15.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நினைவில் இருந்தவாறு உணவு சமையுங்கள். அப்பொழுது அவ்வுணவை உண்பவர்களின் இதயம் தூய்மையாகும். பிராமணர்களாகிய உங்களுடைய உணவு மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
கேள்வி:
சத்திய யுகத்திலே மரணம் உங்கள் வாசலுக்கு வராமைக்குக் காரணம் என்ன?
8பதில்:
'எவ்வாறு மரணித்து வாழ்வது” என்பதைச் சங்கம யுகத்திலே குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடம் கற்கிறீர்கள். 'மரணித்து வாழ்பவர்களின் வாசலுக்கு ஒருபொழுதும் மரணம் வரமுடியாது. எவ்வாறு மரணிப்பது என்பதைக் கற்பதற்கு நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். சத்தியயுகமே அமரத்துவ உலகம். அங்கே எவருக்கும் மரணம் வரமுடியாது. இராவண இராச்சியம் மரண உலகம் என்பதாலேயே அனைவரும் இங்கு அகால மரணத்தைத் தொடர்ந்தும் அனுபவம் செய்கிறார்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகளைப்; பார்த்துவிட்டு இங்கு வரும்பொழுது, உங்களுடைய புத்தி நாம் எவ்வாறு சூத்திரர்களாக இருந்தோம் என்பதையும், நாம் எவ்வாறு பிராமணர்கள் ஆகினோம் என்பதையும், பின்னர் நாம் எவ்வாறு சூரிய வம்ச, சந்திர வம்ச தேவர்களாக ஆகுவோம் என்பதையும் நினைவுசெய்ய வேண்டும். இந்தச் சங்கம யுகத்தின் மாதிரிகளைக் கண்காட்சிகளில் நீங்கள் வைக்க வேண்டும். சத்தியயுகத்திற்கும், கலியுகத்திற்கும் இடையில் இந்த சங்கமயுகம் உள்ளது. எனவே, சங்கமயுகத்திற்கான மாதிரி நடுவிலே இருக்க வேண்டும். அதில், 15 தொடக்கம் 20 வரையானோர் வெண்ணிற ஆடை அணிந்து, தபஸ்யாவிலே அமர்ந்திருப்பதை நீங்கள் காட்ட வேண்டும். எவ்வாறு சூரிய வம்சம் சித்தரிக்கப்படுகிறதோ, அவ்வாறே சந்திர வம்சமும் சித்தரிக்கப்பட வேண்டும். தபஸ்யா செய்பவர்களே பின்னர் அவ்வாறு ஆகுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ளும் வகையிலான மாதிரிகளை நீங்கள் உருவாக்க வேண்டும். ஆரம்பத்தில் நீங்கள் சாதாரண ஆடை அணிந்து தபஸ்யா செய்யும் உருவங்களும், பின்னர் எதிர்காலத்தில் உங்கள் இராஜ அந்தஸ்திற்கு ஏற்ற ஆடைகளை அணிந்திருக்கும் உருவங்களும் இருக்கின்றன. இவ் ஆத்மாக்களே அவ்வாறு ஆகுகின்றனர் என நீங்கள் விளங்கப்படுத்தக் கூடியவகையில், இந்த உருவங்கள் அமைக்கப்பட வேண்டும். நீங்கள் அதனை மிகச்சரியாகக் காட்ட வேண்டும். பிரம்மகுமார்கள், குமாரிகளாகிய நாங்கள் இராஜயோகத்தைக் கற்று, அவ்வாறு ஆகுகிறோம். எனவே, நீங்கள் நிச்சயமாகச் சங்கமயுகத்தையும் காட்ட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அந்தக் கண்காட்சியைக் கண்டுகளித்த பின்னர் வந்திருப்பதால், இந்த ஞானம் நாள் முழுவதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். அப்பொழுதே ஞானக்கடலின் குழந்தைகளாகிய, மாஸ்டர் ஞானக்கடல்கள் என உங்களை அழைக்க முடியும். உங்கள் புத்தியிலே ஞானம் எதுவும் இல்லாவிட்டால், உங்களை ஞானக்கடல் என்று அழைக்க