01.11.18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, வைரத்தைப் போன்றிருந்த பாரதம் தூய்மையற்றதாக ஆகிவிட்டதால் ஏழ்மை நிலையை அடைந்துவிட்டது. இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒரு முறை அதனை வைரத்தைப் போன்று தூய்மையானதாக ஆக்கவேண்டும். நீங்கள் இனிய தேவ விருட்சத்தின் நாற்றை நாட்டவேண்டும்.
கேள்வி:
தந்தையின் எப்பணிகளில் குழந்தைகள் அவரது உதவியாளர்கள் ஆகவேண்டும்?
பதில்:
முழு உலகிலும் தேவ அரசாங்கத்தை ஸ்தாபிப்பதும், எண்ணற்ற சமயங்களை அழித்து ஒரேயொரு உண்மையான தர்மத்தை ஸ்தாபிப்பதும் தந்தையின் பணிகளாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பணிகளில் உதவியாளர்களாக ஆகவேண்டும். நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எவ்வாறாயினும் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள் என எண்ணாதீர்கள்.
பாடல்:
தாயும் நீயே, தந்தையும் நீயே…….
ஓம் சாந்தி.
உலக மக்கள் பாடுகின்றார்கள்: “தாயும் நீயே, தந்தையும் நீயே” எனினும், தாங்கள் யாரைக் குறிப்பிடுகின்றார்கள் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். இதுவும் அற்புதமான விடயமாகும். அவர்கள் இதனைக் கூறவேண்டும் என்பதற்காகக் கூறுகின்றார்கள். உண்மையில் இத்தாயும், தந்தையும் யார் என்பது உங்களது புத்தியில் உள்ளது. அவரே பரந்தாமவாசியாவார். ஒரு பரந்தாமம் மாத்திரம் இருக்கின்றது. சத்தியயுகத்தைப் பரந்தாமம் என அழைக்கமுடியாது. சத்தியயுகம் இங்கேயே இருக்கின்றது. ஆனால் நாங்கள் அனைவரும் பரந்தாமத்தில் வசிப்பவர்கள். நீங்கள் நிர்வாணதாமமாகிய பரந்தாமத்திலிருந்தே இப் பௌதீக உலகிற்கு வந்தீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். சுவர்க்கம் என்பது மேலே இல்லை. நீங்கள் பரந்தாமத்திலிருந்து வருகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரங்களின் மூலமாக உங்களது பாகங்களை நடிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் எத்தனை பிறவிகள் எடுக்கின்றீர்கள் என்பதனையும், எவ்வாறு உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள் என்பதனையும் இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். தொலைதூரவாசியாகிய அந்த ஒரேயொருவரே இந்த அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார். இது ஏன் அந்நியதேசம் என அழைக்கப்படுகின்றது? நீங்கள் பாரதத்திற்கு வருகின்றீர்கள், இல்லையா? எவ்வாறாயினும், நீங்கள் முதலில், தந்தையால் ஸ்தாபிக்கப்படுகின்ற சுவர்க்கத்திற்குச் செல்கின்றீர்கள். பின்னர், அதுவே இராவணனின் இராச்சியமாக, அதாவது நரகமாக ஆகுகின்றது. அங்கு எண்ணற்ற சமயங்களும், எண்ணற்ற அரசாங்கங்களும் இருக்கின்றன. பின்னர், தந்தை வந்து, ஒரேயொரு இராச்சியத்தை உருவாக்குகின்றார். இப்பொழுது பல அரசாங்கங்கள் இருக்கின்றன. அவையனைத்தும் ஒன்றிணைந்து, ஒன்றாக வேண்டும் என அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் கூறுகின்றனர். எவ்வாறு அவையனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு ஒன்றாக்கப்பட முடியும்? 