28.04.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 19.11.84 Om Shanti Madhuban
எல்லையற்ற விருப்பமின்மைக்கான மனோபாவத்தைக் கொண்டிருப்பதன் மூலம் வெற்றியின் பெறுபேறு.
இன்று, உலகைப் படைப்பவர் தனது மேன்மையான படைப்பையும் படைப்பின் மூதாதை ஆத்மாக்களையும் பார்க்கிறார். எங்கும் உள்ள பூஜிக்கத்தகுதிவாய்ந்த மூதாதை ஆத்மாக்களும் பாப்தாதாவின் முன்னால் இருக்கிறார்கள். மூதாதை ஆத்மாக்களின் ஆதாரத்தினால் உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரும் சக்தியையும் அமைதியையும் பெறுகிறார்கள். அதை எதிர்காலத்திலும் பெறவுள்ளார்கள். ஆத்மாக்கள் அனைவரும் பூஜிக்கத்தகுதிவாய்ந்த மூதாதை ஆத்மாக்களை, அமைதியையும் சக்தியையும் அருள்பவர்கள் என அழைத்து நினைவு செய்கிறார்கள். இத்தகைய வேளையில், அமைதி அலைகளை அருள்பவரின் குழந்தைகளான ஆத்மாக்களான நீங்கள், மாஸ்ரர் அமைதிக் கடல்களாகவும், மாஸ்ரர் அமைதி சூரியன்களாகவும் உள்ள நீங்கள், அனைவருக்கும் அமைதிக் கதிர்களையும் அமைதி அலைகளையும் கொடுக்கிறீர்களா? இந்த விசேடமான சேவையைச் செய்வதை நீங்கள் பயிற்சி செய்துள்ளீர்களா? அல்லது, இந்த விசேட சேவையைச் செய்வதற்கு உங்களுக்கு நேரம் இல்லாமல் போவதற்கும், இந்தப் பயிற்சி குறைவாக இருப்பதற்கும், நீங்கள் ஏனைய வகையான சேவைகளில் மும்முரம் ஆகியுள்ளீர்களா? காலத்திற்கேற்ற சேவையின் வடிவத்தை உங்களால் செய்ய முடியாதா? ஒருவர் தண்ணீருக்கான தாகத்துடன் இருக்கும்போது, நீங்கள் அவருக்கு அருஞ்சுவையான உணவைக் கொடுத்தால், அவர் திருப்தி அடைவாரா? அதேபோன்று, தற்சமயம், அமைதிக்கும் சக்திக்குமான தேவை உள்ளது. உங்களின் மனதின் சக்தியால், உங்களால் ஆத்மாக்கள் மன அமைதியை அனுபவம் பெறச் செய்ய முடியும். வார்த்தைகளால், சத்தம் அவர்களின் காதுகளைச் சென்றடையச் செய்ய முடியும். ஆனால், வார்த்தைகளுடன்கூடவே, உங்களின் மனங்களினூடாகச் சேவை செய்வதன் மூலம், உங்களால் அவர்களின் மனங்களைச் சென்றடைய முடியும். மனதின் ஒலி மனங்களைச் சென்றடைகிறது. வாயின் ஒலி, காதுகளையும் வாயையும் மட்டுமே சென்றடைகிறது. வார்த்தைகளால் மட்டும் சேவை செய்வதன் மூலம், பேச்சின் சக்தி மட்டுமே உள்ளது. ஆனால், மனதினால் கடையும் சக்தியும் முற்றிலும் மூழ்கியிருப்பதன் ரூபத்தின் சக்தியும் உள்ளன. இந்த இரு சக்திகளும் பெறப்படுகின்றன. அவர்கள் செவிமடுப்பவர்களாக மட்டும் ஆகுவார்கள். ஆனால், மற்றவர்களோ அந்த ரூபமாக ஆகுவார்கள். இரண்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. எனவே, எப்போதும் சேவையில் இரண்டும் ஒன்றுசேர்ந்து இருக்க வேண்டும்: வார்த்தைகள் மற்றும் மனம்.
