27.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நான் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை இராஜயோகம் கற்பித்து உங்களை அரசர்க்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். 'மீண்டும் ஒருமுறை" என்ற வார்த்தையினுள் முழுச் சக்கரமும் அடங்குகின்றது.

கேள்வி:
தந்தை சக்திநிறைந்தவர், மாயையும் சக்திநிறைந்தவள். இருவரும் எதிலே சக்திநிறைந்தவர்கள்?

பதில்:
தந்தை உங்களைத் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையாக்குகின்றார். தந்தை உங்களைத் தூய்மையாக்குவதிலே சக்திவாய்ந்தவர், இதனாலேயே அவர் தூய்மையாக்குபவர் என்றும், சர்வசக்திவான் என்றும் அழைக்கப்படுகின்றார். மாயை உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குவதில் சக்திவாய்ந்தவள் ஆவாள். உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கின்ற பொழுது, இலாபத்திற்குப்; பதிலாக இழப்பு ஏற்படுகின்ற வகையில் தீய சகுனங்கள் தோன்றுகின்றன. மாயை உங்களுக்கு விகாரங்கள் மீது பித்து பிடிக்குமாறு செய்கின்றாள். இதனாலேயே பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

பாடல்:
நாங்கள் கீழே விழக்கூடிய பாதையில் நடக்க வேண்டியிருப்பதால், நாங்கள்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஓம்சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் எப் பாதையில் நடக்க வேண்டும்? நிச்சயமாக, உங்களுக்குப் பாதையைக் காட்டுவதற்கு யாராவது ஒருவர் இருக்க வேண்டும். மக்கள் தவறான பாதையைப் பின்பற்றுகிறார்கள். அதனாலேயே அவர்கள் சந்தோஷமற்று இருக்கிறார்;கள். அவருடைய வழிகாட்டல்களைப் பிற்பற்றாததினால் அவர்கள் மிகவும் சந்தோஷமற்று இருக்கின்றார்கள். தவறான வழிகாட்டல்களைக் கொடுக்கின்ற இராவணனின் இராச்சியம் ஆரம்பித்ததிலிருந்து அனைவரும் தவறான வழிகாட்டல்களையே பின்பற்றி வருகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் இந்நேரத்தில் இராவணனின் கட்டளைகளையே பின்பற்றுகிறீர்கள். இதனாலேயே அனைவரும் அத்தகைய தீய நிலைமையை அடைந்துள்ளார்கள். அனைவரும் தங்களைத்; தூய்மையற்றவர்கள் எனக் கூறுகிறார்கள். பாபு காந்திஜியும் கூறுவதுண்டு: 'ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!. நாங்கள் தூய்மையற்றவர்கள் என்பதே இதன் அர்த்தமாகும். எவ்வாறாயினும், தாங்கள் எவ்வாறு தூய்மையற்றவர்கள் ஆகினார்கள் என்பதை அவர்களில் எவரும் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் பாரதத்தில் இராம இராச்சியத்தை விரும்புகின்றார்கள், ஆனால் அதை யார் அவ்வாறு உருவாக்குவார்கள்? தந்தை அனைத்தையும் கீதையில் விளங்கப்படுத்தியிருக்கிறார், ஆனால் அவர்கள் கீதையில் கடவுளுக்குப் பிழையான பெயரைக் கொடுத்துவிட்டார்;கள். நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். கிறிஸ்துவின் பைபிளில் அவர்கள் பாப்பரசரின் பெயரை இடுவார்களாயின் பெருமளவு இழப்பு ஏற்படும். இதுவும் நாடகமே ஆகும். தந்தை உங்களுக்குப் மிகப் பெரிய தவறை விளங்கப்படுத்துகிறார். ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இந்த ஞானம் கீதையில் இருக்கிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களை மீண்டும் ஒருமுறை அரசர்;க்கெல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுததுள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். நான் அதனை உங்களுக்குக் கூறுகின்றேன். இது எச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. எண்ணற்ற சமயநூல்கள் இருக்கின்றன. பல்வேறு வழிகாட்டல்கள் இருக்கின்றன. கீதை என்றால் கீதையே ஆகும். கீதையைக் கூறியவரே அந்த அறிவுரையைக்; கொடுத்தார். அவர் கூறுகின்றார்: நான் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு வந்துள்ளேன். மாயையின் நிழல் உங்கள் மீது விழுந்துள்ளது. நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். ஓ கடவுளே, வந்து மீண்டும் ஒருமுறை கீதையைக் கூறுங்கள் எனக் கீதையிலும் கூறப்பட்டுள்ளது. அதன் அர்த்தம்: எங்களுக்கு மீண்டும் ஒருமுறை கீதை ஞானத்தைக் கொடுங்கள். அசுர உலகம் அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருமுறை தேவ உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பது கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'மீண்டும் ஒருமுறை" என்ற வார்த்தை நிச்சயமாகப் பயன்படுத்தப்படும். குருநானக் மீண்டும் ஒருமுறை தனக்குரிய நேரத்தில் வருவார். அவர்கள் விக்கிரகங்களையும் காட்டுகிறார்கள். மயிலிறகுக் கீரிடத்துடன் அதே கிருஷ்ணர் இருப்பார். இந்த இரகசியங்கள் அனைத்தும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால், அவர்கள் கடவுளின் பெயரை மாற்றிவிட்டார்கள். நாங்கள் கீதையை நம்பவில்லை எனக் கூற மாட்டோம், ஆனால் தந்தை வந்து, மனிதர்கள் கீதையில் இட்டிருக்கின்ற தவறான பெயரை எங்களுக்கு விளங்கப்படுத்தி, அதனைச் சரியாக்குகிறார். ஒவ்வொரு ஆத்மாவும் அவருக்கென நிச்சயிக்கப்பட்ட சொந்தப் பாகத்தைக் கொண்டுள்ளார் என்பதையும் அவர் விளங்கப்படுத்துகிறார். அனைவராலும் ஒரேமாதிரி இருக்க முடியாது. மனிதர் என்றால் மனிதரே, அதேபோல் ஓர் ஆத்மா என்றால் ஆத்மாவே. எவ்வாறாயினும், ஒவ்வொரு ஆத்மாவிலும் அவருக்குரிய சொந்தப் பாகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ் விடயங்களை விளங்கப்படுத்துவதற்கு மிகவும் புத்திசாலியான நபர் ஒருவர் தேவைப்படுகிறார். யாரால் விளங்கப்படுத்த முடியும், யார் சேவை செய்வதில் விவேகமானவராக இருப்பவர், எவருடைய (புத்தியின்) இரேகை தெளிவாக இருக்கின்றது, யார் ஆத்ம உணர்வில் இருக்கிறார் என்பவற்றைத் தந்தை அறிவார். அனைவரும் முழுமையாக ஆத்ம உணர்வு உடையவர்களாக ஆகுவதில்லை. அதுவே இறுதியில் பெறுபேறாக இருக்கும். பரீட்சை நாட்கள் நெருங்கும்பொழுது யார் சித்தியடைவார்கள் என்பதை உங்களால் கூறமுடியும். 'இவரே அனைவரிலும் திறமைசாலி" என்பதை ஆசிரியர்களால் புரிந்துகொள்ள முடியும், குழந்தைகளாலும், புரிந்துகொள்ள முடியும். அங்கு, ஏமாற்றுவது சாத்தியமாகும்;; அது இங்கு இடம்பெற முடியாது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. முன்னைய கல்பத்தில் வெளிப்பட்டவர்கள் மாத்திரமே வெளிப்படுவார்கள். உங்களுடைய முயற்சிகளின் வேகத்திலிருந்து பாபாவினால் கூற முடியும். இந்த உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கையில் இலாபம், நஷ்டம், என்பவற்றுடன், சில வேளைகளில் தீய சகுனங்கள் போன்றவையும் ஏற்படுகின்றன. நீங்கள் நடக்கும் பொழுது உங்கள் கால்களை முறித்துக் கொள்கிறீர்கள். நீங்கள் தூய திருமணத்தைச் செய்கின்றபொழுதிலும், மாயை உங்களை முற்றிலும் பைத்தியமாக ஆக்குகின்றாள். மாயையும் மிகவும் சக்திவாய்ந்தவள். உங்களைத் தூய்மையாக்குவதில் பாபா சக்திவாய்ந்தவர். இதனாலேயே அவர் சர்வசக்திவான் என்றும், தூய்மையாக்குபவர் என்றும் அழைக்கப்படுகிறார். பின்னர் மாயை உங்களைத் தூய்மையற்றவர் ஆக்குவதில் சக்திவாய்ந்தவளாக இருக்கிறாள். சத்தியயுகத்தில் மாயை இருப்பதில்லை. அது விகாரமற்ற உலகமும், ஆனால் இது இப்பொழுது முற்றிலும் விகாரம் நிறைந்த உலகமும் ஆகும். பெருமளவு தாக்கம் இருக்கிறது. நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, மாயை உங்களை உங்கள் மூக்கால் பற்றிப் பித்துப் பிடித்தவர்கள்; ஆக்குகின்றாள். உங்களை பாபாவை விவாகரத்துச் செய்ய வைக்குமளவுக்கு, .அவள் மிகவும் சக்திவாய்ந்தவள் ஆவாள். பரமாத்மாவாகிய பரமதந்தை சர்வசக்திவான் என அழைக்கப்பட்டாலும், மாயையும் குறைந்தவள் அல்லள். அவளுடைய இராச்சியம் அரைக்கல்பத்திற்குத் தொடர்கிறது. எவரும் இதனை அறியார். இரவும் பகலும் அரைக்கு அரைவாசியாகும்; பிரம்மாவின் பகலும் பிரம்மாவின் இரவும். எவ்வாறாயினும், அவர்கள் சத்தியயுகத்தின் கால எல்லை நூறாயிரம் வருடங்கள் எனவும், கலியுகத்தின் கால எல்லையை அதைவிட அதிகமாகவும் காட்டியுள்ளர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், ஆகவே இது முற்றிலும் சரியானது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். கலியுகத்தில் மனிதர்கள் உங்களுக்குக் கீதையின் இராஜயோகத்தைக் கற்பித்து உங்களை அரசர்க்கெல்லாம் அரசர்களாக ஆக்க மாட்டார்கள். தான் இராஜயோகம் கற்று அரசர்க்கெல்லாம் அரசர்கள் ஆகலாம் என்பதைத் தங்கள் புத்தியில் கொண்டுள்ள எவருமே இல்லை. அந்தக் கீதைப் பாடசாலைகள் பல உள்ளன, ஆனால் அங்கு எவருமே இராஜயோகத்தைக் கற்று அரசர்க்கொல்லாம் அரசர்களாகவோ அல்லது அரசிகளாகவோ ஆக முடியாது. அங்கே ஓர் இராச்சியத்தை அடைவதற்கான இலக்கோ அல்லது இலட்சியமோ கிடையாது. இங்கு, எதிர்கால சந்தோஷ இராச்சியத்தைக் கோருவதற்காக நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் கற்கின்றீர்கள் எனக் கூறுகின்றீர்கள். அனைத்திற்கும் முதலில் நீங்கள் அல்பாவைப் பற்றி விளங்கப்படுத்த வேண்டும். அனைத்தும் கீதையிலேயே தங்கியுள்ளது. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது, அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள், அவர்கள் எங்கே செல்ல வேண்டும் என்பதை மக்கள் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? எவரும் இதனை அறியார். நாங்கள் எந்தத் தேசத்தில் இருந்து வந்தோம், நாங்கள் எந்தத் தேசத்திற்குச் செல்ல வேண்டும்? அந்தப் பாடல் இருக்கின்றது, ஆனால் அவர்கள், கிளிகளைப் போன்று தொடர்ந்தும் அதனைப் பாடுகின்றார்கள். 'ஓ! பரமாத்மாவாகிய பரமதந்தையே!" என்று கூறி, அவர்கள் கூவி அழைக்கின்ற அந்த ஒரேயொருவரை ஆத்மாக்களில்; உள்ள புத்தி, அறியாது. அவர்களால் அவரைப் பார்க்கவோ, அவரை அறிந்து கொள்ளவோ முடியாது. தனது தந்தையை அறி;ந்து, அவரைக் காண்பது ஓர் ஆத்மாவின் கடமையாகும். நாங்கள் ஆத்மாக்கள் என்பதையும், பரமாத்மாவாகிய பரமதந்தையான தந்தையே, எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். புத்தி கூறுகின்றது: தந்தை வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர்கள் ஓர் ஆத்மாவை வரவழைக்கும் பொழுது, இன்னாரின் ஆத்மா வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்கின்றார்கள். ஆகவே நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், அவர் உங்களுடைய தந்தை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும். நாங்கள் ஏன் சந்தோஷமற்றவர்கள் ஆகியுள்ளோம்? தந்தையே சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுப்பவர் என மக்கள் கூறுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் கடவுளை அவமதிக்கிறார்கள். அவர்கள் அசுர குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் முன்னைய கல்பத்தில் கூறியதையே இப்பொழுது கூறுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது நடைமுறையில் கடவுளின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். முன்னர் நீங்கள் அசுர குழந்தைகளாக இருந்தீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இந்தச் சில வார்த்தைகளை எவருக்கும் விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது: நீங்கள் கடவுளின் குழந்தைகள். கடவுளே இப்பொழுது நரகமாகியுள்ள சுவர்க்கத்தைப் படைத்தார். பின்னர் தந்தை மாத்திரமே மீண்டும் ஒருமுறை சுவர்க்கத்தைப் படைப்பார். தந்தை எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அச்சா, சிவன் யார் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அந்தத் தந்தையே பிரஜாபிதா பிரம்மாவையும் படைப்பவர் ஆவார். ஆகவே தந்தை நிச்சயமாகப் பிரம்மாவின் மூலமே உங்களுக்குக் கற்பிப்பார். இது இப்பொழுது சூத்திர குலமாகும். நாங்கள் பிராமணர்களிலிருந்து தேவர்களாகவும் சத்திரியர்களாகவும் ஆகுவோம். வேறு எதற்குப் பல்வகை ரூபம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்? அந்தப் படம் மிகச்சரியானதாகும், ஆனால் அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள இயலாதுள்ளது. சூத்திரர்களைப் பிராமணர்கள் ஆக்குபவர் யார்? பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். அவர் எவ்வாறு தத்தெடுக்கப்பட்டார்? 