27.01.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     15.04.84     Om Shanti     Madhuban


அன்பான, ஒத்துழைக்கும், சக்திசாலிக் குழந்தைகளின் மூன்று ஸ்திதிகள்.


பாப்தாதா அன்பான, ஒத்துழைக்கும், சக்திசாலிக் குழந்தைகளைப் பார்க்கிறார். அன்பான குழந்தைகளுக்கு இடையே வெவ்வேறு வகையான அன்பைக் கொண்ட குழந்தைகள் இருக்கிறார்கள். முதலாவது வகையினர், மற்றவர்களின் மேன்மையான வாழ்க்கைகளையும் மற்றவர்களின் மாற்றத்தையும் பார்த்து, அதன் விளைவாக அன்பானவர்கள் ஆகியவர்கள். இரண்டாவது வகையினர், ஏதாவதொரு நற்குணத்தின் அனுபவம் - அது சந்தோஷமோ அல்லது அமைதியோ - தொட்டதனால், அன்பானவர்கள் ஆகியவர்கள். மூன்றாவது வகையினர், சகவாசத்தை அதாவது, ஒன்றுகூடலையும் தூய ஆத்மாக்களின் ஆதாரத்தையும் அனுபவம் செய்த அன்பான ஆத்மாக்கள். நான்காவது வகையினர், இறைவனால் நேசிக்கப்படும் ஆத்மாக்கள். அனைவரும் அன்பானவர்களே. ஆனால், அவர்களின் அன்பு வரிசைக்கிரமமானது. நிஜமான அன்பான ஆத்மா, தந்தையை மிகச்சரியாக அறிந்திருப்பதன் மூலம் அன்பானவர் ஆ

அதேபோன்று, ஒத்துழைக்கும் ஆத்மாக்களுக்கு இடையேயும், வெவ்வேறு வகையான ஒத்துழைக்கும் ஆத்மாக்கள் இருந்தார்கள். முதலாவது வகையினர், பக்தி சம்ஸ்காரங்களுக்கேற்ப ஒத்துழைப்பவர்கள். இங்கிருப்பவை நல்லவை, இது ஒரு நல்ல இடம், இந்த மனிதர்கள் நல்ல வாழ்வு வாழ்கிறார்கள், நல்லதொரு இடத்தில் எதையாவது செய்வதன் மூலம் நாம் அதற்கான பலனைப் பெறுவோம் என்று நினைத்து அந்தக் கவர்ச்சியால் ஒத்துழைப்பவர்கள் ஆகுகிறார்கள். அதாவது, தமது சரீரம், மனம், செல்வத்தின் சிறிதளவைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் ஒத்துழைப்பவர்கள் ஆகுகிறார்கள். இரண்டாவது வகையினர், ஞானத்தையும் யோகத்தையும் கிரகிப்பதன் மூலம் சில பேறுகளின் அடிப்படையில் ஒத்துழைப்பவர்கள் ஆகுபவர்கள். மூன்றாவது வகையினர், வேறு எவருக்கும் அன்றி ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்கள். சகல பேறுகளுக்கும் ஒரே தந்தையே உள்ளார். ஒரே இடமே உள்ளது. ‘தந்தையின் பணியே எனது பணி’. இந்த முறையில், அவர்கள் இதைத் தமது தந்தையாகவும் தமது வீடாகவும் தமது பணியாகவும் தமது மேன்மையான இறைபணியாகவும் கருதி சதா ஒத்துழைப்பார்கள். எனவே, இதில் வேறுபாடு உள்ளது.

