22.09.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 30.01.85 Om Shanti Madhuban
மாயையை வென்றவர்களும் சடப்பொருளை வென்றவர்களுமே சுய இராச்சிய உரிமையுடையவர்கள் ஆகுகிறார்கள்.
இன்று, எங்கும் உள்ள சுய இராச்சிய உரிமையுடைய குழந்தைகள் அனைவரினதும் அரச சபையை பாபா பார்க்கிறார். எங்கும், நீண்ட காலம் பிரிந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட, அன்பான, எல்லையற்ற சேவையாளர்களான, விசேடமான அன்பிற்குரிய குழந்தைகள் உள்ளார்கள். சரியான சுய இராச்சியத்தைக் கொண்ட இத்தகைய குழந்தைகள் இப்போதும் அரசசபையில் இருக்கிறார்கள். இத்தகைய தகுதிவாய்ந்த குழந்தைகளை, சதா யோகி குழந்தைகளை, மகத்தான பணிவையும் மேன்மையான சுயமரியாதையையும் கொண்ட குழந்தைகளைப் பார்க்கும்போது, பாப்தாதா களிப்படைகிறார். கல்பம் முழுவதிலும் உள்ள சபைகள் அனைத்திலும், சுய அதிபதிகளின் சபையானது அலௌகீகமானதும் தனித்துவமானதும் அழகானதும் ஆகும். சுய இராச்சிய உரிமையுடைய ஒவ்வொருவரும் உலக இராச்சியத்தின் அத்திவாரமும் புதிய உலகினைப் படைப்பவரும் ஆவார். சுய இராச்சிய உரிமையுடைய நீங்கள் ஒவ்வொருவரும், பிரகாசிக்கும் தெய்வீகத் திலகத்தையும், சகல சிறப்பியல்புகளும் பிரகாசிக்கும் விலைமதிப்பற்ற மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையும் அணிந்துள்ளீர்கள். நீங்கள் சகல தெய்வீகக் குணங்களின் மாலையையும், சம்பூரண தூய்மை என்ற ஒளிக்கிரீடத்தையும் அணிந்து, சுயத்தின் மேன்மையான ஸ்திதி என்ற சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் இந்த முறையில் அலங்கரிக்கப்பட்டவர்களாக அரச சபையில் இருந்தீர்கள். இத்தகைய அரச சபை பாப்தாதாவின் முன்னால் இருந்தது. சுய இராச்சிய உரிமையுடைய, சடப்பொருளை வென்ற, விகாரங்களை வென்ற ஒவ்வொருவரின் முன்னாலும் எத்தனை பணிப்பெண்களும் வேலையாட்களும் இருந்தார்கள்? ஐந்து விகாரங்களும் பஞ்ச பூதங்களும் உள்ளன. எனவே, பஞ்சபூதங்களும் உங்களின் பணியாளர்கள் ஆகியுள்ளன, அல்லவா? எதிரிகள் சேவையாளர்கள் ஆகியுள்ளார்கள். தமது ஆன்மீக போதையைப் பேணுபவர்கள், காம விகாரத்தை நல்லாசிகளாகவும் தூய உணர்வுகளாகவும் மாற்றி, அவற்றைச் சேவையில் பயன்படுத்துபவர்கள், எதிரிகளைச் சேவையாளர்களாக மாற்றுபவர்கள், ஒருபோதும் பஞ்சபூதங்கள் எவற்றின் ஆதிக்கத்திற்கும் உட்படுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் பஞ்சபூதத்தில் ஒவ்வொன்றையும் அதன் தமோகுணி நிலையில் இருந்து சதோபிரதான் நிலைக்கு மாற்றுகிறார்கள். கலியுகத்தில், அந்தப் பஞ்சபூதங்களும் உங்களை ஏமாற்றி, உங்களுக்குத் துன்பம் விளைவிக்கின்றன. சங்கமயுகத்தில், அவை மாற்றம் அடைகின்றன. அவை தமது