28.01.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
`இனிய குழந்தைகளே, அமைதி தாமத்திற்கும், சந்தோஷதாமத்திற்கும் செல்வதற்கான ஆதாரத்தை நீங்கள் இப்பொழுது கண்டுகொண்டுள்ளீர்கள். தந்தையை நினைவு செய்வதனால், நீங்கள் தூய்மையாகவும் கர்மாதீத் ஆகவும் ஆகி, உங்கள் அமைதிதாமத்திற்குத் திரும்பிச் செல்வீர்கள்.
கேள்வி:
எக் குழந்தைகள் தந்தையின் அன்பையும், பிரியத்தையும் பெறுகின்றார்கள்? நீங்கள் எவ்வாறு தந்தையை வெளிப்படுத்துவீர்கள்?
பதில்:
நம்பிக்கை நிறைந்தவர்களும், சேவாதாரிகளும், மிகவும் இனிமையானவர்களும் என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதவர்களுமான குழந்தைகள் தந்தையின் அன்பையும், பிரியத்தையும் தொடர்ந்தும் பெறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவ்கொருவர் ஆழமான அன்பைக் கொண்டிருக்கும் பொழுதும், நீங்கள் தவறுகளைச் செய்யாதிருக்கும் பொழுதும், துன்பம் விளைவிக்கின்ற வார்த்தைகளைப் பேசாத பொழுதும், உங்கள் மத்தியில் எப்பொழுதும் சகோதரத்துவ, ஆன்மீக அன்பு நிலவும் பொழுதும் மாத்திரமே உங்களால் தந்தையை வெளிப்படுத்த முடியும்.பாடல்:
இதயத்திற்கு ஆதாரத்தை அளிப்பவருக்கு இதயம் நன்றி கூறுகின்றது.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைப் பல தடவைகள் செவிமடுத்துள்ளீர்கள். வந்து, செல்வதில் நீங்கள் எவ்வளவு அலைந்து திரிந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நாடகத் திட்டத்திற்கேற்ப, நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றைப் பெறுகின்றீர்கள். சந்தோஷ தாமத்தில் நீங்கள் இயல்பாகவே சந்தோஷத்துடன் உங்கள் சரீரத்தை நீக்கிவிட்டு இன்னொன்றைப் பெறுவதுண்டு. எவ்வாறு சந்தோஷத்துடன் சரீரத்தை நீக்கலாம் என்பதைத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதிதாமத்திலிருந்து வந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாவாகிய நான் இங்கே ஒரு பாகத்தை நடிக்கின்றேன். எல்லாவற்றிற்கும் முதலில், நான் அழிவற்றவன் என்ற நம்பிக்கை ஆத்மாவில் இருக்க வேண்டும். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு ஆதாரத்தைக் கொடுப்பவர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தையை நினைவு செய்வதனால், அதிகளவு சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகிறது. இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்கள். முதலில் நீங்கள் அனைவரும் அமைதிதாமத்தில் வசிக்கின்றீர்கள், பின்னர் நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு ஆதாரத்தைக் கொடுக்கிறார். குழந்தைகளே, உங்கள் அமைதிதாமமும், சந்தோஷதாமமும் ஏறத்தாழ இங்கேயே உள்ளது. நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றைப் பெறுகின்றீர்கள் என்ற நம்பிக்கை ஆத்மாக்களாகிய உங்களுக்கு உள்ளது. நீங்கள் முற்கூட்டியே அழிவற்ற பாகங்களைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் 84 பிறவிகளுக்கான உங்கள் பாகங்களை நடிக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுடன் மாத்திரமே பேசுகின்றார், ஏனெனில், குழந்தைகளாகிய உங்களைத் தவிர, வேறு எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. அதி மங்களகரமான சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் அதி மேன்மையான மனிதர்கள் ஆகுவதற்காக, தந்தை உங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றார். ஆத்மாக்களாகிய உங்களுக்கு எப் பயமும் இருக்கக்கூடாது. நாங்கள் மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றோம். இப்பொழுது, உங்கள் பிறவிகள் அனைத்தையும் பற்றி உங்களுக்குத் தெரியும். இதுவே இறுதிப் பிறவி ஆகும். அமைதிதாமத்திற்கும் சந்தோஷதாமத்திற்கும் செல்வதற்கான ஆதாரத்தை, நீங்கள் கண்டுகொண்டுள்ளீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆகையால், நீங்கள் சந்தோஷத்துடன் செல்ல வேண்டும். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் தூய்மையற்றவர்களாக உள்ளார்கள் என்ற ஞானத்தை நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களின் சிறகுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மாயை உங்கள் சிறகுகளைத் துண்டிப்பதனால், உங்களால் திரும்பிச் செல்ல இயலாதுள்ளது. நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். நீங்கள் அங்கிருந்தே கீழே வந்திருந்தாலும், இப்பொழுது உங்களால் மீண்டும் அங்கே திரும்பிச் செல்ல இயலாதுள்ளது. ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாகத்தை நடிக்க வேண்டும். நீங்கள் மிகவும் உயர்ந்த குலத்துக்கு உரியவர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இப்பொழுது மிகவும் உயர்ந்த வம்சத்தின் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றோம். எனவே, நாங்கள் இச் சரீரத்தின் மூலம் என்ன செய்ய முடியும்? நீங்கள் அங்கே ஒரு புதிய சரீரத்தைப் பெற உள்ளீர்கள். இவ்விதமாக உங்களுடன் பேசுங்கள். தந்தை உங்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுத்து, உங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றார்: ஆத்மா சதோபிரதானிலிருந்து சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கின்றார். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக வேண்டும். ஆத்மாவே தூய்மையாக வேண்டும். தந்தை கூறியுள்ளார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் வேறு எவரையும் நினைவு செய்வதில்லை. உங்கள் புத்தி செல்வம், சொத்து, குழந்தைகள் போன்றவற்றில் ஈர்க்கப்படுமாயின் உங்களால் கர்மாதீத ஸ்திதியை அடைய இயலாது, அப்பொழுது உங்கள் அந்தஸ்து குறைக்கப்பட்டு தண்டனையும் அனுபவிக்கப்பட வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது வீடு திரும்பிச் செல்லப் போகிறோம். நாங்கள் தூய்மையாகி, வீடு திரும்ப வேண்டும். தந்தை எங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளார். எங்கள் பாவங்கள் அழிக்கப்படும் வகையில், நாங்கள் ஏன் தந்தையைச் சந்தோஷத்துடன் நினைவு செய்யக்கூடாது? நீங்கள் நினைவில் நிலைத்திருந்து, இதனைப் பிறருக்குக் கூறும் பொழுது, அம்பு இலக்கைத் தாக்கும். இதுவே ஞானக் கடலைக் கடைதல் என்று அழைக்கப்படுகின்றது. காலையில் சிறந்த கடைதல் இடம்பெறுகிறது. ஏனெனில் உங்கள் புத்தி நன்றாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறது. அந்நேரத்திலேயே பக்தியும் செய்யப்படுகிறது. ‘ஓ மனமே, அதிகாலையில் இராமரை நினைவு செய்’ என்றொரு பாடலும் உள்ளது. நீங்கள் பக்தி மார்க்கத்தில் அதனைப் பாடுவதுண்டு. இப்பொழுது தந்தையின் வழிகாட்டல்கள்: அதிகாலையில் விழித்தெழுந்து என்னை நினைவு செய்யுங்கள். சத்தியயுகத்தில் அவர்கள் இராமரை நினைவு செய்வதில்லை. இந்த முழு நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை வந்து, உங்களுக்கு