22/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் புத்தியை இங்குமங்கும் அலைபாய விடுவதற்குப் பதிலாக, தந்தையை வீட்டில் (பரந்தாமத்தில்) நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தியை வெகு தெ}லைவிற்;குக் கொண்டு செல்லுங்கள். இதுவே நினைவு யாத்திரை என அழைக்கப்படுகின்றது.
கேள்வி:
உண்மையான இதயத்துடன் தந்தையை நினைவுசெய்யும் குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?
பதில்:
1.உண்மையான இதயத்துடன் தந்தையை நினைவு செய்கின்ற குழந்தைகளால் ஒருபொழுதும் பாவச் செயல்கள் எதனையும் செய்ய முடியாது. தந்தையை அவதூறு செய்கின்ற செயல்கள் எதனையும் அவர்கள் ஒருபொழுதும் செய்ய மாட்டார்கள். அவர்களிடம் மிகச்சிறந்த பண்புகள் இருக்கின்றன.
2. அவர்கள் உணவு உண்ணும் பொழுதும் நினைவில் நிலைத்திருக்கிறார்கள். அவர்கள் உறக்கத்திலிருந்து இயல்பாக, சரியான நேரத்திற்கு விழித்தெழுகிறார்கள். அவர்கள் மிகவும் சகிப்புத் தன்மையுடையவர்களாகவும் மிகவும் இனிமையானவர்களாகவும் இருக்கிறார்;கள். அவர்கள் ஒருபொழுதும் தந்தையிடமிருந்து எதனையும் மறைப்பதில்லை.
பாடல்:
எங்கள் யாத்திரை தனித்துவமானது....
ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சிலர் அசரீரியான தந்தையைப் புரிந்துகொள்கிறார்கள், சிலர் பௌதீகத் தந்தையைப் புரிந்துகொள்கிறார்கள், சிலர் தாயையும் (பிரம்மா) தந்தையையும் (சிவபாபா) புரிந்து கொள்கிறார்கள். இந்தத் தாயும் தந்தையும் விளங்கப்படுத்தும் பொழுதும், தாயானவர் தந்தையிலிருந்து வேறுபட்டவர்;. அசரீரியானவர் விளங்கப்படுத்துகிறார் என்றால், அசரீரியானவர் சரீரதாரியிலிருந்து வேறுபட்டவர்;. எவ்வாறாயினும், தந்தையே இதனை விளங்கப்படுத்துகிறார். பௌதீக யாத்திரைத் தலங்களும், ஆன்மீக யாத்திரைத் தலமும் இருக்கிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். அப் பௌதீக யாத்திரைகள் அரைச்சக்கரத்திற்;கு நீடிக்கின்றன. அவை பிறவி பிறவியாகத் தொடர்ந்திருக்கின்றன என்று நீங்கள் கூறுவீர்களாயின், அவை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்திருக்கின்றன என்றும், அவை அநாதியானவை என்றும் அப்பொழுது புரிந்து கொள்ளப்படும். ஆனால், அது அவ்வாறல்ல. இதனாலேயே அவை அரைச்சக்கர காலமாகத் தொடர்ந்திருக்கின்றன என்று கூறப்படுகின்றது. தந்தை இப்பொழுது வந்து, அந்த யாத்திரைகளின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ‘மன்மனாபவ’ என்றால் ஆன்மீக யாத்திரை என அர்த்தமாகும். அவர் நிச்சயமாக ஆத்மாக்களுக்கே விளங்கப்படுத்துகின்றார், ஏனெனில், ஒரேயொரு பரமதந்தையே விளங்கப்படுத்துபவர்;. வேறு எவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. ஒவ்வொருவரும் அந்தச் சமய ஸ்தாபகருடைய யாத்திரைத் தலத்திற்குச் செல்கிறார்கள். இதுவும் அரைச்சக்கரத்தின் சம்பிரதாயம் ஆகும். அவர்கள் யாத்திரைத் தலங்கள் அனைத்திற்கும் செல்கின்றார்கள், ஆயினும், அந்த