22.12.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli    24.03.85     Om Shanti     Madhuban


இப்பொழுதில்லையேல் எப்போதும் இல்லை.


இன்று, அன்பு நிறைந்த, நீதி நிறைந்த பாப்தாதா குழந்தைகள் அனைவரினதும் கணக்குகளில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் கணக்கில் எந்தளவைச் சேமித்திருக்கிறீர்கள் என்று பார்க்கிறார். பிராமணர் ஆகுவதெனில், சேமித்தல் என்று அர்த்தம். ஏனெனில், இந்த ஒரு பிறவியில் நீங்கள் எந்தளவைச் சேமித்துள்ளீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் 21 பிறவிகளுக்கான வெகுமதியைத் தொடர்ந்து பெறுவீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு மட்டும் வெகுமதியைப் பெறுவதில்லை. ஆனால், நீங்கள் எந்தளவிற்குப் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர் ஆகுகிறீர்களோ, அதாவது, நீங்கள் எந்தளவிற்குத் தகுதிவாய்ந்த இராஜ அந்தஸ்தைப் பெறுகிறீர்களோ, அந்தளவிற்கு, உங்களின் இராச்சிய பாக்கியத்தின் உரிமையாக, பக்தி மார்க்கத்திலும் அரைக்கல்பத்திற்கு நீங்கள் பூஜிக்கப்படுவீர்கள். இராஜ அந்தஸ்து மேன்மையானது. அதேபோன்று பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபமும் மேன்மையானது. பிரஜைகளின் எண்ணிக்கையும் அதற்கேற்ப உருவாக்கப்படுகின்றன. இராச்சிய உரிமையுள்ள தமது உலகச் சக்கரவர்த்தியை அல்லது அரசரை மக்கள் தமது தாயாகவும் தந்தையாகவும் நேசிக்கிறார்கள். அதேபோன்று, பக்த ஆத்மாக்களும் இராச்சிய உரிமையுள்ள மேன்மையான ஆத்மாக்களையும் மகாத்மாக்களையும் தமது அழகான, அதியன்பிற்குரிய தேவர்களாகக் கருதி, அவர்களைப் பூஜிக்கிறார்கள். எட்டில் வருபவர்களும் மகத்தான, விசேடமான அதியன்பிற்குரிய தேவர்கள் ஆகுகிறார்கள். இந்தக் கணக்கீட்டின்படியே இந்த பிராமண வாழ்க்கையில் இராஜ அந்தஸ்தும் பூஜிக்கத்தகுதிவாய்ந்த அந்தஸ்தும். கிடைக்கின்றன. அரைக்கல்பத்திற்கு, நீங்கள் இராஜ அந்தஸ்தைப் பெற்றவர்கள் ஆகுகிறீர்கள். அரைக்கல்பத்திற்கு, நீங்கள் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். எனவே, இந்தப் பிறவியும் வாழ்க்கையும் யுகமும், கல்பம் முழுவதற்கும் உங்களின் சேமிப்புக்கணக்கில் சேமிப்பதற்காகவே உள்ளன. இதனாலேயே உங்களிடம் ஒரு சுலோகம் உள்ளது: உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? ‘இப்போதில்லையேல், எப்போதும் இல்லை!’ இது இந்த நேரத்தையும் இந்த வாழ்க்கையையும் பற்றியே நினைவுகூரப்படுகிறது. இந்த சுலோகம் பிராமணர்களுக்கானது. அத்துடன் இது ஞானம் இல்லாத ஆத்மாக்களை விழித்தெழச் செய்கிறது. ஒவ்வொரு மேன்மையான செயலைச் செய்யும்போதும், மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருக்கும்போதும், பிராமண ஆத்மாக்களான நீங்கள் ‘இப்போதில்லையேல் எப்போதும் இல்லை!’ என்ற சுலோகனை எப்போதும் நினைத்தால், என்ன நிகழும்? ஒவ்வொரு மேன்மையான பணியைச் செய்யும்போதும் நீங்கள் எப்போதும் வலிமையானவராக இருப்பதுடன் முன்னேறுவீர்கள். அத்துடன் இந்தச் சுலோகம் உங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். உங்களுக்குள் இயல்பாகவே ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படும். சாதாரணமான முயற்சிக்குரிய எண்ணங்களான, ‘நல்லது, நான் அதை ஏதாவதொரு வேளையில் செய்வேன். நான் எப்படியும் செய்ய வேண்டியுள்ளது! நான் அந்த முறையில் செயற்பட வேண்டியுள்ளது. நான் எவ்வாறாயினும் அப்படி ஆகவேண்டியுள்ளது’ என்பவை இயல்பாகவே முடிவுக்கு வரும். ஏனெனில், ‘இப்போதில்லையேல் எப்போதும் இல்லை!’ என்பதை நீங்கள் உணர்ந்தவர் ஆகியிருப்பீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதை இப்போதே செய்யுங்கள். இது தீவிர முயற்சி எனப்படுகிறது.

