02.06.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     24.12.84     Om Shanti     Madhuban


இறையன்பின் முக்கியத்துவம்.


இன்று, அன்புக்கடல் தனது அன்பான சாகரப் பறவை (மழைத்துளிகளுக்கான தாகத்துடன் இருக்கும் பறவைகள்) போன்ற குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். பல பறவைகள் இந்த உண்மையான, அழியாத இறையன்பின் தாகத்துடன் இருக்கிறார்கள். பல பிறவிகளாக சாகரப்பறவைகளாக இருந்த ஆத்மாக்கள்,இப்போது உண்மையான அன்பை, அழியாத அன்பை அனுபவம் செய்கிறார்கள். குழந்தைகளான நீங்கள் அனைவரும் பக்த ஆத்மாக்களாக இருந்ததால், அன்பை யாசிப்பவர்கள் ஆகினீர்கள். தந்தை இப்போது உங்களை யாசகர்களில் இருந்து, அன்புக்கடலிடமிருந்து ஆஸ்திக்கான உரிமையைப் பெறுபவர்களாக மாற்றுகிறார். உங்களின் அனுபவத்தின் அடிப்படையில், இந்த ஒலி இயல்பாகவே உங்கள் ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்தும் வெளிப்படுகிறது: இறையன்பானது எங்களின் பிறப்புரிமை. எனவே, யாசகர்களில் இருந்து நீங்கள் உரிமை உடையவர்கள் ஆகியுள்ளீர்கள். இந்த உலகில், அனைவருக்கும் தமது வாழ்க்கையில் தேவைப்படுவது அன்பே ஆகும். அவர்களின் வாழ்க்கையில் அன்பு இல்லாதபோது, அவர்கள் வாழ்க்கையை உருசியற்றதாகக் கருதுகிறார்கள். இன்று சாதாரண மக்களும் அன்பைக் கடவுள் எனக் கருதும் வகையில் அன்பானது மேன்மையான விடயம் ஆகும். ‘அன்பே கடவுள்’ அல்லது ‘கடவுளே அன்பு’ என அவர்கள் நம்புகிறார்கள். எனவே, அன்பு அதிமேன்மையானது. கடவுள் எவ்வளவு மேன்மையானவர் என அவர்கள் நம்புகிறார்களோ, அந்தளவிற்கு அன்பும் மேன்மையானது. இதனாலேயே, அவர்கள் கடவுளை அன்பு என்று அழைக்கிறார்கள். ஏன் அவ்வாறு கூறப்படுகிறது என்ற அனுபவம் அவர்களிடம் இல்லை. எவ்வாறாயினும், தந்தையாகிய இறைவன். இந்த உலகிற்கு வந்ததில் இருந்து, சாகார் ரூபத்தினூடாகக் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் அன்பை உங்களின் நடைமுறை வாழ்க்கையில் வழங்கி வருகிறார். அவர் அதை இப்போதும் வழங்குகிறார். முன்னர், உங்களுக்கு இந்த அனுபவம் இல்லாவிட்டாலும், கடவுளே அன்பு என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். ஆகவே, தந்தையாகிய இறைவனின் முதல் பரிசானது அன்பே ஆகும். அன்பு உங்கள் அனைவருக்கும் பிராமணப் பிறப்பைக் கொடுத்துள்ளது. அன்பின் பராமரிப்பு, உங்கள் அனைவரையும் இறை சேவைக்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கியுள்ளது. அன்பானது உங்களை இலகு யோகிகளாகவும் கர்மயோகிகளாகவும் இயல்பான யோகிகளாகவும் ஆக்கியுள்ளது. எல்லைக்குட்பட்ட துறவறத்தையும் அன்பானது, பாக்கியமாக உணரச்செய்துள்ளது. அது துறவறம் அல்ல. ஆனால் பாக்கியம் ஆகும். உண்மையான அன்பே உங்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது. இந்த அன்பின் அடிப்படையில், எந்த