23.12.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவது, அதிமேலான அட்டவணையைக் கொண்டிருப்பது என்பதாகும். ஸ்ரீமத்துக்கு மரியாதையைச் செலுத்தும் குழந்தைகள் நிச்சயமாக முரளியைக் கற்பார்கள்.

பதில்:
குழந்தைகளாகிய உங்களிடம் எவரும் வினவக்கூடாது: “நீங்கள்; சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறீர்களா?”, ஏனெனில் நீங்கள் சதா திருப்தியாக இருப்பதாகக்; கூறுகிறீர்கள். நீங்கள் அப்பாலுள்ள பூமியில், பரந்தாமத்தில் வசிக்கும் தந்தையைக் கண்டு கொள்வதற்கான அக்கறையைக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அவரைக் கண்டுகொண்டதால், நீங்கள் ஏன் எதைப் பற்றியாவது கவலைப்பட வேண்டும்? நீங்கள் உடல்நலனின்றி இருந்தாலும், நீங்கள்; சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பதாக இன்னமும் நீங்கள் கூறுகிறீர்கள். கடவுளின் குழந்தைகள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. எவராவது மாயையினால் தாக்கப்படுவதைத் தந்தை பார்க்கும்பொழுதே, அவர் வினவுகிறார்: குழந்தாய், நீங்கள்; சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறீர்களா?”

ஓம் சாந்தி.
தந்தை விளங்கப்படுத்துகிறார்: பாபாவே தந்தையும், ஆசிரியரும், பரம குருவும் என்பது நிச்சயமாகக் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நிச்சயமாக இந்த நினைவிலேயே நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும். வேறு எவராலும் உங்களுக்கு இந்த நினைவைக் கற்பிக்க முடியாது. தந்தை மாத்திரமே ஒவ்வொரு கல்பத்திலும் வந்து உங்களுக்கு இதைக் கற்பிக்கின்றார். அவரே தூய்மையாக்குபவராகிய, ஞானக்கடல் ஆவார். இப்பொழுது நீங்கள் மூன்றாவது ஞானக் கண்ணை,அதாவது ஒரு தெய்வீகப் புத்தியைப் பெற்றுவிட்டதால், உங்களுக்கு இதை விளங்கப்படுத்த முடியும். குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைப் புரிந்துகொண்டாலும், தந்தையை மறந்துவிடுவதால், எவ்வாறு உங்களால் ஆசிரியரையும் குருவையும் நினைவுசெய்ய முடியும்? தந்தையின் மூன்று ரூபங்களையும் உங்களை மறக்கச் செய்யுமளவிற்கு மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் ஆவாள். பின்னர் நீங்கள் கூறுகிறீர்கள்: நான் தோற்கடிக்கப்பட்டேன். உண்மையில், நீங்கள் ஒவ்வொரு அடியிலும் பல மில்லியன்களைச் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் தோற்கடிக்கப்பட்டால், எவ்வாறு உங்களால் அவற்றில் எதையாவது சேகரிக்க முடியும்? தேவர்கள் ஒரு தாமரை மலரைச் சின்னமாகக் கையில் வைத்திருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி கடவுளால் கற்பிக்கப்படுகிறது. அத்தகையதொரு கல்வியை என்றுமே ஒரு மனிதரினால் கற்பிக்க முடியாது. தேவர்கள் புகழப்பட்டாலும், அனைவரிலும் அதிமேன்மையானவர்; ஒரேயொரு தந்தையே ஆவார். ஆகவே, அவர்களுக்கு உள்ள மகத்துவம் என்ன? இன்று, அவர்கள் “கழுதைத்தனத்தைக்” கொண்டிருக்கிறார்கள், நாளை