16.11.2018        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகி, இந்த யாத்திரையில் சென்று, ஏனையோரையும் அதில் செல்ல வைக்க வேண்டும். இந்நினைவே உங்கள் யாத்திரை ஆகும். தொடர்ந்தும் நினைவைக் கொண்டிருங்கள், உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும்.

கேள்வி:
நீங்கள் அசரீரி உலகிற்குச் சென்றதும் எச் சம்ஸ்காரங்கள் மறைந்து, எச் சம்ஸ்காரங்கள் எஞ்சியிருக்கின்றன?

பதில்:
அங்கு, ஞானத்தின் சம்ஸ்காரங்கள் மறைந்து வெகுமதியின் சம்ஸ்காரங்கள் மாத்திரம் எஞ்சியிருக்கின்றன. இச்சம்ஸ்காரங்களின் அடிப்படையிலேயே நீங்கள் சத்திய யுகத்தில் உங்கள் வெகுமதியை அனுபவம் செய்கிறீர்கள். கற்பதற்கும், முயற்சி செய்வதற்கும் உரிய சம்ஸ்காரங்கள் அங்கு இருக்க மாட்டாது. நீங்கள் உங்கள் வெகுமதியைப் பெற்றதும் இந்த ஞானம் முடிவடைந்து விடுகின்றது.

பாடல்:
ஓ இரவுப் பயணியே களைப்படையாதீர். விடியலின் இலக்கு தொலைவில் இல்லை.

ஓம் சாந்தி.
இங்கு, கடவுள் சிவன் உங்களுடன் நேரடியாகப் பேசுகிறார். கீதையில் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பேசுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கிருஷ்ணர் அதே பெயரிலும் ரூபத்திலும் உங்கள் முன்னிலையில் நேரடியாகத் தோன்ற மாட்டார். அசரீரியான கடவுளே பேசுகிறார், அவர் உங்களுடன் நேரடியாகப் பேசுகிறார். “கடவுள் கிருஷ்ணர் பேசுகிறார்” என அவர்கள் கூறினால், அது அவர்கள் ஒரு சரீரதாரியைக் குறிப்பிடுவது போன்று உள்ளது. வேதங்களையும் சமயநூல்களையும் உரைப்பவர்கள் ஒருபொழுதும் “கடவுள் பேசுகிறார்” எனக் கூறமாட்டார்கள். ஏனெனில் அச் சாதுக்கள், புனிதர்கள், மகாத்மாக்கள் போன்றோர்கள் அனைவரும் சரீரதாரிகளே ஆவர். தந்தை கூறுகிறார்: ஓ ஆன்மீகப் பயணிகளே. ஆன்மீகத் தந்தை நிச்சயமாக ஆத்மாக்களுக்குக் கூறுவார்: குழந்தைகளே, களைப்படையாதீர்கள். சிலர் ஒரு யாத்திரையில் களைப்படைவதனால், அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள். அவை பௌதீக யாத்திரைகள் ஆகும். ஒரு பௌதீக யாத்திரையில் செல்கையில் அவர்கள் பல்வேறு ஆலயங்களுக்குச் செல்கிறார்கள். பக்தி மார்க்கத்தின் அனைத்து விக்கிரகங்களும் வைக்கப்பட்டுள்ள சிவாலயத்திற்கு அவர்கள் செல்கிறார்கள். அந்த பரம ஆவியான, பரமாத்மாவாகிய பரமதந்தை, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து, ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகிறார்: ஓ குழந்தைகளே, உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் மாத்திரமே இணைத்துக் கொள்ளுங்கள். மக்கள் அந்த யாத்திரைகளில் செல்லும்பொழுது, அங்கு சமயநூல்களிலிருந்து அவர்களுக்குக் கதைகளைக் கூறிப்; பாடுகின்ற, பிராமணக் குருக்களே அமர்ந்திருக்கிறார்கள். எவ்வாறாயினும், உங்களுடையது சத்திய நாராயணன் ஆகுகின்ற ஓர் உண்மைக்கதை ஆகும், அதாவது, சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதாகும். நீங்கள் முதலில் இனிய வீட்டுக்;குச் சென்று, பின்னர் விஷ்ணுவின் பூமிக்குக் கீழிறங்கி வருவீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இந்நேரத்தில் நீங்கள் பிரம்மாவின் பூமியில் இருக்கிறீர்கள். இது உங்களுடைய பிறந்த வீடு என அழைக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் பிறந்த வீட்டில் இருப்பதால் நகைகள் போன்ற