11/10/18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள். ஞானம், பக்தி, ஆர்வமின்மை மூன்றுமே இதில் அடங்கியுள்ளது. இது புதியதொரு கல்வியாகும்.

கேள்வி:
சங்கமயுகத்தில் ஞானமும் யோகமும் இருக்கும் அதே நேரத்தில்; எவ்வாறு பக்தியும் தொடர்ந்துள்ளது?

பதில்:
உண்மையில், யோகத்தையும் பக்தி என்று அழைக்கலாம். ஏனெனில் குழந்தைகளாகிய நீங்கள் கலப்படமற்ற நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள். உங்கள் நினைவு ஞானத்தையும் உள்ளடக்குவதால், அது யோகம் என்று அழைக்கப்படுகின்றது. துவாபரயுகம் முதல், அவர்கள் பக்தியையே செய்து கொண்டிருக்கின்றார்கள். ஞானம் இருக்கவில்லை. ஆகையாலேயே அந்த பக்தியானது, யோகம் என்று அழைக்கப்படுவதில்லை. அதில் எந்த இலக்கும் இலட்சியமும் இருப்பதில்லை. இப்பொழுது நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் யோகம் செய்வதுடன், நீங்கள் எல்லையற்ற உலகின் மீது ஆர்வமின்மையையும் கொண்டிருக்கின்றீர்கள்.

பாடல்:
யாரோ என்னை தனக்குரியவராக்கி, எவ்வாறு புன்னகைப்பது என்பதைக் கற்பித்தார்..

சாந்தி.
சமயநூலை எந்த இலக்கும் இலட்சியமும் இல்லாமல் கற்பதால், அது உண்மையிலேயே ஒரு கல்வி இல்லை என்று எல்லையற்ற தந்தை விளங்கப்படுத்துகின்றார். சமயநூலில், நீங்கள் உலகைப் பற்றி எதுவும் அறிந்து கொள்வதில்லை. சமயநூலின் மூலம், அமெரிக்கா எங்குள்ளது என்பதையோ அல்லது அதனை யார் கண்டு பிடித்தார் என்றோ உங்களால் கூற முடியாது. இன்ன இன்னார் அதனைக் கண்டு பிடித்தார் என்றே அவர்கள் கூறுகின்றார்கள். தாம் சென்று வாழலாம் என்பதற்காக, அவர்கள் ஏனைய இடங்களுக்குச் சென்று அவற்றைக் கண்டு பிடிக்கின்றார்கள். மனிதர்கள் அதிகரித்து உள்ளதால் அதிகளவு நிலம் தேவை என்பதை அவர்கள் கண்டு கொண்டுள்ளார்கள். அவ் விடயங்கள் யாவுமே கற்கப்பட்டுள்ளன. அது கல்வி என்று அழைக்கப்படுகின்றது. உங்களுடையதும் ஒரு கல்வியேயாகும். இதனை ஓர் ஆச்சிரமம், ஒரு கல்விக்கூடம், அல்லது ஒரு பல்கலைக்கழகம் என்றும் அழைக்கலாம். அனைத்தும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. வரைபடத்தின் கல்வி வேறானது. சமயநூல்களின் மூலம் ஞானோதயம் கிடைப்பதில்லை. கற்பதன் மூலமே ஞானோதயத்தைப் பெற முடியும். உங்களுடையதும் ஒரு கல்வியே ஆகும். வைகுந்தம் என்று அழைக்கப்படும் இடம் எது? இது உலகக் கல்வியிலோ அல்லது சமயநூலிலோ குறிப்பிடப்படவில்லை. இது ஒரேயொரு தந்தையால் மாத்திரமே கூறப்படுகின்ற ஒரு புதிய கல்வியாகும். மக்கள் சுவர்க்கம் நரகம் இரண்டுமே இங்குள்ளது என்றே கூறுகின்றார்கள். தந்தை மாத்திரமே எது சுவர்க்கம் என்றும் எது நரகம் என்றும் விளங்கப்படுத்துகின்றார். இவ் விடயங்கள் சமநூல்களிலோ அல்லது அந்தக் கல்வியிலோ குறிப்பிடப்படவில்லை. இவ்விடயங்கள் புதியவை என்பதால், மக்கள் குழப்பமடைகின்றார்கள். தாம் இவ்வாறான விடயங்களை முன்னர் ஒருபோதுமே கேள்விப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள். இவை எந்த மனிதராலுமே, எப்பொழுதுமே கூறப்படாத, புதிய, அற்புதமான விடயங்களாகும். உண்மையிலேயே, அவை புதிய