அவர்கள் இராச்சியத்தைக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது நீங்கள் இவ்வாறு ஆகுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். பலர் இம்முயற்சியில் சித்தியடைவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஞானம் மிகவும் இலகுவானதாக இருப்பினும், உங்களிற் சிலரே சித்தியடைகிறீர்கள்! ஏன்? ஏனெனில் மாயை உங்களை மீண்டும் மீண்டும் மறக்க வைக்கிறாள். உங்களுடைய நினைவு அட்டவணையை வைத்திருக்குமாறு தந்தை உங்களுக்குக் கூறுகிறார். ஆனால் உங்களால் அதை எழுதுவதற்கு இயலாமல் இருக்கிறது. நீங்கள் எந்தளவுக்கு அமர்ந்திருந்து அதை எழுதுகிறீர்கள்? நீங்கள் (அட்டவணையை) எழுதும்பொழுது, சில சமயங்களில் அது உயர்வாகவும் சிலசமயங்களில், அது தாழ்வாகவும் உள்ளது. ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்களே, அதிமேன்மையான அட்டவணையைக் கொண்டுள்ளார்கள். ஒருவேளை இந்த அப்பாவிகள் வெட்கப்படக்கூடும் என்பது தந்தைக்குத் தெரியும். இல்லாவிட்டால், ஸ்ரீமத் பயிற்சி செய்யப்பட்டும். ஒன்று அல்லது இரண்டு சத வீதமானோரே எழுதுகிறார்கள். அவர்கள் ஒரு முரளியைப் பெறும்பொழுதும், அவர்கள் அதை வாசிப்;பதில்லை, ஏனெனில் அவர்கள் ஸ்ரீமத்திற்;கு அதிக மரியாதையைக் கொண்டிருக்கவில்லை. அவர்;கள் முரளியை வாசிப்பதில்லை என்று அவர் கூறும்பொழுது, பாபா உண்மையையே கூறுகிறார் என்பது நிச்சயமாக அவர்களின் இதயங்களைத் தொடக்கூடும். அவ்வாறாயின், அவர்கள் ஏனையோர்களுக்கு எதைக் கற்பிக்க முடியும்? தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். இதில் ஆசிரியர், ஜீவன்முக்தியை அளிப்பவர் இருவரும் தந்தையுடன் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் சில வார்த்தைகளுக்குள்; இந்த ஞானம் முழுவதும் உள்ளடங்கியுள்ளது. தந்தை அதே விடயங்களையே விளங்கப்படுத்தினாலும், இங்கு நீங்கள் அவற்றை மீட்டல் செய்வதற்கே வருகிறீர்கள். நீங்கள் மறந்துவிடுகிறீர்கள் என்று நீங்கள் கூறுவதனாலேயே நீங்கள் மீட்டல் செய்வதற்காக இங்கு வருகிறீர்கள். உங்களில் சிலர் இதைச் செய்தாலும், உங்களால் சரியான முறையில் மீட்டல் செய்ய இயலாமல் உள்ளது. அது சிலரின் பாக்கியத்தில் இல்லாதுவிட்டால், அவர் என்ன முயற்சியைச் செய்வார்? ஒரேயொரு தந்தையே உங்கள் அனைவரையும் இந்த முயற்சியைச் செய்வதற்குத் தூண்டுகிறார். இதில் எவருக்கும் பாரபட்சம் காண்பிக்க முடியாது. ஏனைய கல்வியில், ஓர் ஆசிரியர் மேலதிக வகுப்பை எடுப்பதற்கு அழைக்கப்படுகிறார். நீங்கள் அனைவரும் உங்கள் சொந்தப் பாக்கியத்தை உருவாக்குவதற்காக, இவர் அனைவருக்கும் ஒரேவிதமாகக் கற்பிக்கிறார். எந்தளவுக்கு அவர் அமர்ந்திருந்து உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கற்பிப்பார்? இங்கு பல குழந்தைகள் உள்ளார்கள். ஏனைய கல்வியில், தங்கள் குழந்தைகளுக்கு மேலதிக வகுப்பு எடுப்பதற்காக, செல்வந்தர்கள் ஆசிரியருக்கு