16.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அமைதிக் கடலும், சந்தோஷக் கடலுமாகிய தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதே நீங்கள் கொண்டிருக்க வேண்டிய முதலாவது நம்பிக்கையாகும். எந்தவொரு மனிதராலுமே அமைதியையோ அல்லது சந்தோஷத்தையோ எவருக்கும் வழங்க முடியாது.
கேள்வி:
அனைத்திலும் அதியுயர்ந்த இலக்கு என்ன? அந்த இலக்கை அடைவதற்கு என்ன முயற்சி தேவையாகும்?
8பதில்:
ஒரேயொரு தந்தையின் நினைவு உறுதியானதாக இருக்கட்டும். உங்களது புத்தி வேறு எவர்மீதும் ஈர்க்கப்படாதிருக்கட்டும். இதுவே அதிமேலான இலக்காகும். இதற்கு, ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கான முயற்சியை நீங்கள் செய்யவேண்டும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகும் போது, விகார எண்ணங்கள் அனைத்தும் முடிவடைந்து விடுவதுடன், உங்களது புத்தி அலைபாய்வதும் நின்றுவிடும். உங்களது பார்வை சரீரத்தின்மீது சற்றேனும் ஈர்க்கப்படக் கூடாது. இதுவே உங்களது இலக்கு என்பதால், ஆத்ம உணர்வில் இருப்பீர்களாக.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்தவாறு ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவரை (பிரம்ம பாபா) ஆன்மீகத் தந்தை என்று அழைக்க முடியாது. இன்றைய தினம் (வியாழக் கிழமை) சற்குருவிற்கான தினம் என்று அழைக்கப்படுகின்றது. இதனை ‘குருவார்’ (வியாழக்கிழமை) என்று அழைப்பது தவறாகும். பல குருமார் உள்ளனர். ஆனால், ஒரேயொருவரே சற்குரு ஆவார். தங்களை குரு என்றும், சற்குரு என்றும் அழைக்கின்ற பலர் உள்ளனர். சற்குருவிற்கும், குருவிற்குமிடையில் வேறுபாடுள்ளதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். ‘சத்’ என்றால், சத்தியம் ஆகும். ஒரேயொரு தந்தை மாத்திரமே சத்தியம் என அழைக்கப்படுகின்றார், எந்தவொரு மனிதரையும் அவ்வாறு அழைக்க முடியாது. ஞானக்கடலாகிய தந்தை ஒரேயொரு தடவையே வந்து, இந்த உண்மையான ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். மனிதர்களால் ஒருபோதுமே மனிதர்களுக்கு இந்த உண்மையான ஞானத்தைக் கொடுக்க முடியாது. அசரீரியான தந்தை மாத்திரமே சத்தியம் ஆவார். இவரது பெயர் பிரம்மாவாகும், இவரால் எவருக்கும் ஞானத்தைக் கொடுக்க முடியாது. பிரம்மாவிடம் எந்த ஞானமும் இல்லை. இப்பொழுதுமே, அவரிடம் முழு ஞானமும் இல்லை என்றே நீங்கள் கூறுவீர்கள். ஞானக்கடலாகிய பரமாத்மாவான பரமாதந்தையே முழு ஞானத்தையும் கொண்டிருக்கின்றார். எந்தவொரு மனிதரும் தன்னை சற்குரு எனக் கூறிவிட முடியாது. சற்குரு என்றால், முழுமையான சத்தியமானவர் என்று அர்த்தமாகும். நீங்கள் சத்தியம் ஆகியதும் இச்சரீரம் இருக்க மாட்டாது. மனிதர்களை ஒருபோதும் சற்குரு என்று அழைக்கமுடியாது. ஒரு சதப் பெறுமதியான பலமுமே அவர்களிடம் இல்லை. இவரும் கூறுகின்றார்: நானும் உங்களைப் போன்று ஒரு மனிதரே. இதில் பலம் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்களுக்குக் கற்பிப்பவர் தந்தையே அன்றி பிரம்மா அல்ல. இந்த பிரம்மாவும் அவரிடம் கற்று, பின்னர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் உங்களை பிரம்ம குமாரர்கள், குமாரிகள் என்று அழைக்கின்றீர்கள். சற்குருவாகிய பரமாத்மாவான பரமதந்தையிடம் நீங்கள் கற்கின்றீர்கள். நீங்கள் அவரிடமிருந்து பலத்தைப் பெறுகின்றீர்கள். ஒருவரை நீங்கள் தள்ளும் போது, அவர் கீழே விழுவது பலம் அல்ல. இல்லை. இது