24.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:

இனிய குழந்தைகளே, மனதை ஒழுங்குபடுத்துவதற்கு நீங்கள் சத்குருவிடம் இருந்து இலகுவான மந்திரத்தைப் பெற்றுள்ளீர்கள்: மௌனமாகவிருந்து சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இதுவே மாயையைக் கட்டுப்படுத்துகின்ற மகாமந்திரமாகும்.

கேள்வி:
எவ்வாறு சிவபாபா முற்றிலும் கள்ளங்கபடமற்ற வாடிக்கையாளராக உள்ளார்;?

பதில்:
பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் சரீரம் உட்பட, உங்களிடமுள்ள எல்லா பழைய குப்பைகளையும் நான் எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் மரணிக்க இருக்கும் தறுவாயில் அதனை நான் எடுக்கின்றேன். உங்கள் வெண்ணிற ஆடையும் மரணத்தின் அடையாளமேயாகும். நீங்கள் இப்பொழுது உங்களைத் தந்தையிடம் அர்ப்பணிக்கின்றீர்கள். பின்னர் தந்தை உங்களை 21 பிறவிகளுக்கு செழிப்படையச் செய்கின்றார். பக்தி மார்க்கத்தில் தந்தை ஒவ்வொருவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்கின்றார். பின்னர் ஞான மாரக்கத்திலும் கூட, அவர் உங்களுக்கு உலக ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுத்து உங்களை திரிகால தரிசிகள் ஆக்குகின்றார்.

பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் வேறு எவரும் இல்லை....

ஓம்சாந்தி.
கள்ளங்கபடமற்றவரின் முன்னால் குழந்தைகளாகிய நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள். வியாபாரிகள் கூறுகிறார்கள்: ஒன்று அல்லது இரண்டாயிரம் பெறுமதியான பொருட்களை வாங்கி, அதிகளவு பணத்தைக் கொடுக்கக்கூடிய கள்ளங்கபடமற்ற ஓர் அப்பாவி வாடிக்கையாளரை என்னிடம் அனுப்புங்கள். ஓ கடவுளே அத்தகையதொரு வாடிக்கையாளரை அனுப்புங்கள்! கள்ளங்கபடமற்ற பிரபுவாகிய தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு உலக ஆரம்பம், மத்தி, இறுதியை விளங்கப்படுத்தி, உங்களை திரிகாலதரிசிகள் ஆக்குகின்றார். என்னைப் போன்ற அத்தகையதொரு வாடிக்கையாளரை நீங்கள் எப்போதாயினும் கண்டுள்ளீர்களா? உங்களை நீங்கள் அவரிடம் அர்ப்பணிக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அவரை அதிகளவில் போற்றிப் புகழ்ந்து பாடுகின்றீர்கள். ‘நீங்களே தாயும் தந்தையும்’ என்பதே கள்ளங்கபடமற்ற பிரபுவின் புகழாகும். அவர் வந்து இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் தந்தையிடம் கூறுகின்றீர்கள்: பழைய குப்பைகள் அனைத்தையும் நாங்கள் உங்களிடம் அர்ப்பணிக்கின்றோம். எங்களை 21 பிறவிகளுக்கு செழிப்படையச் செய்கிறீர்;கள். பங்குச் சந்தை தரகர்கள் பேரம் பேசி தமக்கான தரகுப் பணத்தையும் பெற்றுக் கொள்கின்றார்கள். இவரும் கூறுகின்றார்: நீங்கள் மரணமடையவிருக்கும் பொழுதே உங்கள் சரீரம் உட்பட, உங்களிடமுள்ள குப்பைகள் அனைத்தையும் நான் எடுத்துக் கொள்கின்றேன். இங்கே, வெண்ணிற ஆடையே பிரம்மகுமாரிகளாகிய