22.01.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் அந்தச் சரீரங்களை மறந்து, கவர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும். நீங்கள் கர்மாதீத நிலையடைந்து, வீடு திரும்ப வேண்டும். அதனால், தூய செயல்களைச் செய்யுங்கள். பாவச் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.
கேள்வி:
உங்கள் ஸ்திதியைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு எந்த மூன்று புகழை எப்பொழுதும் நினைவிற் கொள்ள வேண்டும்?
பதில்:
1. அசரீரியானவருடைய புகழ். 2. தேவர்களுடைய புகழ் 3. சுயத்தின் புகழ். இப்பொழுது, அசரீரியான தந்தையைப் போல் நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகி விட்டீர்களா என்று சோதித்துப் பாருங்கள். அவரது தெய்வீகக் குணங்கள் அனைத்தையும் கிரகித்து விட்டீர்களா? உங்கள் நடத்தை தேவர்களுடையதைப் போல் இராஜரீகமாக உள்ளதா? உங்கள் உணவு, பானம், தெய்வீகக் குணங்கள் அனைத்தும் தேவர்களுடையதைப் போல் இருக்கிறதா? ஆத்மாவின் தெய்வீகக் குணங்கள் அனைத்தையும் நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அவற்றின் சொரூபம் ஆகி விட்டீர்களா?ஓம் சாந்தி.
மௌனக் கோபுரமே ஆத்மாக்களாகிய உங்களின் வசிப்பிடம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இமய மலையின் உச்சி அதியுயர்ந்ததாக இருப்பதைப் போன்று, நீங்களும் அனைத்திலும் அதியுயர்ந்த இடத்திலேயே வசிக்கின்றீர்கள். அம்மக்கள் மலை ஏறும் பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் போட்டிகளும் வைக்கின்றனர். சிலர் மலையேறுவதில் திறமைசாலிகள். அனைவராலும் மலை ஏறமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் அதில் போட்டியிட வேண்டியதில்லை. தூய்மையற்றவர்களாகியுள்ள ஆத்மாக்கள் தூய்மையாகி, மேலே செல்ல வேண்டும். அது மௌனக்; கோபுரம் என அழைக்கப்படுகின்றது. அம்மக்கள் விஞ்ஞானக் கோபுரத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் மிகப்பெரிய குண்டுகளும், அத்துடன் அவற்றின் கோபுரமும் இருக்கின்றன. தங்களது அபாயகரமான பொருட்கள் அனைத்தையும் அவர்கள் அங்கேயே வைத்திருக்கின்றனர். அவர்கள் குண்டுகளில் நஞ்சு போன்றவற்றை இடுகிறார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் வீட்டிற்குப் பறந்து செல்ல வேண்டும். அனைத்தையும் அழித்துவிடும் வகையில், வீட்டிலிருந்தவாறே அவர்கள் அத்தகைய குண்டுகளை ஏவுகின்றார்கள். நீங்கள் இங்கிருந்து, மேலே மௌனக்;; கோபுரத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் அங்கிருந்தே வந்தீர்கள். பின்னர், நீங்கள் சதோபிரதானாகியதும் அங்கே திரும்பிச் செல்வீhகள். நீங்கள் சதோபிரதானிலிருந்து தமோபிரதானாகி விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். சதோபிரதானாகுவதற்கு முயற்சி செய்பவர்கள் மற்றவர்களுக்கும் பாதையைக் காண்பிக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தூய செயல்களையே செய்ய வேண்டும். நீங்கள் எப்பாவச் செயல்களையும் செய்யக்கூடாது. தந்தை உங்களுக்குக் கர்ம தத்துவத்தை விளங்கப்படுத்தியுள்ளார். இராவண இராச்சியத்தில் நீங்கள் சீரழிந்தவர்களாகினீர்கள். தந்தை இப்பொழுது தூய செயல்களைச் செய்வதற்கு உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஐந்து