29/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, கீழ்ப்படிவானவர்கள் ஆகுங்கள். தந்தையின் முதலாவது கட்டளை: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள்.
கேள்வி:
ஆத்மாக்களின் பாத்திரம் ஏன் அசுத்தமாகிவிட்டது? அதனைச் சுத்தப்படுத்துவதற்கான வழிமுறை என்ன?
பதில்:
வீணான விடயங்களைச் செவிமடுப்பதாலும், பேசுவதாலும் ஆத்மாக்களின் பாத்திரம் அசுத்தமாகிவிட்டது. அதனைச் சுத்தப்படுத்துவதற்கு, தந்தையின் கட்டளைகள்: தீயதைக் கேட்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! ஒரேயொரு தந்தையை மாத்திரம் செவிமடுங்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், அப்பொழுது ஆத்மாக்களின் பாத்திரம் சுத்தமாகிவிடும். ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மையாகும்.
பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீதே மழை பொழிகின்றது…..
ஓம் சாந்தி:
குழந்தைகளாகிய நீங்கள் “ஓம் சாந்தி” என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யுமாறு உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறப்படுவதைப் போன்றே, ஞானக் கருத்துக்கள் குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகின்றன. இங்கே, நீங்கள் மனிதர்களை நினைவு செய்வதில்லை. மனிதர்கள் உங்களுக்கு மனிதர்களை அல்லது தேவர்களை மாத்திரமே நினைவூட்டுகின்றார்கள். ஏனெனில், எம் மனிதருமே பரலோகத் தந்தையை அறியார், அவர்களில் எவராலுமே அவரை நினைவு செய்யுமாறு உங்களைத் தூண்ட முடியாது. இங்கே உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றது: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். ஒரு தந்தைக்கு ஒரு புத்திரன் பிறக்கும்போது, அப்புத்திரன் தனது தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்காக வந்துள்ளார் என்பதை அனைவரும் புரிந்து கொள்கிறார்கள். குழந்தை தனது தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்வார். இங்கும் அவ்வாறேயாகும். நிச்சயமாகக் குழந்தைகள் தந்தையை அறியார்கள். அதனாலேயே அவர் வர வேண்டும். தந்தையுடன் இருக்கின்ற குழந்தைகள் மீதே இந்த ஞானம் பொழியப்படுகின்றது. வேதங்களிலும், சமயநூல்களிலும் இருக்கின்ற ஞானம் பக்தி மார்க்கத்திற்;குரியவையாகும். உச்சாடனம் செய்தல், தானம் கொடுத்தல், புண்ணியம் செய்தல், மாலைநேரப் பிரார்த்தனைகள், மந்திரங்கள் போன்று மக்கள் செய்வன அனைத்தும் பக்தி மார்க்கத்துக்குரியவை ஆகும். சந்நியாசிகளும் பக்தர்களே ஆவர். தூய்மையில்லாது எவராலும் அமைதிதாமத்திற்குச் செல்ல முடியாது. இதனாலேயே அவர்கள் வீட்டை விட்டு நீங்கி, வேறு எங்காவது செல்கின்றார்கள். எவ்வாறாயினும், முழு உலகிலும் உள்ள அனைவரும் அதனைச் செய்ய மாட்டார்கள். நாடகத்தில் அவர்களுடைய ஹத்தயோகமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு, ஒவ்வொரு கல்பத்திலும் ஒருமுறை மாத்திரமே வருகின்றேன். நான் வேறு எந்த வழியிலும் அவதாரம் செய்வதில்லை. “கடவுளின் மறு அவதாரம்” எனக் கூறப்படுகின்றது. அவரே அதிமேலானவர். பின்னர் உலகத் தாயினதும், உலகத் தந்தையினதும் மறு அவதாரமும் இருக்கவேண்டும். ‘மறு அவதாரம்’ என்ற வார்த்தை தந்தைக்கு மாத்திரமே பொருந்தும். ஒரேயொரு தந்தை மாத்திரமே சற்கதியை அருள்பவர். ஆனால், உண்மையில், அனைத்துமே மீண்டும் அவதரிக்கின்றது. இப்பொழுது சீரழிவே உள்ளதால் ‘சீரழிவு மறு அவதாரம் செய்துள்ளது’ எனக் கூறப்படும்; அவர்கள் மீண்டும் ஒருமுறை சீரழிந்தவர்கள் ஆகிவிட்டனர். பின்னர், நீதி நிலவும். அனைத்தும் மறுஅவதாரம் செய்கின்றது. இப்பொழுது இது பழைய உலகமாகும். பின்னர் புதிய உலகம் மீண்டும் வரும். புதிய உலகின் பின்னர் மீண்டும் பழைய உலகம் வரும் எனக் கூறப்படும். தந்தை இங்கமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் நினைவில் இருக்கும்பொழுது, எப்பொழுதும் சிந்தியுங்கள்: நான் ஓர் ஆத்மா, நான் தந்தையிடமிருந்து, அவரை நினைவு செய்யுமாறு கட்டளையைப் பெற்றுள்ளேன். