12.12.18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இங்கு சிவபாபாவைத் தவிர வேறெதுவும் உங்களுக்குச் சொந்தமானதல்ல. ஆகவே சரீரத்தின் உணர்வுக்கும் அப்பாற் செல்லுங்கள். ஒரு பிச்சைக்காரரைப் போன்று எதுவுமே இல்லாதவர் ஆகுங்கள். ஒரு பிச்சசைக்காரரே ஓர் இளவரசர் ஆகுவார்.
கேள்வி:
நாடகத்தின் மிகச்சரியான ஞானம் இருக்கும்போது எவ்வாறான எண்ணங்களைக் கொண்டிருப்பதை நீங்கள் நிறுத்துகிறீர்கள்?
பதில்:
“ஏன் இந்த நோய் ஏற்பட்டது”? “நான் அதைச் செய்யாதிருந்தால் இது நடந்திருக்காது”. “ஏன் இந்தத் தடை ஏற்பட்டது”? “ஏன் இந்தப் பந்தனம் ஏற்பட்டுள்ளது”? உங்களுக்கு நாடகத்தைப் பற்றிய மிகச்சரியான ஞானம் இருக்கும்போது, இவ்வாறான எண்ணங்கள் அனைத்தும் முடிவடைந்துவிடும். ஏனெனில் நாடகத்தின்படி எவையெல்லாம் நடக்கவேண்டுமோ அவை நடந்தே ஆகவேண்டும். ஒரு கல்பத்தின் முன்னரும் அது நடந்தது. இது ஒரு பழைய சரீரமாதலால், பல ஒட்டுக்கள் இருக்கும். இதனாலேயே எவ்வாறான தேவையற்ற எண்ணங்களும் இருக்கக்கூடாது.
பாடல்:
நாங்கள் விழுந்து எழக்கூடிய அந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும். ஆகவே நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்…
ஓம்சாந்தி.
நீங்கள் அந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும். எந்தப் பாதை? உங்களுக்குப் பாதையைக் காட்டுபவர் யார்? யாருடைய புத்திமதியை நீங்கள் பின்பற்றுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அதனை ஆலோசனை என்றோ பாதை என்றோ ஸ்ரீமத் என்றோ கூறினாலும், அது ஒன்றேயாகும். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஆனால் யாருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும்? ஸ்ரீமத் பகவத் கீதை என்று எழுதப்பட்டுள்ளது. ஆகவே எங்களின் புத்தியின் யோகம் நிச்சயமாக ஸ்ரீமத்தில் ஈர்க்கப்படவேண்டும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் யாருடைய நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள்? “ஸ்ரீகிருஷ்ணரின் நினைவில்” என்று நீங்கள் கூறினால், அவரை நீங்கள் அங்கு நினைவுசெய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீகிருஷ்ணரை நினைவுசெய்கின்றீர்களா, இல்லையா? நீங்கள் அவரை அவரின் ஆஸ்தியின் உருவில் நினைவுசெய்கின்றீர்களா? நீங்கள் இளவரசர்;கள் ஆகப்போகின்றீர்கள் என்பதைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். பிறப்பு எடுக்கும்போது நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுவீர்கள் என்றில்லை. சிவபாபா ஸ்ரீமத்தைத் தருகின்றார் என்பதால் நாங்கள் நிச்சயம் அவரை நினைவுசெய்கிறோம். “கடவுள் கிருஷ்ணர் பேசுகிறார்” என்று கூறுபவர்கள் கிருஷ்ணரை நினைவுசெய்வார்கள். கிருஷ்ணரை நினைவுசெய்வதானால் அவர் எங்கு நினைவுசெய்யப்பட வேண்டும்? அவர் சுவர்க்கத்தில் நினைவுசெய்யப்படுகின்றார். அதனால் “மன்மனாபவ” என்ற வார்;த்தையைக் கிருஷ்ணர் உபயோகிக்க முடியாது. “மத்யாஜிபவ” (மத்தியிலே இருப்பவரைப் பாருங்கள் - விஷ்ணு) என்று அவர் கூறலாம். அவர் சுவர்க்கத்தில் இருப்பதால் “என்னை நினைவுசெய்யுங்கள்” என்று அவர் கூறமுடியாது. உலகத்தவர்களுக்கு