26.03.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையிடமிருந்து மின்னோட்டத்தைப் (உரசசநவெ) பெறுவதற்கு, நறுமணமுள்ள மலர்களாகுங்கள். அதிகாலையில் எழுந்து, நினைவில் அமர்ந்திருந்து, பாபாவுடன் பெருமளவு அன்புடன் இனிமையான விடயங்களைப் பேசுங்கள்.
கேள்வி:
குழந்தைகள் அனைவரும் வரிசைக்கிரமமாகத் தந்தையை நினைவுசெய்தபொழுதிலும், எக் குழந்தைகளைத் தந்தை நினைவுசெய்கின்றார்?
8பதில்:
மிகவும் இனிமையானவர்களையும், சேவையைத் தவிர வேறெதனையும் நினைவு செய்யாதவர்களையும், தந்தையை மிகவும் அன்புடன் நினைவுசெய்து சந்தோஷத்தில் அன்புக்கண்ணீர் சிந்தும் குழந்தைகளையுமே தந்தை நினைவுசெய்கின்றார். தந்தையின் பார்வை மலர்களின் மீது விழுகிறது. அவர் கூறுவார்: இன்ன ஆத்மா மிகவும் நல்லவர். அந்த ஆத்மா எங்கு சேவையைக் கண்டாலும் ஓடோடிச் செல்கின்றார். அவர் பலருக்கும் நன்மையை ஏற்படுத்துகின்றார். அவ்வாறான குழந்தைகளைத் தந்தை நினைவு செய்கின்றார்.ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் ஆத்மாக்களையும். சரீரங்களையும் நினைவுசெய்கிறார். ஒரு சரீரமின்றி, ஆத்மாவினால் நினைவுசெய்ய முடியாது. இந்த ஆத்மா சிறந்தவர் என்றும், இந்த ஆத்மா புற நோக்கிலுள்ளார் என்றும், இந்த ஆத்மா உலகைச் சுற்றி வர விரும்புகின்றார் அல்லது அந்த உலகை மறந்து விட்டார் என்றும் புரிந்துகொள்ளப்படுகிறது. முதலில் ஓர் ஆத்மாவின் பெயரும், உருவமும் உங்கள் முன்னே வருகின்றன. இன்னாருடைய ஆத்மா நினைவுகூரப்படுகிறார்; இன்ன ஆத்மா சிறந்த சேவை செய்கிறார்; அவருடைய புத்தியின் யோகம் பாபாவுடன் உள்ளது, அத்துடன் இந்த நற்குணங்களையும் கொண்டுள்ளார். முதலில் சரீரமே நினைவுசெய்யப்படுகிறது, பின்னர் ஆத்மாவும் நினைவுசெய்யப்படுகிறார். சரீரம் பெரியதாக இருப்பதால் முதலில் சரீரம் நினைவுசெய்யப்படும். பின்னர் சூட்சுமமான, மிகவும் சின்னஞ்சிறிய ஆத்மா நினைவுசெய்யப்படுவார். பெரியதான சரீரத்தைப் புகழ முடியாது. ஆத்மா மாத்திரமே புகழப்படுகிறார்: இவருடைய ஆத்மா சிறந்த சேவையைச் செய்கிறார்; இன்னாருடைய ஆத்மா அவரிலும் பார்க்கச் சிறந்தவர். அனைத்திற்கும் முதலில் சரீரமே நினைவுசெய்யப்படுகிறது. தந்தை பல ஆத்மாக்களை நினைவுசெய்ய வேண்டும். அவர் சரீரத்தின் பெயரை நினைவுசெய்வதில்லை, ஆனால் உருவம் மாத்திரமே அவரின் முன் வருகிறது. இன்னாருடைய ஆத்மா என்று கூறுவதன் மூலம் சரீரம் நிச்சயமாக நினைவு செய்யப்படும். உதாரணத்திற்கு, சிவபாபா, இந்தத் தாதாவின் சரீரத்தில் பிரவேசிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பாபா, அவரின் சரீரத்தில் பிரவேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். சரீரம் நிச்சயமாக நினைவுசெய்யப்பட வேண்டும். நீங்கள் கேளுங்கள்: எவ்வாறு நாங்கள் பாபாவை நினைவு செய்யலாம்? நாங்கள் சிவபாபாவை