24/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அதிகாலை வேளையில், உங்கள் தந்தையான என்னை உங்கள் மனம், புத்தியினால் நினைவுசெய்யுங்கள். அத்துடன், பாரதத்தைத் தெய்வீக அரசர்களின பூமியாக (இராஜஸ்தான்) ஆக்கும் சேவையைச் செய்யுங்கள்.
கேள்வி:
எதன் அடிப்படையில் நீங்கள் சூரிய வம்ச இராச்சியம் எனும்; பரிசைப்; பெறுகின்றீர்கள்?
பதில்:
சூரிய வம்ச இராச்சியம் எனும் பரிசைப் பெறுவதற்கு, தந்தையின் முழுமையான உதவியாளர் ஆகுங்கள். தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். ஆசீர்வாதங்களைக் கேட்காதீர்கள். ஆனால் யோகசக்தி மூலம் ஆத்மாவாகிய உங்களைத் தூய்மையாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் சரீரத்தையும், உங்கள் சரீர உறவினர் அனைவரையும் துறந்து ஒரேயொரு அதி அன்பிற்கினிய தந்தையை நினைவு செய்தால், நீங்கள் சூரிய வம்ச இராச்சியம் எனும்; பரிசைப் பெறுவீர்கள். அங்கு அனைத்தும் இருக்கும் - அதில் அமைதி, தூய்மை, செழிப்பு அடங்கும்.
பாடல்:
இறுதியில், நாங்கள் காத்திருந்த அந்த நாள் வந்துவிட்டது.
ஓம் சாந்தி.
‘ஓம்சாந்தி’ என்பதன் அர்த்தம் எப்பொழுதும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் நிலைத்துள்ளது. தந்தை விளங்கப்படுத்தும் விடயங்களை, குழந்தைகளாகிய உங்களைத் தவிர, வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது. இது புதிய நபர் ஒருவர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று அமர்ந்தால், அவரால் எதனையும் புரிந்துகொள்ள முடியாதைப் போன்றது. எதனையும் புரிந்துகொள்ள முடியாத வகையில், மக்கள் செல்கின்ற அத்தகைய எந்த ஓர் ஆன்மீக ஒன்றுகூடலும் இருப்பதில்லை. அங்கே, அவர்கள் சமயநூல்களில் உள்ள விடயங்களையே விளங்கப்படுத்துகின்றார்கள். இதுவே அனைத்திலும் மிகப்பெரிய கல்லூரியாகும். இது புதியதொன்றல்ல. தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்ற அந்த நாள் மீண்டும் ஒருமுறை வந்துள்ளது. இந்த நேரத்தில் பாரதத்தில் எந்த ஓர் இராச்சியமும் இல்லை. இந்த இராஜயோகத்தின் ஊடாக நீங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆகுகின்றீர்கள், அதாவது, விகாரம் நிறைந்த அரசர்கள் ஆகுபவர்களுக்கும் நீங்கள் அரசர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் புத்தியைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் என்ன செயல்களைச் செய்தாலும் அவை உங்கள் புத்தியில் நிலைத்துள்ளன. நீங்கள் போராளிகள். தந்தையுடன் யோகம் செய்;வதால், நீங்கள் பாரதத்தைத் தூய்மையாக்குவதுடன், சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கிரகிப்பதால் நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்யும் அரசர்களாகவும் ஆகுகின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் ஓர் யுத்தகளத்தில் இருக்கின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். எங்கள் வெற்றிக்கு ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது; அது உறுதி. நாங்கள் உண்மையிலேயே இப் பாரதத்தை இரட்டைக் கிரீடத்திற்குரிய தெய்வீக அரசர்களின் பூமி ஆக்குகின்றோம். பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் படங்களை மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். நாங்கள் எங்கள் 84 பிறவிகளை நிறைவுசெய்த பின்னர் இப்பொழுது வீடு திரும்ப உள்ளோம். அதன்பின்னர் நாங்கள் இங்கே வந்து ஆட்சிசெய்வோம். மக்கள் வினவுகின்றார்கள்: இப் பிரம்மாகுமார், குமாரிகள் அனைவரும் என்ன செய்கின்றார்கள்? பிரம்மகுமாரிகள் என்ற இந்த ஸ்தாபனம் என்னவாகும்? ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், இப் பாரதத்தை மீண்டும் ஒருமுறை தெய்வீக அரசர்களின் பூமியாக ஆக்குகின்றோம் என்று பிரம்மாகுமார், குமாரிகள் உடனடியாகப் பதிலளிக்கின்றார்கள். மக்களுக்கு “ஸ்ரீ” என்பதன் அர்த்தம் தெரியாது. சிவபாபாவே ஸ்ரீ ஸ்ரீ என்பதை நீங்கள் அறிவீர்கள். அவருடைய மாலையும் உருவாக்கப்படுகின்றது. இவை அனைத்தும் யாருடைய படைப்பு? தந்தையே படைப்பவர். சூரிய வம்சத்தினர் அல்லது சந்திர வம்சத்தினர் யாராயினும் இது உருத்திர சிவபாபாவின் முழு மாலையாகும். அனைவரும் தமது படைப்பவரை அறிந்துள்ளனர். ஆனால் அவருடைய தொழில் என்னவென்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அவர் எவ்வாறு அல்லது எப்பொழுது வந்து, பழைய உலகைப் புதியதாக மாற்றுகின்றார் என்பது எவருடைய புத்தியிலும் இல்லை. கலியுகம் இன்னமும் பற்பல ஆண்டுகளுக்கு நீடிக்கவுள்ளது என்று அவர்கள் நம்புகின்றார்கள். தெய்வீக அரசர்களின் பூமியை ஸ்தாபிப்பதற்கு நீங்கள் கருவிகள் ஆகியுள்ளீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். உண்மையிலேயே தேவ அரசர்களின் உலகமும், சத்திரிய அரசர்களின் உலகமும் உள்ளது. முதலில் சூரிய வம்ச இராச்சியமும், அதன்பின்னர் சத்திரிய குலமும் உள்ளது. நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்யும் அரசர்களும் அரசிகளும் ஆக வேண்டுமாயின், உங்கள் புத்தியில் சக்கரம் சுழல வேண்டும். இப்படங்களை உங்களால் எவருக்குமே மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் சூரிய வம்ச குலத்திற்கும், இராமரும் சீதையும் சத்திரிய குலத்திற்கும் உரியவர்கள். அவர்கள் அதன்பின்னர் தூய்மையற்ற குலங்களான வைசிய, சூத்திர வம்சத்தினர் ஆகுகின்றனர். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் பின்னர் பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். ஒற்றைக் கிரீடம் சூடிய அரசர்களின் படங்களும் உருவாக்கப்பட வேண்டும். இக் கண்காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும். நாடகத்திற்கு ஏற்ப, இக் கண்காட்சி சேவைக்கும் மிகவும் அவசியமாகும், அப்பொழுதே குழந்தைகளின் புத்தியில் அது நிலைத்திருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். புதிய உலகம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகின்றது என்பது படங்களினூடாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் சந்தோஷப் பாதரசம் உயர்ந்து காணப்பட வேண்டும். சத்தியயுகத்தில், அவர்களிடம் ஆத்மாவைப் பற்றிய ஞானம் உள்ளது என்று உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் முதுமை அடையும்பொழுது, அவர் சடுதியாகத் தான் இப்பொழுது பழைய சரீரத்தை விட்டு நீங்கிச் சென்று புதியதொன்றைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பார். அவர்களின் ஆயுட்காலத்தின் இறுதியிலேயே அவர்கள் இவ் எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள். எனினும் ஏனைய நேரத்தில் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். ஆரம்பத்தில், அவர்களிடம் அந்த ஞானம் இருப்பதில்லை. பரமாத்மாவான பரமதந்தையின் பெயர், வடிவம், இடம் அல்லது நேரம் பற்றிய தனது சொந்த அறிமுகத்தை அவரே வந்து கொடுக்கும் வரையில் வேறு எவரும் அறிந்திருப்பதில்லை என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அறிமுகம் மிகவும் ஆழமானது. ஆரம்பத்தில், அவரது வடிவம் இலிங்க வடிவம் என்று கூறப்பட்டது. அவர்கள் உருத்திர யாகத்தை உருவாக்கும்பொழுது, களிமண்ணால் இலிங்கங்கள் செய்து அவற்றைத் தொடர்ந்தும் வழிபடுவதுண்டு. தந்தை ஆரம்பத்தில் உங்களுக்குப் புள்ளி வடிவத்தைப் பற்றி கூறவில்லை. ஆரம்பத்திலேயே