29.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களுடைய சரீரம் உட்பட அனைத்தின்மீதும் உங்களுக்குள்ள பற்றை அகற்றிவிடுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் கர்மாதீதமாகும்போதே உங்களால் வீடு திரும்ப முடியும்.

கேள்வி:
ஆத்மாக்களில்; பெரும் பயத்தை விளைவிப்பது எது? அத்தகைய பயம் ஏன் ஏற்படுகின்றது?

8பதில்:
ஆத்மாக்கள் தங்களது சரீரங்களின் மீது பற்றை வளர்த்துவிட்டதால், அச்சரீரங்களை நீங்கிச் செல்வதற்கு அதிகளவு பயப்படுகின்றார்கள். ஓர் ஆத்மா துன்பத்தின் காரணமாகத் தனது சரீரத்தை நீக்க விரும்பினாலும், அவர் தனது பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்தாக வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்குச் சங்கமயுகத்தில் எவ்வித பயமும் இல்லை. நீங்கள் உங்களுடைய பழைய சரீரத்தை நீக்கி, தந்தையிடம் செல்வீர்கள் என்பதையிட்டு மேலும் அதிக சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, முதலில் ஞானமும், இரண்டாவதாக பக்தியும் இருப்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி எவருமே அறியமாட்டார்கள். சத்தியயுகத்தில் மரண பயம் இருப்பதில்லை என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தாங்கள் தங்களது சரீரத்தை நீக்கி வேறொன்றை எடுக்க வேண்டும் என்பதனை அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். அங்கே துன்பத்தை அனுபவித்தல், அழுதல் போன்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே மரண பயம் உள்ளது. ஆத்மாக்கள் சரீரத்தை நீக்குவதில் துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். ஆத்மா இனியும் வேறொரு பிறவியெடுத்துத் துன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்பதால் பயம் ஏற்படுகின்றது. இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது திரும்பிச் செல்லவேண்டும் என்பதனைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். எங்கு திரும்பிச் செல்ல வேண்டும்? வீட்டிற்கு! அது கடவுளின் வீடாகும். இது (பௌதீக உலகம்) உங்களது வீடல்ல. கடவுளும், ஆத்மாக்களாகிய நீங்களும் வசிக்கின்ற இடமே வீடு என அழைக்கப்படுகின்றது. அங்கு சரீரங்கள் இருப்பதில்லை. மக்கள் தாங்கள் பாரதத்தில் வசிப்பதால் பாரதமே தங்களது வீடு எனக் கூறுகின்றார்கள். அதேபோன்று, ஆத்மாக்களாகிய நாங்கள் அங்கே, எங்களது வீட்டில் வசிக்கின்றோம் என நீங்கள் கூறுகின்றீர்கள். அது ஆத்மாக்களின் வீடாகும். இது மனிதர்களின் வீடாகும். அது முக்திதாமம் எனப்படுகின்றது. மக்கள் அங்கு சென்று கடவுளைச் சந்திப்பதற்கு முயற்சி செய்கின்றார்கள். கடவுளைச் சந்திப்பதில் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். சரீரம் ஆத்மாவிற்குச் சொந்தமானதாக இருப்பதால், ஆத்மா அதன்மீது பெருமளவு பற்றை விருத்தி செய்துவிட்டார். இதனாலேயே, சிறிதளவு நோய் வந்துவிட்டாலும்கூட ஆத்மாக்கள் தங்களது சரீரத்தை நீக்கவேண்டி வந்துவிடுமோ எனப் பயப்படுகின்றார்கள். அறியாமைப் பாதையில் பயம் உள்ளது. சங்கமயுகமாகிய இக்காலத்திலேயே, நீங்கள் இப்பொழுது தந்தையிடம் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். எனவே, பயம் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை மிகச்சிறந்த வழிமுறையை உங்களுக்குக் காண்பித்திருக்கின்றார். தூய்மையற்ற