17.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இக்கல்வி நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கானதாகும். இக் கல்வியில் சிறிதளவு தவறையேனும் செய்யாதீர்கள். நீங்கள் கற்காது, உண்டும், உறங்கிக் கொண்டும் இருந்தால் அதிகளவு வருந்த நேரிடும்.

கேள்வி:
தொடர்ந்தும் முன்னேறிச் செல்வதற்கு எவ்விடயத்தில் நீங்கள் தந்தை பிரம்மாவைப் பின்பற்ற வேண்டும்?

பதில்:
தந்தை பிரம்மா அனைத்தையும் யாகத்தில் இட்டதைப் போன்று, அதாவது, அவர் அனைத்தையும் அர்ப்பணித்ததைப் போன்று, நீங்களும் தந்தையைப் பின்பற்றுங்கள். தந்தையினால் உருவாக்கப்பட்ட இந்த உருத்திர யாகத்தில், உங்கள் தானத்தை இடுவதே, முன்னேறிச் செல்வதற்கான வழியாகும், அதாவது தந்தையின் உதவியாளர் ஆகுவதாகும். எவ்வாறாயினும், நீங்கள் என்றுமே நினைக்கக் கூடாது: நான் இவ்வளவு உதவி செய்தேன். அல்லது நான் இவ்வளவு கொடுத்தேன். தந்தை அருள்பவர்;. நீங்கள் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றீர்கள். நீங்கள் அவருக்குக் கொடுப்பதில்லை.

பாடல்:
நீங்கள் இரவை உறங்குவதிலும், பகலை உண்பதிலும் வீணாக்கி விட்டீர்கள்...

ஓம்சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதனையும்; விளங்கப்படுத்த வேண்டும். தந்தை குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: நான் உங்களுடனேயே பேசுகின்றேன். வேறு எவரும் இதனைக் கூறமாட்டார்கள். பல சாதுக்கள், புனிதர்கள், மகாத்தமாக்கள் உள்ளனர். இன்ன இன்னாருக்கு சக்தி உள்ளது என்று சிலர் கூறுகின்றார்கள். அவரே அனைவருக்கும் தந்தையாவார். அவர் இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். உண்டும், அருந்திக் கொண்டும், நாள் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் அதாவது அதிகளவு உறங்கிக் கொண்டிருக்கின்ற பல குழந்தைகள் உள்ளனர். அதனால் என்ன நடக்கும்? நீங்கள் வைரம் போன்ற பிறப்பை இழக்கின்றீர்கள். மாயை உங்களைப் பல தவறுகளைச் செய்ய வைக்கின்றாள். மாயை உங்களை கும்பகர்ண உறக்கத்தில் உறங்கச் செய்கின்றாள். உங்களை விழித்தெழச் செய்யும் ஒரேயொருவர் இப்பொழுது வந்துள்ளார். அறியாமை என்ற உறக்கத்தில் இருந்து விழித்தெழுங்கள். முழு உலகிலும் விசேடமாகப் பாரதத்திலும் அறியாமை உள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது தவறு செய்தால், அதிகளவு வருந்த நேரிடும். அந்த நேரத்தில் நீங்கள் வருந்துவதால் எப்பயனும் இல்லை. இது நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆக மாறுவதற்கான கல்வியாகும். இதனை வேறு எவரும் கூற முடியாது. ஒரே ஞானமே இங்கும் உள்ளது என்றில்லை. இது புதிய கல்வியாகும். ஆதி சனாதன தேவ தேவியர் தர்மம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. இங்கே, பலரும் தேவிகள் (இறைவிகள்) என்று அழைக்கப்படுகின்றார்கள். பெண்கள் தேவிகள் என்றும் ஆண்கள் தேவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். எவ்வாறாயினும் நாங்கள் தேவ அந்தஸ்தை, சத்தியயுகத்தில் பெறவே முயற்சி செய்கின்றோம். எனவே நிச்சயமாக சத்தியயுகத்தை ஸ்தாபிப்பவரே, அந்த