07.04.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     29.04.84     Om Shanti     Madhuban


ஞான சூரியனின் ஆன்மீக நட்சத்திரங்களின் வெவ்வேறு சிறப்பியல்புகள்.


இன்று, ஞான சூரியனும் ஞானச் சந்திரனும் தமது பல்வகை நட்சத்திரங்களைப் பார்த்தார்கள். சிலர் அன்பான நட்சத்திரங்கள். சிலர் குறிப்பாக ஒத்துழைக்கும் நட்சத்திரங்கள். சிலர் இலகு யோகி நட்சத்திரங்கள். சிலர் மேன்மையான, ஞானி நட்சத்திரங்கள். ஏனையோர், விசேட சேவைக்கான உற்சாகத்தைக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள். சிலர் முயற்சியின் பழத்தை உண்டுவிடும் நட்சத்திரங்கள். சிலர் இலகு வெற்றியின் நட்சத்திரங்கள். இந்த முறையில் நட்சத்திரங்கள் அனைவருக்கும் வெவ்வேறு சிறப்பியல்புகள் காணப்படுகின்றன. நட்சத்திரங்களான நீங்கள் அனைவரும் ஞான சூரியனிடமிருந்து ஆன்மீக ஞானோதயத்தைப் பெறுவதனால், பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் ஆகியுள்ளீர்கள். எவ்வாறாயினும், ஒவ்வொரு வகையான நட்சத்திரத்தினதும் சிறப்பியல்பினதும் பிரகாசம் வேறுபட்டது. பௌதீகமான நட்சத்திரங்களின் ஆதிக்கம், தற்காலிகமான காலத்திற்கு வெவ்வேறு வகையான பலன்களைப் பெறச் செய்வதைப் போன்று, ஞான சூரியனின் ஆன்மீக நட்சத்திரங்களான நீங்களும் அழியாத பேறுகளைக் கொடுக்கும் ஆத்மாக்கள் அனைவருடனும் உறவுமுறையைக் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு நட்சத்திரமும் என்ன சிறப்பியல்பால் நிறைந்துள்ளதோ, அவரின் சிறப்பியல்பிற்கேற்ப, அந்த நட்சத்திரம் மற்றவர்களும் பலன்களைப் பெறுவதற்குக் கருவி ஆகுகிறார். நீங்கள் எந்தளவிற்கு ஞானச் சந்திரனுக்கும் ஞான சூரியனுக்கும் நெருக்கமாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு மற்றவர்களையும் உங்களுடன் நெருக்கமாக உறவுமுறைக்குள் அழைத்து வருவீர்கள். அதன்பின்னர், நீங்கள் ஞான சூரியனிடமிருந்து பெற்ற சிறப்பியல்புகளின் அடிப்படையிலும், அந்த நேரடியான சிறப்பியல்புகளின் சக்தியின் அடிப்படையாலும் நீங்கள் அவர்களை ஞான சூரியனுக்கும் ஞானச் சந்திரனுக்கும் நேரடி உறவுமுறையில் நெருக்கமாகக் கொண்டுவருவீர்கள். நீங்கள் இத்தகைய சக்திசாலி நட்சத்திரங்கள், அல்லவா? நீங்களே சக்திசாலிகளாக அல்லது நெருக்கமாக இல்லாவிட்டால், உங்களால் மற்றவர்களையும் நேரடித் தொடர்பை ஏற்படுத்தச் செய்ய முடியாது. நீங்களே தொலைவில் இருந்தால், உங்களின் சிறப்பியல்பிற்கேற்ப, உங்களின் மூலமாக மற்றவர்கள் என்ன சக்தியை, உறவுமுறையை, தொடர்பைப் பெற முடியுமோ, அவர்கள் அதைத் தமது கொள்ளளவிற்கேற்பவே தொடர்ந்தும் பெறுவார்கள். நேரடியாக சக்தியைப் பெறும் வலிமை அவர்களிடம் இல்லை. இதனாலேயே, ஞான சூரியன் அதிமேலானவராக இருப்பதைப் போன்று, விசேடமான நட்சத்திரங்களும் உயர்ந்தவர்களே. இல்லாவிடின், அவர்களால் மேன்மையான ஸ்திதியை அனுபவம் செய்ய முடியாதிருக்கும். அவர்களால் தமது கொள்ளளவிற்கேற்பவே பேறுகளைப் பெறக்கூடியதாக இருக்கும். அவர்கள் சக்திவாய்ந்த ஸ்திதியை அனுபவம் செய்ய மாட்டார்கள்.

