24.09.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, யோக சக்தியின் மூலம் உங்களுக்குள் இருக்கும் தீய சம்ஸ்காரங்களை நல்ல சம்ஸ்காரங்களாக மாற்றுங்கள். ஞானத்தினதும், தூய்மையினதும் சம்ஸ்காரங்கள் நல்ல சம்ஸ்காரங்கள் ஆகும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களது பிறப்புரிமை என்ன? நீங்கள் இப்பொழுது என்ன உணர்வைக் கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்:
முக்தியும், ஜீவன்முக்தியுமே உங்கள் பிறப்புரிமைகள் ஆகும். நீங்கள் இப்பொழுது தந்தையுடன் வீடு திரும்ப வேண்டும் என்ற உணர்வைக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு முக்தியும் ஜீவன்முக்தியும் எனும் உங்கள் பக்தியின் பலனைக் கொடுப்பதற்கே தந்தை வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைவரும் இப்பொழுது அமைதிதாமத்திற்குச் செல்ல வேண்டும். அனைவரும் தங்கள் வீட்டின் காட்சியொன்றைப் பெற வேண்டும்.

ஓம் சாந்தி.
மக்கள் தந்தையை உண்மையான சக்கரவர்த்தி என்று அழைக்கின்றார்கள். ஆங்கிலத்தில் அவர்கள் அவரை அவ்வாறு அழைப்பதில்லை, அவர்கள் உண்மையான தந்தை என்று மாத்திரமே அவரை அழைக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: தந்தையான கடவுளே சத்தியமாவார். பாரதத்தில் மாத்திரமே அவர்கள் அவரை உண்மையான சக்கரவர்த்தி என்று அழைக்கின்றார்கள்; அதில் பெருமளவு வேறுபாடு உள்ளது. அவர் சத்தியத்தை மாத்திரமே பேசுகின்றார். அவர் சத்தியத்தைக் கற்பித்து, உங்களைச் சத்தியமானவர்கள் ஆக்குகின்றார். இங்கே நீங்கள் அவரை உண்மையான சக்கரவர்த்தி என்று அழைக்கின்றீர்கள். அவர் உங்களைச் சத்தியமானவர்கள் ஆக்கி, உங்களைச் சத்திய பூமியின் சக்கரவர்த்திகளாகவும் ஆக்குகின்றார். பக்தியின் பலன் என்று அழைக்கப்படுகின்ற முக்தியையும், ஜீவன்முக்தியையும் அவர் உங்களுக்குக் கொடுப்பது உண்மையாகும்;. முக்தியும் பலனும். அவர் உங்களுக்குப் பக்தியின் பலனைக் கொடுத்து உங்களுக்கு விடுதலை அளிக்கின்றார். அவர் உங்களுக்கு இரண்டையும் அருள்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் அனைவரையும் விடுவித்து, உங்களுக்குப் பலனைக் கொடுக்கின்றார். மொழி உருவாக்கப்பட்டுள்ளது: முக்தியும் பலனும். பல மொழிகள் உள்ளன. சிவபாபாவிற்கும் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவரின் பெயர் சிவபாபா என்று நீங்கள் பிறருக்குக் கூறுவீர்களானால், அவர்கள் கூறுவார்;கள்: நாங்கள் அவரை அதிபதி என்றே அழைக்கின்றோம். அவரை அதிபதி என்று அழைப்பது நல்லதே, இருப்பினும், அவருக்கு ஒரு பெயர் இருக்க வேண்டும். ஒரு பெயரும் வடிவமும் இல்லாது எதுவும் இருக்க முடியாது. அவர் ஏதோ ஒன்றிற்கு அதிபதியாக வேண்டும்! அவருக்கு நிச்சயமாக ஒரு பெயரும் வடிவமும் உள்ளன. தந்தை உங்களை உண்மையாகவே விடுவிக்கின்றார் என்பதும், அனைவரும் நிச்சயமாக அமைதிதாமத்திற்குச் செல்ல வேண்டும் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். அனைவரும் தங்கள் வீட்டின் காட்சியொன்றைப் பெற வேண்டும். நீங்கள் வீட்டிலிருந்தே வந்தீர்கள். ஆதலால் நீங்கள் முதலில் அதன் காட்சியைப் பெறுகின்றீர்கள். அதுவே முக்தியும், சற்கதியும் என