'இவர் எனது மனைவி" என நீங்கள் கூறுவது போலவே, அவர் எவ்வாறு இவரைத் தனக்குரியவர் ஆக்கினார்? அவர் இவரைத் தத்தெடுத்தார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னைத் தாயும், தந்தையும் என அழைக்கிறீர்;கள். நான் தந்தை ஆவேன். நான் எனது மனைவியை எங்கிருந்து கொண்டுவர முடியும்? ஆகவே நான் இவரினுள் பிரவேசித்து, இவருக்குப் பிரம்மா எனப் பெயரிடுகின்றேன். ஒரு மனைவி ஏற்றுக் கொள்ளப்படுகின்றாள். ஒரு பௌதீகத் தந்தையானவர் ஒரு மனைவியை ஏற்றுக் கொண்டு, பௌதீகப் படைப்புக்களைப் படைப்பதைப் போல, பாபாவும் இவரினுள் பிரவேசித்து, அவரைத் தத்தெடுத்து அவரின் மூலமாக வாய்வழித்தோன்றல்களை உருவாக்குகின்றார். நாங்கள் பிராமணர்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள். நிச்சயமாக இவருடைய பெயர் பிரம்மாவே ஆகும். பிரம்மா யாருடைய குழந்தை? சிவபாபாவின் குழந்தையாவார். அவரைத் தத்தெடுத்தவர் யார்? எல்லையற்ற தந்தை ஆவார். இந்த உதாரணம் மிகச் சிறந்ததாகும், ஆனால் எவருடைய புத்தியில் இது இருக்கின்றதோ, அவர்களால் மாத்திரமே இதை விளங்கப்படுத்த முடியும். இது ஒருவருடைய புத்தியில் இல்லாவிட்டால், எவ்வாறு விளங்கப்படுத்துவது என்பதை அவர் அறிய மாட்டார். பௌதீகத் தந்தையர்களும் பரலோகத் தந்தையும் இருக்கின்றனர். அவர்கள் ஒரு மனைவியை ஏற்றுக் கொண்டு, 'இவர் என்னுடைய மனைவி" எனக் கூறுகிறார்கள். அவர் இவரினுள் பிரவேசித்து இவரைத் தத்தெடுக்கின்றார். அவரே கூறுகின்றார்: அசரீரியான நான் இவருடைய ஆதாரத்தை எடுக்க வேண்டியுள்ளது. எனவே நான் அவருடைய பெயரையும் மாற்றுகின்றேன். அவரால் ஒரே நேரத்தில் எத்தனை பெயர்களைக் கொடுக்க முடியும்? நீங்கள் உங்களுடன் பெயர்களின் பட்டியலை வைத்திருக்க வேண்டும். கண்காட்சிகளில் பெயர்களின் பட்டியலும் காட்டப்;பட வேண்டும். பாபா ஒரேநேரத்தில் எவ்வாறு அனைத்துப் பெயர்களையும் கொடுத்தார் என்று பாருங்கள். பாபா எங்களைத்; தனக்குரியவர்கள் ஆக்கியதனால் எங்கள் பெயர்களையும் மாற்றியுள்ளார். அவர் பிருகுரிஷி (ஒவ்வொருவருடைய ஜாதகத்தையும் அறிந்த ஜோதிடர்) என அழைக்கப்படுகின்றார் கடவுள் மாத்திரமே உங்கள் ஜாதகத்தைக் வைத்திருக்கின்றார். அவை அற்புதமான பெயர்கள் ஆகும். அவர்களில் எவரும் இப்பொழுது இங்கு இல்லை. சிலர் வியப்படைந்து, பின்னர் ஓடி விட்டார்கள். அவர்கள் இன்று இங்கு இருப்பார்கள், ஆனால் நாளை இங்கிருக்க மாட்டார்கள். காமமே முதலாவது இலக்க எதிரியாகும். இக் காமவிகாரம் உங்களுக்குப் பெருமளவு விரக்தியை ஏற்படுத்துகின்றது. நீங்கள் அதை வெற்றி கொள்ள வேண்டும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதே, ஒன்றாக வாழ்ந்து, அதை வெற்றிகொள்ள வேண்டும். இதுவே உங்கள் சத்தியமாகும். நீங்கள் உங்கள் மனோநிலையைப் பரிசோதிப்பதுடன் பௌதீகப் புலன்களின் மூலம் எந்தப் பாவச் செயலையும் செய்யாதீர்கள். அனைவருக்கும் புயல்கள் வருகின்றன. நீங்கள் அவற்றையிட்டுப் பயப்படக்கூடாது. நான் இந்த வியாபாரத்தைச் செய்யலாமா? அல்லது வேண்டாமா? எனப் பல குழந்தைகள் பாபாவிடம் வினவுகின்றனர். பாபா அவர்களுக்குப் பதிலளித்து எழுதுகின்றார்: உங்கள் வியாபாரம் போன்றவற்றைக் கவனிப்பதற்காகவா