26.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:

இனிய குழந்தைகளே, நீங்கள் என்றுமே அழாதவகையில், பரோபகாரித் தந்தை இப்பொழுது உங்களுக்கு உபகாரம் செய்கின்றார். அழுவது மங்களம் இல்லாததற்கும் சரீர உணர்விற்குமான அடையாளமாகும்.

கேள்வி:
எந்த நிச்சயிக்கப்பட்ட நியதியை அறிந்திருப்பதால், நீங்கள் எப்பொழுதும் கவலையற்றவராக இருக்கின்றீர்கள்?

பதில்:
இப் பழைய உலகம் நிச்சயமாக அழியவுள்ளது என்பதனை நீங்கள் அறிவீர்கள். மக்கள் அமைதியை வேண்டித் தொடர்ந்தும் முயற்சி செய்தபொழுதிலும், மனிதர்கள் விரும்புவது ஒன்றாகவும், நடப்பது வேறொன்றாகவும் உள்ளது. அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், இந்நியதியைத் தவிர்க்க முடியாது. இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற வேண்டும். நீங்கள் கடவுளின் மடியில் இருக்கின்றீர்கள் என்ற போதையைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் பெற்ற காட்சிகள் அனைத்தும் நடைமுறை ரீதியில் இடம்பெற உள்ளது. ஆகையால் நீங்கள் சதா கவலையற்றவராக இருக்கின்றீர்கள்.

ஓம்சாந்தி.
 உலகில், தற்சமயம் மக்களின் புத்;தியில் பக்தி மார்க்கத்தின் புகழ் மாத்திரமே உள்ளது, ஏனெனில் இப்பொழுது இது பக்தி மார்க்கமாகும். இங்கே பக்திக்கான புகழ் இல்லை. இங்கே, தந்தைக்கான புகழே உள்ளது. மிகவும் மேன்மையான ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்ற அத் தந்தையை நீங்கள் புகழ வேண்டும். பக்தியில் சந்தோஷம் இல்லை. பக்தி மார்க்கத்திலும், அவர்கள் சுவர்க்கத்தையே நினைவுசெய்கின்றார்கள். ஒருவர் மரணிக்கும்பொழுது அவர் சுவர்க்கவாசி ஆகி விட்டார் என்றே மக்கள் கூறுகின்றார்கள். ஆகவே அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஒருவர் சுவர்க்கத்தில் பிறப்பு எடுப்பாராயின், அழ வேண்டிய அவசியமில்லை. உண்மையில், அவர் சுவர்க்க வாசி ஆகிவிட்டார் என்பது உண்மையல்ல என்பதாலேயே, அவர்கள் தொடர்ந்தும் அழுகின்றார்கள், இப்பொழுது, அழுபவர்களுக்கு எவ்வாறு நன்மை இருக்க முடியும்? அழுவது துன்பத்தின் அடையாளம். மனிதர்கள் அழுகின்றார்கள், அல்லவா? பிறக்கும்பொழுது, துன்பத்தை உணர்வதாலேயே குழந்தைகளும் அழுகின்றார்கள். துன்பம் இல்லாவிட்டால், அவர்கள் நிச்சயமாக முகமலர்ச்சியுடன் இருப்பார்கள். ஏதோ ஒரு வகையான இழப்பு ஏற்படும்பொழுதே ஒருவர் அழவேண்டும் என்று உணர்கின்றார். சத்தியயுகத்தில் மங்களமற்ற எதுவும் இருப்பதில்லை, இதனாலேயே அங்கே எவரும் என்றுமே அழுவதில்லை. அங்கே மங்களம் இன்மை என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கு வருமானம் ஈட்டுவதில் இழப்பு ஏற்படுகிறது. உண்பதற்கு உணவு இல்லாததால், அவர்கள் சந்தோஷமற்று உள்ளனர். துன்பத்தின்பொழுதே, மக்கள் அழுது கடவுளை நினைவுசெய்கின்றார்கள்: வந்து அனைவருக்கும் நன்மையளியுங்கள். அவர் சர்வவியாபகர் எனின், அனைவருக்கும் நன்மை செய்ய வருமாறு அவர்கள் யாரை அழைக்கின்றார்கள்? பரமாத்மாவான பரமதந்தையைச் சர்வவியாபகர் என்று நம்புவது பெருந் தவறு. தந்தை அனைவருக்குமே பரோபகாரி. அவர் மாத்திரமே பரோபகாரி என்பதால் அவர் நிச்சயமாக அனைவருக்கும் உபகாரம் செய்கின்றார். பரமாத்மாவான பரமதந்தை எப்பொழுதும் அனைவருக்கும் உபகாரம் செய்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆகவே, அனைவருக்கும் உபகாரம் செய்வதற்காக பரமாத்மாவான பரமதந்தையால் எப்பொழுது வர முடியும்? வேறு எவராலும் உலகிற்கு உபகாரம் செய்ய முடியாது. பின்னர் அவர்கள் தந்தையைச் சர்வவியாபி