25.03.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இராஜ குலத்தைச் சேர்ந்த இராஜரீக மாணவர்கள். உங்கள் நடத்தை மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். அப்பொழுதே உங்களால் தந்தையை வெளிப்படுத்த முடியும்.
கேள்வி:
விநாச காலத்தில் யாரால் இறுதி வினாத்தாளில் சித்தியடைய முடியும்? இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி என்ன?
8பதில்:
இப் பழைய உலகைச் சேர்ந்த எதையுமே நினைவு செய்யாதவர்களாலும், தந்தையைத் தவிர வேறு எவரையுமே நினைவு செய்யாதவர்களாலுமே இறுதி வினாத்தாளில் சித்தியடைய முடியும். வேறு எதையேனும் நீங்கள் நினைவு செய்தால் சித்தியடைய மாட்டீர்கள். இதற்கு, இந்த எல்லையற்ற முழு உலகிலுமுள்ள அனைத்தின் மீதுள்ள உங்கள் பற்று அனைத்தையும் அகற்ற வேண்டும். உறுதியான சகோதரத்துவ உணர்வு இருக்க வேண்டும். சரீர உணர்வை அகற்றி விடுங்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இராஜரீக மாணவர்கள் என்ற போதை எப்போதும் உங்களுக்கு இருக்க வேண்டும். எல்லையற்ற அதிபதியே எங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் மிக மேன்மையான குலத்தின் இராஜரீக மாணவர்கள் என்பதால், இராஜரீக மாணவர்களின் நடத்தையும் இராஜரீகமானதாகவே இருக்க வேண்டும். அப்போதே உங்களால் தந்தையை வெளிப்படுத்த முடியும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், உலகில் அமைதியை ஸ்தாபிப்பதற்கு கருவியாகி இருக்கின்றீர்கள். நீங்கள் அமைதிக்கான பரிசைப் பெறுகிறீர்கள். இப் பரிசை நீங்கள் வெறுமனே ஒரு பிறவிக்காக மட்டும் பெறவில்லை. பல பிறவிகளுக்காகப் பெறுகிறீர்கள். தந்தையே உங்களுக்குச் சுவர்க்கத்தைத் தன் உள்ளங்கையில் பரிசாகக் கொடுக்கின்றார் என்பதால், குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு தந்தைக்கு நன்றி செலுத்த முடியும்? தந்தையே வந்து இதைக் கொடுப்பார் என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியுமா? தந்தை இப்போது கூறுகிறார்: இனிய குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! நினைவில் நிலைத்திருக்குமாறு உங்களுக்கு ஏன் கூறப்படுகிறது? ஏனெனில், இந்த நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தைப் பெற்ற உடனே உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இங்கே சிரமம் என்ற கேள்விக்கு இடமில்லை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, பாபா. நிச்சயமாகத் தந்தையிடமிருந்து ஏதாவது ஆஸ்தி கிடைக்கும். உங்களுக்கு முயற்சி செய்வதற்கு இன்னும் இடமுண்டு. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் அடிப்படையில் உங்கள் எந்தளவிற்கு அதிகளவு முயற்சி செய்கிறீர்களோ அந்தளவிற்கு ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் ‘தந்தை, ஆசிரியர், சத்குரு’ மூவரது ஸ்ரீமத்தையும் பெறுகின்றீர்கள். நீங்கள் அவர்களது வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடனேயே வாழ வேண்டும். இவ் வழிகாட்டல்களைப் பின்பற்றும் போதே தடைகள் வருகின்றன. சரீர உணர்வே மாயையின் முதல் தடையாகும். தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். எனவே