23.12.18    Avyakt Bapdada     Tamil Lanka Murli     12.03.84     Om Shanti     Madhuban


ஆன்மீகத்திற்கான இலகுவான வழிமுறை திருப்தி ஆகும்.


இன்று, தொலைவில் இருந்தாலும் நெருக்கமாக இருக்கும் எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரிலும் திருப்தியையும் ஆன்மீகத்தையும் மனநிறைவின் புன்னகையையும் பாப்தாதா பார்த்தார். ஆன்மீகத்தை அனுபவம் செய்வதற்கான இலகுவான வழிமுறை, திருப்தியே ஆகும். மலர்ச்சியானது இலகுவான பேறு ஆகும். திருப்தியுடன் இருப்பவர்கள் நிச்சயமாக மலர்ச்சியின் சொரூபங்களாகவே இருப்பார்கள். திருப்தியுடன் இருத்தல் என்றால் சகல பேறுகளின் சொரூபமாக இருத்தல் ஆகும். திருப்தியே சகல சிறப்பியல்புகளையும் கிரகிப்பதற்கான இலகுவான வழிமுறை ஆகும். திருப்தி என்ற பொக்கிஷம் இயல்பாகவே ஏனைய அனைத்துப் பொக்கிஷங்களையும் தன்னை நோக்கி ஈர்க்கும். திருப்தியே ஞானம் என்ற பாடத்தின் நடைமுறை அத்தாட்சி ஆகும். திருப்தியானது உங்களைக் கவலையற்ற சக்கரவர்த்தி ஆக்குகிறது. நீங்கள் சதா உங்களின் சுயமரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பதற்கான வழிமுறை திருப்தியே ஆகும். திருப்தியானது உங்களை இலகுவாகவும் எப்போதும் மகாதானியாகவும் உலக உபகாரியாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆக்குகிறது. ‘எனது மற்றும் உனது’ என்ற எல்லைக்குட்பட்ட சக்கரங்களின் சுழற்சியில் இருந்து திருப்தி உங்களை விடுவித்து, சுயதரிசனசக்கரதாரி ஆக்குகிறது. திருப்தி உங்களை சதா எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடுவித்து, தடுமாற்றம் இல்லாத, ஸ்திரமான வெற்றியாளர் ஆசனத்தின் உரிமையைக் கோரச் செய்கிறது. அது உங்களை பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் சதா அமர்ந்திருக்கும் உரிமையுள்ள முழுமையான ரூபத்தில் ஸ்திரமாக இருக்கச் செய்கிறது. இலகு நினைவெனும் திலகத்தை இடச் செய்கிறது. உலக மாற்றம் என்ற சேவைக்கான கிரீடத்தை அணியச் செய்கிறது. திருப்தி, பிராமண வாழ்க்கையின் வாழ்க்தைத் தானம் ஆகும். அது பிராமண வாழ்க்கையில் முன்னேறுவதற்கான இலகுவான வழிமுறை ஆகும். நீங்கள் உங்களுடனும் குடும்பத்துடனும் திருப்தியாக இருக்கும்போது, குடும்பமும் உங்களுடன் திருப்தியாக இருக்கும். அதேபோன்று, திருப்தி சொரூபங்கள் மேன்மையான ஆத்மாவாக, வெற்றியாளர் ஆத்மாவாக இருப்பதற்கான சான்றிதழுக்கான உரிமையைக் கோருகிறார்கள். நீங்கள் மூன்று சான்றிதழ்களைக் கோர வேண்டும்.

1) சுயம் சுயத்துடன் திருப்தியாக இருத்தல். 2) சுயத்தில் தந்தை சதா திருப்தி அடைதல். 3) சுயத்தில் பிராமணக் குடும்பம் திருப்தி அடைதல்.

