்தை அடையும் வழியைக் காட்டுகின்றார். நினைவும் மிக இலகுவானதாக இருக்க வேண்டும். அதற்கு உங்களுக்குத் தேவைப்படுவது ஒரு தங்கப்பாத்திரமே ஆகும். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக முயற்சி செய்கிறீர்களோ, அந்தளவுக்கு அதிகக் கருத்துக்கள் வெளித்தோன்றும். நீங்கள் தொடர்ந்தும் ஞானத்தை மிகவும் நன்றாகப் பேசுவீர்கள். பாபாவே உங்களில் பிரவேசித்து ஞானத்தைக் கொடுப்பதாக நீங்கள் உணர்வீர்கள். பாபாவும் பெருமளவில் உதவி செய்கின்றார். நீங்கள் மற்றவர்களுக்கும் நன்மையளிக்க வேண்டும். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒரு விநாடி மற்றையதைப் போன்று இருக்க முடியாது. காலம் தொடர்ந்தும் கடந்து செல்கின்றது. பல வருடங்களும், பல மாதங்களும் எவ்வாறு கடந்து சென்றுவிட்டன? ஆரம்பத்திலிருந்து காலம் தொடர்ந்தும் கடந்துசென்று விட்டது. இவ்விநாடி மீண்டும் 5000 வருடங்களுக்குப் பின்னர் வரும். இதுவும் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்யவும் வேண்டும். அதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். வேறெந்த வழியும் கிடையாது. நீங்கள் இதுவரை காலமும் செய்துவந்ததெல்லாம் பக்தியே. மக்கள் கூறுகின்றார்கள்: கடவுள் பக்தியின் பலனைக் கொடுப்பார். அவர் எத்தகைய பலனைக் கொடுப்பார்? எப்பொழுது, எவ்வாறு அவர் அதனைக் கொடுப்பார்? அவர்கள் முற்றிலும் எதனையும் அறியார்கள். தந்தை பலனைக் கொடுப்பதற்காக வரும்பொழுது, கெர்டுப்பவரும், பெறுபவர்களும் ஒன்றாகவே வருகின்றார்கள். நாடகத்தின் அந்தப் பாகம் தொடர்ந்தும் நகர்ந்து செல்கின்றது. முழு நாடகத்திலும் இதுவே உங்கள் இறுதி வாழ்வாகும். ஒருவர் தனது சரீரத்தை நீக்கி விடுவதும் சாத்தியமாகும். அவர்கள் வேறொரு பாகத்தை நடிக்க வேண்டியிருந்தால், அவர்கள் பிறப்பெடுக்கவும் முடியும். கர்மக் கணக்குகள் அதிகம் கொண்டிருப்பவர்கள் இன்னொரு பிறப்பெடுக்க முடியும். பல பாவங்களைக் கொண்டவர்கள் தொடர்ந்தும் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுப்பார்கள். அவர் கருப்பையில் பிரவேசித்து, துன்பத்தை அனுபவம் செய்து, பின்னர் சரீரத்தை நீக்கி, வேறொன்றை எடுப்பார். இதுவே மக்கள் காசியில் தங்களை அர்ப்பணிக்கும்பொழுது, ஏற்படும் நிலை ஆகும். அவர்களின் தலைமீது பல பாவங்கள் உள்ளன. யோகசக்தி கிடையாது. காசியில் உங்களை அர்ப்பணிப்பது என்றால், சரீரம் தற்கொலை செய்வதாகும். தான் தற்கொலை செய்வதை ஆத்மா புரிந்து கொள்கின்றார். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நீங்கள் வரும்பொழுது, நான் என்னை உங்களிடம் அர்ப்பணிப்பேன். எவ்வாறாயினும், பக்தி மார்க்கத்தில் மக்கள் தங்களை அர்ப்பணிக்கின்றார்கள். அது பக்தியாகும். தானதர்மங்கள், புண்ணியங்கள், யாத்திரைகள் போன்ற எதனை நீங்கள் செய்தாலும் யாருடன் அப் பரிமாற்றங்கள் உள்ளன? அது பாவாத்மாக்களுடனாகும். இது இராவண இராச்சியமாகும். தந்தை கூறுகின்றார்: எச்சரிக்கையுடன் ஒரு பரிமாற்றத்தைச் செய்யுங்கள். நீங்கள் எதையாவது தீய