16.09.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் மின்கலங்களைச் (பற்றரி) சக்தியூட்டுவதற்கான அக்கறையைக் கொண்டிருங்கள். ஏனையோரைப் பற்றிச் சிந்திப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் சொந்தச் சரக்குகளை நீங்களே அரைத்துப் போதையுடையவர்கள் ஆகுங்கள்.

கேள்வி:
ஞானம் ஒரு விநாடிக்கானது என்ற போதிலும், ஏன் தந்தை உங்களுக்கு அனைத்தையும் விபரமாக விளங்கப்படுத்தி, உங்களுக்கு அதிக காலத்தையும் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது?

பதில்:
உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்த பின்னர், குழந்தைகளாகிய உங்களில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று தந்தை பார்க்கிறார். உங்களில் முன்னேற்றம் மேலும் இடம்பெற வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்தும் ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் விதையினதும், முழு விருட்சத்தினதும் ஞானத்தைக் கொடுப்பதனாலேயே அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். அவர் உங்களுக்கு ஒரு விநாடிக்கான மந்திரத்தைக் கொடுத்ததும் சென்றிருந்தால், அவர் ஞானக்கடல் என்ற பட்டத்தைப் பெற்றிருக்க மாட்டார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பக்திமார்க்கத்தில், இங்கு, அவர்கள் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனை வழிபட்டாலும், அவர் வந்து சென்றுள்ளார் என்பதை அவர்களின் புத்தி அறிந்துள்ளது. அவர்கள் ஓர் இலிங்கத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம், அதை வழிபடுகிறார்கள். சிவன் பரந்தாமத்தில் வசிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் வந்து சென்றுள்ளார் என்பதாலேயே அவர்கள் அவருடைய ஞாபகார்த்தத்தை உருவாக்கி அதை வழிபடுகிறார்கள். நீங்கள் அவரை நினைவு செய்யும்பொழுது, அவர் அசரீரியானவர் என்பதும், அவர் பரந்தாமவாசி என்பதும் நிச்சயமாக உங்கள் புத்தியில் புகுகின்றது. அவர்கள் ஓர் இலிங்கத்தைச் சிவன் என்று அழைத்து, அதை வழிபடுகிறார்கள். அவர்கள் ஆலயங்களுக்குச் சென்று அதற்குத் தலைவணங்குகிறார்கள். பால், நீர், பழங்கள் போன்றவற்றை அவர்கள் அதற்குப் படைக்கிறார்கள், ஆனால், அது உயிரற்ற ரூபமாகும். அவர்கள் தொடர்ந்தும் உயிரற்ற ரூபத்தை வழிபடுகிறார்கள். அவர் உயிருள்ளவர் என்பதும், அவருடைய வசிப்பிடம் பரந்தாமம் என்பதும் இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அம்மக்கள் அவரை வழிபடும்பொழுது, அவர் பரந்தாமவாசி என்பதையும், அவர் வந்து சென்றுள்ளார் என்பதையும் அவர்களுடைய புத்தி அறிந்துள்ளது. அதனாலேயே அவ் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அவற்றை வழிபடுகிறார்கள். அவ் உருவங்கள் சிவனல்ல, ஆனால் அவை அவருக்குரிய உருவங்களே ஆகும். அதேபோன்று, மக்கள் உயிரற்ற ரூபங்களாகிய, தேவர்களின் விக்கிரகங்களை வழிபடுகிறார்கள்;; அவை உயிருள்ளவை அல்ல. எவ்வாறாயினும், அந்த உயிருள்ளவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் நிச்சயமாக மறுபிறவி எடுத்துக் கீழே வந்திருக்க வேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தைப் பெறுகிறீர்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகிய அந்தத் தேவர்கள் அனைவரும் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள். அந்தப் பெயர் மாற்றமடைவதில்லை, ஆனால் சரீரங்களின் பெயர்கள் மாற்றமடைகின்றன. ஒவ்வொரு ஆத்மாவும்; ஏதோவொரு சரீரத்தில் உள்ளார்;. அவர்கள் நிச்சயமாக மறுபிறவி எடுக்க வேண்டும். முதலாவதாக ஒரு சரீரத்தையுடைய மனிதர்களாக இருந்தவர்களே, (சத்தியயுகத்து இலக்ஷ்மியும் நாராயணனும்) வழிபடப்படுகிறார்கள். தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற ஞானத்தைப் பற்றிய எண்ணங்களே இப்பொழுது உங்களிடம் உள்ளன. நீங்கள் வழிபட்ட உருவம் முதல் இலக்கத்துக்குரியது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் உயிருள்ள ரூபத்தில் இருந்தார்கள். அவர்கள் இங்கு பாரதத்தில் இருந்தார்கள், ஆனால் இப்பொழுது அவர்கள் இங்கு இல்லை. மறுபிறவி எடுப்பதால், அவர்கள் வெவ்வேறு பெயர்களையும் ரூபங்களையும் பெற்று, தொடர்ந்தும் தங்களுடைய 84 பிறவிகளுக்கான பாகங்களை நடிக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களில் எவரும் இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்கள் நிச்சயமாகச் சத்தியயுகத்தில் இருந்தார்கள், ஆனால் அவர்கள் இப்பொழுது இங்கு இல்லை. எவராலும் இதைக்கூட புரிந்துகொள்ள இயலாதுள்ளது. நாடகத் திட்டத்துக்கேற்ப, நிச்சயமாக அவர்கள் உயிருள்ள ரூபத்தில் வருவார்கள் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரியும். மனிதர்களின் புத்தியில் இந்த எண்ணங்கள் புகுவதில்லை, ஆனால், அவர்கள் இருந்தார்கள் என்பதை நிச்சயமாக அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இப்பொழுது அவர்களின் உயிரற்ற விக்கிரகங்களே உள்ளன, ஆனால் அந்த உயிருள்ள மனிதர்கள் எங்கு சென்றார்கள் என்பது எவருடைய புத்தியிலும் பதிய மாட்டாது. மறுபிறவியைப் பற்றியும், 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றியும் மக்கள் பேசுகிறார்கள். மனிதர்கள் 84 பிறவிகளை மாத்திரம் பெறுகிறார்கள், 8.4 மில்லியன் பிறவிகளையல்ல என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரம் தெரியும். மக்கள் இராமச்சந்திரரை வழிபடுகிறார்கள், ஆனால் இராமர் எங்கு சென்றார் என்பது அவர்களுக்குத் தெரியாது. நிச்சயமாக ஸ்ரீ இராமரின் ஆத்மா மறுபிறவி எடுத்துக் கொண்டிருப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த ஆத்மா இங்கு பரீட்சையில் சித்தியடையவில்லை. எவ்வாறாயினும், நிச்சயமாக அவர் ஏதோவொரு ரூபத்தில் இருக்கிறார். இங்கேயே அவர் தொடர்ந்தும் முயற்சி செய்கிறார். இராமரின் பெயர் அதிகளவில் போற்றப்படுவதால், நிச்சயமாக அவரின் ஆத்மா வந்து இந்த ஞானத்தைப் பெற வேண்டும். இப்பொழுது, மக்கள் எதையும் அறியாததால், நீங்கள் அவ்விடயத்தை ஒருபுறமாக ஒதுக்கிவிட வேண்டும். அவ்விடயங்களுக்குள் செல்வதால், நேரமே வீணாக்கப்படுகிறது. உங்கள் நேரத்தை அவ்விதமாகச் செலவழிப்பதைத் தவிர்த்து, ஏன் ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்தக்கூடாது? நீங்கள் உங்களுடைய சொந்த முன்னேற்றத்துக்காக, உங்கள் மின்கலத்துக்குச் (பற்றரி) சக்தியூட்ட வேண்டும். ஏனை விடயங்களைப் பற்றிச் சிந்திப்பது என்றால், ஏனையோர்களைப் பற்றிச் சிந்திப்பதாகும். இப்பொழுது நீங்கள் உங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்க வேண்டும். நான் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நிச்சயமாக