30.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகையால் உங்களது பழைய சரீரத்திலிருந்தும் பழைய உலகிலிருந்தும் பற்றற்றிருங்கள். உங்கள் பற்றறியைச் (டியவவநசல) சக்தி; (உhயசபந) ஊட்டுவதற்கு நீங்கள் யோக சூளையில் அமர்ந்திடுங்கள்.

கேள்வி:
எக் குழந்தைகள் யோகத்தின் மூலம், தந்தையிடமிருந்து மின்சாரத்தை (உரசசநவெ) முழுமையாகப் பெறுகின்றார்கள்?

8பதில்:
வெளியில் அலைந்து திரியாத புத்தியைக் கொண்டவர்கள். தம்மை ஆத்மாக்கள் என்று கருதித் தந்தையை நினைவு செய்பவர்கள், தந்தையின் மின்சாரத்தைப் பெறுகின்றார்கள். பாபா அத்தகைய குழந்தைகளுக்குச் சக்காஷ் (மின்சாரத்தின் ஒளியையும், சக்தியையும்;) கொடுக்கின்றார். தந்தை கொடுக்கின்ற மின்சாரத்தை ஈர்க்க வேண்டியது குழந்தைகளின் கடமை. ஏனெனில் இம் மின்சாரத்தால் மாத்திரமே உங்கள் ஆத்மாவின் பற்றரிகள் சக்தி ஊட்டப்பட முடியும். அப்பொழுதே நீங்கள் வலிமை பெற்று, உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். இதுவே யோக அக்கினி என அழைக்கப்படுகின்றது. இதனை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

ஓம் சாந்தி.
கடவுள் பேசுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டையும் நினைவு செய்ய வேண்டும். தந்தை மாத்திரமே உங்கள் வீட்டைப் பற்றியும், இராச்சியத்தைப் பற்றியும் கூறுகின்றார். ஆத்மாக்களின் வீடு எங்குள்ளது என்பதைப் பற்றியும், ஆத்மா என்றால் என்ன என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளார் என்பதையும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். தந்தை எங்கிருந்து வருகின்றார்? பரந்தாமதிலிருந்து. தூய உலகை ஸ்தாபிப்பதற்காக, அவர் தூய உலகிலிருந்து வருகின்றார் என்று கூறப்படுவதில்லை; இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் சத்தியயுகமாகிய தூய உலகிலிருந்து வரவில்லை. குழந்தைகளாகிய நீங்கள், உங்கள் பாகங்களை நடிப்பதற்காக எந்த வீட்டிலிருந்து கீழிறங்கி வந்தீர்களோ அவ் வீட்டிலிருந்தே நானும் வந்துள்ளேன். நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றேன். நான் பரந்தாமமான வீட்டில் வசிக்கின்றேன். அருகிலுள்ள ஒரு நகரத்திலிருந்து வந்ததைப் போன்று தந்தை மிகவும் எளிமையான முறையில் விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகின்றார்: நாடகத் திட்டத்திற்கேற்ப, நீங்கள் உங்கள் பாகங்களை நடிக்க வந்ததைப் போன்றே, நானும் அங்கிருந்தே எனது பாகத்தை நடிக்க வந்துள்ளேன். நான் ஞானம் நிறைந்தவன். நாடகத் திட்டத்திற்கு ஏற்ப, எனக்கு இவ்விடயங்கள் அனைத்தும் தெரியும். கல்பம் கல்பமாக நீங்கள் காமச்சிதையில் அமர்ந்ததனால், முழுமையாக அவலட்சணம் ஆகிய பின்னர், நான் உங்களுக்கு இதே விடயங்களையே கூறுகின்றேன். மக்கள் தீயால்; முற்றாக அவலட்சணம் ஆகுகின்றார்கள். நீங்களும் அவலட்சணம் ஆகியுள்ளீர்கள். நீங்கள் சதோபிரதானாக இருந்தபோது உங்களுக்கிருந்த சக்தி இப்பொழுது முற்றாக மறைந்து விட்டது. ஆத்மாவின் பற்றரி முற்றாகச் சக்தியை இழந்து விட அனுமதிக்கக்கூடாது. அவ்வாறாயின் இயந்திரம் இயங்காமல் நின்று விடும். இப்பொழுது அனைவரது பற்றரியும் சக்தி இழந்துள்ள காலம் வந்துள்ளது. ஆகையால் தந்தை கூறுகின்றார்: நாடகத்திற்கு ஏற்ப, ஆதிசனாதன தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களின் பற்றரியைச் சக்தியூட்டவே