30.12.18 Avyakt Bapdada Tamil Lanka Murli 02.04.84 Om Shanti Madhuban
புள்ளியின் (பூச்சியத்தின்) முக்கியத்துவம்.
இன்று, பாக்கியத்தை அருள்பவரான தந்தை, தனது பாக்கியசாலிக் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். பாக்கியத்தை அருள்பவரான தந்தை, குழந்தைகளான உங்கள் அனைவருக்கும், உங்களின் பாக்கியத்தை உருவாக்குவதற்கான அதிகபட்ச இலகுவான வழிமுறையைக் காட்டுகிறார். புள்ளியின் கணக்கை அறிந்திருங்கள். அவ்வளவே. பூச்சியத்தின் கணக்கீடு அனைத்திலும் மிகவும் இலகுவானது. புள்ளியின் முக்கியத்துவத்தை அறிந்து, மகத்தானவர் ஆகுங்கள். நீங்கள் அனைவரும் இலகுவான, அதி அர்த்தபூர்வமான புள்ளியின் (பூச்சியத்தின்) கணக்கை மிக நன்றாக அறிவீர்கள், அல்லவா? பூச்சியத்தைப் பற்றிப் பேசுவதும் புள்ளி ஆகுவதும் ஆகும். புள்ளியாகி, புள்ளியான தந்தையை நினையுங்கள். நீங்கள் புள்ளியாக இருந்தீர்கள். நீங்கள் இப்போது புள்ளியானவரான தந்தையைப் போன்று புள்ளியின் ஸ்திதியில் ஸ்திரமானவராகி, அவருடன் சந்திப்பைக் கொண்டாடுங்கள். சந்திப்பிற்கான இந்த யுகம் பறக்கும் ஸ்திதிக்குரிய யுகம் என்று அழைக்கப்படுகிறது. பிராமண வாழ்க்கை சந்திப்பதற்கும் கொண்டாடுவதற்கும் உரியது. இந்த வழிமுறையுடன் அனைத்தையும் செய்யும்போது, சதா செயல்களைச் செய்யும்போது, நீங்கள் எப்போதும் செயல்களின் பந்தனத்தில் (கர்மபந்தனம்) இருந்து விடுபட்ட கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் செயலின் பந்தனத்திற்குள் செல்வதில்லை. ஆனால், எப்போதும் தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். கரவன்ஹார் தந்தை உங்களைக் கருவிகளாக்கி, அனைத்தையும் செய்விக்கிறார். அதனால், நீங்கள் பற்றற்ற பார்வையாளர்கள் ஆகுகிறீர்கள். இவ்வாறே இந்த உறவுமுறையின் விழிப்புணர்வானது உங்களைப் பந்தனத்தில் இருந்து விடுவிக்கிறது. நீங்கள் ஓர் உறவுமுறையில் அனைத்தையும் செய்யும்போது, பந்தனம் எதுவும் இருக்காது. ‘நான் இதைச் செய்தேன்’ என நீங்கள் நினைக்கும்போதே, உறவுமுறையை நீங்கள் மறப்பதனாலேயே, பந்தனம் உருவாக்கப்படுகிறது. சங்கமயுகம், பந்தனத்தில் இருந்து விடுபட்ட ஸ்திதியை அனுபவம் செய்வதற்கும் தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் ஏற்படுத்துவதற்கும் ஜீவன்முக்தியாக இருப்பதற்குமான யுகம் ஆகும். ஆகவே, நீங்கள் சகல உறவுமுறைகளையும் பேணுகிறீர்களா அல்லது பந்தனத்திற்குள் பிரவேசிக்கிறீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். எங்கு உறவுமுறையில் அன்பு உள்ளதோ, அங்கு பேறு இருக்கும். ஆனால் பந்தனத்திலோ இழுபறிநிலையே காணப்படும். அந்தப் பதட்டத்தினால், துன்பத்தினதும் அமைதியின்மையினதும் குழப்பம் நிலவும். எனவே, தந்தை உங்களுக்கு இலகுவான புள்ளிக் கணக்கைப் பற்றிக் கற்பித்திருப்பதனால், சரீர பந்தனம் எதுவும் முடிந்துவிட்டது. இந்தச் சரீரம் உங்களுடையது அல்ல. நீங்கள் அதைத் தந்தையிடம் கொடுத்துள்ளீர்கள். எனவே, அது அவருடையதே. ‘எனது சரீரம்’ என்ற உங்களின் ஆதி பந்தனமும் முடிந்துவிட்டது. ‘எனது சரீரம்’ என நீங்கள் கூறுவீர்களா? அந்த உரிமை இப்போது உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் கொடுத்துவிட்ட எதிலாவது எவ்வாறு உங்களுக்கு உரிமை இருக்க முடியும்? நீங்கள் அதைக் கொடுத்துவிட்டீர்களா அல்லது இன்னமும் உங்களுடையது என்று வைத்திருக்கிறீர்களா? ‘அது உங்களுடையது’ என நீங்கள் கூறினாலும், இன்னமும் அது உங்களுக்குரியது என நீங்கள் நம்புகிறீர்களா?
