01.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான பிரத்தியேக வகுப்பைப் (வரவைழைn) பெறுவதற்கு நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் சிப்பிகளிலிருந்து வைரங்களாகிக் கொண்டிருக்கிறீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள், ஏன் இக் கல்வியைக் கற்பதற்கு எவ்விதச் செலவுகளையும் செய்வதில்லை?

8பதில்:
உங்கள் தந்தையே உங்களது ஆசிரியரும் என்பதாலாகும். தந்தை எவ்வாறு தனது குழந்தைகளிடமிருந்து கட்டணம் அறவிட முடியும்? நீங்கள் தந்தையின் ஒரு குழந்தையாகி, அவரது மடியில் அமர்ந்துவிட்டதும், ஆஸ்திக்கான உரிமையைப் பெறுகிறீர்கள். ஒரு சிப்பியளவு கூட செலவு செய்யாமல், குழந்தைகளாகிய நீங்கள் வைரங்கள் போன்ற தேவர்கள் ஆகுகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் யாத்திரைகள் செல்வதுடன், தான தர்மங்களும் செய்கிறார்கள். அவை அனைத்தும் வீணான செலவுகளேயன்றி. வேறெதுவுமில்லை. இங்கு தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் இராச்சியத்தைக் கொடுக்கிறார். அவர் முழு ஆஸ்தியையும் உங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறார். ஆகவே தூய்மையானவர்களாகி, உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் மாணவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தையின் மாணவர்கள் எதனைக் கற்கின்றார்கள்? மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான பிரத்தியேக வகுப்பை நாங்கள் பெறுகின்றோம். பரமாத்மாவாகிய பரமதந்தையிடமிருந்து ஆத்மாக்களாகிய நாங்கள் பிரத்தியேக வகுப்பைப் பெறுகின்றோம். பிறவிபிறவியாக நாங்கள் எங்களைச் சரீரதாரிகளாகக் கருதினோமே அல்லாது, ஓர் ஆத்மாவாகக் கருதவில்லை என்பதை இபபொழுது புரிந்துகொண்டுள்ளோம். ஒரு லௌகீகத் தந்தை தனது குழந்தைகளைப் பிரத்தியேக வகுப்பிற்கு ஓரிடத்திற்கும், சற்கதி பெறுவதற்கு, வேறு இடத்திற்கும் அனுப்புவார். ஒரு தந்தை, முதியவரானதும், அவர் ஓய்வு பெறுவதற்கு விரும்புகின்றார். எவ்வாறாயினும், ஓய்வு ஸ்திதி என்பதன் அர்த்தத்தை எவரும் புரிந்துகொள்வதில்லை. நாங்கள் எவ்வாறு சத்தத்திற்கு அப்பாற் செல்ல முடியும்? இது அவர்களின் புத்தியில் இருப்பதில்லை. இபபொழுது நாங்கள் தூய்மையற்றவர்களாக இருக்கிறோம். ஆத்மாக்களாகிய நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அங்கு நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள். இங்கு வந்த பின்னர், நீங்கள் உங்கள் பாகங்களை நடிக்கும்பொழுது, தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது யார் உங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குவார்? மக்கள் கூவி அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! எவரும் தங்கள் குருவைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு குருவை ஏற்றுக் கொண்டிருப்பினும், அவர்களுக்கு அவர் மீது முழு நம்பிக்கை இருப்பதில்லை. ஆகையாலேயே தம்மை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கும், தம்மைச் சப்தத்திற்கு அப்பால் அழைத்துச் செல்லவும் இன்னொரு குருவைத் தேடுகின்றார்கள். இதற்குப் பல வழிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. இன்ன, இன்னார் அதிகம் புகழப்படுவதாகக் கேள்விப்பட்டதும், அவர்கள் அவரிடம் செல்வார்கள். உங்கள் ஞானத்தின் அம்புகள், இந்த விருட்சத்தின் மரக்கன்றுகளையே தாக்கும். இது மிகவும் தெளிவானது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். நீங்கள் உண்மையில் ஓய்வு ஸ்திதிக்குச் செல்கின்றீர்கள். அது ஒரு பெரிய விடயமல்ல. ஓர் ஆசிரியருக்கு ஒரு