14.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் குடும்பப்பெயரை எப்போதும் நினைவிற் கொள்ளுங்கள். நீங்கள் இறை குழந்தைகள். உங்கள் குலமும் இறை குலம். நீங்கள் தேவதேவியர்களை விடவும் மேன்மையானவர்கள். அதனால், உங்கள் நடத்தை மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும்.

கேள்வி:
தந்தை தன்னைப் போல் குழந்தைகளாகிய உங்களையும் அன்புக்கடல்களாக ஆக்கியிருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுவது எது?

பதில்:
குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போல் அன்பானவர்கள் ஆகினீர்கள். இதனாலேயே உங்கள் ஞாபகார்த்தங்களாக இருக்கும் விக்கிரகங்களை அனைவரும் நேசிக்கின்றார்கள். அவற்றை அன்போடு பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணரும் எப்போதும் மலர்ந்த முகத்துடன் புன்னகை பூத்தவாறே இருக்கிறார்கள். இப்போது பாபா உங்களை ஞானத்தாலும் யோகத்தாலும் மிக, மிக இனிமையானவர்களாக்குவது உங்களுக்குத் தெரியும். உங்கள் உதடுகளிலிருந்து எப்போதும் ஞான இரத்தினங்களே வெளி வரட்டும்.

பாடல்:
நீங்கள் அன்புக்கடல். நாங்கள் ஒரு துளிக்கு ஏங்குகிறோம்....

ஓம்சாந்தி.
‘நீங்களே அன்புக்கடல்’ என்று அவர்கள் யாரைப் போற்றிப் பாடுகிறார்கள்? இது ஒரு மனிதருடைய புகழ் அல்ல. நீங்களே அன்புக்கடல், அமைதிக்கடல், தூய்மை கடல் என்று கூறப்படுகிறது. இப்போது நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். திருமணம் செய்யாதவர்கள் பலரும் இருக்கிறார்கள். சந்நியாசிகள் ஆகாமலே தூய்மையாக இருப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். ஜனக மன்னரைப் போல் வீட்டில் இருக்கும் போதே ஒருவர் ஞானம் பெற விரும்பினார் என்று நினைவுகூரப்படுகிறது. அதைப் பற்றிய வரலாறு (கதை) இருக்கிறது. எனக்கு யாராவது பிரம்மம் பற்றிய ஞானம் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். உண்மையில் அவர்; ‘பிரம்மாவின் ஞானம்’ என்று கூறியிருக்க வேண்டும். பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து, பிரம்மா மூலம் பிரம்மகுமார், குமாரிகளுக்கு ஞானம் கொடுக்கிறார். இந்த நேரத்தில் உங்கள் குடும்பப்பெயர் பிரம்மகுமார், குமாரிகள் என்பதும் நீங்கள் இறை குழந்தைகள் என்பதும் உங்களுக்குத் தெரியும். பொதுவாக அனைவருமே தம்மை கடவுளின் குழந்தையென்றே கூறுகிறார்கள். எனவே நிச்சயமாக நீங்கள் அனைவரும் சகோதரர்கள். அதனால் உங்களை நீங்கள் தந்தையென்று அழைக்க முடியாது. தந்தைத்துவம் என்பது இல்லையாகையால் சகோதரத்துவம் என்றே அழைக்கப்படுகின்றது. உங்களை நீங்கள் பிரம்மகுமார், குமாரிகள் என்று அழைத்துக் கொள்வது ஒரு விடயம், இரண்டாவதாக நீங்கள் யாருக்கு மகனாகவும், மகளாகவும் இருக்கிறீர்களோ அவர்கள் மம்மா என்றும் பாபா என்றும் அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் சிவபாபாவின் பேரக்குழந்தைகளாகிய பிரம்மகுமார், குமாரிகள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பாரதத்தில் இருக்கும் அனைவரும் வேதங்கள், புராணங்கள் என்று