27/10/18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பொறுமையாக இருங்கள். இப்பொழுது உங்கள் துன்ப நாட்கள் முடிவடைந்து விட்டன. உங்கள் சந்தோஷ நாட்கள் வரவுள்ளன. தங்கள் புத்தியில் நம்பிக்கையுள்ள குழந்தைகளே பொறுமையாக இருக்கின்றார்கள்.

கேள்வி:
எச் சந்தர்ப்பத்திலும், சோர்வடைவதிலிருந்து உங்களைத் தடுப்பதற்கான இலகுவான வழி என்ன?

பதில்:
எப்பொழுதும் உதாரணமாகவுள்ள (மாதிரி) பிரம்ம பாபாவை உங்கள் முன்னிலையில் வைத்திருங்கள். அவர் பல குழந்தைகளுக்குத் தந்தையாவார். சிலர் தகுதியானவர்கள். சிலர் தகுதியற்றவர்கள், சிலர் சேவை செய்கின்றார்கள், சிலர் அவச்சேவை செய்கின்றார்கள். இருப்பினும் பாபா என்றுமே சோர்வடைவதும் இல்லை, பயப்படுவதும் இல்லை. எனவே குழந்தைகளாகிய நீங்கள் ஏன் சோர்வடைகின்றீர்கள்? எச்சந்தர்ப்பத்திலும் நீங்கள் சோர்வடையக்கூடாது.

பாடல்:
ஓ மனமே, பொறுமையாக இரு. உனது சந்தோஷ நாட்கள் வரவுள்ளன.

ஓம் சாந்தி.
‘ஓ மனமே பொறுமையாக இரு’ என்று மனிதர்களுக்குக் கூறப்படுவதில்லை. ஆத்மாக்களுக்கே இவ்வாறு கூறப்படுகின்றது, ஏனெனில், மனமும் புத்தியும் ஆத்மாவிலேயே உள்ளன. பரமாத்மாவாகிய பரமதந்தையைத் தவிர, வேறு எவராலும் ஆத்மாக்களிடம் பொறுமையாக இருங்கள் என்று கூறமுடியாது, ஏனெனில், பொறுமையற்றவர்களுக்கே பொறுமை கொடுக்கப்படுகின்றது. கடவுள் சர்வவியாபகராயின், அவரைப் பொறுமையற்றவர் என்று அழைக்க முடியாது. இந் நேரத்தில், மக்கள் அனைவருமே பொறுமை அற்றவர்களாகவும் சந்தோஷம் அற்றவர்களாகவுமே இருக்கின்றார்கள். தந்தையே உங்களுக்குப் பொறுமையையும், சந்தோஷத்தையும் கொடுப்பதற்கு வந்துள்ளார். அவர் கூறுகின்றார்: இப்பொழுது பொறுமையாக இருங்கள். தந்தையின் வார்த்தைகள் உங்களுக்கு மாத்திரமானவையல்ல, ஆனால், அவை முழு உலகத்திற்கானதுமாகும். நாளடைவில் முழு உலகமும் கேள்விப்பட ஆரம்பிக்கும். கேள்விப்படுபவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். தந்தை மாத்திரமே சற்கதியை அருள்பவரும், துன்பத்தை அகற்றுபவரும் ஆவார். எவ்வாறாயினும், இது துன்ப உலகமாகும். முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறுவதற்கு இதுவே நேரமாகும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அதாவது, நீங்கள் இத் தூய்மையற்ற, கலியுக உலகிலிருந்து விடுதலை அடைகின்றீர்கள். இது உங்கள் புத்தியில் உள்ளது. ஆனாலும் அது உங்கள் முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாகவே உள்ளது. நாங்கள் இப்பொழுது துன்ப உலகிலிருந்து விடுதலை அடைந்து, சந்தோஷ உலகிற்குச் செல்கின்றோம் என்ற உத்தரவாதம் அனைவருக்கும் உள்ளது என்றில்லை. உங்கள் சந்தோஷ நாட்கள் இப்பொழுது வரவுள்ளன என்ற உறுதியான நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். ஆயினும், அவ்வாறு ஆகுவதற்கு நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். இதில் ஆசீர்வாதங்கள், கருணை போன்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை இங்கு அமர்ந்திருந்து சுய இராச்சியத்திற்காகவே