18.11.18 Avyakt Bapdada Tamil Lanka Murli 04.04.84 Om Shanti Madhuban
உங்களின் மேன்மையான பாக்கியத்தின் சித்திரத்தை வரைவதற்கான காலம், மேன்மையான காலமான சங்கமயுகமே ஆகும்.
இன்று, பாப்தாதா ஒவ்வொரு பிராமண ஆத்மாவினதும் மேன்மையான வாழ்க்கையின் பிறப்பின் கணத்தையும் பாக்கிய ரேகையையும் பார்த்தார். ஒவ்வொரு குழந்தையினதும் பிறப்பிற்குரிய கணம் மேன்மையானது. ஏனெனில், இது இப்போது அதி புண்ணிய மேன்மையான சங்கமயுகம் ஆகும். நீங்கள் அனைவரும் மேன்மையான சங்கமயுகத்தில், அதாவது, அதிமேன்மையான காலப்பகுதியில்; மேன்மையான பிராமணப் பிறப்பை எடுத்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் பிறப்பு எடுத்த கணம் மேன்மையானது. பிராமணர்களான உங்கள் அனைவரினதும் பாக்கிய ரேகையும், பாக்கியமும் மேன்மையானது. ஏனெனில், நீங்கள் மேன்மையான தந்தைக்குச் சொந்தமான சிவகுலத்தைச் சேர்ந்த பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளும் ஆவீர்கள். மேன்மையான தந்தை, மேன்மையான பிறப்பு, மேன்மையான ஆஸ்தி, மேன்மையான குடும்பம், மேன்மையான பொக்கிஷங்கள்: உங்கள் அனைவரினதும் இந்தப் பாக்கிய ரேகை, பிறப்பில் இருந்தே மேன்மையானது. காலப்பகுதியும் மேன்மையானது. பேறுகளால் பாக்கிய ரேகையும் மேன்மையானது ஆகுகிறது. குழந்தைகளான நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையிடமிருந்து ஒரே பாக்கியத்தைப் பெறுகிறீர்கள். இதில் எந்தவித வேறுபாடும் கிடையாது. நீங்கள் ஒரே பாக்கியத்தைப் பெற்றிருந்தாலும், அது ஏன் வரிசைக்கிரமம் ஆகுகிறது? அதே தந்தை. அதே பிறப்பு. அதே ஆஸ்தி. அதே குடும்பம். அதே காலப்பகுதியான சங்கமயுகம். எனவே, ஏன் இலக்கம் ஏற்படுகிறது? நீங்கள் அனைவரும் எல்லையற்ற பேறுகளை, அதாவது, எல்லையற்ற பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். எனவே, ஏன் இந்த வேறுபாடு? உங்களின் கொள்ளவிற்கேற்ப எவ்வாறு நீங்கள் உங்களின் எல்லையற்ற பாக்கியத்தை உங்களின் வாழ்க்கையின் செயல்களின் சித்திரத்தில் போடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே வேறுபாடு உருவாக்கப்படுகிறது. பிராமண வாழ்க்கை என்றால் உங்களின் பாக்கியத்தின் சித்திரத்தை வரைதல், உங்களின் வாழ்க்கையில் கொண்டுவருதல், உங்களின் ஒவ்வொரு செயலிலும் கொண்டு வருதல் என்று அர்த்தம். பாக்கியசாலி ஆத்மா ஒருவர் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு செயலிலும் பாக்கியத்தை அனுபவம் செய்ய வேண்டும். அதாவது, பாக்கியம் புலப்பட வேண்டும். பிராமணர் என்றால் பாக்கியசாலி ஆத்மா என்று அர்த்தம். அவரின் கண்களும் நெற்றியும் முகத்திலுள்ள புன்னகையும் ஒவ்வோர் அடியிலும் அனைவருக்கும் மேன்மையான பாக்கியத்தின் அனுபவத்தைக் கொடுக்கும். இதுவே பாக்கியத்தின் சித்திரத்தை வரைதல் எனப்படுகிறது. செயல்கள் எனும் கடதாசியில், அனுபவம் எனும் பேனாவால் உங்களின் பாக்கியத்தின் சித்திரத்தை