10.11.2018        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சுத்தமும் நேர்மையும் உங்கள் இதயத்தில் இருந்தால் மாத்திரமே, நீங்கள் பேசுகின்ற உண்மையான விடயங்களின் அம்பானது இலக்கைத் தாக்கும். நீங்கள் உண்மையான தந்தையின் சகவாசத்தைப் பெற்றுள்ளீர்கள். எனவே, நேர்மையானவராகவும் உண்மையானவராகவும் இருங்கள்.

கேள்வி:
நீங்கள் மாணவர்கள் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பிரதான விடயம் என்ன?

பதில்:
நீங்கள் தவறு செய்யும் பொழுதெல்லாம், நீங்கள் உண்மையைக் கூற வேண்டும். உண்மையைக் கூறுவதன் மூலம் மாத்திரமே நீங்கள் முன்னேறுவீர்கள். நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனிப்பட்ட சேவையைப் பெறக்கூடாது. நீங்கள் இங்கு சேவையைப் பெற்றால், நீங்கள் அங்கே சேவை செய்ய வேண்டியிருக்கும். மாணவர்களாகிய நீங்கள் நன்றாகக் கற்று, மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே தந்தை பூரிப்படைகிறார். தந்தை அன்புக் கடலாவார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்து, உயர்ந்த அந்தஸ்தைக் கொடுக்கிறார் என்பதே அவருடைய அன்பாகும்.

பாடல்:
இந்த நாடகத்தை உருவாக்கி விட்டு, மறைந்துக் கொண்டவர் யார்?

ஓம்சாந்தி.
இப்பொழுதெல்லாம், 'மக்கள் கீதை ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள்" என்ற செய்திகள் எங்களுக்குக் கிடைக்கின்றன. 'கீதைக்குப் பிறப்பைக் கொடுத்தவர் யார்?" என்பதே தலைப்பாகும். அது ஜெயந்தி என அழைக்கப்படுவதால், அது நிச்சயமாகப் பிறப்பையே குறிக்கின்றது. அது 'ஸ்ரீமத் பகவத் கீதை ஜெயந்தி" எனக் கூறப்படுவதால், நிச்சயமாக எவராவது அதற்குப் பிறப்பைக் கொடுத்திருக்க வேண்டும். 'கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் பேசுகிறார்" என்று அனைவரும் கூறுகிறார்கள். இந்த விடயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் முதலில் வருகிறார், பின்னர் கீதை வருகின்றது. கீதையைப் படைப்பவர் நிச்சயமாகத் தேவைப்படுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வாறு அழைக்கப்பட்டால், ஸ்ரீகிருஷ்ணர் முதலிலும், அவருக்குப் பின்னர் கீதையும் வர வேண்டும். எவ்வாறாயினும், ஸ்ரீ கிருஷ்ணர் சிறு குழந்தை என்பதால், அவர் கீதையை உரைத்திருக்க முடியாது. கீதைக்குப் பிறப்பு கொடுத்தது யார் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். இது ஆழமான விடயம். கிருஷ்ணர் அவரின் தாயின் கருப்பையிலிருந்து பிறந்தார், அவர் சத்தியயுகத்தின் இளவரசராக இருந்தார். அவர் கீதையின் மூலம் இராஜயோகத்தைக் கற்பதால், இளவரசரின் அந்தஸ்தைப் பெற்றார். எனவே, யார் கீதைக்குப் பிறப்பைக் கொடுத்தார்? அது பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனா, அல்லது ஸ்ரீ கிருஷ்ணரா? உண்மையில் கிருஷ்ணரை திரிலோகநாதர் என்றோ திரிகாலதரிசி என்றேனோ அழைக்க முடியாது. ஒருவர் மாத்திரமே திரிலோகநாதர் அல்லது திரிகாலதரிசி என அழைக்கப்பட முடியும். திரிலோகநாதர் என்றால் மூன்று உலகையும் ஆள்பவர். அசரீரியான உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம் ஆகியன மூவுலகங்கள் (திரிலோகி) எனப்;படுகின்றது. இந்த மூன்றையும் அறிந்தவர் மாத்திரமே திரிலோகநாதர், திரிகாலதரிசி, பரமாத்மாவாகிய பரமதந்தை சிவன் என அழைக்கப்படுகிறார். அது அவருடைய புகழாகும், ஸ்ரீ கிருஷ்ணரின் புகழன்று. 'பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர், அனைத்து நற்குணங்களும் நிறைந்தவர்" என்பதே ஸ்ரீ கிருஷ்ணரின் புகழாகும். அவர் சந்திரனுடன் ஒப்பிடப்படுகின்றார். நீங்கள் பரமாத்மாவைச் சந்திரனுடன் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டீர்கள். அவருடைய பணி வேறுபட்டது. அவர், கீதைக்குப் பிறப்பைக் கொடுக்கும் படைப்பவராவார். கீதையினதும், இராஜயோகத்தினதும் ஞானத்தால், தேவர்கள் படைக்கப்பட்டார்கள். மனிதர்களைத் தேவர்களாக்குவதற்கு, தந்தை வந்து, ஞானத்தைக் கொடுக்க வேண்டும். இந்த விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய மிகவும் புத்திசாலிகளான பிரம்மகுமாரர்களும் குமாரிகளும் தேவைப்படுகிறார்கள். அனைவராலும் ஒரே விதத்தில் விளங்கப்படுத்த முடியாது. புத்திரிகள் அனைவரும் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். 'ஸ்ரீமத் பகவத் கீதைக்குப் பிறப்பைக் கொடுத்தது யார்?" என்னும் தலைப்பு இருக்க வேண்டும். இதற்காக, நீங்கள் வேறுபாட்டை விளங்கப்படுத்த வேண்டும். பரமாத்மாவாகிய பரமதந்தை சிவன் மாத்திரமே கடவுளாவார். ஞானக் கடலிடமிருந்து ஞானத்தைச் செவிமடுத்ததால், கிருஷ்ணர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். அவர் எவ்வாறு இலகு இராஜயோகத்தைக் கற்றதன் மூலம் அந்த அந்தஸ்தைப் பெற்றார் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். தந்தை முதலில் பிரம்மாவின் மூலம் பிராமணர்களைப் படைக்கிறார். அவர் வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தைக் கூறுகிறார். பிரம்மாவுடன் பிரம்மாவின் வாய்மூலமான படைப்புக்களும் தேவைப்படுகிறார்கள். பிரம்மா மாத்திரமே முக்காலத்தையும் பற்றிய (திரிகாலதரிசி) ஞானத்தைப் பெறுகிறார். திரிலோகி என்றால், அவர் மூவுலகங்களினதும் ஞானத்தைப் பெறுகிறார் என்பதாகும். ஆரம்பம், மத்தி, இறுதி என்பனவே மூன்று காலங்களாகும். அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம் என்பன மூன்று உலகங்களாகும். நீங்கள் இந்த வார்த்தைகளை நினைவு செய்ய வேண்டும். பல குழந்தைகள் இதை மறக்கிறார்கள். சரீர அகங்காரம் என்னும் வடிவில் மாயையே உங்களை இதை மறக்கச் செய்கிறாள். எனவே கீதையைப் படைப்பவர், கிருஷ்ணரன்றி, பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனேயாவார். பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே திரிகாலதரிசியும் திரிலோகநாதருமாவார். கிருஷ்ணரோ அல்லது இலக்ஷ்மி நாராயணனோ இந்த ஞானத்தைச் சிறிதேனும் கொண்டிருப்பதில்லை. ஆம், தந்தையிடமிருந்து ஞானத்தைப் பெற்றவர்கள், உலக அதிபதிகளாக ஆகினார்கள். நீங்கள் சற்கதியைப் பெற்றுக் கொண்டதும், இந்த ஞானம் உங்களுடைய புத்தியிலிருந்து மறைந்துவிடுகிறது. அவர் ஒருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அவர் மறுபிறவி எடுப்பவரல்ல. மறுபிறப்பு சத்தியயுகத்திலேயே ஆரம்பமாகுகின்றது. அப்பொழுதிலிருந்து கலியுக இறுதிவரை நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். இந்த விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். அனைவரும் 84 பிறவிகளை எடுக்கமாட்டார்கள். கீதையை எழுதியவரைத் திரிகாலதரிசி என அழைக்க முடியாது. முதலில், 'கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் பேசுகிறார்" என்று எழுதப்பட்டமை, முற்றிலும் தவறாகும். அது நிச்சயமாகத் தவறாகவே இருக்க வேண்டும். சமயநூல்கள் அனைத்தும் தவறாக இருக்கின்ற பொழுது மாத்திரமே, தந்தையால் வந்து, சரியானதைக் கூற முடியும். உண்மையில், அவர் பிரம்மாவின் மூலம் வேதங்கள், சமயநூல்களின் உண்மையான சாராம்சத்தைக் கொடுக்கிறார். இதனாலேயே அவர் சத்தியமானவர் என அழைக்கப்படுகிறார். நீங்கள் இப்பொழுது, உங்களை உண்மையானவர்களாக ஆக்குகின்றவருடன் உண்மையான சகவாசத்தைக் கொண்டிருக்கிறீர்கள். பிரஜாபிதா பிரம்மாவும் அவருடைய வாய்வழித்தோன்றலான ஜெகதாம்பாள் சரஸ்வதியும் இருக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் அனைவரும் சகோதரர்களும் சகோதரிகளும் ஆவார்கள். நீங்கள் எல்லா இடங்களிலுமுள்ள ஆலயங்கள் அனைத்திற்கும் சென்று சொற்பொழிவாற்ற வேண்டும். மக்கள் பல காட்சிகளை காண வேண்டுமென்பதற்காக சுற்றிப் பயணிக்கிறார்கள். நீங்கள் ஒருவருக்கு விளங்கப்படுத்தும் பொழுது, முழு ஆன்மீக ஒன்றுகூடலும் அங்கே கூடும். நீங்கள் மயானங்களுக்கும் செல்ல வேண்டும். மக்கள் அங்கே விருப்பமின்மையைக் கொண்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும் பாபா கூறுகிறார்: நீங்கள் என்னுடைய பக்தர்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது, அவர்கள் விரைவாகப் புரிந்து கொள்வார்கள். ஆகவே, நீங்கள் சிவபாபாவினதும் இலக்ஷ்மி நாராயணனினதும் ஆலயங்களுக்குச் செல்ல வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனும் 'மம்மா, பாபா" என அழைக்கப்பட மாட்டார்கள். சிவன் பாபா என அழைக்கப்படுகிறார். நிச்சயமாக மம்மாவும் இருக்க வேண்டும்; அவர் (மம்மா) மறைமுகமானவர். படைப்பவரான சிவபாபா எவ்வாறு தாயும் தந்தையுமானவர் என அழைக்கப்படுகிறார் என்ற மறைமுகமான இரகசியம் எவருக்கும் தெரியாது. இலக்ஷ்மியும் நாராயணனும் ஒரு புத்திரரை மாத்திரமே கொண்டிருப்பார்கள். எவ்வாறாயினும் இவருடைய பெயர், பிரஜாபிதா பிரம்மாவாகும். விஷ்ணுவும் சங்கரரும் உயர்ந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். திரிமூர்த்தி பிரம்மா உயர்ந்தவராக கருதப்படுகிறார். கடவுள் சிவன் படைப்பவர் என்று அழைக்கப்படுவதைப் போலவே, பிரம்மாவும் படைப்பவரென அழைக்கப்படுகிறார். எவ்வாறாயினும், அவர் அழிவற்றவர் ஆவார். நீங்கள் 'படைப்பவர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், 'அவர் எவ்வாறு படைத்தார்?" என அவர்கள் வினவுவார்கள். எவ்வாறாயினும், அவர் படைப்பவரே. எவ்வாறாயினும், பிரம்மாவின் மூலமே படைப்பு இடம்பெறுகின்றது. கடவுள் இப்பொழுது பிரம்மாவின் மூலம் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை ஆத்மாக்கள் அனைவருக்கும் கொடுக்கிறார். வேதங்கள், சமயநூல்கள் முதலானவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியனவாகும். பக்திமார்க்கம் அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றது. இது ஞானத்தின் செயற்பாடாகும். பக்தி மார்க்கம் முடிவடைந்து, அனைவரும் தூய்மையற்றவர்களாகவும், தமோபிரதானாகவும் ஆகியதும், தந்தையாகிய நான் வருகிறேன். நீங்கள் முதலில் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர், நீங்கள் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளுக்கு