26/10/18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், உங்கள் பொக்கிஷக் களஞ்சியங்கள் அனைத்தும் நிறைந்து வழியும். உங்கள் பாக்கியமும் மேன்மையடையும்.

கேள்வி:
இக் கலியுகம் எதில் கடனாளியாகி உள்ளது? அவ்வாறு கடனாளியாகியதால் அதன் நிலைமை என்னவாகியது?

பதில்:
இக் கலியுகம் தூய்மை, சந்தோஷம், அமைதி என்பவற்றில் கடனாளி ஆகியுள்ளது. ஆகையாலேயே பாரதம் சந்தோஷ பூமியிலிருந்து துன்ப பூமியாகியாகவும், வைரத்திலிருந்து சிப்பியாகவும் ஆகியுள்ளது. இம் முழு நாடகமும் பாரதத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. தந்தை இப்பொழுது இந் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். பாக்கியசாலிக் குழந்தைகளால் மாத்திரமே இந்த ஞானத்தை மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவரும் இல்லை.

ஓம் சாந்தி.
கடவுள் பேசுகின்றார். எக் கடவுள்? கள்ளங்கபடமற்ற கடவுள் சிவன் பேசுகின்றார். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்கு விளங்கப்படுத்துவதும் ஆசிரியரின் கடமை ஆகும். சற்குருவிற்கும் உங்களுக்கு விளங்கபடுத்த வேண்டிய கடமையுள்ளது. சிவபாபாவே உண்மையான பாபா என அழைக்கப்படுகின்றார். அவர் கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்கப்படுகின்றார். சங்கரரை கள்ளங்கபடமற்றவர் என அழைக்க முடியாது. சங்கரர் கண்ணைத் திறந்த போது, அவர் உலகையே எரித்தார் என்று, அவரைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. சிவன் பொக்கிஷங்களின் கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்கப்படுகின்றார், அதாவது, அவரே உங்கள் பொக்கிஷக் களஞ்சியங்களை முழுமையாக நிரப்புபவர். எப் பொக்கிஷக் களஞ்சியத்தை? செல்வம். சந்தோஷம், அமைதி ஆகியவற்றையாகும். தந்தை வந்து உங்கள் பொக்கிஷக் களஞ்சியங்களான தூய்மை, சந்தோஷம், அமைதி ஆகியவற்றை நிரப்புகின்றார். கலியுகம் தூய்மை, சந்தோஷம், அமைதி ஆகியவற்றில் கடனாளி ஆகியுள்ளது. ஏனெனில் அதனை இராவணன் சபித்துவிட்டான். அனைவரும் தொடர்ந்து துன்பக் குடிலில் அழுது புலம்புகின்றார்கள். கள்ளங்கபடமற்ற பிரபுவான சிவன், இங்கமர்ந்திருந்து உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். அதாவது, அவர் குழந்தைகளாகிய உங்களை திரிகாலதரிசிகள் ஆக்குகின்றார். வேறு எவருமே நாடகத்தை அறியவில்லை. மாயை அனைவரையும் முற்றிலும் விவேகமற்றவர் ஆக்கியுள்ளாள். வெற்றியும் தோல்வியும், சந்தோஷமும் துன்பமும் நிறைந்த இந்த நாடகம் பாரதத்திற்கானதாகும். வைரம் போன்று செழிப்பாக இருந்த பாரதம், இப்பொழுது சிப்பி போன்று செழிப்பற்றுப் போய் விட்டது. சந்தோஷ பூமியாக இருந்த பாரதம் இப்பொழுது துன்ப பூமியாகியுள்ளது. சுவர்க்கமாக இருந்த பாரதம் இப்பொழுது நரகமாகியுள்ளது. ஞானக் கடலைத் தவிர, வேறு எவராலும் உங்களுக்கு