28.05.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உலகில் உள்ள ஆத்மாக்கள் அனைவரும் அறியாமையிலும் சந்தோஷமற்றும் இருக்கின்றார்கள். அவர்கள் மீது நீங்கள் கருணை கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, அவர்களின் கண்களைத் திறந்து அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள்.
கேள்வி:
எந்த ஒரு நிலையத்தினதும்; வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது என்ன?
8பதில்:
ஒரு நேர்மையான இதயத்துடன் தன்னலம் கருதாது செய்யும் சேவையாகும். எப்பொழுதும் சேவை செய்வதற்கான ஆர்வம் இருக்கட்டும், அப்பொழுது உங்கள் பண்டாரி (பொக்கிஷக் களஞ்சியம்) தொடர்ந்தும் நிரம்பும். நீங்கள் சேவை செய்யக்கூடிய இடங்களுக்;கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எதையும் எவரிடமும் கேட்காதீர்கள். எதனையும் இரப்பதை விட இறப்பது மேலாகும். அனைத்தும் தானாகவே கிடைக்கும். வெளியில் உள்ளவர்களைப் போன்று, நீங்கள் நிதி சேகரிக்க முடியாது. எதையும் கேட்பதன் மூலம் நிலையங்கள் நிரம்ப மாட்டாது. ஆகையால், எதையும் கேட்காமலே நிலையங்களை இயங்கச் செய்யுங்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் இங்கு அமர்ந்திருக்கின்றார்கள். விஷ்ணுவின் அவதாரத்தைப் பற்றிய ஒரு நாடகத்தை அவர்கள் காட்டுவதைப் போன்று, ஆரம்பத்தில் நீங்கள் எவ்வாறு மேலிருந்து கீழே இறங்குகின்றீர்கள் என்ற ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. அவர் தனது விமானத்தில் அமர்ந்தவாறே கீழே வருகின்றார். அவர்கள் சித்தரித்துள்ள அவதாரங்கள் போன்ற அனைத்தும் பிழையானவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்;கின்றீர்கள். ஆத்மாக்களாகிய உங்களது உண்மையான வசிப்பிடம் எது என்பதையும், நீங்கள் மேலிருந்து இங்கே எவ்வாறு வருகின்றீர்கள் என்பதையும், உங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கும்பொழுது, எவ்வாறு நீங்கள் தூய்மையற்றவர் ஆகுகின்றீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை இப்பொழுது உங்களைத் தூய்மையாக்குகின்றார். 84 பிறவிச் சக்கரத்தை நீங்கள் எவ்வாறு சுற்றி வருகின்றீர்கள் என்பது மாணவர்களாகிய உங்கள் புத்தியில் நிச்சயமாக இருக்க வேண்டும். இது உங்கள் விழிப்புணர்வில் இருக்க வேண்டும். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதைத் தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். சக்கரத்தின் கால எல்லையை நீண்டதாகக் காட்டியதால், மக்களால் அந்த எளிமையானதொரு விடயத்தையேனும் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. ஆகையாலேயே அது குருட்டு நம்பிக்கை என்று அழைக்கப்படுகின்றது. ஏனைய சமயங்கள் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகின்றன என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் மறுபிறவி எடுத்து, உங்கள் பாகங்களை நடித்த பின்னர் இப்பொழுது முடிவை அடைந்துள்ளீர்கள் என்பதையும், நீங்கள் வீடு திரும்புகிறீர்கள் என்பதையும் அறிவீர்கள். குழந்தைகளாகிய உங்களிடம் மாத்திரமே இந்த ஞானம் உள்ளது. இந்த உலகில் உள்ள வேறு எவருக்கும் இந்த ஞானத்தைப் பற்றித் தெரியாது. 