நான் இப்பொழுது வந்துள்ளேன். உங்கள் பற்றரிகள் நிச்சயமாக சக்தியூட்டப்படும். எனினும் தினமும் காலையில் நீங்கள் இங்கு வருவதால் மாத்திரம் அது மீண்டும் சக்தியூட்டப்பட முடியாது. இல்லை. நீங்கள் நடந்தும் உலாவியும் திரியும்போதும் நினைவில் நிலைத்திருப்பதன் மூலமே உங்கள் பற்றரிகள் சக்தியூட்டப்பட வேண்டும். முன்னர் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகவும் சதோபிரதானாகவும் இருந்தீர்கள். நீங்கள் உண்மையான தங்கமாகவும், உண்மையான ஆபரணங்களாகவும் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். ஆத்மாக்கள் இப்பொழுது, மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும், அப்பொழுது அவர்கள் தூய சரீரத்தைப் பெறுவார்கள். இது தூய்மையாகுவதற்கான மிகவும் இலகுவானதொரு சூளை. இது யோக சூளை என்றும் அழைக்கப்படுகின்றது. தங்கம் சூளையிலேயே இடப்படுகின்றது. ஆத்மாக்களைத் தூய்மையாக்குகின்ற இந்தச் சூளையே தந்தையை நினைவுசெய்கின்ற சூளையாகும். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். நீங்கள் நினைவுசெய்யாது விட்டால், உங்களால் அந்தளவிற்குத் தூய்மையாக முடியாது. இது தீர்வுக்காலம் என்பதால் உங்கள் கர்மக் கணக்குகளையும் நீங்கள் தீர்க்க வேண்டும். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். வீட்டின் நினைவு உங்கள் புத்தியில் உள்ளது. அது வேறு எவரது புத்தியிலும் இல்லை. அவர்கள் பிரம்ம தத்துவத்தைக் கடவுள் என்று கருதுகின்றார்கள். அதனை அவர்கள் வீடென்று கருதுவதில்லை. நீங்கள் இந்த எல்லையற்ற நாடகத்தின் நடிகர்கள். அத்துடன் நீங்கள் நாடகத்தையும் மிகத்தெளிவாக அறிவீர்கள். 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவடைகின்றது என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகியதாலேயே அவர்கள் தம்மைத் தூய்மையாக்கி வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பாபாவை கூவியழைக்கின்றார்கள். இல்;லாவிடின் உங்களால் வீடு திரும்ப முடியாது. தந்தை இங்கமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இதனைப் புரிந்துகொண்டிருப்பதாலேயே அவரைத் தந்தை என அழைக்கின்றீர்கள். நீங்கள் அவரை ஆசிரியர் என்றும் குறிப்பிடுகின்றீர்கள். மக்கள் கிருஷ்ணரை ஆசிரியர் என்று கருதுகின்றார்கள். கிருஷ்ணரும் சத்தியயுகத்தில் கற்றார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரி;ந்துகொண்டிருக்கின்றீர்கள். கிருஷ்ணர் எவருக்கும் ஆசிரியர் ஆகுவதோ அல்லது கற்று ஆசிரியர் ஆகுகின்றார் என்றோ இல்லை; இல்லை. அவர் அவ்வாறு ஆகுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்திலிருந்து அவர் முதிர்ச்சி அடையும் வரையுள்ள கதையை அறிவீர்கள். கிருஷ்ணரை மக்கள் கடவுள் என்று கருதி, கூறுகின்றார்கள்: நான் எங்கும் கிருஷ்ணரையே பார்க்கின்றேன். இராமரின் பக்தர்கள் கூறுகின்றார்கள்: நான் எங்கு பார்த்தாலும், இராமரே உள்ளார். பக்தியின் இழை, சிக்கலாகி உள்ளது. இப்பொழுது பாரதத்தின் பிரசித்தி பெற்ற, புராதன யோகமும், ஞானமும் உங்களுக்குத் தெரியும். மக்களுக்கு எதுவுமே தெரியாது. ஞானக்கடலான தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதனால், நீங்களும் மாஸ்டர் ஞானக்கடல்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். எவ்வாறாயினும், இது