21.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒரு மங்களகரமான பணியைச்; செய்வதில் தாமதிக்காதீர்கள். அலைந்து திரிவதில் இருந்து உங்கள் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுங்கள். அவர்களுக்கு ஞானத்தை ரீங்காரமிட்டு, அவர்;களையும் உங்களுக்குச் சமனாக ஆக்குங்கள்.

கேள்வி:
எத்தகைய ஒரு சோகம் நடைபெற்றதால் பாரதம் சிப்பியைப் போல் ஆகிவிட்டது?

பதில்:
கீதையின் பிரபுவை மக்கள் மறந்துவிட்டு;, கீதை ஞானத்தின் மூலம் பிறப்பெடுக்கின்ற குழந்தையைப் பிரபு என அழைத்ததே மிகப் பெரிய சோகமாகும். இதனைத் தவறாகப் புரிந்து கொண்டதனாலேயே அனைவரும் தந்தையில் இருந்து விலகிச் சென்றுவிட்டார்கள், பாரதமும் சிப்பியைப் போல் ஆகிவிட்டது. குழந்தைகளாகிய நீங்கள் தனிப்பட்ட முறையில் உண்மையான கீதையைத் தந்தையிடம் இருந்து செவிமடுக்கின்றீர்கள், இந்தக் கீதை ஞானத்தின் மூலமே தேவ தர்மமானது ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சமனாகுகின்றீர்கள்.

பாடல்:
இந்த நாடகத்தை உருவாக்கிவிட்டு; பின்னர் தன்னை மறைத்துக் கொண்டவர் யார்?

ஓம்சாந்தி.
தாங்கள் சுவர்க்கத்தில் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதை பிராமணக் குலத்தின் அலங்காரங்களான குழந்தைகள் புரிந்து கொண்டார்கள். நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். உயிருள்ளவர்களாகிய நாங்கள் சுவர்க்கத்தில் மிக்க போதை கொண்டவர்களாவே இருந்தோம். அதன்பின்னர் என்ன நடந்தது? பலவர்ண மாயை வந்து எங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டாள். விகாரங்களின் காரணமாகவே இது நரகம் எனப்படுகின்றது. இம் முழு உலகும் நரகமாகும். ரீங்காரமிடும் வண்டின் உதாரணமும் கொடுக்கப்பட்டுள்ளது. ரீங்காரம் இடும் வண்டினதும் (பிரம்மரீ) ஆசிரியர்களினதும் (பிராமணி) பணி ஒன்றே ஆகும். ரீங்காரமிடும் வண்டின் உதாரணமானது உங்களையே அடிப்படையாகக் கொண்டது. ரீங்காரமிடும் வண்டு ஒரு பூச்சியைப் பிடித்துப், பின்னர் ஒரு வீட்டினை அமைத்து, அந்தப் பூச்சியை அதனுள் இடுகின்றது. இதுவும் நரகமே. அனைவரும் பூச்சிகளைப் போன்றவர்களாக உள்ளனர். எவ்வாறாயினும், அனைத்துப் பூச்சிகளும் தேவதர்மத்திற்குரியவர்கள் அல்லர். அவர்கள் எந்தச் சமயத்திற்குரியவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் நரக வாசிகளான பூச்சிகளாவர். தேவ தர்மத்திற்குரிய பூச்சிகள் யார்? இவர்களே, அமர்ந்திருந்து ஞானத்தை ரீங்காரம் செய்கின்ற பிரம்மாவின் குலத்திற்குரிய பிராமணர்கள் என்பதை எவ்வாறு உங்களால் எவ்வாறு கூறமுடியும்;? தேவ தர்மத்துக்கு உரியவர்களால் மாத்திரமே இங்கு நீடித்தி;ருக்க முடியும். இக்குலத்தைச் சாராதவர்களால் இங்கு நீடித்திருக்க முடியாதிருக்கும். அனைவரும் நரகவாசிகளான பூச்சிகளே. நரகத்தின் இந்தச் சந்தோஷமானது காக்கையின் எச்சத்தைப் போன்றது என்றே சந்நியாசிகளும் கூறுகின்றார்கள். சுவர்க்கத்தில் எல்லையற்ற சந்தோஷம் இருக்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியாது. இங்கோ, 5வீத சந்தோஷமும் 95வீத துன்பமுமே இருக்கின்றது. ஆகவே, இதனை நாம் சுவர்க்கம் என அழைக்க முடியாது. சுவர்க்கத்தில் துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கு, எண்ணற்ற