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலுமே தந்தையிடமிருந்து கட்டளைகளைப் பெற முடியாது. குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலும், சிலர் கீழ்ப்படிவானவர்களாகவும், ஏனையவர்கள் கீழ்ப்படிவற்றவர்களாகவும் இருக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் இணையுங்கள்! தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகின்றார். தாங்கள் ஆத்மாக்களுடனேயே பேசுவதாக எந்தவொரு கல்விமானோ, பண்டிதரோ கூறமாட்டார். அவர்கள் ஆத்மாவைப் பரமாத்மாவாகக் கருதுகின்றார்கள். அது தவறானதாகும். சிவபாபா இச்சரீரத்தினூடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒரு சரீரமின்றி, ஒருவரால் செயற்பட முடியாது. எல்லாவற்றுக்கும் முதலில் உங்களுக்கு நம்பிக்கை தேவை. உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும்வரை, எதுவுமே உங்கள் புத்தியில் இருக்கமாட்டாது. எல்லாவற்றுக்கும் முதலில், அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையே ஆத்மாக்களின் தந்தை என்பதிலும், சரீர ரூபத்தில் மக்களின் தந்தையான பிரஜாபிதா பிரம்மாவே தந்தையாவார் என்பதிலும் நம்பிக்கை இருக்கவேண்டும். நீங்கள் பிரம்ம குமார்களும், குமாரிகளுமாவீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் சிவனின் புத்திரர்கள் ஆதலால், அவர்கள் சிவகுமாரர்கள் என்றே அழைக்கப்படுகின்றார்களே அன்றி, சிவகுமாரிகள் என அழைக்கப்படுவதில்லை. நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் நிலையான நினைவில் நிலைத்திருக்கும் பொழுது மாத்;திரமே உங்களால் அவற்றைக் கிரகிக்க முடியும். நினைவில் நிலைத்திருக்கும் பொழுதே உங்கள் புத்தி என்னும் பாத்திரத்தைச் சுத்தப்படுத்த முடியும். ஏனெனில் நீங்கள் வீணான விடயங்களைச் செவிமடுத்து வந்ததால், உங்கள் பாத்திரம் அசுத்தமாகிவிட்டது. நீங்கள் அதனைச் சுத்தமாக்க வேண்டும். தந்தையின் கட்டளைகள்: என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தி தூய்மையாக்கப்படும். ஆத்மாவில் கலப்படம் கலக்கப்பட்டுவிட்டது. ஆகவே. நீங்கள் இப்பொழுது தூய்மையாக வேண்டும். ஆத்மா செயலின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவரெனச் சந்நியாசிகள் கூறுகின்றனர். ஆனால் தந்தையோ ஆத்மாவில் கலப்படம் கலக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார். ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மையானவை, ஆனால், சத்தியயுகத்தில் மாத்திரமே இரண்டும் தூய்மையாக இருக்கின்றன் இங்கே அவை தூய்மையாக இருக்கமுடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் வரிசைக்கிரமமாகவே தூய்மையாகுகின்றீர்கள். நீங்கள் இன்னமும் தூய்மையாகவில்லை. எவருமே இன்னமும் தூய்மையாகவில்லை. நீங்கள் அனைவரும் இதற்காக முயற்சி செய்கின்றீர்கள். அனைவரது பெறுபேறும் இறுதியில் வரிசைக்கிரமமாகக் கொடுக்கப்படும். தந்தை வந்து, ஆத்மாக்கள் அனைவருக்கும் இக்கட்டளையைப் பிறப்பிக்கின்றார்: உங்களைச் சரீரமற்றவராகக் கருதி, என்னை நினைவு