எதையாவது கொடுப்பார்கள். ஒருவர் (கல்வியில்) மந்தமாக இருப்பதை ஆசிரியர் அறிந்துகொள்வதால், அவரை ஒரு புலமைப்பரிசிலை வெல்வதற்குத் தகுதியானவர் ஆக்குவதற்காக, அவருக்கு மேலதிகமாகக் கற்பிப்பார். இந்த ஒரேயொரு ஆசிரியர் இதைச் செய்வதில்லை. இவர் அனைவருக்கும் ஒரேமாதிரிக் கற்பிக்கின்றார். ஒரு மாணவனுக்காக ஓர் ஆசிரியர் மேலதிக முயற்சியைச் செய்யும்பொழுது, அவர் சிறிதளவு கருணை காட்டுகிறார் என்று அர்த்தமாகும். சிலர் ஒரு மாணவரில் மேலதிக நேரத்தைச் செலவழித்து அவர் திறமைசாலி ஆகுவதற்காக மேலும் அதிகமாக கற்பித்து பணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தத் தந்தை அனைவருக்கும் அதே மகா மந்திரத்தைக் கொடுப்பார்: மன்மனாபவ் அவ்வளவுதான்! தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர், அவருடைய நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரம், நீங்கள் தூய்மையாகுகிறீர்கள். அது குழந்தைகளாகிய உங்கள் கரங்களிலேயே உள்ளது - நீங்கள் அவரை அதிகளவு நினைவுசெய்தால், அந்தளவிற்கே தூய்மையாகுவீர்கள்! அனைத்தும் நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. அங்கு ஏனையோர்கள் செல்வதைப்; பார்க்கும்பொழுது, மக்கள் ஒரு யாத்திரை செல்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பல யாத்திரைகள் சென்றீPர்கள். அதன் பெறுபேறு என்னவாக இருந்தது? நீங்கள் தொடர்ந்தும் கீழே வந்தீர்கள். அந்த யாத்திரைகள் எதற்காக ஏற்பட்டன? அவற்றிலிருந்து நீங்கள் எதைப் பெறுவீர்கள்? நீங்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. இதுவே இப்பொழுது உங்கள் நினைவுயாத்திரை ஆகும். இந்த ஒரு வார்த்தை மாத்திரமே உள்ளது: மன்மனாபவ! உங்களுடைய இந்த யாத்திரை அநாதியானதாகும். தொன்றுதொட்டு தாங்கள் யாத்திரைகளுக்குச் சென்று வருவதாக மக்கள் கூறுகிறார்கள். இப்பொழுது உங்களுக்கு ஞானம் உள்ளதால், ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் இந்த யாத்திரையை மேற்கொள்வதாக நீங்கள் கூறுகிறீர்கள். தந்தையே வந்து உங்களுக்கு இந்த யாத்திரையைக் கற்பிக்கிறார். அந்த யாத்திரைகளில் மக்கள் அதிகளவு தடுமாறுவதுடன் அதிகளவு சப்தமிடு;கிறார்கள். இந்த யாத்திரை மயான அமைதிக்குரியதாகும். நீங்கள் ஒரேயொரு தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இவ்வாறே நீங்கள் தூய்மை ஆகுகிறீர்கள். இந்த உண்மையான ஆன்மீக யாத்திரையைத் தந்தை உங்களுக்குக் கற்பித்துள்ளார். பிறவிபிறவியாக நீங்கள் அந்த யாத்திரைகளுக்குச் செல்கிறீர்கள். இருப்பினும், நீங்கள் தொடர்ந்தும் பாடினீர்கள்: நாங்கள் நாலா திசைகளிலும் கடவுளைத் தேடி அலைந்தோம், இன்னமும் நாங்கள் அவரிடமிருந்து தொலைவிலேயே உள்ளோம். ஒரு யாத்திரையிலிருந்து அவர்கள் திரும்பும்பொழுது, விகாரத்தில் ஈடுபடுவதால், அங்கு என்ன நன்மை இருந்தது? இப்பொழுது இதுவே தந்தை வருகின்ற அதிமங்களகரமான