14.04.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     07.05.84     Om Shanti     Madhuban


சமநிலையைப் பேணுவதன் மூலம் ஆசீர்வாதங்களைப் பெறுதல்.


இன்று, அன்புக்கடலான தந்தை, இந்த சந்தோஷமான அன்பு ஒன்றுகூடலுக்குள், அன்பின் சொரூபங்களாகவும் நினைவின் சொரூபங்களாகவும் இருக்கும் குழந்தைகளின் அன்பினதும் நினைவினதும் பிரதிபலனை வழங்குவதற்காக வந்துள்ளார். இந்த ஆன்மீக அன்பின் சந்தோஷமான ஒன்றுகூடல், ஆன்மீக உறவுமுறைகளின் சந்திப்பு நிகழும் இடமாகும். கல்பம் முழுவதிலும் இந்த வேளை மட்டுமே இதை அனுபவம் செய்ய முடியும். இந்த ஒரு பிறவியைத் தவிர, வேறெந்த வேளையிலும், உங்களால் ஆன்மீகத் தந்தையிடமிருந்து இந்த ஆன்மீக அன்பைப் பெற முடியாது. இந்த ஆன்மீக அன்பானது ஆத்மாக்களுக்கு உண்மையான சௌகரியத்தைக் கொடுக்கிறது. இது அவர்களுக்கு உண்மையான பாதையைக் காட்டுகிறது. இது அவர்களை சகல நிஜப் பேறுகளையும் பெறச் செய்கிறது. இந்தப் பௌதீகமான பூமியில், இந்தப் பிறவியில், இவ்வாறு இலகுவாக ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்குமான நேருக்கு நேரான ஆன்மீகச் சந்திப்பு நிகழும் என நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? தந்தை அதிமேலானவர், அவர் மிகவும் பிரகாசமானவர், அவர் அனைவரிலும் அதிமேலானவர் எனத் தந்தையைப் பற்றி நீங்கள் அறிந்துள்ளதைப் போன்று, அவரைச் சந்திக்கும் வழிமுறையும் கஷ்டமானதாகவும் அதிகளவு பயிற்சி தேவைப்படுவதாகவும் இருக்கும் என நீங்கள் எண்ணியதால், மனவிரக்திக்கு உள்ளாகினீர்கள். எவ்வாறாயினும், மனவிரக்திக்குள்ளான குழந்தைகளுக்குத் தந்தை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மனவிரக்தி அடைந்த குழந்தைகளை சக்திசாலிகள் ஆக்கியுள்ளார். ‘எப்போது நாம் அவரைச் சந்திப்போம்?’ என அவர்கள் கேட்டார்கள். அவரைச் சந்திக்கும் அனுபவத்தை இப்போதே அவர்கள் பெறும்படி அவர் செய்துள்ளார். தனது சொத்துக்கள் அனைத்தினதும் உரிமையை அவர்களுக்கு அவர் வழங்கியுள்ளார். இப்போது, உரிமையுள்ள ஆத்மாக்களான நீங்கள் உங்களின் உரிமைகளை அறிவீர்கள், அல்லவா? அவற்றை நீங்கள் மிக நன்றாக அறிவீர்களா? அல்லது இன்னமும் அவற்றை நீங்கள் அறிய வேண்டியுள்ளதா?

