16.12.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எல்லையற்ற சந்தோஷத்தையும் போதையையும் கொண்டிருப்பதற்கு, சரீர உணர்வு என்ற நோயைத் துறந்துவிடுங்கள். அன்பான புத்தியை உடையவராகி, உங்கள் நடத்தையைச் சீர்திருத்;திக் கொள்ளுங்கள்.

கேள்வி:

பதில்:
தந்தையை மிகச்சரியாக அறிந்து நினைவுசெய்பவர்களும், தந்தையைத் தங்கள் இதயபூர்வமாகப் புகழ்பவர்களும், இந்தக் கல்வியில் முழுக் கவனம் செலுத்துபவர்களுமே, ஞானத்தில் எவ்விதமான தவறான போதையை என்றுமே கொண்டிராத குழந்தைகள் ஆவார்கள். தந்தையைச் சாதாரணமாகக் கருதுபவர்களால் அவரை நினைவுசெய்ய இயலாதிருக்கும். அவர்கள் அவரை நினைவு செய்திருந்தால், அவர்கள் நிச்சயமாக அவருக்கு எழுதுவதுடன் அவருக்குத் தங்கள் செய்திகளையும் கொடுப்பார்கள். ஒரு குழந்தை பாபாவிற்கு எழுதாமலும், அவருக்குச் செய்திகளைக் கொடுக்காதபோதும், அந்தக் குழந்தை உணர்வற்றவர் ஆகிவிட்டாரா என்று தந்தை அதிசயிக்கின்றார்.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, ஒரு புதிய நபர் வரும்பொழுது, அனைத்திற்கும் முதலில், அவருக்கு எல்லைக்குட்பட்ட தந்தை, எல்லையற்ற தந்தை ஆகிய இரு தந்தையர்களினதும் அறிமுகத்தைக் கொடுங்கள். எல்லையற்ற தந்தை என்றால், எல்லையற்ற ஆத்மாக்களின் தந்தை என்று அர்த்தமாகும். ஒவ்வொரு மனித ஆத்மாவிற்;கும் வெவ்வேறான, எல்லைக்குட்பட்ட தந்தை உள்ளார். இந்த ஞானத்தை அனைவரும் ஒரேயளவிற்குக் கிரகிப்பதில்லை. சிலர் அதன் ஒரு வீதம் மாத்திரம் கிரகிக்கின்றார்கள், ஆனால் ஏனையோர் அதன் 95வீதத்தைக் கிரகிக்கின்றார்கள்;; அது புரிந்துகொள்வதற்கான விடயமாகும். சூரிய, சந்திர வம்சங்களும் இருக்கின்றன. அங்கு அரசரும், அரசியும், பிரஜைகளும் இருப்பார்கள். அனைத்து விதமான மக்களும் பிர ஜைகளாக இருப்பார்கள். பிரஜைகள் என்றால் பிரஜைகள்! இது நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் புத்திக்கேற்ப கற்கின்ற ஒரு கல்வி என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஒவ்வொருவரும் நடிப்பதற்காக, உங்கள் சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எந்தளவிற்கு இந்த ஞானத்தை முன்னைய கல்பத்தில் கிரகித்தீர்களோ, அந்தளவிற்கே இப்பொழுதும் அதைக் கிரகிப்பீர்கள். ஒருவர் என்ன கற்றாலும் அது மறைந்திருக்க முடியாது. நீங்கள் எந்தளவிற்குக் கற்கின்றீர்களோ அதற்கேற்பவே, நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் பின்னர் ஒரு பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஒரு பரீட்சையை எடுக்காமல், உங்களைத் தரமுயர்த்த முடியாது. இறுதியில், நீங்கள் அனைத்தையும் அறிந்துகொள்வீர்கள், ஆனால் இப்பொழுதும் நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறத் தகுதியானவர் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் அனைவரும் உங்கள் கரங்களை மனக்கவலையுடன் உயர்த்தினாலும், எவ்வாறு நீங்கள் அவ்வாறு ஆகுவது சாத்தியமாகும் என நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள முடியும்! எவ்வாறாயினும், உங்களிற் சிலர் உங்கள் கரங்களை உயர்த்துகிறீர்கள். இது அறியாமை என்று அழைக்கப்படுகிறது. லௌகீக மாணவர்களுக்கு உங்களுக்கு உள்ளதை விட அதிக விவேகம் உள்ளது என்பதைத் தந்தை மிக விரைவிலேயே