27.11.2018        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையைப் போன்று முரளிதரர்கள் (புல்லாங்குழல் வாசிப்பவர்கள்) ஆகவேண்டும். முரளிதரர் குழந்தைகளே தந்தையின் உதவியாளர்கள் ஆகுகின்றனர். அத்தகைய குழந்தைகளையிட்டுத் தந்தை பூரிப்படைகின்றார்.

கேள்வி:
எக்குழந்தைகளின் புத்தி மிகவும் பணிவானதாக ஆகுகின்றது?

பதில்:
அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தானம் செய்து உண்மையான கொடையாளிகள் ஆகுபவர்களினதும், திறமையான விற்பனையாளர்கள் ஆகுபவர்களினதும் புத்தியானது சேவை செய்வதனால் மிகவும் பணிவானதாகவும், மிகவும் சீரானதாகவும் ஆகுகின்றது. நீங்கள் தானம் செய்யும்போது, ஒருபோதும் எவ்வித அகங்காரத்தையும் கொண்டிருக்கக்கூடாது. சிவபாபா உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றையே நீங்கள் கொடுக்கின்றீர்கள் என்ற விழிப்புணர்வு உங்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும். சிவபாபாவின் நினைவில் இருப்பதில் நன்மையே ஏற்படுகின்றது.

பாடல்:
நீங்களே தாயும், தந்தையும்.

ஓம் சாந்தி.
“நீங்களே தாயும், தந்தையும்” என்ற பாடலை வெறுமனே இசைப்பதன் மூலம் அவரது பெயர் நிரூபிக்கப்படுவதில்லை. நீங்கள் முதலில் “ஓம் நமசிவாய” என்ற பாடலையும், பின்னர் “நீங்களே தாயும், தந்தையும்” என்ற பாடலையும் இசைப்பீர்களாயின், அவர்கள் ஞானத்தை அறிந்து கொள்வார்கள். மக்கள் ஆலயங்களுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனின் ஆலயத்திற்கோ அல்லது கிருஷ்ணரின் ஆலயத்திற்கோ செல்லும்போது, தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று, எதையும் புரிந்துகொள்ளாமல், “நீங்களே தாயும், தந்தையும்” எனக் கூறுகின்றனர். எனவே, நீங்கள் முதலில் “ஓம் நமசிவாய” என்ற பாடலையும், பின்னர் “நீங்களே தாயும், தந்தையும்” என்ற பாடலையும் இசைப்பீர்களாயின், அவர்களால் அவரது புகழை அறிந்துகொள்ள முடியும். இப்பாடல்கள் புதிதாக வருபவர்களுக்கு மிகவும் சிறந்தவை. அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கத்தக்க வகையில் அவர்கள் அதை இயற்றுகின்றார்கள். தந்தையின் பெயர் சிவன் ஆகும். சிவனைச் சர்வவியாபகர் எனக் கூறமுடியாது. அவ்வாறு கூறுவோமாயின், அனைவரது புகழும் ஒரேமாதிரியாகிவிடும். அவரது பெயர் சிவன். வேறு எவருமே தங்களுக்குச் சிவன் என்ற பெயரைக் கொடுக்க முடியாது. அவரது வழிமுறைகள் தனித்துவமானவை. அவை தேவர்கள் உட்பட, மனிதர்கள் அனைவரிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை. தாயும் தந்தையுமானவரால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கற்பிக்க முடியும். சந்நியாசிகள் மத்தியில் தாய்மார்கள் இல்லை; இதனாலேயே அவர்களால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. அவர்களால் “ஓம் நமசிவாய" என எவருக்கும் கூறமுடியாது. நீங்கள் சரீரதாரி ஒருவருக்கு “ஓம் நமசிவாய" எனக் கூறமுடியாது. இவை அனைத்தும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். சிலவேளைகளில் நல்ல குழந்தைகள் கூட சில கருத்துக்களைத் தவறவிட்டு விடுகிறார்கள். அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதுகிறார்கள். இவ்விடயத்தில், இதயத்தில் சுத்தம் இருக்க வேண்டும். அனைத்தையும் பற்றி உண்மையையே பேசுவதற்கும். அனைத்திலும் உண்மையாக