15/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் புத்தி எல்லையற்ற சேவைக்காக வேலை செய்ய வேண்டும். தொலைவிலிருந்து பார்க்கும் பொழுது பிரகாசமாகத் தெரியும் வகையில் ரேடியம் முட்களைக் கொண்ட ஒரு பெரிய கடிகாரத்தை உருவாக்குங்கள்.
கேள்வி:
சேவையை அதிகரிப்பதற்கு நீங்கள்; பயன்படுத்த வேண்டிய வழிமுறை என்ன?
பதில்:
திறமையான மகாராத்திக் குழந்தைகளை உங்கள் நிலையத்திற்கு வரவழையுங்கள். மகாராத்திக் குழந்தைகள் தொடர்ந்தும் சுற்றுப் பயணம் செய்;யும் பொழுது சேவை வளரும். நீங்கள் இவ்வாறு செய்தால் உங்கள் மரியாதை குறைந்துவிடும் என்று நீங்கள் எண்ணக்கூடாது. குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் சரீர உணர்வுடையவர்கள் ஆகக்கூடாது. மகாராத்திகளின் மீது அதிகளவு மரியாதையைக் கொண்டிருங்கள்.
பாடல்:
இந்நேரம் கடந்து செல்கிறது....
ஓம் சாந்தி.
‘கடிகாரம்’ என்ற வார்த்தையைக் கேட்ட பொழுது, நான் எல்லையற்ற கடிகாரத்தை நினைவு செய்தேன். இது ஓர் எல்லையற்ற கடிகாரம். இவை அனைத்தும் புரிந்து கொள்வதற்கு உங்கள் புத்தியைப் பயன்படுத்துவதற்கான ஒரு விடயமாகும். அக்கடிகாரத்திற்கு ஒரு பெரிய முள்ளும்;, ஒரு சிறிய முள்ளும் உள்ளன. விநாடிகளுக்கான பெரிய முள் தொடர்ந்தும் நகர்ந்து செல்கின்றது. இப்பொழுது நள்ளிரவு, அதாவது, இரவு முடிவடைந்து பகல் ஆரம்பமாகிறது என்பது அர்த்தமாகும். ஆகவே, நீங்கள் இந்த எல்லையற்ற கடிகாரத்தை எவ்வளவு பெரிதாக உருவாக்க வேண்டும்? நீங்கள் அவற்றின் முட்களை ரேடியத்தினால் உருவாக்குவதனால் அவை தொலைவில் இருந்து பார்க்கையில், பிரகாசமாகத் தெரியும். கடிகாரமே விளங்கப்படுத்துகின்றது. புதிதாக ஒருவர் வரும்பொழுது, அவரை வந்து அக் கடிகாரத்தைப் பார்க்க அனுமதியுங்கள். கடிகார முள் இப்பொழுது உண்மையிலேயே முடிவை அடைந்துள்ளதால், அதனைப் பார்க்கும் அனைவரும், விநாசம் நிச்சயமாக இடம்பெறவுள்ளது என்பதையும், சத்தியயுகம் மீண்டும் வரும் என்பதையும் புரிந்து கொள்ள முடியும் எனப் புத்தி கூறுகின்றது. சத்தியயுகத்தில் மிகச்சொற்ப ஆத்மாக்களே இருப்பதால், ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் நிச்சயமாக வீட்டிற்;குத் திரும்பிச் செல்வார்கள். படங்கள் மூலம் புரிந்து கொள்வது மிகவும் இலகுவானதாகும். எவராவது இவ்வாறானதொரு கடிகாரத்தைத் தயாரித்தால், தங்கள் வீட்டில் வைத்திருப்பதற்குப் பலரும் இக் கடிகாரத்தை வாங்குவார்கள். இக்கலியுக உலகம் சீரழிந்துள்ளது என்று நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பல சமயங்கள் உள்ளன. விநாசம் முன்னால் உள்ளது. இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். இப்பொழுது, இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு தங்கள் சத்தியயுக இராச்சியத்தைப் பெற்றனர்? நிச்சயமாக அவர்கள் அதனைத் தந்தையிடமிருந்து பெற்றிருக்;க வேண்டும். சங்கமயுகத்தில் தூய்மையாக்குபவர் தூய்மையற்ற உலகிற்கு வருகிறார். தந்தை தூய உலகிற்கு வரவேண்டியதில்லை. இது