03.11.2018        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை ஒருவர் மாத்திரமே பேரானந்தமிக்கவர். அவரே அனைவருக்கும் ஆசீர்வாதங்களை அளிப்பவர். தந்தையே துன்பத்தை அகற்றிச் சந்தோசத்தை அருள்பவர் என அழைக்கப்படுகின்றார். அவரைத் தவிர வேறு எவராலும் உங்கள் துன்பத்தை அகற்ற முடியாது.

கேள்வி:
பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் இரண்டிலுமே தத்தெடுப்பது என்ற வழமை இருக்கின்ற போதிலும், இரண்டிலும் உள்ள வேறுபாடு என்ன?

பதில்:
பக்தி மார்க்கத்தில் ஒருவர் தத்தெடுக்கப்படும்போது குருவும் சீடனும் என்ற உறவு ஏற்படுகின்றது. ஒரு சந்நியாசி தத்தெடுக்கப்படும்போது, அவர் தன்னைப் பின்பற்றுபவர் என்று அழைக்கிறார்;. ஆனால், ஞான மார்க்கத்தில் நீங்கள் பின்பற்றுபவர்களோ அல்லது, சீடர்களோ அல்ல. நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகிவிடுகிறீர்கள். ஒரு குழந்தையாகுவது என்றால் ஆஸ்திக்கான ஓர் உரிமையைக் கொண்டிருப்பதாகும்.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இது பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனின் புகழாகும். (நமசிவாய) சிவனுக்கு வந்தனங்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதில்லை: உருத்திரருக்கு வந்தனங்கள் அல்லது சோமநாதருக்கு வந்தனங்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நமசிவாய. அவரே அதிகளவில் போற்றப்படுகின்றவரும் ஆவார். நமசிவாய என்பதன் அர்த்தம் தந்தை ஆகும். தந்தையாகிய கடவுளின் பெயர் சிவன்; ஆகும். அவர் அசரீரியானவர். ‘ஓ, தந்தையாகிய கடவுளே’ என்று கூறியவர் யார்? ஆத்மாவே அவ்வாறு கூறினார். ஆத்மா ஒருவர் ‘ஓ தந்தையே’ என்று மாத்திரம் கூறினால்;, அது பௌதீகத் தந்தையைக் குறிக்கின்றது. ‘ஓ தந்தையாகிய கடவுளே!’ என்ற கூற்று ஆன்மீகத் தந்தையைக் குறிக்கின்றது. இவ் விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தேவர்கள் தெய்வீகப் புத்தி கொண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவர்களே உலக அதிபதிகளாக இருந்தார்கள். இப்பொழுது எவருமே அதிபதியாக இல்லை. எவருமே பாரதத்தின் பிரபுவாகவோ அல்லது அதிபதியாகவோ இல்லை. ஓர் அரசர், தந்தை அல்லது உணவளிப்பவர் என்று அழைக்கப்படுகிறார். இப்பொழுது அரசர்கள் எவருமே இல்லை. எனவே ‘சிவனுக்கு வந்தனங்கள்’ என்று கூறியவர் யார்? அவரே தந்தை என்று எவ்வாறு நீங்கள் கூறமுடியும்? அநேக பிரம்மகுமார்களும், குமாரிகளும் உள்ளனர். அவர்கள் சிவபாபாவின் பேரக்குழந்தைகள் ஆகுகின்றார்கள். அவர் பிரம்மா மூலம் அவர்களைத் தத்தெடுக்கிறார். நாங்கள் பிரம்மகுமார், குமாரிகள் என்று அவர்கள் அனைவரும் கூறுகிறார்கள். நல்லது, பிரம்மா யாருடைய குழந்தை? சிவனுடைய குழந்தை ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மூவருமே சிவனுடைய குழந்தைகள். சிவபாபா, அசரீரி உலகவாசியான, அதிமேலான கடவுள். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சுமலோகவாசிகள். நல்லது, மனித உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது? அவர் கூறுகிறார்: நாடகத்திற்கேற்ப, நான் பிரம்மாவின் சாதாரண சரீரத்தில் பிரவேசித்து, அவரை மக்களின் தந்தையாக்குகிறேன். பிரம்மா என்று பெயரிடப்பட்டவருக்குள்ளேயே நான் பிரவேசிக்க வேண்டும். அவர் தத்தெடுக்கப்பட்ட பின் அவரது பெயர் மாற்றமடைகின்றது. சந்நியாசிகளும் தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்கிறார்கள். முதலில் அவர்கள் குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்களுக்கே