சிலவேளைகளில், அந்தக் கணம் மாறும்போது, புண்ணிய எண்ணமும் மாறுகிறது. ஒரு புண்ணிய பணியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் உற்சாகமும் மாறுகிறது. ஆகவே, முதலாம் இலக்கத்தவர் ஆகும்போது தந்தை பிரம்மாவில் என்ன சிறப்பியல்பை நீங்கள் கண்டீர்கள்? ‘ஏதாவதொரு வேளையில்’ என்றில்லாமல், ‘நான் இப்போதே இதைச் செய்ய வேண்டும்!’. உடனடித் தானமே மகத்தான புண்ணியம் எனப்படுகிறது. நீங்கள் உடனடியாகத் தானம் செய்யாவிட்டால், நீங்கள் அதைப் பற்றி நினைத்து, அதற்கு நேரம் எடுத்தால், நீங்கள் திட்டங்களைச் செய்து, பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்தினால், அதை உடனடித் தானம் என்று அழைக்க முடியாது. அது வெறுமனே தானம் என்றே அழைக்கப்படும். மகத்தான தானத்தின் பலனும் மகத்தானதாகவே இருக்கும். ஓர் எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், ‘நல்லது, நான் இதைச் செய்ய வேண்டும், நான் இதைச் செய்வேன். இப்போது இல்லை, ஆனால் சிறிது காலத்தின் பின்னர் நான் இதைச் செய்வேன். இப்போது இந்தளவை மட்டும் நான் செய்வேன்’ என நினைத்தால், அந்த எண்ணங்களைச் சிந்திப்பதற்கும் அவற்றை நடைமுறையில் இடுவதற்கும் இடையிலான நேர இடைவெளி மாயைக்கு ஒரு வாய்ப்பை அளித்துவிடும். பாப்தாதா குழந்தைகளின் கணக்குகளைப் பார்த்தார். குழந்தைகளான நீங்கள் எதைப் பற்றியாவது சிந்திப்பதற்கும், அதை நடைமுறையில் செய்வதற்கும் இடையில் ஏற்படும் சின்னஞ்சிறிய இடைவெளியில் பல தடவைகள் மாயை வருகிறாள். அதனால் சூழ்நிலைகளும் மாறுகின்றன. உதாரணமாக, சிலவேளைகளில் உங்களின் சரீரத்தாலும் மனதாலும் எதையாவது செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும், ஆரம்பத்தில் நீங்கள் அதைப் பற்றி 100மூ நினைத்தீர்கள். ஆனால், அதை நீங்கள் செய்யும்போது, அது மாறிவிடுகிறது. கால இடைவெளி ஏற்படும்போது, மாயையின் ஆதிக்கத்தால், எட்டு மணிநேரம் கொடுக்க வேண்டும் என நினைத்தவர், ஆறு மணிநேரங்களை மட்டுமே கொடுக்கிறார். அது இரண்டு மணிநேரத்தால் குறைந்துவிடுகிறது. சூழ்நிலைகள் அவ்வாறு ஆகும். அதேபோன்று, பணத்திலும், நீங்கள் 100 கொடுக்க வேண்டும் என நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் 50 ஐயே கொடுப்பீர்கள். மாயை இடைவெளியில் ஓர் எல்லையை வைத்திருப்பதனால், இந்த வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அதன்பின்னர், ‘ஓகே, இப்போது நான் 50 கொடுப்பேன். பின்னர் 50 கொடுப்பேன். எப்படியோ இது தந்தைக்குச் சொந்தமானதே’ என நீங்கள் நினைப்பீர்கள். எவ்வாறாயினும், சரீரம், மனம், செல்வத்தின் உடனடித் தானமே மகத்தான