20.12.18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, கேள்விகளால் குழப்பமடைவதை நிறுத்தி, மன்மனாபவ ஆக இருங்கள். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். தூய்மையாகி ஏனையோரையும் தூய்மையாக்குங்கள்.கேள்வி:
ஏன் குழந்தைகளாகிய நீங்கள் தன்னை வழிபடுவதை சிவபாபாவால் அனுமதிக்க முடியாது?
பதில்:
பாபா கூறுகின்றார்: நானே குழந்தைகளாகிய உங்களின் மிகவும்; கீழ்ப்படிவான சேவகர் ஆவேன். குழந்தைகளாகிய நீங்கள் எனது அதிபதிகள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு வந்தனம் கூறுகின்றேன். தந்தை ஆணவமற்றவர் ஆவார். குழந்தைகள் தந்தைக்குச் சமமானவர்களாக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் என்னை வழிபடுவதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? நீங்கள் கழுவுவதற்கென்று எனக்குப் பாதங்கள் கூட இல்லை. நீங்கள் கடவுளின் உதவியாளர்கள் ஆகி, உலகிற்குச் சேவை செய்ய வேண்டும்.
பாடல்:
இதுவே பலவீனமானவர்களுக்கும் பலசாலிகளுக்கும், தீபத்திற்;கும் புயல்களுக்கும் இடையிலான போராட்டத்தின் கதை ஆகும்...
ஓம்சாந்தி.
அசரீரியான கடவுள் சிவன் பேசுகின்றார். சிவபாபா அசரீரியானவர், 'சிவபாபா" எனக் கூறுகின்ற ஆத்மாக்களும் உண்மையில் அசரீரியானவர்களே ஆவார்கள். அவர்கள் அசரீரி உலகவாசிகள் ஆவார்கள். நீங்கள் உங்கள் பாகங்களை இங்கு நடிப்பதற்காகச் சரீரதாரிகள் ஆகியுள்ளீர்கள். எங்கள்; அனைவருக்கும் பாதங்கள் உள்ளன. கிருஷ்ணருக்கும் பாதங்கள் உள்ளன. அவர்கள் பாதங்களைப் பூஜிக்கின்றார்கள். சிவபாபா கூறுகின்றார்: நான் கீழ்ப்படிவானவர் ஆவேன். உங்களைக் கழுவிப் பூஜிக்கச் செய்;வதற்கு என்னிடம் பாதங்கள் இல்லை. சந்நியாசிகள் தங்களுடைய பாதங்களைக் கழுவச் செய்கின்றார்கள். இல்லறத்தவர்கள் சென்று அவர்களுடைய (சந்நியாசிகளின்) பாதங்களைக் கழுவுகின்றார்கள். மனிதர்களுக்கே பாதங்கள் இருக்கின்றன. நீங்கள் அவரின் பாதங்களைப் பூஜிக்கத்;தக்கக்கூடிய வகையில் சிவபாபாவிற்குப் பாதங்கள் கிடையாது. அது வழிபாட்டிற்குரிய சம்பிரதாயம் ஆகும். தந்தை கூறுகின்றார்: நானே ஞானக்கடல். எனது குழந்தைகள் எனது பாதங்களைக் கழுவுவதை எவ்வாறு என்னால் அனுமதிக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: தாய்மார்களுக்கு வந்தனங்கள்! அப்பொழுது தாய்மார்கள் என்ன கூறவேண்டும்? ஆம், மற்றவர்கள் 'சலாம் மலேக்கும்" (வந்தனங்கள்) என்று கூறுவது போன்று, அவர்கள் எழுந்து நின்று, 'சிவபாபா, நமஸ்தே" என்று கூறவேண்டும். எவ்வாறாயினும், அதிலும், தந்தையே முதலில் “நமஸ்தே” கூறவேண்டும். அவர் கூறுகின்றார்: நான் மிகவும்; கீழ்ப்படிவானவர். நானே எல்லையற்ற சேவகர் ஆவேன். அவர் அசரீரியானவர் ஆதலால், ஆணவமற்றவரும் ஆவார். பூஜிப்பதற்கான கேள்வியே இல்லை. சொத்தின் அதிபதிகள் ஆகுகின்ற அதியன்பிற்குரிய குழந்தைகள் என்னைப் பூஜிப்பதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? ஆம், சிறிய