அந்தஸ்தைப் பெற எங்களுக்கு உதவுகின்றார். இங்குள்ள விடயங்கள், ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்கள் அனைத்திலிருந்தும் வேறுபட்டவையாகும். கடவுளை சர்வவியாபி என்று கூறுபவர்களிடமும், அவர் பல அவதாரங்களை எடுக்கின்றார் என்று கூறுபவர்களிடமும் கூறுங்கள்: கடவுள் சர்வவியாபியாயின், அவதாரங்களைப் பற்றி பேசுபவர்களும் நிச்சயமாக கடவுளின் அவதாரங்களாகவே இருக்க வேண்டும். நல்லது. அவ்வாறாயின், எங்களுக்கு உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைக் கூறுங்கள். அவர்களால் உங்களுக்கு எதனையும் கூறமுடியாது. பல வகையினர் உள்ளனர். மாயாஜால சக்தி உடையவர்களும் உள்ளனர். புதியதோர் ஆத்மா வரும்போது, அவர் தனது சக்தியைக் காட்டுகின்றார். ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதற்காக, ஒரு புதிய ஆத்மா பிரவேசிக்கின்றார். எனவே அவரது பெயர் போற்றப்படுகின்றது. இங்கே சக்தி என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் கூறுகிறீர்கள்: சிவபாபா, நாங்கள் உங்களிடம் சுவர்க்க ஆஸ்தியைப் பெற வந்துள்ளோம். இது உங்கள் இறை பிறப்புரிமை என்று கூறப்படுகின்றது. நீங்களே கடவுளின் குழந்தைகள். சாதுக்களோ, புனிதர்களோ, மகாத்மாக்களோ தாம் பாப்தாதாவின் குழந்தையெனக் கூறமாட்டார்கள். நீங்கள் சுவர்க்க ஆஸ்தியை பெறுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பாபா கூறுகின்றார்: நீங்கள் உங்களது முழு ஆஸ்தியையும் கோர விரும்பினால், தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். இங்கு தந்தையே உங்களுக்கு கற்பிக்கின்றார். இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் இக் கல்வியும், இதனை உங்களுக்குக் கற்பிப்பவரும் மறைந்து விடுவார்கள். இந்த நேரத்திலேயே இப் பிராமண குலம் உள்ளது. நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் பிரம்மாவின் குழந்தைகள். அவ்வாறாயின், பிரம்மா எப்பொழுது வந்தார்? பிரம்மா சங்கமயுகத்திலேயே வருவார். அப்படித்தானே? பிரஜாபிதா பிரம்மா உருவாக்கும் பிராமணர்கள் பின்னர் தேவர்கள் ஆகுகின்றார்கள். பின்னர், அங்கே எந்த பிராமணர்களும் இருக்க மாட்டார்கள். நாங்கள் தேவ குலத்தினர் ஆகுகின்றோம். பின்னர், ரிஷிகள், முனிவர்கள் போன்றோரினால் ஆரம்பிக்கப்பட்ட சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள அப்பிராமணர்கள் (லௌகீக) உள்ளனர். துவாபரயுகத்தில் சிவாலயங்கள் கட்டப்பட்டு பூஜிக்கப்படும்போது, பூஜைக்குரிய தேவர்கள், பூஜை செய்பவர்கள் ஆகுகின்றார்கள். அந்த நேரத்தில் பிராமணப் புரோகிதர்கள் ஆலயங்களுக்கு தேவைப்படுகின்றனர். பூஜைக்குரியவர்களாக இருந்து பூஜை செய்பவர்களாகிய பிராமணர்கள் அந்த நேரத்திலேயே அதனை ஆரம்பித்திருக்க வேண்டும். அவர்களை பிராமணர்கள் என்று அழைக்க முடியாது. ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களுக்கு முன்னால்; நிச்சயமாக பிராமணப் புரோகிதர்கள் இருக்க வேண்டும். எனவே அப் பிராமணர்கள் அப்பொழுதே தோன்றியிருக்க வேண்டும். இது விபரமான விடயங்கள்; ஆகும். உண்மையில், இது ஞானத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. “மன்மனாபவ” என்று மாத்திரமே ஞானம் கூறுகின்றது! சிவபாபாவையும் ஆஸ்தியையும் மாத்திரமே நினைவு செய்யுங்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டால், இதனை நினைவு செய்வதனால் மாத்திரம் நீங்கள் அனைவரும் இலக்ஷ்மி நாராயணன் ஆகிவிடுவீர்களா? இல்லை. கல்வியும் உள்ளது. நீங்கள் சேவை செய்வது அதிகரிப்பதற்கு ஏற்ப, நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தையும் கோருவீர்கள். அதற்கேற்ப நீங்கள் தங்கக் கரண்டியை உங்கள் வாயில் வைத்திருப்பீர்கள். புதிய உலகை ஸ்தாபிப்பதற்கும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் நீண்ட காலம் எடுக்கும். ஸ்தாபனை விநாசத்தின் பின்னரே இடம்பெறும். கலியுகத்தின் பின்னரே சத்தியயுகம் இருக்கும். பூமி அதிர்ச்சி போன்றன தொடர்ந்தும் இடம்பெற்ற போதிலும், எண்ணற்ற சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படவும் வேண்டும். அப்பொழுது நாடகம் முடிவடையும். நாங்கள் இப்பொழுது பாபாவிடம் வந்து, பின்னர் புதிய உலகிற்கு வருவோம். இந்த நேரத்தில், பிராமணர்களாகிய நாங்கள் இந்த யாகத்திற்குரியவர்கள்;. 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போன்றே, இந்த உருத்திர யாகத்தை சிவபாபா உருவாக்கியுள்ளார். இதுவே அனைத்திலும் மிகப் பெரிய யாகமாகும். உண்மையான பிராமணர்களாகிய நீங்கள் இந்த யாகத்தைப் பராமரிக்கின்றீர்கள். அப்பிராமணர்கள் சடப்பொருட்களை இட்டு யாகம் வளர்க்கின்றார்கள். ஓர் அனர்த்தம் இடம்பெறும் போது, அவர்கள் யாகம் வளர்க்கின்றார்கள். சத்தியயுகத்தில் குருமார் போன்றோருக்கான அவசியம் இருக்கமாட்டாது. சற்கதிக்கான தேவை உள்ள இடத்திலேயே குருமார்கள் உள்ளனர். இப்பொழுது இங்கு பல குருமார்கள் உள்ளனர். பல வேதங்களும் சமயநூல்களும் இருந்த போதிலும் பாரதம் ஏன் இந்த நிலையில் உள்ளது? நீங்கள் எழுதலாம்: மனிதர்கள் அனைவரும் 5000 வருடங்களின் முன்னர் போன்றே, இப்பொழுதும் ஆழமான உறக்கத்தில் உள்ளனர். அனைவரும் உறங்கச் செல்கின்றனர், ஆனால் இது அறியாமை என்ற உறக்கமாகும். சற்கதியை அருள்வதற்குரிய குருமார் எவரும் இல்லை. இப்பொழுது ஒளியை ஏற்றுபவர் யார்? பரமாத்மாவான பரமதந்தை இல்லாது எந்த ஒளியும் இருக்கமுடியாது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது பல குருமார்கள் உள்ளனர். இருப்பினும், ஏன் காரிருளும், துன்பமும் உள்ளது? சத்தியுகத்தில் அதிகளவு சந்தோஷம் நிலவியது. இப்பொழுதே, நீங்கள் கடவுளின் ஸ்ரீமத்தை பெறும் பொழுதே சந்தோஷம் இருக்கமுடியும். இராவணனே பாரதத்தை தூய்மையற்றதாகவும், சந்தோஷம் அற்றதாக்கவும் ஆக்கினான். தந்தை கூறுகின்றார்: இக்கொடிய எதிரியான காமத்தை வெற்றி கொள்ளுங்கள். தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்தாலேயே உங்களால் புதிய உலகிற்கு அதிபதிகள் ஆக முடியும். அந்த குருமார்கள் உங்களை தூய்மையாகுமாறு கூறுவதில்லை. நீங்கள் இப்பொழுது பேரோளிக்குள் வந்துள்ளதால், நீங்கள் அவர்களிடம் வினவலாம்: சந்தோஷமாக இருந்த பாரதம் ஏன் இப்பொழுது அதிகளவு