வரையுங்கள். உங்களின் பாக்கியத்தின் சித்திரத்தினை கோடுகளால் வரையுங்கள். நீங்கள் அனைவரும் உங்களின் சித்திரங்களை உருவாக்குகிறீர்கள். ஆனால் சிலரின் சித்திரங்கள் பூரணமாகியுள்ளன. ஆனால் ஏனையோரின் சித்திரங்களில் ஏதாவது குறைவாக உள்ளன. நீங்கள் இதை உங்களின் நடைமுறை வாழ்க்கையில் இடும்போது, நெற்றியிலுள்ள கோடு என்றால் உங்களின் எண்ணங்கள் என்று அர்த்தம். கண்களிலுள்ள ரேகைகள் என்றால் ஆன்மீகப் பார்வை என்று அர்த்தம். உங்களின் முகத்திலுள்ள புன்னகையின் ரேகைகள் என்றால் சதா திருப்தியாக உள்ள ஆத்மா மற்றும் சகல பேறுகளின் சொரூபம் என்று அர்த்தம். திருப்தியே புன்னகை ரேகை ஆகும். கைகளில் உள்ள ரேகைகள் என்றால் மேன்மையான செயல்களுக்கான கோடுகள் என்று அர்த்தம். பாதங்களின் ரேகைகள் என்றால், ஸ்ரீமத்திற்கேற்ப ஒவ்வோர் அடியையும் எடுத்து வைத்தல் என்று அர்த்தம். இந்த முறையில், உங்களின் பாக்கியத்தின் சித்திரத்தை வரையும் முறையில் வேறுபாடு காணப்படுகிறது. சிலரில் ஒன்று குறைகிறது. ஏனையோரில் வேறொன்று குறைகிறது. பௌதீகமான சித்திரத்தை வரையும்போது, சிலருக்குக் கண்களை எவ்வாறு வரைவது என்று தெரியாது. சிலருக்குக் கால்களை எவ்வாறு வரைவது என்று தெரியாது. சிலருக்கு ஒரு புன்னகையை எவ்வாறு வரைவது என்று தெரியாது. எனவே, இதில் வேறுபாடு ஏற்படுகிறது. சித்திரம் முழுமையாக இருக்கும் அளவிற்கு, அது பெறுமதிவாய்ந்ததாக இருக்கும். சிலரின் சித்திரங்களுக்கு நூறாயிரம் ரூபாய்கள் வருமானமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஏனையோரின் சித்திரங்களுக்கு நூறு ரூபாய்கூட அரிதாகவே கிடைக்கிறது. எனவே, அதில் உள்ள எதனால் இந்த வேறுபாடு ஏற்படுகிறது? பரிபூரணம். அதேபோன்று, பிராமண ஆத்மாக்களான நீங்கள் சகல ரேகைகளிலும் பரிபூரணமாக இல்லாவிட்டால், ஒன்று அல்லது இரண்டு ரேகைகளில் பரிபூரணமாக இல்லாததால், நீங்கள் வரிசைக்கிரமமானவர் ஆகுகிறீர்கள்.
ஆகவே, இன்று, பாபா பாக்கியசாலிக் குழந்தைகளின் சித்திரங்களைப் பார்த்தார். பௌதீகமான பாக்கியத்தில், வெவ்வேறு வகையான பாக்கியங்கள் இருப்பதைப் போன்று, இங்கும், பாபா பலவகையான பாக்கியத்தின் சித்திரங்களைக் கண்டார். ஒவ்வொரு படத்திலும், பிரதான முகச்சாயல்களான கண்களும் நெற்றியும் சித்திரத்தின் மதிப்பை உயர்த்துகின்றன. அதேபோன்று, இங்கு, மனதின் மனோபாவத்தின் சக்தியும், கண்களின் ஆன்மீகப் பார்வையின் சக்தியும் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. இவையே படத்தின் அத்திவாரம் ஆகும். நீங்கள் அனைவரும் உங்களின் சொந்தப் படத்தைப் பார்த்தீர்களா? எந்தளவிற்கு உங்களின் படம் சம்பூரணமாக உள்ளது? உங்களின் பாக்கியத்தை உருவாக்கிய ஒரேயொருவர் அந்தச் சித்திரத்தில் புலப்படும்படியாக நீங்கள் உங்களின் சித்திரத்தை வரைந்துள்ளீர்களா? ஒவ்வொரு ரேகையையும் சோதித்துப் பாருங்கள். இதனாலேயே வரிசைக்கிரமம் ஏற்படுகிறது. உங்களுக்குப் புரிகிறதா?
