22.11.2018        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதிலேயே உங்கள் பாதுகாப்பு தங்கியுள்ளது. ஸ்ரீமத்திற்கேற்ப, ஆன்மீகச் சேவை செய்வதில் மும்;முரமாகுங்கள். அப்பொழுது எந்த ரூபத்திலும் சரீர உணர்வாகிய எதிரி உங்களைத் தாக்க மாட்டாது.

கேள்வி:
உங்கள் தலைமீது பாவச்சுமை உள்ளது என்பதை எது குறிக்கின்றது? அந்தச் சுமையை இலேசாக்குவதற்கான வழிமுறைகள் யாவை?

பதில்:
பாவச்செயல்களின் சுமை இருக்கும்பொழுது உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாது. மீண்டும் மீண்டும் தடைகளை உருவாக்கக்கூடியதான செயல்கள் செய்யப்பட்;டுள்ளன. அவை உங்களை முன்னேற அனுமதிப்பதில்லை. அச்சுமையை இலேசாக்குவதற்கு, உறக்கத்தை வென்றவர்கள் ஆகுங்கள். இரவில் விழித்திருந்து பாபாவை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்கள் சுமை இலேசாகும்.

பாடல்:
தாயே ஓ தாயே, உலகிற்குப் பாக்கியத்தை அருள்பவர் நீங்களே.

ஓம் சாந்தி.
இது ஜெகதாம்பாளின் புகழாகும், ஏனெனில் இது ஒரு புதிய படைப்பாகும். முற்று முழுதான புதிய படைப்பொன்று இருக்கமுடியாது. பழையதே புதியது ஆகுகின்றது. நீங்கள் மரணபூமியிலிருந்து அமரத்துவப் பூமிக்குச் செல்லவேண்டும். இது வாழ்வும் மரணமும் பற்றிய கேள்வியாகும்: நீங்கள் மரணபூமியில் மரணித்து, முற்றாக மரணமடைந்தவர்கள் ஆகவேண்டும் அல்லது உயிருடன் மரணித்து, அமரத்துவப் பூமிக்குச் செல்லவேண்டும். “உலகத்தாய்” என்றால் உலகைப் படைப்பவர் என்று அர்த்தம் ஆகும். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் என்பதும், அவர் பிரம்மாவின் மூலம் படைப்பைப் படைக்கின்றார் என்பதும் நிச்சயமாகும். தந்தை கூறுகின்றார்: நான் சூரிய, சந்திர வம்ச இராச்சியங்களை ஸ்தாபிக்கிறேன். நான் சங்கமயுகத்தில் வரவேண்டும். அவர் கூறுகின்றார்: நான் சக்கரத்தில் சங்கமயுகத்தில் வருகின்றேன். நான் சக்கரங்களின் ஒவ்வொரு சங்கமயுகத்திலும் வருகின்றேன். இது ஒரு மிகத்தெளிவான விளக்கமாகும். மக்கள் ஒரு தவறைச் செய்து, பெயரை மாற்றியுள்ளார்கள். மக்கள் சர்வவியாபி எனக் கூறும்பொழுது, 'யார் இதனைக் கூறியது?, அவர் எப்பொழுது இதனைக் கூறினார்?, இது எங்கு எழுதப்பட்டுள்ளது?” என்று நீங்கள் அவர்களிடம் வினவவேண்டும். அச்சா. இதனைக் கூறுகின்ற கீதையின் கடவுள் யார்? ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு சரீரதாரி. அவர் சர்வவியாபியாக இருக்கமுடியாது. ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் மாற்றப்பட்டால், அனைத்தும் தந்தையையே சாரும். தந்தை உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்க வேண்டும். அவர் கூறுகின்றார்: நான் சூரிய, சந்திர வம்சத்து ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். இல்லாவிட்டால், அவருக்கு 21 பிறவிக்கான ஆஸ்தியைக் கொடுத்தவர் யார்? பிரம்மாவின் வாய்மூலம் பிராமணர்கள் படைக்கப்பட்டனர் என்றும் எழுதப்பட்டுள்ளது. அவர் அமர்ந்திருந்து, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைப் பிராமணர்களுக்கு