17.12.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்குத் தினமும் கற்பிக்கின்ற கல்வியை ஒருபொழுதும் தவறவிடாதீர்கள். இக் கல்வியைக் கற்பதனால் மாத்திரமே உங்களுக்குள் உள்ள சந்தேகங்கள் அகற்றப்படும்.
கேள்வி:
தந்தையின் இதயத்தை வெல்வதற்கான வழி என்ன?
பதில்:
தந்தையின் இதயத்தை வெல்;வதற்கு, சங்கமயுகம் இருக்கும்வரை அவரிடம் ஒருபொழுதும் எதனையும் மறைக்காதீர்கள். உங்கள் நடத்தையில் முழுக் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஏதாவது பாவச் செயல்களைச் செய்தால், அழிவற்ற சத்திரசிகிச்சை நிபுணரிடம் கூறுங்கள், அப்பொழுது நீங்கள் இலேசானவர் ஆகுவீர்கள். தந்தையின் கருணையும், அவரது நல்லாசிகளும், அவரது ஆசீர்வாதங்களுமே அவர் உங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்கள் ஆகும். ஆகையால் தந்தையிடம் கருணையை வேண்டி நிற்பதிலும் பார்க்க, உங்கள் மீது கருணை கொள்ளுங்கள். நீங்கள் தந்தையின் இதயத்தை வெற்றி கொள்ளும் வகையில் அத்தகைய முயற்சியைச் செய்யுங்கள்.
ஓம் சாந்தி.
புதிய உலகில் சந்தோஷமும், பழைய உலகில் துன்பமும் உள்ளன என்பதை ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்;கள். துன்ப வேளையில் அனைவரும் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள், சந்தோஷ வேளையில் அனைவரும் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். சந்தோஷ தாமத்தில் துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்க முடியாது. துன்பம் இருக்குமிடத்தில் சந்தோஷத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்க முடியாது. எங்கு பாவம் இருக்கின்றதோ அங்கு புண்ணியத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்க முடியாது. எங்கு புண்ணியம் உள்ளதோ அங்கு பாவத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்க முடியாது. இவை எந்த இடங்கள்? ஒன்று சத்தியயுகமும், மற்றையது கலியுகமும் ஆகும். இது நிச்சயமாகக் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்க வேண்டும். துன்பகாலம் இப்பொழுது முடிவடைகிறது, நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றீர்கள். இப்பொழுது நாங்கள் இந்த அழுக்கான, தூய்மையற்ற உலகை நீங்கி, சத்திய யுகத்திற்கு, அதாவது, இராம இராச்சியத்திற்குச் செல்ல இருக்கிறோம். புதிய உலகில் சந்தோஷமும், பழைய உலகில் துன்பமும் உள்ளன. உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பவரே உங்களுக்குத் துன்பத்தையும் விளைவிக்கிறார் என்றில்லை; இல்லை. தந்தையினால் சந்தோஷமே கொடுக்கப்படுகின்றது, இராவணனான மாயையினால் துன்பம் விளைவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் அந்த எதிரியின் கொடும்பாவிகள் எரிக்கப்படுகின்றன. துன்பத்தை விளைவிப்பவர்களின் கொடும்பாவிகளே எப்பொழுதும் எரிக்கப்படுகின்றன. அவனது இராச்சியம் முடிவடையும்பொழுது, அது சதா காலத்துக்குமாக முடிவடையும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஐந்து விகாரங்களே அனைவருக்கும் அவை ஆரம்பித்த காலத்திலிருந்து மத்தியினூடாக அவற்றின் இறுதிவரை துன்பத்தை விளைவிப்பன. இங்கமர்;ந்திருந்தபொழுதிலும் நீங்கள் பாபாவிடம் செல்ல வேண்டும் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இராவணனை