27.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையிடமிருந்து மின்சக்தியைப் (உரசசநவெ) பெறுவதற்கு, சேவையில் ஈடுபட்டிருங்கள். அனைத்தையும் துறந்து தந்தையின் சேவையில் மும்முரமாக இருக்கின்ற குழந்தைகளே நேசிக்கப்படுகின்றார்கள். அவர்கள் தந்தையின் இதயத்தில் அமர்கின்றார்கள்.
கேள்வி:
சில குழந்தைகளால் ஏன் நிரந்தரமான சந்தோஷத்தை அனுபவம் செய்ய இயலாதிருக்கின்றது? இதற்கான பிரதான காரணம் என்ன?
8பதில்:
நினைவு செய்யும் நேரத்தில் அவர்களின் புத்தி அலைபாய்கிறது. ஸ்திரமான புத்தியைக் கொண்டிருக்காததால் அவர்கள் சந்தோஷத்தைக் கொண்டிருப்பதில்லை. மாயையின் புயல்கள் தீபங்களைக் குழப்பமடையச் செய்கின்றன. உங்கள் செயல்கள் நடுநிலையானவையாக இல்லாவிடின் உங்களால் நிரந்தரமான சந்தோஷத்தைக் கொண்டிருக்க முடியாது. இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் இந்த முயற்சியைச் செய்ய வேண்டும்.ஓம் சாந்தி.
நீங்கள் “ஓம் சாந்தி” என்று கூறும்பொழுது பெருமளவு உற்சாகத்துடன் கூறுகின்றீர்கள், “ஆத்மாவாகிய நான், ஓர் அமைதி சொரூபம்”. அர்த்தம் மிகவும் இலகுவானதாகும்! தந்தை “ஓம் சாந்தி” என்று கூறுகின்றார், தாதாவும் “ஓம் சாந்தி” என்று கூறுகின்றார். அவர் “நான் பரமாத்மா” என்று கூறுகின்றார், இவர் “நான் ஓர் ஆத்மா” என்று கூறுகின்றார். நீங்கள் அனைவரும் நட்சத்திரங்கள்;. நட்சத்திரங்கள் அனைவரினதும் தந்தையும் இருக்கவேண்டும். நினைவுகூரப்பட்டுள்ளது: சூரியனும் சந்திரனும் அதிர்ஷ்ட நட்சத்திரங்களும். குழந்தைகளாகிய நீங்களே அதிகளவு அதிர்ஷ்டமுடைய நட்சத்திரங்கள். இரவில் சந்திரன் வரும்பொழுது, சில நட்சத்திரங்கள் மங்கலாகவும் சில நட்சத்திரங்கள் பிரகாசமாகவும் உள்ளதைப் போன்று, இதிலும் வரிசைக்கிரமம் உள்ளது. சில சந்திரனுக்கு அருகாமையில் உள்ளன. அவை நட்சத்திரங்கள் ஆகும். நீங்கள் ஞான நட்சத்திரங்கள்;. மேலும் கூறப்பட்டுள்ளது: அற்புதமான ஒரு நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கின்றது. தந்தை கூறுகிறார்: இந்த நட்சத்திரங்கள் (ஆத்மாக்கள்) மிகவும் அற்புதமானவை. முதன்முதலில், அவர்கள் மிகவும் சின்னஞ் சிறு புள்ளிகளாக இருந்ததால், எவருக்குமே அவர்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லை ஆத்மாக்களே தங்கள் பாகங்களைச் சரீரங்களினூடாக நடித்தார்கள். இது மிகப்பெரிய அற்புதமாகும். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமானவர்களும், அனைவரும் வேறுபட்டவர்ளும் ஆவீர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து மிக நன்றாகப் பிரகாசிக்கின்ற நட்சத்திரங்களையும், அதிக சேவை செய்கின்ற வர்களையும் நினைவு செய்கின்றார். அவர்களே தொடர்ந்தும் மின்சக்தியைப் பெறுகின்றவர்கள். உங்கள் மின்கலம் தொடர்ந்தும் மின்னேற்றப்படுகின்றது. நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவதற்கு, உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக ஒரு சேர்ச் லைட்டைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: எனக்காக அனைத்தையும் துறப்;பதுடன் சேவையில் மும்முரமாக இருப்பவர்களும் அதிகளவு நேசிக்கப்படுகின்றார்கள். அவர்களே பாபாவின் இதயத்திலும் அமர்கின்றவர்கள்;. அந்த ஒரேயொரு பாபாவே உங்கள் இதயத்தையும் வெல்பவர். தில்வாலா ஆலயமும் உள்ளது. அது தில்வாலா ஆலயமா அல்லது உங்கள் இதயத்தை வென்றவரின் ஆலயமா? யாருடைய இதயத்தை அவர் வெல்கின்றார்? பிரஜாபிதா பிரம்மா இங்கு அமர்ந்திருப்பதை உங்களால் பார்க்க முடியும். சிவபாபா நிச்சயமாக அவரினுள் பிரவேசித்துள்ளார். மேலே சுவர்க்க ஸ்தாபனையையும் கீழே குழந்தைகள் தபஸ்யாவில் அமர்ந்திருப்பதையும் உங்களால் பார்க்க முடியும். அது அவர்கள் உருவாக்கியுள்ள ஒரு சிறிய மாதிரி ஆகும். மிகச் சிறந்த சேவை செய்பவர்களே மேன்மையான உதவியாளர்கள்;. யானைப் படையினரும் (மகாராத்திகள்), குதிரைப் படையினரும் காலாட் படையினரும் உள்ளனர். இவ்வாலயம் மிக நன்றாகவும் மிகச் சரியாகவும் ஒரு ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது. அது உங்கள் ஞாபகார்த்தம் என்று நீங்கள் கூறுகின்ற்Pர்கள். நீங்கள் இப்பொழுது ஞானோதயத்தைப் பெற்றுள்ளீர்கள். வேறு எவரும் ஞானமாகிய மூன்றாவது கண்ணைக் கொண்டிருப்பதில்லை. பக்தி மார்க்கத்தில், மக்கள் தமக்குக் கூறப்படுவதற்கெல்லாம் தொடர்ந்தும் “உண்மை. உண்மை” என்று கூறுகின்றார்கள். உண்மையில், அவை பொய்களாகும், ஆனால் அவர்கள் அதை உண்மை என்று கருதுகின்றார்கள். சத்தியமானவராகிய தந்தையே இப்பொழுது இங்கமர்ந்திருந்து உங்களுக்கு சத்தியத்தைக் கூறுகின்றார். அதன் மூலமாக நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். தந்தை உங்களை எந்த முயற்சியையும் செய்விக்கவில்லை. இப்பொழுது முழு விருட்சத்தினதும் இரகசியங்களும் உங்கள் புத்தியில் உள்ளன. பாபா உங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்கப்படுத்துகின்றார், ஆனால் அதற்கு ஏன் காலம் எடுக்கின்றது? உண்மையில் ஞானத்தையோ அல்லது உங்கள் ஆஸ்தியையோ பெறுவதற்குக் காலம் எடுக்காது. தூய்மையாகுவதற்கே காலம் எடுக்கின்றது. நினைவுசெய்வதே பிரதான விடயம் ஆகும். நீங்கள் இங்கு வரும்பொழுது நினைவு யாத்திரையில்; பெருமளவு கவனம் செலுத்துகின்றீர்கள். நீங்கள் வீடு திரும்பிச் சென்றதும், அந்தளவு கவனம் செலுத்துவதில்லை. இங்கு, அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள்;. இங்கு அமர்ந்துள்ள உங்களிற் சிலர் புத்தியில் போதையைக் கொண்டிருக்கின்றீர்கள்: நாங்கள் குழந்தைகளும் அந்த ஒரேயொருவரே தந்தையும் ஆவார். எல்லையற்ற தந்தையும் குழந்தைகளாகிய நாங்களும் இங்கு அமர்ந்திருக்கின்றோம். தந்தை இச்சரீரத்தில் பிரவேசித்துள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் உங்களுக்கு தெய்வீக திருஷ்டியை வழங்கிக்கொண்டிருக்கின்றார். அவர் சேவை செய்து கொண்டிருக்கின்றார். எனவே, நீங்கள் அவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். உங்கள் புத்தி வேறு எங்கும் செல்லக்கூடாது. ஒரு திரான்ஸ் தூதுவரால் யாருடைய புத்தி வெளியே அலைபாய்கிறது, யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், யார் தூங்கி விழுகின்றார்கள் என்ற முழு அறிக்கையையும் கொடுக்க முடியும். அவரால் அனைத்தையும் கூறமுடியும். மிகச் சிறந்த, சேவாதாரி