உங்களுக்கு இலகு யோகத்தைக் கற்பிக்கின்றார். இக் கல்வி, ஞானம் என்றும் அழைக்கப்படுகின்றது. அவர் உங்களுக்கு மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். என்றுமே உங்கள் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்க வேண்டியதே முதலாவதும், முக்கியமானமானதுமாகும், அப்பொழுது அது என்றுமே தளம்பல் அடைய முடியாது. ஒரு பாடல் உள்ளது: ‘நான் பிரம்ம தத்துவத்திற்கு அப்பால் வாழ்பவரைச் சந்திக்க விரும்புகின்றேன். இப்பொழுது அவரைக் கண்டு கொண்டுவிட்டதால் இதனைவிட மேலும் வேறு என்ன எனக்கு வேண்டும்? தந்தையிடமிருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்குள்ளது. எனவே, ஆரம்பத்திலிருந்தே, நீங்கள் என்றும் நிலைத்திருக்கக்கூடிய பொறுமையைப் பெறுகின்றீர்கள். இது அழிவற்ற பொறுமையாகும். அனைத்திலும் அதிமேன்மையான இராச்சியங்களை நீங்கள் ஸ்தாபிக்கின்றீர்கள் என்பது நிச்சயமேயாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் மேன்மையான இராச்சிய பாக்கியத்தை எவ்விதமான சண்டை, சச்சரவுகளும் இன்றிப் பெறுகின்றீர்கள். ஒரு வீட்டில் பத்து அல்லது பன்னிரண்டு குழந்தைகள் இருந்தாலும், சோர்வடைவதற்கான தேவை என்ன? பாபாவைப் பாருங்கள், அவருக்கு ஆயிரம், நூறாயிரம் குழந்தைகள் உள்ளனர். சில குழந்தைகள் குழப்பத்தையும் விளைவிக்கின்றார்கள். சிலர் தகுதியுள்ளவர்களாகவும் சிலர் தகுதியற்றவர்களாகவும் உள்ளார்கள். சிலர் சேவை செய்கின்றார்கள், ஆனால் சிலரோ அவச்சேவை செய்கின்றார்கள். அப்பொழுதெல்லாம் பாபா பயப்படுகின்றாரா? அது போன்றே குழந்தைகளாகிய நீங்களும் பயப்படக்கூடாது. நீங்கள் உங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழ வேண்டும். மறுபுறத்தில் கர்மத்தைத் துறந்த ஹத்தயோகம் உள்ளது. உங்களுடையதோ எல்லையற்ற துறவறமாகும். இது இராஜயோகமாகும். நீங்கள் வீட்டில், உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டே, தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது மிகவும் இலகுவாகும். இப்பொழுது உங்கள் சந்தோஷ தாமத்தின் விருட்சங்களை உங்களால் காணக்கூடியதாக உள்ளது. உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தாலும், கிடைக்காது விட்டாலும், கண்ணிற்குப் புலப்படுகின்றவற்றையும், புலப்படாதவற்றையும் உங்கள் புத்தியால் நீங்கள் இனங்காணுகின்றீர்கள். நீங்கள் உங்கள் சொந்த எதிர்கால இராச்சியத்திற்கான முயற்சியைச் செய்கின்றீர்கள். உங்கள் இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. இலக்ஷ்மி நாராயணனின் படங்களை உங்களால் காணக்கூடியதாக உள்ளது. காட்சி கிடைத்தால் மாத்திரமே இவற்றை நம்புவேன் என்றிருக்கக்கூடாது. இது உங்கள் புத்தியால் புரிந்து கொள்ளப்பட வேண்டியவையாகும். அப்படத்தை நீங்கள் உங்கள் கண்களால் பார்க்க முடியும். பின்னர்; நீங்கள் பார்த்த அதே விடயங்களையே உங்கள் கண்களால் பார்ப்பீர்கள். இதுவே இராஜயோகமாகும். உங்கள் புத்தியும் கூறுகின்றது: படங்கள் இங்கிருக்கின்றன எனவே காட்சிகள் அருள்வதற்கான தேவை