25.02.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்;, நீங்கள் தெய்வீகக் குணங்களை வளர்த்துக் கொள்வீர்கள், உங்கள் குற்ற எண்ணங்கள் முடிவடைவதுடன், முடிவற்ற சந்தோஷத்தையும் அனுபவம் செய்வீர்கள்.
கேள்வி:
உங்கள் நடத்தையைச் சீர்திருத்தி, சதா சந்தோஷமாக இருப்பதற்கு, நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டியது என்ன?
பதில்:
நீங்கள் உங்களுடைய தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்;கின்றீர்கள் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள். நாங்கள் மரணபூமியை விட்டு நீங்கி அமரத்துவப் பூமிக்குச் செல்கின்றோம். இதைச் செய்வதால், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதுடன்;, உங்கள் நடத்தையும் சீர்திருத்தப்படும் ஏனெனில், புதிய உலகமாகிய, அமரத்துவப் பூமிக்குச் செல்வதற்கு, நிச்சயமாக உங்களுக்குத் தெய்வீகக் குணங்கள் தேவை. சுய இராச்சியத்தை அடைவதற்கு, நீங்கள் பலருக்கும் நன்மை செய்ய வேண்டும். நீங்கள் அனைவருக்கும் பாதையைக் காட்ட வேண்டும்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் உங்களை இவ்விடத்திற்கு உரியவர்களாகக் கருதக்கூடாது. இராம இராச்சியம் அல்லது சூரிய வம்ச இராச்சியம் என அழைக்கப்பட்ட உங்கள் இராச்சியம் அதிகளவு அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டிருந்தது என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றோம். நாங்கள் முன்னரும் அவ்வாறு ஆகினோம். நாங்களே தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகவும் நற்குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களாகவும் இருந்தோம். நாங்கள் எங்கள் இராச்சியத்தில் இருந்தோம். இப்பொழுது நாங்கள் இராவண இராச்சியத்தில் இருக்கின்றோம். நாங்கள் எங்களுடைய இராச்சியத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். எனவே, நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் இராச்சியததிற்;குச் செல்கின்றீர்கள் என்று உள்ளுரப் பெருமளவு சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும். இராவணன் உங்கள் இராச்சியத்தை உங்களிடமிருந்து அபகரித்து விட்டான். நீங்கள் உங்கள் சொந்த சூரியவம்ச இராச்சியத்தைக் கொண்டிருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் இராம இராச்சியத்திற்;கு உரியவர்களாக இருந்து தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தோம். நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம், பின்னர் இராவணன் எங்கள் இராச்சிய பாக்கியத்தை அபகரித்தான். தந்தை இப்பொழுது வந்துவிட்டதுடன்;, எது எங்களுடையதாக இருந்தது என்பதற்கும் எது எங்களுக்கு அந்நியமாக உள்ளது என்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எங்களுக்குக் கூறுகின்றார். அரைக்கல்பத்திற்கு நாங்கள் இராம இராச்சியத்தில் இருந்தோம், பின்னர் இறுதி அரைக்கல்பமாக நாங்கள் இராவண இராச்சியத்தில் இருக்கின்றோம். குழந்தைகளாகிய நீங்கள் அனைத்து விடயங்களிலும் நம்பிக்கையைக் கொண்டிருந்தால், சந்தோஷமாக இருப்பதுடன், உங்கள் நடத்தையும் சீர்திருத்தப்படும். நாங்கள் இப்பொழுது அந்நிய இராச்சியத்தில் மிகவும் சந்தோஷமற்றவர்களாக