30/10/18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞானத்தின் சந்தோஷம் 21 சந்ததிகளுக்குத் தொடர்கிறது. அதுவே சுவர்க்கத்தின் நிலையான சந்தோஷமாகும். பக்தி மார்க்கத்தில், தீவிர பக்தி செய்யும்பொழுது, அவர்கள் கணப்பொழுது சந்தோஷத்தையே பெற்றுக் கொள்கின்றார்கள்.

கேள்வி:
எந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், குழந்தைகளாகிய உங்களால் சற்கதியைப் பெற முடியும்?

பதில்:
தந்தையின் ஸ்ரீமத்: இப்பழைய உலகை மறந்து, என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். இது, உங்களையே அர்ப்பணித்தல் அல்லது மரணித்து வாழ்தல் என்று அறியப்படுகின்றது. இந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் அனைவரிலும் அதிமேன்மையானவர் ஆகுகின்றீர்கள். அப்பொழுது, நீங்கள் சற்கதியைப் பெறுகின்றீர்கள். சரீரதாரிகளாகிய மனிதர்களால், மனிதர்களுக்குச் சற்கதியை அருள முடியாது. தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஆவார்.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள்;. ‘கடவுளே அதிமேலானவர்’ என்று பாடப்படுகின்றது. மனிதர்களுக்குக் கடவுளின் பெயர் என்னவென்பது தெரியாது. கடவுள் வந்து, பக்தர்களுக்குத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கும்வரை, பக்தர்களால் கடவுளை அறிந்து கொள்ள முடியாது. ஞானமும் பக்தியும் உள்ளதென விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியயுகமும், திரேதாயுகமுமே ஞானத்திற்கான வெகுமதியாகும். நீங்கள் இப்பொழுது ஞானக்கடலிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். முயற்சி செய்வதன் மூலம், நீங்கள் நிலையான சந்தோஷம் என்ற உங்கள் வெகுமதியை உருவாக்கிக் கொள்கின்றீர்கள். அதன்பின்னர், துவாபர, கலியுகங்களில் பக்தி நிலவும். ஞானத்தின் வெகுமதி சத்திய, திரேதாயுகங்களினூடாகத் தொடர்கின்றது. ஞானத்தின் சந்தோஷம் 21 சந்ததிகளுக்குத் தொடர்கின்றது. அது சுவர்க்கத்தின் நிலையான சந்தோஷமாகும். நரகத்தில், கணப்பொழுது சந்தோஷமே உள்ளது. ஞான மார்க்கமான சத்தியயுகமும் திரேதாயுகமும் இருந்தபொழுது, புதிய பாரதமான புதிய உலகம் இருந்தது எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. பாரதம் இப்பொழுது தமோபிரதான் நரகமாக ஆகிவிட்டது. இங்கே பல வகையான துன்பங்கள் உள்ளன. சுவர்க்கத்தில், துன்பத்தின் பெயரோ, சுவடோ இருக்க மாட்டாது. ஒரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. கடவுள் மாத்திரமே பக்தர்களை ஈடேற்ற வேண்டும். இப்பொழுது இது கலியுக இறுதியாகும், விநாசம் உங்கள் முன்னிலையில் உள்ளது. தந்தை வந்து, பிரம்மாவின் மூலம் உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் சங்கரரின் மூலம் விநாசத்தையும், விஷ்ணுவின் மூலம் பராமரித்தலையும் தூண்டுகின்றார். கடவுளின் செயற்பாடுகளை எவருமே புரிந்துகொள்வதில்லை. மனிதர்கள் பாவாத்மாக்கள் என்றோ அல்லது புண்ணியாத்மாக்கள் என்றோ கூறப்படுகின்றார்கள். ‘பாவ பரமாத்மா என்றோ, புண்ணிய பரமாத்மா’ என்றோ கூறப்படுவதில்லை. மகாத்மா