5000 வருடங்களுக்கு முன்னர் வைகுந்தம் இருந்தது என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அது என்னவென்பது அவர்களுக்குத் தெரியாது. அது நிச்சயமாக ஆதி சனாதன தேவதேவியரின் இராச்சியமாக இருந்தது. ஆனால் அவர்கள் இதனைச் சற்றேனும் அறியாதிருக்கின்றனர். நீங்கள் அதனை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். முன்னர், நீங்களும் எதனையும் அறியாதிருந்தீர்கள்;. ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்கள் தமது சமய ஸ்தாபகர் யார் என்பதை அறியாதிருப்பதில்லை. உங்களுக்கு இப்பொழுது இது தெரியும் என்பதுடன், நீங்கள் ஞானம் நிறைந்தவராகவும் ஆகியுள்ளீர்கள். உலகில் உள்ள ஏனையோர் அறியாமையிலேயே உள்ளனர். நாங்கள் விவேகம் மிக்கவர்களாகிப் பின்னர் விவேகமற்றவர்களாகவும், அறிவற்றவர்களாகவும் ஆகினோம். நாங்கள் மனித நடிகர்களாக இருந்தபொழுதிலும், இதனை அறிந்;திருக்கவில்லை. ஞானத்தின் தாக்கம் எவ்வாறு உள்ளதெனப் பாருங்கள்! உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். எனவே குழந்தைகளாகிய உங்களுக்குள் உள்ளார்ந்த சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் இதனைக் கிரகித்;தால் மாத்திரமே அத்தகையதொரு சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் எவ்வாறு இங்கு வந்தீர்கள் என்பதும், பின்னர் நீங்கள் எவ்வாறு சூத்திர குலத்திலிருந்து பிராமண குலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை உங்களைத் தவிர முழு உலகிலும்; உள்ள வேறெவருமே அறியார்கள். உள்ளார உங்களுக்குள்; இந்த ஞான நடனம் இருக்க வேண்டும். பாபா எங்களுக்கு அதிகளவு அற்புதமான ஞானத்தைக் கூறுகின்றார், அதன் மூலம் நாங்கள் எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். ‘இந்த இராஜயோகத்தின் மூலம், நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குகின்றேன்’ என்று எழுதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முன்னர் நீங்கள் இதனைப் புரிந்துகொள்ளவில்லை. உங்கள் புத்தியில் இப்பொழுது இதன் முக்கியத்துவம் அனைத்தும் உள்ளது. நாங்கள் இப்பொழுது சூத்திரரில் இருந்து பிராமணர்கள் ஆகியுள்ளோம். இந்த மந்திரம் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. பிராமணர்களாகிய நாங்கள் தேவர்கள் ஆகுவோம். அதன் பின்னர் கீழிறங்குவதனால் நாங்கள் வீழ்ச்சியடைகின்றோம். நாங்கள் சக்கரத்தைச் சுற்றி வரும்பொழுது மறு பிறவிகள் பலவற்றை எடுக்கின்றோம். உங்கள் புத்தியில் இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதால், அந்தச் சந்தோஷமும் உங்களுக்கு இருக்க வேண்டும். ஏனையோர் எவ்வாறு இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்? தந்தையின் அறிமுகத்தை எவ்வாறு அனைவருக்கும் கொடுக்கலாம் என்ற பல்வேறு எண்ணங்கள் தொடர்ந்தும் உங்களுக்குள் எழுகின்றன. பிராமணர்களாகிய நீங்கள் அனைவரையும் அதிகளவு ஈடேற்றுகின்றீர்கள். தந்தையும் அனைவரையும் ஈடேற்றுகின்றார். அவர் அறியாமையில் உள்ளவர்களைச் சதா சந்தோஷமடையச் செய்கின்றார்; அவர்களது கண்கள் திறப்பதனால் சந்தோஷமும் உள்ளது. சேவை செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள், இதனைத் தங்களின் உள்ளார உணர்வதுடன், பெருமளவு