17.11.2018 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பிரம்மாவின் குழந்தைகளாகிய நீங்கள் சகோதர, சகோதரிகள். உங்கள் மனோபாவம் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
கேள்வி:
எக் குழந்தைகளின் விளக்கம் மிகச்சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்துகின்றது?
பதில்:
வீட்டில் தமது குடும்பங்களுடன் வாழ்ந்து, ஒரு தாமரை மலர் போல் தூய்மையாக இருப்பவர்கள். அத்தகைய அனுபவம் வாய்ந்த குழந்தைகள் இந்த ஞானத்தை ஏனையோருக்கு விளங்கப்படுத்தும்பொழுது அது அவர்களில் மிகச்சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்துகின்றது, ஏனெனில் திருமணம் செய்த பின்னரும் தூய்மையற்ற மனோபாவம் எதனையும் கொண்டிருக்காதிருப்பது மிகவும் உயர்ந்த இலக்காகும். குழந்தைகள் இதனையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பாடல்:
எங்;கள் யாத்திரை மிகவும் தனித்துவமானது.
ஓம்சாந்தி.
தந்தை இஙகமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஏனெனில் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தந்தையைத் தெரியும். குழந்தைகள், குழந்தைகளே. குழந்தைகள் அனைவரும் பிரம்மகுமார்களும் பிரம்மகுமாரிகளும் ஆவர். பிரம்மகுமாரர்களும் பிரம்மகுமாரிகளும் சகோதர, சகோதரிகள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகள். ஆகவே, உண்மையில் ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அனைவரும் (ஆத்மாக்களும்) சகோதரர்கள். இங்கே, நீங்கள் ஒரு பாட்டனாரினதும், தந்தையினதும் குழந்தைகள். நீங்கள் சிவபாபாவின் பேரக் குழந்தைகளும், பிரம்மாவின் குழந்தைகளும் ஆவீர்கள். இவரின் மனைவியும் தான் ஒரு பிரம்மகுமாரி என்றே கூறுவார். ஆகையால் அவரது உறவுமுறையும் அவ்வாறாகுகின்றது. லௌகீக சகோதரனும் சகோதரியும் ஒருவர் மீது ஒருவர் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்க மாட்டார்கள். இக்காலத்தில் அனைவரும் அசுத்தமானவராகி விட்டனர். ஏனெனில் இந்த உலகம் அசுத்தமடைந்துள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் பிரம்மகுமார்களும் பிரம்மகுமாரிகளும் என்பதைப் புரிந்துகொள்;கின்றீர்கள். நீPங்கள் பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். ஆகவே நீங்கள் சகோதர, சகோதரிகள். இருவகையான துறவறம் உள்ளன என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். துறவறம் என்பது தூய்மையாக இருப்பதும், ஐந்து விகாரங்களையும் துறப்பதுமாகும். ஏனையவர்கள் ஹத்தயோகி சந்நியாசிகள் ஆவார்கள். அவர்களின் துறை வேறானது. அவர்கள் இல்லறப் பாதையில் உள்ளவர்களில் இருந்து தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விடுகின்றார்கள். அவர்கள் ஹத்தயோக சந்நியாசிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அதாவது அவர்கள் செயல்களைத் துறப்பவர்கள். நீங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழும்பொழுதே உங்கள் சரீர உணர்வையும், சரீர உறவினர்கள் ஆகியவற்றைத் துறந்து, தந்தையை நினைவுசெய்ய