09.11.2018        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒரு விநாடியில் முக்தியையும், ஜீவன் முக்தியையும் பெறுவதற்கு, மன்மனாபவவாகவும், மதியாஜிபவவாகவும் ஆகுங்கள். தந்தையை மிகச் சரியான முறையில் இனங்கண்டு கொள்ளுங்கள். தந்தையை நினைவு செய்து, அவரது அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள்.

கேள்வி:
எந்தப் போதையின் அடிப்படையில் உங்களால் தந்தையைக் காண்பிக்க (வெளிப்படுத்த) முடியும்?

பதில்:
நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள், அவரே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதையைக் கொண்டிருக்கும்போதாகும். நாங்கள் அனைத்து மனிதர்களுக்கும் சத்தியப் பாதையைக் காண்பிக்க வேண்டும். இப்பொழுது நாங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றோம். நாங்கள் எங்கள் இராஜரீக நடத்தையின் மூலமாகத் தந்தையின் பெயரைப் புகழடையச்செய்ய செய்யவேண்டும். தந்தையின் புகழையும், கிருஷ்ணரின் புகழையும் அனைவருக்கும் எடுத்துரையுங்கள்.

பாடல்:
நாளைய பாக்கியம் நீங்களே….

ஓம் சாந்தி:
இப்பாடல் சுதந்திரப் போராட்ட வீரர்களால் இயற்றப்பட்டது. எவ்வாறாயினும், “உலகின் பாக்கியம்” என்பதன் அர்த்தத்தை பாரத மக்கள் அறியமாட்டார்கள். அது முழு உலகமும் பற்றிய கேள்வியாகும். முழு உலகினதும் பாக்கியத்தை மாற்றவோ அல்லது அதனை நரகத்திலிருந்து சுவர்க்கமாக மாற்றவோ எந்த மனிதராலுமே முடியாது. இப்புகழ் மனிதருக்குரியதல்ல. இது கிருஷ்ணருக்குக் கூறப்பட்டிருக்குமாயின், எவராலும் அவரை இகழ்ந்திருக்க முடியாது. எவ்வாறு கிருஷ்ணர் நான்காம் பிறைச் சந்திரனைப் பார்த்ததனால் இகழப்பட்டார் என்பதனை எவருமே புரிந்து கொள்ளமாட்டார்கள். உண்மையில், கிருஷ்ணரையோ, கீதையின் கடவுளையோ ஒருபோதுமே இகழ முடியாது. பிரம்மாவே இகழப்படுகின்றார். கிருஷ்ணர் பெண்களைக் கடத்தியதாகக் கூறப்பட்டதன் மூலமே இகழப்படுகின்றார். சிவபாபாவைப் பற்றி எவருமே அறியமாட்டார்கள். மக்கள் நிச்சயமாகக் கடவுளின் பின்னால் செல்கின்றார்கள். கடவுளை ஒருபோதுமே இகழ முடியாது. கடவுளையோ, கிருஷ்ணரையோ இகழமுடியாது. இருவரது புகழும் மிகவும் சக்திவாய்ந்தது. கிருஷ்ணரின் புகழ் முதலாம் இலக்கத்திற்குரியது. இலக்ஷ்மியும், நாராயணனும் திருமணமானவர்கள் என்பதனால் அவர்களுக்கு அந்தளவு புகழ் இல்லை. கிருஷ்ணர் ஒரு குமார் ஆவார். இதனாலேயே அவருக்கு அதிகளவு புகழ் கிடைக்கின்றது. அவர்கள் இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் என்றும், முற்றிலும் விகாரமற்றவர்கள் என்றும் அதே புகழையே பாடுகின்றார்கள். எனினும், அவர்கள் கிருஷ்ணரை துவாபரயுகத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். அப்புகழ் ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்வதாக அவர்கள் நினைக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். இது இறை ஞானமாகும். கடவுளே இராம (கடவுள்) இராச்சியத்தை ஸ்தாபித்தார். இராம (கடவுள்) இராச்சியம் என்றால் என்ன என்பதை மனிதர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். தந்தை வந்து, இதன் விளக்கத்தைக் கொடுக்கின்றார். அனைத்தும் கீதையிலேயே தங்கியுள்ளது. கீதையில் தவறான விடயங்களே எழுதப்பட்டிருக்கின்றன. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமிடையில் யுத்தம் இடம்பெறவில்லை. எனவே, அர்ஜுனன் பற்றிய கேள்வியே எழமாட்டாது. தந்தை இங்கிருந்தவாறு, இப்பாடசாலையில் உங்களுக்குக் கற்பிக்கின்றார். யுத்த களமொன்றில் பாடசாலை இருக்கமுடியாது. ஆம், இராவணனாகிய மாயையுடனான இந்த யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெறவேண்டும். நீங்கள் மாயையை வென்றவர்களாகவும், உலகை வென்றவர்களாகவும் ஆகவேண்டும். எவ்வாறாயினும், மக்கள் சிறிதளவுகூட இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தாமதமாகவே வந்து புரிந்துகொள்ளவேண்டும் என்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே இவ்விடயங்களை அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். பீஷ்மபிதாமகரை நோக்கி வன்முறையுடன் அம்பு எய்தல் போன்ற கேள்விக்கே இடமில்லை. அத்தகைய பல விடயங்கள் சமய நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன. தாய்மாராகிய நீங்கள் அம்மக்களிடம் சென்று, சிறிது நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: இதனுடன் தொடர்புள்ள விடயங்களைப் பற்றி நாங்கள் உங்களுடன் பேசவேண்டும். கடவுளே கீதையை உரைத்தார். அது கடவுளின் புகழாகும். கிருஷ்ணர் வேறானவர். எனவே, நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இது தனது உருத்திர ஞான யாகம் எனக் கடவுள் உருத்திர சிவன் கூறுகின்றார். இது அசரீரியான பரமதந்தை, பரமாத்மாவின் ஞான யாகமாகும். மனிதர்கள் பின்னர் கூறுகின்றனர்: கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார். உண்மையில் ஒருவரையே கடவுள் என அழைக்கமுடியும். நீங்கள் அவரது புகழையும், பின்னர் கிருஷ்ணரின் புகழையும் எழுத வேண்டும். இப்பொழுது, அவ்விருவரில், கீதையின் கடவுள் யார்? “இலகு இராஜயோகம்” என்பது கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருங்கள். உங்கள் சரீரத்தினதும், சரீர உறவுகள் அனைத்தினதும் உணர்வைத் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். மன்மனாபவ! மதியாஜிபவ! தந்தை அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். கீதை கடவுளால் பேசப்பட்ட ஸ்ரீமத்தை உள்ளடக்கியதாகும். ஸ்ரீ என்றால் அதி மேன்மையான என்பதாகும். எனவே, இது பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனுக்கே பொருந்தும். கிருஷ்ணர் தெய்வீகப் பண்புகளைக் கொண்ட மனிதராவார். சிவனே கீதையின் கடவுளும், இராஜயோகத்தைக் கற்பித்தவரும் ஆவார். இறுதியில், ஏனைய சமயங்கள் அனைத்தும் நிச்சயமாக அழிக்கப்பட்டு, ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்படும். சத்தியயுகத்தில், ஒரேயொரு ஆதி சனாதன தேவ தர்மம் மாத்திரமே இருந்தது. கிருஷ்ணரன்றி, கடவுளே அதனை ஸ்தாபித்தார். இப்புகழ் கடவுளுக்குரியதாகும். அவர் தாய், தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார். கிருஷ்ணரை இவ்வாறு அழைக்க