12.11.2018 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞான வானம்பாடியாகி நாள் முழுவதும் ஞானத்தைப் பாடிக்கொண்டிருங்கள். அப்போது உங்கள் பௌதீக மற்றும் ஆன்மீகத் தாய், தந்தையரை உங்களால் வெளிப்படுத்த முடியும்.
கேள்வி:
கூறப்படுகிறது: உங்கள் சொந்த சேர்மானங்களை அரையுங்கள், உங்கள் போதை ஏறும். இதன் அர்த்தம் என்ன?
பதில்:
உங்கள் சொந்த சேர்மானங்களையே அரைத்தல் என்றால், உங்கள் புத்தியை அங்குமிங்கும் அலையவிடாது, தந்தையொருவரையே நினைவு செய்வதாகும். தந்தையொருவரே உங்கள் புத்தியில் இருப்பாராயின், உங்கள் போதை அதிகரிக்கும். ஆயினும் சரீர உணர்வு இதில் அளவற்ற தடைகளை உருவாக்குகிறது. சிலர் சிறிதளவு நோய்வாய்ப்பட்டுவிட்டாலே விரக்தியடைந்துவிடுகின்றார்கள். பின்னர் தங்கள் நண்பர்கள், உறவினர்களை நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனாலேயே அவர்களுடைய போதை அதிகரிப்பதில்லை. அவர்கள் யோகத்தில் நிலைத்திருப்பார்களாயின், அவர்களுடைய வலி குறையும்.
பாடல்:
நீங்கள் பகலை உண்பதிலும், இரவை உறங்குவதிலும் வீணாக்கினீர்கள்.
ஓம் சாந்தி.
இவ்விடயங்கள் யாவும் சமய நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை அவர்கள் ஒருவருக்கொருவர் விளங்கப்படுத்தவும் செய்கிறார்கள். குருமார்கள் பலவகையான வழிகாட்டல்களையும் கொடுக்கிறார்கள். மிக நல்ல பக்தர்கள் பலர் ஒரு சிறிய அறையிலிருந்து, கௌமுக் என அவர்களால் அழைக்கப்படும் சிறு துணிப்பை ஒன்றினுள் கரத்தை நுழைத்து ஒரு மணிமாலையின் மணிகளை உருட்டுவார்கள். அதுவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஒரு நாகரீக பாணியே ஆகும். இப்போது தந்தை கூறுகிறார்: அவற்றையெல்லாம் துறந்துவிடுங்கள். ஆத்மா தன் தந்தையை நினைவு செய்யவேண்டும். இதில் மணிமாலையின் மணிகளை உருட்டுவது என்ற கேள்விக்கு இடமில்லை. நமசிவாய என்பது மிகச்சிறந்த பாடலாகும். இப்பாடலில் மட்டும்தான், நீங்களே தாயும் தந்தையும் என விளங்கப்படுத்தியுள்ளனர். கடவுள் ஒருவரே படைப்பவராகிய தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் படைப்பவர் என அழைக்கப்படுவதால், அவர் எதனைப் படைக்கின்றார்? நிச்சயமாக அவர் புதிய உலகை மட்டுமே படைப்பார் என்பதை அனைவரும் புரிந்துகொள்கின்றனர். நீங்களே தாயும் தந்தையும், நாங்கள் உங்கள் குழந்தைகள் என்றும் மக்கள் பாடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் முதலில், அனைவருக்கும் தந்தையாக இருப்பவர் கடவுளேயாவார். தந்தை இருப்பதால் தாயும் தேவைப்படுகின்றார். தாய் இல்லாமல் அவரால் படைத்தலைச் செய்ய முடியாது. படைத்தலை அவர் எவ்வாறு செய்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. இரண்டாவதாக, எங்கள் மத்தியில் நாம் எல்லோரும் சகோதர, சகோதரிகள். எனவே, விகாரமான பார்வை எதுவும் இருக்கமுடியாது. தந்தையும் தாயுமாக இருப்பவர் ஒருவரே. புரிந்துகொண்டு விளங்கப்படுத்துவதற்கு, இக்கருத்துகள் மிக