வேண்டும் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தமது வீட்டையும் தொழிலையும் விட்டுச் செல்கின்றார்கள். அவர்கள் தமது தாய்வழி மாமனுடனோ அல்லது தந்தைவழி மாமனுடனோ தொடர்பு கொண்டிருப்பதில்லை. தமக்கென ஒரு விடயமே உள்ளதென்றும், அந்த ஒரு விடயம் மாத்திரமே நினைவுசெய்யப்பட வேண்டுமென்றும், தமது ஒளி, அந்த ஒளியுடன் இரண்டறக் கலக்கும் என்றும், தாம் நிர்வாணா தாமத்திற்குச் திரும்பிச் செல்ல வேண்டும் என்பவற்றை மட்டுமே அவர்கள் நம்புகின்றார்கள். அவர்களின் துறையும் வேறானது. அவர்களின் ஆடையும் வேறானது. பெண்களே நரகத்தின் வாசல் என்றும், பஞ்சையும் நெருப்பையும் சேர்த்து வைக்க முடியாது என்றும், பிரிந்து இருப்பதன் மூலமே தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். நாடகத்திற்கேற்ப அவர்களின் சமயம் வேறுபட்டது. சங்கராச்சாரியார் அந்தச் சமயத்தை ஸ்தாபித்தார். அவர் செயல்களைத் துறப்பதையும், ஹத்தயோகத்தையுமே கற்பித்தார், இராஜயோகத்தை அல்ல. நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். அதுவும் வரிசைக்கிரமமானதே. அனைவரும் 100மூ விவேகமானவர்களாக இருக்க முடியாது. சிலர் 100மூ விவேகமானவர்கள் என்றும், சிலர் 100மூ விவேகமற்றவர்கள் என்றும் கூறப்படுகின்றது. இது நிகழும். நீங்கள் மம்மா, பாபா| என்று அழைப்பதால் நீங்கள் சகோதர, சகோதரிகள் என்பதைப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். எந்த அசுத்தமான மனோபாவத்தையும் கொண்டிருக்கக்கூடாது என்று சட்டம் கூறுகின்றது. ஒரு சகோதரனும் சகோதரியும் என்றுமே திருமணம் செய்ய முடியாது. வீட்டில் ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையில் ஏதாயினும் இருந்து, அவர்களின்; நடத்தை தவறானதாக இருப்பதை அவர்களுடைய தந்தை கவனித்தாராயின் அவர் அதனையிட்டு மிகவும் கவனம் செலுத்துவார். அந்தளவிற்குப் பாதிப்பை விளைவிக்கின்ற அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர் அவர்களை அதிகமாக ஏசுவார். முன்னர் இவ்விடயங்களில் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். இப்பொழுது அனைவரும் 100மூ தமோபிரதான் ஆக உள்ளார்கள். மாயையின் வலிமை மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. பரமாத்மா பரமதந்தையின் குழந்தைகளுடனேயே மாயை சண்டை செய்கின்றாள். தந்தை கூறுகின்றார்: இவர்கள் எனது குழந்தைகள். நான் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். மாயை கூறுகின்றாள்: இல்லை, இவர்கள் என்னுடைய குழந்தைகள்! நான் அவர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளேன். இங்கே, நீங்கள் தர்மராஜாவாகிய தந்தையின் கரங்களில் இருக்கின்றீர்கள். வீட்டில் தமது குடும்பத்துடன் இருந்து கொண்டு தூய்மையாக இருப்பவர்கள், தாம் சேர்ந்து வாழும்பொழுதும் எவ்வாறு தூய்மையாக இருக்கின்றோம் என்பதனை ஏனையோருக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். ஹத்தயோகி சந்நியாசிகளினால் நிறைவேற்ற முடியாத பணியை நீங்கள் செய்வதற்குத் தந்தை உங்களைத் தூண்டுகிறார். சந்நியாசிகளினால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. ‘இராஜ யோகம்| என்ற தலைப்பில் விவேகானந்தர் ஒரு புத்தகத்தை எழுதினார். எவ்வாறாயினும், சந்நியாசிகள் தனிவழிப் பாதையைச் சேர்ந்தவர்கள். அவர்களால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. வீட்டில் வாழும்பொழுதும் தூய்மையாக இருக்கின்ற நீங்கள் பிறருக்கு ஞானத்தை விளங்கப்படுத்தும்பொழுது உங்கள் அம்பு இலக்கை மிக நன்றாகத் தாக்கும். மரங்களைப் பற்றிய ஒரு மாநாடு டெல்கியில் இடம்பெற இருப்பதாக பாபா ஒரு செய்தித்தாளில் வாசித்தார். அந்தக் காட்டு மரங்களையிட்டு அக்கறை கொண்டிருக்கும் வேளையில், வம்சாவளி விருட்சம், அதாவது, மனித விருட்சம் எவ்வாறு தோன்றியது என்றோ அல்லது அது எவ்வாறு பராமரிக்கப்படுகின்றது என்பதைப் பற்றியோ எப்போதாவது அவர்கள் அக்கறை கொண்டார்களா என்று நீங்கள் அவர்களிடம் வினவுங்கள். இன்னும், குழந்தைகளாகிய உங்கள் புத்தி அந்தளவிற்கு விரிவடையவில்லை. நீங்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு நோய் இருக்கும். ஒரு லௌகீகக் குடும்பத்திலும், ஒரு சகோதரனும் சகோதரியும் ஒருவர் மீது ஒருவர் அசுத்தமான எண்ணங்களை என்றுமே கொண்டிருக்க மாட்டார்கள். இங்கே, நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். நீங்கள் பிரம்மகுமாரிகளும் பிரம்மகுமார்களுமான சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். அசுத்தமான எண்ணங்கள் தோன்றுமாயின் அவர்களைப் பற்றி என்ன கூறுவது? அவர்கள் நரகத்தில் வாழ்பவர்களிலும் பார்க்க ஆயிரம் மடங்கு அசுத்தமானவர்கள் என்றே கருதப்பட வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்குப் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. வீட்டில் குடும்பத்துடன் வாழுகின்றவர்கள் தூய்மையாக இருப்பதற்கு அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். உலகிலுள்ள எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. தந்தை உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளார். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக ஒரு சத்தியத்தைச் செய்து, ராக்கி ஒன்றைக் கட்ட வேண்டும். இதில் பெரும் முயற்சி உள்ளது. திருமணம் செய்த பின்னரும் தூய்மையாக இருத்தல் என்பது ஒரு செங்குத்தான இலக்காகும். புத்தி சற்றேனும் ஈர்க்கப்படக்கூடாது. மக்கள் திருமணம் செய்யும்பொழுது, தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். தந்தை வந்து, உங்களைத் துகில் உரிவதில் இருந்து காப்பாற்றுகிறார். திரௌபதியின் கதையும் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. அவ்விடயங்களிலும் நிச்சயமாக சில உட்கருத்துக்கள் இருக்க வேண்டும். அந்தச் சமயநூல்கள் போன்றனவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. நாடகத்தில் கடந்து சென்றவை யாவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை, அவை நிச்சயமாக மீண்டும் நிகழ வேண்டும். ஞான மார்க்கமும் பக்தி மார்க்கமும் நிச்சயிக்கப்பட்டுள்ளன. உங்கள் புத்தி இப்பொழுது மிகவும் பரந்ததாகி