12/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது காரிருள் சூழ்ந்துள்ளது. பயங்கரமான இரவு முடிவுக்கு வருகின்றது. நீங்கள் பகலுக்குச் செல்லவேண்டும். இது பிரம்மாவின் எல்லையற்ற பகலினதும், இரவினதும் கதையாகும்.
கேள்வி:
ஒரு விநாடியில் ஜீவன்முக்தியையும், வைரத்தைப் போன்று பெறுமதியான வாழ்க்கையையும் அடைவதற்கான அடிப்படை என்ன ?
பதில்:
கடவுளால் பேசப்பட்ட மேன்மையான வாசகங்களாகிய உண்மையான கீதையேயாகும். தந்தை தனிப்பட்ட ரீதியில் உங்களுக்குக் கொடுக்கின்ற வழிகாட்டல்களே உண்மையான கீதையாகும். இதன் மூலமாக நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன்முக்தி நிலையை அடைவதுடன், வைரத்தைப் போன்று பெறுமதியானவர்களாகவும் ஆகுகின்றீர்கள். அந்தக் கீதையின் மூலமாகப் பாரதம் சிப்பியைப் போன்றதாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் தந்தையை மறந்து, அதனைப் பொய்யானதாக்கிவிட்டார்கள்.
பாடல்:
ஓ இரவுநேரப் பயணியே களைப்படையாதீர், விடியலின் இலக்கு வெகு தொலைவில் இல்லை.....
சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடலை இயற்றவில்லை. திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களே இதனை இயற்றினார்கள். எனினும் அவர்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. ஒவ்வொன்றினதும் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாததனாலேயே அனைத்தும் அர்த்தமற்றதாகுகின்றது. அவர்கள் பாடுகின்றார்கள் ஆயினும், அதனைப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். யாருடைய ஸ்ரீமத்? கடவுளுடையதாகும். பக்தர்கள் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே, அந்தப் பக்தர்களால் எவ்வாறு முக்தியை அடைய முடியும்? கடவுளே பக்தர்களின் பாதுகாவலர். மக்கள் பாதுகாப்பை வேண்டுவதால், நிச்சயமாக அவர்கள் ஏதாவது துன்பத்தை அனுபவித்தவாறே இருக்கின்றார்கள். “எங்களுக்குப் பாதுகாப்பளியுங்கள்!” அவர்கள் இவ்வாறு பெருமளவில் பாடுகின்றார்கள், எனினும், கடவுள் யார் என்பதனையோ, அவர் எதிலிருந்து தங்களைப் பாதுகாக்கின்றார் என்றும் எதனையும் அறியமாட்டார்கள். பக்தர்களாக உள்ள குழந்தைகள் தங்களது தந்தையை அறியாததனால், மிகவும் சந்தோஷமற்றவர்களாக ஆகிவிட்டனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். இப்பொழுது அரைக் கல்பத்தின் இரவாகும். அதாவது, காரிருள் சூழ்ந்த பயங்கரமான இரவாகும். புலவர்களோ, பண்டிதர்களோ, அல்லது ஆசிரியர்களோ எவருமே இரவு என்றால் என்ன என்பதனை அறியமாட்டார்கள். இரவு என்பது உறக்கத்திற்காகவும், பகல் என்பது விழித்திருப்பதற்காகவும் என்பதை விலங்குகளும் அறியும். பறவைகளும் இரவில் உறங்கச் செல்வதுடன், விடிந்ததும் பறக்க ஆரம்பித்து விடுகின்றன. அந்த இரவும், பகலும் பொதுவானவை. இது பிரம்மாவின் எல்லையற்ற இரவும், எல்லையற்ற பகலுமாகும். சத்திய, திரேதா யுகங்கள் எல்லையற்ற பகலும், துவாபர கலியுகங்கள் எல்லையற்ற இரவும் ஆகும். அது அரைவாசிக்கு