10.12.18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சேவையை விரிவாக்குவதற்குப் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடியுங்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று சேவை செய்யுங்கள். சேவை செய்வதற்கு உங்களுக்கு ஞானோதயம் தேவையாகும்.
கேள்வி:
பழைய உலகைத் தொடர்ந்தும் உங்களுடைய புத்தியிலிருந்து அகற்றுவதற்கான இலகுவான வழிமுறை என்ன?
பதில்:
மீண்டும் மீண்டும் வீட்டையே நினைவுசெய்யுங்கள். மரண உலகில் உங்களுடைய கணக்குகளைத் தீர்த்துவிட்டு, அமரத்துவ உலகிற்குச் செல்ல வேண்டும் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்கட்டும். உங்கள் சரீரத்தைப் பொறுத்தவரை யாசிப்பவர் ஆகுங்கள்;. அச் சரீரமும் உங்களுக்கு உரியதல்ல. அத்தகையதொரு பயிற்சியை நீங்கள் செய்யும்போது நீங்கள் தொடர்ந்தும் இப் பழைய உலகை மறப்பீர்கள். இப் பழைய உலகில் வாழும் வேளையில், உங்கள் ஸ்திதியை நீங்கள் மிகவும் உறுதியாக்க வேண்டும். நிலையான, ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருக்க முயற்சி செய்யுங்கள்.
பாடல்:
தாயே ஓ தாயே! நீங்களே அனைவருக்கும் பாக்கியத்தை அருள்பவர்.
ஓம்சாந்தி.
பாரதத்தில் ஜெகதாம்பாளுக்கு அதிகளவு புகழ் உள்ளது. பாரத மக்களைத் தவிர வேறு எவருக்கும் ஜெகதாம்பாளைத் தெரியாது. ஏவாள் அல்லது பீபி என்று அழைக்கப்பட்ட ஒருவரின் பெயரை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். பீபியோ அல்லது அதிபதியோ இல்லாமல் படைப்பை உருவாக்க முடியாது என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. ஜெகதாம்பாள் நிச்சயமாகத் தோன்ற வேண்டும். அவர் நிச்சயமாக இருந்தார், இதனாலேயே அவர் நினைவு கூரப்படுகின்றார். பாரதத்திற்கு அதிகளவு புகழ் உள்ளது. அவர்கள் சுவர்க்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். பாரதம் புராதனமானது என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆகையாலேயே நிச்சயமாகச் சுவர்க்கம் இருக்க வேண்டும். இறை குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியாது. முன்னைய கல்பத்தில் இதைப் புரிந்துகொண்டவர்கள் மாத்திரமே தொடர்ந்தும் வருவார்கள். கண்காட்சி இடம்பெறுகின்றது. நீங்கள் முன்னைய கல்பத்திலும் இதனைச் செய்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். அனைவருக்கும் விளங்கப்படுத்துவதற்கு வார்த்தைகள் மிகவும் சிறந்தவை! தூய்மையின் மூலம் தூய ஆத்மாக்கள் ஒளிக் கிரீடத்தைப் பெறுகிறார்கள். இரண்டாவதாக, தான தர்மங்கள் செய்கின்ற ஒருவரே புண்ணியாத்மா ஆவார். ஆங்கிலத்தில் அவ்வாறான ஓர் ஆத்மா பிலோன்தரஃபிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார். தூய்மையானவர்கள் விகாரமற்றவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். வெவ்வேறு வார்த்தைகள் உள்ளன. பாரதத்தில் அதிகளவு தான, தர்மங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் தானங்கள் பொதுவாகக் குருமார்களுக்கே செய்யப்படுகின்றன. அவர்களைத் தூய ஆத்மாக்கள் என அழைத்தாலும், அவர்களைப் புண்ணியாத்மாக்கள் என்று அழைக்க முடியாது. அவர்கள் தானம் செய்வதோ அல்லது புண்ணியம் செய்வதோ இல்லை. அவர்கள் தான, தர்மங்களை ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள் அனைவரிடமிருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டித்து, தந்தையுடன் தொடர்புபடுத்துவதற்காக தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்: அது நல்லதல்ல. நான் அவர்கள் அனைவரையும் ஈடேற்றவே வருகின்றேன். நீங்கள் ஞானக் கடலில் இருந்து உருவாகிய ஞான கங்கைகள். உண்மையிலேயே, கங்கைகள் என்பது சரியான வார்த்தையல்ல. ஆனால் ஞாபகார்த்தம் தொடர்ந்ததாலேயே ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது. தந்தை வந்து பழைய உலகின் பழைய விடயங்களைப் புதிதாக ஆக்குகின்றார். சுவர்க்கம் புதியதாகும். தந்தைக்கு மாத்திரமே புதிய விடயங்களின் செய்திகள் தெரியும். அதனை உலகம் அறிய மாட்டாது. கடவுளின் வாசகங்கள் உள்ள போதிலும், கிருஷ்ணரின் பெயர் புகுத்தப்பட்டதால், அனைவரது புத்தியின் யோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகையாலேயே கடவுளைச் சர்வவியாபி என்று அவர்கள் கூறியுள்ளனர். பலரது புத்தியின் யோகம் கிருஷ்ணருடனேயே இணைக்கப்பட்டுள்ளது. கீதைக்கு மரியாதை கொடுக்கப்படும் இடங்கள் அனைத்திலும்; கிருஷ்ணரிற்கும் மரியாதை உள்ளது. உண்மையில், அவர்கள் தந்தையின் தலைக்குரிய புகழைக் குழந்தைக்குக் கொடுத்துள்ளார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை வந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். இங்கு வருகின்ற எவரிடமும் அவருடைய தொழில் என்ன என்பதையும், கிருஷ்ணருடன் அவருக்குள்ள உறவு என்னவென்றும் நீங்கள் ஏன் வினவ வேண்டும் என்று பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். பாபா நல்ல கேள்விப் படிவங்களைத் தயாரித்துள்ளார். மிகவும் சிறந்த சேவை இடம்பெற முடியும். ஜெகதம்பாளின் ஆலயத்தில் மிகவும் சிறந்த சேவை இடம்பெற முடியும். அங்கு சென்று மக்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: இவர் உலகைப் படைக்கும் தாயான ஜெகதாம்பாள். அவர் எவ் உலகைப் படைக்கின்றார்? அவர் நிச்சயமாக ஒரு புதிய படைப்பையே உருவாக்குவார். அச்சா, இத் தாயின் தந்தை யார்? அவருக்குப் பிறப்பளிப்பவர் யார்? ‘வாய்வழித்தோன்றல்’ என்பதன் அர்த்தமேனும் மக்களுக்குப் புரிவதில்லை. பரமாத்மாவான பரமதந்தையே அவருக்குப் பிறப்பளித்தவர் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஜெதாம்பாள் வாய்வழித்தோன்றல், ஆயினும் அது எவ்வாறு என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பரமாத்மாவான பரமதந்தை அசரீரியானவர், அவர் பிரம்மாவின் சரீரத்தினூடாக விளங்கப்படுத்துகின்றார். அதாவது பரமாத்மாவான பரமதந்தை வந்து, பிரம்மாவைத் தத்தெடுத்ததைப் போன்றே, அவர் மகளையும் தத்தெடுத்தார். இவ் விடயங்கள் அனைவரது புத்தியிலும் நிரந்தரமாக நிலைத்திருப்பதில்லை. நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களால் அதிகளவு சேவை செய்ய முடியும். நீங்கள் ஜெகதாம்பாள் ஆலயத்திலும் அறிமுகத்தைக் கொடுத்தால், அவர்களாலும் தமது புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைத்துக் கொள்ள முடியும். ஜெகதாம்பாள் அவருடனேயே யோகம் செய்கின்றார், ஆகவே நாங்களும் அவருடனேயே யோகம் செய்ய வேண்டும். ஜெகதாம்பாள் கீழே