விகாரங்களும் பெரிய எதிரிகளாகும். பற்றும் ஒரு விகாரமே. எந்த விகாரங்களும் குறைந்தவையல்ல. பற்றைக் கொண்டிருந்தாலும் நீங்கள் சரீர உணர்வில் சிக்கிக்கொள்கிறீர்கள். இதனாலேயே தந்தை குமாரிகளுக்குப் பெருமளவில் விளங்கப்படுத்துகின்றார். ஒரு குமாரி தூய்மையானவர் எனப்படுகின்றார். தாய்மார்களும் தூய்மையாக வேண்டும். நீங்கள் அனைவரும் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளுமாவீர்கள். நீங்கள் முதியவர்களாக இருந்தாலும், நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளே. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இப்பொழுது குமாரர்கள், குமாரிகள் என்ற ஸ்திதியைக் கடந்து அப்பாற் செல்லுங்கள். முதலில் நீங்கள் ஒரு சரீரத்திற்குள் பிரவேசித்தது போன்றே, பின்னர் அதனை விட்டு நீங்குவீர்கள். இதற்கான முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற வேண்டுமாயின், வேறு எவரையும் நினைவுசெய்யக்கூடாது. உங்களிடம் வேறு என்ன இருக்கின்றது? நீங்கள் வெறுங்கையுடனேயே இங்கே வந்தீர்கள். உங்களிடம் எதுவும் இருக்கவில்லை. அச் சரீரங்களும் உங்களுடையவை அல்ல. இப்பொழுது நீங்கள் அந்தச் சரீரங்களையும் மறந்துவிட வேண்டும். நீங்கள் கவர்ச்சியிலிருந்து விடுபட்டு, கர்மாதீத நிலையை அடைய வேண்டும். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகுங்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சுற்றுலா செல்லலாம், ஆனால் பணத்தை விரயமாக்காதீர்கள். மக்கள் பெருமளவில் தானம் செய்கின்றார்கள். இன்னார் இன்னார் ஒரு மகாதானி எனப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகிறது. அவர் வைத்தியசாலை, தர்மசாலை போன்றவற்றைக் கட்டியிருக்கின்றார். பெருமளவில் தானம் செய்பவர்கள் அரசாங்கத்திடமிருந்து பட்டத்தைப் பெறுகின்றார்கள். “புனிதர்” என்பதே முதலாவது பட்டமாகும். தூய்மையானவர்கள் புனிதர்கள் என அழைக்கப்படுகின்றனர். தேவர்கள் தூய்மையாக இருந்ததால், நீங்களும் அவர்களைப் போன்று ஆகவேண்டும். பின்னர், நீங்கள் அரைக் கல்பத்திற்குத் தூய்மையானவர்களாக இருப்பீர்கள். பலர் கேட்கின்றனர்: அது எப்படிச் சாத்தியம்? அங்கேயும் குழந்தைகள் பிறக்கின்றனர். எனவே, இராவணன் அங்கே இருப்பதில்லையென உடனடியாக அவர்களுக்குக் கூறுங்கள். இராவணனின் மூலமே உலகம் விகாரங்கள் நிறைந்ததாகுகின்றது. தந்தையாகிய இராமர் வந்து, அதனைத் தூய்மையாக்குகின்றார். அங்கே தூய்மையற்றவர்கள் எவருமேயில்லை. நீங்கள் தூய்மையைப் பற்றிப் பேசக்கூடாதெனச் சிலர் கூறுகின்றனர். சரீரம் எவ்வாறு தொடர முடியும்? தூய உலகம் இருந்ததையும் அவர்கள் அறியார்கள். இப்பொழுது உலகம் தூய்மையற்று உள்ளது. இது ஒரு நாடகம்: விலைமாதர் இல்லமும் சிவாலயமும், தூய்மையற்ற உலகமும், தூய உலகமும். முதலில் சந்தோஷமும், பின்னர் துன்பமும் உள்ளது. இது, எவ்வாறு நீங்கள் உங்களது இராச்சியத்தைப் பெற்றுப் பின்னர் அதனை இழந்தீர்கள் என்பதைப் பற்றிய கதையாகும். இதனை நீங்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம், இப்பொழுது நாங்கள் வெற்றியாளர் ஆகவேண்டும். நீங்கள் தைரியசாலிகளாக இருக்க வேண்டும். உங்கள் சொந்த ஸ்திதியை