03.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே. அன்பே நினைவு செய்வதற்கான அடிப்படையாகும். அன்பில் குறையிருந்தால், தொடர்ச்சியான நினைவு இருக்க முடியாது. தொடர்ச்சியான நினைவு இல்லாவிட்டால், உங்களால் அன்பைப் பெற முடியாது.

கேள்வி:
ஆத்மா அதிகளவில் விரும்புவது எதனை? அதன் அறிகுறிகள் என்ன?

8பதில்:
ஆத்மா அதிகளவில் விரும்புவது சரீரத்தையே ஆகும். அவர் சரீரத்தை விட்டுச்செல்ல முடியாத அளவிற்குச் சரீரத்தில் அதிகளவு அன்பை வைத்திருக்கின்றார். அவர் அதனைக் காப்பாற்றுவதற்காக பல விதமான முறைகளைக் கண்டுபிடிப்பதற்குத் தொடர்ந்தும் முயற்சி செய்கிறார். தந்தை கூறுகின்றார்: அது ஓரு அழுக்கான, தமோபிரதான் சரீரமாகும். இப்போது நீங்கள் புதிய சரீரத்தை எடுக்க வேண்டும் என்பதனால் பழைய சரீரத்தின் மீதுள்ள பற்றை நீக்கிவிட வேண்டும். உங்களுக்கு, சரீர விழிப்புணர்வு இல்லாதிருப்பதே உங்கள் இலக்கு ஆகும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தேவ இராச்சியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கு செல்வதற்கான ஆயத்தங்கள் இப்போது நடைபெறுகின்றன. ஒரு கிளையைத் திறக்கும் போது, முக்கியஸ்தர் ஒருவரை அழைப்பதற்கு மக்கள் முயற்சி செய்வார்கள். முக்கியஸ்தரைக் கண்டதும், கீழ்மட்டத்தில் இருக்கும் உத்தியோகஸ்தர்கள் அனைவரும் வருவார்கள். உதாரணமாக. ஆளுனர் வந்தால், அனைத்து சிரேஷ்ட மந்தரிகள் போன்ற அனைவரும் வருவார்கள். நீங்கள் கலெக்டர் ஒருவரை அழைத்தால் முக்கியஸ்தர்கள் வரமாட்டார்கள். இதனாலேயே நீங்கள் முக்கியஸ்தர் ஒருவரை அழைக்க முயற்சி செய்ய வேண்டும். என்ன காரணத்திற்கேனும் அவர் உள்ளே வந்தால், நீங்கள் அவருக்குப் பாதையைக் காட்டலாம். நீங்கள் எவ்வாறு உங்கள் எல்லையற்ற ஆஸ்தியை, எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள் என்பதை அவருக்குக் காட்டுங்கள். பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு எவரும் இதனை அறிந்திருப்பதில்லை. கடவுள் வந்துள்ளார் என்பதை நேரடியாக அவருக்கு நீங்கள் கூறத் தேவையில்லை. “கடவுள் வந்து விட்டார்” என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் இல்லை! இந்த முறையில் பலர் தங்களைக் கடவுள் எனவும் கூறிக் கொள்கிறார்கள். சென்ற கல்பத்தில் செய்ததைப் போன்றே, நாடகத்திட்டத்திற்கு ஏற்ப, எல்லையற்ற தந்தை வந்து எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்த முழுவரியையும் நீங்கள் எழுத வேண்டும். இந்த வரிகளை வாசிக்கும் மக்கள் வருவதற்கு முயற்சிப்பார்கள். எனினும் யாருக்குப் பாக்கியம் இருக்கின்றதோ அவர்களே வருவார்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். புத்தியில் நம்பி;க்கையுள்ள குழந்தைகள் மாத்திரமே இங்கு வருகின்றார்கள். புத்தியில் நம்பிக்கையுள்ளவர்களுமே சிலவேளைகளில் புத்தியில் சந்தேகம் கொண்டவர்களாகிவிடுகின்றார்கள். மாயை அவர்களை வீழ்த்தி விடுகிறாள். முன்னேறிச் செல்லும் பொழுது அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். எப்பொழுதும் ஒரு பகுதியினரே வெற்றி; அடைவார்கள் என்றும், அவர்களுக்கு என்றுமே தோல்வி ஏற்படாது என்பதும் சட்டம் அல்ல. எப்பொழுதும் வெற்றி தோல்வி இரண்டுமுள்ளது. ஒரு யுத்தத்திலும் மூன்று வகைகள் உண்டு: முதற்தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம். சில வேளைகளில் யுத்தம் செய்யாதவர்களும் யுத்தத்தைப் பார்க்கச் செல்வார்கள். அவர்களும் அதனால் கவரப்பட்டுச் சேனையில் சேர்ந்து விடுவார்கள் என்பதால் அது அனுமதிக்கப்படுகிறது. நீங்கள் மகாராத்தி போராளிகள் என்பதை உலகத்தவர்கள் அறியமாட்டார்கள். எனினும் உங்கள் கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லை. ஆயுதங்கள் உங்கள் கைகளுக்குப் பொருத்தமற்றவையாகும். எனினும் இங்கே ஞான வாள் இருப்பதாகத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். அதனை அவர்கள் பௌதீகமாக விளங்கிக் கொண்டார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையினால் ஞான ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. இதில் வன்முறை என்ற கேள்விக்கே இடமில்லை ஆனால் மக்கள் இதனை விளங்கிக் கொள்வதில்லை எனவே அவர்கள் பௌதீக ஆயுதங்களை தேவர்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அவர்களை வன்முறையாளராக அவர்கள் காட்டியுள்ளனர். இது முற்றிலும் அறிவீனமாகும். யார் மலர்களாக வருபவர்கள் என்பதை தந்தை மிக நன்றாக அறிவார். தந்தையே கூறுகின்றார்: மலர்கள் முன்னால் இருக்க வேண்டும். இவர் ஒரு மலராக வருவார் என்பது நிச்சயமாகும். பாபா எவரது பெயரையும் குறிப்பிடுவதில்லை. அவ்வாறு குறிப்பிட்;டால், ‘நான் முள்ளாக வருவேனா? என எவராவது வினவக்கூடும். சாதாரண மனிதனில் இருந்து யார் நாராயணனாகுவீர்கள் என்று பாபா வினவினால், அனைவரும் தமது கரங்களை உயர்த்துகின்றார்கள். யார் அதிக சேவை செய்கிறார்களோ, அவர்கள் தந்தையை நினைவு செய்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் தாமாகவே புரிந்து கொள்ள முடியும்.யார் தந்தையின் மீது அதிகளவு அன்பு வைத்திருப்பதனால் அவர்களால் அவரை நினைவு செய்ய முடியும் . எவராலும் தொடர்ச்சியான நினைவில் இருக்க முடியாது. ஏனெனில் நினைவு செய்யாததால் உங்களிடம் அன்பு இல்லை. விரும்பப்படும் பொருள், அதிகளவு நினைவு செய்யப்படுகிறது. பெற்றோர் தங்கள் அன்பிற்குரிய குழந்தைகளை தூக்கி எடுத்து தங்கள் மடியில் அமர்த்திக் கொள்வார்கள். சிறு குழந்தைகள் மலர்களாவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபாவிடம் செல்ல விரும்புவதைப் போன்றே சிறு குழந்தைகளும் அவரை ஈர்ப்பார்கள். அவர் உடனடியாக சிறு குழந்தைகளைத் தூக்கி, தனது மடியில் அமர்த்தி அன்பைக் கொடுப்பார். இந்த எல்லையற்ற தந்தை மிகவும் அன்பானவர். அவர் உங்கள் தூய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுகின்றார். மனிதர்களுக்கு என்ன தேவை? முதலில் அவர்களுக்கு நோய் ஏற்படாதிருக்க நல்ல ஆரோக்கியம் தேவை. நல்ல ஆரோக்கியமே அனைத்திலும் சிறந்தது. ஒருவருக்கு நல்ல ஆரோக்கியம் இருந்து பணமில்லை எனில் அந்த ஆரோக்கியத்தினால் என்ன பயன்? சந்தோஷத்தைப் பெறுவதற்கு அவர்களுக்குப் பணம் தேவைப்படும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் நிச்சயமாக ஆரோக்கியம் செல்வம் இரண்டையுமே பெறப்போகிறீர்கள். இது ஒரு புதிய விடயமல்ல. இது ஒரு பழைய விடயமாகும். இதனையே நீங்கள் சந்திக்கும் போது கூறுகின்றீர்கள். நூறாயிரக்கணக்கான வருடங்கள் அல்லது மில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் என நீங்கள் கூறுவதில்லை. இல்லை, எப்போது இந்த உலகம் புதியதாகியது