29.11.2018 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞானம் வெண்ணெயும், பக்தி மோரும் ஆகும். தந்தை உங்களுக்கு ஞானத்தின் வடிவில் வெண்ணெயைக் கொடுத்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். இதனாலேயே அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் வாயில் வெண்ணெயைக் காட்டுகின்றார்கள்.
கேள்வி:
புத்தியில் நம்பிக்கை வைத்துள்ள ஒருவரை நீங்கள் எவ்வாறு இனங்காணலாம்? நம்பிக்கையின் அடிப்படையில் பெறப்படும் பேறு என்ன?
பதில்:
1. புத்தியில் நம்பிக்கை வைத்துள்ள குழந்தைகளே, வெறுமனே சுவாலையைச் சுற்றி வராமல், அதில் தங்களை அர்ப்பணிக்கின்ற உண்மையான விட்டிற்பூச்சிகள் ஆவார்கள். சுவாலையில் தங்களை அர்ப்பணிப்பவர்கள் மாத்திரமே இராச்சியத்திற்குள் வருகின்றார்கள். சுவாலையைச் சுற்றி வருபவர்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுகின்றார்கள்.
2. புத்தியில் நம்பிக்கை வைத்துள்ள குழந்தைகள் செய்கின்ற சத்தியம்: ‘அதி பாதகமான சூழ்நிலையிலும், நான் எனது தர்மத்தைக் கைவிடேன்’. அவர்கள் தங்களின் புத்தியில் உண்மையான அன்பைக் கொண்டிருப்பதுடன் அவர்கள் தங்கள் சரீர சமயங்களையும் தங்கள் சரீரங்களையும் மறந்து தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றார்கள்.
பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டுக் கீழே பூமிக்கு வாருங்கள்.
ஓம்சாந்தி.
கடவுள் பேசுகின்றார். அசரீரியான பரமதந்தையே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். ~கடவுள் பேசுகின்றார்| என்று கூறியது யார்? அந்த அசரீரியான பரமாத்மாவான பரமதந்தையே ஆவார். அசரீரியான தந்தை இங்கமர்ந்திருந்து அசரீரியான ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அசரீரியான ஆத்மாக்களாகிய நீங்கள், உங்கள் சரீரத்தின் பௌதீகப் புலன்களின் மூலம் செவிமடுக்கின்றீர்கள். ஓர் ஆத்மா ஆண் என்றோ, பெண் என்றோ அழைக்கப்படுவதில்லை; ஓர் ஆத்மா, ஆத்மா என்றே அழைக்கப்படுகின்றார். ஆத்மாவே இந்த அங்கங்;களினூடாகப் பேசுகின்றார்: நான் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றைப் பெறுகின்றேன். மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே. அசரீரியான பரமாத்மாவான பரமதந்தையின் குழந்தைகள் என்ற ரீதியில் நீங்கள் சகோதரர்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆகும் பொழுது, சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். இதனை நீங்கள் எப்பொழுதும் அனைவருக்கும் தொடர்ந்தும் விளங்கப்படுத்துங்கள். கடவுள் பக்தர்களுக்கு அவர்களின் பக்தியின் பலனைக் கொடுப்பவரான, பாதுகாவலர் ஆவார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். நான் உங்கள் அனைவருக்கும் ஆசிரியராகி, உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றேன். பின்னர் நான் அனைவரினதும் சத்குருவும் ஆவேன். அவருக்குத் தந்தையோ, ஆசிரியரோ அல்லது குருவோ இல்லை. பாரதத்தின் புராதன இராஜயோகத்தைக் கற்பிப்பவர் அந்தத் தந்தையே அன்றி, கிருஷ்ணர் அல்ல. கிருஷ்ணரைத் தந்தை என்று அழைக்க முடியாது. அவர்; தெய்வீகக் குணங்களை உடைய சுவர்க்கத்தின் இளவரசர் என அழைக்கப்படுகின்றார். ஒரேயொருவர் மாத்திரமே தூய்மையாக்குபவரும், சற்கதியை அருள்பவரும் என்று