23/10/18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் நினைவில் நிலைத்திருந்து, தூய்மையாகும் அளவிற்கேற்ப, பரலோகத் தாய், தந்தையிடமிருந்து அதிகளவு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வீர்கள். ஆசீர்வாதங்களைப் பெறுவதால்;, நீங்கள் சதா சந்தோஷமானவர்கள் ஆகுவீர்கள்.

கேள்வி:
பிழையான செயல்கள் செய்வதில் இருந்து குழந்தைகளாகிய உங்களைப் பாதுகாப்பதற்காக, குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் தந்தை கூறும் அறிவுரை யாது?

பதில்:
பாபா உங்களுக்குக் கூறும் அறிவுரை: குழந்தைகளே, உங்களிடம் உள்ள செல்வம், செழிப்பு அனைத்தையும் உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக வாழுங்கள். நீங்கள் கூறி வந்தீர்கள்: ஓ கடவுளே, இவை அனைத்துமே உங்களுடையது! கடவுள் உங்களுக்கு ஒரு மகனைக் கொடுத்தார். அவர் உங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்தார், எனவே இப்பொழுது கடவுள் கூறுகிறார்: அவை அனைத்திலிருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தை அகற்றி, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றினால் நீங்கள் பிழையான எச் செயல்களையும் செய்ய மாட்டீர்கள்; நீங்கள் மேன்மையானவர் ஆகுவீர்கள்.

பாடல்:
தாய், தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். Audio Player

ஓம் சாந்தி.
தமது வாய் திறப்பதில்லை என்றும், தம்மால் விளங்கப்படுத்த முடியாதுள்ளது என்றும் கூறுகின்ற குழந்தைகளுக்கு, எவ்வாறு அவர்கள் விளங்கப்படுத்தலாம் என்பதை நிலையங்களிலுள்ள ஆசிரியர்களுக்கு சிவபாபா விளங்கப்படுத்துகின்றார். படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும். நீங்கள் சிறு குழந்தைகளுக்கு விளங்கப்படுத்தும்பொழுது படங்களைப் பயன்படுத்த வேண்டும், அப்படித்தானே? அனைவரும் வகுப்புக்கு வந்து அமர்ந்தவுடனேயே நீங்கள் முரளியை ஆரம்பிக்க வேண்டும் என்றிருக்கக்கூடாது, இல்லை. நீங்கள் அமர்ந்திருந்து அவர்களுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து விளங்கப்படுத்த வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். ஒருவர், ‘நீங்களே தாயும் தந்தையும்’ எனத் தொடர்ந்தும் நீங்கள் நினைவு செய்கின்ற பரலோகத் தாயும் தந்தையுமானவர். அவரே உலகத்தைப் படைப்பவர். தாயும் தந்தையுமானவர் நிச்சயமாகச் சுவர்க்கத்தைப் படைக்கின்றார். சத்தியயுகத்தில், குழந்தைகள் சுவர்க்கவாசிகள். இங்கோ தாயும் தந்தையும் நரகவாசிகளாக இருப்பதால், நரகவாசிகளான குழந்தைகளையே அவர்கள் படைப்பார்கள். பாடலில் கூறப்படுகின்றது: தாய், தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இக்காலத்தின் தாய், தந்தையர்கள் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். சுவர்க்கவாசிகளாக இருப்பவர்கள் ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றார்கள். இந்த ஆசீர்வாதங்கள் அரைக்கல்பத்திற்கு நீடிக்கின்றன. அதன்பின்னர், அரைக்கல்பம் கடந்ததும், நீங்கள் சபிக்கப்படுகின்றீர்கள். அவர்கள் தாமும் தூய்மையற்றவர்களாகித் தங்கள் குழந்தைகளையும் தூய்மையற்றவர்கள் ஆக்குகின்றார்கள். அதனை ஆசீர்வாதங்கள் என அழைக்க முடியாது. தொடர்ந்தும் சாபத்தைக் கொடுப்பதால், பாரதமக்கள் சபிக்கப்படுகின்றார்கள்; அதிகளவு