18.12.18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பிராமணர்களாகிய உங்களின் பிறப்புக்கள் தேவர்களிலும் பார்க்க அதிமேன்மையானவையும், நன்மை பயப்பவையும் ஆகும், ஏனெனில் பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே தந்தையின் உதவியாளர்கள் ஆகுகின்றீர்கள்.கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இந்நேரத்தில் எவ்வாறு பாபாவிற்கு உதவுகின்றீர்கள்? தந்தை தனது உதவியாளர்களான குழந்தைகளுக்கு என்ன பரிசைக் கொடுக்கின்றார்?
பதில்:
பாபா தூய்மையும். அமைதியும் உள்ள இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். நாங்கள் தூய்மை மூலம் அவருக்கு உதவுகின்றோம். பாபா உருவாக்கியுள்ள யாகத்தை நாங்கள் பராமரிக்கின்றோம். ஆகவே பாபா நிச்சயம் எங்களுக்கு ஒரு பரிசைக் கொடுப்பார். சங்கம யுகத்தில் மாத்திரமே நாங்கள் ஒரு மிகப்பெரிய பரிசைப் பெறுகின்றோம். இப்பொழுது நாங்கள் உலகின் ஆரம்பம், மத்தி. இறுதியை அறிந்த திரிகாலதரிசிகள் ஆகுகின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் ஒரு சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவோம். இதுவே பரிசாகும்.
பாடல்:
தந்தை, தாய், ஆதாரம், பிரபு, நண்பர் என்பதால் நீங்களே அனைவரினதும் பாதுகாவலர்!
ஓம்சாந்தி.
இது யாருடைய புகழ்? இது அதி அன்பிற்கினிய பரமாத்மாவான பரமதந்தை சிவன் எனும் பெயரைக் கொண்டவரின் புகழாகும். அவருடைய பெயரே அனைத்திலும் உயர்வானது. அவர் வாழும் இடமும் அனைத்திலும் உயர்வானதாகும். பரமாத்மாவான பரமதந்தை என்பதன் பொருள் அவரே ஆத்மாக்கள் அனைவரிலும் உயர்வானவர் என்பதாகும். வேறு எவரையும் பரமாத்மாவான பரமதந்தை என அழைக்க முடியாது. அவரது புகழ் எல்லையற்றது. அவரது புகழின் முடிவை அடைய முடியாதளவிற்கு அவரின் புகழ் உள்ளது எனக் கூறப்படுகின்றது. ரிஷிகளும், முனிவர்களும் நீங்கள் அவரின் முடிவை நெருங்க முடியாதென்று கூறுவார்கள். இதுவுமல்ல அதுவுமல்ல (நேற்றி, நேற்றி) என்று அவர்கள் கூறி வருகிறார்;கள். இப்பொழுது பாபாவே வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். ஏன்? பாபாவின் அறிமுகம் இருக்க வேண்டும், இல்லையா? ஆகவே குழந்தைகள் எவ்வாறு அவரின் அறிமுகத்தைப் பெற முடியும்;? அவரே இப் பூமிக்கு இறங்கி வரும்வரை வேறு எவராலுமே அவரின் அறிமுகத்தைக் கொடுக்க முடியாது. தந்தை மகனைக் காட்டும்பொழுது, மகன் தந்தையைக் காட்டுகிறார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எனது பாகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நானே வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்க வேண்டும். “சீதைக்குரிய, தூய்மையாக்குபவரான இராமரே, வாருங்கள்!” என்று சாதுக்;களும், புனிதர்களும் தொடர்ந்தும் பாடுகிறார்கள். ஏனெனில் இது இராவணனின் இராச்சியமாகும். இராவணனும் குறைந்தவனல்ல. முழு உலகையும் தமோபிரதானாகவும், தூய்மையற்றதாகவும் ஆக்கியது யார்? இராவணன். ஆவான். பின் அதனைத் தூய்மையாக்குவதற்காகச் சக்தி நிறைந்த இராமர் வருகிறார். அரைக் கல்பத்திற்கு