11.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஓர் எல்லையற்ற புலமைப்பரிசிலைப் பெறுவதற்கு வேறு எவரையும் அன்றி, ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்வதைப் பயிற்சி செய்யுங்கள்.
கேள்வி:
தந்தைக்கு உரியவராகிய பின்னரும் சந்தோஷத்தை அனுபவம் செய்யாதிருப்பதற்கான காரணங்கள் எவை?
பதில்:
1. முழு ஞானமும் உங்கள் புத்தியில் நிலைத்திருப்பதில்லை. 2. நீங்கள் தந்தையை மிகச்சரியாக நினைவுசெய்வதில்லை. நீங்கள் பாபாவை நினைவுசெய்யாததால், மாயை உங்களை ஏமாற்றிவிடுகின்றாள். இதனாலேயே சந்தோஷம் இருப்பதில்லை. தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார் என்ற போதை குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்க வேண்டும். பின்னர் நீங்கள் எப்பொழுதும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருப்பீர்கள். தூய்மை, சந்தோஷம், அமைதி என்ற தந்தையின் ஆஸ்தியினால் நிறைந்தவர்கள் ஆகுங்கள், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் ‘ஓம் சாந்தி’ என்பதன் அர்த்தத்தை மிக நன்றாக அறிவீர்கள்;: ‘நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம்’. இதனை மிக நன்றாக நினைவுசெய்யுங்கள். கடவுள், அதாவது, ஆத்மாக்களின் தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். முன்னர் நீங்கள் இதனை எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? கிருஷ்ணரே தங்களுக்குக் கற்பிக்கின்றார் என மக்கள் எண்ணுகின்றார்கள். எவ்வாறாயினும், அவருக்குப் பெயரும், வடிவமும் உள்ளன. உங்களுக்குக் கற்பிக்கின்ற ஒரேயொருவர் அசரீரியான தந்தையாவார். பரமாத்மா பேசும்பொழுது ஆத்மாக்கள் செவிமடுக்கின்றார்கள்;. இது புதிய விடயமாகும். விநாசம் நிச்சயமாக இடம்பெறவுள்ளது. விநாசத்தின்பொழுது, அன்பில்லாத புத்தியைக் கொண்டவர்களும், விநாசத்தின்பொழுது அன்பான புத்தியைக் கொண்டவர்களும் உள்ளனர். கடவுள் சர்வவியாபி என்றும், அவர் கற்களிலும் கூழாங்கற்களிலும் இருக்கின்றார் என்றும் நீங்களும் முன்னர் கூறினீர்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் நீங்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்மாக்கள் அழிவற்றவர்களும், சரீரங்கள் அழியக்கூடியவையும் எனவும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மா அளவில் பெரியதாகவும் சிறியதாகவும் ஆகுவதில்லை. ஓர் ஆத்மா மிகவும் சின்னஞ்சிறியவர். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா 84 பிறவிகளை எடுத்து, தனது முழுப் பாகத்தையும் நடிக்கின்றார். ஆத்மாவே சரீரத்தை இயக்குகின்றார். அதிமேலான தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதால் நீங்களும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். ஆத்மாவே கற்று, ஓர் அந்தஸ்தையும் பெறுகின்றார். ஓர் ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தில் எவ்வாறு பிரவேசித்து, வெளியேறுகின்றார் என்பதைக் காண்பதற்குப் பலரும் முயற்சிக்கின்றார்கள். ஆனால் எவ்வாறு என்பதை அவர்களால் கூற முடியாது. ஓர் ஆத்மாவை ஒருவரால் காண நேர்ந்தாலும், அவர் எதனையும் புரிந்துகொள்ள மாட்டார். ஆத்மாவே சரீரத்தில் இருக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாக்கள் தங்கள் மனித சரீரங்களிலிருந்து வேறுபட்டவர்கள். ஆத்மாக்கள் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகுவதில்லை. சரீரங்களே சிறியவையிலிருந்து