என்பதனையும், எப்போது பழையதாகியது என்பதனையும் நீ;ங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் புதிய உலகத்திற்குச் சென்று பின்னர் பழைய உலகத்திற்குத் திரும்பி வருவோம். “சகலகலா வல்லுனர்” என்ற பெயர் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களே சகலகலா வல்லுனர்கள் என்பதை தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் உங்கள் பாகத்தை நடித்து, உங்கள் பலபிறவிகளின் இறுதியை அடைந்துள்ளீர்கள். நீங்களே முதலில் வந்து உங்கள் பாகத்தை நடித்தவர்கள். அது ஒரு இனிய அமைதி வீடாகும். மக்கள் அமைதியைத் தேடி மிகவும் விரக்தி அடைந்துள்ளார்கள். அவர்கள் அமைதிதாமத்தில் இருந்தார்கள் என்பதையோ, அங்கிருந்து தங்கள் பாகத்தை நடிப்பதற்காக வந்தார்கள் என்பதனையோ புரிந்து கொள்வதில்லை. இப்போது பாகம் முடிவடைகிறது, நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அதே இடத்திற்கு நிச்சயமாகத் திரும்பிச் செல்வோம். அனைவரும் அமைதிதாமத்தில் இருந்தே வருகின்றார்கள். ஆத்மாக்கள் அனைவரும் வசிக்கும் பிரமான்ந்தாகிய பிரம்மலோகம், அனைவரதும் வீடாகும். அவர்கள் மிகப் பெரிதாக கோள வடிவில் உருத்திரரை அமைத்துள்ளார்கள். ஆத்மாக்கள் சின்னஞ் சிறியவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர் நட்சத்திரம் போன்றவர் எனக் கூறுகிறார்கள் ஆனாலும் அவர்கள் பெரிய ரூபங்களை வழிபாடு செய்கின்றார்கள். சின்னஞ் சிறிய ஒரு புள்ளியை வழிபாடு செய்ய முடியாது என்பதை நீ;ங்கள் அறிவீர்கள். எனவே எதனை அவர்கள் வழிபாடு செய்வார்கள்? இதனாலேயே அவர்கள் மிகப்பெரிய ரூபமொன்றை அமைத்து, பாலை அதன் மீது ஊற்றி வழிபாடு செய்கிறார்கள். எனினும் சிவன் அபோக்தா (எதனையுமே அனுபவம் செய்யாத ஒருவர்) ஆவார். அவ்வாறாயின் அவர்கள் ஏன் அவருக்கு பாலைப் படைக்கிறார்கள்? அவர் அப்பாலை அருந்துவராயின், அவர் அனைத்தையும் அனுபவம் செய்பவர் ஆகிவிடுவார். இதுவும் ஓரு அற்புதமே. அனைவரும் கூறுகிறார்கள்: அவர் எனது வாரிசு நான் அவருடைய வாரிசு ஆவேன் ஏனெனில், அவருக்காக எங்களை நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். ஒரு தந்தை (லௌகீக) தனது குழந்தையிடம் தன்னை அர்ப்பணித்து, தனது சொத்துக்களை தன் குழந்தையிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வுக்குச் செல்வதைப் போன்றே, இங்கும் நீங்கள் பாபாவிடம் அதிகளவு சேமிப்பதற்கு ஏற்ப, அவை அனைத்தும் அதிகளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ‘சிலரின் சொத்துக்கள் புதைக்கப்படும், சிலரின் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும்’ என்பன நினைவு கூரப்படுகின்றன. எதுவுமே நிலைத்திருக்கப் போவதில்லை என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அனைத்துமே அழியப் போகின்றது. விநாசம் இடம் பெறும் பொழுது, ஆகாயவிமானங்கள் மோதும், திருடர்கள் அனைத்தையும் எடுத்துச் செல்வார்கள் என்றில்லை. திருடர்களுமே அழி;ந்து விடுவார்கள். அந்த நேரத்தில் களவு போன்றவையும் முடிவிற்கு வந்து விடும். இல்லையேல், விமான விபத்தின் போது. முதலில் திருடர்களின் கைகளுக்குப் பொருட்கள் சென்று, அவற்றை அவர்கள் காடுகளுக்குள் ஒழித்து விடுவார்கள். அவர்கள் தங்கள் வேலையைச் சில வினாடிகளில் செய்து விடுவார்கள். திருட்டுத் தொழிலை