23.01.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதையை எப்பொழுதும் பேணுங்கள். உங்களுடைய இந்த மாணவ வாழ்க்கையானது மிகவும் சிறந்தது. உங்கள் மீது வியாழ சகுனங்கள்; உள்ளன.
கேள்வி:
எக் குழந்தைகள் அனைவரிடமிருந்தும் அதிக அன்பைப் பெறுகின்றார்கள்?
பதில்:
பலருக்கும் நன்மை பயப்பதற்குக் கருவிகள் ஆகுபவர்கள். நன்மை பயப்பவர்கள் கூறுவார்கள்: நீங்கள் எனது தாய். எனவே எத்தனை பேருக்கு நீங்கள் நன்மையைக் கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பார்ப்பதற்கு உங்களைச் சோதியுங்கள். எத்தனை ஆத்மாக்களுக்கு நீங்கள் தந்தையின் செய்தியைக் கொடுக்கிறீர்கள்? தந்தையே தூதுவர். குழந்தைகளாகிய நீங்களும் தந்தையின் செய்தியைக் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் அவர்கள் இரு தந்தையர்களைக் கொண்டுள்ளனர் என்பதைக் கூறுங்கள். எல்லையற்ற தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள்.பாடல்:
நீங்கள் அன்புக்கடல். நாங்கள் ஒரு துளிக்காக ஏங்குகிறோம்!ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து தினமும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, இங்கு ஆத்ம உணர்வில் அமருங்கள். உங்கள் புத்தி தொடர்ந்தும் வெளியே அலைவதாக இருக்கக்கூடாது. நீங்கள் தந்தை ஒருவரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். அவர் மாத்திரமே ஞானக்கடலும் அன்புக்கடலும் ஆவார். கூறப்பட்டுள்ளது: ஞானத்தின் ஒரு துளி கூடப் போதுமானது. தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஆன்மீகத் தந்தையை நினைவுசெய்யுங்கள், நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் பின்னர் வைகுந்தமாகிய, அமரத்துவப் பூமிக்குச் செல்வீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இப்பொழுது உங்கள் தலை மீதுள்ள பாவச்சுமையை அகற்ற வேண்டும். அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒழுங்காகவும் தத்துவ பூர்வமாகவும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரிலும் உயர்ந்தவராக இருந்தவர் இப்பொழுது இறுதியில் கீழே தபஸ்யா செய்து கொண்டிருக்கின்றார். ஒரேயொரு தந்தையே உங்களுக்கு இராஜயோக தபஸ்யாவைக் கற்பிக்கின்றார். ஹத்தயோகம் முற்றிலும் வேறுபட்டது. அது எல்லைக்குட்பட்டதும், இதுவோ எல்லையற்றதும் ஆகும். அது துறவறப் பாதையும், இது இல்லறப் பாதையும் ஆகும். தந்தை கூறுகிறார்: நீங்கள் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள். அரசரையும், அரசியையும் போன்றே, பிரஜைகளும் இருந்தார்கள். இல்லறப் பாதையைச் சேர்ந்த தூய தேவர்கள் இருந்தார்கள், பின்னர் அவர்கள் பாவப் பாதைக்குச் சென்றார்கள். அதன் உருவங்களும் உள்ளன. பார்ப்பதற்குக்கூட வெட்கப்படுமளவுக்கு அத்தகைய அசுத்தமான உருவங்களை அவர்கள் உருவாக்குகிறார்கள். அவர்களுடைய புத்தி முற்றாக செயற்படாமல் போய்விட்டது. “நீங்கள் அன்புக்கடல்” என்ற புகழ் ஒரே தந்தைக்கு மாத்திரம் உரியது. அது ஒரு துளி அன்பல்ல் அது ஞானத்தைக் குறிக்கின்றது. நீங்கள் தந்தையை இனங்கண்டு உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்காக இங்கு வருகின்றீர்கள். தந்தை உங்களுக்குச் சற்கதிக்கான ஞானத்தையே கொடுக்கின்றார். நீங்கள் சிறிதளவைச் செவிமடுத்து, சற்கதியைப் பெறுகிறீர்கள். இங்கிருந்து, குழந்தைகளாகிய நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்நேரத்தில் முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது. தந்தை உங்களுக்கு உலக இராச்சியத்தைத் தருவதற்காக வந்துள்ளார். நீங்கள் அனைவரும் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள். அதன் படங்கள் இப்பொழுதும் உள்ளன. எவ்வாறாயினும், அது நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கான விடயம் அல்ல் அது தவறாகும். தந்தை மாத்திரமே எப்பொழுதும் தர்மவானாக உள்ளார் எனக் கூறப்படுகிறது. முழு உலகமும் தந்தையினூடாகத் தர்மம் மிக்கதாக ஆகுகின்றது. அது இப்பொழுது அதர்மம் மிக்கதாக உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். எவ்வாறாயினும், ஞானத்தைச் செவிமடுப்பவர்கள், அதனைச் செவிமடுப்பதனால் வியப்படைந்து, அதனை ஏனையோருக்குக் கூறிப் பின்னர் ஓடிவிடுவதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஓ மாயையே! அவர்களைத் தந்தையிடமிருந்து திருப்பிவிடுமளவுக்கு நீங்கள் மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் அரைக் கல்பத்திற்கு இராச்சியத்தை ஆட்சிசெய்துள்ளதால், அவள் ஏன் சக்திவாய்ந்தவளாக இருக்க மாட்டாள்? இராவணன் என்றால் என்ன என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இங்கும் சில குழந்தைகள் விவேகமானவர்களும், சில குழந்தைகள் விவேகமற்றவர்களும் ஆவார்கள். நீங்கள் இப்பொழுது வியாழ சகுனங்களை உங்கள் மீது கொண்டுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதனாலேயே நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்;கின்றீர்கள். மரணிப்பவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான முயற்சியைச் செய்வதில்லை. மக்;கள் கூறவேண்டும் என்பதற்காக இன்ன இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என்று கூறுகிறார்கள். நீங்கள் உண்மையிலேயே சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்;கின்றீர்கள், அதாவது, சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதாக வேறு எவருமே கூறமாட்டார்கள். அவர்கள் கூறுவார்கள்: நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? அமைதியாக இருங்கள்! மக்கள் உங்களுக்கு எல்லைக்குட்பட்ட விடயங்களையே கூறுகிறார்கள், தந்தையோ உங்களுக்கு எல்லையற்ற விடயங்களைப் பற்றிக் கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு முயற்சி செய்யவேண்டும். நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். முன்னைய கல்பத்தில் முயற்சி செய்தவர்களும், ஓர் அந்தஸ்தைக் கோரியவர்களும் மீண்டும் அதைச் செய்வார்கள். நீங்கள் மாயையை வெற்றிகொள்ளுமாறு பல தடவைகள் செய்யப்பட்டுள்ளீர்கள். பின்னர் நீங்கள் அவளால் தோற்கடிக்கப்பட்டும் உள்ளீர்கள். இந்நாடகம் நிச்சயிக்கப்பட்டது, எனவே