12.08.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இங்கே நீங்கள் கல்வி கற்பதற்காக வந்திருக்கிறீர்கள். உங்கள் கண்களை நீங்கள் மூட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் பொதுவாகக் கண்களைத் திறந்தே கல்வி கற்கின்றார்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கக்கூடாத, ஆனால் பக்தி மார்க்கத்தில் பக்தர்களுக்கு இருக்கும் பழக்கம் எது?
பதில்:
பக்தி மார்க்கத்தில் அவர்கள் தேவ தேவியரின் விக்கிரகத்திற்கு முன்னால் சென்று, தொடர்ந்தும் ஏதேனும் ஒன்றை வேண்டுகின்றார்கள். எதையாவது கேட்கும் பழக்கத்தை அவர்கள் தங்களில் பதித்துக் கொண்டு விட்டார்கள். அவர்கள் இலக்ஷ்மியின் முன்னால் சென்று செல்வத்தைக் கேட்கிறார்களாயினும், அவர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. இந்தப் பழக்கம் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தையின் ஆஸ்திக்கான உரிமை இருக்கிறது. நீங்கள் சரீரமற்ற தந்தையைத் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இதனைச் செய்வதனால், உங்களால் ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்க முடியும்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது ஒரு பாடசாலை. ஆனாலும், இங்கே நீங்கள் படங்கள் எதையுமோ அல்லது சரீரதாரிகள் எவரையுமோ பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இங்கே, எவரையும் பார்க்கும்பொழுதும், சரீரமற்றவரை நோக்கியே உங்கள் புத்தி செல்ல வேண்டும். பாடசாலையில் குழந்தைகளின் கவனம் எப்பொழுதும் ஆசிரியர் மீதே இருக்கின்றது, ஏனெனில், அவரே அவர்களுக்குக் கற்பிப்பதால், அவர்கள் நிச்சயமாக அவர் கூறுவதைக் கேட்க வேண்டும். பின்னர் அவர்கள் அவருக்குப் பதிலளிக்க வேண்டும். ஓர் ஆசிரியர் கேள்வி கேட்கும்பொழுது, மாணவர்கள் ‘என்னால் பதிலளிக்க முடியும்’ என்று சைகை செய்வார்கள். இது ஒரு தனித்துவமான பாடசாலை, ஏனெனில், இந்தக் கல்வி தனித்துவமானது. கற்பிப்பவருக்குச் சரீரமில்லை. எனவே, நீங்கள் கற்பதற்குக் கண்களைத் திறந்தவாறு அமர்ந்திருக்க வேண்டும். பாடசாலையில் உள்ள மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு முன்னால், தங்கள் கண்களை மூடியவாறு அமர்ந்திருப்பார்களா? பக்தி மார்க்கத்தில், அவர்கள் தங்;களுடைய கண்களை மூடி மணிமாலையை உருட்டியவாறு அமர்ந்திருப்பதுண்டு. சாதுக்களும் தங்கள் கண்களை மூடியவாறே அமர்ந்திருக்கின்றார்;கள். தங்கள் மனம் விஷமம் புரியும் என்பதால், பெண்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனாலும், இன்றைய உலகம் தமோபிரதானானது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இங்கே நீங்கள் சரீரத்தைப் பார்த்தாலும், சரீரமற்றவராகிய அவரை நினைவுசெய்வதிலேயே உங்கள் புத்திகள் மும்முரமாக இருக்கின்றன. சரீரத்தைப் பார்த்துக் கொண்டு சரீரமற்றவரை நினைவுசெய்கின்ற சாதுவோ சந்நியாசியோ எவருமே இல்லை. அந்த பாபாவே இங்கே இந்த இரதத்தில் இருந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் பேசுகிறார். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார்; சரீரம் எதையுமே செய்வதில்லை. ஆத்மா செவிமடுக்கின்றார். ஆத்மாவே பௌதீக ஞானத்தையோ அல்லது ஆன்மீக ஞானத்தையோ செவிமடுத்து உரைக்கின்றார். ஆத்மாவே பௌதீக ஆசிரியர் ஆகுகின்றார். ஒரு சரீரத்தின் மூலம் பௌதீகமான கல்வியொன்றை நீங்கள் கற்கின்றீர்கள். ஆனால், ஆத்மாவே அதைக் கற்கின்றார். நல்ல, தீய சம்ஸ்காரங்கள் ஆத்மாவினாலேயே கிரகிக்கப்படுகின்றன. சரீரம் சாம்பலாகிப் போகின்றது. இது மனிதர்கள் எவருக்கும் தெரியாது. அவர்களுக்கு ‘நான் இன்ன இன்னார்’, ‘நான் ஒரு பிரதம மந்திரி’ என்ற சரீர உணர்வு இருக்கின்றது. ‘ஆத்மாவாகிய நான் இந்தப் பிரதம மந்திரியின் சரீரத்தை எடுத்திருக்கிறேன்’ என அவர்கள் கூற மாட்டார்கள். ஆத்மாவே அனைத்தையும் செய்கிறார் என்று நீங்கள் மட்டுமே புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். இங்கே உங்கள் பாகங்களை நடிப்பதற்காக நீங்கள் சரீரங்களைப் பெற்றிருக்கிறீர்கள். சரீரத்தில் ஆத்மா இல்லையென்றால், சரீரத்தால் எதுவுமே செய்ய முடியாது. ஆத்மா சரீரத்தைப் பிரியும்பொழுது, சரீரம் வெறும் சடலமாகவே இருக்கும். ஆத்மாவை இந்தக் கண்களால் காண முடியாது; அது சூட்சுமமானது. தந்தை கூறுகிறார்: தந்தையை உங்கள் புத்தியால் நினைவுசெய்யுங்கள். சிவபாபா இவர் மூலம் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது உங்கள் புத்தியில் இருக்கிறது. இது ஒரு சூட்சுமமான விடயம்; இதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். சிலர் மிக நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். மற்றவர்களோ புரிந்துகொள்வதேயில்லை. இவ்வளவே புரிந்துகொள்ளப்பட வேண்டும். அல்பா என்றால் பாபாவாகிய கடவுள் என்று அர்த்தம். ‘கடவுள்; அல்லது ;ஈஸ்வரன்;’ என்று மட்டுமே கூறினால், நீங்கள் தந்தை எனும்; உறவுமுறையை அனுபவம் செய்ய மாட்டீர்கள். இந்த நேரத்தில் அனைவருக்கும் கல்லுப்புத்தியே இருக்கிறது. ஏனெனில், அவர்களுக்குப் படைப்பவராகிய தந்தையையோ, படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றியோ தெரியாது. இந்த உலகத்தின் வரலாறும் புவியியலும் தொடர்ந்தும் மீண்டும் இடம்பெறுகிறது. இது இப்பொழுது சங்கமயுகம். இதைப் பற்றி எவருக்குமே தெரியாது. இதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆனால், நீங்களும் இதனை ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது பாபா உங்களை ஞானத்தால் அலங்கரிக்கிறார். எவ்வாறாயினும், இங்கிருந்து நீங்கள் சென்றதுமே மாயை உங்களைப் புழுதியில் உருளச் செய்து, உங்கள் ஞான அலங்காரத்தைச் சீரழிக்கின்றாள். தந்தை உங்களை அலங்கரிக்கின்றார், ஆனால், நீங்களும் உங்கள் சொந்த முயற்சியைச் செய்ய வேண்டும். சில குழந்தைகள் தாங்கள் அலங்கரிக்கப்படவே இல்லை என்பது போல மூர்க்கமாகப் பேசுகிறார்கள்; அவர்கள் அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். பின்னால் சென்று அமரும் மாணவர்கள் கல்வியில் தங்கள் இதயங்களை அவ்வளவாகச் செலுத்துவதில்லை. அவர்கள் ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று செல்வந்தர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் எதையுமே கற்கவில்லை. எவ்வாறாயினும், இது ஒரு மிகவும் உயர்வான கல்வி. கற்காமல் உங்களால் எதிர்கால அந்தஸ்தொன்றைப் பெற முடியாது. இங்கே, நீங்கள் செல்வந்தர் ஆகுவதற்காக ஒரு தொழிற்சாலையில் இருந்து வேலை செய்யத் தேவையில்லை. இங்கே அனைத்துமே அழிக்கப்படவுள்ளது. உங்கள் அழிவற்ற வருமானம் மட்டுமே உங்களுடன் வரும். ஒருவர் மரணிக்கும் பொழுது, வெறுங்கையுடனேயே செல்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்; அவர் தனது