13.10.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     21.02.85     Om Shanti     Madhuban


குளிர்மைச் சக்தி.


இன்று, ஞான சூரியனும் ஞானச் சந்திரனும் தமது அதிர்ஷ்டகரமான, அழகான நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள். கல்பம் முழுவதிலும் வேறு எவராலும் இந்த ஆன்மீக அண்ட வெளியைப் பார்க்க முடியாது. ஆன்மீக நட்சத்திரங்களான நீங்களும் ஞான சூரியனும் ஞானச் சந்திரனும் இந்த அதிகபட்ச அன்பான, தனித்துவமான அண்ட வெளியைப் பார்க்கிறீர்கள். விஞ்ஞான சக்தியைக் கொண்டிருப்பவர்களால் இந்த ஆன்மீக அண்ட வெளியைப் பார்க்க முடியாது. மௌன சக்தியைக் கொண்டிருப்பவர்களாலேயே இந்த அண்டவெளியைப் பார்க்கவும் அறியவும் முடியும். எனவே, இன்று, அண்ட வெளியில் பயணம் செய்யும்போது, வெவ்வேறு நட்சத்திரங்களைக் காண்பதில் பாப்தாதா களிப்படைகிறார். ஒவ்வொரு நட்சத்திரமும் ஞான சூரியனிடமிருந்து எவ்வாறு சத்தியத்தின் ஒளியையும் சக்தியையும் பெற்று, சத்திய சொரூபமான தந்தையைப் போன்று, சத்தியத்தின் சக்தியால் நிரம்புகிறார்கள் என்பதை பாபா கண்டார். ஞானச் சந்திரனின் குளிர்மை சக்தியைக் கிரகிப்பதன் மூலம் நீங்கள் சந்திரனைப் போன்று குளிர்மையின் சொரூபங்கள் ஆகியுள்ளீர்கள். சத்தியம், குளிர்மை என்ற இந்த இரண்டு சக்திகளும் நீங்கள் எப்போதும், இலகுவாகவும் வெற்றி பெறச் செய்கின்றன. ஒருபுறம், சத்தியத்தின் சக்தியின் மிக மகத்தான போதை உங்களுக்கு உள்ளது. மறுபுறம், உயர்ந்த போதை இருக்கும் அளவிற்கு, குளிர்மையின் அடிப்படையில், உங்களால் தவறான போதையை அல்லது கோபத்தைக் கொண்டுள்ள ஓர் ஆத்மாவைக் குளிர்மைப்படுத்த முடியும். மற்றவர்களுக்கு என்ன வகையான ‘நான், நான்’ என்ற அகங்காரத்தின் போதை இருந்தாலும், உங்களின் குளிர்மைச் சக்தியால், ‘நான், நான்’ என்று சொல்வதற்குப் பதிலாக, அவர்கள் ‘பாபா, பாபா!’ என்று கூற ஆரம்பிப்பார்கள். குளிர்மைச் சக்தியால், உங்களால் சத்தியத்தை நிரூபிப்பதில் வெற்றி பெற முடியும். இல்லாவிடின், குளிர்மைச் சக்தியின்றி, சத்தியத்தை நிரூபிக்கும் இலக்கைக் கொண்டிருந்தால், ஞானமற்ற மக்கள், நீங்கள் நிரூபிக்க முயற்சி செய்வதை, பிடிவாதம் என்றே கருதுவார்கள். இதனாலேயே, சத்திய சக்தியும் குளிர்மைச் சக்தியும் சமமாக, ஒரே வேளையில் தேவைப்படுகிறது. ஏனெனில், இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு வகையான நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறான். அனைத்திற்கும் முதலில், குளிர்மைச் சக்தியைப் பயன்படுத்தி, நெருப்பில் எரியும் இத்தகைய ஆத்மாக்களின் வெப்பத்தை நீங்கள் குளிர்மைப்படுத்த வேண்டும். ஏனெனில், குளிர்மையின் அடிப்படையில் மட்டுமே அவர்களால் சத்தியத்தை அறிய முடியும்.

