31/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய உங்களுக்கென்று உங்கள் சொந்த இரதம் உள்ளது. நான் அசரீரியானவர். சக்கரத்தில் ஒரேயொரு தடவையே எனக்கு ஒரு இரதம் தேவை. நான் வயதான, அனுபவசாலியான பிரம்மாவின் இரதத்தை இரவலாகப் பெறுகின்றேன்.
கேள்வி:
எந்நம்பிக்கையின் அடிப்படையில் சரீர விழிப்புணர்வை மறப்பது மிக இலகுவாக உள்ளது?
பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளீர்கள்: பாபா, நான் இப்பொழுது உங்களுக்கே சொந்தம். எனவே, தந்தைக்குச் சொந்தமாகுவது என்றால், உங்கள் சரீர விழிப்புணர்வை மறப்பதாகும். சிவபாபா இந்த இரதத்திற்குள் பிரவேசித்து, பின்னர் அதை விட்டு நீங்குவது போன்று, குழந்தைகளாகிய நீங்களும் உங்கள் இரதங்களில் பிரவேசித்து, பின்னர் அதை விட்டு நீங்குவதைப் பயிற்சி செய்யவேண்டும். சரீரமற்றவராகுவதைப் பயிற்சி செய்யுங்கள். இதைச் செய்வது சிரமமாக இருக்கக்கூடாது. உங்களை அசரீரியான ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள்.
பாடல்:
ஓம் நமசிவாய.
ஓம் சாந்தி.
பிரம்மாவின் இந்த இரதத்தினூடாக சிவபாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: எனக்கென்று சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் சொந்தமாக இருப்பதைப் போன்று, எனக்கும் நிச்சயமாக ஒரு சரீரம் தேவை. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்கும் அவர்களுடைய சூட்சும சரீரங்கள் உள்ளன. இலக்ஷ்மி, நாராயணன் போன்றோரும், ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் நிச்சயமாகத் தமது சரீரங்களை இரதங்களாகக் கொண்டுள்ளனர். அவை குதிரைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. உண்மையில் அவர்கள் மனிதர்களே. உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுபவை அனைத்தும் மனிதர்களைப் பற்றியதேயாகும். விலங்குகளுக்கே விலங்குகளைப் பற்றித் தெரியும். இது மனித உலகம் என்பதால் தந்தையும் இங்கிருந்து மனிதர்களுக்கே விளங்கப்படுத்துகிறார். மனித ரூபங்களுக்குள்ளே இருக்கும் ஆத்மாக்களுக்கு அவர் இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார். அவர் உங்களை நேரடியாகவே கேட்கிறார்: உங்கள் ஒவ்வொருவரிடமும் உங்கள் சொந்தச் சரீரம் இருக்கிறது, இல்லையா? ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு சரீரத்தை எடுத்து, அதனை விட்டுச் செல்கிறார். ஆத்மாக்கள் 8.4 மில்லியன் பிறப்புகளை எடுப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இது ஒரு தவறாகும். காரணம், 84 பிறவிகளை எடுத்ததுமே நீங்கள் முழுமையாகக் களைத்து விடுகிறீர்கள். நீங்கள் மிகவும் விரக்தியடைந்தவர்கள் ஆகிவிடுகிறீர்கள். எனவே, 8.4 மில்லியன் பிறவிகள் என்ற கேள்விக்கே இடமில்லை. அவை யாவும் மனிதர்களால் கூறப்பட்ட பொய்களே. அதனால் தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆத்மாக்களாகிய உங்களிடம் உங்கள் சொந்த