27.10.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 27.02.85 Om Shanti Madhuban
சிவசக்தி பாண்டவ சேனையின் சிறப்பியல்புகள்.
இன்று, அமிர்தவேளையில், வெகு தொலைவில் வசித்தாலும் இதயத்தில் நெருக்கமாக இருக்கும் விசேடமான இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் தனிப்பட்ட முறையில் பாபாவின் முன்னால் இருப்பதை பாப்தாதா பார்த்தார். இன்று, பாபாவிற்கும் தாதாவிற்கும் இடையில் இனிமையான இதயபூர்வமான உரையாடல் இடம்பெற்றது. என்ன தலைப்பில்? தந்தை பிரம்மா குறிப்பாக இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளால் களிப்படைந்து கூறினார்: குழந்தைகளான உங்களின் அற்புதம் என்னவென்றால், நீங்கள் தொலைதூர வாசிகளாக இருந்தாலும், உங்களிடம் சதா அன்பு உள்ளது. சாத்தியமான எந்த முறையிலாவது பாப்தாதாவின் செய்தியை அனைவரும் பெற வேண்டும் என்ற ஒரு நிச்சயமான, ஆழ்ந்த விருப்பம் உங்களிடம் உள்ளது. அதற்காகச் சில குழந்தைகள் இரட்டைப் பணிகளைச் செய்கிறார்கள். லௌகீக மற்றும் அலௌகீக விடயங்களில் இரட்டை மும்முரமாக இருக்கும் வேளையில், அவர்கள் தமது சொந்த ஓய்வைக் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் இரவு பகலாக எப்போதும் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தமது உணவு அல்லது பானத்தைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல், அவர்கள் சேவை செய்வதில் சதா மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். நீங்கள் தூய்மையின்மையைக் கைவிட்டுத் தூய்மையைக் கடைப்பிடிக்கிறீர்கள். இதை மக்கள் இயற்கைக்கு மாறான வாழ்க்கையாகக் கருதுகிறார்கள். நீங்கள் தந்தை மீதுள்ள அன்பினால் அதை உங்களின் வாழ்க்கையில் தைரியத்துடனும் திடசங்கற்பத்துடனும் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். நினைவு யாத்திரையால், உங்களின் அமைதியின் பேற்றின் அடிப்படையிலும் உங்களின் படிப்பின் அடிப்படையிலும் குடும்பத்தின் சகவாசத்தினாலும் இதைக் கடைப்பிடிக்கிறீர்கள். மிகவும் கஷ்டம் என மக்கள் கருதியதை, நீங்கள் இலகுவானது ஆக்கியுள்ளீர்கள். பாண்டவ சேனையைப் பார்க்கும்போது, தந்தை பிரம்மா குறிப்பாகக் குழந்தைகளான உங்களின் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுகிறார். எந்த விடயத்தைப் பற்றி? உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும், யோகி ஆகுவதற்கான முதன்மையான வழிமுறை தூய்மையே என்பது உள்ளது. தந்தையின் அன்பை அனுபவிப்பதற்கான வழிமுறை, தூய்மையே ஆகும். தூய்மையே தந்தையின் அன்பை அனுபவம் செய்வதற்கான வழிமுறை. தூய்மையே சேவையில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் இதயத்தில் மிக உறுதியான தூய எண்ணத்தைக் கொண்டிருக்கிறீர்கள். பாண்டவர்களான உங்களின் அற்புதம் என்னவென்றால், சக்திகளை முன்னணியில் வைத்து, நீங்கள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செயற்பட்டு, உங்களை முன்னேறச் செய்கிறீர்கள். பாண்டவர்களான உங்களின் முயற்சிகளின் தீவிர வேகம், நீங்கள் மிக நன்றாக முன்னேறிச் செல்வதைக் காட்டுகிறது. உங்களில் பெரும்பாலானோர் இந்த வேகத்தில் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள்.