இருக்கின்றோம். பாரத மக்களாகிய இந்துக்கள், தாங்கள் அந்நிய ஆட்சியின் கீழ் மிகவும் சந்தோஷமற்றவர்களாக இருந்தார்கள் என்பதையும், இப்பொழுது தங்கள் சொந்த இராச்சியத்தில், தாங்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்பதையும் புரிந்து கொள்கின்றார்கள். எவ்வாறாயினும், அச் சந்தோஷம் ஒரு காக்கை எச்சத்தைப் போன்று தற்காலிகமானதாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது, நிரந்தரமான சந்தோஷ உலகிற்குச் செல்கின்றீர்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் உள்ளுர மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் ஞானத்தில் இல்லாதிருந்தால், உங்கள் புத்தி கல்லைப் போன்றே இருக்கும். நீங்கள் நிச்சயமாக உங்கள் சொந்த இராச்சியத்தைக் கோருவீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. நாங்கள் எங்கள் இராச்சியத்தைக் கோரி, அரைக்கல்பத்திற்கு ஆட்சிசெய்தோம். பின்னர், நாங்கள் கொண்டிருந்த அனைத்தையும் இராவணன் முற்றாக அழித்தான். ஒரு நல்ல குழந்தையின் செயற்பாடு சீரழியும் பொழுது, ‘நீங்கள அறிவை இழந்து விட்டீர்களா?’ என்று அவர்கள் கூறுகிறார்கள். இவை எல்லையற்ற விடயங்கள் ஆகும். மாயை உங்கள் விவேகம் அனைத்தையும் முற்றிலும் இழக்குமாறு செய்துவிட்டாள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைகின்றோம். இப்பொழுது எல்லையற்ற தந்தை எங்களுக்குத் தெய்வீகக் குணங்களைக் கற்பிக்கின்றார். ஆகவே, சந்தோஷ பாதரசம் உயர வேண்டும். ஓர் ஆசிரியர் ஞானத்தைக் கொடுக்கும் பொழுது, மாணவர்கள் சந்தோஷம் அடைகின்றார்கள். இது எல்லையற்ற ஞானமாகும். நீங்கள் உங்களைச் சோதிக்க வேண்டும்: நான் ஏதாவது அசுர குணத்;தைக் கொண்டுள்ளேனா? நீங்கள் முழுமை அடையாதுவிடின், தண்டனை இருக்கும். எவ்வாறாயினும், நாங்கள் ஏன் தண்டனையை அனுபவம் செய்ய வேண்டும்? ஆகவே, யாரிடமிருந்து இந்த இராச்சியத்தைப் பெறுகின்றீர்களோ, அத்தந்தையை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். நாங்கள் முன்னர் கொண்டிருந்த தெய்வீகக் குணங்களை நாங்கள் இப்பொழுது கிரகிக்க வேண்டும். அங்கு, அரசரையும் அரசியையும் போன்றே, பிரஜைகளும்; இருப்பார்கள்; அனைவரும் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களைப் பற்றிப் புரிந்து கொள்கிறீர்கள். சிலர் இவற்றைப் புரிந்து கொள்ளாதுவிடின், அவர்களால் எவ்வாறு அவற்றை வளர்த்துக் கொள்ள முடியும்?; நற்குணங்கள் அனைத்தினாலும் நிறைந்திருப்பதைப் பற்றி அவர்கள் பாடுகின்றார்கள், எனவே நீங்கள் முயற்சி செய்து அவ்வாறு ஆக வேண்டும். அவ்வாறு ஆகுவதற்கு முயற்சி தேவை. குற்றப் பார்வை உள்ளது. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள், குற்ற எண்ணங்கள் அனைத்தும் முடிவடையும். தந்தை உங்களுக்குப் பல வழிமுறைகளை விளங்கப்படுத்துகின்றார். தெய்வீகக் குணங்களை உடையவர்கள் தேவர்கள் எனவும், அவை இல்லாதவர்கள் மனிதர்கள் எனவும் கூறப்படுகிறார்கள். இருவரும் மனிதர்களே, ஆனால்; தேவர்கள் ஏன் வழிபடப்படுகின்றார்கள்? ஏனெனில் அவர்கள் தெய்வீகக் குணங்களை உடையவர்கள், ஆனால் மனிதர்களின் செயற்பாடுகளோ, குரங்குகளைப் போன்றுள்ளன. அவர்கள் தங்கள் மத்தியில் அதிகளவு சண்டை, சச்சரவு போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள். சத்தியயுகத்தில் அத்தகைய விடயங்கள் இருப்பதில்லை. ஆனாலும் அவை இங்கு இருக்கின்றன. நிச்சயமாக, நீங்கள் ஒரு தவறு செய்தால், நீங்கள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஆத்ம உணர்வில் இல்லாவிடின், நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதிகளவு ஆத்ம உணர்வுடையவர் ஆகும்பொழுது, நீங்கள் அதிகளவு தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பீர்கள். நீங்கள் உங்களைச் சோதிக்க வேண்டும்: நான் தெய்வீகக் குணங்களைக் கொண்டுள்ளேனா? தந்தை சந்தோஷத்தை அருள்பவர், எனவே அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பதே குழந்தைகளின் கடமை ஆகும். உங்கள் இதயத்தை வினவுங்கள்: நான் எவருக்காவது துன்பத்தை விளைவிக்கின்றேனா? எவ்வாறாயினும், துன்பம் விளைவிப்பதில் இருந்து விலகியிருக்க முடியாத அத்தகைய பழக்கத்தைச் சிலர் கொண்டுள்ளார்கள். அவர்கள் தங்களை முற்றாகச் சீர்திருத்துவதில்லை; அது அவர்கள் சிறைப் பறவைகளாக இருப்பதைப் போன்றுள்ளது. சிறையில் இருக்கின்றபொழுது, தாங்கள் சந்தோஷமாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அங்கு, சிறைகள் இருக்க மாட்டாது. எவராவது சிறைக்குச் செல்ல நேரிடும்வகையில், அங்கு, எப்பாவமும் செய்யப்படுவதில்லை. இங்கு, அவர்கள் சிறையில் தண்டனையை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தில் இருந்தபொழுது, மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பிராமண குலத்திற்கு உரியவர்கள், தாங்கள் தங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்வார்கள். தேவர்களின் இராச்சியமாக இருந்த அவ்விடம், எங்கள் இராச்சியமாக இருந்தது. ஓர் ஆத்மா ஞானத்தைப் பெறுகின்றபொழுது, சந்தோஷம் அடைகின்றார். நீங்கள் நிச்சயமாக ‘உயிருள்ளவர்கள்;’ என்பதைக் கூறவேண்டும். உயிருள்ளவர்களாகிய நாங்கள், தேவதர்மத்திற்கு உரியவர்களாக இருந்தபொழுது, உலகம் முழுவதும் எங்கள் இராச்சியத்தைக் கொண்டிருந்தோம். இந்த ஞானம் உங்களுக்குரியது. அது தங்கள் இராச்சியமாக இருந்தது என்பதையும், தாங்களும் சதோபிரதானாக இருந்தார்கள் என்பதையும் பாரதமக்கள் புரிந்துகொள்வதில்லை. இந்த ஞானம் அனைத்தையும் நீங்கள் மாத்திரம் புரிந்துகொள்கின்றீர்கள். எனவே, நாங்கள் தேவர்களாக இருந்தோம், நாங்கள் இப்பொழுது அவ்வாறு ஆக வேண்டும். தடைகள் இருந்தாலும், நாளுக்கு நாள், நீங்கள் தொடர்ந்தும் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் பெயர் தொடர்ந்தும் போற்றப்படும். இது ஒரு சிறந்த ஸ்தாபனம் என்பதையும், இது சிறந்த பணியை நிறைவேற்றி வருகின்றது என்பதையும் அனைவரும் புரிந்துகொள்வார்கள். நீங்கள் மிகவும் இலகுவானதொரு பாதையைக் காட்டுகின்றீர்கள். கூறப்பட்டுள்ளது: உங்கள் சொந்த இராச்சியத்தில் நீங்கள் சதோபிரதான் தேவர்களாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். வேறு எவரும் தங்களை இராவண இராச்சியத்தில் இருப்பதாகக் கருதுவதில்லை. நீங்கள் மிகவும் தூய்மையானவர்களாகவும் சுத்தமானவர்களாகவும் இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது சீரழிந்தவர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். மறுபிறவி