ரூபத்தை மாற்றுகின்றன. சத்தியயுகத்தில், பஞ்ச பூதங்களும் தேவர்களுக்குச் சந்தோஷம் கொடுப்பதற்கான வழிமுறைகள் ஆகுகின்றன. சூரியன் உங்களின் உணவைத் தயாரிக்கும். எனவே, அது பண்டாரி (சமைப்பவர்) ஆகும். காற்று உங்களின் இயற்கையான விசிறி ஆகும். அது உங்களுக்குக் களிப்பூட்டுவதற்கான ஒரு கருவி ஆகும். காற்று வீசும்போது, மரங்கள் அசையும். கிளைகளும் கொப்புகளும் அசையும்போது இயல்பாகவே வெவ்வேறு சங்கீதத்தை இசைக்கும். எனவே, அது உங்களுக்குக் களிப்பூட்டும் ஒரு கருவி ஆகுமல்லவா? வானம் உங்களின் இராஜபாதை ஆகும். உங்களின் விமானங்களை நீங்கள் எங்கே பறக்கச் செய்வீர்கள்? வானமே உங்களின் ஓடுதளமாக இருக்கும். இத்தகைய பெரியதொரு நெடுஞ்சாலை வேறெங்கே இருக்கும்? வெளிநாடுகளில் இவ்வாறு உள்ளதா? எத்தனை மைல்கள் நீண்டதாக அதை நீங்கள் அமைத்தாலும், அது வானத்தை விடச் சிறியதாகவே இருக்கும். அந்தளவு பெரிய வீதி உள்ளதா? அமெரிக்காவில் உள்ளதா? அத்துடன் அது விபத்துக்கள் எதுவும் நடக்காத பாதையாக இருக்கும். ஓர் எட்டு வயதுச் சிறுவன் அதை ஓட்டினாலும், அவன் விழமாட்டான். எனவே, உங்களுக்குப் புரிகிறதா? நீர் உங்களின் ஓடிகலோனாக (நறுமணம்) இருக்கும். மூலிகைகளால், கங்கையின் நீர் இப்போதும் வேறெந்த நீரை விடத் தூய்மையானது. இத்தகைய நறுமண மூலிகைகளால், நீரில் இயற்கையான நறுமணம் காணப்படும். பால் உடலுக்கு வலிமையைக் கொடுப்பதைப் போன்று, அங்கு நீர் சக்திவாய்ந்ததாகவும் சுத்தமாகவும் இருக்கும். இதனாலேயே, பாலாறுகள் ஓடும் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் அனைவரும் இப்போதே சந்தோஷப்படுகிறீர்கள், அல்லவா? அதேபோன்று, நிலமும் நீங்கள் விரும்பிய ருசியில் மேன்மையான பழத்தைக் கொடுக்கும். அந்த பழத்தின் ருசி, உங்கள் முன்னால் இருக்கும். அங்கு உப்போ சீனியோ இருக்காது. புளிப்புச் சுவைக்காக, இப்போது நீங்கள் தக்காளியைப் பயன்படுத்துகிறீர்கள். எனவே, அது தயார் நிலையில் இருப்பதல்லவா? அவற்றில் புளிப்புச் சுவை இருக்கும். அதேபோன்று, நீங்கள் விரும்பும் ருசியில் பழங்கள் காணப்படும். நீங்கள் அவற்றின் சாற்றினை விட்டதும், உணவில் அந்தச் சுவை ஏற்படும். எனவே, முதலில், நிலம் உங்களுக்கு உயர் தரமான பழங்களையும் நல்ல தானியங்களையும் கொடுத்துச் சேவை செய்யும். இரண்டாவதாக, இயற்கைக் காட்சிகள் இருக்கும். இதை நீங்கள் இயற்கை, இயற்கைக் காட்சிகள் என்று அழைக்கிறீர்கள். மலைகள் போன்றவையும் காணப்படும். செங்குத்தான மலைகள் இருக்காது. இயற்கை அழகுடன் பல்வகை உருவங்களில் மலைகள் காணப்படும். சிலது பறவைகளின் வடிவில் இருக்கும். ஏனையவை மலர்களின் வடிவில் இருக்கும். அங்கு இயல்பான