உங்கள் தந்தையென அழைக்க மாட்டீர்கள். இராவணனை “பரமாத்மாவாகிய பரமதந்தை!” என எவராவது அழைத்ததை நீங்கள் எப்பொழுதாவது கேட்டதுண்டா? ஒருபொழுதும் இல்லை! இலங்கையில் இராவணன் வசித்தான் எனச் சிலர் நினைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இந்த முழு உலகமுமே இலங்கைத்தீவு ஆகும். வஸ்கொடகாமா உலகம் முழுவதையும் நீராவிக்கப்பலில் அல்லது படகில் சுற்றி வந்தார் என மக்கள் கூறுகிறார்கள். அவர் உலகைச் சுற்றி வந்த காலத்தில், ஆகாய விமானங்கள் போன்றன இருக்கவில்லை. புகையிரதங்களும் நீராவியில் இயங்கின. மின்சாரம் வேறான விடயம். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஒரேயொரு உலகமே உள்ளது; அது புதியதிலிருந்து பழையதாகவும், பழையதிலிருந்து புதியதாகவும் மாறுகிறது. முதலில் ஸ்தாபனையும், பின்னர் பராமரிப்பும், அதன்பின்னர் விநாசமும் உள்ளன எனக் கூறுவது சரியல்ல. முதலில் ஸ்தாபனையும், பின்னர் விநாசமும், அதன்பின்னர் பராமரிப்பும் உள்ளதெனக் கூறுவதே சரியாகும். இராவணனால் உங்களுக்குக் கொடுக்கப்படும் பராமரிப்பு, பின்னரே இடம்பெறுகிறது. அது பொய்யான பராமரிப்பாகும், அதன் மூலம் நீங்கள் தூய்மையற்றவராகவும் விகாரமுள்ளவராகவும் ஆகுகிறீர்கள். அப் பராமரிப்பின் மூலம் அனைவரும் துன்பத்தையே அனுபவம் செய்கிறார்கள். தந்தை என்;றுமே எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை. இங்குள்ள அனைவரும் தமோபிரதானாக உள்ளதால், தந்தையைச் சர்வவியாபி எனக் கூறுகின்றார்கள். அவர்கள் என்னவாகியுள்ளார்கள் எனப் பாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, இவ்விடயங்களை உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். இது மிகவும் இலகுவானது; இது அல்ஃபா பற்றியதோர் எளிமையான விடயம். நீங்கள் அதிகாலையில் விழித்தெழுந்து அல்லாவை நினைவுசெய்ய வேண்டும் என இஸ்லாமியர்களும் கூறுகிறார்கள். அவர்களும் அதிகாலையில் விழித்தெழுகிறார்கள். அவர்கள் “அல்லாவை அல்லது “குதாவை (கடவுள்) நினைவுசெய்யுங்கள்” எனக் கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் “தந்தையை நினைவுசெய்யுங்கள்” எனக் கூறுகிறீர்கள். “பாபா” என்ற வார்த்தை மிகவும் இனிமையானது. “அல்லா” எனக் கூறுவதினால் உங்களால் உங்கள் ஆஸ்தியை நினைவுசெய்ய முடியாது. ஆனால் “பாபா” எனக் கூறுவதினால் நீங்கள், உங்கள் ஆஸ்தியை நினைவுசெய்கிறீர்கள். இஸ்லாமியர்கள் தந்தை எனக் கூறுவதில்லை. அவர்கள் பிரபுவாகிய அல்லா பற்றிப் பேசுகின்றார்கள். கணவன், மனைவி பற்றி மக்கள் பேசுகிறார்கள். இவ் வார்த்தைகள் அனைத்தும் பாரதத்திலே உள்ளன. பாரத மக்கள் “பரமாத்மாவாகிய பரமதந்தை” எனக் கூறும்பொழுது, அவர்கள் ஒரு சிவலிங்கத்தையே நினைவுசெய்கின்றார்கள். ஐரோப்பியர்கள் தந்தையாகிய கடவுள் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் பாரத மக்கள் கூழாங்கற்களையும் கற்களையும் கூட கடவுள் எனக் கருதுகிறார்கள். சிவலிங்கங்களும் கல்லால் செய்யப்படுகின்றன. அவர்கள் கடவுள் அந்தக் கல்லில் இருக்கிறார் என எண்ணுவதால், கடவுளை நினைவுசெய்யும்பொழுது, அக்கல்லினாலான உருவமே அவர்கள் முன் தோன்றுகின்றது. அவர்கள் அக்கல்லைக் கடவுள் எனக் கருதி அதனை வழிபடுகின்றார்கள். அத்தகைய கற்கள் எங்கிருந்து வருகின்றன? அவை மலைகளிலிருந்து