முடியாது. நீங்கள் தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுக்கவேண்டும். கடவுள் மாத்திரமே விடுதலையளிப்பவரும், வழிகாட்டியும், அனைவரையும் வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்பவருமாவார் என்பதனை நீங்கள் விளங்கப்படுத்தலாம். ஒரு நுளம்புக் கூட்டத்தைப் போன்று அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச்செல்வது சிவனின் பணியேயாகும். ‘பரம்’ என்ற வார்த்தை மிகவும் சிறந்தது. எனவே, பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனின் புகழ் கிருஷ்ணரின் புகழிலிருந்து வேறுபட்டது என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் இதனை நிரூபித்து, இரண்டிற்குமிடையிலான வேறுபாட்டை விளங்கப்படுத்த வேண்டும். சிவன் பிறப்பு, மறுபிறப்புச் சக்கரத்திற்குள் வருவதில்லை. அவரே தூய்மையாக்குபவர். ஆனால் கிருஷ்ணர் முழுமையாக 84 பிறவிகளையும் எடுக்கின்றார். இப்பொழுது, யாரைப் பரமாத்மா என அழைக்கமுடியும்? நீங்கள் இதனையும் எழுத வேண்டும்: எல்லையற்ற தந்தையை அறியாததனால், நீங்கள் சந்தோஷமற்ற அநாதைகளாகி விட்டீர்கள். சத்தியயுகத்தில், நீங்கள் பிரபுவிற்கும், அதிபதிக்கும் உரியவராகும்போது, நிச்சயமாகச் சந்தோஷமாக இருப்பீர்கள். வார்த்தைகள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்து, உங்கள் ஆஸ்தியாகிய ஜீவன் முக்தியை ஒரு விநாடியில் பெற்றுக்கொள்ளுங்கள். இப்பொழுதும்கூட சிவபாபா இதனையே கூறுகின்றார். ஓம் நமசிவாய: அவரது முழுப் புகழும் எழுதப்பட வேண்டும். அவரிடமிருந்தே நீங்கள் உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெற்றுக்கொள்கின்றீர்கள். உலகச் சக்கரத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவீர்கள். இப்பொழுது, எது சரியெனத் தீர்மானியுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் சந்நியாசிகளின் ஆச்சிரமங்களுக்குச் சென்று, அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் ஒன்றுகூடலில் இருக்கும்போது, பெருமளவு அகங்காரத்தைக் கொண்டிருப்பார்கள். மக்களுக்கு எவ்வாறு சத்தியப் பாதையைக் காண்பிக்கலாம் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். கடவுள் பேசுகின்றார்: நான் இந்த சாதுக்களையும், புனிதர்களையும்கூட ஈடேற்றுகின்றேன். ‘விடுதலையளிப்பவர்’ என்ற வார்த்தையும் உள்ளது. எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: எனக்குரியவராகுங்கள். “தந்தை மகனை வெளிக்காட்டுகின்றார்!” பின்னர், “மகன் தந்தையை வெளிக்காட்டுகின்றார்”. ஸ்ரீ கிருஷ்ணரைத் தந்தை என அழைக்க முடியாது. அனைவரும் தந்தையாகிய கடவுளின் குழந்தைகளாகவே இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் ஒரு மனிதனின் குழந்தைகளாக இருக்கமுடியாது. எனவே, நாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதனை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது, குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்கவேண்டும். அரசனின் மகனாக இருக்கின்ற இளவரசனின் நடத்தையைப் பாருங்கள்! அது மிகவும் இராஜரீகமானது. எவ்வாறாயினும், பாரத மக்கள் இந்த அப்பாவியை (ஸ்ரீகிருஷ்ணர்) இகழ்ந்துள்ளார்கள். அவர்கள் கூறுகின்றனர்: நீங்களும் பாரதவாசிகளே. அவர்களிடம் கூறுங்கள்: ஆம், அப்படித்தான், ஆனால் நாங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றோம். நாங்கள் கடவுளின் குழந்தைகளாகி, அவரிடம் கற்கின்றோம். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். கிருஷ்ணரால் இவ்வாறு கூறமுடியாது. அவர்கள் இதனைப் பின்னர் புரிந்துகொள்வார்கள். ஜனக மன்னரும் ஒரு சமிக்ஞை மூலமாக அனைத்தையும் புரிந்து கொண்டார். அவர் பரமாத்மாவாகிய பரம தந்தையை நினைவு செய்து, திரான்ஸில் சென்றார். பலர் தொடர்ந்தும் திரான்ஸில் செல்கின்றார்கள். திரான்ஸில் அவர்கள் அசரீரி உலகத்தையும், வைகுந்தத்தையும் பார்க்கின்றனர். நீங்கள் அசரீரி உலகவாசிகள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் உங்கள் பாகத்தை நடிப்பதற்காகப் பரந்தாமத்திலிருந்து கீழிறங்கி வருகின்றீர்கள். விநாசம் சற்று முன்னாலேயே உள்ளது. விஞ்ஞானிகள் சந்திரனுக்குச் செல்வதற்காகத் தொடர்ந்தும் பிரயத்தனம் செய்கின்றார்கள். விஞ்ஞானத்தின் உச்சக்கட்ட அகங்காரத்தினால் அவர்கள் தாங்களாக அழிவை ஏற்படுத்திக்கொள்வார்கள். உண்மையில், சந்திரனில் எதுவுமே கிடையாது. இவ்விடயங்கள் மிகவும் சிறந்தவை. எனினும், நீங்கள் அவற்றைச் சாதுரியமான முறையில் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அதிமேலான தந்தையே இக்கற்பித்தல்களை எங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே உங்கள் தந்தையுமாவார். அவரது புகழ் கிருஷ்ணரது புகழிலிருந்து வேறுபட்டது. இந்த உருத்திர ஞான யாகத்தில் அனைத்துமே அர்ப்பணிக்கப்பட வேண்டும். இக்கருத்துக்கள் மிகவும் சிறந்தவை, எனினும் இதற்குக் காலம் எடுக்கும். ஒன்று ஆன்மீக யாத்திரை, மற்றையது பௌதீக யாத்திரை என்ற கருத்தும் மிகவும் சிறந்தது. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் இறுதி எண்ணங்களே உங்களை இலக்கிற்கு இட்டுச்செல்லும். ஆன்மீகத் தந்தையைத் தவிர வேறு எவராலுமே இவ்விடயங்களை உங்களுக்குக் கற்பிக்க முடியாது. நீங்கள் அத்தகைய கருத்துக்களை எழுதவேண்டும்: மன்மனாபவ! மத்தியாஜிபவ! இந்த யாத்திரை முக்திக்கும், ஜீவன் முக்திக்குமானதாகும். தந்தையால் மாத்திரமே உங்களை இந்த யாத்திரைக்கு அழைத்துச்செல்ல முடியும். கிருஷ்ணரால் இதனைச் செய்யமுடியாது. நீங்கள் நினைவுசெய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தளவிற்கு அதிகமான நினைவைக் கொண்டிருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் சந்தோஷம் அதிகளவில் இருக்கும். எவ்வாறாயினும், நினைவில் இருப்பதற்கு மாயை உங்களை அனுமதிக்கமாட்டாள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்பிற்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். நீங்கள் அனைவரும் சேவை செய்கின்றீர்கள். எவ்வாறாயினும், மேன்மையான சேவையும் இருக்கின்றது, தாழ்ந்த சேவையும் இருக்கின்றது. தந்தையின் அறிமுகத்தை ஒருவருக்குக் கொடுப்பது மிக இலகுவானதாகும். நல்லது. ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.

