11.12.18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உபகாரியாக இருக்கின்றார். எனவே, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் இருப்பதற்கான சாக்குப்போக்குகள் எதனையும் கூறாமல், ஸ்ரீமத்தைச் சதா தொடர்ந்தும் பின்பற்றுங்கள்.
கேள்வி:
தீவிர பக்தி செய்வதால் கிடைக்கும் பேறுகளுக்கும், தீவிரமாகக் கற்பதனால் கிடைக்கும் பேறுகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
பதில்:
தீவிர பக்தி செய்வதால், நீங்கள் காட்சிகளை மாத்திரமே பெறுகின்றீர்கள். உதாரணமாக, ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் காட்சிகளைக் கண்டு, நடனமும் ஆடலாம். ஆனால் அவர்கள் வைகுந்த தாமத்திற்கு அல்லது ஸ்ரீ கிருஷ்ண தாமத்திற்குச் செல்ல மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தீவிரமாக இக் கல்வியைக் கற்கின்றீர்கள். அதன் மூலம் உங்கள் ஆசைகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்படுகின்றன. இக்கல்வியைக் கற்பதால், நீங்கள் வைகுந்த தாமத்திற்குச் செல்கின்றீர்கள்.
பாடல்:
இன்றில்லாவிடின் நாளை முகில்கள் கலைந்துவிடும். ஓ அலைந்து திரியும் இரவு நேரப் பயணியே, இப்பொழுது காலை நேரம்;. நாங்கள் வீடு திரும்புவோம்.
ஓம்சாந்தி.
நாங்கள் வீடு திரும்புவோம் எனக் கூறியவர் யார்? ஒருவரது குழந்தை முகங்கோணி வீட்டை விட்டுச் செல்லும்பொழுது, அவரது நண்பர்களும், உறவினர்களும் அவர் பின்னால் சென்று, அவர் ஏன் முகங்கோணினார் என வினவி, “இப்பொழுது வீடு செல்வோம்” எனக் கூறுகிறார்கள். இங்கும், எல்லையற்ற தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றார். தந்தையும், தாதாவும் இருக்கின்றனர். லௌகீகமானவருடன் ஆன்மீகமானவரும் இருக்கின்றார். அவர் கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, இப்பொழுது வீடு செல்வோம். இப்பொழுது இரவு முடிவடைந்து, பகல் வரவுள்ளது. இவை ஞான விடயங்களாகும். பிரம்மாவின் இரவையும், பிரம்மாவின் பகலையும் பற்றி விளங்கப்படுத்;துபவர் யார்? தந்தை இங்கிருந்தவாறு, பிரம்மாவிற்கும், பிரம்மகுமாரர்கள், குமாரிகளாகிய உங்களுக்கும் விளங்கப்படுத்துகின்றார். அரைக்கல்பத்திற்கு இரவாகும், அதாவது, சீரழிந்த இராச்சியமாகிய, இராவணனின் தூய்மையற்ற இராச்சியமாகும், ஏனெனில், மக்கள் அசுர கட்டளைகளையே பின்பற்றுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்கள். ஸ்ரீமத்தும் மறைமுகமானது. தந்தையே வருகின்றார் என்பதை நாங்கள் அறிவோம். அவரது வடிவம் இராவணனுடைய வடிவத்தில் இருந்து வேறுபட்டதாகும். அவன் ஐந்து விகாரங்களாகிய, இராவணன் என அழைக்கப்படுகின்றான். இராவண இராச்சியம் இப்பொழுது முடிவடைகின்றது. பின்னர் கடவுளின் இராச்சியம் இருக்கும். அவர்கள் இராம இராச்சியத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் சீதைக்குரிய இராமரின் பெயரை உச்சரிப்பதில்லை. அவர்கள் மாலையின் மணிகளை உருட்டியவாறே “இராமா, இராமா” என