20.12.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்களை அனைத்துப் பொக்கிஷங்களாலும் நிரப்புவதற்காக வந்துள்ளார். நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றவேண்டும். நன்றாக முயற்சி செய்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக்கொள்ளுங்கள். மாயையால் தோற்கடிக்கப்பட்டவர் ஆகாதீர்கள்.
கேள்வி:
கடவுளின் வழிகாட்டல்களுக்கும், தெய்வீக வழிகாட்டல்களுக்கும், மனித வழிகாட்டல்களுக்கும் இடையிலுள்ள பிரதான வேறுபாடுகள் யாவை?
பதில்:
கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், குழந்தைகளாகிய நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, பின்னர் புதிய உலகில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக்கொள்வீர்கள். தெய்வீக வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் இந்நேரத்திலேயே தந்தையிடமிருந்து அவ்வழிகாட்டல்களையும் பெற்றுள்ளீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்குகிறீர்கள். மனித வழிகாட்டல்கள் உங்களை சந்தோஷமற்றவர்கள் ஆக்குகின்றது. கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்கு, முதலில் உங்களுக்குக் கற்பிப்பவரான தந்தைமீது நீங்கள் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
ஓம் சாந்தி.
ஆத்மாவாகிய நான் ஓர் அமைதி சொரூபம் எனத் தந்தை இதன் அர்த்தத்தை விளங்கப்படுத்தியுள்ளார். “ஓம் சாந்தி” என நீங்கள் கூறும்போது ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் வீட்டை நினைவு செய்கின்றீர்கள். ஆத்மாவாகிய நான், அமைதி சொரூபம். பின்னர் ஆத்மா அங்கங்களைப் பெற்றதும் அவர் பேசக்கூடியவர் ஆகுகின்றார். முதலில் அங்கங்கள் சிறிதாக இருந்து, பின்னர் பெரிதாக வளர்கின்றன. பரமபிதா பரமாத்மா அசரீரியானவர். அவர் பேசுவதற்கு அவருக்கு ஒரு இரதம் தேவைப்படுகின்றது. எவ்வாறு ஆத்மாக்களாகிய நீங்கள் அநாதியாகவே அமைதிதாமவாசிகளாக இருந்து பின்னர் இங்கே கீழிறங்கி வந்தவுடன் பேசுபவர்கள் ஆகினீர்களோ, அதேபோன்று தந்தையும் கூறுகின்றார்: நானும் உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதற்காக இந்த பேசுகின்ற உலகிற்கு வந்துள்ளேன். தந்தை அவருடைய சொந்த அறிமுகத்தையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் அறிமுகத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். இக்கல்வி ஆன்மீகமானது. மற்றைய அனைத்துக் கல்விகளும் லௌகீகமானது. அவர்கள் தங்களைச் சரீரங்களாகவே கருதுகின்றார்கள். ஆத்மாவாகிய நான் இக்காதுகள் மூலம் செவிமடுக்கின்றேன் என எவருமே கூறுவதில்லை. தந்தையே தூய்மையாக்குபவர் எனக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். தான் எவ்வாறு வருகின்றார் என அவர் வந்து விளங்கப்படுத்துகின்றார். உங்களைப் போன்று நான் ஒரு கர்ப்பத்தினுள் பிரவேசிப்பதில்லை. நான் இவரினுள் பிரவேசிக்கிறேன். இதையிட்டு எந்தக் கேள்வியும் எழுப்பமுடியாது. இவர் எனது இரதமாவார். அத்துடன் அவர் தாய் என்றும் அழைக்கப்படுகின்றார். பிரம்மபுத்திரா மிகப் பெரிய நதியாகும், எனவே இவரே மிகப்பெரிய நதியாவார். இதில் தண்ணீர் பற்றிய கேள்வியில்லை. இது அதி மேன்மையான நதியாகும்: இதுவே மிகப்பெரிய ஞானநதி ஆகும். ஆகையால் தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நான் உங்களுடைய