சமயநூல்களும், எண்ணற்ற சமயங்களும், எண்ணற்ற வழிகாட்டல்களும் இருக்கின்றன. சுவர்க்கத்திலோ, தேவர்களின் பிரிவினையற்ற ஒரேயொரு வழிகாட்டலே இருக்கும். அங்கு ஒரேயொரு தர்மமே இருக்கும். நீங்களே பிராமணர்கள். நீங்கள் ஞானத்தை ரீங்காரமிடுகின்றீர்கள், பின்னர் தேவ தர்மத்திற்குரியவர்கள் இங்கே இருப்பார்கள். பல்வகையினரும் இருக்கின்றார்கள். சிலர் இயற்கையிலும், சிலர் விஞ்ஞானத்திலும் நம்பிக்கையைக் கொண்டுள்ளார்கள். சிலரோ இந்த உலகமே கற்பனை என்று கூறுகின்றார்கள். அத்தகைய சம்பாஷணைகள் இங்கேயே நடைபெறுகின்றதேயன்றி, சத்தியயுகத்தில் அல்ல. எல்லையற்ற தந்தை இங்கு அமர்ந்திருந்து பிரஜாபிதா பிரம்மாவின் கமலத் திருவாயின் மூலம் விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் என்னுடனேயே இருந்தீர்கள், நீங்கள் இப்பொழுது மீண்டும் என்னிடமே திரும்பி வரவேண்டும். இதில் சமயநூல்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. கிறிஸ்துவும், புத்தரும் வரும் போது அவர்களும் ஏதாவது கூறுவார்கள். அவ்வேளையில் அவர்களுடைய சமயநூல்கள் என்ற பேச்சிற்கே இடமில்லை. கிறிஸ்து பைபிளைக் கற்றாரா? பைபிள் என்ற கேள்வி அப்பொழுது தோன்றுவதில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் நிலைமையைப் பாருங்கள்! இராவணனாகிய மாயை உங்களை என்ன நிலைக்குள்ளாக்கியுள்ளாள் என்பதைப் பாருங்கள்! நீங்களே இராவணனின் அசுர குலத்தவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்ற போதிலும் அவன் ஒருபொழுதும் எரிவதில்லை. இராவணனை எரிப்பது எப்பொழுது முடிவிற்கு வரும்? மக்களுக்கு இது தெரியாது. நீங்களே இறை தேவ குலத்தினர், நீங்களே எனது குழந்தைகள். குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காகவே நான் மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். எண்ணற்ற சமயங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து அவர்களை அகற்றுவதற்கு பெருமளவு முயற்சி தேவை. கீதை எங்கிருந்து வந்தது? ரிஷிகளும் முனிகளும் அமர்ந்திருந்து, உருவாக்கியதும் நீங்கள் இன்றும் கேள்விப்படுகின்றதுமான அந்த ஆதி சனாதன தர்மத்தின் அடையாளங்கள் எங்கிருந்து வந்தன? வேதங்களைப் பாடியது யார்? வேதங்களின் தந்தை யார்? தந்தை கூறுகின்றார்: நானே கீதையின் கடவுள். சிவபாபாவே தாயாகிய கீதையை உருவாக்கினார், கிருஷ்ணர் அதில் இருந்தே பிறப்பெடுத்தார். இராதை போன்ற அனைவரும் அவருடன்; உள்ளடக்கப்படுகின்றார்கள். அனைத்திற்கும் முதலில் பிராமணர்கள் இருக்கின்றார்கள். அவரே எங்களுடைய அதிஅன்பிற்கினிய தந்தை என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். இவரையே அனைவரும்: ஓ, தந்தையாகிய கடவுளே கருணை காட்டுங்கள்! என்று கூறுகின்றார்கள். பக்தர்கள் கூவி அழைக்கின்றார்கள்: நாங்கள் துன்பத்திலிருந்து விடுதலையடைவது எவ்வாறு? கடவுள் சர்வவியாபகராக இருப்பின், அவரை கூவியழைக்க வேண்டிய அவசியம் இல்லை. கீதையே பிரதான விடயமாகும். மக்கள் அதிக யாகங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றார்கள். நீங்கள் இப்பொழுது அத்தகைய துண்டுப் பிரசுரங்களை அச்சிடவேண்டும். அனைத்துமே இப்பொழுது