29.12.18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இங்கே ஞானத்தைக் கிரகிப்பதுடன், மற்றவர்களையும் அதனைக் கிரகிக்குமாறு செய்யுங்கள். நீங்கள் சித்தியெய்துவதற்கு, தாயையும், தந்தையையும் போன்று ஆகவேண்டும். இங்கே நீங்கள் செவிமடுப்பதை மற்றவர்களுக்கும் கூறுங்கள்.கேள்வி:
குழந்தைகளில் எழுகின்ற எந்தத் தூய ஆசை நல்ல முயற்சிக்குரிய அடையாளமாகவும் இருக்கின்றது?
பதில்:
குழந்தைகள் தாய், தந்தையைப் பின்பற்றி அவர்களது சிம்மாசனத்தில் அமரவேண்டும் என்ற தூய ஆசையைக் கொண்டிருப்பதும் சிறந்த தைரியத்தின் அடையாளமேயாகும். “பாபா, நான் பரீட்சையில் முழுமையாகச் சித்தியெய்துவேன்” என்று கூறுபவர்கள் நம்பிக்கையுடனேயே அவ்வாறு கூறுகின்றனர். அதற்கு, நீங்கள் நிச்சயமாக அத்தகைய துரித முயற்சியையும் செய்யவேண்டும்.
பாடல்:
எங்கள் யாத்திரை தனித்துவமானது…
ஓம்சாந்தி.
இங்கிருப்பவர்கள் அனைவரும் பாவாத்மாக்கள். சுவர்க்கத்தில் மாத்திரமே தூய, புண்ணியாத்மாக்கள் இருப்பார்கள். இது பாவாத்மாக்களின் உலகமாகும். இங்கே, அஜாமிலைப் போன்ற பாவாத்மாக்களே இருக்கின்றனர். அதுவோ தூய, புண்ணியாத்மாக்களாகிய தேவர்களின் உலகமாகிய சுவர்க்கமாகும். அவர்கள் ஒவ்வொருவரதும் புகழும் வேறானது. பிராமணர்கள் அனைவரும் தாங்கள் இப்பிறவியில் செய்த பாவங்களின் வாழ்க்கைக் கதையை (சுயசரிதை) பாபாவிற்கு அனுப்புகின்றனர். பாபாவிடம் அனைவரது சுயசரிதைகளும் உள்ளன. நீங்கள் இங்கே கூறப்படும் விடயங்களைச் செவிமடுப்பதுடன், மற்றவர்களுக்கும் அவற்றைக் கூறவேண்டும் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மற்றவர்களுக்குக் கூறுவதற்கு, பலர் தேவைப்படுகின்றனர். நீங்கள் இந்த ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பவராக ஆகும்வரை உங்களால் சித்தியெய்த முடியாது. ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில், அவர்கள் செவிமடுத்து, மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்ற நியதி இல்லை. இங்கே, நீங்கள் ஞானத்தைக் கிரகித்து, மற்றவர்களையும் அதனைக் கிரகிக்கத் தூண்ட வேண்டும். நீங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களை உருவாக்க வேண்டும். உங்களுக்கு ஒரேயொரு பண்டிதரே கதை கூறுவாரென்றில்லை. இங்கே, ஒவ்வொருவரும் தாயையும், தந்தையையும் போன்று ஆகவேண்டும். நீங்கள் ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும்பொழுதே உங்களால் சித்தியெய்த முடிவதுடன், தந்தையின் இதயத்திலும் அமரமுடியும். ஞானம் பற்றிய அனைத்தும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே அனைவரும் கூறுவார்கள்: கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார். இங்கே கூறப்படுகின்றது: ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், கீதை ஞானத்தை அருள்பவருமாகிய கடவுள் சிவன் பேசுகின்றார். இராதையும் கிருஷ்ணருமோ அல்லது இலக்ஷ்மியும் நாராயணனுமோ இறைவர் அல்லது இறைவி என அழைக்கப்பட முடியாது. அது நியதியாகாது. எவ்வாறாயினும், கடவுளே அவர்களுக்கு