குழந்தைகள் தங்களுடைய தந்தையின் பாதங்களில் விழுந்து வணங்குகின்றார்கள், ஏனெனில் தந்தை மூத்தவர் ஆவார். எவ்வாறாயினும், தந்தையும் உண்மையில் குழந்தைகளின் சேவகரே ஆவார். மாயை குழந்தைகளாகிய உங்களை மிகவும் தொந்தரவு செய்கின்றாள் என்பதை பாபா அறிவார். அது மிகக் கடினமான பாகமாகும். எல்லையற்ற துன்பம் இன்னமும் பெருமளவில் வரவுள்ளது. இவை அனைத்தும் எல்லையற்றதற்குரிய விடயமாகும். அப்பொழுது மாத்திரமே எல்லையற்ற தந்தை வருகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரமே அருள்பவர் ஆவேன். வேறு எவரையும் அருள்பவர் என அழைக்க முடியாது. அனைவரும் தந்தையிடம் பொருட்களை வேண்டுகின்றார்கள். சாதுக்களும் முக்தியை வேண்டுகின்றார்கள். பாரதத்தின் இல்லறத்தவர்கள் கடவுளிடம் ஜீவன்முக்தியை வேண்டுகின்றார்கள். ஆகவே ஒரேயொருவரே அருள்பவர் ஆவார். நினைவுகூரப்படுகின்றது: ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஆவார். சாதுக்களே ஆன்மீக முயற்சியைச் செய்வதால், அவர்களால் எவ்வாறு ஏனையோருக்கு முக்தியை அல்லது சற்கதியை அருள முடியும்? ஒரேயொரு தந்தையே முக்திதாமம், ஜீவன்முக்தி தாமம் ஆகிய இரண்டிற்கும் உரிமையாளர் ஆவார். அவர் ஒரேயொரு தடவையே தனக்குரிய நேரத்தில் வருகின்றார். ஏனைய அனைவரும் தொடர்ந்து பிறப்பு, இறப்பிற்குள் பிரவேசிக்கின்றார்கள். இராவண இராச்சியம் முடிவடையவுள்ள பொழுதே அந்த ஒரேயொருவர் ஒருமுறை வருகின்றார். அவரால் அதற்கு முன்னர் வர முடியாது. அது நாடகத்தில் அவருடைய பாகம் இல்லை. ஆகவே தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது என் மூலம் என்னை இனங்கண்டு கொண்டுள்ளீர்கள். மக்கள் என்னை அறியார்கள் என்பதால், அவர்கள் என்னைச் சர்வவியாபி என அழைத்துவிட்டார்கள். இது இப்பொழுது இராவண இராச்சியமாகும். பாரத மக்கள் மாத்திரமே தொடர்ந்தும் இராவணனின் கொடும்பாவியை எரிப்பவர்கள். இராவண இராச்சியம் பாரதத்தில் இருக்கின்றது என்பதையும், இராம இராச்சியமும் பாரதத்திலேயே இருக்கிறது என்பதையும் இது நிரூபிக்கின்றது. அது எவ்வாறு இப்பொழுது இராவண இராச்சியமாக இருக்கிறது என்பதை இராம இராச்சியத்தை ஸ்தாபிப்பவரே விளங்கப்படுத்துகின்றார். யார் இதனை விளங்கப்படுத்துவது? அசரீரியான கடவுள் சிவன் பேசுகின்றார். ஆத்மாக்களைச் சிவன் என அழைக்க முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் சாலிகிராம்கள் ஆவார்கள். ஒரேயொருவர் மாத்திரமே சிவன் என அழைக்கப்படுகின்றார். பல சாலிகிராம்கள் இருக்கின்றார்கள். இதுவே உருத்திர ஞான யாகமாகும். அந்த பிராமணர்கள் யாகங்களை வளர்க்கும்பொழுது, அவர்கள் ஒரு பெரிய சிவலிங்கத்தையும் பல சிறிய சாலிகிராம்களையும் உருவாக்கி, அவற்றைப் பூஜிக்கின்றார்கள். வருடாவருடம் இறைவிகள் பூஜிக்கப்படுகின்றார்கள். ஆனால் அவர்களோ களிமண்ணினாலான