25.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ‘மன்மனாபவ’ என்பதே மாயையைக் கட்டுப்படுத்தும் மந்திரமாகும். சகல சிறப்பியல்புகளும் இம்மந்திரத்தினுள் அமிழ்ந்துள்ளன. இம்மந்திரம் உங்களைத் தூய்மையாக்குகின்றது.
கேள்வி:
ஆத்மாக்களின் பாதுகாப்பிற்கான, முதற்தரமான வழிமுறை என்ன? அது எவ்வாறு?
பதில்:
நினைவு யாத்திரையே பாதுகாப்பிற்கான முதற்தரமான வழிமுறையாகும், ஏனெனில், இந்நினைவின் மூலமே உங்கள் நடத்தை சீர்திருத்தப்படுவதுடன், நீங்கள் மாயையையும் வெற்றிகொள்கின்றீர்கள். நினைவின் மூலம் உங்கள் தூய்மையற்ற பௌதீக அங்கங்கள் சாந்தமடைகின்றன. நினைவைக் கொண்டிருப்பதாலேயே நீங்கள் சக்தியைப் பெறுகின்றீர்கள். ஞான வாளில் நினைவின் சக்தி இருக்க வேண்டும். நினைவின் மூலமாக மாத்திரமே நீங்கள் இனிமையானவராகவும், சதோபிரதானாகவும் ஆகுவதுடன், எவரையும் குழப்பவும் மாட்டீர்கள். எனவே, நினைவு யாத்திரையில் பலவீனமடையாதீர்கள். நீங்கள் எந்தளவிற்கு நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள் என உங்களையே கேட்டுப் பாருங்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகத் தினமும் எச்சரிக்கப்பட வேண்டும். எந்த எச்சரிக்கை? முதலில் பாதுகாப்பு. உங்களுடைய பாதுகாப்பு எது? நினைவு யாத்திரை மூலமே நீங்கள் மிக மிகப் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள். இதுவே குழந்தைகளாகிய உங்களுக்குரிய பிரதான விடயம். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: குழந்தைகளாகிய நீங்கள் எந்தளவிற்கு நினைவு யாத்திரையில் ஈடுபட்டிருக்கின்றீர்களோ, அந்தளவிற்குச் சந்தோஷத்தைக் கொண்டிருப்பதுடன், மிகச்சிறந்த பண்புகளையும் கொண்டிருப்பீர்கள், ஏனெனில், நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது நடத்தையையும் சீர்திருத்த வேண்டும். உங்களையே சோதியுங்கள்: எனது நடத்தை மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிப்பதாக உள்ளதா? நான் எவ்விதமான சரீர உணர்வையேனும் கொண்டிருக்கின்றேனா? இதில் மிகக் கவனமாக உங்களைச் சோதியுங்கள். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் கற்று, பின்னர் பிறருக்கும் கற்பிக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார்; ஏனைய அனைவரும் சரீரதாரிகள். முழு உலகமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒரேயொரு தந்தை மாத்திரமே சரீரமற்றவர். நீங்களும் சரீரமற்றவர்கள் ஆகவேண்டும் என அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். நான் உங்களைச் சரீரமற்றவர்கள் ஆக்குவதற்காக வந்துள்ளேன். தூய்மையாகிய பின்னர் மாத்திரமே நீங்கள் அங்கு திரும்பிச் செல்வீர்கள். அவர் அழுக்கானவர்களை அங்கு திரும்ப அழைத்துச் செல்ல மாட்டார். அதனாலேயே அவர் முதலில் இம்மந்திரத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். இதுவே மாயையைக் கட்டுப்படுத்துவதற்கான மந்திரம். நீங்கள் தூய்மையாகுவதற்கான மந்திரமும் இதுவேயாகும். இம்மந்திரத்தில் பல சிறப்பியல்புகள் அமிழ்ந்துள்ளன. இம்மந்திரத்தின் மூலமாகவே நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற வேண்டும். நாங்கள் நிச்சயமாகத் தேவர்களாக இருந்தோம். எனவே, தந்தை கூறுகின்றார்: நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின், உறுதியான மகாவீரர்கள் ஆகவேண்டுமாயின், அப்பொழுது இம்முயற்சியைச் செய்யுங்கள். இது நாடகம் எனத் தந்தை தொடர்ந்தும் கூறுகின்றபொழுதிலும் அவர் தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். அனைத்தும் நாடகத்திற்கேற்ப, முற்றிலும் மிகச்சரியாகவே நிகழ்கின்றன, அவர் எதிர்காலத்திலும் தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துவார். நீங்கள் நினைவு யாத்திரையில் பலவீனமாகக்கூடாது. வெளியில் வசிக்கின்ற, பந்தனத்திலுள்ள கோபிகைகள் தந்தையுடன் வசிப்பவர்களை விடவும் மேலும் அதிகமாகத் தந்தையை நினைவு செய்கின்றனர், ஏனெனில் அவர்கள் சிவபாபாவைச் சந்திப்பதற்குப் பரிதவிக்கின்றனர். ஏற்கனவே அவரைச் சந்தித்துள்ளவர்களின் வயிறு நிரம்பியுள்ளது (நிறைவாக உள்ளனர்). பெருமளவில் நினைவில் நிலைத்திருப்பவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியும். மிகப்பெரிய நிலையங்களைப் பராமரிக்கின்ற, பிரதானமானவர்கள் நினைவு யாத்திரையில் பலவீனமாக இருப்பது காணப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நினைவுச் சக்தி இருக்க வேண்டும். ஞான வாளில் நினைவுச் சக்தி இல்லாததனாலேயே அம்பு எவரையும் தாக்குவதில்லை; அவர்கள் முழுமையாக மரணிப்பதில்லை. மக்கள் மீது ஞான அம்பை எய்து, அவர்களை மரணித்து வாழச் செய்து, தந்தைக்கு உரியவர்கள் ஆக்குவதற்குக் குழந்தைகள் முயற்சி செய்கின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் மரணிக்கவில்லையென்றால், நிச்சயமாக ஞான வாளில் ஏதோ பிழை இருக்க வேண்டும். நாடகம் முற்றிலும் மிகச்சரியாகவே நகர்கின்றது என்பதை பாபா அறிந்திருப்பினும், அவர் எதிர்காலத்திற்காகத் தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தைக் கேட்டுப் பார்க்க முடியும்: நான் எந்தளவிற்கு நினைவில் நிலைத்திருக்கின்றேன்? நினைவின் மூலமாக மாத்திரமே நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். இதனாலேயே ஞான வாளில் சக்தி இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஞானத்தை மிக இலகுவாக விளங்கப்படுத்த முடியும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ, அந்தளவிற்குத் தொடர்ந்தும் இனிமையானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் சதோபிரதானாக இருந்தபொழுது, மிகவும் இனிமையானவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும். உங்கள் சுபாவம் மிக இனிமையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒருபொழுதும் குழப்பமடையக்கூடாது. ஒருவர் குழப்பமடையும் வகையில் சூழல் இல்லாதிருக்கட்டும். இதற்கு முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இறை கல்லூரியொன்றை ஸ்தாபிக்கும் சேவை மிக மேன்மையானது. பாரதத்தில் உலகப் பல்கலைக்கழகங்கள் பல நினைவுகூரப்படுகின்றன. உண்மையில், அவை அத்தகையவை அல்ல. ஒரேயொரு உலகப் பல்கலைக்கழகமே உள்ளது. தந்தை வந்து, அனைவருக்கும் முக்தியையும், ஜீவன்முக்தியையும் கொடுக்கின்றார். முழு உலகத்திலுமுள்ள மனிதர்கள் அனைவரும் மரணிக்க உள்ளார்கள் என்பதைத் தந்தை அறிவார். வந்து, அழுக்கான உலகிற்கு முடிவுகட்டி, புதிய உலகை ஸ்தாபிக்குமாறு நீங்கள் தந்தைக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள். தந்தை