23.07.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நினைவின் மூலமே மின்கலம் சக்தியேற்றப்பட்டு, நீங்கள் சக்தியைப் பெறுவதுடன் ஆத்மாவும் சதோபிரதானாகுவார். அதனால், நினைவு யாத்திரையில் விசேட கவனம் செலுத்துங்கள்.
கேள்வி:
தந்தை ஒருவர் மீதே அன்பு வைத்திருக்கின்ற குழந்தைகளின் அடையாளங்கள் எவை?
பதில்:
1) உங்களுக்குத் தந்தை ஒருவர் மீதே அன்பு இருக்குமானால், தந்தையின் திருஷ்டியானது உங்களை ஒரு கணப் பார்வை மூலம் அப்பால் கொண்டு செல்லும். 2) நீங்கள் முற்றிலும் பற்றை அழிப்பவராக இருப்பீர்கள். 3) எல்லையற்ற தந்தையின் அன்பின் மதிப்பை உணர்பவர்களால் வேறு எவருடைய அன்பிலும் அகப்பட்டுக் கொள்ள முடியாது. 4) அவர்களது புத்தி பொய்யான பூமியின் போலி மனிதர்களிலிருந்து துண்டிக்கப்பட்;டுள்ளது. அழிவற்றதாகுகின்ற அத்தகையதோர் அன்பைத் தந்தை உங்களுக்கு இப்பொழுது கொடுக்கிறார். அதன்பின்னர், சத்தியயுகத்தில் நீங்கள் ஒருவருடனொருவர் பெருமளவு அன்புடன் வாழ்வீர்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஒரேயொரு தடவையே எல்லையற்ற தந்தையின் அன்பைப் பெறுகிறீர்கள். அத்துடன், பக்தி மார்க்கத்திலும் இந்த அன்பை நீங்கள் பெருமளவில் நினைவுகூருகிறீர்கள். பாபா, எனக்கு வேண்டியதெல்லாம் உங்கள் அன்பேயாகும். தாயும் தந்தையும் நீங்களே! எனக்கு அனைத்துமே நீங்கள் தான்! ஒரேயொருவரிடமிருந்து மட்டுமே அரைச்சக்கர காலத்திற்கு நீங்கள் அன்பைப் பெறுகின்றீர்கள். உங்கள் இந்த ஆன்மீக அன்பைப் பற்றிய புகழ் எல்லையற்றது. தந்தையே குழந்தைகளாகிய உங்களை அமைதி தாமத்தின் அதிபதிகளாக்குபவர். இபபொழுது நீங்கள் துன்ப பூமியில் இருக்கிறீர்கள். அனைவரும் துன்பத்திலும், அமைதியின்மையிலும் கதறி அழுகிறார்கள். உரியவர்கள் ஆகுவதற்கு பிரபுவோ அல்லது அதிபதியோ எவருக்கும் இல்லை, இதனாலேயே அவர்கள் பக்தி மார்க்கத்தில் அவரை நினைவுசெய்கிறார்கள். ஆனாலும், பக்தி மார்க்கத்திற்கென்று அரைக் கல்பம் நிச்சயிக்கப்பட்டுள்ள காலப் பகுதியாக உள்ளது. தந்தை அந்தர்யாமி (ஒவ்வொருவருக்குள்ளேயும் இருப்பதை அறிந்தவர்) அல்ல என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளேயும் என்ன இருக்கிறதென்று அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் தந்தைக்கு இல்லை. அதற்கென்று பிறர் எண்ணங்களை வாசிப்பவர்கள் (வாழரபாவ சநயனநசள) உங்களுக்கு இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கலையைக் கற்று வைத்திருக்கிறார்கள். இங்கே அப்படியல்ல. தந்தை இங்கே வருகிறார். தங்களுடைய பாகங்கள் முழுவதையும் நடிப்பவர்கள் தந்தையும் குழந்தைகளுமேயாவர். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்றும், அதில் குழந்தைகள் எவ்வாறு தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள் என்றும் தந்தைக்குத் தெரியும். அவர் ஒவ்வொருவரினுள்ளேயும் என்ன உள்ளது என அறிந்தவரல்ல. ஒவ்வொருவருக்குள்ளேயும் விகாரங்களே இருக்கின்றன என்று நேற்று இரவும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. மனிதர்கள் மிகவும் அழுக்கானவர்கள். தந்தை வந்து, உங்களை அழகிய மலர்களாக்குகிறார். ஒரேயொரு தடவையே குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் அன்பைப் பெறுகின்றீர்கள். அது அழிவற்றதாகுகிறது. அங்கே, நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பெருமளவு அன்பு வைத்திருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் பற்றை வென்றவர்களாகுகிறீர்கள். சத்தியயுக இராச்சியமானது பற்றை வென்ற ராஜா, ராணி, பிரஜைகளுடைய இராச்சியம் என்று கூறப்படுகிறது. அங்கே என்றுமே எவரும் அழுவதில்லை; அங்கே, துன்பம் என்னும் குறிப்பே இல்லை. பாரதத்தில் உண்மையாகவே, ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் இருந்தன என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அது இப்பொழுது இல்லை. ஏனெனில், இது இராவண இராச்சியம். அதில் இருக்கும் அனைவரும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் தந்தையை நினைவுசெய்கிறார்கள்: வந்து, எங்களுக்குச் சந்தோஷத்தையும் அமைதியையும் கொடுங்கள்! எங்கள் மீது கருணை காட்டுங்கள்! எல்லையற்ற தந்தை கருணை மிக்கவர். இராவணனோ கருணையற்றவன்; அவன் உங்களுக்குத் துன்பப் பாதையையே காட்டுகிறான். மனிதர்கள் அனைவருமே துன்பப் பாதையையே பின்பற்றுகிறார்கள். காம விகாரமே அனைத்தையும் விட பெருமளவு துன்பத்தைக் கொடுக்கிறது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, காம விகாரத்தை வெல்லுங்கள். நீங்கள் உலகை வென்றவர்களாகுவீர்கள். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் உலகை வென்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உங்களுக்கு முன்னால் இருக்கின்றன. மக்கள் ஆலயங்களுக்குச் சென்றாலும், அவர்கள் எவரது சரிதையையும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். இது அவர்கள் பொம்மைகளை வழிபாடு செய்வதைப் போலவே இருக்கின்றது. அவர்கள் தேவியரை வழிபாடு செய்கிறார்கள். அவர்களை வடிவமைத்து, அலங்கரித்து, போக் (நைவேத்தியம்) படைப்பதையெல்லாம் செய்கிறார்கள். ஆனால், அந்தத் தேவியர் எதையுமே உண்பதில்லை. பிராமணப் பூசகர்களே அவற்றை உண்கிறார்கள். இவர்கள் தேவியரை உருவாக்கி, பராமரித்து, பின்பு அழித்து விடுகிறார்கள். அது குருட்டு நம்பிக்கை எனப்படுகிறது. அத்தகைய விடயங்கள் சத்தியயுகத்தில் இல்லை. கலியுகத்திலேயே இந்தச் சம்பிரதாயங்கள் வெளிப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் முதலாக நீங்கள் சிவபாபாவை மாத்திரம் வழிபாடு செய்கிறீர்கள். அது கலப்படமற்ற, நேர்மையான வழிபாடு எனப்படுகின்றது. அதனையடுத்து கலப்படமான வழிபாடும் இருக்கிறது. ‘பாபா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதால், நீங்கள் ஒரு குடும்பத்தின் நறுமணத்தைப் பெறுகிறீர்கள். நீங்களும் கூறுகிறீர்கள்: தாயும் தந்தையும் நீங்களே... எங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும் உங்கள் கருணையால் நாங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றோம். ஆரம்பத்தில் நீங்கள் அசரீரி