04.09.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் பூமியின் வாழும் நட்சத்திரங்கள் ஆவீர்கள். நீங்கள் முழு உலகிற்கும் ஒளியைக் கொடுக்க வேண்டும்.

கேள்வி:
எவ்வாறு சிவபாபா குழந்தைகளாகிய உங்களுடைய சரீரங்களைத் தூய்மையாக்குகின்றார்?

பதில்:
அவர் உங்களுக்கு, தாய் பிரம்மாவின் மூலம் ஞானப் பாலைக் கொடுத்து, உங்கள் சரீரங்களைத் தூய்மையாக்குகின்றார். இதனாலேயே அவருடைய புகழில் பாடப்படுகின்றது: நீங்களே தாயும், நீங்களே தந்தையும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தாய் பிரம்மாவின் மூலம் ஞானப் பாலைப் பருகுவதனால், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, தூய்மையாகுவீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார்: ஆகாயத்தில் நட்சத்திரங்கள் இருப்பது போன்றே, நீங்கள் பூமியின் நட்சத்திரங்கள் என்று குழந்தைகளாகிய உங்களைப் பற்றி நினைவுகூரப்பட்டுள்ளது. அவை சுவர்க்க தேவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. உண்மையில், அவை தேவர்கள் அல்ல. நட்சத்திரங்களாகிய நீங்கள் முழு உலகிற்கும் ஞான ஒளியைக் கொடுப்பதால், நீங்கள் அவற்றை விடவும் மிகவும் அதிகளவு சக்திவாய்ந்தவர்கள். நீங்களே தேவர்களாகப் போகின்றவர்கள்;. நடைபெறுகின்ற எழுச்சியும் வீழ்ச்சியும் உங்களுடையதே. அந்த நட்சத்திரங்கள் மேடைக்கு ஒளியைக் கொடுக்கின்றன, ஆனால் அவை தேவர்கள் என அழைக்கப்பட மாட்டாது. நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்;களே முழு உலகிற்கும் ஞான ஒளியேற்றுபவர்கள். இப்பொழுது முழு உலகிலும் காரிருள் சூழ்ந்துள்ளது. அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டனர். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களைத் தேவர்களாக்குவதற்கு இப்பொழுது தந்தை வந்துவிட்டார். அனைவரையும் ஒரு தேவராகவே மனிதர்கள், கருதுகின்றார்கள்; அவர்கள் சூரியனையும் ஒரு தேவர் என்றே கூறுகின்றார்கள். சில இடங்களில், அவர்கள் சூரியனின் கொடியையும் ஏற்றித் தங்களைச் சூரிய வம்சத்தவர்கள் என்றும் அழைக்கின்றார்கள். உண்மையில், நீங்களே சூரிய வம்சத்தவர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது பாரதத்தில் காரிருள் மாத்திரமே உள்ளது. இப்பொழுது பாரதத்தில் ஒளி மாத்திரமே இருக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத் தைலத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் அறியாமை உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தீர்கள். உங்களை மீண்டும் ஒருமுறை விழித்தெழச் செய்வதற்குத் தந்தை வந்துவிட்டார். அவர் கூறுகின்றார்: நாடகத் திட்டத்துக்கேற்ப, நான் ஒவ்வொரு கல்பத்திலும் அதிமங்களகரமான சங்கமயுகத்தில் மீண்டும் ஒருமுறை வருகின்றேன். இந்த அதிமங்களகரமான சங்கமயுகமானது சமயநூல்கள் எதனிலும் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் இப்பொழுது நட்சத்திரங்களாகி, பின்னர் தேவர்களாகுவதால், இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரம் இந்த யுகத்தைப் பற்றித் தெரியும். உங்களையிட்டு மாத்திரமே கூறப்பட்டுள்ளது: சுவர்க்க தேவர்களுக்கு வந்தனங்கள். பூஜிப்பவர்களிலிருந்து நீங்கள் இப்பொழுது பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். அங்கே, நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருக்கின்றீர்கள். இது புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது ஓர் ஆன்மீகக் கல்வி என அழைக்கப்படுகின்றது. இதில் எவருக்கிடையிலும் எந்த யுத்தமும் இருக்க முடியாது. ஆசிரியர் சாதாரணமான முறையில் கற்பிக்கின்றார், குழந்தைகளும் சாதாரணமாகவே கற்கின்றார்கள். இதில் ஒரு யுத்தம் பற்றிய கேள்விக்கே இடமில்லை. இவர் தன்னைக் கடவுள் என்று கூறுவதில்லை. உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பவர் அசரீரியான சிவபாபா என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். அவர் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தைக் கொண்டிருப்;பதில்லை. அவர் கூறுகிறார்: நான் இந்த இரதத்தைக் கடனாகப் பெற்றுள்ளேன். அவர் ஏன் “பாக்கிய இரதம்” என்று அழைக்கப்படுகின்றார்? ஏனெனில் அவர் மிக மிகப் பாக்கியசாலி இரதம். அவரே உலக அதிபதியாகுபவர் ஆதலால், அவர் பாக்கிய இரதமாகிய, பகீரதன் ஆவார். அனைத்தினதும் அர்த்தமும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இதுவே அனைத்திலும் மகத்துவமான கல்வியாகும். உலகில், பொய்மையைத் தவிர வேறு எதுவுமில்லை. சத்தியப் படகு தள்ளாடும், ஆனால் அது மூழ்காது எனக் கூறப்பட்டுள்ளது. இந்நாட்களில், பலவகையான கடவுள்மார் வெளிப்பட்டுள்ளனர். அவர்களை விடுங்கள், அவர்கள் கூழாங்கற்களையும் கற்களையும் கூடக் கடவுள் என்று கூறுகின்றார்கள். அவர்கள் கடவுளையே அதிகளவு அலைந்து திரிய வைத்து விட்டார்கள்! ஒரு லௌகீகத் தந்தை தனது குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துவதைப் போன்றே, தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும், அத்தகைய தந்தை ஆசிரியராகவும், குருவாகவும் இருக்க மாட்டார். முதலில் ஒரு குழந்தை ஒரு தந்தைக்குப் பிறக்கின்றார், பின்னர், அவர் சிறிது வளரும்பொழுது, அவருக்குக் கற்பிப்பதற்கு ஓர் ஆசிரியர் தேவைப்படுகின்றார். 60 வயதின் பின்னர், ஒரு குரு தேவைப்படுகின்றார். அந்த ஒரேயொருவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவர் கூறுகின்றார்: நான் ஆத்மாக்களாகிய உங்களின் தந்தை. ஆத்மாவே கற்கின்றார். ஒவ்வோர் ஆத்மாவும், ஆத்மா என்றே அழைக்கப்படுகின்றார், ஆனால் சரீரங்களுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றிச் சிந்தியுங்கள்: இது ஓர் எல்லையற்ற நாடகமாகும். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதே இடம்பெறுகின்றது. இது எதுவும் புதியதல்ல. இது தொடர்ந்தும் சுழல்கின்ற, அநாதியான, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம். ஆத்மாக்கள் அனைவரும் நடிகர்கள். ஆத்மாக்கள் எங்கு வசிக்கின்றார்கள்? நீங்கள் கூறுவீர்கள்: நாங்கள் பரந்தாமமாகிய, எங்கள் வீட்டில் வசிப்பவர்கள், பின்னர் நாங்கள் எங்களுடைய எல்லையற்ற பாகங்களை நடிப்பதற்கு இங்கு வருகின்றோம். தந்தை எப்பொழுதும் அங்கேயே வசிக்கின்றார். அவர் மறுபிறவி எடுப்பதில்லை. படைப்பவராகிய, தந்தை இப்பொழுது உங்களுக்குத் தன்னுடையதும், படைப்பினதும் சாராம்சத்தைக் கூறுகின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களை “சுயதரிதனச் சக்கரதாரிகள்” என்று அழைக்கின்றார். வேறு எவராலும் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது, ஏனெனில் விஷ்ணுவே சுயதரிசனச் சக்கரதாரி என்று அவர்கள் எண்ணுகிறார்கள். எனவே, அவர்கள் வினவுகின்றார்கள்: ஏன் நீங்கள் மனிதர்களை இவ்வாறு