29.12.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli    27.03.85     Om Shanti     Madhuban


கர்மாதீத் ஸ்திதி.


இன்று, பாப்தாதா குறிப்பாக எங்கும் உள்ள குழந்தைகளைப் பார்ப்பதற்காகச் சுற்றுப்பயணம் சென்றார். நீங்கள் பக்தி மார்க்கத்தில் ஒவ்வொரு திசைகளிலும் பல சுற்றுப்பயணங்களைச் செய்து வந்தீர்கள். எனவே, இன்று, பாப்தாதாவும் உண்மையான பிராமணர்கள் உள்ள சகல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்தார். அவர் குழந்தைகளின் சகல இடங்களையும் கண்டார். குழந்தைகளின் ஸ்திதிகளையும் கண்டார். சகல இடங்களும் அவற்றுக்கே உரிய முறையில் வெவ்வேறு வழிமுறைகளில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சிலது, பௌதீக வசதிகளால் கவர்ச்சியாக இருந்தன. சிலது, தபஸ்யா அதிர்வலைகளால் கவர்ந்து இழுத்தன. சிலது தமது துறவறத்தாலும் மேன்மையான பாக்கியத்தாலும் கவர்ந்தன. அதாவது, தமது எளிமையாலும் மகத்துவத்தாலும் அவை கவர்ந்தன. இந்தச் சூழலால் அவை கவர்ந்தன. சிலது சாதாரணமான இடங்களாக இருந்தன. இறைவனின் நினைவு இருக்கும் பல வகையான இடங்களையும் பாபா பார்த்தார். பாபா என்ன ஸ்திதிகளைக் கண்டார்? இதிலும், பிராமணக் குழந்தைகளின் வெவ்வேறு வகையான ஸ்திதிகளையும் பாபா கண்டார். காலத்திற்கேற்பக் குழந்தைகள் எந்தளவிற்குத் தமது ஆயத்தங்களைச் செய்துள்ளார்கள் எனப் பார்ப்பதற்காகத் தந்தை பிரம்மா சென்றார். தந்தை பிரம்மா கூறினார்: குழந்தைகள் என்றும் தயாராக இருக்கிறார்கள். சகல பந்தனங்களில் இருந்தும் விடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் யோகியுக்தாக இருப்பதுடன் ஜீவன்முக்தி வாழ்க்கையும் வாழ்கிறார்கள். அவர்கள் காலத்திற்காகவே காத்திருக்கிறார்கள். இந்தளவிற்கு நீங்கள் தயாரா? நீங்கள் ஆயத்தமாகி, இப்போது காலத்திற்காகக் காத்திருக்கிறீர்களா? பாபாவும் தாதாவும் இதயபூர்வமாக உரையாடினார்கள். தந்தை சிவன் கூறினார்: சுற்றுப்பயணத்தின்போது, எந்தளவிற்குக் குழந்தைகள் பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ளார்கள், எந்தளவிற்கு அவர்கள் யோகியுக்த் ஆகியுள்ளார்கள் என்பதை பாபா கண்டார். ஏனெனில், பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ள ஆத்மாவால் மட்டுமே ஜீவன்முக்தி வாழ்க்கையை வாழ முடியும். எல்லைக்குட்பட்ட ஆதாரங்கள் எவையும் இல்லாதிருத்தல் என்றால், பந்தனங்களில் இருந்து அப்பால் விலகுதல் என்று அர்த்தம். அது சிறியதோ பெரியதோ, பௌதீகமானதோ சூட்சுமமானதோ, உங்களின் எண்ணங்களிலோ அல்லது செயல்களிலோ, எந்த வகையான ஆதாரங்கள் இருந்தாலும், உங்களால் அந்த பந்தனங்களில் இருந்து அப்பால் செல்ல முடியாது. எனவே, குறிப்பாக இதைக் காட்டுவதற்காகவே தந்தை பிரம்மா ஒரு சுற்றுப்பயணம் சென்றார். அவர் எதைக் கண்டார்?