அதேபோன்று, சக்திசாலி ஆத்மாக்களும் இருக்கிறார்கள். இதிலும், வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். ‘நான் சக்தி சொரூபமான ஆத்மா, நான் சர்வசக்திவான் தந்தையின் குழந்தை’ என்ற ஞானத்தின் அடிப்படையில், அவர்கள் சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதற்கு முயற்சி செய்வார்கள். எவ்வாறாயினும், அவற்றை அறியும் மட்டத்தில் மட்டுமே அது இருக்கும். தமது விழிப்புணர்வில் இந்த ஞானக்கருத்துக்களை வைத்திருக்கும் வேளையில், சக்திவாய்ந்த கருத்தைக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் குறுகிய காலத்திற்கு அவர்கள் சக்திசாலிகள் ஆகுவார்கள். ஆனால், அந்தக் கருத்தை மறந்தவுடன், அவர்கள் தமது சக்தியை இழந்து விடுவார்கள். மாயையின் சிறிதளவு ஆதிக்கமும் அவர்களை ஞானத்தை மறக்கச் செய்து, சக்தியற்றவர்களாக ஆக்கிவிடும். இரண்டாவது வகையினர், ஞானத்தைக் கடைபவர்கள், ஞானத்தைப் பேசுபவர்கள், சக்திவாய்ந்த விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்கள். அந்த வேளையில் செய்யும் சேவைக்கான பலனைப் பெறுவதனால், அவர்கள் தங்களைச் சக்திசாலிகளாக உணருவார்கள். எவ்வாறாயினும், அது அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்கும்போதும் அல்லது அதைப் பற்றிப் பேசும்போதும் மட்டுமே. எல்லா வேளைக்கும் இருப்பதில்லை. முதலாவது, அவர்களின் சிந்திக்கும் நிலை. இரண்டாவது, அதைப் பற்றிப் பேசும் நிலை.

மூன்றாவது வகையினர், சதா சக்திசாலி ஆத்மாக்கள் ஆவார்கள். அவர்கள் வெறுமனே இதைப் பற்றிச் சிந்திப்பதோ அல்லது பேசுவதோ கிடையாது. ஆனால், அவர்கள் மாஸ்ரர் சர்வசக்திவான் என்பதன் சொரூபங்களாக இருப்பார்கள். சொரூபம் ஆகுவதெனில், சக்திசாலி ஆகுதல் என்று அர்த்தம். அவர்களின் ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு செயலும் இயல்பாகவே சக்திவாய்ந்ததாக இருக்கும். அவர்கள் விழிப்புணர்வின் சொரூபங்களாக இருப்பார்கள். இதனாலேயே, அவர்கள் சதா சக்திவாய்ந்த ஸ்திதியைக் கொண்டிருப்பார்கள். சக்திசாலி ஆத்மாக்கள் சதா தங்களை சர்வசக்திவானான தந்தையுடன் ஒன்றிணைந்திருப்பதாக அனுபவம் செய்வார்கள். அத்துடன் சதா தங்களின் மேல் ஸ்ரீமத்தின் கரம் பாதுகாப்புக் குடை போன்றிருப்பதையும் அனுபவம் செய்வார்கள். திடசங்கற்பத்தின் திறவுகோலுக்கான உரிமையை சதா வைத்திருப்பதனால், சக்திசாலி ஆத்மாக்கள் தங்களை வெற்றிப் பொக்கிஷங்களின் அதிபதிகளாக அனுபவம் செய்வார்கள். இத்தகைய ஆத்மாக்கள் சதா சகல பேறுகள் என்ற ஊஞ்சலில் ஆடுவார்கள். அவர்கள் சதா தமது மனங்களில் தமது மேன்மையான பாக்கியத்தின் பாடல்களைப் பாடுவார்கள். அவர்கள் சதா ஆன்மீக போதையுடன் இருப்பதனால், பழைய உலகின் கவர்ச்சியில் இருந்து இலகுவாக அப்பாற்பட்டிருப்பார்கள். அவர்கள் சிரமப்பட வேண்டியதில்லை. சக்திசாலி ஆத்மாக்களின் ஒவ்வொரு செயலும் வார்த்தையும் இயல்பாகவே தொடர்ந்து சேவை நிகழ வழிவகுக்கும். அவர்களின் சுயமாற்றமும் உலக மாற்றமும் சக்திவாய்ந்தவையாக இருப்பதனால், அவர்கள் சதா வெற்றிக்கு உத்தரவாதம் இருப்பதை அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு எப்போதும் இந்த அனுபவம் இருக்கும். எந்தப் பணியை இட்டும் அவர்களுக்குள் ‘நான் என்ன செய்வது? என்ன நிகழும்?’ என்ற எண்ணம் சிறிதளவேனும் தோன்றமாட்டாது. அவர்கள் சதா தமது வாழ்க்கையில் வெற்றி மாலையைச் சூடியிருப்பார்கள் : நான் வெற்றியாளன். நான் வெற்றி மாலையின் பாகம் ஆவேன். அவர்கள் இயல்பாகவும் எப்போதும் ‘வெற்றி எனது பிறப்புரிமை’ என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருப்பார்கள். உங்களுக்குப் புரிகிறதா? இப்போது உங்களையே கேளுங்கள்: நான் யார்? சக்திசாலி ஆத்மாக்கள் சிறுபான்மையினரே. பெரும்பாலானோர், வெவ்வேறு வகையான அன்பான, ஒத்துழைக்கும் ஆத்மாக்களாகவே இருக்கிறார்கள். எனவே, இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சக்திசாலி ஆகுங்கள். சங்கமயுகத்தின் மேன்மையான சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? அதைப் பற்றி அறிந்தவர்களாக மட்டும் ஆகாதீர்கள். ஆனால் அதை அடைபவர்கள் ஆகுங்கள். அச்சா.