ஞானத்தினதும் பக்தியினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். முன்னர், உங்களுக்கு இவை தெரியாது. ஆகையாலேயே நீங்கள் கல்லுப்;புத்தி உடையவர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் இவ்வாறு கூற மாட்டீர்கள். இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் இதனைக் கூறுகின்றீர்கள்: கடவுள் உங்கள் புத்தியை நன்றாக்குவாராக. இங்கிருக்கும் ஞாபகார்த்தம் பக்தி மார்க்கத்திலும் தொடர்கிறது. தந்தை அதிகளவு அன்புடன் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, உங்கள் எல்லையற்ற தந்தையாகிய, என்னை நீங்கள் மறந்து விட்டீர்கள். நான் உங்களுக்கு அரைக்கல்பத்திற்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுத்தேன். நான் உங்களை எல்லையற்ற துறவறத்தை மேற்கொள்ளுமாறு செய்தேன். இப் பழைய உலகம் முழுவதும் ஓர் இடுகாடாகப் போகின்றது என்று நான் உங்களுக்குக் கூறியுள்ளேன். முடிவடையப் போகின்ற உலகை நீங்கள் ஏன் நினைவு செய்கின்றீர்கள்? நீங்கள் என்னை கூவி அழைக்கின்றீர்கள்: ஓ பாபா! தூய்மையற்ற உலகிலிருந்து, எங்களை விடுவித்துத் தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்!. தூய்மையற்ற உலகில் மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். தூய உலகில் வெகுசிலரே உள்ளனர். எனவே, மரணங்களுக்கெல்லாம் மரணமாகிய, மகா காலனை மக்கள் கூவி அழைக்கின்றனர். வந்து, உங்கள் பக்தியின் பலனைக் கொடுக்குமாறு பக்தர்களாகிய நீங்கள், கடவுளை அழைத்தீர்கள். நீங்கள் அதிகளவு தடுமாறித் திரிந்தீர்;கள். நீங்கள் அரைக்கல்பமாக உங்களில் இப் பழக்கத்தைப் பதித்துக் கொண்டுள்ளீர்கள். ஆகையால், அதிலிருந்து விடுபடுவதற்குக் காலம் எடுக்கும். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். பின்னர், விநாசம் இடம்பெறும். இப்பொழுது வசிப்பதற்குக் கூட இடமில்லாதுள்ளது. போதியளவு தானியம் இல்லை. ஆகவே, அவர்கள் எதனை உண்பார்கள்? அமெரிக்காவிலும் மில்லியன் கணக்கானோர் பட்டினி கிடப்பார்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இந்த இயற்கை அனர்த்தங்களும் இருக்கும். யுத்தம் ஆரம்பித்தால், எங்கிருந்து உணவு வரும்? யுத்தம் மிகவும் பயங்கரமாக இருக்கும். அவர்கள் தாங்கள் தயாரித்துள்ள பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுப்பார்கள். அத்துடன் இயற்கை அனர்த்தங்களும் உதவி செய்யும். அதற்கு முன்னர் நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைய வேண்டும். நீங்கள் அவலட்சணமானவர்களிலிருந்து அழகானவர்கள் ஆக வேண்டும். காமச்சிதையில் அமர்ந்ததனால் நீங்கள் அவலட்சணமானவர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தை இப்பொழுது உங்களை அழகானவர்கள் ஆக்குகின்றார். ஆத்மாக்கள் வாழ்வதற்கு ஒரேயொரு இடமே உள்ளது. நீங்கள் அங்கிருந்தே இங்கு வந்து, உங்கள் பாகத்தை நடிக்கின்றீர்கள். நீங்கள் இராம இராச்சியத்தையும் இராவண இராச்சியத்தையும் கடந்து செல்கின்றீர்கள். இது இப்பொழுது பழைய உலகின் இறுதி என்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். நான் இறுதியில், குழந்தைகளாகிய நீங்கள் என்னை அழைக்கும் பொழுது வருகின்றேன். பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். ‘வேடனுக்குக் கொண்டாட்டம் இரைக்குத் திண்டாட்டம்” என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றா விட்டால், அந்தச் சந்தோஷம் இருக்க மாட்டாது. உங்கள் சரீரங்களை நீக்கி, அமரத்துவ தாமத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் பெயர் சிவசக்திகளான சக்திசேனை என்பதாகும். அத்துடன் நீங்கள் பிரஜாபிதா பிரம்மகுமார்களும் குமாரிகளும் ஆவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் சிவனின் குழந்தைகள், பின்னர் நீங்கள் சகோதர சகோதரிகளும் ஆகுகின்றீர்கள். பிரஜாபிதா பிரம்மாவினூடாக மாத்திரமே படைப்பு படைக்கப்படுகின்றது. பிரம்மாவே முப்பாட்டனார் என்று அழைக்கப்படுகின்றார். எனவே, ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தந்தை இங்கு அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாவே ஒரு சரீரத்தினூடாக அனைத்தையும்; செய்கின்றார். ஆத்மாவின் சரீரத்தையே அவர்கள் கொலை செய்கின்றார்கள். ஆத்மா கூறுவார்: நான் அந்த ஆத்மாவின் சரீரத்தை இச் சரீரத்தினூடாகக் கொன்றேன். குழந்தைகள் தங்கள் கடிதங்களில் எழுதுகின்றார்கள்: ஆத்மாவாகிய நான் சரீரத்தின் மூலம் இத் தவறைச் செய்தேன். இதற்கு முயற்சி தேவையாகும். நீங்கள் இதன் அடிப்படையில் ஞானக் கடலைக் கடைய வேண்டும். ஆண்களுக்கு இது மிகவும் இலகுவாகும். பம்பாயில், பலரும் அதிகாலையில் உலாச் செல்கிறார்கள். நீங்கள் சென்று ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து ஞானக் கடலைக் கடைய வேண்டும். பாபாவைத் தொடர்ந்தும் புகழுங்கள். பாபா இது உங்கள் அற்புதமாகும்! நீங்கள் சரீரதாரிகளின் புகழ் பாடுவதில்லை. சரீரமற்ற ஒரேயொருவரே அதிமேலான, கடவுள் ஆவார். அவர் ஒருபொழுதும் தனக்கென ஒரு சரீரத்தை எடுப்பதில்லை. தான் ஒரு சாதாரண சரீரத்தில் அவதரிப்பதாக, அவரே உங்களுக்குக் கூறியுள்ளார். இவருக்குத் தனது சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாது. உங்களுக்கும் அவற்றைப் பற்றித் தெரியாது. இவருக்கு இப்பொழுது என் மூலம் அவற்றைப் பற்றித் தெரியும், அத்துடன் நீங்களும் அவற்றைப் பற்றி அறிந்துள்ளீர்கள். ஆகவே இந்தப் பயிற்சியும் உள்ளது. தந்தையை நினைவு செய்வதனால், நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும் பொழுது, நீங்கள் ஆத்மாவை மாத்திரமே பார்ப்பீர்கள். அப்பொழுது விகாரம் என்று கேள்வியே எழ முடியாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் சரீரமற்றவர் ஆகுவீர்களாக! அவ்வாறாயின், பின்னர் ஏன் குற்ற எண்ணங்கள் எழுகின்றன? நீங்கள் சரீரத்தைப் பார்க்கும் பொழுதே விழுகின்றீர்கள். நீங்கள் ஆத்மாவையே பார்க்க வேண்டும். நான் ஓர் ஆத்மா, நான் இப்பாகத்தை நடித்துள்ளேன். தந்தை இப்பொழுது கூறியுள்ளார்: சரீரமற்றவர் ஆகுவீர்களாக! என்னை நினைவு செய்யுங்கள்;, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதனால், நீங்கள் ஒரு வருமானத்தைச் சேகரிப்பீPர்கள். அதிகாலை வேளை மிகவும் நல்லது. பாபாவைத் தவிர வேறு எவரையும் பார்க்காதீர்கள். எவ்வாறாயினும், ஆம், இலக்ஷ்மியும் நாராயணனுமே உங்கள் இலக்கும், இலட்சியமும் ஆகும். “மன்மனாபவ, மந்தியாஜிபவ!”