24.11.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 12.03.85 Om Shanti Madhuban
சத்தியத்தின் சக்தி.
இன்று, உண்மையான தந்தையும் உண்மையான ஆசிரியரும் சற்குருவும் சத்தியத்தின் சக்தியின் சொரூபங்கள் ஆகியுள்ள தனது குழந்தைகளைப் பார்க்கிறார். ஆத்மாக்களான நீங்கள், உண்மையான ஞானமும் சத்தியத்தின் சக்தியும் எத்தனை மகத்தானது என்பதை அனுபவம் செய்துள்ளீர்கள். தொலைதூரங்களில் வசிக்கும், வெவ்வேறு மதங்களையும் வெவ்வேறு நம்பிக்கைகளையும் சம்பிரதாயங்களையும் வழக்கங்களையும் கொண்டிருந்த குழந்தைகளான நீங்கள், ஏன் இந்த உலக ஆன்மீகப் பல்கலைக்கழகத்தினாலும் இராஜயோகத்தினாலும் கவரப்படுகிறீர்கள்? நீங்கள் உண்மையான தந்தையின் உண்மையான அறிமுகத்தைப் பெற்றுள்ளீர்கள். அதாவது, நீங்கள் உண்மையான ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் உண்மையான குடும்பத்தைக் கண்டுள்ளீர்கள். நீங்கள் உண்மையான அன்பைப் பெற்றுள்ளீர்கள். அத்துடன் உண்மையான பேறுகளையும் அனுபவம் செய்கிறீர்கள். இதனாலேயே நீங்கள் சத்தியத்தின் சக்தியால் கவரப்பட்டீர்கள். உங்களுக்கு வாழ்க்கை இருந்தது. உங்களிடம் பேறுகள் இருந்தன. உங்களின் கொள்ளளவிற்கேற்ப உங்களுக்கு அறிவும் இருந்தது. ஆனால் உங்களிடம் உண்மையான ஞானம் இருக்கவில்லை. இதனாலேயே, சத்தியத்தின் சக்தியானது உங்களை உண்மையான தந்தைக்கு உரியவர் ஆக்கியது.
சத்தியம் என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. சத்தியம் என்றால் உண்மை. சத்தியம் என்றால் அழியாதது என்றும் அர்த்தம். எனவே, சத்தியத்தின் சக்தியும் அழியாதது. இதனாலேயே, உங்களிடம் அழியாத பேறுகளும் அழியாத உறவுமுறைகளும் அழியாத அன்பும் அழியாத குடும்பமும் உள்ளன. அதே குடும்பம், வேறு பெயர்களிலும் உருவங்களிலும் தொடர்ந்து 21 பிறவிகளுக்கு உங்களுடன் இருக்கும். உங்களுக்கு அவர்களைத் தெரியாது. வெவ்வேறு உறவுமுறைகளினூடாக ஒரே குடும்பத்தின் பாகம் ஆகுவீர்கள் என்பதைத் தற்சமயம் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வெகு தொலைவில் வசித்தாலும், இந்த அழியாத பேறும் இனங்காணுதலும் உங்களை உண்மையான குடும்பத்தையும் உண்மையான தந்தையையும் உண்மையான ஞானத்தையும் நோக்கி ஈர்த்துள்ளது. எங்கு சத்தியம் உள்ளதோ, அது அழியாததாக உள்ளதோ, அங்கு இறைவனை இனங்கண்டு கொள்ளமுடியும். எனவே, நீங்கள் அனைவரும் இந்தச் சிறப்பியல்பின் அடிப்படையில் கவரப்படுவதைப் போன்று, நீங்கள் சத்தியத்தின் சக்தியையும் இந்த உண்மையான ஞானத்தையும் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் 50 வருடங்களாக நிலத்தைத் தயார் செய்து வருகிறீர்கள். நீங்கள் மக்களுக்கு அன்பைக் கொடுத்து, அவர்களைத் தொடர்பில் கொண்டுவந்தீர்கள். நீங்கள் அவர்களை இராஜயோகத்தை நோக்கிக் கவர்ந்தீர்கள். அவர்களை அமைதியின் அனுபவத்தை