14.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் முற்றிலும் தூய்மையாக வேண்டும். எனவே எவருக்கும் துன்பத்தைக் கொடுக்காதீர்கள். உங்களுடைய பௌதீக புலனங்கங்களால் பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். எப்பொழுதும் தொடர்ந்தும் தந்தையின் கட்டளைகளைப் பின்பற்றுங்கள்.

கேள்வி:
ஒரு கல்லை, இரசவாதக் கல்லாக (உலோகத்தைத் தங்கமாக மாற்றும் கல்) மாற்றுவதற்கான வழி என்ன? எந்த நோய் இதற்கு தடை ஆகுகின்றது?

பதில்:
ஒரு கல்லை, இரசவாதக் கல்லாக மாற்றுவதற்கு, நீங்கள் நாராயணனாக ஆகுகின்றீர்கள் என்ற போதையைக் கொண்டிருந்து, உங்களுடைய சரீர உணர்வை துண்டிக்க வேண்டும். இந்த சரீர உணர்வே மிகக் கொடிய நோயாகும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவராகும் வரை, உங்களால் இரசவாதக் கல்லாக முடியாது. இரசவாதக் கல்லாக ஆகுபவர்கள் மாத்திரமே தந்தையின் உதவியாளர்கள் ஆகுகிறார்கள். சேவை மாத்திரமே உங்களுடைய புத்தியைப் பொன்னானதாக ஆக்கும். இதற்காக, நீங்கள் கல்வியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கின்றார்: குழந்தைகளே, உங்களை சங்கமயுகத்தவர்கள் என்று கருதிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை சத்தியயுகத்தவர்களாகக் கருத முடியாது. பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே உங்களை சங்கமயுகத்தவர்களாகக் கருதுகின்றீர்கள். ஏனைய அனைவரும் தங்களை கலியுகத்தவர்களாகக் கருதுகின்றார்கள். சத்தியயுகத்திற்கும் கலியுகத்திற்கும், சுவர்க்க வாசிக்கும் நரகவாசிக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. நீங்கள் சுவர்க்கவாசிகளோ அல்லது நரகவாசிகளோ அல்லர். நீங்கள் அதி மங்களகரமான சங்கமயுகத்து வாசிகள். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இந்த சங்கமயுகத்தை அறிந்தவர்கள். வேறெவருக்கும் இது தெரியாது. உங்களுக்கு அது தெரிந்திருந்தாலும், நீங்கள் அதை மறந்து விடுகின்றீர்கள். இப்பொழுது, எவ்வாறு உங்களால் மக்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? அவர்கள் இராவணனின் சங்கிலியில் சிக்கிக் கொண்டுள்ளார்கள் இராம இராச்சியம் இப்பொழுது இல்லை. அவர்கள் தொடர்ந்தும் இராவணனின் கொடும்பாவியை எரிது;து இது இராவண இராச்சியம் என்பதை நிரூபிக்கின்றது. இராம இராச்சியம் என்ன என்பதையும் இராவண இராச்சியம் என்ன என்பதையும் வரிசைக்கிரமமாக நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை சங்கமயுகத்திலேயே வருகின்றார் என்பதால், இந்நேரத்தில் சுவர்க்கமும் நரகமும் ஒன்றோடு ஒன்று ஒப்பிடப்படுகின்றன. கலியுகத்தில் வசிப்பவர்கள் நரகவாசிகள் எனவும், சத்தியயுகத்தில் வசிப்பவர்கள் சுவர்க்க வாசிகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். சுவர்க்கவாசிகள் தூய்மையானவர்கள் எனவும், நரகவாசிகள் தூய்மையற்றவர்கள் எனவும் கூறப்படுகின்றது. உங்களுடையவை அனைத்தும் தனித்துவமானவை. எனவே, இது இப்பொழுது அதிமங்களகரமான