பிரம்மாவின் சரீரத்திலா அல்லது பரந்தாமத்திலா நினைவுசெய்ய வேண்டும்? பலரிடம் இந்தக் கேள்வி உள்ளது. பாபா கூறுகிறார்: ஆத்மாவையே, நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாகச் சரீரத்தையும் நினைவுசெய்வீர்கள். முதலில் சரீரம், பின்னர் ஆத்மா. பாபா இவரின் சரீரத்தில் அமர்ந்திருக்கிறார், ஆகவே நீங்கள் நிச்சயமாகச் சரீரத்தை நினைவுசெய்வீர்கள். இத்தகைய சரீரத்தைக் கொண்ட ஆத்மாவில் இந்தக் குணம் உள்ளது. பாபா தன்னை நினைவுசெய்பவர்கள் யார் என்றும், எவரிடம் பல நற்குணங்கள் உள்ளன என்றும், நறுமணம் உள்ள மலர்கள் எவை என்றும் அவர் தொடர்ந்து பார்க்கிறார். அனைவரும் மலர்களை விரும்புகிறார்கள். அவர்கள் பூச்செண்டுகளைத் தயாரிக்கும்போது, இராஜ மலர்கள், இராணி மலர்கள், இலைகள் போன்றவற்றை உபயோகிக்கின்றார்கள். தந்தையின் பார்வை மலர்களை நோக்கிச் செல்லும். அவர் கூறுவார்: இன்னாரின் ஆத்மா மிகவும் சிறந்தவர். அவர் அதிகச் சேவை செய்கிறார். அவர் ஆத்ம உணர்வுடையவராக இருந்து, தந்தையை நினைவுசெய்கிறார். அவர் எங்கு சேவையைக் கண்டாலும், அங்கு ஓடிச் செல்கின்றார். இருந்தபொழுதிலும், அதிகாலையில் நீங்கள் விழித்தெழுந்து, நினைவில் அமர்ந்திருக்கும்பொழுது, யாரை நினைவுசெய்வீர்கள்? சிவபாபாவைப் பரந்தாமத்திலா அல்லது மதுவனத்திலா நினைவுசெய்வீர்கள்? நீங்கள் பாபாவை நினைவுசெய்வீர்கள், இல்லையா? சிவபாபா இவரில் இருக்கிறார். ஏனெனில், தந்தை இப்பொழுது கீழே வந்துள்ளார். முரளியைப் பேசுவதற்காக அவர் கீழிறங்கி வந்துள்ளார். அவருக்கு, அவரது சொந்த வீட்டில் செய்வதற்கு எதுவுமே இல்லை. அவர் அங்கு சென்றதும், என்ன செய்வார்? அவர்;, இந்தச் சரீரத்தில் மாத்திரம் பிரவேசிக்கிறார். ஆகவே நிச்சயமாக முதலில் சரீரமும், பின்னர் ஆத்மாவும் நினைவுசெய்யப்படும்;: இத்தகைய சரீரத்திலுள்ள ஆத்மா, மிக விசேடமான, சிறந்த குழந்தை. அவர் சேவையைத் தவிர, வேறு எதனையும் நினைவுசெய்ய மாட்டார். அந்த ஆத்மா மிகவும் இனிமையானவர். பாபா இங்கமர்ந்திருந்து தொடர்ந்தும் அனைவரையும் கவனிக்கிறார். அத்தகைய குழந்தை மிகவும் சிறந்தவர். அவள் பாபாவை அதிகளவு நினைவுசெய்கிறாள். பந்தனத்திலுள்ள புத்திரிகள், விகாரத்திற்காக அதிகமாகத் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் அதிகளவு அன்புடன் பாபாவை நினைவுசெய்கிறார்கள். பாபாவை அதிகமாக நினைவு செய்யும்பொழுது, அவர்கள் அந்தச் சந்தோஷத்தினால் ஆனந்தக் கண்ணீர் சிந்துகின்றார்கள், சில சமயங்களில் அக்கண்ணீர் வழிந்தோடுவதுமுண்டு. பாபாவிற்கு வேறு என்ன வேலை உள்ளது? அவர் அனைவரையும் நினைவுசெய்கிறார். அவர் பல புத்திரிகளை நினைவுசெய்கின்றார். இன்னாருடைய ஆத்மாவிடம் சக்தி இல்லை. அவர் தந்தையை நினைவுசெய்வதில்லை. அவர் எவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை. அந்த