19/10/18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் உறவுமுறைகள் அனைத்தையும் ஒரேயொரு தந்தையுடன் வைத்திருந்தால், உங்கள் பந்தனங்கள் முடிவடைந்துவிடும். மாயை உங்களைப் பந்தனத்தில் கட்டுகின்றாள், ஆனால் தந்தையோ உங்களைப் பந்தனத்திலிருந்து விடுதலை செய்;கின்றார்.

கேள்வி:
யார் பந்தனத்திலிருந்து விடுபட்டிருப்பவர்கள் என்று கூறப்படுகிறார்கள்? பந்தனத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறை என்ன?

பதில்:
பந்தனத்திலிருந்து விடுபட்டிருப்பது என்றால் சரீரமற்றவராக இருத்தலாகும். சரீரங்களோ சரீர , உங்கள் புத்தியை ஈர்க்கக்கூடாது. சரீர உணர்வில் பந்தனம் உள்ளது. ஆத்ம உணர்வுடையவராகுங்கள் அனைத்துப் பந்தனங்களும் முடிவடைந்து விடும். மரணித்து வாழ்தல் என்றால் பந்தனத்திலிருந்து விடுபட்டவராகுதலாகும். இது இறுதிக் காலம் என்பதும், நாடகம் முடிவடைய உள்ளது என்பதும் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். நாங்கள் எங்கள் தந்தையின் வீட்டிற்குச் செல்கின்றோம். ஆகையால் நாங்கள் பந்தனத்திலிருந்து விடுபடுவோம்.

பாடல்:
புயலாலும், கடுங்காற்றினாலும் கடவுளின் சகவாசிகளை ஒன்றும் செய்ய முடியாது.

ஓம் சாந்தி.
தந்தை அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பல குழந்தைகள் இருப்பதால், தந்தை நிச்சயமாக எல்லையற்றவராகவே இருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: அசரீரியான சிவபாபா என்று கூறப்படுகின்றது. பிரம்மாவும் பாபா என்றே அழைக்கப்படுகின்றார். விஷ்ணுவோ சங்கரரோ பாபா என்று அழைக்கப்படுவதில்லை. சிவன் எப்பொழுதுமே பாபா என்றே அழைக்கப்படுகின்றார். சிவனின் வடிவம் சங்கரரின் வடிவத்திலிருந்து வேறுபட்டதாகும். ‘ஓம் நமசிவாய’ என்று அப் பாடல் கூறுகின்றது. பின்னர், அப் பாடலில் ‘நீங்களே தாயும் தந்தையும்’ என்று கூறப்பட்டுள்ளது. உண்மையிலேயே அசரீரியான சிவனை மாத்திரமே தந்தை என்று அழைக்க முடியும் என்று விளங்கப்படுத்துவது இலகுவாகும். அவர் ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை ஆவார். சங்கரரும் விஷ்ணுவும் அசரீரியானவர்கள் அல்ல. சிவனே அசரீரியானவர் என்று அழைக்கப்படுகின்றார். அவர்கள் அனைவரதும் விக்கிரகங்களும் ஆலயங்களில் உள்ளன. பக்தி மார்க்கத்தில் பல விக்கிரகங்கள் உள்ளன. அதிமேலான வடிவம் சிவபாபாவினுடையதாகும். அதன் பின்னர் பிரம்மாவினதும், விஷ்ணுவினதும், சங்கரரதும் விக்கிரகங்கள் உள்ளன. அவர்களுக்கென்று ஒரு வடிவம் உள்ளது. ஜெகதாம்பாளுக்கும் ஜெகத்பிதாவிற்கும் வடிவம் உள்ளது. இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் வடிவம் உள்ளது. கடவுள் மாத்திரமே அசரீரியானவர் ஆவார். எவ்வாறாயினும், அவரை ‘கடவுள்’ என்று மாத்திரமே அழைத்ததால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். கடவுளுடன் அவர்களுக்குள்ள உறவுமுறை என்னவென்று அவர்களிடம் வினவினால், அவர்கள், அவரே தந்தை என்று கூறுவார்கள். ஆகையால், அவரே தந்தையான கடவுள் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். தந்தை படைப்பவர் என்பதால் தாயும் தேவையாகும். தாயில்லாமல் எவ்வாறு தந்தையால் உலகைப் படைக்க முடியும்? அந்தத் தந்தை எப்பொழுது வருவார்? அனைவரும் கூவி அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவரே வாருங்கள்! முழு உலகமும் இப்பொழுது தூய்மையற்றதாகும். அது