‘உங்களுடையது’ என நீங்கள் கூறும்போது, ‘எனது’ என்ற எந்தவிதமான உணர்வின் பந்தனமும் முடிந்துவிடும். எல்லைக்குட்பட்ட ‘எனது’ எதுவும் பற்றின் இழையே ஆகும். நீங்கள் அதை ஒரு நூல், சங்கிலி அல்லது இழை என்று அழைத்தாலென்ன, அது உங்களைப் பந்தனத்தில் கட்டிவிடுகிறது. ‘அனைத்தும் உங்களுடையது’ என நீங்கள் கூறும்போது, ஓர் உறவுமுறையை உருவாக்குகிறீர்கள். பந்தனம் உடைந்து, அது ஓர் உறவுமுறை ஆகுகிறது. எந்த வகையான பந்தனமும், அது சரீரம், சுபாவம், சம்ஸ்காரங்கள் அல்லது மனதின் அடிமைத்தனத்திற்குரியதாக இருந்தாலும், எல்லா வேளையும் தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் நீங்கள் ஏற்படுத்துதல் குறைவாக உள்ளது என்பதையே அது நிரூபிக்கிறது. சில குழந்தைகள் தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் எல்லா வேளையும் கொண்டிருப்பதன் மூலம் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். ஆனால், சில குழந்தைகளோ, காலத்திற்கேற்ப, தமது சொந்த நோக்கங்களுக்கேற்ப உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனாலேயே, அவர்களால் பிராமண வாழ்க்கையின் தனித்துவமான ஆன்மீகக் களிப்பைப் பெற முடியாமல் போகிறது. அவர்கள் தங்களுடனும் திருப்தியாக இருப்பதில்லை. மற்றவர்களிடமிருந்தும் திருப்திக்குரிய ஆசீர்வாதங்களை அவர்களால் பெற முடிவதில்லை. பிராமண வாழ்க்கை, மேன்மையான உறவுமுறைகளுக்குரிய வாழ்க்கை, தந்தையிடமிருந்தும் பிராமணக் குடும்பம் முழுவதிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுகின்ற வாழ்க்கை ஆகும். ‘ஆசீர்வாதங்கள்’ என்றால் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் என்று அர்த்தம். பிராமணர்களான நீங்கள், பாப்தாதாவின் ஆசீர்வாதங்களினதும் நல்லாசிகளினதும் அடிப்படையிலேயே பிறப்பு எடுத்துள்ளீர்கள். நீங்கள் பாக்கியசாலி, மேன்மையான, விசேடமான ஆத்மா எனத் தந்தை கூறுகிறார். இந்த ஆசீர்வாதங்களினதும் வரங்களினதும் விழிப்புணர்வுடனும் இந்த நல்லாசிகளுடனும் தூய உணர்வுகளுடனுமே பிராமணர்களான நீங்கள் புதிய வாழ்க்கையையும் புதிய பிறப்பையும் பெற்றீர்கள். எப்போதும் தொடர்ந்து ஆசீர்வாதங்களைப் பெறுங்கள். இதுவே சங்கமயுகத்தின் சிறப்பியல்பு