13.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் புத்தியின் யோகம் உங்கள் சரீரத்திலிருந்தும், சரீர உறவினர்களிடமிருந்தும் துண்டிக்கப்படும் பொழுதே, ஒரேயொரு தந்தையின் மீது கலப்படமற்ற அன்பை ஏற்படுத்த முடியும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களின் ஓட்டப்பந்தயம் என்ன? அந்த ஓட்டப்பந்தயத்தில் முன்னேறிச் செல்வதற்கான அடிப்படை என்ன?

பதில்:
உங்கள் ஓட்டப்பந்தயம் சிறப்புச்சித்தி எய்துவதற்காகவாகும். உங்கள் புத்தியின் யோகமே இந்த ஓட்டபந்தயத்தின் அடிப்படை ஆகும். உங்கள் புத்தியின் யோகம் எவ்வளவுக்கு அதிகமாகத் தந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதோ, அவ்வளவுக்கு அதிகமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அப்பொழுது நீங்கள் 21 பிறவிகளுக்கு நிலையான அமைதியும் சந்தோஷமுடைய அசைக்க முடியாத இராச்சியத்தைப் பெறுவீர்கள். அதற்காகத் தந்தை உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார்: குழந்தைகளே, உறக்கத்தை வென்றவர்கள் ஆகுங்கள். ஒரு மணித்தியாலம் அல்லது அரை மணித்தியாலம் நினைவில் நி;லைத்திருந்து, தொடர்ந்தும் இப் பயிற்சியை அதிகரியுங்கள். உங்கள் நினைவிற்கான பதிவேட்டை வைத்திருங்கள்.

பாடல்:
அவர் எங்களைப் பிரியவும் மாட்டார், அவரின் மீதுள்ள எங்கள் அன்பு (அல்ஃபட்) எங்கள் இதயங்களிலிருந்து அகலவும் மாட்டாது.

ஓம்சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். அல்ஃபட் என்பது அன்பிற்கான இன்னொரு பெயராகும். குழந்தைகளாகிய உங்கள் அன்பு இப்பொழுது எல்லையற்ற தந்தையான சிவனுடன் கட்டுண்டுள்ளது. பிரம்மகுமார்களும், குமாரிகளுமாகிய நீங்கள் அவரை தாதா என்று அழைக்கின்றீர்கள். தனது தந்தையினதும் பாட்டாரினதும் தொழிலை அறியாத எம் மனிதரும் இருக்க முடியாது. வேறெந்த நிறுவனத்திலும் தாங்கள் பிரம்ம குமார்களும், குமாரிகளும் என்று கூறுகின்ற பலர் இருப்பதில்லை. தாய்மார்கள் குமாரிகள் அல்ல, ஆகவே நீங்கள் ஏன் உங்களை பிரம்மகுமாரிகள் என்று அழைக்கின்றீர்கள்? நீங்கள் பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள். பிரம்மகுமார்களும் குமாரிகளுமாகிய நீங்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள். நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் புத்திரிகள் ஆவீர்கள். நீங்கள் பிரம்மாவின் தொழிலையும் அறிந்திருக்க வேண்டும். பிரம்மா யாரது குழந்தை ஆவார்? சிவனின் குழந்தை ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரரே சிவனின் மூன்று குழந்தைகள், அவர்கள் சூட்சும உலகவாசிகள் ஆவார்கள். எவ்வாறாயினும் பிரஜாபிதா பிரம்மா ஒரு பௌதீக உலகவாசியாகவே இருக்க வேண்டும். தாங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள் என்று பல குழந்தைகள் கூறுகிறார்கள். அவர்கள் பௌதீகப் படைப்புக்களாக இருக்க முடியாது. அவர்கள் கருப்பையினூடாகப் பிறந்த படைப்புக்கள் அல்ல. உங்கள் இத்தனை பேரையும் எவ்வாறு பிரம்மகுமார்கள், பிரம்மகுமாரிகள் என்று அழைக்க முடியும் என மக்கள் வினவுவதுமில்லை. தாய்மார்களும் பிரம்மகுமாரிகள் என்றே