14.11.2018 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சரீர உணர்வு உங்களை அழச் செய்கின்றது. நீங்கள் ஆத்ம உணர்விற்கு வந்தால், உங்களால் சரியான முயற்சியைச் செய்ய முடியும்;; உங்கள் இதயத்தில் நேர்மை இருக்கும், உங்களால் தந்தையை முழுமையாகப் பின்பற்ற முடியும்.
கேள்வி:
பாதகமான சூழ்நிலைகளிலும், அனர்த்தங்களின்பொழுதும் உங்கள் ஸ்திதி எப்பொழுது பயமற்றதாகவும், நிலையானதாகவும் இருக்க முடியும்?
பதில்:
நாடகம் பற்றிய ஞானத்தில் நீங்கள் முழு நம்பிக்கை கொண்டிருக்கும்பொழுதாகும். உங்கள் முன்னிலையில் ஏதாவது அனர்த்தம் நிகழும்பொழுது, அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது; நீங்கள் முன்னைய கல்பத்திலும் அதனை வெற்றி கொண்டீர்கள். இதில் எதைப் பற்றியும் பயப்படுவதற்கு எந்த அவசியமும் இல்லை. எவ்வாறாயினும், குழந்தைகளாகிய நீங்கள் மகாவீரர்கள் ஆகவேண்டும். தந்தையின் முழுமையான உதவியாளர்களாலும், அவரின் தகுதிவாய்ந்த குழந்தைகளாலும், அவரின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்களாலுமே எப்பொழுதும் ஸ்திரமாக இருக்க முடியும். அவர்களின் ஸ்திதி நிலையானதாக இருக்கின்றது.
பாடல்:
தூர தேசப் பயணியே, என்னை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.
ஓம் சாந்தி.
விநாச காலத்தின்பொழுது, சிலர் நிச்சயமாகப் பாதுகாக்கப்படுகிறார்கள். இராமரின் சேனையிலிருந்து சிலரும், இராவணனின் சேனையிலிருந்து சிலரும் நிச்சயம்; பாதுகாக்கப்படுகின்றார்கள். அப்பொழுது இராவணனின் சேனையைச் சேர்ந்தவர்கள் கூக்குரல் இடுவார்கள். ஒன்று அவர்களால் அவருடன் செல்ல முடியவில்லையே என்பது, இரண்டாவதாக இறுதியில் பெருமளவு விரக்தி இருப்பதால் பல சிரமங்கள் ஏற்படுவதாலாகும். குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலும், குறிப்பாக அன்பு செலுத்தப்படுகின்றவர்களே விநாசத்தை அவதானிக்கத்; தகுதியானவர்கள். அவர்களே தைரியசாலிகள். உதாரணமாக, அங்கதன் முற்றிலும் உறுதியானவராக இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளார். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் விநாசத்தைக் காணமுடியாது. அதிக விரக்தி நிலவுகின்றது. ஒருவருக்குச் சத்திரசிகிச்சை செய்யப்படுமபொழுது, சிலருக்கு அதனை அருகில் நின்று பார்க்க முடியாததைப் போன்றதே இதுவாகும். நீங்கள் இவையனைத்தையும் தொடர்ந்தும் உங்கள் முன்னிலையில் பார்ப்பீர்கள். தொடர்ந்தும் விரக்திக் கூக்குரல் இருக்கும். சிறந்;த, விசேட அன்பிற்குரிய, பாபாவின் தகுதிவாய்ந்த உதவியாளர்களே தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்;கள். ஒரேயொரு அனுமனே இருந்தார் என்றல்ல. முழு மாலையுமே அனுமனும் மாகாவீரர்களும் ஆகும். உருத்திராட்ச மாலையும் உள்ளது. கடவுள் உருத்திரரின் மாலையே உருத்திரமாலை என அழைக்கப்படுகிறது. உருத்திராட்ச மணி மிகவும் பெறுமதி வாய்ந்தது. உருத்திராட்ச மணிகளில் சில உண்மையானவை, சில