குழந்தைகளாகிய நீங்கள் மரண பூமியில் இருந்து அமரத்துவப் பூமிக்குச் செல்கின்றீர்கள் என்று மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மாணவ வாழ்க்கை மிகவும் சிறந்தது. இந்நேரத்தில் உங்கள் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. மனிதர்கள் எவருக்கும் இது தெரியாது. கடவுளே வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதுவே அதிசிறந்த மாணவ வாழ்க்கை. ஆத்மாக்களே கற்கின்றனர், பின்னர் கூறப்பட்டுள்ளது: இவரின் பெயர் இதுவாகும். ஆத்மாவே ஆசிரியர். ஆத்மாக்களே கற்றுக் கிரகிக்கின்றனர். ஆத்மாக்களே செவிமடுக்கின்றார்கள், ஆனால் சரீர உணர்வுள்ளதால், அவர்கள் புரிந்துகொள்வதில்லை. சத்தியயுகத்தில், ஆத்மாவாகிய நீங்கள், அச்சரீரத்தைப் பெற்றுள்ளீர்கள் என்பதையும், இப்பொழுது வயோதிப வயதை அடைந்துள்ளீர்கள் என்பதையும் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் இப்பொழுது அப்பழைய ஆடையை நீக்கிப் புதியதொன்றைப் பெறவேண்டும் என்ற காட்சியை விரைவாகக் கொண்டிருப்பீர்கள். ரீங்காரமிடும் வண்டின் உதாரணமும் (பிரம்மரி) தற்காலத்தைப் பற்றியதாகும். நீங்கள் பிராமண ஆசிரியர்கள் (பிராமணி) என்பதை இப்பொழுது அறிவீர்கள். நாடகத்திற்கேற்ப, உங்களிடம் வருபவர்க்கெல்லாம் நீங்கள் ஞானத்தை ரீங்காரமிடுகிறீர்கள். பின்னர், அவர்கள் மத்தியிலும், சிலர் பலவீனமானவர்கள், அவர்கள் சீரழிந்து விடுகிறார்கள். சந்நியாசிகளால் இந்த உதாரணத்தைத் தரமுடியாது. அவர்கள் ஏனையோரைத் தங்;களைப் போல் ஆக்க மாட்டார்கள். உங்களுக்கு ஓர் இலக்கும் இலட்சியமும் உள்ளது. இது அமரத்துவக் கதையாகிய, சத்திய நாராயணனின் கதை ஆகும். அக்கதைகள் அனைத்தும் உங்களுடையவையே ஆகும். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றார். மிகுதி அனைத்தும் பொய்யானவை. உலகில், மக்கள் சத்திய நாராயணனின் கதையை உரைத்துப் பின்னர் பிரசாதத்தை (புனித உணவு) விநியோகிக்கின்றார்கள். அந்த எல்லைக்குட்பட்ட விடயங்களுக்கும், இந்த எல்லையற்ற விடயங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களைத் தருகின்றார். நீங்கள் அவற்றைக் குறித்துக்கொள்கிறீர்கள். எவ்வாறாயினும், அனைத்துப் புத்தகங்களும் சமயநூல்களும் அழிக்கப்பட்டுவிடும். பழையவை எதுவும் எஞ்சியிருக்காது. கலியுகத்தில் இன்னமும் 40,000 வருடங்கள் எஞ்சியுள்ளதாக மக்கள் எண்ணுகிறார்கள், இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் பெரும் கட்டடங்களைக் கட்டிப் பணத்தைச் செலவிடுகின்றார்கள். கடல் எதையாவது மீதம் வைக்குமா? அது அனைத்தையும் ஒரு பேரலையால் விழுங்கிவிடும். பம்பாய் முன்னர் இருக்கவில்லை, அது எஞ்சியிருக்க மாட்டாது. கடந்த 100 வருடங்களில் தோன்றியுள்ள விடயங்கள் அனைத்தையும் பாருங்கள். முன்னர், அரசப் பிரதிநிதிகள் (ஏiஉநசழல) நான்கு குதிரைகள் பூட்டிய வண்டியில் பயணிப்பது வழக்கம். கடந்த சில வருடங்களில் என்ன நடைபெற்றுள்ளது எனப் பாருங்கள்! சுவர்க்கம் மிகவும் சிறியதாகும். உங்கள் மாளிகைகள் ஆற்றங்கரைகளில் இருக்கும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் மீது