சாலிகிராம்களைத் தினமும் உருவாக்கி, அவற்றைப் பூஜிக்கின்றார்கள். உருத்திரருக்குப் பெரும் மரியாதை உள்ளது. சாலிகிராம்கள் யார் என்பதை அவர்கள் அறியார்கள். சிவசக்தி சேனையினராகிய நீங்கள் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றீர்கள். சிவன் பூஜிக்கப்படுகின்றார், அவ்வாறாயின் சாலிகிராம்களின் நிலை என்ன? பலர் உருத்திரரின் யாகத்தை உருவாக்கி, சாலிகிராம்களைப் பூஜிக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்களும் சிவபாபாவுடன் முயற்சி செய்தீர்கள். நீங்கள் சிவபாபாவின் உதவியாளர்கள் ஆவீர்கள். நீங்கள் இறை உதவியாளர்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். அசரீரியானவர் நிச்சயமாக யாராவதொருவரின் சரீரத்தில் பிரவேசித்திருப்பார். சுவர்க்கத்தில், எவ்விதமான உதவிக்கும் அவசியமேயில்லை. சிவபாபா கூறுகின்றார்: பாருங்கள், இக் குழந்தைகள் எனது உதவியாளர்கள். அவர்கள் வரிசைக்கிரமமானவர்கள் ஆவார்கள். அனைவருமே பூஜிக்கப்பட முடியாது. இந்த யாகம் பாரதத்தில் மாத்திரமே இடம்பெறுகின்றது. தந்தை மாத்திரமே இந்த இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். அப் பிராமணர்களும் வைசியர்களும் இதனை அறியார்கள். உண்மையில், இதுவே உருத்திர ஞான யாகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் தூய்மையாகிப் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். இதுவே நாங்கள்; யோகத்தினூடாக என்றென்;றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுகின்ற ஒரு பெரிய வைத்தியசாலையாகும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! சரீர உணர்வே உங்கள் யோகத்தைத் துண்டிக்கின்ற முதல் இலக்க விகாரமாகும். நீங்கள் சரீர உணர்வடைந்து தந்தையை மறக்கும்பொழுதே ஏனைய விகாரங்களும் வருகின்றன. இந்த யோகத்தைச் சதா கொண்டிருப்பதற்கே பெரும் முயற்சி தேவையாகும். மக்கள் கிருஷ்ணரைக் கடவுள் எனக் கருதி அவரைப் பூஜிக்கின்றார்கள். எவ்வாறாயினும், அவரின் பாதங்களைப் பூஜிக்கத்தக்க வகையில், அவர் தூய்மையாக்குபவர் அல்லர். சிவனுக்குப் பாதங்களே கிடையாது. அவர் வந்து தாய்மார்களின் சேவகராகிக் கூறுகின்றார்: தந்தையையும் சுவர்க்கத்தையும் நினைவு செய்தால், பின்னர் நீங்கள் 21 பிறவிகளுக்கு ஓர் இராச்சியத்தை ஆட்சி செய்;வீர்கள். 21 சந்ததிகள் நினைவுகூரப்படுகின்றன. அவை ஏனைய சமயங்களில் நினைவுகூரப்படுவதில்லை. ஏனைய சமயத்தவர்களில் எவருமே 21 பிறவிகளுக்கான சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவதில்லை. இந் நாடகமும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஏனைய சமயங்களுடன் கலந்துவிட்ட தேவ தர்மத்திற்குரியவர்கள் மீண்டும் வெளிப்படுவார்கள். சுவர்க்கத்தின் சந்தோஷம் எல்லையற்றதாகும். புதிய கட்டடமாகிய, புதிய உலகில், மிக நல்ல சந்தோஷம் உள்ளது. அது சிறிதளவு பழையதாகியவுடன், அதில் சில குறைபாடுகள் ஏற்படுவதனால், அவை