என்ன? ஸ்ரீகிருஷ்ணரே சத்திய யுகத்தின் அதிபதி ஆவார், அப்படியல்லவா? சிவன் பரந்தாம வாசியாவார். நீங்கள் இலக்ஷ்மியாகவோ அல்லது நாராயணனாகவோ ஆகலாம். இதுவே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். ஆகவே, உங்களைக் கண்ணாடியில் பார்த்து, அந்தத் தெய்வீகக் குணங்களை நீங்கள் எந்தளவிற்குக் கொண்டிருக்கின்றீர்கள் என்று பாருங்கள். தந்தை உங்களுக்கு அதிகளவு பொறுமையைக் கொடுக்கின்றார். இப்பொழுது நீங்கள் கற்க வேண்டும். இராச்சியத்திற்கு ஞானம் தேவைப்படுகிறது, தந்தை உங்களுக்கு அதனைக் கொடுக்கிறார். இந்தியன் சிவில் சேவைக்காகக் கற்பவர்கள் தாம் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகுவோம் என்ற பெரும் போதையைக் கொண்டிருப்பார்கள். உண்மையில், மக்கள் வியாபாரம் செய்தும் கோடீஸ்வரர்கள் ஆகுகின்றார்கள். இப்பொழுது பாபா உங்களுக்கு இந்தப் பண்டமாற்று வியாபாரத்தைக் கற்பிக்கின்றார். நீங்கள் தந்தைக்குச் சிப்பிகளைக் கொடுக்கிறீர்கள், பிரதிபலனாக, பாபா உங்களை 21 பிறவிகளுக்குச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார். இது ஒரு வியாபாரமும், கல்வியும் ஆகும். நீங்கள் வியாபாரத்தில் மாத்திரம் அக்கறை கொள்ளவில்லை. உங்களுக்கு உலக வரலாற்றினதும் புவியியலினது ஞானமும் இருக்க வேண்டும். நீங்கள் சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றுகின்றவராகவும் இருக்க வேண்டும். நீங்கள் கற்பதற்கு ஏற்பவே உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிரஜைகள், பணிப்பெண்கள், வேலைக்காரர்கள் ஆகியோரும் உலக அதிபதிகள் ஆகலாம். அனைவருமே பாரதம் தமது நாடு என்று கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அரசர்களுக்கும் பிரஜைகளுக்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: இயன்றளவிற்கு அதிமேன்மையான அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். தாயும் தந்தையும் செய்வதைப் போன்ற முயற்சியைச் செய்யுங்கள். அனைவருமே சிம்மாசனத்தில் அமர்வார்கள் என்றில்லை, ஆயினும், நீங்கள் ஓட்டப் போட்டியில் விரைந்தோடிச் செல்வதற்குத் தூண்டப்பட்டிருக்க வேண்டும் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. முயற்சி செய்வதற்கு ஏற்ப வரிசைக்கிரமமாக இராச்சியம் பெறப்படுகின்றது. ஒவ்வொருவரும் தாம் முன்னைய கல்பத்திற் செய்த அதேயளவு முயற்சியைச் செய்வதையே, பாபா ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்க்கின்றார். ஒருவரது முயற்சி சற்றுத் தளர்ந்திருப்பதைக் காணும் போது, பாபா, அதனைத் தீவிரமாக்குவதற்குத் தூண்டுகின்றார்: உங்கள் முயற்சி மிகவும் தளர்வடைந்துள்ளது. உங்களுக்கு இன்னமும் பற்றுள்ளது. உங்களை நம்பிக்கைப் பொறுப்பாளராக ஆக்கிய பின்னரும் நீங்கள் ஏன் பற்று கொண்டிருக்கின்றீர்கள்? நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். சிலர் வினவுகின்றார்கள்: பாபா, நான் ஒரு வீட்டைக் கட்டலாமா? ஆம், கட்டுங்கள்! நீங்கள் சௌகரியமாக வாழுலாம். இந்த அழுக்கான உலகம் இன்னமும் சொற்ப