இவற்றின் மூலம் உங்களால் உங்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மேன்மையானவை ஆக்க முடியும். இப்போதும், இந்தச் சான்றிதழ்களைக் கோருவதற்குக் காலம் உள்ளது. உங்களால் அவற்றைக் கோர முடியும். ஆனால் உங்களிடம் அதிகளவு நேரம் இல்லை. இப்போது காலம் பிந்தி விட்டது. ஆனால் இன்னமும் மிகவும் தாமதம் ஆகிவிடவில்லை. இப்போதும், உங்களால் திருப்தியெனும் சிறப்பியல்புடன் முன்னேற முடியும். இப்போதும், இறுதியில் வந்தாலும் விரைவாகச் சென்று, முதலில் வருவதற்கான எல்லை உள்ளது. பின்னர், இறுதியில் வருபவர்கள் இறுதியிலேயே இருப்பார்கள். ஆகவே, இன்று, பாப்தாதா இந்தச் சான்றிதழ்களைச் சோதித்தார். நீங்களும் உங்களைச் சோதித்துப் பார்க்க முடியும். நீங்கள் மலர்ச்சியாக இருக்கிறீர்களா அல்லது கேள்விகள் நிறைந்தவராக இருக்கிறீர்களா? இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் மலர்ச்சி நிறைந்தவர்களா? திருப்தியானவர்களா? உங்கள் கேள்விகள் அனைத்தும் முடிந்துவிட்டால், நீங்கள் மலர்ச்சியாக இருப்பீர்கள். திருப்திக்கான காலம் சங்கமயுகம் ஆகும். இந்த வேளையிலேயே உங்களிடம் திருப்தியின் ஞானம் உள்ளது. அங்கே, நீங்கள் திருப்தியாக இருத்தல் அல்லது அதிருப்தியுடன் இருத்தல் என்ற அறிவிற்கு அப்பாற்பட்டு இருப்பீர்கள். இந்த வேளையிலேயே சங்கமயுகத்தின் பொக்கிஷம் உள்ளது. திருப்தியான ஆத்மாக்கள் அனைவரும் மற்றவர்களுக்கும் திருப்தியின் பொக்கிஷங்களை வழங்குவார்கள். நீங்கள் அருள்பவரின் குழந்தைகளான மாஸ்ரர் அருள்பவர்கள் ஆவீர்கள். நீங்கள் இந்தளவைச் சேமித்துள்ளீர்கள், அல்லவா? நீங்கள் முழுமையான களஞ்சியத்தையும் சேமித்துள்ளீர்களா அல்லது இன்னும் சிறிதளவைப் பெறுவதற்கு இடம் உள்ளதா? உங்களின் களஞ்சியம் குறைவாக இருந்தால், உங்களால் உலக உபகாரி ஆகமுடியாது. உங்களால் உபகாரியாக மட்டுமே ஆகமுடியும். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும். அச்சா.

இந்தத் தேசத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள நீங்கள் அனைவரும், மாஸ்ரர் சர்வசக்திவான்களாக, சகல பொக்கிஷங்களும் நிறைந்தவர்களாகத் திரும்பிச் செல்கிறீர்கள், அல்லவா? நீங்கள் இங்கு வந்திருப்பதனால், திரும்பிச் செல்ல வேண்டும். தந்தையும் இங்கு வருகிறார். அவரும் திரும்பிச் செல்கிறார். குழந்தைகளான நீங்களும் இங்கு வந்து, நிரம்பியவர்களாகித் திரும்பிச் செல்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களைத் தந்தைக்குச் சமமானவர்கள் ஆக்குவதற்காகத் திரும்பிச் செல்கிறீர்கள். நீங்கள் உங்களின் பிராமணக் குடும்பத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்காகத் திரும்பிச் செல்கிறீர்கள். தாகம் நிறைந்த ஆத்மாக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள், அல்லவா? நீங்கள் உங்களின் இதயபூர்வமான விருப்பத்துடன் அல்லது எந்தவிதமான பந்தனத்தாலோ திரும்பிச் செல்லவில்லை. ஆனால், நீங்கள் குறுகிய காலத்திற்குத் தந்தையின் வழிகாட்டல்களுக்கேற்ப சேவை செய்வதற்காகத் திரும்பிச் செல்கிறீர்கள். நீங்கள் இந்தப் புரிந்துணர்வுடனேயே திரும்பிச் செல்கிறீர்கள், அல்லவா? நீங்கள் அமெரிக்காவை அல்லது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்காதீர்கள். இல்லை. பாப்தாதா உங்களைச் சேவைக்குக் கருவிகளாக்கி, அங்கு குறுகிய காலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பாப்தாதாவே உங்களை அங்கு அனுப்பி வைத்துள்ளார். உங்களின் சொந்த விருப்பத்தால் நீங்கள் அங்கு செல்லவில்லை. ‘எனது வீடு, எனது நாடு’ என்றெல்லாம் நீங்கள் கூறுவதில்லை. இல்லை. தந்தையே சேவைத்தலத்திற்காக உங்களை அனுப்பி வைத்துள்ளார். நீங்கள் அனைவரும் எப்போதும் பற்றற்றவராகவும் தந்தையின்மீது அன்பானவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்தவிதமான பந்தனமும் இல்லை. சேவைக்கான பந்தனமும் கிடையாது. தந்தை உங்களை அனுப்பி வைத்துள்ளார். எனவே அவர் அறிவார். நீங்கள் கருவிகள் ஆகியுள்ளீர்கள். எனவே, அவர் உங்களை எங்கு கருவிகள் ஆக்கியுள்ளாரோ, எவ்வளவு காலத்திற்கு ஆக்கியுள்ளாரோ, அங்கு கருவிகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இந்த முறையில் இரட்டை லைற் ஆக இருக்கிறீர்கள், அல்லவா? பாண்டவர்களான நீங்களும் அன்பானவர்களாகவும் பற்றற்றவர்களாகவும் இருக்கிறீர்கள், அல்லவா? எவருக்கும் எந்தவிதமான பந்தனமும் கிடையாது. பற்றற்றவர் ஆகுவதெனில், அன்பானவர் ஆகுதல் என்று அர்த்தம். அச்சா.

