28.11.2018 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற சேவையில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், இச் சேவையைச் செய்வதற்கு, உங்களுக்கு ஆழமான தாரணை இருப்;பது அவசியம்.
கேள்வி:
எவ்வாறு ஆத்மாக்கள் அழுக்கடைகின்றனர்? ஆத்மாக்களை மூடியிருக்கும் அழுக்கு யாது?
பதில்:
நண்பர்கள், உறவினர்களுடைய நினைவினால் ஆத்மாக்கள் அழுக்கடைகின்றனர். சரீர உணர்வே முதல் இலக்க அழுக்காகும். அதனைத் தொடர்ந்து பேராசை, பற்று என்னும் அழுக்குகள் ஆரம்பமாகுகின்றன. ஆத்மாக்கள் விகாரங்கள் என்ற அழுக்கினால் மூடப்படுகின்றனர். பின்னர் அவர்கள் தந்தையை நினைவுசெய்வதற்கு மறந்து விடுவதுடன் சேவையும் செய்ய முடியாதிருக்கின்றார்கள்.
பாடல்:
என் இதயம் உங்களைக் கூவி அழைக்க விரும்புகின்றது.
ஓம் சாந்தி.
இப் பாடல் மிகவும் நல்லது. குழந்தைகள் உத்தரவாதம் அளிக்கின்றார்கள்: உங்களைச் செவிமடுத்த பின் இந்த ஞானத்தை நான் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில குழந்தைகளுக்குத் தந்தையின் நினைவு இருக்கின்றது. அதுவும் அவசியமானதே. சிலருக்கு நினைவும் இருப்பதுடன் பாபாவைச் சந்தித்தும் இருப்பார்கள். பல்கோடிக்கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினரே வந்து இந்த ஆஸ்தியைப் பெறுகிறார்கள் என்று கூறப்படுகின்றது. இப்பொழுது உங்கள் புத்தி மிகவும் பரந்ததாகவும், எல்லையற்றதாகவும் ஆகிவிட்டது. உங்களுக்கு இராஜயோகத்தை கற்பிப்பதற்காகத் தந்தை, நிச்சயமாக 5000 வருடங்களுக்கு முன்பும் வந்திருப்பார். எல்லாவற்றுக்கும் முதலில் இந்த ஞானத்தை உரைத்தவர் யார் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஏனெனில், அதுவே மிகப்பெரிய தவறாகும். சமயநூல்கள் அனைத்துக்கும் தாயாக விளங்கும் இரத்தினமான, கீதையே பாரதத்தின் சமயநூல் என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். சமயநூல்கள் அனைத்திற்கும் தாயாகவும், இரத்தினமாகவும் விளங்குகின்ற கீதையை உரைத்தவர் யார் என்பதையும், அதன் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட தர்மம் எது என்பதையும் மக்கள் மறந்து விட்டார்கள். எவ்வாறாயினும், அவர்கள் நிச்சயமாகப் பாடுகின்றார்கள்: ஓ கடவுளே, வாருங்கள்! கடவுள் நிச்சயமாகப் புதிய, தூய உலகைப் படைப்பதற்கு வருகின்றார். அவரே உலகின் தந்தையாவார், இல்லையா? பக்தர்கள் பாடுகின்றார்கள்: நீங்கள் வரும்பொழுது நாங்கள் அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுகிறோம். சந்தோஷமும் அமைதியும் இரு விடயங்கள். சத்தியயுகத்தில் நிச்சயமாகச் சந்தோஷமும் இருக்கும். ஆனால், ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்தில் இருக்கிறார்;கள். இந்த அறிமுகம் கொடுக்கப்பட வேண்டும். புதிய உலகில், இராம இராச்சியமாகிய, புதிய பாரதம் இருக்கிறது. அந்த உலகில் சந்தோஷம் இருக்கிறது. இதனாலேயே இராம இராச்சியத்தின் புகழ் உள்ளது. அது இராம இராச்சியம் என்று அழைக்கப்படுவதாயின், இது இராவண இராச்சியம் என்றே அழைக்கப்பட வேண்டும். ஏனெனில், இங்கே துன்பமே இருக்கின்றது. ஆனால் அங்கோ சந்தோஷம் இருக்கின்றது. தந்தை வந்து சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் அமைதியைப் பெறுகின்றார்கள். தந்தையே அமைதியையும், சந்தோஷத்தையும் அருள்பவர். இங்கே அமைதியின்மையும், துன்பமுமே இருக்கின்றன. எனவே, இந்த ஞானம் உங்கள் புத்தியில் சிறிதுசிறிதாகப் பதிய வேண்டும். அதற்கு ஒரு மிகச்சிறந்த ஸ்திதி தேவை. சிறு குழந்தைகளுக்கும் இது கற்பிக்கப்பட்டாலும், அவர்களால் அர்த்தத்தை விளங்கப்படுத்த முடியாது. இது மிக ஆழமாகக் கிரகிக்கப்பட வேண்டும். அப்பொழுது எவராவது உங்களை ஏதேனும் கேள்விகள் கேட்டால், உங்களால் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். மிகச் சிறந்ததொரு ஸ்திதி தேவைப்படுகின்றது. இல்லாவிடின், சரீர உணர்வினாலோ அல்லது கோபத்தினாலோ, அல்லது பற்றினாலோ சிலவேளைகளில் நீங்கள் தொடர்ந்தும் வீழ்ந்து விடுகின்றீர்கள். சிலர் எழுதுகின்றார்கள்: பாபா, இன்று நான் கோபத்தினால் வீழ்ந்து விட்டேன். இன்று நான் பேராசையால் வீழ்ந்து விட்டேன். உங்கள் ஸ்திதி உறுதியாக இருக்கும்பொழுது, வீழ்ந்து விடுவதற்கான கேள்வியே இருக்காது. மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற சேவையைச் செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பாடல் மிகவும் நல்லது: பாபா, நீங்கள் வரும்பொழுது, நாங்கள் மிகவும் சந்தோஷமடைவோம். தந்தை நிச்சயமாக வர வேண்டும். இல்லாவிட்டால், தூய்மையற்ற உலகை யார் தூய்மையாக்குவார்? கிருஷ்ணர் ஒரு சரீரதாரி. இதற்காக அவரது பெயரையோ அல்லது பிரம்மா, விஷ்ணு, சங்கரருடைய பெயர்களையோ நீங்கள் குறிப்பிட முடியாது. மக்கள் பாடுகின்றார்கள்: ஓ! தூய்மையாக்குபவரே, வாருங்கள்;! எனவே, அவர்களை நீங்கள் கேட்க வேண்டும்: நீங்கள் யாரிடம் இதனைக் கூறுகின்றீர்கள்? தூய்மையாக்குபவர் யார்? அவர் எப்பொழுது வருவார்? அந்த ஒரேயொருவரே தூய்மையாக்குபவர். அவரை நீங்கள் கூவி அழைப்பதால், நிச்சயமாக இந்த உலகம் தூய்மையற்றதாகவே இருக்க வேண்டும். சத்தியயுகம் தூய உலகம் என அழைக்கப்படுகின்றது. தூய்மையற்ற உலகை யார் தூய்மையாக்குவார்? உண்மையாகவே கடவுள் இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களை இந்த விகாரங்களை வெற்றி கொள்ளுமாறு செய்தார் என்று கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காமமே மிகக் கொடிய எதிரி. அவர்களை நீங்கள் கேட்க வேண்டும்: அவர் உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பார் என்றும், காமமே மிகக் கொடிய எதிரி என்றும் உங்களுக்குக் கூறியது யார்? அவர் சர்வவியாபி என்று உங்களுக்குக் கூறியது யார்? எச் சமயநூலில் இது எழுதப்பட்டிருக்கின்றது? அவரே தூய்மையாக்குபவர் என்று யாரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது? கங்கை தூய்மையாக்குபவரா அல்லது அது வேறு ஒருவரா? காந்திஜியும், “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என்று கூறுவதுண்டு. கங்கை எப்பொழுதும் இருந்திருக்கிறது. அது புதிதல்ல. கங்கையை அழிவற்றது என அழைக்க முடியும். தத்துவங்கள் தமோகுணியாகுவதால், அவை விஷமம் புரிகின்றன. அவை (தத்துவங்கள்) அவற்றைப் பெருக்கெடுக்கச் செய்து வெள்ளத்தை ஏற்படுகின்றன. பின்பு அவற்றின் ஓடிச் செல்லும் திசையை அவை மாற்றுகின்றன. சத்தியயுகத்தில் அனைத்துமே ஒழுங்காகத் தொழிற்படுகின்றன. அங்கே மழை வீழ்ச்சி மிகக்குறைவாகவோ அல்லது அதிகூடியதாகவோ இருக்க முடியாது. அங்கே துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே, தூய்மையாக்குபவர் எங்கள் பாபா மாத்திரமே என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். தூய்மையாக்குபவரை மக்கள் நினைவுசெய்யும்பொழுது, “ஓ கடவுளே!”