23.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உயிருள்ள போதே, இந்தத் துன்ப உலகிலிருந்து விலகிச்செல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சந்தோஷ உலகிற்குச் செல்ல வேண்டும்.

கேள்வி:
தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் எந்தவொரு சிறிய முயற்சியைச் செய்யுமாறு வினவுகின்றார்?

8பதில்:
தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, காமமே கொடிய எதிரி என்பதால், அதனை நீங்கள் வெற்றி கொள்ள வேண்டும். இந்தச் சிறிய முயற்சியையே நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன். நீங்கள் முற்றிலும் தூய்மையானவர் ஆக வேண்டும். தூய்மையற்றதிலிருந்து தூய்மையாகுவது என்றால், நீங்கள் தெய்வீகமானவர் ஆக வேண்டும். தெய்வீகமானவர்கள் கல் ஆக முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் அழகிய மலர்கள் ஆகும் பொழுது, தந்தை தனது கண்களில் உங்களை அமர்த்தி, தன்னுடன் மீண்டும் அழைத்துச் செல்வார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிராமணர்களாகிய நீங்களே, தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நிச்சயமாகக் குழந்தைகளாகிய நீங்கள்; புரிந்துள்ளீர்கள். உங்களுக்கு இந்த உறுதியான நம்பிக்கை உள்ளது. ஓர் ஆசிரியர் யாருக்குக் கற்பித்தாலும், அவர் நிச்சயமாகத் தான் கற்பிப்பவரையும் தனக்குச் சமமானவராகவே ஆக்குவார். இது நம்பிக்கைக்குரியதொரு கேள்வியாகும். தந்தை வந்து ஒவ்வொரு கல்பத்திலும், எங்களுக்கு விளங்கப்படுத்தி, நரகவாசிகளாகிய எங்களைச் சுவர்க்கவாசிகளாக மாற்றுகின்றார். முழு உலகையும் அவ்வாறு ஆக்குகின்ற ஒருவர் இருக்க வேண்டும். தந்தை அனைவரையும் சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார், ஆனால் இராவணனோ அனைவரையும் நரகவாசிகள் ஆக்குகின்றான். இந்த நேரத்தில். இது இராவண இராச்சியமாகும். ஆனால் சத்தியயுகத்திலோ இராம இராச்சியமே உள்ளது. இராம இராச்சியத்தை யாரோ ஒருவரே ஸ்தாபிக்கின்றார் என்பதால், நிச்சயமாக இராவண இராச்சியத்தையும் யாரோ ஒருவர் ஸ்தாபிக்கின்றார்;;. கடவுள் இராமர் என்று அழைக்கப்படுகின்றார். கடவுள் புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். ஞானம் மிகவும் இலகுவானதாகும். அது ஒரு பெரிய விடயமல்ல. ஆனால், தெய்வீகப் புத்தியுடையவர் ஆகுவது சாத்தியமல்ல என்று நினைக்கும் அளவிற்கு மக்கள் கல்லுப் புத்தி உடையவர்களாக இருக்கின்றார்கள். மாயையின் செல்வாக்கு உள்ளதால், நரகவாசிகளில் இருந்து சுவர்க்கவாசிகளாக மாறுவதற்கு, அதிகளவு முயற்சி தேவையாகும். மக்கள் 50 மாடிகள், 100 மாடிகள் கொண்ட, மிகப் பெரிய கட்டடங்களைக் கட்டுகின்றார்கள். சுவர்க்கத்தில் அவ்வாறு பல மாடிக் கட்டடங்கள் இருக்க மாட்டாது. அவ்வாறானவை, இங்கு இக்காலத்திலேயே கட்டப்படுகின்றன. இங்குள்ளதைப் போன்ற பெரிய கட்டடங்கள் சத்தியயுகத்தில் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தையே விளங்கப்படுத்துகின்றார்: இச் சிறிய விருட்சம் (சத்திய யுக சனத்தொகை) முழு உலகிலும் பரவுவதால்;, பல மாடிக் கட்டடங்கள் அங்கு கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அந்த நேரத்தில், அங்கே