நோக்கிக் கவர்ந்தீர்கள். எனவே, இப்போது வேறு என்ன எஞ்சியுள்ளது? வெவ்வேறு மதங்களும் இறைவன் ஒருவரே என நம்புவதைப் போன்று, இந்த மிகச்சரியான, உண்மையான ஞானம் ஒரேயொரு தந்தையிடம் இருந்து மட்டுமே வருகிறது என்றும் இதுவே ஒரேயொரு பாதை என்றும் உரத்த சத்தம் பரவும்வரை, ஆத்மாக்கள் வைக்கோல் போன்ற ஆதாரங்களைத் தேடுவதை நிறுத்த மாட்டார்கள். தற்சமயம், இதுவும் பாதைகளில் ஒன்று என்றும், இது நல்லதொரு பாதை என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இறுதியில் இதுவே ஒரேயொரு தந்தையின் ஒரேயொரு அறிமுகம், இதுவே ஒரேயொரு பாதை என அவர்கள் நினைக்க வேண்டும். பல போலிக்கருத்துக்கள் முடிவடையும்போது, அதுவே உலக அமைதிக்கான அடிப்படையாக இருக்கும். சத்தியத்தை அறிமுகப்படுத்தும் இந்த அலையும் உண்மையான ஞானத்தின் சக்தியும் எங்கும் பரவும்வரை, வெளிப்படுத்தும் கொடியின் கீழ் ஆத்மாக்கள் அனைவராலும் ஆதாரத்தைப் பெற முடியாது. எனவே, நீங்கள் குறிப்பாக ஆத்மாக்களை தந்தையின் வீட்டிற்கு, பொன்விழாவிற்கு, அதாவது, உங்களின் மேடைக்கு விசேடமான அழைப்பிதழால் அழைக்கிறீர்கள். இங்கு மேன்மையான சூழல் உள்ளது. இங்கு சுத்தமான புத்திகளின் ஆதிக்கம் உள்ளது. அன்பினதும் தூய பராமரிப்பினதும் களம் உள்ளது. இத்தகைய சூழலின் மத்தியில் உங்களின் உண்மையான ஞானத்தை வெளிப்படுத்துதல் என்றால் வெளிப்படுத்துகை ஆரம்பமாக உள்ளது என்று அர்த்தம். கண்காட்சிகளில் சேவை செய்வதன் மூலம் துரித கதியில் நீங்கள் சேவை செய்ய ஆரம்பித்தபோது, நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்களுக்கு நினைவிருக்கிறதா? பிரதானமான கேள்விகளுடன் கூடியதொரு படிவத்தை அவர்கள் நிரப்பும்படி கேட்டீர்கள்: கடவுள் சர்வவியாபியா இல்லையா? கீதையின் கடவுள் யார்? நீங்கள் அந்தப் படிவங்களை நிரப்பும்படி அவர்களைக் கேட்டீர்கள், அல்லவா? அவர்களின் அபிப்பிராயங்களை எழுதும்படி கேட்டீர்கள். அவர்களிடம் புதிர்களைக் கேட்டீர்கள். எனவே, முதலில் அவ்வாறே ஆரம்பித்தீர்கள். ஆனால், பின்னர் நீங்கள் முன்னேறியபோது, இந்தக் கேள்விகளுக்கான பதிலை நீங்கள் மறைமுகமான முறையில் கொடுத்து, அன்பை வழங்குவதன் மூலம் அவர்களைத் தொடர்பிலும் நெருக்கமாகவும் கொண்டுவந்தீர்கள். இந்தத் தடவை, அவர்கள் இந்த இடத்திற்கு வரும்போது, உண்மையான அறிமுகத்தை மிகத் தெளிவாகக் கொடுங்கள். ‘இதுவும் நல்லதே’ என அவர்கள் கூறினால், அது உங்களை சந்தோஷப்படுத்த மட்டுமே. எவ்வாறாயினும், ஒரேயொரு தந்தையின் மிகச்சரியான அறிமுகம் அவர்களின் புத்திகளில் பிரவேசிக்க வேண்டும். நீங்கள் இப்போது அந்த நேரத்தை ஏற்படுத்த வேண்டும். தந்தை இந்த ஞானத்தைக் கொடுக்கிறார், அவர் வந்துள்ளார் என நீங்கள் நேரடியாக அவர்களுக்குக் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், அவர்கள் செல்லும்போது, இது