நீங்கள் உங்களின் வீட்டிற்கு, தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் இங்கு வந்திருப்பதை இட்டு பாப்தாதா களிப்படைகிறார். நீங்களும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள், அல்லவா? இந்த சந்தோஷம் சதா மதுவனத்தில் மட்டும் அன்றி, சங்கம யுகம் முழுவதும் உங்களுடன் இருக்க வேண்டும். குழந்தைகள் சந்தோஷப்படும்போது, தந்தையும் களிப்படைகிறார். நீங்கள் மிக மிகத் தொலைவில் இருந்து பலவற்றையும் சகித்துக் கொண்டு இங்கு வந்துள்ளீர்கள். ஆனால், குறைந்தபட்சம் நீங்கள் இங்கு வந்துவிட்டீர்கள். நீங்கள் வெப்பத்தையும் குளிரையும் உணவையும் பானத்தையும் சகித்துக் கொண்டே இங்கு வந்துள்ளீர்கள். தூசுப் புயல்களும் ஏற்பட்டிருந்தன. அவை அனைத்தும் பழைய உலகில் நிகழவே செய்யும். எவ்வாறாயினும், நீங்கள் ஓய்வெடுத்தீர்கள், அல்லவா? ஓய்வெடுத்தீர்களா? மூன்றடி நிலம் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் இரண்டடி நிலமாவது உங்களுக்குக் கிடைத்தது. எவ்வாறாயினும், நீங்கள் உங்களின் வீட்டை, இனிமையான அருள்பவரின் வீட்டைக் கண்டுகொண்டீர்கள், அல்லவா? இந்த இடம், பக்தி மார்க்கத்தின் யாத்திரைகளை விடச் சிறப்பானது. நீங்கள் பாதுகாப்புக் குடையின் கீழ் வந்துள்ளீர்கள். நீங்கள் அன்புப் பராமரிப்பின் கீழ் வந்துள்ளீர்கள். இந்த யக்ஞத்தின் மேன்மையான இடத்தை அடைவதும் யக்ஞத்தின் பிரசாதத்திற்கான உரிமையைக் கொண்டிருப்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு தானியத்திற்கும் அதிகளவு பெறுமதி உள்ளது. நீங்கள் இவை அனைத்தையும் அறிவீர்கள், அல்லவா? அவர்கள் பிரசாதத்தின் ஒரு துணிக்கையையேனும் பெறுவதற்கான தாகத்துடன் இருக்கிறார்கள். ஆனால் இங்கோ, நீங்கள் வயிறு நிறைய பிரம்மாபோஜனத்தைப் பெறுகிறீர்கள். எனவே, நீங்கள் மிகுந்த பாக்கியசாலிகள். இந்த முக்கியத்துவத்தை உணர்ந்து பிரம்மாபோஜனத்தை உண்ணுங்கள். உங்களின் மனம் எல்லா வேளையும் மகத்துவமானது ஆகும்.