சதா திருப்தியின் ஆன்மீகத்தைப் பேணுபவர்களுக்கும், மலர்ச்சிநிறைந்தவர்களாக இருந்து, அனைவருக்கும் தமது ஒவ்வோர் எண்ணத்தாலும் வார்த்தையாலும் செயலாலும் திருப்தியின் சக்தியை வழங்குபவர்களுக்கும், மனவிரக்தி அடைந்துள்ள ஆத்மாக்களைப் பொக்கிஷங்களால் சக்திசாலி ஆக்குபவர்களுக்கும், சதா உலக உபகாரிகளுக்கும், எல்லையற்ற கவலையற்ற சக்கரவர்த்திகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா தாதிஜியையும் தாதி ஜான்கியையும் சந்திக்கிறார்:

நீங்கள் இருவரும் ரூப் (உருவம்) மற்றும் பசான்ந் (வார்த்தைகளைப் பொழிதல்) என்ற புனித அன்னங்களின் ஜோடியாக இருப்பது நல்லதே. இவர் (தாதி ஜான்கி) அதிகளவில் மௌன சொரூபமாக இருந்து சேவை செய்வதையே விரும்புகிறார். ஆனால் இவர் (தாதிஜி) பேசவேண்டியுள்ளது. இவர் தான் விரும்பும்போதெல்லாம் ஏகாந்தத்திற்குள் செல்கிறார். இவர் தனது ரூபத்தினால் சேவை செய்வதை விரும்புகிறார். உண்மையில், நீங்கள் அனைவரும் சகலகலாவல்லவர்கள். ஆனால் இது ரூப் மற்றும் பசான்ந்தின் ஜோடி ஆகும். உண்மையில், இந்த சம்ஸ்காரங்கள் இரண்டிற்குமான தேவை உள்ளது. வார்த்தைகள் செயற்படாத இடத்தில், ரூபம் செயற்படும். ரூபம் செயற்படாத இடத்தில், வார்த்தைகள் செயற்படும். ஆகவே, இது நல்லதொரு ஜோடி ஆகும். இணைந்த சகல ஜோடிகளும் நல்லவையே. அந்தச் சோடியும் நல்லது. இதுவும் நல்லது. (தீதியைக் குறிப்பிடுகிறார்) அவர் நாடகத்தில் ஒரு மறைமுகமான நதியாக இருந்தார். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அவரிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். அது பரவாயில்லை. நீங்கள் தீதியின் மற்றைய ரூபத்தைக் கண்டுள்ளீர்கள். அனைவரும் உங்களைக் காண்பதில் சந்தோஷப்படுகிறார்கள். மகாராத்திகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். பிரிஜ் இந்திரா, நிர்மல் சாந்தா – அனைவரும் வெகுதொலைவில் இருந்தாலும் சகபாடிகளே. சக்திகள் மிக நன்றாக ஒத்துழைக்கிறார்கள். நீங்கள் அனைவரும் உங்கள் ஒவ்வொருவரையும் மற்றவருக்கு முன்னால் வைத்து முன்னேறுவதனால், கருவி சக்திகளை முன்னணியில் வைப்பதனால், நீங்கள் அனைவரும் முன்னால் இருக்கிறீர்கள். இதுவே சேவையின் வளர்ச்சிக்கான காரணம் ஆகும். இதனூடாக நீங்கள் ஒருவரை மற்றவர் முன்னேறச் செய்கிறீர்கள். ஒருவருக்கொருவர் அன்பும் ஒற்றுமையும் உள்ளன. மற்றவர்களின் சிறப்பியல்புகளைச் சதா பேசுவதெனில் சேவையை வளரச் செய்வதாகும். இந்த வழிமுறையால் எப்போதும் வளர்ச்சி உள்ளது. தொடர்ந்து வளர்ச்சி