11.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் ஒருபோதும் ஒரு தடையாக இருக்கக் கூடாது. உங்களிடம் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அவற்றை அகற்றுங்கள். உண்மையான வைரங்களாகுவதற்கான நேரம் இதுவாகும்.

கேள்வி:
எக்குறைபாட்டைக் கொண்டிருப்பதனால், ஆத்மாவின் பெறுமதி குறைவடைய ஆரம்பிக்கின்றது?

8பதில்:
தூய்மையின்மையே முதலில் வரும் குறைபாடாகும். ஓர் ஆத்மா தூய்மையாக இருக்கும் போது, அவரது தரம் மிகவும் உயர்வாக இருப்பதால், அவர் மதிப்பளவிட முடியாத இரத்தினமாக உள்ளார். அந்த ஆத்மா வழிபடத் தகுதிவாய்ந்தவராக உள்ளார். சிறிதளவு தூய்மையின்மைக் குறைபாடும் ஆத்மாவின் பெறுமதியை இழக்கச் செய்கின்றது. நீங்கள் இப்பொழுது தந்தையைப் போன்று என்றென்றும் தூய்மையாகவுள்ள வைரம் ஆகவேண்டும். பாபா உங்களையும் தன்னைப் போன்று, தூய்மையாக்குவதற்காக வந்துள்ளார். தூய குழந்தைகள் மாத்திரமே பாபாவின் நினைவினால் தொந்தரவு செய்யப்படுகின்றனர். அவர்கள் தந்தைமீது துண்டிக்கப்பட முடியாத அன்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒருபோதும் எவருக்கும் எவ்வித துன்பத்தையும் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் மிக இனிமையானவர்கள்.

ஓம் சாந்தி.
இரட்டை ஓம் சாந்தி என்றும் கூறலாம். ஓம் சாந்தி என்பதன் அர்த்தத்தைக் குழந்தைகள் அறிவார்கள், பாப்தாதாவும் அறிவார்: ஆத்மாவாகிய நான் அமைதி சொரூபம், நான் அமைதிக்கடலும், சந்தோஷக் கடலும், தூய்மைக் கடலுமாகிய தந்தையின் உண்மையான குழந்தையாவேன். முதலில், அவர் தூய்மைக் கடல் ஆவார். மக்கள் தூய்மையாகுவதில் சிரமத்தை அனுபவம் செய்கின்றனர். தூய்மையாகுவதில் பல தரங்கள் உள்ளன. இத்தரங்கள் அதிகரிப்பதை ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கொள்கின்றார். நாங்கள் இன்னமும் சம்பூர்ணமடையவில்லை. ஒவ்வொருவரும் நிச்சயமாகத் தூய்மையிலும், யோகத்திலும் ஏதோவொரு வகையான குறைபாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். சரீர உணர்வுடையவர் ஆகியதால், ஆத்மாக்கள் குறைபாடுடையவர்கள் ஆகிவிட்டனர்: சிலர் அதிகளவு குறைபாடுகளையும், சிலர் குறைந்தளவு குறைபாடுகளையும் கொண்டிருக்கின்றனர். வைரங்கள் பல்வேறு வகையானவை. அவை உருப்பெருக்குக் கண்ணாடியினால் பரிசோதிக்கப்படுகின்றன. நீங்கள் தந்தையை ஆத்மாவாகப் புரிந்துகொள்வதைப் போன்றே, குழந்தைகளையும் ஆத்மாக்களாகப் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் இரத்தினங்கள். சகல இரத்தினங்களும் வழிபடத் தகுதி வாய்ந்தவர்கள். முத்துக்கள், மரகதம் மற்றும் ஏனைய இரத்தினங்களும் வழிபடத் தகுதிவாய்ந்தவையேயாகும். இதனாலேயே ‘பலவகையான’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. இது நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக உள்ளது. எல்லையற்ற தந்தையே அழிவற்ற ஞானரத்தினங்களின் இரத்தின வியாபாரி என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் ஒரேயொருவரே. அவர் நிச்சயமாக இரத்தின வியாபாரி என்றே அழைக்கப்படுவார். அவர் உங்களுக்கு ஞானரத்தினங்களைக் கொடுக்கின்றார். அவரின் இரதமும் ஓர் இரத்தின