அழைக்கப்படுகின்றார். இப்பொழுது ஆத்மாக்கள் அனைவரும் சந்தோஷமற்றவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும், சீரழிந்தவர்களாகவும் உள்ளனர். பாரதம் சத்தியயுகத்தில் தெய்வீகமானதாகவும், மேன்மையானதாகவும் இருக்கின்றது. பின்னர் அது சீரழிந்து அசுர இராச்சியமாகும் பொழுது, அனைவரும் கூறுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து இராம இராச்சியத்தை ஸ்தாபியுங்கள். ஆகவே, இது இப்பொழுது இராவண இராச்சியமாகும். மக்கள் இராவணனை எரிக்கின்றார்கள், ஆனால் அந்தக் கல்விமான்கள், ஆசிரியர்கள், பண்டிதர்களில் எவரும் இராவணன் என்றால் என்ன என்பதை அறியார்கள். சத்தியயுகமும், திரேதாயுகமும் இராம இராச்சியமாகும், துவாபரயுகமும் கலியுகமும் இராவண இராச்சியமாகும். பிரம்மாவின் பகல் பிரம்மகுமார், பிரம்மகுமாரிகளின் பகலாகும். பிரம்மாவின் இரவு பிரம்மகுமார், பிரம்மகுமாரிகளின் இரவாகும். இப்பொழுது இரவு முடிவடைந்து பகல் வரவுள்ளது. ‘விநாச காலத்தில் அன்பற்ற புத்தியை உடையவர்கள்’ என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. மூன்று சேனையினரும் உள்ளனர். பரமதந்தையே ஞானக்கடலான, தந்தையாகிய அதி அன்பிற்கினிய கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். ஆகவே அவர் நிச்சயமாக உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவரே உலகின் உயிருள்ள விதையாவார். அவரே பரமாத்மா, அதாவது, அதிமேலான கடவுள் ஆவார். அவர் சர்வவியாபி என்பதல்ல. அவரைச் சர்வவியாபி என்று கூறுவது தந்தையை அவதூறு செய்வதாகும். தந்தை கூறுகின்றார்: என்னை அவதூறு செய்ததால், தர்மம் அவமதிக்கப்பட்டதுடன் பாரதமும் ஏழ்மை அடைந்தும், சீரழிந்தும் உள்ளது. அத்தகைய நேரத்திலேயே நான் வர வேண்டும். பாரதமே எனது பிறப்பிடமாகும். இங்கேயே சோமநாதர் ஆலயமும் சிவாலங்களும் உள்ளன. நான் எனது பிறப்பிடத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றேன். பின்னர் இராவணன் அதனை நரகம் ஆக்குகின்றான். அதாவது, இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுவதனால், மக்கள் அசுர சமுதாயத்தினரான, நரகவாசிகள் ஆகியுள்ளார்கள் என்பதே அர்த்தமாகும். பின்னர், நான் அவர்களை மாற்றி, மேன்மையானவர்கள் ஆக்கி, தெய்வீக சமுதாயத்தினர் ஆக்குகின்றேன். இது நச்சுகடலும் அது பாற்கடலும் ஆகும். அங்கே நெய்யாறுகள் பாயும். சத்தியயுகத்திலும், திரேதாயுகத்திலும் பாரதம் எப்பொழுதுமே சந்தோஷமாகவும் வளமாகவும் இருந்தது, அங்கு வைரங்களாலும், இரத்தினங்களினாலும் ஆன மாளிகைகளும் இருந்தன. பாரதம் இப்பொழுது 100 வீதம் வளமற்றதாக உள்ளது. நான் மாத்திரமே வந்து அதனை 100வீதம் வளமானதாகவும், மேன்மையானதாகவும் ஆக்குகின்றேன். மக்கள் தங்களுடைய தெய்வீக தர்மத்தை மறந்து விடுமளவிற்கு இப்பொழுது மிகவும் சீரழிந்துள்ளார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: பக்தி மார்க்கம் மோரும், ஞான மார்க்கம் வெண்ணெயும் ஆகும். அவர்கள் கிருஷ்ணரின் வாயில் வெண்ணெயைக் காட்டுகின்றார்கள். அவரிடம் உலக இராச்சியம் இருந்தது என்பதே அதன் அர்த்தமாகும். இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். தந்தையே வந்து, உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார், அதாவது, அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: நான் உலக அதிபதி ஆகுவதில்லை. நான் அதிபதியாகுவதாயின், பின்னர் நான் மாயையினால் தோற்கடிக்கப்படவும் வேண்டும். நீங்களே மாயையினால் தோற்கடிக்கப்படுபவர்கள். ஆகவே, நீங்கள் பின்னர் வெற்றி அடைய வேண்டும். நீங்கள் ஐந்து விகாரங்களில் சிக்கி கொண்டிருக்கின்றீர்கள். நான் இப்பொழுது உங்களை ஓர் ஆலயத்தில் வசிப்பதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றேன். சத்தியயுகம் ஒரு பெரிய ஆலயம், அது சிவனால் ஸ்தாபிக்கப்பட்ட, சிவாலயம் என்று அழைக்கப்படுகின்றது. கலியுகம் விலைமாதர் இல்லம் என அழைக்கப்படுகின்றது. அனைவருமே விகாரம் நிறைந்தவர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: சரீர சமயங்களைத் துறவுங்கள், உங்களை ஓர் ஆத்மா என்று கருதி, உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தந்தையின் மீது அன்பு உள்ளது. நீங்கள் வேறு எவரையும் நினைவு செய்வதில்லை. நீங்களே விநாசகாலத்தில் அன்பான புத்தியுடையவர்கள் ஆவீர்கள். பரமாத்மாவான பரமதந்தையே ஸ்ரீ ஸ்ரீ 108 என்று அழைக்கப்படுகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் 108 மணிகளின் மாலையை உருட்டுகின்றார்கள். மேலே சிவபாபாவும் அதன் பின்னர் தாயும் தந்தையுமான பிரம்மாவும் சரஸ்வதியும் உள்ளார்கள். அதன்பின்னர் பாரதத்தைத் தூய்மையாக்குகின்ற அவர்களின் குழந்தைகளும் உள்ளார்கள். உருத்திராக்க மாலையும் நினைவு கூரப்பட்டுள்ளது. இது உருத்திர ஞான யாகம் என்று அழைக்கப்படுகின்றது. இதுவும் சுயாட்சியைப் பெறுவதற்காகக் குதிரை அர்ப்பணிக்கப்பட்ட, அத்தகைய மிகப்பெரிய அழிவற்ற ஞான யாகம் ஆகும். அது பல வருடங்களாகத் தொடர்ந்து வந்துள்ளது. இந்த யாகத்தில் எண்ணற்ற சமயங்கள் அனைத்தும் அர்ப்பணிக்கப்பட உள்ளன, அப்பொழுது மாத்திரமே இந்த யாகம் முடிவடையும். இதுவே அழிவற்ற பாபாவின் அழிவற்ற யாகமாகும். இதிலே அனைத்துப் பொருட்களும் அர்ப்பணிக்கப்பட உள்ளன. குழந்தைகள் வினவுகின்றார்கள்: விநாசம் எப்பொழுது இடம்பெறும்? ஓ, ஒன்றை ஸ்தாபிப்பவர்களே, அதனைப் பராமரிக்கவும் வேண்டும். இது சிவபாபாவின் இரதமாகும். இதில் சிவபாபாவே சாரதி ஆவார். ஆனால் இங்கே குதிரை இரதங்கள் போன்ற எதுவும் இல்லை. அவர்கள் அமர்ந்திருந்து பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்களை உருவாக்கியுள்ளார்கள். பாபா கூறுகின்றார்: நான் இச் சடப்பொருளின் ஆதாரத்தைப் பெறுகிறேன். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: முதலில், கலப்படமற்ற பக்தி இருக்கிறது, ஆனால் பின்னர் கலியுகத்தின் இறுதியில் அது முற்றிலும் கலப்படமாகுகின்றது. பின்னர் தந்தை வந்து பாரதத்திற்கு வெண்ணெயைக் கொடுக்கின்றார். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதற்குக் கற்கின்றீர்கள். தந்தை வந்து உங்களுக்கு வெண்ணெயை ஊட்டுகின்றார். இராவண இராச்சியத்தில் மோர் ஆரம்பமாகுகின்றது. இவ் விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். புதிய குழந்தைகளால் இவ் விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. பரமாத்மாவான பரமதந்தை மாத்திரமே ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: இப் பக்தி மார்க்கத்தின் மூலம் எவராலுமே என்னைக் கண்டுகொள்ள