பல சமயநூல்;களையும் படிக்கின்றார்கள். சமயநூல்களுக்கெல்லாம் தாயாகவும் இரத்தினமாகவும் விளங்கும் ஸ்ரீமத் பகவத் கீதை இருக்கின்றது. கீதை மூலம் சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஞானக்கடலாகிய பரமாத்மா கீதை ஞானம் கொடுத்தார். இந்த ஞான கங்கைகள் எல்லாம் ஞானக்கடலில் இருந்தே தோன்றின. கங்கை நீரிலிருந்து, உங்களைத் தூய்மையாக்குவதற்கான ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. சற்கதி பெறுதல் என்றால் தூய்மையாகுவதாகும். இது தமோபிரதானமான, தூய்மையற்ற உலகம். தூய்மையாகி விட்டு, எங்கே தான் நீ;ங்கள் இருப்பீர்கள்? ஏனெனில் நீங்கள் வீடு திரும்ப முடியாது. நியதி அதுவல்ல. அனைவரும் மறுபிறவிகள் எடுத்துத் தமோபிரதானமாக வேண்டும். தந்தை ஞானக்கடலாவார். நடைமுறையில் நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். எவராலும் இதனை பிரதி செய்;ய முடியாது. தாங்களும் இதே ஞானத்தையே கொடுக்கின்றோம் என்று கூறும் பலர் இருந்தாலும், அது உண்மையல்ல. இங்கே இந்த ஞானத்தைப் பெறுபவர்கள் அதைப் பெற்றதும் பிரம்மகுமார் அல்லது குமாரி என்றே அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் பிரம்மகுமார் அல்லது குமாரி என்று அழைக்கப்படும் நிறுவனங்கள் வேறு எதுவுமில்லை. அவர்களும் இதே ஆடையை அணிந்தாலும் கூட எவ்வாறு அவர்கள் தங்களைப் பிரம்மாவின் குழந்தைகள் என்று கூறிக்கொள்ள முடியும்? நான் இவருக்கே பிரம்மா என்று பெயரிட்டுள்ளேன். நான் இங்கிருந்து இவருக்கு விளங்கப்படுத்துகிறேன். அவர் உங்களுக்கும் கூறுகிறார்: பிரம்மகுமார், குமாரிகளாகிய உங்களுக்கு உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றியே தெரியாது. எனக்கு அவற்றைப் பற்றித் தெரியும். இப்போது சங்கமயுகத்தில் பாதங்களும் உச்சிக்குடுமியும் ஒன்று சேர்கின்றன. இதன் மூலம் பழைய உலகம் மாற்றமடைந்து, புதியதாகுகின்றது. சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்கள் இருக்கின்றன: உலகம் தொடர்ந்து வளர்ச்சியடைகின்றது. இப்போது முடிவு காலம். உலகம் மாற்றமடைந்து புதியதாக வேண்டும். தந்தை வந்து உங்களைத் திரிகாலதரிசிகளாக்குகிறார். அவர் அன்புக்கடல் என்பதால் நிச்சயமாக அவர் உங்களையும் அந்தளவுக்கு அன்பானவர்கள் ஆக்குவார். இலக்ஷ்மி, நாராயணரில் எவ்வளவு கவர்ச்சி இருக்கிறது என்று பாருங்கள்! இலக்ஷ்மி, நாராயணரைப் போல் மலர்ந்த முகத்துடனும் புன்னகையுடனும் இராமர், சீதையைக் காண மாட்டீர்கள். இலக்ஷ்மி, நாராயணருடைய படத்தைப் பார்த்ததுமே நீங்கள் சந்தோஷத்தை அனுபவிக்கின்றீர்கள். இராதை, கிருஷ்ணர் ஆலயத்திற்குச் செல்வதில் கூட அவ்வளவு சந்தோஷ அனுபவம் ஏற்படாது. இலக்ஷ்மி, நாராயணருக்கு அவர்களது இராச்சிய பாக்கியம் இருக்கின்றது. உலகத்தவருக்கு இந்த விடயங்களைப் பற்றித் தெரியாது. பாபா உங்களை மிகவும் இனிமையானவர்கள் ஆக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மியும் நாராயணரும் ஞானக்கடல் என்று அழைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் இந்த யோகத்தாலும் ஞானத்தாலுமே