தந்தையாவேன். நீங்கள் பேசுவது போன்றே நானும் பேசுகின்றேன். எனது பாகம் மிகவும் கடைசியிலாகும். நீங்கள் முழுமையாக தூய்மையற்றவர்களாகும்போது, உங்களைத் தூய்மையாக்குவதற்காக நான் வருகின்றேன். இலக்ஷ்மி, நாராயணனை அவ்வாறு ஆக்கியது யார்? கடவுள் தவிர்ந்த வேறு எவரோ என நீங்கள் கூறமுடியாது. எல்லையற்ற தந்தை மாத்திரமே உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். தந்தை மாத்திரமே ஞானக்கடலாவார். அவர் கூறுகின்றார்: நான் மனித உலக விருட்சத்தின் உயிருள்ள விதையாவேன். அதன் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் நான் அறிவேன். நான் சத்தியமானவரும், உயிருள்ள விதையும் ஆவேன். இந்த உலக விருட்சத்தின் முழு ஞானமும் எனக்குள் இருக்கின்றது. இது உலகச் சக்கரம் என்றும் நாடகம் என்றும் கூறப்படுகின்றது. அது தொடர்ந்து சுழல்கின்றது. அந்த எல்லைக்குட்பட்ட நாடகங்கள் 2 மணித்தியாலங்கள் நீடிக்கும். ஆனால் இந்த நாடகத்தின் கால எல்லை 5000 வருடங்களாகும். கடந்து சென்ற நேரமெல்லாம், 5000 வருடங்களில் இருந்து தொடர்ந்து குறைவடையும். முதலில் நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்றும் பின்னர் படிப்படியாக நீங்கள் சத்திரிய குலத்திற்குச் சென்றீர்கள் என்றும் புரிந்துகொள்கின்றீர்கள். இந்த இரகசியங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. ஆகையால், நீங்கள் சதா அதைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆரம்பத்தில் நாங்கள் எமது பாகத்தை நடிப்பதற்காகக் கீழிறங்கி வந்தபோது 1250 வருடங்கள் தேவர்களாக அரசாட்சி செய்தோம். காலம் கடந்துசெல்கிறது. இது நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கான கேள்வியல்ல, நூறாயிரக்கணக்கான வருடங்கள் பற்றிய எதனையும் எவருமே சிந்திக்கமுடியாது. நீங்கள் எவ்வாறு அந்த தேவர்களாக இருந்தீர்கள் என்றும் உங்கள் பாகங்களைத் தொடர்ந்து நடிக்கும்பொழுது வருடங்கள் கடந்து சென்று, இப்பொழுது எத்தனை வருடங்கள் கடந்து விட்டன என்றும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். உங்களுடைய சந்தோஷம் படிப்படியாகத் தொடர்ந்தும் குறைவடைகின்றது. அனைத்துமே சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகக் கடந்து செல்கின்றன. அனைத்துமே நிச்சயமாகப் பழையதாக வேண்டும். இது எல்லையற்ற விடயமாகும். இந்த விடயங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் மிக நன்றாகக் கிரகித்து மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது. அவர்கள் வேறுபட்ட முறைகளில் விளங்கப்படுத்துவார்கள். இலகுவாக விளங்கப்படுத்தக்கூடிய விடயம் சக்கரமாகும். நாடகமும், விருட்சமும் இரண்டு முதன்மையான படங்களாகும். அது கல்பவிருட்சம் என அழைக்கப்படுகின்றது. சக்கரத்தின் கால எல்லை என்னவென்று எவருக்குமே தெரியாது. மனிதர்கள் பல்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளார்கள். ஒருவர் ஒன்றையும் மற்றவர் வேறொன்றையும் கூறுகின்றார்கள். மனிதர்களின் பல்வேறு அபிப்பிராயங்களையும், அத்துடன் ஒரேயொரு கடவுளின் வழிகாட்டல்களையும் இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இதில் பெருமளவு வேறுபாடு உள்ளது. கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் நீங்கள் மீண்டும் புதிய