16.12.18 Avyakt Bapdada Tamil Lanka Murli 09.03.84 Om Shanti Madhuban
உங்களின் மாற்றத்தை அழியாதது ஆக்குங்கள்.
பாப்தாதா சாகரப் பறவைகளான குழந்தைகள் அனைவரையும் பார்க்கிறார். (மழைத்துளிக்காகக் காத்திருக்கும் பறவை). செவிமடுத்து, சந்தித்து அவ்வாறு ஆகுவதே அனைவரின் ஆழமான விருப்பமாகவும் உள்ளது. செவிமடுப்பதைப் பொறுத்தவரை நீங்கள் அனைவரும் முதல் இலக்க சாகரப் பறவைகள் ஆவீர்கள். சந்திப்பதிலும் ஆகுவதிலுமே நீங்கள் இலக்கங்களைப் பெற்றுக்கொள்கிறீர்கள். உங்களின் கொள்ளளவிற்கேற்ப நீங்கள் சமமானவர் ஆகுகிறீர்கள். எவ்வாறாயினும், மேன்மையான ஆத்மாக்களான பிராமண ஆத்மாக்கள் அனைவரும் மூன்றிலும் சாகரப் பறவைகளாக இருக்கிறார்கள். முதலாம் இலக்கச் சாகரப்பறவை, இலகுவாகவும் நிலையாகவும் தந்தைக்குச் சமமான, மாஸ்ரர் முரளிதார் ஆகவும் மாஸ்ரர் சர்வசக்திவானாகவும் இருப்பார். செவிமடுத்தல் என்றால் முரளிதார் ஆகுதல் என்று அர்த்தம். சந்தித்தல் என்றால் சகவாசத்தினால் நிறமூட்டப்பட்டு, சக்திகள் மற்றும் நற்குணங்களைப் பொறுத்தவரை அவரைப் போன்று நிறமூட்டப்படுதல் ஆகும். ஆகுதல் என்றால் உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் தந்தையின் ஒவ்வோர் அடியையும் பின்பற்றுவதன் மூலம் தந்தைக்குச் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். அதாவது, உங்களின் பாதச்சுவடுகளை பாபாவின் அடிகளில் புலப்படும் வiயிலும் நடைமுறையாகவும் வைத்தல் என்று அர்த்தம். குழந்தைகளான நீங்கள் உங்களின் எண்ணங்களைத் தந்தையின் எண்ணங்களுக்கு ஒத்ததாக அனுபவம் செய்ய வேண்டும். உங்களின் வார்த்தைகளில் இருந்தும் செயல்களில் இருந்தும் அனைவரும் உங்களைத் தந்தையை ஒத்தவர் என்று அனுபவம் செய்ய வேண்டும். இதுவே சமமானவராகவும் முதலாம் இலக்கச் சாகரப்பறவையாகவும் இருத்தல் எனப்படுகிறது. இந்த மூன்றில் நீங்கள் எது என்பதைச் சோதித்துப் பாருங்கள். குழந்தைகள் அனைவரினதும் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த எண்ணங்கள் பாப்தாதாவை வந்தடைகின்றன. உங்களிடம் தைரியமும் திடசங்கற்பமும் மிக்க மிக நல்ல எண்ணங்கள் உள்ளன. எண்ணம் என்ற விதை சக்திவாய்ந்தது. ஆனால் நற்குணங்களைக் கிரகித்தல் என்ற நிலமும், ஞான கங்கை என்ற நீரும், நினைவெனும் சூரிய ஒளியும், சுயத்தில் சதா கவனம் செலுத்துதல் என்ற வெப்பமும் என்று வரும்போது, நீங்கள் சிலவேளைகளில் இவற்றில் கவனக்குறைவானவர் ஆகுகிறீர்கள். ஒன்றிலேனும் ஏதாவது குறைவடையும்போது, எண்ணம் என்ற விதை சதா பழத்தைத் தரமாட்டாது. அது குறுகிய காலத்திற்கு, ஓரிரு பருவகாலங்களுக்குப் பழங்களைக் கொடுக்கும். அது அநாதியாக பழத்தைத் தரமாட்டாது. அதன்பின்னர், விதை சக்திவாய்ந்தது, நீங்கள் உறுதியான சத்தியம் செய்தீர்கள், அனைத்தும் தெளிவாக இருந்தன, ஆனால் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆகவே, முன்னர் உங்களுக்குக் கூறப்பட்ட விடயங்களில் சதா கவனம் செலுத்துங்கள்.