ஏற்படும். சதா சிறப்பியல்புகளைப் பார்ப்பதுடன், சிறப்பியல்புகளைப் பார்ப்பதற்கு மற்றவர்களுக்குக் கற்பிப்பதும் ஒன்றுகூடலின் மாலையின் இழை ஆகும். முத்துக்களும் இழையில் கோர்க்கப்படுகின்றன. ஒன்றுகூடலின் இழையானது, சிறப்பியல்புகளைத் தவிர வேறு எதையும் பேசக்கூடாது என்பதே ஆகும். மதுவனம் மகத்தான பூமியாக இருப்பதனால், அங்கு மகத்தான பாக்கியமும் உள்ளது. மகாபாவமும் உள்ளது. ஒருவர் மதுவனத்தில் இருந்து திரும்பிச் சென்று, வீணான வார்த்தைகளைப் பேசினால், அந்தப் பாவம் சேமிக்கப்படும். ஆகவே, எப்போதும் சிறப்பியல்புகளைப் பார்க்கும் கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள். உங்களால் வீணானவை எதையும் பார்க்க முடியாது. உதாரணமாக, நீங்கள் இளஞ்சிவப்பு வர்ணம் பூசிய கண்ணாடிகளை அணியும்போது, உங்களால் இளஞ்சிவப்பைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாதிருக்கும். அதேபோன்று, எப்போதும் சிறப்பியல்புகளைப் பார்க்கும் கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிலவேளைகளில் எதையாவது பார்த்தாலும், அதைப் பற்றிப் பேசாதீர்கள். நீங்கள் அதைப் பற்றிப் பேசினால், உங்களின் பாக்கியத்தை இழப்பீர்கள். பலவீனங்கள் போன்றவை காணப்பட்டால், தந்தையே அவற்றுக்குப் பொறுப்பு ஆவார். யார் உங்களைக் கருவிகள் ஆக்கியவர்? தந்தையே. எனவே, கருவிகளாக இருப்பவர்களின் பலவீனங்களைப் பற்றிப் பேசுவதெனில், தந்தையின் பலவீனங்களைப் பற்றிப் பேசுதல் என்று அர்த்தம். ஆகவே, எவரும் மற்றவருக்காக நல்லாசிகளைத் தவிர வேறு எதையும் கூறக்கூடாது.

பாப்தாதா இரத்தினங்களான உங்களைத் தன்னைவிட அதிமேன்மையானவர்களாகவே பார்க்கிறார். நீங்கள் தந்தையின் அலங்காரங்கள் ஆவீர்கள். எனவே, தந்தையை அலங்கரிக்கும் குழந்தைகள் அவரை விட அதிமேன்மையானவர்கள். பாப்தாதா களிப்படைந்து, குழந்தைகளின் புகழ்ச்சிகளைப் பாடுகிறார். ஆஹா, எனது இந்த (பெயர்) என்ற இரத்தினமே! ஆஹா, எனது இந்த இரத்தினமே! அவர் தொடர்ந்து இந்தப் புகழைப் பாடுகிறார். தந்தை ஒருபோதும் எவரின் பலவீனங்களையும் பார்ப்பதில்லை. அவர் ஒரு சமிக்ஞை கொடுக்கும்போதும், உங்களின் சிறப்பியல்புக்கேற்ப மரியாதையுடனேயே அந்த சமிக்ஞையைக் கொடுக்கிறார். தந்தையிடம் அதிகாரம் இருந்தாலும், அவர் எப்போதும் மரியாதையுடனேயே சமிக்ஞையைக் கொடுக்கிறார். தந்தையின் இந்தச் சிறப்பியல்பானது சதா குழந்தைகளிடமும் வெளிப்பட வேண்டும். நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும், அப்படியல்லவா?

