13.11.2018 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பகலில் உங்கள் சரீரத்திற்கான ஜீவனோபாயத்திற்காகச் சம்பாதியுங்கள். இரவிலே அமர்ந்திருந்து ஞானத்தைக் கடையுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தியிலே சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். உங்கள் போதை அதிகரிக்கும்.
கேள்வி:
எந்தக் குழந்தைகளை மாயை நினைவிலே அமர்ந்திருப்பதற்கு அனுமதிப்பதில்லை?
பதில்:
புத்தி வேறொருவரிடம்; சிக்குண்டிருப்பவரையோ, பூட்டியிருக்கும் புத்தியைக் கொண்டவரையோ, நன்றாகக் கற்காதவர்களையோ நினைவிலே அமர்ந்;திருக்க மாயை அனுமதிப்பதில்லை. அவர்களால் “மன்மனாபவ”வாக இருக்க முடியாதுள்ளது. அப்பொழுது அவர்களின் புத்தி சேவைக்காகவும் வேலை செய்யாது. ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால், அவர்கள் தந்தையின் பெயரை அவமரியாதை செய்வதோடு, அவரை ஏமாற்றுகிறார்கள். எனவே தண்டனை அனுபவிக்கப்படவே வேண்டும்.
பாடல்:
எனது இதயம் உங்களைக் கூவி அழைக்க விரும்புகிறது.
ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். அவர்கள் தந்தையாகிய கடவுளையே கூவி அழைக்கிறார்கள், கிருஷ்ணரை அல்ல. அவர்கள் 'வந்து, மீண்டும் ஒருமுறை கம்சனின் பூமியைக் கிருஷ்ணரின் பூமியாக மாற்றுங்கள்" எனத் தந்தைக்குக் கூறுகிறார்கள். அவர்கள் கிருஷ்ணரை அழைக்க மாட்டார்கள். கிருஷ்ணரின் பூமி சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. எவருக்கும் இது தெரியாது. ஏனெனில் அவர்கள் கிருஷ்ணரைத் துவாபரயுகத்திலே காட்டியுள்ளார்கள். இத்தவறுகள் அனைத்தும் சமயநூல்களிலேயே செய்யப்பட்டுள்ளன. தந்தை இப்பொழுது உங்களுக்கு விடயங்களை மிகச்சரியாக விளங்கப்படுத்துகிறார். உண்மையில், முழு உலகிலும் மூத்தவர் தந்தையான கடவுளே ஆவார். அனைவரும் அந்த ஒரு கடவுளையே நினைவுசெய்ய வேண்டும். மக்கள் கிறிஸ்து, புத்தர் அல்லது தேவர்களை நினைவுசெய்கிறார்கள். ஒவ்வொரு சமயத்தவர்களும் தங்கள் சமயத்தை ஸ்தாபித்தவரை நினைவுசெய்கிறார்கள். துவாபர யுகத்திலேயே நினைவுசெய்தல் ஆரம்பமாகியது. பாரதத்திலே துன்பவேளையிலே எல்லோரும் கடவுளை நினைவுசெய்கிறார்கள், சந்தோஷவேளையில் எவருமே அவரை நினைவு செய்வதில்லை என்பது நினைவுகூரப்படுகிறது. பின்னரே துன்பம் காரணமாக நினைவு செய்யும் சம்பிரதாயம் ஆரம்பமாகியது. பாரத மக்களே முதன் முதலில் நினைவுசெய்ய ஆரம்பித்தார்கள். அவர்களைப் பார்த்து ஏனைய சமயத்தவர்களும் தங்கள் சமய ஸ்தாபகர்களை நினைவுசெய்ய ஆரம்பித்தார்கள். தந்தையும் ஒரு தர்மத்தை ஸ்தாபிப்பவரே. எவ்வாறாயினும் மக்கள் தந்தையை மறந்து, ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளனர். அவர்களுக்கு இலக்ஷ்மி, நாராயணனின் தர்மத்தைப் பற்றித் தெரியாது. நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனையோ அல்லது கிருஷ்ணரையோ நினைவுசெய்யக்கூடாது. ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்த ஒரே தந்தையையே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். பின்னர் அவர்கள் பக்தி மார்க்கத்திலே சிவனை வழிபட ஆரம்பித்ததும், கீதையின் கடவுள் கிருஷ்ணரே என நம்ப ஆரம்பித்தார்கள்; அவர்கள் அவரை நினைவுசெய்கிறார்கள். அவர்களைப் பார்த்து, ஏனையோரும் தங்களுடைய சமய ஸ்தாபகர்களை நினைவுசெய்ய ஆரம்பிக்கிறாhர்கள். அந்தத் தேவ தர்மத்தை ஸ்தாபித்தவர் கடவுளே என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். கீதையை உபதேசித்தவர் சிவபாபாவே அன்றி, கிருஷ்ணர் அல்லர் என