உங்கள் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகவே உள்ளது. உங்களைக் கடல்கள் என்றா அல்லது நதிகள் என்றா அழைக்க வேண்டும்? நீங்கள் ஞான கங்கைகள். மக்கள் இதனையிட்டும் குழப்பம் அடைகின்றார்கள். ‘மாஸ்டர் ஞானக்கடல்’ என்று கூறுவது முற்றிலும் சரியாகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதில் ஆண்கள், பெண்கள் என்ற கேள்வியே இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஆகவே தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். பரமாத்மாவான நான் ஞானக்கடலாக இருப்பதைப் போன்றே, நீங்களும் ஞானக்கடல்கள் ஆவீர்கள். நான் பரமாத்மாவான பரமதந்தை என அழைக்கப்படுகின்றேன். எனது கடமை அனைத்திலும் மிக உயர்ந்தது. ஓர் அரசனுக்கும், அரசிக்கும் மிகவும் உயர்ந்ததோர் கடமை உள்ளது. உங்களுக்கும் உயர்ந்ததொரு கடமை கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே, ஆத்மாக்களாகிய நீங்கள் கற்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். பரமாத்மா உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆகவே ஆத்ம உணர்வுடையவர் ஆகுவீர்களாக! நீங்கள் அனைவரும் சகோதரர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை அதிகளவு முயற்சி செய்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் அங்கே செல்லும்போது, உங்கள் வெகுமதி தொடரும். அங்கே அனைவரும் சகோதரத்துவ அன்பைக் கொண்டிருக்கின்றார்கள். இங்கும் மிகவும் சிறந்த, சகோதரத்துவ அன்பிருக்க வேண்டும். நீங்கள் சிலருக்கு மதிப்பளித்து, சிலருக்கு மதிப்பளிப்பதில்லை என்றிருக்கக்கூடாது. இந்துக்களும் இஸ்லாமியரும் சகோதரர்கள் என அம்மக்கள் கூறியபோதிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் அந்த மதிப்பை அளிப்பதில்லை. நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் என்றல்லாது, சகோதரர்கள் என்பதே மிகச்சரியாகும். இதுவே சகோதரத்துவம். ஆத்மாக்கள் தமது பாகங்களை நடிக்கவே இங்கே வருகின்றார்கள். அங்கும் நீங்கள் சகோதரர்களாகவே வாழ்கின்றீர்கள். அந்த வீட்டிலும் நீங்கள் நிச்சயமாகச் சகோதரர்களாகவே வாழ்கின்றீர்கள். இந்த சகோதர சகோதரிகள் என்ற ஆடையும், உணர்வும் இங்கேயே துறக்கப்பட வேண்டும். தந்தை மாத்திரமே சகோதரத்துவத்திற்கான ஞானத்தைக் கொடுக்கின்றார். ஆத்மாக்கள் தங்கள் நெற்றியின் மத்தியில் வசிக்கின்றார்கள். உங்கள் பார்வையை நீங்கள் செலுத்த வேண்டிய இடம் அதுவேயாகும். ஆத்மாவாகிய நான் இங்கே இச்சரீரம் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளேன். இதுவே அழியாத சிம்மாசனமான, ஆத்மாவின் சிம்மாசனமாகும். ஆத்மாவிற்கு என்றுமே மரணம் வருவதில்லை. அனைவரது சிம்மாசனமும் நெற்றியின் நடுவில் உள்ளது. அமரத்துவமான ஓர் ஆத்மா இந்த சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய, மிகவும் ஆழமான விடயமாகும். ஓர் ஆத்மா ஒரு குழந்தையின் சரீரத்தில் பிரவேசிக்கும்போது, அவர் நெற்றியின் நடுவிலே அமர்கின்றார். அந்தச் சிறிய சிம்மாசனம் பின்னர் பெரிதாக வளர்கின்றது. இங்கே ஆத்மாக்கள் கருப்பையில் வேதனையை அனுபவம் செய்ய வேண்டியுள்ளது. பின்னர் அவர்கள் வருந்தி, தாம் மீண்டும் ஒருமுறை பாவம் நிறைந்தவர் ஆக மாட்டோம் என்று சத்தியம் செய்கின்றார்கள். ஆனால், உண்மையில், அரைக்கல்பத்திற்கு