18.03.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு உண்மையைக் கூறுகிறார். ஆகையால் மனிதர்கள் கூறுவதை அன்றி, தந்தையை மாத்திரம் செவிமடுங்கள். தந்தை கூறுவதை மாத்திரம் செவிமடுப்பவர்களே ஞானமுள்ளவர்கள்.
கேள்வி:
உங்கள் தேவ குலத்திற்குரிய ஆத்மாக்களின் பிரதான அடையாளங்கள் என்ன?
8பதில்:
இந்த ஞானம் மிகவும் சிறந்ததும் இனிமையானதும் என அவர்கள் உணர்வார்கள். அவர்கள் மனிதர்களின் கட்டளைகளைப் பின்பற்றுவதைத் துறந்து, கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்ற ஆரம்பிப்பார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாத்திரம் தம்மால் மேன்மையானவர்கள் ஆக முடியும் என்பது அவர்களின் புத்திக்கு எட்டும். இப்பொழுது இது அதிமங்களகரமான சங்கமயுகமாகும். நாங்களே அதிமேன்மையானவர்கள் ஆகவேண்டியவர்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளே, நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவீர்களாக! சரீர உணர்வைத் துறந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். பரமாத்மா ஒரேயொருவரே என்பதும் உங்களுக்குத் தெரியும். பிரம்மாவை பரமாத்மா என அழைக்க முடியாது. உங்களுக்கு பிரம்மாவின் 84 பிறவிகளின் கதை தெரியும். இது அவருடைய இறுதிப்பிறவி ஆகும். முழுமையாக 84 பிறவிகளையும் எடுத்துள்ளவருக்குள்ளேயே நான் பிரவேசிக்க வேண்டும். அவருடைய 84 பிறவிகளை அவருக்குத் தெரியாது என்றும் என்னால் மாத்திரமே அவற்றைப் பற்றிக் கூற முடியும் என்றும் நான் அவருக்குக் கூறுகின்றேன், முதலில் நீங்கள் அத்தேவர்களாக இருந்தீர்கள். அவ்வாறு ஆகுவதற்கு நீங்கள் இப்பொழுது முயற்சி செய்யவேண்டும். முதலாவது பிறவியிலிருந்தே மறுபிறவி ஆரம்பமாகின்றது. இப்பொழுது தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கூறுவதெல்லாம் சரியானவையாகும். நீங்கள் கேட்ட ஏனையவை அனைத்தும் தவறானவை ஆகும். நான் உண்மையைப் பேசுகின்ற, சத்தியமானவர் என்று அழைக்கப்படுகின்றேன். நான் சத்திய தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு வருகின்றேன். கூறப்பட்டுள்ளது: சத்தியம் எங்குள்ளதோ, அங்கு ஆத்மா நடனமாடுகின்றார், அதாவது, நீங்கள் உண்மையானவர் ஆயின், நீங்கள் சந்தோஷத்தில் நடனமாடுவீர்கள். இது ஞான நடனம் ஆகும். கிருஷ்ணர் புல்லாங்குழலை வாசித்து நடனம் புரிந்ததாக அம்மக்கள் காட்டுகின்றார்கள். அவர் சத்தியயுகத்தின் அதிபதியாவார். ஆனால் அவரை அவ்வாறு ஆக்கியவர் யார்? சத்தியயுகத்தை ஸ்தாபித்தவர் யார்? அது சத்தியயுகம் இது பொய்மை உலகமாகும். அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தபொழுது, பாரதம் சத்தியயுகமாக இருந்தது. அந்நேரத்தில் வேறெந்த நாடுகளும் இருக்கவில்லை. சுவர்க்கம் எங்குள்ளது என்று மக்களுக்குத் தெரியாது. ஒரு நபர் மரணிக்கும்பொழுது, அவர் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என்று