16.02.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்குத், தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற விடயங்களை, அவர் கற்பித்தவாறே கிரகியுங்கள். சதா தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.
கேள்வி:
நீங்கள் எதற்காகவும் எதனையிட்டும் ஒருபோதுமே வருந்தாமல் இருப்பதற்கு, நீங்கள் எதனைப் பற்றி நன்றாகச் சிந்திக்க வேண்டும்?
பதில்:
ஒவ்வோர் ஆத்மாவும் நடிக்கின்ற பாகம் எதுவானாலும் மிகச்சரியாகவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நாடகம் அநாதியானதும், அழிவற்றதும் ஆகும். இதைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்பொழுது நீங்கள் என்றுமே எதற்காகவும் வருந்த மாட்டீர்கள். நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி உணர்ந்து கொள்ளாதவர்கள் மாத்திரமே வருந்துகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்நாடகத்தைச் சரியாக அதேபோன்று பற்றற்ற பார்வையாளர்களாகப் பாருங்கள். இதில் அழுவது அல்லது முகம் கோணுவது என்ற கேள்விக்கு இடமில்லை.ஓம் சாந்தி.
ஆத்மாக்கள் மிகவும் சின்னஞ் சிறியவர்கள் என்று ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மா மிகவும் சின்னஞ் சிறியவர், ஆனால் சின்னஞ் சிறிய ஆத்மாவிற்குத் தென்படுகின்ற சரீரமோ மிகப் பெரிதாகும். சரீரத்திலிருந்து சின்னஞ் சிறிய ஆத்மா விடுபடும்போது, அவரால் எதையும் பார்க்க முடியாது. நீங்கள் ஆத்மாவையும், அந்தச் சின்னஞ் சிறிய புள்ளி செய்கின்ற வேலைகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். மிகச் சிறிய வைரங்களில் மாசு ஏதாவது உள்ளதா என்பதை, உருப்பெருக்கும் கண்ணாடி மூலம்;; பார்க்க முடியும். ஆத்மாக்களும் மிகவும் சின்னஞ் சிறியவர்களே. வைரங்களைப் பரிசோதிப்பதற்கு அவர்கள் ஓர் உருப்பெருக்கும் கண்ணாடியைப் பயன்படுத்துவதைப் பாருங்கள். ஆத்மா வசிக்கும் இடத்தைப் பாருங்கள். அவருடைய தொடர்பைப் பாருங்கள். அவர் இக்கண்களினால் இந்த மிகப் பெரிய பூமியையும் ஆகாயத்தையும் பார்க்கின்றார். அப் புள்ளி, பிரிந்து செல்லும்பொழுது, எதுவுமே எஞ்சியிருப்பதில்லை. தந்தை ஒரு புள்ளியாக இருப்பதைப் போன்று, ஆத்மாவும் ஒரு புள்ளி ஆவார். அத்தகைய சின்னஞ் சிறிய ஆத்மாவே தூய்மையானவராகவும் தூய்மையற்றவராகவும் ஆகுகின்றார். இவ்விடயங்கள் மிக நன்றாகச் சிந்திக்கப்பட வேண்டும். ஆத்மா என்றால் என்ன, பரமாத்மா என்றால் என்ன, என்பதை வேறு எவருமே அறிந்திருக்கவில்லை. அத்தகைய சின்னஞ் சிறிய ஆத்மா ஒரு சரீரத்தில் இருக்கும்போது, அவர் என்ன செய்கிறார் என்பதையும், அவர் எதைப் பார்க்கின்றார் என்பதையும் பாருங்கள். இந்த ஆத்மா 84 பிறவிகளின் முழுப் பாகத்தையும் தன்னில் பதிவு செய்துள்ளார். ஆத்மா எவ்வாறு தொழிற்படுகின்றார் என்பது ஓர் அற்புதம் ஆகும். அத்தகைய சின்னஞ் சிறிய புள்ளியில் 84 பிறவிகளின் பாகமும் பதிந்துள்ளது. அவர் ஒரு சரீரத்தை நீக்கிவிட்டு வேறொன்றை எடுக்கின்றார். நேரு மரணித்தபொழுதும் கிறிஸ்து மரணித்தபொழுதும் சரீரமே மரணிக்கின்றது, ஆத்மாக்கள் சரீரங்களை விட்டுப் பிரிகின்றனர். சரீரம் மிகவும் பெரியதாயினும், ஆத்மாவோ மிகவும் சின்னஞ் சிறியவராவார். பாபா பல தடவைகள் வினவியுள்ளார்: ஒவ்வொரு 5000 வருடங்களும் எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கின்றது என்பதை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்வார்கள்? ஒருவர் மரணிப்பது, ஒரு புதிய விடயமல்ல. அந்நபரின் ஆத்மா அச்சரீரத்தை விட்டுப் பிரிந்து இன்னொன்றை எடுத்தார். 