28.06.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆன்மீகச் சகோதரர்கள். நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். அன்பால் நிறைந்து வழியும் கங்கைகள் ஆகுங்கள். என்றுமே சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள்.
கேள்வி:
ஆன்மீகத் தந்தை எக்குழந்தைகளை அதிகளவில் நேசிக்கின்றார்?
8பதில்:
1) ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உலகிற்கு நன்மை பயக்கின்ற குழந்தைகளை அவர் நேசிக்கின்றார். 2) மலர்களாகுகின்றவர்களையும், என்றுமே மற்றவர்களை முட்களால் குத்தாதவர்களும், என்றுமே முகங்கோணாது மற்றவர்களுடன் அதிகளவு அன்புடன் வாழ்பவர்களும் தந்தையால் நேசிக்கப்படுகின்றார்கள். சரீர உணர்வுடையவர்களாகித் தங்கள் மத்தியில் சண்டையிட்டு, உவர் நீர் போன்று ஆகிவிடுகின்ற குழந்தைகள், தந்தையின் கௌரவத்தை இழக்கச் செய்கின்றார்கள். அவர்கள் தந்தையை அவமரியாதை செய்பவர்கள் ஆகுகின்றனர்.ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் ஆன்மீகத் தந்தையை நேசிப்பதைப் போன்றே, ஆன்மீகத் தந்தையும் ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களை நேசிக்கின்றார். ஏனெனில், நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் முழு உலகிற்கும் நன்மை பயக்கின்றீர்கள். நன்மை பயப்பவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுகின்றனர். நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள். எனவே, நீங்கள் நிச்சயமாக ஒருவருக்கொருவரால் நேசிக்கப்படுவீர்கள். தந்தையின் குழந்தைகளாகிய உங்கள் மத்தியில் உள்ள அன்பைப் போன்று, வெளியிலுள்ள மக்கள் மத்தியில் அன்பு இருக்க முடியாது. நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். இங்கு, சகோதரர்கள் தங்கள் மத்தியில் சண்டையிட்டாலோ அல்லது ஒருவர்மீது ஒருவர் அதிகளவு அன்பைக் கொண்டிராவிட்டாலோ அவர்கள் சகோதரர்கள் அல்லர். நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை ஆத்மாக்கள்மீது அன்பு கொண்டிருக்கின்றார். எனவே, ஆத்மாக்களும் ஒருவர் மீது ஒருவர் அன்பைக் கொண்டிருக்க வேண்டும். சத்தியயுகத்தில், சரீர உணர்வு துண்டிக்கப்பட்டிருப்பதால், சகல ஆத்மாக்களும் ஒருவரையொருவர் நேசிப்பவர்களாகவே இருப்பார்கள். சகோதரர்களாகிய நீங்கள் ஒரேயொரு தந்தையை நினைவு செய்வதன் மூலமாக முழு உலகிற்கும் நன்மை பயக்கின்றீர்கள். நீங்களே உங்களுக்கு நன்மை பயக்கின்றீர்கள். உங்கள் சகோதரர்களுக்கும் நீங்கள் நன்மை பயக்க வேண்டும். இதனாலேயே தந்தை உங்களை சரீர உணர்வுடையவர்களிலிருந்து ஆத்ம உணர்வுடையவர்களாக ஆக்குகின்றார். செல்வத்தில் தங்கள் பங்கிற்காக, லௌகீகச் சகோதரர்கள் தங்களுக்கிடையே சண்டையிடுகின்றார்கள். இங்கே, சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் நேரடித் தொடர்பை வைத்திருக்க வேண்டும். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியை யோக சக்தி மூலமாகக் கோர வேண்டும். நீங்கள் லௌகீகத் தந்தையிடமிருந்து பௌதீக ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஆனால் அந்த ஆன்மீகத் தந்தையாகிய ஒரேயொருவரிடமிருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் ஆன்மீக ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து நேரடியாகப் பெறவேண்டும். எந்தளவிற்கு நீங்கள் அதிகமாகத் தந்தையைத் தனிப்பட்ட முறையில் நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக ஆஸ்தியைப் பெறுவீர்கள். உங்கள் மத்தியில் நீங்கள் சண்டையிடுவதைத் தந்தை பார்த்தால், அவர் கேட்பார்: நீங்கள் அநாதைகளா? ஆன்மீகச் சகோதரர்கள் தங்கள் மத்தியில் என்றுமே சண்டையிடக்கூடாது. சகோதரர்களாகிய நீங்கள் உங்கள் மத்தியில் அன்பில்லாமல் சண்டையிட்டால், அது நீங்கள் இராவணனுக்குரியவர்கள் என்பதைப் போன்றதாகும். அவர்கள் அனைவரும் அசுரக் குழந்தைகள். அந்த நிலையில்;, அசுரக் குழந்தைகளுக்கும் இறை குழந்தைகளுக்குமிடையில் வேறுபாடு இல்லாததைப் போன்றுள்ளது. ஏனெனில், நீங்கள் சரீர உணர்விற்கு வந்து, சண்டையிடுகின்றீர்கள். ஆத்மாக்கள் ஆத்மாக்களுடன் சண்டையிடமாட்டார்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஒருவரோடொருவர் உவர் நீரைப் போன்று ஆகாதீர்கள். நீங்கள் அவ்வாறு ஆகும்போதே தந்தை இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அப்பொழுது நீங்கள் சரீர உணர்வுடைய குழந்தைகள், அதாவது இராவணனின் குழந்தைகள் என்றும், தனது குழந்தைகளல்ல என்றும் தந்தை கூறுவார். ஏனெனில், நீங்கள் ஒருவரோடொருவர் உவர் நீர் போன்று வாழ்கின்றீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு பாலும் சீனியும் போன்று வாழ்கின்றீர்கள். இந்நேரத்தில்;, நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் ஒருவரையொருவர் அனுசரிக்க முடியாவிடின், உங்களை இராவண சமுதாயத்தைச் சேர்ந்தவராகவே நீங்கள் கருத வேண்டும். நீங்கள் ஒருவரோடொருவர் உவர் நீர்; போன்றிருப்பதால், தந்தையின் கௌரவத்தை இழக்கச் செய்கின்றீர்கள். நீங்கள் இறை குழந்தைகள் என அழைக்கப்பட்டாலும், உங்களில் அசுரக் குணங்கள் இருக்குமாயின், நீங்கள் சரீர உணர்வுடையவர்களாகவே இருக்கின்றீர்கள். ஆத்ம உணர்வுடைய குழந்தைகளிடம் இறை குணங்களே இருக்கும். இங்கு நீங்கள் இறை குணங்களைக் கிரகிக்கும்போது, தந்தை உங்களைத் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்வார். பின்னர், நீங்கள் அந்தச் சம்ஸ்காரங்களை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். குழந்தைகள் சரீர உணர்வுடன், உவர் நீரைப் போன்று வாழ்வதைத் தந்தை அறிவார். அவர்களை இறை குழந்தைகள் என அழைக்க முடியாது. அவர்கள் தங்களுக்குப் பெருமளவு இழப்பையே ஏற்படுத்துகின்றார்கள். அவர்கள் மாயையின் ஆதிக்கத்திற்குள் உள்ளாகுகின்றார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் உவர் நீர்; போன்று இருக்கின்றார்கள் (முரண்பாடுடையவர்கள்). உண்மையில், முழு உலகமும் உவர் நீர் போன்றே உள்ளது. எனவே, கடவுளின் குழந்தைகளும் உவர் நீர் போன்று இருந்தால், இரு சாராருக்குமிடையில் என்ன வேறுபாடு உள்ளது? அவர்கள் தந்தைக்கு அவமரியாதையை ஏற்படுத்துகின்றார்கள். உவர் நீர் போலாகி, தந்தைக்கு அவமரியாதையை ஏற்படுத்துபவர்களால் தங்கள் இலக்கை அடைய முடியாது. அவர்களை