போலியானவை. ஒரேமாதிரியான இந்த மாலைகளை நூறு ரூபாய்களுக்கும், இரண்டு ரூபாய்க்கும் வாங்க முடியும். அனைத்தும், இவ்வாறேயாகும். தந்தை உங்களை வைரங்களைப்; போன்று ஆக்குகின்றார். அதனுடன் ஒப்பிடும்பொழுது, ஏனைய அனைவரும் போலியானவர்களே. உண்மையான கடவுளுடன் ஒப்பிடுமபொழுது ஏனைய அனைவரும் போலியானவர்களும், ஒரு சதப் பெறுமதியற்றவர்களும் ஆவர். சூரியனின் முன்னிலையில் இருள் மறைந்திருக்க முடியாது என்றொரு கூற்றுள்ளது. அவர் ஞான சூரியன.; அவரின் முன்னிலையில் அறியாமை மறைந்திருக்க முடியாது. நீங்கள் உண்மையான தந்தையிடமிருந்து உண்மையைப் பெறுகின்றீர்கள். உண்மையான தந்தையாகிய கடவுளைப் பற்றி மக்கள் கூறுவன அனைத்தும் பொய் என்பது உங்களுக்குத் தெரியும். கீதையின் கடவுள் சிவனே என்றும், தெய்வீகக் குணங்கள் நிறைந்த தேவரான ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல என்பதையும் நீங்கள் இப்பொழுது விளங்கப்படுத்துகின்றீர்கள். இப்பொழுது இது சங்கமயுகம், பின்னர் நிச்சயமாகச் சத்தியயுகம் வரும். ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்மா இப்பொழுது ஞானத்தைப் பெறுகின்றார். அவரே ஞானத்தைக் கொடுப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள்; அதிக வேறுபாடு உள்ளது! அவர் தந்தையும், இவர் குழந்தையும் ஆவார்கள்;. அவர்கள் தந்தையை முற்றாக மறையச் செய்து, குழந்தையின் பெயரைப் புகுத்தியுள்ளனர். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, இறுதியில் உண்மை வெளிப்படும். இதுவே முதலாவதும் பிரதானமானதுமான விடயம். மக்கள் கடவுளைச் சர்வவியாபகர் என்று கருதுவது ஏன்? ஏனெனில் அவர்கள் கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதால் ஆகும். உங்களுக்கு இவ்விடயங்கள் தெரியும். ஸ்ரீகிருஷ்ணரும், தேவ ஆத்மாக்களும் இப்பொழுது 84 பிறவிகளையும் பூர்த்தி செய்துள்ளனர். ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்டகாலம் பிரிந்திருந்தனர் என்று பாடப்படுகிறது. நாங்களே முதலில் பிரிந்தவர்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் பாபாவுடன் அங்கே மேலே இருக்கிறார்கள். எவரும் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. உங்கள் மத்தியிலும், இவ்விடயங்களை மிகச்சரியாக விளங்கப்படுத்தக்கூடியவர்கள் அரிதாகவே உள்ளனர். சரீர உணர்வே உங்களை அதிகளவு அழச் செய்கின்றது. ஆத்ம உணர்வுடையவர்களே, மிகச்சிறந்த முயற்சியைச் செய்வதுடன், அவர்களால் அனைத்தையும் மிகவும் நன்றாகக் கிரகிக்கவும் முடிகின்றது. ஆகையாலேயே ‘தந்தையைப் பின்பற்றுங்கள்’ என்று கூறப்படுகின்றது. தந்தையும் செயலாற்ற வருகின்றார். இருவருமே தந்தையர் ஆவார்கள். பாப், தாதா இருவருமே இச்சரீரத்தில் இருப்பதால், ஒரு விடயம் கூறப்படும்பொழுது, எந்தத் தந்தை கூறுகிறார் என்று உங்களால் கூறமுடியாது. செயலாற்ற வருகின்ற அவரையே நீங்கள் பின்பற்ற வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! பல