19.03.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இது மிகவும் நன்மை பயக்கும் மங்களகரமான சங்கம யுகமாகும். இந்த யுகத்திலேயே பழைய உலகம் மாற்றப்பட்டுப் புதியதாக்கப்படுகின்றது. இந்த யுகத்தை மறந்து விடாதீர்கள்.
கேள்வி:
தந்தை இளைய, முதிய குழந்தைகள் அனைவரையும், தன்னைப் போன்று ஆக்குவதற்காக எந்த ஓர் அன்பான கற்பித்தலைக் கொடுக்கின்றார்?
8பதில்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது எந்தத் தவறுகளையும் செய்யாதீர்கள். ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுவதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். ஆகவே தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் தவறு செய்யும்பொழுது, மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்கிறீர்கள். தந்தை ஒருபொழுதும் குழந்தைகளுக்குத் துன்பம் விளைவிப்பதில்லை. அவர் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். யோகிகள் ஆகுங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் மிகவும் இனிமையானவர்களாகவும் ஆகுவீர்கள்.ஓம் சாந்தி.
தந்தை சத்தியமானவர் என்பதால்; தங்களை ஆத்மாக்களாகக் கருதி, பரமாத்மாவான பரமதந்தையுடன்; யோகத்தைக் கொண்டிருக்கும் குழந்தைகள் உண்மையான யோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள், ஆகவே, உங்கள் புத்தியின் யோகம் சத்தியமானவருடன் உள்ளது. அவர் உங்களுக்குக் கூறுகின்ற அனைத்தும் சத்தியமேயாகும். பல்வேறு யோகிகளும், போகிகளும் (இந்திரிய சுகங்களில் ஈடுபடுபவர்கள்) உள்ளனர். பல வகையான போகிகள் உள்ளனர், பல வகையான யோகிகளும் உள்ளனர். உங்களுடைய யோகம் ஒரு வகையானது. அவர்களின் துறவறம் உங்கள் துறவறத்திலிருந்து வேறுபட்டது. நீங்கள் அதிமங்களகரமான சங்கமயுகத்து யோகிகள். அவர்கள் தூய யோகிகளாக இருந்தாலென்ன, அல்லது தூய்மையற்ற போகிகளாக இருந்தாலென்ன, அவர்களில் எவரும் இந்த யோகத்தை அறியார்கள். இதைக் குழந்தைகளும் அறியார்கள். உங்கள் அனைவரையும் பாபா “குழந்தைகள், குழந்தைகள்” என்றே அழைக்கிறார், ஏனெனில் எல்லையற்ற எண்ணிக்கையான ஆத்மாக்களின் தந்தை அவரே என்பதை அவர் அறிவார். நீங்கள் அனைவரும் சகோதரர்களாகிய ஆத்மாக்கள் என்பதையும்;;, அந்த ஒரேயொருவரே உங்கள் தந்தை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருப்பதனால், நீங்;கள் தூய்மை ஆகுகிறீர்கள். அவர்கள் போகிகள், ஆனால் நீங்களோ யோகிகள். தந்தை, தனது சொந்த அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். இதுவே அதிமங்களகரமான சங்கமயுகம் என்பதை நீங்;களும் புரிந்துகொள்கிறீர்கள். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இது தெரியாது. இது, அதிமங்களகரமான சங்கமயுகம் என்று அழைக்கப்படுகிறது. இதனாலேயே ‘மங்களகரமான’ என்ற வார்த்தையை நீங்கள் ஒருபொழுதும் மறந்து விடக்கூடாது. இதுவே அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்ற யுகமாகும். அதியுயர்வானவர்களும், தூய்மையானவர்களுமே மேன்மையான மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் தூய்மையானவர்களாகவும், மேன்மையானவர்களாகவும் இருந்தார்கள். இப்பொழுது என்ன நேரம் என்பதும் உங்களுக்குத் தெரியும். 