உச்சரிக்கும்பொழுது, பரமாத்மாவாகிய கடவுளையே நினைவுசெய்கின்றார்கள். அனைவருக்கும் சற்கதி அருள்பவரின் பெயரை அவர்கள் தொடர்ந்தும் உச்சரிக்கின்றார்கள். இராமர் என்றால் கடவுள் என்பதாகும். அவர்கள் மாலையின் மணிகளை உருட்டும்பொழுது, எந்த மனிதர்களையும் நினைவுசெய்வதில்லை. வேறு எவருமே அவர்களது புத்தியில் பிரவேசிக்க மாட்டார்கள். இரவு இப்பொழுது முடிவுக்கு வருகின்றது என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். இது கர்மஷேத்திரமாகும், அதாவது, ஆத்மாக்களாகிய நாங்கள் சரீரங்களை எடுத்து, எங்கள் பாகங்களை நடிக்கின்ற மேடையாகும். நாங்கள் ஒவ்வொருவரும் 84 பிறவிகளுக்கான பாகத்தை நடிக்க வேண்டும். அந்த ரூபத்தில் குலங்களும் காட்டப்பட்டுள்ளன, ஏனெனில் 84 பிறவிகளின் கணக்கும் இருக்க வேண்டும்; நீங்கள் எந்தெந்தப் பிறவிகளில், எந்தச் சாதிகளில், எக்குலங்களில் வருகின்றீர்கள் என்பதும் காட்டப்பட வேண்டும். இதனாலேயே பல்ரூப வடிவம் காட்டப்பட்டுள்ளது. அனைத்திற்கும் முதலில் பிராமணர்கள் உள்ளனர். 84 பிறவிகளும் சத்தியயுகத்துச் சூரிய வம்சத்தில் மாத்திரம் இருந்திருக்க மாட்டாது; பிராமணக் குலத்திலும் 84 பிறவிகள் இல்லை. 84 பிறவிகளும் வெவ்வேறு பெயர்களுடனும் உருவங்களுடனும், வெவ்வேறு தேசங்களில், வேறுபட்ட நேரங்களில் இடம்பெறுகின்றன. அனைவரும் நிச்சயமாகச் சத்தியயுக சதோபிரதான் ஸ்திதியிலிருந்து, கலியுகத்துத் தமோபிரதான் ஸ்திதிக்கு கீழிறங்கி வரவேண்டும். அக்காலப் பகுதியும் காட்டப்பட்டுள்ளது. மனிதர்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். மனிதர்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. எனவே, தந்தை கூறுகின்றார்: உங்களின் சொந்தப் பிறவிகளைப் பற்றி உங்களுக்கே தெரியாது; நானே அவற்றைப் பற்றி உங்களுக்குக் கூறுகின்றேன். நாடகத்திற்கேற்ப, நீங்கள் நிச்சயமாக அனைத்தையும் மறந்துவிட வேண்டும் என்பதைத் தந்தை புரிந்துகொள்கிறார். இப்பொழுது இது சங்கமயுகமாகும். கலியுகம் இன்னமும் ஒரு குழந்தைப் பருவத்தில் உள்ளது என உலகம் கூறுகின்றது. அது காரிருளாகிய அறியாமை எனப்படுகின்றது. நாடகமொன்றில் நடிகர்கள் இன்னமும் 10 நிமிடங்களில் அந்நாடகம் முடிவடைந்துவிடும் என்று அறிந்திருக்கிறார்கள். அதேபோன்று, இதுவும் உயிரோட்டமான நாடகமேயாகும். இது எப்பொழுது முடிவடையும் என்பதை மக்கள் அறியார்கள்; அவர்கள் காரிருளில் இருக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: குருமார்கள் மூலமாகவோ, வேதங்கள், சமயநூல்கள் மூலமாகவோ, அல்லது நோன்பு, தபஸ்யா செய்வதன் மூலமாகவோ என்னைக் கண்டறிய முடியாது. அவை பக்தி மார்க்கத்துச் சம்பிரதாயங்களாகும். இரவு பகலாக்கப்படும்பொழுது, அதாவது, எண்ணற்ற சமயங்கள் அழிக்கப்பட்டு ஒரேயொரு தர்;மம் ஸ்தாபிக்கப்படும்பொழுது, நான் எனக்குரிய நேரத்தில் வருகின்றேன். உலகச் சக்கரம் முடிவடையும்பொழுதே என்னால் சுவர்க்கத்தை ஸ்தாபிக்க முடியும். பின்னர், நேரடியாக