09.12.18 Avyakt Bapdada Tamil Lanka Murli 07.03.84 Om Shanti Madhuban
ஓய்வெடுக்கும் ஸ்திதியில் உள்ள கர்மாதீத் ஆத்மாக்கள் மட்டுமே தீவிர வேகத்தில் சேவைக்குக் கருவிகள் ஆகுவார்கள்.
மதுவனம் ஆசீர்வாதங்களின் பூமி ஆகும். அத்துடன் இது சக்திவாய்ந்த இடமும் மேன்மையான சகவாசத்திற்கான இடமும் இலகு மாற்றத்திற்கான இடமும், நீங்கள் சகல பேறுகளையும் அனுபவம் அடையச் செய்யும் இடமும் ஆகும். இத்தகைய இடத்திற்கு வந்திருக்கும் நீங்கள், உங்களை நிரம்பியவர்களாக, அதாவது, அனைத்தினாலும் நிறைந்தவர்களாக அனுபவம் செய்கிறீர்களா? எதிலும் பேறுகள் குறைவாக இல்லையல்லவா? நீங்கள் பெற்ற பொக்கிஷங்கள் அனைத்தையும் எல்லா வேளைக்கும் கிரகித்துவிட்டீர்களா? நீங்கள் இங்கிருந்து உங்களின் சேவை இடங்களுக்குத் திரும்பிச் சென்றபின்னர், நீங்கள் மகாதானிகளாகி இந்தச் சக்திகளையும் சகல பேறுகளையும் அனைவருக்கும் தானம் செய்வதற்குக் கருவிகள் ஆகுவீர்கள் என நினைக்கிறீர்களா? நீங்கள் உங்களை எல்லா வேளைக்கும் தடைகளை அழிப்பவர்களாகவும் தீர்வுகளின் சொரூபங்களாகவும் அனுபவம் செய்கிறீர்களா? உங்களின் சொந்தத் தடைகள் மட்டுமன்றி, ஏனைய ஆத்மாக்களுக்கும் தீர்வுகளின் சொரூபங்கள் ஆகவேண்டும்.
காலத்திற்கேற்ப, பிராமண ஆத்மாக்களான நீங்கள் இப்போது பிரச்சனைகளின் ஆதிக்கத்திற்கு உட்படுவதற்கு அப்பால் சென்றுவிட்டீர்கள். பிரச்சனைகளின் ஆதிக்கத்திற்கு உட்படுதல் என்றால் குழந்தைப்பருவ நிலை என்று அர்த்தம். பிராமண ஆத்மாக்களின் குழந்தைப்பருவ நிலை இப்போது முடிவிற்கு வந்துவிட்டது. உங்களின் வாலிப நிலையில், மாயையை வென்றவர்கள் ஆகும் வழிமுறையால், நீங்கள் மகாவீர்கள் ஆகினீர்கள். உங்களின் சேவையைப் பொறுத்தவரை, நீங்கள் ‘உலகை ஆளுபவர்கள்’ ஆகினீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் பலருக்கும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் மகாதானிகளாகவும் ஆகினீர்கள். உங்களுக்குப் பலவகையான அனுபங்கள் ஏற்பட்டன. நீங்கள் மகாராத்திகள் ஆகினீர்கள். நீங்கள் இப்போது உங்களின் ஓய்வுநிலைக்குரிய கர்மாதீத் ஸ்திதியை அடையும் நேரத்திற்கு வந்துவிட்டீர்கள். ஓய்வுநிலையின் கர்மாதீத் ஸ்திதியை அடைவதன் மூலம் மட்டுமே உங்களால் உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரையும் அரைக்கல்பத்திற்கு கர்ம பந்தனத்தில் இருந்து விடுவித்து, அவர்களை முக்திக்கு அனுப்ப முடியும். விடுதலை அடைந்துள்ள ஆத்மாக்களால் மட்டுமே ஆத்மாக்களைத் தமது முக்திக்கான ஆஸ்தியை ஒரு விநாடியில் தந்தையிடமிருந்து பெறச் செய்ய முடியும். கர்மாதீத் ஆகிய, ஓய்வு ஸ்திதியில் இருக்கும் மகாதானிகளும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களுமான குழந்தைகளான உங்களிடம் பெரும்பாலான ஆத்மாக்கள் முக்தியை யாசித்துக் கொண்டு