28.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பழைய உலகத்தின் மீதான உங்கள் பற்றைத் துறந்து, சேவையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருங்கள். சேவையில் ஒருபொழுதும் களைப்படையாதீர்கள்.

கேள்வி:
ஞானத்தில் போதையுடையவர்களாக இருக்கின்ற குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?

பதில்:
அவர்கள் சேவை செய்வதில் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எப்பொழுதும் மனதாலும் வார்த்தைகளாலும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, அதற்கான அத்தாட்சியைக் காட்டுகின்றார்கள். இராச்சியத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கையில், அவர்கள் எதையாவது சகித்துக் கொள்ள வேண்டியிருந்தால், அவர்கள் சகித்துக் கொள்கின்றார்கள். அவர்கள் தந்தையின் முழு உதவியாளர்களாக இருந்து, பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகின்ற சேவையைச் செய்கின்றார்கள்.

பாடல்:
தாயே, ஓ தாயே! நீங்களே அனைவருக்கும் பாக்கியத்தை அருள்பவர்...

ஓம்சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக இப்பொழுது தாயை அறிவீர்கள். நீங்கள் தாயை அறிவீர்கள் ஆகையால், நீங்கள் நிச்சயமாகத் தந்தையையும் அறிவீர்கள். இந்தத் தாயும் தந்தையும் நூறுமடங்கு பாக்கியத்தை அருள்வதுடன், பாக்கியத்தை அருள்பவர்களும் ஆவார்கள். நூறு மடங்கு பாக்கியத்துடன் இருப்பவர்கள், முயற்சி செய்து, தங்களுடைய முழு பாக்கியத்தையும் உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்களுடைய ஆஸ்தியைச் சூரிய, சந்திர வம்சங்களில் பெறுகிறார்கள், அதுவும் வரிசைக்கிரமமே. சுதேசிகள் போன்ற பலர் இருக்கின்றார்கள்; அவர்கள் சென்று, மிகவும் சாதாரணப் பிரஜைகள் மத்தியிலேயே பிறப்பார்கள்; அவர்களால் ஓர் அந்தஸ்தைப் பெற முடியாது. தந்தை நிச்சயமாக உங்களுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, இப் பழைய உலகத்தின் மீது பற்று வைக்காதீர்கள். இந்தப் பரிதாபத்துக்குரிய உலகம் கதறி அழுகின்றது. சேவை செய்வதில் குழந்தைகள் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்க வேண்டும். சிலர் சேவை செய்வதற்கு உற்சாகத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் சேவை செய்வதற்கான கலையைக் கொண்டிருப்பதில்லை. நீங்கள் பல வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். எழுத்துக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். திரிமுர்த்தியினதும் விருட்சத்தினதும் படங்கள் 30” ஒ 40” அளவுடையதாக இருக்க வேண்டும். இவை மிகவும் பயனுள்ள விடயங்களாகும். எவ்வாறாயினும், குழந்தைகள் அதனைக் குறைத்து மதிப்பிடுகின்றார்கள். சஞ்ஜயின் மீது அதிகளவு மரியாதை இருந்தாலும், அப் புகழ் இறுதி நேரத்திற்கானது. “அதீந்திரிய சந்தோஷத்தைப் பற்றிக் கோப, கோபியரிடம் கேளுங்கள்” என்று கூறப்பட்டுள்ளதால், அந்தப் புகழும் இறுதி ஸ்திதியைப் பற்றியதாகும். இப்பொழுது எவரிடமும் அந்தச் சந்தோஷம் இல்லை. இப்பொழுது அவர்கள் தொடர்ந்தும் அழுதவாறும், விழுந்தவாறும் இருக்கின்றார்கள்; மாயை அவர்களை அறைகின்றாள். சிலர் ஒவ்வொரு நாளும் வந்தாலும், அவர்களிடம் அந்தப் போதை இல்லை. நீங்கள் சேவை செய்வதற்குப் பல வாய்ப்புக்களைப் பெறுகின்றீர்கள். ஒரு தர்மமே இருக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் கூறுகின்றார்கள். பாரதத்தில் ஒரேயொரு அரசாங்கமே இருந்தது. அது சுவர்க்கம் என அழைக்கப்பட்டாலும், எவருக்கும் அது தெரியாது. 