முடியாது. நாள் முழுவதும் உங்கள் புத்தி இதில் ஈடுபட்டிருக்க வேண்டும். உங்கள் பந்தனங்கள் துண்டிக்கப்படும். இப்பொழுது நாங்கள் பிராமணர்கள், பின்னர் தேவர்கள் ஆகுவோம். நீங்கள் நல்ல முயற்சி செய்யாவிட்டால், நீங்கள் சத்திரிய குலத்திற்கே செல்வீர்கள். உங்களால் வைகுண்டத்தைக் காணவும் முடியாது. வைகுண்டமே முக்கிய விடயமாகும். சத்தியயுகமே உலகின் அற்புதம் என அழைக்கப்படுகிறது. இதனாலேயே நீங்கள் நல்ல முயற்சி செய்ய வேண்டும். உங்களுடைய இரண்டு படங்களும் இருக்க வேண்டும்: ஒன்றிலே ஆபரணங்கள் அணிந்து வர்ண ஆடையுடன் இருப்பதைப் போன்றும், மற்றையதிலே நீங்கள் தபஸ்யாவிலே இருப்பதைப் போன்றும் இருக்க வேண்டும். அப்பொழுது, சூட்சும உலகத்திலே அமர்ந்திருப்பவர்கள் நீங்களே என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். உங்கள் ஆடைகள் மாறலாம், ஆனால் உங்கள் முகச்சாயலை மாற்றமுடியாது. அது தூய்மையற்ற இல்லறப் பாதை, இதுவோ தூய இல்லறப் பாதை. இதன் மூலமாக நீங்கள் ஸ்தாபனையை மேற்கொள்கிறீர்கள் என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியும். முயற்சி செய்பவர்கள் பலனைப் பெறுவார்கள். பிராமணர்கள் ஆகப் போகின்ற பலர் இருக்கிறார்கள். இந்நேரத்திலே, உங்களில் வெகு சிலரே இருக்கிறீர்கள். நாளுக்கு நாள் தொடர்ந்தும் விரிவாக்கம் இடம்பெறும். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதுவும், இப்பொழுது நீங்கள் எவ்வாறு தபஸ்யா செய்து, பின்னர் அவ்வாறு ஆகுவீர்கள் என்பதுவும் உங்கள் புத்தியில் உள்ளன. இதுவே சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுகின்ற விழிப்புணர்விலே இங்கே அமர்ந்திருத்தல் எனப்படுகிறது. ஏனெனில் உங்களுடைய புத்தியில் ஞானம் முழுவதும் உள்ளது: நாங்கள் முன்னர் எவ்வாறு இருந்தோம். இப்பொழுது என்னவாக ஆகுகின்றோம். ஒரு மாணவன் நிச்சயமாக அவருடைய ஆசிரியரை நினைவுசெய்வார். நீங்களும் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நினைவு யாத்திரை மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஓர் ஆத்மா தூய்மையானதும், அவர் ஒரு தூய சரீரத்தைப் பெறுகிறார். சூத்திரர்களிலிருந்து, பிராமணர்கள் ஆகுபவர்கள் பின்னர் தேவர்கள் ஆகுகிறார்கள். இதன் மாதிரியை நீங்கள் எந்தளவிற்குப் பெரிதாக வைத்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நல்லதாகும். ஏனெனில் இந்தச் சங்கமயுகத்துப் பிராமணர்களே அதிமேன்மையானவார்களாக ஆகுகிறார்கள் என்பதை அதில் நீங்கள் எழுத வேண்டும். தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். உச்சியிலே உங்களுக்குக் கற்பிக்கும் சிவபாபாவின் உருவம் உள்ளது. நீங்கள் இவ்வாறு ஆகுகிறீர்கள். இந்த பிரம்மாவும் உங்களோடு இருக்கிறார். அவரும் வெள்ளை ஆடை அணிந்துள்ள ஒரு மாணவரே. மக்கள் இராம இராச்சியத்திலுமே நம்பிக்கை கொள்வதில்லை. ‘இராமரே அரசர், பிரஜைகள் இராமருக்குச் சொந்தமானவர்கள்’ எனக் கூறப்படுகிறது. சத்திய