நல்லவை. மூன்றாவதாக, நிச்சயமாகத் தந்தையே புதிய உலகத்தைப் படைத்திருக்க வேண்டும். நாங்கள் அவரது குழந்தைகளாக இருந்தோம். இப்போது மீண்டும் ஒருமுறை அவரது குழந்தைகளாகியுள்ளோம். நாங்கள் 84 பிறவிச் சக்கரத்தைப் பூர்த்திசெய்து, பக்தி மார்க்கத்தில் மக்களால் நினைவுகூரப்படுகின்ற தந்தையும் தாயுமானவருக்குச் சொந்தமாகியுள்ளோம். தந்தையும் தாயுமாக இருப்பவர் உலகைப் படைக்கிறார். நாங்கள் அவரது குழந்தைகளாகின்றோம். எனவே, நிச்சயமாக எங்களுக்கு அவர் அளவற்ற சந்தோஷத்தைக் கொடுக்கவேண்டும். கடவுள் தந்தையும் தாயுமாகிறார் என்பது எவருக்குமே தெரியாது. அவர் ஆசிரியராகவும் சற்குருவாகவும் இருக்கிறார். எங்கள் மத்தியில் பிரம்மாவின் குழந்தைகளாகிய நாம் சகோதர சகோதரிகள் ஆவோம். நாங்கள் பிரம்ம குமாரர்கள், குமாரிகள் என்று அழைக்கப்படுகிறோம். எங்களைப் படைப்பவரும் அந்த ஒரேஒருவரேயாவார். அளவற்ற சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் தந்தையிடம் இராஜயோகம் கற்கின்றோம். நாங்கள் துன்பத்திலுள்ளபோதே அளவற்ற சந்தோஷத்தையும் பெறமுடியும். எதிர்காலத்தில் நாங்கள் சந்தோஷமாக இருக்கும்போது இக்கற்பித்தல்களை எங்களுக்குக் கொடுப்பதற்காக அவர் வருவார் என்பதல்ல. துன்பத்தில் இருக்கும்போதே சந்தோஷத்தை அடையும் கற்பித்தல்களைப் பெறுகிறோம். தந்தையும் தாயுமாக இருக்கும் அவர் வந்து எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறார். ஆதாமும் ஏவாளும் பிரசித்தி பெற்றவர்கள். அவர்களும் நிச்சயமாகக் கடவுளின் குழந்தைகளே. எனவே, கடவுள் யார்? தந்தை கொடுக்கும் ஞானம் சகல மதங்களைச் சேர்ந்தவர்களுக்குமானது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உலகம் முழுவதற்கும் அத்தந்தையுடன் புத்தியின் யோகம் துண்டிக்கப்பட்டுவிட்டது. உங்கள் புத்தியின் யோகத்தை இணைத்துக்கொள்ள சாத்தானாகிய மாயை அனுமதிப்பதில்லை. அதற்குப் பதிலாக அவள் புத்தியின் யோகத்தை மேலும் துண்டித்து விடுகிறாள். தந்தை வந்து உங்களைச் சாத்தானை வெல்லச் செய்கிறார். இப்போதெல்லாம் மந்திர சக்தி வாய்ந்த பலர் உலகில் உள்ளனர். இது சாத்தான்களின் உலகம். காம விகாரம் என்னும் சாத்தான் தன் ஆரம்பதிலிருந்து நடுப்பகுதி ஊடாக இறுதிவரை, உங்களை ஒருவருக்கொருவர் துன்பம் கொடுக்கச் செய்கிறது. உங்களை ஒருவருக்கொருவர் துன்பத்தைக் கொடுக்கச் செய்வது சாத்தான்களின் வேலையாகும். சத்தியயுகத்தில் சாத்தான்கள் இல்லை. பைபிளிலும் சாத்தானைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதென்று விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இராவணன் என்றால் சாத்தானாகும். இது சாத்தான்களின் இராச்சியமாகும். இராம இராச்சியமாகிய சத்தியயுகத்தில் சாத்தான்கள் இல்லை. அங்கே அளவற்ற சந்தோஷம் உள்ளது. நமசிவாய என்ற பாடல் மிகவும் நல்லது. சிவனே தந்தையும் தாயுமாக இருக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சங்கரரைத் தந்தையும் தாயும் என்று