சக்கரத்தின் விளக்கத்தில் உள்ள ஒரு முதற்தரமான விடயமாகும், இதனை எவருக்கும் விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். அதிகளவு பணம் இருப்பவர்கள், உடனடியாகவே இப்படங்களைத் தயாரிக்குமாறு ஓர் ஓவியருக்கு விரைவில் கூற வேண்டும். எந்த அரசாங்கப் பணியும் அவ்வாறே இடம்பெறுகின்றன ஆனால் இங்கோ, சிலர் அரிதாகவே அத்தகைய பணிகளைச் செய்கின்றார்கள். ஒரு மிகச்சிறந்த ஓவியர் இப்படங்களுக்கு நன்றாக வர்ணம் தீட்டினால், அவை மிகவும் அழகாகத் தெரியும். இந்நாட்களில், கலைக்கு அதிகளவு மரியாதை உள்ளது. அவர்கள் நடனக்கலையில் அதிகளவு ஈடுபடுகின்றார்கள். முன்னர், அத்தகைய நடனம் இருந்ததாக அவர்கள் நம்புகின்றனர், ஆனால் அவ்வாறு அது இருக்கவில்லை. ஆகவே, நீங்கள் இந்த எல்லையற்ற கடிகாரங்ளை உடனடியாகத் தயாரிப்பதனால், மக்களால் மிகத்தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். நிறமும் சிறப்பாக இருக்க வேண்டும். அப்பொழுது அது சதா பிரகாசிக்கும்;. மனிதர்கள் எவரும் தூய்மையாக்குபவராக இருக்க முடியாது. மனிதர்கள் தூய்மையற்றவர்கள். இதனாலேயே அவர்கள் கூவி அழைக்கின்றனர். சுவர்க்கமே தூய உலகமாகும். கிருஷ்ணரே அவலட்சணமானவராகிப் பின்னர் அழகானவர் ஆகுபவர் என்பதை மக்கள் அறியார்கள். இதனாலேயே அவர் அவலட்சணமானவரும், அழகானவரும் என அழைக்கப்படுகிறார். முன்னர், நாங்களும் இதனைப் புரிந்து கொள்ளவில்லை. காமச்சிதையில் அமர்வதால், நாங்கள் நிச்சயமாக அவலட்சணமானவர்கள் ஆகுகிறோம்., அதாவது, ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள் என்பது இப்பொழுது எங்கள் புத்தியில் உள்ளது. பரமாத்மாவாகிய பரமதந்தை, உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார் எனவும், இராவணன் உங்களைச் சபிக்கிறான் எனவும் நீங்கள் தெளிவாக எழுத வேண்டும். எவ்வாறாயினும், திரேதா யுகத்து, இராகவ குலத்தின் அரசர் இராமரை நோக்கியே மக்களி;ன் புத்தி செல்கிறது, ஆனால் பரமாத்மாவாகிய பரமதந்தையே இராமர் ஆவார். இந்நாட்களில் ஒவ்வொருவரும் தங்களைக் கடவுள் என்று அழைப்பதால், நீங்கள் இப்படங்களை உருவாக்குவதற்கு உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். ஒரேயொரு தந்தையே உள்ளார் என்றும், ஆத்மாக்கள் அனைவரும் பரந்தாமத்திற்குச் சென்று அங்கு பரமாத்மாவுடன் வசிப்பார்கள் என்றும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அப்பொழுது, தந்தை பிரம்மாந்தத்தின் (ஒளித் தத்துவம்) அதிபதியாக இருப்பதுடன், ஆத்மாக்களாகிய நாங்களும் பிரம்மாந்தத்தின் அதிபதிகளாக இருக்கிறோம். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். வேறு எந்த அரசராலும், அவர் எந்தளவு மகத்துவமானவராக இருந்;தாலும், அவரால் உலக அதிபதியாக இருக்கிறார் எனக் கூற முடியாது. தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். ஆகவே, நீங்கள் அத்தகைய தாயும் தந்தையுமானவருக்கு உங்களை அர்ப்பணம் செய்ய வேண்டும். அவரின் ஸ்ரீமத் மிகவும் பிரபல்யமானது. அதனைப் படிப்படியாகப் பின்பற்றுவதன் மூலம், இறுதியில் உங்களால் அதனை