30.11.2018 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இதுவே பிராமணர்களாகிய உங்களின் புதிய விருட்சமாகும். புதிய விருட்சத்தைச் சிட்டுக்குருவிகள் உண்டு விடும் என்பதால் நீங்கள் அதனை நன்றாக பராமரித்து அதனை வளர்க்க வேண்டும்.
கேள்வி:
பிராமண விருட்சத்தின் புதிய இலைகள் ஏன் வாடுகின்றன? இதற்கு என்ன காரணம் அத்துடன் இதற்கு என்ன தீர்வு ?
பதில்:
தந்தை விளங்கப்படுத்துகின்ற ஞானத்தின் அற்புதமான இரகசியங்களை ஆத்மாக்கள் புரியாத பொழுது, அவர்களின் மனத்தில் சந்தேகங்கள் எழுகின்றன. இதனாலேயே புதிய இலைகள் வாடி விடுவதால் கற்பதை நிறுத்துகின்றனர். அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு மிகவும் திறமைசாலியான குழந்தைகள் தேவைப்படுகின்றனர். நீங்கள் எதைப் பற்றியாவது ஏதாவது சந்தேகங்களைக் கொண்டிருந்தால், மூத்தோரிடம் வினவுங்கள். நீங்கள் இன்னமும் ஒரு பதிலைப் பெறவில்லையானால், நீங்கள் தந்தையை வினவலாம்.
பாடல்:
வந்து எங்களைச் சந்தியுங்கள், ஓ அன்பிற்கினியவரே.....
ஓம்சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடலைப் பல முறைகள் கேட்டுள்ளீர்கள். துன்ப வேளையில் அனைவரும் கடவுளைக் கூவியழைக்கின்றனர். ஆனால் அவரோ இப்பொழுது உங்களுடன் அமர்ந்திருந்து உங்கள் துன்பங்கள் அனைத்திலிருந்தும் உங்களை விடுதலை செய்கின்றார். உங்களைத் துன்பதாமத்திலிருந்து சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கின்ற சந்தோஷதாமத்தின் அதிபதி உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் வந்து உங்களின் முன்னிலையில் அமர்ந்திருந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இது மனிதர்களுக்கானதொரு பணியல்ல. பரமாத்மாவாகிய பரமதந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றினார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மனிதர்களால் மனிதர்களைத் தேவர்களாக மாற்ற முடியாது. ~மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் எடுக்கவில்லை|. இது யாருடைய புகழ் ? இது பாபாவுடைய புகழ் ஆகும். தேவர்கள் நிச்சயமாகச் சத்தியயுகத்தில் இருக்கிறார்கள். தேவர்கள் இந்நேரத்தில் இருக்கவில்லை. எனவே, இது நிச்சயமாகச் சுவர்க்கத்தை உருவாக்குபவரே மனிதர்களைத் தேவர்களாக்குகின்றார்;;. சிவன் என்று அழைக்கப்படுகின்ற பரமாத்மாவாகிய பரமதந்தையே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு இங்கு வர வேண்டும். இப்பொழுது, அவர் எவ்வாறு வர முடியும்? அவர் தூய்மையற்ற உலகில் கிருஷ்ணரின் சரீரத்தைக் கொண்டிருக்க முடியாது. மனிதர்கள் குழப்பம் அடைகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நேரடியாக அவரைச் செவிமடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இவ்வுலகின் வரலாறும் புவியியலும் தெரியும். வரலாற்றுடன் நிச்சயமாகப் புவியியலும் இருக்கும். மனித உலகில் புவியியலும் வரலாறும்; இருக்கின்றன. சூட்சும வதனத்தின் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் பற்றி எவ்விதமான வரலாறோ, புவியியலோ ஒருபொழுதும் இருக்கமுடியாது. அங்கே சூட்சும வதனத்தில் அசைவும், இங்கே பேச்சும் இருக்கின்றன. பாபா இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகினதும் வரலாற்றையும் புவியியலையும் கூறுவதுடன் உங்களுக்கு