தற்சமயம், பாரத மக்களை என்ன நிலையில் பாபா காண்கிறார்? இப்போது, அனைவருக்கும் தற்காலிக விருப்பமின்மையின் மனோபாவம் காணப்படுகிறது. (ஒருவர் இறக்கும்போது ஏற்படும் மனோநிலை). இந்தத் தற்காலிக விருப்பமின்மையை எல்லையற்ற விருப்பமின்மையாக மாற்றுவதற்கு, நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பவர்கள் ஆகவேண்டும். உங்களையே சோதித்துப் பாருங்கள்: நீங்கள் சிலவேளைகளில் ஆர்வத்துடனும் சிலவேளைகளில் ஆர்வமின்மையுடனும் இருக்கிறீர்களா? அல்லது நீங்கள் நிலையான, எல்லையற்ற விருப்பமின்மை உடையவர்கள் ஆகிவிட்டீர்களா? எல்லையற்ற விருப்பமின்மை உடையவர் என்றால், வீடற்றவர் என்று அர்த்தம். சரீரம் என்ற வீடும் இல்லாதவர் என்று அர்த்தம். இந்தச் சரீரமும் தந்தைக்குரியது. அது உங்களுடையது அல்ல. இந்தளவிற்கு சரீர விழிப்புணர்வில் இருந்து பற்றற்றவராக இருங்கள். எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருக்கும் ஒருவர் ஒருபோதும் சம்ஸ்காரங்களின் சுபாவத்தின் அல்லது வசதிகளின் ஆதிக்கத்திற்கு உட்படுவதில்லை. அவர் வசதிகளைப் பயன்படுத்தும்போது, ஒரு பற்றற்ற அதிபதியாகவும் வெற்றி சொரூபமாகவும் ஆகுவார். அவர் வசதிகளைத் தனக்குரிய வழிமுறைகளாகப் பயன்படுத்துவார். அவர் ஆதாரத்தைப் பெயரளவிலேயே பயன்படுத்துவார். அவற்றில் தங்கியிருப்பதில்லை. ஆதாரத்தில் தங்கியிருத்தல் என்றால் ஆதிக்கத்திற்கு உட்படுதல் என்று அர்த்தம். ‘ஆதிக்கத்திற்கு உட்படுதல்’ (வசிபூத்) என்ற கூற்றின் அர்த்தம், ஆத்மா ஒருவர் தீய ஆவியின் வசப்பட்டு பிரச்சனைக்கு உள்ளாகுதல் என்பதாகும். நீங்கள் வசதிகளின், சம்ஸ்காரங்களின், சுபாவத்தின் அல்லது தொடர்புகளின் ஆதிக்கத்திற்கு உட்படும்போது, நீங்கள் ஒரு தீய ஆவியின் வசப்பட்டு அதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளீர்கள் என்றே அர்த்தம். எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டுள்ள ஒருவர், கரவன்ஹாரே அனைத்தையும் தன்மூலம் செய்விக்கிறார் என்ற சதா போதையுடன் இருப்பார். அதனால் அவர் பறக்கும் யோகியாக இருப்பார். போதையுற்ற யோகியை விட இது அதியுயர்ந்த ஸ்திதி ஆகும். ஹத்தயோகத்தின் எல்லைக்குட்;பட்ட வழிமுறைகளால் அவர்கள் நிலத்திற்கு, நெருப்புக்கு, நீருக்கு மேலே உயரே அமர்ந்திருப்பது போன்றுள்ளது. அவர்கள் யோகத்தினூடாக வெற்றி சொரூபங்கள் ஆகியவர்களாகக் கருதப்படுகிறார்கள். அது ஹத்தயோகம் என்ற வழிமுறையினூடாகப் பெறப்படும் தற்காலிகமான வெற்றி ஆகும். அதேபோன்று, எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தின் வழிமுறையைக் கொண்டிருப்பவர்கள், சரீர உணர்வெனும் நிலத்தின் விழிப்புணர்விற்கு அப்பாலும், வெவ்வேறு வகையான மாயையின் விகாரம் என்ற நெருப்பிற்கு அப்பாலும் இருப்பார்கள். அத்துடன் அவர்கள் பற்றற்றவர்களாக இருப்பார்கள். பல்வகையான வசதிகளெனும் தீய சகவாசத்தில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். நீரின் ஓட்டம் உங்களைத் தனக்குரியதாக்கி உங்களைத் தன்னை நோக்கி இழுப்பதைப் போன்று, எந்த வகையான தற்காலிக ஓட்டமும் உங்களை அதை நோக்கிக் கவராதிருக்க வேண்டும். நீரின் ஓட்டத்திற்கு அப்பாற்பட்டிருத்தலே பறக்கும் யோகியாக இருத்தல் எனப்படுகிறது. இந்த வெவ்வேறு வெற்றி ரூபங்கள் அனைத்தும் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கும் வழிமுறை மூலம் பெறப்படுகிறது.
எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருத்தல் என்றால், உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் சேவையிலும் எல்லையற்ற மனோபாவம், விழிப்புணர்வு, நல்லாசிகள், தூய உணர்வுகளைக் கொண்டிருத்தல் ஆகும். ஒவ்வொரு வார்த்தையும் சுயநலமற்ற உணர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். கரவன்ஹாரே உங்களைச் செயற்பட வைக்கிறார் என்ற அதிர்வை உங்களின் ஒவ்வொரு செயலிலும் அனைவரும் அனுபவம் செய்ய வேண்டும். இதுவே எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருத்தல் என்றால் சுயத்தின் எந்தவிதமான விழிப்புணர்வையும் முடித்தல் என்று அர்த்தம். அதற்குப் பதிலாக, அனைத்திலும் ‘பாபா’ என்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும். நீங்கள் எல்லையற்ற மந்திரத்தை உச்சாடனம் செய்வதைப் போன்று, சகல எல்லைகளுக்கும் அப்பால் இருக்கும் விழிப்புணர்வின் சொரூபம் ஆகுங்கள். உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் மூச்சிலும் எல்லையற்ற விழிப்புணர்வும் பாபாவுமே கலந்திருக்க வேண்டும். ஆகவே, நீங்கள் இப்போது அமைதியையும் சக்தியையும் அருள்பவர்களாகி, யாராவது இறக்கும்போது ஏற்படும் எல்லைக்குட்பட்ட, தற்காலிகமான விருப்பமின்மையைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை, எல்லையற்ற விருப்பமின்மை உடையவர்கள் ஆக்குங்கள்.
எனவே, இந்தக் காலத்திற்கேற்ப, பாப்தாதா குழந்தைகளின் பெறுபேறுகளைத் தொலைக்காட்சியில் கண்டார். குழந்தைகளோ தொலைக்காட்சியில் இந்திரா காந்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வேளையில் அறிவிற்காக அல்லது செய்திக்காக அதைப் பார்த்தது ஓகே. எவ்வாறாயினும், ‘என்ன நிகழ்ந்தது? இப்போது என்ன நிகழும்?’ என்ற உணர்வுடன் அதைப் பார்க்காதீர்கள். ஞானம் நிறைந்தவராகி, ஒவ்வொரு காட்சியையும் சென்ற கல்பத்தின் விழிப்புணர்வுடன் பாருங்கள். எனவே, பாப்தாதா குழந்தைகளில் எதைக் கண்டார்? குழந்தைகளின் காட்சியும் சுவாரசியமாக இருந்தது. பாபா மூன்று வகையான பெறுபேறுகளைக் கண்டார்.
1. இவர்கள் தொடர்ந்து முன்னேறுகையில் கவனக்குறைவு என்ற நித்திரையில் ஆழ்ந்திருக்கும் ஆத்மாக்கள் ஆகுவார்கள். சடுதியாக ஓர் உரத்த சத்தம் கேட்கும்போது அல்லது யாராவது அவர்களை அசைக்கும்போது, நித்திரை செய்பவர்கள் விரைந்து விழித்தெழுவார்கள். ஆனால் அவர்கள் ‘என்ன நிகழ்ந்தது?’ என்ற எண்ணத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே விழித்திருப்பார்கள். பின்னர், படிப்படியாக கவனக்குறைவு என்ற நித்திரையில் மீண்டும் ஆழ்ந்துவிடுவார்கள். ‘இது எல்லா வேளையும் நிகழுகிறது’ என்ற போர்வையைப் போர்த்தியவண்ணம் மீண்டும் அவர்கள் தூங்கிவிடுகிறார்கள். ‘இது வெறும் ஒத்திகையே. இறுதிக்காட்சி எதிர்காலத்திலேயே நிகழும்’ என்று அவர்கள் போர்வையை இழுத்துத் தமது முகத்தை மூடிக் கொள்கிறார்கள்.