நாங்கள் எழுத முடியும். அவர் அசரீரியானவர். எனவே இது அற்புதமான ஒரு விடயம், அல்லவா? எவருக்கும் சிவபாபாவின் அறிமுகம் இல்லை. அவர் ஒரு நட்சத்திரம். சகல இடங்களிலும் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் அவருக்கு பெரிய உருவம் இருப்பதாக, அதாவது, அவர் நிலையான ஒளித்தத்துவம் என நம்புகிறார்கள். எவ்வாறாயினும், அவர் ஆத்மாக்கள் வசிக்கும் பெரும் ஒளித் தத்துவத்திலேயே வசிக்கிறார். உண்மையில் ஆத்மாக்களின் வடிவம் நட்சத்திரம் போன்றதே. பரமாத்மாவாகிய பரமதந்தையும் ஒரு நட்சத்திரமே. எவ்வாறாயினும், அவர் ஞானம் நிறைந்தவரும் விதையும் ஆகையால், அவருக்கு அந்தச் சக்தி இருக்கிறது. பரமாத்மாவே (விதை) ஆத்மாக்களின்; தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் அசரீரியானவர். மனிதர்களை ஞானக்கடல் அல்லது அன்புக்கடல் என அழைக்க முடியாது. இதனாலேயே ஞானத்தை விளங்கப்படுத்தும் குழந்தைகளிடம் அந்த அதிகாரம் இருக்க வேண்டும். அத்துடன் அவர்களின் புத்தி பரந்ததாகவும், எல்லையற்றதாகவும் இருக்க வேண்டும். உங்கள் அனைவர் மத்தியிலும் மம்மாவே பிரதானமானவர். தாய்மார்களுக்கு வந்தனம் என்பது நினைவுகூரப்படுகிறது. குமாரிகளாலேயே அம்பு எய்யப்பட்டது. வேறெங்கும் அவர்கள்; “அரைக்குமாரிகள், குமாரிகள்”; பற்றிய இரகசியத்தைக் கொண்டிருப்பதில்லை. இது இங்கிருக்கும் ஆலயத்தால் நிரூபிக்கப்படுகிறது. உண்மையில் ஜெகதாம்பாளும் இருக்கிறார். ஆனால் மக்களுக்கு அவர் யார் என்பது தெரியாது. நான் உங்களுக்குப் படைப்பவரையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் பற்றிய இரகசியங்களையும் பிரம்மாவின் கமலவாய் மூலமாகக் கூறுகிறேன் எனத் தந்தை கூறுகிறார். நாடகத்திலே என்ன இருக்கிறது என்பது மக்களின் புத்தியினுள் பிரவேசிக்க வேண்டும். இது ஓர் எல்லையற்ற நாடகம். நாங்கள்; இந்த நாடகத்தின் நடிகர்கள். எனவே நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்கள் எங்களுடைய புத்தியிலே இருக்க வேண்டும். இதைத் தங்கள் புத்தியிலே வைத்திருப்பவர்களிடம் பெருமளவு போதை இருக்கிறது. நாள் முழுவதும், உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்கான அனைத்தையும் செய்த பின்னர், இரவிலே அமர்ந்திருந்து எவ்வாறு இந்த நாடகம் சுழல்கிறது என்பதை நினைவுசெய்யுங்கள். இதுவே “மன்மனாபவ” ஆகும். எவ்வாறாயினும், மாயை உங்களை இரவிலே அமர்ந்திருக்க விடுவதில்லை. நடிகர்களின் புத்தியிலே நாடகத்தின் இரகசியங்கள் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், இது மிகவும் கடினம்; அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் சிக்குவதால் அவர்களின் புத்தி பாபாவினால் பூட்டப்பட்டு விடுகிறது. இலக்கு மிக உயர்ந்ததாகும். நன்றாகக் கற்றவர்கள் நல்ல சம்பளத்தைக் கேட்கிறார்கள். இதுவும் ஓர் கல்வியே. எவ்வாறாயினும், வெளியே சென்றதும் நீங்கள் மறந்துவிடுவதோடு, உங்கள் சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்ற ஆரம்பிக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே உங்களுக்கு நன்மை இருக்கிறது. இந்த உலகம் தூய்மையற்றதாகும். சந்நியாசிகள் துறக்கின்ற விகாரம் நஞ்சு என அழைக்கப்படுகிறது. இராவண இராச்சியம் துவாபர யுகத்திலேயே ஆரம்பமாகுகிறது. வேதங்கள், சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. குழந்தைகளின் புத்தி சேவையிலே வேலை செய்ய வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், உங்களால் ஞானத்தையும் கிரகிக்க