07.07.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     26.12.84     Om Shanti     Madhuban


சத்தியத்தின் சக்தி.
 


இன்று, சர்வசக்திவான் தந்தை குறிப்பாக இரண்டு அதிகாரங்களைப் பார்க்கிறார். ஒன்று, ஆளும் அதிகாரம். மற்றையது, இறை அதிகாரம். இரண்டு அதிகாரங்களின் விசேடமான பாகங்களும் இப்போது சங்கம யுகத்தில் செயற்படுத்தப்படுகின்றன. ஆளும் அதிகாரம் குழப்பத்தில் உள்ளது. இறை அதிகாரம் சதா ஆட்ட அசைவில்லாமல் உள்ளது. இறை அதிகாரம், சத்தியத்தின் சக்தி எனப்படுகிறது. ஏனெனில், இந்த அதிகாரத்தைக் கொடுக்கும் ஒருவர், உண்மையான தந்தையும், உண்மையான ஆசிரியரும் சத்குருவும் (உண்மையான குரு) ஆவார். இதனாலேயே, சத்தியத்தின் சக்தியானது எப்போதும் மேன்மையானது. நீங்கள் சத்தியத்தின் சக்தியால் சத்தியபூமியை, சத்தியயுகத்தை ஸ்தாபிக்கிறீர்கள். சத்தியம் என்றால் அழியாதது என்றும் அர்த்தம். சத்தியத்தின் சக்தியால், நீங்கள் அழியாத ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இந்தக் கல்வி நீங்கள் அழியாத அந்தஸ்தைப் பெறச் செய்கிறது. இதன் மூலம் நீங்கள் அழியாத ஆசீர்வாதங்களைப் பெற்றீர்கள். இந்தப் பேற்றினை எவராலும் எடுக்க முடியாது. பக்தி மார்க்கத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, சத்தியத்தின் சக்தியைக் கொண்டுள்ள உங்களை முழு உலகமும் புகழ்கிறது, பூஜிக்கிறது. உங்களின் புகழும், வழிபாடும் அழியாதவை என்பதே இதன் அர்த்தமாகும். சத்தியம் என்றால் சத்தியம் (அழியாதது) என்று அர்த்தம். எனவே, அனைத்திற்கும் முதலில் நீங்கள் எதை அறிந்தீர்கள்? நீங்கள் உங்களை ஓர் உண்மையான (அழியாத) ஆத்மா என்று அறிந்து கொண்டீர்கள். உண்மையான தந்தையின் உண்மையான அறிமுகத்தை நீங்கள் அறிந்தீர்கள். இந்த உண்மையான இனங்காணுதலாலும் உண்மையான ஞானத்தாலும் சத்தியத்தின் சக்தி தவிர்க்க முடியாதபடி சத்தியமாக உள்ளது. சத்தியத்தின் சக்தியால், பொய்மையின் இருளும் அறியாமை இருளும் இயல்பாகவே முடிந்துவிடும். அறியாமை எப்போதும் பொய்யானது. ஞானம் உண்மையானது. அதுவே சத்தியமானது. இதனாலேயே, பக்தர்கள் இறைவனின் புகழை, சத்தியம், சிவம் (உபகாரி), சுந்தரம் (அழகானவர்) எனப் பாடுகிறார்கள். சத்தியத்தின் சக்தி இயல்பாகவே உங்களைச் சடப்பொருளை வென்றவர்களாகவும் மாயையை வென்றவர்களாகவும் ஆக்குகிறது. இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் உண்மையான தந்தையின் குழந்தையாக இருப்பதனால், எந்தளவிற்கு நான் சத்தியத்தின் சக்தியைக் கிரகித்துள்ளேன்?