ஊடாகச் செல்கின்றீர்கள். மேலிருந்து கீழிறங்கும் தூய ஆத்மாக்கள் துன்பத்தை அனுபவம் செய்யவேண்டிய வகையில் எந்தவிதச் செயல்களையும் அதுவரையில் செய்திருக்க மாட்டார்கள். ~~கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்" என்று அவர்கள் கூறினாலும், அது சாத்தியமற்றதாகும். ஒரு புதிய ஆத்மா தர்மத்தை ஸ்தாபிப்பதற்காகக் கீழே வருகிறார், அவர் துன்பத்தைப் பெற முடியாது. ஏனெனில் அந்த ஆத்மா, அவருடைய கர்மாதீத நிலையில், தர்மத்தை ஸ்தாபிப்பதற்காக வந்த தூதுவராவார். யுத்தகளத்திற்குத் தூதுவர் அனுப்பப்படும் பொழுது, அவர் வெள்ளை நிறக் கொடியை ஏந்திச் செல்கிறார். அதன்மூலம், அவர் செய்தியுடன் வந்துள்ளார் என்பதை மறுபுறத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் அந்நேரத்தில் அவருக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கமாட்டார்கள். எனவே தூதுவரை எவராலும் சிலுவையில் அறைய முடியாது. ஆத்மாவே துன்பத்தை அனுபவிக்கிறார். ஆத்மாக்கள் செயல்களின் விளைவிற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என நீங்கள் எழுத வேண்டும். ஆத்மாக்கள், செயல்களின் விளைவிற்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கூறுவது தவறாகும். யார் இதைக் கூறினார்? இவை கடவுள் சிவனின் வாசகங்கள். நீங்கள் இந்தக் கருத்துக்களைக் குறித்துக் கொள்ள வேண்டும். இதை எழுதுவதற்கு, உங்களுக்குப் பரந்த, எல்லையற்ற புத்தி தேவைப்படுகிறது. 'கிறிஸ்துவின் ஆத்மா சிலுவையில் அறையப்படவில்லை, ஆனால் கிறிஸ்துவின் ஆத்மா பிரவேசித்த சரீரத்தின் ஆத்மாவே அறையப்பட்டு, வேதனையை அனுபவித்தார்" என்று கிறிஸ்தவர்கள் கண்காட்சிகளுக்கு வரும்பொழுது, நீங்கள் கூறவேண்டும். அவ்வாறான விடயங்களை கேள்விப்படும் பொழுது அவர்கள் வியப்படைவார்கள். தந்தையாகிய கடவுளின் வழிக்காட்டல்களுக்கு இணங்க, தூய ஆத்மா சமயத்தை ஸ்தாபித்தார். இதுவும் நாடகத்தில் உள்ளது. சிலர் நாடகத்தைப் புரிந்து கொண்டாலும் அவர்களுக்கு அதன் ஆரம்பம், மத்தி, இறுதி தெரியாது. அவர்கள் அத்;தகைய விடயங்களைச் செவிமடுக்கும் பொழுது, அவர்கள் அந்த விடயங்கள் சிலவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். கிருஷ்ணரை யாராலும் அவதூறு செய்ய முடியாது. உண்மையில் இப்பொழுது அவதூறு செய்யப்படுபவர் யார்? சிவபாபா அல்ல, இந்தச் சரீரதாரியே. தூய ஆத்மாவாகிய பாபா ஆசிரியராவார். தூய்மையற்ற இவரோ இப்பொழுது தூய்மையாகிக் கொண்டிருக்கிறார். தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் தயக்கமின்றிப் பேசுவார்கள். இல்லையேல் நீங்கள் வெறுமனே மனப்பாடம் செய்துள்ளீர்கள் என மக்கள் புரிந்துகொள்வார்கள். அப்பொழுது அவர்களால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாதிருக்கும். அம்பானது இலக்கைத் தாக்காது. அதிகளவு நேர்மையும் சுத்தமும் தேவைப்படுகிறது. விகாரத்தில் ஈடுபடுபவர், 'காமமே கொடிய எதிரி" என மற்றவர்களுக்குக் கூறினால், அம்பு இலக்கைத் தாக்காது. 'இராமரின் பெயரை உச்சரியுங்கள், உங்களால் கடலைக் கடக்க முடியும்" என்று கூறிய பண்டிதரின் உதாரணமும் இருக்கின்றது. இது இக் காலத்தையே குறிக்கின்றது. சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் இந்த நச்சுக்கடலைக் கடந்து செல்வீர்கள். எந்தக் கடல் என்பது பண்டிதர்களுக்குத் தெரியாது. நீங்கள் விலைமாதர் இல்லத்திலிருந்து சிவாலயத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தை நன்றாகப் பின்பற்ற வேண்டும். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நீங்கள் என்மீது அன்பு செலுத்தினாலும் அல்லது என்னை நிராகரித்தாலும்.... இங்கு, ஒரு விளக்கம் மாத்திரமே கொடுக்கப்பட்டாலும், சிலர் இன்னும் பிணங்களைப் போல் ஆகுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் நன்றாகக் கற்க வேண்டும். தந்தை அன்புக்கடலாவார், அதாவது உங்களுக்குக் கற்பித்து, உங்களை உயர்ந்த அந்தஸ்தைப் பெறக்கூடியவராக ஆக்குகிறார். இதுவே அவருடைய அன்பாகும். தந்தை உங்களுக்குக் கற்பிப்பதால், நீங்கள் கற்று, மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். நீங்கள் தந்தையைப் பூரிப்படையச் செய்ய வேண்டும். நீங்கள் தந்தையின் சேவையில் மும்முரமாக இருக்க வேண்டும். உங்கள் சரீரம், மனம், செல்வத்தால் பாரதத்திற்கு உண்மையான சேவை செய்தலே உங்களுக்கான தந்தையின் சேவை ஆகும். நீங்கள் உரத்த, தெளிவான குரலில் விளங்கப்படுத்த வேண்டும். அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். அவர்கள் இராச்சியத்திலும் வரிசைக்கிரமமாகவே இருப்பார்கள். நீங்கள் தெய்வீக இராச்சியத்தில் எந்த இலக்கத்தைப் பெறுவீர்கள் என்பதை ஆசிரியர் புரிந்து கொள்கிறார். பிரதானமானவர்களாக ஆகுவார்கள் யார் என்பதையும், அவரவருடைய சேவையிலிருந்து அவரால் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் மம்மாவையும் பாபாவையும் போல அதிகளவு சேவை செய்யாவிட்டால், நீங்கள் பணிப்பெண்களாகவும் வேலையாட்களாகவும் ஆக வேண்டியிருக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் முன்னேறிச் செல்கையில், நீங்கள் அனைவரும் அனைத்தையும் தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லை என்பது தெளிவாகும். இவ்வேளையில் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் மாணவர்கள். நீங்கள் இப்போது எவரையேனும் உங்கள் பணியாள் ஆக்கினால் நீங்களே ஒரு பணியாளாக வேண்டி நேரிடும். இங்கு ஒரு சக்கரவர்த்தியாகுவது சரீர உணர்வாகும். நீங்கள் உண்மையையே பேசுதல் வேண்டும்: பாபா, நான் இத் தவறைச் செய்துவிட்டேன். எவரும் இன்னும் சம்பூரண நிலையை அடையவில்லை. ஒருவர் பரீட்சையில் சித்தியடையத் தவறும் பொழுது, அவர் வெட்கப்படுகிறார். 'மக்கள் 21 பிறவிகளைப் பற்றிப் பேசுகிறார்கள், அதுவும் நினைவுகூரப்படுகிறது, ஆனால் இப்பொழுது இத் தெய்வீகப் பிறப்பு வேறுபட்டது" என்பதைப் பற்றி பாபா இரவில் சிந்தித்தார். சத்தியயுகத்தில் 8 பிறவிகளும், திரேதா யுகத்தில் 12 பிறவிகளும், துவாபர யுகத்தில் 21 பிறவிகளும் கலியுகத்தில் 42 பிறவிகளும் இருக்கின்றன. நீங்கள் தத்தெடுக்கப்பட்ட இந்தத் தெய்வீகப் பிறப்பு, அனைத்திலும் மிக மேன்மையானதாகும். இதுவே பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே உரிய அதி பாக்கியம் வாய்ந்த பிறவியாகும். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. அன்புக்கடலாகிய தந்தையின் அன்பிற்குப் பிரதி உபகாரம் கொடுங்கள். நன்றாகக் கற்று, மற்றவர்களுக்கும் கற்பியுங்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும்.