நாஸ்திகர்கள் என்றும் அழைக்கலாம். ஆஸ்திகராகுகின்ற குழந்தைகள் என்றுமே எவருடனும் சண்டையிடமாட்டார்கள். நீங்கள் உங்கள் மத்தியில் சண்டையிடக்கூடாது. நீங்கள் இங்கேயே ஒருவரோடொருவர் அன்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அப்பொழுதே 21 பிறவிகளுக்கு அந்த அன்பு நீடித்திருக்கும். உங்களைத் தந்தையின் குழந்தைகள் என அழைத்த பின்னரும் நீங்கள் சகோதரர்களாகவில்லையெனில், நீங்கள் அசுரக் குழந்தைகளே. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே முரளியைப் பேசுகின்றார். எவ்வாறாயினும், சரீர உணர்வில் இருப்பதனால், தந்தை தங்களுக்கே இதனைக் கூறுகின்றார் என்பதையேனும் அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. மாயை மிகவும் திறமைசாலி. எலி நீங்கள் அறியாத வகையில் உங்களைக் கடிப்பது போன்று, மாயையும் நீங்கள் அறியாத வகையில் உங்களை மிக இனிமையாக ஊதிவிட்டு, பின்னரே கடிக்கின்றாள். ஒருவரோடொருவர் முகம் கோணுவது அசுர சமுதாயத்தின் வேலையாகும். பல நிலையங்களில், குழந்தைகள் உவர் நீரைப் போன்றே இருக்கின்றார்கள். எவருமே இதுவரை சம்பூர்ணமாகவில்லை. மாயை தொடர்ந்தும் யுத்தம் புரிகின்றாள். நீங்கள் அறியாத வகையில் மாயை உங்களை அறைகின்றாள். நீங்கள் ஒருவரோடொருவர் இதயபூர்வமான அன்பு கொண்டிருக்கின்றீர்களா என உங்களது இதயத்தையே கேட்டுப் பாருங்கள். நீங்கள் அன்புக் கடலின் குழந்தைகள். எனவே, நீங்கள் அன்பால் நிறைந்து வழியும் கங்கைகள் ஆகவேண்டும். சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு, தீய அல்லது தவறான வார்த்தைகளைப் பேசுவதற்குப் பதிலாக, எதுவும் பேசாதிருப்பதே மேலானது. தீயதைச் செவிமடுக்காதீர்கள்! எவரிடமாவது கோபத்தின் சுவடு இருக்குமாயின், அங்கு அன்பு இல்லை. இதனாலேயே பாபா கூறுகின்றார்: தினமும் உங்கள் அட்டவணையை எழுதுங்கள். உங்களால் அசுர நடத்தையைச் சீர்திருத்த முடியாவிட்டால், அதன் விளைவு என்னவாக இருக்கும்? நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவீPர்கள்? தந்தை விளங்கப் படுத்துகின்றார்: ஒருவர் சேவை செய்யாவிடின், அவரது நிலை என்னவாகும்? அவரது அந்தஸ்து குறைக்கப்படும். அனைவரும் காட்சிகளைப் பெறுவீர்கள். நீங்களும் உங்கள் கல்விக்கான காட்சிகளைப் பெறுவீர்கள். காட்சிகளைப் பெற்ற பின்னரே நீங்கள் .இடமாற்றம் செய்யப்படுவீர்கள். இடமாற்றம் செய்யப்;பட்ட பின்னர், நீங்கள் புதிய உலகிற்குச் செல்வீர்கள். இறுதியில், யார் எத்தனை புள்ளிகளுடன் சித்தியெய்தியிருக்கின்றார்கள் போன்ற அனைத்தினதும் காட்சிகளைப் பெறுவீர்கள். அதன் பின்னர் கதறி, ஓலமிட்டு அழுவீர்கள். நீங்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடுவதால், வருந்துவீர்கள். ஏனெனில், நீங்கள் பாபா கூறுவதைச் செவிமடுக்கவில்லை. பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளங்கப் படுத்துகின்றார்: நீங்கள் அசுரக் குணங்கள் எதனையும் கொண்டிருக்கக்கூடாது. தெய்வீகக் குணங்களைக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களையும் தங்களைப் போன்று ஆக்கவேண்டும்;. தந்தையை நினைவு செய்வது மிக இலகுவானது: அல்பாவும் பீற்றாவும். அல்பா என்றால் தந்தையும், பீற்றா என்றால் இராச்சியமும் ஆகும். எனவே, குழந்தைகளே, நீங்கள் போதையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒருவரோடொருவர் உவர் நீர்; போன்று இருந்தால், உங்களை எவ்வாறு இறை குழந்தைகளாகக் கருத முடியும்? பாபா உங்களை அசுரக் குழந்தைகள் எனவும், மாயை உங்களை மூக்கில் பிடித்துள்ளாள் எனவும் நினைப்பார். தங்களது ஸ்திதி தளம்பலடைவதையும், தங்களது அந்தஸ்து குறைவடைவதையும்கூட அவர்கள் உணர்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் அவர்களுக்கு அன்புடன் கற்பிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அன்பான பார்வை இருக்கட்டும். தந்தையே அன்புக்கடல், எனவே அவர் குழந்தைகளாகிய உங்களைக் கவர்கின்றார். நீங்களும் அன்புக் கடல்கள் ஆகவேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்தி, நல்ல வழிகாட்டல்களையும் கொடுக்கின்றார். கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் மலர்கள் ஆகுகின்றீர்கள். அவர் உங்களுக்கு அனைத்து நற்குணங்களையும் கொடுக்கின்றார். தேவர்களிடம் அன்பு இருக்கிறது. எனவே நீங்கள் அந்த ஸ்திதியை இங்கேயே உருவாக்க வேண்டும். இந்நேரத்தில் உங்களிடம் ஞானம் இருக்கிறது. ஆனால் நீங்கள் தேவர்களாகியதும், உங்களிடம் இந்த ஞானம் இருக்காது. அங்கே தெய்வீக அன்பு மாத்திரமே இருக்கும். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகக் குணங்களையும் இப்பொழுதே கிரகிக்கவேண்டும். இப்பொழுது நீங்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாகுவதற்காக முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். தந்தை பாரதத்திற்கே வருகின்றார். மக்கள் சிவனின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். எனினும், அவர் யார் என்பதையோ, அவர் எப்போது வருகின்றார் என்பதையோ அல்லது அவர் என்ன செய்கின்றார் என்பதையோ அவர்கள் அறியமாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்நேரத்தில், உங்களது முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே இதனை அறிந்துகொள்கின்றீர்கள். இதனை அறியாதவர்களால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியாததுடன், அவர்களது அந்தஸ்தும் குறைவடைகின்றது. பாடசாலையில் கற்பவர்களில், சிலரது நடத்தை தீயதாகவும், சிலரது நடத்தை எப்போதும் நல்லதாகவும் உள்ளது. சிலர் தினமும் சமூகமளிக்கிறார்கள்; சிலர் சமூகமளிப்பதில்லை. இங்கே, எப்பொழுதும் தந்தையை நினைவு செய்து, சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் சமூகமளிக்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் உங்களைச் சுயதரிசன சக்கரதாரிகளாகக் கருதுங்கள். இதனை நீங்கள் மறக்கும்போது, சமூகமளிக்கத் தவறிவிடுகிறீர்கள். எப்பொழுதும் நீங்கள் சமூகமளிக்கும்போதே, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். மறந்தால், குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். இன்னமும் காலம் இருப்பதைத் தந்தை அறிவார். உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறவுள்ளவர்களின் புத்தியில் எப்பொழுதும் சக்கரம் சுழன்றவாறே