அழைக்கப்படுகின்றது. அவர்கள் இவ்வார்த்தைகளை அர்த்தமின்றியே பேசுகின்றார்கள். ‘நாங்கள் எங்கள் வீட்டிற்குச் செல்வதுடன், பலனையும் பெறுவோம்’ என்ற உணர்வு குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. நீங்கள் அனைத்தையும் வரிசைக்கிரமமாகவே பெறுவதால், ஏனைய சமயத்தினர் அனைவரும் நேரத்திற்கு ஏற்பவே அனைத்தையும் பெறுகின்றார்கள். தந்தை இந்தத் துண்டுப் பிரசுரங்கள் மிகவும் சிறந்தவை என்று கூறியுள்ளார்: நீங்கள் நரகவாசியா அல்லது சுவர்க்கவாசியா? முக்தி, ஜீவன்முக்தி இரண்டும் உங்களது இறை தந்தையின் பிறப்புரிமைகள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். இதனை நீங்கள் எழுதவும் முடியும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து இப் பிறப்புரிமைகளைப் பெறுகின்றீர்கள். தந்தைக்கு உரியவர்கள் ஆகுவதனால், நீங்கள் இரண்டையும் பெறுகின்றீர்கள். அது இராவணனின் பிறப்புரிமை. ஆனால் இது பரமாத்மாவான பரமதந்தையிடமிருந்து பெறப்படுகின்ற பிறப்புரிமையாகும், இது கடவுளிடமிருந்து கிடைக்கும் பிறப்புரிமையாகும், ஆனால் அது சாத்தானிடம் இருந்து பெறப்படும் பிறப்புரிமையாகும். மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் நீங்கள் எழுத வேண்டும். குழந்தைகளாகிய நீங்களே இப்பொழுது சுவர்க்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்;. நீங்கள் அதிகளவு வேலை செய்ய வேண்டியுள்ளது! மக்கள் கலியுகத்தைப் பற்றி, அது இன்னமும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளது என கூறுவதைப் போன்றே, நீங்களும் தற்சமயம் குழந்தைகளைப்; போன்றிருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: சத்தியயுக ஸ்தாபனை இன்னமும் குழந்தை பருவத்திலேயே உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஓர் ஆஸ்தியைப் பெறவுள்ளீர்கள். இராவணன் ஓர் ஆஸ்தியைக் கொடுக்கின்றான் என நீங்கள் கூற மாட்டீர்கள். நீங்கள் இறை தந்தையிடமிருந்தே ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அவன் (இராவணன்) தந்தையல்ல. அவன் சாத்தான் என அழைக்கப்படுகின்றான். நீங்கள் சாத்தானிடமிருந்து என்ன ஆஸ்தியைப் பெறுவீர்கள்? நீங்கள் ஐந்து விகாரங்களைப் பெறுகின்றீர்கள், அது நடைமுறையில் இடப்படும்பொழுது (செயலில் இடும்பொழுது) நீங்கள் தமோபிரதான் ஆகுகின்றீர்கள். மக்கள் இப்பொழுது தசேராவை அதிகளவு கொண்டாடுகின்றார்கள்;; அவர்கள் விழாக்களைக் கொண்டாடுகின்றார்கள்;; அவர்கள் பெருமளவு பணத்தைச் செலவழிக்கின்றனர். அவர்கள் வெளிநாடுகளிலிருந்தும் மக்களை வரவழைக்கின்றார்கள். மிகப் பிரபல்யமான தசேராவின் கொண்டாட்டங்கள் மைசூரிலேயே இடம்பெறுகின்றன. அங்கே பல செல்வந்தர்கள் உள்ளனர். இராவண இராச்சியத்தில், அவர்களிடம் பணம் இருக்கும்பொழுது, அவர்கள் தங்கள் பொது அறிவை இழக்கின்றார்கள். தந்தை உங்களுக்கு விபரமாக விளங்கப்படுத்துகின்றார். இது இராவண இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. பின்னர் அது கடவுளின் இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. அதனை இராம இராச்சியம் என்று அழைப்பது பிழையாகும். இராம இராச்சியம் இருக்க வேண்டும் என்று