அரைவாசியாகும். பகலின் காலப்பகுதி 2500 வருடங்களாகும். இப்பகலையும், இரவையும் எவருமே அறியமாட்டார்கள். இரவு முடிவுக்கு வருகின்றது, அதாவது, உங்களது 84 பிறவிகளும் முடிவுக்கு வருகின்றது என்பதனை, அதாவது நாடகச் சக்கரம் முடிவடைந்து பகல் ஆரம்பிக்க உள்ளது என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இரவைப் பகலாகவும், பகலை இரவாகவும் மாற்றுபவர் யார் என்பதனை எவருமே அறியமாட்டார்கள். அவர்கள் கடவுளையும் அறியமாட்டார்கள், எனவே இவ்விடயங்களை எவ்வாறு அவர்கள் அறிந்திருப்பார்கள்? மக்கள் வழிபடுகின்றார்கள், ஆயினும், தாங்கள் யாரை வழிபடுகின்றார்கள் என்பதனை அறியமாட்டார்கள். தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: முதலாவதும், முக்கியமானதுமான விடயம் கீதையைப் பொய்யாக்கியதேயாகும். அவர்கள் ஸ்ரீமத் பகவத் கீதை என்று கூறுகின்றார்கள். கீதையின் பிரபு கடவுளேயன்றி, மனிதரல்லர். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் தேவர்கள் என அழைக்கப்படுகின்றனர். சத்தியயுகத்து மனிதர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்ட தேவர்கள் எனப்படுகின்றனர். தேவ தர்மத்தைச் சேர்ந்த மேன்மையான மனிதர்களே தேவர்கள் எனப்படுகின்றனர். பாரத மக்கள் மேன்மையானவர்களாக இருந்தனர். பின்னர் அவர்கள் அசுர குணங்களைக் கொண்டவர்களாகினர். பிரதானமான சமயநூல்கள் நான்கு உள்ளன. வேறு எந்தச் சமயநூல்களுமே இல்லை. அவ்வாறிருந்தாலும், அவை சந்நியாசிகளினதும் பௌத்தர்களினதும் வௌ;வேறான பிரிவுகளைப் போன்று பல சிறிய பகுதிகளாக ஸ்தாபிக்கப்பட்டவையேயாகும். புத்தர் பௌத்த சமயத்தை ஸ்தாபித்தார். அவர் கூறுவார்: இன்ன இன்னது எங்களது சமயநூலாகும். பாரத மக்களிடம் ஒரேயொரு சமயநூலே உள்ளது. சத்தியயுகத்துத் தேவர்களிடம் ஸ்ரீமத் பகவத் கீதை என அழைக்கப்படுகின்ற சமயநூல் மாத்திரம் இருந்தது. கீதை மாதா. கீதை மாதாவைப் படைப்பவர் பரமாத்மாவாகிய பரமதந்தை ஆவார். கிருஷ்ணரின் ஆத்மா தனது 84 பிறவிகளையும் பூர்த்தி செய்ததும் கீதையின் கடவுளும், ஞானக்கடலுமாகிய பரமாத்மாவாகிய பரமதந்தையிடமிருந்து இலகு இராஜயோகத்தையும், ஞானத்தையும் கற்று, உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்கின்றார். அவர்கள் அதிமேலான சமயநூலைப் பொய்யாக்கிவிட்டதனால், பாரதம் சிப்பியைப் போன்று பெறுமதியற்றதாகிவிட்டது. அவர்கள் கீதையைப் பொய்யாக்கியதே நாடகத்திலுள்ள ஒரு தவறாகும். தந்தை பேசுகின்ற உண்மையான கீதையே பிரசுரிக்கப்பட வேண்டும். அச்சிடப்பட்ட உண்மையான கீதை அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். இவை கடவுளின் மேன்மையான வாசகங்களாகும். தந்தை குழந்தைகளுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். நீங்கள் அவற்றைச் சுருக்கமாக, மிக நன்றாக எழுதவேண்டும். நீங்கள் உண்மையான கீதையின் மூலம் ஒருவிநாடியில் ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள் என்பதனை அறிவீர்கள். நீங்கள் தந்தைக்குரியவராகி, உங்களது