08.10.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உண்மையான தந்தையுடன் நேர்மையாக இருங்கள். உங்கள் நேர்மையான அட்டவணையை வைத்திருங்கள். ஞானத்தின் அகங்காரம் எதனையும் துறந்து, நினைவில் நிலைத்திருப்பதற்கு முழு முயற்சி செய்யுங்கள்.
கேள்வி:
மகாவீர்க் (தைரியமான போர்வீரர்) குழந்தைகளின் பிரதான அடையாளங்கள் யாவை?
பதில்:
மகாவீர்க் குழந்தைகள் தங்கள் புத்தியில் சதா தந்தையின் நினைவைக் கொண்டிருக்கின்றார்கள். மகாவீர்கள் என்றால், சக்தி வாய்ந்தவர்கள் என்பதாகும். மகாவீர்கள் சதா சந்தோஷமாகவும், ஆத்ம உணர்விலும் இருக்கின்றார்கள்; அவர்கள் சிறிதளவேனும் சரீர அகங்காரத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். தாங்கள் ஆத்மாக்கள் என்பதும், பாபாவே தங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதும் அத்தகைய மகாவீர்க் குழந்தைகளின் புத்தியில் இருக்கின்றன.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: “இங்கு நீங்கள் உங்களை ஆத்மாக்களாக அல்லது ஆவிகளாகக் கருதியவாறு அமர்ந்திருக்கின்றீர்களா?” ஏனெனில், இது சற்று சிரமமானது என்பதைத் தந்தை அறிவார். இதற்கே முயற்சி தேவைப்படுகின்றது. இங்கு ஆத்ம உணர்வு ஸ்திதியில் அமர்ந்திருப்பவர்கள் மகாவீர்கள் எனப்படுகின்றனர். தங்களை ஆத்மாக்களாகக் கருதுபவர்களும், தந்தையை நினைவுசெய்பவர்களும் மகாவீர்கள் என அழைக்கப்படுகின்றனர். சதா உங்களையே வினவியவாறு அமர்ந்திருங்கள்: நான் ஆத்ம உணர்வில் இருக்கின்றேனா? நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதனால் மகாவீர்கள் ஆகுகின்றீர்கள், அதாவது, பரம்; (ளரிசநஅந) ஆகுகின்றீர்கள். ஏனைய சமயத்தவர்கள் பரம் ஆகுவதில்லை. ஏனெனில், அவர்கள் தாமதித்தே வருகின்றார்கள். நீங்கள் வரிசைக்கிரமமாக பரம்; ஆகுகின்றீர்கள். பரமாக இருப்பதென்றால், சக்தி வாய்ந்தவராகவும், மகாவீரராகவும் இருப்பதாகும். எனவே, நீங்கள் ஆத்மாக்கள் என்றும், ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றும் நீங்கள் உள்ளார்த்தமாகச் சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீPர்கள். உங்களிற் சிலர் உங்கள் அட்டவணையில் 25மூ ஐயும், சிலர் 100மூ ஐயும் காண்பிக்கின்றீர்கள் என்பதைத் தந்தை அறிவார். சிலர் 24 மணித்தியாலங்களில் அரை மணி நேரமே தாங்கள் நினைவில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே, அது எத்தனை சதவீதம்? நீங்கள் உங்கள் மீது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் படிப்படியாக மகாவீர்கள் ஆகவேண்டும். உங்களால் உடனடியாகவே அவ்வாறு ஆகிவிட முடியாது; அதற்கு முயற்சி தேவை. பிரம்ம தத்துவத்தின் ஞானத்தைக் கொண்டவர்கள் தங்களை ஆத்மாக்களாகக் கருதுகின்றனர் என எண்ணாதீர்கள். அவர்கள் வீடாகிய, பிரம்ம தத்துவத்தைப் பரமாத்மாவாகக் கருதுகின்றார்கள். நானும் பிரம்மம் என அவர்கள் தங்களைத் தாங்களே கூறுகின்றனர். ஒருவரால் வீட்டுடன் யோகம் செய்ய முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய அட்டவணையைப் பார்த்து, 24 மணித்தியாலங்களில் எவ்வளவு நேரம் நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதினீர்கள் என உங்களையே வினவ வேண்டும். நீங்கள் இறை சேவையில் இருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் இறை சேவையில் இருக்கின்றீர்கள். “மன்மனாபவ, அதாவது, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள்” எனத் தந்தை கூறுவதாக நீங்கள் அனைவருக்கும் கூற வேண்டும். இந்தச் சேவையையே நீங்கள் செய்ய வேண்டும். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் சேவை செய்கிறீர்களோ, அதற்கேற்ப அதன் பலனைப் பெறுகிறீர்கள். இவ் விடயத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மிகச்சிறந்த, மகாராத்திக் குழந்தைகளும் இவ்விடயத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. இதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. முயற்சி செய்யாமல் உங்களால் ஒரு வெகுமதியைப் பெற முடியாது. சிலர் தங்கள் அட்டவணைகளை எழுதி அனுப்புவதையும், ஆனால் ஏனையோர் அட்டவணையை எழுதவேனும் முயற்சி செய்யாமல் இருப்பதையும் பாபா பார்க்கின்றார். அவர்கள் தங்களிடமுள்ள ஞானத்தினால் அகங்காரம் கொண்டிருக்கின்றார்கள். அவர்களால் நினைவில் இருப்பதற்கு எந்த முயற்சியையும் செய்ய முடியாதிருக்கின்றது. நினைவு செய்வதே பிரதான விடயம் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்களே உங்களில் கவனம் செலுத்தி, உங்களுடைய அட்டவணை எவ்வாறிருக்கின்றது எனப் பார்த்து, அதைக் குறித்துக்கொள்ள வேண்டும். தங்கள் அட்டவணைகளை எழுதுவதற்குத் தங்களுக்கு நேரமில்லை எனச் சிலர் கூறுகின்றனர். தந்தை கூறுகின்ற பிரதான விடயம்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, அல்பாவை நினைவுசெய்யுங்கள். நீங்கள் எவ்வளவு நேரம் இங்கமர்ந்திருந்தாலும், அவ்வப்பொழுது உங்கள் இதயத்தை வினவுங்கள்: நான் எவ்வளவு நேரம் நினைவில் இருந்தேன்? நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்பொழுதும், நினைவில் நிலைத்திருக்க வேண்டும், அத்துடன், நீங்கள் சக்கரத்தைச் சுழற்றினாலும் பரவாயில்லை. நாங்கள் நிச்சயமாக பாபாவுடன் திரும்பிச் செல்ல வேண்டும். நாங்கள் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் ஆகிய பின்னரே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் இவ்விடயத்தை மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் அவர்களுக்குக் கூறிய உடனேயே அதை மறந்துவிடுகிறார்கள்; அவர்கள் பாபாவிற்குத் தங்கள் உண்மையான அட்டவணையைக் கூறுவதில்லை. என்றுமே உண்மையைக் கூறாத பல மகாராத்திகளும் உள்ளனர். பொய்மையான உலகம் அரைக்கல்பத்திற்கு இருந்தது. எனவே பொய்மை அவர்களுள் நிலைத்து விட்டதைப் போல உள்ளது. சாதாரணமானவர்கள் தங்களுடைய அட்டவணைகளை உடனடியாக எழுதுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: நினைவு யாத்திரையில் இருப்பதால் உங்கள் பாவங்கள் எரிக்கப்பட்டு, நீங்கள் தூய்மையாகுவீர்கள். வெறும் ஞானத்தின் மூலம் நீங்கள் தூய்மையாக மாட்டீர்கள். எனவே, அதில் என்ன நன்மை இருக்கிறது? நீங்கள் தூய்மைப்படுவதற்காகக் கூவியழைத்தீர்கள். இதற்கு நீங்கள் நினைவுசெய்வது அவசியம். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய அட்டவணையை நேர்மையுடன் காட்டவேண்டும். நீங்கள் இங்கு 45 நிமிடங்கள் அமர்ந்திருக்கும்பொழுது, அந்த நேரப்பகுதியில் எவ்வளவு நேரம் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையின் நினைவில் நிலைத்திருந்தீர்கள் என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டும். சிலர் உண்மையைக் கூற மிகவும் வெட்கப்படுகிறார்கள். அவர்கள் தந்தைக்கு உண்மையைக் கூறுவதில்லை. நாங்கள் இத்தனை பேருக்கு விளங்கப்படுத்தினோம், நாங்கள் இதைச் செய்தோம், அதைச் செய்தோம் எனத் தாங்கள் செய்துள்ள சேவை பற்றிய செய்திகளை மாத்திரமே அவர்கள் கொடுக்கிறார்கள்;; எனினும் அவர்கள் தங்களுடைய நினைவு யாத்திரை பற்றிய ஓர் அட்டவணையையேனும் எழுதுவதில்லை. தந்தை கூறுகிறார்: நினைவு யாத்திரையில் நிலைத்திருக்காததால், உங்கள் அம்புகள் இலக்கைத் தாக்குவதில்லை. அவர்களின் ஞான வாளில் பலம் இல்லை. அவர்களால் ஞானத்தைக் கூற முடிந்தாலும், யோகம் இல்லாமல் அம்புகள் இலக்கைத் தாக்குவது கடினமாகும். பாபா கூறுகிறார்: நீங்கள் 45 நிமிடங்கள் அமர்ந்திருந்தாலும், அதில் 5 நிமிடங்களேனும் நினைவில் இருப்பதில்லை. சிலருக்கு எவ்வாறு தங்களை ஆத்மாக்களாகக் கருதுவது என்பதும், தந்தையை எவ்வாறு நினைவுசெய்வது என்பதும் தெரியாது. தாங்கள் சதா நினைவில் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். பாபா கூறுகின்றார்: இப்பொழுது அந்த ஸ்திதியைக் கொண்டிருப்பது சாத்தியமற்றது. நீங்கள் சதா நினைவில் நிலைத்திருந்தால், உங்கள் கர்மாதீத நிலையை அடைந்து, ஞானத்தினால் முழுமையாக ஞானோதயம் பெற்றிருப்பீர்கள். ஒருவருக்குச் சிறிதளவு விளங்கப்படுத்தினாலும், உங்கள் அம்புகள் இலக்கைத் தாக்கும். எவ்வாறாயினும் இதற்கு முயற்சி தேவையாகும். உங்களால் அவ்வளவு எளிதாக உலக அதிபதிகளாகி விட முடியாது! மாயை உங்கள் புத்தியின் யோகத்தை ஒரு திசையிலிருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்கின்றாள்; நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றோரை நினைவுசெய்கின்றீர்கள். ஒருவர் வெளிநாட்டிற்குப் பயணிக்க நேரிடும்பொழுது, அவர் தனது நண்பர்கள், உறவினர்கள், மற்றும் நீராவிக்கப்பல், ஆகாய விமானங்கள் போன்றவற்றை நினைவுசெய்ய ஆரம்பிக்கின்றார். வெளிநாடு செல்லும் ஆசை அவர்களின் புத்தியை ஈர்க்கின்றது. அது அவர்களின் புத்தியின் யோகத்தை முற்றாகத் துண்டித்து விடுகின்றது. உங்கள் புத்தி வேறொரு திசைக்குச் செல்வதைத் தடுப்பதற்குப் பெருமளவு முயற்சி தேவையாகும். நீங்கள் ஒரேயொரு தந்தையின் நினைவை மாத்திரமே கொண்டிருக்க வேண்டும். இச் சரீரமும் நினைவுசெய்யப்படக்கூடாது. நீங்கள் இறுதியிலேயே இந்த ஸ்திதியை அடைவீர்கள். நாளுக்கு நாள், நீங்கள் உங்களுடைய நினைவு யாத்திரையை எந்தளவிற்கு அதிகமாக அதிகரிக்கின்றீர்களோ, அந்தளவு அதிகமாக உங்களுக்கு நன்மை செய்வீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் வருமானம் அதிகமாக இருக்கும். நீங்கள் இப்பொழுது உங்களுடைய சரீரத்தை நீக்கினால், உங்களால் இந்த வருமானத்தைச் சம்பாதிக்க முடியாது. நீங்கள் ஒரு குழந்தையாக ஆகிவிடுவீர்கள், எனவே அப்பொழுது