விடயங்களாகும். அந்தக் கல்வியைக் கற்பிப்பவர்களாலோ அல்லது சந்நியாசிகளாலோ இவ்விடயங்களைப் பற்றி உங்களுக்குக் கூற முடியாது. ஆகையாலேயே பரமாத்மாவான பரமதந்தையே ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். அவர் உங்களுக்கு எல்லையற்ற வரலாற்றையும் புவியியலையும் விளங்கப்படுத்துகின்றார். அவர் சுவர்க்கத்தையும் நரகத்தையும் பற்றிய விபரங்களை ஞானத்தின் மூலம் விளங்கப்படுத்துகின்றார். இவை புதிய விடயங்கள். அப்படித்தானே? அனைத்துமே இக் கல்வியிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் ஞானமும், யோகமும், கல்வியும், பக்தியும் உள்ளது. யோகத்தை பக்தி என்றும் அழைக்கலாம். ஏனெனில் ஒரேயொருவருடன் யோகம் செய்தல் என்றால் அவரை நினைவு செய்தலாகும். அப்பக்தர்களும் அவரை நினைவு செய்து, வழிபடுகின்றார்கள் அத்துடன் அவரைப் போற்றிப் பாடுகின்றார்கள். அத்தகைய பக்தி என்பது யோகம் என்று அழைக்கப்படுவதில்லை. உதாரணமாக, மீரா ஸ்ரீகிருஷ்ணருடன் யோகம் செய்வதுண்டு. அவர் ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்வதுண்டு ஆனால் அது பக்தி என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் யோகம் செய்கின்றீர்கள், அதாவது, நீங்கள் ஒரேயொருவரை நினைவு செய்கின்றீர்கள். சத்தியயுகத்தில், பக்தியும் இருப்பதில்லை, யோகமும் இருப்பதில்லை. சங்கமயுகத்தில், ஞானம், பக்தி இரண்டுமே உள்ளன. ஆனால் துவாபரயுகத்திலிருந்து, பக்தி மாத்திரமே தொடர்ந்துள்ளது. ஒருவரை நினைவு செய்தல் என்றால் பக்தியாகும். இங்கே, ஞானமும், யோகமும் பக்தியும் உள்ளது. அவர்கள் பக்தர்களாக இருந்து, தத்துவத்துடன் யோகம் செய்கின்றார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது. எவ்வாறாயினும், அவர்களின் யோகம் பலருடன் உள்ளது. ஆகையாலேயே அவர்கள் பக்தர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். உங்களுடையது கலப்படமற்ற யோகமாகும். ஞானக்கடல் தானே இங்கமர்ந்திருந்து உங்களுக்கு கற்பிக்கின்;றார். நீங்கள் அவருடன் யோகம் செய்கின்றீர்கள். அவர்களுக்கு ஆத்மாவை பற்றிய ஞானமேனும் இல்லை. எங்களுக்கும் இது தெரியும். எங்களது புத்தியை பரமாத்மாவான பரமதந்தையுடன் தொடர்பு கொள்ளச் செய்வதால், நாங்கள் தந்தையிடம் செல்வோம். அவர்கள் அனுமன் போன்றவர்களை நினைவு செய்கின்றார்கள், எனவே அவர்களுக்கு அவரது காட்சி கிடைக்கின்றது. அது கலப்படம் என்று அழைக்கப்படுகின்றது. இது கலப்படமற்ற யோகமாகும். நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். எனவே, ஞானம், பக்தி, ஆர்வமின்மை ஆகிய மூன்றுமே இதில் இணைந்துள்ளது. அங்கே, அவர்களின் அனைத்துமே வேறுபட்டதாகும். ஞானம் வேறுபட்டது, சமயநூல்களின் ஞானத்தையே அவர்கள் கொண்டுள்ளனர், அவர்களின் விருப்பமின்மையும் எல்லைக்குட்பட்டதாகும். இங்கே, இது எல்லையற்ற விடயமாகும். எங்களுக்கு எல்லையற்ற தந்தையைத் தெரியுமென்பதால், நாங்கள் அவரை நினைவு செய்கின்றோம். அவர்கள் சிவனை நினைவு செய்தாலுமே, அவரின் தொழில் என்னவென்பது அவர்களுக்குத் தெரியாததால் அவர்களின் பாவங்கள் அழிவதில்லை. பாவங்கள் அழியும் என்ற