நான் இங்கு வந்துள்ளேன்? நான் ஆசிரியராவேன், நான் உங்களுக்குக் கற்பிப்பதற்காகவே வந்துள்ளேன். உங்கள் வியாபாரங்களைப் பற்றி ஏன் என்னிடம் வினவுகின்றீர்கள்? நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். உருத்திர யாகம் நினைவு கூரப்படுகின்றது. நினைவுகூரப்படுவது கிருஷ்ணரின் யாகம் அல்ல. தந்தை கூறுகின்றார்: இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் உலகச்சக்கரம் பற்றிய ஞானம் இருக்க மாட்டாது. அவர்கள் பதினாறு சுவர்க்கக் கலைகள் கொண்டவர்களில் இருந்து பதினான்கு சுவர்க்கக் கலைகள் கொண்டவர்கள் ஆக வேண்டும் என்பதை அந்நேரத்தில் அறிந்திருந்தால், அவர்களுடைய இராச்சியத்தின் போதையும் பறந்து சென்று விடும். அங்கு எப்படியும் சற்கதி இருக்கும். ஒரேயொருவரே சற்கதியை அருள்பவர் ஆவார். அவர் மாத்திரமே வந்து உங்களுக்கு வழிமுறையைக் கூறுகின்றார். வேறு எவராலும் உங்களுக்கு இதைக் கூற முடியாது. காமமே கொடிய எதிரி என்று கூறியவர் யார்? என்ற தலைப்பை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். விகார உலகமும், விகாரமற்ற உலகமும் எனக் கூறப்படுகின்றது. பாரதத்தில் மாத்திரமே அவர்கள் தொடர்ந்து இராவணனின் கொடும்பாவிகளை எரிக்கின்றார்கள். அவர்கள் சத்திய யுகத்தில் அவற்றை எரிக்க மாட்டார்கள். அவர்கள் கூறுவது போல் அது அநாதியானதும், அவன் சத்திய யுகத்திலும் இருந்தான் எனில், அப்பொழுது எங்கும் துன்பமே இருந்திருக்கும். அவ்வாறெனில், அது எவ்வாறு சுவர்க்கம் என அழைக்கப்பட முடியும்? இவ்விடயங்கள் விளங்கப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொருவருடைய வேகமும் தனிப்பட்டதாகும். யார் நல்ல வேகத்தைக் கொண்டிருக்கின்றார் என உங்களால் கூறமுடியும். எவருமே இன்னமும் சம்பூரணமாகவில்லை. எவ்வாறாயினும், சதோ, இரஜோ, தமோ என்ற ஸ்திதிகள் உள்ளன. ஒவ்வொருவருடைய புத்தியும் வேறுபட்டதாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றாதவர்களுக்குத் தமோபிரதான் புத்தியே உள்ளது. நீங்கள் உங்களைக் காப்புறுதி செய்யாதுவிட்டால், உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு உரியவற்றை எவ்வாறு பெறுவீர்கள்? நீங்கள் மரணிக்க வேண்டும், ஆகவே நீங்கள் ஏன் உங்களைக் காப்புறுதி செய்து கொள்ளக்கூடாது? அனைத்தும் அவருக்கே உரியவை ஆகும். எனவே அவர் உங்களைப் பராமரிக்கவும் செய்வார். சிலர் அனைத்தையும் கொடுத்தார்கள், ஆனால் அவர்கள் சேவை செய்யாமல், தாங்கள்; கொடுத்ததிலிருந்து தொடர்ந்தும் உண்கின்றார்கள், ஆகவே அப்பொழுது என்ன சேகரிக்கப்படும்? எதுவுமே இல்லை! சேவையின் அத்தாட்சி தேவைப்படுகின்றது. இங்கு வழிகாட்டிகளாக வருகின்றவர்கள் யார் என்பது அவதானிக்கப்படும். அவர்களுக்கு மத்தியிலும் நிலையங்களை நடாத்துகின்ற புதிய பிரம்மகுமார்கள், குமாரிகளுக்கும் அதிகளவு நன்றிகள் செலுத்தப்படுகின்றன. இந்த ஞானம் மிகவும் இலகுவானதாகும். ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களிடம் சென்று, உண்மையில் ஓய்வு பெறும் ஸ்திதி என்பது எப்பொழுது உள்ளது என்பதை விளங்கப்படுத்துங்கள். தந்தை மாத்திரமே ஒரு வழிகாட்டியாகி அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்வார். தந்தையே மகா காலன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் பாபாவுடன் சந்தோஷமாக ஒன்றாகத் திரும்பிச் செல்வதை விரும்புகின்றோம். அனைத்திற்கும் முதலில், இந்தப் பிரதான தலைப்பை எடுத்துக்கொள்ளுங்கள்: படைப்புக்களைப் படைத்த கீதையின் கடவுள் யார்? இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் இராஜயோகம் கற்பித்தவர் யார்? அவர்களுடைய இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. வேறு எவருமே ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு வரவில்லை. தந்தையே ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு வருகிறார். அவர் தூய்மையற்ற அனைவரையும் தூய்மையாக்குகின்றார். இது விகார உலகமும், ஆனால் அதுவோ விகாரமற்ற உலகமுமாகும். இரு உலகங்களிலும் அந்தஸ்துக்கள் வரிசைக்கிரமமானவை ஆகும். இவ்விடயங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றவர்களின் புத்தியில் மாத்திரமே இருக்கும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1. ஆத்ம உணர்வில் இருங்கள், அப்பொழுது உங்கள் புத்தியின் இரேகை எப்பொழுதும் தெளிவாக இருக்கும். உங்கள் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கும் பொழுது, மாயை எவ்வகையிலும் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் எச்சரிக்கையாக இருங்கள்.

2. உங்கள் பௌதீகப் புலன்களின் மூலம் எப் பாவச்செயலையும் செய்யாதீர்கள். உங்களைக் காப்புறுதி செய்த பின்னர், நீங்கள் நிச்சயமாகச் சேவையையும் செய்ய வேண்டும்.

ஆசீர்வாதம்:
யோக சக்தியின் வெப்பத்தில், உங்கள் கண்ணீர் தாங்கியை காயச் செய்வதன் மூலம் சந்தோஷ சொரூபமாகவும் அழுவதிலிருந்து விடுபட்டவராகவும் ஆகுவீர்களாக.

இன்ன இன்னார் தமக்கு துன்பத்தை விளைவிக்கின்றார்கள் என்பதாலேயே தாம் அழுகின்றோம் என சில குழந்தைகள் கூறுகின்றார்கள், எவ்வாறாயினும் அவர் அதனை விளைவிப்பாராயினும் நீங்கள் அதனை ஏற்க வேண்டியதில்லை. அதனை விளைவிக்க வேண்டியது அவரின் கடமை, ஆனால் அதனை நீங்கள் ஏற்க வேண்டியதில்லை. கடவுளின் குழந்தைகள் என்றுமே அழ முடியாது. அழுகை நிறுத்தப்பட்டுவிட்டது -கண்ணீர் விட்டு அழுவது, மனதினால் அழுவது இரண்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. சந்தோஷம் இருக்கும் இடத்தில் அழுகை இருக்க முடியாது. ஆனந்த கண்ணீர் அல்லது அன்புக் கண்ணீர் இரண்டுமே அழுகை எனக் கூறப்படுவதில்லை. எனவே யோகசக்தியின் வெப்பத்தினால் கண்ணீர் தாங்கியை காயச் செய்து, தடைகளை விளையாட்டுகளாக் கருதினால் நீங்கள் சந்தோஷ சொரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் பாகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராக நடிக்கும் பயிற்சியை நீங்கள் கொண்டிருக்கும் போது, நீங்கள் பதற்றப்படுவதிலிருந்து அப்பால் இருப்பதால். இயல்பாகவே கவனம் செலுத்துவீர்கள்.