குளிர்மைச் சக்தி என்றால் ஆத்ம உணர்வு அன்பின் சக்தி என்று அர்த்தம். ஞானச் சந்திரனான அன்னையால், எந்தவொரு குழந்தையையும் அவர் எந்தளவிற்குப் பாழாகி இருந்தாலும், அன்பெனும் குளிர்மையால் அவரை மாற்ற முடியும். எனவே, அன்பு, அதாவது, குளிர்மைச் சக்தியால், ஓர் ஆத்மாவை, அவர் எத்தகைய நெருப்பில் எரிந்து கொண்டிருந்தாலும் அவரைக் குளிர்மைப்படுத்த முடியும். அத்துடன் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள வைக்க முடியும். அனைத்திற்கும் முதலில், சந்திரனின் குளிர்மையினூடாக, நீங்கள் தகுதிவாய்ந்தவர் ஆகுகிறீர்கள். பின்னர், ஞான சூரியனின் சத்திய சக்தியால், நீங்கள் யோகி ஆகுகிறீர்கள். எனவே, ஞானச் சந்திரனனின் குளிர்;மைச் சக்தியானது, உங்களைத் தந்தைக்கு முன்னால் வருவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகிறது. நீங்கள் தகுதிவாய்ந்தவர் ஆகாவிட்டால், உங்களால் யோகியாகவேனும் ஆகமுடியாது. எனவே, அனைத்திற்கும் முதலில், சத்தியத்தை அறிவதற்கு முன்னால், நீங்கள் குளிர்மை அடைய வேண்டும். நீங்கள் சத்தியத்தைக் கிரகிப்பதற்கு சக்தி அவசியம். குளிர்மைச் சக்தியைக் கொண்டுள்ளதோர் ஆத்மா, தனது எண்ணங்களின், வார்த்தைகளின், தொடர்புகளின் வேகத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனக்குள் குளிர்மையாக இருப்பார். எண்ணங்களின் வேகம் விரைவானதாக இருந்தால், அதிகளவு வீணாக்கப்படுகிறது. அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதில் நேரமும் வீணாக்கப்படுகிறது. அதன்பின்னர், நீங்கள் விரும்பும் நேரத்தில், அவற்றைக் கட்டுப்படுத்தி, மாற்றுவதற்கு அதிகளவு நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். மிகச்சரியான வேகத்தில் செல்பவர்கள், அதாவது, குளிர்மைச் சக்தியின் சொரூபங்களாக இருப்பவர்கள் வீணானவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்கள் விபத்துக்களில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்கள் வீணான, துரித கதியிலான ‘என்ன? ஏன்? இவ்வாறில்லை, ஆனால் இவ்வாறே!’ போன்றவற்றில் இருந்து விடுபடுகிறார்கள். மரத்தின் நிழலானது ஒத்துழைப்பதுடன் பயணி ஒருவருக்கு ஓய்வையும் சௌகரியத்தையும் கொடுப்பதைப் போன்று, குளிர்மைச் சக்தியைக் கொண்டுள்ள ஆத்மா எப்போதும் தனது குளிர்மை என்ற நிழலால் ஏனைய ஆத்மாக்களுக்கு சதா ஒத்துழைப்பு என்ற ஓய்வை அளிப்பார். ‘நான் இந்த ஆத்மாவிடம் சில கணங்களுக்கேனும் சென்று, அவரின் குளிர்மை என்ற நிழலில், சந்தோஷத்தையும் அந்தக் குளிர்மையின் ஆனந்தத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என ஒவ்வொருவரும் ஈர்க்கப்பட்டு, உணர வேண்டும். உதாரணமாக, எங்கும் வெப்பமாக இருந்தால், நிழலான ஓரிடத்தை நீங்கள் தேடுவீர்கள். அதேபோன்று, ஆத்மாக்களின் பார்வை அல்லது ஈர்ப்பு இத்தகைய ஆத்மாக்களை நோக்கியே செல்கிறது. விகாரங்களின் அக்கினியானது உலகில் மேலும் தீவிரமாகப் போகிறது. நெருப்பு எரியும்போது, மக்கள் உரத்து அழைப்பதுடன், குளிர்மை என்ற ஆதாரத்தையும் தேடுவார்கள்! அதேபோன்று, பரிதவிக்கும் அந்த ஆத்மாக்கள், குளிர்மையான ஆத்மாக்களான உங்களிடம் வருவார்கள். குளிர்மையின் ஒரு சில துளிகளையேனும் எங்கள் மீது தெளியுங்கள் என அவர்கள் பரிதவிப்புடன் அழைப்பார்கள். ஒருபுறம், விநாசத்தின் நெருப்பு காணப்படும். இரண்டாவது பக்கத்தில், ஐந்து விகாரங்கள் காணப்படும். மூன்றாவது பக்கத்தில், சரீரங்கள், சரீர உறவுகள், பௌதீக உடமைகளின் மீதான பற்றின் நெருப்பு காணப்படும். நான்காவது பக்கத்தில், வருந்துகையின் நெருப்பு காணப்படும். நான்கு பக்கங்களிலும், நெருப்பைத் தவிர வேறு எதையும் காணமாட்டீர்கள். எனவே, அத்தகைய வேளையில், குளிர்மைச் சக்தியைக் கொண்டுள்ள சீதளா தேவிகளை நோக்கி அவர்கள் ஓடோடி வருவார்கள். ‘ஒரு விநாடிக்கேனும் எங்களைக் குளிர்மைப்படுத்துங்கள்.’ இத்தகைய வேளையில், எங்கும் உள்ள நெருப்பின் வெப்பத்தால் நீங்கள் பாதிக்கப்படாதவகையில் உங்களுக்குள் அதிகளவு குளிர்மைச் சக்தியைச் சேமித்து வைத்திருத்தல் அவசியமாகும். எங்கும் உள்ள நெருப்பினை அணைக்கும் சீதளா ஆகுங்கள். குளிர்மையின் ஆசீர்வாதத்தைக் கொடுங்கள். நான்கு வகையான நெருப்பின் சிறிதளவு சுவடேனும் எஞ்சியிருக்குமானால், அந்த நெருப்பின் சுவட்டில் இருந்து எங்கும் நெருப்புப் பரவும். எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள்.

