16.11.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் திரிமூர்த்தி தந்தையின் குழந்தைகள். உங்களது மூன்று செயற்பாடுகளை நீங்கள் நினைவு செய்ய வேண்டும்: ஸ்தாபித்தல், அழித்தல், பராமரித்தல்

கேள்வி:
சரீர உணர்வு என்ற தீவிர நோயினால்; ஏற்படும் சேதம் என்ன?

பதில்:
1. சரீர உணர்வுள்ளவர்கள் பொறாமை கொண்டிருக்கின்றார்கள். பொறாமையினால் அவர்கள் ஒருவரோடொருவர்; உவர் நீரைப் போன்று ஆகுகின்றனர். அவர்களால் அன்புடன் சேவை செய்ய முடிவதில்லை. அவர்கள் உள்ளார எரிந்து கொண்டிருப்பார்கள். (2) அவர்கள் கவனயீனமாக இருப்பார்கள், மாயை அவர்களைப் பெருமளவு ஏமாற்றுகின்றாள். அவர்கள் முயற்சி செய்யும்பொழுது நம்பிக்கை இழந்து களைப்படைவதால் கற்பதை நிறுத்தி விடுகின்றார்கள். (3) சரீர உணர்வினால் அவர்களின் இதயம் சுத்தமாக இருப்பதில்லை. அவர்களின் இதயம் அசுத்தமாக இருப்பதால், அவர்களால் பாபாவின் இதய சிம்மாசனத்தில் அமர முடிவதில்லை. (4) அவர்களின் மனோநிலை (அழழன) மாறுவதால் முகமும் மாறுகின்றது.

ஓம் சாந்தி.
நீங்கள் தந்தையை மாத்திரம் நினைவு செய்கின்றீhகளா, அத்துடன் வேறு எதனையும் நினைவு செய்கின்றீர்களா? குழந்தைகளாகிய நீங்கள் ஸ்தாபித்தல், அழித்தல், பராமரித்தல் ஆகிய மூன்று பணிகளையும் நினைவு செய்ய வேண்டும். ஏனெனில் அவை ஒரே நேரத்தில் இடம்பெறுகின்றன. உதாரணமாக ஒருவர் சட்டநிபுணர் ஆகுவதற்காக சட்டத்தைக் கற்பாராயின், அவர் சட்டநிபுணராகி பின்னர் நீதித் தொழிலில் ஈடுபடுவார் என்பதைப் புரிந்துகொள்கின்;றார். அவர் சட்டம் என்ற பாடநெறியைப் பாதுகாப்பார். ஒருவர் என்ன கற்கின்றாரோ, எதிர்காலத்தில் அதனைத் தொடர்வதற்கான நோக்கத்தைக் கொண்டிருப்பார். நீங்கள் இப்பொழுது ஸ்தாபனைக்கான பணியைச் செய்துகொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் தூய புதிய உலகை ஸ்தாபிக்கின்றீர்கள். இதற்கு யோகம் பிரதானமானதாகும். யோகத்தின் மூலம் மாத்திரமே தூய்மையற்று இருக்கும் உங்கள் ஆத்மா தூய்மையாக முடியும். நீங்கள் தூய்மையாகி தூய உலக இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். இது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இதுவே பரீட்சைகள் அனைத்திலும் அதி மேன்மையான பரீட்சையும், கல்விகள் அனைத்திலும் அதி மேன்மையான கல்வியுமாகும். பலவிதமான கற்பித்தல்கள் உள்ளன. அவை மனிதர்களுக்கு மனிதர்களால் கற்பிக்கப்படுகின்றன. அக் கற்பித்தல்கள் இந்த உலகிற்கு மாத்திரமேயாகும். கற்ற பின்னர் அதன் பலனை இங்கேயே பெற்றுக் கொள்கின்றார்கள். இந்த எல்லையற்ற கல்வியின் பலனை நீங்கள் புதிய உலகில் பெறுவீpர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அந்தப் புதிய உலகம் வெகு தொலைவில் இல்லை. இப்பொழுது இது சங்கமயுகமாகும். புதிய உலக இராச்சியத்தை நீங்கள் ஆட்சி செய்யப் போகின்றீர்கள். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, உங்கள் புத்தியில் இந்த நினைவைக் கொண்டிருக்க வேண்டும். தந்தையின் நினைவின் மூலமே ஆத்மா தூய்மையாக முடியும். நீங்கள் தூய்மையாகும் பொழுது இத்தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழிந்து விடும். அனைவரும் தூய்மையாகுவார்கள் என்றில்லை. அதற்கான சக்தி வெகு சிலரான உங்களிடம் மாத்திரமே இருக்கின்றது. நீங்கள் உங்களுடைய சக்திக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக சூரிய, சந்திர வம்சத்திற்கு உரியவர்கள் ஆகுகின்றீர்கள். அனைத்திற்கும் சக்தி தேவையாகும். இது இறை சக்தியாகும். இது யோக சக்தியின் பலம் என்று அழைக்கப்படுகின்றது. ஏனைய அனைத்தும் பௌதீக சக்தியாகும். இது ஆன்மீக சக்தியாகும். கல்பம் கல்பமாக தந்தை கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். சர்வ சக்திவானாகிய தந்தையை நினைவுசெய்யுங்கள். அவர் மாத்திரமே தந்தையாவார். அவரை நினைவு செய்வதன் மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகுவீர்கள். இவை கிரகிக்கப்பட வேண்டிய மிக நல்ல விடயங்களாகும். தாங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை இல்லாதவர்களின் புத்தியில் இந்த விடயங்கள் நிற்காது. சதோபிரதான் உலகில் இருந்தவர்கள் இப்பொழுது தமோபிரதான் உலகில் இருக்கின்றார்கள். அவர்கள் மாத்திரமே விரைவாகத் தமது புத்தியில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வார்கள். நீங்கள் எதையாவது புரிந்து கொள்ளவில்லை என்றால் அது பற்றி வினவ வேண்டும். நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டீர்களாயின், உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியும். உங்களால் புரிந்து கொள்ள முடியாது விட்டால் உங்களால் அவரை நினைவு செய்ய முடியாது. இது நேரடியான விடயமாகும். சதோபிரதான் ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். உங்களில் சந்தேகம் கொண்டிருப்பவர்கள், நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது என்றோ அல்லது முன்னைய கல்பத்தில் உங்கள் ஆஸ்தியை தந்தையிடமிருந்து எவ்வாறு பெற்;றுக் கொண்டீர்கள் என்றோ வினாக்களை வினவிக்கொண்டு, கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்த மாட்டார்கள். அது உங்கள் பாக்கியத்தில் இல்லை என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. முன்னைய கல்பத்திலும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை, ஆகையாலேயே உங்களால் நினைவில் இருக்க முடிவதில்லை. இக்கல்வி எதிர்காலத்திற்கானதாகும். ஆத்மாக்கள் கற்காது விட்டால், அவர்கள் கல்பம், கல்பமாக கற்கவில்லையென்றோ அல்லது அவர்கள் குறைந்த புள்ளிகளுடனேயே சித்தியடைந்திருக்கின்றார்கள் என்றோ புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு பாடசாலையில் பலரும் சித்தியடைவதில்லை. அவர்கள் வரிசைக்கிரமமாகவே சித்தியடைகின்றார்கள். இதுவும் ஒரு கல்வியாகும். இங்கு அனைவரும் வரிசைக்கிரமமாகவே சித்தியடைகின்றார்கள். திறமைசாலிகள் கற்று தொடர்ந்தும் பலருக்குக் கற்பிப்பார்கள். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களின் சேவகன். குழந்தைகளும் கூறுகின்றார்கள்: நாங்களும் சேவகர்களே. நீங்கள் ஒவ்வொரு சகோதர, சகோதரிக்கும் நன்மை செய்ய வேண்டும். தந்தை உங்களுக்கு நன்மை செய்கின்றார், பின்னர் நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்று அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமானவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுக்கின்றீர்களோ, அந்தளவுக்கு சிறந்த தூதுவராக ஆகுகின்றீர்கள். அவர்கள் மகாராத்திகள் என்றோ குதிரைப்படையினர் என்றோ அழைக்கப்படுகின்றார்கள். காலாட் படையினர் பிரஜைகளின் ஒரு பகுதி ஆகுகின்றனர். யார் செல்வந்தர்கள் ஆகுவார்கள் என்று குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இந்த ஞானம் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சேவைக்கான கருவிகள் ஆகியுள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையை சேவைக்காக கொடுத்துள்ளீர்கள் என்பதால் அதற்கேற்ப ஒரு அந்தஸ்தைப் பெறுவீர்கள். அப்படியான குழந்தைகள் எவரைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். மனிதர்கள் கரங்களையும் பாதங்களையும் கொண்டிருக்கின்றார்கள். அவைகள் கட்டப்பட்டிருக்கவில்லை. உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ளலாம். அவ்வாறாயின் உங்களை நீங்கள் ஏன் பந்தனத்தில் சிக்க விடுகின்றீர்கள்? தந்தையிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று ஏன் பிறருக்கு அமிர்த தானத்தைக் கொடுக்கக் கூடாது? பிறர் உங்களைக் கட்டி வைப்பதற்கு நீங்கள் செம்மறியாடோ, அல்லது ஆடோ அல்ல. ஆரம்பத்தில் குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு உங்களை விடுவித்துக் கொண்டீர்கள்? நீங்கள் அழுது, கூக்குரலிட்டு, அதிகளவு குழப்பம் செய்து பின்னர் அங்கே இருந்தீர்கள் நீங்கள் கூறினீர்கள் : எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை. நாங்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதா, அல்லது வேறு வேலையில் ஈடுபடுவதா? நீங்கள் பிரபுவுக்கும் அதிபதிக்கும் உரியவர்கள் என்ற ஆன்மீக போதை கொண்டவர்களாக இருந்தீர்கள்;. நீங்கள் பிரபுவிலும் அதிபதியிலும் போதை கொண்டிருப்பவர்கள். நீங்கள் பிரபுவிடமும், அதிபதியிடமும் இருந்து எதனைப் பெற்றுக்கொண்டிருக்கின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். பிரபுவும், அதிபதியுமானவரே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன, சில பெயர்கள் மிகவும் இனிமையானவையாகும். நீங்கள் இப்பொழுது பிரபுவினதும், அதிபதியினதும் மீது போதை கொண்டிருக்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு மிகவும் எளிமையான வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சதோபிரதானாகி, உலக அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதை உங்கள் புத்தியும் புரிந்துகொண்டிருக்கின்றது. இந்த அக்கறையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மூச்சிலும் நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் அவர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் வெளியே செல்லும் பொழுது, மறந்து விடுகின்றீர்கள். இங்கிருக்கும் போதை வெளியில் சென்றதும் இருப்பதில்லை. நீங்கள் அனைத்தையும் மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் மறந்து