ஒருவர், மகாத்மா என்றே அழைக்கப்படுவார்; அவர் மகா பரமாத்மா என்று அழைக்கப்படுவதில்லை. ஆத்மாக்கள் தூய்மையாகுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: எல்லாவற்றிற்கும் முதலில், தேவ தர்மமே பிரதானமானது. அந்நேரத்தில், சூரிய வம்சத்தினரே இராச்சியத்தை ஆட்சிசெய்தனர்: அப்பொழுது சந்திர வம்சத்தினர் இருக்கவில்லை. ஒரேயொரு தர்மமே இருந்தது. பாரதத்தில் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் ஆன மாளிகைகள் இருந்தன. கூரைகள், சுவர்கள் அனைத்தும் வைரங்களினாலும் இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பாரதம் வைரம் போன்றிருந்தது. அதே பாரதம் இப்பொழுது சிப்பியைப் போன்றுள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் சக்கரத்தின் இறுதியில் வருகி;றேன். நான் கலியுகத்தின் இறுதியும் சத்தியயுகத்;தின் ஆரம்பமுமான சங்கமத்தில் வருகின்றேன். தாய்மார்களாகிய உங்கள் மூலம் நான் மீண்டும் ஒருமுறை பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றேன். நீங்களே பாண்டவ சேனையான, சிவசக்திகள். பாண்டவர்களுக்கு ஒரேயொரு தந்தையின் மீது அன்பு உள்ளது. தந்தை அவர்களுக்குக் கற்பிக்கின்றார். சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அது பக்தியின் பிரிவாகும். தந்தை இப்பொழுது வந்து, அனைவருக்கும் பக்தியின் பலனான ஞானத்தைக் கொடுக்கின்றார். அதனூடாகவே நீங்கள் சற்கதியைப் பெறுகின்றீர்கள். அனைவரது தந்தையும் சற்கதியைப் அருள்பவரும் ஒரேயொருவரே. தந்தை மாத்திரமே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். மனிதர்களால் மனிதர்களுக்கு முக்தியையோ ஜீவன்முக்தியையோ அருள முடியாது. இந்த ஞானம் எச் சமயநூல்களிலும் இல்லை. தந்தை மாத்திரமே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் அவரிடமிருந்தே உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அதன்பின்னர் நீங்கள் சகல தெய்வீகக் குணங்கள் நிறைந்தவராகவும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவராகவும் ஆகுவீர்கள். இதுவே தேவர்களுக்கான புகழாகும். இலக்ஷ்மியும் நாராயணனும் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள். இராமரும் சீதையும் 14 சுவர்க்கக் கலைகளே நிறைந்தவர்கள். இது ஒரு கல்வியாகும். இது பொதுவானதோர் ஆன்மீக ஒன்றுகூடல் அல்ல. ஒரேயொருவர் மாத்திரமே சத்தியமாவார். அவர் மாத்திரமே வந்து, உண்மையை விளங்கப்படுத்துகின்றார். இது தூய்மையற்ற உலகமாகும். தூய உலகில் தூய்மையற்றவர்கள் எவரும் இருப்பதில்லை. தூய மனிதர்கள் தூய்மையற்ற உலகில் இருப்பதில்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களைத் தூய்மையாக்குகின்றார். ‘ஓம் நமசிவாய’ என்று ஆத்மா கூறுகின்றார். ஆத்மா தனது தந்தைக்கு வந்தனம் கூறினார். சிவன் தனக்குள் உள்ளார் என்று எவராவது கூறினால், அவ்வாறாயின் அவர் யாருக்குத் தலை வணங்குகின்றார்? இந்த அறியாமை பரவியுள்ளது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களைத் திரிகாலதரிசிகளாக ஆக்குகின்றார். உங்கள் இனிய