மிக நல்ல குழந்தைகளும் தந்தையை நினைவுசெய்யாததால், சரீர உணர்வுடையவர்கள் ஆகுகின்றார்கள். யோகிகள் அல்லாதவர்களால், எதனையும் கிரகிக்க முடியாது. இங்கே நேர்மை தேவைப்படுகிறது. நீங்கள் அவரை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். நீங்கள் செவிமடுக்கின்ற அனைத்தையும் கிரகித்து, பின்னர் அதனைப் பிறருக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துங்கள். நீங்கள் பயமற்றவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் நாடகத்தில் உறுதியாக இருக்க வேண்டும். ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், அவை நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. நீங்கள் சிரமங்களை முன்னரும் வெற்றிகொண்டுள்ளீர்கள். நீங்கள் அனைவருமே மகாவீர்கள், அல்லவா? உங்கள் பெயர் போற்றப்படுகின்றது. எண்மர் மிகச் சிறந்த மகாவீர்கள். பின்னர் அவர்களை விடச் சற்றுக் குறைந்த 108 பேர் உள்ளனர். அதன்பின்னர் அவர்களிலும் சற்றுக் குறைந்த 16,000 பேர் உள்ளனர். நீங்கள் நிச்சயமாக அவ்வாறு ஆகவேண்டும். முன்னைய கல்பத்திலும் இந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே அது இப்பொழுதும் நிகழ வேண்டும். பலருக்கும் சந்தேகம் எழுவதால், விலகிச் செல்கின்றார்கள். அவர்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், அவர்கள் அத்தகைய தந்தையைக் கைவிட்டிருக்க மாட்டார்கள். சிலவேளைகளில், சிறு குழந்தைகளிடம் கூறுவதைப் போன்று, சிலரிடம் ஞானாமிர்தத்தை அருந்துங்கள் என்று வலியுறுத்திக் கூறினாலும் அவர்கள் அருந்துவதில்லை. தந்தை உங்களுக்கு ஞானப்பாலை அருந்தக் கொடுக்கின்றபொழுதிலும், அதனை நீங்கள் அருந்துவதில்லை. நீங்கள் உங்கள் முகத்தை முற்றாக அப்பால் திருப்பிக்கொள்வதால், முற்றிலும் பயனற்றவர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் கூறுகின்றீர்கள்: எனக்குத் தாய் தந்தையிடமிருந்து எதுவும் தேவையில்லை. என்னால் ஸ்ரீமத்தைப் பின்பற்ற முடியாதுள்ளது. அவ்வாறாயின், நீங்கள் எவ்வாறு மேன்மையானவர்கள் ஆகுவீர்கள்? ஸ்ரீமத் கடவுளிடமிருந்து பெறப்படுகின்றது. எனவே நீங்கள் இச் சுலோகத்தை எழுத வேண்டும்: அசரீரியானவரும், ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், ஆசிரியருமான கடவுள் சிவன் பேசுகிறார்: தாய்மார்களே சுவர்க்க வாயில்கள். நீங்கள் விளங்கப்படுத்துவதற்காக, இக்கருத்துக்கள் உங்கள் புத்தியில் பதிய வேண்டும். மாணவர்கள் அனைவரும் நிச்சயமாக வரிசைக்கிரமமாகவே இருப்பார்கள். அவர்கள் நாடகத்தில் தமது பாகங்களை நடிக்கின்றார்கள். துன்பத்தின்பொழுது நாம் அவரை நினைவுசெய்கிறோம். தந்தை தூரதேசத்தில் வசிக்கின்றார். ஆத்மாக்களாகிய நாங்கள் அவரை நினைவுசெய்கிறோம். அனைவரும் அவரைத் துன்பத்தின்பொழுதே நினைவுசெய்கின்றார்கள். ஆனால், சந்தோஷத்தினபொழுது ஒருவரேனும் அவரை நினைவுசெய்வதில்லை. இப்பொழுது இது துன்ப உலகம், அல்லவா? இதனை