தந்தை சிவன் கூறினார்: குறிப்பாக மரியாதை கொடுப்பதில் பாண்டவர்கள் நல்லதொரு பதிவேட்டைக் காட்டியுள்ளார்கள். அத்துடன்கூடவே, அவர் வியப்பான ஒரு விடயத்தையும் கூறினார். இடையில், அவர்கள் சம்ஸ்காரங்களின் விளையாட்டுக்களையும் விளையாடுகிறார்கள். எவ்வாறாயினும், முன்னேறுவதற்கான அவர்களின் உற்சாகத்தாலும், தந்தையிடம் உள்ள ஆழ்ந்த அன்பினாலும், அன்பினால் அவர்களின் மாற்றத்தைத் தந்தை விரும்புகிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இதனாலேயே, அவர்கள் தங்களை அர்ப்பணிக்கிறார்கள். தந்தை கூறுவதையும் விரும்புவதையும் மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் இந்த எண்ணத்தால் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அன்பினால், அவர்களின் சிரமமும் அவர்களுக்குச் சிரமமாகத் தெரிவதில்லை. அன்பினால் எதையாவது சகித்துக் கொள்ளுதல் சகித்துக் கொள்வதைப் போன்று தெரியாது. இதனாலேயே, அவர்கள் தொடர்ந்து ‘பாபா, பாபா’ எனக் கூறிய வண்ணம் முன்னேறுகிறார்கள். இந்தப் பிறவியின் சரீரங்களின் சம்ஸ்காரங்களுக்கும் முக ஒப்பனைக்கும் ஏற்ப, அதாவது, எல்லைக்குட்பட்ட படைப்பாளர்களாக இருக்கும் அதேவேளையில், அவர்கள் தங்களையும் மிக நன்றாக மாற்றியுள்ளார்கள். படைப்பவரான தந்தையைத் தங்களுக்கு முன்னால் வைத்திருப்பதனால், அகங்காரமற்றவராகவும் பணிவானவராகவும் ஆகும் இலக்கிற்கான தகைமைகளை நன்றாகக் கிரகித்திருப்பதுடன், இப்போதும் அவற்றைக் கிரகிக்கிறார்கள். அவர்கள் உலகச் சூழலில் மற்றவர்களுடன் தொடர்புபட்டுள்ளார்கள். ஆயினும், அவர்களிடம் நினைவிற்காக அன்பெனும் பாதுகாப்புக் குடை இருப்பதனால், பாதுகாப்பாக இருப்பதற்கான மிக நல்ல அத்தாட்சியை அவர்கள் கொடுக்கிறார்கள். பாண்டவர்களைப் பற்றிக் கேட்டீர்களா? இன்று, அதியன்பிற்குரியவராக ஆகுவதற்குப் பதிலாக, பாப்தாதா காதலி ஆகியுள்ளார். இதனாலேயே, உங்களைக் காண்பதில் அவர் களிப்படைகிறார். இருவருக்குமே குழந்தைகளான உங்களின் மீது விசேடமான அன்பு உள்ளது. எனவே, இன்று, அமிர்த வேளையில், பாப்தாதா குழந்தைகளின் சிறப்பியல்புகள், நற்குணங்கள் என்ற மாலையை உருட்டினார். நீங்கள் அனைவரும் 63 பிறவிகளாக மாலையை உருட்டினீர்கள். அதற்குப் பதிலாக, தந்தை இப்போது மாலையை உருட்டி, உங்களுக்குப் பதில் அளிக்கிறார். அச்சா.