இன்று, குழந்தைகளைப் பார்க்கும்போது, பாபாவும் தாதாவும் இதயபூர்வமாக கலந்துரையாடினார்கள். குழந்தைகள் அனைவருக்கும் நிலையான நம்பிக்கை இருக்கிறது. அவர்களுக்கு அன்பும் இருக்கிறது. நினைவிற்கான அன்பும் சேவைக்கான உற்சாகமும் அவர்களிடம் உள்ளன. அவர்களின் இலக்கும் அதிமேன்மையானது. அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என அவர்களிடம் நீங்கள் கேட்டால், அவர்கள் அனைவரும் இலக்ஷ்மியாக அல்லது நாராயணனாக ஆகப்போவதாகவே கூறுவார்கள். அவர்களில் எவரும் இராமர் அல்லது சீதை ஆவேன் எனக் கூற மாட்டார்கள். அவர்களின் இதயங்களில், அவர்கள் 16000 மாலையின் பாகம் ஆகுவதற்கு விரும்புவதில்லை. அனைவரும் 108 மாலையின் மணிகள் ஆகும் உற்சாகத்துடனேயே இருக்கிறார்கள். சேவை செய்தல் என்றும் கற்றல் என்றும் வரும்போது, எவரும் தன்னை வேறு எவரையும் விடக் குறைந்தவராகக் கருதுவதில்லை. எவ்வாறாயினும், சதா ஸ்திரமான ஸ்திதியை அனுபவம் செய்தல், சதா பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்தல், சதா ஒரேயொருவரில் மூழ்கியிருத்தல், சதா உங்களின் சரீரத்தில் இருந்தும் சரீரத்தின் தற்காலிக பேறுகளில் இருந்தும் பற்றற்று இருத்தல், எப்போதும் அழியும் விடயங்களின் உணர்வுகள் அனைத்தையும் மறத்தல் போன்றவற்றில் நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். இது ஏன்? இதற்கான விசேடமான காரணத்தை பாப்தாதா கண்டார். அவர் என்ன காரணத்தைக் கண்டார்? ஒரேயொரு வார்த்தையே இதற்கான காரணம் ஆகும்.

நீங்கள் அனைத்தையும் அறிவீர்கள். அனைவரும் அனைத்தையும் பெற்றுள்ளார்கள். உங்களுக்கு வழிமுறையின் ஞானம் உள்ளது. வெற்றியின் அறிவும் உள்ளது. செயல், அதன் பலன் என்ற இரண்டின் அறிவும் உள்ளது. ஆனால், சதா சமநிலையைப் பேணுவது எவ்வாறு என்பதே உங்களுக்குத் தெரியவில்லை. இந்த சமநிலை இல்லாதிருப்பதே, நீங்கள் சரியான வேளையில் இறைகோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதில் இருந்து உங்களைத் தடை செய்கிறது. இதனாலேயே, நீங்கள் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு செயலிலும் பாப்தாதாவிடமிருந்தும் சகல மேன்மையான ஆத்மாக்களிடமிருந்தும் மேன்மையான ஆசீர்வாதங்களைப் பெறுவதில்லை. நீங்கள் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் இலகுவாக வெற்றி பெறுவதில்லை. எதை நீங்கள் சமநிலையில் வைத்திருக்க மறக்கிறீர்கள்? ஒன்று, நினைவிற்கும் சேவைக்கும் இடையிலான சமநிலை. நினைவில் இருந்தவண்ணம் சேவை செய்வதே, நினைவிற்கும் சேவைக்கும் இடையிலான சமநிலை ஆகும். எவ்வாறாயினும், நீங்கள் சேவையில் மும்முரமாகுகிறீர்கள். பின்னர், நேரத்தைப் பொறுத்து நினைவில் இருக்கிறீர்கள். உங்களுக்கு நேரம் இருந்தால், பாபாவை நினைக்கிறீர்கள். இல்லாவிடின், சேவையை நினைவு என்று கருதுகிறீர்கள். இது சமநிலை இல்லாத நிலை என்று சொல்லப்படுகிறது. சேவையே நினைவு என்று சொல்வது ஒருவிடயம். சேவையில் நினைவு உள்ளது என்று சொல்வது வேறொரு விடயம். வழிமுறையில் ஏற்படும் இந்த சிறியதொரு வேறுபாடே, பெறுபேற்றையும் மாற்றுகிறது. உங்களின் நினைவின் சதவீதம் எவ்வளவு எனப் பெறுபேற்றை உங்களிடம் கேட்டதும், நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? நீங்கள் சேவையில் மிகவும் மும்முரமாக இருந்ததால், வேறு எதையும் நினைக்கவில்லை என்று கூறுகிறீர்கள். வேறு எதற்கும் உங்களுக்கு நேரம் இருக்கவில்லை. அல்லது, ‘சேவை தந்தையினுடையது. எனவே, நான் தந்தையையே நினைவு செய்தேன்’ என நீங்கள் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், அந்த ஆழ்ந்த அன்புடன் நீங்கள் சேவையில் கழித்த நேரம் எதுவாயினும், அந்த வேளையில் சக்திவாய்ந்த நினைவின் அனுபவமும் உங்களுக்கு ஏற்பட்டதா? சேவையில் சுய மரியாதை இருக்கும் அளவிற்கு, பணிவான உணர்வும் உங்களுக்கு இருந்ததா? இந்தச் சமநிலை காணப்பட்டதா? நீங்கள் மிக நன்றாக மகத்தான சேவை செய்தீர்கள் என நினைப்பது நல்ல சுயமரியாதையே. ஆனால், சுய மரியாதை இருக்கும் அளவிற்குப் பணிவும் இருக்க வேண்டும். கரவன்ஹார் தந்தை கருவியாகி, அந்தச் சேவையை உங்களின் மூலமாகச் செய்வித்தார். இதுவே பணிவான கருவியாக இருத்தல் எனப்படுகிறது. நீங்கள் கருவி ஆகினீர்கள். மிக நல்ல சேவை இடம்பெற்றது. விரிவாக்கம் இடம்பெற்றது. நீங்கள் வெற்றி சொரூபம் ஆகினீர்கள். இந்த சுயமரியாதை நல்லதே. எவ்வாறாயினும், சுயமரியாதை மட்டும் இருக்கக்கூடாது. அது பணிவுடன் சமநிலையில் இருக்க வேண்டும். இந்தச் சமநிலையானது, உங்களை இலகுவாகவும் எப்போதும் வெற்றி சொரூபம் ஆக்கும். சுயமரியாதையும் அத்தியாவசியமானதே. சரீரத்தின் அகங்காரம் இருக்கக்கூடாது. ஆனால் சுயமரியாதை இருக்க வேண்டும். எவ்வாறாயினும், சுயமரியாதைக்கும் பணிவிற்கும் இடையில் சமநிலை இல்லாவிட்டால், சுயமரியாதை தன்னைப் பற்றிய அகங்காரமாக மாறிவிடும். சேவை இடம்பெறும்போதும் வெற்றி ஏற்படும் போதும் ‘ஆஹா பாபா! நீங்கள் என்னைக் கருவி ஆக்கினீர்கள். நான் அதைச் செய்யவில்லை’ என்ற சந்தோஷம் இருக்க வேண்டும். ‘நான்’ என்ற உணர்வானது, சுயமரியாதையை சுயஅகங்காரமாக மாற்றிவிடுகிறது. நினைவிற்கும் சேவைக்கும் இடையே சமநிலையைப் பேணுபவர்கள், சுயமரியாதைக்கும் பணிவிற்கும் இடையே சமநிலையைப் பேணுவார்கள். எனவே, இந்தச் சமநிலை எதனால் தளம்பல் அடைகிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?

அதேபோன்று, நீங்கள் பொறுப்புக் கிரீடத்தை அணிந்திருப்பதனால், ஒவ்வொரு பணியிலும் முழுமையான பொறுப்பையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அது லௌகீக அல்லது அலௌகீகச் செயலாக இருந்தாலும், அல்லது இறைசேவைக்குரிய செயலாக இருந்தாலும், இரண்டு செயல்களிலும் அதற்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றும்போது, நீங்கள் அன்பாகவும் அதேவேளை பற்றற்றவராகவும் இருக்க வேண்டும். இந்தச் சமநிலை காணப்பட வேண்டும். ஒவ்வொரு பொறுப்பையும் நிறைவேற்றுதல் அவசியமாகும். ஆனால், எந்தளவிற்கு அதிக பொறுப்பு உங்களிடம் உள்ளதோ, அந்தளவிற்கு நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் இருக்க வேண்டும். உங்களின் பொறுப்பை நிறைவேற்றும்போது, அதன் எந்தவிதச் சுமையில் இருந்தும் பற்றற்றவராக இருங்கள். இதுவே தந்தையிடம் அன்பாக இருத்தல் எனப்படுகிறது. ‘நான் என்ன செய்வது? அதிகளவு பொறுப்பு உள்ளது! நான் இதைச் செய்வதா வேண்டாமா? நான் என்ன செய்வது? இதையும் அத்துடன் அதையும் செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது!’ எனப் பயப்படாதீர்கள். இவ்வாறு அனுபவம் செய்வதெனில் ஒரு சுமையைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, அது இலேசாகவும் ஒளியாகவும் இருப்பது அல்ல. இலேசாகவும் ஒளியாகவும் இருத்தல் என்றால் பற்றற்றவராக இருத்தல் என்று அர்த்தம். எந்தவொரு பொறுப்பிலும் குழப்பம் என்ற எந்தவிதச் சுமையும் இருக்கக்கூடாது. இதுவே, அன்பாகவும் பற்றற்றவராகவும் இருப்பதில் சமநிலையைப் பேணுபவர் எனப்படும்.