உண்மையிலேயே வந்துவிட்டார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இப்பொழுது மாயையின் பகட்டு அதிகளவில் உள்ளது. அவர்கள் “பொம்பீயின் வீழ்ச்சி” (வுhந குயடட ழக Pழஅpநi)” என்ற நாடகத்தைக் காட்டுகின்றனர். அவர்கள் பல்வேறு பெரிய கட்டடங்கள் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். அதுவும் பகட்டேயாகும். சத்தியயுகத்தில், அவர்கள் பல மாடிகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்ட மாட்டார்கள். இங்கு மக்கள் வாழக்கூடிய நிலம் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதால் அவர்கள் இங்கு அத்தகைய கட்டடங்களைக் கட்டுகிறார்கள். விநாசம் நிகழும்பொழுது உயர்ந்த கட்டடங்கள் அனைத்தும் வீழ்ந்துவிடும். முன்னர், அவர்கள் அத்தகைய உயரமான கட்டடங்களைக் கட்டவில்லை. குண்டுகள் வீசப்படும்பொழுது, கட்டடங்கள் சீட்டுக் கட்டுக்களைப் போன்று வீழும். கட்டடங்களினுள் இருப்பவர்கள் மாத்திரமே மரணிப்பார்கள் என்றும், ஏனையோர் (உயிருடன்) இருப்பார்கள் என்றும் இதற்கு அர்த்தமில்லை. இல்லை. அவர்கள் எங்கிருந்தாலும், கடற்கரையிலோ, நிலத்திலோ, ஆகாயத்திலோ, மலைகள் மீதோ அல்லது பறந்து கொண்டோ இருந்தாலும், அனைவரும் அழிக்கப்படுவார்கள். இது பழைய உலகம். 8.4 மில்லியன் உயிரினங்கள் அனைத்தும் அழிக்கப்படும். அங்கு, புதிய உலகில் இவை எதுவும் இருக்க மாட்டாது. அங்கு அதிக எண்ணிக்கையான மனிதர்களோ அல்லது நுளம்புகள் அல்லது கிருமிகளும் பூச்சிகளும் போன்றவையோ இருக்க மாட்டாது. இங்கு அவை அதிக எண்ணிக்கையில் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே, அங்கு அனைத்துமே சதோபிரதானாக இருக்கும். இங்கும், நீங்கள் செல்வந்தரின் வீடொன்றிற்குச் செல்லும்பொழுது பெருமளவு சுத்தத்தைக் காண்பீர்கள். நீங்கள் அனைவரை விடவும் மகத்தான தேவர்கள் ஆகுகின்றீர்கள். இப்பொழுது உங்களை முக்கியஸ்தர்கள் என அழைக்க முடியாது. நீங்கள் மிக மேன்மையான தேவர்கள் ஆகுகின்றீர்கள். ஆனால், இது புதியதொன்றல்ல. நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் வரிசைக்கிரமமாக இவ்வாறு ஆகினீர்கள். அங்கு அதிகளவு குப்பை போன்றவை இருக்க மாட்டாது. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் மேன்மையான தேவர்களாகுவதையிட்டு மிகுந்த சந்தோஷமடைய வேண்டும். ஒரேயொரு தந்தை மாத்திரமே எங்களுக்குக் கற்பித்து, எங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். ஒரு கல்வியில், அம்மக்கள் எப்பொழுதும் வரிசைக்கிரமமான நிலைகளைக் (pழளவைழைn) கொண்டிருக்கின்றார்கள்; சிலர் குறைவாகக் கற்கிறார்கள், பிறர் அதிகமாகக் கற்கிறார்கள். குழந்தைகள் இப்பொழுது முயற்சி செய்து, பெரிய நிலையங்களைத் திறக்கின்றார்கள்; எனவே, முக்கியஸ்தர்களும் இதனை அறிந்துகொள்ள முடியும். “பாரதத்தின் புராதன இராஜயோகமும்” நினைவுகூரப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டவர்கள் இராஜயோகம் கற்பதில் மிக ஆர்வமாக உள்ளனர். பாரத மக்களே தமோபிரதான் புத்தியைக் கொண்டிருக்கின்றனர். ஏனையோர் தமோ புத்தியைக் கொண்டிருக்கின்றனர். இதனாலேயே அவர்கள் பாரதத்தின் புராதன இராஜயோகத்தைக் கற்பதில் ஆர்வமாக உள்ளனர். பாரதத்தின் புராதன இராஜயோகம் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது, இதன் மூலமே