21/10/18 Avyakt Bapdada Tamil Lanka Murli 20.02.84 Om Shanti Madhuban
அதிமேன்மையான, மகத்தான, அழகான தருணம்.
இன்று, பாக்கியத்தை உருவாக்கும் தந்தை, மேன்மையான, பாக்கியசாலிக் குழந்தைகள் அனைவரையும் காண்பதில் களிப்படைகிறார். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் பாக்கியத்தை விழித்தெழச் செய்து, சென்ற கல்பத்தைப் போன்று இப்போதும் இங்கு வந்துள்ளீர்கள். உங்களின் பாக்கியத்தை விழித்தெழச் செய்தவண்ணம் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். இனங்காணுதல் என்றால் உங்களின் பாக்கியத்தை விழித்தெழச் செய்வதாகும். குறிப்பாக, இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் விசேடமான ஒன்றுகூடல், ஆசீர்வாதங்களின் பூமியில் இடம்பெறுகிறது. இது பாக்கியசாலிக் குழந்தைகளின் ஒன்றுகூடல் ஆகும். குழந்தைகளான நீங்கள் இனங்கண்டு, ஏற்றுக் கொண்டு, ‘எனது பாபா!’ என்று கூறும் தருணமே, உங்களின் பாக்கியம் முதலில் திறக்கும் மேன்மையான தருணம் ஆகும். அந்தக் கணமே, கல்பம் முழுவதிலும் அதிமேன்மையான, அழகான தருணம் ஆகும். நீங்கள் அனைவரும் இப்போதும் அந்தக் கணத்தை நினைவு செய்கிறீர்கள், அல்லவா? நீங்கள் சங்கமயுகம் முழுவதிலும், சொந்தமாகிய, சந்தித்த, உரிமையைக் கோரியதைத் தொடர்ந்தும் நினைவு செய்வீர்கள். ஆனால், அந்தக் கணமானது, அனாதைகளாக இருந்த நீங்கள் பிரபுவிற்கும் அதிபதிக்கும் சொந்தமாகி, நீங்கள் எவ்வாறு இருந்தீர்களோ அதற்கு முற்றிலும் வேறுபட்ட ஒருவராக மாறிய கணமே ஆகும். பிரிந்திருந்தவர்கள் மீண்டும் சந்தித்தார்கள். பேறுகள் இல்லாமல் இருந்த ஓர் ஆத்மா பேறுகளை அருள்பவருக்குச் சொந்தமாகினார். மாற்றத்திற்கான அந்த முதல் கணம், உங்களின் பாக்கியம் விழித்தெழுந்த அந்தக் கணம், மகத்தான, மேன்மையான தருணம் ஆகும். நீங்கள் தந்தைக்குச் சொந்தமாகிய அந்த முதல் கணம், சுவர்க்க வாழ்வை விட மகத்தானது. ‘எனது’ என்ற அனைத்தும் ‘உங்களுடையது’ என்று ஆகின. ‘உங்களுடையது’ என நீங்கள் கூறியவுடனேயே, நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் ஆகினீர்கள். ‘எனது’ என்ற சுமையில் இருந்து நீங்கள் இலேசாகினீர்கள். உங்களுக்கு சந்தோஷ இறக்கைகள் முளைத்தன. பூமியில் இருந்த நீங்கள், வானத்தில் பறக்க ஆரம்பித்தீர்கள். நீங்கள் கல்லில் இருந்து வைரமாக மாறினீர்கள். நீங்கள் பல வகையான சுழற்சிகளில் இருந்தும் விடுபட்டு, சுயதரிசனச் சக்கரதாரி ஆகினீர்கள். அந்தத் தருணம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? சரீரம், மனம், செல்வம், மனிதர்கள் என்ற பேறுகளின் பாக்கியம் நிறைந்த வியாழ திசையை நீங்கள் பெற்ற அந்தக் கணம் நினைவிருக்கிறதா? இத்தகைய திசைகளையும் இத்தகைய பாக்கிய ரேகையையும் நீங்கள் பெறும்போது, மேன்மையான பாக்கியத்தைக் கொண்டுள்ள ஒருவர் ஆகினீர்கள். உங்களின் மூன்றாம் கண் திறந்தது. நீங்கள் தந்தையைக் கண்டீர்கள். நீங்கள் அனைவரும் இதை அனுபவம் செய்தீர்கள், அல்லவா? நீங்கள் உங்களின் இதயங்களில் இந்தப் பாடலைப் பாடுகிறீர்கள், அல்லவா? ‘ஆஹா, அதிமேன்மையான கணமே, ஆஹா!’. இது அந்தக் கணத்தின் அற்புதம் ஆகும். இத்தகைய மகத்தான வேளையில், இத்தகைய அதிர்ஷ்டமான வேளையில் வந்திருக்கும் குழந்தைகளைக் காண்பதில் பாப்தாதா களிப்படைகிறார்.