கொழுந்து விட்டெரியும் விநாசத்தீயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறை, பயமற்றிருக்கும் சக்தியே ஆகும். பயமற்ற தன்மை, உங்களை விநாசத் தீயின் ஆதிக்கதினால் தளம்பல் அடைய அனுமதிக்காது. அது உங்களைக் குழப்பத்திற்குள் கொண்டுவரமாட்டாது. பயமற்ற தன்மையின் அடிப்படையில், விநாசத்தீயினால் பயப்படும் ஆத்மாக்களுக்கு, நீங்கள் குளிர்மைச் சக்தியைக் கொடுப்பீர்கள். அதனால், அந்த ஆத்மாக்கள் பயம் என்ற நெருப்பில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். குளிர்மையால் அவர்கள் சந்தோஷ நடனம் ஆடுவார்கள். அந்த ஆத்மாக்கள் விநாசத்தைக் கண்டாலும், அவர்கள் ஸ்தாபனையின் காட்சிகளையும் காண்பார்கள். அவர்களின் ஒரு கண்ணில் இனிய வீடான முக்தி அமிழ்ந்திருக்கும். மற்றைய கண்ணில், ஜீவன்முக்தி, அதாவது, சுவர்க்கம் அமிழ்ந்திருக்கும். அந்த ஆத்மா தனது வீட்டையும் தனது இராச்சியத்தையும் மட்டுமே பார்ப்பார். ‘அனைத்தும் போய்விட்டது, நான் இறக்கப் போகிறேன்’ என மக்கள் அழுவார்கள். ஆனால், நீங்களோ, ‘நான் எனது இனிமையான வீட்டிற்கும் எனது இனிய இராச்சியத்திற்கும் போகிறேன்!’ எனக் கூறுவீர்கள். எதுவும் புதியதல்ல! எமது வீடு, எமது இராச்சியம் என்ற கால் சலங்கைகளை நீங்கள் அணிந்து கொள்வீர்கள். இந்த சந்தோஷத்தில் நீங்கள் ஆடிப்பாடிய வண்ணம் ஒன்றாக வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்கள். அவர்களோ அழுது கொண்டிருப்பார்கள். ஆனால் நீங்களோ ஒன்றாக வீட்டிற்குச் செல்வீர்கள். இதைக் கேட்கும்போதே, நீங்கள் எல்லோரும் சந்தோஷப்படுகிறீர்கள். அப்படியென்றால், அந்த வேளையில் நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருப்பீர்கள்? ஆகவே, நீங்கள் நான்கு நெருப்புக்களையும் குளிர்மையாக்கி விட்டீர்கள், அல்லவா? விநாசத் தீயில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறை, பயமற்ற தன்மையே என உங்களுக்குக் கூறப்பட்டது. அதேபோன்று, விகாரங்கள் என்ற நெருப்பின் சிறிதளவு சுவட்டில் இருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறை, உங்களின் ஆதியான, அநாதியான குலத்தை நினைவு செய்வதே ஆகும். நான் அநாதியான தந்தையின் குலத்தைச் சேர்ந்த சம்பூரணமான சதோபிரதான் ஆத்மா. நான் ஆதி குலத்தைச் சேர்ந்த தேவாத்மா. தேவாத்மா பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்திருப்பார். முற்றிலும் விகாரமற்றவராக இருப்பார். எனவே, உங்களின் ஆதியான, அநாதியான குலத்தை நினைவு செய்யுங்கள். விகாரங்களின் ஒவ்வொரு சுவடும் முடிந்துவிடும்.

