08.11.2018        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களது உண்மையான தீபமாலா (தீப விழா) புதிய உலகிலேயே இருக்கும். இதனாலேயே இப்பழைய உலகின் பொய்யான விழாக்களைப் பார்ப்பதற்கு உங்களுக்கு எந்த ஆசையும் இருக்கக்கூடாது.

கேள்வி:
நீங்களே புனித அன்னங்கள். உங்கள் கடமை என்ன?

பதில்:
ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதும், அனைவரதும் புத்தியின் யோகத்தை ஒரேயொரு தந்தையுடன் இணைப்பதுமே உங்களது பிரதான கடமையாகும். நீங்களும் தூய்மையாகிப் பிறரையும் தூய்மையாக்குகின்றீர்கள். நீங்கள் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற பணியில் சதா ஈடுபட்டிருக்க வேண்டும். நீங்கள் அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவித்;து, வழிகாட்டிகளாகி, அவர்களுக்கு முக்திக்கும், ஜீவன் முக்திக்குமான பாதையைக் காட்ட வேண்டும்.

பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதால் முழு உலகையும் கண்டுகொண்டோம். பூமி, வானம் அனைத்தும் எங்களுக்கே சொந்தம்…

ஓம்சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். உங்கள் ஆஸ்தியான சுவர்க்க இராச்சியத்தை நீங்கள் பெறுகின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள். அதனை எவராலும் என்றுமே எரிக்கவும் முடியாது. அதனை எவராலும் எங்களிடமிருந்து அபகரிக்கவும் முடியாது. அந்த ஆஸ்தியை எங்களிடமிருந்து எவராலும் வெற்றி கொள்ளவும் முடியாது. ஆத்மாக்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். அத்தகைய தந்தையையே உண்மையில் தாயும் தந்தையும் என்று அழைக்கப்படுகின்றார். தாயையும் தந்தையையும் இனங்காண்பவர்களாலேயே இந்த நிறுவனத்திற்கு வர முடியும். மேலும் தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளின் முன்னிலையில் நேரடியாக என்னை வெளிப்படுத்தி, அவர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். உயிருடன் உள்ள போதே குழந்தைகள் வந்து எல்லையற்ற தந்தையைத் தமக்குரியவர் ஆக்குகின்றார்கள். குழந்தைகள் உயிருள்ள போதே தத்தெடுக்கப்படுகின்றார்கள். நீங்கள் எனக்குரியவர், நான் உங்களுக்கு உரியவர். நீங்கள் ஏன் எனக்குரியவர் ஆகினீர்கள்? நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் உங்களிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவதற்காகவே, உங்களுக்கு உரியவராகியுள்ளோம். நல்லது குழந்தையே, அத்தகையதொரு தந்தையை என்றுமே விவாகரத்துச் செய்யாதீர்கள். விவாகரத்துச் செய்தால், அதன் விளைவு என்னவாக இருக்கும்? சுவர்க்க இராச்சியத்தின் முழு ஆஸ்தியையும் உங்களால் பெற முடியாது. பாபாவும் மம்மாவும் சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியுமாக ஆகுகின்றார்கள். ஆகையால், நீங்களும் அத்தகைய ஆஸ்தியைப் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறாயினும், முயற்சி செய்யும் போது, குழந்தைகளிற் சிலர் தந்தையை விவாகரத்துச் செய்த பின்னர் விகாரங்களில் சிக்கிக் கொள்வதால், நரகத்தினுள் வீழ்ந்து விடுகின்றார்கள். நரகம் நரகமே. சுவர்க்கம் சுவர்க்கமே. நீங்கள் கூறுகின்றீர்கள்: எக்காலமும் சுவர்க்கத்தின் அதிபதிகளாக ஆகுவதற்காகவே, நாங்கள் தந்தையை எங்களுக்கு உரியவர் ஆக்குகின்றோம், ஏனெனில், இப்பொழுது நாங்கள் நரகத்தில் இருக்கின்றோம். சுவர்க்கத்தைப் படைப்பவரான, தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் வரும் வரை, எவராலும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என்பதே அவரின் பெயராகும். உங்களுக்கு அதனை இந்த