29.10.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும், உங்கள் புத்தியில் இந்த ஞானம் துளித்துளியாக ஏறட்டும். அப்பொழுது நீங்கள் அளவற்ற சந்தோஷத்தில் இருப்பீர்கள்.

கேள்வி:
எவருடைய சகவாசத்தையிட்டுக் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

பதில்:
தங்கள் புத்தியில் தந்தையின் நினைவைக் கொண்டிராதவர்களினதும், தொடர்ந்தும் அங்குமிங்கும் அலைகின்ற புத்தியைக் கொண்டிருப்பவர்களினதும் சகவாசத்தையிட்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு அருகில் அமரக்கூடாது, அவர்களைத் தொடவும்கூடாது. ஏனெனில், நினைவில் இருக்காதவர்கள் சூழலைப் பாழாக்குகின்றார்கள்.

கேள்வி:
மக்கள் எப்பொழுது வருந்துவார்கள்?

பதில்:
கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை அவர்கள் அறியும்பொழுது, அவர்களின் முகங்கள் வெளிறிப் போய், தாங்கள் கற்காமல் விட்ட தவறுக்காக வருந்துவார்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீக யாத்திரையை மிக நன்றாகப் புரிந்துகொள்கிறீர்கள். இங்கு ஹத்தயோக யாத்திரைகள் எதுவும் இல்லை. இது நினைவாகும். நினைவுசெய்வதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தையை நினைவுசெய்வதில் எவ்விதச் சிரமமுமில்லை. இது ஒரு வகுப்பாகும். ஆகவே நீங்கள் ஓர் ஒழுங்கான முறையில் அமர்ந்திருக்க வேண்டும். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் பராமரிக்கப்படுகிறீர்கள். எவ்வாறான பராமரிப்பை நீங்கள் பெறுகிறீர்கள்? அழியாத ஞான இரத்தினங்கள் என்ற பொக்கிஷங்களை நீங்கள் பெறுகிறீர்கள். தந்தையை நினைவுசெய்வதில் எவ்விதச் சிரமமுமில்லை. மாயையே உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிக்கிறாள். எவ்வாறாயினும், நீங்கள் எவ்வாறு அமர்ந்திருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில் அது நினைவுடன் தொடர்புபட்டதல்ல. பல குழந்தைகள் ஹத்தயோகிகள் போன்று மூன்று முதல் நான்கு மணித்தியாலங்கள் வரை அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் இரவு முழுவதும் அமர்ந்திருப்பதுமுண்டு. முன்னர் நீங்கள் பத்தியில் அமர்ந்திருந்தீர்கள். ஆனால் அது வேறுபட்டது. அங்கு உங்களுக்கு வியாபாரம் போன்ற எதுவும் இருக்கவில்லை. ஆகவே உங்களுக்கு அது கற்பிக்கப்பட்டது. தந்தை இப்பொழுது கூறுகிறார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழுங்கள். நீங்கள் உங்கள் வியாபாரத்தையும் செய்யலாம். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இப்பொழுது உங்களால் சதா நினைவுசெய்ய முடியும் என்று எண்ணாதீர்கள்; இல்லை. அந்த ஸ்திதியை அடைவதற்கு நீண்ட காலம் எடுக்கிறது. இப்பொழுது நீங்கள் சதா நினைவில் நிலைத்திருந்தால், உங்கள் கர்மாதீத நிலையை அடைந்திருப்பீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நாடகத் திட்டத்தின்படி, இப்பொழுது சொற்ப காலமே எஞ்சியுள்ளது. உங்கள் புத்தியில் முழுக் கணக்கும் உள்ளது. கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதமே இருந்ததென்றும், அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய 2000 வருடங்கள் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. இது 