அழைக்க முடியாது. இருப்பினும், சிவன் தந்தை என்றே அழைக்கப்படுவார். ஆதாமும் ஏவாளும் அதாவது, பிரம்மாவும் சரஸ்வதியும் இங்கேயே உள்ளனர். அங்கே அந்தக் கிறிஸ்தவர்கள் தந்தையாக இருக்கும் கடவுளை நோக்கிப் பிரார்த்திக்கிறார்கள். இந்த பாரதமே தந்தையும் தாயுமானவருடைய பூமியாகும். அவரது பிறப்பு இங்கேயே இடம்பெறுகின்றது. எனவே, நீங்கள் அவர்களுக்குப் பின்வருமாறு விளங்கப்படுத்த வேண்டும்: தந்தையும் தாயுமானவரை நீங்கள் நினைவுகூர்வதால் நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகளாவோம். அவர் பிரஜாபிதா பிரம்மா மூலம் படைப்பை உருவாக்குகிறார். அவர்களை அவர் தத்தெடுக்கின்றார். சரஸ்வதியும் தத்தெடுக்கப்படுகிறார். பிரஜாபிதா பிரம்மா எங்களைத் தத்தெடுத்திருக்கிறார். அதனாலேயே இத்தனைபேர் பிரம்ம குமாரர்கள், குமாரிகளாகியுள்ளனர். சிவபாபா தொடர்ந்து எங்களைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார். பிரம்மா மூலமே புதிய உலகம் படைக்கப்படுகின்றது. விளங்கப்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய பல யுக்திகளும் உள்ளன. எனினும், நீங்கள் முழுமையாக விளங்கப்படுத்துவதில்லை. எல்லா இடங்களிலும் ‘நமசிவாய’ என்ற பாடலை இசைக்குமாறு பாபா உங்களுக்குப் பல தடவைகள் கூறியுள்ளார். நாங்கள் எந்த வகையில் தந்தையும் தாயுமாக இருப்பவரது குழந்தைகளாக இருக்கிறோம்? தந்தை இங்கிருந்து இதை விளங்கப்படுத்துகிறார். புதிய உலகம் பிரம்மா மூலம் படைக்கப்பட்டது. இப்போது கலியுகத்தின் முடிவு ஆகும். நாங்கள் மீண்டும் ஒருமுறை சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்றோம். இது புத்தியால் உட்கிரகிக்கப்பட வேண்டும். ஞானம் மிக இலகுவானது. மாயையின் புயல்கள் உங்களை ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருக்க அனுமதிப்பதில்லை. புத்தி அதிசயிக்கின்றது. அனைவரையும் படைக்கும் இறைவன் ஒருவரே என்பதை எப்போதும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். எல்லோரும் அவரைத் தந்தை என்றே அழைப்பார்கள், இல்லையா? அசரீரியான ஒரேயொருவர் பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்குச் சூட்சும ஆடைகள் உள்ளன.இங்கேயே மக்கள் 84 பிறவி எடுக்கின்றார்களே தவிர, சூட்சுமலோகத்தில் அல்ல. நாங்கள் அனைவரும் தந்தையும் தாயுமாக இருப்பவருடைய குழந்தைகள் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் புதிய குழந்தைகளாவோம். தந்தை எங்களைத் தத்தெடுத்துள்ளார். அவர் மக்களின் தந்தையாகிய பிரஜாபிதாவாக இருப்பதால், எண்ணற்றவர்கள் இருப்பார்கள். நிச்சயமாக அவர்களை அவர் தத்தெடுத்திருக்கவே வேண்டும். பிரம்மாவைப் பல கரங்களுடன் காட்டுகிறார்களாயினும், அவர்களுக்கு அதன் அர்த்தம் விளங்குவதில்லை. வெளித்தோன்றியிருக்கும் சமய நூல்கள், விக்கிரகங்கள் அனைத்தும் நாடகத்தின் அடிப்படையிலேயெ அமைந்ததாகவே இருக்கவேண்டும். பிரம்மாவின் பகலாக