25/10/18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இக் கல்வி எந்தச் செலவும் அற்றதும், இலகுவானதும் ஆகும். உங்கள் அந்தஸ்து நீங்கள் ஏழைகளா அல்லது பணக்காரர்களா என்பதில் அல்லாது நீங்கள் எவ்வாறு கற்கிறீர்கள் என்ற அடிப்படையிலேயே உள்ளது. ஆகையால் கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள்.

கேள்வி:
ஞானம் நிறைந்த ஆத்மாக்களின் முதல் தகுதி யாது?

பதில்:
அவர்கள் அனைவருடனும் மிகவும் இனிமையாக பழகுவார்கள். சிலருடன் நட்பும் பிறரிடம் குரோதமும் கொண்டிருப்பது ஞானம் நிறைந்த ஆத்மாக்களின் தகுதி அல்ல. தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, இனிமையிலும் இனிமையானவர்கள் ஆகுங்கள். ‘ஆத்மாவாகிய நான் இச் சரீரத்தை இயக்குகின்றேன். நான் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும்’ என்பதைப் பயிற்சி செய்யுங்கள்.

பாடல்:
நீங்களே அன்புக் கடல். நாங்கள் ஒரு துளிக்காக ஏங்குகின்றோம்.....

ஓம் சாந்தி.
யாருடைய புகழைக் குழந்தைகள் செவிமடுத்தார்கள்? அசரீரியான எல்லையற்ற தந்தையின்; புகழையாகும். அவரே ஞானக்கடலும் அதி மேலானவரும் ஆவார். அவர் மாத்திரமே அதி மேலான தந்தை என அழைக்கப்படுகின்றார். அவர் பரம ஆசிரியர், அதாவது ஞானக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றார். இது எங்கள் தந்தையின் புகழ் என்பதனை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவரின் மூலம் குழந்தைகளாகிய எங்கள் ஸ்திதியும் அவருடையது போன்றே ஆக வேண்டும். அவரே தந்தையர்கள் அனைவரிலும் அதி மகத்துவம் வாய்;ந்தவர் ஆவார். அவர் ஒரு சாதுவோ அல்லது புனிதரோ அல்ல. அவர் எல்லையற்ற தந்தையும், அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையும் ஆவார். அவரே எங்கள் எல்லையற்ற தாய், தந்தை, கணவன் போன்ற அனைவரும்; ஆவார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. எங்களின் அனைத்தும் அவரேயாவார். ஆனால் இப்போதை எவருக்கும் எப்பொழுதும் இருப்பதில்லை. குழந்தைகள் மீண்டும் மீண்டும் இதனை மறக்கின்றார்கள். அனைவரும் அரைக்கல்பத்திற்கு நினைவு செய்து கொண்டிருந்த அவரே அனைவரிலும் அதி மேலான தந்தையும், அனைவரிலும் அதி இனிமையிலும் இனிமையான தந்தையும் ஆவார். அவர்கள் இலக்ஷ்மி நாராயணனை அதிகளவு நினைவு செய்வதில்லை. பக்தர்களின் கடவுள் ஒரேயொரு அசரீரியானவர் மாத்திரமேயாவார். அவரை மாத்திரமே அனைவரும் நினைவு செய்கின்றார்கள். சிலர் இலக்ஷ்மி நாராயணன் அல்லது கணேசர் போன்றவரில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், அவர்கள் எவ்வாறாயினும் ‘ஓ கடவுளே!’ என்றே கூறுகின்றார்கள். ‘ஓ பரமாத்மா’ என்ற வார்த்தை நிச்சயமாக அனைவரது உதடுகளிலுமிருந்து வெளிப்படுகின்றது. ஆத்மாக்கள் அவரை நினைவு செய்கின்றார்கள். பௌதீக பக்தர்கள் பௌதீக விடயங்களையே நினைவு செய்கின்றார்கள். இருந்தும், ஆத்மாக்கள் தங்கள் தந்தைக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருப்பதால், நிச்சயமாக அவர்கள் அவரை நினைவு செய்கின்றார்கள். துன்பத்தில் ‘ஓ பரமாத்மா!’ என்ற சத்தம் விரைவாக வெளிப்படுகின்றது. கடவுள் அசரீரியானவர் என்பதனை அவர்கள் நிச்சயமாகப் புரிந்து கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாது. அவர் நேரடியாகவே உங்கள் முன்னிலையில் வந்திருப்பதால், அதன் முக்கியத்துவத்தை நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவரே சுவர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். அவர் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் கற்பிக்கின்றார். இந்த ஒரு கல்வி மாத்திரமே உள்ளது. பௌதீக விடயங்கள் பற்றிய பல்வேறு கல்விகள் உள்ளன. ஒருவரது மனம் கல்வியில் ஈர்;க்கப்படவில்லையானால் அவர் அந்த கல்வியை விட்டு விலகி விடுவார். இக் கல்வியைப் பொறுத்தவரை பணம் போன்றவற்றிற்கான கேள்விக்கு இடமில்லை. அந்த அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசக் கல்வியை தருகின்றது. இங்கே, இது எவ்வாறாயினும் இலவசமாகவே கிடைக்கின்றது. எந்தக் கட்;டணமும் அறவிடப்படப்படுவதில்லை. தந்தை ஏழைகளின் பிரபு என அழைக்கப்படுகின்றார். இங்கே ஏழைகள் மாத்திரமே கற்கின்றார்கள். இது மிகவும் இலகுவானதும் செலவற்ற கல்வியும் ஆகும். மனிதர்கள் தங்களைக் காப்புறுதி செய்கின்றார்கள். இங்கே, நீங்கள் அனைத்தையும் காப்புறுதி செய்கின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, இதற்கு பிரதிபலனாக 21 பிறவிகளுக்கு நீங்களே எங்களுக்கு சுவர்க்கத்தில் கொடுங்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் கூறுவதில்லை: ஒ பரமாத்மாவாகிய பரமதந்தையே, எங்களுக்கு 21 பிறவிகளுக்கு ஆஸ்தியைக் கொடுங்கள். நீங்கள் இப்பொழுது நேரடியாகவே உங்களைக் காப்புறுதி செய்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். கடவுளே பலனைக் கொடுக்கின்றார் என இவர் எப்பொழுதும் கூறுகின்றார். கடவுள் அனைவருக்கும் கொடுக்கின்றார். ஒரு சாதுவாக இருந்தாலும் புனிதராக இருந்தாலும் அல்லது மாயாஜாலச் சக்தி நிறைந்த ஒருவராக இருந்தாலும் கடவுளே அனைவருக்கும் கொடுக்கின்றார். ஆத்மா கூறுகின்றார்: கடவுளே அனைவருக்கும் கொடுக்கின்றார். ஒருவர் தானம் செய்தால் அல்லது புண்ணியம் செய்தால்; கடவுளே அதற்கான பலனைக் கொடுக்கின்றார். இக்; கல்விக்கு எச் செலவும் செய்யத் தேவையில்லை. ஏழைகளும் அதிகளவு காப்புறுதி செய்கின்றார்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். செல்வந்தர் ஒருவர் நூறாயிரம் ரூபாய்களுக்கான காப்புறதியைச் செய்திருக்கலாம். அதற்காக அவர் நூறாயிரம் ரூபாயைப் பலனாகவும் பெறலாம். ஒரு ஏழை ஒரு ரூபாயைக் காப்புறுதி செய்தல், ஒரு செல்வந்தர் 5000 ரூபாயைக் காப்புறுதி செய்தல் இரண்டும் சமமேயாகும் . இது ஏழைகளுக்கு மிகவும் இலகுவாகும். கட்டணம் போன்ற எதுவும் இல்லை. ஏழைகள், செல்வந்தர் இருவருக்குமே தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்ற உரிமை உள்ளது. அனைத்தும் எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கி உள்ளது. ஏழை ஒருவர் நன்றாகக் கற்றால் அவரின் அந்தஸ்து, செல்வந்தர் ஒருவரிலும் பார்க்க உயர்ந்ததாக இருக்கும். இக் கல்வி ஒரு வருமானமாகும். இது