ஓர் அந்தஸ்தைக் கொடுத்தார். எனவே, அவர் நிச்சயமாக அவர்களை இறைவராகவும், இறைவியாகவும் ஆக்குவார். இதனாலேயே அவர்களுக்கு அப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் வெற்றி மாலையில் கோர்க்கப்படுவதற்கு இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். ஒரு மாலை உருவாக்கப்படுகிறது, இல்லையா? முதலில் உருத்திரன் இருக்கின்றார். உருத்திராட்ச மணி மாலை இருக்கின்றது. கடவுளின் மாலை இங்கேயே உருவாக்கப்படுகின்றது. நீங்கள் கூறுகின்றீர்கள்: எங்களது யாத்திரை தனித்துவமானது. அம்மக்கள் யாத்திரைகளுக்கெனப் பெருமளவில் அலைந்து திரிகின்றார்கள். உங்களுடைய அனைத்தும் தனித்துவமானவை. உங்களது புத்தியின் யோகம் சிவபாபாவுடனேயே இருக்கின்றது. நீங்கள் உருத்திரனின் கழுத்து மாலையாக வேண்டும். மக்கள் மாலையின் இரகசியத்தைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். முதலில் சிவபாபா குஞ்சமாகவும், பின்னர் இரட்டை மணிகளாக ஜெகதாம்பாவும், ஜெகத்பிதாவும், பின்னர் அவர்களது 108 படைப்புக்களும் இருக்கின்றனர். அவர்கள் வைத்திருக்கின்ற மிக நீண்ட மாலையின் மணிகளையும், எவ்வாறு அவர்கள் “இராமா, இராமா!” என்ற பெயரை உச்சரித்தவாறே உருட்டுகின்றனர் என்பதனையும் பாபா பார்த்திருக்கின்றார். அவர்கள் எந்த இலக்கையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் உருத்திர மாலையின் மணிகளை உருட்டுவதுடன், இராமரின் பெயரையும் உச்சரிக்கின்றனர். அவையனைத்தும் பக்தி மார்க்கம். அது ஏனையவற்றை விடவும் சிறந்ததே. ஏனெனில், அந்நேரத்தில் அவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள்! அவை பாவம் செய்வதிலிருந்து காப்பாற்றப்படுவதற்கான வழிமுறைகள். இங்கே, மாலையின் மணிகளை உருட்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்களே மாலையின் மணிகள் ஆகவேண்டும். எனவே, எங்களது யாத்திரை தனித்துவமானது. நாங்கள் எங்களது சிவபாபாவின் வீட்டிற்குச் செல்கின்ற கலப்படமற்ற பயணிகள். எங்களின் பல பிறவிகளின் பாவங்கள் அனைத்தும் யோகத்தின் மூலம் எரிக்கப்படுகின்றன. ஒருவர் இரவுபகலாக கிருஷ்ணரை நினைவுசெய்தாலும் அவரது பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. அவர்கள் இராமரின் பெயரை உச்சரிக்கும்வேளையில் பாவம் செய்ய மாட்டார்கள். அதன்பின்னர் பாவம் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். அவர்களது பாவங்கள் அழிக்கப்படுகின்றன என்றோ அல்லது அவர்களது ஆயுட்காலம் அதிகரிக்கின்றதென்றோ இல்லை. இங்கே, யோக சக்தியின் மூலம் குழந்தைகளாகிய உங்கள் பாவங்கள் எரிக்கப்படுவதுடன், உங்களது ஆயுட்காலமும் அதிகரிக்கின்றது. பிறவிபிறவியாக உங்கள் வாழ்க்கை அழிவற்றதாகுகின்றது. மனிதரிலிருந்து தேவராகுவது என்பது உங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எனப்படுகின்றது. தேவர்களுக்குப் பெருமளவு புகழ் உள்ளது. மக்கள் தங்களைச் சீரழிந்த பாவிகள் என அழைக்கின்றனர். எனவே, அனைவரும் நிச்சயமாக அவ்வாறே இருக்க வேண்டும். அவர்கள் பாடவும் செய்கின்றனர்: நான் நற்பண்புகளற்றவன், என்னிடம் நற்பண்புகளில்லை. என்மீது