5000 வருடங்களுக்குப் பின்னர் உலகம் பழையதாகுகின்றது. அதனை, மீண்டும் புதியதாக்குவதற்குத் தந்தை வருகின்றார். இப்பொழுது நாங்கள், சங்கமயுகப் பிராமணக் குலத்திற்கு உரியவர்கள். பிரம்மாவே அனைவரிலும் உயர்வானவர். எவ்வாறாயினும் பிரம்மா சரீரதாரியாகக் காட்டப்பட்டுள்ளார், சிவன் சரீரமற்றவர். சரீரமற்ற ஒரேயொருவருக்கும், சரீரதாரிக்குமிடையே ஒரு சந்திப்பு இடம்பெறுகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். நீங்கள் அவரை ‘பாபா’ என்று அழைக்கிறீர்கள். இது ஓர் அற்புதமான பாகம். இவரும் புகழப்படுவதுடன், இவருக்கும் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஓர் இரதத்தைச் சிலர் ஒரு விதமாகவும், மற்றவர்கள் வேறு விதமாகவும் அலங்கரிக்கின்றார்கள். பாபாவும் உங்களுக்குக் கூறியுள்ளார்: இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியிலேயே, நான் இவரின் சரீரத்தினுள் பிரவேசிக்கிறேன். அனைத்தையும் அவர் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார். அனைத்திற்கும் முதலில் கூறுங்கள்: கடவுள் பேசுகிறார், அதன்பின்னர் உங்கள் பல பிறவிகளில், இறுதிப் பிறவியின் முடிவில் அனைத்து இரகசியங்களையும் நான் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். வேறு எவரும் இதனைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்களும் சில சமயங்களில் மறந்து விடுகிறீர்கள். ‘மங்களகரமான’ என்ற வார்த்தையை எழுதுவதனால், இந்த மங்களகரமான யுகம் மாத்திரமே நன்மை பயக்கும் யுகம் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் யுகத்தை நினைவில் வைத்திருந்தால், புதிய உலகிற்குச் செல்வதற்காகத் தாங்கள் மாறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள். புதிய உலகில் தேவர்கள் இருக்கின்றார்கள். உங்களுக்கும் யுகங்களைப் பற்றித் தெரியும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே. ஒருபொழுதும் சங்கம யுகத்தை மறந்துவிடாதீர்கள். அதனை மறப்பதனால், நீங்கள் முழு ஞானத்தையும் மறந்து விடுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது மாற்றமடைந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்துகொள்கிறீர்கள். பழையவை அனைத்தும் இப்பொழுது மாற்றமடைந்து புதியவையாகும். தந்தை வந்து உலகை மாற்றுகிறார். அவர் குழந்தைகளாகிய உங்களையும் மாற்றுகிறார். அவர் ஒவ்வொருவரையும் “குழந்தாய், குழந்தாய்” என்று கூறுகிறார். முழு உலகிலுமுள்ள ஆத்மாக்கள் அனைவரும் அவரின் குழந்தைகள். இந்த நாடகத்தில் அனைவருக்கும் ஒரு பாகம் உள்ளது. சக்கரம் நிரூபிக்கப்பட வேண்டும். அவர்களில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தச் சமயத்தை ஸ்தாபிக்கிறார்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் தேவ தர்மத்தை ஸ்தாபிக்க முடியாது. இந்தத் தர்மத்தை பிரம்மா ஸ்தாபிப்பதில்லை. புதிய உலகில் தேவ தர்மம் உள்ளது. பழைய உலகில் அனைவரும் மனிதர்களே. புதிய உலகில் தேவர்கள் இருக்கிறார்கள். தேவர்கள் தூய்மையானவர்கள். அங்கு இராவண இராச்சியம் இருக்க மாட்டாது. தந்தை குழந்தைகளாகிய உங்களை, இராவணனை வெற்றிகொள்ளுமாறு