15.08.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொடுத்து, உங்களை மரண அரக்கனின் தண்டனையிலிருந்தும், இராவணனின் தங்கியிருத்தலில் இருந்தும் விடுவிப்பதற்காகவே தந்தை வந்துள்ளார்.

கேள்வி:
தந்தை விளங்கப்படுத்துவதற்கும், குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துவதற்கும் இடையேயுள்ள முக்கியமான வேறுபாடு என்ன?

பதில்:
தந்தை விளங்கப்படுத்தும்போது, ‘இனிய குழந்தைகளே’ என்றவாறே விளங்கப்படுத்துகிறார். இதன் மூலம் தந்தை எய்கின்ற அம்பானது, இலக்கைத் தாக்குகிறது. குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் சகோதரர்களுக்கு விளங்கப்படுத்தும்போது, “இனிய குழந்தைகளே” என்று கூற முடியாது. தந்தை மூத்தவர் என்பதால் அவர் கூறுவதில் ஒரு தாக்கம் ஏற்படுகின்றது. அவர் குழந்தைகளாகிய உங்களை உணர்ந்து கொள்ளச் செய்கிறார். குழந்தைகளே, நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகியதையிட்டு வெட்கப்படவில்லையா? இப்போது, தூய்மையாகுங்கள்!

ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை இங்கு அமர்ந்திருந்து, எல்லையற்ற ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். எல்லையற்ற தந்தைக்கும், எல்லையற்ற குழந்தைகளுக்கும் மாத்திரமே இது தெரியும். எல்லையற்ற தந்தையை, வேறு எவருக்கும் தெரியாது. அவர்கள் தங்களை எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்று கருதுவதில்லை. பிரம்மாவின் வாய் வழித் தோன்றல்கள் மாத்திரமே இதனை அறிந்து, ஏற்றுக் கொண்டுள்ளார்கள். வேறு எவரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரம்மா நிச்சயம் தேவைப்படுவதுடன், அவர் ஆதிதேவ் என்றும் அழைக்கப்படுகிறார். தந்தை அவரில் பிரவேசிக்கிறார். தந்தை வந்து, என்ன செய்கிறார்? அவர் கூறுகிறார்: நீங்கள் தூய்மையாக வேண்டும். தந்தையின் ஸ்ரீமத்தானது: நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு ஆத்மாவின் அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார். ஆத்மாக்கள் நெற்றிப் புருவத்தின் மத்தியில் வாழ்கிறார்கள். ஆத்மா அழிவற்றவர் என்றும், அவரது இந்தச் சிம்மாசனமானது அழியக்கூடிய சரீரம் என்றும் பாபா விளங்கப்படுத்தியிருக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதும், ஒரே தந்தையின் குழந்தைகள் என்பது போன்ற இவ் விடயங்கள் உங்களுக்குத் தெரியும். தந்தை சர்வ வியாபி என்று கூறுவது தவறாகும். அனைவரிலும் ஐந்து விகாரங்களும் உள்ளன என்று நீங்கள் மிக நன்றாக விளங்கப்படுத்துகிறீர்கள். நீங்கள் கூறுவது சரியெனச் சிலர் நினைக்கிறார்கள். நாங்கள் சகோதரர்கள். ஆகவே நாங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவோம். எவ்வாறாயினும், நீங்கள் இங்கிருந்து சென்றதும், மாயையின் புயலில் அகப்பட்டுக் கொள்கிறீர்கள். அரிதாக சிலரே காப்பாற்றப்படுகின்றார்கள். எல்லா இடங்களிலும் இந்த நிலைமையே உள்ளது. சிலர் இதில் சிறிதளவை நன்றாக விளங்கிக்கொண்டு, மேலும் சிறிதளவை விளங்கிக் கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள். இப்பொழுது உங்களால் அனைவருக்கும் விளங்கப்படுத்த முடியும். ஒருவர் அதிகளவு கவனம் செலுத்தவில்லையென்றால், கூறப்படுகிறது: அவர் ஒரு பழைய பக்தர் அல்ல. இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் மாத்திரமே, இவற்றை