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதத்தில் ஒரேயொரு அரசாங்கமே இருந்தது. இலக்ஷ்மியும், நாராயணனுமே உலக சர்வ சக்திவான்களாக இருந்தனர். உலகை ஆட்சி புரியக்கூடிய வேறு எந்த சக்தியுமே இல்;லை. சமயங்கள் அனைத்தும் ஒரே தர்மத்திற்குள் வரமுடியாது. சுவர்க்கத்தில் ஒரேயொரு அரசாங்கமே இருந்தது. இதனாலேயே அனைத்தும் ஒன்றாக வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது பல அரசாங்கங்களினதும் விநாசத்தைத் தூண்டி, ஒரேயொரு ஆதி சனாதன தேவ அரசாங்கத்தை ஸ்தாபிக்கின்றேன். நீங்களும் கூறுகின்றீர்கள்: நாங்கள் அனைத்துச் சக்திகளையும் கொண்டவராகிய உலக சர்வசக்திவானின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப, பாரதத்தில் ஒரேயொரு தேவ அரசாங்கத்தின் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். தேவ அரசாங்கத்தைத் தவிர, வேறு எங்குமே ஒரேயொரு அரசாங்கம் இருக்க முடியாது. 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதத்தில், அதாவது முழு உலகிலும் ஒரேயொரு தேவ அரசாங்கமே இருந்தது. இப்பொழுது உலகில் மீண்டும் ஒரு முறை தேவ அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காகவே தந்தை வந்துள்ளார். குழந்தைகளாகிய நாங்களே அவரது உதவியாளர்கள். இந்த இரகசியம் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உருத்திரனின் ஞான யாகமாகும். அசரீரியானவரே உருத்திரன் என அழைக்கப்படுகின்றார். கிருஷ்ணரை அவ்வாறு அழைக்க முடியாது. ~உருத்திரன்| என்ற பெயர் அசரீரியானவருடையதாகும். பல பெயர்களைக் கேட்க நேரிட்டதால், உருத்திரன் சோமநாதரிலிருந்து வேறுபட்டவர் என மக்கள் நினைக்கின்றனர். எனவே, ஒரேயொரு தேவ அரசாங்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் நீங்கள் சுவர்க்கத்திற்குச் சென்றுவிடுவீர்கள் என நினைத்துச் சந்தோஷப்படாதீர்கள். நரகத்தில் ஓர் அந்தஸ்தைப் பெறுவதற்காக மக்கள் எவ்வளவு பிரயத்தனம் செய்கின்றார்கள் எனப் பாருங்கள்! முதலில் அவர்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றனர், இரண்டாவதாக பெருமளவு பணம் சம்பாதிக்கின்றார்கள். பக்தர்களுக்காக ஒரேயொரு கடவுளே இருக்கவேண்டும். இல்லையெனில், அவர்கள் அலைந்து திரிவார்கள்;. இங்கே அவர்கள் அனைவரையும் கடவுள் என அழைக்கின்றனர். அவர்கள் பலரை அவதாரங்களாகக் கருதுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் ஒரேயொரு முறையே வருகின்றேன். அவர்கள் பாடுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! முழு உலகும் தூய்மையற்றதாக இருக்கின்றது. அதிலும் பாரதமே அதி தூய்மையற்றதாக உள்ளது. பாரதம் ஏழ்மை நிலையை அடைந்து விட்டது. ஆனால், அது வைரத்தைப் போன்றிருந்தது. நீங்கள் புதிய உலக இராச்சியத்தைப் பெற வேண்டும். கிருஷ்ணரைக் கடவுள் என அழைக்கமுடியாதெனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவராகிய, அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே கடவுள் என அழைக்கப்படமுடியும். மக்கள் கூறுகின்றனர்: அவரும் கடவுள், நானும் கடவுள். நாங்கள் எங்களைக் களிப்பூட்டுவதற்காகவே இங்கே வந்திருக்கின்றோம். அவர்கள் மிகவும் போதையுடையவர்களாக இருக்கின்றார்கள். “நான் எங்கே பார்த்தாலும் உங்களை மாத்திரமே பார்க்கின்றேன். இது அனைத்தும் உங்களது அற்புதமே!” நானே நீங்கள், நீங்களே நான்.” அவர்கள் தொடர்ந்தும் நடனமாடுகின்றார்கள். அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: பக்தர்கள் தொடர்ந்தும் கடவுளைப் பிரார்த்திக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பெருமளவு பக்தி உணர்வோடு கடவுளைப் பூஜிக்கின்றார்கள். பாபா கூறுகின்றார்: நான் அவர்களுக்கு காட்சிகளைக் கொடுக்கின்றேன். ஆனால் அவர்கள் என்னைச் சந்திப்பதில்லை. நான் சுவர்க்கத்தைப் படைப்பவர். நான் அவர்களுக்கு சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பதில்லை என்றில்லை. ஒரேயொரு கடவுளே இருக்கின்றார். தந்தை கூறுகின்றார்: மறுபிறவிகள் எடுத்ததால், அனைவரும் பலவீனமடைந்துவிட்டார்கள். நான் இப்பொழுது பரந்தாமத்திலிருந்து வந்திருக்கின்றேன். நான் ஸ்தாபிக்கின்ற சுவாக்கத்திற்குள் நான் பிரவேசிப்பதில்லை. தாங்கள் சுயநலமற்ற சேவை செய்வதாகப் பலர் கூறுகின்றனர். அவர்கள் விரும்புகின்றார்களோ, இல்லையோ அவர்கள் செய்வதற்குரிய பலனை நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் தானங்கள் செய்வதால், நிச்சயமாக அதற்குரிய பலனைப் பெறுவார்கள். நீங்கள் கடந்த காலத்தில் தான தர்மங்கள் செய்ததனால் செல்வந்தர்கள் ஆகினீர்கள். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக முயற்சி செய்கின்றீர்களோ, அதற்கேற்ப எதிர்காலத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வீர்கள். உங்களது எதிர்காலத்தின் பல பிறவிகளுக்காக நற்செயல்களைச் செய்யுமாறு இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. மக்கள் தங்களது அடுத்த பிறவிக்காக அவ்வாறு செய்கின்றனர். அது தங்களது கடந்த காலச் செயல்களுக்குரிய பலன் என அவர்களும் கூறுகின்றனர். சத்திய, திரேதா யுகங்களில் நீங்கள் இவ்வாறு கூறமாட்டீர்கள். 21 பிறவிகளுக்கான கர்ம பலன் இப்பொழுது தயார் செய்யப்படுகின்றது. சங்கமயுகத்தில் செய்யும் முயற்சிக்கான வெகுமதி 21 சந்ததிகளுக்குத் தொடர்கின்றது. நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷமாக இருக்கக்கூடியதாக அத்தகையதோர் வெகுமதியை உங்களுக்காக உருவாக்குவதாக சந்நியாசிகளால் கூறமுடியாது. கடவுள் நல்ல, அல்லது தீய பலனைக் கொடுக்கவேண்டியுள்ளது. எனவே, அவர்கள் சக்கரத்தின் காலப்பகுதியை நீண்டதாக்கி ஓர் தவறைச் செய்துவிட்டார்கள். சக்கரம் 5000 வருடங்களைக் கொண்டதெனக் கூறுகின்ற பலர் இருக்கின்றனர். முஸ்லிம் ஒருவர் உங்களிடம் வந்து, சக்கரத்தின் காலப்பகுதி உண்மையில் 5000 வருடங்களே எனக் கூறினார். நாங்கள் இங்கே பேசுகின்ற விடயங்களை அவர் செவிமடுத்திருக்க