உங்களின் சீருடையாகும். இது நீங்கள் மரணமடைந்ததைப் போன்றுள்ளது. சடலம் எப்போதும் முற்றிலும் கரைபடியாத ஒரு வெண்மையான துணியாலேயே மூடப்படுகின்றது. இந்த நேரத்தில், அனைவரும் மாயை என்ற கரும்புள்ளியைக் கொண்டிருக்கின்றார்கள். இவை ராகுவின் தீய சகுனம் எனப்படுகின்றது. சந்திர கிரகணத்தின் போது சந்திரனும் இருளடைகின்றது. ஆகையால் மாயையின் இச் சகுனம் முழு உலகையும் இருளடையச் செய்கின்றது. பஞ்ச தத்துவங்களும் அதில் அடங்கி உள்ளது.. தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: இது உங்கள் இராஜயோகமாகும். இராஜயோகத்தின் மூலமே நீங்கள் உங்கள் சுவர்க்க இராச்சியத்தைக் கோர வேணடும். நீங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுவதுடன், நாராயணன் ஆகுகின்ற போதையும் உங்களுக்குள்ளது. நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுகின்றீர்கள். சத்தியயுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் உள்ளது. எனவே நான் நிச்சயமாக இறுதியிலேயே வரவேண்டும். இப்பொழுது இது பக்தி மார்க்கமாகும். பக்தி மார்க்கத்தில், மக்கள் வாசலுக்கு வாசல் சென்று தொடர்ந்தும் விழுந்து வணங்கித் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். கடவுளே பக்தர்களைக் பாதுகாப்பவர். அவர் வந்து பக்திக்கான பலனைக் கொடுக்கின்றார். அனைவரும் பக்தர்கள். அவர்கள் அனைவருமே, ஒரே மாதிரியான பலனைப் பெறுவதில்லை. சிலருக்குக் காட்சி கிடைக்கின்றது. சிலர் ஒரு மகனைப் பெற்றெடுக்கின்றார்கள். அவை அனைத்தும் தற்காலிகமானவையாகும். நான் அவர்களின் பல்வேறு ஆசைகளைப் பூர்த்தி செய்கின்றேன். இராஜயோகத்தைக் கற்பிக்க கடவுள் வந்துள்ளார் என்பது உலகிலுள்ள எவருக்குமே தெரியாது. அவர் துவாபரயுகத்தின் போது வந்து, அப்பொழுதே அதை அவர் கற்பித்தார் என்றே அவர்கள் கருதுகின்றார்கள். நீங்கள் எவ்வாறு அங்கே மனிதரிலிருந்து நாராயணன் ஆகியிருக்க முடியும்? இப்பொழுதே தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆக்குகின்றார். இங்கே, நீங்கள் மௌனமாக இருந்தால் போதும். உங்கள் மனதை ஒழுங்குபடுத்துவதற்கு சத்குருவினால் உங்களுக்குக் கொடுக்கப்படும் இலகுவான மந்திரம் ‘மன்மனாபவ’ ஆகும். இந்த மந்திரத்தின் மூலமே அதிகளவு வருமானம் ஈட்டப்படுகின்றது. இம் மந்திரத்தின் மூலமே நீங்கள் மாயையை கட்டுப்படுத்துகின்றீர்கள். நீங்கள் மாயையை வெற்றி கொண்டவர்களாகவும், உலகை வெற்றி கொண்டவர்களாகவும் ஆகுகின்றீர்கள். ‘உங்கள் மனதை வெற்றி கொள்ளும் போது உலகை வெற்றி கொள்கின்றீர்கள்’ என்று பக்திமார்க்கத்தவர்கள்; கூறுகின்றார்கள். ஆகையாலேயே அவர்கள் ஹத்த யோகம் போன்றவற்றைச் செய்கின்றார்கள். எவ்வாறாயினும், உலகை வென்றவர்கள் ஆகுவதற்காக அவர்கள் அதனைச் செய்யவில்லை. அவர்கள் முக்தியை அடையவே அதனைச் செய்கின்றார்கள். தந்தை வந்து கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் சரீரத்தையும் சகல