வருவார்கள். உதாரணமாக, ஆலயங்களில் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் முன்னால் சென்று, மக்கள் சந்தோஷத்தையும் அமைதியையும் வேண்டுகிறார்கள். சிலர் யாத்திரை ஸ்தலங்களுக்குச் சென்று எதற்காவது பிரார்த்திக்கிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவண்ணம் எதையாவது வேண்டுகிறார்கள். ஒவ்வொருவரின் கொள்ளளவிற்கேற்ப, தங்களால் செல்லக்கூடிய இடத்திற்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்களின் பலன் என்ற பேறு அவர்களின் சக்திக்கேற்பவே அமைகிறது. சிலர் தொலைவில் இருந்தவண்ணம் தமது இதயபூர்வமாகச் செய்கிறார்கள். ஆனால் சிலரோ யாத்திரை ஸ்தலங்களில் அல்லது ஆலயங்களில் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்றும் பகட்டிற்காக இதைச் செய்கிறார்கள். அவர்கள் சுயநல நோக்கங்களுக்காகவே அவ்வாறு செய்கிறார்கள். இந்தக் கணக்குகளுக்கேற்ப, அவர்களின் செயல்களும் உணர்வுகளும் எவ்வாறு உள்ளனவோ, அதற்கேற்பவே அவர்கள் அவற்றின் பலனைப் பெறுவார்கள். இப்போது, காலத்திற்கேற்ப, மகாதானிகளாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் உள்ள உயிர்வாழும் விக்கிரகங்களின் முன்னால் வந்து அவர்கள் பிரார்த்திப்பார்கள். சிலர் சேவைஸ்தலங்களுக்கும் ஆலயங்களுக்குச் செல்வதைப் போன்றே செல்வார்கள். சிலர் மகாயாத்திரை ஸ்தலமான மதுவனத்தை வந்தடைவார்கள். சிலர் வீட்டில் இருந்தவாறே காட்சிகளைப் பெறுவார்கள். தமது தெய்வீகப் புத்திகளால் வெளிப்படுத்துதலை அனுபவம் செய்வார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் இங்கு வராவிட்டாலும், அவர்கள் தமது அன்புடனும் திடசங்கற்பமான எண்ணங்களுடனும் பிரார்த்திப்பார்கள். அவர்கள் தமது மனங்களில் உயிர்வாழும் தேவதைகளான உங்களை அழைத்து, முக்தி என்ற ஆஸ்தியின் ஒரு துளியைத் தரும்படி கேட்பார்கள். நீங்கள் ஆத்மாக்கள் அனைவரும் தமது ஆஸ்தியைப் பெறச் செய்யும் பணியைக் குறுகிய காலத்தில், மிக விரைவாகச் செய்ய வேண்டும். விநாசத்திற்கான கருவிகள் தெளிவாகிக் கொண்டு வருவதனால் விரைவான வேகத்தில் நிறைவு பெறுவதற்குக் கருவிகள் ஆகுவதைப் போன்று, ஆசீர்வாதங்களை அருள்பவர்களும் மகாதானிகளுமான ஆத்மாக்களான நீங்கள், உங்களின் கர்மாதீத் தேவதை ரூபங்களாலும் உங்களின் சம்பூரணமான சக்திவாய்ந்த ரூபங்களாலும் ஆத்மாக்கள் அனைவரினதும் பிரார்த்தனைகளுக்குப் பதில் அளித்து, அவர்களின் முக்திக்கான ஆஸ்தியைப் பெறச் செய்வீர்கள். இந்தப் பணியை விரைவான வேகத்தில் செய்வதற்கு, நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்களாக, சகல சக்திகளின் பொக்கிஷக்களஞ்சியங்களாக, ஞானத்தின் பொக்கிஷக் களஞ்சியங்களாக, நினைவின் சொரூபங்களாகத் தயாராகிவிட்டீர்களா? விநாசத்திற்கான பொறிமுறையும் ஆசீர்வாதங்களுக்கான பொறிமுறையும் ஒரே வேளையில், விரைவாக ஒன்றுசேர்ந்து செயற்படும்.