வியாழ சகுனங்கள் உள்ளன. நீங்கள் மிகவும் செல்வந்தராக ஆகுகின்றீர்கள் என்கின்ற சந்தோஷத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். ஒருவர் கடனாளி ஆகும்பொழுது, அவர்;மீது தீய சகுனங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது. உங்கள் மீதுள்ள சகுனங்களுடன் நீங்கள் இப்பொழுது சந்தோஷமாக இருக்கின்றீர்கள். தந்தையாகிய கடவுளே, இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்;கின்றார். கடவுள் எவருக்காவது கற்பிப்பாரா? உங்களுடைய இந்த மாணவ வாழ்க்கை சிறந்தது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாங்கள் சாதாரண ஆண்களில் இருந்து நாராயணன் ஆகுகிறோம்;;; நாங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகிறோம். நாங்கள் இங்கு வந்தோம், பின்னர் இராவண இராச்சியத்தில் அகப்பட்டுக் கொண்டோம். நாங்கள் இப்பொழுது சந்தோஷ பூமிக்குச் செல்வோம். நீங்கள் சங்கமயுகத்துப் பிராமணர்கள். பிரம்மாவினூடாக ஸ்தாபனை நடைபெறுகிறது. அங்கு ஒருவர் மாத்திரம் இருக்க மாட்டார்;; பலர் இருப்பார்கள். நீங்கள் கடவுளின் உதவியாளர்கள் ஆகியுள்ளீர்கள். சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற சேவையைக் கடவுள் செய்கின்றார், நீங்கள் அதில் அவருக்கு உதவுகிறீர்கள். அவருக்கு அதிகமாக உதவுபவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். எவரும் பட்டினியால் மரணிக்க மாட்டார்கள். இங்கு, அரசாங்கம் பிச்சைக்காரர்களை விசாரித்தபொழுது, அவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை வைத்திருந்ததைக் கண்டுபிடித்தார்கள். எவரும் பட்டினியால் மரணிக்க மாட்டார்கள். இங்கும், நீங்கள் தந்தைக்குரியவராக இருக்கிறீர்கள். ஒரு தந்தை ஏழையாக இருந்தாலும், குழந்தைகளே வாரிசுகள் ஆதலால், தனது குழந்தைகள் உண்பதற்கு ஏதாவது இருக்கும்வரை அவரும் எதையும் உண்ண மாட்டார். அவர் அவர்கள் மீது அன்பு வைத்துள்ளார். அங்கு, எவராவது ஏழையாக இருப்பார்கள் என்ற கேள்வியே கிடையாது; அவர்களிடம் அதிகளவு உணவு இருக்கும். அங்கு எல்லையற்ற செல்வம் இருக்கின்றது. அவர்கள் உடையணிகின்ற பாணியைப் பாருங்கள்;; அது மிகவும் அழகானதாகும். இதனாலேயே பாபா கூறுகிறார்: உங்களுக்கு நேரம் இருக்கும்பொழுது, சென்று இலக்ஷ்மி நாராயணனின் படத்திற்கு முன்னால் அமருங்கள். உங்களால் இரவிலும் அதன் முன்னிலையில் அமர முடியும். இலக்ஷ்மி நாராயணனின் படத்தைப் பார்த்தவாறே உறங்கச் செல்லுங்கள். ஓஹோ! பாபா எங்களை அவர்களைப் போன்று ஆக்குகிறார்! இதைப் பயிற்சி செய்து, நீங்கள் எவ்வளவு களிப்படைகின்றீர்கள் என்று பாருங்கள். பின்னர், காலையில் எழுந்து உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அனைவரிடமும் இலக்ஷ்மி நாராயணனினதும், ஏணியினதும் படங்கள் இருக்க வேண்டும். யார் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது மாணவர்களாகிய உங்களுக்குத் தெரியும். அவருடைய படமும் உள்ளது. அனைத்தும் கல்வியிலேயே