இரவு வகுப்பு

புத்துணர்;ச்சி பெறுவதற்காக, மக்கள் சுத்தமான காற்றைப் (கசநளா யசை) பெற மலைகளுக்குச் செல்கின்றார்கள். வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருக்கும்போது அவர்கள் தங்கள் கடமைகளை நினைக்கின்றார்கள். வெளியில் செல்வதன் மூலம் அவர்கள் தங்கள் அலுவலக எண்ணங்களிலிருந்து விடுபடுகின்றார்கள். குழந்தைகளும் புத்துணர்ச்சி பெறுவதற்காகவே இங்கே வருகின்றார்கள். நீங்கள் அரைக் கல்பமாக பக்தி செய்ததனால் களைப்படைந்துவிட்டீர்கள். நீங்கள் மங்களகரமான இச்சங்கமயுகத்தில் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஞானத்தின் மூலமாகவும், யோகத்தின் மூலமாகவும் நீங்கள் புத்துணர்ச்சி பெறுகின்றீர்கள். பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்பட வேண்டும் என்பதனையும், புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதனையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பிரளயம் என்பதே கிடையாது. உலகம் முழுமையாக அழிக்கப்படும் என அம்மக்கள் நினைக்கின்றனர், எனினும் அவ்வாறில்லை. அது மாற்றமே அடைகின்றது. இது பழைய உலகமாகிய நரகமாகும். பழைய உலகம் என்றால் என்ன, புதிய உலகம் என்றால் என்ன என்பதனை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இது உங்களுக்கு விபரமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. விபரங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. ஆனால் அதுவும் உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே உள்ளது. விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குப் பெருமளவு தெளிவு இருக்கவேண்டும். நீங்கள் விளங்கப்படுத்துவது மற்றவர்களின் புத்தியில் உடனடியாகவே பதியுமளவிற்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். சில குழந்தைகள் பலவீனமானவர்கள் என்பதால், அவர்கள் முன்னேறிச் செல்லும்பொழுது நின்றுவிடுகின்றார்கள். கடவுளின் வாசகங்களும் உள்ளன: அவர்கள் அதிசயிக்கின்றார்கள், அவர்கள் ஞானத்தைச் செவிமடுக்கின்றார்கள். மற்றவர்களுக்கும் இந்த ஞானத்தைப் பற்றிக் கூறுகின்றார்கள்..... இங்கே மாயையுடன் யுத்தம் நிகழ்கின்றது. அவர்கள் மாயையிடமிருந்து மரணித்து, கடவுளுக்குரியவர்கள் ஆகின்றார்கள். அதன் பின்னர் அவர்கள் கடவுளிடமிருந்து மரணித்து, மாயைக்குரியவர்கள் ஆகின்றார்கள். அவர்கள் தத்தெடுக்கப்பட்ட பின்னர், அவரை விவாகரத்துச் செய்கின்றார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் பலருக்கும் புயல்களைக் கொண்டுவருகின்றாள். வெற்றியும் தோல்வியும் உள்ளது என்பதனையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இது வெற்றியையும் தோல்வியையும் கொண்ட விளையாட்டாகும். நாங்கள் ஐந்து விகாரங்களினால் தோற்கடிக்கப்படுகின்றோம். அவற்றை வெற்றி கொள்வதற்காகவே நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். இறுதியில், வெற்றி உங்களுக்கேயாகும். நீங்கள் தந்தைக்குரியவர்கள் என்பதால், உறுதியானவர்கள் ஆகவேண்டும். மாயை உங்களுக்கு எந்தளவிற்கு ஆசைகள் காட்டுகின்றாள் என்பதனையும் நீங்கள் பார்க்கலாம். திரான்ஸில் செல்வதாலும் அநேக விளையாட்டுக்கள் முடிவடைந்துவிடுகின்றன. நீங்கள் இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்;தைப் பூர்த்தி செய்துவிட்டீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் உள்ளது. நீங்கள் தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும் ஆகி, இப்பொழுது சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆகியிருக்கின்றீர்கள். நீங்கள் பிராமணர்களாகி, பின்னர் தேவர்களாகுகின்றீர்கள். இதனை நீங்கள் மறந்துவிடக்கூடாது. நீங்கள் இதனை மறந்தால், பின்னோக்கியே செல்வீர்கள், உங்கள் புத்தியும் லௌகீக விடயங்களில் ஈடுபட்டுவிடும். உங்களால் முரளி போன்றவற்றைக்கூட நினைவு செய்ய முடியாதிருக்கும். நீங்கள் நினைவு யாத்திரையைச் சிரமமானதாக உணர்வீர்கள். இது ஓர் அற்புதமாகும்! சில குழந்தைகள் சின்னத்தை அணிவதற்குக்கூட வெட்கப்படுகின்றார்கள். இதுவும் சரீர உணர்வேயாகும், இல்லையா? நீங்கள் அவதூறுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணருக்குப் பல அவதூறுகள் கிடைத்தன. கிருஷ்ணரைவிட சிவபாபாவிற்கே ஆகக்கூடியளவில் அவதூறுகள் கிடைத்தன. பின்னர் இராமருக்கு அதிகளவில் அவதூறுகள் கிடைத்தன. அது வரிசைக்கிரமமானதாகும். இந்த அவதூறுகளால் பாரதம் பெருமளவில் இகழப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் அதனையிட்டுப் பயப்படக்கூடாது. அச்சா.

இனிமையிலும், இனிமையான, அன்பிற்கினிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அன்பும், நினைவும், இரவு வந்தனங்களும்.