இராமரின் இராச்சியம் உள்ளது. அரைக் கல்பத்திற்கு இராவணனின் இராச்சியம் தொடர்கின்றது. இராவணன் யாரென்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அவனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். இருந்தபொழுதும் இராவணனின் இராச்சியம் தொடர்கிறது; அவன் எரிக்கப்படுவதில்லை. கடவுளிடம் சர்வசக்திகளும் உள்ளதாயின் ஏன் அவர் இராவணன் ஆட்சிசெய்வதை அனுமதிக்கின்றார் என்று மக்கள் கேட்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது வெற்றிக்கும் தோல்விக்கும், சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமான விளையாட்டாகும். முழு நாடகமும் பாரதத்தின் அடிப்படையில் உள்ளது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. பரமதந்தையே சர்வ சக்திவானாகையால் அவர் நாடகம் முடிவதற்கு முன் வருவாரென்றோ அல்லது அவரால் நாடகத்தை இடைநடுவே நிறுத்த முடியுமென்றோ இல்லை. தந்தை கூறுகிறார்: முழு உலகமும் தூய்மையற்றதாகும்பொழுது நான் வருகிறேன். இதனாலேயே மக்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள். ‘சிவனுக்கு வந்தனங்கள்’ என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ‘பிரம்மா, விஷ்ணு. சங்கரர் ஆகிய தேவர்;களுக்கு வந்தனம்’ என்று அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் சிவனை நோக்கி ‘பரமாத்மாவிற்கு வந்தனங்கள்’ என்று கூறுவார்கள். சிவன் பபுல்நாதர் அல்லது சோமநாதர் ஆலயங்களில் அவர்களால் காட்டப்பட்டுள்ளவர் போன்றவரா? பரமாத்மாவான பரமதந்தைக்கு அவ்வளவு பெரிய உருவம் உள்ளதா? அல்லது ஆத்மாக்களுக்குச் சிறிய உருவமும், தந்தைக்குப் பெரிய உருவமும் உள்ளதா? இவ்வாறான கேள்வி உள்ளது, இல்லையா? இங்கு ஒரு சிறியவரைக் குழந்தை என்றும், முதியவரைத் தந்தை என்றும் கூறுவதுபோல் பரமாத்மாவான பரமதந்தையே மிகப்பெரியவரும், ஆத்மாக்களாகிய நாங்கள் சிறியவர்களுமா? இல்லை. தந்தை விளங்கப்படுத்துகி;றார்: குழந்தைகளே, நீங்கள் எனது புகழைப் பாடுகிறீர்கள். பரமாத்மாவின் புகழ் எல்லையற்றது என நீங்கள் கூறுகின்றீர்கள். அவரே மனித உலக விருட்சத்தின் விதையாவார். ஆகவே தந்தையே விதை என்று அழைக்கப்பட வேண்டும், இல்லையா? அவரே படைப்பவர். வேதங்கள், உபநிடதங்கள், கீதை, யாகங்கள், தபஸ்யா, தான தர்மங்கள் போன்ற ஏனைய அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கானவை. அவற்றிற்கென்று ஒரு காலமுள்ளது. அரைக் கல்பத்திற்குப் பக்தியும், அரைக் கல்பத்திற்கு ஞானமும் நிலவுகிறது. பக்தி பிரம்மாவின் இரவும், ஞானம் பிரம்மாவின் பகலுமாகும். சிவபாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவருக்கென ஒரு சரீரம் இல்லை. அவர் கூறுகிறார்: உங்களுக்கு உங்கள் இராச்சியப் பாக்கியத்தைக் கொடுப்பதற்காக நான் இராஜயோகத்தை மீண்;டும் ஒருமுறை உங்களுக்குக் கற்பிக்கின்றேன். பிரம்மாவின் இரவு இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. தர்மத்தை நிந்தனை செய்யும் அதே காலம் இப்பொழுது வந்துள்ளது. யாரை அவர்கள் அதிகளவு