சங்கமயுகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒருநாள், தந்தை வந்துவிட்டார் என்பதை அனைவரும் அறிந்துகொள்வார்கள். இறுதியில் எவ்வாறு கடவுளை எவரேனும் கண்டுகொள்ள முடியும்;? இது எவருக்கும் தெரியாது. கடவுள் பூனைகளிலும் நாய்களிலும் இருக்கிறார் என்று சிலர் எண்ணுகிறார்கள். நீங்கள் கடவுளை அவற்றில் கண்டுகொள்வீர்களா? அதிகளவு பொய்மை உள்ளது. அவர்களுடைய உணவும் பொய் (தவறானது), பானமும் பொய், அவர்கள் தங்களுடைய இரவைப் பொய்மையில் கழிக்கிறார்கள். இதனாலேயே இதுவே பொய்மையான பூமி ஆகும். சுவர்க்கம் மாத்திரமே சத்தியபூமி என்று அழைக்கப்படுகிறது. பாரதம் சுவர்க்கமாக இருந்தது. சுவர்க்கத்தில் உள்ள அனைவரும் பாரதவாசிகளாக இருந்தார்கள்;. இன்று அவர்களே நரகத்தில் இருக்கிறார்கள். இப்பொழுது தந்தையிடமிருந்து நீங்கள் ஸ்ரீமத்தைப் பெற்று, மீண்டும் ஒருமுறை பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகிறீர்கள் என்பது இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அந்நேரத்தில், பாரதத்தில் வேறு எவரும் இருக்கவில்லை. முழு உலகமும் தூய்மையாகுகிறது, தற்சமயம், பல்வேறு சமயங்கள் உள்ளன. முழு விருட்சத்தினதும் ஞானத்தைத் தந்தை உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் எனவும், பின்னர் நீங்கள் வைசியர்களாகவும் பின்னர் சூத்திரர்களாகவும் ஆகினீர்கள் எனவும் தந்தை உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறார். இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் எப்பொழுதாவது இவ்வார்த்தைகளைச் சந்நியாசிகளிடமிருந்தோ அல்லது கல்விமான்களிடமிருந்தோ அல்லது பண்டிதர்களிடமிருந்தோ கேட்டுள்ளீர்களா? “ஹம்சோ, சோஹம்” என்பதன் அர்த்தத்தை மிக இலகுவான முறையில் தந்தை விளங்கப்படுத்துகிறார்! “ஹம்சோ” என்றால் இந்த ஆத்மாவாகிய நான், இவ்வாறாகச் சக்கரத்தைச் சுற்றி வருகிறேன். அம்மக்கள் கூறுகிறார்கள்: “ஆத்மாவாகிய நானே, பரமாத்மா, பரமாத்மாவே ஆத்மாவாகிய நான்;”. “ஹம்சோ” என்பதன் உண்மையான அர்த்தம் ஒருவருக்கேனும் தெரியாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் சதா உங்களின் புத்தியில் “ஹம்சோ” என்னும் மந்திரத்தை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் எவ்வாறு பூகோளத்தை ஆட்சிசெய்;பவர்களாக ஆக முடியும்? 84 பிறவிகளின் சக்கரம் என்பதன் அர்த்தத்தையேனும் அம்மக்கள் புரிந்துகொள்வதில்லை. “பாரதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” நினைவுகூரப்படுகிறது. நீங்கள் சதோபிரதான், சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்கிறீர்கள்: சூரிய வம்சம், சந்திர வம்சம் போன்றன. இதைப் பற்றிய அனைத்து விடயங்களும் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். விதையாகிய, ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். அவர் உலகச் சக்கரத்தில் பிரவேசிப்பதில்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் பரமாத்மா