23.09.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் ஞானமாகிய மூன்றாவது கண் எப்பொழுதும் திறந்திருப்பின், உங்களுக்குச் சந்தோஷத்தினால் புல்லரிப்பு ஏற்படுவதுடன் உங்கள் சந்தோஷ பாதரசமும் எப்பொழுதும் உயர்ந்திருக்கும்.

கேள்வி:
இந்நேரத்தில் மனிதர்களின் கண் பார்வை மிகவும் பலவீனமாக இருப்பதனால், அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் என்ன வழிமுறையைப் பயன்படுத்த வேண்டும்?

பதில்:
பாபா கூறுகின்றார்: தொலைவிலிருந்தே அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், அத்தகைய பெரிய படங்களை அவர்களுக்காக உருவாக்குங்கள். இப் பூகோளத்தின் படம் (உலகச் சக்கரம்) மிகவும் பெரியதாக இருக்க வேண்டும். இது குருடர்களுக்கான கண்ணாடி ஆகும்.

கேள்வி:
முழு உலகையும் சுத்தம் செய்வதற்கு யார் உங்கள் உதவியாளர்கள் ஆகுவார்கள்?

பதில்:
இயற்கை அனர்த்தங்களே உங்கள் உதவியாளர் ஆகுவார்கள்;. இந்த எல்லையற்ற உலகைச் சுத்தம் செய்வதற்கு, நிச்சயமாக உங்களுக்கு உதவியாளர்கள் தேவைப்படுகின்றார்கள்.

ஓம் சாந்தி.
பாடப்பட்டுள்ளது: உங்கள் ஆஸ்தியாகிய ஜீவன்முக்தியை நீங்கள் தந்தையிடமிருந்து ஒரு விநாடியில் பெறுகின்றீர்கள். ஏனைய அனைவரும் பந்தன வாழ்க்கையில் இருக்கின்றார்கள். இந்தத் திரிமூர்த்தியும் உலகச் சக்கரத்தின்; படமும் பிரதானமானவை ஆகும். இந்தப்; படங்கள் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும். குருடர்களுக்கு ஒரு பெரிய கண்ணாடி தேவைப்படுகிறது, அப்பொழுதே அவர்களால் மிகவும் தெளிவாகப் பார்க்க முடியும், ஏனெனில் இந்நேரத்தில் அனைவருடைய கண்பார்வையும் பலவீனமாக இருப்பதுடன் அவர்கள் விவேகம் அற்றவர்களாகவும் உள்ளார்கள். மூன்றாவது கண் புத்தி எனக் கூறப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது உங்கள் புத்தியில் சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். சிலருக்குச் சந்தோஷத்தின் புல்லரிப்பு ஏற்படாதுவிடின், அவர்கள் சிவபாபாவை நினைவுசெய்யவில்லை என்றே அர்த்தமாகும். ஆகவே, அவர்களுக்கு ஞானமாகிய மூன்றாவது கண் சிறிதளவே திறந்துள்ளது எனவும் அவர்கள் மங்கிய பார்வையைக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் கூறப்படும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் ஏனையோருக்குச் சுருக்கமாக விளங்கப்படுத்த வேண்டும். பல பெரிய ஒன்றுகூடல்கள் போன்றவை இடம்பெறுகின்றன, உண்மையில் ஒரு படமே சேவை செய்யப் போதுமானது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உங்களிடம் பூகோளப் படம் ஒன்று மாத்திரம் இருந்தாலும், பரவாயில்லை. தந்தை உங்களுக்கு நாடகம், விருட்சம், அதாவது, கல்ப விருட்சம் மற்றும் 84 பிறவிகளின் சக்கரம் ஆகியவற்றின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இந்த ஆஸ்தியைப் பிரம்மாவினூடாகத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். இது மிகவும் தெளிவானதாகும். அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளடங்கியிருப்பதால், பல படங்கள் தேவையில்லை. இந்த இரு படங்களிலும் மிகப் பெரிய எழுத்துக்கள் இருக்க