14/10/18      AV Tamil Lanka Murli    18.02.84   Om Shanti      Madhuban


                   பிராமண வாழ்க்கையே விலைமதிப்பற்ற வாழ்க்கை ஆகும்.

இன்று, அன்புக் கடலானவர் எப்போதும் அன்பிலே திளைத்திருக்கும் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். நீங்கள் தந்தையை அன்புடன் நினைப்பதைப் போன்றே, அன்பான குழந்தைகளுக்கு பலமில்லியன் மடங்கு பிரதிபலனைக் கொடுப்பதற்காகத் தந்தையும் சந்திப்பைக் கொண்டாடுவதற்காக பௌதீக உலகிற்கு வந்துள்ளார். குழந்தைகளான உங்களைத் தந்தை தன்னைப் போன்று சரீரமற்றவர்களாகவும் அசரீரியானவர்களாகவும் ஆக்குகிறார். குழந்தைகளும் தமது அன்பினால், அசரீரியான மற்றும் சூட்சுமமான தந்தையர்களைத் தம்மை ஒத்த சரீரதாரிகளாக ஆக்குகிறார்கள். இது குழந்தைகளின் அன்பின் அற்புதம் ஆகும். குழந்தைகளின் அன்பின் அற்புதத்தைக் கண்டு பாப்தாதா களிப்படைகிறார். குந்தைகள் சதா தந்தையின் சகவாசத்தால் நிறமூட்டப்படுவதன் மூலம் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுகிறார்கள் எனக் குழந்தைகளின் நற்குணங்களின் பாடல்களைத் தந்தை பாடுகிறார். தந்தையைப் பின்பற்றும் இத்தகைய குழந்தைகளை கீழ்ப்படிவான, விசுவாசமான, நம்பத்தகுந்த, உண்மையான விலைமதிப்பற்ற இரத்தினங்கள் என பாப்தாதா அழைக்கிறார். குழந்தைகளான உங்களுடன் ஒப்பிடுகையில், பௌதீக வைரங்களும் இரத்தினங்களும் தூசு போன்றவை. நீங்கள் விலைமதிப்பற்றவர்கள். நீங்கள் உங்களை பாப்தாதாவின் கழுத்து மாலைகளாக இருக்கும் வெற்றிநிறைந்த விலைமதிப்பற்ற இரத்தினங்களாகக் கருதுகிறீர்களா? இத்தகைய சுயமரியாதை உங்களுக்கு இருக்கிறதா?

இரட்டை வெளிநாட்டுக்குழந்தைகள் தாம் மிகத் தொலைவில் இருந்தாலும், பாப்தாதா தங்களை தொலைதேசத்தில் இருந்து தேர்ந்தெடுத்துத் தங்களை அவருக்குச் சொந்தமானவர்கள் ஆக்கியுள்ளார் என்ற போதையையும் சந்தோஷத்தையும் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகமே தந்தையைத் தேடுகிறது. ஆனால் தந்தையோ உங்களைக் கண்டெடுத்துள்ளார். நீங்கள் உங்களை இவ்வாறானவர்களாகக் கருதுகிறீர்களா? இங்கு வருமாறு இந்த உலகமே அவரை அழைக்கிறது. ஆனால் நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக என்ன பாடலைப் பாடுகிறீர்கள்? ‘நான் உங்களுடன் அமர்ந்திருக்கிறேன், நான் உங்களுடன் உண்கிறேன், நான் சதா உங்களுடைய சகவாசத்தில் இருக்கிறேன்’. ஒருவரை அழைப்பதற்கும், ஒருவரின் சகவாசத்தில் சதா இருப்பதற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. இது இரவிற்கும் பகலிற்குமான வேறுபாடு, அப்படியல்லவா? ஒரு விநாடியேனும் அழியாத பேற்றுக்கான தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களுக்கும், பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களான உங்களுக்கும் இடையே இத்தகையதொரு வேறுபாடு உள்ளது. அந்த ஆத்மாக்கள் சதா பாடல்களைப் பாடுகிறார்கள். ஆனால் நீங்களோ சதா தந்தையின் மடியில் அமர்ந்திருப்பவர்கள். அவர்கள் அழைப்பவர்கள். ஆனால் நீங்களோ ஒவ்வோர் அடியிலும் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் ஒரு கணப் பார்வைக்காக (தரிசனம்) ஏங்குகிறார்கள். நீங்களோ காட்சிகளை அருளும் ரூபங்களாகத் தந்தையால் ஆக்கப்பட்டவர்கள். அவர்கள் மேலும் சிறிதளவு துன்பத்தையும் வலியையும் அனுபவம் செய்தார்கள் எனில், உங்கள் அனைவரிடமிருந்தும் ஒரு விநாடி தரிசனத்தை அல்லது ஒரு விநாடிக்கான திருஷ்டியைப் பெறுவதற்கான ஏக்கத்துடன் உங்களின் முன்னால் எவ்வாறு வருவார்கள் என்று பாருங்கள்.