முடியும். விநாசம் சற்று முன்னால் உள்ளது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அனைவரும் சந்தோஷமற்றுக் கூவி அழைப்பார்கள்: 'ஓ கடவுளே, கருணை காட்டுங்கள்!" விரக்தியில் கூவி அழைக்கும்பொழுது, அவர்கள் கடவுளை நினைவு செய்வார்கள். பிரிவினை நேரத்திலே அவர்கள் 'ஓ கடவுளே, கருணை காட்டுங்கள்! எங்களைப் பாதுகாத்திடுங்கள்” என அதிகளவில் நினைவுசெய்தார்கள். அவர் எவ்வாறு உங்களைப் பாதுகாப்பார்? மக்களுக்குத் தங்களைப் பாதுகாப்பவரைத் தெரியாவிட்டால், அவரால் எவ்வாறு அவர்களைப் பாதுகாக்க முடியும்? தந்தை இப்பொழுது வந்துவிட்டார், ஆனால் இது அரிதாகவே ஒருவருடைய புத்தியிலே பதிகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இன்ன இன்ன விதமாகச் சேவை செய்யுங்கள். இந்த ஸ்ரீமத்தைத் தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகிறீர்கள். அவர்களால் அத்தகைய தந்தையை இனங்கண்டு கொள்ள முடியாதிருப்பது மிகப் பெரிய அதிசயம். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நாள் முழுவதும் உங்கள் புத்தியிலே சிவபாபாவின் நினைவு இருக்கட்டும். இவர் அவருடைய இரதமும், சகபாடியும் ஆவார். இன்று குழந்தைகளின் புத்தியிலே பெருமளவு நம்பிக்கை இருப்பதையும், நாளையே அவர்கள் பெருமளவு சந்தேகத்தை வளர்த்துக் கொள்வதையும் தந்தை காண்கிறார். மாயையின் புயல்கள் வரும்பொழுது, அவர்களின் ஸ்திதி வீழ்ச்சி அடைகிறது. அதற்கு பாபா என்ன செய்ய முடியும்? நீங்கள் ஞானத்திற்கு வந்து உங்களை அர்ப்பணித்தீர்கள். எனவே நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் உங்களை அர்ப்பணித்து விட்டீர்கள். அத்துடன் நீங்கள் சேவையும் செய்ய வேண்டும். அப்பொழுது நீங்கள் பிரதிபலனைப் பெறுவீர்கள். நீங்கள் உங்களை அர்ப்பணித்துப் பின்னர் சேவை செய்யாவிட்டாலும்;, உங்களுக்கு உணவளிக்கவே வேண்டும். எனவே நீங்கள் கொடுத்த பணம் அனைத்தையும் நீங்கள் உங்கள் உணவிற்கே பயன்படுத்துகிறீர்கள். அவர்கள் சேவை செய்வதில்லை. மனிதர்களை வைரங்களைப் போன்று ஆக்குவதற்கான சேவையை நீங்கள் செய்ய வேண்டும.; நீங்கள் பாபாவின் ஆன்மீகச் சேவையைச் செய்ய வேண்டும் என்பதே பிரதான விடயம். அதன் மூலம் மனிதர்களால் மேன்மையானவர்களாக முடியும். நீங்கள் சேவை செய்யாவிட்டால், நீங்கள் சென்று பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவீர்கள். மிக நன்றாகக் கற்பவர்களுக்கு மிக உயர்ந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. சித்தியடையாதவர்களோ பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆகுவார்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவுசெய்து உங்கள் ஆஸ்தியைப் பெறுங்கள். அவ்வளவுதான்! “மன்மனாபவ” என்ற இவ் வார்த்தை சரியானதாகும். ஞானக்கடல் கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். கிருஷ்ணரால் இதைக் கூறமுடியாது. தந்தை மட்டுமே கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்வதுடன் உங்கள் எதிர்கால இராஜ அந்தஸ்தையும் நினைவுசெய்யுங்கள். இது இராஜயோகம். இதனாலேயே இல்லறப் பாதை நிரூபிக்கப்படுகிறது. உங்களால் மட்டுமே இதை விளங்கப்படுத்த முடியும். உங்கள் மத்தியிலும், திறமைசாலிகளும், சேவாதாரிகளுமே அழைக்கப்படுகிறார்கள். ஒருவர் திறமையான கரமாக இருக்கும்பொழுது அது புரிந்துகொள்ளப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் யோகி;யுக்தாக இருக்க வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாவிட்டால், தந்தையின் பெயரை அவதூறு செய்கிறீர்கள். அவரை நீங்கள் ஏமாற்றினால், தண்டனை கிடைக்கும். நீதிமன்றமும் கூட்டப்படுகிறது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