ஆத்மாக்கள் என்னிடம் முக்திதாமத்திற்கு வரமுடியாது. அது தூய ஆத்மாக்களின் வீடாகும். இது மனிதர்களின் வீடாகும். இச்சரீரம் பஞ்ச தத்துவங்களால் ஆக்கப்பட்டது. பஞ்ச தத்துவங்களும் உங்களை இங்கே வசிப்பதற்காகக் கீழே ஈர்க்கின்றன. காற்று, நீர், ஆகாயம் போன்ற இத்தத்துவங்கள் அங்கு (ஆத்மலோகத்தில்) இருப்பதில்லை. இவ்வாறே ஞானத்தைக் கடைய வேண்டும். ஆத்மாக்கள் சரீரம் எனும் இச்சொத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள், இதனாலேயே அவர்கள் இதன்மீது பற்றை விருத்தி செய்துகொள்கின்றார்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்களாகிய நீங்கள் உண்மையில் அவ்விடத்து வாசிகளே. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை வீடு திரும்புவதற்கு முயற்சி செய்கி;ன்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும்போது சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். அங்கு துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்நேரத்தில், இது துன்ப பூமியாகும். நீங்கள் உங்களது பாகத்தை நடிப்பதற்காக பஞ்சதத்துவங்கள் உங்களை ஈர்த்துக் கீழே வரச்செய்கின்றன. நீங்கள் உண்மையில் நிச்சயமாக சடப்பொருட்களின் ஆதாரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில், இந்நாடகம் தொடர முடியாது. இந்நாடகம் சந்தோஷத்தையும், துன்பத்தையும் உள்ளடக்கியது. நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது, பஞ்ச தத்துவங்களால் ஆக்கப்பட்ட உங்களது சரீரத்தின்மீது எந்தப் பற்றையும் நீங்கள் கொண்டிருப்பதில்லை. அங்கே நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள், உங்களுக்கு உங்களது சரீரத்தின் பற்று இருக்கமாட்டாது. இப்பொழுது நீங்கள் பஞ்ச தத்துவங்களாலான சடப்பொருட்கள் மீதுள்ள பற்றுக்கள் அனைத்தையும் துறந்துவிட வேண்டும். அப்பொழுது, நீங்கள் தூய்மையாகுவதுடன், உங்களது சரீரங்கள் யோக சக்தி மூலமாகவே உருவாக்கப்படும். இதனாலேயே உங்களை ஈர்ப்பதற்கு மாயை அங்கே இருக்கமாட்டாள். உங்களது அச்சரீரம் யோக சக்தியினால் உருவாக்கப்படுவதால், அங்கே துன்பம் இருக்கமாட்டாது. இந்நாடகம் அத்தகைய அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது! இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய மிகவும் சூட்சுமமான விடயங்களாகும். மிகவும் புத்திசாலிகளாகவும், சேவையில் ஈடுபட்டும் உள்ளவர்களால் மிகத் தெளிவாக விளங்கப்படுத்த முடியும். தந்தை கூறியுள்ளார்: நீங்கள் செல்வத்தைத் தானம் செய்யும்போது, அது ஒருபோதுமே குறைவடையாது. நீங்கள் தொடர்ந்து தானம் செய்வீர்களாயின், அதனைக் கிரகிக்கவும் செய்வீர்கள். இல்லாவிடில் கிரகிப்பது மிகவும் கடினமாக இருக்கும். வெறுமனே எழுதிக்கொள்வதால் அவற்றைக் கிரகிக்க முடியும் என நினைக்காதீர்கள். ஆம், நீங்கள் கருத்துக்களை எழுதி, மற்றவர்கள் நன்மையடைவதற்காக அவர்களுக்கு அனுப்பலாம், அது வேறுபட்ட விடயமாகும். இல்லாவிடில், அதனால் உங்களுக்கு எவ்வித பயனுமில்லை. சிலர் வெறுமனே எழுதியெழுதிக் காகிதங்களைத்தான் வீணாக்குகின்றார்கள். இதுவும் நீங்கள் உள்ளார்த்தமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்: நான் இப்பொழுது எழுதுகின்றேன், ஆனால் பின்னர் எவ்வாறு அவற்றைப் பயன்படுத்தப்போகின்றேன்? எழுதிவிட்டுப் பின்னர் அவற்றை வீசிவிடுவீர்களாயின், அதில் என்ன