புரிந்து கொள்வார்கள். எவருக்காவது இது புரியாதிருந்தால், அவரால், பிறருக்கு விளங்கப்படுத்த முடியாது. உங்கள் மத்தியிலும் இது வரிசைக்கிரமமாகவே உள்ளது. சிறந்தவர்களுக்கு விளங்கப்படுத்த சிறந்த ஒருவரே அனுப்பப்படுகின்றார். அப்பொழுதே முக்கியஸ்தர்களால் சிறிதளவையேனும் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அவர்கள் இவ்விடயங்களை அவ்வளவு விரைவில் புரிந்து கொள்ள முடியாதுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆம், நீங்கள் விளங்கப்படுத்தும் முறை நன்றாக உள்ளதென்றும், நீங்கள் தந்தையின் முழு அறிமுகத்தையும் கொடுக்கிறீர்;கள் என்றும் தங்களுக்குத்தான் நேரம் இல்லை என்றும் அபிப்பிராயம் தெரிவிக்கின்றார்கள். நீங்கள் அவர்களிடம் கூறுங்கள்: எல்லையற்ற தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்களை அழிக்க முடியும். தந்தை, ஆத்மாக்களாகிய உங்களுடன் நேரடியாகப் பேசுகிறார் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் அவர் கூறுவதை நேரடியாகச் செவிமடுக்கும்போது, அம்பு மிக நன்றாக இலக்கைத் தாக்குகிறது. அங்கு (ஒரு நிலையத்தில்) நீங்கள் ஒரு பிரம்மகுமாரியின் மூலமாகச் செவிமடுக்கிறீர்கள். இங்கு, பரமதந்தை, பரமாத்மா, நேரடியாக பிரம்மா மூலம் விளங்கப்படுத்துகிறார்: ஓ குழந்தைகளே, குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்குக் கீழ்படிவதில்லை. உங்களில் எவரும் இதனை எவருக்கும் கூறமுடியாது. தந்தை இங்கு அமர்ந்திருப்பதால். அவர் அங்கு இல்லை. குழந்தைகளே, தந்தை உங்களுடன் பேசுகிறார். நீங்கள் தந்தை கூறுவதை செவிமடுக்க மாட்டீர்களா? அறியாமை பாதையிலும் கூட லௌகீகத் தந்தை விளங்கப்படுத்துவதற்கும், ஒரு சகோதரர் விளங்கப்படுத்துவதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. தந்தை மூத்தவர் என்பதால், அவர் கூறும்போது ஏற்படும் தாக்கம் ஒரு சகோதரர் கூறும்போது இருக்க மாட்டாது. தந்தை மீது பயம் இருக்கும். தந்தை உங்களுக்கும் விளங்கப்படுத்துகிறார்: உங்களுடைய தந்தையாகிய என்னை, நினைவு செய்யுங்கள்! நீங்கள் மீண்டும் மீண்டும் என்னை மறப்பதையிட்டு வெட்கப்படுவதில்லையா? தந்தை நேரடியாக உங்களுக்குக் கூறுகிறார். ஆகவே அது விரைவில் உங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் தந்தை கூறுவதைக் கேட்க மாட்டீர்களா? எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நீங்கள் இந்த ஒரு பிறவியில் விகாரமற்றவர்கள் ஆகுங்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு விகாரமற்றவர்கள் ஆகுவதுடன், தூய உலகின் அதிபதிகளும் ஆகுவீர்கள். நீங்கள் இதனை நம்பமாட்டீர்களா? தந்தை கூறுகின்ற அம்பு பலம் வாய்ந்தது போலுள்ளது. நிச்சயமாக ஒரு வேறுபாடு உள்ளது. பாபா எப்போதும் தொடர்ந்து புதியவர்களைச் சந்திப்பார் என்றில்லை. பலர் பலவகையான தவறான கேள்விகளைக் கேட்கிறார்கள். இது முற்றிலும் புதிய விடயம் என்பதால், இது அவர்களின் புத்தியில் நிற்பதில்லை. கீதையில் அவர்கள் கிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அது அவ்வாறாக இருக்க முடியாது. இப்போது, நாடகத்தின்படி, இது உங்கள் புத்தியில் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிடம் ஓடோடி வருகிறீர்கள்: நாங்கள் பாபாவிடம் சென்று, நேரடியாக