16/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் ஒரு பெரிய நீராவிக்கப்பலில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுடைய நங்கூரம் உயர்த்தப்பட்டு, உவர்ப்புக் கால்வாயூடாக நீங்கள் பாற்கடலுக்குச் செல்கின்றீர்கள்.
கேள்வி:
குழந்தைகள் குறிப்பாக எதில் களைப்படைந்து விடுகிறார்கள்? களைப்படைவதற்கான முக்கிய காரணம் யாது?
பதில்:
முன்னேறிச் செல்லும்பொழுது குழந்தைகள் நினைவு யாத்திரையில் களைப்படைந்து விடுகிறார்கள். களைப்படைவதற்கான முக்கிய காரணம் தீய சகவாசத்தின் ஆதிக்கமாகும். தந்தையின் கரங்களைக் கைவிடுமளவிற்கு நீங்கள் அவ்வாறான சகவாசத்திற்கு உள்ளாகுகிறீர்;கள். நல்ல சகவாசம் உங்களை அக்கரைக்கு இட்டுச் செல்கிறது என்றும், தீய சகவாசம் உங்களை மூழ்கடித்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. நீங்கள் கொண்டிருக்கும் சகவாசத்தின் ஆதிக்கத்திற்குள்ளாகி, நீராவிக் கப்பலிலிருந்து வெளியேறினால் மாயை உங்களைப் பச்சையாகவே உண்டு விடுகிறாள். இதனாலேயே குழந்தைகளாகிய உங்களை பாபா எச்சரிக்;கிறார்: சர்வசக்திவான் தந்தையின் கரங்களை ஒருபொழுதும் கைவிடாதீர்கள்.
பாடல்:
தாயே, ஓ தாயே, நீங்களே அனைவருக்கும் பாக்கியத்தை அருள்பவர்.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, ஓம் சாந்தி. இது மகா மந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆத்மா தனது ஆதி தர்மத்தின் மந்திரத்தை உச்சரிக்கிறார். ஆத்மாவான எனது ஆதி தர்மம் அமைதியாகும். அமைதிக்காக நான் காடுகள் போன்றவற்றிற்குச் செல்ல வேண்டியதில்லை. ஆத்மாவாகிய நான் அமைதி நிறைந்தவர். இவை எனது அங்கங்கள். சப்தம் எழுப்புவதும், சப்தம் எழுப்பாதிருப்பதும் எனது கரங்களிலேயே தங்கியுள்ளது. எவ்வாறாயினும், மக்களுக்கு இந்த ஞானம் இல்லாததால் அவர்கள் தொடர்ந்தும் வாயில்தோறும் அலைந்து திரிகிறார்கள். இது பற்றிய கதை ஒன்றுள்ளது: ஓர் அரசி தனது கழுத்தில் கழுத்துமாலை ஒன்றை அணிந்திருந்தார். அவர் அதை மறந்து, தான் அதனைத் தொலைத்து விட்டதாக எண்ணியதால், அதனை வெளியே எங்கெல்லாமோ தேடினார். அப்பொழுது யாரோ, அது அவர் கழுத்திலேயே உள்ளது என்று அவருக்குக் கூறினார்கள். இந்த உதாரணம் கொடுக்கப்;பட்டுள்ளது. மக்கள் வாயில்தோறும் அலைந்து திரிகிறார்கள். எவ்வாறு மன அமைதி இருக்க முடியுமென்று சந்நியாசிகள் போன்றோரும் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் ஆத்மாவிலேயே மனமும் புத்தியும் உள்ளன. ஆத்மா இந்த அங்கங்களைப் பெற்றவுடன் அவர் ‘பேசக்கூடியவர்’ ஆகுகின்றார். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் ஆதிதர்மத்தில் ஸ்திரமாக இருக்க வேண்டும். சரீர சமயங்கள் அனைத்தையும் மறந்துவிடுங்கள். பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்தியபொழுதும், உங்களில் சிலர் கூறுகிறீர்கள்: மௌனத்தில் அமர்வதற்கு எனக்கு உதவி செய்யுங்கள். விசேடமாக நடத்தப்படும் தியானத்தை நடத்துவோம். இவ்வாறு கூறுவது தவறாகும். ‘மௌனத்தில் அமர்வதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்’ என ஓர் ஆத்மா இன்னொருவரைக் கேட்கிறார். ஓ! உங்களுடைய ஆதி தர்மம் அமைதி அல்லவா? நீங்களாகவே மௌனத்தில் அமர முடியாதா? நடக்கும்பொழுதும், உலாவும்;பொழுதும் ஏன் உங்கள் ஆதிதர்மத்தில் உங்களால் ஸ்திரமாக இருக்க