08.09.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     23.01.85     Om Shanti     Madhuban


தெய்வீகக் கண்கள் உங்களின் தெய்வீகப் பிறப்பின் பரிசாகும்.


இன்று, திரிகாலதரிசி தந்தை தனது திரிகாலதரிசியும் திரிநேத்ரியுமான குழந்தைகளைப் பார்க்கிறார். பாப்தாதா ஒவ்வொருவரினதும் தெய்வீகப் புத்தியையும் மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் தெய்வீகக் கண்களையும் பார்க்கிறார். ஒவ்வொருவரின் கண்களும் எந்தளவிற்குத் தெளிவாகவும் சக்திவாய்ந்தவையாகவும் உள்ளன என்பதையும், ஒவ்வொரு குழந்தையின் தெய்வீகக் கண்களினதும் சக்தியின் சதவீதம் என்னவென்பதையும் அவர் பார்க்கிறார். உங்களின் பிறந்தநாள் பரிசாக பாப்தாதா உங்கள் அனைவருக்கும் 100மூ சக்திவாய்ந்த தெய்வீகக் கண்களைக் கொடுத்துள்ளார். பாபா வரிசைக்கிரமமாக சக்திவாய்ந்த கண்களைக் கொடுக்கவில்லை. ஆனால், குழந்தைகளான நீங்கள் அனைவரும் உங்களின் தெய்வீகக் கண்களை நடைமுறையில், உங்களின் சொந்த விதிமுறைகளுக்கேற்பவும், உங்களின் சொந்தப் முன்னெச்சரிக்கைகளுக்கேற்பவும், எந்தளவிற்கு நீங்கள் அதில் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதற்கேற்பவும் பயன்படுத்துகிறீர்கள். இதனாலேயே, சிலரின் தெய்வீகக் கண்கள் சக்தி நிறைந்தவையாக உள்ளன. ஆனால் ஏனையோரின் கண்களைப் பார்க்கும்போது, அவர்களின் தெய்வீக் கண்களின் சக்தி சதவீதமாக உள்ளன. நீங்கள் இந்த மூன்றாம் கண்ணை, தெய்வீகக் கண்ணை பாப்தாதாவிடமிருந்தே பெற்றுள்ளீர்கள். தற்காலத்தில், விஞ்ஞானக் கண்டுபிடிப்பான தொலைநோக்கிகள், தொலைவில் இருக்கும் எதையும் நெருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்பதற்கு உதவுவதைப் போன்று, தெய்வீகக் கண்களும் தெய்வீகத் தொலைநோக்கிகள் போன்று தொழிற்படுகின்றன. ஒரு விநாடியில், வெகு தொலைவில் உள்ள பரந்தாமத்தை உங்களால் சென்றடைய முடியும். எத்தனை மைல்களுக்கு அப்பால் அது உள்ளது என உங்களால் கணக்கிட முடியாது. எனினும், அது மிகவும் நெருக்கமாகவும் தெளிவாகவும் புலப்படும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் உங்களால் சூரியன், சந்திரன், பௌதீக உலகம் வரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் இந்தத் தெய்வீகக் கண்ணால் உங்களால் மூவுலகங்களையும் முக்காலங்களையும் பார்க்க முடியும். இந்தத் தெய்வீகக் கண்ணை அனுபவக் கண் என்றும் அழைக்க முடியும். அனுபவக் கண்களாலேயே உங்களால் 5000 வருடங்களுக்குரிய அனைத்தையும் தெளிவாக, நேற்று நடந்தவை போலப் பார்க்க முடியும். 