வடிவமைப்புக் காணப்படும். நீங்கள் சிறிது அதைத் தொட்டால் மட்டும் போதும். இந்த முறையில், பஞ்சபூதங்களும் உங்களின் சேவையாளர்கள் ஆகும். ஆனால் அவை யாருக்குச் சேவையாளர்கள் ஆகும்? சுய இராச்சிய உரிமையுடைய ஆத்மாக்களுக்கே அவை சேவையாளர்களாக ஆகும். எனவே, இப்போது உங்களையே சோதித்துப் பாருங்கள்: ஐந்து விகாரங்களும் எதிரிகளில் இருந்து சேவையாளர்கள் ஆகிவிட்டனவா? அப்போது மட்டுமே உங்களை சுய இராச்சிய உரிமையுடையவர் என்று அழைக்க முடியும். கோபம் என்ற நெருப்பு, யோக அக்கினியாக மாறட்டும். அதேபோன்று பேராசை என்ற விகாரத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். பேராசை என்றால் ஆசை என்று அர்த்தம். எல்லைக்குட்பட்ட ஆசைகள் மாறி, அவற்றுக்குப் பதிலாக, சதா சுயநலமற்ற, உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் செயலிலும் எல்லையற்ற சேவையாளராக இருப்பதற்கான தூய ஆசை இருக்க வேண்டும். ‘நான் தந்தைக்குச் சமமானவன் ஆகவேண்டும்.’ இத்தகைய தூய ஆசைகளைக் கொண்டிருத்தல் என்றால் பேராசையின் வடிவத்தை மாற்றுதல் என்று அர்த்தம். அது எதிரியாக இருப்பதற்குப் பதிலாக, அதைச் சேவைக்காகப் பயன்படுத்துங்கள். அனைவருக்கும் அதிகளவு பற்று உள்ளது. நீங்கள் பாப்தாதாவில் பற்று வைத்துள்ளீர்கள், அல்லவா? ஒரு விநாடியேனும் நீங்கள் தொலைவில் செல்ல விரும்புவதில்லை. அது பற்று, அப்படித்தானே? எவ்வாறாயினும், இந்தப் பற்றானது சேவை நடப்பதற்கு உதவியாக இருக்கும். உங்களின் கண்களைப் பார்க்கும் எவரும், தந்தை உங்களின் கண்களில் அமிழ்ந்திருப்பதைக் காண வேண்டும். நீங்கள் எதைச் சொன்னாலும், தந்தையின் விலைமதிப்பற்ற வாசகங்களை மட்டுமே சொல்லுங்கள். எனவே, பற்று என்ற விகாரமும் சேவைக்காகப் பயன்படுத்தப்படும், அல்லவா? அது மாற்றப்படுகிறதல்லவா? அகங்காரமும் அப்படியே. சரீர உணர்வில் இருந்து நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகுகிறீர்கள். தூய பெருமை உள்ளது. அதாவது, ஆத்மாவான நான், விசேடமான ஆத்மாவாக, பலமில்லியன் மடங்கு பாக்கியசாலி ஆத்மாவாக, கவலையற்ற சக்கரவர்த்தியாக ஆகியுள்ளேன். இந்தத் தூய பெருமை, அதாவது, இந்த ஆன்மீக போதை, சேவைக்குக் கருவி ஆகும். எனவே, ஐந்து விகாரங்களும் மாறி, சேவைக்கான வழிமுறைகள் ஆகினால், அவை எதிரிகளில் இருந்து சேவையாளர்கள் ஆக மாறியுள்ளன, அப்படியல்லவா? எனவே, எந்தளவிற்கு நீங்கள் மாயையை வென்றவர்களாகவும் சடப்பொருளை வென்றவர்களாகவும் ஆகியுள்ளீர்கள் என்று சோதித்துப் பாருங்கள். பணிப்பெண்களும் வேலையாட்களும் முதலில் தயாராகியதும் நீங்கள் அரசர்கள் ஆகுவீர்கள். தமது வேலையாட்களில் தங்கியிருப்பவர்களால் எவ்வாறு இராச்சிய உரிமையைக் கோர முடியும்?