வேண்டும். படங்கள் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றன. எனினும், அனைவரும் இதனை நம்பமாட்டார்கள். இந்த உருத்திர ஞான யாகத்தின் மூலமாக விநாசச் சுவாலை தோன்றுகின்றதென்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கே இலகு இராஜயோகம் கற்பிக்கப்படுகின்றது. கிருஷ்ணரின் ஆத்மா இப்பொழுது தனது இறுதிப்பிறவியில், சிவனிடமிருந்து (உருத்திரன்) தனது ஆஸ்தியைப் பெறுகின்றார். அவர் இங்கே அமர்ந்திருக்கின்றார். பாபா இவரிலிருந்து வேறுபட்டவர். அவர்கள் பிராமணப் பூசகர் ஒருவருக்கு உணவூட்டி, ஓர் ஆத்மாவை வரவழைக்கும்போது, அவ்வாத்மா அந்த பிராமணரது சரீரத்தினுள் பிரவேசித்துப் பேசுகின்றார். மக்கள் விஷேடமாக யாத்திரைகள் சென்று, ஆத்மாக்களை வரவழைக்கின்றார்கள். அவ்வாத்மா சென்று நீண்ட காலமாகிவிட்டது. எனவே, அவர் எவ்வாறு வருவார்? என்ன நிகழ்கின்றது? அவ்வாத்மா கூறுகின்றார்: நான் சந்தோஷமாக இருக்கின்றேன். நான் இன்ன இன்ன வீட்டில் பிறவியெடுத்திருக்கின்றேன். அங்கே என்ன நிகழ்கின்றது? அவ்வாத்மா அவ்விடத்தை விட்டு, இங்கே வந்துவிட்டாரா? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் அவர்களுக்கு பக்தியின் பலனைக் கொடுப்பதால் அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள். இதுவும் நாடகத்தில் ஓர் இரகசியமாகும். அவர்கள் பேசுகின்றார்கள். எனவே அப்பாகம் தொடர்கின்றது. ஒருவர் பேசவில்லையாயின், அது நிச்சயிக்கப்படவில்லை என்பதாலாகும். தந்தையின் நினைவில் இருங்கள், உங்களது பாவங்கள் அழிக்கப்படும். அதற்கு வேறு எவ்வழிமுறைகளும் இல்லை. அனைவரும் சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்லவேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களைப் புதிய உலகின் அதிபதிகளாக்குகின்றேன். நான் மீண்டும் ஒரு முறை பரந்தாமத்திலிருந்து பழைய உலகிற்கு வந்து, ஒரு பழைய சரீரத்தினுள் பிரவேசித்திருக்கின்றேன். இவர் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருந்தார். பின்னர், இவர் பூஜிப்பவராகி, இப்பொழுது மீண்டும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக ஆகுகின்றார். அது உங்களுக்கும் பொருந்தும். நான் உங்களையும் அவ்வாறு ஆக்குகின்றேன். இவர் முதலாம் இலக்க முயற்சியாளர். இதனாலேயே நீங்கள் கூறுகின்றீர்கள்: “மாதேஸ்வரி, பிதாஸ்ரீ”. தந்தை மேலும் கூறுகின்றார்: சிம்மாசனத்தில் அமர்வதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த ஜெகதாம்பா அனைவரது ஆசைகளையும் பூர்த்தி செய்கின்றார். தாய் இருப்பதால், நிச்சயமாக தந்தையும், குழந்தைகளும் கூடவே இருக்கவேண்டும். நீங்கள் அனைவருக்கும் பாதையைக் காண்பிக்கின்றீர்கள். சத்தியயுகத்தில், உங்களது ஆசைகளனைத்தும் பூர்த்தி செய்யப்படுகின்றன. பாபா கூறுகின்றார்: நீங்கள் வீட்டில் வசிக்கும்போதே முழுமையாக யோகத்தில் இருப்பீர்களாயின், இங்கே இருப்பவர்களை விடவும் உயர்ந்ததோர் அந்தஸ்தை உங்களால் பெற முடியும். பலர் பந்தனத்தில் இருக்கின்றார்கள். பலவீனமானவர்கள் துன்புறுத்தப்படாத