11.11.18 Avyakt Bapdada Tamil Lanka Murli 26.02.84 Om Shanti Madhuban
பாப்தாதாவின் தனித்துவமான அருங்காட்சியகம்.
இன்று, பாப்தாதா தனது அருங்காட்சியகத்தைப் பார்க்கிறார். பாப்தாவிடம் என்ன அருங்காட்சியகம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? இன்று, ஒவ்வொரு குழந்தையினதும் தெய்வீகச் செயல்களின் படங்களை சூட்சும வதனத்தில் பாப்தாதா பார்த்தார். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை, உங்கள் ஒவ்வொருவரினதும் தெய்வீகச் செயல்களின் படங்கள் எவ்வாறு இருந்தன? எனவே, அந்த அருங்காட்சியகம் எத்தனை பெரியது என நினைத்துப்பாருங்கள்! அந்தப் படங்களில் குறிப்பாக ஒவ்வொரு குழந்தையிலும் மூன்று விடயங்களை பாபா கண்டார். முதலாவது, தூய்மையின் ஆளுமை. இரண்டாவது, நிஜத்தின் இராஜரீகம். மூன்றாவது, உறவுமுறையில் நெருக்கம். ஒவ்வொருவரின் படத்திலும் பாபா இந்த மூன்று விடயங்களையும் கண்டார்.
தூய்மையின் ஆளுமையானது, படத்தைச் சூழவும் சூட்சுமமான பிரகாசமான ஒளியாகப் புலப்பட்டது. நிஜத்தின் இராஜரீகம், முகத்தில் ஜொலிக்கும் மலர்ச்சியும் சுத்தமும் ஆகும். உறவுமுறையின் நெருக்கம், நெற்றியின் மத்தியிலுள்ள நட்சத்திரம் ஆகும். சிலர் மற்றவர்களை விட எங்கும் பரவியுள்ள கதிர்களுடன் அதிகளவில் ஜொலித்தார்கள். சிலர் சில கதிர்களுடன் மட்டும் ஜொலித்தார்கள். நெருக்கமான ஆத்மாக்கள், தந்தைக்குச் சமமான ஆத்மாக்கள். அதாவது, அவர்கள் எங்கும் பரவும் கதிர்களைக் கொண்டுள்ள ஆத்மாக்கள் ஆவார்கள். அவர்களின் ஒளியிலும் சக்தியிலும் அவர்கள் தந்தைக்குச் சமமாகக் காணப்பட்டார்கள். ஒவ்வொருவரின் தெய்வீகச் செயல்களின் படத்திலும் பாபா இந்த மூன்று சிறப்பியல்புகளையும் கண்டார். இத்துடன், ஒவ்வொருவரின் படத்திலும், நீங்கள் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, இந்த மூன்று விடயங்களிலும் எப்போதும் மேன்மையானவராக இருந்தீர்களா அல்லது சிலவேளைகளில் ஒன்றாகவும் ஏனைய வேளைகளில் வேறொன்றாகவும் இருந்தீர்களா என்ற பெறுபேற்றையும் பாபா பார்த்தார். பௌதீக சரீரத்தில் அனைத்தும் நன்றாக உள்ளதா அல்லது ஏதாவது தளம்பல் ஏற்பட்டுள்ளதா என்பதைச் சோதிப்பதற்கு நாடி பிடித்துப் பார்க்கப்படுகிறது. ஒருவரின் நாடித்துடிப்பு வேகமாக உள்ளதா அல்லது மெதுவாக உள்ளதா என்பதைப் பொறுத்து ஒருவரின் ஆரோக்கியத்தை அறிய முடியும். அதேபோன்று, ஒவ்வொரு படத்தின் மத்தியில் இருந்தும், இதயத்தில் இருந்து ஓர் ஒளி சரீரம் முழுவதும், மேலிருந்து கீழே வரை செல்கிறது. வேகமும் புலப்படுகிறது. கீழிருந்து மேலே செல்லும் ஒளியானது, ஒரே வேகத்துடன் செல்கிறதா அல்லது அவ்வப்போது அதன் வேகத்தில் மாற்றம் ஏற்படுகிறதா என்பது புலப்படுகிறது. இத்துடன், ஒளியின் நிறமும் இடையிடையே சோதிக்கப்படுகிறது. அதன் நிறம் நிலையாக உள்ளதா அல்லது அது மாறுகிறதா எனச் சோதிக்கப்பட்டது. மூன்றாவதாக, பயணம் செய்யும் இந்த ஒளியானது, இடையில் நின்றுவிட்டதா அல்லது எல்லா வேளையும் அது தொடர்ந்து அசைகிறதா என்பதும் பார்க்கப்பட்டது. இந்த முறையில் பாபா ஒவ்வொருவரின் தெய்வீகச் செயல்களின் படத்தையும் பார்த்தார். உங்களாலும் உங்களின் சொந்தப் படத்தைப் பார்க்க முடியும், அல்லவா?