அதேபோன்று, மூன்றாவது நெருப்பு, உங்களின் சரீரம், சரீர உறவுகள், பௌதீக உடமைகளின் மீதுள்ள பற்று ஆகும். இந்த நெருப்பில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறை, தந்தையை உங்களின் உலகமாக ஆக்கிக் கொள்வதாகும். தந்தை உங்களின் உலகமாக இருந்தால், ஏனைய அனைத்தும் ருசியற்றதாகவே இருக்கும். எவ்வாறாயினும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என பாபா அடுத்த தடவை உங்களுக்குக் கூறுவார். தந்தையே உங்களின் முழு உலகம் என்பதை நீங்கள் நினைவு செய்யும்போது, உங்களின் சரீரமோ, சரீர உறவுகளோ அல்லது பௌதீக உடமைகளோ எஞ்சியிருக்காது. அவை அனைத்தும் முடிந்துவிடும்!

நான்காவது விடயம், வருந்துகையின் நெருப்பு. சகல பேறுகளின் சொரூபம் ஆகுவதே இதை முடிப்பதற்கான இலகுவான வழிமுறை ஆகும். சில பேறுகள் குறைவாக இருப்பது உங்களை வருந்தச் செய்யும். ஆனால் சகல பேறுகளும் வருந்துவதை முடித்துவிடும். எனவே, இப்போது பேற்றின் ஒவ்வொரு ரூபத்தையும் உங்களின் முன்னால் வைத்து, ஒவ்வொரு வகையான பேற்றின் அனுபவமும் உங்களிடம் இருக்கிறதா இல்லையா என்பதைச் சோதித்துப் பாருங்கள். உங்களிடம் பேறுகளின் பட்டியல் உள்ளதல்லவா? பேறுகள் இல்லாமல் போதல் முடிவடைகிறதெனில், வருந்துகையும் முடிவடைகிறது என்று அர்த்தம். எனவே, இப்போது இந்த நான்கு விடயங்களைச் சோதித்துப் பாருங்கள். அப்போது மட்டுமே நீங்கள் குளிர்மையின் சொரூபம் ஆகுவீர்கள். நீங்கள் மற்றவர்களின் இதயங்களைக் குளிர்மைப்படுத்தும் குளிர்மை யோகிகள் அல்லது குளிர்மை தேவிகள் ஆகுவீர்கள். எனவே, குளிர்மைச் சக்தி என்றால் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சத்தியத்தின் சக்தி என்பதைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் பாபா அதைப் பற்றி மேலும் கூறுவார். பாபா அண்டவெளியில் எதைக் கண்டார் என்பதைக் கேட்டீர்களா? வேறொரு வேளையில் பாபா அதை விரிவாகக் கூறுவார். அச்சா.

சந்திரனைப் போன்று சதா குளிர்மைச் சக்தியின் சொரூபங்களாக இருக்கும் குழந்தைகளுக்கும், சத்தியத்தின் சக்தியால் சத்திய யுகத்தைக் கொண்டுவரும் குழந்தைகளுக்கும், குளிர்மை நிழலால் அனைவரின் இதயங்களுக்கும் சதா சௌகரியத்தை வழங்கும் குழந்தைகளுக்கும், குளிர்மை யோகிகளாகவும் குளிர்மை தேவிகளாகவும் இருக்கும் குழந்தைகளுக்கும், எங்கும் நான்கு வகையான நெருப்பில் இருந்தும் பாதுகாப்பாக இருப்பவர்களுக்கும், ஞான சூரியனிடமிருந்தும் ஞானச் சந்திரனிடமிருந்தும் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா வெளிநாட்டு ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:
இது என்ன குழு? (வலது கர சேவையாளர்கள்) இன்று, பாப்தாதா தனது நண்பர்களைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். நண்பன் என்ற உறவுமுறை மிகவும் களிப்பூட்டக்கூடியது. தந்தை எப்போதும் குழந்தைகளின் அன்பில் திளைத்திருப்பதைப் போன்று, குழந்தைகளும் எப்போதும் தந்தையின் அன்பிலே திளைத்திருக்கிறார்கள். எனவே, இந்தக் குழு அன்பிலே அமிழ்ந்திருக்கும் (லவ்லீன்) குழு ஆகும். உண்ணும்போதும் பருகும்போதும் அங்குமிங்கும் செல்லும்போதும், நீங்கள் எதில் அமிழ்ந்துள்ளீர்கள்? நீங்கள் அன்பிலே அமிழ்ந்துள்ளீர்கள், அப்படியல்லவா? அன்பிலே அமிழ்;ந்திருக்கும் இந்த ஸ்திதியானது, இலகுவாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களைத் தந்தைக்குச் சொந்தம் ஆக்குகிறது. நீங்கள் தந்தையின் அன்பிலே அமிழ்ந்திருக்கும்போது, அவரின் சகவாசத்தினால் நிறமூட்டப்படுகிறீர்கள், அல்லவா? முயற்சியில் இருந்து அல்லது கஷ்டமான எதிலும் இருந்து விடுபடுவதற்கான இலகுவான வழிமுறை, அன்பிலே அமிழ்ந்திருத்தலே. அன்பிலே அமிழ்ந்திருக்கும் இந்த ஸ்திதியானது அதிர்ஷ்;டமான ஸ்திதி ஆகும். நீங்கள் இந்த ஸ்திதியில் இருக்கும்போது மாயை உங்களிடம் வரமாட்டாள். எனவே, இதுவே அதிகபட்ச அன்பான, தந்தைக்கு நெருக்கமாகவும் சமமானவர்களாகவும் இருப்பவர்களின் குழு ஆகும். உங்களின் எண்ணங்களுக்கு இடையேயும் தந்தையின் எண்ணங்களுக்கு இடையேயும் எந்தவித வேறுபாடும் கிடையாது. நீங்கள் மிகவும் நெருக்கமானவர்கள், அல்லவா? அப்போது மட்டுமே உங்களால் தந்தையைப் போன்ற உலக உபகாரிகள் ஆகமுடியும். தந்தையின் எண்ணங்கள் எத்தகையதோ, குழந்தைகளின் எண்ணங்களும் அத்தகையே. தந்தையின் வார்த்தைகள் என்னவோ, அவையே குழந்தைகளின் வார்த்தைகளும் ஆகுகின்றன. எனவே, உங்களின் ஒவ்வொரு செயலும் எவ்வாறிருக்க வேண்டும்? (ஒரு கண்ணாடியாக) ஒவ்வொரு செயலும் தந்தையைப் புலப்படச் செய்யும் கண்ணாடியாக இருக்க வேண்டும். இது அத்தகைய குழு, அல்லவா? சிறியதைப் பெரியதாகவும் பெரியதைச் சிறியதாகவும் காட்டும் பல கண்ணாடிகள் உலகில் உள்ளன. எனவே, உங்களின் ஒவ்வொரு செயலின் கண்ணாடியும் எதைக் காட்டும்? அது அனைத்தையும் இரட்டையாகக் காட்ட வேண்டும்: நீங்களும் தந்தையும். தந்தை உங்களில் தென்பட வேண்டும். நீங்கள் தந்தையுடன் தென்பட வேண்டும். நீங்கள் எப்போதும் தந்தை பிரம்மாவில் இரண்டு பேர்களைக் கண்டீர்கள், அல்லவா? அதேபோன்று, உங்கள் ஒவ்வொருவரிலும் தந்தை எப்போதும் தென்பட வேண்டும். ஆகவே, அது இரண்டு பேர்களைக் காண்பதல்லவா? நீங்கள் அத்தகைய கண்ணாடியா? சேவையாளர்களான நீங்கள் எந்த விசேட சேவைக்குக் கருவிகள் ஆவீர்கள்? ஒரேயொரு விசேட சேவை, தந்தையை வெளிப்படுத்துவதே. எனவே, உங்களின் ஒவ்வொரு எண்ணத்தாலும் வார்த்தையாலும் செயலாலும் தந்தையை வெளிப்படுத்துங்கள். நீங்கள் இந்தப் பணியில் எப்போதும் மும்முரமாக இருக்கிறீர்கள், அல்லவா? ஓர் ஆத்மா இன்னோர் ஆத்மாவைப் பார்த்து, ‘அந்த ஆத்மா நன்றாகப் பேசுகிறார், அந்த ஆத்மா மிக நன்றாக சேவை செய்கிறார், அந்த ஆத்மா மிக நன்றாக திருஷ்டி கொடுக்கிறார்’ என நினைத்தால், அது தந்தையைப் பார்ப்பதல்ல. ஆனால் அந்த ஆத்மாவைப் பார்ப்பதாகும். இதுவும் தவறானதே. அவர்கள் உங்களைப் பார்க்கும்போது, அவர்களின் உதடுகளில் இருந்து ‘பாபா’ என்பது வெளிப்பட வேண்டும். அப்போது மட்டுமே உங்களைச் சக்திவாய்ந்த கண்ணாடி என்று கூற முடியும். ஆத்மா மட்டும் புலப்படக்கூடாது. தந்தையும் புலப்பட வேண்டும். இது