இறைஞானம் என்றோ அல்லது இறைவனின் பணி நிகழ்கிறது என்ற நம்பிக்கையுடனா செல்கிறார்கள்? அவர்கள் இந்த ஞானத்தின் புதுமையை அனுபவம் செய்கிறார்களா? கடவுள் சர்வவியாபியா இல்லையா அல்லது அவர் ஒரு தடவை வருகிறாரா அல்லது மீண்டும் மீண்டும் வருகிறாரா? எனக் கேட்கும் பட்டறைகளை நடத்தினீர்களா? இங்கு அவர்கள் செவிமடுக்கும் விடயங்களை வெளியுலகில் ஒருபோதும் கேட்டதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வதற்கான தெளிவான அறிமுகங்களைக் கொடுங்கள். வருகின்ற பிரதான பேச்சாளர்களுக்கு இந்த இரகசியங்களை நீங்கள் கூறினால், இது அவர்களின் புத்திகளில் பிரவேசிக்கும். அத்துடன், நீங்கள் வழங்கும் சொற்பொழிவுகளில் ஒவ்வொரு பேச்சாளரும் இந்தப் புதிய ஞானத்தின் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்துவதுடன், தமது சொந்த மாற்றத்தின் அனுபவங்களையும் கூற முடியும். ‘கடவுள் சர்வவியாபி இல்லை’ என நேரடியாகக் கூறும் தலைப்பை வைக்காதீர்கள். ஒரேயொரு தந்தையை ஒரு ரூபத்தில் அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பெற்ற விசேடமான பேறுகளைப் பற்றி அவர்களுக்குக் கூறுங்கள். அதன்பின்னர் நீங்கள் சர்வவியாபி என்ற விடயத்தைத் தெளிவுபடுத்தலாம். தந்தையை நினைப்பதன் மூலமும் உங்களைப் பரந்தாமவாசி எனக் கருதுவதன் மூலமும் எவ்வாறு புத்தியை ஸ்திரமாக்க முடியும் என அவர்களுக்குக் கூறுங்கள். அத்துடன் தந்தையுடன் உறவுமுறையைப் பேணுவதன் மூலம் என்ன பேறுகளை நீங்கள் பெறுகிறீர்கள் என்றும் கூறுங்கள். நீங்கள் இதை இந்த முறையில் சத்தியத்துடனும் பணிவுடனும் நிரூபிக்க முடியும். அதன்மூலம் உங்களிடம் அகங்காரம் இல்லை என்பதையும் நீங்கள் உங்களை மட்டுமே புகழ்வதில்லை என்பதையும் அவர்கள் உணர்வார்கள். உங்களின் பணிவையும் கனிவையும் உணரும்போது, நீங்கள் அகங்காரம் கொண்டவர்கள் என அவர்கள் நினைக்க மாட்டார்கள். உதாரணமாக, நீங்கள் முரளியைக் கேட்கும்போது, அது அகங்காரம் என நீங்கள் எவரும் கூறமாட்டீர்கள். அது அதிகாரத்துடன் பேசப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுவார்கள். வார்த்தைகள் எத்தனை பலமானதாக இருந்தாலும், நீங்கள் அதை அகங்காரம் என அழைக்கமாட்டீர்கள். அதன் மூலம் அதிகாரம் அனுபவம் செய்யப்படுகிறது. இது ஏன்? எந்தளவிற்கு அதிகாரம் உள்ளதோ, அந்தளவிற்கு பணிவும் கனிவும் காணப்படும். தந்தை தனது குழந்தைகளின் முன்னால் அவ்வாறே பேசுகிறார். உங்கள் அனைவராலும் இந்தச் சிறப்பியல்புடன் இதை மேடையில் தெளிவுபடுத்த முடியும். எவ்வாறு அதைச் செய்வது என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. எனவே, சர்வவியாபி என்ற விடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவதாக, பெயர், உருவத்திற்கு அப்பாற்பட்டது என்ற விடயத்தை