உங்களின் படத்தை ஆளுமை, இராஜரீகம், நெருக்கம் என்ற மூன்று சிறப்பியல்புகளுடனும் சோதித்து, அது எவ்வாறு உள்ளது என்று பாருங்கள். உங்களின் ஒளியின் வேகம் என்ன? அது வரிசைக்கிரமமாகவே இருக்கும். ஆனால், ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, மூன்று வகையான சிறப்பியல்புகளை வைத்திருப்பவர்களும், மூன்று வகையான ஒளியின் வேகமும் நிலையாக இருப்பவர்களும் பெரும்பாலானவர்களாக இல்லை. சிறுபான்மையினரே அவ்வாறு உள்ளனர். மூன்று ஒளிகளின் வேகமும் மூன்று சிறப்பியல்புகளும் என்றால் ஆறு விடயங்கள் என்று அர்த்தம். இந்த ஆறிலும், பெரும்பாலானோரிடம் நான்கு அல்லது ஐந்து காணப்பட்டன. சிலரிடம் மூன்று காணப்பட்டன. சிலரின் தூய்மையின் ஆளுமையின் ஒளி ரூபம், அவர்களின் முகங்களைச் சுற்றி கிரீடத்தின் வடிவில் (ஒளிவட்டம்) காணப்பட்டது. ஏனையோரில், அவர்களின் சரீரத்தின் அரைவாசிக்குக் காணப்பட்டது. ஏனையோரில், அவர்களின் சரீரங்களைச் சூழவும் காணப்பட்டது. உதாரணமாக, நீங்கள் ஒரு புகைப்படம் எடுப்பதைப் போன்றிருந்தது. ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை, தமது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் தூய்மையாக இருப்பவர்கள் காணப்பட்டார்கள். அவர்களின் மனங்களில், தம்மைப் பற்றிய அல்லது மற்றவர்களைப் பற்றிய வீணான எண்ணங்கள் என்ற வடிவில் எந்தவிதத் தூய்மையின்மையும் காணப்படவில்லை. அவர்கள் எவரின் பலவீனம் அல்லது குறைகள் என்ற எந்தவிதத் தூய்மையின்மையையும் கொண்டிருக்கவில்லை. அவர்களின் எண்ணங்களில் அவர்கள் பிறப்பில் இருந்தே வைஷ்ணவர்களாக இருந்தார்கள். எண்ணங்கள் புத்திக்கான உணவு ஆகும். ‘பிறப்பில் இருந்தே வைஷ்ணவர்கள்’ என்றால், உங்களின் மனதில் அல்லது புத்தியில் எந்தவிதமான தூய்மையின்மையை, குறைபாடுகளை, அல்லது வீணான எண்ணங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம். இதுவே பிறப்பில் இருந்து உண்மையான வைஷ்ணவராகவும் பிரம்மச்சாரியாகவும் இருத்தல் எனப்படுகிறது. எனவே, பாபா ஒவ்வொருவரின் படத்திலும், தூய்மையின் ஆளுமையை ஒளியின் ரூபத்தில் கண்டார். தமது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் - உறவுமுறைகளும் தொடர்புகளும் செயல்களில் அடங்குகின்றன- தூய்மையாக இருப்பவர்களின் படங்களில் அவர்களின் நெற்றியில் இருந்து பாதங்கள் வரை ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது. உங்களுக்குப் புரிகிறதா? ஞானக் கண்ணாடியில் நீங்கள் உங்களின் படத்தைப் பார்த்தீர்களா? பாப்தாதா உங்களைப் பற்றிப் பார்த்த படம் எவ்வாறிருக்கும் என மிகக் கவனமாகப் பாருங்கள். அச்சா.
பாபாவைச் சந்திப்பதற்காக இருப்பவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. சூட்சும வதனத்தில், உங்களுக்கு ஓர் இலக்கம் வழங்கப்படமாட்டாது. அங்கு காலத்தைப் பற்றிய கேள்வியே கிடையாது. நீங்கள் விரும்பியபோது, விரும்பும் நேரத்திற்கு பாபாவைச் சந்திக்க முடியும். எத்தனை பேர் வேண்டும் என்றாலும் பாபாவைச் சந்திக்க முடியும். ஏனெனில், அது எல்லைகள் நிறைந்த உலகிற்கு அப்பாற்பட்டது. பௌதீக உலகிலேயே இந்த பந்தனங்கள் (கட்டுப்பாடுகள்) உள்ளன. இதனாலேயே, பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ள அந்த ஒருவரும் பந்தனத்தில் கட்டுண்டு இருக்கிறார். அச்சா.
ஆசிரியர்களான நீங்கள் இப்போது திருப்தியாக இருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் அனைவரும் உங்களின் முழுப் பங்கினையும் பெற்றுவிட்டீர்கள், அல்லவா? நீங்கள் கருவிகள் ஆகியுள்ள விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். விசேடமான ஆத்மாக்களிடம் பாப்தாதாவும் விசேடமான மரியாதை வைத்திருக்கிறார். நீங்கள் இன்னமும் சேவைச் சகபாடிகளாக இருக்கிறீர்கள், அல்லவா? உண்மையில், அனைவரும் சகபாடிகளே. எவ்வாறாயினும், கருவிகள் தங்களைக் கருவிகளாகக் கருதும்போதே, சேவையில் வெற்றி ஏற்படும். எவ்வாறாயினும், பல குழந்தைகள் சேவையில் அதிகளவு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தொடர்ந்து முன்னேறுகிறார்கள். அவ்வாறிருந்தும், விசேடமான கருவி ஆத்மாக்களுக்கு மரியாதை அளித்தல் என்றால் தந்தைக்கு மரியாதை அளித்தல் என்று அர்த்தம். அந்த மரியாதைக்குப் பலனாக, நீங்கள் தந்தையின் இதயபூர்வமான அன்பைப் பெறுகிறீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தவில்லை. ஆனால், தந்தையின் இதயபூர்வமான அன்பைப் பெறுகிறீர்கள். அச்சா.