முற்றிலும் அர்த்தமற்றவையாக உள்ளன. எங்கு பார்த்தாலும், அவர்கள் தொடர்ந்தும் கீதையையே எழுதுகின்றார்கள். யார் கீதையை உருவாக்கியது என்றோ, யார் அதனைப் பாடியது என்றோ, அது எப்பொழுது பாடப்பட்டது என்பதோ அல்லது அதனை உருவாக்கியது யார் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் சரியான அறிமுகம் கூட இல்லதாவர்களாக உள்ளனர். அவர்கள் கூறுகின்றார்கள்: நான் எங்கு பார்த்தாலும், சர்வவியாபகரான ஸ்ரீகிருஷ்ணரையே காண்கின்றேன். இராதையின் பக்தர்கள் தாம் சர்வவியாபகரான இராதையை மாத்திரமே பார்ப்பதாக, அதாவது அவர்களுக்கு இராதை எங்கும் இருப்பதாகக் கூறுகின்றார்கள், அவர்கள் இவ்வாறு அசரீரியான ஓரேயொரு பரமாத்மாவைக் கூறுவார்களாயின் அது சரியாகும். ஆனால் அனைவருமே சர்வவியாபகர் என்று அவர்கள் ஏன் கூற வேண்டும்? அவர்கள் கணேஷ{ம் சர்வவியாபி என்றே கூறுகின்றார்கள். ஒரு மதுரா நகரிலேயே, ஒருவர் கிருஷ்ணர் சர்வவியாபகர் என்றும், இன்னொருவர் இராதை சர்வவியாபகர் என்றும் கூறுவார்கள். அதில் பெருமளவு குழப்பம் உள்ளது. இரு அபிப்பிராயங்கள் ஒன்றாக இருப்பதில்லை. ஒரே வீட்டில், தந்தையின் குருவும் குழந்தையின் குருவும் வேறு நபர்களாக இருப்பார்கள். உண்மையில், குருமார்கள் ஓய்வு நிலையில் இருப்பவர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்படுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நானும் இவரது ஓய்வு ஸ்திதியிலேயே வந்துள்ளேன். உலகில், ஒரு குருவானவர் எவ்வளவு மகத்தானவராக இருக்கின்றாரோ, அவ்வளவுக்கு அதிகளவு போதையை அவர் (குருவை ஏற்பவர்) கொண்டிருப்பார். ஆதிதேவனுக்கு மகாவீரர் என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுமனையும் மகாவீரர்; என்றே அழைக்கின்றார்கள். சக்திகளாகிய நீங்களும் மகாவீரர்களே. தில்வாலா ஆலயத்திலே, சக்திகள் சிங்கத்தை ஓட்டுவதாகவும், பாண்டவர்கள் யானையை ஓட்டுவதாகவும் காட்டப்பட்டுள்ளது. அந்த ஆலயமானது மிகுந்த முக்கியத்துவம் நிறைந்ததாகவே கட்டப்பட்டுள்ளது. அதுவே உங்களது மிகச்சரியான அதேபோன்ற ஞாபகார்த்தமாகும். உங்கள் படங்களைப் பயன்படுத்துவதற்கு அந் நேரத்தில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். துவாபரயுகத்திலேயே ஆலயங்கள் உருவாக்கப்பட்டன, ஆகவே, உங்கள் படங்கள் எங்கிருந்து வந்திருக்க முடியும்? நீங்களே இந்நேரத்தில் சேவையைச் செய்கின்றீர்கள். அவ்விடயங்கள் அனைத்தும் தற்காலத்தையே குறிக்கின்றன. அவர்கள் சமயநூல்களைப் பின்னரே உருவாக்கியிருக்கின்றார்கள். நாம் கீதையின் பெயரைக் குறிப்பிடாவிட்டால் அவர்கள்: இது எந்தப் புதிய சமயம் என்று தெரியவில்லை என்று கூறுவார்கள். இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. அவர்கள் இவ்வுலகில் சமயத்தை மாத்திரமே ஸ்தாபிக்கின்றார்கள். தந்தையோ உங்களைப் புதிய உலகிற்காகத் தயாராக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் செய்கின்ற பணியை வேறு எவராலுமே செய்ய முடியாது. நான் தூய்மையற்ற அனைவரையும்; தூய்மையாக்க வேண்டும். நான் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்க வேண்டும். பாரதத்தில் பல அனர்த்தங்கள் நிகழ்ந்துவிட்டன. இதனாலேயே அது ஒரு சிப்பியைப் போல் ஆகிவிட்டது. தந்தை