பாரதக் குழந்தைகளின் இந்த மேளாவின் நிகழ்ச்சியின்படி, இன்று இறுதித்தினம் ஆகும். எனவே, இதுவே மேளாவில் கடைசித் தடவையாக மூழ்கியெழுதல் ஆகும். இதில் மகத்தான அர்த்தம் உள்ளது. இந்த முக்கிய தினத்தில், அவர்கள் தமது பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையுடன் அந்த மேளாவிற்குச் செல்கிறார்கள். எனவே, எல்லா வேளைக்கும் ஐந்து விகாரங்களையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அனைவரும் கொண்டிருப்பதே, இறுதி மூழ்கியெழுதலின் முக்கியத்துவம் ஆகும். எனவே, உங்கள் அனைவருக்கும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திடசங்கற்பமான எண்ணம் உள்ளதா? நீங்கள் அவற்றைத் துறக்க வேண்டியதில்லை. ஆனால் அவற்றை மாற்றுங்கள். எதிரி ஒருவர் உங்களின் சேவையாளர் ஆகினால், நீங்கள் எதிரியை விரும்புவீர்களா அல்லது சேவையாளரை விரும்புவீர்களா? எனவே, இன்று, சோதித்துப் பார்த்து, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அப்போது மட்டுமே சந்திப்பெனும் மேளாவிற்கு அர்த்தம் இருக்கும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நான்கில் நீங்கள் ஓகே என்றும், ஒன்று இருந்தால் பரவாயில்லை என்றும் நினைக்காதீர்கள். அந்த ஒன்றானது, ஏனைய நான்கையும் திரும்பவும் அழைத்து வந்துவிடும். அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. இதனாலேயே, இராவணனின் தலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியது போன்று காட்டப்படுகின்றன. எனவே, நீங்கள் தசேராவைக் கொண்டாடிவிட்டுத் திரும்பிச் செல்ல வேண்டும். பஞ்சபூதங்களை வென்றவர் ஆகுவதும் ஐந்து விகாரங்களை வென்றவர் ஆகுவதும் என்றால் அங்கு பத்து உள்ளன, அப்படியல்லவா? எனவே, விஜயதசமியைக் (வெற்றித் திருநாள் - தசேரா) கொண்டாடிவிட்டுத் திரும்பிச் செல்லுங்கள். அதை முடித்துவிடுங்கள். அதை எரித்துவிடுங்கள். ஆனால், அவற்றின் சாம்பலை உங்களுடன் திரும்பவும் எடுத்துச் செல்லாதீர்கள். சாம்பலை நீங்கள் மீண்டும் எடுத்துச் சென்றால், அவை திரும்பவும் வரும். அவை பேய்களாகித் திரும்பி வரும். ஆகவே, நீங்கள் செல்வதற்கு முன்னர் ஞானக் கடலில் அவை அனைத்தையும் முடித்துவிடுங்கள். அச்சா.
சதா சுய அதிபதிகளாக இருப்பவர்களுக்கும், அலௌகீகத் திலகத்தையும் கிரீடத்தையும் அணிந்திருப்பவர்களுக்கும் பஞ்சபூதங்களையும் பணிப்பெண்கள் ஆக்குபவர்களுக்கும் ஐந்து எதிரிகளையும் சேவையாளர்களாக மாற்றுபவர்களுக்கும், ஆன்மீக போதையில் இருக்கும் சக்கரவர்த்திகளான, சதா கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருப்பவர்களுக்கும், தந்தைக்குச் சமமான சதா வெற்றியாளர் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
அவ்யக்த பாப்தாதா குமாரிகளைச் சந்திக்கிறார்:
நீங்கள் அனைவரும் உங்களை மேன்மையான குமாரிகளாக அனுபவம் செய்கிறீர்களா? சாதாரணமான குமாரிகள் தமது வேலை என்ற கூடையைச் சுமக்கிறார்கள். அல்லது வேலையாட்கள் ஆகுகிறார்கள். ஆனால், மேன்மையான குமாரிகளோ உலக உபகாரிகள் ஆகுகிறார்கள். நீங்கள் இத்தகைய மேன்மையான குமாரிகள், அல்லவா? உங்களின் வாழ்க்கையின் மேன்மையான இலக்கு என்ன? தீய சகவாசத்தின் ஆதிக்கத்தில் இருந்தும் உங்களின் உறவுமுறைகளின் பந்தனத்தில் இருந்தும் விடுபட்டுகின்ற இலக்கு உங்களுக்கு இருக்கிறதல்லவா? நீங்கள் பந்தனத்தில் கட்டுப்படுபவர்கள் அல்ல. ‘நான் என்ன செய்வது, எனக்குப் பந்தனங்கள் உள்ளதே? நான் வேலை செய்ய வேண்டியிருந்தால் என்ன செய்வது?’ இது பந்தனத்தைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. எனவே, உங்களிடம் உறவுமுறைகளின் எந்தவொரு பந்தனமும் இல்லை. வேலை என்ற கூடையும் (சுமை) இல்லை. இந்த இரண்டு பந்தனங்களில் இருந்தும் விடுபட்டிருப்பவர்கள் மட்டுமே கடவுளால் நேசிக்கப்படுகிறார்கள். இந்தளவிற்கு நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருக்கிறீர்களா? இரு வகையான வாழ்க்கைகளும் உங்களின் முன்னால் உள்ளன. சாதாரண குமாரிகளினதும் விசேடமான குமாரிகளினதும் எதிர்காலங்கள் இரண்டும் உங்களின் முன்னால் உள்ளன. எனவே, அவை இரண்டையும் பார்க்கும்போது, நீங்களே அதை நிர்ணயிக்க முடியும். கூறுவதைக் கேட்டுச் செய்பவர்கள் ஆகாதீர்கள். உங்களுக்கே நீங்கள் நீதிபதியாகி, உங்களின் சொந்தத் தீர்மானத்தை எடுங்கள். உலக உபகாரிகள் ஆகும்படி ஸ்ரீமத் கூறுகிறது. அது நல்லது. ஆயினும், ஸ்ரீமத்துடன் கூடவே, தமது சொந்த உற்சாகத்துடனும் முன்னேறுபவர்களே இலகுவாக சதா முன்னேறுவார்கள். யாரோ ஒருவர் உங்களுக்குச் சொன்னதால் அல்லது மற்றவர்களின் அபிப்பிராயங்களால் நீங்கள் முன்னேறினால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்து, வெட்கமடைந்து, ‘நான் இவ்வாறு ஆகாவிட்டால், அனைவரும் என்னை இவ்வாறு பார்ப்பார்கள், நான் பலவீனமானவன் என நினைப்பார்கள்’ என நினைப்பீர்கள். யாரோ ஒருவரின் நிர்ப்பந்தத்தால் நீங்கள் இவ்வாறு ஆகினால், பரீட்சைகளில் சித்தி அடைவது சிரமமாக இருப்பதை உணர்வீர்கள். ஆனால் உங்களின் சொந்த உற்சாகம் இருக்கும்போது, உங்களிடமே உற்சாகம் இருப்பதனால், புறச் சூழ்நிலைகள் எத்தனை பெரியதாக வந்தாலும், அவற்றை இலகுவானதாக நீங்கள் உணர்வீர்கள். ஒருவரின் சொந்த ஊக்கமும் உற்சாகமும் இறக்கைகள் ஆகுகின்றன. மலையொன்று எத்தனை பெரியதாக இருந்தாலும், பறக்கின்ற பறவையால் அதை இலகுவாகக் கடந்துவிட முடியும். நடந்து செல்பவர்களால் அல்லது அதில் ஏறுபவர்களால் மிகுந்த சிரமத்தின் மத்தியிலே, நீண்ட நேரத்தின் பின்னரே அதைக் கடந்து செல்ல முடியும். எனவே, மனதின் உற்சாகமே இறக்கைகள் ஆகும். இந்த இறக்கைகளுடன் பறந்து செல்பவர்களுக்கு அது எப்போதும் இலகுவாக இருக்கும். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, உலக உபகாரிகள் ஆகுங்கள் என்பதே மேன்மையான வழிகாட்டல்கள் ஆகும். எவ்வாறாயினும், உங்களுக்கே நீங்கள் நீதிபதியாகி, உங்களின் வாழ்க்கைக்கான தீர்மானத்தை எடுங்கள். தந்தை உங்களுக்குரிய தீர்மானத்தை எடுக்கும்படி கூறுகிறார். இது புதிய விடயமல்ல. இப்போது, உங்களின் சொந்தத் தீர்மானத்தை எடுங்கள். நீங்கள் சதா வெற்றியாளர் ஆகுவீர்கள். விவேகி என்பவர் ஒவ்வோர் அடியையும் கவனமாகக் கருத்தில் கொண்டே எடுத்து வைப்பார். அதைப் பற்றி வெறுமனே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். ஆனால், அதைப் பற்றிச் சிந்தியுங்கள், அதைப் புரிந்து கொள்ளுங்கள். பின்னர் அதைச் செய்யுங்கள். இது விவேகியாக இருத்தல் எனப்படுகிறது. சங்கமயுகத்தில் குமாரியாக இருத்தல் முதல் பாக்கியம் ஆகும். நாடகத்தின்படி நீங்கள் இந்தப் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். இப்போது, இந்தப் பாக்கியத்திற்குள் உங்களின் பாக்கியத்தைத் தொடர்ந்து உருவாக்குங்கள். நீங்கள் இந்தப் பாக்கியத்தைப் பயன்படுத்தினால், உங்களின் பாக்கியம் தொடர்ந்து அதிகரிக்கும். எவ்வாறாயினும், நீங்கள் இந்த முதல் பாக்கியத்தைத் தவறவிட்டால், எல்லா வேளைக்குமான உங்களின் பாக்கியம் அனைத்தையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள். ஆகவே, நீங்கள் பாக்கியசாலிகள். பாக்கியசாலிகளாகி, இப்போது ஏனைய சேவையாளர்களின் பாக்கியத்தை உருவாக்குங்கள். உங்களுக்குப் புரிகிறதா?
