25.11.18 Avyakt Bapdada Tamil Lanka Murli 01.03.84 Om Shanti Madhuban
ஒரேயொருவரின் கணக்கு.
இன்று, பாபா இலகு யோகியாகவும் சதா ஒத்துழைப்பவர்களாகவும் இருக்கும் குழந்தைகளைக் காண்பதில் களிப்படைகிறார். சகல திசைகளில் இருந்தும் வந்திருக்கும் தந்தையின் குழந்தைகள் அனைவரும் சதா ஒரே நம்பிக்கையையும் ஒரே ஆதாரத்தையும் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரேயொருவரின் புகழை மட்டுமே பாடுகிறார்கள். அவர்கள் ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளுக்குமான பொறுப்பை நிறைவேற்றுகிறார்கள். அவர்கள் எப்போதும் ஒரேயொருவருடனேயே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கடவுளின் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் ஓர் இலக்கையும் ஒரேவகையான தகைமைகளையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரேவகையான தூய, மேன்மையான நல்லாசிகளுடன் பார்ப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒரேவகையான மேன்மையான, தூய விருப்பத்துடன் உயரே பறக்கச் செய்வார்கள். அவர்கள் அனைவரும் ஒரே உலகைச் சேர்ந்தவர்கள். அத்துடன் அவர்கள் இந்த ஒரேயொரு உலகின் பேறுகள் அனைத்தையும் அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் கண்களைத் திறந்ததும், ஒரேயொரு பாபாவை மட்டுமே பார்க்கிறார்கள். ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும், ஒரேயொரு பாபாவையே அவர்கள் தமது சகபாடியாகக் கொண்டிருக்கிறார்கள்;. நாளின் இறுதியில், தமது கர்மயோகத்தையும் சேவையையும் முடித்தவுடன், அவர்கள் ஒரேயொருவரின் அன்பு மடியில் அமிழ்ந்துள்ளார்கள். அவர்களின் நாளாந்த அட்டவணை முழுவதும் ஒரேயொருவருடன் இரவையும் பகலையும் கழிப்பதாகவே உள்ளது. சேவைக்காக அல்லது குடும்பத்திற்காக மற்றவர்களுடன் தொடர்பில் வரும்போதும், பலரைப் பார்க்கும்போதும், அவர்கள் ஒரேயொருவரையே பார்க்கிறார்கள். இதுவே ஒரேயொரு தந்தையின் குடும்பம் ஆகும். ஒரேயொரு தந்தை அவர்களைச் சேவைக்காகக் கருவிகள் ஆக்கியுள்ளார். அவர்கள் இந்த முறையில் மற்றவர்களுடன் தொடர்பிலும் உறவுமுறையிலும் வந்தாலும், பலரில் ஒரேயொருவரையே காண்கிறார்கள். இந்த பிராமண வாழ்க்கையில், கதாநாயக பாகத்தை நடிக்கும் வாழ்க்கையில், திறமைச் சித்தி எய்தும் வாழ்க்கையில், நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்ன? ஒரேயொருவரின் கணக்கு. அவ்வளவே! நீங்கள் ஒரேயொருவரை அறிந்து கொள்ளும்போது, அனைத்தையும் அறிந்து கொள்கிறீர்கள். அப்போது நீங்கள் அனைத்தையும் அடைகின்றீர்கள். ஒரேயொருவரைப் பற்றி எழுதுவதும், ஒரேயொருவரைப் பற்றிப் படிப்பதும், ஒரேயொருவரை நினைவு செய்வதும் அனைத்திலும் இலகுவான ஒன்றாகும்.