புரிந்துகொள்கிறார். தாங்கள் எப்பொழுது சித்தியடையமாட்டார்கள் என்பதையும், எப்பொழுது ஒரு புலமைப்பரிசிலைப் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்பதையும், அவர்கள் அறிவார்கள். தங்களுக்கு ஆசிரியர் கற்பிக்கின்ற பாடத்தில் தாங்கள் எத்தனை புள்ளிகளைப் பெறுவார்கள் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். தாங்கள் திறமைச்சித்தி அடைவார்கள் என்று அவர்கள் கூற மாட்டார்கள். இங்கு, குழந்தைகளாகிய உங்களிற் சிலருக்கு இந்தளவு விவேகமேனும் இருப்பதில்லை. உங்களுக்கு அதிகளவு சரீர உணர்வே உள்ளது. நீங்கள் அவர்களைப் (தேவர்கள்) போன்று ஆகுவதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். ஆகவே, உங்கள் நடத்தையும் அவர்களுடையதைப் போன்றே இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: விநாச வேளையில் தந்தை மீது தங்கள் புத்தியில் அன்பைக் கொண்டிராதவர்கள் உள்ளார்கள், ஏனெனில் அவர்கள் தந்தையிடம் மிகச்சரியான அன்பைக் கொண்டிருப்பதில்லை. விநாசவேளையில் ஓர் அன்பற்ற புத்தியைக் கொண்டிருத்தல் என்பதன்; மிகச்சரியான அர்த்தத்தைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய உங்களுக்கும் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாதிருப்பின், ஏனையோர் எதைப் புரிந்துகொள்வார்கள்? தந்தையை நினைவுசெய்வது என்பது ஒரு மறைமுகமான விடயம், ஆனால் நீங்கள் எந்தளவிற்குக் கற்கிறீர்கள் என்பது மறைமுகமான விடயமல்ல. நீங்கள் அனைவரும் கற்பதில் வரிசைக்கிரமமானவர்களே. நீங்கள் அனைவரும் ஒரேயளவிற்குக் கற்பதில்லை. உங்களிற் சிலர் இன்னமும் சிறு குழந்தைகளாகவே உள்ளார்கள் என்பதை பாபா புரிந்துகொள்கிறார். சிலசமயங்களில், அத்தகையதோர் எல்லையற்ற தந்தையை நீங்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு நினைவுசெய்வதும் இல்லை. நீங்கள் எந்தளவிற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் என்ன சேவையைச் செய்கிறீர்கள் என்பதையிட்டு தந்தைக்கு ஒரு கடிதமேனும் எழுதாதிருப்பின், நீங்கள் அவரை நினைவுசெய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை எவ்வாறு பாபாவினால் அறிய முடியும்? குழந்தைகளாகிய உங்கள் மீது தந்தை அதிகளவு அக்கறை கொண்டுள்ளார்! அவர் அதிசயிக்கின்றார்: அந்தக் குழந்தை உணர்வற்றவர் ஆகிவிட்டாரா? அந்தக் குழந்தை மரணித்து விட்டாரா? சிலர் பாபாவுக்கு அற்புதமான சேவைச் செய்திகளை எழுதுகிறார்கள், அந்த வேளையில், இன்னமும் அந்தக் குழந்தைகள் உயிரோடிருப்பதைத் தந்தை புரிந்துகொள்கிறார். சேவை செய்யும்; குழந்தைகள் ஒருபொழுதும் மறைந்திருக்க முடியாது. தந்தை குழந்தைகளாகிய உங்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும் வெற்றி கொள்கின்றார். நீங்கள் ஒவ்வொருவரும் எதைப் போன்றுள்ளீர்கள் என்பதைத் தந்தை அறிவார். சரீர உணர்வு எனும் நோய் மிகக் கொடியதாகும். சிலர் ஞானத்தில் பிழையான போதையைக் கொண்டுள்ளார்கள் என்பதை பாபா முரளியில் விளங்கப்படுத்துகின்றார்; அவர்களுக்கு அகங்காரம் உள்ளது. அத்தகைய குழந்தைகள் பாபாவை நினைவுசெய்வதுமில்லை, அவருக்கு ஒரு கடிதத்தையேனும் எழுதுவதுமில்லை. பின்னர் எவ்வாறு தந்தையால் உங்களை நினைவுசெய்ய முடியும்? நினைவே