பெரியதாகுகின்றன. ஆத்மாக்களே தூய்மையானவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகுகின்றார்கள். ஆத்மாக்களே தந்தையைக் கூவியழைக்கின்றார்கள்: ஓ பாபா, தூய்மையற்ற ஆத்மாக்களைத் தூய்மையாக்;;குபவரே, வாருங்கள்! ஆத்மாக்கள் அனைவரும் மணவாட்டிகள் (சீதைகள்) என்றும், அவரே ஒரேயொரு மணவாளனான இராமர் என்றும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் மணவாளர்கள் என்று அம்மக்கள் பின்னர் கூறுகின்றார்கள். மணவாளன் அனைவரிற்குள்ளும் பிரவேசிப்பது சாத்தியம் அல்ல. பிழையான இந்த ஞானம் அவர்களின் புத்தியில் இருப்பதனால், அவர்கள் தொடர்ந்தும் வீழ்கின்றார்கள். அவரை அவர்கள் அதிகளவு அவமதிப்பதனால், அவர்கள் அவரை அவதூறு செய்து, அதிகளவு பாவங்களைச் செயகின்றார்கள். அவர்கள் தந்தையை அதிகளவு அவதூறு செய்துள்ளார்கள்! குழந்தைகள் எப்பொழுதேனும் தமது தந்தையை அவதூறு செய்வார்களா? எவ்வாறாயினும் இக்காலத்தில் குழந்தைகள் சீரழிந்திருப்பதால் அவர்கள் தமது (லௌகீகத்) தந்தையை அவதூறு செய்ய ஆரம்பிக்கின்றார்கள். அவரோ (சிவபாபா) எல்லையற்ற தந்தை. ஆத்மாக்களே எல்லையற்ற தந்தையை அவதூறு செய்;கின்றார்கள். ‘பாபா, நீங்கள் முதலையிலும் மீனிலும் அவதரிக்கின்றீர்கள்’. அரசிகளைக் கடத்தினார் என்றும், வெண்ணெயைத் திருடினார் என்றும் அவர்கள் கிருஷ்ணரையும் அவதூறு செய்துள்ளார்கள். அவருக்கு வெண்ணெயைத் திருட வேண்டிய அவசியம் என்ன? அவர்களின் புத்தி மிகவும் தமோபிரதான் ஆகியுள்ளது! நான் வந்து தூய்மையாகுவதற்கு மிகவும் இலகுவான வழியை உங்களுக்குக் காட்டுகின்றேன். தந்தை மாத்திரமே சர்வசக்திவானான, தூய்மையாக்குபவர். சாதுக்களும், புனிதர்களும் சமயநூல்களின் அதிகாரிகள் எனக் கூறப்படுவதைப் போன்று, சங்கராச்சாரியாரும் வேதங்களினதும், சமயநூல்களினதும் அதிகாரி என்று கூறப்படுவார். அவர்கள் அதிகளவு ஆடம்பரமாக உள்ளார்கள். சிவாச்சாரியார் எவ்வித ஆடம்பரமும் அற்றவர். அவர் தன்னுடன் சிஷ்யர்களின் குழுவொன்றை வைத்திருப்பதில்லை. அவர் இங்கமர்ந்திருந்து அனைத்து வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சம்சத்தைப் பேசுகின்றார். சிவபாபா தனது ஆடம்பரத்தைக் காட்ட வேண்டுமாயின், அதற்கு முதல் பிரம்மாவின் ஆடம்பரம் இருக்க வேண்டும்; ஆனால் இல்லை! தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்கள் சேவகன். தந்தை இவருக்குள் பிரவேசித்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் தூய்மையாகினீர்கள், பின்னர் 84 பிறவிகளின்பொழுது, தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இவரது வரலாறும் புவியியலும் மீண்டும் இடம்பெறும். இவரே 84 பிறவிகளினூடாகச் சென்றார். அவருக்குச் சதோபிரதான் ஆகுவதற்கான வழி காட்டப்பட்டுள்ளது. தந்தை மாத்திரமே சர்வ சக்திவான்;. அவர் அனைத்து வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சத்தை பிரம்மா மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் படங்களில் பிரம்மாவைச் சமயநூல்களுடன் சித்தரித்துள்ளார்கள். ஆனால் உண்மையில் சமயநூல்கள் என்ற கேள்விக்கு இடமில்லை. பாபாவிடமும் சமயநூல்கள் இருப்பதில்லை, இவரிடமும் சமயநூல்கள் இருப்பதில்லை. உங்களிடமும் சமயநூல்கள் இருப்பதில்லை. அந்த ஒரேயொருவர் எப்பொழுதும் உங்களுக்குப் புதிய விடயங்களையே கூறுகின்றார். சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை என்று உங்களுக்குத் தெரியும். நான் சமயநூல்களைக் கூறுவதில்லை. நான் வாய்வழியாகவே உங்களிடம் பேசுகின்றேன். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். அது பின்னர் பக்தி மார்க்கத்தில் கீதை என்று பெயரிடப்பட்டது. என்னிடமோ அல்லது உங்களிடமோ கீதை போன்றன உள்ளனவா? இது ஒரு கல்வி. இதில் வாசகங்கள் போன்ற எந்தக் கேள்விக்கும் இடமில்லை. நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றேன், நான் தொடர்ந்தும் இதேபோன்று ஒவ்வொரு சக்கரத்திலும் உங்களுக்குக் கற்பிப்பேன். நான் அத்தகைய இலகுவான விடயங்களையே விளங்கப்படுத்துகின்றேன்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். உங்கள் சரீரங்கள் மண்ணோடு மண்ணாகிவிடும். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், சரீரங்கள் தொடர்ந்தும் எரிக்கப்படுகின்றன. ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் ஒருமுறையே வருகின்றேன். மக்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அது உண்மையில் சிவ ஜெயந்தி என்றே அழைக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், ஜெயந்தி என அழைப்பதென்றால், தாயின் கருப்பையில் மூலம் பிறப்பு எடுப்பது என்பதாகும். இதனாலேயே அவர்கள் சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள். துவாபர, கலியுகங்களின் இரவில் அவர்கள் என்னைத் தேடுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: அவர் சர்வவியாபி. ஆகையால், அவர் உங்களுக்குள்ளும் உள்ளார். அவ்வாறாயின் நீங்கள் ஏன் தடுமாறித் திரிகின்றீர்கள்? தேவர்களில் இருந்து நீங்கள் முற்றிலும் அசுர சமுதாயத்தைச் சேர்ந்தவராகியது போன்றுள்ளது. தேவர்கள் மதுபானம் அருந்துவார்களா? அதே ஆத்மாக்களே வீழ்ந்து, பின்னர் மதுபானம் போன்றவற்றை அருந்த ஆரம்பித்தார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது, இப் பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது. பழைய உலகில், எண்ணற்ற சமயங்கள் உள்ளன. புதிய உலகில் ஒரேயொரு தர்மமே உள்ளது. ஒரேயொரு தர்மத்திலிருந்து, இப்பொழுது பல சமயங்கள் உள்ளன. ஆகையால் இப்பொழுது நிச்சயமாக ஒரேயொரு தர்மம் இருக்க வேண்டும். மக்கள் கலியுகம் இன்னமும் 40,000 வருடங்கள் நீடிக்கும் என்று கூறுகின்றார்கள். அதுவே காரிருள் என்று அழைக்கப்படுகின்றது. ஞான சூரியன் உதயமாகும்பொழுது, அறியாமை இருள் அகற்றப்படுகின்றது. மக்கள் அதிகளவு அறியாமையில் உள்ளனர். ஞானசூரியனும், ஞானக்கடலுமாகிய தந்தை வரும்பொழுது, உங்கள் பக்தி மார்க்கத்தின் அறியாமை முடிவடைகின்றது. தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்வதால், நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். கலப்படம் அகற்றப்படுகின்றது. இதுவே யோக அக்கினியாகும். காம அக்கினி உங்களை அவலட்சணமாக்குகின்றது. ஆனால் யோக அக்கினி, அதாவது, சிவபாபாவின் நினைவு உங்களை அழகானவர் ஆக்குகின்றது. அவர்கள் கிருஷ்ணருக்கு சியாம்சுந்தர் (அழகானவரும் , அவலட்சணமானவரும்) என்று பெயரிட்டுள்ளபொழுதும் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை வந்து அதன் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். முதன் முதலில் அவர்கள் சத்தியயுகத்தில் மிகவும் அழகாக இருந்தனர். ஆத்மாக்கள் தூய்மையாகவும், அழகாகவும் இருப்பதால், அவர்கள் தூய அழகான சரீரங்களைப் பெறுகின்றார்கள். அங்கே, செல்வம், சொத்து, ஏனைய அனைத்தும் புதிதாகவே இருக்கின்றன. புதிய உலகம் பின்னர் பழையதாகுகின்றது. இப் பழைய