ஆன்மீகத் தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற ஆன்மீக பலம் ஆகும். நீங்கள் நினைவு சக்தி மூலமாக அமைதியையும், கல்வி மூலமாக சந்தோஷத்தையும் பெறுகின்றீர்கள். ஏனைய ஆசிரியர்கள் உங்களுக்குக் கற்பிப்பது போன்றே தந்தையும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். இவரும் கற்கின்றார், இவர் ஒரு மாணவர். அனைத்து சரீரதாரிகளும் மாணவர்களேயாவர். தந்தைக்கென ஒரு சரீரம் கிடையாது. அவர் அசரீரியானவர் என்பதால், அவரே இங்கு வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஏனைய மாணவர்கள் கற்பதைப் போன்றே நீங்களும் கற்கின்றீர்கள். இதில் முயற்சி என்ற கேள்விக்கே இடமில்லை. கற்கும் காலத்தில் மாணவர்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள். அவர்கள் பிரம்மச்சரியம் கடைப்பிடித்து, பின்னர் தங்களது கல்வி முடிவடைந்ததும் விகாரத்தில் ஈடுபடுகின்றார்கள். மனிதர்கள் மனிதர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள். இவர் இன்ன இன்னார், இவர் சட்டத்தரணி, இவர் இன்ன இன்ன அலுவலகர் எனக் கூறப்படுகின்றது. அவர்கள் தங்களது கல்விக்கேற்ப பட்டங்களைப் பெற்றாலும், அவர்களது முகங்கள் அவ்வாறே உள்ளன. லௌகீகக் கல்வியைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். சமய நூல்களை வாசிப்பவர்களும், கற்பவர்களுமாகிய சாதுக்களிடமும், புனிதர்களிடமும் எந்த மகத்துவமும் கிடையாது. எவருமே அதன் மூலமாக அமைதியைப் பெற முடியாது. அவர்களுமே அமைதியைத் தேடி, அலைந்து திரிகின்றார்கள். காடுகளில் அமைதி இருக்குமாயின், அவர்கள் ஏன் வீடு திரும்புகின்றார்கள்? எவருமே முக்தி பெறுவதில்லை. கடந்த காலத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்களாக இருந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அனைவரும் மறுபிறவிகள் எடுத்து கீழே வந்துள்ளனர். எவருமே முக்தியையோ அல்லது ஜீவன் முக்தியையோ பெறவில்லை. அனைவரும் தமோபிரதான் ஆகவேண்டும். உங்களால் பௌதீகமாக எதனையும் பார்க்கமுடியாது. எவரிடமேனும் வினவுங்கள்: உங்கள் குருவிடமிருந்து நீங்கள் எதனைப் பெறுகின்றீர்கள்? ‘அமைதியை’ என்று அவர்கள் கூறுவார்கள். எவ்வாறாயினும், அவர்கள் எதனையுமே பெறுவதில்லை. அமைதியின் அர்த்தத்தமேனும் அவர்களுக்குத் தெரியாது. பாபா ஞானக்கடல் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். எந்தவொரு முனிவரோ, புனிதரோ அல்லது குருவோ அமைதிக்கடலாக இருக்க முடியாது. மனிதர்களால் எவருக்குமே உண்மையான அமைதியைக் கொடுக்க முடியாது. அமைதிக்கடலாகிய ஒரேயொரு தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் முதலில் கொண்டிருக்க வேண்டும். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றதென்பதையும் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். மனிதர்களால் ஒருபோதுமே மனிதர்களுக்கு அமைதியையோ அல்லது சந்தோஷத்தையோ கொடுக்க முடியாது. இந்த பிரம்மா அவரது இரதம் ஆவார். அவரும் உங்களைப் போன்று ஒரு மாணவன் ஆவார். அவரும் இல்லறப் பாதையை சேர்ந்தவரே. அவர் தனது ஓய்வு நிலையில், தனது சரீரத்தைத் தந்தைக்குக் கடனாகக் கொடுத்துள்ளார். ஒரேயொரு தந்தையே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை அனைவருக்கும் கூறுகின்றார்: நீங்கள் விகாரமற்றவர்கள் ஆக வேண்டும். இவ்வாறு ஆகமுடியாதவர்கள், உங்களைப் பல வழிகளிலும் அவதூறு