முழுமையாகப் பின்பற்ற முடியும். தற்பொழுது நீங்கள் அதனை முழுமையாகப் பின்பற்றினால், நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் அதிகளவு பிரயத்;தனம் செய்ய வேண்டும்! யாகம் நீடிக்கும் வரை உங்கள் முயற்சிகள் தொடரும். இது உருத்திர ஞான யாகமாகும். அமைதியை அடைவதற்காக மக்களும் உருத்திர யாகங்களை வளர்க்கின்றார்கள். எவ்வாறாயினும், அவற்றால் அமைதி ஏற்பட முடியாது. முழு உலகின் ஆகுதிகளும் அர்ப்பணிக்கப்படுகின்ற, தந்தையினால் உருவாக்கப்பட்டுள்ள ஒரேயொரு யாகமே உள்ளது, அதனூடாக நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியை அடைகிறீர்கள். அவர்கள் பல வகையான யாகங்களை வளர்;க்கின்றார்கள், இருப்பினும், அவற்றில் ஒரு நன்மையும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் அகிம்சாவாதிகள். தூய்மையாகாது எவராலும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. இதுவே இறுதிக் காலம் ஆகும். இதுவே இராவணனின் சீரழிந்த உலகமாகிய, தூய்மையற்ற உலகம் என நீங்கள் எழுத வேண்டும். இங்கு 100வீதம் தூய்மையின்மை, அமைதியின்மை, துன்பம், நோய்கள் என்பன நிலவுகின்றன, ஆனால் சத்தியயுகத்தில் அனைவரும் மேன்மையானவர்கள். அங்கு 100வீதம் தூய்மையும், சந்தோஷமும், அமைதியும் இருப்பதுடன், அனைவரும் நோய்களிலிருந்து விடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். அது இராவணனின் சாபமும், இது சிவபாபாவிடமிருந்தான ஆஸ்தியுமாகும். எக்காலத்திலிருந்து எக்காலம் வரை பாரதம் மேன்மையாக இருந்தது, பின்னர் எக்காலத்திலிருந்து எக்காலம் வரை அது சீரழிந்தது ஆகியது என்று உங்களின் புத்தகங்கள் முழுமையாக விளங்கப்படுத்த வேண்டும். எவரும் பார்த்தவுடனேயே இவ்விடயங்களை எளிதாகப் புரிந்து கொள்ளக்;கூடியவகையில் புத்தகங்கள் இருக்க வேண்டும். ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதனால், உங்கள் புத்தியின் போதை உயரும். இவ்வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதனால், இப்பயிற்சியை நீங்கள் விருத்தி செய்வீர்கள். மக்கள் எட்டு மணித்தியாலங்களுக்கு வேலைக்குச் செல்கின்றார்கள், ஆகவே நீங்களும் இச்சேவையை எட்டு மணித்தியாலங்களுக்குச் செய்ய வேண்டும். நிலையங்களில் வசிக்கும் புத்திரிகளும் வரிசைக்கிரமமானவர்கள். சிலருக்குச் சேவை செய்வதில் அதிகளவு ஆர்வம் இருக்கிறது - அவர்கள் சதா எங்கும் ஓடிச் செல்கின்றார்கள், ஆனால் ஏனையோரோ சௌகரியமாக ஓரிடத்தில் அமர்ந்திருக்கின்றார்கள். அத்தகைய ஆத்மாக்களைச் சகலதுறை வல்லுனர்கள் என்று அழைக்க முடியாது. அவர்கள் மகாராத்திகளைப் பற்றி அதிகளவு சிந்திக்காததால் சேவை பின்னடைகின்றது. பலருக்கும் தங்களைப் பற்றி அதிகளவு அகங்காரம் உள்ளது. மக்கள் தங்களுக்கு அதிகளவு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், வேறு எவராவது தங்கள் நிலையத்திற்கு வந்தால் தங்கள் மரியாதை குறைந்துவிடும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். வருகின்ற