ஆஸ்தியை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் விதை, விருட்சம், நாடகச் சக்கரம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும். பாடப்படுகின்றது: சத்தியயுகத்தின் ஆரம்பமே உண்மையானது, அதுவே சத்தியமானது, அது சத்தியமானதாகவே இருக்கும். விருட்சத்தை அறிந்துகொள்வது இலகுவானது. அதன் விதையானவர் மேலே உள்ளார்;. இது பல்வேறு சமயங்களினதும் விருட்சமாகும். அனைவரும் அதில் உள்ளடக்கப்படுகின்றனர். பல சிறிய கிளைகளும், கொப்புக்களும் உள்ளன. பல சமயப் பிரிவுகளும், உபபிரிவுகளும் உள்ளன. பாரதத்தில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்தவர் யார்? கடவுள். அதை ஸ்தாபித்தவர், மனிதரல்லர். ஸ்ரீ கிருஷ்ணர் தெய்வீகக் குணங்களையுடைய ஒரு மனிதராவார். அவர் தனது 84 பிறவிகளையும் பூர்த்தி செய்து, இப்பொழுது இறுதிப் பிறவியில் உள்ளார். நீங்கள் சூரியவம்ச, சந்திரவம்ச நிலைகளையும், பின்னர் வைசிய வம்சத்தையும் கடந்து செல்லும்போது, உங்களது கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. சத்தியயுகத்தில் மேன்மையானதாக இருந்த சூரியவம்ச இராச்சியம் இப்பொழுது கலியுகத்தில் சீரழிந்ததாகிவிட்டது. அது இப்பொழுது மீண்டும் ஒரு தடவை மேன்மையானதாகுகின்றது. அதிமேலான பாகத்தைக் கொண்டவர்கள் யார் என்பதனை உங்களது புத்தி அறிந்திருக்கின்றது. நீங்கள் இப்பொழுது இதனை அறிவீர்கள். ஓம் நமசிவாய என்பதே பிரதான விடயமாகும். அவருக்கேயுரியதாக உள்ள புகழை பிரம்மா, விஷ்ணு அல்லது சங்கரருக்குப் பாடமுடியாது. ஜனாதிபதிக்குரிய புகழை பிரதம மந்திரிக்கு அல்லது வேறு எவருக்காவது வழங்குவீர்களா? இல்லை. அவை வேறுபட்ட தலைப்புக்களாகும். அனைத்தும் ஒன்றாக இருக்கமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புத்தியைப் பெற்றிருக்கின்றீர்கள். கிறிஸ்துவும் கிறிஸ்தவ சமயத்தை ஸ்தாபிக்கின்ற பாகத்தைப் பெற்றிருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மா சின்னஞ்சிறிய புள்ளி வடிவமானவர். ஆத்மாவில் அப்பாகம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அவர் கிறிஸ்தவ சமயத்தை ஸ்தாபிக்க வேண்டும். பின்னர் மறுபிறவி எடுத்ததனாலும், அதனைப் பராமரித்ததனாலும் அவர் சதோ, ரஜோ, தமோ ஆகிய நிலைகளைக் கடந்துசெல்கின்றார். இறுதியில், முழு விருட்சமும் முற்றிலும் உக்கிய நிலைக்குச் செல்லும். ஒவ்வொருவரும் எந்தளவு பாகத்தைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதனையும், எவ்வளவு காலத்திற்குப் புத்தர் பராமரிப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதனையும் நீங்கள் அறிவீர்கள். அவர்கள் வௌ;வேறு பெயர்களுடனும், உருவங்களுடனும் தொடர்ந்தும் மறுபிறவியெடுக்கின்றார்கள். பாபா இப்பொழுது உங்களது புத்தியை மிகவும் பரந்ததாகவும், எல்லையற்றதாகவும் ஆக்குகின்றார். எவ்வாறாயினும், சிலருக்கு சிவபாபாவை நினைவு செய்யவும் இயலாமலிருக்கின்றது. எல்லையற்ற தந்தை எல்லையற்ற சுவர்க்கம் என்ற ஆஸ்தியை