மக்கள் கூறுகின்றார்கள். நீங்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மாயையிடம் தங்கியிருப்பவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது தந்தை வந்து உங்களை நேராக நிமிர்ந்து நிற்கச் செய்கின்றார். கடவுளே பக்தர்களுக்கு பக்திக்கான பலனைக் கொடுக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். இந்நேரத்தில்; அனைவரும் பக்தியில் ஈடுபட்டுள்ளார்கள். சமயநூல்கள் போன்றவை அனைத்தும் பக்திமார்க்கத்திற்கு உரியவை ஆகும். இப்பாடல்கள் போன்றவற்றைப் பாடுவதும் பக்திமார்க்கம் ஆகும். ஞான மார்க்கத்தில் பக்திப்பாடல்கள் எவையும் கிடையாது. நீங்கள் சப்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் வீடு திரும்ப வேண்டும். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஒருபொழுதும் “ஓ கடவுளே!” என்று கூறக்கூடாது. அதுவும் பக்திமார்க்கம் ஆகும். பக்திமார்க்கம் கலியுக இறுதிவரை தொடர்கின்றது. இது இப்பொழுது தந்தை வந்து உங்களை ஞானத்தினூடாக, மேன்மையானவர்கள் ஆக்குகின்ற, அதிமங்களகரமான சங்கமயுகம் ஆகும். நீங்கள் ஓரேயொரு கடவுளின் வழிகாட்டல்களையே பின்பற்ற வேண்டும். கடவுள் உங்களுக்குக் கூறுபவையெல்லாம் சரியானவை ஆகும். பாபா ஒரு மனித சரீரத்தில் பிரவேசித்து உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் மிகவும் விவேகமுள்ளவராக இருந்தீர்கள், இப்பொழுது மிகவும் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்தீர்கள், இப்பொழுது கலியுகத்திற்குள் வந்துவிட்டீர்கள். இவ்விடத்திற்கு உரியவர்கள் இந்த ஞானத்தில் மிகவும் களிப்படைவார்கள். இவ்விடத்திற்கு உரியவர்கள் அது மிகவும் இனிமையானதென உணர்வார்கள். இந்த பாபாவும் கீதையை வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் பாபாவை இனங்கண்டதும், அவை அனைத்தையும் செய்வதை நிறுத்தி விட்டார். அவர் பல குருமார்களையும் ஏற்றுக் கொண்டிருந்தார். தந்தை கூறினார்: அவர்கள் அனைவரும் பக்திமார்க்கத்தின் குருமார்கள். நான் மாத்திரமே ஞான மார்க்கத்தின் குரு ஆவேன். என்னிடமிருந்து ஒருவர் ஞானத்தைச் செவிமடுக்கும்பொழுது மாத்திரமே அவர் ஒரு கியானி என்று அழைக்கப்படுகின்றார். ஏனைய அனைவரும் பக்தர்கள். ஸ்ரீமத் மாத்திரமே மேன்மையானதும், ஏனையவை மனிதரின் கட்டளைகளும் ஆகும். இவை கடவுளின் வழிகாட்டல்கள் ஆகும். அவை இராவணனின் கட்டளைகளும் இவை கடவுளின் வழிகாட்டல்களும் ஆகும். கடவுள் பேசுகின்றார்: நீங்கள் மகா பாக்கியசாலிகள் ஆவீர்கள். ஆகையாலேயே இந்நேரத்தில் உங்களுடைய பிறவி ஒரு வைரத்தைப் போன்றுள்ளது. மக்கள் ஒரு மோதிரத்தின் மத்தியில் வைரத்தைப் பதிக்கின்றார்கள். ஒரு மாலையில், அவர்கள் உச்சியில் ஒரு குஞ்சத்தையும் பின்னர் இரட்டை மணிகளையும் வைக்கின்றார்கள். அவர்களுடைய பெயர் ஆதாம்-பீபி ஆகும். நீங்கள் கூறுவீர்கள் : மம்மாவும் பாபாவும். ஆதிதேவனும் ஆதிதேவியும் சங்கமயுகத்திற்கு உரியவர்கள் ஆவார்கள். அந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்ற சங்கமயுகம் அனைத்திலும் அதி மேலானதாகும். இங்கேயே