17.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எவ்விதமான ஆசைகளுமற்ற இத்தகைய இனிமையானதொரு தந்தையை நீங்கள் கண்டுகொண்டு விட்டீர்களே என்றும், அவர் எவ்வளவுக்கு ஒரு மகத்தான அருள்பவராக இருக்கிறார் என்றும் நீங்கள் அதிசயிக்க வேண்டும். அவருக்குத் துளியளவேனும் எதையுமே பெற்றுக்கொள்ளும் ஆசையில்லை.

கேள்வி:
தந்தை நடிக்கும் அற்புதமான பாகம் என்ன? நூறு சதவீதம் சுயநலமற்ற பிறர்நலன் மட்டுமே கருதும் தந்தை எந்த ஆசையோடு இந்தப் பூமிக்கு வந்திருக்கிறார்?

பதில்:
நமக்குக் கற்பிப்பதே பாபாவின் அற்புதமான பாகமாகும். சேவை செய்வதற்காகவே அவர் இங்கே வருகிறார். அவர் எங்களைப் பராமரிக்கின்றார். எங்களுக்கு அன்பையும் அரவணைப்பையும் தந்து, ‘இனிய குழந்தைகளே, இதைச் செய்யுங்கள்.’ என்று அவர் கூறுகிறார். எங்களுக்கு அவர் ஞானத்தைத் தருகிறார். ஆனாலும், எங்களிடமிருந்து அவர் எதையுமே பெற்றுக் கொள்வதில்லை. நூறு சதவீதம் பலனையே எதிர்பாராத தந்தை, தன் குழந்தைகளுக்குத் தான் சென்று பாதையைக் காட்ட வேண்டும் என்றும், தான் சென்று, அவர்களுக்கு உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய செய்தியைக் கொடுக்க வேண்டும் என்றுமே ஆசைப்படுகிறார். குழந்தைகளைப் பற்றித் தந்தைக்கு இருக்கும் ஆசை அவர்கள் தெ;யவீகக்குணம் மிக்கவர்களாக வேண்டும் என்பதேயாகும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் தங்களிடமிருந்து எதையுமே பெற்றுக் கொள்ளாத ஆன்மீகத் தந்தையைக் கண்டுகொண்டு விட்டார்கள். அவர் எதையுமே உண்பதோ அருந்துவதோ இல்லை. அதனால், அவருக்கு ஆசைகளோ எதிர்பார்ப்புகளோ எதுவுமேயில்லை. மனிதர்களுக்கோ ஏதேனும் ஒரு ஆசை நிச்சயமாக இருக்கும். அவர்கள் செல்வந்தர்களாக வேண்டுமென்றோ அல்லது ஏதேனும் ஒன்றாக வேண்டுமென்றோ விரும்புகிறார்கள். அவருக்கோ எவ்விதமான ஆசையுமில்லை. அவர் அபோக்தா (அனுபவங்களின் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டவர்). தான் எதையுமே உண்பதுமில்லையென்றும் அருந்துவதுமில்லையென்றும் கூறி வந்த ஒரு சாதுவைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர் தந்தையைப் பிரதி செய்வது போலவே செய்கிறார். உலகம் முழுவதிலும் தந்தையொருவரே எதையும் பெற்றுக் கொள்வதும் இல்லை, செய்வதும் இல்லை. அதனால், குழந்தைகளாகிய நீங்கள் யாருடைய குழந்தைகளாக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தந்தை எவ்வாறு இவருக்குள்ளே பிரவேசிக்கிறார்? அவருக்கென்று எந்த ஆசைகளுமே இல்லை. அவர் மறைமுகமானவர். குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே அவரது சுயசரிதம் முழுவதும் தெரியும். உங்கள் மத்தியிலும் இதை முழுமையாகப் புரிந்து கொள்கின்றவர்கள் மிகச்சிலரேயாவர். எதையுமே உட்கொள்ளாத, எதையுமே அருந்தாத, எதையுமே பெற்றுக் கொள்ளாத தந்தையை நீங்கள் கண்டுகொண்டு விட்டீர்கள் என்பது உங்கள் இதயத்தில் பதிய வேண்டும். எந்த ஆசையுமே அவருக்கு இல்லை. அவரைப் போல் ஒருவர் இருக்கவே