இரண்டாவதாக, முயற்சியில் நீங்கள் தொடர்ந்து முன்னேறும்போது, நீங்கள் செய்யும் முயற்சியினூடாகப் பேறுகளை அனுபவம் செய்யும்போது, அந்தப் பேற்றினால் நீங்கள் மிகவும் சந்தோஷமாகவும் போதையுடனும் இருக்கிறீர்கள். அவ்வளவே! நான் அனைத்தையும் பெற்றுவிட்டேன். நான் அனைத்தையும் அனுபவம் செய்துவிட்டேன். நான் ஒரு மகாவீர் ஆகிவிட்டேன். நான் ஒரு மகாராத்தி ஆகிவிட்டேன். நான் ஞானியாகவும் யோகியாகவும் ஆகிவிட்டேன். நான் ஒரு சேவையாளர் ஆகிவிட்டேன். இந்தப் பேறு மிகவும் நல்லது. ஆனால், இந்தப் பேற்றின் போதையில் சிலவேளைகளில் கவனக்குறைவும் காணப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? நீங்கள் ஞானியாகவும் யோகியாகவும் சேவையாளராகவும் ஆகினீர்கள். ஆனால், ஒவ்வொரு செயலிலும் நீங்கள் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்தீர்களா? நீங்கள் உயிர்வாழும் வரைக்கும், ஒவ்வோர் அடியிலும் பறக்கும் ஸ்திதியில் இருக்க வேண்டும். இந்த இலக்கைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இன்று செய்தவற்றில் ஏதாவது புதுமை காணப்பட்டதா? அல்லது, இப்போது முழுமையின் எல்லையை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் முயற்சி செய்யும்போது, பேற்றின் போதையும் சந்தோஷமும் உங்களுக்கு உள்ளது. ஆனால், ஒவ்வோர் அடியிலும் பறக்கும் ஸ்திதியை அல்லது முன்னேற்றத்தை அனுபவம் செய்வதும் அத்தியாவசியமாகும். இந்தச் சமநிலை இல்லாவிட்டால், கவனக்குறைவானது ஆசீர்வாதங்களை அனுபவம் செய்வதற்கு உங்களை அனுமதிக்காது. ஆகவே, உங்களின் முயற்சி செய்யும் வாழ்க்கையில், நீங்கள் எந்தளவைப் பெற்றுவிட்டீர்கள் என்ற போதையும் இருக்க வேண்டும். அதேவேளை, ஒவ்வோர் அடியிலும் முன்னேற்றமும் இருக்க வேண்டும். இதுவே சமநிலை என்று அழைக்கப்படும். எப்போதும் இந்தச் சமநிலை காணப்பட வேண்டும். உங்களுக்கு அனைத்தும் தெரியும், நீங்கள் அனுபவசாலி ஆகிவிட்டீர்கள், நீங்கள் மிக நன்றாக முன்னேறுகிறீர்கள், நல்லவர் ஆகிவிட்டீர்கள் என்று நினைக்காதீர்கள். இது மிக நல்லதே. ஆனால், நீங்கள் இன்னமும் முன்னேற வேண்டியுள்ளது. விசேடமான செயல்களைச் செய்து, ஆத்மாக்கள் அனைவருக்கும் உதாரணம் ஆகுங்கள். இதை மறக்காதீர்கள். எந்த விடயங்களில் சமநிலையைப் பேண வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இந்தச் சமநிலையினூடாக, நீங்கள் இயல்பாகவே தொடர்ந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். எனவே, ஏன் வரிசைக்கிரமம் ஏற்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சிலர் ஏதாவதொன்றில் சமநிலையை இட்டுக் கவனக்குறைவானவர்கள் ஆகுகிறார்கள். ஏனையோர், வேறொன்றில் சமநிலையையிட்டுக் கவனக்குறைவானவர்கள் ஆகுகிறார்கள்.