இடங்களால் எவருக்கும் சற்கதியை அருள முடியாது. அவர்கள் தாங்களே மீண்டும் மீண்டும் யாத்திரைகள் செல்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் அமர்நாத்துக்கும், பத்ரிநாத்துக்கும் யாத்திரை செல்கிறார்கள், அதன்பின், நான்கு யாத்திரைத் தலங்கள் என்று அழைக்கப்படும் இடங்களுக்கும் செல்கிறார்கள். இப்பொழுது நீங்கள் மாத்திரமே இந்த ஆன்மீக யாத்திரையைப் பற்றி அறிவீர்கள். ஆன்மீகப் பரமதந்தை கூறியுள்ளார்: மன்மனாபவ. பௌதீக யாத்திரைகள் அனைத்தையும் துறந்து, என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது, நீங்கள் உண்மையான சுவர்க்கத்திற்;குச் செல்வீர்கள். ஒரு யாத்திரை என்றால் வருவதும் செல்வதும் ஆகும். அது இந் நேரத்தில் மாத்திரமே இடம்பெறுகின்றது. சத்தியயுகத்தில் யாத்திரைகள் எதுவும் இல்லை. நீங்கள் சென்று சுவர்க்கம் என்னும் ஆச்சிரமத்தில் சதா காலமும் அமர்ந்திருப்பீர்கள். இங்கேயோ, அவர்கள் வெறுமனே ஓர் இடத்திற்;கு மாத்திரமே அந்தப் பெயரைக் கொடுக்கிறார்கள். உண்மையில், இங்கே, சுவர்க்க ஆச்சிரமமே இல்லை, சத்தியயுகமே சுவர்க்க ஆச்சிரமம் என அழைக்கப்படுகின்றது. நரகத்திற்கு அப் பெயரைக் கொடுக்க முடியாது. நரகவாசிகள் நரகத்தில் வசிக்கிறார்கள், சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் வசிக்கிறார்கள். இங்கே, மக்கள் பௌதீக ஆச்சிரமங்களுக்குச் சென்று, பின்னர் திரும்பி வருகிறார்கள். எல்லையற்ற தந்தை இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். உண்மையில், ஒரேயொரு உண்மையான எல்லையற்ற குருவே இருக்கிறார். எல்லையற்ற தந்தையும் ஒரேயொருவரே ஆவார். அவர்கள் குரு அகாகானைப் பற்றிப் பேசினாலும், உண்மையில் அவர் ஒரு குரு அல்ல. அவர் சற்கதியை அருள்பவர் அல்ல. அவர் சற்கதியை அருள்பவராக இருந்திருந்தால், அவராலேயே முக்தியையும் சற்கதியையும் அடையக்கூடியதாக இருக்கும். அவரை ஒரு குரு என அழைக்க முடியாது. அவர்கள் வெறுமனே அவருக்கு அப் பெயரைக் கொடுத்துள்ளார்கள். சீக்கியர்கள் கூறுகிறார்கள்: சத்குரு அகல் (அமரத்துவமானவர்). உண்மையில், ஒரேயொரு பரமாத்மாவே சத்குரு எனவும் அழைக்கப்படுகின்ற, சத் ஸ்ரீ அகல் ஆவார். அவர் மாத்திரமே சற்கதியை அருள்பவர். குரு பிரம்மா, குரு விஷ்ணுவைப் பற்றி அவர்கள் பேசுகின்ற பொழுதிலும், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், பிரம்மா போன்றோரால் இதனைச் செய்ய முடியாது. பிரம்மாவைக் குரு என்று அழைக்க முடிந்தாலும், குரு விஷ்ணுவோ அல்லது குரு சங்கரரோ இருக்க முடியாது. குரு பிரம்மா என்ற பெயர் நிச்சயமாக இருக்கின்றது, ஆனால் குரு பிரம்மாவினுடைய குருவும் இருக்க வேண்டும். சத் ஸ்ரீ அகல் ஆக இருப்பவருக்குக் குரு இல்லை. அவரே ஒரேயொரு சத்குரு ஆவார். ஒரேயொருவரைத் தவிர ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்ற குருமாரோ, தத்துவஞானிகளோ எவருமேயில்லை. புத்தர் போன்றவர்கள் ஏனைய அனைவரையும் தங்களுடன் கீழே அழைத்து வருகிறார்கள். அவர் ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்ல வேண்டும். அவர் சற்கதியை அருள்வதற்கு வருவதில்லை. ‘சற்கதி அருள்பவர்’ என்ற பெயர் ஒரேயொருவருக்கே உரியதாக அறியப்பட்டிருக்கின்ற பொழுதிலும், பின்னர் அவர் சர்வவியாபி எனவும் அழைக்கப்படுகிறார். அவ்வாறாயின், ஒரு குருவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? நானும் ஒரு குரு, நீங்களும் ஒரு குரு, நானும் சிவன், நீங்களும் சிவன்... அதன் மூலம் எவருமே மனநிறைவு அடைய மாட்டார்கள். எவ்வாறாயினும், ஆம், அவர்கள் தூய்மையாக இருப்பதால், அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது, ஆனால் அவர்களால் சற்கதியை அருள முடியாது. ஒரேயொருவரே உண்மையான குரு என்று அழைக்கப்படுபவர். பலவகையான குருமார் இருக்கிறார்கள். உங்களுக்குக் கற்பிக்கின்ற (லௌகீக) ஆசிரியரும் குரு என்றே அழைக்கப்படுகிறார். இவரும் ஆசிரியர் ஆவார். எவ்வாறு மாயையுடன் போர் புரிவது என்று அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். குழந்தைகளாகிய உங்களிடம் உங்களைப் பூகோள ஆட்சியாளர்களாக்குகின்ற, திரிகாலதரிசியாக இருக்கும் ஞானம் இருக்கின்றது. உலகச் சக்கரத்தை அறிந்தவர்கள் மாத்திரமே, பூகோள ஆட்சியாளர்களாகிய, அரசர்கள் ஆகுகிறார்;கள். நாடகச் சக்கரத்தை அறிந்து கொள்வதும், கல்ப விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்து கொள்வதும் ஒரேவிடயமே ஆகும். பல சமயநூல்களிலும் சக்கரத்தின் அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளது. தத்துவ நூல்கள் வேறுபட்டவை. பல வகையான நூல்களும் இருக்கின்றன. இங்கே, உங்களுக்குப் புத்தகங்கள் எதுவும் தேவையி;ல்லை. தந்தை உங்களுக்குக் கற்பிப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அனைவருக்கும் தந்தையின் சொத்திற்கான ஓர் உரிமையுண்டு. எவ்வாறாயினும், சுவர்க்கத்தில் அனைவருக்கும் ஒரேயளவு சொத்து இருக்க மாட்டாது. தந்தைக்கு உரியவர்களுக்கே இராச்சியம் உரியது. நீங்கள் “பாபா” என்று கூறிச் சிறிதளவு ஞானத்தைச் செவிமடுக்கும் பொழுது, நீங்கள் ஓர் உரிமையைப் பெறுகிறீர்கள். ஆனால் அது வரிசைக்கிரமமானது. உலகச் சக்கரவர்த்திக்கும் பிரஜைகளுக்கும், பணிப்பெண்களுக்கும் வேலையாட்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கின்றது. முழுமையான ஓர் இராச்சியமே ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தைக்கு உரியவர்களாகுவதனால், நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இவ்விடயங்கள் புதியவை ஆதலால், மக்கள் புரிந்துகொள்வதில்லை. சத்தியயுகத்திலே விகாரங்கள் இல்லை என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். அங்கே மாயை இல்லாததால், விகாரங்கள் எங்கிருந்து வர முடியும்? துவாபர யுகத்திலேயே