சந்தோஷத்தையும் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய எங்களின் வசிப்பிடம் எது, எங்கள் பாகத்தை நடிப்பதற்காகப் பின்னர் நாம் எவ்வாறு கீழிறங்கி வருகின்றோம், நாங்கள் எவ்வாறு மிகவும் மேன்மையானவர் ஆகுகின்றோம், அதன்பின்னர் நாம் எவ்வாறு கீழிறங்குகின்றோம், இராவண இராச்சியம் எப்பொழுது ஆரம்பிக்கின்றது: இவை அனைத்தும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. ஞானத்திற்கும் பக்திக்கும் இடையில் பகலுக்கும் இரவிற்கும் உள்ள வேறுபாடு உள்ளது. ஆரம்பத்திலிருந்தே யார் பக்தி செய்துள்ளார்கள்? நீங்களே ஆரம்பத்தில் வந்தீர்கள் என்பதால் நீங்களே அதிகளவு சந்தோஷத்தைக் கண்டீர்கள் என்றும், அதன்பின்னரே பக்தி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றும் நீங்கள் கூறுவீர்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவருக்கும், பூஜிப்பவருக்கும் இடையில் பகலுக்;கும் இரவிற்குமான வேறுபாடு உள்ளது. இப்பொழுது உங்களுக்கு அதிகளவு ஞானம் உள்ளது. நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தை எவ்வாறு சுற்றினீர்கள் என்பதையிட்டுச் சந்தோஷப்பட வேண்டும். 84 பிறவிகளுக்கும், 8.4 மில்லியன் பிறவிகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. இத்தகைய சிறிய விடயம் எவரது புத்தியிலும் புகுவதில்லை. நூறாயிரம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்பொழுது, இது இரண்டொரு நாட்;களைப் போன்றது. இச் சக்கரம் நல்ல குழந்தைகளின் புத்தியில் தொடர்ந்தும் சுழல்கின்றது. இதனாலேயே அவர்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இந்த ஞானம் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. சுவர்க்கத்தையிட்டு அதிகளவு புகழ் உள்ளது. அங்கே பாரதம் மாத்திரமே இருந்தது. முன்னர் இருந்தது மீண்டும் இருக்க வேண்டும். வெளிப்படையாகப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் காட்சிகள் உள்ளன. இப்பழைய உலகம் இப்பொழுது முடிவடைய உள்ளது என்பதும், நீங்கள் புதிய உலகிற்கு வரிசைக்கிரமமாகச் செல்வீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக எவ்வாறு கீழிறங்கி வருகின்றார்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். அவர்கள் நாடகங்களில் காட்டுவதைப் போன்று ஆத்மாக்கள் மேலிருந்து கீழே இறங்குவதில்லை. தங்கள் பௌதீகக் கண்களால் ஓர் ஆத்மாவை எவராலும் பார்க்க முடியாது. ஓர் ஆத்மா வந்து எவ்வாறு சின்னஞ் சிறிய சரீரத்தில் புகுகின்றரர் என்பது ஓர் அற்புதமான விளையாட்டாகும். இது இறை கல்வி. உங்கள் எண்ணங்கள் இதில் இரவுபகலாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும். ஒருமுறை இதனை நாங்கள் புரிந்துகொண்டதும், அது, அதனை நாங்கள் கண்டதைப் போன்றதாகும். பின்னர் அதனைப் பற்றி உங்களால் பேசவும் முடியும். முன்னர் மந்திரவாதிகள் பல பொருட்களைத் தோன்றச் செய்வார்கள். தந்தையும் மந்திரவாதி, வியாபாரி, இரத்தின வியாபாரி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். ஆத்மாவிலேயே முழு ஞானமும் உள்ளது. ஆத்மா ஒரு ஞானக்கடல்;. கடவுள் ஞானக்கடல் என்று கூறப்பட்டபொழுதிலும், அவர் யார் என்பதோ, அவர் எவ்வாறு மந்திரவாதியாவார் என்பதோ எவருக்கும் தெரியாது நீங்களும் முன்னர் இதை அறிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது வந்து உங்களைத் தேவர்கள் ஆக்குகின்றார். உங்களுக்கு உள்ளார்த்;தமாக அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவரும், உங்களுக்குக் கற்பிப்பவரும் ஆவார். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். இதனை நீங்கள் உங்களுக்குள் இரவுபகலாகக் கடைய வேண்டும். இந்த எல்லையற்ற நாடகத்தின் ஞானத்தைப் பற்றி ஒரேயொரு தந்தையால் மாத்திரமே பேச முடியும். வேறு எவராலும் இதனைக் கூற முடியாது. பாபா எதனையும் பார்த்ததில்லை, ஆனால் அவரிடம் முழு ஞானமும் உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் சத்திய, திரேதா யுகங்களுக்குள் வருவதில்லை. ஆனால் நான் அவற்றைப் பற்றிய முழு ஞானத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றேன். அந்தப் பாகத்தை ஒருபொழுதும் நடித்திராத ஒருவர் எவ்வாறு அனைத்தையும் பற்றிக் கூறுகின்றார் என்பது அற்புதமாகும். தந்தை கூறுகின்றார்: நான் எதனையும் பார்ப்பதில்லை, நான் சத்திய, திரேதா யுகங்களுக்குள் செல்வதுமில்லை. ஆனால் என்னிடம் மிகவும் சிறப்பான ஞானம் உள்ளது. அதனை நான் ஒருமுறை மாத்திரமே வந்து உங்களுக்குக் கூறுகின்றேன். நீங்கள் அப்பாகங்களை நடித்தபொழுதிலும், உங்களுக்கு அது தெரியாதுள்ளதும், ஆனால் அப்பாகத்தை ஒருபொழுதும்; நடிக்காத அந்த ஒரேயொருவர் உங்களுக்கு அனைத்தையும் கூறுகின்றார் என்பதும் அதிசயமே. நாங்கள் நடிகர்களாயினும் எங்களுக்கு எதுவுமே தெரியாது. ஆனால் தந்தையிடம் அதிகளவு ஞானம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: அந்த அனுபவங்களைப் பற்றிக் கூறுவதற்கு நான் சத்திய, திரேதா யுகங்களுக்குள்; வருவதில்லை. நாடகத்திற்கு ஏற்ப, அதனைப் பார்க்காமலும், அதனை அனுபவம் செய்யாமலும் நான் உங்களுக்கு முழு ஞானத்தையும் கூறுகின்றேன். நான் ஒருபொழுதும் அத்தகையதொரு பாகத்தையும் ஏற்காதபொழுதிலும் நான் உங்களுக்கு உங்கள் பாகங்கள் முழுவதையும் விளங்கப்படுத்துவது அற்புதமே. ஆகையாலேயே நான் ஞானம் நிறைந்தவர் என்று அழைக்கப்படுகின்றேன். எனவே தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் முன்னேற வேண்டுமாயின், உங்களை நீங்கள் ஆத்மாக்கள் என்று கருத வேண்டும். இது ஒரு நாடகமாகும். நீங்கள் நாடகத்தை அதேபோன்றே மீண்டும் நடிப்பீர்கள். நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். பின்னர், நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வரும்பொழுது, இறுதியில் மனிதர்கள் ஆகுவீர்கள். பாபா இந்த ஞானத்தை எவ்வாறு கொண்டுள்ளார் என்பதையிட்டு நீங்கள் வியப்படைய வேண்டும். அவருக்குக் குருமார் போன்றோர் எவரும் இல்லை. நாடகத்திற்கு ஏற்ப, இப் பாகத்தை அவர் நடிக்க வேண்டும் என்பது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையின் அற்புதம் என்று அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு விடயமும் அற்புதமாகும். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குப் புதிய விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். அத்தகைய தந்தையை நீங்கள் அதிகளவு நினைவுசெய்ய வேண்டும்! நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தையும் நினைவுசெய்ய வேண்டும். பாபா உங்களுக்கு இந்த முக்கியத்துவத்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். பல்வகை ரூபத்தின் படமும் மிகவும் சிறந்ததாகும். இலக்ஷ்மி, நாராயணன், விஷ்ணு ஆகியோரின் படங்களைத் தயாரித்தவர்கள், நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றோம் என்பதை மாத்திரமே காட்டுகின்றார்கள். நாங்கள் தேவர்களாகவும், பின்னர் சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும். சூத்திரர்களாகவும் ஆகுவோம். இதனை நினைவுசெய்வதில் சிரமம் ஏதும் உள்ளதா? தந்தை ஞானம் நிறைந்தவர்;. அவர் எவரிடமிருந்தும்; கற்கவில்லை, அவர் சமயநூல்களையும் கற்கவில்லை. எதனையும் கற்காமலும், எந்தக் குருவையும் ஏற்காமலும் அதிகளவு ஞானத்தை உங்களுக்கு அமர்ந்திருந்து கற்றுக் கொடுக்கக்கூடிய எவரையுமே நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள். தந்தை மிகவும் இனிமையானவர். பக்தி மார்க்கத்தில், சிலர் ஒருவரையும், வேறு சிலர் வேறு ஒருவரையும் இனிமையானவர் என்று கருதலாம். ஒருவரைப் பற்றி அவர்கள் எவ்வாறு உணர்கின்றார்களோ, அவரை அவர்கள் வழிபட ஆரம்பித்து விடுகின்றார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து, அனைத்து இரகசியங்களையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் பேரானந்த சொரூபங்கள் ஆகுகின்றனர். பின்னர் ஆத்மாக்களே சந்தோஷமற்றும், அழுக்கானவர்களும் ஆகுகின்றனர். பக்தி மார்க்கத்தில் உங்களுக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் என்னை அதிகளவு புகழ்வதுண்டு. ஆனால் உங்களுக்கு எதுவுமே தெரியாது. இது மிகவும் அற்புதமான நாடகம். இந்த நாடகம் முழுவதையும் பாபா விளங்கப்படுத்தியுள்ளார். ஏணி போன்ற இத்தனை படங்களை நீங்கள் ஒருபொழுதும் பார்த்திருக்க மாட்டீர்கள். நீங்கள் இப்பொழுது அவற்றைப் பார்ப்பதுடன், இந்த ஞானத்தையும் செவிமடுக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் அது உண்மையிலேயே மிகச்சரியானது என்று கூறுகின்றீர்கள். எவ்வாறாயினும் காமமே மிகக்கொடிய எதிரி. நீங்கள் அதனை வெற்றிகொள்ள வேண்டும். பின்னர் மக்கள் இதனைக் கேள்விப்படும்பொழுது, பலவீனமடைகின்றார்கள். நீங்கள் எந்தளவுக்கு அவர்களுக்கு விளங்கப்படுத்தினாலும், அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அதற்கு அதிகளவு முயற்சி தேவை. முன்னைய கல்பத்தில் புரிந்துகொண்டவர்களே இதனைப் புரிந்துகொள்வார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும் தேவ குடும்பத்தில் ஒருவர் ஆகவுள்ளவர்களால் மாத்திரமே இதனைக் கிரகிக்க முடியும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். ‘பிறரை உங்களுக்குச் சமமானவர் ஆக்க வேண்டும்’ என்பதே உங்களுக்குத் தந்தை கொடுக்கும் வழிகாட்டல்கள். தந்தை உங்களுக்கு முழு ஞானத்தையும் கொடுக்கின்றார். நீங்களும் அதனைக் கூறுகின்றீர்கள். ஆகையால் நிச்சயமாக சிவபாபாவின் இந்த இரதமான இவராலும் அதனைக் கூறமுடியும். எவ்வாறாயினும், அவர் மறைமுகமாகவே உள்ளார். நீங்கள் தொடர்ந்தும் சிவபாபாவையே நினைவுசெய்கின்றீர்கள். இவரை