திருத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே, எவ்வாறு தந்தையின் புகழ் எல்லையற்றதோ, அவ்வாறே சுவர்க்கத்தின் புகழும் எல்லையற்றதாகும். நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். வேறு எவராலும் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்க முடியாது. விநாசத்தின் காட்சிகள் மிகவும் வேதனை நிறைந்தவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அதற்கு முன்னர், நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோர வேண்டும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது எனக்குரியவர் ஆகுங்கள். அதாவது, கடவுளின் மடிக்குள் வாருங்கள். சிவபாபா மகத்துவமானவர் ஆதலால், நீங்கள் பெருமளவு பேற்றினைக் கொண்டிருக்கின்றீர்கள். சுவர்க்க சந்தோஷம் எல்லையற்றதாகும். அதன் பெயரைச் செவிமடுத்த உடனேயே உங்கள் வாயூற ஆரம்பிக்கின்றது. அவர்கள் கூறுகிறார்கள்: இன்ன இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். அனைவரும் சுவர்க்கத்தை விரும்புகின்றார்கள். இது நரகமாகும், சத்தியயுகம் வரும்வரை எவராலும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்த ஜெகதாம்பாள் சுவர்க்கத்திற்குச் சென்று, சக்கரவர்த்தினி இலக்ஷ்மி ஆகுகின்றார். பின்னர் குழந்தைகளும் வரிசைக்கிரமமாக வருகின்றார்கள். மம்மாவும் பாபாவும் அதிக முயற்சி செய்கின்றார்கள். குழந்தைகளும் அங்கு ஆட்சிசெய்வார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் மாத்திரமே அங்கு ஆட்சிசெய்ய மாட்டார்கள். ஆகவே தந்தை வந்து உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகின்றார்; அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். கிருஷ்ணரே உங்களை அவ்வாறு (தேவர்கள்) ஆக்குகிறார் என அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், கிருஷ்ணர் துவாபரயுகத்தில் காட்டப்பட்டுள்ளார். தேவர்கள் துவாபரயுகத்தில் இருக்க மாட்டார்கள். தாங்கள் உங்களுக்குச் சுவர்க்கத்திற்கான பாதையைக் காட்டுவதாகச் சந்நியாசிகளால் கூறமுடியாது. அதற்குக் கடவுளே தேவைப்படுகின்றார். அவர்கள் கூறுகின்றார்கள்: கலியுகத்தின் இறுதியில் முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான வாயில்கள் திறக்கும். இதுவே உருத்திர ஞான யாகமாகும். நானே உருத்திரராகிய சிவனும், அனைவரும் சாலிகிராம்களும் ஆவார்கள். நீங்கள் அனைவரும் சரீரதாரிகள். நான் ஒரு சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளேன். நீங்கள் அனைவரும் பிராமணர்கள் ஆவீர்கள். பிராமணர்களைத் தவிர வேறு எவருக்கும் இந்த ஞானம் இருக்க முடியாது. சூத்திரர்களிடம் அது இருக்க முடியாது. சத்தியயுகத்துத் தேவர்கள் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருந்தார்கள்; தந்தை இப்பொழுது உங்களை அவர்களைப் போன்று ஆக்குகின்றார். சந்நியாசிகளால் எவருடைய புத்தியையும் தெய்வீகமானதாக்க