இருப்பதற்கும் காலம் எடுக்கும். நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவதால் அந்நியோன்னியம் போன்றவை ஏற்படுகின்றது. இதற்குள் வேறு பல விடயங்களும் அடங்கும். இதுவரை உங்களில் எவருமே ஆத்ம உணர்விற்கு வந்துவிட்டதாகக் கூற முடியாது. அவ்வாறெனில், நீங்கள் உங்களது கர்மாதீத ஸ்திதியை அடைந்திருப்பீர்கள். அனைவரும் வரிசைக்கிரமமானவர்களே. சில குழந்தைகள் மிகவும் தகுதியற்றவர்களாக இருக்கின்றார்கள். பாபாவின் சேவையை யார் செய்கின்றார்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. அவர்கள் சிவபாபாவின் இதய சிம்மாசனத்தில் அமர்வதன் மூலம் மாத்திரமே உருத்திரரின் மாலையில் நெருக்கமாக வருவதுடன், ஒரு சிம்மாசனத்தில் அமர்வதற்குத் தகுதி வாய்ந்தவர்களாகவும் ஆகமுடியும். தங்களது லௌகீகத் தந்தையின் உதவியாளர்களாக ஆகுகின்ற, தகுதிவாய்ந்த குழந்தைகளே அவரது இதய சிம்மாசனத்தில் அமர்கிறார்கள். இது எல்லையற்ற தந்தையின் அழிவற்ற ஞான இரத்தின வியாபாரம். எனவே தந்தையும் தனது வியாபாரத்தில் தனக்கு உதவி செய்பவர்களையிட்டுப் பூரிப்படைவார். அழிவற்ற ஞான இரத்தினங்களை நீங்கள் கிரகிப்பதுடன் மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டவேண்டும். சிலர் தங்களைக் காப்புறுதி செய்து விட்டதாகவும், அதனால் அதன் வெகுமதியைத் தாங்கள் பெறுவார்கள் எனவும் நினைக்கிறார்கள். இங்கு நீங்கள் பலருக்குத் தானம் செய்ய வேண்டும். அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தானம் செய்வதனால் தந்தையைப் போன்று கொடையாளி ஆகுங்கள். உங்கள் புத்தியை ஞான இரத்தினங்களால் நிரப்புவதற்காகத் தந்தை வருகிறார். இங்கு செல்வம் என்ற கேள்விக்கே இடமில்லை. தகுதிவாய்ந்த குழந்தைகளை மாத்திரமே தந்தை விரும்புகிறார். இந்த வியாபாரத்தை எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் அறியாதுவிட்டால், உங்களை எவ்வாறு வியாபாரியான, முரளிதரரின் குழந்தைகள் என அழைக்க முடியும்? நீங்கள் எவ்வித வியாபாரமும் செய்யவில்லை எனில், உங்களையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஒரு வியாபாரி விற்பனையாளரின் திறமையைப் பார்க்கும்போது அவருக்கு ஒரு பங்கை வழங்குகிறார். அதுபோன்று உங்களால் ஒரு பங்கைப் பெறமுடியாது. இவ்வியாபாரத்தைச் செய்வதால் உங்கள் புத்தி மிகவும் பணிவானதாகுகின்றது. சேவை செய்வதனால் உங்களது புத்தி நன்றாகச் சீரமைக்கப்படுகிறது. பாபாவும், மம்மாவும் தங்களது அனுபவங்களைக் கூறுகின்றனர். பாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த பாபா ஞானத்தை மிக நன்றாகக் கிரகித்து, முரளியையும் மிக நன்றாக நடத்துகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அச்சா. சிவபாபா இவரில் இருக்கின்றார். அவரோ முரளிதரர். எனினும், இந்த பாபாவும் அனைத்தையும் அறிவார். இல்லையெனில், அவர் எவ்வாறு அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்? நீங்கள் எப்பொழுதும் சிவபாபாவே இந்த ஞானத்தைப் பேசுவதாகக் கருத வேண்டும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். சிவபாபாவை நினைவுசெய்வதால் உங்களுக்கு நன்மையே ஏற்படுகின்றது. சிவபாபா இவரிலேயே வருகின்றார். மம்மா தனக்கேயுரிய விதத்தில் பேசுகிறார். அவரது பெயர் போற்றப்பட வேண்டும். ஏனெனில், பெண்களுக்கு ஓர் உயர்த்தி கொடுக்கப்பட வேண்டும். “அவள் எப்படியானவளாக இருந்தாலும், அவள் என்னுடையவள், அவளை நான் பராமரிக்க