வகையான புயலும் இறை பரிசாகவே அனுபவம் செய்யப்படும். அன்பின் அடிப்படையில், நீங்கள் சிரமமான ஒன்றையும் மிகவும் இலகுவான ஒன்றாக அனுபவம் செய்கிறீர்கள். இந்த இறையன்பானது, பல உறவுமுறைகளில் பற்று வைத்து, பல துண்டுகளாக உடைந்து போன இதயத்தை, ஒரேயொருவரிடம் இணைத்துள்ளது. இப்போது ஒரேயொரு இதயம் உள்ளது. ஒரேயொரு இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர் இருக்கிறார். இதயம் துண்டுகளாக உடையவில்லை. அன்பு உங்களைத் தந்தைக்குச் சமமானவர் ஆக்கியுள்ளது. அவரின் சதா சகவாசத்தில் இருப்பதனால், அன்பு உங்களைச் சதா சக்திசாலி ஆக்கியுள்ளது. அன்பு யுகத்தையும் மாற்றியுள்ளது. உங்களைக் கலியுகத்தில் இருந்து சங்கமயுகத்திற்கு மாற்றியுள்ளது. துன்பமும் வலியும் நிறைந்த உலகை அன்பானது, சுகமும் சந்தோஷமும் மிக்க உலகாக மாற்றியுள்ளது. இந்த இறையன்பு அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் மகான் ஆகுவார்கள். நீங்கள் இவ்வாறு மகான் ஆகியுள்ளீர்கள், அல்லவா? இதுவே அனைத்திலும் மிகவும் இலகுவான முயற்சி ஆகும். சதா அன்பிலே திளைத்திருங்கள். அன்பிலே திளைத்திருக்கும் ஆத்மாக்களால் தமது கனவுகளிலேனும் மாயையின் ஆதிக்கத்திற்கு உட்பட முடியாது. ஏனெனில், அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியே மாயையால் பாதிக்கப்படாதிருக்கும் ஸ்திதி ஆகும். ஆகவே, அன்புடன் இருப்பது இலகுவானது, அல்லவா? அன்பானது உங்கள் அனைவரையும் மதுவனவாசிகள் ஆக்கியுள்ளது. உங்களின் அன்பினாலேயே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள், அப்படியல்லவா? பாப்தாதாவும் குழந்தைகள் அனைவருக்கும் ‘நீங்கள் சதா அன்பாக இருப்பீர்களாக!’ என்ற ஆசீர்வாதத்தை வழங்குகிறார். நீங்கள் கேட்பவை அனைத்தையும் பெறக்கூடிய வகையில் அன்பானது மாயாஜாலம் போன்றது. எவ்வாறாயினும், இது உண்மையான அன்பை, இதயபூர்வமான அன்பைக் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சுயநலமான அன்பினால், காலத்திற்கேற்ப அன்பானவர்கள் ஆகுபவர்களின் அன்பினால் அல்ல. நீங்கள் மேலோட்டமாகத் தேவைப்படும்போது, ‘இனிமையான பாபா, அன்பான பாபா’ என்று சொல்பவர்கள் அல்ல. நீங்கள் இந்த அன்பிலே சதா திளைத்திருப்பவர்கள். இத்தகைய குழந்தைகளுக்கு, பாப்தாதாவே சதா பாதுகாப்புக் குடையாக இருக்கிறார். தேவைப்படும்போது மட்டும் என்னை நினைப்பவர்கள் அல்லது சுயநல நோக்கங்களுக்காக என்னை நினைப்பவர்கள் அதற்குப் பலனாக, அவர்களின் கொள்ளளவிற்கேற்ப, அன்பிற்கேற்ப ஒத்துழைப்பைப் பெறுவார்கள். ஆனால், அவர்களின் கொள்ளளவிற்கேற்ற சம்பூரணமான,முழுமையான வெற்றியை அவர்கள் பெற மாட்டார்கள். ஆகவே, சதா அன்பினூடாக சகல பேறுகளின் சொரூபமாக இருப்பதை அனுபவம் செய்வதற்கு, உண்மையான இதயத்துடன் அன்பு செலுத்துபவர்கள் ஆகுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?