ஆகும். எவ்வாறாயினும், இவை அனைத்திற்குமான அடிப்படை, அதிமேன்மையான உறவுமுறை ஆகும். இந்த உறவுமுறையானது, ஒரு விநாடியில் ‘எனது’ என்ற உணர்வின் சங்கிலிகளையும் பந்தனங்களையும் முடித்துவிடுகிறது. உறவுமுறையின் முதல் ரூபம் இலகுவான விடயம் ஆகும். தந்தை ஒரு புள்ளி, நான் ஒரு புள்ளி, சகல ஆத்மாக்களும் புள்ளிகளே. எனவே, இது ஒரு புள்ளிக்குரிய கணக்கு ஆகும். ஞானக்கடல் இந்தப் புள்ளிக்குள் அமிழ்ந்திருக்கிறார். உலகின் கணக்குப்படி, ஒரு புள்ளி (பூச்சியம்) 10 ஐ 100 ஆகவும், 100 ஐ 1000 ஆகவும் மாற்றுகிறது. தொடர்ந்து பூச்சியங்களை அதிகரிப்பதன் மூலம், இலக்கத்தை அதிகரியுங்கள். எனவே, எது முக்கியமானது? புள்ளி, அப்படியல்லவா? அதேபோன்று, பிராமண வாழ்க்கையில், சகல பேறுகளுக்குமான அடிப்படை புள்ளியே ஆகும்.
படிப்பறிவற்ற மக்களாலும் பூச்சியத்தை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். ஒருவர் எவ்வளவு மும்முரமாக அல்லது நோயுற்று இருந்தாலும், அல்லது அவரின் புத்தி பலவீனமாக இருந்தாலும், எவராலும் பூச்சியத்தின் கணக்கை அறிந்து கொள்ள முடியும். தாய்மார்கள் கணக்கிடுவதில் கெட்டிக்காரர்கள், அல்லவா? எனவே, எப்போதும் பூச்சியத்தின் கணக்கை நினைவில் வைத்திருங்கள். அச்சா.
நீங்கள் வேறுபட்ட இடங்களில் இருந்து உங்களின் இனிய இல்லத்தை வந்தடைந்துள்ளீர்கள். பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரையும் உங்களின் பாக்கியத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டுகிறார். நீங்கள் உங்களின் வீட்டை வந்தடைந்துள்ளீர்கள். உங்களின் இந்த வீடு அருள்பவரின் வீடு ஆகும். உங்களின் சொந்த வீடு, ஆத்மாவிற்கும் சரீரத்திற்கும் ஓய்வையும் சௌகரியத்தையும் கொடுக்கும் இடம் ஆகும். நீங்கள் ஓய்வையும் சௌகரியத்தையும் பெறுகிறீர்கள், அல்லவா? நீங்கள் இரட்டைப் பேறுகளைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஓய்வையும் சௌகரியத்தையும் (ஆராம்) பெற்றுள்ளதுடன் இராமரையும் கண்டுள்ளீர்கள். எனவே, இது இரட்டைப் பேறு அல்லவா? குழந்தைகளே தந்தையின் வீட்டின் அலங்காரங்கள் ஆவார்கள். பாப்தாதா வீட்டின் அலங்காரங்களாக விளங்கும் குழந்தைகளைப் பார்க்கிறார். அச்சா.
ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளையும் வைத்திருப்பதன் மூலம் எப்போதும் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பவர்களுக்கும், கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்பவர்களுக்கும், புள்ளியின் முக்கியத்துவத்தை எப்போதும் அறிந்து மகான் ஆகுபவர்களுக்கும், சகல ஆத்மாக்களிடமிருந்தும் நல்லாசிகளின் ஆசீர்வாதங்களையும் திருப்திக்கான தூய உணர்வுகளையும் சதா பெறுபவர்களுக்கும், இத்தகைய ஆசீர்வாதங்களை அனைவருக்கும் கொடுப்பவர்களுக்கும், எப்போதும் தங்களைப் பற்றற்ற பார்வையாளர்களாகக் கருதி, ஒவ்வொரு செயலையும் கருவிகளாக இருந்தவண்ணம் செய்பவர்களுக்கும், இத்தகைய தனித்துவமான ஆன்மீகக் களிப்பை சதா அனுபவம் செய்பவர்களுக்கும், சதா களிப்பான வாழ்க்கை வாழுபவர்களுக்கும், சகல சுமைகளையும் முடிப்பவர்களுக்கும், இத்தகைய சதா பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும், பாக்கியத்தை அருள்பவரான தந்தையிடமிருந்து அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா தாதிகளைச் சந்திக்கிறார்:
காலம் வேகமான கதியில் சென்று கொண்டிருக்கிறது. காலம் வேகமான கதியில் செல்வதைப் போன்று, சகல பிராமணர்களும் வேகமாகப் பறக்கிறார்கள். நீங்கள் மிகவும் இலேசானவர்களாக, இரட்டை லைற் ஆனவர்களாக ஆகிவிட்டீர்களா? மற்றவர்களைப் பறக்கச் செய்ய வேண்டிய விசேடமான சேவை இப்போது உள்ளது. இந்த முறையில் நீங்கள் மற்றவர்களைப் பறக்கச் செய்கிறீர்களா? எந்த வழிமுறையால் நீங்கள் அனைவரையும் பறக்கச் செய்யப் போகிறீர்கள்? வகுப்புகளைச் செவிமடுப்பதன் மூலம், அவர்கள் வகுப்புக்களை எடுப்பவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்கள் எந்தவொரு தலைப்பை ஆரம்பித்தாலும், அந்தத் தலைப்பை நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னரே, அவர்களிடம் சகல குறிப்புகளும் அதைப் பற்றி இருக்கும்! எனவே, எந்த வழிமுறையைப் பயன்படுத்தி அனைவரையும் பறக்கச் செய்வது என்பதற்கு நீங்கள் திட்டம் இட்டீர்களா? அனைவரையும் இலேசாக்குவதற்கு ஒரு வழிமுறை தேவைப்படுகிறது. சுமைகளே உங்களை மேலேயும் கீழேயும் செல்ல வைக்கின்றன. சிலருக்கு ஒரு வகையான சுமை உள்ளது. ஏனையோருக்கு வேறொரு வகையான சுமை உள்ளது. அது உங்களின் சொந்த சம்ஸ்காரங்களின் சுமையோ அல்லது ஒன்றுகூடலின் சுமையோ, எந்தவொரு சுமையும் உங்களைப் பறப்பதற்கு அனுமதிக்காது. இப்போது, சிலரால் பறக்கக்கூடியதாக இருந்தாலும், அது மற்றவர்களின் சக்தியாலேயே ஆகும். உதாரணமாக, நீங்கள் ஒரு பொம்மையைப் பறக்கச் செய்யும்போது, என்ன நிகழும்? அது மேலே சென்று, பின்னர் கீழே வருகிறது. அது நிச்சயமாகப் பறக்கும். ஆனால், அது எல்லா வேளையும் பறப்பதில்லை. இப்போது, பிராமண ஆத்மாக்கள் அனைவரும் பறந்தால் மட்டுமே, ஏனைய ஆத்மாக்கள் அனைவரையும் பறக்கச் செய்து, அவர்களைத் தந்தைக்கு நெருக்கமாகக் கொண்டுவர முடியும். மற்றவர்களையும் பறக்கச் செய்வதற்கும், நீங்களும் அதேவேளை பறப்பதற்கும் வேறு எந்தவொரு வழிமுறையும் கிடையாது. வழிமுறையாலேயே பறப்பதன் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. எத்தனை பணிகள் பூர்த்தியாக்கப்படவேண்டியுள்ளது? உங்களிடம் இன்னமும் எவ்வளவு நேரம்; உள்ளது?
