04.11.18     Avyakt Bapdada       Tamil Lanka  Murli     24.02.84    Om Shanti     Madhuban


பிராமணப் பிறப்பே அவதாரத்திற்கான பிறப்பு ஆகும்


பாப்தாதா அனைவரையும் சத்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதிக்கு அழைத்துச் செல்வதற்காக சத்தத்திற்குள் வந்துள்ளார். அவர் உங்களை அவ்யக்த் ஆக்குவதற்காகப் பௌதீக உலகிற்குள் பௌதீக சரீரத்தில் பிரவேசிக்கிறார். நீங்கள் அவ்யக்த ஸ்திதியில் இருந்தவாறு, உங்களை சூட்சும தேவதைகளாகக் கருதியவண்ணம் எப்போதும் உங்களின் பௌதீக சரீரங்களில் அவதரிக்கின்றீர்களா? நீங்கள் அனைவரும் அவதரித்திருக்கும் அவதாரங்கள் ஆவீர்கள். ஒவ்வொரு செயலையும் இந்த விழிப்புணர்வுடன் செய்வதன் மூலம், நீங்கள் கர்ம பந்தனம் எவற்றில் இருந்தும் விடுபட்டிருக்கும் கர்மாதீத் அவதாரங்கள் ஆகுவீர்கள். அவதாரம் என்றால் மேன்மையான செயல்களைச் செய்வதற்காக மேலே இருந்து கீழே வந்திருக்கும் ஒருவர் என்று அர்த்தம். நீங்கள் அனைவரும் உங்களின் உயர்ந்த ஸ்திதியுடன் மேலேயிருந்து, சரீரத்தின் ஆதாரத்துடன் பழைய உலகில் சேவைக்கான செயல்களைச் செய்வதற்காகப் பழைய சரீரத்தில் பிரவேசித்துள்ளீர்கள். எவ்வாறாயினும், உங்களின் ஸ்திதியானது மேலேயே உள்ளது. இதனாலேயே, நீங்கள் அவதாரங்கள் ஆவீர்கள். அவதாரம் ஒருவர் எப்போதும் கடவுளிடமிருந்து செய்தியைக் கொண்டு வருவார். சங்கமயுக, மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் அனைவரும், கடவுளின் செய்தியை வழங்கி, அனைவரையும் கடவுளைச் சந்திக்கச் செய்வதற்காகவே அவதாரம் எடுத்துள்ளீர்கள். அந்தச் சரீரம் இனிமேலும் உங்களுடையதல்ல. நீங்கள் உங்களின் சரீரத்தையும் தந்தையிடம் ஒப்படைத்துள்ளீர்கள். ‘அனைத்தும் உங்களுடையதே, எனவே எதுவும் என்னுடையதல்ல’ என நீங்கள் கூறுகிறீர்கள். தந்தை அந்தச் சரீரத்தைச் சேவைக்காக உங்களுக்குக் கடனாகக் கொடுத்துள்ளார். நீங்கள் கடனாகப் பெற்ற எதிலும் உங்களுக்கு உரிமை கிடையாது. அந்தச் சரீரம் உங்களுடையது இல்லாதபோது, எவ்வாறு சரீர உணர்வு ஏற்பட முடியும்? ஆத்மா தந்தைக்குச் சொந்தமானவர். சரீரமும் தந்தைக்குச் சொந்தமானது. எனவே, எங்கிருந்து ‘நான்’ என்பதும் ‘எனது’ என்பதும் வரும்? இப்போது ‘நான்’ என்ற எல்லையற்ற உணர்வு மட்டுமே உள்ளது. ‘நான்’ தந்தைக்குச் சொந்தமானவன். தந்தையைப் போன்று, நானும் அதிபதியே. ஆகவே, இதுவே ‘நான்’ என்ற எல்லையற்ற உணர்வு ஆகும். ‘நான்’ என்ற எல்லைக்குட்பட்ட உணர்வானது தடைகளையே உருவாக்கும். ‘நான்’ என்ற எல்லையற்ற உணர்வானது உங்களைத் தடைகளில் இருந்து விடுபடச் செய்து, தடைகளை அழிப்பவர் ஆக்குகிறது. அதேபோன்று, ‘நான்’ என்ற எல்லைக்குட்பட்ட உணர்வானது, உங்களை ‘எனது’ என்ற சுழற்சிக்குள் கொண்டுவருகிறது. ஆனால், ‘நான்’ என்ற எல்லையற்ற உணர்வானது பல பிறவிகளின் சுழற்சிகளில் இருந்து உங்களை விடுவிக்கிறது.