நீரோடைகளினால் கீழே தள்ளப்பட்டு, அழுத்தமாக்கப்பட்டு, நீரினால் வட்டவடிவம் ஆக்கப்படுகிறது. இயல்பாகவே அது ஓர் அடையாளம் ஆகுகின்றது. தேவர்களினது உருவச்சிலைகள் அவ்வாறில்லை. சிற்பிகள் கல்லில் அழகிய காதுகள், வாய்கள், மூக்குகள், கண்கள் போன்றவற்றுடன் சிலைகளைச் செதுக்குகிறார்கள். அவர்கள் பெருமளவு பணத்தைச் செலவழிக்கிறார்கள். எவ்வாறாயினும்; சிவபாபாவின் வடிவத்தை அமைப்பதற்குச் செலவு எனும் கேள்வியே கிடையாது. நீங்களே இப்பொழுது உயிருள்ள ரூபத்தில் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் உயிருள்ள ரூபத்தில் இருக்கும்பொழுது பூஜிக்கப்படுவதில்லை. மக்கள் கல்லுப்புத்தி உடையவராகும்பொழுதே, கல்லைப் பூஜிக்கிறார்கள். நீங்கள் உயிருள்ள ரூபத்தில் இருக்கும்பொழுது பூஜிக்கத் தகுதியுடையவர்கள் ஆகுகிறீர்கள். அதன்பின்னர் நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகுகின்றீர்கள். சத்தியயுகத்தில் பூஜிப்பவர்களோ அல்லது கற்சிலைகளோ இல்லை. அங்கு அவற்றிற்கான தேவை இல்லை. உயிருள்ள ரூபத்தில் இருந்தவர்களின் ஞாபகார்த்தங்களாகக் கற்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அத்தேவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எவை என இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அவை மீண்டும் ஒருமுறை இடம்பெறும். முன்னர் உங்களுடைய மூன்றாவது ஞானக்கண் உங்களிடம் இல்லாதிருந்தபொழுது, உங்கள் புத்தி கல்லைப் போன்றிருந்தது. தந்தையிடமிருந்து நீங்கள் அனைவரும் பெறுகின்ற ஞானம் ஒன்றே, ஆனால் நீங்கள் அனைவரும் அதனை வரிசைக்கிரமமாகவே பெறுகின்றீர்கள். ஆகவே, உருத்திரமாலை (ஆத்மாக்களின்) நீங்கள் ஒவ்வொருவரும் கிரகிக்குமளவிற்கு ஏற்பவே உருவாக்கப்படுகிறது. ஒரு மாலை உருத்திர மாலையும், அடுத்தது உருண்டா மாலையும் (மனிதர்களின்) ஆகும். ஒன்று சகோதரர்களினதும் (ஆத்மாக்களின்), மற்றையது சகோதர, சகோதரிகளினதும் ஆகும். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சின்னஞ்சிறிய புள்ளிகள் போன்றவர்கள் என்பது உங்கள் புத்தியில் இப்பொழுது உள்ளது. பாடல் கூறுகின்றது: அற்புதமான நட்சத்திரம் ஒன்று நெற்றியின் நடுவில் பிரகாசிக்கின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் உயிருள்ளவர்கள் என்றும், நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய நட்சத்திரம் போன்றவர்கள் என்றும் இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். கருப்பையில் பிரவேசிக்கும் ஆத்மாவின் சரீரம் முதலில் சிறியதாக இருந்து, பின்னர் பெரிதாக வளர்ச்சியடைகிறது. ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களின் மூலம் தங்கள் அழிவற்ற பாகங்களைத் தொடர்ந்தும் நடிக்கிறார்கள். பின்னர் அனைவரும்; சரீரங்களை நினைவுசெய்ய ஆரம்பிக்கிறார்கள். சரீரங்களே அனைவரையும் கவர்கின்றன. ஏனெனில் அவை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ உள்ளன. சத்தியயுகத்தில் ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள் என்றோ அல்லது உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள் என்றோ நீங்கள் எவருக்கும் கூற வேண்டியதில்லை. இப்பொழுதே உங்களுக்கு இந்த ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் ஆத்மாக்கள் இப்பொழுது