காந்திஜியும் விரும்பினார். காந்திஜி ஓர் அவதாரம் என மக்கள் எண்ணுகின்றார்கள். அவர்கள் அவருக்கு அதிகளவு பணத்தைக் கொடுப்பதுண்டு! அவர்கள் அவரைப் பாரதத்தின் பாபுஜி என்று அழைப்பதுண்டு. இவரே முழு உலகத்திற்கும் பாபு (தந்தை) ஆவார். நீங்கள் இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள், எத்தனை மனிதர்கள் இருப்பார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சரீரங்கள் அழியக்கூடியவை, ஆனால் ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். பல ஆத்மாக்கள் உள்ளனர்; அவர்கள் மேலே வாழும் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அதிக நட்சத்திரங்களா அல்லது அதிக ஆத்மாக்களா உள்ளனர்? நீங்கள் பூமியில் வாழும் நட்சத்திரங்கள், அவை ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்கள். நீங்கள் தேவர்கள் என அழைக்கப்படுவதால், அவர்கள் அந்த நட்சத்திரங்களையும் தேவர்கள் என்று அழைக்கின்றார்கள். நீங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். அச்சா. நீங்கள் இதனைப் பற்றிப் பின்னர் உங்கள் மத்தியில் கலந்தாலோசிக்க முடியும். பாபா இப்பொழுது இதனைப் பற்றி எதுவும் பேசப் போவதில்லை. ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒரேயொரு தந்தையே உள்ளார் என அவர் விளங்கப்படுத்தியுள்ளார். அனைவரும் அவரின் புத்தியில் உள்ளனர். அவரே மனிதர்கள் அனைவருக்கும் தந்தை. முழு உலகமும் கடலின் மேல் (நீரின் மேல்) நிற்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அனைவருக்கும் இது தெரியும் என்றில்லை. முழு உலகிலும் இராவண இராச்சியம் நிலவுகின்றது என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். கடல் கடந்து இராவண இராச்சியம் உள்ளது என்றில்லை: எங்கும் கடல் சூழ்ந்துள்ளது. கீழே ஓர் எருது உள்ளது என்றும், அதன் கொம்புகளில் ஒன்றில் உலகம் ஓய்வாக உள்ளது என்றும், அது களைப்படையும்பொழுது தனது நிலையை மற்றைய கொம்புக்கு மாற்றுகின்றது என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். பழைய உலகம் இப்பொழுது முடிவடைய உள்ளது, புதிய உலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. சமயநூல்களில் அவர்கள் கற்பனைக் கதைகள் வடிவில் அனைத்து வகையான விடயங்களையும் எழுதியுள்ளார்கள். இங்குள்ள ஆத்மாக்கள் அனைவரும் தத்தமது சரீரங்களுடன் உள்ளனர் என்றும், அவர்கள் மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள் என்றும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாக்களின் அவ்வீட்டில் சரீரங்கள் இருப்பதில்லை. அது அசரீரி உலகம் என்று அழைக்கப்படுகின்றது, மனிதர்கள் பௌதீகமானவர்கள்; (சரீரம் உடையவர்கள்). இதனாலேயே இது பௌதீக உலகம் என்று அழைக்கப்படுகின்றது. அசரீரியானவர் தனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. இது பௌதீக உலகமாகும். அது அசரீரியான ஆத்மாக்களின் உலகமாகும். இது உலகம் என்றும், அது அசரீரி உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தில் பிரவேசிக்கும்பொழுதே, அந்த அசைவு ஆரம்பமாகுகின்றது. இல்லாதுவிடின் சரீரத்தினால் பயன் ஏதுமில்லை. எனவே, அது அசரீரி உலகம் என அழைக்கப்படுகின்றது. எத்தனை