செய்வார்கள். பிறவி பிறவியாகத் தமது தந்தையிடமிருந்து (லௌகீக) ஆஸ்தியாகப் பெற்றுவந்த உணவை (விகாரங்கள்) நீங்கள் துறக்கச் செய்வதாக அவர்கள் நம்புகின்றனர். எல்லையற்ற தந்தையே அவர்களை அவற்றைத் துறக்கச் செய்கின்றார். இவரையும் அவற்றைத் துறக்கச் செய்தவர் அவரே ஆவார். அவர் தனது குழந்தைகளையும் பாதுகாக்க முயற்சித்தார். அவர் தன்னிடம் வர முடிந்த குழந்தைகளைப் பாதுகாத்தார். உங்களுக்குக் கற்பிப்பவர் மனிதரல்ல என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் உள்ளது. அசரீரியான தந்தை மாத்திரமே சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகின்றார். வேறு எவரையும் இவ்வாறு அழைக்க முடியாது. அவரே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தையே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவ்விகாரங்களே உங்களது கொடிய எதிரிகள். நீங்கள் அவற்றைத் துறந்துவிட வேண்டும். அவற்றைத் துறக்க முடியாதவர்கள் அதிகளவில் சண்டையிடுகின்றனர். சில பெண்களுமே விகாரத்திற்காகப் பெருமளவு குழப்பத்தை விளைவிக்கின்றார்கள். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இது அதி மங்களகரமான சங்கமயுகம் என்பதனை எவருமே அறியமாட்டார்கள். தந்தை உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். முழுமையான நம்பிக்கையுடைய பலர் உள்ளனர். சிலர் அரைவாசி நம்பிக்கையையும், சிலர் 100 வீதம் நம்பிக்கையையும், சிலர் 10மூ நம்பிக்கையையும் கொண்டிருக்கின்றனர். கடவுள் இப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கின்றார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! இதுவே தந்தையின் மகா கட்டளையாகும். உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலே நீங்கள் அக்கட்டளையைப் பின்பற்றுவீர்கள். தந்தை கூறுகின்றார்: எனது இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் இவரை நினைவு செய்யக்கூடாது. இதனை நான் கூறவில்லை, பாபாவே என் மூலமாக உங்களுக்குக் கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களைப் போன்றே இவரும் கற்கின்றார். அனைவரும் மாணவர்கள். ஒரேயொரு ஆசிரியரே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அங்கே, மனிதர்களே உங்களுக்குக் கற்பிக்கின்றார்கள். இங்கேயோ கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் கற்று, பின்னர் மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றீர்கள். இதில், நீங்கள் மிகவும் ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும். ஆத்மாவே ஒரு சட்ட நிபுணராகவோ அல்லது பொறியியலாளராகவோ ஆகுகின்றார். ஆத்மாக்கள் இப்பொழுது சரீர உணர்வைக் கொண்டிருக்கின்றனர். ஆத்ம உணர்விலிருப்பதற்குப் பதிலாக, நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வில் இருக்கும் போது, உங்களை விகாரம் நிறைந்தவர் என்று அழைக்க முடியாது. அத்தகைய ஆத்மாக்கள் ஒருபோதுமே விகார எண்ணங்களைக் கொண்டிருக்கமாட்டார்கள். சரீர உணர்வின் மூலமாகவே உங்களுக்கு விகார எண்ணங்கள் வருகின்றன. அந்நேரத்தில் நீங்கள் மற்றவர்களை விகாரப் பார்வையுடன் நோக்குகின்றீர்கள். தேவர்கள் ஒருபோதும் விகாரப் பார்வையைக் கொண்டிருக்க மாட்டார்கள். ஞானத்தின் மூலமாகப் பார்வை மாறுகின்றது. சத்தியயுகத்தில் இங்கு போன்று, காதலோ அல்லது நடனமோ இருப்பதில்லை. அங்கே, அவர்கள் அன்பைக் கொண்டிருந்தாலும், விகாரம் என்ற