காலத்திற்கே இருக்கும். நீங்கள் சௌகரியமாக வாழலாம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கலாம். தந்தை உங்களிடம் இருந்து பணம் எதனையும் பெற்றுக் கொள்வதில்லை. அவரே அருள்பவர். சிவபாபா இந்த நேரத்தில் இக்கட்டடங்கள் போன்றவற்றைக் குழந்தைகள் வாழ்வதற்காகவே கட்டியுள்ளார். அவர் இந்தச் சரீரத்தினுள் வாழ்வதற்காக அதனைக் கருவியாக்கிக் கொண்டுள்ளார். எவ்வாறாயினும் மனிதர்கள் வாழ்வதற்கு நிச்சயமாகக் கட்டடங்கள் தேவையாகும். எனவே, பாபா குழந்தைகளாகிய உங்களுக்காகவே அவற்றைக் கட்டியுள்ளார். பாபாவும் இக்கட்டடத்திலேயே அமர்ந்துள்ளார். ஒருவர் ஆத்மாக்களின் தந்தையும், மற்றவர் சரீரத்திற்கான தந்தை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவர் உங்களைத் தத்தெடுத்துள்ளார்: நீங்கள் எனது குழந்தைகள். நீங்கள் ‘மம்மாவும் பாபாவும்’ என்று கூறுகின்றீர்கள். நீங்கள் அவர்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். பிரஜாபிதா பிரம்மாவிற்குப் பல குழந்தைகள் உள்ளனர், எனவே அவர்கள் நிச்சயமாகத் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளே ஆவார்கள். அவர் குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கின்றார். சரஸ்வதியும் அவரின் புத்திரியாவார். இவை மிகவும் மறைமுகமான விடயங்கள் என்பதால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீங்கள் கீதை, பாகவதம் போன்றவற்றைக் கற்றுள்ளீர்கள். இந்த பாபாவும் அவற்றைக் கற்றுள்ளார். எவ்வாறாயினும், இப்பொழுது நாடகத்திற்கு ஏற்ப, நீங்கள் ஸ்ரீமத்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். எது கூறப்பட்டிருந்தாலும் அது நாடகத்திற்கு ஏற்பவாகும். அதில் நிச்சயமாக நன்மை உள்ளது. இழப்பு ஏற்பட்டிருந்தாலும், அதிலும் நன்மை உள்ளது. அனைத்திலும் நன்மை உள்ளது. சிவபாபா உபகாரியாவார். அவரது வழிகாட்டல்கள் சிறந்தவையாகும். அதில் உங்களுக்குச் சந்தேகம் எழும் பொழுது, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, நீங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதால், நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள். அவ்வாறாயின், சிவபாபாவினால் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு அடியிலும் நீங்கள் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பரம வழிகாட்டி இங்கே அமர்ந்திருக்கின்றார். பல குழந்தைகள் யோகத்தில் நிலைத்திருக்காததால் இதனை மறந்து விடுகின்றார்கள். யோகம் அல்லது நினைவு செய்தல் என்பது யாத்திரை என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் நினைவு செய்யாதிருந்தால், நீங்கள் ஓய்வெடுக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் யாத்திரையை மேற்கொள்ளும் போது ஓய்வெடுக்கின்றார்கள். நீங்களும் ஓய்வெடுத்து, நினைவு செய்யாதிருந்தால் உங்கள் பாவங்கள் அழிய மாட்டாது. நீங்கள் முன்னேறிச் செல்லவும் மாட்டீர்கள். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காதிருந்தால், உங்களால் நெருங்கி வரவும் முடியாது. ஆத்மா களைப்படைந்து, தந்தையை மறந்து விடுகின்றார்;. தந்தை கூறுகின்றார்: நீங்கள் யாத்திரையில் முன்னேறிச் செல்கின்றீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் இரவில் ஓய்வெடுக்கின்றீர்கள். நீங்கள் இரவில் உறங்கும் போது, நீங்கள் யாத்திரையில் இருக்கின்றீர்கள் என்றில்லை. இல்லை, அது ஓய்வாகும். நீங்கள் விழித்திருக்கும் போதே நீங்கள் யாத்திரையில் செல்கின்றீர்கள். நீங்கள் உறங்கும் போது பாவங்கள் அழிவதில்லை, ஆனால், அவ்வேளையில் எப்பாவங்களும் செய்யப்படுவதுமில்லை என்பது உண்மையே. எனவே தந்தை அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இருப்பினும் ஒருவர் அவற்றைப் பயிற்சியில் இட வேண்டும். அவர் உங்களுக்குத் தொடர்ந்தும் பல கருத்துக்களைக் கூறுகின்றார். நீங்கள் சட்ட நிபுணராகுவதற்கான கல்வியைக் கற்கும் போது, சட்டநிபுணர் பற்றிய கருத்து உங்கள் புத்தியில் பிரவேசிக்கின்றது. வைத்தியர் அல்லது பொறியியலாளர் ஆகுவதற்கான கல்வியைக் கற்கும் போது, நீங்கள் ஒரு வைத்தியராகவோ அல்லது ஒரு பொறியியலாளராகவோ ஆகுகின்றீர்கள். யார் எப் பாடநெறியைக் கற்கின்றார்களோ, அதற்குரியவர் ஆகுகின்றார்கள். இங்கே, ஒரேயொரு பாடநெறியே உள்ளது. தொடர்ந்தும் முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் தலையில் பல பிறவிகளின் பெரும் பாவச் சுமை உள்ளது. அப் பாவங்கள் அழிவதற்கு ஒரேயொரு வழியே உள்ளது. நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தவறினால் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். மாலை உருவாக்கப்பட்டுள்ளது. நவரத்தினங்களின் ஞாபகார்த்தமும் உள்ளது. அது எங்கிருந்து வந்தது என்பது மக்களுக்குத் தெரியாது. எட்டு இரத்தினங்களும் உருத்திர மாலையில் உள்ளவர்களே. ஆகையால் நீங்கள் நன்றாக முயற்சி செய்ய வேண்டும். மாணவர்கள் பாடசாலையில் நன்றாகக் கற்கும் போது, அவர்களின் பதிவேடுகளின் மூலம் பெற்றோர் அவர்களைப் பற்றி அறிந்து கொள்கின்றார்கள். இங்கோ தந்தையே ஆசிரியரும் என்பதால் அவருக்குத் தெரியும். நீங்கள் தந்தையுடன் கற்கின்றீர்கள். அவருக்கு உங்கள் பதிவேட்டையும் தெரியும். உங்கள் பதிவேட்டிலிருந்து நீங்கள் அந்தத் தெய்வீகக் குணங்களை எந்தளவிற்குக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம். எந்தளவிற்கு நான் பிறரையும் என்னைப் போன்று ஆக்குகின்றேன்? உங்களைப் பார்க்கின்ற எவரும் தமது சரீரத்தை மறந்துவிடும் அளவிற்கு உங்களிடம் போதியளவு சக்தி உள்ளதா? ‘குழந்தை தைரியத்தைக் கொண்டிருக்கும் போது, தந்தையின் உதவி கிடைக்கின்றது’ என்று கூறப்படுகின்றது. தந்தை அதிகளவு உதவி செய்கின்றார். நீங்களும் யோகம் என்ற உதவியைச் செய்கின்றீர்கள். தூய்மை என்ற உதவியே தந்தைக்குத் தேவையாகும். தூய்மையற்ற முழு உலகமும் யோகசக்தியினால் தூய்மையாக்கப்பட வேண்டும். யோகத்தினால் அதிகளவு உதவி செய்யும் போது அந்தளவிற்கு பாபாவும் பூரிப்படைகின்றார். இந்த உதவி தந்தைக்கானதா அல்லது உங்களுக்கானதா? நீங்கள் கற்பதற்கு