ஆத்மாக்கள் அங்குள்ளார்களோ, அவர்கள் அனைவரும் இறுதிக்குள் இங்கே வருவார்;கள். ஆகையாலேயே இது அதி மங்களகரமான சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்கள் அனைவரும் கீழே இங்கு வரும் பொழுது, அங்கே ஓர் ஆத்மாவேனும் தங்கியிருப்பதில்லை. அவ்விடம் முற்றிலும் வெறுமையாகும் பொழுது, அனைவரும் திரும்பிச் செல்வார்கள். நீங்கள் அந்தச் சம்ஸ்காரங்களை உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாகச் சுமந்து செல்கின்றீர்கள். சிலர் ஞானத்தின் சம்ஸ்காரங்களையும், சிலர் தூய்மையின் சம்ஸ்காரங்களையும் சுமந்து சென்றாலும், அவர்கள் இங்கேயே வரவேண்டும். எவ்வாறாயினும் நீங்கள் முதலில் வீட்டிற்கே செல்ல வேண்டும். அங்கே நல்ல சம்ஸ்காரங்கள் உள்ளன. இங்கே தீய சம்ஸ்காரங்கள் உள்ளன. நல்ல சம்ஸ்காரங்கள் மாறி, தீய சம்ஸ்காரங்கள் ஆகுகின்றன. அதன்பின்னர் அந்தத் தீய சம்ஸ்காரங்கள் யோக சக்தியின் மூலம் நல்ல சம்ஸ்காரங்கள் ஆகுகின்றன. நீங்கள் நல்ல சம்ஸ்காரங்களை உங்களுடன் அங்கே சுமந்து செல்வீர்கள். தந்தை கற்பிக்கும் சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பதாலேயே, அவர் வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்குப் படைப்பவரதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு விதையினதும், முழு விருட்சத்தினதும் விளக்கத்தையும் கொடுக்கின்றார். விதையின் விளக்கம் ஞானமாகும். விருட்சத்தின் விளக்கம் பக்தியாகும். பக்தியில் பெருமளவு விபரங்கள் உள்ளன. விதையானவரை நினைவுசெய்வது இலகுவாகும். நீங்கள் அங்கே செல்ல வேண்டும். தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவதற்குக் குறுகிய காலமே பிடிக்கின்றது. பின்னர் சதோபிரதானிலிருந்து தமோபிரதான் ஆகுவதற்கு மிகச்சரியாக 5000 வருடங்கள் பிடிக்கின்றன. இச் சக்கரம் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது, அது தொடர்ந்தும் சுழலுகின்றது. வேறு எவராலும் இவ்விடயங்களை உங்களுக்குக் கூற முடியாது. நீங்கள் அவர்களிடம் கூற முடியும். அது இரண்டாகப் பிரிந்துள்ளது: அரைவாசி சுவர்க்கமும், அதன்பின்னர் வரும் அரைவாசி நரகமும் ஆகும். அதன் விபரங்களும் காட்டப்பட வேண்டும். சுவர்க்கத்தில் நீண்ட ஆயுட்காலத்துடன் குறைவான பிறவிகள் உள்ளன. நரகத்தில் அதிகளவு பிறவிகளும் குறைந்தளவு ஆயுட்காலமும் உள்ளது. அங்கே நீங்கள் யோகிகளாகவும், ஆனால் இங்கோ நீங்கள் போகிகளாகவும் (இந்திரிய சுகங்களில் ஈடுபடுபவர்கள்) உள்ளீர்கள். இதனாலேயே இங்கே பல பிறவிகள் உள்ளன. இவ்விடயங்கள் வேறு எவருக்கும் தெரியாது. மக்களுக்கு எதுவும் தெரியாது. தேவர்கள் எப்பொழுது இருந்தார்கள்? அவர்கள் எவ்வாறு அவ்வாறானவர் ஆகினார்கள்? அவர்கள் எவ்வளவு விவேகிகளாக இருந்தார்கள்? உங்களுக்கு மாத்திரமே இவ்விடயங்கள் தெரியும். இந்நேரத்தில் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்து, உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அதன்பின்னர் உங்களது அந்தச் சம்ஸ்காரங்கள் இருக்க மாட்டாது. அவை துன்ப சம்ஸ்காரங்கள் ஆகும். அதேபோன்று உங்களிடம் (இராச்சியத்திற்கான) இராஜரீகமான சம்ஸ்காரங்கள் இருக்கும்பொழுது, ஞானத்தைக் கற்கின்ற சம்ஸ்காரங்கள் முடிவடைகின்றன. இந்தச் சம்ஸ்காரங்கள் முடிவடையும்பொழுது, உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக உருத்திர மாலையில் கோர்க்கப்படுவீர்கள். பின்னர் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருவீர்கள். 