12.11.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது ஆசிரியர்களாகி, மனதை ஓழுங்குபடுத்தும் மந்திரத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இதுவே குழந்தைகளாகிய உங்கள் அனைவரதும் கடமையாகும்.
கேள்வி:
எவ்வாறான குழந்தைகளிடமிருந்து பாபா எதனையும் ஏற்றுக் கொள்வதில்லை?
பதில்:
தாங்கள் எவ்வளவு கொடுக்கின்றோம் அல்லது தாங்கள் எவ்வளவு உதவி செய்கின்றோம் என்ற அகங்காரத்தைக் கொண்டவர்களிடமிருந்து பாபா எதனையும் ஏற்றுக் கொள்வதில்லை. பாபா கூறுகிறார்: எனது கையில் திறவுகோல் உள்ளது. நான் விரும்பினால் எவரையும் ஏழையாக ஆக்கமுடியும் அல்லது செல்வந்தராக ஆக்க முடியும். இதுவும் நாடகத்திலுள்ள ஓர் இரகசியமாகும். தங்கள் செல்வத்தையிட்டு அகங்காரம் கொண்டவர்கள் நாளை ஏழை ஆகுவார்கள். ஆனால் தங்களிடமுள்ள ஒவ்வொரு சதத்தையும் தந்தையின் பணிக்கு உதவி செய்வதற்குத் தகுதியான முறையில் உபயோகிக்கின்ற ஏழை மக்கள் செல்வந்தர்கள் ஆகுவார்கள்.
ஓம் சாந்தி.
புதிய உலகம் என்ற எங்கள் ஆஸ்தியை எங்களுக்குக் கொடுப்பதற்குத் தந்தை வந்துள்ளார் என்பதை ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்குத் தூய்மையாகுவீர்கள், எந்தளவிற்கு நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கே ஓர் உயர் அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்ற உறுதியான புரிந்துணர்வு குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. தந்தை ஓர் ஆசிரியராக எவ்வாறு கற்பிப்பது என்பதை உங்களுக்குக் கற்பிக்கிறார். பின்னர், நீங்கள் பிறருக்குக் கற்பிக்க வேண்டும். நீங்கள் நிச்சயமாக, பிறருக்கும் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகுகிறீர்கள். ஆனால் உங்களால் எவரினதும் குருவாக முடியாது; உங்களால் ஓர் ஆசிரியராக மாத்திரமே வர முடியும். உங்களுக்குக் கற்பிக்கின்ற ஒரேயொரு சற்குருவே குரு ஆவார். ஒரேயொருவரே அனைவரினதும் சற்குரு. அவர் உங்களை ஆசிரியர்கள் ஆக்குகின்றார். நீங்கள் அனைவருக்கும் கற்பித்து, அவர்களுக்கு “மன்மனாபவ”விற்கான பாதையையும் காட்டுகிறீர்கள். தந்தையை நினைவுசெய்வதுடன் ஆசிரியர்கள்; ஆகுகின்ற கடமையையும் தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார்;. தந்தையின் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளவர்களின் கடமை, தந்தையை நினைவுசெய்வதாகும். ஓர் ஆசிரியராக, அவர் உங்களுக்கு உலகச் சக்கரத்தைப் பற்றிய ஞானத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் பாவாத்மாக்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதனாலேயே தந்தை அனைவருக்கும் கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். அவர் உங்களுக்கு வழிமுறையைக் கொடுக்கின்றார். இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதனால் உங்கள் சரீரங்களும் தூய்மையற்றவையாகி விட்டன. முதலில் நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது பாபா, நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான மிகவும் இலகுவான வழியைக் கூறுகிறார். அவர் கூறுகிறார்: தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூய்மையாகுவீர்கள். நடக்கும்பொழுதும், அமர்ந்திருக்கும் பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். அம்மக்கள் நீராடக் கங்கைக்குச் செல்கிறார்கள்; அவர்கள் கங்கையை