மிகச்சரியான சேவையாளராக இருத்தல் எனப்படும். உங்களுக்குப் புரிகிறதா? உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் எந்தளவிற்கு நீங்கள் ‘பாபா, பாபா’ என்பதை வைத்துள்ளீர்களோ, அந்தளவிற்கு மற்றவர்களாலும் உங்கள் மூலம் பாபாவைக் காண முடியும். தற்காலத்தில், விஞ்ஞானத்தினால், முதலில் ஒன்று புலப்படும்,பின்னர் அது மறைந்து, அது இருந்த இடத்தில் வேறொன்று புலப்படும் வகையில் காட்டுகிறார்கள். அதேபோன்று, அவர்கள் உங்களைப் பார்க்கும்போது, உங்களின் மௌன சக்தியால் நீங்கள் மறைந்து, தந்தை புலப்பட வேண்டும். சேவை அத்தகைய சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். ஆத்மாக்களின் உறவுமுறை தந்தையுடன் ஏற்படுத்தப்படும்போது, ஆத்மாக்கள் சதா சக்திசாலிகள் ஆகுவார்கள். ஆத்மாக்களுடன் உறவுமுறை ஏற்பட்டால், அவர்களால் எல்லா வேளையும் சக்திசாலிகள் ஆகமுடியாது. சேவையாளர்களான உங்களின் விசேட சேவை என்னவென்பதைப் புரிந்து கொண்டீர்களா? உங்களின் மூலம் தந்தையை வெளிப்படுத்தல். அவர்கள் உங்களைப் பார்க்கும்போது, அவர்கள் ‘பாபா,பாபா!’ என்ற பாடல்களைப் பாட ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் இத்தகைய சேவை செய்கிறீர்கள், அல்லவா? அச்சா.

நீங்கள் அனைவரும் அமிர்தவேளையில் தில்குஷ் தோளியை உண்கிறீர்களா? சேவையாளர் ஆத்மாக்கள் தினமும் தில்குஷ் தோளியை உண்டால், அவர்களால் அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியும். அதன்பின்னர், மனவிரக்திக்கான சூழ்நிலைகள் உங்களிடம் வரமாட்டாது. இத்தகைய சூழ்நிலைகளுடன் மாணவர்கள் உங்களிடம் வரமாட்டார்கள். இல்லாவிடின், நீங்களும் அதற்கு நேரம் ஒதுக்கவேண்டும், அல்லவா? அந்த நேரம் சேமிக்கப்படும். அத்தகைய சேமிக்கப்பட்ட நேரத்தில் உங்களால் தொடர்ந்து பலருக்கு தில்குஷ் தோளியைப் பகிர்ந்தளிக்க முடியும். அச்சா.

நீங்கள் அனைவரும் எப்போதும் தில்குஷ் - சந்தோஷ இதயத்துடன் இருக்கிறீர்கள், அல்லவா? சேவையாளர்களான நீங்கள் எவரும் அழுவதில்லை, அல்லவா? சிலவேளைகளில், கண்களில் அழுகை மட்டுமன்றி, மனதிலும் அழுகை காணப்படும். எனவே, நீங்கள் அழுபவர்கள் இல்லையல்லவா? அச்சா, நீங்கள் முறைப்பாடு செய்பவர்களா? நீங்கள் தந்தைக்கு முறைப்பாடு செய்கிறீர்களா? ‘எனக்கு ஏன் இது நிகழுகிறது? எனது பாகம் மட்டும் ஏன் இவ்வாறுள்ளது? எனது சம்ஸ்காரங்கள் மட்டும் ஏன் இவ்வாறுள்ளன? ஏன் என்னால் இத்தகைய மாணவர்களைக் கண்டுகொள்ள முடியவில்லை? ஏன் எனக்கு இத்தகைய நாடு கொடுக்கப்படவில்லை?’ நீங்கள் இத்தகைய முறைப்பாடுகளைச் செய்பவர்கள் இல்லையல்லவா? முறைப்பாடுகள் என்றால் பக்தியின் அடையாளம் என்று அர்த்தம். என்னவாக இருந்தாலும், மாற்றத்தைக் கொண்டு வருவதே சேவையாளர்களின் விசேடமான கடமை ஆகும். நாடு, மாணவர்கள், உங்களின் சொந்த சம்ஸ்காரங்கள் அல்லது சகபாடிகள் எதுவாக இருந்தாலும், முறைப்பாடு செய்வதற்குப் பதிலாக, மாற்றத்திற்கான பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். சேவையாளர்கள் ஒருபோதும் மற்றவர்களின் பலவீனங்களைப் பார்க்கக்கூடாது. நீங்கள் மற்றவர்களின் பலவீனங்களைப் பார்த்தால், நீங்களும் பலவீனமாகிவிடுவீர்கள். ஆகவே, எப்போதும் அனைவரினதும் சிறப்பியல்புகளையே பாருங்கள். சிறப்பியல்புகளையே கிரகியுங்கள். சிறப்பியல்புகளைப் பற்றி மட்டுமே பேசுங்கள். இதுவே ஒரு சேவையாளருக்குப் பறக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பதற்கான விசேடமான வழிமுறை ஆகும். உங்களுக்குப் புரிகிறதா? சேவையாளர்கள் வேறு என்ன செய்வார்கள்? நீங்கள் மிக நல்ல திட்டங்களைச் செய்கிறீர்கள். உங்களிடம் நல்ல ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகின்றன. தந்தைக்காகவும் சேவைக்காகவும் நீங்கள் நல்ல அன்பைக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது என்ன செய்ய வேண்டும்?

தற்சமயம், உலகில் இரண்டு விசேடமான அதிகாரங்கள் உள்ளன. 1) அரசியலின் அதிகாரம். 2) மதத்தின் அதிகாரம். மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும். வெவ்வேறு தொழில்களைச் செய்யும் மனிதர்கள் இருந்தாலும், இந்த இரண்டிடமே அதிகாரம் காணப்படுகிறது. எனவே, இந்த இரண்டு அதிகாரங்களும் இப்போது தெளிவாக இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. அரசியல்வாதிகளுக்குப் பெயரளவிலேயே அரசியல் அதிகாரம் உள்ளது. இப்போது அவர்களுக்கு உண்மையில் எந்தவித அதிகாரமும் இல்லை. எவ்வாறு நீங்கள் இதை அவர்கள் அனுபவம் செய்ய வைப்பீர்கள்? இதைச் செய்வதற்கான வழிமுறை என்ன? மதத் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தூய்மையினதும் ஒற்றுமையினதும் அனுபவத்தைக் கொடுங்கள். இந்த இரண்டும் அவர்களிடம் இல்லாததால், இரண்டு அதிகாரங்களும் பலவீனமாகி உள்ளன. தூய்மை என்றால் என்ன, ஒற்றுமை என்றால் என்ன என்பதன் தெளிவான விளக்கத்தை அவர்கள் பெற்றால், தாம் பலவீனமாக இருப்பதையும் நீங்கள் சக்திசாலிகள் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். குறிப்பாக இதைக் கடையுங்கள். மத அதிகாரத்தைக் கொண்டவர்கள் தம்மிடம் அதிகாரம் இல்லை என்பதை உணர வைப்பதற்கான விசேடமான வழிமுறை, தூய்மையை நிரூபிப்பதாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஒற்றுமையை நிரூபியுங்கள். இந்தத் தலைப்பைக் கடையுங்கள். திட்டங்களைச் செய்யுங்கள். அந்தத் திட்டங்கள் அவர்களைச் சென்று அடையுமாறு செய்யுங்கள். இந்த இரண்டு சக்திகளையும் நீங்கள் நிரூபித்தால், உங்களால் மிக இலகுவாக இறை அதிகாரத்தின் கொடியை ஏற்ற முடியும். இந்த இரண்டிலும் இப்போது விசேட கவனம் செலுத்த வேண்டும். அகத்தே, அவர்கள் இதைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் வெளியே அவர்களுக்கு அகங்காரம் காணப்படுகிறது. அவர்கள் தூய்மை மற்றும் ஒற்றுமை சக்திகளைக் கொண்ட உங்களுடன் நெருங்கிய தொடர்பில் வரும்போது, அவர்களாகவே இவற்றைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள். உங்களுக்குப் புரிகிறதா? அந்த இரண்டு அதிகாரங்களும் பலவீனமாக இருப்பதை நீங்கள் நிரூபித்தால், வெளிப்படுத்துகை இடம்பெறும். அச்சா.

