21.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையைப் போன்று ஆன்மீக ஆசிரியர்களாகுங்கள். அத்துடன் நீங்கள் தந்தையிடமிருந்து கற்றதை மற்றவர்களுக்கும் கற்பியுங்கள். நீங்கள் ஞானத்தைக் கிரகித்திருந்தால் உங்களால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியும்.

கேள்வி:
எவ்விடயத்தில் பாபா அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றார்? குழந்தைகளாகிய நீங்களும் எதில் அசைக்க முடியாதவர்களாக வேண்டும்?

பதில்:
பாபா நாடகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றார். பாபா கூறுகின்றார்: 'கடந்தவையனைத்தும் நாடகமே. நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்தவற்றையே இப்பொழுதும் செய்வீர்கள். எதனையும் மாற்றுவதற்கு நாடகம் உங்களை அனுமதிக்காது. எவ்வாறாயினும், குழந்தைகளின் ஸ்திதி இன்னமும்; அவ்வாறு ஆகவில்லை. இதனாலேயே அவர்கள் கூறுகின்றனர்: அது இவ்வாறிருந்;தால் நான் அதனைச் செய்திருப்பேன். நான் அதைப்பற்றி அறிந்திருந்தால் அவ்வாறு செய்திருக்கமாட்டேன். பாபா கூறுகின்றார்: கடந்ததை நினைவு செய்;யாதீர்கள். எதிர்காலத்தில் மீண்டும் அதே தவறைச் செய்யாதிருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தையே கூறுகின்றார்: நான் மறைமுகமானவர் என்பதனால், நான் எப்போது வருகின்றேன் என்பதை எவருமே அறியமாட்டார்கள். ஓர் ஆத்மா கருப்பையினுள் எப்போது பிரவேசிக்கின்றாரென்பதை எவராலுமே கூறமுடியாது. அதற்கு ஒரு நேரமோ அல்லது திகதியோ இருக்க முடியாது. அது கருப்பையை விட்டு வெளியே வரும் கணத்திற்கான நேரமும், திகதியுமே வழங்கப்படுகின்றன. அதேபோன்று, பாபா பிரவேசித்த நேரத்தையோ அல்லது திகதியையோ உங்களால் கூறமுடியாது. அவர் இரதத்தினுள் எப்போது பிரவேசித்தார் என்பதை உங்களால் கூறமுடியாது. பாபா எவரையாவது பார்க்கும்போது, அவர்கள் போதையடைந்து, அந்த ஸ்திதியில் திளைத்துவிடுகின்றார்கள். எவரோ தங்களில் பிரவேசித்துவிட்டதாகவோ அல்லது ஏதோவொரு சக்தி வந்திருப்பதாகவோ அவர்கள் நினைப்பார்கள். அச்சக்தி எங்கிருந்து வந்தது? நான் விஷேடமாக எதனையும் உச்சரிக்கவோ அல்லது தபஸ்யா செய்யவோ இல்லை. அது மறைமுகமானது என அழைக்கப்படுகின்றது. நேரமோ அல்லது திகதியோ கிடையாது. சூட்சுமலோகம் எப்போது உருவாக்கப்பட்டது என்பதை உங்களால் கூறமுடியாது. “மன்மனாபவ” என்பதே பிரதான விடயமாகும். தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, தூய்மையற்ற உங்களையும், உலகையும் தூய்மையாக்க வருமாறு உங்கள் தந்தையாகிய என்னைக் கூவியழைத்தீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நாடக நியதிப்படி, நான் வரும்போது நிச்சயமாக மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். சத்தியயுகம் முதல் நிகழ்ந்தவை அனைத்தும் மீண்டும் நிகழும். சத்திய, திரேதா யுகங்களில் கடந்து செல்கின்ற ஒவ்வொரு விநாடியும் நிச்சயமாக மீண்டும் இடம்பெறும். காலமும் தொடர்ந்து கடந்துசெல்கின்றது. சத்தியயுகம் கடந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் அதனைக் காணவில்லை. நீங்கள் அந்த