ஏராளமான நிலங்கள் இருந்தன, ஆனால் இப்பொழுது இங்கே நிலம் எதுவுமே இல்லாததனால், நிலத்தின் விலை அதிகளவு அதிகரித்துள்ளது. அங்கே, நிலத்திற்கு எவ்விதமான பெறுமதியும் இருக்கவில்லை. அத்துடன், நகரசபையினால் வரி எதுவும் அறவிடப்படுவதும்; இல்லை.. ஒருவருக்கு எவ்வளவு நிலம் தேவையானாலும், அதனை அவர் எடுத்துக் கொள்ளலாம். ஒரேயொரு தந்தையிடம் இருந்து இந்த ஞானத்தைப் பெறுவதன் மூலம், அங்கே, சகல வகையான சந்தோஷத்தையும் நீங்கள் பெறுகின்றீர்கள், மக்கள் கட்டுகின்ற 100 மாடிக்கட்டடங்கள் போன்றவற்றிற்கு அதிகளவு பணம் செலவழிக்கப்படுகின்றது. அங்கே அவற்றிற்கு எப்பெறுமதியும் இல்லை. உங்களிடம் அங்கே அதிகளவு செல்வம் உள்ளது. பணத்திற்கு அங்கே எப்பெறுமதியும் இல்லை. உங்களிடம் அதிகளவு பணம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? மக்கள் வைரங்களும், முத்துக்களும் பதித்த தங்க மாளிகைகளைக் கட்டுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு புரிந்துணர்வைப் பெற்றிருக்கின்றீர்கள். புரிந்து கொள்வதிலும், புரிந்து கொள்ளாதிருப்பதிலுமே அனைத்தும் தங்கியுள்ளது. சதோ புத்தியும், தமோ புத்தியும் உள்ளது. சதோபிரதானானவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தார்கள். தமோகுனி புத்தியுடைவர்கள் நரகத்தின் அதிபதிகள் ஆவார்கள். இது சுவர்க்கம் அல்ல. இதுவே ஆழ்நரகம்; ஆகும். இங்குள்ள மக்கள் சந்தோஷமற்றிருக்கிறார்கள். இதனாலேயே, அவர்கள் கடவுளைக் கூவி அழைக்கின்றார்கள். பின்னர் அவர்கள் அவரை மறந்து விடுகின்றார்கள். அவர்கள் அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்கு அவர்கள் மாநாடுகளை நடாத்துகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். முழு விருட்சமும், உக்கிய நிலையை அடைந்துள்ளது. இப்பொழுது புதியதொரு விருட்சம் வளர்கின்றது. கலியுகம் எவ்வாறு சத்தியயுகமாக மாறுகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த நேரத்திலேயே தந்தை, இந்த ஞானத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுக வாசிகளாகிய நீங்கள் பின்னர், கலியுகவாசிகளாக ஆகுகின்றீர்கள். அதன் பின்னர்; சங்கமயுக வாசிகளாகிய நீங்கள். பின்னர் சத்தியயுகவாசிகளாக ஆகுகின்றீர்கள். நீங்கள் வினவலாம்: இத்தனை மக்கள் அனைவரும் சத்தியயுகத்திற்குச் செல்வார்களா? இல்லை. சத்திய நாராயணனின் கதையைக் கேட்பவர்களே சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். ஏனைய அனைவரும், அமைதிதாமத்திற்கே செல்வார்கள். துன்ப உலகம் இருக்க மாட்டாது. ஆகையால், நீங்கள் உயிருடன் உள்ள போதே, இத் துன்ப உலகை நீக்கிவிட வேண்டும். தந்தை உங்களுக்கு இந்த உலகை எவ்வாறு நீக்குவது என்ற வழியைக் காட்டுகின்றார். முழு உலகின் மீதும் தேவர்களின் இராச்சியமே நிலவியது. தந்தை இப்பொழுது அதனை மீண்டும் ஸ்தாபிப்பதற்கே வந்துள்ளார். அந்தத் தந்தையிடம் இருந்தே உலக இராச்சியத்தை நாங்கள் பெறுகின்றோம். நாடகத்தின் திட்டத்திற்கு ஏற்ப நிச்சயமாக ஏதோ ஒரு மாற்றம் இருக்க வேண்டும். இது பழைய உலகமாகும். அதனை, நீங்கள் எவ்வாறு சத்தியயுகம் என்று அழைப்பீர்கள்? எவ்வாறாயினும், சத்தியயுகம் என்றால் என்னவென்பதைப் பற்றி