முடியவில்லை? பாதையைக் காட்டும் தந்தையைக் கண்டடையும்வரை எவராலும் ஆதிதர்மத்தில் ஸ்திரமாக இருக்க முடியாது. ஒவ்வொரு ஆத்மாவும் பரமாத்மா என்று அவர்கள் கூறியுள்ளார்கள். அதனால் அவர்களால் தங்கள் தர்மத்தில் ஸ்திரமாக இருக்க முடியாதுள்ளது. இந்த அமைதியற்ற உலகில் இதுவே உங்கள் இறுதிப் பிறவி. இப்பொழுது நீங்கள் அமைதி தாமத்திற்குச் செல்ல வேண்டும். பின் நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு ஒவ்வொரு வீட்டிலும் அமைதியின்மை உள்ளது. சத்திய யுகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒளி உள்ளது. இங்கு இருளே உள்ளது. இங்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் தடுமாற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இருள் உள்ளது. அதனால் அவர்கள் ஒரு விளக்கை ஏற்றி வைக்கிறார்கள். இராவணன் மரணித்தபின் அவர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். அங்கு இராவணன் இருக்க மாட்டான். அங்கு சதா தீபாவளி இருக்கும். இங்கு இது இராவணனின் இராச்சியம் என்பதால் அவர்கள் 12 மாதங்களுக்கு ஒருமுறை தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். இராவணன் மரணித்தவுடன், இலக்ஷ்மி நாராயணனின் முடிசூட்டு விழா இடம்பெறுகிறது. அவர்கள் அதைச் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். சத்தியயுகத்தில் இலக்ஷ்மியும், நாராயணனும் சிம்மாசனத்தில் அமரும்பொழுது, அவர்கள் முடிசூட்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். இப்பொழுது இராவணனின் இராச்சியம் முடிவுக்கு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். பாரதமே மீண்டும் ஒருமுறை இராச்சிய பாக்கியத்தை பெறவுள்ளது. இப்பொழுது இராச்சியம் இல்லை. நீங்கள் தந்தையிடமிருந்து இராச்சியத்தைப் பெறவுள்ளீர்கள். எல்லையற்ற தந்தை எல்லையற்ற இராச்சியம் என்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கிறார். தந்தை கூறுகிறார்: சதா சந்தோஷம் என்னும் ஆஸ்தியை நான் ஒருவரே உங்களுக்குக் கொடுக்கிறேன். ஏனைய அனைவரும் உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பவர்களே. அவர்கள் ஒருவேளை தற்காலிகச் சந்தோஷத்தைக் கொடுப்பவர்களாக இருக்கலாம்; அந்தச் சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றதே. மீண்டும் எதுவிதத் துன்பமும் இல்லாதவாறு நான் உங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறேன். இதனாலேயே நீங்கள் உங்கள் சரீரத்தையும், உங்களுடன் சரீர உறவுமுறையைக் கொண்டிருப்பவர்கள் அனைவரையும் மறந்து விட வேண்டும். அச்சரீரமும், சரீர உறவுகள் அனைத்தும் உங்களுக்குத் துன்பத்தையே கொடுக்கவுள்ளன. அவற்றைத் துறந்து, என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நீங்கள் என்னைக் காலையில் அமிர்தவேளையில் நினைவுசெய்ய வேண்டும். பக்தி மார்க்கத்திலும் மக்கள் அதிகாலையில் விழித்தெழுகிறார்;கள். சிலர் பிறருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றி எதனையாவது செய்கிறார்கள். ஏனையோர் வேறு எதையோ செய்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அதிகாலையில் விழித்தெழுந்து, முடிந்தவரை உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். இது தந்தையின் கட்டளை. பக்தர்கள் கடவுளை