5000 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரேயொரு இராச்சியம் இருந்தது. இராம இராச்சியத்திலும் ஓர் அரசாங்கமே இருப்பதால், 2500 ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரேயொரு இராச்சியமே இருந்தது என்று உங்களால் கூற முடியும். சத்திய, திரேதா யுகங்களில் 2500 ஆண்டுகளுக்கு, ஒரேயொரு அரசாங்கமே இருந்தது. முரண்பாடுகள் ஏதேனும் ஏற்படும் வகையில் இரண்டு அரசாங்கங்கள் இருக்கவில்லை. இங்கே, சீனர்களும் இந்துக்களும் சகோதரர்கள் என்று அவர்கள் தொடர்ந்தும் கூறுகிறார்கள். அதன்பின்னர் அவர்கள் தொடர்ந்தும் என்ன செய்கிறார்கள் எனப் பாருங்கள்! அவர்கள் தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் சுடுகிறார்கள். உலகம் அப்படிப்பட்டதாக இருக்கின்றது. கணவனும் மனைவியும் கூட தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். மனைவி, கணவனை அறைவதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் அதிகளவு சண்டை இடம்பெறுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரேயொரு அரசாங்கமே இருந்தது என்ற விடயத்தைப் பாரத மக்கள் மறந்து விட்டார்கள். இப்பொழுது பல அரசாங்கங்களும், பல சமயங்களும் இருப்பதால், நிச்சயமாகச் சண்டை இருக்கும். பாரதத்தில் ஒரேயொரு அரசாங்கமே இருந்தது என்று நீங்கள் அவர்களுக்குக் கூறுங்கள். அது தேவ தேவியரின் அரசாங்கம் என அழைக்கப்பட்டது. பக்தி மார்க்கம் பின்னரே வந்தது. சத்திய, திரேதா யுகங்களில் பக்தி இருக்கவில்லை. மக்கள் அதிகளவு அகங்காரத்தைக் காட்டினாலும், அவர்களுடைய ஞானம் சிப்பியின் பெறுமதியையேனும் கொண்டிருப்பதில்லை. அவர்கள், வைத்தியர் ஆகுவதற்கான ஞானம், சட்டத்தரணி ஆகுவதற்கான ஞானம் போன்ற ஏனைய ஞானத்தை அதிகளவு கொண்டுள்ளார்கள். தந்தை கூறுகிறார்: தங்களைத் தத்துவ கலாநிதிகள் என்று அழைப்பவர்கள் கூட, இந்த ஞானத்தைச் சிறிதளவேனும் கொண்டிருப்பதில்லை. தத்துவ ஞானம் என்றால் என்னவென்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. எனவே குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் விருப்பத்தைக் கொண்டிருந்து, ஸ்தாபனையில் உதவியாளர்களாக ஆகுங்கள். நீங்கள் நல்லது எதையாவது செய்து, அதை அவர்களுக்கு அளிக்;க வேண்டும். ஒருவருடைய அந்தஸ்தின் அடிப்படையில், அவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படுகின்றது. உதாரணமாக, அரசாங்கத்தில் பல உத்தியோகஸ்தர்கள் இருக்கின்றார்கள். கல்வி அமைச்சரும், முதலமைச்சரும் இருக்கிறார்கள். இங்கும் அலுவலகம் இருக்க வேண்டும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட எந்த வழிகாட்டல்களயும் நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்கள் இப்பொழுது கொரக்பூரி கீதையை எழுதியுள்ளார்கள். அவர்கள் அதை இலவசமாக விநியோகிப்பதற்கும் தயாராக இருக்கின்றார்கள். சகல நிறுவனங்களும் அதிகளவு நிதியைக் கொண்டுள்ளன. காஷ்மீர் மகாராஜா மரணித்த போது, அவர் ஆரிய சமாஜத்திற்கு உரியவராக இருந்ததால், அவருடைய சொத்துக்கள் அனைத்தும் ஆரிய சமாஜத்துக்குக் கொடுக்கப்பட்டது. சந்நியாசிகளும் அதிகளவு பணத்தைக் வைத்திருந்தார்கள். நீங்கள் உங்களிடமுள்ள