தந்தை பிரம்மாவும் கூறுகிறார்: ஆஹா, ஆதிதேவரின் குழந்தைகளே, ஆரம்பத்தில் இருந்து இராச்சியத்திற்கான பாக்கியத்தின் உரிமையைக் கொண்டிருக்கும் எனது குழந்தைகளே! தந்தை சிவனும் கூறுகிறார்: ஆஹா, அநாதியாக, அநாதியான மற்றும் அழியாத உரிமைகளைக் கோரும் எனது குழந்தைகளே! நீங்கள் பாபாவிடமும் தாதாவிடமும் சகல உரிமைகளையும் கொண்டிருக்கும் நீண்ட காலம் பிரிந்திருந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளும் சகபாடிகளாக இருக்கும் அன்பான குழந்தைகளும் ஆவீர்கள். பாப்தாதாவிற்கு இந்த போதை உள்ளது. உலகில், ஆத்மாக்கள் அனைவரும் வாழ்க்கைத் துணைவரை, ஒரு உண்மையான துணைவரை, அன்பின் பொறுப்பை நிறைவேற்றக்கூடிய ஒரு துணைவரை அடைவதற்கே முயற்சி செய்கிறார்கள். அதிகளவில் தேடியபின்னர், அவர்கள் யாராவது சகபாடியைக் கண்டு கொள்கிறார்கள். எனினும், அவர்கள் திருப்தி அடைவதில்லை. அவர்களால் ஒரேயொரு இத்தகைய உண்மையான சகபாடியைக் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால், பாப்தாதா எத்தனை வாழ்க்கைத் துணைவர்களைக் கண்டுபிடித்துள்ளார்? ஒவ்வொருவரும் அடுத்தவரை மகத்தானவர்! நீங்கள் உண்மையான சகபாடிகள், அப்படியல்லவா? நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை இழந்தாலும், அன்பிற்கான பொறுப்பைக் கைவிடாத அத்தகைய உண்மையான சகபாடிகள். நீங்கள் அத்தகைய உண்மையான சகபாடிகள், வாழ்க்கைத் துணைவர்கள் ஆவீர்கள்.