நினைவுசெய்து, பின்னர், அனைவரும் கடவுளே என்று கூறுகிறார்கள்! அவர்கள் இப்பொழுது எதனையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஒருநாள் அவர்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் ஆகுவார்கள். இது சிறந்ததென அவர்கள் கூறுவார்கள். கடவுள் சர்வவியாபி என்று கூறுவது உங்கள் சொந்தப் படகையும், பாரதத்தின் படகையும் மூழ்கச் செய்வதாகும். இரண்டாவதாக, தந்தையே சுய இராச்சிய உரிமை என்ற வெண்ணெயைப் பாரதத்திற்குக் கொடுக்கின்றார். அவரது பெயருக்குப் பதிலாக, வெண்ணெயைப் பெறுகின்ற, குழந்தை ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை அவர்கள் கொடுத்துள்;ளார்கள். இதனாலேயே கிருஷ்ணரிடமிருந்தே பாரதம் வெண்ணெயைப் பெறுவதாக மக்கள் நினைக்கிறார்கள். தந்தையின் பெயருக்குப் பதிலாக அவர்கள் குழந்தையின் பெயரைப் புகுத்தி, அனைத்தையும் அர்த்தமற்றதாக்கி உள்ளார்கள். கிருஷ்ணர் முழு உலகினதும் கடவுளாக இருக்க முடியாது. இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றி மக்கள் தமக்குத் தாமே சாபமிட்டுள்ளார்கள். தந்தையே படகோட்டி. நீங்கள் அனைவரும் படகுகள். ‘எனது படகை அக்கரைக்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்று நீங்கள் பாடுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது பெரிய நீராவிக்கப்பலில் அமர்ந்திருக்கிறீர்கள். நீராவிக்கப்பலின் கதை சந்திரகாந்த வேதாந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கதையும் இந்நேரத்தைக் குறிப்பதற்கே உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் நீராவிக் கப்பலில் அக்கரைக்குச் செல்கின்றீர்கள். நீங்கள் நச்சுக் கடலிலிருந்து அமிர்தக் கடலுக்கு அல்லது பாற் கடலுக்குச் செல்கின்றீர்கள். லண்டனிலிருந்து உவர்ப்புக் கால்வாயூடாகச் செல்லும் எந்த நீராவிக் கப்பலும் ஒரு பரிசினைப் பெறுகிறது. இங்கு இது நரகத்திலிருந்து சுவர்க்கத்திற்குச் செல்லும் விடயம். நச்சுக் கடல் உவர்ப்பானது. நீங்கள் ஒரு பெரிய நீராவிக் கப்பலில் அமர்ந்திருக்கிறீர்கள். நங்கூரம் உயர்த்தப்பட்டு, இப்பொழுது நீங்கள் நகரத் தொடங்கியுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் புறப்படுகிறீர்கள். நீங்கள் மறு பக்கத்திற்குச் செல்லவேண்டும். பயணிக்கும்பொழுது நீராவிக் கப்பல்கள் துறைமுகங்களுக்கு வருகின்றன. சிலர் நீராவிக் கப்பலிலிருந்து இறங்குகிறார்;கள். ஏனையோர் ஏறிக்கொள்கிறார்;கள். சிலர் உணவையும், பானத்தையும் தேடிப் போய், கப்பலைத் தவற விட்டு விடுகிறார்;கள். இதனை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் கிருஷ்ணரை பத்தூக் மகாராஜா என்றும் எழுதியுள்ளார்கள். அவரே நீராவிக் கப்பலின் தலைவராக இருந்தார். கப்பல் முன்னேறிச் செல்லும்பொழுது எவராவது அந்த நீராவிக் கப்பலிலிருந்து இறங்கினால் மாயை என்ற முதலை காத்திருக்கிறாள்;. அவள் மகாராத்திகளையும் முழுதாக விழுங்கிவிடுகிறாள். அவர்கள் கற்பதை நிறுத்துகிறார்;கள், அதாவது, அவர்களின் புத்தியில் நம்பிக்கை இருக்க மாட்டாது. அவர்கள் பின்னர் நடுக்கடலில் விழுந்து விடுகிறார்கள். ஒரு பறவை மரணிக்கும்பொழுது, முழு எறும்புக் கூட்டமும் அதனை எடுத்துச் செல்வதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். எனவே ஐந்து விகாரங்களின் தீய ஆவிகள் முற்றாக