05.10.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்களை அழகானவர்களாக (மலர்களைப் போன்று) ஆக்குவதற்காக வந்துள்ளார். மலர்களான குழந்தைகளாகிய உங்களால் ஒருபொழுதும் எவருக்கும் துன்பத்தை விளைவிக்க முடியாது. எப்பொழுதும் தொடர்ந்தும் சந்தோஷத்தைக் கொடுங்கள்.

கேள்வி:
எந்த ஒரு விடயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

பதில்:
உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களின் தொடர்புகளில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மக்களின் அபிப்பிராயங்கள் பற்றியும், அவர்கள் என்ன கூறுவார்கள் என்பது பற்றியும், விகார உலகின் நடத்தைக் கோட்பாடுகள் குறித்தும் நீங்கள் கொண்டுள்ள அச்சத்தை உங்களுடைய புத்தி மறந்துவிட வேண்டும். உங்களைச் சோதித்துக் கொள்ளுங்கள்: எத்தனை தெய்வீகக் குணங்களை நான் கிரகித்துள்ளேன்? நான் இலக்ஷ்மி நாராயணனைப் போன்று நாகரிகமாக ஆகியுள்ளேனா? எந்தளவுக்கு நான் அழகானவராக (ஒரு மலரைப் போன்று) ஆகியுள்ளேன்?

ஓம் சாந்தி.
தனது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்மாக்கள் என்பது சிவபாபாவுக்குத் தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும். உங்களுடைய சரீரங்களை மறந்து நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும். சிவபாபா கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறேன். சிவபாபா அசரீரியானவர், ஆத்மாக்களாகிய நீங்களும் அசரீரியானவர்கள் ஆவீர்கள். உங்களுடைய பாகங்களை நடிப்பதற்கே நீங்கள் இங்கு வருகிறீர்;கள். தந்தையும் தனது பாகத்தை நடிப்பதற்கு வருகிறார். நாடகத் திட்டத்துக்கேற்ப, தந்தை வந்து உங்களை அழகானவர்களாக ஆக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் குறைபாடுகள் அனைத்தையும் துறந்து நற்குணங்கள் உடையவர்களாக வேண்டும். நற்குணங்கள் உடையவர்கள் ஒருபொழுதும் எவருக்கும் துன்பம் விளைவிக்கமாட்டார்கள். தாங்கள் கேட்டுள்ளவற்றை அவர்கள் ஒருபொழுதும் அலட்சியப்படுத்த மாட்டார்கள். துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் எவருடைய துன்பத்தையும் அவர்கள் அகற்றுவார்கள். தந்தை வரும்பொழுது, முழு உலகின் துன்பமும் நிச்சயமாக அகற்றப்படுகிறது. தந்தை உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார்: இயன்றளவு முயற்சி செய்து தொடர்ந்தும் அனைவரினதும் துன்பத்தை அகற்றுங்கள். முயற்சி செய்வதால் மட்டுமே நீங்கள் ஒரு சிறந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். முயற்சி செய்யாதுவிட்டால், உங்களுடைய அந்தஸ்து குறைக்கப்படும். பின்னர் கல்பம் கல்பமாக அது ஓர் இழப்பு ஆகிவிடும். தந்தை அனைத்து விடயங்களையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் இழப்பு ஏற்படுவதைத் தந்தை விரும்புவதில்லை. உலகிலுள்ள மக்களுக்கு இலாப நட்டத்தைப் பற்றித் தெரியாது, ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் மீது கருணை கொண்டிருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். உங்களுடைய புத்தி இங்குமங்கும் அலைந்தாலும், நீங்கள் அத்தகையதோர் எல்லையற்ற தந்தையை ஏன் நினைவுசெய்வதில்லை என்பதை முயற்சி செய்து சோதித்துப் பாருங்கள். இந்நினைவினூடாக மட்டுமே நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். குறைந்தபட்சம் நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்வீர்கள், ஆனால் நீங்கள் சுவர்க்கத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகிறார்கள்: எங்களுடைய குழந்தைகள் பாடசாலையில் கற்று ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரவேண்டும். இங்கு, எவருக்கும் எதுவும் தெரியாது. நீங்கள் எக்கல்வியைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுடைய உறவினர்களுக்குத் தெரியாது. அக்கல்வியில், உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அனைத்து விடயங்களையும் அறிந்துகொள்கிறார்கள். இங்கு, சிலர் அறிந்துகொள்கிறார்கள், ஏனையோர் அறிந்துகொள்வதில்லை. ஒருவருடைய தந்தை இதைப் பற்றி அறிந்துகொள்வார், ஆனால் அவருடைய சகோதர சகோதரிகளுக்கு அது தெரியாமலிருக்கும். ஒருவருடைய தாய்க்கு இதைப் பற்றித் தெரிந்திருக்கலாம்;, ஆனால் தந்தைக்குத் தெரியாமலிருக்கும், ஏனெனில் இக்கல்வி தனித்துவமானது, உங்களுக்கு இக்கல்வியைக் கற்பித்துக் கொண்டிருப்பவரும் தனித்துவமானவரே ஆவார். நீங்கள் வரிசைக்கிரமமாகப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அதிக பக்தி செய்துள்ளீர்கள் என்பதையும் அதுவும் வரிசைக்கிரமமானது என்பதையும் தந்தை விளங்கப்படுத்துகிறார். அதிகளவு பக்தி செய்துள்ளவர்களே பின்னர் இந்த ஞானத்தைப் பெறுகிறார்கள். இப்பொழுது பக்தியின் சம்பிரதாயங்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன. முன்னர், மீரா சமுதாயத்தின் அபிப்பிராயங்களையும் குடும்பத்தின் கோட்பாடுகளையும் துறந்தார் என்று கூறுவது வழக்கமாகும். இங்கு, நீங்கள் விகார குலத்தின் நடத்தைக் கோட்பாடுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். உங்களுடைய புத்தியின் மூலம் நீங்கள் அனைத்தையும் துறக்க வேண்டும். நீங்கள் இவ்விகார உலகின் எதையும் விரும்புவதில்லை. பாவச் செயல்களைப் புரிபவர்கள் முற்றாகவே விரும்பப்படுவதில்லை. தங்களுடைய சொந்தப் பாக்கியத்தை அவர்கள் பாழாக்கிவிடுகிறார்கள். தன்னுடைய குழந்தைகள் ஏனையோர்களைத் தொந்தரவு செய்வதையோ அல்லது கற்காதிருப்பதையோ விரும்புகின்ற எந்தத் தந்தையும் இருக்க மாட்டார். அங்கு அத்தகைய குழந்தைகள் இல்லை என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய பெயரே தேவர்கள் ஆகும். அது அத்தகையதொரு தூய்மையான பெயர்! நீங்கள் உங்களையே சோதித்துக்கொள்ள வேண்டும்: என்னில் தெய்வீகக் குணங்கள் உள்ளனவா? நீங்கள் சகித்துக் கொள்பவராகவும் இருக்கவேண்டும். அது புத்தியின் யோகத்துக்குரிய ஒரு விடயமாகும். இந்த யுத்தம் மிகவும் இனிமையானதாகும். தந்தையை நினைவுசெய்வதில் யுத்தமென்ற கேள்விக்கே இடமில்லை, ஆனால் ஆம், இதில் மாயை தடைகளை ஏற்படுத்துகிறாள். அவளைப் பற்றி நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் மாயையை வெற்றி கொள்ள வேண்டும். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் செய்து வருகின்றவை அனைத்தும், ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் செய்த மிகச்சரியான அதே முயற்சியே, இப்பொழுது செய்யப்பட்டு வருகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நாங்கள் பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகிப் பின்னர், சத்தியயுகத்தில், நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்போம் என்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு கல்பமும் தந்தை இம்முறையில் விளங்கப்படுத்துகிறார். இது ஒன்றும் புதியதல்ல, இது மிகப் பழையதொன்றாகும். குழந்தைகள் முற்றிலும் அழகானவர்கள் ஆகுவதையே தந்தை