உங்களுக்கு வழங்குகின்றார். உங்களுக்கு இதனையும் விளங்கப்படுத்த இயலாமலிருக்கின்றது. ஆத்மாக்களில் அழியாத பாகம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது என்பதனையும், அவர்கள் ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரத்தை எடுப்பார்கள் என்பதனையும் பாபா உங்களுக்குப் பல தடவைகள் விளங்கப்படுத்தியிருக்கின்றார். இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய அத்தகைய ஆழமான விடயங்களாகும். பாடசாலையில் தினமும் கற்பவர்கள் மாத்திரமே புரிந்துகொள்வார்கள். சிலர் முன்னேறிச் செல்கையில் களைப்படைந்துவிடுகின்றனர். நீங்கள் பாடுகின்றீர்கள்: நீங்களே தாயும் தந்தையும், நாங்கள் உங்களது குழந்தைகள். தந்தை கூறுகின்றார்: நான் சுவர்க்கத்தின் எல்லையற்ற சந்தோ~த்தை உங்களுக்கு வழங்குவதற்காக, உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றேன். நீங்கள் களைப்படையக்கூடாது. நீங்கள் அத்தகையதோர் மேன்மையான கல்வியைக் கற்பதை நிறுத்திவிடுகின்றீர்கள். சிலர் கற்பதை நிறுத்திவிட்டு, பின்னர் விகாரத்தினுள் சென்றுவிடுகின்றனர். அவர்கள் இங்கே வருவதற்கு முன்னர் எவ்வாறிருந்தார்களோ, அவ்வாறு ஆகிவிடுகின்றனர். முன்னேறிச் செல்லும்போது, அவர்கள் வீழ்ந்துவிடுகின்றனர். வேறு என்ன நிகழமுடியும்? அவர்கள் அங்கே சந்தோஷமாக இருந்தாலும், அவர்களது அந்தஸ்தில் வேறுபாடு இருக்கவே செய்யும். இங்கே அனைவரும் சந்தோ~மற்றவர்களாகவே இருக்கின்றனர். அங்கே, அரசர்கள், பிரஜைகள் அனைவரும் சந்தோ~மாகவே இருப்பார்கள். இருப்பினும், நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறவேண்டும். நீங்கள் கற்பதை நிறுத்திவிட்டால், நீங்கள் தகுதியற்றவர் என்றே தாயும் தந்தையும் கூறுவார்கள். சில குழந்தைகள் தந்தையிடமிருந்து தங்களது சுவர்க்க ஆஸ்தியைப் பெறும்போது களைத்துவிடுகின்றார்கள். அவர்கள் முன்னேறிச் செல்லும்போது, மாயை அவர்களைத் தாக்குவதால், அவர்கள் பின்னோக்கித் திரும்பிவிடுகின்றனர். அதனால், அவர்கள் சேகரித்ததெல்லாம் இழக்கப்பட்டுவிடுகின்றது. எனவே, அவர்கள் என்னவாக ஆகுவார்கள்? அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள், எனினும் முற்றிலும் சாதாரணமான பிரஜைகளாகவே ஆகுவார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனக்குரியவர்களாக ஆகியபின்னர் களைப்படைந்து அமர்ந்துவிட்டாலோ, அல்லது ஒரு துரோகியாக ஆகினாலோ நீங்கள் பிரஜைகளின் சுடலையாண்டியாகவே ஆகுவீர்கள். அனைத்து வகையினரும் தேவைப்படுகின்றனர். சுவர்க்கத்தின் அதிபதிகளாக ஆகிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் கல்வியை நிறுத்திவிடுவார்களாயின், அவர்களைவிட மகாமுட்டாள்கள் உலகில் வேறு எவருமே இருக்கமுடியாது. சிலர் எழுதுகின்றார்கள்: நீங்களே தாயும், தந்தையும். நான் உங்களது குழந்தை. உங்களது கருணையினாலேயே நான் சுவர்க்கத்தின் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றேன். கருணை காட்டுங்கள்! தந்தை