2. இவர்கள் சோம்பேறித்தனம் என்ற நித்திரையில் ஆழ்ந்திருப்பவர்கள். ‘இவை அனைத்தும் நிகழவுள்ளது’. அது நிகழ்ந்தது. நாம் எவ்வாறாயினும் முயற்சி செய்கிறோம். நாம் எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வோம். நாம் சங்கமயுகத்தில் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. நாம் அவற்றில் சிலதைச் செய்துள்ளோம். எதிர்காலத்தில் மேலும் சிலதைச் செய்வோம். நித்திரையில் இருந்து விழித்த ஒருவர், போர்வையில் இருந்து தனது தலையை நீட்டித் தன்னைச் சூழ இருப்பவர்கள் இன்னமும் தூங்குகிறார்களா எனப் பார்ப்பதைப்போன்று, அவர்கள் விழித்தெழுந்து, தொடர்ந்து மற்றவர்களை அவதானிக்கிறார்கள். ‘மிகவும் பிரபல்யமானவர்களும் எங்களைப் போன்றே அதே வேகத்திலேயே செல்கிறார்கள்’. இந்த முறையில் மற்றவர்களின் பலவீனங்களைப் பார்த்து, அவர்கள் தந்தையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, தமது சகோதர, சகோதரிகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்களின் பலவீனங்களிலும் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய எண்ணங்களுடன் சோம்பேறித்தனம் என்ற நித்திரையில் ஆழ்ந்திருப்பவர்கள், நிச்சயமாக விழித்தெழுகிறார்கள். அவர்களின் ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் அடிப்படையில், சிலர் தமது சோம்பேறித்தனம் என்ற நித்திரையையும் துறக்கிறார்கள். அவர்கள் சுய முன்னேற்றத்திற்கும் சேவையில் முன்னேற்றத்திற்குமான அடிகளையும் முன்னால் எடுத்து வைக்கிறார்கள். குழப்பம் அவர்களை அசைத்தது. எனவே அவர்கள் முன்னால் சென்றார்கள். ஆனால், சோம்பேறித்தனம் என்ற சம்ஸ்காரம் அவர்களை அவ்வப்போது இழுத்துக் கொண்டே இருக்கும். எவ்வாறாயினும், அந்தக் குழப்பம் அவர்களை அசைத்து, முன்னால் செல்ல வைத்தது.
3. இவர்களே குழப்பத்தைக் கண்டும் அசையாமல் இருப்பவர்கள். சேவையின் மேன்மையான எண்ணங்களுடன், அவர்கள் சேவைக்காக வெவ்வேறு திட்டங்களைச் செய்து, அவற்றைப் பூர்த்தி செய்கிறார்கள். இவர்களே முழு உலகிற்கும் அமைதியினதும் சக்தியினதும் உதவியைக் கொடுப்பவர்கள். தைரியத்தைப் பேணுவதுடன் மற்றவர்களுக்கும் தைரியத்தைக் கொடுப்பவர்கள். பாபா இப்போதும் இத்தகைய குழந்தைகளைக் கண்டார். எவ்வாறாயினும், தற்காலிகமான ஊக்கம், உற்சாகத்தின் அலையில், தற்காலிகமான தீவிர முயற்சியில் அல்லது பலவீனங்களின் விருப்பமின்மையில் முன்னேறாதீர்கள். உங்களின் ஆதி ஸ்திதியின் சக்தியால் இக்கட்டான சூழ்நிலைகளையும் மாற்றும் உலகை மாற்றுபவர்கள் என்ற விழிப்புணர்வை எப்போதும் பேணுங்கள். இக்கட்டான சூழ்நிலைகள் உங்களின் ஸ்திதியை முன்னேறச் செய்தால், சூழல் மாஸ்ரர் சர்வசக்திவான்களான உங்களை ஆட்சி செய்தால், அல்லது மயானத்தின் தற்காலிகமான விருப்பமின்மை உங்களைத் தற்காலிகமான காலப்பகுதிக்கு எல்லையற்ற விருப்பமின்மைக்குரியவர் ஆக்கினால், அவை மூதாதை ஆத்மாக்களின் செயல்கள் அல்ல. காலமும் படைப்பும் மாஸ்ரர் படைப்பவர்களான