வீடான, நிர்வாணா உலகமே ஆத்மாக்கள் அனைவரதும் வசிப்பிடம் என்பது உங்களுக்குத் தெரியும். அனைவரும் முக்தியை நினைவுசெய்து கொண்டிருக்கும்பொழுது, ஆத்மாக்களாகிய நாங்களோ தந்தையோடு வாழ்கின்றோம். நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்கின்றீர்கள். நீங்கள் சந்தோஷ உலகிற்குச் செல்லும்பொழுது, தந்தையை நினைவுசெய்ய மாட்டீர்கள். இது துன்ப உலகம்; அனைவருமே சீரழிவில் உள்ளனர். புதிய உலகில் புதிய பாரதம் இருந்தது. அது சந்தோஷ பூமியாக இருந்தது. அங்கு சூரிய வம்ச, சந்திர வம்ச இராச்சியங்கள் இருந்தன. இலக்ஷ்மி நாராயணனுக்கும், இராதை கிருஷ்ணருக்கும் இடையேயுள்ள தொடர்பு மக்களுக்குத் தெரியாது. அந்த இளவரசரும் இளவரசியும் வௌ;வேறு இராச்சியங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சகோதரரும் சகோதரியும் அல்ல. இராதை தனது இன்னோர் இராச்சியத்திலும், கிருஷ்ணர் தனது சொந்த இராச்சியத்தின் இளவரசராகவும் இருந்தார். அவர்கள் திருமணம் செய்தபொழுது இலக்ஷ்மி நாராயணன் ஆகினார்கள். சத்தியயுகத்தில் அனைத்துமே சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. ஆனால் கலியுகத்திலோ அனைத்துமே துன்பத்தை விளைவிக்கின்றன. சத்தியயுகத்தில், எவருமே அகால மரணம் அடைவதில்லை. நீங்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணனாகவும், சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் ஆகுவதற்கு, பரமாத்மாவான பரமதந்தையுடன் இலகு இராஜயோகத்தைக் கற்கின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இது ஒரு பாடசாலையாகும். அந்த ஆன்மீக ஒன்றுகூடல்கள் எந்த இலக்கையோ, இலட்சியத்தையோ கொண்டிருப்பதில்லை. அவர்கள் வேதங்கள், சமயநூல்கள் போன்றவற்றைத் தொடர்ந்தும் உபதேசிக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து மனித உலகச் சக்கரத்தை அறிந்துள்ளீர்கள். தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவரும்;, பேரானந்தம் நிறைந்தவரும், கருணை நிறைந்தவரும் என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் பாடுகின்றீர்கள்: ஓ பாபா, வந்து, கருணை காட்டுங்கள்! தந்தையான சுவர்க்கக் கடவுள் மாத்திரமே வந்து, சங்கமயுகத்தில் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். சுவர்க்கத்தில் மிகச்சொற்ப மனிதர்களே உள்ளனர். ஏனைய மக்கள் அனைவரும் எங்கே செல்வார்கள்? தந்தை அனைவரையும் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். சுவர்க்கத்தில் பாரதம் மாத்திரமே இருந்தது. அதன்பின்னரும் பாரதம் மாத்திரமே இருக்கும். சத்தியபூமியான பாரதம் இங்கே நினைவுகூரப்படுகிறது. தற்பொழுது பாரதம் ஏழையாகி விட்டது. அது தொடர்ந்தும் ஒவ்வொரு சதத்திற்கும் கையேந்துகின்றது. பாரதம் ஒரு வைரத்தைப் போன்றிருந்தது. அது இப்பொழுது சிப்பியின் பெறுமதி உடையதாகி விட்டது. நாடகத்தின் இந்த இரகசியம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். படைப்பவரான தந்தையையும், அவரின் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் நீங்கள் அறிவீர்கள். காங்கிரஸ்காரர்கள் பாடுகிறார்கள்: வந்தே மாதரம் (தாய்மார்களுக்கு வந்தனங்கள்). எவ்வாறாயினும், தூய்மையானவர்கள் மாத்திரமே புகழப்படுகின்றார்கள். கடவுளே வந்து கூற ஆரம்பிக்கின்றார்: வந்தே மாதரம். சிவபாபாவே வந்து கூறினார்: பெண்களே சுவர்க்கத்தின் வாயில்கள். சக்திசேனையும் உள்ளது. அவர்களே சுவர்க்க இராச்சியத்தை உருவாக்குவார்;கள். அது உலக சர்வசக்திவானின் இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. சக்திகளாகிய நீங்கள் சுய இராச்சியத்தை ஸ்தாபித்தீர்கள். அது இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. சத்தியயுகம், இராம இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுதும், அவர்கள் கூறுகின்றார்கள்: இராம இராச்சியம் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் எந்த மனிதராலும் இதனைச் செய்ய முடியாது. அசரிரீயான தந்தையான கடவுளே வந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவருக்கும் நிச்சயமாக ஒரு சரீரம் தேவை. அவர் நிச்சயமாக பிரம்மாவின் சரீரத்தினுள் பிரவேசிக்க வேண்டும். சிவபாபாவே ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் தந்தை. பிரஜாபிதாவும் நினைவுகூரப்பட்டுள்ளார். பிதா என்றால் தந்தையாவார். பிரம்மா கொள்ளுப்பாட்டனார் என அழைக்கப்படுகின்றார். ஆதிதேவன், ஆதிதேவி ஆகிய இருவரும் இங்கே அமர்ந்திருந்து தபஸ்யா செய்கின்றார்கள். நீங்களும் தபஸ்யா செய்கின்றீர்கள். இது இராஜயோகம். சந்நியாசிகள் ஹத்தயோகம் செய்கின்றார்கள்; அவர்களால் என்றுமே இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. சமயநூல்கள், கீதை போன்றவை பக்தி மார்க்கத்திற்கு உரியவை. அவர்கள் அவற்றைக் கற்று வந்தபொழுதிலும் அவர்கள் தொடர்ந்தும் தூய்மையற்றவர்களாகவே ஆகினார்கள். இது விநாசத்தை ஏற்படுத்துகின்ற அதே மகாபாரத யுத்தமாகும். வேதங்களில் விஞ்ஞானம் இருப்பதில்லை. அதில் ஞானத்தின் விடயங்களே உள்ளன. கண்டுபிடிப்புக்களைச் செய்வது விஞ்ஞான அறிவுடைய புத்தியின் அற்புதமாகும். அவர்கள் விமானங்கள் போன்றவற்றைச் சந்தோஷத்திற்காகக் கண்டுபிடிக்கின்றார்கள். பின்னர், அவற்றினூடாக விநாசம் இடம்பெறுகின்றது. பாரதத்தில் சந்தோஷத்தின் திறன்கள் எஞ்சியிருக்கும். துன்பத்தின் திறன்களும், ஒருவரையொருவர் கொல்வதற்கான திறன்களும் முடிவடைந்திருக்கும். விஞ்ஞானத்தின் விவேகம் தொடரும். இந்தக் குண்டுகள் போன்றன முன்னைய கல்பத்திலும் தயாரிக்கப்பட்டன. புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும், பின்னர் தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் 84 பிறவிகளை நிறைவு செய்துள்ளீர்கள். இப்பொழுது அச் சரீரங்களின் அகங்காரத்தை துறந்து, உங்கள் தந்தையான என்னை நினைவுசெய்வீர்களாயின், நினைவு என்ற யோக அக்கினியில் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இராவணன் உங்களைப் பல பாவச் செயல்களைச் செய்ய வைத்துள்ளான். தூய்மையாகுவதற்கு ஒரேயொரு வழியே உள்ளது. எவ்வாறாயினும் நீங்கள் ஆத்மாக்களே. நீங்கள் கூறுகின்றீர்கள்: நான் ஓர் ஆத்மா. ‘நான் பரமாத்மா’ என்று நீங்கள் கூறுவதில்லை. நீங்கள் கூறுகின்றீர்கள்: எனது ஆத்மாவைக் குழப்படையச் செய்யாதீர்கள்! ஆத்மாவைப் பரமாத்மா என்று கூறுவது மிகப்பெரிய தவறாகும். பக்தி இப்பொழுது தமோபிரதானாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் உள்ளது. அவர்கள் அமர்ந்திருந்து தங்கள் முன்னால் தோன்றுபவரை வழிபடுகிறார்கள். ஒரேயொருவரை நினைவுசெய்வதே கலப்படமற்றது எனப்படுகிறது. கலப்படம் நிறைந்த பக்தி இப்பொழுது முடிவடைய உள்ளது. தந்தை வந்து, உங்களுக்கு உங்களது எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பவர் வேறு எவரும் அன்றித் தந்தை மாத்திரமே ஆவார். தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் மாத்திரம் இணைத்துக் கொள்வதனால், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். நானே சுவர்க்கத்தைப் படைப்பவர். இது முட்களின் உலகமாகும். அவர்கள் தமக்குள் தொடர்ந்தும் சண்டை சச்சரவு செய்கின்றார்கள். இந்தப் பழைய உலகம் இப்பொழுது மாறுகின்றது. ஞான அமிர்தக் கலசம் தாய்மாரின் தலை மீது வைக்கப்பட்டுள்ளது. இது ஞானமாகும். ஆனால், நஞ்சுடன் ஒப்பிடும்பொழுது, இது அமிர்தம் என்று அழைக்கப்படுகின்றது. ‘நான் ஏன் அமிர்தத்தைத் துறந்து, நஞ்சை அருந்த வேண்டும்?’ என்று கூறப்படுகிறது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். பரமாத்மாவான பரமதந்தை வந்து, ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். ஸ்ரீமத்தைப் பின்பற்றியே கிருஷ்ணரும் அவ்வாறாகினார். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நீங்கள் பழைய உலகம் முழுவதையும் மறந்து, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இப்பொழுதே நீங்கள் உங்களை அர்ப்பணிக்க வேண்டும். இதுவே மரணித்து வாழ்தல் என்று அழைக்கப்படுகின்றது. பக்தி மார்க்கத்தின் விடயங்கள் வேறானவை. அது பக்தியின் பிரிவாகும். பக்திக்கான குருமார்கள் பலர் உள்ளனர். எவ்வாறாயினும் அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே சற்கதியை அருள்பவர். சரீரதாரிகளினால் மனிதர்களுக்குச் சற்கதியை அருள முடியாது. அவர்களால் எக்காலத்திற்கும் சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. தந்தையே எக்காலத்திற்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். இது ஒரு பாடசாலை. தந்தை உங்களுக்கு இலக்கையும், இலட்சியத்தையும் கூறுகின்றார். அவர் கூறுகின்றார்: சுவர்க்க சந்தோஷம் என்ற உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெறவுள்ளீர்கள். ஏனைய அனைவரும் முக்தி தாமத்திற்குச் செல்வார்கள். அமைதி தாமம், சந்தோஷ தாமம் என்பன உள்ளன. இது துன்ப பூமியாகும். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. இது சுயதரிசனச் சக்கரம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த நாடகச் சக்கரத்திலிருந்து எவராலும் விடுதலையடைய முடியாது. ஒவ்வொருவரும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ள, அழிவற்ற பாகத்தைக் கொண்டிருக்கின்றார்கள். தந்தை உங்களுக்குக் கற்பித்து, உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகின்றார். பின்னர் அது, நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவு கற்கின்றீர்கள் என்பதில் தங்கியுள்ளது. சிலர் அரசர்களாகவும் சிலர் பிரஜைகளாகவும் ஆகுவார்கள். சூரிய வம்சம் உள்ளது. சத்தியயுகத்தில் சூரிய வம்சம் இருந்தபொழுது, வேறு எவரும் இருக்கவில்லை. பாரத பூமியே அதிமேலான சத்திய பூமியாக இருந்தது. அது இப்பொழுது பொய்யான பூமியாகியுள்ளது. இதுவே ஆழ்நரகம் என்று அழைக்கப்படுகின்றது. பணத்திற்காக அதிகளவு வன்முறை இடம்பெறுகின்றது. அங்கே, அவர்கள் பாவம் செய்து பெற வேண்டியளவிற்கு, எதுவுமே குறைவாக இருக்காது. தந்தையே இச் சீரழிந்த உலகத்தைத் தாய்மார்களாகிய உங்கள் மூலம் மேன்மையடையச் செய்கின்றார். தந்தை அவர்களிடம் கூறுகின்றார்: தாய்மார்களுக்கு வந்தனங்கள். சந்தியாசிகள் ‘தாய்மார்களுக்கு வந்தனங்கள்’ என்று கூறுவதில்லை. அவர்களது எல்லைக்குட்பட்ட துறவறம். இது எல்லையற்ற துறவறமாகும். முழு உலகமும் புத்தியினால் துறக்கப்பட வேண்டும். நீங்கள் மௌன தாமத்தையும், சந்தோஷ தாமத்;தையும் நினைவுசெய்ய வேண்டும். துன்ப பூமியை மறந்துவிடுங்கள். இது தந்தையின் கட்டளை. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், நீங்கள் உங்களுடைய செவிகளினூடாகச் செவிமடுக்கின்றீர்கள். சிவபாபா இப் புலன்களினூடாக விளங்கப்படுத்துகின்றார். அவர் ஞானக்கடல். அவர் ஒரு சாதுவோ, சந்நியாசியோ அல்லது மகாத்மாவோ அல்ல. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. உங்களைத் தந்தையிடம் முற்றுமுழுதாக அர்ப்பணியுங்கள். சரீர அகங்காரத்தைத் துறந்து, யோக அக்கினியில் உங்கள் பாவங்களை அழித்து விடுங்கள்.

2. உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும் உங்கள் புத்தியில் வைத்து, கற்றிடுங்கள். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகத்தை உங்கள் புத்தியில் வைத்து, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் திருப்தி எனும் நற்சான்றிதழின் மூலம் எதிர்கால இராச்சியத்தின் சிம்மாசனத்தை அடைகின்ற, திருப்தியடைந்த விக்கிரகங்கள் ஆகுவீர்களாக.

“நானும் திருப்தியாக இருந்து, அனைவரையும் திருப்தியாக்க வேண்டும்”. இச்சுலோகமானது உங்கள் நெற்றி எனும் பலகையில் எழுதப்பட்டிருக்கட்டும், ஏனெனில் இந்த நற்சான்றிதழைக் கோருபவர்களே எதிர்கால இராச்சிய பாக்கியம் எனும் நற்சான்றிதழைக் கோருவார்கள். எனவே தினமும் அதிகாலையில் அமிர்தவேளையில், உங்கள் விழிப்புணர்வில் இந்தச் சுலோகத்தைக் கொண்டு வாருங்கள். நீங்கள் பலகைகளில் சுலோகங்களை எழுதுவதைப் போன்று, இந்தச் சுலோகமும் உங்கள் நெற்றி எனும் பலகையில் எப்பொழுதும் எழுதப்பபட்டிருக்கட்டும். நீங்கள் அனைவரும் திருப்தியடைந்த விக்கிரகங்கள் ஆகுவீர்கள். திருப்தியாக இருப்பவர்களே எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

சுலோகம்:
அனைவருடனும் அன்பான, திருப்தியான தொடர்புகளைக் கொண்டிருப்பவர்களே வெற்றி சொரூபங்கள் ஆகுகின்றார்கள்.