வேண்டும். அதில் எழுதப்பட்டிருக்கவும் வேண்டும்: விநாசம் வருவதற்கு முன்னர், தந்தையாகிய கடவுளிடமிருந்து ஜீவன்முக்தி உங்கள் பிறப்புரிமை ஆகுகின்றது. விநாசமும் நிச்சயமாக இடம்பெற வேண்டும். நாடகத் திட்டத்திற்;கேற்ப, அனைவரும் தாங்களாகவே புரிந்துகொள்வார்கள். நீங்கள் எதையும் விளங்கப்படுத்தத் தேவையில்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து இந்த எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இதை மிகவும் தெளிவாக நினைவுசெய்ய வேண்டும். எவ்வாறாயினும், மாயை உங்களை மறந்துவிடச் செய்கின்றாள். தொடர்ந்து காலம் கடந்து செல்கின்றது. பெருமளவு காலம் கடந்துவிட்டது என்பது நினைவுகூரப்படுகின்றது. இது தற்காலத்தையே குறிக்கின்றது. இப்பொழுது குறுகிய காலமே எஞ்சியுள்ளது. ஸ்தாபனை நடைபெறுகின்றது, விநாசத்திற்கு முன்னர், ஒரு குறுகிய காலமே எஞ்சியுள்ளது. இந்தக் குறுகிய காலத்திலும், சிறிதளவு நேரமே எஞ்சியுள்ளது. இதைப் பற்றிச் சிந்தியுங்கள்: பின்னர் என்ன நிகழும்? மக்கள் இப்பொழுது விழிப்படைய மாட்டார்கள், ஆனால் தாமதமாகவே அவர்கள் விழிப்படைய ஆரம்பிப்பார்கள். அவர்களுடைய கண்கள் (பார்வை) தொடர்ந்தும் திறக்கும். இந்தப் பௌதீகக் கண்களை இது குறிப்பிடவில்லை, ஆனால் புத்தியாகிய கண்ணையே குறிப்பிடுகின்றது. சிறிய படங்களைப் பயன்படுத்துவதில், அந்தளவு சந்தோஷம் ஏற்படுவதில்லை. பெரிய படங்கள் உருவாக்கப்பட வேண்டும். விஞ்ஞானமும் பெரிதும் உதவுகின்றது. விநாசத்திற்கு தத்துவங்களும் உதவுகின்றன. ஒரு சதமேனும் செலவின்றி அவை உங்களுக்குப் பெருமளவு உதவுகின்றன. உங்களுக்காக அனைத்தையும் அவை சுத்தம் செய்கின்றன. இது முற்றிலும் அசுத்தமான ஓர் உலகாகும். அஜ்மீரில், அவர்கள் சுவர்க்கத்தின் ஞாபகார்த்தத்தை வைத்திருக்கின்றார்கள். இங்கு, தில்வாலாவில், ஸ்தாபனையின் ஞாபகார்த்தம் உள்ளது, ஆனால் அவர்களால் எதையும் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் இப்பொழுது விவேகிகள் ஆகிவிட்டீர்கள். விநாசம் இடம்பெறும் என்று தாங்கள் நம்பவில்லை என்று மக்கள் கூறுவதாலேயே அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றது. ஒரு சிங்கம் வந்துவிட்டதாகக் கூறிய சிறுவனைப் பற்றிய கதையொன்றும் உள்ளது. எவரும் அவனை நம்பவில்லை, பின்னர், ஒருநாள், உண்மையாகவே சிங்கம் வந்து பசுக்கள் அனைத்தையும் உண்டுவிட்;டது. இப் பழைய உலகம் முடிவடையவுள்ளது என்று நீங்களும் தொடர்ந்து கூறுகின்றீர்கள். பெருமளவு காலம் கடந்துவிட்டது, சிறிது காலமே எஞ்சியுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய புத்தியில் இந்த ஞானம் அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாவே அனைத்தையும் கிரகிக்கின்றார். தந்தையின் ஆத்மாவும் ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். அவர் ஒரு சரீரத்தை ஏற்றுக் கொள்ளும்பொழுதே, அவர் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர் தன்னுள் ஞானத்தைக் கொண்டிருப்பதனால் அவர் ஞானம் நிறைந்த தந்தையாகிய கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். அவருக்கு முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றித் தெரியும். அவர் தன்னையும் அறிவார் அத்துடன் எவ்வாறு உலகச் சக்கரம் சுற்றுகின்றது என்ற ஞானத்தையும் அவர் கொண்டுள்ளார். இதனாலேயே ஆங்கிலத்திலுள்ள “ஞானம் நிறைந்தவர்” என்ற வார்த்தை மிகவும் சிறந்ததாகும். அவரே மனித உலக விருட்சத்தின் விதை என்பதால், அவர் ஞானம் அனைத்தையும் கொண்டுள்ளார். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, இது உங்களுக்குத் தெரியும். சிவபாபா ஞானம் நிறைந்தவர்;. இது உங்கள் புத்தியில் மிகவும் நன்றாகப் பதிந்திருக்க வேண்டும். அனைவராலும் அனைத்தையும் ஒரேயளவிற்;குக் கிரகிக்க முடியும் என்றல்ல. அவர்கள் கருத்துக்களை எழுதிக் கொண்டாலும், அவர்கள் எதனையுமே கிரகிக்க மாட்டார்கள். அவர்கள் அதைப் பெயருக்கு எழுதினாலும் அவர்களால் அதை எவருக்கும் நிரூபிக்க முடியாதிருக்கும். அவர்கள் அதைக் கடதாசியில் காண்பிக்கின்றார்கள், ஆனால் கடதாசி என்ன செய்யும்? எவராலும் கடதாசி மூலம் புரிந்துகொள்ள முடியாதிருக்கும். இந்தப் படத்திலிருந்து, மக்களால் மிக நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். ஞானமே அனைத்திலும் மகத்துவமானது என்பதால், எழுத்துக்களும் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும். மக்கள் பெரிய படங்களைப் பார்க்கும்பொழுது, நிச்சயமாக அவற்றில் ஏதோ அர்த்தம் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். ஸ்தாபனையும், விநாசமும் பற்றி எழுதப்பட்டுள்ளது. இராச்சிய ஸ்தாபனை உங்கள் இறை தந்தையின் பிறப்புரிமை ஆகும். ஜீவன்முக்திக்கான ஓர் உரிமையை ஒவ்வொரு குழந்தையும் கொண்டுள்ளார். அனைவரும் ஒரு பந்தன வாழ்க்கையில் உள்ளதால், எவ்வாறு நாங்கள் அவர்களை ஒரு பந்தன வாழ்விலிருந்து ஜீவன்முக்திக்குள் அழைத்துச் செல்ல முடியும் என்பதிலேயே குழந்தைகளாகிய உங்கள் புத்தி தொழிற்பட வேண்டும். நீங்கள் முதலில் அமைதி தாமத்திற்கும் பின்னர் சந்தோஷ தாமத்திற்;கும் செல்வீர்கள். சந்தோஷ தாமமே ஜீவன்முக்தி என்று அழைக்கப்படுகின்றது. விசேடமாக மிகவும் பெரிய படங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவையே பிரதான படங்கள் ஆகும். எழுத்துக்கள் மிகவும் பெரியதாக இருப்பின், மக்கள் கூறுவார்கள்: பிரம்மாகுமாரிகள் இத்தகைய பெரிய படங்களை உருவாக்கியுள்ளதால், அவற்றில் நிச்சயமாக ஏதோவொரு ஞானம் இருக்க வேண்டும். ஆகவே, உங்களுடைய பெரிய படங்கள் சகல இடங்களிலும்; காட்சிக்கு வைக்கப்படும்பொழுது, மக்கள் வினவுவார்கள்: இது என்ன? அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் புரிந்துகொள்வதற்காகவே இந்தப் பெரிய படங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது: அவர்கள் ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொண்டிருந்தார்கள். அது நேற்றைக்குரிய ஒரு விடயமாகும். இப்பொழுது அவர்களிடம் அது இல்லை, ஏனெனில் 84 மறுபிறவிகளை எடுத்ததால், அவர்கள் கீழிறங்கிவிட்டார்கள். சதோபிரதானிலிருந்து, அனைவரும் தமோபிரதானாக வேண்டும். இது ஞானத்திற்;கும் பக்திக்கும், பூஜிக்கப்படுபவர்களுக்;கும் பூஜைசெய்பவர்களுக்குமான ஒரு நாடகமாகும். முழு நாடகமும் அரைக்கு அரைவாசியாக ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, அத்தகைய பெரிய படங்களை உருவாக்குவதற்கு நீங்கள் தைரியத்தைக் கொண்டிருப்பது அவசியமாகும். நீங்கள் சேவை செய்வதில் ஆர்வத்தையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் டெல்லியின் ஒவ்வொரு மூலைக்கும் சேவை செய்ய வேண்டும். மக்கள் பலரும் சந்தைகள் போன்றவற்றுக்குச் செல்கின்றார்கள். உங்களுக்கு இந்தப் படங்கள் அங்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். திரிமூர்த்தியும் சக்கரமும் பிரதானமானவையாகும். இவை மிகச் சிறந்த விடயங்கள் ஆகும். இவை குருடர்களுக்கு முன்னால் ஒரு கண்ணாடி போன்றிருக்கும். குருடர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். ஆத்மாவே கற்கின்றார். எவ்வாறாயினும், ஆத்மாவின் புலன்கள் சிறியவையாக இருக்கும்பொழுது, கற்பிப்பதற்குப் படங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பின்னர்;, அவர்கள் சிறிது வளர்ந்தபின் அவர்களுக்கு உலக வரைபடம் காண்பிக்கப்படுகின்றது. பின்னர், அந்த முழு வரைபடமும் அவர்களின் புத்தியில் இருக்கின்றது.; இப்பொழுது உங்கள் புத்தியில் முழு நாடகச் சக்கரமும் உள்ளது. பல சமயங்கள் உள்ளன, அவர்கள் எவ்வாறு வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வந்தார்கள்; என்பதும் பின்னர் எவ்வாறு அவர்கள் திரும்பிச் செல்கின்றார்கள் என்பதும் உங்களுக்கு இப்பொழுது தெரியும். சுவர்க்கம் என அழைக்கப்படுகின்ற, ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஒன்றே அங்கு உள்ளது. தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருப்பதால், ஆத்மா தூய்மையற்றவரிலிருந்து தூய்மை ஆகுகின்றார். பாரதத்தின் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானதாகும். யோகம் என்றால் நினைவுசெய்வதாகும். தந்தை கூறுகின்றார்: தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள்! அவர் இதைக் கூற வேண்டியுள்ளது. ஒரு பௌதீகத் தந்தை கூற வேண்டியதில்லை: என்னை நினைவு செய்யுங்கள்! குழந்தைகள் இ;யல்பாகவே கூவியழைக்கின்றார்கள்: பாபா, மம்மா (அவர்களுடைய பௌதீகப் பெற்றோரை). அவர்கள் பௌதீகப் பெற்றோர்கள், ஆனால் புகழ் பாடப்படுகின்ற அந்த ஒரேயொருவரே பரலோகத்துக்குரியவர்: உங்கள் கருணையினூடாக நாங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றோம். துன்பத்தில் இருப்பவர்கள் மாத்திரம் இதைப் பாடுகின்றார்கள். சந்தோஷத்தில் இருக்கும்பொழுது, இதைக் கூற வேண்டியதில்லை. அவர்கள் துன்பத்தில் இருப்பதாலேயே, கூவியழைக்கின்றார்கள். இவரே தாயும் தந்தையும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: தினமும் நான் உங்களுக்கு மிகவும் ஆழமான விடயங்களைக் கூறுகின்றேன். தாயும் தந்தையும் என்று யார் அழைக்கப்படுகின்றார்கள் என்பது முன்னரே உங்களுக்குத் தெரியுமா? அவர் மாத்திரமே தந்தை என்று அழைக்கப்படுகின்றார் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். நீங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பிரம்மாவினூடாகப் பெறுகின்றீர்கள். குழந்தைகள் தத்தெடுக்கப்பட வேண்டியுள்ளதால், ஒரு