புண்ணியம் எனக் கருதப்படுகிறது. அவர்கள் பலி கொடுக்கும்போது, அது உடனடியாக இறந்தால் மட்டுமே ‘மகாபிரசாதம்’ எனக் கருதப்படும். ஓரடியால் பலி கொடுக்கப்படும் விலங்கே மகாபிரசாதம் எனக் கருதப்படும். அழுது, பலி கொடுக்கப்படுவதைப் பற்றிச் சிந்தித்தால், அதை மகாபிரசாதம் என்று அழைக்க முடியாது. அவர்கள் ஓர் ஆட்டைப் பலி கொடுக்கும்போது, அந்த ஆடு கத்தும். நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்? ‘நான் இதைச் செய்வதா வேண்டாமா?’ என நீங்கள் நினைக்கிறீர்கள். இது அதைப் பற்றிச் சிந்திப்பதாகும். அழுகின்ற ஒன்றை மகாபிரசாதம் என ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோன்று, இங்கும், உடனடித்தானமே மகத்தான புண்ணியம் ஆகும். உங்களின் சிந்தனையும் செயலும் உடனடியாக இருக்க வேண்டும் என்பதே இந்த நேரத்திற்கான புகழ் ஆகும். அதைப் பற்றிச் சிந்தித்தவண்ணம் விடுபடாதீர்கள். சிலவேளைகளில், உங்களில் சிலர் உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். நானும் அதைப் பற்றி நினைத்தேன், ஆனால் அதற்குப் பதில் அவர் அதைச் செய்தார். நான் அதைச் செய்யவில்லை. எனவே, உண்மையில் அதைச் செய்பவர்கள் வெகுமதியைப் பெறுகிறார்கள். அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள், அவ்வாறு சிந்தித்தவண்ணம் வெள்ளி யுகத்திற்குச் செல்கிறார்கள். அவர்கள் எல்லா வேளையும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். ‘அதை உடனடியாகச் செய்யாதே’ என உங்களுக்குக் கூறுவது வீணான எண்ணமே. புண்ணியச் செயலுக்கும் புண்ணிய எண்ணத்திற்கும் புகழ் உள்ளது. உடனடித் தானமே மகத்தான புண்ணியம். சிலவேளைகளில், சில குழந்தைகள் மகத்தான விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள். அவர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவு மிக விசையான வீணான எண்ணங்கள் அவர்களிடம் உள்ளன. அதன்பின்னர், ‘நான் என்ன செய்வது? இது நிகழ்ந்துவிட்டது’ என அவர்கள் கூறுகிறார்கள். அவர்களால் அதை நிறுத்த முடிவதில்லை. அதன்பின்னர், அவர்களுக்குள் என்ன எண்ணங்கள் உள்ளதோ, அதையே செய்கிறார்கள். எவ்வாறாயினும், வீணான எண்ணங்களைக் கட்டுப்படுத்த உங்களிடம் கட்டுப்படுத்தும் சக்தி இருக்க வேண்டும். ஒரு சக்திவாய்ந்த எண்ணத்திற்காகப் பலமில்லியன் மடங்கு பலனை நீங்கள் பெறுகிறீர்கள். அதேபோன்று, ஒரு வீணான எண்ணத்தின் - சோகமான, மனவிரக்திக்குரிய, உங்களின் சந்தோஷத்தை இழக்கச் செய்யும், நீங்கள் யார் என்பதைப் புரியாத அல்லது உங்களைப் புரிந்து கொள்ள முடியாத எண்ணத்தின் - கணக்கும், ஒன்றுக்குப் பலமில்லியன் மடங்காக அனுபவம் செய்யப்படும். அதன்பின்னர், ‘அது