நீங்கள் உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். வீட்டையும், குடும்பத்தையும் கொண்டிருந்து, அதனைப் பராமரிக்கும் அதேவேளை, நிச்சயமாக நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் எப்பாவச் செயல்களையும் செய்யக்கூடாது. பலர் பெருமளவு பற்றைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும்: ஒரேயொருவரைத் தவிர வேறு எவரிலும் அன்பு கொண்டிருக்க மாட்டீர்கள் என நீங்கள் சத்தியம் செய்துள்ளீர்கள். எனவே, ஏன் பிறரில் அன்பு கொண்டிருக்கின்றீர்கள்? அனைவரை விடவும் அதியன்பிற்கினியவரான அந்த ஒருவரையே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். அப்பொழுது உங்கள் சரீர உறவுமுறைகள் அனைத்தையும் நீங்கள் மறந்து விடுவீர்கள். அனைவரையும் பார்க்கும்பொழுது, நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதாக உங்களைக் கருதிக் கொள்ளுங்கள். இவையனைத்தும் கலியுகத்துப் பந்தனங்கள். இப்பொழுது நாங்கள் தெய்வீக உறவுமுறைகளினுள் செல்கின்றோம். வேறு எந்த மனிதருமே தனது புத்தியில் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் மிக நன்றாகத் தந்தையின் நினைவில் இருப்பீர்களாயின், உங்களது சந்தோஷப் பாதரசம் உயரும். தொடர்ந்தும் உங்களது பந்தனங்களை இயன்றவரை குறையுங்கள்; உங்களை இலேசானவர்கள் ஆக்குங்கள்! உங்கள் பந்தனங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இராச்சியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்விதச் செலவுமே ஏற்படுவதில்லை. நீங்கள் எந்தச் செலவுமின்றி உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். அவர்கள் ஆயுதங்கள், படைகள் போன்றவற்றிற்காகப் பெருமளவில் செலவழிக்கின்றனர். உங்களுக்கு எவ்விதச் செலவுமேயில்லை. நீங்கள் தந்தைக்கு எதனைக் கொடுத்தாலும், உண்மையில் நீங்கள் கொடுக்கவில்லை, ஆனால் உண்மையில் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். தந்தை மறைமுகமானவர். எவரும் ஞானத்தைப் பெறும்வகையில் அருங்காட்சியகங்கள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றைத் திறக்குமாறு அவர் தொடர்ந்தும் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் யோகம் செய்வதால், சதா நோய்களிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுகின்றீர்கள். ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் உடையவர்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷமாக இருக்கிறார்கள். எவ்வாறு ஒரு விநாடியில் முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறலாம் என்பதனை வந்து, புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அவர்களது வீட்டு வாயிற்படிகளில் நின்று விளங்கப்படுத்தலாம். மக்கள் தானங்கள் கேட்டு உங்கள் வாயிலுக்கு வருவது போன்றே, நீங்களும் அவர்கள் மிகவும் வளமானவர்கள் ஆகுவதற்கான தானத்தைக் கொடுக்கின்றீர்கள். வருகின்ற எவரிடமும் கூறுங்கள்: நீங்கள் எதற்காக யாசிக்கிறீர்கள். நீங்கள் பிறவிபிறவியாகத் தானங்கள் கேட்பதிலிருந்து விடுபடும்வகையில் நாங்கள் அத்தகைய தானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம். எல்லையற்ற தந்தையையும், உலகச் சக்கரத்தையும் அறிந்துகொள்வதனால், நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள். உங்கள் பட்ஜ்; பல