எவற்றையும் நீங்கள் கொண்டிருக்கவில்லை. நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தை உங்களின் புகுந்த வீட்டில் பெற இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இங்கு, உங்களுடைய கலியுகத்துப் புகுந்த வீட்டில் எல்லையற்ற துன்பம் இருக்கிறது. நீங்கள் அக்கரைக்கு அச் சந்தோஷ பூமிக்குச் செல்ல வேண்டும். நீங்கள் இங்கிருந்து இடமாற்றப்பட வேண்டும். தந்தை உங்கள் அனைவரையும் தன் கண்களில் அமர்த்தி, உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வார். கிருஷ்ணரின் தந்தை அவரை ஒரு கூடையில் சுமந்து ஆற்றைக் கடந்ததாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு, எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களை அக்கரைக்கு உங்கள் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். முதலில், அவர் உங்களை உங்கள் அசரீரியான வீட்டுக்கு அழைத்துச் சென்று, பின்னர் உங்களை உங்களுடைய புகுந்த வீட்டிற்கு அனுப்புவார். நீங்கள் உங்களுடைய புகுந்த வீட்டினதும் பிறந்த வீட்டினதும் இவ்விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுவீர்கள். அது உங்கள் அசரீரியான பிறந்த வீடு ஆகும். அங்கு நீங்கள் இந்த ஞானத்தை மறந்திருப்பீர்கள். ஞானத்தின் சம்ஸ்காரங்கள் மறைந்து உங்களுடைய வெகுமதியின் சம்ஸ்காரங்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும். பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய வெகுமதியின் விழிப்புணர்வை மாத்திரம் கொண்டிருப்பீர்கள். உங்களுடைய வெகுமதிக்கேற்ப, நீங்கள் சென்று ஒரு சந்தோஷப் பிறவியைப் பெறுவீர்கள். நீங்கள் சந்தோஷப் பூமிக்குச் செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் வெகுமதியைப் பெற்றதும் இந்த ஞானம் முடிவடைகின்றது. வெகுமதியின் அதே செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் சம்ஸ்காரங்கள் வெகுமதிக்குரியவை ஆகும். இப்பொழுது உங்கள் சம்ஸ்காரங்கள் முயற்சி செய்வதற்கு உரியவை ஆகும். முயற்சி, வெகுமதி இரண்டினதும் சம்ஸ்காரங்கள் அங்கிருக்கும் என்பதல்ல. இல்லை. இந்த ஞானம் அங்கிருக்க மாட்டாது. இது உங்களுடைய ஆன்மீக யாத்திரையும், தந்தையே உங்கள் பிரதான வழிகாட்டியும் ஆவார். உண்மையில், நீங்களும் ஆன்மீக வழிகாட்டிகள் ஆகி, அனைவரையும் உங்களுடன் அழைத்துச் செல்கிறீர்கள். அந்த வழிகாட்டிகள் பௌதீகமானவர்கள், வழிகாட்டிகளாகிய நீங்களோ ஆன்மீகமானவர்கள் ஆவீர்கள். அவர்கள் அமர்நாத்திற்குப் பெரும் பகட்டுடனும்; ஆடம்பரத்துடனும் செல்கிறார்கள். விசேடமாகப் பெரிய குழுக்கள் அமர்நாத்திற்குப் பகட்டுடனும் ஆடம்பரத்துடனும் செல்கிறார்கள். சாதுக்கள், புனிதர்கள் போன்ற பலரும் இசைக்கருவிகளை அங்கு எடுத்துச் செல்வதை பாபா பார்த்துள்ளார். அவர்கள் ஒரு வைத்தியரையும் தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள், ஏனெனில் அங்கு காலநிலை குளிராக இருப்பதால், சிலர் நோய்வாய்ப்படுகிறார்கள். உங்களுடைய யாத்திரை மிகவும் இலகுவானதாகும். தந்தை கூறுகிறார்: உங்களுடைய யாத்திரை நினைவு செய்வதற்;குரியதாகும். நினைவே பிரதான விடயம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் நினைவைக் கொண்டிருந்தால் உங்களுடைய சந்தோஷப் பாதரசம் உயர்ந்திருக்கும். நீங்கள் ஏனையோரையும் உங்களுடன் இந்த யாத்திரையில் அழைத்துச் செல்ல வேண்டும். இந்த யாத்திரை ஒருமுறை மாத்திரமே