18.11.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் நேரத்தை இந்த எல்லைக்குட்பட்ட உலகின் பயனற்ற விடயங்களில் வீணாக்காதீர்கள். உங்கள் புத்தியில் இராஜரீகமான எண்ணங்கள் எப்போதும் இருக்கட்டும்.

கேள்வி:
எக்குழந்தைகளால் தந்தை கொடுக்கின்ற ஒவ்வொரு வழிகாட்டலையும் நடைமுறையில் இட முடியும்?

பதில்:
அகநோக்குடையவர்களாலும், எவ்விதமான வெளிப்பகட்டும் இல்லாமல் ஆன்மீக போதையில் உள்ளவர்களாலுமே பாபாவின் ஒவ்வொரு வழிகாட்டலையும் நடைமுறையில் இட முடியும். குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த ஒரு போலியான பெருமையும் இருக்கக்கூடாது. உங்களுக்குள் முழுமையான சுத்தம் பேணப்பட வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் நல்லவர்களாகவும், ஒரேயொரு தந்தையின் மீது உண்மையான அன்பு கொண்டவராகவும் இருக்க வேண்டும். உவர்நீரைப் போன்ற சம்ஸ்காரங்கள் ஒருபொழுதும் இல்லாதிருக்கட்டும். அப்பொழுதே உங்களால் தந்தையின் ஒவ்வொரு வழிகாட்டலையும் நடைமுறையில் இட முடியும்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதுடன், நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் தேவதைகளின் உலகையும் (பரிஸ்தான்) ஸ்தாபிக்கின்றீர்கள் என்ற போதையுடையவர்களாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு அதிகளவு சந்தோஷமும் உற்சாகமும் இருக்க வேண்டும். பயனற்ற விடயங்கள் மற்றும் குப்பைகள் அனைத்தும் இப்பொழுது அகற்றப்பட வேண்டும். எல்லையற்ற தந்தையைக் காண்பதில் நீங்கள் அதிகளவு உற்சாகத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவிற்கு அதிகமாக நினைவு யாத்திரையில் இருக்கிறீர்களோ, அவ்வளவிற்கு அதிகமாக முன்னேற்றமும் இருக்கும். குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் ஆன்மீகப் பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் எனத் தந்தை கூறுகின்றார். உங்களுடையது ‘உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்’ ஆகும். எனவே இந்தப் பல்கலைக்கழகம் எங்குள்ளது? உங்களுக்கென விசேடமாக ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஓர் இராஜரீக விடுதியும் இருக்க வேண்டும். உங்களுடைய எண்ணங்கள் இராஜரீகமானதாக இருக்க வேண்டும். உங்களை அதியுயர்ந்த பரீட்சைகள் அனைத்திலும் சித்தியெய்தச் செய்து, உலக அதிபதிகள் ஆக்குவதற்கு உங்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதைப் பற்றி தந்தை இரவுபகலாக சிந்திக்கின்றார். ஆதியில் ஆத்மாக்களாகிய நீங்கள் முற்றிலும் தூய்மையாக இருந்தீர்கள். எனவே உங்கள் சரீரங்களும் முற்றிலும் தூய்மையாகவும் அழகாகவும் இருந்தன. உங்களிடம் மிகவும் மேன்மையான இராச்சியம் இருந்தது! இந்த எல்லைக்குட்பட்ட உலகின் பயனற்ற விடயங்களில் உங்கள் நேரம் அதிகளவு வீணாக்கப்படுகின்றது. மாணவர்களாகிய உங்களிடம் எந்த அழுக்கான எண்ணங்களும் இருக்கக்கூடாது. நீங்கள் பல நல்ல நிர்வாகக் குழுக்களை நியமிக்கின்றீர்கள் ஆனால் அங்கு யோக சக்தி இருப்பதில்லை. இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என