பாப்தாதாவின் வாழ்க்கை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உலகச் சேவையே பாப்தாதாவின் வாழ்க்கை ஆகும். நீங்கள் அனைவரும் இத்தகைய வாழ்க்கையின் சகபாடிகள், அல்லவா? ஆகவே, பாப்தாதாவிடம் உண்மையான, வாழ்க்கைத் துணைவர்களான பல குழந்தைகள் இருக்கிறார்கள். இரவு, பகலாக நீங்கள் எதில் மும்முரமாக இருக்கிறீர்கள்? உங்களின் சகவாசத்தைக் கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளீர்கள். வாழ்க்கைத் துணைவர்களான உங்கள் அனைவருக்குள்ளும் உள்ள எண்ணம் என்ன? சேவைக்கான முரசங்களை அடிக்க வேண்டும். இப்போதும், நீங்கள் அனைவரும் அன்பிலே ஆழமாக மூழ்கியுள்ளீர்கள். நீங்கள் சேவை சகபாடிகளாகி, சேவைக்கான அத்தாட்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள். உங்களின் இலக்கிற்கேற்ப, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகிறீர்கள். இதுவரை நீங்கள் செய்த எதுவும், நாடகத்தின்படி, நல்லதே. நீங்கள் இப்போது தொடர்ந்து முன்னேற வேண்டும். இந்த வருடம், நீங்கள் பெரியதொரு ஒலி கேட்கும்படி செய்தீர்கள். எவ்வாறாயினும், இன்னமும், சில இடங்களில் இருந்து மட்டுமே மைக்குகள் வந்துள்ளார்கள். மைக்குகள் எல்லா இடங்களிலும் இருந்தும் வரவில்லை. எனவே, ஒலி பரப்பப்பட்டிருந்தாலும், இப்போது, எங்கும் உரத்த ஒலியை எழுப்புவதற்குக் கருவிகளாக இருப்பவர்கள், பெரிய மைக்குகள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள், அல்லது சேவைக்குக் கருவிகளாக இருக்கும் ஆத்மாக்கள்;, இங்கு வரவேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும், தாம் எங்கிருந்து வந்தோமோ, அந்த இடத்திற்கு ஒரு தூதுவராகத் தன்னைக் கருதியவண்ணம் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் இப்போது எந்த இடத்தில் இருந்து வந்துள்ளார்களோ, அந்த இடத்திற்கான தூதுவர்கள் ஆகவேண்டும். எவ்வாறாயினும், அனைத்து இடங்களில் இருந்தும் மைக்குகள் இங்கு வந்து, தூதுவர்களாகத் திரும்பிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு மூலையிலிருந்தும் அனைவரும் இந்தச் செய்தியைப் பெற்றால், ஒரே வேளையில் இந்த ஒலி எங்கும் கேட்கும். இதுவே பெரிய முரசங்களை அடித்தல் எனப்படுகிறது. ஒரே முரசம் எங்கும் அறையப்பட வேண்டும்: நாம் ஒன்றே, நாம் ஒன்றே. அப்போது மட்டுமே, வெளிப்படுத்தலுக்கான முரசங்கள் அறையப்பட்டுள்ளன எனக் கூற முடியும்.
இப்போது, ஒவ்வொரு நாட்டினதும் பாண்ட்வாத்தியங்கள் இசைத்துள்ளன. இப்போது முரசங்கள் அடிக்கப்பட வேண்டும். இசைக்கருவிகள் மிக நன்றாக இசைத்துள்ளன. அதனால் பாப்தாதா வௌ;வேறு நாட்டிலுள்ள கருவி ஆத்மாக்களின் பல்வகையான பாண்ட்வாத்தியங்கள் இசைப்பதைக் கேட்பதிலும் பார்ப்பதிலும் களிப்படைகிறார். அவர் பாரதத்தின் இசைக்கருவிகளின் ஒலியையும் கேட்டார். பாண்ட்வாத்தியங்களின் ஒலிக்கும் முரசங்களின் ஒலிக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஆலயங்களில், பாண்ட்வாத்தியங்களுக்குப் பதிலாக, அவர்கள் முரசங்களையே அடிப்பார்கள். நீங்கள் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது புரிந்து கொண்டீர்களா? ஒன்றுகூடலின் ஒலியானது, மிகவும் உரத்த ஒலியாகும். இப்போதும், ஒருவர் ‘ஹாஜி’ என்று கூறுவதற்கும், பின்னர் அனைவரும் ஒன்றாக ‘ஹாஜி’ என்று கூறுவதற்கும் இடையில் வேறுபாடு இருக்கும், அல்லவா? இதுவே ஒன்று. இந்த ஒன்று மட்டுமே உள்ளது. ஒன்று மட்டுமே உள்ளது. இந்த உரத்த ஒலி ஒரே வேளையில் எங்கும் ஒலிக்க வேண்டும். தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கைகள், மக்களின் வாய்கள் அனைத்தில் இருந்தும் இந்த ஒரு ஒலியே உரத்து ஒலிக்க வேண்டும். சர்வதேச அளவில் இந்த சத்தம் ஒலிக்க வேண்டும். ஆகவே, தனது வாழ்க்கை சகபாடிகளைக் காண்பதில் பாப்தாதா களிப்படைகிறார். ஒருவருக்கு இத்தனை வாழ்க்கை சகபாடிகள் இருக்கும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் மகத்தானவராக இருக்கும்போது, பணிகள் அனைத்தும் ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டன. மேன்மையான செயல்களுக்கான வெகுமதியை நீங்கள் உருவாக்குவதற்கான கருவியாக மட்டுமே தந்தை இருக்கிறார். அச்சா.