அழைக்கப்படுவதால், பிரம்மாவின் குழந்தைகள் நிச்சயமாக வாய்வழித்தோன்றல்களே ஆவர். அவர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் ஆவார்கள். கடவுள் யார்? அவர் படைப்பவராகிய பரமாத்மாவான பரமதந்தை ஆவார். அவர் எதனைப் படைக்கின்றார்? அவர் சுவர்க்கத்தைப் படைக்கின்றார். ஆகவே அவர் நிச்சயமாகத் தனது பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பார். அவருக்கு ஒரு சரீரம் தேவை, அதனால் அவர் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும். அவருக்கு இத் தலைப்பை வெறுமனே கொடுக்க முடியாது. சிவபாபா இங்கமர்ந்திருந்து பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களுக்கு மீண்டும் ஒருமுறை இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார், ஏனெனில் அவர் மீண்டும் ஒருமுறை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். இல்லாவிடின், இத்தனை பிரம்மகுமார்களும் குமாரிகளும் எங்கிருந்து வருவார்;கள்? அவ்வாறு வினவுவதற்கான தைரியம் எவருக்கும் இல்லாதது ஓர் அற்புதமே. பல நிலையங்கள் உள்ளன. அவர்கள் வினவ வேண்டும்: நீங்கள் யார்? எங்களுக்கு உங்கள் அறிமுகத்தைக் கொடுங்கள். நீங்களே பிரஜாபிதா பிரம்மாவின் புத்திரர்களும் புத்;திரிகளும் என்பதும், சிவனின் பேரர்களும் பேத்திகளும் என்பது தெளிவானதாகும். நாங்கள் அவரது குழந்தைகள் ஆகியுள்ளோம். நாங்கள் அவரை நேசிக்கிறோம். சிவபாபாவும் கூறுகின்றார்: உங்கள் அன்பை, அதாவது, உங்கள் புத்தியின் யோகத்தை ஏனைய அனைவரிடமிருந்தும் அகற்றி, அதனை என்னுடன் மாத்திரமே இணைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பிரம்மாவினூடாக இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். பிரம்மகுமார்களும், குமாரிகளுமாகிய நீங்கள் என்னைச் செவிமடுக்கின்றீர்கள். இது மிகவும் இலகுவானதும், நேரடியானதும் ஆகும். குறைந்தபட்சம் வினவுங்கள்! ஆகவே, இது ஒரு மாட்டுத் தொழுவம் ஆகும். சமயநூல்களில் பிரம்மாவின் மாட்டுத் தொழுவம் நினைவுகூரப்பட்டுள்ளது. உண்மையில், அது சிவபாபாவின் மாட்டுத் தொழுவம் ஆகும். சிவபாபா இந்த நந்தியில் (எருது) பிரவேசிக்கின்றார், ஆனால் ‘மாட்டுத் தொழுவம்’ என்ற வார்த்தையின் காரணமாக அவர்கள் சமயநூல்களில் ஒரு பசுவைக் காட்டியுள்ளார்கள். சிவனின் பிறந்தநாள் (ஜெயந்தி) உள்ளதால், சிவன் நிச்சயமாக வந்திருக்க வேண்டும். அவர் நிச்சயமாக ஒருவரின் சரீரத்திற்குள் பிரவேசித்திருப்பார். இதுவே தந்தையான கடவுளின் பாடசாலை என்பதை நீங்கள் அறிவீர்கள். கடவுள் சிவன் பேசுகின்றார். அவரே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் ஆவார். கிருஷ்ணர் தூய்மையானவரே. அவர் ஏன் தூய்மையற்ற சரீரத்திற்குள் பிரவேசிப்பதைப் பற்றி அக்கறைப்பட வேண்டும்? ‘தொலைதூர வாசி அந்நிய தேசத்திற்கு வந்தார்;’ என்று பாடப்பட்டுள்ளது. சரீரமும் அந்நியமானது (அது அவருக்குச் சொந்தமானது அல்ல). ஆகவே சிவபாபாவே அவரை நிச்சயமாகப் படைத்திருக்க வேண்டும். அவ்வாறே மனித உலகம் உருவாக்கப்பட்டது. ஆகவே, அவர்கள் பாப்தாதா என்பதையே இது நிரூபிக்கின்றது. பிரஜாபிதா பிரம்மா மாயையை வெல்கிறார் என்பதால், அவர் மகாவீரராகிய