வேண்டும்” எனக் கூறப்படுகின்றது. கணவன்மாரே இவ்வாறு கூறுகின்றனர். ஒரு மனைவி “அவர் எப்படியானவராக இருந்தாலும், அவர் என்னுடையவர்” எனக் கூறமாட்டாள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறானவர்களாக இருந்தாலும், நீங்கள் என்னுடையவர்கள். எனவே, நான் உங்களைப் பராமரிக்க வேண்டும். தந்தையின் பெயரே போற்றப்படுகின்றது. இங்கே, தந்தையின் பெயர் எப்படியோ போற்றப்படவே செய்கின்றது. பின்னர், சக்திகளின் பெயர்களும் போற்றப்பட வேண்டும். அவர்கள் சேவை செய்வதற்கு மிசச்சிறந்த வாய்ப்பைப் பெறுகின்றார்கள். நாளுக்கு நாள், சேவை மிகவும் இலகுவானதாகும். ஞானமும் பக்தியும், அதாவது, பகலும் இரவும் இருக்கின்றன. சத்திய, திரேதா யுகங்கள் சந்தோஷமான பகலாகும்; துவாபர, கலியுகங்கள் துன்பமான இரவாகும். சத்தியயுகத்தில் பக்தி இருக்க மாட்டாது. இது மிக இலகுவானது. ஆனால், இது உங்களது பாக்கியத்தில் இல்லையெனில், உங்களால் இதைக் கிரகிக்க முடியாது. நீங்கள் மிக இலகுவான கருத்துக்களைப் பெறுகின்றீர்கள். சென்று, இவற்றை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். உங்கள் வீட்டினரை ஈடேற்றுங்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தினருடன் வசிப்பவர்கள், எனவே உங்களால் இவ்விடயங்களை அவர்களுக்கு மிக எளிதாக விளங்கப்படுத்த முடியும். பரலோகத் தந்தை மாத்திரமே சற்கதியை அருள்பவர். அவரே ஆசிரியரும், சற்குருவுமாவார். ஏனைய அனைவரும் துவாபரயுகம் முதல் அனைவரையும் சீரழிந்த நிலைக்கே கொண்டு வந்துள்ளனர். சீரழிந்த பாவாத்மாக்கள் கலியுகத்திலேயே உள்ளனர். சத்திய யுகத்தில் பாவாத்மாக்களைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. கூன்முதுகுடையவர்களும், கல்லுப்புத்தியைக் கொண்டவர்களும், அஜாமிலைப் போன்ற பாவாத்மாக்களும் இப்பொழுதே உள்ளனர். அரைக் கல்பம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. பின்னர், பக்தி ஆரம்பமாகுகின்றது, உங்கள் ஸ்திதி கீழிறங்க ஆரம்பிக்கின்றது. நீங்கள் நிச்சயமாக வீழ்ந்தாக வேண்டும். நீங்கள் சூரிய வம்சத்தவராக இருந்து, பின்னர் வீழ்ந்து சந்திர வம்சத்தவர் ஆகுகின்றீர்கள். பின்னர், நீங்கள் தொடர்ந்தும் வீழ்கின்றீர்கள். துவாபர யுகம் முதல் நீங்கள் சந்திக்கின்ற அனைவரும் உங்களைக் கீழேயே கொண்டு வருகின்றனர். நீங்கள் மாத்திரமே இப்பொழுது இதனை அறிவீர்கள். நாளுக்கு நாள், நீங்கள் தொடர்ந்தும் பலத்தைப் பெறுவீர்கள். நீங்கள் சாதுக்களுக்கும், புனிதர்களுக்கும் விளங்கப்படுத்தும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இறுதியில் பரமாத்மா பரமதந்தை ஏன் சர்வவியாபகராக இருக்க முடியாது என்பதை அவர்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள். நீங்கள் விளங்கப்படுத்துவதற்குப் பல கருத்துக்களை உபயோகிக்கலாம். முதலில், பக்தி கலப்படமற்றதாக இருக்கின்றது. பின்னர் அது கலப்படமாகுகின்றது; கலைகள் குறைவடைய ஆரம்பிக்கின்றன. இப்பொழுது எந்தக் கலைகளுமே எஞ்சியிருக்கவில்லை. எவ்வாறு சுவர்க்கக் கலைகள் குறைவடைகின்றன என்பது விருட்சத்தின் படத்திலும், சக்கரத்தின் படத்திலும் காட்டப்பட்டுள்ளது. இவை விளங்கப்படுத்துவதற்கு மிக இலகுவானவை. எவ்வாறாயினும், இது உங்கள் பாக்கியத்தில் இல்லையெனில், உங்களால் அவற்றை விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதில்லை. நீங்கள் உங்களது பழைய