சங்கமயுகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பிராமணர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். குலங்களுக்கான படம் மிகவும் சிறந்தது அப்படத்தை உபயோகித்து உங்களால் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் வேறுபாட்டைக் காட்டவேண்டும். அப்பொழுதே மக்கள் தாம் தூ}ய்மையற்ற வறுமை நிறைந்த நரக வாசிகள் என்பதை புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது இது பழைய கலியுக உலகம் என நீங்கள் எழுதவேண்டும். சத்தியயுகமான சுவர்க்கம், புதிய உலகமாகும். நீங்கள் நரகவாசிகளா? அல்லது சுவர்க்க வாசிகளா? நீங்கள் தேவர்களா? அல்லது அசுரர்களா? எவரும் தாங்கள் சுவர்க்கவாசிகள் எனக் கூறமாட்டார்கள். சிலர் தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள். ஓ உண்மையாகவா! ஆனால், இது நரகம். சத்தியயுகமான சுவர்க்கம் எங்கே இருக்கின்றது? இது இராவண இராச்சியம், இதனாலேயே மக்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். அவர்களிடம் பல விடைகள் உள்ளன. கடவுள் சர்வவியாபகர் என்பதில் பெருமளவு விவாதம் உள்ளது. இது புதிய உலகமா அல்லது பழைய உலகமா என்று குழந்தைகளாகிய நீங்கள் மிகத்தெளிவாக வினவுங்கள். நீங்கள் அவ்வாறாக, ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்ட வேண்டும். இதற்கு மிகச்சிறந்த புத்தி அவசியம். நீங்கள் மிகவும் சாதுரியமாக எழுதவேண்டும். அப்போது மக்கள் தங்களையே வினவிக் கொள்வார்கள்: நான் சுவர்க்கவாசியா அல்ல நரகாவாசியா? இது பழைய உலகமா அல்லது புதிய உலகமா? இது இராம இராச்சியமா அல்லது இராவண இராச்சியமா? நாங்கள் பழைய கலியுக வாசிகளா அல்லது புதிய உலகவாசிகளா? இதை நீங்கள் இந்தியில் எழுதவேண்டும், பின் ஆங்கிலத்திலும், குஜராத்தியிலும் மொழிபெயர்க்க வேண்டும். நான் எவ்விடத்தில் வசிப்பவர் என்று மக்கள் தம்மைத்தாமே வினவிக் கொள்ளட்டும். ஒருவர் மரணிக்கும்போது அவர் சுவர்க்கம் சென்று விட்டதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் சுவர்க்கம் இப்பொழுது இல்லை. இப்பொழுது இது கலியுகம், எனவே நிச்சயமாக மறுபிறப்பும் இங்கு தான் இருக்கும். சத்தியயுகமே சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது, எனவே இப்பொழுது எவரேனும் எவ்வாறு அங்கு செல்ல முடியும்? இவை அனைத்தும் கடையப்பட வேண்டிய விடயங்களாகும். வேறுபாட்டை மிகத்தெளிவாக காட்ட வேண்டும். கடவுள் பேசுகின்றார் என எழுதுங்கள். நான் சத்தியயுக இராம இராச்சியவாசியா அல்லது கலியுக இராவண இராச்சியவாசியா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை வினவிக்;கொள்ளுங்கள். பிராமணர்களாகிய நீங்கள் சங்கமயுகவாசிகள், ஆனால் எவரும் உங்களை அறிய மாட்டார்கள். நீங்கள் முற்றிலும் அனைவரில் இருந்தும் வேறுபட்டவர்கள். நீங்கள் சத்தியயுகத்தையும் கலியுகத்தையும் மிகச்சரியாக அறிந்துள்ளீர்கள். நீங்கள் விகாரமுள்ள சீரழிந்தவர்களா, அல்லது விகாரமற்ற மேன்மையான மனிதர்களா என்று உங்களால் மாத்திரமே வினவ முடியும். இதனைப் பற்றி உங்களால் ஒரு புத்தகத்தை எழுதமுடியும். கடவுள் சர்வவியாபகர் அல்லர் என்பதை மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் புதிய விடயங்களை நீங்கள் எழுத வேண்டும். நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்கள் என்பதைப் பார்த்து அவர்கள் தாமாகவே உள்ளே வந்து, அதுபற்றி உங்களிடம் வினவுவார்கள். அனைவரும் இதனைக் கலியுகம் என்றே கூறுவார்கள். எவராலும் இதனை சத்தியயுக தேவ இராச்சியம் என அழைக்க முடியாது. இது நரகமா அல்லது சுவர்க்கமா? அவர்கள் உண்மையில் தூய்மையற்ற கலியுகவாசிகள் என்றும், அவர்கள் எவ்வித தெய்வீகக் குணங்களையும் கொண்டிருக்கவில்லை எனவும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு முதற்தரமான கட்டுரையை எழுதுங்கள். கலியுகத்தில் சத்தியயுகத்தவர் என எவரும் இருக்க முடியாது. ஞானக்கடலை இம்முறையில் கடைந்து, பின் இவ்விடயங்களை எழுதுங்கள். எவராவது முதலில் செய்பவர் அர்ஜுனன் ஆவார். அர்ஜுனனின் பெயர் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாபா கூறுகின்றார்: கீதையில் உள்ள அனைத்தும் ஒரு மூடை மாவில் ஒரு துளி உப்பைப் போன்றேயிருக்கும். சீனிக்கும் உப்புக்கும் இடையே பெருமளவு வித்தியாசம் இருக்கின்றது. சீனி இனிமையானது. உப்பு உவர்ப்பானது. 'கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார்" என கீதையில் எழுதியதன் மூலம், அவர்கள் கீதையை உவர்ப்பானதாக்கிவிட்டார்கள். மக்கள் அச்சேற்றில் மிகமோசமாக சிக்குண்டு விட்டார்கள். அப்பாவிகள் ஞானத்தின் இரகசியங்களை அறிய மாட்டார்கள். கடவுள் ஞானத்தை உங்களுக்கு மாத்திரமே பேசுகின்றார். வேறு எவரும் இதனை அறியமாட்டார்கள். ஞானம் மிகவும் இலகுவானது. எவ்வாறாயினும், கடவுளே அவர்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை சிலர் மறந்து விடுகின்றார்கள். அவர்கள் ஆசிரியரையும், மறந்து விடுகின்றார்கள். இல்லையெனில் மாணவர்கள் ஒருபோதும் தங்கள் ஆசிரியரை மறக்கமாட்டார்கள். பாபா, நான் உங்களை மறந்துவிடுகின்றேன் என அவர்கள் மீண்டும், மீண்டும் கூறுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: மாயை சிறிதளவேனும் குறைந்தவள் அல்ல. நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகிவிட்டீர்கள், அத்துடன் பெருமளவு பாவங்களையும் செய்கின்றீர்கள். நீங்கள் பாவங்கள் செய்யாத ஒரு நாள் கூட இல்லை எனலாம். நீங்கள் தந்தையின் கட்டளைகளை மறந்துவிடுவதே முக்கியமான பாவமாகும். தந்தை உங்களுக்குக் கட்டளை இடுகின்றார்: மன்மனாபவ! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் இந்தக்கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை. எனவே, நிச்சயமாக பாவச் செயல்கள் செய்யப்படுகின்றன. பல பாவங்கள் செய்யப்படுகின்றன. தந்தையின் கட்டளை மிகவும் சுலபமானதுடன் மிகவும் கடினமானதும் ஆகும். நீங்கள் எவ்வளவுதான் பிரயத்தனம் செய்த போதிலும், மறக்கவே செய்கின்றீர்கள். ஏனெனில், அரைச்சக்கரத்திற்கு சரீர உணர்வு கொண்டவர்களாக இருந்துள்ளீர்கள். சிலரால் ஐந்து நிமிடங்களேனும் சரியான நினைவில் அமர்ந்திருப்பதற்கு முடிவதில்லை. நாள் முழுவதும், நீங்கள் நினைவில் அமர்ந்திருப்பீர்களாயின், கர்மாதீதநிலையை அடைந்து விடுவீர்கள். இதற்கு முயற்சி தேவை எனத்தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் உலகியல் கல்வியை மிக நன்றாக கற்கின்றீர்கள். நீங்கள் வரலாறும் புவியியலும் கற்றுக் கொள்வதில் பெருமளவு பயிற்சியைக் கொண்டிருக்கின்றீர்கள். எவ்வாறாயினும், நினைவு யாத்திரையில் இருக்கும் பயிற்சியைக் கொண்டிருக்கவில்லை. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதிக்கொண்டு, தந்தையை நினைவு செய்வதும், ஏதோ ஒரு வகையில் புதியதாகும். அவ்வாறான ஒரு தந்தையை மிக நன்றாக நினைவு செய்ய வேண்டும் என்று மனச்சாட்சி கூறுகின்றது. ஒரு துண்டு பாணை உண்பதற்கு நீங்கள் சிறிதளவு நேரம் எடுக்கின்றீர்கள். ஆனால் அதுவும் பாபாவின் நினைவே ஆகும். நீங்கள் எவ்வளவு தூரம் நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு தூய்மை அடைவீர்கள். பல குழந்தைகள் வட்டியில் வாழ்வதற்குப் போதுமான அளவு பணத்தைக் கொண்டிருக்கின்றார்கள். தொடர்ந்து தந்தையை நினைவு செய்வதுடன் ஒரு துண்டு பாணை உண்ணுங்கள். அவ்வளவே! எவ்வாறாயினும், நினைவில் இருப்பதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. முன்னைய சக்கரத்தில், நீங்கள் ஒவ்வொருவரும், எவ்வளவு முயற்சியை மேற்கொண்டீர்களோ, அதே முயற்சியை இப்பொழுதும் செய்வீர்கள். இதற்கு காலம் எடுக்கும். சிலருக்கு வேகமாக முன்னோக்கி ஓடி, அங்கு சென்றடைவதற்கான சாத்தியமில்லை. இங்கு நீங்கள் இரு தந்தையரைக் கொண்டிருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தைக்கு தனக்கென ஒரு சரீரம் இல்லை. அவர் இவரினுள் பிரவேசித்து, உங்களுடன் பேசுகின்றார். எனவே நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றவேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். உங்கள் சரீரத்தையும், சரீர சமயத்தையும் மறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் இங்கு தூய்மையாகவே வந்தீர்கள். பின்னர் 84 பிறவிகளை எடுத்தபோது, ஆத்மாவாகிய நீங்கள் தூய்மையற்றவர் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாகுவதற்கு ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். அப்போதே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், நீங்கள் தூய்மையான ஆத்மாக்கள் ஆகுவீர்கள் எனத் தந்தை உத்தரவாதம் கொடுப்பார். பின்பு அங்கு நீங்கள் ஒரு தூய்மையான சரீரத்தைப் பெறுவீர்கள். இந்தக் குலத்திற்குரியவர்கள், நீங்கள் கூறுவதைச் செவிமடுப்பதுடன் அவற்றைப் பற்றிச் சிந்திக்கவும் ஆரம்பிப்பார்கள். நீங்கள் கூறுவதெல்லாம் சரியென அவர்கள் கூறுவார்கள். நீங்கள் தூய்மையாக வேண்டுமெனில், எவருக்கும் துன்பம் கொடுக்காதீர்கள். உங்கள் எண்ணங்களில், வார்த்தைகளில், செயல்களில், தூய்மை