13/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் இதயத்தில் சந்தோஷ முரசு ஒலிக்க வேண்டும். ஏனெனில், எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்க வந்துள்ளார்.
கேள்வி:
மனிதர்கள் சுவர்க்கத்திற்குச் செல்லும் முயற்சியை மேற்கொள்ள முடியாதிருக்கும் அளவுக்கு மாயை உருவாக்கி இருக்கும் மாயத்தோற்றம் என்ன?
பதில்:
கடந்த நூறு வருடங்களாக மாயையின் இறுதிக் காலப் பகட்டை மக்கள் பார்க்கும் போதும், ஆகாய விமானங்கள், மின்சாரம் போன்ற கண்டுபிடிப்புக்களைப் பார்க்கும் போதும், சுவர்க்கம் இங்கேயே இருக்கிறது என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்களிடம் செல்வமும் மாளிகைகளும் மோட்டார் வண்டிகளும் இருப்பதால், இதுவே சுவர்க்கம் என்று நினைக்கிறார்கள். அதாவது, இதுவே தங்களுக்குச் சுவர்க்கம் என்று எண்ணுகிறார்கள். இது மாயையிடம் இருந்து கிடைக்கும் சந்தோஷமாகும். இது அவர்களை மாயத் தோற்றத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது. இதன் காரணமாக அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய முயற்சியைச் செய்வதில்லை.
பாடல்:
அன்னையே ஓ அன்னையே நீங்களே அனைவருக்கும் பாக்கியத்தை அருள்பவள்...
ஓம் சாந்தி.
இங்கு வாழ்ந்து சென்றவர்களைப் பற்றியே புகழ் பாடப்படுகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பாரத மக்களுக்கு இது தெரியாது. கல்விமான்கள், பண்டிதர்கள் போன்றோருக்கும் இது தெரியாது. உலகத்தாயாகிய ஜெகதாம்பாள் என்றால் உலக மக்களைப் படைப்பவர் என்பதே அர்த்தமாகும். ஜெகதாம்பாள் என்று அழைக்கப்படுபவர் இப்போது குழந்தைகளாகிய உங்கள் முன் நேரடியாக இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் இவ்வாறு பாடியுள்ளார்;கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். அதாவது, நீங்கள் ஜெகதாம்பாளின் அறிமுகத்தைப் பெற்றுள்ளீர்கள். ஜெகதாம்பாளின் பெயரில் பல்வேறுபட்ட படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையில் அவர் காளி என்றோ, சரஸ்வதி என்றோ, துர்க்கை என்றோ அழைக்கப்பட்டாலும் ஜெகதாம்பாள் ஒரேயொருவரே ஆவார். அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள். அவர்கள் கல்கத்தாவில் உள்ள காளியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆயினும், அந்தப் படத்தில் இருப்பதைப் போன்று வேறு எவருமே இருந்ததில்லை. தந்தை கூறுகிறார்: அவை அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை ஆகும். இராவண இராச்சியம் ஆரம்பமாகும் நேரத்திலேயே பக்திமார்க்கமும் ஆரம்பமாகுகின்றது. இராவணன் யார் என்பதோ அல்லது இராமர் யார் என்பதோ மக்களுக்குத் தெரியாது. இது ஓர் எல்லையற்ற கதை ஆகும். இராவண இராச்சியம் முடிவடைந்து, இராம இராச்சியம் ஆரம்பமாகவுள்ளது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். இராமர் என்பவர் நிச்சயமாக உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பவர், ஆனால் இராவணனோ நிச்சயமாக உங்களுக்குத் துன்பத்தையே விளைவிக்கின்றான். பாரதத்தில் இராவணனுடைய இராச்சியம் நிலவுகிறது என்பதனால் அது துன்பக்குடில் என்று அழைக்கப்படுகின்றது. தற்போது நீங்கள் அனைவரும் இராவண இராச்சியத்தில் இருக்கிறீர்கள் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். அது பிரதானமாகப் பாரதத்தைப் பற்றியதாகும். இராவண இராச்சியத்தில் நீங்கள் சீரழிந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். எல்லையற்ற தந்தையாகிய இராமரே உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பவர். இந்த நேரத்தில் மனிதர்கள் அனைவரும் அசுர கட்டளைகளைப் பின்பற்றுகிறார்கள். உண்மையில் பத்துத் தலை கொண்ட இராவணன் என்று எவருமே இல்லை. அவை இராவணனின் கட்டளைகள் என அழைக்கப்படுகின்ற, ஐந்து விகாரங்களின் கட்டளைகள் ஆகும். ஸ்ரீமத் என்பது சிவபாபாவின் வழிகாட்டல்கள் ஆகும். இப்போது அசுர சமுதாயம் இருக்கின்றது. இது எல்லையற்ற விடயமாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் 63 பிறவிகளுக்குத் துன்பத்தைப் பெறுகின்றீர்கள். மக்கள் எரித்து வருகின்ற இராவணனே மிகப்பெரிய எதிரி என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் இராவணனை எரிப்பதை எப்போது நிறுத்துவார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இராவணனை எரிப்பது தொன்று தொட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்றது என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அவனது கொடும்பாவியைத் தயாரித்துத் தொடர்ந்தும் அதனை எரிக்கின்றார்கள். உண்மையாகவே இராவணன் அனைவருக்கும் குறிப்பாகப் பாரதத்திற்குத் துன்பம் விளைவித்திருக்கிறான். அதனால் இராவணன் ஒரு கொடிய எதிரியாக இருக்கின்ற போதிலும் எவருக்குமே இந்த எல்லையற்ற எதிரியைப் பற்றித் தெரியாது. எல்லையற்ற தந்தை வந்து உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். கல்விமான்களும், பண்டிதர்கள் போன்றோரும் இத்தனை இலகுவான விடயத்தை அறிந்திருக்கவில்லை. உங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து நீங்கள் உங்கள் சந்தோஷ ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இருந்த போதிலும் நீங்கள் மீண்டும் மீண்டும் தந்தையை மறந்து விடுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் கூவி அழைத்தீர்கள்: ஓ பாபா! கருணை காட்டுங்கள். என் மீது கருணை காட்டுங்கள்! நான் தொடர்ந்து கருணை கொண்டிருக்கின்றேன். நீங்கள் தேவர்களை என்ன உணர்வுகளோடு வழிபடுகின்றீர்களோ, அதற்கேற்ப ஒரு தற்காலிகச் சந்தோஷத்தை நான் உங்களுக்குக் நிச்சயமாக கொடுக்கின்றேன். வேறு எவராலும் உங்களுக்குச் சந்தோஷத்தை கொடுக்க முடியாது. நான் மாத்திரமே சந்தோஷத்தை அருள்பவர். நானே பக்தி மார்க்கத்திலும் சந்தோஷத்தை அருள்பவர். அவர்கள் கூறுகிறார்கள்: தந்தையாகிய கடவுளே இதனைக் கொடுத்தார். அவர்கள் இதனைக் கடவுளுக்கே கூறுகிறார்கள். உங்களுக்கு ஒரேயொரு தந்தையே சந்தோஷத்தைக் கொடுப்பவர்; என்றால், பின்னர் இன்ன புனிதர் உங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்தார் என்று ஏன் நீங்கள் கூறுகின்றீர்கள்? மக்கள் பாடுகிறார்கள்: ஓ கடவுளே, எங்கள் துன்பத்தை அகற்றி விடுங்கள்! அவ்வாறாயின் ஏன் இன்ன புனிதரால் அவர்களுடைய துன்பம் நீங்கியது என்றோ, அவர்களுக்குக் குழந்தை கிடைத்தது என்றோ கூறுகின்றார்கள்? அவரது ஆசீர்வாதத்தினாலேயே தமக்குச் சந்தோஷம் கிடைத்தது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தங்கள் வியாபாரத்தில் இலாபம் வந்து விட்டால், அது தமது குருவின் ஆசீர்வாதத்தினாலேயே என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நட்டம் ஏற்பட்டு விட்டால், அது தங்கள் குருவின் ஆசீர்வாதக் குறைவால் என்று அவர்கள் நினைப்பதில்லை. அப்பாவிப் பக்தர்கள் எதையுமே புரிந்து கொள்ளாமல் தமது மனதில் தோன்றுவதையெல்லாம் கூறுகின்றார்கள். அவர்கள் கேள்விப்படுவதையெல்லாம் தொடர்;ந்தும் பின்பற்றுகின்றார்கள். இதுவும் நாடகமே. தந்தை இப்பொழுது வந்து உங்களைத் தனக்குரியவர்களாக