பணம் அனைத்தையும் இந்தச் சேவையில் பயன்படுத்துவதால், பாரதம் சுவர்க்கமாக முடியும். நீங்கள் அதைச் சுவர்க்கம் ஆக்குவதற்கு உதவுகின்றீர்கள். பகலுக்கும் இரவிற்குமான வித்தியாசம் இருக்கின்றது. நாளுக்கு நாள், அவர்கள் தொடர்ந்தும் நரகவாசிகளாக ஆகுகின்றார்கள். அதேவேளையில் தந்தை இப்பொழுது உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்கிக் கொண்டிருக்கின்றார். அனைவரும் ஏழைகளாக இருக்கின்றார்கள். நாங்கள் தொடர்ந்தும் பணத்தைச் சேர்க்கின்றோம் என்றில்லை. நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, என்னிடமுள்ள இச் சதங்களை யக்ஞத்திற்கான சேவைக்காகப் பயன்படுத்துங்கள். இந்நேரத்தில், அனைவரும் தங்களுக்கிடையில் தொடர்ந்தும் சண்டை சச்சரவு செய்கின்றார்கள். ஓரே அரசாங்கம் இருக்க முடியாது. எனவே, ஒரேயொரு சூரிய, சந்திர வம்ச அரசாங்கம் நிச்சயமாக இருந்தது என்று நீங்கள் அரசாங்கத்திற்குக் கூற வேண்டும். நீங்களும் அதை விரும்புகின்றீர்கள் என்பதால் அது நிச்சயமாக இடம்பெறும். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் தந்தையாகிய சுவர்க்கக் கடவுளாவார். நாங்கள் ஒரேயொரு தேவ அரசாங்கத்தை ஸ்தாபிக்கின்றோம். அசுர அரசாங்கம் அங்கே இருப்பதில்லை. அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். நீங்கள் மிக நல்ல ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள், அதனால் அதிகளவை அடைய முடியும். டெல்லி தலைமைக் காரியாலயம் ஆகும். அவர்களால் அதிகளவு சேவை செய்ய முடியும். அங்குள்ள குழந்தைகளும் மிக நல்லவர்கள். ஜெகதீஸ் சஞ்ஜயும் அங்கே இருக்கிறார். எவ்வாறாயினும், அனைவரும் சஞ்ஜயே, ஒருவர் மாத்திரம் சஞ்ஜய் அல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் சஞ்ஜய் ஆவீர்கள். அனைவருக்கும் பாதையைக் காட்டுவதே உங்களுடைய பணியாகும். தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் மிக நன்றாக விளங்கப்படுத்தினாலும், குழந்தைகள் அவர்களுடைய தொழில்;, அவர்களுடைய குழந்தைகளைப் பராமரி;த்தல் போன்றவற்றில் அகப்பட்டுள்ளார்கள். வீட்டில் குடும்பத்துடன் வசிக்கின்றபோது, அவர்கள் தந்தையின் உதவியாளர்களாக ஆகுவதில்லை. இங்கே, நீங்கள் சேவை செய்வதன் மூலம் இதைச் செய்து காட்ட வேண்டும். ஒரேயொரு அரசாங்கம் எவ்வாறு ஸ்தாபிக்கபப்டுகிறது? இந்தச் சக்கரமும் நாடகமும் உங்களுக்குக் காலத்தைக் காட்டுகின்றது. இராவணனுடைய படம் உருவாக்கப்பட்டதைப் போல, பெரிய சக்கரத்தின் படத்தை உருவாக்கி, அதில் எழுதுங்கள்: கடிகார முள் காலத்தை அண்மித்து விட்டது. இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஒரேயொரு அரசாங்கம் இருக்க வேண்டும். பாபா உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். சிவபாபா வீதிகளுக்குச் சென்று, அலைந்து திரியமாட்டார். இவர் செல்வாராயின், சிவபாபாவும் தடுமாறித் திரிய வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். நீங்கள் பாபாவிற்கு மரியாதை செலுத்த வேண்டும். சேவை செய்வது குழந்தைகளின் கடமையாகும். நீங்கள் எழுத வேண்டும்: பாரதத்தில் இருந்த ஒரேயொரு அரசாங்கம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. பல வருடங்களுக்கு முன்னர் இந்த யாகம் உருவாக்கப்பட்டது. இந்த உலகின் குப்பைகள் அனைத்தும் அதில் அமிழ்ந்து விடப் போகின்றது. இது மிகவும் இலகுவானது