என்று அழைக்கின்றார்கள். அது மிகப்பெரிய தவறாகும். தந்தை இப்பொழுது தனது சொந்த அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார், அவர் கூறுகின்றார்: மன்மனாபவ! இதில் மாத்திரமே நன்மை உள்ளது. சத்திய, திரேதா யுகங்களில் எச் சந்தர்ப்பத்திலுமே மங்களமின்மை ஏற்பட மாட்டாது. திரேதா யுகத்திலுமே இராம இராச்சியத்தின் பொழுது, சிங்கமும், ஆட்டுக் குட்;டியும் ஒன்றாக நீர் பருகுகின்றன. அந்தளவிற்கு இராம இராச்சியத்தை நாங்கள் புகழ்வதில்லை. ஏனெனில் அது இரண்டு சுவர்க்கக்கலைகளால் குறைவடையும்பொழுது அங்கே சந்தோஷத்தின் அளவும் சிறிது குறைவடைகின்றது. தந்தை ஸ்தாபிக்கின்ற சுவர்க்கத்தையே நாங்கள் விரும்புகின்றோம். அதன் முழு ஆஸ்தியையும் நாங்கள் பெறுவோமாயின் அது நல்லதாகும். நாங்கள் அனைத்திலும் அதியுயர்வான தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்று, அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொருவரும் சுயத்திற்கு உபகாரம் செய்ய வேண்டும். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: ஒன்று அசுர சமுதாயம், மற்றையது தேவ சமுதாயமாகும். இப்பொழுது ஒருபுறம் இராவண இராச்சியம் உள்ளது, மறுபுறம் தேவ சமுதாயத்தை நான் ஸ்தாபிக்கின்றேன். இப்பொழுது இது தேவ சமுதாயம் அல்ல. நான் அசுர சமுதாயத்தைத் தெய்வீகமாக்குகின்றேன். தேவ சமுதாயம் சத்தியயுகத்தில் உள்ளதெனக் கூறப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் இந்த அசுர சமுதாயத்தை எதிர்காலத்தின் தேவ சமுதாயம் ஆக்குகின்றேன். இப்பொழுது இது பிராமண சமுதாயமாகும். தேவ சமுதாயம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ‘மனிதர்களைத் தேவர்கள் ஆக்குவதற்குக் கடவுளுக்கு அதிகக் காலம் எடுக்கவில்லை’ என்று குரு நானக்கும் கூறினார். எவ்வாறாயினும், எந்த மனிதர்களை அவர் தேவர்கள் ஆக்குவார்? அவர்களுக்கு நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியாது. உலக ஆரம்பத்தில் வாழ்ந்த அதிமேலான இலக்ஷ்மி நாராயணனுக்கே ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியாது. அவர்கள் திரிகாலதரிசிகள் அல்ல. அவர்களது முன்னைய பிறவியில் அவர்கள் திரிகாலதரிசிகளாக இருந்தார்கள். அவர்கள் சுயதரிசனத் சக்கரத்தைச் சுழற்றினர், அவ்வாறே அவர்கள் தமது இராஜ அந்தஸ்தைப் பெற்றார்கள். எவ்வாறாயினும், பின்னர் மக்கள் சுயதரிசனச் சக்கரத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்துள்ளார்கள். ஆகையால் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் பிராமணர்களே என்பதனை நீங்கள் விளங்கப்படுத்தும்பொழுது, மக்கள் வியப்படைவார்கள். கிருஷ்ணர் அவ்வாறானவர், விஷ்ணுவும் அவ்வாறானவர் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இலக்ஷ்மி நாராயணனின் இணைந்த வடிவமே விஷ்ணு என்பது அவர்களுக்குத் தெரியாது. இதனை நாங்களும் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் ‘அதுவே நியதி!’ என்று கூறுகின்றார்கள். நடக்க இருப்பதை எவராலும் தடுக்க முடியாது. இதுவே நாடகமாகும். எனவே, எல்லாவற்றிற்கும் முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டுமா அல்லது நாடகத்தின் இரகசியத்தை விளங்கப்படுத்த வேண்டுமா? அதிலும் நீங்கள் பாபாவின் நினைவைக் கொண்டிருக்க வேண்டும். எனவே எல்லாவற்றிற்கும் முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தையே கொடுக்க வேண்டும். எல்லையற்ற பாபாவான சிவபாபா பிரபல்யமானவர்;. 