எடுக்கையில், உங்கள் புத்தி தெய்வீகமானதிலிருந்து கல்லாக மாறியது. நாங்கள் இப்பொழுது எங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம், எனவே நீங்கள் அந்த உற்சாகத்தைக் கொண்டிருந்து, முயற்சி செய்வதில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகவேண்டும். முன்னைய கல்பத்தில் இதில் ஈடுபட்டிருந்தவர்கள், இப்பொழுது நிச்சயமாகத் தங்களை இதில் ஈடுபடுத்துவார்கள். நாங்கள் எங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, எங்கள் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். நீங்கள் இதையும் மீண்டும் மீண்டும் மறக்கின்றீர்கள். இல்லாதுவிடின்;, உள்ளுரப் பெருமளவு சந்தோஷம் இருக்கும். மன்மனபவவாக இருப்பதற்குத் தொடர்ந்தும் ஒருவரையொருவர் நினைவூட்டுங்கள். யாரிடமிருந்து நீங்கள் இப்பொழுது உங்கள் இராச்சியத்தைக் கோருகின்றீர்களோ, அத்தந்தையை நினைவுசெய்யுங்கள். இது புதியதல்ல. ஒவ்வொரு கல்பத்திலும்; தந்தை எங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார், அதனூடாக நாங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றோம். இல்லாவிடின், நாங்கள் தண்டனையை அனுபவம் செய்து, பின்னர் ஒரு குறைந்த அந்தஸ்தையே கோர நேரிடும். இது ஒரு மாபெரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டு ஆகும். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரினால், ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் அதைத் தொடர்ந்தும் பெறுவீர்கள். தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். தொடர்ந்தும் கண்காட்சிகளில் விளங்கப்படுத்துங்கள்: பாரத மக்களாகிய நீங்கள், தேவ இராச்சியத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள். பின்னர், மறுபிறவி எடுத்து, ஏணியில் கீழே வருகையில், நீங்கள் இவ்வாறு ஆகிவிட்டீர்கள். பாபா மிகவும் இலகுவாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் பரம தந்தையும் பரம ஆசிரியரும் பரமகுருவும் ஆவார். தொடர்ந்தும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகின்ற, மாணவர்களாகிய உங்களிற் பலர் உள்ளனர். எவ்வளவு பேர் விகாரமற்றவர்கள் ஆகித் தூய்மையாக இருக்கின்றார்கள் என்பதற்கான பட்டியலையும் பாபா கேட்கின்றார். ஆத்மா நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டு வருகின்றது. தந்தை கூறுகின்றார்: நானும் வந்து இங்கு (நெற்றியின் மத்தியில்) அமர்ந்திருந்து, எனது சொந்தப் பாகத்தை நடிக்கின்றேன். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதே, என்னுடைய பாகமாகும். நான் ஞானக்கடல்;. குழந்தைகள் பிறக்கின்ற பொழுது, சிலர் மிகவும் சிறந்தவர்களாகவும்;; சிலர் சீரழிந்தவர்களாகவும் ஆகுகிறார்கள். பின்னர் அவர்கள் ஞானத்தைக் கேட்கும்பொழுது வியப்படைந்து, ஞானத்தை உரைத்துப் பின்னர் ஓடிவிட்டவர்கள் ஆகுகிறார்கள். ஓ, மாயையே! நீ மிகவும் சக்திவாய்ந்தவள்! இருந்தாலும், தந்தை கூறுகின்றார்: அவர்கள் ஓடினாலும் அவர்கள் எங்கு செல்ல முடியும்? இத்தந்தையே உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்ற ஒரேயொருவர் ஆவார். ஒரேயொரு தந்தையே சற்கதியை