ஒன்றும் பெரியதல்ல. ஆனால் எனது சந்தோஷம் ஏன் மறைந்தது! அது பெரிய விடயம் இல்லை, எனினும் எனது சந்தோஷம் குறைந்து பல நாட்கள் ஆகிவிட்டன. தனித்திருப்பதை நான் ஏன் விரும்புகிறேன் என எனக்குத் தெரியவில்லை. நான் எங்கேயாவது செல்ல வேண்டும்’ என நீங்கள் நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எங்கே செல்வீர்கள்? நீங்கள் எங்கேயும் தனியே செல்லப் போவதில்லை. அதாவது, தந்தையின் சகவாசம் இல்லாமல் செல்லப்போவதில்லை, அல்லவா? நீங்கள் தனியே இருக்கலாம். ஆனால் தந்தையின் சகவாசத்தில் இருந்து பிரிந்து தனியே இருக்காதீர்கள். நீங்கள் தந்தையின் சகவாசத்தில் இருந்து பிரிந்து தனித்திருந்தால், நீங்கள் யோகத்தில் பிரிந்திருந்தால், நீங்கள் குழப்பம் அடைந்தால், அது வேறொரு பிரிவிற்குள்ளேயே செல்கிறது. அது பிராமண வாழ்க்கை அல்ல. நீங்கள் ஒன்றிணைந்தவர்கள், அல்லவா? சங்கமயுகம் ஒன்றிணைந்திருப்பதற்கான யுகம் ஆகும். கல்பம் முழுவதும் இத்தகையதோர் அற்புதமான தம்பதியைக் காணவே முடியாது. நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகினாலும், அதுவும் இந்த அற்புதமான தம்பதியைப் போன்று இருக்காது, அப்படியல்லவா? இதனாலேயே, உங்களால் சங்கமயுகத்தின் ஒன்றிணைந்த ரூபத்தில் இருந்து ஒரு விநாடியேனும் பிரிந்திருக்க முடியாது. நீங்கள் பிரிந்தவுடன், இழக்கிறீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள், அல்லவா? அதன்பின்னர், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் சிலவேளைகளில் கடற்கரைக்குச் செல்கிறீர்கள். சிலவேளைகளில் கூரைக்குச் செல்கிறீர்கள். சிலவேளைகளில் மலைகளுக்குச் செல்கிறீர்கள். கடைவதற்காக அங்கு செல்வது வேறுவிடயம். எவ்வாறாயினும், அங்கு தந்தை இல்லாமல் தனியே செல்லாதீர்கள். நீங்கள் எங்கே சென்றாலும், அவருடனேயே செல்லுங்கள். இதுவே பிராமண வாழ்க்கையின் சத்தியம் ஆகும். நீங்கள் பிறப்பு எடுத்தபோது, இந்தச் சத்தியத்தைச் செய்தீர்கள், அல்லவா? நீங்கள் அவருடனேயே இருந்து, அவருடனேயே வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்கள். வெறுமனே அவ்வாறு காட்டுக்கோ அல்லது கடலுக்கோ செல்லாதீர்கள். இல்லை! நீங்கள் அவருடனேயே இருந்து, அவருடனேயே திரும்பிச் செல்வீர்கள். இது அனைவரினதும் உறுதியான சத்தியம், அல்லவா? திடசங்கற்பத்துடன் இருப்பவர்கள், எப்போதும் வெற்றி பெறுவார்கள். திடசங்கற்பமே வெற்றியின் திறவுகோல் ஆகும். ஆகவே, நீங்கள் இந்தச் சத்தியத்தை உறுதியாகச் செய்துள்ளீர்கள், அல்லவா? எங்கு சதா திடசங்கற்பம் உள்ளதோ, அங்கு சதா வெற்றியும் இருக்கும். திடசங்கற்பம் குறைந்தால், வெற்றியும் குறையும்.