துன்பம் நிலவுகின்றது. ஆகையாலேயே அவர்கள் தாயையும் தந்தையையும் நினைவுசெய்கின்றார்கள். இப்பொழுது தாயும் தந்தையும் ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றார்கள். அவர் உங்களுக்குக் கற்பித்து, தூய்மையற்ற உங்களைத் தூய்மை ஆக்குகின்றார். இங்கிருப்பது, இராவண இராச்சியமான, அசுர சமுதாயம். அங்கிருப்பதோ இராம இராச்சியமான, தேவ சமுதாயம். இராவணனின் பிறப்பு பாரதத்திலேயே இடம்பெறுகிறது. நீங்கள் இராமர் என்று அழைக்கும் சிவபாபாவும் பாரதத்திலேயே பிறப்பெடுக்கின்றார். நீங்கள் பாவப் பாதையில் செல்லும்பொழுதே இராவண இராச்சியம் பாரதத்தில் ஆரம்பமாகுகின்றது. எனவே, பரமாத்மாவாகிய பரமதந்தை இராமர் வந்து, தூய்மையற்ற பாரதத்தைத் தூய்மையாக்குகின்றார். இராவணன் வரும்பொழுது மக்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். பாடப்பட்டுள்ளது: இராமரும் சென்றார், இராவணனும் சென்றான். அவர்களின் முழுக் குடும்பங்களும் சென்றன. இராமரின் குடும்பம் மிகவும் சிறியது. ஏனைய சமயங்கள் அனைத்தும் முடிவடைகின்றன் அவை அனைத்துமே அழிக்கப்படுகின்றன் பின்னர், தேவர்களாகிய நீங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றீர்கள். இப்பொழுது பிராமணர்களாகியுள்ள நீங்கள் மாத்திரமே சத்தியயுகத்திற்கு மாற்றப்படுவீர்கள். எனவே நீங்கள் இப்பொழுது தாய், தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். தாயும் தந்தையும் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார்கள். அங்கே சந்தோஷத்தைத் தவிர, வேறொன்றும் இல்லை. இந்நேரத்தில், கலியுகத்தில் துன்பமே உள்ளது. எனவே சமயங்கள் அனைத்துமே சந்தோஷமற்றுள்ளன. இப்பொழுது, கலியுகத்தின் பின்னர், சத்தியயுகம் வரவேண்டும். கலியுகத்தில் அதிகளவு மக்கள் உள்ளனர். சத்தியயுகத்தில் அதிக மக்கள் இருக்க மாட்டார்கள். எவ்வாறாயினும், எத்தனை பிராமணர்கள் உள்ளார்களோ, அத்தனை தேவர்கள் அங்கிருப்பார்கள். திரேதாயுக இறுதிவரை அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கும். கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சத்தியயுகம் இருந்ததாக அவர்கள் கூறுகின்;றார்கள். கிறிஸ்;துவுக்கு முன்னரும் (கி.மு), கிறிஸ்துவுக்குப் பின்னரும் (கி.பி-அனோடோமி). சத்தியயுகத்தில், ஒரேயொரு தர்மமும், ஒரேயொரு இராச்சியமுமே உள்ளன. அங்கே வெகுசிலரே இருப்பார்கள். அங்கே பாரதம் மாத்திரமே இருக்கும். வேறெந்தச் சமயங்களும் இருக்க மாட்டாது. அங்கே சூரிய வம்சம்; மாத்திரமே இருக்கும்; சந்திர வம்சமேனும் இருக்க மாட்டாது. சூரிய வம்சத்தினரை இறைவர், இறைவிகள் என அழைக்கலாம், ஏனெனில், அவர்கள் சம்பூர்ணமானவர்கள். தூய்மையாக்குபவர் ஒரேயொரு பரமாத்மாவான பரமதந்தையே (சக்கரத்தின் படத்தை சுட்டிக் காட்டி) எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், தந்தை மேலே அமர்ந்திருக்கின்றார். அவர் பிரம்மாவின் மூலம் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். நீங்கள் இப்பொழுது கற்கின்றீர்கள். அது தேவர்களின் இராச்சியமாக இருந்தபொழுது, வேறு எச்சமயங்களும் இருக்கவில்லை. அரைக்கல்பத்தின் பின்னர், விரிவாக்கம் இடம்பெறுகின்றது. ஆத்மாக்கள் தொடர்ந்தும் மேலிருந்து கீழே