இடம்பெறுகின்றது. அப்பௌதீக யாத்திரைகள் பக்திமார்க்கத்தில் இடம்பெற ஆரம்பிக்கும், ஆனால் அவை ஆரம்பத்திலேயே தொடங்குவதில்லை. ஆலயங்களும் விக்கிரகங்களும் உடனடியாகவே உருவாக்கப்பட்டன என்பதல்ல் அவை பின்னர் படிப்படியாகவே உருவாக்கப்பட்டன. முதலில் சிவனுக்கு ஆலயங்கள் கட்டப்படும். அவர்கள் முதலில் தங்களுடைய வீடுகளில் சோமநாதர் (சிவனின் விக்கிரகம்) ஆலயத்தைக் கட்டுகிறார்கள், ஆகவே எங்கும் செல்லத் தேவையில்லை. அந்த ஆலயங்கள் போன்ற அனைத்தும் பின்னர் கட்டப்பட்டன. புதிய சமயநூல்கள், புதிய படங்கள், புதிய ஆலயங்கள் தொடர்ந்தும் மிக மெதுவாகவே உருவாக்கப்படுவதால் அதற்குப் பெருமளவு காலம் எடுக்கிறது. சமயநூல்களைக் கற்பவர்களும் இருக்க வேண்டும் என்பதால் அதற்குக் காலம் எடுக்கிறது. சிறுபிரிவு அதிகரிக்கும்பொழுதே சமயநூல்களை உருவாக்கும் எண்ணம் எழுகிறது. பல்வேறு யாத்திரைத் தலங்கள், பல்வேறு ஆலயங்கள், படங்களை உருவாக்குவதற்குக் காலம் எடுக்கிறது. பக்திமார்க்கம் துவாபர யுகத்தில் ஆரம்பிக்கின்றது எனக் கூறப்பட்டாலும் அதற்கும் காலம் எடுக்கின்றது. கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. பக்தி முதலில் கலப்படமற்றதாக இருக்கிறது, பின்னர் அது கலப்படம் உடையதாகுகிறது. இப் பல்வேறு விடயங்கள் அனைத்தினதும் சான்று படங்களில் மிகவும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இவற்றை விளங்கப்படுத்துபவர்கள் இப் பல்வேறு விடயங்களையும் விளங்கப்படுத்துவதற்கு அத்தகைய படங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பதில் தங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். இக் கருத்துக்கள் அனைவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். சிலர்; தங்கள் புத்தியை முற்றிலும் இதற்குப் பயன்படுத்துவதில்லை, ஆகவே அவர்கள் அதற்கேற்பவே ஓர் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். அவர்கள் என்னவாக ஆகுவார்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. நீங்கள் முன்னேறிச் செல்கையில், இதை நீங்கள் மேலும் புரிந்து கொள்வீர்கள். யுத்தம் நடைபெறும்பொழுது நீங்கள் அனைத்தையும் நடைமுறையில் காண்பீர்கள். அப்பொழுது நீங்கள் பெருமளவு வருந்துவீர்கள். உங்களால் அந்நேரத்தில் கற்க முடியாது. யுத்த காலத்தில், விரக்திக் கூக்குரல் இருக்கும்; உங்களால் அவற்றைச் செவிமடுக்க இயலாதிருக்கும். என்ன நடைபெறும் என்று யார் அறிவார்? பிரிவினைக் காலத்தில் என்ன நடைபெற்றது என்பதை நீங்கள் கண்டீர்கள். விநாச காலம் மிகவும் கொடுமையானதாகும். ஆம், நீங்கள் பல காட்சிகளைப் பெறுவீர்கள், அதனூடாக ஒவ்வொருவரும் எவ்வளவு கற்றுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பெருமளவு வருந்துதல் இருப்பதுடன், நீங்கள் காட்சிகளையும் பெறுவீர்கள். நீங்கள் கற்பதை நிறுத்தினீர்கள், இதனாலேயே உங்கள் நிலைமை அத்தகையதாக ஆகியது. உஙகளுக்கு முதலில் ஒரு காட்சியைக் கொடுக்காமல் எவ்வாறு தர்மராஜால் உங்களைத் தண்டிக்க முடியும்? அவர் அனைத்தினதும் காட்சிகளைத் தருவார். உங்களால் அந்நேரத்தில் எதையுமே செய்ய முடியாதிருக்கும். நீங்கள் கூறுவீர்கள்: “ஓ, எனது விதி!” முயற்சி செய்வதற்கான காலம் முடிவடைந்திருக்கும். ஆகவே, தந்தை கூறுகிறார்: ஏன் இப்பொழுது முயற்சி செய்யக்கூடாது? சேவை செய்வதன் மூலம் நீங்கள் தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்வீர்கள். தந்தை