இ “ஓ பாபா!” என்று கூறுகிறார்கள். இப்படிக் கூறியது யார்? ஆத்மாக்களே அதனைக் கூறினார்கள். தூய்மையாக்குபவராகிய சிவபாபா வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். ‘அசரீரியானவர்’ என்ற வார்த்தையை நீங்கள் கட்டாயமாகப் புகுத்த வேண்டும். இல்லாவிட்டால், சரீரதாரியையே அவ்வாறானவர் என்று அவர்கள் நம்புகின்றார்கள். ஆத்மாக்கள் தூய்மையற்றவர்களாகி விட்டதால், அனைவரையும் கடவுள் என்று நீங்கள் கூற முடியாது. “நானே பிரம்மா” அல்லது “நானே சிவன்” என்று கூறுவது ஒரே விடயமே. எவ்வாறாயினும், படைப்பின் அதிபதி ஒரேயொரு படைப்பவர் மாத்திரமே. மக்கள் பல்வேறு, மிக நீண்ட, சிக்கலான அர்த்தங்களை எடுத்துரைக்கிறார்கள். ஆனால், எங்களுடையதோ ஒரு நொடிப்பொழுது விளக்கமாகும். நீங்கள் ஒரு விநாடியில் தந்தையின் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். சுவர்க்க இராச்சியமே தந்தையின் ஆஸ்தியாகும். அது ஜீவன்முக்தி என அழைக்கப்படுகின்றது. இது பந்தன வாழ்க்கையாகும். நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: உண்மையாகவே, நீங்கள் வரும்பொழுது, எங்களுக்குச் சுவர்க்கம், முக்தி, ஜீவன்முக்தி எனும் ஆஸ்தியைக் கொடுப்பதற்காகவே வருகிறீர்கள். இதனாலேயே முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருள்பவர் ஒரேயொருவரே என்று எழுதப்பட்டுள்ளது. இதுவும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். சத்தியயுகத்தில் ஒரேயொரு ஆதி சனாதன தேவிதேவதா தர்மமே இருக்கின்றது. அங்கே துன்பத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. அதுவே சந்தோஷ பூமியாகும். அங்கே சூரிய வம்ச இராச்சியம் இருக்கிறது. அதன்பின் திரேதா யுகத்தில், சந்திர வம்ச இராச்சியமாக இருக்கின்றது. பின்பு துவாபர யுகத்தில் இஸ்லாமியர்களும் பௌத்;தர்களும் வருகிறார்கள். பாகம் முழுவதும் நிச்சயிக்கப்பட்டது. சின்னஞ்சிறிய புள்ளி வடிவமான ஆத்மாக்களிலும், பரமாத்மாவிலும் இத்தகைய பெரிய பாகங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. நீங்கள் சிவனுடைய படத்தில் எழுத வேண்டும்: ‘நான் ஜோதிலிங்கத்தின் (நீள்கோள வடிவம்) அளவுக்குப் பெரியவரல்ல. நான் ஒரு நட்சத்திரம் போன்றவர். ஆத்மாக்களும் நட்சத்திரங்களே. நெற்றியின் மத்தியில் அற்புதமானதொரு நட்சத்திரம் பிரகாசிக்கின்றது என்று நினைவுகூரப்பட்டுள்ளது. எனவே அதுவே ஆத்மா ஆவார். நான் பரமாத்மாவாகிய பரமதந்தை. எவ்வாறாயினும், நான் தூய்மையாக்குபவரான பரம்பொருள். எனது தெய்வீகக்குணங்கள் முற்றிலும் வேறானவை. அதனால், சகல தெய்வீகக்குணங்களும் எழுதப்பட வேண்டும். ஒருபுறம் சிவனுடைய புகழையும், இன்னொரு புறம் கிருஷ்ணருடைய புகழையும் எழுதுங்கள். அவை எதிரும் புதிருமானவை. மக்கள் இதனை வாசித்து மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மிகத்தெளிவாக இதை நீங்கள் எழுத வேண்டும். சுவர்க்கமும் நரகமும், சந்தோஷமும் துன்பமும்: அவற்றை நீங்கள் கிருஷ்ணரின் இரவும் பகலும் என்று அழைத்தாலென்ன, பிரம்மாவின் இரவும் பகலும் என்று அழைத்தாலென்ன அது ஒரேவிடயமே. இன்பமும் துன்பமும் எவ்வாறு தொடர்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். சூரிய வம்சத்திற்கு 16 சுவர்க்கக் கலைகள் இருக்கின்றன. சந்திர வம்சத்திற்கு 14 சுவர்க்கக் கலைகள் இருக்கின்றன. ஒன்று முற்றிலும் சதோபிரதானமானது. மற்றையது சதோ ஆகும்;. சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பின்பு சந்திர வம்சத்தவர்களாக ஆகுகின்றார்கள். சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் திரேதாயுகத்துக்கு வரும்பொழுது, அவர்கள் இராஜ அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டாலும் நிச்சயமாகச் சந்திர வம்சத்திலேயே பிறக்கிறார்கள். இவ் விடயங்கள் உங்கள் புத்தியில் நன்றாகப் பதியச் செய்யப்பட வேண்டும். எவ்வளவுக்கு நீங்கள் நினைவில் இருந்து ஆத்ம உணர்வுடையவர்களாக ஆகுகிறீர்களோ, அதற்கேற்பவே உங்களால் கிரகிக்க முடியும். நீங்கள் சேவையையும் மிக நன்றாகச் செய்வீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் மிகத்தெளிவாகக் கூறுவீர்கள்: நான் இவ்வாறு இருக்கிறேன். நான் இவ்வாறு கிரகிக்கிறேன். நான் இவ்வாறு விளங்கப்படுத்துகிறேன். நான் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக இவ்வாறு ஞானக்கடலைக் கடைகின்றேன். உங்கள் கடைதல் எந்நேரமும் தொடரும். ஞானம் இல்லாதவர்களுக்கு அது வேறுபட்ட விடயம். அவர்கள் எதையுமே கிரகிக்க மாட்டார்கள். அவர்கள் ஞானத்தைக் கிரகித்தால், அவர்கள் சேவை செய்ய வேண்டும். இப்பொழுது சேவை பெருமளவுக்குத் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. நாளுக்கு நாள், உங்கள் புகழ் அதிகரிக்கும். அதன்பின், உங்கள் கண்காட்சிகளுக்குப் பலர் வருவார்கள். பல படங்களும் தயாரிக்கப்பட வேண்டும். மிகப்பெரிய கூடாரமொன்று போடப்பட வேண்டும். உண்மையில் இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதற்கு ஏகாந்தம் தேவைப்படுகின்றது. விருட்சம், சக்கரம், இந்த இலக்ஷ்மி, நாராயணன் படங்கள் என்பவையே எங்கள் முக்கியமான படங்களாகும். இராதை, கிருஷ்ணருடைய படத்திலிருந்து மக்களால் அவர்கள் யார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது. இந்நேரத்தில், அவர்களைப் போன்று தந்தை உங்களைத் தூய்மையாக்குகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அனைவரும் ஒரேயளவுக்கு முழுமையடைவார்கள் என்று கூற முடியாது. ஆத்மாக்கள் தூய்மையாகுவார்கள். ஆனால் அனைவரும் ஞானத்தைக் கிரகிக்க மாட்டார்கள். எவராவது ஞானத்தைக் கிரகிக்காது விட்டால், அவர் குறைந்த அந்தஸ்தையே பெறுவார் என்பது புரிந்துகொள்ளப்படும். உங்கள் புத்தி இப்பொழுது மிகவும் கூர்மையானதாகி விட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் இது வரிசைக்கிரமமாகவே இருக்கும். சிலர் புத்திசாலிகளாகவும், சிலர் மந்தமானவர்களாகவும் உள்ளார்கள். அதுவும் வரிசைக்கிரமமாகவே