05.11.2018 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, என்றென்றும் ஆரோக்கியமாகவும், என்றென்றும்; செல்வந்தராகவும் ஆகுவதற்கு, இப்பொழுது நீங்கள் உங்களுடைய சரீரம், மனம், செல்வம் ஆகியவற்றை நேரடியாகக் காப்புறுதி செய்யவேண்டும். இந்நேரத்தில் மாத்திரமே உங்களால் எல்லையற்ற காப்புறுதியைச் செய்து கொள்ள முடியும்.
கேள்வி:
நீங்கள் அனைவரும் முன்னேறுவதற்காக ஒருவருக்கொருவர் எதனை நினைவூட்ட வேண்டும்?
பதில்:
நாடகம் முடிவடையவுள்ளது என்பதையும், நாங்கள் வீட்;டிற்குத் திரும்ப வேண்டும் என்பதையும் ஒருவருக்கொருவர் நினைவூட்டுங்கள். நாங்கள் இப் பாகங்களை முன்பும் எண்ணற்ற முறைகள் நடித்திருக்கின்றோம். நாங்கள் எங்கள் 84 பிறவிகளை நிறைவு செய்துள்ளோம். நாங்;கள் இப்பொழுது இந்த ஆடையாகிய இச்சரீரங்களை நீக்கி வீடு திரும்புவோம். இதுவே ஆன்மீக சமூக சேவையாளர்களாகிய உங்களின் சேவையாகும். ஆன்மீக சமூக சேவையாளர்களாகிய நீங்கள் இச் செய்தியை அனைவருக்கும் தொடர்ந்தும் கொடுக்க வேண்டும்: சரீரத்தையும், சரீர உறவுகள் அனைத்தையும் மறந்து, தந்தையையும் வீட்டையும் நினைவுசெய்யுங்கள்.
பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டிறங்கிக் கீழே பூமிக்கு வாருங்கள்!
ஓம்சாந்தி.
இந்தப் பாடல் விசேஷமாகக் கீதாப் பாடசாலைகளில் (கீதை படிக்கும் இடங்கள்) பாடப்படுகின்றது. கீதையை உரைப்பவர்கள் முதலில் இச் செய்யுளைப் பாடுவார்கள்;. ஆனால் அவர்கள் யாரைக் கூவி அழைக்கின்றார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்த வேளையில் அதர்மம் உள்ளது. முதலில் பிரார்த்தனை செய்யப்படுகின்றது. பின்பு அதற்கான பதில் (கீதையிலிருந்து) கிடைக்கின்றது. பாவம் பெருமளவில் அதிகரித்திருப்பதனால், வந்து கீதையின் ஞானத்தைப் போதியுங்கள் என அவர்கள் கூவி அழைக்கின்றார்கள். அதற்கான பதில் (கீதையிலிருந்து) கிடைக்கிறது: பாரதத்திலுள்ள ஆத்மாக்கள் சந்தோஷமற்றவர்களாகவும், பாவம் நிறைந்தவர்களாகவும் ஆகும்போதும், அதர்மம் ஏற்படும்போதும் நான் வருகின்றேன். அவர் தனது வடிவத்தை மாற்ற வேண்டியுள்ளது. ஆகவே அவர் நிச்சயமாக ஒரு மனித சரீரத்தில் பிரவேசிப்பார். ஆத்மாக்கள் அனைவரும் தமது வடிவத்தை மாற்றுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஆதியில் அசரீரியானவர்கள். நீங்கள் இங்கு வரும்போது சரீரதாரிகள் ஆகுகின்றீர்கள். அப்போது நீங்கள் மனிதர்களென அழைக்கப்படுகின்றீர்கள். மனித ஆத்மாக்கள் இப்போது தூய்மையற்றவர்களாகவும் பாவம் நிறைந்தவர்களாகவும் உள்ளனர். எனவே நான் எனது வடிவத்தை மாற்றி வரவேண்டியுள்ளது. நீங்கள் அசரீரியானவர்களிலிருந்து சரீரதாரிகள் ஆகுவது போன்றே, நானும் ஆகவேண்டியுள்ளது. ஸ்ரீகிருஷ்ணரால் இத் தூய்மையற்ற உலகிற்கு வரமுடியாது. அவர் சுவர்க்கத்தின் அதிபதி. ஸ்ரீ கிருஷ்ணரே கீதையை உபதேசித்ததாக மக்கள் நினைக்கின்றார்கள். ஆனால் கிருஷ்ணரால் இத் தூய்மையற்ற