சந்தோஷமற்றுள்ளது? நீங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சந்நியாசிகள் உடனேயே தமது வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுகின்றார்கள். சந்நியாசிகளைப் பற்றி கூறும்போது, அவர்கள் தூய்மையானவர்கள் என்று கூறப்படுகின்றது. தாம் தூய்மையாகுவதற்கே முயற்சி செய்கிறோம் என்று அவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. உங்களது அனைத்துமே தனித்துவமானதாகும். சந்நியாசிகள் அனைவருமே தூய்மையாக உள்ளார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்களின் ஸ்திதி உறுதியாகும் வரை, அவர்களது புத்தி தொடர்ந்தும் அவர்களது உறவினர்கள், நண்பர்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றது. சரீரத்தையும், சரீர உறவினர்கள் அனைவரையும் மறக்கவேண்டும் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது, அதற்கு அதிக முயற்சி தேவை. அவர்களிடம் நீங்கள் எப்பொழுது துறவறத்தை மேற்கொண்டீர்கள் என்றோ அல்லது முன்னர் உங்கள் பெயர் என்னவென்றோ, வினவினால் அவர்கள் ‘எங்களிடம் அக்கேள்விகளை கேட்காதீர்கள், அவற்றை ஏன் எங்களுக்கு ஞாபகப்படுத்துகிறீர்கள்?’ என்று கூறுகின்றார்கள். சிலர் அதற்கு பதிலளித்த பின்னர் அவர்களிடம் கேட்கப்படுகின்றது: நீங்கள் அனைவரையும் உடனடியாகவே மறந்துவிட்டீர்களா, அல்லது அவர்களை மறப்பதற்கு காலம் எடுத்ததா? நீங்கள் யார்? நீங்கள் எவ்வாறு அனைத்தையும் துறந்தீர்கள்? நீங்கள் தனியாக இருந்தீர்களா அல்லது உங்களுக்கு ஒரு குடும்பம் இருந்ததா, அவர்களை நீங்கள் நினைக்கின்றீர்களா? இவற்றை நாங்கள் அறிந்து கொள்வதற்காகவே நாங்கள் கேட்கின்றோம். அவர்கள் கூறுவார்கள்: நான் அவர்களை அதிக காலத்திற்கு நினைவு செய்தேன். அந்த நினைவை நீங்கள் மிகவும் சிரமத்துடனேயே துண்டிக்கின்றீர்கள்;. நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பற்றியாவது நினைக்கின்றீர்கள். நாங்கள் சிவபாபாவை நினைவு செய்தாலும், நாங்கள் எங்கள் வாழ்க்கையையோ அல்லது நாங்கள் கற்ற சமயநூல்களையோ மறக்கவில்லை. அவர் கூறுகின்றார்: உயிருடன் இருக்கும்போதே, அனைத்தையும் மறந்துவிடுங்கள். இதனைக் கிரகியுங்கள். நீங்கள் கடந்தவற்றை நினைத்துக் கொண்டிருந்தால், நீங்கள் அதில்; பற்று வைப்பீர்கள். முதன் முதலில், இவ்விடயங்களைச் செவிமடுத்து, பின்னர் நீங்களே தீர்மானியுங்கள். மரணித்து வாழுங்கள். வேறு எவர் கூறுவதையும் செவிமடுக்காதீர்கள். எங்கள் முழு வாழ்க்கையைப் பற்றியும் உங்களுக்கு எங்களால் கூறமுடியும். ஆம், இந்த உலகம் இப்பொழுது முடிவடையப் போகின்றது என்பது எங்களுக்குத் தெரியும். நிலையங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும். ‘பாபா, மம்மா’ என்று கூறுபவர்கள் பிராமணர்கள் ஆகுகின்றார்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே! ஆத்மாவே பேசுகின்றார். ‘நீங்கள் யார்’ என்று உங்களிடம் வினவப்படுகின்றது. நீங்கள் உடனடியாக ‘ஆத்மாவான நானே கற்கின்றேன்’ என்று பதிலளிக்கின்றீர்கள்;. நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அந்த புலனங்களின் மூலம் கற்கின்றீர்கள். ஆத்மாவும் சரீரமும் இரு வேறு விடயங்களாகும். ஆத்மா