உலகம் இப்பொழுது நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது. அதற்கு அதிகளவு ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. தங்கள் சொந்தக் குலத்தையே தாங்கள் அழிக்கின்றோம் என்பதை அம்மக்கள் புரிந்தகொண்ட அளவிற்கு, பாரத மக்கள் புரிந்துகொள்வதில்லை. விஞ்ஞானத்தின் மூலம் தமது சொந்த அழிவை யாரோ தூண்டுகின்றார்கள் என்று அவர்கள் உணர்கின்றார்கள். கிறிஸ்துவுக்கு 3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வைகுந்தம் இருந்தது என்று நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். அது அந்த இறைவர், இறைவிகளின் உலகமாக இருந்தது. பாரதமே புராதன தேசமாகும். இலக்ஷ்மியும் நாராயணனும் இந்த இராஜயோகத்தைக் கற்பதனால், அவ்வாறு ஆகினார்கள். தந்தை ஒருவரால் மாத்திரமே இந்த இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும். சந்நியாசிகளினால் இதனைக் கற்பிக்க முடியாது. இந்ந்hட்களில் பல ஏமாற்றுதல்கள் இடம்பெறுகின்றன. அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பாரதத்தின் புராதன யோகத்தைக் கற்பிக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். பின்னர் அவர்கள் முட்டை உண்ணலாம், மதுபானம் அருந்தலாம், நீங்கள் எதுவும் செய்யலாம் என்றும் கூறுகின்றார்கள். அவர்களால் எவ்வாறு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? அவர்களால் எவ்வாறு மனிதர்களைத் தேவர்கள் ஆக்க முடியும்? ஆத்மாக்கள் மிகவும் மேன்மையானவர்களாக இருந்தனர், அவர்கள் பின்னர் மறுபிறவிகள் எடுப்பதால் சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆகுகின்றனர் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மீண்டும் ஒருமுறை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். அங்கு வேறு சமயங்கள் எதுவும் இல்லை. தந்தை கூறுகின்றார்: நரகம் நிச்சயமாக அழிக்கப்படவுள்ளது. இங்கு வந்தவர்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். சிவபாபாவின் ஞானத்தைச் சிறிதளவு செவிமடுத்தாலும் அவர்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். அதன்பின்னர் அவர்கள் எந்தளவிற்குக் கற்று, தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கின்றார்கள் என்பதற்கேற்ப, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். இப்பொழுது இது அனைவருக்கும் விநாசத்திற்கான காலமாகும். விநாசத்தின்பொழுது அன்பான புத்தியைக் கொண்டவர்கள் தந்தையைத் தவிர வேறெவரையும் நினைவுசெய்ய மாட்டார்கள். அவர்களே உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருபவர்;கள். இதுவே ஓர் எல்லையற்ற புலமைப்பரிசில் என அழைக்கப்படுகின்றது. இதில் நீங்கள் விரைந்தோட வேண்டும். இதுவே இறை அதிர்ஷ்டலாபச் சீட்டாகும். முதலில் நினைவு இருக்க வேண்டும், இரண்டாவதாக, நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் அரசர்களும் அரசிகளும் ஆக வேண்டுமாயின், பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். சிலர் பல பிரஜைகளையும், ஏனையோர் வெகு சிலரையும் உருவாக்குகின்றார்கள். நீங்கள் சேவை செய்வதாலேயே பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள். அருங்காட்சியகங்கள், கண்காட்சிகள் போன்றவற்றில் சேவை செய்வதனால், பல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள். நீங்கள் இந்நேரத்தில் கற்கின்றீர்கள். பின்னர் சூரிய