அதன் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அல்லது அது எவ்வாறு சுவர்க்கத்திலிருந்து நரகமாகியது என்ற ஞானத்தையோ கொடுக்க முடியாது. புத்தியில் இந்த நம்பிக்கை இருக்க வேண்டும். எவரது பாக்கியம் திறக்கப்பட்டுள்ளதோ, அதாவது, பாக்கியசாலிகள் ஆகியுள்ளவர்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கும். இப்பொழுது அனைவருமே அபாக்கியசாலிகள் ஆவார்கள். அபாக்கியசாலிகள் என்றால், தமது பாக்கியத்தை வீணாக்கியவர்கள் என்று அர்த்தமாகும். அவர்கள் சீரழிந்து விட்டார்கள். தந்தை வந்து அவர்களை மேன்மையாக்குகின்றார். எவ்வாறாயினும், அவருக்கும் சரீரம் இல்லாததால், அரிதாகவே அந்தத் தந்தையைப் புரிந்து கொள்கின்றார்கள். பரமாத்மா பேசுகின்றார். தூய ஆத்மாக்கள் மாத்திரமே சத்தியயுகத்தில் இருக்கின்றார்கள். கலியுகத்தில் அனைவருமே தூய்மையற்றவர்கள் ஆவார்கள். மக்கள் பல ஆசைகளுடன் ஜெகதாம்பாளிடம் செல்கின்றார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது. இருப்பினும், தந்தை கூறுகின்றார்: மக்கள் எந்த உணர்வுகளுடன் எவரை வழிபட்டாலும், நானே அவர்களுக்கு அதற்கான தற்காலிக பலனைக் கொடுக்கின்றேன். உயிரற்ற விக்கிரகத்தால் அதற்கான பலனை என்றுமே கொடுக்க முடியாது. நான் மாத்திரமே அவர்களுக்குத் தற்காலிக பலனையும், சந்தோஷத்தையும் கொடுக்கின்றேன். நான் எல்லையற்ற சந்தோஷத்தை அருள்பவரும் ஆவேன். நான் துன்பதை அருள்பவன் அல்ல. நான் துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவர் ஆவேன். சந்தோஷ உலகிற்கான சுவர்க்க ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளவே நீங்கள் வந்துள்ளீர்கள், இதில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஆரம்பத்தில் சந்தோஷம் உள்ளது. பின்னர், இடையில்;, பக்தி மார்க்கம் ஆரம்பமாகின்றது. எனவே சந்தோஷம் முடிவடைந்து துன்பம் ஆரம்பமாகின்றது. அந் நேரத்தில், பக்தி மார்க்கம் ஆரம்பமாகும் போது, தேவர்கள் விகாரப் பாதையான பாவப் பாதையில் வீழ்ந்து விடுகின்றார்கள். ஆகையால் ஆரம்பத்தில், சந்தோஷம் உள்ளது. ஆனால் துன்பம் இடையிலேயே ஆரம்பமாகின்றது. இறுதியில் அதிகளவு துன்பம் இருக்கும். தந்தை கூறுகின்றார்: நானே அனைவருக்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் அருள்பவர். நான் உங்களை சந்தோஷ உலகிற்கு அனுப்புவதற்கு தயாராக்குகின்றேன். ஏனைய அனைவரும் தமது கணக்கை முடித்துக் கொண்டு, சாந்தி தாமத்திற்குச் செல்வார்கள். அதிகளவு தண்டனைகள் அனுபவம் செய்யப்படும். நீதிமன்றம் கூடும். மக்கள் காசியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வதுண்டு என்று பாபாவும் விளங்கப்படுத்தியுள்ளார். அவர்கள் காசி கல்வட் (காசியில் அர்ப்பணித்தல்) என்பதைப் பற்றி பேசுகின்றார்கள். காசியில் சிவனுக்குரிய ஆலயம் ஒன்றுள்ளது. பக்தி