உலகிற்குச் செல்வீர்கள். மனித வழிகாட்டல்களாயினும் தெய்வீக வழிகாட்டல்களாயினும் - வேறு எவரது வழிகாட்டல்களையும் பின்பற்றுவதனால் உங்களால் அங்கு செல்லமுடியாது. தெய்வீக வழிகாட்டல்களைப் பின்பற்றும்பொழுதும் நீங்கள் கீழிறங்கவே செய்கின்றீர்கள். ஏனெனில் உங்கள் கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றியபொழுதும் நீங்கள் கீழிறங்கினீர்கள். எவ்வாறாயினும் தெய்வீக வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் சந்தோஷமும், மனித வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் துன்பமும் ஏற்படுகின்றது. இந்நேரத்தில் தந்தையினால் உங்களுக்கு தெய்வீக வழிகாட்டல்களும் கொடுக்கப்படுகின்றன. இதனாலேயே நீங்கள் அங்கு சந்தோஷமாக இருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தை வெகு தூரத்திலிருந்து இங்கு வந்துள்ளார். மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் பெருமளவு செல்வத்தைச் சேர்த்தவுடன் திரும்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குப் பல பொக்கிஷங்களைக் கொண்டுவந்துள்ளேன். ஏனெனில் நான் உங்களுக்குப் பெருமளவு செல்வத்தைக் கொடுத்திருந்தேன் என்பதையும் நீங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். செல்வத்தை நடைமுறையில் தொலைத்த உங்களுக்கு மாத்திரமே நான் இவ்விடயங்களைக் கூறுகின்றேன். 5000 வருடங்களுக்கான விடயங்களை நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். இல்லையா? ஆம் பாபா, நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் உங்களைச் சந்தித்தோம், நீங்கள் எங்கள் ஆஸ்தியைக் கொடுத்தீர்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது உங்களுடைய எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைக் கோரிக்கொள்வீர்கள் என நிச்சயமாகத் தெரிந்துகொண்டுள்ளீர்கள். பாபா, நாங்கள் புதிய உலக இராச்சியம் என்ற ஆஸ்தியை உங்களிடமிருந்து கோரிக்கொண்டோம். சரி, மீண்டும் முயற்சி செய்யுங்கள்! பாபா, மாயை என்ற தீய ஆவி என்னைத் தோற்கடித்துவிட்டது என்று கூறாதீர்கள். சரீர உணர்விற்கு வந்தபின்னரே நீங்கள் மாயையினால் தோற்கடிக்கப்பட்டீர்கள். நீங்கள் பேராசை கொண்டவர்களாகினீர்கள் அல்லது இலஞ்சம் பெற்றீர்கள் ஓர் இக்கட்டான சூழல் என்பது வேறுபட்ட விடயமாகும். பேராசையின்றி உங்களால் உங்களது வயிற்றை நிரப்ப முடியாது என்பதை பாபா அறிவார். அது பரவாயில்லை. நீங்கள் உண்ணவேண்டும், ஆனால் அதிலேயே முழுமையாக ஈடுபட்டுவிடக்கூடாது. அல்லாவிட்டால், நீங்களே துன்பத்தை அனுபவம் செய்யவேண்டும். நீங்கள் பணத்தைப் பெற்று, சந்தோஷமடைவீர்கள். பின்னர் பொலீசாரினால் பிடிபட்டால் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அவ்வாறான செயல்களைச் செய்யாதீர்கள். நான் உங்களுக்குப் பொறுப்பில்லை. எவராவது ஒரு குற்றச்செயல் புரிந்தால், அவர் சிறைக்குச் செல்லவேண்டும். அங்கே சிறை போன்ற எதுவும் இருக்கமாட்டாது. எனவே நாடகத்திற்கு ஏற்ப முன்னைய கல்பத்தில் பெற்றதைப்போன்று, 21 பிறவிகளுக்கு நீங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. அங்கு செல்வந்தப் பிரஜைகளும், ஏழைப் பிரஜைகளும் இருப்பார்கள். ஆனால் அங்கே துன்பம் இருக்கமாட்டாது. தந்தை இதற்கு உத்தரவாதம் அளிக்கின்றார். அனைவரும் ஒரே