முடியாது. அவர்கள் தூய்மையானவர்களாக இருந்தாலும், சுகயீனம் அடைகின்றார்கள். சுவர்க்கத்தில், எவரும் என்றுமே சுகயீனமடைய மாட்டார்கள். அங்கு எல்லையற்ற சந்தோஷம் உள்ளது, இதனாலேயே தந்தை கூறுகின்றார்: முழு முயற்சி செய்யுங்கள். இது ஓர் ஓட்டப்பந்தயமாகும். இதுவே உருத்திர மாலையில் கோர்க்கப்படுவதற்கான ஓட்டப்பந்தயமாகும். ஆத்மாக்களாகிய நாங்கள் யோகத்தில் ஓடவேண்டும். எவ்வளவு அதிகமாக நீங்கள் யோகம் செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் விரைவாக ஓடுகின்றீர்கள் என்றும், உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அழிக்கப்படும் என்றும் அதிகளவில் புர்pந்து கொள்ளப்படுகிறது. நடக்கும்பொழுதும், அமர்ந்திருக்கும்பொழுதும், உலாவித்திரியும்பொழுதும், நீங்கள் யாத்திரையில் இருக்கின்றீர்கள். உங்களுடைய புத்தியின் யோகத்திற்குரிய யாத்திரை மிகச் சிறந்ததாகும். நீங்கள் கூறுகின்றீர்கள்: அத்தகைய சுவர்க்கத்தின் எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுவதற்காக நாங்கள் ஏன் தூய்மையாக இருக்கக்கூடாது? மாயையால் எங்களை அசைக்க முடியாது. நீங்கள் ஒரு சத்தியம் செய்ய வேண்டும். இது உங்களுடைய இறுதிப்பிறவி, அனைவரும் மரணிக்க வேண்டும், ஆகவே நீங்கள் ஏன் தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைக் கோரக்கூடாது? பாபாவிற்குப் பல குழந்தைகள் இருக்கின்றார்கள். பிரஜாபிதா இருப்பதனால், அவர் நிச்சயமாக ஒரு புதிய படைப்பைப் படைத்திருக்க வேண்டும். புதிய படைப்பு பிராமணர்களினுடையதாகும். பிராமணர்கள் ஆன்மீக சமூக சேவையாளர்கள் ஆவார்கள். தேவர்கள் வெகுமதியை அனுபவம் செய்கின்றார்கள். நீங்கள் பாரதத்திற்குச் சேவை செய்கின்றீர்கள், இதனாலேயே நீங்கள் மாத்;திரம் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்;கள். பாரதத்திற்குச் சேவை செய்வதனால், நீங்கள் அனைவருக்கும் சேவை செய்கின்றீர்கள். இதுவே உருத்திர ஞான யாகமாகும். கிருஷ்ணரன்றி, சிவனே உருத்திரர் என அழைக்கப்படுகின்றார். கிருஷ்ணர் சத்தியயுக இளவரசர் ஆவார். அந்த யாகங்கள் போன்றவை அங்கிருக்க மாட்டாது. இது இப்பொழுது இராவண இராச்சியம், இது முடிவடைய வேண்டும். அதன்பின்னர் நீங்கள் ஒருபொழுதும் இராவணனின் கொடும்பாவியை உருவாக்க மாட்டீர்கள். தந்தையே வந்து, உங்களை அந்தச் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கின்றார். அவர் இந்தப் பிரம்மாவையும் சங்கிலிகளில் இருந்து விடுவித்தார். சமயநூல்களை வாசிப்பதனால் அனைவருடைய நிலைமையும் எவ்வாறு ஆகிவிட்டது எனப் பாருங்கள்! ஆகவே, தந்தை கூறுகின்றார்: .இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள். உங்களுக்குத் தந்தையை நினைவு செய்வதற்கான தைரியம் இருப்பதில்லை. சிலர் தூய்மையாக இருக்காமல், தொடர்ந்தும் பயனற்ற கேள்விகளைக் கேட்கின்றார்கள். ஆகவே, தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ. நீங்கள் எதனைப் பற்றியேனும் குழப்பம் அடைந்தால், அதை ஒருபுறம் ஒதுக்கிவிடுங்கள். மன்மனாபவ ஆகுங்கள். நீங்கள் உங்களுடைய கேள்விக்கான பதிலைப் பெறாததனால் கற்பதை நிறுத்த வேண்டும் என எண்;ணாதீர்கள். உங்களுடன் இங்கு கடவுள் இருக்கின்றார், ஆகவே, ஏன் உங்களால் பதிலளிக்க முடியாதுள்ளது எனச் சிலர் வினவுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் தந்தையிலும், ஆஸ்தியிலும் மாத்திரமே அக்கறை கொண்டுள்ளீர்கள். நீங்கள் சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். அம்மக்கள் திரிமூர்த்தியையும் சக்கரத்தையும் காட்டுகின்றார்கள். அவர்கள் எழுதுகிறார்கள்: “சத்தியத்திற்கு வெற்றி” ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தினைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும்: நீங்கள் சிவபாபாவை நினைவு செய்யும்பொழுது, சூட்சும வதனவாசிகளான பிரம்மா, விஷ்ணு, சங்கரரையும் நினைவு செய்வீர்கள், அத்துடன் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதனால், நீங்கள் வெற்றியாளர்கள் ஆகுவீர்கள். வெற்றி என்றால் மாயையை வெற்றி கொள்வதாகும். இது அத்தகைய பெரும் புரிந்துணர்விற்குரிய விடயமாகும். அன்னங்களின் ஒன்றுகூடலில் நாரைகள் அமர்ந்திருக்க முடியாது என்பதே, இங்குள்;ள நியதியாகும். அனைவரையும் சுவர்க்கத் தேவதைகள் ஆக்குகின்ற பிரம்மாகுமார், குமாரிகளுக்குப் பெரும் பொறுப்பு உள்ளது. ஒருவர் வரும்பொழுது, எல்லாவற்றுக்கும் முதலில் அவரிடம் கேளுங்கள்: ஆத்மாக்களின் தந்தை யார் என்பதை நீங்கள் அறிவீர்களா? கேள்வி கேட்பவர்கள் நிச்சயமாக அதனை அறிந்திருக்க வேண்டும். சந்நியாசிகள் ஒருபொழுதும் அத்தகைய கேள்விகளைக் கேட்க மாட்டார்கள். அவர்களே அறியார்கள். நீங்கள் வினவ வேண்டும்: “நீங்கள் எல்லையற்ற தந்தையை அறிவீர்களா?” நீங்கள் அனைத்திற்கும் முதலில், அவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளுங்கள். இது பிராமணர்களின் தொழிலாகும். தந்தை கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, என்னுடன் யோகம் செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் என்னிடம் வரவேண்டும். சத்தியயுகத்துத் தேவர்கள் நீண்ட காலம் பிரிந்திருந்தார்கள், ஆகவே அவர்களே ஞானத்தை முதலில் பெறவுள்ளவர்கள் ஆவார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் தங்களுடைய 84 பிறவிகளைப் பூர்த்தி செய்துள்ளார்கள், ஆகவே அவர்களே முதலில் ஞானத்தைப் பெறவேண்டும். மனித உலக விருட்சத்தின் தந்தை பிரம்மாவும், ஆத்மாக்களின் தந்தை சிவனும் ஆவார். ஆகவே அவர்களே பாப்பும் தாதாவும் ஆவார்கள், நீங்கள் அவரின் பேரக்குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் அவரிடமிருந்து ஞானத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் நரகத்தினுள் பிரவேசிக்கும்பொழுது மாத்திரமே