யுகத்தைக் கடந்து வந்ததாகத் தந்தை விளங்கப்படுத்தியிருக்கின்றார். நீங்களே முதலில் என்னை விட்டுப் பிரிந்தீர்கள். எனவே, நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுத்தீர்கள் என்பதையும், மீண்டும் அதேபோன்று எவ்வாறு பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதையும் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதாவது, சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொண்ட உங்கள் பாகத்தை எவ்வாறு நடிப்பது என்பதைப் பற்றியாகும். சத்தியயுகத்தில் சந்தோஷமே இருக்கின்றது. கட்டடமொன்று பழையதாகும்போது, சிலவேளைகளில் அதன் கூரை வீழ்ந்துவிடும், சிலவேளைகளில் கட்டடத்தின் ஏதோவொரு பகுதியில் ஏதாவது நிகழ்ந்துவிடும். எனவே, அதனைத் திருத்தவேண்டும் என்பதில் அக்கறை இருக்கும். அது மிகவும் பழையதாகும்போது, அக்கட்டடமானது வசிப்பதற்கு இனி உகந்ததல்ல என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. நீங்கள் புதிய உலகைப் பற்றி இவ்வாறு கூறமாட்டீர்கள். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்வதற்குத் தகுதி வாய்ந்தவர்களாகுகின்றீர்கள். அனைத்துமே முதலில் புதியதாகவும், பின்னர் பழையதாகவும் ஆகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதனைச் சிந்தித்துப் பாருங்கள். வேறு எவராலுமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் தொடர்;ந்தும் கீதை, இராமாயணம் போன்றவற்றை எடுத்துரைத்து, அதில் மும்முரமாக இருக்கின்றார்கள். நீங்களும், நானும்கூட அதில் மும்முரமாக இருந்தோம். தந்தை இப்பொழுது உங்களை மிகவும் விவேகமானவர்களாக ஆக்கியுள்ளார். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பழைய உலகம் இப்பொழுது முடிவடையப்போகின்றது. நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்லவேண்டும். அனைவரும் அங்கே செல்வார்கள் என்றில்லை. அனைவரும் முக்திதாமத்திலேயே தங்கிவிடலாம் என்பதும் நியதியல்ல. அவ்வாறாயின், பிரளயம் ஏற்பட முடியும். இது பழைய உலகினதும், புதிய உலகினதும் அதி மங்களகரமான, நன்மைபயக்கும் சங்கமயுகமாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மாற்றம் இப்பொழுது நிகழ்ந்தாக வேண்டும். பின்னர் நீங்கள் சாந்திதாமத்திற்குச் செல்வீர்கள். அங்கே சந்தோஷ உணர்வுகளேனும் கொண்டிருப்பதற்கான கேள்விக்கே இடமில்லை. யாகத்திற்குத் தடைகள் இருந்ததாக நினைவு கூரப்படுகின்றது. எனவே, அங்கே தடைகள் தொடர்ந்தும் இருக்கும். ஒரு கல்பத்தின் பின்னரும் தடைகள் இருக்கும். நீங்கள் இப்பொழுது உறுதியானவர்களாகி இருக்கின்றீர்கள். ஸ்தாபனையும் விநாசமும் என்ற இப்பணி ஒரு சிறிய விடயமல்ல. எதில் உங்களுக்குத் தடைகள் வருகின்றன? தந்தை கூறுகின்றார்: காமமே மாபெரும் எதிரி. இதனாலேயே துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன. திரௌபதியின் உதாரணம் உள்ளது. அனைத்து முரண்பாடுகளும் பிரம்மச்சரியத்தினாலேயே ஆகும். நீங்கள் நிச்சயமாக