யுகத்திலே தர்மம் நிறைந்த இராச்சியம் நிலவுகின்றது. எவ்வாறாயினும், திரேதா யுகத்திலே சத்திரியர்கள் அவதூறு செய்யப்பட்டுள்ளனர். சூரிய வம்சம் அவதூறு செய்யப்படவில்;லை. ‘அனைவரிலும் தெய்வீகம் நிறைந்திருக்கும் இதுவே தர்மம் நிலவுகின்ற, இராம (கடவுள்) இராச்சியம் எனவும் நீங்கள் எழுத வேண்டும். அது அரைச் சுவர்க்கமே, ஏனெனில் அங்கே 14 சுவர்க்கக் கலைகளே உள்ளன. அங்கே அவதூறான விடயங்கள் எதுவும் இருக்காது. நீங்கள் என்னவாக ஆகுகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். நாம் எமது சொந்த, சுய இராச்சியத்தை ஸ்தாபிக்கிறோம். அனைவரும் விரும்புகின்ற அத்தகையதோர் அமைதியான உலக இராச்சியத்தையே நாங்கள் ஸ்தாபிக்கிறோம். பாபா கண்காட்சிகளைக் காணும்பொழுது, அவருக்குத் தொடர்ந்தும் பல எண்ணங்கள் உருவாகுகின்;றன. குழந்தைகளாகிய நீங்கள் வீடு திரும்பிச் செல்லும்பொழுது, இவ்விடயங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறீர்கள். ஆனால் நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். கண்காட்சிகளில் இருந்து நீங்கள் வெளியே சென்றதும் அனைத்தும் முடிவடைந்து விட்டது என்றிருக்கக்கூடாது. பாபாவின் புத்தியிலிருந்து இவை வெளிப்பட்டுக் கொண்டிருப்பதைப் போன்றே, நன்றாக முயற்சி செய்கின்ற குழந்தைகளின் புத்தியிலும் இது வெளிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் புத்தியிலே ஞானம் இருக்கும்பொழுது, நீங்கள் பாபாவையும் நினைவுசெய்வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் முன்னேறுவீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகாதுவிட்டால், சத்தியயுகத்திற்குச் செல்ல மாட்டீர்கள். எனவே, நீங்கள் உங்களை நினைவு யாத்திரையில் உறுதியாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் இராஜயோகிகள். உங்களுக்கு நீண்ட கூந்தல் உள்ளது. அவை அனைத்தும் தாய்மாராகிய உங்களுடைய புகழ்ச்சியாகும். உங்களுக்கு இயற்கையான கூந்தல் உள்ளது. இராஜயோகிகளாகிய உங்களுடைய உண்மையான வடிவமும், யோகி தபஸ்விகளும் அவ்வாறாகக் காட்டப்பட்டுள்ளனர். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தை கூறுகிறார்: சரீரத்தின் சமயங்கள் அனைத்தையும் துறந்து, நீங்கள் ஆத்மாக்கள் என்பதிலே நம்பிக்கை கொண்டிருங்கள். சரீரத்தின் உறவுமுறைகள் அனைத்தையும் மறந்துவிடுங்கள். ஒரேயொரு தந்தையை மட்டும் நினைவுசெய்யுங்கள். அவர் உங்களைச் செல்வச் செழிப்பு நிறைந்தவர்கள் ஆக்குகிறார். 'மரணித்து வாழுங்கள்!" 'மரணித்து வாழ்வது எவ்வாறு" என்பதைத் தந்தை வந்து, உங்களுக்குக் கற்பிக்கிறார். தந்தை கூறுகிறார்: நானே மகாமரணம் ஆவேன். மரணம் உங்கள் வாசலிற்கு ஒருபொழுதும் வராதிருக்கும் வகையிலே நீங்கள் எவ்வாறு மரணிக்க வேண்டும் என நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். அங்கே இராவண இராச்சியம் இல்லை. சத்தியயுகத்திலே அகால மரணம் இடம்பெறுவதில்லை. அது அமரத்துவ உலகமென அழைக்கப்படுகிறது. பாபா உங்களை அமரத்துவ உலகின் அதிபதிகள் ஆக்குகிறார். இது மரண பூமியும், அது அமரத்துவ பூமியும் ஆகும். இதுவே இராஜயோகம். 