பாடசாலையில் கற்பிப்பது ஒரு பெரிய விடயமல்ல. பக்தர்களுக்கு என்ன வேண்டுமென்று எவருக்கும் தெரியாது. இந்த நாடகச் சக்கரத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிகவும் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். உண்மையில் தந்தையே, உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுத்தார் என்பதையும், அதனையே இப்பொழுது அவர் மீண்டும் கொடுக்கின்றார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆகவே நீங்கள் அதே ஸ்திதியை மீண்டும் அடைவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் இதனைப் புரிந்துகொள்கிறீர்கள். தூய்மையாகுவதற்கு, முதன்மையானதும், முக்கியமானதுமான விடயம் தந்தையை நினைவுசெய்தலாகும். அனைவரும் தங்கள் லௌகீகத் தந்தையை நினைவுசெய்கின்றார்கள். அவர்களுக்குத் தங்கள் பரலோகத் தந்தையைக்கூடத் தெரியாது. இதுவே அனைத்திலும் இலகுவானது என்பதையும், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்வதே மிகவும் சிரமமானது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மா ஓர் சின்னஞ்சிறிய நட்சத்திரம் போன்றவர். தந்தையும் ஒரு நட்சத்திரமேயாவார். அவர் முழுமையான தூய ஆத்மா. ஆனால் இவரோ முற்றிலும் தூய்மையற்றவர். முழுமையாகத் தூய்மையான ஒருவரின் சகவாசம் உங்களை அக்கரைக்கு இட்டுச் செல்லும். ஆனால் அது ஒரேயொருவருடைய சகவாசமேயாகும். உங்களுக்கு நிச்சயமாகச் சகவாசம் தேவை. ஐந்து விகாரங்கள் என்ற இராவணனின் தீய சகவாசமும் உங்களிடமுள்ளது. அது இராவணனின் சமுதாயம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் இராமரின் சமுதாயத்திற்கு உரியவர்களாக ஆகுகின்றீர்கள். நீங்கள் இராமரின் சமுதாயத்தினர் ஆகும்பொழுது, இராவண சமுதாயம் இங்கு இருக்க மாட்டாது. உங்களுடைய புத்தியில் இந்த ஞானம் உள்ளது. கடவுள் இராமர் என்று அழைக்கப்படுகிறார். கடவுளே வந்து, இராம இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார். அதாவது அவர் சூரிய வம்ச இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார். அதனை இராம இராச்சியம் என்று அழைக்க முடியாது. ஆனால் இராம இராச்சியத்தையும், இராவண இராச்சியத்தையும் விளங்கப்படுத்துவது இலகுவானதாகும். உண்மையில் அது சூரிய வம்ச இராச்சியமாகும். உங்களிடம் ஒரு சிறிய கைநூல் உள்ளது: எவ்வாறு நீங்கள் உங்கள் வாழ்க்கையை வைரம் போன்று ஆக்க முடியும்? இப்பொழுது உங்களைத் தவிர, ஏனைய மனிதர்களுக்கு, வைரம் போன்ற வாழ்க்கை பற்றி என்ன தெரியும்? ‘எவ்வாறு நீங்கள் தேவர்களைப் போன்று, ஒரு வைர வாழ்க்கையை உருவாக்குவது?’ என்று நீங்கள் எழுத வேண்டும்;. ‘தேவர்’ என்ற வார்த்தையையும் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இங்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையை வைரம் போன்று ஆக்குகிறீர்கள் என்பதை உணர்கிறீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் அதனை அவ்வாறு ஆக்க முடியாது. நூல் நல்லது. ஆனால், இந்தச் சொற்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்: ஒரு சிப்பியளவுகூட செலவழிக்காது, நீங்கள் அசுரர் போன்ற சிப்பி வாழ்க்கையிலிருந்து, தேவர் போன்ற வைர வாழ்க்கையை ஒரு விநாடியில் பெறலாம். ஒரு குழந்தை பிறந்தவுடன், அவருக்குத் தந்தையின் ஆஸ்திக்கான உரிமை கிடைக்கிறது. குழந்தை ஏதாவது செலவு செய்கின்றதா? தந்தையின் மடிக்குச் சென்றதும் அவர் ஆஸ்திக்கான உரிமையைப் பெறுகிறார். தந்தைக்கே செலவு ஏற்படுகின்றதேயன்றி, குழந்தைக்கல்ல. இதுவரை நீங்கள் என்ன செலவழித்தீர்கள்? தந்தைக்கு உரியவர்கள் ஆகியதால், உங்களுக்கு ஏதாவது செலவுகள் ஏற்பட்டதா? இல்லை. ஒரு