பம்பாய் வாசிகளே, நீங்கள் கவனக்குறைவாக ஆகுவதில்லை, அல்லவா? நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமநிலையைப் பேணுபவர்கள், அல்லவா? நீங்கள் சமநிலையைப் பேணும் கலையில் திறமை வாய்ந்தவர்கள், அல்லவா? சமநிலை பேணுதலும் ஒரு கலையே. நீங்கள் இந்தக் கலையில் நிபுணர்கள் அல்லவா?பம்பாய் செல்வம் நிறைந்த பூமி என்று அழைக்கப்படுகிறது. எனவே, நீங்களும் உங்களின் சமநிலையைப் பேணும் செல்வத்தாலும் ஆசீர்வாதங்களின் செல்வத்தாலும் நிறைந்திருப்பவர்கள், அல்லவா? நார்தேசவரின் ஆசீர்வாதம் உங்களுக்கு உள்ளது. பம்பாயைச் சேர்ந்தவர்கள் என்ன சிறப்பியல்பை வெளிப்படுத்துவீர்கள்? பம்பாயில் பல கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். எனவே, அந்த ஆத்மாக்களுக்குக் குறிப்பாக அழியாத, ஆன்மீகக் கோடீஸ்வரராகவும் சகல பொக்கிஷங்களின் சுரங்கங்களின் அதிபதியாகவும் இருத்தல் என்றால் என்ன என்ற அனுபவத்தை பம்பாயைச் சேர்ந்தவர்கள் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுங்கள். அவர்கள் அழிகின்ற செல்வத்தின் அதிபதிகள். இந்த அழியாத பொக்கிஷங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களுக்குக் கூறி, அவர்களை அழியாத செல்வம் நிறைந்தவர்கள் ஆக்குங்கள். இந்தப் பொக்கிஷங்களே மேன்மையான, அழியாத பொக்கிஷங்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். நீங்கள் இத்தகைய சேவை செய்கிறீர்கள், அல்லவா? அந்தச் செல்வத்தை உடையவர்களின் கண்களில், நீங்கள் அழியாத செல்வத்தை உடைய மேன்மையான ஆத்மாக்கள் என்ற அனுபவம் ஏற்பட வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? அவர்களின் பாகங்களில் இது இல்லை! என நினைக்காதீர்கள். இறுதியில், அவர்களின் பாகங்களும் விழித்தெழச் செய்வதாகவே இருக்கும். அவர்கள் உங்களுடன் உறவுமுறையில் வரமாட்டார்கள். ஆனால் உங்களுடன் தொடர்பில் இருப்பார்கள். எனவே, இத்தகைய ஆத்மாக்களை விழித்தெழச் செய்வதற்கான காலம் இப்போது வந்துவிட்டது. ஆகவே, அவர்களை விழித்தெழச் செய்யுங்கள். மிக நன்றாக அவர்களை விழித்தெழச் செய்யுங்கள். ஏனெனில், அவர்கள் தமது செல்வத்தின் போதை என்ற தூக்கத்தில் நித்திரை செய்கிறார்கள். போதையுடன் இருப்பவர்களை நீங்கள் மீண்டும் மீண்டும் விழித்தெழச் செய்ய வேண்டும். ஒரு தடவை