'உருத்திரபாபா" என்று ஒருபொழுதுமே கூறப்படுவதில்லை. சிவபாபா மிகவும் பிரபல்யமானவர். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: எங்கெல்லாம் பக்தர்கள் உள்ளார்களோ, அங்கு சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இமயமலையின் வயது பல மில்லியன் ஆண்டுகள் என்று மக்கள் கூறுகின்றார்கள் எனச் செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இமயமலைக்கு எவ்வாறு வயது இருக்க முடியும்? அவை எப்பொழுதுமே இருக்கின்றன. இமயமலை எப்பொழுதாவது மறைந்து விடுகின்றதா? இப் பாரதமும் அநாதியானது. அது எப்பொழுது படைக்கப்பட்டது என்று உங்களால் கூற முடியாது; உங்களால் அதற்கு ஒரு வயதை கொடுக்க முடியாது. அதனைப் போன்றே இமயமலை எவ்வளவு காலமாக இங்குள்ளது என்றும் உங்களால் கூறமுடியாது. இமயமலைத் தொடருக்கு ஒரு வயதைக் கொடுக்க முடியாது. ஆகாயமும் கடலும் இத்தனை வயதானவையென உங்களால் கூற முடியாது. இமயமலைக்கான வயதைப் பற்றி அவர்கள் பேசுகின்றார்களாயின், அவர்களால் கடலினது வயதையும் கூறக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இங்கே நீங்கள் உங்;கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். இது இறை குடும்பமாகும். தந்தைக்கு உரியவர்கள் ஆகுவதனால், நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என உங்களுக்குத் தெரியும். ஒரு ஜனக மன்னர் என்ற கேள்விக்கு இடமில்லை. கடவுளின் இராச்சியத்தில் ஜீவன்முக்தியுடன் பலர் இருப்பார்கள். அனைவரும் ஜீவன்முக்தியைப் பெற்றிருப்பார்கள். நீங்களே ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெறுவதற்கான முயற்சியைச் செய்கிறீர்கள். நீங்கள் குழந்தைகளாகி உள்ளீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: மம்மா, பாபா. நீங்கள் ஜீவன்முக்தியைப் பெறுவீர்கள், அல்லவா? பல பிரஜைகள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதனை உங்களால் புரிந்துகொள்;ள முடிகின்றது. உங்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் பரவ வேண்டும். இந்தத் தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு அதிகளவு முயற்சி தேவை. தத்தமது ஸ்தாபனையை மேற்கொள்வதற்காக, மேலே இருந்து வருகின்ற ஆத்மாக்களைத் தொடர்ந்து ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் வருகின்றார்கள். இங்கே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாக்கியமான இராச்சியத்தைப் பெறுவதற்குத் தகுதி உடையவர்கள் ஆக்கப்பட வேண்டும். உங்களைத் தகுதி உடையவர் ஆக்க வேண்டியது தந்தையின் கடமையாகும். முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான தகுதி உடையவர்களையும் மாயை தகுதி அற்றவர்கள் ஆக்கிவிட்டாள். பஞ்ச தத்துவங்களும் தகுதியற்றவை ஆகியுள்ளன. மீண்டும் தந்தையே அவற்றைத் தகுதியுடையவை ஆக்குகிறார். இப்பொழுது ஒவ்வொரு விநாடியிலும் செய்யப்படுகின்ற முயற்சி எதுவாக இருந்தாலும், அதே முயற்சியே இன்ன இன்னாரால் முன்னைய கல்பத்திலும் செய்யப்பட்டது என நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். வியப்படைந்த சிலர் விட்டுச் சென்று தந்தையை விவாகரத்து செய்கின்றார்கள். நடைமுறையில் நீங்கள் இதனைத் தொடர்ந்தும் பார்க்கின்றீர்கள். விநாசம் உங்கள் முன்னிலையில் உள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாடகத்திற்கு ஏற்ப, அனைவரும் நடிப்பதற்காக வரவேண்டும். மனிதர்கள் ஒன்றை விரும்பும்பொழுது, நியதி வேறொன்றாக உள்ளது. அவர்கள் அமைதியை விரும்பியபொழுதிலும், நியதி