இது இப்போது சந்திப்பிற்கான பருவகாலம் ஆகும். போலந்தின் குழந்தைகளே இளைய, நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆவார்கள். இளைய குழந்தைகள் எப்போதும் அதிகளவில் நேசிக்கப்படுவார்கள். போலந்தில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு, அதிக காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் என்ற போதை உள்ளதல்லவா? நீங்கள் சகல பிரச்சனைகளையும் வெற்றி கொண்டு குறைந்தபட்சம் இங்கு வந்துள்ளீர்கள். இது ஆழ்ந்த அன்பு எனப்படுகிறது. ஆழ்ந்த அன்பானது தடைகளை முடிக்கிறது. நீங்கள் பாப்தாதாவினாலும் குடும்பத்தினராலும் நேசிக்கப்படுகிறீர்கள். போலந்தும், போர்த்துக்கல்லும், இரு நாடுகளும் ஆழ்ந்த அன்பைக் கொண்டிருப்பவர்கள். நீங்கள் மொழியையோ அல்லது பணத்தையோ பெரிதாக எண்ணவில்லை. ஏனெனில் உங்களின் அன்பு உங்களைப் பறக்கச் செய்கிறது. எங்கு அன்பு உள்ளதோ, அங்கு நீங்கள் நிச்சயமாக ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அசாத்தியமானவற்றில் இருந்து, அனைத்தும் அசாத்தியமானது ஆகும். இத்தகைய இனிய குழந்தைகளின் அன்பைக் கண்டு பாப்தாதா களிப்படைகிறார். மிகுந்த அன்புடன் சேவை செய்த கருவிக் குழந்தைகளுக்கு பாப்தாதா நன்றி கூறுகிறார். நீங்கள் அன்புடன் மிக நல்ல முயற்சி செய்துள்ளீர்கள்.