அவ்வாறு ஆகினார்கள். நீங்கள் இப்பொழுது அவர்களைப் போல் ஆகுகின்றீர்கள். உலகம் ஒன்றுபட வேண்டும் என்றும், ஒரே இராச்சியமாக வேண்டுமென்றும் மக்கள் விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் ஒரே இராச்சியம் இருந்ததென்று உங்களுக்கு அவர்கள் நினைவூட்டுகிறார்கள். ஆனாலும், அனைவரும் ஒற்றுமையாகி ஒன்றுபடுவார்கள் என்பதல்ல. இல்லை. அங்கே மிகச் சில மனிதர்களே இருக்கிறார்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். கடவுள் எங்கும் இருக்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஆத்மாக்கள் தான் எங்கும் இருக்கிறார்கள். ஆத்மாக்கள் சர்வவியாபகர்கள். ஒவ்வொருவரிலும் ஆத்மா இருக்கிறார். அனைவரிலும் கடவுள் இருக்கிறார் என்பதல்ல. எனவே, அவர்களைக் கொண்டு அவ்வாறானதொரு சத்தியப்பிரமாணம் செய்விப்பதில் அர்த்தமென்ன இருக்கிறது? கடவுள் அவர்களில் இருக்கிறார் என்றால், யாருடைய பெயரில் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள்? நாங்கள் தவறான காரியங்கள் செய்தால், கடவுள் எங்களைத் தண்டிப்பார். அனைவரிலும் கடவுள் இருக்கிறார் என்றால், சத்தியப்பிரமாணம் செய்வதில் அர்த்தமில்லை. நீங்கள் இப்போது சரீர வடிவத்தில் இருக்கிறீர்கள். பௌதீகக் கண்களால் ஆத்மாவையே பார்க்க முடியாத போது, கடவுளை எவ்வாறு உங்களால் பார்க்க முடியும்? நீங்கள் ஆத்மா என்பதை நீங்கள் உணர்கின்றீர்கள். தங்களுக்குக் கடவுளின் காட்சி கிடைக்க வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால், ஆத்மாவைப் பார்ப்பது சாத்தியமில்லையென்றால், கடவுளை எவ்வாறு உங்களால் இக் கண்களால் காண முடியும்? ஆத்மாக்களே தூய புண்ணியாத்மாக்களாகவோ அல்லது பாவத்மாக்களாகவோ ஆகுகின்றார்கள். இந்த நேரத்தில் அனைவரும் பாவாத்மாக்களே. நீங்கள் பெருமளவில்; புண்ணியங்கள் செய்தீர்கள். நீங்கள் உங்கள் மனம், சரீரம், செல்வம் ஆகியவற்றை தந்தையிடம் அர்ப்பணித்தீர்கள். நீங்கள் இப்பொழுது பாவாத்மாக்களில் இருந்து புண்ணியாத்மாக்களாக ஆகுகின்றீர்கள். உங்கள் மனம், புத்தி, செல்வத்தை நீங்கள் சிவபாபாவிடம் அர்ப்பணிக்கின்றீர்கள். இவர் அனைத்தையும் அர்ப்பணித்தார். இவர் தன் சரீரத்தையும் உண்மையான சேவைக்காகக் கொடுத்தார். அவர் தன்னைத் தாய்மார்களின் முன் அர்ப்பணித்து, அவர்களை நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ஆக்கினார். தாய்மார்களை முன்னேற்ற வேண்டியிருந்தது. தாய்மார்கள் அவரிடம் வந்து தஞ்சம் புகுந்தனர். எனவே, அவர்களையெல்லாம் எவ்வாறு பராமரிப்பது? அவர் தன்னைத் தாய்மார்களிடம் அர்ப்பணிக்க வேண்டியிருந்தது. ‘வந்தே மாதரம்’ (தாய்மார்களுக்கு வந்தனங்கள்) என்று தந்தை கூறுகிறார். எங்கும் இருப்பது என்பதன் அர்த்தமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஓ தந்தையாகிய கடவுளே என்று ஆத்மாக்கள் கூவி அழைக்கிறார்கள். ஆத்மாக்கள் எந்தத் தந்தையைக் கூவி அழைக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது புரிவதில்லை. நீங்கள் இலக்ஷ்மி, நாராயணர் ஆகுகின்றீர்கள். அவர்களை