நன்மையிருக்கின்றது? இதுவும் ஆத்மாக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்ற ஒரு வழியேயாகும். இவ்விடயங்கள் கிரகிக்கப்பட வேண்டும். எழுதப்பட்டிருக்கின்ற எதனையும் தந்தை மனப்பாடம் செய்ததில்லை. தந்தை தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றார். முதலில், நீங்கள் தந்தையுடன் ஒரு தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலமாக மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக முடியும். பின்னர், நீங்கள் அங்கே செல்லும்போது, தூய்மையாக இருப்பீர்கள். அங்கே ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மையாக இருக்கும். அந்த சக்தி முடிவடைந்த பின்னர், பஞ்ச தத்துவங்களினதும் சக்தி ஆத்மாக்களை ஈர்க்கின்றன. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது உங்களது சரீரங்களைத் துறந்து வீடு திரும்ப விரும்புகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாகுகின்றீர்கள். பின்னர், நீங்கள் வெண்ணெயில் இருந்து தலைமுடியை எடுப்பது போல, இலகுவாக உங்கள் சரீரத்தை விட்டுச் செல்வீர்கள். நீங்கள் உங்களது சரீரம் உட்பட அனைத்தின் மீதும் உள்ள பற்றை அகற்றவேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரமின்றி, தூய்மையாகவே வந்தீர்கள். உங்களுக்கு உலகின் மீது எவ்வித பற்றும் இருக்கவில்லை. அங்கே, ஓர் ஆத்மா சரீரத்தை விட்டுச் செல்லும்போது, எவருமே அழுவதில்லை. அங்கே சிரமங்களோ, அல்லது நோய்களோ எதுவுமே கிடையாது. சரீரத்தில் எந்தப் பற்றும் இருக்க மாட்டாது. அங்கு ஆத்மாக்களே தங்களது பாகங்களை நடிப்பது போன்றிருக்கும். ஓர் ஆத்மாவின் சரீரம் வளர்ந்து, வயதாகியதும் அவர் அதனை நீக்கி, தனது பாகத்தை நடிப்பதற்காக இன்னொன்றை எடுக்கின்றார். அங்கே இராவண இராச்சியம் கிடையாது. இந்நேரத்திலேயே தந்தையிடம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். இந்த ஞானம் உங்களது புத்தியில் உள்ளது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் தூய்மையாகி, என்னிடம் வரவேண்டும். அனைவரும் இப்பொழுது தூய்மையற்றவர்களாகவே இருக்கின்றார்கள். இதனாலேயே பஞ்ச தத்துவங்களாலான இப்பொம்மை மீது பற்று காணப்படுவதால், எவருமே அதனை விட்டு நீங்க விரும்பவில்லை. நாங்கள் சரீரத்தை விட்டு நீங்கினால், தந்தையிடம் திரும்பிச் செல்ல முடியும் என்ற அறிவு இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது தூய்மையாகி, தந்தையிடம் திரும்பிச் செல்வதற்காக முயற்சி செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனக்குச் சொந்தமானவர்களாக இருந்தீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது என்னை நினைவு செய்து, மீண்டும் ஒரு தடவை தூய்மையாக வேண்டும். அங்கே புதிய சரீரமொன்றை எடுப்பதில் எச்சிரமமும் இருக்காது. இங்கே, சரீரத்தின்மீது பற்று இருப்பதனால், மக்கள் வைத்தியரை வரவழைக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது பாபாவிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு இனி சரீரங்களுடன் எந்தத் தொடர்பும்; கிடையாது. உங்களது பாகத்தை நடிப்பதற்காகவே உங்களுக்கு சரீரம் வழங்கப் பட்டிருக்கின்றது. அங்கே ஆத்மாவும், சரீரமும் ஆரோக்கியமாக இருக்கும். துன்பத்தின் சுவடுகூட அங்கு இருக்கமாட்டாது. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவில் முயற்சி செய்யவேண்டும். நீங்கள் இப்பொழுது பாபாவிடம் செல்லவேண்டும். எனவே, ஏன் உங்களது சரீரத்தைத் துறந்து, திரும்பிச் செல்லக்கூடாது? எவ்வாறாயினும், யோகத்தின் மூலம் நீங்கள் தூய்மையாகி, உங்களது கர்மாதீத நிலையை அடையும்வரை உங்களால் தந்தையிடம் திரும்பிச் செல்ல முடியாது. இந்த ஞானம் இல்லாத மனிதர்களால் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களாலேயே அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க முடியும். நீங்கள் இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் ஆத்மாக்களிடம் சக்தி இருந்தது, அவர்கள் சந்தோஷமாக இருந்தனர். அவர்களுக்கு ஒருபோதுமே எவ்வித பயமும் ஏற்பட்டதில்லை. இங்கே துன்பமே நிலவுவதால், மக்கள் பக்தி போன்றவற்றைச் செய்கின்றனர். எனினும், வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான பாதையை அவர்கள் அறியமாட்டார்கள். ஒரேயொரு தந்தையால் மாத்திரமே அங்கு திரும்பிச் செல்வதற்கான பாதையை உங்களுக்குக் காண்பிக்க முடியும். நீங்கள் தந்தையிடம் திரும்பிச் செல்லவேண்டும் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். இங்கு நீங்கள் உங்களது சரீரத்தின்மீது பற்று வைத்திருக்கின்றீர்கள் எனவும், அப்பற்றை அகற்ற வேண்டும் எனவும் தந்தை விளங்கப்படுத்துகின்றார். இச்சரீரங்கள் பஞ்ச தத்துவங்களாலானவை. இவையனைத்தும் மாயையேயாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் இக்கண்களால் பார்க்கின்ற அனைத்தும் மாயையே அன்றி வேறு எதுவும் இல்லை. இங்கே, அனைத்திலும் துன்பமே உள்ளது. பெருமளவு அழுக்கு உள்ளது. சுவர்க்கத்தில் சரீரங்கள் முதற்தரமானவையாக இருப்பதுடன், உங்களது மாளிகைகளும் முதற்தரமானவையாகவே இருக்கும். அங்கு துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். இ;வ்விடயங்கள் உங்களது எண்ணங்களில் புகவேண்டும். தந்தை கூறுகின்றார்: அவர்கள் எதனையும் புரிந்துகொள்ளவில்லையாயின், அவர்களிடம் கூறுங்கள்: குறைந்த பட்சம் தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுதுதான் உங்களது பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். நீங்கள் ஓவ்வொருவரும் ஆத்மாக்களே. நீண்ட வால் போன்ற சரீரத்தைப் பின்னரே நீங்கள் பெறுகின்றீர்கள். எனவே, நாங்கள் ஏன் அதில் சிக்குப்பட வேண்டும்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது இராவண இராச்சியம் எனப்படுகின்றது. இராவண இராச்சியத்தில் துன்பத்தைத் தவிர வேறெதுவுமில்லை. சத்திய யுகத்தில் துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. நாங்கள் பலவீனமாகிவிட்டதால், இப்பொழுது தந்தையிடமிருந்து சக்தியைப் பெறுகின்றோம். சரீர உணர்வே உங்களை முற்றிலும் பலவீனமாக்கிவிடுகின்றது. தந்தை கூறுகின்றார்: ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட இந்நாடகம் ஒருபோதுமே முடிவடையாது. அநாதியான முக்தி என்ற கேள்விக்கே இடமில்லை. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். கூறப்பட்டுள்ளது: ‘நிச்சயிக்கப்பட்டவை நடப்பதையிட்டு கவலைப்படுவது ஏன்?’ கடந்தவையனைத்தும் மீண்டும் ஒரு தடவை இடம்பெறும். கவலைப்படுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. சத்தியயுகத்தில் தீயவை எதுவும் இடம்பெறமாட்டாது. இங்கே, கவலையே இருக்கின்றது. தந்தை கூறுகின்றார்: இது நாடகமாகும். தந்தை தன்னிடம் திரும்பி வருவதற்கான பாதையை உங்களுக்குக் காண்பிக்கின்றார். நீங்கள் இவ்வழியாக என்னிடம் வருவீர்கள். இது வெண்ணெயிலிருந்து தலைமுடியை எடுப்பது போன்று இலகுவானதாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் என்னை நினைவு செய்து, தூய்மையாக வேண்டும். தூய்மையாகுவதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. நீங்கள் இராவண இராச்சியத்தில் இருக்கின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அங்கே, அது கடவுளின் இராச்சியமாகும். இறை இராச்சியத்தையும் அசுர இராச்சியத்தையும் பற்றியதே இந்த நாடகமாகும். எவ்வாறு கடவுள் வந்து, ஸ்தாபனையை மேற்கொள்கின்றார் என்பதனை எவருமே புரிந்துகொள்ளமாட்டார்கள். தந்தை ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். அவரால் மாத்திரமே வந்து அனைத்தையும் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இப்பொழுது முழு ஞானத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். பின்னர், இந்த ஞானம் அனைத்தையும் நீங்கள் மறந்துவிடுவீர்கள். நீங்கள் எவ்வாறு இக்கல்வியின் மூலமாக உங்கள் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டீர்கள் என்பதைக்கூட மறந்துவிடுவீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லும்போது, இந்த ஞானம் அனைத்தும் மறைந்துவிடும். கடவுள் எவ்வாறு உங்களை இரட்டைக் கிரீடமுடையவராக ஆக்கினார் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். இவருக்கே எதுவும் தெரியவில்லையெனில், சமய நூல்கள் போன்றவற்றை படிக்கும் ஏனையவர்களுக்கு என்ன தெரிந்திருக்க முடியும்;? இந்த ஞானம் அவர்களை தொடவும் மாட்டாது. நீங்கள் இங்கு வந்து, செவிமடுத்ததால் இது உடனடியாகவே உங்களைத் தொட்டுவிடுகின்றது. இவையனைத்தும் மறைமுகமானவையாகும். தந்தை உங்களுடன் பேசுகின்றார், ஆனால் ஏதாவது புலப்படுகிறதா? இது புரிந்துகொள்ளப்படுகின்றது. ஓர் ஆத்மாவை எப்பொழுதாவது கண்டிருக்கின்றீர்களா? ஆத்மாக்கள் இருப்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. தெய்வீகப் பார்வை மூலம் ஒருவரைப் பார்ப்பது சாத்தியமாகும். தந்தை கூறுகின்றார்: அதைப் பார்த்தாலும் எதனைத்தான் புரிந்துகொள்வீர்கள்? ஆத்மாக்கள் சின்னஞ்சிறிய புள்ளிகள். எண்ணற்ற ஆத்மாக்கள் உள்ளனர். நீங்கள் 10 முதல் 20 வரையான ஆத்மாக்களின் காட்சியைப் பெறுவீர்கள். ஓர் ஆத்மாவைப் பார்ப்பதால் மாத்திரம் நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்கள். பலர் காட்சிகளைக் காண்கின்றார்கள். அவர்கள் ஆத்மாவையா அல்லது பரமாத்மாவையா பார்த்தார்கள் என்பதை அவர்கள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியாது. அமர்ந்திருக்கும்போது, நீங்கள் சின்னஞ்சிறிய ஆத்மாக்களைப் பார்க்கக்கூடும். எனினும், அது ஆத்மாவா அல்லது பரமாத்மாவா என்பதை உங்களால் அறியமுடியாது. அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாவில் பெருமளவு சக்தி இருப்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாவே அதிபதி. அவர் ஒரு சரீரத்தைத் துறந்துவிட்டு, தனது பாகத்தை நடிப்பதற்காக வேறொன்றினுள் பிரவேசிக்கின்றார். இது இயற்கையின் அற்புதமாகும். ஒருவரது சரீரம் நோய்வாய்ப்பட்டால் அல்லது அவர் கடனாளியாகிவிட்டால் தான் அச்சரீரத்தை விட்டு நீங்குவது சிறந்தது என உணர்கின்றார். ஏனெனில், ஆத்மா தனது