இழிவுபடுத்துகின்றார்கள்? பரமாத்மாவான பரமதந்தை சிவனையே ஆகும். எப்பொழுதெல்லாம் அதர்மம் நிலவுகின்றதோ, அப்பொழுதெல்லாம் நான் வருகிறேன் என்று எழுதப்பட்டுள்ளது. முன்னைய கல்பத்தில் நான் ஞானத்தை சமஸ்கிருதத்தில் கொடுத்தேன் என்றில்லை. அது அதே மொழியாகும். தேவ தர்மத்தை ஸ்தாபிப்பவருக்குப் பாரதத்தில் அவதூறு ஏற்படும்பொழுது, அவர்கள் என்னைக் கற்களிலும், கூழாங்கற்களிலும் இடும்பொழுதே நான் வருகின்றேன். பாரதத்தைச் சுவர்க்கமாக்குபவரும், தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவருமாகிய அந்த ஒரேயொருவரை அவர்கள் அதிகளவு இழிவுபடுத்தியுள்ளார்கள். பாரதமே அனைத்து நாடுகளிலும் பழைமையானதும், ஒருபொழுதும் அழிவற்றதும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சத்திய யுகத்தில் இங்கு இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமும் இருக்கிறது. சுவர்க்கத்தை உருவாக்குபவரே அவர்களுக்கு அந்த இராச்சியத்தைக் கொடுத்தார். அதே பாரதம் இப்பொழுது தூய்மையற்றுள்ளது. அதனாலேயே நான் மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். இதனாலேயே அவர்கள் ‘சிவனுக்கு வந்தனங்கள்’ என்று அவரின் புகழைப் பாடுகின்றார்கள். இந்த எல்லையற்ற நாடகத்தில் ஒவ்வோர் ஆத்மாவினதும் பாகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது தொடர்ந்து இடம்பெறுகிறது. சிலர் அதிலிருந்து ஒரு சிறு பாகத்தை எடுத்து, எல்லைக்குட்பட்ட நாடகங்களை ஆக்குகிறார்கள். நாங்கள் இப்பொழுது பிராமணர்கள், நாங்கள் பின்பு தேவர்கள் ஆகுவோம். இது கடவுளின் குலமாகும். இது உங்கள் 84 வது பிறவியின் இறுதியாகும். இந்நேரத்தில் உங்களுக்கு நான்கு குலங்களினதும் ஞானம் உள்ளது. இதனாலேயே பிராமண குலமே அனைத்துக் குலங்களிலும் உயர்ந்தது. எவ்வாறாயினும் தேவர்களே புகழப்பட்டு, வழிபடப்;படுகின்றார்கள். பிரம்மாவின் ஆலயமும்; உள்ளது. ஆனால் கடவுள் இவரிலேயே வந்து, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. ஸ்தாபனை நடைபெறுவதால், விநாசமும் இடம்பெற வேண்டும். இதனாலேயே உருத்திரனின் ஞான யாகத்திலிருந்து விநாசத்திற்கான சுவாலைகள் வெளிப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதே தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, இது இப்பொழுது உங்கள் இறுதிப் பிறப்பாகும். நான் உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பதற்கே மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். அது உங்களுடைய உரிமை. ஆனாலும் எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்களுக்கே நான் சுவர்க்கம் என்ற பரிசைக் கொடுப்பேன். ஏனையோரும் அமைதிக்கான பரிசு போன்றவற்றைப் பெறுகிறார்கள். ஆனால் தந்தை உங்கள் அனைவருக்கும் சுவர்க்கம் என்ற பரிசைத் கொடுக்கின்றார். அவர் கூறுகிறார்: நான் அதனை எடுப்பதில்லை. உங்கள் மூலம் ஸ்தாபனை இடம்பெறுவதை நான் தூண்டுகிறேன். ஆகவே நான் அதனை உங்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் சிவபாபாவின் பேரக் குழந்தைகளும், பிரம்மாவின் குழந்தைகளும் ஆவீர்கள். பிரஜாபிதா