இருக்கும். நல்ல நபருக்கு விளங்கப்படுத்துவதற்கு மூன்றாந்தரமான ஒருவரைக் கொடுத்தால், இங்கே ஒன்றுமேயில்லை என்று அவர் நினைப்பார். இதனாலேயே நல்ல நபருக்கு விளங்கப்படுத்துவதில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முயற்சி செய்யப்படுகின்றது. அனைவரும் ஒரேயளவுக்குச் சித்தியடைய மாட்டார்கள். பாபா ஒரு வரையறை வைத்திருக்கின்றார். இந்தக் கல்வியின் பெறுபேறுகள் ஒவ்வொரு சக்கரமும் அறிவிக்கப்படுகின்றன. சித்தியடைபவர்களில் முக்கியமானவர்கள் எட்டுப் பேர் இருக்கிறார்கள். அவர்களையடுத்து, 100 பேரும், பின்பு 16,000 பேரும், அவர்களையடுத்துப் பிரஜைகளும் சித்தியடைகிறார்கள். அதிலும், செல்வந்தர்கள், ஏழைகள் என அனைத்து வகையினரும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் எவ்வகையான முயற்சி செய்;கிறார்கள் என்பதும், அவர் எத்தகைய அந்தஸ்தைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் என்பதும் புரிந்துகொள்ளப்படுகின்றது. ஓர் ஆசிரியருக்கு இது தெரிந்திருக்கும். ஆசிரியர்களும் வரிசைக்கிரமமானவர்களே. சில ஆசிரியர்கள் சிறந்தவர்;கள். அவர்கள் மிக நன்றாகக் கற்பிக்கிறார்கள் என்றும், அதிகளவு அன்பை அளிக்கிறார்கள் என்றும் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். ஒரு நல்ல ஆசிரியர் சிறியதொரு நிலையத்தைப் பெரிய நிலையமாக்குவார். நீங்கள் புத்தியைப் பயன்படுத்தி அதிகளவைச் செய்ய வேண்டும். ஞான மார்க்கத்தில் நீங்கள் அதிகூடியளவு இனிமையானவர்களாக வேண்டும். இனிய தந்தையோடு நீங்கள் முழுமையான யோகத்தைக் கொண்டிருக்கும்பொழுதே உங்களால் இனிமையானவர்களாக முடியும். அப்பொழுதே, உங்களால் கிரகிக்கவும் முடியும். அவ்வளவு இனிமையான பாபாவுடன் பலருக்கும் யோகத் தொடர்பு இல்லாதிருக்கின்றது. வீட்டில் தங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதும் தாங்கள் தந்தையுடன் முழுமையான யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதும் இல்லை. மாயையின் புயல்கள் நிச்சயமாக வரும். சிலர் தங்கள் பழைய நண்பர்கள், உறவினர்களை நினைவு செய்வார்கள். ஏனையோர் வேறு ஏதாவதொன்றை நினைவுசெய்வார்கள். நண்பர்கள், உறவினர்களின் நினைவு ஆத்மாக்களை அழுக்கடையச் செய்கின்றது. ஆத்மாவில் குப்பைகள் சேர்ந்திருக்கும்பொழுது அவர் பயந்து விடுகின்றார். இங்கே நீங்கள் பயப்படக்கூடாது. மாயை அவ்வாறு செய்வாள். நிச்சயமாக எங்கள் மீது குப்பைகள் விழுந்து கொண்டே இருக்கும். ஹோலியின்பொழுது, தீ மூட்டப்பட்டு அதில் குப்பைகள் வீசப்படுகின்றன. நாங்கள் பாபாவின் நினைவில் நிலைத்திருந்தால், குப்பைகள் இருக்காது. தந்தையை நீங்கள் மறந்துவிடுவதால், முதல்தரக் குப்பையாகிய, சரீர உணர்வு உங்கள் மீது வந்து விழும். அதனையடுத்துப் பேராசை, பற்று போன்ற அனைத்தும் வரும். நீங்கள் உங்களுக்காக முயற்சி செய்து, வருமானமொன்றைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அத்துடன், மற்றவர்களையும் உங்களைப் போல் ஆக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நிலையங்களில் மிக நல்ல சேவை இடம்பெறுகின்றது. அவர்கள் இங்கே வரும்பொழுது நிலையங்களைத் திறப்பதற்குரிய