அசரீரி உலகின் செய்திகளையும் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு மூன்று உலகங்களைப் பற்றிய அனைத்து விடயங்களையும் கூறுகின்றார். பிராமணர்களின் புதிய விருட்சம் இப்பொழுது நாட்டப்படுகின்றது. இது ஒரு விருட்சம் என அழைக்கப்படுகின்றது; ஏனைய வழிகளும் பிரிவுகளும் விருட்சங்கள் என அழைக்கப்பட மாட்டாது. கிறிஸ்தவர்களின் விருட்சம் இவ்விருட்சத்திலிருந்து வேறுப்பட்டது எனக் கிறிஸ்தவர்கள் நம்பினாலும் இப்பெரிய விருட்சத்திலிருந்தே அனைத்துக் கிளைகளும் வெளித்தோன்றின என்பது அவர்களுக்குத் தெரியாது. எவ்வாறு மனித உலகம் உருவாக்கப்பட்டது என்று நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தாயும் தந்தையும் பின்னர் குழந்தைகளும் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் அனைவரும் ஒரேசமயத்தில் வெளித்தோன்ற மாட்டார்கள். இரண்டு இலைகள், பின்னர் நான்கு இலைகள் அல்லது ஐந்து இலைகள் வெளித்தோன்றுகின்றன, சில சிட்டுக்குருவிகளால் உண்ணப்படுகின்றன. இங்கும் ~ஓம்| சிட்டுக்குருவிகள் அவற்றை உண்கின்றன. இது மிகவும் சிறிய விருட்சமாகும். அது முன்னைய கல்பத்தில் நிகழ்ந்ததைப் போன்று வளர்ச்சி படிப்படியாகவே இடம்பெறுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிக ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள்! முக்காலத்தையும் அறிந்த திரிகாலதரிசிகளும் மூன்று உலகங்களையும் அறிந்த திரிலோக்நாத்களும் ஆவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் ~திரிலோக்நாத்| அல்லது திரிகாலதரிசி என அழைக்கப்பட மாட்டார்கள். மக்கள் கிருஷ்ணரை ~திரிலோகிநாத்| என்று அழைக்கின்றார்கள். சேவை செய்பவர்கள் தங்களுடைய பிரஜைகளை உருவாக்குவார்கள். உங்களுடைய வாரிசுகளையும் உங்களுடைய பிரஜைகளையும் நீங்கள் உருவாக்க வேண்டும். நீங்கள் ~திரிலோக்நாத்| என்பது உங்களுடைய புத்தியில் இருக்க வேண்டும். இவை அத்தகைய அற்புதமான விடயங்கள் ஆகும்! சில குழந்தைகளால் மிகச்சரியாக விளங்கப்படுத்த இயலாதிருக்கின்றது, எனவே, ஆக்கத்திற்குப் பதிலாக, அவர்கள் அழிவை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் வெளித்தோன்றியுள்ள இலைகளை வாடச் செய்கிறார்கள். அவர்கள் பின்னர் கற்பதை நிறுத்திவிடுகிறார்கள். இதுவும் முன்னைய கல்பத்தில் நிகழ்ந்தது என்று ஒருவர் கூறுவார், எனவே, இது ~கடந்தது கடந்து விட்டது|! எனப் பார்க்க வேண்டும்! குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முழு உலகின் வரலாற்றினதும், புவியியலினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், மக்கள் பல கட்டுக்கதைகளைக் கூறுகிறார்கள். அவர்கள் புத்தகங்களை எழுதி அனைத்து வகையான விடயங்களையும் பற்றிய நாடகங்களையும் உருவாக்குகிறார்கள். பாரதத்தில், அவர்கள் பலரையும் அவதாரங்கள் என நம்புகிறார்கள். பாரதம் தன்னை மூழ்கடித்துக் கொண்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது குறிப்பாகப் பாரதமாகிய படகையும் பொதுவாக உலகையும் மீட்கின்றீர்கள். உலகச்சக்கரம் தொடர்ந்து சுழல்கின்றது. சூரியன் மறைகின்றபொழுது மக்கள் அது கடலின் அடியில் செல்வதாகக் கூறுவது போன்று நாங்கள் மேலே இருக்கும்பொழுது, நரகம் கீழே இருக்கின்றது. எவ்வாறாயினும், உண்மையில் அது நிகழ்வதில்லை. துவாரகை