உலகில் இருந்தீர்கள் என்பதை உங்கள் புத்தி நினைவுசெய்கின்றது. அங்கிருந்து, நீங்கள் இங்கே வந்து, உங்கள் பாகங்களை நடிப்பதற்காகச் சரீரங்களைப் பெற்றீர்கள். முதலில் நாங்கள் தெய்வீகமான ஆடைகளை அணிகிறோம், அதாவது, நாங்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறோம். அதன்பின்னர்; நாங்கள் சத்திரிய, வைசிய, சூத்திர குலங்களுக்குள் சென்று, எங்கள் பல்வேறு பாகங்களை நடிக்கின்றோம். ஆரம்பத்தில் உங்களுக்கு இந்த விடயங்கள் தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது பாபா வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொடுக்கிறார். எவ்வாறு அவர் இந்தச் சரீரத்தில் பிரவேசிக்கிறார் என்ற தனது சொந்த ஞானத்தையும் உங்களுக்கு அவர் கொடுத்துள்ளார். இவர் தனது 84 பிறவிகளைப் பற்றி அறிந்;திருக்கவில்லை. நீங்களும் அறிந்;திருக்கவில்லை. சியாம்சுந்தர் என்பதன் இரகசியம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்ரீகிருஷ்ணரே புதிய உலகத்தின் முதல் இளவரசராகவும், இராதை இரண்டாம் இலக்கத்தவராகவும் இருக்கிறார்கள். சில வருட வித்தியாசம் இருக்கிறது. உலகின் ஆரம்பத்தில் இவரே முதல் இலக்கத்தவர் என்று கூறப்படுகிறார். இதனாலேயே அனைவரும் கிருஷ்ணரை நேசிக்கிறார்கள். அவர் மாத்திரமே சியாம்சுந்தர் என்று அழைக்கப்படுகிறார். சுவர்க்கத்தில் அனைவருமே அழகானவர்கள். ஆனால் இப்பொழுது சுவர்க்கம் எங்கே இருக்கிறது? சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. இலங்கையும் துவாரகையும் கடலுக்கடியில் சென்று விட்டன என்று அவர்கள் கூறுவதைப் போல, அது கடலில் மூழ்கி விடவில்லை; இல்லை. இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. இந்தச் சக்கரத்தை அறிந்துகொள்வதால், நீங்கள் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினிகளாக, பூகோள ஆட்சியாளர்களான, உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பிரஜைகளுமே தங்களை உலக அதிபதிகளாகக் கருதுகிறார்கள். இது எங்கள் இராச்சியம் என்றே அவர்களும் கூறுகிறார்கள். பாரத மக்கள், இது எங்கள் இராச்சியம் என்று கூறுகிறார்கள். அது பாரதம் என்றே அழைக்கப்படுகிறது. இந்துஸ்தான் என்ற பெயர் தவறானது. உண்மையில் ஆதி சனாதன தேவ தர்மமே இருக்கின்றது. ஆனாலும், அவர்கள் தங்கள் தர்மத்திலும் கர்மத்திலும் சீரழிந்தமையால், அவர்களால் தங்களைத் தேவதேவியர்கள் என்று அழைக்க முடியவில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. இல்லாவிட்டால், தந்தை எவ்வாறு வந்து, மீண்டும் ஒருமுறை தேவ தர்மத்தை ஸ்தாபிப்பார்? ஆரம்பத்தில் நீங்கள் இவ்விடயங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்பொழுது தந்தை வந்து, உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அவர் மிகவும் இனிமையான பாபா, இருந்தும் அவரை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்! பாபாவே அனைவரிலும் அதி இனிமையானவர். ஆனால், இராவண இராச்சியத்தில் அனைவரும் உங்களுக்குத் துன்பத்தைத் தவிர