பிரதான மூத்த சகோதரிகள் அனைவரும் (தாதிகள்) பாப்தாதாவின் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்:

ஜீவன்முக்தி அடைந்த ஜனக்கின் புகழ் உங்களின் ஞாபகார்த்தம், அல்லவா? இரண்டு தலைப்புகள் உள்ளன – ஜீவன்முக்தி மற்றும் விதேகி (சரீரமற்றவர்) (இவை தாதிக்கு). இவர்- தாதிஜி – ஓர் இரத்தினம் ஆவார். திருப்தி இரத்தினம், நெற்றியிலுள்ள இரத்தினம், வெற்றி இரத்தினம் - பல இரத்தினங்கள்! அனைவரும் இரத்தினங்களே. வேறு எதுவும் அன்றி இரத்தினங்களே. இரத்தினங்களின் ஜொலிப்பை எந்தளவிற்கு நீங்கள் மறைக்க முயற்சி செய்தாலும், அவற்றை மறைக்க முடியாது. சேற்றுக்குள்ளும் ஓர் இரத்தினம் பிரகாசிக்கும். அது ஒளியாகச் செயற்படும். எனவே, அது உங்களின் பெயர். அதுவே நீங்கள் செய்ய வேண்டிய பணி. இவருக்கும் (தாதி ஜான்கி) அந்தப் பண்புகள் உள்ளன: சரீரமற்ற நிலை மற்றும் ஜீவன்முக்தி நிலை. நீங்கள் எப்போதும் வாழ்வின் சந்தோஷமான அனுபவத்தின் ஆழத்தில் இருக்கிறீர்கள். இதுவே ஜீவன்முக்தி நிலை என்று அழைக்கப்படுகிறது. அச்சா.

அவ்யக்த் வாசகம்: பணிவானவராக இருந்து, புதிய உலகைக் கட்டியெழுப்புங்கள்.

சேவையில் எப்போதும் இலகுவாகவும் வெற்றி பெறுவதற்கான பிரதானமான அடிப்படை, பணிவே ஆகும். பணிவானவராக இருத்தல் என்றால் உங்களின் சுய மரியாதையைப் பேணுதல் என்று அர்த்தம். அத்துடன் அனைவரிடமிருந்தும் மரியாதையைப் பெறுவதற்கான இலகுவான வழிமுறையும் அதுவே ஆகும். பணிவானவராக இருத்தல் என்றால் தலைவணங்குதல் என்று அர்த்தம் அல்ல. ஆனால், உங்களின் சிறப்பியல்பிற்கும் அன்பிற்கும் அனைவரையும் தலைவணங்கச் செய்வதாகும். மகத்துவத்தின் அடையாளம் பணிவே ஆகும். நீங்கள் எந்தளவிற்குப் பணிவானவராக இருக்கிறீர்களோ, அதற்கேற்ப, அனைவரின் இதயங்களிலும் நீங்கள் மகத்தானவராகக் கருதப்படுவீர்கள். பணிவானது உங்களை இலகுவாக அகங்காரமற்றவர் ஆக்கும். பணிவின் விதையானது இயல்பாக உங்களை மகத்துவத்தின் பலனைப் பெறச் செய்யும். பணிவே அனைவரின் இதயங்களில் இருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான இலகுவான வழிமுறை ஆகும். அகங்காரம் அற்றவர் ஆகுவதன் அடையாளம் பணிவே ஆகும். உங்களிடம் பணிவெனும் நற்குணம் இருக்கும்போது, உங்களின் மனோபாவம், பார்வை, வார்த்தைகள், தொடர்புகள், உறவுமுறைகள் அனைத்தும் மகத்தானவை ஆகிவிடும். தலைசாயும் ஒரு மரம் மற்றவர்களுக்குச் சேவை செய்வதைப் போன்று, பணிவானவராக இருத்தல் என்றால் சேவையாளராக இருப்பதுடன் தலைவணங்குதல் என்று அர்த்தம். இதனாலேயே, மகத்துவத்தினதும் பணிவினதும் சமநிலை இருக்க வேண்டும். பணிவாக இருப்பவர்கள் அனைவரின் மரியாதையையும் பெறுவார்கள். நீங்கள் பணிவானவராக இருக்கும்போது, அனைவரும் உங்களை மதிப்பார்கள். அகங்காரத்துடன் இருப்பவர்களை எவரும் மதிக்க மாட்டார்கள். அனைவரும் அவர்களில் இருந்து தொலைவில் சென்றுவிடுவார்கள். பணிவாக இருப்பவர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தையே கொடுப்பார்கள். அவர்கள் எங்கு சென்றாலும், எதைச்செய்தாலும், அவர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பார்கள். அவர்களுடன் தொடர்பில் வருகின்ற எவரும் சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள்.