துர்நாற்றம் இருக்க மாட்டாது. மக்கள் பிறவி பிறவியாக விகாரத்தில் ஈடுபட்டதால், பெரும் சிரமத்துடனேயே அந்தப் போதையிலிருந்து அவர்களால் விடுபட முடியும். தந்தை உங்களை விகாரமற்றவர்களாக்குகின்றார். எனவே, சில குழந்தைகள் மிகவும் பலசாலிகள் ஆகுகின்றனர். நான் முற்றிலும் விகாரமற்றவர் ஆகவேண்டும். நான் தனியாகவே வந்தேன், தனியாகவே திரும்பிச் செல்ல வேண்டும். ஒருவர் தங்களை மிக இலேசாகத் தொடுவதைக்கூட சிலர் விரும்பமாட்டார்கள். அவர்கள் கூறுவார்கள்: அவர் ஏன் என்னைத் தொடுகின்றார்? அவரிடம் விகாரம் என்ற வாடை உள்ளது. விகாரமுடையவர்கள் ஒருபோதும் எங்களைத் தொடவேனும் கூடாது. நீங்கள் இவ்விலக்கை அடையவேண்டும். உங்களது பார்வை ஒருபோதும் சரீரத்தை நோக்கிச் செல்லக் கூடாது. அக்கர்மாதீத நிலையை நீங்கள் இப்பொழுதே உருவாக்கிக்கொள்ள வேண்டும். இப்பொழுதுமே ஆத்மாவை மாத்திரம் பார்க்கின்ற எவருமே இல்லை. இதுவே உங்களது இலக்காகும். தந்தை எப்பொழுதும் கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். வாலாகிய இச்சரீரத்தின் மூலமாக நீங்கள் உங்களது பாகத்தை நடிக்கின்றீர்கள். இவரில் ஏதோ சக்தி இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். எனினும், சக்தி என்ற கேள்விக்கே இடமில்லை. இது ஒரு கல்வியாகும். மற்றவர்கள் கற்பதைப் போன்றே இவரும் கற்கின்றார். ஒருவர் தூய்மையாகுவதற்காக அதிகளவு பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: ஒருவரையொருவர் ஆத்மாக்களாகப் பாருங்கள். நீங்கள் சத்தியயுகத்திலும் ஆத்ம உணர்வுடையவர்களாகவே இருக்கின்றீர்கள். அங்கே இராவண இராச்சியம் இருக்கமாட்டாது. அங்கே விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே, இராவண இராச்சியத்தில் அனைவரும் விகாரமுடையவர்களாகவே உள்ளனர். ஆகையாலேயே, தந்தை வந்து, உங்களை விகாரமற்றவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் இவ்வாறு ஆகாவிட்டால், தண்டனையை அனுபவிக்க நேரிடும். ஓர் ஆத்மா தூய்மையாகாமல் மேலே செல்ல முடியாது. கர்மக்கணக்குகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும். இருப்பினும் அந்தஸ்து குறைவடைகின்றது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. சுவர்க்கத்தில் ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் மாத்திரமே இருந்ததென்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முதலில், நிச்சயமாக ஓர் அரசனும், அரசியும் இருப்பார்கள். பின்னர், அவர்களது வம்சம் இருக்கும். பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். அவர்களது ஸ்திதியில் வேறுபாடு உருவாக்கப்படுகின்றது. முழுமையான நம்பிக்கை அற்றவர்களால், முழுமையாகக் கற்க முடியாது. அவர்களால் தூய்மையாக முடியாது. 21 பிறவிகளாகத் தூய்மையற்றிருந்தவர்கள் ஒரு பிறவியில் தூய்மையாகுவதென்பது, உங்களது மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றிருக்க முடியுமா? காமமே பிரதான விடயமாகும். கோபம் முதலானவை அந்தளவு பலம் வாய்ந்தவையல்ல. உங்களது புத்தி வேறு எங்காவது ஈர்க்கப்பட்டிருக்குமாயின், நீங்கள் நிச்சயமாகத் தந்தையின் நினைவைக் கொண்டிருக்கவில்லை. தந்தையின் நினைவு உறுதியாக இருக்குமாயின், உங்களது புத்தி வேறு திசைகளில் செல்லாது. இலக்கு மிக உயர்ந்ததாகும். சிலருக்குத் தூய்மையைப் பற்றிக் கேட்பது, தாங்கள் தீயில் எரிவது