அருள்பவர் ஒருவரே. அவர் அனைவருக்கும் ஒரே விடயத்தையே கொடுக்கிறார். எனினும், படத்தை உருவாக்குபவர்கள், அதை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதில் வரிசைக்கிரமம் ஆகுகிறார்கள். சிலர் விசேடமான எட்டில் ஒருவர் ஆகுகிறார்கள். அத்துடன் விசேடமான இஷ்ட தெய்வம் ஆகுகிறார்கள். சிலர் தேவர்கள் ஆகுகிறார்கள். சிலர் அந்தத் தேவர்களை அவதானித்து சந்தோஷப்படுபவர்கள் ஆகுகிறார்கள். நீங்கள் உங்களின் சொந்தப் படத்தைப் பார்த்தீர்கள், அல்லவா? அச்சா.
பௌதீகமாகச் சந்திக்கும்போது, காலமும் மக்களின் எண்ணிக்கையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அவ்யக்த சந்திப்பில், காலம் அல்லது மக்களின் எண்ணிக்கை என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் அவ்யக்த சந்திப்புகளில் அனுபசாலிகள் ஆகினால், நீங்கள் சதா தொடர்ந்து அவ்யக்த சந்திப்புகளில் தனித்துவ அனுபவங்களைப் பெறுவீர்கள். பாப்தாதா சதா குழந்தைகள் அனைவருக்கும் கீழ்ப்படிவாக இருக்கிறார். இதனாலேயே, அவர் அவ்யக்தாக இருந்தாலும், அவர் பௌதீக ரூபத்தில் (வியக்த்) வரவேண்டியுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் என்னவாக வேண்டும்? நீங்கள் அவ்யக்த் ஆகவேண்டும், அப்படியல்லவா? அல்லது, நீங்கள் பௌதீக ரூபத்தில் இருக்க விரும்புகிறீர்களா? அவ்யக்த் ஆகுங்கள். அவ்யக்த் ஆகுவதன் மூலம், நீங்கள் அசரீரியானவராகித் தந்தையுடன் வீட்டுக்குச் செல்வீர்கள். நீங்கள் இன்னமும் அதனூடாகச் செல்லும் ஸ்திதியை அடையவில்லை. தேவதை ரூபத்தினூடாக, உங்களால் அசரீரியானவராகி, வீட்டுக்குச் செல்ல முடியும். எனவே, நீங்கள் இப்போது தேவதை ரூபத்தைப் பெற்றுள்ளீர்களா? உங்களின் பாக்கியத்திற்கான சித்திரத்தைப் பூரணப்படுத்திவிட்டீர்களா? சம்பூரணமான சித்திரமே தேவதை ஆகும். அச்சா.
குழந்தைகளான நீங்கள் அனைவரும் வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து வந்துள்ளீர்கள். ஒவ்வொரு பிராந்தியத்தினதும் சிறப்பியல்புடன் உங்கள் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது பாப்தாதா களிப்படைகிறார். உங்களில் சிலருக்கு மொழி தெரியாதிருக்கலாம். ஆனால், அன்பு மற்றும் பக்திக்கான மொழியைத் தெரிந்து கொள்வதில் நீங்கள் கெட்டிக்காரர்கள். உங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. ஆனால் முரளியின் மொழியை நீங்கள் அறிவீர்கள். எதையும் புரிந்து கொள்ள முடியாதவர்களாலும், அவர்களின் அன்பாலும் பக்தியாலும் புரிந்து கொள்ள முடிகிறது. பெங்கால் மற்றும் பீகாரில் வசிப்பவர்கள், வசந்தகாலத்தில் (பகார்) வசிக்கிறார்கள். அவர்களுக்கு என்றும் வசந்தகாலமே.