செய்கிறார். நீங்கள் இராவணனை வெற்றிகொண்டதும், இராம இராச்சியம் ஆரம்பமாகும். புதிய உலகம் இராம இராச்சியம் ஆகும். பழைய உலகம் இராவண இராச்சியம் ஆகும்;. இராம இராச்சியம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகிறது என்பதைக் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறெவரும் அறியார். படைப்பவரான, தந்தை இங்கமர்ந்திருந்து, படைப்பின் இரகசியங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். படைப்பவரான தந்தையே விதையாவார். விதையானவரே, விருட்சத்தின் விதை என்றும் அழைக்கப்படுகின்றார். இப்பொழுது அது ஓர் உயிரற்ற விதையாகும். ஆனால் அந்த ஒரேயொருவரை நீங்கள் அவ்வாறாகக் (உயிரற்றவர்) கருத முடியாது. முழு விருட்சமும் இந்த விதையிலிருந்து வெளிப்படுகிறது என்பதை நீங்;கள் புரிந்துகொள்கிறீர்;கள். முழு உலகமும் அத்தகைய மிகப்பெரிய விருட்சமாகும். அது உயிரற்றது. ஆனால் இந்த ஒரேயொருவரே உயிருள்ளவர். அவரே சத்தியமானவரும், உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமுமாவார். தந்தையே மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவரிலிருந்து மிகப்பெரிய விருட்சம் வெளித்தோன்றுகிறது. எவ்வாறாயினும் அவர்கள் ஒரு சிறிய மாதிரியுருவை உருவாக்குகிறார்கள். மனித உலக விருட்சமே அனைத்திலும் மிகப்பெரியது. அதி மேன்மையான தந்தை, ஞானம் நிறைந்தவர். பலர் அந்த விருட்சங்கள் பற்றிய அறிவைக் கொண்டிருந்தபொழுதிலும், இந்த விருட்சத்தைப் பற்றிய ஞானத்தைத் தந்தையால் மாத்திரமே கொடுக்க முடியும். தந்தை இப்பொழுது உங்கள் புத்தியை எல்லைக்குட்பட்டதிலிருந்து, எல்லையற்றதாக மாற்றியுள்ளார். இப்பொழுது நீங்கள் இந்த எல்லையற்ற விருட்சத்தைப் பற்றி அறிந்துள்ளீர்கள். அந்த விருட்சம் (ஆத்மாக்களின்) அதிகளவு வெற்றிடத்தைப் (அசரீரியான உலகம்) பெற்றுள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்களை எல்லையற்றதிற்குள் அழைத்துச் செல்கிறார். முழு உலகமும் இப்பொழுது தூய்மையற்றுள்ளது. முழு உலகிலும் வன்முறை உள்ளது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். சத்திய யுகத்திலுள்ள ஒரேயொரு தேவ தர்மம் மாத்திரமே அகிம்சைக்குரியது. சத்திய யுகத்தில், அனைவரும் தூய்மையாக இருப்பதுடன், அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்கின்றார்கள். 21 பிறவிகளுக்கு உங்கள் ஆசைகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்படும். சத்திய யுகத்தில் ஆசைகள் எதுவும் இருக்க மாட்டாது. நீங்கள் அளவற்ற தானியம் போன்ற அனைத்தையும் பெறுவீர்கள். முன்னர் இந்த மும்பாய் இருக்கவில்லை. தேவர்கள் உவர் நீர்க் கரைகளில் வாழவில்லை. இனிய ஆறுகள் இருந்த இடங்களிலேயே தேவர்கள் வாழ்ந்தார்கள். மிகக் குறைந்தளவு மனிதர்களே அங்கு இருந்தார்கள். அனைவருக்கும் அதிகளவு நிலம் இருந்தது. சத்திய யுகமே விகாரமற்ற உலகமாகும். யோக சக்தி மூலம் நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். அதுவே இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் புதிய விருட்சம் மிகவும் சிறியதாகும். முதலில், ஒரு தர்மம் மாத்திரமே இருக்கின்றது, அது