5000 வருடங்களுக்கு முன்னரும், இதே நேரத்தில், அந்தப் பெயரையும் வடிவத்தையும் அந்த ஆத்மா விட்டுப் பிரிந்திருந்தார். ஒரு சரீரத்தை நீக்கிவிட்டு இன்னொன்றை எடுப்பதை அவ் ஆத்மா இப்பொழுது அறிந்துள்ளார். நீங்கள் இப்பொழுது சிவ ஜெயந்தியைக் கொண்டாடுகின்றீர்கள். நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் சிவஜெயந்தியைக் கொண்டாடினீர்கள் என்று நீங்கள் காட்டுகின்றீர்கள். ஒவ்வொரு 5000 வருடங்களும் நீங்கள் ஒரு வைரத்தைப் போன்ற சிவ ஜெயந்தியைக் கொண்டாடுகின்றீர்கள். இவ்விடயங்கள் உண்மையானவை. நீங்கள் ஞானக்கடலைக் கடைய வேண்டும், அப்பொழுது உங்களால் மற்றவர்களுக்கு அதனை விளங்கப்படுத்த முடியும். இவ்விழாக்கள் போன்றவை புதியவையல்ல என்று நீங்கள் கூறுவீர்கள். வரலாறு மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது என்பதால், ஒவ்வொரு 5000 வருடங்களும் சகல நடிகர்களும் தங்களின் சொந்தச் சரீரங்களை எடுக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய பெயர்கள், வடிவங்கள்;, இடங்கள், நேரங்கள் போன்றவற்றை நீக்கிவிட்டு, வேறொன்றை எடுக்கின்றார்கள். இதைக் கடைந்து மக்கள் வியப்படையும் வகையில் அதைப் பற்றி எழுதுங்கள். நான் குழந்தைகளை வினவுகின்றேன்: நாங்கள் முன்னர் சந்தித்துள்ளோமா? சின்னஞ் சிறிய ஆத்மாவிடமே இது வினவப்பட வேண்டும். இப் பெயரிலும், வடிவத்தினூடாகவும் நீங்கள் முன்னர் என்னைச் சந்தித்துள்ளீர்களா? ஆத்மாவே செவிமடுக்கின்றார். எனவே, பலர் பதிலளிக்கின்றார்கள்: ஆம் பாபா, நாங்கள் முன்னர் உங்களை முன்னைய கல்பத்திலும் சந்தித்தோம். நீங்கள் ஒவ்வொருவரும் நாடகத்தின் முழுப் பாகத்தையும் உங்கள் புத்தியில் கொண்டிருக்கின்றீர்கள். அந்நடிகர்கள் எல்லைக்குட்பட்ட நாடகங்களில் நடிக்கின்றார்கள். ஆனால் இதுவோ எல்லையற்ற நாடகமாகும். இந்நாடகம் மிகச் சரியானது. அதில் சிறிதளவு வேறுபாடேனும் இருக்க முடியாது. இயந்திரத்தால் இயக்கப்படுகின்ற அத் திரைப்படங்கள் எல்லைக்குட்பட்டவை. தொடர்ந்தும் சுழற்றப்படுகின்ற இரண்டு அல்லது நான்கு திரைப்படச் சுருள்கள் இருக்கின்றன. இதுவே ஒரேயொரு அநாதியான, அழியாத, எல்லையற்ற நாடகம். அதில், சின்னஞ் சிறிய ஆத்மா ஒரு பாகத்தை நடித்துப் பின்னர் இன்னுமொரு பாகத்தை அதனுள் நடிக்கின்றார். 84 பிறவிகளின் படச்சுருள் மிகவும் நீண்டதாக இருக்கும். இது இயற்கையானது. இது சிலரின் புத்தியில் இருக்கின்றது. அது ஒரு பதிவுநாடா போன்றதாகும்;; அது மிகவும் அற்புதமானது. அது 8.4 மில்லியன் பிறவிகளாக இருக்க முடியாது. அது 84 பிறவிகளின் சக்கரம் ஆகும். நீங்கள் அதனுடைய அறிமுகத்தை எவ்வாறு கொடுக்க முடியும்? நீங்கள் ஊடகவியலாளர்களுக்கு விளங்கப்படுத்தினால், அவர்கள் அதைப் பத்திரிகைகளில் பிரசுரிப்பார்கள். நீங்கள் அதைச் சஞ்சிகைகளிலும் அடிக்கடி பிரசுரிக்க முடியும். இச்சங்கமயுகத்தின் விடயங்களைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். இவ்விடயங்கள் சத்தியயுகத்தில் அல்லது கலியுகத்தில் இருக்க