ஆகுங்கள். உங்கள் மனதில் புயல்கள் வரும். நீங்கள் எல்லையற்ற ஆட்சியைக் கோருகின்றீர்கள். நீங்கள் உண்மையைக் கூறுகின்றீர்களோ, இல்லையோ, தந்தையே கூறுகின்றார்: மாயையினால் பல பாவ எண்ணங்கள் வரும். ஆனால், நீங்கள் உங்கள் பௌதீகப் புலன்கள் மூலம் எந்தவிதப் பாவச்செயல்களையும் செய்யக்கூடாது. நீங்கள் உங்கள் புலனங்கள் மூலம் எந்தப் பாவச்செயல்களையும் செய்யக்கூடாது. எனவே நீங்கள் இந்த முரண்பாடான விடயங்களை மிகத் தெளிவாக எழுதவேண்டும். கிருஷ்ணர் முழுமையாக 84 பிறவிகளையும் எடுக்கின்றார். சிவனோ பிறவி எடுப்பதில்லை. அவர் அனைத்து தெய்வீகக் குணங்களும் நிறைந்த தேவர், அந்த ஒரேயொருவரே தந்தை ஆவார். அவர்கள் பாண்டவர்களுக்கு எவ்வாறான பெரிய ரூபங்களைச் செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். இது அவர்களுக்கு எப்படியான, பெரிய பரந்த எல்லையற்ற புத்தி இருக்கின்றது என்பதைக் குறிக்கிறது. அவர்கள் பெரிய புத்தியைக் கொண்டிருந்தார்கள், ஆனால் அம்மக்கள் அவர்களைப் பெரிய சரீரத்துடன்; சித்தரித்துள்ளார்கள். எவருமே உங்களைப்போன்று பரந்த எல்லையற்ற புத்தியைக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் பெரிய படங்களை உருவாக்குவதில் அவர்கள் பணத்தை வீணடிக்கின்றார்கள். அவர்கள் வேதங்கள், சமயநூல்கள் மற்றும் உபநிடதங்கள் ஆகியவற்றிற்காக அதிகளவு செலவழிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் பெருமளவு பணத்தை வீணடித்துள்ளீர்கள். எல்லையற்ற தந்தை இப்பொழுது முறைப்பாடு செய்கின்றார். பாபா உங்களுக்கு அதிகளவு பணம் கொடுத்தார் என்று நீங்கள் உணர்கின்றீர்கள். அவர் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்ததுடன், உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசராக்கியுள்ளார். சிலர் உலகியல் கல்வியைக் கற்று சட்டநிபுணராகி, பின் பெரும் வருமானத்தை சம்பாதிக்கின்றார்கள். இதனாலேயே ஞானம் வருமானத்தின் மூலாதாரம் எனக்கூறப்படுகின்றது. இந்தத் தெய்வீகக் கல்வியும் ஒரு வருமானத்தின் மூலாதாரமே, ஆகும். இதன் மூலம் நீங்கள் எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். பாகவத்திலோ, அல்லது இராமாயணம் போன்றவற்றிலோ ஞானம் கிடையாது. அதில் எவ்வித இலட்சியம், இலக்கு போன்ற எதுவுமே இல்லை. ஞானம் நிரம்பிய தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். இது முற்றிலும் புதிய கல்வியாகும். உங்களுக்குக் கற்பிப்பது யார்? கடவுள்! அவர் உங்களைப் புதிய உலகத்து அதிபதிகள் ஆக்குவதற்காகக் கற்பிக்கின்றார். இலக்ஷ்மியும், நாராயணனும் இந்தக்கல்வியின் மூலமே உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றனர். அரசனுக்கும், பிரஜைகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது. ஒருவருடைய பாக்கியமானது திறக்கப்பட்டால் அவருடைய படகு அக்கரை சேர முடியும். மாணவர்களால் தாங்கள் கற்கிறார்களா என்பதையும், பின் தங்களால் ஏனையோருக்கும் கற்பிக்க முடியுமா