சேவையாளர் ஒருவரின் சிறப்பியல்பானது, மிகவும் பணிவான உலகச் சேவையாளராக இருப்பதுடன் ஞானத்தின் அதிகாரத்தையும் கொண்டிருத்தல் ஆகும். நீங்கள் எந்தளவிற்குப் பணிவானவராக இருக்கிறீர்களோ, அந்தளவிற்குக் கவலையற்ற சக்கரவர்த்தியாகவும் இருப்பீர்கள். பணிவானவராகவும் அதிகாரியாகவும் இருப்பதில் சமநிலையைப் பேணுங்கள். வெற்றிநிறைந்த சேவைக்குப் பிரதானமான அடிப்படைகளாக இருப்பவை, பணிவானவராகவும் எல்லையற்றவராகவும் இருக்கும் உணர்வுடன் இருப்பதுடன், கருவியாகவும் இருப்பதாகும். எந்தளவிற்கு உங்களிடம் சுயமரியாதை இருக்கிறதோ, அந்தளவிற்கு உங்களிடம் பணிவும் தேவை. உங்களின் சுயமரியாதையில் அகங்காரம் இருக்கக்கூடாது. இளையவர்களை விட நீங்கள் அதி மேன்மையானவர்கள் எனக் கருதாதீர்கள். அவர்களுக்காக எந்தவிதமான வெறுப்பான உணர்வுகளும் இருக்கக்கூடாது. ஆத்மாக்கள் எத்தகையவர்களாக இருந்தாலும், அவர்களைக் கருணைப் பார்வையுடன் பாருங்கள். மற்றவர்களுடன் அகங்காரமான அல்லது இகழ்ச்சிக்குரிய உணர்வுகள் எதுவும் இருக்கக்கூடாது. உங்களின் பிராமணப் பிறப்பில் ஒருபோதும் அந்த வகையான நடத்தை இருக்கக்கூடாது. அகங்காரம் இல்லாதபோது, நீங்கள் அவமதிக்கப்பட்டாலும், அவமதிக்கப்பட்டதைப் போன்று உணர மாட்டீர்கள். இத்தகைய ஆத்மாக்கள் சதா பணிவானவர்களாக இருப்பதுடன் ஆக்கபூர்வமான பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள். பணிவாக இருப்பவர்களால் புதிய உலகினைக் கட்டி எழுப்பும் பணியைச் செய்ய முடியும். தன்னை ஒரு கருவியாகக் கருதிப் பணிவாக இருத்தலே, நல்லாசிகளுக்கும் தூய உணர்வுகளுக்குமான விதை ஆகும். எல்லைக்குட்பட்ட மரியாதையை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, பணிவாக இருங்கள். பிடிவாதம் தீய பழக்கவழக்கத்தைக் குறிக்கிறது. ஆனால் பணிவோ நல்ல பழக்கவழக்கத்தைக் குறிக்கிறது. அனைவருடனும் நீங்கள் தொடர்பில் வரும்போது, பணிவாக இருந்தால், நீங்கள் நல்ல குணவான் என்பதையும் உண்மையுள்ளவர் என்பதையும் குறிக்கின்றன. உங்களின் வெற்றியை இட்டு நீங்கள் அகங்காரத்துடன் இல்லாமல், அதைப் பற்றிப் பேசாமல் இருந்தால் நீங்கள் வெற்றி நட்சத்திரம் ஆகுவீர்கள். உங்களின் சொந்தப் புகழைப் பாடாதீர்கள். ஆனால், நீங்கள் எந்தளவிற்கு வெற்றிநிறைந்தவராக இருக்கிறீர்களோ, அந்தளவிற்குப் பணிவானவராகவும் ஆக்கபூர்வமானவராகவும் இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் இருங்கள். மற்றவர்கள் உங்களின் புகழைப் பாடக்கூடும். ஆனால் நீங்கள் தந்தையின் புகழை மட்டுமே பாடுங்கள். இத்தகைய பணிவானது இலகுவாக நீங்கள் ஆக்கபூர்வமான பணியைச் செய்ய உதவுகிறது. நீங்கள் பணிவானவர் ஆகும்வரை, உங்களால் ஆக்கபூர்வமான பணியைச் செய்ய முடியாது. மக்களின் தவறான புரிந்துணர்வினால், பணிவாக இருக்கும் பாடத்தைப் பயிற்சி செய்வதுடன் அனைவருக்கும் ‘ஹாஜி’ என்று கூறுபவர்கள், தோல்வி அடைந்தவர்களாகக் கருதுகிறார்கள். எவ்வாறாயினும், இத்தகைய ஆத்மாக்கள் உண்மையில் வெற்றியாளர்கள். உங்களின் புத்தியில் நம்பிக்கைக்குப் பதிலாக, மற்றவர்கள் அந்த வேளையில் கூறுவதைக் கேட்டு அல்லது சூழ்நிலைகளால் சந்தேகங்களை வளர்த்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள். நீங்கள் வெற்றி அடைவீர்களா அல்லது தோல்வி அடைவீர்களா என்ற சந்தேகத்தைக் கொண்டிராதீர்கள். அந்த சந்தேகத்திற்குப் பதிலாக, உங்களின் நம்பிக்கையில் உறுதியாக இருங்கள். இன்று, நீங்கள் தோல்வி அடைந்ததாக மற்றவர்கள் கூறலாம். ஆனால், நாளை, அதே மக்கள் உங்களின் மீது மலர்கள் தூவி உங்களைப் புகழுவார்கள். பணிவானவராகவும் ஆக்கபூர்வமானவராகவும் இருக்கும் சிறப்பியல்புகளுடன் கூடிய சம்ஸ்காரங்களைக் கொண்டிருத்தல், அதிபதியின் அடையாளங்கள் ஆகும். இத்துடன்கூடவே, இத்தகைய ஆத்மாக்களுடன் தொடர்பில் வருகின்ற மற்றவர்களும் அவர்களை அன்பானவர்களாகக் கருதி, அவர்களுக்குத் தமது இதயபூர்வமான ஆசீர்வாதங்களை வழங்குவார்கள். அவர்கள் தமது இதயபூர்வமான நல்லாசிகளை அவர்களுக்காகக் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் உங்களை அறிந்திருந்தாலென்ன அறியாவிட்டாலென்ன, அவர்கள் உங்களுடன் தூரத்து உறவுமுறையைக் கொண்டிருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, உங்களின் அன்பினூடாக, உங்களைப் பார்க்கும் அனைவரும் நீங்கள் அவர்களுக்குச் சொந்தமானவர்கள் என்பதை உணர வேண்டும். நீங்கள் சகல நற்குணங்களையும் கிரகித்து, சகல நற்குணங்களின் பலனையும் அனுபவம் செய்து நிரம்பியவர்கள் ஆகும் அளவிற்கு, நீங்கள் பணிவானவர்களாகவும் இருப்பீர்கள். உங்களின் பணிவான ஸ்திதியில் இருந்தவண்ணம் ஒவ்வொரு நற்குணத்தையும் வெளிப்படுத்துங்கள். அப்போது மட்டுமே நீங்கள் நேர்மையின் அதிகாரத்தைக் கொண்டுள்ள மகாத்மா என்று அழைக்கப்படுவீர்கள். சேவையாளர் என்றால் பணிவாக இருப்பதுடன் ஆக்கபூர்வமாகவும் இருப்பவர் ஆவார். சேவையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறை பணிவே ஆகும். பணிவாக இருப்பதன் மூலம், நீங்கள் சதா சேவையில் இலேசாக இருப்பீர்கள். நீங்கள் பணிவாக இல்லாமல், மரியாதையை மட்டும் விரும்பினால், அது ஒரு சுமை ஆகிவிடும். இவ்வாறு சுமையுடன் இருப்பவர்கள் எப்போதும் நின்றுவிடுவார்கள். அவர்களால் விரைவாகச் செல்ல முடியாது. ஆகவே, உங்களுக்குள் சுமை இருப்பதாக நீங்கள் உணரும்போதெல்லாம், உங்களிடம் பணிவு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எங்கு பணிவு உள்ளதோ, அங்கு அதிகாரதோரணை இருக்காது. ஆன்மீகமே இருக்கும். தந்தை இங்கு அதிகளவு பணிவுடன் வருகிறார். எனவே, அதே போன்று தந்தையைப் பின்பற்றுங்கள். சேவையில் சிறிதளவு அதிகாரதோரணை காணப்பட்டாலும், அந்தச் சேவை வெற்றி