15.12.18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் இராஜரீகமான நடத்தையின் மூலம் நீங்கள் சேவை செய்து, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் புத்தியைச் சீராக்க வேண்டும். அத்துடன் நீங்கள் தாய்மார்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.கேள்வி:
எப்பணியானது ஒரேயொரு தந்தையினுடையதேயன்றி வேறு எவருடையதும் அல்ல?
பதில்:
முழு உலகிலும் அமைதியை நிலைநாட்டுவது தந்தையின் பணியே ஆகும். மக்கள் எத்தனை அமைதி மாநாடுகளை நடத்தினாலும், அவர்களால் அமைதியை நிலைநாட்ட முடியாது. அமைதிக்கடலான தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்விக்கும்பொழுதே, அமைதி நிலைநாட்டப்படுகின்றது. தூய உலகிலேயே அமைதி உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயத்தை மிகவும் சாமர்த்தியமான முறையில் சிறப்பாக விளங்கப்படுத்தும்பொழுது தந்தையின் பெயர் போற்றப்படும்.
பாடல்:
நான் ஒரு சிறுகுழந்தை, நீங்களோ சர்வசக்திவான்!
ஓம்சாந்தி.
பக்தி மார்க்கத்திலேயே இப்பாடல் பாடப்படுகின்றது, ஏனெனில் ஒருபுறம் பக்தியின் ஆதிக்கமும், மறுபுறம் ஞானத்தின் ஆதிக்கமும் உள்ளது. பக்திக்கும் ஞானத்திற்கும் இடையில்; இரவிற்கும் பகலிற்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. என்ன வித்தியாசம்? இது மிக இலகுவானது. பக்தி இரவும், ஞானம் பகலும் ஆகும். பக்தியில் துன்பமே உள்ளது. பக்தர்கள் சந்தோஷமற்று இருக்கும்போதே அவர்கள் கடவுளைக் கூவியழைக்கின்றார்கள். அப்பொழுது சந்தோஷமற்றிருப்பவர்களின் துன்பத்தை அகற்றுவதற்குக் கடவுள் வரவேண்டியுள்ளது. ஆகவே, நீங்கள் இப்பொழுது தந்தையைக் கேட்கிறீர்கள்: நாடகத்தில் ஏதாவது தவறு உள்ளதா? தந்தை கூறுகின்றார்: ஆம், நீங்கள் என்னை மறப்பதே பெரிய தவறாகும். உங்களை மறக்கச் செய்பவர் யார்? மாயை எனும் இராவணனே. தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, இந்நாடகம் நிச்சயிக்கப்பட்டது. சுவர்க்கமும் நரகமும் பாரதத்திலேயே இருக்கின்றது. யாராவது ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவர் வைகுந்தவாசி ஆகிவிட்டார் என்று பாரதத்தில் மாத்திரமே கூறுகிறார்கள். சுவர்க்கம் அல்லது வைகுந்தம் எப்பொழுது உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது. சுவர்க்கம் இருக்கும்போது மனிதர்கள் நிச்சயமாக மறுபிறவியைச் சுவர்க்கத்திலேயே எடுக்கிறார்கள். இது இப்பொழுது நரகமாகும், ஆகவே சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படும்வரை அவர்கள் நிச்சயமாக நரகத்திலேயே பிறப்பெடுப்பார்கள். மக்களுக்கு இவ்விடயங்கள் தெரியாது. ஒன்று இறை சமுதாயம், அதாவது இராமரின் சமுதாயம், மற்றையது இராவணனின் சமுதாயம் ஆகும். சத்திய, திரேதா யுகங்களில் இராமரின் சமுதாயமே உள்ளது. அவர்களிடம் எத்துன்பமும் இல்லை. அவர்கள் துன்பமற்ற குடிலிலேயே வாழ்கின்றார்கள். அரைக் கல்பத்தின் பின்னர், இராவண இராச்சியம் ஆரம்பமாகுகின்றது. தந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். அதுவே மிகவும் மேன்மையான தர்மமாகும். அனைத்துச் சமயங்களும் உள்ளன. அவர்கள் சமய மாநாடுகளை நடாத்துகிறார்கள். எண்ணற்ற சமயத்தவர்களும் பாரதத்திற்கு வந்து மாநாடுகளை நடாத்துகிறார்கள். எவ்வாறாயினும், சமயங்களிலே நம்பிக்கை கொண்டிராத பாரத மக்களால், எத்தகைய மாநாடுகளை நடாத்த முடியும்? உண்மையில், பாரதத்தின் புராதன