ஆக்குகின்றார். நீங்கள் தந்தை மீது அன்பு கொண்டிருப்பதில் மாயை பெரும் தடைகளை ஏற்படுத்துகின்றாள். அவள் உங்கள் முகத்தை முற்றாக அப்பால் திருப்பி விடுகிறாள். உங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும் தந்தையை அவள் விவாகரத்துச் செய்ய வைத்து விடுகிறாள். பக்தி மார்க்கத்திற்கும் ஞான மார்க்கத்திற்கும் இடையில் இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வேறுபாடு காணப்படுகிறது என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். தொடர்ந்து பக்தி செய்வதனால் மக்கள் மிகவும் ஏழ்மையானவராகும் போது, தந்தை வந்து ஞானத்தைக்; கொடுத்து உங்களை 21 பிறவிகளுக்குச் செழிப்பானவர்களாக்குகின்றார். நீங்கள் பிறவிபிறவியாக அந்தப் பக்தியைச் செய்து தற்காலிகமான சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். பெரும் துன்பம் உள்ளது. தந்தை கூறுகிறார்: நீங்கள் இழந்;த இராச்சியத்தை மீண்டும் உங்களிடம் கொடுப்பதற்காகவே நான் வந்துள்ளேன். இது எல்லையற்றதொன்றாகும். இது வேறு எதுவுமல்ல. இலக்ஷ்மியும் நாராயணனும் விகாரமற்ற தேவர்கள். அவர்களது மாளிகைகளில் வைரங்களும் இரத்தினங்களும் பெருமளவு இருந்திருக்;கலாம். மேலும் முன்னேறிச் செல்லுகையில் நீங்கள் இன்னும் அதிகமானவற்றைப் பார்ப்பீர்கள். நீங்கள் நெருங்கி வரும் அளவுக்கு அதிகளவு சுவர்க்கக் காட்சிகளைப் பார்ப்பீர்கள். அங்கே மிகப்பெரிய சபைகள் இருக்கும். யன்னல்கள் முதலியவற்றில் தங்கத்தாலும் வைரங்களாலும் ஆன மிக நல்ல அலங்காரங்கள் இருக்கும். அவ்வளவே. இரவு முடிவடைந்து பகல் வரும் வரை காத்திருங்கள். தெய்வீகக் காட்சிகளில் நீங்கள் பார்க்கும் சுவர்க்கத்தை உண்மையாகவே நடைமுறைரீதியில் நிச்சயமாக பார்ப்பீர்கள். தெய்வீகக் காட்சிகளில் நீங்கள் பார்த்த விநாசத்தையும் நிச்சயமாக நடைமுறையிலும் பார்ப்பீர்கள். உங்களுக்குள் சந்தோஷ முரசு ஒலிக்க வேண்டும். நீங்கள் உங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள்;. இந்தப் படங்கள் மிகச்சரியானவை அல்ல. தெய்வீகக் காட்சிகளில் அவற்றையெல்லாம் நீங்கள் பார்க்கின்றீர்கள். அங்கே சென்று நீங்கள் நடனங்கள் போன்றவற்றையும் ஆடுகின்றீர்கள். பல படங்களை நீங்கள் தயாரித்தீர்;கள். தெய்வீகக் காட்சிகளில் தந்தை உங்களுக்குக் காட்டிய அனைத்தும் நிச்சயமாக நடைமுறை ரீதியில் இடம்பெறும். இ;ந்த அழுக்கான உலகம் முடிவடையவுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சுய இராச்சியத்தைப் பெறுவதற்காக நீங்கள் இங்கிருந்து முயற்சி செய்கின்றீர்கள். அந்தப் பக்தி மார்க்கத்திற்கும், இந்த ஞான மார்க்கத்திற்கும் இடையில் அதிக வேறுபாடு உள்ளது. பாரதத்தின் நிலைமை என்னவாகி விட்டது என்று பாருங்கள். அவர்களிடம் உண்பதற்கு உணவேயில்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய திட்டங்களைத் தீட்டு;கிறார்கள் என்று பாருங்கள். மிகச் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. அவர்களது திட்டங்கள் என்ன என்றும், உங்கள் திட்டங்கள் என்ன என்றும் பாருங்கள்! இந்த விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் இராமாயணம் போன்றவற்றில் பல கதைகளை எழுதியிருந்தாலும் அது அவ்வாறு இல்லை. எதற்காக அவர்கள் ஒவ்வொரு வருடமும் இராவணனை எரிக்கிறார்கள்? இராவணனை எரித்து விட்டால், அவன் அழிக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லையா? பக்தி மார்க்கத்து வருமானத்தையும் ஞான மார்க்கத்து வருமானத்தையும் பாருங்கள்! உங்கள் பொக்கிஷக் களஞ்சியத்தை