உள்ளது. எல்லையற்ற தந்தையின் புத்தி எவ்வாறோ, அவ்வாறே ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்ற விசேடமான குழந்தைகளினது புத்தியும் இருக்கும். எண்ணற்ற குழந்தைகள் உள்ளனர். இன்னும் எத்தனை பேர் வருவார்கள் என்று யாருக்குத் தெரியும்? அவர்கள் பிராமணர்கள் ஆகும்வரை அவர்களால் தமது ஆஸ்தியைப் பெற முடியாது. நீங்கள் இப்பொழுது பிரம்மாவின் குலத்திற்கு உரியவர். பின்னர் நீங்கள் சூரிய வம்சத்திற்கு உரியவராக, அதாவது விஷ்ணுவின் வம்சத்தினர் ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது சிவனின் குலத்திற்கு உரியவர்கள். சிவன் தாதாவும் (பாட்டனார்), பிரம்மா பாபாவும் ஆவார். மக்கள் அனைவருக்கும் ஒரேயொரு மனித குலத் தந்தையே உள்ளார். மனித உலக விருட்சத்திற்கான விதை இருக்க வேண்டும் என்பததையும், புதிய மனிதன் என்று அவர்கள் அழைக்கின்ற மனிதரில் ஒருவர் முதலில் வரவேண்டும் என்பதையும் மக்கள் புரிந்து;டிருக்கின்றனர். யார் அந்தப் புதிய மனிதராக இருப்பார்? அவர் பிரம்மாவாகவே இருப்பார். பிரம்மாவும் சரஸ்வதியுமே ‘புதியவர்கள்| என்று கருதப்படுகிறார்கள். இதனைப் புரிந்துகொள்வதற்கு பரந்த புத்தி தேவையாகும். ஓ தந்தையான கடவுளே! ஓ பரம தந்தையான கடவுளே! என்று ஆத்மாக்கள் கூறுகின்றார்கள். ஆத்மாக்களே இதனைக் கூறுகிறார்கள். ஆகையால் அவரே அதிமேலான, அனைவரையும் படைப்பவராக இருக்க வேண்டும். இங்கே, கீழே இருக்கின்ற மனித உலகில், அதிமேலானவர் என்று எவர் கருதப்படுவார்? மனித குலத்தின் தந்தையேயாவார். இந்த மனித விருட்சத்தில் பிரம்மாவே பிரதானமானவர் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும். சிவனே ஆத்மாக்களின் தந்தையாவார். பிரம்மாவை மனிதர்களைப் படைப்பவர் என்று அழைக்கலாம். எவ்வாறாயினும், எவரின் வழிகாட்டலில் அவர் இதனை நிறைவேற்றுவார்? தந்தை கூறுகின்றார்: நான் பிரம்மாவைத் தத்தெடுக்கின்றேன். அவ்வாறாயின் புதிய பிரம்மா எங்கிருந்து வருகின்றார்? இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் நான் இவரின் சரீரத்திற்குள் பிரவேசித்து, இவருக்கு பிரஜாபிதா பிரம்மா எனப் பெயரிடுகின்றேன். நீங்கள் நிச்சயமாக பிரம்மாவின் குழந்தைகள் என்பதை இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்கள். நாங்கள் சிவபாபாவிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக் கொள்கின்றோம். நாங்கள் தந்தையிடமிருந்து தூய்மை, சந்தோஷம், அமைதி, ஆரோக்கியம் செல்வம் ஆகியவற்றைப் பெறுவதற்காகவே வந்துள்ளோம். நாங்கள் பாரதத்தில் சதா சந்தோஷமாக இருந்தோம். இப்பொழுது நாங்கள் அவ்வாறில்லை. தந்தை மீண்டும் ஒருமுறை எங்களுக்கு அந்த ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அந்தத் தூய்மையே முதன்மையானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ராக்கி யாருக்கு கட்டப்படுகின்றது? தூய்மையற்றவர்களாக ஆகியவர்கள் தாங்கள் நிச்சயமாகத் தூய்மையானவர்கள் ஆகுவோம் என்;று ஒரு சத்தியத்தைச் செய்கிறார்கள். இந்த இலக்கு மிகவும் உயர்ந்தது