பாரதத்தில், ஒரு கூற்று உள்ளது: ‘மூன்றை அல்லது ஐந்தைப் பற்றிப் பேசாதீர்கள். ஒரேயொருவரைப் பற்றிப் பேசுங்கள்’. மூன்றைப் பற்றி அல்லது ஐந்தைப் பற்றிப் பேசுதல் சிரமமானது. ஒரேயொருவரை நினைப்பதும் ஒரேயொருவரை அறிந்து கொள்வதும் மிகவும் இலகுவானது. எனவே, இங்கு நீங்கள் எதைக் கற்றுக் கொண்டீர்கள்? நீங்கள் ஒரேயொருவரின் பாடத்தைக் கற்றுக் கொண்டீர்கள். ஒரேயொருவரில் பலமில்லியன்கள் அடங்கியுள்ளார்கள். இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு இலகுவான ஒரேயொருவரின் பாதையைக் காட்டுகிறார். ஒரேயொருவரின் முக்கியத்துவத்தை அறிந்து, மகான் ஆகுங்கள். விரிவாக்கம் அனைத்தும் ஒரேயொருவரில் அடங்கியுள்ளது. ஞானம் அனைத்தும் இதில் அடங்குகிறது, அல்லவா? இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் இப்போது ஒரேயொருவரை மிக நன்கு அறிவீர்கள், அல்லவா? அச்சா. இன்று, பாபா குழந்தைகளான உங்களுக்கு மரியாதை கொடுப்பதற்கே வந்துள்ளார். உங்களை வரவேற்கும்போது, பாபா உங்களுக்கு ஒரேயொருவரின் கணக்கைப் பற்றிக் கூறினார்.
இன்று, பாப்தாதா உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவே வந்துள்ளார். எவ்வாறாயினும், நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட, நேற்றும் இன்றும் வந்துள்ள குழந்தைகளுக்காக, பாபா சிறிதளவு கூறியுள்ளார். அன்பினால், நீங்கள் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி, இங்கு வருவதற்கு அதிகளவு முயற்சி செய்துள்ளீர்கள் என்பதை பாப்தாதா அறிவார். உங்களுடைய முயற்சிகளால், குழந்தைகளான உங்களுக்குத் தந்தையின் பலமில்லியன் மடங்கு அன்பு கிடைத்துள்ளது. இதனாலேயே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரையும் அன்புடனும் பொன்னான வாசகங்களுடனும் வரவேற்கிறார். அச்சா.
அன்பிலே திளைத்துள்ள எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், இதயத்தின் நண்பர்களாக இருந்து அன்பிலே மூழ்கியிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும், ஒரேயொரு தந்தையின் பாடல்களை எப்போதும் பாடும் குழந்தைகளுக்கும், எப்போதும் அன்பிற்கான பொறுப்பை நிறைவேற்றும் சகபாடிக் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
வெளிநாட்டில் இருந்து வந்துள்ள சகோதர, சகோதரிகளுடன் பாப்தாதாவின் கலந்துரையாடல் - 03-03-84
‘இரட்டை வெளிநாடு’ என்றால் சதா சுய தேசத்தையும் இனிய இல்லத்தையும் அனுபவம் செய்பவர்கள் என்று அர்த்தம். நீங்கள் சதா அந்தத் தேசவாசிகள். இனிய இல்லத்தில் வசிப்பவர்கள். இந்தத் தேசமான வெளிநாட்டிற்கு, சுய இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு வெளிநாட்டு இராச்சியத்திற்கு வந்துள்ளீர்கள். அதாவது, ஆத்ம உணர்வு இராச்சியத்தை, சந்தோஷ இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளீர்கள். அத்துடன் மறைமுகமான முறையில் உங்களின் பாகங்களை நடிப்பதற்கு