மாயையின் இராச்சியம் ஆரம்பமாகுகின்றது. இவையே இராவணனுடைய ஐந்து சங்கிலிகள் ஆகும். அங்கே அவை இருப்பதில்லை. நீங்கள் அதிகளவுக்குக் கலந்துரையாடத் தேவையில்லை. அது முற்றிலும் விகாரமற்ற உலகம். எவ்வாறாயினும், குழந்தைகளைப் பெற்றெடுத்தல், முடிசூட்டு விழாக்கள், மாளிகைகள் அமைத்தல் போன்ற சம்பிரதாயங்கள் எதுவாக இருந்தாலும் அவை நிச்சயமாகச் சிறந்தவையாகவே இருக்கும். ஏனெனில், அது சுவர்க்கம் ஆகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, உங்கள் புத்தியின் யோகத்தை நீங்கள் சதா இந்த ஆன்மீக யாத்திரையில் இணைத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் இலகுவானது. பக்தி மார்க்கத்தில் மக்கள் அதிகாலையில் விழித்தெழுகின்றார்கள். எனவே, ஞான மார்க்கத்திலும் நீங்கள் அதிகாலையில் விழித்தெழுந்து, தந்தையை நினைவு செய்ய வேண்டும். வேறு எந்தப் புத்தகங்கள் போன்றவற்றையும் நீங்கள் கற்கக்கூடாது. தந்தை கூறுகிறார்: என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். ஏனெனில், முதியவர்கள், இளையவர்கள் அனைவருடைய மரணமும் முன்னிலையிலேயே இருக்கின்றது. ஒரு நபர் மரணத் தறுவாயில் இருக்கும் பொழுது ஏனையோர் அவரிடம் கூறுகிறார்கள்: கடவுளை நினைவு செய்யுங்கள். நீங்கள் உங்கள் இறுதிக் கணங்களில் கடவுளை நினைவு செய்யாவிட்டால், உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது! ஆகவே, தந்தையும் கூறுகிறார்: மன்மனாபவ. நீங்கள் இச் சரீரத்தையும் நினைவு செய்யக்கூடாது. சிவபாபாவின் குழந்தையான, ஆத்மாவாகிய நான் ஒரு நடிகர், நீங்கள் சதா நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் பொதுவாகச் சிறு குழந்தைகளிடம் கடவுளை நினைவுசெய்யும்படி கூற மாட்டீர்கள். இங்கே, நீங்கள் அனைவரிடமுமே கூற வேண்டும், ஏனெனில் அனைவரும் தந்தையிடம் செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எவருடனும் சண்டையிடவோ அல்லது சச்சரவில் ஈடுபடவோ கூடாது. அது மிகவும் சேதத்தை விளைவிக்கக்கூடியது. எவராவது எதையேனும் கூறும்பொழுது, நீங்கள் அதைக் கேட்காததைப் போல அலட்சியப்படுத்தி விடுங்கள். நீங்கள் சண்டையொன்றை ஆரம்பிக்கக்கூடிய எதிர்ப்பு எதனையும் உருவாக்காதீர்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் சகித்துக் கொள்பவராக இருக்க வேண்டும். அத்துடன், தந்தை தந்தையாகவும், தர்மராஜாகவும் இருக்கிறார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏதாவது நடைபெற்றால், அதனைத் தந்தையிடம் அறிவித்து விடுங்கள். பின்னர், அது எவ்வாறோ தர்மராஜைச் சென்றடைந்து, அந் நபர் தண்டனைக்குரியவர் ஆக்கப்படுவார். தந்தை கூறுகிறார்: நான் சந்தோஷத்தைக் கொடுக்கிறேன். தர்மராஜரே துன்பத்தை, அதாவது, தண்டனையைக் கொடுப்பவர்;. எனக்குத் தண்டனை கொடுப்பதற்கான உரிமை இல்லை. நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள், பின்னர் தர்மராஜ் தண்டனையைக் கொடுப்பார். அதனைப் பற்றி