என்பதையும் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் கல்வியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். கல்லுப்புத்தியைக் கொண்டிருப்பதனால், அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் தங்கப் புத்தியுள்ளவர்கள் ஆகவேண்டும். சேவையில் ஈடுபட்டிருப்பவர்களால் மாத்திரமே அவர்களைத் தங்கமாக்க முடியும். பட்ஜைப் பயன்படுத்தி உங்களால் ஞானத்தை எவருக்கேனும் விளங்கப்படுத்த முடியும்: எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுங்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது அது நேற்றைய விடயமாகும். 5000 வருடங்களுக்கும் நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. அவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்தும் போது அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் முற்றிலும் கல்லுப்புத்தியைக் கொண்டவர்களாகவே உள்ளார்கள். இந்தப் பட்ஜ் உங்களுக்கு கீதை போலுள்ளது. இது முழுக் கல்வியையும் உள்ளடக்கியுள்ளது. பக்தி மார்க்கத்தில் மக்கள் கீதையை மாத்திரம் நினைவு செய்கிறார்கள். தந்தையிடம் இருந்து நீங்கள் செவிமடுக்கும் கீதையின் மூலம் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு சற்கதி கிடைக்கும். ஆரம்பத்தில் நீங்களே கீதையைச் கற்கத் தொடங்கினீர்கள். நீங்களே பூஜிக்க ஆரம்பித்தீர்கள். இப்பொழுது நீங்கள் பக்தி மார்க்கச் சங்கிலியில் கட்டுண்டு இருக்கும் அப்பாவி மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு முயற்சி எடுக்கவேண்டும். தொடர்ந்தும் எவருக்காவது விளங்கப்படுத்துங்கள். அதிலிருந்து ஓரிருவராவது வெளித்தோன்றுவார்கள். ஐந்து அல்லது ஆறு பேர் ஒன்றாக வந்தால் அவர்களை தனித்தனியாகவே படிவத்தை நிரப்பச் செய்து, அவர்களுக்கு தனித்தனியாகவே விளங்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அவர்களில் ஒருவர் அந்தளவிற்கு நல்லவராக இல்லாதிருந்தாலும் அவர் மற்றவர்களையும் குழப்பமடையச் செய்துவிடுவார். நிச்சயமாக அவர்களைத் தனித்தனியாகப் படிவத்தை நிரப்பச் செய்ய வேண்டும். ஒருவர் மற்றவரின் படிவத்தைப் பார்க்கவும் கூடாது. அப்பொழுதே அவர்கள் புரிந்து கொள்வார்கள். நீங்கள் வெற்றியடைவதற்கு இத்தகைய யுக்திகளைக் கொண்டிருக்க வேண்டும். தந்தையும் ஒரு வியாபாரியாவார். புத்திசாலி;கள் நன்றாக வியாபாரம் செய்வார்கள். தந்தை அதிகளவு இலாபத்தை ஏற்படுத்துகிறார். ஓரேநேரத்தில் குழுவாக வருபவர்களைத் தனித்தனியாக படிவத்தை நிரப்புமாறு அவர்களிடம் கூறுங்கள். அவர்கள் அனைவரும் சமயப்பற்றுடையவர்கள் என்றால் அவர்களை ஒன்றாக அமரச் செய்து அவர்களிடம் கீதையைக் கற்றுள்ளீர்களா என்றும், தேவர்களிடம் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா என்றும் வினவுங்கள். இந்த ஞானத்தைப் பக்தர்களுக்கு மாத்திரம் கொடுக்க வேண்டும் என் பாபா கூறியுள்ளார். எனது பக்தர்களும் தேவர்களின் பக்தர்களும் விரைவில் புரிந்து கொள்வார்கள். கல்லை ஒரு இரசவாதக் கல்லாக (உலோகத்தைத் தங்கமாக