வருகின்றார்கள். குலங்கள் தொடர்ந்தும் மாறுகின்றன. மனித எண்ணிக்கையும் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. சத்தியயுகத்தில் 900,000 இருப்பார்கள், பின்னர் ஒரு மில்லியன் எண்ணிக்கையானோர் இருப்பார்கள், அதன்பின்னர் தொடர்ந்தும் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சத்தியயுகத்தில், பாரதம் மேன்மையாக இருந்தது, ஆனால் இப்பொழுது அது சீரழிந்துள்ளது. சகல சமயத்தினருமே மேன்மையானவர் ஆகுவார்கள் என்றில்லை. பல மனிதர்கள் உள்ளார்கள். இங்கே, சீரழிந்தவரில் இருந்து மேன்மையானவர் ஆகுவதற்கும் அதிகளவு முயற்சி தேவை. மேன்மையானவர் ஆகும்பொழுது, அவர்கள் அடிக்கடி விகாரத்தில் வீழ்ந்து, சீரழிகின்றார்கள். தந்தை கூறுகின்றார்;: நான் உங்களை அவலட்சணமானவரிலிருந்து அழாகாக்கவே வருகின்றேன். நீங்கள் தொடர்ந்தும் விழுந்து விடுகின்றீர்கள். எல்லையற்ற தந்தை அனைத்தையும் உங்களுக்கு நேரடியான முறையில் கூறுகின்றார். அவர் கூறுகின்றார்: நீங்கள் குலத்தின் பெயரை அவதூறு செய்பவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் உங்கள் முகத்தை அழுக்காக்கிக் கொள்கின்றீர்கள். நீங்கள் அழகானவராக மாட்டீர்களா? நீங்கள் அரைக்கல்பத்திற்கு மேன்மையானவராக இருந்தீர்கள். பின்னர் உங்கள் கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்தன. கலியுக இறுதியில், கலைகள் முற்றிலும் அற்றுப் போய்விட்டன. சத்தியயுகத்தில் ஒரேயொரு பாரதம் மாத்திரமே இருந்தது. இப்பொழுது, பல சமயங்கள் உள்ளன. தந்தை வந்து, மீண்டும் ஒருமுறை மேன்மையான சத்தியயுக உலகை ஸ்தாபிக்கின்றார். நீங்களும் மேன்மையானவர் ஆக வேண்டும். யார் வந்து, உங்களை மேன்மையானவர் ஆக்குகின்றார்? தந்தையே ஏழைகளின் பிரபு. இதில் பணம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் மேன்மையானவர் ஆகுவதற்கே எல்லையற்ற தந்தையிடம் வருகின்றீர்கள். இருப்பினும் மக்கள் வினவுகின்றார்கள்: நீங்கள் ஏன் அங்கே செல்கின்றீர்கள்? அவர்கள் பல தடைகளை ஏற்படுத்துகின்றார்கள். இந்த உருத்திர ஞான யாகத்திற்கு அசுரர்களினால் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியும். பல அப்பாவிகள் அடிக்கப்படுகின்றார்கள். சில பெண்களும் பல தொல்லைகளை ஏற்படுத்துகின்றார்கள்; அவர்கள் விகாரத்திற்காகத் திருமணம் செய்கின்றார்கள். தந்தை இப்பொழுது உங்களைக் காமச்சிதையிலிருந்து அகற்றி, ஞானச்சிதையில் அமர்த்துகின்றார். இது தொடரும் பல பிறவிகளுக்கான ஒப்பந்தமாகும். இந்த நேரத்தில் இது இராவண இராச்சியமாகும். அரசாங்கம் பல விழாக்களைக் கொண்டாடுகின்றது. அவர்கள் இராவணனை எரிக்கின்றார்கள், அவர்கள் பல நாடகங்களைக் காணச் செல்கின்றார்கள். இந்த இராவணன் எங்கிருந்து வந்தான்? இராவணன் வந்ததிலிருந்து 2500 ஆண்டுகளாகி விட்டன. இராவணன் அனைவரையுமே துன்பக்குடிலில் அமர்த்தியுள்ளான். இப்பொழுது அனைவரும் சந்தோஷமற்றவர்களாக, சந்தோஷம் அற்றவர்களாக மாத்திரமே உள்ளனர். இராம இராச்சியத்திலேயே அனைவருமே முற்றிலும் சந்தோஷமாக உள்ளனர். இது இப்பொழுது கலியுக இறுதியாகும்; விநாசம் முன்னிலையிலேயே உள்ளது. பல மில்லியன் கணக்கானோர் மரணிக்கப் போகின்றார்களாயின், நிச்சயமாக யுத்தம் இடம்பெறும், இல்லையா? அனைவருமே கடுகு விதைகளைப் போன்று