17.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, கடவுள் சர்வவியாபகர் அல்ல, அவர் உங்கள் தந்தை என்பதில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதால், அதனைப் பிருக்கும் விளங்கப்படுத்தி, இந்த நம்பிக்கையை அவர்களில் பதிய வைத்து, பின்னர் அவர்களது அபிப்பிராயங்களைக் கேளுங்கள்.
கேள்வி:
வேறெவருமே வினவ முடியாத எதனைத் தந்தை தனது குழந்தைகளிடம் வினவுகின்றார்?
பதில்:
பாபா குழந்தைகளாகிய உங்களைச் சந்திக்கும்பொழுது, வினவுகின்றார்: குழந்தைகளே, நாங்கள் முன்னர் சந்தித்துள்ளோமா? இதனைப் புரிந்துகொண்ட குழந்தைகள் “ஆம், பாபா, நாங்கள் உங்களை 5000 வருடங்களுக்கு முன்னரும் சந்தித்தோம்” என ஒரே தடவையில் பதிலளிக்கின்றனர். புரிந்துகொள்ளாதவர்கள் குழப்பமடைகின்றனர். அத்தகைய கேள்வியைக் கேட்கும் விவேகத்தை வேறெவரும் கொண்டிருக்க மாட்டார்கள். தந்தை மாத்திரமே முழுச் சக்கரத்தினதும் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்.ஓம் சாந்தி.
எல்லையற்ற ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றார். நீங்கள் இங்கு தந்தையின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். பிரம்மாவின் இரதத்தினுள் பிரவேசித்து, உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கும் சிவபாபாவிடமே நீங்கள் செல்கின்றீர்கள் என்ற எண்ணத்துடனேயே உங்கள் வீடுகளை விட்டு வருகின்றீர்கள். நாங்கள் சுவர்க்கத்தில் இருந்தோம், பின்னர் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றிவரும்பொழுது, நாங்கள் கீழிறங்கி, நரகத்தினுள் வீழ்ந்தோம். இது வேறு ஆன்மீக ஒன்றுகூடல்களில் இருக்கும் எவரது புத்தியிலும் இருக்க மாட்டாது. இந்த இரதத்தில் பிரவேசித்து, உங்களுக்குக் கற்பிக்கும் சிவபாபாவிடமே நீங்கள் செல்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் ஆத்மாக்களாகிய எங்களைத் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்வதற்காகவே வந்திருக்கின்றார். நாங்கள் நிச்சயமாக எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஓர் ஆஸ்தியைப் பெறுவோம். தான் சர்வவியாபகர் அல்ல என்பதைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்; ஐந்து விகாரங்களே சர்வவியாபியாக உள்ளன. உங்களிடமும் ஐந்து விகாரங்களும் உள்ளன. இதனாலேயே நீங்கள் பெரிதும் சந்தோஷமற்றுள்ளீர்கள். கடவுள் சர்வவியாபகர் அல்ல என்ற அபிப்பிராயத்தை நிச்சயமாக நீங்கள் மக்களைக் கொண்டு எழுதச் செய்ய வேண்டும். தந்தையாகிய கடவுள் சர்வவியாபகர் அல்ல என்பதில் குழந்தைகளாகிய நீங்கள் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்கள். தந்தையே பரம தந்தையும், பரம ஆசிரியரும், அத்துடன் குருவும் ஆவார். அவரே எல்லையற்ற சற்கதியை அருள்பவர். அவர் மாத்திரமே அமைதியைக் கொடுப்பவர். தாங்கள் எதனைப் பெறவுள்ளார்கள் என்பது பற்றி வேறு இடங்களில் எவரும் சிந்திப்பதில்லை. அவர்கள் வெறுமனே இராமாயணம், கீதை போன்றவற்றைச் செவிமடுப்பதில் களிப்படைகின்றனர். அவர்கள் எதனுடைய