விரும்புகிறார். தன்னுடைய குழந்தைகள் அழகான மலர்கள் ஆகுவதையே ஒரு லௌகீகத் தந்தையும் விரும்புவார். முட்களை மலர்களாக மாற்றுவதற்கே பரலோகத் தந்தை வருகிறார். ஆகவே, நீங்கள் அவ்வாறாக வேண்டும். உங்களுடைய தொடர்பு பற்றிய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பௌதீகப் புலனிலும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயை மிகவும் ஏமாற்றக்கூடியவள் ஆவாள். நீங்கள் அவளைப் பற்றி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இலக்கு மிகவும் உயர்ந்ததாகும். அரைக்கல்பமாக, குற்றப் பார்வையைக் கொண்டிருந்தீர்கள். ஒரு பிறவியில் அது இலக்ஷ்மி நாராயணனின் பார்வையைப் போன்று, குற்றமற்ற பார்வையாக்கப்பட வேண்டும். அவர்கள் நற்குணங்கள் அனைத்தினாலும் நிரம்பியவர்கள் ஆவர்;. அங்கு குற்றப் பார்வை இல்லை. இராவணனே அங்கு இருக்க மாட்டான். இது எதுவும் புதியதல்ல. முன்னர் பல தடவைகள் நீங்கள் அந்த அந்தஸ்தைக்; கோரியுள்ளீர்கள். நீங்கள் கற்றுக் கொண்டிருப்பதைப் பற்றி உலகுக்கு எதுவும் தெரியாது. உங்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்குத் தந்தை வருகிறார். தூய்மையற்ற விருப்பங்கள் இராவணனுடையவையாகும். உங்களுடைய விருப்பங்கள் தூய்மையானவையாகும். நீங்கள் குற்றமான விருப்பங்கள் எவற்றையும் கொண்டிருக்கக் கூடாது. சந்தோஷ அலைகள் மூலம் குழந்தைகள் முன்னேறிச் செல்ல வேண்டும். உங்களுடைய மிதமிஞ்சிய சந்தோஷத்தைப் பற்றி எவரும் பேசுவதில்லை; அவர்கள் துன்பத்தைப் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் சந்தோஷத்தைப் பற்றிப் பேசுவதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு விருப்பம் மட்டும் உள்ளது, அது தூய்மையாகுவதே ஆகும். நீங்கள் எவ்வாறு தூய்மை ஆகுவீர்கள்? தந்தை மட்டுமே தூய்மையாக்குபவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய நினைவைக் கொண்டிருப்பதால், நீங்கள் தூய்மையாக்கப்படுவீர்கள். புதிய உலகின் முதல் இலக்கத் தூய ஆத்மாக்கள், இத்தேவர்களே ஆவர். தூய்மையாகுவதால், நீங்கள் எவ்வளவு சக்தியை அடைகிறீர்கள் என்று பாருங்கள். நீங்கள் தூய்மையாகிப் புதிய உலகின் இராச்சியத்தை அடைகிறீர்கள். இத்தேவதர்மத்தில் பெரும் சக்தி உள்ளது என்று இதனாலேயே கூறப்பட்டுள்ளது. அவர்கள் எங்கிருந்து இச்சக்தியைப் பெறுகிறார்கள்? சர்வசக்திவான் தந்தையிடமிருந்தே ஆகும். நீங்கள் உங்களுடைய வீட்டில் இரண்டு தொடக்கம் நான்கு பிரதான படங்களை வைத்து அதிகளவு சேவை செய்ய முடியும். ஊரடங்குச் சட்டம் அமுலாக்கம் செய்யப்பட்டு உங்களால் எங்குமே செல்ல முடியாத ஒரு நேரம் வரும். நீங்களே உண்மையான கீதையைக் கூறுகின்ற, பிராமணர்கள் ஆவீர்கள். ஞானம் மிகவும் இலகுவாகும். முழுக் குடும்பமும் ஞானத்திலுள்ள பொழுது, வீடுகளில் அதிகளவு அமைதி நிலவுகிறது. இது அவர்களுக்கு மிகவும் இலகுவாகும். உங்களுடய வீட்டில் இரண்டு தொடக்கம் நான்கு பிரதான படங்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். திரிமூர்த்தி, சக்கரம், விருட்சம், ஏணியின் படங்கள் போதுமானவை ஆகும். அவற்றுடன், கீதையின் கடவுள் கிருஷ்ணர் அல்லர் என்று காண்பிக்கின்ற சுவரொட்டியையும் வைத்திருக்க வேண்டும். அந்தச் சுவரொட்டியும் சிறந்ததாகும். இது மிக இலகுவானது! இதற்காகப் பணம் செலவிடுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. உங்களிடம் படங்கள் உள்ளன. படங்களைப் பார்ப்பதன் மூலம் உங்களுக்கு ஞானத்தின் விழிப்புணர்வு