கருணை காட்டுங்கள்! அவர்கள் இவ்வாறே கடவுளைப் புகழ்கின்றனர். அவர் உங்களை ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்று நற்பண்புகள் அனைத்தும் நிறைந்தவராக ஆக்குகின்றார். நீங்கள் இப்பொழுது அவ்வாறு ஆகுகின்றீர்கள். இதனைவிட மேலான புகழ் வேறு எதுவுமேயில்லை. “நிர்குண் பலக்” (நற்பண்புகளற்ற குழந்தைகள்) என்ற அமைப்பு இருக்கின்றது. நிர்குண் (நற்பண்புகளற்றவன்) என அழைக்கப்படுபவர் யார் என்பதனை அவர்களும் புரிந்துகொள்ளவில்லை. ஸ்ரீ கிருஷ்ணரும், இலக்ஷ்மி, நாராயணனுமே நற்பண்புகள் நிறைந்தவர்கள்... எனப் புகழப்படுகின்றார்கள் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றீர்கள். வேறு எந்த ஒன்றுகூடல்களிலும் இவ்வாறு கூறப்படுவதில்லை. இங்கே, நீங்கள் இலக்ஷ்மி நாராயணனையா, அல்லது இராமர் சீதையையா திருமணம் செய்வீர்கள் எனத் தந்தை உங்களிடம் கேட்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் விவேகமற்றவர்கள் அல்ல. நீங்கள் உடனேயே பதிலளிக்கின்றீர்கள்: பாபா, நாங்கள் பரீட்சையில் முழுமையாகச் சித்தியெய்துவோம். நீங்கள் நம்பிக்கையுடன் பேசுகின்றீர்கள். எவ்வாறாயினும், அனைவரும் ஒரேமாதிரி ஆகுவார்கள் என்றில்லை. குறைந்தபட்சம் நீங்கள் தைரியத்தையாவது காண்பிக்கின்றீர்கள்! நீங்கள் கூறுகின்றீர்கள்: மம்மாவும், பாபாவும் சிவபாபாவின் விசேட அன்பிற்கினிய குழந்தைகள். நாங்கள் அவர்களை முழுமையாகப் பின்பற்றி, அவர்களது சிம்மாசனத்தில் அமர்ந்துகொள்வோம். இத்தூய்மையான ஆசை நல்லது. அப்படியாயின், நீங்கள் அந்தளவுக்கு முயற்சியும் செய்யவேண்டும். இந்நேரத்தில் எடுக்கின்ற முயற்சியே ஒவ்வொரு கல்பத்திலும் எடுக்கப்படுகின்ற முயற்சியாக இருக்கும். இது ஓர் உத்தரவாதம். ஒருவர் செய்கின்ற முயற்சியிலிருந்து, முன்னைய கல்பத்திலும் அவர் அதே முயற்சியையே செய்தார் என்பதனை உங்களால் கூறமுடியும். அதே முயற்சியே கல்பம் கல்பமாகத் தொடரும். பரீட்சை நேரம் வரும்பொழுது, எந்தளவுக்கு நீங்கள் சித்தியெய்துவீர்கள் என்பதனை உங்களால் கூறமுடியும். ஓர் ஆசிரியருக்கும் அது உடனடியாகவே தெரியவரும். இதுவே சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்கான கீதை பாடசாலை. ஏனைய கீதைப் பாடசாலைகளில், அவர்கள் தாங்கள் சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவதற்காகவே அங்கே வந்திருப்பதாக ஒருபொழுதுமே கூறமாட்டார்கள். ஆசிரியரும் தான் அவர்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆக்குவதாகக் கூறமாட்டார். முதலில், ஆசிரியர் தான் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகுவேன் என்ற போதையைக் கொண்டிருக்க வேண்டும். கீதையில் விரிவுரை கொடுக்கின்ற பலர் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் சிவபாபாவிடமிருந்தே கற்கின்றார்கள் என ஒருபொழுதுமே கூறமாட்டார்கள். அவர்கள் மனிதர்களிடமே கற்கின்றார்கள். அதிமேலானவர் ஞானம் நிறைந்தவரும் சுவர்க்கத்தைப் படைப்பவருமாகிய பரமாத்மாவான பரமதந்தை, சிவனே என்பதனை நீங்கள் அறிவீர்கள். அவர் மாத்திரமே வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார். குருநானக்கும் அவரது புகழைப் பாடினார்: பிரபுவை நினைவுசெய்யுங்கள், சந்தோஷத்தைப் பெறுவீர்கள். அந்த ஒருவரே அதிமேலானவராகிய உண்மையான பிரபு என்பதனை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவரே கூறுகின்றார்: உங்களது தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். நான் உங்களுக்கு உண்மையான அமரத்துவக் கதையையும், மூன்றாவது கண்ணின் கதையையும் கூறுகின்றேன். எனவே, இதுவே மூன்றாவது கண்ணைப் பெற்று, சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகுகின்ற ஞானமாகும். ஓ பார்வதிகளே, அமரத்துவப் பிரபுவாகிய நான், அமரத்துவக் கதையை உங்களுக்குக் கூறுகின்றேன். சிவபாபாவே அதிமேலானவர். பின்னர், பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரும், சுவர்க்கத்தில் இலக்ஷ்மி, நாராயணன் ஆகியோரும் உள்ளனர். அதன்பின்னர் சந்திர வம்சமாகும். இவ்வாறாக அவர்கள் தொடர்ந்து வரிசைக்கிரமமாகக் கீழிறங்குகின்றனர். காலமும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கின்றது. எவருமே இவ்விடயங்களை அறியார்கள். பாபா உங்களுக்குப் பல ஆழமான விடயங்களைக் கூறுகின்றார். ஓர் ஆத்மாவில் அழிவற்ற பாகம் உள்ளது. ஒவ்வொரு பிறவியிலும் குறித்த அப்பாகம் பதிவுசெய்யப்படுகின்றது, அதனை ஒருபொழுதும் அழிக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: எனது பாகமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் சந்தோஷ தாமத்தில் வசிக்கும்பொழுது, நான் அமைதி தாமத்தில் வசிக்கின்றேன். உங்களது பாக்கியத்தில் சந்தோஷமும், துன்பமும் இருக்கின்றன. நீங்கள் எத்தனை பிறவிகளைச் சந்தோஷத்துடன் எடுக்கின்றீர்கள் என்பதனையும், எத்தனை பிறவிகளைத் துன்பத்துடன் எடுக்கின்றீர்கள் என்பதனையும் நான் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்;. நான் உங்களது சுயநலமற்ற தந்தையாவேன். நான் உங்கள் அனைவரையும் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றேன். நானும் தூய்மையற்றவராகி விட்டால், யார்தான் உங்களைத் தூய்மையாக்குவார்கள்? யார் அனைவரதும் அழைப்பைச் செவிமடுப்பார்கள்? யார் தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுவார்கள்? கீதையை உரைக்கும் கல்விமான்கள் எவராலுமே இதுபோன்று விளங்கப்படுத்த முடியாது என்பதனை இத்தந்தை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் மூவுலகங்களினதும் அர்த்தத்தைப் பல்வேறு வழிகளிலும் விளங்கப்படுத்துகின்றார்கள். வேதங்கள், சமயநூல்கள் போன்றவற்றின் மூலம் கடவுளைச் சந்திப்பதற்கான வழிமுறையை நீங்கள் கண்டறிய முடியும் என மக்கள் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: அச்சமயநூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. சமயநூல்கள் ஞான மார்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்குரியவை அல்ல. நானே ஞானத்தைப் பேசுகின்ற, ஞானக்கடலாவேன். ஏனைய அனைத்தும் பக்தி மார்க்கச் சம்பிரதாயங்களாகும். நானே