கரங்களில் எதையுமே கொண்டு செல்வதில்லை. நீங்களோ உங்கள் கரங்களை நிறைத்துக் கொண்டு செல்வீர்கள். இதுவே ஓர் உண்மையான வருமானம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே 21 பிறவிகளுக்கான உங்கள் உண்மையான வருமானம். எல்லையற்ற தந்தையே உங்களை ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்குமாறு செய்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் இந்தச் சரீரத்தைப் பார்க்கிறீர்கள். ஆனாலும், சரீரமற்ற தந்தையையே நீங்கள் நினைவுசெய்கிறீர்கள். ஏனெனில், நீங்களும் ஆத்மாக்களே. ஆத்மாக்கள் தங்கள் தந்தையை மட்டுமே பார்க்கிறார்கள்; நீங்கள் அவரிடம் கற்கின்றீர்கள். ஆத்மாக்களையோ பரமாத்மாவையோ நீங்கள் (கண்களால்) காண்பதில்லை, ஆனால் உங்கள் புத்தியால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்கின்றீர்கள்: ஆத்மாவாகிய நான் அழிவற்றவனும், இந்தச் சரீரம் அழியக்கூடியதும் ஆகும். இந்தத் தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தனக்கு முன்னால் பார்த்தாலும், தான் ஆத்மாக்களுக்கே விளங்கப்படுத்துகிறார் என அவரது புத்தி அறிந்து வைத்துள்ளது. தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிப்பது சத்தியத்தைத் தவிர வேறெதுவுமேயில்லை; அதில் பொய்மையின் சுவடு சிறிதளவேனும் கிடையாது. நீங்கள் சத்திய உலகத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். ஆனால் இதுவோ பொய்யான உலகம். கலியுகம் பொய்யான பூமியும் சத்தியயுகம் சத்திய பூமியும் ஆகும். இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு காணப்படுகிறது. சத்தியயுகத்தில் துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அதன் பெயரே சந்தோஷ தாமம் ஆகும். எல்லையற்ற தந்தை மட்டுமே உங்களை அந்தச் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்குவார். அவருக்குச் சரீரமில்லை. ஆனால் ஏனைய அனைவருக்கும் சரீரம் இருக்கின்றது. அவரது ஆத்மாவின் பெயர் மாற்றமடைவதுண்டா? அவரது பெயர் என்றுமே சிவன் என்பதாகும். ஏனைய அனைவரும் ஆத்மாக்கள் எனப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்கள் அவர்களது சரீரங்களையே குறிக்கின்றன. ஒரு சிவலிங்கம் அசரீரியானவரைப் பிரதிநிதித்துவம் செய்;கின்றது. ‘ஞானக்கடலும், அமைதிக்கடலும்” என்பது சிவனது புகழேயாகும். அவர் தந்தையாகவும் இருக்கிறார். எனவே நிச்சயமாக நீங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவீர்கள். படைப்பு படைப்பிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. படைப்பவர் தனது குழந்தைகளுக்கே ஆஸ்தியைக் கொடுப்பார். ஒருவருக்குத் தனது சொந்தக் குழந்தைகள் இருக்கும்பொழுது, அவர் தன் சகோதரருடைய குழந்தைகளுக்கு ஆஸ்தியைக் கொடுப்பாரா? இங்கேயும் எல்லையற்ற தந்தை தனது எல்லையற்ற குழந்தைகளுக்கே ஆஸ்தியைக் கொடுக்கின்றார். மக்கள் கற்பதன் மூலம் சட்டத்தரணிகள் போன்றவர்களாக ஆகுவதைப் போல், இது ஒரு கல்வியாகும். அவர்களது யோகம் கல்வியுடனும், அந்தக் கல்வியைக் கற்பிப்பவருடனுமே இணைக்கப்பட்டு உள்ளது. இங்கே உங்களுக்குக் கற்பிப்பவர், சரீரமற்றவர் ஆவார். ஆத்மாக்களாகிய நீங்களும் சரீரமற்றவர்கள். தந்தை கூறுகிறார்: நான் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கிறேன். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை ஒரு தடவையே வந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆத்மாக்களே கற்கின்றனர். ஆத்மாக்களே சரீரங்களின் மூலம் துன்பத்தையும், சந்தோஷத்தையும் அனுபவம் செய்கின்றனர். ஓர் ஆத்மா தனது சரீரத்தை விட்டுச் செல்லும்பொழுது, அதன்பின்னர் அந்தச் சரீரத்தை நீங்கள் எவ்வளவு தான் அடித்தாலும், அது வெறும் சாம்பலையே அடிப்பது போலாகும். தந்தை உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் அனைத்தையும் வரிசைக்கிரமமாகவே கிரகிக்;கின்றீர்கள் என்பது பாபாவுக்குத் தெரியும். சிலர் ஒன்றையுமே புரிந்துகொள்ள முடியாதளவுக்குப் புத்தியற்றவர்களாக (புத்துக்கள்) இருக்கிறார்கள். ஞானம் மிகவும் இலகுவானது. பார்வையற்றவர்கள், அங்கவீனர்கள், முடமானவர்களாலும் கூட இதைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், ஆத்மாக்களுக்கே அனைத்தும் விளங்கப்படுத்தப்படுகிறது. ஆத்மாக்கள் முடமானவரோ அங்கவீனரோ இல்லை. சரீரங்களே அவ்வாறு இருக்கின்றன. தந்தை இங்கிருந்து உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், அவர்கள் பக்தி மார்க்கத்திலிருந்தே தங்கள் கண்களை மூடி அமர்ந்திருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், இங்கேயும் அதையே செய்கிறார்கள். அது அவர்கள் போதையடைந்தவர்களைப் போல உள்ளது. தந்தை கூறுகிறார்: உங்கள் கண்களை மூடாதீர்கள். எவரையேனும் உங்களுக்கு முன்னால் பார்க்கும்பொழுது, உங்கள் புத்தியில் தந்தையை வைத்திருங்கள். அப்பொழுதே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது மிக இலகுவானது! இருந்தபொழுதிலும் நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, என்னால் உங்களை நினைவுசெய்ய முடியாதிருக்கின்றது. ஆ! ஆனால் உங்களுக்கு எல்லைக்குட்பட்ட ஆஸ்தியைத் தரும் உங்கள் பௌதீகத் தந்தையை நீங்கள் மரணிக்கும் வரை உங்களால் நினைவுசெய்ய முடிகின்றது, ஆனால் இவரோ சகல ஆத்மாக்களுக்கும் எல்லையற்ற தந்தையாக இருக்கிறார், இருப்பினும், உங்களால் அவரை நினைவுசெய்ய முடியாதிருக்கிறது! ‘ஓ தந்தையாகிய கடவுளே, எனக்கு வழிகாட்டுங்கள்!’ என இந்தத் தந்தையை நீங்கள் கூவி அழைத்தீர்கள். உண்மையில் இவ்வாறு கூறுவது தவறு. தந்தை ஒரு நபருக்கு மட்டும் வழிகாட்டியாக ஆகுவதில்லை. அவர் எல்லையற்ற வழிகாட்டி. அவர் ஒரு நபரை மட்டும் விடுதலை செய்யப் போவதில்லை. தந்தை கூறுகிறார்: நான் வந்து அனைவருக்கும் சற்கதி அருள்;கிறேன். அனைவரையும் அமைதி தாமத்திற்கு அனுப்பி வைப்பதற்காக நான் வந்திருக்கிறேன். இங்கே எதையுமே கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் எல்லையற்ற தந்தை. அம்மக்;கள் எல்லைக்குட்பட்டதற்குள் வந்து, தொடர்ந்தும் ‘நான், நான்’, ‘ஓ இறைவா, எனக்குச் சந்தோஷம் தாருங்கள்! என் துன்பத்தை அகற்றுங்கள்! நான் கீழ்த்தரமான பாவி! என் மீது கருணை காட்டுங்கள்!’