சத்தியத்தின் சக்தியைக் கொண்டிருக்கும் ஒருவரின் அடையாளம், அவர் எப்போதும் பயமற்றவராகவே இருப்பார். ‘எங்கு சத்தியம் உள்ளதோ, அங்கு ஆத்மா நடனம் ஆடுவார்’ என நீங்கள் முரளியில் கேட்டிருப்பீர்கள். இதன் அர்த்தம், சத்தியத்தின் சக்தியைக் கொண்டிருக்கும் ஒருவர் சதா கவலையற்றவராக, கவலைகளில் இருந்து விடுபட்டவராக, பயமற்றவராக இருப்பார் என்பதாகும். அதனால் அந்த ஆத்மா சதா சந்தோஷ நடனம் ஆடிக் கொண்டிருப்பார். எங்கு கவலை அல்லது பயம் உள்ளதோ, அங்கு உங்களால் சந்தோஷ நடனம் ஆட முடியாது. நீங்கள் உங்களின் சொந்தப் பலவீனங்களைப் பற்றியும் கவலைப்படுவீர்கள். உங்களின் சம்ஸ்காரங்களும் எண்ணங்களும் பலவீனமாக இருக்கும்போது, இது சத்தியப் பாதையாக இருப்பதனால், உங்களின் மனதிலும் நிச்சயமாக அந்தப் பலவீனங்களின் எண்ணங்கள் தோன்றும். பலவீனங்கள் நிச்சயமாக உங்களின் மனதில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்கும். காலத்திற்கேற்ப அல்லது சூழ்நிலைகளுக்கேற்ப நீங்கள் அதை மறைக்க முயற்சி செய்தாலோ அல்லது தற்காலிகமான நேரத்திற்கு செயற்கையான புன்னகையுடன் இருந்தாலோ, சத்தியத்தின் சக்தியானது நிச்சயமாக உங்களின் பலவீனங்களை நீங்கள் உணரச் செய்துவிடும். தந்தையிடமிருந்து அல்லது உங்களிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அதை மற்றவர்களிடமிருந்து மறைக்க முடியும். சிலவேளைகளில் நீங்கள் எதையாவது உணர்ந்ததால், நீங்கள் உங்களை முன்னேறச் செய்யக்கூடும். ஆனால், உங்களின் கவனக்குறைவால், சத்தியத்தின் சக்தி நிச்சயமாக மனதின் குழப்பத்தின் ரூபத்தில், சந்தோஷமற்ற நிலை அல்லது வீணான எண்ணங்களின் ரூபத்தில் ஏற்படும். ஏனெனில், சத்தியத்தின் முன்னால் பொய்மையால் நிலைத்திருக்க முடியாது. பக்தி மார்க்கத்தில், கடலின் மத்தியில் பாம்பின் மீது கிருஷ்ணர் நடனம் ஆடுவதாக ஒரு படத்தில் சித்தரித்துள்ளார்கள். அது ஒரு பாம்பு. ஆயினும் அவரின் சத்தியத்தின் சக்தியால், பாம்பும் அவர் நடனம் ஆடுவதற்கான மேடை ஆகுகிறது. ஒரு சூழ்நிலை எத்தனை பயங்கரமானதாக இருந்தாலும், மாயையின் ரூபம் எத்தனை பயங்கரமாக இருந்தாலும், உங்களின் உறவுகளும் தொடர்புகளும் எத்தனை துயரங்களை ஏற்படுத்தினாலும், சூழ்நிலை நச்சுவாய்ந்தாக இருந்தாலும், சத்தியத்தின் சக்தியைக் கொண்டிருக்கும் ஒருவர் அவை அனைத்தையும் சந்தோஷ நடனம் ஆடுவதற்கான மேடையாக மாற்றிவிடுவார். எனவே, அது யாரின் ரூபம்? இது உங்கள் அனைவரினதும் ரூபம் அல்லவா? நீங்கள் அனைவரும் கிருஷ்ணர் ஆகப்போகிறீர்கள். இதற்கே நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள், அப்படியல்லவா? இத்தகைய விடயங்கள் இராமரின் தெய்வீகச் செயல்களில் குறிப்பிடப்படவில்லை. அதில், ஒரு கணம் பிரிவும் அடுத்த கணம் சந்தோஷமும் காணப்படுகிறது. எனவே, கிருஷ்ணர் ஆகப்போகும் ஆத்மாக்கள் சதா இத்தகைய சூழ்நிலைகள் என்ற மேடையில் தொடர்ந்து நடனம் ஆடுவார்கள். சடப்பொருட்கள், மாயை, மனிதர்கள் அல்லது பௌதீக வசதிகள் எவையாலும் இத்தகைய ஆத்மாக்களை அசைக்க முடியாது. அவர்கள் மாயையைத் தமது மேடையாக அல்லது தமது கட்டிலாக ஆக்கிக் கொள்வார்கள். நீங்கள் அந்தப் படத்தையும் பார்த்துள்ளீர்கள், அல்லவா? அவர் பாம்பைப் படுக்கை ஆக்கினார். அதாவது, அவர் வெற்றியாளர் ஆகினார். ஆகவே, சத்தியத்தின் அடையாளம், எங்கு சத்தியம் உள்ளதோ, அங்கு ஆத்மா நடனம் ஆடுவார் என்பதே ஆகும். அதுவே அந்தச் சித்திரம். சத்தியத்தின் சக்தியை உடையவர்களால் ஒருபோதும் அமிழ்ந்து போக முடியாது. சத்தியப் படகு ஆடும் விளையாட்டைச் செய்யும். ஆனால் அது அமிழாது. ஆடுவதும் ஒரு விளையாட்டைப் போன்றே அனுபவம் செய்யப்படும். தற்காலத்தில், வேண்டும் என்றே மேலேயும் கீழேயும் சென்று வருவதற்கான விளையாட்டுக்களை உருவாக்குகிறார்கள். அப்படியல்லவா? அது வீழ்வதாக இருந்தாலும், அது விளையாட்டு என்பதனால், அவர்கள் தங்களை வெற்றியாளர்களாகவே கருதுகிறார்கள். எந்தளவிற்குக் குழப்பங்கள் இருந்தாலும், விளையாட்டை விளையாடுபவர், தான் வெற்றி பெற்றதாகவே கருதுவார். ஆகவே, உங்களிடம் சத்தியத்தின் சக்தி இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? அதாவது, வெற்றியின் ஆசீர்வாதத்தைப் பெற்றதாகக் கருதுகிறீர்களா? நீங்கள் எப்போதும் உங்களின் வெற்றி ரூபத்தை அனுபவம் செய்கிறீர்களா? இப்போதும், குழப்பமோ அல்லது பயமோ இருந்தால், சத்தியத்துடன் கூடவே பொய்மையும் இருக்கும். இதனாலேயே, குழப்பம் உருவாக்கப்படுகிறது. ஆகவே, சோதித்துப் பாருங்கள்: உங்களின் எண்ணங்களிலும் பார்வையிலும் மனோபாவத்திலும் வார்த்தைகளிலும் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் அசைக்கமுடியாத சத்தியத்தின் சக்தி உள்ளதா? அச்சா. இன்று, பல குழந்தைகள் சந்திப்பதற்காக வந்துள்ளார்கள். அதனால் பாப்தாதா வேறொரு வேளையில் சத்தியத்தின் சக்தியின் விரிவாக்கத்தைப் பற்றியும் பிராமண வாழ்க்கையில் சிறப்பியல்புகளால் நிறைந்தவண்ணம் எவ்வாறு முன்னேற முடியும் என்பதைப் பற்றியும் கூறுவார். உங்களுக்குப் புரிகிறதா?

இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் கிறிஸ்மஸ் கொண்டாடினீர்களா? அல்லது, இன்றும் கிறிஸ்மஸ்தானா? பிராமணக் குழந்தைகளுக்கு, சங்கமயுகம் கொண்டாட்டத்திற்குரிய யுகம் ஆகும். ஆகவே, தினமும் சந்தோஷமாக ஆடிப் பாடிக் கொண்டாடுங்கள். கல்பத்தைப் பொறுத்தவரை, சங்கமயுகம் ஒருசில தினங்களுக்கு மட்டுமே சமமானது. ஆகவே, சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் பெரியதொரு நாள் ஆகும். அச்சா.

சத்தியத்தின் சக்தியின் சொரூபமாக இருக்கும் அனைவருக்கும், உண்மையான தந்தையிடமிருந்து உண்மையான ஆசீர்வாதங்களையும் ஆஸ்தியையும் பெறுபவர்களுக்கும், சத்தியத்தின் சக்தியால் வெற்றி அடையும் ஆத்மாக்களுக்கும், சதா சடப் பொருளை வென்றவர்களாகவும் மாயையை வென்றவர்களாகவும் இருப்பவர்களுக்கும், சந்தோஷ நடனம் ஆடுபவர்களுக்கும், இத்தகைய உண்மையான தந்தை, ஆசிரியர், சற்குருவின் உண்மையான குழந்தைகளுக்கும், அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

தாதி சந்திரமணி பஞ்சாப் திரும்பிச் செல்வதற்காக பாப்தாதாவிடமிருந்து விடை பெறுகிறார்:
மதுவனவாசிகளாக ஆகியுள்ள, பஞ்சாப்வாசிகளான குழந்தைகளான நீங்கள் அனைவரும் தயவுசெய்து அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளான நீங்கள் அனைவரும் சதா கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகுகிறீர்கள், அல்லவா? ஏன்? யோகியுக்த் குழந்தைகள் எப்போதும் பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பார்கள். யோகி குழந்தைகளான நீங்கள் பஞ்சாபில் வசிக்கவில்லை. ஆனால், பாப்தாதாவின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருக்கிறீர்கள். நீங்கள் பஞ்சாபில் இருந்தாலென்ன அல்லது வேறு எங்கு இருந்தாலென்ன, பாதுகாப்புக் குடையின் கீழ் இருக்கும் குழந்தைகள் சதா பாதுகாப்பாகவே இருப்பார்கள். அவர்களுக்குள் குழப்பம் பிரவேசித்தால், அவர்கள் ஏதாவதொரு முறையில் பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள். எவ்வாறாயினும், நீங்கள் அசைக்க முடியாதவராக இருக்கும்போது, தீங்கான ஓரிடத்தில் நீங்கள் இருந்தாலும், உங்களுக்குச் சிறிதளவேனும் பாதிப்பு ஏற்படமாட்டாது. எனவே, உங்களுக்கு பாப்தாதாவின் கரமும் அவரின் சகவாசமும் இருப்பதனால், கவலையற்ற சக்கரவர்த்தியாகி, அமைதியற்ற சூழலுக்கு அமைதிக்கதிர்களைப் பரப்புங்கள். நம்பிக்கை இழந்தவர்களுக்கு இறைவனின் ஆதாரம் என்ற நம்பிக்கையை ஊட்டுங்கள். குழப்பத்தில் இருப்பவர்களுக்கு அநாதியான ஆதாரத்தை நினைவூட்டி, அவர்களை அசைக்க முடியாதவர்கள் ஆக்குங்கள். இதுவே பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் செய்ய வேண்டிய விசேடமான சேவையாகும். பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் தந்தையின் பெயரைப் பெருமைப்படுத்துவதற்கான மிக நல்லதொரு வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள் என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டது. மக்கள் எந்தத் திசையிலும் எந்தவோர் ஆதாரத்தையும் காணாதபோது, அத்தகைய வேளையில் நீங்களே மேன்மையான ஆத்மாக்கள், இதயத்திற்கு ஆறுதல் அளிப்பவர்கள், இதயத்திற்கு அமைதியின் ஆதாரத்தைக் கொடுப்பவர்கள் என்பதை அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். அமைதியற்ற வேளையில் அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே, அத்தகைய வேளையில் அவர்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுப்பதெனில், வெளிப்படுத்துகை இடம்பெறுகிறது என்று அர்த்தம். ஆகவே, பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் பயப்படக்கூடாது. அத்தகைய வேளையில், அங்கிருக்கும் மக்கள், ஏனைய அனைவரும் தங்களைப் பயப்படுத்துகிறார்கள், ஆனால் நீங்களோ அவர்களுக்கு ஆதாரத்தை வழங்குபவர்கள் என்பதை உணர வேண்டும். அமைதியற்ற ஆத்மாக்களின் ஒன்றுகூடலில் சென்று அவர்களுக்கு அமைதியின் அனுபவத்தைக் கொடுப்பதற்காக மீட்டிங்கில் திட்டமிடுங்கள். ஓரிரு ஆத்மாக்களுக்கேனும் நீங்கள் அமைதியின் அனுபவத்தைக் கொடுத்தால், அந்த ஓரிருவரிடமிருந்து அலை பரவும். அத்துடன் சத்தமும் உரத்துக் கேட்கும். நீங்கள் மீட்டிங் வைப்பது மிகவும் நல்லது. நீங்கள் தைரியசாலி, அத்துடன் உற்சாகம் மிக்கவர். நீங்கள் ஒவ்வொரு பணியிலும் எப்போதும் ஒத்துழைப்பவராகவும் அன்பானவராகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறீர்கள். எப்போதும் அவ்வாறே இருப்பீர்கள். பஞ்சாப் பின்னால் வரிசைக்கிரமமாக இல்லை. அது முன்னணியில் உள்ளது. பஞ்சாபைச் சிங்கம் என்று கூறுவார்கள். சிங்கங்கள் பின்னால் இருக்க மாட்டாது. அவை முன்னாலேயே இருக்கும். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள என்ன நிகழ்ச்சிகளுக்கும் ‘ஹா ஜி, ஹா ஜி’ என்று கூறுங்கள். அசாத்தியமும் சாத்தியம் ஆகும். அச்சா.