தர்மம் ஆதி சனாதன தேவிதேவதா தர்மமாகும். இந்து சமயம் என எதுவும் இல்லை. தேவதர்மமே அனைத்திலும் அதியுயர்ந்ததாகும். அதிமேன்மையான தர்மத்தைச் சேர்ந்தவர்களையே கதியில் அமரச் செய்ய வேண்டும் என்பது நியதி. யாரை முன்னால் அமர்த்த வேண்டும்? சில வேளைகளில், அவர்கள் இதற்காகச் (ஆசனத்திற்காக) சண்டையிடுகின்றார்கள். ஒருமுறை கும்ப மேலாவில் இதையிட்டு ஒரு தகராறு ஏற்பட்டது. ஒரு குழுவினர் தாம் முதல் செல்ல வேண்டும் என்றும், இன்னொரு குழுவினர் தாமே முன்னால் செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள். அவர்கள் இதற்காகவே சண்டையிட்டார்கள். எச்சமயம் அனைத்திலும் உயர்ந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விளங்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு அது தெரியாது. ஆதி சனாதன தர்மமே தேவ தர்மம் என்றும், அது இப்பொழுது மறைந்துவிட்டதனால் அவர்கள் தம்மை இந்துக்கள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள் என்றும் தந்தை கூறுகிறார். சீனாவில் வாழ்பவர்கள் ஒருநாளும் தாம் சீன சமயத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறமாட்டார்கள். அவர்கள் யாருக்கு மிகவும் முக்கியமானவராகவும், முதன்மையானவராகவும் மதிப்பளிக்கின்றார்களோ, அவரையே கதியில் அமரச் செய்கிறார்கள். சட்டத்திற்கு ஏற்ப பலராலும் மாநாட்டிற்கு வரமுடியாது. சமயத் தலைவர்கள் மாத்திரமே வரவழைக்கப்படுகிறார்கள். அவ்வேளையில் பலரும் கருத்துக்கள் குறித்து விவாதிக்கின்றார்கள். அவர்களுக்கு ஆலோசனை கொடுக்க எவருமேயில்லை. நீங்களே அதி உயர்ந்த தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள்;. நீங்களே இப்பொழுது தேவ தர்மத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். அனைத்துச் சமயங்களினதும் தாயாகவும் தந்தையாகவும் திகழ்கின்ற, பாரதத்தின் பிரதான சமயத்தின் தலைவரே இம்மாநாட்டின் தலைவர் ஆக்கப்பட வேண்டும் என்று உங்களால் மாத்திரமே கூறமுடியும். அவரே பிரதான ஆசனத்தில் அமர்ந்திருக்கவும் வேண்டும். ஏனையவர்கள் அனைவரும் அவருக்குக் கீழேயே வருவார்கள். பிரதான குழந்தைகளின் புத்தியானது இதன் அடிப்படையிலே செயற்பட வேண்டும். கடவுள் அமர்ந்திருந்து அர்ஜுனனுக்கு விளங்கப்படுத்துகிறார். அவரே சஞ்சய் ஆவார். அர்ஜுனனே, இரத ஒட்டுனர். ஒரேயொரு தந்தையே அந்த இரதத்தைச் செலுத்துபவர். எனினும் மக்கள் அவர் தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு கிருஷ்ணரின் சரீரத்தினுள் புகுந்து ஞானத்தைக் கொடுத்தார் என்றும் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அது அவ்வாறல்ல. இப்பொழுது பிரஜாபிதாவும் இருக்கிறார். இது திரிமூர்த்தியின் படத்தைப் பயன்படுத்தி, மிகத்தெளிவாக விளங்கப்படுத்த முடியும். நீங்கள் நிச்சயமாகத் திரிமூர்த்தியின் உருவின் மேலே சிவபாபாவின் உருவத்தைக் காட்ட வேண்டும். அது சூட்சும உலகின் படைப்பாகும். குழந்தைகள் விஷ்ணுவே பராமரிப்பவர் என்பதை விளங்கிக்கொள்கின்றார்கள். பிரஜாபிதா பிரம்மாவே ஸ்தாபிப்பவர். ஆகவே அவரின் படமும் தேவைப்படுகின்றது. இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். நிச்சயமாக, பிரஜாபிதா இருக்கின்றார் என்பது உங்கள் புத்தியில் புகுகின்றது. விஷ்ணுவும் தேவைப்படுகின்றார். எவர் மூலம் அவர் ஸ்தாபிக்கின்றாரோ அவர் மூலமே பரிபாலனையையும் செய்கின்றார். அவர் பிரம்மா