முடியாது. அசரீரியான, அதிமேலான கடவுள் ஒருவர் மட்டுமே நினைவுகூரப்பட்டிருக்கிறார். எல்லோருமே அவரை நினைக்கிறார்கள். உங்கள் தந்தையாக இருக்கும் அவர் அபோக்தா, ஆசிரியரும் அபோக்தா, சத்குருவும் அபோக்தாவாகவே இருக்கிறார். உங்களிடமிருந்து அவர் எதையுமே பெற்றுக் கொள்வதில்லை. அவ்வாறு உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அதை வைத்துக் கொண்டு அவர் என்ன தான் செய்ய முடியும்? அவர் அற்புதமானவொரு தந்தையாக இருக்கிறார். அவர் தனக்கென்று துளியளவேனும் ஆசையற்றவர். மனிதர்களில் அவ்வாறான ஒருவர் இருக்கவே முடியாது. மனிதர்களுக்கு உணவு, ஆடைகள் போன்றவையெல்லாம் தேவைப்படுகின்றன. எனக்கோ எதுவுமே தேவையில்லை. வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குமாறு நீங்கள் என்னைக் கூவி அழைக்கிறீர்கள். நான் அசரீரியானவர். எதையுமே நான் பெற்றுக் கொள்வதில்லை. எனக்கென்று ஒரு வடிவம் (சரீரம்) கூட என்னிடம் இல்லை. நான் இவருக்குள்ளேயே வந்து பிரவேசிக்கிறேன். இவருக்குள்ளே இருக்கும் ஆத்மாவே உண்பவரும் அருந்துபவருமாவார். எனது ஆத்மாவுக்கு ஆசைகளெதுவும் இல்லை. நான் சேவைக்காகவே இங்கே வருகிறேன். இந்த நாடகம் எவ்வளவு அற்புதமானதென்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தந்தையொருவர் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார். அவர் தனக்கென்று எந்த ஆசைகளுமே இல்லாதவராக இருக்கிறார். அவர் இங்கே வந்து, எங்களுக்குக் கற்பித்து, எங்களைப் பராமரிக்கின்றார். ‘இனிய குழந்தைகளே, இதைச் செய்யுங்கள்.’ என்று எங்களுக்கு அவர் அன்பையும் அரவணைப்பையும் தருகிறார். உங்களுக்கு அவர் ஞானத்தைத் தருகிறார். இருந்த போதிலும் உங்களிடமிருந்து எதையுமே அவர் பெற்றுக் கொள்வதில்லை. தந்தையொருவரே கரன்கரவன்ஹார் ஆவார். நீங்கள் சிவபாபாவுக்கு எதையேனும் கொடுத்தாலும் அவர் அதை வைத்துக் கொண்டு என்ன தான் செய்வார்? அவர் தோளியை எடுத்து உண்பாரா? சிவபாபாவுக்குச் சரீரம் கூட இல்லையென்னும் போது, எவ்வாறு அவர் எதையாவது உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்? ஆனாலும், அவர் எவ்வளவு சேவை செய்கிறார் என்று பாருங்கள்! மிக நல்ல வழிகாட்டல்களையெல்லாம் உங்களுக்குத் தந்து உங்களை அவர் அழகானவர்களாக்குகிறார். இதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் அதிசயப்பட வேண்டும். எவ்விதத்திலும் தந்தை அருள்பவரே. அருள்பவர் மிக மகத்துவம் வாய்;ந்தவர். அவருக்கு ஆசைகளே இல்லை. பிரம்மாவுக்கு இவ்வளவு குழந்தைகளையும் பராமரித்து அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் போன்ற அக்கறைகள் இருக்கின்ற போதிலும், வந்து சேரும் பணமெல்லாம் சிவபாபாவுக்கே ஆகும். நான் எல்லாவற்றையுமே அர்ப்பணித்து விட்டேன். நான் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, என்னிடம் இருப்பனவற்றையெல்லாம் தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்தி