மக்கள் எதுவுமே புரிந்து கொள்ளவில்லை. பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: அதிகளவு பக்தி செய்தவர்கள் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்ளும் தகுதியுடையவர்கள். அத்தகையவர்களுக்கே, நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இக் குலத்திற்குரியவர் அல்லாதவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, உங்கள் நேரத்தை ஏன் நீங்கள் இது போன்றவற்றில் வீணாக்க வேண்டும்? அவர்கள் எங்கள் குலத்திற்குரியவர்கள் அல்லாதவராயின், அவர்கள் எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்;: ஆத்மாவைப் பற்றியோ அல்லது பரமாத்மாவைப் பற்றியோ நான் புரிந்து கொள்ள விரும்பவில்லை. எனவே, அத்தகைய ஆத்மாக்களிடம் நீங்கள் ஏன் முயற்சி செய்ய வேண்டும்? பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார்: ஆக உச்சியில் எழுதப்பட்டுள்ளது: கடவுள் பேசுகின்றார். நான் கல்பத்தில் அதி மங்களகரமான சங்கமயுகத்தில், தனது சொந்தப் பிறவிகளைப் பற்றி அறியாதவரின் சாதாரண சரீரத்தில் வருகின்றேன். நானே அவரிடம் அவற்றைப் பற்றிக் கூறுகின்றேன். யார் 5000 வருடங்கள் முழுவதினதும் பாகத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதை நான் உங்களிடம் கூறுகின்றேன். முதல் எண்ணைப் பெற்றவரே இப் பாகத்தைப் பெறுகின்றார். சத்தியயுகத்தின் முதல் இளவரசனான ஸ்ரீகிருஷ்ணரின் புகழை மக்கள் இன்றும் பாடுகின்றார்கள். 84 பிறவிகளின் பின்னர் அவர் என்னவாகுவார்? அவரே முதலில் யாசிப்பவர்;. அவர் யாசிப்பவரில் இருந்து ஓர் இளவரசனாகவும் பின்னர் ஓர் இளவரசரில் இருந்து யாசிப்பவராகவும் மாறுகின்றார். அவர் எவ்வாறு இளவரசரில் இருந்து யாசிப்பவர் ஆகுகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அதன் பின்னர் தந்தை வந்து, சிப்பி போன்றிருந்தவரை வைரம் போன்றவர் ஆக்குகின்றார். வைரம் போன்றிருப்பவர்கள் பின்னர், சிப்பி போன்றவர்கள் ஆகுகின்றார்கள். அனைவரும் மறுபிறப்பெடுக்கின்றார்கள். யார் அதிகபட்ச பிறவிகளை எடுக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். முதன்முதலில், ஸ்ரீகிருஷ்ணரே அவர் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் இது அவரது இராச்சியமாகும். அவரே, அதிகளவு பிறவிகளைப் எடுப்பவர். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் இலகுவான விடயமாகும். எவ்வாறாயினும், மக்கள் இவ்விடயங்களில் அதிகளவு கவனம் செலுத்துவதில்லை. தந்தை இதனை விளங்கப்படுத்தும் போது, மக்கள் வியப்படைகின்றார்கள். முதலாமவரே இறுதியானவரும் ஆகுகின்றார் என்பதைத் தந்தை மிகச் சரியாகக் கூறுகின்றார். முதலாமவர் வைரம் போன்றவரும், இறுதியானவர் சிப்பி போன்றவரும் ஆவார். நீங்கள் மீண்டும் ஒருமுறை வைரம் போன்றவர் ஆக வேண்டும். அதாவது, நீங்கள் தூய்மையானவர் ஆக வேண்டும். இதில் என்ன சிரமம் உள்ளது? பரலோகத் தந்தை ஒரு கட்டளை பிறப்பிக்கின்றார்: காமமே கொடிய எதிரி. நீங்கள் எவ்வாறு தூய்மையற்றவர் ஆகினீர்கள்? விகாரத்தில் ஈடுபட்டதாலாகும். ஆகையாலேயே, நீங்கள் ‘ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்!’ என்று கூவி அழைத்தீர்கள். தந்தை என்றென்றும் தெய்வீகப் புத்தியை கொண்டவராவார். அவர் என்றுமே கல்லுப் புத்தியுடையவர் ஆகுவதில்லை. அவருக்கும் முதல் இலக்கப் பிறப்பைப் பெறுகின்றவருக்குமே தொடர்புள்ளது. பல தேவர்கள் இருந்த போதிலும், மக்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்தது என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் பின்னர் வந்ததால் அவர்களிடம் பலம் உள்ளது. அவர்களிடம் சென்று அனைவருமே எதனையாவது கற்க விரும்புகின்றார்கள், ஏனெனில், அவர்களின் புத்தி புதியதாக (கசநளா) உள்ளது. அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்தே செல்கின்றார்கள். வெளிநாட்டவரிடம் இருந்து மக்கள் அனைத்தையும் கற்றுக் கொள்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சத்தியயுகத்தில் கட்டடம் போன்றவற்றைக் கட்டுவதற்கு நீண்டகாலம் எடுக்க மாட்டாது என்பதும் உங்களுக்குத் தெரியும். அது (வடிவமைப்பு) ஒருவரின் புத்தியில் எழும் பொழுது, தொடர்ந்து அது விரிவடைகின்றது. அவர்கள் ஒன்றைக் கட்டிய பின்னர், இன்னமும் பலவற்றைக் கட்ட ஆரம்பிப்பார்கள். அது அவர்களின் புத்தியில் புகுகின்றது. விஞ்ஞானிகள் உங்களிடம் வரும் போது, அவர்களின் புத்தி மேன்மையடைந்து, அவர்கள் விரைவில் மாளிகைகளைக் கட்டுகின்றார்கள். இங்கே, ஒரு கட்டடத்தையோ அல்லது ஒரு ஆலயத்தையோ கட்டுவதற்கு 12 மாதங்களளவில் எடுக்கின்றது. அங்கே, பொறியிலாளர்கள் போன்றோர் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள். அது சத்தியயுகமாகும். அங்கே, கற்கள் இருக்க மாட்டாது. நீங்கள், இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கும் போது, அப் பழைய சரீரங்களை நீக்கி வீடு திரும்புவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். பின்னர், அங்கிருந்து, யோக சக்தியின் மூலம் சத்தியயுகத்தில் பிறப்பெடுப்பீர்கள். இந்தச் சந்தோஷம் ஏன் உங்களுக்கு இல்லாதுள்ளது? இவ் விடயங்களைப் பற்றி நீங்கள் ஏன் சிந்திக்காதுள்ளீர்கள்? அதிகளவு சேவை செய்கின்ற குழந்தைகள் நிச்சயமாக இவ்விடயங்கள் பற்றிச் சிந்திப்பார்கள். அதாவது ஒருவர் சட்டநிபுணர் ஆகுவதற்கான பரீட்சையில் சித்தி அடைந்து விட்டால், தான் செய்யப் போகின்ற விடயங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதைப் போன்று, நீங்களும் சிந்திக்க வேண்டும். எனவே நீங்கள் அந்தச் சரீரங்களை நீக்கிச் சென்ற பின்னர், அவ்வாறு ஆகுவீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நினைவு செய்வதினால் மாத்திரமே உங்கள் ஆயுட்காலம் நீடிக்கின்றது. நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். இது மிகவும் உயர்ந்த பதவியாகும். நீங்கள் கடவுளின் குடும்பத்திற்குரியவர்கள். உங்களுக்கு வேறு எந்த உறவுமுறைகளும் இல்லை. நீங்கள் சகோதரர், சகோதரி என்பவர்களையும் விட அதிமேன்மையானவர்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள். சகோதர்கள் என்றே உங்களைக் கருதுங்கள்;. இதனை நீங்கள் அதிகளவில் பயிற்சி செய்ய வேண்டும். சகோதரர் எங்கு வசிக்கின்றார்? அமரத்துவமான ஆத்மா இந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். ஆத்மாக்கள் அனைவரதும் இந்தச் சிம்மாசனங்கள் சிதைந்துவிட்டன. உங்களுடைய