ஆகுகின்றோம் என்றல்ல. இல்லை. தந்தை ஞானம் நிறைந்தவராக இருப்பதைப் போன்று எங்களையும் அவ்வாறு ஆக்குகின்றார். அவர் தன்னைப்; போன்று கடவுளாக எங்களை ஆக்குவதில்லை. நீங்கள் இவ்விடயங்களை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும், ஏனெனில், அப்பொழுதே உங்களின் புத்தியில் நீங்கள் சக்கரத்தைச் சுழற்ற முடியும். எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு உங்கள் புத்தியை நீங்கள் பயன்படுத்தலாம். காலம், சாதிகள், வம்சங்கள் போன்றவை அனைத்தும் இதில் உள்ளடக்கப்படுகின்றன. இந்த ஞானத்தினூடாக நீங்கள் அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள். உங்களுக்கு ஞானம் இருக்கும்பொழுது, உங்களால் அதனை ஏனையோருக்கும் கொடுக்க முடியும். அப்பாடசாலைகளில் பரீட்சைகளை எடுக்கும் வேளையில், உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பரீட்சைத் தாள்கள் கொடுக்கப்படுகின்றன. வெளிநாட்டில் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்காகவும் அனைத்து விடயங்களையும் சோதிக்கும் ஒரு சிரேஷ்ட கல்வி அமைச்சர் இருக்க வேண்டும். இங்கு உங்கள் விடைத்தாள்களை யார் சோதிப்பார்கள்? இதை நீங்கள் உங்களுக்காகவே செய்ய வேண்டும். நீங்கள் விரும்பியவாறு உங்களால் ஆக முடியும். இக்கல்வியைக் கற்பதால், தந்தையிடமிருந்து நீங்கள் விரும்பிய அந்தஸ்தை உங்களால் கோர முடியும். நீங்கள் தந்தையை அதிகளவு நினைவுசெய்து ஏனையோருக்குச் சேவை செய்தால், அதிகளவு பலனை நீங்கள் பெறுவீர்கள். ஏனெனில் உங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது, பிரஜைகளும் தேவைப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆகவே, நீங்கள் சேவை செய்வதைப் பற்றி அக்கறைப்படுகிறீர்கள். எந்த ஆலோசகர்களும் அங்கு தேவையில்லை. இங்கு அவர்கள் விவேகம் குறைந்தவர்களாக உள்ளதால், அவர்களுக்கு .ஆலோசகர்கள் தேவையாகும். தந்தையிடம் ஆலோசனை பெறுவதற்காக இங்கு பலர் வருகிறார்கள்: அவர்கள் வினவுகிறார்கள்: பாபா, என்னிடமுள்ள பணத்தினால்; நான் என்ன செய்ய வேண்டும்? நான் என்ன வியாபாரத்தைச் செய்ய வேண்டும்? தந்தை கூறுகிறார்: உங்களுடைய லௌகீக வியாபார விடயங்களை இங்கு கொண்டு வர வேண்டாம். ஆம், ஒருவர் நம்பிக்கையிழந்தால்; அல்லது மனந்தளர்ந்திருந்தால்;, அவருக்கு மீண்டும் நம்பிக்கையளிப்பதற்காக, பாபா அவருக்குச் சில ஆலோசனைகளை வழங்குவார். எவ்வாறாயினும், இது என்னுடைய பணியல்ல. தூய்மையற்றதிலிருந்து உங்களைத் தூய்மையாக்குவதும் உங்களை உலக அதிபதிகளாக ஆக்குவதுமே என்னுடைய பணி ஆகும். நீங்கள் சதா தொடர்ந்தும் தந்தையிடமிருந்து ஸ்ரீமத்தைப் பெற வேண்டும். தற்சமயம், அனைவரும் அசுர வழிகாட்டல்களைக் கொடுக்கிறார்கள். அது சந்தோஷப் பூமியாகும் அங்கு, உங்களிடம் ஒருபொழுதுமே வினவப்பட மாட்டாது: நீங்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறீர்களா? நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? இவ்விடயங்கள் இங்கு மாத்திரமே வினவப்படுகின்றன. இவ்வாறான சொற்கள் அங்கு இல்லை. துன்பபூமியைப் பற்றிய சொற்கள் எதுவும் அங்கு இருப்பதில்லை. எவ்வாறாயினும், மாயை குழந்தைகளிடம் தலையிடும் பொழுது, அவரால் வினவ முடியும் என்பதைத் தந்தை அறிவார்: நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறீர்களா? இங்கு நாங்கள் பயன்படுத்தும் சொற்களைப்பற்றி ஏனைய மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்று மக்கள் உங்களை வினவும்பொழுது, நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆதலால், உங்கள் நலனைப் பற்றி அவர்கள் வினவ வேண்டிய அவசியமில்லை என்று நீங்கள் அவர்களுக்குக் கூற முடியும். பிரம்ம தத்துவத்திற்கு அப்பால் உள்ள பூமியில் வசிக்கும் தந்தையைக் கண்டு கொள்வது பற்றிய அக்கறையை நாங்கள் கொண்டிருந்தோம். இப்பொழுது நாங்கள் அவரைக் கண்டு கொண்டுள்ளோம், நாங்கள் ஏன் வேறு எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்? நீங்கள் யாருடைய குழந்தைகள் என்பதை நீங்கள் சதா நினைவுசெய்ய வேண்டும். உங்கள் புத்தியில் இந்த ஞானம் உள்ளது. நீங்கள் தூய்மையாகும்பொழுது, யுத்தம் ஆரம்பமாகும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று அவர்கள் உங்களை வினவும்பொழுது, நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறீர்கள் என்று உங்களால் கூற முடியும். நீங்கள் நோயுற்றிருக்கும் பொழுதும், இன்னமும் நீங்கள் திருப்தியாகவே இருக்கிறீர்கள். உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கும் தந்தையை நீங்கள் கண்டுகொண்டதால், நீங்கள் பாபாவின் நினைவில் இருக்கும்பொழுது, சுவர்க்கத்தில் இருப்பதிலும் பார்க்க ,இங்கு நீங்கள் மேலும் அதிக திருப்தியாக இருக்கிறீர்கள். அவர் எங்களை மிகவும் தகுதியானவர்கள் ஆக்குகிறார். ஆகவே நாங்கள் ஏன் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்? கடவுளின் குழந்தைகள் எதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? தேவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தேவர்களிலும் பார்க்க கடவுளே மேலானவர், ஆகவே, கடவுளின் குழந்தைகள் எதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார். பாபா எங்களுடைய ஆசிரியரும் சற்குருவும் ஆவார். பாபா எங்கள் மீது ஒரு கிரீடத்தை வைக்கிறார். தன்னுடைய தந்தையின் கிரீடத்தை அணியவுள்ள குழந்தை ஆங்கிலத்தில் ஒரு “முடிக்குரிய இளவரசர்” என்று அழைக்கப்படுவார். சத்தியயுகத்தில் சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமேயில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் அங்கு செல்லும்பொழுது, அந்தச் சந்தோஷத்தை நடைமுறை ரீதியில் நீங்கள் அடைவீர்கள். சத்தியயுகத்தில் என்ன உள்ளது என்பதை நீங்கள் மாத்திரம் அறிவீர்கள். உங்களுடைய தற்போதைய