இப்போது, குறைந்தபட்சம் முதலில் 900000 பிராமணர்கள் தேவைப்படுகிறார்கள். உண்மையில், எண்ணிக்கை பெரிதாகவே இருக்கும். ஆனால், நீங்கள் முழு உலகையும் ஆளும்போது, குறைந்தபட்சம் 900000 பேராவது இருக்க வேண்டும். காலத்திற்கேற்ப, மேன்மையான வழிமுறை தேவைப்படுகிறது. மேன்மையான வழிமுறையே மற்றவர்களைப் பறக்கச் செய்வதற்கான வழிமுறை ஆகும். இதற்கு ஒரு திட்டம் இடுங்கள். சிறிய ஒன்றுகூடல்களைத் தயாரியுங்கள். அவ்யக்த பாகம் ஆரம்பம் ஆகியதில் இருந்து பல வருடங்கள் கடந்துவிட்டன. சரீர ரூபத்தில் இருந்தும் அவ்யக்த ரூபத்தில் இருந்தும் பராமரிப்பை எடுப்பதில் அதிகளவு காலம் கடந்துவிட்டது. நீங்கள் இப்போது புதிதாய் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். பறப்பதும் பின்னர் கீழே வருவதுமான சக்கரம் இப்போது முடிந்துவிட்டது. 84 பிறவிகள் உள்ளன. 84 இன் சக்கரம் நினைவுகூரப்படுகிறது. எனவே, 1984 இல், நீங்கள் இந்தச் சக்கரத்தை முடித்தால் மட்டுமே, சுயதரிசனச் சக்கரம் தொலைவிலுள்ள ஆத்மாக்களை நெருக்கத்தில் கொண்டுவரும். அவர்கள் ஞாபகார்த்தமாக எதைக் காட்டியுள்ளார்கள்? அவர் எங்கேயோ இருந்தவண்ணம் சக்கரத்தை அனுப்பினார். அந்தச் சுயதரிசனச் சக்கரம் ஆத்மாக்களை நெருக்கமாகக் கொண்டுவந்தது. அவர் அங்கு செல்லவில்லை. ஆனால் தனது சக்கரத்தைப் பயன்படுத்தினார். எனவே, அந்தச் சுழற்சிகள் அனைத்தும் முடிந்தால் மட்டுமே உங்களால் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்ற முடியும். ஆகவே, இப்போது, 1984 ஆம் வருடத்தில், சகல எல்லைக்குட்பட்ட சக்கரங்களும் முடிவதற்காக இந்த வழிமுறையைப் பயன்படுத்துங்கள். இதையே நீங்கள் நினைத்தீர்கள், அப்படியல்லவா? அச்சா.
பாப்தாதா ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:
ஆசிரியர்கள் எவ்வாறாயினும் பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்களே. கருவியாகுவதே பறக்கும் ஸ்திதிக்குப் பயன்படுத்தும் வழிமுறை ஆகும். எனவே, கருவி ஆகுதல் என்றால், நாடகத்திற்கேற்ப, பறக்கும் ஸ்திதிக்கான வழிமுறையை நீங்கள் கண்டுள்ளீர்கள். நீங்கள் இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எப்போதும் வெற்றி பெறுகின்றன மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். கருவி ஆகுதல் என்றால் உயர்த்தியைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். எனவே, உயர்த்தியால் ஒரு விநாடியில் எங்கேயாவது செல்பவர்கள் பறக்கும் ஸ்திதியில் இருக்கிறார்கள். நீங்கள் கீழிறங்கும் ஸ்திதியில் இல்லை. நீங்கள் தளம்புவர்கள் இல்லை. நீங்கள் மற்றவர்களைத் தளம்புவதில் இருந்து பாதுகாப்பவர்கள். நீங்கள் நெருப்பின் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், அந்த நெருப்பையே அணைப்பவர்கள். எனவே, கருவியாக இருக்கும் வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றி பெறுங்கள். ஆசிரியராக இருத்தல் என்றால் கருவியாக இருக்கும் உணர்வைக் கொண்டிருப்பதாகும். கருவியாக இருக்கும் இந்த உணர்வானது நீங்கள் இயல்பாகவே சகல பலனையும் பெறச் செய்கிறது. அச்சா.
அவ்யக்த மேன்மையான வாசகங்கள்
கர்ம பந்தனத்தில் இருந்து விடுபட்டு, கர்மாதீத் ஆகவும் சரீரமற்றவராகவும் ஆகுங்கள்.