உங்களை முன்னேறச் செய்யும்போது, அது மாஸ்ரர் படைப்பவர்களின் பலவீனம் ஆகும். உங்களின் மேன்மையான எண்ணங்கள் காலத்தை மாற்றும். உலகை மாற்றும் ஆத்மாக்களான உங்களுடன் காலம் ஒத்துழைக்கிறது. உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள், காலம் உங்களை அசைக்கும்போது முன்னேறுபவர்கள் அல்ல. ஆனால் நீங்களாகவே முன்னேறிக் காலத்தை நெருக்கமாகக் கொண்டுவருபவர்கள். ‘இப்போது என்ன நிகழும்?’ என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. எவ்வாறாயினும், அந்தக் கேள்வியை முற்றுப்புள்ளியாக மாற்றுங்கள். அதாவது, உங்களைச் சகல பாடங்களிலும் முழுமையானவர் ஆக்குங்கள். இதுவே முற்றுப்புள்ளி ஆகும். ‘இவ்வாறான நேரத்தில் என்ன நிகழும்?’. இந்தக் கேள்வி எழக்கூடாது. அதற்குப் பதிலாக, ‘நான் என்ன செய்ய வேண்டும்? இந்த வேளையில் எனது கடமை என்ன?’ என உங்களையே கேளுங்கள். உங்களை இந்தச் சேவையில் ஈடுபடுத்துங்கள். தீயை அணைப்பதில் தீயணைக்கும் படையினர் ஈடுபடுவார்கள். ‘என்ன நிகழ்ந்தது?’ என அவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்கள் தங்களைத் தமது சேவையில் ஈடுபடுத்திக் கொள்வார்கள், அப்படியல்லவா? அதேபோன்று, ஆன்மீக சமூக சேவையாளர்களான உங்களின் கடமையானது, உங்களை ஆன்மீகச் சேவையில் ஈடுபடுத்திக் கொள்வதாகும். உலகிலுள்ள மக்களும் தனித்துவமான ஒன்றை அனுபவம் செய்ய வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? அவ்வாறிருந்தும், காலத்திற்கேற்ப, நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். சூழ்நிலைகள் எவ்வாறிருந்தாலும், நாடகத்திற்கேற்ப சந்திப்பிற்கான ஒன்றுகூடல் இடம்பெறும். இங்கு வந்ததில் நீங்கள் மேலும் அதிர்ஷ்டசாலிகள் ஆகுகிறீர்கள். இங்கு வந்திருப்பது உங்களின் பாக்கியமே என நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள், அல்லவா? நல்வரவுகள்! குழந்தைகளான நீங்கள் அனைவரும் மதுவனத்தின் அழகு ஆகும். மதுவனத்தின் அலங்காரங்கள் மதுவனத்தை வந்தடைந்துள்ளன. மதுவனத்தின் பாபா மட்டும் அல்ல. மதுவனத்தின் குழந்தைகளும் இருக்கிறார்கள். அச்சா.
பாப்தாதா எங்கும் இருந்து இங்கு வந்துள்ள குழந்தைகள் அனைவருக்கும், அவர்களின் எண்ணங்களாலும் அன்பாலும் தேவதை ரூபங்களாலும், ‘நீங்கள் எப்போதும் அசைக்க முடியாதவராகவும் எப்போதும் எல்லையற்ற விருப்பமின்மை உடையவராகவும் எப்போதும் பறக்கும் யோகிகளாகவும் ஆகுவீர்களாக’ என்ற ஆஸ்தியையும் ஆசீர்வாதத்தையும் வழங்குகிறார். எப்போதும் எல்லையற்ற விழிப்புணர்வின் சொரூபங்களாக இருப்பவர்களுக்கும், கவனக்குறைவு மற்றும் சோம்பேறித்தனம் என்ற நித்திரையை வென்றவர்களுக்கும், சதா எல்லையற்ற நினைவின் சொரூபங்களாக இருப்பவர்களுக்கும், இத்தகைய மூதாதை மற்றும் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
தாதிஜியும் ஜகதீஷ்பாயும் தமது வெளிநாட்டுப் பயணச் செய்திகளையும் அன்பையும் நினைவுகளையும் பாப்தாதாவிற்குத் தெரிவித்தார்கள்.