தந்தை பிரம்மாவில் நீங்கள் என்ன சிறப்பியல்பைக் கண்டீர்கள்? அவர் உடனடித் தானத்தைச் செய்வதை நீங்கள் கண்டீர்கள். என்ன நிகழும் என அவர் எப்போதாவது நினைத்தாரா? ‘நான் அதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும், அதன்பின்னர் நான் அதைச் செய்வேன்’ என ஒருபோதும் இருக்கவில்லை. இல்லை. அவரின் உடனடித் தானங்களால் அவர் மகத்தான புண்ணியாத்மா ஆகினார். அதனால் அவர் முதலாம் இலக்க மகாத்மா ஆகினார். அவர் முதலாம் இலக்க மகாத்மா ஆகியதால், அவர் கிருஷ்ணரின் ரூபத்தில் வழிபடப்படும் முதலாம் இலக்க ஆத்மா ஆகினார். இவர் மட்டுமே தனது குழந்தைப் பருவத்திலும் வழிபடப்படும் ஒரேயொரு மகாத்மா ஆவார். நீங்கள் அவரின் குழந்தைப் பருவத்தைக் கண்டுள்ளீர்கள், அல்லவா? அவர் ராதையுடன் தனது இளமைப்பருவத்திலும் பூஜிக்கப்படுகிறார். இராதே கிருஷ்ணா. அவர் கோப, கோபிகைகளுடனும் நினைவுகூரப்பட்டுப் பூஜிக்கப்படுகிறார். நான்காவதாக, இலக்ஷ்மி, நாராயணன் ரூபத்தில் வழிபடப்படுகிறார். இவர் மட்டுமே தனது வாழ்க்கையின் வெவ்வேறு வயதுகளிலும், பல்வகையான செயல்களின் ரூபங்களிலும் நினைவு செய்யப்படும், பூஜிக்கப்படும் ஒரேயொரு மகாத்மா ஆவார். இராதையின் புகழும் உள்ளது. ஆனால் கிருஷ்ணரைத் தொட்டிலில் ஆட்டுவதைப் போல, அவர்கள் இராதையை ஆட்டுவதில்லை. அவர்கள் கிருஷ்ணரை நேசிக்கிறார்கள். இராதை கிருஷ்ணருடன் இருப்பதால், இராதையின் பெயரும் நிச்சயம் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறாயினும், இரண்டாம் இலக்கத்தில் இருப்பதற்கும் முதல் இலக்கத்தில் இருப்பதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. எனவே, முதல் இலக்கத்தவர் ஆகுவதற்கான காரணம் என்ன? மகத்தான புண்ணியம். மகத்தான புண்ணியாத்மாக்கள் பின்னர் மகத்தான பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் ஆகின்றனர். நீங்கள் அனைவரும் வழிபடப்படும் முறையில் வேறுபாடு இருக்கும் என உங்களுக்கு முன்னர் கூறப்பட்டுள்ளது. சில தேவர்கள் சரியான முறையில் வழிபடப்படுவார்கள். ஆனால் ஏனையொர் பெயரளவில் மட்டுமே பூஜிக்கப்படுவார்கள். இதைப் பற்றி அதிகளவு விவரங்கள் உள்ளன. பூஜிப்பதிலும் அதிகளவு விவரங்கள் உள்ளன. எவ்வாறாயினும், இன்று, பாபா அனைவரினதும் சேமிப்புக் கணக்கைப் பார்க்கிறார். நீங்கள் எந்தளவிற்கு ஞானப் பொக்கிஷத்தை, சக்திகளின் பொக்கிஷத்தை, மேன்மையான எண்ணங்களின் பொக்கிஷத்தை, காலம் என்ற பொக்கிஷத்தைச் சேமித்துள்ளீர்கள்? நீங்கள் எந்தளவிற்கு இந்த நான்கு பொக்கிஷங்களையும் சேமித்துள்ளீர்கள்? பாபா இந்தக் கணக்குகளைப் பார்த்தார். எனவே, இன்று, இந்த நான்கு விடயங்களிலும் உங்களின் கணக்கைச் சோதித்துப் பாருங்கள். அதன்பின்னர், பாப்தாதாவும் தான் கண்ட பெறுபேற்றைப் பற்றி உங்களுக்குக் கூறுவார். ஒவ்வொரு கணக்கிலும் சேமிப்பதற்கான வழிமுறை என்ன, அது எவ்வாறு பேறுகளுடன் தொடர்புடையது, எவ்வாறு சேமிப்பது என்பவற்றைப் பற்றி அவர் உங்களுக்குக் கூறுவார். பாபா இந்த விடயங்களைப் பற்றிப் பின்னர் கூறுவார். உங்களுக்குப் புரிகிறதா?