முடியாது. நான் வரும் பொழுது மாத்திரமே நான் பக்தர்களுக்கு அவர்களின் பக்தியின் பலனைக் கொடுக்கின்றேன். நான் விடுதலை அளிப்பவராகி, அவர்களின் துன்பத்தை அகற்றி, அவர்களை அமைதி தாமத்துக்கும், சந்தோஷ தாமத்துக்கும் அழைத்துச் செல்கின்றேன். நம்பிக்கையுடைய புத்தி வெற்றிக்கு இட்டுச் செல்கிறது, சந்தேகப் புத்தி அழிவிற்கு இட்டுச் செல்கிறது. தந்தையே சுவாலை ஆவார். சில விட்டில் பூச்சிகள் தங்களை முற்றாக அர்ப்பணிக்கின்றார்கள். ஆனால் ஏனையோரோ வெறுமனே சுவாலையைச் சுற்றிப் பின்னர் சென்று விடுகின்றார்கள். அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. உண்மையிலேயே எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறார்கள் என்பதைத் தங்களை அர்ப்பணிக்கின்ற குழந்தைகள் அறிவார்கள். சுற்றி வட்டமிட்டதன் பின்னர் செல்பவர்கள் வரிசைக்கிரமமாகப் பிரஜைகள் ஆகுவார்கள். தங்களை அர்ப்பணிப்பவர்கள் தங்கள் முயற்சிக்கேற்;ப வரிசைக்கிரமமாகத் தங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். முயற்சி செய்வதற்கு ஏற்பவே வெகுமதியும் பெறப்படுகின்றது. ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடல் ஆவார். பின்னர் இந்த ஞானம் மறைந்து விடுகின்றது. அப்பொழுது நீங்கள் சற்கதியைப் பெற்றிருப்பீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் குருமார் போன்றோர் இருக்க மாட்டார்கள். அனைவரும் இப்பொழுது அத் தந்தையை நினைவு செய்கின்றார்கள், ஏனெனில் அவரே ஞானக்கடல் ஆவார். அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். விரக்திக் கூக்குரல் முடிவடைந்து வெற்றிக் களிப்பு நிலவுகின்றது. நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது திரிகாலதரிசிகளும் திரிநேற்றியும் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானம் அனைத்தையும் பெறுகிறீர்கள். இது ஒரு கற்பனைக் கதை அல்ல. கடவுளாலேயே கீதை பேசப்படுகின்றது. ஆனால் அவர்கள் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதால், அது பொய்யாகியுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைவருக்கும் நன்மையளிக்க வேண்டும். நீங்கள் சிவசக்தி சேனையினர் ஆவீர்கள். ~தாய்மாருக்கு வந்தனங்கள்;| என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. தூய்மையானவர்களுக்கே வந்தனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஒரு குமாரி தூய்மையாக இருக்கும் பொழுது, அனைவரும் அவளுக்குத் தலை வணங்குகின்றார்கள். அவள் தனது புகுந்த வீட்டிற்குச் சென்று தூய்மையற்றவராகும் பொழுது, அவள் அனைவரையும் தொடர்ந்தும் தலைவணங்குகின்றாள். அனைத்தும் தூய்மையிலேயே தங்கியுள்ளது. பாரதத்தில் தூய இல்லற தர்மம் இருந்தது; அது இப்பொழுது தூய்மையற்ற இல்லற தர்மமாக உள்ளது. துன்பத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை. சத்தியயுகத்தில் அவ்வாறு இருப்பதில்லை. தந்தை தனது உள்ளங்கையில் குழந்தைகளாகிய உங்களுக்காகச் சுவர்க்கத்தைக் கொண்டு வருகின்றார். வீட்டில் வாழும் பொழுதே, தந்தையிடமிருந்து ஜீவன்முக்தி என்ற உங்கள் ஆஸ்தியை உங்களால் பெற முடியும். உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் விட்டுச் செல்வது என்ற கேள்விக்கே இடமில்லை. சந்நியாசிகளின் துறவறப்பாதை