பாபாவிடம் கூறுவதனால், நீங்கள் இலேசாக ஆகுவீர்கள். ஏனெனில், அவர் இன்னமும் வலது கரமாக இருக்கிறார்! சத்குருவை அவதூறு செய்பவர்களால் தங்கள் இலக்கை அடைய முடியாது. யார் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் என்று தர்மராஜ் மாத்திரமே தீர்ப்பளிப்பார். அவரிடமிருந்து எதுவுமே மறைக்கப்பட முடியாது. நாடகத்திற்கேற்ப ஒரு தவறு செய்யப்பட்டால், அது முன்னைய கல்பத்திலும் செய்யப்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது. எவ்வாறாயினும், நீங்கள் தொடர்ந்தும் தவறு செய்ய முடியும் என அதற்கு அர்த்தம் இல்லை. அவ்வாறாயின், நீங்கள் எவ்வாறு தவறுகள் செய்வதிலிருந்து விடுபடுவீர்கள்? நீங்கள் ஒரு தவறு செய்தால், மன்னிப்புக் கேட்க வேண்டும். வங்காளத்தில், எவராவது தவறுதலாக இன்னொருவருடைய பாதத்தைத் தொட்டு விட்டால், அவர் உடனடியாக மன்னிப்புக் கேட்கிறார். இங்கே, மக்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் அவமதிக்கின்றார்கள். ஒருவரிடம் மிகச்சிறந்த பண்புகள் இருக்க வேண்டும். தந்தை அதிகளவு கற்பிக்கிறார், ஆனால் எவரேனும் அதனைப் புரிந்துகொள்ளாத பொழுது, அவரது பதிவேடு தீயதாக உள்ளது என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அவர் தொடர்ந்தும் அவதூறு ஏற்படுத்துகிறார். அவருடைய அந்தஸ்து அழிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பிறவி பிறவியாகச் செய்த பாவச்சுமை இருக்கின்றது. அதற்காகத் தண்டனையை அனுபவம் செய்ய வேண்டும். ஒருவர் இங்கேயிருந்து கொண்டு பாவச் செயல்களைச் செய்தால், அதற்கு நூறு மடங்கு தண்டனையைப் பெற வேண்டியிருக்கும். தண்டனை அனுபவம் செய்யபப்ட வேண்டும். ஒருவர் காசியில் அர்ப்பணிப்பதைப் பற்றி பாபா விளங்கப்படுத்துகிறார். அது பக்தி மார்க்கம். இது ஞான மார்க்கத்தைக் குறிக்கின்றது. முதலில், கடந்த காலப் பாவங்கள் இருக்கின்றன. இரண்டாவதாக, இந் நேரத்தில் நீங்கள் செய்கின்ற பிழைகள் அனைத்திற்காகவும் நூறு மடங்கு தண்டனையைச் சேகரித்துக் கொள்கிறீர்கள். மிகக் கடுமையான தண்டனை அனுபவம் செய்யப்பட வேண்டும். தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். எப் பாவத்தையும் செய்யாதீர்கள். பற்றை அழிப்பவர்கள் ஆகுங்கள். அதற்கு அதிகளவு முயற்சி தேவைப்படுகின்றது. இந்த மம்மாவையும் பாபாவையும் நீங்கள் நினைவு செய்யக்கூடாது. அவர்களை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் எதனையுமே சேகரித்துக் கொள்ள மாட்டீர்கள். சிவபாபா இவருக்குள் பிரவேசிப்பதால், சிவபாபாவையே நீங்கள் நினைவு செய்ய வேண்டும். இவருக்குள்ளே சிவபாபா வருவதால் நீங்கள் இவரை நினைவு செய்ய வேண்டும் என்றில்லை. இல்லை, நீங்கள் அங்கே மேலே சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் சிவபாபாவையும் உங்கள் இனிய வீட்டையும் நினைவு செய்ய வேண்டும். ஒரு ஜீனியைப் போல் இதனை