பாபா முழுமையாக நிரப்பிவிடுகின்றார். அதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. நிச்சயமாக நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். நினைவு கூரப்படுகின்றது: ஏன் நாங்கள் அமிர்தத்தைத் துறந்து நஞ்சை அருந்த வேண்டும். அமிர்தசரஸில் ஓர் ஏரியை உருவாக்கி அதற்கு அமிர்த ஏரி என்று பெயரிட்டு இருக்கிறார்கள். அந்த ஏரியில் மூழ்கி எழுகின்றார்கள். மன்சரோவர் என்ற பெயருடனும் ஓர் ஏரி இருக்கின்றது. மன்சரோவர் என்ற பெயரின் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. மன்சரோவர் என்றால் அசரீரியான பரமதந்தை, பரமாத்மா, ஞானக்கடல் மனித சரீரமொன்றில் பிரவேசித்து இந்த ஞானத்தைப் பேசுகின்றார் என்பதாகும். மக்கள் அமர்ந்திருந்து பல கதைகளை உருவாக்கி விட்டார்கள். கீதையே தாயாகவும், சமயநூல்கள் அனைத்தினதும் இரத்தினமாகவும் உள்ளது. பின்னர் அவர்கள் அது கிருஷ்ணரால் பேசப்பட்டதாகக் கூறியுள்ளார்கள். கிருஷ்ணரைப் பற்றியும், அவர் பாம்பால் தீண்டப்பட்டார் என்றும், பெண்களைக் கடத்திச் சென்றார் என்றும் பற்பல கதைகளையும் எழுதியிருக்கின்றார்கள். பல பொய்யான குற்றங்களைச் சுமத்தியிருக்கிறார்கள். அவை கிருஷ்ணருடன் தொடர்புபட்டவையல்ல என இப்போது நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். பரமாத்மாவாகிய பரமதந்தை இங்கிருந்து பிரம்மாவின் மூலம் உங்களுக்கு வேதங்கள், சமயநூல்கள், கிரந்தம் ஆகியவற்றின் சாராம்சத்தைக் கூறுகின்றார். ஸ்ரீமத் பகவத் கீதையே முதல் இலக்கத்தி;ற்குரியது. பாரத மக்களுக்கு ஒரு சமயநூல் மாத்திரமே உள்ளது. அது பொய்யாக்கப்பட்டுள்ளதால், அவற்றின் குழந்தைகளான வேதங்களும், சமயநூல்களும் பொய்யாக்கப்பட்டன. தந்தை உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார். அவ்வாறிருந்தும் நீங்கள் முன்னேறிச் செல்லும் போது மாயையால் தொடர்ந்தும் அறையப்படுகின்றீர்;கள். எதையுமே நீங்கள் உட்கிரகிப்பதில்லை. இது ஒரு போர்க்களம். குழந்தைகளான நீங்களே பிராமணர்களாகி உள்ளீர்;கள். இத்தகைய விடயங்கள் கீதை போன்றவற்றில் எழுதப்படவில்லை. பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள் உள்ளார்கள். பிரம்மா மூலமே யாகம் உருவாக்கப்பட்டது. உண்மையாகவே உருத்திர ஞான யாகம் உள்ளது. எனவே யுத்தக்களம் எங்கிருந்து வந்தது? சுயஇராச்சியத்துக்காக யாகத்தில் குதிரை அர்ப்பணம் செய்யப்பட்டதும் நினைவுகூரப்பட்டுள்ளது. நாங்கள் இந்த இரதத்தை அர்ப்பணிக்கின்றோம். பின்பு அவர்கள் தக்ஷ பிரஜா பிதாவின் யாகம் என்று ஒன்றை உருவாக்கி, அதில் ஒரு குதிரையை அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் பலவகையான விடையங்களையும் எழுதியிருக்கிறார்கள். சத்தியயுகத்தில் பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே அங்கே நிச்சயமாக மிகச்சில மனிதர்களே இருந்திருக்க வேண்டும். அங்கே மிகச்சில தேவர்களே இருந்தனர். ஜமுனா நதிக்கரையோரத்தில் நிச்சயமாக இராச்சியம் இருக்கும். அங்கே தேவர்களே ஆட்சி புரிவார்கள். அவர்கள் காஷ்மீருக்கோ அல்லது சிம்லாவுக்கோ செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் வகையில் அங்கே வெப்பமாக இருக்காது. பஞ்சபூதங்களும் முற்றிலும் சதோபிரதானமாக ஆகிவிடும். இந்த விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே இவற்றைப் புரிந்து கொள்வார்கள். சத்தியயுகம் சுவர்க்கம் என்றும், கலியுகம் நரகம் என்றும் அழைக்கப்படுகின்றது. துவாபரயுகம் அந்தளவுக்கு நரகம் என்று