ஞானம் கூட அவர்களுக்கு இல்லை. இங்கே தந்தையின் நினைவால் உங்கள் பாவங்கள் அழிகின்றன. அங்கே அவர்கள் தங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என தங்களைக் காசியில் அர்ப்பணிக்கின்றார்கள். அவர்கள் கர்ம வேதனையை அனுபவம் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், அவர்கள் உங்களைப் போன்று நாளடைவில் கர்மாதீத் அடைவார்கள் என்றில்லை. இல்லை, அவர்கள் தண்டனையை அனுபவம் செய்தே தமது பாவங்களை அழிக்கின்றார்கள். அவர்கள் மன்னிக்கப்படுவதில்லை. எனவே இது ஒரு கல்வியும், ஞானமும், யோகமும் ஆகும். அனைத்தும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒரேயொரு தந்தையையே அனைத்தையும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது ஓர் ஆச்சிரமம் என்றும் ஒரு கல்விக்கூடம் என்றும் அழைக்கப்படுகின்றது. எழுத்தில் இது மிகவும் நன்றாக உள்ளது. முன்னைய ‘ஓம் மண்டலி’ என்ற பெயர் பிழையாகும். இப் பெயர் மிகவும் சிறந்தது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்களும் பிரம்மகுமாரர்களே என்பதை நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தலாம். தந்தையே அனைவரையும் படைத்தவர் ஆவார். அவர் முதலில் சூட்சும உலகை உருவாக்கியுள்ளார். பிரம்மாவும் விஷ்ணுவும் சங்கரரும் சூட்சும உலக வாசிகள் ஆவார்கள். புதிய உலகம் படைக்கப்படுகின்றது, ஆகையால் பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். சூட்சும உலகிலுள்ளவரால் இங்கு வரமுடியாது. அவர் முழுமையடைந்த பிரம்மா ஆவார். சரீரதாரியான பிரம்மாவே இங்கு தேவைப்படுகின்றார். அவர் எங்கிருந்து வருவார்? மக்களுக்கு இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. விக்கிரங்கள் உள்ளன. பிரம்மாவின் மூலம் பிராமணர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். ஆனால் பிரம்மா எங்கிருந்து வருவார்? எனவே, தத்தெடுத்தல் இடம்பெறுகின்றது. ஒரு அரசருக்கு குழந்தை இல்லாதிருந்தால், அவர் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதைப் போன்றே, தந்தையும் இவரைத் தத்தெடுத்து அவரின் பெயரைப் பிரஜாபிதா பிரம்மா என்று பெயரிடுகின்றார். மேலே இருக்கின்றவரால் இங்கு, கீழே வர முடியாது. கீழே உள்ளவரே மேலே போக வேண்டும். அவர் சூட்சுமமானவர். இவர் பௌதீகமானவர். எனவே இந்த இரகசியமும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் அனைவரும் இக் கேள்வியை எழுப்புகின்றார்கள். சிலவேளைகளில் நீங்கள் தாதாவை பிரம்மாவென்றும், சிலவேளைகளில் கடவுள் என்றும், சிலவேளைகளில் கிருஷ்ணாவென்றும் கூறுகின்றீர்கள். எவ்வாறாயினும், இவரைக் கடவுள் என்று அழைக்க முடியாது. ஆனால் அவரை பிரம்மா என்றோ கிருஷ்ணா என்றோ அழைக்கலாம். ஏனெனில் பின்னர் கிருஷ்ணர் அவலட்சணமாக ஆகுகின்றார். இரவாக இருக்கும் போது அவர் பிரம்மாவென்றும், பகலாக இருக்கும் போது கிருஷ்ணர் என்றும் அழைக்கப்படுகின்றார். இதுவே கிருஷ்ணா ஆத்மாவின் இறுதி பிறவியாகும். ஸ்ரீ கிருஷ்ணர் வடிவமே முதற் பிறவியாகும். இது மிகவும் தெளிவாக