மகாராத்திகள் தங்களுக்கு உதவி செய்வார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தங்களைப் பற்றி அகங்காரம் கொள்கிறார்கள்; அத்தகைய மூடர்களும் உள்ளனர். தந்தை கூறுகின்றார்: பிரபுவும் அதிபதியுமானவரும் ஒரு நேர்மையான இதயத்தின் மூலம் பூரிப்படைகின்றார். பாபா தொடர்ந்தும் செய்திகள் அனைத்;தையும் பெறுவதுடன், அவரால் ஒவ்வொருவருடைய நாடித் துடிப்பையும் அறிந்து கொள்ள முடியும். இந்த பாபாவும் அனுபவசாலியாவார். சக்கரத்தின் விளக்கம் மிகவும் சிறந்தது. நீங்கள் உங்களுடைய இவ் விளக்கத்தைக் கொடுக்கும் பொழுது, சேவை மிகவும் வேகமாகவும், மகத்தாகவும் இடம்பெறும். தற்;பொழுது, சேவை ஓர் எறும்பு ஊர்கின்ற வேகத்திலேயே இடம்பெறுகின்றது. நீங்கள் சரீர உணர்வில் இருப்பதால், உங்கள் புத்தி நன்றாகச் செயற்படுவதில்லை. நீங்கள் இப்பொழுது விரைவாகச் சேவை செய்ய வேண்டும். சேவாதாரிக் குழந்தைகளின் புத்தியானது என்ன உருவாக்கப்;பட வேண்டும் என்பதில் தொடர்ந்தும் வேலை செய்கின்றது. படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். இது இப்பொழுது கலியுகமாகும், சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படுகிறது. தந்தையே அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்பவர். அங்கு சந்தோஷம் இருக்கிறது, ஆனால் இங்கோ துன்பம் உள்ளதுடன், அனைவரும் தூய்மையற்றவர்களாகவும் உள்ளனர். தூய்மையற்ற மனிதர்களால் எவருக்கும் முக்தியையோ அல்லது ஜீவன்முக்தியையோ அருள முடியாது. அந்தக் குருமார் அனைவரும் உங்களுக்குப் பக்தி மார்க்கத்திற்குரிய செயற்பாடுகளையே கற்பிக்கிறார்கள். குருமார் அனைவரும் பக்தி மார்க்கத்திற்;குரியவர்கள். ஞான மார்க்கத்தில் குருமார்கள் எவரும் இருப்பதில்லை. இங்கு, நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவது ஒரு மந்திரவித்தையின் விளையாட்டாகும், இதனாலேயே, அவர் மந்திரவாதி என்று அழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை மந்திரவாதி என்று அழைக்க முடியாது. தந்தையே கிருஷ்ணரை அவலட்சணமானவரில் இருந்து அழகானவர் ஆக்குபவர். இதனை விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்கு அதிகளவு போதை தேவை ஆகும். நீங்கள் சேவை செய்வதற்கு வெளியே செல்ல வேண்டும். ஏழைகள் இந்த ஞானத்தை மிகவும் நன்றாகப் பெறுகின்றார்கள். செல்வந்தர்களுக்குக் குறைந்தளவு நம்பிக்கையே உள்ளது. நூறு ஏழைகளுக்கு மத்தியில், அநேகமாக ஓரிரு செல்வந்தர்களும், ஐந்து அல்லது ஏழு சாதாரணமானவர்களுமே வெளிப்படுவார்கள். அனைத்தும் இவ்வாறே தொடர்கிறது. செல்வத்தைப் பற்றி அதிகளவு அக்கறை இருக்க மாட்டாது. அரசாங்கம் எவ்வளவு போர்த் தளபாடங்களை உருவாக்குகின்றது என்று பாருங்கள். இரு பகுதியினரும் விநாசம் இடம்பெறும் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்; நாங்கள் விநாசத்தை ஏற்படுத்துவோம். அப்பொழுது வேட்டைக்காரர் ஆகுபவர் யார்? இரண்டு பூனைகள் வெண்ணெய்க்காகச் சண்டையிட, அவற்றின் மத்தியிலுள்ள