மாதிரியாக ஆகமுடியாது. சூரிய, சந்திர வம்ச இராச்சியத்திற்கு அனைத்து வகையினரும் தேவைப்படுகின்றார்கள். தந்தை எவ்வாறு உலக இராச்சிய உரிமையைக் கொடுத்தார் என்றும், பின்னர், நீங்கள் எவ்வாறு கீழே வந்தீர்கள் என்றும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் இதை நினைவு செய்கின்றீர்கள், இல்லையா? பாடசாலையிலும் நீங்கள் கற்பதை நினைவுசெய்கிறீர்கள், இல்லையா? இங்கும்கூட முழு உலகிலும் இந்த ஆன்மீகக் கல்வியை கற்பிக்கக்கூடிய எவருமே இல்லை, எனத் தந்தை உங்களுக்கு நினைவூட்டுகின்றார். கீதையில் “மன்மனாபவ” குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே மனதை வழிநடத்தும் மகா மந்திரம் என்று கூறப்படுகின்றது. இந்த மந்திரமே உங்களை மாயையை வெற்றிகொள்ளுமாறு செய்கின்றது. மாயையை வென்றவர்கள் உலகை வெற்றி கொள்வார்கள். ஐந்து விகாரங்களே மாயை எனப்படுகின்றது. இராவணனின் படம் முற்றிலும் தெளிவானது. ஐந்து விகாரங்கள் பெண்களிலும், ஐந்து விகாரங்கள் ஆண்களிலும் இருக்கின்றது. இவற்றின் மூலம் நீங்கள் கழுதை போன்று ஆகிவிட்டீர்கள். இதனாலேயே இராவணனின் தலையில் கழுதையின் தலை காட்டப்பட்டுள்ளது. ஞானமில்லாது நீங்களும் அவ்வாறே இருந்தீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு களிப்பூட்டும் முறையில் கற்பிக்கின்றார். அவர் பரம ஆசிரியர். அவரிடமிருந்து எதையெல்லாம் கற்றுக்கொண்டோமோ, பின்னர் அதை மற்றவர்களுக்கு கூற வேண்டும். முதலில் நீங்கள் உங்களுக்கு கற்பிப்பவரில் அவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்யவேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: தந்தை இதை எங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். எனவே இப்பொழுது நீங்கள் நம்புகின்றீர்களோ, இல்லையோ அது உங்களிலேயே தங்கியிருக்கின்றது. அவர் எல்லையற்ற தந்தையாவார். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். ஆகையால் உங்களுக்கு நிச்சயமாக மேன்மையான புதிய உலகம் தேவைப்படுகின்றது. நீங்கள் அழுக்கான உலகில் இருக்கின்றீர்கள் என இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். வேறு எவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. அங்கே சுவாக்கத்தில், நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். ஆனால் இங்கே நரகத்தில் மக்கள் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். நீங்கள் அதை நரகம் அல்லது நச்சாறு என்று கூறலாம். இப்பழைய உலகம் அழுக்கானது. சத்தியயுகமாகிய சுவர்க்கத்திற்கும், கலியுகமாகிய நரகத்துக்குமிடையில் உள்ள வேறுபாட்டை இப்பொழுது உங்களால் உணரமுடிகின்றது. சுவர்க்கம் உலகின் அற்புதம் என்று கூறப்படுகின்றது. திரேதாயுகம் அவ்வாறு கூறப்படுவதில்லை. இந்த அழுக்கான உலகில் வாழ்வதி;ல் மக்களில் சிலர் சந்தோஷமடைகின்றார்கள். ஒரு ரீங்காரமிடும் வண்டு அழுக்கான பூச்சிகளைச் சுற்றி ரீங்காரமிட்டு தன்னைப்போல ஆக்கிவிடும். நீங்களும் அழுக்கிலேயே இருந்தீர்கள். நான் வந்து இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுத்து உங்களைப் பூச்சிகளிலிருந்து மாற்றி அதாவது சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆக்கியுள்ளேன். நீங்கள் இப்பொழுது இரட்டைக் கிரீடம் உள்ளவர்களாக