அற்புதங்களைச் செய்ய வல்லது. இதன் மூலம் நீங்கள் எவருக்கும் ஒரு விநாடியில் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்க முடியும். நீங்கள் சேவை செய்ய வேண்டும். தந்தை ஒரு விநாடியில் உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். பின்னர் அது உங்கள் முயற்சிகளிலேயே தங்கியுள்ளது. இளையவர்கள், முதியவர்கள் என அனைவரிடமும் தந்தையை நினைவுசெய்யுமாறு கூறப்படுகின்றது. நீங்கள் உங்களது பட்ஜைப் பயன்படுத்தி புகையிரதங்களில் கூட சேவை செய்ய முடியும். நீங்கள்; உங்களது பட்ஜை அணிந்திருக்கும்பொழுது, அனைவருக்கும் இரு தந்தையர் இருப்பதனை விளங்கப்படுத்த முடியும். அவர்கள் இருவரிடமிருந்தும் ஓர் ஆஸ்தி பெறப்படுகின்றது. பிரம்மாவிடமிருந்து எந்த ஆஸ்தியும் பெறப்படுவதில்லை. அவர் முகவரே ஆவார். தந்தை இவர் மூலமாக உங்களுக்குக் கற்பித்து, உங்களுக்கு ஓர் ஆஸ்தியை வழங்குகின்றார். நீங்கள் உங்களுக்கு முன்னால் வருபவரைப் பார்த்து, (அவருக்கு ஏற்ப) பின்னர் விளங்கப்படுத்த வேண்டும். பலர் யாத்திரை செல்கின்றனர். அவை அனைத்தும் பௌதீக யாத்திரைகள். இதுவோ ஓர் ஆன்மீக யாத்திரை. நீங்கள் இதன் மூலம் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். மக்கள் பௌதீக யாத்திரைகளில் தடுமாறித் திரிகின்றார்கள். நீங்கள் ஏணிப் படத்தையும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். தொடர்ந்தும் சேவை செய்யுங்கள், உங்களுக்கு உணவு போன்றவை கூடத் தேவைப்படாது. சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறு எதுவுமே கிடையாது எனக் கூறப்படுகின்றது. உங்களிடம் பணம் இல்லையெனில், முழு நேரமும் பசியையே உணர்கிறீர்கள். செல்வந்த அரசர்களின் வயிறு எப்பொழுதும் நிரம்பியிருப்பதைப் போன்றதாகும். அவர்களது செயற்பாடு மிகவும் இராஜரீகமானது. அவர்கள் பேசும் விதமும் முதற்தரமானது. நீங்கள் என்னவாக ஆகுகின்றீர்கள் என்பதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். அங்கே, மக்கள் பெருமளவு இராஜரீகத்துடனேயே உண்டு பருகுகின்றனர். அவர்கள் ஒருபொழுதுமே உணவுவேளைகளுக்கு இடையில் உண்ண மாட்டார்கள். அவர்கள் பெருமளவு இராஜரீகத்துடன், மிக அமைதியாக உண்கிறார்கள். நீங்கள் அனைத்துத் தெய்வீகக் குணங்களையும் கற்க வேண்டும். அசரீரியானவரினதும், தேவர்களினதும், உங்களினதும் புகழைச் சோதித்துப் பாருங்கள். இப்பொழுது நீங்கள் பாபாவின் தெய்வீகக் குணங்களை உடையவர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் தேவர்களின் தெய்வீகக் குணங்களை உடையவர்களாக நீங்கள் ஆகுவீர்கள். எனவே, இப்பொழுது நீங்கள் அந்தத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். இப்பொழுது தெய்வீகக் குணங்களை நீங்கள் கிரகிக்கின்றீர்கள். அவர்கள் அவரை அமைதிக்கடலாகவும், அன்புக் கடலாகவும் நினைவுசெய்கின்றார்கள். தந்தை பூஜிக்கப்படுவதைப் போன்றே நீங்களும் பூஜிக்கப்படுகின்றீர்கள். தந்தை உங்களுக்கு ‘நமஸ்தே’ கூறுகின்றார். நீங்கள் இரு வழிகளில் பூஜிக்கப்படுகின்றீர்கள். தந்தை மாத்திரமே இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களது புகழையும் விளங்கப்படுத்துகின்றார். முயற்சி செய்து, அவர்களைப் போன்று