செலவற்றதும். மிகவும் இலகுவானதுமாகும். நீங்கள் மனித உலக விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்கள் எவருக்கும் இது தெரியாது. எவரும் திரிகாலதரிசிகளாக இருக்க முடியாது. அனைவரும் கடவுள் முடிவற்றவர் எனக் கூறுகின்றார்கள். பரமாத்மாவே மனித உலக விருட்சத்திற்கு விதையானவர் என்றும் நம்புகின்றார்கள். இது ஒரு தலைகீழான விருட்சமாகும். எவ்வாறாயினும், தங்களுக்கு அது மிகச்சரியாகத் தெரியாது என்று அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவரும், அதனைப் பற்றி மிகச் சரியாகக் கூறுபவரும் ஆவார். அனைத்தும் குழந்தைகளாகிய நீங்கள் கற்பதிலேயே தங்கியுள்ளது. நீங்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப நீங்கள் இதை இப்பொழுது வரிசைக்கிரமமாகவே தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மாஸ்டர் ஞானக்கடல் ஆகுவீர்கள். அனைவரும் ஒரேமாதிரி இருக்க முடியாது. சிலர் பெரிய நதிகள், சிலர் சிறிய நதிகள் ஆவார்கள். நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த முயற்சிக்கு ஏற்ப கற்கின்றீர்கள். இவரே எங்கள் எல்லையற்ற தந்தை என்பது குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் அவருக்கு உரியவராகி, அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். சிலருக்குக் கூறப்படுகின்றது: அந்த அப்பாவி மனிதர் யாரோ ஒருவரது செல்வாக்கில் இருக்கின்றார். அவர்கள் மாயையின் செல்வாக்கில் அகப்பட்டுப் பிழையான கட்டளைகளைப் பின்பற்றுகின்றார்கள். ஸ்ரீமத் கடவுளின் வாசகங்கள் ஆகும். இதன் மூலமே நீங்கள் அனைவரிலும் அதி மேலான தேவர்கள் ஆகுகின்றீர்கள். முதலில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அதன் பின்னர் நீங்கள் சிவபாபாவைச் சந்திக்க முடியும். ஒருவருக்கு மிகச்சரியான நம்பிக்கை இல்லாதிருந்தால் அதனை பாபாவினால் புரிந்து கொள்ள முடியும். ஆத்மாக்களின் தந்தை இவரே என்பதனை அவர்கள் புரிந்து கொண்டிருந்தாலும், அவர் இவரில் பிரவேசித்து எங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு அதிகளவு சிரமம் உள்ளது. இது அவர்களின் புத்தியில் நிலைத்திருந்து அதனை அவர்கள் எழுதினால் அவர்கள் எழுதியவற்றை நீங்கள் பாபாவிடம் காட்ட முடியும். இது சரியென்பதனையும் முன்னர், நீண்ட காலமாக அவர்கள் விளங்கிக் கொண்டிருந்தது தவறு என்பதனையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். கடவுள் சர்வவியாபகர் அல்லர். அவர் எல்லையற்ற தந்தையாவார். பாரதம் உண்மையிலேயே ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் எல்லையற்ற தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றது. அது இதே நேரமான சங்கமயுகத்திலேயே பெற்றுக் கொண்டதுடன் மீண்டும் ஒருமுறை இப்பொழுது பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவர்களை இதையும் எழுதச் செய்ய வேண்டும். உண்மையில், தந்தை சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். அவர் வந்து பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் மூலம் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். இதனை