இப்போது, சேவையாளர் குழு எப்போதும் திருப்தியாக உள்ளது. நீங்கள் உங்களுடனும் உங்களின் சகபாடிகளுடனும் உங்களின் சேவையிலும் திருப்தியாக இருக்கும் திருப்தி யோகிகள் ஆவீர்கள். நீங்கள் இந்தத் திருப்திக்கான சான்றிதழைப் பெற்றுள்ளீர்கள், அல்லவா? பாப்தாதாவும் கருவி தாதிகளும் தீதிகளும், ஆமாம், நீங்கள் திருப்தி யோகிகள் என்ற சான்றிதழை உங்களுக்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும் சான்றிதழைப் பெறுகிறீர்கள். அச்சா, உங்களுக்கு ஒருபோதும் ‘உற்சாகமற்ற மனோநிலை’ ஏற்படுவதில்லை, அல்லவா? நீங்கள் ஒருபோதும் சேவை செய்வதில் களைப்படைந்து, உற்சாகமற்ற மனோநிலையுடன் இருப்பதில்லை, அல்லவா? ‘செய்வதற்கு என்ன இருக்கிறது? ஏன் விரைய வேண்டும்?’ என நீங்கள் நினைப்பதில்லை, அல்லவா?

எனவே, இப்போது இந்த விடயங்கள் அனைத்தையும் உங்களில் சோதித்துப் பாருங்கள். ஏதாவது குறைவாக இருந்தால், உங்களையே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில், சேவையாளர் ஆத்மா என்றால் ஒவ்வொரு செயலையும் மேடையில் செய்பவர் என்று அர்த்தம். மேடையில் இருக்கும்போது, நீங்கள் ஒவ்வோர் அடியையும் மேன்மையான, யுக்தியுக்த் முறையில் எடுத்து வைக்க வேண்டும். நீங்கள் இன்ன நாட்டின் ஒரு நிலையத்தில் இருக்கிறீர்கள் என ஒருபோதும் நினைக்காதீர்கள். ஆனால், உலக மேடையில் அமர்ந்திருப்பதாக நினையுங்கள். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், உங்களின் ஒவ்வொரு செயலும் இயல்பாகவே மேன்மையடையும். உங்களைப் பின்பற்றுபவர்கள் பலர் உள்ளனர். ஆகவே, நீங்கள் சதா தந்தையைப் பின்பற்றினால், உங்களைப் பின்பற்றுபவர்களும் தந்தையைப் பின்பற்றுவார்கள். எனவே, மறைமுகமாக, அவர்கள் தந்தையைப் பின்பற்றுவார்கள். ஏனெனில், உங்களின் ஒவ்வொரு செயலும் தந்தையைப் பின்பற்றுவதாகவே அமையும். ஆகவே, எப்போதும் இந்த விழிப்புணர்வுடன் இருங்கள். அச்சா. உங்களின் அன்பினால், நீங்கள் முயற்சி செய்வதில் இருந்து அப்பாற்பட்டுள்ளீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சம்பூரணமான தூய ஆத்மாவாகி, ஒரேயொரு தந்தையை உங்களின் சகபாடியாக்கி, அவரின் சகவாசத்தில் இருப்பீர்களாக.

சம்பூரணமான தூய ஆத்மா என்பவர் தனது எண்ணங்களிலும் தனது கனவுகளிலும் பிரம்மச்சாரி என்ற தூய்மையைக் கிரகித்து, ஒவ்வோர் அடியிலும் தந்தை பிரம்மாவின் கற்பித்தல்களைப் பின்பற்றுபவர் ஆவார். தூய்மை என்றால், தந்தையை உங்களின் சதா சகபாடி ஆக்கித் தந்தையின் சகவாசத்தில் நிலைத்திருப்பதாகும். ஒன்றுகூடலின் சகவாசமும் குடும்பத்தின் அன்பெனும் ஒழுக்கக்கோட்பாடும் வேறுபட்டவை. தந்தையால் மட்டுமே உங்களுக்கு ஒன்றுகூடலின் அன்பெனும் சகவாசம் கிடைத்துள்ளது. தந்தை இல்லாவிட்டால், குடும்பம் எங்கிருந்து வரும்? தந்தையே விதை ஆவார். எனவே, நீங்கள் ஒருபோதும் விதையை மறக்கக்கூடாது.

சுலோகம்:
யாராவது ஒருவரைப் பார்த்து வியந்து, அவரின் ஆதிக்கத்திற்கு உட்படுபவர் ஆகாதீர்கள். ஆனால், ஞானத்தினால் மற்றவர்களில் ஆதிக்கத்தை ஏற்படுத்துபவர் ஆகுங்கள்.