உங்களை உயிரோடு உண்டு, விழுங்கி விடுகின்றன. இதையிட்டு ஒரு நீண்ட கதை எழுதப்பட்டுள்ளது. சிலர் நீராவிக் கப்பலில் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் ஓர் உத்தரவாதத்தையும் எழுதி, தங்கள் புகைப்படங்களையும் அனுப்புவார்கள். பின்னர் அவர்கள் சிலரின் சகவாசத்தால் சீரழிந்து கற்பதை நிறுத்தி விடுகிறார்;கள். அப்பொழுது அவர்களுடைய புகைப்படங்கள் அவர்களுக்குத் திருப்பி அனுப்பப்படும். இப்பொழுது மாயை தமோபிரதானாக உள்ளாள். நீங்கள் கடவுளின் கரத்தைக் கை விட்டவுடன், அசுரர்கள் உங்களைப் பற்றிக் கொள்கிறார்கள். முன்னேறிச் செல்லும்பொழுது பலர் அவரின் கரங்களைக் கை விட்டு, நீராவிக் கப்பலிலிருந்து இறங்கி விடுகின்றார்கள். ‘இவர் கோபம் என்ற தீய ஆவியினாலோ அல்லது பற்று என்ற தீய ஆவியினாலோ பீடிக்கப்பட்டுள்ளார்’ என்ற செய்திகளை பாபா பெறுகின்றார். முதலில் நீங்கள் பற்றை அழித்தவர்கள் ஆகவேண்டும். ஒரேயொருவரிடம் மாத்திரம் நீங்கள் பற்றைக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு முயற்சி தேவை. பற்றின் சங்கிலிகள் பல உள்ளன. இப்பொழுது நீங்கள் ஒரேயொருவருடனான யோகத்தில் மாத்திரமே உங்கள் புத்தியை இணைக்க வேண்டும். மக்கள் பக்தி செய்வதற்கு அமர்ந்திருக்கும்பொழுது, தங்கள் வியாபாரங்கள், வீடுகள் போன்றவற்றில் அவர்களின் புத்தி அலைபாய்கின்றது. உங்களுக்கும் அதுவே இங்கு நிகழ்கிறது. முன்னேறிச் செல்லும்பொழுது நீங்கள் உங்கள் குழந்தையையோ அல்லது கணவரையோ நினைவுசெய்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் புத்தியின் யோகத்தை அந்தச் சங்கிலிகளிலிருந்து அகற்றுங்கள். அந்த ஒரேயொருவரை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். முடிவில் வேறு எவரையாவது நீங்கள் நினைவுசெய்தால், உங்கள் கணவரை நினைவுசெய்தால், அப்பொழுது...... இறுதியில் சிவபாபாவைத் தவிர வேறு எவரும் நினைவுசெய்யப்படக்கூடாது. உங்களுக்கு அவ்வாறான பயிற்சி இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து தந்தையை நினைவுசெய்யுங்கள்: பாபா, நான் உங்களிடம் வந்துள்ளேன். நான் நிச்சயம் சுவர்க்கத்தின் அதிபதியாகுவேன். நீங்கள் தந்தையையும், ஆஸ்தியையும் அதாவது, அல்பாவையும், பீற்றாவையும் நினைவுசெய்ய வேண்டும். அல்லா அல்லது அல்பா. பீற்றா இராச்சியமாகும். ஆத்மா ஓர் புள்ளியாகும். இங்கு மக்கள் திலகமிடும்பொழுது சிலர் ஒரு புள்ளியை இடுகிறார்கள். சிலர் நீண்ட கோட்டினை இடுகிறார்கள். சிலர் அதைக் கிரீட வடிவில் இடுகிறார்கள். சிலர் அதைச் சிறிய நட்சத்திரம் போன்று இடுகிறார்கள். சிலர் வைரத்தை இடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா. ஓர் ஆத்மா நட்சத்திரத்தைப் போன்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த ஆத்மாவில் முழு நாடகத்தின் பதிவுகளும் நிரம்பியுள்ளன. தந்தை இப்பொழுது உங்களுக்குக் கட்டளையிடுகிறார்: சதா தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். உங்களின் புத்தியின் யோகத்தை ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து விடுங்கள். வேறு எவராலும் உங்களுக்கு இந்த இலக்கைக் கொடுக்க முடியாது. தந்தை கூறுகிறார்: பல பிறவிகளுக்கான பாவச் சுமை உங்கள் தலையில் உள்ளது. நினைவின் மூலமன்றி அவற்றை எரிக்க