கூறுகின்றார்: கருணை என்ற கேள்விக்கே இடமில்லை. நானே ஆசிரியர், எனவே, நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். சிறந்த புள்ளிகளுடன் சித்தியெய்துவதற்கு முயற்சி செய்யுங்கள். நான் அமர்ந்திருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆசீர்வாதங்கள் கொடுப்பதில்லை. யோகத்தில் இருங்கள், பலத்தைப் பெறுவீர்கள். அனைவரும் சிம்மாசனத்தில் அமர்வார்கள் என்றில்லை. ஒருவர் தலைமீது இன்னொருவர் என நீங்கள் அமர்வீர்களா? பிரதானமாக நான்கு சமயங்களும், நான்கு சமயநூல்களும் இருக்கின்றன. அவற்றில் கீதையே பிரதானமானதாகும். ஏனைய அனைத்தும் அதன் குழந்தைகளேயாகும். தாய், தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை இப்பொழுது நேரடியாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஒருவர் வெறுமனே கீதையைக் கற்பதால் மாத்திரம் அரசர்களுக்கெல்லாம் அரசராக ஆகிவிடமுடியாது. பாபாவும் கீதையைக் கற்றார். எனினும் அதன் மூலமாக எதுவுமே நிகழவில்லை. அவையனைத்தும் பக்தி மார்க்கத்துச் சமயநூல்களேயாகும். நீங்கள் முயற்சி செய்து, 16 கலைகளும் நிறைந்தவராக ஆகவேண்டும். இப்பொழுது உங்களிடம் கலைகளோ, நற்பண்புகளோ எதுவும் இல்லை. நீங்கள் பாடுகின்றீர்கள்: நான் நற்பண்புகள் அற்றவன், என்னிடம் எந்த நற்பண்புகளும் இல்லை. என்மீது கருணை காட்டுங்கள்! என்னை மீண்டும் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவராக ஆக்கிவிடுங்கள். நான் எவ்வாறிருந்தேனோ, அவ்வாறே மீண்டும் என்னை ஆக்கிவிடுங்கள். தந்தை வந்து, நேரடியாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர்கள் “நிர்குண்” (நற்பண்புகளற்றவர்) என அழைக்கப்படுகின்ற அமைப்பையும் உருவாக்கியிருக்கின்றார்கள். நிர்குண், நிராகார்(உருவமற்றவர்) என்பவற்றின் அர்த்தமும் மக்களுக்குத் தெரியாது. சிவனுக்கும் ஓர் உருவம் உள்ளது. ஒரு பெயரைக் கொண்ட எதுவும் நிச்சயமாக இருக்கவே செய்யும். ஆத்மா மிகவும் சூட்சுமமானவர், எனினும் அதற்கும் ஒரு பெயர் உள்ளது. ஆத்மாக்கள் வசிக்கின்ற பிரம்ம தத்தவமும் பெயரைக் கொண்ட இடமேயாகும். பெயரோ, உருவமோ இல்லாத எதுவுமே இருக்கமுடியாது. கடவுள் பெயருக்கும், உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர் சர்வவியாபகர் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இது அத்தகையதொரு பெரிய தவறாகும். மக்கள் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ளும்போதே அவர்களுக்கு இதில் நம்பிக்கை ஏற்படும். பாபா, நான் இப்பொழுது உங்களை அறிவேன். நான் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களிடமிருந்து இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றேன். நீங்கள் அத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருக்கும்போதே உங்களால் கற்க முடியும். நீங்கள் இங்கிருந்து சென்றதும் மறந்துவிடுகின்றீர்கள். இதனாலேயே நீங்கள் அவர்களை எழுதச் செய்யவேண்டும்: உண்மையில், சிவபாபா எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக வந்துள்ளார். அவர்கள் இதனை எழுத்தில் வைத்திருப்பார்களே தவிர கற்கமாட்டார்கள். சிலர் இதனை இரத்தத்தாலும் எழுதினார்கள். எனினும், அவர்கள் இன்று இங்கில்லை. மாயை மிகவும் புத்திசாலி. தந்தை இங்கிருந்து உங்களுக்குப் பெருமளவில் விளங்கப்படுத்துகின்றார். அத்தகைய கடிதங்கள் எழுதப்படும்போது, சேவை துரித வேகத்தில் நிகழும். உங்களது சக்தி சேனையும் வரிசைக்கிரமமானதே. ஒருவர் தலைமைத் தளபதியாகவும் இன்னொருவர் கப்டனாகவும் வேறொருவர் மேஜராகவும் இருப்பர். படைவீரர்களுடன் கூடவே சுமை தூக்குகின்ற சிலரும் இருப்பர். முழுச் சேனையும் இருக்கின்றது. பாபா உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றார். ஒருவர் அரசனாகவா, அரசியாகவா, அல்லது சிறந்த செல்வந்தப் பிரஜையாகவா, சாதாரணப் பிரஜையாகவா, அல்லது பணிப்பெண்ணாகவா, வேலைக்காரனாகவா ஆகுவாரென்பதை அவரது முயற்சியிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இது புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவானது. எனவே, முதலாவதும், பிரதானதுமான விடயம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பாபா மகாராத்திகளுக்குப் பெரும் சவால் விடுகின்றார். எனவே, நீங்கள் துரிதமான சேவை செய்கின்ற எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கற்பதில் களைப்படையாதீர்கள். நிச்சயமாக, அனைத்திலும் மேன்மையானதாகிய இக்கல்வியைத் தினமும் கற்று, மற்றவர்களுக்கும் கற்பியுங்கள்.
2. துரிதமான சேவை செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள். யோகத்தில் நிலைத்திருந்து, தந்தையிடமிருந்து சக்தியைப் பெறுங்கள். கருணையையோ, ஆசீர்வாதங்களையோ கேட்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் பிராமண வாழ்க்கையின் சந்தோஷ ஆசீர்வாதங்களை சதா உங்களுடன் வைத்திருக்கின்ற மகாத்மா ஆகுவீர்களாக.
சந்தோஷமே பிராமண வாழ்க்கையின் பிறப்புரிமை ஆவதுடன் சந்தோஷமாக இருத்தலே மகத்துவமாகும். இந்த ஆசீர்வாதங்களை தம்முடன் நிரந்தரமாக வைத்திருப்பவர்கள் மகத்துவமானவர்கள். ஆகவே ஒருபொழுதும் உங்களுடைய சந்தோஷத்தை இழந்துவிடாதீர்கள். பிரச்சனைகள் வரும் போகும், ஆனால் உங்களுடைய சந்தோஷத்தை கைவிட்டுவிடாதீர்கள், ஏனென்றால் பிரச்சனைகள் வெளிப்புறச் சூழ்நிலையால் பிறரிடமிருந்து வருகின்றவை என்பதுடன் அவை வரும் போகும். சந்தோஷம் உங்கள் தனிப்பட்ட சொத்து ஆவதுடன் எப்போதும் உங்கள் தனிப்பட்ட சொத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். ஆகவே உங்களுடைய சரீரத்தை நீக்க நேரிட்டாலும், உங்களுடைய சந்தோஷத்தைக் கைவிட்டுவிடாதீர்கள். உங்களுடைய சரீரத்தைவிட்டுப் பிரிந்து செல்கையில் சந்தோஷமாக இருப்பீர்களேயானால் உங்களுக்கு அழகிய புதியதொன்று கிடைக்கும்.
சுலோகம்:
பாப்தாதாவின் இதயத்திலிருந்து வாழ்த்துக்களை பெறுவதற்கு பல்வேறுபட்ட சூழ்நிலைகளைப் பார்க்காதீர்கள். ஆனால் களைப்பின்றி சேவையில் ஈடுபட்டிருங்கள்.