84 பிறவிகளை முழுவதுமாக எடுத்துள்ளவர்கள் முதலில் செல்கின்றார்கள். அவர்களின் பெயர்களும் காட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணரே சுவர்க்கத்தின் முதல் இளவரசர் ஆவார். ஒருவர் மாத்திரம் இருப்பதில்லை, முழு இராச்சியமும் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அரசர்களுடன் பிரஜைகளும் தேவைப்படுகின்றார்கள். ஒருவரில் இருந்து ஏனையோர் உருவாக்கப்படுவது சாத்தியம். எட்டுப் பேரும் ஒன்றாகவே வருகின்றார்கள் என்று நீங்கள் கூறினாலும், ஸ்ரீகிருஷ்ணரே முதல் இலக்கத்துக்குரியவர் ஆகுவார். எட்டுப் பேரும் ஒன்றாக வந்த பொழுதிலும் ஏன் கிருஷ்ணரின் புகழ் அதிகளவில் உள்ளது? நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, இவ் விடயங்கள் அனைத்தும் விளங்கப்படுத்தப்படும். பாபா கூறுகின்றார்: இன்று நான் உங்களுக்கு மிகவும் ஆழமான விடயங்களைக் கூறுகின்றேன். சில விடயங்கள் இன்னமும் (விளங்கப்படுத்துவதற்கு) உள்ளன. இது மிகவும் சாதுரியமான வழிமுறையாகும். ஒரு குறிப்பிட்ட விடயத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என நீங்கள் உணர்ந்தால், அப்பொழுது ‘எங்களது மூத்த சகோதரியால் உங்களுக்குப் பதிலளிக்க முடியும்;’ என்று கூறுங்கள். அல்லது நீங்கள் ‘தந்தை இன்னமும் இதனைப் பற்றி விளங்கப்படுத்தவில்லை’ என்று கூற வேண்டும். நாளுக்கு நாள், நான் உங்களுக்கு ஆழமான விடயங்களைக் கூறுகின்றேன். இதனைக் கூறுவதற்கு நீங்கள் மிகவும் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு அனைத்திலும் மிகவும் ஆழமான கருத்துக்கள் கூறப்படும்;பொழுது, நீங்கள் அவற்றைக் கேட்பதால், பெருஞ் சந்தோஷம் அடைகின்றீர்கள். பின்னர் இறுதியில் பாபா கூறுகின்றார்: மன்மனாபவ, மத்தியாஜிபவ! சமயநூல்களை எழுதியுள்ளவர்கள் இவ் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. ஒரு குழந்தை தந்தைக்கு உரியவர் ஆகியவுடன், எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகின்றார். இதில் உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மை இருப்பது அவசியம். இலக்ஷ்மியும் நாராயணனும் தங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்தே பெற்றார்கள். அவர்களே முதல் இலக்கத்தினர், அவர்கள் வழிபடப்படுகின்றார்கள். உங்களையும் பாருங்கள்: ‘என்னிடம் அத்தகைய தெய்வீகக் குணங்கள் உள்ளனவா? இப்பொழுது தெய்வீகக் குணங்களும் இருப்பதில்லை. தங்களின் குறைபாடுகளைப் பற்றி அவர்களில் எவரும் அறியவும் மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் தந்தைக்கு உரியவர்கள் ஆகியுள்ளதால், நிச்சயமாகச் சில மாற்றங்கள் இருக்க வேண்டும். தந்தை உங்கள் புத்தியில் உள்ள பூட்டைத் திறந்துள்ளார். பிரம்மாவினதும், விஷ்ணுவினதும் இரகசியங்களையும் அவர் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். இவர் தூய்மையற்றவர், அவர் தூய்மையானவர். அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே தத்தெடுத்தல் இடம்பெறுகின்றது. பிரஜாபிதா பிரம்மா பிரசன்னமாகியிருக்கும்பொழுதே, அந்தத் தத்தெடுத்தல் இடம்பெறுகின்றது; அது சத்தியயுகத்தில் இடம்பெறுவதில்லை. இங்குள்ளவர்களுக்குக் குழந்தை இல்லாதபொழுது, அவர்கள் ஒருவரைத் தத்தெடுக்கின்றார்கள். நிச்சயமாக பிரஜாபிதாவிற்கும் பிராமணக் குழந்தைகள் அவசியமாகும். நீங்களே வாய்வழித்தோன்றல்கள், ஆனால் ஏனையோர் பௌதீகப் படைப்புக்கள். பிரம்மா மிகவும் பிரபல்யமானவர். அவரின் குடும்பப் பெயர் எல்லையற்றதாகும். அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவை ஆதிதேவர் என்றே எண்ணுகின்றார்கள். ஆங்கிலத்தில் அவர் முப்பாட்டனார் என்று அழைக்கப்படுவார். இதுவே எல்லையற்ற குடும்பப் பெயர். ஏனைய அனைத்தும் எல்லைக்குட்பட்ட குடும்பப் பெயர்கள். இதனாலேயே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எல்லையற்ற தந்தை வருகின்ற பாரதமே அனைத்திலும் மகத்துவம் வாய்ந்த யாத்திரைத் தலம் என்பதை அனைவரும் நிச்சயமாக அறிய வேண்டும். அவர் முழுப் பாரதத்திற்கும் வருகின்றார் என்றில்லை. சமயநூல்களில், அவர்கள் தூய்மையற்ற சிந்த் தேசத்தைப் பற்றி எழுதியுள்ளார்கள், ஆனால் அவர் எங்கு ஞானத்தைக் கற்பித்தார்? அவர் எவ்வாறு அபுவிற்கு வந்தார்? தில்வாலா ஆலயமே மிகச்சரியான ஞாபகார்த்தம். அதனைக் கட்டியவர்கள் தங்கள் புத்தியில் தோன்றியதற்கேற்ப, அதனைக் கட்டினார்கள். மிகச்சரியான மாதிரி உருவாக்கப்பட முடியாது. இங்கேயே தந்தை வந்து, அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார், தூய்மையற்ற இடத்தில் வருவதன் மூலம் அல்ல. அது பாக்கிஸ்தானாக இருந்தது. இது தூய்மையான இடமாகும். உண்மையில், சுவர்க்கம் தூய தாமம் என்று அழைக்கப்படுகின்றது. முழு நாடகமும் தூய்மையையும், தூய்மையின்மையையும் பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, நீண்டகாலம் தொலைந்;து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் நீண்டகாலம் பரமாத்மாவிடமிருந்து பிரிந்திருந்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எவ்வளவு காலத்தின் பின்னர் நீங்கள் பாபாவைச் சந்தித்துள்ளீர்கள்? நீங்கள் மீண்டும் எப்பொழுது அவரைச் சந்திப்பீர்கள்? நீங்கள் முகவர் வடிவத்தில் சற்குருவைக் கண்ட பொழுது, அழகிய சந்திப்பு நிகழ்ந்தது. பல குருமார்கள் உள்ளனர். இதனாலேயே அவர் சற்குரு என அழைக்கப்படுகின்றார். ஒரு பெண் திருமணம் செய்யும்பொழுது, அவளுக்குக் கூறப்படுகின்றது: உங்கள் கணவரே உங்கள் குருவும், உங்கள் கடவுளும் ஆவார். கணவனே முதலில் அவளைத் தூய்மையற்றவர் ஆக்குகின்றான். இந்நாட்களில், உலகில் பெருமளவு தூய்மையின்மை உள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அழகானவர்கள் ஆகவேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை உறுதியானதொரு காப்பை அணிவிக்கின்றார். உண்மையில் சிவஜெயந்தியைப் போன்று அதேநேரத்திலேயே இரக்ஷா பந்தனமும் இடம்பெறுகின்றது. கீதை ஜெயந்தியும் அப்பொழுதே இடம்பெற வேண்டும். கிருஷ்ணரின் பிறப்பு புதிய உலகில் சற்றுப் பின்னரே இடம்பெறுகின்றது. எவ்வாறாயினும், சகல