என்னவென்று குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் காட்சிகளைக் கண்டுள்ளீர்கள். விநாசம் இடம்பெறாதிருப்பதற்கு அவர்கள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும், அதனைத் தடுக்க முடியாது; அதுவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. பூகம்பங்களும், இயற்கை அழிவுகளும் இடம்பெறும். அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் கூறுவார்கள்: இது கடவுளின் செயல். உங்கள் மத்தியிலும், வெகு சிலரே அந்தளவு போதையைக் கொண்டிருந்து, தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள். அனைவரும் முழுமை அடையவில்லை. இந்த நியதியைத் தடுக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். உணவு இல்லை; மக்கள் இருப்பதற்கு இடவசதி இல்லை; ஒருவரால் மூன்றடி நிலத்தைக் கூட பெற முடியாதுள்ளது. இது உங்கள் இறை குடும்பம்: தாயும் தந்தையும், குழந்தைகளும் உள்ளனர். தந்தை கூறுகின்றார்: நான் என்னை எனது குழந்தைகள் முன்னிலையில் வெளிப்படுத்துகின்றேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறேன். குழந்தைகள் கூறுகின்றார்கள்: நாங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றோம்;. தந்தை கூறுகின்றார்: நான் எனது குழந்தைகள் முன்னிலையில் மாத்திரமே நேரடியாக வந்து அவர்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றேன். எனது குழந்தைகள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்வார்கள். உங்களால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது விட்டால், விட்டு விடுங்கள்; சண்டையிட வேண்டிய அவசியமில்லை. நான் உங்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கின்றேன். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சுயதரிசனச் சக்கரத்தை நினைவுசெய்தால், நீங்கள் பூகோள ஆட்சியாளர் ஆகுவீர்கள். இதுவே “மன்மனாபவ”, “மத்தியாஜிபவ” என்பதன் அர்த்தமாகும். படைப்பவரினதும், படைப்பினதும்; இரகசியங்களை அவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், தந்தையின் அறிமுகத்தை அவர்களுக்கு கொடுங்கள். இதுவே பிரதான விடயமாகும். இதுவே கீதையில் உள்ளதோர் முக்கிய தவறாகும். தந்தை கூறுகின்றார்: பரோபகாரியான நான் வந்தே அனைவருக்கும் உபகாரம் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், சமயநூல்களின் மூலம் எந்த நன்மையும் இருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் முதலில், கடவுள் ஒருவரே என்பதனை நீங்கள் நிரூபிக்க வேண்டும். நீங்கள் அவரை நினைவுசெய்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கு அவரைத் தெரியாது. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டுமாயின், அவரின் அறிமுகம் உங்களுக்குத் தேவை. அவர் எங்கு வசிக்கின்றார்? அவர் இங்கு வருகின்றாரா, இல்லையா? தந்தை நிச்சயமாக இங்கே இருப்பவர்களுக்கே ஆஸ்தியைக் கொடுப்பார். அல்லது அங்கேயா? தந்தை உங்கள் நேர் முன்னிலையில் இருக்க வேண்டும். மக்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகின்றார்கள். சிவனே ஆத்மாக்கள் அனைவரினதும் பரமதந்தை. அவரே படைப்பவர். அவர் புதிய ஞானத்தைக் கொடுக்கின்றார். அவருக்கு உலகச் சக்கரத்தின் ஆரம்பம் மத்தி, இறுதியைத் தெரியும். அவரே மனிதர்களைத் தேவர்கள் ஆக்குகின்ற, அதிமேலான ஆசிரியர். அவர் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். மனிதர்களால் என்றும் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. அவர் எங்களுக்குக் கற்பித்தார், இதனாலேயே