எழுதப்பட வேண்டும். இராதை, கிருஷ்ணரது அல்லது இலக்ஷ்மி, நாராயணனது 84 பிறவிகள் காட்டப்பட வேண்டும். இங்கே, இவர் தத்தெடுக்கப்படுகின்றார். ஆகவே, பிரம்மாவின் பகலும், பிரம்மாவின் இரவும் உள்ளது. அதுவே இலக்ஷ்மி நாராயணனின் இரவும் பகலும் ஆகுகின்றது. அதுவே அவர்களது வம்சத்தினருக்கும் நடக்கின்றது. நீங்கள் இப்பொழுது பிராமண குலத்தினராகவும், அதன் பின்னர் தேவ குலத்தினராகவும் ஆகுவீர்கள். ஆகையால், அதுவே பிரம்மாகுமார், பிரம்மகுமாரிகளின் இரவும் பகலும் ஆகும். இவ் விடயங்கள் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். படத்திலும் (விருட்சம்) அவர்கள் மரத்தின் கீழே தபஸ்யா செய்வதும், அதுவே அவர்களது இறுதி பிறவி என்பதும் மிகத் தெளிவாக உள்ளது. பிரம்மா எங்கிருந்து வருகின்றார்? அவர் யார் மூலமாக உருவாக்கப்படுகின்றார்? எனவே பிரம்மா தத்தெடுக்கப்படுகின்றார். ஓர் அரசரால் ஒருவர் தத்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் இளவரசர் என்று அழைக்கப்படுவதைப் போன்று பிரம்மாவும் தத்தெடுக்கப்படுகின்றார். அவர் ‘இன்ன இன்னாரின் இளவரசன்’ என்ற பதவிக்கு மாற்றப்படுகின்றார். முன்னர் அவர் ஒரு இளவரசராக இருந்திருக்க மாட்டார். அவரை அரசர் தத்தெடுத்த பின்னர், அவர் இளவரசர் என்ற பட்டத்தைப் பெற்றார். இந்த நடைமுறைகள் தொடர்ந்துள்ளன. இது குழந்தைகளின் புத்தியில் பிரவேசிக்க வேண்டும். தந்தை எவ்வாறு பழைய உலக விநாசத்தை மேற்கொண்டு, புதிய உலகின் ஸ்தாபனையை இடம்பெறச் செய்கின்றார் என்பது உலகினருக்குத் தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானோதயம் உள்ளது. நீங்களும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும் போது, சிறு புதல்வியர் திறமைசாலிகளாகுவார்கள், ஏனெனில், அவர்கள் குமாரிகள் ஆவார்கள். ஞான அம்புகள் குமாரிகளினாலேயே எய்யப்பட்டன என்று எழுதப்பட்டுள்ளது. குமாரிகளின் அற்புதம் முதற் தரமானதாகும். மம்மாவும் ஒரு குமாரியே. அவர் அனைவரையும் விட முன்னேறிச் சென்றார். தாயை மகள் காட்டுவாள் (வெளிப்படுத்துவாள்) என்று கூறப்பட்டுள்ளது. தாய் அமர்ந்திருந்து எவருடனும் உரையாடுவதில்லை. இந்தத் தாய் மறைமுகமானவர். அந்த மம்மா கண்ணுக்குப் புலப்படுபவர். தாயைக் காட்ட வேண்டியது, சக்திகளான குழந்தைகளாகிய உங்கள் கடமையாகும். நன்றாக முயற்சி செய்கின்ற மிகவும் நல்ல புதல்விகளும் உள்ளனர். கௌரவ சமுதாயத்தில், பிரதானமான சிலரின் பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அவர்களது மகாராத்திகள். இங்கும், மகாராத்திகளின் பெயர்கள் உள்ளன. சிவபாபாவே அனைவரிலும் அதி மகத்துவமானவர். கடவுளே அதி மேலானவர். அவரது வசிப்பிடமும் அதி மேலானதாகும். உண்மையில், ஆத்மாக்களான எங்களின் வசிப்பிடமும் அதி மேலானது. அவர்கள் புகழைப் பாடிய போதிலும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆத்மாக்களாகிய நாங்களும் அவ் விடத்து வாசிகளே ஆவோம். ஆனால் நாங்கள் பிறப்பு மறுபிறப்பினூடாகச் சென்று, எங்கள் பாகங்களை நடிக்க வேண்டும். அவர் பிறப்பு, இறப்பிற்கு