5000 வருடங்கள் என்ற கணக்கை உருவாக்குகிறது. வெளிநாடுகளில் உங்கள் பெயர் புகழப்படும் என்பதும் காணப்பட்டுள்ளது, ஏனெனில் பாரத மக்களின் புத்தியை விட அவர்களுடைய புத்தி கூர்மையானது. அவர்களும் அமைதிக்காகப் பாரதத்தையே வேண்டுகிறார்கள். பாரத மக்களே நூறாயிரக்கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுவதுடன், சர்வவியாபகர் என்ற கருத்தையும் கொடுத்து, அவர்களின் புத்தியைக் கெடுத்து விடுகிறார்கள். அவர்கள் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். அம்மக்கள் (வெளிநாட்டவர்கள்) அந்தளவிற்குத் தமோபிரதான் ஆகவில்லை. அவர்களின் புத்தி மிகவும் கூர்மையானது. அவர்கள் பாரத மக்களிடமிருந்து, அதிகளவு கற்றுக்கொள்வார்கள் (அமைதியைப் பற்றி). அவர்களுடைய ஓசை பரவும்பொழுது, பாரத மக்கள் விழித்தெழுவார்கள், ஏனெனில் பாரத மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உறங்குகின்றனர். அம்மக்;கள் (வெளிநாட்டவர்கள்) இலேசாகவே தூங்குகிறார்கள். அவர்களுடைய ஓசை மிக நன்றாகப் பரவும். எவ்வாறு அமைதி நிலவ முடியுமென்று எவராவது காட்டுங்கள் என்று வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கேட்கிறார்கள். தந்தையும் பாரதத்திற்கு மாத்திரமே வருகிறார். உலகில் மீண்டும் எவ்வாறு, எப்பொழுது அமைதி நிலவும்; என்ற விடயங்களைக் குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே கூறமுடியும். உண்மையில் வைகுந்தம் அல்லது சுவர்க்கம் இருந்ததென்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உலகம் புதிதாக இருந்தபொழுது, பாரதம் வைகுந்தமாக இருந்தது. வேறு எவருக்கும் அது தெரியாது. கடவுள் சர்வவியாபகர் என்பது மக்களின் புத்தியில் பதிந்துள்ளது. சக்கரத்தின் காலப்பகுதி நூறாயிரக் கணக்கான வருடங்கள் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். இந்தப் பாரத மக்களே அதிகளவு கல்லுப் புத்தி உடையவர்கள் ஆகிவிட்டார்கள். கீதையும், சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியன. அவை மீண்டும் அவ்வாறே எழுதப்படும். நீங்கள் நாடகத்தை அறிந்திருந்தாலும், தந்தை உங்களை முயற்சி செய்வதற்கே தூண்டுவார். விநாசம் நிச்சயம் இடம்பெறும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு வந்திருக்கிறார். இது சந்தோஷத்திற்குரிய விடயம். ஒரு கடினமான பரீட்சையில் ஒருவர் சித்தி அடையும்பொழுது, உள்ளாரச் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார். நாங்கள் இவை அனைத்திலும் சித்தியடைந்த பின்னர், சென்று தேவர்கள் ஆகுவோம் என்று உணர்கிறோம். அனைத்தும் கற்பதிலேயே தங்கியுள்ளது. உண்மையில் தந்தை உங்களுக்குக் கற்பித்து, உங்களை அவர்கள் (தேவர்கள்) ஆக்குகிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உண்மையில் அங்கு சுவர்க்கமாகிய வைகுந்தம் இருந்தது. அப்பாவி மக்கள் முற்றாகவே குழப்பத்திலுள்ளனர். எல்லையற்ற தந்தை தன்னிடமுள்ள ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தையை நீங்கள் புகழ்கிறீர்கள்: பாபா ஞானம் நிறைந்தவரும், பேரானந்தம் நிறைந்தவருமாவார். அவர் அனைத்துப் பொக்கிஷங்களும் நிறைந்தவர். உங்களை