விழித்தெழச் செய்வதனால் அவர்கள் விழித்தெழப் போவதில்லை. எனவே, இப்போது, போதையென்ற தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஆத்மாக்களுக்கு அழியாத செல்வத்தின் அனுபவத்தை அறிமுகப்படுத்துங்கள். உங்களுக்குப் புரிகிறதா? பம்பாயைச் சேர்ந்த நீங்கள், மாயையை வென்றவர்கள், அல்லவா? நீங்கள் மாயையைக் கடலில் எறிந்துவிட்டீர்கள், அல்லவா? அவளை நீங்கள் கடலின் ஆழத்திற்குள் எறிந்துவிட்டீர்களா? அல்லது அவள் இன்னமும் மேற்பரப்பிலேயே இருக்கிறாளா? ஏதாவதொன்று இன்னமும் மேற்பரப்பிலேயே இருந்தால், அலைகள் திரும்பவும் அதைக் கரையில் கொண்டு வந்துவிடும். நீங்கள் எதையாவது கடலின் ஆழத்திற்கு எறிந்தால், அது பலியாகிவிடும். எனவே, மாயை கரைக்குத் திரும்பவும் வருகிறாளா? பம்பாய்வாசிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உதாரணங்கள் ஆகவேண்டும். ஒவ்வொரு சிறப்பியல்பிலும் உதாரணம் ஆகுங்கள். மக்கள் தொலைவில் இருந்தும் பம்பாயின் அழகைக் காண்பதற்காக வருகிறார்கள். அதேபோன்று, உங்களைப் பார்ப்பதற்கும் அவர்கள் தொலைவில் இருந்து வருவார்கள். ஒவ்வொரு நற்குணத்தினதும் நடைமுறை ரூபத்தின் உதாரணம் ஆகுங்கள். நீங்கள் எளிமையான வாழ்க்கையைக் காணவிரும்பினால், இந்த நிலையத்திற்குச் சென்று, இந்தக் குடும்பத்தைப் பாருங்கள். நீங்கள் சகிப்புத்தன்மையைக் காணவிரும்பினால், இந்த நிலையத்திற்குச் சென்று, இந்தக் குடும்பத்தைப் பாருங்கள். நீங்கள் சமநிலையைக் காணவிரும்பினால், இந்த விசேடமான ஆத்மாக்களைப் பாருங்கள். நீங்களே இத்தகைய அற்புதங்களைச் செய்பவர்கள், அல்லவா? பம்பாயைச் சேர்ந்தவர்கள் பிரதிபலனை இரட்டிப்பாகக் கொடுக்க வேண்டும். ஒன்று, நீங்கள் ஜகதம்பா மா விடமிருந்து பெற்ற பராமரிப்பு. மற்றையது, தந்தை பிரம்மாவிடமிருந்து நீங்கள் பெற்ற விசேடமான பராமரிப்பு. பம்பாயைச் சேர்ந்தவர்கள் ஜகதாம்பா மாவிடமிருந்து விசேடமான பராமரிப்பைப் பெற்றுள்ளார்கள். எனவே, பம்பாய் அந்தளவினைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், அல்லவா? ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் ஆத்மாவினூடாகவும் தந்தையினதும் தாயினதும் விசேடமான ஆத்மாக்களினதும் சிறப்பியல்பு வெளிப்பட வேண்டும். இதுவே பிரதிபலனை வழங்குதல் எனப்படுகிறது. அச்சா. நல்வரவுகள்! தந்தையின் வீட்டிற்கு, உங்களின் வீட்டிற்கு, நல்வரவுகள்!