மாட்டாது. மிருகங்கள் போன்றவையும் நீங்கள் பார்க்கின்ற அனைத்தும் - அவை அனைத்தையும் 5000 வருடங்களின் பின்னரும் பார்ப்பீர்கள் என்று கூறப்படுகின்றது. அதில் எந்த வேறுபாடும் இருக்க முடியாது. நாடகத்தில் உள்ள அனைத்தும் நிச்சயிக்கப்பட்டவை. சத்தியயுகத்தில், மிருகங்கள் மிகவும் அழகாக இருக்கும். ஒரு நாடகத்தின் படப்பிடிப்பு நடைபெறுவது போன்று, முழு உலகின் வரலாற்றினதும் புவியியலினதும் படப்பிடிப்பு நடைபெறுகின்றது. ஓர் ஈ பறந்து சென்றால், அதுவும் அதேபோன்று மீண்டும் இடம்பெறும். இப்பொழுது இவ் அற்ப விடயங்களைப் பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, எல்லாவற்றிற்கும் முதலில், தந்தையே கூறுகின்றார்: ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் நான் இந்த அதிர்ஷ்ட இரதத்தில் பிரவேசிக்கின்றேன். அதனுள் ஆத்மா எவ்வாறு பிரவேசிக்கின்றார் என்பதை அவரே கூறினார். ஆத்மா சின்னஞ் சிறியதொரு புள்ளி. அவர் பின்னர் ஞானக்கடல் எனவும் அழைக்கப்படுகின்றார். விவேகிகளான குழந்தைகளாகிய உங்களால்; மாத்திரம் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியும். நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றேன். இது அத்தகையதொரு பெறுமதியான கல்வி. தந்தை மாத்திரம் மிகச்சரியான ஞானத்தைக் கொண்டிருப்பதுடன், அவர் அதைக் குழந்தைகளாகிய உங்களுக்கும் கொடுக்கின்றார். எவராவது உங்களை வினவினால், சத்தியயுகத்தின் ஆயுட்காலம் 1250 வருடங்கள் என்று உடனடியாகவே உங்களால் அவருக்குக் கூற முடியும். அங்கு ஒவ்வொரு பிறவியினதும் ஆயுட்காலம் 150 வருடங்கள் ஆகும். அத்தகையதொரு நீண்ட பாகம் நடிக்கப்படுகின்றது. நீங்கள் முழுச் சக்கரத்தையும் உங்களுடைய புத்தியில் கொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றோம். முழு உலகமும் இவ்வாறே தொடர்ந்தும் ஒரு சக்கரத்தில் சுழல்கின்றது. இந்நாடகம் அநாதியானதும், அழிவற்றதும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதும் ஆகும். அதில் புதிதாக எதுவும் மேலதிகமாகச் சேர்க்கப்படுவதில்லை. நினைவுகூரப்பட்டுள்ளது: அனைத்தும் நிச்சயிக்கப்பட்டுள்ளதால், அதனைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? நிகழ்பவையெல்லாம் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. ஒரு பற்றற்ற பார்வையாளராக நீங்கள் அதை அவதானிக்க வேண்டும். எல்லைக்குட்பட்ட நாடகங்களில், அத்தகைய பாகங்கள் நடிக்கப்படும்பொழுது, மென்மையான இதயமுடையவர்கள் அழ ஆரம்பிக்கின்றனர். அது ஒரு நாடகமே, ஆனால் இதுவோ நிஜம் ஆகும். இங்கு, ஒவ்வோர் ஆத்மாவும் தத்தமது பாகத்தை நடிக்கின்றார்கள். நாடகம் என்றுமே நிறுத்தப்படுவதில்லை. இதில் அழுவது அல்லது முரண்படுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. இது புதியதல்ல. நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றி உணராதவர்கள் மாத்திரம் வருத்தப்படுகின்றார்கள். உங்களுக்கு மாத்திரம் இது தெரியும். இந்நேரத்தில் இந்த ஞானத்தினூடாக நாங்கள் என்ன அந்தஸ்தை அடைந்தோமோ, அதையே சக்கரத்தைச் சுற்றி வந்த பின்னரும் அடைவோம். இவை நீங்கள் கடைய வேண்டிய மிகவும் அற்புதமான விடயங்கள்;. எந்த மனிதரும் இவ்விடயங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. ரிஷிகளும் முனிவர்களும் கூறுவதுண்டு: எங்களுக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பையோ தெரியாது. படைப்பவர் மிகச் சின்னஞ் சிறிய புள்ளி என்பதை அவர்களால் எவ்வாறு அறிய முடியும்? அவர் மாத்திரமே புதிய உலகைப் படைப்பவர். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்;கின்றார். அவரே ஞானக்கடல்;. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றீர்கள். எங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் கூற மாட்டீர்கள். இந்நேரத்தில் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எதற்காகவும் வருத்தப்படத் தேவையில்லை. நீங்கள் சதா முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். அந்நாடகங்களின் படச்சுருள் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதால், கிழிந்து பயனற்றதாகிவிடுகிறது. அது பழையதாகுவதால் நீங்கள் அவற்றிற்குப் பதிலாக வேறொன்றை மாற்றி, பழையதை அழித்து விடுவீர்கள். இந்நாடகம் எல்லையற்றதும், அழிவற்றதும் ஆகும். நீங்கள் இவ்விடயங்களைப் பற்றிச் சிந்தித்து அவற்றை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே நாடகம். நாங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுகின்றோம். தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுவதற்கோ, அல்லது தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்கோ வேறு எந்த வழியும் இல்லை. நாங்கள் எங்கள் பாகங்களை நடிக்கும் வேளையில், சதோபிரதானிலிருந்து தமோபிரதான் ஆகிவிட்டோம். இப்பொழுது நாங்கள் சதோபிரதானாக வேண்டும். ஓர் ஆத்மாவையோ அல்லது அவருடைய பாகத்தையோ அழிக்க முடியாது. அத்தகைய விடயங்களைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. மக்கள் இவ்விடயங்களைக் கேள்விப்படும்பொழுது, வியப்படைவார்கள். அவர்கள் பக்திமார்க்கத்தின் சமயநூல்களைக் கற்கின்றார்கள். இராமாயணம், பாகவதம், கீதை போன்றவை அனைத்தும் ஒன்றேயாகும். இங்கு, நீங்கள் ஞானக்கடலைக் கடைய வேண்டும். எல்லையற்ற தந்தை விளங்கப்படுத்துகின்ற அனைத்து விடயங்களையும் அவர் மிகச்சரியாக விளங்கப்படுத்துவதைப் போன்றே, நாங்கள் கிரகிக்க வேண்டும். பின்னர் எங்களால் ஒரு சிறந்த அந்தஸ்தைக் கோர முடியும். அனைவரும் ஒரேயளவிற்குக் கிரகிக்க முடியாது. சிலர் மிகவும் ஆழமாகவும், சூட்சுமமாகவும் விளங்கப்படுத்துகின்றார்கள். இந்நாட்களில், நீங்கள் சிறைச்சாலைகளில் சொற்பொழிவுகள் ஆற்றுவதற்குச்; செல்கின்றீர்கள். நீங்கள் விபச்சாரிகளிடமும் செல்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் செவிப்புலன் அற்றவர்களிடமும், வாய்பேச முடியாதவர்களிடமும் செல்லலாம். ஏனெனில் அவர்களுக்கும் இதைப் பெறும் உரிமை உள்ளது. சமிக்ஞைகளினூடாக அவர்களால் புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொள்ளும் ஆத்மா உள்ளே இருக்கின்றார். அவர்கள் முன்னிலையில் படத்தை வைத்தால், குறைந்தபட்சம் அவர்களால் வாசிக்க முடியும். ஆத்மாவிலே புத்தி உள்ளது. ஒருவர் குருடராகவோ அல்லது முடவராகவோ இருந்தாலும், ஏதோவொரு வகையில் அவரால் புரிந்துகொள்ள முடியும். குருடர்களுக்குச் செவிகள் இருக்கின்றன. உங்களுடைய ஏணிப்படம் மிகவும் சிறந்தது. இந்த ஞானத்தை எவருக்கும் விளங்கப்படுத்தி