இத்தகைய ஆத்மாக்களின் மனங்களிலும் வாயிலும் இருந்து சதா வெளிப்படுகின்ற வார்த்தைகள், ‘இது இவ்வாறே இருக்க வேண்டும், ஆனால் அது அவ்வாறு இல்லை’ என்பதே ஆகும். நான் இவ்வாறே ஆகவேண்டும். ஆனால் இன்னமும் நான் அவ்வாறு ஆகவில்லை. நான் இதையே செய்ய வேண்டும். ஆனால் என்னால் செய்ய முடியவில்லை. அவர்கள் அனைத்தையும் தமது கொள்ளவிற்கேற்பச் செய்யும் ஆத்மாக்கள் என்றே அழைக்கப்படுவார்கள். அவர்கள் சகல சக்திகளும் நிறைந்த ஆத்மாக்கள் அல்ல. இத்தகைய ஆத்மாக்களால் தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தடைகளை அழிப்பவர்களாக ஆக முடிவதில்லை. அவர்கள் முன்னால் சென்றவுடனேயே, ஒரு தடை வரும். அவர்கள் அந்தத் தடையை நீக்குவார்கள். அவர்களுக்குத் தைரியம் ஏற்படும். அவர்கள் சந்தோஷப்படுவார்கள். பின்னர் இன்னொரு தடை ஏற்படும். ஆயுள் ரேகை, அதாவது, அவர்களின் முயற்சிக்கான ரேகை, எல்லா வேளையும் தெளிவாக இருக்காது. அவர்கள் சிறிதளவு முன்னேறிப் பின்னர் நிறுத்தி, பின்னர் மீண்டும் சிறிதளவு முன்னேறுகின்ற வழிமுறையுடனேயே முன்னேறுவார்கள். அவர்கள் மற்றவர்களையும் தொடர்ந்து இந்த முறையிலேயே முன்னேறச் செய்வார்கள். நிறுத்திப் பின்னர் ஆரம்பிப்பதனால், அவர்களால் நிலையான விரைவான வேகத்தை அனுபவம் செய்ய முடிவதில்லை. சிலவேளைகளில், நடக்கும் ஸ்திதியாக இருக்கும். சிலவேளைகளில், ஏறுகின்ற ஸ்திதியாக இருக்கும். ஏனைய வேளைகளில் பறக்கும் ஸ்திதியாக இருக்கும். அவர்கள் எப்போதும் ஸ்திரமான அல்லது சக்திவாய்ந்த ஸ்திதியை அனுபவம் செய்வதில்லை. அவர்கள் சிலவேளைகளில் பிரச்சனையாக இருப்பார்கள். சிலவேளைகளில் தீர்வுகளின் சொரூபங்களாக இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் தமது கொள்ளளவிற்கேற்பவே செயற்படுவார்கள். ஞான சூரியனிடமிருந்து சகல சக்திகளையும் கிரகிப்பதற்கான சக்தி அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு நிச்சயமாக இடையில் ஆதாரம் தேவைப்படுகிறது. அவர்கள் கொள்ளளவிற்கேற்ப அனைத்தையும் பெற்றுள்ள ஆத்மாக்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.