ஆகுங்கள். நீங்கள் அவர்களைப் போன்று ஆகிவிட்டீர்களா என உங்களது இதயத்தைக் கேட்டுப் பாருங்கள். நாங்கள் இங்கே சரீரமற்றவராக வந்ததைப் போன்று, சரீரமற்றவராகவே திரும்பிச் செல்ல வேண்டும். உங்கள் கைத்தடியைக் கூடத் துறக்க வேண்டும் எனச் சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கைத்தடி என்ற கேள்விக்கே இங்கே இடமில்லை. இங்கே இது உங்களது சரீரத்தைத் துறப்பதற்கான கேள்வியேயாகும். ஏனைய அனைத்தும் பக்தி மார்க்க விடயங்கள். இங்கே நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் வேறு எவருக்குமன்றி, ஒரேயொரு தந்தைக்கு மாத்திரமே உரியவர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். மக்கள் எவ்வாறு குருமாரின் சங்கிலியில் சிக்குண்டுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பல வகையான குருமார் உள்ளனர். உங்களுக்கு இனி குருமாரும் தேவையில்லை, நீங்கள் வேறு எதனையும் கற்க வேண்டியதும் இல்லை. தந்தை உங்களுக்கு ஒரு மந்திரத்தைக் கொடுத்திருக்கின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்கள் ஆஸ்தியை நினைவுசெய்வதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். வீட்டில் உங்களது குடும்பத்துடன் வாழும்பொழுது நீங்கள் தூய்மையாக வேண்டும். புத்துணர்ச்சி பெறுவதற்காகவே நீங்கள் இங்கே வருகின்றீர்கள். இங்கே, நீங்கள் தந்தையின் முன்னால் நேரடியே அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். அங்கே (உங்கள் நிலையங்களில்), பாபா மதுவனத்தில் அமர்ந்திருக்கின்றார் என்பதனை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாவாகிய நீங்கள் உங்கள் சிம்மாசனத்தில் அமர்;ந்திருப்பதைப் போன்றே, பாபாவும் இந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றார். பாபா கீதையைத் தனது கரங்களில் எடுத்துக் கொள்வதில்லை. அவர் அதனை மனனம் செய்துள்ளார் என்றில்லை. அந்தச் சந்நியாசிகள் போன்றோர் அதனை மனனம் செய்கின்றார்கள். அவர் (சிவபாபா) ஞானக்கடல். அவர் அனைத்து இரகசியங்களையும் பிரம்மா மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சிவபாபா எப்பொழுதாவது பாடசாலைக்கு அல்லது ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் சென்றிருக்கின்றாரா? தந்தை அனைத்தையும் அறிவார். மக்கள் வினவுகின்றார்கள்: பாபாவுக்கு விஞ்ஞானம் ஏதாவது தெரியுமா? பாபா கூறுகின்றார்: நான் விஞ்ஞானததின் மூலம் என்ன செய்யப் போகின்றேன்? வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குமாறு மக்கள் என்னைக் கூவியழைக்கின்றார்கள். எனவே, அதற்காக நான் ஏன் விஞ்ஞானத்தைக் கற்கப் போகின்றேன்? அவர்கள் வினவுகின்றார்கள்: சிவபாபா இன்ன இன்ன சமயநூலைக் கற்றிருக்கின்றாரா? ஓ, அவரே ஞானக்கடல் என அவரைப் பற்றிக் கூறப்படுகின்றது. அச்சமயநூல்கள் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை. அவர்கள் விஷ்ணுவின் கரங்களில் சங்கையும், சக்கரத்தையும் காட்டியுள்ளார்கள். அவர்கள் அதன் அர்த்தத்தை அறியார்கள். உண்மையில் அந்த அணிகலன்கள் பிரம்மாவிற்கும், பிராமணர்களுக்குமே கொடுக்கப்பட வேண்டும். சூட்சும உலகில் எச் சரீரமுமே இருப்பதில்லை. வீட்டிலிருக்கும்பொழுதே