குழந்தைகள் அனைவரையும் சந்தித்தபின்னர், பாப்தாதா சற்குரு தினத்திற்காக காலை 5.30 மணிக்கு அன்பையும் நினைவுகளையும் வழங்கினார்:

உண்மையான தந்தையினதும் உண்மையான ஆசிரியரினதும் சற்குருவினதும் அதிகபட்ச நெருக்கமான, அன்பான, சதா சகபாடிக் குழந்தைகளுக்கு, சற்குரு தினத்தில் அதிகளவு அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று, சற்குரு தினத்தில், பாப்தாதா கூறுகிறார்: நீங்கள் எப்போதும் வெற்றி சொரூபமாக இருப்பீர்களாக. நீங்கள் எப்போதும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பேணுவீர்களாக. நீங்கள் எப்போதும் பாப்தாதாவின் பாதுகாப்புக் குடையின் கீழ் பாதுகாப்பாக இருப்பீர்களாக. நீங்கள் சதா ஒரு நம்பிக்கையுடனும் ஓர் ஆதாரத்துடனும் பற்றற்ற பார்வையாளராக இருந்து, ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும் மலர்ச்சியுடன் இருப்பீர்களாக. பாப்தாதா இத்தகைய விசேட அன்பு நிறைந்த ஆசீர்வாதங்களை வழங்குகிறார். எப்போதும் இந்த ஆசீர்வாதங்களை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து சதா சக்திசாலியாக இருங்கள். எப்போதும் இதை நினைவு செய்யுங்கள். எப்போதும் நினைவில் இருங்கள். அனைவருக்கும் காலை வணக்கங்கள். ஒவ்வொரு நாளுக்கும் வாழ்த்துக்கள்.

உங்களின் நினைவானது எரிமலை (தீவிரம்) ரூபத்தில் இருக்கட்டும்.
உங்களின் நினைவானது தீவிர ரூபத்தில் இருக்கும்போது, உங்களாலும் தந்தையைப் போன்று பாவங்களை நீக்குபவர் ஆக முடியும். இத்தகைய நினைவினால் மட்டுமே காட்சிகளை அருளும் உங்களின் தெய்வீக ரூபம் வெளிப்படும். இதற்கு, நினைவானது சாதாரணமானதாக இருக்கக்கூடாது. எப்போதும் தீவிரமான, எரிமலை போன்ற சக்திவாய்ந்த நினைவில் இருங்கள். அன்புடன் கூடவே, சக்தி ரூபத்திலும் ஒன்றிணைந்திருங்கள்.

தற்சமயம், ஒன்றுதிரட்டிய வடிவில் தீவிர நினைவிற்கான தேவை உள்ளது. தீவிர நினைவு மட்டுமே சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்கும். அதனால் பலவீனமான ஆத்மாக்கள் சக்தியால் நிரம்பியவர்கள் ஆகுவார்கள். தடைகள் அனைத்தும் இலகுவாக முடிவடைவதுடன், பழைய உலகின் விநாசத்திற்கான தீச்சுவாலைகள் கொழுந்துவிட்டு எரியும்.