நீங்கள் ஏன் இந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை? குழந்தைகள் கூறுகிறார்கள்: நாங்களும் முயற்சிக்கின்றோம், எனினும் மாயை இதனைச் செய்ய எங்களை அனுமதிப்பதில்லை. இக் கல்வியில் குழந்தைகளாகிய நீங்கள் விசேட முயற்சி செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நல்ல குழந்தைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். தந்தையிடமிருந்து அதி மேன்மையான ஆஸ்தியைப் பெற விரும்புவதாலேயே அனைவரும் முயற்சி செய்கிறார்கள். முள்ளிலிருந்து மலராக மாறுவதற்குத் தந்தையை நினைவுசெய்தலே அத்தியாவசியமாகும். ஐந்து விகாரங்களான முட்கள் அகற்றப்பட்டாலே நீங்கள் மலர்கள் ஆக முடியும். அவற்றை யோக சக்தியினால் மாத்திரமே அகற்ற முடியும். இன்னார் சரீரத்தை விட்டு நீங்கிச் சென்றுவிட்டார் என்பதால் தாமும் சரீரத்தை விட்டுச் சென்று விடக்கூடும் என்று சில குழந்தைகள் நினைக்கிறார்கள். எனினும், அவரைப் பார்ப்பதால், நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் சரீரத்தை விட்டுச் செல்லும் போது, அது பாபாவின் நினைவில் நிலைத்திருக்கும் போது நிகழ வேண்டும். உங்கள் பௌதீகப் புலன்கள் அனைத்தையும், உங்கள் மனதையும் ஒழுக்கமடையச் செய்யும் மந்திரத்தை நீங்கள் நினைவு செய்யுங்கள். தந்தையைத் தவிர வேறு எவரையுமே நினைவு செய்யாத போதே, ஆத்மா (உயிர்) சரீரத்தை விட்டுச் செல்ல வேண்டும். ‘பாபா நான் இப்போது உங்களிடம் வருகிறேன்.’ இவ்வாறாக நீங்கள் பாபாவை நினைவு செய்யும் போது, உங்களுக்குள் நிறைந்திருக்கும் குப்பைகள் அனைத்தும் எரிக்கப்படும். ஆத்மாவில் குப்பை இருக்குமாயின், சரீரத்திலும் இருக்கும். பிறவி பிறவியாக சேர்ந்த குப்பை நிறைந்துள்ளது. அவை அனைத்துமே எரிக்கப்பட வேண்டும். உங்கள் குப்பை முழுவதும் எரிக்கப்பட்ட பின்னரே உலகமும் சுத்தமாக்கப்படும். உங்களுக்காகவே உலகிலுள்ள குப்பை அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும். உங்கள் குப்பையை மாத்திரமல்ல, நீங்கள் ஏனைய அனைவருடைய குப்பையையும் சுத்தம் செய்ய வேண்டும். ‘பாபா, நீங்கள் வந்து இவ் உலக குப்பை அனைத்தும் சுத்தம் செய்து, முழு உலகையும் தூய்மையாக்குங்கள்.’ என்று நீங்கள் பாபாவைக் கூவியழைக்கிறீர்கள். யாருக்காக? குழந்தைகளாகிய நீங்களே அந்தத் தூய உலகை ஆட்சி செய்ய முதலில் வருகிறீர்கள். எனவே, தந்தை உங்களுக்காக உங்கள் இடத்திற்கு வந்திருக்கிறார். பக்திக்கும் ஞானத்திற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. பக்தி மார்க்கத்தில், அவர்கள் மிகவும் அழகான பாடல்களைப் பாடுகிறார்கள். ஆனால் அவற்றினால் எவரும் நன்மையடைவதில்லை. நீங்கள் சுயத்தின் ஆதிதர்மத்தில் நிலைத்திருந்து, தந்தையை நினைவு செய்தாலே, நன்மை ஏற்பட முடியும். உங்கள் நினைவு சுழன்று கொண்டிருக்கும் ஒரு கலங்கரைவிளக்கத்தைப் போன்றது. சுயத்தை உணர்வது, கலங்கரைவிளக்கமாக இருப்பது என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் பாப்தாதாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறவுள்ளீர்கள் என்பதை இதயபூர்வமாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இதுவே சத்திய நாராயணனின் கதையாகும், அதாவது, சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகும் கதையாகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: தமோபிரதான் ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும். சத்தியயுகத்தில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். மீண்டும் உங்களைச் சதோபிரதான் ஆக்குவதற்கு தந்தை வந்திருக்கிறார். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்வதாலேயே நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். கீதையை உபதேசித்தவர் தந்தையே ஆயினும், இப்போது மனிதர்களே அதை எடுத்துரைக்கிறார்கள் என்பதால், மிகப்பெரிய வேறுபாடு காணப்பகிறது. கடவுள் கடவுளேயாவார். அவரே மனிதர்களைத் தேவர்களாக்குபவர். புதிய உலகத்தில் தூய தேவர்கள் இருக்கிறார்கள். எல்லையற்ற தந்தையே உங்களுக்குப் புதிய உலக ஆஸ்தியைக் கொடுக்கின்றார். தொடர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். அப்போது உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். உங்களை அதி மேன்மையானவர்களாக ஆக்குவதற்காகத் தந்தை சங்கமயுகத்தில் வருகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்த 84 பிறவிச் சக்கரம் முடிவிற்கு வருகிறது. அது மீண்டும் ஆரம்பமாகும். உங்களுக்கு இந்த சந்தோஷம் இருக்க வேண்டும். கண்காட்சிகளைப் பார்க்க மக்கள் வரும் போது, அவர்களை முதலில் சிவபாபாவின் படத்துக்கு முன்னால் அழைத்து வந்து, அவர்களிடம் கூறுங்கள்: தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள். தந்தையிடமிருந்தே நீங்கள் சத்தியயுக ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பாரதம் சத்தியயுகமாக இருந்தது. இப்போது அது அவ்வாறில்லை. மீண்டும் அது அவ்வாறாகும். அதனால், தந்தையையும் இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். அவ்வாறு செய்தால், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். இவரே உண்மையான தந்தையாவார். அவரது குழந்தைகளாகுவதால், நீங்கள் சத்திய பூமிக்கு அதிபதியாகுவீர்கள். எல்லாவற்றுக்கும் முதலில் அவர்களை அல்பாவாகிய கடவுளை உறுதியாகப் புரிந்துகொள்ளச் செய்யுங்கள். அல்பா பாபாவும் பீற்றா இராச்சியமும் ஆகும். தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்களால் சுவர்க்கத்திற்கும்; செல்ல முடியும். அது மிகச் சுலபம். பிறவி, பிறவியாக பக்தி மார்க்கத்து விடயங்களைக் கேட்டு உங்கள் புத்தி மாயையால் பூட்டப்பட்டுள்ளது தந்தை வந்து அந்தப் பூட்டைத் தனது திறவுகோலால் திறக்கிறார். இந்த நேரத்தில், அனைவரது காதுகளும் மூடப்பட்டுள்ளது போல் உள்ளது. அவர்கள் கல்லுப்புத்தி கொண்டவர்களாகி விட்டார்கள். இவ்வாறும் நீங்கள் எழுதுகிறீர்கள், அதாவது: சிவபாபாவை நினைவு செய்கிறீர்களா? சுவர்க்க ஆஸ்தியை நினைவு செய்கிறீர்களா? உங்கள் இராச்சியத்தை நினைவு செய்வதால் உங்கள் வாய் இனிமையாகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் என்னைப் பெரிதும் அவதூறு செய்த போதிலும் நான் உங்களை ஈடேற்றுகின்றேன். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. இது எவருடைய தவறும் இல்லை, ஆயினும் கல்லுப்புத்தியை தெய்வீக புத்தியாக்குவது அதாவது, முட்களை மலர்களாக்குவது குழந்தைகளாகிய உங்களுடைய பணியாகும். உங்கள் பணி தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. நீங்கள் அனைவரும் ஒருவரையொருவர் முட்களிலிருந்து மலர்களாக்குகிறீர்கள். நிச்சயமாக ராஜ மலரே அவர்களை அவ்வாறு ஆக்குபவராக இருக்க வேண்டும். தந்தை ஒருவரே சுவர்க்கத்தைப் படைப்பவர், அதாவது, பூந்தோட்டத்தை உருவாக்குபவர். நீங்கள் கடவுளின் உதவியாளர்கள். தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக மாறுவதென்பது உதவி வழங்குவதாகும். அவர் உங்களுக்கு வேறெந்த சிரமத்தையும் கொடுப்பதில்லை. இதை விளங்கப்படுத்துவது மிக இலகுவானதாகும். கலியுகத்தில் அனைவருமே தமோபிரதானாக இருக்கிறார்கள். கலியுகத்தின் கால எல்லையை மேலும் நீண்டதாக்குவார்களாயின், மேலும் தமோபிரதான் ஆகி விடுவார்கள். எங்களை மலர்களாக்கும் தந்தை இப்போது வந்து விட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்களை முட்களாக்குவது இராவணனது தொழிலாகும். தந்தையின் பணியோ உங்களை மலர்களாக்குவதாகும். சிவபாபாவை நினைவு செய்பவர்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்தையும் நினைவு செய்வார்கள். நீங்கள் அமைதிப் பேரணியொன்றை நடத்தும் போது, பிரஜாபிதா பிரம்மகுமாரிகளாகிய நாம் இங்கே பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணரது இராச்சியத்தை ஸ்தாப்pக்கின்றோம் என்று காட்டலாம். பிராமணர்களாகிய நாம் தேவர்களாகுகிறோம். தேவர்கள் பின்பு, சத்திரியர்களாகவும் வைசியர்களாகவும் ஆகுகிறார்கள். இது ஒரு குட்டிக்கரணமாகும். இதை எவருக்கும் விளங்கப்படுத்துவது இலகுவானதாகும். நாங்கள் பிராமணர்கள். பிராமணருக்கு உச்சிக் குடுமி உண்டு. நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைப் பூர்த்தி செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிக நல்ல ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். ஏனையவை அனைத்தும் பக்தியே ஆகும். தந்தை ஒருவரே ஞானத்தைக் கொடுக்கின்றார். எல்லோருக்கும் சத்கதி அருள்பவர் தந்தை ஒருவரேயாவார். அதிமங்களகரமான சங்கமயுகமும் ஒன்றேயாகும். இந்த நேரத்தில் தந்தை கற்பிக்கின்றார். பின்பு, இதன் ஞாபகார்த்தமே பக்தி மார்க்கத்தில் தொடர்கின்றது. இந்த முயற்சியை மேற்கொள்வதால் நீங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள் என்று தந்தை உங்களுக்கு பாதையைக் காட்டியிருக்கிறார். இந்தக் கல்வி மிக இலகுவானது. சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகுவதற்குரிய கல்வி இதுவாகும். இதனை சமயக்கதையென்று அழைப்பது தவறாகும். ஏனெனில், அக் கதைகளில் ஒரு இலக்கோ குறிக்கோளோ இல்லை. ஆனால், கல்வியில் ஓர் இலக்கும் குறிக்கோளும் இருக்கும். உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? ஞானக்கடலாவார்! தந்தை கூறுகிறார்: நான் உங்கள் புத்திகளை இரத்தினங்களால் நிரப்புவதற்காக வருகிறேன். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்? இந்த நேரத்தில் எல்லோருக்கும் கல்லுப்புத்தியே உள்ளது. இராவணன் யாரென்றே அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் இப்பொழுது அவர்களைக் கேள்வி கேட்கும் விவேகத்தைப் பெறுகின்றீர்கள். மக்களிடம் வினவுங்கள்: உண்மையில் இராவணன் யார்? அவன் எப்போது பிறந்தான்? அவனை எப்போது நீங்கள் எரிக்க ஆரம்பித்தீர்கள்? அவர்கள் பதிலளிப்பார்கள்: அது அநாதியாகத் தொடர்கின்றது. அவர்களை நீங்கள் பல வகையான கேள்விகளும் கேட்கலாம். நீங்கள் அவ்வாறான கேள்விகளைக் கேட்கும் ஒரு காலமும் வரும். ஆனால், அவற்றிற்கு எவராலும் பதிலளிக்க முடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் சதா தந்தையின் நினைவு யாத்திரையில் இருப்பீர்கள். இப்போது உங்களிடமே வினவுங்கள்: நான் சதோபிரதான் ஆகிவி;ட்டேனா? இதயபூர்மாக என்னால் இதனை உறுதியாகக் கூறமுடியுமா? இன்னும் நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடையவில்லை. அதுவும் நடைபெறும். இந்த நேரத்தில் உங்களில் வெகு சிலரே இருக்கிறீர்கள். இதனாலேயே நீங்கள் கூறுவதை எவரும் செவிமடுப்பதில்லை. நீங்கள் கூறுபவை தனித்துவமானவையாக இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் முதல் தந்தை சங்கமயுகத்தில் வருகிறார் என்பதை அவர்களிடம் கூறுங்கள். ஒரு விடயத்தை அவர்கள் புரிந்து கொண்ட பின்பே நீங்கள் மேலும் விளங்கப்படுத்த வேண்டும். அதிகளவு பொறுமையோடும் அன்போடும் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: உங்களுக்கு, உங்கள் பரலோகத் தந்தை, லௌகீகத் தந்தை என்று இரு தந்தையர் இருக்கிறார்கள். நீங்கள் சதோபிரதான் ஆகும் போதே உங்களால் தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெற முடியும். தந்தையை நினைவு செய்யும்போது உங்கள் சந்தோஷ பாதரசம் உயர்;கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் பல தெய்வீகக்குணங்களால் நிரப்பப்படுகிறீர்கள். தந்தை வந்து தகைமைகளைக் கற்பிக்கின்றார். உங்களுக்கு ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் கொடுத்து உங்கள் நடத்தையை சீராக்குகின்றார். அவர் உங்களுக்கு ஒரு கல்வியும் கொடுக்கின்றார். உங்களைச் சிறைத் தண்டனையிலிருந்தும் விடுதலை செய்கிறார். அரசாங்க அமைச்சர்கள் போன்றோருக்கு இவற்றையெல்லாம் நீங்கள் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தலாம். அவர்கள் உருகிப் போகும் அளவுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். உங்கள் ஞானம் மிக இனிமையானது. அவர்கள் அன்போடு இருந்து கேட்பார்களானால், அன்புக்கண்ணீர் சொரிவார்கள். நீங்கள் உங்கள் சகோதரர்களுக்குப் பாதை காட்டுகிறீர்கள் என்ற பார்வையுடன் எப்போதும் இருங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: ஸ்ரீமத்தின் அடிப்படையில் நாங்கள் உண்மையாகவே பாரதத்திற்குச் சேவையாற்றுகிறோம். பாரதத்திற்குச் சேவையாற்றுவதில் நாங்கள் எங்கள் செல்வத்தைப் பயன்படுத்துகிறோம். பாபா கூறுகிறார்: விரிவு ஏற்படும் வகையில், சேவையால் டெல்லியைச் சுற்றி வளையுங்கள். ஆனாலும், இன்னும் எவருமே அம்பினால் தாக்கப்படவில்லை. இலக்கை அடைவதற்கு உங்களுக்கு யோக சக்தி தேவை. யோக சக்தியாலேயே நீங்கள் உலக