12.06.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, கைப்பிடியளவு கடலைக்காகத் (சிறு பெறுமதி உடையவை) துரத்திச் செல்வதால் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இப்பொழுது தந்தையின் உதவியாளர்களாகி, தந்தையின் பெயரைப் போற்றுங்கள். (குறிப்பாக குமாரிகளுக்கு).

கேள்வி:
இந்த ஞான மார்க்கத்தில் நீங்கள் முன்னேறிச் செல்வதற்கான அறிகுறிகள் எவை?

8பதில்:
எப்பொழுதும் அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்பவர்களும், நினைவுசெய்யும் நேரத்தில் அலைபாயாத புத்தியை உடையவர்களும், தங்கள் புத்தியில் வீணான எண்ணங்களைக் கொண்டிராதவர்களும், ஒருமைப்பாடுடைய புத்தியை உடையவர்களும், தூங்கி வழியாதவர்களும் சந்தோஷப் பாதரசத்தை உயர்வாகக் கொண்டிருப்பவர்களுமாகிய குழந்தைகளே இந்த ஞானப் பாதையில் முன்னேறிச் செல்வதை நிரூபிக்கிறார்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இங்கே நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் சிவாலயத்தில் (சிவனின் ஆலயம்) அமர்ந்திருப்பது போன்ற உணர்வு உங்கள் இதயத்தில் பிரவேசிக்கிறது. நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்கிறீர்கள், அத்துடன் நீங்கள் சுவர்க்கத்தையும் நினைவுசெய்கிறீர்கள். நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் சிவாலயத்தில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை உங்களுடைய புத்தி நினைவுசெய்தால் கூட நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள். இறுதியில் நீங்கள் அனைவரும் சிவலாயத்திற்குச் செல்ல வேண்டும். எவரும் அமைதி தாமத்தில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். உண்மையில், அமைதி தாமம் சிவாலயம் என அழைக்கப்படுகிறது, சந்தோஷ தாமமும் சிவாலயம் என்றே அழைக்கப்படுகிறது. இரண்டும் தந்தையினால் ஸ்தாபிக்கப்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் இந்த இரண்டையும் நினைவுசெய்ய வேண்டும். அந்தச் சிவாலயம் அமைதிக்கானது, மற்றைய சிவாலயம் சந்தோஷத்திற்கானது. இது துன்ப பூமி. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளீர்கள். நீங்கள் அமைதிதாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் தவிர்ந்த வேறு எதனையும் நினைவுசெய்யக்கூடாது. நீங்கள் எங்கே அமர்ந்திருந்தாலும், உங்களுடைய தொழிலிலேயே இருந்தாலும், உங்கள் புத்தியானது இரண்டு சிவாலயங்களையும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் துன்ப பூமியை மறக்க வேண்டும். இத் துன்ப பூமியாகிய, இந்த விலைமாதர் இல்லம் இப்பொழுது முடிவடைய இருக்கிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இங்கே அமர்ந்திருக்கின்றபொழுது, குழந்தைகளாகிய நீங்கள் தூங்கி வழியக்கூடாது. பல குழந்தைகளின் புத்தி ஏனைய திசைகளில் அலைபாய்கிறது. மாயையின் தடைகள் இருக்கின்றன. 'குழந்தைகளே, மன்மனாபவவாக இருங்கள்!" எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுகிறார். அவர் உங்களுக்குப் பல்வேறு உபாயங்களையும் கூறுகிறார். நீங்கள் முதலில் அமைதி தாமமாகிய, சிவாலயத்திற்குச் சென்று, பின்னர் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள் என்பதை நீங்கள் இங்கு அமர்ந்திருக்கையில் உங்கள் புத்தி நினைவுசெய்யுமாறு செய்ய வேண்டும். இதை நினைவுசெய்வதால், உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அழிக்கப்படும். நீங்கள் எவ்வளவுக்கு நினைவில் இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு முன்னேறுவீர்கள். நீங்கள் வேறெந்த