அழைக்கின்றீர்கள்? உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். நீங்கள் சூத்திரர்களாக இருந்தபொழுது, மனிதர்களாக இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆகிவிட்ட பொழுதும், இன்னமும் மனிதர்களாகவே இருக்கின்றீர்கள், நீங்கள் தேவர்களாகும்பொழுதும், மனிதர்களாகவே இருப்பீர்கள். எவ்வாறாயினும், நடத்தையே மாற்றமடைகின்றது. இராவணன் வரும்பொழுது, உங்கள் நடத்தை அதிகளவு சீரழிகின்றது. சத்தியயுகத்தில் அவ்விகாரங்கள் இருக்க மாட்டாது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பல்வேறு கதைகளைக் கேட்டுள்ளீர்கள். அமரத்துவப் பிரபுவானவர் பார்வதிக்கு அமரத்துவக் கதையைக் கூறினார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், நிச்சயமாகச் சங்கரரே பார்வதிக்குக் கதையைக் கூறியிருந்திருக்க வேண்டும். எவ்வாறு சிவனால் அதைக் கூறமுடியும்? மனிதர்கள் பலர் அதைச் செவிமடுக்கச் செல்கின்றார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குப் பக்தி மார்க்கத்து விடயங்களைக் கூறுகின்றார். பக்தி செய்வது தீங்கானது என்று தந்தை கூறமாட்டார். இல்லை, அநாதியான நாடகமே உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. இப்பொழுது தந்தை கூறுகின்றார்: முதலில், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். இதுவே பிரதான விடயமாகும். கடவுள் பேசுகின்றார்: மன்மனாபவ! அதன் அர்த்தம் என்ன? தந்தை இங்கமர்ந்திருந்து அதன் அர்த்தத்தை இவ்வாயினூடாக உங்களுக்குக் கூறுவதால், இதுவே கௌமுக் (பசுவின் வாய்) ஆகும். நீங்களே தாயும், நீங்களே தந்தையும் என்று அந்த ஒரேயொருவரையிட்டு நீங்கள் கூறுகிறீர்கள் என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அவர் உங்கள் அனைவரையும் இந்தத் தாயினூடாகத் தத்தெடுத்துள்ளார். சிவபாபா கூறுகின்றார்: நான் உங்களுக்கு ஞானப் பாலை இவ்வாயினூடாகத் (பிரம்மா) தருவதால், உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். ஆகவே, நீங்கள் பின்னர் தூய சரீரங்களைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்கள் முழுமையாகத் தூய்மையாகிப் பின்னர் படிப்படியாகத் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்குகிறார்கள். நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள் என்பதையும், உங்கள் சரீரங்களும் தூய்மையாக இருந்தன என்பதையும், பின்னர், நாடகத்;துக்கேற்ப, நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்துக்குள் வந்தீர்கள் என்பதையும் ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாக இல்லை. இப்பொழுது 9 கரட் தங்கமே இருப்பதாக உங்களையிட்டுக் கூறப்படும். ஒரு சிறிய சதவீதம் மாத்திரமே இப்பொழுது எஞ்சியுள்ளது. அது முழுமையாகவே மறைந்துவிடுகின்றது என்று உங்களால் கூறமுடியாது. அதில் சிறிதளவு இன்னமும் இருக்கின்றது. தந்தை உங்களுக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்துள்ளார். இலக்ஷ்மி நாராயணனினது விக்கிரகங்கள் முதற்தரமானவை. இப்பொழுது உங்கள் புத்தியில் முழுச் சக்கரமும் பிரவேசித்துள்ளது. அதில் தந்தையின் அறிமுகமும் உள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் முழுமையாகத் தூய்மையாயாகாது விட்டாலும், உங்கள் புத்தியில் தந்தையின் அறிமுகம் உள்ளது. தந்தை உங்களுக்குத் தூய்மையாகுவதற்கான வழியைக் காட்டுகின்றார். ஆத்மாக்களிலுள்ள கலப்படம் எவ்வாறு அகற்றப்பட முடியும்? அதற்காகவே நினைவு யாத்திரை உள்ளது. இது போர்க்களம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் போர்க்களத்திலுள்ள ஒரு சுதந்திரமான போர்வீரர். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் விரும்பியளவுக்கு முயற்சியைச் செய்ய முடியும். முயற்சி செய்வது ஒரு மாணவனின் கடமையாகும். நீங்கள் எங்கு சென்றாலும், தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் எச்சரிக்கை செய்யுங்கள்: மன்மனாபவ! நீங்கள் சிவபாபாவை நினைவு செய்கிறீர்களா? இந்தச் சமிக்ஞையை ஒருவருக்கொருவர் கொடுங்கள். தந்தையின் கல்வியே சமிக்ஞை, இதனாலேயே தந்தை கூறுகின்றார்: உங்கள் சரீரம் தூய்மையாகுகின்றது. நான் ஒரு விநாடியில் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகும்பொழுது, உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். பின்னர், உலக இராச்சியமும் இருக்கின்றது. அதில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதே நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியாகும், இல்லாவிடில் ஒரு விநாடியில் ஜீவன்முக்தி கிடைக்கும். இது சரியானது. முயற்சி செய்வது ஒவ்வொருவரையும் பொறுத்தது. தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள், ஆத்மாக்களாகிய நீங்கள் முழுமையாகத் தூய்மையாகுவீர்கள். நீங்கள் சதோபிரதானாகி, சதோபிரதான் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் பல தடவைகள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகியுள்ளீர்கள். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது; அது ஒருபொழுதும் முடிவடைவதில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகிறார். அவர் கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறேன். குழந்தைகளாகிய நீங்களே என்னை அழுக்கான உலகத்துக்கு அழைக்கின்றீர்கள். நீங்கள் எனக்குக் கொடுக்கும் அழைப்பு என்ன? நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டதால், வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! அது உங்களுடைய அத்தகையதோர் அற்புதமான அழைப்பு! நீங்கள் கூறுகின்றீர்கள்: எங்களை அமைதி தாமத்துக்கும், சந்தோஷ தாமத்துக்கும் அழைத்துச் செல்லுங்கள். எனவே, நான் உங்கள் கீழ்ப்படிவான சேவகன். இதுவும் நாடகத்தின் விளையாட்டாகும். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் அதே விடயத்தைக் கற்று, உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாக்களே தங்கள் பாகங்களை நடிக்கின்றனர். இங்கு அமர்ந்திருக்கையில், தந்தை ஆத்மாக்களையே பார்க்கின்றார். அவர் நட்சத்;திரங்களைப் பார்க்கின்றார். ஆத்மாக்கள் மிகவும் சின்னஞ் சிறியவர்கள்;. நட்சத்திரங்களின் பிரகாசம் இருப்பது போன்றுள்ளது. சில நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமானவையாகவும், ஏனையவை மங்கலானவையாகவும் உள்;ளன. சில சந்திரனுக்கு அருகில் உள்ளன. நீங்களும் யோக சக்தி மூலம் மிகவும் தூய்மையானவர்கள் ஆகுவதால் பிரகாசிக்கின்றீர்கள். பாபாவும் கூறுகின்றார்: குழந்தைகளாகிய உங்களின் மத்தியில் மிகச்சிறந்த நட்சத்திரங்களாக உள்ளவர்களுக்கு நான் ஒரு மலரைத் தருவேன். குழந்தைகளாகிய உங்களுக்கும் ஒருவரை ஒருவர் தெரியும். சிலர் உண்மையிலேயே மிகவும் உறுதியானவர்களாகவும்;, சிலர் பலவீனமானவர்களாகவும் உள்ளார்கள். அந்த நட்சத்திரங்கள் தேவர்கள் என அழைக்கப்பட முடியாதவை. நீங்களும் மனிதர்கள். எவ்வாறாயினும், தந்தை ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மையாக்கி, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். தந்தை உங்களுக்குப் பெருமளவு சக்தியை ஓர் ஆஸ்தியாகத் தருகின்றார். அவரே சர்வசக்திவானாகிய தந்தையாவார். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சக்தியைத் தருகின்றேன். பாடப்பட்டும் உள்ளது: சிவபாபா, நீங்கள் இங்கமர்ந்திருந்து இக்கல்வியினூடாக எங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகின்றீர்கள். அற்புதம்! எங்களை வேறு எவரும் அவ்வாறு ஆக்குவதில்லை. கல்வியே உங்களுடைய வருமானத்துக்கான மூலாதாரம். ஆகாயம், பூமி முழுவதும் எங்களுடையவை ஆகுகின்றன. எவராலும் அதை எங்களிடமிருந்து அபகரிக்க முடியாது. அது அசைக்க முடியாத இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. அதை எவராலும் சேதமாக்க முடியாது. எவராலும் அதை எரிக்க முடியாது. ஆகவே நீங்கள் அத்தகையதொரு தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த, தனிப்பட்ட முயற்சியைச் செய்ய வேண்டும். குழந்தைகள் அருங்காட்சியகங்கள் போன்றவற்றைக் கட்டுவதால், அந்தப் படங்களினூடாக உங்களுக்குச் சமமானவர்களுக்கு உங்களால் விளங்கப்படுத்த முடியும். தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: நீங்கள் விரும்பிய படங்களை உங்களால் உருவாக்க முடியும். அனைவருடைய புத்தியும் தொழிற்படுகின்றது. இவை மனிதர்களுக்கு நன்மையளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. எவரும் ஒரு நிலையத்துக்கு செல்ல முடியும் என்பது உங்களுக்குத் தெரியும், ஆகவே எந்த வழிமுறையை நீங்கள் உருவாக்குவதால், இந்த இனிப்பைப் பெறுவதற்கு மக்கள் தாங்களாகவே வரமுடியும்? சிலர் செய்கின்ற இனிப்புக்கள் மிகவும் சிறந்தவையாக இருக்கும்பொழுது, (அவற்றை ருசி பார்த்தவர்களால்) அவை விளம்பரப்படுத்தப்படுகின்றன. அவர்கள் அனைவரும் ஏனையோருக்குக் கூறுவார்கள்: இன்ன கடைக்குச் செல்லுங்கள். இதுவே மிகச்சிறந்த, முதற்தரமான இனிப்பு. அத்தகையதோர் இனிப்பை வேறு எவராலும் கொடுக்க முடியாது. எவராவது அதைப் பார்க்கும்பொழுது, அவர் சென்று ஏனையோருக்குக் கூறுகின்றார். நிச்சயமாக, எவ்வாறு பாரதம் முழுவதும் சத்திய யுகத்துக்குச் செல்ல முடியும் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திப்பீர்கள். அதற்காக நீங்கள் பெருமளவில் விளங்கப்படுத்துகிறீர்;கள், ஆனால் அவர்கள் கல்லுப்புத்தியைக் கொண்டிருப்பதால், அதற்கே முயற்சி தேவைப்படுகின்றது. எவ்வாறு வேட்டையாடுவது எனவும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில், எவ்வாறு சிறிய இரையை வேட்டையாடுவது என்று நீங்கள் கற்றுக் கொள்கின்றீர்கள். பெரிய இரையை வேட்டையாடுவதற்குப் பலம் தேவைப்படுகின்றது. வேதங்களையும் சமயநூல்களையும் கற்றுள்ள பல்வேறு மகத்தான பண்டிதர்கள் உள்ளார்கள். அவர்கள் தங்களை அத்தகைய மகத்தான அதிகாரிகளாகக் கருதுகின்றார்கள். பெனாரசில், அவர்கள் மிகப்பெரிய பட்டங்களைப் பெறுகின்றார்கள். இதனாலேயே பாபா விளங்கப்படுத்துகின்றார்: எல்லாவற்றுக்கும் முதலில், பெனாரசில் உள்ள அனைவரையும் சுற்றி வளைத்துச் சேவை செய்யுங்கள். பிரபல்யமானவர்களின் ஒலியானது வெளிப்படும்;பொழுது, பின்னர் ஏனையோரும் செவிமடுப்பார்கள். எவரும் இளையவர்களைச் செவிமடுக்க