அவர்கள் எழுதும் பொழுது, அவர்கள் யாரிடம் வந்திருக்கின்றார்கள் என்பதனையும் எதனைப் பெற்றுக் கொள்ள வந்திருக்கின்றார்கள் என்பதனையும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். கடவுளின் வடிவம் அசரீரியாகும். கடவுளின் வடிவத்தை அவர்கள் அறிந்து கொண்டிருக்காததால் அவர் பிரம்ம தத்துவம் என அவர்கள் கூறுகின்றார்கள். அவர் ஒரு புள்ளி என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் ஒரு புள்ளி என்பது வேறு எவரின் புத்தியிலும் நிற்காது. ஆத்மா ஒருவரைப் பொறுத்தவரை அவர் நெற்றியின் நடுவில் நட்சத்திரமாகப் பிரகாசிக்கின்றார் என அவர்கள் கூறுகிறார்கள். அது சின்னஞ்சிறிய ஒன்றாகும். யார் நடிகன் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா அத்தகைய பெரிய அழியாத பாகத்தைத் தனக்குள் பதிந்து கொண்டுள்ளார். ஒருவர் இவ்விடயங்களின் ஆழத்திற்குச் சென்றால் நீங்கள் அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும். ஆத்மாவாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: நான் 84 பிறவிகளை எடுத்துள்ளேன். அந்தப் பாகம்; முழுவதும் புள்ளியான, சின்னஞ்சிறிய ஆத்மாவில் அமிழ்ந்துள்ளது. தொடர்ந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். மக்கள் இவ்விடயங்களைக் கண்டு வியப்படைவார்கள். எவராலும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. எங்கள் 84 பிறவிகள் மீண்டும் வரும். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆத்மாவிலும் எவ்வாறு ஒரு பாகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதனைக் கேள்விப்படும் பொழுது அவர்கள் வியப்படைகின்றார்கள். உண்மையில் ஆத்மாவாகிய நான் கூறுகின்றேன்: ஆத்மாவாகிய நான் ஒரு சரீரத்தை நீங்கி, இன்னொன்றை எடுக்கின்றேன். நிச்சயிக்கப்பட்ட என்னுடைய இந்தப் பாகம் நாடகத்திற்கு ஏற்ப மீண்டும் வரும். பலவீனமான புத்தி உடையவர்களால் இவ்விடயங்களைக் கிரகிக்க முடியாது. நீங்கள் நினைவு செய்ய வேண்டியது: நான் 84 பிறவிகளை எடுத்து எனது பாகத்தை நடிக்கின்றேன். நான் ஒரு சரீரத்தை ஏற்றுக் கொள்கின்றேன். நீங்கள் இவ்விடயங்களைத் தொடர்ந்து நினைவு செய்யும் பொழுது, நீங்கள் முற்றாகத் திரிகாலதரிசிகள் ஆகி, ஏனையோரையும் திரிகாலதரிசிகள் ஆக்குவதற்கு முயற்சி செய்கின்றீர்கள் எனக் கூறப்படும். இதனை நீங்கள் விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குத் தைரியம் வேண்டும். நீங்கள் குருடர்களுக்கு ஊன்றுகோல்கள் ஆகி, அனைவரையும் உறக்கத்தில்; இருந்து விழித்தெழச் செய்ய வேண்டும். விழித்தெழுங்கள்! ஓ மணவாட்டிகளே, விழித்தெழுங்கள்! புதிய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. பழைய உலகம் அழிய உள்ளது. திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கரர் போன்றவர்களின் பெயர்களைக் கேட்டிருக்கின்றீர்களா? பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம் பெறுகின்றது. இவர்கள் யாவரும் பிரம்மாகுமார் பிரம்மாகுமாரிகள் ஆவார்கள். பிரம்மா