உள்ளாகுவதில்லை. அவருக்கும் ஒரு பாகம் உள்ளது. ஆனால் உங்களுக்கு மாத்திரமே அது என்னவென்பது தெரியும். இது சிவபாபாவின் இரதம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஒரு குதிரையும் உள்ளது. ஆனால் அது அந்த குதி;ரையோ அல்லது இரதமோ அல்ல. இதனை மறப்பதும் நாடகத்தில் உள்ளது. அலைந்து திரிந்ததாலும் அரைக்கல்பத்திற்கு மறந்திருந்ததாலும் நாங்கள் இப்பொழுது கதியற்றிருக்கின்றோம். நாங்கள் இப்பொழுது ஞானோதயத்தைப் பெற்றிருக்கின்றோம். எனவே நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளோம். இப் பழைய உலகம் முடிவடையப் போகிறது என்பதால் நாங்கள் பற்றை வென்றவர்கள் ஆக வேண்டும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். நாங்கள் வீட்டில், குடும்பத்துடன் ஒரு தாமரையைப் போன்று வாழும் போதும், பற்றை வெல்வதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். நாங்கள் அனைவருக்குமான எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதுடன் அவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். முன்னைய கல்பத்தில் உருவாக்கப்பட்டதைப் போன்று, இந்தப் பத்தி (சூளை) உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் வீட்டில், குடும்பத்துடன் வாழும் போதும் முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டப்படுகின்றீர்கள். இங்கே உங்களது வீட்டையும், குடும்பத்தையும் விட்டுச்செல்வது என்ற கேள்வியில்லை. நாங்கள் வீட்டிலேயே அமர்ந்திருக்கின்றோம். அப்படித்தானே? பல குழந்தைகள் உள்ளனர். பாபாவிற்கும் லௌகீகக் குடும்பம் இருந்தது. அவர் எதனையும் துறக்கவில்லை. சந்நியாசிகள் காட்டிற்கு சென்று விடுகின்றார்கள். ஆனால் நாங்களோ நகரங்களில் வாழ்கின்றோம். ஆகவே, நாங்கள் அனைவருக்குமான எங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். படைப்பானது (லௌகீக) தந்தையினதாகும். தந்தை உழைத்து புத்திரர்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார். முதன் முதலில், அவர் காமம் என்ற விகாரத்தை ஆஸ்தியாகக் கொடுக்கின்றார். எனவே, உங்களை அதிலிருந்து விடுதலை செய்து, உங்களை விகாரமற்றவர் ஆக்குவதே தந்தையான சிவபாபாவின் பணியாகும். சிலரைப் பொறுத்தவரை, குழந்தைகள் தமது பெற்றோருக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார்கள். இன்னும் சிலரைப் பொறுத்தவரை தந்தை தனது குழந்தைகளுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். இது இராஜயோகமாகும். அது ஹத்த யோகமாகும். ஆத்மா பரமாத்மாவிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக் கொள்கின்றார். பிரம்மாவாகிய நான் அரசர்களுக்கெல்லாம் அரசராகி, இப்பொழுது ஒரு பிச்சைக்காரனாக ஆகியுள்ளேன். ஆண்டி அரசனான கதையொன்று உள்ளது. நீங்கள் சூரிய வம்சத்திற்குரியவர் என்பதும், அதன் பின்னர் நீங்கள் சூத்திர வம்சத்தினர் ஆகுகின்றீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சுவர்க்கமும் நரகமும் வௌ;வேறானது என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு இது தெரியாது. உங்கள் மத்தியிலும், பல