'பாரதத்தின் புராதன இராஜயோகம் மீண்டும் ஒருமுறை கற்பிக்கப்படுகிறது" என நீங்கள் எழுதலாம். கண்காட்சிகளைப் பார்ப்பவர்கள் அதிலே வேறு எதனைச் செய்தால், அதைப் பார்க்கும் மக்கள் மிகச்சரியாகப் புரிந்து கொள்வார்களெனச் சிந்திக்க வேண்டும். அதிலே மிக நல்ல நடைமுறை விளக்கம் உள்ளது. அரசர், அரசி எவ்வாறோ, பிரஜைகளும் அவ்வாறே என்பதும் அதில் உள்ளடக்கப்படும். தந்தை உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். இதையே நீங்கள் பிரதானமாக வலியுறுத்த வேண்டும். தூய்மை, அமைதி, சந்தோஷம் என்பன உலகில் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகின்றன என்பதை வந்து புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அனைத்தையும் உங்களுக்காகவே செய்கிறீர்கள். நீங்கள் எந்தளவிற்கு முயற்சி செய்கிறீர்களோ, அதற்கேற்பவே ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். இதுவும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. நீங்கள் எவ்வாறு வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள் என்பதையும் காட்ட வேண்டும். பிரஜைகளைச் செல்வந்தப் பிரஜைகளாகவும், இரண்டாம் தரமான பிரஜைகளாகவும், மூன்றாந்தரமான பிரஜைகளாகவும் காட்ட வேண்டும். உங்களால் மிக நன்றாக விளங்கப்படுத்தக்கூடிய வகையிலே அதை மிகச்சரியாகக் காட்டுங்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். மிகவும் குறுகிய காலமே எஞ்சி உள்ளது. இந்த ஞானம் உங்களுக்கானது. 'நாம் ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்ய வேண்டும், அபபொழுதே நாமும் அவ்வாறு ஆக முடியும்" என மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் கண்காட்சியில் விளங்கப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அவர்கள் மீண்டும் பக்தி மார்க்கத்திற்கே செல்வார்கள். நீங்கள் மகாராத்திக் குழந்தைகள் என்பதால் உங்கள் புத்தி இதில் ஈடுபட வேண்டும். மிகவும் நல்ல ஆண்களும்; இருக்கிறார்கள். சஞ்சிகைகள் எழுதும் ஜெகதீஸ் முதல் இலக்கத்திற்குரியவர். பிரிஜ் மோகனும் எழுதுவதிலே ஆர்வமுடையவர். ஒருவேளை மூன்றாவதாகவும் ஒருவர் தோன்றலாம். நாளுக்கு நாள் நீங்கள் ஒவ்வொரு விடயத்தையும் தொடர்ந்தும் தெளிவுபடுத்துவீர்கள். தந்தையே ஞானக்கடல். அந்த பரமாத்மா ஞானத்தால் நிறைந்திருக்கிறார். நீங்கள் கேட்கும் பாடல்கள் ஓர் ஒலிப்பதிவு நாடாவிலே பதியப்பட்டு இருப்பதைப் போலவே இங்கும் அவ்வாறே உள்ளது. நாடகத்திற்கு ஏற்ப நீங்கள் தொடர்ந்தும் தந்தையிடமிருக்கும் பொக்கிஷங்களைப் பெறுவீர்கள். குழந்தைகளாகிய உங்கள் புத்தி இதனையிட்டுச் செயற்பட வேண்டும். நீங்கள் வேலை போன்றவற்றைச் செய்யலாம் அல்லது உங்கள் கரங்களால் உணவு சமைக்கலாம், ஆனால் உங்கள் புத்தி