சரீரங்களில் சிக்குண்டுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் பழைய சரீரத்தின் மீதுள்ள பற்றுக்கள் அனைத்தையும் நீக்கி, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவில்லையெனில், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியாது. ஒரு மாணவன் எல்லா நேரங்களிலும் தான் கடைசியாக இருப்பதை விரும்ப மாட்டான். அவனது நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் அனைவரும் அவன் தனது கல்வியில் கவனம் செலுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள். இங்கேயும், ஒருவர் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதுவிட்டால், அவரது நிலைமை என்னவாக இருக்கும் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. யார் பிரஜைகள் ஆகுவார்கள். யார் பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்மை செய்யுங்கள். இதுவே நியதியாகும். ஒரு வீட்டில் மூத்த சகோதரர் ஒருவர் இருக்கும்போது, இளையவருக்கு உதவி புரிவது அவரது கடமையாகும். “புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பிக்கின்றது” என்பது இதனையே குறிக்கின்றது. தந்தை கூறுகிறார்: தானம் செய்வதால், உங்கள் செல்வம் குறைந்து விட மாட்டாது. நீங்கள் செல்வத்தைத் தானம் செய்யவில்லையெனில், செல்வத்தைப் பெற்றுக்கொள்ளவும் மாட்டீர்கள், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தையும் பெறமுடியாது. நீங்கள் மிகச்சிறந்த வாய்ப்பொன்றைப் பெறுகின்றீர்கள். நீங்கள் கருணை நிறைந்தவர்கள் ஆகவேண்டும். சாதுக்கள், புனிதர்கள் மீதும் நீங்கள் கருணை கொண்டிருக்க வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: வந்து, புரிந்துகொள்ளுங்கள். பாரத மக்களுக்கு நிலையான சந்தோஷம் எனும் அவர்களின் ஆஸ்தியை ஒவ்வொரு கல்பத்திலும் வழங்குபவராகிய பரலோகத் தந்தையை நீங்கள் அறிய மாட்டீர்கள். எவருமே இதனை அறியார்கள். அரசாங்க அலுவலகர்கள் கூட சீரழிந்த நிலையிலிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். எனவே, யாரால் அவர்களை மேன்மையானவர்கள் ஆக்க முடியும்? தற்காலத்தில் சாதுக்களின் சமுதாயத்திற்குப் பெருமளவு மதிப்புள்ளது. தந்தை அவர்கள் மீதும் (சாதுக்கள் மீதும், புனிதர்கள் மீதும்) கருணை கொண்டிருப்பதாக அவர்களுக்கு நீங்கள் எழுதும்போது, அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். நீங்கள் மேலும் முன்னேறும்போது, உங்கள் பெயர் போற்றப்படும். பலர் தொடர்ந்தும் உங்களிடம் வருவார்கள். பல கண்காட்சிகளும் இடம்பெறும். இறுதியில், நிச்சயமாகச் சிலர் விழித்தெழுவார்கள். சந்நியாசிகள் கூட விழித்தெழுவார்கள். அவர்கள் வேறு எங்குதான் செல்வார்கள்? ஒரேயொரு கடையே உள்ளது. தொடர்ந்தும் பெருமளவு முன்னேற்றம் இடம்பெறும். நீங்கள் விளங்கப்படுத்துவதற்கெனப் பல சிறந்த படங்கள் உருவாக்கப்படும். எனவே, எவரும் வந்து கற்கலாம். வைக்கோற்போர் தீ மூட்டப்படும்போது மக்கள் விழித்தெழுவார்கள், ஆனால் அப்போது மிகவும் தாமதமாகிவிடும். குழந்தைகளுக்கும் இது பொருந்துகிறது. இறுதியில் உங்களால் எவ்வளவு தூரத்திற்கு ஓட முடியும்? ஓர் ஓட்டப்பந்தயத்திலும் சிலர் முதலில் மெதுவாகவே ஓடுகிறார்கள். சிலர் மாத்திரமே பரிசைப் பெறுகிறார்கள். இதுவும் உங்களது குதிரைப் பந்தயமே. ஆன்மீக யாத்திரை என்ற இப்பந்தயத்தில் ஓடுவதற்கு ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் தேவைப்படுகின்றனர். தந்தையை நினைவுசெய்வதும் ஞானமே, இல்லையா? வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. ஞானத்தின் மூலம் மனிதர்கள் வைரங்களைப் போன்றவர்களாகவும், அறியாமை காரணமாகச் சிப்பிகளைப் போன்றவர்களாகவும் ஆகுகின்றார்கள். தந்தை உங்கள் சதோபிரதான் வெகுமதியை உருவாக்குவதற்காக வருகின்றார். பின்னர் இந்த வெகுமதி படிப்படியாகக் குறைவடையும். நீங்கள் இக்கருத்துக்கள் அனைத்தையும் கிரகித்துப் பின்னர் செயற்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மகாதானிகள் ஆகவேண்டும். பாரதம் மகாதானி என அழைக்கப்படுகின்றது. ஏனெனில், நீங்கள் இங்கேயே உங்களது சரீரம், மனம், செல்வம் ஆகியவற்றைத் தந்தையிடம் அர்ப்பணிக்கின்றீர்கள். பின்னர் தந்தையும் அனைத்தையும் உங்களிடம் அர்ப்பணிக்கின்றார். பாரதத்தில் பல மகாதானிகள் உள்ளனர். ஏனைய மனிதர்கள் யாவரும் மூட நம்பிக்கையில் சிக்குண்டுள்ளனர். இங்கே நீங்கள் கடவுளின் புகலிடத்தில் பிரவேசித்துள்ளீர்கள். இராவணன் உங்களைச் சந்தோஷமற்றவர்கள் ஆக்கிவிட்டான். எனவே, நீங்கள் இராமரிடம் (கடவுள்) புகலிடம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் துன்பக் குடிலில் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் துன்பமற்ற குடிலுக்கு, அதாவது, சுவர்க்கத்திற்குச் செல்லவிருக்கின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்தைப் படைப்பவராகிய, தந்தையிடம் புகலிடம் பெற்றுள்ளீர்கள். சிலர் குழந்தைப் பருவத்தில் பலவந்தமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் இப்புகலிடத்தில் எவ்விதச் சந்தோஷத்தையும் அனுபவிக்க மாட்டார்கள்; அது அவர்கள் பாக்கியத்தில் இல்லை. அவர்கள் இராவணனாகிய மாயையிடம் புகலிடம் பெற விரும்புகின்றார்கள். அவர்கள் கடவுளுடைய புகலிடத்தை விட்டு இராவணனாகிய மாயையின் மடிக்குச் செல்வது மாபெரும் அதிசயமாகும். 'ஓம் நமசிவாய" என்ற பாடல் மிகவும் சிறந்தது. நீங்கள் இப்பாடலை இசைக்கலாம். மக்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. இதன் சரியான அர்த்தத்தை ஸ்ரீமத்திற்கேற்ப உங்களால் விளங்கப்படுத்த முடியும் என நீங்கள் கூறலாம். அவர்கள் தொடர்ந்தும் பொம்மைகளுடன் விளையாடுகிறார்கள். நாடகத்தின்படி, இப்பாடல்களிலிருந்தும் நீங்கள் உதவி பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தைக்குரியவர்களாக இருந்தும், சேவாதாரிகளாக இல்லையெனில், அவரின் இதய சிம்மாசனத்தில் எவ்வாறு அமரமுடியும்? சில குழந்தைகள் தகுதியற்றவர்களாகி, பெரும் துன்பத்தை விளைவிக்கின்றார்கள். இங்கு, உங்கள் தாயார் மரணித்தாலும் அல்வா சாப்பிடுங்கள். உங்கள் மனைவி மரணித்தாலும் அல்வா சாப்பிடுங்கள். நீங்கள் அழுது புலம்ப மாட்டீர்கள். நீங்கள் நாடகத்தில் உறுதியாக இருக்க வேண்டும். மம்மாவும், பாபாவும் சென்று விடுவார்கள். அத்துடன் மிக விசேடமான குழந்தைகளும் முற்கூட்டியே சென்றுவிடுவார்கள். ஒவ்வொருவரும் அவரவர் பாகத்தை நடிக்க வேண்டும். இதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? நாங்கள் பற்றற்ற பார்வையாளர்களாக இருந்து நாடகத்தை அவதானிக்கின்றோம். உங்கள் ஸ்திதி எப்போதும் மலர்ச்சியாக இருக்கவேண்டும். பாபாவும் அக்கறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார். அவர்கள் நிச்சயமாக வருவார்கள் என்று நியதி