நீங்கள் ஒருவருக்கொருவர் பொய்க் கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றீர்கள். மாயையும் கூறுகின்றாள்: நான் அவர்களை அவர்களின் மூக்கினாலும் காதினாலும், பிடிப்பேன். அவர்களுக்குத் தந்தையின் மீது அன்பில்லை. ‘மனிதன் ஒன்றை விரும்ப, வேறொன்று நடக்கின்றது’ என்ற கூற்று ஒன்று உள்ளது. எனவே மாயை உங்களை எதுவும் செய்ய அனுமதிப்பதில்லை. மாயை உங்களை அதிகளவு ஏமாற்றி விடுகின்றாள். அவள் உங்கள் செவிகளையும் அறுத்து விடுகின்றாள். குழந்தைகளாகிய உங்களைத் தந்தை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள், வேறொன்றைச் செய்யுங்கள் என அவர் உங்களுக்கு வழிகாட்டல்கள் கொடுக்கின்றார். இராஜரீகமான புத்திரிகளைச் சேவை செய்வதற்காக பாபா வெளியில் அனுப்புகின்றார். சில குழந்தைகள் பாபாவிடம் வினவுகிறார்கள்: பாபா நாங்கள் பயிற்சிக்காகச் செல்லலாமா? பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, முதலில் உங்கள் சொந்தப் பலவீனங்களை அகற்றுங்கள். உங்களை சோதித்துப் பாருங்கள்: என்னிடம் எத்தனை குறைபாடுகள் உள்ளன? பெரிய மகாராத்திகளைக் கூட மாயை உவர்நீர் ஆக்கி விடுகின்றாள். என்றுமே தந்தையை நினைவு செய்யாத, அத்தகைய உவர்ப்பான குழந்தைகளும் உள்ளனர். அவர்களுக்கு இன்னமும் ஞானத்தில் “அ, ஆ, இ” கூடத் தெரியாதுள்ளது. அவர்கள் அதிகளவு வெளிப்பகட்டைக் காட்டுகிறார்கள். இங்கு நீங்கள் மிகவும் அகநோக்குடையவர்களாக இருக்க வேண்டும். கல்வி அறிவற்றவர்களைப் போன்று குழந்தைகளாகிய உங்களில் சிலர் நடந்து கொள்கின்றீர்கள். சிறிதளவு பணம் இருந்து விட்டாலே மக்கள்; மிகவும் போதையுடையவர்களாக இருக்கின்றார்கள். தாங்கள் முற்றாகக் கடனாளிகளாக உள்ளோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாதிருக்கின்றார்கள். அவர்கள் இதனைப் புரிந்துகொள்ள மாயை அனுமதிப்பதில்லை. மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். பாபா அவர்களைச் சிறிதளவு புகழ்ந்து விட்டாலும் அதனையிட்டு அவர்கள் அதிகளவு சந்தோஷம் அடைகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நன்றாகக் கற்பதற்கு ஏற்றதொரு முதற்தரமான பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் என பாபா இரவு பகலாக சிந்திக்கின்றார். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவதால், உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் போதையுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக பாபா வெவ்வேறு வகையான மருந்துகளைக் கொடுக்கின்றார். கடனாளி ஒருவர் மதுபானம் அருந்தும் போது, தான் ஓர் அரசர் என்று எண்ணுகின்றான். ஆனால் மதுபானத்தின் தாக்கம் குறைவடையும் போது, தனது முன்னைய நிலையை அவன் அடைகிறான். எவ்வாறாயினும், இங்கு நீங்கள் ஆன்மீகப் போதையில் இருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தையே உங்களின் ஆசிரியராகி உங்களுக்குக் கற்பித்து, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். உங்களில் சிலர் சிலநேரங்களில் போலியான