ஒரு சரீரத்தை எடுத்த பின்னர், அதனை நீக்குகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவர் சம்ஸ்காரங்களைக் கிரகிக்கின்றார். சத்தியயுகத்தில், ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையாகவும் புண்ணியாத்மாக்களாகவும் இருந்தோம். இப்பொழுது நாங்கள் பாவாத்மாக்களாக உள்ளோம். இது இப்பொழுது இறுதி பிறவியாகும். பரமாத்மா இப்பொழுது அவரிடம் உள்ள ஞானத்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார். மனிதர்கள் அனைவரும் காரிருளில் உள்ளனர். சமயநூல்கள் போன்றன அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். அது ஞானம் என்று அழைக்கப்படுவதில்லை. ஞானம் பகலும், பக்தி இரவும் ஆகும். நீங்கள் வினவலாம்: கீதையை படைத்தவர் யார்? அவர் எப்பொழுது வந்தார்? எப்பொழுது கீதை எழுதப்பட்டது? பாபா தொடர்ந்தும் உங்களுக்கு எழுதுகிறார், பின்னர் நீங்களும் இவ்விடயங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்விடயங்களை நீங்கள் உங்கள் புத்தியில் கிரகிப்பதால்;, நீங்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்வீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். மாலையைப் பற்றிய இரகசியமும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பரமாத்மா பரமதந்தையே எல்லையற்ற குஞ்சமாவார். அதன் பின்னர் இரட்டை மணிகளான பிரம்மாவும் சரஸ்வதியும் உள்ளனர். படைப்பு பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் இடம்பெறுகின்றது. இவர்கள் ஆதி தேவனும் ஆதி தேவியும் ஆவார்கள். இவர்களே சுவர்க்கத்தை ஸ்தாபித்த பிராமணர்கள் ஆவார்கள். ஆகையாலேயே அவர்கள் பூஜிக்கப்படுகின்றார்கள். இடையில், சூரிய வம்சத்தினர் ஆகிய எட்டு மணிகளும் உள்ளனர். அவர்கள் அதிகளவு உதவி செய்தனர். இந்த ஞானம் உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். யாகத்திற்குள் நிச்சயமாக அர்ப்பணப் பொருட்கள் இடப்படுகின்றன என்பதும் உங்களுக்குத் தெரியும். தாய்மார்கள் முன்னேறிச் செல்வதற்கு பாபா திறமையான வழிமுறையை உருவாக்கியுள்ளார். அவர் தன்னை அர்ப்பணித்தார், அல்லவா? ஆகையால் தந்தையைப் பின்பற்றுங்கள். காந்திஜிக்கு உதவியவர்கள் தற்காலிக சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். அவர் எல்லைக்குட்பட்ட தந்தையாவார். ஆனால் அந்த ஒரேயொருவரோ எல்லையற்ற தந்தையாவார். இங்கே, பாபா அனைத்தையும் தாய்மாரின் காலடியில் இடுவதனால், அவர் முதல் இலக்கத்தைப் பெற்றுக்கொள்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்யவேண்டும். உதவி செய்பவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவார்கள். நீங்கள் எவருமே நான் சிவபாபாவிற்கு உதவுகிறேன் என்று நினைக்கக்கூடாது. இல்லை. சிவபாபாவே உங்களுக்கு உதவுகிறார். ஓ, ஆனால் அவர் அருள்பவர் ஆவார்! நீங்கள் எதனைக் கொடுத்தாலும், நீங்கள் உங்களுக்காகவே செய்கின்றீர்கள். நீங்கள் நினைவில் நிலைத்திருந்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் சுவர்க்கத்தை நினைவுசெய்தால், நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். பாபாவே