மார்க்கத்தில், அவர்கள் சிவபாபாவின் நினைவில் நிலைத்திருப்பார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: அவ்வளவுதான்! நான் இப்பொழுது உங்களிடம் வருகின்றேன். அவர்கள் அழுதவாறே, தம்மைச் சிவனிடம் அர்ப்பணிக்கின்றார்கள். எனவே அவர்கள் அதற்கான தற்காலிக சந்தோஷத்தைப் பெறுகின்றார்கள். இங்கே, நீங்கள் உங்களை அர்ப்பணிக்கின்றீர்கள். அதாவது, நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காக உயிருள்ள போதே சிவனிற்கு உரியவர்கள் ஆகுகின்றீர்கள். தற்கொலை செய்தல் என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் உயிருள்ள போதே கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களுடையவர். அவர்கள் சிவனிடம் தம்மை அர்ப்பணிக்கின்றார்கள். மரணம் அடைவதன் மூலம் தாம் சிவபாபாவிற்கு உரியவர்கள் ஆகுகின்றோம் என்று அவர்கள் நம்புகின்றார்கள். ஆனால் அவர்கள் அவருக்கு உரியவர் ஆகுவதில்லை. இங்கே, நீங்கள் உயிருடனேயே தந்தைக்கு உரியவர் ஆகுகின்றீர்கள். நீங்கள் அவருடைய மடிக்குச் செல்வதனால் நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அப்பொழுது உங்களால் மேன்மையான தேவர்கள் ஆக முடியும். நீங்கள் இப்பொழுது அவ்வாறு ஆகுகின்றீர்கள். நீங்கள் இம் முயற்சியைக் கல்பம் கல்பமாகச் செய்கின்றீர்கள். இது புதிய விடயம் அல்ல. உலகம் பழையதாகுகின்றது. அவ்வாறாயின், புதியதொன்று அவசியமாகும். பாரதமே புதிய சந்தோஷ உலகமாகும். அது இப்பொழுது பழைய துன்ப உலகமாகும். மக்கள் அத்தகைய கல்லுப் புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். அதனாலேயே அவர்கள் ஒரேயொரு உலகம் உள்ளது, அதுவே புதியதாகவும் பழையதாகவும் ஆகுகின்றது என்று புரிந்துகொள்கின்றார்களில்லை. மாயை அவர்களின் புத்தியை பூட்டி, அதனை முற்றாகச் சீரழித்து விட்டாள். ஆகையாலேயே அவர்கள் தேவர்களின் தொழில் என்னவென்பது தெரியாமலே, அவர்களைத் தொடர்ந்தும் வழிபடுகின்றார்கள். அதுவே மூட நம்பிக்கை எனப்படுகின்றது. அவர்கள் தேவியரை வழிபடுவதற்காக, மில்லியன் கணக்கான ரூபாய்களைச் செலவிடுகின்றார்கள். அவர்களை வழிபட்ட பின்னர், அவர்களுக்கு நிவேதனம் செய்த (உணவு படைத்தல்) பின்னர் அவர்கள் கடலில் மூழ்கச் செய்து விடுகின்றார்கள். ஆகையால், அது பொம்மை வழிபாடாகும், அப்படித்தானே? அதனால் என்ன பயனுள்ளது? அவர்கள் பெரும் பகட்டுடனும் மகிழ்ச்சியோடும், அதிகளவு பணத்தைச் செலவழித்தும் கொண்டாடுகிறார்கள், ஒரு வாரத்தின் பின்பு அவர்கள் இடுகாட்டில் புதைப்பது போன்று அவற்றைக் கடலில் அமிழ்த்திவிடுகிறார்கள். கடவுள் பேசுகிறார்: அது அசுர சமுதாயத்தின் ஆட்சியாகும். நான் உங்களை தேவ சமுதாயத்தினராக ஆக்குகின்றேன். அவருக்கு ஒரு பௌதீக வடிவம் இல்லாததால் ஒருவருக்கு நம்பிக்கையை எற்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. அகாகானுக்கு ஒரு பௌதீக வடிவம் உள்ளது, அவருக்கப் பல சீடர்கள் உள்ளார்கள். அவரது