எனக்கென்று ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்கிறேன். ஆனால் தந்தையோ நூற்றுக்கு நூறு சதவீதம் பலனையே எதிர்பாராதவர். தான் சென்று எல்லோருக்கும் பாதையைக் காட்ட வேண்டுமென்பதே அவருக்கிருக்கும் ஒரே அக்கறையாகும்: நான் சென்று உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய செய்தியைக் கொடுக்க வேண்டும். வேறு யாருக்குமே அது தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே இது தெரியும். தந்தை ஆசிரியர் வடிவில் உங்களுக்குக் கற்பிக்கின்றார். உங்களிடமிருந்து அவர் எந்தக் கட்டணமும் அறவிடுவதில்லை. நீங்கள் எதைப் பெற்றுக் கொண்டாலும் சிவபாபாவின் பெயரிலேயே பெற்றுக் கொள்கிறீர்கள். பலன் அங்கேயே பெறப்படுகின்றது. பாபாவுக்கு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகும் ஆசையிருக்கிறதா? நாடகத்திற்கேற்பவே தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். தான் அதிமேலான சிம்மாசனத்தில் அமர வேண்டுமென்ற ஆசை அவருக்கிருக்கிறது என்பதல்ல. இல்லை. எல்லாமே படிப்பிலும் தெய்வீகக் குணங்களிலுமே தங்கியிருக்கிறது. அதன் பின், நீங்கள் மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். கடந்த கல்பத்தில் இடம்பெற்றதைப் போலவே நாடகத்திற்கேற்ப இவரால் என்னென்ன செய்யப்பட்டதோ அவற்றையெல்லாம் தந்தை ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்;த்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கும் அவர் கூறுவது இதையே: எல்லாவற்றையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள். நீங்கள் கற்கிறீர்களா, இல்லையா என்று உங்களையே பாருங்கள். நான் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறேனா, இல்லையா? நான் மற்றவர்களை என்னைப் போலாக்குவதற்காகச் சேவை செய்கிறேனா, இ;ல்லையா? இவரது வாயை கடனாகப் பெற்றுத் தந்தை பேசுகிறார். ஆத்மா உயிருள்ளவர். உயிரற்ற சடலத்தால் பேச முடியாது. அவர் நிச்சயமாக உயிருள்ள ஒருவருக்குள்ளேயே பிரவேசிப்பார். தந்தை எவ்விதப் பிரதிபலனும் கருதாத ஒருவர். அவருக்கு ஆசைகளே இ;ல்லை. பௌதீகத் தந்தையொருவருக்கு தன் குழந்தைகள் பெரியவர்களாகியதும் தன்னைக் கவனித்துக் கொள்வார்கள் என்ற உணர்வு இருக்கும். ஆனால் அவருக்கோ எந்த ஆசையுமே இல்லை. நாடகத்தில் தன் பாகம் எப்படிப்பட்டதென்று அவருக்குத் தெரியும். நான் உங்களுக்குக் கற்பிப்பதற்காகவே வருகிறேன். அதுவும் நிச்சயிக்கப்பட்டே இருக்கிறது. மக்களுக்கு நாடகத்தைப் பற்றியே தெரியாது. தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. இந்த பிரம்மாவும் படிக்கிறார். நிச்சயமாக அவர் எல்லோரையும் விட மிக நன்றாகப் படிக்கின்றவராக இருக்க வேண்டும். அவர் சிவபாபாவுக்கு மிக நல்லதொரு உதவியாளராகவும் இருக்கிறார். என்னிடம் செல்வம் எதுவுமில்லை. குழந்தைகளாகிய நீங்களே செல்வத்தைக் கொடுக்கிறீர்கள், செல்வத்தைப் பெற்றும் கொள்கிறீர்கள். நீங்கள் இரண்டு