தந்தை எப்போதும் குழந்தைகளைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொரு குழந்தையும் உலகின் தீபம் ஆவார். நீங்கள் குலதீபங்கள் மட்டுமல்ல. ஆனால் உலகின் தீபங்கள் ஆவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உலக நன்மைக்கான கருவிகள் ஆகியுள்ளீர்கள். எனவே நீங்கள் உலகின் தீபங்கள் அல்லவா? உண்மையில், முழு உலகமும் எல்லையற்ற குலமே. அவ்வாறாயின், உங்களை எல்லையற்ற குல தீபங்கள் என்றும் அழைக்க முடியும். எவ்வாறாயினும், நீங்கள் எல்லைக்குட்பட்ட குலங்களின் தீபங்கள் அல்ல. உங்களை எல்லையற்ற குலதீபங்கள் அல்லது உலகின் தீபங்கள் என்று அழைக்க முடியும். நீங்கள் அத்தகையவர்கள், அல்லவா? நீங்கள் சதா ஏற்றப்பட்ட தீபங்கள், அல்லவா? நீங்கள் மின்னி மின்னி ஒளிர்விடும் தீபங்கள் இல்லையல்லவா? மின்னி மின்னி ஒளிர்விடும் ஒளியைப் பார்க்கும்போது, அது உங்களின் கண்களைப் பாதிக்கும். நீங்கள் அதை விரும்புவதில்லை, அல்லவா? எனவே, நீங்கள் சதா ஒளிர்விடும் தீபங்கள் அல்லவா? இத்தகைய தீபங்களைக் காண்பதில் பாப்தாதா எப்போதும் சந்தோஷப்படுகிறார். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

சதா ஒவ்வொரு செயலிலும் சமநிலையைப் பேணுபவர்களுக்கும், சதா தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுபவர்களுக்கும், ஒவ்வோர் அடியிலும் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்பவர்களுக்கும், சதா அன்புக்கடலில் அமிழ்ந்திருப்பவர்களுக்கும், சமமான ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், பலமில்லியன் மடங்கு மேன்மையான, பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா தாதிகளிடம் பேசுகிறார்:
நீங்கள் அனைவரும் கிரீடத்திலுள்ள இரத்தினங்கள், அல்லவா? உங்களிடம் அனைத்திலும் மிகப்பெரிய கிரீடம் இருக்கும் அளவிற்கு நீங்கள் எப்போதும் அனைவரிலும் இலேசானவர்களாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும், உங்களால் அணிந்திருக்கக்கூடிய கிரீடத்தை நீங்கள் அணிந்துள்ளீர்கள். இரத்தினங்கள் பதித்த கிரீடத்தை நேரத்திற்கேற்ப நீங்கள் அணிந்துள்ளீர்கள். பின்னர் கழற்றி வைக்கிறீர்கள். ஆனால் இந்தக் கிரீடத்தையோ கழற்ற வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தூங்கும்போதும் கிரீடத்தை அணிந்துள்ளீர்கள். விழித்திருக்கும்போதும், உங்களின் கிரீடத்தை அணிந்துள்ளீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? கிரீடம் இலேசாக உள்ளதல்லவா? இது பாரமாக இல்லையல்லவா? பெயர் மகத்துவமானது. அதன் நிறையும் இலேசானது. இந்தக் கிரீடம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இது சந்தோஷத்தைக் கொடுக்கும் கிரீடம் ஆகும். நீங்கள் பிறவி பிறவியாகக் கிரீடத்தைப் பெறும் வகையில் தந்தை உங்களுக்குக் கிரீடம் சூட்டுகிறார். கிரீடம் அணிந்திருக்கும் இத்தகைய குழந்தைகளைக் காணும்போது, பாப்தாதா களிப்படைகிறார். பாப்தாதா இப்போது முடிசூட்டு விழாவைக் கொண்டாடியுள்ளார். இந்த சம்பிரதாயத்தை எல்லா வேளைக்குமாக உருவாக்கியுள்ளார். முடிசூட்டுவிழா சத்தியயுகத்திலும் கொண்டாடப்படும். சங்கமயுகத்தில் கொண்டாடப்படும் முடிசூட்டுவிழாவின் ஞாபகார்த்தம், அநாதியாகத் தொடரும். பாபா சூட்சும வதனத்தில் உள்ள சேவையாளர். ஏனெனில் அவர் பௌதீக உலகில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார், அல்லவா? தந்தையே பௌதீக