எண்ணங்களுடனும் இங்கே அமர்ந்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், நீங்கள் மற்றவர்களுக்கு இழப்பையே ஏற்படுத்துவீர்கள். நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக, இழப்பை ஏற்படுத்துவீர்கள். முன்னர் நீங்கள் தியானத்தில் அமர்த்தப்படும்பொழுது, யாராவது தூங்கி வழிகிறார்களா, யாராவது தங்களுடைய கண்களை மூடியிருக்கிறார்களா என்பதைச் சோதிப்பதற்காக உங்கள் முன்னால் ஒருவர் அமர்த்தப்பட்டார். எனவே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தீர்கள். உங்கள் புத்தியின் யோகம் எங்கேயாவது அலைந்து பாய்ந்ததா அல்லது நீங்கள் தூங்கிவழிந்தீர்களா எனத் தந்தையும் பார்த்ததுண்டு. பலர் இங்கே வருகிறார்கள். அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. பிராமண ஆசிரியர்கள் அவர்களை அழைத்து வருகிறார்கள். மிக நல்ல குழந்தைகள் சிவபாபாவின் முன்னால் இருக்க வேண்டும், அதனால் அவர்கள் தவறான எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டார்கள், ஏனெனில் இவர் சாதாரண ஆசிரியர் அல்ல. தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இங்கே அமர்ந்திருக்க வேண்டும். பாபா உங்களை 15 நிமிடங்களுக்கு மௌனமாக இருக்க வைத்தாலும், நீங்கள் ஒரு மணித்தியாலத்திற்கோ அல்லது இரண்டு மணித்தியாலத்திற்கோ இருக்கிறீர்கள். அனைவரும் மகாராத்தி அல்ல. பலவீனமாக இருப்பவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும். எச்சரிக்கையாக இருப்பதால், அவர்கள் உஷாராகவும் அவதானமுள்ளவர்களாகவும் ஆகுவார்கள். நினைவில் இருக்காமல் தொடர்ந்தும் வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் தடைகளை உருவாக்குவது போலத் தோன்றுகிறது, ஏனெனில் அவர்கள் புத்தி எங்கேயாவது அலைபாய்கிறது. யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை, அனைவரும் இங்கே இருக்கிறார்கள். இன்று, பாபா ஞானத்தைக் கடைந்த பின்னரே இங்கே வந்துள்ளார்: சிவாலயம், விலைமாதர் இல்லம், மிகவும் மங்களகரமான சங்கமயுகம் - மூன்றினதும் மாதிரி வடிவைக் குழந்தைகளாகிய நீங்கள் அருங்காட்சியகத்திலும் கண்காட்சிகளிலும் காட்டுவது, மக்களுக்கு ஞானத்தை விளங்கப்படுத்துவதற்கான மிகச்சிறந்த வழியாகும். நீங்கள் அதை மிகவும் பெரியதாக அமைக்க வேண்டும். நீங்கள் அதற்காக மிகப்பெரியதும் சிறந்ததுமான மண்டபத்தைப் பெற வேண்டும். எனவே அது மக்களின் புத்தியில் விரைவாகப் பதியும். நீங்கள் இந்த விடயங்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு முன்னேற்றுவது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். நீங்கள் மிகவும் மங்களகரமான சங்கமயுகத்தை மிக நல்லதாக அமைக்க வேண்டும். அதன் மூலம் மக்கள் மிக நல்ல புரிந்துணர்வைப் பெற முடியும். நீங்கள் 5 முதல் 6 பேர் தபஸ்யாவில் இருப்பதைக் காட்டுகிறீர்கள். ஆனால் இல்லை; நீங்கள் 10 முதல் 15 பேர் தபஸ்யாவில் இருப்பதாகக் காட்ட வேண்டும். நீங்கள் படங்களை மிகப்பெரிதாக ஆக்கி, மிகத்தெளிவான எழுத்துக்களில் எழுத வேண்டும். நீங்கள் அதிகளவு விளங்கப்படுத்தினாலும், மக்கள் உண்மையில் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் விளங்கப்படுத்த முயற்சி செய்தாலும், அவர்கள் கல்லுப்புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, முடிந்தளவுக்கு நீங்கள் மிகத்தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். சேவையில் ஈடுபடுபவர்கள், எவ்வாறு சேவையை அதிகரிப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அருங்காட்சியகங்களில் விளங்கப்படுத்தும்பொழுது