குரங்கு அதனைப் பெறுவதாக ஒரு கதை உள்ளது. கிருஷ்ணர் அவரின் வாயில் வெண்ணெயுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். அந்த வெண்ணெய் சுவர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அரிதாக எவரும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்கின்றார்கள், இங்கு 20 முதல் 25 வருடங்களாக இருப்பவர்களும் எதனையும் புரிந்து கொள்வதில்லை. பாபா பத்தியை உருவாக்கிய பொழுது, பலர் வந்தார்கள், பலர் நீங்கிச் சென்று விட்டனர். அவ்வாறிருப்பினும், பலர் தொடர்ந்தும் இங்கிருந்தனர். நாடகத்தின் முன்னைய கல்பத்திலும் இதேவிடயமே நடைபெற்றது. இப்பொழுதும் அதேவிடயமே நடைபெறுகிறது. படங்கள் எவ்வளவு பெரிதாகச் செய்யப்படுகின்றனவோ, அந்தளவிற்கு ஏனையோருக்கு விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கிறது. இலக்ஷ்மி நாராயணனின் படம் மிகவும் அத்தியாவசியமானது. விருட்சத்தின் படத்திலிருந்து பக்தி மார்க்கம் எப்பொழுது ஆரம்பித்தது என்பது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. முதல் இரண்டு யுகங்களும் பிரம்மாவின் பகலையும், மற்றைய இரண்டு யுகங்களும் பிரம்மாவின் இரவையும் குறிக்கின்றன. மனிதர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை, பின்னர் அவர்கள் பிரம்மா, சூட்சும உலகில் இருப்பதாகக் கூறுகிறார்கள். மனித குலத்தின் தந்தை நிச்சயமாக இங்கேயே இருப்பார். இவை சமயநூல்களிலும் கண்டுகொள்ள முடியாத ஆழமான விடயங்கள். மனிதர்கள் பார்க்கும் படங்கள் அனைத்தும் பிழையானது, அவர்கள் செவிமடுத்து வருகின்ற ஞானமும் பிழையானது. பிரம்மா பல கரங்களுடன் சித்தரிக்கப்;பட்டுள்ளார். அச்சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்;கு உரியவை. அது எப்பொழுது ஆரம்பித்தது என்பதை உலகில் உள்ள எவரும் அறியார். பக்தி செய்யாமல் கடவுளைச் சந்திப்பது அசாத்தியம் என மனிதர்கள் நம்புவதனால் அவர்கள் அதிகளவு பக்தி செய்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் முற்றி;லும் சீரழிந்தவர்கள் ஆகியுள்ள பொழுதே, உங்களால் கடவுளைச் சந்திக்க முடியும். அவர் உங்களுக்குச் சற்கதியை அருளவும் முடியும். நீங்கள் மாத்திரமே இக் கணக்கை அறிவீர்கள். அரைக் கல்பத்தின் பின்னரே பக்தி ஆரம்பிக்கிறது. தந்தை கூறுகின்றார்: வேதங்கள், உபநிடதங்கள், யாகங்கள், தபஸ்யா போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்;கு உரியவையாகும். அவை அனைத்தும் முடிவடையப் போகிறது. அனைவரும் அவலட்சணமானவர்கள் ஆகவேண்டும். தந்தை வந்து உங்களை அழகானவர்கள் ஆக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்தினதும் சங்கமத்தில் வருகிறேன், ஒவ்வொரு யுகத்திலும் அல்ல. அவர்கள் எனது அவதாரத்தை ஒரு முதலை, மீன் போன்றவற்றில் காட்டுகின்றனர். அவை கடவுளின் அவதாரங்களாக இருந்தால், அவரால் எவ்வாறு கூழாங்கற்களிலும், கற்களிலும் இருக்க முடியும்? மனிதர்கள் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டனர்! தந்தை