சரீரத்தை நீங்கள் நீக்கிவிடும்பொழுது, நீங்கள் எங்கு செல்வீர்கள்? இப்பொழுது தந்தை உங்களுக்கு நடைமுறை ரீதியில் கற்பிக்கின்றார். நீங்கள் உண்மையிலேயே சுவர்க்கத்துக்குச் செல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இன்ன இன்னார் சுவர்க்கத்துக்குச் சென்று விட்டார் என்று அம்மக்கள் கூறும்பொழுது, எது சுவர்க்கம் என்றோ அல்லது எது நரகம் என்றோ அவர்களுக்குத் தெரியாது. ஒரு சக்கரத்தின் ஆயுட்காலம், நூறாயிரக் கணக்கான வருடங்களை உடையது என்று எழுதப்பட்டுள்ளது. பல பிறவிகளாக நீங்கள் அந்த ஞானத்தைச் செவிமடுக்கும்போது, தொடர்ந்தும் நீங்கள் கீழிறங்குவீர்கள். நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பதையும் நீங்கள் எங்கு வீழ்ந்துள்ளீர்கள் என்பதையும் இப்பொழுது உங்கள் புத்தி அறியும். நீங்கள் சத்தியயுகத்திலிருந்து தொடர்ந்தும் கீழிறங்கி வந்து, இப்பொழுது அதிமங்களகரமான சங்கமயுகத்தை அடைந்துவிட்டீர்கள். ஒவ்வொரு கல்பமும் தந்தை உங்களுக்குக் கற்பிப்பதற்கு வருகிறார். நீங்கள் தந்தையுடன் இருக்கின்றீர்கள், இல்லையா? ஒரேயொருவரே எங்களுக்கு முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்டுகின்ற எங்கள் உண்மையான சற்குரு ஆவார். இந்த பாபா கற்பதைப் போன்று, குழந்தைகளாகிய நீங்களும் அவரை அவதானித்து அவ்வாறாகவே கற்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். உங்களுக்குள் எவ்விதமான அழுக்கோ அல்லது குப்பையோ இருக்கக் கூடாது. குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் மீண்டும் தந்தையை மறந்து விடுகிறீர்கள். நீங்கள் தந்தையை மறந்துவிடும்பொழுது, நீங்கள் அவருடைய கற்பித்தல்களையும் மறந்துவிடுகிறீர்கள். நீங்கள் மாணவர்கள் என்பதையும் மறந்து விடுகிறீர்கள். இந்தக் கல்வி மிகவும் இலகுவானதாகும். பாபாவின் நினைவைக் கொண்டிருப்பதில் மந்திரவித்தை உள்ளது. எவ்வாறு அத்தகைய மந்திரவித்தையைப் புரிவது என்று வேறு எந்தத் தந்தையாலும் உங்களுக்குக் கற்பிக்க முடியாது. இந்த மந்திர வித்தையினூடாக நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகிறீர்கள். சத்திய, திரேதா யுகங்களினூடாக, அரைக் கல்பத்திற்;கு நீடிக்கின்ற ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை சிவபாபா பிரம்மாவினூடாக ஸ்தாபித்தார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பின்னர் தாமதமாகவே ஏனைய அந்தச் சமயங்கள் விரிவாக்கமடைந்தன. உதாரணமாக, கிறிஸ்து வந்தபொழுது, முதலில் மிகச் சொற்பளவினரே இருந்தார்கள். அங்கு அவர்களில் பலர் இருக்கும்பொழுது மாத்திரமே, அவர்களால் ஆட்சிசெய்ய முடியும். கிறிஸ்தவ சமயம் இப்பொழுதும் தொடர்கின்றது. அது தொடர்ந்தும் வளர்கிறது. தாங்கள் கிறிஸ்துவினூடாக, கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். 