சுவர்க்கத்தைப் படைக்கின்றேன். கடவுள் சிவன் பேசுகின்றார்: இலக்ஷ்மியும் நாராயணனும் திரிகாலதரிசி அல்லர். அவர்களிடம் படைப்பவரின் அல்லது படைப்பைப் பற்றிய ஞானம் கிடையாது, ஆதலால் இந்த ஞானமானது எவ்வாறு தொன்றுதொட்ட காலத்திலிருந்து இருந்திருக்க முடியும்? நீங்கள் மரணம் வரவுள்ளது எனக் கூறிக் கொண்டே இருப்பதாகவும், எனினும் எதுவுமே நிகழவில்லை என்றும் சிலர் எண்ணுகிறார்கள். இதற்கானதொரு உதாரணமும் உள்ளது. சிறிய பையன் ஒருவன் சிங்கம் ஒன்று வந்தது எனக் கூறிக் கொண்டே இருந்தான், ஆனால் சிங்கம் ஒருபொழுதும் வரவில்லை. இறுதியில், ஒருநாள், சிங்கம் வந்து அனைத்துச் செம்மறி ஆடுகளையும் உண்டுவிட்டது. இக் கதைகள் அனைத்தும் தற்சமயத்தையே குறிக்கின்றன. ஒருநாள், மரணம் அனைவரையும் உண்டுவிடும். அப்பொழுது உங்களால் என்ன செய்ய முடியும்? இது கடவுளின் அத்தகையதொரு மிகப்பெரிய யாகமாகும். கடவுளைத் தவிர வேறு எவராலும் அத்தகைய மிகப்பெரிய யாகத்தை உருவாக்க முடியாது. நீங்கள் உங்களை பிரம்மாவின் வாய்வழித்தோன்றலான பிராமணர் என அழைத்துக் கொண்டு, தூய்மை ஆகாதுவிட்டால், நீங்கள் மரணிப்பீர்கள். நீங்கள் சிவபாபாவிற்கு ஒரு சத்தியம் செய்யவேண்டும். இனிய பாபா, என்னைச் சுவர்க்க அதிபதியாக்கும் பாபா, நான் உங்களுக்குரியவன்; ஆவேன். இறுதிவரை நான் உங்களுக்கு உரியவனாகவே இருப்பேன். நீங்கள் அத்தகைய தந்தையை அல்லது மணவாளனை விவாகரத்து செய்தால், உங்களால் ஒரு சக்கரவர்த்தியாகவோ அல்லது சக்கரவர்த்தினியாகவோ ஆக முடியாது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கடவுளின் உண்மையான உதவியாளராகி, உங்கள் தூய்மை மூலம் பாரதத்தைச் சுவர்க்கமாக்குவதற்குத் தந்தைக்கு உதவி செய்யுங்கள். ஓர் ஆன்மீக சமூக சேவையாளர் ஆகுங்கள்.
2. எவ் வகையான கேள்விகளாலும் குழப்பம் அடைந்து கற்பதை நிறுத்தாதீர்கள். கேள்விகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
சுயமாற்றத்தினூடாக உலகமாற்றத்திற்கான பொறுப்புக்கிரீடத்தைச் சூடுவதன் மூலம் உலக இராச்சிய கிரீடத்தைச் சூடுவீர்களாக.தந்தைக்கான மற்றும் உங்கள் பேறுகளுக்கான உரிமை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் அனைவரும் கருதுவதைப் போன்றே, சுய மாற்றத்தினதும் உலக மாற்றத்தினதும் பொறுப்பு கிரீடத்தை சூடுபவராகவும் ஆகுங்கள். அப்பொழுது இராச்சிய கிரீடம் சூடப்படுவதற்கான உரிமை உடையவர்கள் ஆகுகிறீர்கள். நிகழ்காலமே எதிர்காலத்திற்கான அடிப்படையாகும். உங்கள் பிராமண வாழ்வில் நீங்கள் தூய்மை மற்றும் கல்விக்கும் சேவைக்குமான இரட்டை கிரீடத்தைக் கொண்டிருக்கின்றீர்களா என ஞானக் கண்ணாடியில் சோதனை செய்து பாருங்கள். இங்கே எந்தவொரு கிரீடமும் முழுமையடையாதிருந்தால் அங்கே நீங்கள் சிறியதொரு கிரீடத்திற்கான உரிமையையே கோருவீர்கள்.
சுலோகம்:
பாப்தாதாவின் பாதுகாப்புக் குடையின் கீழ் சதா நிலைத்திருக்கும் போது, நீங்கள் ஓர் தடைகளை அழிப்பவர் ஆகுவீர்கள்.