. எவருக்கும் இவற்றின் அர்த்தம் தெரியாது. பக்தி மார்க்கமானது இல்லறத்தினருக்கு உரியது என்பதை உங்களால் விளங்கப்படுத்த முடியும். துறவறப் பாதையில் உள்ளவர்கள் காட்டில் என்ன பக்தியைச் செய்ய முடியும்? முதலில் அவர்களும் சதோபிரதானாகவே இருந்தனர். முன்னர் அனைத்துமே அவர்களுக்குக் காட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும். இப்பொழுது, அவர்கள் தமோபிரதான் ஆகியுள்ளதால், அக் குடில்கள் வெறுமையாக உள்ளன, ஏனெனில் எதுவும் அங்கு சென்றடைவதில்லை. பக்தர்களுக்கு அவர்களின் மீது இப்பொழுது அந்த நம்பிக்கை இல்லை. இதனாலேயே அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்; அவர்கள் இலட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் ஆகியுள்ளார்கள். இவை அனைத்தும் இப்பொழுது முடிவடைய உள்ளன. அக் கட்டடங்கள் இத் தங்கத்தினால் கட்டப்படும் என்றில்லை. அங்கே அனைத்தும் புதியதாக இருக்கும். தானியங்களும் புதிதாக இருக்கும். புதிய உலகின் அனைத்தும் முதற்தரமாக இருக்கும். நிலம் இப்பொழுது வறண்டுள்ளதால், அவர்களுக்குப் போதியளவு தானியங்கள் கூட கிடைப்பதில்லை. அங்கே, நிலம், கடல் அனைத்தும் உங்களுக்குரியவை. அங்கே, நீங்கள் அத்தகைய தூய உணவை உண்கிறீர்கள். இங்கே அவர்கள் மாமிசத்தைக் கூட சமைக்கின்றார்கள். அங்கே அத்தகைய விடயங்கள் இடம்பெறுவதில்லை. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிற்கு அதிகளவு நன்றி தெரிவிக்க வேண்டும். உங்களுக்குத் தந்தையை தெரியும், பின்னர் நீங்கள் மற்றவர்களுக்குத் தந்தை இவ்வாறு கூறியுள்ளார் எனக் கூறுகின்றீர்கள்: நான் ஒரு சாதாரண பழைய சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். நான் அவரது ஓய்வு ஸ்திதியின் பொழுது அவருக்குள் பிரவேசிக்கின்றேன். நீங்கள் ஓய்வு ஸ்திதியிலேயே வீடு திரும்பிச் செல்ல வேண்டும். இதுவே நியதியாகும். பக்தி மார்க்கத்திலும் அதே வழமையே தொடர்கின்றது. இவ்விடயங்கள் அனைத்தும் கிரகிக்கப்பட வேண்டும். சிலர் அவற்றை மிகவும் நன்றாகக் குறித்துக் கொண்டு, அவற்றைக் கிரகித்து, பின்னர் அவற்றைப் பிறருக்குக் கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது ஆதாரத்தைக் கண்டுகொண்டுள்ளதால், நீங்கள் அவற்றை அதிகளவு களிப்புடன் செவிமடுக்கின்றீர்கள். ஒவ்வொரு ஆத்மாவும் நெற்றி என்ற சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாவைப் பற்றிக் கூறப்படுகிறது: நெற்றியின் மத்தி;யில் அற்புதமான நட்சத்திரம் பிரகாசிக்கின்றார். பரமாத்மாவான பரமதந்தை சிவன் பிரகாசிக்கின்றார் என்று அவர்கள் கூறுவதில்லை. எவ்வாறாயினும் ஆத்மாவே பிரகாசிக்கின்றார். ஆத்மாக்கள் சகோதரர்கள், இதனாலேயே ‘இந்துக்கள், பாகிஸ்தானியர்கள், பௌத்தர்கள் ஆகிய அனைவருமே சகோதரர்கள்’ என்று அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் ‘சகோதரர்கள்’ என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. உங்கள் மத்தியில் உங்களுக்குள் அதிகளவு அன்பு இருக்க வேண்டும். சத்தியயுகத்தில் மிருகங்களும் ஒன்றையொன்று நேசிக்கின்றன. நீங்கள் சகோதரர்கள் என்பதால் நீங்கள் எவ்வளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும்! எவ்வாறாயினும், சரீர உணர்வு இருப்பதன் காரணமாக நீங்கள் ஒருவரோடொருவர் சலிப்படைகின்றீர்கள். அப்பொழுது நீங்கள் ஒருவரையொருவர் அவதூறு செய்கின்றீர்கள். இந் நேரத்தில்;, குழந்தைகளாகிய நீங்கள் பாலும் சீனியும் போன்று வாழ வேண்டும். நீங்கள் இந்த முயற்சியை இந்நேரத்தில் செய்கிறீர்கள், பின்னர், நீங்கள் 21 பிறவிகளுக்குப் பாலும் சீனியும் போன்று வாழ்கிறீர்கள். நீங்கள் எந்தத் தவறான வார்த்தையை எவரிடமேனும் உபயோகித்தால், உடனடியாகவே ‘என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று கூற வேண்டும். ஏனெனில், மிகவும் இனிமையாக இருங்கள் என பாபா எங்களுக்குக் கட்டளை