இருந்து, பின்பு பக்தி மார்க்கம் ஆரம்பமாகியது. அது தொடர்ந்து வந்திருக்கின்றது. தந்தையொருவரே வந்து எங்களுக்கு இந்த இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இது உங்கள் புத்தியில் இருக்கவேண்டும். உங்கள் சேர்மானங்களை அரைப்பீர்களானால், உங்கள் போதை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இருந்தாலும், உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைக்கப்பட வேண்டும். இங்கே, பலரது புத்தியின் யோகம் அலைபாய்கின்றது. அவர்கள் பழைய உலக நண்பர்கள், உறவினர்களிலோ அல்லது சரீர உணர்விலோ சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் சிறிதளவு நோய்வாய்ப்பட்டுவிட்டாலே பெருமளவில் விரக்தியடைகின்றனர். ஆ, ஆனால் நீங்கள் யோகத்தில் நிலைத்திருப்பீர்களாயின் உங்கள் வலி குறைவடையும். யோகத் தொடர்பு இல்லையென்றால், எவ்வாறு நீங்கள் நோய்கள் போன்றவற்றிலிருந்து விடுபட முடியும்? இதைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்: முதல்தரமான தூய ஆத்மாக்களாகும் தந்தையும் தாயுமே மிகவும் கீழிறங்கி வருபவர்கள். அவர்கள் அளவற்ற கர்மங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனாலும், யோகத்தில் நிலைத்திருப்பதால், தொடர்ந்து அவர்களுடைய நோய் அகன்றுவிடுகின்றது. இல்லாவிட்டால், அவர்களே அதிகூடிய கர்ம வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனாலும், அவர்களுடைய வேதனை யோக சக்தியால் அகற்றப்பட்டு, அவர்கள் அளவற்ற சந்தோஷமடைகின்றனர்: நாங்கள் பாபாவிடமிருந்து அளவற்ற சுவர்க்க சந்தோஷத்தைப் பெறுகின்றோம். பல குழந்தைகள் தங்களை ஆத்மாக்களாகக் கருதுவதில்லை. நாள் முழுவதும் அவர்கள் தங்கள் சரீரத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறு ஞானத்தைக் கீச்சிடுவது என பாபா வந்து உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். எனவே நீங்கள் ஞான வானம்பாடி ஆகவேண்டும். இந்த ஞானத்தைக் கீச்சிடுகின்ற மிக நல்ல, இளம் புதல்வியர் பலர் வெளியே இருக்கிறார்கள். குமாரிகள் மூலமாகவே பீஷ்ம பிதாமகருக்கு ஞானம் கொடுக்கப்பட்டது. இந்தச் சிறு குழந்தைகள் சுறுசுறுப்பானவர்களாகவும் விழிப்பானவர்களாகவும் ஆக்கப்பட வேண்டும். சிறு குழந்தைகள் தங்கள் ஆன்மீகத் தாய், தந்தையரையும், பௌதீகத் தாய், தந்தையரையும் வெளிப்படுத்துகிறார்கள். அப்போது இந்த உலகம், அந்த உலகம் இரண்டுமே போற்றப்படுகிறது. பௌதீகத் தாயும் தந்தையும்கூட ஈடேற்றப்படவேண்டும். இளம் புதல்வியர் எவ்வாறு தங்கள் தந்தையையும் தாயையும் ஈடேற்றுவார்கள் என்று நீங்கள் காண்பீர்கள். குமாரிகளுக்கு மரியாதை கொடுக்கப்படுகின்றது. எல்லோரும் குமாரிகளுக்குத் தலைவணங்குகிறார்கள். சிவசக்தி சேனையில் அனைவருமே குமாரிகள்தான். சிலர் தாய்மார்களாக இருந்தாலும் குமாரிகள் என்றே அவர்களும் அழைக்கப்படுகிறார்கள். மிக நல்ல குமாரிகள் வெளித்தோன்றுவார்கள். இளம் புதல்வியரே அனைவரையும் வெளிப்படுத்துவார்கள். சில