பாரதம் சுவர்க்கம் ஆகியது. வருபவர்களில் வெகு சிலரே முழுமையாகப் புரிந்துகொள்கின்றனர். சுவர்க்கம் கடந்து சென்று விட்டது, அது நிச்சயமாக மீண்டும் வரும். சுவர்க்கம், அதாவது, வைகுந்தமே உலகின் மகா அற்புதமாகும். சுவர்க்கம் அதிகளவில் போற்றப்படுகின்றது. சுவர்க்கமும் நரகமும், சிவாலயமும் விலைமாந்தர் இல்லமும். இப்பொழுது நீங்கள் சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக நினைவுசெய்கின்றீர்கள். அங்கு செல்வதற்கு, நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும். அவரே அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்லும் வழிகாட்டி. பக்தி இரவு எனவும், ஞானம் பகல் எனவும் அழைக்கப்படுகின்றது. இது ஓர் எல்லையற்ற விடயம். புதியதற்கும், பழையதற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. முக்கிய பிரமுகர்களும் வரக்கூடியதாக, பெரிய கட்டடங்களில் அத்தகைய மேன்மையான கல்வியைக் கற்பிப்பதற்குக் குழந்தைகள் விருப்பம் கொண்டுள்ளனர். நீங்கள் அமர்ந்திருந்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்த வேண்டும். உண்மையில், கற்பதற்கென ஏகாந்தமான இடங்கள் உள்ளன. பிரம்ம கியானிகளின் ஆச்சிரமங்கள் எப்பொழுதும் நகரங்களிலிருந்து வெகு தொலைவிலேயே இருக்கின்றன. அவர்கள் எப்பொழுதும் கீழ்த் தளத்திலேயே (பசழரனெ கடழழச) வசிக்கின்றார்கள். அவர்கள் அத்தகைய உயரமான கட்டடங்களின் மேற்தளங்களில் தங்குவதில்லை. இப்பொழுது அவர்கள் தமோபிரதானாக உள்ளதால், நகரங்களிற்குள் பிரவேசித்து விட்டனர். அச்சக்தி இப்பொழுது முடிவடைந்து விட்டது. இந்நேரத்தில், அனைவரது மின்கலங்களும் (பற்றரி) வெறுமையாகவே உள்ளன. எவ்வாறு மின்கலங்கள் இப்பொழுது சக்தியேற்றப்பட முடியும்? தந்தையைத் தவிர வேறு எவராலுமே மின்கலங்களைச் சக்தியேற்ற முடியாது. உங்கள்; மின்கலங்களைச் சக்தியேற்றுவதனால் மாத்திரமே குழந்தைகளாகிய நீங்;கள் சக்தியைப் பெறுகின்றீர்கள். அதற்கு, நினைவே பிரதான விடயமாகும். இதிலேயே மாயையின் தடைகள் உள்ளன. சிலர் சத்திரசிகிச்சை நிபுணரிடம் உண்மையைக் கூறுகின்றனர், ஏனையோர் விடயங்களை மறைக்கின்றனர். நீங்கள் உங்களினுள் உள்ள பலவீனங்களைப் பற்றித் தந்தையிடம் கூறவேண்டும். நீங்கள் இப்பிறவியில் செய்துள்ள பாவங்களை அழிவற்ற சத்திரசிகிச்சை நிபுணரிடம் கூறவேண்டும். இல்லாவிட்டால், உங்கள் மனச்சாட்சி தொடர்ந்தும் உங்களை உறுத்தும். பாபாவிடம் அவை பற்றிக் கூறிய பின்னர் உங்கள் மனச்சாட்சி உறுத்தாது. அவற்றை உங்களிற்குள் வைத்திருப்பதும் தீங்கானதே. உண்மையான குழந்தைகள் ஆகுபவர்கள் தந்தையிடம் அனைத்தையும் கூறுகின்றனர்: இவையே நான் இப்பிறவியில் செய்துள்ள பாவங்கள். நாளுக்கு நாள், இது உங்கள் இறுதிப் பிறவி என்பதைத் தந்தை தொடர்ந்தும் வலியுறுத்துகின்றார். தமோபிரதானாக உள்ளவர்கள் நிச்சயமாகப் பாவங்களைச் செய்து கொண்டிருப்பார்கள். தந்தை கூறுகின்றார்: தனது பல பிறவிகளின் இறுதியில், முதலாம் இலக்கத் தூய்மையற்றவர் ஆகிவிட்டவரிலேயே நான் பிரவேசிக்கின்றேன், ஏனெனில், அவரே பின்னர் முதலாம் இலக்கத்தைக் கோர வேண்டும். பெருமளவு முயற்சி செய்யப்பட வேண்டும். நீங்கள் இப்பிறவியிலும் பாவங்கள் செய்துள்ளீர்கள். சிலர் தாங்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைக் கூட