நீங்கள் அனைவருக்கும் ஒரு செய்தியைக் கொடுப்பதன் மூலம் அனுபவத்தைக் கொடுத்தீர்கள். அவர்களின் அன்பையும் உறவுமுறையையும் நீங்கள் அதிகரித்தீர்கள். இப்போது, அவர்கள் தமது உரிமைகளைக் கோருவதற்கு முன்வருவார்கள். ஆத்மாக்கள் பலருக்கும் நன்மை செய்யும் பாகம் உங்கள் ஒவ்வோர் அடியிலும் உள்ளது. இந்த நிச்சயிக்கப்பட்ட பாகத்துடன், நீங்கள் அனைவரின் இதயத்திற்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தீர்கள். நீங்கள் சேவை மற்றும் அன்புக்கான மிக நல்ல பாகத்தை நடித்தீர்கள். பாப்தாதா கரவன்ஹார். அத்துடன் பற்றற்ற பார்வையாளராக அவதானிக்கும் ஒரேயொருவர் ஆவார். அவர் உங்களைக் கொண்டு செய்வித்தார். அத்துடன் அவர் உங்களை அவதானித்தார். குழந்தைகளின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தைரியத்தையும் கண்டு பாப்தாதா பெருமைப்படுகிறார். எதிர்காலத்திலும், சத்தம் இதை விட உரத்து ஒலிக்கும். கும்பகர்ணர்கள் அனைவரும் தமது கண்களைத் திறந்து என்ன நிகழுகிறது எனப் பார்க்கும் வகையில் சத்தம் உரத்து ஒலிக்க வேண்டும். பலரின் பாக்கியம் மாற்றப்படும். நீங்கள் நிலத்தைப் பண்படுத்தி, விதைகளை விதைத்து விட்டுத் திரும்பி வந்துள்ளீர்கள். இப்போது, விதைகள் விரைவாகப் பழத்தைத் தரும். வெளிப்படுத்துகை என்ற பழம் நிச்சயமாக வெளிவரப் போகிறது. அந்த நேரம் நெருங்கி வந்துவிட்டது. நீங்கள் அங்கு சென்றீர்கள். நீங்கள் அங்கு செய்த சேவையின் பலனாக, அவர்கள் இங்கு ஓடோடி வருவார்கள். தொலைவில் இருந்து தங்களை ஒரு காந்தம் இழுப்பதாக அவர்கள் அனுபவம் செய்வார்கள். யாரோ ஒருவர் தங்களை இழுக்கிறார் என்ற உணர்வே இருக்கும். ஆரம்பத்தில், ஆத்மாக்கள் பலருக்கு ஆன்மீக ஈர்ப்பு ஏற்பட்டது. தங்களை யாரோ ஈர்ப்பதாகவும் தாம் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் உணர்ந்தார்கள். அதேபோன்று, அவர்கள் அனைவரும் இங்கே ஈர்க்கப்பட்டு வருவார்கள். ஆன்மீக ஈர்ப்பு அதிகரிப்பதை நீங்கள் அனுபவம் செய்தீர்கள், அல்லவா? இந்த அதிகரிப்புடன், அவர்கள் ஈர்க்கப்பட்டு, இங்கு பறந்து வருவார்கள். அந்தக் காட்சியும் இடம்பெறப் போகிறது. இப்போது இதுவே எஞ்சியுள்ளது. செய்தியை எடுத்துச் செல்பவர்கள், செய்தியைக் கொடுப்பதற்காகச் செல்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையான யாத்திரைத்தலத்திற்கு வருவதே கடைசிக் காட்சியாக இருக்கும். நிலம் இப்போது தயாராகிவிட்டது. விதையும் விதைக்கப்பட்டுவிட்டது. இப்போது பழங்கள் வெளிவரப் போகின்றன. அச்சா. நீங்கள் இரண்டு பக்கங்களுக்கும் சென்றீர்கள். அனைவரின் தைரியமும் ஊக்கமும் உற்சாகமும் பாப்தாதாவை வந்தடைகின்றன. பெரும்பாலானோருக்குச் சேவையில் ஊக்கமும் உற்சாகமும் இருப்பதனால், அவர்கள் மாயையை