சரீர சமயங்களையும் துறந்திடுங்கள். ‘நான் இச் சமயத்தை சேரந்தவன், நான் இன்ன இன்னார்’ என்ற அனைத்தையும் துறந்திடுங்கள். உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதி சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவ்வளவே! நான் கொடுக்கின்ற வழிகாட்டல்களை பின்பற்றுங்கள். இன்றுவரை நீங்கள் பின்பற்றிய வழிகாட்டல்கள் அனைத்தையும் நீங்கள் இப்பொழுது துறக்க வேண்டும். ஆகவே, உங்களுடைய ஞானம் முற்றிலும் புதியதாகும். நீங்கள் கூறுபவை புதியவை என்று மக்கள் நினைக்கின்றார்கள். நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்தும் முன்னர் அவர்களின் நாடித்துடிப்பை அறிய வேண்டும். ஒரே மாதிரியாக நீங்கள் அனைவரிடமும் கூறக் கூடாது. மக்கள் பல்வேறு வழிகாட்டல்களைக் கொண்டிருக்கின்றார்கள். உங்களுடையதோ ஒரேயொரு வழிகாட்டலேயாகும். ஆயினும் அது வரிசைக்கிரமமானது. யோகத்தில் நன்றாக நிலைத்திருந்து தாரணை செய்கின்றவர்கள் நன்றாக விளங்கப்படுத்துவார்கள். குறைந்தளவு தாரணை செய்கின்றவர்கள் குறைவாகவே விளங்கப்படுத்துகின்றார்கள். ஒரேயொரு எளிமையான விடயத்தை மாத்திரம், வருகின்ற அனைவரிடமும் கூறுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டிலே வாழ்ந்தாலும், நீங்கள் ஒரு தாமரையைப் போன்று வாழ வேண்டும். ஒவ்வொரு தாமரையும் பல வம்சங்களைக் கொண்டிருப்பதாலேயே அது உதாரணமாகக் காட்டப்படுகின்றது. தந்தைக்கும் பல குழந்தைகள் உள்ளனர். தாமரை மலர் மாத்திரமே தண்ணீரின் மேல் உள்ளது. அதன் வம்சத்தின் ஏனையவை அனைத்தும் தண்ணீருக்கு அடியிலேயே உள்ளன. இது சிறந்த உதாரணமாகும். பாபா கூறுகின்றார்: உங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழுங்கள். ஆனால் தூய்மையாக இருங்கள். இது தூய்மைக்கான விடயமாகும். அத்துடன், இதில் இவ் இறுதிப் பிறவியில் தூய்மையாக இருந்து சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். நீங்கள் நிச்சயமாக உங்கள் படைப்பையும் பராமரிக்க வேண்டும். தவறினால், இது ஹத்த யோகம் போலாகிவிடும். உலக மக்களிற் பலர் தூய்மையாக உள்ளார்கள். பிறப்பிலிருந்தே பிரம்மச்சாரியாக உள்ளவர்கள் பீஷ்மரைப் போன்றவர்கள் ஆவார்கள். ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தாலும் தூய்மையாக வாழ்வதே பிரம்மச்சாரியத்திற்கு சிறந்த உதாரணமாகும். சமயநூலிலும் தூய திருமணம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் அது தெரியாது. தந்தை இதனை விளங்கப்படுத்துகின்றார். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது காமச்சிதையில் அமர்வதற்குப் பதிலாக ஞானச் சிதையில் அமர்வதற்கான ஒப்பந்தத்தை இருவரும் ஏற்படுத்திக்; கொள்ளுங்கள். பிராமணர்களாகிய நீங்கள் அத்தகைய நல்லதொரு பணியை ஆற்றுகின்றீர்கள். நீங்கள் தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்ய வேண்டும். ஒருவரையொருவர் எச்சரிப்பதன் மூலம், நீங்கள் இருவருமே சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். இங்கே சேரந்து வாழும் போதும் இவ்வாறு தூய்மையாக வாழ்ந்து, காட்டுவதே உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கான வழியாகும். நீங்கள் உதாரணமாகக் காட்டப்படுவீர்கள். நீங்கள் ஞானச் சிதையில் அமர்ந்து, சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இதற்கு அதிகளவு தைரியம் தேவையாகும். நீங்கள் மிகவும் உறுதியாகத் தொடர்ந்தும் முன்னேறிச் சென்றால் உங்களுடைய அந்தஸ்து மிக உயர்ந்ததாக இருக்கும்;. அத்துடன், அது நீங்கள் செய்யும் சேவையிலும் தங்கியுள்ளது. அதிகளவு சேவை செய்து, பிரஜைகளை உருவாக்குபவர்கள் ஒரு நல்ல அந்தஸ்தைப் பெறுகிறார்கள். நீங்கள் பாபாவையும் மம்மாவையும் விட முன்னால் செல்ல வேண்டும். எவ்வாறாயினும், கிறிஸ்தவர்கள் இருபாலாரும் (ரஷ்யர்களும் அமெரிக்கர்களும்) ஒன்றிணைந்தால் அவர்களால் உலக அதிபதிகளாக முடியும் என்று பாபா கூறுவதைப் போன்றே, தாய் தந்தையை விட முன்னால் செல்கின்ற அத்தகைய தம்பதியினர் தோன்ற வேண்டும். எவ்வாறாயினும், அவ்வாறு எவருமே இல்லை. ஜெகதாம்பாளும் ஜெகத்பிதாவுமே பிரபல்யமானவர்கள். அவர்கள் செய்வதைப் போன்று சேவை செய்பவர்கள் எவருமே இல்லை. அவர்கள் கருவிகள் ஆகியுள்ளார்கள். இதனாலேயே நீங்கள் இதில் இதய வழுவல் அடையக் கூடாது. நல்லது. மம்மா பாபாவைப் போல ஆகாவிட்டாலும் நீங்கள் இரண்டாம் இலக்கத்தைப் பெறலாம். பிரஜைகளையும் வாரிசுகளையும் உருவாக்குகின்ற சேவையிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. எனவே, எங்களுடையது அனைத்துமே புதியதாகும். தந்தை புதிய உலகைப் படைப்பதற்காக நிச்சயமாக இங்கு வரவே வேண்டும். அவர் மாத்திரமே படைப்பவர். கடவுள் பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என மக்கள்; கூறுகின்றார்கள். ஆனால் அவர் அவ்வாறானவர் அல்ல. அவர்களைக் குறை கூற முடியாது. அவர்களின் பாக்கியத்தில் இருந்தால் மாத்திரமே புரிந்து கொள்வார்கள். இதுவே சரி என்று கருதுகின்ற பலரும் வருகிறார்கள். ஓர் ஆத்மாவிற்குப் பெயரோ ரூபமோ கிடையாது என்று சிலர் கூறுகிறார்கள். அவ்வாறாயின், ஆத்மா என்று அழைக்கப்படுவது என்ன? ‘ஆத்மா’ என்ற பெயர் உள்ளது. இது இராஜயோகம் என்று அனைவரிடமும் கூறுங்கள். பரமாத்மாவான பரமதந்தை சங்கமயுகத்தில் வருகிறார். சங்கமயுகத்திலேயே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்க முடியுமென்பதால் அவர் இராஜயோகத்தை நிச்சயமாக சங்கமயுகத்திலேயே கற்பிக்கிறார். எனவே, இங்குள்ள விடயங்கள் தனித்துவமானவையாகும். தந்தை கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மா என்று கருதுங்கள். நீங்கள் தந்தையிடம் செல்ல வேண்டும். இதனையிட்டு எக்கேள்விகளும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் கூறுகிறார்கள்: என் ஆத்மாவைத் துன்புறுத்தாதீர்கள், இவர் ஒரு பாவாத்மா, இவர் ஒரு தூய ஆத்மா. ஓர் ஆத்மாவிற்கு ரூபம் இல்லை என்று எவருமே கூற முடியாது. விவேகானந்தர் இராமகிருஷ்ணர் முன்னிலையில் அமர்ந்திருந்தபொழுது, ஒரு காட்சியைப் பெற்றார். தனக்குள் ஓர் ஒளி பிரவேசிப்பதை அவர் கண்டார். அது போன்று அவர்கள் பேசுகிறார்கள். “இது எங்களது இராஜயோகம்” என்று அவர்களிடம் கூறுங்கள். இங்கே நீங்கள் உங்கள் சரீரத்தையும், சரீர உறவினர், நண்பர்கள் போன்ற அனைவரையும் மறந்துவிட வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் கடவுளின் குழந்தைகள். எங்களுக்குள் சகோதரத்துவமே உள்ளது. அனைவருமே தந்தையானால், தந்தையே தந்தையிடம் பிரார்த்தனை செய்வார். நாங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கிறோம். இது அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுவதற்கான யோகமாகும். இப்பொழுது இராச்சியம் எதுவும் இல்லை. எனவே, நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: நாங்கள் மௌனமாக இருந்து சிவபாபாவை மாத்திரம் நினைவு செய்கின்றோம். நாங்கள் எங்களைச் சரீரத்திலிருந்து வேறுபட்டவர்களாகவே கருதுகின்றோம். ஆத்மா கூறுகின்றார்: நான் ஒரு சரீரத்தை விட்டு, இன்னொன்றை எடுக்கின்றேன். எனவே, ஞானத்திற்கான சம்ஸ்காரங்கள் ஆத்மாவிலேயே உள்ளன. நல்ல தீய சமஸ்காரங்களும் ஆத்மாவிலேயே உள்ளன. ஆத்மா செயல்களின் தாக்கத்திற்கு உட்படாதவர் அல்ல. இது விளங்கப்படுத்தப்பட வேண்டும். ஆத்மா மறுபிறவி எடுக்கிறார். ஆத்மா தொடர்ந்தும் புலன்களை மீண்டும் மீண்டும் பெற வேண்டும். ஆத்மா ஒரு நட்சத்திரமாகும். அவர் நெற்றியின் நடுவிலேயே வசிக்கிறார். ஒருவருக்கு ஆத்மாவின் காட்சி கிடைக்கும்பொழுது, ஆத்மாவின் காட்சியை அவருக்குக் காட்டக்கூடிய சக்தி உங்களுக்கு உள்ளது என்று அவர் நம்புகின்றார். எவ்வாறாயினும், ஆத்மா நெற்றியின் நடுவில் வசிக்கின்றார். நீங்கள் காட்சியைக் கண்டாலென்ன, காணாவிட்டாலென்ன? ஆத்மா கூறுகின்றார்: நான் ஒரு நட்சத்திரம். எனக்குள் 84 பிறவிகளின் பாகம் உள்ளது. ஆத்மாக்கள் 8.4 மில்லியன் பிறவிகள் எடுக்க வேண்டுமாயின், அவர்களிடம் பல சம்ஸ்காரங்கள் இருக்க வேண்டும். அப்போது என்ன நடக்கும் என்றே தெரியாது. ஆத்மா 84 பிறவிகளையே எடுக்கிறது என்பதை உங்களால் நம்ப முடியும்;. ஒருவர் 8.4 மில்லியன் பிறவிகள் எடுக்கின்றார் என்பதை எவராலும் நம்ப முடியாது. நாங்கள் இப்பொழுது தூய்மை ஆகுகின்றோம். சாதாரண மனிதரில் இருந்து எங்களை நாராயணனாக மாற்றுவதற்கு பாபா எங்களைத் தூய்மையாக்கினார். இப்பெரும் போதை உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் எவருடனும் விவாதம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் சரீரத்தையும் சகல சரீர சம்பந்தங்களையும் துறந்து உங்களைச் சரீரமற்ற