பிரம்மா மாத்திரமே ஏராளமான குழந்தைகளைத் தத்தெடுப்பார். இந்தப் பிராமணப் பிறவியே உங்களது அதியுயர்வான பிறவி. இதுவே நன்மை பயக்கும் பிறவி. தேவர்களினதும், சூத்திரர்களினதும் பிறப்புகள் நன்மை அளிப்பவை அல்ல. இதுவே உங்களது அதிக நன்மை பயக்கும் பிறப்பாகும். ஏனெனில் நீங்கள் தந்தையின் உதவியாளர்களாகி, உலகில் அமைதியையும், தூய்மையையும் ஸ்தாபிக்கின்றீர்கள். பரிசில்களை வழங்குபவர்களுக்கு இது தெரியாது. அவர்கள் அதனை அமெரிக்கர்கள் போன்றவர்களுக்கு வழங்குகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: எனது உதவியாளர்கள் ஆகுபவர்களுக்கு நான் ஒரு பரிசை வழங்குகின்றேன். உலகில் தூய்மை இருக்கும் பொழுது அங்கு அமைதியும், செல்வச் செழிப்பும் இருக்கின்றன. இது விலைமாதர்களின் இல்லம். சத்திய யுகம் ஆலயமாகிய, சிவாலயமாகும். சிவபாபா அதனை ஸ்தாபித்தார். சாதுக்களும், சந்நியாசிகளும் ஹத்தயோகிகள். அவர்கள் கீதை, மகாபாரதம் ஆகியவற்றை ஆயிரம் முறைகள் வாசித்திருந்தாலும் அவர்களால் இல்லறப் பாதையைப் பின்பற்றுபவர்களுக்கு இலகு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. இவர் அனைவரினதும் பாபா. அனைத்துச் சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர் கூறுகிறார்: உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் மாத்திரம் தொடர்புபடுத்துங்கள். நானும் ஒரு சிறு புள்ளியே. நான் அந்தளவு பெரியவனல்ல. ஆத்மாவைப் போன்றே பரமாத்மாவும் இருப்பார். ஒவ்வோர் ஆத்மாவும் இங்கு நெற்றியின் புருவத்தின் மத்தியில் வாழ்கிறார். அவர் மிகப் பெரியவராக இருந்தால், அவரால் எவ்வாறு நெற்றியின் புருவத்தின் மத்தியில் வாழ முடியும்? நான் ஓர் ஆத்மா போன்றவர். எனினும் நான் பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர். நான் என்றும் தூய்மையானவர்;. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் பிறப்பு இறப்பினுள் வருகிறார்கள். அவர்கள் தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்களாகவும், தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாகவும் ஆகுகின்றார்கள். தூய்மையற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குவதற்காகத் தந்தை மீண்டும் ஒருமுறை இந்த உருத்திர யாகத்தை உருவாக்கியுள்ளார். இதன்பின் சத்திய யுகத்தில் எவ்வித யாகமும் இருக்க மாட்டாது. பின்பு துவாபர யுகத்திலிருந்து அவர்கள் தொடர்ந்தும் பல வகையான யாகத்தை உருவாக்குவார்கள். உருத்திரனின் இந்த யாகம் கல்பம் முழுவதிலும் ஒருமுறையே உருவாக்கப்படும். அனைவரது அர்ப்பணங்களும் இதனுள் இடப்படுகிறது. பின்னர் வேறு எந்த யாகமும் உருவாக்கப்பட மாட்டாது. அனர்த்தங்கள் உள்ளபொழுதே யாகங்கள் உருவாக்கப்படுகின்றன. மழை இல்லாவிடின் அல்லது வேறு ஏதாவது அனர்த்தங்கள் உள்ளபொழுதே அவர்கள் யாகத்தை உருவாக்குவார்கள். சத்திய, திரேதா யுகங்களில் அனர்த்தங்கள் இருக்க மாட்டாது. இந் நேரத்தில் பல வகையான