நட்சத்திரங்களை நான் தொடர்ந்தும் பார்க்கின்றேன். தந்தை அவர்களை நேசிக்கின்றார். அவர்கள் ஸ்தாபனைக்கு உதவுகிறார்கள். முன்னைய கல்பத்தில் இருந்ததைப் போன்றே, மிகச் சரியாக இராச்சியம் ஸ்தாபனையாகின்றது. அது முன்னரும் பல தடவைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுவே தொடர்கின்ற நாடகச் சக்கரம் ஆகும். இதில் கவலை என்ற கேள்வியே கிடையாது. நீங்கள் தந்தையுடன் இருக்கின்றீர்கள், இல்லையா? எனவே, சகவாசம் உங்களை நிறமூட்டுகின்றது. நீங்கள் தொடர்ந்தும் குறைவாகவே கவலைப்படுகின்றீர்கள். இது முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட நாடகம் ஆகும். தந்தை உங்களுக்காகவே சுவர்க்க இராச்சியத்தைக் கொண்டுவந்துள்ளார். அவர் கூறுகிறார்:இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கு, தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் இப்பொழுது உங்களின் இனிய வீட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதற்காக அதிக பிரயத்தனம் செய்கிறீர்கள். எவ்வாறாயினும், எவராலுமே வீடு திரும்ப முடியாது. இப்பொழுது தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்து தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். அல்பாவும் பீற்றாவும். தந்தையை நினைவுசெய்து 84 பிறவிகளின் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். ஆத்மா 84 பிறவிகளின் சக்கரத்தின் ஞானத்தைப் பெற்றுள்ளார். எவருக்கும் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ தெரியாது. உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக இது உங்களுக்குத் தெரியும். நாங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைப் பூர்த்திசெய்துள்ளதுடன் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதை நீங்கள் காலையில் எழுந்து, உங்களின் புத்திகளில் கொண்டிருக்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும், நீங்கள் பூகோளத்தின் ஆட்சியாளர்கள் ஆவீர்கள். இது இலகுவானது, ஆனால் மாயை உங்களை மறக்க வைக்கின்றாள். தீபங்களுக்குத் தொல்லை கொடுக்கின்ற மாயையின் புயல்கள் உள்ளன. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் குழந்தைகளாகிய உங்களை மறக்க வைக்கின்ற அளவுக்கு அதிக சக்தியைக் கொண்டிருக்கின்றாள். பின்னர் அச்சந்தோஷம் நிரந்தரமாக இருப்பதில்லை. நீங்கள் தந்தையை நினைவுசெய்வதற்கு அமர்கின்றீர்கள், ஆனால், அமர்ந்திருக்கையில், உங்கள் புத்தி எங்கோ அலைபாய்கின்றது. இவ்விடயங்கள் அனைத்தும் மறைமுகமானவை ஆகும். நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், உங்களால் பாபாவை நினைவுசெய்ய இயலாதிருக்கும். சிலரின் புத்திகள் அலைபாய்ந்த பின்னர் ஸ்திரமாகின்றன, சிலரின் புத்திகள் உடனடியாகவே ஸ்திரமாகின்றன. நீங்கள் சிலருடன் எவ்வளவுதான் பிரயத்தனம் செய்தாலும், இது அவர்களுடைய புத்தியில் இருக்காது. இது மாயையுடனான யுத்தம் என்று அழைக்கப்படுகிறது. உங்களுடைய செயல்களை நடுநிலையானவை ஆக்குவதற்கு, நீங்கள் அதிக முயற்சி செய்யவேண்டும். அங்கு உங்கள் செயல்கள் பாவகரமானவையாக இருக்கின்ற இராவண