ஏனையோர்களும் கற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய மின்கலத்துக்குச் சக்தியூட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நீங்கள் உங்களுடைய சொந்த மின்கலத்துக்குச் சக்தியூட்ட வேண்டும். கூறப்பட்டுள்ளது: உங்கள் சொந்தச் சரக்குளை அரையுங்கள், நீங்கள் போதையுடையவர்கள் ஆகுவதை உணர்வீர்கள். தந்தை கூறியுள்ளார்: நீங்கள் சதோபிரதானாக இருந்தபொழுது, உங்கள் அந்தஸ்து மிகவும் உயர்வானதாக இருந்தது. இப்பொழுது மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்த இலக்கு உள்ளது. நீங்கள் இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது, சதோபிரதான் ஆகுவீர்கள். நாராயணனைப் பற்றிச் சிந்திப்பதால், நாங்கள் நாராயணன் ஆகுவோம். இறுதிக்கணங்களில், நாராயணனை நினைவுசெய்பவர்கள்…. நீங்கள் தந்தையை நினைவுசெய்வதினூடாக, உங்களின் பாவங்கள் அழிக்கப்பட்டு, பின்னர் நீ;ங்கள் நாராயணன் ஆக முடியும். இதுவே ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான அதியுயர்ந்த வழிமுறை ஆகும். நாராயணன் ஆகுகின்ற, ஒரு நபர் மாத்திரம் இருக்க மாட்டார். முழு வம்சமும் இவ்வாறு ஆகுகின்றது. தந்தையே உங்களை அதியுயர்ந்த முயற்சியைச் செய்ய வைக்கிறார். இது இராஜயோகத்துக்குரிய ஞானம், நீங்கள் முழு உலகத்துக்கும்; அதிபதிகள் ஆக வேண்டும். நீங்கள் அதிகளவுக்கு முயற்சி செய்யும் பொழுது, நிச்சயமாக அதிகளவில் நன்மை இருக்கும். முதலில், நீங்கள் ஓர் ஆத்மா என்கின்ற நம்பிக்கையை நிச்சயமாகக் கொண்டிருங்கள். சிலர் எழுதுகிறார்கள்: இந்த ஆத்மா உங்களை நினைவுசெய்கிறார். ஆத்மா சரீரத்தினூடாக எழுதுகிறார். ஆத்மா சிவபாபாவுடன் ஒரு தொடர்பைக் கொண்டிருக்கிறார். ஆத்மாவாகிய நான், இன்ன இன்ன பெயரையும் ரூபத்தையும் உடைய ஒரு சரீரத்தைக் கொண்டிருக்கிறேன். நீங்கள் நிச்சயமாக இதைக் கூற வேண்டும், ஏனெனில், ஓர் ஆத்மாவினால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற சரீரங்களுக்கு வேறுபட்ட பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆத்மாவாகிய நான் உங்கள் குழந்தை, இந்த ஆத்மாவின் சரீரத்தின் பெயர் இன்ன-இன்ன ஆகும். ஒருபொழுதும் ஆத்மாவின் பெயர் மாற்றமடையாது. ஆத்மாவாகிய நான், இச் சரீரத்தைக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாகச் சரீரத்திற்கு ஒரு பெயர் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், தொடர்புகள் எவையும் இருக்க மாட்டாது. இங்கு, தந்தை கூறுகிறார்: நான் இந்த பிரம்மாவின் சரீரத்தில் தற்காலிகமாகவே பிரவேசிக்கிறேன். இவரின் ஆத்மாவுக்கும் அவர் விளங்கப்படுத்துகிறார். நான் இச் சரீரத்தினூடாக உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளேன். இது என்னுடைய சரீரமல்ல. நான் இச் சரீரத்தில் பிரவேசித்துள்ளேன். பின்னர் நான் எனது தாமத்துக்குத் திரும்பிச் செல்வேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இம் மந்திரத்தைக் கொடுப்பதற்கு வந்துள்ளேன். நான் உங்களுக்கு மந்திரத்தைக் கொடுத்ததும் திரும்பிச் செல்வேன் என்பதல்ல் இல்லை. குழந்தைகளாகிய உங்களில் எந்தளவுக்குச் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும். பின்னர், உங்களுடைய முன்னேற்றத்திற்;காக, நான் தொடர்ந்தும் கற்பித்தல்களைக் கொடுக்கிறேன். ஒரு விநாடிக்குரிய ஞானத்தை