அருள்பவர். எவ்வாறாயினும் எவருக்கும் இந்த ஞானம் முற்றாகவே தெரியாது. முன்னைய கல்பத்தில் இதை நம்பியவர்களே, இப்பொழுது அதை நம்புவார்கள். நீங்கள் உங்கள் நடத்தையைப் பெருமளவு சீர்திருத்திக் கொள்வதுடன், சேவையையும் செய்ய வேண்டும். நீங்கள் பலருக்கும் நன்மையை ஏற்படுத்த வேண்டும். சென்று பலருக்கும் பாதையைக் காட்டுங்கள். அனைவருக்கும் மிகவும் இனிமையாக விளங்கப்படுத்துங்கள்: பாரத மக்களாகிய நீங்கள், உலக அதிபதிகளாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் இவ்வழியில் உங்கள் இராச்சியத்தைத் திரும்பவும் கோர முடியும். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற விதத்தில், வேறு எவராலும் உங்களுக்கு விளங்கப்படுத்த முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எவ்வாறாயினும், முன்னேறிச் செல்கையில், நீங்கள் மாயையால் தோற்கடிக்கப்படுகின்றீர்கள். தந்தையே கூறுகின்றார்: விகாரங்களை வெற்றிகொள்;வதால் மாத்திரமே, நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். அத்தேவர்கள் உலகை வென்றவர்கள் ஆகினார்கள். அவர்கள் நிச்சயமாக அத்தகைய செயல்களைச் செய்;;திருக்க வேண்டும். தந்தை உங்களுக்குக் கர்ம தத்துவத்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். இராவண இராச்சியத்தில் செயல்கள் பாவம் நிறைந்தவையாகவும், இராம இராச்சியத்தில் செயல்கள் நடுநிலையானவையாகவும் உள்ளன. காமத்தை வென்று உலகை வென்றவர்கள் ஆகுவதே, பிரதான விடயம் ஆகும். நீ;ங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதால், தந்தையை நினைவுசெய்யுங்கள். நாங்கள் நிச்சயமாக எங்கள் இராச்சியத்தைக் கோருவோம் என்பது எங்களுக்கு 100வீதம் உறுதியாகும். எவ்வாறாயினும், நாங்கள் இங்கு ஆட்சிசெய்ய மாட்டோம். நாங்கள் இங்கு இராச்சியத்தைக் கோரிப் பின்னர் அமரத்துவ பூமியில் ஆட்சி செய்வோம். நீங்கள் இப்பொழுது மரணபூமிக்கும் அமரத்துவ பூமிக்கும் இடையில்; இருக்கின்றீர்கள் என்பதைக் கூட நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள். இதனாலேயே தந்தை உங்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றார். நீங்கள் உங்கள் இராச்சியத்திற்குச் செல்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையை இப்பொழுது நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். இப்பழைய இராச்சியம் நிச்சயமாக முடிவடையவுள்ளது. புதிய உலகிற்குச் செல்வதற்கு, நீங்கள் இப்பொழுது நிச்சயமாகத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். இவ்விதமாக உங்களுடன் பேசுங்கள். இப்பொழுது நீ;ங்கள் வீடு திரும்ப வேண்டுமாதலால், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். எனவே, இந்நேரத்திலேயே நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும். பின்னர் இந்த ஞானத்தைப் பெறுவதற்கு, நீங்கள் இங்கு திரும்பி வர வேண்டியதில்லை. நாங்கள் யோகத்தைச் செய்ய நேரிடும் வகையில், அங்கு ஐந்து விகாரங்களும் இருக்காது. இந்நேரத்திலேயே தூய்மையாகுவதற்கு நீங்கள் யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அங்கு, அனைவரும் சீர்திருந்தியவர்கள். பின்னர் கலைகள் தொடர்ந்தும் படிப்படியாகக் குறைவடைகின்றன. இது மிகவும் இலகுவானதாகும். கோபம் மக்களுக்குத் துன்பத்தை விளைவிக்கின்றது. சரீர உணர்வே பிரதான விடயமாகும். அங்கு, சரீர உணர்வு இல்லை. ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதால், நீங்கள் குற்றப் பார்வையைக் கொண்டிருப்பதில்லை; நீங்கள் குற்றமற்ற பார்வையுடையவராக ஆகுகிறீர்கள். இராவண இராச்சியத்தில் நீங்கள் குற்றப் பார்வையைக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் சொந்த இராச்சியத்தில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு காமமோ அல்லது கோபமோ கிடையாது. ஆரம்ப நாட்களிலிருந்து இதை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடல் உங்களிடம் உள்ளது. இவ்விகாரங்கள் அங்கு இருக்க மாட்டாது. நாங்கள் வெற்றி பெற்றுப் பின்னர் பல தடவைகள் தோற்கடிக்கப்பட்டு வருகின்;றோம். சத்தியயுகத்திலிருந்து கலியுகம் வரை நடைபெற்றவை அனைத்;தும் மீண்டும் மீண்டும் நடைபெற வேண்டும். தந்தையும் ஆசிரியருமானவர், தான் கொண்டுள்ள ஞானத்தை அவர் தொடர்ந்தும் உங்களுக்குக் கொடுக்கின்றார். இந்த ஆன்மீக ஆசிரியர் அற்புதமானவர்;. கடவுள் அதிமேலானவர், அவரே அதிமேலான ஆசிரியரும் ஆவார், அவர் எங்களை அதிமேலான தேவர்கள் ஆக்குகிறார். தந்தை எவ்வாறு தேவதர்மத்தை ஸ்தாபிக்கின்றார் என்பதை நீங்களே பார்க்க முடியும். நீங்களே தேவர்கள் ஆகுகின்றீர்கள். இப்பொழுது அவர்கள் அனைவரும் தங்களை இந்துக்கள் என்று அழைக்கின்றார்கள். உண்மையில், அங்கு, ஆதி சனாதன தேவதர்மமே இருந்தது, ஏனைய சமயங்கள் தொடர்ந்து வந்தன என்பது அவர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது. தேவதர்மம் மாத்திரமே மறைந்து விடுகின்றது. இது மிகவும் தூய்மையான தர்மம் ஆகும். இதைப் போன்ற தூய்மையான வேறெந்தச் சமயமும் இல்லை. இப்பொழுது, தூய்மையாக இருக்காததால், அவர்களில் எவரும் தங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது. நீங்கள் ஆதி சனாதன தேவதர்மத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்பதையும், இதனாலேயே நீங்கள் தேவர்களை வழிபடுகின்றீர்கள் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த முடியும். கிறிஸ்துவை வழிபடுபவர்கள் கிறிஸ்தவர்கள். புத்தரை வழிபடுபவர்கள் பௌத்தர்கள்;. தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்கள்;. எனவே, நீங்கள் ஏன் உங்களை இந்துக்கள் என்று அழைக்கின்றீர்கள்? நீங்கள் அவர்களுக்குச் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அவர்களுக்கு வெறுமனே இந்து சமயம் என்பதே கிடையாது என்று கூறினால், அவர்கள் குழப்பமடைவார்கள். அவர்கள் ஆதியான தேவதர்மத்திற்;கு உரியவர்களாக இருந்தார்கள் என்று அவர்களுக்குக் கூறுங்கள், பின்னர் புராதன, ஆதி தர்மம் இந்து சமயமல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். “ஆதியும் புராதனமும்” என்ற வார்த்தைகள் சிறப்பானவை ஆகும். தேவர்கள் தூய்மையாக இருந்தார்கள், அவர்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களாக இருக்கின்றார்கள், எனவே அவர்களால் தங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது. அது ஒவ்வொரு கல்பமும் இதேபோன்று நடைபெறுகின்றது. நீங்கள் அந்த