பெருமையைக் கொண்டிருக்கின்றீர்கள். மாயை இருக்கின்றாள், அல்லவா! நீங்கள் அத்தகைய கற்பனைக் கதைகளைக் கூறுகின்றீர்கள். கேட்கவும் வேண்டாம்! அத்தகைய குழந்தைகளால் இங்கு தொடர்ந்து இருக்க முடியாது என்பதைத் தந்தை புரிந்து கொள்கின்றார். உங்களுக்குள் நீங்கள் முற்றாகச் சுத்தத்தைப் பேண வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் நல்லவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் காதல் திருமணம் செய்துள்ளீர்கள். காதல் திருமணத்தில் அதிகளவு அன்புள்ளது. அந்த ஒருவரே கணவருக்கெல்லாம் கணவர் ஆவார். எனவே, ஒருவர் மாத்திரமல்ல, உங்களிற் பலரும் காதல் திருமணம் செய்துள்ளீர்கள். நீங்கள் அனைவருமே சிவபாபாவுடன் உங்களுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்தில் இருக்கப் போகின்றீர்கள். இது மிகவும் சந்தோஷத்திற்குரிய விடயமாகும். பாபா உங்களை எவ்வளவு அலங்காரிக்கின்றார் என்பதைப் பற்றி நீங்கள் உள்ளார்த்தமாக சிந்திக்க வேண்டும். சிவபாபா இவர் (பிரம்மாவின்) மூலமாக உங்களை அலங்கரிக்கின்றார். தந்தையை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் சதோபிரதான் ஆகுகின்றீர்கள் என்பதை உங்கள் புத்தி அறிந்துள்ளது. எவருக்குமே இந்த ஞானத்தைப் பற்றித் தெரியாது. இதனையிட்டுப் பெரும் போதை இருக்க வேண்டும். தற்பொழுது, இருக்க வேண்டிய அளவு போதை இல்லாது உள்ளது. ‘அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய வேண்டுமாயின், கோப, கோபிகைககளைக் கேளுங்கள்’ என்று கூறப்படுகின்றது. ஆத்மாக்களாகிய உங்களில் சிலர் மிகவும் அழுக்காக இருக்கின்றீர்கள்! நீங்கள் குப்பை மேட்டில் இருப்பதைப் போன்றுள்ளது. தந்தை வந்து உங்களை மாற்றுகின்றார். அவர் உங்களைப் புதுப்பிக்கின்றார். மக்கள் தமது சுரப்பிகளை மாற்றும் போது, அவர்கள் அதனையிட்டு அதிகளவு சந்தோஷப்படுவதுண்டு. நீங்கள் இப்பொழுது தந்தையை அறிந்துள்ளீர்கள், அது உங்கள் படகு கரையேறி விட்டதைப் போன்றதாகும். இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தைக்குரியவர் ஆகிவிட்டதால், உங்களை நீங்கள் மிக விரைவில் சீர்திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் மிகவும் சந்தோஷமடைவதுடன், இரவுபகலாக இதனையிட்டு அக்கறைப்படவும் வேண்டும். உங்கள் தளபதியாக நீங்கள் யாரை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்று பாருங்கள்! இரவும் பகலும் நீங்கள் இந்த எண்ணங்களுடன் மும்முரமாக இருக்க வேண்டும். பாபாவை மிகவும் தெளிவாக இனங்கண்டு புரிந்து கொண்டிருப்பவர்கள் பறக்க ஆரம்பிப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள், ஆனால் ஏனைய அனைவரும் அழுக்கின் மீதே உள்ளனர். அவர்கள் குப்பைமேட்டிற்கு அருகே குடிசையில் வாழ்வதைப் போன்றே உள்ளனர். அவ்வாறான பல சிறு குடிசைகள் உள்ளன. இது ஒரு எல்லையற்ற விடயமாகும். அதிலிருந்து உங்களை அகற்றிக் கொள்வதற்கு சிவபாபா மிகவும் இலகுவான வழியொன்றைக் காட்டுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இந்த நேரத்தில், ஆத்மாக்களாகிய