அடிமரத்தினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது. பின்னர் அத்திவாரத்திலிருந்து மூன்று பிரிவுகள் வெளித்தோன்றுகின்றன. தேவ தர்மமே அத்திவாரமாகும். பல சிறு கிளைகளும், கொப்புகளும் இந்த அடிமரத்திலிருந்து வெளித்தோன்றுகின்றன. இவ் விருட்சத்தின் அடி மரம் நீண்ட காலத்திற்கு இருப்பதில்லை. வேறு எதுவும் இவ் விருட்சம் போல் இருப்பதில்லை. இவ் விருட்சம் மிகச்சரியாக ஓர் ஆலமரத்துடன் ஒப்பிடப்படுகிறது. முழு ஆலமரமும், அடி மரமின்றி நிற்கிறது. அது காய்ந்து போவதுமில்லை. முழு விருட்சமும் இன்னமும் பசுமையாக, நிற்கிறது. ஆனால் தேவ தர்மத்தின் அத்திவாரம் இப்போது இல்லை. இதுவே அடிமரமாகும். அடிமரம் இராம இராச்சியத்தை, அதாவது, தேவ தர்மத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. தந்தை கூறுகிறார்: நான் மூன்று தர்மங்களை ஸ்தாபிக்கிறேன். சங்கம யுகத்துப் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இவ் விடயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள். உங்களுடைய பிராமண குலம் மிகவும் சிறியது. அரவிந்த ஆச்சிரமம் போன்ற பல சிறிய பிரிவுகளும், மதப் பிரிவுகளும் வெளித்தோன்றுகின்றன. எவரையும் விகாரத்தில் ஈடுபடவேண்டாம் என்று அங்கு இருந்தவர்கள் கூறாததால், அது மிக விரைவில் விரிவடைந்தது. இங்கு தந்தை கூறுகிறார்: காமமே கொடிய எதிரி. நீங்கள் அதனை வெற்றிகொள்ள வேண்டும். வேறெவராலும் இவ்வாறு கூற முடியாது. இன்றேல், அவர்களுக்கும் தொந்தரவுகள் இருக்கும். இங்கு தூய்மையற்றவர்கள் உள்ளனர். ஆகவே அவர்கள் தூய்மையாகுதல் என்ற விடயத்தைச் செவிமடுக்க மாட்டார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: விகாரமின்றி எவ்வாறு குழந்தைகள் பிறப்பார்கள்? அது அந்த அப்பாவிகளின் தவறல்ல. ‘காமமே கொடிய எதிரி, அதனை வெற்றிகொள்;வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகலாம்’ என்பது கடவுளின் வாக்கியம் என்று கீதையைக் கற்பவர்கள் மேற்கோள் காட்டுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் இதனைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இவ் வார்த்தைகளை மேற்கோள் காட்டும்பொழுது, நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அனுமான் செருப்புக்களுக்கு அருகே அமர்ந்திருப்பது போன்று நீங்களும் சென்று, வெளியே அமர்ந்திருந்து செவிமடுக்க வேண்டும் என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். அவர்கள் இவ் வார்த்தைகளைக் கூறும்பொழுது, இதன் அர்த்தம் என்ன என்று அவர்களைக் கேளுங்கள். தேவர்களே, உலகை வென்றவர்கள். நீங்கள், தேவர்கள் ஆகுவதற்கு விகாரங்களைத் துறக்க வேண்டும். இராம இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும் என்றும் நீங்கள் கூறலாம். நீங்கள் மகாவீரர்கள் (தைரியமான வீரர்கள்). இதில் பயப்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் அவர்களிடம் அதிக அன்புடன் வினவ வேண்;டும்: சுவாமிஜி, இந்த விகாரங்களை வெற்றிகொள்வதால், நீங்;கள் உலக அதிபதிகள் ஆகலாம் என்று கூறினீர்கள். ஆனால் எவ்வாறு நாங்கள் தூய்மையானவர்கள் ஆகலாம் என்று நீங்கள் கூறவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தூய்மையானவர்களாக