இரதங்கள் இருக்கின்றன. எனக்கும் ஓர் இரதம் தேவை. நான் உங்கள் எல்லையற்ற தந்தை. ஓ தூய்மையாக்குபவரே, ஞானக்கடலே என்று நீங்கள் பாடுகிறீர்கள். வேறு யாரையுமே நீங்கள் தூய்மையாக்குபவர் என்று அழைக்க மாட்டீர்கள். இலக்ஷ்மி, நாராயணன் போன்றோரையும் அவ்வாறு நீங்கள் அழைக்க மாட்டீர்கள். அது தூய்மையற்ற உலகத்தைத் தூய்மையாக்குபவராகிய, அதாவது, சுவர்க்கம் எனும் தூய உலகத்தைப் படைப்பவராகிய பரமாத்மா பரமதந்தையைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது. அவர் மட்டுமே பரமதந்தையாக இருக்கிறார். நீங்கள் கல்லுப்புத்தி கொண்டவர்கள் என்ற நிலையிலிருந்து, வரிசைக்கிரமமாக, தெய்வீகப் புத்தி கொண்டவர்களாகுகின்றீர்கள் என்பதைத் தந்தை அறிவார். வெளியுலக மக்களுக்கு இது தெரியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: எனக்கும் நிச்சயமாக ஓர் இரதம் தேவை. தூய்மையாக்குபவராகிய நான் நிச்சயமாகத் தூய்மையற்ற உலகத்திற்குள் வர வேண்டும். ‘பிளேக்’ (கொள்ளை நோய்) எல்லா இடங்களிலும் பரவும்பொழுது, பிளேக் நோய் பீடித்தவர்களிடம் மருத்துவர்கள் செல்ல வேண்டும். தந்தை கூறுகிறார்: அரைச்சக்கர காலமாக உங்களுக்குள்ளே நீங்கள் ஐந்து விகாரங்கள் என்ற நோயுடன் இருந்திருக்கிறீர்கள். மனிதர்கள் துன்பமே கொடுக்கிறார்கள். அந்த ஐந்து விகாரங்களால் நீங்கள் முற்றிலும் தூய்மையற்றவர்களாகி விட்டீர்கள். அதனால், தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் தூய்மையற்ற உலகத்துக்குள் வரவேண்டும். தூய்மையற்றவர்கள் சீரழிந்தவர்கள் என்றும், தூய்மையானவர்கள் மேன்மையானவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அது இலக்ஷ்மி, நாராயணனுடைய இராச்சியமாக இருந்தபொழுது, உண்மையாகவே உங்கள் பாரதம் தூய்மையாகவும் மேன்மையானதாகவும் இருந்தது. “சகல நற்குணங்களும் நிறைந்த...” என்று நீங்கள் அதன் புகழைப் பாடுகின்றீர்கள். அங்கே அனைவருமே சந்தோஷமாக இருந்தார்கள். அது நேற்று நடந்த விடயமாகும். தந்தை கூறுகிறார்: நான் வரும்பொழுது எவ்வாறு வருகிறேன்? யாருடைய சரீரத்தில் நான் வருவேன்? எல்லாவற்றுக்கும் முதலில் எனக்கு பிரஜாபிதா தேவைப்படுகிறார். சூட்சுமலோகவாசியாக இருப்பவரை எவ்வாறு இங்கே கொண்டுவர முடியும்? அவர் ஒரு தேவதை. அவரை நான் தூய்மையற்ற உலகத்துக்குள் கொண்டு வருவேனாயின், அது ஒரு குற்றமாகிவிடும். நான் என்ன குற்றம் செய்தேன் என்று அவர் கேட்பார். தந்தை உங்களுக்கு மிகவும் களிப்பூட்டும் விடயங்களை விளங்கப்படுத்துகிறார். தந்தைக்குச் சொந்தமானவர்களே இந்த விடயங்களைப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்வார்கள். தந்தை கூறுகிறார்: பூமியில் பாவம் அதிகரிக்கும்பொழுது, நான் வருகிறேன். கலியுகத்தில் மக்கள் அளவற்ற பாவம் செய்கிறார்கள். எனவே தந்தை கேட்கிறார்: குழந்தைகளே, நான் வந்தால் யாருடைய சரீரத்தில் பிரவேசிப்பேன் என்று எனக்குக் கூறுங்கள்? நிச்சயமாக வயதான, அனுபவசாலி இரதமொன்று எனக்குத் தேவைப்படும். நான் யாருடைய