தாரணைக்கான சாராம்சம்:

1. உங்கள் புத்தியில் எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருந்து, சதா இந்த ஆன்மீக யாத்திரையில் சதா நிலைத்திருங்;கள் நினைவிலிருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

2. “தந்தை மகனை வெளிக்காட்டுகின்றார்”. “மகன் தந்தையை வெளிக்காட்டுகின்றார்”. தந்தையின் உண்மையான அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். ஒரு விநாடியில் ஜீவன் முக்தியைப் பெறுவதற்கான பாதையை அனைவருக்கும் காண்பியுங்கள்.

ஆசீர்வாதம்:
மேன்மையான செயல்கள் என்ற கிளையில் தலைகீழாகத் தொங்குவதற்குப் பதிலாகப் பறக்கும பறவையாகி ஒரு கதாநாயக நடிகன் ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில் செய்யும் மேன்மையான செயல்கள் ஒரு வைரக்கிளையாகும். சங்கமயுகத்து மேன்மையான செயல்கள் எதுவானாலும் அது மேன்மையான செயல்கள் என்ற பந்தனத்தில் அகப்பட்டுக் கொள்வதாகும். அதாவது எல்லைக்குட்பட்ட ஆசைகளைக் கொண்டிருப்பது ஒரு தங்கச் சங்கிலியே ஆகும். நீங்கள் இந்தச் சங்கிலியைக் கொண்டிருக்கவோ அல்லது இந்த வைரக்கிளையில் தொங்கவோ கூடாது. ஏனெனில் பந்தனம் பந்தனமே. ஆகவே பாப்தாதா அனைத்துப் பந்தனங்களுக்கும் அதாவது அனைத்து எல்லைகளுக்கும் அப்பால் சென்று கதாநாயக நடிகன் ஆகுமாறு சகல பறக்கும் பறவைகளுக்கு ஞாபகமூட்டுகின்றார். .

சுலோகம்:
முகம் உங்கள் உள்ளார்ந்த ஸ்திதியின் கண்ணாடியாகும். எனவே உங்கள் முகம் என்றுமே வாடாது சந்தோ~த்தினால் மலர்ந்திருக்கட்டும்.


மாதேஸ்வரியின் இனிய மேன்மையான வாசகங்கள்:

சுவையற்ற கலியுக உலகிலிருந்து சாரம் நிறைந்த சத்தியயுக உலகிற்குச் செல்வது யாருடைய கடமை?

இந்த கலியுக உலகம் ஒரு சுவையற்ற உலகம் என ஏன் அழைக்கப்படுகிறது? ஏனெனில் இந்த உலகில் சாரம் இல்லை. அதாவது அதில் எந்தவித பலமும் எஞ்சி இருக்கவில்லை அங்கு சந்தோஷம், அமைதி. தூய்மை எதுவுமில்லை. ஒரு காலத்தில் இவ்வுலகில் சந்தோஷம்,அமைதி,தூய்மை இருந்தது. இப்போது அந்தப் பலம் இல்லை. ஏனெனில் ஐந்து விகாரங்களும் இவ்வுலகில் உள்ளது. ஆகவே இவ்வுலகில் பயத்தின் கடல் உள்ளது. அதாவது அது கர்ம பந்தனத்தின் கடல் என அழை க்கப்படுகிறது . இதனாலேயே மக்கள் சந்தோஷமற்று இருக்கிறார்கள். அவர்கள் கடவுளைக் கூவி

அழைக்கிறார்கள்: கடவுளே எங்களை இக் கடலின் அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள். நிச்சயமாக அங்கே ஒரு பயமற்ற உலகம் உள்ளது. அதாவது அவர்கள் செல்வதற்கு விரும்பும் பயமற்ற உலகம் உள்ளது என்பதையே இது நிருபிக்கிறது. இதனாலேயே இவ்வுலகம் பாவக்கடல் என அழைக்கப்படுகிறது. அவர்கள் அக்கரைக்கு அதாவது புண்ணியாத்மாக்களின் உலகிற்குச் செல்ல விரும்புகிறார்கள். இரு உலகங்கள் உள்ளன. ஒன்று சாரம் நிறைந்த சத்தியயுக உலகம், மற்றையது சுவையற்ற கலியுக உலகம். இரு உலகங்களும் இப்பூமியிலேயே உள்ளன. அச்சா