இரண்டாவதாக, நீங்கள் அற்ப விடயங்களுக்காக மிக விரைவில் குழப்பம் அடைகிறீர்கள். குழப்பம் அடைந்தபின்னர், நீங்கள் சிறிய விடயங்களையும் மிகப்பெரிய விடயங்கள் ஆக்கிவிடுகிறீர்கள். அது ஓர் எறும்பு. ஆனால் நீங்கள் அதை ஒரு யானை ஆக்கிவிடுகிறீர்கள். இதனாலேயே, சமநிலை காணப்படுவதில்லை. சமநிலை இல்லாததால், உங்களின் வாழ்க்கை சுமை ஆகிவிடுகிறது. ஒன்றில், உங்களின் போதையால் நீங்கள் முற்றிலும் உயர்ந்த நிலைக்குச் செல்கிறீர்கள். அல்லது மிகச்சிறிய கூழாங்கற்களும் உங்களைக் கீழே கொண்டுவந்துவிடுகின்றன. ஞானம் நிறைந்தவராகி, அதை ஒரு விநாடியில் நீக்குவதற்குப் பதிலாக, ‘எவ்வாறு இந்தக் கூழாங்கல் இடையில் வந்தது, நீங்கள் நின்றுவிட்டீர்கள், நீங்கள் கீழே வந்துவிட்டீர்கள், இது நிகழ்ந்தது’ என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள். உங்களுக்கு நோய் வந்தது. உங்களுக்குக் காய்ச்சல் வந்தது. அல்லது வலி ஏற்பட்டது. நீங்கள் தொடர்ந்து அவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போது, பேசும்போது, உங்களின் நிலைமை என்னவாகும்? எனவே, இப்போது வருகின்ற அற்ப விடயங்களை முடித்துவிடுங்கள். அவற்றை நீக்கி, பறவுங்கள். இது நிகழ்ந்தது அல்லது அது வந்தது என நினைப்பதன் மூலம் பலவீனமானவர் ஆகாதீர்கள். மருந்தை உட்கொண்டு, ஆரோக்கியமானவர் ஆகுங்கள். சிலவேளைகளில், குழந்தைகளின் முகங்களைப் பார்க்கும்போது, பாப்தாதா நினைப்பார்: முன்னர் நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள், இப்போது நீங்கள் எவ்வாறு ஆகிவிட்டீர்கள்? நீங்கள் அதே குழந்தைகளா அல்லது வேறொன்றாக மாறிவிட்டீர்களா? நீங்கள் தளம்பும்போது, உடனடியாக என்ன நிகழுகிறது? உங்களின் தலை பாரமாகிவிடுகிறது. பௌதீகமாகவும், நீங்கள் மேலேயும் கீழேயும் சென்றுகொண்டிருந்தால், உங்களின் தலை சுற்றும். ஆகவே, அந்த சம்ஸ்காரங்களை மாற்றுங்கள். உங்கள் அனைவருக்கும் இந்தப் பழக்கம் இருக்கிறது, நாட்டினால், சூழலால், உங்களின் பிறப்பு சம்ஸ்காரங்களால் அல்லது உங்களின் சுபாவத்தால் இது நிகழுகிறது என நினைக்காதீர்கள். இத்தகைய நம்பிக்கைகள் உங்களைப் பலவீனமானவர் ஆக்கும். உங்களின் பிறப்பு மாறிவிட்டது. எனவே, உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுங்கள். நீங்கள் உலகை மாற்றுபவர்கள் ஆதலால், நீங்கள் ஏற்கனவே சுயத்தை மாற்றுபவர்கள் ஆகிவிட்டீர்கள். உங்களின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்களையும் சுபாவங்களையும் அறிந்து கொள்ளுங்கள். இவையே உங்களின் நிஜமான சம்ஸ்காரங்கள் ஆகும். ஏனையவை செயற்கையானவை. ‘எனது சம்ஸ்காரங்கள், எனது சுபாவம் போன்றவை’ மாயையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள சுபாவம் ஆகும். அது மேன்மையான ஆத்மாக்களான உங்களின் ஆதியான, அநாதியான சுபாவம் அல்ல. இதனாலேயே, பாபா மீண்டும் உங்களின் கவனத்தை இவற்றின்மீது திருப்புகிறார். இதை நீங்கள் மீட்டல் செய்ய வைக்கிறார். இந்த மாற்றத்தை என்றும் நிலைத்திருப்பதாக ஆக்குங்கள்.