எடுத்துக்கொள்ளுங்க்ள. மூன்றாவதாக, நாடகத்தின் கருத்துக்களை உங்களின் புத்திகளில் வைத்திருங்கள். ஆத்மாக்களின் புதிய சிறப்பியல்புகளை உங்களின் புத்திகளில் வைத்திருங்கள். மனதில் அந்த விசேடமான தலைப்புக்களை வைத்திருந்து, உங்களின் அனுபவத்தினதும் பேறுகளினதும் அடிப்படையில் அவற்றைத் தெளிவுபடுத்துங்கள். இந்த உண்மையான ஞானத்தினால் சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படுவதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். கடவுளைத் தவிர வேறு எவராலும் கூற முடியாத, கடவுளின் வாசகங்களின் சிறப்பு என்ன? சில விசேடமான சுலோகன்களை உங்களால் அவர்களுக்கு நேரடியாகக் கூற முடியும்: ஒரு மனிதனை மனிதர்களின் சற்குரு எனக் கூறமுடியாது. அவரால் உண்மையான தந்தை ஆகமுடியாது. மனிதர்களால் கடவுள் ஆகமுடியாது. நீங்கள் அவ்வப்போது இத்தகைய விசேட கருத்துக்களைக் கேட்கிறீர்கள். உண்மையான ஞானத்தைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த வகையான சுலோகங்களை உருவாக்குங்கள். இது புதிய உலகிற்கான புது ஞானம் ஆகும். அவர்கள் புதுமையையும் சத்தியத்தையும் அனுபவம் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் கருத்தரங்குகளை நடத்தும்போது, மிக நல்ல சேவை இடம்பெறுகிறது. அந்தக் கருத்தரங்குகளின் தொடர்நடவடிக்கைக்காக நீங்கள் உரிமை ஆவணங்களை அல்லது வேறு ஏதாவது வழிமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள். தொடர்பில் இருப்பதற்காக நீங்கள் பல்வகை வழிமுறைகளைக் கையாளுகிறீர்கள். அவை நல்ல வழிமுறைகளே. ஏனெனில், அதில் பங்குபற்றுபவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. எவ்வாறாயினும், இங்கு வருபவர்கள், இது மிகவும் நல்லது, இது மிக நல்லதொரு திட்டம், இது மிக நல்லதொரு உரிமை ஆவணம், இது சேவை செய்வதற்கு நல்லதொரு வழிமுறை எனக் கூறுவதைப் போன்று, இன்று, இந்தப் புதிய ஞானம் தெளிவாகியது என்று கூறியவண்ணம் செல்ல வேண்டும். இத்தகைய ஐந்து அல்லது ஆறு விசேடமான ஆத்மாக்களை நீங்கள் உருவாக்க முடியும். ஏனெனில், உங்களால் அனைவருடனும் இந்த வகையான உரையாடலைச் செய்ய முடியாது. இங்கு விசேடமாக வரும் சிலரிடமே இவ்வாறு பேச முடியும். அவர்களை இங்கு அழைத்து வருபவர்களுக்கும் நீங்கள் பயணச்சீட்டுகளைக் கொடுக்கிறீர்கள். அவர்களும் விசேடமான பராமரிப்பைப் பெறுகிறார்கள். இங்கு வருகின்ற பிரபல்யமானவர்களுடன் இதயபூர்வமான சம்பாஷணை செய்யுங்கள். நிச்சயமாக இது அவர்களின் புத்திகளில் மிகத் தெளிவாகப் பிரவேசிக்கும். உங்களிடம் அதிகளவு போதை உள்ளது என்றில்லாமல், இதுவே சத்தியம் என்பதை அவர்கள் உணரும் வகையில் திட்டங்களை உருவாக்குங்கள். இது ‘வலியின்றி இலக்கைத் தாக்குவது’ எனப்படுகிறது. அவர்கள் அழக்கூடாது. ஆனால் சந்தோஷ நடனம் ஆடவேண்டும். சொற்பொழிவுகளை ஆற்றுவதற்குப் புதிய