சதோபிரதானிலிருந்து தமோபிரதான் ஆகவேண்டியிருந்தது. நீங்கள் ஏணிப்படிகளில் கீழிறங்க வேண்டியிருந்ததுடன், உலகமும் நிச்சயமாகப் பழையதாக வேண்டியிருந்தது. நீங்கள் மாத்திரமே இவையனைத்தையும் புரிந்துகொண்டு, நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். நீங்கள் ஓர் ஆசிரியராக வேண்டும். நிச்சயமாக உங்கள் புத்தியில் ஞானம் இருப்பதனாலேயே நீங்கள் கற்று, ஓர் ஆசிரியராகுகின்றீர்கள். ஆசிரியரிடம் கற்று, புத்திசாலிகளாகுபவர்களை அரசாங்கம் சித்தியடையச் செய்கின்றது. தந்தை உங்களை ஆசிரியராக்கியுள்ளார். ஒரேயொரு ஆசிரியரால் என்ன செய்ய முடியும்? நீங்கள் அனைவருமே ஆன்மீக ஆசிரியர்கள். எனவே, நீங்கள் உங்கள் புத்தியில் இந்த ஞானத்தைக் கொண்டிருக்க வேண்டும். மனிதரிலிருந்து தேவராகுகின்ற ஞானம் மிகவும் சரியானது. எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தந்தையை இப்பொழுது நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்குத் தொடர்ந்தும் ஒளியைப் பெறுவீர்கள். மக்கள் தொடர்ந்தும் காட்சிகளைப் பெறுவார்கள். நினைவின் மூலமே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகுவீர்கள். பின்னர் மற்றவர்களுக்கக் காட்சி கிடைப்பதும் சாத்தியமாகும். உதவியாளராகிய தந்தையும் இங்கேயே இருக்கின்றார். தந்தை எப்பொழுதும் குழந்தைகளுக்கு உதவி செய்கின்றார். கல்வியில் அனைத்தும் வரிசைக்கிரமமானதேயாகும். எந்தளவு ஞானத்தை உங்கள் புத்தி கிரகித்துள்ளது என்பதை உங்கள் ஒவ்வொருவராலும் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் ஞானத்தைக் கிரகித்திருந்தால் எவருக்காவது விளங்கப்படுத்துவதன் மூலம் அதனைச் செய்து காண்பியுங்கள். இது செல்வமாகும். இச்செல்வத்தை நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கவில்லையெனில், உங்களிடம் செல்வம் இருந்ததை எவருமே நம்பமாட்டார்கள். நீங்கள் செல்வத்தைத் தானம் செய்வீர்களாயின், மகாதானி என அழைக்கப்படுவீர்கள். மகாராத்தி என்பதும், மகாவீரர் என்பதும் ஒன்றேயாகும். அனைவரும் ஒரேமாதிரி இருக்க முடியாது. எனவே, பல மக்கள் உங்களிடம் வருவார்கள். நீங்கள் ஒவ்வொருவருடனும் அமர்ந்திருந்து மோதிக்கொள்வீர்களா? அம்மக்கள் பத்திரிகைகள் மூலமாகப் பல விடயங்களைக் கேள்விப்பட்டுச் சூடாகிவிடுவார்கள் (கோபமடைதல்). பின்னர், அவர்கள் உங்களிடம் வந்து, ஞானத்தைச் செவிமடுக்கும்போது, மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றியதால் தாங்கள் என்ன செய்துவிட்டோம் என்பதனையும், இந்த ஞானம் சிறந்ததென்பதனையும் புரிந்துகொள்வார்கள். ஒவ்வொருவரையும் சீர்திருத்துவதற்குக் காலம் எடுக்கும். இங்கும் பெருமளவு முயற்சி தேவைப்படு;கின்றது. இருந்தபோதிலும், சிலர் மகாராத்திகளாகவும்(யானைப்படையினர்), சிலர் குதிரைப்படையினராகவும், சிலர் காலாற்படையினராகவும் உள்ளனர். இது நாடகத்தில் அவர்களது பாகமாகும். இறுதியில் நீங்களே வெற்றியடைவீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்தில் எவ்வாறு ஆகினீர்களோ, அவ்வாறே ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்யவேண்டும். தந்தை உங்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்: விளங்கப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். முதலில் சிவபாபாவின் ஆலயத்திற்குச் சென்று, அங்கே சேவை செய்யுங்கள். நீங்கள் அவர்களிடம் கேட்கலாம்: யார் இவர்? நீங்கள் ஏன் இந்த விக்கிரகத்தின்மீது நீரூற்றுகின்றீர்கள்? நீங்கள் இதனை நன்றாக அறிவீர்கள். தணல் வாங்கச் சென்ற சமையற்காரர் ஒருவர் அங்கே தங்கியிருந்து அதிபதியாகிய பழமொழியொன்று உள்ளது. இவ்வுதாரணம் உங்களையே குறிக்கின்றது. நீங்கள் அவர்களை விழித்தெழச் செய்வதற்காகவே அங்கே செல்கின்றீர்கள். அவர்கள் உங்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்புகின்றார்கள். எனவே, அத்தகையதோர் அழைப்பிதழைப் பெறும்போது, நீங்கள் சந்தோஷமடைய வேண்டும். காசி போன்ற இடங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பெரிய பட்டங்கள் வழங்கப்படுகின்றன. பக்தி மார்க்கத்தில் பல ஆலயங்கள் உள்ளன. அதுவும் ஒருவித வியாபாரமேயாகும். அவர்கள் சிறந்த பெண்ணொருவரைக் கண்டுவிட்டால், அவளைக் கீதையை மனனம் செய்ய வைத்து, அவளை முன்னிறுத்தி, பின்னர் அவளுக்குக் கிடைக்கின்ற வருமானத்தைத் தாங்கள் எடுத்துக்கொள்வார்கள். இல்லையெனில், அவர்களிடம் எதுவுமே இல்லை. பல மக்கள் சித்து வித்தைகளைக் கற்கின்றார்கள். நீங்கள் அத்தகைய இடங்களுக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஒருபோதுமே சமய நூல்களின் அர்த்தத்தை விளங்கப்படுத்த முயலக்கூடாது. நீங்கள் சென்று, தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். முக்தியையும், ஜீவன் முக்தியையும் அருள்பவர் ஒரேயொருவரேயாவார். நீங்கள் அவரைப் புகழ வேண்டும். அவர் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். எவ்வாறாயினும், ‘மன்மனாபவ’ என்பதன் அர்த்தம் நீங்கள் கங்கைக்குச் சென்று நீராட வேண்டும் என்பதல்ல. ‘மாமேகம்’ என்றால், என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள் என்பதாகும். நான் உங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் உங்களை விடுவிப்பேன் என உங்களுக்குச் சத்தியம் செய்கின்றேன். இராவணன் வந்த நேரத்திலேயே பாவம் ஆரம்பமாகியது. எனவே, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு நீங்கள் பெருமளவு முயற்சி செய்யவேண்டும். மக்கள் பதவிக்காக இரவு பகலாகப் பெருமளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். இதுவும் ஒரு கல்வியே ஆகும். புத்தகங்கள் எதனையும் வைத்திருப்பதற்கான கேள்விக்கு இங்கு இடமில்லை. உங்கள் புத்தியில் 84 பிறவிகளின் சக்கரம் உள்ளது. இது சிரமமான விடயமல்ல. உங்களுக்கு ஒவ்வொரு பிறவியினதும் விபரங்கள் கூறப்படவில்லை. உங்கள் 84 பிறவிகளும் முடிவடைந்துவிட்டன. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். தூய்மையற்றவர்களாகியுள்ள ஆத்மாக்கள் மீண்டும் தூய்மையாக்கப்பட வேண்டும். சதா ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுமாறு தொடர்;ந்தும் அனைவருக்கும் கூறுங்கள். குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா, என்னால் யோகத்தில் இருக்க முடியாமலிருக்கின்றது. ஆ! என்னை நினைவு செய்யுமாறு உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் நான் கூறுகின்றேன், எனவே நீங்கள் ஏன் யோகம் என்று பேசுகின்றீர்கள்? நீ;ங்;கள் யோகம் என்று பேசுவதனாலேயே என்னை மறந்துவிடுகின்றீர்கள். யாரால் தங்கள் தந்தையையே (லௌகீகத் தந்தை) நினைவுசெய்ய முடியாமலிருக்கும்? எவ்வாறு நீங்கள் உங்கள் லௌகீகப் பெற்றோரை நினைவு செய்கின்றீர்கள்? அந்த ஒரேயொருவரே உங்கள் தாயும், தந்தையுமாவார். இவரும் கற்கின்றார். சரஸ்வதியும் கற்கின்றார். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் கற்பிக்கின்றார். நீங்கள் எந்தளவிற்குக் கற்கின்றீர்களோ, அதற்கேற்ப உங்களால் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சமய நூல்களை வாசிப்பதன் மூலமாகவோ அல்லது மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாகவோ அல்லது தபஸ்யாவின் மூலமாகவோ உங்களால் என்னை அடைய முடியாது. அதில் என்ன நன்மை இருக்கின்றது? நீங்கள் இன்னமும் தொடர்;ந்து ஏணிப்படிகளில் இறங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு எதிரிகள் எவருமில்லை. இருந்தபோதிலும், பாவ புண்ணியங்கள் எவ்வாறு சேர்க்கப்படுகின்றன என்பது பற்றி நீங்கள் நிச்சயமாக விளங்கப்படுத்த வேண்டும். இராவண இராச்சியம் ஆரம்பித்த பின்னரே நீங்கள் பாவம் செய்ய ஆரம்பித்தீர்கள். புதிய உலகம் என்றால் என்ன, பழைய உலகம் என்றால் என்ன என்பதையும் விளங்கப்படுத்தத் தெரியாத குழந்தைகளும் இருக்கின்றனர். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: எல்லையற்ற தந்தையை நினைவுசெய்யுங்கள். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். நீங்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. பக்தி மார்க்கத்தில், பூஜிப்பதற்காக நீங்கள் வீட்டிற்கு வெளியே வேறு எங்கேயாவது செல்கின்றீர்கள். கணவன் தனது மனைவிக்குக் கூறுவார்: வீட்டிலும் கிருஷ்ணரின் படம் இருக்கும்போது, நீங்கள் ஏன் வெளியில் செல்கின்றீர்கள்? அங்கே என்னதான் வித்தியாசம் இருக்கின்றது? கணவனே அவளது தெய்வம் என அவளுக்குக் கூறப்பட்ட போதிலும், அவள் அவர் கூறுவதைச் செவிமடுப்பதும் இல்லை! பக்தி மார்க்கத்தில், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடியதாக, அவர்கள் வெகு தொலைவில் உயரமாக ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். மக்கள் எவ்வாறு ஆலயங்களுக்கெனப் பெருமளவு தடுமாறி அலைந்து திரிந்தார்கள் என்பதை நீங்கள் விளங்கப்படுத்துங்கள். இது அவர்கள் உருவாக்கியுள்ள சம்பிரதாயமாகும். அவர்கள் சிவகாசிக்கு யாத்திரை செல்கின்றார்களாயினும், அதன் மூலமாக எப்பேறுமே கிடைக்கமாட்டாது. நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. உண்மையில், கணவன்மாருக்கெல்லாம் கணவனாகிய