விளங்கப்படுத்துவது இலகுவானது. முதலில், தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார் என்பதால் நாங்கள் ஏன் சுவர்க்க இராச்சியத்தைப் பெறக்கூடாது என்பது பற்றி நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அனைவருமே ஆஸ்தியைப் பெறுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அனைவருமே சுவர்க்கத்திற்கு வருவார்களாயின், நரகம் என்பது இருக்க மாட்டாது. அவ்வாறாயின், எவ்வாறு விரிவாக்கம் இடம்பெற முடியும்? பாரதமே அழியாத தேசம், அதாவது, அதுவே அநாதியான தந்தையின் பிறப்பிடம் என நினைவுகூரப்பட்டுள்ளது. பாரதம் சுவர்க்கமாக இருந்தது. நாங்கள் சந்தோஷமாகக் கூறுகிறோம்: 5000 வருடங்களின் முன்னர் சுவர்க்கம் இருந்தது. சுவர்க்க அதிபதிகளின் படங்கள் நிச்சயமாக இருக்கின்றன. கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளின் முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்று அவர்கள் கூறுகின்றார்கள். பாரதத்தில் சூரிய, சந்திர வம்சங்கள் நிச்சயமாக இருந்தன. அவர்களின் விக்கிரகங்களும் உள்ளன. இது மிக இலகுவானது! இந்த ஞானம் உங்கள் புத்தியில் வேலை செய்கின்றது. பாபாவின் ஆத்மாவில் இந்த ஞானம் இருந்ததால், அவர் ஆத்மாக்களாகிய எங்களை அதனைக் கிரகிக்கச் செய்தார். அவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவர். அவர் கூறுகின்றார்: நான் இந்தப் பிரஜாபிதா பிரம்மா மூலம் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். பின்னர் அவர் அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆகுகின்றார். அப்பொழுது இந்த ஞானம் மறைந்து விடும். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஒரு சவால் விட வேண்டும். இதற்கு மிகச்சிறந்த, முதற்தரமான புத்தி தேவைப்படுகின்றது. பாபா ஒருபொழுதும் முதற்தரமான எதனையுமே தனக்கென வைத்துக் கொள்வதில்லை. அவர் கூறுவார்: இந்தக் கட்டடங்கள் அனைத்தும் குழந்தைகள் வசிப்பதற்காகவே கட்டப்பட்டுள்ளன. இல்லாவிட்டால், குழந்தைகள் வந்தால் எங்கு தங்குவார்கள்? ஒருநாள் கட்டடங்கள் அனைத்துமே எங்களுக்குரியதாகும். பக்தர்களின் பெருங்கூட்டம் கடவுளின் வாயிலில் கூடிநிற்கும். அவர்கள் பலரையும் கடவுளாக்கி விட்டார்கள். நடைமுறையில், அவர் மாத்திரமே அந்த ஒரேயொருவர். எவ்வளவு கூட்டம் இருக்கும் என்பதை நீங்கள்; புரிந்துகொள்கிறீர்கள். உலகில் பெருமளவு குருட்டு நம்பிக்கை உள்ளது. களியாட்டங்கள் இடம்பெறும்பொழுது, அங்கே பெருங்கூட்டம் கூடுகின்றது. சிலவேளைகளில் அவர்கள் தங்கள் மத்தியில் சண்டையும் இடுகின்றார்கள். அவ்வாறான பெருங் கூட்டங்களின்பொழுது பலரும் மரணிக்கின்றார்கள்; பெருமளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகையால் இந்தச் சுயதரிசனச் சக்கரம் மிகவும் சிறந்தது. நீங்கள் நிச்சயமாக இந்தச் சுலோகங்களையும் எழுத வேண்டும். இறுதியில் தாய்மாருக்கு அனைவரும் தலைவணங்க வேண்டும். அவர்கள் சக்திகளின் அத்தகைய