ஆத்மாவாகக் கருதுங்கள். நாங்கள் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றிருந்தாலும், நாங்கள் ஏன் அவற்றை ஆராய வேண்டும்? ஏனெனில் தந்தை கூறுகின்றார்: சதா என்னையே நினைவு செய்யுங்கள். அவரது இரண்டாவது கட்டளை: உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழ்ந்தாலும், ஒரு தாமரையைப் போன்று வாழுங்கள். யோக அக்கினியின் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். கடவுள் பேசுகிறார்: பரமாத்மாவே கடவுளாவார். அவரும் நட்சத்திரம் என்றே அழைக்கப்படுகின்றார். பல கருத்துக்கள் உள்ளபொழுதிலும், அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் கூற முடியாது. உங்கள் முன்னிலையில் உள்ளவரின் ஆளுமைக்கு ஏற்பவே, அனைத்தையும் சாதுரியமாக எடுத்துக் கூற வேண்டும். அவரிடம் கூறுங்கள்: நாங்களும் சமயநூல்களைக் கற்கிறோம். ஆனால் அனைத்;தையும் மறந்து, சதா அவரை மாத்திரமே நினைவு செய்யுங்கள் என்பதே தந்தையின் கட்டளையாகும். அவர் அசரீரியானவர்;. அனைவரும் ஆத்மாவில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். விவேகானந்தரில் நம்பிக்கை கொண்டவர்கள் கூட, ஆத்மாவை நம்புகிறார்கள். அனைவரும் ஓர் ஆத்மாவைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, நிச்சயமாக பரமாத்மாவாகிய பரமதந்தை என்று அழைக்கப்படுகின்ற தந்தையே ஆத்மாக்களின் தந்தையாவார். இவை அனைத்துமே கருத்துக்கள் ஆகும். இவற்றைக் கடைவதால், நீங்கள் தொடர்ந்தும் புதிய கருத்துக்களைக் கண்டுபிடிப்பீர்கள். நீராவி இயந்திரம் தொடர்ந்தும் நிரப்பப்படும். இவை ஞானத்தின் அழிவற்ற இரத்தினங்களின் சரக்குகள் போலாகும். கருத்துக்களைக் குறித்து, பின்னர் அவற்றை மீட்டல் செய்யுங்கள். இவை இரத்தினங்கள் ஆகும். நீங்கள் அவற்றைக் கிரகிப்பதிலும் அவற்றைப் பற்றி எழுதுவதிலும் அதிக ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். அனைவருக்கும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துங்கள்: ஆத்மா அனைவரிலும் உள்ளார், எனினும் ஒரு பௌதீகப் பெயரையோ அல்லது ரூபத்தையோ கொண்டிருப்பதில்லை. ஆத்மா ஓர் ரூபத்தைக் கொண்டிருப்பதால், ஏன் கடவுள் ஒரு ரூபத்தைக் கொண்டிருக்கக் கூடாது? என நீங்கள் கூற முடியாது. அந்த ஒரேயொருவர் பரந்தாமத்தில் வசிக்கின்ற பரமாத்மாவாகிய பரமதந்தை என அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இப்பொழுது சேவை செய்வதனால், இதை நடைமுறையில் காட்டுங்கள். நீங்கள் செய்கின்ற சேவைக்கேற்ப, பாபா ஒரு பரிசைத் தருகிறார். அவர் உங்களைப் பெருமளவு ஞான இரத்தினங்களால் அலங்கரிப்பதற்கு உதவுகிறார். நாங்கள் இங்கு பல்கோடீஸ்வரர்கள் ஆகத் தேவையில்லை. எங்களுக்கு உலகின் இராச்சியம் தேவையாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1. ஞானக்கடலைக் கடைந்து நீங்கள் பெற்ற ஞான இரத்தினங்களைக் கிரகியுங்கள். எப்பொழுதும் ஞான இரத்தினங்களால் நிறைந்திருங்கள்.