பஞ்சாப் எப்போதும் அனைத்தையும் புதியதாகவும் பசுமையாகவும் (அனைவரையும் நிரம்பச் செய்கிறது) ஆக்குகிறது. பஞ்சாபில் நல்ல விளைச்சல் உள்ளது. ஹரியானா எப்போதும் நிரம்பியதாகவும் பசுமையாகவும் உள்ளது (ஹர பரா). பஞ்சாபும் ஹரியானாவும் எப்போதும் நிறைந்திருப்பதுடன் பசுமையாகவும் உள்ளன. எங்கு பசுமை உள்ளதோ, அந்த இடம் எப்போதும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் மேன்மையான இடமாகவும் விளங்கும். பஞ்சாபும் ஹரியானாவும் எப்போதும் சந்தோஷத்தால் நிரம்பியுள்ளன. இதனாலேயே, பாப்தாதா உங்கள் அனைவரையும் காண்பதில் களிப்படைகிறார். இராஜஸ்தானின் சிறப்பியல்பு என்ன? இராஜஸ்தான் அதன் கலைக்குப் பிரபல்யமானது. இராஜஸ்தானின் சித்திரங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவை. ஏனெனில், அங்கு பல மன்னர்கள் இருந்தார்கள். ஆகவே, இராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள், மிகவும் பெறுமதிவாய்ந்த பாக்கியத்திற்கான சித்திரங்களைச் செய்வார்கள். கலையில், நீங்கள் எப்போதும் மேன்மையானவர்கள். குஜராத்தின் சிறப்பியல்பு என்ன? அங்கு அதிகளவு கண்ணாடிகளின் அலங்காரங்கள் உள்ளன. எனவே, குஜராத் கண்ணாடியாக இருக்கிறது. அது தந்தையின் ரூபத்தைக் காட்டக்கூடிய ஒரு கண்ணாடி ஆகும். நீங்கள் உங்களின் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறீர்கள், அல்லவா? எனவே, குஜராத் எனும் கண்ணாடி, அனைவருக்கும் தந்தையின் ரூபத்தையும் தேவதையின் ரூபத்தையும் காட்டும் சிறப்பியல்பு வாய்ந்தது. குஜராத்தின் சிறப்பியல்பானது, தந்தையை வெளிப்படுத்தும் கண்ணாடி ஆகும். இறுதியாக, தமிழ் நாடு எஞ்சியுள்ளது. சிறியவர்கள் அற்புதங்களைச் செய்வார்கள். அவர்கள் பெரிய பணிகளைச் செய்வார்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வீர்கள்? அங்கு பல ஆலயங்கள் உள்ளன. அவர்கள் ஆலயங்களில் சங்கீதம் இசைப்பார்கள். தமிழ் நாட்டின் சிறப்பியல்பானது, முரசங்களை அடித்து, தந்தையின் வெளிப்படுத்துகை என்ற மிகவும் உரத்த சத்தத்தை ஏற்படுத்துவதாகும். உங்களுக்கு மிக நல்ல சிறப்பியல்பு உள்ளது. சிலர் தமது குழந்தைப் பருவத்திலும் கீதம் இசைப்பார்கள். பக்தர்களும் மிகுந்த அன்புடன் கீதம் இசைப்பார்கள். குழந்தைகளான நீங்களும் அன்புடன் அதை இசைக்கிறீர்கள். இப்போது, ஒவ்வொரு இடமும் உங்களின் சொந்தச் சிறப்பியல்பை நடைமுறை ரூபத்தில் கொண்டுவர வேண்டும். பாபா இப்போது சகல பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களையும் சந்தித்துவிட்டார், அல்லவா? படிப்படியாக, இவ்வாறே சந்திப்புகள் நிகழும். பழைய குழந்தைகள் கூறுகிறார்கள்: நீங்கள் ஏன் எங்களை அழைக்கவில்லை? நீங்கள் பிரஜைகளை உருவாக்குகிறீர்கள். பிரஜைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறீர்கள். எனவே, பழையவர்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது மட்டுமே எண்ணிக்கை அதிகரிக்கும். பழையவர்கள், அதே பழைய முறையில் தொடர்ந்தும் இருப்பார்களாயின், புதியவர்களுக்கு என்ன நிகழும்? பழையவர்கள் வழங்குகின்ற அருள்பவர்கள் ஆவார்கள். புதியவர்கள் பெறுபவர்கள். ஆகவே, நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். நீங்கள் இதில் அருள்பவர்கள் ஆகவேண்டும். பௌதீக ரூபத்தில் சந்திப்பதில் பல வரையறைகள் உள்ளன. அவ்யக்த் சந்திப்பில், எந்தவித வரையறைகளும் கிடையாது. சிலர் கேட்கிறார்கள்: எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நிகழும்? பௌதீகான சந்திப்பிற்கான வழிமுறையும் மாறும். எண்ணிக்கை அதிகரிக்கும்போது, நீங்களும் சிலதைத் தானம் செய்து, சில புண்ணியமும் செய்ய வேண்டும். அச்சா.
இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த குழந்தைகள் அனைவருக்கும், அவர்களின் அன்பான இதயங்களின் ஒலிக்கும், சந்தோஷப் பாடல்களினதும், அவர்களின் இதயபூர்வமான செய்திக்கடிதங்களுக்கும் பதிலாக, குழந்தைகள் அனைவருக்கும் பலமில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குவதுடன், பாப்தாதா அவர்களின் கடிதங்களுக்குப் பதிலும் அளிக்கிறார். சதா நினைவைக் கொண்டிருப்பதன் மூலம், அமரத்துவத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்று, தொடர்ந்து முன்னேறுவதுடன், மற்றவர்களையும் முன்னேறச் செய்யுங்கள். தமது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பேணும் குழந்தைகள் அனைவருக்கும், பாப்தாதா உங்களின் சொந்த முன்னேற்றத்திற்கும் சேவையில் முன்னேற்றத்திற்கும் உங்களைப் பாராட்டுகிறார். வாழ்த்துக்கள்! நீங்கள் எப்போதும் தந்தையுடன் இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் சம்பூரணமாகவும் முழுமையாகவும் இருக்கிறீர்கள். இத்தகைய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெற்ற குழந்தைகளுக்கு, பாப்தாதா மீண்டும் ஒருமுறை அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் எப்போதும் உங்களைத் தந்தைக்குச் சமமான, சம்பூரணமான ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? சம்பூரணமானவர்கள் எப்போதும் தொடர்ந்து முன்னேறுவார்கள். சம்பூரணம் இல்லாவிட்டால், உங்களால் முன்னேற முடியாது. ஆகவே, தந்தையைப் போன்றே குழந்தைகளும் இருக்கிறார்கள். தந்தை கடலாக இருக்கிறார். குந்தைகள் மாஸ்ரர் கடல்கள் ஆவார்கள். ஒவ்வொரு நற்குணத்தையும் சோதித்துப் பாருங்கள். தந்தை ஞானக்கடலாக இருப்பதைப் போன்று, நீங்களும் மாஸ்ரர் ஞானக்கடல்கள் ஆவீர்கள். தந்தை அன்புக்கடல் ஆவார். எனவே, நீங்கள் மாஸ்ரர் அன்புக்கடல்கள். இந்த முறையில் உங்களுக்கிடையே உள்ள ஒத்த தன்மைகளைச் சோதித்துப்பாருங்கள். அப்போது மட்டுமே நீங்கள் எப்போதும் தந்தைக்குச் சமமானவராகவும் தந்தையைப் போன்று சம்பூரணமானவராகவும் ஆகித் தொடர்ந்து முன்னேறுவீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? சதா உங்களை இந்த முறையில் தொடர்ந்து சோதியுங்கள். இந்த உலகமே தேடுகின்ற அந்த ஒருவர் உங்களைத் தனக்குச் சொந்தமாக்கி உள்ளார் என்ற சந்தோஷத்தை எப்போதும் பேணுங்கள். அச்சா.
அவ்யக்த் மேன்மையான வாசகங்கள் - உலக உபகாரி ஆகுங்கள்
பாப்தாதா குழந்தைகளான உங்களை உலக சேவைக்குக் கருவிகள் ஆக்கியுள்ளார். நீங்களே தந்தையை முழு உலகிற்கும் வெளிப்படுத்தப் போகின்ற குழந்தைகள் ஆவீர்கள். தந்தையின் குழந்தைகளால் மட்டுமே அவரை வெளிப்படுத்த முடியும். தந்தை முதுகெலும்பாக இருக்கிறார். தந்தை முதுகெலும்பாக இல்லாவிட்டால், நீங்கள் மட்டும் தனித்திருப்பதனால், விரைவில் களைப்படைந்துவிடுவீர்கள். ஆகவே, தந்தையை உங்களின் முதுகெலும்பாகக் கருதுங்கள். உங்களின் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும், உங்களின் சரீரத்தினூடான செயல்களாலும் மனதாலும் செல்வத்தாலும் உலகிற்குச் சேவை செய்வதில் மும்முரமாக இருங்கள். உங்களால் இலகுவாக மாயையை வெல்ல முடியும்.