பாபா சக்திகளின் எந்த மாலையை உருட்டினார்? சக்தி சேனையின் மகத்தான சிறப்பியல்பு என்னவென்றால், ஒவ்வொரு கணமும் தந்தைமீதுள்ள அன்பினாலும் சகல உறவுமுறைகளையும் ஒரேயொருவருடன் வைத்திருப்பதனாலும், தந்தையின் அன்பிலே திளைத்திருப்பதன் மூலம் நீங்கள் முன்னேறுகிறீர்கள். சதா உங்களின் ஒரு கண்ணிலே தந்தை அமிழ்ந்துள்ளார். மறுகண்ணில் சேவை அமிழ்ந்துள்ளது. உங்களின் விசேடமான மாற்றம் என்னவென்றால், நீங்கள் உங்களின் கவனக்குறைவையும் உணர்ச்சிவசப்படும் சுபாவத்தையும் துறந்துள்ளீர்கள். நீங்கள் தைரியமுள்ள சக்தி ரூபங்கள் ஆகியுள்ளீர்கள். இன்று,பாப்தாதா குறிப்பாக இளைய சக்திகளைப் பார்த்தார். இந்த இளம்வயதில், நீங்கள் பல வகையான தற்காலிகக் கவர்ச்சிகளைத் துறந்து, ஊக்கம், உற்சாகத்துடன் ஒரேயொரு தந்தையின் கவர்ச்சியுடன் முன்னேறுகிறீர்கள். இந்த உலகை ருசியற்ற உலகமாக நீங்கள் அனுபவம் செய்வதனால், தந்தையை உங்களின் உலகமாக ஆக்கியுள்ளீர்கள். உங்களின் சரீரங்கள், மனங்கள், செல்வத்தைத் தந்தைக்காகவும் சேவைக்காகவும் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பேறுகளை அனுபவம் செய்வதுடன், இப்போது பறக்கும் ஸ்திதியில் முன்னேறிச் செல்கிறீர்கள். நீங்கள் சேவைக்கான பொறுப்புக் கிரீடத்தை மிக நன்றாக அணிந்துள்ளீர்கள். சிலவேளைகளில் களைப்பை அனுபவம் செய்தாலும், சிலவேளைகளில் உங்களின் புத்திகளில் சுமையை அனுபவம் செய்தாலும், தந்தையைப் பின்பற்றுவதற்கான, அவரை வெளிப்படுத்துவற்கான திடசங்கற்பம் இருப்பதனால், நீங்கள் அவை அனைத்தையும் முடித்து வெற்றி பெறுகிறீர்கள். இதனாலேயே, குழந்தைகளின் அன்பை பாப்தாதா பார்க்கும்போது, அவர் மீண்டும் மீண்டும், ‘குழந்தைகள் தைரியத்தைப் பேணும்போது, தந்தை உதவி செய்கிறார்’ என்ற ஆசீர்வாதத்தை வழங்குகிறார். எவ்வாறாயினும் வெற்றி உங்களின் பிறப்புரிமை. தந்தையின் சகவாசத்தில் இருப்பதன் மூலம், உங்களால் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் வெண்ணெயில் ஒரு தலைமுடியை இழுப்பதைப் போன்று இலகுவாக வெற்றி கொள்ள முடிகிறது. வெற்றி என்பது குழந்தைகளின் கழுத்து மாலை ஆகும். வெற்றி மாலைகள் குழந்தைகளான உங்களை வரவேற்கப் போகின்றன. ஆகவே, குழந்தைகளான உங்களின் தியாகம், தபஸ்யா, சேவைக்காக பாப்தாதா தன்னையே அர்ப்பணிக்கிறார். அன்பினால், எதையும் கஷ்டமாக நீங்கள் உணர்வதில்லை. அப்படியல்லவா? எங்கு அன்பு உள்ளதோ, அன்பு உலகில், கஷ்டம் என்ற வார்த்தையே இருக்கமாட்டாது. அது தந்தையின் உலகிலோ அல்லது தந்தையின் மொழியிலோ கிடையாது. கஷ்டமான விடயங்களை இலகுவாக்குவதே சக்தி சேனையின் சிறப்பியல்பு. உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும், எந்தளவிற்கு விரைவாக முடியுமோ, அந்தளவிற்கு அதிகபட்ச எண்ணிக்கையான மக்களுக்கு செய்தியைக் கொடுப்பதற்குக் கருவியாகி, ஓர் அழகான ரோஜாக்களின் ஆன்மீகப் பூங்கொத்தைத் தந்தையின் முன்னால் கொண்டுவர வேண்டும் என்ற இதயபூர்வமான உற்சாகம் உள்ளது. தந்தை உங்களை ஆக்கியிருப்பதைப் போன்று, நீங்களும் மற்றவர்களை ஆக்கித் தந்தையின் முன்னால் அழைத்து