மாட்டார்கள். தங்களைச் சமயநூல்களின் அதிகாரிகளாகக்; கருதுகின்ற சிங்கங்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு அத்தகைய பெரிய பட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபாபாவுக்குக்கூட, பல்வேறு பட்டங்கள் இருப்பதில்லை. பக்தி மார்க்கத்துக்குரிய இராச்சியம், பின்னர், ஞான மார்க்கத்துக்குரிய இராச்சியம் ஆகுகின்றது. ஞான மார்க்கத்தில் பக்தி இருக்காது. பின்னர், பக்தியில் முற்றாகவே ஞானம் இருக்காது. ஆகவே தந்தை இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இங்கமர்ந்திருக்கின்ற நீங்கள் அனைவரும் நட்சத்திரங்கள் என்கின்ற புரிந்துணர்வுடன் தந்தை உங்கள் அனைவரையும் பார்க்கின்றார். நீங்கள் உங்களுடைய சரீரங்களின் உணர்வைத் துறக்க வேண்டும். மேலே நட்சத்திரங்களின் பிரகாசம் உள்ளதைப் போன்று, இங்கும் ஒரு பிரகாசம் உள்ளது. சிலர் மிகவும் பிரகாசமான ஒளியைக்; கொண்டிருப்பவர்கள் ஆகியுள்ளனர். அவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகின்ற, பூமியின் நட்சத்திரங்கள். இது அத்தகையதொரு பெரிய எல்லையற்ற மேடை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அது எல்லைக்குட்பட்ட இரவும், பகலும் ஆகும். இதுவே அரைக் கல்பத்தின் இரவும், அரைக் கல்பத்தின் பகலும் ஆகும். அது எல்லையற்றது. பகலில், சந்தோஷத்தைத் தவிர, எதுவுமேயில்லை; எங்கும் தடுமாறித் திரியத் தேவையில்லை. ஞானத்தில் சந்தோஷமும், பக்தியில் துன்பமும் உள்ளது. சத்திய யுகத்தில் துன்பம் என்ற குறிப்பே இல்லை. அங்கு மரணம் கிடையாது. நீங்கள் மரணத்தை வெல்கின்றீர்கள். அங்கு மரணம் என்ற குறிப்பே இல்லை. அது அமரத்துவ பூமி. அமரத்துவ பூமிக்காக, தந்தை உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். முழுச் சக்கரத்தின் ஞானம் முழுவதும் அதன் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது. பிரம்ம தத்துவமே ஆத்மாக்களாகிய உங்களுடைய வீடு என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் பாகங்களை நடிப்பதற்கு, வரிசைக்கிரமமாக, நீங்கள் அங்கிருந்து இங்கு வருகின்றீர்கள். பல ஆத்மாக்கள் உள்ளனர். தந்தை அமர்ந்திருந்து ஒவ்வொருவரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் பேச மாட்டார். அவர் உங்களுக்கு அனைத்து விடயங்களையும் மிகச்சுருக்கமாகக் கூறுகின்றார். பல்வேறு கிளைகள் உள்ளன. தொடர்ந்தும் கிளைகள் வெளிப்படுவதால், விருட்சம் வளர்கின்றது. தங்கள் சொந்தச் சமயத்தைப் பற்றிக்கூட அறிந்திராத பலர் உள்ளனர். தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார்: ஆதியில், நீங்கள் தேவ தர்மத்துக்கு உரியவர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இப்பொழுது உங்கள் தர்மத்திலும் உங்கள் செயல்களிலும் சீரழிந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். ஆதியில், நீங்கள் அமைதி தாமத்தில் வசிப்பவர்களாக இருந்தீர்கள் என்பதும், பின்னர் இங்கு உங்கள் பாகங்களை நடிப்பதற்கு வந்தீர்கள் என்பதும் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் உள்ளன. அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது; அது அவர்களின் வம்சமாக இருந்தது. இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் சூரிய வம்சத்தவர்களாக இருந்தீர்கள் எனவும், பின்னர் சந்திர