கடலினடியில் மூழ்கியதாக அவர்கள் எண்ணுகிறார்கள். மனிதர்களின் புத்திகள் மிகவும் அற்புதமானவை! நீங்கள் இப்பொழுது மிகவும் மேன்மையானவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் துன்பவேளையில் ஓர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்கின்றீர்கள். தேவர்கள் ஏற்கெனவே அதைப் பெற்றுள்ளார்கள். இங்கு துன்பத்தை அனுபவித்த பின், நீங்கள் இப்பொழுது எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். எதிர்கால 21 பிறவிகளுக்குச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக ஆகுகின்றீர்கள் என்ற பெரும் சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். கீதா ஞானத்தைச் செவிமடுப்பது என்றால் சத்சங்கத்தில் இருப்பது என்று அர்த்தமாகும் என்று மக்கள் கூறுகின்றார்கள். சாய்பாபா போன்ற எண்ணற்ற சத்சங்கங்கள் இருக்கின்றன. பெரிய சந்தை இருக்கின்றது, ஆனால் இதுவோ பிரம்மாகுமாரிகளின் ஒரேயொரு கடை ஆகும். ஜெகதாம்பா பிரம்மாவின் வாய்வழித்தோன்றல் ஆவார். பிரம்மாவின் புதல்வியாகிய சரஸ்வதி மிகவும் பிரபல்யமானவர்;. தாய்தந்தையினூடாக நீங்கள் எல்லையற்ற பொக்கிஷங்களைப் பெற்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது தாயையும் தந்தையையும் கண்டுகொண்டுள்ளீர்கள். அவர்கள் உங்களுக்குப் பல சந்தோஷப் பொக்கிஷங்களைக் கொடுக்கின்றார்கள். நல்லது, தாய்க்கும் தந்தைக்கும் யார் பிறப்பு கொடுத்தது? சிவபாபா. நாங்கள் சிவபாபாவிடமிருந்து இரத்தினங்களைப் பெறுகின்றோம். நீங்கள் அவருடைய பேரக்குழந்தைகள் ஆவீர்கள். தந்தையும் தாயுமாகிய பிரம்மாவினூடாகவும் சரஸ்வதியினூடாகவும் அந்த எல்லையற்ற தந்தையிடமிருந்து நாங்கள் இப்பொழுது எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகின்றோம். அவர் அருள்பவர் ஆவார். இது அத்தகைய இலகுவான விடயம் ஆகும். பின்னர் எவ்வாறு நாங்கள் இப் பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் எவ்வாறு நாங்கள் அங்கு சந்தோஷப் பொக்கிஷங்களைப் பெறுவோம் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நாங்கள் பாரதத்தின் சேவகர்கள் ஆவோம். நாங்கள் எங்களுடைய மனம், சரீரம், செல்வத்தினூடாகச் சேவை செய்து கொண்டிருக்கின்றோம். மக்கள் காந்திக்கு உதவுவது வழக்கமாகும். யாதவர்கள், பாண்டவர்கள், கௌரவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த முடியும். பரமாத்மாவாகிய பரமதந்தை பாண்டவர்களின் பக்கத்தில் இருக்கின்றார். விநாசவேளையில், பாண்டவர்கள் ஓர் அன்பான புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள், கௌரவர்களும் யாதவர்களுமோ தங்களுடைய புத்தியில் கடவுளின்மீது அன்பைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையில் நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் அவரைக் கூழாங்கற்கள், கற்கள் போன்றவற்றில் இட்டுள்ளார்கள். நீங்கள் அவரைத் தவிர எவரிடமும் அன்பைக் கொண்டிருப்பதில்லை. எனவே, நீங்கள் மிகவும் மலர்ச்சியுடன் இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய விரல் நுனியிலிருந்து உங்களுடைய உச்சந்தலை வரை சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். பல குழந்தைகள் இருக்கின்றார்கள். தாய் தந்தையினூடாகச் செவிமடுக்கின்ற நீங்கள் சந்தோஷத்தை