அதிபதிகளாகுகிறீர்கள். உங்களிடம் ஞானமும் இருக்கிறது. யோக சக்தியுடையவர்களாக இருப்பதன் மூலமே உங்களால் மற்றவர்களைக் கவர முடியும். குழந்தைகளாகிய நீங்கள் நல்ல சொற்பொழிவுகளை ஆற்றினாலும், யோக சக்தியின் கவர்ச்சியில் குறைபாடு உள்ளது. யோகமே பிரதானமானது. குழந்தைகளாகிய நீங்கள் யோகத்திலேயே உங்களைத் தூய்மையாக்கிக் கொள்கின்றீர்கள். அதிகளவு யோக சக்தியே தேவையாகும். அதில் அதிகளவு குறைபாடு உள்ளது. உங்களுக்குள் நீங்கள் நடனமாட வேண்டும். இதுவே சந்தோஷ நடனமாகும். இந்த ஞானத்தாலும் யோகத்தாலும் நீங்கள் உள்ளுர நடனமாடுகிறீர்கள். தந்தையின் நினைவில் இருக்கும் போது நீங்கள் சரீரமற்றவர்களாகுகிறீர்கள். இந்த ஞானத்தினால் நீங்கள் சரீரமற்றவர்களாக வேண்டும். மறைந்து விடுதல் என்பதற்கு இடமில்லை. இப்போது நீங்கள் வீடு திரும்ப வேண்டுமென்றும், அதன் பின்னர் உங்கள் இராச்சியத்திற்குச் செல்வீர்கள் என்றும் உங்கள் புத்தியில் ஞானம் இருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு விநாசத்தினதும் ஸ்தாபனையினதும் காட்சிகளைக் கொடுக்கின்றார். உலகம் முழுவதும் ஏற்கனவே எரிந்துள்ளது. நீங்கள் புதிய உலகிற்குச் செல்லத் தகுதி வாய்ந்தவர்களாகுகிறீர்கள். இப்போது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். இதனாலேயே உங்களுக்கு உங்கள் சரீரத்துடன் எந்தப் பற்றும் இருக்கக் கூடாது. உங்கள் சரீர உணர்விற்கும் இவ்வுலகிற்கும் அப்பால் இருங்கள். உங்கள் வீட்டையும் இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் எதைக் கண்டும் ஆசை கொள்ளக் கூடாது. பெரும் விநாசம் ஏற்படும். விநாசம் ஆரம்பமாகும் போது, நீங்கள் இடமாற்றம் செய்யப்படுவீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்கும். ஆனால், பழைய உலகத்தைச் சேர்ந்த எதையேனும் நினைவு செய்வீர்களானால், சித்தியடைய மாட்டீர்கள். குழந்தைகளாகிய உங்களிடம் எதுவுமில்லையென்றால் நீங்கள் எதனை நினைவு செய்வீர்கள்? இந்த எல்லையற்ற உலகம் முழுவதிலும் இருந்து உங்கள் பற்றைத் துண்டிப்பதற்கு முயற்சி தேவையாகும். உங்கள் சரீர உணர்வை நீங்கள் முழுமையாகத் துண்டித்த பின்னரே உங்களால் உறுதியான சகோதரத்துவ ஸ்திதியை பேணிக் கொள்ள முடியும். சரீர உணர்வுடையவராகுவதால் ஏதோ ஒரு வகையில் இழப்பு ஏற்படுகிறது. ஆத்ம உணர்வில் இருப்பதால் எவ் இழப்பும் இருப்பதில்லை. நீங்கள் தீவிரமாக விருத்தி செய்ய வேண்டிய பழக்கம்: நான் என் சகோதரனுக்குக் கற்பிக்கிறேன். நான் என் சகோதரனுடன் பேசுகிறேன். நீங்கள் புலமைப்பரிசொன்றைப் பெற்றுக் கொள்ள விரும்பினால், நிச்சயமாக இந்தளவிற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எவருக்கேனும் விளங்கப்படுத்தும் போது, நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள் ஆத்மாக்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள். சகோதரர்கள் அனைவருக்கும் தந்தையிடமிருந்து தமது ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளும் உரிமை உள்ளது. சகோதரி என்ற உணர்வு இருக்கக் கூடாது. இதுவே ஆத்ம உணர்வு எனப்படுகிறது. ஆத்மாவிற்கு இந்த சரீரம் கிடைத்திருக்கிறது. சிலருக்கு ஆண்களுக்கான பெயரும் சிலருக்குப் பெண்களுக்கான பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு அப்பால், ஆத்மா மட்டுமே இருக்கிறார். பாபா உங்களுக்குக் காட்டியிருக்கும் பாதை முற்றிலும் சரியானதென்று நீங்கள் உணர வேண்டும். இவற்றைப் பயிற்சி செய்வதற்காகவே குழந்தைகளாகிய நீங்கள் இங்கே வருகிறீர்கள். புகைவண்டியில் எவருக்கேனும் விளங்கப்படுத்துவதற்கு உங்கள் பட்ஜை நீங்கள் பயன்படுத்தலாம். அமர்ந்து ஒருவரையொருவர் நீங்கள் வினவவேண்டும்: உங்களுக்கு எத்தனை தந்தையர் இருக்கிறார்கள்? பின்னர் பதிலளியுங்கள். இதுவே அவர்களது கவனத்தை ஈர்ப்பதற்கான வழியாகும். உங்களுக்கு இரு தந்தையர் இருக்கிறார்களானால், எனக்கு மூன்று தந்தையர் இருக்கிறார்கள். இந்த அலௌகீகத் தந்தையின் மூலம் நாங்கள் எங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறோம். உங்களிடம் முதல்தரமான ஓர் இலக்கு இருக்கிறது. இதில் என்ன நன்மை இருக்கிறதென்று சிலர் கேட்கிறார்கள். பார்வையற்றவர்களுக்குப் பாதையைக் காட்டுவது, அதாவது பார்வையற்றவர்களுக்குக் கைத்தடியாகுவது எங்கள் பொறுப்பாகும். கன்னியாஸ்திரிகள் சேவையாற்றுவதைப் போல நீங்களும் சேவை செய்யலாம். நீங்கள் பல பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஏறுவதற்கான பாதையை நீங்கள் அனைவருக்கும் காட்டுகிறீர்கள். தொடர்ந்தும் ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அதிகளவு சந்தோஷம் அடைவீர்கள். பல குழைந்தைகள் இன்னமும் பலதவறுகளைச் செய்கிறார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இறுதிக்கணங்களில் சித்தியடைவதற்கு, உங்கள் சரீரத்திற்கும் இவ் உலகிற்கும் அப்பால் செல்வதைப் பயிற்சி செய்யுங்கள். எதனாலும் கவரப்படவோ எதிலும் ஆசைப்படவோ வேண்டாம்.. நீங்கள் இடமாற்றம் செய்யப்படப் போகின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும்.2. அதிகளவு பொறுமையுடனும், அன்புடனும் அனைவருக்கும் இரு தந்தையரது அறிமுகத்தைக் கொடுங்கள். ஞான இரத்தினங்களால் உங்கள் புத்தியை நிறைத்து, அவற்றைத் தானம் செய்யுங்கள். முட்களை மலர்களாக மாற்றும் சேவையை நிச்சயமாகச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
சேவைக்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பதன் மூலம் பாதுகாப்பை அனுபவம் செய்து மாயையை வென்றவர் ஆகுவீர்களாக.பௌதீக சேவையை செய்வதற்காகவும், ஆன்மீக சேவையை செய்வதற்காகவும் ஓடோடிச் செல்கின்ற குழந்தைகளுக்கும், எப்பொழுதும் தயாராகவுள்ள குழந்தைகளுக்கும் தமது ஊக்கமும் உற்சாகமுமே அவர்களின் பாதுகாப்பிற்கு அடிப்படையாக உள்ளன. சேவையில் மும்முரமாக இருப்பவர்கள், மாயையிடமிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். உங்களுக்கு நேரம் இல்லை என்பதை மாயை பார்க்கும் பொழுது அவள் அப்பால் சென்று விடுகிறாள். தந்தையின் மீதும் இந்தக் கல்வியின் மீதும் அன்பைக் கொண்டிருக்கும் குழந்தைகள் தைரியம் என்ற வடிவில் மேலதிக உதவியைப் பெறுகிறார்கள். இதனூடாக அவர்கள் இலகுவாக மாயையை வென்றவர்கள் ஆகுகிறார்கள்.
சுலோகம்:
ஞானத்தையும் யோகத்தையும் வாழ்வில் உங்கள் சுபாவங்களில் ஒன்றாக்கிக் கொண்டால் உங்கள் பழைய சுபாவம் மாற்றமடையும்.