சூரியன் உலகிற்கு ஒளியையும் தற்காலிகமான பல பேறுகளையும் கொடுப்பதைப் போன்று, குழந்தைகளான நீங்கள் உங்களின் மகா தபஸ்விகளின் ரூபத்தில் பேறுகளின் கதிர்களின் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். இதற்கு, அனைத்திற்கும் முதலில், உங்களின் சேமிப்புக் கணக்கை அதிகரியுங்கள். சூரியனின் கதிர்கள் சகல திசைகளிலும் பரவுவதைப் போன்று, மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஸ்திதியில் நிலைத்திருங்கள். சக்திகளினதும் சிறப்பியல்புகளினதும் கதிர்கள் எங்கும் பரவுவதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள்.

எரிமலை ரூபம் ஆகுவதற்கான இலகுவான, பிரதானமான முயற்சியானது, எப்போதும் ஒரேயொரு ஆழமான அக்கறையைக் கொண்டிருப்பதாகும். ‘நான் இப்போது வீடு திரும்ப வேண்டும். அனைவரையும் என்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும்’. இந்த விழிப்புணர்வுடன், நீங்கள் இயல்பாகவே சகல உறவுமுறைகளுக்கும் இயற்கையின் சகலவிதமான கவர்ச்சிகளுக்கும் அப்பால் செல்வீர்கள். அதாவது, நீங்கள் பற்றற்ற பார்வையாளர் ஆகுவீர்கள். பற்றற்ற பார்வையாளர் ஆகுவதன் மூலம், நீங்கள் இலகுவாகத் தந்தையின் சகபாடியாகவும் தந்தைக்குச் சமமானவராகவும் ஆகுவீர்கள்.

தீவிர நினைவென்பது ஒளி மற்றும் சக்தி வீட்டின் ஸ்திதியின் கருத்தைப் புரிந்துகொண்டு, அதற்கான முயற்சியைப் பேணி, அந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதாகும்;. குறிப்பாக, ஞான சொரூபம் ஆகுவதிலும் சக்திசாலி ஆகுவதிலும் அனுபவசாலி ஆகுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், மேன்மையான ஆத்மாக்களான நீங்கள், அழுது புலம்பிய வண்ணம் அலைந்து திரியும் பரிதவிக்கும் ஆத்மாக்கள் பலரை, உங்களின் தூய மனோபாவத்தாலும் நலம்விரும்பும் மனோபாவத்தாலும் சூழலினூடாகவும் ஆனந்தத்தையும் அமைதியையும் சக்தியையும் அனுபவம் அடையச் செய்ய முடியும்.

ஏதாவதொன்றை நெருப்பில் போட்டால், அதன் பெயர், உருவம், தன்மை அனைத்தும் மாறிவிடுகின்றன. அதேபோன்று, உங்களைத் தந்தையின் நினைவெனும் நெருப்பில் போட்டதும், நீங்கள் மாறுகிறீர்கள். நீங்கள் மனிதர்களில் இருந்து பிராமணர்களாகவும், பிராமணர்களில் இருந்து தேவதைகளாகவும் பின்னர் தேவர்களாகவும் மாறுகிறீர்கள். களிமண்ணை ஒரு அச்சில் போட்டு அதைச் சுடும்போது, அது செங்கல் ஆகுகிறது. அதேபோன்று, நீங்களும் மாறுகிறீர்கள். இதனாலேயே, இந்த நினைவானது தீவிர, எரிமலை ரூபமான நினைவு என்று அழைக்கப்படுகிறது.

நீங்கள் ஒரு சேவையாளர். அன்பானவர் மற்றும் ஒரு வலிமையையும் ஓர் ஆதாரத்தையும் கொண்டிருப்பவர். அது நல்லதே. ஆயினும், மாஸ்ரர் சர்வசக்திவான் ஸ்திதி என்றால் அந்த ஸ்திதியில் இருந்தவண்ணம் வெளிச்சவீட்டினதும் சக்திவீட்டினதும் ஸ்திதியைக் கொண்டிருப்பதாகும். உங்களின் நினைவானது தீவிரமான, எரிமலை ரூபத்தை எடுத்தால், அனைவரும் உங்களிடம் வந்து, விட்டில் பூச்சிகள் போன்று உங்களைச் சுற்றி வருவார்கள்.