நீங்களும் உங்கள் சரீரங்களுமாகிய இரண்டுமே தூய்மையற்றுள்ளன. நீங்கள் இப்பொழுது அவ் உலகில் இருந்து விலகி வந்துள்ளீர்கள். அந்த உலகில் இருந்து விலகி வந்தவர்கள் இப்பொழுது ஞானோதயம் பெற்றுள்ளார்கள். நீங்கள் தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். எனவே, இன்னும் என்ன வேண்டும்! உங்களுக்கு இந்தப் போதை இருக்கும் போது மாத்திரமே, நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துவீர்கள். தந்தை வந்துவிட்டார். அவர் ஆத்மாக்களாகிய எங்களைத் தூய்மையாக்குகின்றார். ஓ! ஆத்மா தூய்மையாகும் போது, அவர் முதற்தரமான சரீரத்தைப் பெறுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது எங்கு அமர்ந்திருக்கின்றீர்கள் என்று பாருங்கள். நீங்கள் உங்கள் சரீரங்கள் என்ற குடிசைகளில் அமர்ந்திருக்கின்றீர்கள். இந்த உலகம் தமோபிரதானாக (முற்றிலும் தூய்மையற்றது) உள்ளது. நீங்கள் குப்பைமேட்டிற்கு அருகில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் என்று பாருங்கள்! தந்தை உங்களை சாக்கடையில் (தேங்கி நிற்கும் அசுத்தமான நீர்) இருந்து அகற்றி உள்ளார். எனவே இனிமேல் ஆத்மாக்களாகிய நீங்கள் சுத்தமாகி விடுவீர்கள். அதன்பின்னர் நீங்கள் வாழ்வதற்கு முதற்தரமான மாளிகைகள் கட்டப்படும். தந்தை ஆத்மாக்களாகிய உங்களை அதிகளவு அலங்கரித்து, உங்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இத்தகைய எண்ணங்களை உங்களுக்குள் கொண்டிருக்க வேண்டும். தந்தை உங்களை அதிகளவு போதையுடையவர்கள் ஆக்குகின்றார். முன்னொரு காலத்தில் நீங்கள் மிகவும் மேன்மையானவராக இருந்தீர்கள். பின்னர் இன்றுவரை, நீங்கள் படிப்படியாக அடித்தளம் வரை விழ ஆரம்பித்தீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சிவாலயத்தில் இருக்கும் போது மிகவும் தூய்மையாக இருந்தீர்கள். ஆகையால், நீங்கள் இப்பொழுது ஒன்றாக இணைந்து, சிவாலயத்திற்கு திரும்பிச் செல்வதற்கு விரைந்து முயற்சி செய்ய வேண்டும். அதனைச் செய்வதற்கு குழந்தைகளாகிய உங்களுக்குப் போதியளவு மூளை இல்லாதுள்ளதையிட்டு பாபா மிகவும் வியப்படைகின்றார். எங்கிருந்து பாபா உங்களை அகற்றியுள்ளார்? தந்தையே இந்த பாண்டவ அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளார். ஒரு காலத்தில் சுவர்க்கமாக இருந்த பாரதம் இப்பொழுது நரகம் ஆகியுள்ளது. இவை அனைத்தும் ஆத்மாக்களையே குறிக்கின்றன. பாபாவிற்கு ஆத்மாக்களின் மீது அதிகளவு கருணை உள்ளது. இப்பொழுது நீங்கள் வாழுகின்ற உலகம் முற்றிலும் தமோபிரதானாக உள்ளது. இதனாலேயே நீங்கள் தந்தையை நினைவுசெய்து ‘பாபா வந்து எங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்!’ என்று கூறுகின்றீர்கள். இங்கு அமர்ந்திருக்கும் போதும், இவ்வாறான எண்ணங்களே உங்களுக்கு இருக்க வேண்டும். ஆகையினாலேயே பாபா கூறுகின்றார்: குழந்தைகளாகிய உங்களுக்காக முதற்தரமான பல்கலைக்கழகம் கட்டப்பட வேண்டும். அது ஒவ்வொரு கல்பத்திலும் கட்டப்படுகின்றது. உங்கள் எண்ணங்கள் மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும். தற்பொழுது, உங்களிடம் அந்தளவிற்குப் போதை இல்லை. உங்களுக்கு அந்தளவிற்குப் போதை இருக்குமாயின், நீங்கள் அதிகளவு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு ‘பல்கலைக்கழகம்’ என்பதன் அர்த்தம் தெரியாது. அந்த இராஜரீகமான போதையை நீங்கள் பேணுவதில்லை. மாயை உங்களை அடக்குகின்றாள். பாபா விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, உங்களுக்கு எவ்விதமான பிழையான போதையும் இருக்கக்கூடாது. நீங்கள் எவ்வளவு தகைமை பெற்றிருக்கின்றீர்கள் என்பதையும், நீங்கள் எவ்வளவு கற்கின்றீர்கள் என்பதையும், எவ்வளவு உதவி செய்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் வெறுமனே கட்டுக் கதைகளைக் கூறக்கூடாது: நீங்கள் கூறுவதை பயிற்சியிலிட வேண்டும். நீங்கள் வெறுமனே கட்டுக்கதைகளைக் கூறக்கூடாது. இன்று நீங்கள் இதைச் செய்யப் போகின்றேன் என்று கூறுகின்றீர்கள். நாளையே மரணம் ஏற்பட்டால் உங்களுக்கான அனைத்தும் முடிவடைந்து விடும். இவ்வாறாக நீங்கள் சுவர்க்கத்தில் கூற மாட்டீர்கள். சுவர்க்கத்தில் அகால மரணம் ஏற்படுவதில்லை. அங்கு மரணம் வர முடியாது. அது சந்தோஷ உலகமாகும். சந்தோஷ உலகிற்குள் பிரவேசிக்கும் உரிமை மரணத்திற்கு இல்லை. ‘இராவண இராச்சியம்” ‘இராம இராச்சியம்’ என்பவற்றின் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் யுத்தம் இப்பொழுது இராவணனுடன் ஆகும். சரீர உணர்வு அதிகளவு அற்புதங்களை நிகழ்த்துகின்றது; அது உங்களை முற்றிலும் தூய்மையற்றவர்கள் ஆக்குகின்றது. ஆத்ம உணர்விற்கு வருவதால் ஆத்மாக்களாகிய நீங்கள் சுத்தமானவர்கள் ஆகுகின்றீர்கள். அங்கே எத்தகைய மாளிகைகள் உங்களுக்கு இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது வரிசைக்கிரமமாக முன்னேற்றம் அடைந்து, உங்களைத் தகுதியானவர் ஆக்குகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர் ஆகியதால், நீங்கள் தூய்மையற்ற சரீரத்தைப் பெற்றீர்கள். நான் இப்பொழுது உங்களைச் சுவர்க்க வாசியாக்கவே வந்துள்ளேன். நினைவு செய்வதுடன், உங்களுக்குத் தெய்வீகக் குணங்களும் இருக்க வேண்டும். அது உங்கள் மாமியாரின் வீட்டிற்குப் போவதைப் போன்றில்லை! உங்களை மனிதர்களில் இருந்து நாராயணன் ஆக்குவதற்காகவே பாபா வந்தள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்;கின்றீர்கள். எவ்வாறாயினும், மாயை உங்கள் மீது மறைமுகமாக போர் தொடுக்கின்றாள். உங்கள் யுத்தம் மறைமுகமானதாகும். ஆகையினால் நீங்கள் எவரும் அறியாத போராளிகள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். ‘எவரும் அறியாத போராளிகள்’ என்று வேறு எவரும் இல்லை. நீங்கள் போராளிகள் என்றே அழைக்கப்படுகின்றீர்கள். ஏனைய அனைவரது பெயர்களும் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றது. அவர்கள் ‘எவரும் அறியாத போராளிகளாகிய’ உங்களின் சின்னத்தை எடுத்துக் கொண்டுள்ளார்கள். உங்களை எவருமே அறியாதிருக்கின்ற அளவிற்கு நீங்கள் மிகவும் மறைமுகமாக இருக்கின்றீர்கள். மாயையைக் கட்டுப்படுத்துவதற்காக நீங்கள் முழு