ஆதிதேவர் ஆவார். ஜெகதாம்பாளும் நினைவுகூரப்பட்டுள்ளார். ஸ்ரீ இலக்ஷ்மியும் நினைவுகூரப்பட்டுள்ளார். ஜெகதாம்பாளே பிரம்மாவின் புத்திரியான, சரஸ்வதி என்பதை உலகம் அறியாது. அவர் ஒரு பிரம்மகுமாரி ஆவார். இவரும் ஒரு பிரம்மகுமாரி ஆவார். சிவபாபா அவரை பிரம்மாவின் வாயினூடாகத் தனக்குரியவர் ஆக்கியுள்ளார். உங்கள் அனைவரினதும் புத்தியின் அன்பு இப்பொழுது அவருடனேயே உள்ளது. கூறப்படுகின்றது: ‘கடவுளை நேசியுங்கள்!’ ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து ஒரேயொருவருடன் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரேயொருவரே கடவுள், ஆனால் அவர்கள் அவரை அறியார்கள். அவர்கள் எவ்வாறு அவரை அறிந்து கொள்ள முடியும்? தந்தை வந்து தனது அறிமுகத்தைக் கொடுக்கும் பொழுது மாத்திரமே நம்பிக்கை இருக்க முடியும். இக்காலத்தில், ஆத்மாவே பரமாத்மா என்று அனைவருக்கும் அவர்கள் கற்பித்துள்ளார்கள். இதன் காரணமாகவே அவர்களின் உறவுமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் சத்திய நாராயணனின் உண்மைக் கதையைச் செவிமடுக்கிறீர்கள். அவர் சுக்தேவரும், நீங்கள் வியாசர்களும் ஆவீர்கள். ‘வியாசர்’ என்ற பெயர் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மனிதனாக இருந்தவர். ஆனால் நீங்களோ உண்மையான வியாசர். நீங்கள் உருவாக்கியுள்ள கீதையும் அழிக்கப்படும். இப்பொழுது உண்மையானதும், பொய்யானதுமான கீதைகள் உள்ளன. சத்திய பூமியில் பொய்ம்மை என்னும் குறிப்பே கிடையாது. நீங்கள் தாதாவிடமிருந்து (பாட்டனார்) உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அது இந்த பாபாவின் சொத்து அல்ல. சுவர்க்கத்தைப் படைப்பவர், சிவபாபாவே அன்றி, பிரம்மா அல்ல. பிரம்மாவே மனித உலகைப் படைப்பவர் ஆவார். பிராமணக் குலம் பிரம்மாவின் கமலவாயினூடாகப் படைக்கப்பட்டது. நீங்கள் சிவனின் பேரக் குழந்தைகள், அதாவது நீங்கள் இறை சமுதாயத்தினர் ஆவீர்கள். அவர் உங்களைத் தனக்குரியவர்கள் ஆக்கியுள்ளார். நீங்கள் குருவின் பேரக் குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சற்குருவின் பேரர்களும் பேத்திகளும் ஆவீர்கள். அங்கே பேரர்கள், அதாவது, ஆண்கள் மாத்திரமே இருக்கிறார்;கள். பேத்திகள் இருப்பதில்லை. ஒரேயொரு சிவபாபா மாத்திரமே சற்குரு ஆவார். ‘சற்குரு இல்லாததால், காரிருள் சூழ்;ந்துள்;ளது’ என்று கூறப்பட்டுள்ளது. பிரம்மகுமார்கள், குமாரிகள் என்ற உங்கள் பெயர் மிகவும் அற்புதமாகும். தந்தை அதிகளவு விளங்கப்படுத்துகிறார், ஆனாலும் சில குழந்தைகள் புரிந்துகொள்வதேயில்லை. தந்தை கூறுகின்றார்: எல்லையற்ற தந்தையான என்னை அறிந்துகொள்வதனால், நீங்கள் அனைத்தையும் அறிந்துகொள்வீர்கள். சத்திய, திரேதாயுகங்களில், சூரிய, சந்திர வம்ச இராச்சியங்கள் உள்ளன. அதன்பின்னர், இராவண இராச்சியத்தில் பிரம்மாவின் இரவு ஆரம்பமாகுகின்றது. நீங்கள் நடைமுறை ரீதியில் பிரம்மகுமார்களும் பிரம்மகுமாரிகளும் ஆவீர்கள். நெய்யாறுகளும், பாலாறுகளும் பாய்கின்ற, சத்தியயுகம் மாத்திரமே சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இங்கே உங்களால் நெய்யைக் கூட பெற