இராச்சியம் கிடையாது. உங்களைத் தவறான செயல்களைப் புரிய வைக்கின்ற மாயை அங்கு இருக்கமாட்டாள். இராவணனினதும் இராமரினதும் நாடகம் உள்ளது. அங்கு அரைக் கல்பத்திற்கு இராம இராச்சியமும் அரைக் கல்பத்திற்கு இராவண இராச்சியமும் உள்ளது: பகலும் இரவும். சங்கம யுகத்தில் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இருப்பீர்கள். இரவு முடிவடைந்து பகல் ஆரம்பமாகின்றது என்பதை இப்பொழுது பிராமணர்களாகிய நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். சூத்திர குலத்திற்குரியவர்கள் இதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் பக்திப் பாடல்களை மிகவும் சத்தமாகப் பாடுகின்றார்கள். நீங்கள் சத்தத்திற்கு அப்பாற் செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் தந்தையின் நினைவில் மூழ்கியிருக்கின்றீர்கள். ஆத்மா ஞானமாகிய மூன்றாம் கண்ணைப் பெற்றுள்ளார். தான் இப்பொழுது தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்பதை ஆத்மா புரிந்துகொண்டுள்ளார். பக்திமார்க்கத்தில், நீங்கள் தொடர்ந்தும், “சிவபாபா, சிவபாபா” என்று கூறி வந்துள்ளீர்கள். சிவாலயத்தில், நிச்சயமாக மக்கள் சிவனை “பாபா” என்று அழைக்கின்றார்கள். அவர்களுக்கு ஞானம் இருப்பதில்லை. நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். அவர் சிவபாபா ஆவார்; ; அது அவருடைய விக்கிரகம் ஆகும். அம்மக்கள் அவரை இலிங்க ரூபமாகக் கருதுகிறார்கள். இப்பொழுது நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். அம்மக்கள் சென்று அதன்மீது ஒரு கலசத்திலுள்ள பாலை ஊற்றுகின்றார்கள். தந்தை அசரீரியானவர். நீங்கள் அசரீரியானவரின் மீது பாலை ஊற்றினால், அவர் என்ன செய்வார்? அவர் சரீரதாரியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்வார், ஆனால் நீங்கள் அசரீரியானவருக்குப் பால் போன்றவற்றை ஊற்றினால், அவர் என்ன செய்வார்? தந்தை கூறுகிறார்: அங்கு படைக்கப்படுகின்ற பால் போன்றவை உங்களால் பருகப்படுவதுடன் நீங்களே போக் போன்றவற்றையும் உண்கின்றீர்கள். இங்கு, நான் தனிப்பட்ட முறையில் உங்களின் முன்னால் இருக்கின்றேன் முன்னர், நீங்கள் அனைத்தையும் மறைமுகமாகச் செய்வது வழக்கம், இப்பொழுதோ அது நேரடியானதாகும். அவர் இங்கு கீழே வந்து, தனது பாகத்தை நடித்துக் கொண்டிருக்கின்றார். அவர் உங்களுக்கு ஒரு சேர்ச் லைட்டைக் கொடுக்கின்றார்.நீங்கள் நிச்சயமாக மதுபனுக்கு பாபாவிடம் வரவேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இங்கு, உங்கள் மின்கலம் மிகவும் நன்றாக மின்னேற்றப்படுகின்றது. வீட்டில், உங்கள் நாளாந்த வியாபாரத்தில், அமைதியின்மையைத் தவிர எதுவுமில்லை. இந்நேரத்தில், முழு உலகிலும் அமைதியின்மை உள்ளது. இப்பொழுது நீங்கள் யோகசக்தியால் அமைதியை ஸ்தாபிக்;கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும், கற்பதால் நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இதை முன்னைய கல்பத்தில் கேட்டதுடன், இப்பொழுதும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். நடைபெறுகின்ற செயல்கள் அனைத்தும் மீண்டும் இடம்பெறும். தந்தை கூறுகிறார்: இந்த