நினைவுசெய்கிறார்கள். அதுவே தூய்மையாக்குபவர் என்றும், அதனை நினைவுசெய்வதனால், தாங்கள் தூய்மையாகுவார்கள் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும் தந்தை கூறுகிறார்: அவ்வாறு செய்வதனால், எவராலும் தூய்மையாக முடியாது. நீரினால் எவ்வாறு எவராவது தூய்மையாக முடியும்? தந்தை கூறுகிறார்: நானே தூய்மையாக்குபவர். ஓ குழந்தைகளே, உங்கள் சரீரங்களையும், சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, என்னை நினைவுசெய்து, தூய்மையாகுங்கள். அப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை முக்திதாமமான, உங்கள் வீட்டை அடைவீர்கள். நீங்கள் சக்கரம் முழுவதிலும் உங்கள் வீட்டை மறந்து விட்டீர்கள். சக்கரம் முழுவதிலும் எவரும் தந்தையை அறியார். ஒருமுறை மாத்திரம் தந்தையே வந்து, இந்த வாய் மூலம் தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். இந்த வாய்க்கு அதிகளவு புகழ் உள்ளது. மக்கள் கௌமுக் (பசுவின் வாய்) பற்றிப் பேசுகிறார்கள். அந்தப் பசு ஒரு மிருகமாகும். ஆனால் இது ஒரு மனிதரைக் குறிக்கிறது. இவரே சிரேஷ்ட தாய், இவர் மூலமே சிவபாபா உங்கள் அனைவரையும் தத்தெடுக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நீங்கள் கூற ஆரம்பித்திருக்கிறீர்கள்: பாபா, பாபா. தந்தையும் கூறுகிறார்: இந்த நினைவு யாத்திரை மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். குழந்தைகள் தங்கள் தந்தையை நினைவுசெய்கிறார்கள். அவர்களின் அனைவரினதும் இதயங்களில் அவர்களது தந்தையின் முகம் பதிந்துள்ளது. நீங்கள் ஆத்மாக்கள் என்பது போல், அவர் பரமாத்மா என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவரின் ரூபத்திற்கும், உங்களது ரூபத்திற்கும் இடையே வேறுபாடு இல்லை. அனைத்துச் சரீரங்களின் சாயல்களும் வேறுபட்டவை. ஆனால் ஆத்மாக்கள் அனைவரும் ஒரேமாதிரியானவர்கள். பரமாத்மாவான தந்தையும் ஆத்மாக்களாகிய உங்களைப் போன்றவரே. தந்தை பரந்தாமத்தில் வசிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நாங்களும் பரந்தாமத்தில் வசிக்கிறோம். தந்தையின் ஆத்மாவிற்கும், ஆத்மாக்களாகிய எங்களுக்கும் இடையில் வேறு எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஒரு புள்ளி, நாங்களும் புள்ளி;களே. வேறு எவரும் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை. உங்களுக்கு மாத்திரமே தந்தை கூறுகிறார். தந்தை சர்வவியாபி, அவர் கற்கள், கூழாங்கற்கள் போன்றவற்றில் இருக்கிறார் என்று தந்தையையிட்டுப் பிறர் பலவாறு கூறுகிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் மனதில் தோன்றுபவற்றைக் கூறுகிறார்கள். நாடகத் திட்டத்திற்கேற்ப, பக்தி மார்க்கத்தில் அவர்கள் தந்தையின் பெயர், வடிவம், தேசம், நேரம் அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். நீங்களும் இவ்விடயங்களை மறந்து விடுகிறீர்கள். ஆத்மாக்கள் தங்கள் தந்தையை மறந்து விடுகின்றனர். குழந்தைகள் தந்தையை மறந்து விடுகின்றனர். ஆகவே அவர்கள் எதனைத் அறிந்திருப்பார்கள்? அவர்கள் அநாதைகள் ஆகிவிட்டார்கள் என்பதே இதன் அர்த்தம். அவர்கள் பிரபுவும் அதிபதியுமானவரை