ஏற்ப, உயர்ந்;ததோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடியும். உங்கள் நினைவு செய்தல் அதிகரிப்பதற்கு ஏற்ப, தூய்மையினால் நீங்கள் எனக்குச் செய்கின்ற உதவியும் அதிகரிக்கின்றது. நான் தூய்மையான உலகிற்காக, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கவே வந்துள்ளேன். தூய்மையற்ற நீங்கள் இங்கேயே தூய்மையாகுகின்றீர்கள். அது அசரீரியான உலகமாகும். ‘ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்!’ என்றொரு பாடல் உண்டு. தூய உலகம் என்றால் என்னவென்பது அவர்களுக்குத் தெரியாது. சீதை இராவணனின் சிறையிலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டாள். ஆகையால், அதன்பின்னர் சந்தோஷம் இருக்க வேண்டும். ஏனையோர் அதிகளவு அமைதியையும் சிறிதளவு சந்தோஷத்தையும் பெறுவார்கள். நீங்கள் அதிகளவு சந்தோஷத்தையும் அதிகளவு துன்பத்தையும் பெறுகின்றீர்கள். இறுதியிலே வருகின்ற ஆத்மாக்கள் தமது சிறிய பாகத்தை நடித்த பின்னர் சென்று விடுவார்கள். அவர்கள் ஒன்று அல்லது இரண்டு பிறவிகளையே எடுப்பார்கள். அவர்கள் குறுகிய காலத்திற்கு வந்த பின்னர் சென்று விடுகின்றார்கள். உங்களைப் பொறுத்தவரை, இது 84 பிறவிகளுக்கான விடயமாகும். அவர்களைப் பொறுத்தவரை ஓரிரு பிறவிகளுக்கானதாகும். உங்கள் 84 பிறவிகளை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சக்கரத்தை அறிந்திருப்பதன் மூலம் நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்கின்ற அரசர்கள் ஆகுகின்றீர்கள். அவர்களால் அவ்வாறு ஆக முடியாது. இந்த ஞானம் அவர்களுக்கானதல்ல. முன்னைய கல்பத்திலும் இந்த ஞானத்தைப் பெற்ற உங்களுக்கானதே இந்த ஞானமாகும். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இதுவே முயற்சி செய்வதற்கான நேரமாகும். முயற்சி செய்தல் என்பதற்கான கேள்வி உங்களுக்கே பொருத்தமாகும். அதிகளவு சந்தோஷத்தைக் கொடுப்பதே தேவ தர்மமாகும். அந்தளவு சந்தோஷத்தை வேறு எவராலும் கொடுக்க முடியாது. இந்த அநாதியான நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். அனைவராலுமே கதாநாயக, கதாநாயகிப் பாகத்தை நடிக்க முடியாது. பல வகையான மக்களும் உள்ளார்கள். நல்லவர், தீயவர் என்ற வகையினரும் உள்ளனர். தேவர்களே அனைவரிலும் அதி மேன்மையானவர்கள். அவர்களை மாத்திரமே மேன்மையானவர்கள் என்று அழைக்க முடியும். அவர்கள் சத்தியயுகத்தில் மாத்திரமே இருக்கின்றார்கள். அவர்களுடைய படங்களும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் எவ்வாறு அவ்வாறாகினார்கள் என்பது எவருக்குமே தெரியாது. கிருஷ்ணர் எங்கும் உள்ளார் என்று சிலர் கூறுகின்றார்கள், கடவுளும் எங்கும் உள்ளார் என்றும் கூறுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இவை அனைத்தையும் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் விளங்கப்படுத்துவதற்கு இந்த இலக்கும் இலட்சியமும் மிகவும் சிறந்ததாகும். நீங்கள் நிச்சயமாக அனைவரையும் அழைக்க வேண்டும். செய்தித்தாளில் அனைவரையுமே அழைக்க