உலகையும் வெற்றி கொள்கின்றீர்கள். நீங்கள் அவரை நினைக்க முயற்சிக்கும் போது, மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். உங்கள் சொந்த இராச்சியத்தை நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் ஸ்தாபிக்கின்றீர்கள். நீங்களே தந்தையை மாத்திரம் நினைவு செய்கின்ற எவரும் அறியாத போராளிகள். இதற்கு உங்கள் கைகளையோ அல்லது கால்களையோ நீங்கள் அசைக்க வேண்டியது இல்லை. நினைவு செய்வதற்கு பாபா பல வழிகளை உங்களுக்குக் காட்டுகின்றார். நடந்து உலாவித் திரியும் போதெல்லாம், நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நீங்கள் இந்த ஞானத்தையும் கற்க வேண்டும். நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதையும், நீங்கள் இப்பொழுது என்னவாகி உள்ளீர்கள் என்பதையும் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், தந்தையை நினைவு செய்தால், அப்பொழுது உங்களுக்குள் இருக்கும் துரு அகற்றப்பட முடியும். அவர் உங்களுக்கு இதற்கான வழிமுறையை ஒவ்வொரு கல்பத்திலும் காட்டுகின்றார். உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, தந்தையை நினைவு செய்தால், நீங்கள் முற்றிலும் தூய்மையானவர் ஆகுவீர்கள். இதனைத் தவிர வேறு பந்தனம் உங்களுக்கு இல்லை. குளியலறைக்குச் சென்றாலும் கூட, உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, தந்தையை நினைவு செய்தால் உங்கள் ஆத்மாவின் அழுக்கு அகற்றப்படும். ஆத்மாவிற்கு நீங்கள் திலகம் இட வேண்டும் என்றில்லை. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் அடையாளங்கள் ஆகும். ஞான மார்க்கத்திற்கு அவை எதுவுமே தேவையில்லை. ஒரு சதச் செலவேனும் உங்களுக்கு இல்லை. வீட்டில் இருக்கும் போதும் தொடர்ந்தும் நினைவில் நிலைத்திருங்கள். அது மிகவும் இலகுவாகும்! பாபா எங்கள் தந்தையும், எங்கள் ஆசிரியரும், எங்கள் குருவும் ஆவார். முதலில் உங்கள் (லௌகீக) தந்தையினதும், பின்னர் உங்கள் ஆசிரியரதும், அதன் பின்னர் குருவின் நினைவும் இருக்க வேண்டும் என்ற பொது நியதி உள்ளது. நீங்கள் நிச்சயமாக உங்கள் ஆசிரியரை நினைவு செய்கின்றீர்கள், ஏனெனில், நீங்கள் கற்றலுக்கான ஆஸ்தியை அவரிடமிருந்தே பெறுகின்றீர்கள். அதன் பின்னர் ஓய்வுக்கான வயதை அடையும் போது, ஒரு குருவை ஏற்றுக் கொள்கின்றீர்கள். இந்தத் தந்தை உங்களுக்கு அனைத்தையும் ஒட்டுமொத்தமாகவே கொடுக்கின்றார். பாபா 21 பிறவிகளுக்கான இராச்சியத்தையும் ஒட்டுமொத்தமாகவே கொடுக்கின்றார். ஒரு பெண் திருமணம் செய்யும்போது, அவளுக்கு மறைமுகமாகச் சீதனம் கொடுக்கப்படுகின்றது. அதனையிட்டு அவர்கள் வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்வதில்லை. ‘மறைமுகமான தானமும்’ நினைவுகூரப்பட்டுள்ளது. சிவபாபாவும் மறைமுகமானவரே. இதில் ஆணவம் என்ற கேள்விக்கு இடமில்லை. சிலருக்கு அதிகளவு ஆணவம்; உள்ளதால், தாங்கள் கொடுப்பதை அனைவரும் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இங்கே அனைத்தும் மறைமுகமானதாகும். தந்தை முழு உலக இராச்சியத்தையும் உங்களுக்குச் சீதனமாக