மூலமே ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். பிரம்மாவுடன் சரஸ்வதியும் பல குழந்தைகளும் இருக்கின்றார்கள். உண்மையில், இவரும் தூய்மையற்றவரில்pருந்து தூய்மையானவர் ஆகுகின்றார். ஆகவே, மாநாட்டின் தலைவர் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் தலைவியான ஜெகதாம்பாளாகவே இருக்க வேண்டும், ஏனெனில் தாய்மார்களுக்குப் பெருமளவு மரியாதை இருக்கின்றது. ஜெகதாம்பாளிற்குப் பெரியதொரு மேலா இடம்பெறுகின்றது. அவர் ஜெகத்;பிதாவின் புதல்வியாவார். ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. கீதையின் அத்தியாயம் இப்பொழுது மீண்டும் இடம்பெறுகின்றது. அதாவது எங்கள் முன்னால் அதே மகாபாரத யுத்தம் இடம்பெறுகின்றது. தந்தை கூறுகின்றார்: சீரழிந்த உலகை மேன்மையானதாக ஆக்குவதற்காக நான் ஒவ்வொரு சக்கரத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றேன். ஜெகதாம்பாளே ஞான தேவியாக நினைவுகூரப்படுகின்றார். அவருடன் கூடவே ஞான கங்கைகளும் இருக்கின்றார்கள். நீங்கள் அவர்களிடம் கேட்கலாம்: நீங்கள் யாரிடமிருந்து ஞானத்தைப் பெற்றீர்கள்? ஞானம் நிறைந்த கடவுளாகிய தந்தை ஒரேயொருவரே. அவரால் எவ்வாறு உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்க முடியும்? அவர் நிச்சயமாக ஒரு சரீரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, அவர் பிரம்மாவின் கமலவாய் மூலம் பேசுகின்றார். இத்தாய்மார்கள் அங்கு அமர்ந்திருந்து விளங்கப்படுத்துவார்கள். மாநாட்டிலே, அனைத்திலும் மகத்தானது எச்சமயம் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்திற்குரியவர்கள் என்பதை எவருமே நம்புவதில்லை. தந்தை கூறுகின்றார்: இந்தத் தர்மமானது மறைந்துபோகும்பொழுதே நான் வந்து மீண்டும் ஒருமுறை இதனை ஸ்தாபிக்கின்றேன். தேவ தர்மம் இப்பொழுது இல்லை. ஏனைய மூன்று சமயங்களும் தொடர்ந்தும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, தேவ தர்மமானது நிச்சயமாக மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும். பின்னர் அந்தச் சமயங்கள் எதுவும் இருக்க மாட்டாது. ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிப்பதற்கே தந்தை வருகின்றார். அமைதி எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகின்றது என்று புதல்விகளாகிய உங்களால் மாத்திரமே அவர்களுக்குக் கூறமுடியும். பரமாத்மா பரமதந்தையே அமைதிக்கடலாவார். ஆகவே, அவர் நிச்சயமாக அமைதியை ஸ்தாபிப்பார். அவரே ஞானக்கடலும், சந்தோஷக்கடலும் ஆவார். மக்கள் பாடுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து பாரதத்தை இராமரின் தூய இராச்சியம் ஆக்குங்கள். அவர் மாத்திரமே அதனை அமைதியானதாக ஆக்குவார். இது தந்தையின் பணி மாத்திரமே. நீங்கள் அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலமே ஒரு மேன்மையான அந்தஸ்தைப் பெற்றுக்கொள்கின்றீர்கள். தந்தை கூறுகிறார்: எனக்குரியவர்களாகி, இராஜயோகத்தைக் கற்று, தூய்மைக்கான சத்தியத்தைச் செய்பவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, நான் தூய்மையாகி 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெற்று, அதிபதி ஆகுவேன். அவர்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவார்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமே அனைவரிலும் மிக மேன்மையான, தூய மனிதர்களாவர். தூய