இவ்விடயங்கள் பற்றித் தெரியாது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, அந்தச் சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். கீதை அனைத்துச் சமய நூல்களுடனும் சேர்க்கப்பட்டுள்ளது. கீதை நிச்சயமாகப் பாரதத்தின் சமயநூலாகும். உண்மையில், அது அனைவரினதும் சமயநூலாகும். கீதையே அனைத்துச் சமயநூல்களினதும் இரத்தினமாகிய, உயர்வான சமயநூலென்று கூறப்படுகின்றது, அது அதிமேலானது என்று அர்த்தம் ஆகும். சிவபாபாவே அனைவரிலும் அதி மேலானவராவார். அவரே அனைவரிலும் அதிமேலான, ஸ்ரீ ஸ்ரீ ஆவார். கிருஷ்ணரை ஸ்ரீ ஸ்ரீ என்று அழைக்க முடியாது. ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா என்றோ அல்லது ஸ்ரீ ஸ்ரீ இராமா என்றோ கூற முடியாது; அவர்களை ஸ்ரீ என்று மாத்திரமே அழைக்க முடியும். அனைவரிலும் அதி மேன்மையானவர் வந்து மீண்டும் ஒருமுறை உங்களை மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். கடவுளே அனைவரிலும் அதி மேன்மையானவர். அனைவரிலும் அதிமேன்மையானவர் என்பதே ஸ்ரீ ஸ்ரீ என்பதன் அர்த்தமாகும். மேன்மையானவர்களின் பெயர்கள் பிரபல்யமானவை. தேவர்களே நிச்சயம் அதி மேன்மையானவர்கள். ஆனால் அவர்கள் இப்போது இல்லை. இந்நாட்களில் யார் மேன்மையானவர்கள் என்று கருதப்படுகிறார்கள்? இன்றைய தலைவர்கள் போன்றவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அவர்களை ஸ்ரீ என்று அழைக்க முடியாது. “ஸ்ரீ’ என்ற வார்த்தையை மகாத்மாக்களுக்கும் பிரயோகிக்க முடியாது. நீங்கள் இப்பொழுது அதியுயர்வான பரமாத்மாவிடமிருந்து ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பரமாத்மா பரமதந்தையே அனைவரிலும் உயர்வானவர். அதன்பின் அவரின் படைப்புகள் உள்ளனர். அப் படைப்புகளுள்ளும் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் உயர்ந்தவர்கள். இங்கும் அந்தஸ்து வரிசைக்கிரமமானது. அனைவரிலும் அதி உயர்ந்தவர் ஜனாதிபதியாவார். அதன் பின் பிரதம மந்திரி, யூனியன் அமைச்சர்கள் என்று இருப்பார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து உலகின் ஆரம்பம், மத்தி மற்றும் இறுதி ஆகியவற்றின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். கடவுளே படைப்பவராவார். ‘படைப்பவர்” என்ற வார்த்தையை நீங்கள் உபயோகிக்கும்போது, ‘எவ்வாறு உலகம் படைக்கப்பட்டது?’ என்று மக்கள் கேட்கிறார்கள். ஆகவே திரிமூர்த்தி சிவனே படைப்பவர் என்று நீங்கள் நிச்சயம் கூற வேண்டியிருக்கும். ஆகவே ‘படைப்பவர்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக “படைப்பைத் தூண்டும் ஒருவர்” என்று கூறுவது மேலானது. பிரம்மாவின் மூலம் பிராமண குலம் ஸ்தாபிப்பதை அவர் தூண்டுகிறார். பிரம்மா மூலம் என்ன ஸ்தாபிக்கப்பட்டது? தேவ சமுதாயம். சிவபாபா கூறுகிறார்: நீங்கள் இப்போது பிரம்மாவிற்கு உரிய பிராமண சமுதாயம்;. மற்றையது அசுர சமுதாயமாகும். நீங்கள் இறை சமூகத்தினர். பின்னர் தேவ சமுதாயத்தினர் ஆகுவீர்கள். பிரம்மாவின் மூலம் சகல வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சத்தைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். மக்கள் மிகவும் குழப்பமடைந்து, தொடர்ந்து அதிகப் பிரயத்தனம் செய்கின்றார்கள். அவர்கள் குடு;ம்பக்கட்டுப்பாடு