உணர்ந்து கொள்வதில்லை; அவர்கள் உண்மையைக் கூறுவதில்லை. சிலர் உண்மையைக் கூறுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: குழந்தைகளே, மக்கள் முதுமையடையும்பொழுது அவர்களது பௌதீக அங்கங்கள் இயல்பாகவே சாந்தமடைவது போன்று, நீங்களும் உங்களது கர்மாதீத நிலையை அடையும்பொழுது உங்கள் பௌதீக அங்கங்கள் சாந்தமடையும். இங்கு, அனைத்துப் பௌதீக அங்கங்களும் இளம் வயதிலேயே சாந்தமடைய வேண்டும். நீங்கள் யோக சக்தியை மிக அதிகமாகக் கொண்டிருப்பீர்களாயின், அவ்விடயங்கள் அனைத்தும் முடிவடைந்துவிடும். அங்கு அழுக்கான நோய்கள் அல்லது குப்பைகள் அல்லது அது போன்ற எதுவுமே கிடையாது. மக்கள் அங்கு மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்கின்றார்கள். அங்கு, அது இராம இராச்சியம். இங்கு, இதுவோ இராவண இராச்சியம். எனவே, இங்கு பலவகையான தீய நோய்கள் போன்றவை உள்ளன. சத்தியயுகத்தில் அவை எதுவுமே இருக்க மாட்டாது. கேட்கவும் வேண்டாம்! அதன் பெயரே முதற்தரமானது: புதிய உலகமாகிய சுவர்க்கம். அங்கு பெருமளவு சுத்தம் உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்த அதி மங்களகரமான சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் செவிமடுக்கின்றீர்கள். நேற்று நீங்கள் இவை எதனையும் கேட்டதில்லை. நேற்று, நீங்கள் மரண பூமியின் அதிபதிகளாக இருந்தீர்கள், இன்று நீங்கள் அமரத்துவப் பூமியின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நேற்று நீங்கள் மரண பூமியில் இருந்தீர்கள், சங்கமயுகத்திற்குள் வருவதனால், இப்பொழுது அமரத்துவப் பூமிக்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவரை இப்பொழுது நீங்கள் கண்டடைந்து விட்டீர்கள். நன்றாகக் கற்பவர்கள் நல்ல வருமானத்தையும் சம்பாதிக்;கின்றார்கள். அவர்கள் கற்பதிலேயே அவர்களின் மகத்துவம் உள்ளது எனக் கூறப்படும். இங்கும் அவ்வாறே. நீங்கள் இக்கல்வி மூலம் மிக உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் ஒளியில் உள்ளீர்கள். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்கும் இது தெரியாது. நீங்களும் மீண்டும் மீண்டும் இதனை மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் பழைய உலகிற்குத் திரும்பிச் செல்கின்றீர்கள். மறத்தல் என்றால், பழைய உலகிற்குச் செல்வதாகும். சங்கமயுகத்துப் பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது கலியுகத்தில் இல்லை என்பதை அறிவீர்கள். நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை எப்பொழுதும் நினைவுசெய்யுங்கள். தந்தை எங்களுக்குக் கற்பிப்பதால், நாங்கள் புதிய உலகிற்குச் செல்ல முடியும். இது தூய பெருமை, மற்றையது தூய்மையற்ற பெருமை. குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் தூய்மையற்ற எண்ணங்களைக் கொண்டிருக்கக்கூடாது. முயற்சி செய்த பின்னர், இறுதியில் பெறுபேறுகள் அறிவிக்கப்படும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அந்நேரம் வரைக்கும் அனைவரும் முயற்சியாளர்களே. பரீட்சை நிகழும்பொழுது ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாகச் சித்தி எய்தி, பின்னர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். உங்களுடையது, நீங்கள் மாத்திரமே