சிம்மாசனங்களே அதிகளவில் சிதைந்துவிட்டன. ஆத்மா இந்தச் சிம்மாசனத்தில் இருக்கின்றார். நெற்றியின் நடுவில் என்ன உள்ளது? இவ்விடயங்கள் உங்கள் புத்தியினால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஓர் ஆத்மா முற்றிலும் சூட்சுமமானவர். அவர் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார். தந்தை கூறுகின்றார்: நானும் ஒரு புள்ளியே. நான் உங்களிலும் பெரிதானவர் இல்லை. நீங்கள், சிவபாபாவின் குழந்தைகள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள், இப்பொழுது தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்ள வேண்டும். இதனாலேயே நீங்கள் உங்களைச் சகோதர்கள் அதாவது ஆத்மாக்கள் என்று கருத வேண்டும். தந்தை உங்களுக்கு நேரடியாகக் கற்பிக்கின்றார். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, அதிகளவு ஈர்ப்பு இருக்கும். நாடகத்திற்கு ஏற்ப, இந்தத் தடைகள் தொடர்ந்தும் வரும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர் ஆகக் கூடாது. இது ஒரு கட்டளையாகும். ஆத்மாக்கள் இப்பொழுது மேலும் அதிகளவில் தமோபிரதானாகியுள்ளார்கள். அவர்களால் விகாரத்தில் ஈடுபடாமல் இருக்க முடியாது. அரசாங்கம்; மதுபானம் குடிக்கக் கூடாது என்று கூறிய போதிலும், மக்களால் மதுபானம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. அவர்கள், அவர்களுக்குக் குடிபோதையேற்றி, வழிகாட்டல்களையும் கொடுக்கிறார்கள்: ‘இன்ன இடத்திற்குச் சென்று குண்டு வீசி அதனைத் தகர்த்து விடுங்கள்”;. அதிகளவு சேதம் ஏற்படுகின்றது. நீங்கள், இங்கே அமர்ந்திருந்தவாறு, உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அம்மக்கள் அங்கிருந்தவாறே குண்டுகளை வீசுகின்றார்கள். உலகை அழிப்பதில் அதிகளவு போட்டி உள்ளது. நீங்கள் இங்கே அமர்ந்திருந்து, தந்தையை நினைவு செய்வதால், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஹத்த யோகம் செய்வதோ அல்லது விஷேசடமானதொரு நிலையில் அமர வேண்டும் போன்ற கேள்விக்கே இடமில்லை. பாபா உங்களுக்கு எவ்விதமான சிரமமும் கொடுக்கவில்லை. நீங்கள் விரும்பியவாறு நீங்கள் அமரலாம். ஆனால் நீங்களே அதி அன்பிற்கினிய குழந்தைகள் என்ற நினைவில் நிலைத்திருங்கள். வெண்ணெயில் இருந்து ஒரு மயிரை எடுப்பதைப் போன்று நீங்கள் ஓர் இராச்சியத்தை மிகவும் இலகுவாகப் பெறுகின்றீர்கள். ஜீவன்முக்தி ஒரு விநாடியில் பெறப்படுகின்றது என்று அவர்கள் பாடுகின்றார்கள். நீங்கள் எங்கும் அமரலாம். அல்லது எங்கும் பயணம் செய்யலாம். ஆனால் நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும்;. தூய்மையாகாது உங்களால் எவ்வாறு திரும்பிச் செல்ல முடியும்? அல்லது தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். நீங்கள் அனைவரும் தர்மராஜிடம் செல்லும் போது, அனைவரின் கர்மக்கணக்கும் தீர்க்கப்பட்டுவிடும். நீங்கள் எந்தளவிற்கு தூய்மையானவர் ஆகுகின்றீர்களோ அந்தளவிற்கே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் தூய்மையற்றவராக இருந்தால், காய்ந்த சப்பாத்திகளையே உண்ண நேரிடும். நீங்கள் தந்தையின் நினைவை அதிகரிக்கும் அளவிற்கு, உங்கள் பாவங்களும் அதிகளவில் அழிக்கப்படும். இதற்கு