இங்கு வருவதற்கு நீங்கள் உயர்ந்த மலையில் மேலே வரவேண்டியுள்ளது. நீங்கள் எத்தகைய வாகனத்தில் வந்தாலும், அது பேரூந்தாகவோ அல்லது காராகவோ இருந்தாலும், அதற்கு சக்திவாய்ந்த எஞ்சின் இருப்பதனால், உங்களால் காற்றுக்காக அல்லது நீருக்காக நிற்காமல் விரைவான வேகத்தில் நேரடியாக மேலே வரமுடிகிறது. எஞ்சின் பலவீனமாக இருந்தால், மேலதிகமாகக் காற்று அடிப்பதற்கு அல்லது நீருக்காக நீங்கள் இடையில் நிறுத்த வேண்டியிருக்கும். அப்போது உங்களால் நிறுத்தாமல் பயணம் செய்ய முடியாது. எங்கேயாவது நீங்கள் நிறுத்த வேண்டியிருக்கும். அதேபோன்று, கொள்ளளவிற்கேற்ப அனைத்தையும் கொண்டிருக்கும் ஆத்மாக்களால் பறக்கும் ஸ்திதி என்ற தமது இலக்கை வேறோர் ஆத்மாவின் அல்லது ஏதாவது சத்கதி அல்லது வசதி இல்லாமல் விரைவான வேகத்துடன் சென்று அடைய முடியாது. சிலவேளைகளில், அவர்கள் கூறுவார்கள்: இன்று, நான் சந்தோஷமாக இல்லை. இன்று எனது யோகம் சக்திவாய்ந்ததாக இல்லை. இன்று, நான் அனைத்தையும் புரிந்து கொண்டிருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட தாரணையில் பலவீனமாகி விட்டேன். இன்று, சேவை செய்வதற்கு எனக்கு உற்சாகம் இல்லை. சிலவேளைகளில், அவர்களுக்கு நீர் தேவைப்படுகிறது. சிலவேளைகளில் அவர்களுக்குக் காற்றுத் தேவைப்படுகிறது. சிலவேளைகளில், அவர்களுக்கு ஓர் உந்துதல் தேவைப்படுகிறது. இதை நீங்கள் சக்திசாலி என்று அழைப்பீர்களா? நான் சகல உரிமைகளையும் கொண்டிருப்பவன். எனது உரிமைகளைக் கோருவதில், நான் முதலாம் இலக்கத்தவன். நான் எவரையும் விட சளைத்தவன் அல்ல. ஆனால், எதையாவது செய்வது என்று வரும்போது, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? நான் இன்னமும் இளையவன். நான் இன்னமும் புதியவன். நான் வயதானவன் இல்லை. நான் இன்னமும் சம்பூரணம் ஆகவில்லை. இன்னமும் சிறிது காலம் எஞ்சியுள்ளது. அது மூத்தவரின் தவறு, என்னுடையதல்ல. நான் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் அதைக் கற்பேன். அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பாப்தாதா எப்போதும் கூறுவார். நானும் இந்த வாய்ப்பைப் பெற வேண்டும். நீங்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். கோருவதில், நீங்கள் அதைப் பெற வேண்டும் எனக் கூறுகிறீர்கள். ஆனால், எதையாவது செய்வது என்று வரும்போது, மூத்தவர்கள் செய்வதை மட்டுமே நீங்கள் செய்வீர்கள் என்று சொல்கிறீர்கள். உங்களின் உரிமைகளைக் கோருவதில், உங்களுக்கு இப்போதே அவை வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், எதையாவது செய்வது என்று வரும்போது, ஏதாவதொரு வேளையில் நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று கூறுகிறீர்கள். எடுப்பதில் நீங்கள் மூத்தவர் ஆகுகிறீர்கள். செய்வதில் இளையவர் ஆகுகிறீர்கள். இதுவே கொள்ளளவிற்கேற்ப அனைத்தையும் செய்யும் ஆத்மா என்று அழைக்கப்படுகிறார்.

இந்தக்களிப்பூட்டும் விளையாட்டைக் காணும்போது, பாப்தாதா தொடர்ந்து புன்னகைக்கிறார். தந்தையே அனைவரிலும் புத்திசாலி ஆவார். ஆனால் மாஸ்ரர் கெட்டிக்காரர்களும் சளைத்தவர்கள் அல்ல. ஆகவே, கொள்ளளவிற்கேற்ப செயற்படும் ஆத்மாக்களில் இருந்து, மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆகுங்கள். எதையாவது செய்பவர்கள் ஆகுங்கள். அப்போது நீங்கள் இயல்பாகவே சக்திவாய்ந்த செயல்களின் பலனையும், நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் பலனையும் பெறுவீர்கள். பேறுகள் அனைத்தும் நிச்சயமாக உங்களை நிழலைப் போன்று தொடரும். நீங்கள் ஞான சூரியனிடமிருந்து பெற்ற ஞானோதயத்தடன் தொடர்ந்து முன்னேறுங்கள். சகல பேறுகள் என்ற நிழல் உங்களை நிச்சயமாகப் பின்தொடரும். உங்களுக்குப் புரிகிறதா?