2. முதலில், நீங்கள் நேர்மையாகவும், இதய சுத்தியுடனும் ஞானத்தைக் கிரகியுங்கள். பின்னர் மற்றவர்களைக் கிரகிக்கத் தூண்டுங்கள். ஒரேயொரு தந்தையின் சகவாசத்தில் இருங்கள்.

ஆசீர்வாதம்:
சகல எல்லைக்;குட்பட்டவற்றிலிருந்தும் அப்பால் இருப்பதன் மூலம் மற்றவர்களுக்கு உணர்வுகளை கொடுக்கும் அனுபவ சொரூபங்கள் ஆகுவீர்களாக.

~~எனது பாபா|| என்பது ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் வெளிப்படுவதைப் போன்று, எல்லையற்ற சகோதரன் அல்லது சகோதரிகள், தீதி, தாதியையிட்டும், ஒவ்வொருவரின் மனதில் இருந்தும் ~~இவர் என்னுடையவர்|| என்பது வெளிப்படட்டும். நீங்கள் எங்கிருப்பினும், நீங்கள் எல்லையற்ற சேவைக்கான கருவிகள் ஆவீர்கள். அனைத்து எல்லைக்குட்டவற்றிற்கும் அப்பால் இருந்து, எல்லையற்ற உணர்விலும், எல்லையற்ற நல்லாசிகளினாலும் நிலைத்திருப்பது என்பதே தந்தையை பின்பற்றுவதாகும். இப்பொழுது இதை நடைமுறையில் பயிற்சி செய்து அதே அனுபவத்தை பிறருக்கும் கொடுங்கள். எப்பொழுதுமே முதிர்ச்சியான அனுபவசாலிகள் ~பிதாஜி| அல்லது ~காக்காஜி| (மாமா) என்றே அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறாக எல்லயற்ற வகையில் அனுபவசாலிகள் அதாவது அனைவரும் உரிமையானவர் என்ற அனுபவத்தைப் பெறட்டும்.

சுலோகம்:
அப்பாலுள்ள ஸ்திதியில் தொடர்ந்தும் பறந்திடுங்கள், அப்பொழுது நீங்கள் பந்தனம் என்ற எந்தக் கிளையிலும் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.


மாதேஸ்வரியின் மேன்மையான வாசகங்கள்

நாங்கள் இறைவனிடம் எங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள் என வேண்டும் போது, ~அக்கரை| என்பதன் அர்த்தம் என்ன? அக்கரைக்குச் செல்வது என்றால் பிறப்பு இறப்புச் சக்கரத்திற்குள் வராது விடுதலையடைதலைக் குறிக்கின்றது என மக்கள் நினைக்கிறார்கள். இவ்வாறே மக்கள் கூறுகின்றார்கள். ஆனால் அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, உண்மையான சந்தோஷமும் அமைதியும் நிலவும் இடம், துன்பமும் அமைதியின்மையும் உள்ள இடத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. அது ஓர் உலகம் என அழைக்கப்படுவதில்லை. மக்கள் சந்தோஷத்தை விரும்பும் போது, அது இவ்வாழ்க்கையிலேயே இருக்க வேண்டும். அதுவே சத்தியயுகமாகிய தேவர்களின் உலகமான வைகுந்தமாகும். அங்கு முழுமையான சந்தோஷத்தையுடைய வாழ்க்கையே இருந்தது. அத் தேவர்கள் அமரத்துவமானவர்கள் எனக் கருதப்பட்டார்கள். அமரத்துவம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தேவர்கள் என்றும் மணிக்காத நீண்ட ஆளுட்காலத்தையுடையவர்கள் என்பதல்ல. அவர்களை இவ்வாறு கூறுவது தவறாகும் ஏனெனில் அது அவ்வாறில்லை. அவர்களின் ஆயுட்காலம் சத்திய திரேதாயுகங்களினூடாக நீடிக்க மாட்டாது. எவ்வாறாயினும், தேவர்கள் சத்திய திரேதாயுகங்களில் பல பிறவிகள் எடுக்கின்றார்கள். அவர்கள் 21 பிறவிகள், இராச்சியத்தை மிக நன்றாக ஆட்சி