மாற்றும் கல்) மாற்றுவது, மாமியார் வீட்டுக்குப் போவது போன்றதல்ல! சரீர உணர்வே அனைத்தையும் விட மிக மோசமானதும், அழுக்கான நோயும் ஆகும். சரீர உணர்வு துண்டிக்கப்படும் வரை உங்களைச் சீர்திருத்துவது என்பது சிரமமானதாகும். இதற்கு நீங்கள் நாராயணனாகுகின்ற முழுப் போதையையும் கொண்டிருக்க வேண்டும். இங்கு நாங்கள் சரீர மற்றே வந்தோம். மீண்டும் நாங்கள் சரீரமற்றே திரும்பிச் செல்ல வேண்டும். இங்கு என்ன இருக்கின்றது. தந்தை கூறியுள்ளார்: என்னை நினைவு செய்யுங்கள். இதற்கு முயற்சி தேவையாகும். இலக்கு மிகவும் உயர்ந்ததாகும். முன்னைய கல்பத்தைப் போன்று யார் நல்ல உதவியாளர்களாகுவார்கள் என்பதை அவர்களின் நடத்தையின் மூலம் உங்களால் கூறமுடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையாக இருங்கள். உங்கள் பௌதீகப் புலன்கள் மூலம் பாவங்கள் எதையும் செய்யாதிருப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். ஆத்மா தூய்மையாகுவதற்கு நீங்கள் நிச்சயமாக நினைவில் நிலைத்திருக்க வேண்டும்.

2. சரீர உணர்வு எனும் மோசமான நோயில் இருந்து விடுபடுவதற்கு நாராயணனாகுகின்ற போதையைப் பேணுங்கள். பயிற்சி செய்யுங்கள்: நான் சரீரமற்றவனாக வந்தேன் இப்போது நான் சரீரமற்றவனாகவே வீடு திரும்ப வேண்டும்.


ஆசீர்வாதம்:
அதிபுத்திசாலித் தந்தையிலும் பார்க்க பத்திசாலியாக இருப்தற்கு முயற்சி செய்வதை விடுத்து உணரும் சக்தியினால் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டிருப்பீர்களாக.

சில குழந்தைகள் தங்கள் வேலையை நிருபித்து நல்ல பெயர் வாங்குவதற்கு அனைவரினதும் அதிபுத்திசாலித் தந்தையைவிட புத்;திசாலியாக இருக்க முயற்சி செய்கிறார்கள். அந்நேரத்தில் அவர்களிடம் உணர்வு இருந்தாலும்அந்த உணர்வில் எந்த வித சக்தியும் இல்லை. எனவே மாற்றம் இடம்பெறுவதில்லை. இது சரியல்ல எனச் சிலர் புரிந்து கொண்டாலும் தங்கள் பெயர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக தங்கள் சொந்த மனச்சாட்சியைக் கொன்றுவிடுகிறார்கள். இதுவும் பாவக்கணக்கில் சேமிக்கப்படுகிறது.எனவே அதிபுத்திசாலி ஆகுவதை நிறுத்தி உங்களை மாற்றி, உண்மையான இதயத்தின் உணர்வினால் உங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டிருங்கள்.

சுலோகம்:
இந்த வாழ்க்கையில் அனைத்து வெறுபட்ட பந்தனங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதே வாழ்க்கையில் அடைந்த ஸ்திதியாகும்.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தேவதை வாழ்க்கை என்பது பந்தனத்திலிருந்து விடுபட்ட வாழ்க்கையாகும். சேவையில் பந்தனம் இருந்தாலும் நீங்கள் எவ்வளவு சேவை செய்தாலும் அது வேகமாக இருந்தாலும் அவற்றை எல்லாம் செய்யும் போது நீங்கள் சதா எப்பொழுதும் சுதந்திரமாகவே இருக்கிறீர்கள். நீங்கள் எந்தளவிற்கு பற்றற்றவர்களாக இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு அன்பாகவும் இருப்பீர்கள். எப்பொழுதும் சுதந்திரத்துக்கான ஸ்திதியின் அனுபவம் இருக்கட்டும்.