நினைவைக் கவர்கின்றது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை மிகச்சரியாக அறிந்துகொண்டு, அவரை நினைவுசெய்கிறீர்கள். உங்கள் இதயபூர்வமாக நீங்கள் அவருடைய புகழைப் பாடுகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களிற் சிலர் தந்தையைச் சாதாரணமாகக் கருதுவதால், அவரை நினைவுசெய்வதில்லை. பெரும் பகட்டு போன்ற எதையும் பாபா காட்டுவதில்லை கடவுள் பேசுகிறார்: நீங்கள் உலக ஆட்சி அரசுரிமையை அடைவதற்காக, நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். முழு உலகின் மீதும் அரசுரிமையைக் கோருவதற்காக, நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டதாகப் புலப்படவில்லை. இந்தப் போதையை நீங்கள் கொண்டிருந்தால் உங்கள் எல்லையற்ற சந்தோஷத்தின் அளவு எப்பொழுதும் உயர்ந்தே இருக்கும். “நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன்” என்னும் வார்த்தைகளை ஸ்ரீ கிருஷ்ணர் பேசினார் என்று கீதையைக் கற்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஓர் இராச்சியத்தை அடைவதற்கான சந்தோஷத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அவர்கள் கீதையைக் கற்று முடிந்ததும்;, தங்கள் தொழிலிற்குச் செல்கிறார்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. இது அவர்களின் புத்தியில் பிரவேசிப்பதில்லை. ஆகவே, அனைத்திற்கும் முதலில், வருபவர்களுக்கு நீங்கள் இரு தந்தையர்களின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: பாரதம் முன்னர் சுவர்க்கமாக இருந்தது, ஆனால் இப்பொழுது அது நரகமாக உள்ளது. இப்பொழுது இது கலியுகம். இது சுவர்க்கம் என்று அழைக்கப்படமாட்டாது! ஒரேநேரத்தில் சத்தியயுகம், கலியுகம் இரண்டிலும் இருப்பதற்கு நீங்கள் கோர முடியாது. ஒருவர் துன்பத்தை அனுபவம் செய்யும்பொழுது, நரகத்தில் இருப்பதாக அவர் கூறுவார், ஒருவர் சந்தோஷத்தை அனுபவம் செய்யும்பொழுது, அவர் சுவர்க்கத்தில் இருப்பதாகக் கூறுவார். இதைக் கூறுகின்ற பலர் உள்ளார்கள். அதிக துன்பத்தை அனுபவம்செய்து கொண்டிருப்பவர்கள் நரகத்தில் உள்ளார்கள், ஆனால் நாங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்;கின்றோம். சிலர் மாளிகைகள், மோட்டார்கள் போன்றவற்றைக் கொண்டிருப்பதால், தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாகவும் அது சத்தியயுகமாக இருந்தாலென்ன அல்லது கலியுகமாக இருந்தாலென்ன, அனைத்தும் தங்;களுக்கு ஒன்றுதான் எனவும் அவர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே, அனைத்திற்கும் முதலில், நீங்கள் இரு தந்தையர்கள் பற்றிய விடயம் அவர்களின் புத்தியில் இருக்குமாறு செய்ய வேண்டும். தந்தையே தனது சொந்த அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? உங்கள் லௌகீகத் தந்தையை நீங்கள் சர்வவியாபி என்று அழைப்பீர்களா? ஓர் ஆத்மாவின் ரூபமும் பரமாத்மாவின் ரூபமும் ஒரேமாதிரியானவை என்பதை நீங்கள் அவர்களுக்குக் காண்பிக்கின்ற படங்களில் அவர்களால்; காண முடியும்;; அதில் எவ்வித வேறுபாடும் இல்லை.. ஓர் ஆத்மா பரமாத்மாவைப் பார்க்கிலும் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்க மாட்டார். ஒவ்வொருவரும் ஓர் ஆத்மர் அவரும் (பரமாத்மா) ஓர் ஆத்மாவே. அவர் சதா பரந்தாமத்தில் வசிப்பதால், அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். ஏனைய