கைப்பிடியளவைக் கொடுத்து விட்டு, அதை எதிர்காலத்தில் பெற்றுக் கொள்கிறீர்கள். சிலரிடம் எதுவுமே இல்லை. அதனால், அவர்கள் எதையும் கொடுப்பதும் இல்லை. எனினும், ஒருவர் நன்றாகக் கற்றால், அவருக்கும் எதிர்காலத்தி;ல் நல்ல அந்தஸ்து கிடைக்கும். தாங்கள் புதிய உலகத்திற்காகப் படிக்கிறோம் என்பதை நினைவிற் கொள்பவர்கள் மிகச் சிலராகவே இருக்கிறார்கள். இதை நினைவிற் கொள்வார்களானால், அதுவும் மன்மனாபவ ஆகுகின்றது. இருந்த பொழுதும், உலக விடயங்களில் தமது நேரத்தை வீணாக்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள், பாபா கற்பிப்பது என்ன, அதை எவ்வாறு அவர் கற்பிக்கிறார், தாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய அந்தஸ்து எவ்வளவு உயர்ந்தது என்பதையெல்லாம் மறந்து விடுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து தங்களுக்கிடையில் சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டுத் தமது நேரத்தை வீணாக்குகிறார்கள். உயர் பரீட்சையொன்றில் சித்தியடைய வேண்டியிருப்பவர்கள் ஒருபோதும் தமது நேரத்தை வீணாக்க மாட்டார்கள். அவர்கள் நன்றாகப் படித்து ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறார்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றியாக வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் கீழ்ப்படிவற்றவர்கள். தந்தையை நினைவு செய்யுமாறு உங்களுக்கு நான் ஸ்ரீமத்தைத் தர, நீங்களோ மறக்கின்றீர்கள். இது ஒரு பலவீனம் என்றே கூறப்படும். மாயை உங்களை மூக்கில் பிடித்துக் கடித்து, உங்கள் தலை மீது ஏறி அமர்ந்து கொள்கிறாள். இது ஒரு போர்க்களம். மிக நல்ல குழந்தைகளைக் கூட மாயை வென்று விடுகிறாள். அதனால், யாருடைய பெயர் அவதூறு செய்யப்படுகிறது? சிவபாபாவின் பெயரே. சத்குருவின் பெயருக்கு அவதூறை ஏற்படுத்துபவர்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது என்று கூறப்படுகிறது. மாயையால் தோற்கடிக்கப்படுகின்றவர்கள் எவ்வாறு உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடியும்? உங்கள் புத்தியை உங்கள் சொந்த நன்மைக்காகப் பயன்படுத்தி, பாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறு நீங்கள் முயற்சி எடுக்கலாம் என்று பார்க்க வேண்டும். மகாரத்திகளைப் போல் மிக நல்லவர்களாகி, எல்லோருக்கும் பாதையைக் காட்டுங்கள். சேவைக்காக பாபா மிக நல்ல யுக்திகளைக் காட்டுகிறார். தந்தை கூறுகிறார்: என்னை நீங்கள் கூவி அழைத்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது நான் கூறுகிறேன். என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மையாகுவீர்கள். தூய உலகின் படங்கள் இருக்கின்றன. இதுவே பிரதானமானது. இங்கே, உங்களுக்கு ஒரு இலக்கும் குறிக்கோளும் இருக்கின்றன. நீங்கள் ஒரு மருத்துவராக விரும்பினால் ஒரு மருத்துவரை நினைவு செய்ய வேண்டுமென்றோ அல்லது சட்டநிபுணராக விரும்பினால் சட்டநிபுணர் ஒருவரை நினைவு செய்ய