முடியும். இன்னமும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. இப்பொழுதும், சில குழந்தைகள் யாத்திரை செல்வதில் களைப்படைவதால், அமர்ந்து விடுகின்றார்கள். அவர்களால் மாயையின் புயலைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. யுத்தகளத்தில் மாயை அவர்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்வாள். அவள் சக்திமிக்கவளாகி, சக்திமிக்கவர்களோடு யுத்தம் புரிவாள். புயல் மிகவும் கடுமையாக வீசும். அப்பொழுது அவர்கள் கூறுவார்கள்: நான் ஞானத்திற்கு வந்த நாள் முதல், எனக்குப் பல தடைகள் உள்ளன. இப்பொழுது வியாபாரத்திலும் நட்டம் உள்ளது. பாபா கூறுகின்றார்: நீங்கள் ஞானத்திற்கு வந்ததாலேயே தடைகள் உள்ளன என நினைக்க வேண்டாம். இது உலகில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. இதனைக் கண்டு நீங்கள் பயப்படக்கூடாது. சிலவேளைகளில் ஒரு வகையான சகுனமும், இன்னொரு வேளையில் வேறு வகையான சகுனங்களும் காணப்படுகின்றன. சிலர் முன்னேறும் போது மூர்ச்சை அடைந்து விடுகின்றார்கள். ராகுவின் சகுனம் அதிகளவு பலத்துடன் வருகின்றது. மாயை உங்களை உண்டு விடுவதால், நீங்கள் மிகவும் அவலட்சணம் ஆகுகின்றீர்கள். மாயை உங்களை அறைந்து உங்கள் முகத்தை முற்றாக அழுக்காக்கி விடுகின்றாள். மாயை வெற்றியும் ஈட்டுகின்றாள். குழந்தைகள் வெற்றி ஈட்டினால், இராச்சியம் மிகவும் விரைவில் ஸ்தாபிக்கப்படும். நீங்கள் மாஸ்டரை (ஆசிரியரை) மறந்து விடும் போதே, மாயை உங்களை அறைகின்றாள். மணவாட்டிகள் ஆன்மீக மணவாளனை மறந்து விடுகின்றார்கள். இதுவும் ஓர் அற்புதமாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. யோக சக்தியின் மூலம் தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குவதற்குத் தந்தையின் உதவியாளர் ஆகுங்கள். நினைவு யாத்திரையின்போது ஓய்வெடுக்காதீர்கள். உங்கள் முன்னிலையில் உள்ளவரும் தனது சரீரத்தை மறந்துவிடும் அளவிற்கு உங்கள் நினைவு இருக்கட்டும்.

2. என்றுமே ஸ்ரீமத்தில் சந்தேகப்பட்டு, உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆலோசனையைப் பெறுங்கள். அதில் உங்களுக்கு நன்மை இருக்கும் என்று கருதி, அதனைப் பின்பற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
மாஸ்டர் படைப்பவராகி உங்கள் சூட்சும சக்திகளை ஸ்தாபனைக்கான பணியில் பயன்படுத்துவீர்களாக.

உங்கள் படைப்பு விஞ்ஞானத்தின் விரிவாக்கத்தை அதன் சாராம்சத்திற்குள் அமிழ்த்துகிறது. அவர்கள் அழிவுக்கான மிக மெருகூட்டப்பட்ட சக்திமிக்க கருவிகளைப் உருவாக்குகின்றார்கள். அதுபோலவே நீங்களும் மாஸ்டர் படைப்பவராகி உங்கள் சூட்சும சக்தியை ஸ்தாபனைப் பணிக்காகப் பயன்படுத்துங்கள். மேன்மையான எண்ணங்களின் சக்தி, தூய மனோபாவத்தின் சக்தி, அன்பு, ஒத்துழைப்பிற்கான பார்வை போன்ற மிக மேன்மையான சக்தி உங்களிடம் உள்ளது. இந்த சூட்சும சக்திகளால் உங்கள் குலத்தின் நம்பிக்கை ஒளியை ஏற்றி ஆத்மாக்கள் சரியான இலக்கை அடையச் செய்யுங்கள்.

சுலோகம்:
சுத்தமும் இனிமையும் எங்கு உள்ளதோ அங்கு சேவையில் வெற்றிகிட்டும்.