வழங்குகின்றார். நீங்கள் மிகவும் மறைமுகமாக அலங்கரிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் மிகப் பெரிய சீதனத்தைப் பெறுகின்றீர்கள். எவருமே அறியாத வகையிலேயே தந்தை அதனை உங்களுக்குக் கொடுக்கின்றார். இங்கே, நீங்கள் பிச்சைக்காரர்கள். ஆனால் உங்களது அடுத்த பிறவியில், உங்கள் வாயில் நீங்கள் தங்கக்கரண்டியை வைத்திருப்பீர்கள். நீங்கள் தங்க யுக உலகிற்குச் செல்கின்றீர்கள். அங்கே அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். செல்வந்தர்கள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனை போன்ற பெரிய வீடுகளை வைத்திருப்பார்கள். நிச்சயமாக வித்தியாசம் இருக்கும். மக்கள் இப்பொழுது வெளவாலைப் போன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். மாயை அவர்களைத் தலைகீழாகத் தொங்க வைக்கின்றாள். தந்தை இப்பொழுது வந்துள்ளார் என்பதால், உங்களுக்கு அதிகளவு உற்சாகம் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் இவை தந்தையின் வழிகாட்டல்களா அல்லது பிரம்மாவின் வழிகாட்டல்களா, தந்தையினதா அல்லது சகோதரரின் வழிகாட்டல்களா என்பதை மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். அவர்கள் இதையிட்டுக் குழப்பம் அடைகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: வழிகாட்டல்கள் நல்லவையா தீயவையா என எவ்வாறு எண்ணினாலும், நீங்கள் அவற்றைத் தந்தையின் வழிகாட்டல்கள் என்றே கருதி அவற்றைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் பாபா அத் தவறைத் திருத்தி விடுகின்றார், ஏனெனில் அவரிடம் அதற்கான சக்தி உள்ளது. இவர் எவ்வாறு அனைத்தையும் பின்பற்றுகின்றார் என்று பார்க்கின்றீர்கள். இவரின் நெற்றியில் அமர்ந்திருப்பவர் யார்? அவர் (சிவபாபா) இவருக்கு (பிரம்மாவின்) மிகவும் அருகிலேயே அமர்ந்திருக்கின்றார். குருமாரும் உங்களுக்குக் கற்பிக்கும் போது உங்களை தமது பக்கத்திலேயே அமர்த்துகின்றார்கள். இருப்பினும் இவரும் முயற்சி செய்ய வேண்டும். அவர் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உணவு தயாரிக்கும் போது, என்னை நினைவு செய்யுங்கள். சிவபாபாவின் நினைவுடன் தயாரித்த உணவை வேறு எவராலும் பெற்றுக் கொள்ள முடியாது. புகழுக்குரிய பிரம்மபோசனம் இந்நேரத்திற்கானதாகும். லௌகீகப் பிராமணர்கள் அவ் உணவின் புகழைப் பாடினாலும், அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. புகழை மாத்திரம் பாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. ஒருவர் வழிபாடு செய்பவர் ஆயின், அவர் சமயப்பற்றுள்ளவர் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். சத்தியயுகத்தில் சமயப்பற்றுள்ளவர் என்ற கேள்விக்கே இடமில்லை, ஏனெனில் அங்கே பக்தி இருப்பதில்லை. அங்குள்ள எவருக்கும் பக்தி என்றால் என்னவென்றே தெரியாது. மக்கள் ஞானத்தைப் பற்றியும், பக்தியைப் பற்றியும், ஆர்வமின்மை பற்றியும் பேசுகின்றார்கள். இவ் வார்த்தைகள் முதற்தரமானவை. ஞானம் பகலும், பக்தி இரவும் ஆகும். உங்களுக்கு இரவில் ஆர்வமின்மை