வெண்டுமென்றோ இல்லை. தந்தை கூறுகிறார்: என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். நானே உங்கள் ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்பவர். மாயை உங்களை எவ்வளவு தான் தொந்தரவு செய்தாலும் பரவாயில்லை, என்னையே நினைவு செய்யுங்கள். உங்கள் இருவருக்குமிடையில் இன்னும் போர் நடக்கின்றது. அவளை நீங்கள் உடனடியாக வென்று விடுவீர்கள் என்றில்லை. இது வரையில் எவருமே மாயையை வெற்றி கொள்ளவில்லை. வெற்றியடைவதன் மூலம், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். ‘நான் ஓரடிமை, நான் உங்கள் அடிமை.’ என்று மக்கள் பாடுகிறார்கள். ஆனால், இங்கே நீங்கள் மாயையை உங்கள் அடிமையாக்க வேண்டும். அங்கே, மாயை உங்களுக்கு ஒருபோதும் துன்பம் தர மாட்டாள். இப்போதெல்லாம் உலகம் மிகவும் தீயதாக உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்து துன்பம் கொடுக்கிறார்கள். பாபா மிகவும் இனிமையானவர். அவர் தனக்கென்று எந்த ஆசைகளுமே அற்றவராக இருக்கிறார். நீங்கள் அத்தையதொரு தந்தையை நினைவு செய்யாதிருக்கிறீர்களே! சிலரோ ‘நான் சிவபாபாவை நம்புகிறேன். ஆனால் பிரம்மபாபாவை நம்பவில்லை.’ என்று கூறுகிறார்கள். ஆனால், இருவரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். முகவர் இல்லாது உங்களால் பேரம் பேசிக் கொள்ள முடியாது. இவர் பாபாவின் இரதம். அவரது பெயர் பகீரதன் (பாக்கிய இரதம்) என்பதாகும். முதற்தரமானவரும், எல்லோரிலும் அதிமேலானவரும் இவரே என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு வகுப்பில் வகுப்புத் தலைவனுக்கு (மொனிட்டர்) மரியாதை கொடுக்கப்படுகிறது. அவருக்கு மதிப்பு இருக்கிறது. இவரே முதல்தரமான, அன்புக்குரிய வெகுநாட்களுக்கு முன்னர் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டவராவார். அங்கே சகல ராஜாக்களும் இவருக்கு (ஸ்ரீ நாராயணருக்கு) மரியாதை அளித்தே ஆக வேண்டும். இதை நீங்கள் புரிந்து கொள்ளும் போதே அவருக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற விவேகம் உங்களுக்கு ஏற்படும். இங்கே நீங்கள் அவருக்கு மதிப்பளிக்கப் பழகிக் கொண்டால் தான், உங்களால் அங்கேயும் அவருக்கு மதிப்பளிக்க முடியும். இல்லாவிட்டால், உங்களுக்கு என்ன தான் கிடைக்கப் போகின்றது? உங்களால் சிவபாபாவைக் கூட நினைவு செய்ய முடியாது. தந்தை கூறுகிறார்: நினைவில் இருப்பதாலேயே உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். அவர் உங்களுக்கு எல்லையற்ற இராச்சியத்தைத் தருகிறார். அவ்வாறானதொரு தந்தையை நீங்கள் அதிகளவு நினைவு செய்ய வேண்டும். உங்களுக்குள்ளே அவர் மீது அளவற்ற அன்பிருக்க வேண்டும். இவர் எவ்வாறு தந்தையை அளவின்றி நேசிக்கிறார் என்று பாருங்கள். உங்களுக்கு அன்பிருக்கும் போதே உங்கள் பாத்திரம் (புத்தி) பொன்னாகும். யாருடைய பாத்திரம் பொன்னாகியிருக்கிறதோ அவர்களுக்கு முதல்தரமான நடத்தை இருக்கும். நாடகத்திற்கேற்ப இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். அதற்கு எல்லா வகையானவர்களும் தேவைப்படுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் ஒருபோதும் கோபப்படக்கூடாது. நீங்கள் சேவை செய்யவில்லையென்றால், உங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் சிவபாபாவின் யக்ஞத்திற்கு சேவை செய்யவில்லையெனின், அவருக்கு என்ன கிடைக்கப் போகின்றது? நன்றாகச் சேவை செய்பவர்களாலேயே உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும். உங்களுக்கு நன்மை செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்யவில்லையென்றால், உங்கள் அந்தஸ்தை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள். மாணவர்கள் நன்றாகப் படிக்கும் போது, அவர்களையிட்டு ஆசிரியர் மகிழ்ச்சியடைவார். ஏனெனில், அவர்கள் தன் பெயருக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்றும் அவர்களால் தனக்கு ஒரு பரிசு கிடைக்கும் என்றும் அவர் புரிந்து கொள்வார். தந்தை, ஆசிரியர் போன்ற எல்லோருமே சந்தோஷம் அடைவார்கள். மிக நல்ல சேவையாற்றும் தகுதி வாய்ந்த நல்ல குழந்தைகளிடம் பெற்றோர் தம்மையே அர்ப்பணிப்பார்கள். எனவே, இவற்றைக் கேள்விப்படும் போது இந்தத் தந்தையும் மகிழ்ச்சியடைகிறார். பலருக்கும் சேவையாற்றுகின்றவர்களது பெயர்கள் நிச்சயமாகப் பெருமைப்படுத்தப்படும். அவர்களே உயர்ந்த அந்தஸ்தை அடையக்கூடியவர்கள். இரவும் பகலும் அவர்களுக்கிருக்கும் ஒரே அக்கறை சேவையே ஆகும். அவர்கள் தங்கள் உணவு, பானங்களைப் பற்றி அக்கறை கொண்டவர்களல்ல. ஞானத்தை விளங்கப்படுத்திக் கொண்டிருக்கும் போது அவர்களது தொண்டைகள் கூட வரண்டு போகும். அவ்வாறான வெகு நாட்காளாகத் தொலைந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வார்கள். இது 21 பிறவிகளுக்குக் கிடைப்பதாகும். அதுவும் சக்கரம், சக்கரமாகக் கிடைக்கப் போவதாகும். பெறுபேறுகள் அறிவிக்கப்படும் போது, யார் சேவை செய்தார்கள் என்றும் எத்தனை பேருக்கு அவர்கள் பாதையைக் காட்டியிருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளப்படும். குணவியல்புகளை மாற்றியமைத்துக் கொள்வதும் அத்தியாவசியமானதாகும். மகாரத்திகள் (யானைப்படையினர்), குதிரைப்படையினர், காலாற்படையினர் என்ற பெயர்கள் இருக்கின்றன. நீங்கள் சேவை செய்யவில்லையென்றால், காலாற்படையினரில் ஒருவரென உங்களையிட்டு நீங்கள் புரிந்து கொள்ளலாம். உங்கள் செல்வத்தைக் கொடுத்து உதவுவதால், உங்களுக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும் என்று நீங்கள் எவருமே நினைக்கக்கூடாது. அது முற்றிலும் தவறாகும். அனைத்தும் சேவையிலும் நீங்கள் எவ்வாறு கற்கிறீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. நீங்கள் கற்று, உயர்ந்த ஓர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு சக்கரத்திலும் உங்களுக்கு ஓர் இழப்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாதென்றுமே தந்தை