5000 வருடங்களுக்கும் நேற்று நடந்தவற்றுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. எனவே, வெகு தொலைவில் இருந்தவற்றை உங்களால் நெருக்கமாகவும் தெளிவாகவும் பார்க்க முடியும், அல்லவா? நேற்று நீங்கள் பூஜிக்கத்தகுதிவாய்ந்த தேவாத்மாவாக இருந்தீர்கள். நாளை மறுபடியும் அவ்வாறு ஆகுவீர்கள் என்பதை உங்களால் அனுபவம் செய்ய முடிகிறது. இன்று, நீங்கள் ஒரு பிராமணர். நாளை, நீங்கள் ஒரு தேவர் ஆகுவீர்கள். எனவே, இன்று, நாளைக்குரிய விடயங்கள் இலகுவானவை, அல்லவா? சக்திவாய்ந்த கண்ணைக் கொண்டுள்ள குழந்தைகள் சதா தமது அழகான, அலங்கரிக்கப்பட்ட, இரட்டைக் கிரீடம் தரித்த ரூபத்தைத் தங்களுக்கு முன்னால் தெளிவாகப் பார்ப்பார்கள். உங்களின் முன்னால் ஒரு நாகரிகமான ஆடையைப் பார்க்கும்போது, நீங்கள் அதை அணியப் போகிறீர்கள் என்று உணர்வதைப் போன்று, உங்களின் முன்னால் தேவ சரீரம் என்ற ஆடையையும் உங்களால் பார்க்க முடிகிறதல்லவா? அதாவது, நீங்கள் நாளை அதை அணியப் போகிறீர்கள். உங்களால் அதைக் காண முடிகிறதல்லவா? அது இன்னமும் தயாராகி வருகிறதா? அல்லது உங்களின் முன்னால் ஏற்கனவே தயாரான ஆடையை உங்களால் காண முடிகிறதா? பிரம்மா பாபா எப்போதும் தனது எதிர்கால ஆடையான ஸ்ரீ கிருஷ்ணரின் ரூபத்தைத் தனக்கு முன்னால் வைத்திருந்தார் என்பதை நீங்கள் கண்டீர்கள். அதேபோன்று, உங்களின் சக்திவாய்ந்த கண்களால் உங்களின் ஆடையைத் தெளிவாக உங்களின் முன்னால் காண முடிகிறதா? ஒரு கணம், நீங்கள் ஒரு தேவதை. மறுகணம், நீங்கள் தேவதையில் இருந்து ஒரு தேவராக மாறுகிறீர்கள். உங்களுக்குப் போதையுள்ளது. உங்களின் தெய்வீகக் கண்களினூடாக தேவரின் நடைமுறை ரூபத்தின் காட்சியையும் நீங்கள் காண்கிறீர்கள். எனவே, உங்களின் கண்கள் சக்திவாய்ந்தவையா? அல்லது, எதையாவது பார்க்கும் சக்தி பலவீனமாக உள்ளதா? பௌதீகக் கண்களின் சக்தி பலவீனமாகும்போது, தெளிவாக இருக்கும் எதுவும் திரைக்குப் பின்னால் அல்லது முகில்களுக்கிடையே இருப்பதைப் போன்றே தோன்றும். அதேபோன்று, நீங்கள் தேவர்கள் ஆகவேண்டும். நீங்கள் அவ்வாறானவர்கள் ஆகினீர்கள். ஆனால், ‘நான் அவ்வாறிருந்தேன்’ என்ற திரைக்குப் பின்னால் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதையும் எவ்வாறிருந்தீர்கள் என்பதையும் உங்களால் பார்க்க முடியவில்லை. இது தெளிவாக உள்ளதா? நம்பிக்கை என்ற திரையும் நினைவெனும் மணியும் (டிநயன) சக்திவாய்ந்தவையாக உள்ளனவல்லவா? அல்லது, மணிகள் நன்றாக இருந்து, திரை பலவீனமாக உள்ளதா? ஒன்று பலவீனமாக இருந்தாலும், அது தெளிவாக இருக்காது. எனவே, உங்களின் கண்களின் சக்தி குறைந்து விட்டதா எனச் சோதித்துப் பாருங்கள். பிறப்பில் இருந்தே நீங்கள் ஸ்ரீமத் என்ற முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றினால், உங்களின் கண்கள் சதா சக்திவாய்ந்தவையாக இருக்கும். நீங்கள் ஸ்ரீமத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், உங்களின் சக்தி குறைவடையும். ஸ்ரீமத் என்ற ஆசீர்வாதங்களை, மருந்தை அல்லது முன்னெச்சரிக்கைகளை, அதை நீங்கள் எப்படியும் அழைக்கலாம், மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை சக்திவாய்ந்தவை ஆகும். எனவே, இந்தக் கண்களே தெய்வீகத் தொலைநோக்கிகள் ஆகும்.