வரவேண்டும். ஒருவர் மற்றவரின் ஒன்றுதிரட்டிய ஒத்துழைப்பினால், வெளிநாட்டில் உள்ள சக்தி சேனையினர் பாரதத்தில் இருப்பவர்களை விட அதிகளவில் புதியதை உருவாக்குவதற்கான தூய உற்சாகத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் இருக்கும்போது, அங்கு நிச்சயமாக வெற்றியும் இருக்கும். உங்கள் ஒவ்வோர் இடங்களிலும் உள்ள சக்தி சேனை வளர்வதில் வெற்றியடைந்துள்ளார்கள். அனைத்திலும் வெற்றி பெறுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் அவ்வாறே இருப்பார்கள். இரண்டிற்குமான அன்பைப் பார்க்கையில், உங்களின் சேவைக்கான உற்சாகத்தைப் பார்க்கையில், பாப்தாதா களிப்படைகிறார். பாபாவால் எந்தளவிற்கு ஒவ்வொருவரின் நற்குணங்களையும் புகழ முடியும்? எவ்வாறாயினும், சூட்சும வதனத்தில், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையினதும் நற்குணங்களைப் பற்றிப் பேசினார். அதைப் பற்றிச் சிந்தித்தவண்ணம், இந்தத் தேசத்தில் இருக்கும் சில மக்கள் பின்தங்கிவிடலாம். ஆனால், வெளிநாட்டில் உள்ள குழந்தைகள் அவரை இனங்கண்டு, தமது உரிமையைக் கோரியுள்ளார்கள். அந்த மக்களோ பார்வையாளர்களாகவே இருப்பார்கள். ஆனால் நீங்கள் தந்தையுடன் வீட்டுக்குச் செல்வீர்கள். அவர்கள் அழுதுகொண்டிருப்பார்கள். ஆனால் நீங்களோ உங்களின் ஆசீர்வாதத் திருஷ்டியால் தொடர்ந்து ஏதாவது ஒன்றின் துளியை வழங்கிக் கொண்டே இருப்பீர்கள்.
எனவே, இன்று குறிப்பாக பாப்தாதா என்ன செய்தார் என்பதைச் செவிமடுத்தீர்களா? ஒன்றுகூடல் முழுவதையும் பார்த்து, தமது பாக்கியத்தை உருவாக்கும் பாக்கியசாலிக் குழந்தைகளின் புகழை பாப்தாதா பாடினார். வெகு தொலைவில் வசிப்பவர்கள் நெருக்கமாகியுள்ளார்கள். ஆனால் அபுவில் வாழ்பவர்கள் மிகவும் தொலைவிற்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் அண்மையில் வசித்தாலும் தொலைவில் சென்றுவிட்டார்கள். ஆனால் நீங்களோ தொலைவில் வசித்தாலும், நெருக்கமாக வந்துள்ளீர்கள். அவர்கள் வெறுமனே அவதானிப்பவர்கள். ஆனால் நீங்களோ எப்போதும் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள். நீங்கள் மிகுந்த அன்புடன் மதுவனத்திற்கு வருவதற்கான வழிமுறைகளைக் கண்டுகொள்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும் நீங்கள் இந்தப் பாடல்களைப் பாடுகிறீர்கள்: நான் தந்தையைச் சந்திக்க வேண்டும். நான் அங்கு செல்ல வேண்டும். நான் அதற்காகச் சேமிக்க வேண்டும். எனவே, இந்த அன்பும் மாயையை வெல்வதற்கு ஒரு வழிமுறை ஆகுகிறது. நீங்கள் இலகுவாக ஒரு பயணச்சீட்டைப் பெற்றால், அந்த அன்பிலும் அதிகளவு தடைகள் ஏற்படலாம். எவ்வாறாயினும், நீங்கள் துளித் துளியாக ஒரு ஏரியையே உருவாக்குகிறீர்கள். ஆகவே, நீங்கள் சேகரிக்கும் ஒவ்வொரு துளியிலும் தந்தையின் நினைவு அமிழ்ந்துள்ளது. இதனாலேயே, நாடகத்தில் என்ன நிகழ்ந்தாலும் அது நன்மைக்கே. நீங்கள் அதிகளவு பணத்தைப் பெறவேண்டியிருந்தால், மாயை வரக்கூடும். அதனால் நீங்கள் சேவையை மறந்துவிடுவீர்கள். இதனாலேயே, செல்வந்தர்கள் தந்தையின் உரிமையுள்ள குழந்தைகள் ஆகுவதில்லை.