தற்சமயம், மரத்தில் உள்ள பழங்களும் மலர்களும் காய்ந்து விட்டன. ஏனெனில் அவர்கள் தற்காலிகமான பராமரிப்பையே பெறுகிறார்கள். தொடர்ந்து இந்த உலகம் இயங்க வேண்டியிருப்பதனாலும், அனைவரும் தமது வாழ்க்கைகளை வாழ வேண்டியிருப்பதனாலும், அவர்கள் தமது எண்ணங்களால் அல்லது வார்த்தைகளால் அழுகிறார்கள். எவரும் இப்போது சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதில்லை. எனவே, பரிதாபத்திற்குரிய சூழ்நிலைகளில் வாழ்பவர்களுக்கு பேறுகளின் இறக்கைகளைக் கொடுத்து, அவர்களைப் பறக்கச் செய்யுங்கள். எவ்வாறாயினும், நீங்கள் பறக்கும் ஸ்திதியில் இருந்தால் மட்டுமே, உங்களால் மற்றவர்களைப் பறக்கச் செய்ய முடியும். இவ்வாறு செய்வதற்கு, தந்தையைப் போன்று எல்லையற்ற உலக உபகாரி என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். உலகைச் சுற்றி வந்து, ஆத்மாக்கள் அனைவருக்கும் சக்திவாய்ந்த கதிர்களின் மின்னோட்டத்தை அனுப்புங்கள். ஸ்ரீ கிருஷ்ணர் உலக உருண்டையில் அமர்ந்திருப்பதைப் போன்ற படத்தைக் காட்டுகிறார்கள். நீங்களும் உலக உருண்டையின் மீது அமர்ந்திருக்க வேண்டும். முழு உலகையும் அவ்வாறு இருந்து பார்க்கும்போது, நீங்கள் இயல்பாகவே எங்கும் பயணம் செய்து வருவீர்கள். நீங்கள் உயர்ந்த ஓரிடத்திற்குச் செல்லும்போது, நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில் அந்த உயர்ந்த இடத்தில் இருந்து உங்களால் அனைத்தையும் பார்க்கக்கூடியதாக இருக்கும். அதேபோன்று, நீங்கள் உங்களின் மேன்மையான விதை நிலையில் ஸ்திரமாக இருக்கும்போது, உங்களின் உலக உபகாரி என்ற ஸ்திதியில் இருக்கும்போது, முழு உலகமும் ஒரு விநாடியில் நீங்கள் சுற்றி வரக்கூடிய சிறியதோர் உருண்டை போன்றே தென்படும்.
நீங்கள் ஆத்மாக்கள் அனைவரின் தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். அதனால் ஆத்மாக்கள் அனைவரும் உங்களின் சகோதரர்கள். எனவே, உங்களின் எண்ணங்கள் உங்களின் சகோதரர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும். உங்களின் புத்தியைப் பரந்ததாகவும் தொலைநோக்குடையதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். அற்ப விடயங்களுக்காக உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். ஆனால் மேன்மையான ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்தி, எல்லையற்ற பணிக்குக் கருவி ஆகுங்கள். ஓ, உலக உபகாரி ஆத்;மாக்களே, சதா உலகிற்கு நன்மை செய்யும் திட்டத்தை உணர்ந்தவராக இருங்கள். அனைவரின் சிறப்பியல்பும் உலக நன்மைக்காகப் பயன்படுத்தப்படும்போதே, எல்லையற்ற பணி பூர்த்தியாகும். நீங்கள் எதையாவது சமைக்கும்போது, அதற்குத் தேவையான சகல பொருட்களையும் போடாவிட்டால், நீங்கள் உப்பு அல்லது சீனி போன்ற சாதாரணமான பொருட்களைப் போடாவிட்டாலும், அந்த உணவு பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும், அது உண்பதற்குத் தகுதிவாய்ந்ததாக இருக்காது. அதேபோன்று, உலக நன்மை என்ற மேன்மையான பணிக்கு ஒவ்வோர் இரத்தினமும் அத்தியாவசியமானவரே. அனைவரின் ஒத்துழைப்பு என்ற விரல் தேவைப்படுகிறது. உலக மாற்றம் என்ற பணி, ஒவ்வொருவரின் ஒத்துழைப்பெனும் விரலினால் மட்டுமே பூர்த்தியாகும்.