விடக்கூடாது. எவ்வாறாயினும், அது உங்கள் பாக்கியத்தில் இல்லாதிருந்தால், இங்கே இருக்கும்பொழுது நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். நூதனசாலையிலும் வெவ்வேறு கிராமங்களிலும், குழந்தைகள். சேவை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தந்தை கூறுகின்றார்: நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் விரைவாகச் சேவை செய்ய வேண்டும். எவ்வாறாயினும் நீங்கள் நாடகத்தை அவசரப்படுத்த முடியாது. தந்தை கூறுகின்றார்;: நீங்கள் தொட்டதுமே தயார் நிலையில் இருக்கக் கூடிய அப்படியான இயந்திரங்கள் இருக்க வேண்டும். தந்தை இவை யாவற்றையும் தொடர்ந்து விளங்கப்படுத்துகின்றார். மாயை சில நல்ல குழந்தைகளை அவர்களின் மூக்கிலும் காதிலும் இறுக்கிப் பிடித்துக் கொள்ளுகின்றாள். மகாவீரர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்பவர்களுக்கு மாயை பல புயல்களைக் கொண்டு வருகிறாள். அவர்கள் பின்னர் எவரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர்கள் அனைத்தையும் மறைத்துவிடுகின்றார்கள். உள்;ர அவர்களின் இதயத்தில் உண்மை இல்லை. உண்மையான இதயத்தைக் கொண்டிருப்பவர்கள் புலமைப் பரிசிலைப் பெற்றுக் கொள்வார்கள். இதயத்தில் ஏதாவது அசுரத்தன்மை இருக்குமானால், அவர்களால் தொடர முடியாது. அசுரத்தனமான இதயத்தைக் கொண்டிருப்பதனால் நீங்கள் உங்களின் படகை மூழ்கடிக்கின்றீர்கள். அனைவருக்கும் சிவபாபாவின் தேவை உள்ளது. நீங்கள் அனைத்தினதும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றீர்கள். பிரம்மாவை உருவாக்கியதும் சிவபாபாவே ஆவார். சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தேவர்களைப் போல ஆகமுடியும். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள் என்று பாபாவுக்குத் தெரியும். நீங்கள் உணர முடியாதவாறு அவள் ஒரு எலியைப் போன்று கடித்து விடுகிறாள். மாயை மிகவும் திறமை வாய்ந்த எலியைப் போன்றவள். மகாராத்திகளும் கூட மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயை தங்களை வீழ்த்தி, உவர்நீரைப் போல ஆக்கிவிட்டாள் என்பதை அவர்களே உணர்ந்திருக்க மாட்டார்கள். உவர்நீரைப் போல ஆகுவதால் தந்தையின் சேவையைச் செய்ய முடியாது போய்விடும் என நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீPங்கள் உள்ளே தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பீர்கள். சரீர உணர்வினாலேயே நீங்கள் உள்ளே எரிகின்றீர்கள். இன்னமும் ஆத்மாக்களாகிய நீங்கள் அந்த ஸ்திதியை உருவாக்கவில்லை. அந்தளவுக்கு நினைவு சக்தியில்லை. ஆகையால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயை மிகவும் திறமையானவள். நீங்கள் போர்க்களத்தில் இருக்கும் பொழுது, மாயை உங்களைத் தனியாக இருக்க விடுவதில்லை. நீங்கள் உணரமுடியாதவாறு அவள் உங்களில் அரைவாசி அல்லது முக்கால்வாசியானோரை முடித்து விடுகின்றாள். பல நல்ல புதியவர்கள் கற்பதை நிறுத்தி வீட்டில் இருந்து விடுகின்றார்கள். சிறந்த பிரபல்யமானவர்களையும் மாயை தாக்குகிறாள். அவர்கள் புரிந்துகொண்டாலும், கவனயீனமாக