இரதத்தைத் தெரிவு செய்திருக்கிறேனோ அவர் உண்மையாகவே பல குருமாரையும் ஏற்றிருந்தார். அவர் சமயநூல்;கள் போன்றவற்றைக் கற்றிருக்கிறார். அவர் மிகவும் நன்றாகக் கல்வியறிவு பெற்றவர் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இது அர்ஜூனனுடன் சம்பந்தப்பட்டதல்ல. எனக்கு அர்ஜூனனின் அல்லது கிருஷ்ணரின் இரதம் தேவையில்லை. எனக்குப் பிரம்மாவின் சரீரமே தேவை. அவரையே பிரஜாபிதா என்று அழைக்கலாம். கிருஷ்ணரை பிரஜாபிதா என்று அழைக்க முடியாது. பிராமணரை உருவாக்கக்கூடிய பிரம்மாவின் இரதம் மட்டுமே தந்தைக்கு வேண்டும். பிராமண குலமே அதிமேலான குலம். அவர்கள் பல்வகை ரூபத்தைக் காட்டுகிறார்கள். அதில் தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் காட்டப்பட்டுள்ளார்கள். எனவே பிராமணர்கள் எங்கே சென்றார்கள்? இது எவருக்குமே தெரியாது. பிராமணர்கள் என்னும் உச்சிக்குடுமியே அனைத்திலும் அதிமேலானது. அவர்களுக்கு உச்சிக்குடுமி இருந்தால்தான் அவர்களைப் பிராமணர்கள் என்று புரிந்துகொள்ளலாம். உங்களுடையதே உண்மையான உச்சிக்குடுமி. நீங்கள் பெரிய உச்சிக்குடுமி கொண்ட, இராஜரிஷிகள். தூய்மையாக இருப்பவர்கள் ரிஷிகள் எனப்படுகிறார்கள். நீங்கள் இராஜரிஷிகளாகிய, இராஜயோகிகள். நீங்கள் ஓர் இராச்சியத்துக்காகத் தபஸ்யா செய்கிறீர்கள். அம்மக்;களோ முக்தியடைவதற்காக ஹத்தயோகத் தபஸ்யா செய்கிறார்கள். நீங்கள் ஜீவன்முக்திக்காக, அதாவது, இராச்சியத்துக்காக இராஜயோக தபஸ்யா செய்கிறீர்கள். சிவசக்தி என்பது உங்கள் பெயராகும். சிவபாபா உங்களை மறு அவதாரம் எடுக்க வைக்கிறார். அதனால், நீங்கள் மீண்டும் ஒரு தடவை பாரதத்தில் பிறக்கிறீர்கள். நீங்கள் பிறப்பெடுத்து து விட்டீர்கள், இல்லையா? சிலர் புதுப்பிறவி எடுத்தபொழுதிலும், தாங்கள் சிவபாபாவுக்குரியவர்கள் என்பதையோ அல்லது தாங்கள் அவருக்குப் பிறந்திருக்கிறார்கள் என்பதையோ அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இதை அவர்கள் புரிந்துகொள்வார்களாயின், தங்கள் சரீரங்களின் விழிப்புணர்வை முழுமையாக மறந்து விடுவார்கள். அசரீரியான சிவபாபா இந்த இரதத்தில் இருப்பதைப் போலவே, நீங்களும் உங்களை அசரீரியான ஆத்மாக்களாகக் கருத வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவுசெய்யுங்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். முதலில் நீங்கள் சரீரமற்றவர்களாக இருந்தீர்கள். பின்னர், தேவ சரீரங்களை எடுத்தீர்;கள். பின்னர், சத்திரிய சரீரங்களையும், அதன்பின்னர் வைசிய சரீரங்களையும், பின்னர் சூத்திர சரீரங்களையும் எடுத்தீர்;கள். இபபொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை சரீரமற்றவர்களாக வேண்டும். அசரீரியான என்னிடம் நீங்கள் கூறுகின்றீர்கள்: “பாபா, நான் இப்பொழுது உங்களுக்கே சொந்தமானவன். நான் வீடு திரும்ப விரும்புகிறேன்.” உங்களோடு நீங்கள் அச்சரீரங்களையும் கொண்டு செல்லப் போவதில்லை. ஓ ஆத்மாக்களே, இப்பொழுது