இயற்கையின் (சடப்பொருளின்) ஆதாரத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் சுய தேசவாசிகள். வெளிநாடுகளில் உங்களின் பாகங்களை நடிக்கிறீர்கள். இது சடப்பொருளிலான ஒரு தேசம். ஆதிதாமம் ஆத்மாக்களின் தாமம் ஆகும். சடப்பொருளும் இப்போது மாயையின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. இது மாயையின் இராச்சியம். இதனாலேயே, இது வெளிநாடு ஆகியுள்ளது. நீங்கள் மாயையை வென்றவர் ஆகியதும், இந்தச் சடப்பொருள் உங்களின் சேவையாளர் ஆகி, உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். நீங்கள் மாயையை வென்றவராகவும் சடப்பொருளை வென்றவராகவும் ஆகும்போது, அது உங்களின் சந்தோஷ இராச்சியமாக, சதோபிரதான் இராச்சியமாக, பொன்னான உலகமாக மாறும். இந்த விழிப்புணர்வு உங்களுக்குள் தெளிவாக உள்ளதா? நீங்கள் உங்களின் ஆடையை ஒரு விநாடியில் மாற்ற வேண்டும். அவ்வளவே. நீங்கள் பழைய ஆடையை மாற்றி, புதிய ஆடையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? உங்களின் ஆடையை மாற்றுவதற்கு, ஒரு தேவதையில் இருந்து தேவராக மாறுவதற்கான நேரமே எடுக்கும். நீங்கள் இதை இனிய வீட்டினூடாகச் (பரந்தாமம்) செய்வீர்கள். எவ்வாறாயினும், இறுதியில், நீங்கள் இப்போது தேவதையில் இருந்து தேவராக மாறப் போகிறீர்கள் என்ற விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். உங்களுக்கு தேவ சரீரம், தேவ வாழ்க்கை, தேவ உலகம், சதோபிரதான் சடப்பொருளுக்கான காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏதாவது இருக்கிறதா? பல தடவைகள் உங்களிடம் இருந்த இராச்சியத்தினதும், நீங்கள் நிரம்பியிருந்த தேவ வாழ்க்கையினதும் சம்ஸ்காரங்கள் வெளிப்படுகின்றனவா? தேவர்கள் ஆகுவதற்கான சம்ஸ்காரங்கள் வெளிப்படும்வரைக்கும், எவ்வாறு பௌதீக ரூபத்தில் சத்தியயுகம் வெளிப்படும்? உங்களின் எண்ணங்கள் வெளிப்படுவதன் மூலம், தேவ உலகம் இந்தப் பூமியில் வெளிப்படுத்தப்படும். இந்த எண்ணங்கள் தானாகவே வெளிவருமா? அல்லது, இன்னமும் அதிகளவு நேரம் இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களின் தேவ சரீரங்கள் தேவாத்மாக்களான உங்களை அழைக்கின்றன. உங்களின் தேவ சரீரங்களை உங்களால் பார்க்க முடிகிறதா? எப்போது நீங்கள் அவற்றை ஏற்றுக் கொள்வீர்கள்? உங்களின் இதயம் பழைய சரீரத்தில் பற்று வைத்திருக்கவில்லை, அல்லவா? நீங்கள் உங்களின் பழைய இறுக்கமான ஆடையை அணிந்திருக்கவில்லை, அல்லவா? நீங்கள் இப்போதும் உங்களின் பழைய சரீரத்தை, உங்களின் பழைய ஆடையை அணிந்திருக்கிறீர்கள். அதை உங்களால் குறிப்பிட்ட வேளையில் ஒரு விநாடியில் துறக்க முடியாதிருக்கிறது. பந்தனத்தில் இருந்து விடுபட்டிருத்தல் என்றால் தளர்வான ஆடையை அணிதல் என்று அர்த்தம். எனவே, இரட்டை வெளிநாட்டவர்கள் எதை விரும்புகிறார்கள்: தளர்வானதா அல்லது இறுக்கமானதா? நீங்கள் இறுக்கமானதை விரும்புவதில்லை, அல்லவா? உங்களுக்கு எந்தவித பந்தனமும் இல்லையல்லவா?
நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்களா? காலத்தை ஒருபுறம் வையுங்கள். காலத்தைப் பார்க்காதீர்கள்: இது இப்போது நிகழ வேண்டும். இது இன்னமும் நிகழ வேண்டியுள்ளது. காலம் அறியும். தந்தையும் அறிவார். சேவை அறியும். தந்தையும் அறிவார். நீங்கள் சுய சேவையை இட்டுத் திருப்தி அடைகிறீர்களா? உலக சேவையை ஒருபுறம் வையுங்கள். உங்களைப் பாருங்கள். உங்களின் சொந்த ஸ்திதியிலும் உங்களின் சொந்த சுதந்திரமான இராச்சியத்திலும் உங்களையிட்டு நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா? உங்களின் சொந்த இராச்சியத்தை உங்களால் நன்கு ஆள முடிகிறதா? உங்களின் பணியாளர்கள் அனைவரும், அமைச்சர்கள் அனைவரும், மூத்த அமைச்சர்களும் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறார்களா? எதிலும் தங்கியிருத்தல் இல்லையல்லவா? உங்களின் சொந்த அமைச்சர்களும் மூத்த அமைச்சர்களும் சிலவேளைகளில் உங்களை ஏமாற்றுகிறார்களா? சிலவேளைகளில், அகத்தே, உங்களின் சொந்தப் பணியாளர்கள் இரகசியமாக மாயையின் சகபாடிகள் ஆகவில்லை, அல்லவா? உங்களின் சொந்த இராச்சியங்களில், அரசர்களான உங்களின் ஆளுகின்ற சக்தியும் கட்டுப்படுத்தும் சக்தியும் மிகச்சரியாகச் செயற்படுகின்றனவா? தூய எண்ணங்களை வரும்படி நீங்கள் கட்டளை இடும்போது, அதற்குப் பதிலாக வீணான எண்ணங்கள் வரவில்லை, அல்லவா? சகிப்புத்தன்மை என்ற நற்குணத்திற்குக் கட்டளை இடும்போது, அதற்குப் பதிலாக குழப்பம் என்ற குறைபாடு வரவில்லை, அல்லவா? ஓ சுய இராச்சிய அதிகாரிகளே, உங்களின் சக்திகள் அனைத்தும், நற்குணங்கள் அனைத்தும் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றனவா? அவை உங்களின் இராச்சியத்தின் சகபாடிகள் ஆகும். எனவே, அவை அனைத்தும் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனவா? அரசர்கள் கட்டளை ஒன்றை இடும்போது, அனைவரும் ஒரு விநாடியில் ‘ஆமாம், எனது பிரபுவே’ (ஜீ ஹஸ_ர்) எனக் கூறி அரசருக்குத் தலைவணங்குவார்கள். எனவே, உங்களிடமும் இத்தகைய கட்டுப்பாட்டு சக்தியும் ஆளுகின்ற சக்தியும் உள்ளதா? இதில் நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்களா? உங்களின் சொந்தப் பலவீனங்களும் உங்களின் சொந்த பந்தனங்களும் உங்களை ஏமாற்றவில்லை, அல்லவா?
இன்று, சுய இராச்சிய அதிகாரிகளான உங்களிடம் சுய இராச்சியத்தின் நலத்தைப் பற்றி பாப்தாதா கேட்கிறார். இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் அரசர்கள், அல்லவா? நீங்கள் பிரஜைகள் இல்லையல்லவா? எதிலாவது தங்கியிருத்தல் என்றால் பிரஜை ஆகுதல் என்று அர்த்தம். சகல உரிமைகளையும் கொண்டிருத்தல் என்றால் அரசராக இருத்தல் என்று அர்த்தம். எனவே, நீங்கள் அனைவரும் யார்? நீங்கள் இராஜயோகிகளா அல்லது பிரஜாயோகிகளா? அரசர்கள் அனைவரினதும் சபை இங்கேயே கூட்டப்படுகிறது, அப்படியல்லவா? சத்தியயுகத்தின் இராஜ சபையில், நீங்கள் அனைத்தையும் மறந்துவிடுவீர்கள். அதே சங்கமயுக ஆத்மாக்கள் என ஒருவரையொருவர் நீங்கள் இனங்காண மாட்டீர்கள். இந்த நேரத்திலேயே நீங்கள் திரிகாலதரிசியாகி, ஒருவரையொருவர் பார்த்து அறிந்து கொள்கிறீர்கள். இப்போது, ஒவ்வொருவரின் இராஜ சபையும், சத்தியயுகத்தினை விட அதி மேன்மையானது. சங்கமயுகத்தில் மட்டுமே இத்தகைய இராஜசபை இருக்கும். எனவே, அனைவரின் இராச்சியத்தின் நிலைமையும் நன்றாக இருக்கிறதல்லவா? அனைத்தும் நன்றாக இருக்கிறது என நீங்கள் உரத்துக் கூறுகின்றீர்கள் இல்லை!