மக்கள் பெரிதும் நேசிக்கிறார்கள். அவர்கள் ‘புனித’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள். இப்போது நீங்கள் இறை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், முன்பு அசுர குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். பிராமணர்களுடைய குடும்பப் பெயர் இறை குழந்தைகள் என்பதாகும். இராம இராச்சியம் வர வேண்டுமென்றும், புதிய பாரதத்தில் புதிய இராச்சியம் வர வேண்டுமென்றும், உலக சர்வசக்தி படைத்த அரசாங்கம் இருக்க வேண்டுமென்றும் பாபு காந்திஜி விரும்பினார். அதை எல்லையற்ற தந்தையாலேயே ஸ்தாபிக்க முடியும். தந்தை கூறுகிறார்: ‘நான் உலக சர்வசக்திவான், நானே அதிமேலான அசரீரியானவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் என் படைப்பேயாவர்.’ பாரதம் சிவாலயமாகவும் முற்றிலும் விகாரமற்றதாகவும் இருந்தது. இப்போதோ அது முற்றிலும் விகாரமானதாக இருக்கிறது. இங்கே தான் நீங்கள் முற்றிலும் விகாரமானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒரே உலகமும், ஒரே சர்வசக்தி படைத்த இராச்சியமும் வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். இலக்ஷ்மி, நாராயணருடைய, உலக சர்வசக்தி படைத்த ஒரே தேவ இராச்சியத்தைப் பரமாத்மா ஸ்தாபிக்கின்றார். ஏனைய அனைவருடைய விநாசமும் சற்று முன்னால் உள்ளது. அந்தளவுக்குப் போதை இருக்க வேண்டும். இங்கிருந்து நீங்கள் வீடு சென்றதும் உணர்வற்றுப் போய் விடுகின்றீர்கள். (உயிர் கொடுக்கும்) சஞ்சீவி மூலிகை பற்றிய கதை இருக்கின்றது. ஆனால், அது மன்மனாபவ என்னும் ஞான மூலிகையேயாகும். நீங்கள் சரீர உணர்வுடையவர்களாகும் போது, மாயையால் அறையப்படுகின்றீர்கள். ஆத்ம உணர்வுடையவராகும் போது நீங்கள் அறையப்பட மாட்டீர்கள். நாங்கள் சிவபாபாவிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். இது பிரம்மாவின் இறுதிப் பிறவியாகும். அவரும் ஆஸ்தியொன்றைப் பெறுகின்றார். தேவலோக இராச்சியம் என்பது உங்கள் இறை தந்தை தரும் பிறப்புரிமையாகும். குழந்தைகளாகிய உங்களுக்குத் தெய்வீகமான நடத்தையே இருக்க வேண்டும். பிராமணர்களாகிய நீங்கள் தேவதேவியர்களை விடவும் மேன்மையானவர்கள். நீங்கள் மிக இனிமையாகவே பேச வேண்டும். சொற்பொழிவுகள் ஆற்றுவதற்கு நீங்கள் பேச வேண்டுமே தவிர, வீண் விடயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. எப்போதும் உங்கள் உதடுகளிலிருந்து இரத்தினங்களே வெளிவரட்டும். உங்களிடம் அந்தப் பௌதீகக் கண்கள் இருக்கின்ற போதிலும், சுவர்க்கத்தையும் அசரீரி உலகத்தையுமே நீங்கள் காண வேண்டும். ஆத்மாவே ஞானக் கண்ணைப் பெற்றுக் கொள்கிறார். ஆத்மா உறுப்புகள் மூலமாகக் கற்கிறார். ஞானப்பல்லைப் போல், மூன்றாவது ஞானக்கண்ணையும் நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள். தந்தை பிராமணர்களுக்கே ஆஸ்தி கொடுக்கிறார், சூத்திரர்களுக்கு அல்ல. ஆத்மாவே மூன்றாவது கண்ணைப் பெற்றுக் கொள்கிறார். மூன்றாவது கண் இல்லாது, சரியானதையும் பிழையானதையும் உங்களால் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. இராவணன் உங்களைத் தவறான