அர்த்தத்தையும் தங்கள் புத்தியில் வைத்திருப்பதில்லை. பரமாத்மா சர்வவியாபகர் என நாங்கள் முன்னர் கூறிவந்தோம். அது தவறு என்பதைத் தந்தை இப்பொழுது எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது பெருமளவு அவதூறான விடயமாகும். எனவே, இந்த அபிப்பிராயமும் மிக முக்கியமானது. இந்நாட்களில், திறப்புவிழா நடத்தி வைப்பதற்காக நீங்கள் அழைப்பவர்கள், பிரம்மகுமாரிகள் மிக நல்ல பணியைச் செய்கின்றனர் எனவும், அவர்கள் மிக நல்ல விளக்கங்களைக் கொடுப்பதுடன், கடவுளை அடைவதற்கான வழியையும் காட்டுகின்றனர் எனவும் எழுதுகின்றனர். இது மக்களின் இதயங்களில் மிக நல்ல தாக்கத்தைக் ஏற்படுத்துகின்றது. எவ்வாறாயினும்; “கடவுள் சர்வவியாபகர்” என உலகிலுள்ள மக்கள் கூறும்பொழுது அது ஒரு பெரும் தவறு என்பதை எவரும் எழுதுவதோ அல்லது அபிப்பிராயம் தெரிவிப்பதோ இல்லை. கடவுளே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். இதுவே முதலாவது பிரதான விடயமாகும். இரண்டாவதாக, “இந்த விளக்கத்தினூடாக, கீதையின் கடவுள் கிருஷ்ணர் அல்ல என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது” எனும் அபிப்பிராயமும் உங்களுக்குத் தேவை. எந்த ஒரு மனிதரையோ அல்லது தேவரையோ கடவுள் என அழைக்க முடியாது. கடவுள் ஒரேயொருவரே, அவரே தந்தையும் ஆவார். அத்தந்தையிடமிருந்தே நாங்கள் அமைதியும், சந்தோஷமும் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றோம். நீங்கள் அத்தகைய அபிப்பிராயங்களைப்; பெற வேண்டும். இப்பொழுது மக்கள் எழுதுகின்ற அபிப்பிராயங்களினால் எவ்விதப் பயனும் இல்லை. ஆம், குறைந்தபட்சம் தங்களுக்கு இங்கே மிகச் சிறந்த கற்பித்தல்கள் வழங்கப்பட்டன என்பதையாவது அவர்கள் எழுதுகின்றனர். எவ்வாறாயினும், கடவுள் சர்வவியாபகர் அல்ல எனக் கூறும்பொழுது, பிரம்மகுமாரிகள் சத்தியத்தையே பேசுகின்றனர் என்ற பிரதான விடயத்தை அவர்களைக் கொண்டு எழுதச் செய்வதில் நீங்கள் வெற்றியாளர்களாக இருக்க வேண்டும். அவரே தந்தை; அவர் மாத்திரமே கீதையின் கடவுள். தந்தை வந்து, உங்களைப் பக்தி மார்க்கத்திலிருந்து விடுவித்து, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். தூய்மையாக்குபவர், ஒரேயொரு தந்தையே அன்றிக் கங்கையோ, ஆறுகளோ அல்ல என்ற அபிப்பிராயமும் முக்கியமானது. மக்கள் அத்தகைய அபிப்பிராயங்களை எழுதினாலே நீங்கள் வெற்றியடைவீர்கள். இப்பொழுது இன்னமும் காலம் உள்ளது. அதிகளவு சேவை இடம்பெறுகின்றது. அதிகளவு செலவும் ஏற்படுகின்றது. ஆனால் அது குழந்தைகளாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்காகும். வெளியிலிருக்கும் மக்களுக்கு எதுவுமே தெரியாது. உங்களுக்கென ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கும்பொழுது, நீங்கள் உங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தைப் பயன்படுத்துகின்றீர்கள். அவ்வாறு செய்பவர்கள் அதற்கான பிரதிபலனைப் பெறுவார்கள். எதுவும் செய்யாதவர்கள் எதனையும் பெற மாட்டார்கள். நீங்கள் மாத்திரமே இதனை ஒவ்வொரு கல்பத்திலும் செய்கின்றீர்கள். நீங்கள் மாத்திரமே