கூறுவார்: இக் குழந்தை சிறந்த சேவையைச் செய்கிறார். ஓர் இராணுவ வீரர் மரணித்;தால், அவருடைய சக அலுவலர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கும் ஒரு விருது கொடுக்கப்படுகிறது. இங்கு, எல்லையற்ற தந்தையே உங்களுக்கு ஒரு விருதைக் கொடுக்கிறார். தந்தையிடமிருந்து உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு நீங்கள் விருதைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தில் உங்கள் கரத்தை வைத்து நீங்கள் எவ்வளவு கற்கிறீர்கள் என்று உங்களை வினவ வேண்டும். உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடியாதுவிடின், அது உங்களுடைய பாக்கியத்தில் இல்லை எனக் கூறப்படும். உங்களுடைய கர்மம் (விதி) சிறந்தல்ல எனக் கூறப்படும். பெருமளவு தீய செயல்களைப் புரிந்தவர்களால் இந்த ஞானம் எதையும் பெற்றுக் கொள்ள இயலாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, நீங்களும் உங்கள் சகபாடிகளை உங்களுடன் இந்த ஆன்மீக யாத்திரையில் அழைத்துச் செல்ல வேண்டும். இந்த யாத்திரையைப் பற்றி அனைவருக்கும் கூறுவது உங்களுடைய கடமையாகும். எங்களுடைய இந்த யாத்திரை ஆன்மீகமானது, ஏனைய யாத்திரைகளோ பௌதீகமானவை என்று அவர்களுக்குக் கூறுங்கள். அவர்கள் ஒரு மாய ஏரியை ரங்கூனுக்கு அருகில் காட்டுகிறார்கள். அதில் நீராடுவதால் நீங்கள் ஒரு தேவதையாக ஆக முடியும்; என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், எவரும் தேவதையாக ஆகுவதில்லை. அது நீங்கள் வைகுந்தத்தின் சக்கரவர்த்தினி ஆகுவதற்கான ஞானத்தில் நீராடுவதற்கான ஒரு கேள்வி ஆகும். ஞான, யோகச் சக்திகளினூடாக வைகுந்தத்திற்குச் சென்று வருவது உங்களுக்கு ஒரு சாதாரண விடயமாகும். உண்மையில், திரான்ஸில் செல்வது ஒரு பழக்கமாக ஆகுவதால், நீங்கள் மீண்டும் மீண்டும் திரான்ஸில் செல்வதிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளீர்கள். ஆகவே, இது ஞான மானசரோவர் ஆகும். பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து இம் மனிதச் சரீரத்தினூடாக உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். இதனாலேயே இது மானசரோவர் என அழைக்கப்படுகிறது. ‘மானசரோவர்’ என்ற வார்த்தையின் அர்த்தம் கடலிலிருந்து வருகிறது; ஞானக்கடலில் நீராடுவது மிகச் சிறந்ததாகும். வைகுந்தத்தில் (ஒரு சக்கரவர்த்தியின்) மனைவி ஒரு சக்கரவர்த்தினி என அழைக்கப்படுகிறாள். தந்தை கூறுகிறார்: நீங்களும் வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். குழந்தைகள் மீது அன்பு உள்ளது. அனைவர் மீதும் கருணை உள்ளது. புனிதர்கள் மீதும் கருணை உள்ளது. கடவுள் புனிதர்களையும் ஈடேற்றுகிறார் எனக் கீதையில் எழுதப்பட்டுள்ளது. ஈடேற்றம் ஞானத்தினூடாகவும் யோகத்தினூடாகவும் நடைபெறுகிறது. ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் உஷாராகவும் சுறுசுறுப்பானவர்;களாகவும் இருப்பது அவசியமாகும். அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் அறிந்துள்ளவை அனைத்தும் மோரைப் போன்றதாகும். நீங்கள் வெண்ணெயைக் கொடுப்பவரை அறிய மாட்டீர்கள். தந்தை உங்களுக்கு அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார், ஆனால் அவற்றில் எவ்வளவு உங்கள் புத்தியில் பதிகிறது என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. தந்தையை இனங்கண்டு