உங்களுக்குக் கொடுத்ததும் அவர் சென்றிருந்தால், அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்பட மாட்டார். நீண்டகாலமாகியிருந்தும், இன்னமும் அவர் உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார். புரிந்து கொள்ளப்பட வேண்டிய, விருட்சத்தினதும் பக்தி மார்க்கத்தினதும் விபரங்கள் உள்ளன. அவர் உங்களுக்கு விபரமாக விளங்கப்படுத்துகிறார். மொத்த வியாபாரம் செய்வதென்;றால், மன்மனபவ என்பதேயாகும்! எவ்வாறாயினும், அவர் இதை மாத்திரம் கூறிச் செல்ல மாட்டார். அவர் உங்களைப் பராமரிக்கவும் வேண்டும். சில குழந்தைகள் தந்தையை நினைவுசெய்து விட்டுப் பின்னர் வருவதில்லை. இன்ன பெயரையுடைய ஓர் ஆத்மா மிகவும் நன்றாகக் கற்றார். அவர் அதை நினைவுசெய்வார். பழைய குழந்தைகள் மிகவும் சிறந்தவர்களாக இருப்பினும், மாயை அவர்களை விழுங்கி விட்டாள். ஆரம்பத்தில் பலர் வந்தார்கள். அவர்கள் வந்து உடனடியாகவே தந்தையின் மடிக்குச் சென்றார்கள், ஒரு சூளை (பத்தி) உருவாக்கப்பட்டது. அதில் அனைவரும்; தங்கள் சொந்த அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்கு முயற்சித்தார்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்கையில், மாயை அவர்களை முழுமையாகவே ஊதிவிடுகிறாள். அவர்களால் நீடித்து நிற்க இயலாதிருந்தது, அதேவிடயம் 5000 வருடங்களுக்குப் பின்னரும் நடைபெறும். பலர் சென்றுவிட்டார்கள். நிச்சயமாக விருட்சத்தின் அரைவாசி சென்றிருக்க வேண்டும். விருட்சம் வளர்ச்சியடைந்துள்ளது, ஆனால் பழையவர்கள் நீங்கிவிட்டார்கள். நிச்சயமாக அவர்களில் சிலர் இங்கு மீண்டும் கற்பதற்கு மறுபடியும் வருவார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் தந்தையுடன் கற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதையும், ஏனையோர்கள்; அவருடன் இன்னமும் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கும் பொழுது, தாங்;;கள் தோற்கடிக்கப்பட்டார்கள்; என்பதையும் அவர்கள் நினைவுசெய்வார்கள். பின்னர் அவர்கள் மீண்டும் ஒருமுறை களத்துக்கு வருவார்கள். அவர்கள் வருவதை பாபா அனுமதிப்பார்: அவர்கள் வந்து மீண்டும் முயற்சி செய்யட்டும். அவர்கள் ஏதோவொரு சிறந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். தந்தை உங்களுக்கு நினைவூட்டுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எவ்வாறு நீங்கள் அவரை நினைவுசெய்கிறீர்கள்? பாபா பரந்தாமத்தில் இருக்கிறார் என நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை. தந்தை இங்கு இந்த இரதத்தில் அமர்ந்திருக்கிறார். அனைவரும் இந்த இரதத்தைப் பற்றித் தொடர்ந்தும் அறிந்துகொள்கிறார்கள். இதுவே “பாக்கிய இரதம்” ஆகும். அவர் இவரினுள் பிரவேசித்துள்ளார். நீங்கள் பக்திமார்க்கத்தில் இருந்தபொழுது, நீங்கள் அவரைப் பரந்தாமத்தில் நினைவுசெய்வது வழக்கம், ஆனால் அந்த நினைவினூடாக என்ன நடைபெறும் என்பதை நீங்கள்; அறிந்திருக்கவில்லை. இப்பொழுது தந்தையே இந்த இரதத்தில் அமர்ந்திருந்து உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். இதனாலேயே இப்பொழுது இந்த மரண பூமியில், அதிமங்களகரமான சங்கமயுகத்தில் பாபா இருக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் பிரம்மாவை நினைவுசெய்ய வேண்டியதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நான் இந்த