இளம் புதல்வியர் மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால், சிலருக்கு அளவற்ற பற்று உள்ளது. இந்தப் பற்று மிகவும் தீயதாகும். இதுவும் உங்களைத் தந்தையிடமிருந்து அப்பால் திருப்பிவிடும் தீய ஆவியாகும். பரம தந்தை பரமாத்மாவிடமிருந்து உங்களை அப்பால் திருப்புவதே மாயையாகிய சாத்தானுடைய தொழிலாகும். ‘நமசிவாய’ என்ற பாடல் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த பாடலாகும். அந்தப் பாடலில்தான் நீங்களே தாயும் தந்தையும் என்று கூறுகிறார்கள். பொதுவாக, ராதாகிருஷ்ணர் ஆலயத்தில் தம்பதி வடிவத்தைக் காட்டுகிறார்கள். கீதையில் கிருஷ்ணருடன் சேர்த்து ராதையைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. சகல நற்குணங்களும் நிறைந்த, பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்த.... என்ற கிருஷ்ணருடைய புகழ் வேறுபட்டது. சிவனுடைய புகழ் வேறுபட்டது. சிவனுக்குக் கற்பூர ஆரத்தி செய்யும் போது அளவற்ற புகழ் பாடுகின்றார்கள். ஆனால் அதன் அர்த்தம் அவர்களுக்கு விளங்குவதில்லை. காலமெல்லாம் வழிபாடு செய்தே களைத்துப்போய் விட்டார்கள். மம்மாவும் பாபாவும் நீங்களுமே அதிகூடிய வழிபாடு செய்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது நீங்கள் வந்து பிராமணர்களாகியுள்ளீர்கள். இதிலும் வரிசைக்கிரமம் உள்ளது. யோகத்தின் மூலம் தீர்க்கப்படவேண்டிய கர்மவேதனைகளும் உள்ளன. நீங்கள் உங்கள் சரீர உணர்வை துண்டிக்க வேண்டும். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து நீங்கள் அளவற்ற சந்தோஷத்தில் இருக்கவேண்டும். நாங்கள் தந்தையும் தாயுமானவரிடமிருந்து அளவற்ற சந்தோஷத்தைப் பெறுகின்றோம். இந்த பிரம்மா கூறுகிறார்: நான் பாபாவிடமிருந்து ஒரு ஆஸ்தியைப் பெறுகின்றேன். பாபா என் இரதத்தைக் கடனாகப் பெற்றுள்ளார். அதனால், இந்த இரதத்திற்கு பாபா விசேட உபசாரம் செய்வார். ‘ஆத்மாவாகிய நான் இந்த இரதத்திற்கு உணவூட்டுகிறேன்’ என்றே ஆரம்ப காலங்களில் நான் நினைப்பதுண்டு. இதுவும் ஒரு இரதமே. இப்போதோ, அந்த ஒரேயொருவரே இவருக்கு உணவளிப்பவர் என்று கூறப்படும். இந்த இரதம் பராமரிக்கப்படவேண்டும். பிரபுக்கள் குதிரைமீது ஏறி அமரும்போது, தங்கள் கரங்களாலேயே அவற்றுக்கு உணவூட்டுவார்கள். சிலசமயங்களில் அவற்றின் முதுகைத் தடவிக்கொடுப்பார்கள். தாங்கள் அக்குதிரைகளைச் செலுத்துவதால், அவற்றை நன்றாகக் கவனிப்பார்கள். பாபாவும் இந்த இரதத்தைச் செலுத்துகிறார் என்பதால், அவரும் இவரை விசேடமாக உபசரிக்கமாட்டாரா? பாபா நீராடும்போது, ‘நான் நீராடுகிறேன். அத்துடன் நான் பாபாவுக்கும் நீராட்டவேண்டும். ஏனெனில், அவர் இந்த இரதத்தைக் கடனாகப் பெற்றிருக்கிறார்.’ என்று நினைத்துக்கொள்கிறார். சிவபாபா கூறுகிறார்: நானும் உங்கள் சரீரத்தை நீராட்டி, உணவூட்டுகிறேன். நான் உண்பதில்லை. ஆனாலும் சரீரத்துக்கு உணவூட்டுகிறேன். பாபா சரீரத்துக்கு உணவூட்டினாலும் தான் உண்பதில்லை. பாபாவுக்கு நீராடும்போதும் நடமாடும் போதும் இவ்வகையான பல்வேறு நினைவுகளும் தோன்றுகின்றன. இது அவருடைய சில அனுபவங்களாகும். பாபாவே கூறுகிறார்: நான் இவருடைய பல பிறவிகளின் இறுதியில் இவருக்குள்; பிரவேசிக்கிறேன். இவருக்கு இவருடைய பிறவிகளைப் பற்றித் தெரியாது. எனக்கு அவற்றைப் பற்றித் தெரியும். பாபா மீண்டும் ஒருமுறை உங்களுக்கு ஞானத்தை வழங்குகிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறவேண்டும். சத்தியயுகத்தில் அரசர்களும் இருக்கிறார்கள். பிரஜைகளும் இருக்கிறார்கள். தந்தையிடமிருந்து உங்கள் முழு ஆஸ்தியைப் பெறுவதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். இப்பொழுது அதை நீங்கள் பெறவில்லையாயின், ஒவ்வொரு சக்கரமும் அதனைத் தவறவிட்டுவிடுவீர்கள். உங்களால் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியாது. இது பிறவி, பிறவியாகத் தொடரும் பேரம் ஆகும். அதனால், நீங்கள் ஸ்ரீமத்தை அதிகளவில் பின்பற்ற வேண்டும்! ஒவ்வொரு சக்கரமும் நீங்கள் கருவிகளாகுவீர்கள். ஒவ்வொரு சக்கரமும் உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெற்றுள்ளீர்கள். இந்தக் கல்வி சக்கரம் சக்கரமாக இருக்கப் போவதாகும். இதில் நீங்கள் அளவற்ற கவனம் செலுத்த வேண்டும். ஏழு நாட்களுக்கு இலக்கை வைத்திருந்து அதன் பின்னர் வீட்டிலும் முரளியைப் படிக்கலாம். உங்களுக்கு இது மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது. நாடகம் உங்கள் புத்தியில் இருக்கவேண்டும். இது உலகப் பல்கலைக்கழகம் என அழைப்படுவதால், நீங்கள் எங்கு சென்றாலும், அமெரிக்காவுக்கே சென்றாலும் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறலாம். ஒரு வாரத்திற்கு இதை நீங்கள் உட்கிரகிக்க வேண்டும், அவ்வளவுதான். நீ;ங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதால், சகோதர சகோதரிகள் ஆவீர்கள். பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார். எனவே, அவரது குழந்தைகள் எல்லோரும் சகோதர, சகோதரிகள். நீங்கள் உங்கள் வீட்டில் குடும்பத்துடன் சகோதர, சகோதரிகளாக வாழும்போது, நிச்சயமாகத் தூய்மையாக இருப்பீர்கள். இது மிகச் சுலபமானது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. மாயை எனும் சாத்தானிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, ஞானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டிருங்கள். பற்று எனும் தீய ஆவியைத் துறந்து, தந்தையை வெளிப்படுத்துங்கள். ஞானத்தை பாடுங்கள்.
2. கல்வியில் முழுக்கவனம் செலுத்தி, தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக்கொள்ளுங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எதுவாயினும், இவ்வாய்ப்பை நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் இழந்துவிடக்கூடாது.
ஆசீர்வாதம்:
கர்மயோக ஸ்தியினால் கர்மவேதனையை வெற்றி கொள்ளும் ஒரு வெற்றி இரத்தினம் ஆகுவீர்களாக.