பெறாது. பிரம்மாபாபா அத்தகைய பணிவுடன் தன்னையே தாழ்த்திக் கொண்டார். அவர் குழந்தைகளின் பாதங்களைப் பிடித்துவிடத் தயாராக இருக்கும் அளவிற்கு மிகுந்த பணிவுடன் சேவை செய்யும் ஒரு சேவையாளராக இருந்தார். அவர் எப்போதும் குழந்தைகள் தனக்கு முன்னால் இருக்கிறார்கள் என்றும் அவர்களால் தன்னை விடச் சிறந்த முறையில் சொற்பொழிவுகள் ஆற்ற முடியும் என்று கருதினார். அவர் ஒருபோதும் தன்னை முன்னணியில் வைத்ததில்லை. அவர் எப்போதும் குழந்தைகளையே முன்னால் வைத்தார். அவர் எப்போதும் அவர்களை முன்னால் செல்ல வைத்ததுடன் அவர்களை மூத்தவர்களாகக் கருதினார். அவர் அவ்வாறு செய்ததால், அவர் தன்னைத் தாழ்த்திக் கொள்ளவில்லை. ஆனால், உண்மையில், அவர் மேலும் அதிமேன்மையானவர் ஆகினார். இதுவே முதலாம் இலக்கத் தகுதிவாய்ந்த சேவையாளர் ஆகுதல் எனப்படுகிறது. மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்து, உங்களைப் பணிவானவராக வைத்திருத்தல், மற்றவர்களில் கருணை காட்டுவதன் அடையாளம் ஆகும். இவ்வாறு சதா வழங்குதல், எல்லா வேளைக்கும் பெறுவதன் ரூபம் ஆகுகிறது. தற்காலிகமான அழிகின்ற மரியாதையைத் துறந்து, உங்களின் சுயமரியாதையில் ஸ்திரமாக இருங்கள். பணிவானவராக இருப்பதுடன், தொடர்ந்து மற்றவர்களுக்கும் மரியாதை கொடுங்கள். இவ்வாறு கொடுக்கும் ரூபம், பெறுகின்ற ரூபம் ஆகுகிறது. மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதெனில், அவர்களை முன்னணியில் வைத்து, அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டுவதாகும். நீங்கள் அவர்களுக்கு எல்லா வேளையும் ஊக்கம், உற்சாகம், சந்தோஷம், ஒத்துழைப்பென்ற பொக்கிஷங்களை வழங்கும்போது, நீங்கள் எல்லா வேளைக்கும் புண்ணியாத்மா ஆகுவீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் வீணான எண்ணங்களைச் சக்திநிறைந்த எண்ணங்களாக மாற்றி, இலகுயோகி ஆகும் ஒரு சக்திசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

சில குழந்தைகள் தமக்கு புலப்படும் பாகம் இல்லை, தம்மால் யோகம் செய்ய முடியவில்லை அல்லது சரீரமற்றவர் ஆகமுடியவில்லை என்று நினைக்கிறார்கள். இவை வீணான எண்ணங்கள் ஆகும். இந்த எண்ணங்களை மாற்றி, நினைவே உங்களின் ஆதி தர்மம் என்ற சக்திவாய்ந்த எண்ணத்தைக் கொண்டிருங்கள். ‘நான் ஒவ்வொரு கல்பத்திலும் இலகுயோகி ஆவேன். நான் யோகி ஆகாவிட்டால், வேறு யார் அவ்வாறு ஆகுவார்கள்?’. ஒருபோதும், ‘எனது உடல் நன்றாக இயங்குவதில்லை. எனவே நான் என்ன செய்வது? இந்தப் பழைய உடல் பயனற்றது’ என்று நினைக்காதீர்கள். இல்லை. ‘ஆஹா, ஆஹா!’ என்ற எண்ணங்களை உருவாக்குங்கள். உங்களின் இறுதிச் சரீரத்தின் அற்புதத்தின் பாடல்களைப் பாடுங்கள். நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
நல்லாசிகளின் சக்தியால் மற்றவர்களின் வீணான உணர்வுகளை மாற்ற முடியும்.