உரைக்கின்றார். ஆகவே, நிச்சயமாக இந்த ஞானத்தைக் கொடுப்பவரே ஞானத்தை விளங்கப்படுத்துவதற்காக இப்படங்களை உருவாக்கியிருக்கவும் வேண்டும். உண்மையில், அவற்றைக் கற்பது என்ற கேள்வியே இல்லை. எவ்வாறாயினும், விளங்கப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்பதாலேயே இப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அதிகளவைச் சாதிக்க முடியும். ஆகவே, ஜெகதாம்பாளின் புகழும் உள்ளது. சிவசக்திகள் என்றும் கூறப்படுகின்றது. நீங்கள் யாரிடமிருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள்? உலக சர்வசக்திவானாகிய தந்தையிடமிருந்தாகும். நீங்கள் அவரது புகழில் “உலக சர்வசக்திவான்" என்ற வார்த்தைகளையும் எழுத வேண்டும். அதிகாரி என்றால், அவரிடம் சகல சமயநூல்களினதும் ஞானம் அனைத்தும் உள்ளது என்று அர்த்தமாகும். அவர் அனைத்தையும் அறிவார். அவருக்கு அவற்றை விளங்கப்படுத்துவதற்கான அதிகாரம் உள்ளது. அவர்கள் பிரம்மாவின் கரங்களில் சமயநூல்களைக் காட்டுவதுடன், பிரம்மாவின் கமல வாயினூடாகவே வேதங்களினதும் சமயநூல்களினதும் இரகசியங்கள் பேசப்படுகின்றன என்றும் கூறுகிறார்கள். ஆகவே, அவரே அதிகாரி, இல்லையா? அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். சமயநூல்கள் என்றால் என்ன என்பதை உலகம் அறியாது. நான்கு சமயங்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றது. அவற்றிலும் பிரதான தர்மம் ஒன்றுள்ளது. அதுவே அத்திவாரமாகும். ஆலமரத்தின் உதாரணமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அத்திவாரம் உக்கிவிட்டது, ஆனால் அதன் கிளைகளும் சிறுகிளைகளும் இருக்கின்றன. அது வெறும் உதாரணம் ஆகும். உலகில் பல மரங்கள் உள்ளன. சத்தியயுகத்திலும் மரங்கள் இருக்கும். ஆம், அங்கு காடுகள் இருக்க மாட்டாது, ஆனால் பூந்தோட்டங்கள் இருக்கும். பயனுள்ள விடயங்களுக்காகக் காடுகளும் இருக்கும். மரங்கள் போன்றவை தேவைப்படும். பல மிருகங்களும் பறவைகளும் காடுகளில் வசிக்கின்றன. எவ்வாறாயினும், அங்கிருக்கும் அனைத்தும் மிகச்சிறந்தவையாகவும், பயன் நிறைந்தனவாகவும் இருக்கும். அங்கிருக்கும் பறவைகளும் மிருகங்களும் அங்கு அழகை ஏற்படுத்துபவையாக இருக்கும். அங்குள்ளனவற்றை அழுக்காக்குவன எதுவும் அங்கே இருக்காது. அங்கு பறவைகளினதும் மிருகங்களினதும் அழகும் தேவைப்படுகின்றது. உலகமே சதோபிரதானாக இருப்பதனால், அனைத்தும் சதோபிரதானாகவே இருக்கும். நீங்கள் வேறு எதனை வைகுந்தத்தில் எதிர்பார்க்கின்றீர்கள்? நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறவேண்டும் என்பதே முதலாவதும் பிரதானமானதுமான விடயமாகும். படங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படும், நீங்கள் அவற்றிலே பிரம்மாவின் மூலம் படைப்பும், விஷ்ணுவின் மூலம் பராமரிப்பும்...... என்று எழுதவேண்டும். மக்கள் இவ் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். இதனாலேயே அங்கு அனைத்தையும் பராமரிக்கின்ற, இலக்ஷ்மியும் நாராயணரும் என்னும் விஷ்ணுவின் இரட்டை