இன்று, பாபா கொள்ளளவிற்கேற்ப இருக்கும் நட்சத்திரங்களினதும் சக்திவாய்ந்த நட்சத்திரங்களினதும் பிரகாசத்தைப் பார்த்தார். அச்சா.

அனைவரும் விரைந்து ஓடோடி இங்கு வந்துள்ளார்கள். நீங்கள் தந்தையின் வீட்டை வந்தடைந்துள்ளீர்கள். எனவே, அவர் குழந்தைகளான உங்களுக்கு, நல்வரவாகுக! என்று கூறுகிறார். உங்களுக்கு என்ன இடம் அல்லது எத்தகைய இடம் கிடைத்தாலும், இது உங்களின் வீடே. வீடு ஒரு நாளில் விரிவடையாது. ஆனால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அல்லவா? ஆகவே, அனைவருக்கும் தங்குமிடம் கொடுக்கப்பட வேண்டும். இடமும் காலமும் எண்ணிக்கைக்கேற்ப இருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் தங்குமிடம் கிடைத்துள்ளது, அல்லவா? ஆமாம், அனைத்திற்கும் வரிசையில் நிற்க வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில், பாண்டவபவனிலும் அதை ஒட்டிய ஏனைய கட்டடங்களிலும் உங்களுக்கு தங்குமிடம் கிடைத்துள்ளது. வரிசை இன்னமும் வெளியே செல்லவில்லை. வளர்ச்சி ஏற்படும். வரிசைகள் நிற்கும். சதா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சந்தோஷமாகவும் சௌகரியமாகவும் இருங்கள். தந்தையின் வீட்டில் நீங்கள் பெறும் இதயத்தின் சௌகரியத்தை வேறு எங்கும் ஒருபோதும் நீங்கள் பெற மாட்டீர்கள். ஆகவே, சதா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் திருப்தியாக இருங்கள். சங்கமயுகத்தின் ஆசீர்வாதபூமியின் மூன்றடி நிலமும் சத்தியயுகத்தின் மாளிகைகளை விட அதிமேன்மையானது. அமர்வதற்கு உங்களுக்கு இந்தளவு இடம் கிடைத்துள்ளது. அதுவும் அதிமேன்மையானதே. நீங்கள் இந்த நாட்களை நினைவு செய்வீர்கள்! இப்போது, குறைந்தபட்சம் உங்களுக்குத் திருஷ்டியும் தோளியும் கிடைக்கின்றன. பின்னர், நீங்கள் மற்றவர்களைத் திருஷ்டியும் தோளியும் பெறச் செய்பவர்கள் ஆகவேண்டும். விரிவாக்கம் இடம்பெறுகிறது. இது சந்தோஷமான விடயம். நீங்கள் எதைப் பெற்றாலும், எவ்வாறு பெற்றாலும் சந்தோஷமாக இருங்கள். விரிவாக்கம் என்றால் நன்மை என்று அர்த்தம். அச்சா.

கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் விசேடமாக நேசிக்கப்படும், நீண்ட காலம் பிரிந்து இப்போது கண்டெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையிலும் மகத்தானவர்கள். டெல்லியும் முன்னேறியுள்ளது. நீங்கள் அனைவரும் தொடர்ந்து வளர்வீர்களாக! உத்தரப் பிரதேசமும் எவருக்கும் சளைத்ததல்ல. ஒவ்வோர் இடத்திற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்பு உள்ளது. பாபா வேறொரு வேளையில் அதைப் பற்றி உங்களுக்குக் கூறுவார்.

பாப்தாதாவும் காலத்தின் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அவர் பௌதீகமான சரீரத்தை ஆதாரமாக எடுக்க வேண்டியுள்ளது. அவர் ஒரு சரீரத்தையே கடனாகப் பெற்றுள்ளார். அது அவரின் சொந்த சரீரம் இல்லை. பாப்தாதாவிற்கு அந்தச் சரீரத்தின் பொறுப்பு உள்ளது. ஆகவே, எல்லையற்றதன் அதிபதி, எல்லையால் கட்டுப்பட்டுள்ளார். சூட்சும வதனம் எல்லையற்றது. இங்கு, பாபா நடைமுறை, காலம், சரீரத்தின் பலம் என்பவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எல்லையற்ற இடத்திற்கு வந்து சந்திப்பைக் கொண்டாடுங்கள். அங்கு, எவரும் உங்களிடம், இப்போது வாருங்கள், இப்போது திரும்பிச் செல்லுங்கள் அல்லது வரிசைக்கிரமமாக வாருங்கள் எனக் கூற மாட்டார்கள். உங்களுக்குத் திறந்த அழைப்பு உள்ளது. அதாவது, உங்களுக்கு முழுமையான உரிமைகள் உள்ளன. நீங்கள் 2 மணிக்கும் வரலாம். அல்லது 4 மணிக்கும் வரலாம். அச்சா.