நீங்கள் சம்பாதிக்கிறீர்கள், அத்துடன் சேமிக்கிறீர்கள். உண்மையான வருமானத்தின் பணத்தைச் சேமிப்பதில் சக்தி உள்ளது. உண்மையான வருமானத்தின் பணம் தந்தையின் பணிக்காகப் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்படும். நீங்கள் உழைக்காமல் பணத்தைப் பெற்றால், உங்களின் சரீரம் அதற்காகப் பயன்படுத்தப்பட மாட்டாது. உங்களின் சரீரம் பயன்படுத்தப்படாவிட்டால், உங்களின் மனமும் தளம்பல் அடையும். இதனாலேயே, உங்களின் சரீரம், மனம், செல்வம் மூன்றும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனாலேயே, சங்கமயுகத்தில் சம்பாதித்து, இறை வங்கியில் சேமித்தலே முதலாம் இலக்க வாழ்க்கை ஆகும். நீங்கள் வெறுமனே சம்பாதித்து, அழியும் உலகத்தின் வங்கிகளில் சேமித்தால், அது பயனுள்ள முறையில் பயன்படுத்தப்பட மாட்டாது. நீங்கள் சம்பாதித்து, அழியாத வங்கியில் சேமித்தால், ஒன்று பலமில்லியன் மடங்காகப் பெருகும். அது 21 பிறவிகளுக்குச் சேமிக்கப்படும். நீங்கள் உங்களின் இதயபூர்வமாக செய்யும் எதுவும் இதயங்களுக்குச் சௌகரியம் அளிக்கும் திலாராமைச் சென்றடைகிறது. ஒருவர் மற்றவர்களுக்குக் காட்டவேண்டும் என்று எதையும் செய்தால், அது காட்டுவதில் பயன்படுத்தப்பட்டுவிடும். அது இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரைச் சென்றடைய மாட்டாது. இதனாலேயே, இதயபூர்வமாகச் செயற்படும் நீங்கள் நல்லவர்கள். நீங்கள் உங்களின் இதயபூர்வமாக எதையாவது செய்தால், கோடீஸ்வரர் ஆகுவீர்கள். இதயத்தின் வருமானம், அன்பெனும் வருமானமே உண்மையான வருமானம் ஆகும். நீங்கள் எதற்காகப் பணத்தைச் சம்பாதிக்கிறீர்கள்? சேவைக்காகவே, இல்லையா? அல்லது, அது உங்களின் சொந்த சௌகரியத்திற்காகவா? எனவே, உண்மையான இதயத்தின் வருமானம் பலமில்லியன்மடங்கு ஆகுகிறது. நீங்கள் உங்களின் சொந்த சௌகரியத்திற்காகச் சம்பாதித்துச் சேமித்தால், இங்கு உங்களுக்கு சௌகரியம் இருந்தாலும், பின்னர் நீங்கள் மற்றவர்களுக்குச் சௌகரியம் கொடுப்பதற்காகக் கருவிகள் ஆகுவீர்கள். பணிப்பெண்களும் வேலையாட்களும் என்ன செய்வார்கள்? அவர்கள் அரச குடும்பத்திற்கு சௌகரியம் கொடுப்பார்கள். நீங்கள் இங்கு ஓய்வெடுப்பதாலும் சௌகரியமாக இருப்பதாலும், அங்கு ஓய்வையும் சௌகரியத்தையும் கொடுப்பதற்குக் கருவிகள் ஆகுவீர்கள். ஆகவே, அன்புடனும் உண்மையான இதயத்துடனும் நீங்கள் எதைச் சம்பாதித்து, அதைச் சேவைக்காகப் பயன்படுத்தினாலும், அதை நீங்கள் பயனுள்ள முறையிலேயே உபயோகிக்கிறீர்கள். நீங்கள் பல ஆத்மாக்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் யாருக்குக் கருவிகள் ஆகுகிறீர்களோ, அவர்கள் உங்களின் பக்தர்களாகி, உங்களைப் பூஜிப்பார்கள். நீங்கள் அந்த