மதுவனம் என்ற வீட்டின் அலங்காரங்களான குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதா விசேடமான அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் வீட்டின் விசேடமான அலங்காரம் ஆவார்கள். குழந்தைகளான நீங்களே, மதுவனம் என்ற இந்த எல்லையற்ற வீட்டின் அழகு ஆவீர்கள். நீங்கள் உங்களை இவ்வாறானவர்களாகக் கருதுகிறீர்கள், அல்லவா? உலகிலுள்ள மக்கள் கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்குப் பல இடங்களுக்குச் செல்வார்கள். ஆனால், வெளிநாட்டின் விசேடமானவர்களும் பாரதத்தின் குழந்தைகளும் இந்த மகத்தான தினத்தை, அனைவரிலும் மகத்தான தந்தையுடன், மகத்தான இதயத்துடன் கொண்டாடுவதற்காக இனிய வீட்டிற்கு வந்துள்ளீர்கள்.

இந்த மகத்தான தினமே, பாபாவினதும் தாதாவினதும் ஞாபகார்த்தத்தைக் குறிக்கும் விசேடமான தினம் ஆகும். ஒன்று, அருள்பவரின் ரூபத்தி;ல் இருக்கும் சிவபாபாவின் சின்னம். மற்றையது, தந்தை பிரம்மாவின் வயதான ரூபத்தைக் குறிக்கும் சின்னம். இளைஞரின் ரூபத்தை அவர்கள் ஒருபோதும் காட்டுவதில்லை. அவர்கள் எப்போதும் கிறிஸ்மஸ் தந்தையை வயதானவராகவே காட்டுகிறார்கள். அத்துடன் நிச்சயமாக இரண்டு நிறங்களான வெள்ளையையும் சிவப்பையும் காட்டுகிறார்கள். ஆகவே, இது பாபாவினதும் தாதாவினதும் அடையாளங்கள் ஆகும். பாப்தாதா சிறு குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அவற்றைப் பூர்த்தி செய்கிறார். இந்த விசேடமான தினத்தில், சிறுவர்கள் குறிப்பாக கிறிஸ்மஸ் தந்தையிடம் தாம் விரும்பியவற்றை மிகுந்த அன்புடன் கேட்பார்கள். அல்லது அது கிடைக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர் நிச்சயமாகத் தமது ஆசையைப் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. எனவே, இதுவும் குழந்தைகளான உங்களின் ஞாபகார்த்தமே ஆகும். உங்களின் பழைய சூத்திர வாழ்க்கையில் உங்களுக்கு எத்தனை வயதாக இருந்தாலும், பிராமண வாழ்க்கையில், நீங்கள் சிறு குழந்தைகளே. எனவே, சிறு குழந்தைகளிடம் உள்ள மேன்மையான ஆசைகள் எவையாயினும், அவை நிச்சயமாக நிறைவேற்றப்படும், அப்படியல்லவா? இதனாலேயே, இந்த ஞாபகார்த்தச் சின்னம் இறுதியாக வந்த மதங்களிலும் தொடர்ந்தும் உள்ளது. நீங்கள் அனைவரும் சங்கமயுகத்தின் இந்த மகத்தான தினத்தில் பாப்தாதாவிடமிருந்து பற்பல பரிசுகளைப் பெற்றீர்கள், அல்லவா? இந்த மகத்தான தினமே, பரிசுகளுக்கான விசேடமான தினம் ஆகும். ஆகவே, பாப்தாதா அனைத்திலும் மகத்தான பரிசான, சுய இராச்சியத்தையும் சுவர்க்க இராச்சியத்தையும் உங்களுக்கு வழங்குகிறார். அங்கு இல்லாதது என்று எதுவும் இல்லை. நீங்கள் சகல பேறுகளினதும் சொரூபங்கள் ஆகுகிறீர்கள். எனவே, பெரிய தினத்தைக் கொண்டாடுபவர்கள் பெரிய இதயத்தைக் கொண்டிருக்கிறார்கள். உலகிற்கே வழங்குபவர்களிடம் பெரிய இதயங்கள் உள்ளன, அப்படியல்லவா? எனவே, சங்கமயுகத்தின் இந்த மிகப் பெரிய தினத்தில், அனைவரிலும் மிகப் பெரியவரான பாப்தாதா, குழந்தைகள் அனைவருக்கும் பெரிய இதயத்துடன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அந்த மக்களோ நள்ளிரவின் பின்னரே கொண்டாடுவார்கள். ஆனால், நீங்கள் அனைவரும் அவர்களை முந்திவிட்டீர்கள், அல்லவா? எனவே, நீங்கள் அதை முதலில் கொண்டாடுகிறீர்கள். உலக மக்கள் பின்னர் கொண்டாடுவார்கள். இரட்டை வெளிநாட்டவர்கள், குறிப்பாகத் தந்தைக்கு அதிகளவு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பௌதீகமான முறையிலும் சூட்சுமமான முறையிலும் நினைவுப் பரிசைக் கொடுக்கிறார்கள். பாப்தாதாவும் சகல இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கும், அவர்களின் நினைவுப் பரிசிற்குப் பதிலாக, அமரத்துவமான அன்புப் பரிசையும் பலமில்லியன் மடங்கு நினைவுகள் நிறைந்த ‘நீங்கள் சதா அன்பான சகபாடியாக இருப்பதுடன், சதா அன்புக்கடலில் அமிழ்ந்திருக்கும் ஸ்திதியையும் அனுபவம் செய்வீர்களாக’ என்ற ஆசீர்வாதத்தையும் வழங்குகிறார். நீங்கள் சதா சந்தோஷத்துடன் ஆடிப் பாடுவீர்கள். உங்களின் வாய் எப்போதும் இனிமையாக இருக்கும். இந்த முறையில், பாபா பாரதத்தில் உள்ள அன்பான குழந்தைகள் அனைவருக்கும் விசேடமான அன்பையும் நினைவுகளையும் ‘நீங்கள் இலகு யோகிகளாகவும் இயல்பான யோகிகளாகவும் இருப்பீர்களாக’ என்ற ஆசீர்வாதத்தையும் வழங்குகிறார்.