உங்கள் புத்தியில் வைத்திருங்கள்: சிவபாபா அங்கே மேலே இருக்கிறார், சிவபாபா இங்கே வந்து எங்களுடன் பேசுகிறார், ஆனாலும், நாங்கள் அவரை அங்கே மேலேயே நினைவு செய்ய வேண்டுமே தவிர, இங்கே கீழே அல்ல. உங்கள் புத்தி இங்கேயே இருக்காமல், அப்பால் வெகு தொலைவுக்குச் செல்ல வேண்டும். எவ்வாறாயினும், சிவபாபா செல்லவுள்ளார். சிவபாபா இவருக்குள்ளே மாத்திரமே பிரவேசிக்கிறார். நீங்கள் அவரை மம்மாவில் பார்க்க முடியாது. இது பாபாவின் இரதம் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால், நீங்கள் அவருடைய முகத்தைப் பார்க்கக்கூடாது. உங்கள் புத்தி அங்கே மேலே இருக்கட்டும். உங்கள் புத்தியை இங்கே கீழே வைத்திருந்தால் அதிகளவு களிப்படைய மாட்டீர்கள். இது யாத்திரையல்ல. உங்கள் யாத்திரையின் எல்லை அங்கே மேலேயே இருக்கிறது. சிவபாபா இவருக்குள்ளே இருப்பதால் நீங்கள் தொடர்ந்தும் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. அவ்வாறானால், அங்கே மேலே செல்கின்ற உங்கள் பழக்கம் துண்டிக்கப்பட்டு விடும். தந்தை கூறுகிறார்: என்னை அங்கே மேலேயே நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை அங்கே இணைத்துக் கொள்ளுங்கள். சில மூடர்கள் (புத்துக்கள்) தாங்கள் வெறுமனே இங்கமர்ந்திருந்து, பாபாவைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஓ! ஆனால், நீங்கள் உங்கள் புத்தியை இனிய வீட்டுடன் இணைக்க வேண்டும். சிவபாபா சதா இரதத்தில் இருக்க முடியாது. அவர் இங்கே வந்து, சேவை செய்கிறார். அவர்; இந்த இரதத்தைப் பெற்று, சேவை செய்து, அதன்பின்னர்;, இரதத்தை விட்டு நீங்கிச் செல்கிறார். ஒருவர் எப்பொழுதும் ஓர் எருதை ஓட்ட முடியாது. ஆகவே உங்கள் புத்தி அங்கேயே இருக்க வேண்டும். பாபா வந்து, முரளியைப் பேசுகிறார், பின்னர் அவர் நீங்கிச் செல்கிறார். இவருடைய புத்தியும் அங்கே மேலேயே இருக்கின்றது. நீங்கள் சரியான பாதையைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் மீண்டும், மீண்டும் தடம் புரண்டு விடுவீர்கள். அவர் ஒரு குறுகிய காலத்திற்கு மாத்திரமே இங்கே இருக்கிறார். இவருக்குள்ளே சிவபாபா இல்லையென்றால் நீங்கள் ஏன் இவரை நினைவுசெய்யப் போகின்றீர்கள்? இவராலும் முரளியைப் பேச முடியும். சிலசமயங்களில் அவர் இவரினுள் இருக்கிறார், சிலசமயங்களில் இவரினுள் இருப்பதில்லை. சிலசமயங்களில் அவர் ஓய்வெடுக்கிறார். அவரை நீங்கள் அங்கேயே நினைவு செய்ய வேண்டும். சிலசமயங்களில் பாபாவுக்கு, நாடகத்திற்;கேற்ப, நான் சென்று முன்னைய கல்பத்தில் இதேநாளில் பேசிய அதே முரளியைப் பேசுவேன் என்ற எண்ணம் ஏற்படுகிறது. முன்னைய கல்பத்தில் செய்ததைப் போலவே அந்தளவு ஆஸ்தியைத் தந்தையிடம்pருந்து நீங்கள் பெறுவீர்கள் என்று நீங்களும் கூற முடியும். நிச்சயமாக நீங்கள் சிவபாபாவின் பெயரைக் குறிப்பிட வேண்டும். எவ்வாறாயினும், இதனை எவ்வாறு கூறுவது என்பதை எவரும் அறிய மாட்டார்கள். தந்தையின் பெயர் நிச்சயமாக நினைவுகூரப்படும். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் இங்கமர்ந்திருந்து, இவரைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: சிவபாபாவை நினைவு செய்யுங்கள். இல்லாவிடின் பாவங்கள் செய்யப்படும். நீங்கள் சதா தந்தையை நினைவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. இலக்கு மிக உயர்ந்தது. இது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல. நீங்கள் உணவை உண்ண ஆரம்பிக்கும் பொழுது, பாபாவை நினைவு செய்கிறீர்கள் என்பதாகவும், பின்னர் அவ்வளவு தான், நினைவு செய்யாமல் உணவு உண்கிறீர்கள் என்பதாகவும் இருக்கக்கூடாது. இல்லை, நீங்கள் உணவு உண்ணும் நேரம் முழுவதும் அவரை நினைவு செய்ய வேண்டும். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தை அவ்வாறு பெற முடியாது! இதனாலேயே மில்லியன் கணக்கானவர்களுக்குள் எட்டு இரத்தினங்கள் மாத்திரமே சித்தி அடைவதை உங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. இலக்கு மிக உயர்ந்தது. நீங்கள் உலக அதிபதிகளாக வேண்டும்; இது எவர் புத்தியிலும் இருக்க மாட்டாது. அது இவருடைய புத்தியிலும் இருக்கவில்லை. அதனைப் பற்றிச் சிந்தியுங்கள்: யார் 84 பிறவிகளைப் பெறுவார்கள்? இலக்ஷ்மியும் நாராயணருமே நிச்சயமாக முதலில் வருபவர்கள். இவை அனைத்தும் நீங்கள் கடைய வேண்டிய விடயங்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்கள் இதயம் நினைவில் நிலைத்திருக்கும் பொழுது, கரங்கள் வேலையைச் செய்யட்டும். உங்கள் தொழில் போன்றவற்றை நீங்கள் தொடர்ந்தும் செய்யலாம். ஆனால் நீங்கள் சதா தொடர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதுவே யாத்திரை ஆகும். நீங்கள் அந்த யாத்திரைகளுக்குச் சென்று பின்னர் திரும்பி வர வேண்டும் என்றில்லை. பலரும் யாத்திரைகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், இப்பொழுது, அங்கேயும் மிகவும் அழுக்காக இருக்கின்றது. யாத்திரைத் தலமொன்றில் விலைமாதர் இல்லம் என்பதே இருக்கக்கூடாது. இப்பொழுது அதிகளவு ஊழல் உள்ளது. அங்கே ஒருவர் தான் அதிபதியென்று இல்லை. அவர்கள் விரைவாக ஒருவரையொருவர் அவமதிக்க ஆரம்பிக்கிறார்கள். இன்று ஒருவர் பிரதம மந்திரியாக இருக்கலாம், நாளைக்கே அவரைத் தூக்கியெறிந்து விடுவார்கள். அவர்கள் மாயையின் அடிமைகள் ஆகுகிறார்கள். அவர்கள் பணத்தைச் சேர்த்து, வீடுகள் போன்றவற்றைக் கட்டுகிறார்கள். அவர்கள் செல்வத்தைப் பெறுவதற்காகத் திருட்டிலும் ஈடுபடுகிறார்;கள். நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றீர்கள். நீங்கள் அதனை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். நீங்கள் அனைத்தையும் கிரகிக்கவும் வேண்டும். நீங்கள் முரளியை எழுதி வைத்து, பின்னர் அதனை மீட்டல் செய்ய வேண்டும். உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. இரவில், உங்களுக்கு