காலம் எல்லைக்குட்பட்டது, அல்லவா? அவரும் எல்லைக்குள்ளே வருகிறார். அவர் பிரவேசிப்பது அவரின் சொந்த சரீரம் இல்லை. அவர் அதைக் கடனாகவே எடுத்துள்ளார். அது தற்காலிக பாகத்தை நடிக்கும் ஒரு உடல் ஆகும். இதனாலேயே, பாபாவும் நேரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பாப்தாதாவும் ஒவ்வொரு குழந்தையைச் சந்திப்பதிலும், ஒவ்வொரு குழந்தையிடமிருந்து மிக இனிமையான ஆன்மீக நறுமணத்தைப் பெற்றுக் கொள்வதிலும் சந்தோஷம் அடைகிறார். ஒவ்வொரு குழந்தையினதும் முக்காலங்களையும் பாப்தாதா அறிவார். ஆனால் குழந்தைகளோ தமது நிகழ்காலத்தையே அதிகளவில் அறிவார்கள். அதனால் அவர்கள் சிலவேளைகளில் இவ்வாறும், சிலவேளைகளில் அவ்வாறும் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், முக்காலங்களையும் அறிந்ததால், பாப்தாதா உங்களைச் சென்ற கல்பத்தில் உரிமை உடையவராக இருந்த, சகல உரிமைகளும் உள்ள அதே ஆத்மா என்ற பார்வையுடனேயே பார்க்கிறார். சிலர் தற்சமயம் சிறிதளவு குழப்பத்துடன் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், தளம்பல் அடைபவர்கள், இப்போது அசைக்க முடியாதவர்கள் ஆகவேண்டும். அவர் உங்களின் எதிர்காலம் மேன்மையாக இருப்பதைக் காண்கிறார். இதனாலேயே, அவர் நிகழ்காலத்தைப் பார்த்தாலும், அவர் அதைப் பார்ப்பதில்லை. எனவே, அவர் ஒவ்வொரு குழந்தையின் சிறப்பியல்பையும் பார்க்கிறார். சிறப்பியல்பு இல்லாத குழந்தைகள் யாராவது இருக்கிறார்களா? இங்கு நீங்கள் வந்திருப்பதே முதல் சிறப்பியல்பு ஆகும். உங்களிடம் வேறு எதுவும் இல்லாதிருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் இந்தப் பாக்கியம் எதிலும் குறைந்தது அல்ல. உங்களிடம் இந்தச் சிறப்பியல்பு உள்ளதல்லவா? இது விசேட ஆத்மாக்களின் ஒன்றுகூடல் ஆகும். ஆகவே, விசேட ஆத்மாக்களின் சிறப்பியல்பைக் கண்டு பாப்தாதா களிப்படைகிறார். அச்சா.

மகா தானமான, உடனடியாகத் தானம் செய்யும் மேன்மையான எண்ணங்களைச் சதா கொண்டிருப்பவர்களுக்கும், ‘சில வேளை’ (கப்) என்பதை ‘இப்போதே’ (அப்) என எப்போதும் மாற்றுபவர்களுக்கும், காலத்தின் ஆசீர்வாதத்தைச் சதா அறிந்து, தமது மடிகளை ஆசீர்வாதங்களால் நிரப்பிக் கொள்பவர்களுக்கும், எப்போதும் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுவதுடன், மேன்மையான இராச்சியத்திற்கான உரிமையையும் தந்தை பிரம்மாவுடன் மேன்மையான அந்தஸ்தைக் கொண்டிருப்பதற்கான உரிமையையும் கொண்டிருப்பவர்களுக்கும், சதா தந்தையுடன் ஒன்றிணைந்த ரூபத்தில் இருப்பவர்களுக்கும், இத்தகைய சதா சகபாடிக் குழந்தைகளுக்கும், எப்போதும் சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றுபவர்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பிரியாவிடை வேளையில் குழந்தைகள் அனைவருக்கும் அன்பையும் நினைவுகளையும் கொடுக்கிறார்.
பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் அன்பையும் நினைவுகளையும் அனுப்புகிறார். ஒவ்வோர் இடத்திலும் உள்ள அன்பான குழந்தைகள் அனைவரும் சேவையில் அன்புடன் முன்னேறுகிறார்கள். அத்துடன் அன்பு எப்போதும் உங்களைத் தொடர்ந்து முன்னேறச் செய்யும். நீங்கள் அன்புடன் சேவை செய்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் யாருக்குச் சேவை செய்கிறீர்களோ, அவர்களும் தந்தையிடம் அன்பானவர்கள் ஆகுகிறார்கள். உங்களின் சேவைக்காகக் குழந்தைகள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கடின உழைப்பிற்கு (மெஹனத்) அன்றி, அன்பிற்கே (மொஹபத்) பாராட்டுக்கள். ‘கடின உழைப்பு’ என அவர்கள் பேசினாலும், அது உண்மையில் அன்பே. இதனாலேயே, நினைவில் இருந்தவண்ணம் சேவை செய்பவர்கள், தமது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் சேமிக்கிறார்கள். இதனாலேயே, நீங்கள் இப்போது செய்யும் சேவையால் சந்தோஷம் அடைகிறீர்கள். அத்துடன் எதிர்காலத்திற்கும் சேமிக்கிறீர்கள். நீங்கள் சேவை செய்யவில்லை. ஆனால், அழியாத வங்கியில் உங்களின் கணக்கில் சேமிக்கிறீர்கள். சிறிதளவு சேவை, அதனால் எல்லா வேளைக்கும் சேமிப்புக் கணக்கில் நீங்கள் சேமிக்கிறீர்கள். எனவே, அது என்ன சேவை? அது சேமிப்பு, அல்லவா? இதனாலேயே, பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் அன்பையும் நினைவுகளையும் அனுப்புகிறார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைச் சக்திவாய்ந்தவராகக் கருதி, முன்னேற வேண்டும். ஆகவே, சக்திவாய்ந்த ஆத்மாக்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உங்களின் பெயரால் அன்பையும் நினைவுகளையும் பெறுவீர்களாக. (டெல்லி பாண்டவபவனில் ஒரு டெலெக்ஸ் இயந்திரம் புதிதாக வாங்கப்பட்டுள்ளது) டெல்லி, பாண்டவ பவனில் வாழும் குழந்தைகள் அனைவருக்கும் சேவைக்காக விசேடமான பாராட்டுக்கள். ஏனெனில், இந்த வசதி சேவைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. வசதிக்காக அன்றி, சேவைக்காகவே பாராட்டுக்கள். இந்த வசதிகளால் நீங்கள் தொடர்ந்து என்றென்றும் எல்லையற்ற சேவையைச் செய்வீர்கள். இந்த வசதியால், நீங்கள் சந்தோஷமாகத் தொடர்ந்து பாப்தாதாவின் செய்தியை உலகெங்கும் பரவச்செய்வீர்கள். இதனாலேயே, எந்தளவிற்குக் குழந்தைகளிடம் சேவைக்காக அதிகளவு ஊக்கமும் உற்சாகமும் சந்தோஷமும் உள்ளன என்பதை பாப்தாதா பார்க்கிறார். எப்போதும் இந்த சந்தோஷத்துடன் முன்னேறுங்கள். சகல வெளிநாட்டவர்களும் பாண்டவ பவனிற்கு சந்தோஷ சான்றிதழைக் கொடுக்கிறார்கள். இதைத் தந்தையைப் போன்று விருந்துபசாரம் செய்வதில் எப்போதும் முன்னணியில் இருத்தல் எனப்படுகிறது. தந்தை பிரம்மா எவ்வாறு அதிகளவில் விருந்தோம்பினார் என்பதை நீங்கள் கண்டீர்கள். இந்த விருந்தோம்பலைச் செய்வதில் தந்தையைப் (பிரம்மபாபா) பின்பற்றுபவர்கள், தந்தையை (சிவபாபா) வெளிப்படுத்துகிறார்கள். நீங்கள் தந்தையின் பெயரை வெளிப்படுத்துகிறீர்கள். இதனாலேயே, அனைவரின் சார்பாக பாப்தாதா அன்பையும் நினைவுகளையும் கொடுக்கிறார்.