இராச்சியம் ஆரம்பமாகுகின்றது. நீங்கள் பின்னர் ஓர் அரசனுக்குப் பிறப்பெடுப்;பீர்கள் என்பதையும், பின்னர் புதிய உலகம் படிப்படியாகப் உருவாக்கப்படும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அனைத்தும் புதியதாக்கப்பட வேண்டும். ஆத்மா கற்று, செயலாற்றுகின்ற சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கின்றார் என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வுடையவர்களாகவே இருக்கின்றார்கள். அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக ஆகும்பொழுதே அவர்களால் பரமாத்மாவை நினைவுசெய்ய முடியும். அனைத்திற்கும் முதலில், ஆத்ம உணர்வுடையவர் ஆகுகின்ற கேள்வியும் இருக்கின்றது. தாங்கள் உயிருள்ளவர்கள் என அனைவரும் கூறுகின்றனர். ஒவ்வோர் ஆத்மாவும் அழிவற்றவர் என்றும், சரீரங்கள் அழியக்கூடியவை என்றும், ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இதனைக் கூறினாலும், அதன்படி அவர்கள் வாழ்வதில்லை. ஆத்மாக்கள் அசரீரி உலகிலிருந்தே வருகின்றார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர்கள் தங்களுக்குள் அழிவற்ற பாகங்களைக் கொண்டிருக்கின்றார்கள். தந்தை இங்கிருந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் மறுபிறவி எடுக்கின்றனர். நாடகம் மீண்டும் மீண்டும் அதேபோன்று நிகழ்கின்றது. பின்னர், கிறிஸ்து போன்ற அனைவரும் வரவேண்டும். அவர்கள் தங்களது சொந்தச் சமயத்தை ஸ்தாபிப்பதற்காகத் தங்களுக்கேயுரிய நேரத்தில் வருகின்றார்கள். இப்பொழுது இது சங்கமயுகப் பிராமணர்களின் தர்மமாகும். அப்பிராமணர்கள் பூஜிப்பவர்கள், ஆனால் நீங்களோ பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள். நீங்கள் என்றும் பூஜிப்பதில்லை. மக்கள் பூஜித்தல் போன்றவற்றைச் செய்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது அத்தகையதோர் மகத்தான கல்வி. நீங்கள் அதிகளவு கிரகிக்க வேண்டும்! அனைத்தையும் ஆழமாகக் கிரகிப்பதும் வரிசைக்கிரமமானதே. பாபா படைப்பவர் என்பதையும், இது அவரது படைப்பு என்பதையும் நீங்கள் இரத்தினச் சுருக்கமாகப் புரிந்துகொள்கின்றீர்கள். அச்சா, குறைந்தபட்சம் அவர் உங்கள் தந்தை என்பதையாவது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பக்தர்கள் அனைவரும் தந்தையை நினைவுசெய்கின்றார்கள். பக்தர்களும், அத்துடன் குழந்தைகளும் இருக்கின்றனர். பக்தர்கள் “பாபா” எனக் கூவியழைக்கின்றனர். பக்தர்கள் கடவுளாக இருப்பார்களாயின், அவர்கள் “பாபா” எனக்கூறும்பொழுது யாரைக் கூவியழைக்கின்றனர்? அவர்கள் இந்தளவிற்கேனும் புரிந்துகொள்வதில்லை! அவர்கள் தங்களைக் கடவுளாகக் கருதுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நாடகத்திற்கேற்ப பாரதத்தின் நிலைமை அவ்வாறு ஆகும்பொழுதே, அதாவது, பாரதம் தனது இறுதிக்கட்டத்தில் உள்ளபொழுதே தந்தை வருகின்றார். பாரதம் பழையதாகும்பொழுதே அது மீண்டும் புதுப்பிக்கப்பட முடியும். பாரதம் புதியதாக இருந்தபொழுது, வேறு எச்சமயங்களும் இருக்கவில்லை. அதுவே சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது அப் பாரதம் பழையதாக உள்ளது, இது நரகம் என அழைக்கப்படுகின்றது. அங்கே, நாங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தோம். ஆனால் இங்கோ பூஜிப்பவர்களாக இருக்கின்றோம். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களுக்கும், பூஜிப்பவர்களுக்கும் இடையிலான வேறுபாடு உங்களுக்குக் காட்டப்பட்டிருக்கின்றது. ஆத்மாவாகிய நான் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருந்தேன், ஆத்மாவாகிய நான் பூஜிப்பவராக இருக்கின்றேன். ஆத்மாவாகிய நான் ஒரு ஞானி ஆத்மா. ஆத்மாவாகிய நான் பூஜிக்கின்ற ஆத்மா. கடவுளைப் பூஜிப்பவராகுகின்ற, பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் என அழைக்க முடியாது. இது இலக்ஷ்மி, நாராயணனுக்குக் கூறப்படலாம். எனவே, அவர்கள் எவ்வாறு பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றனர், பின்னர் எவ்வாறு பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள் என்பது உங்கள் புத்தியில் புக வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் முன்னைய கல்பத்திலும் இதே ஞானத்தையே கொடுத்தேன். நான் ஒவ்வொரு கல்பத்திலும் அதனைக் கொடுக்கின்றேன். நான் சக்கரத்தில், சங்கமயுகத்திலேயே வருகின்றேன். எனது பெயர் தூய்மையாக்குபவர் என்பதாகும். முழு உலகமும் தூய்மையற்றதாகும் பொழுதே நான் வருகின்றேன். பாருங்கள், இது விருட்சம், பிரம்மா அதன் உச்சியில் நிற்;கின்றார். முதலில், அவர் ஆரம்பத்தில் காட்டப்;படுகின்றார். இப்பொழுது, அனைவரினதும் இறுதியாகும். பிரம்மா இறுதியில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைப் போன்றே, அவர்களும் இறுதியில் வருவார்கள். உதாரணமாக, கிறிஸ்துவும் இறுதியிலேயே வருவார். எவ்வாறாயினும், நாங்கள் அவரது படத்தை இறுதியாக, அதாவது, கிளையின் முடிவில் காண்பிக்க முடியாது. அதனைப் பற்றி நாங்கள் விளங்கப்படுத்தலாம். தேவ தர்மத்தை ஸ்தாபிப்பவராகிய பிரஜாபிதா விருட்சத்தின் உச்சியில் நிற்பதைப் போன்றே, கிறிஸ்துவும் கிறிஸ்த சமய மக்களின் தந்தையாகிய பிரஜாபிதா ஆவார். இவர் பிரஜாபிதா என்பதைப் போன்றே பிரஜாபிதா கிறிஸ்துவும், பிரஜாபிதா புத்தரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் சமயங்களை ஸ்தாபிப்பவர்கள். சந்நியாசிகளின் சங்கராச்சாரியாரும் தந்தை என்று அழைக்கப்படுவார். அவர்களைக் குருமார்கள் என்றே அவர்கள் அழைக்கின்றனர். அவர்கள் தங்களது குரு சங்கராச்சாரியார் என்றே கூறுவார்கள். எனவே, கிளையின் முற்பகுதியில் நிற்பவர் மறுபிறவிகள் எடுத்து, இறுதிப்பகுதியில் வருவார். இப்பொழுது அனைவரும் தமோபிரதான் ஸ்திதியில் உள்ளனர். அவர்களும் வந்து, புரிந்துகொள்வார்கள். அவர்கள் இறுதியில் தந்தைக்கு வணக்கம் செலுத்துவதற்காக நிச்சயமாக வருவார்கள். அவர்களுக்கும் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்யுமாறு