என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். நாங்கள் எவ்வாறு சகோதர, சகோதரிகள் என்ற உணர்வில் இருக்கின்றோம் என்பதைத் திருமணம் செய்த தம்பதியினருக்கு முதலில் விளங்கப்படுத்த வேண்டும். ஆம், இந்த ஸ்திதியை உறுதியாக்கிக் கொள்வதற்குச் சிறிது காலம் எடுக்கும். மாயையின் பல புயல்கள் வருகின்றன என்று குழந்தைகள் எழுதுகின்றார்கள். ஆகையால் வீட்டில் வாழ்ந்து கொண்டு தூய்மையாக இருக்கின்ற குழந்தைகள் சொற்பொழிவாற்றினால் நல்லது, ஏனெனில், இது ஒரு புதிய விடயமாகும். இது சுயாட்சிக்கான யோகமாகும். இதில் துறவறமும் உள்ளது. வீட்டில் குடும்பத்துடன் வாழும்பொழுது, நீங்கள் ஜீவன்முக்தியைப் பெற விரும்புகின்றீர்கள். அதாவது, முக்தியடைய விரும்பிகின்றீர்கள். இங்கே பந்தன வாழ்வே உள்ளது. உங்களுடைய அந்தஸ்து சுயாட்சியாகும். சுயம் ஆட்சி செய்ய விரும்புகின்றது. இப்பொழுது அது ஆட்சிசெய்வதில்லை. ஆத்மா கூறுகின்றார்: நான் அரசராக இருந்தேன். நான் அரசியாக இருந்தேன், இப்பொழுது நான் விகாரமானவராகவும் ஏழ்மையடைந்தவராகவும் ஆகிவிட்டேன். என்னிடம் தெய்வீகக் குணங்கள் இல்லை. இவ்வாறு ஆத்மாவே கூறுகின்றார். ஆகையால் நீங்கள் உங்களை ஓர் ஆத்மா, அதாவது, பரமாத்மா பரமதந்தையின் குழந்தை எனக் கருத வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள், ஆகையால் எங்களுக்கு இடையில் பெருமளவு அன்பு இருக்கின்றது. நாங்கள் இந்த முழு உலகையும் அழகாக்குகின்றோம் இராம இராச்சியத்தில், சிங்கமும், ஆடும் ஒன்றாக ஒரு தடாகத்தில் நீர் அருந்துவதுண்டு. எவரும் என்றுமே சண்டையிடுவதில்லை. அவ்வாறாயின், குழந்தைகளாகிய உங்கள் மத்தியில் எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்? இந்த ஸ்திதியைப் படிப்படியாக அடையலாம். பலரும் அதிகளவு சண்டையிடுவார்கள். பாரளுமன்றத்தில் சண்டையிடுவார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கதிரைகளையும் வீசி எறிவார்கள்! அது ஓர் அசுரர்களின் ஒன்றுகூடலாகும். இது உங்கள் இறை ஒன்றுகூடலாகும். ஆகவே நீங்கள் எவ்வளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும்? எவ்வாறாயினும், இது ஒரு பாடசாலையாகும். ஒரு பாடசாலையில் சிலர் தமது கல்வியில் முன்னேறிச் செல்வார்கள். வேறு சிலர் பின்தங்கி விழுவார்கள். இப் பாடசாலை அற்புதமானது. அங்கே, ஆசிரியர்களும் பாடசாலைகளும் வெவ்வேறானவை ஆகும். இங்கோ, ஒரு பாடசாலையும் ஒரேயொரு ஆசிரியருமே உள்ளார். ஆத்மா ஒரு சரீரத்தை ஏற்றுக் கற்பிக்கின்றார். அவர் ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் சரீரங்கள் மூலம் கற்கின்றோம். இந்தளவிற்கு நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். நாங்கள் ஆத்மாக்கள், அவர் பரமாத்மா. இது உங்கள் புத்தியில் நாள் முழுவதும் சுழன்று கொண்டிருக்க வேண்டும். சரீர உணர்வினாலேயே நீங்கள் தவறுகள் செய்கின்றீர்கள். தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! சரீர உணர்வுடையவர் ஆகுவதன் மூலம், நீங்கள் மாயையினால் தாக்கப்படுகின்றீர்கள். இந்த ஏற்றம் மிகவும் செங்குத்தானதாகும். நீங்கள் அந்தளவிற்கு