உங்களால் எத்தகைய வருமானத்தைச் சம்பாதிக்க முடியும்? ஆத்மா சம்ஸ்காரங்களைத் தன்னுடன் எடுத்துச் சென்றாலும், அவருக்கு அதனை ஞாபகப்படுத்துவதற்கு ஓர் ஆசிரியர் தேவைப்படுவார். தந்தையும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார்: தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்வதனால் மாத்திரமே தூய்மையாகலாம் என்பதை உங்களைத் தவிர, வேறெவரும் அறியார். அவர்கள் கங்கையில் நீராடுவதை மேன்மையானதாகக் கருதுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் கங்கையில் நீராடுகிறார்கள். பாபாவுக்கு அவ்விடயங்கள் அனைத்திலும் அனுபவம் உள்ளது. அவர் பல குருமாரையும் ஏற்றிருந்தார். அவர்கள் நீரில் நீராடச் செல்கின்றார்கள். இங்கே நினைவு யாத்திரையிலேயே உங்கள் நீராடல் இடம் பெறுகிறது. தந்தையை நினைவுசெய்யாமல், ஆத்மாக்களாகிய உங்களால் தூய்மையாக முடியாது. இதுவே யோகம், அதாவது, நினைவு யாத்திரை என அழைக்கப்படுகின்றது. ஞானம் நீராடல் என நினைக்காதீர்கள், யோகமே நீராடலாகும். ஞானம் என்பது கல்வியாகும். ஆனால் யோகம் நீராடலாகும், அதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. ஞானம், யோகம் என இரு விடயங்கள் உள்ளன. நினைவுசெய்வதனாலேயே பல பிறவிகளின் பாவங்கள் எரிக்கப்படுகின்றன. தந்தை கூறுகிறார்: இந்த நினைவு யாத்திரை மூலமே நீங்கள் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் ஆகுவீர்கள். தந்தை மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இவ் விடயங்களை மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதனால், உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள். ஞானம் என்றால் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான வழியாகும். கல்வியும், நினைவும் இரு வேறு விடயங்களாகும். கியானும் விக்கியானும்: கியான் என்றால் கற்பதும், விக்கியான் என்றால் யோகம் செய்வதும், அதாவது, நினைவும் ஆகும். எது அதி மேன்மையானது: ஞானமா அல்லது யோகமா? நினைவு யாத்திரையே மிக உயர்ந்தது. இதற்கே முயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். சத்தியயுகம் என்றால் சுவர்க்கமும், திரேதாயுகம் என்றால் அரைச் சுவர்க்கமும் ஆகும். நீங்கள் கற்கும் அளவிற்கேற்ப அங்கு சென்று உங்களுடைய இடத்தைப் பெறுவீர்கள். எவ்வாறாயினும் யோகமே பிரதான விடயமாகும். உங்களால் இந்த ஞானத்தைக் கண்காட்சிகளிலும், நூதனசாலைகளிலும் விளங்கப்படுத்த முடியும். எனினும், யோகத்தை உங்களால் விளங்கப்படுத்த முடியாது. 'உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள்” என்றே உங்களால் கூறமுடியும். எவ்வாறாயினும் உங்களால்; பெருமளவு ஞானத்தைக் கொடுக்க முடியும். தந்தை கூறுகிறார்: முதலில், இந்த விடயத்தை அவர்களுக்குக் கூறுங்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் இந்த ஞானத்தைக் கொடுப்பதற்காக, பல படங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றீர்கள். எவ்வாறாயினும், யோகத்தை விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குப் படங்கள் தேவையில்லை. நீங்கள் ஞானத்தை விளங்கப்படுத்துவதற்கே இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதால், உங்கள் சரீர அகங்காரம் அனைத்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிடும். ஞானத்தைப் பேசுவதற்கு நீங்கள் நிச்சயமாக உங்கள் வாயைப் பயன்படுத்த வேண்டும். யோகத்தில் ஒரேயொரு விடயமே உள்ளது: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். எவ்வாறாயினும் கற்பதற்கு ஒரு சரீரம் தேவைப்படுகிறது. சரீரமின்றி, எவ்வாறு உங்களால் கற்கவோ அல்லது கற்பிக்கவோ முடியும்? தந்தையே தூய்மையாக்குபவர், எனவே நீங்கள் அவருடனேயே யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் எவருக்கும் இது தெரியாது. தந்தையே வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். மனிதர்களால் இதனை மனிதர்களுக்குக் கற்பிக்க முடியாது. தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள்! இது பரமாத்மாவின் ஞானம் எனப்படுகிறது. பரமாத்மாவே ஞானக் கடல். இந்த விடயங்களுக்குப் பெருமளவு புரிந்துணர்வு தேவைப்படுகின்றது. புதிய உலகை ஸ்தாபிப்பவராகிய, ஒரேயொரு எல்லையற்ற தந்தையை நினைவுசெய்யுமாறு அனைவருக்கும் கூறுங்கள். புதிய உலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளதால், அவர்கள் கடவுளை நினைவுசெய்ய வேண்டும் என்பதையேனும் உணராமல் இருக்கின்றார்கள். அவர்கள் இதை அறியாமலிருப்பதால், அதைப் பற்றி ஏன் அவர்கள் சிந்திப்பார்கள்? பரமாத்மாவாகிய பரமதந்தை கடவுள் சிவன் என ஒருவர் மாத்திரமே இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரம்ம தேவருக்கு வந்தனங்கள் என அவர்கள் கூறுகின்றனர். இறுதியில் அவர்கள் கூறுகின்றனர்: பரமாத்மாவாகிய சிவனுக்கு வந்தனங்கள். அந்தத் தந்தை அதிமேலானவர், எனினும் அவர் யார் என்பதை அவர்கள் அறியார்கள். அவர் கற்களிலும், கூழாங்கற்களிலும் இருந்தால், யாருக்கு அவர்கள் தலை வணங்குகிறார்கள்? அவர்கள் தாங்கள் கூறுவதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமலே கூறுகிறார்கள். இங்கு, நீங்கள் சத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். நீங்கள் மௌன தாமமாகிய, நிர்வாணா தாமத்திற்குச் செல்ல வேண்டும். அமைதி தாமமும் சந்தோஷ தாமமும் உள்ளன. அது சுவர்க்க பூமியாகும். நீங்கள் நரகத்தை ஒரு பூமி என அழைக்க மாட்டீர்கள். வார்த்தைகள் மிக இலகுவானவை. கிறிஸ்தவ சமயம் எவ்வளவு காலம் தொடரும்? அவர்கள் இதனை அறியார்கள். கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வைகுந்தம் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறாயின், தேவர்களின் இராச்சியம் இருந்தது என்றே அர்த்தமாகும். எனவே, கிறிஸ்தவ சமயம் வந்து, 2000 ஆண்டுகள் ஆகுவதால், தேவ தர்மம் மீண்டும் வரவேண்டும். மனிதர்களின் புத்தி தொழிற்படுவதேயில்லை. நாடகத்தின் இரகசியங்களை அறியாமையால், அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு திட்டங்களைத் தீட்டுகிறார்கள். வயதான தாய்மார்களால் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது இது உங்கள் அனைவரதும் ஓய்வு ஸ்திதியாகும். நீங்கள் சத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். ஒருவர் நிர்வாணா