வென்றவர்கள் ஆகுவதில் இலகுவாக முன்னேறுகிறார்கள். நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது, மாயையின் தாக்குதலும் ஏற்படும். ஆனால், நீங்கள் கடமைக்காக அன்றி, உங்களின் இதயபூர்வமாக மும்முரமாக இருக்கும்போது, உங்களின் இதயபூர்வமாக நீங்கள் சேவையில் மும்முரமாக இருப்பதனால், இலகுவாக மாயையை வென்றவர்கள் ஆகுகிறீர்கள். எனவே, பாப்தாதா குழந்தைகளின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கண்டு களிப்படைகிறார். அங்கு, வசதிகள் இலகுவாகக் கிடைக்கின்றன. அவர்களால் அவற்றைப் பெற முடியும். அவர்களுக்கு இலக்கு உள்ளது. அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இலகுவாக அவர்களுக்கு வசதிகளும் கிடைக்கின்றன. இந்த மூன்று விடயங்களால் அவர்களால் இலகுவாக இந்த ஓட்டப்பந்தயத்தில் முன்னால் ஓரிலக்கத்தைக் கோர முடிகிறது. இது நல்லது. எவ்வாறாயினும், இந்தத் தேசத்திலும் அது குறைவாக இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் ஏற்ப முன்னேறுகிறீர்கள். இந்தத் தேசத்தில் இருந்தே பெயர் பரவ வேண்டும். வெளிநாடுகளின் வெற்றியும் இந்தத் தேசத்திலேயே தங்கியுள்ளது. அவர்கள் இதை நன்கு உணர்ந்திருப்பதுடன் இதைத் தமது கடமை என்றும் கருதுகிறார்கள். பெயரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். வெளிநாட்டின் ஒலியால் பாரதம் விழித்தெழ வேண்டும். நீங்கள் இந்த இலக்கை உறுதியானது ஆக்கியுள்ளதுடன் அதை நிறைவேற்றுகிறீர்கள். நீங்கள் அவர்களைத் தயாராக்குகிறீர்கள். எனினும், சத்தம் வெளிநாடுகளை மட்டுமே சென்றடைந்துள்ளது. வெளிநாட்டின் சத்தம் இங்கு வரவேண்டுமெனில், அது இங்கு பறந்து வரவேண்டும். அவர்கள் இப்போது பறக்கிறார்கள். சத்தம் இன்னமும் பயணம் செய்கிறது. அது பறந்து இங்கு வரும். இப்போது சத்தம் வெளிநாடுகளில் மிக நன்றாகப் பரவுகிறது. ஆனால், வெளிநாடுகளின் சத்தம் இன்னமும் இந்தத் தேசத்தை வந்தடையவில்லை. அச்சா. நீங்கள் என்ன பாகத்தை நடித்தாலும், அதை நன்றாக நடித்தீர்கள். சதா முன்னேறுவதற்கான ஒத்துழைப்பும் ஆசீர்வாதமும் உங்களுக்கு உள்ளன. ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவருக்கேயுரிய பாகம் உள்ளது. நீங்கள் எந்தளவிற்கு அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு அந்த அனுபவத்தின் அடிப்படையில் நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். கரவன்ஹார் யார் மூலம் எதைச் செய்வித்தாரோ, நாடகத்திற்கேற்ப அவர் அதைச் செய்வித்தார். அது அனைத்திலும் சிறந்ததாக இருந்தது. அவர் ஒரு கருவியினூடாக சேவையை நிகழச் செய்தார். எனவே, நீங்கள் சேவை செய்வதற்கும் அவர் தூண்டினார். நீங்கள் கருவிகள் ஆகினீர்கள். நீங்கள் சேமித்தீர்கள். எதிர்காலத்திலும் தொடர்ந்து சேமிப்பீர்கள். அச்சா.