இப்போது நீங்கள் அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து அவர்களை அழைக்கிறீர்கள். காலம் வரும்போது, ஒரு விநாடியேனும் உங்களைச் சந்திப்பதற்காக அவர்கள் அதிகளவு முயற்சி செய்வார்கள்: ‘தயவுசெய்து உங்களைச் சந்திக்க அனுமதியுங்கள்!’ உங்கள் அனைவரிடமும் காட்சிகளை அருளும் ரூபம் நடைமுறையில் காணப்படும். குழந்தைகளான உங்களுக்கிடையேயும், இத்தகைய வேளையில் உங்களின் மேன்மையான வாழ்க்கையினதும் மேன்மையான பேறுகளினதும் முக்கியத்துவத்தை நீங்கள் அதிகளவில் புரிந்து கொள்வீர்கள். இப்போது, கவனக்குறைவினாலும் சாதாரணமானவராக இருப்பதனாலும், உங்களின் மகத்துவத்தையும் சிறப்பியல்பையும் நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். எவ்வாறாயினும், பேறுகளற்ற ஆத்மாக்கள் பேறுகளுக்கான தாகத்துடன் உங்களின் முன்னால் வரும்போது, நீங்கள் யார் என்பதையும் அவர்கள் யார் என்பதையும் நீங்கள் அதிகளவில் அனுபவம் செய்வீர்கள். தற்சமயம், நீங்கள் பாப்தாதாவிடமிருந்து பல பொக்கிஷங்களை மிகவும் இலகுவாகப் பெறுவதனால், சிலவேளைகளில் நீங்கள் உங்களின் மதிப்பையும் பொக்கிஷங்களையும் சாதாரணமானது என்று கருதுகிறீர்கள். எவ்வாறாயினும், பிராமண வாழ்க்கையின் ஒவ்வொரு மேன்மையான வாசகமும் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு மூச்சும் மிக மேன்மையானவை. நீங்கள் மேற்கொண்டு முன்னேறுகையில் இதை அதிகளவில் அனுபவம் செய்வீர்கள். பிராமண வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் ஒரு பிறவிக்கான வெகுமதியை மட்டுமன்றி, பிறவி பிறவிகளுக்கான வெகுமதியை உருவாக்கும். ஒரு விநாடி போய்விட்டதென்றால், பல பிறவிகளுக்கான வெகுமதியும் போய்விட்டது என்றே அர்த்தம். நீங்கள் இத்தகைய விலைமதிப்பற்ற வாழ்க்கை வாழும் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள் மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருக்கும் விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள் யார் என்பது உங்களுக்குப் புரிகிறதா? பாபா இத்தகைய மேன்மையான குழந்தைகளைச் சந்திப்பதற்காகவே வந்துள்ளார். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளான நீங்கள் சதா இதை நினைவு செய்கிறீர்கள், அல்லவா? அல்லது, நீங்கள் சிலவேளைகளில் அதை மறந்துவிடுகிறீர்களா? சிலவேளைகளில் அதை நினைக்கிறீர்களா? நீங்கள் நினைவின் சொரூபங்கள் ஆகிவிட்டீர்கள், அல்லவா? சொரூபமானவர்களால் ஒருபோதும் மறக்க முடியாது. நினைக்க வேண்டும் என்று கூறுபவர்கள் ஆகாதீர்கள். ஆனால் நினைவின் சொரூபங்கள் ஆகுங்கள். அச்சா.