ஆத்மாக்கள் பாவம் நிறைந்தவர் ஆகுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது, தந்தையினால் தூய்மையாக்கப்படுகின்றீர்கள். நீங்கள் உங்களிடமுள்ள மனம், சரீரம், செல்வம் அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைகின்றீர்கள். வேறு எவருக்கும் அத்தகைய பெரிய தானத்தை எவ்வாறு செய்வது என்பது தெரியாது. தானத்தைப் பெறுகின்ற ஒரேயொருவரும், தானத்தைக் கொடுப்பவர்களும் பாரதத்திலேயே வருகின்றனர். இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய, சூட்சுமமான விடயங்கள். பாரதம் அநாதியான இடமாகும். ஏனைய இடங்கள் அனைத்தும் அழியவுள்ளன. இது நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. இது உங்கள் புத்தியில் மாத்திரமே உள்ளது. உலகில் உள்ள வேறு எவருக்கும் இது தெரியாது. இதை ஞானம் எனக் குறிப்பிடுவது சிறந்தது. ஞானமே உங்கள் வருமானத்திற்கான வழியாகும். நீங்கள் இதன் மூலம் அதிகளவு வருமானத்தை ஈட்டுகின்றீர்கள். தந்தை தன்னை எவ்வாறு நினைவுசெய்யலாம் என்ற ஞானத்தையும், உலகச் சக்கரத்தின் ஞானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். இதற்கே முயற்சி அவசியம். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆகையால் நீங்கள் பழைய உலகத்திலிருந்தும் உங்கள் பழைய சரீரங்களிலிருந்தும் அப்பால் இருக்க வேண்டும். நீங்கள் பார்க்கின்ற அனைத்தும், உங்கள் சரீரங்கள் உட்பட, அழியப் போகின்றது. நீங்கள் இப்பொழுது மாற்றல் செய்யப்படவுள்ளீர்கள். தந்தையால் மாத்திரமே உங்களுக்கு இவ்விடயங்களைக் கூறமுடியும். இது மிகப்பெரிய பரீட்சை. இதனைத் தந்தை மாத்திரமே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதற்குப் புத்தகங்கள் போன்ற எதுவும் தேவையில்லை. தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். தந்தை 84 பிறவிச் சக்கரத்தை விளங்கப்படுத்துகின்றார். வேறு எவருக்கும் இந்த நாடகத்தின் ஆயுட்காலம் தெரியாது. அவர்கள் அனைவரும் காரிருளில் உள்ளார்கள். நீங்கள் இப்பொழுது விழித்தெழுந்துள்ளீர்கள். மக்கள் விழித்தெழுவதும் இல்லை. அவர்களை விழித்தெழச் செய்வதற்கு நீங்கள் கடுமையாக முயற்சி செய்கின்றீர்கள். ஆனால் கடவுள் வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அவர் நிச்சயமாக எவரிலாவது பிரவேசிக்க வேண்டும். மக்கள் புரிந்துகொள்வதற்கு நீங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனையை தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். உங்களுக்கு அது மிகவும் இலகுவானதாயினும், நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். பாடசாலையிலும் மாணவர்கள் வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். அவர்கள் எவ்வாறு கற்கின்றார்கள் என்பதிலும் வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். இக்கல்வியின் மூலம் பெரியதோர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் ஓர் ஆட்சியாளர் ஆகுவதற்கு அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். கல்பம்கல்பமாக நீங்கள் இப்பொழுது செய்கின்ற முயற்சியையே தொடர்ந்தும் செய்வீர்கள். இதுவே இறை அதிர்ஷ்ட இலாபச்சீட்டு என அழைக்கப்படுகின்றது. பழைய உலகில் சிலர் சிறிய அதிர்ஷ்ட இலாபச்சீட்டையும், சிலர் பெரிய அதிர்ஷ்ட