தாமத்திற்குச் சென்றுவிட்டார் என அவர்கள் கூறினாலும் எவராலும் அங்கு செல்ல முடியாது. அவர்கள் நிச்சயமாக மறுபிறவி எடுத்தாக வேண்டும். எவராலும் வீடு திரும்ப முடியாது. அவர்கள் ஓய்வு ஸ்திதிக்குச் செல்வதற்காக ஒரு குருவினது சகவாசத்தைக் கொண்டிருக்கிறார்கள். தங்களது ஓய்வு ஸ்திதியில் உள்ளவர்களுக்கெனப் பல ஆச்சிரமங்கள் உள்ளன. பல தாய்மாரும் உள்ளனர். நீங்கள் அங்கும் சேவை செய்யலாம். தந்தை இங்கமர்ந்திருந்து ஓய்வு ஸ்திதியின் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் அனைவரும் இப்பொழுது ஓய்வு ஸ்திதியில் இருக்கின்றீர்கள். முழு உலகமுமே ஓய்வு ஸ்திதியில் உள்ளது. நீங்கள் காணும் மனிதர்கள் அனைவரும் ஓய்வு ஸ்திதியிலேயே உள்ளனர். ஒரேயொரு சற்குரு மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அனைவரும் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும். மிகச்சிறந்த முயற்சி செய்பவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவார்கள். இந்தக் காலம் 'தீர்ப்புக்கான காலம்" என அழைக்கப்படுகிறது. 'தீர்ப்புக்கான காலம்" என்பதன் அர்த்தம் மக்களுக்குத் தெரியாது. குழந்தைகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமாகவே இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். இலக்கு மிக உயர்ந்தது. அனைவரும் இப்பொழுது நிச்சயமாக வீடு திரும்ப வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்மாக்கள் சத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். பின்னர் அவர்கள் அனைவரும் தங்களுடைய பாகங்களை மீண்டும் நடிப்பதற்காகக் கீழிறங்கி வருவார்கள். எவ்வாறாயினும், நீங்கள் தந்தையை நினைவுசெய்தவாறு திரும்பினால், உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் எவ்விதமான அசுத்தமான செயல்களையோ, களவுகள் போன்றவற்றையோ செய்யக்கூடாது. நீங்கள் ஞானத்தின் மூலமாக அன்றி, யோகத்தின் மூலமாகவே புண்ணியாத்மா ஆகமுடியும். ஆத்மாக்கள் தூய்மையாக வேண்டும். தூய ஆத்மாக்களால் மாத்திரமே அமைதி தாமத்திற்குத் திரும்பிச் செல்ல முடியும். சகல ஆத்மாக்களும் அங்கேயே வசிக்கின்றார்கள். அவர்கள் இப்பொழுதும் இன்னமும் கீழிறங்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது அங்கே இருப்பவர்களும் தொடர்ந்தும் கீழிறங்கி வருவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையில் பெருமளவில் இருக்க வேண்டும். உங்களால் மிகச்சிறந்த உதவியை இங்கு பெற முடியும். நீங்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் சக்தியைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களில் ஒரு சிலரின் பலமே தொழிற்படுகிறது. விரல்களின் ஒத்துழைப்பால் கோவர்த்தன மலை உயர்த்தப்படுவதாக அவர்கள் காட்டுகின்றார்கள். நீங்களே கோப, கோபிகைகள். சத்தியயுகத்துத் தேவர்கள் கோப கோபிகைகள் என அழைக்கப்படுவதில்லை. நீங்களே உங்களின் விரல்களின் ஒத்துழைப்பைக் கொடுக்கின்றீர்கள். கலியுகத்தைச் சத்திய யுகமாக்குவதற்கும், நரகத்தைச் சுவர்க்கமாக ஆக்குவதற்கும் நீங்கள் உங்களுடைய புத்தியின் யோகத்தை ஒரேயொரு தந்தையுடன் தொடர்புபடுத்துகிறீர்கள். யோகத்தின் முலமே நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் இந்த விடயங்களை மறந்துவிடக்கூடாது. நீங்கள் இந்தச் சக்தியை இங்கேயே பெறுகின்றீர்கள். வெளியில், அசுரத்தனமான மனிதர்களின் சகவாசமே உள்ளது. அங்கு நினைவிலிருப்பது மிகவும் சிரமமானது. .