சகல சதா மேன்மையான, சக்திசாலி ஆத்மாக்களுக்கும், எப்போதும் நெருக்கமாகவும் சமமாகவும் இருப்பதுடன் ஞான சூரியனைப் போன்று அதியுயர்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும், ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும், ‘நான் முதலில்’ என்று கூறுவதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் சதா கொண்டிருக்கும் தைரியசாலி ஆத்மாக்களுக்கும், சகல ஆத்மாக்களையும் சக்திசாலிகள் ஆக்கும் சகல நெருக்கமான குழந்தைகளுக்கும், ஞான சூரியனிடமிருந்தும் ஞானச் சந்திரனிடமிருந்தும் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா தாதிகளைச் சந்திக்கிறார்:

பாப்தாதா குழந்தைகளான உங்களையிட்டுப் பெருமைப்படுகிறார். அவர் எதையிட்டுப் பெருமைப்படுகிறார்? தந்தை எப்போதும் தனக்குச் சமமான குழந்தைகளையிட்டுப் பெருமைப்படுகிறார். தந்தையை விட அதி விசேடமான பணியை அவரின் குழந்தைகள் செய்யும்போது, தந்தை எவ்வளவு பெருமைப்படுவார்? இரவு பகலாக, நினைவிற்கும் சேவைக்கும் உங்களுக்கு ஆழ்ந்த அன்பு உள்ளது. எவ்வாறாயினும், மகாவீர் குழந்தைகளின் சிறப்பியல்பானது, அவர்கள் நினைவை முன்னால் வைக்கிறார்கள். பின்னரே சேவையை வைக்கிறார்கள். குதிரை வீரர்களும் காலாட்படையினரும் சேவையை முன்னால் வைத்துப் பின்னர் நினைவை வைக்கிறார்கள். இதனாலேயே, வேறுபாடு ஏற்படுகிறது. முதலில் நினைவும் பின்னர் சேவையும் இருந்தால், வெற்றி ஏற்படும். நீங்கள் சேவையை முன்னால் வைத்தால், சேவையில் என்ன நிகழ்ந்தாலும், அது நல்லதோ கெட்டதோ, நீங்கள் அதனால் பாதிக்கப்படுகிறீர்கள். ஆனால், நினைவை முன்னால் வைத்தால், உங்களால் இலகுவாகப் பற்றற்றவர் ஆகமுடியும். எனவே, தந்தையும் தனக்குச் சமமாக இருக்கும் இத்தகைய குழந்தைகளையிட்டுப் பெருமைப்படுகிறார். அவருக்குச் சமமான இத்தகைய குழந்தைகளை உடையவர் இந்த முழு உலகிலும் யார் இருக்கிறார்? பாபா ஒவ்வொருவரின் சிறப்பியல்பைப் பற்றிப் பேசினால், ஒரு பாகவதமே உருவாக்கப்பட்டுவிடும். ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு மகாராத்தியின் சிறப்பியல்பைப் பற்றியும் பாபா பேசினால், ஒரு பாகவதமே உருவாக்கப்பட்டுவிடும். மதுவனத்தில், ஞான சூரியனும் நட்சத்திரங்களும் ஒன்றாகப் பிரகாசிக்கும்போது, மதுவனத்தில் வானத்தின் அழகு மிக மேன்மையானது ஆகும். ஞான சூரியனுடன் நட்சத்திரங்களும் நிச்சயமாகத் தேவை.

பாப்தாதா தம்பதிகளின் குழுக்களைச் சந்திக்கிறார்.