அமர்ந்திருந்து தவம் செய்கின்றார். அவரது ஆலயம் மேலே உள்ளது. கீழிருந்து அவர் இராஜயோகத் தவம் செய்து, பின்னர் இளவரசியாக, அதாவது, சத்தியயுகத்தில் சுவர்க்கத்தின் அதிபதி ஆகுகின்றார். இப்பொழுது இது கலியுகமாகும். அவர் மீண்டும் தவம் செய்தாலே, அவரால் மீண்டும் சுவர்க்கத்தின் அதிபதியாக முடியும். இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். மக்களுக்கு இந்த உண்மையான ஆலோசனை கொடுக்கப்படுகின்றது. நீங்கள் ஒவ்வொருவரது அறிமுகத்தையும் கொடுக்கின்றீர்கள். எவ்வாறாயினும், அவ்வளவு விரைவில் அனைவரது புத்தியிலும் இதனைப் புகுத்தி விட முடியாது. அவர்கள் தம்மைச் சேவையில் ஈடுபடுத்தும்பொழுதே, இது அவர்களின் புத்தியில் புகும். மிகவும் நல்ல படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நீங்கள் இலக்ஷ்மி நாராயணனின் ஆலயத்திற்குச் சென்று, அங்கும் விளங்கப்படுத்தலாம். பாபா கூறுகின்றார்: சென்று இதனை எனது பக்கதர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். நீங்கள் ஆலயங்களில் நிச்சயமாகப் பக்தர்களை இனங்காண்பீர்கள். அவர்களுக்கு இலக்ஷ்மி நாராயணனின் இப்படத்தை அன்புடன் விளங்கப்படுத்துங்கள். அனைவரும் தாம் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தோம் என்று கூறுவார்கள். அச்சா, அது இப்பொழுது என்னவாக உள்ளது? அது இப்பொழுது நிச்சயமாகக் கலியுகம் என்றே அழைக்கப்படுகின்றது. கலியுகத்தில் துன்பத்தைத் தவிர வேறு எதுவுமேயில்லை, ஆகவே, அவர்கள் எவ்வாறு அந்த இராச்சியத்தைப் பெற்றார்கள்? உங்களுக்கு இது தெரியும் என்பதால், உங்களால் அனைவருக்கும் கூற முடியும். நீங்கள் ஒருவருக்கு இதனை விளங்கப்படுத்தும்பொழுது, அங்கே முழுக் கூட்டமும் கூடிவிடும். பின்னர் தம்மிடமும் வருமாறு உங்களை அனைவரும் அழைப்பார்கள். ஆலயங்களில் பெரும் மேலா ஒன்று நடைபெறுவதுண்டு. நீங்கள் இராமரின் ஆலயத்திற்கும் சென்று அவரது தொழிலைப் பற்றி அவர்களுக்குக் கூறுங்கள். நீங்கள் அவர்களுக்குப் படிப்படியாக, சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். சில குழந்தைகள் எழுதுகின்றார்கள்: பாபா, நாங்கள் இவ்வாறு விளங்கப்படுத்தினோம். நீங்கள் ஒருவருக்கு விளங்கப்படுத்தும்பொழுது, ஏனையோரும் உங்களை அழைத்து உங்களிடம் கூறுவார்கள்: இச் சொற்பொழிவுகள் எனது இல்லத்திலும் ஏழு நாட்களுக்கு இடம்பெற்றால் மிகவும் நன்றாகவிருக்கும். பின்னர் அங்கிருந்து, இன்னமும் ஏனையோர் வெளிப்படுவார்கள். உங்களை எவரேனும் அழைத்தால், அவர்கள் உங்களை விட்டுச் செல்லாதவகையில், நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் சொற்பொழிவுகளை ஆற்றும்பொழுது, அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்களும் அங்கு ஒன்றுகூடுவார்கள். இவ்வாறு விரிவாக்கம் நிகழும். பலராலும் நிலையங்களுக்கு வரமுடியாது. இது நல்லதொரு வழிமுறையாகும். நீங்கள் இவ்வாறு முயற்சி செய்ய வேண்டும். அரிதாகச் சிலரே இதற்காக முயற்சி செய்வதற்கான கலையை அறிந்துள்ளார்கள். ஞானோதயம் தேவையாகும். பாபா மிகத் தொலைவில் இருந்து எமக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளார். நீங்கள் சேவை செய்யாதுவிடின், உங்களால் எவ்வாறு உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும்? பாடசாலைகளில், மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பதுடன், அதிகளவு உற்சாகத்துடனும் இருக்கின்றார்கள்;. இதுவும் ஒரு கல்வியே. இது அற்புதமானதொரு கல்வியாகும். இங்கே இளைஞர்கள், பெரியவர்கள், வயோதிபர்கள் அனைவரும்; கற்கின்றார்கள். ஏழைகளுக்கு மேலும் நல்ல வாய்ப்பு உள்ளது. உண்மையில், சந்நியாசிகளும் ஏழைகளே. பல செல்வந்தர்கள் தம்மிடம் வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார்கள். சந்நியாசிகள் தமது இல்லறத்தைத் துறந்து யாசிப்பவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் தம்மிடம் எதனையும் வைத்திருப்பதில்லை. நீங்களும் இப்பொழுது யாசிப்பவர்களே, பின்னர் இளவரசர்கள் ஆகுகின்றீர்கள். அவர்களும் யாசிப்பவர்களே. இதில் தூய்மை என்ற கேள்வியே உள்ளது. உங்களிடம் எதுவுமே இல்லை. உங்கள் சரீரத்தையும் நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் உங்கள் சரீரம் உட்பட, அனைத்தையும் துறந்து, ஒரேயொரு தந்தைக்குரியவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள்; தந்தையை அதிகளவு நினைவுசெய்வதற்கேற்ப அதிகளவு தாரணையைக் கொண்டிருக்க முடியும். நீங்கள் நிரந்தரமாகத் தாரணையைக் கொண்டிருக்க முயற்சி செய்ய வேண்டும். நாங்கள் பாபாவிடம் செல்ல வேண்டும் என்பதால், நாங்கள் ஏன் இப்பழைய உலகைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும்? உங்கள் ஸ்திதி உறுதியாகும் வரை நீங்கள் இப்பழைய உலகில் இப்பழைய சரீரத்தில் இருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது உங்கள் வீட்டில் வாழ்ந்த பொழுதிலும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்த மரண உலகில் உங்கள் கணக்கு தீர்க்கப்படுவதால், நீங்கள் அமரத்துவ உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் மீண்டும் மீண்டும் வீட்டை நினைவுசெய்யும் பொழுது, பழைய உலகம் தொடர்ந்தும் மறக்கப்படும். அவர்களிடம் வினவுங்கள்: கீதையில் பாபா என்ன கூறுகின்றார்? கடவுள் ‘பாபா’ என அழைக்கப்படுகின்றார் என்று விளங்கப்படுத்துங்கள். அசரீரியான பாபா கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். யோக அக்கினியினால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். கிருஷ்ணரால் இதனைக் கூற முடியாது. கடவுளின் மேன்மையான வாசகங்களாவன: இப்பழைய உலகையும், பழைய சரீரத்தையும் துறந்திடுங்கள். ஆத்ம உணர்வுடையவர்களாகி, சதா பாபாவை நினைவுசெய்யுங்கள். கடவுள் அசரீரியானவர். ஆத்மா ஒரு சரீரத்தை எடுத்து ‘சப்தத்துக்குள்’ வருகின்றார். பாபா பிறப்பெடுப்பதன் மூலம் சரீரத்தை எடுப்பதில்லை. அவருக்கு சிவன் என்ற ஒரு பெயர் மாத்திரமே உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் ஆத்மாக்களும் உள்ளார்கள். அவர்களுக்கெனச் சூட்சும சரீரங்களும் இருக்கின்றன. அவர் எப்பொழுதும் அசரீரியான பரமாத்மாவான பரமதந்தையே ஆவார். அவரின் பெயர் சிவனாகும். அவர் மாத்திரமே ஞானக் கடலாவார். பிரம்மா, விஷ்ணு மற்றும் சங்கரர்; படைப்பவரென அழைக்கப்படுவதில்லை. ஒரேயொரு அசரீரியானவரே படைப்பவர் என அழைக்கப்படுகின்றார். அவ்வாறாயின், அவர் சரீரப் படைப்பை