வேறுபட்டது. நீங்கள் இப்பொழுது தந்தைக்குச் சத்தியம் செய்கின்றீர்கள்: பாபா, நான் நிச்சயமாகத் தூய்மையாகி, தூய உலகின் அதிபதி ஆகுவேன். பின்னர் ‘எது நடந்தாலும் எனது தர்மத்திலிருந்து விலக மாட்டேன்’. ஐந்து விகாரங்களையும் தானம் செய்வதால், நீங்கள் மாயையின் கிரகணத்திலிருந்து விடுதலை அடைவீர்கள். பின்னர் நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். சத்தியயுகத்தில், அவர்கள் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்களாகவும், முற்றிலும் விகாரமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றி மீண்டும் அவ்வாறு ஆகவேண்டும். கடவுளே ஏழைகளின் பிரபு ஆவார். செல்வந்தர்களால் இந்த ஞானத்தைப் பெற முடியாது, ஏனெனில், அவர்களிடம் அதிகளவு செல்வம் போன்றவை உள்ளதால், தாங்கள் இப்பொழுது சுவர்க்கத்தில் இருப்பதாக அவர்கள் எண்ணுகின்றார்கள். இதனாலேயே, அப்;பாவிகளும், பலவீனமானவர்களும், கல்லுப்புத்தி உடையவர்களுமே இந்த ஞானத்தைப் பெறுகின்றார்கள். பாரதம் ஏழ்மையாக உள்ளது. அவர்கள் மத்தியிலும், சாதாரணமானவர்களையும், ஏழைகளையுமே தந்தை தனக்குரியவர்கள் ஆக்குகின்றார். அது அவர்களின் பாக்கியத்தில் மாத்திரமே உள்ளது. சுதாமாவின் (குசேலர்) உதாரணமும் நினைவுகூரப்படுகின்றது. செல்வந்தர்களுக்கு இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதற்கு நேரம் இல்லை. சில புத்திரிகள் இராஜேந்திர பிரசாத்திடம் (முன்னைய இந்திய ஜனாதிபதி) செல்வதுண்டு. அவர்கள் அவரிடம் கூறினார்கள்: எல்லையற்ற தந்தையை அறிந்து கொண்டால் நீங்கள் வைரம் போன்று பெறுமதியுடையவர் ஆகுவீர்கள். இந்த ஏழு நாட் பாடநெறியைக் கற்றிடுங்கள். அவர் கூறுவதுண்டு: ஆம், நீங்கள் கூறுவது மிகவும் நல்லதாகும். நான் ஓய்வுபெற்ற பின்னர் அதனைப் பெறுகின்றேன். அவர் ஓய்வுபெற்ற பொழுது, அவர் கூறினார்: இப்பொழுது நான் சுகவீனமடைந்துள்ளேன். முக்கியஸ்தர்களுக்கு நேரம் இல்லை. அவர்கள் ஏழு நாட்; பாடநெறியைப் பூர்த்திசெய்யும் பொழுதே, அவர்களுக்கு நாராயணன் ஆகுகின்ற போதை இருக்க முடியும். வெறுமனே அவர்களை அவ்வாறு நிறந்தீட்ட முடியாது. ஏழு நாட்களின் பின்னரே ஒருவர் தகுதியானவரா அல்லது இல்லையா என்று உங்களால் கூற முடியும். அவர் தகுதியானவராயின், அவர் கற்பதற்கான முயற்சியைச் செய்வதில் மும்முரமாகி விடுவார். ஒருவர் சூளையில் (பத்தி) மிகவும் நன்றாக நிறமூட்டப்படும் வரையில், அவர் வெளியில் சென்றவுடன் நிறம் மங்குகிறது. இதனாலேயே நீங்கள் முதலில் அவர்களை மிகவும் நன்றாக நிறமூட்ட வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரு சிவசக்தியாகி உலகிற்கு நன்மை செய்யுங்கள். தூய்மையின் அடிப்படையில், சிப்பிப் பெறுமதியான மனிதர்களை மாற்றி, அவர்களை வைரத்தின் பெறுமதியானவர்களாக ஆக்குங்கள்.
2. ஸ்ரீமத்திற்கு ஏற்ப, விகாரங்களைத் தானம் செய்து, முற்றிலும் விகாரமற்றவர்களாகவும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும் ஆகுங்கள். சுவாலையில் தங்களை அர்ப்பணிக்கின்ற விட்டிற்பூச்சிகள் ஆகுங்கள்.}
ஆசீர்வாதம்:
எப்பொழுதும் உபசாரதி என்றும் பற்றற்ற பார்வையாளர் என்றும் உங்களை கருதுவதன் மூலம் யோக்யுத்தாகவும் சரீரத்தின் சகல விழிப்புணர்வுகளுக்கு அப்பாலும் நிலைத்திருப்பீர்களாக.