குழந்தைகளாகிய நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆக வேண்டும். தந்தை பழைய உலகைப் புதியதாக்குவதற்கு வருகின்றார். குழந்தைகளாகிய உங்களைத் தவிர, எவருக்கும் இவ்வுலகின் காலஎல்லை தெரியாது. அது நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவை அனைத்தும் பொய்யான விடயங்கள் ஆகும். ‘மாயையும் பொய், சரீரமும் பொய்’ என்று கூறப்பட்டுள்ளது. புதிய உலகே உண்மையானதாகும். இது பொய்மை தாமம் ஆகும். பொய்மை தாமத்தை சத்தியதாமம் ஆக்குவது தந்தையினுடைய கடமை மாத்திரமே ஆகும். தந்தை கூறுகின்றார்: பக்தி மார்க்கத்தில் நீங்கள் கற்றவை அனைத்தையும் மறந்துவிடுங்கள். இது உங்களுடைய எல்லையற்ற ஆர்வமின்மையாகும். அம்மக்கள் தங்களின் இவ்வுலகின் வீடுகளையும் குடும்பத்தையும் துறந்து பின்னரே காட்டிற்குள் செல்கிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏன் அதைச் செய்கின்றார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை; இது முன்னரே நிச்சயிக்கப்பட்ட நாடகமாகும். அத்தகைய விடயங்கள் இடம்பெறும் என்று தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஏனைய சமயங்களைச் சேர்ந்த அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. புத்த வம்சமும் கிறிஸ்துவ வம்சமும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. அவர்கள் பின்னர் வருகின்றார்கள். அனைத்திற்கும் முதலில் தேவவம்சமும் பின்னர் தங்கள் சொந்த சமயங்களை ஸ்தாபிப்பதற்கு ஆபிரகாம், புத்தர், கிறிஸ்து வருகிறார்கள். பாபா அதி மங்களகரமான சங்கமயுகத்தில் வந்து தேவவம்சத்தை ஸ்தாபிக்கின்றார். ஆத்மா முதலில் கருப்பையினுள் பிரவேசிக்கிறார். ஒரு சிறு குழந்தை பின்னர் பெரியவராக வளர்கின்றார். சிவபாபாபா பெரியவராகவோ அல்லது சிறியவராகவோ ஆகுவதில்லை, அவர் ஒரு கருப்பையினூடாகப் பிறப்பதும் இல்லை. புத்தரின் ஆத்மா வேறொருவரில் பிரவேசிக்கின்றார். புத்தசமயம் முன்னர் இருக்கவில்லை. அவர் நிச்சயமாக இங்கு ஏற்கெனவே இருக்கின்ற ஒரு நபரில் பிரவேசிப்பார், அவர் நிச்சயமாக ஒரு கருப்பையில் பிரவேசிப்பார். ஒருவர் மாத்திரமே புத்த சமயத்தை ஸ்தாபித்தார், பின்னர் பலரும் அவரைப் பின்பற்றத் தொடங்கி விரிவாக்கம் நடைபெற்றது. அவர்களில் நூறாயிரக் கணக்கானவர்கள் ஆகும் பொழுது, அவர்களின் இராச்சியம் பின்னர் ஆரம்பமாகுகின்றது. பௌத்தர்களின் இராச்சியமும் இருந்தது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவர்கள் அனைவரும் பின்னரே வருகின்றனர். அவர்கள் குருமார்கள் என்று அழைக்கப்படுவதில்லை. ஒரேயொரு குரு மாத்திரமே இருக்கின்றார். அம்மக்கள் தங்களின் சொந்த சமயத்தை ஸ்தாபித்ததன் பின்னர் தொடர்ந்தும் கீழே வருகின்றனர். தந்தை அனைவரையும் மேலே அனுப்பினார், பின்னர் அவர்கள் தொடர்ந்தும் முக்திதாமத்திலிருந்து ஒவ்வொருவராகக் கீழே வருகின்றனர். நீங்கள் ஜீவன்முக்தியிலிருந்து கீழே வருகிறீர்கள். அதேபோன்று, அவர்கள் முக்தியிலிருந்து கீழே வருகின்றனர். ஏன் அவர்கள் புகழப்பட வேண்டும்? அந்நேரத்தில் ஞானம் மறைந்துவிடும். தந்தை உங்களுக்கு ஞானத்தை முக்திக்காகவும் சற்கதிக்காகவும் கொடுக்கின்றார். அவர் ஒரு கருப்பையினுள் பிரவேசிப்பதில்லை. அவர் இவரில் அமர்ந்திருக்கின்றார். அவருக்கு வேறொரு பெயர் இல்லை. ஏனைய அனைவரும் தங்கள் சரீரத்திற்கான பெயரைப் பெறுகின்றனர். அந்த ஒரெயொருவர் பரமாத்மா.. அவர் ஞானக்கடல்.. ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் ஆத்மாக்களே முதலில் இந்த ஞானத்தைப் பெறுகின்றனர், ஏனெனில் அவர்களே தங்களின் பக்தியின் பலனைப் பெறவிருப்பவர்கள்;. நீங்களே பக்தியை ஆரம்பிக்கின்றீர்கள். நான் மாத்திரமே உங்களுக்கு அதன் பலனைக் கொடுக்கின்றேன். ஏனைய அனைத்தும் பக்கக் கிளைகள் ஆகும். அவர்கள் 84 பிறவிகளையேனும் எடுப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! அங்கும் நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி இன்னுமொன்றை எடுப்பீர்கள் என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு துன்பத்திற்கான கேள்வியே இல்லை. அங்கு விகாரங்களுக்கான கேள்வியே இல்லை. இராவண இராச்சியத்திலேயே விகாரங்கள் உள்ளன. அது விகாரமற்ற உலகமாகும். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்திய போதிலும் உங்களை அவர்கள் நம்புவதில்லை. முன்னைய கல்பத்திற்கேற்ப, உங்களை நம்புபவர்கள் ஓர் அந்தஸ்தைக் கோருவார்கள், உங்களை நம்பாதவர்கள் ஓர் அந்தஸ்தைப் பெறமாட்டார்கள். சத்தியயுகத்தில், அனைவரும் தூய்மையானவர்களாகவும், அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்கின்றார்கள். அவர்களின் ஆசைகள் அனைத்தும் 21 பிறவிகளுக்குப் பூர்த்திசெய்யப்படுகின்றன. சத்தியயுகத்தில் ஆசைகள் எவையும் இருக்காது. அங்கு, உணவு போன்ற அனைத்தும் உங்களுக்கு அதிகளவு கிடைக்கும். இந்த பம்பாய் முதலில் இருக்கவில்லை. தேவர்கள் உவர் நிலத்தில் வசிப்பதில்லை. இனிமையான ஆறுகள் இருக்கின்ற இடத்திலேயே தேவர்கள் வாழ்ந்தார்கள். அங்கு வெகுசில மனிதர்களே இருந்ததால், அவர்கள் ஒவ்வொருவரும் பெருமளவு நிலத்தைக் கொண்டிருந்தார்கள். குசேலர் ஒரு கைப்பிடி அரிசியைக் கொடுத்துப் பிரதிபலனாக ஒரு மாளிகையைப் பெறுகின்றார் என்று அவர்கள் சித்தரிக்கின்றனர். மக்கள் கடவுளின் பெயரில் தான தர்மம் செய்கின்றனர். ஆனால் அவர் ஒரு பிச்சைக்காரரா? கடவுள் அருள்பவர்! கடவுள் தமக்கு அடுத்த பிறவியில் பெருமளவு தருவார்; என்று அவர்கள் நம்புகின்றார்கள். நீங்கள் இரு கைப்பிடியளவு கொடுத்துப் புதிய உலகில் பெருமளவு பெறுகின்றீர்கள். நீங்கள் பணத்தைச் செலவழித்து நிலையங்கள் போன்றவற்றைத் திறக்கின்றீர்கள், ஆகவே அனைவரும் இக்கற்பித்தல்களைப் பெற முடியும். நீங்கள் உங்கள் சொந்தச் செல்வத்தைச் செலவழிக்கின்றீர்கள், ஆகவே நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நானே உங்களுக்கு என்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கின்றேன். எவருக்கும் என்னுடைய