இதனைத் தனியாகச் செய்வதில்லை. பிரஜாபிதாவுடன் நிச்சயமாக பிரம்மா குமார்களும் குமாரிகளும் உள்ளனர். இவருக்குக் கற்பிக்கின்ற இவரின் தந்தையும் நிச்சயமாக இங்கிருப்பார். இவர் (பிரம்மா) ஞானக்கடல் என அழைக்கப்படமாட்டார். அவர்கள் பிரம்மாவை அவருடைய கரங்களில் சமயநூல்களுடன் காட்டுகின்றார்கள். எவ்வாறாயினும் பரமாத்மாவாகிய பரமதந்தையே அவருக்குள் பிரவேசித்து அவரின் மூலம் வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாரம்சத்தைக் கூறுகின்றார். பிரம்மா உங்களுக்குச் சமயநூல்கள் அனைத்தினதும் சராம்சத்தைக் கூறுவதில்லை. அவர் எங்கிருந்து அவற்றைக் கற்பார்? அவருக்கு நிச்சயமாக ஒரு தந்தையும் ஒரு குருவும் இருக்க வேண்டும். பிரஜாபிதா நிச்சயமாக ஒரு மனிதராவார். அவர் இங்கேயே இருக்க வேண்டும். அவரே மக்களை உருவாக்குகின்றார். அவரைப் படைப்பவர் என்றோ, ஞானக்கடல் என்றோ, அல்லது ஞானம் நிறைந்தவர் என்றோ கூற முடியாது. பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே ஞானக்கடல் ஆவார். அவர் வந்து, பிரஜாபிதா மூலமாகக் கற்பிக்கின்றார். இது ஞானக்கலசம் என்று அழைக்கப்படுகின்றது. அனைத்தும் உங்கள் தாரணையிலேயே தங்கி உள்ளது. நீங்கள் உங்களைக் காப்புறுதி செய்து கொள்கின்றீர்களா இல்லையா என்பது உங்களைப் பொறுத்ததாகும். பாபா அனைத்தையும் மிகவும் நன்றாக காப்புறுதி செய்கின்றார். அவரே பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் காப்புறுதி செய்யும் சிறப்பான வியாபாரி ஆவார். பக்தி மார்க்கத்தில் ஆத்மாக்கள் அனைவரும் தந்தையை நினைவு செய்து கூறுகின்றார்கள்: பாபா, வந்து எங்களைத் துன்பத்தில் இருந்து விடுதலை செய்யுங்கள். தந்தை உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவர் உங்களை சாந்தி தாமத்திற்கோ அல்லது சந்தோஷதாமத்திற்கோ அனுப்புகின்றார். அமைதி என்ற ஆஸ்தியைப் பெற உள்ளவர்கள் அதே அமைதி என்னும் ஆஸ்தியை ஒவ்வொரு கல்பத்திலும் பெற்றுக் கொள்வார்கள். நீங்கள் இப்பொழுது சந்தோஷம் என்ற உங்கள் ஆஸ்தியைப் பெற முயற்சி செய்கின்றீர்கள். அதற்கு, நீங்கள் கற்பதுடன் ஏனையோருக்குக் கற்பிக்கவும் வேண்டும். தந்தை எவ்வாறு அனைவரிலும் இனிமையிலும் இனிமையானவராக இருக்கின்றாரோ அவ்வாறே, அவரின் படைப்பும் இனிமையிலும் இனிமையானதாகும். சுவர்க்கம் மிகவும் இனிமையானது! அனைவரும் சுவர்க்கத்தைப் பற்றி பேசுகின்றார்கள். எவராவது ஒருவர் மரணித்து விட்டால், அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆகவே, அவர் நிச்சயமாக நரகத்திலேயே இருந்து விட்டு, இப்பொழுது சுவர்க்கத்திற்குச் சென்றுள்ளார். உண்மையில் அந்த ஆத்மா அங்கு செல்லாவிட்டாலும் அவர்கள் அவ்வாறு கூறுகின்றார்கள். அவர் நிச்சயமாக நரகத்திலேயே இருந்தார் என நீங்கள் எழுத வேண்டும். இது நரகமாகும். அவ்வாறாயின் அந்த ஆத்மாவை அவர்கள் ஏன் இங்கே அழைத்து இங்குள்ள பொருட்களைப் படைக்கின்றார்கள்? அவர்கள் பிரிந்து சென்ற ஆத்மாக்களையே அழைக்கின்றார்கள். ஒரு ஆத்மாவை அழைப்பது என்றால் பிரிந்து சென்ற ஓர் ஆவியை அழைப்பதாகும். அதன் பின்னர் நீங்கள் பிரிந்து சென்ற