வேறெதையும் கொடுப்பதில்லை. இதனாலேயே நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் பக்தர்கள். நீங்கள் அவர் நினைவிலே அன்புக்கண்ணீர் சொரிந்து, பின்வருமாறு கூறுகின்றீர்கள்: ஓ அன்பிற்கினியவரே! நீங்கள் எப்பொழுது வந்து மணவாட்டிகளைச் சந்திப்பீர்கள்? கடவுளே பக்தர்கள் அனைவரதும் கணவர். கடவுள் வந்து, உங்கள் பக்தியின் பலனை உங்களுக்குக் கொடுக்கிறார். அவர் உங்களுக்குப் பாதையைக் காட்டி, விளங்கப்படுத்துகிறார்: இது 5000 வருட நாடகம். மனிதர் எவருக்குமே படைப்பவரைப் பற்றியோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியோ தெரியாது. ஆன்மீகத் தந்தைக்கும் ஆன்மீகக் குழந்தைகளுக்கும் மாத்திரமே இது தெரியும். மனிதர் எவருக்குமே இது தெரியாது. தேவதேவியருக்குமே இது தெரியாது. ஆன்மீகத் தந்தைக்கு மாத்திரமே இது தெரியும். அவர் இங்கமர்ந்து தனது குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். வேறெந்தச் சரீரதாரியிடமும் படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் பற்றிய ஞானம் இருக்க முடியாது. ஆன்மீகத் தந்தையிடம் மாத்திரம் இந்த ஞானம் இருக்கிறது. அவர் மாத்திரமே ஞானஞானேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். உங்களை ராஜராஜேஸ்வரர்கள் (அரசர்களுக்கு அரசர்) ஆக்குவதற்கு ஞானஞானேஸ்வரர் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். இதனாலேயே இது இராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது. ஏனைய அனைத்தும் ஹத்தயோகம். அவ்வாறான ஹத்தயோகிகளின் உருவங்கள் பல இருக்கின்றன. பிற்காலத்தில் சந்நியாசிகள் வரும்பொழுது, அவர்கள் ஹத்தயோகம் கற்பிக்கிறார்கள். விரிவாக்கம் பெருமளவில் இடம்பெற்றிருக்கும்பொழுது, அவர்கள் ஹத்தயோகம் போன்றவற்றைக் கற்பிக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்தியிருக்கிறார்: நான் சங்கமயுகத்திலேயே வருகிறேன். நான் வந்து, இராச்சியமொன்றை ஸ்தாபிக்கிறேன். அவர் இங்கேயே ஸ்தாபனை நடத்துகிறாரே தவிர, சத்தியயுகத்தில் அல்ல. அங்கே சத்தியயுக ஆரம்பத்தில் இராச்சியம் இருக்கின்றது. அதனால், நிச்சயமாகச் சங்கமயுகத்திலேயே ஸ்தாபனை இடம்பெறுகிறது. இங்கே கலியுகத்தில் அனைவரும் பூஜிப்பவர்கள். சத்தியயுகத்தில் அனைவருமே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள். உங்களை அவ்வாறு பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்காகவே தந்தை இங்கு வருகிறார். இராவணனே உங்களைப் பூஜிப்பவர்கள் ஆக்குபவன். இவ்விடயங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதுவே அனைத்திலும் அதிமேலான கல்வி. அந்த ஆசிரியரைப் பற்றி எவருக்குமே தெரியாது. அவர் பரம தந்தை, ஆசிரியர், சற்குரு ஆவார். எவருக்குமே இது தெரியாது. தந்தை மாத்திரமே வந்து, தனது முழுமையான அறிமுகத்தைக் கொடுக்கிறார். அவரே குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்து, அதன் பின் உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். எல்லையற்ற தந்தையிடமிருந்து