முடியாது. என்றென்றும் ஆரோக்கியமானவர் ஆகுவதற்கு நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். என்றென்றும் ஆரோக்கியமானவராகவும், என்றென்;றும் செல்வத்துடனும் இருப்பதற்கான ஆஸ்தியை நீங்கள் தந்தையிடமிருந்து மாத்திரமே பெறுகிறீர்கள். உங்களுக்கு ஆரோக்கியமும் செல்வமும் இருக்கும்பொழுது வேறு என்ன உங்களுக்குத் தேவை? உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் இருந்து செல்வம் இல்லாவிடில் எந்தவிதச் சந்தோஷமும் இருக்க மாட்டாது. உங்களுக்குச் செல்வம் இருந்து நல்ல ஆரோக்கியம் இல்லாவிட்டால் அதுவும் நல்லதல்ல. உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, 21 பிறவிகளுக்கு நீங்கள் ஆரோக்கியத்தைப் பெறும் வகையில் முதலில் நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் ஆகினால் 21 பிறவிகளுக்குச் செல்வத்தைப் பெறுவீர்கள். இது அத்தகையதோர் இலகுவான விடயம். நான் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளேன். இப்பொழுது அனைத்தும் தூசாகப் போகின்றது. ஏன் நாங்கள் எங்கள் இதயத்தில் அதில் பற்றை வைத்திருக்க வேண்டும்? புதிய உலகம் என்ற இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கக்கூடிய அந்த ஒரேயொருவரிலேயே உங்கள் இதயம் பற்றுவைக்க வேண்டும். அவர் ஆத்மாக்களுடன் பேசுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் உங்கள் சரீரங்களை மறந்து, உங்களைச் சரீமற்றவர்களாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக இச்சரீரங்களைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அதிகாலையில் எழுந்து இதனை நினைவுசெய்ய வேண்டும். கால்வாயினூடாக உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் மணவாளனை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். ஏனைய அனைவரும் நச்சாற்றில் மூழ்குவார்கள். தந்தை ஒருவரே உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார். அவரே படகோட்டி எனவும், பூந்தோட்டத்திற்கு அதிபதி என்றும் அழைக்கப்படுகிறார். அவர் உங்களை முட்களிலிருந்து மலர்களாக்கி, சுவர்க்கத்திற்கு அனுப்புகிறார். பின்னர் சுவர்க்கத்தில் நீங்கள் ஒருபொழுதுமே எவ்விதத் துன்பத்தையும் காண மாட்டீர்கள். இதனாலேயே அவர் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்;பவர் என அழைக்கப்படுகிறார். அவர்கள் கூறுகிறார்கள்: ஹர ஹர மகாதேவா (அனைவருடைய துன்பத்தையும் அகற்றுபவராகிய மகாதேவா (சங்கரர்)) இது சிவனுக்கு மாத்திரமே கூறப்பட வேண்டும். அவர் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரின் தந்தையாவார். அந்தத் தந்தை உங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சந்தோஷம் என்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். ஆகவே நீங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். இதற்குத் தைரியம் தேவை. சிலர் அவரை நினைவுசெய்யும்பொழுது களைப்படைவதால், இங்கு வருவதை நிறுத்தி விடுகிறார்கள். அவர்கள் இந்தச் சகவாசத்தைக் கைவிடுமளவுக்கு அத்தகையதொரு சகவாசத்தைப் பெறுகிறார்கள். இதனாலேயே நல்ல சகவாசம் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றது என்றும், தீய சகவாசம் உங்களை மூழ்கடிக்கிறது என்றும் கூறப்படுகிறது. நீங்கள் வெளியே செல்லும்பொழுது உங்களுக்குத் தீய