கிருஷ்ணருக்கு கீதைத் தாயின் மூலமே பிறப்பினைக் கொடுத்தார், ஆனால் அவர்கள் கிருஷ்ணரைக் கீதையின் பிரபுவாக்கி உள்ளார்கள். கீதையின் பிரபு உண்மையில் சிவனே ஆவார். அவர் கீதையின் மூலம் கிருஷ்ணருக்குப் பிறப்புக் கொடுத்தார். நீங்கள் அனைவரும் சஞ்சயன்கள், உங்கள் அனைவருக்கும் இந்த ஞானத்தைக் கொடுப்பவரோ சிவபாபாவாகும். புராதன தேவதர்மத்தைப் படைத்தவர் யார்? இந்த விடயங்களைப் பற்றியெல்லாம் எழுதுவதற்கு உங்களுக்கு விவேகம் தேவைப்படுகின்றது. நாங்கள் கீதையின் மூலமே பிறப்பு எடுக்கின்றோம். மம்மாவே இராதையாகவும், இவர் கிருஷ்ணராகவும் ஆகுவார்கள். இவை மறைமுகமான விடயங்களாகும். பிராமணர்களின் பிறவியைப் பற்றி எவராலும் புரிந்து கொள்ள முடியாது. இவ்விடயம் கிருஷ்ணரையும் பரமாத்மாவையும் பற்றியது ஆகும். பிரம்மா, கிருஷ்ணர், சிவபாபா: இவை அனைத்தும் ஆழமான விடயங்களாகும். இந்த விடயங்களைப் புரிந்து கொள்வதற்கு மி;க விவேகமானவர்கள் தேவைப்படுகின்றார்கள். முழுமையான யோகத்தைக் கொண்டிருப்பவர்களின் புத்தியானது தொடர்ந்தும் இரசவாதக் கல்லைப் (உலோகத்தைத் தங்கமாக்கும் கல்) போல் ஆகும். இது அலைந்து திரியும் புத்தியில் இருக்க முடியாது. பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு, அத்தகைய மேன்மையான ஞானத்தைக் கொடுக்கின்றார். மாணவர்களும் தமது புத்தியைப் பயன்படுத்துகின்றார்கள். ஆகவே, இப்பொழுது இங்கு அமர்ந்திருந்தவாறே இதனை எழுதுங்கள். ஒருவர் மங்களகரமான ஒரு பணியைச் செய்வதில் தாமதிக்கக்கூடாது. கடலின் குழந்தைகளாகிய நாம் நமது சகோதர, சகோதரிகளைப் பாதுகாக்க வேண்டும். அப்பாவிகள் தொடர்ந்தும் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் கூறுவார்கள்: பிரம்மகுமாரர்களும் குமாரிகளும் இதனை உறுதியாக அதிகாரபூர்வாக வெளியிடுவதால் இதில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். பல நூறாயிரம் பிரசுரங்களை அச்சிட்டு, அவற்றினைக் கீதைப் பாடசாலைகளில் விநியோகியுங்கள். பாரதமே அழிவில்லாத தேசம். அதுவே அதிமேன்மையான யாத்திரீகத் தலமும் ஆகும். மக்கள் அனைவருக்கும் சற்கதியை அருள்பவராகிய தந்தையை மறந்து விட்டார்கள். ஆகவே, அவரது புகழானது மீண்டும் புகழப்பட வேண்டும். சிவன் மாத்திரமே மலர்களால் அர்ச்சிக்கப்படும் தகுதி வாய்ந்தவர். ஏனையவர்கள் அனைவரும் எந்தவிதமான பயனுமற்றவர்கள். பல கீதைப் பாடசாலைகள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் ஆடையை மாற்றி, அங்கு செல்ல முடியும். பின்னர் அவர்கள் நீங்கள் ஒரு பிரம்மகுமார் அல்லது குமாரியாக இருக்க வேண்டும் என நினைக்கட்டும். வேறு எவராலும் அத்தகைய கேள்விகளைக் கேட்க முடியாது. நல்லது. சிவபாபா பிரம்மாவின் சரீரத்தில் அமர்ந்திருந்து, இந்த விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். உங்களை உலகின் அதிபதிகளாக்குகின்ற பாபா இப்பொழுது இங்கு வந்துள்ளார். நீங்கள் பிராமணர்களாக ஆகும் வரை உங்களால் தேவர்கள் ஆகமுடியாது. பிராமணக் குலமானது தேவ குலத்தை விட மேன்மையானதாகும். ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையாகுகின்றார்கள். பின்னர் நீங்கள் புதிய உலகில் மறுபிறவியை எடுப்பீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு : 12.01.69