பெரும்பாலானோர் பெரிய பந்தனங்களில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். நீங்கள் தெளிவாகப் புலப்படும் பந்தனங்களில் இருந்தும் கயிறுகளில் இருந்தும் அப்பால் விலகியுள்ளீர்கள். எவ்வாறாயினும், சில அதிகபட்ச சூட்சுமமான பந்தனங்களும் கயிறுகளும் இப்போதும் எஞ்சியுள்ளன. இவற்றை ஆழமான, சூட்சுமமான புத்தி இல்லாமல் பார்க்கவோ அல்லது இனங்காணவோ முடியாது. தற்காலத்தில், விஞ்ஞானிகளால் சக்திவாய்ந்த கண்ணாடியின் மூலம் சூட்சுமமான விடயங்களையும் பார்க்க முடிகிறது. அவற்றைச் சாதாரணமாகப் பார்க்க முடியாது. அதேபோன்று, சூட்சுமமான வேறுபிரித்தறியும் சக்தியால், உங்களால் அந்தச் சூட்சுமமான பந்தனங்களைப் பார்க்க முடியும். அல்லது ஆழமான, சூட்சுமமான புத்தியால் அவற்றை இனங்காண முடியும். அவற்றை நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தால், அவற்றைப் பார்க்க அல்லது இனங்காண முடியாததால், நீங்கள் உங்களைப் பந்தனத்தில் இருந்து விடுபட்ட ஒருவராகவே கருதுவீர்கள். தந்தை பிரம்மாவும் அந்தச் சூட்சுமமான ஆதாரங்களைச் சோதித்துப் பார்த்தார். அவர் இரண்டு வகையான ஆதாரங்களைக் கண்டார்.

ஒன்று, சேவைச் சகபாடிகளின் ஆதாரம் என்ற அதிகபட்ச சூட்சுமமான ரூபம். இதிலும், அவர் பல வகைகளைக் கண்டார். சேவையில் ஒத்துழைப்பதனால், கருவிகளாக இருப்பதனால், சேவையின் வளர்ச்சிக்குக் கருவிகளாக இருப்பதனால், ஏதாவது சிறப்பியல்பு அல்லது விசேட நற்குணம் இருப்பதனால், குறிப்பிட்ட சம்ஸ்காரத்தைப் பொறுத்தவரை ஒத்திசைந்து போவதனால், அல்லது அவ்வப்போது மேலதிக உதவியை வழங்குவதனால், இத்தகைய காரணங்களால், புறத்தே தெரியும் ரூபம், அவர்கள் ஒத்துழைக்கும் சேவை சகபாடிகள் என்பதே ஆகும். எவ்வாறாயினும், விசேடமான அடிமைத்தனத்தால், சூட்சுமமான பற்றின் ரூபம் உருவாக்கப்படுகிறது. இதன் பெறுபேறு என்ன? இவை தந்தையின் பரிசுகள் என்பதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். இன்னார் நல்ல சிறப்பியல்புள்ள நற்குணங்கள் நிறைந்த மிக நல்ல ஒத்துழைக்கும் நபர் என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களின் எண்ணங்களிலேனும் நீங்கள் யாராவது ஒருவரில் உங்களின் புத்தி தங்கியிருக்குமாயின், அந்தத் தங்கியிருத்தல் ஆதாரம் ஆகுகிறது. பௌதீக ரூபத்தில் அவர்கள் ஒத்துழைப்பதனால், அவசியம் நேரும்போது, தந்தையை நினைப்பதற்குப் பதிலாக, நீங்கள் அந்த நபரையே நினைப்பீர்கள். அந்த பௌதீக ஆதாரம் இரண்டு அல்லது நான்கு நிமிடங்களுக்காயினும் உங்களின் விழிப்புணர்வில் பிரவேசித்தால், அந்த வேளையில் தந்தையின் ஆதாரத்தை நீங்கள் நினைப்பீர்களா? இரண்டாவதாக, நினைவு யாத்திரையின் இணைப்பானது இரண்டு அல்லது நான்கு நிமிடங்களுக்காயினும் துண்டிக்கப்பட்டால், அது துண்டித்தபின்னர், மீண்டும் இணைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் அது நிலையானதாக இருக்காது. உங்களின் இதயம் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரிடம் தங்கியிருப்பதற்குப் பதில், ஏதாவதொரு காரணத்தால் வேறொருவரிலேயே தங்கியிருக்கும். ‘இவருடன் பேசுவதை நான் விரும்புகிறேன். இவருடன் அமர்ந்திருப்பதை விரும்புகிறேன்.’ ‘குறிப்பாக இவர்’ எனக் கூறுவதெனில், ஏதோவொன்று சரியில்லை என்றே அர்த்தம். ‘குறிப்பாக இவர்’ என்ற எண்ணத்தைக் கொண்டிருத்தல் என்றால், ஏதோவொன்று குறைகிறது என்று அர்த்தம். ‘உண்மையில், நான் அனைவரையும் விரும்புகிறேன். ஆனால் இவரை அதிகம் விரும்புகிறேன்.’ அனைவருக்காகவும் ஆன்மீக அன்பைக் கொண்டிருத்தல், அவர்களிடம் பேசுதல், சேவையில் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தல் மற்றும் ஒத்துழைப்பைப் பெறுதல் போன்றவை வேறு விடயம். அவர்களின் சிறப்பியல்புகளைப் பாருங்கள். அவர்களின் நற்குணங்களைப் பாருங்கள். ஆனால், அதற்கு இடையில், ‘இவரின் குணம் மட்டும் மிகவும் நல்லது’ என்பதைப் போடாதீர்கள். ‘இவர் மட்டுமே’ என்ற வார்த்தைகள் அனைத்தையும் பாழாக்கிவிடுகின்றன. இது பற்று என்று அழைக்கப்படுகிறது. அப்போது, புற ரூபம் சேவை, ஞானம், அல்லது யோகமாக இருந்தாலும், ‘நான் இவருடன் யோகம் செய்ய விரும்புகிறேன், அவரின் யோகம் மட்டுமே நல்லது’ என நீங்கள் கூறுவீர்கள். இவர் மட்டுமே என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. இவரால் மட்டுமே சேவையில் ஒத்துழைக்க முடியும். எனக்கு இந்தச் சகபாடி மட்டுமே வேண்டும். எனவே, பற்றின் அடையாளம் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? ஆகையால், ‘இவர் மட்டுமே’ என்ற வார்த்தையை நீக்கிவிடுங்கள். அவர்களின் சிறப்பியல்புகளைப் பாருங்கள். ஒத்துழையுங்கள். அவர்களையும் ஒத்துழைக்கச் செய்யுங்கள். ஏனெனில், அது ஆரம்பத்தில் சிறிய வடிவில் மட்டும் இருந்தாலும், பின்னர் வளர்ந்து, பெரிதாகி, பயங்கரமான வடிவத்தை எடுத்துவிடும். அதன்பின்னர், நீங்களே அதில் இருந்து விடுபட நினைத்தாலும், உங்களால் முடியாது. ஏனெனில், அந்த நூல் மிகவும் பலமானதாக ஆகிவிடும். முதலில் அது சூட்சுமமாகவே இருக்கும். பின்னர், அது பலமானதாகி, அறுப்பதற்கே கஷ்டமாகிவிடும். ஒரேயொரு தந்தை மட்டுமே ஆதாரம் ஆவார். எந்தவொரு மனித ஆத்மாவும் ஆதாரம் ஆகமாட்டார். தந்தை ஒத்துழைப்பதற்காக எவரையும் ஒரு கருவி ஆக்குகிறார். ஆனால் அந்த நபரைக் கருவி ஆக்கிய தந்தையை மறந்து விடாதீர்கள். தந்தையே அந்த நபரைக் கருவி ஆக்கினார். தந்தை மத்தியில் இருக்கும்போது, அவர் அங்கிருப்பதால், பாவம் இருக்காது. இடையில் இருந்து தந்தையை நீக்கினால், பாவம் செய்யப்படும். எனவே, ஆதாரத்தைப் பற்றிய முதல் விடயம் இதுவே ஆகும்.