சகவாசம் கிடைக்கிறது. அதனால் போதை பறந்து விடுகிறது. “பிரம்மகுமாரிகளிடம் மந்திரவித்தை உள்ளது. அவர்கள் உங்களை மயக்கி விடுவார்கள். நீங்கள் அவர்களிடம் செல்லக்கூடாது” என்று சிலர் கூறுகின்றார்கள். பல சோதனைகள் வரும். ஏறத்தாழ பத்து வருடங்கள் வரை இங்கு இருந்தபின், தீய சகவாசத்தின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிய பலர் உள்ளார்கள். நீராவிக் கப்பலிலிருந்து நீங்கள் வெளியேறியவுடன் மாயை உங்களை உயிருடனே உண்டு விடுகின்றாள். தாங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உள்ளது. இருப்பினும்; மாயையின் பல புயல்கள் வருகின்றன. இது ஒரு போர்க்களம். மாயையின் இராச்சியம் அரைக் கல்பத்திற்குத் தொடர்ந்துள்ளது. நீங்கள் அவளை வெற்றிகொள்ள வேண்டும். அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். பின்னர் ஒருநாளைச் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். அவை அனைத்தும் செயற்கையான சந்தோஷம். உண்மையான சந்தோஷம் சந்தோஷ பூமியிலேயே கிடைக்கிறது. நரகத்திலுள்ள சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றதே. சுவர்க்கத்தில் சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. நீங்கள் இப்பொழுது சந்தோஷ பூமிக்கான முயற்சியைச் செய்கிறீர்கள். இந்தக் குத்துச் சண்டையில் சில சமயங்களில் மாயை வெல்கிறாள், சில சமயங்களில் குழந்தைகள் வெல்கிறார்கள். இந்தச் சண்டை இரவுபகலாகத் தொடர்கின்றது. நீங்கள் அதிபதியின் கரத்தை முற்றாகப் பற்றிக்கொள்ள வேண்டும். சக்திநிறைந்தவராகிய, சர்வசக்திவானே அதிபதி. நீங்கள் அவரின் கரங்களைக் கைவிட்டீர்களானால், சர்வசக்திவானால் என்ன செய்ய முடியும்? நீங்கள் அவரின் கரத்தைக் கைவிட்டவுடன் விழுந்துவிடுகிறீர்கள். நீராவிக் கப்பல் என்னும் விடயம் சமயநூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீராவிக் கப்பல் இப்பொழுது புறப்;படவுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன. நீங்கள் வைகுந்தத்தை உங்கள் முன்னே பார்க்கலாம். இறுதிக் கணங்களில் நீங்கள் மீண்டும் மீண்டும் வைகுந்தத்தின் காட்சிகளைப் பார்ப்பீர்கள். ஆரம்பத்தில் உங்களில் பலர் அவற்றைப் பார்த்ததைப் போன்று, இறுதியிலும், உங்களுக்குப் பல காட்சிகள் கிடைக்கும். இங்கிருந்து, தந்தையின் கரங்களைத் தைரியத்துடன் பற்றிக்கொண்டிருப்பவர்களே இவற்றை இறுதியில் பார்ப்பார்கள். ‘பாபா, இவர் ஒரு பணிப்பெண் ஆகுவார். இவர் இவ்வாறு ஆகுவார்;’ என்று புத்திரிகள் கூற ஆரம்பிப்பார்கள். நான் ஒரு பணிப்பெண் ஆகியுள்ளேன் என்ற வருத்தம் அப்பொழுது இருக்கும். நீங்கள் முயற்சி செய்திருக்கா விட்டால், உங்கள் நிலைமை வேறு எவ்வாறிருக்கும்? பின்னர் அதிகம் வருந்துதல் இருக்கும். ஆரம்பத்தில் நீங்கள் பெருமளவு வேடிக்கைகளையும், விளையாட்டுக்களையும் பார்த்திருப்பீர்கள். நாங்கள் பார்த்தவற்றை நீங்கள் பார்க்கவில்லை என்று ஒரு பாடல் உள்ளது. நேரம் அண்மிக்கும்பொழுது அனைத்தும் வெளிப்படுத்தப்படும்;; அப்பொழுது உங்களால் கற்க முடியாதிருக்கும். தந்தை கூறுவார்: நான் உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தினேன். இருப்பினும், நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்;பற்றவில்லை. ஆகவே உங்கள் நிலைமை