இரதத்தில் தங்கியிருந்;து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறேன்: இங்கு நான் இருக்கிறேன் என்று விளங்கப்படுத்தி, என்னுடைய சுய அறிமுகத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். முன்னர், அவர் பரந்தாமவாசி எனவும், அவர் வந்து சென்றார் எனவும் நீங்கள் எண்ணினீர்கள். ஆனால் அது எப்பொழுது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அனைவரும் வாழ்ந்து சென்றுவிட்டார்கள். யாருடைய விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவோ, அவர்கள் அனைவரும் எங்கு உள்ளார்கள் என்பது எவருக்கும் தெரியாது. சரீரத்தை நீக்கிச் சென்;றவர்கள் பின்னர் தங்களுக்குரிய நேரத்தில் திரும்பவும் வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் வெவ்வேறு பாகங்களை நடிக்கிறார்கள். இன்னமும் எவராலும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாதுள்ளது. தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், அதி மங்களகரமான சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்ற, பழைய உலகின் இறுதியும் புதிய உலகின் ஆரம்பமும் இருக்க வேண்டும். இப்பொழுது உங்களிடம் இந்த ஞானம் உள்ளது. மக்களுக்கு எதுவுமே தெரியாது. சரீரம் எரிக்கப்பட்டு, ஆத்மா பிரிந்து செல்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். இது இப்பொழுது கலியுகம் ஆதலால், ஆத்மாக்கள் நிச்சயமாகக் கலியுகத்திலேயே மறுபிறவி எடுப்பார்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்தபொழுது, நீங்கள் சத்தியயுகத்திலேயே மறுபிறவி எடுத்தீர்கள். அசரீரி உலகிலேயே ஆத்மாக்களின் அனைவரும் உள்ளார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இது உங்கள் புத்தியில் உள்ளது. பின்னர், நாங்கள் அங்கிருந்து வந்து, இங்கு சரீரங்களை ஏற்று, மனிதர்கள் ஆகுகிறோம். இங்கு அனைவரும் வந்து மனிதர்கள் ஆகி, பின்னர் வரிசைக்கிரமமாகத் திரும்பிச் செல்ல வேண்டும். அவர் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்ல மாட்டார், ஏனெனில் அவ்வாறு செய்தால் பிரளயம் ஏற்படும். அவர்கள் பிரளயம் நடைபெற்றதைக் காட்டுகிறார்கள், ஆனால் அவர்கள் அதன் விளைவைக் காட்டுவதில்லை. இவ்வுலகம் ஒருபொழுதும் வெறுமையாக முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். பாடப்பட்டுள்ளது: இராமர் சென்றார், ஒரு பெரிய குடும்பத்தையுடைய இராவணனும் சென்றான். உலகம் முழுவதும் இராவண சமுதாயம் உள்ளது. மிகச்சிறிய சமுதாயமே இராமருக்கு உள்ளது. இராமரின் சமுதாயம் சத்திய, திரேதா யுகங்களில் உள்ளது. பெருமளவு வித்தியாசம் உள்ளது. பின்னர், ஏனைய கிளைகளும் சிறுபிரிவுகளும் வெளித்தோன்றுகின்றன. உங்களுக்கு இப்பொழுது விதையையும் விருட்சத்தையும் தெரியும். தந்தைக்கு அனைத்தும் தெரியும், இதனாலேயே அவர் உங்களுக்குத் தொடர்ந்தும் அனைத்து விடயங்களையும் கூறுகிறார். இதனாலேயே அவர் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகிறார். (அவர் கூறுவதற்கு) ஒரு விடயம் மாத்திரம் இருந்திருந்தால், சமயநூல்கள் போன்றவை எழுதப்பட்டிருக்க முடியாது. அவர் தொடர்ந்தும் உங்களுக்கு விருட்சத்தின் விபரத்தையும் விளங்கப்படுத்துகிறார். முதலாவது பாடமாகிய, பிரதான விடயம், தந்தையை நினைவுசெய்வதாகும். இதற்கே முயற்சி தேவைப்படுகிறது. இதில் அனைத்து விடயங்களும் தங்கியுள்ளன. எவ்வாறாயினும், இப்பொழுது உங்களுக்கு விருட்சத்தைப் பற்றியும் தெரியும். உலகிலுள்ள எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. நீங்கள் ஏனைய சமயங்கள் அனைத்தினதும் காலம், திகதி போன்றவற்றைக் காட்டுகிறீர்கள். அவை அனைத்தும் அரைக்கல்பத்தினுள் அடங்கியுள்ளன, ஆனால் சூரியவம்சம், சந்திரவம்சம் போன்றவை உள்ளன. அவற்றுக்குப் பல யுகங்கள் கிடையாது, இரண்டு யுகங்களே உள்ளன. அங்கு சொற்ப மனிதர்களே இருக்கிறார்கள். 