அதிக நேரம் இருக்கிறது. இரவில் விழித்திருங்கள், அப்பொழுது அப் பழக்கம் பதிக்கப்படும். உண்மையாகவே பாபாவை நினைவு செய்பவர்களின் கண்கள் இயல்பாகவே திறக்கும். பாபா தான் எவ்வாறு இயல்பாகவே இரவில் விழித்தெழுகிறார் என்று தன் சொந்த அனுபவத்தை உங்களுக்குக் கூறுகிறார். இந்நாட்களில், உறங்குவதற்காக மக்கள் எவ்வளவோ மேலதிக முயற்சிகளைச் செய்கின்றார்கள். ஆம், நிச்சயமாக, அதிகளவு பௌதீக வேலைகளைச் செய்யும் பொழுது சரீரம் களைப்படைகிறது. பாபாவின் இரதமானவர் எவ்வளவு முதியவர் என்று பாருங்கள்! அதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: பாபா தூய்மையற்ற உலகினுள் வந்து அதிகளவு முயற்சி செய்கிறார். அவர் பக்தி மார்க்கத்திலும் அதிகளவு முயற்சி செய்தார், இப்பொழுதும் அவர் அதிகளவு முயற்சி செய்கிறார். சரீரம் தூய்மையற்றது, உலகமும் தூய்மையற்றது. பாபா கூறுகிறார்: அரைச்சக்கரத்திற்கு எனக்கு அதிகளவு ஓய்வு இருக்கிறது. நான் எதனைப் பற்றியுமே சிந்திக்க வேண்டியதில்லை. பக்தி மார்க்கத்திலேயே நான் அதிகளவு சிந்திக்க வேண்டும். இதனாலேயே தந்தை கருணை மிக்கவரும், ஞானக்கடலும் பேரானந்தக்கடலும் என நினைவுகூரப்படுகிறார். ஒரேயொரு கடலே இருக்கிறது. பின்னர் அவர்கள்; அவரை அதிகளவு புகழ்கிறார்கள். அதே தந்தையே எங்களுக்குக் கற்பிக்கிறார். வேறு எவராலும் எங்களுக்குக் கற்பிக்க முடியாது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எவரையும் எதிர்க்காதீர்கள். எவராவது ஏதாவது கூறினால், நீங்கள் எதனையும் கேட்காததைப் போல் அதனை அலட்சியப்படுத்தி விடுங்கள். நீங்கள் சகிப்புத் தன்மையுடையவர்களாக வேண்டும். நீங்கள் சத்குருவை அவதூறு செய்யக்கூடாது.
2. நீங்கள் உங்கள் பதிவேடு பாழாகுவதை அனுமதிக்காதீர்கள். நீங்கள் ஒரு தவறு செய்தால், அதனைப் பற்றித் தந்தையிடம் கூறி மன்னிப்புக் கேளுங்கள். அவரை அங்கே மேலே நினைவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
சகிப்புத் தன்மையின் அவதாரமாகி விலகிச் செல்வதற்குப் பதிலாக நீங்கள் அனுசரித்துப் போவீர்களாக.
சில குழந்தைகள் சிறுதளவேனும் சகிப்புச் சக்தி இல்லாதிருப்பதால், அற்ப விடயங்கள் இடம்பெறும் போதும், அவர்கள் மிக விரைவில் முகம் கோணுகிறார்கள். பின்னர் பயத்தின் காரணமாக தமது இடங்களை மாற்றவோ அல்லது தமது விரக்திக்குக் காரணமான அந்த நபரை மாற்றவோ முயற்சிக்கிறார்கள். அவர்கள் தாம் மாறாது, மற்றவர்களிடம் இருந்து விலகிச் செல்கிறார்கள். எனவே உங்கள் இடத்தை மாற்றவோ பிறரை மாற்றவோ நினைப்பதை விடுத்து, உங்களை மாற்றுங்கள்: சகிப்புத் தன்மையின் அவதாரம் ஆகுங்கள். அனைவரிடமும் எவ்வாறு அனுசரித்துப் போவது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்.
சுலோகம்:
உங்கள் இறை செயற்பாட்டின் அடிப்படையில் ஏனையோரிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்வதே ஒரு யோகியின் தன்மையாகும்.