இருக்கின்றார்கள். அவர்கள் அற்ப விடயங்களுக்கெல்லாம் உடனடியாக உவர்நீரைப் போல ஆகிவிடுகின்றார்கள். தந்தை விளங்கப் படுத்துகின்றார்: சரீர உணர்வினாலேயே நீங்கள் உவர்நீரைப் போல ஆகுகின்றீர்கள். உங்களையே நீங்கள் ஏமாற்றுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இதுவும் நாடகத்தின் ஒரு பாகமாகும். நீங்கள் காண்பவை எல்லாம், நாடகத்தில் முன்னைய கல்பத்தில் நடந்தது போல தொடர்ந்து செல்கின்றது. அவர்களது ஸ்திதி தொடர்ந்தும் தளம்பலடைகின்றது. சில நேரங்களில் அவர்கள் மீது தீய சகுனங்கள் படிகின்றன. சில நேரங்களில் அவர்கள் நன்றாகச் சேவை செய்து, பாபாவிற்கு நல்ல செய்திகளை எழுதுகின்றார்கள். அவர்களுடைய ஸ்திதி தொடர்ந்தும் தளம்பலடைகின்றது. சிலவேளைகளில் தோல்வியும், சிலவேளைகளில் வெற்றியும் கிடைக்கின்றது. பாண்டவர்கள் சிலவேளைகளில் மாயையினால் தோற்கடிக்கப்படுகின்றார்கள், சில வேளைகளில் மாயையை வெற்றி கொள்கின்றார்கள். மிக நல்ல மகாராத்திகளுமே தளம்பலடைகின்றார்கள். சிலர் மரணித்தும் விடுகின்றார்கள். ஆகையால் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், தந்தையைத் தொடர்ந்து நினைவு செய்து சேவையும் செய்யுங்கள். நீங்கள் சேவைக்கான கருவிகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் போர்க்களத்தில் இருக்கின்றீர்கள். வெளியில் இல்லறத்தில் வசிப்பவர்கள், இங்கிருப்பவர்களைவிட முன்னேறிச் செல்ல முடியும். மாயையுடன் முழுமையான யுத்தம் இடம்பெறுகின்றது. உங்கள் பாகம் முன்னைய கல்பத்தைப் போல வினாடிக்கு, வினாடி தொடர்கின்றது. இவ்வளவு காலம் கடந்துவிட்டது என்றும், நடந்தவை அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். முழு ஞானமும் உங்கள் புத்தியிலே உள்ளது. தந்தை ஞானத்தைக் கொண்டிருப்பதைப் போன்று, இந்த தாதாவிடமும் ஞானம் இருக்க வேண்டும். பாபா பேசும்பொழுது, தாதாவும் பேசுபவராக இருக்க வேண்டும். யார் நல்லவர்கள் என்றும், சுத்தமான இதயத்தைக் கொண்டவர்கள்; என்றும் உங்களுக்குத் தெரியும். சுத்தமான இதயத்தைக் கொண்டவர்கள் பாபாவின் இதயத்தில் இடம் பிடிப்பார்கள். அவர்களிடம் உவர் நீரைப் போல ஆகுகின்ற சுபாவம் இருப்பதில்லை. அவர்கள் எப்பொழுதும் மலர்ச்சியாக இருப்பார்கள். அவர்களது மனோநிலை மாறுவதில்லை. அடிக்கடி மனோநிலை மாறுகின்ற பலர் இங்கு இருக்கின்றார்கள். கேட்கவே வேண்டாம்! மக்;கள் கூறுகின்றார்கள்: நாங்கள் தூய்மையற்றவர்கள். தூய்மையாக்குகின்ற தந்தையை வந்து தூய்மையாக்கும்படி அவர்கள் அழைத்துள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: தொடர்ந்து என்னை நினைவு செய்யுங்கள், உங்களுடைய ஆடைகள் (ஆத்மா) சுத்தமாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றாதவர்களின் ஆடைகள் (ஆத்மா); சுத்தமாகுவதில்லை. அந்த ஆத்மாக்கள் தூய்மையாகுவதில்லை. இரவு பகலாக தந்தை தொடர்ந்தும் வலியுறுத்துகின்றார் உங்களை ஆத்மாவாகக் கருதுங்கள். சரீர உணர்வுக்கு வரும் பொழுது நீங்கள் மூச்சுத் திணறுகின்றீர்கள். எந்தளவிற்கு நீங்கள் ஏறுகின்றீர்களோ, அந்தளவுக்கு சந்தோஷம் உள்ளவர்களாகி