போன்றுள்ளது. அவர்கள் கூறுகின்றனர்: வேறு எவருமே ஒருபோதும் இவ்வாறு கூறியதில்லை. இது சமய நூல்களில் குறிப்பிடப்படவும் இல்லை. அவர்கள் அதனை மிகவும் சிரமமாகக் கருதுகின்றனர். அது சந்நியாச மார்க்கத்தின் வேறுபட்ட தர்மமாகும். அவர்கள் மறுபிறவியெடுத்து, துறவு என்ற தர்மத்திற்குரியவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் அதே சம்ஸ்காரங்களைத் தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். நீங்கள் உங்களது வீட்டையும், குடும்பத்தையும் துறக்க வேண்டியதில்லை. நீங்கள் வீட்டில் வாழும் போதும், ‘இப்பொழுது இது சங்கமயுகம்’ என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள் என்று உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையாகாமல் உங்களால் சத்தியயுகத்து தேவர்களாக முடியாது. சிறிதளவு ஞானத்தைச் செவிமடுப்பவர்களுமே பின்னர் பிரஜைகள் ஆகுகின்றார்கள். பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். சத்தியயுகத்தில் ஆலோசகர்கள் இருக்கமாட்டார்கள். ஏனெனில், தந்தை உங்களை முற்றிலும் ஞானம் நிறைந்தவர்கள் ஆக்குகின்றார். ஞானமற்றவர்களுக்கே ஆலோசகர்கள் தேவை. இந்நேரத்தில், எவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் கொலை செய்கின்றனர் எனப் பாருங்கள். அவர்களின் பகை உணர்வு மிகவும் வலிமையாக உள்ளது. நீங்கள் பழைய சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுப்பீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அது ஓர் பெரிய விடயமன்று. அவர்கள் துன்பத்துடனேயே மரணிக்கின்றார்கள். நீங்களோ தந்தையின் நினைவில், சந்தோஷத்துடன் செல்ல வேண்டும். தந்தையாகிய என்னை எந்தளவிற்கு அதிகமாக நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் ஏனையவர்களை மறந்துவிடுவீர்கள். வேறு எவருமே நினைவு செய்யப்படக்கூடாது. எவ்வாறாயினும், நீங்கள் முழு நம்பிக்கையைக் கொண்டிருக்கும்போதே இந்த ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். நம்பிக்கையில்லாவிட்டால், நினைவு இருக்க முடியாது. அவர்கள் கூறவேண்டும் என்பதற்காகக் கூறுகின்றார்கள். நம்பிக்கையில்லாவிட்டால், நீங்கள் ஏன் நினைவைக் கொண்டிருக்க வேண்டும்? அனைவரும் ஒரேயளவிற்கு நம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள் என்றில்லை. மாயை நம்பிக்கையிலிருந்து உங்களை விலக வைக்கின்றாள். நீங்கள் முன்னர் இருந்ததைப் போன்றவராகவே ஆகுகின்றீர்கள். முதலில், உங்களுக்குத் தந்தைமீது நம்பிக்கை இருக்க வேண்டும். அவரே தந்தை என்பதில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா? ஒரேயொரு தந்தையே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். இவர் கூறுகின்றார்: நான் படைப்பவரையோ, அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியோ அறிந்திருக்கவில்லை. எவரோ ஒருவரே எனக்கு அதனைக் கூறவேண்டும். நான் 12 குருமாரை ஏற்றிருந்த போதிலும், அவர்கள் அனைவரையும் துறக்கவேண்டியிருந்தது. அந்த குருமார் எனக்கு ஞானத்தைக் கொடுக்கவில்லை. சற்குரு சடுதியாக வந்து எனக்குள் பிரவேசித்தார். ‘என்ன நடக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை’ என்றே நான் நினைத்தேன். அர்ஜூனனுக்குக் காட்சி அருளப்பட்டதாகக் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அர்ஜூனன் மாத்திரம் என்ற கேள்விக்கு இடமில்லை. இவரே