வழிமுறையைக் கண்டுபிடியுங்கள். உலக அமைதிக்காகப் பல உரைகள் ஆற்றப்பட்டுள்ளன. ஆன்மீகத்திற்கான தேவையே உள்ளது. ஆன்மீக சக்தி இன்றி எதுவும் நிகழாது. இது பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்மீக சக்தி என்றால் என்ன? ஆன்மீக ஞானம் என்றால் என்ன? அதன் மூலாதாரம் யார்? அவர்கள் இன்னமும் இந்தளவைப் பெறவில்லை. இறைவனின் பணி நிகழ்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்சமயம், பெண்களான நீங்கள் மிக நல்லதொரு பணியைச் செய்கிறீர்கள் என்றே அவர்கள் கூறுகிறார்கள். காலத்திற்கேற்ப, இந்தக் களமும் தயாராக்கப்பட வேண்டும். ‘மகன் தந்தையைக் காட்டுகிறார்’ என்பதைப் போல், ‘தந்தை மகனைக் காட்டுகிறார்’. இப்போது, ‘தந்தை மகனைக் காட்டுகிறார்’ என்றே உள்ளது. எனவே, இந்த உரத்த ஒலி, வெளிப்பாட்டிற்கான கொடியை ஏற்றி வைக்கும். உங்களுக்குப் புரிகிறதா?
பொன்விழாவிற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள், அல்லவா? ஏனைய இடங்களில், நீங்கள் சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், தந்தையின் வீடு உங்களின் வீடு. அது உங்களின் மேடை. எனவே, இத்தகைய இடத்தில், உங்களால் இந்த வெளிப்பாட்டிற்கான உரத்த ஒலியை உருவாக்க முடியும். இந்த விடயத்தைப் பற்றி சிலருக்கேனும் புத்தியில் நம்பிக்கை ஏற்பட்டால், அவர்கள் ஒலியைப் பரப்புவார்கள். இப்போது என்ன பெறுபேறு உள்ளது? தொடர்பில் வந்து அன்பை அனுபவித்தவர்கள் சேவை செய்கிறார்கள். அவர்கள் ஏனையவர்களையும் தொடர்பில் கொண்டு வந்து அவர்களுக்கு அன்பைக் கொடுக்கிறார்கள். அவர்கள் எந்தளவிற்கு இவ்வாறு ஆகியுள்ளார்களோ, அந்தளவிற்கு அவர்கள் சேவை செய்கிறார்கள். இதுவும் வெற்றி என்றே அழைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், நீங்கள் இப்போது முன்னேற வேண்டும். அவப்பெயரைக் கொண்டிருப்பதில் இருந்து,இப்போது உங்களின் பெயர் பெருமைப்படுத்தப்படுகிறது. முன்னர், அவர்கள் பயப்பட்டார்கள். ஆனால் இப்போது அவர்கள் வர விரும்புகிறார்கள். எனவே, இந்தளவு வேறுபாடு உள்ளது. முன்னர், அவர்கள் உங்களின் பெயரைக் கேட்பதற்கே விரும்பவில்லை. ஆனால், இப்போது அவர்கள் உங்களின் பெயரைக் குறிப்பிட விரும்புகிறார்கள். இதுவும் 50 வருடங்களில் நீங்கள் பெற்ற வெற்றியே. களத்தை உருவாக்குவதற்கு நேரம் எடுக்கும். இந்தளவை அடையவே உங்களுக்கு 50 வருடங்கள் எடுத்தன, இன்னும் என்னதான் நிகழ முடியும்? என நினைக்காதீர்கள். அனைத்திற்கும் முதலில், நிலத்தை உழுது அதைத் தயார் செய்வதற்கே நேரம் எடுக்கும். விதைகளை விதைப்பதற்கு நேரம் எடுக்காது. சக்திவாய்ந்த விதைகளில் இருந்து சக்திவாய்ந்த பழங்கள் கிடைக்கும். இது வரை என்ன நிகழ்ந்ததோ, அது நிகழ வேண்டியிருந்தது. என்ன நிகழ்ந்திருந்தாலும் அது சரியானதே. உங்களுக்குப் புரிகிறதா?