1.ஒரு திசையில் செல்லும் தண்டவாளங்களில் பயணிப்பவர்கள் விரைவான வேகத்தைக் கொண்டிருப்பார்கள், அல்லவா? இருவரினதும் ஒரு திசையானது - இந்த ஒரு திசையானது சக்கரங்களே. ஒரு வழிகாட்டலின் அடிப்படையில் முன்னேறுபவர்கள் விரைவான வேகத்தில் சதா செல்வார்கள். இரண்டு சக்கரங்களும் மேன்மையாக இருக்க வேண்டும். ஒன்று மெதுவாகவும் இன்னொன்று வேகமாகவும் இல்லையல்லவா? இரண்டும் சமமாக இருக்க வேண்டும். தீவிர முயற்சி செய்வதில், பாண்டவர்களா அல்லது சக்திகளா முதலாம் இலக்கத்தில் இருக்கிறார்கள்? ஒருவரையொருவர் முன்னேறச் செய்வதெனில் சுயம் முன்னேறுகிறது என்று அர்த்தம். மற்றவர்களை முன்னேறச் செய்து, நீங்கள் பின்னால் தங்கிவிடுவதாக இருக்கக்கூடாது. மற்றவர்களை முன்னேறச் செய்வதெனில், தானும் முன்னேறுதல் என்று அர்த்தம். நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள், அல்லவா? டெல்லியையும் மும்பாயையும் சேர்ந்தவர்கள் குறிப்பாக அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில், இந்தப் பாதையில் முன்னேறும்போது, நீங்கள் பல பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் விசேடமான ஆத்மாக்களின் சகவாசத்தையும் ஒத்துழைப்பையும் கற்பித்தல்களையும் பெறுகிறீர்கள். இதுவும் நீங்கள் அழைப்பின்றிப் பெறுகின்ற ஓர் ஆசீர்வாதமே. ஏனையோர் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். தமது பிராமண வாழ்க்கை முழுவதிலும் அல்லது சேவை வாழ்க்கையில், இத்தகைய மேன்மையான ஆத்மாக்கள் தமது இடங்களுக்குச் சிரமத்துடன் இரண்டு அல்லது மூன்று தடவைகளே செல்கிறார்கள். ஆனால், அவர்களை நீங்கள் அழைத்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் இலகுவாக உங்களிடம் வருகிறார்கள். எனவே, சகவாசத்தின் நிறம், பிரபல்யமான விசேட ஆத்மாக்களின் சகவாசம் உங்களுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் மிக இலகுவாகப் பாக்கியத்தைப் பெறுகின்ற அதிர்ஷ்டசாலி ஆத்மாக்கள் ஆவீர்கள். ‘ஆஹா, எனது மேன்மையான பாக்கியமே!’ என்ற பாடலை சதா பாடுங்கள். நீங்கள் பெறும் பேறுகளின் பிரதிபலன், சதா பறக்கும் ஸ்திதியைக் கொண்டிருத்தல் ஆகும். நின்றுவிடுபவர்களாகவோ அல்லது நடப்பவர்களாவோ ஆகாமல், சதா பறப்பவர்கள் ஆகுங்கள்.

2.நீங்கள் சதா உங்களைத் தந்தையின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பவர்களாக அனுபவம் செய்கிறீர்களா? தந்தையின் நினைவே பாதுகாப்புக் குடை ஆகும். பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள். மழை பெய்யும்போது அல்லது புயல்கள் ஏற்படும்போது, நீங்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் செல்வீர்கள். அதேபோன்று, தந்தையின் நினைவே பாதுகாப்புக் குடை ஆகும். பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பவர்கள் இலகுவாக மாயையை வென்றவர்கள் ஆகுகிறார்கள். நினைவு செய்வதை மறத்தல் என்றால், நீங்கள் பாதுகாப்புக் குடையின் கீழிருந்து வெளியே வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். தந்தையின் நினைவு எப்போதும் உங்களுடன் இருக்கும். இந்த முறையில் பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பவர்கள் எப்போதும் தொடர்ந்து தந்தையின் உதவியைப் பெறுவார்கள். அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு சக்தியின் உதவியையும் பெறுவார்கள். அவர்கள் ஒருபோதும் பலவீனமாகவோ அல்லது மாயையால் தோற்கடிக்கப்படவோ முடியாது. சிலவேளைகளில் நீங்கள் நினைவு செய்வதை மறக்கும்படியாக மாயை செய்யவில்லை, அல்லவா? 63 பிறவிகளாக, நீங்கள் தொடர்ந்து மறந்தீர்கள். இப்போது, இந்த சங்கமயுகம் நினைவில் இருப்பதற்கான யுகம் ஆகும். இந்த வேளையில் மறக்காதீர்கள். மறந்ததனால், நீங்கள் தளம்பல் அடைந்து, துன்பத்தையே அடைந்தீர்கள். அவ்வாறிருக்கும்போது, எப்படி நீங்கள் இப்போது மறப்பீர்கள்? நீங்கள் இப்போது எல்லா வேளையும் நினைவில் இருப்பவர்கள்.