தூய்மையற்றுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் தூய்மையற்றுள்ளதால், அவர்கள் செய்யும் செயல்கள் எதுவானாலும் பிழையானதாகவே இருக்கின்றன. தந்தை உங்களைச் சரியாகச் செயற்படுமாறு தூண்டுகிறார், ஆனால் மாயை உங்களைப் பிழையாகச் செயற்படுமாறு செய்கிறாள். தந்தையைச் சர்வவியாபி என அழைப்பதே மிகப்பெரிய பிழையான செயலாகும். ஒவ்வோர் ஆத்மாவும் நடிக்கின்ற பாகம் அழிவற்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒருபொழுதும் எரிக்கப்படுவதில்லை. நீங்கள் பூஜிக்கப்படுகிறீர்கள், உங்கள் சரீரங்கள் எரிக்கப்படுகின்றன. ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கும்பொழுது, அந்த ஆத்மா வேறொரு சரீரத்தினுள் பிரவேசிக்கிறார், பழைய சரீரம் எரிக்கப்படுகின்றது. ஓர் ஆத்மா இன்றி ஒரு சரீரத்தை இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை கூட வைத்திருக்க முடியாது. எவ்வாறாயினும் சில சரீரங்கள் இரசாயனப் பதார்த்தங்களினால் பாதுகாக்கப்படுகின்றன. அதில் என்ன நன்மை உள்ளது? பரிசுத்த சேவியரின் சரீரம் இன்னமும் பாதுகாக்கப்படுகிறதென கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள். அது அவரின் ஆலயம் ஒன்று அங்கு உள்ளது போன்றிருக்;கிறது. அவர்கள் காட்டுகின்ற அவருடைய ஒரேயொரு பகுதி அவரது பாதம் ஆகும். அவரது பாதத்தைத் தொடும் எவரும் ஒருபொழுதும் நோய்வாய்ப்படமாட்டார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். அவரது பாதத்தைத் தொட்ட பின்னர் தங்கள் நோயிலிருந்து விடுபட்ட உணர்வு ஏற்பட்டால் அது அவரின் கருணையே என அவர்கள் நம்புகிறார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்கள் தங்கள் நம்பிக்கையின் பலனைப் பெறுகிறார்கள். சிலர் தங்கள் புத்தியில் கொண்டிருக்கும் நம்பிக்கையினாலேயே நன்மை அடைகிறார்கள். எவ்வாறாயினும், அது உண்மையில் அவ்வாறாக இருந்திருந்தால் பெருந்திரளான மக்கள் அங்கு செல்வார்கள், அங்கு மிகப்பெரியதொரு ஒன்றுகூடல் இடம்பெறும். தந்தை இங்கு வந்துள்ளார், ஆனால் இங்கு இன்னமும் பெரிய மக்கள்கூட்டம் வரவில்லை. எவ்வாறாயினும், அனைவருக்கும் போதிய இடவசதியும் இல்லை. பலரும் வருவதற்கான நேரம் வரும் பொழுது விநாசம் இடம்பெறும். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்திற்கு ஆரம்பமோ அல்லது முடிவோ இல்லை. ஆம். விருட்சம் முற்றிலும் உக்கிய நிலையை அடைகிறது, அதாவது, இது தமோபிரதான் ஆகுகிறது. ஆகவே அது பின்னர் மாற்றமடைய வேண்டும். இந்த விருட்சம் எல்லையற்றது. முதல் இலக்கத்தில் வரவேண்டியவர்கள் முதலில் கீழிறங்கி வருவார்கள். அனைவரும் வரிசைக்கிரமமாகக் கீழிறங்க வேண்டும். சூரிய வம்சத்தில் உள்ள அனைவரும் ஒருமித்துக் கீழிறங்க முடியாது. சந்திர வம்சத்திற்குரியவர்களும் ஒருமித்து கீழிறங்கி வர முடியாது. அவர்கள் மாலையில் தங்களது இடத்திற்கு ஏற்ப வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருவார்கள். எவ்வாறு சகல நடிகர்களும் ஒரே நேரத்தில் மேடைக்கு ஒருமித்து வர முடியும்? முழு நாடகமும் சீர்கெட்டு விடும்! இந்த நாடகம் மிகவும் சரியானது; அதில் சிறிதளவு மாற்றமும் இருக்க முடியாது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்பொழுது, இவ்விடயங்களை