செய்யுங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். தந்தையைத் தவிர வேறு எவராலுமே இப்பிரதான விடயத்தை விளங்கப்படுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் முதலில் உங்களுக்கு இதில் முழுமையான நம்பிக்கை இருந்தாலே, உங்களால் வெற்றியடைய முடியும். உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், உங்களால் வெற்றியடைய முடியாது. “நம்பிக்கையுடைய புத்தி வெற்றியடையும், ஆனால் ஒரு சந்தேகப் புத்தியோ அழிவிற்கு இட்டுச் செல்லப்படுகிறது.” கீதையிலுள்ள சில வார்த்தைகள் மிகவும் சிறந்தவை. அவை ஒரு மூடை மாவில் உள்ள ஒரு துளி உப்பு என அழைக்கப்படுகின்றன. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகின்றேன். அவ்விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கமாகும். அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. பக்தி மார்க்கம் ஏன் உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழுவதில்லை. இந்நாடகம் அநாதியாக முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. நாடகத்தில், நீங்கள் சுவர்க்க அதிபதிகளாகுகின்ற ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பல தடவைகள் பெற்றுள்ளீர்கள், நீங்கள் தொடர்ந்தும் அதனைப் பெறுவீர்கள். அது ஒருபொழுதுமே முடிவடையாது. இச்சக்கரம் அநாதியாச் சுழல்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது துன்ப பூமியில் இருக்கின்றீர்கள். நீங்கள் விரைவில் அமைதிதாமத்திற்குச் செல்லவுள்ளீர்கள், அங்கிருந்து சந்தோஷதாமத்திற்குச் செல்வீர்கள். பின்னர் நீங்கள் துன்ப பூமிக்குச் செல்வீர்கள். இச்சக்கரம் தொடர்ந்தும் அநாதியாகச் சுழல்கின்றது. குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷ பூமியிலிருந்து துன்ப பூமிக்குச் செல்வதற்கு 5000 வருடங்கள் எடுக்கின்றன, அக்காலத்திற்குள் நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே 84 பிறவிகளைப் பெறுகின்றீர்கள். அனைவருமே 84 பிறவிகளைப் பெற முடியாது. எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இதனை நேரடியாக விளங்கப்படுத்துகின்றார். ஏனைய குழந்தைகள் வாசிக்கப்படுகின்ற முரளியைச் செவிமடுப்பார்கள் அல்லது தாங்களாகவே முரளியை வாசிப்பார்கள் அல்லது ஒலிப்பதிவு நாடாவைச் செவிமடுப்பார்கள். அனைவராலும் ஒலிப்பதிவு நாடாவைச் செவிமடுக்க முடியாது. ஆகவே, எல்லாவற்றுக்கும் முதலில், குழந்தைகளாகிய நீங்கள் அமர்ந்திருக்கும்பொழுதும், நடந்து திரியும்பொழுதும் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். மக்கள் மாலையின் மணிகளை உருட்டி, இராமரின் பெயரை உச்சரிக்கின்றார்கள். அவர்கள் உருத்திர மாலையைப் பற்றிப் பேசுகின்றார்கள். உருத்திரர் கடவுளாவார். பின்னர் விஷ்ணுவின் இரட்டை ரூபத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற, இணைந்த மணிகள் இருக்கின்றன. அது யார்? அவர்கள் இலக்ஷ்மியும் நாராயணனுமாகிய, விஷ்ணுவின் இரட்டை ரூபம் ஆகுகின்ற, தாயும், தந்தையும்; ஆவர். இதனாலேயே அவர்கள் இரட்டை மணிகள் என அழைக்கப்படுகின்றார்கள். சிவபாபாவே குஞ்சம் ஆவார். தாயும், தந்தையும் என அழைக்கப்படுகின்ற மம்மாவும், பாபாவுமே இரட்டை மணிகள்;. விஷ்ணுவைத் தாயும், தந்தையும் என அழைக்க முடியாது. இலக்ஷ்மி, நாராயணனின் குழந்தைகள் மாத்திரமே அவர்களைத் தாய், தந்தை என அழைப்பார்கள். இந்நாட்களில் மக்கள் எவர் முன்னிலையிலும் சென்று, “நீங்களே தாயும், நீங்களே தந்தையும்” என்று கூறுகின்றார்கள்: ஒருவர் ஒருமுறை இப்புகழைக் கூறியதும், ஏனைய அனைவரும் அதனைப் பின்பற்ற ஆரம்பித்தனர். இது அதர்மம் நிறைந்த உலகமாகும். கலியுகம் அதர்ம உலகம் என அழைக்கப்படுகின்றது, ஆனால் சத்தியயுகமோ தர்;ம உலகம் என அழைக்கப்படுகின்றது. அங்கே ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மையாக இருக்கின்றன. சத்தியயுகத்தில் கிருஷ்ணர் அழகானவராக இருக்கிறார், பின்னர், அவரது இறுதிப் பிறவியில் அந்த ஆத்மா அவலட்சணமானவர் ஆகியுள்ளார். இந்நேரத்தில் பிரம்மாவும், சரஸ்வதியும் தூய்மையற்றவர்களாக உள்ளார்கள். ஆத்மா தூய்மையற்றவராக இருப்பதால், ஆபரணமும் (சரீரம்) தூய்மையற்றதாகிவிட்டது (கலப்படம்). தங்கத்தில் கலப்படம் கலக்கப்படும் பொழுது, அதிலிருந்து செய்யப்படுகின்ற ஆபரணமும் கலப்படம் கலக்கப்பட்டதாகவே ஆகிவிடுகின்றது. சத்தியயுகம் தேவர்களால் ஆட்சி செய்யப்பட்டபொழுது, அங்கே போலியோ, கலப்படமோ எதுவுமே இருக்கவில்லை. அங்கே, உண்மையான தங்கத்தாலான மாளிகைகள் இருக்கும். பாரதம் முன்னர் “தங்கச் சிட்டுக்குருவியாக” இருந்தது. ஆனால், அது இப்பொழுது தங்கமுலாம் பூசப்பட்டதாகிவிட்டது. தந்தையால் மாத்திரமே இப் பாரதத்தை மீண்டும் ஒருமுறை அத்தகைய சுவர்க்கமாக ஆக்க முடியும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஸ்ரீமத் என்றால் கடவுளின் வாசகங்களாகும். கிருஷ்ணர் தெய்வீகக் குணங்களை உடைய ஒரு மனிதராவார்; அவருக்கு இரு கரங்களும், இரு கால்களுமே உள்ளன. அந்த விக்கிரகங்களில் இலக்ஷ்மி நான்கு கரங்களுடன் காட்டப்படுகிறார், நாராயணனும் நான்கு கரங்களுடன் காட்டப்படுகிறார். மக்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் “ஓம்” என்ற வார்த்தையைக் கூறும்பொழுது, “நானே கடவுள். நான் எங்கே பார்த்தாலும் கடவுளை மாத்திரமே பார்க்கிறேன்” என்பதே அதன் அர்த்தம் எனக் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அது தவறு ஆகும்.. “ஓம்” என்றால், நான் ஓர் ஆத்மா என்று அர்த்தமாகும். தந்தை கூறுகின்றார்: நானும் ஓர் ஆத்மாவே. ஆனால் நான் பரம்பொருளாக இருப்பதால் நான் பரமாத்மா என அழைக்கப்படுகின்றேன். நான் பரந்தாமத்தில் வசிக்கின்றேன். கடவுளே அதிமேலானவர். பின்னர், சூட்சும உலகில் பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் ஆத்மாக்கள் இருக்கின்றனர். பின்னர் கீழே இங்கே இம் மனித உலகம் உள்ளது. அது தேவர்களின் உலகம், மற்றையது அசரீரி உலகம் எனவும் அழைக்கப்படுகின்ற, ஆத்மாக்களின் உலகமாகும். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அழிவற்ற ஞான இரத்தினங்களின் தானத்தைப் பெறுகிறீர்கள், அதன் மூலமாக எதிர்காலத்தில் நீங்கள் வளமானவர்களாகவும், இரட்டைக் கிரீடம் உடையவர்களாகவும் ஆகுகின்றீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் படத்தைப் பாருங்கள். அவர் இரு கிரீடங்களையும் கொண்டிருக்கின்றார். பின்னர். அக்குழந்தை சந்திர வம்சத்திற்குச் செல்லும்பொழுது, அவரது கலைகளில் இரண்டு குறைவடைகின்றன. அதன்பின்னர் அவர் வைசிய வம்சத்திற்குச் செல்லும்பொழுது, அவர் மேலும் நான்கு கலைகளை இழப்பதுடன், அவரது ஒளிக்கிரீடத்தையும் இழந்து, இரத்தினங்களினாலான கிரீடம் மாத்திரமே எஞ்சியுள்ளது. அந்நேரத்தில், பெருமளவு தானங்கள் கொடுத்து, பெருமளவு புண்ணியம் செய்பவர்கள் ஒரு பிறவிக்கு மிகச்சிறந்த இராச்சியத்தைப் பெறுகிறார்கள். பின்னர், அவர்கள் அடுத்த பிறவியில் அவர்கள் மீண்டும் பெருமளவு தானம் செய்தால், அவர்களால் மீண்டும் ஒருமுறை ஓர் இராச்சியத்தைப் பெறமுடியும். இங்கே, நீங்கள் 