உங்களால் அங்கே அசைக்க முடியாதவர்களாக இருக்க முடியாது. உங்களுக்கு இந்த ஒன்றுகூடல் தேவையாகும். நீங்கள் அனைவரும் இங்கு ஒன்றிணைந்து ஸ்திரமாக அமர்ந்திருக்கும்பொழுது, உங்களால் உதவியைப் பெறமுடியும். இங்கு தொழில் போன்ற எதுவும் இல்லை. எனவே உங்கள் புத்தி எங்கு செல்லும்? நீங்கள் வெளியில் வசிக்கும்பொழுது, உங்களுடைய தொழில் மற்றும் வீடு போன்றவை நிச்சயமாக உங்களை ஈர்க்கின்றன. இங்கு அவ்வாறான எதுவும் இல்லை. இங்கே சூழல் மிகவும் சிறந்ததாகவும், தூயதாகவும் இருக்கின்றது. நாடகத்திற்கேற்ப, நீங்கள் வெகு தூரத்தில் ஓர் உயர்ந்த மலைப் பிரதேசத்தில் இருக்கின்றீர்கள். உங்கள் முன்னால் உங்களுடைய மிகச்சரியான ஞாபகார்த்தம் உள்ளது. சுவர்க்கம் கூரையின் மீது சித்தரிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், அவர்களால் அதை வேறு எங்கே காட்ட முடியும்? எனவே, பாபா கூறுகின்றார்: நீங்கள் இங்கு வந்து அமரும்பொழுது, தந்தையின் நினைவில் இருக்கின்றீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் நினைவு அட்டவணையில் கவனம் செலுத்தி எவ்வளவு நேரம் நீங்கள் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள் எனப் பாருங்கள். நினைவு நேரத்தில் உங்கள் புத்தி எங்கே அலைபாய்கின்றது?
2. இந்தத் தீர்ப்புக் காலத்தில், சத்தத்திற்கு அப்பால் செல்வதற்கு முயற்சி செய்யுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதுடன், நீங்கள் நிச்சயமாகத் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். அசுத்தமான செயல்களையோ அல்லது திருடுதல் போன்றவற்றையோ செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் முகமலர்ச்சியுடனும் சந்தோஷமான இதயத்துடனும் இருந்து, சதா பேறுகள் அனைத்தினாலும் நிறைந்திருப்பீர்களாக.
தேவர்களின் சிலையொன்றை அவர்கள் உருவாக்கும்பொழுது, எப்பொழுதும் ஒரு புன்னகைக்கின்ற (முகமலர்ச்சி) முகத்தையே சித்தரிக்கின்றார்கள். இந்நேரத்திற்குரிய உங்கள் ஞாபகார்த்தங்களாகிய உருவங்களில் நீங்கள் முகமலர்ச்சியுடன் இருப்பதாகவே அவர்கள் சித்தரிக்கின்றார்கள். முகமலர்ச்சியுடன் இருப்பது எனில் சதா பேறுகள் அனைத்தினாலும் நிறைந்திருப்பது என்று அர்த்தமாகும். நிறைவாக இருப்பவர்களால் மாத்திரமே முகமலர்ச்சியுடன் இருக்க முடியும். ஏதாவது பேறுகளின் குறை இருந்தால், நீங்கள் முகமலர்;ச்சியுடன் இருக்க மாட்டீர்கள். ஒருவர் எவ்வளவுதான் முகமலர்ச்சியுடன் இருக்க முயற்சித்தாலும், அவர் தனது இதயத்தில் அன்றி, புறத்தேயே சிரிக்கின்றார். ஆனால் நீங்களோ உங்கள் இதயத்தில் சிரிக்கின்றீர்கள், ஏனெனில் நீங்கள் முகமலர்ச்சியுடனும், பேறுகள் அனைத்தாலும் நிறைந்தும் இருக்கின்றீர்கள்.சுலோகம்:
திறமைச்சித்தி அடைவதற்கு, உங்கள் ஒவ்வொரு பொக்கிஷத்தினதும் சேமிப்புக் கணக்கும் நிறைந்திருக்கட்டும்.