செய்தார்கள். பின்னர் அவர்கள் திரேதாயுகத்திலிருந்து கலியுக இறுதிவரைக்கும் 63 பிறவிகள் எடுத்தார்கள்;. மொத்தமாக அவர்கள் ஏறும் ஸ்திதியில் 21 பிறவிகளும், இறங்கும் ஸ்திதியில் 63 பிறவிகளும் எடுத்தார்கள். மனிதர்கள் மொத்தமாக 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். ஆனால் மனிதர்கள் 8.4 மில்லியன் உயிரினங்களாகப் பிறப்பெடுக்கின்றார்கள் என மக்கள் நினைப்பது ஓர் தவறாகும். மனிதர்கள் சந்தோஷத்தினதும் துன்பத்தினதும் பாகங்களை மனிதப் பிறவினூடாக மாத்திரம் முடிப்பார்களேயானால், மிருக இராச்சியத்தின் ஊடாக எவ் வேதனைiயும் அனுபவிக்க வேண்டிய அவசியம் என்ன? ஆனால் மக்களிடம் இந்த ஞானம் இருக்கவில்லை. மனிதர்கள் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். ஆனால் மொத்தமாக பூமியில் 8.4 மில்லியன் மிருகங்கள் பறவைகள் போன்ற உயிரினங்கள் உள்ளன. ஒவ்வொரு வகையான படைப்பும் உள்ளது. அதில், மனிதர்கள் தங்கள் பாவ புண்ணியத்தை மனிதவர்க்கத்திலும் மிருகங்கள் அவற்றை தங்கள் மிருக இராச்சியத்திலும் அனுபவம் செய்கின்றன. மனிதர்கள் மிருகங்களாகவோ, மிருகங்கள் மனிதர்களாகவோ பிறப்பெடுப்பதில்லை. மனிதர்கள் தங்கள் வேதனையைத் தங்கள் சொந்த வர்க்கத்திலேயே தீர்க்க வேண்டியிருப்பதால், சந்தோஷத்தினதும் துன்பத்தினதும் உணர்வு ஏற்படுகின்றது. அதேபோன்று மிருகங்களும் தங்கள் சந்தோஷத்தையும் துன்பத்iயும் தங்கள் சொந்த இராச்சியத்தில் அனுபவம் செய்கின்றன. ஆனால், தாம் எந்தச் செயலுக்காகத் துன்பத்தை அனுபவிக்கின்றோம் என்பதை புரிந்து கொள்கின்ற புத்தி அவற்றிற்கு இல்லை. மனிதர்கள் தமது வேதனையை அனுபவம் செய்கின்றார்கள் ஏனெனில் அவர்களுக்கு புத்தி உள்ளது. மனிதர்கள் 8.4 மில்லியன் உயிரினங்களினூடாகச் செல்கின்றார்கள்; என்றல்ல. ஓர் உயிரற்ற விருட்சமும் தன் சொந்த வர்க்கத்தைச் சேர்ந்ததாகும். இது இலகுவானதும் புத்தியினால் புரிந்து கொள்ளக் கூடிய விடயமும் ஆகும். ஓர் கர்மக்கணக்கை உருவாக்கக் கூடியதாக ஓர் உயிரற்ற விருட்சம் எவ்வாறான செயல்களை அல்லது நடுநிலைச் செயல்களைப் புரிந்திருக்க முடியும்? உதாரணமாக, ‘தங்கள் இறுதிக் கணங்களில் தங்கள் மகனை நினைவு செய்பவர்கள், அத்தகைய கவலையுடன் மரணிப்பவர்கள் ஒரு கரடியாகப் பிறப்பெடுப்பார்கள்’ என குருநானக் தனது மேன்மையான வாசகங்களைப் பேசினார். எவ்வாறாயினும், மனிதர்கள் கரடி வர்க்கத்திற்கு செல்வார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால், அதன் அர்த்தம் அவர்களின் செயல்கள் மிருகங்களுடையதைப் போன்றிருக்கும் என்பதாகும். எவ்வாறாயினும், மனிதர்கள் மிருகங்கள் ஆகுவார்கள் என்பது அதன் அர்த்தம் அல்ல. இக் கற்பித்தல்கள் மனிதர்களை பயப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டவையாகும். எனவே, உங்கள் வாழ்க்கையை நீங்கள் இந்த சங்கமயுகத்திலேயே மாற்றி பாவாத்மாக்களில் இருந்து புண்ணியாத்மாக்கள் ஆக வேண்டும். அச்சா.