இப்பொழுதில் இருந்தே நீங்கள் நீண்ட காலத்திற்கு என்றும் தயாரானவர்கள் ஆகவேண்டும். தீவிர வேகத்தைக் கொண்டிருப்பவர்கள், எல்லா வேளைக்கும் கர்மாதீத் ஆகவும் தீர்வுகளின் சொரூபங்களாகவும் இருப்பதைப் பயிற்சி செய்யாவிடின், தீவிர வேகத்திற்கான தேவை ஏற்படும் வேளையில், கொடுப்பவர்களாக இருப்பதற்குப் பதிலாக, நீங்கள் வெறுமனே அவதானிப்பவர்களாகவே இருப்பீர்கள். நீண்ட காலத்திற்குத் தீவிர முயற்சியாளர்களாக இருப்பவர்களால் மட்டுமே தீவிர சேவைக்குக் கருவிகள் ஆகமுடியும். இது, சகல பந்தனங்களில் இருந்தும் விடுபட்டிருக்கும், பற்றற்றவராக இருந்து தந்தையுடன் தீவிர சேவை செய்யும் ஓய்வுநிலைக்குரிய அழகான ஸ்திதி ஆகும். எனவே, இது இப்போது கொடுப்பவர்கள் ஆகுவதற்கான நேரம் ஆகும். இது உங்களுக்காக அல்லது பிரச்சனைகளுக்காக எடுத்துக் கொள்ளும் நேரம் அல்ல. எப்போதும் உங்களின் சொந்தப் பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொண்டிருந்த காலம் இப்போது கடந்துவிட்டது. பிரச்சனைகளும் உங்களின் சொந்தப் பலவீனங்களின் படைப்பே ஆகும். வேறொருவரிடம் இருந்து அல்லது குறிப்பிட்ட சூழ்நிலைகளிடமிருந்து வருகின்ற எந்தவொரு பிரச்சனையும் உண்மையில் உங்களின் சொந்தப் பலவீனத்தின் பெறுபேறே ஆகும். ஏதாவது பலவீனம் இருக்கும்போது, பிரச்சனைகளும் யாராவதொருவர் மூலம் அல்லது சூழ்நிலைகள் மூலம் தாக்கும். பலவீனம் இல்லாவிட்டால், பிரச்சனைகளால் தாக்க முடியாது. வருகின்ற பிரச்சனைகளும் உங்களைத் தீர்வுகளின் சொரூபமாக அனுபவம் பெறச் செய்யும். பிரச்சனைகளை அனுபவிக்கும் ஒருவராக அல்ல. அது உங்களின் சொந்தப் பலவீனங்களால் உருவாக்கப்பட்டுள்ள மிக்கி மௌஸ் ஆகும். இப்போது நீங்கள் அனைவரும் சிரிக்கிறீர்கள். ஆனால் அது வரும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்களே ஒரு மிக்கி மௌஸ் ஆகிவிடுகிறீர்கள். அதனுடன் விளையாடுங்கள். ஆனால் பயப்படாதீர்கள். எவ்வாறாயினும், அவையும் குழந்தைப்பருவ விளையாட்டுக்களே. எதையாவது உருவாக்கி, உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். அந்த நிலைக்கு அப்பால் செல்லுங்கள். ஓய்வு நிலையில் இருப்பவர்கள் ஆகுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?
காலம் உங்களுக்கு என்ன சொல்கிறது? தந்தை உங்களுக்கு என்ன சொல்கிறார்? இப்போதும் நீங்கள் பொம்மைகளுடன் விளையாடுவதை விரும்புகிறீர்களா? கலியுக மக்களின் படைப்பு எதைப் போன்று ஆகியுள்ளது? நீங்கள் முரளியில் இதைச் செவிமடுக்கிறீர்கள், அல்லவா? அவர்கள் தேள்களையும் பல்லிகளையும் போன்று ஆகியுள்ளார்கள். எனவே, பலவீனமான பிரச்சனைகள் என்ற படைப்பும் உங்களைத் தேள்களையும் பல்லிகளையும் போன்று கொட்டுகிறது. அதனால் நீங்கள் சக்தியற்றவர்கள் ஆகுகிறீர்கள். ஆகவே, நீங்கள் நிரம்பியவர்கள் ஆகியபின்னர் மதுவனத்தில் இருந்து திரும்பிச் சென்றதும், உங்களின் சொந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் முடிக்கும் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். எவ்வாறாயினும், நீங்கள் வேறு எவருக்கும் ஒரு பிரச்சனையாகவும் ஆகக்கூடாது. நீங்கள் எப்போதும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தீர்வுகளின் சொரூபமாகவே இருப்பீர்கள். உங்களுக்குப் புரிகிறதா?