அனுபவிக்கின்றீர்கள். முழு உலகிலும் உங்களைப் போன்ற பாக்கியசாலிகள் இல்லை. எவ்வாறாயினும், உங்கள் மத்தியில், சிலர் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள், சிலர் நூறு மடங்கு பாக்கியசாலிகள், ஏனையவர்களோ பாக்கியசாலிகளும் துர்ப்பாக்கியசாலிகளும் ஆவார்கள். வியப்படைந்து பின்னர் ஓடிவிடுபவர்கள் பெரும் துர்ப்பாக்கியசாலிகள் எனக் கூறப்படுகின்றார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் தந்தையை விட்டு நீங்கிச்; செல்கின்றார்கள். தந்தை மிகவும் இனிமையானவர்;. அவர் அவர்களுக்குக் குறிப்பிட்ட கட்டளைகளைக் கொடுத்தால், அவர்கள் அவரை விட்டு நீங்கிச் செல்லக்கூடும் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். நீங்கள் விகாரத்தில் ஈடுப்பட்டால், நீங்கள் குலத்தின் பெயரைக் களங்கப்படுத்துகின்றீர்கள். நீங்கள் குலத்தின் பெயரை களஙகப்படுத்தினால்; பெரும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று அவர் விளங்கப்படுத்துகின்றார். அத்தகைய நபர் சத்குருவின் பெயரை களங்கப்படுத்துபவர் என்று அழைக்கப்படுகின்றார். மக்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு இது தங்களுடைய லௌகீகக் குருவிற்குப் பொருந்துகின்றது என்று எண்ணுகிறார்கள். ஆண்களும் தங்களுடைய கள்ளங்கபடமற்ற மனைவிகளை இதனால் பயமுறுத்துகிறார்கள். அமரத்துவப் பிரபுவாகிய பாபா உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றார். பாபா கூறுகின்றார்: நான் ஆசிரியரும் சேவகனும் ஆவேன். மாணவர்கள் தங்களுடைய ஆசிரியரின் பாதங்களைக் கழுவிப் பின்னர் அந்த நீரைப் பருகுகின்றார்களா? உலகின் அதிபதிகளாகப் போகின்ற குழந்தைகளை நான் என்னுடைய பாதங்களைக் கழுவச் செய்ய முடியுமா? இல்லை. அந்த அசரீரியானவரும் ஆணவமற்றவருமானவரின் புகழ் நினைவுகூரப்படுகின்றது. இவரும் அவருடைய சகவாசத்தில் ஆணவமற்றவர் ஆகுகின்றார். கள்ளங்கபடமற்றவரை அடிப்பதும் நினைவுகூரப்பட்டு வருகின்றது. இவ்வன்முறைகளும் முன்னைய கல்பத்தில் நடைபெறுகின்றன. பாவக்கலசம் நிறைந்து இரத்த ஆறுகள் பாயும். நீங்கள் இப்பொழுது உங்களுடைய எல்லையற்ற இராச்சியத்தை யோகசக்தியுடன் பெறுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது ஆட்ட அசைக்க முடியாத இராச்சியத்தைத் தந்தையிடமிருந்து கோரிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் நிச்சயமாகச் சூரியவம்சத்தினராக ஆகுவோம். ஆம், இதற்குத் தைரியம் தேவையாகும். ஏதாவது விகாரங்கள் உங்களில் இருக்கின்றனவா என்பதைப் பார்ப்பதற்கு உங்களுடைய முகத்தைத் தொடர்ந்து சோதியுங்கள். நீங்கள் ஏதாவது புரிந்து கொள்ளாதுவிடின், நீங்கள் சிரேஷ்டமானவர்களை வினவலாம், சந்தேகங்களை அகற்ற முடியும். ஓர் ஆசிரியரால் உங்களுடைய சந்தேகங்களை அகற்ற முடியாதுவிடின், பாபாவிடம் வினவுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்வதற்கு இன்னமும் பலவிடயங்கள் உள்ளன. பாபா தொடர்ந்தும் நீங்கள் வாழும்வரை உங்களுக்கு விளங்கப்படுத்துவார். அவர்களின் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு நீங்கள் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் என்று நீங்கள் அவர்களுக்குக் கூறலாம், நீங்கள் அதைப் பற்றி பாபாவிடம் வினவ முடியும். அல்லது, பாபா அக்கருத்தை இன்னமும் விளங்கப்படுத்தவில்லை