தூய்மையற்றதாக இருக்கும் போதே, அவர் வந்து அதனைத் தூய்மையாக்குகின்றார். தந்தை நிச்சயமாகத் தூய்மையற்ற உலகிற்கே வரவேண்டும் என்பதை அது நிரூபிக்கின்றது. ஆனால் நாடகத்திற்கு ஏற்ப, இதனை எவராலும் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. அவர்கள் புரிந்து கொள்ளாதபோது தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பாரதத்தில் மாத்திரமே ஞானமும் யோகமும் நினைவு கூரப்படுகின்றது. அத்துடன் அவர்கள் பிரம்மாவின் பகலையும், பிரம்மாவின் இரவையும் பற்றிப் பேசுகின்றார்கள். இரவில் காரிருள் சூழ்ந்துள்ளது. சத்குரு ஞான தைலத்தைக் கொடுத்த போது, அறியாமை என்ற இருள் அகன்றது என்று நினைவு கூரப்பட்டுள்ளது. தந்தையை அறியாதளவிற்கு மக்கள் அதிகளவு அறியாமையில் உள்ளனர். இதனைப் போன்ற அறியாமை வேறு எதுவும் இல்லை. ‘பரம தந்தையே! தந்தையான கடவுளே!’ என்றெல்லாம் கூறிய பின்னரும், அவரை அவர்கள் அறியாதிருந்தால், அதனை விட அறியாமை வேறு எதுவும் இல்லை. குழந்தைகள் ‘பாபா’ என்று கூறிய போதும், அவர்கள் அவரது தொழிலையும், பெயரையும், வடிவத்தையும் தெரியாது என்று கூறினால் அவர்கள் முட்டாள்கள் என்றும், விவேகமற்றவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். பாரதமக்கள் அவரைத் தந்தை என்று அழைத்த போதிலும் அவரை அறியாதிருத்தலே அவர்கள் செய்யும் பெரும் தவறாகும். அவர்கள் பாடுகின்றார்கள்: ‘ஓ தந்தையான கடவுளே, வந்து தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குங்கள்! துன்பத்திலிருந்து எங்களை விடுதலை செய்யுங்கள்! எங்கள் துன்பத்தை அகற்றி எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள்’. தந்தை ஒருமுறை மாத்திரமே வருகின்றார். இதனை நீங்கள் வரிசைக்கிரமமாக அறிவீர்கள். தந்தையிடமிருந்து தாம் தமது முழு ஆஸ்தியையும் பெறவுள்ளோம் என்பதைச் சிலர் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குத் தந்தையின் முழு அறிமுகமும் இல்லை. ஆகையால் அவர்கள் வினவுகின்றார்கள்: நான் என்ன செய்ய முடியும்? எனக்குப் பந்தனங்கள் உள்ளன. மரணித்து வாழ்ந்தல் எப்படி என்பது உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் பந்தனங்கள் முடிவடையும். ஒருவர் திடீரென மரணித்தால், அவர் தனது பந்தனத்திலிருந்து விடுதலை அடைகின்றார். இப்பொழுது அனைவரது பந்தனமும் முடிவடய உள்ளது. நீங்கள் பந்தனத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும். அதாவது, உயிருள்ள போதே சரீரமற்றவர் ஆகுதலாகும். தந்தை கூறுகின்றார்: உங்கள் சரீரம் போன்றவற்றின் பந்தனங்களை மறந்திடுங்கள். உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். எவ்வாறாயினும், நீங்கள் சரீர உணர்வுடையவராகும் போதே பந்தனத்திலுள்ள உணர்வு ஏற்படுகின்றது. அப்பொழுதே, ‘நான் எவ்வாறு விடுதலையடைவது?’ என்று நீங்கள் வினவுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் வீட்டில் வாழலாம். ஆனால் வீடு திரும்ப வேண்டும் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். ஒரு நாடகம் முடிவடையும் தறுவாயில், நடிகர்கள் நாடகத்தில் பற்றற்றிருப்பார்கள். தமது பாகத்தை நடிக்கும் போது, இன்னமும் சிறிது நேரமே எஞ்சியுள்ளது என்றும், தமது பாகத்தை நடித்து முடித்த பின்னர் தாம் வீடு திரும்ப வேண்டும் என்பதையும் அவர்களின் புத்தி அறிந்திருக்கும். இப்பொழுது இறுதி