செயலுக்காகப் பயன்படுத்துவீர்களாயின் அது உங்கள் தலையில் சேகரிக்கப்படும். நீங்கள் பெருமளவு எச்சரிக்கையுடன் தானதர்மங்கள் செய்ய வேண்டும். ஏழைகளுக்கே அன்ன தானங்களும் ஆடைகளும் வழங்கப்படுகின்றன. இந்நேரத்தில், அவர்கள் தர்மசாலைகளைக் கட்டி, அங்கே மக்களை வரவழைத்துக் கொடுக்கின்றார்கள். செல்வந்தர்கள் பிரம்மாண்டமான மாளிகைகளைக் கொண்டிருக்கிறார்கள், ஏழைகளுக்குக் குடிசைகள் உள்ளன. அவர்கள் அசுத்தமான கால்வாய்களின் அருகே வாழ்கின்றார்கள். அவ்வசுத்தம் பசளை உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றது. பின்னர் அது விற்கப்பட்டு, வயல்களில் பயன்படுத்தப்படுகின்றது. சத்தியயுகத்தில், அத்தகைய குப்பைகளுடன் வயல்கள் இருக்க மாட்டாது. அங்கே புத்தம் புதிய மண் காணப்படும். அதன்பெயரே வைகுந்தம் ஆகும். பல்வேறு இரத்தினங்களின் பெயர்கள் நினைவுகூரப்படுகின்றன. சிலர் அதிகளவு சேவை செய்கின்றார்கள், சிலரோ சிறிதளவு சேவையே செய்கின்றார்கள். சிலர் கூறுகின்றனர்: என்னால் சேவை செய்ய முடியாது. அனைவரும் பாபாவின் இரத்தினங்களே, ஆனால் அதிலும் அவர்களது முயற்சிக்கேற்ப அவர்கள் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றார்கள். பின்னர் அவர்கள் பூஜிக்கப்படுகின்றார்கள். தேவர்களே பூஜிக்கப்படுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் பல வகையான வழிபாடுகள் இடம்பெறுகின்றன. அவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்படடுள்ளன. நீங்கள் அவற்றைப் பார்த்துக் களிக்கின்றீர்கள். நாங்கள் நடிகர்கள். நீங்கள் இந்நேரத்திலேயே ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். பக்தியின் பாகமும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். பக்தியிலும் மக்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். அவர்களது குரு அவர்களிடம் மாலையின் மணிகளை உருட்டுமாறு கூறுகின்றார், எப் புரிந்துணர்வும் இல்லாமல் அவர்கள் பெருமளவு சந்தோஷத்துடன் அதனைத் தொடர்ந்தும் செய்கின்றார்கள். சிவன் அசரீரியானவர். மக்கள் ஏன் அவருக்குப் பால், நீர் போன்றவற்றைப் படைக்கின்றார்கள்? அவர்கள் விக்கிரகங்களுக்கு போக் படைக்கின்றார்களாயினும், அவ்விக்கிரகங்கள் எதனையும் உண்பதில்லை. பக்தி மார்க்கத்தில் அதிகளவு விரிவாக்கம் உள்ளது. பக்தி விருட்சமும், ஞானம் விதையுமாகும். குழந்தைகளாகிய உங்களைத் தவிர எவரும் படைப்பவரையோ அல்லது படைப்பையோ அறியார்கள். சில குழந்தைகள் இச்சேவைக்காகத் தங்கள் எலும்புகளையும் அர்ப்பணிக்கின்றார்கள். இது உங்கள் கற்பனை என்றும் சிலர் உங்களிடம் கூறுகின்றனர். ஓ, ஆனால் இது உலக வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதாகும். கற்பனை மீண்டும் மீண்டும் இடம்பெற முடியாது. இது ஞானமாகும். இவை புதிய உலகிற்கான புதிய விடயங்களாகும். கடவுள் பேசுகின்றார்: கடவுள் புதியவர், அவரது மேன்மையான வாசகங்களும் புதியவையே. கடவுள் கிருஷ்ணர் பேசுவதாக அம்மக்கள் கூறுகின்றனர், நீங்களோ கடவுள் சிவன் பேசுவதாகக் கூறுகின்றீர்கள். ஒவ்வொருவரும் தங்களது