19.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் விகாரமானவர்களிலிருந்து விகாரமற்றவர்கள் ஆகுவதற்கே எல்லையற்ற தந்தையிடம் வந்திருக்கிறீர்கள். அதனால், உங்களுக்குள் எவ்விதமான தீய ஆவிகளும் இருக்கக்கூடாது.
கேள்வி:
முழுச் சக்கரத்திலும் கற்பிக்கப்படாத எக்கல்வியைத் தந்தை இப்போது உங்களுக்குக் கற்பிக்கிறார்?
பதில்:
இந்நேரத்தில், பரம தந்தை மாத்திரமே புதிய இராச்சியத்தை ஸ்தாபிக்கும் கல்வியையும் மனிதர்களுக்கு ஓர் இராஜ அந்தஸ்தைக் கொடுக்கும் கல்வியையும் கற்பிக்கின்றார். இப் புதிய கல்வி சக்கரம் முழுவதிலும் இந் நேரத்தில் அல்லாது வேறு எப்பொழுதுமே கற்பிக்கப்படுவதில்லை. இக் கல்வி மூலமே சத்தியயுக இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது.ஓம் சாந்தி.
நீங்கள் ஆத்மாக்கள் என்றும், சரீரங்கள் அல்ல என்றும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதுவே ஆத்ம உணர்வில் நிலைத்திருத்தல் என அழைக்கப்படுகின்றது. மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வு உடையவர்கள். இது பாவாத்மாக்களின் உலகம், அதாவது, இது விகார உலகம் ஆகும்; இது இராவண இராச்சியம் ஆகும். சத்தியயுகம் கடந்து சென்று விட்டது. அங்கே வாழ்ந்த அனைவரும் விகாரமற்றவர்களாக இருந்தார்கள். நீங்கள் தூய தேவர்களாக இருந்தீர்கள் என்றும், 84 பிறவிகளை கடக்கும் போது. மீண்டும் ஒருமுறை தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அனைவரும் 84 பிறவிகளை எடுப்பதில்லை. 82, 83 அல்லது 84 பிறவிகளை எடுத்த பாரத மக்கள் மாத்திரமே தேவர்களாக இருந்தார்கள். இப்போது அவர்கள் தூய்மையற்றவர்களாகி விட்டார்கள். பாரதம் மாத்திரமே அழிவற்ற பூமி என்று நினைவுகூரப்படுகிறது. பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணரின் இராச்சியம் நிலவிய போது, அது புதிய பாரதமாகிய, புதிய உலகம் என்று அழைக்கப்பட்டது. இப்போது இது பழைய பாரதமாகிய, பழைய உலகமாக இருக்கிறது. அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு எவ்விதமான விகாரங்களும் இருக்கவில்லை. அத் தேவர்கள் 84 பிறவிகளை எடுத்து, இப்போது தூய்மையற்றவர்களாகி விட்டார்கள். காமம், கோபம், பேராசை போன்ற கடுமையான தீய ஆவிகள் இருக்கின்றன, அவற்றில் சரீர உணர்வே பிரதான தீய ஆவி ஆகும். இது இராவண இராச்சியம். மனிதர்களில் ஐந்து விகாரங்கள் பிரவேசிக்கும் பொழுது, இந்த இராவணன், அரைச்சக்கரத்திற்கு, பாரதத்தின் எதிரி ஆகுகின்றான். தேவர்களுக்குள் இத் தீய ஆவிகள் இருப்பதில்லை. மறுபிறவிகளை எடுக்கும் போது, அந்த ஆத்மாக்களும் விகாரங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகினார்கள். நீங்கள் தேவர்களாக இருந்த போது, உங்களுக்குள் எவ்விதமான விகாரங்களின் தீய ஆவிகளும் இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். சத்திய, திரேதா யுகங்கள் இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றன. துவாபர, கலியுகங்கள் இராவண இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றன. இங்கே ஒவ்வொரு ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் ஐந்து விகாரங்களும் இருக்கின்றன. துவாபர