ஞானத்தால் பல குழந்தைகள் வியப்படைந்தனர், ஆனால் பின்னர் அவர்கள் ஓடிவிட்டார்கள். அவர்கள் அன்பிற்கினியவராகிய, என்னை அதிகமாக நினைவுசெய்தார்கள். இப்பொழுது நான் வந்துவிட்டேன், இன்னமும் அவர்கள் என்னை விட்டு நீங்கிச் செல்கின்றார்கள்! மாயை அவர்களை மிகவும் கடுமையாக அறைகின்றாள். பாபா அனுபவசாலி. பாபா தனது முழு வரலாற்றையும் நினைவுகூருகின்றார். அவர் ஒரு தொப்பியை அணிந்துகொண்டு வெறுங்கால்களுடன் சுற்றிவருவது வழக்கம். அவர் ஒரு குருவின் குழந்தையாக இருந்த பொழுதிலும், “பாடசாலை ஆசிரியரின் குழந்தை” வந்துள்ளார் என்று இஸ்லாமியர்கள் அவரைப் பெருமளவு நேசித்ததுடன் அவருக்குப் பெரும் உபசாரத்தையும் அளிப்பது வழக்கம். அவர்கள் அவருக்குக் குரக்கன் சப்பாத்திகளை ஊட்டுவார்கள். இங்கும்கூட, தடித்த குரக்கன் சப்பாத்திகளையும் மோரையும் 15 நாட்களுக்கு உண்கின்ற நிகழ்ச்சியை பாபா உருவாக்கினார். அந்நேரத்தில், வேறு எதுவும் சமைக்கப்படவில்லை. நோயாளிகளுக்கும் அதே உணவே சமைக்கப்பட்டது. அதனூடாக எவருக்கும் எதுவும் நடக்கவில்லை. பதிலாக, நோயாளிகளும் ஆரோக்கியமடைந்தார்கள். “என்னிடம் இது இல்லை”, அல்லது “எனக்கு அது வேண்டும்” என அவர்கள் எந்த ஆசையையும் கொண்டிருக்கவில்லை என்பது பார்க்கப்பட்டது. ஆசைகளைக் கொண்டிருப்பது என்பது வீதியைப் பெருக்குபவராக இருத்தல் போன்றதாகும். இங்கு, தந்தை கூறுகின்றார்: எதையும் இரப்பதைவிட இறப்பதே மேல். குழந்தைகளாகிய உங்களுக்கு என்ன கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தந்தையே அறிவார். அவர் உங்களுக்குக் கொடுக்க வேண்டியவற்றையே கொடுப்பார். நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டதாகும். பாபாவைத் தங்களுடைய தந்தையாகவும் தங்களுடைய குழந்தையாகவும் கருதுபவர்களை கரங்களை உயர்த்துமாறு பாபா வினவினார். அப்பொழுது, அனைவரும் தமது கரங்களை உயர்த்தினார்கள். யார் இலக்ஷ்மி நாராயணனாக ஆகுவார்கள் என்று பாபா வினவினால், அனைவரும் தங்களுடைய கரங்களை உடனடியாக உயர்த்துவதைப் போன்று, அவர்கள் விரைவாக தமது கரங்களை உயர்த்தினார்கள். அவர்கள் நிச்சயமாக இந்தப் பரலோகக் குழந்தையையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். அவர் தனது பெற்றோருக்குப் பெருமளவு சேவை செய்கின்றார். அவர் அவர்களுக்கு ஓர் ஆஸ்தியை 21 பிறவிகளுக்குக் கொடுக்கின்றார். ஒரு தந்தை ஓய்வுபெறும் ஸ்திதிக்குள் செல்லும்பொழுது, அவரைப் பராமரிக்க வேண்டியது அவருடைய குழந்தைகளின் கடமையாகும். அது தந்தை ஒரு சந்நியாசி ஆகுவதைப் போன்றதாகும். அதேபோன்று, இவரின் லௌகீகத் தந்தையும் தான் ஓய்வுபெறும் ஸ்திதியை அடையும்;பொழுது, பெனாரஸிற்குச் சென்று அங்கு ஆன்மீக ஒன்றுகூடல்களைக் கொண்டிருப்பார் என்று கூறினார். (பாபாவின் வரலாற்றைக் கூறுங்கள்.) நீங்கள் பிரஜாபிதா பிரம்ம குமாரர்களும் குமாரிகளுமாகிய, பிராமணர்கள் ஆவீர்கள். பிரஜாபிதா பிரம்மா முப்பாட்டனார்.; மனித உலக விருட்சத்தின் முதலாவது இலை ஆவார். அவரை ஞானக்கடல் என்றோ, பிரம்மா, விஷ்ணு, அல்லது, சங்கரரை ஞானக்கடல் என்றோ அழைக்க முடியாது. சிவபாபாவே எல்லையற்ற தந்தையாவார், எனவே நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எப்பொழுது அல்லது எவ்வாறு பரமாத்மாவாகிய, அந்த அசரீரியான பரமதந்தை வந்தார் என்பது எவருக்கும் தெரியாது, இருந்தாலும் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். அவர் ஒரு கருப்பையினுள் பிரவேசிப்பதில்லை. அவர் விளங்கப்படுத்துகின்றார்: நான் இவருடைய பல பிறவிகளின் இறுதியில், இவருடைய ஓய்வுபெறும் ஸ்திதியில், இவரில் பிரவேசிக்கின்றேன். மக்கள் துறவறத்தை மேற்கொள்ளும்பொழுது, அவர்கள் தமது ஓய்வுபெறும் ஸ்திதியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே, இப்பொழுது தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் முழுமையாக 84 பிறவிகளையும் எடுத்துள்ளீர்கள். இதுவே பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். உங்களுக்குக் கணக்குத் தெரியும். எனவே, நான் இவரில் பிரவேசிக்கின்றேன். நான் வந்து எங்கு அமர்வது? குருமார்கள் அவர்களுடைய சிஷ்யர்களைத் தங்களுடைய கதியில் தங்களுக்கு அடுத்ததாக அமரச் செய்வதைப் போன்று, நான் இவரின் ஆத்மா அமர்ந்திருக்கும் இடத்திற்கு அடுத்ததாக அமர்ந்துகொள்கின்றேன். இவருடைய இடமும் என்னுடைய இடமும் ஒரே இடத்திலேயே அமைந்துள்ளன. நான் கூறுகின்றேன்: ஓ ஆத்மாக்களே, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறவேண்டும். இது இராஜயோகம். இராஜயோகம் நிச்சயமாகப் புதிய உலகிற்காகத் தேவைப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் அத்திவாரத்தை இடவே நான் வந்துள்ளேன். பல குருமார்கள் உள்ளனர், ஆனால் ஒருவர் மாத்திரமே சத்குரு ஆவார். அவர் மாத்திரமே சத்தியமானவரும் ஏனைய அனைவரும் பொய்மையானவர்களும் ஆவார்கள். ஒரு மாலை உருத்திரருடையதும் மற்றையது விஷ்ணுவின் வெற்றி மாலையும் ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தையை நினைவுசெய்யுங்கள், நீங்கள் பக்தி மார்க்கத்தில் உருட்டுகின்ற, மாலையின் ஒரு மணி ஆகுவீர்கள். எவ்வாறாயினும், அது யாருடைய மாலையாக இருந்தது அல்லது உச்சியிலுள்ள குஞ்சத்தினால் யார் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டார்; அல்லது யார் இரட்டைமணி அல்லது மணிகள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் யாருடைய மாலையை உருட்டிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கவில்லை. மக்கள் “இராமா, இராமா” என்று தொடர்ந்தும் உச்சாடனம் செய்து மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். “இராமா, இராமா” என்று கூறி அவர்கள் அனைவரையுமே இராமர் என்று எண்ணுகின்றார்கள். இதனூடாகவே சர்வவியாபகத்தின் இருள் இருந்து வந்தது. மாலையின் அர்த்தம்கூட அவர்களுக்குத் தெரியாது. சிலர் கூறுகின்றார்கள்: மாலையை நூறு தடவைகள் உருட்டுங்கள். சிலர் கூறுகின்றார்கள்;: இதனை இத்தனை தடவைகள் சுழற்றுங்கள். தந்தை அனுபவசாலி. அவர் 12 குருமார்களைக் கொண்டிருந்தார், அவர்கள் 12 பேரினதும் அனுபவங்களை அவர்; கொண்டிருந்தார். தமக்கென சொந்த குருவைக் கொண்டிருந்தாலும், வேறொரு அனுபவத்தைப் பெறும் எண்ணத்துடன் ஏனையோரிடம் செல்லும் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் மாலையின் மணிகளை