தங்கியுள்ளது. நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள், ஆனால் உங்கள் அந்தஸ்தானது நீங்கள் எவ்வாறு கற்கின்றீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. பாபா கூறுகின்றார்: இம்முயற்சியைச் செய்யுங்கள்: நான் ஓர் ஆத்மா, ஒரு சரீரமல்ல. நான் பாபாவிடமிருந்து எனது ஆஸ்தியைக் கோருகின்றேன். இதில் சிரமம் எதுவும் இல்லை. தாய்மார்களுக்கு இது மிகவும் இலகுவானது. ஆண்கள் தங்களுடைய வியாபாரம் போன்றவற்றிற்குச் செல்கின்றார்கள். இந்த இலக்கினதும் இலட்சியத்தினதும் படத்தைப் பயன்படுத்தி உங்களால் அதிக சேவை செய்ய முடியும். நீங்கள் பலருக்கு நன்மையளிப்பீர்கள், அவர்கள் உங்களைப் பெருமளவு நேசிப்பார்கள். அவர்கள் கூறுவார்கள்: நீங்கள் எங்களுடைய தாய். தாய்மார்களாகிய நீங்கள் உலகிற்கு நன்மை அளிப்பதற்கான கருவிகள் ஆகியுள்ளீர்கள். எத்தனை பேருக்கு நீங்கள் நன்மையைக் கொண்டு வருகிறீர்கள் என்று பார்ப்பதற்கு உங்களைச் சோதியுங்கள். எத்தனை பேருக்கு நீங்கள் தந்தையின் செய்தியைக் கொடுத்தீர்கள்? தந்தையே தூதுவர். வேறு எவரும் தூதுவர் என அழைக்கப்படுவதில்லை. நீங்கள் பின்னர் ஏனையோருக்குக் கொடுக்க வேண்டிய செய்தியைத் தந்தை உங்களுக்குத் தருகின்றார்: எல்லையற்ற தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூதுவராகிய தந்தையின் குழந்தைகள், அனைவருக்கும் நீங்கள் செய்தியைக் கொடுக்கின்றீர்கள். அவர்களுக்கு இரு தந்தையர்கள் உள்ளனர் என்று அனைவருக்கும் கூறுங்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்குச் சந்தோஷம், அமைதி என்ற ஆஸ்தியைக் கொடுத்தார். நாங்கள் சந்தோஷ தாமத்தில் இருந்தோம், ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தார்கள். நாங்கள் ஜீவன்முக்திக்குச் சென்றோம். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும், நாங்கள் பின்னர் அங்கு, உலகின் அதிபதிகள் ஆகுவோம். ஒரு பாடல் உள்ளது: பாபா, உங்களிடமிருந்து நாங்கள் உலக இராச்சியத்தைப் பெறுகின்றோம். பூமி, கடல், ஆகாயம் அனைத்தும் எங்கள் கைகளில் உள்ளன. இந்நேரத்தில், நாங்கள் தந்தையிடமிருந்து எங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியைக்; கோருகின்றோம். நீங்கள் சிவசக்தி சேனையாகிய, மறைமுகமான போர் வீரர்கள். இது ஞான வாளும் ஞான அம்புகளும் ஆகும். அம்மக்கள் இறைவியரைப் பௌதீக ஆயுதங்களுடன் காட்டியுள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் பல ஆலயங்கள் உள்ளன. பல படங்கள் போன்றவையும் உள்ளன. இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் பக்தி மார்க்கத்தில் அச்செல்வம் அனைத்தையும் பயன்படுத்தினீர்கள். அவை யாவும் அழிக்கப்படவுள்ளன. அனைத்தும் மூழ்கிவிடும். நீங்கள் எவ்வாறு வைரங்களையும் இரத்தினங்களையும் சுரங்கங்களிலிருந்து கொண்டுவருவீர்கள் என்ற காட்சிகள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன, ஏனெனில் அவை யாவும் இந்நேரத்தில் புதைக்கப்படும். பேரரசர்கள் பொக்கிஷக் களஞ்சியங்களை நிலத்தினடியில் கொண்டுள்ளனர். அவை யாவும் புதைக்கப்பட்டுவிடும். பின்னர், உங்கள் கைவினைஞர்கள் அவற்றை