யுகத்திலிருந்து கலியுகம் வரை ஐந்து விகாரங்களும் தொடர்கின்றன. நீங்கள் இப்போது அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். விகாரமானவர்களிலிருந்து விகாரமற்றவர்கள் ஆகுவதற்கே நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் வந்துள்ளீர்கள். எவராவது விகாரமற்றவர்களாகிய பின்னர் மீண்டும் விகாரத்தில் வீழ்ந்தால், பாபா எழுதுகிறார்: நீங்கள் உங்கள் முகத்தை அழுக்காக்கி விட்டீர்கள். மீண்டும் உங்கள் முகத்தை அழகாக்குவது இப்போது சிரமமாகும். இது ஐந்தாவது மாடியில் இருந்து விழுவது போலாகும். எலும்புகள் நொறுங்கிப் போகின்றன. கீதையிலும் கூறப்பட்டுள்ளது: கடவுள் பேசுகிறார்: காமமே கொடிய எதிரி. பாரதத்தின் ஆதி சமயநூல் கீதையாகும். ஒவ்வொரு சமயத்திற்கும் ஒரு சமயநூல் மாத்திரமே இருக்கிறது. பாரத மக்களிடமோ பல சமயநூல்கள் உள்ளன. அது பக்தி என்று அழைக்கப்படுகிறது. புதிய உலகம் சதோபிரதானாகவும், சத்தியயுகமாகவும் இருக்கின்றது. அங்கே சண்டை அல்லது யுத்தங்கள் எதுவுமில்லை. அனைவருக்கும் நீண்ட ஆயுட்காலம் இருப்பதுடன், அவர்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் இருக்கிறார்கள். தேவர்களாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் இப்போது நினைவுகூருகின்றீர்கள். அங்கே அகால மரணம் இல்லை. அங்கே மரண பயம் இல்லை. அங்கே உங்களிடம் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் அனைத்தும் இருக்கின்றன. நரகத்தில் சந்தோஷமே இ;ல்லை. சரீரத்திற்கு தொடர்ந்தும் ஏதேனும் ஒரு நோய் ஏற்படுகின்றது. இது அளவற்ற துன்பம் நிறைந்த உலகம், அதுவோ அளவற்ற சந்தோஷம் நிறைந்த உலகமாகும். எல்லையற்ற தந்தை ஒரு துன்ப உலகைப் படைக்க மாட்டார். தந்தை சந்தோஷ உலகையே படைக்கிறார். பின்னர், இராவண இராச்சியம் நிலவுகிறது, அதில் நீங்கள் துன்பத்தையும் அமைதியின்மையையும் அனுபவம் செய்கிறீர்கள். சத்தியயுகம் சந்தோஷ உலகமும், கலியுகம் துன்ப உலகமும் ஆகும். விகாரத்தில் ஈடுபடுவது என்றால் ஒருவர் மீது ஒருவர் காம வாளைப் பயன்படுத்துவதாகும். மக்கள் கூறுகிறார்கள்: “இது கடவுளின் படைப்பு!” ஆனால், இல்லை! இது கடவுளின் படைப்பல்ல, இது இராவணனின் படைப்பு. கடவுள் சுவர்க்கத்தைப் படைக்கிறார். அங்கே காம வாளே இல்லை. கடவுள் சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுக்கிறார் என்பதல்ல. கடவுள் எல்லையற்ற தந்தை என்பதால், அவரால் எவ்வாறு குழந்தைகளுக்குத் துன்பத்தைக் கொடுக்க முடியும்? அவர் கூறுகிறார்: நான் உங்களுக்குச் சந்தோஷ ஆஸ்தியைக் கொடுக்கின்றேன். அதனையடுத்து அரைச்சக்கரத்தின் பின்னர், இராவணன் உங்களைச் சபிக்கின்றான். சத்தியயுகத்தில் எல்லையற்ற சந்தோஷம் இருந்தது, நீங்கள் மிகவும் செழிப்பானவர்களாக இருந்தீர்கள். சோமநாதர் ஆலயத்தில் மாத்திரமே பல்வேறு வைரங்களும் இரத்தினங்களும் இருந்தன. பாரதம் மிகவும் வளமுள்ளதாக இருந்தது; அது இப்போது வளமற்றதாகி விட்டது. சத்தியயுகத்தில் நீங்கள் 100வீதம் வளமானவர்களாக இருந்தீர்கள், கலியுகத்தில் நீங்கள் 100வீதம் வளமிழந்து இருக்கின்றீர்கள். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். இது இப்போது கலியுகமாகும். ஆத்மாக்களில் கலப்படம் கலந்ததால், அவர்கள் இப்போது முற்றிலும் தமோபிரதானாகி விட்டார்கள். அதிகளவு துன்பம் இருக்கிறது. இந்த ஆகாய விமானங்கள் போன்றவையும் கடந்த 100 வருடங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டவையே. இது மாயையின் பகட்டு என்று அழைக்கப்படுகிறது. எனவே, மக்களும் விஞ்ஞானத்தின் மூலமே சுவர்க்கம் உருவாக்கப்பட்டது என்று எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், அது இராவணனின் சுவர்க்கமாகும். கலியுகத்தில் மாயையின் பகட்டைப் பார்ப்பதால், அரிதாகவே எவரேனும் உங்களிடம் வருகிறார்கள். தங்களிடம் மாளிகைகளும், கார்கள் போன்றவையும் இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். தந்தை கூறுகிறார்: சத்தியயுகம் இலக்ஷ்மி, நாராயணரின் இராச்சியமாக இருந்த போது, அது சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. அது இப்போது இலக்ஷ்மி, நாராயணரின் இராச்சியமாக இல்லை. கலியுகத்தின் பின்னர் அவர்களது இராச்சியம் மீண்டும் இப்போது வரும். எல்லாவற்றுக்கும் முதலில், பாரதத்தில் மிகச்சிறிய சனத்தொகையே இருந்தது. புதிய உலகில் 900,000 தேவர்களே இருக்கின்றார்கள். பின்னர் தொடர்ந்தும் வளர்ச்சி இடம்பெறுகிறது. முழு உலகமும் தொடர்ந்தும் விரிவடைகின்றது. முதலில் தேவர்கள் மாத்திரமே இருக்கின்றார்கள். எனவே, எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்கு உலகின் வரலாறையும் புவியியலையும் கூறுகிறார். தந்தையைத் தவிர வேறு எவராலும் இதை உங்களுக்குக் கூற முடியாது. அவர் ஞானம் நிறைந்தவரும், தந்தையான கடவுளும், ஆத்மாக்களின தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள், பின்னர், அவர்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகிறார்கள். நீங்கள் அனைவரும் ஒரேயொரு பிரஜாபிதா பிரம்மாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆவீர்கள். ஆத்மாக்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகள். அவர் பரம தந்தை என அழைக்கப்படுகிறார், அவரது பெயர் சிவன். அவ்வளவு தான். தந்தை விளங்கப்படுத்துகிறார்: எனக்கு சிவன் என்ற ஒரு பெயர் மாத்திரமே இருக்கிறது. பின்னர், பக்தி மார்க்கத்தில் மக்கள் பல ஆலயங்களைக் கட்டியுள்ளார்கள். அதனால், அவர்கள் எனக்குப் பல பெயர்களையும் கொடுத்துள்ளார்கள். பக்தியின் சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதனை ஒரு கல்வி என்று அழைக்க முடியாது. அதில் ஓர் இலக்கோ அல்லது குறிக்கோளோ இல்லை. அது கீழிறங்கி வருவதற்காகும். கீழிறங்கும் போது நீங்கள் தமோபிரதான் ஆகுகிறீர்கள். அனைவரும் இப்போது சதோபிரதானாக வேண்டும். நீங்கள் சதோபிரதானாகி சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள், ஏனையோர் சதோபிரதானாகி, அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். இதனை மிக நன்றாக நினைவிற் கொண்டிருங்கள். பாபா கூறுகிறார்: என்னை நீங்கள் கூவி அழைத்தீர்கள்: பாபா, வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள். அதனால் நான் முழு உலகையும் தூய்மையாக்குவதற்காக இப்பொழுது