உலகில் இருக்க முடியாது. அவரின் பெயர், ரூபம், தேசம், நேரம், செயற்பாடு அனைத்தும் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாகும். தந்தை இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். கிருஷ்ணருக்கென அவரது சொந்தத் தாயும் தந்தையும் உள்ளார்கள். அவரின் உருவம் அவருடைய தாயின் கர்ப்பத்திலேயே உருவாக்கப்பட்டது. நான் ஒரு கர்ப்பப்பையில் பிரவேசிப்பதில்லை. ஆனால் எனக்கு நிச்சயமாக ஓர் இரதம் தேவைப்படுகின்றது. நான் இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவரில் பிரவேசிக்கின்றேன். அவர் தனது முதலாவது பிறவியில் ஸ்ரீ கிருஷ்ணராக உள்ளார். இப் பிறவி அவரின் 84 ஆவது பிறவியாகும். அத்துடன் அவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியுமாகும். எனவே, நான் அவரில் பிரவேசிக்கிறேன். அவருக்குத் தனது பிறவிகளைப் பற்றித் தெரியாது. தனது சொந்தப் பிறவிகளைப் பற்றித் தனக்குத் தெரியாதென ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதில்லை. கடவுள் கூறுகிறார்: நான் பிரவேசித்தவருக்கும் தனது சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாது. எனக்கு மாத்திரமே இது தெரியும். கிருஷ்ணர் ஓர் இராச்சியத்தின் அதிபதி ஆவார். சத்தியயுகத்தில் சூரிய வம்ச இராச்சியம் உள்ளது. அது விஷ்ணுபூமியாகும். இலக்ஷ்மி நாராயணனின் இணைந்த ரூபம் விஷ்ணு எனப்படுகின்றது. நீங்கள் சொற்பொழிவு ஆற்றும் எந்த இடத்திலும் இப் பாடலை இசைப்பது போதுமானதாகும். ஏனெனில் பாரதமக்களே இப் பாடலைப் பாடுகின்றார்கள். இத் தர்மம் மறையும் போதே நான் வந்து மீண்டும் கீதையை உரைத்து, அத் தர்மத்தை மீண்டும் ஸ்தாபிக்க முடியும். அத் தர்மத்தைச் சார்ந்த மனிதர்கள் இப்பொழுது இல்லாததால்;, கீதையின் ஞானம் எங்கிருந்து தோன்றியது? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: சத்திய, திரேதா யுகங்களில் சமயநூல்கள் போன்ற எதுவும் இருக்கவில்லை. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. எவராலும் அவற்றினூடாக என்னைச் சந்திக்க முடியாது. நான் நிச்சயமாக வரவேண்டியுள்ளது. நான் வந்து, உங்கள் அனைவருக்கும் முக்தியினூடாகச் சற்கதியை அருள்கின்றேன். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். முக்தி அடைந்த பின்னர், நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் முக்தி அடைந்த பின்னர் ஜீவன்முக்தியை அடைவீர்கள். தந்தை கூறுகிறார்: உங்களால் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெற முடியும். உங்கள் வீடுகளில் வாழ்ந்தவாறே உங்களால் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியை அடைய முடியும், அதாவது, உங்களால் துன்பத்தில் இருந்து விடுதலை அடைய முடியும் என்று கூறப்படுகின்றது. சந்நியாசிகளால் உங்களுக்கு ஜீவன்முக்தியை அளிக்க