வகையில் இதற்கு ஒரு தீர்வு காணப்படவேண்டும் எனக் கடந்த இரவு, உள்நாட்டு அமைச்சருக்கு பாபா விளங்கப்படுத்தினார். எவ்வாறாயினும், அவர்கள் இரண்டு அல்லது நான்கு முறைகள் இதனைச் செவிமடுத்தாலே இதைப்பற்றிச் சிந்திப்பார்கள். அவர்களது பாக்கியத்தில் இருந்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்த ஞானம் சறுக்கலானதாகும். மார்க்கமாகும். சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் இதனை அறிய நேரிட்டால், “மனிதர்களை தேவர்களாக்குவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை” என்ற வாசகத்தைப் புரிந்துகொள்வார்கள். அதனைச் செய்தவர் யார்? அவர்கள் அவரது புகழைப் பாடுகின்றனர்: அசரீரியானவர் ஒரேயொருவரே. அவர் சத்தியமானவரும், அமரத்துவமானவரும் ஆவார். பிரம்ம தத்துவமே அவரது சிம்மாசனமாகும். அவர்கள் கூறுகின்றனர்: உங்களது சிம்சனத்தை விட்டிறங்கி இங்கே வாருங்கள்! தந்தை இங்கிருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவார். அவர் ஒவ்வொருவரினதும் இதயத்தில் என்ன இருக்கின்றதென்பதனை அறிவார் என்றில்லை. மக்கள் தங்களைச் சற்கதிக்குக் கொண்டு செல்வதற்காகக் கடவுளை நினைவு செய்கின்றனர். பாபா கூறுகின்றார்: நான் உலக சர்வசக்தி வாய்ந்த தேவ அரசாங்கத்தை ஸ்தாபிக்கின்றேன். நிகழ்ந்த பிரிவினைகள் யாவும் அகற்றப்படும். எங்களது தேவ தர்மத்தைச் சார்ந்தவர்களின் நாற்று நாட்டப்பட வேண்டும். விருட்சம் மிகவும் பெரியது. அதில், தேவர்களே அதி இனிமையானவர்கள். அவர்களது நாற்று நாட்டப்பட வேண்டும். ஏனைய எண்ணற்ற சமயங்களைச் சார்ந்தவர்கள் நாற்றுக்களை நாட்டுவதில்லை. அச்சா.
இன்று சற்குருவார் தினமாகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தூய்மையாகுங்கள், நான் உங்களை என்னுடன் மீண்டும் அழைத்துச் செல்கின்றேன். பின்னர் நீங்கள் வெல்வெற் அரசியாகினாலும்சரி, சில்க் அரசியாகினாலும் சரி நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறவேண்டுமாயின், எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். நினைவின் மூலமாக மாத்திரமே நீங்கள் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆகுவீர்கள். நல்லது. நீண்ட காலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதாவிடமிருந்தும், இனிய மம்மாவிடமிருந்தும் அன்பும், நினைவுகளும், நமஸ்காரங்களும்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சங்கமயுகத்தில் செய்கின்ற முயற்சிக்கான வெகுமதி 21 பிறவிகளுக்கு நீடித்திருக்கும். இதனை உங்களது விழிப்புணர்வில் கொண்டிருந்து, மேன்மையான செயல்களைச் செய்யுங்கள். ஞானத்தைத் தானம் செய்வதன் மூலம் உங்களது வெகுமதியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
2. இனிய தேவ விருட்சத்தின் நாற்று நாட்டப்படுகின்றது. எனவே, மிக மிக இனிமையானவராகுங்கள்.
ஆசீர்வாதம்:
எந்த ஒரு கர்ம வேதனையையும், கர்மயோகமாக மாற்றுவதன் மூலம் பாக்கியசாலிகளாகி சேவைக்குக் கருவிகள் ஆகுவீர்களாக.