அறிமுகம் கிடையாது, நான் வேறு எவருடைய சரீரத்திலும் பிரவேசிப்பதில்லை. தூய்மையற்ற உலகம் மாற வேண்டிய போது, ஒருமுறை மாத்திரமே நான் வருகின்றேன். நான் தூய்மையாக்குபவர் ஆவேன். எனது பாகம் சங்கமயுகத்திலேயே உள்ளது, எனவே நான் எனது மிகச்சரியான நேரத்தில் வருகின்றேன். சிவபாபா எப்பொழுது இவருக்குள் பிரவேசிக்கின்றார் என்று உங்களால் கூற முடியாது. அவர்கள் எப்பொழுது கிருஷ்ணர் வருகின்றார் என்பதற்கான திகதி, நேரம், நிமிடம் போன்றவற்றைக் கொடுத்துள்ளார்கள். இவர் எப்பொழுது வருகின்றார் என்பதை மிகச்சரியாக நிமிடத்தில் உங்களால் கூறமுடியாது. இந்த பிரம்மாவும் அதை அறிந்திருக்கவில்லை. அவர் ஞானத்தைப் பேசியபொழுதே இவர் அதைப் பற்றி அறிந்தார். அங்கு அந்த ஈர்ப்பு உள்ளது. இவர் தன்னில் துருவைக் கொண்டிருந்தார். பரமாத்மாவாகிய பரமதந்தை இவரில் பிரவேசித்தபொழுதே, நீங்கள் ஈர்க்கப்பட்டு, ஓடி வந்தீர்கள். நீங்கள் வேறு எதைப் பற்றியும் அக்கறை கொண்டிருந்ததில்லை. தந்தை தான் முற்றிலும் தூய்மையானவர் என்று கூறுகிறார். ஆத்மாக்களாகிய உங்களில்; துருப்பிடித்துள்ளது, எனவே அது எவ்வாறு அகற்றப்பட முடியும்? நாடகத்தில், ஆத்மாக்கள் அனைவரும் தங்களுடைய சொந்தப் பாகங்களைப் பெற்றுள்ளார்கள். இவை மிகவும் ஆழமான விடயங்கள் ஆகும். ஓர் ஆத்மா சின்னஞ் சிறியவர். தெய்வீகப் பார்வையில்லாது எவராலும் ஆத்மாவைப் பார்க்க முடியாது. தந்தை வந்து உங்களுக்கு ஞானமாகிய மூன்றாம் கண்ணைக் கொடுக்கின்றார். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு மாத்திரமே கற்பிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். பக்திமார்க்கத்தில், அவர்கள் ஒரு மூட்டை மாவினுள் ஒரு பிடி உப்புள்ளது போன்றே ஞானத்தைக் கொண்டிருக்கின்றார்கள்;. உதாரணமாக, “கடவுள் பேசுகின்றார்” என்பது சரியாகும், ஆனால் பின்னர், கிருஷ்ணரே அதைப் பேசுகின்றார் என்று கூறுவதால், அது தவறு ஆகுகின்றது. “மன்மனபவ” என்னும் வார்த்தை சிறந்ததாகும், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. “சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்” என்ற வார்த்தைகள் சரியானவை ஆகும். இது கீதையின் காலம் (யுகம்) ஆகும். இந்நேரத்தில் மாத்திரமே கடவுள் இந்த இரதத்தில் பிரவேசிக்கின்றார். அவர்கள் பின்னர் ஒரு குதிரை இரதத்தை கிருஷ்ணர் அதில் அமர்ந்திருப்பதாகக் காண்பித்துள்ளார்கள். கடவுளின் இந்த இரதத்திற்கும் குதிரை இரதத்திற்கும் இடையில் அத்தகைய வேறுபாடுள்ளது. அவர்கள் முற்றிலும் எதையுமே புரிந்துகொள்வதில்லை. இது எல்லையற்ற தந்தையின் இல்லம் ஆகும். தந்தை குழந்தைகளாகிய அதாவது ஆத்மாக்களாகிய உங்களுக்கு, உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷத்தை 21 பிறவிகளுக்குக் கொடுக்கின்றார். இதுவும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட, அநாதியான, அழியாத நாடகமாகும். அது எப்பொழுது ஆரம்பமாகியது என்று உங்களால் கூற