வந்து, இந்த ஞானத்தின் மூலம் அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்கின்றேன். நீரிலிருந்து ஒரு குமிழ் தோன்றி, பின்னர் மீண்டும் அதற்குள் அமிழ்ந்து கொள்வதாக அம்மக்கள் நினைக்கின்றனர். எவ்வாறாயினும், அமிழ்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள். அவர்கள் ஒருபொழுதுமே எரிக்கப்படுவதோ, வெட்டப்படுவதோ அல்லது குறைக்கப்படுவதோ இல்லை. தந்தை இவ்விடயங்கள் அனைத்தினதும் விளக்கத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் யோக சக்தியின் மூலம் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்ற சந்தோஷத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை கொண்டிருக்க வேண்டும். இச்சந்தோஷமும் வரிசைக்கிரமமானதே. அது நிலையானதாகவோ, அல்லது அனைவருக்கும் ஒரேமாதிரியானதாகவோ இருக்க முடியாது. பரீட்சை ஒன்றாக இருப்பினும், குறைந்தபட்சம் அனைவரும் சித்தியெய்தக் கூடியதாகவேனும் இருக்கவேண்டும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. எனவே, அவர் அதற்கான திட்டத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். சூரிய வம்சத்தில் இந்தளவு சிம்மாசனங்களும் (வம்சங்கள்), சந்திர வம்சத்தில் இந்தளவும் இருக்கும். தோல்வியடைபவர்கள் பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவார்கள். பணிப்பெண்களும், வேலையாட்களும் கூட பின்னர் வரிசைக்கிரமமாக அரசர்களாகவும், அரசிகளாகவும் ஆகுவார்கள். கல்வியறிவற்றவர்கள் இறுதியில் ஓர் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வார்கள். பாபா பெருமளவு விளங்கப்படுத்துகின்றார். எனினும், உங்களுக்கு ஏதாவது புரியவில்லையெனில், நீங்கள் கேட்கலாம். காரணம் கேட்கின்றனர்: ஒருவர் பின்னர் எங்கே பிறவியெடுப்பார்? அங்கும், சந்தோஷத்திற்கு எக்குறையுமில்லை. அங்கேயும், அவர்களுக்குப் பெருமளவு மதிப்பு கொடுக்கப்படுகின்றது. அவர்கள் பெரிய மாளிகைகளில் தங்கியிருக்கின்றார்கள். அங்கே பெரிய தோட்டங்கள் இருக்கின்றன. பெரிய நிலப்பரப்பு அங்கே இருப்பதனால், இரண்டு அல்லது மூன்று மாடிக் கட்டடங்களைக் கட்டவேண்டிய அவசியமில்லை. அங்கே பணத்திற்கு எவ்விதக் குறையுமில்லை. இங்கே கட்டடங்களைக் கட்டுவதில் மக்கள் ஆர்வத்தைக் கொண்டிருப்பது போன்றே, அங்கேயும் அவர்கள் அதில் பெருமளவு ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் புதுடெல்கியைக் கட்டியபொழுது, அது புதிய பாரதம் என்றே நினைத்தார்கள். உண்மையில், சுவர்க்கம் புதிய பாரதம் எனவும், நரகம் பழைய பாரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. அனைத்தும் நாடகத்தின்படியே என்றாலும் அங்கே, உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அதனை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். முன்னைய கல்பத்தில் கட்டப்பட்ட மாளிகைகள் மீண்டும் கட்டப்படும். வேறு எவராலுமே இந்த ஞானத்தைப் புரிந்துகொள்ள முடியாது. தங்களது பாக்கியத்தில் அதனைக் கொண்டவர்களின் புத்தியிலேயே அது