இருக்கும். சிவபாபாவின் நினைவு இருக்கட்டும், உங்கள் வாயில் ஞானாமிர்தம் இருக்கட்டும், அப்பொழுதே உங்கள் சரீரத்தை விட்டு; நீங்குவீர்கள் எனக் கூறப்படுகின்றது. உங்களுக்கு ஏதாவது ஒன்றில் அன்பு இருந்தால், இறுதிக் கணங்களில் நீங்கள் அதனையே தொடர்ந்தும் நினைவு செய்வீர்கள். உணவின்மீது பேராசை இருக்குமாயின், மரணிக்கும் நேரத்தில், அதை உண்ண வேண்டும் என்றே தொடர்ந்தும் நினைப்பீர்கள். அப்போது உங்கள் அஸ்தஸ்து அழிக்கப்பட்டுவிடும். தந்தை கூறுகிறார்: சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றியவாறே மரணியுங்கள். வேறு எதனையும் நினைவுசெய்யாதீர்கள். ஆத்மாக்கள் தாங்கள் வந்ததைப் போன்றே, எந்த உறவுமுறைகளும் இன்றித் திரும்பிச் செல்ல வேண்டும். பேராசையும் சற்றும் குறைந்ததல்ல. பேராசை இருந்தால், இறுதியில், எதன் மீது உங்களுக்குப் பேராசை இருக்கின்றதோ அதையே தொடர்ந்து நினைவு செய்வதுடன், அதை நீங்கள் பெறாவிட்டால், அந்த ஆசையுடனேயே மரணிப்பீர்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் பேராசை போன்றவற்றைக் கொண்டிருக்கக்கூடாது. தந்தை அதிகளவு விளங்கப்படுத்துகிறார். ஆனால் புரிந்துகொள்ள வேண்டியவர்களே அதைப் புரிந்துகொள்வார்கள். தந்தையின் நினைவு உங்கள் இதயத்தைப் பற்றிக் கொள்ளட்டும். 'பாபா, ஓ பாபா!" நீங்கள் 'பாபா, பாபா!" என வாயால் கூறாதீர்கள். சத்தமற்ற உச்சரிப்பு உள்ளாரத் தொடரட்டும். நீங்கள் தந்தையின் நினைவிலும், கர்மாதீத ஸ்திதியிலும் இருந்து உங்கள் சரீரத்தை விட்டுப் பிரியும்போதே, உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அன்பு நிறைந்து வழியும் ஒரு கங்கையாகுங்கள். அனைவர் மீதும் அன்பான பார்வை இருக்கட்டும். தவறான வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.2. எதன் மீதும் பேராசை கொண்டிருக்காதீர்கள். சுயதரிசன சக்கரதாரியாக இருங்கள். இறுதியில் நீங்கள் வேறு எதனையும் நினைவு செய்யாதிருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
ஆசீர்வாதம்: உங்கள் பிராமண வாழ்க்கையில் மேன்மையான ஸ்திதியின் வடிவத்தில் ஒரு பதக்கத்தைப் பெற்றுக் கொள்வதுடன் கவலையற்ற தேசத்தின் சக்கரவர்த்தி ஆகுவீர்களாக.உங்கள் தனிப்பட்ட ஸ்திதியை அனைத்திலும் சிறந்ததாக ஆக்குவதற்கே நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். பிராமண வாழ்க்கையில் ஒரு மேன்மையான ஸ்திதி உங்கள் தனிப்பட்ட சொத்தாகும். இது பிராமண வாழ்க்கையின் சொத்தாகும். இந்தப் பதக்கத்தைப் பெறுபவர்கள் ஆட்ட அசைக்க முடியாத நிலையான ஸ்திதியில் எப்பொழுதும் ஸ்திரமாக இருப்பதுடன் சதா கவலையற்றவராக இருப்பார்கள். அவர்கள் கவலையற்ற தேசத்தின் சக்கரவர்த்தி ஆகுவார்கள். அவர்கள் அனைத்து ஆசைகளில் இருந்தும் விடுபட்டிருப்பார்கள். அவர்கள் ஆசை என்றால் என்னவென்றே அறியாத சொரூபங்கள்.
சுலோகம்:
நீங்கள் சரீர உணர்வை முடித்ததும் அனைத்து பாதகமான சூழ்நிலைகளும் இயல்பாகவே முடிவிற்கு வரும்.மாதேஸ்வரிஜியின் இனிய மேன்மையான வாசகங்கள்.
இந்தச் சங்கமயுக காலத்தில் மகாபாரதம் நடைமுறைரீதியாக மீண்டும் இடம்பெறுகிறது.