தீவிரமான எரிமலை ரூப நினைவிற்கு, முதலில், மனம் புத்தி இரண்டிற்கும் சக்திவாய்ந்த ஒரு தடை (டிசயமந) அவசியம். அத்துடன் அவற்றுக்குத் திசை திருப்பும் சக்தியும் (pழறநச வழ ளவநநச) அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம், புத்தியின் சக்தி அல்லது வேறு எந்தச் சக்தியும் வீணாகாது. அதற்குப் பதிலாக அது சேமிக்கப்படும். நீங்கள் எந்தளவிற்குச் சேமிக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் பகுத்தறியும் சக்தியும் தீர்மானிக்கும் சக்தியும் அதிகரிக்கும். இதற்கு, இப்போது தொடர்ந்து எண்ணங்கள் என்ற மூட்டையைக் கட்டுங்கள். அதாவது, விஸ்தாரத்தில் இருந்து விடுபடும் சக்தியைக் கிரகியுங்கள்.

ஏதாவது பணியைச் செய்யும்போது, அல்லது யாருடனும் பேசும்போது, அவ்வப்போது எண்ணங்களின் போக்குவரத்தை நிறுத்துங்கள். ஒரு நிமிடத்திற்கு மனதின் எண்ணங்களையும், உங்களின் சரீரத்தின் மூலம் செய்யும் அனைத்தையும் நிறுத்துங்கள். இதைப் பயிற்சி செய்வதன் மூலமே, உங்களால் புள்ளி என்ற சக்திவாய்ந்த ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்த முடியும். அவ்யக்த ஸ்திதியில் செயற்படுவது இலகுவாக இருப்பதைப் போன்று, புள்ளி என்ற ஸ்திதியில் ஸ்திரமாகுவதும் இலகுவாகும்.

கிருமிகளை அழிப்பதற்கு மருத்துவர்கள் லேசர் கதிர் சிகிச்சை செய்கிறார்கள். அதேபோன்று, நினைவெனும் சக்திவாய்ந்த கதிர்கள் சகல விகாரங்கள் எனும் கிருமிகளை ஒரு விநாடியில் எரித்துவிடும். உங்களின் பாவங்கள் எரிந்தபின்னர், நீங்கள் இலேசாகவும் சக்திசாலியாகவும் உணர்வீர்கள்.

நீங்கள் சதா இலகு யோகிகள். ஆனால், இப்போது உங்களின் நினைவின் ஸ்திதியைச் சக்திவாய்ந்தது ஆக்குவதற்கு அவ்வப்போது கவனம் செலுத்துதல் என்ற விசையைப் பிரயோகிக்க வேண்டும். நீங்கள் முழுமையான தூய்மையைக் கிரகிக்கும்போது, உங்களின் மேன்மையான எண்ணங்களின் சக்தியானது, அன்பு அக்கினியைத் தீவிரப்படுத்தும். அந்த நெருப்பில் சகல குப்பைகளும் எரிந்து விடும். அப்போது மட்டுமே நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். விரைவான சேவை இயல்பாகவே இடம்பெறும்.

இறைவிகளின் ஞாபகார்த்தத்தில், அவர்களின் தீவிர அக்கினி ரூபத்தால் அசுரர்கள் எரிந்ததாகச் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில், அவர்கள் அழித்தது அசுரர்களை அல்ல. ஆனால் அசுர சக்திகளையே. இது தற்சமயத்தின் ஞாபகார்த்தம் ஆகும்.

இப்போது, எரிமலை ரூபம் உடையவராகி, அசுர சம்ஸ்காரங்களையும் அசுர சுபாவத்தையும் எரியுங்கள். இயற்கையினதும் ஆத்மாக்களினதும் தமோகுணி குணங்களை எரிப்பவர் ஆகுங்கள். நீங்கள் இதை துரித கதியில் செய்தால் மட்டுமே இந்தப் பாரிய பணி நிறைவேறும்.