வம்சத்திற்குள்ளும், சந்திர வம்சத்திற்குள்ளும் நீங்கள் செல்வீர்கள். இதுவே பிராமணர்களாகிய உங்கள் குலமாகும். தந்தை பிராமணக் குலத்தைத் தத்தெடுத்து, அவர்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் ஒரு குலத்தையும், இரண்டு வம்சங்களையும் உருவாக்குகின்றேன்: சூரிய வம்ச சக்கரவர்;த்திகளும், சக்கரவர்த்தினிகளும், சந்திர வம்சத்தின் அரசர்களும் அரசிகளும். அவர்களே இரட்டைக் கிரீடம் அணிந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். பின்னர் விகாரமுடைய அரசர்கள் வரும்பொழுது, அவர்களிடம் ஒளிக் கிரீடம் இருக்க மாட்டாது. அவர்கள் இரட்டைக் கிரீடம் உள்ளவர்களுக்கே ஆலயங்கள் கட்டி, வழிபடுகின்றார்கள். தூய்மையாக இருந்தவர்களின் விக்கிரகங்களின் முன்னிலையில் அவர்கள் தலைவணங்குகின்றார்கள். அவ்விடயங்கள் சத்தியயுகத்தில் இடம்பெறுவதில்லை. அது தூய உலகமாகும். அங்கே தூய்மையற்ற எவரும் இருப்பதில்லை. அது விகாரமற்ற உலகமான, சந்தோஷ தாமம் என்று அழைக்கப்படுகின்றது, ஆனால் இதுவோ விகாரமான உலகம் என்று அழைக்கப்படுகின்றது. இங்குள்ள ஒருவரேனும் தூய்மையானவர் அல்லர். சந்நியாசிகள் தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் விட்டு ஓடி விடுகின்றார்கள். கோபிசந்த் இராஜாவின் உதாரணம் உள்ளது. எந்த மனிதராலும் பிறருக்கு முக்தியையோ அல்லது ஜீவன்முக்தியையோ கொடுக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். நான் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். நான் வந்து அனைவரையும் தூய்மையாக்குகின்றேன். சிலர் தூய்மையாகி அமைதி தாமத்திற்குச் செல்வார்கள், ஏனையோர் தூய்மையாகிச் சந்தோஷ உலகிற்குச் செல்வார்கள். இது தூய்மையற்ற, துன்ப உலகமாகும். சத்தியயுகத்தில் நோய்கள் போன்றன எதுவும் இருக்க மாட்டாது. நீங்கள் அந்தச் சந்தோஷ தாமத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள். பின்னர் இராவண இராச்சியத்தில் நீங்கள் துன்ப உலகின் அதிபதிகள் ஆகினீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் ஒவ்வொரு சக்கரத்திலும் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். நீங்கள் புதிய உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். பின்னர் தூய்மையற்ற நரகவாசிகள் ஆகுகின்றீர்கள். பின்னர் தேவர்கள் விகாரமுடையவர்களாகி, பாவப்பாதையில் வீழ்கின்றார்கள். தந்தை வந்து இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார்: நான் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் ஒருமுறை மாத்திரமே வருகின்றேன். நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. சக்கரத்தின் சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றேன், ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. சக்கரங்களின் சங்கமத்தின்பொழுதே, நான் வருவதற்கான காரணம் என்ன? ஏனெனில் நான் நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுகின்றேன். நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றேன். சில குழந்தைகள் எழுதுகின்றார்கள்: பாபா, எனக்கு எந்தச் சந்தோஷமோ உற்சாகமோ இல்லை. ஓ உண்மையா? தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார்! அத்தகைய தந்தையை நினைவுசெய்வதனால் நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லையா? நீங்கள் அவரை முழுமையாக நினைவுசெய்யாததாலேயே உங்களால் சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. உங்களைத் தூய்மையற்றவராக்குகின்ற