என்றாலும், அனைவருக்கும் விளங்கப்படுத்துவதற்கு நேரம் எடுக்கிறது. இப்பொழுது எந்த அரசர்களும் இங்கு இல்லை. ஒரேயொருவரை எவருமே நம்ப மாட்டார்கள். முன்னர் ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டதும் அவர்கள் அச்செய்தியை அரசரினூடாகவே பரப்புவார்கள், ஏனெனில் அரசர் அத்தகைய சக்தியைக் கொண்டிருந்தார். ஒருவர் இராஜயோகம் கற்பதனால் அல்லது பெருமளவு செல்வத்தைத் தானம் செய்வதனாலேயே அரசர் ஆகுகின்றார். இங்கோ, இது மக்களின் ஆட்சியே. ஒரேயொரு அரசாங்கம் (கட்சி) மாத்திரம் இங்கில்லை. பரிதாபத்திற்குரிய இராணுவ வீரர்களின் கட்சியும் இருக்கின்றது; அவர்கள் மற்றவர்களை அவமரியாதை செய்வதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை. அத்தகைய பல செயற்பாடுகளும் தொடர்ந்தும் நடந்து கொண்டே இருக்கின்றது. அவர்களுக்குச் சிறிதளவு பணத்தையேனும் கொடுத்தீர்களேயானால் அவர்கள் பெரிய மந்திரிமார்களைக் கூட கொன்றுவிடுவார்கள். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதற்கான சந்தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளவேண்டுமேயன்றி, உறங்கிவிடக்கூடாது. சமய சம்பந்தமான கதைகளைச் செவிமடுக்கச் செல்லும் மக்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் மீண்டும் முன்னர் இருந்ததைப் போன்றே ஆகி, உற்சாகமின்றி இருப்பதைப் போன்றே, குழந்தைகளும் உற்சாகம் குன்றியவர்களாகவே காணப்படுகின்றார்கள். அரசாங்கப் பூந்தோட்டங்கள் பல மிகச் சிறந்த முதற்தரமான மலர்களைக் கொண்டதாக இருக்கும். அவர்களின் திணைக்களம் வேறுபட்டது. யாராவது ஒருவர் அங்கு சென்றதுமே முதலில் அவர்களுக்கு முதற்தரமான மலர்கள் கொடுக்கப்படுகின்றது. இதுவும் தந்தையின் பூந்தோட்டமே. யாராவது இங்கு வந்தால், அவர்களை நீங்கள் சுற்றிப்பார்க்க அழைத்துச் செல்லும் பொழுது எதைக் காட்டுவீர்கள்? நீங்கள் அவர்களுக்குப் பெயர்களையே கூறுவீர்கள். இவை மிகச்சிறந்த மலர்கள். ஊமத்தம் பூ எருக்கலம் பூ போன்றவர்களும் இங்கு அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் பிரகாசிப்பதில்லை; அவர்கள் எவ்விதமான சேவையைச் செய்வதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும், நீங்கள் யாராவது ஒருவருக்கு தந்தையின் அறிமுகத்தை நிச்சயமாகக் கொடுக்கவே வேண்டும். நீங்கள் மறைமுகமானவர்கள், உங்களுக்குப் பல தடைகள் உள்ளன. நீங்கள் இன்னமும் சேவை செய்வதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகவில்லை. பாபா மீண்டும் மீண்டும் உங்களை ஆலயங்களுக்கும், சுடுகாடுகளுக்கும் செல்லுமாறு கூறுகின்றார். நீங்கள் அங்கு சென்று சொற்பொழிவுகளை ஆற்ற வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சேவைக்கான அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும். பல நூறுபேரில் மிகச்சொற்பளவினரே வெளிப்படுவார்கள். நீங்கள் இதனை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். மக்கள் இங்கு வருவதற்குப் பயப்படும் பொழுது, நீங்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் தந்தையின் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டதும் மிகச் சந்தோஷமடைவார்கள். பாபா கூறுகின்றார்: சேவை செய்யும் பொழுது எவ்விதமான களைப்பும் இருக்கக்கூடாது. நூறில் ஒருவரேனும் வெளிப்படுவார். ஓர் இராச்சியத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் நிச்சயமாகச் சற்று