உண்மையில் இந்த வருடம், அனைவரும் மிக நல்ல குழுக்களை அழைத்து வந்துள்ளார்கள். எவ்வாறாயினும், இந்த நாடுகளும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே, பாப்தாதா குறிப்பாக அவற்றைப் பார்க்கிறார். நீங்கள் அனைவரும் உங்களின் சொந்த சேவைஸ்தலங்களை மிக நன்றாக வளர்ச்சி அடையச் செய்துள்ளீர்கள். இதனாலேயே, பாப்தாதா இடங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. எவ்வாறாயினும், ஒவ்வோர் இடத்திற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்பு உள்ளது. மதுவனத்திற்கு வருவதெனில், அது சேவையின் சிறப்பியல்பே ஆகும். பாப்தாதா குறிப்பாக, எங்கும் உள்ள கருவிக் குழந்தைகளுக்கு அன்பு மலர்களை வழங்குகிறார். எங்கும் பொருளாதாரத்தில் தளம்பல் இருந்தாலும், நீங்கள் ஆத்மாக்கள் பலரையும் பறக்கச் செய்து, இங்கு அழைத்து வந்துள்ளீர்கள். இது அன்புடன் செய்யப்படும் முயற்சியின் அடையாளம் ஆகும். இது வெற்றியின் அடையாளம் ஆகும். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உங்களின் பெயரால் மலர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இங்கு வராதவர்களிடம் இருந்தும் பல நினைவுக் கடிதங்களின் மாலைகள் வந்துள்ளன. எனவே, பௌதீகமான முறையில் இங்கு வரமுடியாதவர்களுக்கும் அன்பு நிறைந்த நினைவுகளை பாப்தாதா வழங்குகிறார். எங்கும் இருந்து வந்துள்ள குழந்தைகள் அனைவருக்கும் நினைவிற்கான பதிலை பாப்தாதா வழங்குகிறார். நீங்கள் அனைவரும் அன்பானவர்கள். நீங்கள் பாப்தாதாவின் வாழ்க்கை சகபாடிகள் ஆவீர்கள். நீங்களே சகவாசத்திற்கான பொறுப்பை சதா நிறைவேற்றும் நெருக்கமான இரத்தினங்கள் ஆவீர்கள். இதனாலேயே, நினைவுக்கடிதங்களுக்கும் தூதுவர்களுக்கும் முன்னர், உங்களின் நினைவானது பாப்தாதாவை வந்தடைகின்றது. இப்போதும் அது தொடர்ந்து அவரை வந்தடைகிறது. குழந்தைகளான நீங்கள் அனைவரும் இந்த வகையான சேவைக்காக இப்போது உற்சாகத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து பெற்ற அமைதியினதும் சந்தோஷத்தினதும் பொக்கிஷங்களை ஆத்மாக்கள் அனைவருக்கும் பாரிய அளவில் பகிர்ந்தளியுங்கள். ஆத்மாக்கள் அனைவருக்கும் தேவையாக இருப்பது, உண்மையான சந்தோஷமும் உண்மையான அமைதியுமே ஆகும். மக்கள் சந்தோஷத்தைப் பெறுவதற்காக அதிகளவு நேரத்தை, பணத்தை, பௌதீக சக்தியைச் செலவு செய்கிறார்கள். அவர்கள் ஹிப்பிகள் (hippநைள) ஆகுகிறார்கள். இப்போது அவர்களைச் சந்தோஷப்படுத்துங்கள் (hயிpல). அனைவரின் உணவுத் தேவையையும் பூர்த்திசெய்யும் அன்னபூர்ணாவின் (தேவி) பொக்கிஷக் களஞ்சியம் ஆகுங்கள். இந்தச் செய்தியை வெளிநாட்டில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் அனுப்புங்கள். பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் ஒரு செய்தியை வழங்குகிறார். முன்னேறும்போது, கவனக்குறைவினால், தீவிர முயற்சியாளர்களில் இருந்து குறைவான முயற்சியாளர்கள் ஆகும் குழந்தைகளும் இருக்கிறார்கள். சிலர் குறிப்பிட்ட காலத்திற்கு மாயையின் சுழற்சிக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அவ்வாறு அவர்கள் அகப்பட்டுக் கொண்ட பின்னர், அவர்கள் வருந்துகிறார்கள். முதலில், மாயையின் கவர்ச்சியால், அது சுழற்சி போன்று தென்படுவதில்லை. அது சௌகரியமாகவே இருக்கும். எவ்வாறாயினும், நீங்கள் சுழற்சியில் அகப்பட்டுக் கொள்ளும்போது, நீங்கள் உணர்கிறீர்கள். அவ்வாறு உணரும்போது, ‘பாபா, நான் என்ன செய்வது?’ என பாபாவிடம் கேட்கிறீர்கள். இத்தகைய சுழற்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட குழந்தைகளின் இத்தகைய பல கடிதங்களை பாபா பெறுகிறார். இத்தகைய குழந்தைகளுக்கும் பாப்தாதா அன்பையும் நினைவுகளையும் வழங்குவதுடன், இதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறார். பாரதத்தில் ஒரு கூற்று உள்ளது: ஒருவர் தனது வீட்டை இரவில் மறந்து, பின்னர் பகலில் வீடு திரும்பினால், அவர் வீட்டை மறக்கவில்லை என்றே கூறப்படுகிறது. நீங்கள் இந்த முறையில் மீண்டும் ஞானோதயம் பெற்றால், கடந்தது கடந்ததாக இருக்கட்டும். உங்களால் மீண்டும் புதிய ஊக்கத்தையும் புதிய உற்சாகத்தையும் புதிய வாழ்க்கையையும் அனுபவம் செய்து, தொடர்ந்து முன்னேற முடியும்.