‘எனது’ என்பதன் எல்லையற்ற உணர்வானது, ‘எனது பாபா’ என்பதாகும். எனவே, எல்லைகள் துறக்கப்படுகின்றன. அவதாரமாகி, சரீரத்தின் ஆதாரத்துடன் சேவைக்கான செயல்களைச் செய்யுங்கள். தந்தை உங்களுக்கு ஒரு கடன் வழங்கியுள்ளார். அதாவது, அவர் சேவைக்காக நம்பிக்கைப் பொறுப்பாக உங்களிடம் அதை ஒப்படைத்துள்ளார். உங்களால் வீணானவற்றுக்காக அதைப் பயன்படுத்த முடியாது. இல்லாவிடின், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொக்கிஷங்களைப் பொறுத்தவரை அது நேர்மையற்ற கணக்கையே உருவாக்கும். அவதாரம் ஒருவர் வீணான கணக்கை உருவாக்க மாட்டார். அவதாரம் எடுத்தவர் வந்து, செய்தியைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார். நீங்கள் அனைவரும் இந்த பிராமணப் பிறப்பைச் சேவைக்காகவும் செய்தியைக் கொடுப்பதற்காகவுமே எடுத்துள்ளீர்கள். பிராமணப் பிறப்பு என்பது நீங்கள் அவதாரம் செய்துள்ள பிறப்பு ஆகும். இது சாதாரணமான பிறப்பு அல்ல. ஆகவே, உலக உபகாரியாக, சதா மேன்மையான, அவதாரம் செய்துள்ள ஆத்மாவாக இருப்பதற்கே நீங்கள் அவதரித்துள்ளீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். இந்த நம்பிக்கையையும் போதையையும் பேணுங்கள். நீங்கள் இங்கு தற்காலிகமான காலத்திற்கே வந்துள்ளீர்கள். நீங்கள் திரும்பியும் செல்ல வேண்டியுள்ளது. இப்போது, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை எப்போதும் நினைக்கிறீர்களா? நீங்கள் ஓர் அவதாரம் ஆவீர்கள். நீங்கள் இப்போது வந்துள்ளீர்கள். பின்னர் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். இந்த விழிப்புணர்வானது, உங்களுக்கு அப்பால் செல்லும் அனுபவத்தையும், எல்லையற்ற பேறுகளைக் கொண்டிருக்கும் அனுபவத்தையும் கொடுக்கும். ஒருபுறம், அப்பால் செல்லுதல். இன்னொரு புறம், எல்லையற்ற பேறுகள். இந்த இரண்டு அனுபவங்களும் ஒரே வேளையில் ஏற்படும். நீங்கள் இத்தகைய அனுபவ மூர்த்திகள் அல்லவா? அச்சா.

இப்போது, நீங்கள் கேட்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்துங்கள். செவிமடுப்பதெனில், அவ்வாறு ஆகுதல் என்று அர்த்தம். இன்று, பாபா குறிப்பாகத் தனக்குச் சமமானவர்களைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். நீங்கள் அனைவரும் சமமானவர்கள், அல்லவா? உண்மையான ஆசிரியர் தனது கருவி ஆசிரியர்களைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். அவர் தனது சேவைச் சகபாடிகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். அச்சா.

எப்போதும் ‘நான்’ என்ற எல்லையற்ற உணர்வின் விழிப்புணர்வு சொரூபங்களாக இருப்பவர்களுக்கும், ‘என்னுடையவர் ஒரேயொரு தந்தை மட்டுமே’ என்ற எல்லையற்ற சக்திவாய்ந்த ரூபத்தில் சதா ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் குழந்தைகளுக்கும், சரீர ஆதாரங்களை எடுத்து அவதாரங்களாக அவதரித்திருப்பவர்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:

இது சதா சேவையாளர் ஆத்மாக்களின் ஒன்றுகூடல், அப்படியல்லவா? நீங்கள் உங்களை எப்போதும் எல்லையற்ற உலகச் சேவையாளர்களாகக் கருதுகிறீர்களா? நீங்கள் எல்லைக்குட்பட்ட சேவையாளர்கள் இல்லையல்லவா? நீங்கள் அனைவரும் எல்லையற்றவர்களா? உங்களை ஓரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு அனுப்பினால், நீங்கள் அதற்குத் தயாரா? நீங்கள் அனைவரும் பறக்கும் பறவைகளா? சரீர உணர்வு என்ற கிளை இருந்தும், அவற்றை விட்டுப் பறக்கும் பறவைகளா? உங்களை அதிகளவில் தன்னை நோக்கி இழுக்கும் கிளையானது, சரீர உணர்வே ஆகும். பழைய சம்ஸ்காரங்களை நோக்கி சிறிதளவு கவர்ச்சி இருந்தாலும், சரீர உணர்வு உள்ளது என்பதே அதன் அர்த்தம். ‘எனது சுபாவம் இப்படிப்பட்டது. நான் வாழும் முறை இத்தகையது. எனது பழக்கவழக்கங்கள் இத்தகையதே.’ இவை அனைத்தும் சரீர உணர்வின் அடையாளங்கள் ஆகும். எனவே, பறவைகளான நீங்கள் இந்தக் கிளையை விட்டுப் பறந்துவிட்டீர்களா? இது கர்மாதீத் ஸ்திதி, பந்தனங்கள் எதுவும் அற்ற நிலை எனப்படுகிறது. கர்மாதீத் என்றால் நீங்கள் செயல்களைச் செய்யாமல் விடுதல் என்று அர்த்தம் இல்லை. ஆனால், செயல்களின் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருத்தல் ஆகும். ஆகவே, சரீரத்தின் செயல்கள்;;- இதன் அர்த்தம், உதாரணமாக, சிலர் சௌகரியமாக வாழும் சுபாவத்தை, சரியான வேளையில் சௌகரியமாக உண்பதையும், சரியான வேளையில் அனைத்தையும் செய்வதையும் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இந்த கர்ம பந்தனமும் உங்களை அதைநோக்கி இழுக்கும். இந்த பந்தனத்திற்கும், அதாவது, இந்தக் கர்மத்தின் பழக்கத்திற்கும் அப்பால் செல்லுங்கள். ஏனெனில் நீங்கள் கருவிகள் ஆவீர்கள்.