அனர்த்தங்கள்; உள்ளன. இதனாலேயே மிகப்பெரிய வியாபாரியான, சிவபாபா இந்த யாகத்தை உருவாக்கி, ஆகுதிகள் அனைத்தும் எவ்வாறு தீயில் இடப்படும் என்றும், எவ்வாறு விநாசம் இடம்பெறும் என்றும், எவ்வாறு பழைய உலகம் ஒரு இடுகாடு ஆகுகின்றது என்றும் முற்கூட்டியே உங்களுக்கு ஒரு காட்சியையும் கொடுக்கிறார். ஆகவே ஏன் நீங்கள் உங்கள் இதயத்தை இப்பழைய உலகுடன் இணைக்க வேண்டும்? இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் பழைய உலகின் மீது எல்லையற்ற துறவைக் கொண்டிருக்கின்றீர்கள். அச் சந்நியாசிகள் தமது வீடுகளையும், குடும்பங்களையும் துறக்கிறார்கள். நீங்கள் உங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் துறக்கக்கூடாது. நீங்கள் உங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் கவனித்துக் கொள்வதுடன், அவர்கள் மீதுள்ள பற்றைத் துண்டித்து விடவும் வேண்டும். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே மரணித்து விட்டார்கள். ஏன் நீங்கள் உங்கள் இதயத்தில் அவர்களின் மீதான பற்றை வைத்திருக்க வேண்டும்? இது பிணங்களின் உலகமாகும். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: தேவதைகளின் பூமியை நினைவுசெய்யுங்கள்;, ஏன் நீங்கள் இடுகாட்டை நினைவுசெய்கிறீர்கள்? பாபா ஒரு முகவராகி, உங்கள் புத்தியின் யோகத்தைத் தன்னுடன் இணைக்கிறார். அவர்கள் கூறுகிறார்கள்: ஆத்மாக்களும், பரமாத்மாவும் நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள்;. இப் புகழும் அவருக்கே உரியது. கலியுகக் குருமார்களைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியாது. அவர்களால் சற்கதி அளிக்க முடியாது. ஆம். அவர்களால் சமயநூல்களை உரைக்கவும், சமயச் சடங்குகளைச் செய்யவும் முடியும். சிவபாபாவிற்கென ஓர் ஆசிரியரோ அல்லது குருவோ இல்லை. பாபா கூறுகிறார்: நான் உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வந்துள்ளேன். பின்னர் நீங்கள் சூரிய வம்சத்தினராகவோ அல்லது சந்திர வம்சத்தினராகவோ ஆகலாம். எவ்வாறு நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள்? யுத்தம் மூலமா? இல்லை; இலக்ஷ்மி நாராயணனோ அல்லது இராமர் சீதையோ தங்கள் இராச்சியத்தை யுத்தம் செய்து பெறவில்லை. அவர்கள் இந்நேரத்தில் மாயையுடன் யுத்தம் புரிந்தார்கள். நீங்கள் மறைமுகமான போர்வீரரர்கள். இதனாலேயே சக்திசேனையாகிய உங்களை எவருக்கும் தெரியாது. நீங்கள் யோக சக்தியின் மூலம் முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் உலக இராச்சியத்தை இழந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அதனை மீண்டும் ஒருமுறை கோருகின்றீர்கள். தந்தையே உங்களுக்கு அந்தப் பரிசைக் கொடுக்கிறார். இப்பொழுது தந்தையின் உதவியாளர்களாக ஆகுபவர்களே அமைதி மற்றும் செல்வச் செழிப்பு என்ற பரிசை அரைக் கல்பத்திற்குப் பெறுவார்கள். சரீரமற்றவராகித் தந்தையை நினைவுசெய்பவர்களும், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களும், தங்கள் இனிய வீடான அமைதி தாமத்தையும், தங்கள் இனிய