தங்கியிருக்கும். யோகத்தில் முழுமையாகத் தங்கியிருப்பதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில், மக்கள் ஸ்ரீ கிருஷ்ணருடன் யோகத்தில் இருந்தனர். எனினும், அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாகவில்லை. இப்பொழுது, சுவர்க்கம் உங்களுக்குச் சற்று முன்னாலேயே இருக்கின்றது. நீங்கள் பரமாத்மா பரமதந்தையினதும், பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரினதும் சுயசரிதைகளை அறிவீர்கள். பிரம்மா எத்தனை பிறவிகளை எடுக்கின்றார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: தாய்மார்களாகிய நீங்களே சுவர்க்க வாயில்களைத் திறப்பவர்கள். ஏனைய அனைவரும் நரகத்தில் இருக்கின்றார்கள். தாய்மார்களே அனைவரையும் ஈடேற்றுவார்கள். நாங்கள் கடவுளைப் புகழ்கின்றோம். நீங்கள் புரிந்துகொண்டு கூறுகின்றீர்கள்;: சிவபாபா, உங்களுக்கு நமஸ்தே. நீங்கள் வந்து, எங்களை வாரிசுகளாக, சுவர்க்கத்தின் அதிபதிகளாக ஆக்குகின்றீர்கள். அத்தகைய சிவபாபாவிற்கு நமஸ்தே. குழந்தைகள் எப்படியாயினும் தந்தைக்கு நமஸ்தே கூறவே செய்வார்கள். அதற்கு, தந்தை பதிலளிக்கின்றார்: நமஸ்தே. நீங்கள் என்னைச் சில சதங்களுக்கே வாரிசாக்குகின்றீர்கள். நீங்கள் என்னைச் சிப்பிகளுக்கு வாரிசாக்குகின்றீர்கள். நானோ உங்களை வைரங்களுக்கு வாரிசாக்குகின்றேன். நீங்கள் சிவனை உங்களது குழந்தையாக, உங்களது வாரிசாக ஆக்கிக்கொள்கின்றீர்கள், இல்லையா? அச்சா.
உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவிடமிருந்து, இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு அன்பும், நினைவுகளும் காலை வந்தனங்களும், நமஸ்தேயும், அதிபதிகளுக்கு வந்தனங்கள், தாய்மாருக்கு வந்தனங்கள்.
தாரணைக்கான சாராம்சம்:
1.சிவபாபாவின் வீட்டிற்குச் செல்கின்ற கலப்படமற்ற பயணியாகி, யோக சக்தி மூலம் உங்கள் பாவங்களை எரித்து விடுங்கள். ஞானத்தைக் கடைந்து, எல்லையற்ற சந்தோஷத்துடன் இருங்கள்.2.தந்தையைப் போன்று சிம்மாசனத்தில் அமர்வதற்கான தூய ஆசையைக் கொண்டிருக்கும் அதேவேளை, தந்தையை முழுமையாகப் பின்பற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தெளிவான புத்தியினால் ஒவ்வொரு சூழ்நிலையையும் பிரித்தறிந்து, மிகச்சரியான தீர்மானத்தை எடுப்பதன் மூலம் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.எந்தளவிற்கு உங்கள் புத்தி தெளிவாக உள்ளதோ, அதற்கேற்ப உங்கள் பிரித்தறியும் சக்தியை வளர்ப்பீர்கள். அதிகம் சிந்திப்பதற்குப் பதிலாக, ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருந்து தந்தையுடன் தெளிவாக இருங்கள். உங்களால் ஒவ்வொரு சூழ்நிலையையும் பிரித்தறிந்து மிகச்சரியான தீர்மானத்தை எடுக்க முடியும். எந்த நேரத்தில் எவ்விதச் சூழ்நிலையாக இருந்தாலும், உங்கள் தொடர்பிலும், உறவுமுறையிலும் வருபவர் எவ்வித மனோபாவத்தைக் கொண்டிருந்தாலும், அதற்கேற்ப அந்நேரத்தில் முன்னேறுவதற்கும் அந்தச் சூழ்நிலையைப் பிரித்தறிந்து அதற்கேற்ப ஒரு தீர்மானத்தை எடுப்பதும் என்பது ஒரு மகா சக்தியாகும். அத்துடன் அது உங்களை வெற்றி சொரூபம் ஆக்கும்.