கடவுள் ஒரேயொருவரேயாவார். உங்கள் கணவரும், தாய்வழி, தந்தைவழி மாமன்மாரும் நினைவுசெய்வது, கணவன்மாருக்கெல்லாம் கணவருமான அனைவரது தந்தையுமாகிய ஒரேயொரு கடவுளையே ஆகும். அவர் உங்களுக்குக் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் ஒளி இப்பொழுது ஏற்றப்படுவதால், மக்களால் உங்களில் ஒளியைப் பார்க்கமுடியும். எனவே, குழந்தைகளாகிய உங்கள் பெயர்களும் போற்றப்பட வேண்டும். தந்தை குழந்தைகளின் பெயர்கள் போற்றப்படுமாறு செய்கின்றார். புத்திரி சுதேஷ் விளங்கப்படுத்துவதில் மிகவும் திறமைசாலி. அவர் பெருமளவு முயற்சி செய்ததால், மூத்தவர்களையும் முந்திச் செல்கின்றார். அவர் இன்னமும் முயற்சி செய்தால் மற்றவர்களையும் முந்திச் செல்ல முடியும். அனைத்தும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. எவருக்கும் இதய வழுவல் ஏற்படக்கூடாது. நீங்கள் இறுதியில் வந்தாலும், உங்களால் ஒரு விநாடியில் ஜீவன் முக்தியைப் பெறமுடியும். நாளுக்கு நாள் அத்தகைய பலர் தொடர்ந்தும் வெளிப்படுவார்கள். நாடகத்தில், வெற்றியைக் கொண்ட உங்கள் பாகம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. தடைகளும் வரவே செய்யும். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் இதுபோன்ற தடைகள் கிடையாது. இங்கே, விகாரங்களின் காரணமாகக் குழப்பம் ஏற்படுகின்றது. நாங்கள் ஏன் அமிர்தத்தைத் துறந்து நஞ்சைப் பருகவேண்டும் என்பது நினைவு கூரப்படுகின்றது. ஞானத்தின் மூலமாக ஒரேயொரு தேவதர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இராவண இராச்சியம் சத்தியயுகத்தில் இருக்க முடியாது. விளக்கம் மிகத் தெளிவானது. அவர்கள் இராவண இராச்சியத்தை இராம இராச்சியத்திற்கு அடுத்ததாகக் காண்பித்திருக்கின்றார்கள். நீங்களும் காலப்பகுதியைக் காண்பிக்கின்றீர்கள். இது சங்கமயுகமாகும். உலகம் இப்பொழுது மாற்றமடைகின்றது. ஒரேயொரு தந்தையே ஸ்தாபனை, பராமரிப்பு, விநாசம் ஆகியவற்றைத் தூண்டுகின்றார். அது மிக இலகுவானது. எவ்வாறாயினும், அவர்களிடம் முழுமையான தாரணை இல்லாதபோது, அவர்கள் ஞானம், யோகம் ஆகியவற்றை மறந்து ஏனையவற்றையே நினைவு செய்கின்றார்கள். நீங்கள் அதிமேலான கடவுளின் குழந்தைகளாவீர்கள். நாளுக்கு நாள் நீங்கள் வளமுடையவர்களாகுகின்றீர்கள். நீங்கள் செல்வத்தைப் பெறுகின்றீர்கள். செலவுகளும் செலுத்தப்படுகின்றன. பாபா கூறுகின்றார்: பானை தொடர்ந்தும் நிரம்பும். நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்தவாறே செலவு செய்வீர்கள். நீங்கள் சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலவு செய்வதற்கு நாடகம் உங்களை அனுமதிக்கமாட்டாது. பாபா நாடகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றார். கடந்தவை அனைத்தும் நாடகமே. “அது இவ்வாறிருந்தால் நான் அதனைச் செய்திருக்கமாட்டேன்.” அத்தகைய ஸ்திதி இன்னமும் விருத்தியாகவில்லை. ஏதோவொன்று உங்கள் உதடுகள் மூலமாகத் தொடர்ந்தும் வெளிப்படுகின்றது. பின்னர் நீங்கள் அதனை உணர்கின்றீர்கள். பாபா கூறுகின்றார்: கடந்ததை நினைவு