இருக்கும் மகாவீரர்கள். மகாவீரர்களே வெற்றி மாலையில் கோர்க்கப்படுகின்றார்கள். மக்களின் செவிகள், பிழையான விடயங்களைச் செவிமடுப்பதற்குப் பழகிவிட்டன. நீங்கள் இனிமேல் பிழையான விடயங்களைச் செவிமடுப்பதற்கு விரும்ப மாட்டீர்கள். சரியான விடயங்களைச் செவிமடுப்பதற்கே உங்கள் செவிகள் விரும்புகின்றன. தீயதைக் கேட்காதீர்கள்! நீங்கள் நிச்சயமாக மனிதர்களை விழிப்படையச் செய்ய வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: கடவுள் கூறுகிறார்: “தூய்மை ஆகுங்கள்” சத்திய யுகத்தில் உள்ள அனைவரும் தூய தேவர்கள். இப்பொழுது அனைவரும் தூய்மையற்றவர்கள். அவர்களுக்கு இவ்வாறு விளங்கப்படுத்துங்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: எங்கள் சற்சங்கத்தில், காமமே கொடிய எதிரி என விளங்கப்படுத்தப்படுகிறது. நீங்கள் தூய்மையாக விரும்பினால், இவ் வழிமுறையை உபயோகித்துத் தூய்மையானவர்கள் ஆகலாம்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி ஆத்மாக்களைச் சகோதரர்களாகப் பார்க்கும் உங்கள் பார்வையை, உறுதியாக்கிக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் இந்தப் பாரதம் மிகவும் செழிப்பான பூமியாக இருந்தது என்பதையும், அது இப்பொழுது வரண்டதாகி விட்டதால், அதற்கு ‘இந்துஸ்தான்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முன்னர் பாரதம் செல்வம், தூய்மை, சந்தோஷம், அமைதி, மற்றும் அனைத்தினாலும் நிறைந்து வழிந்தது. அது இப்பொழுது துன்பத்தினால் நிறைந்து வழிகின்றது. இதனாலேயே அவர்கள் கூவி அழைக்கிறார்கள்: துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவரே. நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன், தந்தையிடம் கற்கிறீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து, சந்தோஷம் என்ற எல்லையற்ற ஆஸ்தியைப் பெறாதவர்கள் எவராவது இருக்க முடியுமா? அனைத்திற்கும் முதலில் அல்பாவைப் புரிந்துகொள்ளுங்கள். அல்பா யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், வேறு எந்த இரகசியங்களும் உங்கள் புத்தியில் புகமாட்டாது. எல்லையற்ற தந்தையே உங்களுக்கு உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் மட்டுமே உங்களால் முன்னேற முடியும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைக் கேள்வி கேட்க வேண்டிய தேவையில்லை. தந்தையே தூய்மையாக்குபவர். அவரையே நீங்கள் நினைவுசெய்கிறீர்கள். அவரை நினைவுசெய்வதனால் நீங்கள் தூய்மையாகுகிறீர்கள். இதனாலேயே நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள். ஒரு விநாடியில் ஜீவன்முக்தி கிடைக்கிறது. எவ்வாறாயினும் நினைவு யாத்திரைக்கு அதிகக் காலம் எடுக்கின்றது. நினைவு யாத்திரையிலேயே தடைகள் வருகின்றன. அரைக் கல்பத்திற்கு நீங்கள் சரீர உணர்வுடையவர்களாக இருந்தீர்கள். இந்த ஒரு பிறவியிலேயே ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இவருக்கு (பிரம்மபாபா) இது மிகவும் இலகுவானது. நீங்கள் எங்களை அழைக்கிறீர்கள்: பாப்தாதா. தந்தை இவரில் அமர்ந்திருப்பதை இவரும் புரிந்துகொள்கிறார். அவரை நான் அதிகளவு புகழ்கிறேன். நான் அவரை அதிகளவு நேசிக்கிறேன். பாபா, நீங்கள் மிகவும் இனிமையானவர்! கல்பம், கல்பமாக