மிகவும் செல்வந்தர்கள் ஆக்குபவர் யார்? நீங்கள் ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்? உங்களுடைய ஆஸ்தியைப் பெறுவதற்காக. ஒருவர் மிக ஆரோக்கியமானவராக இருந்தும், அவரிடம் பணம் இல்லையென்றால், பணமின்றி என்ன நடக்கும்? வைகுந்தத்தில் உங்களிடம் செல்வம் இருக்கின்றது. இங்கு செல்வந்தர்களாக இருப்பவர்கள், அதிக செல்வம், தொழிற்சாலைகள் போன்றவற்றை வைத்திருக்கும் போதையில் உள்ளனர். எவ்வாறாயினும் அவர்கள் தங்கள் சரீரத்தை நீக்கும்பொழுது, அனைத்துமே முடிவடைகின்றது. பாபா உங்களுக்கு 21 பிறவிகளுக்குப் பல்வேறு பொக்கிஷங்களைக் கொடுக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை பொக்கிஷங்களின் அதிபதி ஆகுவதில்லை. அவர் குழந்தைகளாகிய உங்களையே அதிபதிகள் ஆக்குகிறார். தந்தையான கடவுளைத் தவிர வேறு எவராலும் உலகில் அமைதியை ஸ்தாபிக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். திரிமூர்த்தியும், சக்கரமும் (இணைந்தது) முதற்தரமான படம். இச் சக்கரத்தில் முழு ஞானமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உங்களிடம் மிகவும் அற்புதமானதொன்று இருப்பதை அவர்கள் காணும்பொழுது, இதில் நிச்சயமாக ஏதாவது முக்கியத்துவம் இருககின்றது என அவர்கள் புரிந்துகொள்வார்கள். சில குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் போன்று சிறிய படங்களை உருவாக்குகிறார்கள். பாபா அவற்றை விரும்புவதில்லை. பாபா கூறுகிறார்: தூரத்திலிருந்தவாறு வாசித்து, புரிந்துகொள்ளக்;கூடியதாக மிகவும் பெரிய படங்களை உருவாக்குங்கள். பெரிய விடயங்களிலேயே மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இதில் (சக்கரத்தில்) கலியுகம் இந்தப் பக்கத்திலும், சத்தியயுகம் மறுபக்கத்திலும் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. பெரிய படங்களைப்; பயன்படுத்தும்பொழுது, மக்களின் கவனத்தை ஈர்க்கலாம். சுற்றுலாப் பயணிகளும் அவற்றைப் பார்த்து, மிகத்தெளிவாகப் புரிந்துகொள்வார்கள். கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன் சுவர்க்கம் இருந்தது என உங்களுக்குத் தெரியும். வெளியேயுள்ள மக்களுக்கு அது தெரியாது. 5000 வருடங்களுக்கான கணக்கை நீங்கள் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறீர்கள். ஆகவே மக்கள் தூரத்திலிருந்து பார்க்கும்பொழுதே வாசிக்கக்கூடிய அத்தகைய பெரிய படங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். இதன் மூலம், இதுவே நிச்சயமாக உலகின் இறுதி என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். குண்டுகள் தொடர்ந்தும் தயாரிக்கப்படும். இயற்கை அனர்த்தங்களும் நிகழும். ‘விநாசம்’ என்ற வார்த்தையைக் கேட்டதும், உள்ளாரப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் உங்களிடம் ஞானம் இல்லையென்றால், சந்தோஷம் இருக்க மாட்டாது. தந்தை கூறுகிறார்: உங்கள் சரீரம் உட்பட, அனைத்தையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். ஆத்மாவாகிய உங்களுடைய யோகம் தந்தையாகிய என்னுடன் இணைந்திருக்கட்டும். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் தூய்மையாகிய பின்னரே தூய உலகத்திற்குச் செல்ல முடியும். நாங்கள் எங்கள் இராச்சியத்தைப் பெற்றுப் பின்னர், அதனை இழக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். இது மிக இலகுவானது. நீங்கள் நடக்கும்பொழுதும், அமர்ந்திருக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் ஞானம் உங்களுக்குள் துளித்துளியாக ஏற வேண்டும். பாபாவிடம் ஞானம் உள்ளது. தந்தை உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் தேவர்கள் ஆக்குவதற்கு வந்திருக்கிறார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்களையே கேளுங்கள்: நான், அத்தகைய அளவற்ற சந்தோஷத்துடன் இருக்கின்றேனா? தந்தையை நான் அந்தளவுக்கு நினைவுசெய்கின்றேனா? சக்கரம் பற்றிய ஞானம் முழுவதும் உங்களிடம் உள்ளது. ஆகவே அந்தளவு சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்து, முழுமையான சந்தோஷத்தைக் கொண்டிருங்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்று பாருங்கள்! இதனையிட்டு அவர்கள் அனைவருக்கும் தெரியவரும்பொழுது, அவர்களின் முகங்கள் வெளிறிவிடும். எவ்வாறாயினும், அவர்கள் இவற்றைப் புரிந்துகொள்வதற்கு இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. தேவ தர்மத்தைச் சேர்ந்த பல அங்கத்தவர்கள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. முழு இராச்சியமும் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை. தந்தையின் செய்தியை நீங்கள் பலருக்கும்; கொடுக்க வேண்டும்: எல்லையற்ற தந்;தை சுவர்க்க இராச்சியத்தை மீண்டும் ஒரு தடவை எங்களுக்குக் கொடுக்கின்றார். நீங்களும் அந்தத் தந்தையை நினைவுசெய்யலாம். எல்லையற்ற தந்தை, எல்லையற்ற சந்தோஷத்தை நிச்சயமாக உங்களுக்குக் கொடுப்பார். குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தின் அளவற்ற சந்தோஷத்தை உள்ளாரக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகத் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அதற்கேற்ப ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் தூய்மையாகுகின்றீர்கள். நாடகத் திட்டத்திற்கேற்ப, பிரஜைகளை உருவாக்குகின்ற சேவையை எந்தளவுக்கு அதிகமாகக் குழந்தைகளாகிய நீங்கள் செய்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக, அவ்வாறு நன்மையடைந்தவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். நீங்கள் ஏழைகளுக்குச் சேவை செய்கிறீர்கள். தொடர்ந்தும் அழைப்பிதழ்களைக் கொடுங்கள். புகையிரத வண்டிகளிலும் நீங்கள் பெருமளவு சேவை செய்யலாம். அத்தகையதொரு சிறிய பட்;ஜில் (டியனபந) அதிக ஞானம் உள்ளது. முழுக் கல்வியின் சாராம்சமும் இதில் அடங்கியுள்ளது. மற்றவர்களுக்கு அன்பளிப்பாகவும் கொடுக்கக்கூடியதாக மிகச்சிறந்த பட்ஜ் பலவற்றை நீங்கள் உருவாக்க வேண்டும். பிறருக்கு விளங்கப்படுத்துவது மிக இலகுவானது: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். சிவபாபாவிடமிருந்து மாத்திரமே நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆகவே தந்தையையும், தந்தையின் ஆஸ்தியான சுவர்க்க இராச்சியத்தையும், கிருஷ்ண தாமத்தையும் நினைவு