வடிவம் உள்ளது. அவர்கள் இதனைப் புரிந்துகொள்கின்றனர். பல மில்லியன்கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினரே இதனைப் புரிந்துகொள்வார்கள். பின்னர் எழுதப்பட்டுள்ளது: ஞானத்தைச் செவிமடுக்கும்பொழுது அதனையிட்டு வியப்படைந்து, அதனை ஏனையோருக்கும் கூறி, பின்னர் தாங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகத் தங்களின் அந்தஸ்தைப் பெறுபவர்கள் உள்ளார்கள். இவ்விடயங்கள் எங்கேயாவது எழுதப்பட்டுள்ளன. “கடவுள் பேசுகின்றார்" என்ற வார்த்தைகளும் சரியானவையாகும். கடவுளின் சுயசரிதை அழிக்கப்பட்டிருந்தால், அப்பொழுது அனைத்துச் சமயநூல்களும் பொய்யாகுகின்றன. நாளுக்கு நாள், தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் மிக நல்ல கருத்துக்களைக் கொடுக்கின்றார் என்பது காணப்படுகின்றது. அனைத்திற்கும் முதலில், கடவுளே ஞானக்கடல் என்பதிலும், அவரே மனித உலக விருட்சத்தின் விதை என்பதிலும் அவர்களை நம்பிக்கை கொள்ளுமாறு நீங்கள்; செய்ய வேண்டும். உயிர்வாழும் விதையானவர் எவ்வாறான ஞானத்தைக் கொண்டிருப்பார்? அது நிச்சயமாக விருட்சத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். தந்தை வந்து பிரம்மாவின் மூலம் ஞானத்தை விளங்கப்படுத்துகின்றார். பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் என்ற பெயர் மிகவும் நல்லது. பிரஜதாபிதா பிரம்மாவின் குமாரர்களும் குமாரிகளும் பலர் உள்ளனர். இதில் குருட்டு நம்பிக்கை என்ற கேள்விக்கே இடமில்லை. இதுவே படைப்பாகும். பாபா, மம்மா அல்லது நீங்களே தாயும் தந்தையும் என்று அனைவரும் கூறுகின்றனர். சரஸ்வதியாகிய, ஜெகதாம்பாள் பிரம்மாவின் புத்திரியாவார். அவர் நடைமுறை ரீதியில் ஒரு பிரம்மகுமாரி ஆவார். ஒரு கல்பத்தின் முன்னரும் பிரம்மாவின் மூலம் புதிய உலகம் படைக்கப்பட்டது. ஆகவே, அது நிச்சயமாக பிரம்மாவின் மூலம் இப்பொழுதும் படைக்கப்படும். தந்தை மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். இதனாலேயே அவர் ஞானம் நிறைந்தவர் என்று அழைக்கப்படுகின்றார். விதையானவர் நிச்சயமாக முழு விருட்சத்தின் ஞானத்தைக் கொண்டிருப்பார். உயிர்வாழும் மனித உலகே அவரது படைப்பாகும். தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். பரமாத்மாவாகிய பரமதந்தை இங்கு அமர்ந்திருந்து பிரம்மாவின் மூலம் பிராமணர்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். பிராமணர்களாகிய நீங்கள் பின்னர் தேவர்கள் ஆகுவீர்கள். அவரைச் செவிமடுக்கும் நேரத்தில், நீங்கள் அனைவரும் இவை அனைத்தினாலும் அதிகளவு சந்தோஷப்படுகின்றீர்கள். ஆனால் சரீர உணர்வு காரணமாக உங்கள் அனைவராலும் இதனைக் கிரகிக்க முடியாதுள்ளது. நீங்கள் இங்கிருந்து சென்றவுடன் அனைத்தும் முடிவடைந்துவிடுகின்றது. பலவிதமான சரீர உணர்வுகள் உள்ளன. இதில் அதிகளவு முயற்சி தேவைப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: உறக்கத்தை வென்றவர்கள் ஆகுங்கள். சரீர உணர்வைத் துறவுங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். இரவில் விழித்திருந்து தந்தையை நினைவுசெய்யுங்கள், ஏனெனில் உங்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் பல பிறவிகளின் பெரும் பாவச்சுமை உள்ளது. அது உங்களை ஞானத்தைக் கிரகிப்பதற்கு அனுமதிப்பதில்லை. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக முடியாத வகையில் நீங்கள் அத்தகைய செயல்களைச் செய்துள்ளீர்கள். நீங்கள் அதிகளவு பொய்களைக் கூறுகிறீர்கள். நான் 75மூ நேரம் நினைவில் நிலைத்திருக்கின்றேன் என்ற பெரியதொரு பொய் அட்டவணையை எழுதி நீங்கள் பாபாவிற்கு அனுப்புகிறீர்கள். எவ்வாறாயினும், பாபா கூறுகின்றார்: அது அசாத்தியம். அனைவரிலும் முன்னணியில் இருப்பவர் கூறுகிறார்: நான் எவ்வளவுதான் நினைவிலிருக்க முயற்சித்தாலும் மாயை என்னை மறந்து விடுமாறு செய்கின்றாள். நீங்கள் ஒரு நேர்மையான அட்டவணையை எழுதவேண்டும். பாபாவே தனது சொந்த அனுபவத்தைக் கூறுவதால், குழந்தைகளும் அவரைப் பின்பற்ற வேண்டும். அவரைப் பின்பற்றாததால், அவர்கள் தங்களுடைய அட்டவணையையும் அனுப்புவதில்லை. உங்களுக்கு முயற்சிசெய்வதற்காக நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஞானத்தைக் கிரகிப்பது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வதைப் போன்றதல்ல! இதில் நீங்கள் களைப்படையக்கூடாது. சிலருக்குப் புரிந்துகொள்வதற்கு நேரம் எடுக்கின்றது. இன்றில்லாவிட்டாலும், நாளை அவர்கள் புரிந்து கொள்வார்கள். தேவ தர்மத்துக்கு உரியவர்களாக இருந்து, பின்னர் ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டவர்கள் இங்கு வருவார்கள் என்பதை பாபா ஏற்கனவே கூறியுள்ளார். ஒருநாள், ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்களுக்கான ஒரு மாநாடும் இடம்பெறும். அவர்கள் தொடர்ந்தும் பாரத தேசத்திற்கு வருவார்கள். முன்னர், அவர்கள் ஒருபொழுதும் இங்கு வருவதேயில்லை. இப்பொழுது, முக்கியஸ்தர்கள் அனைவரும் தொடர்ந்து வருகின்றனர். ஜேர்மனிய இளவரசர் போன்றோர் ஒருபொழுதும் வெளியே செல்வதில்லை. நேபாள மன்னர் தண்டவாளத்தை ஒருபொழுதும் பார்த்தில்லை. அவருக்குத் தனது சொந்த எல்லையைக் கடந்து வெளியே செல்வதற்கு அனுமதி கிடையாது. போப்பாண்டவரும் ஒருபொழுதும் எங்கும் சென்றதில்லை, ஆனால் அவர் பின்னர் இங்கு வந்தார். இந்த பாரதமே அனைத்துச் சமயத்தவர்களுக்கும் உரிய ஒரு மிகப்பெரிய யாத்திரை ஸ்தலமாக இருப்பதனால், அனைவரும் வருவார்கள். இதனாலேயே இது மிகவும் சக்திவாய்ந்த முறையில் விளம்பரப்படுத்தப்படும். நீங்கள் இதை அனைத்துச் சமயத்தவர்களுக்கும் கூறி, அவர்களை அழைக்க வேண்டும். தேவதர்மத்துக்கு உரியவர்களாக இருந்து, மாற்றப்பட்டவர்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுவார்கள். இதற்குப் புரிந்துணர்வு தேவைப்படுகின்றது. எவராவது புரிந்துகொண்டால் அவர் நிச்சயமாகச் சங்கை ஊதுவார். நாங்கள் பிராமணர்கள், ஆகவே நாங்கள் கீதையை மாத்திரம் கூறவேண்டும். அது மிகவும் இலகுவானது. எல்லையற்ற தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவராவார். அவரிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுவது எங்கள் உரிமையாகும். அனைவருக்கும் முக்திதாமமான, அவர்களின் பிறந்த வீட்டிற்குச் செல்வதற்கு உரிமையுள்ளது. அவர்கள் அனைவருக்கும் முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான உரிமை உள்ளது. அனைவரும் ஜீவன்முக்தியைப் பெறவுள்ளனர். நீங்கள் பந்தன வாழ்விலிருந்து விடுபட்டு, அமைதிக்குள் செல்கிறீர்கள். பின்னர், நீங்கள் இங்கே கீழிறங்கி வரும்பொழுது, ஜீவன்முக்தியைப் பெறுவீர்கள். எவ்வாறாயினும், சத்தியயுகத்தில் அனைவருமே ஜீவன்முக்தி பெறுவதில்லை. சத்தியயுகத்தில், தேவர்களே ஜீவன்முக்தியைப் பெறுபவர்கள். பின்னர் வருபவர்கள் சிறிதளவு சந்தோஷத்தையும் சிறிதளவு துன்பத்தையும் அனுபவம் செய்கிறார்கள். இதுவே கணக்காகும். அதிமேலான பாரதம் இப்பொழுது மிகவும் வறுமையாகியுள்ளது. தந்தையே கூறுகின்றார்: இத் தேவதர்மம் அதிகளவு சந்தோஷத்தைக் கொடுப்பதாகும். இந்த நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது; அனைவரும் வந்து தங்களுக்குரிய நேரத்தில் தங்கள் சொந்தப் பாகங்களை நடிக்கிறார்கள். தந்தையாகிய சுவர்க்கக் கடவுளே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். வேறு எவராலும் இதனைச் செய்ய முடியாது. கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன்னர் அங்கு உண்மையிலேயே சுவர்க்கம் இருந்தது. அங்கு புதிய உலகம் இருந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து அங்கு வரமாட்டார். அவர் தனக்குரிய நேரத்திலேயே வருகிறார். அவர் அவரது பாகத்தை மீண்டும் நடிக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் புத்தியில் இருக்கும் பொழுது மாத்திரமே நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவீர்கள். அனைவருடைய புத்தியும் ஒரேமாதிரியானதல்ல. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்குத் தைரியம் தேவைப்படுகிறது. பின்னர், 'சிவபாபா, நீங்கள் எனக்கு பிரம்மா மூலமும், ஜெகதாம்பா மூலமும் எதனை ஊட்டினாலும், நீங்கள் எனக்கு எதனை அணிவதற்குக் கொடுத்தாலும் ....... அவர் அனைத்தையும் பிரம்மா மூலம் செய்வார், இல்லையா? ஆகையால் அவர்கள் இணைந்துள்ளார்கள். அவர் தனது பணிகளைப் பிரம்மா மூலம் மாத்திரமே மேற்கொள்கிறார். இரு சரீரங்கள் இணைந்துள்ளன என்பதல்ல. பாபா ஒன்றிணைந்த இரு சரீரங்கள் (சியாமிஸ் இரட்டையர்கள்) சிலவற்றைப் பார்த்துள்ளார். இருவரினதும் ஆத்மாக்கள் வேறானவையாகும். பாபா இவரினுள் பிரவேசிக்கின்றார். அவர் ஞானம் நிறைந்தவராவார். ஆகவே, அவர் எவரினூடாக ஞானத்தைக் கொடுப்பார்? கிருஷ்ணரின் ரூபம் வேறானதாகும். இங்கேயே பிரம்மா தேவைப்படுகின்றார். பல பிரம்மகுமாரர்களும் பிரம்மகுமாரிகளும் இருக்கின்றனர். இது குருட்டு நம்பிக்கை அல்ல. கடவுள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றார். முன்னைய கல்பத்தில் தத்தெடுக்கப்பட்டவர்களே இப்பொழுதும் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். வெளியே