நீங்கள் புகழவும் கூடாது. அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், மாயையின் சங்கிலிகளில் இருந்து உங்களை விடுவிப்பவரும் ஒரேயொருவரே ஆவார். தந்தை இங்கமர்ந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறெவரும் அறியார். இராவணன் யார் என்பதையும் மக்கள் அறியார்கள். அவர்கள் தொடர்ந்தும், ஒவ்வொரு வருடமும் சாதாரணமாக அவனுடைய கொடும்பாவியை எரிக்கின்றார்கள். ஓர் எதிரிக்கே கொடும்பாவி செய்யப்படுகிறது. பாரதத்தைச் சந்தோஷமற்றதும் ஏழ்மையுமாக்கிய இராவணனே, பாரதத்தின் எதிரி என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். அனைவரும் ஐந்து விகாரங்களாகிய, இராவணனின் பிடிக்குள் சிக்கிக் கொண்;டுள்ளார்கள். மற்றவர்களை எவ்வாறு இராவணனிடமிருந்து விடுவிப்பது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குள் புக வேண்டும். உங்களால் சேவை செய்ய முடியுமானால், ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் தன்னலம் கருதாது, ஒரு நேர்மையான இதயத்துடன் சேவை செய்ய வேண்டும். பாபா கூறுகிறார்: நான் அத்தகைய குழந்தைகளின் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புவேன். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. உங்களுக்குச் சேவை செய்வதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தால், எதனையும் கேட்கத் தேவையில்லை. தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: தொடர்ந்தும் சேவை செய்யுங்கள். எவரிடமும் எதனையும் கேட்காதீர்கள். எதனையும் கேட்பதற்குப் பதிலாக மரணிப்பது மேலானதாகும். அனைத்தும் தானாகவே உங்களிடம் வந்து சேரும். எதனையும் கேட்டுப் பெறும்பொழுது நிலையங்கள் அபிவிருத்தியடைவதில்லை. எதனையும் கேட்டுப் பெறாமலே நிலையத்தை நடத்த முடியும். அனைத்தும் தொடர்ந்தும் உங்களிடம் வந்து சேரும். அதில் பலம் உள்ளது. வெளியில் உள்ள மக்கள் நிதி திரட்டுவதைப் போன்று நீங்கள் செய்யக்கூடாது. மனிதர்களைக் ஒருபொழுதுமே கடவுள் என்றழைக்க முடியாது. ஞானம் விதையாகும். விதையாகிய தந்தை இங்கமர்ந்து, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். விதையாகிய அவர் ஞானம் நிறைந்தவர். உயிரற்ற விதைகளால் பேச முடியாது. உங்களால் பேச முடியும். உங்களால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். எவரும் இந்த எல்லையற்ற விருட்சத்தை புரிந்துகொள்ள மாட்டார்கள். விசேட, அன்பிற்கினிய குழந்தைகளாகிய நீங்கள், உங்கள் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக இதனை அறிவீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். நீங்களும் சிறிது சகித்துக்கொள்ள வேண்டும். விகாரங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை. மிக நன்றாகச் சேவை செய்யும் குழந்தைகளும், ;நான் வீழ்ந்து விட்டேன்’ எனக் கூறுமளவிற்கு மாயையினால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். ஏணியில் ஏறும்பொழுதே அவர்கள் கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே அவர்கள் சம்பாதித்துள்ள வருமானம் அனைத்தும் இழக்கப்படுகின்றது. நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அவர்கள் தங்கள் இரத்தத்தினால் எழுதித் தந்தைக்குச் சத்தியம் செய்து