வந்து, உங்களை மிகவும் விவேகிகள் ஆக்கியுள்ளார்;. பரமாத்மாவாகிய பரமதந்தை எவ்வாறு ஞானக்கடலாகவும், தூய்மைக்கடலாகவும் இருக்கிறார் என்னும் அவரது புகழை நீங்கள் பாட வேண்டும். இது கிருஷ்ணரின் புகழாக இருக்க முடியாது. கிருஷ்ணரின் பக்தர்கள் கிருஷ்ணரைச் சர்வவியாபி என்று கூறுகின்றனர். அவர்கள் அவரை அதிகளவு பற்றிக் கொண்டுள்ளனர்! நீங்கள் அவர்களை அதிலிருந்து விடுவித்து, அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதால், எவ்வாறு அவர்கள் அனைவரும் தந்தையாக இருக்க முடியும்? அவ்வாறாயின், நீங்கள் யாரை நினைவு செய்வீர்கள்? குழந்தைகள், தந்தையாகிய கடவுளை நினைவு செய்கிறார்;கள். இதனை விளங்கப்படுத்துபவர்களுக்கு ஓர் எல்லையற்ற புத்தி இருக்க வேண்டும். குழந்தைகளின் புத்தி எல்லைக்குட்பட்டதில் சிக்கியுள்ளது. அவர்கள் ஓர் இடத்தில் மாத்திரமே அமர்வார்கள். வியாபாரிகள் பல இடங்களில் பெரிய கிளைகளைத் திறக்கிறார்கள். அவர்கள் அதிக நிலையங்களைத் திறப்பதற்கேற்ப, அவர்கள் திறமையான முகாமையாளர்கள் ஆகுகிறார்கள். எவ்வாறாயினும், பின்னர் அதுவும் நிலையத்திலேயே தங்கியுள்ளது. இவை அழிவற்ற ஞான இரத்தினங்களின் கடைகள் ஆகும். அவர்கள் யாருக்கு உரியவர்கள்;? ஞானக்கடலுக்காகும். கிருஷ்ணருக்கு இந்த ஞானம் இருக்கவும் இல்லை, அந்த நேரத்தில் எந்த யுத்தமும் இடம்பெறவும் இல்லை. நீங்கள் கிரகித்து விளங்கப்படுத்த வேண்டிய பல கருத்துக்கள் இருக்கின்றன. ஓர் ஒன்றுகூடலில் படங்கள்; போடப்படுவதனால், அனைவரும் அவற்றைப் பார்க்க முடியும். கடிகாரத்தின் படம் மிகவும் சிறந்தது. இச்சக்கரத்தை அறிந்து கொள்வதனால், நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாக ஆகவேண்டும். கடிகாரத்தின் படம் மூலம் விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. இங்கு நீண்டகாலமாக இருக்கும் பல குழந்தைகள் முற்றிலும் தகுதியானவர்கள் ஆகுவதில்லை. அவர்கள் தங்களை மிகவும் திறமைசாலிகளாகக் கருதுகின்றனர். அவர்கள் எக்காரணமும் இன்றித் தங்களையிட்டுப் பூரிப்படைகின்றார்கள் நீங்கள் சேவை செய்யாவிட்டால், நீங்கள் ஒரு தானி என எவர் எண்ணுவார்கள்? நீங்கள் தானம் செய்யும்பொழுது, நீங்கள் தங்க நாணயங்களையா அல்லது சில சத நாணயங்களையா தானம் செய்ய வேண்டும்? இப்படங்கள் குருடர்களுக்கான கண்ணாடிகளைப் போன்றவை. அவர்களால் தங்கள் முகத்தை இக்கண்ணாடிகளில் பார்க்க முடியும். முன்னர் நீங்கள் ஒரு குரங்கின் முகத்தைப் பார்த்தீர்கள், இப்பொழுது உங்கள் முகம் ஓர் ஆலயத்தில் இருப்பதற்குத் தகுதிவாய்ந்ததாக ஆகுகின்றது. ஓர் ஆலயத்தில் இருப்பதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இது தூய்மையற்ற உலகமாகும், ஆனால் சிவபாபா படைக்கின்ற உலகமோ முற்றிலும் தூய்மையானதாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றாதவர்களின் புத்தியினால் இவற்றில் எதனையும் கிரகிக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: நாளுக்கு நாள், நான் உங்களுக்கு ஆழமான விடயங்களை