அருள்பவரும் பாக்கியத்தை அருள்பவருமான பாப்தாதா, குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் அழியாத அன்பினால் நிறைந்திருக்கும் ரூபத்தினாலும் சக்தி சொரூபங்களாக இருப்பதனாலும் சதா அனைத்தையும் இலகுவானதாக அனுபவம் செய்வதற்காக அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அனைவருக்கும் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் எப்போதும் உங்களை இந்தப் பழைய உலகின் கவர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவராகவும் தந்தையின் மீது அன்புடையவராகவும் அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் எந்தளவிற்கு அப்பாற்பட்டு இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு இயல்பாகவே அன்பாகவும் இருப்பீர்கள். நீங்கள் அப்பாற்பட்டு இருக்காவிட்டால், உங்களால் அன்பாகவும் இருக்க முடியாது. எனவே, நீங்கள் அன்பானவராகவும் அப்பாற்பட்டவராகவும் இருக்கிறீர்களா? அல்லது எங்கேயேனும் ஏதாவது பற்று உள்ளதா? எவரிடமும் உங்களுக்குப் பற்று இல்லாதபோது, உங்களின் புத்தியானது இயல்பாகவே ஒரேயொரு தந்தையிடமே செல்லும். அது வேறு எங்கும் செல்ல முடியாது. இலகுவான, சதா யோகியின் ஸ்திதியானது அனுபவம் செய்யப்பட வேண்டும். நீங்கள் இப்போது இலகு யோகி ஆகாவிட்டால், எப்போது இவ்வாறு ஆகுவீர்கள்? உங்களிடம் இத்தகைய இலகுவான பேறு உள்ளது. சத்தியயுகத்திலும், நிகழ்காலத்தின் பேற்றின் பலனை நீங்கள் பெறுவீர்கள். எனவே, இந்த வேளையில் இலகு யோகிகளாக இருப்பதுடன் எல்லா வேளையும் இராச்சிய பாக்கியத்திற்கான உரிமையைக் கொண்டிருப்பவர்கள், எப்போதும் தந்தைக்கு நெருக்கமாகவும் சமமாகவும் இருக்கும் இலகு யோகிக் குழந்தைகள் ஆவார்கள். எனவே, நீங்கள் உங்களைத் தந்தைக்கு நெருக்கமானவர்களாகவும் அவருடனேயே இருப்பவர்களாகவும் அனுபவம் செய்கிறீர்களா? அவருடன் இருப்பவர்கள் எப்போதும் ஓர் ஆதாரத்தைக் கொண்டிருப்பார்கள். உங்களால் அவருடன் இருக்க முடியாவிட்டால், அவரின் ஆதாரத்தை அனுபவம் செய்ய முடியாது. இப்போது நீங்கள் தந்தையின் ஆதாரத்தைப் பெற்றிருப்பதனால், எந்தவிதத் தடையும் உங்களிடம் வரமுடியாது. சர்வசக்திவான் தந்தையின் ஆதாரம் உங்களிடம் இருக்கும்போது, மாயை தானாகவே உங்களிடமிருந்து விலகிச் சென்றுவிடுவாள். பலசாலியான ஒருவரின் முன்னால் பலவீனமான ஒருவர் என்ன செய்வார்? அவர் அப்பால் விலகிச் சென்றுவிடுவார்,அப்படியல்லவா? அதேபோன்று, மாயையும் விலகிச் சென்றுவிடுவாள். அவள் உங்களை எதிர்க்க மாட்டாள். எனவே, நீங்கள் அனைவரும் மாயையை வென்றவர்களா? மாயை வெவ்வேறு ரூபங்களில், புதிய வடிவங்களில் வருவாள். எவ்வாறாயினும், ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் மாயையிடம் பயப்படுவதில்லை. அவர்கள் மாயையின் சகல ரூபங்களையும் இனங்கண்டு கொள்வார்கள். அந்த ரூபங்களை அறிந்திருப்பதனால், அவர்கள் அவளிடமிருந்து விலகியே இருப்பார்கள். நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆகியதும், எவராலும் உங்களை அசைக்க முடியாது. ஒருவர் எந்தளவிற்கு முயற்சி செய்தாலும், நீங்கள் அசைய மாட்டீர்கள்.