ஆகுகின்றீர்கள். எனவே நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கவேண்டும். நீங்கள் முழு முயற்சி செய்யவேண்டும். எல்லையற்ற தந்தை உங்களுக்கு இலகுவான விளக்கத்தைக் கொடுக்கின்றார். சத்தியம் உங்கள் இதயத்தைத் தொடுமளவிற்கு பாபா எவ்வாறு விளங்கப்படுத்துகின்றார். இந்நேரத்தில் அனைவரும் மாயையின் புதைகுழியில் சிக்கியுள்ளார்கள். பெருமளவு வெளிப்பகட்டு உள்ளது. பாபா விளங்கப்படுத்துகின்றார்: நான் வந்து உங்களைப் புதைகுழியிலிருந்து மீட்டெடுத்து, சுவர்க்கத்திற்கு அழைத்துச்செல்கின்றேன். சுவர்க்கம் என்ற பெயரை நீங்கள் செவிமடுத்துள்ளீர்கள். சுவர்க்கம் இப்பொழுது இல்லை. அவற்றின் படங்கள் இருக்கின்றன. சுவர்க்கத்தின் அதிபதிகள் நிறைந்த செல்வந்தர்களாக இருந்தார்கள். பக்தி மார்க்கத்தில், நீங்கள் தினமும் ஆலயங்களுக்குச் சென்றபோதிலும், உங்களிடம் இந்த ஞானம் இருக்கவில்லை. ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் பாரதத்தில் இருந்தது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்களுடைய இராச்சியம் எப்போது இருந்தது என்று எவருக்குமே தெரியாது. தேவ தர்மம் என்று கூறுவதற்குப் பதிலாக, அவர்கள் இந்து சமயம் என்று கூறுகின்றார்கள். ஆரம்பத்தில், இந்து மகா சபையின் தலைவர் வந்தார். அவர் கூறினார்: நாங்கள் விகாரம் நிறைந்தவர்கள், அசுரத்தனமானவர்கள். எவ்வாறு எங்களை தேவர்கள் என அழைக்கமுடியும்? நாங்கள் கூறினோம்: சரி, வாருங்கள் தேவதர்மம் மீண்டும், ஒரு தடவை ஸ்தாபிக்கப்படுவதை நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவோம். நாங்கள் உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றோம். இருந்து கற்றிடுங்கள். அவர் கூறினார் தாதிஜி, எனக்கு நேரமில்லை அவருக்கு நேரம் இல்லாவிடின், எவ்வாறு அவர் தேவர் ஆகமுடியும்? இது ஒரு கல்வியாகும். அது அந்த ஏழை மனிதனின் பாக்கியத்தில் இல்லை. அவர் இறந்துவிட்டார். அவர் ஒரு பிரஜையாக வருவார், என்றுகூட கூறமுடியாது. இல்லை. எவ்வாறு தூய்மையாகுவது என்ற ஞானம் இங்கு கொடுக்கப்படுகின்றது என்று கேள்வியுற்று அவர் இங்கே வந்துள்ளார். எவ்வாறாயினும் அவரால் சுவர்க்கத்திற்கு வரமுடியாது. அவர் மீண்டும் இந்து சமயத்திற்குள் வருவார். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். அவள் ஏதாவதொரு தவறை செய்ய வைக்கின்றாள். நீங்கள் எந்த விதமான பாவம் செய்தாலும் அதைப்பற்றி தந்தையிடம் நேர்மையான இதயத்துடன் கூறவேண்டும். இராவணனின் உலகத்தில் பாவங்கள் தொடர்ந்தும் இடம்பெறும். அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் பல பிறவிகளாக பாவ ஆத்மாக்களாக இருக்கின்றோம். இதைக் கூறியது யார்? ஆத்மாக்கள் இவ்வாறு தந்தையின் முன்னிலையில் அல்லது தேவர்களின் விக்கிரகங்களின் முன்னிலையில் கூறுகின்றார்கள். நீங்கள் பல பிறவிகளாக உண்மையில் பாவ ஆத்மாக்களாக இருந்தீர்கள் என்று இப்பொழுது உணர்கின்றீர்கள். நீங்கள் இராவண இராச்சியத்தில் நிச்சயமாக பாவம் செய்துள்ளீர்கள். உங்களுடைய பல பிறவிப் பாவங்கள் பற்றி உங்களால் கூறமுடியாது. ஆனால் இந்தப்பிறவியில் உங்கள் பாவங்கள் பற்றிக் கூறமுடியும். பாபாவுக்கு கூறுவதனால், நீங்கள் இலேசாகிவிடுவீர்கள். நீங்கள் இன்னார் இன்னாரை அடித்தீர்கள் அல்லது, ஏதாவது களவெடுத்தீர்கள் என்று