இரவு வகுப்பு:
குழந்தைகளாகிய நீங்கள்; எல்லாவற்றிற்கும் முதலில் தந்தையைப் பற்றிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். எல்லையற்ற தந்தை மட்டுமே எங்களுக்குக் கற்பிக்கிறார். கீதையைக் கற்றவரான கிருஷ்ணரை அவர்கள் கடவுள் என அழைக்கிறார்கள். அசரீரியானவரே கடவுள் என அழைக்கப்படுகிறார் என்பதை நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். பல சரீரதாரிகள் இருக்கிறார்கள். சரீரமற்றவர் ஒருவரே இருக்கிறார். அவரே அதியுயர்ந்தவரான சிவபாபா ஆவார். 'நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள்" என்பதை அவர்களின் புத்தியில் மிக நன்றாகப் பதியச் செய்யுங்கள். அவர் மட்டுமே அதி உயர்ந்தவரான, அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையாவார். அவர் எல்லையற்ற தந்தையும், இவர் எல்லைக்குட்பட்ட தந்தையும் ஆவார்கள். வேறெவரும் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு ஓர் ஆஸ்தியைத் தருவதில்லை. உங்களுக்கு ஓர் அமரத்துவ அந்தஸ்தைக் கொடுக்கும்; தந்தை வேறெவரும் இல்லை. சத்தியயுகமே அமரத்துவமான உலகாகும். இது மரணபூமியாகும். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கும்பொழுது, தாங்கள்; தேவ சுய இராச்சியம் என அழைக்கப்படும் ஓர் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகிறார்கள்; என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தந்தை மட்டுமே உங்களுக்கு அதைக் கொடுக்கிறார். அந்தத் தூய்மையாக்குபவர் நினைவுசெய்யப்படுகிறார். அவர் கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகி, தூய உலகிற்குச் செல்லத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகலாம். ஒவ்வொரு சக்கரத்திலும் தந்தை கூறுகிறார்: சதா என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள். நினைவு யாத்திரையின் மூலம் மட்டுமே, நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். தூய உலகம் இப்பொழுது வருகிறது, தூய்மையற்ற உலகம் அழியப் போகிறது. எல்லாவற்றிற்கும் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, இதை அவர்களை உறுதியாகப் புரிந்துகொள்ளச் செய்யுங்கள். அவர்கள் தந்தையை உறுதியாகப் புரிந்துகொள்ளும் பொழுதே, அவர்களால் தந்தையின் ஆஸ்தியைப் பெறமுடியும். இங்கேயே மாயை உங்களைப் பெருமளவு மறக்கச் செய்கிறாள். நீங்கள் பாபாவை நினைவுசெய்ய முயற்சி செய்கிறீர்கள். பின்னர் அவரை மறந்து விடுகிறீர்கள். சிவபாபாவை நினைவுசெய்வதன் மூலம் மட்டுமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அந்த பாபா உங்களுக்கு இவர் மூலம் கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவுசெய்யுங்கள். இருப்பினும், நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றிலே மும்முரமாக ஈடுபடும்பொழுது, என்னை மறந்து விடுகிறீர்கள். நீங்கள் அவரை மறந்து விடக்கூடாது. இவ்விடயத்திலேயே முயற்சி தேவையாகும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைய வேண்டும். கர்மாதீத ஸ்திதியை உடையவர்கள் தேவதைகள் என அழைக்கப்படுகிறார்கள். எனவே, நீங்கள் எவ்வாறு ஒருவருக்கு விளங்கப்படுத்தலாம் என்பதை உறுதியாக நினைவில் வைத்திருங்கள். நீங்கள் உங்கள் சகோதரர்களுக்கு (ஆத்மாக்கள்) விளங்கப்படுத்துகிறீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். எல்லோருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுங்கள். சிலர் கூறுகிறார்கள்: நான் பாபாவிடம் சென்று காட்சிகளைப் பெற விரும்புகிறேன். எவ்வாறாயினும், இதிலே காட்சிகள் பற்றிய கேள்விக்கே இடமில்லை. கடவுளே வந்து உங்களுக்குக் கற்பித்து, 'உங்கள் அசரீரியான தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்" என வாய் மூலமாகக் கூறுகிறார். என்னை நினைவுசெய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எங்கேயேனும் அமர்ந்து உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்தாலும், மீண்டும் மீண்டும் நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை உங்களுக்கு 'என்னை நினைவு செய்யுங்கள்!" என்ற கட்டளையைப் பிறப்பிக்கிறார். என்னைச் சதா நினைவுசெய்பவர்களே வெற்றி அடைவார்கள். நீங்கள் என்னை நினைவுசெய்யாவிட்டால், உங்கள் புள்ளிகள் குறைவடையும். இதுவே மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்கான கல்வி. ஒரேயொரு தந்தையே இதை உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்யும் அரசர்கள் ஆகவேண்டும். எனவே நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவுசெய்ய வேண்டும். உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இறுதியிலே அது இடம்பெறும். முடிவு எந்நேரத்திலும் வரலாம். எனவே நீங்கள் தொடர்ச்சியான முயற்சி செய்ய வேண்டும். உங்கள் முயற்சி சதா காலமும் தொடர வேண்டும். உங்கள் பௌதீகத் தந்தை, 'உங்கள் சரீர உறவினர்களைத் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள், சரீரத்தின் உணர்வைத் துறந்து என்னை நினைவுசெய்யுங்கள் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்" எனக் கூறமாட்டார். எல்லையற்ற தந்தை மட்டுமே, 'குழந்தைகளே, எனது நினைவில் மட்டும் நிலைத்திருங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள்" எனக் கூறுகிறார். இந்த வியாபாரத்தை நீங்கள் சந்தோஷமாகச் செய்ய வேண்டும். உங்கள் உணவை உட்கொள்ளும்பொழுதும், நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். குழந்தைகளாகிய உங்களின் நினைவிலே நிலைத்திருக்கும் மறைமுகமான பயிற்சி சதாகாலமும் தொடர்ந்தால் அது நல்லது. அதிலே உங்களுக்கு நன்மை மாத்திரம் உள்ளது. நீங்கள் பாபாவை எவ்வளவு நேரம் நினைவு செய்கிறீர்கள் என்பதைப் பார்க்க உங்களை நீங்கள் சோதிக்க வேண்டும். அச்சா.
இனிமையிலும், இனிமையான, அன்பிற்கினிய வெகுகாலத்திற்கு முன்னர் தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு அன்பும், நினைவுகளும், இரவு வணக்கமும். ஓம் சாந்தி.
தாரணைக்கான சாராம்சம்:
1. மனிதர்களை வைரங்களைப் போன்று ஆக்கும் ஆன்மீகச் சேவையைச் செய்யுங்கள். உங்கள் புத்தியிலே ஒருபொழுதும் சந்தேகங்களை உருவாக்கி, கற்பதை நிறுத்திவிடக் கூடாது. ஒரு நம்பிக்கைப்பொறுப்பாளராக இருங்கள்.
2. உங்கள் சரீரத்திற்கான ஜீவனோபாயத்திற்காகச் செயற்படும்பொழுதும், நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் உங்களுக்கு நன்மை இருப்பதாகக் கருதித்; தொடர்ந்தும் முன்னேறுங்கள். உங்கள் சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்றாதீர்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் அனைவருக்குமான நன்மையளிக்கும் உணர்வுகளைக் கொண்டிருக்கும்பொழுது, மாற்றத்தை ஏற்படுத்துகின்ற, ஓர் எல்லையற்ற சேவகர் ஆவீர்களாக.