என்றும் அவர் அதை எதிர்காலத்தில் விளங்கப்படுத்துவார் என்றும், அப்பொழுது அவர்கள் அதைப் பற்றி வினவலாம். பல கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. சிலர் யுத்தத்தைப் பற்றி என்ன நடக்கும் என்று வினவுகின்றார்கள். பாபா திரிகாலதரிசி ஆவார். அவரால் விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், பாபா இன்னமும் அந்த விடயத்தை விளங்கப்படுத்தவில்லை, அதனால் நீங்கள் அவருக்கு ஒரு விண்ணப்பத்தை விண்ணப்;பித்துவிடுங்கள், ஆனால் அது அவரைப் பொறுத்தது என்று அவருக்குக் கூறுங்கள். இவ்வாறாக நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். பாபா குழந்தைகளிடம் பூந்தோட்டத்தில் ஒரு வினாவை வினவினார்: பாபா ஞானக்கடல், எனவே, அவர் ஞான நடனம் ஆட வேண்டும். நல்லது, சிவபாபா பக்திமார்க்கத்தில் அனைவருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்கின்ற பாகத்தை நடிக்கின்றபொழுது, அவர் சங்கமயுகத்தில் பாரதத்திற்குச் சென்று குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களை அவர் சுவர்க்கத்தின் அதிபதிகளாக்க வேண்டும் என்று அந்நேரத்தில் அவர் எண்ணியிருப்பாரா? இவ்வெண்ணம் அந்நேரத்தில் தோன்றியதா அல்லது அது அவர் வருகின்ற நேரத்தில் தோன்றியதா? அப்பொழுது நிச்சயமாக இந்த எண்ணம் இருக்கவில்லை என்று பாபா எண்ணுகிறார். 84 பிறவிகளின் பாகம் உங்களில் அமிழ்ந்திருப்பது போன்று, இந்த ஞானம் அவரில் அமிழ்ந்திருந்தாலும், அவர் வருகின்ற நேரத்தில் மாத்திரம் அது வெளிப்படும். புதிய உலகைப் படைப்பதற்கான எண்ணத்தைக் கடவுள் கொண்டிருந்தார் என்று கூறப்படுகின்றது. அந்த எண்ணம் சரியான நேரத்திலேயே வரும். அவரும் நாடகத்தில் கட்டுண்டுள்ளார். இவை மிகவும் ஆழமான விடயங்களாகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
இரவு வகுப்பு : 13.01.1969
குழந்தைகள் வந்து இங்கு அமரும்பொழுது, பாபா உங்களை வினவுகிறார்: குழந்தைகளே, நீங்கள் சிவபாபாவை நினைவு செய்கிறீர்களா? பின்னர், புதிய உலகின் இராச்சியத்தையும் நினைவு செய்கிறீர்களா? எல்லையற்ற தந்தையின் பெயர் சிவன். பல மொழிகளின் காரணமாக, அவருக்குப் பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பம்பாயில் பாபுல்நாத் (முட்களின் பிரபு) என்று அழைக்கப்படுகின்ற ஆலயம் உள்ளது, ஏனெனில் அவர் முட்களை மலர்களாக மாற்றுகின்றார். சத்தியயுகத்தில் மலர்கள் உள்ளன, ஆனால் இங்கோ அனைவரும் முட்கள் ஆவார்கள்;. எனவே, பாபா ஆன்மீகக் குழந்தைகளை வினவுகிறார்: எவ்வளவு காலத்திற்கு நீங்கள் எல்லையற்ற தந்தையின் நினைவில் நிலைத்திருப்பீர்கள்? அவருடைய பெயர் நன்மையளிப்பவராகிய சிவன் ஆகும். நீங்கள் அவரை எந்தளவிற்கு நினைவு செய்கிறீர்களோ, உங்கள் எண்ணற்ற பிறவிகளின் பாவம் அந்தளவிற்கு அழிக்கப்படும். சத்தியயுகத்தில் பாவங்கள் இல்லை. அது தூய புண்ணியாத்மாக்களின் உலகமாகும், இதுவோ பாவாத்மாக்களின் உலகமாகும். ஐந்து விகாரங்களே உங்களைப் பாவம் செய்ய வைக்கின்றன. இராவணன் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அவர் முழு உலகினதும் எதிரியாவான். இந்நேரத்தில், முழு உலகிலும் இராவண இராச்சியமே உள்ளது. அனைவரும் சந்தோஷமற்றும் தமோபிரதானாகவும் இருக்கின்றனர். இதனாலேயே பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இவ்வார்த்தைகள் கீதையிலிருந்து