அச்சா, இந்த வேளையில், பஞ்சாபில் இருந்து அதிகமான எண்ணிக்கையினர் வந்துள்ளனர். அதிகளவு எண்ணிக்கையிலானவர்கள் ஏன் இங்கு ஓடோடி வந்துள்ளனர்? முன்னர் ஒருபோதும் இவ்வளவு பேர் வந்ததில்லை. நீங்கள் அனைவரும் இப்போது உணர்வுடையவர்கள் ஆகியுள்ளீர்கள்! பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், ஆன்மீக ஒன்றுகூடல்களுக்கும் அமிர்த வேளைக்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கும் மேன்மையான சிறப்பியல்பை பாப்தாதா பார்க்கிறார். அவர்கள் வெறுங்கால்களுடன் அமிர்த வேளைக்கு வருகிறார்கள். பஞ்சாபின் குழந்தைகள் அமிர்த வேளையின் முக்கியத்துவத்தை அறிந்த மகத்தானவர்கள் என்றே பாப்தாதா அவர்களைப் பார்க்கிறார். பஞ்சாப்வாசிகள் சதா ஆன்மீக நிறத்தின் சகவாசத்தால் நிறமூட்டப்படுபவர்கள். அவர்கள் சதா சத்தியத்தின் சகவாசத்தில் இருப்பவர்கள். நீங்கள் அவ்வாறானவர்கள், அல்லவா? பஞ்சாபில் உள்ள அனைவரும் அமிர்தவேளையில் சக்திசாலிகளாகிச் சந்திப்பைக் கொண்டாடுகிறீர்களா? பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் அமிர்த வேளையை இட்டுச் சோம்பல் அடைவதில்லை, அல்லவா? நீங்கள் தூங்கி விழுவதில்லை, அல்லவா? எனவே, எப்போதும் பஞ்சாபின் சிறப்பியல்பை நினைவு செய்யுங்கள். அச்சா.

கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களும் வந்துள்ளார்கள். கிழக்கின் சிறப்பியல்பு என்ன? (சூரியோதயம்). சூரியன் எப்போதும் அங்கேயே உதிக்கிறது. சூரியன் என்றால் ஒளிப் பொக்கிஷம் என்று அர்த்தம். எனவே, இப்போது கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் மாஸ்ரர் ஞான சூரியர்கள் ஆவார்கள். நீங்கள் சதா இருளை நீக்கி ஒளியைக் கொடுப்பவர்கள், அல்லவா? உங்களுக்கு இந்தச் சிறப்பியல்பு உள்ளதல்லவா? நீங்கள் ஒருபோதும் மாயையின் இருளுக்குள் பிரவேசிப்பதில்லை. நீங்கள் இருளை அகற்றும் மாஸ்ரர் அருள்பவர்கள் ஆகியுள்ளீர்கள், அல்லவா? சூரியன் அருள்பவர், அல்லவா? எனவே, நீங்கள் அனைவரும் மாஸ்ரர் சூரியர்கள், அதாவது, உலகிற்கே ஒளியைக் கொடுக்கும் பணியில் மும்முரமாக இருக்கும் மாஸ்ரர் அருள்பவர்கள் ஆகிவிட்டீர்கள் அல்லவா? வேறு எதற்கும் ஒருபோதும் நேரம் இன்றி, மும்முரமாக இருப்பவர்களிடம் செல்வதற்கு மாயைக்கும் நேரம் கிடையாது. எனவே, கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? மாயை கிழக்குப் பிராந்தியத்திற்கு வருகிறாளா? அவள் வந்தால், உங்களுக்குத் தலைவணங்க வருகிறாளா அல்லது அவள் உங்களை ஒரு மிக்கி மௌஸ் ஆக்குகிறாளா? மிக்கி மௌஸின் விளையாட்டுக்களை நீங்கள் விரும்புகிறீர்களா? கிழக்குப் பிராந்தியத்தின் கதி, தந்தையின் கதி ஆகும். எனவே, அது இராச்சியத்தின் கதி, அல்லவா? இராச்சிய சிம்மாசனத்தைக் கொண்டிருப்பவர்கள் அரசர்களா அல்லது மிக்கி மௌஸா? எனவே, நீங்கள் அனைவரும் மாஸ்ரர் ஞான சூரியர்களா? ஞான சூரியன் அங்கிருந்தே உதித்தார், அல்லவா? அவர் கிழக்கில் இருந்தே உதித்தார். உங்களின் சிறப்பியல்பை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? நீங்களே பாபா முதலில் வெளிப்பட்ட மேன்மையான கதியின் அதாவது, ஆசீர்வதிக்கப்பட்ட இடத்தின் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். வேறு எந்தப் பிராந்தியத்திற்கும் இந்தச் சிறப்பியல்பு கிடையாது. ஆகவே, சதா உங்களின் சிறப்பியல்பை உலகச் சேவைக்காகப் பயன்படுத்துங்கள். நீங்கள் என்ன சிறப்பியல்பை வெளிப்படுத்துவீர்கள்? சதா மாஸ்ரர் ஞான சூரியர்கள். நீங்கள் சதா ஒளியைக் கொடுக்கும் மாஸ்ரர் அருள்பவர்கள் ஆவீர்கள். அச்சா. நீங்கள் அனைவரும் பாபாவைச் சந்திக்க வந்துள்ளீர்கள். சதா மேன்மையான சந்திப்பைத் தொடர்ந்து கொண்டாடுங்கள். மேளா என்றால் சந்தித்தல் என்று அர்த்தம். ஒரு விநாடியேனும் அந்த மேளாவில் இருந்து, சந்திப்பில் இருந்து உங்களை விலக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் இங்கிருந்து செல்வதற்கு முன்னர் சதாயோகியின் அனுபவத்தை உறுதியானதாக்கிக் கொள்ளுங்கள். அச்சா.