செய்யுங்கள். மக்களின் வழிகாட்டல்கள் மிகவும் குழப்பமடையச் செய்கின்றன! அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் விகாரத்திற்காக மற்றவர்களை அதிகளவு துன்புறுத்துகிறார்கள். அவர்கள் காமத்திற்காக ஏங்கித் தவிக்கின்றார்கள். அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அனைவரது புத்தியும் முற்றாக சீரழிந்து விட்டது. அவர்களுக்குத் தந்தையைக் கூடத் தெரியாது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைவரது மனோசக்தியும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, தூய்மையாகுங்கள், நீங்கள் அத்தகைய சுவர்க்கத்திற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். எவ்வாறாயினும், அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. ஆத்மாக்களின் சக்தி முழுவதும் முடிவடைந்து விட்டது. உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நீங்கள் முயற்சி செய்வதுடன், பிறரையும் தூண்ட வேண்டும். முயற்சி செய்வதில் நீங்கள் களைபபு அடையக்கூடாது. உங்களுக்கு இதய வழுவலும் ஏற்படக்கூடாது. நீங்கள் அதிக முயற்சி செய்தீர்கள். இருந்தபொழுதும் அந்த விரிவுரையின் பின்னர் ஒருவர் கூட வெளித்தோன்றவில்லை. எவ்வாறாயினும், நீங்கள் கூறியவற்றை யாரெல்லாம் செவிமடுத்தார்களோ, அவர்களில் அது பதிந்துள்ளது. இறுதியில், நிச்சயமாக அனைவருக்கும் இதனைப் பற்றித் தெரிய வரும். எதிர்காலத்தில் பிரம்மகுமாரிகளாகிய நீங்கள் பெருமளவு புகழப்படுவீர்கள். இருந்தபொழுதும், சிலரின் நடவடிக்கைகளை மக்கள் பார்க்கும்பொழுது, அது முற்றிலும் விவேகமற்றதாக உள்ளது. எவருக்கும் மதிப்பு இல்லை, அந்த முழுமையான இனங்காண்தலும் இல்லை. அவர்களுடைய புத்தி தொடர்ந்தும் வெளியே அலைந்து திரிகிறது. அவர்கள் தந்தையை நினைவுசெய்திருந்தால், அவர்களாலும்; உதவியைப் பெற்றிருக்க முடியும். அவர்கள் தந்தையை நினைவுசெய்யவில்லை என்றால், அவர்கள் தூய்மையற்றவர்கள் என்றே அர்த்தமாகும். நீங்கள் தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். தந்தையை நினைவுசெய்யாதவர்களின் புத்தி நிச்சயமாக எங்காவது ஓரிடத்தில் அலைந்து கொண்டிருக்கிறது. ஆகவே நீங்கள் அவ்வாறானவர்களுக்கு அருகே அமரவோ, அவர்களைத் தொடவோ கூடாது. நினைவில் நிலைத்திராததால், அம்மக்கள் சூழலைப் பாழாக்குகிறார்கள். தூய்மையானவர்களும், தூய்மையற்றவர்களும் ஒன்றாக அமர்ந்திருக்க முடியாது. இதனாலேயே தந்தை பழைய உலகை அழித்துவிடுகிறார். நாளுக்கு நாள், சட்டங்களும் தொடர்ந்தும் கடுமையாகும். நீங்கள் தந்தையை நினைவுசெய்யாவிடின், இலாபத்திற்குப் பதிலாக நீங்கள் உங்களுக்குப் பேரிழப்பையே ஏற்படுத்துவீர்;கள். தூய்மைக்கான அனைத்தும் நினைவுசெய்வதிலேயே தங்கியுள்ளது. அது ஓர் இடத்தில் அமர்ந்திருப்பது என்ற கேள்வியல்ல. இங்கு ஒன்றாக அமர்ந்திருப்பதைவிட, மலைகளில் ஏகாந்தமாக அமர்ந்திருப்பது சிறந்தது. நினைவுசெய்யாதவர்கள் தூய்மையற்றவர்கள். நீங்கள் அவர்களின் சகவாசத்தையேனும் கொண்டிருக்கக்கூடாது. அவர்களின் செயல்களிலிருந்து உங்களால் அனைத்தையும் கூறமுடியும். நினைவுசெய்யாமல் எவராலும் தூய்மையாக முடியாது. ஒவ்வொருவரிலும் பல பிறவிகளின் பெரிய பாவச்சுமை உள்ளது. நினைவு யாத்திரை இல்லாமல் எவ்வாறு அதனை அழிக்க முடியும்? அவர்கள் இன்னமும் தூய்மையற்றவர்களாக உள்ளார்கள் என்பதே அதன் அர்த்தம். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களுக்காகவே தூய்மையற்ற முழு உலகையும் நான் அழித்துவிடுகிறேன். நீங்கள் அவர்களின் சகவாசத்தைக் கூட வைத்திருக்கக்கூடாது. எவ்வாறாயினும், சிலரிடம் யாருடைய சகவாசத்தைத் தாம் கொண்டிருக்க வேண்டும் என்ற போதிய விவேகம் இல்லை. நீங்கள் தூய்மையான ஒரேயொருவரிடம் தூய்மையான அன்பைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு அந்தளவு விவேகமும் இருக்க வேண்டும். இனிமையான தந்தையையும், இனிமையான இராச்சியத்தையும் தவிர வேறு எவரையும் நினைவுசெய்யாதீர்கள். அவை அனைத்தையும் துறப்பது என்பது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல! தந்தை குழந்தைகளாகிய உங்களில் பெருமளவு அன்பைக் கொண்டிருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நான் உங்களுக்காகத் தூய உலகை ஸ்தாபிக்கிறேன். இந்தத் தூய்மையற்ற உலகத்தை அவர் முற்றாக அழிக்கின்றார். இங்கு இந்தத் தூய்மையற்ற உலகில் உள்ளவை அனைத்தும் உங்களுக்குத் துன்பத்தையே விளைவிக்கின்றன. உங்கள் ஆயுட்காலமும் தொடர்ந்தும் குறைவடைகிறது. இது ‘ஒரு சதம்கூட பெறுமதியற்றது’ என்று அழைக்கப்படுகிறது. வைரங்களுக்கும், சிப்பிகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். நினைவுகூரப்படுகிறது: சத்தியம் இருக்குமிடத்தில், ஆத்மா நடனமாடுகின்றார். சத்திய யுகத்தில் நீங்கள் சந்தோஷத்தில் நடனம் ஆடுவீர்கள். உங்கள் இதயம் இங்குள்ள எதன் மீதும் பற்றுக் கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் அனைத்தையும்; பார்த்தாலும் பார்க்காதிருங்கள். நீங்கள் கண்களைத் திறந்திருந்தவாறு உறங்குவதாக இருக்கக்கூடாது. எவ்வாறாயினும் நீங்கள் அந்தத் தைரியத்தையும், ஸ்திதியையும் கொண்டிருப்பது அவசியம். பழைய உலகம் தொடர்ந்தும் இருக்க மாட்டாது என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். சந்தோஷப் பாதரசம் தொடர்ந்தும் உயர்வாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களைக் கிள்ளிப் பார்க்க வேண்டும்: நான் சிவபாபாவை நினைவுசெய்தால், உலக இராச்சியத்தைப் பெறுவேன். நீங்கள் ஒரு ஹத்தயோகி போன்று இங்கு அமர்ந்திருக்கக்கூடாது. உண்ணும்பொழுதும். அருந்தும்பொழுதும், உங்கள் வேலைகளைச் செய்யும்பொழுதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு பணிப்பெண்ணாக வேண்டும் என்று தந்தை கூறுவதில்லை. தந்தை கூறுகிறார்: தூய்மையாகுவதற்கு முயற்சி செய்யுங்கள். தந்தை நீங்கள் தூய்மையாகுவதற்கு முயற்சி செய்யத் தூண்டுகிறார். பின்னர் நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் பல பொய்களைக் கூறி, பாவச் செயல்களைச் செய்கிறீர்கள். எப்பொழுதும் சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் அர்ப்பணிக்கப்படும். இது பாபாவின் யாகமாகும். இது மிகவும் முக்கியமான யாகம். அம்மக்கள் யாகம் ஒன்றை உருவாக்கி, நூறாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள். இங்கு இந்தத் தீயில் முழு