எடையை தங்கத்தினால் நிறுத்துக் கொள்வார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அது மூட நம்பிக்கை எனப்படுகின்றது. இந் நேரத்தில், எவருக்குமே நிரந்தரமான சந்தோஷம் இருப்பதில்லை. பல தீயவர்கள் உள்ளனர். முக்கியஸ்தர்கள் பெரிய பாவங்களைச் செய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஏழைகளின் பிரபு ஆவேன். ஏழைகள் அதிக பாவங்களைச் செய்வதில்லை. இந் நேரத்தில், அனைவருமே பாவாத்மாக்கள் ஆவார்கள். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டீர்கள். இருந்தும் நீங்கள் அவரைத் தொடர்ந்தும் மறந்து விடுகின்றீர்கள். ஆனால் நீங்களோ ஆத்மாக்கள்! அல்லவா? எவருமே என்றுமே ஓர் ஆத்மாவைக் கண்டதில்லை. ஆத்மா நெற்றியின் நடுவில் ஒரு நட்சத்திரம் போன்றுள்ளார் என்பதை அவர்கள் புரிந்துள்ளார்கள். ஓர் ஆத்மா சரீரத்தை விட்டுச் செல்லும் போது, சரீரம் பயனற்று விடுகின்றது. ஓர் ஆத்மா நட்சத்திரம் போன்றிருப்பதால், ஆத்மாவாகிய எனது தந்தையும் நிச்சயமாக என்னைப்போன்றே இருக்க வேண்டும். எவ்வாறாயினும், அவரே சந்தோஷக் கடலும் அமைதிக் கடலும் ஆவார். அசரீரியானவர் எவ்வாறு ஓர் ஆஸ்தியைக் கொடுக்க முடியும்? அவர் நிச்சயமாக நெற்றியின் நடுவிலேயே வந்து அமர்கின்றார். ஆத்மா இப்பொழுது ஞானத்தைக் கிரகிக்கின்றார் என்பதால் அவர் சீரழிவிலிருந்து ஜீவன் முக்தி அடைகின்றார். எதனைச் செய்தாலும் அதற்கான பலனைப் பெற்றுக் கொள்கின்றார்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யாதுவிடின் உங்கள் ஆஸ்தியைப் பெறமாட்டீர்கள். நீங்கள் ஏனையோரை உங்களுக்குச் சமமானவர் ஆக்காதிருந்தாலும், அவர்களை ஆஸ்திக்குத் தகுதியானவர் ஆக்காதிருந்தாலும் நீங்கள் சில சதப் பெறுமதியானவர்களாகவே ஆகுவீர்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. யார் மேன்மையானவர்கள் என்பதையும் யார் சீரழிந்தவர்கள் என்பதையும் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். மேன்மையான தேவர்கள் பாரதத்தில் வாழ்ந்து, சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் தந்தையான சுவர்க்;கக் கடவுளே என்று பாடுகின்றார்கள். ஆனால் அவர்களுக்குத் தந்தையான சுவர்க்கக் கடவுள் எப்பொழுது வந்து, உலகை சுவர்க்கம் ஆக்குகின்றார் என்பது தெரியாது. உங்களுக்கு இது தெரியும். ஆனால் நீங்கள் முழு முயற்சி செய்வதில்லை. இதுவும் நாடகத்திற்கு ஏற்பவே நடக்க வேண்டும். உங்கள் பாக்கியத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு உள்ளதோ அதனையே நீங்கள் பெறுவீர்கள். உங்களில் எவராவது பாபாவிடம் வினவுவீர்களாயின், நீங்கள் இப்பொழுது சரீரத்தை விட்டுச் சென்றால் தற்சமயம் உங்கள் நடத்தைக்கு ஏற்ப, நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் என்பதை பாபாவினால், உங்களிடம் உடனடியாகவே கூற முடியும். ஆனால் எவருக்கும் அதைக் கேட்பதற்கான