31.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தையின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள், அவர் உங்களைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர் உங்களை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்து, உங்களை சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவார்.

கேள்வி:
உங்களைச் சந்தோஷமாக வைத்திருப்பதற்கு எந்தப் பிரதானமான தாரணை அவசியமாகும்?

பதில்:
நீPங்கள் எவ்வாறு உங்களுடனேயே ஆன்மீக உரையாடலைக் கொண்டிருப்பது என்பதை அறியும் போதே உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். எதன் மீதும் பற்றைக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் வயிற்றிற்கு இரண்டு சப்பாத்திகளே தேவையாகும். அது போதுமானதாகும். கவர்ச்சியிலிருந்து விடுபட்ட மனோபாவத்தின் தாரணை இருக்கும் போதே, நீங்கள் முக மலர்ச்சியுடன் இருக்க முடியும். ஞானத்தைக் கடைந்து உங்களை சந்தோஷமாக வைத்திருங்கள். நீங்கள் கர்மயோகிகள். இல்லறப் பொறுப்புக்கள், உண்ணுதல் போன்ற கர்மங்களில் ஈடுபட்டிருக்கும் போதும், தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தியில் சுயதரிசன சக்கரம் தொடர்ந்தும் சுழன்றால், அதிகளவு சந்தோஷம் இருக்கும்.

பாடல்:
அவர் என்னை விட்டுப் பிரிந்து செல்லவும் மாட்டார், எனது இதயத்திலுள்ள அன்பு மறையவும் மாட்டாது.

ஓம்சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இது குழந்தைகளாகிய உங்களின் ஆன்மீக அன்பாகும். அதாவது, பரமாத்மாவான பரமதந்தையின் மீது ஆத்மாக்களாகிய உங்களுக்குள்ள அன்பாகும். பிராமணக் குழந்தைகளாகிய உங்களிடம் மாத்திரமே இந்த ஆன்மீக அன்புள்ளது. நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. எவ்வாறாயினும். அவர்கள் ஆத்மாவே பரமாத்மா என்று கூறும் போது, ஆத்மா யார் மீது அன்பு செலுத்துவார்? குழந்தைகளே தமது தந்தையின்மீது அன்பு கொண்டுள்ளனர். தந்தையின் அன்பு தந்தையின் மீதாக இருக்க முடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் அன்பை இப்பொழுது பரமாத்மாவாகிய பரமதந்தையின் மீது கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். இந்த அன்பே உங்களை அவருடன் அழைத்துச் செல்லும். உங்களுக்குத் தந்தையின் மீது ஆன்மீக அன்புள்ளது என்பதால், நீங்கள் சிரமங்களையும் எதிர் கொள்ள நேரிடுகின்றது. முழு உலகமும், உங்கள் குடும்ப அங்கத்தவர்களும் உங்கள் எதிரிகள் ஆகுகின்றார்கள். கங்கை, தூய்மையாக்குபவர்; அல்ல என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையாக வேண்டுமென்ற எண்ணத்துடன் மக்கள் கங்கை நதிக்கரைக்கும் ஜமுனை நதிக்கரைக்கும் செல்கின்றார்கள். அவர்கள் சென்று ஹரித்துவாரிலும் காசியிலும் அமர்ந்து கொள்கின்றார்கள். அவை இரண்டுமே பிரதான இடங்களாகும். அவர்கள் கூறுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரான கங்கையே! எவ்வாறாயினும், அந்தக் கங்கை அவற்றைச் செவிமடுப்பதில்லை. தூய்மையாக்குபவரான தந்தை மாத்திரமே அவற்றைச் செவிமடுக்கின்றார். இப்பொழுது நீங்கள் அந்தத் தந்தையின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் எவ்வாறு தூய்மையாகலாம் என்று தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். ‘என்னை