ஆத்மா, சுயத்திற்கும் நன்மையளிப்பதில்லை. தந்தை தொடர்ந்தும் இதனை அவதானிப்பார். அந்த ஆத்மாவை நினைவுசெய்வது என்பதன் பொருள் அவருக்குச் சக்காஷ் (சக்தி என்ற மின்சாரம்) கொடுப்பதாகும். ஆத்மாவின் தொடர்பு பரமாத்மாவுடன் உள்ளது. அந்தக் குழந்தை, பெருமளவு யோகத்திலிருக்கின்ற நாளும் வரும். இவர் எவரையாவது நினைவுசெய்யும்பொழுது, அவருக்கு உடனடியாக ஒரு காட்சி கிடைக்கும். ஓர் ஆத்மா ஒரு சின்னஞ்சிறிய புள்ளி. அவர்களுக்கு ஒரேயொருவரின் காட்சி கிடைத்தாலும், அவர்களால் புரிந்துகொள்ள முடியாதிருப்பதால், அவர்கள் சரீரத்தையே நினைவுசெய்வார்;கள். ஓர் ஆத்மா சின்னஞ்சிறியவர். ஆனால் அவர் பாபாவை நினைவு செய்யும்பொழுது, தொடர்ந்தும் தூய்மையாகுகிறார். ஒரு தோட்டத்தில் பல வகையான மலர்கள் இருக்கின்றன. இவர் மிகச்சிறந்த நறுமணமுள்ள மலர் என்றும், இன்னுமொருவர் அதேபோன்று இல்லை என்பதையும் பாபா பார்க்கிறார். ஆகவே, அந்தஸ்தும் குறைவாகவே இருக்கும். பாபாவின் உதவியாளராக வருபவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகிறார்கள். அத்துடன் தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்பவர்களும் பிராமணர்களிலிருந்து தேவர்களாக மாற்றம் செய்யப்படுகிறார்கள். ஒருவர் தேவ மலரா அல்லது அசுர மலரா என்பதைப் பற்றிச் சங்கமயுகத்தில் மாத்திரமே பேசப்படுகின்றது. அனைவரும் மலர்களே, ஆனால் அதில் பல வகை உள்ளன. பாபாவும் தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களை நினைவுசெய்கிறார். ஓர் ஆசிரியர் தனது மாணவர்களை நினைவுசெய்வார்: அவர் அதிகம் கற்பதில்லை. அவர் இதனைத் தனது இதயத்தினால் புரிந்துகொள்வார். அந்த ஒரேயொருவரே தந்தையும், ஆசிரியரும் ஆவார். எவ்வாறாயினும் அவரே தந்தையாவார். பின்னர் அவர் நீண்ட காலத்திற்கு ஆசிரியரின் பாகத்தை நடிக்கிறார். ஓர் ஆசிரியர் தினமும் கற்பிக்க வேண்டும். இந்தக் கல்வியின் சக்தியினால் நீங்கள் அந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். அதிகாலையில், சகோதரர்களாகிய நீங்கள் அனைவரும் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கிறீர்கள். இதுவே நினைவு என்ற பாடமாகும். பின்னர், முரளி நடத்தப்படுகின்றது. அது கற்க வேண்டிய பாடமாகும். யோகமும், கற்பதுவும் பிரதான விடயங்களாகும் அது கியான் விக்யான் என்றும் அழைக்கப்படும். தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்ற, கியான்-விக்யான் பவன் இதுவே ஆகும். கியான் மூலம் நீங்கள் முழு உலகம் பற்றிய ஞானத்தையும் பெறுகிறீர்கள். விக்யான் என்றால் நீங்கள் யோகத்தில் அமர்ந்திருந்து, அதன்மூலம் தூய்மையாகுவதாகும். இப்பொழுது உங்களுக்கு அர்த்தம் தெரியும். தந்தை தொடர்ந்தும் குழந்தைகளைப் பார்க்கிறார். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதால் மாத்திரமே, தீய ஆவிகள் அகற்றப்படும். அனைவருடைய ஆவிகளும் உடனடியாக அகற்றப்படும் என்றில்லை. கர்மக் கணக்குகள் தீர்க்கப்பட்டதும், உங்கள் செயற்பாடுகளுக்கேற்ப, ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். வகுப்பு மாற்றம் செய்யப்படும். இந்த உலகம் கீழ்நோக்கி மாற்றம் செய்யப்படுகின்றது, ஆனால் நீங்களோ மேல்நோக்கி மாற்றம் செய்யப்படுகிறீர்கள். அதில் அதிகளவு வித்தியாசமுள்ளது! அவர்கள் கலியுகத்து ஏணியில் தொடர்ந்தும் கீழிறங்குகிறார்கள், ஆனால், நீங்களோ அதி மங்களகரமான சங்கமயுகத்து ஏணியில் தொடர்ந்தும் ஏறுவீர்கள். இது அதே உலகமாகும். அது புத்திக்கான விடயமாகும். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் சங்கம யுகத்துக்கு உரியவர்கள். உங்களை அதிமேன்மையானவர்கள் ஆக்குவதற்குத் தந்தை வரவேண்டும். உங்களுக்கு இதுவே மிகவும் மங்களகரமான சங்கம யுகமாகும். ஏனைய அனைவரும், காரிருளில் இருக்கின்றனர். அந்த மக்களுக்கு, ஞானத்தைப் பற்றித் தெரியாததால், பக்தி மிகவும் சிறந்தது என்று கருதுகிறார்கள். இப்பொழுது நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளதாலேயே புரிந்துகொள்கிறீர்கள். ஒரு சிறு துளி ஞானத்துடன், அரைக் கல்பத்திற்கு நீங்கள் மேலேறிச் செல்கிறீர்கள். பின்னர், அங்கு ஞானம் பற்றி எதுவும் இருக்காது. மகாராத்திக் குழந்தைகள் மாத்திரமே இவ்விடயங்களைச் செவிமடுத்து, அவற்றைக் கிரகித்து, பின்னர் ஏனையோருக்கும் எடுத்துக் கூறுவார்கள். எவ்வாறாயினும், ஏனைய அனைவருக்கும் இங்கிருந்து சென்றவுடன், அனைத்துமே முடிவடைந்துவிடும். கர்மம், நடுநிலைக் கர்மம், பாவக் கர்மத்தின் தத்துவத்தைக் கடவுள் மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பழைய உலகம் முடிவடைந்து, புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்ற இதுவே, சக்கரத்தின் சங்கமயுகமாகும். விநாசம் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் சங்கம யுகத்தில் நிற்கிறீர்கள். ஆனால் ஏனைய மக்களுக்கோ, இது கலியுகமாகும். காரிருள் உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் வீழ்கிறார்கள். அவர்கள் வீழ்வதற்கு எவராவது கருவியாக இருப்பார்கள். அது இராவணனாகும். உண்மையில் தூய்மையற்ற எவரும் இந்த ஒன்;றுகூடலில் அமர முடியாது. தூய்மையற்றவர்கள் சூழலை மாசுபடுத்துவார்கள். எவராவது இரகசியமாக வந்து, இங்கே அமர்ந்திருந்தால் அவர்; தாக்கப்படலாம். அவர் முழுமையாக வீழ்வார். ஓர் அசுரர் வந்து, இறை ஒன்றுகூடலில் அமர்ந்திருந்தால் அது உடனடியாகத் தெரிந்துவிடும். அவர்கள் ஏற்கெனவே கல்லுப் புத்தியுடையவர்கள். அவர்களின் புத்தி மேலும் கல்லாகிவிடும். அவர்கள் நூறு மடங்கு தண்டனையைப் பெறுவார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஓர் இழப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களால் இதனைக் கூற