வியாபாரியினுடையதே ஆகும். அவருக்கும் இரத்தினங்களின் பெறுமதி பற்றித் தெரியும். ஓர் இரத்தின வியாபாரி உருப்பெருக்கக் கண்ணாடியின் உதவியினால் ஒவ்வொரு இரத்தினத்திலும் எத்தனை குறைபாடுகள் உள்ளன, அது எவ்வகையான இரத்தினம், எந்தளவிற்கு அது சேவைசெய்யக் கூடியது என்பதைக் கவனமாகச் சோதித்தறிய வேண்டும். இரத்தினங்களைப் பார்க்க எவருமே ஆசைப்படுவார்கள். சிறந்த இரத்தினமொன்றிருந்தால், மக்கள் அதனை அதிகளவு விருப்பத்துடன் பார்ப்பார்கள். “இது மிகவும் சிறந்தது.” இது தங்கப் பேழையினுள் வைக்கப்பட வேண்டும். கோமேதகம் போன்றன (பெறுமதி குறைந்தவை) தங்கப் பேழையினுள் வைக்கப்படுவதில்லை. நீங்களும் இங்கு எல்லையற்ற இரத்தினங்களாக ஆகியிருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வகையான இரத்தினம் என்பதை உங்கள் இதயம் அறியும். “என்னில் ஏதாவது குறைபாடுகள் இருக்கின்றனவா?” நீங்கள் ஆபரணங்களை மிகவும் கவனமாகப் பார்ப்பது போன்றே ஒவ்வொருவரும் தங்களாலேயே பரிசோதிக்கப்பட வேண்டும். நீங்கள் உயிர்வாழும் இரத்தினங்கள். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்: நான் எந்தளவிற்கு ஒரு நீல மாணிக்கமாகவோ, அல்லது மரகதமாகவோ ஆகியிருக்கின்றேன்? மலர்களில் சில வாடாத ரோஜாக்களாகவும், சில சாதாரண ரோஜாக்களாகவும், சில வேறு மலர்களாகவும் இருப்பதைப் போன்றே, நீங்களும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி மிக நன்றாக அறிவீர்கள். உங்களை நீங்களே பரிசோதித்துப் பார்க்க வேண்டும்: “நாள் முழுவதும் நான் என்ன செய்தேன்?” நான் எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்தேன்? பாபா கூறியிருக்கின்றார்: வீட்டில் உங்களது குடும்பத்துடன் வாழும்போதும், நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். பாபா நாரதரிடமும் கூறினார்: உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள். அது ஓர் உதாரணமாகும். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் மிக நன்றாக உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும்: என்னை ஒரு வைரமாக ஆக்குகின்ற தந்தை மீது நான் எந்தளவிற்கு அன்பு வைத்திருக்கின்றேன்? எனது மனோநிலை வேறு திசைகளில் ஈர்க்கப்படுகின்றதா? எந்தளவிற்கு நான் தெய்வீக சுபாவத்தைக் கொண்டிருக்கின்றேன்? மக்களுக்கு அவர்களது சுபாவமே பெருமளவில் தொந்தரவு செய்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது கண்ணைப் பெற்றிருக்கின்றீர்கள். அதன் மூலமாக உங்களை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். தந்தையை நான் எந்தளவிற்கு நினைவு செய்கின்றேன்? எனது நினைவு எந்தளவிற்கு தந்தையைச் சென்றடைகின்றது? அவரை நினைவு செய்யும் போது உங்களுக்கு மெய்சிலிர்க்க வேண்டும். எவ்வாறாயினும், தந்தையே கூறுகின்றார்: மாயையால் வரும் தடைகள் உங்களைச் சந்தோஷமாக இருக்க அனுமதிக்காது. தற்போது நீங்கள் அனைவரும் முயற்சியாளர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பெறுபேறுகள் இறுதியில் அறிவிக்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். உங்களால் இப்பொழுது மாசுக்களை அகற்ற முடியும். நீங்கள் முற்றிலும் தூய்மையான வைரங்கள் ஆகவேண்டும். அதில் சிறிதளவு குறைபாடு இருந்தாலும், உங்களது பெறுமதி குறைந்துவிடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஓர் இரத்தினம், இல்லையா? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் என்றும் தூய்மையான, மதிப்பளவிட முடியாத வைரங்கள் ஆகவேண்டும். பாபா உங்களை முயற்சி செய்யத் தூண்டுவதற்காக, பல்வேறு வழிகளிலும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். (இன்று, யோகம் செய்துகொண்டிருந்த போது, பாபா கதியை விட்டு இறங்கி, ஒவ்வொரு குழந்தையினதும் கண்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தவாறே வகுப்பைச் சுற்றி நடந்தார்.) இன்று பாபா ஏன் எழுந்தார்? எந்தக் குழந்தைகள் சேவை செய்பவர்கள் எனப் பார்ப்பதற்காகும். ஏனெனில், சிலர் ஓரிடத்திலும், சிலர் வேறொரு இடத்திலும் அமர்ந்திருக்கின்றனர். எனவே, பாபா எழுந்து ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தார்: இவர் என்ன நற்குணங்களைக் கொண்டிருக்கின்றார்? எந்தளவு அன்பை இவர் கொண்டிருக்கின்றார்? குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இங்கு நேருக்கு நேர் அமர்ந்திருக்கின்றீர்கள். எனவே, நீங்கள் அனைவருமே அதிகளவில் நேசிக்கப்படுகின்றீர்கள். எவ்வாறாயினும், உங்களது முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே நீங்கள் நேசிக்கப்படுவீர்கள் என்பது நிச்சயமாகும். ஒவ்வொருவரும் என்ன குறைபாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்பதைத் தந்தை அறிவார். தந்தை யாருடைய சரீரத்தில் பிரவேசித்திருக்கின்றாரோ, அவரும் தன்னைச் சோதித்துப் பார்க்கின்றார். பாப், தாதா இருவரும் ஒன்றாகவே இருக்கின்றனர். எனவே, குழந்தைகள் எந்தளவிற்கு மற்றவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார்களோ, அந்தளவிற்கு அவர்கள் எவருக்கும் துன்பம் கொடுக்கமாட்டார்கள், அத்தகைய குழந்தைகள் மறைந்திருக்க முடியாது. ரோஜாக்களும், மல்லிகை மலர்களும் மறைந்திருக்க முடியாது. தந்தை இப்பொழுது அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி, கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால், உங்களிலுள்ள கலப்படம் அகற்றப்படும். நினைவின்போது, நாள் முழுவதும் நீங்கள் செய்தவை அனைத்தையும் சோதித்துப் பார்க்கவேண்டும். நான் என்ன குறைபாட்டைக் கொண்டிருப்பதனால், பாபாவின் இதய சிம்மாசனத்தில் அமரமுடியாதிருக்கின்றது? இதயத்தில் இருப்பவர்கள் சிம்மாசனத்தில் இருக்கின்றார்கள். தந்தை எழுந்திருந்து, குழந்தைகளாகிய உங்களைப் பார்க்கின்றார். எக்குழந்தைகள் எனது சிம்மாசனத்தில் அமரப்போகின்றார்கள்? காலம் நெருங்கிவரும்போது, தாங்கள் எந்தளவிற்குச் சித்தியெய்துவோம் என்பதைக் குழந்தைகள் விரைவில் அறிந்துகொள்வார்கள். தோல்வியடையப் போகின்றவர்கள், தாங்கள் குறைந்தளவு புள்ளிகளையே பெறுவோம் என்பதை முற்கூட்டியே அறிந்துகொள்வார்கள். நீங்களும் என்ன புள்ளிகளைப் பெறுவீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நாங்கள் மாணவர்கள். யாருடைய மாணவர்கள்? கடவுளின் மாணவர்கள். நீங்கள் இந்த