நேரத்திலேயே தெரியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர், செய்ததைப் போன்றே, தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காகவே உண்மையில் வந்திருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். எவ்வாறாயினும், முன்னேறிச் செல்லும் போது, மாயையின் புயல்கள் உங்களை முற்றாக அழித்து விடுகின்றன. பின்னர் நீங்கள் கற்பதை நிறுத்தி விடுகின்றீர்கள். அதாவது நீங்கள் மரணித்து விடுகின்றீர்கள். கடவுளுக்கு உரியவராகிய பின்னர், அவரைக் கை விட்டால், நீங்கள் புதிய உலகிலிருந்து பழைய உலகிற்குச் சென்று விட்டீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். தந்தையான சுவர்க்கக் கடவுள் மாத்திரமே, உங்களை நரகத்தின் துன்பத்திலிருந்து விடுவித்து, உங்களின் வழிகாட்டியாகி, ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கிருந்து வந்தோமோ, அந்த இனிய மௌன வீட்டிற்கே எங்களை மீண்டும் அழைத்துச் செல்கின்றார், பின்னர் அவர் எங்களுக்கு இனிய சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றார். இரு விடயங்களைக் கொடுப்பதற்காகவே தந்தை வந்துள்ளார்: முக்தியும், ஜீவன்முக்தியும் ஆகும். சத்தியயுகம் சந்தோஷ உலகமும், கலியுகம் துன்ப உலகமும் ஆகும் அத்துடன் அமைதி தாமம் என்ற அவ்வுலகிலிருந்தே ஆத்மாக்களாகிய நாங்கள் வருகின்றோம். அந்தத் தந்தையே எதிர்காலத்திற்கான அமைதியை அருள்பவரும், சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். இந்த அமைதியற்ற உலகிலிருந்து, முதலில் நாங்கள் அமைதி தாமத்திற்குச் செல்வோம். அது இனிய மௌன வீடு என்று அழைக்கப்படுகின்றது. நாங்கள் அங்கே வசிக்கின்றோம். ஆத்மாவே கூறுகின்றார்: அது எங்கள் இனிய வீடாகும். அதன் பின்னர், இந் நேரத்தில் ஞானத்தைக் கற்பதன் மூலம், நாங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவோம். தந்தையாகிய சுவர்க்கக் கடவுள், முக்தியளிப்பவர், வழிகாட்டி, ஞானம் நிறைந்தவர், பேரானந்தமிக்கவர், ஞானக்கடல் என்பன தந்தையின் பெயர்களாகும். அவர் கருணை மிக்கவரும் ஆவார். அவர் அனைவர் மீதும் கருணை கொண்டுள்ளார். அவருக்குத் தத்துவங்களின் மீதும் கருணை உள்ளது. அனைவரும் துன்பத்திலிருந்து விடுதலை அடைகின்றனர். மிருகங்கள் போன்றனவும் துன்பத்தை அனுபவம் செய்கின்றன. நீங்கள் எதனையாவது கொன்றால், அது துன்பத்தை அனுபவம் செய்யும் அல்லவா? தந்தை கூறுகின்றார்: நான் மனிதரை மாத்திரமல்ல அனைவரையுமே துன்பத்திலிருந்து விடுதலை செய்கின்றேன். எவ்வாறாயினும் நான் மிருகங்களை என்னுடன் அழைத்துச் செல்வதில்லை. இது மனிதர்களையே குறிக்கின்றது. அவரைப் போன்று எல்லையற்ற தந்தை ஒரேயொருவரே உள்ளார். ஏனைய அனைவரும் உங்களைச் சீரழிவிற்கே அழைத்து செல்கின்றார்கள். எல்லையற்ற தந்தை மாத்திரமே முக்திதாமமாகிய சுவர்க்கம் என்ற பரிசை உங்களுக்குக் கொடுப்பவர் என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். ஒரேயொரு தந்தையே அதிமேலானவர். பக்தர்கள் அனைவரும் தந்தையான கடவுளையே நினைவு செய்கின்றார்கள். கிறிஸ்தவர்களும் கடவுளை நினைவு செய்கின்றார்கள். சிவன் தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் ஆவார். அவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவரும், பேரானந்தமிக்கவரும் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்களும் வரிசைக்கிரமமானவர்;களே. சிலரை எந்தளவிற்கு ஞானத்தால் அலங்கரித்தாலும், அவர்கள் விகாரத்தில் வீழ்ந்து, தீய உலகினால் கவரப்படுகின்றார்கள். குழந்தைகளிற் சிலர் தீபாவளியைக் காணச் செல்கின்றார்கள். உண்மையில், எனது