கூறப்படுவதில்லை. திரேதாயுகத்தில் இரு சுவர்க்கக் கலைகள் குறைவடைகின்றன. ஆகக் கூடிய சந்தோஷம் சுவர்க்கத்திலேயே இருக்கின்றது. இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என்று கூறுகின்ற போதிலும் அதன் அர்த்தம் அவர்களுக்குப் புரிவதில்லை. அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் என்றால் அதற்கு முதல் நிச்சயமாக அவர் நரகத்திலேயே இருந்திருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் நரகத்திலேயே இருக்கிறார். தந்தை இப்போது உங்களுக்கு எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுக்கின்றார் அங்கே அனைத்தும் உங்களுடையதாகவே இருக்கும். வானம், பூமி போன்ற அனைத்தும் உங்களுடையதே. அசைக்க முடியாத, நிலையான, அமைதி நிலவுகின்ற இராச்சியத்தை நீங்கள் ஆட்சிபுரிவீர்கள். அங்கே துன்பம் என்பதே இ;ல்லை. எனவே, அதற்காக நீங்கள் அளவற்ற முயற்சி எடுக்க வேண்டும். குழந்தைகளின் ஸ்திதி எப்படியிருக்கிறது என்று பாருங்கள். உங்கள் மம்மாவும் பாபாவும் மிக நல்ல முயற்சி செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஏன் நீங்களும் முயற்சி செய்து உங்கள் இராச்சியத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது? தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, களைப்படையாதீர்கள். தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். ஒருபோதும் ஸ்ரீமத்தை மறந்து விடாதீர்கள். இதையிட்டு நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதை நீங்கள் செய்தாலும், பாபாவிடம், ‘பாபா, இதைப்பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. இதைச் செய்வதன் மூலம் நான் பாவத்தைச் சேர்த்துக் கொள்ள மாட்டேன், இல்லையா? என்று கேளுங்கள். பாபா யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக் கொள்வதில்லை. பக்தி மார்க்கத்திலும் மக்கள் கடவுள் பெயரால் எதையேனும் தானம் செய்து விட்டு அதன் பலனாக எதையாவது பெற்றுக் கொள்கிறார்கள். உங்களிடமிருந்து எதையாவது பெற்றுக் கொண்டு சிவபாபா என்ன செய்ய முடியும்? அவர் மாளிகைகள் ஏதும் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளாகிய உங்களுக்காகவே அவர் அனைத்தையும் செய்கிறார். இறுதி நேரத்தில் நீங்கள் தங்குவதற்காகவே அவர் கட்டடங்களைக் கட்டுகின்றார். உங்கள் ஞாபகார்த்த ஆலயம் இங்கேயே இருக்கிறது, நீங்களும் இங்கேயே இருக்கிறீர்கள். சேவையில் ஈடுபட்டுள்ள குழந்தைகள் மேலும் முன்னேறிச் செல்கையில் இன்னும் அதிகக் கோலாகலத்தைப் பார்ப்பார்கள். இங்கிருக்கும் போதே நீங்கள் சுவர்க்கத்தைச் சுற்றி வருவீர்கள். பின்பு, அங்கு சென்று மாளிகைகளைக் கட்டுவீர்கள். கட்டடங்கள் அமைப்பதில் போட்டி காணப்படுகின்றது. கடந்த நூறு வருடங்களுக்குள் எவ்வளவற்றைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள் என்று பாருங்கள். பாரதத்தைச் சுவர்க்கம் போல ஆக்கியிருக்கிறார்கள். எனவே, அங்கே நூறு வருடங்களுக்குள்ளேயே என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள்? உங்களால் இதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த விஞ்ஞானம் அங்கே உங்களுக்கு உபயோகமாக இருக்கும். விஞ்ஞானத்தின் சந்தோஷம் அங்கே அனுபவிக்கப்படும். இ;ங்கே துன்பமே இருக்கிறது. விஞ்ஞானத்தில் அளவற்ற முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்கிறார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தற்காலிகமான கணநேரச் சந்தோஷமே அதில் இருக்கின்றது. இது மாயையின் இறுதி