வந்திருக்கின்றேன். கங்கையில் நீராடுவதால், தம்மால் தூய்மையான முடியும் என மக்கள் நினைக்கிறார்கள். அவர்கள் கங்கையை, தூய்மையாக்குபவர் என்று கருதுகிறார்கள். அவர்கள் கிணற்று நீரையும் கங்கை நீராகக் கருதி, அதில் நீராடுகிறார்கள். அவர்கள் அதனை மறைமுகமான கங்கை எனக் கருதுகிறார்கள். அவர்கள் யாத்திரைகள் செல்லும் போது, அல்லது மலைகளுக்குச் செல்லும் போது, அங்கே நீரூற்றுக்களைக் கண்டால் அவற்றை மறைமுகமான கங்கை என அழைக்கின்றார்கள். அது பொய்மை என்று அழைக்கப்படுகிறது. கடவுளே சத்தியமானவர் என்று கூறப்படுகிறார். எவ்வாறாயினும், இராவண இராச்சியத்தில் அனைவரும் பொய்களையே பேசுகிறார்கள். தந்தையாகிய கடவுள் மாத்திரமே சத்திய பூமியை ஸ்தாபிக்கிறார். அங்கே பொய்மை இல்லை. தேவர்களுக்கு பிரசாதமாக தூய உணவு படைக்கப்படுகிறது. இது இப்போது அசுர இராச்சியமாகும். சத்திய, திரேதா யுகங்களில் இப்போது ஸ்தாபிக்கப்படுகின்ற, கடவுளின் இராச்சியம் நிலவுகிறது. கடவுளே வந்து அனைவரையும் தூய்மையாக்குகிறார். தேவர்களுக்கு விகாரங்கள் எதுவுமில்லை. பிரஜைகள்; அரசரையும் அரசியையும் போல் தூய்மையாக இருக்கிறார்கள். இங்கேயோ அனைவரும் பாவம் நிறைந்தவர்களாகவும், காமம் நிறைந்தவர்களாகவும், கோபப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். புதிய உலகம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இந்த உலகம் நரகம் என அழைக்கப்படுகின்றது. தந்தையைத் தவிர வேறு எவராலும் நரகத்தைச் சுவர்க்கமாக ஆக்க முடியாது. இங்கே அனைவரும் தூய்மையற்ற நரகவாசிகள். சத்தியயுகத்தில், அவர்கள் தூய்மையானவர்களாக இருக்கிறார்கள். அங்கே, அவர்கள் கூற மாட்டார்கள்: ‘நாங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாகுவதற்குக் கங்கையில் நீராடச் செல்கிறோம்.’ இதுவே மனித உலகின் பல்வகை விருட்சமாகும். கடவுளே இதன் விதையானவர் ஆவார். அவர் மாத்திரமே படைப்பைப் படைக்கிறார். எல்லாவற்றுக்கும் முதலில், அவர் தேவர்களைப் படைக்கிறார். பின்னர் விரிவாக்கம் இடம்பெறும் போது, பல்வேறு சமயங்களும் இருக்கின்றன. ஆரம்பத்தில் ஒரேயொரு தர்மமும் ஒரேயொரு இராச்சியமுமே இருந்தது. அங்கே சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமே இருக்கவி;ல்லை. உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நீங்கள் இப்போது அதை ஸ்தாபிக்கின்றீர்கள். ஏனையவை அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். ஒரு சிலர் மாத்திரமே எஞ்சியிருப்பார்கள். இச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இது இப்போது, கலியுக இறுதியும், சத்தியயுக ஆரம்பமுமான அதி மங்களகரமான சங்கமயுகம் ஆகும். இது நன்மை பயக்கின்ற, அதி மங்களகரமான சங்கமயுகம் என்று அழைக்கப்படுகிறது. கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் சங்கமயுகத்தில் கற்று, அதன் பலனைச் சத்தியயுகத்தில் பெறுவீர்கள். இங்கே நீங்கள் தூய்மையாகிக் கல்வி கற்கின்ற அளவுக்கேற்பவே, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். வேறு எங்கும் இவ்வாறானதொரு கல்வி இ;ல்லை. இக் கல்வியின் சந்தோஷத்தை நீங்கள் புதிய