அவர்களில் சிலர் இராஜரீகமாகவும், சிலர் இராஜரீகமற்றதாகவும் பல வித்தியாசமான முறைகளில் செய்கிறார்கள். இவை அனைத்தும் அழிக்கப்பட்டு, நீங்கள் முழுஉலகத்தினதும் அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதனை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எவரையும் தேட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் மிகவும் உயர்ந்த குடும்பத்தில் பிறவி எடுப்பீர்கள். அங்கு பணம் தேவையில்லை. அரசர்கள் ஒரு பொழுதும் பணத்தை எடுப்பது பற்றிச் சிந்திப்பதில்லை. தேவர்கள் அதனைப்பற்றி சிறிதளவேனும் சிந்திப்பதில்லை. தந்தை அதிகளவில் கொடுப்பதனால், அங்கு திருட்டு, பொறாமை போன்ற கேள்விகளுக்கு இடமேயில்லை. நீங்கள் முழுமையாக நிரம்பியவர்கள் ஆகுவீர்கள். அங்கு முட்களும் மலர்களும் உண்டு. இங்கே அனைத்தும் முட்கள் ஆகும். விகாரங்களின்றி இருக்க முடியாதவர்கள் நிச்சயமாக முட்கள் என அழைக்கப்படுவார்கள். அரசர்கள் முதல் அனைவரும் முட்களே ஆவார்கள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: நான் உங்களை இலக்ஷ்மி, நாராயணன் ஆக்குகின்றேன், அதாவது அரசர்களுக்கு எல்லாம் அரசராக்குகின்றேன். இந்த முட்கள், மலர்களுக்கு முன்னால் தலை வணங்குகின்றார்கள். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் விவேகமானவர்கள். சத்தியயுகத்தில் உள்ளவர்கள்; சக்கரவர்த்திகள் எனவும், திரேதாயுகத்தில் உள்ளவர்கள் அரசர்கள் எனவும் அழைக்கப்படுகின்றார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். உயர்ந்த அந்தஸ்த்துக்குரியவர்கள் சக்கரவர்த்திகள் என்றும், குறைந்த அந்தஸ்த்தில் இருப்பவர்கள் அரசர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். முதலில் அங்கு சக்கரவர்த்திகளின் சபை இருக்கும். அங்கு வெவ்வேறு தரத்தில் அந்தஸ்துக்கள் இருக்கும். அப்படியல்லவா? அவர்கள் தங்கள் ஆசனங்களை (பதவிகளை) வரிசைக் கிரமமாகப் பெறுவார்கள். அதாவது, வருவதில்லை என்று தீர்மானித்த ஒருவர், வருவதற்குத் தீர்மானித்தால், அவருக்கு முதலில் ஆசனம் கொடுக்கப்படும். கௌரவம் பேணப்பட வேண்டும். உங்கள் மாலை உருவாக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இவை குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் மாத்திரமே உள்ளது. இவை வேறு எவருடைய புத்தியிலும் இல்லை. மக்கள் உருத்திரமாலையை எடுத்து அதன் மணிகளை உருட்டுகின்றார்கள். நீங்களும் மணிகளை உருட்டினீர்கள். நீங்கள் அதிகளவு மந்திரங்களை உச்சரித்தீர்கள். தந்தை கூறுகின்றார்: அதுவும் பக்தியே ஆகும். இங்கே நீங்கள் ஒரேயொருவரை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். தந்தை விசேடமாகக் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, பக்தி மார்க்கத்தில் சரீர உணர்வின் காரணமாக நீங்கள் அனைவரையும் நினைவு செய்தீர்கள். இப்போது சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் அந்த ஒரேயொரு தந்தையை அறிந்து கொண்டீர்கள். எனவே அமர்ந்திருக்கும் போதும், நடமாடித் திரியும் போதும் தந்தையை நினைவு செய்தால், அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். தந்தையை நினைவு செய்வதனால் முழு உலகத்தினதும் ஆட்சியைப் பெறுவீர்கள். நேரம் நெருங்க நெருங்க, நீங்கள் அடிக்கடி பாபாவை அதிகமாக நினைவு