முரளியைச் செவிமடுக்கப்போகிறோம். அங்கு (நிலையங்களில்) நாங்கள் சகோதரர்கள் மூலமாக அதனைச் செவிமடுக்கிறோம். இப்போது நாங்கள் பாபாவிடமிருந்து கேட்க விரும்புகிறோம். தந்தை பேசும்போது, அதில் ஒரு தாக்கமிருக்கும். அவர் உங்களுடன் “குழந்தைகள், குழந்தைகள்” என்றவாறே பேசுகின்றார். குழந்தைகளே, நீங்கள் தந்தையை நினைவு செய்யாததையிட்டு வெட்கப்படுவதில்லையா? தந்தை மீது உங்களுக்கு அன்பு இல்லையா? அவரை நீங்கள் எவ்வளவு நேரம் நினைவு செய்கிறீர்கள்? பாபா, ஒரு மணித்தியாலம். நீங்கள் சதா என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பல பிறவிகளின் பாவச் சுமை உங்கள் தலையிலுள்ளது. தந்தை உங்களுக்கு நேருக்கு நேராக முன்னிலையில் இருந்து விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் தந்தையை அதிகளவு அவதூறு செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படல் வேண்டும்! எவராவது பத்திரிகை மூலம் இன்னொருவரை அவதூறு செய்தால், அவருக்கு எதிராக ஒரு வழக்குத் தொடரப்படும். நீங்கள் செய்த விடயங்களை தந்தை இப்பொழுது உங்களுக்கு நினைவூட்டுகிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நாடகத்தின்படி, அவை அனைத்தும் இராவணனின் சகவாசத்தில் இடம்பெற்றன. பக்தி மார்க்கம் இப்போது முடிவடைந்துவிட்டது. அது கடந்ததாகிவிட்டது. உங்களை நிறுத்துவதற்கு, இடையில் எவரும் இருக்கவில்லை. நாளுக்கு நாள், கீழே வரும்போது, உங்களுடைய புத்தி ஒரு மூடரைப் போன்றும், தமோபிரதானாகவும் ஆகிவிட்டது. நீங்கள் பூஜிக்கும் ஒருவர் கற்களிலும், கூழாங்கற்களிலும் இருக்கிறாரென நீங்கள் கூறுகிறீர்கள்! அது எல்லையற்ற விவேகமின்மை என்று அழைக்கப்படுகிறது. அது எல்லையற்ற குழந்தைகளின் எல்லையற்ற விவேகமின்மையாகும். ஒரு புறத்தில் அவர்கள் சிவபாபாவைப் பூஜிக்கிறார்கள். மறு புறத்தில் அவர்கள் அந்தத் தந்தையைச் சர்வவியாபி என்று அழைக்கிறார்கள். இப்போது நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்கள்: நாங்கள் மிகவும் விவேகமற்றர்களாக இருந்ததால், எங்கள் தந்தையை அவதூறும் செய்திருக்கின்றோம். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொண்டதால், பிச்சைக்காரர்களிலிருந்து, இளவரசர்கள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்கிறீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் சத்திய யுகத்தின் இளவரசராக இருந்தார். இருந்தபோதும், மக்கள் அவரைப் பற்றி கூறும்போது, அவருக்கு 16,108 அரசிகளும், குழந்தைகளும் இருந்தனர் என்று கூறியுள்ளார்கள். இப்போது நீங்கள் வெட்கப்படுவீர்கள். ஒருவர் ஒரு பாவத்தைச் செய்தால், அவர் கடவுளின் முன்னிலையில் தோப்புக்கரணம் போட்டுக் கூறுகின்றார்: ஓ கடவுளே! நான் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டேன். கருணை காட்டுங்கள்! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்! நீங்கள் அவ்வாறானதொரு பெரிய தவறைச் செய்திருக்கிறீர்;கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அது நாடகத்தில் அவ்வாறாக உள்ளது. நீங்கள் அவ்வாறு ஆகிய பின்னரே என்னால் வர முடியும். தந்தை இப்போது கூறுகிறார்: எல்லா சமயத்தினருக்கும் நீங்கள் நன்மை செய்ய வேண்டும். அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருளும் தந்தையைப் பற்றிக் கூறும்போது, அவர் சர்வவியாபி