உங்கள் தந்தையாகிய என்னையும், உங்கள் இனிய வீட்டையும் நினைவுசெய்யுங்கள். மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து திரும்பும்பொழுது, “பாரதத்தில் எங்கள் இனிய வீட்டுக்குச் செல்வோம். நாம் பிறந்த இடத்துக்குத் திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். ஒருவர் மரணித்தால், அவர் பிறந்த இடத்துக்கு அவரது உடலை எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள்; பாரத மண்ணால் உருவாக்கப்பட்டதால் தமது மண்ணையும் (உடலையும்) அங்கேயே விட வேண்டும் என்று நம்புகிறார்கள். தந்தை கூறுகிறார்: எனது பிறப்பும் பாரதத்திலே; இடம்பெறுகின்றது. மக்கள் சிவஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எனக்குப் பல பெயர்களையும் வைத்திருக்கிறார்கள். ஹர ஹர மகாதேவா (அனைவரின் துன்பங்களையும் நீக்கும் மகாதேவனே) என்று கூறுகிறார்கள். அவரே அனைவரின் துன்பங்களையும் நீக்குபவர். நானே அத்தகையவராக இருக்கின்றேனே தவிர, சங்கரர் அல்ல. பிரம்மா சேவையில் பிரசன்னமாக இருக்கிறார். ஸ்தாபனையை மேற்கொள்பவரே, விஷ்ணு என்னும் இரட்டை ரூபத்தில் பராமரிப்பையும் மேற்கொள்வார். எனக்கு நிச்சயமாகப் பிரஜாபிதா பிரம்மா தேவைப்படுகிறார். நிச்சயமாக ஆதிதேவனுக்கு ஓர் ஆலயம் உள்ளது. ஆதிதேவன் யாருடைய குழந்தை? எவராவது எனக்குக் கூறமுடியுமா? தில்வாலா ஆலய தர்மகர்த்தாக்களுக்குக் கூட ஆதிதேவன் யாரென்றோ அல்லது அவரது தந்தை யாரென்றோ தெரியாது. பிரஜாபிதா பிரம்மாவே ஆதிதேவன். அவரது தந்தை சிவன். அந்த ஆலயம் ஜெகதாம்பாள், ஜெகத்பிதா ஆகியோருடைய ஞாபகார்த்தம். தந்தை இந்த ஆதிதேவன் பிரம்மாவின் இரதத்தில் அமர்ந்திருந்து ஞானத்தைக் கொடுத்தார். குழந்தைகள் அனைவரும் சிறு சந்நிதிகளில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஆலயங்கள் கட்டப்படுவதில்லை. பிரதானமானவர்கள் 108 மணிகொண்ட மாலையில் இருப்பதால், 108 சிறு சந்நிதி;கள் கட்டப்பட்டுள்ளன. 108 பேரே வழிபாடு செய்யப்படுகின்றார்கள். பிரதானமானவர் சிவபாபாவும் அவரையடுத்து, தம்பதியாக பிரம்மாவும் சரஸ்வதியும் இருக்கிறார்கள். சிவபாபாவே உச்சியிலுள்ள குஞ்சமாக இருக்கிறார். அவருக்கென்று சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் அவரவர் சொந்தச் சரீரங்கள் உள்ளன. சரீரதாரிகளைக் கொண்டதாகவே மணிமாலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. அனைவரும் மணிமாலையை வழிபடுகிறார்கள். அதனை வழிபாடு செய்து, முற்று முழுதாக மணிகள் அனைத்தையும் உருட்டிய பின்பு, நமசிவாய (சிவபாபாவுக்கு வந்தனங்கள்) என்று கூறி மணிமாலைக்குத் தலை வணங்குகிறார்கள். அதற்குக் காரணம், அவரே தூய்மையற்ற அனைவரையும் தூய்மையாக்கினார். அதனாலேயே அது வழிபாடு செய்யப்படுகிறது. அவர்கள் தங்கள் கரங்களில் மணிமாலையை வைத்து, இராம நாமத்தை ஓதுகிறார்கள். பரமாத்மா பரமதந்தையின் நாமம் எவருக்கும் தெரியாது. சிவபாபாவே பிரதானமானவர். அவரையடுத்து, பிரஜாபிதா பிரம்மா, சரஸ்வதி ஆகிய ஏனைய பிரதானமானவர்களும் இருக்கிறார்கள். அவர்களையடுத்து, தொடர்ந்தும் முயற்சி மேற்கொள்கின்ற பிரம்மகுமாரர்கள், குமாரிகளின் பெயர்களும் உள்ளன. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்கையில், இவற்றையெல்லாம் தொடர்ந்து காண்பீர்கள். இறுதி நேரத்தில், நீங்கள் இங்கே வந்து தங்கியிருப்பீர்கள். உறுதியான யோகிகளாக இருப்பவர்களால் மட்டுமே இங்கே தங்கியிருக்க முடியும். புலன் இன்பங்களில் திளைப்பவர்கள் சிறியதொரு சத்தத்தைக் கேட்டு, அங்கேயே மரணிப்பார்கள். சிலர் அறுவைச்சிகிச்சை நடைபெறுவதைப்; பார்த்துக் கொண்டிருந்தாலே மூர்ச்சையடைகிறார்;கள். பிரிவினை இடம்பெற்ற காலத்தில் பலர் மரணித்தார்கள். யுத்தம் போன்ற எதுவுமே இல்லாது தாங்கள் இராச்சியத்தைப் பெற்றுக்கொண்டதாக அவர்கள் பெருமைப்படுகிறார்கள். இருந்தபொழுதிலும், எத்தனையோ பேர் மரணித்து விட்;டார்;கள், கேட்கவே வேண்டாம்! மாயையும் பொய், சரீரமும் பொய், உலகமும் பொய். உண்மையான தந்தை இப்பொழுது இங்கிருந்து உங்களுக்கு உண்மையைக் கூறுகிறார். தந்தை கூறுகிறார்: எனக்கு நிச்சயமாக ஓர் இரதம் தேவை. நானே மூத்த மணமகன் என்பதால் எனக்கு மூத்த மணமகளே தேவை. சரஸ்வதியும் பிரம்மாவின் வாய்வழித்தோன்றலே ஆவார். அவர் பிரம்மாவின் துணைவி அல்ல. அவர் பிரம்மாவுக்கு மகளாவார். அவ்வாறாயின், அவர் ஜெகதாம்பாள் என்று அழைக்கப்படுவது ஏன்? இவர் ஓர் ஆணாக இருப்பதால், தாய்மாரைக் கவனித்துக் கொள்வதற்காக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரம்மாவின் வாய்வழித்தோன்றலாகிய சரஸ்வதி பிரம்மாவுக்கு மகளாகுகிறார். மம்மா இளம் பெண். பிரம்மாவோ வயது முதிர்ந்தவர். பிரம்மாவின் மனைவி என்ற நிலை இளம் பெண்ணாகிய சரஸ்வதிக்குப் பொருத்தமாக இல்லை. அவரை அரைப் பங்காளி (துணைவி) என்று அழைக்க முடியாது. நீங்கள் இப்பொழுது இதைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். எனவே, தந்தை கூறுகிறார்: நான் இந்தப் பிரம்மாவின் சரீரத்தைக் கடனாகப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பலரும் கடன் எடுக்கிறார்கள். பிராமணப் பூசகருக்கு உணவளிக்கும்பொழுது, அந்தப் பிராமணரின் சரீரத்தின் ஆதாரத்தைப் பெற்று, அதற்குள்ளே வந்து பிரவேசிக்கும் ஆத்மாவையே வரவழைக்கிறார். அந்த ஆத்மா தன் சரீரத்தை விட்டு நீங்கி இங்கே வருகிறாரா? இல்லை. காட்சிகள் என்ற நடைமுறை ஆரம்பத்திலிருந்தே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே ஆத்மாக்களும் அழைக்கப்படுகிறார்கள். அந்த ஆத்மா தன் சரீரத்தை விட்டு நீங்கி இங்கே வருவார் என்பதல்ல. இல்லை; அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தைக்கு இந்த இரதமே நந்தியாக, புனித எருதுவாக விளங்குகிறது. இல்லாவிட்டால் ஏன் சிவாலயத்தில் எருதொன்றைக் காட்டியிருப்பார்கள்? சூட்சுமலோகத்தில் சங்கரருடன் எப்படி எருது இருக்க முடியும்? அங்கே, பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மட்டுமே