மாத்திரம் சதா நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்று கங்கை நீர் கூறுவதில்லை. தந்தை கூறுகின்றார்: தந்தையாகிய என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்று நான் சத்தியம் செய்கின்றேன். இந்த உத்தரவாதத்தை நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன். கங்கையினால் இந்த உத்தரவாதத்தை அளிக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் இராவணனின் கொடும்பாவியை மக்கள் எரித்தாலும், அவன் மரணிப்பதில்லை. அதேபோன்று, மக்கள் பிறவிபிறவியாகக் கங்கையில் நீராடினாலும் எவரும் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் அங்கே நீராடச் செல்கின்றார்கள். அவர்கள் தூய்மையாகிவிட்டால் அவர்கள் மீண்டும் ஏன் அங்கே செல்ல வேண்டும்? பல மேலாக்கள் இடம்பெறுகின்றன. அங்கே ஆத்மாக்கள் பரமாத்மாவைச் சந்திக்கின்றனர் என்று எவரும் குறிப்பிடுவதில்லை. பக்தி மார்க்கத்தில், மேலாக்களில் பெரிய கூட்டம் உள்ளது. நீங்கள் இப்பொழுது உங்கள் புத்தியின் யோகத்தை தந்தையுடன் இணையுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் காதலர்கள் ஆகியுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களே சரீரத்தினூடாகக் கடவுளை நினைவு செய்கின்றனர்.. தந்தை கூறுகின்றார்: நானும் இச் சரீரத்தின் மூலமே உங்களுக்குக் கற்பிக்கின்றேன். ஆகையாலேயே நீங்கள் தொடர்ந்தும் பாபாவை நினைவு செய்ய வேண்டும்;. நீங்கள் ‘பாபா’ என்று கூறும் போது, நீங்கள் நிச்சயமாக சுவர்க்கத்தையும் முக்தி தாமமான உங்கள் வீட்டையும் நினைவு செய்கின்றீர்கள். முக்தி நிர்வாண உலகம் என்றும் அழைக்கப்படுகின்றது. இது சரீர உலகமாகும். ஆத்மாக்கள் இங்கு வராதிருந்தால், எவ்வாறு சரீர உலகின் சனத்தொகை அதிகரிக்கும்? ஆத்மாக்கள் அசரீர உலகிலிருந்து வருவதால், மனித உலகம் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. அது இயல்பாகவே தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றது என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆத்மாக்கள் இங்கே வருகின்றனர் என்பதால் உலக சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். இனிய வீடே அமைதி தாமமாகும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். பலருக்கும் அமைதியில் விருப்பம் உள்ளது. அமைதி தாமமே உங்கள் இனிய இறை தந்தையின் வீடாகும் என்பது உங்களுக்குத் தெரியும். பாரதமக்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பும் போது அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் எங்கள் இனிய வீடான பாரதத்திற்கு திரும்பிச் செல்கின்றோம். அவர்கள் எப்பொழுதும் தமது பிறந்த நாட்டின் மீது அன்பு கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: எங்கள் இனிய வீடான பாரதத்திற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள். நல்லது. ஒருவர் மரணித்து அந்நபரின் ஆத்மா பிரிந்து சென்ற பின்னர், அவர்கள் சரீரத்தை இங்கு எடுத்து வந்து அதனை முடித்து விடுகின்றனர். பாரதத்தின் மண் பாரதத்திற்;கே திரும்பி வரவேண்டுமென அவர்கள் நம்புகின்றார்கள். நேரு மரணித்த பொழுது அவர்கள் அவரது சாம்பலைப் பல இடங்களில் தூவினார்கள். அவர்கள் அதனை வயல்களிலும் தூவினார்கள். அதனால் நிலம் செழிப்படையும் என்று