உங்கள் முயற்சியின் பாதையில், உங்கள் பேறுகளுக்கு கர்மகணக்குகளை ஒரு தடையாக அனுபவம் செய்யாதீர்கள். நீங்கள் சேவை செய்வதற்கு உங்கள் சரீரம் தடையாக இருப்பதற்கு அனுமதிக்காதீர்கள். பாக்கியசாலி ஆத்மாக்கள் தமது கர்ம வேதனைக்கான நேரத்திலும் ஏதேனும் ஒரு வகையில் சேவைக்குக் கருவிகளாகவே இருப்பார்கள். கர்ம வேதனை சிறிதாக இருப்பினும், பெரிதாக இருப்பினும் அதன் கதையை பெரிது படுத்தாதீர்கள். அதனை பற்றி பேசுவது என்றால் உங்கள் நேரத்தையும் சக்தியையும் விரயம் செய்வதாகும். ஒரு யோகி வாழ்க்கை என்றால் எந்த கர்ம வேதனையையும் கர்மயோகமாக மாற்றுவதாகும். இதுவே பாக்கியசாலியாக இருப்பது என்பதன் அடையாளமாகும்.
சுலோகம்:
உங்கள் பார்வையில் கருணையும் நல்லாசிகளும் கொண்டிருக்கும் போது, இழிவான அல்லது அகங்காரமான பார்வை முடிவடைந்து விடும்.
மாதேஸ்வரியின் மேன்மையான வாசகங்கள்
ஆத்மாக்களுக்கும் பரமாத்இ h வுக்கும் இடையிலான வேறுபாடு
ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்டகாலமாகப் பிரிநதிருந்தார்கள். ஓர் முகவர் என்ற ரூபத்தில் சற்குருவை இனங்கண்டதும், ஓர் அழகான சந்திப்பு இடம்பெற்றது. நாங்கள் இவ்வார்த்தைகளைப் பேசும் போது, ஆத்மாக்கள் நீண்ட காலமாகப் பாரமாத்மாவிடமிருந்து பிரிந்திருந்தார்கள் என்பதே அதன் சரியான அர்த்தமாகும். ~ஒரு நீண்டகாலம்| என்பது ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்டகாலத்திற்கு முன்பே பிரிந்திருந்hர்கள் என்பதால், இவ்வார்த்தைகள் ஆத்மாக்களும் பரமாத்மாவும் வௌ;வேறானவர்கள் என்பதையே நிரூபிக்கின்றன. இரண்டிற்கும் இடையே ஓர் அடி;படையான வித்தியாசம் உள்ளது. ஆனால், உலகமக்கள் அவரை இனங்கண்டு கொள்ளாததால், ~ஆத்மாவாகிய நானே பரமாத்மா| எனக் கருதுகின்றார்கள். ஏனெனில் ஆத்மாக்கள் மாயையின் ஆதிக்கத்திற்கு உட்படுவதால், அவர்கள் தங்களின் ஆதிரூபத்தை மறந்து விடுகின்றார்கள். மாயையின் ஆதிக்கம் அகற்றப்பட்டதும் ஆத்மாக்கள் பரமாத்மாவை போல் ஆகின்றார்கள். எனவே, அவர்கள் ஆத்மாக்களை அவ்வாறு வேறாகக் கருதுகின்றார்கள். பின்னர் வேறு சிலர் ~ஆத்மாவாகிய நானே கடவுள்| எனக் கூறுகின்றார்கள்;. ஆத்மாக்கள் தங்களையே மறந்ததால், அவர்கள் சந்தோஷமற்றவர்கள் ஆகுகின்றார்கள். ஒரு ஆத்மா தன்னை இனங்கண்டு தூய்மையாகும் போது, பரமாத்மாவுடன் அமிழ்ந்து ஒருவர் ஆகுகின்றார். எனவே, அவ்வகையில் ஆத்மா வேறானவர் என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஆத்மாவும் பரமாத்மாவும் இரு வேறானவர்கள் என்பதை நாம் அறிவோம். ஓர் ஆத்மா கடவுளாக ஆக முடியாது, ஓர் ஆத்மா கடவுளில் அமிழ்ந்து விடவும் முடியாது. பரமாத்மா எந்த செல்வாக்கிற்கும் உள்ளாக முடியாது.