இலாபச்சீட்டையும் பெறுகின்றார்கள். இந்த அதிர்ஷ்ட இலாபச்சீட்டு ஓர் இராச்சியத்திற்கானது. இங்கே ஆத்மாக்களாகிய நீங்கள் வெல்லும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டு உங்கள் செயற்பாடுகளுக்கு ஏற்பவே இருக்கின்றது. சிலர் ஏழைகள் ஆகுகின்றார்கள். சிலர் செல்வந்தர் ஆகுகின்றார்கள். இந்த நேரத்திலேயே குழந்தைகளாகிய நீங்கள் முழுமையான அதிர்ஷ்ட இலாபச்சீட்டைத் தந்தையிடமிருந்து வெல்கின்றீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் செய்கின்ற முயற்சியின் அடிப்படையிலேயே அனைத்தும் உள்ளது. நினைவு செய்வதே நீங்கள் செய்கின்ற முதல் இலக்க முயற்சியாகும். நீங்கள் முதலில் யோக சக்தியினூடாக, சுத்தமாக வேண்டும். நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவிற்கு ஞானத்தைக் கிரகித்து, பிறருக்கும் விளங்;கப்படுத்தி, பல பிரஜைகளையும் உருவாக்குகின்றீர்கள் எனப் புரிந்துகொள்கின்றீர்கள். மக்கள் எச் சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், நீங்கள் அவர்களைச் சந்திக்கும்பொழுதெல்லாம், அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, விநாசம் உங்கள் முன்னிலையில் உள்ளதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். மக்கள் விநாச காலத்தில் ஆர்வமின்மையை அதிகரித்துக் கொள்வார்கள். ‘நீங்கள் ஓர் ஆத்மா’ என்று நீங்கள் கூறினால் போதும். தந்தையான கடவுள் என்று கூறுவது யார்? ஆத்மாவே இதனைக் கூறுகின்றார். இப்பொழுது தந்தை ஆத்மாக்களுக்குக் கூறுவது: நான் உங்களை முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டி ஆகியுள்ளேன். எவ்வாறாயினும் ஆத்மாக்கள் என்றுமே அழியாதவர்கள் என்பதால், அநாதியான முக்தி (மோட்சம்) என்ற கேள்விக்கு இடமில்லை. ஒவ்வொருவரும் தத்தமது பாகத்தை நடிக்க வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் அமரத்துவமானவர்களும், என்றும் அழிக்க முடியாதவர்களும் ஆவார்கள். எவ்வாறாயினும் வீட்டிற்குச் செல்ல வேண்டுமாயின், நீங்கள் தந்தையை நினைவுசெய்தால் மாத்திரமே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அப்பொழுதே உங்களால் வீடு திரும்ப முடியும். இறுதியில் அனைவருமே வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்பதை மகத்துவமான சந்நியாசிகளும் அறிந்து கொள்வார்கள். உங்கள் செய்தி, அனைவரதும் புத்தியிலும் முத்திரை குத்தப்படும். ஆகையாலேயே ஒரு புகழ் உள்ளது: ஓ கடவுளே! உங்கள் வழிமுறைகள்; அற்புதமானவை! ஆகையால், அவர் நிச்சயமாக எவருக்கோ ஒருவருக்கு வழிகாட்டல்களைக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது அவற்றைத் தானே வைத்துக் கொண்டாரா? அவரின் வழிகாட்டலின் ஊடாகவே சற்கதி அருளப்படுகின்றது. எனவே அவர் நிச்சயமாக அவற்றை உங்களுக்குக் கூறுகின்றார். இருப்பினும்;, சிலர் கூறுகின்றார்கள்: உங்களுக்;கு மாத்திரமே உங்கள் வழிமுறைகள் தெரியும்! எங்களுக்குத் தெரியாது! இவ்வாறும் ஒன்றுள்ளது! தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், சற்கதியைப் பெறுகின்றீர்கள். பாபா அறிந்த அனைத்தையும் எங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் பாபாவை இனங்கண்டுள்ளீர்கள் எனக் கூறுகின்றீர்கள். ஆனால் ஏனையோர் அவரைச் சாதாரணமாக நினைவுசெய்த பின்னர் கூறுகின்றார்கள்: உங்களுக்கே