அவர்களைச் சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு தகுதியானவர் ஆக்க முடியும். ஆத்மாவால் தந்தையிடமிருந்து தனது ஆஸ்தியைக் கோர முடியும். ஆத்மாவால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். அங்கங்களில் குறைபாடுகள் இருக்கலாம், எனினும் அங்கு எவரும் நொண்டியாகவோ அல்லது முடவராகவோ இருக்க மாட்டார்கள். அங்கு, ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மையாக இருக்கும். சடப்பொருளும் தூய்மையானது. நிச்சயமாகப் புதிய விடயங்கள் சதோபிரதானாக இருக்கும். இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. ஒரு விநாடி அடுத்த விநாடி போன்று இருக்க முடியாது. இரு விநாடிகள் ஒரேமாதிரி இருக்க முடியாது; எப்பொழுதும் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது. அத்தகைய நாடகத்தை அவ்வாறாகவே ஒரு பற்றற்ற பார்வையாளராக, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்நேரத்தில் நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள், நீங்கள் அதை மீண்டும் பெற மாட்டீர்கள். முன்னர், நீங்கள் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை. இது அநாதியான, அழிவற்ற, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் என அழைக்கப்படுகின்றது. அதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அதைக் கிரகித்து ஏனையோருக்கும் விளங்கப்படுத்துங்கள். இந்த ஞானத்தைப் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். நீங்கள் சக்தியைக் கொடுக்கின்ற, மிகச்சிறந்த மருந்தைப் பெறுகின்றீர்கள். அனைத்திலும் மிகச்சிறந்தவை எதுவாயினும் புகழப்படுகின்றது. எவ்வாறு புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதும், அந்த இராச்சியம் பின்னர் எதைப் போன்று இருக்கும் என்பதும் உங்களுக்கு வரிசைக்கிரமமாகத் தெரியும். இதை அறிந்தவர்களால் ஏனையோருக்கும் விளங்கப்படுத்த முடியும். நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். சிலர் ஒரு பைசா பெறுமதியான சந்தோஷத்தையேனும் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தமது சொந்தப் பாகத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இதைப் புத்தியில் கொண்டிருப்பவர்களும் ஞானக்கடலைக் கடைபவர்களும் ஏனையோருக்கும் விளங்கப்படுத்துகின்றார்கள். இது உங்கள் கல்வி, நீங்கள் அவ்வாறே ஆகுகின்றீர்கள். நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்தலாம்: நீங்கள் ஓர் ஆத்மா. ஆத்மாவே பரமாத்மாவை நினைவுசெய்கின்றார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். கூறப்பட்டுள்ளது: கடவுள் ஒருவரே, மனிதர்கள் அனைவரும்; ஓர் ஆத்மாவைத் தங்களுள் கொண்டிருக்கின்றார்கள். ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவரினதும் பரலோகத் தந்தை. புத்தியில் உறுதியான நம்பிக்கையை உடையவர்களின் மனதை மாற்ற எவராலும் முடியாது. அவர்கள் பலவீனமானவர்களின் மனதை விரைவில் மாற்றிவிடுகின்றார்கள். சர்வவியாபி என்ற எண்ணத்தைப் பற்றிய பல்வேறு விவாதங்கள் உள்ளன. அவர்களும் தமது சொந்த ஞானத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள். அவர்கள் எங்களுடைய தர்மத்திற்கு உரியவர்களாக இல்லாதிருப்பது சாத்தியம். அவர்கள் தேவ தர்மத்திற்கு உரியவர்கள் என்று எவ்வாறு நீங்கள் கூறமுடியும்? ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் மறைந்து விட்டது. உங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் தூய இல்லறப் பாதைக்குரியது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, அது தூய்மையற்றதாகி விட்டது. முதலில் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்கள் பல கருத்துக்களைக் கற்றிருந்தால், உங்களால் ஏனைய பலருக்கும் விளங்கப்படுத்த முடியும். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பின்னர் நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்த வேண்டும். உங்களைத் தவிர, வேறெவருக்கும் இது தெரியாது. நீங்களும் வரிசைக்கிரமமாகவே உள்ளீர்கள். புதியவர்கள் வருவதால், பாபாவும் கருத்துக்களை மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்பக் கூற வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் எவ்வாறு ஸ்தாபனை இடம்பெற்றது என அவர்கள் உங்களை வினவுகின்றார்கள், நீங்கள் பின்னர் அதை மீண்டும் கூற வேண்டியிருக்கும். நீங்கள் மிகவும் மும்முரமாக இருப்பீர்கள். படங்களைப் பயன்படுத்தியும் நீங்கள் விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், அனைவராலும் ஒரேயளவிற்கு ஞானத்தைக் கிரக்கிப்பதற்கு இயலாது. இங்கு, உங்களுக்கு ஞானமும் தேவை, நினைவும் உங்களுக்குத் தேவை, உங்களுக்கு மிகச்சிறந்த தாரணையும் தேவை, சதோபிரதான் ஆகுவதற்கு நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். சில குழந்தைகள் தத்தமது சொந்த வியாபாரத்தில் சிக்கியுள்ளார்கள். அவர்கள் எம் முயற்சியையும் செய்வதில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முன்னைய கல்பத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு முயற்சியைச் செய்தீர்களோ, அதே முயற்சியையே நீங்கள் மீண்டும் செய்வீர்கள். இறுதியில், நீங்கள் சகோதரர்களாக வாழ வேண்டும். நீங்கள் சரீரமற்றவராகவே வந்தீர்கள், நீங்கள் சரீரமற்றவராகத் திரும்ப வேண்டும். இறுதியில் நீங்கள் வேறு எவரையேனும் நினைவுசெய்கின்றீர்கள் என்றிருக்கக்கூடாது. எனினும் எவராலும் திரும்பிச் செல்ல முடியாது. விநாசம் நடைபெறுவதற்கு முன்னதாக, எவ்வாறு எவரேனும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும்? அவர்கள் சூட்சும வதனத்திற்குச் செல்வார்கள் அல்லது இங்கேயே இன்னொரு பிறவியை எடுக்க வேண்டும். அவர்கள் இன்னமும் எஞ்சியுள்ள பலவீனங்களை அகற்றுவதற்கு முயற்சி செய்வார்கள். எவ்வாறாயினும், அவர்கள் வளர்ந்து முதிர்ச்சி அடையும்பொழுது அவர்களால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இறுதியிலேயே நீங்கள் நிலையான ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைச் சுயசரிதையை எழுதும்பொழுது நீங்கள் அனைத்தையும் நினைவுசெய்வீர்கள் என்றில்லை. எனவே, நூ}லகங்களில் ஏன் பல்வேறு புத்தகங்கள் இருக்கின்றன? வைத்தியர்களும் சட்டத்தரணிகளும் பல புத்தகங்களை வைத்திருக்கின்றார்கள்;, அவர்கள் அவற்றைத் தொடர்ந்து வாசிக்கின்றார்கள். அங்கு, மனிதர்கள் மனிதர்களுடைய சட்டத்தரணிகள் ஆவார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்மாக்களின் சட்டத்தரணிகள் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றீர்கள். அது