சதா சந்திப்பைக் கொண்டாடுபவர்களுக்கும், சதா தந்தையின் சகவாசத்தால் நிறமூட்டப்பட்டிருப்பவர்களுக்கும், சுயத்தினதும் காலத்தினதும் சகல பேறுகளினதும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கும், ஒவ்வோர் அடியிலும் சதா தந்தையைப் பின்பற்றுபவர்களுக்கும், இத்தகைய நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் கீழ்ப்படிவான குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

போலந்தில் இருந்தும் ஏனைய நாடுகளில் இருந்தும் வந்திருக்கும் புதிய குழந்தைகளை பாப்தாதா சந்திக்கிறார்:

நீங்கள் அனைவரும் உங்களைப் பாக்கியசாலிகளாகக் கருதுகிறீர்களா? உங்களிடம் என்ன பாக்கியம் உள்ளது? இந்த மேன்மையான இடத்திற்கு வருவதே அனைத்திலும் மகத்தான பாக்கியம் ஆகும். இந்த இடமே, மகத்தான யாத்திரைஸ்தலம் ஆகும். இங்கு வந்திருப்பதே பாக்கியம் ஆகும். எனவே, இப்போது மேலும் அதிகமாக எதை நீங்கள் செய்வீர்கள்? நினைவில் இருங்கள். சதா நினைவிற்கான பயிற்சியைத் தொடர்ந்து அதிகரியுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவற்றைக் கற்கிறீர்களோ, தொடர்ந்து அதை அதிகரியுங்கள். நீங்கள் சதா ஓர் உறவுமுறையைப் பேணினால், அந்த உறவுமுறையால் தொடர்ந்து அதிகளவில் பெறுவீர்கள். ஏன்? இன்றைய உலகில், அனைவருக்கும் சந்தோஷமும் அமைதியுமே தேவைப்படுகிறது. எனவே, இந்த இராஜ யோகப் பயிற்சியினூடாக, எல்லா வேளைக்கும் இவை இரண்டையும் பெற முடியும். உங்களுக்கு இந்தப் பேறு வேண்டும் என்றால், இதுவே இலகுவான வழிமுறை ஆகும். இதைக் கைவிடாதீர்கள். இதை உங்களுடன் வைத்திருங்கள். நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இது உங்களால் மற்றவர்களுக்கு உண்மையான சந்தோஷத்தை அளிக்கும் வகையில் நீங்கள் சந்தோஷ சுரங்கத்தைப் பெற்றதைப் போன்று இருக்கும். இதை மற்றவர்களுக்கும் கூறுங்கள். இந்தப் பாதையை மற்றவர்களுக்கும் காட்டுங்கள். உலகில் பல ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த ஆத்மாக்கள் அனைவரிலும் வெகு சில ஆத்மாக்களான நீங்களே இங்கு வந்துள்ளீர்கள். இதுவும் மகத்தான பாக்கியத்தின் அடையாளம் ஆகும். நீங்கள் சாந்தி குண்டத்தை (சக்தி இல்லம்) வந்தடைந்துள்ளீர்கள். அனைவருக்கும் அமைதி அத்தியாவசியமானதாகும். தாங்களும் அமைதிநிறைந்தவர்களாக இருந்து, தொடர்ந்து அனைவருக்கும் அமைதியை வழங்குவதே மனிதர்களின் சிறப்பியல்பாகும். அமைதி இல்லாவிட்டால், மனிதராக வாழ்வதில் என்ன பயன்? உங்களிடம் ஆன்மீக, அழியாத அமைதி உள்ளது. உங்களால் உங்களுக்கும் ஏனைய பலருக்கும் உண்மையான அமைதியை அடைவதற்கான வழிமுறையைக் காட்ட முடியும். நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள். அமைதியற்ற ஆத்மாவிற்கு அமைதியை வழங்குவதே மகத்தான புண்ணியம் ஆகும். அனைத்திற்கும் முதலில், நீங்கள் முதலில் நிறைந்தவர்கள் ஆகுங்கள். அதன்பின்னர், உங்களால் மற்றவர்களுக்குப் புண்ணியாத்மாக்கள் ஆகமுடியும். இதைப் போன்ற புண்ணியம் வேறு எதுவும் இல்லை. சந்தோஷமற்றிருக்கும் ஆத்மாக்களுக்கு உங்களால் அமைதியினதும் சந்தோஷத்தினதும் பிரகாசத்தைக் காட்ட முடியும். எங்கு ஆழ்ந்த அன்பு உள்ளதோ, அங்கு இதயத்தின் எண்ணம் நிறைவேறும். நீங்கள் தந்தையிடமிருந்து இப்போது பெற்ற செய்தியைத் தொடர்ந்தும் வழங்குகின்ற தூதுவர்களாக இருங்கள்.