அவர்கள் நம்பினார்கள். எவ்வாறாயினும், யாராயினும், எதற்கும், எவ்வளவு, மதிப்பளித்தாலும், அது நிச்சயமாகப் பழையதாக வேண்டும். அவர்கள் பல சிரமங்களை எதிர் கொள்கிறார்கள். அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. உங்களுக்குத் தந்தையைத் தெரியும் என்பதால், நீங்கள் அவரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஆகையால், உங்கள் நண்பர்களையும், உறவினர்களையும்கூட சுவர்க்கவாசிகளாக்க உங்கள் இதயம் விரும்புகின்றது. சுவர்க்க வாசிகள் ஆகுங்கள் என்று நீங்கள் அவர்களிடம் கூறும்போது, அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களைக் கொலை செய்யவா விரும்புகிறீர்கள்? நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் சுவர்க்கத்தின் மேன்மையான வாசிகள் ஆகுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். நீங்கள் மீண்டும் மீண்டும் சரீர உணர்வுடையவர்களாகித் தந்தையை மறந்து விடுகிறீர்கள். நீங்கள் இப்போது நேரடியாகவே அவர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். உங்கள் பரமாத்மாவான பரமதந்தையிடம் வந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா வினவுகிறார்: நாங்கள் முன்னர் சந்தித்திருக்கின்றோமா? அப்போது, நீங்கள் உடனடியாகப் பதிலளிக்கிறீர்கள்: ஆம், பாபா, நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் சந்தித்தோம், இவையே உங்கள் மறைமுகமான வார்த்தைகளாகும். எவராலும் உங்களைப் பிரதி செய்ய முடியாது. சிலர் கிருஷ்ணரின் ஆடையை உடுத்தி, தாம் சுவர்க்கத்தை ஸ்தாபிக்க வந்துள்ளோம் என்று கூறினாலும், 5000 வருடங்களின் முன்னரும் தாம் சுவர்க்கத்தை ஸ்தாபித்தோம் என்று கூறமுடியாது. நீங்கள் மாத்திரமே கூறுகின்றீர்கள்: பாபா, உங்களிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காக, நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் வந்தோம். நீங்கள் எங்களுக்கு இராஜயோகம் கற்பித்தீர்கள். ஆத்மா சரீரத்தினூடாக இதனைக் கூறுகிறார். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையுடன் தந்தையை நினைவு செய்யுங்கள். இதில் சர்வவியாபகர் என்ற கேள்விக்கே இடமில்லை. பரமாத்மாவான பரமதந்தை, புதிய உலகைப் படைப்பதற்காகப் பயன்படுத்தும் பிரம்மா நிச்சயமாகச் சரீர வடிவில் இருக்க வேண்டும் என்பதைக் கூட அவர்கள் புரியாதுள்ளார்கள். தூய்மையாக்குகின்ற தந்தை வந்து உங்களைத் தூய தேவர்கள் ஆக்குகின்றார். சுவர்க்கத்தைப் படைப்பவர் தந்தை மாத்திரமே ஆவார். ஆகையால் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்கு மனிதர்கள் தேவையாகும். பாபா வந்து உங்களுக்கு சுவர்க்கத்திற்கான வாயிலைக் காட்டுகின்றார். நீங்கள் நரகவாசிகளைச் சுவர்க்க வாசிகளாக மாற்ற முயற்சிக்கின்றீர்கள். நீங்கள் முக்கியஸ்தர் ஒருவரிடம் நேரடியாக நீங்கள் தூய்மையற்ற நரக வாசியாக இருந்தீர்கள் என்று கூறினால், அவர், மிகவும் குழப்பமடைந்துவிடுவார். நீங்கள் இப்போது நரகத்திலிருந்து வெளியேறி சுவர்க்கத்திற்குச் செல்கிறீர்கள் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். நாங்கள் இப்போது சங்கமயுக வாசிகளாவோம். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் சரீரத்தைத் துறந்து பாபாவுடன் பாபாவின் வீட்டிற்குச் செல்கின்றோம். இது உங்;கள் ஆன்மீக யாத்திரையாகும். நீங்கள் பாபாவின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். உங்கள் சரீரம் இருக்கும் வரை யாத்திரையும் தொடரும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள்கிறீர்கள். நீங்கள் செயல்களையும் செய்ய வேண்டும். உண்ணவும், உறங்கவும், சமைக்கவும் வேண்டுமாயினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் தந்தையை நிச்சயமாக நினைவு செய்ய வேண்டும். நீங்கள் வேலை செய்யும் போது சிறிது நேரம் கிடைத்தாலும், பாபாவின் நினைவில் அமர்ந்துவிடுங்கள். அதில் அதிகளவு வருமானம் உள்ளது. புகையிரதத்தில் பயணிக்கும் போது, அவ்வேளையில் நீங்கள் எதுவும் செய்வதில்லை. எனவே அதில் அமர்ந்திருக்கும் போது பாபாவை நினைவு செய்யுங்கள். நாங்கள் இப்போது பாபாவிடம் செல்கின்றோம். பாபா பரந்தாமத்திலிருந்து எங்களை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். நல்லது. மாலையில் குடும்பத்திற்காக நீங்கள் சமைக்கும் போது, ஒருவருக்கொருவர் பாபாவை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். வாருங்கள் எங்கள் பாபாவின் நினைவில் அமர்வோம். இக்கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுங்கள். நாங்கள் சுயதரிசன சக்கரதாரி;கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் பிறருக்குப் பாதையைக் காட்டும் கலங்கரை விளக்கங்கள்;. அமர்ந்திருக்கும் போதும், நிற்கும் போதும், நடமாடித் திரியும் போதும் நீங்கள் கலங்கரை விளக்கங்கள் ஆவீர்கள். உங்கள் ஒரு கண்ணில் முக்தியையும் மறு கண்ணில் ஜீவன் முக்தியையும் கொண்டிருக்கிறீர்கள். சுவர்க்கம் இங்கேயே இருந்தது, ஆனால் அது இப்போது இல்லை. இப்போது இது நரகமாகும். பாபா இப்போது மீண்டும் ஒருமுறை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். தந்தை கூறுகிறார்: நான் உங்களை மிகவும் அழகிய மலர்கள் ஆக்குகிறேன். அதன் பின்னர் நீங்கள் சக்கரவர்த்தினிகளாகவும் அரசிகளாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் கதராடை (கைத்தறியால் செய்யப்பட்ட பருத்தி ஆடை) அணிந்த ராணியாகக் கூடாது. நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்கள் ஆக வேண்டுமேயன்றி பதிநான்கு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாக அல்ல. ஸ்ரீ கிருஷ்ணர் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவராவார். நீங்கள் பல விரதங்கள், கோட்பாடுகள் போன்றவற்றைக் கடைப்பிடித்தீர்கள். நீங்கள் 7 நாட்களுக்கு நீராகாரம் கூட இல்லாது இருக்கிறீர்கள். நீங்கள் அதிகளவு முயற்சி செய்த போதும், கிருஷ்ண தாமத்திற்குச் செல்லவில்லை. நீங்கள் இப்பொழுது நடைமுறை ரீதியாகக் கிருஷ்ண தாமத்திற்குச் செல்ல முயற்சிக்கிறீர்கள். கிருஷ்ணரைத் துவாபர யுகத்தில் காட்டியுள்ளதால் எவருக்கும் சுவர்கத்தைப் பற்றித் தெரியாது. உண்மையில் இப்போது உங்களுக்கு 7 நாட்கள் என்பதன் அர்த்தம் தெரியும். நீங்கள் தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யக் கூடாது. ஆனால் நீர் போன்றவற்றை அருந்தாதிருக்க வேண்டுமென்ற கேள்விக்கே இடமில்லை. பாபாவை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் பாபாவிடம் செல்வீர்கள். இதன் பின்னர் தந்தை உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புவார்;. நீங்கள் விரதம், கட்டுப்பாடுகள் போன்றவற்றைக் கடைப்பிடித்துப் பல நாட்கள் பட்டினி கிடந்தீர்கள். நீங்கள் பிறவி பிறவியாகப் பெரும் முயற்சி செய்தீர்கள், அவை எவற்றிலிருந்தும் எந்தப் பேறும் பெறப்படவில்லை. நீங்கள் இப்போது அவை அனைத்திலிருந்தும் விடுதலை செய்யப்பட்டு, ஜீவன் முக்திக்கான பாதைக்கு அழைத்து வரப்பட்டுள்ளீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா நாங்கள் முன்னைய கல்;பத்திலும் சந்தித்துச் சுவர்க்க ஆஸ்தியைப் பெற்றோம் என்று கூறுகிறீர்கள். தந்தை கூறுகிறார் ஒவ்வொரு அடியிலும் தொடர்ந்தும் ஆலோசனை பெறுங்கள். உங்கள் கணக்கைப் பற்றி விபரமாகக் கேளுங்கள், பாபா தொடர்ந்தும் ஆலோசனை வழங்குவார். நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றைத் தொடர்ந்தும் செய்யுங்கள். அப்போதும் கூட, பாபா தொடர்ந்தும் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். உங்கள் வியாபாரத்தில் அளவுக்கதிகமாக நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும் போது அவர் கூறும் ஆலோசனை: ஏன் நீங்கள் அதில் இவ்வளவு முட்டி மோதிக் கொள்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வாழப் போகிறீர்கள்? ஒன்று அல்லது இரண்டு சப்பாத்திகளையே வயிறு கேட்கின்றது. பணக்காரராயினும் ஏழையாயினும் அதனைக் கொண்டு வாழ முடியும். பணக்காரர்கள் மிகவும் நன்றாக உண்ட போதிலும் அவர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள். கிராமத்தவர்கள் எவ்வளவு பலசாலிகளாக உள்ளார்கள். என்று பாருங்கள். அவர்கள் உண்ணும் உணவைப் பாருங்கள்! அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் தமது குடிசையில் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆகையால், இந் நேரத்தில் நீங்கள் உங்கள் ஏனைய ஆசைகள் அனைத்தையும் துறக்க வேண்டும். இரண்டு சப்பாத்திகளை உண்டாலே உங்கள் வயிறு நிரம்பிவிடும். இதுவே போதும். அதன் பின்னர் நீங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் ஆன்மீகக் குழந்தைகளும், பரமாத்மாவான, பரம தந்தையின் காதலர்களும் ஆவீர்கள். நீங்கள் பாபாவை நினைவு செய்வதை அதிகரிப்பதற்கேற்ப உங்கள் பாவங்கள் அதிகளவில் அழிக்கப்படும். நீங்கள் நினைவு செய்கின்றவரை சந்திக்கச் செல்வீர்கள். உங்களில் சிலர் காட்சிகள் காண ஆசைப்படுகிறீர்கள். பாபா கூறுகிறார்: வீட்டிலிருக்கும் போதே நீங்கள் காட்சிகள் காண முடியும் சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் வைகுந்தத்தின் காட்சிகளைக் காண்பதுடன் கிருஷ்ணதாமத்தையும் காண்பீர்கள். இங்கே, பாபா உங்களை வைகுந்தத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். காட்சிகள் மாத்திரம் என்ற கேள்விக்கு இடமில்லை. என்னை நினைவு செய்யுங்கள். ஏனெனில், உங்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்கே நான் வந்துள்ளேன். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். அவர் மாத்திரமே உங்களை ஸ்ரீகிருஷ்ண தாமத்தின் அதிபதியாக ஆக்குகின்றார். கிருஷ்ணர் உங்களை அவ்வாறு ஆக்குவதில்லை. சிவபாபாவை நினைவு செய்வதனால், நீங்கள் வைகுந்தத்தின் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். அவர் இப்போது பரந்தாமத்திலிருந்து வருகிறார். அவர் நிச்சயமாக ஒரு நேரத்தில் வந்தார். ஆகையாலேயே ஞாபகார்த்தமாக ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. சிவாலயம் உள்ளது. மக்கள் சிவஜெயந்தியையும் கொண்டாடுகிறார்கள். எவ்வாறாயினும், அவர் பாரதத்திற்கு எவ்வாறு வருகிறார் என்பது எவருக்கும் தெரியாது. அவர் கிருஷ்ணரின் சரீரத்தில் பிரவேசிப்பதில்லை. கிருஷ்ணர் சத்தியயுகத்தில் மாத்திரமே இருக்கிறார். சிவனுக்கு மிகப் பெரிய ஆலயம் உள்ளது. ஆனால் கிருஷ்ணரின் ஆலயம் அவ்வளவு பெரியதல்ல. சோமநாதர் ஆலயம் மிகப்பெரியதாகும். கிருஷ்ணரின் ஆலயங்களில், ராதையும் கிருஷ்ணரும் பல ஆபரணங்களை அணிந்திருப்பதாகவே காட்டியுள்ளார்கள். சிவாலயத்தில் நீங்கள் ஆபரணங்கள் எதனையும் காணமாட்டீர்கள். சிவன் பெரிய மாளிகையில் வசிப்பதில்லை. கிருஷ்ணரே அங்கே வசிக்கின்றார். பாபா கூறுகின்றார்: நான் மாளிகைகளில் வசிப்பதில்லை. எவ்வாறாயினும், பக்தி மார்க்கத்தில் வைரங்களாலும் இரத்தினங்களாலும் பதித்த மிகவும் ஆடம்பரமான ஆலயங்களைக் கட்டியுள்ளார்கள். சிவபாபாவிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியை அதிகளவு பெற்றவர்களே அத்தகைய மிகப்பெரிய ஆலயங்களைக் கட்டினார்கள். அவர்கள் ஞாபகார்த்தமாகவே அத்தகைய பெரிய ஆலயங்களைக் கட்டினார்கள். ஆகையால் அவர்கள் அந்தளவிற்கு செல்வந்தர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் இப்போதும் மிகவும் நல்ல ஆலயங்களைக் கட்டுகிறார்கள். பம்பாயில், பபுல்நாத் (முட்களை மலர்கள் ஆக்குகின்ற பிரபு) என்ற சிவனுக்குரிய ஆலயம் உள்ளது. மாதவ் பாக்கில் இலக்ஷ்மி நாராயணனுக்கான ஓர் ஆலயம் உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் உங்களை சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றேன். ஆகையால் பக்தி மார்க்கத்தில் நீங்கள் மிகப் பெரிய ஆலயங்களைக் கட்டுகிறீர்கள். ஆனால் இப்போது நான் எவ்வாறு ஒரு குடிசையில் அமர்ந்திருக்கிறேன் என்பதைப் பாருங்கள்! உங்கள் பெயரும் போற்றப்படும். உங்கள் ஆலயங்கள் மீண்டும் கட்டப்படும் என்பதும் உங்களுக்குத் தெரியும். எங்கள் தந்தை சிவனுக்கு பல ஆலயங்கள் உள்ளன என்பதும் அற்புதமேயாகும். சோமநாதர் ஆலயத்தைக் கட்டியவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருந்திருக்க வேண்டும். இப்பொழுது நான் மிகவும் மறைமுகமாக இருப்பதால், எவருக்கும் என்னைத் தெரியாதுள்ளது. சிவபாபாவிற்குரிய ஆலயங்கள் எவ்வாறு மீண்டும் கட்டப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது நீங்கள் பக்திமார்க்கத்திற்குச் சென்றிருப்பீர்கள். மம்மாவும் பாபாவுமே அதிகபட்ச தகுதிவாய்ந்தவர்களாகவும் வைகுந்தத்தின் அதிபதிகளாகவும் ஆகுகின்றார்கள். பின்னர் அவர்களே முதலில் பூஜிப்பவர்களாகவும் ஆகுகிறார்கள். அவர்களே ஆலயங்களைக் கட்டவேண்டியவர்களும் ஆவார்கள். எனவே அவர்கள் தமது இதயத்தில் “நாங்கள் பூஜிப்பவர்களாகி, ஆலயங்களைக் கட்டுவோம்” என்று கூறுகின்றார்கள். இவ்விடயங்களினால் உங்களை நீங்கள் குதூகலப்படுத்தினால், பழைய உலக விடயங்களை நீங்கள் மறப்பீர்;கள். உங்கள் மத்தியில் நீங்கள் இத்தகைய விடயங்களைப் பற்றிப் பேசும் போது நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடன் ஓர் ஆன்மீக உரையாடலை