ஏற்படும் போது, உங்களால் பகலிற்குச் செல்ல முடியும். இது மிகவும் தெளிவாகும்! இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருப்பதால், நீங்கள் இனிமேலும் தடுமாற வேண்டியதில்லை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்! நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். நான் உங்களது எல்லையற்ற தந்தையாவேன். உலகச் சக்கரத்தைப் பற்றிய ஞானத்தைக் கற்பது மிகவும் இலகுவாகும். விதையையும் விருட்சத்தையும் நினைவு செய்யுங்கள். இப்பொழுது இது கலியுகம் என்பதால், சத்தியயுகம் வரவுள்ளது. நீங்கள் சங்கமயுகத்தில் அழகிய மலர்கள் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதான் ஆகுவதால், நீங்கள் வாழ்வதற்கு சதோபிரதான் மாளிகைகளைப் பெற்றுக் கொள்வீர்கள். முழு உலகமும் புதியதாகுகின்றது. ஆகையால், குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் தேவதை உலகை (பரிஸ்தானை) நீங்கள் ஸ்தாபிக்கிர்ர்ர்கள் என்ற போதையை நீங்கள் எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். வீணான விடயங்கள் அனைத்தையும், குப்பைகளையும் அகற்றி விட்டு, பெரும் உற்சாகம் உடையவர்களாக இருங்கள்.

2. இராஜரீகமான எண்ணங்களைக் கொண்டிருங்கள். மிகவும் நல்ல, இராஜரீகமான பல்கலைக்கழகத்தையும் விடுதியையும் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யுங்கள். தந்தையின் மறைமுகமான உதவியாளர் ஆகுங்கள், வெளிப்பகட்டைக் காட்டாதீர்கள்.


ஆசீர்வாதம்:
அனைத்து ஆத்மாக்களுக்கும் தூய ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருந்து ஞானம் நிறைந்த அருள்பவராகுவதன் மூலம் மேன்மையான சேவகர் ஆகுவீர்களாக.

ஏனையோருக்குத் தூய ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் பிரதான அடிப்படையானது தூய ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பதாகும். வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களாலும், ஏனையோரைப்பற்றிய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களாலும், ஏனையோர் மீது தூய ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருக்க முடியாது. எப்பொழுதும் ஏனையோர் மீது தூய ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் இரத்தினங்களே, தூய ஆக்கபூர்வமான சக்திவாய்ந்த எண்ணங்களின் பொக்கிஷக் களஞ்சியத்தைக் கொண்டிருப்பார்கள், அதாவது எப்பொழுதும் நிறைந்திருக்கிறார்கள். நிறைந்திருப்பதனால் அவர்களால் ஏனையோரையிட்டு தூய ஆக்க பூர்வமான எண்ணங்களைக் கொண்டிருக்க முடியும். ஏனையோரையிட்டு தூய ஆக்க பூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பது என்பது சகல ஞான இரத்தினங்களாலும் நிறைந்திருப்பதாகும். அத்தகைய ஞானம் நிறைந்த அருள்பவர்களால் மாத்திரமே நடந்தும் உலாவித் திரியும் போதும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் சேவை செய்யமுடியும். அவர்கள் மேன்மையான சேவகர்கள ஆகுவார்கள்.

சுலோகம்:
உலக இராச்சியத்திற்கு உரிமை கொண்டவராகுவதற்கு உலக மாற்றத்திற்கான ஒரு கருவி ஆகுங்கள்.