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: எல்லையற்ற பழைய உலகைப் புதிதாக்குவதற்கு நான் வந்திருக்கிறேன். தேவர்கள் புதிய உலகில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு ஐயாயிரம் வருடங்களுக்கும் ஒருமுறை நீங்கள் முற்றிலும் தூய்மையற்றவர்களாகிய பின்பு, நான் வருகிறேன். இது அசுர சமுதாயம். உண்மையைப் பேசும் சற்குரு ஒரேயொருவரே இருக்கிறார். அவர் மட்டுமே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். தந்தை கூறுகிறார்: இந்தத் தாய்மார்கள் சுவர்க்கத்தின் வாசலைத் திறந்து வைப்பார்கள். “சுவர்க்க வாயில்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும், மக்களால் இதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் நரகத்தில் இருப்பதாலேயே கூவியழைக்கிறார்கள். பாபா இப்பொழுது உங்களுக்குச் சுவர்க்கத்திற்கான பாதையைக் காட்டுகிறார். தந்தை கூறுகிறார்: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கி, உங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வதற்காக வருகிறேன். இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஒரேயொரு விடயத்;தை அனைவருக்கும் கூறுங்கள்: தந்தை கூறுகிறார்: மாயையை வென்றவர்களாகி, அதன் மூலம் உலகத்தை வென்றவர்களாகுங்கள்;. உங்கள் அனைவருக்குமே உலக அதிபதிகளாகும் வழியை நான் காட்டுகின்றேன். தீபாவளியின்பொழுது மக்கள் இலக்ஷ்மியை வழிபடுகிறார்கள். அவர்கள் அவரிடம் செல்வத்தைக் கேட்கிறார்கள். ‘எனக்கு நல்லாரோக்கியம் கொடுங்கள்’ என்றோ அல்லது ‘என் ஆயுட்காலத்தை அதிகரியுங்கள்’ என்றோ அவர்கள் கேட்பதில்லை. தந்தையிடமிருந்து நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். உங்கள் ஆயுட்காலம் மிக நீண்டதாகுகின்றது. இப்பொழுது அவர் செல்வம், ஆரோக்கியம், சந்தோஷம் அனைத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர்கள் இலக்ஷ்மியிடம் வெறும் கற்களையும் கூழாங்கற்களையுமே கேட்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அது கூடக் கிடைப்பதில்லை. அவர்கள் வெறுமனே அந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எதையாவது இரந்து கேட்பதற்கே அவர்கள் தேவர்களுக்கு முன்னால் செல்வார்கள். இங்கே, நீங்கள் தந்தையிடம் எதையுமே கேட்க வேண்டிய அவசியமில்லை. தந்தை உங்களிடம் கூறுகிறார்: சதா என்னையே நினைவுசெய்வதனால், நீங்கள் அதிபதிகளாகுவீர்கள். உலகச் சக்கரத்தை அறிந்துகொள்வதனால், நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கவும் வேண்டும். தந்தையிடமிருந்து நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவதால், இதற்காக எதையுமே கூற வேண்டியதில்லை. நீங்கள் இப்பொழுது அவர்களை வழிபாடு செய்வீர்களா? நீங்களே அவ்வாறு ஆகுவது உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் ஏன் அந்தப் பஞ்ச பூதங்களை வழிபாடு செய்யப் போகின்றீர்கள்? நாங்கள் உலக இராச்சியத்தைப் பெறுகிறோம். எனவே, இவற்றுடன் நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்? இப்பொழுது நீங்கள் ஆலயங்;கள் போன்றவற்றுக்குச் செல்வதில்லை. தந்தை கூறுகிறார்: அவை அனைத்தும் பக்தி மார்க்கத்து சம்பிரதாயங்கள். ஞானத்தில், ‘சதா என்னை மட்டுமே நினைவுசெய்யுங்கள்’ என்ற கூற்று ஒன்றே இருக்கிறது, அவ்வளவுதான். இந்த நினைவின் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் சகல நற்குணங்களும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகவேண்டும். மக்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. கல்லுப்புத்தி கொண்டவர்களுடன் தந்தை பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கவேண்டும். ஒரேயொரு தந்தையைத் தவிர வேறெந்தச் சாது, சந்நியாசிகளாலும் உங்களுக்கு இவற்றைக் கூறமுடியாது. இவர் கடவுள் அல்ல. இப்பொழுது