21 பிறவிகளுக்கு ஓர் இராச்சியத்தைப் பெற முடியும். ஆனால், நீங்கள் முயற்சி செய்யவேண்டும். ஆகவே, தந்தை தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: நானே பரமாத்மா. இதனாலேயே அவர் பரமாத்மாவாகிய பரமதந்தை என, அதாவது, கடவுள் என அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அப் பரம்பொருளை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் சாலிகிராம்கள், அவரோ சிவன் ஆவார். மக்கள் களிமண்ணினால் ஒரு பெரிய சிவலிங்கத்தையும், சாலிகிராம்களையும் உருவாக்குகின்றனர். அந்த ஞாபகார்த்தங்கள் எந்த ஆத்மாக்களைக் குறிக்கின்றன என்பதை எவருமே அறியார்கள். சிவபாபாவின் குழந்தைகளாகிய நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குவதால், நீங்கள் அந்த வடிவத்தில் பூஜிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் தேவர்களாகிய பின்னர்; அவ்வடிவத்திலும் பூஜிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் சிவபாபாவுடன் சேர்ந்து பெருமளவு சேவை செய்வதால், சாலிகிராம்களாகிய (களிமண்ணாலானவை) நீங்களும் பூஜிக்கப்படுகின்றீர்கள். அதிமேன்மையான பணிகளைச் செய்பவர்களே பூஜிக்கப்படுகின்றார்கள். கலியுகத்தில் சிறந்த பணிகளைச் செய்பவர்களுக்கு ஞாபகார்த்தங்கள் கட்டப்படுகின்றன. தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, உலகச் சக்கரத்தின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், அதாவது, அவர் உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்குகின்றார். விஷ்ணு சுயதரிசனச் சக்கரத்தை வைத்திருக்க முடியாது. அவர் ஒரு தேவராக ஆகியிருப்பார். உங்களுக்கு இப்பொழுது இந்த ஞானம் அனைத்தும் கொடுக்கப்படுகின்றன, ஆனால், நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனாக ஆகும்பொழுது, உங்களுக்கு இந்த ஞானம் இருக்கமாட்டாது. அங்கே அனைவரும் சற்கதியைப் பெற்றிருப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்நேரத்தில் இந்த ஞானத்தைச் செவிமடுத்து, பின்னர் உங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டதும், இந்த ஞானத்திற்கான தேவை எதுவுமே இருக்கமாட்டாது. தந்தை வரும்பொழுதே, படைப்பவரினதும், தனது படைப்பினதும் முழுமையான அறிமுகத்தையும் கொடுக்கின்றார். சந்நியாசிகள் தாய்மாரை அவதூறு செய்கின்றார்கள். ஆனால், தந்தை வந்து, தாய்மாரை ஈடேற்றுகின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: சந்நியாசிகள் இருந்திருக்காவிட்டால், பாரதம் சாம்பலாகியிருக்கும். ஏனெனில், அனைவரும் காமச்சிதையில் அமர்;ந்திருக்கின்றார்கள். தேவர்கள் பாவப் பாதையில் வீழ்ந்த பொழுது, பெரிய பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டு, அனைத்தும் கீழே செல்கின்றன. அந்நேரத்தில் வேறெந்தத் தேசங்களும் இருக்கமாட்டாது. அந்நேரத்தில் பாரதம் மாத்திரமே இருக்கிறது. இஸ்லாமியர்கள் போன்றவர்கள் பின்னரே வருகின்றனர். சத்தியயுகத்து விடயங்கள் இங்கே இருப்பதில்லை. நீங்கள் பார்க்கின்ற சோமநாதர் ஆலயம் சத்தியயுகத்தில் கட்டப்படவில்லை. அது பக்தி மார்க்கத்திலேயே கட்டப்பட்டு, பின்னர், முகம்மதுவால் கொள்ளையடிக்கப்பட்டது. எவ்வாறாயினும், தேவர்களின் மாளிகைகள் போன்றவை அனைத்தும் பூமியதிர்ச்சியில் மறைந்துவிடுகின்றன. மாளிகைகள் அனைத்துமே கீழே செல்கின்றன எனவும், கீழே சென்றுள்ளவை பின்னர் மீண்டும் மேலே வருகின்றன என்றில்லை. இல்லை. அவை கீழேயே இருந்துவிடுகின்றன அல்லது