ஞானக் கடலைக் கடைய வேண்டும்! இரவு நேரத்திலேயே உங்களால் ஞானக்கடலைக் கடைய முடியும். இவ்வாறாக ஞானக் கடலைக் கடைவதன் மூலம், நீங்கள் படிப்படியாக தந்தையைப் போன்று ஆகுவீர்கள். இந்த ஞானம் முழுவதையும் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் கொண்டிருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் வாழ்ந்து கொண்டே, இராஜயோகத்தை கற்றிடுங்கள். இந்த வேலை முழுவதும் புத்தியினுடையதாகும். புத்தியே இவ்விடயங்களைக் கிரகிக்கின்றது. வீட்டில் குடும்பத்துடன் வாம்பவர்களுக்கு அதிகளவு முயற்சி தேவை. இக்காலம் தமோபிரதானாக உள்ளதால், மக்கள் மிகவும் அசுத்தமடைந்துள்ளனர். மாயை அனைவரையும் அழித்து விட்டாள். அவள் அனைவரையும் மென்று, விழுங்கி விட்டாள். தந்தை வந்து முதலையான மாயையின் வயிற்றில் இருந்து உங்களை அகற்றியுள்ளார். அங்கிருந்து உங்களை அகற்றுவது கடினமாகும். வீட்டில் தமது குடும்பங்களுடன் வாழ்கின்றவர்கள் தமது பிரகாசத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: எங்களுடையது இராஜயோகமாகும். நாங்கள் ஏன் பிரம்மகுமார்களும் பிரம்மகுமாரிகளும் என அழைக்கப்படுகின்றோம்? இந்தப் புதிரை நீங்கள் புரிந்துகொண்டு அவர்களிடம் கூற வேண்டும்: உண்மையில், நீங்களும் பிரம்மகுமார்களும், பிரம்மகுமாரிகளுமே ஆவீர்கள். பிரஜாபிதா பிரம்மா புதிய உலகைப் படைக்கின்றார். புதிய மனிதனின் மூலம் புதிய உலகம் படைக்கப்படுகின்றது. உண்மையில், சத்தியயுகத்தின் முதற் குழந்தையே புதியவர் என அழைக்கப்பட வேண்டும். இது மிகவும் சந்தோஷத்திற்குரிய விடயமாகும். அங்கே சந்தோஷப் பேரிகை வாசிக்கப்படும். அங்கே ஆத்மா சரீரம் இரண்டுமே தூய்மையாக இருக்கும். பாபா இப்பொழுது இவரின் சரீரத்தில் பிரவேசித்துள்ளார். இப் புதிய மனிதர் தூய்மையானவர் அல்லர். அவர் இந்த முதியவரினுள் அமர்ந்து, அவரைப் புதியவர் ஆக்குகின்றார். அவர் பழையனவற்றைப் புதியதாக்குகின்றார். இப்பொழுது, புதிய மனிதன் என யாரை அழைக்க முடியும்? பிரம்மாவை இவ்வாறு அழைக்க முடியுமா? புத்தி இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. யார் ஆதாமும், ஏவாளும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். புதிய மனிதன் ஸ்ரீகிருஷ்ணர் ஆவார். பின்னர் அவர் பழைய மனிதனான பிரம்மாவாகுகின்றார். இந்தப் பழைய மனிதனாகிய பிரம்மாவை, நான் அந்தப் புதிய மனிதனாக ஆக்குகின்றேன். புதிய உலகத்திற்கு புதிய மனிதன் தேவையாகும். அவர் எங்கிருந்து வருவார்? புதிய மனிதன் சத்தியயுகத்தின் இளவரசர். அவர் அழகியவர் என அழைக்கப்படுகின்றார். இவர் அவலட்சணமானவர். அவர் ஒரு புதிய மனிதன் அல்லர். அதே ஸ்ரீகிருஷ்ணரே 84 பிறவிகளை எடுத்து, இப்பொழுது தனது இறுதிப் பிறவியில் பாபாவினால் தத்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பழைய விடயங்களைப் புதியது ஆக்குகின்றார். இவை புரிந்து கொள்வதற்கு மிகவும் நல்ல விடயங்களாகும். புதியது பழையது ஆகுகின்றது. பழையது புதியது ஆகுகின்றது. அவலட்சணமானவர் அழகியவராகவும், அழகியவர் அவலட்சணமாகவும் ஆகுகின்றார். அனைவரிலும் பழையவர், இப்பொழுது