படங்களை உருவாக்குகிறார்கள்! தந்தை ஞான வெடிமருந்துகளை குழந்தைகளான உங்களுக்காகச் உருவாக்கி வைத்துள்ளார். அவர் கூறுகின்றார்: இதனை நிரூபியுங்கள்! இது இலகுவானது. பக்தர்கள் கடவுளை நினைவுசெய்கின்றார்கள்; கடவுளைச் சந்திப்பதற்காகச் சாதுக்கள் ஆன்மீக முயற்சி செய்கின்றார்கள். கடவுள் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். நாங்கள் உண்மையிலேயே அவரின் குழந்தைகள். அவர்கள் சகோதரத்துவத்தைப் பற்றி பேசுகின்றார்கள். அதாவது இந்துக்களும், சீனர்களும் சகோதரர்கள் என்று கூறுகிறார்கள். எனவே அவர்களது தந்தை ஒருவராகவே இருப்பார், அப்படித்தானே? பௌதீக வடிவில், அவர்கள் சகோதர சகோதரிகள், எனவே விகாரப் பார்வை இருக்க முடியாது. இதுவே தூய்மையாக இருப்பதற்கான வழியாகும். அத்துடன் தந்தை கூறுகின்றார்;: காமமே கொடிய எதிரியாகும். எவ்வாறாயினும் இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ‘கடவுளே அனைவருக்கும் தந்தை’ என்பதே பிரதான விடயமாகும். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதால், நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும். உங்களிடம் ஆஸ்தி இருந்தது, பின்னர் அதனை நீங்கள் இழந்தீர்கள். இது சந்தோஷத்தையும் துன்பத்தையும் பற்றிய நாடகம். இது மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நேர்மையைக் கிரகித்து, தந்தையின் ஒவ்வொரு செயலையும் பின்பற்றுங்கள். ஞானாமிர்தத்தை பருகி, அதனைப பிறர் பருகுவதற்கும் தூண்டுங்கள். அச்சமற்றவர் ஆகுங்கள்.
2. கடவுளின் குழந்தைகளாகிய நீங்கள் சகோதரர்களாக இருக்கின்ற விழிப்புணர்வில், உங்கள் பார்வையையும் மனோபாவத்தையும் தூய்மையாக்குங்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் சிறப்பியல்புகளை உங்கள் முன்னால் வைத்திருப்பதால், புத்தியில் நம்பிக்கை உடையவராகவும், வெற்றி இரத்தினமாகவும் ஆகுவதன் மூலம் சதா சந்தோஷமாக முன்னேறிச் செல்வீர்;களாக
உங்கள் பலவீனங்களை அன்றி, உங்கள் சிறப்பியல்புகள் அனைத்தையும் உங்கள் முன்னால் வைத்திருங்கள், நீங்கள் உங்களில் நம்பிக்கையைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் பலவீனங்களைப் பற்றி அதிகம் சிந்திக்காதீர்கள், அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷமாக முன்னேறுவீர்கள். தந்தையே சர்வசக்திவான் என்ற நம்கிகையைக் கொண்டிருப்பதால், அவரது கரங்களைப் பற்றிருப்பவர்கள் நிச்சயமாக அக்கரைக்குச் செல்வார்கள். புத்தியில் அத்தகைய நம்பிக்கையைச் சதா கொண்டவர்களே வெற்றி இரத்தினங்கள் ஆகுகின்றார்கள். சுயத்தில் நம்பிக்கையும், தந்தையில் நம்பிக்கையும், நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவதானிக்கும்பொழுது முழு நம்பிக்கையும் இருக்கட்டும். அப்பொழுது நீங்கள் வெற்றியாளர்கள் ஆகுவீர்கள்.
சுலோகம்:
தூய்மையின் இராஜரீகத்தைப் பேணுங்கள், நீங்கள் எல்லைக்குட்பட்ட கவர்ச்சிகளிலிருந்து பற்றற்றவர்களாக ஆகுவீ;ர்கள்.