ஒரேயொரு தந்தையுடன் சதா அன்பானவர்களாக இருக்கும் அன்பான ஆத்மாக்களுக்கும், ஒவ்வோர் அடியையும் இறைபணியில் எடுத்து வைக்கும் ஒத்துழைக்கும் ஆத்மாக்களுக்கும், சதா சக்தி சொரூபங்களாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், சதா வெற்றிக்கான உரிமைகளை அனுபவம் செய்யும் வெற்றியாளர் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குழுக்களுடன் பேசுகிறார்:

சதா ஒரு நம்பிக்கையுடனும் ஒரே ஆதாரத்துடனும் தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் சதா ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்கள். அத்துடன் நீங்கள் ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தை சதா பின்பற்ற வேண்டும். இந்த முயற்சியுடன் தொடர்ந்து முன்னேறுங்கள். மேன்மையான ஞானத்தின் சொரூபமாகவும் மகாயோகியாகவும் ஆகுங்கள்;. ஆழத்திற்குச் செல்லுங்கள். ஞானத்தின் ஆழத்திற்கு நீங்கள் செல்லும் அளவிற்கு, விலைமதிப்பற்ற அனுபவங்களின் இரத்தினங்களைப் பெறுவீர்கள். ஒருமுகப்பட்ட புத்திகளை உடையவர்கள் ஆகுங்கள். எங்கு ஒருமுகப்படுதல் உள்ளதோ, சகல பேறுகளின் அனுபவம் அங்கு இருக்கும். தற்காலிகப் பேறுகளின் பின்னால் செல்லாதீர்கள். அழியாத பேறுகளை வைத்திருங்கள். அழிகின்ற விடயங்களால் கவரப்படாதீர்கள். சதா உங்களைப் பொக்கிஷங்களின் அதிபதிகளாகக் கருதி, எல்லையற்றதற்குள் செல்லுங்கள். எல்லைக்குள் செல்லாதீர்கள். எல்லையற்றதன் களிப்பிற்கும் எல்லைக்குட்பட்ட கவர்ச்சியின் களிப்பிற்கும் இடையே பகலுக்கும் இரவிற்கும் இடையிலுள்ள வேறுபாடு காணப்படும். ஆகவே, விவேகியாகி, அனைத்தையும் புரிந்துணர்வுடன் செய்யுங்கள். உங்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மேன்மையாக்கிக் கொள்ளுங்கள்.

விசேடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மையான வாசகங்கள்:

அன்பான புத்திகளை உடையவர்களாகவும் வெற்றி இரத்தினங்களாகவும் ஆகுங்கள்.

அன்பான புத்திகள் என்றால் அல்லாவிற்குச் (இறைவன்) சொந்தமானவர்கள் என்றும் எப்போதும் அலௌகீகமான, அவ்யக்த ஸ்திதியில் இருப்பவர்கள் என்றும் அர்த்தம். அவர்களின் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு பணியும் அலௌகீகமானவை. அவர்கள் தாமரை போன்று பற்றற்றவர்களாக இருந்தவண்ணம் பணிகளைச் செய்வார்கள். பௌதீக உலகில் வாழ்ந்தாலும், எப்போதும் ஒரேயொரு தந்தையின்மீது அன்புடையவர்களாக இருப்பார்கள். இதுவே அன்பான புத்தியைக் கொண்டிருப்பவர்கள் என்று அர்த்தம். அன்பான புத்தி என்றால் வெற்றியாளர் என்று அர்த்தம். விநாச வேளையில் அன்பான புத்தியைக் கொண்டிருப்பவர்கள் வெற்றியாளர்கள், விநாச வேளையில் துண்டிக்கப்பட்ட புத்தியைக் கொண்டிருப்பவர்கள் விநாசம் அடைவார்கள் என்பதே உங்களின் சுலோகம் ஆகும். நீங்கள் இந்தச் சுலோகத்தை மற்றவர்களுக்குக் கூறுகிறீர்கள். விநாச வேளையில் துண்டிக்கப்பட்ட புத்தியை உடையவர்கள் ஆகாதீர்கள். அன்பான புத்தியை உடையவர்கள் ஆகுங்கள். அவ்வாறாயின், உங்களையே சோதித்துப் பாருங்கள்: எல்லா வேளையும் எனக்கு அன்பான புத்தி உள்ளதா? சிலவேளைகளில் நான் துண்டிக்கப்பட்ட புத்தியுடன் இருக்கிறேனா?

