30.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஸ்ரீமத்தை சதா பின்பற்றுவது மேன்மையான முயற்சியாகும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றும்போது, ஆத்ம தீபம் ஏற்றப்படுகின்றது.
கேள்வி:
யாரால் முழு முயற்சி செய்ய முடியும்? அதியுயர்ந்த முயற்சி என்ன?
பதில்:
யாருடைய கவனம் அதாவது புத்தியின் யோகம் ஒரேயொருவருடன் இணைக்கப் பட்டிருக்கின்றதோ அவர்களாலேயே முழு முயற்சி செய்யமுடியும். உங்களை முழுமையாகத் தந்தையிடம் அர்ப்பணிப்பதே அதியுயர்ந்த முயற்சியாகும். தங்களைத் தந்தையிடம் அர்ப்பணிக்கின்ற குழந்தைகளைத் தந்தை நேசிக்கின்றார்.கேள்வி:
உண்மையான தீபாவளியைக் கொண்டாடுவதற்கு, எல்லையற்ற தந்தை உங்களுக்கு என்ன ஆலோசனை வழங்குகின்றார்?
பதில்:
குழந்தைகளே, எல்லையற்ற தூய்மையைக் கிரகியுங்கள். இங்கு நீங்கள் எல்லையற்ற வகையில் தூய்மையாகி, அதியுயர்ந்த முயற்சியைச் செய்தாலே உங்களால் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்திற்குச் செல்லமுடியும். அதாவது, பட்டாபிஷேக தினமாகிய உண்மையான தீபாவளியை உங்களால் கொண்டாட முடியும்.ஓம் சாந்தி.
இங்கு அமர்ந்திருக்கும்போது, குழந்தைகளாகிய நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும், இங்கு அமர்ந்திருக்கும்போதும் நினைவு யாத்திரையில் நிலைத்திருந்தாலேயே உங்கள் தலைமீதுள்ள பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மா எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றாரோ, அந்தளவிற்கு அவரது பாவங்கள் அழிக்கப்படும் என்பது ஆத்மாவிற்குத் தெரியும். தந்தை உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் இங்கு அமர்ந்திருந்தாலும், ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்கள் மாத்திரமே தந்தை கொடுக்கின்ற ஆலோசனைகளை விரும்புகின்றார்கள். நீங்கள் எல்லையற்ற முறையில் தூய்மையாகுவதற்கான ஆலோசனையை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். நீங்கள் ஓர் எல்லையற்ற முறையில் தூய்மையாகுவதற்காகவே இங்கு வந்திருக்கின்றீர்கள். நினைவு யாத்திரை மூலமாகவே அவ்வாறு நீங்கள் ஆகுவீர்கள். சிலரால் முற்றாகவே நினைவு செய்ய முடிவதில்லை. சிலர் நினைவு யாத்திரை மூலம் தங்களது பாவங்கள் அழிக்கப்படுவதை, அதாவது தங்களுக்குத் தாங்கள் நன்மை செய்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றார்கள். வெளியிலிருக்கும் மக்களுக்கு இது தெரியாது. நீங்கள் மாத்திரமே தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். நீங்கள் தந்தையுடனேயே இருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் கடவுளின் குழந்தைகளாகியிருப்பதை அறிவீர்கள். முன்னர், நீங்கள் அசுரக் குழந்தைகளாகவே இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் கடவுளின் குழந்தைகளின் சகவாசத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். நல்ல சகவாசம் உங்களை அக்கரைக்குக் கொண்டுசெல்லும், தீய சகவாசமோ உங்களை மூழ்கடித்துவிடும் எனப் பாடப்படுகின்றது. நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதால், உங்களது சொந்தக் கட்டளைகளையன்றி, இறை கட்டளைகளையே பின்பற்ற வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்துவிடுகின்றீர்கள். மனிதக் கட்டளைகள் மனதின் கட்டளைகள் எனப்படுகின்றன. மனிதக் கட்டளைகள் அசுரத்தனமானதாகவே இருக்கமுடியும். தங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் குழந்தைகள் சதோபிரதானாகுவதற்காக