பெறப்பட்டவையாகும். தந்தையே கூறுகிறார்: உங்களுடைய சரீரத்தினதும் சரீர உறவுகளினதும்; உணர்வைத் துறந்து என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். முதலில், நீங்கள் சந்தோஷ உறவுமுறைகளில் இருந்தீர்கள், பின்னர் நீங்கள் இராவணனின் பந்தனத்திற்குள் வந்தீர்கள். இப்பொழுது, மீண்டும் ஒருமுறை, நீங்கள் சந்தோஷ உறவுமுறைகளுக்குள் வர வேண்டும். உங்களை ஓர் ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை இக்கற்பித்தல்களைச் சங்கமயுகத்தில் கொடுக்கின்றார். தந்தையே கூறுகிறார்: நான் பரந்தாம வாசி ஆவேன். உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக நான் இச் சரீரத்தில் பிரவேசித்துள்ளேன். தந்தை கூறுகின்றார்: முதலில் தூய்மையாகாமல் உங்களால் என்;னிடம் வர முடியாது. இப்பொழுது, நீங்கள் எவ்வாறு தூய்மை ஆகுவீர்கள்? என்னை நினைவு செய்யுங்கள். பக்திமார்க்கத்திலும், என்னை மாத்திரம் வழிபட்டவர்கள் இருந்தார்கள். அது கலப்படமற்ற வழிபாடு என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது, நானே தூய்மையாக்குபவர்;. எனவே என்னை நினைவு செய்யுங்கள், உங்களுடைய எண்ணற்ற பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். 63 பிறவிகளின் பாவங்கள் உள்ளன. சந்நியாசிகளால் ஒருபொழுதும் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. தந்தையால் மாத்திரமே அதைக் கற்பிக்க முடியும். உண்மையில், அச் சமயநூல்கள், பக்தி போன்றவை அனைத்தும் இல்லறத்தவர்களுக்கு உரியதாகும். சந்நியாசிகள் சென்று காடுகளில் அமர்ந்திருந்து பிரம்ம தத்துவத்தை நினைவு செய்கிறார்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: நானே அனைவருக்கும் சற்கதியை அருள்கிறேன். எனவே, என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் போன்றவர் ஆகுவீர்கள். இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளது. எவ்வளவு அதிகமாக நீங்கள் கற்று ஏனையோர்களுக்கும் கற்பிக்கின்றீர்களோ, அந்தளவுக்கு உயர்ந்த அந்தஸ்தை நீங்கள் தேவ இராச்சியத்தில் கோருவீர்கள். ஒரேயொரு தந்தையே அல்பா ஆவார். ஒரு படைப்பு ஒரு படைப்பிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறமுடியாது. அவர் எல்லையற்ற தந்தை ஆவார், எனவே ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். சத்தியயுகத்தில், நீங்கள் சற்கதியில் இருப்பீர்கள். ஏனைய அனைத்து ஆத்மாக்களும் வீட்டிற்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள். ~முக்தி|~ஜீவன்முக்தி|, ~சத்கதி| என்கின்ற வார்த்தைகள் சாந்திதாமத்திற்கும் சந்தோஷதாமத்திற்கும் உரியவையாகும். தந்தையின் நினைவைக் கொண்டிருக்காமல் உங்களால் வீட்டிற்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது. ஆத்மாக்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். இங்கு, அனைவரும் நாஸ்திகர்கள்: அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. நீங்கள் இப்பொழுது ஆஸ்திகர்கள் ஆகிவிட்டீர்கள். கடவுளின் மீது அன்பைக் கொண்டிருக்காதவர்களின் புத்திகள் அழிக்கப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது விநாசத்திற்கான நேரம் ஆகும். சக்கரம் நிச்சயமாகச் சுழல வேண்டும். கடவுளின்மீது