உங்களிடம் பல சிறப்பியல்புகள் உள்ளன. நீங்கள் அன்பிலும் சேவைக்கான உற்சாகத்திலும் முதல் இலக்கத்தவராக இருக்கிறீர்கள். பௌதீகமாக வெகு தொலைவில் இருந்தாலும், நீங்கள் நெருக்கமாகவே இருக்கிறீர்கள். உங்களின் பிடித்துக் கொள்ளும் சக்தி (கிரகிக்கும் ஆற்றல்) மிகவும் நல்லது. உங்களின் புரிந்து கொள்ளும் சக்தியும் மிகத் தீவிரமானது. நீங்கள் சந்தோஷ ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். ‘ஆஹா பாபா, ஆஹா குடும்பமே, ஆஹா நாடகமே!’ என மிக நல்ல பாடல்களை நீங்கள் பாடுகிறீர்கள். திடசங்கற்பம் என்ற உங்களின் சிறப்பியல்பும் மிகவும் நல்லதே. இனங்கண்டுகொள்வதில் உங்களின் புத்திகள் மிகவும் கூர்மையாக உள்ளன. நீங்கள் தந்தையினதும் குடும்பத்தினதும் நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட மிகவும் அன்பான குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் மதுவனத்தின் அலங்காரங்கள். நீங்கள் இங்கு மகத்தான பிரகாசத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். பல்வகைக் கிளைகளான நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு சந்தனமரத்தை உருவாக்கியிருக்கும் உதாரணம் மிகவும் நல்லது. உங்களிடம் பல சிறப்பியல்புகள் உள்ளன. பல சிறப்பியல்புகள் உள்ளன. அத்துடன் ஒரு பலவீனமும் உள்ளது. எனவே, அந்த ஒரு விடயத்தை முடிப்பது மிகவும் இலகுவானதல்லவா? உங்களின் பிரச்சனைகள் இப்போது முடிவடைந்துவிட்டன, அல்லவா? உங்களுக்குப் புரிகிறதா?
நீங்கள் நேர்மையாகவும் சுத்தமான இதயத்துடனும் பேசுவதைப் போன்று, நேர்மையுடனும் சுத்தத்துடனும் உங்களின் இதயத்தில் இருந்து அனைத்தையும் நீக்குவதிலும் நீங்கள் முதலாம் இலக்கத்தில் இருக்க வேண்டும். பாபா சிறப்பியல்புகளின் மாலை ஒன்றைச் செய்தால், அது மிகவும் பெரியதாகவே இருக்கும். எவ்வாறாயினும், பாபா உங்களைப் பாராட்டுகிறார். உங்களுக்குள் 99மூ மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னமும் 1மூ எஞ்சியுள்ளது. அந்த மாற்றம் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. உங்களுக்குப் புரிகிறதா? இப்போதும் நீங்கள் மாறுகிறீர்கள். எனவே நீங்கள் நல்லவர்கள். அத்துடன், ‘இல்லை’ என்று கூறுவதற்குப் பதிலாக, ‘ஆம்’ என்று கூறுகிறீர்கள். இதுவும் ஒரு சிறப்பியல்பே. நீங்கள் மிக நல்ல பதில்களை வழங்குகிறீர்கள். நீங்கள் சக்திவாய்ந்தவர்களும் வெற்றியாளர்களுமா என பாபா கேட்கும்போது, நீங்கள் ஏற்கனவே அவ்வாறு ஆகிவிட்டீர்கள் என்று கூறுகிறீர்கள். இதுவும் மிகத் தீவிரமான மாற்றத்திற்கான சக்தி, அப்படியல்லவா? உங்களுக்குள் எறும்புகளுக்கும் எலிகளுக்கும் பயப்படும் சம்ஸ்காரங்களே உள்ளன. ஒரு மகாவீரராகி, உங்களின் காலடியில் எறும்பை நசுக்குங்கள். எலியை விரட்டுங்கள். கணேஷ் ஆகுங்கள். இப்பொழுதில் இருந்தே, தடைகளை அழிப்பவர்கள் ஆகுங்கள். கணேஷ் ஆகி, எலிகளை விரட்ட ஆரம்பியுங்கள். எலிகளைக் கண்டு பயப்படாதீர்கள். எலி உங்களின் சக்திகளைக் கடித்துவிடுகிறது. உங்களின் சகித்துக் கொள்ளும் சக்தியையும் உங்களின் இலகு சுபாவத்தையும் முடித்து விடுகிறது. அது அன்பை முடித்துவிடுகிறது. அது உங்களைக் கடித்துவிடுகிறது, அல்லவா? எறும்பு உங்களின் தலைக்குள் நேரடியாகச் சென்றுவிடுகிறது. உங்களின் பதட்டமான நிலையில், அது உங்களை மயக்கம் அடையச் செய்துவிடுகிறது. அந்த வேளையில் அது உங்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துகிறதல்லவா? அச்சா.