அன்பான புத்திகளை உடையவர்களால் ஸ்ரீமத்திற்கு எதிராக ஓர் எண்ணத்தையும் உருவாக்க முடியாது. ஸ்ரீமத்திற்கு எதிராக ஏதாவது எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்கள் இருக்குமாயின், உங்களை அன்பான புத்தியைக் கொண்டவர் எனக் கூற முடியாது. எனவே, சோதித்துப் பாருங்கள்: எனது ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு வார்த்தையும் ஸ்ரீமத்திற்கேற்ப உள்ளனவா? அன்பான புத்தி என்றால் புத்தியின் அன்பு எப்போதும் ஒரேயொரு அதியன்பிற்குரியவரிடம் இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் எப்போதும் ஒரேயொருவரிடம் அன்பு வைத்திருக்கும்போது, உங்களின் அன்பு வேறொருவருக்கோ அல்லது உடைமைகளிடமோ இருக்க முடியாது. ஏனெனில், அன்பான புத்தி என்றால் சதா பாப்தாதாவை உங்களின் முன்னால் அனுபவம் செய்தல் என்று அர்த்தம். பாபாவின் முன்னால் தனிப்பட்ட முறையில் சதா இருப்பவர்கள், பாபாவுடன் நேருக்கு நேர் இருப்பவர்களால் பாபாவிடமிருந்து தமது முகங்களை அப்பால் திருப்ப முடியாது.

அன்பான புத்திகளை உடையவர்களின் இதயத்தில் இருந்தும் உதடுகளில் இருந்தும் எப்போதும் வெளிவரும் வார்த்தைகள்: நான் உங்களுடனேயே உண்கிறேன். நான் உங்களுடனேயே இருக்கிறேன். நான் உங்களுடனேயே பேசுகிறேன். நான் நீங்கள் கூறுவதையே செவிமடுக்கிறேன். நான் உங்களுடனேயே சகல உறவுமுறைகளையும் பேணுகிறேன். நான் உங்களிடமிருந்தே சகல பேறுகளையும் பெறுகிறேன். அவர்கள் பேசாதபோதும், அவர்களின் கண்களும் முகங்களும் பேசும். எனவே, சோதித்துப் பாருங்கள்: நான் விநாச வேளையில் அன்பான புத்தியை உடையவராக ஆகிவிட்டேனா? அதாவது, ஒரேயொருவரிடம் நான் அன்பாக இருக்கிறேனா? என்னிடம் நிலையான, ஸ்திரமான ஸ்திதி உள்ளதா?

நீங்கள் சூரியனைப் பார்க்கும்போது, நிச்சயமாக அதன் கதிர்களையும் காண்பீர்கள். அதேபோன்று, நீங்கள் சதா ஞான சூரியனான தந்தையின் முன்னால் இருக்கும்போது, அதாவது, உண்மையில் நீங்கள் அன்பான புத்தியைக் கொண்டிருக்கும்போது, ஞான சூரியனிடமிருந்து சகல நற்குணங்களின் கதிர்களையும் நீங்கள் அனுபவம் செய்வீர்கள். இத்தகைய அன்பான புத்திகளைக் கொண்டிருப்பவர்களின் முகங்களில், அகநோக்கின் பிரகாசம் காணப்படும். அத்துடன் சங்கமயுகத்தினதும் எதிர்காலத்தினதும் சகல வகையான சுயமரியாதையின் போதையும் காணப்படும்.