நீங்கள் அன்பைப் பெறுகிறீர்கள். அதனால், நீங்கள் வேறு எவரது அன்பையும் விரும்புவதில்லை. இந்நேரத்தில், இது பொய்யான பூமியாகும். மாயையும் பொய்யானது, சரீரங்களும் பொய்யானவை, உலகம் முழுவதுமே பொய்யானது. இப்பொழுது பாரதம் பொய்மையின் பூமியாக இருக்கிறது. பின்பு, சத்தியயுகத்தில் அது சத்திய பூமியாக இருக்கும். பாரதம் ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை. எல்லையற்ற தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை விளங்கப்படுத்தி, உங்கள் அனைவருக்கும் சற்கதி அளிக்கும் இடமாகிய இதுவே, அனைத்திலும் அதி மகத்துவம் வாய்ந்த யாத்திரீகத் தலம் ஆகும். இது மிகவும் மகிமை பொருந்திய யாத்திரீகத் தலமாகும். பாரதத்தின் புகழ் எல்லையற்றது. எவ்வாறாயினும், பாரதமே உலக மகா அதிசயம் என்பதைக் குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே புரிந்துகொள்ள முடியும். அவை மாயையின் உலக ஏழு அதிசயங்கள். கடவுளின் அதிசயம் ஒன்று மாத்திரமே உள்ளது. தந்தை ஒரேயொருவரும், அவரது அதிசயமான சுவர்க்கமும் ஒன்றேயொன்று ஆகும்;. அது வைகுந்தமாகிய, சுவர்க்கம் எனப்படுகிறது. அதற்கென்று ஒரேயொரு உண்மையான பெயர் உள்ளது. அதுவே சுவர்க்கம். இது நரகம். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே சக்கரம் முழுவதையும் சுற்றி வருபவர்கள். நாங்கள் பிராமணர்கள். பின்பு நாங்கள் தேவர்களாகுகிறோம். மேலேறும் ஸ்திதியும், கீழிறங்கும்; ஸ்திதியும் இருக்கின்றன. மேலேறும் ஸ்திதியால் அனைவருக்கும் நன்மையுள்ளது. பாரத மக்களே உலகில் அமைதியும் சந்தோஷமும் ஏற்படுவதை விரும்புபவர்கள். சுவர்க்கத்தில், சந்தோஷம் மாத்திரமே இருக்கிறது; துன்பம் என்னும் குறிப்பே இல்லை. அது கடவுளின் இராச்சியம் எனப்படுகிறது. சத்தியயுகத்தில் சூரிய வம்சம் இருக்கிறது. அதனையடுத்து, இரண்டாந் தரத்தில் சந்திர வம்சம் இருக்கிறது. நீங்கள் ஆஸ்திகர்களாகவும், அவர்கள் நாஸ்திகர்களாகவும் இருக்கிறார்;கள். நீங்கள் பிரபுவுக்கும் அதிபதிக்கும் உரியவராகி, தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். உங்களுக்கு மாயையுடன் மறைமுகமான யுத்தங்கள்; உள்ளன. தந்தை இரவிலேயே வருகிறார். சிவனின் இரவாகிய, சிவராத்திரி இருக்கின்றபொழுதிலும், மக்கள் சிவனது இராத்திரி என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. பிரம்மாவின் இரவு முடிவடைந்து, பகல் ஆரம்பமாகுகிறது. கடவுள் கிருஷ்ணரின் வாசகங்களைப் பற்றி அவர்கள் பேசுகின்றனர். இவை கடவுள் சிவனுடைய வாசகங்களாகும். இப்பொழுது, யார் சரியானவர்? கிருஷ்ணர் முழுமையாக 84 பிறவிகளையும் எடுப்பவர். தந்தை கூறுகிறார்: நான் வந்து, ஒரு சாதாரண, பழைய சரீரத்தில் பிரவேசிக்கிறேன். அவருக்கும்; தன் சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாது. பல பிறவிகளின் இறுதியில் அவர் தூய்மையற்றவர் ஆகும்பொழுது, நான் தூய்மையற்ற உலகிற்குள் வந்து, தூய்மையற்ற இராச்சியத்தில் பிரவேசிக்கிறேன். தூய்மையற்ற உலகில் பல இராச்சியங்கள் இருக்கின்றன. தூய உலகிலோ ஒரேயொரு இராச்சியமே