சரீரத்தை விட்டு நீங்கினால் வேதனையிலிருந்து விடுபட்டுவிடுவார் என அவர் உணர்கின்றார். எவ்வாறாயினும், அவரது தலைமீதுள்ள பாவச் சுமை எவ்வாறு அகற்றப்பட முடியும்? நினைவின் மூலமாக உங்களது பாவங்கள் அழிக்கப்படுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இராவணனின் காரணமாக பெருமளவு பாவம் செய்யப்பட்டுள்ளது. தந்தை அதிலிருந்து விடுபடுவதற்கான பாதையை உங்களுக்குக் காண்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: தொடர்ந்தும் என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் நினைவிலிருந்தவாறே உங்களது சரீரத்தை நீக்கவேண்டும், உங்களது பாவங்கள் அனைத்தும் முடிவடைந்துவிடும். நினைவில் இருப்பதென்பது உங்களது மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்று இலகுவானதல்ல! நீங்கள் என்னை நினைவு செய்ய முயற்சிக்கும்போது, மாயை பெருமளவு துன்பத்தை விளைவிக்கின்றாள். அவள் உங்களை மீண்டும் மீண்டும் என்னை மறக்குமாறு செய்கின்றாள். பாபா தனது அனுபவத்தை உங்களுக்குக் கூறுகின்றார்: நான் மிகக் கடினமாக முயற்சி செய்கின்றேன், எனினும் நாங்கள் இருவரும் இணைந்திருந்தும்கூட மாயை எனது நினைவில் தடைகளை ஏற்படுத்துகின்றாள். நாங்கள் இணைந்திருந்தாலும்கூட, மீண்டும் மீண்டும் நான் அவரை மறந்துவிடுகின்றேன், அது மிகவும் கடினமானது. மீண்டும் மீண்டும் வேறு யாராவது அல்லது வேறொன்றே நினைவுசெய்யப்படுகின்றது. நீங்கள் மிகச் சிறந்த முயற்சி செய்கின்றீர்கள். சிலர் கட்டுக்கதைகள் கூறுகின்றார்கள். அவர்கள் 10 அல்லது 15 நாட்களுக்கு அட்டவணையை எழுதிவிட்டு, பின்னர் கைவிட்டுவிடுகின்றார்கள். நீங்கள் இதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நீங்கள் அனைத்திலும் தூய்மையாகி உங்களது கர்மாதீத நிலையை அடையும்போது வெற்றி பெறுவீர்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. இது இறை அதிர்ஷ்டலாபச் சீட்டாகும். பாபாவை நினைவு செய்வது நினைவு இழை எனப்படுகின்றது. இது புரிந்துகொள்வதற்கு உங்களது புத்தியைப் பயன்படுத்துகின்ற கேள்வியாகும். சிலர் தாங்கள் பாபாவை நினைவு செய்வதாகக் கூறுகின்றார்கள். ஆனால், பாபா கூறுகின்றார்: அவரை எவ்வாறு நினைவு செய்வது என்பதுகூட உங்களுக்குத் தெரியாது! அந்தஸ்த்தின் தரங்களுக்கு இடையில் வேறுபாடு உள்ளது. இராச்சியம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது? நீங்கள் பல தடவைகள் இராச்சியத்தை ஆட்சி செய்து, இழந்துவிட்டீர்கள். பாபா ஒவ்வொரு 5000 வருடங்களிலும் வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். பின்னர். இராவண இராச்சியத்தில், நீங்கள் பாவப் பாதையில் வீழ்ந்துவிடுகின்றீர்கள். தேவர்களாக இருந்தவர்கள் பாவப் பாதையில் வீழ்ந்துவிட்டார்கள். எனவே, தந்தையை எவ்வாறு நினைவு செய்வது என்பது பற்றிய ஆழமான விடயங்களைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். அது மிக இலகுவானது. நீங்கள் சரீரத்தை விட்டு நீங்கித் தந்தையிடம் செல்வீர்கள். நீங்கள் என்னை இனங்கண்டுகொள்ளும்போதே யோக சக்தி மூலமாக உங்களது பாவங்கள் அழிக்கப்படும். அது இறுதியிலேயே நிகழும். அவர்கள் என்னதான் செய்தாலும் எவராலும் இப்பொழுது திரும்பிச் செல்ல முடியாது. நான் மாத்திரமே வந்து, உங்களுக்கு மிகச் சரியான யோகத்தைக் கற்பிக்கின்றேன். பின்னர் அந்த யோக சக்தி அரைக் கல்பத்திற்கு