இரதம் ஆவார். முன்னர் இவரும் கீதையைக் கற்பதுண்டு. தந்தை இவருக்குள் பிரவேசித்த பின்னர், தந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் எனக் காட்சியை வழங்கியதும், இவர் கீதையை வாசிப்பதை நிறுத்திவிட்;டார். தந்தையே ஞானக்கடலாவார். அவரே இதனைக் கூறுகின்றார். கீதையே தாயும், தந்தையும் ஆகும். தந்தைக்கு நீங்கள் கூறுகின்றீர்கள்: நீங்களே தாயும், நீங்களே தந்தையும். அவர் படைப்பை உருவாக்குகின்றார், அதனை தத்தெடுக்கின்றார். இந்த பிரம்மாவும் உங்களைப் போன்றவரேயாவார். தந்தை கூறுகின்றார்: இவரது ஓய்வு நிலையின்போதே நான் இவருக்குள் பிரவேசிக்கின்றேன். குமாரிகள் தூய்மையானவர்கள். அவர்களுக்கு இது இலகுவானதாகும். அவர்கள் திருமணம் செய்த பின்னர், அவர்களது உறவுமுறைகள் அதிகளவில் அதிகரிக்கின்றன. இதனாலேயே ஆத்ம உணர்விற்கு வருவதற்கு முயற்சி தேவையாகும். உண்மையில், ஆத்மா சரீரத்திலிருந்து வேறானவர். எவ்வாறாயினும், நீங்கள் அரைக் கல்பமாக சரீர உணர்வில் இருந்தீர்கள். இந்த இறுதிப் பிறவியில், தந்தை வந்து உங்களை ஆத்ம உணர்வுடையவர்களாக்குகின்றார். இதனாலேயே உங்களுக்கு இது சிரமமாக உள்ளது. முயற்சி செய்த பின்னர், வெகு சிலரே சித்தியெய்துகின்றனர். எட்டு மணிகள் மாத்திரமே வெளித்தோன்றுகின்றனர். உங்களையே கேட்டுப்பாருங்கள்: எனது தொடர்பு தெளிவாக உள்ளதா? நான் தந்தையைத் தவிர வேறு எவரையாவது நினைவு செய்கின்றேனா? இத்தகைய ஸ்திதி இறுதியிலேயே உருவாக்கப்படும். ஆத்ம உணர்விற்கு வருவதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானத்தினால் உங்களது பார்வையை மாற்றுங்கள். ஆத்ம உணர்வுடையவராகி, விகார எண்ணங்கள் அனைத்தையும் முடித்துவிடுங்கள். எந்த விகாரத்தினதும் துர்நாற்றமும் இல்லாதிருக்கட்டும். உங்களது பார்வை சரீரத்தை நோக்கிச் செல்லாதிருக்கட்டும்.2. எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் எனும் உறுதியான நம்பிக்கை உங்களிடம் இருக்கும்போதே உங்களது நினைவும் உறுதியானதாகும். மாயை உங்களது நம்பிக்கையிலிருந்து உங்களைச் சற்றேனும் தடுமாறச் செய்யாமல் இருப்பதில் கவனம் செலுத்துங்கள்.
ஆசீர்வாதம்:
தூய்மை என்ற அத்திவாரத்தினால், எப்பொழுதும் மேன்மையான செயல்களைச் செய்கின்ற பூஜிக்கத் தகுதியான ஆத்மா ஆகுவீர்களாக.தூய்மை உங்களை பூஜிக்கத் தகுதியானவர் ஆக்குகின்றது. எப்பொழுதும் மேன்மையான செயல்களைச் செய்பவர்கள் பூஜிக்கத் தகுதியானவர்கள் ஆகுகிறார்கள். எவ்வாறாயினும், தூய்மை என்பது பிரம்மச்சரியம் மாத்திரம் அல்ல. உங்கள் மனதில் எவரைப் பற்றியும் எந்த எதிர்மறையான எண்ணங்களும் இருக்காதிருக்கட்டும். பொருத்தமற்ற வார்த்தைகள் இல்லாதிருக்கட்டும். உங்கள் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் எந்த வேறுபாடும் இல்லாதிருக்கட்டும். அனைவரின் மீதும் ஒரேமாதிரியான நல்ல உறவுமுறையே இருக்கட்டும். உங்கள் எண்ணங்களில், வார்த்தைகளில், செயல்களில் எந்தத் தூய்மையின்மையும் இல்லாதிருக்கும் போது, நீங்கள் பூூஜிக்கத்தகுதியான ஆத்மா எனப்படுகின்றீர்கள். ~நான் உச்சளவு பூஜிக்கத்தகுதியான ஆத்மா| - இந்த விழிப்புணர்வுடன் உங்களது தூய்மை எனும் அத்திவாரத்தை பலப்படுத்துங்கள்.
சுலோகம்:
எப்பொழுதும் ~வாஹ் ரே மீ!| (எனது அற்புதம்) என்ற ஆன்மிக போதையை கொண்டிருந்தால், நீங்கள் இயல்பாகவே தொடர்ந்தும் உங்கள் மனதிலும் உங்கள் சரீரத்தினாலும் நடனமாடுவீர்கள்.