இவர் தனது பல பிறவிகளின் இறுதியில் இருக்கிறார். முழுமையாக 84 பிறவிகளையும் எடுத்தவருக்குள் நான் பிரவேசிக்கின்றேன். அவர் ஒரு கிராமத்துப் பையனாக இருந்தார். பின்பு அவர் அவலட்சணமானவரிலிருந்து அழகானவராகுகிறார். அவர் ஒரு முழுக் கிராமத்துப் பையனாக இருந்தார். அதன் பின், அவர் சற்றுச் சாதாரணமானவராகியதும், பாபா அவருக்குள்ளே பிரவேசித்தார். ஏனெனில், சூளை (பத்தி) உருவாக்கப்பட வேண்டியிருந்தது. அவர்களுக்கு உணவளிப்பது யார்? எனவே, சாதாரண நிலையில் இருந்த ஒருவர் நிச்சயமாகத் தேவைப்பட்டார். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தையே கூறுகிறார்: இவரது பல பிறவிகளின் இறுதியில் இவருக்குள்ளே நான் பிரவேசிக்கிறேன். இவர் அதிதூய்மையற்றவராகி விட்டார். இவரே பின்பு அதி தூய்மையானவராகவும் ஆகுவார். அவர் 84 பிறவிகள் எடுத்திருக்கிறார். உங்களுக்கும் அதுவே பொருந்துகின்றது; வெறுமனே ஒரேயொருவர் மட்டுமல்ல, பலர் இருக்கிறார்கள். சூரிய, சந்திர வம்சங்களைச் சேர்ந்தவர்களாகப் போகின்றவர்கள் மட்டுமே அவர்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக இங்கே வருகிறார்கள். ஏனையோரால் இங்கே தொடர்ந்து இருக்க முடியாதிருக்கும். தாமதமாக வருபவர்கள் சிறிதளவு ஞானத்தையே கேட்டுப் பின்னர் தாமதமாகவே கீழிறங்கி வருவார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்கள் மீது சூட்டும் ஞான அலங்காரத்தை நிரந்தரமாக வைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். மாயையின் புழுதியில் உங்கள் ஞான அலங்காரத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள். மிக நன்றாகக் கற்று, ஓர் அழிவற்ற வருமானத்தைச் சம்பாதியுங்கள்.2. உங்களுக்கு முன்னால், இந்தச் சரீரத்தை, அதாவது, இந்தச் சரீரதாரியைப் பார்க்கின்ற பொழுதும், உங்கள் புத்தியால் சரீரமற்றவராகிய தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் கண்களை மூடி அமர்ந்திருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எல்லையற்ற தந்தையிடம் எதையுமே கேட்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சரீரமற்றவராகவும், எதனையும் செய்கின்ற உணர்வைக் கொண்டிராமலும் இருந்தாலும், பற்றற்ற பார்வையாளராகி உங்கள் பௌதீக அங்கங்களைச் செயற்படுத்துவீர்களாக.நீங்கள் விரும்பும்பொழுது உங்கள் சரீரத்திற்குள் வந்து, நீங்கள் விரும்பும்பொழுது சரீரமற்றவர் ஆகுங்கள். நீங்கள் செயற்பட வேண்டியுள்ளபொழுது, உங்;கள் பௌதீக அங்கங்களின் ஆதாரத்தைப் பெறுங்கள், “ஆத்மாவாகிய நானே”, ஆதாரத்தைப் பெற்று அனைத்தையும் நடைபெறுமாறு செய்வதை மறக்க வேண்டாம். உங்களுக்காக நீங்கள் பிறரை எதனையாவது செய்ய வைக்கும்பொழுது, அதிலிருந்து நீங்கள் வேறுபட்டிருப்பதைப் போன்று, அதேவழியில், ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து, உங்கள் பௌதீக அங்கங்களைச் செயற்படுமாறு செய்யுங்கள், நீங்கள் சரீரமற்றவர் ஆகி, எதனையும் செய்யும் உணர்வையும் கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் எதனையாவது செய்யும்பொழுது, ஓரிரு நிமிடங்களுக்கு இடையில் சரீரமற்றவராக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் இறுதிக் கணங்களில் பெருமளவு உதவியைப் பெறுவீர்கள்.
சுலோகம்:
ஓர் உலகச் சக்கரவர்த்தி ஆகுவதற்கு, உலகிற்குச் சக்காஷைக் கொடுப்பவர் ஆகுங்கள்.