இரண்டாவது விடயம், நீங்கள் ஏதாவதொரு பௌதீக வசதியை உங்களின் ஆதாரம் ஆக்கிக் கொள்கிறீர்கள். ‘எங்களுக்கு வசதிகள் இருந்தால், சேவை செய்ய முடியும்.’ வசதிகளில் சிறிது தளம்பல் ஏற்பட்டாலும், சேவையும் தளம்பும். வசதிகளைப் பயன்படுத்துவது வேறுவிடயம். ஆனால், சேவைகளால் கட்டுப்படுத்தப்பட்ட சேவையைச் செய்வதெனில், அது வசதிகளை உங்களின் ஆதாரம் ஆக்கிக் கொள்வதாகும். சேவையின் வளர்ச்சிக்காகவே வசதிகள் உள்ளன. ஆகவே, அந்த முறையில் வசதிகளைச் சேவைக்காகப் பயன்படுத்துங்கள். வசதிகளை உங்களின் ஆதாரம் ஆக்கிக் கொள்ளாதீர்கள். ஒரேயொரு தந்தை மட்டுமே ஆதாரம் ஆவார். வசதிகள் தற்காலிகமானவை. பௌதீக வசதிகளை உங்களின் ஆதாரம் ஆக்கிக் கொள்வதெனில், வசதிகள் தற்காலிகமாக இருப்பதைப் போன்று, உங்களின் ஸ்திதியும் அவ்வாறே இருக்கும். சிலவேளைகளில் மிக உயர்வாக இருக்கும். சிலவேளைகளில் மத்தியிலும் சிலவேளைகளில் தாழ்வாகவும் இருக்கும். அது மாறிக் கொண்டே இருக்கும். உங்களின் ஸ்திதி நிரந்தரமாக இருக்காது. எனவே, இரண்டாவதாக, தற்காலிக வசதிகளை உங்களின் ஆதாரம் ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவை பெயரளவிலேயே உள்ளன. அவை சேவைக்காகவே உள்ளன. அவற்றைச் சேவைக்காகப் பயன்படுத்துங்கள். பின்னர் பற்றற்றவர் ஆகிவிடுங்கள். எந்தவொரு வசதிகளின் கவர்ச்சியாலும் உங்களின் மனம் ஈர்க்கப்பட அனுமதிக்காதீர்கள். எனவே, நீங்கள் இந்த இரண்டு வகையான ஆதாரங்களையும் உங்களின் அத்திவாரம் ஆக்கிக் கொண்டிருப்பதை பாபா கண்டார். நீங்கள் கர்மாதீத் ஸ்திதியை அடைய வேண்டியிருப்பதனால், நீங்கள் அப்பால் செல்வதுடன், ஒவ்வொரு நபரிடமிருந்தும், அனைத்தில் இருந்தும், கர்மத்தின் ஒவ்வொரு பந்தனத்தில் இருந்தும் பற்றற்றவர் ஆகவேண்டும். இதுவே கர்மாதீத் ஸ்திதி எனப்படுகிறது. கர்மாதீத் என்றால் கர்மத்தில் இருந்து பற்றறவர் ஆகுதல் என்று அர்த்தம் இல்லை. ஆனால் எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்தும் பற்றற்றவராக இருத்தல் என்று அர்த்தம். பற்றற்றவராக இருந்தவண்ணம் செயலைச் செய்தல், அதாவது, அந்தச் செயலில் பற்றற்றவராக இருத்தல் என்று அர்த்தம். கர்மாதீத் ஸ்திதி என்றால் பந்தனத்தில் இருந்து விடுபட்ட, யோகியுக்தான, ஜீவன்முக்தியான ஸ்திதி என்று அர்த்தம்.

அவ்வப்போது சில குழந்தைகள் குறிப்பாகத் தமது வேறுபிரித்தறியும் சக்தியில் பலவீனம் அடைவதை பாபா கண்டார். அவர்களால் வேறுபிரித்தறிய முடிவதில்லை. இதனாலேயே, அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். வேறுபிரித்தறியும் சக்தியில் அவர்கள் பலவீனமாக இருப்பதனால், அவர்களின் புத்திகளின் அன்பும் ஸ்திரமாக இருப்பதில்லை. எங்கு ஸ்திரத்தன்மை உள்ளதோ, அங்கு இயல்பாகவே வேறுபிரித்தறியும் சக்தியும் அதிகரிக்கும். ஸ்திரமாகவும் ஒருமுகப்படுத்தலுடனும் இருத்தல் என்றால், சதா ஒரேயொரு தந்தையின் அன்பிலே மூழ்கியிருத்தல் என்று அர்த்தம். ஸ்திரத்தன்மையினதும் ஒருமுகப்படுத்தலினதும் அடையாளம், நீங்கள் சதா பறக்கும் ஸ்திரமான ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். எல்லா வேளையும் ஒரே வேகம் இருந்தால் மட்டுமே அதை ஸ்திரத்தன்மை என்று சொல்ல முடியாது. ஸ்திரத்தன்மை என்றால், சதா பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வதுடன் அதில் ஸ்திரமாக இருப்பதாகும். அதாவது, நேற்றை விட இன்று அதிகளவு சதவீதத்தை அனுபவம் செய்யக்கூடியதாக இருப்பதாகும். இதுவே பறக்கும் ஸ்திதி எனப்படுகிறது. எனவே, வேறுபிரித்தறியும் சக்தியானது சுய முன்னேற்றத்திற்கும் சேவையின் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமானது. உங்களின் வேறுபிரித்தறியும் சக்தியில் நீங்கள் பலவீனமாக இருப்பதனால், உங்களின் பலவீனத்தை நீங்கள் பலவீனமாகக் கருதுவதில்லை. அதற்குப் பதிலாக, உங்களின் பலவீனத்தை மறைப்பதற்காக, நீங்கள் ஒன்றில் உங்களைச் சரியென்று நிரூபிக்க முயற்சி செய்கிறீர்கள். அல்லது நீங்கள் பிடிவாதம் பிடிக்கிறீர்கள். இந்த இரண்டு முறைகளும் எதையாவது மறைக்க முயற்சிக்கும் விசேடமான வழிமுறைகள் ஆகும். அகத்தே, சிலவேளைகளில் நீங்கள் இதை உணர்ந்து கொள்வீர்கள். ஆனால், முழுமையாக வேறுபிரித்தறியும் சக்தி இல்லாததால், உங்களை எப்போதும் சரியென்றும் புத்திசாலி என்றும் நிரூபிக்க முயற்சி செய்வீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? ஆகவே, உங்களையே சோதித்துப் பாருங்கள். மிகவும் யோகியுக்த் ஆகி, வேறுபிரித்தறியும் சக்தியைக் கிரகியுங்கள். உங்களின் புத்தியை ஸ்திரமாக்கி, ஒருமுகப்படுத்திப் பின்னர் உங்களைச் சோதித்துப் பாருங்கள். அதன்பின்னர், எத்தகைய சூட்சுமமான பலவீனங்கள் இருந்தாலும், உங்களால் அவற்றைத் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்கும். ‘நான் முற்றிலும் சரி. நான் மிக நன்றாகவே செயற்படுகிறேன். நான் மட்டுமே கர்மாதீத் அடைவேன்’ என நீங்கள் நினைக்கக்கூடாது. இல்லாவிட்டால், காலம் வரும்போது, அந்தச் சூட்சுமமான பந்தனங்கள் உங்களைப் பறக்க விடாது. அவை உங்களைத் தம்மை நோக்கி இழுக்கும். அந்த வேளையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருவரைக் கட்டி வைத்திருந்தால், அவர் பறக்க விரும்பினாலும் அவரால் பறக்க முடியுமா? அல்லது அவர் கீழேயே வருவாரா? எனவே, இந்தச் சூட்சுமமான பந்தனங்கள், நீங்கள் ஓரிலக்கத்தைக் கோருவதற்கும், நீங்கள் தந்தையுடன் வீடு திரும்பிச் செல்வதற்கும் அல்லது நீங்கள் என்றும் தயாராக இருப்பதற்கும் ஒரு தடையாக ஆகக்கூடாது. இதனாலேயே, தந்தை பிரம்மா சோதித்துப் பார்த்தார். நீங்கள் ஆதாரம் எனக் கருதுவது, ஓர் ஆதாரம் இல்லை. ஆனால் அது ஓர் இராஜரீக நூலே ஆகும். அதேபோன்று, தங்க மானின் உதாரணமும் உள்ளது. அது சீதையை எங்கே கொண்டு சென்றது? எனவே, தங்க மான் ஒரு பந்தனம் ஆகும். அவற்றைத் தங்கம் எனக் கருதுவதெனில், உங்களின் மேன்மையான பாக்கியத்தை இழத்தல் என்று அர்த்தம். அவை தங்கம் இல்லை. ஆனால், அவை இழப்பதற்குக் காரணம் ஆகுகின்றன. அவள் இராமனை இழந்தாள். அதாவது, அவள் துன்பமற்ற குடிலை இழந்தாள்.