என்று அனைத்து சமயங்களைச் சேர்ந்தவர்களும் கூறுகிறார்கள். அவர்கள் இதனை எங்கு கற்றார்கள்? கடவுள் பேசுகிறார்: நான் சர்வவியாபி அல்ல. உங்களாலேயே மற்றவர்களின் நிலைமையும், உங்களுடையதைப்போல் ஆகிவிட்டது. அவர்கள் அழைக்கிறார்கள்: “ஓ தூய்மையாக்குபவரே!”, ஆனால் அவர்கள் புரிந்து கொள்வதில்லை நாங்கள் முதலில் எங்கள் வீட்டிலிருந்து வரும்போது, தூய்மையற்றவர்களாகவா இருந்தோம்? சரீர உணர்வுடையவர்கள் ஆகியதாலேயே நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினோம். எந்தச் சமயத்தவராவது உங்களிடம் வந்தால், அவரிடம் வினவுங்கள்: உங்களுக்கு பரமதந்தை, பரமாத்மாவின் அறிமுகம் உள்ளதா? அவர் யார்? அவர் எங்கு வசிக்கிறார்? அவர் மேலே இருக்கிறார் என்றோ அல்லது அவர் சர்வவியாபி என்றோ அவர் கூறுவார். தந்தை கூறுகிறார்: உங்களாலேயே, முழு உலகமும் இப்போது முற்றாக கடனாளியாகி உள்ளது. நீங்களே அதற்கான கருவிகள் ஆகினீர்கள். இதுவும் அனைவருக்கும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். அது நாடகத்திற்கு ஏற்ப நடந்திருப்பினும், எவ்வாறாயினும் நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். அனைவரும் பாவ ஆத்மாக்கள். தூய ஆத்மாக்கள் ஆகவேண்டும் என்பதால், நீங்கள் இப்போது அழைக்கிறீர்கள். ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்கள் முக்திதாமமாகிய தங்கள் வீட்டிற்குச் திரும்பிச் செல்லவேண்டும். அங்கு அவர்கள் தூய்மையாக இருக்கின்றார்கள். தந்தை வந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துவதும் நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த ஞானம் எல்லா சமயத்தைச் சேர்ந்தவர்களுக்குமானதாகும். பாபா சில செய்திகளைப் பெற்றார்;. ஓர் ஆச்சாரியார் கூறினார்: கடவுள் உங்கள் அனைவரிலும் இருப்பதாக நான் கருதுகிறேன். ஆகவே உங்களை வணங்குகிறேன். பல கடவுள்கள் இருக்கிறார்களா? அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அதிகளவு பக்தி செய்யாதவர்கள் இங்கு நிலைத்திருக்க மாட்டார்கள். சிலர் சில காலங்களுக்கு நிலையத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் வேறு காலத்தில் இருப்பார்கள். இதிலிருந்து அவர்கள் குறைந்தளவு பக்தி செய்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனாலேயே அவர்கள் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருப்பதில்லை. இருந்தபோதும், அவர்கள் எங்கு செல்வார்கள்? வேறு எந்தக் கடையுமில்லை. மக்கள் மிக விரைவாகப் புரிந்து கொள்ளக்கூடியவாறு, என்ன முறையை உருவாக்கலாம்? செய்தி அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் அவர்களிடம் கூறவேண்டும்: தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களால் தந்தையை முற்றாக நினைவு செய்ய முடியாதுவிட்டால், நீங்கள் எய்யும் அம்பு எவ்வாறு இலக்கைத் தாக்கும்? இதனாலேயே பாபா கூறுகிறார்: உங்களுக்கான அட்டவணையை வைத்திருங்கள். தூய்மையாகுவதே முக்கியமான விடயமாகும். நீங்கள் தூய்மையாகுமளவிற்கு ஏற்ப, உங்களால் ஞானத்தை அதிகளவு கிரகிக்க முடியும். அந்தளவிற்கு சந்தோஷமும் இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரையும் ஈடேற்றவதில் அதிகளவு சந்தோஷப்பட வேண்டும். தந்தை மாத்திரமே வந்து, முக்தியை அளிக்கிறார். தந்தையை பொறுத்தவரை, சந்தோஷம் அல்லது