உருட்டுகின்றார்கள். அது முழுக் குருட்டு நம்பிக்கை ஆகும். அவர்கள் மாலையின் மணிகளை உருட்டுவதை முழுமையாகப் பூர்த்திசெய்த பின்னர் குஞ்சத்தை வழிபடுகின்றார்கள். சிவபாபாவே குஞ்சம் ஆவார். விசேடமான அன்பிற்கினிய குழந்தைகளாகிய நீங்களே மாலையின் மணிகள் ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் நினைவு கூரப்படுகின்றீர்கள். அம்மக்களுக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது. அவர்களில் சிலர் இராமரை நினைவு செய்கின்றார்கள், சிலர் கிருஷ்ணரை நினைவு செய்கின்றார்கள். அதற்கு அர்த்தம் கிடையாது. அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஸ்ரீகிருஷ்ணராகிய உங்களிடம் புகலிடம் தேடுகின்றேன். எவ்வாறாயினும், அவர் ஒரு சத்தியயுகத்து இளவரசராக இருந்தார். அவர்கள் எவ்வாறு அவரிடம் புகலிடம் தேடக்கூடும்? தந்தையிடமே நீங்கள் புகலிடம் தேடுகின்றீர்கள். நீங்கள் மாத்திரமே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகிப் பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகின்றீர்கள். 84 பிறவிகளை எடுப்பதால், நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிப் பின்னர் நீங்கள் சிவபாபாவுக்குக் கூறுகின்றீர்கள்: ஓ குஞ்சமே, எங்களை உங்களைப் போன்று ஆக்குவீர்களாக! அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எவ்விதமான ஆசைகளையும் கொண்டிருக்காதீர்கள். ஆசைகள் அனைத்தையும் முடித்துவிடுங்கள்;;. பாபா உங்களுக்கு ஊட்டுவதை மாத்திரமே உட்n;காள்ளுங்கள்;. “இரப்பதைவிட இறப்பதே மேல்”; என்ற வழிகாட்டலை நீங்கள் பெற்றுள்ளீர்கள்2. தந்தையின் சேர்ச் லைட்டைப் பெறுவதற்கு, ஒரேயொரு தந்தைமீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். அவர் தந்தையாகவும் நாங்கள் குழந்தைகளாகவும் உள்ளோம் என்ற போதை உங்கள் புத்தியில் இருக்கட்டும். அவருடைய சேர்ச் லைட்டினூடாக, நாங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும்.
ஆசீர்வாதம்:
உடனடிப் பலனாகிய மேன்மையான பேறுகளின் மூலம் என்றென்றும் ஆரோக்கியமாகவும்; எப்பொழுதும் சந்தோஷமாகவும் இருப்பீர்களாக.சங்கமயுகத்தில் நீங்கள் எதையாவது செய்ததும்; நீங்கள் உடனடியாக மேன்மையான பேற்றை அனுபவம் செய்கின்றீர்கள். இதுவே உடனடிப் பலனாகும். அதிமேன்மையான பலனானது அருகாமையை அனுபவம் செய்வதாகும். தற்போது பௌதீக உலகில் இவ்வாறு கூறப்படுகிறது: “பழம் உண்ணுங்கள், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்”. பழம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உகந்தது எனக் கருதப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு விநாடியும் தென்படும் பழத்தை உண்கின்றீர்கள். இதனாலேயே நீங்கள் சதா ஆரோக்கியமானவர்களாக இருக்கிறீர்கள். மக்கள் உங்களை எவ்வாறு இருக்கிறீர்கள் என வினவினால் அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் தேவதைகளைப் போன்று முன்னேறுவதுடன் சந்தோ~மாகவும் இருக்கின்றோம்.
சுலோகம்:
அனைவருடைய ஆசீர்வாதங்களின் பொக்கிஷத்தினால் நிறைந்திருக்கும் பொழுது உங்களுக்கு முயற்சி செய்வதற்கு கடின உழைப்புத் தேவையில்லை.