உங்களுடைய நோயை சத்திரசிகிச்சை நிபுணரிடம் கூறவேண்டும். இந்த விடயங்களைக் கூறுவதில் நீங்கள் வெட்கப்படமாட்டீர்கள், ஆனால் காமம் பற்றிக் கூறுவதில் நீங்கள் வெட்கமடைவீர்கள். சத்திரசிகிச்சை நிபுணரிடம் கூறுவதற்கு வெட்கப்பட்டீர்களாயின், எவ்வாறு உங்களின் நோய் அகற்றப்படும்? உங்களுடைய மனச்சாட்சி தொடர்ந்து உங்களை உறுத்தும்;, உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியாதிருக்கும். அவருக்கு உண்மையைக் கூறுவதன் மூலம் உங்களால் அவரை நினைவு செய்யமுடியும். தந்தை கூறுகின்றார்: சத்திரசிகிச்சை நிபுணராகிய, நான் நீங்கள் சதா தூய்மையாக இருப்பதற்கு பெருமளவு மருந்து கொடுத்திருக்கிறேன். சத்திரசிகிச்சை நிபுணரிடம் கூறுவதால், நீங்கள் இலேசானவராக ஆகுவீர்கள். சிலர் தைரியமாக ஆரம்பித்து எழுதுகின்றார்கள்: பாபா, நான் பல பிறவிகளாகப் பாவங்கள் செய்துள்ளேன். நீங்கள் பாவ ஆத்மாக்களின் உலகில் பாவ ஆத்மாவாகவே ஆகுவீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே நீங்கள் பாவ ஆத்மாக்களுடன் இனிமேலும் எந்தக் கொடுக்கல், வாங்கலும் வைத்திருக்கக்கூடாது. உண்மையான சற்குரு அமரத்துவமாக தந்தையாவார். அவர் ஒருபோதும் பிறப்பு, இறப்பு சக்கரத்தினுள் வருவதில்லை. அம்மக்கள் அந்த சிம்மாசனத்திற்கு “அமரத்துவ சிம்மாசனம்” என்று பெயரிட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. இது ஆத்மாவின் சிம்மாசனம் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். இங்கே இருப்பதாக (நெற்றியின் மத்தியில்) உணர்வது சரியானது. ஒரு திலகம் இங்கேயே இடப்படுகின்றது. அநாதியாகவே, ஒரு சிறிய புள்ளி திலகம் இடப்பட்டுள்ளது. இப்பொழுது உங்களுக்கு நீங்களே திலகம் இட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் தொடர்ந்து தந்தையை நினைவு செய்யவேண்டும். பெருமளவு சேவை செய்பவர்கள் மகத்தான சக்கரவர்த்திகள் ஆகுவார்கள். புதிய உலகில், பழைய உலகின் கல்வி எதனையும் நீங்கள் கற்க வேண்டியதில்லை. ஆகையால் அவ்வாறான மேன்மையான கல்வியில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். இங்கு அமர்ந்திருக்கும்போது, உங்களில் சிலரின் புத்தியின் யோகம் நன்றாக இருக்கின்றது. மற்றவர்கள் புத்தியை அலைபாய விடுகின்றார்கள். சிலர் தாம் 10 நிமிடமும், சிலர் 15 நிமிடமும் யோகம் செய்வதாக எழுதுகின்றார்கள். அட்டவணையை நன்றாக வைத்திருப்பவர்கள் தாம் பாபாவின் நினைவில் இவ்வளவு நேரம் இருந்ததற்கான போதையைக் கொண்டிருப்பார்கள். தாங்கள் 15 நிமிடத்திற்கு மேல் யோகம் செய்வதாக எவருமே எழுதமுடியாது; புத்தி அங்கும், இங்கும் அலைபாயும் அனைவரும் தொடர்ச்சியான யோகத்தைக் கொண்டிருந்தார்களாயின், அவர்கள் அனைவரும் கர்மாதீத நிலையை அடைந்திருப்பார்கள். தந்தை பல இனிமையான, அன்பான விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எந்த ஒரு குருவாலும் இவ்வாறு கற்பிக்கமுடியாது. ஒருவர் மாத்திரமே குருவிடமிருந்து கற்கின்றார் என்று இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் குருவிடமிருந்து கற்பார்கள். நீங்கள் சற்குருவிடமிருந்து பெருமளவு கற்றுள்ளீர்கள். இது மாயையைக் கட்டுப்படுத்தும் மந்திரமாகும். ஐந்து விகாரங்களே மாயை என்று கூறப்படுகின்றது. செல்வம் செழிப்பு என்று