சதா மகாவீரர்களாக இருப்பதுடன் சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், ஒவ்வோர் அடியிலும், தமது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் தமது பாதச்சுவடுகளைத் தந்தையின் சுவடுகளில் வைத்துத் தந்தையுடன் சேர்ந்து முன்னேறும் உண்மையான வாழ்க்கை சகபாடிகளுக்கும், சதா தமது சிறப்பியல்புகளைத் தங்களுக்கு முன்னால் வைத்து, எல்லா வேளைக்கும் பலவீனங்களுக்குப் பிரியாவிடை அளிப்பவர்களுக்கும், சதா எண்ணங்களின் விதையைப் பலன் அடையச் செய்பவர்களுக்கும், ஒவ்வொரு கணமும் எல்லையற்ற புலப்படும், நடைமுறைப் பழத்தை உண்பவர்களுக்கும், சகல பேறுகள் என்ற ஊஞ்சல்களின் ஆடுபவர்களுக்கும், இத்தகைய சதா சக்திசாலி ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா பிரான்ஸ் குழுவைச் சந்திக்கிறார்:
நீங்கள் அனைவரும் பாபாவைப் பல தடவைகள் சந்தித்திருக்கிறீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திக்கிறீர்கள். நீங்கள் சென்ற கல்பத்திலும் பாபாவைச் சந்தித்ததனால், இப்போதும் அவரைச் சந்திக்கிறீர்கள். சென்ற கல்பத்தில் பாபாவிற்குச் சொந்தமாக இருந்த ஆத்மாக்கள், மீண்டும் தமது உரிமையைக் கோருவதற்காக இங்கு வந்துள்ளார்கள். உங்களுக்கு இது புதியதாக இல்லையல்லவா? நீங்கள் பாபாவைப் பல தடவைகள் சந்தித்திருக்கிறீர்கள் என்ற புரிந்துணர்வுடன் நினைவு செய்கிறீர்கள். அனைத்தும் நன்கு பரிச்சயமாக இருக்கும்போது, நீங்கள் வீட்டில் இருப்பதைப் போன்று உணர்வீர்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த ஒருவரை நீங்கள் சந்திக்கும்போது, அந்த நபரைக் காண்பதில் நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள். முன்னர் உங்களுக்கு இருந்த உறவுமுறைகள் அனைத்தும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். அவை நிஜமானவை அல்ல. ஆனால், நீங்கள் இப்போது உங்களின் குடும்பத்தையும் உங்களின் இனிய இல்லத்தையும் வந்தடைந்துள்ளீர்கள். ‘நீங்கள் வந்திருப்பது நல்லதே’ என பாப்தாதாவும் உங்களை வரவேற்கிறார்.
திடசங்கற்பம் வெற்றியை ஏற்படுத்துகிறது. ஏதாவது நிகழுமா இல்லையா என நீங்கள் நினைக்கும்போது, அங்கு வெற்றி ஏற்படமாட்டாது. எங்கு திடசங்கற்பம் உள்ளதோ, அங்கு வெற்றிக்கு ஏற்கனவே உத்தரவாதம் உள்ளது. சேவையில் ஒருபோதும் மனவிரக்தி அடையாதீர்கள். இது அழியாத தந்தையின் அழியாத பணி ஆகும். எனவே, வெற்றியும் அழியாதது ஆகும். சேவையில் பலன் ஏற்படாமல் போவதற்கான சாத்தியம் இல்லை. சில பழங்கள் அந்த வேளையில் தோன்றுகின்றன. சில பழங்கள் சிறிது காலத்தின் பின்னர் தோன்றுகின்றன. எனவே, அந்த எண்ணத்தை ஒருபோதும் வைத்திருக்காதீர்கள். சேவை இடம்பெற வேண்டும் என்றே எப்போதும் நினையுங்கள்.