இருக்கவேண்டுமென்று கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் வந்து பாரதத்திற்கு இந்தச் சேவையைச் செய்கின்றேன். இங்கு மக்கள் தமோபிரதானாக உள்ளார்கள். அவர்கள் 10 முதல் 12 குழந்தைகளைப் பிரசவிக்கின்றார்கள். விருட்சம் நிச்சயம் வளரவேண்டும். இலைகள் தொடர்ந்து வெளிவரும். எவராலும் இதனைக் கட்டுப்படுத்த முடியாது. சத்திய யுகத்தில் இதற்குக் கட்டுப்பாடு இருக்கும். ஒரு மகனும், ஒரு மகளும் இருப்பார்கள். அவ்வளவுதான். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் மேலும் செல்லும்போது இன்னும் பலர் வருவார்கள். அவர்கள்; தொடர்ந்து விளங்கிக்கொள்வார்கள். அதீந்திரிய சந்தோஷம் பற்றி நீங்கள் அறியவேண்டுமானால் கோபிகளையும், கோபியர்களையும் கேட்கவேண்டும் என நினைவுகூரப்படுகின்றது. இங்கு, நேரடியாக பாபா கூறுவதைச் செவிமடுக்கும்போது நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். பின் நீங்கள், உங்கள் தொழில் போன்றவற்றில் ஈடுபடும்போது அதிகச் சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லை. இங்கு நீங்கள் திரிகால தரிசிகள் (முக் காலத்தையும் அறிந்தவர்கள்) ஆக்கப்படுகின்றீர்கள். திரிகாலதரிசிகளானவர்கள் சுயதரி;சனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இன்ன ஒரு மகாத்மா ஒரு திரிகாலதரிசியாக இருந்தார் என்று மக்கள் கூறுகிறார்கள். சுவர்க்கத்தின் அதிபதிகளான இராதையும், கிருஷ்ணரும் சுய தரிசனச் சக்கரத்தைப் பற்றிய அல்லது முக்காலத்தையும் பற்றிய ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். அனைவராலும் அன்பு செலுத்தப்படுகின்ற கிருஷ்ணரே, சத்திய யுகத்தின் முதல் இளவரசர் ஆவார். எவ்வாறாயினும் மக்கள் இதனைப் புரிந்துகொள்ளாததனால் “நீங்கள் கிருஷ்ணரைக் கடவுள் என்று ஏற்றுக்கொள்வதில்லை, ஆகவே நீங்கள் நாஸ்திகர்கள்” என்று கூறுகிறார்கள். பின் அவர்கள் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். இந்த அநாதியான ஞான யாகத்தில் தடைகள் ஏற்படும். கன்னிகளும் (குமாரிகளும்) தாய்மார்களும் தடைகளை அனுபவம் செய்கிறார்கள். பந்தனங்களில் உள்ளவர்கள் அதிகளவு சகித்துக்கொள்ளவேண்டியிருக்கும். ஆகவே நாடகத்திற்கு ஏற்ப, அது அவர்களுடைய பாகம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தடைகள் ஏற்படும்போது, ‘நான் இதனைத் செய்யாதிருந்தால் அது ஒருபோதும் நடந்திருக்காது’ ‘நான் அதனைச் செய்திருக்காவிட்டால் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருக்காது’ என்பது போன்ற எண்ணங்களைக் கொண்டிருக்காதீர்கள். இப்போது நீங்கள் இவ்வாறானவற்றைக் கூற முடியாது. நாடகத்தின்படி நீங்கள் அதனைச் செய்தீர்கள். அதனை முன்னைய கல்பத்திலும் செய்தீர்கள்; இதனாலேயே சற்றுச் சிரமம் உள்ளது. நிச்சயம் இந்தப் பழைய சரீரத்தில் ஒட்டுக்கள் இருக்கும்;. இறுதிவரை தொடர்ந்து திருத்தவேலைகள் இடம்பெற வேண்டும். இதுவும் ஆத்மாவின் பழைய வீடாகும். ‘நானும் முதுமையடைந்துவிட்டேன்; என்னில் பலம் இல்லை’ என்று ஆத்மா கூறுகிறார். சக்தி இல்லாதபோது ஒரு பலவீனமானவர் துன்பத்தை அனுபவம் செய்கிறார். பலவீனமானவர்களுக்கு மாயை அதிக துன்பத்தை ஏற்படுத்துகிறாள். பாரத