பாப்தாதாவும் இந்த இராஜ சபையை விரும்புகிறார். எவ்வாறாயினும், தினமும் உங்களைச் சோதித்துப் பாருங்கள். தினமும் உங்களின் இராஜ சபையைக் கூட்டுங்கள். உங்களின் பணியாளர்களில் ஒருவரேனும் சிறிதளவு கவனக்குறைவானவர் ஆகினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரை வேலையில் இருந்து நீக்குவீர்களா? நீங்கள் அனைவரும் ஆரம்ப காலத்தின் தெய்வீகச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்கள், அல்லவா? ஒரு சிறு குழந்தை குளப்படி செய்தால், அவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது? அவருக்கு உணவு கொடுக்காமல் விடுதல் அல்லது கயிற்றினால் கட்டி வைத்தல் பொதுவான விடயம். ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னவென்றால், பல மணிநேரங்களுக்கு அவர் தனிமையாக அமர்ந்திருக்க வேண்டும் என்பதே ஆகும். அவன் ஒரு சிறுவன். சிறுவர்களால் எதையும் செய்யாமல் அமர்ந்திருக்க முடியாது. ஆகவே, ஓரிடத்தில் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் அசையாமல் அமர்ந்திருப்பது என்ற தண்டனை பெரியதொரு விடயம்! எனவே, அவர்களுக்கு இத்தகைய இராஜரீகமான தண்டனையே வழங்கப்பட்டது! ஆகவே, இங்கும், உங்களின் பணியாளர்கள் விஷமத்தனம் செய்தால், அவற்றை அகநோக்கு எனும் சூளையில் (பத்தி) அமரச் செய்யுங்கள். நீங்கள் புறநோக்குடையவர் ஆகக்கூடாது. இந்த முறையில் அவற்றுக்குத் தண்டனை கொடுங்கள். ஏதாவது வெளியே வந்தால், அவற்றை மீண்டும் உள்ளே அனுப்புங்கள். குழந்தைகள் இவ்வாறு செய்வார்கள், அல்லவா? நீங்கள் குழந்தைகளை அமரச் செய்தால், அவர்கள் தாம் விரும்பியதையே செய்வார்கள். அதன்பின்னர் நீங்கள் மீண்டும் அவர்களை அமரச் செய்வீர்கள். ஆகவே, இந்த முறையில், நீங்கள் புறநோக்கில் இருந்து அகநோக்குடையவர் ஆகும் பழக்கத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். ‘அமர்ந்திருந்து பாபாவை நினைவு செய்யுங்கள்’ என்ற பழக்கம் சிறு குழந்தைகளிடம் உருவாக்கப்படுகிறது. அந்தக் குழந்தை அமர்ந்திருக்க விரும்பாதிருக்கலாம். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அந்தக் குழந்தையை அமரச் செய்வீர்கள். அந்தக் குழந்தை எவ்வளவிற்குத் தனது கால்களை அசைத்தாலும், ‘இல்லை, இவ்வாறு இரு’ என நீங்கள் கூறுவீர்கள். இந்த முறையில், திடசங்கற்பம் என்ற எண்ணங்களால் அவற்றை நன்றாகக் கட்டி, அகநோக்குப் பயிற்சியெனும் பத்தியில் அமரச் செய்யுங்கள். நீங்கள் வேறு எந்தவொரு கயிற்றாலும் கட்ட வேண்டியதில்லை. ஏனெனில், திடசங்கற்பமான எண்ணமே கயிறு ஆகும். அகநோக்குப் பயிற்சி எனும் பத்தியில் அவற்றை அமரச் செய்யுங்கள். உங்களுக்கே தண்டனை கொடுங்கள். மற்றவர்கள் உங்களுக்குத் தண்டனை வழங்கினால் என்ன நிகழும்? உங்களின் பணியாளர்கள் நன்றாக இல்லை, நீங்கள் அவற்றுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என மற்றவர்கள் உங்களிடம் கூறினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? ‘இவர் எதைப் பற்றிப் பேசுகிறார்?’ என நீங்கள் சிறிதளவு உணர்வீர்கள். எவ்வாறாயினும், நீங்களே உங்களுக்குத் தண்டனை கொடுக்கும்போது, அது எல்லா வேளைக்கும் நிலைத்திருக்கும். மற்றவர்கள் உங்களுக்குக் கூறும்போது, அது எல்லா வேளைக்கும் நிலைத்திருக்காது. மற்றவர்களின் சமிக்ஞைகளை உங்களுக்குரியதாக நீங்கள் ஆக்கும்வரைக்கும், அவை எல்லா வேளைக்கும் நிலைத்திருக்காது. உங்களுக்குப் புரிகிறதா?