மலர்ச்சியாகவும் இருப்பீர்கள். சில குழந்தைகள் முதல் தரமானவர்கள் என்பதை தந்தை அறிந்துள்ளார்., இருந்தும் அவர்களது உள்ளார்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது, அவர்கள் உருகிக் கொண்டு இருக்கின்றார்கள். சரீர உணர்வு என்னும் நெருப்பு அவர்களை உருகச் செய்கின்றது. அவர்களது நோய் எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் அறியாது இருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: சரீர உணர்வினாலேயே இந்நோய் ஏற்படுகின்றது. ஆத்ம உணர்வுடையவர்கள் ஒருபொழுதும் நோயாளிகள் ஆகுவதில்லை. எவ்வாறாயினும் பலர் உள்ளார எரிந்து கொண்டிருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுவீர்களாக! அவர்களுக்கு ஏன் இந்த நோய் வருகின்றது என்று சிலர் கேட்கின்றார்கள்? தந்தை கூறுகின்றார்: சரீர உணர்வு எனும் நோய் அத்தகையது, கேட்கவும் வேண்டாம்! ஒருவருக்கு இந்த நோய் இருக்கின்ற பொழுது, அது ஒட்டுண்ணியைப் போன்று விட்டு அகலாது. ஸ்ரீமத்தைப் பின்பற்றாததாலும், சரீர உணர்வில் இருப்பதாலும் நீங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றீர்கள். பாபா அனைத்துச் செய்திகளையும் பெற்றுக்கொள்கின்றார். மாயை அவர்களின் மூக்கைப் பிடித்து விழச்செய்கின்றாள். அவர்களின் புத்தி முற்றாக இறந்துவிடுகின்றது. பலர் இவ்வாறாக சந்தேகத்தை வளர்த்துக் கொள்கின்றார்கள். நீங்கள் கடவுளைக் கூவி அழைக்கின்றீர்கள், வந்து கல்லுப் புத்தியுடையவர்களை தெய்வீக புத்தியுடையவர்கள் ஆக்குங்கள். இருந்தும் நீங்கள் கடவுளை எதிர்த்தால், எந்த இலக்கை அடைவீர்கள்? அவர்கள் முற்றாக வீழ்ந்து அவர்களின் புத்தி கல்லைப் போன்றதாகுகின்றது. இங்கே அமர்ந்திருக்கும் பொழுதே, குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேணடும். மாணவ வாழ்க்கையே சிறந்தது. தந்தை வினவுகிறார்: இதனை விடச் சிறந்த கல்வி வேறு ஏதும் உள்ளதா? இதுவே சிறந்தது. இது இருபத்தியொரு பிறவிகளுக்குப் பலனைத் தருகின்றது. ஆகையால் இந்தக் கல்வியில் நீங்கள் அதிகளவு கவனஞ் செலுத்த வேண்டும். சிலர் எந்தவித கவனமும் செலுத்துவதில்லை. மாயை அவர்களின் மூக்கையும், காதுகளையும் வெட்டி விடுகிறாள். தந்தையே கூறுகின்றார்: அரைக் கல்பத்துக்கு அவளுடைய இராச்சியம் நீடிக்கின்றது. அவள் அவ்வாறாக உங்களைப் பிடித்துக் கொள்கிறாள், கேட்கவும் வேண்டாம்! ஆகையால் கவனமாக இருந்து ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்யுங்கள். சிவபாபாவை நினைவு செய்யுங்கள், இல்லாவிடின் மாயை உங்கள் மூக்கையும் காதுகளையும் வெட்டி விடுவாள், அதன் பின்னர் நீங்;;கள் எதற்கும் பயனற்றவர்கள் ஆகிவிடுவீர்கள். பலரும் தாங்கள் இலக்ஷ்மி, நாராயணனின் அந்தஸ்தை அடைவோம் எனச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். அது சாத்தியமில்லை. அவர்கள் களைத்து மயங்கிவிடுகின்றார்கள். அவர்கள் மாயையினால் தோற்கடிக்கப்பட்டு குப்பையில் விழுந்து விடுகின்றார்கள். உங்கள் புத்தி பாழாகுவதைப் பார்க்கும் பொழுது, மாயை உங்களின் மூக்கில் பிடித்து உள்ளாள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நினைவு