ஏற்படும் அதிகளவு மகிழ்ச்சி, புரொஜெக்டரையும்; (pசழதநஉவழச), கண்காட்சியையும் பயன்படுத்தி விளங்கப்படுத்தும்பொழுது ஏற்படுவதில்லை. புரொஜெக்டர்கள் மூலம் அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அருங்காட்சியகம் சிறிதாக இருந்தாலும், அதுவே அனைத்திலும் சிறந்ததாகும். ஓர் அறையில், சிவாலயத்தினதும், விலைமாதர் இல்லத்தினதும், மிகவும் மங்களகரமான சங்கமயுகத்தினதும் காட்சிகள் இருக்க வேண்டும். இதை விளங்கப்படுத்துவதற்கு மிகவும் பரந்த புத்தி தேவைப்படுகிறது. எல்லையற்ற தந்தையும் எல்லையற்ற ஆசிரியருமானவர் வந்துவிட்டாலும், குழந்தைகள் முதுகலைப் பட்டதாரியாகவோ (ஆ.யு), இளங்கலைப் பட்டதாரியாகவோ (டீ.யு) சித்தியடைய வேண்டுமென அவர் கீழே அமர்ந்து சிந்திக்கப் போவதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருக்கப் போவதில்லை. அவர் குறுகிய காலத்தில் சென்று விடுவார். குறுகிய காலமே எஞ்சியுள்ளது, மக்கள் இன்னும் விழித்தெழவில்லை. 'நான் ஏன் என்னுடைய நேரத்தை இந்த 400, 500 ரூபாய்களுக்காக வீணாக்க வேண்டும்? அப்பொழுது நான் சிவாலயத்தில் என்ன அந்தஸ்தைப் பெறுவேன்?" என நல்ல புத்திரிகள் கூறுகிறார்கள். குமாரிகள் சுதந்திரமாக இருப்பதை பாபா காண்கிறார். நீங்கள் எவ்வளவு உயர்வான சம்பளத்தைப் பெற்றாலும் அது கைப்பிடியளவு கடலை போன்றதேயாகும். அவை அனைத்தும் முடிவடையப் போகிறது. எதுவும் எஞ்சாது. உங்களைக் கைப்பிடியளவு கடலையைத் துறக்கச் செய்வதற்காகத் தந்தை இப்பொழுது வந்துள்ளார். எவ்வாறாயினும் சிலர் எதையும் கைவிடமாட்டார்கள். அங்கே நீங்கள் கைப்பிடியளவு கடலையைப் பெறுகிறீர்கள், நீங்கள் இங்கே உலக இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். அவை சில சதங்களே பெறுமதியான கடலையாகும். எனவே நீங்கள் ஏன் அவற்றின் பின்னால் துரத்திச் சென்று உங்களை விரக்தியடைய செய்கிறீர்கள்? குமாரிகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அந்தக் கல்வி சில சதங்கள் மாத்திரமே பெறுமதியானது. நீங்கள் அந்தக் கல்வியை நிறுத்திவிட்டு, தொடர்ந்து இந்த ஞானத்தை கற்றால், உங்கள் புத்தி திறக்கப்பட முடியும். இளம் புத்திரிகள் அமர்ந்திருந்து, முதியவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, தந்தை சிவாலயத்தை ஸ்தாபிப்பதற்காக வந்துள்ளார் என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும். இங்கே உள்ள அனைத்தும் தூசாகப் போகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அந்தக் கடலையையேனும் உங்கள் பாக்கியத்தில் கொண்டிருக்க மாட்டீர்கள். சிலர் ஐந்து கடலையைக் கொண்டிருந்தாலும், அதாவது 500,000 ரூபாய்களை தங்களுடைய கைகளில் கொண்டிருந்தாலும் அதுவும் அழிக்கப்படும். இப்பொழுது மிகவும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகுகிறது. திடீரென அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. மரணம் திடீரென இடம்பெறுகின்றது. அவர்கள் கடலையைத் தங்கள் கையில் வைத்துக் கொண்டே தங்கள் சரீரத்தை விட்டுவிடுகிறார்கள். எனவே மக்கள் இந்தக் குரங்குத்தனமான நடத்தையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அருங்காட்சியகங்களைப் பார்ப்பதில் மாத்திரம் சந்தோஷமடையாதீர்கள். நீங்கள் அற்புதங்களை நிகழ்த்த வேண்டும். மக்கள் சீர்திருத்தப்பட வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கிறார். எவ்வாறாயினும், சிலர் கடலையையேனும் தங்கள் பாக்கியத்தில் கொண்டிருக்க மாட்டார்கள்; அனைத்தும் அழிக்கப்படும். அதற்குப் பதிலாக, ஏன் தந்தையிடமிருந்து