நீங்கள் கர்மயோகியாகும் பொழுது சரீரத்தினூடாக எற்படும் எந்தவித கர்ம வேதனையும் வேதனையாக அனுபவம் செய்யப்படமாட்டாது. ஒருவருக்கு மனநோய் இருந்தால் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார் எனக்கூறப்படும். எவ்வாறாயினும் உங்கள் மனம் எந்தவித நோயிலிருந்தும் விடுபட்டிருந்தால் நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமானவர்கள்.விஷ்ணு பாம்பின் மேல் உறங்குவதைப் போன்று ஞானத்தைக் கடைந்து முகமலர்ச்சியுடன் இருங்கள். கடையும் சக்தியினால் உங்களுக்கு கடலிற்குள் இன்னும் ஆழமாகச் செல்வதற்கு சந்தர்ப்பம் உள்ளது. அத்தகைய கர்மயோகிகளாலேயே கர்மவேதனையை வெற்றிகொண்டு வெற்றி இரத்தினங்கள் ஆக முடியும்
சுலோகம்:
தைரியத்தை உங்கள் சகபாடி ஆக்கிக் கொள்ளுங்கள்.அப்போது ஒவ்வொரு செயலிலும் நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
மாதேஸ்வரியின் இனிய மேன்மையான வாசகங்கள்:
மக்கள் கடவுளிடம் எதற்காகப் பிரார்த்திக்கிறார்கள் ;? அவர்கள் எதைப் பெறுகிறார்கள் ;
“நீங்களே தாயும் தந்தையும் நாங்கள் உங்கள் குழந்தைகள் .உங்கள் கருணையினால் எங்களுக்கு பெருமளவு சந்தோஷம் உள்ளது” இந்தப் புகழ் யாருக்காகப் பாடபடப்பட்டது? நிச்சயமாக இது கடவுளுக்கே பாடப்பட்டது. ஏனெனில் கடவுள் தாய் தந்தை வடிவத்தில் தாமாகவே வந்து உலகிற்கு அளப்பரிய சந்தோ~த்தைக் கொடுத்தார். கடவுள் நிச்சயமாக ஒரு நேரத்தில் வந்து சந்தோ~ உலகைப் படைத்தார் இதனாலேயே அவர்கள் தாயும் தந்தையும் என அவரைக் கூவி அழைக்கின்றனர். எவ்வாறாயினும் மக்களுக்கு சந்தோ~ம் என்றால் என்ன என்று தெரியாது. இப்பூமியில் அளப்பரிய சந்தோ~ம் இருந்தபோது பூமியில் அமைதியும் இருந்தது. ஆனால் இப்போது அந்தச் சந்தோ~ம் இல்லை நிச்சயமாக மக்களுக்கு அந்தச் சந்தோ~த்திற்கான விருப்பம் உள்ளது.. எவ்வாறாயினும் பின்னர் சிலர் செல்வத்தையும், சிலர் குழந்தைகளையும், சிலர் தாங்கள் ஒருபோதும் விதவைகள் ஆகாத வண்ணம் ஒரு விசுவாசமான மனைவியாக இருக்கவேண்டும் என்றும் கேட்கிறார்கள். அவர்கள் சந்தோ~த்தை மட்டுமே விரும்புகிறார்கள். எனவே கடவுள் நிச்சயமாக அவர்களது ஆசைகளைப் பூர்த்தி செய்வார். சத்திய யுகத்தில் பூமியில் சுவர்க்கம் இருந்த போது அங்கே சதா சந்தோ~ம் நிலவியது. அங்கே பெண்கள்; விதவைகள் ஆகுவதில்லை எனவே அந்த ஆசை சத்தியயுகத்தில் பூர்த்தி செய்யப்பட்டது. அங்கே அளப்பரிய சந்தோ~ம் இருந்தது. ஆனால் இந்நேரத்தில் இது நரகமாகும். இந்நேரத்தில் மனிதர் துன்பத்தில் வேதனைப்படுகிறார்கள். அச்சா.