மீண்டும் மேலே கொண்டுவருவார்கள். இத் தங்கம் அனைத்தையும் வேறு எங்கிருந்து அவர்கள் கொண்டு வருவார்கள்? நீங்கள் அஜ்மீரில் சுவர்க்கத்தின் மாதிரிக் காட்சியைப் பார்க்க முடியும். பாபா அதனையொத்த அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கும்படி உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் சுவர்க்கத்தின் முதற்தர மாதிரியொன்றை உருவாக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். முன்னர், உங்களுக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் அனைத்தையும் அறிந்துள்ளீர்கள். நான் ஒவ்வொருவருக்குள்ளும் என்ன இருக்கின்றது என்பதை அறிவேன் என்பதல்ல. விகாரமுடைய சிலரும்; இங்கு வருவது வழக்கம். அவர்களிடம் வினவப்பட்டது: நீங்கள் ஏன் இங்கே வந்துள்ளீர்கள்? அவர்கள் பதிலளிப்பார்கள்: நான் இங்கு வந்தால்தான் என்னால் விகாரங்களிலிருந்து விடுபட முடியும். நான் மிகவும் பாவாத்மா. தந்தை கூறுவார்: சரி, நீங்கள் நன்மையடைவீர்களாக! மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் அந்த விகாரங்களை வெற்றிகொள்ள வேண்டும், ஏனெனில் அப்பொழுது மாத்திரமே நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். மாயை குறைந்தவள் அல்லள். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து, இலக்ஷ்மி நாராயணன் போன்று ஆகுகின்றீர்கள். அவர்கள் கொண்டிருக்கும் அழகைப் போன்று வேறு எவரும் கொண்டிருக்க முடியாது. அது இயற்கை அழகு. சுவர்க்கம் ஒவ்வொரு 5000 வருடங்களும் ஸ்தாபிக்கப்படுகின்றது, பின்னர் நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வருகிறீர்கள். உங்களால் எழுத முடியும்: இது வைத்தியசாலை சார்ந்த பல்கலைக்கழகம். ஒன்று ஆரோக்கியத்திற்கும், மற்றையது செல்வத்திற்குமானது. வந்து 21 பிறவிகளுக்கு ஆரோக்கியம், செல்வம், சந்தோஷத்தை அடையுங்கள். வியாபாரிகளும் தங்கள் சொந்தப் பெயர்ப் பலகைகளைப் போட்டுள்ளனர். அவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு வெளியேயும் பெயர்ப் பலகைகளைப் போட்டுள்ளனர். இப்போதையைக் கொண்டுள்ளவர்கள் மாத்திரம் இவ்விடயங்களை எழுதுவார்கள். வருகின்ற எவருக்கும் விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரினீர்கள், பின்னர் நீங்கள் 84 பிறவிகளை எடுத்துத் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது தூய்மை ஆகுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். தந்தையை நினைவுசெய்யுங்கள். பாபாவும் அதையே செய்கின்றார். அவர் முதற்தர முயற்சியாளர். சில குழந்தைகள் எழுதுகிறார்கள்: பாபா, புயல்கள் வருகின்றன. இது நடைபெறுகின்றது. நான் பதில் எழுதுகிறேன்: அனைத்துப் புயல்களும் முதலில் எனக்கே வருகின்றன. முதலில் நான் அனுபவசாலி ஆகினாலே பின்னர் உங்களுக்கு அவற்றைப் பற்றி விளங்கப்படுத்த முடியும். அது மாயையின் தொழில். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: இனிமையான, அன்பிற்கினிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது உங்கள் மீது வியாழ சகுனங்களைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய ஜாதகத்தை எவரிடமும் காண்பிக்கத் தேவையில்லை; பாபா உங்களுக்கு அனைத்தையும் கூறுகின்றார். அங்கு, நீங்கள் நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். கிருஷ்ணரும் யோகேஷ்வரர் என அழைக்கப்படுகின்றார். யோகேஷ்வரரே அவருக்கு யோகத்தைக் கற்பித்தார், எனவே அவர் அவ்வாறு ஆகினார். எந்த மனிதரோ அல்லது சந்நியாசி போன்ற எவருமோ யோகேஷ்வரர் என அழைக்கப்படுவதில்லை. ஈஸ்வரர் (கடவுள்) உங்களுக்கு யோகத்தைக் கற்பிக்கின்றார். இதனாலேயே ‘யோகேஷ்வரர்’, ‘யோகேஷ்வரி’ என்ற பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நேரத்திலேயே நீங்கள் ‘ஞானேஷ்வரரும்’, ஞானேஷ்வரியும்’ ஆவீர்கள். பின்னர் நீங்கள் சென்று இராஜ இராஜேஸ்வரி (இளவரசர்களும் இளவரசிகளும்) ஆகுவீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் உங்கள் முன்னிலையில் வைத்திருந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் முன்னிலையில் உள்ள இலக்ஷ்மி நாராயணன் படத்தைப் பார்த்து, உங்களுடனே பேசுங்கள்: ஓஹோ பாபா! நீங்கள் என்னை அவர்களைப் போன்று ஆகச் செய்கின்றீர்கள். எங்கள் மீது இப்பொழுது வியாழ சகுனங்கள் உள்ளன.2. உங்களைப் போன்று ஏனையோரையும் ஆக்குவதற்கு, ஒரு ரீங்காரமிடும் வண்டு போன்று தொடர்ந்தும் ஞானத்தை ரீங்காரமிடுங்கள். கடவுளின் உதவியாளராகிச் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதில் தந்தைக்கு உதவி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சரீர உணர்வு எதனையும் ஆத்ம உணர்வு ஸ்;திதியாக மாற்றுவதால், எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பீர்களாக.
முன்னேறிச் செல்லும்பொழுது, உங்களுக்கு விருப்பமின்மை இல்லாது விட்டால், அதற்கான பிரதான காரணம் சரீர உணர்வே ஆகும். உங்களுக்குச் சரீரங்களின் உணர்வு எதனிலும் விருப்பமின்மை ஏற்படும்வரை, எதனிலும் நிரந்தரமான விருப்பமின்மையைக் கொண்டிருக்க மாட்டீர்கள். உறவுமுறைகளில் விருப்பமின்மையைக் கொண்டிருப்பது ஒரு பெரிய விடயமல்ல் உலகில் பலரும் விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வாhயினும், இங்கு, நீங்கள் சரீர உணர்வின் பல ரூபங்களை அறிந்துகொண்டு, அவற்றை ஆத்ம உணர்வு ஸ்;திதிiயாக மாற்ற வேண்டும். இதுவே எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டவர் ஆகுவதற்கான வழியாகும்.
சுலோகம்:
உங்களுடைய எண்ணங்களின் பாதங்கள் உறுதியாக இருக்கும்பொழுது, கருமேகங்கள் போன்ற சூழ்நிலைகள் மாற்றமடைந்து விடும்.
தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
இந்தப் பிறவிக்கான அல்லது உங்கள் கடந்த காலப் பிறவிக்கான கணக்கு எதுவானாலும், அது அன்புத் தீ எனும் ஸ்திதி இல்லாமல் எரிக்கப்பட முடியாது. இப்பொழுது, தந்தை பிரம்மாவைப் போன்று, நிலையான, சக்திவாய்ந்த நினைவு ஸ்திதியில் விசேட கவனம் செலுத்தி, உங்கள் பாவக் கணக்குகள் அனைத்தையும் எரித்து விடுங்கள். அதுவே வெளிச்ச வீடாகவும் சக்தி வீடாகவும் இருக்கின்ற ஸ்திதியாகிய, விதை ஸ்திதியான, தீயின் ரூபம் ஆகும்.