இராச்சியத்தையும் நினைவுசெய்து தூய்மையாகுபவர்களையுமே பாபா உதவியாளர்கள் என்று அழைக்கிறார். இது மிகவும் இலகுவானது! ஆத்மாவாகிய நான் ஒரு நட்சத்திரம். எனது தந்தை, பரமாத்மாவும் ஒரு நட்சத்திரமே. அவர் அதைப் போன்று அவ்வளவு பெரிதானவரல்ல. ஆனால் ஒரு நட்சத்திரத்தை எவ்வாறு வழிபட முடியும்? அதனாலேயே அவர்கள்; அவரை வழிபடுவதற்காகப் பெரிதாகச் செய்துள்ளனர். தந்தையே முதலில் வழிபடப்படுகின்றார். பின்பு ஏனையோர் வழிபடப்படுகிறார்கள். இலக்ஷ்மி நாராயணனே அதிகம் வழிபடப்படுகின்றனர். ஆனால் யார் அவர்களை அவ்வாறு ஆக்கியது? அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஒரேயொரு தந்தையோவார். அந்த ஒரேயொருவரினதே மகத்துவம் ஆகும். அவருடைய பிறந்தநாள் வைரம் போன்று பெறுமதி மிக்கது. ஆனால் ஏனையோரின் பிறந்தநாட்கள்; சிப்பிகளின் பெறுமதியானவை. சிவனுக்கு வந்தனங்கள். இது அவருடைய யாகமாகும். இது பிராமணர்களாகிய உங்களின் மூலம் உருவாக்கப்பட்டது. அவர் கூறுகிறார்: தூய்மையையும், அமைதியையும் ஸ்தாபிப்பதற்கு எனக்கு உதவி செய்பவர்களுக்கு நான் இந்தளவு பலனைக் கொடுக்கிறேன். பிராமணர்களாகிய உங்கள் மூலம் இந்த யாகத்தை அவர் உருவாக்கியதால், அவர் நிச்சயம் உங்களுக்குத் தானம் வழங்குவார். அவர் அத்தகையதொரு பிரமாண்;டமான யாகத்தை உருவாக்கியுள்ளார். வேறு எந்த யாகமும் இந்தளவு நீண்ட காலத்திற்கு நீடிக்க மாட்டாது. அவர் கூறுகிறார்: ஒருவர் எவ்வளவு நீண்ட காலத்திற்கு எனக்கு உதவுகின்றாரோ, அதற்கேற்ப நான் அவர்களுக்குப் பரிசு வழங்குவேன். நானே அனைவருக்கும் பரிசில்களை வழங்குபவர். நான் எதனையும் எடுப்பதில்லை. நான் உங்களுக்கு அனைத்தையும் வழங்குகிறேன். எதையாவது செய்பவர்கள் அதற்குரிய பலனைப் பெறுவார்கள். நீங்கள் சிறிதளவு செய்தீர்களானால், நீங்கள் பிரஜைகளுக்குள்ளேயே வருவீர்கள். காந்திஜிக்கு உதவி செய்தவர்கள் பின்பு ஜனாதிபதியாகவோ அல்லது ஒரு மந்திரி போன்றவர்களாகவோ ஆகினார்கள். அது தற்காலிகமான சந்தோஷமே. தந்தை உங்களுக்கு ஆரம்பம், மத்தி, இறுதி ஆகியவற்றின் ஞானத்தைக் கொடுத்;து, தன்னைப் போன்று உங்களைத் திரிகாலதரிசிகள் ஆக்குகின்றார். அவர் கூறுகிறார்: எனது சுயசரிதையை அறிந்ததன் மூலம் நீங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் ஆகுவீர்கள். சந்நியாசிகளால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. அவர்களிடமிருந்து நீங்கள் என்ன ஆஸ்தியைப் பெறுவீர்கள்? அவர்கள் ஒருவருக்கே சிம்மாசனத்தைக் கொடுப்பார்கள். எனவே ஏனையோர் எதனைப் பெறுவார்கள்? பாபா உங்கள் அனைவருக்கும் ஒரு சிம்மாசனத்தைக் கொடுக்கின்றார். அவர் அவ்வாறான சுயநலமற்ற சேவையைச் செய்கிறார். இருப்பினும் நீங்கள் என்னைக் கற்களிலும், கூழாங்கற்களிலும் இட்டு, என்னை அதிகம் இழிவுபடுத்தியுள்ளீர்கள்! இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சிப்பிகள் போன்று ஆகும்பொழுது, நான் உங்களை வைரங்கள் போன்று ஆக்குகின்றேன். பாரதத்தை நான் எண்ணற்ற தடவைகள் சுவர்க்கமாக ஆக்கியுள்ளேன். பின்னர் மாயை அதனை