ஆத்மாக்களுக்குச் சேவை செய்தீர்கள். அந்தச் சேவைக்குப் பலனாக, அவர்கள் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களுக்குச் சேவை செய்வார்கள். அவர்கள் அவற்றைப் பூஜிப்பார்கள். அவர்கள் தொடர்ந்து 63 பிறவிகளுக்கு சேவையின் பலனை உங்களுக்குக் கொடுப்பார்கள். நீங்கள் எவ்வாறாயினும் தந்தையிடமிருந்து பெறுவீர்கள். ஆனால் நீங்கள் அந்த ஆத்மாக்களிடமிருந்தும் பெறுவீர்கள். நீங்கள் செய்தியைக் கொடுத்திருந்தும், அவர்கள் உரிமையைக் கோராவிட்டால், இந்த முறையிலேயே அவர்கள் பிரதியுபகாரம் செய்வார்கள். உரிமையைக் கோரிக் கொள்பவர்கள், உங்களுடன் உறவுமுறையை ஏற்படுத்துவார்கள். சிலர் உங்களின் உறவினர் ஆகுவார்கள். சிலர் பக்தர்கள் ஆகுவார்கள். சிலர் பிரஜைகள் ஆகுவார்கள். பல்வகைப் பெறுபேறுகள் வெளிப்படும். உங்களுக்குப் புரிகிறதா? மக்கள் கேட்கிறார்கள்: நீங்கள் ஏன் ஓடித்திரிந்து சேவை செய்கிறீர்கள்? உண்டு, பருகிக் களித்திருங்கள். இரவு பகலாகச் சேவைக்குப் பின்னால் ஓடி நீங்கள் எதைப் பெற்றீர்கள்? அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நாம் பெற்றதை, நீங்கள் முயற்சி செய்து அனுபவம் செய்து பாருங்கள். இந்தச் சந்தோஷத்தை அனுபவித்தவர்கள் மட்டுமே இதை அறிந்து கொள்வார்கள். இந்தப் பாடலையே நீங்கள் பாடுகிறீர்கள், அப்படியல்லவா? அச்சா.
சதா அன்பிலே தங்களை மறந்திருப்பவர்களுக்கு, சதா துறவறத்தைப் பாக்கியமாக அனுபவம் செய்பவர்களுக்கு, சதா ஒன்றில் இருந்து பலமில்லியன்களை உருவாக்குபவர்களுக்கு, சதா பாப்தாதாவைப் பின்பற்றுபவர்களுக்கு, தந்தையைத் தமது உலகமாக அனுபவம் செய்பவர்களுக்கு, இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இத்தகைய குழந்தைகளுக்கு, இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரான தந்தையின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
இரட்டை வெளிநாட்டவர்களுடன் பாப்தாதாவின் தனிப்பட்ட சந்திப்பு:
நீங்கள் உங்களைப் பாக்கியசாலி ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? நீங்கள் பாக்கியத்தை அருள்பவரின் இடத்தை வந்தடையும் வகையில் அதிகளவு பாக்கியத்தை உருவாக்கியுள்ளீர்கள். இ;நத இடம் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அமைதியான ஓரிடத்தை வந்தடைவதும் பாக்கியமே. பாக்கியத்தை அடையும் இந்தப் பாதையும் திறந்துள்ளது. நாடகத்தின்படி, நீங்கள் பாக்கியத்தை அடையக்கூடிய இடத்திற்கு வந்துள்ளீர்கள். பாக்கிய ரேகை இங்கேயே வரையப்படுகிறது. எனவே, நீங்கள் உங்களின் பாக்கியத்தை மேன்மையானது ஆக்கியுள்ளீர்கள்.