முடிகின்றதா, இல்லையா என்பதைப் பார்ப்போம். அதில் எங்களுக்கு என்ன? எவராவது ஏதாவதொன்றைச் செய்தால், அவர்கள் அதற்கான பலனைப் பெறுவார்கள். அதனைப் பற்றி நாங்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தந்தையுடன் சதா நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். கூறப்படுகிறது: சத்தியம் இருக்குமிடத்தில் ஆத்மா நடனமாடுகின்றார். நீங்கள் சத்தியம் நிறைந்தவர்களாக இருந்தால், நீங்களும் உங்கள் இராச்சியத்தில் நடனமாடுவீர்கள். தந்தையே சத்தியமானவர். ஆகவே குழந்தைகளாகிய நீங்களும் சத்தியம் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும். பாபா கேட்கிறார்: சிவபாபா எங்கே? நீங்கள் கூறுகிறீர்கள்: அவர் இவரினுள் இருக்கிறார். தொலைதூரவாசி பரந்தாமத்தை விட்டு, அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார். இப்பொழுது அவர் அதிக சேவையைச் செய்ய வேண்டியுள்ளது. தந்தை கூறுகிறார்: இங்கு நான் இரவுபகலாகச் சேவை செய்ய வேண்டியுள்ளது. திரான்ஸ் தூதுவர்களுக்கும், பக்தர்களுக்கும் நான் காட்சிகளைக் கொடுக்க வேண்டும். எவ்வாறாயினும் அது இங்கேயேதான். அங்கு சேவை இருக்க மாட்டாது. சேவை செய்யாவிட்டால், பாபா சந்தோஷப்பட மாட்டார். முழு உலகிற்கும் அவர் சேவை செய்ய வேண்டும். அனைவரும் கூவி அழைக்கிறார்கள்: பாபா, வாருங்கள்! அவர் கூறுகிறார்: நான் இந்த இரதத்தில் பிரவேசிக்கிறேன். அந்த மக்களோ குதிரை இரதத்தைக் காட்டியுள்ளார்கள். கிருஷ்ணர் எவ்வாறு குதிரை இரதத்தில் அமர்ந்திருக்க முடியும்? குதிரை இரதத்தில் அமர்ந்திருப்பதற்கு அவர் ஆர்வமாக இருக்கின்றார் என்றில்லை. சங்கம யுகத்தில் மாத்திரமே நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக இருப்பதைப் பற்றியும், சரீர உணர்வுடையவராக இருப்பதைப் பற்றியும் பேசுகிறீர்கள். தந்தையைத் தவிர வேறெவராலும் இவற்றை விளங்கப்படுத்த முடியாது. உங்களுக்கும் இது இப்பொழுது தெரியும். முன்னர் நீங்கள் இதை அறிந்திருக்கவில்லை. யாராவது ஒரு குரு உங்களுக்கு எதனையும் கற்பித்தாரா? நீங்கள் பல குருமார்களை ஏற்றிந்தீர்கள். ஆனால் எவரும் உங்களுக்கு எதனையும் கற்பிக்கவில்லை. பலர் குருமார்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எவரிடமிருந்தாவது அமைதிக்கான பாதையைக் கண்;பார்கள் என்று நம்புகிறார்கள். தந்தை கூறுகிறார்: ஒரேயொரு தந்தை மாத்திரமே அமைதிக் கடல். அவர் உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வார். அமைதி தாமத்தைப் பற்றியும், சந்தோஷ தாமத்தைப் பற்றியும் எவருக்கும் தெரியாது. கலியுகத்தில் சூத்திர குலத்தினரும், அதி மங்களகரமான சங்கம யுகத்தில் பிராமணக் குலத்;தினரும் உள்ளார்கள். இந்தக் குலங்களைப் பற்றி உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. நீங்கள் அனைத்தையும் இங்கு செவிமடுக்கிறீர்கள். ஆனால் நீங்கள் வெளியே சென்றவுடன், அனைத்தையும் மறந்துவிடுகிறீர்கள். உங்களால் கிரகிக்க முடியாதுள்ளது. தந்தை கூறுகிறார்: நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் பட்ஜையும் வைத்திருக்க வேண்டும். அது பற்றித் தர்மசங்கடம் அடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்வதற்காகவே பாபா அதனைச் செய்வித்துள்ளார். நீங்கள் அதனை எவருக்கும் விளங்கப்படுத்திய பின்னர் ஒன்றை அவர்களுக்குக் கொடுக்கலாம். விவேகியான ஒருவர் கூறுவார்: இதற்கு நீங்கள் பணம் செலவழித்திருப்பீர்கள். அவருக்குக் கூறுங்கள்: அதற்குக் கொஞ்சம் செலவு ஏற்பட்டது. ஆனால் ஏழைகளுக்கு அது இலவசமாக வழங்கப்படும். அந்த நபர் இதனைக் கிரகித்தால், அவரால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும். ஏழைகளிடம் பணம் இல்லாவிட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும்? சிலரிடம் பணம் உள்ளது. ஆனால் அவர்கள் உலோபிகள். இவர் அனைத்தையும் உங்களுக்கு நடைமுறையில் செய்து காட்டியுள்ளார். அவர் அனைத்தையும் தாய்மார்களிடம் கையளித்தார்: எனக்கு இப்பொழுது ஞானம் கிடைத்துள்ளதால், முடிவில் நான் எதனையும் நினைவுசெய்ய மாட்டேன். ஆகவே நீங்களே அமர்ந்திருந்து அனைத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். இறுதியில் நீங்கள் எதனை நினைவுசெய்கின்றீர்களோ,….உங்களிடம் பெரிய வீடுகள் இருந்தால், நீங்கள் நிச்சயமாக அவற்றை நினைவுசெய்வீர்கள். எவ்வாறாயினும் சிறிதளவாவது ஞானத்தைச் செவிமடுத்திருந்தால், நீங்கள் நிச்சயமாகப் பிரஜைகளில் ஒருவராகுவீர்கள். தந்தையே ஏழைகளின் பிரபு. சிலரிடம் பணமுள்ளது. இருப்பினும் அவர்கள் உலோபிகள். சிவபாபாவே, முதல் வாரிசு என அவர்கள் நினைக்க மாட்டார்கள். பக்தி மார்க்கத்திலும் கடவுளே வாரிசாவார். மக்கள் கடவுளின் பெயரில் தானம் செய்கிறார்கள். மக்கள் அவருக்குக் கொடுப்பதற்கு, அவர் ஏழையாகி விட்டாரா? கடவுளின் பெயரில் ஏழைகளுக்குத் தானம் கொடுத்தால், கடவுள் அவர்களுக்கு அதற்குரிய பிரதிபலனைக் கொடுப்பாரென மக்கள் எண்ணுகிறார்கள். அடுத்த பிறவியில் அவர்கள் எதையாவது பெறுகின்றார்;கள். கூறப்பட்டுள்ளது: தானம் ஒன்றைச் செய்யுங்கள். கிரகணத்தின் சகுனங்கள் அகற்றப்படும். அவர் அனைத்தையும் தந்தைக்குக் கொடுத்தார். அவர், தனது சரீரம், நண்பர்கள், உறவினர்கள் போன்ற அனைத்தையும் பாபாவிற்கே அர்ப்பணித்தார்: பாபா, இவை அனைத்தும் உங்களுடையதே. இந் நேரத்தில் உலகம் முழுவதிலும் ஒரு கிரகணத்தின் சகுனங்கள் உள்ளன. இவற்றை ஒரு விநாடியில் எவ்வாறு அகற்றலாம் என்பதையும், அவலட்சணமாக இருந்து நீங்கள் எவ்வாறு அழகானவர்களாக ஆகுகின்றீர்கள் என்பதையும் நீங்கள் மாத்திரமே இப்பொழுது