பலருக்குப் பிரம்மாவின் காட்;சிகள் கிடைக்கின்றன. அவர்களுக்குக் கிருஷ்ணரின் காட்சிகளும் கிடைக்கின்றன. அவர்கள் பிரம்மாவிடம் சென்றால் கிருஷ்ணரைப் போல் அகுவார்கள் அல்லது கிருஷ்ணரின் மடிக்கே செல்ல முடியும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டது என்று அதற்கு அர்த்தம். அவர்கள் ஓர் இளவரசரின் காட்சியையே காண்கின்றார்கள். நீங்கள் நன்றாகக் கற்றால் அவ்வாறு ஆகலாம். அதுவே உங்கள் இலட்சியமும் இலக்கும் ஆகும். ஒருவரின் முன்மாதிரி காட்டப்படுகின்றது. அதுவே மாதிரி உரு என்று அழைக்கப்படுகின்றது. பாபா சத்திய நாராயணனின் கதையை உங்களுக்குக் கூறுவதற்கும், உங்களைச் சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாக மாற்றுவதற்கும் வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லாவற்றிற்கும் முதலில் நீங்கள் நிச்சயமாக இளவரசர்கள் ஆகுவீர்கள். கிருஷ்ணர் வெண்ணெயை உண்டார் என்று சமயநூல்களில் காட்டப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில், அது உலக இராச்சியம் எனும் பூகோளமாகும். சந்திரன் போன்றவை அவரது வாயில் எவ்வாறு காட்டப்பட முடியும்? இரண்டு பூனைகள் ஒன்றோடொன்று சண்டை பிடிக்கும்பொழுது, உலக அதிபதியான, இடையில் உள்ளவரால் வெண்ணெய் எடுத்துச் செல்லப்பட்டது. நீங்கள் அவ்வாறு ஆகிவிட்டீர்களா அல்லது இல்லையா என்று உங்களையே நீங்கள் பாருங்கள். இக் கல்வி ஓர் இராஜ அந்தஸ்தைப் பெறுவதற்கானது. இது பிரஜா பாடசாலை (பிரஜைகள் ஆகுவதற்கான கற்குமிடம்) என்று அழைக்கப்படுவதில்லை. இது சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கான ஒரு பாடசாலை. இது இறை பல்கலைக்கழகமாகும். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். பாபா கூறியுள்ளார்: ‘ஈஸ்வரிய விஸ்வ வித்தியாலயம் (இறை உலக பல்கலைக்கழகம்)’ என்று எழுதுங்கள். பல்கலைக்கழகம் என்பதை அடைப்புக் குறிக்குள் எழுதுங்கள். எவ்வாறாயினும் நீங்கள் அதனை எழுத மறக்கின்றீர்கள். நீங்கள் மக்களுக்கு எவ்வளவு புத்தகங்களைக் கொடுத்தாலும், அதிலிருந்து அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. இங்கே நீங்கள் நேரடியாக விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பிறவிபிறவியாக நீங்கள் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியைப் பெற்றீர்கள். நீங்கள் பட்ஜைப் பயன்படுத்திச் சேவை செய்யலாம். இரு தந்தையரைப் பற்றிய கருத்தையிட்டு எவரேனும் சிரித்தாலும் பரவாயில்லை, இரு தந்தையரைப் பற்றிய கருத்தானது நல்லதொரு கருத்து. இவ்வாறாகத் தமது குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்ற பலர்; உள்ளனர். குழந்தைகளும் தமது தந்தைக்கு விளங்கப்படுத்துகின்றனர். ஒரு மனைவியும் தனது கணவனை இங்கு அழைத்து வருவார். சிலவேளைகளில் அவர்கள் ஒருவரோடொருவர் சண்டை இடுகின்றார்கள். நீங்கள் அனைவரும் புத்திரர்களான, ஆத்மாக்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். உங்களுக்கு ஆஸ்திக்கான ஓர் உரிமை உள்ளது. உலகில், புத்திரிகள் திருமணம் செய்து இன்னொரு வீட்டிற்குச் செல்கின்றனர். அது கன்னிகா தானம் என்று அழைக்கப்படுகின்றது. அவர் வேறொருவருக்குக் கொடுக்கப்படுகின்றார். அதனை நீங்கள் இனியும் செய்யத் தேவையில்லை. சுவர்க்கத்தில் ஒரு குமாரி இன்னொரு