எவ்வாறு உருவாக்குகின்றார்? அவர் வந்து, பிரம்மாவின் மூலம் பேசுகின்றார். இதனைச் செய்பவர் கிருஷ்ணராக இருக்க முடியாது. அவர்கள் பிரம்மாவின் கரத்தில் மாத்திரமே வேதங்களையும், சமயநூல்களையும் காட்டுகின்றார்கள். நினைவுகூரப்படுகின்றது: பிரம்மாவின் ஊடாக ஸ்தாபனை இடம்பெறுகின்றது. அவர் பிரம்மாவின் ஊடாக அனைத்துச் சமயநூல்களினதும் சாராம்சத்தையும் கொடுக்கின்றார். அசரீரியானவர் இதனைச் சரீரதாரியின் ஊடாகப் பேசுகின்றார். இவ்விடயங்கள் மிக நன்றாகக் கிரகிக்கப்பட வேண்டும். கடவுள் பேசுகின்றார்: நான் இராஜயோகம் கற்பிக்கின்றேன். விநாசத்தின் முன்னர் ஸ்தாபனை தேவையாகும். அனைத்திற்கும் முதலில், ஸ்தாபனை இடம்பெறுகின்றது. இதனை மிகத்தெளிவாகத் தொடர்ந்தும் எழுதுங்கள்: பிரம்மாவின் ஊடாக சூரிய வம்ச இராச்சியத்தின் ஸ்தாபனை. இவ்வாறு எழுதும்பொழுது, இதன் இரகசியங்கள் தெளிவடையும். ஆனால் நீங்கள் இம் முயற்சியை செய்து, சேவையில் மும்முரமாக ஈடுபட வேண்டும். நீங்கள் சேவையில் மும்முரமாகும்பொழுது, களிப்படைவீர்கள். மம்மாவும் பாபாவுமே சேவை செய்வதில் களிப்படைகின்றார்கள். குழந்தைகளும் சேவை செய்ய வேண்டும். மம்மா ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. மம்மாவிற்குப் பெரும் புகழ் உள்ளபொழுதிலும், குழந்தைகளாகிய நீங்களே அங்கு செல்ல வேண்டும். பாபா கூறுகின்றார்: ஓய்வு பெற்றவர்களிடம் சென்று கேள்விகளைக் கேட்டு, அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் கீதையைக் கற்றிருக்கின்றீர்களா? கீதையின் கடவுள் யார்? ஒரேயொரு அசரீரியான கடவுள் மாத்திரமே உள்ளார். ஒரு சரீரதாரியைக் கடவுள் என்று அழைக்க முடியாது. கடவுள் ஒரேயொருவரே. நீங்கள் சேவை செய்வதற்கு ஞானத்தை நன்றாகக் கடைய வேண்டும்;. இதனை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டுமாயின், சென்று முயற்சி செய்து பார்க்க வேண்டும். ஜெகதாம்பாளின் ஒரு கணப் பார்வைக்காக மக்கள் தினமும் செல்கின்றார்கள். மக்கள் நதிகளின் திரிவேணிக்கும் செல்கின்றார்கள். நீங்களும் அங்கு சென்று சொற்பொழிவாற்றி, சேவை செய்தால், பலரும் ஒன்றாகக் கூடுவார்கள். அவர்கள் தொடர்ந்தும் உங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள்: எங்களிடமும் வந்து, இவ் ஆன்மீக ஒன்றுகூடல்களை நிகழ்த்துங்கள். பாபாவினாலும் மம்மாவினாலும் எங்கும் செல்ல முடியாது, குழந்தைகளால் செல்ல முடியும். உங்களால் வங்காளத்தில் உள்ள காளி கோயிலிலும் அதிகளவு சேவை செய்ய முடியும். யார் காளி? இத் தலைப்பில் ஒரு சொற்பொழிவு ஆற்றுங்கள். எவ்வாறாயினும் தைரியம் தேவையாகும். யாரால் இதனை விளங்கப்படுத்த முடியும் என்பது பாபாவிற்குத் தெரியும். சரீர உணர்வைக் கொண்டிருப்பவர்களால் என்ன சேவையைச் செய்ய முடியும்? அவர்கள் சேவைக்கான அத்தாட்சியைக் கொடுப்பதில்லை. நீங்கள் முழுமையாகச் சேவை செய்யாது விட்டால், நீங்கள் பாபாவின் பெயருக்;கு அவதூறு ஏற்படுத்துகின்றீர்கள். யோகி ஒருவருக்கு மிகவும் சக்தி உள்ளது. அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக பாபா தொடர்ந்தும் பல சிறந்த கருத்துக்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். எவ்வாறாயினும், மிகச்சிறந்த மகாராத்திகளுமே