உங்களின் சரீரம் எந்த வேளையிலும் அழிந்துபோகும் என்ற விழிப்புணர்வு உங்களுக்கு எப்போதும் இருக்குமாயின், உங்களின் விழிப்புணர்வில் விநாசத்திற்கான இந்த நேரத்தை வைத்திருப்பதன் மூலம், நீங்கள் இயல்பாகவே அன்பான புத்தியை விருத்தி செய்வீர்கள். விநாச வேளை வரும்போது, ஞானம் அற்றவர்களும் நிச்சயமாகத் தந்தையை நினைப்பதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால், அவரின் அறிமுகம் இல்லாமையால், அவர்களால் தமது அன்பை அவருடன் இணைக்க முடியாதிருக்கும். இவை இறுதிக்கணங்கள் என்பதை நீங்கள் எப்போதும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்தால், இதை நினைப்பதன் மூலம் நீங்கள் வேறு எவரையும் நினைக்க மாட்டீர்கள்.

சதா அன்பான புத்திகளைக் கொண்டிருப்பவர்களால் தமது மனங்களில் ஸ்ரீமத்திற்கு எதிரான வீணான அல்லது பாவகரமான எண்ணங்களைக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய அன்பான புத்தியை உடையவர்கள் வெற்றி இரத்தினங்கள் ஆவார்கள். சரீரதாரிகளிடம் எந்த முறையிலும் எந்த வகையான அன்பும் இருக்கக்கூடாது. இல்லாவிடின், நீங்கள் துண்டிக்கப்பட்ட புத்திகளை உடையவர்களின் பட்டியலில் இடம்பெறுவீர்கள். அன்பான புத்தியுடன் இருந்து, எப்போதும் அன்பின் உறவுமுறையை நிறைவேற்றுபவர்கள், எல்லா வேளையும் உலகின் சகல வகையான சந்தோஷத்தின் பேறுகளையும் பெறுவார்கள். அன்பின் பொறுப்பை நிறைவேற்றும் இத்தகைய குழந்தைகளின் புகழை பாப்தாதா இரவு பகலாகப் பாடுகிறார். அவர்கள் மற்றவர்களை முக்தி தாமத்தில் இருக்கச் செய்கிறார். அன்பின் பொறுப்பை நிறைவேற்றுபவர்களுக்கு உலக இராச்சியம் என்ற பாக்கியத்தைக் கொடுக்கிறார்.

ஒரேயொரு தந்தையிடம் இதயபூர்வமான உண்மையான அன்பு இருக்க வேண்டும். அப்போது மாயை ஒருபோதும் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டாள். அவள் அழிக்கப்பட்டுவிடுவாள். எவ்வாறாயினும், இதயபூர்வமான அன்பு இல்லாவிடின், நீங்கள் வெறுமனே தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தால், ஆனால் அவரின் ஆதாரத்தை எடுக்காவிட்டால், நீங்கள் தொடர்ந்து மாயையால் பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் மரணித்து வாழ்கிறீர்கள். புதிய பிறவியை எடுத்துள்ளீர்கள். புதிய சம்ஸ்காரங்களைப் பெற்றுள்ளீர்கள். அவ்வாறாயின், பழைய சம்ஸ்காரங்களுடன் உள்ள ஆடைகளை ஏன் விரும்புகிறீர்கள்? தந்தை விரும்பாத விடயங்களை ஏன் குழந்தைகள் விரும்ப வேண்டும்? எனவே, அன்பான புத்திகளை உடையவர்களாகி, எல்லா வேளைக்கும் உள்ளே உள்ள பலவீனங்கள், குறைபாடுகள், சக்தியின்மை, உணர்ச்சிவசப்படும் சுபாவம் போன்றவற்றின் பழைய கணக்குகளை முடித்துவிடுங்கள். இரத்தினங்கள் பதித்த ஆடையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, பழைய, கிழிந்துபோன ஆடையை விரும்பாதீர்கள்.