அமிர்த வேளையில் இருந்து இரவுவரை, தந்தைக்கும் சேவைக்கும் தவிர வேறு எதிலும் அன்பு வைக்காதீர்கள். நீங்கள் தந்தையைக் கண்டடைந்துள்ளீர்கள். ஒரு சேவையாளர் ஆகியுள்ளீர்கள். நீங்கள் பெற்றதை எந்தளவிற்குப் பகிர்ந்தளிக்கிறீர்களோ, அதற்கேற்ப அது அதிகரிக்கும். ஒன்றைக் கொடுத்து, பலமில்லியன்களைப் பெறுங்கள். நீங்கள் சகல பொக்கிஷக்களஞ்சியங்களினதும் அதிபதிகள் என்பதை நினைவில் வைத்திருங்கள். பொக்கிஷக் களஞ்சியங்கள் நிரம்பி வழிகின்றன. உலகமே தேடுகின்ற ஒரேயொருவரின் குழந்தைகளாக நீங்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் துன்ப உலகில் இருந்து விலகி, சந்தோஷ உலகை அடைந்துள்ளீர்கள். ஆகவே, சதா சந்தோஷக் கடலின் அலைகளில் தொடர்ந்து முன்னேறுவதுடன், அனைவரையும் சந்தோஷப் பொக்கிஷங்களால் நிரப்புங்கள். அச்சா.

தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மையான அவ்யக்த வாசகங்கள்
பிராமண வாழ்க்கையில், ‘நல்ல பண்புகள்’ என்ற கலாச்சாரத்தைப் பின்பற்றுங்கள்

பிராமணக் குடும்பத்தின் முதலாம் இலக்கக் கலாச்சாரம், நல்ல பண்புகள் ஆகும். இந்த பிராமணக் கலாச்சாரம் ஒவ்வொருவரின் முகத்திலும் அவர்களின் நடத்தையிலும் புலப்பட வேண்டும். ஒவ்வொரு பிராமணனும் மற்றவர்களுடன் தொடர்பில் வரும்போது புன்னகைக்க வேண்டும். ஒருவர் எத்தகையவராக இருந்தாலும், உங்களின் பிராமணக் கலாச்சாரத்தைக் கைவிடாதீர்கள். இப்போது, உங்களின் வாழ்க்கையில் நல்ல பண்புகள் என்ற உங்களின் புதிய சம்ஸ்காரங்களை வெளிப்படுத்துங்கள். குறைவாகப் பேசுங்கள். மென்மையாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள். உங்களின் விருப்பத்திற்கு மாறாகக் கோபமோ அல்லது எரிச்சலோ வந்தால், உங்களின் இதயபூர்வமாக ‘எனது பாபா’ எனக் கூறுங்கள். நீங்கள் மேலதிக உதவியைப் பெறுவீர்கள். உங்களின் இதயத்தில் இருந்து தூய, அன்பான உணர்வுகள் வெளிப்பட வேண்டும். அப்போது நீங்கள் உங்களின் மகத்தான எதிரியான கோபத்தை வெல்வீர்கள்.