பாப்தாதா சேவாதாரிகளைச் சந்திக்கிறார்:

சேவைக்கான அதிர்ஷ்டலாபச் சீட்டு உங்களை எல்லா வேளைக்கும் நிறைந்தவர்கள் ஆக்குகிறது. சேவை செய்வதன் மூலம், நீங்கள் எல்லா வேளைக்கும் பொக்கிஷங்களால் நிரம்பியவர்கள் ஆகுகிறீர்கள்;. நீங்கள் அனைவரும் முதலாம் இலக்கச் சேவை செய்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் முதல் இலக்கத்தைக் கோருபவர்கள், அல்லவா? திருப்தியாக இருப்பதுடன், அனைவரையும் திருப்திப்படுத்துவதே முதல் பரிசு ஆகும். எனவே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் சேவை செய்த நாட்கள் அனைத்திலும், எல்லா வேளையும் நீங்களும் திருப்தியாக இருந்து, மற்றவர்களையும் திருப்திப்படுத்தினீர்களா? அல்லது, உங்களில் சிலர் குழப்பத்திற்கு உள்ளாகினீர்களா? நீங்களும் திருப்தியாக இருந்து, மற்றவர்களையும் திருப்தி செய்திருந்தால், நீங்கள் முதல் இலக்கத்தினர் ஆவீர்கள். ஒவ்வொரு பணியிலும் வெற்றியாளர் ஆகுவதெனில், முதல் இலக்கத்தினர் ஆகுதல் என்று அர்த்தம். இதுவே சித்தி அடைதல் ஆகும். உங்களைக் குழப்பவும் அனுமதிக்காதீர்கள். மற்றவர்களையும் குழப்பாதீர்கள். இதுவே வெற்றி ஆகும். ஆகவே, நீங்கள் எல்லா வேளையும் வெற்றியாளர்களான இரத்தினங்கள் ஆவீர்கள். வெற்றி என்பது சங்கமயுகத்தின் பிறப்புரிமை. ஏனெனில் நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆவீர்கள்.