உங்கள் வழிமுறைகள் தெரியும்! நீங்கள் அவ்வாறு கூறுவதில்லை. இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் பதியும். ஆனால் இதற்குக் காலம் எடுக்கும். இன்றுவரை, எவரும் முழுமையடையவில்லை. நீங்கள் முழுமையடையும் போது, அதன்பின்னர் இங்கிருக்க மாட்டீர்கள். எவரும் இப்பொழுது திரும்பிச் செல்ல முடியாது. அனைவரும் இன்னமும் முயற்சியைச் செய்கின்றார்கள். ஆரம்பத்தில் பாபா பழைய உலகத்தின் மீது தீவிர ஆர்வமின்மை கொண்டிருந்தபொழுது, தானே இரட்டைக் கிரீடம் உடையவர் ஆகவுள்ளதை உணர்ந்தார். நாடகத்திற்கேற்ப பாபா இதனை எனக்குக் காட்டினார். உடனடியாகவே நான் சந்தோஷமடைந்தேன். அந்தச் சந்தோஷத்திலேயே நான் அனைத்தையும் துறந்தேன். நான்கு கரங்களைக் கொண்ட விஷ்ணுவின் உருவத்தின் காட்சியைக் கண்டதுடன், நான் விநாசத்தின் காட்சியையும் கண்டேன். நான் இப்பொழுது ஓர் இராச்சியத்தை அடையப் போகின்றேன் என்றும், விநாசம் இன்னமும் சொற்ப நாட்களில் இடம்பெறும் என்றும் உணர்ந்தேன். போதை உயர்ந்;திருந்தது. இது சரியென்பது புரிந்துகொள்ளப்பட்டது. இராச்சியம் உருவாக்கப்படும். பலரும் அதில் ஒருவர் ஆகுவார்கள். நான் தனியாகச் சென்றால், நான் மாத்திரம் அங்கிருந்து என்ன செய்வேன்? நீங்கள் இந்த ஞானத்தை இப்பொழுது பெறுகின்றீர்கள். ஆரம்பத்தில், சந்தோஷப் பாதரசம் அதிகளவு அதிகரித்தது. அனைவரும் இப்பொழுது முயற்சி செய்யவேண்டும். நீங்கள் இங்கே முயற்சி செய்வதற்காகவே அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் அதிகாலையில் நினைவில் அமர வேண்டும். நினைவுசெய்வதற்கு அமருதல் மிகவும் நல்லது. பாபா வந்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். பாபா வந்துள்ளாரா? அல்லது தாதா வந்துள்ளாரா? சக்கரையும் சக்கரையுள்ள பாத்திரமுமே சக்கரையின் இனிமையை அறியும். பாபா தொடர்ந்தும் ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கின்றார். அவர் இங்கமர்ந்திருந்து, ஒவ்வொருவருக்கும் சக்காஷ் கொடுக்கின்றார். இதுவே யோக அக்கினி. இந்த யோக அக்கினியியிலே உங்கள் பாவங்கள் அழிய முடியும். பாபா இங்கமர்ந்திருந்து அனைவருக்கும் ஒளியைக் கொடுப்பதைப் போன்றுள்ளது. அவர் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் ஒரு சேர்ச்லைட்டைக்; கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இங்கமர்ந்திருந்து, உங்கள் அனைவரையும் சக்தியால் நிரப்புவதற்கு ஆத்மாக்களாகிய உங்களுக்கு மின்சாரத்தைக் கொடுக்கின்றேன். உங்கள் புத்தி வெளியில் அலைந்து திரியுமாயின், இந்த மின்சாரத்தை உங்களுக்குள் ஈர்க்க முடியாது. ஆத்மாக்களாகிய உங்களின் புத்தி தொடர்ந்தும் எங்காவது அலைந்;தால், எதனைப் பெறுவீர்கள்? நீங்கள் அன்பைக் கொடுத்தால், அன்பைப் பெறுவீர்கள். உங்கள் புத்தி வெளியில் அலைந்து திரிந்தால், உங்கள் பற்றரிகளைச் சக்தியூட்ட முடியாது. தந்தை உங்கள் பற்றரிகளைச் சக்தியூட்டவே வருகின்றார். சேவை செய்வதே அவரது கடமையாகும். இச் சேவையை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா அல்லது இல்லையா என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். நீங்கள் இங்கே அமரும்போது எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். நான் பரமாத்மா. நீங்கள் பற்றரியான, என்னுடன் யோகம் செய்தால், உங்களுக்குச் சக்காஷைக் கொடுக்க முடியும். நான் அன்பாக