தாதாவுடன் சேர்ந்து கற்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். எனவே, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். பாபா எங்களுக்குப் பெருமளவு அன்பைக் கொடுக்கின்றார்! அவர் மிக இனிமையானவர்! அவர் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் கொடுப்பதில்லை. அவர் கூறுகின்றார்: இச்சக்கரத்தை நினைவு செய்யுங்கள். கல்வி அதிகமாக இல்லை. உங்கள் இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னிலையிலேயே உள்ளது. அவ்வாறு நீங்கள் ஆகவேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களுக்கான இலக்கையும், குறிக்கோளையும் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, அவர்களைப் போன்று தூய்மையாக வேண்டும். அப்பொழுதே நீங்கள் மாலையில் கோர்க்கப்படுவீர்கள். எல்லையற்ற பாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் அச்சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள், இல்லையா? பாபா நிச்சயமாகத் தன்னைப் போன்று உங்களைத் தூய்மையானவர்களாகவும், ஞானம் நிறைந்தவர்களாகவும் ஆக்குவார். தூய்மை, அமைதி, சந்தோஷம் அனைத்தும் அதில் உள்ளடங்கும். எவருமே இதுவரை முழுமையடையவில்லை. இறுதியில் நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள். நீங்கள் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். அனைவரும் தந்தையை நேசிக்கின்றார்கள். நீங்கள் “பாபா” என்று கூறியவுடனேயே உங்களது இதயம் மலர்கின்றது. நீங்கள் அத்தகைய பெரிய ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். உங்களது இதயம் தந்தையைத் தவிர வேறு எவர் மீதும் இணைக்கப்பட்டிருக்கக்கூடாது. தந்தையின் நினைவு உங்களைத் தொந்தரவு செய்வதாக இருக்க வேண்டும். நீங்கள் அதிகளவு அன்புடன் தந்தையை நினைவு செய்ய வேண்டும்: “பாபா, பாபா, பாபா!” ஓர் இளவரசன் இராச்சிய போதையைக் கொண்டிருப்பார். இப்பொழுது அரசர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லை. பிரித்தானிய அரசாங்கத்தின் இராச்சியம் இருந்தபோது, அவர்களுக்கு அதிகளவு மரியாதை வழங்கப்பட்டது. இராஜ பிரதிநிதி தவிர்ந்த மற்றவர்கள் அவர்களை மரியாதை செய்வார்கள். ஏனைய அனைவரும் அரசர்களுக்குத் தலைவணங்குவார்கள். இப்போது அவர்களது நிலை என்னவாகிவிட்டது எனப் பாருங்கள்! அவர்கள் வந்து, இராஜரீக அந்தஸ்தைக் கோரமாட்டார்கள் என்பதனை நீங்கள் அறிவீர்கள். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: நான் ஏழைகளின் பிரபு ஆவேன். ஏழைகள் உடனடியாகவே தந்தையை இனங்கண்டு கொள்கின்றார்கள். அவர்கள் உணர்ந்து கொள்கின்றார்கள்: இவையனைத்தும் அவர் ஒருவருக்கே (சிவபாபா) உரியவை. நாங்கள் அனைத்தையும் ஸ்ரீமத்திற்கேற்பவே செய்வோம். அம்மக்கள் தங்களது செல்வத்தின் போதையைக் கொண்டிருக்கின்றார்கள். அதனாலேயே அவர்களால் இதனைச் செய்ய முடியாமலுள்ளது. எனவே, தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு ஆவேன். எவ்வாறாயினும், நீங்கள் முக்கியஸ்தர்களையும் ஈடேற்ற வேண்டும். ஏனெனில், அவர்கள் வந்தால் ஏழைகளும் உடனடியாக வருவார்கள். அத்தகைய முக்கியஸ்தர்கள் இங்கு வருவதை அவர்கள் பார்த்தால், அவர்களும் வருவார்கள். எவ்வாறாயினும், ஏழைகள் அதிகளவில் பயப்படுகின்றார்கள். ஒருநாள் அவர்களும் (செல்வந்தர்கள்) உங்களிடம் வருவார்கள். அந்நாளும் வரும். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது, அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள். அவர்கள் உங்களைப் பற்றிக்கொள்வார்கள். நீங்கள் அவர்களுக்காக ஒரு விஷேட நேரத்தை நிச்சயித்துக் கொள்வீர்கள். அனைவரையும் ஈடேற்ற வேண்டும் என்ற இதயபூர்வமான ஆசையை குழந்தைகள் கொண்டிருக்கின்றார்கள். அவர்களும் கற்று, மூத்த அதிகாரிகள் ஆகுவார்கள். நீங்கள் இறை பணியில் உள்ள்Pர்கள்;. நீங்கள் அனைவரையும் ஈடேற்ற வேண்டும். கடவுள் சுதேசிகளின் கனிகளை உண்டதாக நினைவு கூரப்படுகின்றது. ஒருவரது மனச்சாட்சியும் கூறுகின்றது: தானங்கள் எப்பொழுதும் ஏழைகளுக்கே கொடுக்கப்படுகின்றன, செல்வந்தர்களுக்கல்ல. நீங்கள் மேலும் முன்னேறும்போது, இவையனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டும். இதற்கு, உங்களுக்கு யோக சக்தி தேவையாகும். அதன் மூலமாகவே அவர்களைக் கவர முடியும். சரீர உணர்விருப்பதனால், யோக சக்தி குறைவாகவே உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது இதயத்தைக் கேளுங்கள்: நான் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றேன்? நான் எதிலாவது அகப்பட்டிருக்கின்றேனா? நான் எவரையாவது பார்த்தால், அவரால் ஈர்க்கப்படாமல் இருக்கக்கூடியதாக, அத்தகைய ஸ்திதியைக் கொண்டிருக்க வேண்டும். பாபாவின் கட்டளை: சரீர உணர்வுடையவர் ஆகாதீர்கள். அனைவரையும் உங்களது சகோதரர்களாகக் கருதுங்கள். நீங்கள் சகோதரர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்திட வேண்டும். இறுதி நேரத்தில் நீங்கள் வேறு எதையாவது நினைவு செய்வீர்களாயின், தண்டனையே கிடைக்கும். உங்களது ஸ்திதியை உறுதியாக்கிக் கொள்வதுடன், சேவையும் செய்யுங்கள். நீங்கள் அத்தகையதோர் ஸ்திதியை உருவாக்கினாலே, உங்களால் ஓர் அந்தஸ்தைப் பெற முடியும் என்பதை உள்ளார்த்தமாகப் புரிந்துகொள்ளுங்கள். தந்தை உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். இன்னமும் அதிகளவு சேவை செய்யப்பட வேண்டியுள்ளது. உங்களிடம் சக்தி இருந்தால், அவர்கள் ஈர்க்கப்படுவார்கள். பல பிறவிகளின் கறை உள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். சகல ஆத்மாக்களும் தூய்மையாக்கப்பட வேண்டும். மக்கள் இதனை அறியமாட்டார்கள். நீங்கள் அதனை அறிவீர்களாயினும், அதுவும் உங்களது முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே உள்ளது. தந்தை தொடர்ந்தும் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். பாபா எல்லையற்றதில் இருப்பதைப் போன்றே, குழந்தைகளாகிய நீங்களும் எல்லையற்றதைப் பற்றியே சிந்திக்க வேண்டும். தந்தை ஆத்மாக்களாகிய உங்கள்மீது பெருமளவு அன்பு கொண்டிருக்கின்றார். அவர் ஏன் பல நாட்களாக அன்பு கொண்டிருக்கவில்லை? ஏனெனில், நீங்கள் குறைபாடுடையவர்களாக இருந்தீர்கள். அவர் ஏன் தூய்மையற்ற ஆத்மாக்களை நேசிக்க வேண்டும்.? தந்தை இப்பொழுது