பிறக்கின்றார்கள். அதன்பின், தங்கள் சம்ஸ்காரங்களுக்கேற்ப குழந்தைப் பருவத்திலேயே சமயநூல்கள் போன்றவற்றைக் கற்று, பின்னர் உலக வாழ்க்கையில் ஆர்வமின்மையைக் கொண்டிருக்கின்றார்கள். பின்பு ஒரு சந்நியாசியிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் தத்தெடுக்கப்படுகின்றார்கள். இவர் என் குருநாதர் என்று கூறுவார்களே தவிர, அவரைத் தந்தையென்று அழைக்க மாட்டார்கள். அவர்கள் குருவின் சீடர்களாகவோ அல்லது அவரைப் பின்பற்றுகின்றவர்களாகவோ ஆகுவார்கள். குரு சீடனைத் தத்தெடுத்துக் கூறுகின்றார்: நீங்கள் என் சீடன் அல்லது என்னைப் பின்பற்றுபவர். இத் தந்தையோ நீங்கள் என் குழந்தைகள் என்றே கூறுகிறார். பக்தி மார்க்கத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையைக் கூவி அழைத்;தீர்கள். ஏனெனில், இங்கேயே அதிகளவு துன்பம் இருக்கின்றது. விரக்திக் குரல்களும் அதிகளவில் இருக்கின்றன. ஒரேயொருவரே தூய்மையாக்குபவராகிய தந்தை. ஆத்மாக்கள் அசரீரியான சிவனுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். தந்தை எப்போதும் இருக்கிறார். தந்தையாகிய கடவுளை நோக்கி அவர்கள் பாடுகிறார்கள்: நீங்களே தாய், நீங்களே தந்தை. தந்தை இருப்பதால் தாயும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். தாயும் தந்தையும் இன்றிப் படைப்பு இடம்பெற முடியாது. தந்தை நிச்சயமாகக் குழந்தைகளிடம் வர வேண்டும். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்றும், அதன் ஆரம்பம், மத்தி, இறுதியையும் அறிந்து கொள்வதே திரிகாலதரிசியாக ஆகுவதாகும். மில்லியன் கணக்கான நடிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய பாகமும் அவரவருக்கே உரியது. இந்த நாடகம் எல்லையற்றது. தந்தை கூறுகிறார்: நானே படைப்பவராகவும், இயக்குனராகவும், பிரதான நடிகனாகவும் இருக்கிறேன். நான் நடிக்கின்றேன், இல்லையா? என் ஆத்மா பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். ஆத்மாவின் வடிவமும் பரமாத்மாவின் வடிவமும் ஒரே மாதிரியானவை. உண்மையில் ஆத்மா ஒரு புள்ளி வடிவானவரே. நட்சத்திரமாகிய ஆத்மா நெற்றியின் மத்தியில் இருக்கிறார். ஆத்மா அதி சூட்சுமமானவரும் பார்க்க முடியாதவரும் ஆவார். ஆத்மா சூட்சுமமானவர். ஆத்மாக்களின் தந்தையும் சூட்சுமமானவர். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் புள்ளியைப் போன்றவர்கள். சிவனாகிய நானும் ஒரு புள்ளியைப் போன்றவரே. ஆனாலும், நான் அதிமேலான படைப்பவரும், இயக்குனரும் ஆவேன். நானே ஞானக்கடல். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானம் என்னிடம் இருக்கின்றது. நானே ஞானம் நிறைந்தவரும் பேரானந்தமிக்கவரும் ஆவேன். நான் அனைவருக்கும் ஆசீர்வாதங்களை அளிக்கின்றேன். அனைவரையும் நான் சற்கதிக்கு அழைத்துச் செல்கிறேன். தந்தை ஒருவரே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். சத்தியயுகத்தில் எவருமே சந்தோஷமற்று இருக்க மாட்டார்கள். அது இலக்ஷ்மி, நாராயணருடைய இராச்சியம் மாத்திரமே. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நானே மனித உலக விருட்சத்தின் விதை. உதாரணமாக, ஒரு மாமரம் இருக்கிறது. அதில் உயிரற்ற விதை உள்ளது, எனவே, அதனால் பேச முடியாது. அது உயிருள்ளதாக இருந்தால், அது கூறியிருக்கும்: இந்தக் கிளைகள், கொப்புகள், இலைகள் அனைத்தும் விதையாகிய என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இவர் உயிருள்ளவர். இது கல்ப விருட்சம் எனக் கூறப்படுகின்றது. பரமாத்மாவாகிய பரமதந்தையே மனித உலக விருட்சத்தின் விதை ஆவார். தந்தை கூறுகிறார்: நானே வந்து அதன் ஞானத்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறேன். குழந்தைகளாகிய உங்களை நான் என்றென்றும் சந்தோஷமானவர்களாக ஆக்குகிறேன். மாயையே உங்களைச் சந்தோஷமற்றவர்களாக ஆக்குகிறாள். பக்தி மார்க்கம் முடிவடைய வேண்டும். நாடகம் நிச்சயமாகச் சுழல வேண்டும். இதுவே எல்லையற்ற உலகின் வரலாறும் புவியியலும் ஆகும். சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. கலியுகம் சத்தியயுகமாக மாற வேண்டும். ஒரேயொரு உலகம் மாத்திரம் இருக்கின்றது. தந்தையாகிய கடவுளும் ஒரேயொருவரே. அவருக்கென்று ஒரு தந்தை இல்லை. அவர் ஆசிரியராகவும் இருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். மக்களுக்குத் தாயையும் தந்தையையும் தெரியாது. நீங்களே அசரீரியான சிவபாபாவின் அசரீரியான குழந்தைகள் என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பின்னர் நீங்கள் சரீரதாரியாகிய பிரம்மாவின் குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள். அசரீரியான குழந்தைகள் அனைவரும் சகோதரர்களும், பிரம்மாவின் குழந்தைகள் அனைவரும் சகோதர, சகோதரிகளும் ஆவார்கள். தூய்மையாக இருப்பதற்கான வழி இதுவேயாகும். சகோதரர்களும் சகோதரிகளும் எவ்வாறு விகாரத்தில் ஈடுபட முடியும்? விகாரமே தீ மூட்டுகிறது, இல்லையா? காமத்தீ என்று கூறப்படுகின்றது. அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழியைத் தந்தை உங்களுக்குக் காட்டுகின்றார். முதலாவதாக, இங்கே கிடைக்கும் பேறு மிகவும் உயர்ந்தது. நாங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவோம். தந்தையின் நினைவின் மூலம் மாத்திரமே நாம் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாக ஆகுகின்றோம். புராதன பாரதத்தின் யோகம் மிகப் பிரபல்யமானது. தந்தை கூறுகிறார்: தொடர்ந்து என்னை நினைவுசெய்வதன் மூலம், நீங்கள் தூய்மையாகுவதுடன், உங்கள் பாவங்களும் அழிக்கப்பட்டு விடும். தந்தையின் நினைவில் உங்கள் சரீரத்தை விட்டு நீங்கினால் நீங்கள் என்னிடம் வருவீர்கள். இப் பழைய உலகம் முடிவடைய உள்ளது. இது அதே மகாபாரத யுத்தம் ஆகும். தந்தைக்கு உரியவர்களுக்கு வெற்றியுண்டாகும். இராச்சியம் ஒன்று ஸ்தாபிக்கப்படுகின்றது. சுவர்க்க அதிபதிகள் ஆகுவதற்காகக் கடவுள் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். அதன்பின், மாயையாகிய இராவணன் உங்களை நரக அதிபதிகளாக்குகின்றான். நீங்கள் அவ்வாறான ஒரு சாபத்தைப் பெறுவது போன்றதாகி விடுகிறது. தந்தை கூறுகிறார்: அன்புக்குரிய குழந்தைகளே, என் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சுவர்க்கவாசிகள் ஆகுவீர்களாக! அதன்பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பமாகும் போது, இராவணன் கூறுகிறான்: ஓ கடவுளின் குழந்தைகளே, நரகவாசிகளாகுவீர்களாக! நிச்சயமாக நரகத்தின் பின்பு சுவர்க்கம் வர வேண்டும். இது நரகம், இல்லையா? எங்கும் அளவற்ற வன்முறை நிலவுகிறது. சத்தியயுகத்தில் சண்டையோ சச்சரவுகளோ இருக்காது. பாரதமே சுவர்க்கமாக இருந்தது. அங்கே வேறெந்த இராச்சியமும் இருக்கவில்லை. இப்போது பாரதம் நரகமாக இருப்பதால், எண்ணற்ற பல மதங்களும் இருக்கின்றன. நான் பல தர்மங்களை அழித்து, ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்காக வரவேண்டும் என்று நினைவுகூரப்பட்டிருக்கின்றது. நான் ஒரேயொரு முறையே அவதரிக்கின்றேன். தந்தை தூய்மையற்ற உலகிற்கு வரவேண்டியிருக்கின்றது. பழைய உலகம் முடிவடையும்பொழுதே அவர் வருகிறார். அதற்கு யுத்தமும் அவசியமாக இருக்கின்றது. தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, நீங்கள் சரீரமற்றவர்களாக வந்தீர்கள். இப்போது நீங்கள் உங்கள் 84 பிறவிகளின் பாகங்களைப் பூர்த்தி செய்து விட்டீர்கள். இப்போது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். நான் உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக்கி, வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்கிறேன். 