நீடித்திருக்கும். அங்கே, நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் பலவற்றையும் செய்கின்றார்கள். தந்தை வந்து ஞானத்தைக் கொடுத்த பின்னர் பக்தி இருக்கமாட்டாது. ஞானத்துடனேயே பகல் உதயமாகுவதால், வேறு சிரமங்கள் இருக்கமாட்டாது. பக்தி தடுமாறித் திரியும் இரவாகும். அங்கே, துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. இவ்விடத்திற்கு உரித்துடையவர்களாக உள்ளவர்களின்; நாற்றுக்களின் புத்தியிலேயே இவ்விடயங்கள் அனைத்தும் பதியும். இவை மிகவும் சூட்சுமமான விடயங்களாகும். ஞானம் அற்புதமானது. தந்தையைத் தவிர வேறு எவராலும் அதனை விளங்கப்படுத்த முடியாது. வெகு சிலரே இதனைப் புரிந்துகொள்கின்றார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த வேறுபாடும் இருக்கமுடியாது. மக்கள் நினைக்கின்றார்கள்: கடவுளால் செய்ய முடியாதது என்னதான் உள்ளது? எவ்வாறாயினும், கடவுள் ஒரேயொரு தடவையே வருகின்றார். அவர் வந்து, சுவர்க்கத்திற்கான பாதையைக் காண்பிக்கின்றார். இப்பொழுது, குழந்தைகளாகிய உங்களின் புத்தி மிகவும் பரந்ததாகிவிட்டது. நாங்கள் இருவரும் இணைந்திருக்கின்றோம். இவர் (பிரம்மா) எவரையாவது பார்க்கும்போது, அவ்வாத்மாவிற்கு அமைதியைத் தானம் செய்கின்ற உணர்வைக் கொண்டிருக்கின்றார். அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் எங்களது குலத்திற்குரியவர்களா இல்லையா என்பதை ஒருவரால் கூறமுடியும். அவர்களது நாடித்துடிப்பை உணர்வதே சேவாதாரிக் குழந்தைகளாகிய உங்களின் பணியாகும். அவர்கள் உங்களது குலத்திற்குரியவர்களாயின், அமைதியாகிவிடுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மையாகி, தந்தையுடன் வீடு திரும்புவதற்கு, பஞ்ச தத்துவங்களாலான பொம்மை மீது பற்றைக் கொண்டிருக்காதீர்கள். சரீரத்தை விட்டு நீங்குகின்ற பயம் அனைத்தையும் அகற்றிவிடுங்கள்.

2. மிகவும் அவதானமாக இருந்து, உங்களுடைய நினைவு யாத்திரை அட்டவணையை அதிகரித்துக்கொள்ளுங்கள். யோக சக்தியால் ஆத்மாவைத் தூய்மைப்படுத்துங்கள். கர்மாதீதமாகி, இறை அதிர்ஷ்டலாபச் சீட்டை வெற்றிகொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் மனதையும் புத்தியையும் வீணான அனைத்திலிருந்தும் விடுவித்திருப்பதன் மூலம் ஒரு ஆட்சியாளர் ஆகி உங்கள் பிராமண சம்ஸ்காரங்களை உருவாக்குவீர்களாக.

எந்த ஒரு சிறிய வீணான சூழ்நிலையும் அல்லது வீணான சூழலும் அல்லது வீணான காட்சிகளும் முதலில் உங்கள் மனதில் செல்வாக்கு செலுத்துகின்றது, பின்னர், புத்தி அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றது. உங்கள் மனமும் புத்தியும் தொடர்ந்தும் அவ்வாறாக இயங்க ஆரம்பிக்கும் போதே ஒரு சம்ஸ்காரம் உருவாக்கப்படுகின்றது. அதன் பின்னர் பிராமண சம்ஸ்காரங்கள் அல்லாத பல்வேறு சம்ஸ்காரங்களை அவதானிப்பீர்கள். எந்த ஒரு வீணான சம்ஸ்காரத்தினாலும் ஆதிக்கம் செலுத்தப்படுவது, உங்கள் சுயத்துடன் போராடுவது, தொடர்ந்தும் உங்கள் சந்தோஷத்தை இழப்பது என்பன ஒரு போராளியின் சம்ஸ்காரங்கள் ஆகும். பிராமணர் என்பவர் வீணான சம்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டவரும், வெளியில் உள்ள எதிலும் தங்கியிருக்காத ஒரு ஆட்சியாளர் (சுயத்தின்) என்றும் அர்த்தமாகும்.

சுலோகம்:
ஓர் உறுதியான சத்தியத்தினால் சகல பிரச்சினைகளையும் இலகுவாக வெற்றி கொள்பவரே மாஸ்டர் சர்வ சக்திவான் ஆவார்.