வீட்டிற்குச் சென்றாலும், தூய்மையாகவே இருக்கின்றார்;. இது தூய்மையற்ற உலகம். அந்தச் சத்தியயுகம் தூய உலகமான, சிவாலயமாகும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் மீது வியாழ சகுனங்கள் உள்ளன. நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் முயற்சி செய்து உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற வேண்டும். நான் இன்னாரைப் போல் சேவை செய்கின்றேனா என நீங்கள் உங்கள் இதயத்தைக் கேட்க வேண்டும். உங்களுக்கு ஓர் ஆசிரியர் தேவை என்றிருக்கக்கூடாது. நீங்களே ஓர் ஆசிரியராக வேண்டும்;. அச்சா. குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். எவரிடமேனும் பாபா பணத்தை வாங்கி என்ன செய்வார்? நீங்கள் சென்று, அருங்காட்சியங்கள் போன்றவற்றைத் திறக்க முடியும். இங்குள்ள கட்டடங்கள் போன்றவை அனைத்தும் அழிக்கப்படும். பாபாவே வியாபாரியும், பங்குத்தரகரும் ஆவார். அவர் உங்களைத் துன்பம் என்ற சங்கிலியில் இருந்து விடுவித்து, உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: பெருமளவு காலம் கடந்து விட்டது, சிறிது காலமே இப்பொழுது எஞ்சியுள்ளது. இனிமேல் எவ்வளவு குழப்பங்கள் நிலவும் என்பதை நீங்களே காண்பீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நம்பிக்கை பொறுப்பாளராக வாழ்ந்து, கவர்ச்சியிலிருந்து விடுபட்டிருங்கள். எந்த வீணான செலவும் செய்யாதீர்கள். தேவர்களைப் போல் தூய்மையாக இருப்பதற்குத் தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள்.2. அனைவரிலும் அதியன்பிற்கினியவரை (தந்தையை) நினைவுசெய்யுங்கள். தொடர்ந்தும் இயன்றளவு கலியுகத்தின் பந்தனங்களைக் குறைத்து, உங்களை இலேசாக்கிக் கொள்ளுங்கள். அவற்றை அதிகரிக்காதீர்கள். நீங்கள் சத்தியயுகத்தின் தெய்வீக உறவுமுறைகளுக்குள் செல்கின்றீர்கள் என்ற சந்தோஷத்தில் நிலைத்திருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஞானம் நிறைந்தவராகுவதால், யாகத்தில் உங்கள் வீணான கேள்விகள் அனைத்தையும் அர்ப்பணித்து, தடைகளிலிருந்து விடுபட்டிருப்பீர்களாக.
ஏதேனும் தடைகள் வரும்பொழுது, நீங்கள் “ஏன்?”, “என்ன?” என்ற பல கேள்விகளுக்குள் செல்கின்றீர்கள். கேள்விகளால் நிறைந்திருப்பது என்றால் விரக்தியடைவது என்று அர்த்தமாகும். ஞானம் நிறைந்தவராகி, யாகத்தில் வீணான கேள்விகள் அனைத்தையும் அர்ப்பணியுங்கள், உங்கள் நேரத்துடன், பிறரின் நேரமும் சேமிக்கப்படும். இதனைச் செய்வதால், இலகுவில் தடைகளிலிருந்து விடுபட்டவர் ஆகுவீர்கள். நம்பிக்கையும் வெற்றியுமே உங்கள் பிறப்புரிமை: இந்தப் பெருமையைப் பேணுங்கள், நீங்கள் என்றுமே விரக்தியடைய மாட்டீர்கள்.
சுலோகம்:
சதா உற்சாகத்தைப் பேணுவதுடன், அந்த உற்சாகத்தைப் பிறருக்கும் வழங்குவதே, உங்கள் தொழில் ஆகும்.
தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தந்தை பிரம்மா அன்பில் அமிழ்ந்துள்ள ஸ்திதியில் நிலைத்திருந்ததுடன், “நான்” எனும் உணர்வின் மனோபாவத்தையும் துறந்து, அனைவரின் கவனத்தையும் தந்தை மீது ஈர்த்ததைப் போன்று, அதேவிதமாக, தந்தையைப் பின்பற்றுங்கள். ஞானத்தின் அடிப்படையில், தந்தையின் நினைவில் அமிழ்ந்திருங்கள். இவ்விதமாக அமிழ்ந்திருப்பதே அன்பில் மூழ்கியிருக்கின்ற ஸ்திதி ஆகும்.