உண்மையான சேவையாளர் ஆத்மாக்கள் சதா ஆன்மீகப் பார்வையையும் ஆன்மீக மனோபாவத்தையும் கொண்டிருப்பார்கள். அத்துடன் ஆன்மீக ரோஜாக்களாக, ஆத்மாக்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்துவார்கள். எனவே, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் சேவை செய்திருந்தாலும், ஒரு ஆன்மீக ரோஜாவாக நீங்கள் சேவை செய்தீர்களா? இடையில் ஏதாவது முட்கள் இருக்கவில்லை, அல்லவா? நீங்கள் எப்போதும் ஆன்மீக விழிப்புணர்வைப் பேணினீர்களா? அதாவது, நீங்கள் எப்போதும் ஆன்மீக ரோஜா என்ற ஸ்திதியைப் பேணினீர்களா? நீங்கள் இதை இங்கே பயிற்சி செய்ததைப் போன்று, உங்களுடைய சொந்த இடங்களிலும் இத்தகைய மேன்மையான ஸ்திதியைப் பேணுங்கள். என்ன நிகழ்ந்தாலும் அல்லது சூழல் எவ்வாறு இருந்தாலும், கீழே வராதீர்கள். ரோஜாக்கள் முட்களுக்கு இடையே வசிக்கும். எனினும், சதா நறுமணத்தைக் கொடுக்கும். முட்களுக்கு இடையே வசிப்பதனால் அவை முட்களாக மாறுவதில்லை. அதேபோன்று, ஆன்மீக ரோஜாக்களும் எப்போதும் சூழலின் ஆதிக்கத்திற்கு அப்பால் இருப்பவர்கள். அத்துடன் அன்பாகவும் பற்றற்றவர்களாகவும் இருப்பவர்கள். நீங்கள் திரும்பிச் சென்றபின்னர், ‘நான் என்ன செய்வது? மாயை வந்துவிட்டாள்!’ என்று எழுதாதீர்கள். நீங்கள் மாயையை சதா வென்றவர்களாகவே திரும்பிச் செல்கிறீர்கள், அப்படியல்லவா? மாயை வருவதற்கு அனுமதி அளிக்காதீர்கள். எல்லா வேளையும் கதவை மூடியே வைத்திருங்கள். நினைவும் சேவையுமே இரட்டைப் பூட்டு ஆகும். இரட்டைப் பூட்டு இருக்கும் இடத்தில் மாயையால் வரமுடியாது.

பாப்தாதா தாதிஜியையும் ஏனைய மூத்த சகோதரிகளையும் சந்திக்கிறார்:

தந்தை சதா குழந்தைகளான உங்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிப்பதைப் போன்று, குழந்தைகளான நீங்களும் தந்தையைப் பின்பற்ற வேண்டும். சேவைக்காக இந்தத் தேசத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருக்கும் ஆசிரியர்களான உங்கள் அனைவரையும் குறிப்பாக பாப்தாதா பாராட்டுகிறார். நீங்கள் ஒவ்வொருவரும், தனிப்பட்ட முறையில் உங்களின் பெயரால் அன்பையும் நினைவையும் பெறுவதற்கான உரிமையைக் கொண்டிருப்பதாகக் கருதி, அந்த முறையில் உங்களுக்கே அன்பை வழங்குங்கள். பாபா ஒவ்வொருவரின் புகழையும் தனிப்பட்டமுறையில் பாட ஆரம்பித்தால், எத்தனை பேரின் புகழை அவர் பாடுவார்? நீங்கள் அனைவரும் அதிகளவு முயற்சி செய்துள்ளீர்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நீங்கள் மிக நன்றாக முன்னேறியுள்ளீர்கள். எதிர்காலத்திலும், நீங்கள் தொடர்ந்து உங்களிலும் சேவையிலும் அதிகபட்சம் முன்னேறுவீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? பாப்தாதா உங்களுடன் பேசவில்லை என நினைக்காதீர்கள். அவர் உங்கள் அனைவருடனும் பேசுகிறார். பக்தர்கள் தந்தையின் பெயரை நினைவு செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். தந்தையின் பெயர் தமது உதடுகளில் நிலைத்திருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தந்தையின் உதடுகளில் யாருடைய பெயர் உள்ளது? குழந்தைகளான உங்களின் பெயர்களே தந்தையின் உதடுகளில் உள்ளன. உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

இரட்டை வெளிநாட்டுச் சகோதர, சகோதரிகளால் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு பாப்தாதாவின் பதில்களும்.