புத்தியில் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தையே தந்தையும், ஆசிரியரும் என்பதையும், அவர் கீதை ஞானத்தை மிகச்சரியான முறையில் கூறுகின்றார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் கீதையைச் செவிமடுத்தாலும் அவர்கள் ஓர் இராச்சியத்தைப் பெறவில்லை. அவை இறை கட்டளைகளிலிருந்து அசுர வழிகாட்டல்களாகின. அவர்களின் நடத்தை சீரழிந்ததுடன், அவர்கள் தூய்மையற்றவர்களும் ஆகினர். பல மில்லியன் கணக்கான மக்கள் கும்பமேலாவிற்குச் செல்கின்றனர். அவர்கள் எங்கெல்லாம் நீரைக் காண்கின்றார்களோ, அங்கெல்லாம் செல்கின்றனர், ஏனெனில் தாங்கள் நீரினால் தூய்மையாக்கப்படுவோம் என அவர்கள் நம்புகின்றனர். எவ்வாறாயினும், ஆறுகளிலிருந்தே எங்கும் நீர் வருகின்றது. எவராவது அதன் மூலம் தூய்மையாக முடியுமா? நீரில் நீராடுவதன் மூலம், நாங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாகி, தேவர்களாகிவிட முடியுமா? எவராலும் அதனைச் செய்வதனால் தூய்மையாக முடியாது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அதுவும் ஒரு தவறாகும். நீங்கள் இந்த மூன்று விடயங்களையிட்டும் மக்களின் அபிப்பிராயங்களைப் பெற வேண்டும். தற்காலத்தில், அவர்கள் இந்த நிறுவனம் (ழசபயnளையவழைn) நல்லது எனக் கூறுவதால், பிரம்மகுமாரிகள் மந்திரசக்தி உடையவர்கள் என்றும், அவர்கள் மக்களைக் கடத்துகின்றார்கள் என்றும் மக்கள் கொண்டிருக்கும் தவறான புரிந்துணர்வு அகற்றப்படுகின்றது, ஏனெனில் அந்த ஓசை பெருமளவில் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. அந்த ஓசை வெளிநாடுகளையும் சென்றடைந்தது. இவருக்கு 16,108 இராணிகள் தேவைப்படுகின்றனர் எனவும், அதில்; 400 பேரை அவர் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டார் எனவும் அவர்கள் கூறினர். அந்நேரத்தில் ஆன்மீக ஒன்றுகூடலிற்கு வருபவர்களின் எண்ணிக்கை 400 ஆக இருந்தமையே அதற்குக் காரணமாகும். எங்களைப் பலர் எதிர்த்ததுடன், மறியல் போராட்டம் (piஉமநவiபெ) போன்றவற்றையும் செய்தனர், எனினும், தந்தையின் முன்னால் எவராலும் எதனையும் செய்ய முடியவில்லை. “இந்த மந்திரவாதி எங்கிருந்து வந்தார்” என அனைவரும் கூறுவதுண்டு. பின்னர் நிகழ்ந்த அற்புதத்தைப் பாருங்கள்! பாபா கராச்சியில் இருந்தார். முழுக் குழுவினரும் தாங்களாகவே ஒன்றுசேர்ந்து இங்கே ஓடிவந்தனர். அவர்கள் எவ்வாறு தங்களது வீடுகளை விட்டு ஓடினார்கள் என்பது எவருக்குமே தெரியாது. அவர்கள் அனைவரும் எங்கு தங்குவார்கள் என்பதைப் பற்றிக் கூட அவர்கள் சிந்திக்கவேயில்லை. அப்பொழுது பாபா உடனடியாக ஒரு பங்களாவை வாங்கினார். அது மந்திரவித்தையாக இருந்தது. நீங்கள் மந்திரவாதிகள் எனவும், எவராவது பிரம்மகுமாரிகளிடம் சென்றால் அவர் திரும்பி வரமாட்டார் எனவும், பிரம்மகுமாரிகள் கணவன் மனைவியாக இருப்பவர்களைச் சகோதர சகோதரிகளாக ஆக்குகின்றனர் எனவும் மக்கள் இப்பொழுதும் கூறுகின்றார்கள். பலர் அதனால் வரவில்லை. இப்பொழுது, உங்கள் கண்காட்சிகளைப் பார்க்கும்பொழுது, அவர்களது புத்தியிலுள்ள தவறான