5000 வருடங்களில் தேவர்கள்; 84 பிறவிகள் எடுக்கிறார்கள். இந்தக் கணக்கு இருக்கின்றது. அனைவரும் 84 பிறவிகள் எடுப்பார்கள்; என்றில்லை. தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். உலக சக்கரம் உங்கள் புத்தியில் சுழல வேண்டும். ஒரு நடிகனாக இருந்தும், நாடகத்தின் படைப்பவர், இயக்குனர், பிரதான நடிகரைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் விவேகமற்றவர்கள். இதனால் பாரதம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்துவிட்டது. தந்தை வந்து அதனைச் செழிப்பானதாக்குகின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பாரத மக்களாகிய நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள். நிச்சயமாக நீங்கள் 84 பிறவிகள் எடுக்க வேண்டும். இப்பொழுது உங்கள் 84 பிறவிகளும் முடிவடைந்து விட்டன. இந்த இறுதிப் பிறவி மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. கடவுள் பேசுகிறார்: அனைவருக்கும் கடவுள் ஒருவரே. ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணரைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அசரீரியானவரையே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவரே சகல ஆத்மாக்களுக்கும் தந்தையாவார். அவர் கூறுகிறார்: இவருடைய பல பிறவிகளில் இறுதிப் பிறவியில் வந்து இவருக்குள்ளே பிரவேசிக்கிறேன். இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டதும் விநாசம் ஆரம்பமாகும். மீண்டும் நான் வீடு திரும்புவேன். இது மிகப்பெரியதொரு யாகம். ஏனைய யாகங்கள் அனைத்தும் இதற்குள்ளே அர்ப்பணிக்கப்படும். உலகம் முழுவதிலும் உள்ள குப்பை இதற்குள்ளே வீழ்ந்த பின், வேறெந்த யாகமும் உருவாக்கப்பட மாட்டாது. பக்தி மார்க்கம் முடிவடைகின்றது. சத்திய, திரேதா யுகங்களின் பின்னர் பக்தி ஆரம்பமாகுகின்றது. பக்தி இப்போது ஒரு முடிவுக்கு வருகின்றது. இவையெல்லாம் சிவபாபாவின் புகழாகும். அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்தபோதிலும், அவர்களுக்கு எதுவுமே தெரியாது. இவர் சிவன் என்ற போதிலும், உருத்திரர், சோமநாதர், பபுல்நாதர் (முட்களை மலராக்குபவர்) என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் ஒருவருக்கே பல பெயர்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவர் செய்த சேவைக்கேற்பவே அவருக்கு ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருக்கி;ன்றது. அவர் உங்களுக்கு அருந்துவதற்கு அமிர்தம் கொடுக்கிறார். தாய்மார்களாகிய நீங்களே சுவர்க்கத்தின் வாயிலைத் திறப்பதற்குக் கருவிகளாகி இருக்கிறீர்கள். தூய்மையானவர்களே போற்றப்படுகிறார்கள். தூய்மையற்றவர்கள் தூய்மையானவர்களைப் போற்றுகிறார்கள். அனைவரும் குமாரிகளுக்குத் தலை வணங்குகிறார்கள். பிரம்மகுமார், குமாரிகளாகிய நீங்கள் பாரதத்தை ஈடேற்றுகிறீர்கள். நீங்கள் தூய்மையாகி, தந்தையிடமிருந்து தூய உலகின் ஆஸ்தியைப் பெற வேண்டும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்தவாறே நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்கு