நினைவுசெய்வதில்லை. அவர்களுக்குப் பிரபுவும் அதிபதியுமானவரின் பாகங்களையும் தெரியாது. அவர்கள் தங்களையே மறந்து விடுகிறார்கள். உண்மையில் நீங்கள் அனைத்தையும் மறந்து விட்டீர்கள் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். முன்னர் நாங்கள் அத்தகைய தேவர்களாக இருந்தோம். பின்னர் நாங்கள் மிருகங்களிலும் பார்க்க மோசமானவர்கள் ஆகினோம். நாங்கள் ஆத்மாக்கள் என்பதையும் மறந்ததே பிரதான விடயமாகும். இப்பொழுது, யாரால் எங்களை இதனை உணரச் செய்ய முடியும்? எந்த மனித ஆத்மாவிற்கும், ஆத்மாவாகிய தான் யார் என்பதோ, எவ்வாறு அவர் தனது முழுப் பாகங்களையும் நடிக்கிறார் என்பதோ தெரியாது. நாங்கள் அனைவரும் சகோதரர்கள். வேறெவரிடமும் இந்த ஞானம் இல்லை. இந்த நேரத்தில் முழு உலகமும் தமோபிரதான் ஆகிவிட்டது. அவர்களிடம் எந்த ஞானமும் இல்லை. இப்பொழுது, ஆத்மாக்களாகிய உங்களிடம் ஞானம் உள்ளது, நீங்கள் நீண்ட காலமாக உங்கள் தந்தையை அவதூறு செய்தீர்கள் என்பதையும் உங்கள் புத்தி புரிந்துகொள்கிறது. அவரை அவதூறு செய்ததினால் தொடர்ந்தும் நீங்கள் தந்தையிடமிருந்து தூர விலகியே இருந்தீர்;கள். நாடகத் திட்டத்திற்கேற்ப, நீங்கள் தொடர்ந்து ஏணியிலிருந்து கீழிறங்கினீர்கள். தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயமாகும். தந்தை உங்களுக்கு வேறு எந்தச் சிரமமும் கொடுப்பதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு, தந்தையை நினைவுசெய்யும் சிரமமே உள்ளது. தந்தை எப்பொழுதாவது தனது குழந்தைகளுக்கு எவ்விதச் சிரமத்தையும் கொடுப்பாரா? அது நியதி இல்லை. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு எவ்விதச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. அவர்கள் கேள்வி கேட்கும்பொழுது, நான் கூறுவேன்: நீங்கள் ஏன் இவ்வாறான விடயங்களில் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? தந்தையை நினைவுசெய்யுங்கள்! உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கே நான் வந்துள்ளேன். இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து, தூய்மையாக வேண்டும்; அவ்வளவுதான்! நான் மாத்திரமே தூய்;மையாக்குகின்ற தந்தையாவேன். தந்தை உங்களுக்கு வழிமுறையைக் காட்டுகிறார்: எங்கு நீங்கள் சென்றாலும், தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தையும் உங்களுக்கு 84 பிறவிகளின் இரகசியத்தை விளங்கப்படுத்தியிருக்கிறார். நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள் என்று இப்பொழுது நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும், அவ்வளவுதான்! நீங்கள் வேறு எதனையும் நினைவுசெய்யக்கூடாது. தந்தையை நினைவு செய்வது மிகவும் இலகுவானது! ஒரு குழந்தை சிறிது வளரும்பொழுது, அவர் இயல்பாகவே தனது பெற்றோரை நினைவுசெய்ய ஆரம்பிக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்களும், தந்தையின் குழந்தைகள் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் ஏன் அவரை நினைவுசெய்ய வேண்டும்? ஏனெனில் இந்த நினைவின் மூலமே நீங்கள் சேர்த்துக்கொண்ட பாவங்கள் அழிக்கப்பட முடியும். இதனாலேயே ஒரு விநாடியில் ஜீவன்முக்தி அடையலாம் என்பது நினைவுகூரப்படுகிறது. ஜீவன்முக்தி உங்கள் கல்வியிலும், முக்தி உங்கள் நினைவிலும் தங்கியுள்ளன. நீங்கள் எந்தளவுக்குத் தந்தையை நினைவுசெய்து, உங்கள் கல்வியிலும் கவனம் செலுத்துகிறீர்களோ, அதற்கேற்ப, ஓர் உயர் இலக்க அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யலாம். நீங்கள் அதனைச் செய்வதைத் தந்தை தடுக்கவில்லை. இரவும்பகலும், நீங்கள் செய்யும் வியாபாரம் போன்றவற்றை நினைவு செய்கின்றீர்கள், இல்லையா? ஆகவே தந்தை இப்பொழுது உங்களுக்கு இந்த ஆன்மீக வியாபரத்தைக் கொடுத்துள்ளார். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை நினைவுசெய்வதுடன், உங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவுசெய்யுங்கள். என்னை நினைவுசெய்வதனால், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். இப்பொழுது உங்கள் ஆடைகள் பழையதாகி விட்டன என்பதையும், ஒரு புதிய சதோபிரதான் ஆடையைப் பெறப் போகின்றீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த ஞானத்தின் சாராம்சத்தை நீங்கள் உங்கள் புத்தியில் வைத்திருக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் பெருமளவு நன்மையைப் பெறுவீர்கள். பாடசாலையில் உள்ள பல பாடங்களில், ஆங்கிலத்திலேயே நீங்கள் சிறந்த புள்ளிகளைப் பெற வேண்டும். ஏனெனில் ஆங்கிலமே பிரதான மொழி. இது முன்னர் அவர்களது இராச்சியமாக இருந்ததால், அது அதிகளவில் உபயோகிக்கப்படுகிறது. இப்பொழுதும் பாரத மக்கள் அவர்களுக்குக் கடனாளியாகி உள்ளார்கள். மக்கள் எந்தளவு செல்வந்தர்களாக இருந்தாலும், அரசாங்கத் தலைவர்கள் கடன்பட்டுள்ளார்கள் என்பது அவர்களின் புத்தியிலுள்ளது. பாரத மக்களாகிய நாங்கள் கடனாளிகளாக உள்ளோம் என்பதே இதன் அர்த்தமாகும். தாங்கள் கடனாளிகளாக இருப்பதாக மக்கள் கூறுவார்கள், அல்லவா? உங்களுக்கு இந்தப் புரிந்துணர்வு இருப்பது அவசியம். நீங்கள் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதால், நீங்கள் அந்தக் கடன்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, செழிப்பானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீPர்கள். பின்னர் அரைக் கல்பத்திற்கு நீங்கள் எவருக்கும் கடனாளியாக இருக்க மாட்டீர்கள். தூய்மையற்ற உலகின் அதிபதிகள் கடனாளிகளாக இருக்கிறார்கள். தற்சமயம், நாங்கள் கடனாளிகளாகவும், தூய்மையற்ற உலகின் அதிபதிகளாகவும் உள்ளோம். மக்கள் பாரதத்தின் புகழ் பாடுகிறார்கள்: எங்கள் பாரதம் இவ்வாறானது! நீங்கள்; செல்வம் மிக்கவர்களாக இருந்தீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும்; நீங்கள் இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் இருந்தீர்கள். நீங்கள் அத்தகைய உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள் என நினைவுசெய்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர்களாகி, முற்றிலும் கடனாளிகள் ஆகிவிட்டீர்கள். இவ் விளையாட்டின் பெறுபேற்றைத் தந்தை உங்களுக்குக் கூறுகிறார். பெறுபேறு என்ன? சத்தியயுகத்தில் நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நினைவுசெய்கிறீர்கள். உங்களை மிகுந்த செல்வந்தர்கள் ஆக்கியவர் யார்? குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, நீங்கள் எங்களைச் செல்வம் மிக்கவர்களாக ஆக்கினீர்கள்! தந்தை ஒருவரால் மாத்திரமே உங்களைச் செல்வம் மிக்கவர்களாக ஆக்க