நேரப் பகட்டு. இப்போது ஆகாய விமானங்களிலும் ரொக்கெட்டுகளிலும் பயணிக்கின்றார்கள். ஆரம்பத்தில் இந்த வசதிகள் இருக்கவில்லை. ஆரம்பத்தில் மின்சாரம் இருக்கவில்லை. அவையனைத்தும் மக்களுக்கு ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் மாயையின் சௌகரியமேயாகும். இதுவே சுவர்க்கம் என்று மக்கள் நினைக்கிறார்கள். சுவர்க்கத்தில் விமானங்கள் போன்றவை இருந்தன என்பதால் இதுவே சுவர்க்கம் என்று நினைக்கிறார்கள். இப்போதே சுவர்க்கத்திற்குரிய ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன என்று அவர்களுக்குப் புரிவதில்லை. தங்களிடம் செல்வமும், மாளிகைகளும் இருப்பதால் அதுவே சுவர்க்கம் என்று நினைக்கிறார்கள். இதையே அவர்கள் சுவர்க்கம் என்று நினைக்கிறார்கள். நல்லது, அவர்களது பாக்கியத்தில் அந்தச் சுவர்க்கமே இருக்கட்டும்! நாங்கள் முயற்சி செய்து உண்மையான சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் அதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் உங்கள் முயற்சிகளில் பின்தங்கக்கூடாது. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும் அதே சமயம் நீங்கள் முயற்சி செய்யவும் வேண்டும். நீங்கள் சேவை செய்ய வேண்டும். நீங்களும் தூய்மையாகி உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் தகுதி வாய்ந்தவர்களாக்க வேண்டு;ம். அவர்களுக்கு இனிமையான விடயங்களைக் கூறுங்கள். இரு தந்தையர் பற்றிய கருத்தை பாபா மிகத்தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கிறார். தந்தையின் சொத்தின் ஆஸ்தியை நீங்கள் பெறப் போகின்றீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. முயற்சி செய்வதில் ஒருபோதும் களைப்படைந்துவிடாதீர்கள். தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். என்றுமே குழப்பமடையாதீர்கள்.
2. பாவச் செயல் எதையும் செய்யாதீர்கள். உண்மையான சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தூய்மையாகுகின்ற சேவையைச் செய்வதுடன் மற்றவர்களையும் தூய்மையாக்குங்கள்.
ஆசீர்வாதம்:
எந்தவொரு கவர்ச்சியான சலனத்திலிருந்தும் விடுபட்டவராக இருக்கும் வேளை உங்கள் லௌகீக குடும்பத்தையும் அவ்வாறு உருவாக்குவதன் மூலம் அனைத்து இரகசியங்களையும் அறிந்தவராகவும் ஓர் இறை வருமானத்தை விருத்தி செய்பவராகவும் ஆகுவீர்களாக.
பல குழந்தைகள் தங்கள் குடும்பத்தவர்கள், குடும்ப உறவினர்கள் மற்றும் தொடர்புகளில் வரும் ஒவ்வொருவரையும் தங்கள் எல்லையற்ற புத்திகளினால் திருப்தியாளர்களாக ஆக்குகின்றார்கள். இறை வருமானத்தின் இரகசியத்தை அறிந்துகொள்வதனால் அவர்களும் அவர்களுடைய விசேட பங்குக்கு உரிமை கொண்டவர் ஆகுகின்றார்கள். ஒரே ஒருவருக்கு சொந்தமான அத்தகைய சிக்கனமான குழந்தைகளும் இருக்கின்றார்கள். அவர்கள் எந்தவொரு கவர்ச்சியான சலனத்திலிருந்தும் விடுபட்டவர்களாக இருப்பதுடன் தங்கள் அனைத்துப் பொக்கிஷங்கள், நேரம், சக்திகள் மற்றும் பௌதீக செல்வத்தை தங்கள் குடும்பத்திற்குச் சிக்கனமாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் தங்கள் அலௌகீகக் கடமைகளுக்கு அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்துவார்கள். அனைத்து இரகசியங்களையும் புரிந்துகொள்கின்ற அத்தகைய யுக்தியுக்த் குழந்தைகள் புகழ்ச்சிக்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆவார்கள்.
சுலோகம்:
நினைவு சொரூபமாக இருந்தவண்ணம் தங்கள் ஒவ்வொரு கடமையையும் நிறைவேற்றுபவர்கள் ஒளிக்கோபுரங்கள் ஆவர். (கலங்கரை விளக்கம்).