முடியாதுள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது இப் பழைய உலகம் முடிவடையவுள்ளது. ஒருநாள், இந்த வைக்கோற் போர் தீ மூட்டப்பட்டு, அனைத்தும் அழிக்கப்படும். அந்நேரத்தில் உங்களால் என்னிடமிருந்து ஆஸ்தியைப் பெற இயலாதிருக்கும். நான் வரும் பொழுது, நான் நிச்சயமாக ஒரு சரீரத்தைக் கடனாகப் பெற வேண்டும்; எனக்கு ஒரு கட்டடம் தேவையாகும். களிப்பூட்டும் வகையில் விளங்கப்படுத்துவதில் பாபா மிகவும் சிறந்தவர். நீங்கள் இப்பொழுது என்னிடமிருந்து அனைத்தையும் அறிந்து கொள்கின்றீர்கள். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதை எவரும் அறியார். 84 பிறவிகளை எடுப்பவர்கள் யார்? அனைவருமே அவற்றைப் பெற மாட்டார்கள். நிச்சயமாக, முதலில் வருகின்ற தேவர்களே 84 பிறவிகளை எடுப்பார்கள். நான் இப்பொழுது அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். நான் பாரதத்தை நரகத்திலிருந்து சுவர்க்கம் ஆக்குவதற்கு மீண்டும் ஒருமுறை வருகின்றேன். நான் அதற்கு விடுதலையளிக்கின்றேன். பின்னர் நான் வழிகாட்டியாகி, உங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். நான் ஜோதி (சுவாலை) வடிவம் என்றும் அழைக்கப்படுகின்றேன். ஜோதி வடிவமும் வர வேண்டும். அவரே கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உங்கள் தந்தை ஆவேன். என்னுடைய ஒளி என்றும் அணைவதில்லை. அது நெற்றியின் மத்தியில் வசிக்கின்ற நட்சத்திரமாகும். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு, இன்னொன்றைப் பெறுகின்றனர். ஆகவே 84 பிறவிகளின் அழிவற்ற பாகம் நட்சத்திரமான ஆத்மாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் 84 பிறவிகளை எடுக்கின்றனர், பின்னர் முதல் இலக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கின்றது. அரசரையும் அரசியையும் போன்றே, பிரஜைகளும் இருக்கிறார்கள். வேறு எவ்வாறு ஆத்மாவில் அவ்வாறான ஒரு பாகம் பதிவு செய்யப்பட்டிருக்க முடியும்? இதுவே அதி அற்புதமான, ஆழமான இரகசியம் என அழைக்கப்படுகின்றது. மனித உலகின் ஆத்மாக்கள் அனைவரிலும் ஒரு பாகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர் கூறுகின்றார்: எனக்குள் இப்பாகம் உள்ளது, அதுவும் அழிவற்றதாகும். அதில் எம்மாற்றமும் இருக்க முடியாது. பிரம்மகுமார்களும் குமாரிகளும் எனது பாகத்தை அறிவார்கள். பாகமே சுயசரிதை என்று அழைக்கப்படுகின்றது. பிரஜாபிதா பிரம்மா இருப்பதால், ஜெகதாம்பாளும் இருக்க வேண்டும். அவரும் சூத்திரரில் இருந்து பிராமணராக மாறியுள்ளார். உங்களுக்குத்; தந்தையின் மீது அன்பு உள்ளதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒரேயொருவர் மீது மாத்திரமே உங்கள் அன்பு உள்ளது. கலப்படமற்ற அன்பு கொள்வதற்கு நீண்டகாலம் எடுப்பதில்லை. எவ்வாறாயினும், பூனையான மாயையும் குறைந்தவள் அல்ல. சில பெண்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்கிறார்கள். நாங்கள் சிவபாபாவின் மீது அன்பு கொள்ளும் பொழுது, மாயை பொறாமை கொள்வதால், புயல்களை ஏற்படுத்துகின்றாள். நீங்கள் (தாயக்கட்டையில்) இரண்டு ஆறுகளைப் போட விரும்புகின்றீர்கள், ஆனால் மாயையோ இதில் குறுக்கீடு செய்கிறாள். நீங்கள் உங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழ்வதால், உங்களுக்குக் கூறப்படுகின்றது: உங்கள் புத்தியின் யோகத்தை உங்கள் சரீரத்திலிருந்தும், சரீர உறவினர்களிடமிருந்தும் துண்டித்து, என்னை நினைவு செய்யுங்கள். நானே உங்கள் அதி அன்பிற்கினிய தந்தையாவேன். நீங்கள் எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், நான் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குவேன். பிரம்மாவின் வழிகாட்டல்கள் மிகவும் பிரபல்யமானவை. ஆகவே நிச்சயமாகப் பிரம்மாவின் குழந்தைகளின் வழிகாட்டல்களும் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருக்கும். அவர்களும் அதே வழிகாட்டல்களையே கொடுப்பார்கள். தந்தை மாத்திரமே உங்களுக்கு முழு உலகின் செய்திகளையும் கூறுகின்றார். நீங்கள் உங்கள் குழந்தைகள் போன்றோரைப் பராமரிக்கலாம். ஆனால் உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கட்டும். இது ஒரு இடுகாடு என்றும், நீங்கள் தேவதைகளின் பூமிக்குச் செல்கின்றீர்கள் என்றும் கருதுங்கள். இது மிகவும் எளிமையானது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் புத்தியின் யோகத்தை வேறு எந்தச் சரீரதாரியிடமோ அல்லது சூட்சும தேவரிடமோ இணைக்காதீர்கள். தந்தை ஒரு முகவராக இருந்து இதனை உங்களுக்குக் கூறுகின்றார். ஆத்மாக்கள் நீண்டகாலமாகப் பரமாத்மாவிடமிருந்து பிரிந்திருந்தார்கள் என்பது நினைவுகூரப்படுகின்றது. தேவர்களே நீண்டகாலமாகப் பிரிந்திருந்தார்கள். அவர்களே முதன்முதலில் தங்கள் பாகங்களை நடிக்க வந்தவர்கள் ஆவார்கள். முகவரான சத்குருவை நீங்கள் கண்டுகொண்ட பொழுது, அழகிய சந்திப்பு இடம்பெற்றது. முகவராக அவர் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்வதுடன், நீங்கள் காமச்சிதையிலிருந்து அகன்று, ஞானச் சிதையில் அமர்வீர்கள் எனச் சத்தியம் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் இராச்சியப் பாக்கியத்தைப் பெறுவீர்கள். அத்தகைய அதிஅன்பிற்கினிய தந்தையை நீங்கள் எவ்வளவிற்கு நினைவு செய்கிறீர்கள் என்னும் பதிவேட்டை உங்களுடன் வைத்திருங்கள். ஒரு பெண் தனது கணவனை இரவுபகலாக நினைவு செய்கிறார். தந்தை கூறுகின்றார்: ஓ உறக்கத்தை வென்ற குழந்தைகளே, இப்பொழுது ஒரு மணித்தியாலம் அல்லது அரை மணித்தியாலம் முயற்சி செய்யுங்கள். இவ்வாறாக ஆரம்பித்துப் பின்னர் படிப்படியாக அதனை அதிகரியுங்கள். என்னுடன் யோகம் செய்தால், நீங்கள் சிறப்புச்சித்தி எய்துவீர்கள். இது புத்தியின் ஓட்டப்பந்தயமாகும். இதற்குக் காலம் எடுக்கும். உங்கள் புத்தியின் யோகத்தினூடாக மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர் நீங்கள் 21 பிறவிகளுக்கு அசைக்க முடியாத, நிலையான, அமைதிநிறைந்த, சந்தோஷ இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். நீங்கள் அதனை முன்னைய கல்பத்திலும் ஆட்சி செய்தீர்கள். இப்பொழுது உங்கள் இராச்சியப் பாக்கியத்தை மீண்டும் ஒருமுறை பெறுங்கள். நாங்களே ஒவ்வொரு கல்பத்திலும் சுவர்க்கத்தை உருவாக்கி, பின்னர் அங்கே ஆட்சி செய்பவர்கள். பின்னர், மாயை