இட்டுள்ளார். கட்டளைகளைப் பின்பற்றாதவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் எனக் கூறப்படுகின்றார்கள். நீங்கள் ஒருபொழுதும் எவருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடாது. எவ்வாறாயினும், பொலிஸ் சேவையில் சிலசமயங்களில் ஒருவரை உண்மை பேசச் செய்வதற்கு அவர்கள் அவரை அடிக்கவும் நேரிடும் என்று பாபாவிற்குத் தெரியும். இராணுவத்தில் உள்ளவர்களும் சண்டையிட வேண்டியுள்ளது. உங்களை ஓர் ஆத்மா எனக் கருதிச் சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால், உங்கள் படகு அக்கரை செல்லும். நீங்கள் ஏன் இப் பழைய உலகைப் பார்க்க வேண்டும்? நாங்கள் புதிய உலகையே பார்க்க வேண்டும். இப்பொழுது புதிய உலகம் ஸ்ரீமத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இதில் ஆசீர்வாதங்கள் என்ற கேள்விக்கு இடமில்லை. ஓர் ஆசிரியர் ஒருபொழுதும் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதில்லை; ஓர் ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஒருவர் கற்று பண்புகளைக் கிரகிக்கின்ற அளவுக்கேற்ப, அவர் ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றார். இங்கும் அதுபோன்றதே. நீங்கள் எவ்வாறு முன்னேறுகின்றீர்கள் என்பதைக் காண்;பதற்கு, உங்கள் சொந்தப் பதிவேட்டை நீங்கள் பார்க்க வேண்டும். சிலர் மிகவும் இனிமையாக முன்னேறுகின்றார்கள். அவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். பாபா கூறியுள்ளார்: நீங்கள் தவறு செய்கின்றீர்களா என்பதைச் சோதிப்பதற்கு உங்கள் மத்தியில் நீங்கள் ஒரு சபையைக் கூட்டுங்கள். எவ்வாறாயினும், சபையைக் கூட்டுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்: நான் ஓர் ஆத்மா. நான் எனது சகோதர ஆத்மாவிடம், அவர் அந்தச் சரீரத்தின் மூலம் ஏதாவது தவறு செய்துள்ளாரா என்று வினவுகின்றேன். நீங்கள் எவருக்கும் எத் துன்பத்தையும் விளைவிக்கவில்லை, இல்லையா? தந்தை என்றுமே துன்பம் விளைவிப்பதில்லை. தந்தை உங்களைச் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். தந்தையே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். எனவே, நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒருபொழுதும் பிழையான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. ஒருபொழுதும் சட்டத்தை உங்கள் கரங்களில் எடுக்காதீர்கள். அதனை அறிவிக்க வேண்டியதே உங்கள் கடமையாகும். நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆக வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு இனிமையானவர் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகளவில் தந்தையை வெளிப்படுத்துவீர்கள். தந்தை அன்புக்கடல். நீங்கள் அன்புடன் விளங்கப்படுத்தினால், வெற்றியாளர்கள் ஆகுவீர்கள். தந்தை கூறுகின்றார்: எனது அன்பிற்கினிய குழந்தைகளே, என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். பலவகையான தவறுகளைச் செய்கின்ற பலர் இருக்கின்றார்கள்: பிறரை விமர்சித்தல், போட்டி போடுதல், பொறாமை கொள்ளுதல் அனைத்துமே பாவங்;களாகும். பாபா கூறுகின்றார்: சிறந்த, நம்பிக்கைக்குரிய, சேவாதாரிக் குழந்தைகளும் நிச்சயமாக இனிமையானவர்களாக இருப்பார்கள். பாபாவும் அவர்களுக்கு அன்பையும் பிரியத்தையும் கொடுக்கின்றார். அவர் இதனை ஏனையோருக்குக் கொடுப்பதில்லை. சிலர் அப்பொழுது கூறுகின்றார்கள். அவர் ஒரு முக்கியஸ்தர் என்பதால் அவருக்கு பாபா சலுகை செய்கின்றார். அவர்கள் இவ்விதமாகத் தங்களுக்குத் தாங்களே பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அவர்கள் பிழையான செயல்களைச் செய்து, பின்னர் பிறர் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இன்னார் புகைப்பதை நிறுத்தவில்லை என்ற செய்தியை பாபா பெறுகிறார். பாபா கூறுகின்றார்: அவருக்கு விளங்கப்படுத்துங்கள்: யோகசக்தியின் மூலம் உங்களால் உலகையே தூய்மையாக்க முடியும், ஆகவே, உங்களால் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியாதா? தந்தையை நினைவு செய்யுங்கள். பாபாவே அழிவற்ற சத்திரசிகிச்சை நிபுணராவார். உங்கள் அனைத்துத் துன்பமும் அகற்றப்படக்கூடிய அத்தகைய மருந்தை அவர் உங்களுக்குக் கொடுப்பார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சரீர உணர்வுடையவர்கள் ஆகி, ஒருவருக்கொருவர் குழப்பம் விளைவிக்காதீர்கள்;. ஒவ்வொரு சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருங்கள். என்றுமே எவரையும் விமர்;சிக்கவோ, பொறாமை கொள்ளவோ அல்லது எவருடனும் போட்டியிடவோ கூடாது. நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடாது. உங்கள் மத்தியில் நீங்கள் மிகவும் இனிமையானவர்களாக இருக்க வேண்டும். பாலும் சீனியும் போன்று வாழுங்கள்.2. அதிகாலையில் விழித்தெழுந்து, தந்தையை அன்புடன் நினைவு செய்யுங்கள். உங்களுடனே உரையாடி, ஞானக் கடலைக் கடையும் பொழுது, தந்தைக்கு நன்றி தெரிவியுங்கள்.
ஆசீர்வாதம்:
புத்தி (hநயன) இதயம் (hநயசவ) இரண்டினதும் சமநிலையைப் பேணி சேவை செய்வதன் மூலம் சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.
குழந்தைகள் பல தடவைகள் தங்கள் புத்தியை மாத்திரமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் புத்தியையும் இதயத்தையும் பயன்படுத்தி சேவை செய்யும் போது, சேவையில் நீங்கள் வெற்றி சொரூபங்கள் ஆகுவீர்கள். புத்தியினால் சேவை செய்பவர்கள் தந்தையின் நினைவைத் தங்கள் புத்தியில் சிறிதளவு நேரத்திற்கே கொண்டிருக்கிறார்கள். ஆம், பாபாவே என்னை செய்விக்கிறார் என அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும் சிறிது நேரத்தின் பின் அதே “நான்” எனும் உணர்வு மீண்டும் வெளிப்படுகின்றது. இதயத்தினால் சேவை செய்பவர்களின் இதயத்தில் பாபாவின் நினைவு எப்பொழுதும் அமிழ்ந்திருக்கும். அவர்கள் நிச்சயமாக சேவையின் பலனை இதயபூர்;வமாகப் பெறுவார்கள். நீங்கள் இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு சம நிலையைக் கொண்டிருக்கும் போது நீங்கள் எப்பொழுதும் வெற்றி அடைவீர்கள்.
சுலோகம்:
எல்லையற்றதில் நிலைத்திருக்கும்போது எல்லைக்குட்பட்ட எந்தச் சூழ்நிலையும் இயல்பாகவே முடிவடையும்.ஓம் சாந்தி
தந்தை பிரம்மாவிற்கு சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி
தந்தை பிரம்மா மாஸ்ரர் ஞான சூரியனாகி ஞான ஒளியைக் கொடுக்கும் அதே வேளை யோக சக்தியின் கதிர்களைக் கொடுப்பதன் மூலம் அனைத்து ஆத்மாக்களின் சமஸ்காரங்களிலும் உள்ள கிருமிகளை அழிக்கும் பணியையும் மேற்கொண்டார். அதேபோன்று நீங்கள் நடக்கும் போதும் உலாவித் திரியும் போதும் குழந்தைகளாகிய உங்கள் நெற்றியில் ஒளி வட்டம் புலப்படட்டும். அத்துடன் உங்கள் நடத்தையின் மூலமும் வார்த்தைகளின் மூலமும் ஞானசக்தி தென்படட்டும். அதாவது விதை தென்படட்டும். ஒரு மாஸ்டர் விதையாகி அதாவது ஒளியினதும் சக்தியினதும் கோளம்(படழடிந) ஆகுங்கள். அப்பொழுது நீங்கள் தந்தையைப் போன்று ஆகுவதுடன் காட்சிகளையும் அருளும் ஒரு சொரூபமாகவும் ஆகுவீர்கள்.