இவ்வாறாகியுள்ளது. நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் அதே அந்தஸ்தைப் பெறுவீர்கள். இதனாலேயே பாபா கூறுகிறார்: தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். தாயையும் தந்தையையும் பின்பற்றுங்கள். சில தகுதியற்ற குழந்தைகளும் இருக்கிறார்கள்;; அவர்கள் மாயையின் ஆதிக்கத்திற்குள்ளாகி, விரக்தியை ஏற்படுத்துகிறார்கள். பின்னர் அவர்கள் மிகவும் கடுமையான தண்டனையைப் பெறுவதுடன், அவர்களின் அந்தஸ்தும் அழிக்கப்படுகிறது. குழந்தைகள் தண்டனைகளின் காட்சிகளையும் கண்டுள்ளனர். உலகில் அசுர சகவாசம் உள்ளது. ஆனால் இங்கோ உங்களுக்குக் கடவுளின் சகவாசம் உள்ளது. பாபா அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆகவே நான் இதனை அறிந்திருக்கவில்லையென்று எவரும் அந்நேரத்தில் கூறமுடியாது. விநாசம் இடம்பெறும் நேரத்தில் மக்கள் விரக்தியில் கதறி அழுவார்கள். உங்களுக்குப் பல காட்சிகள் கிடைக்கும். இரைக்கு மரணமும், வேடனுக்கு வெற்றியும் கிட்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்தும் நடனமாடுவீர்கள். விநாசத்தின் பின்னர் உங்கள் மாளிகைகள் எவ்வாறு கட்டப்படும் என்பதை நீங்கள் காண்பீர்கள். உயிரோடு இருப்பவர்கள் அனைத்தையும் காண்பார்கள். தந்தைக்கு உரியவராகிய பின்னரும் நீங்கள் அவரை விவாகரத்துச் செய்தீர்களாயின், உங்களால் எதனையும் காண முடியாது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டு, 5000 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒருமுறை வந்து பாபாவைச் சந்தித்த குழந்தைகளுக்கு அவர்களின் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமான அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சர்வசக்திவான் தந்தையின் கரத்தைத் தொடர்ந்தும் பற்றியிருங்கள். ஒரேயொரு தந்தையுடன் மாத்திரமே உங்கள் இதயத்தில் பற்றுக் கொண்டிருங்கள். அதிகாலையில் எழுந்து நினைவில் அமர்ந்திருங்கள்.
2. தீய சகவாசத்தின் ஆதிக்கத்தையிட்டு எச்சரிக்கையாக இருங்கள். தீய சகவாசத்தின் ஆதிக்கத்தின் காரணமாக ஒருபொழுதும் கற்பதை நிறுத்திவிடாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சிறப்பியல்புகளால் நிறைந்திருந்து, சேவையில் சதா ஒத்துழைப்பாக இருப்பதால், இலகுயோகத்தைப் கொண்டிருக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெறுவீர்களாக.
பிராமண வாழ்க்கை சிறப்பியல்புகளால் நிறைந்துள்ள ஒரு வாழ்க்கை ஆகும். ஒரு பிராமணராக இருப்பதென்றால், ஓர் இலகுயோகியாக இருக்கின்ற ஆசீர்வாதங்களைப் பெறுவதாகும். இதுவே இப்பிறவியில் முதலாவது ஆசீர்வாதம். உங்கள் புத்தியில் எப்பொழுதும் இந்த ஆசீர்வாதத்தை வைத்திருங்கள். இதுவே உங்கள் ஆசீர்வாதத்தை உங்கள் நடைமுறை வாழ்வில் இடுவதாகும். உங்கள் ஆசீர்வாதத்தைச் சகல ஆத்மாக்களுக்கும் சேவை செய்வதற்காகப் பயன்படுத்துவதே அந்த ஆசீர்வாதத்தை நிரந்தரமாக வைத்திருப்பதற்கான இலகு வழி. சேவையில் ஒத்துழைப்பாக இருப்பது என்றால் ஓர் இலகுயோகியாக இருப்பதாகும். எனவே இந்த ஆசீர்வாதத்தை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்து, சிறப்பியல்புகளால் நிறைந்தவர்கள் ஆகுங்கள்.
சுலோகம்:
உங்கள் ரூபத்தின் காட்சியையும், உங்கள் மேன்மையான இலக்கையும் உங்கள் நெற்றியிலுள்ள இரத்தினத்தின் மூலம் அருள்வதே, ஒரு வெளிச்ச வீடாக இருப்பதாகும்.