குழந்தைகள் அந்தப் போலியான தீபாவளியைப் பார்க்கக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு ஞானம் இல்லாததால், அந்த ஆசை அவர்களுக்கு உள்ளது. நீங்கள் தூய்மையாகும் போது, உங்கள் தீபாவளி சத்தியயுகத்திலேயே இருக்கும். தந்தை உங்களை இனிய வீட்டிற்கும், இனிய சுவர்க்கத்திற்கும் அழைத்துச் செல்லவதற்காகவே வருகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நன்றாகக் கற்று, ஞானத்தைக் கிரகிப்பவர்களே சுவர்க்க இராச்சியத்திற்குச் செல்வார்கள். எவ்வாறாயினும் அது உங்கள் பாக்கியத்தில் இருக்க வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதிருந்தால், நீங்கள் மேன்மையானவர் ஆக மாட்டீர்கள். இவை ஸ்ரீ ஸ்ரீ கடவுள் சிவனின் வாசகங்களாகும். மனிதர்கள் கடவுளை இனங்காணும் வரை, அவர்கள் தொடர்ந்தும் பக்தி செய்வார்கள். நம்பிக்கை உறுதியாகும் போது, பக்தி இயல்பாகவே துறக்கப்படுகின்றது. நீங்கள் “புனிதமானவர்கள்”. நீங்கள் தந்தையான கடவுளின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப அனைவரையும் தூய்மையாக்குகின்றீர்கள். அம்மக்கள் இந்துக்களையும் இஸ்லாமியரையும் கிறிஸ்வர்கள் ஆக்குகின்றார்கள். நீங்கள் அசுரத்தனமான மனிதர்களைத் தூய்மை ஆக்குகின்றீர்கள். அவர்கள் தூய்மையாகும் போதே, அவர்களால் சுவர்க்கத்திற்கோ அல்லது இனிய வீட்டிற்கோ செல்ல முடியும். ஒரேயொருவரே அன்றி வேறெவரும் இல்லை. நீங்கள் ஒரேயொரு தந்தையை அன்றி வேறெவரையும் நினைவு செய்வதில்லை. ஒரேயொரு தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் ஆஸ்தியைப் பெறுவதால், நீங்கள் நிச்சயமாக அந்த ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்வீர்கள். நீங்கள் தூய்மையாகி, ஏனையோரையும் தூய்மையாகுவதற்கு உதவி செய்கின்றீர்கள். அக் கன்னியாஸ்திரிகள் எவரையும் தூய்மையாக்குவதும் இல்லை, பிறரைத் தம்மைப் போன்று கன்னியாஸ்திரிகள் ஆக்குவதும் இல்லை. அவர்கள் இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றுகின்றார்கள். புனித கன்னியாஸ்திரிகளாகிய நீங்கள் அனைவரையும் தூய்மையாக்கி, ஆத்மாக்கள் அனைவரது புத்தியின் யோகத்தையும் தந்தையாகிய ஒரேயொரு கடவுளுடன் இணைக்கின்றீர்கள். கீதையில் குறிப்பிடப்படுகின்றது: உங்கள் சரீரத்தையும், சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மா எனக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். பின்னர், ஞானத்தைக் கிரகிப்பதன் மூலம் மாத்திரமே நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் மாத்திரமே நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாக ஆகுகின்றீர்கள். ஞானத்தின் மூலம் நீங்கள் என்றென்றும் செல்வந்தராகுகின்றீர்கள். தந்தையே ஞானக் கடல் ஆவார். அவர் வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சம் அனைத்தையும் உங்களுக்குக் கூறுகின்றார். பிரம்மா கரத்தில் சமயநூலை வைத்திருப்பதாக அவர்கள் சித்தரித்துள்ளார்கள். இவர் பிரம்மா ஆவார். சிவபாபா வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை இவரினூடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் ஞானக்கடல் ஆவார். நீங்கள் தொடர்ந்தும் இவரினூடாக ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பின்னர் ஏனையோர் தொடர்ந்தும் உங்களினூடாக அதனைப் பெறுகின்றார்கள். குழந்தைகளிற் சிலர் கூறுகின்றார்கள்: பாபா, நான் இந்த ஆன்மீக வைத்தியசாலையை ஆரம்பிக்கின்றேன். அங்கு நோயுற்ற மனிதர்கள் வந்து, நோயிலிருந்து விடுதலை