மக்களாகிய எங்களை நிச்சயம் மாயை மிகப் பலவீனமானவர்கள் ஆக்கியுள்ளாள். நாங்கள் பலம் நிறைந்தவர்களாக இருந்தோம். மாயை எங்களைப் பலவீனமானவர்களாக ஆக்கியுள்ளாள். இப்பொழுது நீங்கள் மாயையை வெல்வதற்கு முயற்சிக்கும்போது அவள் உங்களுடைய எதிரி ஆகுகின்றாள். பாரதமே அதிக துன்பத்தைப் பெறுகின்றது. பாரதம் அனைவருக்கும் கடனாளியாக உள்ளது. பாரதம் முழுமையாக மிகவும் பழையதாகியுள்ளது. அது மிகவும் செல்வச் செழிப்புடன் இருந்தது. ஆனால் இப்போது அது ஒரு பிச்சைக்காரராக ஆகிவிட்டது. பிச்சைக்காரரிலிருந்து அது ஓர் இளவரசர் ஆகவேண்டும். பாபா கூறுகிறார்: உங்கள் சரீரத்தின் உணர்வுக்கு அப்பாற் சென்று, ஒன்றுமே இல்லாதவர்கள் ஆகுங்கள். இங்கு சிவபாபா ஒருவரைத் தவிர வேறு எவருமே உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. ஆகவே நீங்கள் முழுப் பிச்சைக்காரர்கள் ஆகவேண்டும். உங்களுக்குப் பல விவேகமான வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளன. ஜனக்கின் உதாரணமும் உள்ளது. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போது, ஒரு தாமரை மலர் போன்று தூய்மையாக வாழ்வதுடன், ஸ்ரீமத்தையும் பின்பற்றுங்கள். நீங்கள் அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். ஜனக் அனைத்தையும் கொடுத்தார். அதன்பின் அவரை அவரின் சொத்துக்களைக் கவனித்துக் கொண்டு, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழும்படி கூறப்பட்டது. அரிச்சந்திரனின் உதாரணமும் உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் உங்களுக்காக ஒரு விதையை விதைக்காது விட்டால், உங்கள் அந்தஸ்து குறைந்துவிடும். தந்தையைப் (பிரம்மா) பின்பற்றுங்கள்; இந்தத் தாதா உங்களுக்கு முன் உள்ளார். அவர் சிவபாபாவையும், சிவ சக்திகளையும் பூரண நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ஆக்கியுள்ளார். எவ்வாறாயினும் சிவபாபா அமர்ந்திருந்து அனைத்தையும் கவனித்துக்;கொள்ள மாட்டார். அவர் தன்னைத் தனக்கு அர்ப்பணிக்க மாட்டார். அவர் தன்னைத் தாய்மார்களுக்கே அர்ப்பணிக்க வேண்டும். தாய்மார்களே முன்னிலையில் வைக்கப்பட வேண்டியவர்கள். தந்தை வந்து மனிதர்களைத் தேவர்கள் ஆக்குவதற்காக ஞான அமுதம் என்ற கலசத்தைத் தாய்மார்களுக்குக் கொடுக்கிறார். அது இலக்ஷ்மிக்குக் கொடுக்கப்படவில்லை. இப்போது அவர் ஜெகதாம்பாள் ஆவார். சத்திய யுகத்தில் அவர் இலக்ஷ்மி ஆகுவார். ஜெகதாம்பாளையிட்டு மிக இனிமையான பாடல் ஒன்று உள்ளது. மக்கள் அவரை அதிகம் நம்புகின்றனர். அவர் எவ்வாறு பாக்கியத்தை அருள்பவர் ஆவார்? எங்கிருந்து அவர் செல்வத்தைப் பெறுகின்றார்? பிரம்மாவிடமிருந்தா? கிருஷ்ணரிடமிருந்தா? இல்லை. ஞானக் கடலிடமிருந்தே செல்வம் பெறப்படுகின்றது. இவை மிகவும் மறைமுகமான விடயங்கள். கடவுளின் வாக்கியங்கள் அனைவருக்குமானவை. கடவுள் அனைவருக்கும் சொந்தமானவர். சகல சமயத்தினருக்கும் அவர் கூறுகிறார்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். சிவனை வழிபடுபவர்கள் பலர் இருந்தாலும், அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆகவே இது பக்தியாகும். இப்போது உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பவர் யார்? அதி