இந்தக் கண்கள் சக்திவாய்ந்த கருவிகள். இவற்றினூடாக எவரையும் அவர்கள் எத்தகையவர்களோ அவ்வாறே உங்களால் பார்க்க முடியும். உங்களால் இலகுவாகவும் தெளிவாகவும் மற்றவர்களின் ஆத்ம உணர்வு ரூபத்தையும் அவர்களின் சிறப்பியல்புகளையும் பார்க்க முடியும். உங்களின் பௌதீகக் கண்களால் பௌதீக சரீரத்தைப் பார்ப்பதைப் போன்று, சரீரத்தில் மறைமுகமாக உள்ள ஆத்மாவை உங்களால் பார்க்க முடியும். ஆத்மாவை உங்களால் அந்தளவிற்குத் தெளிவாகப் பார்க்க முடிகிறதா? அல்லது நீங்கள் சரீரத்தைப் பார்க்கிறீர்களா? உங்களின் தெய்வீகக் கண்களால், உங்களால் தெய்வீகமான, சூட்சுமமான ஆத்மாவை மட்டுமே பார்க்க முடியும். நீங்கள் ஒவ்வோர் ஆத்மாவினதும் சிறப்பியல்புகளை மட்டுமே பார்ப்பீர்கள். உங்களின் கண்கள் தெய்வீகமாக இருப்பதைப் போன்று, உங்களின் சிறப்பியல்புகளும், அதாவது, உங்களின் நற்குணங்களும் தெய்வீகமானவை. குறைபாடுகள் என்பவை ஒரு பலவீனம் ஆகும். பலவீனமான கண்பார்வையால் பலவீனங்களை மட்டுமே பார்க்க முடியும். உங்களின் பௌதீகக் கண்கள் பலவீனமாக இருக்கும்போது, கருமையான திட்டுக்களை நீங்கள் காண்பீர்கள். அதேபோன்று, பலவீனமான கண்பார்வையும் பலவீனங்கள் என்ற இருளையே பார்க்கும். பாப்தாதா உங்களுக்குப் பலவீனமான கண்களைக் கொடுக்கவில்லை. நீங்களே அவற்றைப் பலவீனமாக்கிக் கொண்டீர்கள். உண்மையில், தெய்வீகக் கண் என்ற இந்தச் சக்திவாய்ந்த கருவியானது, நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும், எப்போதும் இயல்பாகவே ஆத்ம உணர்வு ரூபத்தை மட்டுமே பார்க்கும். அது சரீரமா அல்லது ஆத்மாவா எனப் பார்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியதில்லை. இதுவா அல்லது அதுவா? என நீங்கள் தடுமாறினால், அது பலவீனமான கண்பார்வையின் அடையாளம் ஆகும். சக்திவாய்ந்த மைக்கிரஸ்கோப்பினால் விஞ்ஞானிகளால் கிருமிகளைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அதேபோன்று, இந்தச் சக்திவாய்ந்த தெய்வீகக் கண்களால் மிகத் தெளிவாக மாயையின் அதிகபட்ச சூட்சுமமான ரூபத்தையும் பார்க்க முடியும். கிருமிகள் அதிகரிக்க அவை அனுமதிப்பதில்லை. ஆனால் அவற்றை அழித்துவிடுகின்றன. மாயையின் நோயை முன்கூட்டியே அவை இனங்கண்டு அதை அழித்துவிடுகின்றன. அத்துடன் சதா நோயில் இருந்து விடுபட்டும் இருக்கின்றன.