பின்னர் மறைந்து விடுகிறார்கள். அதனை உறுதியாக்குவதற்குப் பலவிதமான வழிமுறைகளை உருவாக்கினாலும், அவர்கள் பழைய உலகிற்குள் திரும்பவும் செல்வதைத் தந்தை பார்க்கின்றார். பாபா உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். நடிகர்கள் தொடர்ந்தும் தங்கள் பாகங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எவராலும் தமது பாகத்தை மறக்க முடியாது. தினமும் தந்தை பல்வேறு முறைகளி;ல் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்களும் ஏனைய பலருக்கும் விளங்கப்படுத்துகின்றீர்கள். ஆனாலும் அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் தனிப்பட்ட முறையில் பாபாவின் முன்னால் செல்ல வேண்டும். இது தந்தையின் அற்புதமாகும். அவர் தினமும் முரளியை உரைக்;கின்றார். அவர் அசரீரியானவர். அவருக்கு ஒரு பெயர், ரூபம், இடம் அல்லது காலம் இல்லையாயின் அவர் எப்படி முரளியை உரைப்பார்? இதனால் அவர்கள் வியப்படைந்து, உறுதியானவர்களாகித் (தந்தையைச் சந்தித்ததன் பின்னர்) திரும்பிச் செல்கின்றார்கள். அவர்கள் அத்தகைய ஆஸ்தியைக் கொடுப்பதற்கு வந்துள்ள தந்தையைச் சந்திக்க விரும்புகிறார்கள். தந்தையை இவ்வாறு இனங்கண்டு அவரைச் சந்தித்தால் அவர்களால் ஞான இரத்தினங்களைக் கிரகிக்க முடியும். அவர்களால் ஸ்ரீமத்தைப் பின்பற்றவும் முடியும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் வாழ்க்கையில் ஞானத்தை கிரகித்து, சந்தோஷத்தில் திளைத்திருங்கள். நீங்கள், அற்புதமான ஞானத்தையும், ஞானத்தை அருள்பவரையும் நினைவுசெய்து, ஞான நடனம் புரிய வேண்டும்.2. உங்கள் சொந்தப் பாகத்தை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். பிறரின் பாகங்களைப் பார்க்கவும் கூடாது. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். எனவே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் சொந்த முன்னேற்றத்தில் ஈடுபட்டிருங்;கள். சேவை செய்வதில் ஆர்வத்தைக் கொண்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா நினைவு எனும் பாதுகாப்புக் குடையின் கீழும், மரியாதைக் கோட்பாடுகள் எனும் கோட்டினுள்ளும் இருப்பதால், வெற்றியாளராகவும் மாயையை வென்றவராகவும் ஆகுவீர்களாக.தந்தையின் நினைவே பாதுகாப்புக் குடை ஆகும், குடையின் கீழ் தங்குவது எனில், வெற்றியாளராகவும் மாயையை வென்றவராகவும் ஆகுவது என்று அர்த்தமாகும். சதா நினைவாகிய பாதுகாப்புக் குடையின் கீழும், மரியாதைக் கோட்பாடுகள் எனும் கோட்டினுள்ளும் இருங்கள், அப்பொழுது அதன் கீழ் வருவதற்கான தைரியத்தை எவரும் கொண்டிருக்க மாட்டார்கள். நீங்கள் மரியாதைக் கோட்பாடுகள் எனும் கோட்டின் அப்பால் செல்லும்பொழுது, மாயை உங்களைத் தனக்குரியவர் ஆக்குவதில் திறமைசாலியாக ஆகுகின்றாள். எவ்வாறாயினும், நீங்கள் எண்ணற்ற தடவைகள் வெற்றியாளர் ஆகியுள்ளதுடன், வெற்றி மாலையே உங்கள் ஞாபகார்த்;தமும் ஆகும். இவ் விழிப்புணர்வு மூலம் சதா சக்திநிறைந்தவராக இருங்கள், மாயையால் நீங்கள் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள்.
சுலோகம்:
உங்களினுள் பொக்கிஷங்கள் அனைத்தையும் அமிழ்த்திக் கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் நிறைவை அனுபவம் செய்வீர்கள்.