நேரம் என்பதை நீங்களும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது தெய்வீக உறவுமுறைக்குள் வருகின்றோம். இப் பழைய உலகில் வாழும் பொழுதே நீங்கள் தந்தையிடம் செல்கின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் பாடுகின்றீர்கள்: நாங்கள் எங்களை உங்களிடம் அர்ப்பணிப்போம். நாங்கள் உயிருள்ள போதே உங்களுக்குரியவர் ஆகுவோம். நாங்கள் எங்கள் சரீரங்களையும், சரீர உறவுமுறைகள் அனைத்தையும் மறந்து, உங்களுடன் மாத்திரமே ஓர் உறவுமுறையை வைத்திருப்போம். உங்களுக்கு அந்த உறவுமுறை இருப்பதால் அவரை நினைவு செய்து அவரின் மீது அன்பு கொண்டிருங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை உங்கள் அன்பிற்கினிய தந்தையுடன் இணைத்தால், உங்களைச் சூழ்ந்துள்ள துரு அகன்று விடும். யோகம் நினைவுகூரப்பட்டுள்ளது. ஏனைய அனைவரும் பௌதீகத்துடன் யோகம் செய்கின்றார்கள். நீங்கள் உங்கள் தாய்வழி தந்தைவழி உறவினருடனும், குருமார்கள் போன்றோருடனும் யோகம் செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியை அனைவரிடமிருந்தும் அகற்றி, என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். என்னுடன் மாத்திரமே யோகம் செய்யுங்கள். சரீர உணர்வுடையவர் ஆகாதீர்கள். உங்கள் சரீரத்தின் மூலம் செயலாற்றும் போதும், நீங்கள் ஒரு பாகத்தை நடிக்கின்றீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருங்கள். இப்பொழுது இது இப்பழைய உலகின் இறுதியாகும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் சரீரத்திலிருந்தும், சரீர உறவுமுறைகள் அனைத்திலிருந்தும் அப்பாற் செல்ல வேண்டும். இவ்வாறாக உங்களுடன் உரையாடுங்கள். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் செல்ல வேண்டும். சிலருக்குத் தமது மனைவியுடனும், சிலருக்குத் தமது கணவருடனும், சிலருக்கு வேறு எவரிடமுமோ பந்தனம் உள்ளது. பாபா பல வழிமுறைகளை உங்களுக்குக் காட்டுகின்றார். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் தூய்மையாகி பாரதத்தையும் நிச்சயமாகத் தூய்மையாக்க வேண்டும். நாங்கள் தூய்மையாகி, எங்களது சரீரம், மனம், செல்வத்தினால் சேவை செய்கின்றோம். எவ்வாறாயினும் நீங்கள் முதலில் பற்றை வென்றவராக வேண்டும். நீங்கள் பற்றை வென்றவராகிய பின்னர், அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதினால், அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். அவர்களிடம் ‘காமமே கொடிய எதிரி’ என கடவுள் கூறுகின்றார் என்று கூறுங்கள். நாங்கள் அதனை வெற்றி கொண்டு தூய்மையாக வேண்டும். தந்தையின் கட்டளை: தூய்மையாகுங்கள். நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். நாங்கள் விநாசத்தினதும், ஸ்தாபனையினதும் காட்சிகளைக் கண்டுள்ளோம். நாங்கள் தூய்மையாகுவதற்கு அவர்கள் எங்களுக்கு இப்பொழுது தடைகளை எற்படுத்தி எங்களை அடிக்கின்றார்கள். நாங்கள் பாரதத்திற்கு உண்மையான சேவையைச் செய்கின்றோம். இப்பொழுது எங்களுக்குப் புகலிடம் கொடுங்கள். எவ்வாறாயினும், நீங்கள் உண்மையிலேயே பற்றை வென்றவர் ஆக வேண்டும். சந்நியாசிகள் தமது வீட்டையும் குடும்பத்தையும் விட்டுச் செல்கின்றார்கள். இங்கே நீங்கள் குடும்பத்துடன் வாழும் போதே பற்றை வென்றவர் ஆக வேண்டும். சந்நியாசிகளின் பாதை வேறானது. மனிதர்கள் கூறுகின்றார்கள்: குடும்பத்துடன் வாழும் போதும், ஜனக