கருவி ஆத்மாக்களான நீங்கள் அனைவரும், எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்தும், சரீரத்தின் சம்ஸ்காரங்களிலும் சுபாவத்தில் இருந்தும் விடுபட்டிருக்கும்வரை, எவ்வாறு உங்களால் மற்றவர்களை விடுவிக்க முடியும்? உதாரணமாக, சரீரத்தில் ஏற்படும் நோய்கள் கர்ம வேதனையே ஆகும். அதேபோன்று, எதாவதொரு கர்ம பந்தனமும் உங்களைத் தன்னை நோக்கி இழுக்குமாயின், அந்தக் கர்ம வேதனையும் தடைகளை உருவாக்கும். ஒரு பௌதீகமான நோய், ஏதாவது கர்ம வேதனை மீண்டும் மீண்டும் உங்களை இழுத்தால், அதன் வலியே உங்களை இழுக்கிறது, அப்படியல்லவா? அப்போது நீங்கள் கூறுகிறீர்கள்: நான் என்ன செய்வது? இது இல்லாவிட்டால் நான் நன்றாக இருப்பேன். ஆனால் இந்தக் கடும் கர்ம வேதனை உள்ளது. அதேபோன்று, குறிப்பி;ட்டதொரு பழைய சம்ஸ்காரம், சுபாவம் அல்லது பழக்கவழக்கம் உங்களை இழுக்கும்போது, அதுவும் கர்ம வேதனையே ஆகும். எந்த வகையான கர்ம வேதனையும் உங்களைக் கர்ம யோகி ஆகுவதற்கு அனுமதிக்காது. ஆகவே, இதில் இருந்தும் அப்பால் செல்லுங்கள். ஏன்? நீங்கள் அனைவரும் முதலாம் இலக்கத்தைக் கோரப்போகும் ஆத்மாக்கள் ஆவீர்கள். அனைத்திலும் வெல்பவர் என்பதே முதலாம் இலக்கத்தவர் என்பதன் அர்த்தம் ஆகும். அப்போதும் எதிலும் குறைவிருக்காது. ஆசிரியர்கள் என்பதன் அர்த்தம், தமது சொந்த ரூபத்தால் சதா கர்மாதீத் தந்தை பிரம்மாவினதும் அன்பான, பற்றற்ற தந்தை சிவனினதும் அனுபவத்தைக் கொடுப்பவர் என்று அர்த்தம். எனவே, உங்களுக்கு இந்தச் சிறப்பியல்பு உள்ளதல்லவா? நீங்கள் நண்பர்கள், அல்லவா? எவ்வாறு நீங்கள் நண்பர்கள் ஆகுகிறீர்கள்? சமமானவர் ஆகாமல் உங்களால் நண்பர்கள் ஆகமுடியாது. ஆகவே, நீங்கள் அனைவரும் தந்தையின் நண்பர்கள் ஆவீர்கள். நீங்கள் இறைநண்பர்கள். சமமாகுவதெனில், நட்புடன் இருத்தல் என்று அர்த்தம். நீங்கள் தந்தையின் பாதச் சுவடுகளில் உங்களின் பாதச் சுவடுகளை வைப்பவர்கள். ஏனெனில், நீங்கள் நண்பர்களும் அத்துடன் அதியன்பிற்கினியவரின் காதலிகளும் ஆவீர்கள். ஆகவே, காதலிகள் எப்போதும் தமது பாதச் சுவடுகளைத் தமது அதியன்பிற்கினியவரின் அடிகளிலேயே வைப்பார்கள். இதுவே வழக்கம், அப்படியல்லவா? திருமணம் செய்யும்போது தம்பதிகளை என்ன செய்வார்கள்? இவ்வாறே செய்ய வைப்பார்கள், அப்படியல்லவா? எனவே, எங்கு இந்த வழக்கம் ஆரம்பமாகியது? இது உங்கள் மூலமே உருவாகியது. உங்களுடையது புத்தியின் பாதம் ஆகும். ஆனால் அவர்கள் அதைப் பௌதீகமான பாதங்கள் எனப் புரிந்து கொண்டுள்ளார்கள். நீங்கள் ஒவ்வோர் உறவுமுறையினதும் பொறுப்பை நிறைவேற்றும் விசேடமான உறவுமுறைகளைக் கொண்டுள்ள கருவி ஆத்மாக்கள் ஆவீர்கள்.

கருவி ஆசிரியர்களிடம் மற்றவர்களை விட இலகுவான வழிமுறை உள்ளது. மற்றவர்கள் இப்போதும் தமது உறவுமுறைகளைப் பேண வேண்டியுள்ளது. ஆனால் உங்களின் உறவுமுறையோ எப்போதும் சேவையுடனும் தந்தையுடனும் உள்ளது. நீங்கள் லௌகீகப் பணியொன்றைச் செய்யும்போதும், நேரம் வரும்போது நீங்கள் சேவைக்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் யாருக்காக லௌகீகப் பணியைச் செய்கிறீர்களோ, இயல்பாகவே அவரின் விழிப்புணர்விலேயே இருப்பீர்கள். உதாரணமாக, உலகில், பெற்றோர் தமது பிள்ளைகளுக்காக வருமானத்தைச் சம்பாதிப்பார்கள். எனவே, இயல்பாகவே அவர்களை நினைப்பார்கள். நீங்கள் உங்களின் லௌகீகப் பணியைச் செய்யும்போது, அதை யாருக்காகச் செய்கிறீர்கள்? நீங்கள் உங்களுக்காகச் செய்கிறீர்களா அல்லது சேவைக்காகச் செய்கிறீர்களா? நீங்கள் சேவைக்காக எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமான சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் லௌகீகப் பணியைச் செய்கிறீர்கள் எனச் சிந்தித்தவண்ணம் அதைச் செய்யாதீர்கள். அதுவும் சேவைக்கான வழிமுறையே. அது வேறுபட்ட ரூபத்தில் இருந்தாலும், அதுவும் ஒரு சேவையின் வடிவமே ஆகும். இல்லாவிடின், அது லௌகீகச் சேவையாக இருந்து, சேவை செய்வதற்கான வசதிகள் உங்களிடம் இல்லாவிட்டால், எங்கிருந்து எதையாவது பெறுவது, எவ்வாறு அதைப் பெறுவது என நீங்கள் சிந்திப்பீர்கள். ‘என்னால் நிர்வகிக்க முடியவில்லை. அது எப்போது நிகழும் என எனக்குத் தெரியவில்லை’. இந்த எண்ணங்கள் உங்களின் நேரத்தை வீணாக்கும் அல்லவா? ஆகவே, நீங்கள் லௌகீகத் தொழிலைச் செய்கிறீர்கள் என ஒருபோதும் கூறாதீர்கள். அது லௌகீகம் இல்லாத தொழில். அது சேவைக்காகவே. அவ்வாறிருந்தால் நீங்கள் ஒருபோதும் சுமையை உணர மாட்டீர்கள். இல்லாவிடின், நீங்கள் சிலவேளைகளில் பாரமாக உணர்வீர்கள்: ‘எவ்வளவு காலத்திற்கு நான் இதைச் செய்வது? என்ன நிகழும்?’ நீங்கள் அனைவரும் உங்களின் வெகுமதியை இலகுவாக உருவாக்குவதற்கான வழிமுறை இதுவே ஆகும்.