தற்காலத்தில் சில குழந்தைகள் விசேடமான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். பொய்மையான எதையும் தங்களால் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடிவதில்லை என அவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயே, பொய்மையான எதையும் தாங்கள் பார்த்தாலோ அல்லது கேட்டாலோ, தாங்கள் உக்கிரம் அடைவதாகக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், மற்ற நபர் பொய்யானவராக இருந்து, அந்தப் பொய்மையைப் பார்த்ததனால் நீங்கள் உக்கிரம் அடைந்தால், உங்களின் உக்கிரமும் சத்தியம் அல்ல. எந்த வகையான பொய்மையையும் முடிப்பதற்கு, உங்களுக்குள் சத்தியத்தின் சக்தியைக் கிரகியுங்கள். சத்தியத்தின் அடையாளம், உங்களின் நல்ல பண்புகள் ஆகும். நீங்கள் உண்மையானவராக இருந்து, சத்தியத்தின் சக்தியைக் கொண்டிருந்தால், உங்களிடம் நல்ல பண்புகள் ஒருபோதும் குறைவடையாது. நீங்கள் சத்தியத்தை நிரூபிக்க வேண்டியிருக்கலாம். ஆனால், அதை நல்ல பண்புகளுடன் செய்யுங்கள். உங்களின் நல்ல பண்புகளைக் கைவிட்டு, ஏதாவதொன்றை உண்மை என நிரூபிக்க நீங்கள் முயற்சி செய்தால், உங்களால் அதை நிரூபிக்க முடியாது. நல்ல பண்புகள் இல்லாமல் இருப்பதன் அடையாளம் பிடிவாதம் ஆகும். நல்ல பண்புகளின் அடையாளம், பணிவு ஆகும். சத்தியத்தை நிரூபிப்பவர்கள் எப்போதும் பணிவாக இருப்பார்கள். அத்துடன் அனைவருடனும் நல்ல பண்புகளுடனேயே தொடர்பு கொள்வார்கள். உக்கிரத்துடன் எதையாவது உண்மை என நிரூபிக்க முயற்சி செய்பவர்களுக்குள் நிச்சயமாக உண்மை இல்லாத ஏதாவது அமிழ்ந்திருக்கும். பல குழந்தைகளின் பாஷை இவ்வாறு ஆகியுள்ளது: நான் நேர்மையாக உண்மையைப் பேசுகிறேன். நான் 100மூ சத்தியத்தையே பேசுகிறேன். எவ்வாறாயினும், சத்தியத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. சத்தியம் சூரியனைப் போன்றது. அதை மறைக்க முடியாது. உங்களின் முன்னால் எத்தனை மறைப்புக்களை வைத்தாலும், உங்களின் சத்தியத்தின் ஒளியை மறைக்க முடியாது. நல்ல பண்புகளின் அடிப்படையிலான வார்த்தைகளும் நடத்தையும் நிச்சயமாக வெற்றியை ஏற்படுத்தும்.