மன்னனைப் போன்று, நாங்கள் முக்தியையும் ஜீவன்முக்தியையும் அடைவதற்கான ஞானத்தை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் இப்பொழுது அதனைப் பெறுகின்றீர்கள். பாபா கூறுகின்றார்: இவர் எனது மனைவி நான் அவரின் வாயினூடாக மக்களை உருவாக்குகின்றேன். அவர் இதனை பிரஜாபிதா பிரம்மாவின் வாயினூடாகக் கூறுகின்றார். சிவபாபா உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் எனது பேரக் குழந்தைகள். இவர் கூறுகின்றார்;: நீங்கள் எனது குழந்தைகள் ஆகிய பின்னர், சிவபாபாவின் பேரக் குழந்தைகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். எந்த மனிதராலும் சுவர்க்க ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்க முடியாது. அசரீரியானவர் மாத்திரமே அதனை உங்களுக்குக் கொடுக்கின்றார். எனவே, பக்தி ஞானத்திலிருந்து வேறுபட்டது. பக்தியில், அவர்கள் வேதங்களையும் சமயநூல்களையும் கற்கின்றார்கள், யாகங்கள் வளர்க்கின்றார்கள், தபஸ்யா செய்கின்றார்கள், தான தர்மங்கள் செய்கின்றார்கள். அதற்கு அதிகளவு செலவும் செய்யப்படுகின்றது. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் ஆகும். பக்தி துவாபரயுகத்தில் ஆரம்பமாகுகின்றது. தேவர்கள் பாவப் பாதையில் சென்று, தூய்மையற்றவர்கள் ஆகும் போது, அவர்களால் ‘தேவர்கள்’ என்ற பெயரைக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் பாவப் பாதையில் செல்லும் போதே அவர்கள் விகாரம் நிறைந்தவர்கள் ஆகுகின்றார்கள். எனவே, ‘தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் பாவப் பாதையில் சென்றதால், தூய்மையற்றவர்கள் ஆகினார்கள்’ என்று கூறப்படுகின்றது. தூய்மையற்றவர்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது என்பதாலேயே அவர்கள் இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் வேதங்களிலும், சமயநூல்களிலும் ‘ஆரியர்’ (சீரானவர்கள்;) என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்கள். ‘ஆரியர்’ என்ற பெயர் பாரத தேசத்தைக் குறிக்கின்றது. இப்பொழுது, அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது? ஆரியர் என்ற வார்த்தை சத்தியயுகத்தில் இருக்க மாட்டாது. அவர்கள் கூறுகின்றார்கள்: கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்திலிருந்த தேவர்கள் விவேகமானவர்களாக இருந்தார்கள் என்றும், பின்னர் அதே தேவர்களே, துவாபரயுகத்தில் விகாரம் நிறைந்தவர்கள் ஆகினார்கள் என்றும், அப்பொழுது அவர்கள் ‘ஆரியரல்லாதவர்’ (சீரழிந்தவர்கள்) என்றும் அழைக்கப்பட்டார்கள். ஒருவர் ‘ஆரியர்’ என்று கூறியதால், அன்றிலிருந்து அப் பெயர் தொடருகின்றது. ஒருவர், ‘கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார்’ என்று கூறியதாலோ அல்லது எழுதியதாலோ அனைவரும் அதனை நம்ப ஆரம்பித்து விட்டனர். அவர்கள் ‘ஓம் நமசிவாய, நீங்களே தாயும் தந்தையும்’ என்று பாடிய போதிலும், அவர் எவ்வாறு தாயும் தந்தையும் ஆவார் என்பதையோ, அவர் எப்பொழுது படைப்பைப் படைக்கின்றார் என்பதையோ அறியாதுள்ளார்கள். அவர் நிச்சயமாக உலக ஆரம்பத்தின் போதே அதனைச் செய்திருக்க வேண்டும். உலகத்தின் ஆரம்பம் எதுவாக இருந்திருக்கும்? சத்தியயுகமா அல்லது சங்கமயுகமா? சத்தியயுகத்தில் தந்தை வருவதில்லை. இலக்ஷ்மியும் நாராயணனும் சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் வருகின்றார்கள். அவர்களைச் சத்தியயுகத்தின் அதிபதிகள் ஆக்கியது யார்? அவர்; கலியுகத்திலும் வருவதில்லை. இதுவே கல்பத்தின் சங்கமயுகமாகும். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையற்றவர்களாகவும், உலகம் பழையதாகும் போதும், ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் நான் வருகின்றேன். நாடகச் சக்கரம் முடிவடையும் போது தந்தை வருகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் திறமைசாலிகளாக ஆக வேண்டும். அத்துடன் நீங்கள் தாரணையும் செய்ய வேண்டும். வேதங்களைக் கற்பதனால் உள்ள பயன்களையும், வேதங்களை ஏன் ஒருவர் கற்க வேண்டும் என்பதை பற்றிய மாநாட்டையும் அவர்கள் இப்பொழுது நடாத்துகின்றார்கள். அவர்கள் எந்தத் தீர்வையும் காணாததால், அடுத்த வருடமும் இவ்வாறான மாநாடுகளை நடாத்துவார்கள். அவர்கள் தீர்வுகளை எடுப்பதற்காகவே அமர்கின்றார்கள். ஆனால் எதுவும் தீர்க்கப்பட மாட்டாது. விநாசத்திற்கான ஆயத்தங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. அவர்கள் தொடர்ந்தும் குண்டுகளையும் தயாரிக்கின்றார்கள். இப்பொழுது இது கலியுகமாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இவ் விடயங்கள் தெரியும். நீங்கள் கூறுகின்ற விடயங்கள் தனித்துவமானவை. மனிதர்களுக்கு மனிதர்களால் முக்தியையோ ஜீவன்முக்தியையோ கொடுக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். தூய்மையாக்குபவர் நினைவு கூரப்படுகின்றார். அவ்வாறாயின் அவர்கள் ஏன் தம்மைத் தூய்மையற்றவர்கள் என்று கருதுவதில்லை? இது நச்சுக்கடலான தூய்மையற்ற உலகமாகும். அனைவருமே படகோட்டிகள் ஆக முடியாது. முழுமையாக விளங்கப்படுத்துவதற்கான சக்தியைக் குழந்தைகளாகிய நீங்கள் இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் இன்னமும் அந்தளவு திறமைசாலிகள் ஆகவில்லை. உங்களுக்கு யோகமும் இல்லை. இப்பொழுதும், நீங்கள் சிறு குழந்தைகள் போன்று அழுகின்றீர்கள். உங்களால் மாயையின் புயலைச் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அதிகளவு சரீர உணர்வுள்ளது. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதில்லை. பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மா என்று கருதுங்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நடிகர்கள் அனைவரும் தத்தமது சொந்தப் பாகங்களை நடிக்கின்றார்கள். அவர்கள் தமது சரீரங்களை நீக்கி, வீடு திரும்புவார்கள். நீங்கள் பற்றற்ற பார்வையாளர்களாகப் பார்க்க வேண்டும்;. நீங்கள் உங்கள் சரீர உறவினர் மீதும், உங்கள் சரீரத்தின் மீதும் ஏன் பற்றைக் கொண்டுள்ளீர்கள்? நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகாததால், உங்கள் பாவங்களும் அழிக்கப்படுவதில்லை. நீங்கள் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்தால், உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். சிவபாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார். அதன் பின்னர் நாங்கள் தேவர்கள் ஆகுவோம். அப்பொழுது அளவற்ற சந்தோஷம் இருக்கும். பாரதமக்கள் சந்தோஷத்தில் இருந்த போது, ஏனைய அனைவரும் அமைதி தாமமான, நிர்வாணா உலகில் இருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இப்பொழுது பல மில்லியன் மக்கள் உள்ளனர். நீங்கள் இப்பொழுது ஜீவன்முக்தியை அடையவே முயற்சி செய்கின்றீர்கள். ஏனைய அனைவரும் வீடு திரும்புவார்கள். பழைய