முடியும். இவ்விடயங்கள் இவ்வுலகிலுள்ள வேறெவருக்கும் தெரியாது. நூறாயிரக் கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசியதால், அவர்கள் அனைத்தையும் மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் இப்பொழுது அனைத்தையும் புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் பல கோடி மடங்கு செல்வந்தர்களாக இருந்தோம். நாங்கள் மிகவும் தூய்மையாகவும், சந்தோஷமாகவும் இருந்தோம். அங்கு பொய், பாவம் போன்றவை இருக்கவில்லை. நீங்கள் முழு உலகையும் வென்றிருந்தீர்கள். பாடப்பட்டுள்ளது: சிவபாபா, நீங்கள் எங்களுக்குக் கொடுப்பவற்றை வேறெவராலும் எங்களுக்குக் கொடுக்க முடியாது. அரைக் கல்பத்திற்குச் சந்தோஷத்தைக் கொடுப்பதற்கான பலம் எவரிடமும் இல்லை. தந்தை கூறுகிறார்: பக்தி மார்க்கத்திலும், உங்களிடம் ஏராளமான சந்தோஷமும், அபரிதமான செல்வமும் இருந்தன. உங்களிடம் பல வகையான இரத்தினங்;களும், வைரங்களும் இருந்தன. பின்னர் அவை, உங்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கைகளுக்குச் சென்று விட்டன. இப்பொழுது உங்களால் அவற்றை எங்குமே காண முடியாது. உங்களால் வேறுபாட்டைக் காணமுடியும். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த ஆத்மாக்களாகவும், பின்னர் பூஜிப்பவர்களாகவும் இருந்தீர்கள். தந்தை பூஜிப்பவராக ஆகுவதில்லை. ஆனால் அவர் பூஜிப்பவர்களின் உலகில் பிரவேசிக்கிறார். தந்தை என்றும் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர். அவர் ஒருபொழுதும் பூஜிப்பவர் ஆகுவதில்லை. உங்களை பூஜிப்பவர்களிலிருந்து, பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குவதே அவரின் தொழிலாகும். உங்களைப் பூஜிப்பவர்கள் ஆக்குவது இராவணனின் தொழிலாகும். உலகிலுள்ள எவருக்கும் இது தெரியாது. நீங்களும் இதனை மறந்து விடுகிறீர்கள். தந்தை தினமும் விளங்கப்படுத்துகிறார். ஒருவரைச் செல்வந்தர் ஆக்குவதும், ஏழையாக்குவதும், தந்தையின் கைகளிலேயே உள்ளது. தந்தை கூறுகிறார்: இப்பொழுது செல்வந்தர்களாக இருப்பவர்கள் நிச்சயமாக ஏழைகளாக வேண்டும்; அவர்கள் நிச்சயமாக ஏழைகள் ஆகுவார்கள். அவர்களின் பாகங்கள் அவ்வாறானவை! அவர்களால் ஒருபொழுதும் இங்கு இருக்க முடியாது. செல்வந்தர்கள் தாம் இன்ன இன்னராக இருப்பதாகவும், தம்மிடம் இதுவும் அதுவும் உள்ளதாகவும் பெருமளவு அகங்காரம் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அகங்காரத்தைத் துண்டிப்பதற்கு பாபா கூறுகின்றார்: பாபாவிற்கு எதனையாவது அவர்கள் கொடுக்க வரும்பொழுது, அவற்றின் தேவை தனக்கு இல்லை என்றும், அவற்றை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என்றும் பாபா அவர்களிடம் கூறுவார். அப்பொழுது அவற்றினால் பயனில்லை என்பதைக் காண்பதால், அவருக்குத் தேவை ஏற்படும்பொழுது, பாபா அவற்றை வாங்கிக் கொள்வார். அவர்கள் தமது சொந்த அகங்காரத்தில் உள்ளார்கள். ஆகவே எதனையாவது ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்பது அனைத்தும் பாபாவின் கரங்களிலேயே உள்ளது. தந்தை பணத்தை வைத்து என்ன செய்வார்? அவருக்கு அது தேவையில்லை. இந்தக் கட்டடங்கள் குழந்தைகளாகிய உங்களுக்காகவே கட்டப்படுகின்றன. பாபாவைச் சந்திப்பதற்காக நீங்கள் இங்கு