அன்பிற்குரிய தந்தையாகும். கிருஷ்ணரை அவ்வாறு அழைக்க முடியாது. அவர் சத்திய யுக இளவரசர் என்றே அழைக்கப்படுகின்றார். மக்கள் கிருஷ்ணரை வழிபட்டாலும், அவர் எவ்வாறு சத்திய யுக இளவரசர் ஆகினார் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. முன்பு நாங்களும் தெரியாது இருந்தோம். மீண்டும் ஒருமுறை நீங்கள் நிச்சயமாக இளவரசர்;களும், இளவரசிகளும் ஆகுவீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது தெரியும். நீங்கள் வளர்ந்தபின்னர்தான் இலக்ஷ்மி நாராயணனைத் திருமணம் செய்யத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். இந்த ஞானம் எதிர்காலத்திற்கானது. நீங்கள் இதற்கான பலனை 21 பிறவிகளுக்குப் பெறுகிறீர்கள். கிருஷ்ணர் ஆஸ்தியைத் தருகின்றார் என்று கூற முடியாது. தந்தையிடமிருந்தே ஆஸ்தி பெறப்படுகிறது. சிவபாபா இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். பிரம்மாவின் வாய் மூலம் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் பிறப்பு எடுக்கிறார்;கள். அவர்களே இந்தக் கற்பித்தல்களைப் பெறுபவர்கள். கல்பத்தின் சங்கம யுகத்தின் பிராமணர்கள் நீங்களே ஆவீர்கள். உலகிலுள்ள மற்றவர்கள் கலியுகத்திற்கு உரியவர்களாவார்கள். தாங்கள் கலியுகத்தில் இருப்பதாக அவர்கள் அனைவரும் கூறுகிறார்கள். சங்கம யுகத்தில் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். இவ்விடயங்கள் வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்தப் புதிய விடயங்களை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள். பிரதான விடயம் தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்வதாகும். நீங்கள் தூய்மையானவர்களாக இல்லாவிடில் உங்களால் யோகம் செய்ய முடியாது; சட்டம் இதனைக் கூறுகிறது. அப்போது நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தையும் பெற முடியாது. சிறிதளவு யோகம் செய்தாலும் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் தூய்மையானவர்கள் ஆகாதுவிட்டால், உங்களால் என்னிடம் வரமுடியாது. நீங்கள் வீட்டில் இருந்தாலும், உங்களால் சுவர்க்கத்திற்குச் சென்று, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும். ஆனால் நீங்கள் மட்டும் தூய்மையாக இருந்து, யோகம் செய்ய வேண்டும். தூய்மை இல்லாது உங்களால் யோகம் செய்ய முடியாது. மாயை உங்களை யோகம் செய்ய விடமாட்டாள். நேர்மையான இதயத்தைக் கொண்டவர்களையிட்டுப் பிரபு பூரிப்படைகிறார். தொடர்ந்து விகாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு “நான் சிவபாபாவை நினைவுசெய்கிறேன்” என்று கூறுபவர்கள், தங்கள் சொந்த இதயத்தையே சந்தோஷப்படுத்துகிறார்கள். தூய்மையே பிரதானமாகும். குடும்பக் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். இனிமேலும் குழந்தைகளைப் பிரசவிக்காதீர்கள். இது தமோபிரதான் உலகமாகும். பாபா இப்போது குடும்பக் கட்டுப்பாட்டைச் சாத்தியமாக்குகிறார். நீங்கள் அனைவரும் குமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். ஆகவே விகாரம் என்ற கேள்விக்கு இடமில்லை. இங்கு புத்திரிகள் விகாரம் காரணமாக அதிகம் சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. பாபா