முடியாது. சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. இச்சங்கமயுகத்தைப் பற்றி எவருக்கும் தெரியாது. இந்நாடகம் 5000 வருடங்களுக்கு மாத்திரம் என்று தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். அரைக்கல்பத்திற்குச் சூரிய சந்திர வம்சங்களும் பின்னர், ஏனைய கல்பத்திற்கு, அதாவது, 2500 வருடங்களுக்கு, ஏனைய சமயங்கள் அனைத்தும் உள்ளன. சத்தியயுகத்தில் அது விகாரமற்ற உலகம் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது யோகசக்தியுடன் உலக இராச்சியத்தைக் கோரிக் கொண்டிருக்கின்றீர்கள். சிலர் தங்களைத் தூண்டிக் கொண்டிருப்பதாகக் கிறிஸ்தவர்களே புரிந்துகொள்கின்றார்கள், இதனாலேயே அவர்கள் விநாசத்திற்காக அவ்விடயங்கள் அனைத்தையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றார்கள். ஒரு உலகை மாத்திரமல்ல, ஆனால் அத்தகைய பத்து உலகங்களை அழிக்கக்கூடியதாக, அவர்கள் அத்தகைய குண்டுகளை உருவாக்கியுள்ளார்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளேன், ஆனால் அவர்கள் விநாசத்தை மேற்கொள்வார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு காலை வந்தனங்கள் கூறுகிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எல்லையற்ற ஆர்வமின்மையுடையவர் ஆகி, நீங்கள் பக்திமார்க்கத்தில் இதுவரையில் கற்ற, செவிமடுத்த அனைத்தையும் மறந்துவிடுங்கள். ஒரேயொரு தந்தை கூறுவதை மாத்திரம் செவிமடுங்கள். அவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், உங்களை மேன்மையானவர்கள் ஆக்குங்கள்.2. தந்தை எவ்வாறு முற்றிலும் தூய்மையானவராகவும் அவரில் துருவைக் கொண்டிருக்காதும் உள்ளாரோ, அவ்வாறே தூய்மை ஆகுங்கள். நாடகத்திலுள்ள ஒவ்வொரு நடிகரும் மிகச் சரியானதொரு பாகத்தைக் கொண்டிருக்கின்றார். இந்த ஆழமான இரகசியத்தைப் புரிந்துகொள்வதால், தொடர்ந்தும் முன்னேறுங்கள்.
ஆசீர்வாதம்:
அழியாத எல்லையற்ற உரிமைகளை வைத்திருப்பதன் சந்தோஷத்தையும் போதையையும் கொண்டிருப்பதன் மூலம் சதா கவலையற்றவராக இருப்பீர்களாக.உலகிலுள்ள மக்கள் பெருமளவு முயற்சி செய்வதன் மூலம் தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள். ஆனால் நீங்களோ எந்தவித முயற்சியும் இன்றி உங்கள் உரிமைகளைப் பெற்றுள்ளீர்கள். ஒரு குழந்தையாகுவதென்பது ஓர் உரிமையைக் கோருவதாகும். ஆகா! நான் அனைத்து உரிமைகளையும் கொண்ட ஒரு மேன்மையான ஆத்மா. இந்த எல்லையற்ற உரிமையின் போதையிலும் சந்தோஷத்திலும் நிலைத்திருங்கள். நீங்கள் எப்பொழுதும் கவலையற்றவராக இருப்பீர்கள். இந்த அழியாத உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஏதாவது உத்தரவாதம ;அளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் கவலையற்று இருப்பீர்கள். உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் தந்தையிடம் கையளித்துவிடுங்கள். நீங்கள் அனைத்துக் கவலைகளிலிருந்தும் விடுபட்டிருப்பீர்கள்.
சுலோகம்:
பெரிய இதயத்தையும் பரந்த இதயத்தையும் கொண்டவர்களே ஒற்றுமைக்கு அத்திவாரம் ஆவார்கள்.