சொந்தக் கருத்துக்களைக் கூறுகின்றனர். இரு விடயங்கள் ஒரேமாதிரியாக இருக்க முடியாது. இது ஒரு கல்வியாகும். நீங்கள் ஒரு பாடசாலையில் கற்கின்றீர்கள். அங்கு கற்பனை என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை ஞானம் நிறைந்தவரான, ஞானக்கடலாவார். ரிஷிகளும், முனிவர்களும் தங்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பையோ தெரியாதெனக் கூறுகின்றனர். எனவே, ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களுக்கே அது தெரியாமலிருக்கும்பொழுது, அவர்கள் எவ்வாறு இந்த ஞானத்தை எங்கிருந்தாவது பெற முடியும்? அதை அறிந்து கொண்டவர்கள் ஓர் அந்தஸ்தைப் பெற்றார்கள். சங்கமயுகம் எப்பொழுது வருகின்றது எனத் தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். இவ்விடயங்களால் புதியவர்கள் குழப்பமடைகிறார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: வெகு சிலரான நீங்கள் கூறுவதுதான் சரியா, ஏனைய அனைவர் கூறுவதும் தவறா? அவர்கள் கீதையைப் பொய்யாக்கிவிட்டதாக நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். அதுவே தாயும், தந்தையுமாகும். ஏனைய அனைத்தும் அதன் படைப்பாகும். அவற்றிலிருந்து நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. வேதங்களிலோ, சமயநூல்களிலோ படைப்பவரின் அல்லது படைப்பின் ஞானம் இருக்க முடியாது. முதலில், வேதங்கள் மூலம் எச்சமயம் உருவாக்கப்பட்டது என எங்களுக்குக் கூறுங்கள். பிரதான சமயங்கள் நான்கு இருக்கின்றன. ஒவ்வொரு சமயமும் ஒரேயொரு சமயநூலையே கொண்டுள்ளது. தந்தை பிராமணக் குலத்தை ஸ்தாபிக்கின்றார். பிராமணர்கள் பின்னர் சூரிய, சந்திர வம்சங்களில் தங்களது அந்தஸ்தைக் கோரிக் கொள்கின்றார்கள். தந்தை வந்து இந்த இரதத்தின் மூலம் நேரடியாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மா அசரீரியானவரென்பதால், நிச்சயமாக ஓர் இரதம் தேவைப்படுகின்றது. அவர் பௌதீகச் சரீரமொன்றை (கடனாகப்) பெறுகின்றார். ஓர் ஆத்மா என்றால் என்ன என்று அறியாதவர்களால் எவ்வாறு தந்தையை அறிந்துகொள்ள முடியும்? தந்தை மாத்திரமே உங்களுக்கு எது சரியானது எனக் கூறுகின்றார். ஏனையவர்கள் உங்களுக்குக் கூறுகின்ற ஏனைய அனைத்தும் தவறானவையே. அதன்மூலம்; எந் நன்மையும் கிடையாது. தாங்கள் யாருடைய மணி மாலையை உருட்டுகின்றார்கள் என்பது பற்றிய எதனையும் அவர்கள் அறியார்கள். அவர்கள் தந்தையையும் அறியார்கள். தந்தையே வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். ஞானத்தின் மூலம் சற்கதி கிடைக்கின்றது. அரைக் கல்பமாக ஞானமும், அரைக் கல்பமாகப் பக்தியும் உள்ளது. இராவண இராச்சியத்துடன் பக்தி ஆரம்பமாகுகின்றது. நீங்கள் பக்தி மூலமாகத் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி தமோபிரதானாகினீர்கள். மக்களுக்கு எவரது தொழில் பற்றியும் தெரியாது. அவர்கள் அதிகளவில் கடவுளைப் பூஜிக்கின்றார்கள். எனினும், அவர்களுக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது. எனவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அத்தகைய உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு, நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதற்கு முயற்சி தேவையாகும். ஒருவரது புத்தி சாதாரணமாக இருக்குமாயின் அவரால் மேலோட்டமாகத் தான் நினைவு செய்ய முடியும். எனினும், அவர் ஒரேயொருவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் பாடுகின்றீர்கள்: பாபா, நீங்கள் வரும்பொழுது நான் எனது புத்தியின் யோகத்தை உங்களுடன் மாத்திரமே இணைப்பேன். தந்தை இப்பொழுது வந்துவிட்டார். யாரைச் சந்திப்பதற்காக நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்கள்;? வாழ்க்கைத் தானத்தைக் கொடுத்து, ஆத்மாக்களை அமரத்துவப் பூமிக்கு அழைத்துச் செல்பவரிடம் ஆகும். தன்னால் உங்களை மரணத்தை வெற்றி கொள்ளச் செய்ய முடியும் என தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நான் உங்களை அமரத்துவப் பூமிக்கு அழைத்துச் செல்கின்றேன். கடவுள் பார்வதிக்கு அமரத்துவக் கதையைக் கூறுவதாக அவர்கள் காட்டுகின்றார்கள். ஒரேயொருவரே அமரத்துவப் பிரபு ஆவார். அவர் இமாலயத்தில் இருந்தவாறு உங்களுக்கு ஓர் கதையைக் கூறுவதில்லை. பக்தி மார்க்கத்திலுள்ள அனைத்தும் ஓர் அதிசயமாகவே தோன்றுகின்றது! அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. யோகசக்தியின் மூலம் புலனங்கங்களை வென்றவராகி, முற்றிலும் தூய்மையானவர்கள் ஆகுங்கள். அந்த ஸ்திதியை அடைவதற்கு, தொடர்ந்தும் உங்களைச் சோதியுங்கள்.2. நீங்கள் பிராமணர்களாக இருந்து தேவர்கள் ஆகினீர்கள் என்பதை எப்பொழுதும் உங்களது புத்தியில் வைத்திருங்கள். இப்பொழுது நீங்கள் தேவர்களாகுவதற்காக இங்கு மீண்டும் வந்துள்ளீர்கள். இதனாலேயே நீங்கள் பாவ புண்ணியங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு, மற்றவர்களுடன் பரிமாற்றம் செய்யும்பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆசீர்வாதம்:
உங்கள் விழிப்புணர்வில் உங்கள் சகல பேறுகளையும் தோன்றச் செய்வதன் மூலம் திருப்தியான ஆத்மாவாகவிருந்து சதா நிறைந்திருப்பீர்களாக.சங்கமயுகத்தில் நீங்கள் பாப்தாதாவிடமிருந்து பெற்ற சகல பேறுகளையும் உங்கள் விழிப்புணர்வில் நீங்கள் தோன்றச் செய்யும் போது, பேறுகளின் சந்தோஷம் தளம்பல்களில் நீங்கள் கீழிறங்குவதில் இருந்து உங்களை தடுக்கின்றது. நீங்கள் சதா ஆட்ட அசைக்க முடியாதவராக இருப்பீர்கள். நிறைந்திருத்தல் உங்களை ஆட்ட அசைக்க முடியாதவராக இருக்கச் செய்வதுடன் தளம்பல்களிலிருந்தும் உங்களை விடுவிக்கிறது. சகல பேறுகளினாலும் நிறைந்திருப்பவர்கள், சதா சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கின்றார்கள். திருப்தியானது அனைத்திலும் மிகப் பெரிய பொக்கிஷமாகும். திருப்தியாக இருப்பவர்களிடம் அனைத்தும் உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் பாடும் பாடல்: நான் அடைய வேண்டியதை அடைந்துவிட்டேன்!
சுலோகம்:
அன்பு என்ற ஊஞ்சலில் அமர்ந்திருந்தால், அனைத்து கடின உழைப்பும் இயல்பாகவே முடிவடையும்.