(வெளிநாட்டில் இருந்து வந்துள்ள குழந்தைகளைப் பார்த்துக் கூறுகிறார்). நீங்கள் மிக நல்ல சாகரப் பறவைகள். தந்தை பிரம்மா நீண்ட காலமாக அழைத்து உங்களுக்குப் பிறப்புக் கொடுத்தார். நீங்கள் விசேடமான அழைப்பினால் பிறந்துள்ளீர்கள். உங்களின் பிறப்பிற்கு நிச்சயமாக நீண்ட காலம் எடுத்தது. ஆனால், நீங்கள் ஆரோக்கியமாகவும் நல்ல முறையிலும் பிறந்துள்ளீர்கள். தந்தையின் ஒலி உங்களை வந்தடைந்துள்ளது. நீங்கள் சரியான நேரத்தில் நெருக்கமாக வந்துள்ளீர்கள். குறிப்பாகத் தந்தை பிரம்மா மகிழ்ச்சி அடைகிறார். தந்தை சந்தோஷப்பட்டால், குழந்தைகளும் சந்தோஷப்படுவார்கள். ஆனால் தந்தை பிரம்மாவிடம் விசேடமான அன்பிருந்தது. இதனாலேயே, உங்களில் பெரும்பாலானோர் தந்தை பிரம்மாவைக் காணவில்லை என்றாலும், அவரைக் கண்டதைப் போன்றே உங்களின் அனுபவம் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு உயிர் பெற்றுள்ளது. இது ஒரு சிறப்பியல்பாகும். ஆத்மாக்களான நீங்கள் தந்தை பிரம்மாவிற்காக விசேடமான அன்பெனும் ஒத்துழைப்பைக் கொடுக்கிறீர்கள். பாரத மக்களோ, ‘ஏன் பிரம்மா? ஏன் இந்தக் குறிப்பிட்ட நபர்?’ எனக் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் வெளிநாட்டுக் குழந்தைகளான நீங்களோ வந்தவுடனேயே தந்தை பிரம்மாவினால் கவரப்பட்டு, அன்பிலே கட்டப்பட்டு விடுகிறீர்கள். எனவே, இது ஒத்துழைப்பெனும் விசேடமான ஆசீர்வாதம் ஆகும். இதனாலேயே, நீங்கள் அவரைக் காணாவிட்டாலும், அவரிடமிருந்து மகத்தான பராமரிப்பைப் பெறுவதை அனுபவம் செய்கிறீர்கள். உங்களின் இதயத்தின் ஆழத்தில் இருந்து நீங்கள் ‘பிரம்மாபாபா’ என்று கூறுகிறீர்கள். இது விசேடமான சூட்சுமமான அன்பின் தொடர்பாகும். அவ்யக்த் ஆகிய பின்னர் ஏன் அவர்கள் வந்துள்ளார்கள்? எனத் தந்தை நினைப்பதில்லை. நீங்களும் இவ்வாறு நினைப்பதில்லை. தந்தை பிரம்மாவும் இவ்வாறு நினைப்பதில்லை. அவர் உங்களுக்கு முன்னாலேயே இருக்கிறார். பௌதீக ரூபம் கொடுத்ததைப் போன்ற பராமரிப்பை சூட்சும ரூபமும் கொடுக்கிறார். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள்,அல்லவா? இத்தகைய குறுகிய காலத்தில் பல நல்ல ஆசிரியர்கள் தயார் ஆகியுள்ளார்கள். வெளிநாடுகளில் சேவை ஆரம்பித்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது? எத்தனை ஆசிரியர்கள் தயாராகியுள்ளனர்? இது நல்லது. குழந்தைகளான நீங்கள் பெற்ற விசேடமான, சூட்சுமமான பராமரிப்பால் உங்களின் சேவைக்கான அன்பை பாப்தாதா தொடர்ந்து பார்க்கிறார். தந்தை பிரம்மாவில் தென்பட்ட விசேடமான சம்ஸ்காரம் என்ன? அவரால் சேவை செய்யாமல் இருக்க முடிந்ததா? வெளிநாட்டில் தொலைவில் வசிப்பவர்கள் விசேட பராமரிப்பின் ஒத்துழைப்பைப் பெறுவதனால், அவர்களுக்குச் சேவை செய்வதற்கு மகத்தான ஊக்கமும் உற்சாகமும் உள்ளன.
பொன்விழாவிற்காக நீங்கள் வேறு எதைச் செய்கிறீர்கள்? நீங்களும் பொன்போன்றவர்கள். விழாவும் பொன்விழா. இது நல்லது. சுயத்திற்கும் சேவைக்கும் இடையே சமநிலையைப் பேணுவதில் நிச்சயமாகக் கவனம் செலுத்துங்கள். சுய சேவையும் சேவையில் முன்னேற்றமும். சமநிலையைப் பேணுவதன் மூலம்,நீங்கள் உங்களுக்கும் ஏனைய ஆத்மாக்களுக்கும் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதற்குக் கருவிகள் ஆகுவீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? சேவைக்காகத் திட்டங்களைச் செய்யும்போது, அனைத்திற்கும் முதலில், உங்களின் ஸ்திதியில் கவனம் செலுத்துங்கள். அப்போது மட்டுமே திட்டங்களில் சக்தி இருக்கும். திட்டங்கள் விதைகளைப் போன்றவை. விதைகளுக்குச் சக்தி இல்லாவிட்டால், விதைகள் சக்திவாய்ந்தவையாக இல்லாவிட்டால், நீங்கள் எவ்வளவுதான் சிரமப்பட்டாலும், அவை மேன்மையான பழங்களைத் தரமாட்டாது. ஆகவே, திட்டங்களைச் செய்வதுடன்கூடவே, நிச்சயமாக அவற்றை உங்களின் சொந்த ஸ்திதி என்ற சக்தியால் நிரப்புங்கள். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.