புரிந்துணர்வு அகற்றப்படுகின்றது. எவ்வாறாயினும், பாபா விரும்புகின்ற அபிப்பிராயங்களை எவரும் எழுதுவதில்லை. பாபாவுக்கு இவ் அபிப்பிராயங்;களே வேண்டும்: கீதையின் கடவுள் கிருஷ்ணர் அல்ல என்பதை அவர்கள் எழுத வேண்டும். கடவுள் கிருஷ்ணரே பேசுகின்றார் என முழு உலகமும் எண்ணுகின்றது. எவ்வாறாயினும், கிருஷ்ணர் முழு 84 பிறவிகளையும் எடுக்கின்றார், சிவபாபாவோ மறுபிறவிகளுக்கு அப்பாற்பட்டவர். எனவே, இதற்குப் பலரின் அபிப்பிராயம் தேவைப்படுகின்றது. கீதையைச் செவிமடுக்கும் மக்கள் பலர் உள்ளனர். கீதையின் கடவுள் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனே என்பதை அவர்கள் பத்திரிகைகளில் வாசிக்க வேண்டும். அவர் மாத்திரமே தந்தையும், ஆசிரியரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். அவரிடமிருந்து மாத்திரமே நீங்கள் அமைதியும், சந்தோஷமும் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும், அங்குரார்ப்பண நிகழ்விற்காக நீங்கள் இப்பொழுது செய்த முயற்சிகளெல்லாம் மக்களின் தவறான புரிந்துணர்வை அகற்றி, அவர்கள் நல்ல விளக்கத்தைப் பெறுகின்றனர். எனினும் பாபாவுக்கு வேண்டிய அபிப்பிராயங்களை அவர்கள் எழுத வேண்டும். அதுவே பிரதான அபிப்பிராயமாகும். எவ்வாறாயினும், அவர்கள் இந்த அமைப்பு மிகவும் நல்லது என்ற ஆலோசனையையே பிறருக்குக் கூறுகிறார்கள். அதன் மூலம் என்ன நிகழும்? ஆம், நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, ஸ்தாபனையும் விநாசமும் ஒருமித்து நெருங்கி வரும்பொழுது, இந்த அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்வீர்கள். அவர்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு எழுதுவார்கள். குறைந்தபட்சம் அவர்கள் இப்பொழுது உங்களிடம் வரவாவது ஆரம்பித்து விட்டனர். நீங்கள் ஒரே தந்தையின் குழந்தைகள், நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற ஞானத்தை இப்பொழுது நீங்கள் பெற்றுள்ளீர்கள். இதனை எவருக்கேனும் விளங்கப்படுத்துவது மிக இலகுவானதாகும். பரம (ளுரிசநஅந) பாபாவே சகல ஆத்மாக்களினதும் தந்தை. நீங்கள் நிச்சயமாக அவரிடமிருந்து பரம எல்லையற்ற அந்தஸ்தைப் பெற வேண்டும். நீங்கள் அதனை 5000 வருடங்களுக்கு முன்னரும் பெற்றீர்கள். கலியுகத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என அம்மக்கள் கூறுகின்றனர். முழுக் கல்பமும் 5000 வருடங்கள் மாத்திரமே என நீங்கள் கூறுகின்றீர்கள். ஆகவே அங்கு அதிகளவு வேறுபாடு உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: 5000 வருடங்களுக்கு முன்னர், உலகில் அமைதி நிலவியது. இந்த இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னிலையில் உள்ளன. அவர்களது இராச்சியத்தில், உலகில் அமைதி நிலவியது. நாங்கள் மீண்டும் ஒரு தடவை அந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். முழு உலகிலும் அமைதியும், சந்தோஷமும் இருந்தன் அங்கு துன்பம் பற்றிய குறிப்பே இருக்கவில்லை. இப்பொழுது, எல்லையற்ற துன்பம் உள்ளது. நாங்கள் எங்களது