இதயங்களுக்குச் சௌகரியம் அளிக்கும் தந்தையின் இதயபூர்வமான அன்பைப் பெறுவதற்கு எப்போதும் தகுதிவாய்ந்தவர்களாக இருப்பவர்களுக்கும், அதாவது, தம்மில் தூய்மையின் ஆளுமையையும் நிஜத்தின் இராஜரீகத்தையும் அனுபவம் செய்யும் தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கும், தந்தைக்கு நெருக்கமாகவும் சமமாகவும் இருக்கும் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
அவ்யக்த பாப்தாதா யுகே குழுவைச் சந்திக்கிறார்:
நீங்கள் அனைவரும் சகல இரகசியங்களாலும் நிறைந்திருக்கும் ராசியுக்தாகவும் யோகியுக்தாகவும் இருக்கும் ஆத்மாக்கள், அல்லவா? நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே பாப்தாதாவின் பெயரை எங்கும் வெளிப்படுத்துவதற்குக் கருவிகளாக இருக்கும் ஆத்மாக்கள் ஆவீர்கள். இத்தகைய ஆதி இரத்தினங்களையும் சேவை சகபாடிகளையும் காணும்போது பாப்தாதா எப்போதும் களிப்படைகிறார். நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் வலது கைக் குழுவினர் ஆவீர்கள். நீங்கள் மிக நல்ல இரத்தினங்கள் ஆவீர்கள். சிலர் ஒரு வகையினர். ஏனையோர் வேறொரு வகையினர். ஆனால் நீங்கள் அனைவரும் இரத்தினங்களே. ஏனெனில், நீங்கள் அனுபவசாலிகள் ஆகியிருப்பதுடன், ஏனையோரையும் அனுபவசாலிகள் ஆக்குவதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் சதா அதிகளவு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் நினைவிலும் சேவையிலும் திளைத்திருப்பவர்கள் என்பதை பாப்தாதா அறிவார். நீங்கள் இப்போது ஏனைய அனைத்தையும் முடித்துவிட்டீர்கள். இப்போது, நினைவையும் சேவையையும் தவிர வேறு எதுவும் இல்லை. ஒரேயொருவரே உள்ளார். நீங்கள் ஒரேயொருவருக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் நிலையான ஸ்திதியைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இதையே கூறுகிறீர்கள். உண்மையில், இதுவே உண்மையான மேன்மையான வாழ்க்கை ஆகும். இத்தகைய மேன்மையான வாழ்க்கை வாழுபவர்கள், சதா பாப்தாதாவிற்கு நெருக்கமாக இருப்பார்கள். புத்தியில் நம்பிக்கை வைத்திருப்பதற்கான நடைமுறை அத்தாட்சியை நீங்கள் கொடுக்கிறீர்கள். நீங்கள் எப்போதும், ‘ஆஹா, எனது பாபா, ஆஹா, எனது பாக்கியமே!’ என்பதை நினைவு செய்கிறீர்கள், அல்லவா? பாப்தாதா இத்தகைய விழிப்புணர்வின் சொரூபங்களாக இருக்கும் குழந்தைகளைக் கண்டு எப்போதும் களிப்படைகிறார்: ஆஹா, என் மேன்மையான குழந்தைகளே, ஆஹா! பாப்தாதா இத்தகைய குழந்தைகளின் பாடல்களைப் பாடுகிறார். இலண்டனே வெளிநாட்டுச் சேவைக்கான அத்திவாரம் ஆகும். நீங்கள் அனைவரும் பலமானவர்கள் ஆகுகின்றீர்கள். அதன் விளைவாகச் சேவை தொடர்ந்து வளருகிறது. மரம் வளரும்போது அத்திவாரம் மறைந்து போனாலும், அது அத்திவாரமே ஆகும். மரம் அழகாக வளருவதைப் பார்க்கும்போது, அனைவரின் பார்வையும் அதை நோக்கியே அதிகளவில் ஈர்க்கப்படுகிறது. அத்திவாரம் மறைமுகமாகவே இருக்கும். அதேபோன்று, நீங்களும் கருவிகளாகி உள்ளீர்கள். அத்துடன் ஏனையோருக்கு வாய்ப்பை அளிப்பவர்கள் ஆகியுள்ளீர்கள். ஆயினும், ஆதியில் வந்தவர்கள் முதன்மையானவர்களே. நீங்கள் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களை முன்னேறச் செய்வதில் சந்தோஷப்படுகிறீர்கள், அல்லவா? இரட்டை வெளிநாட்டவர்கள் வந்துள்ளார்கள், அதனால் நீங்கள் மறைக்கப்பட்டுவிட்டீர்கள் என நீங்கள் நினைக்கவில்லை, அல்லவா? நீங்கள் இப்போதும் கருவிகளே. நீங்கள் அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்குவதற்கான கருவிகள் ஆவீர்கள். மற்றவர்களைத் தமக்கு முன்னால் வைப்பவர்கள், எப்போதும் தாம் முன்னாலேயே இருப்பார்கள். உதாரணமாக, சிறுவர்களிடம் எப்போதும் உங்களின் முன்னால் நடக்கும்படி நீங்கள் கூறுவீர்கள். வயதானவர்கள் பின்னால் இருப்பார்கள். இளையவர்களை முன்னால் செல்ல வைப்பதெனில், பழையவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். நீங்கள் நிச்சயமாக அதன் புலப்படும் பழத்தைத் தொடர்ந்து பெறுவீர்கள். நீங்கள் ஒத்துழைப்பவர் ஆகாவிட்டால், இலண்டனில் பல நிலையங்கள் ஏற்பட்டிருக்க மாட்டாது. ஒருவர் ஓரிடத்தில் கருவி ஆகுகிறார். இன்னொருவர் வேறோர் இடத்தில் கருவி ஆகுகிறார். அச்சா.