உங்கள் ஒவ்வொருவருக்கும் சக்காஷ் கொடுக்கின்றேன். தந்தையை நினைவுசெய்வதற்கே நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். பாபா கூறுகின்றார்: நான் ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் சக்காஷ் கொடுக்கின்றேன். நான் உங்கள் முன்னிலையில் அமர்ந்து, உங்களுக்கு ஒளி ஏற்றுகின்றேன். நீங்கள் அதனைச் செய்வதில்லை. அந்த ஒளியை உள்ளெடுக்க விரும்புகின்றவர்கள், அதனை ஈர்க்கும்போது உங்கள் பற்;றரிகள் சக்தியூட்டப்படுகின்றன. நாளுக்குநாள், பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் யுக்திகள் கொடுக்கின்றார். எவ்வாறாயினும், நீங்கள் எவ்வளவு புரிந்துகொள்கின்றீர்கள், அல்லது எவ்வளவு புரிந்துகொள்ளவில்லை என்பதிலேயே அது தங்கியுள்ளது. அது வரிசைக்கிரமமாக மாணவர்களைப் பொறுத்தும் உள்ளது. உங்களுக்கு மிகவும் சிறந்த ஊட்டச்சத்தே கொடுக்கப்படுகின்றது. ஆனால் அதனை நீங்கள் ஜீரணித்துக் கொள்ள வேண்டும். இது மிகப்பெரிய அதிர்ஷ்ட இலாபச்சீட்டு. இது நீங்கள் பிறவிபிறவியாக, கல்பம்கல்பமாக வெற்றியீட்டுகின்ற அதிர்ஷ்ட இலாபச்சீட்டு. நீங்கள் இதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பாபாவிடம் இருந்து மின்சாரத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை இந்த நெற்றியின் நடுவில் இவருக்கு அருகில் அமர்ந்துள்ளார். உங்களை நீங்கள் ஆத்மாக்கள் என்று கருதி, தந்தையையே நினைவுசெய்ய வேண்டும். பிரம்மாவை அல்ல. நீங்கள் அவருடன் யோகம் செய்யவே இங்கே அமர்ந்துள்ளீர்கள். இவரை நீங்கள் பார்க்கும்போதும், அவரையே பார்க்க வேண்டும். இது ஆத்மா பற்றிய கேள்வியாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதிகாலையில் தந்தையிடமிருந்து சேர்ச்லைட்டைப் பெற்று, ஆத்மாவான உங்களைச் சுத்தப்படுத்துங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை வெளியிலிருந்து அகற்றி, அதனை ஒரேயொரு தந்தையுடன் இணைத்து, அவரது மின்சாரத்தை ஈர்த்துக் கொள்ளுங்கள்.

2. உண்மையான சகோதரத்துவ அன்பைப் பேணி அனைவருக்கும் மரியாதை கொடுங்கள். சகோதரராகிய ஆத்மா அழியாத சிம்மாசனத்தில் பிரசன்னமாகி உள்ளார். ஆகையால் நெற்றியின் மத்தியில் பார்த்து அனைவருடனும் பேசுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருந்து, தந்தையின் சம்ஸ்காரங்களை உங்களின் ஆதியான சம்ஸ்காரங்கள் ஆக்குவீர்களாக.

இப்பொழுதும் சில குழந்தைகள் குழப்பமடைதல், வெளியேறிச் செல்வது, ஏனையோரைச் செவிமடுத்து, பேசுவது எனும் பல்வேறு சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கின்றனர். “என்னால் என்ன செய்ய முடியும்? இவை எனது சம்ஸ்காரங்கள்” என அவர்கள் தம்மையிட்டுக் கூறுகின்றார்கள். “எனது’ எனும் இவ் வார்த்தை உங்கள் முயற்சிகளில் உங்களைப் பின்னடையச் செய்கின்றது. அது இராவணனுக்கு உரியது, உங்களுக்கு அல்ல. எவ்வாறாயினும், தந்தையின் சம்ஸ்காரங்களே பிராமணர்களின் ஆதியான சம்ஸ்காரங்கள். அந்தச் சம்ஸ்காரங்கள் உலக உபகாரியாக இருப்பதற்கும், பிறருக்காகத் தூய எண்ணங்களைக் கொண்டிருப்பதற்கும் உரியவை. அனைவருக்காகவும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்ட ஒருவராக இருங்கள்.

சுலோகம்:
சக்தியைக் கொண்டிருப்பவர்களே, சகல சக்திகள் எனும் பொக்கிஷத்திற்கான ஓர் உரிமையைக் கொண்டிருப்பவர்கள் ஆவார்கள்.