அரசர்களான நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் இராஜ சபையை இரசிக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் அனைவரும் மகா மன்னர்கள், அல்லவா? நீங்கள் சிறிய மன்னர்கள் இல்லை. ஆனால் மகா மன்னர்கள். அச்சா. இன்று, இரட்டை வெளிநாட்டவர்களைப் பார்க்கும்போது, குறிப்பாகத் தந்தை பிரம்மா இதயபூர்வமாகக் கலந்துரையாடினார். பாபா அதைப் பற்றி பின்னர் கூறுவார். அச்சா.
சதா மாயையை வென்றவர்களாகவும் சடப்பொருளை வென்றவர்களாகவும் இருப்பதுடன் சுய இராச்சிய உரிமையைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கும், எப்போதும் நற்குணங்களின் பொக்கிஷங்களையும் சகல சக்திகளையும் உரிமையாகப் பயன்படுத்துபவர்களுக்கும், சுய இராச்சியத்துடன், தமது பணியாளர்களை எல்லா வேளையும் தமது அன்பான சகபாடிகள் ஆக்குபவர்களுக்கும், சதா பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பதுடன் என்றும் தயாராக இருப்பவர்களுக்கும், திருப்தியான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா அவுஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ள குழுவைச் சந்திக்கிறார்:
நீங்கள் சதா நினைவிற்கும் சேவைக்கும் இடையே சமநி;லையைப் பேணுவதன் மூலம் பாப்தாதாவிடமிருந்தும் ஆத்மாக்கள் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுபவர்கள், அல்லவா? முயற்சி செய்வதுடன், நீங்கள் எப்போதும் ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தொடர்ந்து முன்னேறுவது பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பு ஆகும். இந்த ஆசீர்வாதங்கள் பிராமண வாழ்க்கையில் ஓர் உயர்த்தியைப் போன்று செயற்படுகின்றன. இவற்றினூடாக நீங்கள் தொடர்ந்து பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள்.
அவுஸ்திரேலியாவாசிகளிடம் ஏன் பாப்தாதா விசேடமான அன்பு வைத்திருக்கிறார்? ஏனெனில், நீங்கள் ஒவ்வொருவரும் எப்போதும் ஏனைய பலரைக் கொண்டுவருவதற்கான தைரியத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கிறீர்கள். தந்தை இந்தச் சிறப்பியல்பை விரும்புகிறார். ஏனெனில், அதிகபட்ச எண்ணிக்கையான ஆத்மாக்கள் தமது ஆஸ்திக்கான உரிமையைப் பெறச் செய்வது தந்தையின் பணி ஆகும். ஆகவே, தந்தையைப் பின்பற்றும் குழந்தைகள் விசேடமாக நேசிக்கப்படுகிறார்கள். நீங்கள் வந்தவுடனேயே, உங்களுக்குள் மகத்தான உற்சாகம் இருந்தது. அவுஸ்திரேலியா தேசம் பெற்றுள்ள ஆசீர்வாதம் இதுவே ஆகும். ஒருவர் பலருக்குக் கருவி ஆகுகிறார். பாப்தாதா தொடர்ந்து ஒவ்வொரு குழந்தையினதும் நற்குணங்களின் மாலையின் மணிகளை உருட்டுகிறார். அவுஸ்திரேலியாவிற்குப் பல சிறப்பியல்புகள் உள்ளன. எவ்வாறாயினும், மாயையும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களை அதிகளவில் விரும்புகிறாள். தந்தையால் நேசிக்கப்படுபவர்கள், மாயையால் நேசிக்கப்படுபவர்களாகவும் ஆகுகிறார்கள். குறுகிய