2000 வருடங்களுக்கு முன்னர், கிறிஸ்து வந்தார், இப்பொழுது விரிவாக்கம் நடைபெறுகிறது. தாங்கள் கிறிஸ்துவிற்கு உரியவர்கள் என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள். முதலில், கிறிஸ்து மாத்திரம் வருகிறார், பின்னர் அவருடைய சமயம் ஸ்தாபிக்கப்பட்டு, விரிவாக்கம் இடம்பெறுகிறது. ஒருவரிலிருந்து இருவரும், இருவரிலிருந்து நால்வரும் ...… இவ்வாறாகத் தொடர்ந்தும் விரிவாக்கம் இடம்பெறுகிறது. கிறிஸ்தவ விருட்சம் எவ்வளவு பெரியதாகி விட்டது எனப் பாருங்கள். தேவ வம்சமே அதன் அத்திவாரம் ஆகும். இதனாலேயே பிரம்மா கொள்ளுப் பாட்டன் என்று அழைக்கப்படுகிறார். எவ்வாறாயினும், தாங்களே பரமாத்மாவாகிய, பரமதந்தை, சிவனின் நேரடிக் குழந்தைகள் என்பதைப் பாரதமக்கள் மறந்துவிட்டார்கள். ஆதிதேவ் கடந்த காலத்தில் இருந்தார் என்பதையும், இது அவருடைய மனித வம்சம் என்பதையும,; கிறிஸ்தவர்களும் புரிந்துகொள்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் தங்கள் கிறிஸ்துவை இன்னமும் நம்புகிறார்கள். கிறிஸ்து, புத்தர் போன்றவர்களைத் தங்கள் தந்தையாக மக்;கள் கருதுகிறார்கள். வம்சாவழி விருட்சமும் உள்ளது. கிறிஸ்தவ நாடுகளில் கிறிஸ்துவின் ஞாபகார்த்தம் உள்ளதைப் போன்றே, குழந்தைகளாகிய நீங்கள் இங்கு தபஸ்யா செய்துள்ளதாலேயே இங்கு அபுவில் உங்களுடைய ஞாபகார்த்தம் உள்ளது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மயான அமைதிக்குரிய, உண்மையான, ஆன்மீக யாத்திரையில் செல்லுங்கள். “ஹம்சோ” என்னும் மந்திரத்தைச் சதா நினைவுசெய்யுங்கள், அப்பொழுதே நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆகுவீர்கள்.

2. உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். உங்களுக்குள் எந்த அழுக்கோ அல்லது குப்பையோ இல்லாதிருக்கட்டும். ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையாக இருப்பதுடன், ஸ்ரீமத்திற்கு மரியாதை கொடுங்கள்.

ஆசீர்வாதம்:
பாபா எனும் வார்த்தையாகிய திறவுகோலினால் அனைத்துப் பொக்கிஷங்களையும் திறக்கின்ற ஒரு பாக்கியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

ஞானத்தின் விரிவாக்கத்தைப் பற்றி அறியவோ பேசவோ முடியாதிருந்தாலும் உங்கள் இதயத்திற்குள் பாபா எனும் ஒரு வார்த்தையை எடுத்து ஏனையோருக்கு, இதயத்திலிருந்து கூறுவதன் மூலம் நீங்கள் ஒரு விசேட ஆத்மா ஆகுவீர்கள். உலகிற்கு முன்னால் நீங்கள் போற்றத் தகுதிவாய்ந்த ஒரு மகாத்மா. ஏனெனில் பாபா எனும் வார்த்தையே அனைத்துப் பொக்கிஷங்களுக்கும் அனைத்துப் பாக்கியத்திற்கும் திறவு கோலாகும். அந்தத் திறவு கோலைப் பயன்படுத்துவதற்கான வழியானது உங்கள் இதயத்தில் அதை அறிந்து உங்களது இதயத்தினால் அதை ஏற்றுக் கொள்வதாகும். உங்கள் இதயத்திலிருந்து “பாபா” எனக் கூறுங்கள் அப்பொழுது பொக்கிஷங்கள் உங்கள் முன் எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கும்.

சுலோகம்:
பாப்தாதா மீது உங்களுக்கு அன்பு இருக்கிறது. எனவே அன்பின் காரணமாக பழைய உலகை அர்ப்பணியுங்கள்.