கூறுகிறது. மம்மாவும், பாபாவும் முழுமையடைந்து விட்டார்கள் என்றில்லை. முழுமையான ஸ்திதி இறுதியிலேயே வரும். தற்சமயத்தில் எவரும் தான் முழுமையடைந்துவிட்டதாகக் கூறமுடியாது. இந்த இழப்பு இருந்தது; முரண்பாடுகள் இருந்தன, பத்திரிகைகளில் பிரம்மகுமாரிகள் பற்றிய வதந்திகள் வந்தன. இவை அனைத்தும் முன்னைய சக்கரத்திலும் நிகழ்ந்துள்ளன. எனவே கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? நீங்கள், உங்களின் 100மூ ஸ்திதியை இறுதியில் பெறுவீர்கள். நீங்கள் கருணை நிறைந்தவர்களாகி, மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்கும்போதே உங்களால் தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமரமுடியும். நீங்கள், உங்களைக் காப்புறுதி செய்வீர்களாயின், அது வேறு விடயம்; நீங்கள் அதை உங்களுக்காகவே செய்கின்றீர்கள். நீங்கள் இந்த ஞான இரத்தினங்களை ஏனையோருக்குத் தானம் செய்ய வேண்டும். நீங்கள் தந்தையை முழுமையாக நினைவுசெய்யாவிடில் உங்;கள் தலை மீதுள்ள பாவச்சுமை அதிகரிக்கும். கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர். அவர்கள் சாமர்த்தியமானவர்களாக இருக்க வேண்டும். இரவு வேளையில் நினைவைக் கொண்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சியேற்படுகிறது. இந்த ஆன்மீக மணவாளனை நீங்கள் அதிகாலை வேளையில் நினைவுசெய்ய வேண்டும். பாபா, நீங்கள் மிகவும் இனிமையானவர்! எவ்வாறிருந்த என்னை நீங்கள் எவ்வாறு ஆக்குகிறீர்கள் எனப் பாருங்கள்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. உங்கள் இதயத்தைச் சதா உண்மையானதாக வைத்திருங்கள். எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள், அனைத்திலும் சதா உண்மையானவர்களாக இருங்கள். நீங்கள் சரீர உணர்வுடையவராகி, உங்களை மிகவும் சாமர்த்தியசாலியாகக் கருதாதீர்கள். ஒருபொழுதும் அகங்காரம் கொள்ளாதீர்கள்.

2. ஒரு பற்றற்ற பார்வையாளராகி, நாடகத்தை அவதானியுங்கள். நாடகத்தில் உறுதியாக இருங்கள். எதனைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். சதா உங்கள் ஸ்திதியை மலர்ச்சியானதாக வைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்கள் சத்தியங்களைப் பற்றி அறிந்திருப்பதால் நன்மையை அடைந்து, சதா ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவராக இருப்பீர்களாக.

உங்கள் மனதில், வார்த்தைகளில் அல்லது எழுத்தில் நீங்கள் செய்யும் சத்தியங்களை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருங்கள், அப்பொழுது உங்களால் அச் சத்தியங்களிலிருந்து முழு நன்மையையும் பெற இயலும். நீங்கள் எத்தனை தடவைகள் ஒரு சத்தியத்தைச் செய்தீர்கள் எனவும், நீங்கள் எந்தளவுக்கு அதனை நிறைவேற்றினீர்கள் எனவும் சோதியுங்கள். சத்தியங்கள் மற்றும் அவற்றின் நன்மை இரண்டுக்குமான ஒரு சமநிலை இருக்கட்டும். அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் ஆசீர்வாதங்களை அருள்பவராகிய, தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். மேன்மையான எண்ணங்களை நீங்கள் கொண்டிருப்பதைப் போன்று, அதேவழியில், உங்கள் செயல்களும் மேன்மையாக இருக்கட்டும், அப்பொழுது நீங்கள் ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
தந்தை மாத்திரமே தென்படும் வகையில் அத்தகையதொரு தெய்வீகக் கண்ணாடியாக உங்களை ஆக்குங்கள், அப்பொழுது அது ஓர் உண்மையான சேவை என அழைக்கப்படும்.