8.4 மில்லியன் பிறவிகள் இருப்பது சாத்தியமில்லை. மக்கள் புரிந்துணர்வு அனைத்தையும் இழப்பதாலேயே தந்தை வந்து விளங்கப்படுத்துகிறார். படைப்பவராகிய தந்தையே, இங்கமர்ந்திருந்து உங்களுக்குப் படைப்பவரினதும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தைக் கொடுக்கிறார். பாரத மக்களுக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது; அவர்கள் தொடர்ந்தும் அனைவரையும் வழிபடுகிறார்கள். அவர்கள் முஸ்லிம்கள், பார்சிகள் போன்ற, வருபவர்கள் அனைவரையும் வழிபட ஆரம்பிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் தர்மத்தையும் தங்கள் தர்மத்தின் ஸ்தாபகரையும் மறந்து விட்டார்கள். ஏனைய அனைவருக்கும் தங்கள் சொந்தச் சமயம் பற்றித் தெரியும். இன்ன சமயம் எப்பொழுது, யாரால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது அவர்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் எவருக்கும் சத்திய, திரேதா யுகங்களின் வரலாறும் புவியியலும் தெரியாது. அவர்கள் விக்கிரகங்களைப் பார்த்து எண்ணுகிறார்கள்: அது சிவபாபாவின் ரூபம். அவர் மாத்திரம் அதிமேலான தந்தை ஆவார். ஆகவே, நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். மக்கள் ஸ்ரீ கிருஷ்ணரை அதிகளவில் வழிபடுகிறார்கள், ஏனெனில் அவர் அவருக்கு (சிவனுக்கு) அடுத்தவராக உள்ளார். அவர்கள் அவரிலும் அன்புகொண்டு அவரைக் கீதையின் கடவுளாகக் கருதுகிறார்கள். இந்த ஞானத்தை உரைக்கின்றவரும் இருக்கவே வேண்டும், ஏனெனில் அப்பொழுதே உங்களால் உங்கள் ஆஸ்தியைப் பெற முடியும். தந்தை மாத்திரம் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். புதிய உலகை ஸ்தாபித்துப் பழைய உலகின் விநாசத்தைத் தூண்டுவதற்கு, ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனையும், விஷ்ணுவின் மூலம் பராமரிப்பும், சங்கரரின் மூலம் விநாசமும் என்றும் அவர்கள் எழுதுகிறார்கள். அது இந்நேரத்தையே குறிப்பிடுகிறது, ஆனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை. அது அசரீரி உலகமும், இது பௌதீக உலகமும் என்பது உங்களுக்குத் தெரியும். அதே உலகமே உள்ளது - இங்கேயே இராம இராச்சியமும் இராவண இராச்சியமும் உள்ளன. அனைத்துப் புகழும் இந்நேரத்துக்கே உரியதாகும். எவ்;வாறாயினும், சூட்சும உலகம் காட்சிகளைக் காண்பதற்காக மாத்திரம் உள்ளது. ஆத்மாக்கள் அசரீரி உலகில் வசிக்கிறார்கள், பின்னர் ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்கு இங்கு வருகிறார்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற, சூட்சும உலகில் இருப்பதாக அவர்கள் எண்ணுபவர்;களின் விக்கிரகங்களையே அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சூட்சும உலகவாசிகளாகிய அத் தேவதைகளாக ஆகவேண்டும். தேவதைகளுக்குச் சதையும் எலும்புகளும் இருக்காது. அவர்கள் கூறுகிறார்கள்: ததிசி ரிஷி