அழிந்துவிடுகின்றன. அந்நேரத்தில் அகழ்வாராய்ச்சிகள் செய்திருந்தால், ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால், இப்பொழுது எதுவுமே கண்டுபிடிக்கப்பட மாட்டாது. சமயநூல்களில் இவ்விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே சற்கதி அருள்பவர். எல்லாவற்றுக்கும் முதலில், உங்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பது அவசியமாகும். நம்பிக்கையிலேயே மாயை தடைகளை உருவாக்குகின்றாள். சிலர் கூறுகின்றனர்: கடவுள் எவ்வாறு இங்கே வரமுடியும்? சிவஜெயந்தி (சிவனின் பிறந்ததின விழா) கொண்டாடப்படுவதால் அவர் நிச்சயமாக வந்திருக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நான் எல்லையற்ற பகலினதும், எல்லையற்ற இரவினதும் சங்கமத்திலேயே வருகின்றேன். நான் எந்நேரத்திலே வருகின்றேன் என்பதைக் குழந்தைகளாகிய உங்களைத் தவிர, வேறு எவருமே அறியார்கள். தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார், அத்;துடன், அவர் உங்களுக்குத் தெய்வீகக் காட்சிகளைக் கொடுப்பதனால், இப்படங்களை உருவாக்கியிருக்கின்றார். கீதையிலே கல்ப விருட்சத்தைப் பற்றிச் சில குறிப்புக்கள் உள்ளன. அவர் குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: நீங்களும் நானும் இப்பொழுது இருக்கின்றோம். நாங்கள் ஒரு கல்பத்தின் முன்னரும் இருந்தோம், நாங்கள் தொடர்ந்தும் கல்பம் கல்பமாகச் சந்திப்போம். ஒவ்வொரு கல்பத்திலும் நான் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பேன். இதுவும் சக்கரத்தை நிரூபிக்கின்றது. எவ்வாறாயினும், உங்களைத் தவிர, வேறெவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. முழுக் கல்பத்தையும் பற்றிய இப்படத்தைப் பாருங்கள். நி;;ச்சயமாக எவரோ ஒருவர் அதனை உருவாக்கியிருக்க வேண்டும். தந்தை இதனை விளங்கப்படுத்துகின்றார், ஆனால் குழந்தைகளாகிய நீங்களும் இப்படத்தைப் பயன்படுத்தி, அதனை விளங்கப்படுத்த வேண்டும். அச்சா
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒவ்வொரு விடயத்திலும், நம்பிக்கையே வெற்றியின் அடிப்படையாகும். ஆகவே, புத்தியில் நம்பிக்கை உடையவர்கள் ஆகுங்கள். சற்கதியை அருள்பவராகிய, தந்தைமீது ஒருபொழுதும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.
2. உங்கள் புத்தியைத் தூய்மையாக்குவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் சரீரமற்றவர் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள். வீணான விடயங்களைப் பேசவோ, செவிமடுக்கவோ வேண்டாம்.
ஆசீர்வாதம்:
உங்கள் சக்தி வடிவத்தில் எரிமலையாகி உங்கள் ஆன்மீகத்தின் அனுபவத்தை வழங்குவீர்களாக.
இன்று வரை சுவாலையாகிய தந்தையின் மீது கவர்ச்சி இருந்தது. அவரது பணியும் குழந்தைகளின் பணியும் ஒரு மறைமுகமான விதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. எவ்வாறாயினும் உங்கள் சக்தி வடிவத்தில் உங்களை நீங்கள் ஸ்திரப்படுத்தும் போது உங்கள் தொடர்பில் வரும் ஆத்மாக்கள் ஆன்மீகத்தை அனுபவம் செய்வார்கள். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எரிமலை வடிவமாகவும், வெளிச்ச வீடாகவும் ஆகும்பொழுது “இது நல்லது, இது நல்லது”என்று கூறுபவர்கள் நல்லவராக ஆகுவதற்குத் தூண்டப்படுவார்கள். மாஸ்ரர் சர்வசக்திவானாகிய நீங்கள் இந்த ஸ்திதிக்கு வரும்போது அனைவரும் விட்டில் பூச்சிகளைப் போல் உங்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்;
சுலோகம்:
யோக அக்கினியில் தங்கள் பௌதீகப் புலன்களை சூடாக்குபவர்கள் முற்றிலும் தூய்மை ஆகுவார்கள்.