சரீரமற்ற நிலையை அல்லது கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, ‘எனது, எனது’ என்ற எல்லைக்குட்பட்ட எந்தவொரு சரீர உணர்வில் இருந்தும் விடுபடுங்கள். லௌகீக (உலகம் சார்ந்த) மற்றும் அலௌகீகச் (ஆன்மீகம்) செயல்களிலும் உறவுமுறைகளிலும் சுயநல நோக்கங்களில் இருந்து விடுபடுங்கள். உங்களின் கடந்த காலப் பிறவிகளின் செயல்களின் கர்மக்கணக்கில் இருந்து விடுபடுங்கள். உங்களின் தற்போதைய முயற்சிகளில் ஏற்படும் பலவீனத்தால் ஏற்படும் ஏதாவது வீணான சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்தில் இருந்தும் விடுபடுங்கள். சேவையில் இக்கட்டான சூழ்நிலை, ஒன்றுகூடல் அல்லது சடப்பொருள் உங்களின் ஆதியான அல்லது மேன்மையான ஸ்திதியை அசைத்தால், அது பந்தனத்தில் இருந்து விடுபட்ட ஸ்திதி இல்லை. இந்த பந்தனத்தில் இருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள். இந்தப் பழைய உலகில் உங்களின் இறுதிப் பழைய சரீரத்தின் எந்தவகையான நோயும் உங்களின் மேன்மையான ஸ்திதியைத் தளம்பச் செய்யக்கூடாது. இதில் இருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள். நோய் வருவது நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் உங்களின் ஸ்திதி தளம்பல் அடைதல் - பந்தனத்தில் அகப்பட்டிருப்பதன் அடையாளம் ஆகும். சுயத்தைப் பற்றிய எண்ணங்களையும் ஞானத்தைப் பற்றிய எண்ணங்களையும் கொண்டவராகி, நலம்விரும்பி ஆகுங்கள். சரீரத்தின் நோயைப் பற்றிய எண்ணங்களில் இருந்து விடுபடுங்கள். இதுவே கர்மாதீத் ஸ்திதி எனப்படுகிறது.
கர்மயோகியாகி, சதா எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்தும் பற்றற்றவர் ஆகுங்கள். எப்போதும் தந்தைமீது அன்புடையவர் ஆகுங்கள். இதுவே கர்மாதீத் மற்றும் சரீரமற்ற ஸ்திதி எனப்படுகிறது. கர்மாதீத் ஆகுதல் என்றால் செயல்களைச் செய்வதற்கு அப்பால் செல்லுதல் என்று அர்த்தமல்ல. செயல்களைச் செய்யாமல் விடாதீர்கள். ஆனால், எந்தவொரு செயலின் பந்தனத்திலும் அகப்பட்டுக் கொள்வதில் இருந்து பற்றற்றவர் ஆகுங்கள். பணி எத்தனை பெரியதாக இருந்தாலும், நீங்கள் பணி செய்வதைப் போன்று உணரப்படாமல், நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடுவது போன்றே புலப்பட வேண்டும். இக்கட்டான சூழ்நிலை எது வந்தாலும், ஓர் ஆத்மா உங்களுடன் கர்மக்கணக்குகளைத் தீர்ப்பதற்கு உங்கள் முன்னால் வந்தாலும், உங்களின் முன்னால் தொடர்ந்து சரீரத்தின் மூலமான கர்ம வேதனை ஏதாவது ஏற்பட்டாலும், எல்லைக்குட்பட்ட ஆசைகள் எவற்றில் இருந்தும் விடுபட்டிருங்கள். இதுவே சரீரமற்ற ஸ்திதி எனப்படுகிறது. நீங்கள் அந்தச் சரீரத்தில் இருந்தவண்ணம் செயற்களத்தில் உங்களின் புலனங்கங்களால் உங்களின் பாகத்தை நடித்துக்கொண்டிருப்பதனால், உங்களால் ஒரு விநாடியேனும் செயல்களைச் செய்யாமல் இருக்க முடியாது. எவ்வாறாயினும், செயல்களைச் செய்யும்போதே, கர்ம பந்தனத்திற்கு அப்பாற்பட்டிருத்தலே கர்மாதீத் மற்றும் சரீரமற்ற ஸ்திதி