பாப்தாதா ஜப்பானைச் சேர்ந்த ஒரு குழுவைச் சந்திக்கிறார்:
நீங்கள் தந்தையிடமிருந்து சகல பொக்கிஷங்களையும் பெறுகிறீர்களா? நீங்கள் நிரம்பியிருக்கும் ஆத்மாக்களாக உங்களை அனுபவம் செய்கிறீர்களா? இந்தப் பொக்கிஷங்கள் ஒரு பிறவிக்கு மட்டுமன்றி, 21 பிறவிகளுக்குத் தொடரும். இன்றைய உலகில் ஒருவர் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், உங்களிடம் உள்ள பொக்கிஷங்கள் எவரிடமும் இல்லை. எனவே, நிஜத்தில் யார் உண்மையான விஐபி கள்? நீங்களே அத்தகையவர்கள், அல்லவா? அவர்களுக்கு இன்று அந்தப் பதவி உள்ளது. நாளை அது இல்லாமல் போகிறது. எவராலும் உங்களின் இறை பதவியைப் பறிக்க முடியாது. நீங்கள் தந்தையின் இல்லத்தின் அலங்காரமான குழந்தைகள் ஆவீர்கள். வீட்டை மலர்களால் அலங்கரிப்பதைப் போன்று, நீங்கள் தந்தையின் வீட்டின் அலங்காரங்கள் ஆவீர்கள். எனவே, எப்போதும் உங்களைத் தந்தையின் அலங்காரங்கள் ஆகக்கருதி, மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். பலவீனமான விடயங்களை ஒருபோதும் நினைக்காதீர்கள். கடந்த காலத்தின் விடயங்களை நினைவு செய்வதன் மூலம் அதிகளவு பலவீனமே உங்களுக்குள் விருத்தியாகும். நீங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நினைத்தால், அழுதுகொண்டே இருப்பீர்கள். ஆகவே, கடந்தகாலம் என்றால் ‘முடிவடைந்துவிட்டது’ என்று அர்த்தம். தந்தையின் நினைவானது உங்களைச் சக்திசாலி ஆத்மாக்கள் ஆக்குகிறது. சக்திசாலி ஆத்மாக்களுக்கு, முயற்சி அன்பாக மாறுகிறது. நீங்கள் மற்றவர்களுக்கு ஞானப்பொக்கிஷங்களைக் கொடுக்கும் அளவிற்கு, விரிவாக்கமும் இடம்பெறும். தைரியத்துடனும் உற்சாகத்துடனும், சதா தொடர்ந்து முன்னேறுங்கள்.
அவ்யக்த மேன்மையான வாசகங்கள் - சகல ஆசைகளையும் அறியாதவர் ஆகுங்கள்.
ஒரு பிராமணரின் இறுதியான, முழுமையான ரூபத்தின் வரைவிலக்கணம், சகல ஆசைகளையும் அறியாதவர் என்பதே ஆகும். நீங்கள் இந்த ஸ்திதியை அடையும்போது, வெற்றி முழக்கங்களும் துன்ப அழுகுரல்களும் கேட்கும். இதற்கு, நீங்கள் மனநிறைவானதோர் ஆத்மா ஆகவேண்டும். நீங்கள் எந்தளவிற்கு மனநிறைவை அடைகிறீர்களோ, அதற்கேற்ப சகல ஆசைகளையும் அறியாதவர் ஆகுவீர்கள். பாப்தாதாவிற்குத் தனது செயல்களின் பலன்களில் எந்தவிதமான ஆசையும் ஒருபோதும் இல்லாததைப் போன்று, நீங்கள் உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் செயலிலும் தந்தையின் நினைவுடன் இருக்கிறீர்கள். உங்களுடைய எண்ணங்களிலேனும் அவற்றின் பலனுக்கான ஆசை ஒருபோதும் இருக்கக்கூடாது. ஆகவே, தந்தையைப் பின்பற்றுங்கள். குழந்தைகளே, உங்களின் செயல்களுக்கான காய்க்கான ஆசை உங்களுக்கு இருக்கக்கூடாது. ஏதாவது பழத்திற்கு சூட்சுமமான ஆசை இருக்கும்போது, நீங்கள் அதைப் பெற்றவுடனேயே அந்தப் பழத்தை உண்பதைப் போன்றே இருக்கும். எந்தவிதப் பழமும் புலப்படாது. ஆகவே, பலனுக்கான எந்தவிதமான ஆசையையும் விட்டு, முற்றிலும் சகல ஆசைகளும் அறியாதவர் ஆகுங்கள்.