நசுக்கப்படுவார்கள். ஆயத்தங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை உங்களால் இப்பொழுது காணக்கூடியதாக உள்ளது. தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. தந்தை மாத்திரமே வந்து, இந்த ஞானத்தைக் கொடுத்து, உங்களைத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாக்குகின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்குச் சற்கதி அளிக்கின்றார். சத்தியயுகத்தில் சற்கதி உள்ளது. அங்கே குருமார்களுக்கான தேவை இல்லை. இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் இப்பொழுது திரிகாலதரிசிகள் ஆகுகின்றீர்கள். சத்தியயுகத்தில், இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் இந்த ஞானம் இருக்க மாட்டாது. அவ்வாறாயின், தொன்றுதொட்ட காலத்திலிருந்து எவ்வாறு இந்த ஞானம் தொடர்ந்திருக்க முடியும்? இப்பொழுது இது கலியுக இறுதி. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்! சுவர்க்க இராச்சிய ஸ்தாபனையை மேற்கொள்கின்ற தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகவே வேண்டும். அது தூய உலகமும், இது தூய்மையற்ற உலகமும் ஆகும். கம்சன், ஜெராசகன், இரணியகசிபு போன்றோர் தூய உலகில் இருக்க மாட்டார்கள். அவர்கள் கலியுக விடயங்களைச் சத்தியயுகத்திற்கு உரியதாக்கி விட்டார்கள். சிவபாபா கலியுக இறுதியிலேயே வந்துள்ளார். இன்று சிவபாபா வந்துள்ளார், நாளை ஸ்ரீகிருஷ்ணர் வருவார். எனவே அவர்கள் சிவபாபாவினதும் ஸ்ரீகிருஷ்ணரதும் பாகங்களைக் கலந்து விட்டனர். கடவுள் சிவன் பேசுகின்றார்: ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா என்னிடமிருந்து கற்று, அந்த அந்தஸ்தைப் பெறுகின்றார். பின்னர் தவறுதலாக அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைக் கீதைக்குள் புகுத்தியுள்ளார்கள். இத்தவறு மீண்டும் இடம்பெறும். மக்கள் சீரழியும்பொழுதே, தந்தையால் வந்து அவர்களை மேன்மையாக்க முடியும். மேன்மையானவர்கள் மாத்திரமே முழுமையான 84 பிறவிகளையும் எடுத்து, பின்னர் சீரழிகின்றார்கள். சக்கரத்தின் இப்படத்தைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துதல் மிக இலகுவாகும். விருட்சத்தின் படத்திலும், கீழே, நீங்கள் இராஜயோக தபஸ்யாவில் இருப்பதாகவும், மேலே இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமும் காட்டப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் அடிமரத்தின் கீழ் அமர்ந்துள்ளீர்கள், அத்திவாரம் இடப்படுகிறது. பின்னர் நீங்கள் சூரிய வம்ச குலத்துக்குச் (வைகுந்தத்திற்கு) செல்வீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இராம இராச்சியம் வைகுந்தம் என அழைக்கப்பட மாட்டாது. கிருஷ்ண இராச்சியமே வைகுந்தமாகும். பலரும் இப்பொழுது உங்களிடம் வருவார்கள். கண்காட்சி போன்றவற்றினால் உங்கள் பெயர் போற்றப்படும். மக்கள் ஒருவர் வருவதை மற்றவர் பார்க்கும்பொழுது, அதிகளவு விரிவாக்கம் ஏற்படும். தந்தை வந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இப் படங்களைக் காட்டி, எவருக்கும் விளங்கப்படுத்துதல் இலகுவாகும். கடவுள் மாத்திரமே வந்து, சத்தியயுக ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். அவர் தூய்மையற்ற உலகிற்கே