செய்வீர்கள். நாளுக்கு நாள் நீங்கள் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்வீர்கள். ஆத்மா ஒருபொழுதும் களைப்படையமாட்டார்.. யாராவது ஒருவர் மலை ஏறும்போது, அவர் களைப்படைந்து விடுவார். தந்தையை நினைவு செய்யும் பொழுது எவ்வித களைப்பையும் நீங்கள் அனுபவம் செய்ய மாட்டீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் பாபாவை நினைவு செய்து தொடர்ந்தும் முன்னேறுவீர்கள். குழந்தைகள் அமைதி தாமத்திற்குச் செல்வதற்காக அரைச் சக்கரமாக முயற்சி செய்கிறார்கள். உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் பற்றி மக்களுக்கு எதுவுமே தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. பக்தி மார்க்கத்தில் நீங்கள் யாருக்கு அதிக பக்தி செய்தீர்களோ இப்போது அந்த ஒரேயொருவரே கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். சரி, பிழை பாராது, பாபா கூறுவது சரி எனக் கருதுங்கள். அந்த மக்கள் நீரினால் தூய்மையாக முடியும் என நினைக்கிறார்கள் ஆனால் இங்கேயும் நீர் இருக்கின்றது. இது கங்கையின் நீரா? இல்லை. இது சேமித்து வைக்கப்பட்ட மழை நீராகும். இது தொடர்ந்தும் நீரூற்றிலிருந்து வருகின்றது. இதனை கங்கை நீர் என்று கூற முடியாது. இதற்கு முடிவு இல்லை. இதுவும் இயற்கையே. மழை நின்றுவிடும் ஆனால் நீர் தொடர்ந்தும் ஓடிக் கொண்டிருக்கும். வைஷ்ணவர்கள் எப்பொழுதும் கிணற்று நீரையே அருந்துவார்கள். ஒரு பக்கம் அது தூயநீர் என்று நினைக்கும் அவர்கள் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாகுவதற்கு, கங்கைக்கு நீராடச் செல்கின்றார்கள். அதனை அறியாமை என்றே கூறவேண்டும். மழை நீர் எப்பொழுதும் நல்லதே. அதுவும் நாடகத்தின் அற்புதமே யாகும். இயற்கையின் இறை அற்புதங்களாகும். மிகச் சிறிய விதையிலிருந்தே அத்தகைய பெரிய விருட்சம் தோன்றுகிறது. பூமி வளமற்றதாகியதும், அதில் வலிமை இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் ஒரு சுவையும் இருக்க மாட்டாது. தந்தை, சுவர்க்கம் எப்படி இருக்கும் என்ற அனுபவங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கிறார். இப்போது அது இ;ல்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காட்சிகளைக் காண்கின்றார்கள். நீங்கள் திரான்ஸில் சென்று அங்கு பழங்கள் எவ்வளவு இனிமையானவை என்பதைக் கூறுகின்றீர்கள். தற்போது உங்களுக்கு அவற்றின் காட்சிகள் கிடைக்கின்றன, பின்னர் நீங்கள் அங்கு செல்லும் போது, உண்மையிலேயே அவற்றை உங்கள் கண்களால் பார்த்து, வாயினால் சுவைப்பீர்கள். இப்பொழுது நீங்கள் காணும் காட்சிகளை உங்கள் கண்களினால் காண்பீர்கள். இவை உங்கள் முயற்சியிலேயே தங்கியுள்ளது. நீங்கள் முயற்சி செய்யாவிடில் என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள்? உங்கள் முயற்சி இப்போது தொடர்கிறது. நீங்கள் அவர்களைப் போன்று ஆகுவீர்கள். இந்த விநாசத்தின் பின்பு இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் ஆரம்பமாகும். நீங்கள் இப்போது இதனை அறிந்துள்ளீர்கள். தூய்மையாகுவதற்கு காலம் எடுக்கும். நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். சகோதரர், சகோதரி என்ற உணர்வில், பிரச்சனை இருப்பதாலேயே, அனைவரையும் சகோதரர்கள் எனக் கருதுமாறு கூறப்பட்டுள்ளது. நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர், சகோதரி