இத்தகைய சக்திவாய்ந்த தெய்வீகக் கண் உங்களிடம் உள்ளதா? இந்தத் தெய்வீகக் கண்களும் தெய்வீகத் தொலைக்காட்சியே. தற்காலத்தில், அனைவரும் தொலைக்காட்சி பார்ப்பதை விரும்புவார்கள். இந்தத் தொலைக்காட்சியினூடாக உங்களால் சுவர்க்கத்தில் உங்களின் பிறப்புக்கள் அனைத்தையும் பார்க்க முடியும். அதாவது, உங்களின் 21 பிறவிகளின் தெய்வீகத் திரைப்படத்தை உங்களால் பார்க்க முடியும். உங்களின் இராச்சியத்தின் அழகான காட்சிகளை உங்களால் காண முடியும். ஒவ்வொரு பிறவியிலும் ஆத்மாவின் கதையை உங்களால் பார்க்க முடியும். உங்களின் இராச்சியக் கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் பாக்கியத்தையும் பார்க்க முடியும். அதைத் தெய்வீகக் காட்சி அல்லது தொலைக்காட்சி, எப்படி நீங்கள் அழைத்தாலும், தெய்வீகக் காட்சியின் கண்கள் சக்திவாய்ந்தவையா? நீங்கள் எதுவும் செய்யாமல் இருக்கும்போது, இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். தற்காலத்து நடனங்களைப் பார்க்காதீர்கள். அது பயங்கரமான நடனம். தேவதைகளினதும் தேவர்களினதும் நடனங்களைப் பாருங்கள். உங்களின் விழிப்புணர்வின் ஆளி நன்றாக இருக்கிறதல்லவா? உங்களின் ஆளி நன்றாக இல்லாவிட்டால், நீங்கள் ஒரு திரைப்படத்தைப் போட்டாலும், உங்களால் எதையும் பார்க்க முடியாதிருக்கும். இந்தக் கண்கள் எத்தனை மேன்மையானவை என்பதைப் புரிந்து கொண்டீர்களா? தற்காலத்தில், எதையாவது கண்டுபிடிக்கும்போது, அவற்றில் பெரும்பாலானவை பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. அதேபோன்று, தெய்வீகக் கண்ணாலும் பல பணிகளை வெற்றிகரமாகச் செய்ய முடியும். சிலவேளைகளில், குழந்தைகளின் பலவீனங்களின் முறைப்பாடுகளைக் கேட்டதும் பாப்தாதா கூறுகிறார்: நீங்கள் தெய்வீகப் புத்தியையும் தெய்வீகக் கண்ணையும் பெற்றுள்ளீர்கள். எப்போதும் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துங்கள். உங்களுக்கு வேறு எதைப் பற்றியும் சிந்திப்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நேரம் இருக்காது. எனவே, எந்தவிதமான முறைப்பாடுகளும் இருக்காது. சம்பூரணம் ஆகுவதற்கு அல்லது முறைப்பாடுகள் செய்வதற்கான விசேடமான அடிப்படை, சிந்திப்பதும் பார்ப்பதுமே. அனைத்தையும் பார்க்கும்போதும் கேட்கும்போதும், எப்போதும் தெய்வீகமான முறையில் சிந்தியுங்கள். உங்களின் சிந்தனையைப் போன்றே, உங்களின் செயலும் இருக்கும். எனவே, சதா இந்தத் தெய்வீகப் பேறுகள் இரண்டையும் உங்களுடன் வைத்திருங்கள். இது இலகுவானதல்லவா? நீங்கள் சக்திசாலிகள். ஆனால் நீங்கள் என்னவாகின்றீர்கள்? ஸ்தாபனை ஆரம்பமாகியபோது, சிறுவர்களான நீங்கள் போலாபாயைப் பற்றிச் சிறு வசனங்கள் பேசுவதுண்டு. (போலாபாய் - அனைத்தையும் மறக்கும் அப்பாவி சகோதரன்) எனவே, நீங்கள் சக்திசாலிகள். ஆனால் அப்பாவிகள் ஆகுகிறீர்கள். எனவே, அந்தளவிற்கு அப்பாவிகள் ஆகாதீர்கள்! எப்போதும் சக்திசாலிகளாக இருந்து, மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குங்கள். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

சதா தமது தெய்வீகப் புத்தியையும் தெய்வீகக் கண்ணையும் பயன்படுத்துபவர்களுக்கும், தமது தெய்வீகப் புத்தியால் மேன்மையான முறையில் ஞானத்தைச் சதா கடைபவர்களுக்கும், தமது தெய்வீகக் கண்ணினூடாக தெய்வீகக் காட்சிகளைப் பார்ப்பதில் திளைத்திருப்பவர்களுக்கும், தமது எதிர்காலத் தேவ

ரூபத்தைத் தெளிவாக அனுபவம் செய்பவர்களுக்கும், நாளை என்பதை இன்றுபோல் நெருக்கமாக அனுபவம் செய்பவர்களுக்கும், தெய்வீகக் கண்ணைக் கொண்டுள்ள இத்தகைய சக்திவாய்ந்த திரிநேத்ரி மற்றும் திரிகாலதரிசிக் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
1) இலகு யோகி ஆகுவதற்கான வழிமுறை.