பாப்தாதா சேவையாளர் ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:
1)எப்போதும் சேவையின் களிப்பை அனுபவம் செய்பவர்களே சேவையாளர்கள். அவர்கள் எப்போதும் தமது வாழ்க்கையைக் களிப்பானதாக அனுபவம் செய்வார்கள். சேவையாளரின் வாழ்க்கை என்றால் களிப்பான வாழ்க்கை என்று அர்த்தம். எனவே, நீங்கள் சதா நினைவினதும் சேவையினதும் களிப்பில் இருப்பவர்கள், அல்லவா? நினைவின் களிப்பும் உங்களுக்கு உள்ளது. சேவை செய்யும் களிப்பும் உள்ளது. உங்களின் வாழ்க்கையும் களிப்பானது. யுகமும் களிப்பானது. சதா களிப்புடன் இருப்பவர்களைப் பார்க்கும்போது, மற்றவர்களும் தமது வாழ்க்கையில் களிப்பை அனுபவம் செய்கிறார்கள். உங்களின் முன்னால் வருபவர் எத்தனை குழப்பத்தில் இருந்தாலும், களிப்புடன் இருப்பவர்களால் அவர்களைக் குழப்பத்தில் இருந்து விடுவித்து, களிப்பான நிலைக்குக் கொண்டுவரமுடியும். களிப்புடன் இருக்கும் இத்தகைய சேவையாளர்கள், எப்போதும் தமது சரீரங்களிலும் மனங்களிலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். களிப்புடன் இருப்பவர்கள் சதா பறந்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களிடம் சந்தோஷம் உள்ளது. இவர் தொடர்ந்து சந்தோஷ நடனம் ஆடுகிறார், இவர் நடக்கவில்லை, ஆனால் நடனம் ஆடுகிறார் எனப் பொதுவாகக் கூறுவார்கள். நடனம் ஆடுதல் என்றால் உயரே செல்லுதல் என்று அர்த்தம். உங்களின் பாதங்களை உயர்த்தினால் மட்டுமே உங்களால் நடனம் ஆடமுடியும். எனவே, களிப்புடன் இருப்பவர்களே சந்தோஷமாக இருப்பவர்கள். சேவையாளர் என்றால் ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து விசேடமான ஆசீர்வாதங்களைப் பெறுதல் என்று அர்த்தம். ஒரு சேவையாளருக்கு விசேடமான ஆசீர்வாதம் உள்ளது: ஒன்று உங்களின் சொந்தக் கவனம். மற்றையது, ஆசீர்வாதம். இரட்டை உயர்த்தி. சேவையாளராக இருத்தல் எனில், சதா சுதந்திரமான ஆத்மாவாக இருந்து, ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவித்தல் என்று அர்த்தம்.