சுலோகம்:
சுலோகம்: ஞான சூரியனாகிய தந்தையுடன் உலகின் இருளை அகற்றுபவர்களே அதிர்ஷ்ட நட்சத்திரங்கள்; அவர்கள் இருளுக்குள் செல்லாதவர்கள்.மாதேஸ்வரியின் இனிய மேன்மையான வாசகங்கள்.
குருடர்களுக்கு , அதாவது , ஞானக்கண் இல்லாதவர்களுக்குப் பாதையைக் காட்டுபவரே கடவுள்.
“அன்பான கடவுளே, குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்”. “அன்பான கடவுளே, குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்” என்று மக்கள் பாடும்பொழுது இது கடவுளால் மாத்திரமே பாதையைக் காட்ட முடியும் என்பதைக் குறிக்கின்றது. இதனாலேயே மக்கள் கடவுளைக் கூவியழைக்கின்றார்கள். அவர்கள் “கடவுளே, எங்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்” எனக் கூறுமபொழுது, மனிதர்களுக்குப் பாதையைக் காட்டுவதற்குக் கடவுள் அசரீரி வடிவில் வந்து சரீர வடிவில் நிச்சயமாகப் புக வேண்டும். அப்பொழுதே அவரால் ஒரு பௌதீக விதத்தில் பாதையைக் காட்ட முடியும். இங்கு வராமல் அவரால் பாதையைக் காட்ட முடியாது. குழப்பம் அடைந்தவர்களுக்குப் பாதை காண்பிக்கப்பட வேண்டும். இதனாலேயே அவர்கள் கடவுளைக் கூவி அழைக்கின்றார்கள்: அன்பான கடவுளே, குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள். அவர் படகோட்டி எனவும் அழைக்கப்படுகின்றார். ஏனெனில் அவர் எங்களை அக்கரைக்குக் கொண்டு செல்கின்றார். அதாவது, அவர் ஐந்து தத்துவங்களாலான இவ்வுலகிற்கு அப்பால் அக்கரைக்கு எடுத்துச் செல்கின்றார். அதாவது, ஆறாவது தத்துவமாகிய மகா தத்துவத்தின் நிலையான ஒளிக்கு எடுத்துச் செல்கின்றார். எனவே கடவுள் அக்கரையிலிருந்து இக்கரைக்கு வரும்பொழுதே, அவரால் எங்களை அங்கு அழைத்துச் செல்ல முடியும். எனவே கடவுள் தனது தேசத்திலிருந்து வரவேண்டும். இதனாலேயே அவர் படகோட்டி என அழைக்கப்படுகின்றார். அவர் ஆத்மாக்களாகிய படகுகளை அக்கரை சேர்க்கின்றார். அவர் தன்னுடன் யோகம் செய்பவர்களையே தன்னுடன் அழைத்துச் செல்வார். எஞ்சியிருப்பவர்கள் தர்மராஜிடமிருந்து தண்டனையை அனுபவம் செய்து பின்னர் விடுவிக்கப்படுவார்கள். அச்சா.