சிவபாபாவுடன் இருக்கட்டும். பிரம்ம போஜனம் தூய்மையானதாக இருக்க வேண்டும். பிரம்ம போஜனே பிராமணர்களின் உணவாகும். உணவு சமைக்கும்பொழுது பிராமணர்கள் எந்தளவிற்கு அதிக யோகம் செய்கிறார்களோ, அந்தளவிற்கு அவ் உணவில் சக்தி நிறைந்திருக்கும். இதயத்தைச் சுத்தப்படுத்தப்படுகின்ற பிரம்ம போஜனத்தைப் பெருமளவு புகழ்கின்ற தேவர்களின் புகழும் உள்ளது. எனவே பிரமாணர்கள் அவ்வாறு (யோகிகளாக) இருக்க வேண்டும். இப்பொழுது அவர்கள் அவ்வாறு இல்லை. இப்பொழுது நீங்கள் அவ்வாறு ஆகினால், அதிகளவு வளர்ச்சி இடம்பெறும். எவ்வாறாயினும், நாடகத்திற்கு ஏற்ப, மெதுவாகவே வளர்ச்சி இடம்பெற வேண்டும். பாபாவின் நினைவுடன் உணவு தயாரிப்பதாகக் கூறும் பிராமணர்கள் வெளிப்படுவார்கள். பாபா உங்களுக்கு ஒரு சவால் விடுகின்றார். யோகத்தில் நிலைத்திருந்து உணவு தயாரிக்கும் அத்தகைய பிராமணர்கள் இருக்க வேண்டும். உணவு தூய்மையாக இருக்க வேண்டும். உங்கள் உணவிலேயே அனைத்தும் அதிகளவு தங்கியுள்ளது. இதைக் குழந்தைகள் வெளியே பெற முடியாது என்பதாலேயே அவர்கள் இங்கே வருகிறார்கள். குழந்தைகள் உணவின்; மூலம் புத்துணர்ச்சி பெறுகின்றார்கள். யோகம் செய்பவர்கள் ஞானிகளாகவும் இருக்கிறார்கள். இதனாலேயே அவர்கள் சேவைக்காக வெளியே அனுப்பப்படுகிறார்கள். இன்னமும் அதிகளவினர் உருவாகும்பொழுது, அத்தகைய பிராமணர்கள் இங்கே தங்க முடியும். எவ்வாறயினும் சமையல் இலாகாவில் மகாராத்திகளும் பிரசன்னமாக வேண்டும். அப்பொழுதே உணவு யோகியுக்தாக சமைக்கப்படும். பிரம்ம போஜனத்தை உட்கொண்டதன் மூலமே தாம் தேவர்களாக ஆகினார்கள் என்பதைத் தேவர்கள் புரிந்துகொண்டார்கள். இதனாலேயே அவர்கள் உங்களை வந்து சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களை எவ்வாறு சந்திக்கிறார்கள் என்பதும் நாடகத்திலே ஒரு யுக்தியாகும். அவர்களும் (தேவர்கள்) நீங்களும் சூட்சும உலகில் சந்திக்கிறீர்கள். இது ஓர் அற்புதமான காட்சி. ஞானமும் அற்புதமானதே, எனவே காட்சிகளும் அற்புதமானவை, அவை அர்த்தம் நிறைந்தவை. பக்தி மார்க்கத்திலே, மக்கள் காட்சிகளைப் பெற அதிகளவு முயற்சி செய்கிறார்கள். காட்சிகளைப் பெறுவதற்காக அவர்கள் தீவிர பக்தி செய்கிறார்கள். தாம் காட்சிகளைப் பெற்றால், முக்தி அடைவார்களென அவர்கள் நம்புகிறார்கள். அந்தத் தேவர்கள் இந்தக் கல்வி மூலமாகவே அவ்வாறு ஆகினார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்தக் கல்வி மூலமே அவர்கள் சூரிய வம்சத்தவர்களாகவும், சந்திர வம்சத்தவர்களாகவும் ஆகினார்கள். உருவாக்கப்பட்டுள்ள அந்தப் படங்கள் அனைத்திலும் எதுவுமே இல்லை. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விரிவாக்கமே. செயற்பாடுகள் மிகவும் சிறந்தவை. இப்பொழுது உங்களால் பக்தியினதும், ஞானத்தினதும் இரகசியங்களைப் புரிந்துகொள்ள முடியும். தந்தையே இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவரே ஆன்மீகத் தந்தை. அவர் மட்டுமே ஞானக்கடல். ஒவ்வொரு சக்கரத்திலும் பழைய உலகைப் புதியதாக்குவதும், இராஜயோகம் கற்பிப்பதும் தந்தையின் கடமை மட்டுமேயாகும். அதை விடுத்து அவர்கள் கீதையிலே அவரது பெயரை மாற்றியுள்ளார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அதுவும் ஒவ்வொரு கல்பத்திலும் இடம்பெறுகின்றது. நாம் எமது வீட்டிலிருந்து இங்கே எமது பாகங்களை நடிப்பதற்காக வருகிறோம். விருட்சத்தின் படத்தை ஏனையவர்களுக்கு எவ்வாறு விளங்கப்படுத்தலாம் என்பதையிட்டு உங்கள் புத்தி வேலை செய்ய வேண்டும். சிலர் வினவுகின்றார்கள்: நாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல மாட்டோமா? அவர்களுக்குக் கூறுங்கள்: உங்கள் சமய ஸ்தாபகர் சுவர்க்கத்திற்குச் செல்வதில்லை. அவர் சுவர்க்கத்திற்குச் செல்லும்பொழுது, நீங்களும் சுவர்க்கத்திற்குச் செல்லலாம். ஒவ்வொரு சமயத்திற்கும் அதற்குரிய நேரத்திலே, அதற்குரிய பாகம் உள்ளது. பல சமயங்களைக் கொண்ட இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நிச்சயிக்கப்பட்ட நாடகம். எதனைப் பற்றியும் இதில் கூறத் தேவையில்லை. பிரதான சமயங்கள் காட்டப்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே இதை அறிவீர்கள். இப்படங்கள் போன்றவை புதியவை அல்ல. அவை ஒவ்வொரு சக்கரத்திலும் அவ்வாறே தொடர்ந்தும் இருக்கும். பலவிதமான தடைகளும் உள்ளன. துன்புறுத்தல் போன்ற தடைகளும் ஏற்படும். அனைத்தும் மிகச் சாமர்த்தியமாகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. அவர்களிடம் கூறுங்கள்: கடவுள் பேசுகின்றார்: காமமே கொடிய எதிரி. கலியுக உலகம் இப்பொழுது அழியப் போகிறது. தேவ தர்மம் ஸ்தாபிக்கப்படுகிறது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, தூய்மையாகுங்கள்! காமத்தை வெல்லுங்கள்! இதனாலேயே போராட்டம் இருக்கிறது. முக்கிய பிரமுகர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்துங்கள். ஆளுனரின் (கவர்னர்) பெயரை மக்கள் கேள்விப்படும் பொழுது, அவர்கள் அனைவரும் வருகிறார்கள். இதனாலேயே அவ்வழிமுறை பயன்படுத்தப்படுகிறது. அவர்களில் ஒருவர் இதை மிக நன்றாகப் புரிந்துகொள்ளும் சாத்தியம் இருக்கிறது. முக்கிய பிரமுகர்களின் பெயரைக் கேள்விப்படும்பொழுது, பலர் வருவார்கள். பிரபல்யமானவர் ஒருவர் வரும் சாத்தியமும் இருக்கிறது. இது மிகக் கடினமானது. பாபா உங்களுக்கு அதிகளவு எழுதுகிறார்: குழந்தைகளே, முதலில் நீங்கள் திறப்புவிழாவிற்கு அழைப்பவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: மனிதனிலிருந்து, தேவனாக மாறுதல் இவ்வாறே சாத்தியம் ஆகுகின்றது. உலகிலே அமைதி நிலவ முடியும். உலகில் சுவர்க்கத்திலேயே அமைதியும், சந்தோஷமும் நிலைத்துள்ளன. பத்திரிகைகளிலே பிரசுரிக்கப்படும் வகையில் சொற்பொழிவாற்றம்பொழுது, நீங்கள் தூங்க முடியாதளவிற்கு உங்களைத் தேடி பலர் வருவார்கள். உங்கள் தூக்கத்தை நீங்கள் துறக்க