2) நீங்கள் சதா வெற்றி சொரூபங்களாக இருக்கும் சேவையாளர்களா? வெற்றி உங்களின் பிறப்புரிமை. உரிமை என்பது எப்போதும் இலகுவாகப் பெறப்படுகிறது. அதற்கு முயற்சி தேவையில்லை. எனவே, நீங்கள் உரிமையின் வடிவில் வெற்றியை அனுபவம் செய்பவர்கள். வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது என்ற நம்பிக்கையையும் போதையையும் கொண்டிருங்கள். நீங்கள் வெற்றி அடைவீர்களா மாட்டீர்களா என நீங்கள் நினைப்பதில்லை, அல்லவா? உங்களின் சகல உரிமைகளும் உள்ளன. சகல உரிமைகளையும் கொண்ட ஒருவரால் ஓர் உரிமை இல்லாமல் இருப்பது என்பது சாத்தியமில்லை. உங்களிடம் நம்பிக்கை உள்ளது. எனவே, வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. இதுவே சேவையாளரின் வரைவிலக்கணம் ஆகும். இந்த வரைவிலக்கணம் நடைமுறையானது. சேவையாளர் என்றால் இலகுவாக வெற்றியை அனுபவம் செய்பவர் என்று அர்த்தம்.
பிரியாவிடை வேளையில்:
(இப்போது எங்களைப் பிரிந்து செல்லாதீர்கள், எமது இதயங்கள் இன்னமும் நிரம்பவில்லை என்ற பாடலை எல்லோரும் பாடினார்கள்) பாப்தாதா எந்தளவிற்கு அன்புக் கடலோ, அந்தளவிற்கு அவர் பற்றற்றவராகவும் இருக்கிறார். அன்பான வார்த்தைகளைப் பேசுதல், சங்கம யுகத்தில் களிப்பான விடயங்களில் ஒன்று. உங்களால் களிப்புடன் கொண்டாட முடியும். உண்டு, பருகி நடனம் ஆட முடியும். ஆனால் எப்போதும் அவ்வாறு செய்யுங்கள். இப்போது நீங்கள் அன்பிலே திளைத்திருப்பதைப் போன்று, எல்லா வேளையும் திளைத்திருங்கள். பாப்தாதா தொடர்ந்தும் ஒவ்வொரு குழந்தையினதும் இதயபூர்வமான பாடல்களைக் கேட்கிறார். இன்று, நீங்கள் வாயால் பாடிய பாடல்களைக் கேட்டார். பாப்தாதா பாடல் வரிகளிலோ அல்லது சுருதியிலோ கவனம் செலுத்துவதில்லை. அவர் இதயத்தின் ஒலிகளையே கேட்கிறார். இப்போது, நீங்கள் பௌதீக ரூபத்திலோ அல்லது அவ்யக்த ரூபத்திலோ எப்போதும் அவருடனேயே இருக்கிறீர்கள். பிரிவிற்கான நாட்கள் இப்போது முடிந்துவிட்டன. இப்போது, சங்கமயுகம் சந்திப்பிற்கான மேளா ஆகும். இந்த மேளாவில் காட்சிகளே மாறிக் கொண்டிருக்கும். சிலவேளைகளில், பௌதீகமானது. சிலவேளைகளில், அவ்யக்தமானது. அச்சா. காலை வணக்கம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் ஆன்மீக சக்தியின் அடிப்படையில் சதா ஆரோக்கியமாக இருந்து பௌதீக சக்தியை அனுபவம் செய்வீர்களாக.
இந்த அலௌகீக வாழ்க்கையில், ஆத்மாவினதும் சடப்பொருளினதும் (சரீரம்) இரண்டின் ஆரோக்கியமும் அத்தியாவசியமானவை. ஆத்மா ஆரோக்கியமாக இருக்கும்போது, சரீரத்தின் கர்மக் கணக்கு அல்லது சரீரத்திலுள்ள நோய், ஒரு சிலுவையில் இருந்து முள் போன்று ஆகிவிடும். உங்களின் ஆதி ஸ்திதியால் நீங்கள் உங்களை ஆரோக்கியமானவராகக் கருதுகிறீர்கள். அந்த நோயின் வலியின் அடையாளங்கள் எவையும் உங்களின் முகத்தில் காணப்படுவதில்லை. கர்ம வேதனையைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, நீங்கள் கர்மயோகா ஸ்திதியைப் பற்றிப் பேசுங்கள். மாற்றத்தின் சக்தியால், இத்தகைய ஆத்மாக்கள் தமது வலியைத் திருப்தியாக மாற்றுவார்கள். அவர்கள் தாமும் திருப்தியாக இருந்து, திருப்தி அலைகளையும் பரப்புவார்கள்.
சுலோகம்:
உங்களின் இதயத்தாலும் சரீரத்தாலும் அன்பாலும் ஒருவருக்கொருவர் சேவை செய்யுங்கள். நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.