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்: நீங்கள் சதா சந்திப்பின் மேளாவில் (ஒன்றுகூடலில்) இருப்பவர்கள், அல்லவா? சந்திப்பின் இந்த ஒன்றுகூடல், உங்களை அழியாத சந்திப்பின் ஒன்றுகூடலை அனுபவம் செய்ய வைக்கிறது. நீங்கள் எங்கு வசித்தாலும், நீங்கள் ஒன்றுகூடலில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒன்றுகூடலில் இருந்து ஒருபோதும் தொலைவில் இருப்பதில்லை. ஒன்றுகூடல் என்றால் சந்தித்தல் என்று அர்த்தம். எனவே, எப்போதும் சந்திப்பின் ஒன்றுகூடல் இருக்கும். ஆகவே, சதா மேளாவில் இருக்கும் பாக்கியத்தைக் கொண்டிருப்பவர்கள் யார்? பொதுவாக, மேளா ஆரம்பமாகிப் பின்னர் முடிவடைகிறது. ஏனெனில் எவரும் எல்லா வேளையும் மேளாவில் இருப்பதில்லை. பாக்கியசாலி ஆத்மாக்களான நீங்கள் சதா மேளாவில் இருக்கிறீர்கள். எப்போதும் சந்திப்பு என்ற மேளாவில் இருக்கிறீர்கள். மேளாவில் என்ன நிகழும்? சந்தித்தலும் ஊஞ்சல் ஆடுவதும். நீங்களும் ஊஞ்சல் ஆடுகிறீர்கள், அல்லவா? எனவே, நீங்கள் சதா பேறுகள் என்ற ஊஞ்சல்களில் ஆடுபவர்கள். ஓர் ஊஞ்சல் மட்டும் அன்றிப் பல பேறுகளின் பல ஊஞ்சல்கள் உள்ளன. சிலவேளைகளில் நீங்கள் ஓர் ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். வேறொரு வேளையில் வேறோர் ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். அல்லது நீங்கள் ஒரு மேளாவில் இருக்கிறீர்கள். ஊஞ்சலே எப்போதும் உங்களுக்குச் சந்தோஷத்தினதும் சகல பேறுகளினதும் அனுபவத்தைக் கொடுக்கின்றது. நீங்கள் பலமில்லியன் ஆத்மாக்களில் கையளவினரான பாக்கியசாலி ஆத்மாக்கள் ஆவீர்கள். முன்னர், நீங்கள் புகழைச் செவிமடுத்தீர்கள். இப்போது, நீங்கள் மகத்தானவர்கள் ஆகுகிறீர்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் மௌனசக்தியால் அசாத்தியமானவற்றையும் சாத்தியமாக்கும் இலகு யோகி ஆகுவீர்களாக.மௌன சக்தியே அனைத்திலும் அதிமேன்மையான சக்தி ஆகும். ஏனைய சக்திகள் அனைத்தும் மௌன சக்தியில் இருந்தே வெளிப்படுகின்றன. விஞ்ஞான சக்தியின் விளைவானது, மௌன சக்தியின் மூலமே நிகழுகிறது. உங்களால் மௌன சக்தியால் நீங்கள் விரும்பிய எதையும் செய்ய முடியும். உங்களால் அசாத்தியமானவற்றையும் சாத்தியமானது ஆக்க முடியும். உலகிலுள்ள மக்கள் அசாத்தியமானது எனக் கருதுவது, உங்களுக்குச் சாத்தியம் ஆகுகிறது. அது சாத்தியமாக இருப்பதனால், இலகுவாக உள்ளது. மௌன சக்தியைக் கிரகித்து, இலகு யோகி ஆகுங்கள்.
சுலோகம்:
உங்களின் வார்த்தைகளால் அனைவருக்கும் சந்தோஷத்தையும் அமைதியையும் கொடுங்கள். நீங்கள் புகழத் தகுதிவாய்ந்தவர் ஆகுவீர்கள்.