கேள்வி:
இந்த வருட சேவைக்கான புதிய திட்டம் என்ன??

பதில்:
காலத்தை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கு, உங்களின் மனோபாவத்தால் சூழலைச் சக்திநிறைந்தது ஆக்குவதே நீங்கள் முதலில் செய்ய வேண்டிய சேவை ஆகும். இதற்கு, உங்களின் மனோபாவத்தில் விசேட கவனம் செலுத்துங்கள். இரண்டாவதாக, மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கு, குறிப்பாக அந்த ஆத்மாக்களை வரவழையுங்கள். இங்கு மட்டுமே அமைதிக்கான வழிமுறையைக் காணமுடியும் என்று உண்மையில் நம்புபவர்களை வெளிப்படுத்துங்கள். அமைதி இருந்தால், அது இந்த வழிமுறையால் மட்டுமே என்ற ஒலி இந்த வருடம் வெளிப்பட வேண்டும். இதுவே ஒரேயொரு வழிமுறை. இந்த வழிமுறையைத் தவிர வேறு எதுவும் இந்த உலகிற்குத் தேவைப்படாது. இந்தச் சூழல் எங்கும் ஒரே வேளையில் உருவாக்கப்பட வேண்டும். பாரதத்தில் அல்லது வெளிநாட்டில், அமைதியின் பிரகாசம் புலப்படும் வகையில் வெளிப்பட வேண்டும். எங்கும் அனைவரும் தொடப்பட்டு, கவரப்பட்டு, சரியான இடம் இருக்குமாக இருந்தால், அது இங்கேயே என்று கூற வேண்டும். அரசாங்கத்திற்கு ஐக்கியநாடுகள் அமையம் உள்ளது. ஏதாவது நிகழும்போது, அனைவரின் கவனமும் அங்கே ஈர்க்கப்படுகிறது. அதேபோன்று, ஏதாவது நிகழும்போதெல்லாம், அது அமைதியின்மையை உருவாக்கும்போதெல்லாம், அனைவரின் கவனமும் அமைதியின் செய்தியைக் கொடுக்கும் ஆத்மாக்களான உங்களின் மீது திரும்ப வேண்டும். அமைதியின்மையில் இருந்து தம்மால் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இடம் இது மட்டுமே என்றும், தம்மால் புகலிடம் தேடக்கூடிய இடம் இது மட்டுமே என்றும் அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். இந்தச் சூழல் இந்த வருடமும் உருவாக்கப்பட வேண்டும். ‘ஞானம் நல்லது, உங்களின் வாழ்க்கை நல்லது, இராஜயோகம் நல்லது’. அனைவரும் இதையே கூறுகிறார்கள். ஆனால் இப்போது, உண்மையான பேற்றை இங்கேயே பெற முடியும், இந்த வழிமுறையால் இந்த இடத்தில் உலகமே நன்மை பெறும் என்ற ஒலி வெளிப்பட வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? இதற்கு, குறிப்பாக அமைதியை விளம்பரப்படுத்துங்கள்: எவருக்காவது அமைதி வேண்டுமாயின், உங்களால் அதற்கான வழிமுறையை இங்கே பெற முடியும். அமைதி வாரத்தைக் கடைப்பிடியுங்கள். அமைதிக்கான ஒன்றுகூடலை நடத்துங்கள். அமைதிக்கான அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதற்காக யோகா முகாம்களை நடத்துங்கள். இந்த முறையில் அமைதியின் அதிர்வலைகளைப் பரப்புங்கள்.