கூறுகிறார்: நீங்கள் பெரும் முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டும். மதுபானம் அருந்துபவர்கள் யாராவது இங்கு இருக்கின்றீர்களா? தந்தை குழந்தைகளாகிய உங்களைக் கேட்கின்றார். நீங்கள் பொய் கூறினால் தர்மராஜிடமிருந்து கடுமையான தண்டனையை அனுபவம் செய்யவேண்டியிருக்கும். கடவுளின் முன் நீங்கள் உண்மை பேச வேண்டும். நீங்கள் எப்பொழுதாவது, மருந்துக்காகவேனும் மதுபானம் அருந்துகிறீர்களா? (எவரும் கைகளை உயர்த்தவில்லை). நீங்கள் நிச்சயம் இங்கு உண்மை பேச வேண்டும். நீங்கள் ஏதாவது ஒரு தவறு செய்தால் நீங்கள் பாபாவிற்கு எழுதவேண்டும்: பாபா, நான் இந்தத் தவறைச் செய்தேன். மாயை என்னை அறைந்தாள். பலர் பாபாவிற்கு எழுதுகிறார்;கள்: இன்று தீய ஆவியான கோபம் வந்தது. நான் ஒருவரை அறைந்தேன். ஒருவருக்கும் நீங்கள் அறையக்கூடாது என்பதே உங்களுக்கான வழிகாட்டலாகும். கிருஷ்ணர் மரத்துடன் கட்டப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. அவ்விடயங்கள் அனைத்தும் பொய்யானவை. குழந்தைகளுக்கு அதிக அன்புடன் கற்பிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு அடிக்கக்கூடாது. ஒரு நேர உணவை நிறுத்துங்கள்; அவர்களுக்கு இனிப்புகள் கொடுக்காதீர்கள்: நீங்கள் இவ்வாறு அவர்களைத் திருத்தலாம். அவர்களுக்கு சாட்டையால் அடிப்பதும் ஒரு கோபத்துக்கான அடையாளமாகும். நீங்கள் ஒரு மகாத்மாவின் மீது கோபப்படுகிறீர்கள். சிறு குழந்தைகள் மகாத்மாக்கள் போன்றவர்கள். ஆகவே நீங்கள் அவர்களைச் சாட்டையால் அடிக்கக்கூடாது. நீங்கள் அவர்களை அவதூறு செய்யவும் கூடாது. நீங்கள் ஒரு பாவச் செயலைச் செய்துள்ளீர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கக்கூடிய எந்தச் செயல்களையும் ஒருபோதும் செய்யக்கூடாது. நீங்கள் செய்தால், பாபா, நான் இந்தத் தவறைச் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் அதனை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உடனே பாபாவிற்கு எழுதுங்கள். பின் அதனையிட்டு நீங்கள் வருந்த வேண்டும். அங்கும், தர்மராஜ் தண்டனை கொடுக்கும்போது, தாங்கள் வருந்துவதாகவும், அதனைத் தாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பாபா மிகுந்த அன்புடன் கூறுகிறார்: அன்புக்குரிய, தகுதியான குழந்தைகளே, அன்பான குழந்தைகளே, ஒருபோதும் பொய் கூறாதீர்கள். ஒவ்வொரு அடியிலும் ஆலோசனை கேளுங்கள். இப்பொழுது உங்கள் பணம் பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. ஆகவே உங்களது ஒவ்வொரு சதமும் வைரங்கள் பெறுமதியானவை. அவற்றைத் தானம் செய்வதற்கும், சந்நியாசி போன்றவர்களுக்குத் தர்மத்திற்கும் கொடுக்கிறீர்கள் என்றில்லை. மக்கள் வைத்தியசாலைகள், கல்லூரிகள் போன்றவற்றைக் கட்டுவதால் எவற்றைப் பெறுகிறார்கள்? அவர்கள் ஒரு கல்லூரியைத் திறந்தால், பின்னர், அவர்களின் அடுத்தபிறவியில் அவர்கள் ஒரு சிறந்த கல்வியைப் பெறுவார்கள். ஒரு தர்மசாலையைக் கட்டினால் அவர்கள் ஒரு மாளிகையைப் பெறுகிறார்கள். இங்கு நீங்கள் பிறவி பிறவியாக எல்லையற்ற சந்தோஷத்தைத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். நீங்கள் எல்லையற்ற ஆயுட்காலத்தைப் பெறுகின்றீர்கள். வேறு எந்த