வருகிறீர்கள். பின்னர் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்; நீங்கள் எப்பொழுதும் இங்கு தங்க முடியாது. பாபாவிற்குப் பணம் தேவையில்லை. அவருக்கு இராணுவமோ, அல்லது குண்டுகளோ தேவையில்லை. நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் போர்க்களத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்வதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. தந்தை உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளார்: என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் இந்தளவு சக்தியைப் பெறுவீர்கள். உங்களுடைய இந்தத் தர்மம் அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. தந்தையே சர்வ சக்திவான். நீங்கள் அவருக்கு உரியவர்கள். அனைத்தும் உங்கள் நினைவு யாத்திரையில் தங்கியுள்ளது. பசுக்கள் புல்லை மேய்ந்த பின்னர், உணவை அசைபோடுவதற்கு அவற்றின் வாய் தொடர்ந்தும் வேலை செய்வது போன்று, இங்கு நீங்கள் செவிமடுக்கின்ற அனைத்தையும் கடைய வேண்டும். ஞானத்திலுள்ள விடயங்கள் பற்றி, பெருமளவு நினைவுசெய்யுமாறு பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: நாங்கள் பாபாவிடம் எதனை வினவ வேண்டும்? தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! இதன் மூலம் நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். உங்கள் இலக்கும், குறிக்கோளும் உங்கள் முன்னே உள்ளன. நீங்கள் அனைத்துத் தெய்வீகக்குணங்களும் நிரம்பியவர்களாகவும், பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும் ஆகவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இதனை நீங்கள் இயல்பாகவே உங்களுக்குள் உணர வேண்டும். நீங்கள் எவரையும் அவதூறு செய்யவோ அல்லது எந்தப் பாவச் செயல்களையும் செய்யவோ கூடாது. நீங்கள் எந்தத் தவறான செயல்களையும் செய்யக்கூடாது. தேவர்கள் முதல் இலக்கத்தைக் கொண்டவர்கள். அவர்கள் முயற்சி செய்ததனால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றார்கள். தேவர்கள், உயர்ந்த அகிம்சா தேவ தர்மத்திற்கு உரியவர்கள் என தேவர்களைப் பற்றி நினைவுகூரப்படுகிறது. எவரையும் கொல்வது வன்செயலாகும். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பதால், குழந்தைகளாகிய நீங்கள் அகநோக்கில் இருப்பதுடன், நீங்கள் என்னவாக ஆகியிருக்கிறீர்கள் என்பதையும் சோதித்துப் பார்க்கவேண்டும். நான் பாபாவை நினைவுசெய்கின்றேனா? நான் பாபாவை எந்தளவு நேரத்திற்கு நினைவுசெய்கிறேன்? பாபாவை நினைவுசெய்வதை நீங்கள் என்றுமே மறந்துவிடாமல் இருக்குமளவிற்கு, உங்கள் இதயங்கள் பாபாவுடன் இணைந்திருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை இப்பொழுது கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் எனது குழந்தைகள்; நீங்கள் எனது அநாதியான குழந்தைகள். அந்தக் காதலர்களினதும், அன்புக்கினியவர்களினதும் நினைவு பௌதீகமானது, அவர்கள் ஒருவர் மற்றவரின் முன்னால் இருப்பது போன்று, ஒருவர் மற்றவரின் காட்சியைக் காண்கின்றனர். பின்னர் காட்சி மறைந்து விடுகின்றது. அவர்கள் அந்தச் சந்தோஷத்தில் உண்டு, பருகி, ஒருவரையொருவர் நினைவுசெய்கின்றார்கள். உங்களுடைய இந்த நினைவில் பெருமளவு சக்தி உள்ளது. நீங்கள் தொடர்ந்தும் ஒரேயொரு தந்தையை