இராச்சியத்தைப் பெறக்கூடாது? இதில் எச்சிரமமும் இல்லை. நீங்கள் தந்தையை நினைவுசெய்து, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும். நீங்கள் உங்கள் கையில் உள்ள கடலையை வீசிவிட்டு, அதை வைரங்களினாலும் இரத்தினங்களினாலும் நிரப்பி, வீடு திரும்ப வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஏன் கைப்பிடியளவு கடலைக்காக அலைந்து திரிவதில் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? ஆம், முதியவர் ஒருவர் பல குழந்தைகளைக் கொண்டிருந்தால், அவர் அவர்களைப் பராமரிக்க வேண்டும். குமாரிகளுக்கு இது மிகவும் இலகுவானது. யாராவது வரும்பொழுது, தந்தை இந்த இராச்சியத்தை எங்களுக்குக் கொடுக்கிறார் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். எனவே, நீங்கள் இராச்சியத்தைப் பெற வேண்டும். உங்கள் கை இப்பொழுது வைரங்களால் நிரப்பப்படுகிறது. ஏனைய அனைத்தும் அழியப் போகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் 63 பிறவிகளாகப் பாவம் செய்தீர்கள். தந்தையையும் தேவர்களையும் அவமதிப்பது மற்றைய பாவமாகும். நீங்கள் விகாரமுடையவர்களாகி, தந்தையையும் அவமதித்தீர்கள்! நீங்கள் தந்தையை அதிகளவு அவமதித்தீர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். 'பாபா, என்னால் நினைவில் இருக்க முடியவில்லை" எனக் கூறாதீர்கள். 'பாபா, என்னை ஓர் ஆத்மாவாகக் கருத முடியாதுள்ளது. நான் என்னை மறந்துவிடுகிறேன்" என்றே கூறுங்கள். சரீர உணர்வுடையவர் ஆகுவதே உங்களை மறப்பதாகும். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாக நினைவுசெய்ய முடியாவிட்டால், உங்களால் எவ்வாறு தந்தையை நினைவுசெய்ய இயலும்? இலக்கானது மிகவும் உயர்ந்தது. இது மிக இலகுவானதும் ஆகும். ஆம் ஆனால், மாயையின் எதிர்ப்புக்களும் இருக்கின்றன. மக்கள் கீதை முதலானவற்றைக் கற்றாலும் அவர்கள் அதன் அர்த்தத்தை முற்றாகவே புரிந்து கொள்வதில்லை. கீதையே பாரதத்தின் பிரதான சமயநூல். ஒவ்வொரு சமயமும் அதன் சொந்தச் சமயநூலைக் கொண்டுள்ளது. ஒரு சமயத்தை ஸ்தாபிப்பவரை சற்குரு என அழைக்க முடியாது. இது மிகப்பெரிய தவறாகும். சற்குரு ஒருவர் மாத்திரமே இருக்கிறார் என்றாலும், பலர் தங்களை ஒரு குரு என அழைக்கிறார்கள். தச்சரின் அல்லது பொறியியலாளரின் வேலையைக் கற்பிப்பவரும் ஒரு குரு ஆவார். எதையாவது கற்பிப்பவர் ஒரு குருவாவார், ஆனால் சற்குரு ஒருவரே இருக்கிறார். நீங்கள் இப்பொழுது சற்குருவைக் கண்டுவிட்டீர்கள். அத்துடன் அவரே உண்மையான தந்தையும், உண்மையான ஆசிரியரும் ஆவார். இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் கவனயீனமாக இருக்கக்கூடாது. நீங்கள் மிகவும் நல்ல புத்துணர்ச்சியுடையவராகி இங்கேயிருந்து சென்றாலும், நீங்கள் வீட்டை அடைந்தவுடன் அனைத்தையும் மறந்து விடுகிறீர்கள். கருப்பை எனும் சிறையில் பெருமளவு தண்டனை பெறப்படுகிறது. அங்கே கருப்பை மாளிகையாக இருக்கின்றது. அங்கே எவரும் தண்டனை பெறவேண்டிய வகையில் பாவச் செயல்கள் எதுவும் செய்யப்பட மாட்டாது. இங்கே (மதுவனத்தில்), நீங்கள் தந்தையுடனிருந்து தனிப்பட்ட முறையில் கற்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். வெளியே, உங்களுடைய வீட்டில் நீங்கள் அதேபோன்று கூற மாட்டீர்கள். அங்கே உங்கள் சகோதரர் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள். இங்கே நீங்கள் நேரடியாகத் தந்தைக்கு முன்னால் வந்துள்ளீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகிறார். தந்தை