நீங்கள் அதிகளவில் செலவழித்து, அதிகளவு முயற்சி செய்து இங்கு வந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் இலகுவாகவும் நிலையாகவும் தொடர்ந்து உங்களின் திடசங்கற்பமான எண்ணங்களுடன் இந்த முயற்சிக்கான பலனைப் பெறுவீர்கள். தூய்மை என்ற பிரதான விடயத்திற்கு நீங்கள் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதைச் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும் அல்லது நீங்கள் இறக்கவே வேண்டியிருந்தாலும், நீங்கள் இந்த சத்தியத்தில் உறுதியாக இருப்பீர்கள். உங்களின் கனவுகளில் அல்லது எண்ணங்களில் சிறிதளவு தளம்பல் ஏற்பட்டாலும் நீங்கள் அதைப் பாவமாகவே கருதுவீர்கள். அதேபோன்று, ஒரு பிரச்சனையின் சொரூபமாகுதல் அல்லது ஒரு பிரச்சனையின் ஆதிக்கத்திற்கு உட்படுதலும் பாவக்கணக்கிலேயே சேரும். பாவத்தின் வரைவிலக்கணமும் புரிந்து கொள்ளுதலும்: எங்கு பாவம் உள்ளதோ, அங்கு தந்தையின் நினைவு இருக்காது. அவரின் சகவாசம் இருக்காது. பாவமும் பாபாவும் இரவும் பகலையும் போன்றது. எனவே, உங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படும்போது, அந்த வேளையில் நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களா? நீங்கள் அவரிடமிருந்து அப்பால் செல்கிறீர்கள், அல்லவா? அதன்பின்னர், நீங்கள் குழப்பத்திற்குள்ளாகித் தந்தையை நினைவு செய்கிறீர்கள். ஆனால், ஓர் உரிமையைக் கொண்டவராக அன்றி, ஒரு பக்தராகவே அவரை நினைவு செய்வீர்கள். எனக்கு சக்தி கொடுங்கள்! எனக்கு ஆதாரத்தைக் கொடுங்கள்! என்னை அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள்! நீங்கள் அவரைச் சகல உரிமைகளையும் கொண்ட ஒருவராக அல்லது உங்களின் சகபாடியின் ரூபத்தில் அல்லது சமமானவராக நினைவு செய்ய மாட்டீர்கள். எனவே, நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் இப்போது சம்பூரணத்திற்கான விழாவைக் கொண்டாட வேண்டும். நீங்கள் சகல பிரச்சனைகளையும் முடித்து வைக்கும் விழாவைக் கொண்டாடுவீர்கள், அல்லவா? அல்லது, நீங்கள் வெறுமனே நடனம் ஆடுவீர்களா? நீங்கள் மிக நல்ல நாடகங்களை நடிக்கிறீர்கள். இப்போது இந்த விழாவைக் கொண்டாடுங்கள். ஏனெனில், சேவைக்கு அதிகளவு நேரம் தேவைப்படுகிறது. அங்குள்ள மக்கள் உங்களை அழைக்கிறார்கள். ஆனால் நீங்களோ இங்கு தளம்பல் அடைகிறீர்கள். இது நல்லதல்ல, அப்படியல்லவா? அவர்கள் ஆசீர்வாதங்களை அருள்பவர்களும் மகாதானிகளுமான உங்களை அழைக்கிறார்கள். ஆனால் நீங்கள் குழப்பமான மனோநிலையுடன் (ழகக அழழன) அழுகிறீர்கள். அவ்வாறிருந்தால் எவ்வாறு நீங்கள் அவர்களுக்குப் பலனைக் கொடுப்பீர்கள்? உங்களின் சூடான கண்ணீர்த்துளிகள் அவர்களையும் சென்றடையும். அவர்கள் அதனால் தொடர்ந்து பயப்படுவார்கள். இப்போது, நீங்கள் தந்தை பிரம்மாவுடன் சேர்ந்திருக்கும் விசேடமான, பூஜிக்கத்தகுதிவாய்ந்த தேவர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். அச்சா.