பிரியாவிடை பெறும் வேளையில்: சங்கமயுகம் சந்திப்பிற்கான காலம் ஆகும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகச் சந்திக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கும். சந்திக்க வேண்டும் என்ற தூய ஆசை இருக்க வேண்டும். ஏனெனில், சந்திக்க வேண்டும் என்ற தூய ஆசையே உங்களை மாயையை வென்றவர்கள் ஆக்குகிறது. சந்திக்க வேண்டும் என்ற இந்தத் தூய எண்ணம் சதா நீங்கள் தந்தையின் நினைவைக் கொண்டிருக்கச் செய்கிறது. இது நிகழ வேண்டும். இது நிறைவேறியதும், சங்கமயுகமும் முடிவடையும். ஏனைய சகல ஆசைகளும் நிறைவேறியுள்ளன. ஆனால், சதா நினைவில் அமிழ்ந்திருக்க வேண்டும் என்ற தூய ஆசையே உங்களை முன்னேறச் செய்கிறது. இவ்வாறே உள்ளது, அல்லவா? எனவே, நீங்கள் பௌதீகமாக அல்லது அவ்யக்த ரூபத்தில் தொடர்ந்து சந்திப்பினைக் கொண்டாடுவீர்கள். அவ்யக்த சந்திப்பு அதற்கேயுரிய முறையில் தனித்துவமானது. பௌதீகச் சந்திப்பு அதற்கேயுரிய முறையில் தனித்துவமானது. சந்திப்பது நல்லது. அச்சா. காலை எப்போதும் தூய்மையாகவும் மேன்மையாகவும் இருக்கும். அவர்களோ, ‘காலை வணக்கம்’ என்று கூறுகிறார்கள். ஆனால் இங்கு, இது தூய்மையாகவும் மேன்மையாகவும் உள்ளது. ஒவ்வொரு விநாடியும் தூய்மையானது, மேன்மையானது. ஆகவே, ஒவ்வொரு விநாடிக்கும் வாழ்த்துக்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையின் சகவாசத்தினால் இலகுவாகத் தூய்மை என்ற ஆதி தர்மத்தைக் கடைப்பிடிக்கும் மாஸ்ரர் சர்வசக்திவான் ஆகுவீர்களாக.

ஆத்மாக்களின் ஆதி தர்மம் (மதம், வாழ்க்கை முறை) தூய்மையே. தூய்மையின்மை என்பது புறதர்மம். உங்களின் ஆதி தர்மத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்போது, புறதர்மம் உங்களை அசைக்க முடியாது. எவ்வாறாயினும், நீங்கள் தந்தையை மிகச்சரியாக இனங்கண்டு, அவரை உங்களுடனேயே வைத்திருந்தால், உங்களின் ஆதி தர்மமான தூய்மையைக் கடைப்பிடித்தல் மிக இலகுவாக இருக்கும். ஏனெனில், உங்களின் சகபாடி சர்வசக்திவான் ஆவார். சர்வசக்திவானின் குழந்தைகளான மாஸ்ரர் சர்வசக்திவான்களின் முன்னால் தூய்மையின்மையால் வரமுடியாது. உங்களின் எண்ணங்களிலேனும் மாயை வந்தால், ஏதாவதொரு வாசல் நிச்சயமாகத் திறந்துள்ளது அல்லது உங்களின் நம்பிக்கையில் ஏதாவது குறைவாக உள்ளது.

சுலோகம்:
முக்காலங்களையும் அறிந்தவர்கள், ஒருபோதும் எதையும் ஒரு காலத்தின் அடிப்படையில் பார்க்க மாட்டார்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நன்மை இருப்பதாகவே அவர்கள் கருதுவார்கள்.