கொள்வதால் மனிதர்கள் வைரங்களைப் போன்றவர்கள் ஆகுகின்றார்கள். அவரை அறியாததால், மனிதர்கள் சிப்பிகளைப் போன்றவர்களாகவும், முற்றிலும் தூய்மையற்றவர்களாகவும் ஆகுகிறார்கள். தந்தையை அறிந்துகொள்வதால் அவர்கள் தூய்மையானவர்கள் ஆகுகிறார்கள். தூய்மையற்ற உலகில் தூய்மையானவர்கள் எவரும் இல்லை. மகாராத்திக் குழந்தைகளால் இவ்விடயங்களை மிகவும் நன்றாக விளங்கப்படுத்த இயலும். பல பிரம்மா குமார்களும் குமாரிகளும் இருக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் பெயர் பிரபல்யமானதாகும். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள் ஆவீர்கள். பிரம்மா 100 கரங்களுடனும் 1000 கரங்களுடனும் சித்தரிக்கப்படுகிறார். பிரம்மாவுக்கு அத்தனை கரங்கள் இருக்காது என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பிரம்மாவுக்குப் பல குழந்தைகள் உள்ளனர். பிரம்மா யாருடைய குழந்தை? அவருக்கும் ஒரு தந்தை இருக்கிறார். பிரம்மா, சிவபாபாவின் குழந்தை ஆவார். வேறு யார் அவருடைய தந்தையாக இருக்க முடியும்? அது ஒரு மனிதராக இருக்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகவாசிகளாக நினைவு செய்யப்படுகிறார்கள்; அவர்கள் இங்கு வர முடியாது. மக்களின் தந்தையாகிய பிரம்மா நிச்சயமாக இங்கேயே இருப்பார். அவரால்; சூட்சும உலகில் மக்களைப் படைக்க முடியாது. எனவே, பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து பிரம்மாவின் வாயினூடாகச் சிவசக்தி சேனையை உருவாக்குகிறார். நீங்கள் முதலில் உங்களை பிரம்மாவின் வாய்வழித்தோன்றலாக உங்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அவர்களும் பிரம்மாவின் குழந்தைகள் என அவர்களுக்குக் கூறுங்கள். பிரஜாபிதா பிரம்மா அனைவரினதும் தந்தை ஆவார். பின்னர் அவரிலிருந்து ஏனைய வம்சாவளிகள் தோன்றுவதுடன், பின்னர் பெயர்களும் மாற்றமடைந்து வருகின்றன. நீங்கள் இப்பொழுது பிராமணர்களாக இருக்கிறீர்கள். பிரஜாபிதா பிரம்மாவிற்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பதை நீங்கள் நடைமுறை ரீதியில் பார்க்க முடியும். குழந்தைகள் நிச்சயமாக ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும். பிரம்மா எச் சொத்தையும் கொண்டிருக்கவில்லை. சிவபாபாவே சொத்துக்கள் அனைத்தையும் உடையவர். பிரம்மா சிவனின் புத்திரர் ஆவார். நீங்கள் உங்களுடைய ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். சிவபாபா இங்கமர்ந்திருந்து பிரம்மாவினூடாக உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைப் பாட்டனாரிடமிருந்து பெறுகிறீர்கள். பாபா பெருமளவு விளங்கப்படுத்துகிறார், ஆனால் நீங்கள் யோகத்தைக் கொண்டிருப்பதில்லை. நீங்கள் நியதிகளுக்கேற்ப விடயங்களைச் செய்யாதுவிடின், தந்தையால் என்ன செய்ய முடியும்? தந்தை கூறுகிறார்: அது உங்களுடைய பாக்கியம்! நீங்கள் பாபாவிடம் கேட்டிருந்தால் உங்களுடைய தற்போதைய நிலைமையிலிருந்து நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என பாபாவால் கூற முடியும். நீங்கள் எவ்வளவு சேவை செய்கிறீர்கள், நீங்கள் எவ்வளவுக்கு ஸ்ரீமத்தைப் பின்பற்;றுகிறீர்கள் என்பதை உங்களுக்குக் கூறுவதற்கு உங்கள் இதயமே சாட்சியாகும். ஸ்ரீமத் கூறுகிறது: மன்மனபவ! தொடர்ந்தும் அனைவருக்கும் தந்தையினதும் ஆஸ்தியினதும் அறிமுகத்தைக் கொடுங்கள். தொடர்ந்தும் இம் முரசுகளைக் கொட்டுங்கள். நீங்கள் அரசாங்கத்திற்கு