உலகை புதியதாக்க வேண்டும். தந்தையால் மாத்திரமே அதனைப் புதியதாக்க முடியும். மரக்கன்;று நடப்பட்டுள்ளது. இது தெய்வீக மலர்களிற்கான மரக்கன்றாகும். நீங்கள் முட்களிலிருந்து மலர்கள் ஆகுகின்றீர்கள். பூந்தோட்டம் முழுமையாகத் தயாராகும் போது, இந்த முட்காடு அழிந்து விடும். அது எரியூட்டப்பட வேண்டும். அதன் பின்னர் நாங்கள் பூந்தோட்டத்திற்குச் செல்வோம். நீங்கள் ஏன் மம்மாவையும் பாபாவையும் பின்பற்றக்கூடாது? ‘தாய் தந்தையைப் பின்பற்றுங்கள்’ என்று நினைவுகூரப்பட்டுள்ளது. மம்மாவும் பாபாவும் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களே 84 பிறவிகளை எடுத்துள்ளார்கள். அது உங்களுக்கும் பொருந்தும். அவர்களுடையது பிரதான பாகமாகும். தந்தை வந்து, மீண்டும் ஒருமுறை சூரிய, சந்திர இராச்சிய வம்சங்களை ஸ்தாபிக்கின்றார் என்பது எழுதப்பட்டுள்ளது. இதனை உங்களுக்குத் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ள போதும், உங்கள் சரீர உணர்வு துண்டிக்கப்படவில்லை. ‘எனது கணவன், எனது குழந்தை…’ ஓ ஆனால் அவை பழைய உலகின் பழைய உறவுமுறைகள் அல்லவா? ‘என்னுடையவர், ஒரேயொரு சிவபாபாவே அன்றி, வேறு எவரும் அல்ல’. சரீரதாரிகள் அனைவரின் மீதுமுள்ள உங்கள் பற்றை அகற்றுவது மிகவும் சிரமமாகும். ஒருவரின் பற்றை அழித்துக் கொள்வது மிகவும் சிரமமானது என்பதைத் தந்தை புரிந்து கொள்கின்றார். அவர்களின் முகம் அவ்வாறாகத் தோன்றும். குமாரிகள் மிகச் சிறந்த உதவியாளர் ஆகுகின்றார்கள். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. உங்கள் சரீரம் உட்பட, அனைத்திலிருந்தும் உங்கள் பற்றை அகற்றி, சரீரமற்றவர் ஆகுவதற்கு முழு முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு நடிகரது பாகத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பாருங்கள். பந்தனத்திலிருந்து விடுபடுங்கள்.

2. இப் பழைய உலகிலிருந்து அப்பாற் செல்லுங்கள். உங்களுடனேயே உரையாடுங்கள்: நான் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது இது பழைய உலகின் இறுதியாகும். எனது பாகம் இப்பொழுது முடிவிற்கு வந்துள்ளது.

ஆசீர்வாதம்:
அனைத்து பந்தனங்களிலிருந்தும் விடுபட்டவராகவும் இரட்டை ஒளியாக இருக்கும் விழிப்புணர்வின் மூலமும் பறக்கும் ஸ்தியை அனுபவம் செய்கவராகவும் ஆகுவீர்களாக.

நடக்கும் பொழுதும் உலாவித்திரியும் பொழுதும் இந்த வழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: நான் இரட்டை ஒளி ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் ஒரு தேவதை. தேவதை என்றால் பறப்பவர் என்று அர்த்தப்படும். இலேசாக இருக்கும் ஒரு பொருள் எப்பொழுதும் மேலேயே தொடர்ந்தும் இருக்கும். அது கீழே இறங்கமாட்டாது. நீங்கள் அரைக்கல்ப்பமாக கீழே இருந்தீர்கள். இப்பொழுது பறப்பதற்கான நேரமாகும். எனவே பரிசோதியுங்கள். என்னிடம் ஏதாவது சுமை அல்லது பந்தனம் உண்டா? உங்களுடைய பலவீனமான சம்ஸ்காரங்கள், வீணான எண்ணங்கள் மற்றும் சரீர உணர்வின் பந்தனமொன்று அல்லது சுமை நீண்டகாலம் தொடர்ந்து இருக்குமாயின் இறுதியில் அது உங்களை கீழே கொண்டுவந்துவிடும். அதனால் பந்தனத்திலிருந்து விடுபட்டவராகுங்கள். அத்துடன் இரட்டை ஒளி ஸ்திதியில் இருப்பதற்கு பயிற்சி செய்யுங்கள்.

சுலோகம்:
தூய எண்ணங்களின் ஸ்திதியை விருத்தி செய்பவர்களால் மாத்திரமே அவர்களின் மனம் மூலம் சேவை செய்ய முடியும்.