பாருங்கள், குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு யுத்தம் இடம்பெற்றதாக கூறும் அவர்கள் கிருஷ்ணரே பாண்டவர்களுக்கு சகவாசியாகவிருந்து வழிகாட்டினார் என்றும் காட்டுகின்றார்கள். எனவே சடப்பொருளின் பிரபு யார் பக்கம் உள்ளாரோ அவர்களே நிச்சயமாக வெற்றியீட்டுவார்கள். பாருங்கள், அவர்கள் அனைத்தையும் குழப்பமடையச் செய்துள்ளார்கள். அனைத்திற்கும் முதலில், சடப்பொருளின் பிரபு கிருஷ்ணர் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பரமாத்மாவே சடப்பொருளின் பிரபு ஆவார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணரோ சத்திய யுகத்தின் முதல் தேவர் ஆவார். அவரைக் கடவுள் என அழைக்க முடியாது. எனவே பாண்டவர்களின் சக இரதோட்டி கடவுளே அன்றி, ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. கடவுள் குழந்தைகளாகிய எங்களுக்கு வன்முறையைக் கற்பிக்கவோ, அல்லது பாண்டவர்கள் ஒரு வன்முறை யுத்தத்தில் ஈடுபட்டு இராச்சியத்தைக் கோரவோ முடியாது. இவ் உலகம் கர்மஷேத்திரம் ஆகும். இதில் மக்கள் எந்தவிதமான விதைகளைத் தங்கள் செயல்கள் மூலமாக விதைத்தாலும், அதற்கேற்ப அவர்கள் நல்ல, தீய பலனைப் பெறுவார்கள். இந்தக் கர்ம ஷேத்திரத்தில் பாண்டவர்களும் சக்தியின் அவதாரங்களாகிய பாரதத் தாய்மார்களும் இருக்கிறார்கள். கடவுள் பாரத தேசத்தில் வருவதாலேயே பாரதம் அழிவற்ற தேசம் என்று கூறப்படுகிறது. கடவுள் விசேடமாகப் பாரதத்தில் அவதரிக்கின்றார். ஏனேனில் பாரத தேசத்திலிருந்தே அதர்மத்தின் விரிவாக்கம் ஆரம்பமானது. இங்கேயே கடவுள் யோக சக்தியினூடாக கௌரவர்களின் இராச்சியத்தை அழித்து, பாண்டவர்களின் இராச்சியத்தை ஸ்தாபித்தார். எனவே கடவுள் வந்து தர்ம இராச்சியத்தை ஸ்தாபித்தார். ஆனால் பாரத மக்களோ தங்களுடைய மகத்துவமான தூய தர்மத்தையும், மேன்னையான செயல்களையும் மறந்துவிட்டதால் தங்களை இந்துக்கள் என்று அழைத்தார்கள். தமது சொந்த தர்மத்தை அறியாததனால் அந்த அப்பாவிகள் ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டார்கள். இது எல்லையற்ற அதிபதி தானாகவே எங்களுக்கு கொடுக்கும் எல்லையற்ற ஞானமாகும். அவர்கள் தங்கள் ஆதிதர்மத்தை மறந்து, இந்த எல்லைக்குட்பட்டதில் சிக்கிக் கொண்டார்கள். இதுவே தர்மத்திற்கான உச்சகட்ட அவதூறு எனப்படுகின்றது. ஏனெனில் இவை அனைத்தும் சடப்பொருட்கள் சம்பந்தமான சமயங்கள் ஆகும். எவ்வாறாயினும் முதலில் சுயத்திற்கான தர்மம் இருக்க வேண்டும். எனவே எங்கள் ஒவ்வொருவரின் சுயத்தின் தர்மம்: ஆத்மாவாகிய நான் அமைதி என்பதாகும். பின்னர் சடப்பொருளின் (சரீரத்தின்) சமயம் தேவதர்மமாகும். முப்பத்து முக்கோடி பாரதவாசிகள் தேவர்கள் ஆவார்கள். இதனாலேயே கடவுள் கூறுகிறார்: எண்ணற்ற சரீர சமயங்கள் அனைத்தையும் துறவுங்கள். ஏனைய சமயங்களைத் துறவுங்கள்….. அந்த எல்லைக்குட்பட்ட சமயங்களினால் அதிகளவு புரட்சிகள் ஏற்பட்டது. எனவே இப்பொழுது எல்லைக்குட்பட்ட சமயங்களிலிருந்து விலகி எல்லையற்றதிற்குள் செல்லுங்கள். நீங்கள் சர்வசக்திவான் கடவுளான எல்லையற்ற தந்தையுடன் யோகம் செய்ய வேண்டும். ஆகையாலேயே சடப்பொருளின் பிரபுவான சர்வசக்திவானே பரமாத்மா அன்றி கிருஷ்ணர் அல்ல. எனவே சடப்பொருளின் பிரபுவாகிய கடவுளை நடைமுறையில் தம் பக்கம் கொண்டிருந்தவர்களின் வெற்றி ஒரு கல்பத்தின் முன்னரும் நினைவு கூரப்பட்டது. அச்சா.