அவர் புள்ளி வடிவத்தைப் பற்றி உங்களுக்குக் கூறியிருந்தால், உங்களால் அதனைப் புரிந்துகொள்ள முடியாதிருந்திருக்கும். அவர் எதனை எப்பொழுது விளங்கப்படுத்த வேண்டுமோ, அப்பொழுதே அதை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் வினவ முடியாது: இன்று எங்களுக்கு விளங்கப்படுத்தும் விடயங்களை நீங்கள் ஏன் எங்களுக்கு முன்னரே விளங்கப்படுத்தவில்லை? இல்லை. இவ்வாறே இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சியினூடாகச் சேவை அதிகளவு வளர்ச்சியடைய முடியும். பாபா மோட்டார் வண்டியின் உதாரணத்தைக் கொடுப்பதைப் போன்று, ஏதாயினும் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அது அதிகரிக்கின்றது. முதலில், அதனைக் கண்டுபிடிப்பதற்கு முயற்சி தேவையாக இருந்தது. ஆனால் அவர்கள் பின்னர் பெரிய தொழிற்சாலைகளில் ‘ஒரு விநாடிக்கு ஒரு மோட்டார்’ என்று தயாரிக்க ஆரம்பித்தார்கள். விஞ்ஞானம் அதிகளவு வளர்ச்சியடைந்துள்ளது. பாரதம் மிகப் பெரியதாகும். உலகமும் மிகப் பெரியதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்பின்னர், அது மிகவும் சிறியதாகும். இது உங்கள் புத்தியில் மிகவும் நன்றாக நிலைத்திருக்குமாறு செய்யப்பட வேண்டும். சேவை செய்கின்ற குழந்தைகளின் புத்தியில் மாத்திரமே இது நிலைத்திருக்கும். ஏனைய அனைவரும் தமது நேரத்தை உண்பதிலும், பருகுவதிலும், வம்பளப்பதிலும் வீணாக்குகிறார்கள். தேவ அரசர்களின் பூமி பாரதத்தில் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். உண்மையில், அதனை ஓர் இராச்சியம் என்று அழைப்பதும் பிழையாகும். பாரதம் தெய்வீக அரசர்களின் பூமியாகுகின்றது (இராஜஸ்தான்) இந்நேரத்தில், அது அசுரர்களின் பூமி; இது இராவணனின் இராhச்சியம்: ஒவ்வொருவரிலும் ஐந்து விகாரங்களின் ஆதிக்கம் உள்ளது. மில்லியன் எண்ணிக்கையான ஆத்மாக்கள் உள்ளனர். அனைவரும் நடிகர்கள். அவர்கள் தத்தமது நேரத்தில் வந்து, பின்னர் திரும்பிச் செல்கின்றார்கள். அதன் பின்னர் தங்கள் பாகங்களை அவர்கள் தங்களுக்குரிய நேரத்தில் மீண்டும் நடிக்க வேண்டும். நாடகம் விநாடிக்கு விநாடி வித்தியாசமின்றி இடம்பெறுகின்றது. முன்னைய கல்;பத்தில், நடிக்கப்பட்ட அதே பாகமே, இப்பொழுதும் நடிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். உங்கள் தொழில் போன்றவற்றில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் அது சிரமமாக இருக்கின்றது. ஆனால் தந்தை கூறுகின்றார்: அதிகாலை வேளை நினைவுகூரப்பட்டுள்ளது. அவர்கள் பாடுகின்றார்கள்: ஓ மனமே, அதிகாலை வேளையில் இராமரை நினைவுசெய்யுங்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது வேறு எவரையும் நினைவுசெய்யாதீர்கள். அதிகாலை வேளையில் என்னை நினைவுசெய்யுங்கள். தந்தை இப்பொழுது இதனை உங்களுக்கு நேரடியாகவே கூறுகின்றார். அதன்பின்னர் பக்தி மார்க்கத்தில் அது நினைவுகூரப்படுகின்றது. சத்திய, திரேதாயுகங்களில் இந்நினைவு இருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, உங்கள் மனதினாலும் புத்தியினாலும் அதிகாலை வேளையில் உங்கள் தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள். பொதுவாக, பக்தர்கள் இரவில் விழித்திருந்து, ஏதோ ஒன்றை நினைவு செய்வதுண்டு. இந்நேரத்திற்கான சம்பிரதாயங்கள் பின்னர் பக்தி மார்க்கத்தில் தொடர்கின்றன. குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளைத் தொடர்ந்தும் பெறுகின்றீர்கள். இன்ன இன்ன நேரத்தில் பாரதம் தெய்வீக அரசர்களின் பூமியாக இருந்தது. பின்னர் அது சத்திரிய அரசர்களின் பூமியானது. அதன்பின்னர் அது வைசிய அரசர்களின் பூமியானது. அவர்கள் நாளுக்கு