சதா தந்தையை மிக நன்றாக நினைவு செய்கிறார்கள். சதோபிரதானானவர்கள் புகழப்படுகிறார்கள். நீங்கள் உண்மையில் வரிசைக்கிரமமாக, சந்தோஷதாமத்தின் அதிபதிகளாகுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஸ்ரீமத்தை எந்தளவிற்குப் பின்பற்றுகிறீர்களோ, அந்தளவிற்கு ஓர் உயாந்;த அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் சொந்தக் கட்டளைகளை எந்தளவிற்குப் பின்பற்றுகிறீர்களோ, அதற்கேற்ப உங்களுடைய அந்தஸ்து அழிக்கப்படும். நீங்கள் உங்களின் சொந்த நன்மைக்காகவே தந்தையின் வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் பெறுகிறீர்கள். இதுவும் முயற்சியே எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நினைவு யாத்திரையின்றி உங்களால் தூய்மையாக முடியாது.நடக்கும்போதும், உலாவித்திரியும்போதும், இந்த ஒரே அக்கறையைக் கொண்டிருங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இக்கற்பித்தல்களைப் பல வருடங்களாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். எனினும், நீங்கள் வெகு தூரத்திலேயே இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். உங்களால் அந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்ய முடியாதுள்ளது. சதோபிரதான் ஆகுவதற்கு அதிக காலம் எடுக்கும். எனவே, அதற்கிடையில் நீங்கள் உங்கள் சரீரத்தை நீக்கினால், கல்பம் கல்பமாக உங்கள் அந்தஸ்து குறைவாகவே இருக்கும். நீங்கள் இப்பொழுது கடவுளுக்கு உரியவர்கள். எனவே உங்களுடைய முழு ஆஸ்தியையும் அவரிடமிருந்து பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். உங்களுடைய புத்தி ஒரேயொரு வழிகாட்டலிலேயே இருக்கவேண்டும். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். அவர் அதிமேலான கடவுள். நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றாவிட்டால், அதிகளவு ஏமாற்றப்படுவீர்கள். நீங்கள் அவற்றைப் பின்பற்றுகிறீர்களா இல்லையா என்பது உங்களுக்கும் சிவபாபாவுக்கும் மாத்திரமே தெரியும். சிவபாபாவே உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றார். சரீரதாரிகள் அனைவரும் முயற்சி செய்கின்றார்கள். இவரும் சரீரதாரியே. சிவபாபா இவரை முயற்சி செய்யத் தூண்டுகின்றார். குழந்தைகளாகிய நீங்களே முயற்சி செய்யவேண்டும். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதே பிரதான விடயமாகும். உலகில், தூய்மையானோர் பலர் உள்ளனர். சந்நியாசிகளும் தூய்மையாக இருக்கின்றார்களாயினும் அவர்கள் ஒரு பிறவிக்கே தூய்மையாக இருக்கின்றார்கள். பிறப்பிலிருந்தே பிரம்மச்சாரிகளாக உள்ள பலர் இருக்கின்றார்களாயினும், தூய்மையின் மூலம் அவர்களால் உலகிற்கு உதவ முடியாது. நீங்கள் ஸ்ரீமத்திற்கேற்ப தூய்மையாகி, உலகையும் தூய்மையாக்கும்போதே உதவி வழங்கப்பட முடியும். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். பிறவி பிறவியாக நீங்கள் அசுரக் கட்டளைகளையே பின்பற்றி வந்தீர்கள். சந்தோஷதாமம் ஸ்தாபிக்கப்படுவதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீமத்திற்கேற்ப நாங்கள் எந்தளவிற்கு அதிகமாக முயற்சி செய்கின்றோமோ, அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவோம். இவை பிரம்மாவின் வழிகாட்டல்களல்ல. அவர் ஒரு முயற்சியாளர். அவருடைய முயற்சி நிச்சயமாக மேன்மையாக உள்ளது. இதனாலேயே அவர் நாராயணனாகின்றார். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த மனக் கட்டளைகளையன்றி, ஸ்ரீமத்தையே பின்பற்ற வேண்டும். நீங்கள் உங்கள் ஆத்மாவிற்கு நீங்கள் ஒளியேற்ற வேண்டும். இப்பொழுது தீபாவளி வருகின்றது. எனினும், சத்தியயுகத்தில் தீபாவளி இருக்கமாட்டாது. அங்கு பட்டாபிஷேகம் மாத்திரமே நடைபெறுகின்றது. ஆத்மாக்கள் சதோபிரதானாகியிருப்பார்கள். இப்பொழுது கொண்டாடப்படும் தீபாவளி பொய்யானது. அவர்கள் வெளியே தீபங்களை ஏற்றுகின்றார்களாயினும், அங்கு ஒவ்வொரு வீட்டிலும் தீபமேற்றப்பட்டிருக்கும், அதாவது, அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் சதோபிரதானாக இருப்பார். ஊற்றப்படும் ஞான எண்ணெய் 21 பிறவிகளுக்கு நீடித்திருக்கின்றது. பின்னர், அது படிப்படியாக மங்க ஆரம்பித்து, இன்று முழு உலகினதும் ஒளி அணைந்துவிட்டது. இதிலும், குறிப்பாக பாரதத்திலும், பொதுவாக முழு உலகிலும் அனைவரும் இப்பொழுது பாவாத்மாக்களாகவே உள்ளனர். இது அனைவரும் கணக்கைத் தீர்ப்பதற்கான காலமாகும். அனைவரும் தங்கள் கர்மக்கணக்குகளைத் தீர்க்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அதியுயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு இப்பொழுது முயற்சி செய்யவேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலமே நீங்கள் அதனைப் பெறுவீர்கள். இராவண இராச்சியத்தில், சிவபாபாவிற்கு நீங்கள் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள். இப்பொழுதும், நீங்கள் அவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால், அதிகளவு ஏமாற்றப்படுவீர்கள். வந்து உங்களைத் தூய்மையாக்குமாறு நீங்கள் அவரைக் கூவியழைத்தீர்கள். எனவே, இப்பொழுது, உங்களுக்கு நன்மையளிப்பதற்கு, நீங்கள் சிவபாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிடில், பெரும் இழப்பே ஏற்படும். சிவபாபாவின் நினைவைக் கொண்டிராமல் உங்களால் முற்றிலும் தூய்மையானவர்களாக முடியாது என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இங்கு பல வருடங்களாக இருக்கின்றீர்களாயினும், ஏன் உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியவில்லை? உங்களிடம் ஒரு தங்கப் பாத்திரம் இருந்தால் மாத்திரமே உங்களால் கிரகிக்க முடியும். புதிய குழந்தைகள் சிறந்த சேவாதாரிகள் ஆகுகின்றனர். எவ்வளவு வேறுபாடு உள்ளதெனப் பாருங்கள்! புதியவர்கள் நினைவு யாத்திரையில் இருக்குமளவிற்குப் பழையவர்கள் இருப்பதில்லை. சிவபாபாவின் மிக நல்ல, அன்பிற்கினிய குழந்தைகள் வந்து, அதிக சேவை செய்கின்றனர். அது, அவர்கள் தங்கள் ஆத்மாவை சிவபாபாவிடம் அர்ப்பணித்துவிட்டதைப் போன்றுள்ளது. தங்களை அர்ப்பணிப்பதன் மூலம் அவர்கள் அதிக சேவையும் செய்கின்றனர். அவர்கள் மிக இனிமையானவர்களும், அன்பானவர்களும் ஆவார்கள். நினைவு யாத்திரையில் இருப்பதன் மூலம் அவர்கள் தந்தைக்கு உதவி செய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். வந்து உங்களைத் தூய்மையாக்குமாறு நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள். எனவே, தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். நீங்கள் சரீர உறவுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். ஒரேயொரு தந்தையைத் தவிர உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்ற எவருமே நினைவு செய்யப்படக்கூடாது. அப்பொழுதே உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியும். நீங்கள் நினைவைக் கொண்டிராவிடின் உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியாது. பாப்தாதாவாலும் இதனைப் புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளாகிய நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். வருகின்ற புதியவர்களும் நாளுக்கு நாள் தாங்கள் முன்னேறிக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்கின்றார்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாத்திரமே நீங்கள் சீர்திருத்தப்படுகிறீPர்கள். கோபத்தை வெற்றிகொள்ள முயற்சி செய்வதன் மூலம், நீங்கள் படிப்படியாக வெற்றி பெறுவீர்கள். தந்தையும் விளங்கப்படுத்துகிறார்: தொடர்ந்தும் குறைபாடுகளை அகற்றுங்கள். கோபம் மிகவும் தீயதாகும். அது உங்களை உள்ளுக்குள் எரித்து மற்றவர்களையும் எரிக்கின்றது. அது அகற்றப்பட வேண்டும். குழந்தைகள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதபோது, அவர்களின் அந்தஸ்து குறைக்கப்படுவதுடன், பிறவி பிறவியாக, கல்பம் கல்பமாக இழப்பே ஏற்படுகின்றது. அது பௌதீகக் கல்வி, இதுவோ ஆன்மீகத் தந்தை கற்பிக்கின்ற ஆன்மீகக் கல்வி என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எல்லாவிதத்திலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். விகாரமுடைய எவரும் இங்கு மதுவனத்திற்கு வரமுடியாது. நீங்கள் சுகவீனமுற்றிருக்கும்போது விகாரத்தில் ஈடுபடும் உங்கள் நண்பர்களும், உறவினர்களும் வருவார்களாயின் அதுவும் நல்லதல்ல. நாங்கள் அதை விரும்பமாட்டோம். ஏனெனில் இறுதிக் கணங்களில் அந்த நண்பர்களும், உறவினர்களுமே நினைவு செய்யப்படுவார்கள். அப்பொழுது உங்களால் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியாதிருக்கும். தந்தை தொடர்ந்தும் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறார். எவருமே நினைவு செய்யப்படக்கூடாது. நீங்கள் சுகவீனமாக இருப்பதால் உங்கள் நண்பர்களும் உறவினர்களும் உங்களை வந்து பார்க்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. இல்லை. அவர்களை அழைப்பது வழக்கம் அல்ல. ஒழுங்குகளைப் பின்பற்றுவதால் மாத்திரமே ஜீவன் முக்தி பெறப்படுகிறது. அல்லாவிடின் உங்களுக்கு நீங்களே அநாவசியமாக இழப்பை ஏற்படுத்திக்கொள்கின்றீர்கள். எவ்வாறாயினும் தமோபிரதான் புத்தியுடையவர்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. கடவுள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இருந்தும் அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்வதில்லை! நீங்கள் இங்கு மிகுந்த எச்சரிக்கையுடன் முன்னேற வேண்டும். இதுவே புனித இடங்கள் அனைத்திலும் அதி புனிதமான இடமாகும். தூய்மையற்றவர்களால் இங்கு தங்க முடியாது. நீங்கள் உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு செய்வீர்களாயின் மரணிக்கும் தறுவாயில் நிச்சயமாக அவர்களையே நினைவு செய்வீர்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதால் நீங்கள் உங்களுக்கு ஒர் இழப்பையே ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். இதுவும் தண்டனைக்கு ஒரு காரணமாகின்றது. ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால் பெரும் சீரழிவு ஏற்படுவதுடன் உங்களால் சேவை செய்யத் தகுதிவாய்ந்தவராகவும் முடியாது. நீங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உங்களால் சேவைசெய்யத் தகுதிவாய்ந்தவராக முடியாது. நீங்கள்; கீழ்ப்படிவற்றலராக இருந்தால் கல்லுப்புத்தி உடையவர்கள் ஆகுவீர்கள். மேலேறுவதற்குப் பதிலாக வீழ்ந்துவிடுவீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் கீழ்ப்படிவானவர்கள் ஆகவேண்டும். அல்லாவிடின் உங்கள் அந்தஸ்து அழிக்கப்பட்டுவிடும். ஒரு லௌகீகத் தந்தைக்கு நான்கு முதல் ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்களில் அவர் கீழ்ப்படிவானவர்கள் மீதே அதிக அன்பு கொண்டிருக்கிறார். கீழ்ப்படிவற்றவர்கள் துன்பத்தையே விளைவிக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மகத்தான இரு தந்தையரைக் கண்டறிந்துள்ளீர்கள். நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கக்கூடாது. நீங்கள் கீழ்ப்படிவற்றவர்களாக இருப்பீர்களாயின், பிறவி பிறவியாக கல்பம் கல்பமாக மிகக் குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். நீங்கள் இறுதியில் சிவபாபாவை மாத்திரமே நினைவு செய்யக்கூடியதாக அத்தகைய முயற்சியைச் செய்யுங்கள். தந்தை கூறகிறார்: நீங்கள் ஒவ்வொருவரும் என்ன முயற்சி செய்கின்றீர்கள் என என்னால் அறிய முடியும். சிலர் மிகக் குறைவாகவே நினைவு செய்கிறார்கள். சிலர் தொடர்ந்தும் தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் நினைவுசெய்கிறார்கள். அவர்களால் சந்தோஷமாக இருக்கவோ ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறவோ முடியாது. உங்களுக்கு ஒவ்வொரு நாளும் சற்குருவார் தினமாகும். சிறுவர்கள் ஜூப்பிற்றர் தினமாகிய வியாழக்கிழமையன்றே கல்லூரியில் சேர்க்கப்படுகின்றார்கள். அது பௌதீக ஞானம், இதுவோ ஆன்மீக ஞானமாகும். சிவபாபா எங்களின் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும், அப்பொழுதே உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியும். முயற்சியாளர்கள் தங்களுக்குள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டுள்ளார்கள், கேட்கவே வேண்டாம்! நீங்கள் சந்தோஷமாக இருந்தால், மற்றவர்களையம் சந்தோஷமாக்குவதற்கு முயற்சி செய்வீர்கள். சில புத்திரிகள் இரவு பகலாகத் தொடர்ந்து எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் எனப் பாருங்கள். ஏனெனில் இந்த ஞானம் அற்புதமானது. சில குழந்;தைகள் புரிந்துணர்வின்மையால் தங்களுக்கு அதிக இழப்பை ஏற்படுத்துவதால் பாப்தாதா கருணை கொள்கின்றார். அவர்கள் சரீர உணர்வுடையவர்களாகி உள்ளுக்குள் மிகவும் பொறாமைப்படுகிறார்கள். கோபத்தில், மக்கள் செப்பைப் போன்று செந்நிறமாகிவிடுகின்றார்கள். கோபம் மனிதர்களை எரித்துவிடுகின்றது. காமம் அவர்களை அவலட்சணமாக்குகின்றது. பற்றினாலோ பேராசையினாலோ அவர்கள் அந்தளவு எரிவதில்லை. அவர்கள் கோபத்தினாலேயே எரிகிறார்கள். பலர் கோபம் எனும் தீய ஆவியைக் கொண்டுள்ளனர். அவர்கள் பெருமளவு சண்டையிடுகிறார்கள். சண்டையிடுவதால், அவர்கள் தங்களுக்கு ஓர் இழப்பையே ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் அசரீரியானவருக்கும், சரீரதாரியானவருக்கும் கீழ்ப்படிவில்லாமல் நடக்கிறார்கள். அவர்கள் தகுதியற்றவர்கள் என்பதைத் தந்தை புரிந்துகொள்கிறார். நீங்கள் முயற்சி செய்தால் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். எனவே, உங்களுடைய சொந்த நன்மைக்காக நீங்கள் உங்கள் உறவினர்கள் அனைவரையும் மறந்துவிட வேண்டும். தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். வீட்டில் வாழும்போதும், உங்கள் உறவினர்களைக் காணும்போதும், சிவபாபாவை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இப்பொழுது