வம்சத்தவர்கள் ஆகினீர்கள் எனவும் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்; அதற்கிடையில் துணைக் கதைகள் உள்ளன. இது எல்லையற்ற நாடகம். இது அத்தகையதொரு சிறிய விருட்சம். இதுவே பிராமணக் குலம். பின்னர் நீங்கள் அனைவரையும் பார்க்கவோ அல்லது சந்திக்கவோ இயலாத அளவுக்கு அது மிகவும் பெரியதாகும். நீங்கள் தொடர்ந்தும் அனைவரையும் (சேவையால்) சுற்றி வளைக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: டெல்கியிலும் பெனாரசிலும் உள்ள அனைவரையும் சுற்றி வளையுங்கள். அவர் பின்னர் கூறுகின்றார்: நீங்களே முழு உலகையும் முற்றுகையிடப் போகின்றவர்கள். நீங்கள் யோக சக்தி மூலம் உலகம் முழுவதிலும் ஒரே இராச்சியத்தை ஸ்தாபிப்பதால், அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். சிலர் தொடர்ந்தும் ஒரே இடத்துக்குச் செல்கின்றார்கள், ஏனையோர் வேறோர் இடத்துக்குச் செல்கின்றார்கள். இப்பொழுது எவரும் உங்களைச் செவிமடுப்பதில்லை. முக்கியஸ்தர்கள் வந்து, அது செய்தித் தாள்களில் அச்சிடப்படும்பொழுது, அவர்கள் பின்னர் புரிந்துகொள்வார்கள். இப்பொழுது வேட்டையாடப்பட்டுள்ள இரையானது, சிறிய இரை ஆகும். இதுவே தங்;களுக்குச் சுவர்க்கம் என்று மகத்தான, பெரிய செல்வந்தர்கள் எண்ணுகிறார்கள். ஏழைகள் மாத்திரமே வந்து தங்கள் ஆஸ்தியைக் கோருகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, வேறு எவரும் அன்றி, நீங்கள் மாத்திரமே என்னுடையவர். எவ்வாறாயினும், முழு உலகிலிருந்தும் பற்று துண்டிக்கப்படும்பொழுது மாத்திரமே அது நிகழ முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மாக்களைத் தூய்மையாக்குவதற்கு, தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்யுங்கள். “மன்மனாபவ” என்ற சமிக்ஞையைக் கொடுங்கள். யோக சக்தியினால் தூய்மையாகி, ஒரு பிரகாசிக்கின்ற நட்சத்திரம் ஆகுங்கள்.

2. இந்த எல்லையற்ற, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகத்தை மிக நன்றாகப் புரிந்துகொண்டு, ஒரு சுயதரிசனச் சக்கரதாரி ஆகுங்கள். மனிதர்களுக்கு ஞானத் தைலத்தைக் கொடுத்து, அவர்களை அறியாமை எனும் காரிருளிலிருந்து அகற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு விசேட சேவையாளராகி, உங்களுடைய நடைமுறை வாழ்வின் அத்தாட்சி மூலம் மௌனச் சக்தியின் ஒலியைப் பரப்புவீர்களாக.

அனைவருக்கும் மௌனச் சக்தியின் அனுபவத்தைக் கொடுப்பதே விசேட சேவையாகும். விஞ்ஞானத்தின் சக்தி மிகவும் பிரபல்யமாக இருப்பதைப் போன்று, அதேவழியில், மௌனச் சக்தியும் மிகவும் பிரபல்யம் ஆகட்டும். மௌனச் சக்தியானது விஞ்ஞானத்தின் சக்தியை விடவும் மகத்தானது எனும் ஒலி அனைவரினதும் வாயிலிருந்தும் வெளிப்படட்டும். அந்த நாளும் வரும். மௌனச் சக்தியின் வெளிப்பாடு எனில் தந்தையின் வெளிப்பாடு ஆகும். உங்கள் அனைவரினதும் வாழ்வுகளும் மௌனச் சக்தியின் நடைமுறை அத்தாட்சி ஆகும். நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் அமைதியின் ஒரு மாதிரியாகத் தென்பட வேண்டும். அப்பொழுது விஞ்ஞானிகளின் கண்கள் மௌனத்தைக் கொண்டிருப்பவர்களின் மீது வீழும். நீங்கள் அத்தகைய சேவையைச் செய்யும்பொழுதே, ஒரு விசேட சேவையாளர் என்று கூறப்படுவீர்கள்.

சுலோகம்:
சேவை செய்வதற்கும் உங்கள் ஸ்திதியைப் பேணுவதற்கும் இடையில் ஒரு சமநிலையை வைத்திருங்கள், அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.