அடைந்து, அவர்களால் தமது சுவர்க்க ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்கள் தமது வாழ்க்கையைத் தகுதி வாய்ந்ததாக்கி, அதிகளவு சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால், அவர்கள் பலரது ஆசீர்வாதங்களையும் பெறுகின்றார்கள். கீதை, பாகவதம், வேதங்கள், உபநிடதம் போன்ற பாரதத்தின் சமயநூல்களைக் கற்பதுவும், யாகங்கள் வளர்த்தல், தபஸ்யா செய்தல், விரதம் அனுட்டித்தல், நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு யாத்திரை செய்வது போன்ற அனைத்தும் மோரைப்; போன்றவையாகும் என பாபா அன்றொரு நாள் விளங்கப்படுத்தினார். அவை பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் ஒரேயொரு பகவத் கீதையான கடவுளின் ஸ்ரீமத்தை மாத்திரமே பின்பற்றுவதனால் பாரதம் வெண்ணெயைப் பெற்றுக் கொள்கின்றது. ஸ்ரீமத் பகவத் கீதையும் பொய்யாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தூய்மையாக்குபவரும், அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையான ஞானக்கடலின் பெயருக்குப் பதிலாக அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதால், அதனை மோர் ஆக்கி விட்டார்கள். இதுவே ஒரேயொரு பெருந் தவறாகும். ஞானக் கடலான தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு, ஞானத்தை நேரடியாகவே கொடுக்கின்றார். இப்பொழுது இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதும், உலக விருட்சம் எவ்வாறு வளர்கின்றது என்பதும் உங்களுக்குத் தெரியும். பிராமணர்களாகிய நீங்களே உச்சிக் குடுமிகளும், சிவபாபா பிராமணர்களின் தந்தையும் ஆவார். அதன்பின்னர் நீங்கள் பிராமணர்களில் இருந்து தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைஷியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகுவீர்கள். இதுவே குத்துக்கரணம் ஆகும். இது 84 பிறவிகளின்; சக்கரம் என்று அழைக்கப்படுகின்றது. ‘பக்தி மோர் என்றும், ஞானம் வெண்ணெய் என்றும், அதனூடாக நீங்கள் முக்தியையும் ஜீவன் முக்தியையும் பெறலாம்’ என நீங்கள் வேதங்களை வாசிக்கின்ற ஒன்றுகூடலில் அவற்றை வாசிப்பவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். நீங்கள் ஞானத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதனைப் பொறுமையாகக் கேளுங்கள். பிரம்மகுமாரிகளினால் அதனை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். பீஷ்மருக்கும், அஷ்வத்மா (மகாபாரத பாத்திரம்) போன்றோருக்கும் இறுதியில், இக் குழந்தைகள் ஞானத்தைக் கொடுத்தார்கள் என்று சமயநூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் கூறுவது சரியானது என்பதை இறுதியில் அனைவருமே புரிந்து கொள்வார்கள். அவர்கள் நிச்சயமாக இறுதியில் வருவார்கள். நீங்கள் கண்காட்சிகளை நடாத்தும் போது, பல ஆயிரம் மக்கள் வருகின்றார்கள். ஆனால் புத்தியில் முழுமையான நம்பிக்கையைக் கொண்டவர்களாக அனைவருமே ஆகுவதில்லை. பல மில்லியன் மக்களில் ஒரு கைப்பிடி அளவினரே மிகவும் நன்றாகப் புரிந்து கொள்வதுடன் அவர்களுக்கே பெரும் நம்பிக்கையும் உள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கும், அதிர்ஷ்ட ஞான நட்சத்திரங்களுக்கும், உங்களின் முயற்சிக்கு எற்ப, வரிசைக்கிரமமாக உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. தூய்மையாகி, உங்களைப் போன்று பிறரையும் தூய்மையாக்குங்கள். ஒரேயொரு தந்தையைத் தவிர, வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள்.
ஆத்மாக்கள் பலரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு, ஓர் ஆன்மீக