அதனை மறந்து விடுகின்றார்கள். இன்னமும் அதிகளவு சேவை செய்ய வேண்டியுள்ளது. இது எல்லையற்ற சேவை என்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் அவர்கள் அதிகளவு மரியாதையையும்; பெற்றுக் கொள்கின்றார்கள். தூய்மையே பிரதான விடயமாகும். சிலர் முன்னேறும் வேளையில் இதைக் கைவிட்டுச் சென்று விடுகின்றார்கள். தமது லௌகீகத் தந்தை மீதுள்ள நம்பிக்கையை எவரும் இழப்பதில்லை. இங்கே நீங்கள் பாபாவிற்குப் பிறப்பெடுக்கின்றீர்கள், இருப்பினும் பின்னர் அவர் அசரீரியாக உள்ளதால், அத்தகைய தந்தையை மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். அத்தகைய தந்தைக்குச் சரீரம் இல்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை நினைவு செய்து தூய்மையாகினால் என்னிடம் வருவீர்கள். தான் 84 பிறவிகளுக்கான பாகத்தை நடித்திருப்பதை ஆத்மா புரிந்துகொள்கின்றார். ஆத்மாவில் பாகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகம் சரீரத்தில் இருப்பதில்லை. அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாவில் ஒரு மிகப்பெரிய பாகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் புத்தியில் அதிகளவு போதை இருக்க வேண்டும். உங்கள் லௌகீகக் குடும்பத்தினருடன் உள்ள தொடர்புகளுக்கான உங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றும்பொழுதும் உங்களால் இச் சேவையையும் செய்ய முடியும். தாயும் தந்தையும் எங்கும் செல்ல மாட்டார்கள். குழந்தைகளாகிய உங்களால் எங்கு சென்றும் சேவை செய்ய முடியும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்பிற்கினிய நீண்டகாலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட அதிர்ஷ்ட ஞான இரத்தினங்களுக்குத் தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சரீர உணர்வைத் துறந்து சேவை செய்யுங்கள். ஞானத்தைக் கடைந்து எல்லையற்ற சேவைக்கான அத்தாட்சியைக் கொடுங்கள்.2. இம் மரண பூமியில் உள்ள அனைத்துப் பழைய கணக்குகளும் தீர்க்கப்பட வேண்டும். உங்கள் புத்தியிலிருந்து பழைய உலகையும் பழைய சரீரத்தையும் தொடர்ந்தும் அகற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் செயல்களைச் செய்யும்பொழுது, சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதன் மூலம் ஆன்மீக ஆளுமையின் அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு கர்மயோகி ஆகுவீர்களாக.
குழந்தைகளாகிய நீங்கள் தொழில் புரிபவர்கள் மட்டுமல்ல, ஆனால் யோகியுக்தாக இருந்து ஒவ்வொரு செயலையும் செய்யும் கர்மயோகிகள். நீங்கள் வேலை செய்யும்பொழுது, கைகளினால் வேலை செய்கின்றீர்கள், ஆனால் நீங்கள் சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக உள்ளீர்கள் என்பதை ஒவ்வொருவரும் அனுபவம் செய்யட்டும். நீங்கள் சாதாரண விதத்தில் முன்னேறினாலோ அல்லது எங்காவது நின்றாலோ உங்கள் ஆன்மீக ஆளுமை தூரத்திலிருந்தே அனுபவம் செய்யப்படட்டும். உலகாய ஆளுமை கவர்வதைப் போன்று, உங்கள் ஆன்மீக ஆளுமை, உங்கள் தூய்மையின் ஆளுமை, அத்துடன் ஞானி, யோகியின் ஆளுமை இயல்பாகவே ஏனையோரைக் கவரும்.
சுலோகம்:
சரியான பாதையில் நடந்து, சரியான பாதையைக் காட்டுபவர்களே உண்மையான கலங்கரை விளக்கங்கள் ஆவார்கள்.