எப்பொழுதும் நீங்கள் செல்லும் இடம் எங்கும், உங்களை உபசாரதியாகவும் பற்றற்ற பார்வையாளர் எனவும் கருதுவதே யோக்யுத்தாக இருப்பதற்கான இலகுவான வழியாகும். ~இந்த இரதத்தை இயக்குகின்ற ஆத்மாவான நான் ஓர் உபசாரதி|. இந்த விழிப்புணர் இயல்பாகவே இரதத்தின் அதாவது சரீரத்தினதும், சரீரத்தின் சகலவகையான விழிப்புணர்விலிருந்தும் உங்களை விடுபடச் செய்கின்றது. சரீரத்தின் எந்த விழிப்புணர்வும் இல்லாத போது, நீங்கள் இலகுவாக யோகயுக்தாக ஆகுவதுடன் உங்கள் ஒவ்வொரு செயலும் யோகியுக்தாகவிருக்கும். உங்களை உபசாரதியாக கருதுவதனால் உங்கள் சகல புலன்களும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அத்தகைய ஆத்மாவினால் எந்தவொரு பௌதீக புலன்களின் செல்வாக்கிற்கும் உள்ளாக முடியாது.
சுலோகம்:
வெற்றி ஆத்மா ஆகுவதற்கு, கவனம் செலுத்துதலையும் பயிற்சியையும் உங்கள் இயல்பான சம்ஸ்காரங்கள் ஆக்குங்கள்.
மாதேஸ்வரியின் இனிய மேன்மையான வாசகங்கள்.
~ஓம்| என்ற மந்திரத்தை ஓதுவதால் மாத்திரம் நன்மை இருக்க மாட்டாது.
~ஓம்| என்று ஓதுவது என்றால், இதனை சதா பாடிக்கொண்டிருத்தல் என்று அர்த்தமாகும். நாங்கள் ஓம் என்று கூறும் போது, அதனை சப்தமிட்டு கூறவேண்டும் என்றில்லை. ~ஓம்| என்று வெறுமனே கூறுவதால் வாழ்க்கையில் எந்த நன்மையும் கிட்ட மாட்டாது. ஆனால் ~ஓம்| என்பதன் அர்த்தத்தில் ஸ்திரமாக நிலைத்திருப்பதாலும், ~ஓம்| என்ற அந்த வார்த்தையின் அர்த்தத்தை அறிந்திருப்பதாலும் மனிதர்களால் தமது வாழ்வில் அமைதி கொண்டிருக்க முடியும். மனிதர்கள் நிச்சயமாக அமைதியை விரும்புகின்றார்கள், அதனை ஸ்தாபிப்பதற்கு பல மாநாடுகளையும் நடாத்துகின்றார்கள். ஆனால் விளைவோ மென்மேலும் அமைதியின்மை நிலவுவதுடன் துன்பமே விளைவிக்கப்படுகின்றது. அதற்கு பிரதான காரணம், மனிதர்கள் ஐந்து விகாரங்களை அழிக்கும் வரையில் பூமியில் அமைதி நிலவுவது சாத்தியமில்லை. எனவே முதலில், ஒவ்வொரு மனிதனும் தமது ஐந்து விகாரங்களையும் கட்டுப்படுத்தி தமது (ஆத்மாவினது) இழையை பரமாத்மாவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது மாத்திரமே அமைதி நிலவ முடியும். எனவே, ஒவ்வொருவரும் சுயத்திடம் வினவவேண்டும்: எனக்குள் இருக்கின்ற ஐந்து விகாரங்களையும் நான் அழித்து விட்டேனா? நான் அவற்றை வெற்றி கொள்ளும் முயற்சியை செய்தேனா? ~எனக்குள் இருக்கும் ஐந்து விகாரங்களை நான் எவ்வாறு அழிப்பது?| என அவர்கள் வினவினால், இவ் வழிமுறையை அவர்களுக்குக் காட்டுங்கள். முதன் முதலில், ஞானத்தினதும் யோகத்தினதும் தூப்பை (ஊதுபத்தியின் புகை) கொடுங்கள். இம்முறையை அவர்களுக்குக் காட்டுங்கள். அத்துடன் பரமாத்மா பரமதந்தையின் மேன்மையான வாசகங்களை அவர்களுக்குக் கொடுங்கள்: உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் இணைத்து என்னிடமிருந்து சக்தியை பெற்று, சர்வசக்திவான் கடவுளான என்னை நினைவுசெய்வதன் மூலம் ஐந்து விகாரங்களும் தொடர்ந்தும் அகற்றப்படும். இத்தகைய ஆன்மிக முயற்சியை நாங்கள் செய்யும் போதே கடவுள் தானே வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார். அச்சா.