தந்தை பிரம்மாவிற்குக் குழந்தைகளிடம் விசேடமான அன்பு உள்ளது. இதனாலேயே, குழந்தைகள் என்றும் தயாரானவர்களாகி, எல்லா வேளையும் தன்னைப் போன்று பந்தனத்தில் இருந்து விடுபட வேண்டும் என அவர் விரும்புகிறார். நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்ட காட்சியைக் கண்டீர்கள், அல்லவா? என்றும் தயார் ஆகுவதற்கு அவருக்கு எவ்வளவு நேரம் எடுத்தது? அவர் எவரின் பந்தனத்திலாவது கட்டுப்பட்டாரா? யாராவது சேவைச்சகபாடியாக இருந்ததால், ‘இன்னார் எங்கே’ என அவர் எவரையாவது நினைத்தாரா? அவர் அதை நினைத்தாரா? எனவே, என்றும் தயார் என்ற பாகத்தை, கர்மாதீத் ஸ்திதிக்குரிய பாகத்தை நீங்கள் கண்டீர்கள். எந்தளவிற்குக் குழந்தைகளிடம் அவருக்கு ஆழ்ந்த அன்பு இருந்ததோ, அந்தளவிற்கு அவர் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருந்தார். அவருக்கு அழைப்பு வந்தது. அவர் சென்றுவிட்டார். எவ்வாறாயினும், தந்தை பிரம்மாவே குழந்தைகள் அனைவரிடமும் அதிகளவு அன்பு வைத்திருந்தார். அவர் எந்தளவிற்கு அன்பானவராக இருந்தாரோ, அந்தளவிற்குப் பற்றற்றவராகவும் இருந்தார். அவர் அனைத்தில் இருந்தும் அப்பால் சென்றதை நீங்கள் கண்டீர்கள். நீங்கள் சமைக்கும் எதுவாயினும் தயார் நிலைக்கு வரும்போது, பக்கங்களில் ஒட்டாமல் இருப்பதைக் காணலாம். எனவே, சம்பூரணம் ஆகுதல் என்றால், பக்கங்களை விடுதல் என்று அர்த்தம். பக்கங்களை விடுதல் என்றால், அப்பால் நகருதல் என்று அர்த்தம். தந்தையின் ஆதாரமே ஒரேயொரு அழியாத ஆதாரம் ஆகும். எந்தவொரு நபரையோ, சடப்பொருளாலான வசதிகளையோ அல்லது உடமைகளையோ உங்களின் ஆதாரம் ஆக்கிக் கொள்ளாதீர்கள். இதுவே கர்மாதீத் என்று அழைக்கப்படுகிறது. எதையும் மறைக்காதீர்கள். நீங்கள் எதையாவது மறைக்கும்போது, அது மேலும் அதிகரிக்கும். அந்தச் சூழ்நிலை பெரியதல்ல. ஆனால், நீங்கள் அதை மறைக்கும் அளவிற்கு, நீங்கள் அந்தச் சூழ்நிலையைப் பெரிதாக்குவீர்கள். அதிகரிப்பீர்கள். உங்களைச் சரியென நீங்கள் நிரூபிக்க முயற்சி செய்யும் அளவிற்கு, நீங்கள் அந்தச் சூழ்நிலையை அதிகரிப்பீர்கள். நீங்கள் எந்தளவிற்குப் பிடிவாதமானவர் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு அந்தச் சூழ்நிலையையும் பெரிதாக்குவீர்கள். ஆகவே, அந்தச் சூழ்நிலையைப் பெரிதாக்காதீர்கள். ஆனால், அது அதன் சிறிய வடிவில் இருக்கும்போதே, அதை முடித்துவிடுங்கள். அப்போது, அது இலகுவாகுவதுடன், நீங்களும் சந்தோஷப்படுவீர்கள். ‘இந்தச் சூழ்நிலை வந்தது. ஆனால் நான் அதை வெற்றிபெற்று, வெற்றியாளர் ஆகினேன்.’ ஆகவே, உங்களுக்கு அந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? இரட்டை வெளிநாட்டவர்களான நீங்களே, கர்மாதீத் ஸ்திதியை அடைவதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பவர்கள், அல்லவா? எனவே, தந்தை பிரம்மா இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு விசேடமான சூட்சுமமான பராமரிப்பை வழங்குகிறார். இது அன்பின் பராமரிப்பாகும். எந்தவிதமான திருத்தமோ அல்லது கற்பித்தலோ கிடையாது. ஏனெனில், தந்தை பிரம்மா விசேடமாக உங்களை அழைப்பதன் மூலம், குழந்தைகளான உங்களை உருவாக்கினார். நீங்கள் தந்தை பிரம்மாவின் எண்ணங்களால் பிறந்தவர்கள். பிரம்மா தனது எண்ணங்களால் இந்த உலகை உருவாக்கினார் எனப்படுகிறது. தந்தை பிரம்மாவின் எண்ணங்களால் இத்தகைய பெரியதொரு பிராமணர்களின் உலகம் உருவாகியுள்ளது. எனவே, நீங்களே தந்தை