துக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. நீங்கள் எவ்வகையிலும் துன்பப்படக் கூடாது. நீங்கள் தந்தையைக் கண்டுவிட்டீர்கள். அதனைவிட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். இந் நேரத்தில் மாத்திரமே நீங்கள் இந்த விளக்கங்களைப் பெறுகிறீர்கள். சத்திய யுகத்தில், நீங்கள் இதனைப் பெற மாட்டீர்கள். அங்கே ஞானம் என்ற கேள்விக்கே இடமில்லை. எல்லையற்ற தந்தையை நீங்கள் இங்கு கண்டுவிட்டீர்கள். ஆகவே, சுவர்க்கத்தைவிட அதிகளவு சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றும், இதனை விளங்கப்படுத்த வேண்டும். எல்லா சமயத்தவர்களின் மீதும் உங்களுக்குக் கருணை உள்ளது. அனைவரும் கூறுகிறார்கள்: ஓ கடவுளே, கருணை காட்டுங்கள்! எங்களை ஆசீர்வதியுங்கள்! துன்பத்திலிருந்து எங்களுக்கு விடுதலை அளியுங்கள்! எவ்வாறாயினும் அவர்கள் எதனையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். தந்தை உங்களுக்குப் பல வகையான சிறந்த முறைகளைக் கூறுகிறார். நீங்கள் அனைவருக்கும் கூறவேண்டும்: நீங்கள் இராவணனின் சிறையில் இருக்கிறீர்கள். தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், சுதந்திரம் என்றால் என்னவென்று எவரும் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் இராவணனின் சிறையில் அகப்பட்டுள்ளார்கள். உங்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொடுப்பதற்காக தந்தை இப்போது வந்திருக்கிறார். அவ்வாறிருந்தும், மக்கள் இராவணனின் சிறையில் அகப்பட்டுக்கொண்டு, தொடர்ந்து பாவங்களைச் செய்கிறார்கள். உண்மையான சுதத்திரம் என்றால் என்ன? நீங்கள் மக்களுக்கு இதனைக் கூறவேண்டும். நீங்கள் செய்தித்தாள்களில் அச்சிடலாம்: இங்கு, இராவணனின் இராச்சியத்தில் எந்தச் சுதந்திரமும் இல்லை. நீங்கள் அதனை மிகவும் சுருக்கமாக எழுதவேண்டும். நீங்கள் நீண்ட விளக்கங்களைக் கொடுத்தால், எவராலும் புரிந்து கொள்ள முடியாதிருக்கும். அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் இராவணனின் சிறையில் இருப்பதால், உங்களுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை. உங்களுடைய ஓசை வெளிநாடுகளில் பரவிச் செல்லும் போது, இங்குள்ள மக்கள் விரைவில் புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து முற்றுகையிடப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே, அது சுதந்திரமா? தந்தை உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அவர் உங்களை இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்கிறார். அங்கே நீங்கள் மிகவும் செல்வந்தர்களாகவும், அதிகளவு சுதந்திரத்துடனும் இருப்பீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவருடைய பார்வையும் உங்கள் மேல் விழ முடியாது. இறுதியில் நீங்கள் பலவீனமானவர்களாக ஆகியபோது, அனைவரது பார்வையும் உங்கள் செல்வத்தின் மேல் விழுந்தது. முகமது குஸ்னாவி வந்து, உங்கள் ஆலயத்தை கொள்ளையிட்ட போது, உங்கள் சுதந்திரத்தை நீங்கள் இழந்தீர்கள், ஏனெனில், நீங்கள் இராவணனின் இராச்சியத்தில் தங்கியிருந்தீர்கள். இப்போது நீங்கள் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் உண்மையான சுதந்திரத்தைப் பெறுகிறீர்கள். அந்த மக்கள் சுதந்திரத்தைப்பற்றிப்; புரிந்துகொள்ளவில்லை. ஆகவே, நீங்கள் இதனைச் சாதுரியமாக அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். முன்னைய கல்பத்தில் சுதந்திரத்தைப் பெற்றவர்கள் மாத்திரமே உங்களை நம்புவார்கள். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது, அவர்கள் அறிவற்றவர்களைப் (புத்துக்கள்) போன்று, அதிகம் விவாதிப்பார்கள். அவர்கள் உங்கள் நேரத்தை வீணாக்குவார்கள். ஆகையால் நீங்கள் அவர்களுடன் பேச விரும்புவதில்லை. தந்தை வந்து உங்களுக்குச் சுதந்திரத்தைத் தருகிறார். இராவணனில் தங்கியிருப்பதனால் அதிகளவு துன்பம் உள்ளது. எல்லையற்ற துன்பம் உள்ளது. தந்தையின் இராச்சியத்தில் நாங்கள் மிகவும் சுதந்திரமானவர்கள். நாங்கள் இராவணனின் இராச்சியத்திலிருந்து மீட்கப்பட்டு, தூய தேவதைகள் ஆகும்போது சுதந்திரம் இருக்கும். தந்தை மாத்திரமே வந்து, உங்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொடுக்கின்றார். இப்போது ஓர் அந்நிய இராச்சியத்தில் அனைவரும் சந்தோஷமற்று இருக்கிறார்கள். இதுவே நீங்கள் சுதந்திரத்தைப் பெறுகின்ற அதி மங்களகாமான சங்கம யுகமாகும். அந்நிய ஆட்சியாளர்கள் சென்றபின்னர், நாங்கள் சுதந்திரம் அடைந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் தூய்மை ஆகாதவரை உங்களுக்கு சுதந்திரம் இருக்க முடியாது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். பின்னர் மரண அரக்கனின் தண்டனை கிடைப்பதுடன், உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்பட்டுவிடும். உங்களை வீட்டுக்குக் கூட்டிச் செல்வதற்குத் தந்தை வருகிறார். அங்கு அனைவரும் சுதந்திரமாக உள்ளார்கள். எல்லா சமயத்தினருக்கும் நீங்கள் விளங்கப்படுத்தலாம்: நீங்கள் ஓர் ஆத்மா. நீங்கள் உங்கள் பாகத்தை நடிப்பதற்காக முக்தி தாமத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் சந்தோஷ தாமத்திலிருந்து, தமோபிரதான் உலகமான, துன்ப பூமிக்கு வந்திருக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் எனது குழந்தை. நீங்கள் இராவணனின் குழந்தையல்ல. இராச்சியம் என்ற பாக்கியத்தை உங்களுக்குக் கொடுத்த பின்னர் நான் சென்று விட்டேன். நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தில் மிகவும் சுதந்திரமாக இருந்தீர்கள். அங்கு திரும்பிச் செல்வதற்கு நீங்கள் மீண்டும் ஒருமுறை தூய்;மையாக வேண்டும். நீங்கள் மிகவும் செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள். அங்கு பணத்தையிட்டுக் கவலைப்பட வேண்டிய தேவை இருக்க மாட்டாது. அவர்கள் வறியவர்களாக இருந்தாலும், பணத்தையிட்டுக் கவலைப்பட வேண்டிய தேவை இருக்க மாட்டாது. அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். இங்கேயே கவலை உள்ளது. எவ்வாறாயினும், இராச்சியத்தில் வரிசைக்கிரமமாக அந்தஸ்து உள்ளது. அனைவரும் சூரிய வம்சத்து அரசர்கள் போன்று ஆகமாட்டார்கள். எவ்வாறாயினும், முயற்சி செய்யும் அளவிற்கு ஏற்ப ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் எல்லா சமயத்தினருக்கும் சேவை செய்பவர்கள். நீங்கள் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும்: நீங்கள் அனைவரும் சகோதரர்கள். அனைவரும் அமைதி தாமத்தில் வசிக்கின்றார்கள். இப்போது நீங்கள் இராவணனின் இராச்சியத்தில் இருக்கிறீர்கள். இப்போது நாங்கள் உங்களுக்கு வீட்டிற்குச் செல்வதற்கான வழியைக்காட்ட உள்ளோம். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னை நினைவு செய்யுங்கள். மக்கள் கூறுகிறார்கள்: கடவுள் அனைவருக்கும் முக்தியை அளிக்கிறார். எவ்வாறாயினும் அவர் எவ்வாறு அனைவருக்கும் முக்தியை அளிக்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகள் குழப்பமடையும்போது கூறுகின்றார்கள்: பாபா, எங்களுக்கு விடுதலையளி;த்து, எங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். அது நீங்கள் குழப்பமடையும்போது, மூடுபனியில் அகப்பட்டு, வழியைக் கண்டுபிடிக்க முடியாது இருப்பதைப் போன்றதாகும்;. பின்னர் உங்களுக்குப் பாதையைக் காட்டும், முக்தி அருள்பவரை நீங்கள் கண்டுகொண்டீர்கள். எல்லையற்ற தந்தையிடம் நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, எங்களை விடுவியுங்கள்! வாருங்கள். நாங்கள் உங்களைப் பின்பற்றுவோம்! தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்குப் பாதையைக் காட்ட முடியாது. நாங்கள் பல சமய நூல்களைப் படித்து, யாத்திரை செய்து தடுமாறித் திரிகின்றோம். எவ்வாறாயினும், எங்களுக்குக் கடவுளைத் தெரியாவிட்டால், எவ்வாறு எங்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியும்? அவர் சர்வவியாபியாக இருந்திருந்தால், எவ்வாறு எங்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியும்? மக்கள் அந்தளவுக்கு அறியாமை என்ற இருளில் இருக்கிறார்கள்! தந்தை ஒருவர் மாத்திரமே அனைவருக்கும் முக்தியை அருள்பவர். அவர் மாத்திரமே வந்து, குழந்தைகளாகிய உங்களின் அறியாமை என்ற இருளை நீக்குகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரே தந்தையை நீங்கள் கண்டுவிட்டீர்கள். ஆகவே எதனையிட்டும் கவலைப்படாதீர்கள். அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றி, எல்லையற்ற விவேகத்தைக் கொண்டிருந்து, சந்தோஷத்துடன் அனைவரையும் ஈடேற்றுவதற்கு கருவிகளாகுங்கள்.

2. மரண அரக்கனின் தண்டனையிலிருந்து பாதுகாக்கப்பட்டு, உண்மையான சுதந்திரத்தைப் பெறுவதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். ஞானமே உங்களின் வருமானத்திற்கான ஆதாரமாகும். ஆகவே அதனைக் கிரகித்து, செல்வந்தர்கள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
சேவையில் ஈடுபட்டிருக்கும் வேளையில் கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்து, தபஸ்யாவின் சொரூபம் ஆகுவீர்களாக.

குறுகிய காலத்தில் அதிகளவு சேவை செய்ய வேண்டியுள்ளது. சேவையிலேயே மாயை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சேவையின் பொழுதே சுபாவத்திலும் உறவுமுறையிலும் விரிவாக்கம் ஏற்படுகின்றது. அதில் சுயநலம் அடங்கியிருந்தாலோ அல்லது இன்னமும் சமநிலையில் குறைபாடு இருந்தாலோ மாயை பல புதிய வடிவங்களை ஏற்று வருகிறாள் என்பதால் சேவையிலும் சுய ஸ்திதியிலும் சமநிலையை பயிற்சி செய்யுங்கள். அதிபதியாகவிருந்து பௌதீக புலன்களான உங்கள் பணியாட்களிடமிருந்து சேவையை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மனதில் ஒரு பாபாவை அன்றி வேறு எவரும் இல்லாதிருக்கட்டும். இந்த விழிப்புணர்வு உங்களுக்குள் வெளிப்படும் போது, நீங்கள் கர்மாதீத் ஸ்திதியின் அனுபவசாலி என்றும் தபஸ்யாவின் சொரூபம் என்றும் அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
எதிர்மறையான காரணங்களை ஆக்கபூர்வமான தீர்வுகள் ஆக்குங்கள்.