மூன்று விடயங்கள் உள்ளன: சரீரம், மனம், செல்வம். நீங்கள் இந்த மூன்றையும் சேவைக்காகப் பயன்படுத்தினால், அந்த மூன்றின் பலனையும் யார் அடைவார்கள்? நீங்கள் அதைப் பெறுவீர்களா அல்லது தந்தை பெறுவாரா? உங்களின் வெகுமதியை மூன்று வழிமுறைகளாலும் உருவாக்கக்கூடியதாக இருத்தல், மற்றவர்களின் வெகுமதியை விட மேலதிகமான ஒன்றாகும். ஆகவே, இதையிட்டு ஒருபோதும் பாரமாக உணராதீர்கள். உங்களின் நோக்கங்களை மாற்றிவிடுங்கள். அவ்வளவே. இது லௌகீகமானது அல்ல. ஆனால் அலௌகீகமானது. இந்த நோக்கத்தை மாற்றுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? அப்போது நீங்கள் இரட்டை அர்ப்பணித்தவர் ஆகுவீர்கள். நீங்கள் உங்களின் செல்வத்தாலும் அர்ப்பணிக்கிறீர்கள். அனைத்தும் தந்தைக்கே. அர்ப்பணித்தல் என்பதன் அர்த்தம் என்ன? உங்களிடம் இருக்கும் அனைத்தும் தந்தைக்கே. அதாவது, அது சேவைக்கே. இதுவே அர்ப்பணித்தல் ஆகும். அர்ப்பணிக்காமல் இருப்பவர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள்! அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம். நீங்கள் குழந்தைகளையும் உருவாக்கியுள்ளீர்கள். நீங்கள் அர்ப்பணிக்கவில்லை என்றும் கூறுகிறீர்கள். உங்களின் திருமண ஆண்டு விழாவை நீங்கள் கொண்டாடுகிறீர்கள். எனவே, நீங்கள் திருமணம் செய்யவில்லை எனக்கூறாதீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? குழு முழுவதும் அர்ப்பணித்துள்ளீர்கள், அல்லவா?

இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளையும் இரட்டை வெளிநாடுகளில் கருவிகளாக இருக்கும் ஆசிரியர்களையும் பாப்தாதா புகழுகிறார். அவர் பெயருக்காகப் புகழவில்லை. ஆனால், நீங்கள் அதிகளவு அன்புடன் விசேடமான முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், அன்பினால், அதை முயற்சியாக நீங்கள் உணர்வதில்லை. பாருங்கள், நீங்கள் குழுக்களைத் தயார் செய்து, வெகு தொலைவில் இருந்து இங்கு அழைத்து வருகிறீர்கள். ஆகவே, நீங்கள் செய்யும் முயற்சிகளால் பாப்தாதா குழந்தைகளான உங்களிடம் தன்னை அர்ப்பணிக்கிறார். இரட்டை வெளிநாட்டுக் கருவி சேவையாளர்களிடம் ஒரு மிக நல்ல சிறப்பியல்பு உள்ளது. அந்தச் சிறப்பியல்பு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? (பல சிறப்பியல்புகள் வெளிவந்தன). வெளிவந்துள்ள சிறப்பியல்புகள் எவையாயினும், உங்களைச் சோதித்துப் பாருங்கள். அவை இல்லாமல் இருந்தால், உங்களை அவற்றால் நிரப்பிக் கொள்ளுங்கள். ஏனெனில், பல நல்ல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. இரட்டை வெளிநாட்டுச் சேவையாளர்களான உங்களில் ஒரு சிறப்பியல்பைக் கண்டதாக பாப்தாதா உங்களுக்குக் கூறுகிறார்: பாப்தாதா என்ன வழிகாட்டலை உங்களுக்கு வழங்கினாலும், நீங்கள் அதைச் செய்கிறீர்கள். அதை நடைமுறையில் கொண்டுவருகிறீர்கள். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியிருந்தாலும், நிச்சயமாக அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த நடைமுறை இலக்கு மிகவும் நல்லது. அவர்கள் ஒரு குழுவைக் கொண்டு வர வேண்டும் என பாப்தாதா கூறும்போது, அவர்கள் குழுக்களைக் கொண்டு வருகிறார்கள்.