இருக்கின்றது. அந்தக் கணக்கு இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் தீவிரமாகப் பக்தி செய்து, தங்களை தலைகளை வெட்டவும் தயாராகும்பொழுது, அவர்களது ஆசைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும், இல்லாவிட்டால், அதில் வேறு எதுவுமேயில்லை. அது தீவிர பக்தி எனப்படுகிறது. இராவண இராச்சியம் ஆரம்பமாகிய முதல் மக்கள் பக்தியின் சம்பிரதாயங்களைக் கற்றுத் தொடர்ந்தும் கீழிறங்கி வந்திருக்கிறார்கள். கடவுள் வியாசர் சமயநூல்களை உருவாக்கினார் என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் எதனை எழுதியுள்ளார்கள் என்று பாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானத்தினதும், பக்தியினதும் இரகசியங்களைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். இவ் விளக்கங்கள் அனைத்தும்; ஏணியினதும், விருட்சத்தினதும் படத்தில் இருக்கின்றன. அவற்றில் 84 பிறவிகளும் காட்டப்பட்டிருக்கின்றன. அனைவரும் 84 பிறவிகள் எடுப்பதில்லை. ஆரம்பத்திலிருந்தே வருபவர்கள் மாத்திரமே முழுமையான 84 பிறவிகளையும் எடுக்கிறார்கள். இந்நேரத்திலேயே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அதன் பின்னர் இது உங்கள் வருமானத்தின் மூலாதாரமாகி விடுகிறது. 21 பிறவிகளுக்கு நீங்கள் எதையுமே அடைவதற்கென்று முயற்சி செய்யத் தேவையில்லாத அளவுக்கு அங்கே எதற்குமே குறைவிருக்காது. அது உலக அதிசயமான, தந்தையின் ஒரேயொரு சுவர்க்கம் என்று குறிப்பிடப்படுகிறது. அதன் பெயரே வைகுந்தம் என்பதாகும். தந்தை உங்களை அதற்கு அதிபதிகளாக்குகிறார். அம்மக்;கள் அந்த அதிசயங்களைக் காட்டுகிறார்கள். ஆனால், தந்தையோ உங்களை அதன் அதிபதிகளாக்குகிறார். இதனாலேயே தந்தை இப்பொழுது கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். ஒவ்வொரு கணமும் என்னையே நினைவுசெய்வதனால், சந்தோஷத்தை அடையுங்கள். உங்கள் சரீரத்தின் வலி, வேதனை அனைத்தும் அகற்றப்பட்டு, ஜீவன்முக்தி அந்தஸ்தை அடைவீர்கள். தூய்மையாகுவதற்கு தந்தையின் நினைவு யாத்திரை அத்தியாவசியமானது “மன்மனாபவ” ஆகுங்கள். உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கை நோக்கி இட்டுச் செல்லும். அமைதி தாமம் முக்தியென்றே கூறப்படுகிறது. ஆனால், சற்கதியானது இங்கேயே பெறப்படுகிறது. சற்கதிக்கு எதிராகச் சீரழிவு உள்ளது. உங்களுக்கு இப்பொழுது தந்தையையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் பற்றித் தெரியும். நீங்கள் தந்தையின் அன்பைப் பெறுகிறீர்கள். தந்தை உங்களைத் தனது ஒரு கணப் பார்வையினால் அப்பால் அழைத்துச் செல்கிறார். அவர் நேரடியாக வந்து, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். இதிலே தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார்: இந்த முறையில் நினைவுசெய்வதால், ஒரு மின்கலத்திற்குச் சக்தியேற்றப்படுவது போல உங்களுக்குச் சக்தி கிடைக்கும். இது ஒரு மோட்டார். இதன் மின்கலம் மந்தமாகி விட்டது. இப்பொழுது