நாள் தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகின்றார்கள். அவர்கள் நிச்சயமாக விழ வேண்டும். இச்சக்கரமே பிரதான விடயமாகும். சக்கரத்தை அறிந்திருப்பதால், நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்யும் அரசர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது கலியுகத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். சத்தியயுகம் உங்கள் முன்னிலையில் உள்ளது. இச்சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்ற ஞானம் உங்களிடம் உள்ளது. நீங்கள் நாளை சத்தியயுக இராச்சியத்தில் இருப்பீர்கள் என்பதை அறிவீர்கள். இது மிகவும் இலகுவானது! உச்சியில், திரிமூர்த்தி சிவன் உள்ளார். சக்கரம் உள்ளது. அதில் இலக்ஷ்மியும் நாராயணனும் அடங்குகின்றார்கள். அவர்களின் முன்; இப்படம் வைக்கப்படும்பொழுது, எவருக்கும் விளங்கப்படுத்துவது இலகுவாகுகின்றது. பாரதம் தெய்வீக அரசர்களின் பூமியாக இருந்தது. ஆனால் அது இப்பொழுது அவ்வாறில்லை. ஒற்றைக் கிரீடம் சூடியவர்களுமே இப்பொழுதில்லை. படங்களைப் பயன்படுத்திக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இப்படங்கள் மிகவும் பெறுமதிமிக்கவை. அவை மிகவும் அற்புதமான விடயங்கள் என்பதால் அவற்றை நீங்கள் அற்புதமாக விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அனைவரும் 30’ஒ40’ அளவான இவ்விருட்சம் மற்றும் திரிமூர்த்தி படங்களை உங்கள் வீடுகளில் வைத்திருக்க வேண்டும். உங்கள் நண்பர்களும் உறவினர்களும் வரும் பொழுது, அவர்களுக்கு இப்படங்களை விளங்கப்படுத்துங்கள். இது உலக வரலாறும் புவியியலும் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இப்படங்களை நிச்சயமாக வைத்திருக்க வேண்டும். இவற்றுடன், நீங்கள் நல்ல பாடல்களையும் வைத்திருக்க வேண்டும். இறுதியில், அந்தநாள் வந்துள்ளது. உண்மையில், பாபா இப்பொழுது வந்துள்ளார். அவர் எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். படங்களை வாங்க விரும்புகின்றவர்கள் வாங்கலாம். ஏழைகள் அவற்றை இலவசமாகவே பெற முடியும். எவ்வாறாயினும், அவற்றை விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குத் தைரியம் தேவை. இது அழியாத ஞான இரத்தின பொக்கிஷமாகும். நீங்கள் தானிகள். நீங்கள் தானம் செய்வதைப் போன்று வேறு எவராலுமே அழியாத ஞான இரத்தினங்களைத் தானம் செய்ய முடியாது. இதனைப் போன்றதொரு தானம் வேறெதுவும் இல்லை. எனவே நீங்கள் இவற்றை நீங்கள் தானம் செய்ய வேண்டும். நீங்கள் வருகின்ற எவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். ஓரிருவர் வருவதைக் கண்ட பின்னர், பலரும் வருவார்கள். நீங்கள் பெறுமதி அளவிட முடியாதவர்கள் என்று கூறப்படுவதைப் போன்றே, இப் படங்களும் மிகவும் பெறுமதியான பொருட்களாகும். நீங்கள் சிப்பிகளில் இருந்து வைரங்களைப் போன்றவர் ஆகுகின்றீர்கள். எவராவது இப்படங்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்தினால், அதிகளவு அற்புதங்கள் நிகழும். இன்றுவரை, பாரதத்தின் யோகத்தைக் கற்பிக்கின்றோம் என்று சந்நியாசிகள் கூறுகின்றார்கள். ஒவ்வொருவரும் தத்தமது சமயத்தைப் புகழ்கின்றார்கள். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பலரைப் பௌத்தர்கள் ஆக்குகின்றார்கள். ஆனால் அதில் எப்பயனும் இல்லை. இங்கே, நீங்கள் குரங்குகளைப் போன்றிருக்கும் மனிதர்களை ஓர் ஆலயத்தில் அமரும் தகுதியுடையவர்கள் ஆக்குகின்றீர்கள். பாரதத்தில் மாத்திரமே முற்றிலும் விகாரமற்றவர்கள் இருந்தார்கள். பாரதம் அழகாக இருந்தது, பாரதம் இப்பொழுது அவலட்சணம் ஆகியுள்ளது. பல மனிதர்கள் உள்ளார்கள். சத்தியயுகத்தில் வெகுசில மக்களே வாழ்வார்கள். தந்தை சங்கமயுகத்தில் மாத்திரமே ஸ்தாபனையை மேற்கொள்ள வருகின்றார். அவர் இராஜயோகம் கற்பிக்கின்றார். அவர் முன்னைய கல்பத்தில் அதனைக் கற்ற குழந்தைகளுக்கு மாத்திரமே கற்பிக்கின்றார். ஸ்தாபனை இடம்பெற வேண்டும். குழந்தைகள் இராவணனினால் தோற்கடிக்கப்பட்டு, பின்னர் இராவணனை வெற்றி கொள்கின்றார்கள். இது மிகவும் இலகுவாகும்! ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் பெரிய படங்களைச் செய்து, அப்படங்களைப் பயன்படுத்திச் சேவை செய்ய வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் பெரிதாக இருக்க வேண்டும். எங்கே பக்தி மார்க்கம் ஆரம்பமாகுகின்றது என்பதை நீங்கள் அதில் எழுத வேண்டும். சீரழிவு முடிவடையும்பொழுது, தந்தை நிச்சயமாகச் சற்கதி அருள வருவார். பக்தி செய்யாதீர்கள் என நீங்கள் எவரிடமும் கூறக்கூடாது என பாபா விளங்கப்படுத்தியுள்ளார்; இல்லை. நீங்கள் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அப்பொழுதே அம்பு இலக்கைத் தாக்கும். இந்த யுத்தம் மகாபாரத யுத்தம் என்று அழைக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏனெனில், இதுவே மிகப் பெரிய யாகம் என்பதால், இவ் யாகத்திலிருந்தே யுத்தம் ஆரம்பமாகுகின்றது. இப் பழைய உலகம் முடிவடைய வேண்டும். இவ்விடயங்கள் உங்கள் புத்தியில் உள்ளன. மக்கள் தொடர்ந்தும் அமைதிக்கான பரிசுகளைப் பெறுகின்றனர். ஆனால், அமைதி ஸ்தாபிக்கப்படவில்லை. உண்மையில், ஒரேயொரு தந்தை மாத்திரமே அமைதியை ஸ்தாபிக்கின்றார். நீங்கள் அவருடைய உதவியாளர்கள். நீங்களே பரிசுகளைப் பெற வேண்டும். தந்தை பரிசைப் பெறுவதில்லை. தந்தை அருள்பவர். உங்கள் முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக நீங்களே பரிசைப் பெறுகின்றீர்கள். எண்ணிக்கையற்ற குழந்தைகள் இருப்பார்கள். நீங்கள் இப்பொழுது தூய்மை, அமைதி, செழிப்பை ஸ்தாபிக்கின்றீர்கள். இது மிகவும் பெரிய பரிசாகும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றீர்களோ, அதற்கேற்பவே சூரிய வம்ச இராச்சியம் என்ற பரிசைப் பெறுவீPர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையே உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். உங்களால் கூற முடியாது: பாபா, எங்களுக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்! மாணவர்களுக்கு ஆலோசனை கொடுக்கப்படுகின்றது: தந்தையை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். யோக சக்தியினால் மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகுவீர்கள். நீங்கள் அனைவரும் சீதைகள். நீங்கள் தீ மிதிக்கின்றீர்கள். நீங்கள் யோக சக்தியினால் கடந்து செல்ல வேண்டும் அல்லது நீங்கள் தீயில் எரிய வேண்டும். உங்கள் சரீரத்தையும், சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, ஒரேயொரு அதி அற்பிற்கினிய தந்தையை நினைவு செய்யுங்கள். எவ்வாறாயினும், இந்த நினைவு சதா நிலைத்திருப்பது சிரமமாகும்; அதற்குக் காலம் எடுக்கின்றது. யோகத் தீ நினைவுகூரப்பட்டுள்ளது. பாரதத்தின் புராதன யோகமும் ஞானமும் அதிகளவு பிரபல்யமாகும். ஏனெனில், கீதையே அனைத்துச் சமயநூல்களினதும் இரத்தினமும், தாயும் ஆகும். இராஜயோகம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் “இராஜ்” என்ற வார்த்தையைத் தொலைத்து விட்டார்கள். எனினும் “யோகம்” என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டார்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் கூற முடியாது: நான் இந்த இராஜயோகத்தினூடாக உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குவேன். நீங்கள் இப்பொழுது சிவபாபாவின் முன் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் பரந்தாமத்திற்குச் சென்று