பாப்தாதா மலேசியா மற்றும் சிங்கப்பூர் குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் அனைவரும் உங்களைத் தந்தையால் நேசிக்கப்படும் ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருக்கும் ஸ்திதியில் நீங்கள் எப்போதும் ஸ்திரமாக இருக்கிறீர்களா? இந்த ஸ்திதி நிலையான ஸ்திதி எனப்படுகிறது. ஏனெனில், நீங்கள் ஒரேயொருவருக்குச் சொந்தமாகும்போது, நீங்கள் நிலையாகவும் ஸ்திரமாகவும் இருப்பீர்கள். பலர் இருந்தால், உங்களின் ஸ்திதி தளம்பும். ஒரேயொருவரில் அனைத்தையும் காண்பதற்கான இலகுவான வழிமுறையைத் தந்தை உங்களுக்குக் காட்டியுள்ளார். நீங்கள் பலரை நினைப்பதில் இருந்தும் பல திசைகளில் அலைந்து திரிவதில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் ஒன்றே. நீங்கள் ஒரேயொருவருக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் சதா இந்த நிலையான, ஸ்திரமான ஸ்திதியுடன் தொடர்ந்து முன்னேறுவீர்கள்.
இப்போது சிங்கப்பூரையும் கொங்கொங்கையும் சேர்ந்தவர்கள், சீனாவில் ஒரு நிலையத்தைத் திறக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருங்கள். சீனாவில் இன்னமும் ஒரு நிலையம் இல்லை. அவர்களை உங்களின் தொடர்பில் கொண்டுவந்து, அவர்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுங்கள். தைரியத்துடன் ஓர் எண்ணத்தை உருவாக்குங்கள். அது நிகழும். இராஜயோகத்தின் மூலம் அவர்கள் கடவுளின் அன்பையும் அமைதியையும் சக்தியையும் அனுபவம் செய்ய வேண்டும். அப்போது ஆத்மாக்கள் இயல்பாகவே மாறுவார்கள். அவர்களை இராஜயோகிகள் ஆக்குங்கள். அவர்களை தேவர்கள் ஆக்காதீர்கள். இராஜயோகிகள் தானாகவே தேவதேவியர்கள் ஆகுவார்கள். அச்சா.