நீண்ட காலத்திற்கு தீவிர முயற்சியாளர்களாக இருப்பவர்களுக்கும், தீவிர சேவைக்கு என்றும் தயாராக இருக்கும் குழந்தைகளுக்கும், உலகை மாற்றுபவர்களாக இருந்து பிரச்சனைகளை மாற்றித் தீர்வுகளின் சொரூபங்களாக இருக்கும் குழந்தைகளுக்கும், சதா கருணைநிறைந்தவர்களாகவும் பக்த ஆத்மாக்களுடனும் பிராமண ஆத்மாக்களுடனும் அன்பாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், எப்போதும் பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்டிருப்பவர்களுக்கும், கர்மாதீத் ஸ்திதி என்ற ஓய்வுநிலையில் இருப்பவர்களுக்கும், சம்பூரணமான குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா நியூயோர்க் குழுவைச் சந்திக்கிறார்:
நீங்கள் அனைவரும் உங்களைத் தந்தையின் விசேடமான ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? தந்தை எப்போதும் மேன்மையானவராக இருப்பதைப் போன்று, குழந்தைகளான நீங்களும் தந்தையைப் போன்றே மேன்மையானவர்கள் என்ற சந்தோஷம் எப்போதும் உங்களுக்கு இருக்கிறதா? இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், உங்களின் செயல்களின் அனைத்தும் இயல்பாகவே மேன்மையானவை ஆகும். உங்களின் எண்ணங்கள் எத்தகையதோ, அவ்வாறே உங்களின் செயல்களும் இருக்கும். எனவே, நீங்கள் உங்களின் நிலையான விழிப்புணர்வுடன் மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். சதா இந்த மேன்மையான பிறப்பின் சந்தோஷத்தைத் தொடர்ந்து கொண்டாடுங்கள். கல்பம் முழுவதிலும், நீங்கள் கடவுளின் குழந்தையாகும் வகையில் உங்களுக்கு இத்தகைய மேன்மையான பிறப்பு இருக்கமாட்டாது. 5000 வருடங்களில், இந்த வேளையில் மட்டுமே நீங்கள் இந்த அலௌகீகப் பிறப்பைப் பெறுகிறீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் ஆத்மாக்களின் குடும்பத்திற்குச் செல்வீர்கள். ஆனால், இந்த வேளையில் நீங்கள் பரமாத்மாவின் குழந்தைகள். எனவே, எப்போதும் இந்தச் சிறப்பியல்பை நினைவு செய்யுங்கள். நீங்கள் ஒரு மேன்மையான குடும்பத்தையும் மேன்மையான தர்மத்தையும் மேன்மையான செயல்களையும் கொண்டுள்ள பிராமணர் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். ஒவ்வோர் அடியிலும் தொடர்ந்து இந்த விழிப்புணர்வுடன் முன்னேறுங்கள். உங்களின் முயற்சிகளின் வேகம் சதா தீவிரமாக இருக்க வேண்டும். பறக்கும் ஸ்திதியானது சதா உங்களை மாயையை வென்றவராகவும் பந்தனங்களில் இருந்து விடுபட்டவராகவும் ஆக்கும். நீங்கள் தந்தையை உங்களுக்குச் சொந்தமானவர் ஆக்கியிருக்கும்போது, வேறு என்ன எஞ்சியுள்ளது? ஒரேயொருவரே எஞ்சியுள்ளார். அனைத்தும் ஒரேயொருவரில் அமிழ்ந்துள்ளது. ஒரேயொருவரின் நினைவில் இருப்பதன் மூலமும், நிலையான ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதன் மூலமும், நீங்கள் தொடர்ந்து அமைதியையும் சக்தியையும் சந்தோஷத்தையும் அனுபவம் செய்வீர்கள். எங்கு ஒரேயொருவர் இருக்கிறாரோ, அங்கு நீங்கள் முதல் இலக்கத்தைப் பெறுவீர்கள். எனவே, நீங்கள் அனைவரும் முதல் இலக்கத்தினர், அல்லவா? ஒரேயொருவரை நினைப்பதா அல்லது பலரை நினைப்பதா இலகுவானது? இந்தப் பயிற்சியையே தந்தை உங்களைச் செய்ய வைக்கிறார். வேறு எதுவும் இல்லை. பத்து விடயங்களை எடுப்பது இலகுவானதா அல்லது ஒன்றை மட்டும் எடுப்பது இலகுவானதா? எனவே, ஒரேயொருவரின் நினைவைக் கிரகிப்பது உங்களின் புத்திக்கு மிகவும் இலகுவாக இருக்கும். உங்கள் அனைவரின் இலக்கும் மிகவும் நல்லது. இலக்கு நல்லதாக இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து நல்ல தகைமைகளை விருத்தி செய்வீர்கள். அச்சா.