தங்களுடைய இன்ன உறவினர் மாற வேண்டும் அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய சகபாடிகள் ஆகவேண்டும் எனும் விருப்பத்தைப் பெரும்பாலான குழந்தைகள் பாப்தாதாவின் முன்னால் வைக்கின்றார்கள். எவ்வாறாயினும் நீங்கள் அந்த ஆத்மாக்களை உங்களுக்கு உரியவராகக் கருதி அந்த விருப்பத்தைக் கொண்டிருப்பதால், ஓர் எல்லைச் சுவர் எழுகிறது. உங்களுடைய நன்மையளிக்கும் உணர்வுகள் அந்த ஆத்மாக்களைச் சென்றடைவதில்லை. ஓர் எல்லையற்ற சேவகர் அனைவருக்குமாக ஆத்ம உணர்வுகளையும், ஆத்ம உணர்வு எனும் எல்லையற்ற பார்வையையும் கொண்டிருக்கின்றார். நீங்கள் சகோதரத்துவ மனோபாவத்துடன் நல்லாசிகளைக் கொண்டிருக்கும்பொழுது, நிச்சயமாக அதன் பலனைப் பெறுகின்றீர்கள். இதுவே மனம் மூலம் சேவை செய்வதற்கான மிகச்சரியான வழி ஆகும்.
சுலோகம்:
தங்கள் புத்தி எனும் அம்பறாத்தூளியை ஞான அம்புகளால் நிரப்புவதால், மாயைக்குச் சவால் விடுப்பவர்களே துணிவுள்ள, தைரியமான சத்திரியர்கள்.
மாதேஸ்வரியின் இனிய மேன்மையான வாசகங்கள்:
மன அமைதியின்மைக்குக் காரணம் கர்ம பந்தனமும்
அமைதிக்குக் காரணம் கர்மாதீத ஸ்திதியும்.
உண்மையில், ஒவ்வொரு மனிதரும் மன அமைதியை அடைய விரும்புகின்றார், அவர்கள் இதற்காக அனைத்து வகையான முயற்சிகளையும் செய்கின்றார்கள். எவ்வாறாயினும், இதுவரையில், அவர்களின் மனமானது அமைதி அடையவில்லை. இதற்கு என்ன காரணம்? அனைத்துக்கும் முதலில், அமைதியின் வேர் என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். சில கர்ம பந்தனங்களில் சிக்கிக் கொண்டிருப்பதே, மன அமைதியின்மைக்கான பிரதான காரணம். ஐந்து விகாரங்களின் கர்ம பந்தனங்கள் அனைத்திலிருந்தும் மனிதர்கள் விடுவிக்கப்படும்வரை அவர்களால் அமைதியின்மையிலிருந்து விடுபட முடியாது. கர்ம பந்தனம் துண்டிக்கப்படும்பொழுதே, மன அமைதி, அதாவது, ஜீவன்முக்தி பெறப்படுகின்றது. எவ்வாறாயினும், எவ்வாறு அந்தக் கர்ம பந்தனத்தைத் துண்டிப்பது என்றும், அதிலிருந்து எவரால் உங்களை விடுவிக்க முடியும் என்றும் நீங்கள் சிந்திக்க வேண்டும். எம்மனிதராலும் இன்னுமோர் மனிதருக்கு முக்தியை அருள முடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஒரேயொரு கடவுளால் மாத்திரமே கர்ம பந்தனங்களின் இந்தக் கர்மக் கணக்குகளைத் துண்டிக்க முடியும், அவரே வந்து ஞானத்தின் மூலமும் யோக சக்தி மூலமும் எங்களைக் கர்ம பந்தனங்களிலிருந்து விடுவிக்கின்றார். இதனாலேயே கடவுள் சந்தோஷத்தை அருள்பவர் என அழைக்கப்படுகின்றார். நீங்கள் ஓர் ஆத்மா என்றும், நீங்கள் யாருடைய குழந்தை என்றும், உங்கள் உண்மையான குணங்கள் எவை என்றும் அறிந்து கொள்ளும்வரை – அதாவது, இவை அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்கும்பொழுது மாத்திரமே உங்கள் கர்ம பந்தனம் துண்டிக்கப்பட முடியும். கடவுளிடமிருந்து மாத்திரமே எங்களால் இந்த ஞானத்தைப் பெற முடியும், அதாவது, கடவுளினூடாக மாத்திரமே எங்கள் கர்ம பந்தனங்கள் துண்டிக்கப்பட முடியும். அச்சா.