சேவையினூடாக மாணவர்களை உருவாக்குவது மிகவும் நல்லது. அந்த விரிவாக்கம் நிச்சயமாக நிகழ வேண்டும். எவ்வாறாயினும், இப்போது, பல்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்களும், வௌ;வேறு மதங்களைச் சேர்ந்த ஆத்மாக்களும் உங்களிடம் இருப்பதைப் போன்று, ஒவ்வோர் இடத்திலும் வௌ;வேறு தொழில்கள் செய்யும் ஆத்மாக்களும் வரவேண்டும். இங்கு நீங்கள் பட்டறைகள் நடத்தும்போது, சிலவேளைகளில் மருத்துவர்களுடனும் சிலவேளைகளில் சட்டத்தரணிகளுடனும் செய்வதைப் போன்று, நிலையத்திற்குச் செல்லும் ஒருவர் அந்த நிலையத்தில் தனது தொழில் செய்யும் ஒருவரைக் கண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். வௌ;வேறு தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள், தமது தொழிலின் அடிப்படையில் அமைதி என்ற விடயத்தைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் அதை இரசிப்பார்கள். எனவே, இந்த முறையில், ஒவ்வொரு தொழிலையும் சேர்ந்தவர்கள் நிலையத்திற்கு வருகின்ற எவருக்கும் தமது அமைதியின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது அவர்களில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். இது சகல தொழில்களையும் சேர்ந்தவர்களுக்கு இலகுவான வழிமுறை என்பதை அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். உதாரணமாக, இப்போது சில காலமாக, சகல மதங்களையும் சேர்ந்தவர்களுக்கு, இதுவே ஒரேயொரு வழிமுறை என்ற நல்லதொரு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒலி கேட்க வேண்டும். எனவே, இந்த முறையில் ஒலியை இப்போது பரப்புங்கள். இந்த ஒலியானது உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மாணவர்களையுமே சென்றடைந்துள்ளது. ஆனால், இப்போது, இந்த ஒலி சகல திசைகளிலும் பரவச் செய்வதில் சிறிது அதிக கவனம் செலுத்துங்கள். இதுவரை வெகுசில பிராமணர்களே உருவாக்கப்பட்டுள்ளார்கள். வரிசைக்கிரமமான பிராமணர்கள் ஆகுவதன் வேகத்தை விரைவானது என்று சொல்ல முடியாது. இப்போது குறைந்தபட்சம் 900000 பேர் தேவை. சத்தியயுகத்தின் ஆரம்பத்தில், குறைந்தபட்சம் 900000 பேரை நீங்கள் ஆளுவீர்கள், அப்படியல்லவா? அந்த எண்ணிக்கையில் பிரஜைகளும் இருப்பார்கள். ஆனால், அவர்கள் இப்போது உங்களுடன் நெருங்கிய தொடர்பில் வந்தால் மட்டுமே, அவர்களால் பிரஜைகள் ஆகமுடியும். எனவே, இந்த எண்ணிக்கையை மனதில் கொண்டால், வேகம் எத்தனை விரைவானதாக இருக்க வேண்டும்? இன்னமும், எண்ணிக்கை மிகவும் சிறிதாகவே உள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களின் முழு எண்ணிக்கை எத்தனை? குறைந்தபட்சம், வெளிநாடுகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை, 200000 இலிருந்து 300000 பேர்வரை இருக்க வேண்டும். நீங்கள் மிக நல்ல முயற்சி செய்கிறீர்கள். இதில் எந்தவிதத் தவறும் இல்லை. ஆனால், இப்போது, வேகத்தைச் சிறிது அதிகரியுங்கள். பொதுவான சூழலினூடாக வேகம் அதிகரிக்கும். அச்சா.

கேள்வி:
மிகவும் சக்திவாய்ந்த சூழலை உருவாக்குவதற்கான வழிமுறை என்ன?