உலகில் பெறுவீர்கள். ஏதேனும் தீய ஆவி இருக்குமானால், முதலில் தண்டனை இருக்கும்; இரண்டாவதாக, அங்கே நீங்கள் ஒரு தாழ்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். முழுமையடைந்து பிறருக்கும் கற்பிப்பவர்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். பல நிலையங்களும் இருக்கின்றன. நூறாயிரக்கணக்கான நிலையங்கள் இருக்கும். உலகம் முழுவதிலும் நிலையங்கள் திறக்கப்படும். நீங்கள் பாவாத்மாக்களிலிருந்து தூய, புண்ணியாத்மாக்கள் ஆகவேண்டும். உங்களுக்கு ஓர் இலக்கும் குறிக்கோளும் இருக்கின்றன. சிவபாபா மாத்திரமே உங்களுக்குக் கற்பிப்பவர். அவரே ஞானக்கடலும் சந்தோஷக்கடலும் ஆவார். தந்தை மாத்திரமே வந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். இவர் உங்களுக்குக் கற்பிப்பதில்லை. அவரே இவர் மூலம் உங்களுக்குக் கற்பிப்பவர்;. இவர் பாக்கிய இரதமாகிய, கடவுளின் இரதம் என்று நினைவுகூரப்படுகிறார். அவர் உங்களைப் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆக்குகிறார். நீங்கள் மிகவும் செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் ஒருபொழுதும் நோய்வாய்ப்படுவதில்லை. நீங்கள் ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் அனைத்தையும் பெறுகிறீர்;கள். இங்கே உங்களிடம் செல்வம் இருந்தாலும் நோய்களும் இருக்கின்றன. அதனால், அந்தச் சந்தோஷம் இருக்க முடியாது; ஏதோ ஒரு வகையான துன்பம் இருந்து கொண்டே இருக்கிறது. அது வைகுந்தமாகிய, சுவர்க்கமான, சந்தோஷ பூமி, என அழைக்கப்படுகிறது. இலக்ஷ்மி, நாராயணருக்கு அந்த இராச்சியத்தைக் கொடுத்தவர் யார்? அது எவருக்கும் தெரியாது. அவர்கள் பாரதத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் உலகிற்கே அதிபதிகளாக இருந்தார்கள், அங்கே பிரிவினைகள் போன்றவை இருக்கவில்லை. இப்போது பல்வேறு பிரிவினைகள் உள்ளன. இது இராவண இராச்சியம் ஆகும். அது பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்தும் சண்டை, சச்சரவு செய்கிறார்கள். அங்கேயோ, பாரதம் முழுவதும் அந்தத் தேவர்களின் இராச்சியம் இருந்தது. அங்கே ஆலோசகர்கள் இருக்கவில்லை. இங்கே மக்கள் விவேகமற்று இருப்பதால், எத்தனை ஆலோசகர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள். ஆலோசகர்களும் தமோபிரதானாகவும் தூய்மையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்; தூய்மையற்றவர்கள் தூய்மையற்றவர்களைக் கவர்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஏழைகளாகி, கடன்படுகிறார்கள். சத்தியயுகத்தில், உணவு, பழங்கள் போன்ற அனைத்தும் சுவை மிக்கவையாக இருக்கின்றன. நீங்கள் அங்கே சென்று அனைத்தையும் அனுபவம் செய்து திரும்பவும் வருகிறீர்கள்: நீங்கள் சூட்சும உலகிற்கும் சுவர்க்கத்திற்கும் செல்கிறீர்கள். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது எனத் தந்தை உங்களுக்குக் கூறுகிறார். முதலில், பாரதத்தில் ஒரேயொரு தேவதர்மமே இருக்கின்றது. வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. பின்னர்;, துவாபர யுகத்தில் இராவண இராச்சியம் ஆரம்பமாகுகின்றது. இப்போது இது விகார உலகம். இப்போது நீங்கள் தூய்மையாகி, விகாரமற்ற தேவர்கள் ஆகுவீர்கள். இது ஒரு பாடசாலை. கடவுள் பேசுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். நீங்கள் எதிர்காலத்தில் அவ்வாறு ஆகுவீர்கள். வேறு எங்கேயும் நீங்கள் ஓர் இராச்சியத்திற்காகக் கற்க முடியாது. தந்தையே உங்களுக்குக் கற்பித்து, உங்களுக்குப் புதிய உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றார். சிவபாபா மாத்திரமே பரம தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். ‘பாபா’ என்றால் நிச்சயமாக நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும். கடவுள் நிச்சயமாக உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியை மாத்திரமே கொடுப்பார். ஒவ்வொரு வருடமும் எரிக்கப்படுகின்ற, இராவணனே பாரதத்தின் முதல் இலக்க எதிரியாவான். இராவணன் உங்களை அத்தகைய அசுரர்கள் ஆக்கினான்! அவனது இராச்சியம் 2500 வருடங்களுக்குத் தொடர்கிறது. தந்தை உங்களுக்குக் கூறுகிறார்: நான் உங்களைச் சந்தோஷ உலகின் அதிபதிகள் ஆக்குகிறேன். இராவணன் உங்களைத் துன்ப உலகிற்கு அழைத்துச் செல்கிறான். உங்கள் ஆயுட்காலமும் குறுகியதாக ஆகுகிறது. திடீர் அகால மரணங்கள் இடம்பெறுவதுடன், தொடர்ந்தும் பல நோய்களும் தோன்றுகின்றன. அங்கே இவ்வாறு எதுவுமே இல்லை. அதன் பெயரே சுவர்க்கமாகும். இப்போது மக்கள் தூய்மையற்றவர்களாகி, தங்களைத் தேவர்கள் என அழைத்துக் கொள்ளும் தகுதியற்றவர்களாக இருப்பதால், தங்களை இந்துக்கள் என அழைக்கிறார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து இந்த இரதத்தின் மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களுக்குக் கற்பிப்பதற்காக அவர் வந்து இவருக்கு அருகில் அமர்கிறார். எனவே, இவரும் கற்கிறார். நாங்கள் அனைவரும் மாணவர்கள். ஒரேயொரு தந்தையே ஆசிரியர் ஆவார். தந்தை இப்போது எங்களுக்குக் கற்பிக்கிறார். பின்னர், அவர் 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் வந்து எங்களுக்குக் கற்பிப்பார். இந்த ஞானமும் இந்தக் கல்வியும் மறைந்து விடும். நீங்கள் கற்று, தேவர்கள் ஆகினீர்கள். நீங்கள் உங்கள் சந்தோஷ ஆஸ்தியை 2500 வருடங்களுக்குப் பெற்றீர்கள். பின்னர் இராவணனின் சாபமாகிய, துன்பம் இருந்தது. இப்போது பாரதம் மிகவும் சந்தோஷமற்று இருக்கிறது; இது துன்ப உலகமாகும். மக்கள் கூவி அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். இப்போது உங்களுக்குள்ளே எந்த விகாரமும் இருக்கக்கூடாது. எவ்வாறாயினும், அரைச்சக்கரத்தின் நோய் அந்தளவு விரைவில் அகலவதில்லை. அக் கல்வியிலும், கற்காதவர்கள் சித்தியடைவதில்லை. திறமைச்சித்தி அடைபவர்கள் ஒரு புலமைப்பரிசிலைப் பெறுகிறார்கள். உங்கள் மத்தியிலும், மிகவும் நன்றாகத் தூய்மையாகி பிறரையும் தூய்மையாக்குபவர்கள் இப் பரிசைப் பெறுகிறார்கள். மணிமாலையானது திறமைச்சித்தி அடைகின்ற எட்டுப் பேரையே கொண்டதாகும். அதனையடுத்து 108 மணிகளைக் கொண்ட மாலை இருக்கிறது. அந்த மணிமாலையும் உருட்டப்படுகிறது. மக்கள் அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதில்லை. ஒரு மணிமாலையில், முதலில் குஞ்சமும், அதனையடுத்து இரட்டை