பாப்தாதா உங்களை மூன்று தடவைகள் மன்னிக்கிறார். அவர் உங்களுக்கு மூன்று தடவைகள் வாய்ப்பு அளிக்கிறார். ஆகவே, எவரும் தயங்க வேண்டாம். நீங்கள் தயங்குவதை விடுத்து, அன்புடன் மீண்டும் திரும்பி வந்தால், உங்களால் முன்னேற முடியும். குறிப்பாக இத்தகைய குழந்தைகளுக்கு இந்தச் செய்தியைக் கொடுங்கள். சிலரால் தமது சூழ்நிலைகளால் வரமுடியாதிருக்கலாம். அவர்கள் தவிப்புடன் பாபாவை நினைவு செய்கிறார்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தைகளின் உண்மையான இதயத்தையும் அறிவார். உங்களுக்கு உண்மையான இதயம் இருக்கும்போது, இன்றில்லாவிட்டால், நாளை, நிச்சயமாக வெற்றி ஏற்படும். அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்கள் பாப்தாதாவின் முன்னால் இருக்கிறார்கள். பருவகாலத்தில் யாரின் முறை வருகிறதோ, அவர்களுக்கே முதலில் ஊட்டப்படுகிறது. சகல இடங்களையும் சார்ந்தவர்களுக்கு, பாக்கியசாலி ஆத்மாக்களுக்கு- இந்த இடத்தைச் சேர்ந்தவர்களுக்கு தந்தையின் அவதார பூமியைச் சேர்ந்தவர்கள் என்ற மேலதிக போதை உள்ளது - இத்தகைய சேவை இடம்பெறும் பாரத தேசத்தை, தந்தையின் அவதார தேசத்தை, உங்களின் எதிர்கால இராச்சிய தேசத்தைச் சேர்ந்த குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதா விசேடமான அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். ஏனெனில், நீங்கள் அனைவரும் உங்களின் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் ஏற்ப சேவை செய்தீர்கள். உங்களின் சேவையானது, ஆத்மாக்கள் பலரைத் தந்தைக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது. அவர் உங்களை வரவேற்கிறார். நீங்களும் அனைவரையும் பூங்கொத்து வழங்கி வரவேற்றீர்கள், அல்லவா? ஆகவே, பாபா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் ஒரு பூங்கொத்தை வழங்குவதுடன், வெற்றிப் பதக்கத்தையும் கொடுக்கிறார். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் பெயரால் தனிப்பட்ட முறையில் பாப்தாதாவிடமிருந்து உங்களின் பதக்கத்தையும் பூங்கொத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். அச்சா.