ஏற்படுகின்றது. அதிலேயே நீங்கள் உறங்கக்கூடியதாக, ஒரு சிறிய அறை இருந்தால் போதும், நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், உங்களால் பலருக்கும் நன்மையளிக்க முடியும். நீங்கள் நன்மையளித்துக் கொண்டிருந்தாலும், தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் நினைவூட்டுகிறார்: நீங்கள் இதை, இதைச் செய்ய முடியும். மக்கள் தாகூர்ஜிக்கும் ஒரு சிலை வைக்கிறார்கள். இங்கு, விளங்கப்படுத்த வேண்டிய விடயங்களும் உள்ளன. பிறவிபிறவியாக, பக்தி மார்க்கத்தில் தொடர்ந்தும் நீங்கள் ஆலயங்களைச் சுற்றி வருகிறீPர்கள், ஆனால் அவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியாது. மக்கள் ஆலயங்களில் தேவர்களின் சிலைகளை வழிபடுகிறார்கள். பின்னர் அவர்கள் சென்று அவற்றை (சிலைகள்) நீரில் மூழ்கடிக்கிறார்கள். அதிகளவு அறியாமை உள்ளது! அவர்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவர்களை வழிபட்டு, பின்னர் அச்சிலைகளை எடுத்துச் சென்று அவற்றைக் கடலினுள் மூழ்கடிக்கிறார்கள். அவர்கள் கணேஷ், தேவியர்கள், சரஸ்வதி ஆகியோரின் சிலைகளையும் நீரில் மூழ்கடிக்கிறார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஒவ்வொரு கல்பமும் இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். அவர் நீங்கள் செய்தவற்றை உங்களை உணர வைக்கிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறித் தந்தை தொடர்ந்தும் அதிகளவில் விளங்கப்படுத்துவதால், குழந்தைகளாகிய நீங்கள் விசேடமாக விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். இது நச்சாறு என்று அழைக்கப்படுகின்றது. அங்கு பாற்கடல் ஒன்றுள்ளது என்றல்ல. ஆனால் அங்கு அனைத்தும் தாராளமாக இருக்கும். எதற்கும் பணம் தேவைப்படாது. உண்மையில், அங்கு தாள் காசு இருக்க மாட்டாது. நீங்கள் எங்கும் தங்க நாணயங்களை மட்டும் காண்;பீர்;கள், கட்டடங்களும் தங்கத்தாலானவை; கற்களும் தங்கம் ஆகும். அங்கு தங்கமும் வெள்ளியும் பெறுமதியற்றவை என்பதையே இது நிரூபிக்கிறது. இங்கு, அவற்றிற்கு அதிகளவு மதிப்பு உள்ளது. அங்கு அனைத்திலும் அற்புதம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். மனிதர்கள் மனிதர்களே; அந்தத் தேவர்களும் மனிதர்களாக இருந்தவர்களே, ஆனால் அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மக்கள் சென்று தங்களுடைய அசுத்தமான பழக்கங்களை அவர்களின் (சிலைகள்) முன்னிலையில் ஒப்புக்கொள்கிறார்கள்: நாங்கள் சீரழிந்த பாவிகள்;; எங்களிடம் நற்குணங்கள் எதுவுமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் ஓர் இலக்கையும் இலட்சியத்தையும் உங்கள் புத்தியில் கொண்டிருக்கிறீர்கள்: நாங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்றோம். தேவர்களிடம் தெய்வீகக் குணங்கள் உள்ளன. மக்கள் ஆலயங்களுக்குச் செல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் அவர்களும் (தேவர்கள்) மனிதர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். நாங்களும் மனிதர்களே. எவ்வாறாயினும், அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தார்கள்; நாங்கள் அசுர குணங்களை உடையவர்கள்;. நீங்கள் எவ்வளவுக்குத் தகுதியற்றவர்களாக இருந்தீர்கள் என்பது இப்பொழுது உங்களுடைய புத்திகளில் புகுகின்றது. நீங்கள் அவர்களின் முன்னிலையில் சென்று பாடினீர்கள்: நீங்கள் நற்குணங்கள் அனைத்தினாலும் நிரம்பியவர்கள்.. இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகிறார்: அவர்கள் கடந்தகாலத்தில் இருந்தார்கள். அவர்கள் தெய்வீகக் குணங்களையும்; அளவற்ற சந்தோஷத்தையும் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் அதிகளவில் சந்தோஷமற்றவர்கள் ஆகிவிட்டார்கள். இந்நேரத்தில், அனைவரிலும் ஐந்து விகாரங்கள் உள்ளன. எவ்வாறு நீங்கள் தொடர்ந்தும் உச்சியிலிருந்து தரையில் வீழ்ந்தீர்கள் என்பதையிட்டு இப்பொழுது நீங்கள் அதிசயப்படுகிறீர்கள். பாரத மக்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தார்கள். இப்பொழுது மக்களுக்குத்; தொடர்ந்தும் அதிகளவில் கடன் சேர்ந்துவருகிறது. தந்தையே இங்கமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். வேறு எவராலும் உங்களுக்கு இதை விளங்கப்படுத்த முடியாது. ரிஷிகளும் முனிவர்களும் “இதுவுமல்ல, அதுவுமல்ல (நேற்றி, நேற்றி)” என்று கூறுவது வழக்கமாகும். அவர்கள் உண்மையையே கூறினார்கள் என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிகிறது: அவர்களுக்குத் தந்தையையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி அல்லது இறுதியையோ தெரியாது. இப்பொழுதும், குழந்தைகளாகிய உங்களைத் தவிர எவருக்கும் இது தெரியாது. மகத்தான சந்நியாசிகளும் மகாத்மாக்களும் இதை அறிய மாட்டார்கள். உண்மையில், இந்த இலக்ஷ்மி நாராயணனே மகாத்மாக்கள் ஆவர்; அவர்கள் சதா தூய்மையானவர்கள் ஆவர். அவர்களே அறிந்திராத பொழுது, எவ்வாறு வேறு எவராலும் அறிய முடியும்? தந்தை அத்தகைய இலகுவான விடயங்களை விளங்கப்படுத்துகிறார், ஆனாலும் சில குழந்தைகள் மறக்கிறார்கள். மிகவும் நன்றாகத் தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பவர்கள், மிகவும் இனிமையானவர்கள் ஆவர். அதிகளவுக்கு இனிமையான குணங்களைக் குழந்தைகளிடம் பார்க்கும்பொழுது, இதயம் சந்தோஷமடைகிறது. சிலர் பெயரையும் அவதூறு செய்கிறார்கள். இங்கு, அவர்கள் இம்மூவரையும் - தந்தை, ஆசிரியர், சற்குருவை அவதூறு செய்கிறார்கள். உண்மையான தந்தை, உண்மையான ஆசிரியர், சற்குருவை அவதூறு செய்வதால், மும்முடங்கு தண்டனை சேர்ந்துவிடுகிறது. எவ்வாறாயினும், சில குழந்தைகளுக்கு எந்தப் புரிந்துணர்வும் கிடையாது. நிச்சயமாக அவ்வாறு சிலர் இருப்பார்கள் என்று தந்தை விளங்கப்படுத்துகிறார். மாயையும் குறைந்தவளல்ல. அரைக்கல்பமாக, அவள் உங்களைப் பாவ ஆத்மாக்களாக ஆக்குகிறாள். பின்னர் தந்தை அரைக்கல்பமாக உங்களைத் தூய புண்ணியாத்மாக்களாக ஆக்குகிறார். நீங்கள் வரிசைக்கிரமமாக அவ்வாறு ஆகுகிறீர்கள். இருவரே உங்களை இவ்வாறு ஆக்குகிறார்கள்: இராமரும் இராவணனும். இராமர் (கடவுள்) பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். மக்கள் இராம நாமத்தை உச்சரித்து, பின்னர், இறுதியில், சிவனுக்கு வந்தனங்கள் கூறுகிறார்கள். அவர் மட்டுமே பரமாத்மா ஆவார். அவர்கள் பரமாத்மாவின் பெயர்களை எண்ணுகிறார்கள். நீங்கள் எதையும் எண்ணத் தேவையில்லை. இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் தூய்மையாக இருந்தார்கள். அது அவர்களின் உலகமாக இருந்தது; அது இப்பொழுது கடந்த காலமாகிவிட்டது. அது புதிய உலகமாகிய, சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. ஒரு கட்டடம் பழையதாகும்பொழுது, அது இடிக்கப்படுவதற்கு மட்டும் தகுதியானதாகும். இவ்வுலகமும் அவ்வாறே உள்ளது. இப்பொழுது கலியுகத்தின் இறுதியாகும். இவை புரிந்துகொள்ளவேண்டிய இலகுவான விடயங்களாகும். நீங்கள் இவ்விடயங்களைக் கிரகித்து