மேற்கொள்ளுங்கள். பரமாத்மா இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஆறுதல் கூறுகிறார். இந்த ஞானத்தின் மூலமாக உங்களை முகமலர்ச்சியுடையவர்கள் ஆக்குகின்றார். நாங்கள் ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் ஒருமுறை வந்துள்ளோம் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். நாங்கள் தந்தையைப் பல தடவைகள் சந்தித்து எங்கள் ஆஸ்தியைப் பெற்றிருக்கின்றோம். இவ்வாறாக நீங்கள் உங்கள் மத்தியில் உரையாட வேண்டும். நீங்கள் கர்மயோகிகளும் ஆவீர்கள். நீங்கள் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தாலும் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுக்கு 84 பிறவிகளின் வரலாறும், புவியியலும் தெரியும். நாங்கள் இப்பொழுது பிராமணர்களாகி உள்ளோம். பின்னர் தேவர்களாகி இராச்சியத்தை ஆட்சி செய்வோம். பூஜிக்கப்படுபவர்களிலிருந்து நாங்கள் பூஜிப்பவர்களாகி பின்னர் மாளிகைகள் போன்றவற்றைக் கட்டுவோம். உங்கள் சொந்த வரலாற்றையும் புவியியலையும் தொடர்ந்தும் கூறுங்கள். எங்கள் வரலாறும், புவியியலும் சக்கரத்தைச் சுற்றி வருதலே சுயதரிசன சக்கரமாகும். நீங்களே மூவுலகமும் அறிந்தவர்களாவீர்கள். உங்கள் ஞானக்கண் இப்போது திறந்துள்ளது. இச்சக்கரத்தை நினைவு செய்வதன் மூலம், உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தையும் பூரிப்படைகின்றார். நீங்கள் இப்போது, சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள். பின்னர், பக்தி மார்க்கத்தில் சேவையாளர்களான உங்களுக்கு ஆலயங்கள் கட்டப்படும். நானும் குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன். நான் உங்களுக்கு, உங்கள் சுவர்க்க ஆஸ்தி முழுவதையும் கொடுக்கவே வந்துள்ளேன். நீங்கள் ஒவ்வொருவரும் முயற்சி செய்வதை அதிகரிப்பதற்கு ஏற்பவே, நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1. நடந்து திரியும் போதெல்லாம் கலங்கரை விளக்கமாகி அனைவருக்கும் பாதையைக் காட்டுங்கள். ஆசைகள் அனைத்தையும் துறந்து, ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். தந்தையிடமிருந்து தொடர்ந்தும் ஆலோசனை பெறுங்கள்.

2. ஞான விடயங்களினால் உங்களைக் களிப்பூட்டுங்கள். உங்களுடனேயே உரையாடுங்கள். சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றி சதா முகமலர்ச்சியுடன் இருங்கள்.


ஆசீர்வாதம்:
சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருந்து அனைவருக்கும் மரியாதை கொடுப்பதன் மூலம் அனைவராலும் மதிக்கப்படுவீர்களாக.

எப்பொழுதும் உங்கள் மேன்மையான சுயமரியாதையில் நிலைத்திருங்கள். பணிவாக இருந்து தொடர்ந்தும் அனைவருக்கும் மரியாதை வழங்குங்கள். கொடுப்பதென்பது பெற்றுக் கொள்வதாகும். மரியாதை கொடுப்பதென்பது ஏனைய ஆத்மாக்களுக்கு ஆர்வம் உற்சாகத்தைக் கொடுத்து அவர்களை முன்னேறிச் செல்வதற்கு உதவுவதாகும் எப்பொழுதும் உங்கள் சுயமரியாதையில் நிலைத்திருப்பதனால் நீங்கள் இயல்பாகவே அனைத்துப் பேறுகளையும் கொண்டிருப்பீர்கள். உங்கள் சுயமரியாதையினால் உலகமே உங்களுக்கு மரியாதை கொடுக்கும். நீங்கள் அனைவரிடமிருந்தும் மேன்மையான மரியாதைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
அனைவருக்கும் மதிப்பளிப்பவரின் பதிவேடு இயல்பாகவே சிறந்ததாக ஆகுகின்றது.