சத்தியத்தை வெளிப்படுத்துபவர்களுக்கும், சதா சத்தியத்தினதும் பணிவினதும் சமநிலையைப் பேணுபவர்களுக்கும், ஒவ்வொரு வார்த்தையாலும் ஒரேயொரு தந்தையின் அறிமுகத்தை நிரூபிப்பவர்களுக்கும், சுய முன்னேற்றத்தினால் வெற்றி பெறுபவர்களுக்கும், சேவையால் தந்தையை வெளிப்படுத்தும் கொடியை ஏற்றுபவர்களுக்கும், சற்குருவினதும் உண்மையான தந்தையினதும் உண்மையான குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பிரியாவிடை பெறும் வேளையில், தாதிஜி போபால் செல்வதற்கு விடை பெறுகிறார்:
செல்வதிலும் சேவை உள்ளது. தங்கியிருப்பதிலும் சேவை உள்ளது. சேவைக்குக் கருவிகள் ஆகியுள்ள குழந்தைகளின் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வோர் விநாடியிலும் சேவையே உள்ளது. அவர்கள் உங்களைப் பார்க்கும்போது, எந்தளவிற்கு அவர்களின் ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கிறதோ, அந்தளவிற்கு அவர்கள் தந்தையை நினைவு செய்வார்கள். அவர்கள் சேவையிலும் முன்னேறுவார்கள். இதனாலேயே, வெற்றி எப்போதும் உங்களுடன் உள்ளது. நீங்கள் தந்தையை உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்கள். அத்துடன் வெற்றியையும் உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்கள். நீங்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும், அங்கு வெற்றியே ஏற்படும். (மோகினிபென்னிடம் பேசுகிறார்): நீங்கள் அவர்களைச் சந்திப்பதற்காகச் செல்கிறீர்கள். சந்திப்பதெனில், ஆத்மாக்கள் பலருக்கும் சுய முன்னேற்றம் என்ற ஒத்துழைப்பைக் கொடுப்பதாகும். அத்துடன்கூடவே, மேடையில் உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால், புதியதொரு உரையாற்றிவிட்டுத் திரும்பி வாருங்கள். நீங்கள் முதலில் ஆரம்பியுங்கள். நீங்கள் முதல் இலக்கத்தவர் ஆகுவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், மக்கள் என்ன கூறுகிறார்கள்? நீங்கள் பாப்தாதாவிடமிருந்து அன்பையும் நினைவுகளையும் கொண்டுவந்தீர்களா? பாப்தாதா அன்பினதும் ஒத்துழைப்பினதும் சக்தியை வழங்குவதைப் போன்று, நீங்களும் தந்தையிடமிருந்து பெற்ற அன்பினதும் ஒத்துழைப்பினதும் சக்தியைத் தொடர்ந்தும் அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். அனைவரையும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பறக்கச் செய்வதற்கு, தொடர்ந்து இத்தகைய ஏதாவதொரு சுலோகனைக் கூறுங்கள். அனைவரும் தொடர்ந்து சந்தோஷ நடனம் ஆடுவார்கள். அனைவரையும் ஆன்மீக நடனம் ஆடச் செய்யுங்கள். உங்களின் களிப்பூட்டும் சுபாவத்தால், அனைவருக்கும் முயற்சியை எவ்வாறு சந்தோஷமாகச் செய்து முன்னேறுவது என்பதைக் கற்பியுங்கள்.
ஆசீர்வாதம்:
ஒரு ஞானி ஆத்மாவாக சுய சக்கரத்தை அறிந்து, இறைவனால் நேசிக்கப்படுபவர் ஆகுவீர்களாக.
இந்த உலகச் சக்கரத்தில் தனது பாகம் என்னவென்பதை ஓர் ஆத்மா அறிந்திருந்தால் அவர் சுயதரிசனச் சக்கரதாரி ஆவார். கல்பம் முழுவதன் ஞானத்தை உங்களின் புத்தியில் மிகச்சரியாகக் கிரகித்துக் கொள்தல் என்றால் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுதல் என்று அர்த்தம். சுய சக்கரத்தை அறிந்து கொள்ளுதல் என்றால், ஞானம் நிறைந்த ஆத்மா ஆகுதல் என்று அர்த்தம். இத்தகைய ஞானி ஆத்மாக்கள் இறைவனால் நேசிக்கப்படுகிறார்கள். மாயையால் அவர்களின் முன்னால் இருக்க முடியாது. இந்த சுயதரிசனச் சக்ககரம் உங்களை எதிர்கால உலக ஆட்சியாளர்கள் ஆக்கும்.
சுலோகம்:
ஒவ்வொரு குழந்தையும் தந்தையைப் போன்று ஆகவேண்டும். அப்போது நடைமுறை அத்தாட்சியும் பிரஜைகளும் இலகுவாகத் தயார் ஆகுவார்கள்.