பதில்:
நீங்கள் சக்திசாலிகள் ஆகவேண்டும். இதற்கு, அமிர்த வேளையில் இருந்து ஒவ்வொரு செயலிலும் உங்களின் ஸ்திதியானது சக்திவாய்ந்ததாக உள்ளதா இல்லையா எனச் சோதிப்பதில் விசேட கவனம் செலுத்துங்கள். நீங்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்வதிலும், சேவைக்கான திட்டங்களைச் செய்வதிலும் மும்முரமாக இருந்தால், உங்களின் ஸ்திதியில் சிலவேளைகளில் சிறிதளவு குறைவு ஏற்படக்கூடும். இதனாலேயே, சூழல் சக்திநிறைந்தது ஆகுவதில்லை. சேவை இடம்பெறும். ஆனால், சூழல் சக்திநிறைந்தது ஆகாது. இதற்கு, நீங்கள் உங்களில் விசேடமான கவனம் செலுத்த வேண்டும். கர்மமும் யோகமும். கர்மத்துடன்கூடவே, சக்திவாய்ந்த ஸ்திதியும் இருக்க வேண்டும். இந்த சமநிலையே சிறிதளவு குறைவாக உள்ளது. நீங்கள் சேவையில் மட்டும் மும்முரமாக இருந்தால், உங்களின் சொந்த ஸ்திதி சக்திவாய்ந்தாக இருக்கமாட்டாது. நீங்கள் சேவைக்காக ஒதுக்கிய நேரம், சேவைக்காக நீங்கள் எந்தளவிற்கு உங்களின் சரீரம், மனம், செல்வத்தைப் பயன்படுத்தினீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் பெற வேண்டிய ஒன்றிற்கு நூறாயிரம் மடங்கு பலனைப் பெற மாட்டீர்கள். கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையில் சமநிலை இல்லாமையே இதற்கான காரணம் ஆகும். நீங்கள் சேவைக்காகத் திட்டங்களைச் செய்வதைப் போன்று – நீங்கள் துண்டுப்பிரசுரங்களை அச்சிடுகிறீர்கள், தொலைக்காட்சியிலும் வானொலியிலும் நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள் - இத்தகைய புற வசதிகளை நீங்கள் பயன்படுத்துவதைப் போன்று, அனைத்திற்கும் முதலில், உங்களின் மன ஸ்திதியை சக்திநிறைந்தது ஆக்குவதற்கு விசேடமான வழிமுறையைக் கையாளுங்கள். இவ்வாறு கவனம் செலுத்துதல் குறைவாக உள்ளது. நீங்கள் மும்முரமாக இருந்ததனாலேயே, இதில் சிறிதளவு தவறிவிட்டீர்கள் எனப் பின்னர் நீங்கள் கூறுகிறீர்கள். அப்போது இரட்டை நன்மை ஏற்படமாட்டாது.

ஆசீர்வாதம்:
நீங்கள் சேவையினூடாகப் பெறப்படும் மதிப்பையும் அந்தஸ்தையும் துறந்து, அழியாத பாக்கியத்தை உருவாக்கும் மகா துறவி ஆகுவீர்களாக.

நீங்கள் செய்யும் மேன்மையான செயல்களினதும், குழந்தைகளான நீங்கள் செய்யும் சேவையினதும் நடைமுறைப் பலன், அனைவராலும் பாராட்டப்படுவதாகும். ஒரு சேவையாளர் மேன்மையான புகழ்ச்சி என்ற ஆசனத்தைப் பெறுகிறார். அவர் மதிப்பும் அந்தஸ்தும் என்ற ஆசனத்தைப் பெறுகிறார். இத்தகையதோர் ஆத்மா நிச்சயமாக இந்த வெற்றியைப் பெறுகிறார். எவ்வாறாயினும், இந்த வகையான வெற்றிகள் அனைத்தும் பயணத்தின் படிக்கற்களே அன்றி, இறுதி இலக்கு அல்ல. எனவே, இதைத் துறந்து, பாக்கியசாலிகள் ஆகுங்கள். இதுவே மகாதுறவியாக இருத்தல் எனப்படுகிறது. மகத்தான, மறைமுகமான தானியின் சிறப்பியல்பானது, தியாகத்தையும் துறத்தல் ஆகும்.

சுலோகம்:
ஒரு தேவதை ஆகுவதற்கு, ஒவ்வோர் ஆத்மாவின் பாகத்தையும் பற்றற்ற பார்வையாளராக அவதானித்து, அவர்களுக்கு சகாஷ் வழங்குங்கள்.