விளங்கப்படுத்த வேண்டும் என்ற சமிக்ஞையை பாபா தொடர்ந்தும் உங்களுக்குக் கொடுக்கிறார், ஆகவே அவர்களாலும் பாரதத்தின் சக்தி நிச்சயமாக இழக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். சர்வசக்திவானாகிய பரமாத்மாவான பரமதந்தையுடன் யோகம் இருக்கவில்லை. நீங்கள் அவருடன் யோகத்தைக் கொண்டிருக்கும் பொழுது, உங்களால் மாயையை வெற்றி கொள்ள முடிவதனால், உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். உங்கள் குடும்பங்களுடன் வீட்டில் வாழும்பொழுது, நீங்கள் மாயையை வெற்றி கொள்ள வேண்டும். தந்தை எங்களுடைய உதவியாளர். உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் அதனைக் கிரகிக்க வேண்டும். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: தானம் செய்வதால் செல்வம் குறைவடையாது. நீங்கள் சேவை செய்யும்பொழுது மாத்திரமே உங்களால் பாபாவின் இதய சிம்மாசனத்தில் அமர முடியும். இல்லாவிட்டால், அது அசாத்தியமாகும். பாபா உங்கள் மீது அன்பு செலுத்தவில்லை என்பது அதன் அர்த்தமாகாது. பாபா சேவாதாரிகள் மீது அன்பு செலுத்துகிறார். அனைவரையும் யாத்திரையில் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். மன்மனபவ - இது ஓர் ஆன்மீக யாத்திரை ஆகும். என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் என்னிடம் வருவீர்கள். சிவனின் பூமிக்குச் சென்ற பின்னர், நீங்கள் விஷ்ணுவின் பூமிக்குச் செல்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களை அறிவீர்கள். அவர்கள் பெருமளவு கற்றாலும், அவர்களில் எவரும் மன்மனபவவின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை உங்களுக்கு இந்த மகத்தான மந்திரத்தைத் தருகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் பாவத்தை வென்றவர்கள் ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. ஞானத்தில் நீராடுங்கள். ஏனையோருக்கு அன்புடன் சேவை செய்து தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமருங்கள். முயற்சி செய்யும் இந்நேரத்தில் கவனயீனமானவர்கள் ஆகாதீர்கள்.

2. தந்தையின் கண் இமைகளில் அமர்வதால், நீங்கள் இக் கலியுகத்துத் துன்பபூமியைக் கடந்து சந்தோஷ உலகிற்குச் செல்ல வேண்டும். ஆகவே, உங்களிடமுள்ள அனைத்தையும் இடமாற்றம் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா அன்புக் கடலில் மூழ்கி, ~நான்| என்ற அனைத்து தீய உணர்விலிருந்து விடுபட்டு ஓர் தூய ஆத்மா ஆகுவீர்களாக.

அன்புக்கடலில் சதா மூழ்கியிருப்பவர்களுக்கு எந்த உலக உணர்வும் இருக்க மாட்டாது. அன்பில் மூழ்கியிருப்பதால், அவர்கள் இலகுவாக சகல சூழ்நிலைகளுக்கும் அப்பால் போகின்றார்கள். பக்தர்களைப் பற்றி பேசும் போது, அவர்கள் அன்பில் திளைத்திருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. ஆனால் குழந்தைகள் சதா அன்பில் மூழ்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு உலக உணர்வு எதுவும் இல்லாதிருப்பதால், ~என்னுடையது| என்பதன் சகல உணர்வும் முடிவடைகின்றது. ~என்னுடையது| என்பதன் அனைத்து உணர்வுகளும் உங்களை தீயவர்கள் ஆக்குகின்றது. ஒரேயொரு ~தந்தை” மாத்திரம் என்னுடையவர் ஆகும்பொழுது தீயவை அகற்றப்படுவதால் ஆத்மா தூய்மை ஆகுகின்றார்.

சுலோகம்:
உங்கள் புத்தியில் ஞான இரத்தினங்களை கிரகித்து பிறரையும் கிரகிக்கச் செய்வதே புனித அன்னங்களாக இருப்பதாகும்.