கூறப்படும். எல்லையற்ற தந்தை அனைவருக்கும் கூறுகின்றார்: உங்கள் சரீரத்தையும், சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து விடுங்கள். இந்த ஞானம்; சமயங்கள் அனைத்திற்கும் உரியதாகும். அனைவரும் தங்களது சரீரங்களைத் துறந்து, தங்களைச் சரீரமற்றவர்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். எந்தளவுக்கு அதிகமாக நீங்கள் நினைவில் நிலைத்திருந்து ஞானத்தைக் கிரகிக்கின்றீர்களோ, அதற்கேற்ப ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். முன்னைய கல்பத்தில் அவர்கள் எந்தளவு ஞானத்தை எடுத்துக் கொண்டாலும், நிச்சயமாக வந்து, மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உலகைப் படைப்பவராகிய, தந்தையின் குழந்தைகளாக இருப்பதில் மகத்தான பெருமையைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை எங்களை உலகின் அதிபதிகளாக்குவதுடன், இராஜயோகத்தையும் எங்களுக்குக் கற்பிக்கின்றார். இது அத்தகையதோர் இலகுவான விடயமாகும். எவ்வாறாயினும், முன்னேறிச் செல்கையில், சிறிய விடயங்களில் சந்தேகங்கள் எழுகின்றன. இவை மாயையின் புயல்கள் அல்லது பரீட்சைத்தாள்கள் என அழைக்கப்படுகின்றன. எனினும் நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ வேண்டும் எனத் தந்தை கூறுகின்றார். நான் அனைவரையும் அவர்களது குடும்பத்தை விட்டு விலகுமாறு கூறினால், அனைவரும் இங்கு வந்து அமர்ந்து விடுவார்கள். நீங்கள் சகல தொடர்புகளையும் கடந்து செல்ல வேண்டும். பின்னர், நேரம் வரும்பொழுது, நீங்கள் உங்களைச் சேவையில் ஈடுபடுத்துவீர்கள். தங்கள் தொழில் போன்றவற்றிலிருந்து விடுபட்டவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். பின்னர், சிலர் குழப்பம் அடைகின்றார்கள். ஏனையவர்களோ, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் நன்மையிருப்பதைப் புரிந்துகொள்கின்றார்கள். நீங்கள் நிச்சயமாக ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு வழிகாட்டல்கள் கொடுக்கப்படும்பொழுது நீங்கள் சாக்குப்போக்குகள் கூறக்கூடாது. தந்தை அனைத்திலும் உபகாரியாகவே இருக்கின்றார். மாயை மிகவும் விஷமத்தனமானவள். இவ்வாறு வாழ்வதை விட, ஏதாவது தொழில் செய்வதோ அல்லது திருமணம் செய்வதோ சிறந்ததெனப் பலர் நினைக்கின்றனர். அவர்களது புத்தி தொடர்ந்தும் சுழல்;கின்றது. பின்னர், அவர்கள் கற்பதை நிறுத்துகின்றார்கள். சிலர் தாங்கள் நிச்சயமாக ஸ்ரீமத்தைப் பின்பற்றுவார்கள் எனத் தந்தைக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். அவை அசுர கட்டளைகள். இவை இறை வழிகாட்டல்களாகும். அசுரக் கட்டளைகளைப் பின்பற்றும்பொழுது, மிகக் கடுமையான தண்டனை அனுபவம் செய்யப்படும். அவர்கள் மேலும் பாவங்கள் செய்யாதவாறு அவர்களைப் பயமுறுத்துவதற்காக, கருட புராணத்தில் பயங்கரமான கதைகளை அவர்கள் எழுதியுள்ளார்கள். எவ்வாறாயினும், இன்னமும் அவர்கள் சீர்திருத்தவில்லை. தந்தை இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். எம்மனிதருமே ஞானக்கடலாக இருக்க முடியாது. ஞானக்கடலும், ஞானம் நிறைந்தவருமாகிய தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். புரிந்துகொண்டவர்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்தி, பின்னர் கூறுகின்றனர்: இது மிகவும் சிறந்தது. நாங்கள் மீண்டும் வருவோம். அவ்வளவுதான்! அவர்கள் கண்காட்சிகளைப் பார்த்துச் சென்றவுடனேயே அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. ஆம், இருவர் அல்லது மூவர் அதிலிருந்து தோன்றினாலும் அது நல்லதே. பல பிரஜைகள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றார்கள். ஆஸ்தியைக் கோருவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் மிக அரிதாகவே தோன்றுவார்கள். ஓர் அரசரும், அரசியும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளையே கொண்டிருப்பார்கள். அவர்கள் இராஜ குடும்பத்தவர்கள் எனப்படுகின்றனர். பிரஜைகளோ பலர் இருக்கின்றனர். பிரஜைகள் மிக விரைவாக உருவாக்கப்படுகின்றனர். ஆனால், அரசர்கள் எவருமே உருவாக்கப்படுவதில்லை. திரேதாயுக இறுதி வரை 16,108 பேர் இருப்பார்கள். ஆனால் பிரஜைகளோ மில்லியன் கணக்கில் இருப்பார்கள். இதனைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் பரந்த, எல்லையற்ற புத்தி தேவைப்படுகின்றது. நாங்கள் பரலோகத் தந்தையிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். தந்தையின் கட்டளைகள்: என்னையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். மன்மனாபவ, மதியாஜிபவ. சுவர்க்கம் என்பது விஷ்ணு பூமியாகும், ஆனால் இதுவோ இராவணனின் பூமியாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அமைதிதாமம், சந்தோஷதாமம், துன்பதாமம் என்பன இருக்கின்றன. தந்தையை நினைவுசெய்வதனால், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களது இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்கின்றன. பக்தி மார்க்கத்தில் அவர்கள் கிருஷ்ணரை நினைவுசெய்கின்றனர், ஆனால் அவர்கள் கிருஷ்ண தாமத்தை அடைவார்கள் என்றில்லை; இல்லை. அவர்கள் திரான்ஸில் கிருஷ்ண தாமத்திற்குச் சென்று நடனமாடி விட்டுத் திரும்பி வரலாம். அது தீவிர பக்தியின் செல்வாக்காகும். அவர்கள் காட்சிகளைப் பெறுவதனால், அவர்களது ஆசைகள் பூர்த்திசெய்யப்படுகின்றன. எவ்வாறாயினும், சத்தியயுகம் என்றால் சத்தியயுகம்தான். அங்கே செல்ல வேண்டும் எனின், நீங்கள் தீவிரமாகக் கற்க வேண்டும்; அதற்காக நீங்கள் தீவிர பக்தி செய்ய வேண்டியதில்லை. தொடர்ந்தும் கற்றுக் கொண்டிருங்கள். நீங்கள் நிச்சயமாக முரளியைக் கற்பது அவசியமாகும். நிச்சயமாக நீங்கள் ஒரு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். இல்லையெனில், முரளியொன்றை எடுத்து, நிச்சயமாக வீட்டில் கற்றுக்கொள்ளுங்கள். சிலருக்கு நிலையத்திற்குச் செல்லுமாறு கூறப்படுகின்றது. அது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாகும். அனைவரது சூழ்நிலையும் ஒரேமாதிரி இருக்க மாட்டாது. ‘எந்த உணவாயினும், திருஷ்டி கொடுத்து விட்டு உண்ணுங்கள், அவ்வளவுதான்!’ என பாபா கூறவில்லை. இல்லை, பாபா கூறுகின்றார்: தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், உங்களால் எதுவுமே செய்யமுடியாமல் இருக்கும்பொழுது, உங்களது உணவிற்குத் திருஷ்டி கொடுத்து விட்டுப் பின்னர் அதனை உண்ணுங்கள். பாபா அனைவருக்கும் இவ்வாறு கூறமாட்டார். உதாரணமாக, பாபா சிலருக்குக் கூறுகின்றார்: நீங்கள் திரைப்படங்கள் பார்க்கச் செல்லலாம். எவ்வாறாயினும், இது அனைவருக்கும் பொருந்தாது. நீங்கள் எவருடனாவது உடன் செல்ல வேண்டியிருக்கலாம். எனவே நீங்கள் அவருக்கு இந்த ஞானத்தையும் கொடுக்க வேண்டும்: அது எல்லைக்குட்பட்ட நாடகம். இதுவோ எல்லையற்ற நாடகம். எனவே நீங்கள் சேவை செய்யவேண்டும். நீங்கள் அங்கு திரைப்படம் பார்ப்பதற்காகவே செல்வதாக இருக்கக்கூடாது. நீங்கள் இடுகாடுகளுக்கும் (மயானம்) சென்று, அங்கு சேவை செய்யவேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கூறுகின்ற அனைத்திலும் நன்மை உள்ளது எனக் கருதித் தொடர்ந்தும் உங்கள் புத்தியில் உறுதியான நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள். ஒருபொழுதும் சந்தேகம் ஏற்படுவதற்கு அனுமதிக்காதீர்கள். ஸ்ரீமத்தை மிகச்சரியான முறையில் புரிந்துகொள்ளுங்கள்.2. ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். நாடகத்தில் ஒவ்வொரு நடிகரும் ஓர் அநாதியான பாகத்தைக் கொண்டிருக்கின்றார். எனவே, ஒரு பற்றற்ற பார்வையாளராக அதனைப் பார்க்கின்ற பயிற்சியைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொருவரினதும் சிறப்பியல்புகளையும் பார்த்து, அவற்றைச் சேவைக்காகப் பயன்படுத்துவதால், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவீர்களாக.
பாப்தாதா ஓவ்வொரு குழந்தையினதும் சிறப்பியல்புகளுக்காக அன்பு கொண்டுள்ளதால், அவர் அனைவரையும் நேசிக்கின்றார், ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் ஏதோவொரு சிறப்பியல்பைக் கொண்டிருக்கின்றார். அதேபோன்று, நீங்களும் ஒவ்வொருவரினதும் சிறப்பியல்புகளையும் பார்க்கின்றீர்கள். ஓர் அன்னம் கற்களை அன்றி, முத்துக்களைப் பொறுக்குவதைப் போன்று, நீங்களும் புனித அன்னங்களே ஆவீர்கள். ஒவ்வொருவரினதும் சிறப்பியல்புகளைப் பார்த்து, அவர்களின் சிறப்பியல்புகளைச் சேவைக்காகப் பயன்படுத்துவதே உங்கள் கடமை. அவர்களுடைய சிறப்பியல்புகளையிட்டு, அவர்களை உற்சாகப்படுத்தி, அதனைச் சேவைக்காகப் பயன்படுத்துமாறு செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் அவர்களுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதுடன், அவர்கள் செய்கின்ற சேவையில் ஒரு பங்கையும் பெறுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் மூலம் பிறருக்குத் தந்தையை நினைவூட்டுகின்ற அத்தகைய வகையில் பாப்தாதாவுடன் இணைந்திருங்கள்.