2. வைத்தியசாலையை ஆரம்பியுங்கள். அனைவருக்கும் முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்டுங்கள்.

ஆசீர்வாதம்:
நம்பிக்கையுள்ள புத்தியினால் இரட்டை சேவையாளராகவும் நம்பிக்கை பொறுப்பாளராகவும் ஆகி, உங்கள் பௌதீக உறவினரின் மீது ஆன்மிக உணர்வு கொண்டிருப்பீர்களாக.

சில குழந்தைகள் சேவை செய்யும் போது களைப்படைந்து விடுவதால், இவர் மாறவே மாட்டார் என நினைக்கின்றார்கள். இவ்வாறாக விரக்தி அடையாதீர்கள். புத்தியின் மீது நம்பிக்கைக் கொண்டு, ~எனது| என்ற உணர்விலிருந்து விடுபட்டு, தொடர்ந்தும் முன்னேறிச் செல்லுங்கள். சில ஆத்மாக்களுக்கு தமது பக்தி மார்க்கத்தின் கணக்கைத் தீர்ப்பதற்கு சற்று காலம் எடுக்கும். ஆகையால், பொறுமையாகவிருந்து, பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியில் ஸ்திரமாகவிருந்து, ஆத்மாக்கள் அனைவருக்கும் அமைதிக்கும் சக்திக்குமான உங்கள் ஒத்துழைப்பை கொடுங்கள். உங்கள் பௌதீக உறவினரின் மீது ஆன்மிக உணர்வு கொண்டிருங்கள். இரட்டை சேவையாளராகவும் நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் இருங்கள்.

சுலோகம்:
உங்கள் மேன்மையான மனோபாவத்தின் ஊடாக சூழலை மேன்மையானதாக ஆக்குவதே உண்மையான சேவையாகும்.


மாதேஷ்வரியின் மேன்மையான வாசகங்கள் 21.01.57

இந்த இறை சத்சங்கம் (ஆன்மீக ஒன்றுகூடல்) பொதுவான சத்சங்கம் அல்ல.

எங்களுடைய இந்த இறை சத்சங்கம் பொதுவான ஒரு சத்சங்கம் அல்ல. இது நாம் தினமும் கற்க வேண்டிய ஓர் இறை பாடசாலை அல்லது கல்லூரி ஆகும். மற்றய சற்சங்கங்களில் அவர்கள் 'சத்சங்கத்தில் கலந்துகொள்வது” (பக்திப் பாடல்களைப் பாடுதல்), என்பதன் அடிப்படையில் சென்று குறுகிய காலப்பகுதிக்கு அவற்றைச் செவிமடுத்து பின்னர் பழைய நிலைக்கே மீண்டும் திரும்புவதாகும். ஒரு வெகுமதியை உருவாக்கக்கூடிய முறையான ஒரு கல்வியை நீங்கள் அங்கு பெறாமையே அதற்குக் காரணமாகும். இதனாலேயே, எமது சத்சங்கம் பொதுவான சத்சங்கம் அல்ல. இது கடவுள் அமர்ந்திருந்து எங்களுக்குக் கற்பிக்கும் எமது இறை கல்லூரி ஆகும். இங்கு நாம் முழுமையாக அதைக் கிரகித்து உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைகிறோம். ஆசிரியர் ஒருவர் தினமும் உங்களுக்குக் கற்பித்து, உங்களுக்கு ஒரு பட்டத்தை வழங்குவதைப் போன்று, இங்கு, கடவுளே குரு, தந்தை, ஆசிரியரின் ரூபத்தில் தினமும் கற்பித்து, தேவர்கள் என்ற அதியுயர்ந்த அந்தஸ்தை நாம் அடையுமாறு செய்கிறார். இதனாலேயே, இந்தப் பாடசாலையில் இணைந்துகொள்வது அத்தியாவசியமாகும். இங்கு வருபவர்கள் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்வதும், இங்கு என்ன கற்பித்தல்கள் பெறப்படுகின்றன என்றும், இந்தக் கற்பித்தல்களால் நீங்கள் எதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்றும் அறிந்து கொள்வது அவசியமாகும். கடவுளே வந்து நாங்கள் பட்டம் ஒன்றைப் பெறுமாறு செய்கிறார் என்பதையும், இந்த ஒரு பிறவியில் இந்த முழுப் பாடநெறியையும் நாம் முடிக்க வேண்டும் என்பதையும் நாம் இப்போது அறிவோம். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இந்த ஞானப் பாடநெறியைக் கற்பவர்கள் முழுமையாகச் சித்தி எய்துவார்கள். இந்தப் பாடநெறியின் இடைநடுவில் வருபவர்களால் அந்தளவு ஞானத்தைப் பெற முடியாது. பாடநெறியில் ஆரம்பத்தில் என்ன கற்பிக்கப்பட்டது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். இதனாலேயே, இங்கு ஒருவர் ஒழுங்காகக் கற்க வேண்டும். இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் முன்னேறுவீர்கள். இதனாலேயே நீங்கள் ஒழுங்காகக் கற்கவேண்டும்.