நீங்கள் அனைவரும் ஒத்துழைக்கும் ஆத்மாக்கள், அல்லவா? நீங்கள் சதா தந்தையுடன் சகல உறவுமுறைகளினதும் அன்பில் திளைத்திருக்கிறீர்கள். சகல உறவுமுறைகளினதும் அன்பானது அனைத்தையும் இலகுவானதாக்குகிறது. எங்கு அன்பான உறவுமுறை உள்ளதோ, அங்கு அனைத்தும் இலகுவாக இருக்கும். இலகுவாக இருக்கும் எதுவும் நிலையாக இருக்கும். எனவே, இத்தகைய இலகு யோகி ஆத்மாக்களே, நீங்கள் தந்தையுடன் சகல அன்பான உறவுமுறைகளையும் அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் யாதவைப் (கிருஷ்ணரின் நண்பன்) போல இருக்கிறீர்களா? அல்லது கோபிகைகளைப் போல இருக்கிறீர்களா? யாதவ் ஞானத்தைப் பேசினார். ஆனால் கோப, கோபியர்கள் இறையன்பை அனுபவம் செய்ய ஆரம்பித்தார்கள். எனவே, சகல உறவுமுறைகளையும் அனுபவம் செய்தலே சிறப்பியல்பு ஆகும். சங்கமயுகத்தில் இந்த விசேடமான அனுபவத்தைக் கொண்டிருத்தல் என்றால் ஆசீர்வாதத்தைப் பெறுவதாகும். ஞானத்தைக் கேட்பதும் ஞானத்தைப் பேசுவதும், உறவுமுறையைப் பூர்த்தி செய்வதில் இருந்தும் சகல உறவுமுறைகளின் சக்தியுடன் சதா அன்பிலே மூழ்கியிருப்பதற்கும் வேறுபட்டது. எனவே, சகல உறவுமுறைகளையும் கொண்டிருப்பதன் அடிப்படையில் நீங்கள் சதா ஒத்துழைப்பீர்களாக. சதா இந்த அனுபவத்தை அதிகரியுங்கள். அன்பிலே திளைத்திருக்கும் இந்த ஸ்திதியானது கோப, கோபிகைகளின் விசேடமான ஸ்திதி ஆகும். அன்பைக் கொண்டிருத்தல், அன்பிலே திளைத்திருப்பதை விட வேறுபட்டது. அன்பிலே திளைத்திருத்தல் மேன்மையான அனுபவம் ஆகும்.

நீங்கள் ஒருபோதும் எந்தவிதமான தடைகளின் ஆதிக்கத்திற்கும் உட்படுவதில்லை, அல்லவா? ஒருவருக்கு எந்தளவிற்கு மேன்மையான ஸ்திதி உள்ளதோ, அந்தளவிற்கு மேன்மையான ஸ்திதியைக் கொண்டிருக்கும் அவர் தடைகளின் எந்தவிதமான ஆதிக்கத்திற்கும் அப்பாற்பட்டிருப்பார். ஒருவர் விண்வெளிக்குச் செல்லும்போது, அவர் புவியீர்ப்பு விசையின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டு மேலே செல்கிறார். இந்த முறையில், நீங்கள் சதா தடைகளின் எந்தவிதமான ஆதிக்கத்திற்கும் அப்பாற்பட்டுள்ளீர்கள். அன்பிலே திளைத்திருக்காதவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆகவே, சகல உறவுமுறைகளினதும் அன்பின் அனுபவத்தில் உங்களை மறந்திருங்கள். அன்பு உள்ளது. ஆனால் இப்போது அது வெளிப்பட வேண்டும். நீங்கள் அமிர்தவேளையில் பாபாவை நினைத்துவிட்டுப் பின்னர் உங்களின் வேலைகளில் மூழ்கிவிட்டால், அந்த அன்பு அமிழ்ந்துவிடும். அதை வெளிப்படுத்தி வைத்திருங்கள். நீங்கள் சதா சக்திசாலியாக இருப்பீர்கள்.

விசேடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மையான அவ்யக்த வாசகங்கள்:
அனைவருக்கும் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டவர் ஆகுங்கள். மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள், இயல்பாகவே அனைவரினதும் ஒத்துழைப்பைப் பெறுகிறார்கள். மற்றவர்களுக்கான தூய, சாதகமான உணர்வுகள் இலகுவாகவும் இயல்பாகவும் மற்றவர்களின் மனங்களில் ஒத்துழைப்பிற்கான உணர்வுகளை உருவாக்குகின்றன. அன்பு அவர்களை ஒத்துழைப்பவர்கள் ஆக்குகிறது. எனவே, எப்போதும் தூய, சாதகமான எண்ணங்களால் நிறைந்திருங்கள். மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டவர்கள் ஆகுங்கள். அதன்மூலம் அனைவரையும் அன்பானவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் ஆக்குங்கள். தேவைப்படும் நேரத்தில் மற்றவர்கள் ஒத்துழைப்பவர்கள் ஆகும் அளவிற்கு - அவர்களின் வாழ்க்கையினூடாக அல்லது சேவையினூடாக - நாடகத்திற்கேற்ப அவர்கள் விசேட சக்தியைப் பெறுகிறார்கள். அவர்கள் தமது சொந்த முயற்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மேலதிக சக்தியையும் பெறுகிறார்கள். சேவைத் திட்டங்களில் நீங்கள் மற்றவர்களை நெருக்கமாகக் கொண்டுவரும் அளவிற்கு, சேவையின் நடைமுறைப் பெறுபேறு அதிகளவில் புலப்படும். நீங்கள் செய்தியைக் கொடுக்கும் சேவையைச் செய்கிறீர்கள். நீங்கள் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். எவ்வாறாயினும், இந்த வருடம், குறிப்பாக, நீங்கள் வெறுமனே செய்தியைக் கொடுக்கக்கூடாது. ஆனால் அவர்களை ஒத்துழைப்பவர்கள் ஆக்குங்கள். அதாவது, தொடர்பில் அவர்களை நெருக்கமாகக் கொண்டுவாருங்கள். வெறுமனே ஒரு மணிநேரத்திற்கு அல்லது அவர்கள் படிவத்தை நிரப்பும்போது மட்டும் அவர்களை ஒத்துழைப்பவர்கள் ஆக்காமல், ஒத்துழைப்பதன் மூலம் அவர்களை நெருக்கமான தொடர்பிலும் உறவுமுறையிலும் கொண்டு வாருங்கள்.

நீங்கள் எந்தச் சேவையைச் செய்தாலும், நீங்கள் சக்தியாகவும் அவர்கள் மைக்குகளாகவும் இருக்கும் வகையில் அவர்கள் ஒத்துழைப்பவர்கள் ஆகவேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருங்கள். எனவே, மைக்குகளைத் தயாரிப்பதே சேவையின் இலக்கு ஆகும். அவர்கள் தமது அனுபவத்தின் அடிப்படையில் உங்களினதும் தந்தையினதும் ஞானத்தைப் பெறுவார்கள். இவ்வாறு மற்றவர்களின் செல்வாக்குச் செலுத்தக்கூடிய மைக்குகளை இலகுவாகவும் இயல்பாகவும் தயார் செய்யுங்கள். உங்களின் சக்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்த இறைபணியில் மற்றவர்களின் சக்தியைப் பயன்படுத்தும் இலக்கைக் கொண்டிருங்கள். எந்தப் புலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒத்துழைக்கக்கூடிய சிறிய மற்றும் பெரிய ஸ்தாபனங்களைக் கண்டுபிடியுங்கள். தற்சமயம், சக்தியுடைய ஸ்தாபனங்கள் உள்ளன. ஆனால் அதைப் பயன்படுத்தும் வழிமுறை அவர்களிடம் இல்லை. அவ்வாறு சேர்ந்து செயற்படக்கூடிய எவரையும் அவர்களால் காண முடிவதில்லை. அவர்கள் உங்களுக்கு அதிகளவு அன்புடன் ஒத்துழைப்புக் கொடுத்து நெருங்கி வருவார்கள். உங்களின் 900000 பிரஜைகளும் விரிவாக்கம் அடைவார்கள். சில வாரிசுகளும் சில பிரஜைகளும் வெளிப்படுவார்கள். இப்போது, நீங்கள் ஒத்துழைப்பவர்களாக ஆக்கியவர்களை வாரிசுகள் ஆக்குங்கள். ஒருபுறம், வாரிசுகளை உருவாக்குங்கள். மறுபுறம், மைக்குகளை உருவாக்குங்கள். உலக உபகாரிகள் ஆகுங்கள். ஒத்துழைப்பின் அடையாளமாக, இரண்டு கைகள் ஒன்று சேர்வதாகக் காட்டப்படுகிறது. எனவே, தந்தையுடன் சதா ஒத்துழைத்தல் என்றால் உங்களின் கையை அவரின் கைமீது வைத்து, சதா உங்களின் புத்தியால் அவருடன் இருப்பதாகும்.