ஆத்மாக்களைப் போன்று, நான் இவ்வுலகிற்கு வருவதில்லை. இறுதியில் நான் வந்து இந்தச் சரீரத்தில் பிரவேசிக்கிறேன். இவ்விடயங்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவாக இருந்தாலும், வெளியே வசிப்பவர்;களால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. தந்தையின் பெயருக்குப் பதிலாக, அவர்கள் வைகுந்தத்தில் வசிப்பவராகிய, கிருஷ்ணரின் பெயரை இட்டுவிட்டார்கள்என்பதே ஒரேயொரு வித்தியாசம் ஆகும். சுவர்க்கமாகிய, வைகுந்தத்தில் இருந்து எவ்வாறு கிருஷ்ணர் நரகத்தினுள் வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? “உங்கள் சரீர உறவினர்கள் உட்பட உங்கள் சரீரத்தையும் மறந்து என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்”, போன்றவற்றை எவ்வாறு கிருஷ்ணரால் கூற முடியும்? ஒரு சரீரதாரியின் நினைவைக் கொண்டிருப்பதால், எவ்வாறு உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும்? கிருஷ்ணர் ஒரு சிறு குழந்தை! நான் ஒரு சாதாரண மனிதரின் பழைய சரீரத்தில் பிரவேசிக்கும் பொழுது, அவருக்கும் எனக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்! அதிக வேறுபாடுள்ளது! இந்த ஒரு தவறினால், ஒவ்வொரு மனிதரும் தூய்மையற்றும், மிகவும் ஏழ்மையாகவும் ஆகியுள்ளார்கள்! நானும் சர்வவியாபி அல்ல, கிருஷ்ணரும் சர்வவியாபி அல்ல, ஆனால் ஒவ்வொரு சரீரத்திலும் ஆத்மாவே சர்வவியாபியாக உள்ளார். நான் எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தையேனும் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவருக்கெனச் சொந்தமாகச் சரீரம் உள்ளது. ஒவ்வொரு சரீரத்துக்கும் வேறுபட்ட பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு ஒரு சரீரமும் கிடையாது, எனக்கு ஒரு சரீரத்தின் பெயரும் கொடுக்கப்படவில்லை. நான் இப்பழைய சரீரத்தைப் பெற்று, அவருடைய பெயரை பிரம்மா என்று மாற்றுகிறேன். பிரம்மா என்பது என்னுடைய பெயர் அல்ல. நான் அநாதியான சிவன் ஆவேன். நானே அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவர்;. அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவர்கள் என்று ஆத்மாக்கள் அழைக்கப்படுவதில்லை. பரமாத்மா எப்பொழுதாவது சீரழிந்தவர் ஆகுகிறாரா? ஆத்மாக்கள் மாத்திரமே சீரழிந்தவர்கள் ஆகுகிறார்கள், ஆத்மாக்கள் மாத்திரமே தந்தையிடமிருந்து ஜீவன்முக்தியைப் பெறுகிறார்கள். நீங்கள் ஞானக்கடலைக் கடைந்து இவ்விடயங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டும். இல்லாவிடின், உங்களால் எவ்வாறு அவற்றை ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியும்? எவ்வாறாயினும், மாயை மிகவும் சக்திவாய்ந்தவள், குழந்தைகளாகிய உங்கள் புத்தியை அவள் முன்னேற அனுமதிப்பதில்லை. நாள் முழுவதும் அரட்டை அடிப்பதிலேயே உங்களிற் சிலர் நேரத்தை வீணாக்குகிறீர்கள். தந்தையிடமிருந்து உங்களை வெளியே இழுப்பதற்கு, மாயை உங்கள் மீது பெரும் விசையுடன் முயற்சிக்கிறாள். சில குழந்தைகள் விலகிச் சென்றுவிடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் தந்தையை நினைவுசெய்யாததால், அவர்கள் ஸ்திதி ஆட்ட அசைக்க முடியாததாக ஆகுவதும் இல்லை. தந்தை உங்களை மீண்டும் மீண்டும் எழச் செய்கிறார், அப்பொழுது மாயை உங்களைத் தொடர்ந்தும் வீழ்த்துகிறாள். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்றுமே தோற்கடிக்கப்படக் கூடாது. இந்தப் பந்தயம் ஒவ்வொரு கல்பத்திலும் நடைபெறுகிறது; அது ஒன்றும் புதியதல்ல. இறுதியில் நீங்கள் நிச்சயமாக, மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள். இராவண இராச்சியம் முடிவடைய வேண்டும், பின்னர் நாங்கள் புதிய உலகை ஆட்சிசெய்வோம். ஒவ்வொரு கல்பத்திலும் நாங்களே மாயையை வென்றவர்கள் ஆகியுள்ளோம். எண்ணற்ற தடவைகள் நாங்கள் புதிய உலகை ஆட்சிசெய்துள்ளோம். தந்தை கூறுகிறார்: உங்கள் புத்தியைச் சதா மும்முரமாக வைத்திருங்கள், நீங்கள் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பீர்கள். இதுவே சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவராக இருத்தல் எனக் கூறப்படுகிறது. இதில் வன்முறைக்கான கேள்விக்கே இடமில்லை. பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என அழைக்கப்பட முடியும். தேவர்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என்று அழைக்கப்பட முடியாது. தூய்மையற்ற உலகின் சம்பிரதாயங்களுக்கும், தேவர்களின் சம்பிரதாயங்களுக்கும் இடையில் மாபெரும் வேறுபாடுள்ளது. மரணபூமியில் வசிப்பவர்களே தூய்மையாக்குபவராகிய தந்தையைக் கூவியழைக்கிறார்கள்: வந்து, தூய்மையற்றவர்களாகிய எங்களைத் தூய்மையாக்குங்கள்! எங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்! இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர், சத்தியயுகம் என்று அழைக்கப்பட்ட, தூய, புதிய உலகம் இருந்தது என்பது உங்கள் புத்தியில் உள்ளது. திரேதா யுகம், புதிய உலகம் என்று அழைக்கப்பட மாட்டாது. அது முதற்தரமானது எனவும் மற்றையது இரண்டாம் தரமானது எனவும் பாபா விளங்கப்படுத்தியுள்ளார் உங்களிடம் வந்து செவிமடுக்கின்றவர்கள் வியப்படையும் அளவிற்கு. நீங்;கள் ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் நன்றாகக் கிரகிக்க வேண்டும். பலர் வியப்படைந்துள்ளார்கள். ஆனால் தாங்;கள் நிச்சயமாகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் கேள்வியுற்றதால், அவர்களுக்கு முயற்சி செய்வதற்குரிய நேரம் இருப்பதில்லை. காம விகாரமே மனிதர்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குகிறது. அதை வெற்றி கொள்வதால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், அவர்களுக்கு விகாரம் ஒரு பொக்கிஷம் போன்றுள்ளது, இதனாலேயே அவர்கள் இதைப் பற்றிப் பேசுவதுமில்லை. நீங்கள் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். உங்கள் மனம் சரீரத்தில் இல்லாத போதே, அது எண்ணங்களிலிருந்து விடுபட்டிருக்க முடியும். இன்றேல், உங்கள் மனம் என்றுமே எண்ணங்களிலிருந்து விடுபட்டவராக முடியாது. செயல்களைப் புரிவதற்காக நீங்கள் ஒரு சரீரத்தைப் பெறுகிறீர்கள். ஆகவே, எவ்வாறு உங்களால் கர்மாதீத ஸ்திதியில் நிலைத்திருக்க முடியும்? கர்மாதீத ஸ்திதி, ஒரு சடலத்தின் ஸ்திதி என்று கூறப்படுகிறது. ஓர் உயிர்வாழும் சடலமாக இருப்பதெனில், சரீரத்திலிருந்து விடுபட்டிருப்பவர் ஆகுவது என்று அர்த்தமாகும். உங்களுடைய சரீரத்திலிருந்து விடுபட்டிருப்பவர் ஆகுவதற்கான கல்வியைத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய சரீரங்களிலிருந்து வேறுபட்டவர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பரந்தாமத்தில் வசிப்பவர்கள்;. ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரங்களில் பிரவேசிக்கும்பொழுது, மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள். செயல்களைப் புரிவதற்காக, நீங்கள் ஒரு சரீரத்தைப் பெறுகிறீர்கள். தொடர்ந்தும் செயல்களைப் புரிவதற்காக, நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னுமொன்றைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்கள் சரீரத்தில் இல்லாதபோதே, அவர்களால் அமைதியை அனுபவம் செய்ய முடியும். அசரீரி உலகில் செயல்கள் செய்யப்படுவது இல்லை, சூட்சும வதனத்தில் செயல்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கு மாத்திரமே உலகச்சக்கரம் சுழல்கிறது. ஞானம் என்றால், தந்தையையும் உலகச் சக்கரத்தையும் அறிவது என்று அர்த்தமாகும். வெள்ளை நிற ஆடையுடன் அல்லது அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆடையுடன் சூட்சும வதனத்தில் எவரும் இருப்பதுமில்லை, அங்கு பாம்பு போன்றவற்றை அணிந்துள்ள சங்கரரும் இருப்பதில்லை. தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு பிரம்மாவினதும் விஷ்ணுவினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். பிரம்மா இங்கே இருக்கிறார், விஷ்ணுவின் இரட்டை வடிவமும் இங்கேயே உள்ளது. அது நீங்கள் தெய்வீகக் காட்சி மூலம் மாத்திரமே காணக்கூடிய, காட்சிகளைக் கொடுப்பதற்கான நாடகப் பாகத்துக்குரியதாகும். அந்தக் குற்றக் கண்களின் மூலம் நீங்கள் தூய்மையான எதையும் காண முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் சதா பாதுகாப்பாக இருப்பதற்கு, உங்கள் புத்தியை ஞானக்கடலைக் கடைவதில் மும்முரமாக வைத்திருங்கள். சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள். அரட்டை அடிப்பதில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

2. உங்கள் சரீரத்திலிருந்து எpடுபட்டிருப்பவர் ஆகுவதற்கு தந்தை உங்களக்குக் கற்பிக்கின்ற கல்வியைக் கற்றிடுங்கள். மாயையின் விசையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு, உங்கள் ஸ்திதியை ஆட்ட அசைக்க முடியாததாக ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் மனதில் சந்தோஷமான பாடல்களைப் பாடுவதன் மூலம் சதா ஊக்கம் உற்சாகத்தைக் கொண்டிருக்கும் அநாதியான சந்தோஷ பாக்கியத்தைக் கொண்டிருப்பீர்களாக.

பாக்கியசாலிக் குழந்தைகளாகிய நீங்கள் அநாதியான வழிமுறைகளைப் பயன்படுத்தி அழிவற்ற வெற்றியைக் கோருகிறீர்கள். உங்கள் மனம் சதா “ஆகா! ஆகா பாபா! ஆகா பாக்கியம், ஆகா இனிமையான குடும்பம், ஆகா சங்கமயுகத்தின் அதிமேன்மையான அழகான நேரம்! ஒவ்வொரு செயலும் ஆகா, ஆகா அற்புதம். இதனாலேயே நீங்கள் அநாதியான சந்தோஷ பாக்கியத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனதில் ஒருபோதும் ஏன் அல்லது நான் இருக்கக் கூடாது. ஏன் என்பதற்குப் பதிலாக நீங்கள் ஆகா! ஆகா! எனக் கூறுகிறீர்கள். நான் என்பதற்குப் பதிலாக நீங்கள் பாபா,பாபா எனக்கூறுகிறீர்கள்.

சுலோகம்:
உங்கள் எண்ணங்கள் மீது உங்கள் அழிவற்ற அரசாங்க முத்திரையை இடுங்கள். அப்பொழுது அவை திடமாக நிலைத்திருக்கும்.