இருக்கிறார்கள்; அவர்கள் தம்பதி வடிவத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் இல்லற மார்க்கத்தையே காட்டுகிறார்கள். எங்கிருந்து அங்கே விலங்குகள் போன்றவை வந்து சேர்ந்தன? மக்களுடைய புத்தி முற்றாகவே செயற்படுவதில்லை! தமது மனதில் தோன்றும் நேர விரயத்தையும் சக்தி விரயத்தையும் ஏற்படுத்தும் விடயங்களை அவர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தூய தேவர்களாக இருந்தீர்கள் என்றும், மறுபிறவிகள் எடுத்ததால் தூய்மையற்ற பூஜிப்பவர்களாக ஆகினீர்கள் என்றும் கூறுகிறீர்கள். நீங்களே பூஜைக்குரியவர்களாக இருந்து, நீங்களே பூஜிப்பவர்களாகவும் ஆகினீர்கள். கடவுள் பூஜைக்குரியவராகவோ அல்லது பூஜிப்பவராகவோ ஆகுவதில்லை. அவர் 84 பிறவிகள் எடுக்க வேண்டியதில்லை. மாயை மக்களின் புத்திகளை முழுமையாகக் கல்லாக்கி விடுகிறாள். “ஹம்ஸோ” என்பதன் அர்த்தம் “ஆத்மாவாகிய நானே பரமாத்மா” என்பதல்ல. “இல்லை, பிராமணனாகிய நான் பின்னர் தேவனாகுவேன்” என்பதே அதன் அர்த்தமாகும். நீ;ங்கள் தொடர்ந்தும் மறுபிறவிகள் எடுப்பீர்கள். இது மிக நல்ல விளக்கமாகும். தந்தை கூறுகிறார்: நான் வந்து பிரவேசித்திருப்பவர், பல குருமார்களைப் பின்பற்றி, பல சமயநூல்களையும் கற்று, முழுமையாக 84 பிறவிகளையும் எடுத்திருக்கிறார். அவருக்கு அது தெரிந்திருக்கவில்லை. நானே இதை உங்களுக்கும் அவருக்கும் கூறுகிறேன். பிரம்மாவுக்கும் நான் இவையனைத்தையும் கூறுகிறேன். எப்பொழுதும் நான் இரதத்தைச் செலுத்திக்கொண்டிருக்க முடியாது. நான் அனைத்தையும் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய பிராமணர்களுக்குக் கூறுகிறேன். எனக்கு இரதமொன்று தேவை. குழந்தைகளாகிய நீங்கள் என்னை நினைவுசெய்கிறீர்கள். நான் வருகிறேன். நான் சேவை செய்ய வேண்டும். எனவே, பாரதம் ஸ்ரீ ஸ்ரீ சிவனுடைய வழிகாட்டல்களால் தூய்மையாகுகிறது. சுவர்க்கவாசிகளுக்கு ஸ்ரீ ஸ்ரீ என்ற பட்டத்தைக் கொடுப்பது தவறாகும். ஆரம்பத்தில் அவர்களுக்கு ஸ்ரீ என்ற பெயர் இருக்கவில்லை. இப்பொழுதோ அவர்கள், அனைவரையும் ‘ஸ்ரீ’, அதாவது, மேன்மையானவர்கள் ஆக்கிவிட்டார்கள். சிவபாபாவே ஸ்ரீ ஸ்ரீ ஆவார். பின்னர் சூட்சுமலோகவாசிகளாகிய பிரம்மா, விஷ்ணு, சங்கரரும், அவர்களையடுத்து ஸ்ரீ இலக்ஷ்மி, நாராயணரும் உள்ளனர். இந்த விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த ஞானம் மிகவும் களிப்பூட்டுவதாகும். இருந்தபொழுதிலும், கற்கும்போதே சிலர் மறைந்து விடுகிறார்கள். மாயை அவர்களை பாபாவின் கரத்தை விட்டு விலகச் செய்கின்றாள். கடைகளும் வரிசைக்கிரமமாகவே உள்ளன. பெரிய கடையொன்றிலே நிச்சயமாகப் பல விற்பனையாளர்கள் இருப்பார்கள். சிறிய கடைகளில் அதை விடக் குறைந்தளவு விற்பனையாளர்களே இருப்பார்கள். எனவே, மகாராத்திகள் இருக்கும் பெரிய கடைகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும். தாய்மார்களுக்கு அதிக நேரம் உள்ளது, ஆண்களுக்கோ வியாபாரம் போன்றவற்றைச் செய்ய