இராச்சியத்தில் மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஏழைகள் ஆகிவிட்டீர்கள். அவர்கள் பல மில்லியன்களை உடையவர்களாக இருந்தார்கள். தந்தை உங்களுக்கு மிகவும் சிறந்த வழிமுறைகளைக் கொடுக்கின்றார். வினவப்பட்டுள்ளது: நீங்கள் சத்தியயுகவாசிகளா அல்லது கலியுகவாசிகளா? நீங்கள் கலியுகத்திற்;கு உரியவர்களானால், நீங்கள் நிச்சயமாக நரகவாசிகள்;. சத்தியயுகவாசிகள் சுவர்க்கவாசிகளாகிய, தேவர்களாக இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் அத்தகைய வினாக்களை வினவினால், இவ்வினாக்களை வினவுபவர்களால், ஏனையோர்களை மாற்றமடையச் செய்து அவர்களைத் தேவர்களாக ஆக்க முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். வேறு எவராலும் இவ்வினாக்களை வினவ முடியாது. பக்திமார்க்கம் வேறானதாகும். பக்தியின் பலன் என்ன? அது ஞானம் ஆகும். சத்திய, திரேதாயுகங்களில் பக்தி கிடையாது. ஞானத்தினூடாக அரைக்கல்பத்திற்குப் பகலும், பக்தியினூடாக அரைக்கல்பத்திற்கு இரவும் உள்ளன. இதை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள், இதனை ஏற்றுக் கொள்வார்கள். எதையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள், ஞானத்தையோ அல்லது பக்தியையோ ஏற்றுக் கொள்வதில்லை. எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை மாத்திரம் அவர்கள் அறிவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், உங்கள் இராச்சியத்தை யோகசக்தி மூலம் ஸ்தாபிக்கின்றீர்கள். அரைக்கல்பத்தின் பின்னர், நீங்கள் இராச்சியத்தை இழந்தும் விடுவீர்கள். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பலருக்கும் நன்மையளிப்பதற்கு, நீங்கள் உங்களுடைய வார்த்தைகளை மிகவும் இனிமையானவையாக ஆக்க வேண்டும். இனிமையான வார்த்தைகளால் சேவை செய்யுங்கள். சகித்துக் கொள்பவர்கள் ஆகுங்கள்.2. ஆழமான கர்ம தத்துவத்தைப் புரிந்துகொண்டு விகாரங்களை வெற்றி கொள்ளுங்கள். உலகை வென்றவர்களாகிய தேவர்கள் ஆகுங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகி, உங்கள் குற்றப் பார்வையைக் குற்றமற்றதாக ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
பிராமண வாழ்க்கையின் ஜாதகத்தை அறிந்து கொள்வதனால் எப்பொழுதும் சந்தோஷத்தில் நிலைத்திலிருந்து மகாபாக்கியசாலி ஆகுவீர்களாக.
பிராமண வாழ்க்கை ஒரு புதிய வாழ்க்கையாகும். ஆரம்பத்தில் பிராமணர்கள் தேவர்களாக இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் பிரம்மகுமார், பிரம்மகுமாரிகள் ஆவாhர்கள். பிராமணர்களின் ஜாதகத்தில் முக்காலங்களும் அனைத்திலும் சிறந்தவையாகும். எது நடந்ததோ அது நன்றாகவே இருந்தது. எது நடக்கின்றதோ அது நன்றாகவே இருக்கிறது. எது நடக்கப்போகிறதோ அது மிக மிக நன்றாக இருக்கும். பிராமணர்களின் ஜாதகம் எப்பொழுதும் நன்றாகவே இருக்கிறது. அதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சந்தோஷத்தை சதா பேணுங்கள். பாக்கியத்தை அருள்பவராகிய தந்தை தாமே உங்கள் மேன்மையான பாக்கிய ரேகையை வரைந்து உங்களை தனக்குரியவராக்கியுள்ளார்.
சுலோகம்:
எப்பொழுதும் நிலையான ஸ்திரமான ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு ஒரேயொரு தந்தையிடமிருந்து அனைத்து உறவுமுறைகளின் இனிமையையும் எடுத்துக் கொள்ளுங்கள்..