பாதையைப் பின்பற்றச் செய்கிறான். தந்தையோ உங்களைச் சரியான பாதையைப் பின்பற்ற வைக்கிறார். எப்போதும் நீங்கள் ஒருவருக்கொருவர் நற்குணங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும். நற்குணங்களுக்குப் பதிலாகக் குறைபாடுகளைக் கவனத்தில் கொள்ளக்கூடாது. டாக்டர் நிர்மலாவைப் பாருங்கள். அவர் மிக இனிமையானதொரு சுபாவமுடையவர். அவர் அமைதியானவர். குறைவாகப் பேசுவது எப்படியென்று அவரிடமிருந்தே பழகிக் கொள்ள வேண்டும். அவர் மிகவும் விவேகமுள்ள, இனிமையான குழந்தையாக இருக்கிறார். அமைதியாக அமர்ந்திருக்கும் இராஜரீகம் ஒருவரிடம் இருக்க வேண்டும். சிறிது நேரத்திற்குத் தந்தையின் நினைவில் இருப்பதாகவும் பின்பு, நாள் முழுவதும் மறந்து விடுவதாகவும் இருக்கக்கூடாது. இதையும் நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்தவதன் மூலம் நீங்கள் பலம் பெறுகின்றீர்கள். தந்தையும் மகிழ்ச்சியடைகின்றார். அவ்வாறானதொரு ஸ்திதி கொண்ட ஒருவர், இன்னொருவரைப் பார்த்த கணமே அவரைச் சரீரமற்றவராக்கி விடுவார். அவர்கள் சரீரமற்றவர்களாகி அமைதியானவர்களாகி விடுவார்கள். வெறுமனே அமைதியாக இருப்பது உண்மையான சந்தோஷமல்ல. அது தற்காலிகமான சந்தோஷம். மௌனமாக அமர்ந்திருந்தால், எவ்வாறு காரியங்களைச் செய்வீர்கள்? யோகத்தில் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இங்கே உண்மையான அமைதியும் சந்தோஷமும் ஏற்பட முடியாது. இங்கே அனைத்தும் தற்காலிகமானதேயாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு: 09.04.1968

இப்போதெல்லாம், உலகத்தில் எவ்வாறு அமைதியை ஏற்படுத்தலாம் என்று பலரும் மாநாடுகள் நடத்துகிறார்கள். நீங்கள் அவர்களுக்குப் பின்வருமாறு கூற வேண்டும்: சத்தியயுகத்தில் ஒரே இராச்சியமும் ஒரே மதமும் இருந்தன. அது பிரிவினையற்ற இராச்சியமாக இருந்தது. முரண்பாடுகள் ஏதும் ஏற்படும் வகையில், அங்கே வேறு மதங்களேதும் இருக்கவில்லை. அதுவே இராம இராச்சியமாக இருந்தது. அப்போது தான் உலகத்தில் அமைதி நிலவியது. உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். சத்தியயுகத்திலேயே அது நிலவியது. பிற்காலத்தில், பல மதங்களும் வந்ததும் அமைதியின்மை தோன்றியது. ஆனாலும், ஒருவருக்குப் புரியும் வரை நீங்கள் பாடுபடத்தான் வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் போது, இது பத்திரிகைகளில் அச்சிடப்படும். அப்போது, அந்த சந்நியாசிகளின் செவிகள் திறக்கும். உங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்ற உத்தரவாதம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கின்றது. உங்களுக்கு இந்தப் போதை இருக்கின்றது. அருங்காட்சியகத்தில் கோலாகலத்தைப் பார்க்கும் போது, பலரும் வருவார்கள். அவர்கள் உள்ளே சென்று பார்த்து அதிசயிப்பார்கள். புதிய படங்களைப் பார்த்து, புதிய விளக்கங்கள் கூறப்படுவதைக் கேட்பார்கள். யோகம் முக்திக்கும் ஜீவன்முக்திக்குமாகவாகும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அதனை மனிதர்கள் எவரும் கற்பிக்க