உலகானது இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் அமைதிக்காக மாநாடுகளை நடாத்தினாலும், மனிதர்களால் அமைதியை ஏற்படுத்த முடியாது. இது அமைதிக்கடலான தந்தையின் பணியேயாகும். பிரமுகர்கள் மாநாடுகளுக்குச் செல்கின்றார்கள். பலரும் பிரதிநிதிகள் ஆகுகின்றார்கள், ஆகவே அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட வேண்டும். தந்தை மகனைக் காட்டுகின்றார். சிவபாபாவின் பேரக்குழந்தைகளும், பிரம்மாவின் குழந்தைகளும் ஞான தேவதேவியர் ஆவார்கள். கடவுளே அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்தார். மனிதர்கள் சமயநூல்களின் ஞானத்தைக் கற்கின்றார்கள். நீங்கள் அத்தகைய சிறப்புடன் விளங்கப்படுத்துவீர்களாயின், அவர்களும் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் இதற்காக ஒரு யுக்தியை நிச்சயமாக உருவாக்க வேண்டும். ஒருபுறம் அவர்களின் மாநாடும், மறுபுறத்தில் மிகவும் சிறப்பாக உங்கள் மாநாடும் இருக்கின்றது. படங்கள் மிகவும் தெளிவாக உள்ளதால், மக்களால் மிக விரைவிலேயே அவற்றின் மூலம் புரிந்துகொள்ள முடியும். அவர்களின் பணி வேறுபட்டது, அவரின் பணியும் வேறுபட்டது. அனைத்தும் ஒரே மாதிரி என்றில்லை. அனைத்துச் சமயங்களினதும் பாகங்களும் வேறுபட்டவை. அவர்கள் ஒன்றுசேர்ந்து அமைதிக்கான பணியை மேற்கொள்கின்றனர். அவர்கள் கூறுகின்றார்கள்: தர்மமே சக்தி. எவ்வாறாயினும், அதி சக்திவாய்ந்தவர் யார்? அந்த ஒரேயொருவரே வந்து ஆதிதர்மமான தேவதர்மத்தை ஸ்தாபிக்கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். நாளுக்கு நாள், குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் கருத்துக்களைப் பெறுகின்றீர்கள். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தக்கூடிய சக்தியையும் கொண்டிருக்க வேண்டும். யோகி ஒருவர் மிக நல்ல சக்தியைக் கொண்டிருப்பார். பாபா கூறுகின்றார்: நான் ஞானி ஆத்மாக்களையே விரும்புகின்றேன். இது அவர் யோகி ஆத்மாக்களை விரும்பவில்லை என்பதல்ல. ஞானிகள் நிச்சயமாக யோகிகளாகவும் இருப்பார்கள். நீங்கள் பரமாத்மா, பரமதந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்கிறீர்கள். யோகமின்றித் தாரணை இருக்க முடியாது. யோகம் செய்யாதவர்கள் தாரணையையும் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பெருமளவு சரீர உணர்வினைக் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். “நீங்கள் உங்கள் அசுர புத்தியைத் தெய்வீகப் புத்தியாக்க வேண்டும்” என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். தந்தையாகிய கடவுள், கல்லுப்புத்தி கொண்டவர்களைத் தெய்வீகப் புத்தி கொண்டவர்களாக ஆக்குகின்றார். இராவணனே வந்து உங்களைக் கல்லுப்புத்தி உடையவர்கள் ஆக்குகின்றான். அவர்களின் பெயர் அசுர சமுதாயம் என்பதாகும். அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களின் முன்னால் கூறுகின்றார்கள்: “நான் நற்குணமற்றவன், நான் காமத்தைக் கொண்ட ஏமாற்றுக்காரன்.” தாய்மார்களாகிய உங்களால் மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். உங்களிடம் ஞானத்தைப் பகிர்ந்து கொள்வதற்குரிய அத்தகைய உற்சாகம் இருக்க வேண்டும். நீங்கள் பெருங்கூட்டங்களிலும் அத்தகைய விடயங்களை விளங்கப்படுத்த வேண்டும். மம்மா ஞான தேவியாவார். பிரம்மா ஒருபொழுதும் ஞானதேவன் என அழைக்கப்படுவதில்லை. சரஸ்வதியின் பெயர் நினைவுகூரப்படுகின்றது. ஒருவரது