அனைவரையும் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாக்குவதற்காக வந்திருக்கின்றார். எனவே, நீங்கள் நிச்சயமாக அழகானவர்களாக ஆகவேண்டும். பாபா அழகானவர். அவர் குழந்தைகளாகிய உங்களை அதிகளவில் ஈர்க்கின்றார். நாளுக்கு நாள், நீங்கள் தூய்மையாகும்போது, அதிகளவு கவர்ச்சி இருக்கும். பாபா அதிகளவில் உங்களைக் கவர்வார். நீங்கள் இங்கு தங்கியிருக்கவே முடியாத அளவிற்கு அவர் உங்களை அதிகளவில் கவர்வார். உங்களது ஸ்திதியானது நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக அவ்வாறு ஆகும். நீங்கள் தொடர்ந்தும் இங்கு தந்தையைப் பார்த்துக் கொண்டிருப்பீர்களாயின், ‘நல்லது, நான் இப்பொழுது பாபாவைச் சந்திக்கச் செல்லப்போகின்றேன்’ என்பதைப் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் ஒருபோதுமே அத்தகைய பாபாவை ஒருபோதும் கைவிட விரும்பமாட்டீர்கள். தந்தை குழந்தைகளால் கவரப்படுகின்றார்: இது இக்குழந்தையின் அற்புதமாகும். இவர் மிகச் சிறந்த சேவை செய்கின்றார். ஆம், சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தபோதிலும், தேவையான நேரத்தில், அவர் தனது ஸ்திதிக்கேற்ப, மிகச் சிறந்த சேவை செய்கின்றார். அவர் எவருக்கும் துன்பத்தை விளைவிக்கும் ஒருவராகத் தென்படவில்லை. ஆம், நோய் போன்றவை இருக்குமாயி;ன், அது உங்களது சொந்தக் கர்மவேதனையே ஆகும். நீங்கள் இங்கு இருக்கும் வேளையில், தொடர்ந்து ஏதாவது நிகழவே செய்யும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். இது இரதமாக இருப்பினும், இறுதிவரை கர்மத்தின் வேதனையை அனுபவிக்கவே வேண்டும். நான் அவருக்கு விஷேட ஆசீர்வாதங்களைக் கொடுப்பேன் என்றில்லை. அவரும் தனது சொந்த முயற்சியைச் செய்யவே வேண்டும். ஆமாம் அவர் தனது இரதத்தைக் கொடுத்திருப்பதனால் நான் அவருக்கு ஒரு பரிசு கொடுப்பேன். பந்தனத்திலுள்ள தாய்மார்கள் அனைவரும் எவ்வாறு இங்கு வருகின்றார்கள் எனப் பாருங்கள். அவர்கள் தந்திரமாகத் தங்களை விடுவித்துக் கொண்டு இங்கு வருகின்றார்கள். அவர்களிடம் அதிகளவு அன்பு உள்ளது. வேறு எவருமே அத்தகைய அன்பைக் கொண்டிருப்பதில்லை. பலரிடம் அன்பு என்பதே கிடையாது. வேறு எவரது அன்பையும் பந்தனத்திலுள்ளவர்களது அன்புடன் ஒப்பிட முடியாது. அவர்களது யோகம் எவ்விதத்திலும் குறைந்தது என எண்ணாதீர்கள். அவர்கள் நினைவு செய்யும் போது அதிகளவு அழுகின்றார்கள்: பாபா, ஓ பாபா! நான் எப்போது உங்களைச் சந்திப்பேன்? என்னை உலகின் அதிபதியாக்குகின்ற பாபாவே, நான் உங்களை எவ்வாறு சந்திப்பது? தொடர்ந்தும் அன்புக்கண்ணீர் சிந்துகின்ற, பந்தனத்திலுள்ள அத்தகைய பெண்கள் உள்ளனர். அவை துன்பக் கண்ணீரல்ல. அக்கண்ணீர்த் துளிகள் அன்பு முத்துக்களாகும். எனவே, பந்தனத்திலுள்ளவர்களின் யோகம் என்பது ஒரு சிறிய விடயமல்ல. அவர்கள், ஓ பாபா! சகல துன்பங்களையும் அகற்றுகின்ற பாபாவே, நான் எப்போது உங்களைச் சந்திப்பேன்? என விரக்தியுடன் நினைவில் இருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் நினைவிலிருந்து, சேவை செய்யும்வரை சக்தியைப் பெறுவீர்கள். பந்தனத்தில் இருப்பதால் சேவை செய்ய இயலாதிருப்பவர்களும்கூட, நிச்சயமாகத் தங்களது