சரீரங்கள், மனங்கள், செல்வம் ஆகியவற்றால் அமைதியும் சந்தோஷமும் நிறைந்த இந்த இராச்சியத்தை மறைமுகமான முறையில் ஸ்தாபிக்கின்றோம். தந்தை மறைமுகமானவர், ஞானமும் மறைமுகமானது. அத்துடன் உங்கள் முயற்சிகளும் மறைமுகமானவையே. இதனாலேயே பாபா பாடல்களையோ, கவிதை போன்றவற்றையோ விரும்புவதில்லை. அது பக்தி மார்க்கத்திற்குரியது. நீங்கள் இங்கு மௌனமாக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியாக நடந்தும், உலாவியும் திரியும்பொழுதும் தந்தையை நினைவுசெய்வதுடன், உலகச் சக்கரத்தை உங்கள் புத்தி சுழற்றுமாறும் செய்யவும் வேண்டும். இது, இப்பழைய உலகில் எங்களது இறுதிப் பிறவியாகும். பின்னர், நாங்கள் புதிய உலகில் எங்களது முதல் பிறவியைப் பெறுவோம். ஆத்மாக்கள் நிச்சமாகத் தூய்மையாக வேண்டும். சகல ஆத்மாக்களும் இப்பொழுது தூய்மையற்றவர்களாகவே உள்ளனர். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களைத் தூய்மையாக்குவதற்காகத் தந்தையுடன் யோகம் செய்கின்றீர்கள். தந்தையே கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் சரீரங்கள் உட்பட, அனைத்துச் சரீர உறவினர்களையும் துறந்துவிடுங்கள். தந்தை புதிய உலகைத் தயார்ப்படுத்துகின்றார். அவரை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஓ, உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கும் அத்தகைய தந்தையை உங்களால் எவ்வாறு மறக்க முடிகின்றது? அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாக இருங்கள். இந்த மரண பூமியின் விநாசம் இப்பொழுது உங்கள் முன்னிலையில் உள்ளது. இந்த விநாசம் அதேபோன்று (எவ்வித மாறுதலும் இன்றி) 5000 வருடங்களுக்கு முன்னரும் இடம்பெற்றது. நீங்கள் இந்தளவிற்கு நினைவுசெய்கின்றீர்கள். அங்கே உங்கள் இராச்சியம் மாத்திரமே இருந்ததுடன், வேறு எந்தச் சமயமும் இருக்கவில்லை. எவராவது பாபாவிடம் வரும்பொழுது, நான் அவர்களிடம் வினவுகின்றேன்: நாங்கள் முன்னர் சந்தித்திருக்கின்றோமா? ஞானத்தைப் புரிந்துகொண்டவர்கள் பாபாவை 5000 வருடங்களுக்கு முன்னரும் தாங்கள் சந்தித்ததாக நேரடியாகவே கூறுகின்றார்கள். புதிதாக வருபவர்கள் குழப்பம் அடைகின்றனர். அவர்களின் ஆசிரியர் அவர்களுக்கு அதனை விளங்கப்படுத்தவில்லை என்பதை அப்பொழுது பாபா புரிந்துகொள்கின்றார். பின்னர். நான் அவர்களிடம் கூறுகிறேன்: இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். பின்னர் அவர்கள் நினைவுபடுத்திப் பார்க்கின்றனர். வேறெவராலும் இக்கேள்வியைக் கேட்க முடியாது. அதனைக் கேட்பதற்கான விவேகம் அவர்களிடம் இல்லை. இவ்விடயங்களைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, உங்கள் குலத்தைச் சார்ந்த பலர் வந்து உங்களைச் செவிமடுப்பார்கள்;. உலகம் நிச்சயமாக மாற வேண்டும். சக்கரத்தின் இரகசியங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். இப்பழைய உலகை மறந்து விடுங்கள். தந்தை ஒரு புதிய வீட்டைக் கட்டுவதனால் உங்கள் புத்தியும் அதை நோக்கியே செல்கின்றது. பின்னர், பழைய வீட்டில் எவ்விதப் பற்றும் கிடையாது. அப்பொழுது இது