எங்களால் உங்களுக்குக் கற்பிக்க முடிகின்றது. “மன்மனாபவவும், மந்தியாஜிபவவும்” கீதையின் ஆரம்பத்திலும் இறுதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. விருட்சத்தினதும், நாடகத்தினதும் ஞானமும் உங்கள் புத்தியில் உள்ளது. அவை விபரமாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். இறுதி முடிவு ஒரேயொரு விடயமே: நீங்கள் தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்ய வேண்டும். இங்கே, ஒரேயொரு விடயமே உள்ளது: நாங்கள் உலக அதிபதிகள் ஆகுவோம். உலக உபகாரியே உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். அவர் உங்களைச் சுவர்க்க அதிபதியாக்குகிறார். அவர் உங்களை நரகத்தின் அதிபதிகள் ஆக்க மாட்டார். நரகத்தைப் படைப்பவன் இராவணன் என்பதும், சுவர்க்கத்தைப் படைப்பவர் தந்தை என்பதையும் உலகம் அறிய மாட்டாது. தந்தை கூறுகின்றார்: மரணம் சற்று முன்னிலையிலேயே உள்ளது. இது அனைவருக்குமான ஓய்வு ஸ்திதியாகும். நான் உங்களை மீண்டும் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். என்னை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மாக்களாகிய நீங்கள் அழுக்கானவரிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். பின்னர் நான் உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புவேன். இதனை நீங்கள் அனைவருக்கும் ஒரு கிளியைப் போலன்றி, உங்கள் புத்தியில் நம்பிக்கை வைத்து விளங்கப்படுத்த வேண்டும். தங்கள் புத்தியில் நம்பிக்கை கொண்டவர்கள் அழவேண்டிய அவசியமோ, சரீர உணர்வு கொள்ள வேண்டிய அவசியமோ இல்லை. சரீர உணர்வு உங்களை மிகவும் அழுக்காக்குகின்றது. இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்காக நீங்கள் செயல்களில் ஈடுபடுங்கள். அம்மக்கள் செயல்களைத் துறப்பவர்கள் ஆகுகின்றார்கள். இங்கே, உங்கள் வீட்டில் குடும்பத்துடன் நீங்கள் வாழ்ந்து, உங்கள் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும். தந்தையையும் சக்கரத்தையும் அறிந்துகொள்வது மிகவும் இலகுவாகும். தந்தைக்குப் பல குழந்தைகள் இருக்கின்றார்கள். சிலர் தகுதி உடையவர்கள், சிலர் தகுதி அற்றவர்கள்: அவர்கள் தந்தையின் பெயரை இழிவுபடுத்துகிறார்கள்; அவர்கள் தமது முகங்களை அழுக்காக்குகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் முகங்களை அழுக்காக்காதீர்கள். நீங்கள் குழந்தைகளாகிய பின்னர், உங்கள் முகங்களை அழுக்காக்குகின்றீர்கள்! ஆகவே, பின்னர் நீங்கள் குலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துபவர் ஆகுகின்றீர்கள். அந்தக் காமச்சிதையில் அமர்வதன் மூலம் நீங்கள் அவலட்சணம் ஆகியுள்ளீர்கள். காமச்சிதையில் எரிந்து நீங்கள் மரணிக்க விரும்பவில்லை, அப்படியல்லவா? அப் போதை சற்றேனும் இருக்கக்கூடாது. சந்நியாசிகள் போன்றவர்கள் தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இவ்வாறு கூறமாட்டார்கள். உண்மையில் அவர்கள் பின்பற்றுபவர்கள் அல்லர். தந்தை உண்மையான விடயங்களையே அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்: நீங்கள் ஓர் உத்தரவாதத்தை அளித்துள்ளீர்கள்: பாபா, நான் உங்கள் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சுவர்க்கவாசியாகுவேன். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, அவ்வாறாயின், விகாரம் என்ற சாக்கடையில் விழுவதற்கான எண்ணங்களை ஏன் கொண்டிருக்கின்றீர்கள்? புத்திரிகளாகிய நீங்கள் அத்தகைய முரளியை அவர்களுக்கு வாசிக்கும்பொழுது, அவர்கள் கூறுகின்றார்கள்: இவ்வாறான ஞானத்தை நாங்கள் முன்னர் ஒருபொழுதும் கேட்டதில்லை. ஆலயங்களின் தலைவர்களை நீங்கள் பற்றிப் பிடிக்க வேண்டும். நீங்கள் படங்களை அவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தத் திரிமூர்த்தியும், விருட்சமும் தில்வாலாவின் படங்கள் ஆகும். தேவ விருட்சம் உச்சியில் உள்ளது. ஆனால் கடந்த கால தேவ விருட்சத்தையே அவர்கள் காட்டுகின்றார்கள். அவ்வாறான சேவையை யாராயினும் செய்தால், ரமேஷை பாபா புகழ்வதைப் போன்று, அவரைப் புகழ்வார். இவர் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என்று பாபா அவரைப் புகழ்வார். ஒரு மிகச் சிறந்த கண்காட்சியை அவர் உருவாக்கியுள்ளார். விரைவான வேகத்தில் சேவையைச் செய்வதற்கு அது ஒரு நல்ல வழி. இங்கும் நாங்கள் ஒரு கண்காட்சியை நடாத்துவோம். படங்கள் மிகவும் சிறந்தவை. டெல்கியில் இடம்பெறுகின்ற சமய கருத்தரங்குகளைப் பாருங்கள்: அவர்களும் ஏகத்துவம் (ழநெநௌள) வேண்டும் என்று கூறுகின்றார்கள். அதில் எந்த அர்த்தமும் இல்லை. தந்தை ஒருவரே, ஏனைய அனைவரும் சகோதர சகோதரிகள். தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கான கேள்வியே உள்ளது. எவ்வாறு நீங்கள்; ஒற்றுமையாகி, பாலும், சீனியும் போன்று ஆகுவீர்கள்? இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கண்காட்சிகளின் வளர்ச்சிக்கு ஒரு வழிமுறை கண்டுபிடிக்கப்பட வேண்டும். சேவைக்கான அத்தாட்சியைக் காட்டாதவர்கள் வெட்கப்பட வேண்டும். பத்து புதியவர்கள் வந்தபொழுதிலும், எட்டு அல்லது பத்துப் பழையவர்கள் மரணித்தால் அதில் என்ன நன்மை உள்ளது? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1.உங்கள் சரீர ஜீவனோபாயத்திற்காகச் செயல்களைச் செய்கின்றபொழுதிலும் ஆத்ம உணர்வுடையவர்களாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். எச் சந்தர்ப்பத்திலும் நீங்கள் அழவோ, சரீர உணர்வு உடையவர்கள் ஆகவோ கூடாது.

2.ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை அளியுங்கள். தகுதி உடையவராகி, தந்தையின் பெயரைப் புகழடையச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய பௌதீகப் புலன்களைக் குளிர்மையாகவும், அமைதிநிறைந்ததாகவும் ஆக்குவதன் மூலம் குளிர்ச்சித் தேவி (சீதலா தேவி) ஆகுவதால், ஒரு சுயாதிபதி ஆகுவீர்களாக.

சுயாதிபதிகளான குழந்தைகளால் தங்கள் பௌதீகப் புலன்கள் எதனாலும் ஏமாற்றப்பட முடியாது. ஏமாற்றத்தை விளைவிக்கின்ற விஷமத்தனம் முடிவடைந்து, உங்கள் பௌதீகப் புலன்கள் அனைத்தும் குளிர்மையாகுகின்றபொழுது, நீங்கள் தேவ, தேவியர் ஆகுகின்றீர்கள். ஒரு குளிர்ச்சித் தேவியால் என்றுமே கோபத்தைக் கொண்டிருக்க முடியாது. தாங்கள் கோபப்படுவதில்லை எனவும், ஆனால் சிறிது அதிகாரத்தைக் காட்டுவதாகவும் சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அதிகாரத்தைக் காட்டுவதும் கோபத்தின் சந்ததியே ஆகும். அதன் சுவடு இருக்குமிடத்தில் அதன் முழு வம்சமும் உருவாக்கப்படுகின்றது. எனவே, நீங்கள் குளிர்ச்சித் தேவ, தேவியர் ஆதலால், உங்களுடைய கனவுகளில் கூட கோபம் அல்லது அதிகாரத்தின் சம்ஸ்காரங்கள் வெளிப்படுவதை என்றுமே அனுமதிக்கக்கூடாது.

சுலோகம்:
கீழ்ப்படிவான குழந்தைகள் இயல்பாகவே நல்லாசிகளையும் ஆசீர்வாதங்களையும் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள்; அவர்கள் ஆசீர்வாதங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.