மாத்திரம் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். ஏனைய சற்சங்கங்களில் அவர்கள் பலவகைப்பட்ட விடயங்கள் அனைத்தையும் தங்கள் புத்தியில் வைத்திருக்கிறார்கள். இங்கு இந்த ஒரேயொரு கல்வி மாத்திரமே உள்ளது, அதன் மூலம் உங்கள் வருமானத்தை நீங்கள் சம்பாதிக்க முடியும் அந்தச் சமயநூல்களைக் கற்பதால் நீங்கள் வருமானம் எதனையும் சம்பாதிக்க மாட்டீர்கள். ஆம், நீங்கள் நற்குணங்கள் சிலவற்றைக் கிரகித்துக் கொள்ள முடியும். அமர்ந்திருந்து கிராந்தை (சீக்கிய சமயநூல்) வாசிப்பவர்கள் அனைவரும் விகாரமற்றவர்கள் என்றில்லை. தந்தை கூறுகின்றார்: இவ்வுலகில் உள்ள அனைவரும் சீரழிவினாலேயே படைக்கப்படுகிறார்கள். அங்கு எவ்வாறு குழந்தைகள் பிறப்பு எடுப்பார்கள் எனப் பலர் குழந்தைகளாகிய உங்களிடம் கேட்கிறார்கள். அவர்களிடம் கூறுங்கள்: அங்கு ஐந்து விகாரங்களும் இருப்பதில்லை. குழந்தைகள் யோக சக்தியின் மூலம் பிறக்கின்றார்கள். அவர்கள் பிறக்கப் போகின்ற, அக் குழந்தையின் காட்சியை முன்னதாகவே காண்கிறார்கள். அங்கு விகாரம் என்ற கேள்வியே இல்லை. இங்கு மாயை குழந்தைகளாகிய உங்களிற் சிலரை வீழச் செய்கிறாள். சிலர் வந்து தந்தையிடம் கூறுகிறார்கள்;;;;;. சிலர் அவரிடம் கூறாததால், நூறு மடங்கு தண்டனையை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் எப்பொழுதாவது ஏதேனும் பாவகரமான செயல்களைச் செய்தால், உடனடியாகத் தந்தையிடம் கூறவேண்டும் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் கூறுகிறார். தந்தையே அழிவற்ற மூலிகை மருத்துவர் (hநசடியசடளைவ). சத்திரசிகிச்சை நிபுணரிடம் நீங்கள் செய்தவற்றைக் கூறுவதினால், இலேசானவர் ஆகுகிறீர்கள். சங்கமயுகம் முழுவதிலும் தந்தையிடமிருந்து எதனையும் நீங்கள் மறைக்கக்கூடாது. எவராவது எதையாவது மறைத்தால், அவரால் தந்தையின் இதயத்தை வென்றெடுக்க முடியாது. அனைத்தும் நீங்கள் செய்யும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. எவராவது பாடசாலைக்குச் செல்லாது விட்டால், எவ்வாறு அவரது நடத்தையைச் சீர்திருத்த முடியும்?; தற்சமயம், அனைவரது நடத்தையும் தீயதாக உள்ளது. காம விகாரமே முதன்மையான தீய நடத்தை. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, காம விகாரமே உங்கள் மிகக்கொடிய எதிரி. முன்னர், நானும் கீதையைச் செவிமடுப்பதுண்டு, ஆனால் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுது தந்தையே உங்களுக்குக் கீதையின் ஞானத்தை நேரடியாகக் கொடுக்கின்றார். இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத் தெய்வீகப் புத்தியைக் கொடுத்துள்ளார். பக்தியில் என்ன செய்தீர்கள் என்பதை நினைவுசெய்யும்பொழுது, நீங்கள் சிரிக்கிறீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்;; இதில் ஆசீர்வாதங்கள் அல்லது கருணை என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்களே உங்களுக்குக் கருணையையும் ஆசீர்வாதங்களையும் கொடுக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்கள் ஒவ்வொருவரையும் முயற்சி செய்யத் தூண்டுகிறார். உங்களிற் சிலர் முயற்சி செய்து தந்தையின் இதயத்தை வெற்றி கொள்கிறார்கள். சிலர் முயற்சி செய்யும்பொழுது மரணித்தும் விடுகிறார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் ஒரே கற்பித்தல்களையே