எங்களை நரகவாசிகள் ஆக்குகின்றாள். நாங்கள் இப்பொழுது இராமரின் சமுதாயத்தினர் ஆவோம். நாங்கள் அவரை நேசிக்கின்றோம். தந்தை எங்களுக்கு அவரது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். நாங்கள் அவரின் குழந்தைகள் ஆதலால், நாங்கள் ஏன் நரகத்தில் இருக்கிறோம்? நாங்கள் நிச்சயமாக ஒரு காலகட்டத்தில் சுவர்க்கத்தில் இருந்தோம். தந்தையே சுவர்க்கத்தைப் படைத்தார். பிரம்மகுமார்களும் குமாரிகளுமே அனைவருக்கும் வாழ்க்கைத் தானத்தைக் கொடுப்பவர்கள். மரணம் நீதியற்ற முறையில் வந்து அவர்களின் வாழ்க்கையை முடிக்க மாட்டாது; அவர்கள் அகால மரணத்தை அனுபவம் செய்ய மாட்டார்கள். அங்கே அகால மரணம் ஏற்படுவது என்பது அசாத்தியம் ஆகும். அங்கே அழுவதும் இருக்க மாட்டாது. ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு பிறப்பெடுக்கின்றார் என்பதை நீங்கள் காட்சிகளில் கண்டுள்ளீர்கள். அந்நேரத்தில் எங்கும் ஒளி சூழ்ந்திருக்கும். அவரே சத்தியயுகத்தின் முதல் இளவரசர் ஆவார். கிருஷ்ணரே முதல் இலக்க சதோபிரதான் ஆத்மா ஆவார். அதன்பின்னர் அவர் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கின்றார். பின்னர் அவரது சரீரம் தமோவாகி, அது முற்றிலும் சீர்கெட்ட நிலையை அடையும்பொழுது, அவர் அந்தச் சரீரத்தை நீக்கி, இன்னொன்றைப் பெறுகிறார். இது இங்கேயே பயிற்சி செய்யப்படுகின்றது. பாபா, நான் உங்களிடம் வருகின்றேன். பின்னர் நான் அங்கிருந்து சுவர்க்கத்திற்குச் சென்று, புதியதொரு சரீரத்தைப் பெறுவேன். நான் இப்பொழுது பாபாவிடம் திரும்பிச் செல்ல செல்ல வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.


தாரணைக்கான சாராம்சம்:

1. அகால மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு, அனைவருக்கும் வாழ்க்கைத் தானத்தைக் கொடுக்கின்ற சேவையைச் செய்யுங்கள். இராவண சமுதாயத்தை இராமரின் சமுதாயம் ஆக்குங்கள்.

2. உங்கள் இதயத்தின் அன்பு ஒரேயொரு தந்தையின் மீதே இருக்கட்டும். உங்கள் புத்தியின் யோகம் அலைபாய்வதை அனுமதிக்காதீர்கள். உறக்கத்தை வென்று, நினைவு செய்வதைத் தொடர்ந்தும் அதிகரியுங்கள்.

ஆசீர்வாதம்:
நேரத்திற்கு ஏற்ப ஞானியாகவும் யோகியாகவும் ஆகுவதன் மூலம், அதாவது ரூப்பாகவும் பசாந்தாகவும் ஆகுவதன் மூலம் சுய அதிகாரியாக இருபீர்களாக.

சுய அதிகாரிகளினால் தேவையான போது ரூப்பாகவும், தேவையான போது பசாந்தாகவும் ஆக முடியும். அவர்களால் இரண்டில் ஒரு ஸ்திதியை ஒரு விநாடியில் உருவாக்க முடியும். நீங்கள் ரூப்பாக இருக்க விரும்பிய போதிலும், அதற்கு மாறாக நீங்கள் ஞானவிடயங்களை நினைவுசெய்து கொண்டிருக்கிறீர்கள் என்றிருக்கக்கூடாது. ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் முற்றுப்புள்ளி இடுங்கள். சக்திவாய்ந்த பிரேக்கானது, இட்டவுடன் செயற்படும். இதற்கு, உங்கள் மனதையும் புத்தியையும் தேவையான நேரத்தில், தேவையான ஸ்திதியில் ஸ்திரமாக வைத்திருப்பதற்கான பயிற்சியை செய்யுங்கள். அத்தகைய கட்டுப்படுத்தும், ஆளும் சக்திகள் இருக்கட்டும்.

சுலோகம்:
குழப்பத்தை விளைவிப்பவர்களுக்கு அமைதியை பரிசாக வழங்குபவர்களே அமைதித் தூதுவர்கள் ஆவார்கள்.