செய்;யாதீர்கள். எதிர்காலத்தில் மீண்டும் அத்தகைய தவறுகளைச் செய்யாதிருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்கள் அட்டவணையை எழுதுங்கள். அதில் பெருமளவு நன்மையிருக்கின்றது. குழந்தைகள் தனது வாழ்க்கை வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்வார்கள் என நினைத்து, ஒருவர் தனது முழு வாழ்க்கை வரலாற்றையும் எழுதிக்கொண்டிருந்ததை பாபா பார்த்தார். இங்கே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் நன்மையிருக்கின்றது. இங்கே பொய்மை இருக்கமுடியாது. நாரதரின் உதாரணம் உள்ளது. அட்டவணையால் பெருமளவு நன்மை இருக்கின்றது. பாபா உங்களுக்குக் கட்டளைகள் கொடுக்கின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் அக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். அச்சா,

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானத்தைக் கிரகித்து, மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். ஞானச் செல்வத்தைத் தானம் செய்து, ஒரு மகாதானியாகுங்கள். எவருடனும் சமய நூல்களைப் பற்றி விவாதிக்காதீர்கள். ஆனால், தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுங்கள்.

2. நீங்கள் கடந்தகால விடயங்களைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் மீண்டும் எத்தவறுகளையும் செய்யாதவாறு, அத்தகைய முயற்சியைச் செய்யுங்கள். நேர்மையான அட்டவணையொன்றைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
சத்தியத்தின் அதிகாரத்தைக் கிரகிப்பதன் மூலம் அனைவரையும் கவர்வதனால் பயமற்ற வெற்றியாளர் ஆகுவீர்களாக.

சத்தியத்தின் சக்தியினால் குழந்தைகளாகிய நீங்கள் மேன்மையான சக்திசாலி ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள் உண்மையான ஞானம், உண்மையான தந்தை, உண்மையான பேறு, உண்மையான நினைவு, உண்மையான தெய்வீகக் குணங்கள், உண்மையான சக்திகள் முதலியவற்றைப் பெற்றுள்ளீர்கள். அத்தகைய அதிகார மகிமையின் போதையைக் கொண்டிருக்கும் போது, இந்தச் சத்தியத்தின் அதிகாரம் தொடர்ந்தும் ஒவ்வொரு ஆத்மாவையும் கவரும். பொய்மை உலகிலும் சத்தியத்தின் சக்தியைக் கொண்டவர்கள் வெற்றியாளர்களே. சந்தோ~மும், பயமின்மையுமே சத்தியத்தின் பேறுகள் ஆகும். உண்மையைப் பேசுபவர்கள் பயமற்றவர்கள், அவர்கள் ஒருபோதும் பயப்படமாட்டார்கள்.

சுலோகம்:
நேரான எண்ணங்களும் சக்தி நிறைந்த மனோபாவமும் சூழலை மாற்றுவதற்கான வழியாகும்.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தந்தை பிரம்மா தனது ஒவ்வொரு செயலிலும், வார்த்தையிலும், தொடர்பிலும், உறவுமுறையிலும் அன்பு நிறைந்தவராக இருந்தார். அத்துடன் தனது விழிப்புணர்விலும் ஸ்திதியிலும் அன்பாக இருந்தார். அதே போன்று தந்தையைப் பின் பற்றுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அன்பானவர் ஆகுகின்றீர்களோ அந்தளவிற்கு உங்களால் அன்பில் மூழ்கி இருக்க முடியும். அத்துடன் மற்றவர்களையும் உங்களுக்கு சமமானவராகவும், தந்தைக்குச் சமமானவராகவும் இலகுவாக ஆக்க முடியும்.