நினைவுசெய்வீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை நினைவுசெய்வீர்கள். நீங்கள் விநாசத்தின் காட்சிகளைக் காண்பீர்கள். மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, நீங்கள் விநாசத்தின் காட்சிகளை அடிக்கடி காண்பீர்கள். அப்பொழுது, விநாசம் இடம்பெறவுள்ளது என்பதையும், தந்தையை நினைவுசெய்யுமாறும் உங்களால் பிறருக்குக் கூறக்கூடியதாக இருக்கும். பாபா அனைத்தையும் துறந்தார். இறுதியில் எதனையும் நினைவுசெய்யக்கூடாது. இப்பொழுது நாங்கள் எங்கள் இராச்சியத்திற்குச் செல்கிறோம். நீங்கள் நிச்சயமாகப் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் யோக சக்தியின் மூலம் உங்கள் பாவங்கள் அனைத்தையும் எரிக்க வேண்டும். இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. இவை மிகவும் சூட்சுமமான விடயங்கள் என்பதால், நீங்கள் தந்தையை மீண்டும் மீண்டும் மறந்துவிடுகிறீர்கள். பாம்பினதும், ரீங்காரமிடும் விட்டிற்பூச்சியினதும் உதாரணங்கள் இந்த நேரத்திற்கு உரியதாகும். ரீங்காரமிடும் விட்டிற்பூச்சி அற்புதங்களை நிகழ்த்துகின்றது. ஆனால் உங்கள் அற்புதங்கள் அதை விடச் சிறந்தது. பாபா எழுதுகிறார்: தொடர்ந்தும் ஞானத்தை ரீங்காரம் செய்யுங்கள். இறுதியில் அவர்கள் விழித்தெழுவார்கள். வேறு எங்கு அவர்கள் செல்ல முடியும்;? அவர்கள் தொடர்ந்து உங்களிடம் வருவார்கள். அவர்கள் உங்களுடன் சேர்க்கப்படுவார்கள். உங்கள் பெயர் புகழப்படும். தற்போது உங்களில் சொற்ப எண்ணிக்கையானோர்களே இருக்கிறீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் ஞானக் கடலைப் பெருமளவு கடைய வேண்டும். நீங்கள் செவிமடுத்துள்ள அனைத்தையும் தொடர்ந்தும் ஜீரணிக்க வேண்டும். அகநோக்கில் இருந்து தந்தையை நீங்கள் என்றுமே மறக்காதிருக்கும் வகையில் உங்கள் இதயம் தந்தை மீது பற்றைக் கொண்டிருக்கின்றதா என்று சோதித்துப் பாருங்கள்.
2. கேள்வி கேட்பதில் நேரத்தை வீணாக்காது, நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து, உங்களைத் தூய்மையாக்குங்கள். இறுதி நேரத்தில் வேறெந்த எண்ணங்களும் இருக்கக்கூடாது, தந்தையின் நினைவு தவிர, எதுவும் இருக்கக்கூடாது. இப்பொழுதில் இருந்தே இதனைப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஞான சூரியனினதும் ஞானச்சந்திரனினதும் சகபாடி ஆகுவதால், இரவைப் பகலாக்குகின்ற, ஓர் ஆன்மீக ஞான நட்சத்திரம் ஆவீர்களாக.
அந்த நட்சத்திரங்கள் இரவில் வருவதைப் போன்று, அதேவிதமாக, பிரகாசிக்கும் நட்சத்திரங்களான நீங்கள், ஆன்மீக ஞான நட்சத்திரங்களாகிய நீங்கள் பிரம்மாவின் இரவில் வெளிவருக்கின்றீர்கள். அந்த நட்சத்திரங்கள் இரவைப் பகலாக்குவதில்லை, ஆனால் நீங்கள் ஞான சூரியனினதும், ஞானச் சந்திரனினதும் சகபாடிகளாகி, இரவைப் பகல் ஆக்குகின்றீர்கள். அவை ஆகாய நட்சத்திரங்கள், நீங்கள் பூமியின் நட்சத்திரங்கள். அது அதிகாரத்தின் விடயமாகும், நீங்கள் இறை நட்சத்திரங்கள். பௌதீகமான பால்வீதியில் பலவிதமான பிரகாசிக்கின்ற நட்சத்திரங்கள் தென்படுவதைப் போன்று, நீங்கள் இந்த இறை பால்வீதியில் பிரகாசிக்கும் ஆன்மீக நட்சத்திரங்கள் ஆவீர்கள்.சுலோகம்:
சேவை செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவது எனில், உங்கள் புத்தியை ஆசீர்வாதங்களால் நிரப்புவது என்ற அர்த்தம் ஆகும்.