காலத்திற்காயினும் பல நல்லவர்கள் மாயைக்குரியவர்கள் ஆகியுள்ளார்கள், அல்லவா? நீங்கள் எவரும் அவர்களைப் போன்று பலவீனமானவர்கள் இல்லையல்லவா? நீங்கள் எந்தவொரு சுழற்சிக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளப்போவதில்லை, அல்லவா? பாப்தாதா அந்தக் குழந்தைகளை இப்போதும் நினைக்கிறார். சிலதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமையால், அவர்களுக்குள் ‘ஏன்?’ ‘என்ன?’ என்ற கேள்விகள் எழுகின்றன. எனவே, ‘ஏன்?’ அல்லது ‘என்ன?’ என்பவற்றுக்குள் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். அப்போது மாயை உள்ளே வருவதற்கான வாய்ப்பு ஏற்படாது. எப்போதும் இரட்டைப் பூட்டினைப் போட்டுக் கொள்ளுங்கள். நினைவும் சேவையுமே இரட்டைப் பூட்டு ஆகும். சேவை மட்டும் செய்தல் ஒற்றைப் பூட்டே. நினைவு மட்டும் இருந்து சேவை இல்லாவிட்டால், அதுவும் ஒற்றைப் பூட்டே ஆகும். இரண்டுக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும். இதுவே இரட்டைப் பூட்டு ஆகும். உங்களின் புகைப்படங்கள் பாப்தாதாவின் தொலைக்காட்சியில் எடுக்கப்பட்டுள்ளன. பின்னர், பாப்தாதா உங்களுக்குக் காட்டுவார்: பாருங்கள், நீங்கள் இந்தப் புகைப்படத்தில் இருக்கிறீர்கள்! அச்சா. உங்களின் தைரியத்தாலும் நம்பிக்கையாலும் இன்னமும் நல்லதொரு எண்ணிக்கை உள்ளது. நீங்கள் தந்தையால் மிகவும் நேசிக்கப்படுபவர்கள். இதனாலேயே, மாயையிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறையை பாபா உங்களுக்குக் கூறியுள்ளார்.
ஆசீர்வாதம்:
நீங்கள் விஸ்தாரத்தில் இருந்து விடுபடும் சக்தியால் ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி இடும், பற்றை அழித்தவராகவும் நினைவின் சொரூபமாகவும் ஆகுவீர்களாக.
இறுதியில், இறுதிப் பரீட்சைத்தாளில் உள்ள கேள்வியானது: ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி இடுங்கள்! வேறு எதுவும் நினைவு செய்யப்படக்கூடாது. ஆனால், ‘தந்தையும் நானும். மூன்றாவதாக எதுவும் இருக்கக்கூடாது’ என்றே இருக்கவேண்டும். ஒரு விநாடியில், நீங்கள் தந்தைக்குச் சொந்தமாக வேண்டும். ‘எனது பாபா, வேறு எவரும் இல்லை’. அதைச் சிந்திப்பதற்கு நேரம் எடுக்கும். ஆனால் நீங்கள் அந்த ஸ்திதியில் ஸ்திரமாக வேண்டும். ஒருபோதும் தளம்பக்கூடாது. ‘ஏன்?’ அல்லது ‘என்ன?’ என்ற கேள்விகள் இருக்கக்கூடாது. அப்போது மட்டுமே நீங்கள் பற்றை அழித்தவராகவும் நினைவின் சொரூபமாகவும் ஆகுவீர்கள். எனவே, நீங்கள் விரும்பும்போது விரிவாக்கத்திற்குள் வருவதையும், நீங்கள் விரும்பும்போது அனைத்தையும் மூட்டை கட்டுவதையும் பயிற்சி செய்யுங்கள். உங்களின் தடை (பிரேக்) சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும்.
சுலோகம்:
தமது சுய மரியாதையை இட்டு எந்தவித அகங்காரமும் அற்றவர்கள் எப்போதும் பணிவாக இருப்பார்கள்.