ஆயத்தங்களைச் செய்வதாகக் கூறுகின்றார்கள். ஆனால், இங்கிருந்து சென்றதும் அவை முடிவடைந்து விடுகின்றன. இவ்விடயங்கள் அனைத்தையும் அவர்கள் மறந்து விடுவார்;கள். என பாபாவே அவர்களுக்குக் கூறுகின்றார். இங்கே நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும் தகுதி வாய்ந்தவர்களாகும் வரை ஒரு பத்தியில் (சூளையில்) இருக்க வேண்டும். சிவபாபாவுடனான தொடர்பே அதிஇனிமையானது. நீங்கள் எவ்வகையான சேவையைச் செய்கின்றீர்கள் என்பது புரிந்துகொள்ளப்படும். பௌதீகச் சேவையின் வெகுமதியை நீங்கள் நிச்சயமாகப் பெற்றுக் கொள்கிறீர்கள். பலரும் அதிகளவு கடின வேலை செய்கிறார்கள். இருந்தாலும், வெவ்வேறு பாடங்கள் இருக்கின்றன. அக் கல்வியிலும் வெவ்வேறு பாடங்கள் இருக்கின்றன. இந்த ஆன்மீகக் கல்வியிலும் அவை இருக்கின்றன. முதல்தரமான பாடம் தந்தையின் நினைவாகும். அதனையடுத்துக் கல்வி வருகின்றது. ஏனையவை அனைத்தும் மறைமுகமானவை. இந்த நாடகம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு யுகமும் 1250 வருடங்கள் என்பது எவருக்கும் தெரியாது. சத்தியயுகம் எவ்வளவு காலம் தொடர்கின்றது? சரி, அங்கே என்ன தர்மம் இருந்தது? இங்கே ஆகக்கூடிய எண்ணிக்கையான பிறப்பு எடுத்தவர்களாக இருக்க வேண்டியவர்கள் யார்? பௌத்தர்களும் இஸ்லாமியர்களும் அத்தனை பிறவிகள் எடுக்க மாட்டார்கள். இந்த விடயங்கள் எவருடைய புத்தியிலும் இல்லை. சமயநூல்களைக் கற்பவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டும்: கடவுளின் வாசகங்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது எதை? கீதையே அனைத்துச் சமயநூல்களினதும் தாயாகிய, இரத்தினமாகும். பாரதத்தில் முதலில் தேவ தர்மம் இருந்தது. அவர்களுடைய சமயநூல் எது? கீதையை எடுத்துரைத்தவர் யார்? அவை கடவுள் கிருஷ்ணரின் வாசகங்களாக இருக்க முடியாது. ஸ்தாபனையையும் விநாசத்தையும் மேற்கொள்வது கடவுள் ஒருவருடைய பணியேயாகும். கிருஷ்ணர் கடவுள் என்று அழைக்கப்பட மாட்டார். அவர் எப்பொழுது வந்தார்? அவர் இப்பொழுது எந்த வடிவத்தில் இருக்கிறார்? கிருஷ்ணருடைய புகழுக்கு எதிர்ப்புறத்தில் நீங்கள் நிச்சயமாகச் சிவபாபாவின் புகழை எழுத வேண்டும். சிவனே கீதையின் கடவுள். அதன் மூலமே ஸ்ரீகிருஷ்ணர் தன் அந்தஸ்தை அடைந்தார். ஸ்ரீகிருஷ்ணருடைய 84 பிறவிகளும் காட்டப்பட்டுள்ளன. இறுதியில், தத்தெடுக்கப்பட்ட பிரம்மாவின் படத்தையும் நீங்கள் காட்ட வேண்டும். அது எங்கள் புத்தியில் 84 பிறவிகளின் மணிமாலையொன்று இருப்பது போன்று உள்ளது. இலக்ஷ்மி, நாராயணருடைய 84 பிறவிகளையும் நீங்கள் நிச்சயமாகக் காட்ட வேண்டும். இரவில் நீங்கள் ஞானக்கடலைக் கடைந்து இந்த விடயங்களைப் பற்றி மேலும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெறப்படுகின்றது. அதற்கு நாம் எதை எழுத வேண்டும்? ஜீவன்முக்தி என்றால் சுவர்க்கத்துக்குச் செல்வதாகும். ஆனாலும், சுவர்க்கத்தைப் படைப்பவராகிய, தந்தை வரும்பொழுதே நீங்கள் அவரது குழந்தைகள் ஆகுகின்றீர்கள். ஏனெனில், அப்பொழுதே நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக முடியும். சத்தியயுகம் தூய, புண்ணியாத்மாக்களின் உலகம். இக்கலியுகம் பாவாத்மாக்களின் உலகம். அது விகாரமற்ற உலகம். அங்கே