விளங்கப்படுத்தும் முறைக்கும் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்தும் முறைக்கும் இடையில் வேறுபாடு இருக்கின்றது. தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கிறார். அவர் 'குழந்தாய், குழந்தாய்" எனக் கூறி, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் சிவாலயத்தையும், விலைமாதர் இல்லத்தையும் (வைஷாலயம்) புரிந்துகொள்வீர்கள். இது எல்லையற்ற விடயமாகும். இதைத் தெளிவாகக் காட்டுங்கள், மக்கள் அதனால் களிப்படைவார்கள். நீங்கள் இலேசான முறையில் விளங்கப்படுத்தினாலும், அவர்களுக்குத் தீவிரமாக விளங்கப்படுத்துங்கள். அப்பொழுது அவர்களால் அதை மிக விரைவில் புரிந்து கொள்ள முடியும்: உங்கள் மீது கருணை கொள்ளுங்கள். நீங்கள் இந்த விலைமாதர் இல்லத்திலேயே தங்கியிருக்கப் போகிறீர்களா? எவ்வாறு விளங்கப்படுத்துவது என்பதைப் பற்றிய எண்ணங்களை பாபா கொண்டிருக்கிறார். குழந்தைகள் அதிகளவு முயற்சி செய்தாலும், இன்னும் எதுவும் ஆழப் பதியாதது போலத் தோன்றுகிறது. அவர்கள் எதனையும் புரிந்துகொள்ளாவிட்டாலும், 'ஆம், ஆம் அது மிகவும் நல்லது, நீங்கள் இதைக் கிராமங்களிலும் விளங்கப்படுத்த வேண்டும்" என்று தொடர்ந்தும் கூறுகிறார்கள். பெருமளவு பணமுடைய செல்வந்தர்கள் சிறிதளவேனும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் இதில் சிறிதளவேனும் கவனம் செலுத்த மாட்டார்கள். அவர்கள் இறுதியில் வருவார்கள், ஆனால் அப்பொழுது காலம் கடந்து விட்டிருக்கும். அவர்களுடைய செல்வம் பயனுடையதாகவும் இருக்காது. அவர்களால் யோகத்தில் நிலைத்திருக்கவும் முடியாது. எவ்வாறாயினும், ஆம், ஆனால், அவர்கள் இதைச் செவிமடுத்தால், அவர்கள் பிரஜைகளாகுவார்கள். ஏழைகளால் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும். குமாரிகளிடம் என்ன உள்ளது? ஒரு குமாரி ஏழை என்றே கூறப்படுகிறாள். ஏனெனில் புத்திரர்களே தங்கள் தந்தையின் ஆஸ்தியைப் பெறுபவர்கள். ஆனால், ஆம், குமாரியைத் திருமணம் செய்து கொடுக்கும்பொழுது, அவள் விகாரத்தில் ஈடுபடுகிறாள். 'திருமணம் செய்யுங்கள், அப்பொழுது நான் உங்களுக்குப் பணம் கொடுப்பேன்" என அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டுமானால், ஒரு சதத்தையேனும் பெற மாட்டீர்கள். அவர்களுடைய மனோபாவத்தை பாருங்கள்! நீங்கள் எவரையிட்டும் பயப்படக்கூடாது. நீங்கள் அனைத்தையும் வெளிப்படையாக விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் முற்றிலும் உண்மையைக் கூறுகிறீர்கள். இது சங்கமயுகமாகும். அந்தப் பக்கத்தில் கைப்பிடியளவு கடலையும், இந்தப் பக்கத்தில் கைப்பிடியளவு வைரங்களும் இருக்கின்றன. நீங்கள் குரங்குகளாக இருப்பதிலிருந்து, இப்பொழுது ஓர் ஆலயத்தில் இருக்கத் தகுதிவாய்ந்தவர்களாக ஆகுகிறீர்கள். நீங்கள் முயற்சி செய்து வைரத்தைப் போன்ற பிறவியைப் பெற வேண்டும். உங்கள் முகங்கள் தைரியமுள்ள பெண் சிங்கத்தைப் போல் இருக்க வேண்டும். சிலருடைய முகம் எளிதில் அச்சம் கொள்கின்ற ஆட்டைப் போல் இருக்கிறது. அவர்கள் சிறிய சப்தத்திற்கும் பயப்படுவார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் எச்சரிக்கிறார். குமாரிகள் சிக்கிக்கொள்ளக்கூடாது. நீங்கள் பந்தனங்களில் சிக்கிக் கொண்டால், விகாரத்திற்காக அடிக்கப்;படுவீர்கள். நீங்கள் ஞானத்தை நன்றாகக் கிரகித்தால், உலகின் சக்கரவர்த்தினி ஆகுவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உலக இராச்சியத்தை உங்களுக்குக் கொடுப்பதற்காக வந்துள்ளேன். எவ்வாறாயினும் சிலருடைய பாக்கியத்தில் அது இல்லை. தந்தையே