உலகமும் அர்ப்பணிக்கப்படவுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். ஓசை வெளிநாடுகளிலிருந்து எழும்பும். அது பாரதத்திலும் பரவும். அனைத்திற்கும் முதலில், உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைந்திருந்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தையும் பெற முடியும். முயற்சி செய்வதற்குக் குழந்தைகளைத் தூண்டுவது தந்தையின் கடமையாகும். ஒரு பௌதீகத் தந்தை தனது குழந்தைகளுக்குச் சேவை செய்வதுடன், அவர்களிடமிருந்தும் சேவையைப் பெறுகிறார். இந்தத் தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றேன். ஆகவே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் வகையில், நீங்கள் நிச்சயமாக அவ்வாறான தந்தையை நினைவுசெய்ய வேண்டும். எவ்வாறாயினும், பாவங்கள் நீரினால் அழிக்கப்பட முடியாது. நீர் எங்கும் ஓடும். வெளிநாடுகளிலும் ஆறுகள் உள்ளன. ஆகவே, இங்குள்ள ஆறுகள் அனைவரையும் தூய்மையாக்குவதாகவும், வெளிநாடுகளில் உள்ள ஆறுகள் அனைவரையும் தூய்மையற்றவர்கள் ஆக்குவதாகவுமா அர்த்தம்? மக்களுக்கு எவ்விதப் புரிந்துணர்வும் இல்லை. தந்தை கருணை கொள்கிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, கவனயீனமாக இருக்காதீர்கள்! தந்தை உங்களை மிகவும் அழகானவர்கள் ஆக்குகிறார். ஆகவே நீங்கள் முயற்சி செய்யவேண்டும். நீங்கள் உங்களில் கருணை கொள்ள வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இதயத்தில் இங்குள்ள எதன் மீதும் பற்று வைக்காதீர்கள். அனைத்தையும் பார்த்தும் பார்க்காதிருங்கள். உங்கள் கண்கள் திறந்திருக்கும்பொழுதும், தூங்குவதில் போதை இருப்பதைப் போன்று, சந்தோஷப் போதையும் இருக்க வேண்டும்.

2. அனைத்தும் தூய்மையிலேயே தங்கியுள்ளது. ஆகவே, தூய்மையற்ற ஒருவருக்கருகில் அமராதிருப்பதிலும், அவரைத் தொடாதிருப்பதிலும்; கவனம் செலுத்த வேண்டும். இனிய தந்தையையும், இனிய இராச்சியத்தையும் தவிர வேறெதனையும் நினைவு செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா நிறைவாகவும், சமமானவர்களாகவும் எல்லைக்குட்பட்ட ஆசைகள் அனைத்திற்கும் அப்பால் இருப்பவர்களாகவும் ஆகி, சேவை செய்வதன் பலனைப் பெறுவீர்களாக.

சேவை செய்வது எனில், பலன் தருவதைச் செய்வது என அர்த்தமாகும். எந்தச் சேவையேனும் உங்களை அதிருப்தி அடையச் செய்தால், அப்பொழுது அந்தச் சேவை சேவையேயல்ல. நீங்கள் அந்தச் சேவையைச் செய்வதை நிறுத்தலாம், ஆனால் உங்கள் திருப்தியைச் செல்ல விடாதீர்கள். பௌதீகமாக மனநிறைவாக உள்ளவர்கள் எப்பொழுதும் திருப்தியாக இருப்பதைப் போன்று, அதேவிதமாக, எவருடைய மனங்கள் நிறைவாக உள்ளனவோ, அவர்களே திருப்தியாக இருப்பார்கள். திருப்தியானது மனநிறைவின் ஓர் அடையாளமாகும். ஒரு மனநிறைவான ஆத்மா பெயர், கௌரவம், மீட்சி அல்லது வசதிகள் போன்ற எந்த எல்லைக்குட்பட்ட ஆசைகளுக்காகவும் பசியுடன் (பரிதவிப்பு) இருக்க மாட்டார். அத்தகைய ஆத்மாக்கள் சதா எந்த எல்லைக்குட்பட்ட ஆசைகளுக்கும் அப்பால் இருப்பதுடன், நிறைவாகவும், சமமானவர்களாகவும் இருப்பார்கள்.

சுலோகம்:
ஒரு நேர்மையான இதயத்துடன் தன்னலமற்ற சேவையில் முன்னேறிச் செல்வது என்றால், உங்கள் புண்ணியக் கணக்கில் சேகரிப்பது என்று அர்த்தமாகும்.