வசிக்கப் போகின்றீர்கள் என்பதையும், அதன்பின்னர் சரீரங்களை ஏற்று உங்கள் பாகங்களை நடிப்பீர்கள் என்பதனையும் நீங்கள் அறிவீர்கள். சிவபாபா மறுபிறவி எடுப்பதில்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரருமே மறுபிறவி எடுக்க வேண்டியதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கவே வருகின்றேன். ஆகவே அனைவரும் என்னை நினைவுசெய்து கூறுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! இவ் வார்த்தைகள் மிகச் சரியானவை. தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தூய தேவர்கள் ஆக்குகின்றேன் என்பதால், உங்களுக்கும் அந்தளவிற்குப் போதை இருக்க வேண்டும். பாபா இவருக்குள் பிரவேசித்து எங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். பாபா இப் பூந்தோட்டத்தின் அதிபதியாவார். நாங்கள் பாபாவின் கரங்களைப் பற்றிப் பிடித்திருக்கின்றோம். இது புத்திக்கான விடயம். பாபா எங்களை நச்சுக்கடலில் இருந்து பாற்கடலான அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே நஞ்சு இருக்காது. ஆகவே அது விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது. பாரதம் விகாரமற்றதாக இருந்தது, இப்பொழுது அது விகாரம் நிறைந்ததாகியுள்ளது. இச் சக்கரம் பாரதத்திற்கு மாத்திரமேயானதாகும். பாரதமக்கள் மாத்திரமே சக்கரத்தைச் சுற்றி வருகின்றார்கள். ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்கள் முழுச் சக்கரத்தையும் சுற்றி வருவதில்லை; அவர்கள் பின்னரே வருகின்றார்கள். இது மிகவும் அற்புதமான சக்கரமாகும். உங்கள் புத்தியில் இந்தப் போதை இருக்க வேண்டும். இப் படங்களின் மீது பெருமளவு கவனம் செலுத்தப்பட வேண்டும். சேவை செய்வதன் மூலம் இதனைச் செய்து காட்டுங்கள். இப்படங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால், உங்கள் பெயர் போற்றப்படும். அப்பொழுது சேவை மிக விரைவான வேகத்தில் இடம்பெறும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் பெற்றுள்ள அழிவற்ற ஞான இரத்தினங்கள் எனும் பொக்கிஷத்தைத் தானம் செய்யுங்கள். உண்பதிலும், பருகுவதிலும், வம்பளப்பதிலும் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.
2. மனிதர்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்கள் போன்றவர் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களை அல்லது கருணையைக் கேட்காதீர்கள். தொடர்ந்தும் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையை உங்கள் முன்னால் வைத்திருப்பதால், பொறாமையின் பாவம் எதனிலிருந்தும் உங்களைப் பாதுகாத்து ஒரு விசேட ஆத்மா ஆகுவீர்களாக.
பிராமண ஆத்மாக்கள் சமமானவர்கள் என்பதால், பொறாமை எழுகின்றது. பொறாமையின் காரணமாகச் சில சம்ஸ்கார முரண்பாடுகள் உள்ளன. இது நடைபெற்றால் உங்கள் சகபாடி ஒரு விசேட பணிக்குக் கருவியாகும்பொழுது, அவரைக் கருவியாக ஆக்கியவர் யார் என்பதை விசேடமாகக் கருத்திற் கொள்ளுங்கள். தந்தையை உங்கள் முன்னால் கொண்டு வந்தால், பொறாமை எனும் ரூபத்திலுள்ள மாயை ஓடி விடுவாள். ஒருவரைப் பற்றிய சில விடயங்களை நீங்கள் விரும்பாவிட்டால், அப்பொழுது அதனைப் பற்றி சிரேஷ்டர்களிடம் நல்லாசிகளுடன் பேசுங்கள், பொறாமையுடன் அல்ல. உங்கள் மத்தியில் ஓட்டப் பந்தயத்தில் ஓடுங்கள், ஆனால் போட்டியிடாதீர்கள், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு விசேடமான ஆத்மா ஆகுவீர்கள்.
சுலோகம்:
நீங்கள் தந்தையை உங்கள் சகபாடியாக ஆக்குபவரும், மாயையின் விளையாட்டுக்களை ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்க்கின்ற ஒருவரும் ஆவீர்கள்.