ஆகும். எனவே, பௌதீகப் புலன்களினூடாக கர்ம உறவுமுறைக்குள் வாருங்கள். ஆனால், எந்தவொரு கர்ம பந்தனத்தினாலும் கட்டப்படாதீர்கள். அழிகின்ற பலனைக் கொண்டுள்ள கர்மத்திற்கான ஏதாவதொரு ஆசையின் ஆதிக்கத்திற்கு உட்படாதீர்கள். ‘கர்மாதீத்’ என்றால் கர்மத்தின் ஆதிக்கத்திற்கு உட்படாமல், அதிபதியாக, அதிகாரியாக இருந்து உங்களின் பௌதீகப் புலன்களுடன் உறவுமுறையை ஏற்படுத்தி, குறுகிய கால ஆசைகளில் இருந்து பற்றற்றவராக இருந்தவண்ணம் உங்களின் புலனங்கங்களைச் செயற்பட வைப்பதாகும். அதிபதியான ஆத்மாவாகிய நீங்கள், செயல்களில் தங்கியிருக்கக்கூடாது. ஆனால், அதிகாரியாகி, தொடர்ந்து செயல்களைச் செய்யுங்கள். செயல்களைச் செய்யும் ஒருவராகச் செயல்களைச் செய்யுங்கள். இதுவே கர்மத்துடன் உறவுமுறையைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. கர்மாதீத் ஆத்மா உறவுமுறையையே கொண்டிருப்பார். பந்தனத்தை அல்ல.
‘கர்மாதீத்’ என்றால் அப்பால் செல்லுதல், அதாவது, சரீரத்தில் இருந்தும் சரீர உறவுகளில் இருந்தும், லௌகீக மற்றும் அலௌகீக உறவுகளுடனும் பந்தனங்களுடன் தொடர்புடைய உடைமைகளில் இருந்தும் பற்றற்றவராக இருத்தலாகும். ‘உறவுமுறை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், சரீரத்துடன் அல்லது சரீர உறவுமுறைகளுடன் தொடர்புடைய தங்கியிருத்தல் இருக்குமாயின், அது ஒரு பந்தனம் ஆகுகிறது. கர்மாதீத் ஸ்திதியில், கர்ம உறவுமுறைகளினதும் கர்ம பந்தனத்தினதும் இரகசியங்களை அறிந்திருப்பதனால், நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒருபோதும் குழப்பத்திற்கு உள்ளாக மாட்டீர்கள். இத்தகையதோர் ஆத்மா தனது கடந்த காலப் பிறவிக்கணக்குகள் எவற்றின் பந்தனத்தில் இருந்தும் விடுபட்டிருப்பார். கடந்த காலப் பிறவிகளின் கர்மக் கணக்குகளின் பின் விளைவாக, சரீரத்தில் ஏதாவது நோய் ஏற்பட்டால் அல்லது மனதில் ஏனைய ஆத்மாக்களின் சம்ஸ்காரங்களின் முரண்பாட்டுடன் இருந்தாலும், கர்மாதீத் ஆத்மா கர்ம வேதனையின் ஆதிக்கத்திற்கு உட்பட மாட்டார். ஆனால், அதிபதியாகி, அந்தக் கணக்கைத் தீர்த்து விடுவார். கர்மயோகியான இருந்து, கர்மவேதனையைத் தீர்த்தல், கர்மாதீத் ஆகுவதன் அடையாளம் ஆகும். யோகத்தினால், ஒரு புன்னகையுடன் அவர் கர்மவேதனையை சிலுவையில் அறையப்படுவதில் இருந்து ஒரு முள் போன்று ஆக்கி அதை அழித்து விடுவார். அதாவது, அவர் அந்தக் கர்மவேதனையை முடித்துவிடுவார். உங்களின் கர்மயோகா ஸ்திதியால் கர்மவேதனையை மாற்றக் கூடியதாக இருத்தலே கர்மாதீத் ஸ்திதி ஆகும். வீணான எண்ணங்கள், சில கர்ம பந்தனங்களின் சூட்சும இழைகள் ஆகும். கர்மாதீத் ஆத்மா ஒருவர் தீங்கான எதிலும் நல்லதையே அனுபவம் செய்வார். எது நிகழ்ந்தாலும், அது நன்மைக்கே என்றே இத்தகைய ஆத்மா கூறுவார். நான் நல்லவன். தந்தை நல்லவர். நாடகமும் நல்லதே. இந்த எண்ணம் பந்தனங்களை வெட்டுவதற்குக் கத்தரிக்கோல் போன்று செயற்படும். பந்தனங்கள் வெட்டப்பட்ட பின்னர், நீங்கள் கர்மாதீத் ஆகுவீர்கள்.