குழந்தைகளாகிய நீங்கள் ஒரேயொரு தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள். ஒரேயொருவரின் நினைவில் அமர்ந்திருத்தல் என்பதுவே கலப்படமற்ற நினைவு எனப்படுகின்றது. நீங்கள் இங்கு அமர்ந்தவாறே, வேறு யாரையாவது நினைவு செய்தீர்களாயின், அது கலப்படமான நினைவு என்றே அழைக்கப்படுகின்றது. வீட்டில் வேறு ஒருவருடன் உண்டு, குடித்து இருந்தவாறே வேறு யாரையாவது நினைவு செய்வது ஏமாற்றுதல் ஆகும். பக்தியும் கூட, நீங்கள் சிவபாபாவை மாத்திரம் நினைவு செய்யும் போது கலப்படமற்றதே. பின்னர் ஏனையவர்களை நினைவு செய்வது கலப்படமான பக்தியாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்;. ஒரேயொரு தந்தையே அத்தகைய அற்புதங்களைக் செய்கின்றார். அவர் எங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். ஆகவே, நாங்கள் அவரை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். என்னுடையவர் ஒரேயொருவர் மாத்திரமே. எவ்வாறாயினும், தாம் சிவபாபாவை நினைவு செய்வதற்கு மறந்து விடுகின்றோம் என்று குழந்தைகள் கூறுகின்றார்கள். இது அற்புதமே! ஒரேயொருவரையே நீங்கள் வழிபடுவீர்கள் என்று பக்திமார்க்கத்திலும் நீங்கள் கூறினீர்கள். அவர் ஒருவரே தூய்மையாக்குபவர். வேறு எவரையும் தூய்மையாக்குபவரென அழைக்க முடியாது. ஒரேயொருவரே இவ்வாறு அழைக்கப்படுகின்றார். அவர் மாத்திரமே அதியுயர்ந்தவர். இப்பொழுது பக்தி என்ற கேள்விக்கே இடமில்லை. குழந்தைகள் ஞானத்தைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் ஞானக்கடலை நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் வரும்பொழுது, நாங்கள் உங்களை மாத்திரமே நினைவு செய்வோம். ஆகவே, நீங்கள் அவ்விடயங்களை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுக் கொள்ள வேண்டும்: நான் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்கின்றேனா அல்லது பல நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு செய்கின்றேனா? நீங்கள் உங்கள் இதயத்தை ஒரேயொரு தந்தையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் இதயம் வேறு எவரையாவது நோக்கிச் சென்றால், அது கலப்படமான நினைவாகிவிடும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். பின்னர் அங்கு நீங்கள் தேவ உறவினர்களக் கொண்டிருப்பீர்கள். புதிய உலகில், நீங்கள் அனைத்துப் புதிய உறவினர்களையுமே கொண்டிருப்பீர்கள். ஆகவே “நான் யாரை நினைவு செய்கின்றேன்?” என்பதைச் சோதிக்க வேண்டும்;. தந்தை கூறுகின்றார்: பரலோகத் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். உங்கள் புத்தியின் யோகத்தை அனைவரிடமிருந்தும் அகற்றி தந்தையை மாத்திரமே நினைவு செய்யுங்கள். நீங்கள் எவ்வளவிற்கு அதிகமாக அவரை நினைவு செய்கின்றீர்களோ, அவ்வளவிற்கு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நான் எவ்வளவிற்கு பாபாவை நினைவு செய்கின்றேனோ, அவரும் என்னை அந்தளவிற்கே நினைவு செய்வார் என்பதல்ல. தந்தைக்கு எந்தப் பாவத்;தையும் அழிக்க வேண்டிய அவசியமில்லை! நீங்கள் தூய்மையாகுவதற்காக இங்கமர்ந்திருக்கின்றீர்கள். சிவபாபாவும் இங்கேயே