யாத்திரையில் அதிகளவு சக்தி உள்ளது. ஆத்மா அதிகளவு சந்தோஷத்தில் நிரம்புவார்;. சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறு எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஒரு கடைக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வரும் பொழுது, அங்கே வருமானம் இருக்கும். அந்த நேரத்தில் சற்றேனும் களைப்பிருக்காது. நீங்கள் பட்டினியாக இருக்க மாட்டீர்கள். நீங்கள் அளவற்ற செல்வத்தைப் பெறுவதால், அதிகளவு சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவஞ் செய்ய வேண்டும். நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்: எனது நடத்தை தெய்வீகமானதா அல்லது அசுரத்தனமானதா? இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. அகால மரணத்தின் ஓட்டப்பந்தயம் இருப்பது போன்றுள்ளது. எத்தனை விபத்துக்கள் போன்றன இடம்பெறுகின்றன என்று பாருங்கள்! மக்களின் புத்தி தமோபிரதான் ஆகிவிட்டது. மழை வேகமாகப் பெய்யும் பொழுது, அது இயற்கையின் விபத்து எனப்படுகின்றது. மரணமும் வரப்போகின்றது. இப்பொழுது அணு குண்டு யுத்தம் விரைவில் ஆரம்பிக்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் அத்தகைய பயங்கரமான வேலைகளைச் செய்கின்றார்கள். அவர்கள் அவ்வாறாகத் தூண்டப்பட்டால் யுத்தம் ஆரம்பமாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பிரபுவுக்கும் அதிபதிக்கும் உரியவர்கள் என்ற போதையில் நிலைத்திருந்து, உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். எந்த பந்தனத்திலும் கட்டுண்டிருக்காதீர்கள். மாயையாகிய எலியையிட்டு மிக எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மனதில் எவ்வித அசுர எண்ணங்களும் இருக்கக் கூடாது.

2. தந்தையிடமிருநது அளவற்ற செல்வத்தைப் (ஞானம்) பெறுகின்ற சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். உங்கள் புத்தியில் சந்தேகம் கொண்டிருந்து, அதனால் இந்த வருமானத்தை ஈட்டுவதில் களைப்படைந்து விடாதீர்கள். மாணவ வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும், ஆகையால் இக்கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள்.


ஆசீர்வாதம்:
நினைவின் சொரூபமாகுவதினால் சதா திருப்தியான ஆத்மாவாகி உங்கள் பேறுகளின் பொக்கிஷங்களை பயன்படுத்துவீர்களாக.

சங்கமயுகத்தின் விசேடமான ஆசீர்வாதம் திருப்தியாகும். திருப்தியின் விதை சகல பேறுகளுமாகும். திருப்தியின்மையின் விதை பௌதீக அல்லது சூட்சும பேறுகளின் குறைபாடாகும். பிராமணர்களின் பொக்கிஷகளஞ்சியத்தில் எந்த குறைபாடுகளும் இல்லை என்று பிராமணர்களை பற்றி நினைவுகூரப்படுகின்றது. எல்லாக் குழந்தைகளும் அந்த ஒருவரிடமிருந்து அளவற்ற பொக்கிஷங்களை பெறுகின்றனர். ஒவ்வொரு கணமும் நீங்கள் அடைந்த பொக்கிஷங்களை பயன்படுத்துங்கள், அதாவது நினைவின் சொரூபமாகுங்கள். எல்லையற்ற பேறுகளை எல்லைக்குட்பட்டதாக மாற்றாதீர்கள். நீங்கள் எப்போதும் திருப்தியில் நிலைத்திருப்பீர்கள்.

சுலோகம்:
நம்பிக்கை உள்ள இடத்தில் வெற்றியின் பாக்கிய ரேகை சதா நெற்றியில் இருக்கும்.