அலுவலகங்களில் தாங்கள் பிரம்மகுமார்களும் குமாரிகளும் என்று எவருமே கூறமாட்டார்கள். இது மறைமுகமானது. ஆயினும், நீங்கள் சிவபாபாவின் குழந்தைகளே. எவ்வாறாயினும், புதிய உலகிற்கான படைப்பு படைக்கப்பட வேண்டும். அவர் பழையதைப் புதியதாக்குகின்றார். ஓர் ஆத்மாவினுள் கலப்படம் கலக்கப்படும் பொழுது, ஆத்மா பழையவராகுகின்றார். தங்கத்தில் கலப்படம் கலக்கப்படும் பொழுது, அது போலியானதாகுகின்றது. ஆத்மாக்கள் பொய்யானவர்கள் ஆகும்பொழுது சரீரங்களும் பொய்யானவையாகிவிடும். ஆகவே அவை எவ்வாறு மீண்டும் உண்மையாக முடியும்? பொய்யான பொருட்கள் தூய்மையாக்கப்படுவதற்காகத் தீயினுள் இடப்;படுகின்றன. ஆகவே, அத்தகையதொரு பெரிய விநாசம் இடம்பெறுகின்றது. அவ் விழாக்கள் போன்றவை அனைத்துமே பாரதத்துக்கு உரியவையாகும். அவை எவருடையது என்பதையோ அல்லது அவை எப்பொழுது முதல் கொண்டாடப்படுகின்றன என்பதையோ எவருமே அறியார். மிகச்சொற்ப மக்களாலேயே ஞானத்தைப் பெறக்கூடியதாக இருக்கின்றது. ஒருவேளை அவர்கள் இறுதியில் ஓர் இராச்சியத்தைப் பெறுவதாக இருக்கலாம், ஆனால் அதில் என்ன பயன் உள்ளது? அது மிகச் சிறிதளவு சந்தோஷமாகும், இல்லையா? துன்பம் படிப்படியாகவே ஆரம்பிக்கிறது. இதனாலேயே நீங்கள் மிகவும் நன்றாக முயற்சி செய்யவேண்டும். ஆகவே, பல புதிய குழந்தைகள், மிகவும் திறமைசாலிகள் ஆகிவிட்டார்கள். மூத்தவர்கள் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு அதிகளவு சரீர உணர்வு உள்ளது. சேவை செய்பவர்களால் மாத்திரமே பாபாவின் இதயத்தில் அமர முடியும். அவர்கள் உள்ளே ஒருவிதமாகவும், வெளியே வேறுவிதமாகவும் இருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. சிறந்த குழந்தைகளுக்கு பாபா பெருமளவு உள்ளார்ந்த அன்பைக் கொடுக்கின்றார். சிலர் வெளியே நல்லவர்களாக இருக்கின்றனர், ஆனால் உள்ளே தீயவர்களாக உள்ளனர். சிலர் எவ்விதச் சேவையையும் செய்வதில்லை. அவர்கள் குருடர்களுக்கு ஒரு கைத்தடியாக ஆகுவதில்லை. இப்பொழுது இது வாழ்வும் மரணமும் பற்றிய கேள்வியாகும். அமரத்துவ பூமியில் நீங்கள் ஒரு மிகவும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற வேண்டும். முன்னைய கல்பத்தில் முயற்சி செய்து உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களை உங்களால் இனங்கண்டுகொள்ள முடியும். அவை அனைத்தும் தென்படுகின்றன. நீங்கள் எவ்வளவுக்கு ஆத்ம உணர்வில் இருக்கின்றீர்களோ அந்தளவுக்கு உங்களால் பாதுகாப்பாக வாழமுடியும். சரீர உணர்வு உங்களைத் தோற்கடிக்கின்றது. தந்தை கூறுகின்றார்: ஸ்ரீமத்திற்கேற்ப உங்களால் எந்தளவுக்கு ஆன்மீக சேவை செய்ய முடிகின்றதோ, அந்தளவுக்கு நல்லது. பாபா அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றார். படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். நீங்கள் அனைவரும் பிரம்மகுமாரர்களும், பிரம்மகுமாரிகளும் ஆவீர்கள். அந்த சிவபாபாவே மூத்த பாபா ஆவார். அவர் ஒரு புதிய உலகைப் படைக்கின்றார். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை என்று பாடப்படுகின்றது. சீக்கிய சமயத்துக்கு உரியவர்களும் அந்தக் கடவுளைப் புகழ்கின்றனர். குருநானக் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் சிறப்பானவை. பிரபுவின் பெயரை நினைவுசெய்யுங்கள், நீங்கள் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இதுவே சாராம்சம்: 'நீங்கள் உண்மையான பிரபுவை நினைவுசெய்தால், சந்தோஷத்தைப் பெறுவீர்கள், அதாவது, நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுவீர்கள்". அவர்கள் ஒரேயொரு அசரீரியானவரை நம்புகின்றனர். ஆத்மாக்களுக்கு மரணம் கிடையாது. ஆத்மாக்கள் தீயவர்கள் ஆகுவார்கள், ஆனால் அவர்கள் அழிக்கப்படுவதில்லை. இதனாலேயே அது ஓர் அமரத்துவ ரூபம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நானே அமரத்துவ ரூபம், ஆகவே, ஆத்மாக்களும் அமரத்துவமானவர்களே. ஆனால் அவர்கள் மறுபிறப்புக்குள் வருகிறார்கள். நான் எப்பொழுதும் ஒரேமாதிரியானவரே. 'நானே ஞானக்கடலும், ரூப்பும்;; பசாந்தும்" என்று அவர் உங்களுக்கு மிகத்தெளிவாகக் கூறுகின்றார். நீங்கள் இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதுடன், பின்னர் அவர்களுக்கு விளங்கப்படுத்தவும் வேண்டும். நீங்கள் குருடர்களுக்குக் கைத்தடியாகி, வாழ்க்கைத் தானத்தைக் கொடுக்க வேண்டும். அப்பொழுது என்றுமே அகாலமரணம் ஏற்படாது. நீங்கள் மரணத்தை வெல்வீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. ஸ்ரீமத்திற்கேற்ப ஆன்மீகச் சேவை செய்யுங்கள். குருடர்களுக்கு ஒரு கைத்தடி ஆகுங்கள். நிச்சயமாகச் சங்கை ஊதுங்கள்.

2. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு ஒரு நினைவு அட்டவணையை வைத்திருங்கள். விசேடமாக இரவில் விழித்திருந்து, நினைவில் நிலைத்திருங்கள். நினைவு செய்வதில் களைப்படையாதீர்கள்.

ஆசீர்வாதம்:
சுய மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், உலக மாற்றத்திற்கான கருவியாகுகின்ற ஒரு மேன்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.

சுயமாற்றத்தினூடாக உலக மாற்றத்தை ஏற்படுத்துவது என்ற ஒப்பந்தத்தை குழந்தைகளாகிய நீங்கள் செய்திருக்கிறீர்கள். சுயமாற்றமே உலக மாற்றத்திற்கான அடித்தளமாகும். உங்களில் சுயமாற்றம் ஏற்படாமல், நீங்கள் ஓர் ஆத்மாவையிட்டு எவ்வளவு முயற்சி செய்தாலும் எந்த மாற்றமும் ஏற்படமாட்டாது. ஏனெனில், இன்றைய உலகில் மக்கள் ஏதேனும் ஒன்றைக் கேட்பதனால் மாத்திரம் மாற்றமடைவதில்லை. ஆனால் அவர்கள் ஒரு மாற்றத்தை பார்க்கும் போதே மாற்றமடைகின்றார்கள். பந்தனத்திற்கு காரணமான பலரும் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை பார்க்கும் போதே, தம்மை மாற்றிக் கொள்கின்றார்கள், எனவே, செய்து காட்டுவதன் மூலம் எடுத்துக் காட்டாக இருங்கள், உங்களை மாற்றுவதன் மூலம் எடுத்துக் காட்டாக இருப்பதே மேன்மையான சேவையாளர் ஆகுவதாகும்.

சுலோகம்:
உங்கள் நேரம், எண்ணங்கள், வார்த்தைகளின் சக்தியை வீணானவற்றிலிருந்து சிறப்பானதாக மாற்றினால் நீங்கள் சக்திசாலி ஆகுவீர்கள்.