தொடர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களுக்கு ஓர் இழப்பை நீங்கள் ஏற்படுத்தும் போது, பாபா அதனைப் பார்க்கி;றார்: இவருக்கு எதுவும் தெரியவில்லை, தான் சிறிதளவு பணத்தைக் கொடுத்திருப்பதால், தான் மணிமாலையில் முன்னணியில் ஓர் இடத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைத்து சந்தோஷப்படுகின்றார். ஒருவர் பணத்தைக் கொடுத்திருந்தாலும், அவர் ஞானத்தைக் கிரகிக்காதிருந்தாலோ அல்லது யோகத்தில் நிலைத்திருக்காதிருந்தாலோ அதனால் என்ன பயன்? நீங்கள்; கருணை கொண்டிருக்காதிருந்தால், தந்தையை எவ்வாறு பின்பற்றுகிறீர்கள்? குழந்தைகளாகிய உங்களை அழகானவர்களாக்கவே தந்தை வந்திருக்கிறார். பலரையும் அழகானவர்களாக ஆக்குபவர்களிடம் தந்தை தன்னை அர்ப்பணிக்கிறார். செய்ய வேண்டிய பௌதீகமான சேவையும் எவ்வளவோ இருக்கின்றது. பண்டாரியை (சமையலறையைக் கவனித்துக் கொள்பவரை) பாபா பெரிதும் போற்றுகிறார். அவர் பலரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கிறார். எவ்வளவுக்கு அவர்கள் சேவையாற்றித் தங்கள் எலும்புகளையும் சேவையில் அர்ப்பணிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவர்கள் தங்களுக்குத் தாங்களே நன்மை செய்து கொள்கிறார்கள். தங்கள் வருமானத்தை அவர்களே உழைத்துக் கொள்கிறார்கள். இதயத்தின் ஆழத்திலிருந்து அளவற்ற அன்போடு அவர்கள் சேவையாற்றுகிறார்கள். தகராறுகளை ஏற்படுத்துபவர்கள் தங்கள் பாக்கியத்தைத் தான் பாழாக்கிக் கொள்கிறார்கள். பேராசை கொண்டவர்கள் அதனாலேயே துன்புறுத்துதலுக்கு ஆளாகுவார்கள். நீங்கள் அனைவருமே ஓய்வு ஸ்திதியிலேயே இருக்கிறீர்கள். நீங்கள் அனைவருமே சப்தத்திற்கு அப்பாற் செல்ல வேண்டும். ‘நான் நாள் முழுவதும் எவ்வளவு சேவை செய்கிறேன்?’ என்று உங்களையே நீங்கள், கேட்டுக் கொள்ள வேண்டும். சில குழந்தைகள் சேவை செய்தாலன்றிச் சந்தோஷமாக இருப்பதில்லை. சிலர் தமது புத்தியிலும் தமது கல்வியிலும், தீய சகுனத்தைக் கொண்டிருக்கின்றார்கள். பாபா அனைவருக்கும் ஒரேயளவாகவே கற்பிக்கிறார். ஒவ்வொருவரது புத்தியும் வேறுபட்டதாக இருக்கிறது. இருந்த பொழுதும் நீங்கள் முயற்சி செய்தே ஆக வேண்டும். இல்லையேல், சக்கரம், சக்கரமாக உங்கள் அந்தஸ்து அவ்வாறானதாகவே ஆகி விடும். இறுதி நேரத்தில் பெறுபேறுகள் அறிவிக்கப்படும் போது, உங்கள் எல்லோருக்கும் எல்லாவற்றைப் பற்றிய காட்சிகளும் கிடைக்கும். நீங்கள் காட்சிகளைப் பெற்றதும், இடமாற்றம் செய்யப்படுவீர்கள். புராணங்களிலும் அதிகளவு நேரத்தை வீணாக்கி விட்டோம் என்றும் சக்கரம், சக்கரமாக பெரிதும் ஏமாற்றப்பட்டு விட்டோமே என்றும் அவர்கள் பெரிதும் மனம் வருந்தியதாகக் கூறப்பட்டுள்ளது. தந்தை தொடர்ந்தும் உங்களை எச்சரிக்கின்றார். குழந்தைகள் படித்து, உயர்ந்த அந்தஸ்தொன்றை அடைய வேண்டும் என்ற ஒரேயொரு ஆசையே சிவபாபாவுக்கு இருக்கின்றது. அவருக்கு வேறு எந்த ஆசையுமே இல்லை. அவருக்கு உபயோகமானதாக எதுவுமே