தாயும் தேவைப்படுகின்றார். இது எவருடைய புத்தியிலும் இருக்காது. ஆகவே, பாபா மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள்! நீங்கள் ஓர் இலக்கைப் பெற்றுவிட்டதால், உங்களால் வேறு எங்கும் செல்ல முடியும்; நீங்கள் அந்நிய நாட்டுக்கும் செல்ல முடியும். நீங்கள் ஏழு நாள் பாடநெறியைப் பெற்றுவிட்டால், அதுவே போதுமானதாகும். நீங்கள் உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோர வேண்டும். நினைவினூடாகவே ஆத்மா தூய்மையாகவும் சுவர்க்க அதிபதியாகவும் ஆகுவார். நீங்கள் உங்கள் புத்தியில் இந்த இலக்கைக் கொண்டிருக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் எங்கு சென்றாலும், பரவாயில்லை. கீதையின் முழு ஞானமும்; இந்த பாட்ஜ்ஜில் உள்ளது. எவரும் வினவத் தேவையில்லை: நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோர விரும்பினால், நீங்கள் நிச்சயமாக அவரை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பல தடவைகள் பெற்றுள்ளீர்கள். நாடகச் சக்கரம் மீண்டும் மீண்டும் தொடர்கின்றது. நீங்கள் எண்ணற்ற தடவைகள் தந்தையுடன் கற்றுப் பின்னர் ஓர் அந்தஸ்தையும் பெறுகின்றீர்கள். கற்கும்போது உங்கள் புத்தியின் யோகம் உங்கள் ஆசிரியருடனேயே இருக்கின்றது. பரீட்சை இலகுவாகவோ அல்லது கடினமாகவோ இருப்பினும், ஆத்மாவே கற்கின்றார். இவருடைய ஆத்மாவும் கற்கின்றார். நீங்கள் உங்கள் ஆசிரியரையும் உங்கள்; இலக்கையும் இலட்சியத்தையும் நினைவுசெய்ய வேண்டும். உலகச் சக்கரத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். தெய்வீகக் குணங்களையும் நீங்கள் கிரகிக்க வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு கிரகிக்கின்றீர்களோ அந்தளவிற்கே, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் தொடர்ந்தும் மிகச் சிறந்த நினைவைக் கொண்டிருப்பீர்களாயின், நீங்கள் இங்கு ஏன் வரவேண்டும்? எவ்வாறாயினும், நீ;ங்கள் இன்னமும் வருகின்றீர்கள். அதிமேலான தந்தையாகிய அவரிடமிருந்தே நீங்கள் ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதால், நிச்சயமாக நீங்கள் வந்து அவரைச் சந்திக்க வேண்டும். அனைவரும் ஒரு மந்திரத்தைப் பெற்றுவிட்டதும் திரும்பிச் செல்கின்றார்கள். நீங்கள் மிக முக்கியமான மந்திரத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் உங்கள் புத்தியில் முழு ஞானத்தையும் மிகத் தெளிவாகக் கொண்டிருக்கின்றீர்கள். ஓர் அழியக்கூடிய வருமானத்தைத்; துரத்திச் செல்வதில் நீங்கள் அதிகளவு நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும். தந்தை எதையாவது விரும்புகின்றாரா? எதையும் இல்லை! அவர் செலவிடுவது எங்களுக்காகவே ஆகும். எவ்வாறாயினும், இதில் ஒரு சதமேனும் செலவு இல்லை. அவர் யுத்தத்திற்காகக் குண்டுகள் அல்லது தாங்கிகள் போன்றவற்றை வாங்கத் தேவையில்லை. அவர் எதையும் கொண்டிருப்பதில்லை. சண்டையிடுகையில் (மாயையுடன்), நீங்கள் உலகில் உள்ள ஏனையோருக்கு மறைமுகமாகவே உள்ளீர்கள். உங்கள் யுத்தம் எதைப் போன்றுள்ளது எனப் பாருங்கள்! இது யோகசக்தி எனப்படும். அனைத்தும் மறைமுகமானவை ஆகும். இதில் எவரையும் கொல்வதற்கு