தனது எலும்புகளையும் கொடுத்தார், ஆனால் எங்கும் சங்கரரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் உள்ளன. சங்கரருக்கு ஆலயம் கிடையாது, எனவே, அவர் விநாசத்திற்காக உள்ளார் என்று அவர்கள் காட்டுகிறார்கள். எவ்வாறாயினும், தனது கண்ணைத் திறப்பதால், அவர் விநாசத்தை மேற்கொள்கிறார் என்பதல்ல. தேவர்களால் எவ்வாறு ஒரு வன்செயலை மேற்கொள்ள முடியும்? அவர்கள் அதைச் செய்யவும் மாட்டார்கள், சிவபாபாவும் அத்தகைய ஒரு வழிகாட்டலைக் கொடுக்க மாட்டார். பின்னர், அவ் வழிகாட்டலைக் கொடுத்தவரின் மீதே அனைத்தும் வீழக்கூடும். அப்பொழுது எதையாவது கூறியவர் குற்றம் சுமத்தப்படுகிறார். சிவனும் சங்கரரும் ஒருவரே என்று அம்மக்கள் கூறுகிறார்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அவர் கூறுவதில்லை: சிவனையும் சங்கரரையும் நினைவு செய்யுங்கள். ஒரேயொருவர் மாத்திரம் தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு கடவுளே அமர்ந்திருந்து உங்களுக்கு அனைத்து விடயங்களையும் அர்த்தத்துடன் விளங்கப்படுத்துகிறார். இவ்விடயங்கள் எவருக்கும் தெரியாததால், அவர்கள் இப் படங்களைப் பார்க்கும்பொழுது, குழப்பமடைகிறார்கள். அவர்களுக்கு நிச்சயமாக அவற்றின் அர்த்தம் கூறப்பட வேண்டும். அவர்களுக்குப்; புரிந்துகொள்வதற்கு நேரம் பிடிக்கின்றது. பல மில்லியன் கணக்கானவர்களில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரம் வெளிப்படுகிறார்கள். நான் எவ்வாறாகவும், என்னவாகவும் இருப்பினும், பல மில்லியன் கணக்கானவர்களில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரம் என்னை இனங்காண்கிறார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஏனைய விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். சுயத்தின் மீது போதையைக் கொண்டவராக இருங்கள். உங்களைப் பற்றியே சிந்தித்து ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குங்கள்.

2. ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணனாக மாறுவதற்கு, உங்கள் இறுதிக் கணங்களில் ஒரேயொரு தந்தையின் நினைவு மாத்திரம் இருக்கட்டும். இந்த அதியுயர்ந்த வழிமுறையை உங்கள் முன்னிலையில் வைத்;து, இம் முயற்சியைச் செய்யுங்கள்: நான் ஓர் ஆத்மா. நான் இச் சரீரத்தை மறக்க வேண்டும்.


ஆசீர்வாதம்:
தாமரை ஆசனத்தில அமர்ந்திருந்து சரீர உணர்விலிருந்து விடுபட்டிருப்பதன் மூலம் கடவுளின் அன்பை அனுபவம் செய்வீர்களாக.

தாமரை ஆசனமானது பிராமண ஆத்மாக்;களின் மேன்மையான ஸ்திதியின் அடையாளமாகும். அத்தகைய தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஆத்மாக்கள் இயல்பாகவே சரீர உணர்விலிருந்து விடுபட்டிருப்பார்கள். சரீரங்களின் உணர்வு அவர்களைக் கவரமாட்டாது. நடக்கும் பொழுதும், உலாவித்திரியும் பொழுதும் தந்தை பிரம்மா தேவதை வடிவம் அல்லது தேவ வடிவத்தின் விழிப்புணர்விலேயே எப்பொழுதும் இருந்தார்.அத்தகைய இயல்பான ஆத்ம உணர்வு ஸ்திதி இருக்கட்டும். இதுவே எந்தவித சரீர உணர்விலிருந்தும் விடுபட்டிருப்பது என்பதாகும்.. இந்தவிதமாக சரீரத்திலிருந்து விடுபட்டிருப்பவர்கள் கடவுளால் நேசிக்கப்படுகிறார்கள்.

சுலோகம்:
உங்கள் சிறப்பியல்புகளும் நற்குணங்களும் பிரபுவின் பிரசாதமாகும்.(கடவுளின் புனித பிரசாதம்). இவற்றை உங்களுடையது எனக் கருதுவது சரீர உணர்வைக் கொண்டிருப்பதாகும்.