வருகின்றார். அவர் அவலட்சணமானவர்களை அழகானவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் அந்த வம்சத்தைச் சேர்ந்தவரும், கிருஷ்ண இராச்சியத்தினரும் ஆவீர்கள். தந்தை உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். அசரீரியான சிவபாபா இங்கமர்ந்திருந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள்! இது ஆன்மீக யாத்திரை. ஓ ஆத்மாக்களே, உங்கள் முக்திதாமமான, அமைதிதாமத்தை நினைவுசெய்வீர்களாயின், நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்தால் நீங்கள் சுவர்க்கத்திற்கு வருவீர்கள். ஒருவர் எவ்வளவுக்கு அதிகமாக நினைவுசெய்வதுடன், தூய்மையாகவும் இருக்கின்றாரோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தையும் பெற்றுக் கொள்வார். நீங்கள் பல மகத்தான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். நீங்கள் செல்வந்தவர் ஆகுவீர்களாக! உங்களுக்கு ஒரு புத்திரன் கிடைக்கட்டும்;! நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக! தேவர்களின் ஆயுட்காலம் மிகவும் நீண்டதாகும். அவர்கள் இப்பொழுது தங்கள் சரீரங்களை விட்டுச் சென்று, மீண்டும் ஒரு குழந்தையாக வேண்டும் என்ற காட்சியைக் காணுவார்கள். ஆகவே இது உங்களுக்குள் பிரவேசிக்க வேண்டும்: ஆத்மாவாகிய நான், இப் பழைய சரீரத்தை விட்டுச் சென்று, ஒரு கருப்பையில் வசிப்பேன். உங்கள் இறுதி எண்ணங்களே உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். முதுமை அடைந்திருப்பதற்குப் பதிலாக நான் ஏன் ஒரு குழந்தையாகக்கூடாது? ஓர் ஆத்மா சரீரத்தில் இருக்கும்பொழுது, சிரமங்களை அனுபவம் செய்கின்றார். ஓர் ஆத்மா சரீரத்திலிருந்து பிரிந்து இருக்கும்பொழுது, அவர் எச்சிரமத்தையும் அனுபவம் செய்வதில்லை. ஓர் ஆத்மா அவரது சரீரத்தைப் பிரிநதலுடன், அனைத்தும் முடிந்து விடுகின்றது. நாங்கள் இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். எங்களைத் திரும்பவும் அழைத்துச் செல்வதற்காக பாபா அசரீரியான உலகிலிருந்து வருகின்றார். இது துன்ப உலகமாகும். நாங்கள் இப்பொழுது முக்தி தாமத்திற்குச் செல்லவுள்ளோம். தந்தை கூறுகின்றார்: நான் அனைவரையும் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். அனைத்துச் சமயத்தைச் சேர்ந்தவர்களுமே முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். அவர்கள் முக்தி தாமத்திற்குச் செல்லவே முயற்சி செய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால் நீங்கள் என்னிடம் வருவீர்கள். பாபாவின் நினைவில் உணவை உட்கொண்டால், நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். நீங்கள் சரீரமற்றவராகி (சரீரமற்ற ஸ்திதியில்) அபு வீதிக்கு நடந்தே சென்றாலும், எக்களைப்பையும் உணர மாட்டீர்கள். பாபா ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு இப்பயிற்சியை வழங்கினார். அவர்கள் ‘நான் ஓர் ஆத்மா’ என்று எண்ணிக் கொண்டிருப்பதுண்டு. அவர்கள் மிகவும் இலேசான நிலையில், நடந்து செல்வார்கள். அவர்களுக்கு எந்;தக் களைப்புமே இருந்ததில்லை. சரீரமற்றிருந்தால், ஆத்மாக்களாகிய உங்களால், பாபாவிடம் ஒரு விநாடியில் வந்து சேர முடியும். நீங்கள் இங்கே, சரீரத்தை நீக்கிவிட்டு ஒரு விநாடியில் இலண்டன் சென்று, இன்னொரு சரீரத்தை