நீங்கள் விஐபி களுக்குச் சேவை செய்ய வேண்டும் என பாப்தாதா கூறினார். ஆரம்பத்தில், அது மிகவும் கடினம் என நீங்கள் கூறினீர்கள். ஆனால் அதைச் செய்வதற்கான தைரியத்தை நீங்கள் பேணினீர்கள். எனவே, இப்போது, இரண்டு வருடங்களாக, குழுக்கள் வருகின்றன. இலண்டனில் இருந்து விஐபிகள் இங்கு வருவது மிகவும் கடினம் என நீங்கள் கூறினீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் இப்போது நடைமுறை உதாரணத்தைக் காட்டியுள்ளீர்கள். இந்த வேளையில், பாரதத்தைச் சேர்ந்தவர்களும் ஜனாதிபதியை இங்கு அழைத்து வந்தார்கள். எவ்வாறாயினும், இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் பெற்ற வழிகாட்டல் எதுவாயினும் அதை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உற்சாகமும் அதைச் செய்வதற்கான அன்பும் மிகவும் நன்றாக உள்ளன. நடைமுறைப் பெறுபேறுகளைப் பார்க்கும்போது, பாப்தாதா உங்களின் சிறப்பியல்புகளின் புகழைப் பாடுகிறார். நிலையங்களைத் திறத்தல் கடந்தகாலத்திற்குரிய விடயம். நீங்கள் தொடர்ந்து அவற்றைத் திறப்பீர்கள். ஏனெனில், அங்கு உங்களுக்கு இலகுவாக சகல வசதிகளும் கிடைக்கின்றன. நீங்கள் இங்கிருந்து சென்று, அங்கு திறக்க முடியும். பாரதத்திற்கு இவ்வாறான வசதிகள் இல்லை. ஆகவே, நிலையங்களைத் திறத்தல் பெரிய விடயம் அல்ல. ஆனால், இப்போது நீங்கள் மிக நல்ல வாரிசு தரமுள்ள ஆத்மாக்களைத் தயார்ப்;படுத்த வேண்டும். ஒன்று, வாரிசு தரமுள்ள ஆத்மாக்களைத் தயாராக்குதல். மற்றையது, சத்தத்தைப் பரப்புவதில் சக்திவாய்ந்தவர்களாக இருப்பவர்களைத் தயாராக்குதல். இரண்டும் அத்தியாவசியமானவை. வாரிசு தரம் - உதாரணமாக, சேவை செய்வதற்கான ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் நீங்கள் உங்களின் சரீரம், மனம், செல்வத்தை உங்களின் புத்திபூர்வமாக அர்ப்பணித்தால் - இது வாரிசு தரமுள்ள ஆத்மா எனப்படுகிறது. எனவே, நீங்கள் வாரிசு தரமுடைய ஆத்மாக்களை வெளிப்படச் செய்ய வேண்டும். இதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிலையத்திலும், இத்தகைய வாரிசு தரமுடைய ஆத்மாக்கள் இருக்க வேண்டும். அப்போது அந்த நிலையம், நிலையங்கள் அனைத்திலும் முதல் இலக்கத்தில் இருக்கும்.