பிராந்தியங்களுக்குப் பொறுப்பாக இருக்கும் தாதிகள் தலைவர்கள் ஆவார்கள். ‘தலைவர்’ (உhயசைஅயn) என்றால் எப்போதும் உங்களின் ஆசனத்தில் அமர்ந்திருப்பவர் என்று அர்த்தம். எப்போதும் தமது ஆசனங்களில் சரியாக அமர்ந்திருப்பவர்களே தலைவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆசனத்துடன் கூடவே, நீங்கள் எப்போதும் நெருக்கமாகவும் இருக்கிறீர்கள். இதனாலேயே, ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒவ்வோர் அடியிலும் நீங்கள் எப்போதும் தந்தையின் சகபாடிகளாக இருக்கிறீர்கள். தந்தையின் அடிகளும் அவர்களின் அடிகளும் எப்போதும் ஒன்றே ஆகும். நீங்கள் உங்களின் பாதச்சுவடுகளைத் தந்தையின் சுவடுகளில் வைப்பவர்கள். ஆகவே, ஒவ்வோர் அடியிலும் எப்போதும் சகபாடிகளாக இருப்பவர்களுக்கு, பாபா பற்பல மில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அத்துடன் தயவுசெய்து தந்தையிடமிருந்து, மிக அழகான வைரங்களாலான தாமரை மலரையும் ஏற்றுக் கொள்ளுங்கள். சகோதரர்களும் மகாராத்திகளில் அடங்குகிறார்கள். பாண்டவர்கள் எப்போதும் சக்திகளின் சகபாடிகள் ஆவார்கள். தந்தையின் பணி என்னவோ, சக்தி சேனையினரும் பாண்டவ சேனையினரும் ஒன்றாகக் கருவிகளாகி, வெற்றியை ஏற்படுத்தும் வெற்றி ரூபங்கள் ஆகுகிறார்கள் என்ற சந்தோஷம் பாண்டவர்களுக்கு எப்போதும் உள்ளது. இதனாலேயே, பாண்டவர்களும் எதிலும் சளைத்தவர்கள் அல்ல. பாண்டவர்களும் மகத்தானவர்கள். ஒவ்வொரு பாண்டவரினதும் சிறப்பியல்பு அவருக்கே உரியது. நீங்கள் அனைவரும் விசேடமான சேவை செய்கிறீர்கள். அந்தச் சிறப்பியல்பின் அடிப்படையில், நீங்கள் தந்தைக்கும் குடும்பத்திற்கும் முன்னால் விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். ஆகவே, குறிப்பாக இத்தகைய சேவைக்குக் கருவிகளாக இருக்கும் விசேடமான ஆத்மாக்களான உங்கள் அனைவரையும் பாப்தாதா வெற்றித் திலகத்துடன் வரவேற்கிறார். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.
நீங்கள் அனைவரும் இப்போது அனைத்தையும் பெற்றுவிட்டீர்கள், அல்லவா? நீங்கள் அனைவரும் தாமரையையும் திலகத்தையும் பூங்கொத்தையும் பதக்கத்தையும் பெற்று விட்டீர்கள், அல்லவா? இரட்டை வெளிநாட்டவர்கள் பல்வேறு வழிகளில் வரவேற்கப்பட்டார்கள். அனைவரும் ஏற்கனவே அன்பையும் நினைவுகளையும் பெற்றுவிட்டார்கள். எவ்வாறாயினும், இரட்டை வெளிநாட்டவர்களுக்கும், இந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும், குழந்தைகளான நீங்கள் அனைவரும் சதா தொடர்ந்து முன்னேறி, உலகை மாற்றி, சதா சந்தோஷ ஊஞ்சல்களில் ஆடுவீர்களாக. இத்தகைய விசேடமான சேவையாளர் குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா ரிறினிடாட் குழுவைச் சந்திக்கிறார்:
நீங்கள் எப்போதும் உங்களை சங்கமயுகத்தின் மேன்மையான பிராமண ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? பிராமணர்கள் எப்போதும் உச்சிக்குடுமியுடன் காட்டப்படுகிறார்கள். தந்தை அதிமேலானவர். காலமும் அதிமேலானது. எனவே, நீங்களும் அதிமேலானவர்கள். மேன்மையான ஸ்திதியில் எப்போதும் இருப்பவர்கள் தங்களை இலேசானவர்களாகவும் ஒளியானவர்களாகவும் அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு உறவுமுறைகளால் அல்லது எந்தவொரு பழைய சம்ஸ்காரத்தால் அல்லது சுபாவத்தால் எந்தவிதமான சுமையும் இருக்கமாட்டாது. இதுவே சகல பந்தனங்களில் இருந்தும் விடுபட்டிருத்தல் எனப்படுகிறது. இந்தளவிற்கு நீங்கள் விடுபட்டிருக்கிறீர்களா? இந்த முழு குழுவும் பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ளது. ஆத்மாவாக விடுபட்டிருப்பதுடன், சரீர உறவுமுறைகளிலும் விடுபட்டிருக்கிறீர்கள். பந்தனத்தில் இருந்து விடுபட்டிருக்கும் ஆத்மாக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் நிலையத்தைப் பராமரிப்பார்கள், அப்படியல்லவா? எனவே, நீங்கள் எத்தனை சேவை நிலையங்களைத் திறப்பீர்கள்? உங்களுக்கு நேரம் உள்ளது. நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்குவீர்கள், அல்லவா? நீங்கள் பெற்றதை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இன்றைய உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு இந்த அனுபவம் தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், அல்லவா? இத்தகைய வேளையில், பேறுகளின் சொரூபமாக இருக்கும் ஆத்மாக்களான உங்களின் கடமை என்ன? எனவே, இப்போது சேவை அதிகரிக்கட்டும். வளர்ச்சி ஏற்படட்டும். எவ்வாறாயினும், ரிறினிடாட் நிரம்பியிருக்கும் ஒரு நாடு ஆகும். எனவே, ரிறினிடாட் நிலையங்களில் இருந்தே பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் வெளிப்பட வேண்டும். உங்களைச் சூழ பல பிரதேசங்கள் (நாடுகள்) உள்ளன. நீங்கள் அவர்களின் மீது கருணை கொள்கிறீர்களா? நிலையங்களைத் திறவுங்கள். அத்துடன் மைக்குகளையும் கொண்டு வாருங்கள். அதிகளவு தைரியத்தைக் கொண்டுள்ள ஆத்மாக்களால் தாம் விரும்பிய எதையும் செய்ய முடியும். மேன்மையான ஆத்மாக்களினூடாக மேன்மையான சேவை நிகழவேண்டும் என்பது நிச்சயிக்கப்பட்டுள்ளது. அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் தடைகளை வென்றவராகி, பல்வகை அனுபவங்களுடன் சதா ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் நிரம்பியவராக இருப்பீர்களாக.
தினமும் அமிர்தவேளையில், நாள் முழுவதற்குமாக, உங்களுடைய புத்தியில் ஊக்கம் மற்றும் உற்சாகத்திற்கான பல்வகைக் குறிப்புகள் வெளிப்பட வேண்டும். முரளியில் தினமும் வருகின்ற ஊக்கம், உற்சாகத்திற்கான குறிப்புகளை குறித்துக் கொள்ளுங்கள். இந்தப் பல்வகைக் குறிப்புகள் உங்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும். பல்வகைகளை விரும்புவது மனித சுபாவம் ஆகும். ஆகவே, நீங்கள் ஞானக் குறிப்புகளைக் கடைந்தாலென்ன அல்லது இதயபூர்வமான சம்பாஷணையை மேற்கொண்டாலென்ன, பல்வகையான ரூபத்துடன் ஸீரோ (பூச்சியம்) ஆகுங்கள். அத்துடன் உங்களின் ஹீரோ பாகத்தையும் உணர்ந்தவராக இருங்கள். நீங்கள் ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் நிறைந்தவராக இருப்பீர்கள். அப்போது சகல தடைகளும் இலகுவாக முடிந்துவிடும்.
சுலோகம்:
கோபத்தின் எந்தவொரு தீய ஆவியும் தொலைவில் இருந்தே ஓடும்படியாக உங்களின் ஸ்திதியை மிகவும் அமைதிநிறைந்தது ஆக்குங்கள்.