ஏனையோர்களையும் அவற்றைக் கிரகிக்கச்; செய்யுங்கள். அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்குத் தந்தை அனைவரிடமும் செல்ல மாட்டார். குழந்தைகளாகிய நீங்கள் இறை சேவையில் இருக்கிறீர்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற சேவையை மட்டும் நீங்கள் செய்யவேண்டும். இறை சேவை மட்டும் உங்களுடையதாகும். உங்களுடைய பெயரை மேன்மையாக்குவதற்கே, தாய்மார்களாகிய உங்களுக்குத் தந்தை ஞானக் கலசத்தைக் கொடுத்துள்ளார். ஆண்கள் இதைப் பெறமாட்டார்கள் என்பதல்ல. அனைவரும் அதைப் பெறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் சந்தோஷமான சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அங்கு சந்தோஷமற்ற எவரும் இருக்கவில்லை. இப்பொழுது இது சங்கமயுகம், நாங்கள் அப்புதிய உலகின் அதிபதிகள் ஆகுகின்றோம். இப்பொழுது பழைய, தூய்மையற்ற உலகமாகிய கலியுகமாகும். மனிதர்கள் முற்றிலும் முட்டாள் (எருமை) புத்தியுடையவர்கள் ஆகிவிட்டதைப் போன்றுள்ளது. இப்பொழுது அவையனைத்தும் மறக்கப்பட வேண்டும். உங்களுடைய சரீரத்தையும் சரீர உறவுகள் அனைத்தையும் மறந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். சரீரத்தில் ஓர் ஆத்மா இல்லாதபொழுது, சரீரத்தால் எதையும் செய்யமுடியாது. தங்கள் சரீரங்களில் மக்களுக்கு அதிக பற்று உள்ளது. சரீரம் எரிக்கப்பட்டு, ஆத்மா சென்று இன்னுமொரு சரீரத்தைப் பெற்றுள்ளார், ஆனாலும் 12 மாதங்களுக்கு அவர்கள் தொடர்ந்தும் துன்பத்தில் அழுகிறார்கள். இப்பொழுது, ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய சரீரங்களை நீக்கும்பொழுது, நிச்சயமாக நீங்கள் வரிசைக்கிரமமாக, உயர்ந்த குடும்பங்களில் பிறப்பெடுப்பீர்கள். சிறிதளவு ஞானத்தை மட்டும் கொண்டிருப்பவர்கள் சாதாரண குடும்பங்களில் பிறப்பார்கள்.மேன்மையான ஞானத்தை கொண்டிருப்பவர்கள் மேன்மையான குடும்பங்களில் பிறப்பார்கள். அங்கு அதிக சந்தோஷம் உள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கூறுபவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள். நற்குணங்கள் உடையவர்களாகி, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். முயற்சி செய்து அனைவருடைய துன்பத்தையும் அகற்றுங்கள்.

2. விகாரங்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு, பாவச்செயல்களைச் செய்யாதீர்கள். சகித்துக்கொள்பவர்கள் ஆகுங்கள். தீய விருப்பங்கள் எதனையும் கொண்டிருக்காதீர்கள்.


ஆசீர்வாதம்:
நான் என்ற உணர்வை பாபாவில் அமிழ்த்துகின்ற சதா யோகியாகவும் இலகு யோகியாகவும் ஆகுவீர்களாக.

ஒவ்வொரு முச்சிலும் தந்தையிடம் அன்பைக் கொண்டுள்ள குழந்தைகளும் ஒவ்வொரு மூச்சிலும் பாபா பாபா என்றுள்ளவர்களும் யோகத்திற்காக கடினமாக உழைக்க வேண்டியதில்லை. அவர்கள் நினைவைக் கொண்டிருப்பதன் அத்தாட்சியானது அவர்களின் உதடுகளிலிருந்து “நான்” என்ற வார்த்தை ஒருபோதும் எழுவதில்லை. பாபா பாபா என்பது மட்டுமே வெளிப்படும்;. நான் எனும் உணர்வு பாபாவில் அமிழ்ந்திருக்கும். பாபாவே முதுகெலும்பு, பாபாவே உங்களைத் தூண்டினார், பாபா உங்களுடன் எப்பொழுதும் இருக்கின்றார். “உங்களுடன் இருப்பேன், உங்களுடன் உண்பேன், உங்களுடன் நடந்தும் உலாவியும் திரிவேன்”. இந்த விழிப்புணர்வு உங்கள் ரூபத்தில் எழுகின்ற போது நீங்கள் இலகு யோகி என அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
எனக்கு எனக்கு (மீ மீ, மியாவ்) எனக் கூறுவது மாயையான பூனையை வரவழைப்பதாகும்.