சில குழந்தைகள் தமது அன்பை இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதை வரிசைக்கிரமமாகவே பூர்த்தி செய்கிறார்கள். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் அவர்களின் இணைப்பு மாறுகிறது. அவர்களின் இலக்கு ஒன்றாகவும், அதற்கான தகைமைகள் வேறுபட்டவையாகவும் உள்ளன. நீங்கள் ஓர் உறவுமுறையின் பொறுப்பை நிறைவேற்றத் தவறினாலும், உதாரணமாக, தந்தையுடன் 75மூ உறவுமுறையும் வேறொரு ஆத்மாவுடன் 25மூ உறவுமுறையும் இருந்தால், உங்களால் தமது பொறுப்பை நிறைவேற்றுபவர்களின் பட்டியலில் இடம்பெற முடியாது. பொறுப்பை நிறைவேற்றுதல் என்றால் அதைச் சம்பூரணமாக நிறைவேற்றுதல் என்று அர்த்தம். உங்களின் மனம், சரீரத்தின் நிலைமைகள் எவ்வாறிருந்தாலும் அல்லது உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் நிலைமைகள் எவ்வாறிருந்தாலும், உங்களின் எண்ணங்களில் வேறு எந்த ஆத்மாவையும் நினைக்காதீர்கள். உங்களின் எண்ணங்களிலேனும் ஓர் ஆத்மாவின் விழிப்புணர்வு இருக்குமாயின், அந்த விநாடியில் ஒரு கணக்கு உருவாக்கப்படுகிறது. இதுவே ஆழமான கர்ம தத்துவம் ஆகும்.

சில குழந்தைகள் இப்போதும் அன்பை விருத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளார்கள். இதனாலேயே அவர்களால் யோகம் செய்ய முடியாமல் இருக்கிறது. குறுகிய நேரத்திற்கு யோகம் செய்து, பின்னர் அதைத் துண்டிப்பவர்கள், தமது அன்பை விருத்தி செய்வதற்கு முயற்சி செய்பவர்கள் எனப்படுகிறார்கள். அன்பின் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள் அன்பிலே தங்களை மறந்திருப்பார்கள். அவர்கள் தமது சரீரங்களின் விழிப்புணர்வையும் தமது சரீர உறவுமுறைகளின் விழிப்புணர்வையும் முற்றிலும் மறந்திருப்பார்கள். எனவே, நீங்களும் தந்தையுடன் இத்தகைய அன்பின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அப்போது நீங்கள் உங்களின் சரீரத்தை அல்லது சரீர உறவுகளை நினைக்க மாட்டீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் நேரம் மற்றும் எண்ணங்களின் பொக்கிஷங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சேமிப்புக் கணக்கை அதிகரித்துக் கோடீஸ்வரர் ஆகுவீர்களாக.

உண்மையில் உங்களிடம் பல பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால், நீங்கள் காலம் மற்றும் எண்ணங்கள் என்ற உங்களின் பொக்கிஷங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு கணமும் உங்களின் எண்ணங்கள் மேன்மையானவையாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். அப்போது உங்களின் சேமிப்புக்கணக்கு தொடர்ந்து அதிகரிக்கும். தற்சமயம், நீங்கள் ஒன்றைச் சேமித்தால், பலமில்லியன் மடங்கினைப் பெறுகிறீர்கள். இதுவே கணக்கீடு. இது ஒன்றிற்காகப் பலமில்லியன்களைத் திருப்பித் தரும் வங்கி ஆகும். ஆகவே, என்ன நிகழ்ந்தாலும், நீங்கள் எதையாவது துறக்க வேண்டியிருந்தாலும், நீங்கள் தபஸ்யா செய்ய வேண்டியிருந்தாலும், நீங்கள் பணிவானவர் ஆகவேண்டியிருந்தாலும், என்ன நிகழ்ந்தாலும், இந்த இரண்டு விடயங்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒரு கோடீஸ்வரர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்களின் மனதின் சக்தியால் சேவை செய்யுங்கள். பல மடங்கு மகத்தான வெகுமதியை நீங்கள் பெறுவீர்கள்.


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
நினைவின் சக்தியாலும் அவ்யக்த சக்தியாலும் தந்தை பிரம்மா தனது மனதையும் புத்தியையம் கட்டுப்படுத்தினார். அவர் சக்திவாய்ந்த தடையைப் பிரயோகித்துத் தனது மனதையும் புத்தியையும் கட்டுப்படுத்தினார். இதனால் அவர் விதை ஸ்திதியை அனுபவம் செய்தார். அதேபோன்று, குழந்தைகளான நீங்களும் தடையைப் பிரயோகித்து, உங்களின் வழிப்படுத்தும் சக்தியைப் பயன்படுத்தினால், உங்களின் புத்தியின் சக்தி வீணாகாது. எந்தளவிற்கு அதிக சக்தியை நீங்கள் சேமிக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் வேறுபிரித்தறியும் சக்தியும் தீர்மானிக்கும் சக்தியும் அதிகரிக்கும்.