முயற்சி தேவை. காமமே கொடிய எதிரியாகும். அவர்களுக்கு விகாரமின்றி இருக்க முடியாதபொழுது, அவர்களை அடித்துத் துன்புறுத்த ஆரம்பிக்கிறார்கள். உருத்திர யாகத்தில் அப்பாவிகள் துன்புறுத்தப்படுகின்றனர். அப்பாவிகளைத் துன்புறுத்துகின்றவர்களுடைய பாவக்கலசம் நிறையும் பொழுது, விநாசம் இடம்பெறும். பாபாவை என்றுமே நேரில் பார்த்திருக்காத பல புதல்வியர் இருக்கிறார்கள். அவர்கள் எழுதுகிறார்கள்: பாபா, எனக்கு உங்களைத் தெரியும். உங்களிடமிருந்து என் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காக நான் நிச்சயமாகத் தூய்மையாக இருப்பேன். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் பக்தி மார்க்கத்தில் சமயநூல்களைக் கற்றுக் கொண்டும், பௌதீக யாத்திரை சென்று கொண்டும் இருந்தீர்கள். இப்போது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். அதனால் என்னுடன் யோகம் செய்யுங்கள். ஏனைய அனைவரிடம் இருந்தும் உங்களைத் துண்டித்து, என்னுடன் மாத்திரமே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களை என்னுடன் மீண்டும் அழைத்துச் சென்று, பின்பு சுவர்க்கத்திற்கு அனுப்புவேன். அதுவே அமைதி தாமம். அங்கே ஆத்மாக்கள் பேசுவதில்லை. சத்தியயுகம் சந்தோஷ தாமம். இது துன்ப தாமம். இப்போது இத் துன்ப தாமத்தில் இருந்தவாறு, நீங்கள் அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்ய வேண்டும். அப்பொழுது நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்து விட்டீர்கள். குலங்களின் சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. முதலில், உச்சிக்குடுமிகளான பிராமணர்கள், பின்பு தேவ குலம், அதன்பின் சத்திரிய குலம் வருகின்றது. நீங்கள் குட்டிக்கரணம் போடுகின்றீர்கள். இப்போது நீங்கள் பிராமணர்களிலிருந்து தேவர்களாகுவீர்கள். இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. இதை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பூகோள ஆட்சியாளர்களாக ஆகுவீர்கள். உங்களுக்கு எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி தேவைப்படுகின்றது. ஆகவே, நீங்கள் நிச்சயமாகத் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அசரீரியான தந்தை வந்து இந்தப் பௌதீகச் சரீரத்தில் பிரவேசித்திருக்கிறார் என்று நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்;கள். ஆத்மாக்களாகிய நாம் அசரீரியாக இருந்தபோது நாம் அங்கேயே இருந்தோம். இந்தச் சூரியனும் சந்திரனும் ஒளியைக் கொடுக்கின்றன. இது எல்லையற்ற இரவும் பகலும் என்று அழைக்கப்படுகின்றது. சத்திய, திரேதா யுகங்கள் பகலும், துவாபர, கலியுகங்கள் இரவும் ஆகும். தந்தை வந்து உங்களுக்குச் சற்கதிக்கான வழியைக் காட்டுகிறார். உங்களுக்கு அத்தகையதொரு விளக்கம் கிடைக்கின்றது. சத்தியயுகத்தில் சந்தோஷம் இருக்கின்றது. அதன்பின், அது சிறிதுசிறிதாகக் குறைவடையத் தொடங்குகின்றன. சத்தியயுகத்தில் 16 சுவர்க்கக் கலைகள் இருக்கின்றன. திரேதா யுகத்தில் 14 சுவர்க்கக் கலைகள் இருக்கின்றன. இந்த விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அங்கே அகால மரணம் இடம்பெறுவதேயில்லை. அங்கே அழுவதும் இல்லை, சண்டையிடுவதுமில்லை. அனைத்தும் கல்வியில் தங்கியிருக்கிறது. இந்தப் கல்வியின் மூலமே நீங்கள் மனிதனிலிருந்து தேவராக முடியும். கடவுள் எங்களைத் தேவ, தேவியராக்குவதற்காகவே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அக்கல்வி ஒரு சில சதங்கள் பெறுமதி வாய்ந்தது. இக் கல்வி