விளங்கப்படுத்துகிறேன், இந்த ஞானம் நிச்சயமாக வளரும். அங்கு எவ்வாறு எட்டு இராச்சியங்கள் இருக்க முடியும்? என்று சிலர் வினவுகின்றார்கள். இக் கணக்கீட்டிற்;கேற்ப, அங்கு இத்தனை இராச்சியங்கள் இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஏன் இவ் விபரங்களுக்குள் செல்கிறீர்கள்;? முதலில், தந்தையையும் அவருடைய ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். அங்கிருக்கின்ற சம்பிரதாயங்கள் தொடர்ந்தும் இருக்கும்;. அங்கிருக்கும் வழமைக்கேற்பவே அங்கு குழந்தைகள் பிறப்பார்கள். நீங்கள் ஏன் அவ் விபரத்திற்குச் செல்கிறீர்கள்? நீங்கள் ஏன் விகாரம் என்னும் விடயத்திற்காக உங்கள் வாயைப் பயன்படுத்துகின்றீர்கள்;? இப்படங்களை எவருக்கேனும் வெகுமதியாகக் கொடுப்பது மிகவும் சிறந்ததாகும். அவை இறைதந்தையின் வெகுமதிகள். எவராவது அத்தகைய இறைதந்தையின் வெகுமதியை ஏற்காமல் விடுவார்களா? கிறிஸ்தவர்களுக்கு தங்கள் சொந்;தச் சமயத்தில் பெருமை இருப்பதால், அவர்கள் வேறு எவரிடமிருந்தும் இலக்கியங்களை ஏற்றுக் கொள்வதில்லை. தந்தை கூறுகிறார்: தேவதர்மமே அனைத்திலும் உயர்வானது. கிறிஸ்தவர்களிடமிருந்து தாங்கள் அதிகளவு பணம் பெறலாம் என மக்கள் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், இவ்விடயங்கள் ஞானத்தைப் பற்றியவை ஆகும். இந்த ஞானத்தைப் பெறுபவர்கள் மாத்திரமே தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெறுவார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற தாயும் தந்தையுமானவருக்கு உங்களை இதயபூர்வமாக அர்ப்பணியுங்கள். அவருடைய ஸ்ரீமத்தை மிகவும் நன்றாகப் பின்பற்றி, மேன்மையானவர் ஆகுங்கள்.
2. உங்கள் இதயத்தை எப்பொழுதும் நேர்மையாக வைத்திருங்கள். அகங்காரமுடையவர்கள் ஆகாதீர்கள். தங்க நாணயங்களைத் தானம் செய்து, ஞானத்தைத் தானம் செய்வதில் ஒரு மகாராத்தி ஆகுங்கள். நீங்கள் நிச்சயமாக ஒரு நாளில் எட்டு மணித்தியாலங்களுக்கு இறை சேவை செய்ய வேண்டும்.
ஆசீர்வாதம்:
உங்கள் பொறுப்புக்களின் அனைத்துச் சுமைகளையும் தந்தையிடம் கொடுப்பதன் மூலம் எப்பொழுதும் கவலையற்ற, முற்றிலும்,வெற்றி சொரூபங்களான சேவையாளர் ஆகுவீர்களாக.
இலேசாக இருக்கும் குழந்தைகள் தாங்களும் மேலேறுவதுடன் சேவையிலும் மேல்நோக்கிச் செல்வார்கள். அதாவது அவர்கள் தொடர்ந்தும் முன்னேறுவார்கள். ஆகவே உங்கள் அனைத்துப் பொறுப்புக்களின் சுமைளையும் தந்தையிடம் கொடுத்து கவலையற்று இருங்கள். எந்த விதமான “நான்” என்ற உணர்வின் சுமை இல்லாதிருக்கட்டும். நினைவின் போதையைப் பேணிக் கொள்ளுங்கள். தந்தையுடன் இணைந்திருங்கள். தந்தை எங்கிருக்கின்றாரோ அங்கு சேவை ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. கரன்கரவன்ஹார் அனைத்தையும் செய்விக்கும்போது நீங்கள் இலேசாக இருப்பீர்கள். அத்துடன் நீங்கள் முற்றிலும் வெற்றி அடைவீர்கள்.
சுலோகம்:
எல்லையற்ற நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் நிச்சயமானதென அறிந்து கொண்டு சதா கவலையற்று இருங்கள்.