குழந்தைகள் எதுவுமே தெரியாதுள்ளனர், ஏனெனில், அது அவர்களது பாக்கியத்தில் இல்லை. அவ்வாறாயின், அவர்கள் என்ன முயற்சியை செய்வார்கள்? சில குழந்தைகளின் பாக்கியத்தில் எதுவுமே இல்லை. சில குழந்தைகளின் பாக்கியத்தில் அனைத்தும் உள்ளது. அவர்களின் பாக்கியம் அவர்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றது. அது அவர்களின் பாக்கியத்தில் இல்லாதிருந்தால், அவர்கள் என்ன முயற்சியை செய்யப் போகின்றார்கள்? பாடசாலை ஒன்றே, அது தொடர்ந்தும் உள்ளது. சிலர் பாதி வழியில் விழுந்து விடுகின்றார்கள், சிலர் முன்னேறிச் செல்லும் போது, மரணிக்கின்றார்கள். பலரும் பிறப்பெடுத்தும், பின்னர் மரணித்தும் விடுகின்றார்கள். இந்த ஞானம் மிகவும் அற்புதமானது! ஞானம் மிகவும் இலகுவானது. நீங்கள் கர்மாதீத நிலையை அடைவதிலேயே அனைத்து முயற்சியும் தங்கியுள்ளது. உங்கள் பாவங்கள் அழிந்தாலே உங்களால் பறக்க முடியும். திரான்ஸில் செல்வதை விட ஞானம் மிகவும் மேன்மையானது. திரான்ஸில் மாயை பல தடைகளை உருவாக்குகின்றாள். ஆகையாலேயே திரான்ஸை விட ஞானம் சிறப்பாகும். ஞானம் யோகத்தை விட சிறப்பானது என்றல்ல, இது திரான்ஸையிட்டு கூறப்படுகின்ற விடயமாகும். திரான்ஸின் சென்றவர்கள் இப்பொழுது இங்கில்லை. யோகத்தில் வருமானம் ஈட்டப்படுகின்றது. உங்கள் பாவமும் அழிக்கப்படுகின்றது. திரான்ஸில் வருமானம் ஈட்ட முடியாது. யோகத்திலும் ஞானத்திலும் வருமானம் ஈட்டப்படுகின்றது. ஞானமும் யோகமும் இல்லாது நீங்கள் ஆரோக்கியமாகவும் செல்வந்தராகவும் ஆக முடியாது. திரான்ஸில் உலாவுகின்ற வழக்கம் உருவாக்கப்பட்டது. அதுவும் நல்லதல்ல. திரான்ஸ் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஞானம் ஒரு விநாடிக்கானதே. யோகம் ஒரு விநாடிக்கானதல்ல. நீங்கள் வாழும் வரை, நீங்கள் தொடர்ந்தும் யோகம் செய்ய வேண்டும். ஞானம் மிகவும் இலகுவாகும். ஆனால் என்றென்றும் ஆரோக்கியமாகவும், நோயிலிருந்து விடுபடவும் முயற்சி தேவையாகும். அதிகாலை எழுந்து, நினைவு செய்வதற்கு அதிகளவு தடைகள் உருவாக்கப்படுகின்றன. நீங்கள் கருத்துக்களைப் பிரித்தெடுத்த போதும், உங்கள் புத்தி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கின்றது. முதல் எண்ணிற்குரியவரே அதிகபட்ச புயலைச் சந்திப்பார். அவை சிவபாபாவிற்கு வர முடியாது. பல புயல்கள் வரும் என்று பாபா எப்பொழுதும் விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு நினைவு செய்வதற்கு முயற்சி செய்கிறீர்களோ, அந்தளவிற்கு புயலும் வரும். நீங்கள் அவற்றைக் கண்டு பயப்படக் கூடாது. நினைவில் நிலைத்திருங்கள். நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். எந்தப் புயலாலும் உங்களை அசைக்க முடியாது என்றிருக்க வேண்டும். இதுவே இறுதி நேரத்திற்கான ஸ்திதியாகும். இது ஆன்மீக ஓட்டப்பந்தயமாகும். தொடர்ந்தும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். இவ் விடயங்கள் புரிந்து கொள்ளப்பட்டு, கிரகிக்கப்பட வேண்டியவையாகும். நீங்கள் செல்வத்தை தானம் செய்யாதிருந்தால், உங்களால் கிரகிக்க