பெயர் எதுவோ அதுவே அவருக்கு வழங்கப்படும் பெயராகும். தாய்மாரின் பெயரானது போற்றப்பட வேண்டும். சில சகோதரர்கள் பெருமளவு சரீர உணர்வினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் நினைக்கின்றார்கள்: பிரம்ம குமாரர்களாகிய நாங்கள் ஞான தேவர்கள் இல்லையா? ஓ! பிரம்மாவே தன்னை ஒருபொழுதும் ஞான தேவன் என்று அழைப்பதில்லை. தாய்மார்களுக்குப் பெருமளவு மதிப்பு வழங்கப்பட வேண்டும். இத்தாய்மார்களே உங்கள் வாழ்வை மாற்றுபவர்கள். அவர்களே மனிதர்களைத் தேவர்கள் ஆக்குபவர்கள். தாய்மார்களும் குமாரிகளும் இருக்கின்றார்கள். எவருமே ‘அரைக்குமாரி’ என்பதன் இரகசியத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் திருமணம் செய்தபோதிலும் பிரம்மகுமாரிகளே. இவை மிகவும் அற்புதமானவை! தந்தையிடமிருந்து தமது ஆஸ்தியைப் பெற இருப்பவர்கள் இதனைப் புரிந்துகொள்கின்றார்கள். ஆனால் இதனைத் தமது பாக்கியத்தில் கொண்டிராதவர்கள் எதைப் புரிந்துகொள்வார்கள்? அந்தஸ்தானது நிச்சயமாக வரிசைக்கிரமமாகவே இருக்கின்றது. அங்கு, சிலர் பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும், சிலர் பிரஜைகளாகவும் இருப்பார்கள். பிரஜைகளும் தேவைப்படுகின்றார்கள். மனிதர்களின் உலகம் தொடர்ந்தும் வளரும், ஆகவே பிரஜைகளும் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். தம்மைப் பிரதானமானவர்கள் எனக் கருதுபவர்கள் அத்தகைய மாநாடுகள் நடைபெறும்பொழுது தயாராக இருக்கவேண்டும். ஞானம் அற்றவர்கள் இளையவர்களைப் போன்றவர்கள். அவர்களிடம் அத்தகைய புத்தி (விவேகம்) இல்லை. அவர்கள் பௌதீகமாக மூத்தவர்களாக இருப்பினும், அவர்கள் அத்தகையதொரு புத்தியைக் கொண்டிருக்காததால் இன்னமும் இளையவர்களாகவே இருக்கின்றார்கள். சிலரது புத்தி மிகவும் சிறந்தது. அனைத்தும் புத்தியிலேயே தங்கியுள்ளது. இளையவர்களும் முன்னேறிச் செல்கின்றார்கள். சிலர் மிகவும் இனிமையான முறையில் விளங்கப்படுத்துகின்றார்கள். அவர்கள் மிகவும் இராஜரீகமான முறையில் விளங்கப்படுத்துகின்றார்கள். அவர் மிகவும் தரமான குழந்தை என்பது புரிந்துகொள்ளப்படும். ஒருவர் தனது நடத்தையின் மூலமே வெளிப்படுத்தப்படுகின்றார். குழந்தைகளாகிய உங்கள் நடத்தை மிகவும் இராஜரீகமானதாக இருக்க வேண்டும். நீங்கள் எத்தகைய இராஜரீகமற்ற செயலையும் செய்யக்கூடாது. பெயரை இகழ்பவர்களால் உயர்ந்த அந்தஸ்;தைப் பெறமுடியாது. உங்களிற் சிலர் சிவபாபாவின் பெயரை இகழும்பொழுது, அதனைப் பற்றி விளங்கப்படுத்துவதற்கான உரிமை தந்தைக்கு உள்ளது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
இரவு வகுப்பு:
சரீரத்திலுள்ள ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது பரமாத்மா, பரமதந்தையின் முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இது ஒரு மங்களகரமான சந்திப்பு எனப்படுகின்றது. “கடவுள் விஷ்;ணுவே நல்ல சகுனத்தை அருள்பவர்” என்று நினைவுகூரப்படுகின்றது. இப்பொழுதே அந்த நல்ல சகுனத்திற்கான சந்திப்பு இடம்பெறுகின்றது. கடவுள் உங்களுக்கு விஷ்ணுவின் குலத்திற்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். இதனாலேயே அவர் கடவுள் விஷ்ணு, அதாவது, நல்ல சகுனத்தை அருள்பவர் என்று அழைக்கப்படுகின்றார். தந்தை உயிருள்ள ஆத்மாக்களாகிய உங்களுடன் சந்திக்கும் சந்திப்பானது