ஏழைகளின் பிரபு. குமாரிகள் ஏழைகள். பெற்றோர்களால் தங்கள் புத்திரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாவிட்டால், அவர்கள் அவளைக் கொடுத்து விடுகிறார்கள். எனவே குமாரிகள் மிகவும் போதையுடையவர்களாக இருக்க வேண்டும். “நான் நன்றாகக் கற்று, நல்ல அந்தஸ்தைப் பெற வேண்டும்.” நல்ல மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்துவதால், நல்ல திறமைச்சித்தி அடைகிறார்கள். அவர்களே பின்னர் புலமைப்பரிசிலைப் பெறுகிறார்கள். நீங்கள் எவ்வளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள், அதுவும் 21 பிறவிகளுக்குப் பெறுவீர்கள். இங்கே தற்காலிகச் சந்தோஷம் இருக்கிறது. இன்று, நீங்கள் அந்தஸ்தைப் பெற்று, மறுநாளே மரணித்து விட்டால், அனைத்தும் முடிவடைந்துவிடும். யோகிகளுக்கும் போகிகளுக்கும் (இந்திரிய சுகத்தில் ஈடுபடுபவர்கள்) இடையில் வித்தியாசம் இருக்கிறது. தந்தை கூறுகிறார்: ஏழைகள் மீது அதிகளவு கவனம் செலுத்துங்கள். செல்வந்தர்கள் எவரும் வெகு அரிதாகவே வந்து இதைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: இது மிக நல்லது; இந்த ஸ்தாபனம் மிகவும் நல்லது, அது பலருக்கும் நன்மையைக் கொடுக்கும். அவர்கள் தங்களுக்குச் சிறிதளவேனும் நன்மையை ஏற்படுத்துவதில்லை. இது மிக நல்லது என அவர்கள் கூறினாலும், அவர்கள் வெளியே சென்றவுடன் அனைத்துமே முடிவடைந்து விடுகிறது. மாயை பிரம்புடன் அமர்ந்திருந்து, அவர்களை உற்சாகம் அனைத்தையும் இழக்கச் செய்கிறாள். அவர்;களை ஒருமுறை அறைவதால், அவள் அவர்களின் விவேகம் அனைத்தையும் இழக்கச் செய்கிறாள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: பாரதம் எந்த நிலைமைக்கு வந்துவிட்டது என்பதைப் பாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தை மிக நன்றாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கைப்பிடியளவு கடலையைத் துறந்து, தந்தையிடமிருந்து உலக இராச்சியத்தைப் பெறுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். எதையிட்டும் பயப்படாதீர்கள். பயமற்றவர்களாகி, பந்தனங்களிலிருந்து விடுபட்டு இருங்கள். ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிப்பதில், உங்கள் நேரத்தைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள்.

2. இத் துன்பபூமியை மறந்து, சிவாலயத்தை, அதாவது, அமைதிதாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள், மாயையின் தடைகளை இனங்கண்டு, அவற்றையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் இலகுயோகியாகி, உங்கள் யோகி வாழ்வு மூலம் பிறரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்பொழுது, திருப்திக்கான மூன்று நற்சான்றிதழ்களையும் கோருவீர்களாக.

திருப்தியே ஒரு யோகி வாழ்வின் விசேட இலக்கு ஆகும். சதா திருப்தியாக இருப்பவர்களும் பிறரைத் திருப்தியாக ஆக்குபவர்களும் இயல்பாகவே தங்கள் யோகி வாழ்வால் பிறரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றார்கள். விஞ்ஞானத்தின் வசதிகள் சூழலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, எனவே, ஓர் இலகு யோகியும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றார். சுயத்தில் திருப்தியும், தந்தையுடனான திருப்தியும், மூன்றாவதாக லௌகீக, அலௌகீகக் குடும்பங்களுடனான திருப்தியுமே ஒரு யோகி வாழ்வின் மூன்று நற்சான்றிதழ்கள் ஆகும்.

சுலோகம்:
சுய இராச்சியம் எனும் திலகத்தையும், உலக நன்மை எனும் கிரீடத்தையும் கொண்டிருந்து, தங்கள் ஸ்திதி எனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்களே இராஜயோகிகள் ஆவார்கள்.