அமர்ந்திருக்கின்றார். அவர் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தைக் கொண்டிருக்கவில்லை, அவர் இவரைக் கடனாகப் பெற்றுள்ளார். நீங்கள் தந்தைக்குச் சத்தியம் செய்துள்ளீர்கள்: பாபா நீங்கள் இங்கு வரும்பொழுது, நாங்கள் உங்களுக்கு உரியவர்கள் ஆகி, புதிய உலகின் அதிபதிகள் ஆகுவோம். உங்கள் இதயத்தைத் தொடர்ந்தும் கேளுங்கள். உங்கள் புத்தியின் யோக இணைப்பானது மீண்டும் மீண்டும் தந்தையிடமிருந்து துண்டிக்கப்படுகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். இணைப்பு துண்டிக்கப்படுவதும் பின்னர் நீங்கள் அவரை நினைவுசெய்வதும்; மறுபடியும் இணைப்பு துண்டிக்கப்படுவதையும் தந்தை அறிவார். குழந்தைகள் வரிசைக்கிரமமாகவே முயற்சி செய்கின்றார்கள். நீங்கள் நன்றாக நினைவில் இருப்பீர்களேயாயின் உங்களால் இந்த வம்சத்தினுள் வரமுடியும். உங்களைத் தொடர்ந்தும் சோதியுங்கள். ஒரு நாட்குறிப்பேட்டை வைத்திருங்கள்;: எனது புத்தியின் யோகமானது நாள்பூராக எங்கு சென்றது? பின்னர் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவார். ஆத்மாவின் மனமும் புத்தியும் எங்கும் அலைபாய்கின்றது. தந்தை கூறுகின்றார்: அவை எங்கும் அலைபாயும் பொழுது, அதில் நட்டம் அனுபவம் செய்யப்படுகின்றது. என்னை நினைவு செய்வதில் பெருமளவு இலாபம் இருக்கின்றது. ஏனைய அனைத்தினாலும் நட்டம் மட்டுமே. நீங்கள் பிரதானமான ஒருவரை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். நீங்கள் உங்களையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு அடியிலும் இலாபம் இருக்கின்றது, ஒவ்வொரு அடியிலும் நஷ்டம் இருக்கின்றது. 84 பிறவிகளாக நீங்கள் சரீரதாரிகளையே நினைவு செய்ததால் நஷ்டத்தைத் தவிர, வேறு எதையும் அனுபவம் செய்யவில்லை. நாளுக்கு நாள், 5000 வருடங்கள் சென்றுவிட்டன, எந்நேரமும் இழப்பே ஏற்பட்டுள்ளது. இப்பொழுது தந்தையின் நினைவில் இருந்து இலாபத்தை அனுபவம் செய்யுங்கள். நீங்கள் இவ்வாறு ஞானக்கடலைக் கடைந்து ஞான இரத்தினங்களைப் பிரித்தெடுக்க வேண்டும். மன ஒருமைப்பாட்டுடன் தந்தையின் நினைவில் இருங்கள். சிப்பிகளைச் சம்பாதித்துக் கொள்வதையிட்டுச் சில குழந்தைகள் கவலைப்படுகின்றார்கள். மாயை அவர்களைத் தமது வியாபாரம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றாள். செல்வந்தர்களுக்குப் பல எண்ணங்கள் உண்டு. பாபாவினால் என்ன செய்ய முடியும்? பாபாவிற்கு அத்தகைய சிறந்த வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அவர் அங்கும் இங்கும் தடுமாறித் திரியவேண்டிய அவசியமிருக்கவில்லை. வியாபாரி ஒருவர் வந்தாராயின் பாபா அவரிடம்: நீங்கள் ஒரு வியாபாரியா அல்லது ஒரு முகவரா? என்றே கேட்பார். உங்கள் வியாபாரத்தைச் செய்த போதிலும் நீங்கள் உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடனேயே இணைத்துக் கொள்ள வேண்டும். கலியுகமானது இப்பொழுது முடிவடைகின்றது, சத்தியயுகமானது வருகின்றது. தூய்மையற்றவர்கள் சத்தியயுகத்திற்குச் செல்வதில்லை. நீங்கள் எவ்வளவிற்கு பாபாவை நினைவு செய்கின்றீர்களோ அவ்வளவிற்குத் தூய்மை ஆகுவீர்கள். தூய்மை மூலம், மிகச் சிறந்த தாரணை செய்ய முடியும். தூய்மையற்றவர்களால் நினைவில் இருக்கவும் முடியாது, தாரணை செய்யவும் முடியாது. தமது