லௌகீகக் கல்வி, ஆனால் இதுவோ ஆன்மீகக் கல்வியாகும். இந்த ஆன்மீகக் கல்வியினூடாக, நீங்கள் 21 பிறவிகளுக்கு எத் தவறையும் செய்ய மாட்டீர்கள். பல தவறுகளை இராவண இராச்சியத்தில் செய்ததனால், நீங்கள் பெருமளவுக்குச் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. முழுமையாகக் கற்காதவர்களும் தங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையாதவர்களும் தண்டனையைச் சகித்துக் கொள்ள வேண்டும். பின்னர், அவர்களுடைய அந்தஸ்தும் குறைக்கப்படும். நீங்கள் ஞானக்கடலைக் கடையும்பொழுதும், தொடர்ந்து ஏனையோருக்குப் பதிலளிக்கும்பொழுதும், நீங்கள் இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள். எவருடைய சிவஜெயந்தி கொண்டாடப்படுகின்றதோ, அந்தத் தந்தையும் கடந்த கல்பத்தில் வந்தார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். யுத்தம் என்ற எந்தக் கேள்விக்கும் இடமில்லை. அவ்விடயங்கள் அனைத்தும் சமயநூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இது ஒரு கல்வி. வருமானம் ஈட்டுவதில் சந்தோஷம் இருக்கின்றது. நூறாயிரத்தைச் சம்பாதிப்பவர்கள் பெருஞ் சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றார்கள், ஆனால் ஏனையோர் சிறிதளவு பணத்தையே கொண்டிருக்கின்றார்கள். எவ்வாறாயினும், ஒருவர் பல ஞான இரத்தினங்களைக் கொண்டிருந்தால், அந்தளவுக்கு அவர் சந்தோஷமாகவும் இருக்கின்றார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானக்கடலைக் கடைந்து உங்களை ஞான இரத்தினங்களால் நிரப்புங்கள். நாடகத்தின் இரகசியங்களை மிக நன்றாகப் புரிந்துகொண்டு அவற்றை ஏனையோருக்;கும் விளங்கப்படுத்துங்கள். எதைப் பற்றியும் எந்த வருத்தத்தையும் கொண்டிருக்காதீர்கள், ஆனால் சதா முகமலர்ச்சியுடன் இருங்கள்.2. உங்கள் ஸ்திதியை நீண்டகாலத்திற்கு நிலையானதாகவும், ஸ்திரமானதாகவும் ஆக்கினால், இறுதியில் ஒரேயொரு தந்தையைத் தவிர வேறெவரையும் நீங்கள் நினைவு செய்ய மாட்டீர்கள். சகோதரர்களாக இருப்பதையும், இப்பொழுது நீங்கள் வீடு திரும்பிச் செல்வதையும் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அனைத்தையும் தந்தையிடம் கையளிப்பதால், ஒரு தாமரை போன்று பற்றற்றவராகவும், அன்பானவராகவும் இருந்து, இலேசாகவும் ஒளியாகவும் ஆகுவீர்களாக.
தந்தைக்குரியவர் ஆகுவதெனில், உங்கள் சுமைகள் அனைத்தையும் தந்தைக்குக் கொடுப்பது என அர்த்தமாகும். இலேசாகவும் ஒளியாகவும் இருப்பது எனில் அனைத்தையும் தந்தையிடம் கையளிப்பதாகும். “இச்சரீரமும் என்னுடையதல்ல”. அச்சரீரமும் உங்களுக்குரியது இல்லையெனில், வேறு என்ன எஞ்சியுள்ளது? நீங்கள் அனைவரும் ஒரு சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்: இச்சரீரம் உங்களுடையது, மனம் உங்களுடையது, அனைத்துச் செல்வமும் உங்களுடையதாகும். அனைத்தும் தந்தைக்கு உரியது ஆதலால், எவ்வாறு சுமைகள் ஏதும் இருக்க முடியும்? ஆகவே, உங்கள் விழிப்புணர்வில் தாமரையின் உதாரணத்தை வைத்திருந்து, சதா அன்பானவராகவும் பற்றற்றவராகவும் இருங்கள், நீங்கள் இலேசானவராகவும் ஒளியாகவும் ஆகுவீர்கள்.
சுலோகம்:
அதிகாரம் செலுத்துவதை முடித்து, ஆன்மீகத்தின் மூலம் தங்கள் சரீர உணர்வு அனைத்தையும் உருகச் செய்பவர்களே, உண்மையான பாண்டவர்கள் ஆவார்கள்.