கூறப்படுகின்றது. இலக்ஷ்மி, நாராயணன் மிகப்பெருமளவில் செல்வத்தைக் கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இலக்ஷ்மி, நாராயணனை தாய், தந்தை என அழைக்கமுடியாது. ஆதிதேவ், ஆதிதேவி ஆகியோரே உலகத்தந்தை, உலகத்தாய் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் (இலக்ஷ்மி, நாராயணன்) இவ்வாறு கூறப்படுவதில்லை. அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாவர். அழியாத ஞான இரத்தினங்களை உள்ளெடுப்பதன் மூலம் நாம் செல்வந்தர்கள் ஆகின்றோம். மக்கள் அம்பாளிடம் பலவிதமான ஆசைகளுடன் செல்கின்றார்கள் ஆனால் அவர்கள் இலக்ஷ்மியிடம் வேறெதற்குமல்லாது செல்வத்திற்காக மட்டுமே செல்கின்றார்கள். ஆகையால் எவர் மகத்துவமானவர்? அவர்கள் அம்பாளிடமிருந்து எதைப் பெறுகின்றார்கள் என்பதும், இலக்ஷ்மியிடமிருந்து எதைப் பெறுகின்றார்கள் என்பதும் எவருக்கும் தெரியாது. அவர்கள் இலக்ஷ்மியிடம் செல்வத்தை மாத்திரமே வேண்டுகிறார்கள். நீங்கள் அம்பாளிடம் இருந்து அனைத்தையும் பெறுகின்றீர்கள். அம்பாள் மிகவும் பிரபல்யமானவர், ஏனெனில் தாய்மார் மிகப் பெரியளவில் துன்பத்தைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆகையால் தாய்மார்; மிகவும் பிரபல்யமானவர்கள் நல்லது. தந்தை கூறுகின்றார் தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். சக்கரத்தை நினைவு செய்து, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். பலரை உங்களைப்போல் ஆக்குங்கள். நீங்கள் தந்தையாகிய கடவுளின் மாணவர்கள். நீங்கள் முன்னைய கல்பத்திலும் இவ்வாறாக ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது அதே இலக்கையும், குறிக்கோளையும் கொண்டிருக்கின்றீர்கள். இதுவே சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுகின்ற உண்மையான கதையாகும்.அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சத்திரசிகிச்சை நிபுணரிடமிருந்து உங்கள் நோயை ஒருபோதும் மறைக்காதீர்கள். மாயையாகிய தீய ஆவிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு இராச்சிய திலகமிடுவதற்கு நீங்கள் நிச்சயமாக சேவை செய்யவேண்டும்.
2. அழியாத ஞான இரத்தினங்களால் உங்களை நிரப்பிக்கொள்வதன் மூலம் செல்வந்தர் ஆகுங்கள். இப்பொழுது பாவ ஆத்மாக்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் வைத்திருக்காதீர்கள். இக்கல்வியில் முழுக்கவனம் செலுத்துங்கள்.
ஆசீர்வாதம்:
கீதையின் பாடத்தைக் கற்று, கற்பிப்பதன் மூலம், பற்றை வென்றவர்களாகவும் நினைவு சொரூபங்களாகவும் ஆகுவீர்களாக.
கீதை ஞானத்தின்; முதலாவது பாடம்: சரீரம் அற்ற ஆத்மா ஆகுங்கள். இறுதி பாடம் பற்றை வென்றவர்களாகவும் நினைவுசொரூபங்களாகவும் ஆகுங்கள் என்பதாகும். முதலாவது பாடம் வழிமுறையாகும், இறுதி பாடம் வழிமுறையின் பெறுபேறாகும். எனவே, ஒவ்வொரு கணமும், முதலில் நீங்கள் இப்பாடங்களைக் கற்றிடுங்கள், பின்னர் அவற்றை பிறருக்குக் கற்பியுங்கள். அத்தகைய மேன்மையான செயல்களைச் செய்யுங்கள், உங்கள் மேன்மையான செயல்களை நீங்கள் செய்து காட்டும் போது, நீங்கள் செய்வதை பார்க்கும் சகல ஆத்மாக்களாலும், மேன்மையான செயல்களை செய்து அதன் மூலம் தமது பாக்கிய ரேகையை மேன்மையாக்கிக் கொள்ள முடியும்சுலோகம்:
கடவுளின் அன்பில் மூழ்கியிருந்தால், கடின உழைப்பிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.