நினைவின் மூலமாகப் பெருமளவு யோக சக்தியைப் பெறுகின்றார்கள். நினைவிலேயே அனைத்தும் அமிழ்ந்துள்ளது. அவர்கள் விரக்தியில் இருக்கின்றார்கள். பாபா, நான் எப்போது உங்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவேன்? அவர்கள் அதிகளவில் நினைவில் இருக்கின்றார்கள். நீங்கள் மேலும் முன்னேறுகையில், நாளுக்கு நாள், மிக உறுதியாக ஈர்க்கப்படுவீர்கள். நீராடும்போதும், அனைத்தையும் செய்யும்போதும்கூட நீங்கள் நினைவில் இருப்பீர்கள். அப்பாவிகள் தொடர்ந்து வினவுகின்றார்கள்: இந்த பந்தனங்கள் முடிவடைகின்ற நாள் எப்போது வரும்? பாபா, எனது குழந்தைகள் என்னைத் துன்புறுத்துகின்றார்கள். நான் என்ன செய்வது? குழந்தைகளை அடிக்கலாமா? அதனால் பாவம் சேகரிக்கப்படுமா? தந்தை கூறுகின்றார்: இ;ன்றைய குழந்தைகள் அவ்வாறானவர்களே, கேட்கவே வேண்டாம்! ஒருவர் தனது கணவனால் துன்பத்திற்குள்ளாக்கப்படும்போது உள்ளார்த்தமாக உணர்கின்றார்: நான் எப்போது இந்த பந்தனத்திலிருந்து விடுதலையாகி, பாபாவைச் சந்திப்பேன்? பாபா நான் மிகவும் மோசமான பந்தனங்களைக் கொண்டுள்ளேன். நான் என்ன செய்வது? நான் எனது கணவனின் பந்தனத்திலிருந்து எப்போது விடுபடுவேன்? அவர் தொடர்ந்து “பாபா பாபா!” எனக் கூறுகின்றார். பாபா ஈர்க்கப்படுகின்றார். அப்பாவித் தாய்மார்கள் பெருமளவில் சகித்துக்கொள்கின்றார்கள். பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் பொறுமையைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, தொடர்ந்து தந்தையை நினைவுசெய்யுங்கள், அந்த பந்தனங்கள் அனைத்தும் முடிவடைந்துவிடும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நான் என்னிடம் ஏதாவது குறைபாடுகளைக் கொண்டுள்ளேனா? எந்தளவிற்கு எனது நினைவு தந்தையைச் சென்றடைகின்றது? எனது சுபாவம் தெய்வீகமானதாக உள்ளதா? எனது மனோநிலை வேறு எங்காவது அலைபாய்கின்றதா? என சோதித்துப் பாருங்கள்.

2. தந்தை உங்களால் ஈர்க்கப்படக்கூடிய அளவிற்கு மிகவும் அழகானவராகுங்கள். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். அதிகளவு அன்புடன் தந்தையை நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
வீணான எண்ணங்கள் என்ற தூண்களை ஆதாரமாக்குவதற்குப் பதிலாக சகல உறவுமுறைகளின் அனுபவங்களையும் அதிகரித்து உண்மையான அன்புடையவர்கள் ஆகுவீர்களாக.

உங்கள் பலவீனமான எண்ணங்களை உறுதியாக்குவதற்கு மாயை பல இராஜரீகமான தூண்களை முன்வைப்பாள். அவள் மீண்டும் மீண்டும் இவ் எண்ணங்களைக் கொண்டுவருவாள், “இது எல்லா வேளையும் நடைபெறுவது… மூத்தவர்கள் கூட இதைச் செய்கிறார்கள்… இன்னமும் எவரும் முழுமை அடையவில்லை… கட்டாயம் சில பலவீனங்கள் எஞ்சியிருக்கும்…” இந்த வீணான எண்ணங்களின் தூண்கள் பலவீனங்களை மேலும் வலிமையுடையதாக்கும். இப்போது அத்தகைய தூண்களின் ஆதாரத்தை எடுப்பதற்குப் பதிலாக சகல உறவுமுறைகளினதும் உங்கள் அனுபவத்தை அதிகரியுங்கள். சகவாசத்தினை சரீரரூபத்தில் அனுபவம் செய்து உண்மையான அன்பானவர் ஆகுங்கள்.

சுலோகம்:
மிகச் சிறந்த நற்குணம் திருப்தியாகும். சதா திருப்தியில் நிலைத்திருப்பவர்கள் கடவுளாலும், மக்களாலும், சுயத்தாலும் நேசிக்கப்படுவார்கள்.