பல்வகைத் துன்பங்களின் நீண்டதொரு பட்டியல் காணப்படுவதைப் போன்று, பலனுக்கும் பல்வேறு ஆசைகள் உள்ளன. அல்லது பதில் கிடைக்க வேண்டும் என்ற சூட்சுமமான எண்ணங்கள் உங்களுக்குள் ஏற்படுகின்றன. அவ்வாறாயின், உங்களால் சுயநலமற்ற மனோபாவத்தைக் கொண்டிருக்க முடியாது. முயற்சியின் வெகுமதியை அறிந்திருந்தாலும், நீங்கள் அதில் எந்தவிதமான பற்றும் வைக்கக்கூடாது. உங்களைப் புகழும் ஒருவரிடம் நீங்கள் விசேட கவனம் செலுத்தினால், அதுவும் சூட்சுமமான முறையில் பலனை ஏற்றுக் கொள்வதைப் போன்றதாகும். ஒரு மேன்மையான செயலைச் செய்வதன் மூலம், அதற்குப் பலனாக நீங்கள் நூறு மடங்கு பலனைப் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் தற்காலிக மற்றும் எல்லைக்குட்பட்ட ஆசைகளை அறியாதவராக இருக்க வேண்டும். ஆசையானது சகல நல்ல செயல்களையும் முடித்துவிடுகிறது. ஆசை சகல சுத்தத்தையும் முடித்துவிடுகிறது. சுத்தத்திற்குப் பதிலாக, நீங்கள் அனைத்தைப் பற்றியும் அதிகளவில் சிந்திப்பவர் ஆகுகிறீர்கள். எனவே, நீங்கள் ஆசை என்ற அறிவே அறியாதவர்கள் ஆகவேண்டும்.
தந்தை எவ்வாறு தனக்குரிய நேரத்தையும் சேவைக்காகக் கொடுத்தார் என்பதை நீங்கள் கண்டீர்கள். அவர் பணிவாக இருந்தார். குழந்தைகளுக்கு மரியாதை கொடுத்தார். அவர் எப்போதும் குழந்தைகளை முன்னணியில் வைத்தார். குழந்தைகளின் பெயரைப் புகழடையச் செய்தார். ஆனால் அனைத்தையும் அவரே செய்தார். அவர் செய்த எந்தப் பணிக்கும் உரிய புகழில் தனது பெயர் இருப்பதைத் துறந்தார். அவர் குழந்தைகளை அதிபதிகளாக வைத்து, அவர்களுக்குச் சேவை செய்தார். ஒரு அதிபதியாக எந்தவிதமான மதிப்பையும் பெருமையையும் புகழையும் அவர் தனக்கென எடுத்துக் கொள்ளவில்லை. அவர் ஒருபோதும் தனது பெயரைப் போற்றவில்லை. ஆனால், எப்போதும் ‘எனது குழந்தைகள்!’ என்றே கூறினார். ஆகவே, தந்தை தனது பெருமையையும் மரியாதையையும் மதிப்பையும் துறந்ததைப் போன்று, நீங்கள் தந்தையைப் பின்பற்றுங்கள். நீங்கள் இப்போது ஏதாவது சேவை செய்து, அதேவேளை அதன் பலனையும் ஏற்றுக் கொண்டால், உங்களால் எதையும் சேமிக்க முடியாது. அது ஒரே வேளையில் சம்பாதிப்பதும் செலவழிப்பதையும் போன்றே இருக்கும். அப்போது உங்களிடம் எந்தவிதமான அகசக்தியும் இருக்காது. அகத்தே நீங்கள் பலவீனமாக இருப்பீர்கள். நீங்கள் சக்திசாலிகளாக இருக்கமாட்டீர்கள். ஆனால் உள்ளே வெறுமையாக உணர்வீர்கள். நீங்கள் இதை நிறுத்தினால், இயல்பாகவே உங்களால் அசரீரியான, அகங்காரமற்ற, விகாரமற்ற ஸ்திதியை அடையமுடியும். குழந்தைகளே, எந்தளவிற்கு நீங்கள் ஆசைகள் அனைத்தில் இருந்தும் பற்றற்றவராக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் ஆசைகள் அனைத்தும் இலகுவில் பூர்த்தியாகும். சௌகரியங்களைக் கேட்காதீர்கள். ஆனால், ஓர் அருள்பவராகி, உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுங்கள். ஆமாம், உங்களின் சௌகரியங்களின் அடிப்படையில், நீங்கள் உங்களின் சொந்த முன்னேற்றத்திற்கு எதையாவது பெறுவீர்கள். அல்லது சேவையில் ஏதாவது தற்காலிக வெற்றியைப் பெறுவீர்கள். எவ்வாறாயினும், இன்று, நீங்கள் நன்றாக இருப்பீர்கள். ஆனால் நாளை, மகத்துவத்திற்குத் தாகம் உள்ள ஓர் ஆத்மாவாகி, சதா ஏதாவதொரு பேற்றுக்கான ஆசையுடன் இருப்பீர்கள்.