முடியாது. பின்வருமாறும் நீங்கள் எழுத வேண்டும்: முக்தி, ஜீவன்முக்திக்குரிய யோகத்தைப் பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர வேறு எவராலும் கற்பிக்க முடியாது. அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஒரேயொருவரேயாவார். இது மிகத் தெளிவாக எழுதப்பட வேண்டும். மக்கள் அதை வாசிக்கட்டும். சந்நியாசிகள் எதனைக் கற்பிக்கிறார்கள்? அவர்கள் எப்போதும் யோகத்தைப் பற்றியே பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எவராலுமே யோகத்தைக் கற்பிக்க முடியாது. ஒரேயொருவருக்கே புகழ் இருக்கிறது. உலகத்தில் அமைதியை நிலைநாட்டி, முக்தியையும் ஜீவன்முக்தியையும் கொடுப்பது தந்தையொருவருடைய பணியேயாகும். இந்த வகையில் நீங்கள் ஞானக்கடலைக் கடைந்து, கருத்துகளை விளங்கப்படுத்த வேண்டும். இது சரியென்று மக்கள் உணரும் வகையில், நீங்கள் எழுத வேண்டும். இந்த உலகம் மாற வேண்டும். இது மரணபூமி. புதிய உலகம் அமரத்துவ பூமி என்று அழைக்கப்படுகிறது. அமரத்துவ பூமியில் மக்கள் எவ்வாறு அமரர்களாக இருக்கிறார்கள் என்பது ஓர் அற்புதமாகும். அங்கே, அவர்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது. அத்துடன், நீங்கள் ஆடை மாற்றுவதைப் போல அவர்கள் குறிப்பிட்ட காலம் வந்ததும், இயல்பாகவே சரீரத்தை விட்டு நீங்கிச் செல்வார்கள். இந்த விடயங்கள் எல்லாம் விளங்கப்படுத்தப்பட வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையிடமிருந்தும் தாதாவிடமிருந்தும் அன்பும், நினைவுகளும், இரவு வணக்கமும் நமஸ்தேயும்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1. உங்கள் சுபாவத்தை மிக இனிமையானதாகவும், அமைதியானதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். மிகக் குறைவாகவும் இராஜரீகமாகவும் பேசுங்கள்.

2. தந்தை பிரம்மாவைப் போல், உங்கள் மனம், சரீரம், செல்வம் ஆகியவற்றின் நம்பிக்கைப் பொறுப்பாளராக இருங்கள்.


ஆசீர்வாதம்:
உங்களுடைய ஆதியும் அநாதியுமான வடிவத்தின் விழிப்புணர்வினூடாக சகல பந்தனங்களையும் முடித்துக் கொள்வதன் மூலம் பந்தனத்திலிருந்து விடுபடுவீர்களாக.

ஒவ்வொரு ஆத்மாவினதும் ஆதியும் அநாதியுமான வடிவம் சுதந்திரமாகும், அதாவது அதிபதியாக இருப்பதாகும். பின்னரே ஆத்மாக்கள் தங்கியிருக்க ஆரம்பித்தனர். ஆகையால், உங்கள் விழிப்புணர்வில் உங்கள் ஆதியும் அநாதியுமான வடிவத்தைக் கொண்டிருப்பதன் மூலம் பந்தனத்திலிருந்து விடுபடுங்கள். மனதிலும் பந்தனம் இருத்தல் ஆகாது. மனதில் ஏதேனும் பந்தனம் இருக்குமாயின், அந்த பந்தனங்கள் ஏனைய பந்தனங்களை ஏற்படுத்தும். பந்தனத்திலிருந்து விடுபட்டிருத்தல் என்றால், ஓர் அரசராக அதாவது சுயராச்சியத்தைக் கொண்டிருக்;கும் சுயத்தின் அதிபதியாக இருப்பதாகும். பந்தனத்திலிருந்து விடுபட்ட, விடுதலையான அத்தகைய ஆத்மாக்கள் சிறப்புச்சித்தி எய்துகின்றார்கள், அதாவது அவர்கள் முதற் பிரிவிற்குள் செல்கிறார்கள்.

சுலோகம்:
மாஸ்டர் துன்பத்தை அகற்றுபவராக இருப்பதும், துன்பத்தை ஆன்மிக சந்தோஷமாக மாற்றுவதுமே உண்மையான சேவையாகும்.