நீங்கள் என்ன பணியைச் செய்தாலும், அந்தப் பணியைச் செய்யும்போது பெரிய இதயத்துடன் செய்யுங்கள். மற்றவர்களை ஒத்துழைக்கச் செய்வதிலும் பெரிய இதயத்துடன் இருங்கள். உங்களுக்காகவோ அல்லது ஒத்துழைக்கும் ஆத்மாக்களுக்காகவோ அல்லது உங்களின் சகபாடிகளுக்கோ சிறிய இதயத்தைக் கொண்டிராதீர்கள். பெரிய இதயத்தைக் கொண்டிருப்பதன் மூலம், தூசும் தங்கம் ஆகும். பலவீனமான சகபாடிகள் பலசாலிகள் ஆகுவார்கள். அசாத்தியமான வெற்றியும் சாத்தியம் ஆகும். உடனடியாக ஒத்துழைக்காமல் இருக்கும் பல ஆத்மாக்கள் இருப்பார்கள். ஆனால் தொடர்ந்து அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுங்கள். தொடர்ந்து மற்றவர்களை ஒத்துழைக்கச் செய்யுங்கள். எனவே, ஒத்துழைப்புடன் முன்னேறுங்கள். ஏனெனில் இந்த ஒத்துழைப்பானது அவர்களை யோகி ஆத்மாக்கள் ஆக்கும். இப்போது, ஒத்துழைக்கும் ஆத்மாக்களை மேடைக்குக் கொண்டுவந்து, அவர்களின் ஒத்துழைப்பைப் பயனுள்ளதாக்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் களத்தையும்(நிலம்) நாடியையும் நேரத்தையும் முதலில் கருத்தில் கொள்வதன் மூலம், ஞானம் நிறைந்தவராகி உண்மையான ஞானத்தை வெளிப்படுத்துவீர்களாக.

தந்தையின் இந்தப் புதிய ஞானம் உண்மையான ஞானம் ஆகும். இந்தப் புதிய ஞானத்தால் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. இந்த அதிகாரமும் போதையும் உங்களின் ரூபத்தில் வெளிப்பட வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் வருகின்ற புதியவர்களிடம் புதிய விடயங்களைக் கூறிக் குழப்பக்கூடாது. அனைத்திற்கும் முதலில், களத்தையும் நாடியையும் நேரத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஞானத்தைக் கொடுங்கள். இதுவே ஞானம் நிறைந்த ஆத்மாவின் அடையாளம் ஆகும். ஆத்மாவின் விருப்பத்தைக் கருத்தில் கொண்டு, அவரின் நாடியைப் பிடித்துப் பார்த்து, ஒரு களத்தை உருவாக்குங்கள். ஆனால், அகத்தே, நிச்சயமாக சத்தியத்தின் பயமற்ற தன்மையின் சக்தியுடன் இருங்கள். அப்போது மட்டுமே உங்களால் உண்மையான ஞானத்தை வெளிப்படுத்த முடியும்.

சுலோகம்:
‘எனது’ என்று கூறுவது என்றால், சிறிய விடயத்தைப் பெரிதாக்குதல் என்று அர்த்தம். ‘உங்களுடையது’ என்று சொல்வது என்றால் மலையையும் பஞ்சு போன்று ஆக்குதல் என்று அர்த்தம்.