வேண்டும். சேவையைச் செய்வதன் மூலமும், யோகம் செய்வதனாலும் நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பவர்கள் ஒருபொழுதும் கொட்டாவி விடுவதுமில்லை. ஒருபொழுதும் தூங்கி வழிவதுமில்லை. அவர்கள் சம்பாதிப்பதன் மூலம் நிரப்பப்படுவதால் அவர்கள் தூக்கத்தை உணர்வதில்லை. அது பழக்கம் ஆகிவிடுகின்றது. நீங்களும் ஒரு நல்ல வருமானத்தைப் பெறுகிறீர்கள். கடனாளிகள் ஆகவுள்ளவர்களே கொட்டாவி விடுகின்றார்கள். இதை நன்றாகப் புரிந்து கொண்டவர்களும், நினைவிலே நிலைத்திருப்பவர்களும் ஒருபொழுதும் கொட்டாவி விடமாட்டார்கள். தொடர்ந்தும் நீங்கள் உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் நினைவுசெய்தால், தொடர்ந்தும் கொட்டாவி விடுவீர்கள். இது ஓர் அறிகுறியாகும். சுவர்க்கத்திலே நீங்கள் ஒருபொழுதும் கொட்டாவி விடுவதில்லை. தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்ற பின்னர் உங்கள் உறக்கம், எழுதல், அமர்தல் அனைத்தும் ஒழுக்கத்துடன் இடம்பெறுகின்றன. அது மிகச்சரியானது: ஆத்மா ஒரு முட் கடிகாரத்தைப் போல் ஆகுகிறார். இப்பொழுது ஆத்மா ஒரு மணற் கடிகாரத்தைப் போல் இருக்கிறார், பின்னர் அவர் ஒரு முட் (டநஎநச) கடிகாரத்தைப் போல் ஆக்கப்பட வேண்டும். சிலரால் அவ்வாறு ஆக முடியும். ஏனையோரால் அவ்வாறு செய்ய முடியாதுள்ளது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பந்தனத்திலிருந்து விடுபட்டு, முன்னேறிச் செல்ல வேண்டுமாயின், எப்பொழுதும் உங்கள் புத்தியை ஞானம் நிறைந்ததாக ஆக்குங்கள். மாஸ்டர் ஞானக் கடலாகி, சுய தரிசனச் சக்கரத்தைச் சுழற்றியவாறே நினைவில் நிலைத்திருங்கள்.2. உறக்கத்தை வென்றவர்களாகி, நினைவின் மூலமும் சேவையின் மூலமும் சக்தியைச் சேமியுங்கள். வருமானத்தை ஈட்டுவதில், ஒருபொழுதும் சோம்பலடையாதீர்கள். தூங்கி விழாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அனைவராலும் நேசிக்கப்படுகின்ற, அனைவர் மீதும் அன்பான திருஷ்டியையும் உணர்வுகளையும் கொண்டிருக்கின்ற, ஒரு தேவதை ஆகுவீர்களாக.மக்கள் தங்களது கனவுகளில் ஒரு தேவதையைக் காணும்பொழுது, மிகவும் சந்தோஷமடைகின்;றார்கள். ஒரு தேவதை அனைவராலும் நேசிக்கப்படுபவர். அவர் எல்லைக்குட்பட்ட அன்பைக் கொண்டிருப்பவர் அல்ல, ஆனால் எல்லையற்ற அன்பைக் கொண்டிருப்பவர் . தன்னை நேசிப்பவர்களை மாத்திரமே நேசிப்பவர் அல்ல, ஆனால் அனைவரிடமும் அன்பாக இருப்பவர். ஓர் ஆத்மா எவ்வாறிருந்தாலும், உங்கள் திருஷ்டியும் உணர்வுகளும் அன்பானவையாக இருக்கட்டும். இதுவே அனைவரிடமும் அன்பாக இருத்தல் என்று அறியப்பட்டுள்ளது. ஒருவர் உங்களை அவமதித்தாலோ அல்லது உங்களை வெறுத்தாலோ அவர் மீது அன்பான, நன்மையளிக்கும் உணர்வுகளே இருக்கட்டும். ஏனெனில் அந்நேரத்தில் அந்த ஆத்மா இன்னுமோர் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றார்.
சுலோகம்:
பேறுகள் அனைத்தாலும் நிறைந்திருப்பவர்களே சந்தோஷப் பாக்கியத்தைக் கொண்டிருப்பதால், சதா முகமலர்ச்சியானவர்களாகவும் சந்தோஷமானவர்களாகவும் இருக்கின்றார்கள்.