உண்மையற்ற எதையாவது நீங்கள் பார்த்தாலோ அல்லது கேட்டாலோ, அந்தப் பொய்மையான சூழலைப் பரப்பாதீர்கள். ‘அது பாவம், என்னால் யாராவது இவ்வாறு பாவம் செய்வதைப் பார்க்க முடிவதில்லை’ எனப் பலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், உண்மையற்ற விடயங்களைச் சூழலில் பரப்புவதும் பாவமே. உங்களின் லௌகீகக் குடும்பத்தில் நீங்கள் பார்க்கும் அல்லது கேட்கும் இவ்வாறான விடயங்களை நீங்கள் பரப்ப மாட்டீர்கள். அதை உங்களின் காதுகளால் கேட்டு, உங்களின் இதயத்தில் மறைத்துக் கொள்வீர்கள். இங்கு வீணான எதையும் பரப்புவதும் பாவத்தின் சுவடே ஆகும். இத்தகைய சிறிய பாவங்கள் பறக்கும் ஸ்திதிக்குரிய அனுபவத்தை முடித்து விடுகிறது. ஆகவே, ஆழமான கர்ம தத்துவத்தைப் புரிந்துகொண்டு, அனைவருடனும் நல்ல பண்புகளுடன் தொடர்பு கொள்ளுங்கள். பிராமணக் குழந்தைகளான நீங்கள் மிகவும் இராஜரீகமானவர்கள். உங்களின் நல்ல பண்புகளையும் நீங்கள் உண்மையாக இருப்பதையும் உங்களின் முகத்தில் இருந்தும் நடத்தையில் இருந்தும் மற்றவர்கள் அனுபவம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். இராஜரீகமான ஆத்மாக்கள், நல்ல பண்புகளின் தேவிகள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் பேசும் விதம், மற்றவர்களை மதித்தல், நடத்தல், உண்ணுதல், பருகுதல் என அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்களின் இயல்பான நல்ல பண்புகளையும் உண்மையையும் பிரதிபலிக்கும். நீங்கள் உண்மையை நிரூபிக்க முயற்சி செய்து, எந்தவிதப் பண்புகளும் இல்லாமல் செயற்படுவதாக இருக்கக்கூடாது. இது சரியாக இருக்காது. சில குழந்தைகள் கூறுகிறார்கள்: பொதுவாக, எனக்குக் கோபம் ஏற்படுவதில்லை. ஆனால் யாராவது பொய் சொன்னால், எனக்குக் கோபம் ஏற்படுகிது. அந்த நபர் உங்களுக்குப் பொய் சொல்லி, நீங்கள் கோபத்துடன் பேசினால், உங்களில் யார் சரி? உங்களில் பலர் மிகவும் கெட்டிக்காரர்களாகி, நாம் கோபப்படுவதில்லை, ஆனால் எமது குரல் உரத்து ஒலிக்கிறது அல்லது கூர்மையாக உள்ளது எனக் கூறுகிறீர்கள். உங்களால் விஞ்ஞானத்தின் கருவிகளால் ஏதாவதொன்றின் சத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்போது, உங்களால் மௌன சக்தியால் உங்களின் சொந்தக் குரலைக் (சத்தம் மற்றும் தொனி) கட்டுப்படுத்த முடியாதா? கோபம் அறியாமைச் சக்தியாக இருப்பதைப் போன்று, அமைதி ஞானச் சக்தி ஆகும். அறியாமைச் சக்தியையும் கோபத்தையும் மிக நன்றாக உங்களின் சம்ஸ்காரம் ஆக்கியுள்ளீர்கள். அந்த சம்ஸ்காரத்தைப் பயன்படுத்தி விட்டுப் பின்னர் மன்னிப்பும் கேட்கிறீர்கள்! அதேபோன்று, இப்போது ஒவ்வொரு நற்குணத்தையும் ஒவ்வொரு ஞானக் குறிப்பையும் உங்களின் சம்ஸ்காரம் ஆக்குங்கள். அப்போது நீங்கள் தொடர்ந்து நல்ல பண்புகளை விருத்தி செய்வீர்கள்.

கோபப்படுதல் விகாரம் இல்லை எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். அது ஓர் ஆயுதமே அன்றி, விகாரம் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், ஞானோதயம் பெற்ற ஓர் ஆத்மாவிற்கு கோபம் மிகப் பெரிய எதிரி ஆகும். ஏனைய ஆத்மாக்களுடன் தொடர்பில் அல்லது இணைப்பில் வரும்போதே உங்களின் கோபம் வெளிப்படும். உங்களின் கோபத்தைப் பார்க்கும்போது, தந்தையின் பெயர் அதிகளவில் அகௌரவத்திற்கு உள்ளாகும். வம்பு பேசுபவர்கள், ‘இப்போது நாம் ஞானோதயம் பெற்ற ஆத்மாக்களைக் கண்டோமே!’ எனக் கேலியாகக் கூறுவார்கள். ஆகவே, இப்போது கோபத்தின் சுவடுகள் அனைத்தையும் முடியுங்கள். மற்றவர்களுடன் மிகவும் நல்ல பண்புகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இறை ஒளியுடன் நேரடியான தொடர்பைக் கொண்டிருப்பதன் மூலம், இருளை நீக்கும் வெளிச்சவீடு ஆகுவீர்களாக.

குழந்தைகளான உங்களுக்கு இறை ஒளியுடன் நேரடித் தொடர்பு உள்ளது. நேரடி இணைப்பைப் பயன்படுத்தி, சுய மரியாதை என்ற விழிப்புணர்வின் ஆளியைப் போடுங்கள். அப்போது ஒளி வீசும். சூரியனின் ஒளியை மறைக்க கரும் முகில்கள் எந்தளவிற்கு முயற்சி செய்தாலும், அவையும் விலகிச் சென்றுவிடும். இந்த முறையில், நீங்கள் ஒளியாக இருப்பீர்கள். அத்துடன் நீங்கள் மற்றவர்களுக்கும் வெளிச்சவீடு ஆகுவீர்கள்.

சுலோகம்:
சுயத்திற்கான முயற்சிகளில் தீவிரமானவர் ஆகுங்கள். அப்போது உங்களின் அதிர்வலைகளினூடாக மற்றவர்களின் மாயையும் இலகுவாக ஓடிவிடும். ஓம் சாந்தி