நரகம் ஆக்கினாள். இப்பொழுது நீங்கள் பேறுகளைப் பெற விரும்பினால், தந்தையின் உதவியாளர்களாகி, உண்மையான பரிசைப் பெறுங்கள். இதில் தூய்மையே முதன்மையானது. பாபா சந்நியாசிகளையும் புகழ்கின்றார். அவர்களும் சிறந்தவர்கள். ஏனெனில் அவர்கள் தூய்மையாக இருக்கிறார்கள். அவர்கள் பாரதத்திற்கு ஆதரவு அளிப்பதுடன், அது சீரழிந்து விடுவதிலிருந்தும் தடுக்கிறார்கள். இல்லாவிடில் அது எவ்வாறாகியிருக்கும் என்று கூற வேண்டியதில்லை. எவ்வாறாயினும் இப்பொழுது பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்கவேண்டும். ஆகவே நீங்கள் நிச்சயமாக உங்கள் வீட்டில் குடும்பங்களுடன் வாழ்ந்தவாறு, தூய்மையாக இருக்க வேண்டும். பாப், தாதா ஆகிய இருவரும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்கள். சிவபாபாவும் இப் பழைய சப்பாத்தின் மூலம் குழந்தைகளாகிய உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குகின்றார். அவரினால் ஒருவரைப் புதியதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் ஒரு தாயின் கருப்பையிலும்; புகுவதில்லை. அவர் இத் தூய்மையற்ற உலகில் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கிறார். இந்தக் கலியுகத்தில் காரிருள் உள்ளது. அவர் இந்தக் காரிருளைப் பேரொளியாக ஆக்க வேணடும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த எல்லையற்ற உலகை உங்கள் இதயத்திலிருந்து அகற்றுவதுடன், உங்கள் பற்றையும் துண்டித்துக் கொள்ளுங்கள். உங்கள் இதயத்தை அதனுடன் இணைத்துக் கொள்ளாதீர்கள்.
2. தந்தையின் உதவியாளர் ஆகுவதுடன், ஒரு பரிசைப் பெறுவதற்கு 1. சரீரமற்றவர்கள் ஆகுங்கள். 2. தூய்மையானவர்கள் ஆகுங்கள் 3. சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். 4. உங்கள் இனிய வீட்டையும், இனிய இராச்சியத்தையும் நினைவுசெய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய வாழ்வில் தெய்வீகக் குணங்களாகிய பூந்தோட்டத்தில் சதா சந்தோஷமாக இருந்து, சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்களாக.சதா சந்தோஷமான நிலையில் இருப்பது என்றால், நிறைவாகவும் முழுமையாகவும் இருப்பதாகும். முன்னர் உங்கள் வாழ்வு முட்காட்டில் இருந்தது, நீங்கள் இப்பொழுது மலர்கள் எனும் சந்தோஷத்திற்குள் வந்து விட்டீர்கள். தெய்வீகக் குணங்கள் எனும் மலர்கள் சதா உங்கள் வாழ்வு எனும் பூந்தோட்டத்தில் உள்ளதால், உங்களுடன் எவர் தொடர்பில் வந்தாலும், தொடர்ந்தும் தெய்வீகக்குணங்கள் எனும் மலர்களிலிருந்து நறுமணத்தைப் பெறுகின்றார்கள், அவர்கள் இந்தச் சந்தோஷத்தைப் பார்க்கும்பொழுது சந்தோஷம் அடைவார்கள். அவர்கள் சக்தியை அனுபவம் செய்வார்கள். இந்தச் சந்தோஷமானது ஏனையோரையும் சக்தி மிக்கவராக்கி, அவர்களைச் சந்தோத்திற்குள் அழைத்து வருகின்றது, இதனாலேயே நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கின்றீர்கள் எனக் கூறுகின்றீர்கள்.
சுலோகம்:
மாயையின் குமிழ்களுக்குப் பயப்படுவதற்குப் பதிலாக அவற்றுடன் விளையாடுபவரே, ஒரு மாஸ்டர் சர்வசக்திவான் ஆவார்.