2. நாராயணன் ஆகுகின்ற போதையில் நிலைத்திருங்கள். பயனற்ற விடயங்களைப் பற்றி எவருடனும் பேசாதீர்கள். சரீரமற்றவர் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
மாயையை உங்கள் எதிரியாக அல்லாது ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்கு ஒத்துழைப்பதாகக் கருதி மாயையை வெற்றி கொண்டவராகி நிலையாகவும் ஸ்திரமாகவும்இருப்பீர்களாக

மாயை…உங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்ப்பிப்பதற்காகவே வருகிறார் எனவே பயப்படாதீர்கள். சில வேளைகளில் சகிப்புத்தன்மையை உறுதியாக்கவும் சில வேளைகளில் அமைதி சொரூபமாகவும் இருப்பதை உறுதியாக்கவுமே மாயை வருகிறாள்.எனவே மாயையை உங்கள் எதிரியாக க்கருதுவதற்குப் பதிலாக அவளை ஒத்துழைப்பவளாகக் கருதுங்கள். .அப்பொழுது உணர்ச்சிவசப்படவோ தோற்கடிக்கப்படவோ மாட்டீர்கள்.நீங்கள் ஒரு பாடத்தைக் கற்பதுடன் அங்கதனைப் போன்று அசைக்கமுடியாதவா ஆகுவீர்கள். ஒருபோதும் பலவீனமடைந்து மாயையை வரவழைக்காதீர்கள். அப்பொழுது அவள் உங்களுக்குப் பிரியாவிடைஅளிப்பாள்.

சுலோகம்:
சுலோகம்: ஓவ்வொரு எண்ணத்திலும் திடசங்கல்பத்தின் மகத்துவம் இருக்கட்டும். நீங்கள் தொடர்ந்தும் வெற்றி பெறுவீர்கள்;.

மாதேஸ்வரியின் இனிய மேன்மையான வாசகங்கள் .

கடவுள் மாத்திரமே சற்கதி அருள்வதற்கான அவரது வழியையும் முறையையும் அறிவார்.

நீங்கள் மாத்திரமே உங்கள் வழியையும் முறையையும் அறிவீர்கள்: இந்தப் புகழ் யாருடைய ஞாபகமார்த்தமாகப் பாடப்பட்டது? கடவுள் எவ்வாறு சற்கதி அருள்கிறார் என்பதைக் கடவுள் மாத்திரமே அறிவார்.மனிதர்களினால் இதனை அறிய முடியாது. மக்களுக்கு சந்தோ~த்திற்கான ஆசை மாத்திரமே உள்ளது. ஆனால் அவர்கள் எவ்வாறு அச்சந்தோ~த்தைப் பெறுவார்கள்?மக்கள் தங்களது ஜந்து விகாரங்களையும் எரித்து தங்கள் செயல்களை நடுநிலையாக்கும் வரை அவர்களால் அந்தச் சந்தோஹத்தைப் பெறமுடியாது. செயல்; நடுநிலைச்செயல் பாவச்செயல் என்ற கர்மதத்துவம் மிகவும் ஆழமானது. கடவுளைத்தவிர எந்த ஓரு மனிதராலும் இதன்விளைவை அறிய முடியாது. அவற்றின் விளைவைக் கடவுள்கூறும் வரை மனிதர்களினால் ஜீவன்முக்தியைப் பெறமுடியாது. இதனாலேயே மக்கள் கூறுகிறார்கள்: உங்கள் வழியையும் முறையையும் நீங்கள் மாத்திரமே அறிவீர்கள்.கடவுள் இவருக்கு சற்கதி அருள்வதற்கான வழியையும் முறையையும் கொண்டிருக்கிறார். செயல்களை எவ்வாறு நடுநிலையாக்குவது என்பதன் கற்பித்தலைக் கொடுப்பது கடவுளின் கடமையாகும். மனிதர்களிடம் இந்த ஞானம் இல்லை. இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் பிழையான செயல்களைச் செய்கிறார்கள். மனதர்களின் முதலாவது கடமையானது தங்கள் செயல்களைச் சீர்திருத்துவதாகும். அப்பொழுதே அவர்களால் மனிதவாழ்க்கையின் முழு நன்மையையும் பெற்றுக் கொள்ள முடியும்.