நீங்கள் எனக்கு அதிகளவு கற்பிக்கிறீர்கள்! பின்னர் அரைக் கல்பத்திற்கு நான் உங்களை நினைவுசெய்ய மாட்டேன். இப்பொழுது நான் உங்களை அதிகளவு நினைவுசெய்கிறேன். நேற்று, எனக்கு எந்த ஞானமும் இருக்கவில்லை. நான் பூஜித்தவரைப் போன்றே நானும் ஆகப்போகின்றேன் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது நான் வியப்படைகின்றேன். யோகிகள் ஆகுவதனால், நாங்கள் தேவர்கள் ஆகுவோம். நீங்கள் அனைவரும் எனது குழந்தைகளும் ஆவீர்கள். இந்த பாபா, குழந்தைகளை மிகுந்த அன்புடன் கவனித்துக் கொள்வதுடன், பராமரித்தும் கொள்கிறார். என்னைப் போன்று அவர்களும் சாதாரண மனிதர்களிலிருந்து, நாராயணன் ஆகுவார்கள். இதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். நான் உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்துகிறேன்: குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்யுங்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதுடன், நீங்கள் உண்பனவற்றிலும், பருகுவனவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். இதனை நீங்கள் செய்யாவிட்டால், ஒருவேளை இன்னும் நேரம் வரவில்லை என்றும், தொடர்ந்தும் ஏதாவதொரு தவறை நீங்கள் செய்வீர்கள் என்றும் நான் எண்ணுவேன். இளைய, மற்றும் முதிய குழந்தைகளுக்கு நான் விளங்கப்படுத்துகிறேன்: குழந்தைகளே, எந்தத் தவறுகளையும் செய்யாதீர்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் ஒரு தவறைச் செய்தால், துன்பத்தை விளைவிக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். தந்தை ஒருபொழுதும் துன்பம் விளைவிப்பதில்லை. அவர் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் மிகவும் இனிமையானவர்களாகவும் ஆகுவீர்கள். நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகுவதுடன், தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கவும் வேண்டும். தூய்மையானவர்கள் ஆகுங்கள். தூய்மையற்றவர்கள் இங்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சிலசமயங்களில் அவர்கள் வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அது இந்த நேரத்தில் மாத்திரமே. அதிகளவு விரிவாக்கம் இடம்பெறும்பொழுது, இது தூய்மையின் கோபுரம் என்றும், மௌனக் கோபுரம் என்றும் அவர்களுக்குக் கூறப்படும். இதுவே அதிமேலான இடம். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதே, அதிமேலான சக்தியாகும். அங்கு பெருமளவு மௌனம் இருக்கும். அங்கு அரைக்கல்பத்திற்குச் சண்டை, சச்சரவு எதுவும் இருக்க மாட்டாது. இங்கு அதிகளவு சண்டை, சச்சரவு உள்ளது. அமைதி இருக்க மாட்டாது. பரந்தாமமே அமைதி தாமமாகும். பின்னர் நீங்கள் உலகில் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக வந்து சரீரங்களை எடுக்கிறீர்கள். அந்த நேரத்தில் அமைதி இருக்கின்றது. அமைதியே ஆத்மாக்களின் ஆதிதர்மம் ஆகும். இராவணன் அமைதியின்மையை ஏற்படுத்துகிறான். நீங்கள் தொடர்ந்து அமைதிக்கான கற்பித்தலைப் பெறுவீர்கள். ஒருவர் கோபமாக இருக்கும்பொழுது, அவர் ஏனைய அனைவரையும் அமைதியற்றவர் ஆக்குகின்றார். இந்த யோக சக்தியின் மூலம், உங்களிடமுள்ள குப்பை