நீங்கள் ஆழ்ந்த அன்பெனும் அக்கினியின் ஸ்திதியில் ஸ்திரமாகாமல், இந்தப் பிறவியின் அல்லது கடந்த பிறவிகளின் எந்தவிதமான கர்மக்கணக்குகளையும் எரிக்க முடியாது. சதா அக்கினி ரூபத்தில் ஸ்திரமாகுவதன் மூலம், கடந்தகாலக் கணக்குகள் சக்திவாய்ந்த எரிமலை ரூப நினைவாலும் விதை ஸ்திதியாலும் ஒளி மற்றும் சக்தி வீட்டின் ஸ்திதியாலும் எரிக்கப்படும். அப்போது நீங்கள் உங்களை இலேசானவராகவும் ஒளியாகவும் அனுபவம் செய்வீர்கள். நினைவின் இணைப்பானது தொடர்ந்து இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே எரிமலை ரூபத்தின் சக்திவாய்ந்த நினைவு ஏற்படும். இந்த இணைப்பு மீண்டும் மீண்டும் துண்டிக்கப்பட்டால், அதை மீளவும் இணைப்பதற்கு நேரம் எடுக்கும். அதற்கு முயற்சியும் தேவைப்படும். அதனால் சக்திசாலி ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் பலவீனம் அடைவீர்கள்.

உங்களின் நினைவைச் சக்திவாய்ந்தது ஆக்குவதற்கு, விரிவாக்கத்திற்குள் செல்லும்போது, சாரத்தில் ஸ்திரமாக இருக்கும் பயிற்சி குறைவடையக்கூடாது. விரிவாக்கத்தில் சாரத்தை மறக்காதீர்கள். உண்டு, பருகி, சேவை செய்யுங்கள். ஆனால் பற்றற்றவர் ஆகுவதை மறக்காதீர்கள். ஆன்மீக முயற்சி என்றால் சக்திவாய்ந்த நினைவும் இதயபூர்வமாகத் தந்தையுடன் தொடர்ச்சியான உறவுமுறையும் என்று அர்த்தம். ஆன்மீக முயற்சி என்றால் யோகத்தில் அமர்ந்திருப்பது மட்டும் அல்ல. பௌதீகமாக நீங்கள் அமர்ந்திருப்பதைப் போன்று, உங்களின் இதயமும் மனமும் புத்தியும் ஒரேயொரு தந்தையை நோக்கியே இருக்க வேண்டும். அவருடன் அமர்ந்திருக்க வேண்டும். இத்தகைய ஒருமுகப்படுத்தலே நெருப்பைத் தீவிரப்படுத்தும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் வார்த்தைகளின் மதிப்பை அறிந்து, அவற்றில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் மகாத்மா ஆகுவீர்களாக.

மகாத்மாக்களுக்கு, ‘சத் வச்சன் மகாராஜ்’ (மகாத்மாக்கள் பேசும் வார்த்தைகள் சத்தியமானவை) எனக் கூறப்படுகிறது. எனவே, உங்களின் வார்த்தைகளும் எப்போதும் வாசகங்களாக இருக்க வேண்டும். அதாவது, அந்த வார்த்தைகள் அனைவருக்கும் ஏதாவதொரு பேற்றைக் கொடுக்க வேண்டும். பிராமணர்களின் உதடுகளில் இருந்து ஒருபோதும் எவரையும் சபிக்கும் வார்த்தைகள் வெளிவரக்கூடாது. ஆகவே, யுக்தியான, பயனுள்ள வார்த்தைகளை மட்டும் பேசுங்கள். வார்த்தைகளின் மதிப்பை அறிந்துகொள்ளுங்கள். சந்தோஷத்தை அளிக்கும் தூய வார்த்தைகளைப் பேசுங்கள். கேலியாக எதையும் கூறாதீர்கள். உங்களின் வார்த்தைகளில் சிக்கனமாக இருங்கள். நீங்கள் மகாத்மா ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்களுடன் சதா ஸ்ரீமத் என்ற கரம் இருக்கும்போது, நீங்கள் கல்பம் முழுவதும் தொடர்ந்து கைகோர்த்து நடப்பீர்கள்.