அவ்யக்த மேன்மையான வாசகங்கள் - எண்ணத்தின் சக்தியைக் கட்டுப்படுத்துங்கள்
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப, உங்களின் குளிர்மைச் சக்தியால், உங்களின் எண்ணங்களினதும் வார்த்தைகளினதும் வேகத்தை மாற்றி, அவற்றைக் குளிர்மையானதாகவும் பொறுமையானதாகவும் மாற்றுங்கள். உங்களின் எண்ணங்களின் வேகம் மிக விரைவானதாக இருந்தால், நீங்கள் அதிகளவு நேரத்தை வீணாக்குவதுடன் உங்களால் அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியாது. எனவே, குளிர்மைச் சக்தியைக் கிரகியுங்கள். உங்களை வீணானவற்றில் இருந்தும் விபத்துக்களில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் ‘ஏன்? என்ன? இது இவ்வாறு இருக்கக்கூடாது’ என்று கேட்கும் வீணானவற்றின் விரைவான வேகத்தில் இருந்து விடுபடுவீர்கள். சிலவேளைகளில், சில குழந்தைகள் பெரிய விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள். வீணான எண்ணங்கள் மிகுந்த விசையுடன் வருவதனால், அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதன்பின்னர், ‘நான் என்ன செய்வது? அது நிகழ்ந்துவிட்;டது!’ என அவர்கள் கூறுகிறார்கள். அவர்களால் தங்களையே கட்டுப்படுத்த முடிவதில்லை. அவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் அந்த வீணானவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கிரகிக்க வேண்டும். ஒரு சக்திவாய்ந்த எண்ணத்திற்குப் பலமில்லியன் மடங்கு பலனை நீங்கள் பெறுவதைப் போன்று, ஒரு வீணான எண்ணத்தின் பலன், சோகமும் மனவிரக்தியும், உங்களின் சந்தோஷத்தை இழப்பதும் ஆகும். நீங்கள் அந்த ஒன்றுக்குப் பதிலாக இவை அனைத்தையும் பெறுகிறீர்கள். உங்களின் நாளாந்த சபையைக் கூட்டி, உங்களின் பணியாளர்களான புலன்களிடம் அவை எவ்வாறு செயற்படுகின்றன எனக் கேளுங்கள். உங்களிடம் உள்ள சூட்சுமமான சக்திகள் அனைத்தும், அவை அமைச்சர்களாகவோ அல்லது மூத்த அமைச்சர்களாகவோ இருந்தாலும், உங்களின் கட்டளைகளுக்கேற்ப அவற்றைச் செயற்பட வையுங்கள். இப்பொழுதில் இருந்தே, உங்களின் இராஜசபை மிகச்சரியாகச் செயற்பட்டால், நீங்கள் தர்மராஜின் சபைக்குச் செல்லவேண்டியிராது. தர்மராஜூம் உங்களை வரவேற்பார். எவ்வாறாயினும், இப்போது உங்களிடம் கட்டுப்படுத்தும் சக்தி இல்லாவிட்டால், இறுதியில் உங்களின் தண்டப்பணத்தைக் கட்டுவதற்காக நீங்கள் தர்மராஜ்புரிக்குச் செல்ல வேண்டியிருக்கும். தண்டப்பணமே தண்டனையாக இருக்கும்;. தெளிவானர்கள் ஆகுங்கள். உங்களிடம் குற்றப்பணம் அறவிடப்படமாட்டாது.