உங்கள் புத்தியின் யோகத்தைச் சர்வசக்திவான் தந்தையுடன் இணைப்பதனால், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகுவதுடன், உங்கள் மின்கலங்களும் சக்தியேற்றப்படும். தந்தையே வந்து, அனைவருடைய மின்கலங்களுக்கும் சக்தியேற்றுகிறார். தந்தை மாத்திரமே சர்வசக்திவான். தந்தை மாத்திரமே இங்கிருந்து இந்த இனிமையான விடயங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கூறுகிறார். பிறவிபிறவியாக நீங்கள் பக்தி மார்க்கத்துச் சமயநூல்களைக் கற்றுக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது தந்தை சகல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரேயொரு விடயத்தையே கூறுகிறார். அவர் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். என்னை நினைவுசெய்வது குழந்தைகளாகிய உங்கள் கடமை. இதையிட்டுக் குழப்பம் அடைதல் என்னும் கேள்விக்கே இடமில்லை. ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். நீங்கள் அனைவரும் தூய்மையாகியதும் அனைவரும் வீடு திரும்புவார்கள். இந்த ஞானம் அனைவருக்கும் உரியது. இது இலகு இராஜயோகமும், இலகு ஞானமும் ஆகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சர்வசக்திவான் தந்தையுடன் உங்கள் புத்தியின் யோகத்தை இணைத்து, உங்கள் மின்கலத்திற்குச் சக்தியேற்றுங்கள். ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குங்கள். ஒருபொழுதும் நினைவு யாத்திரையைப் பற்றிக் குழப்பமடையாதீர்கள்.2. இந்தக் கல்வியைக் கற்று, உங்கள் மீது கருணை காட்டுங்கள். தந்தையைப் போல், அன்புக் கடலாகுங்கள். தந்தையின் அன்பு அழிவற்றது. அதைப் போல், அனைவர் மீதும் உண்மையான, அழிவற்ற அன்பு கொண்டவராக இருங்கள். பற்றை வென்றவராகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் இலகுயோகி, உங்கள் மனதையும் புத்தியையும் திடசங்கற்பம் எனும் சக்தி மூலம் உங்கள் ஆசனத்தில் நிலைநிறுத்துவீர்களாக.குழந்தைகளாகிய நீங்கள் தந்தை மீது அன்பு கொண்டிருக்கின்றீர்கள், இதனாலேயே அமரும்பொழுதும், நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும், சேவை செய்யும்பொழுதும் சக்திவாய்ந்த நினைவைக் கொண்டிருப்பதில் நீங்கள் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும். எவ்வாறாயினும், உங்கள் மனம் மீது உங்களுக்கு முழுக் கட்டுப்பாடு இல்லாவிட்டால், உங்கள் மனம் ஒழுங்குமுறையாக இல்லாது விட்டால், நீங்கள் ஒரு குறுகிய நேரத்திற்குச் சரியாக அமர்ந்திருக்கின்றீர்கள், பின்னர் அமைதியை இழக்க ஆரம்பிக்கின்றீர்கள். சிலவேளைகளில் நீங்கள் மிகச்சரியாக உங்களை நிலை நிறுத்துகின்றீர்கள். சிலவேளைகளில் குழப்பம் அடைகின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் உங்களுடைய மனதையும், புத்தியையும் நிலையான, ஸ்திரமான ஸ்திதி எனும் ஆசனத்தில் நிலைநிறுத்துவதற்கு, மனஒருமைப்பாட்டுச் சக்தியை அல்லது திடசங்கற்பத்தைப் பயன்படுத்தும்பொழுதே, ஓர் இலகுயோகியாக ஆகுவீர்கள்.
சுலோகம்:
தேவையேற்படும் நேரத்தில் உங்கள் சக்திகளைப் பயன்படுத்துங்கள், அப்பொழுது நீங்கள் மிகச்சிறந்த அனுபவங்களைக் கொண்டிருப்பீர்கள்.