கடவுளின் உண்மையான குழந்தை ஆகிய பின்னர், எந்தவிதமான சந்தேகங்களையும் கொண்டிக்காதீர்கள்.

கடவுளே இந்த பூமிக்கு வந்திருப்பதனால், நாம் அவருக்கு எமது கரங்களை முழுமையாக வழங்க வேண்டும். ஆனால் பாபாவின் உண்மையான, உறுதிவாய்ந்த குழந்தைகள் மட்டுமே தமது கரங்களை பாபாவிற்கு வழங்குவார்கள். தந்தையின் கரத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள். நீங்கள் கைவிட்டால், அநாதை ஆகியபின்னர் நீங்கள் எங்கு செல்வீர்கள்? இப்போது நீங்கள் கடவுளின் கரத்தைப் பற்றியிருப்பதனால், சூட்சுமமான முறையிலேனும் அதைக் கைவிடுகின்ற எண்ணம் சிறிதளவேனும் உங்களுக்கு ஏற்படக்கூடாது. 'என்னால் அக்கரைக்குச் செல்ல முடியுமா முடியாதா என எனக்குத் தெரியவில்லை” என்ற சந்தேகங்களையும் கொண்டிருக்கக்கூடாது. தந்தையை இனங்கண்டு கொள்ளாத இத்தகைய குழந்தைகளும் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் தாம் எவரையிட்டும் அக்கறை கொள்வதில்லை எனத் தந்தைக்கு மீளப் பதில் அளிக்கிறார்கள். உங்களிடம் இத்தகைய எண்ணங்கள் இருந்தால், இத்தகைய தகுதியற்ற குழந்தைகளைத் தந்தையால் எவ்வாறு பராமரிக்க முடியும்? நீங்கள் விழப் போகின்றீர்;கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மாயை உங்களை விழச் செய்வதற்கு மிகவும் கடினமாக முயற்சி செய்கிறாள். எந்தளவிற்கு நீங்கள் திறமையான, உறுதிவாய்ந்த போராளியாக இருக்கிறீர்கள் எனப் பார்ப்பதற்கு அவள் நிச்சயமாக உங்களைப் பரீட்சிப்பாள். இதுவும் அத்தியாவசியமானதாகும். நாம் கடவுளுடன் உறுதியானவர்களாக இருக்கும் அளவிற்கு, மாயையும் பலசாலியாகி எங்களை வீழ்த்துவதற்கு முயற்சி செய்வாள். மிகச்சரியான இணைப்பு காணப்படும். கடவுள் பலசாலியாக இருப்பதைப் போன்று, மாயையும் தனது பலத்தைக் காட்டுவாள். ஆனால் இறுதியாகக் கடவுளே அதிபலசாலி என்றும், இறுதியாக வெற்றியும் அவருடையதே என்றும் உறுதியான நம்பிக்கையை நாம் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மூச்சிலும் நாம் இந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டும். மாயை தனது பலத்தைக் காட்ட வேண்டியுள்ளது. அவள் கடவுளுக்கு முன்னால் தனது பலவீனத்தைக் காட்ட முடியாது. நீங்கள் உங்களுடைய பலவீனத்தை ஒரு தடவையேனும் காட்டுவீர்களாயின், அனைத்துமே முடிவடைந்துவிடும். எனவே, மாயை தனது முழுப்பலத்தைப் பிரயோகித்தாலும், நாம் மாயாபதியின் (மாயையின் பிரபு) கரத்தைக் கைவிடக்கூடாது. அவரின் கரத்தை முழுமையாகப் பற்றியிருப்பவர்கள் வெற்றியாளர்கள் ஆவார்கள். கடவுள் எமது அதிபதியாக இருப்பதனால், அவரின் கரத்தைக் கைவிடும் எண்ணத்தையேனும் நாம் கொண்டிருக்கக்கூடாது. கடவுள் கூறுகிறார்: குழந்தைகளே, நான் சக்திசாலியாக இருப்பதனால், என்னுடன் இருப்பதன் மூலம், நீங்கள் நிச்சயமாக சக்திசாலி ஆகுவீர்கள். குழந்தைகளே, உங்களுக்குப் புரிகிறதா?