கொடுக்கின்றார். சிலவேளைகளில், அவர்களுக்கு முன்னர் இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் அகற்றக்கூடிய வகையில் ஆழமான கருத்துக்கள் வெளிவருவதால் அவர்கள் மீண்டும் உஷார் ஆகுகிறார்கள். இதனாலேயே நீங்கள் ஒருபொழுதும் பாபாவின் கல்வியைத் தவறவிடக்கூடாது. தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயம். நீங்கள்; தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். எவராவது தீய விடயங்களைப் பற்றி உங்களுடன் பேசினால் கேட்டும் கேட்காதிருங்கள். தீயதைக் கேட்காதீர்கள்! உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு நீங்கள் நிச்சயமாகப் புகழ்ச்சி இகழ்ச்சி, மரியாதை அவமரியாதை, சந்தோஷம் துன்பம், வெற்றி தோல்வி என்பவற்றைச் சகித்துக் கொள்ள வேண்டும். தந்தை உங்களுக்குப் பல்வேறு வழிமுறைகளைக் கொடுக்கின்றார். இருப்பினும் சில குழந்தைகள் தந்தையைச் செவிமடுத்தபொழுதிலும், அவர் கூறிய எதனையும் செவிசாய்க்காததைப் போன்றுள்ளது. ஆகவே, அவர்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவார்கள்? தந்தை கூறுகின்றார்: நீங்கள் சரீரமற்றவராகும் வரை, மாயையினால் ஏதோவொரு வகையில் தொடர்ந்தும் தாக்கப்படுவீர்கள். நீங்கள் தந்தை கூறுவதைச் செவிமடுக்காது விட்டால் தந்தையை அவமரியாதை செய்கிறீர்கள் என்றே அர்த்தம். அப்படியிருந்தும் தந்தை இன்னமும் கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் சதா உயிர்ப்புடனும், உணர்வுடனும் இருந்து, தந்தையை நினைவுசெய்து உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்களாக. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எவராவது பிழையான விடயங்களை உங்களுக்குக் கூறினால் கேட்டும் கேட்காதிருங்கள். தீயதைக் கேட்காதீர்கள்! நீங்கள் சந்தோஷமும் துன்பமும்;, வெற்றியும் தோல்வியும், மரியாதையும் அவமரியாதையும் போன்ற அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும்.
2. தந்தை கூறுவதைப் புறக்கணிப்பதால், அவரை ஒருபொழுதும் அவமரியாதை செய்யாதீர்கள். மாயையினால் தாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு நிச்சயமாகச் சரீரமற்ற ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் எந்த எல்லைக்குட்பட்ட, இராஜரீகமான ஆசைகளிலிருந்தும் விடுபட்டிருக்கும்பொழுது, சேவை செய்வதனால், ஒரு தன்னமற்ற சேவையாளர் ஆகுவீர்களாக.
தந்தை பிரம்மா எந்தக் கர்ம பந்தனத்திலிருந்தும் விடுபட்டிருப்பதற்கும், பற்றற்றிருப்பதற்குமான அத்தாட்சியைக் கொடுத்தார். சேவையையும் அன்பையும் விட, வேறு பந்தனங்கள் இருக்கவில்லை. சேவையில் உள்ள எல்லைக்குட்பட்ட, இராஜரீகமான ஆசைகளும் உங்களைக் கர்மக் கணக்குகளின் பந்தனத்தில் கட்டுகின்றன. உண்மையான சேவையாளர்கள் இந்தக் கர்மக் கணக்குகளிலிருந்து விடுபட்டிருக்கின்றார்கள். சரீர பந்தனம் சரீரத்துடனான உறவுமுறைகளில் ஒரு பந்தனமாக இருப்பதைப் போன்று, அதேவிதமாக, சேவையிலுள்ள சுயநலமான உள்நோக்கமும் ஒரு பந்தனமாகும். இந்தப் பந்தனத்திலிருந்தும், இராஜரீகமான கர்மக் கணக்குகளிலிருந்தும் விடுபட்டு, ஒரு தன்னலமற்ற சேவையாளர் ஆகுங்கள்.சுலோகம்:
ஒரு கோப்பில் உங்கள் சத்தியங்களை வைத்திருக்காதீர்கள், ஆனால் அவற்றை முழுமையாகுவதனால் (இறுதி) வெளிப்படுத்துங்கள்.