உலகில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் குழந்தைகளுக்குக் கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் கொடுத்துவிட்டு சூட்சும வதனத்திற்குச் சென்றுவிட்டார். எனவே, அதுவே முடிசூட்டுவிழா நாள் அல்லவா? இந்த நாடகம் தனித்துவமானது, அப்படியல்லவா? பாபா செல்வதற்கு முன்னர் உங்களுக்குச் சொல்லியிருந்தால், அது அற்புதமான நாடகமாக இருந்திருக்காது. இதை உங்களால் புகைப்படம் கூட எடுக்க முடியாத அளவிற்கு அது தனித்துவமான நாடகம் ஆகும். தனித்துவமான தந்தைக்கு தனித்துவமான பாகம் உள்ளது. உங்களால் உங்களின் புத்தியின் எண்ணங்களாலேனும் புகைப்படம் எடுக்க முடியாது. இது தனித்துவமானது, ரூபம் அற்றது எனப்படுகிறது. இதனாலேயே, இந்த முடிசூட்டுவிழாவும் தனித்துவமானது. பாப்தாதா எப்போதும் மகாவீர் குழந்தைகளை அவர்களின் கிரீடம் அணிந்த ரூபத்தில், அவர்களின் முடிசூட்டுவிழாவில் கிரீடம் அணியப் போகின்றவர்களாகவே பார்க்கிறார். அவரின் சகவாசத்தைக் கொடுத்தல் என்று வரும்போது, பாப்தாதா தன்னை மறைத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவர் பௌதீக உலகில் இருந்து சூட்சும உலகிற்கு மாற்றிவிட்டார். ஒன்றாக இருந்து, ஒன்றாகத் திரும்பிச் செல்லுதல் என்ற சத்தியம் எல்லா வேளைக்கும் உரியது. இந்தச் சத்தியத்தை ஒருபோதும் மீற முடியாது. இதனாலேயே, தந்தை பிரம்மா இன்னமும் உங்களுக்காகக் காத்திருக்கிறார். இல்லாவிடின், அவர் கர்மாதீத் அடைந்திருப்பதனால், அவரால் அங்கு செல்ல முடியும். அவருக்கு எந்தவிதமான பந்தனமும் இல்லையல்லவா? எவ்வாறாயினும், அன்பு பந்தனம் உள்ளது. இந்த அன்பு பந்தனத்தினால், உங்களுடன் திரும்பிச் செல்கின்ற தனது சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக, தந்தை உங்களுக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. அவர் சகவாசத்திற்கான தனது பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது. உங்களுடன் சேர்ந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்லவும் வேண்டியுள்ளது. நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? அச்சா. ஒவ்வொருவரும் விசேடமானவர்கள். பாபா ஒவ்வொருவரின் சிறப்பியல்புகளைப் பற்றியும் பேசினால், பல மாலைகள் உருவாக்கப்படும். இதனாலேயே, அவர் அவற்றைத் தனது இதயத்திலேயே வைத்திருக்கிறார். அவர் அவற்றைப் பற்றிப் பேசுவதில்லை. அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் மற்றவர்களைக் குழப்பும் வீணான வார்த்தைகளில் இருந்து விடுபட்டுள்ள இலேசான, ஒளியான அவ்யக்த தேவதை ஆகுவீர்களாக.

அவ்யக்த தேவதை ஆகுவதற்கு, எவரும் விரும்பாத வீணான வார்த்தைகளைப் பேசுவதை எல்லா வேளைக்கும் முடித்துவிடுங்கள். ஒரு சூழ்நிலை சில வார்த்தைகளுக்கு உரியதாக இருக்கக்கூடும். ஆனால், அதைப் பற்றித் தொடர்ந்து பேசி அந்தச் சூழ்நிலையைப் பெரிதாக்குவது வீணானதே. நான்கு வார்த்தைகளால் பெறக்கூடியதைப் பற்றி 12 அல்லது 15 வார்த்தைகளைப் பேசாதீர்கள். குறைவாகப் பேசுங்கள். மெதுவாகப் பேசுங்கள்… இந்த சுலோகத்தை உங்களின் கழுத்தில் மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். வீணான அல்லது குழப்பம் தரும் வார்த்தைகளைப் பேசுவதில் இருந்து விடுபடுங்கள். நீங்கள் ஒரு அவ்யக்த தேவதை ஆகுவதற்கான உதவியைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
அன்பினால் தங்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பவர்களுக்கு வெற்றி அவர்களின் கழுத்து மாலை ஆகும்.