சகித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இகழ்ச்சிகளுக்கு முகங்கொடுக்கும் வரையில் உங்களால் காலங்கிதாராக (பல இகழ்ச்சிகளுக்கு முகங்கொடுத்ததால் வழிபாடு செய்யப்படுபவர்) ஆகமுடியாது. உங்கள் ஞானத்தின் போதை அதிகமாகும். எவ்வாறாயினும், அதன் பெறுபேறு எங்கே? சரி, நீங்கள் 10 அல்லது 20 பேருக்கு ஞானத்தைக் கொடுத்திருந்தீர்களேயாயின், அதன் மூலம் ஒருவரோ அல்லது இருவரோ விழித்தெழுந்தால், அதனைப் பற்றி நீங்கள் பாபாவிற்குக் கூற வேண்டும். நீங்கள் சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருக்கும் பொழுதே பாபா உங்களுக்குப் பரிசினைக் கொடுப்பார். தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள்: உங்கள் தந்தை யார்? அப்பொழுது மாத்திரமே ஆஸ்தியின் போதை அதிகரிக்க முடியும். உங்களால் ஒரு சொற்பொழிவை ஆற்ற முடியும்: “இம் முழு உலகிலும், பிரம்மகுமார்கள், குமாரிகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்குமே உலகின் புவியியலும் வரலாறும் தெரியாது. இச்சவாலை விடுங்கள். பாபா சுடுகாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதனால், நீங்கள் அங்கு சென்று சேவை செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் தொழில் போன்றவற்றை 6 முதல் 8 மணித்தியாலங்களுக்குச் செய்கின்றீர்கள். ஆகவே, உங்கள் மிகுதி நேரம் எங்கு செல்கிறது? உங்களால் அவ்வாறு ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. பாபா கூறுவார்: நீங்கள் இலக்ஷ்மியை அல்லது நாராயணனைத் திருமணம் செய்வதற்காக வந்துள்ளீர்கள், அனைத்திற்கும் முதலில் உங்கள் சொந்த முகத்தைப் பாருங்கள். பாபா எதனை விளங்கப்படுத்தினாலும் அவை சரியானவையாகும். ஒரேயொரு தலைப்பை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள்: எவ்வாறு உலக வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றது என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள். இதனைப் பத்திரிகைகளில் பிரசுரியுங்கள். முயற்சி செய்து, ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுங்கள். நீங்கள் மூன்றடி நிலத்தையேனும் பெற்றுக் கொள்வதில்லை. அவர்கள் உங்களை இனங்கண்டு கொள்வதில்லை. நீங்களே பரந்தாமத்திலிருந்து வந்திருக்கும் வெளிநாட்டவர். பரந்;தாமத்திலிருந்து வந்த வேறு வெளிநாட்டவர் எவரும் இல்லை. பாபாவும் குழந்தைகளாகிய நீங்களுமே வெளிநாட்டவர்கள். வேறு எவருமே உங்களுடைய பாஷையைப் புரிந்து கொள்ளமாட்டார்கள். இங்கு பௌதீக ரூபத்தில் இருக்கும் எவருடைய பாதங்களையும் தொடவோ அல்லது சாது மற்றும் மகாத்மாக்களின் பாதங்களை முத்தமிடுதல், மற்றும் பாதங்களைக் கழுவி அந்த நீரை அருந்துதல் போன்ற அத்தகைய விடயங்களைச் செய்யுமாறு உங்களுக்குக் கூறப்படுவதில்லை! அது தத்துவ வழிபாடு எனப்படுகின்றது. சரீரம் ஐந்து தத்துவங்களினால் ஆக்கப்பட்டுள்ளது. பாரதம் என்ன நிலையை அடைந்துள்ளது எனப் பாருங்கள்! எனவே தந்தை கூறுகிறார்: சேவையின் அத்தாட்சியைக் கொடுங்கள். அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். இங்கே உங்களுக்கு ஒரேயொரு அக்கறையே இருக்க வேண்டும்: உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் இணைப்பதே ஆகும்.

பாடல்: தாயே! நீங்களே அனைவருக்கும் பாக்கியத்தை அருள்பவர்.