எந்தச் செலவும் இல்லை. நீங்கள் வீட்டில் அமர்ந்திருந்தாலும், தந்தையிடம் இருந்து மந்திரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்;. ‘மன்மனபவ’ என்ற மந்திரம் மாயையைக் கட்டுப்படுத்தும் மந்திரமாகும். நீங்கள் ஒருமுறை இந்த மந்திரத்தைப் பெற்றுக் கொண்டால் நீங்கள் வீட்டிற்குச் செல்ல முடியும். எதுவும் கூறாதீர்கள். அல்ஃபாவையும், இராச்சியமான பீட்டாவையும் நினைவு செய்தால் போதும். தந்தையை நினைவு செய்வதன் மூலம், நீங்கள் சதோபிரதான் ஆகுவதுடன் உங்கள் பாவங்களும் அழிந்து விடும். பாபாவும் உங்களுக்கு தனது சொந்த அனுபவங்களைக் கூறுகின்றார்: நான் உணவு உண்பதற்காக அமரும் போது, நான் பாபாவின் நினைவில் உண்பேன் என்று நினைத்துக் கொண்டே அமர்வதுண்டு, ஆனால், விரைவில் மறந்து விடுகின்றேன். ஏனெனில் நினைவுகூரப்படுகின்றது: ‘பொறுப்புகளைத் தலையில் சுமப்பவர்கள்….. பாபா அதிகளவு சிந்திக்க வேண்டியுள்ளது. இன்ன ஆத்மா அதிகளவு சேவை செய்கின்றார் என்பதால் நான் அந்த ஆத்மாவை நினைவு செய்ய வேண்டும். பாபா சேவை செய்கின்ற குழந்தைகளுக்கு அதிகளவு அன்பைக் கொடுக்கின்றார். அவர் உங்களிடமும் கூறுகின்றார்: இச் சரீரத்தில் பிரவேசித்துள்ள ஆத்மாவையே நினைவு செய்யுங்கள். நீங்கள் இங்கே சிவபாபாவிடமே வருகின்றீர்கள். தந்தை மேலிருந்து கீழே வந்துள்ளார். கடவுள் வந்துள்ளார் என்று நீங்கள் அனைவரிடமும் கூறுகின்றீர்கள். ஆனால் அவர்களுக்குப் புரிவதில்லை. நீங்கள் சாதுர்யமாகவே கூற வேண்டும். இரு தந்தையர் உள்ளனர்: எல்லைக்குட்பட்ட தந்தை எல்லையற்ற தந்தை. எல்லையற்ற தந்தை உங்களுக்கு ஓர் இராச்சியத்தைக் கொடுக்கின்றார். பழைய உலகின் விநாசம், உங்கள் முன்னிலையில் உள்ளது. ஒரு தர்மத்தின் ஸ்தாபனையும், பல்வேறு சமயங்களின் அழிவும் இடம்பெறுகின்றது. தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் எரிந்து விடும். இது யோக அக்கினியாகும், இதன் மூலமே, நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்றீர்கள். தந்தையே உங்களுக்கு இந்த வழி முறையைக் காட்டியுள்ளார். தந்தை உங்கள் அனைவரையும் அழகானவர் ஆக்கி, தனது கண்களில் அமர்த்தி, உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்பது உங்களுக்குத் தெரியும். எக் கண்களில்? ஞானக் கண்களில். அவர் ஆத்மாக்களைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். நீங்கள் நிச்சயமாக மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆகையால், அதற்கு முன்னர், தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியை ஏன் பெற்றுக் கொள்ளக் கூடாது? வருமானமும் மிக அதிகம். தந்தையை மறந்துவிடுவதனால், அதிகளவு இழப்பு உள்ளது. உண்மையான வியாபாரி ஆகுங்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலமே, ஆத்மா தூய்மை ஆக முடியும். அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுப்பீர்கள். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். இப் பழக்கத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தொடர்ந்தும் தந்தையுடன் கற்றிடுங்கள். அப்பொழுது உங்கள் படகு அக்கரை சேரும். அதன் பின்னர் நீங்கள் சிவாலயத்திற்குச் செல்வீர்கள். சந்தரகாந்த வேதத்தில் ஒரு கதை உண்டு; ஒரு படகில் பயணம் செய்த சிலர்;; இடையில் இறங்கிய போது, எவற்றின் மீதோ பற்றுக் கொண்ட, அவர்களை, விட்டுவிட்டு அப் படகு சென்றதாகக் கூறப்படுகின்றது. பக்தி மார்க்கத்தின் சமயநூல்கள் மீண்டும் உருவாக்கப்படும். அவற்றை நீங்கள் வாசிப்பீர்கள். அதன் பின்னர், பாபா வரும் பொழுது, நீங்கள் அவை அனைத்தையும் நிறுத்தி விடுவீர்கள். தந்தை அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வருகின்றார். பாரதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. இவர் அழகானவராகவும் அவலட்சணமானவராகவும் ஆகுகின்றார். பிரம்மா விஷ்ணுவாகவும், விஷ்ணு பிரம்மாவாகவும் ஆகுகின்றார். ஒரேயொருவர் மாத்திரமே இவ்வாறு ஆகுகின்றார் என்றல்ல. இவை அனைத்தும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணர் அழகாகவும், அவலட்சணமானவராகவும் இருந்தார் என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் சுவர்க்கத்திற்குச் சென்ற போது, அவர் நரகத்தை உதைத்துவிடுகின்றார். இது, படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அப்படித்தானே? இராஜரீக உடை அணிந்த உங்களின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய வெகு நாட்களாகத் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் கட்டளைக்கேற்ப நடப்பதற்கு, இந்த விழிப்புணர்வை பேணுங்கள்: ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். எங்களது வசிப்பிடம் நெற்றியின் நடுவில் உள்ளது. நாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதால் இது எங்களது இறை குடும்பமாகும். ஆத்ம உணர்விலுள்ள இப் பழக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2. தர்மராஜின் தண்டனையிலிருந்து விடுதலை அடைவதற்கு உங்கள் கர்மக் கணக்கு முழுவதையும் தீர்த்திடுங்கள். மாயையைக் கட்டுப்படுத்துவதற்கும், சதோபிரதான் ஆகுவதற்கும் நீங்கள் பெற்றுள்ள மந்திரத்தை நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
சதா உஷாராக இருந்து, அனைவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதன் மூலம் மாஸ்டர் முக்தியும், ஜீவன்முக்தியும் அருள்பவர் ஆகுவீர்களாக.

அனைவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் மேன்மையான எண்ணம் குழந்தைகளாகிய உங்கள் அனைவரிலிருந்தும் வெளிப்படட்டும். அனைவரும் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடும் விருப்பத்தையே கொண்டிருக்கின்றார்கள். ஆகையால், அதனை அவர்கள் அனுபவம் செய்வதற்கு உதவுங்கள். அதனை செய்வதற்கு, உங்களது சக்திமிக்க சதோபிரதான் அதிர்வுகளினால் மனித ஆத்மாக்களின் மனோபாவத்தையும் சுபாவங்களையும் மாற்றுங்கள். மாஸ்டர் அருள்பவர்கள் ஆகி, ஒவ்வொரு ஆத்மாவினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுபவர் ஆகுங்கள். முக்தி, ஜீவன்முக்தி என்ற தானத்தை அருளுங்கள். இந்த பொறுப்பினது விழிப்புணர்வானது உங்களை சதா உஷாராக வைத்திருக்கும்.

சுலோகம்:
முரளிதரின் முரளியை செவிமடுக்கும் வேளையில், தங்களது சரீரங்களின் உணர்வை முற்றாக மறப்பவர்களே கோபியரும் கோபிகைகளும் ஆவார்கள்.