என்று கருதும் போது உங்கள் பார்வை மாறுவதில்லை. எவ்வாறாயினும்; அனைவரையும் நீங்கள் சகோதரர்கள் என்று கருதும் போது சரீரம் இருக்க மாட்டாது. நாங்கள் அனைவரும் ஆத்மாக்கள், சரீரங்கள் அல்ல. நீங்கள் இங்கு காண்கின்ற அனைத்தும் அழிந்து விடும். நீங்கள் இந்த சரீரத்தை நீக்கி சரீரமற்றவர்களாக வீடு திரும்ப வேண்டும். நீங்கள் எவ்வாறு சரீரத்தை நீக்கிவிட்டுத் திரும்பிச் செல்வது எனக் கற்பதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். இதுவே உங்கள் இலக்காகும். ஆத்மா சரீரத்தை மிகவும் விரும்புகின்றார். ஆத்மா சரீரத்தை விட்டு நீங்காது இருப்பதற்குப் பலவிதமான முயற்சிகளைச் செய்கிறார். நான் இந்த சரீரத்தை விட்டுச் செல்லக் கூடாது. ஆத்மாவுக்கு சரீரத்தின் மீது ஆழமான அன்பு உள்ளது. தந்தை கூறுகிறார்: அது உங்கள் பழைய சரீரம். நீங்களும் தமோபிரதானாகிவிட்டீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அழுக்கடைந்து விட்டீர்கள். இதனாலேயே நீங்கள் சந்தோஷமற்றவர்களாகவும், நோயாளிகளாகவும் ஆகிவிட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்போது நீங்கள் சரீரத்தின் மீது அன்பு வைக்காதீர்கள். இது ஒரு பழைய சரீரமாகும். இப்போது நீங்கள் புதிதாக ஒன்றை வாங்க வேண்டும் ஆனால் அதனை வாங்கக் கூடிய கடை ஒன்றும் இல்லை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். பின்னர் நீங்கள் ஒரு புதிய சரீரத்தையும் பெறுவீர்கள். பஞ்ச தத்துவங்களும் தூய்மையாக்கப்படும். தந்தை அனைத்தையும்; விளங்கப்படுத்திய பின்னர் கூறுகின்றார்: மன்மனாபவ! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நாங்கள் சிவபாபாவின் வாரிசுகள், அவர் எங்கள் வாரிசாவார். இந்த நம்பிக்கையுடன் தந்தைக்கு உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். நீங்கள் பாபாவுடன் சேமிக்கப்படுகின்ற அனைத்தும் பாதுகாக்கப்படும். சிலரின் செல்வம் புதைக்கப்படும்……. எனக் கூறப்பட்டுள்ளது.

2. நீங்கள் இப்பொழுது முட்களில் இருந்து மலர்களாக வேண்டும். நிலையான அன்பினாலும், சேவையினாலும் தந்தையின் அன்புக்கு உரிமை கோருங்கள். நாளாந்தம் நினைவு செய்வதில் தொடர்ந்தும் முன்னேறிச் செல்லுங்கள்.

ஆசீர்வாதம்:
நன்மைபயக்கும் இந்த யுகத்திலே மாயையை வென்றவராகவும் சடப்பொருளை வென்றவராகவும் ஆகி அனைவருக்கும் நன்மை செய்வீர்களாக.

சங்கமயுகமே நன்மைபயக்கும் யுகமாகும். இந்த யுகத்தில் சுயமரியாதையை சதா நினைவு செய்ய வேண்டும்: நான் நன்மைபயக்கும் ஆத்மா. முதலில் சுயத்திற்கும் பின்பு அனைவருக்கும் நன்மை செய்வதே என் கடமை. மனிதர்களுக்கு மட்டுமல்லாது நாங்கள் தத்துவங்களுக்கும் நன்மை செய்பவர்கள். இதனாலேயே நாம் மாயையை வென்றவர்கள் எனவும் சடப்பொருளை வென்றவர்கள் எனவும் அழைக்கப்படுகிறோம். ஆத்மாக்கள் சடப்பொருளை வென்றவர்கள் ஆகும்போது சடப்பொருளுமே சந்தோஷத்தை அருள்பவராகின்றது. நீங்கள் அப்போது மாயையின் அல்லது சடப்பொருளின் குழப்பத்தினுள் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள். சூழலின் எவ்வித பாதகமான ஆதிக்கமும் இருக்கமாட்டாது.

சுலோகம்:
ஒவ்வொருவரின் கருத்திற்கும்(அபிப்பிராயம்) மரியாதை கொடுங்கள். அப்போது நீங்கள் மரியாதையைப் பெறுவதற்கு தகுதிவாய்ந்த ஆத்மா ஆகுவீர்கள்.