பிரம்மாவின் எண்ணங்களின் அழைப்பினால் உருவாகிய விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். எனவே, நீங்கள் விசேடமாக நேசிக்கப்படுபவர்கள், அல்லவா? நீங்களே வேகமான முயற்சிகள் செய்து முதலில் வருவதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பவர்கள் என்பதைத் தந்தை பிரம்மா புரிந்து கொள்கிறார். பாபாவும் தாதாவும் இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் சிறப்பியல்புகளால் விசேடமாக அனைத்தையும் அலங்கரிப்பதைப் பற்றித் தமக்குள் பேசிக் கொண்டார்கள். நீங்கள் கேள்விகள் கேட்கிறீர்கள். ஆனால், நீங்கள் விரைவாகப் புரிந்துகொள்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் குறிப்பாக விவேகிகள். இதனாலேயே, நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்டு, தந்தையைப் போன்று அன்பானவர்கள் ஆகவேண்டும் எனத் தந்தை உங்களுக்கு சமிக்ஞை செய்கிறார். தனக்கு முன்னால் இருப்பவர்களுக்கு மட்டும் இதை அவர் சொல்கிறார் என்றில்லை. அவர் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் இதைக் கூறுகிறார். இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள பிராமணக் குழந்தைகள் அனைவரும் தந்தையின் முன்னால் இருக்கிறார்கள். அச்சா, இன்று, பாபா இதயபூர்வமாக உரையாடுகிறார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இந்த வருடத்தின் பெறுபேறு மிகவும் நல்லது என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் வளர்வீர்கள், நீங்கள் பறக்கும் ஸ்திதிக்குள் செல்லும் ஆத்மாக்கள் என்பதையே இது நிரூபிக்கிறது. முழுமையான யோகிகளாக இருப்பதற்கான சமிக்ஞை, அதற்குத் தகுதிவாய்ந்தவர்களாக இருப்பவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. அச்சா.

சதா எந்தவிதமான கர்மபந்தனத்தில் இருந்தும் விடுபட்டு, யோகியுக்தாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், சதா ஒரேயொரு தந்தையைத் தமது ஆதாரம் ஆக்கிக் கொள்ளும் குழந்தைகளுக்கும், சூட்சுமமான பலவீனங்களில் இருந்தும் எப்போதும் அப்பால் நகர்ந்திருக்கும் குழந்தைகளுக்கும், ஸ்திரத்தன்மையுடனும் ஒருமுகப்படுத்தலாலும் வேறுபிரித்தறியக்கூடிய சக்திசாலிக் குழந்தைகளுக்கும், எந்தவொரு நபரினதோ அல்லது உடமையினதோ அழியக்கூடிய ஆதாரத்தில் இருந்து அப்பால் சென்றிருப்பவர்களுக்கும், ஜீவன்முக்தி ஸ்திதி மற்றும் கர்மாதீத் ஸ்திதிகளில் ஸ்திரமாக இருக்கும் விசேடமான குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா தாதி நிர்மல் சாந்தாவிடம் பேசுகிறார்:
நீங்களே எப்போதும் தந்தையுடன் இருப்பவர். ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து தந்தையுடன் செயற்பட்டவர்களிடம் சதா சகவாசம் என்ற அனுபவம் ஒருபோதும் குறையாது. இதுவே குழந்தைப்பருவத்தின் சத்தியம் ஆகும். உங்களுக்கு எப்போதும் சகவாசம் இருந்தது. நீங்கள் தொடர்ந்தும் எப்போதும் ஒன்றாகவே இருப்பீர்கள். எனவே, இதைச் சதா சகவாசத்தின் சத்தியம் என்று அழைத்தாலென்ன அல்லது ஓர் ஆசீர்வாதம் என்று அழைத்தாலென்ன, நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள். எவ்வாறாயினும், தந்தை அன்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்குச் சூட்சும ரூபத்தில் இருந்து பௌதீக ரூபத்திற்குள் வருவதைப் போன்று, குழந்தைகளான நீங்களும் உங்களின் அன்பின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே இங்கு வருகிறீர்கள். இது அப்படித்தானே? எண்ணத்தில் மட்டுமன்றி, உங்களின் கனவுகளிலேனும், வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் அதை உள்ளுணர்வு என்று அழைக்கிறீர்கள் - அந்த ஸ்திதியிலும், தந்தையின் சகவாசத்தைக் கைவிடக்கூடாது. நீங்கள் அத்தகைய உறுதியான உறவுமுறையை ஏற்படுத்தியுள்ளீர்கள். இது பல பிறவிகளுக்கான உறவுமுறை ஆகும்;. இது கல்பம் முழுவதற்கும் ஆனது. இந்தப் பிறவியிலேயே, கல்பம் முழுவதற்குமான உறவுமுறை உருவாக்கப்படுகிறது. இந்த இறுதிப்பிறவியிலேயே, சில குழந்தைகள் சேவைக்காக ஏனைய இடங்களுக்குப் பரந்து சென்றுள்ளார்கள். மக்கள் வெளிநாட்டுக்குச் செல்வதைப் போன்று, நீங்கள் அனைவரும் சிந்திற்குச் சென்றீர்கள். சிலர் ஓரிடத்திற்குச் சென்றார்கள். ஏனையோர் வேறோர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்றிராவிட்டால், எவ்வாறு பல நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும்? அச்சா. நீங்கள் சதா தந்தையின் சகவாசத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் பார் தாதி. சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றுபவர். குழந்தைகளிடம் சேவைக்காக உள்ள ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்க்கும்போது பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்மாக்கள். பாருங்கள், இப்போது கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் விரிவாக்கம் ஏற்படும்போது, எவ்வளவு சனக்கூட்டம் இருக்கும் என்று பாருங்கள். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வடிவிலான சிறப்பியல்பே, போடப்பட்ட அத்திவாரம் ஆகும். சனக்கூட்டம் வரும்போது என்ன நிகழும்? நீங்கள் ஆசீர்வாதங்களைக் கொடுப்பீர்கள். நீங்கள் திருஷ்டி கொடுப்பீர்கள். உயிர்வாழும் விக்கிரகங்கள் இங்கிருந்தே பிரபல்யம் ஆகுவார்கள். ஆரம்பத்தில், மக்கள் உங்கள் அனைவரையும் ‘தேவிகள்’ என்றே அழைத்தனர். இறுதியிலும், அவர்கள் உங்களை இனங்கண்டு ‘தேவிகள், தேவிகள்’ என்று அழைப்பார்கள். ‘தேவிக்கு வணக்கம், தேவிக்கு வணக்கம்!’ என்பது இங்கிருந்தே ஆரம்பிக்கும். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் சரியான வழிமுறையைப் பயன்படுத்தி, இறை சட்டங்களைப் புரிந்து கொள்வதன் மூலம், முதல் பிரிவிற்கு உரித்துடையவராகி, வெற்றி பெறுவீர்களாக.

தைரியமான ஓர் அடி எடுத்து வைத்தால், நீங்கள் பலமில்லியன் அடிகள் உதவியைப் பெறுவீர்கள். இந்த வழிமுறை நாடகத்தில் ஒரு நியதியாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறை ஒரு நியதியாக நிச்சயிக்கப்படாவிட்டால், அனைவரும் உலகின் முதல் அரசர் ஆகிவிடுவார்கள். இந்த வழிமுறையாலேயே வரிசைக்கிரமம் ஆகும் நியதி உள்ளது. ஒவ்வொருவராலும் விரும்பிய அளவு தைரியத்தைப் பேணி, அந்தளவு உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் அர்ப்பணித்திருந்தாலென்ன அல்லது குடும்பத்தின் பாகமாக இருந்தாலென்ன, சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் சமமான உரிமைகளைப் பெற்று, வெற்றி பெறுவீர்கள். இந்த இறை நியதியைப் புரிந்து கொள்ளுங்கள். கவனக்குறைவின் எந்தவிதமான விளையாட்டுக்களையும் முடியுங்கள். அப்போது நீங்கள் முதல் பிரிவிற்கான உரிமையைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
எண்ணங்களின் பொக்கிஷத்தைப் பொறுத்தவரை சிக்கனத்தின் அவதாரம் ஆகுங்கள்.