வைரங்கள் பெறுமதியானது. இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாகுவதற்கான விடயம் மாத்திரமேயாகும். இந்த இராஜயோகம்; அனைத்திலும் இலகுவானது. ஆனால், சட்டத்தரணி போன்று ஆகுவதற்குக் கற்;பது இந்தளவிற்கு இலகுவானதல்ல. இங்கே, தந்தையையும் சக்கரத்தையும் நினைவுசெய்வதன் மூலம் நீங்கள் பூகோள ஆட்சியாளர்களாகுகின்றீர்கள். உங்களுக்குத் தந்தையைத் தெரியாதென்றால், உங்களுக்கு எதுவுமே தெரியாது. தந்தை உலக அதிபதியாகுவதில்லை. குழந்தைகளாகிய உங்களை அவ்வாறு ஆக்குகின்றார். சிவபாபா கூறுகிறார்: இந்தப் பிரம்மா சக்கரவர்த்தியாக ஆகுவார். நான் அவ்வாறு ஆகுவதில்லை. நான் நிர்வாணா தாமத்தில் இருக்கிறேன். நான் குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகளாக்குகிறேன். அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையால் மாத்திரமே தன்னலமற்ற சேவை செய்ய முடியும். மனிதர்களால் அதைச் செய்ய முடியாது. கடவுளைக் கண்டுகொள்வதன் மூலம் நீங்கள் முழு உலகிற்கும் அதிபதிகளாகுகின்றீர்கள். வானம், பூமி அனைத்திற்குமே அதிபதிகள் ஆகுகிறீர்கள். தேவர்களே உலக அதிபதிகளாக இருந்தார்கள், இல்லையா? இப்போது பல பிரிவினைகள் இருக்கின்றன. இப்போது தந்தை கூறுகிறார்: நான் உங்களை உலக அதிபதிகளாக்குகிறேன். நீங்கள் மாத்திரமே சுவர்க்கத்தில் இருந்தீர்கள். பாரதமே சுவர்க்க அதிபதியாக இருந்தது. இப்பொழுது அது ஏழ்மை நிலையடைந்து விட்டது. தாய்மார்களாகிய உங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை பாரதம் உலக அதிபதியாகுகின்றது. பெரும்பாலானவர்கள் தாய்மார்கள் என்பதால் வந்தே மாதரம் என்று, அதாவது, தாய்மார்களுக்கு வந்தனம் என்று கூறப்படுகின்றது. குறுகிய காலமே எஞ்சியிருக்கின்றது. சரீரத்துக்கு உத்தரவாதம் இல்லை. அனைவரும் மரணிக்க வேண்டும். இப்பொழுது அனைவருக்குமே ஓய்வுபெறும் ஸ்திதி ஆகும். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். கடவுள் எங்களுக்கு இதைக் கற்பிக்கின்றார். அவர் ஞானம் நிறைந்தவரும், அமைதி நிறைந்தவரும், பேரானந்தமிக்கவரும் என அழைக்கப்படுகின்றார். அவரே எங்களைச் சகல நற்குணங்கள் நிறைந்தவர்களாகவும், பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும், முற்றிலும் தூய்மையானவர்களாகவும் ஆக்குகின்றார். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. இக் கல்வி உங்களை வைரம் போன்றவர்களாக்குகின்றது. ஆதலால், நன்றாகக் கற்று. ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து, ஒரேயொரு தந்தையுடன் மாத்திரம் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

2. ஸ்ரீமத்தைப் பின்பற்றி, உங்கள் சுவர்க்க ஆஸ்தியை முழுமையாகப் பெறுங்கள். நடமாடும் போதும் உலாவித் திரியும்போதும், தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்துக்கேற்ப “ஆம், எனது பிரபுவே” என்று கூறுவதன் மூலம் அனைத்துப் பேறுகளாலும் நிரம்பியிருப்பதுடன், பிரபு பிரசன்னமாகுவதை அனுபவம் செய்வீர்களாக.

தந்தையின் ஸ்ரீமத்திற்கேற்ப அனைத்திற்கும் “ஆம், எனது பிரபுவே, ஆம் எனது பிரபுவே” என ஒவ்வொரு தடவையும் கூறும் குழந்தைகளின் முன்னால் தந்தை பிரசன்னமாகுகின்றார். பிரபு பிரசன்னமாகும் பொழுது, எச்சூழலிலும் எதுவும் குறைவில்லாமல் இருக்கும். நீங்களும் சதா நிறைந்திருப்பீர்கள். அருள்பவரினதும், பாக்கியத்தை அருள்பவரினதும் பேற்றின் பாக்கிய நட்சத்திரம் உங்கள் நெற்றியில் பிரகாசிக்கத் தொடங்கும்.

சுலோகம்:
கடவுளின் ஆஸ்திக்கான உரிமையுடைய ஒருவராகுங்கள். அப்பொழுது எத்தங்கியிருத்தலும் இருக்க மாட்டாது.