இல்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, அகநோக்குடையவர்கள் ஆகுங்கள். முழு உலகமுமே புறநோக்கில் இருக்கிறது. நீங்கள் அகநோக்குடையவர்களாகுங்கள். நீங்கள் உங்கள் ஸ்திதியைப் பரிசோதித்துப் பார்த்து உங்களைச் சீர்த்திருத்துவதற்கு முயற்சி எடுக்கவும் வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, வெகு நாட்களுக்கு முன்பு தொலைந்து போய், இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பற்றற்ற பார்வையாளராகி உங்கள் சொந்தப் பாகத்தைப் பாருங்கள்: நான் நன்றாகப் படித்து மற்றவர்களுக்கும் கற்பிக்கிறேனா, இ;ல்லையா? மற்றவர்களையும் என்னைப் போல் ஆக்குவதற்கு நான் சேவையாற்றுகிறேனா? உலக விடயங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

2. அகநோக்குடையவராகி உங்களைச் சீர்திருத்துங்கள். உங்களுக்கு நன்மை செய்வதில் ஆர்வமுடையவராக இருங்கள். சேவையில் மும்முரமாக ஈடுபடுங்கள். நிச்சயமாகத் தந்தையைப் போல் கருணை மிக்கவராகுங்கள்.

ஆசீர்வாதம்:
அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் வெற்றி என்ற ஆசீர்வாதத்தைப் பெற்று ஆசீர்வதிக்கப்பட்ட சொரூபமுடையவர் ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில், குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தியுடன் ஆசீர்வாதமும் கொடுக்கப்பட்டுள்ளது: ~அனைத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்தி, வெற்றியீட்டுங்கள்!| அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துதல் விதையும், வெற்றி பழமும் (பலன்) ஆகும். விதை நன்றாக இருந்தால், அதிலிருந்து பழத்தை பெற முடியாது என்பது சாத்தியமில்லை. பிறரிடம் நீங்கள் அவர்களின் நேரத்தை, எண்ணங்களை, செல்வத்தை தகுதியான முறையில் பயன்படுத்துமாறு கேட்கின்றீர்கள், அவ்வாறே, உங்கள் அனைத்து பொக்கிஷங்களின் பட்டியலையும் சோதித்து, அதில் எந்தப் பொக்கிஷத்தை நீங்கள் தகுதியான முறையில் பயன்படுத்தினீர்கள் என்றும் எவை வீணாகின என்றும் பாருங்கள். அனைத்தையும் தொடர்ந்தும் தகுதியான முறையில் பயன்படுத்தினால் நீங்கள் அனைத்து பொக்கிஷங்கள் நிறைந்தவராகவும் ஆசீர்வதிக்கப்பட்ட சொரூபமுடையவராகவும் ஆகுவீர்கள்.

சுலோகம்:
கடவுளின் விருதைப் பெறுவதற்கு, வீணானவை அல்லது எதிர்மறையானவற்றை அலட்சியம் செய்யுங்கள்.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தந்தை பிரம்மாவைப் போன்று எதனதும் விரிவாக்கத்திற்குப் போகாதீர்கள், விரிவாக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இட்டு, அந்தச் சூழ்நிலையை புள்ளிக்குள் அமிழ்த்துங்கள். ஒரு புள்ளியாகி, ஒரு முற்றுப்புள்ளி இட்டு, உங்களை அந்தப் புள்ளியில் அமிழ்த்திக் கொள்ளுங்கள். அப்பொழுது அனைத்து விரிவாக்கமும் வலையும் ஒரே விநாடியில் அமிழ்த்தப்பட்டு, உங்கள் நேரமும் சேமிக்கப்படுவதுடன் நீங்கள் முயற்சி செய்வதிலிருந்தும் விடுதலையடைகின்றீர்கள். நீங்கள் ஒரு புள்ளியாகி புள்ளியின் அன்பில் திளைத்திருப்பீர்கள்.