ஓர் எல்லையற்ற விடயமாகும். தந்தை சுவர்க்கம் எனும் புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். எனவே, இப்பழைய உலகைப் பார்த்தும் பார்க்காதிருங்கள். உங்கள் பற்றானது புதிய உலகின் மீது இருக்கட்டும். இப்பழைய உலகில் விருப்பமின்மை இருக்கட்டும். ஹத்தயோகத்தில், அம்மக்கள் எல்லைக்குட்பட்ட துறவறத்தை மேற்கொண்டு, காடுகளுக்குச் சென்று, அமர்ந்து விடுகின்றனர். உங்கள் விருப்பமின்மை பழைய உலகம் முழுவதிலும் ஆகும். இங்கு எல்லையற்ற துன்பமே உள்ளது. சத்தியயுகப் புதிய உலகில் பெருமளவு சந்தோஷம் நிறைந்திருப்பதால் நீங்கள் நிச்சயமாக அதனை நினைவுசெய்வீர்கள். இங்கு அனைவரும் உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பவர்களாகவே உள்ளனர். பெற்றோர்; போன்றோர் உங்களை விகாரங்களில் சிக்க வைக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. அதனை வெற்றி கொள்வதனால், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். தந்தை உங்களுக்குக் கற்பிக்கும் இந்த இராஜயோகத்தின் மூலம் நீங்கள் இந்த அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். அவர்களிடம் கூறுங்கள்: கடவுள் எனக்குக் கனவில் வந்து கூறினார்: தூய்மையாகினால் நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவீர்கள். எனவே, நான் இந்த ஒரு பிறவியில் தூய்மையற்றவராகி, எனது இராச்சியத்தை இழக்க மாட்டேன். இந்தத் தூய்மை காரணமாகவே அனைத்துச் சச்சரவுகளும் ஏற்படுகின்றன. துச்சாதனன் என்னைத் தூய்மையற்றவளாக ஆக்குகின்றான் என திரௌபதி கூவியழைத்தாள்! கிருஷ்ணர் திரௌபதிக்கு 21 சேலைகளை வழங்கும் ஒரு நாடகத்தை அவர்கள் நடிக்கின்றனர். எவ்வாறு அதிகளவு துர்ப்பாக்கியம் உள்ளது என்பதைத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். இங்கு எல்லையற்ற துன்பம் உள்ளது. சத்தியயுகத்தில் எல்லையற்ற சந்தோஷம் இருந்தது. நான் இப்பொழுது அதர்மம் அனைத்தையும் அழிப்பதற்கும், ஒரேயொரு உண்மையான தர்மத்தை ஸ்தாபிப்பதற்கும் வந்துள்ளேன். நான் உங்களுக்கு உங்கள் இராச்சியப் பாக்கியத்தைக் கொடுத்துவிட்டு ஓய்வு ஸ்திதிக்குச் செல்கிறேன். பின்னர், அரைக் கல்பத்திற்கு என்னுடைய தேவை இருக்காது. நீங்கள் ஒருபொழுதும் என்னை நினைவுசெய்யவும் மாட்டீர்கள். பாபா விளங்கப்படுத்துகின்றார்: அனைவரும் தங்கள் மனங்களில் உங்களைப் பற்றிக் கொண்டிருந்த தவறான அதிர்வலைகள் (எiடிசயவழைளெ) இப்பொழுது சரியாக்கப்படுகின்றன. கடவுள் சர்வவியாபகர் அல்ல என்ற அபிப்பிராயத்தை மக்களைக் கொண்டு எழுதச் செய்வதே பிரதான விடயம். அவர் வந்து, இராஜயோகத்தைக் கற்பித்தார். தந்தை, தூய்;மையாக்குபவருமாவார். நீராறுகளினால் எவரையும் தூய்மையாக்க முடியாது. எங்கும் நீர் உள்ளது. எல்லையற்ற தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். உங்கள் சரீரங்களையும், அனைத்துச் சரீர உறவினர்களையும் துறவுங்கள். ஆத்மாவே ஒரு சரீரத்தை நீக்கி வேறொன்றைப் பெறுகின்றார். பின்னர், ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என அவர்கள் கூறுகின்றனர். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே எனக் கூறுவது பக்தி மார்க்கத்தில் செவிமடுத்த விடயமாகும். குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா, எவ்வாறு எங்களால் உங்களை நினைவுசெய்ய முடியும்? ஓ! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதில்லையா? ஓர் ஆத்மா மிகவும் சின்னஞ்சிறிய புள்ளி. எனவே அவரது தந்தையும் அதுபோன்று சின்னஞ்சிறியவராகவே இருப்பார். அவர் மறுபிறவிக்குள் வருவதில்லை. இந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் ஏன் தந்தையை நினைவுசெய்வதில்லை? நடந்தும் உலாவியும் திரியும்பொழுது தந்தையை நினைவுசெய்யுங்கள். அச்சா. தந்தை ஒரு பெரிய வடிவத்தைக் கொண்டிருப்பதாக நீங்கள் கருதலாம், எனினும், குறைந்தபட்சம் நீங்கள் அந்த ஒரேயொருவரை மாத்திரம் நினைவுசெய்தால், அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். வேறெந்த வழியும் கிடையாது. இதனைப் புரிந்துகொண்டவர்கள் கூறுகின்றனர்: பாபா, உங்களை நினைவுசெய்வதனால் நாங்கள் தூய்மையாகி, தூய உலகிற்கு அதிபதிகள் ஆகுவோம். எனவே, நாங்கள் ஏன் உங்களை நினைவுசெய்யக்கூடாது? நீங்கள் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்வகையில் ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்த வேண்டும், அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையும், ஞானமும் மறைமுகமானவை, எனவே மறைமுகமான முயற்சியைச் செய்யுங்கள். பாடல்கள் பாடுதல், கவிதைகள் வாசித்தல் போன்றவற்றிற்குப் பதிலாக மௌனமாக இருங்கள். நடந்தும், உலாவியும் திரியும்பொழுது மௌனமாகத் தந்தையை நினைவுசெய்யுங்கள்.2. பழைய உலகம் மாற்றமடைவதால், அதன் மீதுள்ள உங்கள் பற்றை நீக்க வேண்டும். அதனைப் பார்த்தும் பார்க்காதிருங்கள். உங்கள் புத்தியைப் புதிய உலகுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பௌதீக உடைமைகள் அனைத்தினதும் தூண்டுதலிலிருந்து பற்றற்றவராகவும், தூண்டுதலிலிருந்து விடுபட்டுள்ள, சடப்பொருளை வென்றவராகவும் ஆகுவீர்களாக.
உங்கள் பௌதீகப் புலன்கள் எதனையும் பௌதீக உடைமைகள் ஏதாவது தொந்தரவு செய்தால், அதாவது, தூண்டுகின்ற உணர்வுகள் எழுந்தால், அப்பொழுது உங்களால் பற்றற்றவராக முடியாது. ஆசைகள் தூண்டுதலின் வடிவம் ஆகும். தங்களுக்கு ஆசைகள் (இச்சா) எதுவும் இல்லை எனவும், ஆனால் தாங்கள் எதனையாவது விரும்புவதாகவும் (அச்சா) சிலர் கூறுகின்றார்கள். இதுவும் ஒரு சூட்சும தூண்டுதலாகும். சில பௌதீக உடைமைகள், அதாவது, சில தற்காலிகச் சந்தோஷம் உங்களை எவ்வழியிலாவது கவர்கின்றனவா என்று பார்ப்பதற்கு இந்தச் சூட்சும ரூபத்தைச் சோதியுங்கள். பௌதீக உடைமைகள் சடப்பொருளின் வசதிகள் ஆதலால், நீங்கள் தூண்டுதலிலிருந்து விடுபடும்பொழுதே, அதாவது, நீங்கள் பற்றற்றவராகும்பொழுதே, உங்களால் சடப்பொருளை வென்றவராக இயலும்.சுலோகம்:
“எனது, எனது” (குழப்பமான சூழ்நிலை) எனும் ஜமேலாவைச் செல்ல விட்டு, எல்லையற்றதினுள் நிலைத்திருங்கள், அப்பொழுது நீங்கள் ஓர் உலக உபகாரி என அழைக்கப்படுவீர்கள்.