ஆவிகள் அனைவருடைய தந்தையையும் அழைக்கின்றீர்கள். ஆத்மாக்கள் அனைவரின் தந்தையும் இங்கே அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் அத்தகையதொரு மறைமுகமான சிவசக்தி; சேனையினர் ஆவீர்கள். சிவன் அசரீரியானவர் ஆவார். சக்திகளாகிய நீங்கள் அவரின் குழந்தைகள் ஆவீர்கள். ஆத்மாவே சக்தியைப் பெற்றுக் கொள்கின்றார். மக்கள் தங்களுடைய பௌதீகச் சக்தியைக் காட்டுகின்றார்கள். ஆனால் நீங்கள் உங்கள் ஆன்மீகச் சக்தியை காட்டுகின்றீர்கள். உங்களுடையது யோக சக்தியாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் யோகத்தில் இருக்கும் பொழுது நீங்கள் தூய்மை ஆகுகின்றீர்கள். ஆத்மா சக்தியை வளர்த்துக் கொள்கின்றார். உங்கள் அனைவரிலும் மம்மாவின் ஞானவாள் மிகவும் கூர்மையானதாகும். இதில் பௌதீக வாளுக்கான எந்த கேள்விக்கும் இடமில்லை. ஓர் ஆத்மா தன்னிடம் எப்பொழுது ஞானச் சங்கை ஊதுவதற்கு மிகச் சிறந்த சக்தி உள்ளது என்பதனைப் புரிந்து கொள்கின்றார். ‘என்னால் சங்கை ஊத முடியும்’. சிலரோ ‘என்னால் சங்கை ஊத முடியவில்லை’ எனக் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஞானச் சங்கை ஊதுபவர்களின் மேல் எனக்கு ஆழமான அன்புள்ளது. நீங்கள் ஞானத்துடன் எனது அறிமுகத்தை கொடுக்கலாம். அப்படித்தானே? ‘எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள்’ இதுவும் ஞானத்தைக் கொடுப்பதாகும். அல்லவா? தந்தையை நினைவு செய்யும் பொழுது நீங்கள் வார்த்தைகள் எதனையும் கூற வேண்டியதில்லை. தந்தையே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார் என நீங்கள் உங்களுக்குள் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் வீடு திரும்ப வேண்டும். என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிந்து விடும். கடவுள் பேசுகின்றார்: மன்மனாபவ. ஆகையால், அவரே நிச்சயமாக அசரீரியானவர் ஆவார். எவ்வாறு ஒரு சரீரதாரியால் ‘என்னை நினைவு செய்யுங்கள்’ எனக் கூறமுடியும்? அசரீரியானவர் மாத்திரமே கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, என்னை நினைவு செய்யுங்கள். நான் உங்கள் தந்தையாவேன். என்னை நினைவு செய்தால் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை, உங்கள் இலக்கிற்கு அழைத்துச் செல்லும். கிருஷ்ணரினால் இவ்வாறு கூறமுடியாது. ஏனெனில் அவர் ஒரு மனிதர் ஆவார். உங்கள் சரீரத்தின் மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: ஓ சரீரத்திலுள்ள ஆத்மாக்களே, உங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையும் ஆத்மாக்களுக்குக் கூறுகின்றார்: மன்மனாபவ. ஆத்மாக்களாகிய நீங்கள் என்னிடமே வரவேண்டும். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக வேண்டும். நன்றாக பயிற்சி செய்யுங்கள்: ஆத்மாவாகிய நானே இந்த சரீரத்தை இயக்குகின்றேன். நான் இப்பொழுது தந்தையிடம் திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை கூறுகின்றார்: நடக்கும் பொழுதும், நடமாடும் பொழுதும் அமர்ந்திருந்தாலும் நின்று கொண்டிருந்தாலும் என்னை நினைவு செய்யுங்கள். அமைதியின்மையைப் பரவச் செய்கின்றவர்கள் தங்களுடைய சொந்த அந்தஸ்தை அழித்துக் கொள்கின்றார்கள். நீங்கள் மிகவும் இனிமையானவர் ஆக வேண்டும். ஒரு பாடல் உண்டு: கபடமற்ற பிரபுவான சிவன் எவ்வளவு இனிமையும் அன்பாவனவரும் ஆவார்! அவரின் குழந்தைகளான நீங்களும் கபடமற்றவர்களே. நீங்கள் முதற்தரமான பாதையைக் காட்டுகின்றீர்கள். தந்தையை நினைவு செய்தால், நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். வேறு எவராலும் உங்களுடன் அத்தகைய ஒரு பேரம் பேச முடியாது. ஆகையால் நீங்கள் தந்தையை அதிகளவு நினைவு செய்ய வேண்டும். அவர்கள் அதிகளவு சந்தோஷத்தைத் தங்களுக்குக் கொடுத்தவரை நினைவு செய்து கூறுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள். அத்துடன், அவர்களின் சரீரங்களும்; தூய்மையற்றதாகியுள்ளன. ஆத்மாவும் சரீரமும் தூய்மையற்றதாகி உள்ளன. ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படாதவர்கள் என்றும் ஆத்மா தூய்மையற்றவர் ஆகமுடியாது என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அது அவ்வாறு அல்ல. பரமாத்மாவாகிய பரமதந்தை எப்பொழுதும் தன்னில் கலப்படம் அற்றவர் ஆவார். ஏனையோர் அனைவரும் நிச்சயமாகத் தங்களுக்குள் கலப்படத்தைக் கலந்து விடுகின்றார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சதோ, இரஜோ, தமோ நிலைகளைக் கடந்தே செல்ல வேண்டும். நீங்கள் இக் கருத்துக்கள் அனைத்தையும் கிரகித்து மிகவும் இனிமையானவர் ஆகவேண்டும். சிலருடன் நீங்கள் குரோதத்துடனும், ஏனையோருடன் நீங்கள் நட்புடனும் இருக்கின்றீர்கள் என்றிருக்கக் கூடாது. சரீர உணர்வுடையவர் ஆகி, பிறரிடம் தனிப்பட்ட சேவையை ஒரு இடத்திலேயே இருந்து கொண்டு, பெற்றுக்கொண்டிருப்பது முற்றிலும் பிழையாகும.; அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. ஞானத்தைக் கடைந்து, திரிகாலதரிசிகள் ஆகி, ஏனையோரையும் திரிகாலதரிசிகள் ஆக்குங்கள். குருடர்களுக்கு ஊன்று கோல்கள் ஆகி, அனைவரையும் அறியாமை என்ற உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்யுங்கள்.

2. உங்களிடம் உள்ள அனைத்தையும் 21 பிறவிகளுக்குக் காப்புறுதி செய்யுங்கள். அத்துடன், ஞானச் சங்கையும் ஊதுங்கள்.

ஆசீர்வாதம்:
குழப்பம் அடைவதை விடுத்து, கவலையற்றதோர் ஆத்மாவாக உங்கள் கர்ம கணக்குகளை சந்தோஷமாக தீர்ப்பீர்களாக.

ஒருவர் ஏதேனும் கூறினால், உடனடியாக குழப்பம் அடையாதீர்கள். முதலில், அதனை ஆராய்ந்து பாருங்கள் அல்லது எந்த நோக்கத்துடன் அவ்வாறு கூறப்பட்டது என புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிழையாக இல்லாதிருந்தால், கவலையற்றவர் ஆகுங்கள். பிராமண ஆத்மாக்களுடனான அனைத்தும் இங்கேயே தீர்க்கப்பட வேண்டும் என்பது உங்கள் விழிப்புணர்வில் இருக்கட்டும். தர்மராஜ்புரியில் தப்பித்துக் கொள்ள வேண்டுமாயின் பிராமணர்களே ஏதோ ஒரு வகையில் கருவிகள் ஆக வேண்டும். ஆகையால், பயப்படாதீர்கள், ஆனால் அனைத்தையும் சந்தோஷமாக தீர்த்திடுங்கள். இதனூடாக மாத்திரமே முன்னேற்றம் இருக்க முடியும்.

சுலோகம்:
~தந்தையே எனது உலகம்| என்பதை சதா விழிப்புணர்வில் பேணுவதே இலகு யோகம் செய்வதாகும்.