பொலிஷ் (போலந்து) குழுவினருடன் பேசுகிறார்:
குழந்தைகளான நீங்கள் அனைவரும் உங்களின் இனிய இல்லத்தை வந்தடைந்ததை இட்டு பாப்தாதா சந்தோஷப்படுகிறார். உங்கள் அனைவருக்கும் இந்த சந்தோஷம் உள்ளதல்லவா? நீங்கள் மகா யாத்திரைஸ்தலத்தை வந்தடைந்துள்ளீர்கள் என்று சந்தோஷப்படுகிறீர்களா? இதைப் பயிற்சி செய்வதன் மூலம், உங்களின் வாழ்க்கை மேன்மையடையும். எவ்வாறாயினும், இந்த இடத்திற்கு வருவதன் மூலம் நீங்கள் மகத்தான பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். இந்த இடத்தில் நிஜமான கடவுளின் அன்பைப் பெற்ற உங்களின் குடும்பத்திடம் நீங்கள் வந்துள்ளீர்கள். நீங்கள் அதிகளவில் செலவு செய்து, அதிகளவு முயற்சி செய்து இங்கு வந்துள்ளீர்கள். இப்போது அந்தச் செலவும் அந்த முயற்சியும் பயனுள்ளது என நீங்கள் உணர்கிறீர்கள். நீங்கள் எங்கு வந்துள்ளீர்கள் என நீங்கள் நினைக்கவில்லை, அல்லவா? நீங்கள் குடும்பத்தினராலும் தந்தையாலும் அதிகளவில் நேசிக்கப்படுகிறீர்கள். பாப்தாதா எப்போதும் குழந்தைகளான உங்களின் சிறப்பியல்பையே பார்க்கிறார். உங்களின் சிறப்பியல்பை நீங்கள் அனைவரும் அறிவீர்களா? உங்களின் அன்பினூடாக வெகு தொலைவில் உள்ள இங்கு வந்திருப்பது உங்களின் சிறப்பியல்பு ஆகும். இப்போது, சதா கடவுளின் குடும்பத்தையும் கடவுளின் வழிமுறையான இராஜயோகத்தையும் உங்களுடன் தொடர்ந்து வைத்திருங்கள். இப்போது, நீங்கள் திரும்பிச் சென்றதும், இராஜயோக நிலையத்தை மிக நன்றாக வளர்ச்சி அடையச் செய்யுங்கள். ஏனெனில், ஆத்மாக்கள் பலரும் உண்மையான அமைதிக்கும் உண்மையான அன்பிற்கும் உண்மையான சந்தோஷத்திற்குமான தாகத்துடன் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குப் பாதையைக் காட்டுவீர்கள், அல்லவா? ஒரு நபர் தண்ணீர் தாகத்துடன் இருக்கும்போது, யாராவது ஒருவர் அந்த வேளையில் தண்ணீர் கொடுத்தால், தனது எஞ்சிய வாழ்நாள் பூராகவும் அவர் தண்ணீர் கொடுத்தவரைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருப்பார். எனவே, நீங்கள் அனைவரும் பிறவி பிறவியாக ஆத்மாக்களின் அமைதிக்கும் சந்தோஷத்திற்குமான தாகத்தைத் தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள். உங்களின் சந்தோஷத்தைக் காணும்போது, அனைவரும் சந்தோஷப்படுவார்கள். சந்தோஷமே சேவை செய்வதற்கான வழிமுறை ஆகும்.
நீங்கள் இந்த மகத்தான யாத்திரைஸ்தலத்தை அடைந்ததும், அனைத்து யாத்திரைகளும் அதில் ஒன்றுகலந்துள்ளன. இந்த மகத்தான யாத்திரைஸ்தலத்தில் ஞான நீராடி, உங்களிடம் உள்ள பலவீனங்கள் அனைத்தையும் தானம்செய்யுங்கள். நீங்கள் யாத்திரை செல்லும்போது, எதையாவது துறக்க வேண்டியிருக்கும். நீங்கள் எதைத் துறப்பீர்கள்? உங்களுக்குத் துன்பம் தருவதைத் துறவுங்கள் - அவ்வளவே! அப்போது மட்டுமே இந்த யாத்திரையில் செல்வது வெற்றி அளிக்கும். இதைத் தானம் செய்யுங்கள். இந்தத் தானத்தினூடாக, நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள். ஏனெனில், தீங்கான எதையும் கைவிடுவதெனில், நல்லதைக் கிரகித்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். நீங்கள் பலவீனங்களைக் கைவிட்டு, நற்குணங்களைக் கிரகித்தால், இயல்பாகவே புண்ணியாத்மா ஆகுவீர்கள். இதுவே இந்த மகத்தான யாத்திரைஸ்தலத்தின் வெற்றி ஆகும். இந்த மகத்தான யாத்திரைஸ்தலத்திற்கு நீங்கள் வந்திருப்பது மிகவும் நல்லது. இங்கு வருவதெனில், பாக்கியசாலி ஆத்மாக்களின் பட்டியலில் இடம்பெறுதல் என்று அர்த்தம். இந்த யாத்திரைஸ்தலத்திற்கு இத்தகைய சக்தி உள்ளது. எவ்வாறாயினும், இப்பொழுதில் இருந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பாக்கியசாலி ஆகுதல் ஒரு விடயம். நூறு மடங்கு பாக்கியசாலி ஆகுதல் வேறொரு விடயம். பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுதல் மேலும் அதிகமான ஒன்றாகும். நீங்கள் இந்த சகவாசத்தில் அதிகம் இருந்து, தொடர்ந்து நற்குணங்களைக் கிரகித்தால், அதிகளவில் தொடர்ந்து பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுவீர்கள். அச்சா.