விழாக்களும் இந் நேரத்திற்கே உரியவை. இராமரின் பிறந்தநாள் எப்பொழுது என எவருக்கேனும் தெரியுமா? புதிய உலகம் தோன்றியதன் 1250 வருடங்களுக்குப் பின்னர் இராமரின் பிறந்ததினம் உள்ளது என நீங்கள் கூறுவீர்கள். சிவஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, இராம ஜெயந்தி என்பன எப்பொழுது இடம்பெறுகின்றன என்பதை எவராலும் உங்களுக்குக் கூற முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இதனை இப்பொழுது தந்தையிடமிருந்து அறிந்துள்ளீர்கள். உங்களால்; இதனை மிகவும் சரியாகக் கூற முடியும்;; அதாவது, நீங்கள் அவர்களுக்கு முழு உலகத்தைப் பற்றிய கதையையும் கூற முடியும் என அர்த்தம். உங்களால் நூறாயிரக்கணக்கான வருடங்களுக்குரிய எதையும் கூற முடியாது. தந்தை அத்தகைய சிறந்த, எல்லையற்ற கல்வியைக் கற்பிக்கின்றார். இந்த ஒன்றினால் நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய்மையற்றவராகுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றீர்கள். தற்சமயம், நீங்கள் ஐந்து விகாரங்கள் என்ற இராவணனின் அந்நிய இராச்சியத்தில் இருக்கின்றீர்கள். இப்பொழுது உங்கள் விழிப்புணர்வில் 84 பிறவிகளின் முழுச் சக்கரமும் உள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எல்லையற்ற சந்தோஷம் என்ற ஆஸ்தியைப் பெறுவதற்கு நீங்கள் நிச்சயமாக உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் தூய்மையாக வேண்டும். யோக சக்தியினால் நல்ல சம்ஸ்காரங்களைக் கிரகியுங்கள். உங்களைத் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர் ஆக்குங்கள்.

2. சதா சந்தோஷமாக இருப்பதற்கு, தந்தை உங்களுக்குத் தினமும் கூறுகின்ற ஆழமான இரகசியங்களைச் செவிமடுத்து, பிறருக்கும் அவற்றைக் கூறுங்கள். எதனையிட்டும் குழப்பம் அடையாதீர்கள். சாதுரியமாகப் பதிலளியுங்கள். வெட்கப்படாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் எல்லையற்ற புத்தியைக் கொண்டிருந்து, உங்கள் சுயமரியாதை எனும் ஆசனத்தில் அமர்ந்திருக்கும்பொழுது, உங்கள் சக்திகள் அனைத்தையும் உங்கள் கட்டளைகளுக்கேற்ப தொழிற்படச் செய்வீர்களாக.

உங்கள் எல்லையற்ற புத்தி மூலம் உங்கள் சேவகர்களை, அதாவது, உங்கள் சக்திகள் அனைத்தையும் சரியான நேரத்தில் பயன்படுத்துங்கள். கடவுளிடமிருந்து நேரடியாக நீங்கள் பெற்றுள்ள தலைப்புக்கள் மூலம் போதையடைந்து இருங்கள். உங்கள் சுயமரியாதை எனும் ஆசனத்தில் அமர்ந்திருங்கள். அப்பொழுது நீங்கள் உங்களுடைய சக்திகள் அனைத்தும் சேவை செய்வதற்கு என்றும் தயாராக இருப்பதை அனுபவம் செய்வீர்கள்; அவை உங்கள் கட்டளைகளுக்காகக் காத்திருக்கும். எனவே உங்கள் ஆசீர்வாதங்களையும் ஆஸ்தியையும் பயன்படுத்துங்கள். ஓர் அதிபதியாக இருங்கள், யோகியுக்தாக இருங்கள், உங்கள் சேவகர்களை ஒரு யுக்தியுக்த் முறையில் சேவை செய்யுமாறு செய்யுங்கள். நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் எதற்காகவும் ஒரு வேண்டுகோளை மீண்டும் மீண்டும் இடத் தேவையில்லை.

சுலோகம்:
எந்தப் பணியையும் செய்வதற்கு முன்னர் இவ்விழிப்புணர்வை குறிப்பாக வெளிப்படச் செய்யுங்கள்: “வெற்றியானது ஒரு மேன்மையான பிராமண ஆத்மாவாகிய எனது பிறப்புரிமை ஆகும்”