கூறுகின்றார்: மன்மனாபவ! இல்லாவிடின், நீங்கள் எவ்வாறு உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறமுடியும்? இதனைக் கணக்கிடுவது உங்கள் கடமையாகும். நீங்கள் பாபாவிற்குக் கொடுக்கின்றீர்கள் என்று நீங்கள் எவருமே நினைக்கக்கூடாது. இது சிவபாபாவின் யாகமாகும். அது தொடர்ந்துள்ளது, அது தொடர்ந்தும் இருக்கும். தந்தையின் உதவியுடன் நீங்கள் உங்கள் இராச்சியத்தை, பாரதத்தில் மாத்திரமன்றி, முழு உலகிலும் ஸ்தாபிக்கின்றீர்கள் என்பது உண்மையான பிராமணர்களாகிய உங்கள் இதயத்தில் உள்ளது. நாங்கள் மீண்டும் ஒருமுறை தூய்மையாகி, பாரதத்தை சுவர்க்கமாக்கி, அங்கே ஆட்சிசெய்வோம். நீங்கள் சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம், பாரதம் சுவர்க்கம் ஆகுகின்றது. எனவே சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் நினைவு செய்யுங்கள். பாபா கூறுகின்றார்: நீங்கள் பிராமணர்கள் ஆகும்போதே தேவ சமுதாயத்தில் ஒருவர் ஆகுகின்றீர்கள். நீங்கள் விகாரத்தில் விழுவதால், முழு உண்மையும் முற்றாக அழிக்கப்படுகிறது. உங்களை நீங்கள் ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக, நீங்கள் உங்களுக்கு தீங்கை ஏற்படுத்திக் கொண்டதால், நீங்கள் சபிக்கப்படுகின்றீர்கள். நான் உங்களை ஆசீர்வதிக்கவே வந்துள்ளேன். எவ்வாறாயினும். ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால், உங்களையே நீங்கள் சபித்து, உங்கள் அந்தஸ்தையும் அழித்துக்கொள்கிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1. உங்கள் புத்தியில் உள்ள அனைத்தையும் மறந்துவிடுவதற்கு, மரணித்து வாழுங்கள். தந்தை கூறுவதை மாத்திரமே செவிமடுங்கள். உங்கள் சொந்த முன்னேற்றத்திற்காக உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள்.

2. ஸ்ரீமத்தைப் பின்பற்றி உங்கள் மீது கருணைகொண்டிருங்கள். உண்மையான பிராமணர்களாகி, யாகத்தைப் பராமரியுங்கள். நன்றாகக் கற்று, உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுங்கள்.

ஆசீர்வாதம்:
நினைவின் சொரூபமாக இருப்பதன் மூலம் மறந்துவிட்டவர்களுக்கு ஞாபகமூட்டுகின்ற உண்மையான சேவகர் ஆகுவீர்களாக.

நினைவின் சொரூபமாக இருக்கின்ற உங்கள் முகச்சாயல்களினால் ஏனையோரை நினைவின் சொரூபமாக்குவது உண்மையான சேவவையாகும். உங்கள் முகச்சாயல்கள் அவர்கள் ஆத்மாக்கள் என்பதை ஏனையோருக்கு ஞாபகமூட்ட்டும். நெற்றியைப் பார்க்கும்போது அவர்கள் பிரகாசிக்கும் ஆத்மாவை அல்லது இரத்தினத்தைப் பார்க்கட்டும். மக்கள் பாம்பின்மீது இருக்கும் இரத்தினத்தைப் பார்க்கும்போது அவர்களின் கவனம் பாம்பின்மீது ஈர்க்கப்படாததைப் போன்று அழிவற்ற பிரகாசிக்கும் இரத்தினத்தைப் பார்க்கையில் அவர்கள் சரீரஉணர்வை மறக்கட்டும். அப்பொழுது அவர்கள் கவனம் இயல்பாகவே ஆத்மாவை நோக்கிச் செல்லும். மறந்துவிட்டவர்கள் விழித்தெழட்டும். அப்பொழுது நீங்கள் உண்மையான சேவகர் என அழைக்கப்படுவீர்கள்;.

சுலோகம்:
சுலோகம்: குறைபாடுகளைக் கிரகிக்கும் புத்தியை அழித்துவிட்டு ஒரு சதோபிரதான் தெய்வீகப் புத்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்.