மணிகளும் இருக்கின்றன. கணவன், மனைவி இருவருமே தூய்மையாக இருக்கிறார்கள். அவர்கள் தூய்மையாக இருந்தார்கள், அவர்கள் சுவர்க்கவாசிகள் என்று அழைக்கப்பட்டார்கள். அவ்வாத்மாக்கள் மறுபிறவிகளை எடுத்து, தூய்மையற்றவர்களாகி விட்டார்கள். இப்போது அவர்கள் இங்கே தூய்மையாகி, தூய உலகிற்குச் செல்வார்கள். உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. விகாரமான அரசர்;கள் விகாரமற்ற அரசர்களுக்கு ஆலயங்களைக் கட்டி அவர்களைப் பூஜிக்கிறார்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருப்பதிலிருந்து பின்னர் அவர்கள் பூஜிப்பவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் விகாரமானவர்கள் ஆகுவதால் ஒளிக்கிரீடம் கூட எஞ்சியிருப்பதில்லை. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. இது ஓர் எல்லையற்ற, அற்புதமான நாடகம். எல்லாவற்றுக்கும் முதலில், இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகின்ற, ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருக்கிறது. பின்னர் ஏனைய சமயங்கள் வருகின்றன. எவ்வாறு இந்த உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது என ஒரேயொரு தந்தையால் மாத்திரமே விளங்கப்படுத்த முடியும். ஒரேயொருவரே கடவுள் ஆவார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கடவுளே ஆசிரியராகி உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆகையால், நீங்கள் நன்றாகக் கற்க வேண்டும். புலமைப்பரிசில் ஒன்றைப் பெறுவதற்கு, தூய்மையாகி மற்றவர்களையும் தூய்மையாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.2. உங்களுக்குள் இருக்கின்ற காமம், கோபம் போன்ற தீய ஆவிகள் அனைத்தையும் அகற்றுங்கள். உங்கள் இலக்கையும் குறிக்கோளையும் உங்கள் முன்னால் வைத்து, முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் புரிந்துணரும் சக்தியினால், பழைய சுபாவங்களிலும் சம்ஸ்காரங்களிலும் இருந்து நீங்கள் விடுபட்டு, மாயையை வென்றவர் ஆகுவீர்களாக.
உங்கள் பழைய சரீரத்தினது சுபாவமும், சம்ஸ்காரங்களும் மிகவும் கடுமையானவை என்பதால் அவை நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆகுவதற்கு உங்களுக்கு பெரும் தடையை உருவாக்குகின்றன. உங்களுடைய பழைய சுபாவமும், சம்காரங்களும் என்ற பாம்பு உங்களிலிருந்து அகன்றிருந்தாலும், அதன் பரம்பரை இன்னமும் உள்ளது. அது நேரம் வரும் போது உங்களை ஏமாற்றிவிடுகிறது. சிலவேளைகளில், நீங்கள் அதிகளவு மாயையின் ஆதிக்கத்திற்குள்ளாகுவதால், நீங்கள் பிழையைக் கூட பிழையாகக் கருதுவதில்லை. நீங்கள் புற விடயங்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றீர்கள். ஆகையாலேயே, உங்களையே நீங்கள் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்பதுடன் புரிந்துணர்வு சக்தியை பயன்படுத்தி, எந்தவொரு மறைந்திருக்கும் பழைய சுபாவங்கள் அல்லது சம்ஸ்காரங்களிலிருந்து விடுபட வேண்டும், அப்பொழுதே நீங்கள் மாயையை வென்றவர் ஆகுவீர்கள்.சுலோகம்:
சரீரமற்றிருக்க பயிற்சி செய்யுங்கள் - இந்தப் பயிற்சி ~சடுதியாக| என்ற பரீட்சையில் நீங்கள் சித்தியடைய உங்களுக்கு உதவுகிறது.