அனைவரிலும் புதியவர் ஆகுகின்றார். பாபா உங்களை இளமையாக்கிப் புதியவர் ஆக்குகின்றார் என்பதனை நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். இவ் விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். உங்கள் சொந்த ஸ்திதியையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனினும் குமாரர்களும் குமாரிகளும் தூய்மையானவர்கள் ஆவார்கள். எவ்வாறாயினும், வீட்டில், தமது குடும்பத்துடன் வாழ்கின்றவர்கள் ஒரு தாமரை போன்று வாழ்வதுடன், சுயதரிசனச் சக்கரத்தை சுழற்றுபவர்களாகவும் ஆகவேண்டும். விஷ்ணுவின் குலம் திரிகாலதரிசிகள் ஆகுவதற்கான ஞானத்தைக் கொண்டிருப்பதில்லை. பழைய மனிதனே திரிகாலதரிசியாவார். இவ்விடயங்கள் மிகவும் தந்திரமான விடயங்கள். பழைய மனிதனே ஞானத்தைப் பெற்ற புதிய மனிதனாக ஆகுகின்றார். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: அது ஹத்த யோகம். இது இராஜயோகமாகும். இராஜயோகம் என்பது சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவது என்பதாகும். சந்தோஷம் என்பது காகத்தின் எச்சத்தைப் போன்றது எனச் சந்நியாசிகள் கூறுகின்றார்கள். அதனை அவர்கள் விரும்புவதில்லை. தந்தை கூறுகின்றார்: பெண்கள் சுவர்க்கத்தின் வாசல்கள். நான் ஞான கலசத்தைத் தாய்மார்களாகிய உங்கள் மீது வைக்கின்றேன். எனவே, எல்லாவற்றிற்கும் முதலில் நீங்கள் ‘ஓம் நமசிவாய| என்பதையும், ‘கடவுள் சிவன் பேசுகின்றார்| என்பதையும் விளங்கப்படுத்துங்கள். இந்த ஒலி உரத்து ஒலிக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். இந்த நம்பிக்கையுடன், இந்தத் தூய்மையின் சத்தியத்தைக் கடைப்பிடித்துக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடன் ஒன்றாகச் சேர்ந்து வாழுங்கள். அனைவரையும் அழகானவர்கள் ஆக்குங்கள்.
2. உங்கள் புத்தியைப் பரந்ததாக்குவதனால், இந்த ஞானத்தின் ஆழ்ந்த உட்கருத்துக்களைப் புரிந்துகொள்ளுங்கள். ஞானக்கடலைக் கடையுங்கள். மாயையின் தாக்குதல்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆத்ம உணர்வில் இருப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஞானம் நிறைந்தவராகி சந்தோஷம் எனும் வில்லைகளையும் ஊசியையும் உங்களுக்குக் கொடுப்பதன் மூலம் உங்களைக் குணப்படுத்துவீர்களாக.
புpராமணக் குழந்தைகள் தங்கள் சொந்த நோய்களுக்குத் தாங்களே மருந்து கொடுப்பார்கள். சந்தோஷம் எனும் போஷாக்கு விநாடிகளில் உங்களைக் குணமாக்குகின்ற, ஒரு மருந்தாகும். மருத்துவர்கள் சக்திவாய்ந்த ஊசியைக் கொடுக்கும்பொழுது, நீங்கள் உடனேயே மாற்றமடைவீர்கள். அதேபோன்று பிராமணர்கள் சந்தோஷம் எனும் வில்லைகளை அல்லது ஊசியைத் தங்களுக்குக் கொடுக்கும்பொழுது, அவர்கள் குணமடைவார்கள். ஞானத்தின் ஒளி மற்றும் ஞானத்தின் சக்தி உங்கள் சரீரத்தைத் தொழிற்படச் செயவதற்குப் பெருமளவு உதவுகின்றது. இது நோய் வரும்பொழுது, புத்திக்கு ஓய்வு கொடுப்பதற்கான ஒரு வழி ஆகும்.
சுலோகம்:
மன ஒருமைப்பாட்டின் மூலம் அனைத்திலும் வெற்றி அடைபவர்களே, வெற்றி சொரூபங்கள் ஆகுவார்கள்.