தைரியம் இல்லை. நல்ல முயற்சி செய்கின்றவர்களால் தாம் எந்தளவிக்கு குருடர்களுக்கு ஊன்று கோலாக முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். யார் நல்லதோர் அந்தஸ்தைப் பெறுவார்கள் என்பதையும், குறிப்பிட்ட இக் குழந்தை எந்தச் சேவையுமே செய்வதில்லை என்றும் அதனால் அவர் ஒரு பணிப்பெண்ணாகவோ, வேலைக்காரராகவோ ஆகுவார் என்பதைத் தந்தையும் புரிந்து கொள்கின்றார். தரையைப் பெருக்குகின்ற பணிப்பெண்களும் வேலைக்காரர்களும், கிருஷ்ணரை பராமரிப்பவர்களும், சக்கரவர்த்தினிகளை அலங்கரிப்பவர்களும் உள்ளனர். அவர்கள் தூய அரசர்கள். ஆனால் இவர்களோ தூய்மையற்ற அரசர்கள். எனவே, தூய்மையற்ற அரசர்கள் தூய அரசர்களுக்கு ஆலயத்தைக் கட்டி அவர்களை வழிபடுகின்றார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது. பிர்லா கட்டிய ஆலயம் மிகவும் பெரியது. அவர்கள் இலக்ஷ்மி நாராயணனிற்கு அதிகளவு ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு இலக்ஷ்மி நாராயணன் யாரென்பது தெரியாது. அவ்வாறாயின் அவர்களால் என்ன பலனைப் பெற்றுக் கொள்ள முடியும்? தற்காலிக சந்தோஷத்தையாகும். அவர்கள் ஜெதாம்பாளின் ஆலயத்திற்குச் செல்கின்றார்கள். ஆனால் இந்த ஜெதாம்பாளே பின்னர் இலக்ஷ்மியாகின்றார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்த நேரத்தில், உங்கள் உலக ஆசைகள் அனைத்தும் ஜெகதாம்பாளின் மூலம் நிறைவேறுகின்றது. நீங்கள் உலக இராச்சியத்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். இப்பொழுது ஜெகதாம்பாளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரே பின்னர் இலக்ஷ்மி ஆகுகின்றவர் ஆவார். அவரிடமே மக்கள் ஒவ்வொரு வருடமும் வேண்டுகின்றார்கள். பெருமளவு வேறுபாடு உள்ளது! அவர்கள் இலக்ஷ்மியிடம் செல்வத்திற்காக வேண்டுகின்றார்கள். அவர்கள் இலக்ஷ்மியின் முன்னிலையில் நின்று கூறுவதில்லை: எனக்கொரு குழந்தை வேண்டும். அல்லது: எனது நோயை சுகப்படுத்துங்கள். இல்லை அவர்கள் இலக்ஷ்மியிடம் செல்வத்திற்காகவே வேண்டுகின்றார்கள். அதன் பெயரே ‘இலக்ஷ்மி வழிபாடு’ என்பதாகும். அவர்கள் ஜெகதாம்பாளிடம் பலவற்றை வேண்டுகின்றார்கள். அவரே அவர்களது ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்றார். நீங்கள் இப்பொழுது சுவர்க்க இராச்சியத்தையும் ஜெகதாம்பாளின் மூலமே பெற்றுக் கொள்கின்றீர்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இலக்ஷ்மியிடம் சிறிதளவு செல்வத்தைப் பலனாகப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆகையாலேயே அவரை அவர்கள் ஒவ்வொரு வருடமும் வழிபடுகின்றார்கள். அவரே தமக்குச் செல்வத்தைக் கொடுக்கின்றார் என அவர்கள் நம்புகின்றார்கள். பின்னர் அந்தச் செல்வத்தினால் அவர்கள் பாவம் செய்கின்றார்கள். அவர்கள் செல்வத்தை அடைவதற்காகவும் பாவம் செய்கின்றார்கள். அழியாத