நியாயம் கேட்கும் ஒருவர் ஆகாதீர்கள். நீங்கள் எதையாவது கேட்கும்போதெல்லாம், உங்களால் முழுமையாகத் திருப்தியான, மனநிறைவுள்ள ஆத்மாவாக அனுபவம் செய்ய முடியாது. மகாதானி ஒருவர், எந்தவிதமான ஆசையையும் கொண்டிருக்க முடியாது. அல்லது ஒரு சதத்தையேனும் ஒரு யாசகர் போன்று யாசிக்க முடியாது. ‘இவர் மாறவேண்டும், இவர் எதையாவது செய்ய வேண்டும், இவர் ஒத்துழைக்க வேண்டும், இவர் முன்னேற வேண்டும்’ என்ற வடிவில் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்றால், ஒரு யாசகரைப் போன்று எதையாவது வேண்டுதல் என்று அர்த்தம். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள், ஒத்துழைக்கும் சகோதரர்கள் அல்லது சகோதரிகள், புரிந்து கொள்ளாத காரணத்தால் அல்லது சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தால், தற்காலிகமான ஒன்றை நிரந்தரமான பேறாகக் கருதி, பெயர், மதிப்பு, கௌரவம் அல்லது தற்காலிகப் பேற்றுக்கான ஆசையைக் கொண்டிருந்தால், பணிவானவராகி அவருக்கு மரியாதை வழங்குங்கள். இவ்வாறு வழங்குதல், எல்லா வேளைக்கும் பெறுகின்ற வடிவம் ஆகுகிறது. மற்றவர்களுக்கு வசதிகளைக் கொடுப்பதற்கு முன்னர், அவர்களிடமிருந்து வசதிகளைப் பெறுகின்ற எண்ணத்தை ஒருபோதும் கொண்டிராதீர்கள். இந்தத் தற்காலிக ஆசையைப் பொறுத்தவரை யாசகர் (வைத்திருக்காதவர்) ஆகுங்கள். பழைய உலகத்தின்மீது சிறிதளவு ஆர்வமும் இருக்காதவரை, இந்த உலகை உருசியற்றதாக அனுபவம் செய்யாதவரை, அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டார்கள் என உங்களின் புத்தி உணராதவரை, நீங்கள் ஏதாவதொரு வடிவில் பேறுகளுக்கான ஆசையைக் கொண்டிருத்தல் சாத்தியமே. எவ்வாறாயினும், சதா ஒரேயொருவரின் இனிமையில் மூழ்கியிருப்பவர்கள் நிலையான, ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒரு பிரேதத்தில் இருந்து எதையும் அடைய விரும்ப மாட்டார்கள். எந்தவிதமான அழியும் இனிமையும் அவர்களைக் கவராது.
ஏதாவதொரு ஆசை, நீங்கள் எதையாவது முகங்கொடுப்பதைத் தடுக்கும். உங்களின் பெயரைப் பெருமைப்படுத்தும் ஆசையை நீங்கள் கொண்டிருக்கும்வரை, அல்லது நீங்கள் ‘இன்னார்’ என எண்ணி, ஏன் உங்களிடம் எவரும் அறிவுரை பெறவில்லை அல்லது உங்களின் அபிப்பிராயங்களுக்கு ஏன் மதிப்பில்லை என உணரும்போது, சேவையில் தடைகள் ஏற்படும். ஆகவே, மரியாதைக்கான எந்தவிதமான ஆசையையும் துறந்து, உங்களின் சுயமரியாதையில் ஸ்திரமாக இருங்கள். பின்னர், மரியாதை உங்களை நிழல் போன்று தொடரும்.