வேண்டியுள்ளதால், அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். தாய்மார் ஓய்வாக இருக்கிறார்கள். அவர்கள் சமையலை முடித்துவிட்டால், அவ்வளவுதான். பின்னர், ஆண்கள் உங்களுக்குப் பந்தனங்களை உருவாக்குகிறார்கள். தாய்மார்கள் பிரம்மகுமாரிகளிடம் செல்வதை அவர்கள் தடுக்கிறார்கள். ஏனெனில், தாய்மார்கள் அவர்களிடம் சென்றால் தங்கள் விகாரம் நின்றுபோய் விடும் என்று அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுமளவுக்கு சிவபாபா மிகவும் நுணுக்கமானவர். தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவான வழிமுறையொன்றைக் காட்டுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழியும், நீங்கள் என்னை வந்தடைவீர்கள். என்னை நீங்கள் நினைவுசெய்யாவிட்டால், உங்கள் பாவங்கள் அழியாது. நானும் உங்களை என்னுடன் திரும்ப அழைத்துச் செல்ல மாட்டேன். பின்னர், நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் மோர் அருந்தி வந்தீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் வெண்ணெய் முழுவதையும் உண்டு விட்டீர்கள். எனவே, கடைசியில் வெறும் மோர் தான் எஞ்சியுள்ளது. முதலில் உங்களுக்கு நல்ல மோர் கிடைக்கிறது. பின்பு அது வெறும் நீர் போல் இருக்கிறது. சத்திய, திரேதா யுகங்களில் நெய்யாறுகளும் பாலாறுகளும் ஓடுகின்றன. இப்பொழுது நெய் மிகவும் விலையுயர்ந்ததாகிவிட்டது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் இராஜரிஷியாகி, தபஸ்யா செய்யுங்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்த மாலையில் இடம்பெறுவதற்கு, தந்தையைப் போல் சேவை செய்யுங்கள். ஓர் உறுதியான யோகி ஆகுங்கள்.
2. ஞானம் மிகவும் களிப்பூட்டுவது. எனவே, களிப்பூட்டும் வகையில் கற்றிடுங்கள். குழப்பம் அடையாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சந்தோஷப் பாக்கியத்தைக் கொண்டிருந்து, ஆசீர்வாதங்கள் எனும் தெய்வீகப் பராமரிப்பின் மூலம் ஓர் இலகுவான, மேன்மையான வாழ்வை அனுபவம் செய்வீர்களாக.
சங்கமயுகத்தில் பாப்தாதா மூன்று உறவுமுறைகளால் குழந்தைகள் அனைவரையும் பராமரிக்கின்றார். தந்தை எனும் உறவுமுறையில் அவர் ஆஸ்தியின் விழிப்புணர்வு மூலம் உங்களைப் பராமரிக்கின்றார். ஆசிரியர் என்ற ரீதியில் அவர் உங்களைக் கல்வி மூலம் பராமரிக்கின்றார், சற்குரு என்ற ரீதியில் அவர் உங்களை ஆசீர்வாதங்களின் அனுபவம் மூலம் பராமரிக்கின்றார். அதனை நீங்கள் அனைவரையும் ஒரேநேரத்தில் பெறுகின்றீர்கள். ஆகவே, தொடர்ந்தும் இத் தெய்வீகப் பராமரிப்பின் மூலம் ஓர் இலகுவான, மேன்மையான வாழ்வை அனுபவம் செய்கின்றீர்கள். “முயற்சி”, “சிரமம்” வார்த்தைகள் முடிவடையட்டும், அப்பொழுது நீங்கள் சந்தோஷப் பாக்கியத்தைக் கொண்டவர்கள் என்று கூறப்படுவீர்கள்.
சுலோகம்:
சகல ஆத்மாக்கள் மீதும் தந்தை மீதும் அன்பானவராக இருப்பதே, நம்பிக்கையும் நல்லாசிகளும் எனும் உண்மையான உணர்வுகளைக் கொண்டிருப்பதாகும்.