பாப்தாதா இரட்டை வெளிநாட்டு ஆசிரியர்களிடம் பேசுகிறார்:
வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களான நாங்கள் இங்கு வந்துள்ளோம் என ஆசிரியர்கள் ஒருபோதும் நினைக்கக்கூடாது. புதியவர்களே இவ்வாறு கூறுவார்கள். நீங்கள் பழையவர்கள். அதனாலேயே நீங்கள் கருவிகள் ஆகியுள்ளீர்கள். வேறொரு மதத்தைச் சேர்ந்த நீங்கள் இந்த மதத்திற்கு வந்துள்ளீர்கள் என்பதல்ல. நீங்கள் இந்த தர்மத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இந்த தர்மத்திற்கு வந்துள்ளீர்கள். ‘நாம் அவர்களில் இருந்து வேறுபட்டவர்கள்’ - உங்களின் கனவுகளிலேனும் இந்த எண்ணம் இருக்கக்கூடாது. பாரதம் வெளிநாடுகளில் இருந்து வேறுபட்டது என்பதல்ல. இந்த எண்ணம், எமது ஒற்றுமைக்குள் பிரிவினைக் கொண்டுவரும். அதன்பின்னர் இது, ‘நாமும் அவர்களும்’ என்று ஆகுகிறது. ‘நாமும் அவர்களும்’ என்று ஆகும்போது அதில் என்ன ஏற்படும்? முரண்பாடுகள் மட்டுமே ஏற்படும். இதனாலேயே, நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். பாப்தாதா உங்களை அடையாளப்படுத்துவதற்காகவே இரட்டை வெளிநாட்டவர்கள் என்று கூறுகிறார். நீங்கள் வேறானவர்கள் அல்ல. நீங்கள் இரட்டை வெளிநாட்டவர்கள் என்பதனால், இந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்களை விட வேறுபட்டவர்கள் என்று நினைக்காதீர்கள். இல்லை. நீங்கள் பிராமணப் பிறப்பை எடுத்திருப்பதனால், உங்களின் பிராமணப் பிறப்பினூடாக நீங்கள் என்னவாகியுள்ளீர்கள்? பிராமணர்கள் அனைவரும் ஒரே தர்மத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு இரட்டை வெளிநாட்டவர்கள் மற்றும் இந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கேள்விக்கு இடமேயில்லை. நாம் அனைவரும் ஒரேயொரு பிராமண தர்மத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். நாம் பிராமண வாழ்க்கை வாழுகிறோம். கருவிகள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் சேவையில் இருக்கிறார்கள். ‘இவை எமது எண்ணங்கள், ஆனால் இந்தியாவைச் சேர்ந்த உங்களின் எண்ணங்கள் இவ்வாறுள்ளன’ என்ற மொழியை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். இவ்வாறு பேசுதல் தவறானது. தவறுதலாகவேனும் இத்தகைய வார்த்தைகளைப் பேசாதீர்கள். பாரத மக்களுக்கும் வௌ;வேறு அபிப்பிராயங்கள் இருக்கக்கூடும். அது வேறு விடயம். எவ்வாறாயினும், ஒருபோதும் பாரதத்திற்கும் வெளிநாடுகளுக்கும் இடையே வேறுபாட்டைக் கொண்டுவராதீர்கள். வெளிநாட்டவர்களான எங்களுக்கு இது இவ்வாறே என ஒருபோதும் நினைக்காதீர்கள். இல்லை. எமது சுபாவம் இத்தகையதே என ஒருபோதும் கூறாதீர்கள். இல்லை. இவ்வாறு ஒருபோதும் நினைக்காதீர்கள். ஒரேயொரு