மிகவும் அழகானதாகும். உங்கள் ஆஸ்தியைக் கடவுளிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காகவே இப்பொழுது நீங்கள் அவரின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். கடவுளிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்ட பின்னர், நீங்கள் தேவர்களிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள், அதாவது, நீங்கள் சுவர்க்கத்தில் மறுபிறவி எடுக்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆகவே, குழந்தைகளாகிய உங்களின் சந்தோஷப் பாதரசம் உயர்ந்திருக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களைப் போல் பாக்கியசாலியோ அல்லது சந்தோஷமானவரோ எவருமேயில்லை. பிராமண குலத்தவரைப் போல் பாக்கியசாலிகள் இவ்வுலகில் எவரும் இருக்க முடியாது. விஷ்ணுவின் குலம் இரண்டாவதாகும். அதுவே தேவர்களின் மடியாகும். உங்களுக்கு இப்பொழுது இறைவனின் மடி கிடைத்துள்ளது. அதுவே உயர்ந்தது. தில்வாலா ஆலயமே இறைவனின் மடியாக அமைந்துள்ள ஆலயமாகும். அவ்வாறே, அம்பாளிற்கும் ஆலயம் உள்ளது. அவ்வாலயமானது சங்கமயுகக் காட்சியை அதிகளவாக வெளிப்படுத்துவதில்லை. தில்வாலா ஆலயம் சங்கமயுகத்துக் காட்சியைக் கொடுக்கிறது. ஏனைய மனிதர்களால் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்குமளவு புரிந்துணர்வினைக் கொண்டிருக்க முடியாது. தேவர்களும் பிராமணர்களாகிய நீங்கள் கொண்டிருக்கும் புரிந்துணர்வைக் கொண்டிருப்பதில்லை. நீங்களே சங்கமயுகத்து பிராமணர்கள். அவர்கள் சங்கமயுகத்துப் பிராமணர்களின் புகழைப் பாடுகின்றார்கள். ‘பிராமணர்களே பின்னர் தேவர்கள் ஆகுகின்றார்கள்’ என்று கூறப்படுகின்றது. அத்தகைய பிராமணர்களுக்கு வந்தனங்கள்! பிராமணர்களே நரகத்தைச் சுவர்க்கமாக்கும் சேவையைச் செய்கின்றார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு (பிராமணர்கள்) பாபா நமஸ்தே கூறுகிறார். அச்சா. இரவு வணக்கம்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கடவுளால் நேசிக்கப்படுபவர் ஆகுவதற்கு ஞானியாகவும் யோகியாகவும் ஆகுங்கள். சரீர உணர்வினைக் கொண்டிருக்காதீர்கள்.2. ஞானத்தைப் பேசுவதற்கான உற்சாகத்தைக் கொண்டிருங்கள். உங்கள் நடத்தையின் மூலம் தந்தையை வெளிப்படுத்துங்கள். அதிக இனிமையுடன் பேசுங்கள்
ஆசீர்வாதம்:
நீங்கள் மனதின் சக்தியையும் வார்த்தைகளின் சக்தியையும் மிகச்சரியாகவும், சக்திவாய்ந்ததாகவும் பயன்படுத்தும் தீவிர முயற்சியாளர் ஆகுவீர்களாக.
தீவிர முயற்சியாளர்கள், அதாவது, முதற் பிரிவிற்குள் செல்ல இருக்கும் குழந்தைகள் எண்ணத்தின் சக்தியையும், வார்த்தைகளின் சக்தியையும் மிகச்சரியாகவும், சக்திவாய்ந்ததாகவும் பயன்படுத்துவார்கள். அதில் அவர்கள் கவனயீனமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் இந்தச் சுலோகத்தை மனதில் வைத்திருப்பார்கள்: குறைவாகப் பேசுங்கள், மென்மையாகப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள். அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் யோகியுக்தாகவும், யுக்தியுக்தாகவும் இருக்கும். அவர்கள் தேவையான வார்த்தைகளையே பேசுவார்கள். வீணானவற்றைப் பேசுவதிலோ அல்லது விஸ்தாரத்திற்கான வார்த்தைகளைப் பேசுவதிலோ தங்கள் சக்தியை வீணாக்க மாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் ஏகாந்தத்தில் இருப்பார்கள்.
சுலோகம்:
முற்றிலும் பற்றை அழித்தவரே, நான் எனும் உணர்விற்கான எந்த உரிமையையும் துறந்தவர் ஆவார்.