அறிவீர்கள். பின்னர் நீங்கள் இதனை ஏனையோருக்கும் விளங்கப்படுத்துகிறீர்கள். தாங்கள் உள்ளார நன்றாகப் புரிந்துகொள்வதாகவும், தங்களால் பிறருக்கு விளங்கப்படுத்த முடியாதிருப்பதாகவும் கூறுபவர்களால், எவ்விதப் பயனுமில்லை. தந்தை கூறுகிறார்: தானம் ஒன்றைச் செய்யுங்கள். அப்பொழுது கிரகணங்களின் சகுனங்கள் அகற்றப்படலாம். நான் உங்களுக்கு அழிவற்ற ஞான இரத்தினங்களைக் கொடுக்கிறேன். இவற்றைத் தொடர்ந்தும் மற்றவர்களுக்குக் கொடுங்கள். அப்பொழுது பாரதத்தின் மீதும் முழு உலகின்; மீதும் உள்ள ராகுவின் சகுனங்கள் அகற்றப்பட்டு, வியாழ சகுனங்கள் இருக்கும். வியாழ சகுனங்களே மிகச் சிறந்த சகுனங்களாகும். இப்பொழுது குறிப்பாகப் பாரதத்தின் மீதும், பொதுவாக உலகின் மீதும் ராகுவின் சகுனங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். இவற்றை எவ்வாறு அகற்றலாம்? இந்த ஒரேயொருவரே தந்தையாவார். தந்தை பழையன அனைத்தையும் உங்களிடமிருந்து எடுத்துக்கொண்டு, அவற்றிற்குப் பதிலாக உங்களுக்குப் புதியன அனைத்தையும் கொடுக்கிறார். அவையே வியாழ சகுனங்கள் எனப்படுகின்றன. முக்தி தாமத்திற்குச் செல்பவர்கள் மீது வியாழ சகுனங்கள் உள்ளன என்று கூறப்படுவதில்லை. அச்சா
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சதா சந்தோஷ நடனம் ஆடுவதற்கு, எப்பொழுதும் உண்மையான தந்தைக்கு உண்மையுள்ளவராக இருங்கள். எதனையும் மறைக்காதீர்கள்.2. தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற அழிவற்ற இரத்தினங்களை அனைவருக்கும் விநியோகியுங்கள். அத்துடன் சிவபாபாவை உங்கள் வாரிசாக்கி, அனைத்தையும் ஒரு தகுதியான முறையில் உபயோகியுங்கள். இதில் உலோபியாக இருக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் முதிர்ச்சி எனும் தெய்வீகக் குணத்தின் மூலம் முழுமையான புள்ளிகளைச் சேகரித்து, முதிர்ச்சி தேவர் அல்லது தேவியாக இருப்பீர்களாக.தற்பொழுது, முதிர்ச்சி எனும் தெய்வீகக் குணத்திற்கான பெருமளவு தேவை உள்ளது, ஏனெனில் மக்கள் பெருமளவு பேசுகின்ற பழக்கத்தை வளர்த்துக் கொண்டு விட்டதுடன், தங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் கூறுகின்றார்கள். ஒருவர் சில நல்ல பணிகளைச் செய்த பின்னர் அவற்றைப் பற்றிப் பேசும்பொழுது, அதன்பலன் அரைவாசி ஆகுகின்றது. அரைவாசி மாத்திரமே சேகரிக்கப்படுகின்றது, முதிர்ச்சி அடைந்தவர்களோ (அதனைப் பற்றிப் பேசாதவர்கள்) முழுமையாகச் சேகரிக்கின்றார்கள். ஆகவே, ஒரு முதிர்ச்சி தேவர் அல்லது தேவி ஆகி, உங்கள் முழுமையான புள்ளிகளைச் சேகரியுங்கள். அதனைப் பற்றிப் பேசுவதால், உங்கள் புள்ளிகள் குறைக்கப்படும்.
சுலோகம்:
புள்ளி ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள், அப்பொழுது உங்களால் எப் பிரச்சனைகளுக்கும் ஒரு விநாடியில் முற்றுப் புள்ளி இட இயலும்.