நிகழ்காலமே எதிர்காலத்தின் கண்ணாடி ஆகும். உங்களின் கண்ணாடி எனும் நிகழ்காலத்தினூடாக, உங்களால் உங்களின் சொந்த எதிர்காலத்தை மிகத் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கும். உங்களின் எதிர்கால இராச்சியத்திற்கான சகல உரிமைகளையும் பெறுவதற்கு, எந்தளவிற்கு உங்களின் மீது உங்களுக்கு ஆளும் சக்தி உள்ளது எனச் சோதித்துப் பாருங்கள். உங்களின் சூட்சும சக்திகளான உங்களின் மனம், உங்களின் புத்தி மற்றும் உங்களின் சம்ஸ்காரங்களில் உங்களுக்கு முழு உரிமைகளும் இருக்க வேண்டும். இந்தச் சக்திகளே உங்களின் விசேடமான பணியாளர்கள். இந்த மூன்று விசேட சக்திகளும் உங்களின் இராஜரீகப் பணியாளர்கள். இவையே உங்களின் பிரதானமான ஒத்துழைக்கும் பணியாளர்கள் ஆகும். இராச்சியத்தின் உரிமை உடைய அரசனான, ஆத்மாவான நீங்கள் கொடுக்கும் சமிக்ஞைகளுக்கேற்ப இந்த மூன்று பணியாளர்களும் வேலை செய்தால், உங்களின் இராச்சியம் சதா சரியாக இயங்கும். அரசன் தானே பணிகளைச் செய்வதில்லை. அவர் மற்றவர்கள் மூலமே அவற்றைச் செய்விப்பார். அதைச் செய்பவர் அந்த அரசனின் சேவகனாக இருப்பார். அரசனின் பணியாளர்கள் அவருக்கு நன்றாகப் பணி செய்யாவிட்டால், அந்த இராச்சியம் ஆடத் தொடங்கிவிடும். ஆத்மாவான நீங்கள் செய்விக்கிறீர்கள். விசேடமான திரிமூர்த்தி சக்திகளே பணியைச் செய்கின்றன. அனைத்திற்கும் முதலில், நீங்கள் அவர்களின் மீது ஆளும் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது உங்களின் பௌதீகப் புலன்கள் அதற்கேற்ப இயல்பாகவே சரியான பாதையில் செயற்படும். உங்களின் மனம் தனது சொந்தக் கட்டளைகளுக்கேற்ப செயற்படக்கூடாது. உங்களின் புத்தியின் வேறுபிரித்தறியும் சக்தி தளம்பக்கூடாது. உங்களின் சம்ஸ்காரங்கள் ஆத்மாவான உங்களை நடனமாடச் செய்யக்கூடாது. அப்போதே உங்களிடம் ஒரு தர்மம், ஓர் இராச்சியம் உள்ளது என்று கூறமுடியும். இத்தகைய கட்டுப்படுத்தும் சக்தியைக் கிரகியுங்கள்.
திறமைச் சித்தி எய்தி, இராச்சியத்திற்கான சகல உரிமைகளையும் கோருவதற்கு, நீங்கள் உங்களின் மனமெனும் சூட்சுமமான சக்தியில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். உங்களின் மனம் உங்களின் கட்டளைகளுக்கேற்ப அனைத்தையும் செய்ய வேண்டும். நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களின் கட்டளைகளில் இருக்க வேண்டும். நீங்கள் ‘நிறுத்து!’ என்று சொன்னதும் அது நிற்கவேண்டும். நீங்கள் ‘சேவையைப் பற்றி நினை!’ என்று சொன்னதும், அது சேவையில் ஈடுபட வேண்டும். நீங்கள் ‘பரந்தாமத்தைப் பற்றி நினை!’ என்று சொன்னதும், நீங்கள் பரந்தாமத்தைச் சென்றடைய வேண்டும். இப்போது, இத்தகைய கட்டுப்படுத்தும் சக்தியை அதிகரியுங்கள். அற்ப விடயங்களில் போராடி நேரத்தை வீணாக்காதீர்கள். கட்டுப்படுத்தும் சக்தியைக் கிரகியுங்கள். நீங்கள் உங்களின் கர்மாதீத் நிலைக்கு நெருக்கமாகுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் அமைதிநிறைந்தவை ஆகுவதுடன், ஒரேயொரு தந்தையைச் சந்திக்கும் அனுபவத்திற்கான ஓர் எண்ணத்தை மட்டும் கொண்டிருக்கும்போது, நீங்களும் தந்தையும் மட்டுமே இருக்கும்போது, அது சக்திவாய்ந்த யோகம் எனப்படுகிறது. இதற்கு, உங்களிடம் அமிழ்த்தும் சக்தியும், விஸ்தாரத்தில் இருந்து விடுபடும் சக்தியும் இருக்க வேண்டும். நீங்கள் ‘நிறுத்து!’ என்று சொன்னதும், உங்களின் எண்ணங்கள் நிற்க வேண்டும். உங்களால் பலமான தடையைப் (பிரேக்) பிரயோகிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பலவீனமானது அல்ல. உங்களிடம் சக்திவாய்ந்த தடையும் சக்திவாய்ந்த கட்டுப்பாடும் இருக்க வேண்டும். ஒரு விநாடியை விட அதிக நேரம் எடுக்குமாயின், உங்களின் அமிழ்த்தும் சக்தி பலவீனமாக உள்ளது. இறுதியில், உங்களின் இறுதிப் பரீட்சைத் தாளில் ஒரேயொரு பரீட்சையே இருக்கும்: ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி இடுங்கள்! இதன் அடிப்படையிலேயே உங்களுக்கு ஓர் இலக்கம் கொடுக்கப்படும். ஒரு விநாடியை விட அதிக நேரம் எடுத்தால், நீங்கள் தோற்றுவிடுவீர்கள். ஒரேயொரு தந்தையும் நீங்களும் மட்டுமே இருக்க வேண்டும். உங்களுக்கு இடையே மூன்றாவது நபர் இருக்கக்கூடாது. ‘நான் இதைச் செய்ய வேண்டும். நான் இதைப் பார்க்க வேண்டும். இது ஏன் நிகழுகிறது? என்ன நிகழ்ந்தது?’ என்ற எண்ணங்கள் தோன்றக்கூடாது. இத்தகைய எண்ணங்கள் ஏற்படுமாயின், நீங்கள் தோற்றுவிடுவீர்கள். ‘ஏன்?’ அல்லது ‘என்ன?’ என்ற வரிசையை நீங்கள் உருவாக்கினால், அந்த வரிசையை நிறுத்துவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். உங்களின் படைப்பை நீங்கள் உருவாக்கிய பின்னர், அதைப் பராமரிக்க வேண்டியிருக்கும். அதைப் பராமரிப்பதில் இருந்து உங்களால் விடுபட முடியாதிருக்கும். நீங்கள் அதற்கு நேரத்தையும் சக்தியையும் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, எந்தவிதமான வீணான படைப்பிற்கும் பிறப்புக் கட்டுப்பாட்டினைப் பேணுங்கள். தமது சொந்த சூட்சும சக்திகளைக் கையாளக்கூடியவர்களால் மற்றவர்களையும் கையாளக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு உங்களின் மீதே கட்டுப்பாட்டு சக்தியும் ஆளுகின்ற சக்தியும் ஏற்பட்டதும், நீங்கள் அனைவரையும் கையாளக்கூடிய மிகச்சரியான சக்தியைக் கொண்டிருப்பீர்கள். ஞானம் அற்ற ஆத்மாக்களுக்குச் சேவை செய்வதோ அல்லது பிராமண ஆத்மாக்களுடன் அன்புடனும் திருப்தியுடனும் தொடர்பு கொள்வதோ, இரண்டிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் புதுமையாலும், உங்களின் எண்ணங்களையும் வார்த்தைகளையும் ஒன்றிணைக்கும் சிறப்பியல்பாலும் நிரம்பியிருப்பதன் மூலம் மாயாஜாலம் செய்வீர்களாக.
எண்ணங்களினதும் வார்த்தைகளிதும் சேர்க்கை மாயாஜாலம் போன்று செயற்படும். இவ்வாறு செய்வதன் மூலம், ஒன்றுகூடலின் அற்ப விடயங்கள் அனைத்தும், அதை ஒரு மாயாஜாலம் என நீங்கள் நினைப்பதைப் போன்று முடிந்துவிடும். அனைவருக்காகவும் தூய உணர்வுகளையும் தூய ஆசீர்வாதங்களையும் கொண்டிருப்பதில் உங்களின் மனம் மும்முரமாக இருக்கும்போது, மனதின் குழப்பங்கள் அனைத்தும் முடிந்துவிடும். உங்களின் முயற்சிகளை இட்டும் நீங்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடையமாட்டீர்கள். நீங்கள் ஒருபோதும் ஒன்றுகூடலை இட்டுப் பயப்பட மாட்டீர்கள். உங்களின் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் ஒன்றிணைந்த சேவையைச் செய்வதன் மூலம், நீங்கள் இத்தகைய சேவை விரைவான வேகத்தில் செல்வதைக் காண்பீர்கள். இப்போது, சேவையில் இந்தப் புதுமையாலும் சிறப்பியல்பாலும் நிரம்பியவர் ஆகுங்கள். ஒன்பது இலட்சம் பிரஜைகள் இலகுவாகத் தயார் ஆகிவிடுவார்கள்.
சுலோகம்:
நீங்கள் சம்பூரணமாக விகாரமற்றவர் ஆகும்போது, உங்களின் புத்தி மிகச்சரியான தீர்மானங்களை எடுக்கும்.