எடுக்கலாம். ஆத்மாவைப் போன்று விரைவானது வேறு எதுவுமே இல்லை. எனவே தந்தை இப்பொழுது கூறுகின்றார்;: குழந்தைகளே, நான் உங்களை மீண்டும் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். நீங்கள் இப்பொழுது உங்கள் பாபாவான என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் இப்பொழுது பரலோகத் தந்தையின் எல்லையற்ற ஆசீர்வாதங்களை நடைமுறைரீதியில் பெறுகின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்திலும் அதிமேலான வழிகாட்டலைக் கொடுக்கின்றார். நீங்கள் உங்களிடமுள்ள செல்வம், செழிப்பு, அனைத்தையும் உங்களுடனேயே வைத்துக் கொள்ளலாம். ஆனால் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக வாழுங்கள். நீங்கள் கூறி வந்;தீர்கள்: ஓ கடவுளே, இவை அனைத்தும் உங்களுடையதே. கடவுள் ஒரு குழந்தையைக் கொடுத்தார். கடவுளே இந்தச் செல்வத்தையும், செழிப்பையும் கொடுத்தார். நல்லது. கடவுள் இப்பொழுது வந்து கூறுகின்றார்: அவை அனைத்;திலிருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தை அகற்றி, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். அப்பொழுது நீங்கள் ஏதேனும் பிழையான செயல்களைச் செய்கின்றீர்களா என்பது தந்தைக்குத் தெரியும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் மாத்திரமே, உங்களால் மேன்மையானவர் ஆக முடியும். அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நீங்கள் சீரழிந்துள்ளீர்கள். நீங்கள் சீரழிவதற்கு அரைக்கல்பம் எடுத்துள்ளது. 16 சுவர்க்கக் கலைகள் உடையவர்களிலிருந்து நீங்கள் 14 சுவர்க்கக் கலைகள் உடையவர்கள் ஆகுகின்றீர்கள், பின்னர் கலைகள் படிப்படியாகக் குறைவடைகின்றன. அதற்குக் காலம் எடுக்கின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் சரீரமற்றிருக்கும் பயிற்சியைச் செய்யுங்கள். ஒரேயொரு தந்தையின் நினைவில் உணவை உண்ணுங்கள்.

2. தாயிடமும் தந்தையிடமும் இருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். நம்பிக்கைப் பொறுப்பாளராக இருங்கள். எப் பிழையான செயல்களையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கர்ம தத்துவத்தை இனங்காண்கின்ற ஒரு ஞான சொரூபமாகி, கர்ம பந்தனம் எதனிலிருந்தும் விடுபட்டு, முன்னேறிச் செல்வீர்களாக.

சில குழந்தைகள் பலவந்தத்துக்கு உட்படுகின்றார்கள்: அவர்கள் அனைத்தையும் விட்டு நீங்குகின்றார்கள் அல்லது தங்கள் சரீரங்கள் உட்பட அனைத்திலிருந்தும் அப்பால் செல்கின்றார்கள். எவ்வாறாயினும், அவர்களின் மனதின் கர்மக் கணக்குகளால் அவர்கள் ஈர்க்கப்படுகின்றார்கள். அவர்களின் புத்தி தொடர்ந்தும் ஈர்க்கப்படுகின்றது. இது ஒரு பெரிய தடை ஆகுவதால், நீங்கள் எவரிடமிருந்தும் அப்பால் செல்ல விரும்பினால், முதலில் கருவி ஆத்மாக்களுடன் அதனைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இது கர்ம தத்துவத்தின் பாகமாகும். பலவந்தமாகத் துண்டிப்பதால், மனமானது மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது. ஆகவே ஒரு ஞான சொரூபமாகி, கர்ம தத்துவத்தை இனங்கண்டு, அதைச் சோதியுங்கள், நீங்கள் இலகுவில் கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் சுய மரியாதை எனும் ஆசனத்தில் அமர்ந்திருங்கள், மாயை உங்களிடம் சரண் அடைவாள்.