உலகம் முழுவதிலும் சதா அமைதியினதும் சந்தோஷத்தினதும் கொடி உயரே பறக்க வேண்டும், சௌகரியத்தின் குழல் சதா இசைக்க வேண்டும் என்பதே பாப்தாதாவின் விருப்பம் ஆகும். இந்த இலக்கை வைத்திருந்து, அனைவரின் ஒத்துழைப்பெனும் விரலினால் எல்லையற்ற பணியைப் பூர்த்தி செய்யுங்கள். ஒவ்வொரு பிராமணரினதும் விசேடமான கடமை, மாஸ்ரர் ஞான சூரியன் ஆகி, சகல சக்திகளின் கதிர்களையும் உலகெங்கும் பிரகாசிக்கச் செய்வதாகும். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும், உலகம் முழுவதிலும் சகல சக்திகளின் கதிர்களை ஜொலிக்கச் செய்யும் உலகை மாற்றுபவர் ஆகுங்கள். சூரியன் தனது கதிர்களால் முழு உலகிற்கும் ஒளியூட்டுகிறது. எனவே, நீங்கள் இப்போது மாஸ்ரர் ஞான சூரியர்களாகி, சகல சக்திகளின் கதிர்களை உலகெங்கும் பரவச் செய்யுங்கள். அப்போது மட்டுமே ஆத்மாக்கள் அனைவரும் உங்களின் சக்திவாய்ந்த கதிர்களின் மின்னோட்டத்தைப் பெறுவார்கள்.
அழியாத, உலக தீபங்களான உங்கள் அனைவரின் ஞாபகார்த்தமாகவே தீபமாலை கொண்டாடப்படுகிறது. இப்போதும், மக்கள் உங்களின் மாலையின் மணிகளை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நீங்கள் இருளை அகற்றி, ஒளியேற்றினீர்கள். ஆகவே, சதா உங்களை ஏற்றப்பட்ட தீபங்களாகக் கருதுங்கள். எத்தனை புயல்கள் வந்தாலும், நீங்கள் அநாதியான ஒளியானவரின் முன்னால் ஒருபோதும் காற்றில் அலையாத ஒளியைக் கொண்ட தீபங்களாக சதா இருக்க வேண்டும். இத்தகைய தீபங்களின் முன்னால் உலகமே தலைவணங்குகிறது. தந்தையும் சதா இத்தகைய தீபங்களுடன் இருக்கிறார். தந்தை சதா ஏற்றப்பட்ட ஒளியாக இருப்பதைப் போன்று, அவர் அநாதியானவராகவும் அமரத்துவ ஒளியாகவும் இருப்பதைப் போன்று, குழந்தைகளான நீங்களும் சதா அமரத்துவ தீபங்களாக இந்த உலகின் சகல இருளையும் நீக்குவதன் மூலம் அதற்குச் சேவை செய்ய வேண்டும். உலகிலுள்ள ஆத்மாக்கள் அதிகளவு அன்புடன் ஏற்றப்பட்ட தீபங்களான உங்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். நீங்களே இரவைப் பகலாக மாற்றும் உயிர்வாழும் தீபங்கள் ஆவீர்கள். ஆத்மாக்கள் பலரும் இருளில் அலைந்து திரிவதுடன் சிறிதளவு ஒளிக்காகப் பரிதவிக்கிறார்கள். தீபங்களான உங்களின் ஒளிகள் ஆடுமாக இருந்தால், உங்களின் ஒளிகள் ஒரு கணம் ஏற்றப்பட்டும், அடுத்த கணம் அணைந்து போகுமாக இருந்தால், அலைந்து திரிகின்ற ஆத்மாக்களின் கதி என்னவாகும்? அணைந்து ஒளிரும் விளக்கை எவரும் விரும்புவதில்லை. ஆகவே, சதா ஏற்றப்பட்ட தீபம் ஆகுங்கள். அத்துடன் இருளை அகற்றுவதற்குப் பொறுப்புள்ள ஆத்மா என்று கருதியவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் உலக உபகாரி என்று அழைக்கப்படுவீர்கள்.