தாய் ஜெகதாம்பா பாக்கியத்தை அருள்பவர் ஆவார். அன்னையே தனது அந்தஸ்தைப் பெறுபவர். அவரும் கூறுகிறார்: சிவபாபாவை நினைவு செய்யுங்கள். நான் அவரிடமிருந்தே ஞானத்தைக் கிரகித்து பின்னர் ஏனையோரும் அதனைக் கிரகிக்கத் தூண்டுகின்றேன். நான் உங்களைப் பாக்கியசாலிகள் ஆக்குகின்றேன். நீங்களே பாரதத்திற்குப் பாக்கியத்தை அருள்பவர்கள். எனவே நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். மம்மாவின் புகழ் எதுவோ, அதுவே தந்தையினதும் தாதாவினதும் புகழும் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் யாகத்தின் பௌதீக சேவையைச் செய்வதுடன், நிச்சயமாக ஆன்மீக சேவையையும் செய்ய வேண்டும். அனைவருக்கும் மன்மனாபவ என்ற மந்திரத்தைக் கொடுங்கள். மன்மனாபவ என்றால் மனதின் மூலமாகச் சேவை செய்தலாகும். மத்தியாஜிபவ என்றால் வார்த்தைகள் மூலமாகச் சேவை செய்தலாகும். அதில் செயல்கள் மூலம் சேவை செய்தலும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குமாரிகளாகிய நீங்கள் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். கிராமங்களிலேயே மிகச்சிறந்த சேவை இடம்பெறுகின்றது. பெரிய நகரங்களில் நாகரீகம் அதிகம் உள்ளது. அங்கு தகாதவற்றைச் செய்வதற்கான தூண்டல்; அதிகளவு உள்ளதால் அவர்கள் என்ன செய்ய முடியும்? பெரிய நகரங்களை நாங்கள் விட்டுவிலகிச் செல்ல வேண்டுமா? எங்களால் அதனைச் செய்ய முடியாது. செல்வந்தர்கள் மூலம் பெரிய நகரங்களில் செய்தி பரவும். எவ்வாறாயினும், மன்மனாபவ என்ற மந்திரத்தினால் உலகம் சுவர்க்கம் ஆக்கப்பட வேண்டும். ஜெகதாம்பா யார் என்பதனைத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். ஜெகதம்பா பாரதத்திற்கு நூறுமடங்கு பாக்கியத்தை அருள்பவராவார். அவருடைய சிவசக்தி சேனை மிகவும் பிரபல்யமானது. ஜெகதாம்பாவே தலைவி ஆவார். அதாவது, அவரே ஒரேயொரு அரசாங்கத்தை ஸ்தாபனை செய்வதின் தலைவி ஆவார். பாரதத்தின் தாய்மார்களாகிய சக்தி அவதாரங்களே ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் பாரதத்தில் ஒரேயொரு அரசாங்கத்தை ஸ்தாபனை செய்தார்கள்.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1. ஒரேயொரு தந்தையின் மீது உங்கள் புத்தியின் யோகத்தை இணைத்துக் கொள்ளுங்கள். மன்மனாபவ என்ற மந்திரவித்தையினால் இவ்வுலகைச் சுவர்க்கம் ஆக்குங்கள்.

2.சேவை செய்வதில் ஒருபொழுதும் களைப்படையாதீர்கள். பௌதீகச் சேவை செய்வதுடன் ஆன்மீக சேவையையும் செய்யுங்கள். மன்மனாபவ என்ற மந்திரத்தை அனைவருக்கும் ஞாபகப்படுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
பிரித்தறியும் மற்றும் தீர்மானிக்கும் சக்திகளினூடாக சேவையில் வெற்றியீட்டும் ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

தமது பிரித்தறியும் சக்தியினூடாக தந்தையையும், தம்மையும், காலத்தையும், பிராமண குடும்பத்தினரையும், தமது மேன்மையான பணியையும் இனங்கண்டு, அதன் பின்னர் தாம் என்னவாக வேண்டும் என்பதையும் தாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிப்பவர்களே தமது சேவையிலும், தாம் செய்யும் விடயங்களிலும், பிறரின் தொடர்பிலும் உறவிலும் வரும் போதும் எப்பொழுதும் வெற்றி ஈட்டுகின்றார்கள். மனதின், வார்த்தைகளின், செயல்களின் மூலமான சேவையில் வெற்றி சொரூபம் ஆகுவதற்கு பிரித்தறியும் சக்தியும் தீர்மானிக்கும் சக்தியுமே அடிப்படையாகும்.

சுலோகம்:
ஞானத்தினதும் யோகத்தினதும் ஒளியாலும் சக்தியாலும் நிறைந்திருப்பவர்கள் ஆகுங்கள், அப்பொழுது நீங்கள் ஒரு விநாடியில் பாதகமான சூழ்நிலைகளைத் தாண்டிச் செல்வீர்கள்.