பாக்கியத்திற்கு ஏற்ப சிலர் முயற்சி செய்வதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்வார்கள்;, ஆனால் ஏனையவர்களுக்கோ நேரமே கிடைப்பதில்லை. அவர்கள் பாபாவை நினைவு செய்வதே இல்லை. அவர்கள் சென்ற கல்பத்தில் என்ன முயற்சியைச் செய்தார்களோ, அந்த முயற்சியையே அவர்கள் இப்பொழுதும் செய்வார்கள். ஒவ்வொருவரும் உங்களுக்கான முயற்சியைச் செய்ய வேண்டும். ஆரம்ப காலத்திலே, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டால், அவர்கள்: அது கடவுளின் சித்தம் என்றே கூறுவார்கள். இப்பொழுது நீங்கள் கூறுவீர்கள்;: அதுவே நாடகம். என்னவெல்லாம் சென்ற கல்பத்தில் நடந்ததோ அதுவே மீண்டும் நடைபெறும். இப்பொழுது உங்களிடம் நான்கு மணித்தியால நினைவு இருக்கின்றது, ஆகவே, எதிர்வரும் சக்கரத்தில், நீங்கள் மேலதிக நினைவைக் கொண்டிருப்பீர்கள் என்பதல்ல. இல்லை. உங்களுக்குக் கற்பித்தல்கள் கொடுக்கப்படுகின்றன: இப்போது நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் நல்ல முயற்சி செய்வீர்கள். ஆகவே, உங்கள் புத்தி எங்கு செல்கின்றது என்று சோதியுங்கள். மல்யுத்தத்தின் போது, அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நல்லது.

ஆன்மீக பாப்தாதா கூறுகின்றார்: ஆன்மீகக் குழந்தைகளுக்கு அன்பும், நினைவுகளும் இரவு வந்தனங்களும்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1. விவேகமானவர்கள் ஆகுவதற்கு, உங்கள் புத்தியை நினைவின் மூலம் இரசவாதக் கல்லைப் (உலோகத்தைத் தங்கமாக்கும் கல்லைப்) போன்று ஆக்குங்கள். உங்கள் புத்தியை அங்கும் இங்கும் அலைந்து திரிய அனுமதிக்காதீர்கள். தந்தை உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களை மாத்திரம் சிந்தியுங்கள்.

2. ரீங்காரமிடும் வண்டுகள் ஆகி, கலியுக பூச்சிகளைத் தேவர்கள் ஆக்கும் சேவையைச் செய்யுங்கள். மங்களகரமான பணியைச் செய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். உங்கள் சகோதர, சகோதரிகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


ஆசீர்வாதம்:
அழிவற்ற ‘சுஹாங்” (சுமங்கலிக்கான) திலகத்தைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் எதிர்கால இராச்சியத் திலகத்திற்கான உரிமையைக் கொண்டுள்ளவர் ஆகுவீர்களாக.

தேவர்களுக்கெல்லாம் தேவராகவும், பரமாத்மா பரமதந்தையின் குழந்தையாகவும் இருப்பதன் பாக்கியமான ‘சுஹாங்” (சுமங்கலி) திலகத்தை நீங்கள் சங்கமயுகத்தில் பெறுகின்றீர்கள். ~சுஹாங்| என்ற திலகமும் பாக்கியமும் அழிவற்றதாயின், மாயையினால் அதனை அழிக்க முடியாது. ஆகையால், யாரொருவர் இங்கே ‘சுஹாங்” (சுமங்கலி) என்ற திலகத்தையும், பாக்கியத்தையும் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் எதிர்கால இராச்சிய திலகத்திற்கான உரிமை உடையவர்கள் ஆகுகிறார்கள். ஒவ்வொரு பிறவியிலும் அரச திலகமிடும் விழா இடம்பெறுகின்றது. திலகத்தை பெற்றுக் கொள்கின்ற இராஜா இந்நாளை கொண்டாடுவதுடன் இந்தநாளில் திலகத்தைப் பெறுகின்ற இராஜாவின் குடும்பத்தினராலும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.

சுலோகம்:
ஒரேயொருவரின் அன்பில் சதா மூழ்கியிருங்கள், அந்த அன்பானது அனைத்து முயற்சியையும் முடித்து விடும்.