அன்பைக் கொண்டிருப்பவர்களின் புத்திகள் வெற்றியடைகின்றன. தந்தை அனைத்து விடயங்களையும் ஓர் எளிமையான முறையில் விளங்கப்படுத்துகிறார், ஆனால் இராவணனாகிய மாயை உங்களை மறக்கச் செய்கின்றாள். இது இப்பொழுது இப்பழைய உலகின் இறுதியாகும். அது அமரத்துவ உலகாகும்; அங்கே அகாலமரணம் இல்லை. நாங்கள் தந்தைக்குக் கூறுகின்றோம்: வந்து எங்கள் அனைவரையும் உங்களுடன் திரும்ப அழைத்துச் செல்லுங்கள். எனவே, அவர் மகா காலன் ஆவார். சத்தியயுகத்தில் உள்ள விருட்சம் மிகச்சிறியதாகும். விருட்சம் இப்பொழுது மிகவும் பெரியதாகும். பிரம்மாவினதும் விஷ்ணுவினதும் தொழில் என்ன? விஷ்ணு ஒரு தேவர் என அழைக்கப்படுகின்றார். பிரம்மா ஆபரணங்கள் போன்ற எவற்றையும் கொண்டிருப்பதில்லை. அங்கு பிரம்மா, விஷ்ணு, அல்லது சங்கரர் இருப்பதில்லை. மனித குலத்தின் தந்தையாகிய பிரம்மா இங்கு இருக்கின்றார். நீங்கள் சூட்சும வதனத்தில் காட்சிகளை மாத்திரமே பெறுகிறீPர்கள். இங்கே பௌதீக, சூட்சும, அசரீரி உலகம் உள்ளன. சூட்சும வதனத்தில் ~அசைவு| உள்ளது. இது புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். நீங்கள் இராஜயோகத்தைக் கற்கின்ற கீதா பாடசாலை இதுவாகும். சிவபாபாவே உங்களுக்குக் கற்பி;க்கின்றார், எனவே நிச்சயமாக சிவபாபாவே நினைவுசெய்ய வேண்டியவராவார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு அன்பும் நினைவும் இரவு வந்தனமும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் துன்பவேளையில் எல்லையற்ற சந்தோஷம் என்னும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டைப் பெற்றுள்ளீர்கள். ஒரே தந்தைக்கான உண்மை அன்பைக் கொண்டிருங்கள். அவரை நினைவுசெய்து சதா சந்தோஷமாக இருங்கள்.
2. பாப்தாதாவைப் போன்று அசரீரியானவராகவும் ஆணவமற்றவராகவும் ஆகுங்கள். தைரியத்தைக் கொண்டிருந்து விகாரங்களை வெற்றி கொள்ளுங்கள். உங்களுடைய யோகசக்தியுடன் உங்கள் இராச்சியத்தைக் கோரிக்கொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
உப சாரதியாக இருப்பதன் மூலம் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருப்பதன் ஸ்திதியின் அனுபவத்தைக் கொடுக்கின்ற ஓர் முதல் இலக்க வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.
உபசாரதி என்றால் ஆத்ம உணர்வைக் கொண்டிருப்பவர் என்று அர்த்தமாகும். இந்த முறையினால் தந்தை பிரம்மா முதல் இலக்க வெற்றியாளர் ஆகினார். சரீரத்தைக் கட்டுப்படுத்தி உபசாரதி ஆகுவதால் தந்தை பிரவேசிக்கின்றார். அவர் சரீரத்தில் தங்கியிருப்பதில்லை, இதனாலேயே அவர் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருக்கின்றார். அவ்வாறே, தந்தையைப் போன்று, பிராமண ஆத்மாக்களாகிய நீங்களும் உபசாரதி ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருங்கள். நடந்து திரியும் போதெல்லாம் சோதியுங்கள்: நான் உபசாரதி ஸ்திதியில் இருக்கின்றேனா அதாவது அன்பும் பற்றற்ற ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருந்து சரீரத்தை இயக்குகின்றேனா? இந்த வழிமுறையினால் மாத்திரமே நீங்கள் முதல் இலக்க வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.
சுலோகம்:
தந்தைக்கு கீழ்ப்படிவாக இருந்தால், தேவையான போதெல்லாம் தொடர்ந்தும் மறைமுக ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உதவும்.