இராவணனாகிய மாயையின் இராச்சியம் எதுவும் இல்லை. அங்கே எங்களுக்கு இந்த ஞானம் இல்லாவிடினும், ‘நான் ஓர் ஆத்மா. இப்பொழுது என்னுடைய இச்சரீரம் பழையதாகி விட்டது. எனவே, நான் இப்பொழுது அதை நீக்கிச் செல்ல வேண்டும்” என்ற எண்ணங்கள் எங்களுக்கு ஏற்படும். இங்கேயோ எவருக்குமே ஆத்மாக்களைப் பற்றிய ஞானம் இல்லை. நீங்கள் தந்தையிடமிருந்து ஜீவன்முக்தி என்னும் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். எனவே, நீங்கள் அவரை நினைவுசெய்யவும் வேண்டும். தந்தை ‘மன்மனாபவ’ என்னும் கட்டளையிடுகிறார். கீதையில் “மன்மனாபவ” என்று கூறியது யார்? “என்னையும் விஷ்ணு தாமத்தையும் நினைவுசெய்யுங்கள்” என்று கூறக் கூடியவர் யார்? கிருஷ்ணர் தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்பட முடியாது. 84 பிறவிகளின் இரகசியம் பற்றி எவருக்குமே தெரியாது. எனவே, இதை நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். இவ்விடயங்களைப் புரிந்துகொண்டு உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். அப்பொழுது அதிக மதிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள். பயமற்றவர்களாகித் தொடர்ந்து அங்கும் இங்கும் செல்லுங்கள். நீங்கள் மிகவும் மறைமுகமானவர்கள். உங்கள் ஆடையை மாற்றிக் கொண்டு சென்று நீங்கள் சேவை செய்யலாம். உங்களுடன் எப்பொழுதும்; நீங்கள் படங்களை வைத்துக் கொள்ள வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இனிய தந்தையுடன் முழுமையாக யோகம் செய்து, அதி இனிமையானவர்களாகவும் ஆத்ம உணர்வுடையவர்களாகவும் ஆகுங்கள். ஞானக்கடலைக் கடைந்து, முதலில் நீங்கள் அதனைக் கிரகித்து, அதன்பின்னர்; மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள்.
2. உங்கள் ஸ்திதியை உறுதியானதாக்குங்கள். பயமற்றவர்களாகுங்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்றும் சேவையைச் செய்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்டர் சர்வசக்திவானாக இருந்து, சுய இராச்சியத்தின் அதிகாரம் மூலம் உலக இராச்சியத்தின் அதிகாரத்தை அடைவீர்களாக.
இந்நேரத்தில் சுய இராச்சியத்தின் அதிகாரத்தை உடையவர்களால், அதாவது, தங்கள் புலன் அங்கங்களை வெற்றிகொள்பவர்களால் உலக இராச்சியத்தின் அதிகாரத்தை அடைய முடியும். சுய இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டவர்கள் மாத்திரமே உலக இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டவர்களாக ஆகமுடியும். எனவே சோதியுங்கள்: ஆத்மாவின் சக்திகளான, மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் அதிபதியாக இருப்பவர் ஆத்மாவா? உங்கள் மனம் உங்களைக் கட்டுப்படுத்துகின்றதா அல்லது நீங்கள் உங்களுடைய மனத்தைக் கட்டுப்படுத்துகின்றீர்களா? உங்களை உங்களுடைய சம்ஸ்காரங்கள் ஈர்க்கின்றனவா? சுய இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டவரின் ஸ்திதியானது சக்திகள் எதுவும் குறைவடையாத, ஒரு மாஸ்டர் சர்வசக்திவானாகவே சதா உள்ளது.
சுலோகம்:
“எனது பாபா” எனும் அனைத்துப் பொக்கிஷங்களுக்குமான திறவுகோலை நீங்கள் உங்களுடன் கொண்டிருக்கும்பொழுது, எக் கவர்ச்சியாலும் உங்களைக் கவர முடியாது.