மூதாதை ஆத்மாக்களான உங்கள் அனைவரின் மனோபாவமும் முழு உலகினதும் சூழலை மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும். மூதாதை ஆத்மாக்களின் வம்சம் முழுவதும் உங்களின் பார்வையால் சகோதரத்துவத்தை நினைவூட்ட வேண்டும். மூதாதை ஆத்மாக்களான நீங்கள் தந்தையுடன் உணர்வுடன் இருந்து, ஆத்மாக்கள் அனைவரின் தந்தை இப்போது வந்துள்ளார் என உங்களின் வம்சம் முழுவதற்கும் நினைவூட்ட வேண்டும். மூதாதை ஆத்மாக்களான உங்களின் மேன்மையான செயல்களும் பணிவான நடத்தையும் உங்களின் முழுச் சந்ததிக்கும் தூய நம்பிக்கைகளை உருவாக்க வேண்டும். அனைவரின் கண்களும் மூதாதை ஆத்மாக்களான உங்களையே தேடுகின்றன. எனவே, இப்போது எல்லையற்ற விழிப்புணர்வை எப்போதும் கொண்டிருப்பவர்கள் ஆகுங்கள். ‘பலவீனமானவர்களுக்கு சக்தி அளிக்கும் ஒரேயொருவர்’ என பாபாவின் புகழ் பாடப்படுவதைப் போன்று, நீங்களும் பிராமணக் குடும்பத்திலும் முழு உலகிலும் உள்ள பலவீனமானவர்களுக்கு சக்தியை வழங்கும் சக்திசாலிகள் ஆகவேண்டும். ஏழ்மையை அகற்றுவதற்காக மக்கள் முரசங்களை அடிப்பதைப் போன்று, நீங்களும் அவர்களின் சக்தியற்ற நிலையை அகற்ற வேண்டும். இத்தகைய கருவிகளாகி, உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தையின் உதவியையும் தைரியத்தையும் கொடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் புத்தியின் நம்பிக்கை உடையவராகி, கவலையற்றவராக இருந்து, அன்பு அக்கினியால் சகல கவலைகளையும் முடிப்பவர் ஆகுவீர்களாக.
புத்தியில் நம்பிக்கை கொண்டுள்ள குழந்தைகள் சகல சந்தர்ப்பங்களிலும் கவலையற்றவராக இருப்பார்கள். அவர்களின் கவலைகள் அனைத்தும் முடிந்துவிடும். தந்தை அவர்களைக் கவலைச் சிதையில் இருந்து அகற்றி, தனது இதய சிம்மாசனத்தில் அமர்த்தியுள்ளார். நீங்கள் தந்தையிடம் அன்பு வைத்திருக்கிறீர்கள். இந்த அன்பின் அடிப்படையில், உங்களின் கவலைகள் அனைத்தும் அன்பு அக்கினியில் அவை ஒருபோதும் இல்லாததைப் போன்று முடிந்துவிடும். சரீரத்தைப் பற்றிய எந்தவிதக் கவலையும் இல்லை. மனதில் ஏதாவது வீணானதைப் பற்றிய கவலை இல்லை. ‘என்ன நிகழும்?’ என செல்வத்தைப் பற்றிய கவலை இல்லை. ஞானத்தின் சக்தியால் நீங்கள் இப்போது அனைத்தையும் அறிவீர்கள். எனவே, நீங்கள் சகல கவலைகளுக்கும் அப்பால் சென்றுள்ளீர்கள். உங்களின் வாழ்க்கை கவலையற்றவர் ஆகியுள்ளது.
சுலோகம்:
எந்த வகையான பிரச்சனையும் உங்களின் புத்தியின் பாதம் அசைக்காத வகையில் ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுங்கள்.