லௌகீகத் தந்தைக்கு உரியவராகுவதற்கு உங்களுக்கு எவ்விதச் செலவும் ஏற்படாததைப் போன்று, பரலோகத் தந்தைக்கு உரியவர்கள் ஆகுவதால், உங்களுக்கு எவ்விதச் செலவும் ஏற்படாது. தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் தேவர்கள் ஆக்குகிறார். நீங்கள் சிறு குழந்தைகள் அல்ல. நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். நீங்கள் தந்தைக்கு உரியவர்கள். ஆகவே தந்தை உங்களுக்குப் புத்திமதி கூறுகிறார்: நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்க வேண்டும். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். அதற்கு எச்செலவும் செய்ய வேண்டியதில்லை. கங்கையில் குளிப்பதற்கு அல்லது யாத்திரைத் தலங்களுக்கு மக்கள் செல்லும்பொழுது, அவர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்குத் தந்தை மீது நம்பிக்கை ஏற்படும்பொழுது, அதனால் உங்களுக்கு ஏதாவது செலவு ஏற்பட்டதா? மக்கள் உங்கள் நிலையங்களுக்கு வரும்பொழுது, எல்லையற்ற தந்தையிடமிருந்து, தங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுமாறும், தந்தையை நினைவு செய்யுமாறும் நீங்கள் அவர்களிடம் கூறுகின்றீர்கள். அவரே தந்தை ஆவார். தந்தையே கூறுகிறார்: என்னிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கு நீங்கள் விரும்பினால், தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையானவர்கள் ஆகுங்கள். அப்பொழுதே உங்களால், தூய உலகிற்கு அதிபதிகள் ஆகமுடியும். தந்தை வைகுந்தத்தை ஸ்தாபிக்கின்றார் என்பது உங்களுக்கும் தெரியும். விவேகமான குழந்தைகள் இதனை மிக நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். ஏனைய கல்விகளில் அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இங்கு எவ்விதச் செலவுமில்லை. ஆத்மா கூறுகிறார்: நான் அழிவற்றவர், ஆனால் சரீரம் அழிந்துவிடும். குழந்தைகள் முதலான அனைவரும் அழிக்கப்பட்டு விடுவார்கள். நல்லது, அவ்வாறாயின், நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் அனைத்தையும் என்ன செய்யப் போகின்றீர்கள்? உங்களுக்குச் சில கருத்துக்கள் இருக்க வேண்டும். எவராவது செல்வந்தராக இருந்து, அவருக்கு வேறு எவரும் இல்லாவிட்டால், ஞானத்தைப் பெற்றதும், அவர் புரிந்துகொள்கிறார்: அவ்வாறான நிலைமையில் பணத்தை நான் என்ன செய்வேன்? கல்வி, வருமானத்திற்கான ஒரு மூலாதாரம் ஆகும். பாபா உங்களுக்கு ஏப்ரஹாம் லிங்கனைப் பற்றிக் கூறியுள்ளார். அவர் மிகவும் ஏழையாக இருந்தார். ஆனால் அவர் இரவில் விழித்திருந்து படிப்பார். அவர் கற்பதால், மிகவும் திறமைசாலியாகியதால், ஜனாதிபதி ஆகினார். இதற்கு ஏதும் செலவு செய்ய வேண்டி இருந்ததா? எதுவுமேயில்லை. ஏழைகள் பலர் உள்ளார்கள். ஆகவே அரசாங்கம் அவர்களின் கல்விக்குப் பணம் எதனையும் அறவிடுவதில்லை. பலர் அவ்வாறு கற்கிறார்கள். ஆகவே அவரும் எவ்விதக் கட்டணமும் செலுத்தாது ஜனாதிபதி ஆகினார். அவர் அவ்வாறான ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றார்! இந்த அரசாங்கமும் கட்டணம் எதனையும் அறவிடுவதில்லை. உலகிலுள்ள அனைவரும் ஏழைகள் என்பதை பாபா புரிந்துகொண்டுள்ளார். சிலர் எவ்வளவுதான் செல்வந்தர்களாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் மில்லியன்களை அல்லது பில்லியன்களை உடையவர்களாக இருக்கலாம். அவர்களும் ஏழைகள்தான். நான் அவர்களைச் செல்வந்தர்கள் ஆக்குகிறேன். அவர்கள் எவ்வளவு செல்வத்தைக் கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் ஒரு சில நாட்களுக்கே இருக்கப் போகின்றன என்பதையும், அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆகவே அவர்கள் அனைவரும் ஏழைகள். அனைத்தும் கல்வியிலேயே தங்கியுள்ளது. இந்தக் கல்விக்காகத் தந்தை குழந்தைகளிடமிருந்து எதனைப் பெறுவார்? தந்தையே உலக அதிபதி. எதிர்காலத்தில் நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதனை ஸ்தாபிப்பதற்காக நான் வந்துள்ளேன். இதன் விளக்கமும் பட்;ஜில் (டியனபந) உள்ளது. புதிய கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. சிவபாபா கூறுகிறார்: எனது ஆத்மாவில் முழுப் பாகமும் பதியப்பட்டுள்ளது. தந்தை வந்து, தூய்மையற்றவர்களாகவும், விகாரமுள்ளவர்களாகவும் ஆகியுள்ளவர்களைத் தூய்மையாக்குகிறார். 5000 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் தந்தையிடமிருந்து உலக இராச்சியத்தைப் பெற்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை கூறும் முக்கியமான விடயம்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அவர் உங்களுக்கு நேரடியாகவே கூறுகிறார். அவர் ஓர் இரதத்தைக் கண்டுபிடித்துள்ளார். ஆகவே தந்தை வந்துள்ளார். நி;ச்சயமாக நிர்ணயிக்கப்பட்ட ஓர் இரதம் இருக்க வேண்டும். இந்த நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. அதனை மாற்ற முடியாது. மக்கள் கூறுகிறார்கள்: இந்த இரத்தின வியாபாரி எவ்வாறு பிரஜாபிதா பிரம்மா ஆகமுடியும்? அவர் ஓர் இரத்தின வியாபாரியாக இருந்தார் என்பதனை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஒன்று நிஜமான ஆபரணம்;, மற்றையது போலியானது. இங்கும், தந்தை உங்களுக்கு நிஜமான இரத்தினங்களைக் கொடுக்கிறார். ஆகவே அந்த இரத்தினங்களால் என்ன பிரயோஜனம்? இவை ஞான இரத்தினங்கள். இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, அந்த ஆபரணங்கள்; எவ்விதப் பெறுமதியும் அற்றவை. அவர் இந்த இரத்தினங்களைக் கண்டதும், அந்த நகை வியாபாரத்தினால் எவ்விதப் பயனும் இல்லை என்பதனைப் புரிந்துகொண்டார். அழிவற்ற இந்த ஒவ்வொரு ஞான இரத்தினமும் பல நூறாயிரம் பெறுமதி வாய்ந்தது. நீங்கள் பல இரத்தினங்ளைப் பெறுகிறீர்கள். இந்த ஞான இரத்தினங்களே நிஜமானவை ஆகுகின்றன. உங்களுடைய புத்தியை நிரப்புவதற்கே தந்தை உங்களுக்கு இந்த இரத்தினங்களைக் கொடுக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவற்றை நீங்கள் இலவசமாகப் பெறுகிறீர்கள். அதற்கு நீங்கள் எவ்விதச் செலவும் செய்ய வேண்டியதில்லை. அங்கு சுவர்களிலும்;, கூரைகளிலும் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அவற்றின் பெறுமதி என்னவாக இருக்கும்? அவை பின்னர் மதிப்பிடப்படும். அங்கு வைரங்களும், இரத்தினங்;களும் கூட உங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்க மாட்டாது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். தான் ரூப்பும்; பசாந்தும் என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். பாபாவிற்கு ஒரு சின்னஞ்சிறிய உருவம் உள்ளது. அவர் ஞானக் கடலென்றும் அழைக்கப்படுகிறார். இவை ஞான இரத்தினங்கள். இவற்றின் மூலம் நீங்கள் மிகவும் செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், ஞானம் அமிர்த மழையோ அல்லது நீர் மழையோ அல்ல. ஒரு கல்வியில், நீர் என்ற கேள்விக்கே இடமில்லை. தூய்மையாகுவதற்குச் செலவீனங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. இப்பொழுது நீங்கள் புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். தந்தை ஒருவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய யோக சக்தியின் மூலம் நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் தூய்மையானவர்களாகி, தூய உலகிற்குச் செல்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே இது சரியா அல்லது அது சரியா? உங்களுடைய புத்தி இவ் விடயங்கள் அனைத்தையும் பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாடகத்தில் பக்திக்கான பாகம் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது நீங்கள் தூய்மையானவர்களாகி, தூய உலகத்திற்குச் செல்ல வேண்டும். தூய்மையாகுபவர்கள் அங்கு செல்வார்கள். இங்கு மரக்கன்றாக இருப்பவர்கள் வெளிப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள் எவரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் புதைசேற்றில் அகப்பட்டிருப்பார்;கள். அவர்கள் இதனைக் கேட்கின்றார்;கள். முடிவில் அவர்கள் கூறுவார்கள்: ‘ஓ பிரபுவே, பழைய உலகைப் புதிய உலகமாக்குகின்ற உங்கள் விளையாட்டு தனித்துவமானது!’ உங்களுடைய இந்த ஞானம் அனைத்தும் தினசரிப் பத்திரிகைகளில் அதிகமாக வெளியாகும். நீங்கள் குறிப்பாக இந்தப் படத்தை வர்ணத்தில் அச்சிட்டு, அதில் எழுதவும் வேண்டும்: சிவபாபா எங்களுக்குப் பிரஜாபிதா பிரம்மா மூலம் கற்பித்து எங்களைச் சுவர்க்க அதிபதிகள் (இலக்ஷ்மி, நாராயணன்) ஆக்குகிறார், அது எவ்வாறு? நினைவு யாத்திரை மூலமாகும். பாபாவை நினைவுசெய்வதன் மூலம் உங்கள் துரு அகற்றப்படும். நீங்கள் எங்கிருந்தாலும், உங்களால் அனைவருக்கும் இந்தப் பாதையைக் காட்ட முடியும்: தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்வதுடன், உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுங்கள். அவர்களின் முகங்களில் மாற்றம் தெரிகிறதா என்று பாருங்கள். அவர்களுடைய கண்கள் ஈரமாகுகின்றனவா? அவ்வாறாயின் அவர்களின் புத்தியில் ஏதோ பதிந்துள்ளது என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். அனைத்திற்கும் முதலில் இந்த ஒரு விடயத்தை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: 5000 வருடங்களுக்கு முன்னரும் தந்தை கூறினார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். சிவபாபா வந்துவிட்டார். இதனாலேயே சிவனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்கு அவர் விளங்கப்படுத்தியுள்ளார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். இளைய புத்திரிகள் கூட அமர்ந்திருந்து, இதனை விளங்கப்படுத்த முடியும். எல்லையற்ற தந்தை சிவபாபா இதனை விளங்கப்படுத்துகிறார். ‘பாபா’ என்ற வார்த்தை மிகவும் இனிமையானது: பாபாவும், ஆஸ்தியும். குழந்தைகளாகிய நீங்கள் இந்தளவு நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். இது மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கான பாடசாலை. எவ்வாறாயினும், தேவர்கள் தூய்மையானவர்களே. தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள்: மன்மனாபவ! நீங்கள் இவ் வார்;த்தையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்கள். இதற்கு முன்னர் நீங்கள் கேள்விப்படவில்லையானால், தந்தை இப்பொழுது உங்களுக்கு அதனைக் கூறுகிறார். தந்தை கூறுகிறார்: நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் கலப்படம் அகற்றப்பட்டு, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். இந்த முயற்சியே தேவைப்படுகின்றது. இது மிகவும் சிறந்தது, இதுவே முதற்தரமான ஞானம் என்றெல்லாம் அனைவரும் ஞானத்தையிட்டுக் கூறுகிறார்கள். ஆனால் எவருக்கும் புராதன யோகத்தையிட்டு எதுவும் தெரியாது. நீங்கள் அவர்களுக்குத் தூய்மையாகுவதைப் பற்றிக் கூறுகின்றபொழுதும் அவர்கள் அதனைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைவரும் தூய்மையற்றவர்களாகவும் தமோபிரதானாகவும் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். ஆதியில் ஆத்மாக்களாகிய நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். ‘ஓ தந்தையான கடவுளே, வாருங்கள்!’ என்று என்னைக் கூவி அழைத்தீர்கள். இப்பொழுது நான் வந்திருப்பதால், எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். இவையே தூய்மையற்றவரில் இருந்து தூய்மையானவர் ஆகுவதற்கான வழிகாட்டல்கள். நான் சர்வசக்திவானும், என்றென்றும் தூய்மையானவரும் ஆவேன். இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள். இது புராதன இராஜயோகம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யலாம். உங்கள் குழந்தைகள் போன்றவர்களையும் கவனித்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் புத்தியின் யோகம் ஏனைய அனைவரிலும் இருந்து அகற்றப்பட்டு, என்னோடு மாத்திரம் இணைக்கப்பட்டிருக்கட்டும். இதுவே மிகவும் பிரதானமான விடயமாகும். உங்களுக்கு இது புரியாதிருந்தால், உங்களுக்கு எதுவுமே புரியவில்லை என்றே அர்த்தம். ஞானத்தைப் பொறுத்தவரை, அவர்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் மிகவும் நல்ல ஞானத்தைக் கொடுக்கின்றீர்கள். நீங்கள் தூய்மையும் நல்லதே. ஆனால் நாங்கள் எவ்வாறு தூய்மையானவர் ஆகமுடியும்? அவர்கள் இதனைச் சற்றேனும் புரிந்துகொள்வதில்லை. தேவர்கள் எப்பொழுதும் தூய்மையானவர்கள். அவர்கள் எப்படி அவ்வாறு ஆகினார்கள்? இதனையே நீங்கள் முதலில் விளங்கப்படுத்த வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். நினைவுசெய்தலின் மூலமே, உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் ஏழைகளிலிருந்து செல்வந்தர் ஆகுவதற்கு, தந்தையிடமிருந்து அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தொடர்ந்தும் பெறுங்கள். இந்த இரத்தினங்கள் ஒவ்வொன்றும் நூறாயிரக் கணக்கான ரூபாய்கள் பெறுமதியானவை. இக் கல்வியின் பெறுமதி அறிந்து அதனைக் கற்றிடுங்கள். இக் கல்வியே உங்கள் வருமானத்திற்கான மூலாதாரம். இதன் மூலமே நீங்கள் உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டும்.

2. இராம சமுதாயத்தினரில் ஒருவர் ஆகுவதாயின், முற்றிலும் தூய்மையான ஒரேயொரு தந்தையின் சகவாசத்தை மாத்திரமே வைத்திருங்கள். எப்பொழுதும் தீய சகவாசத்திலிருந்து தொலைவில் இருங்கள். அனைவரிடமிருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தை அகற்றி, ஒரேயொரு தந்தையிடம் மாத்திரம் இணைத்துக்கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
ஆசீர்வாதம்: நீங்கள் உங்களில் சக்திகள் அனைத்தும் வெளிப்பட்டிருப்பதை அனுபவம் செய்து, ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

உலக மக்களிடம் – அது செல்வத்தின், புத்தியின், உறவுமுறைகளின் அல்லது தொடர்புகளினதாக இருந்தாலும், சக்தியின் சில ரூபங்கள் உள்ளன. ஆகவே அவர்கள் அது ஒரு பெரிய விடயமல்ல என்று நம்புகின்றார்கள். அந்தச் சக்தியின் அடிப்படையில், அவர்கள் வெற்றியும் அடைகின்றார்கள். உங்களிடம் சக்திகள் அனைத்தும் உள்ளன: நீங்கள் எப்பொழுதும் அழிவற்ற செல்வத்தை உங்களுடன் கொண்டிருக்கின்றீர்கள், உங்கள் புத்தியின் சக்தியைக் கொண்டிருக்கின்றீர்கள், நீங்கள் உங்கள் தராதரத்தின் சக்தியையும் கொண்டிருக்கின்றீர்கள்; உங்களுடன் சக்திகள் அனைத்தும் உள்ளன. அவை உங்களில் அமிழ்ந்திருப்பதை அனுபவம் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் அந்த நேரத்தில் சரியான வழிமுறை மூலம் வெற்றியடைந்து, ஒரு வெற்றி சொரூபமும் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் மனதை எப்பொழுதும் கடவுளின் சொத்தாகக் கருதி, அதனை மேன்மையான பணிகளுக்காகப் பயன்படுத்துங்கள்.