அவசியமில்லை. நீ;ங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நாடகத்தில் அனைவருக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. யோகசக்தியைச் சேகரிப்பதற்காக, ஒவ்வொரு 5000 வருடங்களும் நீங்கள் இதைக் கற்கின்றீர்கள். கல்வி பூர்த்திசெய்யப்பட்டதும், உங்களுக்குப் புதிய உலகில் வெகுமதி தேவைப்படும். பழைய உலகின் விநாசத்திற்காக இயற்கை அனர்த்தங்கள்; உள்ளன. எவ்வாறு தங்கள் சொந்தக் குலத்தையே அவர்கள் அழித்தாhர்கள் என்பது நினைவுகூரப்படுகின்றது. குலம் மிகவும் பெரியதாகும். முழு ஐரோப்பாவும் அதில் உள்ளடங்குகின்றது. பாரதம் வேறோர் இடத்தில் உள்ளது. அனைத்தும் அழிக்கப்படும். யோகசக்தியினால் குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகையும் வெற்றி கொள்கின்றீர்கள். இந்த இலக்ஷ்மி நாராயணனைப் போன்றே, நீங்களும் தூய்மையாக வேண்டும். குற்றப் பார்வை அங்கு இருக்காது. நீங்கள் மேலும் முன்னேறுகையில், பல காட்சிகளைக் காண்;பீர்கள். நீ;ங்கள் உங்கள் நாட்டை அண்மித்து வரும்பொழுது, நீங்கள் மரங்களைக்; காண்பதனால், சந்தோஷமடைகின்றீர்கள்: இப்பொழுது நாங்கள் எங்கள் வீட்டிற்;கு அண்மையில் வந்துவிட்டோம். நீங்களும் இப்பொழுது வீட்டிற்;குச் செல்கின்றீர்கள், பின்னர் சந்தோஷ தாமத்திற்;குச் செல்வீர்கள். குறுகிய காலமே எஞ்சியுள்ளது. நீங்கள் சுவர்க்கத்திற்குப் பிரியாவிடை கொடுத்து நீண்டகாலம் ஆகிவிட்டது. சுவர்க்கம் இப்பொழுது அண்மித்துக் கொண்டிருக்கின்றது. உங்கள் புத்தி மேலே செல்கின்றது. அது பிரம்மானந்தம் எனவும் அழைக்கப்படுகின்ற, அசரீரி உலகமாகும். நாங்கள் அந்த இடத்தில் வசிப்பவர்கள். நாங்கள் எங்களுடைய 84 பிறவிகளின் பாகங்களையும் இங்கு நடித்துவிட்டோம், இப்பொழுது நாங்கள் வீடு செல்கின்றோம். குழந்தைகளாகிய நீங்கள் சகலதுறை வல்லுனர்கள்;. நீங்களே ஆரம்பத்திலிருந்து, முழுமையான 84 பிறவிகளையும் எடுக்கின்றவர்கள்;. தாமதித்து வருபவர்கள் சகலதுறை வல்லுனர்கள் என்று அழைக்கப்பட மாட்டார்கள். அதிக எண்ணிக்கையுடைய பிறவிகள் எவை எனவும் குறைந்த எண்ணிக்கையுடைய பிறவி எது எனவும் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அது குறைந்தது ஓரு பிறவியாகவும் இருக்க முடியும். இறுதியில், அனைவரும் வீடு திரும்பிச் செல்வார்கள். நாடகம் முடிவடைந்துவிட்டது, நடிப்பும் முடிந்துவிட்டது. இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். பின்னர் நீங்கள் தந்தையிடம், பரந்தாமத்திற்குச் செல்வீர்கள். அது அமைதி தாமமாகிய, முக்திதாமம் என அழைக்கப்படுகின்றது, பின்னர் சந்தோஷ தாமம் உள்ளது. இது துன்பபூமி ஆகும். அனைவரும் மேலிருந்து சதோபிரதானாகவே கீழிறங்குகின்றார்கள், பின்னர் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கின்றார்கள். ஒருவர் ஒரு பிறவியை மாத்திரம் எடுத்தாலும், அவர் இந்த நான்கு ஸ்திதிகளினூடாகச் செல்வார். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார், ஆனாலும், நீங்கள் அவரை நினைவுசெய்வதில்லை! நீங்கள் தந்தையை மறந்துவிடு;கின்றீர்கள்! அதுவும் வரிசைக்கிரமமானதாகும். உங்கள் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, உருத்திர மாலை உருவாக்கப்படுகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உருத்திர மாலை பல மில்லியன்கணக்கானவர்களைக் கொண்டதாகும். அது எல்லையற்ற உலகின் மாலை ஆகும். பிரஜாபிதா பிரம்மாவிற்கு இரண்டு வம்சாவளிப் பெயர்கள் உள்ளன. பிரம்மாவே விஷ்ணு ஆகுகின்றார், விஷ்ணு பிரம்மா ஆகுகின்றார்! இராவணன் அரைக்கல்பத்தின் பின்னர் வருகின்றான். தேவதர்மமும் பின்னர் இஸ்லாம் மதமும் உள்ளன. மக்கள் ஆதாமையும் பீபியையும் அத்துடன் வைகுந்தத்தையும் நினைவுசெய்கின்றார்கள். பாரதம் சுவர்க்கமாகிய, வைகுந்தமாக இருந்தது. குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். அதிமேலான, கடவுளாகிய, எல்லையற்ற தந்தையே அதிமேலான கல்வியைக் கற்பிக்கின்றார். நீங்கள் அதிமேலான அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். தந்தை அதிமேலான ஆசிரியர்;. அவரே ஆசிரியர், அவர் உங்களை மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்வார், ஆகவே அவர் சத்குருவும் ஆவார். நீங்கள் ஏன் அத்தகையதொரு தந்தையை நினைவுசெய்வதில்லை? உங்கள் சந்தோஷ பாதரசம் உயர வேண்டும். எவ்வாறாயினும், இது ஒரு போர்க்களம் ஆகும். இங்கு இருப்பதற்கு மாயை உங்களை அனுமதிக்க மாட்டாள். நீங்கள் மீண்டும் மீண்டும் வீழ்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நினைவுசெய்வதனாலேயே நீங்கள் மாயையை வெற்றி கொள்பவர்கள் ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கற்பிப்பதைப் பயிற்சியில் இடுங்கள். அதை வெறுமனே கடதாசியில் குறித்துக் கொள்ளாதீர்கள்;. விநாசம் இடம்பெறுவதற்கு முன்னர், பந்தன வாழ்விலிருந்து ஜீவன்முக்தி அந்தஸ்தை அடையுங்கள்.

2. ஓர் அழியக்கூடிய வருமானத்தைத் துரத்திச் செல்வதில் பெருமளவு நேரத்தை வீணாக்காதீர்கள்;, ஏனெனில் அவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகின்றது. ஆகவே, எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருங்கள், அத்துடன் தெய்வீகக் குணங்களையும் கிரகித்துக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
மாஸ்ரர் சர்வசக்திவானாகி, உங்கள் அனைத்து சக்திகளையும் சரியான நேரத்தில் உபயோகிக்கும் ஓர் அதிகாரி ஆகுவீர்களாக.

சர்வசக்திவான் தந்தையிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட சகல சக்திகளும் சூழ்நிலைக்கேற்பவும், நேரத்திற்கேற்பவும், நீங்கள் பயன்படுத்த விரும்பும் வடிவத்திற்கேற்பவும் உங்களுடன் ஒத்துழைக்கும். இந்தச் சக்திகளை அல்லது தந்தையிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களை நீங்கள் விரும்பும் வடிவத்தில் உங்களால் கிரகிக்க முடியும். ஒரு நிமிடம் குளிர்ச்சியான வடிவத்தில் அனுபவம் செய்யுங்கள். அடுத்த நிமிடம் அவற்றை எரிக்கின்ற வடிவத்தில் அனுபவம் செய்யுங்கள். இவற்றைச் சரியான நேரத்தில் உபயோகிக்கின்ற ஓர் அதிகாரி ஆகுங்கள். இந்தச் சக்திகள் அனைத்தும் மாஸ்ரர் சர்வசக்திவான்களாகிய உங்கள் சேவகர்கள்.

சுலோகம்:
உ,ங்களுக்காகவும், உலக மாற்த்திற்கான பணிக்காகவும் முயற்சி செய்வற்கான தைரியத்தை நீங்கள் கொண்டிருக்கும்போது வெற்றி உத்தரவாதம் அளிக்கப்படும்.