உங்கள் கணவரை நினைவுசெய்யும்பொழுது நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். ஆனால் உங்களை இரட்டைக் கிரீடம் அணிந்தவராக்குகின்ற தந்தையை நினைவுசெய்யும்பொழுது நீங்கள் சந்தோஷமாக இருப்பதில்லை. நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். இருப்பினும், நீங்கள் சந்தோஷமாக இருப்பதில்லை என்று கூறுகின்றீர்கள்! உங்கள் புத்தியில் முழு ஞானமும் இல்லை. நீங்கள் என்னை நினைவுசெய்யாததாலேயே மாயை உங்களை ஏமாற்றுகின்றாள். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் விளங்கப்படுத்துகின்றார். நான் கல்லுப்புத்தியைக் கொண்டவர்களாகி விட்ட ஆத்மாக்களைத் தெய்வீகப் புத்தியைக் கொண்டவர்கள் ஆக்குகின்றேன். ஞானம் நிறைந்த தந்தையே வந்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் அனைத்தினாலும் நிறைந்துள்ளார். அவர் முற்றிலும் தூய்மையானவரும் அன்பு நிறைந்தவரும் ஆவார். அவரே ஞானக்கடலும், சந்தோஷக் கடலும், அன்புக்கடலும் ஆவார். நீங்கள் இந்த ஆஸ்தியை அத்தகைய தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். நீங்கள் அவ்வாறு ஆகுவதற்கே இங்கு வந்துள்ளீர்;கள். எவ்வாறாயினும், அந்த ஆன்மீக ஒன்றுகூடல்கள் அனைத்தும் பக்திமார்க்கத்திற்கு உரியவை. அங்;கே இலக்கோ அல்லது இலட்சியமோ இல்லை. இது கீதா பாடசாலை என்று அழைக்கப்படுகின்றது. இது வேதங்களுக்கான பாடசாலை அல்ல. நீங்கள் இந்தக் கீதையின் மூலம் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுகின்றீர்கள். நிச்சயமாகத் தந்தையே உங்களை அவ்வாறு ஆக்குகின்றார். மனிதர்களால் மனிதர்களைத் தேவர்கள் ஆக்க முடியாது. தந்தை மீண்டும் மீண்டும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்கள் என்று கருதுங்கள். நீங்கள் சரீரங்கள் அல்ல. ஆத்மா கூறுகின்றார்: நான் ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றேன். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சிவபாபா எந்த ஆடம்பரமும் இல்லாமல், குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்க ஒரு சேவகராக வருவதைப் போன்று, அதிகாரிகளான நீங்களும் தந்தையைப் போன்று ஆணவமற்றவராக இருங்கள். நீங்களும் தூய்மையாகி, பிறரையும் தூய்மையாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.
2. விநாசத்தின்பொழுது இறை அதிர்ஷ்ட இலாபச்சீட்டைப் பெறுவதற்கு, அன்பான புத்தி உடையவராகி, நினைவு யாத்திரையில் விரைந்தோடி, தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சகல உரிமைகளையும் கொண்டுள்ள ஓர் ஆத்மாவாகி, இறை சேவையைச் செய்வதனால் பல்வகைப் பலன்களைப் பெறுவீர்களாக.
கூறப்பட்டுள்ளது: சேவையைச் செய்து, அதன் பலனை உண்ணுங்கள். இறை ஞானத்தைக் கொடுப்பதே இறை சேவையாகும், இந்தச் சேவையைச் செய்பவர்கள் அதீந்திரிய சுகம், சக்திகள், சந்தோஷம் எனும் பல்வகைப் பலனைப் பெறுகின்றார்கள். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இதற்கான ஓர் உரிமையைக் கொண்டிருக்கின்றீர்கள், ஏனெனில் கற்று, பிறரையும் கடவுளுக்கு உரியவர்களாக்கும் இந்த இறை கல்வியை கற்பிப்பதே உங்கள் கடமையாகும். அத்தகைய இறை சேவையைச் செய்வதனால், நீங்கள் இறை பலன்களுக்கான ஓர் உரிமையைக் கோருகின்றீர்கள்; இந்தப் போதையைப் பேணுங்கள்.சுலோகம்:
தந்தையுடன் இருந்தவாறே செயல்களைச் செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பீர்கள்.