சரீரமற்ற ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, ஆசைகளின் அறிவில் இருந்து விடுபடுங்கள். எல்லைக்குட்பட்ட ஆசைகளில் இருந்து விடுபட்ட ஆத்மா, தந்தைக்குச் சமமாக அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் காமதேனுவாக இருப்பார்;. தந்தையின் பொக்கிஷக் களஞ்சியங்கள் எப்போதும் பொக்கிஷங்களால் நிறைந்திருப்பதைப்போன்று, எந்தவொரு பேறும் இல்லை என்று சொல்லாததைப் போன்று, எப்போதும் தந்தையைப் போன்று சகல பொக்கிஷங்களாலும் நிறைந்தவராக இருங்கள். உலகச் சக்கரத்தில் உங்களின் பாகத்தை நடிக்கும்போது, துன்பத்தின் பல சுழற்சிகளில் இருந்து விடுபட்டிருத்தலே ஜீவன்முக்திக்குரிய ஸ்திதி ஆகும். இத்தகையதொரு ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, சகல உரிமைகளையும் கொண்டவராக, உங்களின் பௌதீகப் புலன்களைச் செயற்பட வைக்கும் அதிபதியாக ஆகுங்கள். செயலைச் செய்யுங்கள். அந்தச் செயல் முடிவடைந்தவுடனேயே, பற்றற்றவர் ஆகுங்கள். இதுவே சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சி ஆகும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என மாற்றுவதன் மூலம், இலேசானவராகவும் ஒளியானவராகவும் ஆகிப் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.
இந்த அழிகின்ற சரீரமும் செல்வமும் பழைய மனமும் உங்களுடையவை அல்ல. நீங்கள் அவற்றைத் தந்தையிடம் கொடுத்துவிட்டீர்கள். ‘அனைத்தும் உங்களுடையது’ என்பதே உங்களின் முதல் எண்ணம் ஆகும். தந்தைக்கு இதனால் எந்தவித நன்மையும் ஏற்படுவதில்லை. ஆனால் நீங்களே நன்மை பெறுகிறீர்கள். ஏனெனில், ‘எனது’ என நீங்கள் கூறும்போது, அதில் அகப்பட்டுக் கொள்கிறீர்கள். ஆனால், ‘உங்களுடையது’ எனக்கூறும்போது, நீங்கள் பற்றற்றவர் ஆகுகிறீர்கள். ‘எனது’ எனக் கூறுவதன் மூலம் உங்களுக்குள் சுமை ஏற்படுகிறது. ஆனால், ‘உங்களுடையது’ எனக் கூறும்போது, நீங்கள் இலேசானவராகவும் ஒளியானவராகவும் நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் ஆகுகிறீர்கள். ஒருவர் இலேசானவராக ஆகும்வரைக்கும், அவரால் அதியுயர்ந்த ஸ்திதியை அடைய முடியாது. இலேசாக இருப்பவர்களால் மட்டுமே தமது பறக்கும் ஸ்திதியினூடாக ஆனந்தத்தை அனுபவம் செய்ய முடியும். இலேசாக இருப்பதிலேயே மகிழ்ச்சி ஏற்படுகிறது.சுலோகம்:
சக்திசாலி ஆத்மா என்பவர் எந்தவொரு நபரின் அல்லது சடப்பொருளின் ஆதிக்கத்திற்கு உட்படாதவர் ஆவார்.