மாதேஸ்வரியின் இனிய மேன்மையான வாசகங்கள்.
தமோகுணி மாயையின் விரிவாக்கம்.
“சதோகுணி, ரஜோகுணி, தமோகுணி” என்னும் மூன்று வார்த்தைகள் உள்ளன. அவற்றை மிகச்சரியாகப் புரிந்துகொள்வதும் அவசியமாகும். இம்மூன்று தராதரங்களும் ஒரேநேரத்தில் ஒன்றாக இருக்கின்றன என்று மக்கள் நம்புகின்றார்கள், ஆனால் உங்கள் மனச்சாட்சி என்ன கூறுகின்றது? இம்மூன்று தராதரங்களும் ஒரேநேரத்தில் ஒன்றாக இருக்கின்றனவா அல்லது மூன்று தராதரங்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு யுகங்களில் ஒரு பாகத்தைக் கொண்டுள்ளனவா? இம்மூன்றும் ஒரேநேரத்தில் ஒன்றாக இருப்பதில்லை என்றே இந்த மனச்சாட்சி கூறுகின்றது. சத்தியயுகம் இருக்கும்பொழுது, அனைத்தும் சதோகுணியாக உள்ளது, துவாபரயுகம் இருக்கும்பொழுது, அனைத்தும் ரஜோகுணியாக உள்ளது, கலியுகம் இருக்கும்பொழுது, அனைத்தும் தமோகுணியாக உள்ளது. சதோவுக்குரிய காலத்தின்பொழுது, ரஜோவும் தமோவும் இருப்பதில்லை. ரஜோவுக்குரிய காலத்தின் பொழுது சதோகுணி இருக்க மாட்டாது. இம்மூன்று குணங்களும் ஒரேநேரத்தில் தொடர்ந்தும் இருந்து வருகின்றன என்று மக்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு கூறுவது முற்றிலும் தவறாகும். ஒரு நபர் உண்மையைக் கூறி, பாவம் எதனையும் செய்யாது விட்டால், அவர் சதோகுணியாக உள்ளார் என அவர்கள் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும், நாங்கள் சதோகுணியாக இருப்பதைப் பற்றிப் பேசும்பொழுது, சதோகுணம் என்றால் முழுமையான சந்தோஷமாகும், அதாவது, முழு உலகும் சதோகுணியாக இருப்பதாகும் என ஒருவரின் மனச்சாட்சி கூறுகின்றது. எவ்வாறாயினும், உண்மையைப் பேசுபவர்கள் சதோகுணி என்றும், பொய்களைக் கூறுபவர்கள் கலியுகத்தவர்களும் தமோகுணியும் என்றும், உலகம் இவ்விதமாகவே தொடர்ந்துள்ளது என்றும் உங்களால் கூற முடியாது. இப்பொழுது, நாங்கள் சத்தியயுகத்தைப் பற்றிப் பேசும்பொழுது, முழு உலகமும் சதோகுணியாகவும் சதோபிரதானாகவும் உள்ளது என்றே அதன் அர்த்தமாகும். ஆம், அது அத்தகைய சத்தியயுகமாகவும், முழு உலகும் சதோபிரதானாகவும் இருந்த குறிப்பிட்ட காலம் இருந்தது. அந்தச் சத்தியயுகமானது இப்பொழுது இல்லை. இது இப்பொழுது கலியுகத்து உலகம், அதாவது, முழு உலகிலும் தமோபிரதான் இராச்சியமே இருக்கின்றது. இந்;தத் தமோபிரதான் யுகத்தில் எவ்வாறு சதோகுணியான எதுவும் இருக்க முடியும்? இப்பொழுது பிரம்மாவின் இரவு என அழைக்கப்படுகின்ற காரிருள் நிலவுகின்றது. சத்தியயுகம் பிரம்மாவின் பகலும், கலியுகம் பிரம்மாவின் இரவும் ஆதலால், நாங்கள் இரண்டையும் இணைக்க முடியாது. அச்சா.