முடியாது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். எவருக்கும் இரு தந்தையைப் பற்றிய கருத்தை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும். தந்தை மாத்திரமே 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்பது உங்களுக்கு மாத்திரமே தெரியும். தந்தையிடமிருந்து இலக்ஷ்மியும் நாராயணனும் 21 பிறவிகளுக்கான தமது ஆஸ்தியை பெற்றுக் கொண்டார்கள்; என்ற நீங்கள் கூறலாம். தந்தை அவர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார். கடவுள் தமக்கு ஆஸ்தியைக் கொடுத்தார் என்று வேறு எவராலுமே கூற முடியாது. உலகில் மக்களில் சிலர் ஒன்றினாலும் ஏனையோர் வேறொன்றினாலும் சந்தோஷப்படுகின்றார்கள். உங்களை சந்தோஷப்படுத்துகின்ற பொருட்களைப் பற்றி எவருக்குமே தெரியாது. மக்கள் தற்காலிகமாகவே சந்தோஷமாக உள்ளார்கள். யோகிகளும், கியானிகளுமாகிய நீங்களே பிராமண குலத்தின் உண்மையான அலங்காரமாவீர்கள். உங்கள் அதீந்திரிய சுகத்தை வேறு எவராலும் அறிந்து கொள்ள முடியாது. அவர்கள் பல விடயங்களுக்காக அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். அவர்கள் சந்திரனுக்குச் செல்லவும் முயற்சிக்கின்றார்கள். அவர்கள் மிகவும் சிரமமான முயற்சியைச் செய்கின்றார்கள். அவர்களது முயற்சி அனைத்துமே வீணாகும். எவராலுமே செல்ல முடியாத அத்தகையதொரு இடத்திற்குச் செல்வதற்கு நீங்கள் எச்சிரமும் இல்லாமல் முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் அதிமேலான பரந்தாமத்திற்குச் செல்லவே முயற்சி செய்கின்றீர்கள்.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. நீங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழும் போதும், நீங்கள் பற்றை வென்றவராகவும் ஆக வேண்டும். அதே நேரத்தில், அனைவருக்குமான உங்கள் பொறுப்பை நிறைவேற்றி, ஒரு தாமரையைப் போன்று வாழ வேண்டும்.

2. ஞானத்தைக் கிரகிப்பதற்கு, நீங்கள் நிச்சயமாக ஞானச் செல்வத்தை தானம் செய்ய வேண்டும். உங்கள் வருமானத்தை ஞானத்தினாலும் யோகத்தினாலும் சேமித்துக் கொள்ளுங்கள், ஆனால் திரான்ஸில் செல்வதற்கோ காட்சிகள் காண்பதற்கோ எந்த ஆசையையும் கொண்டிருக்காதீர்கள்.


ஆசீர்வாதம்:
மௌனசக்தியினால் உங்கள் சேமிப்பு கணக்கை அதிகரித்து மேன்மையானதொரு அந்தஸ்தை அடைவதற்கான உரிமையை கோருவீர்களாக.

இந்நேரத்தில் விஞ்ஞான சக்தி அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தி, உங்களுக்கு தற்காலிக பேறுகளை வழங்குவதைப் போன்று, நீங்கள் மௌனசக்தியினால் உங்கள் சேமிப்பு கணக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தந்தையின் தெய்வீக திருஷ்டியினால் உங்களுக்குள் சக்தியை நிறைத்துக் கொண்டால், நீங்கள் சேமித்தவற்றை தேவையான போது பிறருக்கு வழங்க முடியும். மௌனசக்தியை சேமிப்பவர்களுக்கு திருஷ்டியின் முக்கியத்துவம் தெரிவதால் அத்தகையவர்கள் மேன்மையான அந்தஸ்தைக் கோருபவர்கள் ஆகுகின்றார்கள். அவர்களின் முகத்தில் சந்தோஷம் என்ற ஆன்மிக பிரகாசம் தென்படும்.

சுலோகம்:
இயல்பான கவனம் செலுத்தப்படும் போது, எவ்வகையான பதற்றமும் இருக்க மாட்டாது.