அமிர்தவேளைக்குப் பின்னர், காலை 6.00 மணிக்கு, பாப்தாதா மீண்டும் முரளி கொடுத்ததுடன், அன்பையும் நினைவுகளையும் வழங்கினார் (25ஃ03ஃ85)
இந்தத் தினத்தில், எப்போதும் உங்களை இலேசாகவும் ஒளியாகவும் (டபிள் லைற்) கருதி, தொடர்ந்து பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். கர்மயோகியின் பாகத்தை நடிக்கும்போதே, உங்களின் கர்மத்திற்கும் யோகத்திற்குமான சமநிலையைச் சோதியுங்கள். உங்களின் கர்மமும் நினைவும், அதாவது, யோகமும் சக்திவாய்ந்தவையா எனச் சோதித்துப் பாருங்கள். உங்களின் கர்மம் சக்திவாய்ந்ததாகவும், உங்களின் நினைவு குறைவாகவும் இருந்தால், அதைச் சமநிலை எனக் கூற முடியாது. உங்களின் நினைவு சக்திவாய்ந்ததாகவும், உங்களின் கர்மம் சக்திவாய்ந்ததாக இல்லாமலும் இருந்தால், அதுவும் சமநிலை இல்லை. எனவே, தொடர்ந்து கர்மத்திற்கும் நினைவிற்கும் இடையில் சமநிலையைப் பேணுங்கள். நாள் முழுவதும் இந்த மேன்மையான ஸ்திதியில் இருப்பதன் மூலம், உங்களின் கர்மாதீத் ஸ்திதி உங்களை நெருங்கி வருவதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். நாள் முழுவதும், நீங்கள் உங்களின் கர்மாதீத் ஸ்திதியில் அல்லது அவ்யக்த தேவதை ஸ்திதியில் தொடர்ந்து முன்னேறுவீர்கள். கீழேயுள்ள ஸ்திதிக்குச் செல்லாதீர்கள். இன்று, கீழே செல்லாதீர்கள். மேலேயே இருங்கள். ஏதாவதொரு பலவீனத்தால் நீங்கள் கீழே சென்றாலும், ஒருவருக்கொருவர் அதை நினைவூட்டுங்கள். அவர்களுக்குச் சக்தி கொடுங்கள். அப்போது நீங்கள் அனைவரும் அதியுயர்ந்த ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். இதுவே இன்றைய படிப்பின் வீட்டுவேலை ஆகும். அதிகளவு வீட்டுவேலையும் குறைந்தளவு படிப்பும் உள்ளது.

இந்த முறையில் சதா தந்தையைப் பின்பற்றுபவர்களுக்கும், தந்தைக்குச் சமம் ஆகுகின்ற இலக்கைக் கிரகித்துத் தொடர்ந்து முன்னேறுபவர்களுக்கும், பறக்கும் ஸ்திதியை அனுபவிக்கும் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நினைவுகளும், அதிகளவு அன்புடன் காலை வணக்கங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் இனிமையினூடாகத் தந்தைக்கு நெருக்கமாக இருக்கும் காட்சியை வழங்கும் மகாத்மா ஆகுவீர்களாக.

தமது எண்ணங்களில் இனிமையையும் தமது வார்த்தைகளில் இனிமையையும் தமது செயல்களில் இனிமையையும் கொண்டிருக்கும் குழந்தைகள் தந்தைக்கு நெருக்கமானவர்கள். இதனாலேயே, தந்தை அவர்களுக்குத் தினமும், இனிமையான, இனிமையான குழந்தைகளே எனக் கூறுகிறார். குழந்தைகளும், ‘இனிமையான, இனிமையான பாபா!’ எனப் பதில் அளிக்கிறார்கள். எனவே, தினமும் கூறும் இந்த இனிமையான வார்த்தைகள் உங்களை இனிமையால் நிரம்பச்செய்கின்றன. இனிமையை வெளிப்படுத்தும் மேன்மையான ஆத்மாக்கள் மகத்தானவர்கள். இனிமையே மகத்தானது. இனிமை இல்லாவிட்டால், மகத்துவத்தின் அனுபவமும் இருக்காது.

சுலோகம்:
இலேசாகவும் ஒளியாகவும் இருந்தவண்ணம் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். நீங்கள் அதில் சுவாரசியத்தை அனுபவம் செய்வீர்கள்.