ஒன்று, சேவையில் ஒத்துழைப்பவராக இருத்தல். மற்றையது, உங்களைச் சம்பூரணமாக அர்ப்பணித்தல். இத்தகைய வாரிசுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஒவ்வொரு நிலையத்திலும் இத்தகைய வாரிசுகள் இருக்கிறார்களா? இறை மாணவர்களினதும், சேவையில் ஒத்துழைப்பவர்களினதும் நீண்டதொரு பட்டியலை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். ஆனால் வாரிசுகள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள். எந்தக் கணத்திலும் ஒரு வழிகாட்டலை யார் பெற்றாலும், நீங்கள் தொடர்ந்து என்ன ஸ்ரீமத்தைப் பெற்றாலும், அதற்கேற்ப தொடர்ந்து செயற்படுங்கள். எனவே, இரண்டு இலக்குகளையும் வைத்திருங்கள். நீங்கள் இந்த வகையையும் அந்த வகையையும் உருவாக்க வேண்டும். இத்தகைய வாரிசு ஆத்மா ஒருவரால் பல நிலையங்களைத் திறப்பதற்குக் கருவி ஆகமுடியும். உங்களுக்கு இலக்கு இருக்கும்போது, இது தொடர்ந்து நடைமுறையில் நிகழும். நீங்கள் இப்போது உங்களின் சிறப்பியல்பைப் புரிந்து கொண்டீர்கள், அல்லவா? அச்சா.

நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்கள் அல்லவா? அல்லது உங்களைக் கேட்க வேண்டுமா? நீங்கள் மற்றவர்களைத் திருப்திப்படுத்துபவர்கள். எனவே, மற்றவர்களைத் திருப்திப்படுத்துபவர்கள் தாங்களும் திருப்தியாகவே இருப்பார்கள், அப்படியல்லவா? சிலவேளைகளில் மிகச் சிறிதளவு சேவை இடம்பெறும்போது, நீங்கள் தளம்புவது இல்லையல்லவா? நிலையத்தில் தடைகள் ஏற்படும்போது, அந்தத் தடைகளைக் கண்டு நீங்கள் பயப்படுவது இல்லையல்லவா? உதாரணமாக, தடைகளில் பெரியதொரு தடை வந்தால், அல்லது நல்லதொரு கரம் எதிரானவராகி, உங்களின் சேவையில் குழப்பம் விளைவித்தால், அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் பயப்படுவீர்களா? ஒன்று, அவருக்காக நலம்விரும்பும் உணர்வுகளுடன் கருணை கொள்ளுதல். அது வேறு விடயம். எவ்வாறாயினும், உங்களின் ஸ்திதி தளம்பினால், அல்லது நீங்கள் வீணான எண்ணங்களைக் கொண்டிருந்தால், அதுவும் தளம்பலே ஆகும். ஆகவே, உங்களின் எண்ணங்களால் ஓர் உலகை உருவாக்காதீர்கள். அந்த எண்ணங்கள் உங்களைத் தளம்பல் அடைய அனுமதிக்காதீர்கள். இதுவே ஆட்ட, அசைக்க முடியாத ஸ்திதி எனப்படுகிறது. இது எதுவும் புதியதல்ல எனச் சிந்திப்பதனால் நீங்கள் கவனக்குறைவானவர் ஆகக்கூடாது. சேவை செய்யுங்கள். அவரிடம் கருணைநிறைந்தவர் ஆகுங்கள். தளம்பல் அடையாதீர்கள். எனவே, கவனக்குறைவானவராகி, எந்த வகையான உணர்வையும் உருவாக்காதீர்கள். நீங்கள் எப்போதும் எந்த வகையான சூழலில் அல்லது சுற்றாடலில் இருக்க முடியும். ஆனால், ஆட்ட அசைக்க முடியாதவர் ஆகுங்கள். கருவியாக இருக்கும் ஒருவர் உங்களுக்கு அறிவுரை சொல்லும்போது, அதனால் குழப்பம் அடையாதீர்கள். அவர் ஏன் உங்களுக்கு இதைக் கூறுகிறார் என்றோ அல்லது இது எவ்வாறு நிகழும் என்றோ நினைக்காதீர்கள். கருவிகளாக இருப்பவர்கள் அனுபவசாலிகள். நடைமுறையில் முன்னேறுபவர்களில், சிலர் புதியவர்கள். ஏனையோர் சிறிது பழையவர்கள். ஆகவே, அவர்களின் முன்னால் எந்தவொரு சூழ்நிலை வந்தாலும், அந்தச் சூழ்நிலையால், ஆரம்பம், மத்தி, முடிவினைப் புரிந்து கொள்வதற்கான தெளிந்த புத்திகள் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் நிகழ்காலத்தை மட்டுமே அறிவார்கள். நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பதனால், அவர்களுக்கு ஆரம்பமும் முடிவும் தெளிவாகத் தெரிவதில்லை. அதனால் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். எந்த வேளையிலும், ஒரு வழிகாட்டல் தெளிவாக இல்லாவிட்டாலும், குழப்பம் அடையாதீர்கள். பொறுமையாக, நீங்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள் எனக்கூறி, அந்த நபருக்குச் சிறிதளவு நேரம் கொடுங்கள். அந்த வேளையில், குழப்பமடைந்து, ‘இதைச் செய்யாதீர்கள்’ அல்லது ‘அதைச் செய்யாதீர்கள்’ எனக் கூறாதீர்கள். ஏனெனில், இரட்டை வெளிநாட்டவர்களுக்கு அதிகளவில் சுதந்திரமான மனம் உள்ளது. அந்த சுதந்திரமான மனதுடன் அவர்கள் ‘இல்லை’ என்றும் கூறக்கூடும். ஆகவே, உங்களுக்கு முன்னால் எது வந்தாலும், அனைத்திற்கும் முதலில் அதைப் பற்றி முதிர்ச்சியுடன் சிந்தியுங்கள். ஏனெனில், நிச்சயமாக அதில் ஏதாவது அர்த்தம் மறைந்திருக்கும். ‘இதில் என்ன அர்த்தம் உள்ளது?’ என அவர்கள் கேட்கக்கூடும். இதில் என்ன நன்மை உள்ளது? எங்களுக்கு மேலும் தெளிவாக விளக்குங்கள். நீங்கள் அவர்களுக்கு இதைக் கூறலாம். எவ்வாறாயினும், ஒருபோதும் எந்தவொரு வழிகாட்டலையும் மறுக்காதீர்கள். நீங்கள் மறுப்பதனாலேயே குழப்பம் அடைகிறீர்கள். இந்தச் சிறிதளவு மேலதிகமான கவனம் இரட்டை வெளிநாட்டவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இல்லாவிடின், கருவி சகோதரிகளான உங்களின் வழிகாட்டல்களை அவர்கள் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்யாமல், தளம்பல் அடைய ஆரம்பிப்பார்கள். இதுவே நிகழும். நீங்கள் யாருக்குக் கருவிகளாக இருக்கிறீர்களோ, அவர்கள் உங்களைப் பார்க்கும்போது, இந்த சம்ஸ்காரங்கள் அவர்களிலும் நிரம்பும். சிலவேளைகளில், சிலர் முகங்கோணுவார்கள். ஏனைய வேளைகளில், ஏனையோர் முகங்கோணுவார்கள். இந்த விளையாட்டுகள் நிலையத்தில் தொடரும். புரிகிறதா? அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஞானத்தினதும் யோகத்தினதும் சக்திகளால், ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு விநாடியில் சித்தி எய்தும் மகாவீர் ஆகுவீர்களாக.

ஒரு மகாவீர் என்றால் சதா ஒளி மற்றும் சக்தி வீடாக இருப்பவர் என்று அர்த்தம். ஞானம் - ஒளி. யோகம் - சக்தி. இந்தச் சக்திகளால் நிறைந்திருப்பவர்களால் ஒரு விநாடியில் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் சித்தி எய்த முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் சித்தி எய்தாத சம்ஸ்காரத்தை நீங்கள் விருத்தி செய்தால், அந்த சம்ஸ்காரம் இறுதிக் கணங்களில் உங்களை முழுமையாகச் சித்தி எய்த அனுமதிக்காது. குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாகச் சித்தி எய்துபவர்கள், திறமைச் சித்தி எய்துபவர்கள் எனப்படுகிறார்கள். தர்மராஜூம் அந்த ஆத்மாவை கௌரவிக்கிறார்.

சுலோகம்:
விகாரங்களின் விதையை யோக அக்கினியில் எரியுங்கள். நீங்கள் அந்த வேளையில் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.