தந்தையே இருக்கிறார். நாம் அனைவரும் அந்த ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்கள். கருவி ஆசிரியர்கள் எதைப் பேசுகிறார்களோ, அதையே மற்றவர்களும் பேசுவார்கள். ஆகவே, ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் யுக்தியுடன் பேசுங்கள். ஒரே வேளையில் யோகியுக்தாகவும் யுக்தியுக்தாகவும் இருங்கள். சிலர் யோகத்தில் அதிகளவில் முன்னேறிச் செல்வதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களின் செயல்கள் யுக்தியுக்தாக இருப்பதில்லை. இரண்டிலும் சமநிலை இருக்கவேண்டும். யோகியுக்தாக இருப்பதன் அடையாளம், யுக்தியுக்தாக இருத்தலாகும்.
சேவையாளர்களுடன் பேசுகிறார்:
யக்ஞத்திற்குச் சேவை செய்வதற்கான பாக்கியத்தைப் பெறுதலும் மகத்தான பாக்கியத்தின் அடையாளமே ஆகும். நீங்கள் சொற்பொழிவுகள் அல்லது பாடநெறிகளை வழங்காவிட்டாலும், நீங்கள் சேவைக்கான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இதனூடாகவும் நீங்கள் சித்தி அடைவீர்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் அதற்குரிய மதிப்பெண்கள் உள்ளன. நீங்கள் சொற்பொழிவுகள் கொடுக்காவிட்டால், பின்னால் இருக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள். சேவையாளர்களுக்கு நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினதும் பலனுக்கான உரிமை உள்ளது. நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? தாய்மார்களுக்கு அவர்களின் மனதில் எவ்வாறு நடனம் ஆடுவது என்பது தெரியும். நீங்கள் எதனைச் செய்யாவிட்டாலும், உங்களின் மனதில் தொடர்ந்து சந்தோஷ நடனம் ஆடுங்கள். அதனூடாக அதிகளவு சேவை இடம்பெறும். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் சமநிலைக்கான உணர்வைப் பேணும் அதேவேளை, ஒவ்வோர் அடியிலும் சிறப்பியல்பின் அனுபவத்தை வழங்கும் விசேடமான ஆத்மா ஆகுவீர்களாக.
ஒவ்வொரு குழந்தைக்கும் அவருக்கே உரிய சிறப்பியல்பு உள்ளது. விசேடமான ஆத்மாக்களின் செயல்கள், சாதாரணமான ஆத்மாக்களின் செயல்களை விட வேறுபட்;டது. அனைவரிடமும் சமமாக இருக்கும் உணர்வு இருக்கவேண்டும். ஆனால், ஒவ்வோர் ஆத்மாவும் விசேடமான ஆத்மா என்பது புலப்பட வேண்டும். ‘விசேடமான ஆத்மாக்கள்’ என்றால் விசேடமான எதையும் செய்பவர்கள், ஆனால் அதைப் பற்றிப் பேசாதவர்கள் ஆவார்கள். அத்தகைய ஆத்மா ஓர் அன்புக் பொக்கிஷக் களஞ்சியம் என அனைவரும் உணர்வார்கள். உங்களின் ஒவ்வோர் அடியிலும் ஒவ்வொரு பார்வையிலும் அன்பே அனுபவம் செய்யப்பட வேண்டும். இதுவே சிறப்பியல்பு ஆகும்.
சுலோகம்:
உலகம் அழிவதற்கு முன்னர், உங்களின் சொந்தக் குறைபாடுகளையும் பலவீனங்களையும் அழித்துவிடுங்கள்.