மதத்தவருக்கும் உங்களைப் போன்று நீண்ட ஆயுட்காலம் இருக்காது. இங்கு குறைந்த ஆயுட்காலமே இருக்கும். ஆகவே நடக்கும்போதும், திரியும்போதும் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். ஏதாவது கஷ்டமிருந்தால் கேளுங்கள். எவ்வாறாயினும் ஏழைகள் எவராவது பாபாவிடம் வந்து, பாபா, நான் உங்களுக்குச் சொந்தமானவன், நான் உங்களுடன் இருக்கின்றேன் என்று கூற முடியும் என அதற்கு அர்த்தமல்ல. அவ்வாறான ஏழைகள் பலர் உலகில் இருக்கின்றனர். நாங்கள் மதுவனத்தில் தங்கப் போகின்றோம் என்று அனைவரும் கூறுவார்கள். அவ்வாறு பல்லாயிரக் கணக்கானோர் இங்கு கூடுவார்கள். அதுவும் சட்டத்தில் இல்லை. நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழவேண்டும்; நீங்கள் அவ்வாறு இங்கு தங்க முடியாது. வியாபாரம் செய்வோர் எப்போதும் ஓரிரு பைசாக்களைக் கடவுளின் பெயரில் வேறாக வைப்பார்கள். பாபா கூறுகிறார்: நல்லது. நீங்கள் ஏழைகளானால், எதனையும் வேறாக வைக்காதீர்கள். ஞானத்தைப் புரிந்துகொண்டு, மன்மனாபவ ஆகுங்கள். உங்களுடைய மம்மா எதனைக் கொடுத்தார்? இருந்தும், அவர் ஞானத்தில் சிறந்தவரானார். அவர் தனது மனதினாலும், சரீரத்தினாலும் சேவை செய்கின்றார். அதில் பணம் என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் அதிகபட்சம் ஒரு ரூபாய் கொடுத்தால், ஒரு செல்வந்தரைப் போன்று பெறுகிறீர்கள். முதலில், நீங்கள் உங்கள் வீட்டைக் கவனிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள், சந்தோஷமற்று இருத்தல் கூடாது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும். காலை வணக்கம். தாய்மார்களுக்கு வந்தனங்கள். அதிபதிகளுக்கு வந்தனங்கள். நீங்கள் வெற்றியாளர் ஆகுவீர்களாக.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் பின்னர் மனம் வருந்தவேண்டியோ, கவலைப்படவோ வேண்டிய எந்தச் செயல்களையும் செய்யாதீர்கள். ஒருபோதும் பொய் சொல்லாதீர்கள். உண்மையான தந்தையுடன் நேர்மையாக இருங்கள்.2. பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்கு உங்களிடமுள்ள ஒவ்வொரு சதத்தையும் தகுதியான வழியில் உபயோகியுங்கள். பிரம்ம பாபாவைப் போன்று உங்களை அர்ப்பணித்து, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கருவி ஆத்மாக்களிடமிருந்தான வழிகாட்டல்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதால், விவேகியாக இருந்து, பாவங்களிலிருந்து விடுபட்டிருப்பீர்களாக.
ஒருவர் அவர்களுக்கு ஏதையோ கூறியதால், கருவி ஆத்மாக்கள் ஒருவேளை வழிகாட்டல்களைக் கொடுத்திருக்கலாம் என விவேகமான குழந்தைகள் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். கருவி ஆத்மாக்களை முன்னிட்டு அத்தகைய வீணான எண்ணங்கள் ஒருபொழுதும் தோன்றாதிருக்கட்டும். நீங்கள் விரும்பாத தீர்மானத்தை ஒருவர் எடுத்தாலும், நீங்கள் அதற்குப் பொறுப்பு அல்ல என்பதால், அதில் பாவத்தைச் சேமிக்க மாட்டீர்கள், ஏனெனில் தந்தையே அவரைக் கருவியாக்கினார், அவரால் அந்தப் பாவத்தை மாற்ற முடியும். இது மறைமுகமான பொறிமுறையான, ஒரு மறைமுகமான உட்பொருள் ஆகும்.
சுலோகம்:
ஒரு நேர்மையான நபர் ஓய்வை நேசிப்பவர் அல்ல, ஆனால் கடவுளை நேசிப்பவரும், உலகை நேசிப்பவரும் ஆவார்.