அனைத்தும் நீக்கப்படுகின்றன. கற்பதன்; மூலம் குப்பை நீக்கப்படுவதில்லை. நினைவுசெய்வதனால், உங்கள் குப்பை அனைத்தும் அழிக்கப்படுவதுடன், உங்கள் துருவும் அகற்றப்படும். தந்தை கூறுகிறார்: நேற்று நான் உங்களுக்கு அனைத்துக் கற்பித்தல்களையும் கொடுத்தேன், அவற்றை நீங்கள் மறந்து விட்டீர்களா? அது 5000 ஆண்டுகளுக்குரிய கேள்வியாகும். அவர்கள் நூறாயிரக் கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். பொய்மைக்கும், சத்தியத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். தந்தையே வந்து, பொய்மை என்றால் என்ன என்பதையும், சத்தியம் என்றால் என்ன என்பதையும், பக்தி என்றால் என்ன என்பதையும், ஞானம் என்றால் என்ன என்பதையும், சீரழிவு என்றால் என்ன என்பதையும், மேன்மையான நிலை என்றால் என்ன என்பதையும் உங்களுக்குக் கூறுகிறார். சீரழிந்தவர்கள் விகாரத்தின் மூலம் பிறக்கிறார்கள். அங்கு விகாரம் இருக்க மாட்டாது. தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அங்கு இராவணனின் இராச்சியம் இருக்க மாட்டாது. இது புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவானது. ஆகவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? முதலில் தந்தையை நினைவுசெய்யுங்கள். இரண்டாவதாக நீங்கள் நிச்சயமாகத் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மையாகுவதில் மகாவீரர்கள் ஆகுங்கள். உங்களுக்குள் இருக்கும் குப்பை அனைத்தையும், நினைவு யாத்திரை மூலம் அகற்றுங்கள். உங்கள் ஆதி தர்மமான அமைதியில் உங்களை ஸ்தாபியுங்கள். அமைதியின்மையைப் பரப்பாதீர்கள்.2. தந்தை உங்களுக்குக் கூறுகின்ற சரியான விடயங்களை மாத்திரம் செவிமடுங்கள். தீயவற்றைக் கேட்காதீர்கள்! பிழையானவற்றைச் செவிமடுக்காதீர்கள். அனைவரையும் எச்சரியுங்கள். இந்த மங்களகரமான யுகத்தில் மேன்மையானவர்கள் ஆகுவதுடன், மற்றவர்களும் அவ்வாறு ஆகுவதற்குத் தூண்டுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மறப்பதற்கான உலகிலிருந்து அப்பால் சென்று, ஒரு நினைவு சொரூபமாக, கதாநாயகப் பாகத்தை நடிக்கின்ற, ஒரு விசேடமான ஆத்மா ஆவீர்களாக.இந்தச் சங்கமயுகமே விழிப்புணர்விற்கான யுகமாகும், கலியுகம் மறப்பதற்கான யுகமாகும். இப்பொழுது நீங்கள் அனைவரும் மறப்பதற்கான உலகிலிருந்து அப்பால் சென்று விட்டீர்கள். நினைவு சொரூபங்களாக உள்ளவர்களே விசேடமான பாகங்களை நடிக்கின்ற, விசேடமான ஆத்மாக்கள் ஆவார்கள். இந்நேரத்தில், நீங்க்ள இரட்டைக் கதாநாயகர்களாக இருக்கின்றீர்கள். முதலில் நீங்கள் வைரங்களைப் போன்று விலைமதிக்க முடியாதவர்கள் ஆகிவிட்டீர்கள், இரண்டாவதாக, நீங்கள் கதாநாயக பாகங்களைக் கொண்டிருக்கின்றீர்கள். எனவே, இதயத்தின் இந்தப் பாடல் சதா ஒலிக்கட்டும்: ஆகா எனது மேன்மையான பாக்கியம்! நீங்கள் உங்களுடைய பௌதீகத் தொழிலை நினைவுசெய்வதைப் போல், அதேவழியில், உங்கள் அழிவற்ற தொழிலையும் நினைவுசெய்யுங்கள், “நான் ஒரு மேன்மையான ஆத்மா”, அப்பொழுது மாத்திரமே நீங்கள் ஒரு விசேடமான ஆத்மா என அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
தைரியத்துடன் முதல் அடியை எடுத்து வையுங்கள், நீங்கள் தந்தையிடமிருந்து முழு உதவியையும் பெறுவீர்கள்.