சாந்திதாமமாகிய உங்களுடைய புதிய வீட்டை நினைவுசெய்யுங்கள். இது ஓர் எல்லையற்ற கல்வியாகும். தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். அதில் குழந்தைகளாகிய உங்களுக்கு நன்மையே கிடைக்கின்றது. சில குழந்தைகள் தங்களுடைய தவறான நடத்தையினால் அநாவசியமாகப் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். நீங்கள் உலக இராச்சியத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். ஆனால் பூனையாகிய மாயையோ உங்கள் காதுகளைத் துண்டித்துவிடுகின்றாள். நீங்கள் பிறப்பெடுத்துவிட்டீர்கள், எனவே நீங்கள் அந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள் எனக் கூறுகின்றீர்கள். எனினும், பூனையாகிய மாயை உங்களை அதனை அடைய அனுமதிக்கமாட்டாள். எனவே உங்களுடைய அந்தஸ்து அழிக்கப்படுகிறது. மாயை உங்களை மிகுந்த விசையுடன் தாக்குகிறாள். நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள். எனினும், மாயை உங்களைத் தொந்தரவு செய்கின்றாள். தந்தை கருணை காட்டுகின்றார். ஏழைக் குழந்தைகள் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றால் நன்றாயிருக்கும் எனவும், அவர்கள் தன்னை இகழ்பவர்கள் ஆகிவிடக்கூடாது எனவும் தந்தை உணர்கின்றார். சற்குருவை இகழ்பவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியாது. அது யாருடைய இகழ்ச்சி? சிவபாபாவினுடையதாகும். உங்களுடைய நடத்தை அத்தகைய தந்தை இகழப்படுவதாக இருக்கக்கூடாது. இதில் அகங்காரம் என்ற கேள்விக்கே இடமில்லை. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தையாகவும், தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் சொந்த நன்மைக்காக சரீர உறவுகள் அனைத்தையும் மறந்துவிடுங்கள். அவர்கள்மீது அன்பு வைக்காதீர்கள். உங்களுடைய சொந்த வழிகாட்டல்களையன்றி, கடவுளின் வழிகாட்டல்களையே பின்பற்றுங்கள். தீய சகவாசத்திலிருந்து உங்களைப் பாதுகாத்து கடவுளின் சகவாசத்தில் இருங்கள்.2. கோபம் மிகவும் தீயதாகும். அது உங்களை எரித்துவிடுகின்றது. கோபத்தின் ஆதிக்கத்தினால் கீழ்ப்படிவின்றி இருக்காதீர்கள். சந்தோஷமாக இருந்து, ஏனைய அனைவரையும் சந்தோஷமாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
இதயங்களுக்கு ஆறுதலளிக்கும் திலாராமிடமிருந்து ஆசீர்வாதங்களை இதயபூர்வமாகப் பெற்றதை உணர்ந்தவர்கள் தாங்களே சுயமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வார்களாக.உங்களை மாற்றிக் கொள்வதற்கு இரு விடயங்களைப் புரிந்துணர்வதற்கான ஒரு நேர்மையான இதயம் தேவை. 1;).உங்கள் பலவீனங்களின் புரிந்துணர்வு. 2)சில சூழ் நிலைகளுக்குக் கருவிகளாகி இருக்கும் மக்களின் மனதிலுள்ள ஆசைகள் மற்றும் உணர்வுகளின் புரிந்துணர்வு. சித்தி அடைவதற்கு சூழ்நிலைக்கான வினாத்தாளின் காரணத்தை நீங்கள் புரிந்து கொள்வதுடன் உங்கள் மேன்மையான வடிவத்தின் புரிந்துணர்வையும் நீஙகள் கொண்டிருக்க வேண்டும். உங்கள் ஆதி ஸ்திதி மேன்மையானது எனவும், சூழ்நிலை ஒரு வினாத்தாளே என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் புரிந்துணர்வு இலகுவாக மாற்றத்தைக் கொண்டுவரும். நேர்மையான இதயத்துடன் நீங்கள் புரிந்துணர்வைக் கொண்டிருக்கும்போது இதயத்திற்கு ஆறுதல் அளிப்பவரிடமிருந்து நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.
சுலோகம்:
வாரிசு என்பவர் என்றும் தயாராக இருப்பவர். பிரபுவே நான் ஒவ்வொரு பணிக்கும் நான் தயாராக உள்ளேன்.