இப்போது, சிறிதளவு நேரத்தையும் கொடுங்கள். உங்களிடம் நேரம் உள்ளது. உங்களால் உங்களின் சகவாசத்தையும் கொடுக்க முடியும். இதில் எந்தவிதமான சிரமமும் கிடையாது. கஷ்டமான ஒரு விடயத்திற்காக நீங்கள் சிறிதளவு யோசிக்க வேண்டியிருக்கும். அது இலகுவாக இருந்தால் அதைச் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களின் வாழ்க்கையின் தற்காலிக எதிர்பார்ப்புக்களும் ஆசைகளும் அழியாத பேறுகளால் பூர்த்தியாகும். அந்தத் தற்காலிக ஆசைகளின் பின்னால் துரத்திச் செல்வது, உங்களின் நிழலைத் துரத்திச் செல்வதைப் போன்றதாகும். உங்களின் நிழலைப் பிடிப்பதற்கு எந்தளவிற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அது உங்களுக்கு முன்னால் செல்லும். உங்களால் அதை அடைய முடியாதிருக்கும். எவ்வாறாயினும், நீங்கள் தொடர்ந்து முன்னேறினால், அது உங்களைப் பின்தொடரும். எனவே, இந்த முறையில் அழியாத பேறுகளின் பின்னால் செல்வதன் மூலம், அழியும் விடயங்கள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும். உங்களுக்குப் புரிகிறதா? சகல பேறுகளையும் அடைவதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறை இதுவே ஆகும். குறுகிய காலத்திற்கான துறவறம், எல்லா வேளைக்கும் நீங்கள் பாக்கியத்தை அடைவதற்கு வழிவகுக்கிறது. ஆகவே, இந்த இலக்கைப் புரிந்து கொள்வதன் மூலம் சதா தொடர்ந்து முன்னேறுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் பொக்கிஷத்தைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் அனைத்திலும் மகத்தான பொக்கிஷம் சந்தோஷமே. சந்தோஷம் இல்லாவிட்டால், வாழ்க்கையும் இல்லை. எனவே, உங்களால் அழியாத சந்தோஷப் பொக்கிஷத்தைப் பெற முடியும்.
உங்களின் ஸ்திதியை உருவாக்குவதற்கான வழிமுறை, சேவையே ஆகும்.
குழந்தைகளில் உள்ள எப்போதும் முன்னேறுவதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பாப்தாதா பார்க்கிறார். குழந்தைகளின் ஊக்கமும் உற்சாகமும் பாப்தாதாவை வந்தடைகின்றன. உலகின் விவிஐபி களைத் தந்தைக்கு முன்னால் கொண்டு வரும் ஆசை குழந்தைகளிடம் உள்ளது. இந்த உற்சாகம் தொடர்ந்து நடைமுறையாகும். ஏனெனில், நீங்கள் நிச்சயமாக சுயநலமற்ற சேவைக்கான பலனைப் பெறுகிறீர்கள். உங்களின் சொந்த ஸ்திதியை உருவாக்குவதற்கு சேவை உதவுகிறது. ஆகவே, இந்தச் சேவை மிகப் பெரியது என்றும் உங்களின் ஸ்திதி அவ்வாறில்லை என்றும் ஒருபோதும் நினைக்காதீர்கள். எவ்வாறாயினும், சேவை இயல்பாகவே உங்களின் ஸ்திதியை உருவாக்கும். மற்றவர்களுக்கான சேவை, சுயமுன்னேற்றத்திற்கான வழிமுறை ஆகும். சேவை இயல்பாகவே உங்களின் ஸ்திதியைச் சக்திவாய்ந்தது ஆக்கும். நீங்கள் தந்தையின் உதவியைப் பெறுகிறீர்கள், அல்லவா? தந்தையின் உதவியைப் பெறுவதனாலும் உங்களின் சக்தி அதிகரிப்பதனாலும், அந்த ஸ்திதியும் ஏற்படும். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, ‘எனது ஸ்திதி அதற்கேற்றவாறு இல்லாதபோது என்னால் எவ்வாறு இந்தச் சேவையைச் செய்ய முடியும்?’ என ஒருபோதும் நினைக்காதீர்கள். இல்லை. தொடர்ந்து அதைச் செய்யுங்கள். நீங்கள் நிச்சயமாக முன்னேற வேண்டும் என்பதே பாப்தாதாவின் ஆசீர்வாதம். சேவை என்ற இனிமையான பந்தனமே, முன்னேறுவதற்கான வழிமுறை. இதயபூர்வமாகப் பேசுபவர்களின் அதிகாரத்துடன் கூடிய அனுபவத்தின் ஒலியானது அவர்களின் இதயங்களைச் சென்றடைகின்றது. அனுபவத்தின் அதிகாரத்தைக் கொண்ட வார்த்தைகள், மற்றவர்களையும் அனுபவம் பெறத் தூண்டுகிறது. நீங்கள் சேவையில் முன்னேறும்போது, வருகின்ற பரீட்சைத்தாள்களும் முன்னேறுவதற்கான வழிமுறையே ஆகும். ஏனெனில், உங்களின் புத்திகள் அவற்றைப் பற்றிச் சிந்திப்பதனால், நீங்கள் நினைவில் இருப்பதற்கு விசேட கவனம் செலுத்துவீர்கள். எனவே, அதுவும் விசேடமானதோர் உயர்த்தி ஆகும். அதன்பின்னர், உங்களின் புத்தியில் எப்போதும், ‘எவ்வாறு நாங்கள் சூழலை மிகவும் சக்திவாய்ந்தது ஆக்குவது?’ என்பதே இருக்கும். தடையொன்று எத்தனை பெரிய ரூபத்தில் வந்தாலும், மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் அதில் இருந்து நன்மை பெறுவீர்கள். உங்களின் நினைவு சக்தியால் அந்தப் பெரிய ரூபம் சிறியதாகிவிடும். அது ஒரு கடதாசிப் புலியைப் போன்றதே. அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் தீபாவளிக்காக, மிகச்சரியான முறையில் உங்களின் தேவ அந்தஸ்தை வெளிப்படுத்தும் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகுவீர்களாக.
முன்னர், தீபாவளியின்போது, மக்கள் ஒழுங்குமுறையாகத் தீபங்களை ஏற்றுவார்கள். அந்தத் தீபங்கள் அணையாதவாறு கவனம் செலுத்துவார்கள். அவர்கள் எண்ணெய் ஊற்றுவார்கள். சரியான முறையில் வழிபடும் பயிற்சி அவர்களுக்கு இருந்தது. இப்போது, தீபங்களுக்குப் பதிலாக, மின்விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இப்போது தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. ஏனெனில் அது களிப்பூட்டும் விடயம் ஆகியுள்ளது. அழைக்கும் வழிமுறை, அதாவது, ஆன்மீக முயற்சி முடிந்துவிட்டது. அன்பு முடிந்துவிட்டது. சுயநல நோக்கங்களே எஞ்சியுள்ளன. இதனாலேயே, உண்மையான அருள்பவரின் ரூபத்தில் இலக்ஷ்மி எவரிடமும் வருவதில்லை. எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் உங்களின் தேவ அந்தஸ்தை மிகச்சரியான முறையில் வெளிப்படச் செய்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள்.
சுலோகம்:
எப்போதும் எல்லையற்ற மனோபாவத்தையும் பார்வையையும் ஸ்திதியையும் கொண்டிருங்கள். அப்போது மட்டுமே உலக நன்மைக்கான பணி நிறைவேறும்.