குழந்தைகள் பலர் மிக நல்ல முயற்சியாளர்களாக இருக்கிறார்கள். ஆனால், உங்களில் சிலர் நல்ல முயற்சி செய்தபின்னர், இங்கு, இப்போதே நீங்கள் வெகுமதி வேண்டும் என விரும்புகிறீர்கள். உங்களின் பலன் அனைத்தையும் இங்கேயே அனுபவம் செய்யும் ஆசையானது சேமிப்பதில் இருந்து உங்களைத் தடுக்கிறது. ஆகவே, எந்தவிதமான வெகுமதிக்குமான ஆசையை முடித்து, நல்ல முயற்சியைச் செய்யுங்கள். ‘ஆசை’ என்ற வார்த்தைக்குப் பதிலாக, ‘நல்லது’ என்ற வார்த்தையை நினையுங்கள்.
சகல ஆசைகளையும் அறியாதவராக இருக்கும் உங்களின் ஸ்திதியே, உங்களின் பக்த ஆத்மாக்கள் சகல பேறுகளையும் பெறச் செய்வதன் அடிப்படை ஆகும். நீங்கள் முற்றிலும் ஆசைகளே அறியாதவர்கள் ஆகும்போது மட்டுமே, உங்களால்; ஏனைய பல ஆத்மாக்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியும். உங்களுக்காக எந்தவித ஆசைகளையும் கொண்டிராதீர்கள். ஆனால், மற்றவர்களின் ஆசைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது எனச் சிந்தித்துப் பாருங்கள். அப்போது, நீங்கள் இயல்பாகவே நிரம்பியவர்கள் ஆகுவீர்கள். இப்போது, உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரினதும் வெவ்வேறு ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். உங்களைச் சகல ஆசைகளையும் அறியாதவர் ஆக்குவதெனில், மற்றவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்தல் என்று அர்த்தம். எவ்வாறு வழங்குதல், பெறுவதாக இருக்கிறதோ, அவ்வாறே, மற்றவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்தல் என்றால் தன்னையே நிரம்பியவர் ஆக்குதல் என்று அர்த்தம். அனைவரின் ஆசைகளும் பூர்த்தியாக்கக்கூடிய ரூபம் ஆகும் இலக்கை எப்போதும் கொண்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இக்கட்டான சூழ்நிலைகளைப் பக்கக்காட்சிகளாகக் கருதுவதன் மூலம், நினைவின் சொரூபமாக இருக்கும் சக்திசாலி ஆத்மா ஆகுவீர்களாக.
நினைவின் சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்கள் சக்திசாலிகளாக இருப்பதனால், அவர்கள் இக்கட்டான சூழ்நிலைகளையும் விளையாட்டாகவே கருதுவார்கள். சூழ்நிலைகள் எத்தனை பெரியதாக இருந்தாலும், அவை அனைத்தும் சக்திசாலி ஆத்மாக்கள் தமது இலக்கை அடையும் பாதையில் உள்ள பக்கக்காட்சிகளே ஆகும். மக்கள் இவ்வாறான காட்சிகளைச் சென்று பார்ப்பதற்குப் பணம் செலவழிக்கின்றார்கள். நினைவின் சொரூபங்களாக இருக்கும் சக்திசாலி ஆத்மாக்களுக்கு, நீங்கள் அதை இக்கட்டான சூழ்நிலை, பரீட்சை அல்லது தடை என அழைத்தாலும், அவை அனைத்தும் பக்கக்காட்சிகளே ஆகும். எனவே, உங்களின் இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் அந்தக் காட்சிகள் எண்ணற்ற தடவைகள் குறுக்கே வந்துள்ளன, எதுவும் புதியதல்ல என்பதை உணர்ந்தவராக இருங்கள்.
சுலோகம்:
மற்றவர்களைத் திருத்துவதற்குப் பதிலாக, தந்தையுடன் இணைப்பை ஏற்படுத்துங்கள். நீங்கள் தொடர்ந்து ஆசீர்வாதங்களை அனுபவம் செய்வீர்கள்.விசேட குறிப்பு:
இன்று மாலை இந்த மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆகும். எனவே, சகல சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை விசேடமான ஒன்றுதிரட்டிய தியானத்தில் அமர்ந்து உலகிற்குச் சகல சக்திகளின் கதிர்களையும் பரப்ப வேண்டும். இந்த சுயமரியாதைக் குறிப்பை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள்: மாஸ்ரர் சர்வசக்திவான் ஆத்மாவான நான், இயற்கையின் சகல கூறுகளும் உட்பட சகல ஆத்மாக்களுக்கும் சகல சக்திகளையும் தானம் செய்கிறேன்.