அறிந்த, எல்லையற்ற கல்வி. நீங்கள் அதிகளவு விளங்கப்படுத்துகிறீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்குத் தொடர்ந்தும் புதியவர்கள் வருகின்றார்கள். அவர்கள் தொலைவில் வசித்தாலும், இதைச் செவிமடுப்பதால் அவர்களது புத்தி நம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றது. நீங்கள் அத்தகைய பாபாவுக்கு முன்னால் நேரடியாகவும் வர வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கும் தந்தையை நீங்கள் நிச்சயமாக நேரடியாகச் சந்திக்க வேண்டும். அதனை ஆத்மாக்கள் புரிந்துகொள்ளும்பொழுது மாத்திரமே இங்கு வருகின்றார்கள். சிலர் எதையும் புரிந்துகொள்ளவில்லை, எனினும், அவர்கள் இங்கு வரும்பொழுது அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தந்தை கூறுகிறார்: உங்கள் இதயத்தில் ஏதேனும் இருந்து, உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தால், நீங்கள் அதை வினவலாம். தந்தை ஒரு காந்தம் ஆவார். இதைத் தங்கள் பாக்கியத்தில் கொண்டிருப்பவர்களால் மிக விரைவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாவிட்டால் பின்னர் அனைத்துமே முடிவடைந்து விடுகிறது. அவர்கள் தாங்கள் கேட்டுள்ள அனைத்தையும் புறக்கணித்து விடுகிறார்கள். இங்கே அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? கடவுள். அவருடைய பெயர் சிவன் என்பதாகும். சிவபாபா மாத்திரமே எங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுப்பவர். அப்பொழுது எக்கல்வி சிறந்ததாக இருக்கும்? எங்களுக்கு 21 பிறவிகளுக்கான இராச்சியத்தைக்; கொடுக்கும் சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கிறார் என நீங்கள் கூறுவீர்கள். இவ்வாறு விளங்கப்படுத்துவதால் அவர்களை பாபாவிடம் அழைத்து வர உங்களால் முடியும். சிலர் முழுமையாகப் புரிந்துகொள்ளாததால் அவர்களால் பெருமளவு சேவையைச் செய்ய முடியாமல் உள்ளது. அவர்கள் முழுமையாகப் பந்தனச் சங்கிலிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் நீங்;கள் முழுமையாக போதையடைந்தவர்களைப் போன்று, அச்சங்கிலிகளிலிருந்து உங்களை விடுவித்து, இங்கே வந்தீர்கள். அந்த ஈர்ப்பு இருந்ததும் நாடகத்தில் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. நாடகத்தில், சூளை (பத்தி) உருவாக்கப்பட வேண்டியிருந்தது. நீங்கள் மரணித்து வாழ்ந்தீர்;கள். பின்னர் சிலர் மாயையிடம் திரும்பிச் சென்றார்கள். யுத்தம் தொடர்கிறது. நீங்கள் பெருந் தைரியத்தைக் காட்டியுள்ளதை மாயை பார்ப்பதால், நீங்கள் உறுதியானவர்களா, இல்லையா எனப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக அவள் உங்களை அடிக்கின்றாள். குழந்தைகள் மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டனர். அவர்களுக்கு அனைத்தும் கற்பிக்கப்பட்டது. குழந்தைகளாகிய நீங்கள் அந்தப் புகைப்பட அல்பங்களைப் (யடடிரஅ) பார்க்கிறீர்கள், ஆனால் அப் புகைப்;படங்களைப் பார்ப்பதால் மாத்திரம் உங்களால் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. என்ன நிகழ்ந்தது என யார் அமர்ந்திருந்து விளங்கப்படுத்துவார்கள்? நீங்கள் எவ்வாறு பத்தியில் இருந்தீர்கள் எனவும், பின்னர் சிலர் எவ்வாறு அதிலிருந்து வெவ்வேறு வழிகளில் வெளியேறினார்கள் என்பதையும் பாருங்கள்! இதுபோன்றே ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படும்பொழுது, அவற்றில் சிலவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இதுவும் இறை பணி ஆகும். கடவுள் இங்கிருந்து, தர்மத்தை ஸ்தாபிக்கிறார். எவருமே இதனை அறியார். அவர்கள் தந்தையைக் கூவியழைக்கின்ற பொழுதிலும், எதையுமே புரிந்துகொள்ளாத பித்துப் பிடித்த மக்களைப் போன்றே உள்ளனர். அவர்கள் வினவுகிறார்கள்: இது எவ்வாறு சாத்தியம்? இராவணனாகிய மாயை அவர்களை முழுமையாக அவ்வாறு ஆக்கிவிடுகிறாள். மக்கள் சிவபாபாவை வழிபடுகிறார்கள், பின்னர் அவர்கள் அவரைச் சர்வவியாபி எனக்; கூறுகின்றார்கள்! நீங்கள் சிவபாபாவைப் பற்றிப் பேசுவதனால், அவர் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? மக்கள் ஓர் இலிங்கத்தை வழிபட்டு, அதனைச் சிவன் என அழைக்கின்றார்கள். சிவன் அதில் இருக்கின்றார் என அவர்கள் கூறுவதில்லை. கடவுள் கூழாங்கற்களிலும் கற்களிலும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அனைவரும் கடவுள் என்பதா அதன் அர்த்தம்? கடவுள் அவ்விதமாக எல்லையற்றவராக இருக்க முடியாது. எனவே, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் முன்னைய கல்பத்திலும் இவ்வழியில் உங்களுக்கு விளங்கப்படுத்தினார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எவருமே குழப்பமடையாதவாறு அத்தகையதோர் இனிய சூழலை உருவாக்குங்கள். தந்தையைப் போன்று சரீரமற்றவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் சுபாவத்தை இனிமையானதாக்கி, நினைவுச் சக்தி மூலம் உங்கள் பௌதீக அங்கங்களைச் சாந்தப்படுத்துங்கள்.2. நீங்கள் இப்பொழுது கலியுகத்தவராக அன்றி, சங்கமயுகத்தவராக இருக்கின்ற போதையை எப்பொழுதும் பேணுங்கள். உங்களைப் புதிய உலகின் அதிபதிகள் ஆக்குவதற்கே தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். தூய்மையற்ற எண்ணங்கள் அனைத்தையும் முடித்து விடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய மேன்மையான எண்ணங்களின் சக்தியினூடாக, பேறுகள் அனைத்தையும் பெற்று, ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.
மாஸ்டர் சர்வசக்திவானாகிய குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்கு வேண்டிய எதனையும் எந்நேரத்திலும் செய்யக்கூடியதாகவும், பிறரையும் தூண்டக்கூடிய வகையிலும் உங்கள் எண்ணங்களில் அதிகளவு சக்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். ஏனெனில் உங்கள் எண்ணங்கள் எப்பொழுதும் தூய்மையானவையாகவும், மேன்மையானவையாகவும், நன்மையளிப்பவையாகவும் உள்ளன. மேன்மையாகவும் நன்மையளிப்பவையாகவும் உள்ள எண்ணங்கள் நிச்சயமாக நடைமுறை ஆகுகின்றன. உங்கள் மனம் எப்பொழுதும் ஒருமைப்பாட்டுடன் இருக்கின்றது, அதாவது, ஒரே ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கின்றது; அது அலைந்து திரிவதில்லை. நீங்கள் உங்கள் மனதை உங்களுக்கு வேண்டிய இடத்தில் உங்களுக்கு வேண்டியபொழுது ஸ்தாபிக்கக்கூடியதாக உள்ளது. இதனைச் செய்வதால், இயல்பாகவே நீங்கள் ஒரு வெற்றி சொரூபம் ஆகுகின்றீர்கள்.சுலோகம்:
பாதகமான சூழ்நிலைகளின் குழப்பங்கள் எதனிலும் பாதுகாப்பாக இருப்பதற்கு, சரீரமற்ற ஸ்திதியில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.