ஞானரத்தினங்களைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெற்றுக் கொள்கின்றீர்கள். அதனால் நீங்கள் செழிப்பானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் சுவர்க்க இராச்சியத்தை ஜெகதாம்பாளின் மூலம் பெற்றுக் கொள்கின்றீர்கள். அங்கே எப்பாவமும் செய்யப்படுவதில்லை. இவ் விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சிலர் இவற்றை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்கின்றார்கள். ஆனால் ஏனையோருக்கு எதுவுமே புரியவில்லை. ஏனெனில் அது அவர்களின் பாக்கியத்தில் இல்லை. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாத போது, நீங்கள் மேன்மையானவர் ஆக மாட்டீர்கள். அதன் பின்னர் உங்கள் அந்தஸ்த்தும் அழிக்கப்படுகின்றது. முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். தந்தையான கடவுள் சுவர்க்க இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார், அதன் பின்னர் பாரதம் சுவர்க்கம் ஆகும். இதுவே உபகாரமிக்க யுகம் என அழைக்கப்படுகின்றது. அதிகபட்சம் இந்த யுகம் 100 வருடங்கள் கொண்டதாகும். ஏனைய அனைத்து யுகங்களும் 1250 வருடங்களைக் கொண்டதாகும். அஜ்மிரில் வைகுந்தத்தின் மாதிரி ஒன்றுண்டு. சுவர்க்கம் எவ்வாறிருக்கும் என்று அவர்கள் காட்டுகின்றார்கள். சுவர்க்கம் நிச்சயமாக இங்கிருக்கும். அப்படித்தானே? சிறிதளவையேனும் ஒருவர் செவிமடுத்தாலும் அவரும் சுவர்க்கத்திற்குச் செல்வார். எவ்வாறாயினும். அவர்கள் கற்காவிட்டால், அவர்கள் கல்வியறிவு அற்றவர்கள் போன்றவர்கள் ஆவார்கள். பிரஜைகளும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றார்கள். எவ்வாறாயினும், அங்கே, ஏழைகள் செல்வந்தர் அனைவருமே சந்தோஷமாக இருப்பார்கள். இங்கே துன்பத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. சத்தியயுகத்தில், பாரதமே சந்தோஷ பூமியாகும். ஆனால் கலியுகத்தில், அதுவே துன்ப உலகமாகும். உலக வரலாறும் புவியியலும் சுழல வேண்டும். கடவுள் ஒரேயொருவரே உள்ளார். உலகமும் ஒன்றே உள்ளது. புதிய உலகில் பாரதம் முதலாவதாகும். பாரதம் இப்பொழுது பழையதாகி விட்டதால், அது மீண்டும் புதியதாக வேண்டும். வேறு எவருக்கும் உலக வரலாறும் புவியியலும் மீண்டும் சுழல வேண்டும் என்பது தெரியாது. அனைவருமே ஒரேமாதிரி இருப்பார்கள் என்றில்லை. அங்கேயும் வௌ;வேறு அந்தஸ்த்தில் மக்கள் இருப்பார்கள். அங்கே பயம் இல்லாததால், பொலிஸ்காரர் இருக்க மாட்டார்கள். இங்கே மக்கள் பயப்படுவதாலேயே பொலிஸ்காரர் போன்றோர் இருக்கின்றார்கள். அவர்கள் பாரதத்தை துண்டுகளாகப் பிரித்து விட்டார்கள். சத்தியயுகத்தில் பிரிவுகள் இருக்க மாட்டாது. இலக்ஷ்மி நாராயணனின் ஒரேயொரு இராச்சியம் மாத்திரமே தொடர்ந்திருக்கும். அங்கே எப்பாவமும் செய்யப்பட மாட்டாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றி, சதா சந்தோஷம் என்ற உங்கள் ஆஸ்தியை என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஜீவன்முக்திக்கான பாதையை உங்களுக்குக் காட்டுகின்றார். நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக்குகின்ற சிவசக்தி சேனையைச் சேர்ந்தவர்கள். நீங்கள் உங்கள் சரீரம், மனம், செல்வம், அனைத்தையுமே சேவைக்காகப் பயன்படுத்துகின்றீர்கள். அந்த பாபுஜீ கிறிஸ்தவர்களைத் துரத்தி விட்டார். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அதனால் எந்தச் சந்தோஷமும் இல்லை. மாறாக பெரும் துன்பமே உள்ளது. உணவு இல்லாததால், அவர்கள் தொடர்ந்தும் ‘நீங்கள் இதனைப் பெற்றுக் கொள்வீர்கள், இது நடக்கும்……’ என்றெல்லாம் பொய் பேசுகின்றார்கள். தந்தையிடம் இருந்து மாத்திரமே நீங்கள் எதனையாவது பெற்றுக் கொள்வீர்கள். ஏனைய அனைத்தும் முடிந்து விடும். அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு இருக்க வேண்டுமெனக் கேட்கின்றார்கள். அதற்காக அவர்கள் அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். எதுவும் நடக்க மாட்டாது. சிறிய யுத்தம் ஒன்று இடம்பெற்றாலும், பஞ்சம் நிலவும். ஒருவருக்கொருவர் அதிகளவு வன்முறையில் ஈடுபடுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. நீங்கள் உயிருடன் இருக்கும் போதே உங்களைத் தந்தையிடம் அர்ப்பணிக்க வேண்டும். அதாவது, நீங்கள் தந்தைக்குரியவர் ஆகி, ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தை மாத்திரமே பின்பற்ற வேண்டும். பிறரை உங்களுக்குச் சமமானவர் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.

2. அழியாத ஞானரத்தினங்களைத் தானம் செய்து, அனைவரது ஆசைகளையும் பூர்த்தி செய்பவரான ஜெதாம்பாளைப் போன்றவர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
அனைத்திலும் நன்மை உண்டு என கருதுவதன் மூலம் திரிகாலதர்ஷியாகவும் ஆட்ட அசைக்க முடியாத ஒரு மகாவீராகவும் ஆகுவீர்களாக.

எந்தவொரு சந்தர்ப்பத்தையும் காலத்தின் ஒரு பகுதியின் கோணத்தில் பார்க்காதீர்கள். திரிகாலதர்ஷியாக இருந்து அதனை நோக்குங்கள். ஏன் அல்லது எதற்கு என வினவுவதற்கு பதில் எது நடந்தாலும் அதில் நன்மையுண்டு எனக் கருதுங்கள். பாபா கூறுவது போல் தொடர்ந்து செய்யுங்கள். அது பின்னர் பாபாவின் பொறுப்பும் அவரது வேலையும் ஆகும். பாபா உங்களை இயக்குவதாக முன்னேறிச் செல்லுங்கள் அதில் நன்மை அமிழ்ந்துள்ளது. இந்த நம்பிக்கையை கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் ஒரு போதும் தளம்பல் அடைய மாட்டீர்கள். உங்கள் கனவுகளில் அல்லது மனதில் வீணான எண்ணங்கள் தோன்ற அனுமதிக்காதீர்கள். அப்பொழுது நீங்கள் ஆட்ட அசைக்க முடியாதவர்கள் என அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
ஒரு தபஸ்வி என்பவர் ஸ்ரீமத்தின் சமிக்கைகளுக்கு இனங்க ஒரு விநாடியில் பற்றற்றவராகவும் அன்பானவராகவும் ஆகின்றவர் ஆவார்.