முடியாது. அவர்கள் ஜீவன்முக்தியில் நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. சந்நியாசிகளின் மதம் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. சந்நியாசிகளின் மதம் பின்பே வருகின்றது. இஸ்லாமிய மதமும் பௌத்தர்கள் போன்றவர்களும் சத்தியயுகத்தில் இருக்க மாட்டார்கள். தேவதர்மத்தைத் தவிர்ந்த ஏனைய மதங்கள் அனைத்தும் இப்பொழுது உள்ளன. அவர்கள் அனைவரும் ஏனைய மதங்களுக்கு மாற்றப்பட்டு விட்டார்கள். அவர்களுக்குத் தமது சொந்த மதத்தைப் பற்றித் தெரியாது. எவருமே தன்னைத் தேவ தர்மத்திற்குரியவராகக் கருதுவதில்லை. அவர்கள் 'ஜெய்ஹிந்த்" (ஹிந்துஸ்தானிற்கு வெற்றி) என்று கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், இப்போது வெற்றி எதுவும் இல்லை. பாரதம் எப்பொழுது வெற்றியடைந்தது என்றும், எப்பொழுது தோற்கடிக்கப்பட்டது என்றும் எவருக்குமே தெரியாது. பழைய உலகம் அழிக்கப்பட்டு, நீங்கள் உங்களுடைய இராச்சிய பாக்கியத்தைப் பெறும்பொழுதே பாரதம் வெற்றியடையும். இராவணனே உங்களைத் தோற்கடிக்கச் செய்கின்றான். இராமர் உங்களை வெற்றியடையச் செய்கிறார். 'பாரதத்திற்கு வெற்றி" என்று கூறப்படுகின்றது. 'ஹிந்துஸ்தானிற்கு வெற்றி" என்;பதல்ல. அவர்கள் வார்த்தைகளை மாற்றியுள்ளார்கள். கீதையின் வாசகங்கள் மிக நல்லவை. அதி மேன்மையான கடவுள் கூறுகின்றார்: எனக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. நானே எனது சொந்த வடிவத்தை உருவாக்க வேண்டியுள்ளது. நான் இவரில் பிரவேசிக்கின்றேன். ஒரு தாய் கிருஷ்ணருக்குப் பிறப்புக் கொடுக்கின்றார். நானே படைப்பவர். நாடகத்திற்கேற்ப, அச் சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்காக உருவாக்கப்பட்டன. கீதை, பாகவதம் போன்ற அனைத்தும் தேவதர்மத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. தந்தை உருவாக்கிய தேவதர்மம் இப்பொழுது மறைந்து விட்டது. அது மீண்டும் எதிர்காலத்தில் தோன்றும். ஆரம்பம், மத்தி, இறுதி என்பன கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலமென அழைக்கப்படுகின்றன. இதில் ஆரம்பம், மத்தி, இறுதி ஆகியவற்றிற்கு வேறுபட்ட அர்த்தம் உள்ளன. கடந்தகாலம் மீண்டும் நிகழ்காலமாகும். கடந்தகாலத்தைப் பற்றிக் கூறப்பட்ட கதைகள் அனைத்தும் மீண்டும் எதிர்காலத்தில் கூறப்படும். மனிதர்களுக்கு இந்த விடயங்களைப் பற்றித் தெரியாது. கடந்தகாலத்தில் இடம்பெற்ற கதையைப் பற்றி பாபா இப்பொழுது உங்களுக்குக் கூறுகிறார். அவை மீண்டும் எதிர்காலத்திலும் கூறப்படும். இந்த விடயங்கள் புரிந்து கொள்ளப்படவேண்டும். இதற்கு உங்களுக்கு மிகத் தெளிவானதொரு புத்தி தேவைப்படுகின்றது. நீங்கள் அழைக்கப்பட்ட இடங்களுக்குக் குழந்தைகளாகிய நீங்கள் சென்று சொற்பொழிவுகள் ஆற்ற வேண்டும். மகன் தந்தையை வெளிப்படுத்துகின்றான்! குழந்தைகள் தமது தந்தை யார் என்பதை வெளிப்படுத்துவார்கள். தந்தை நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். இல்லாவிடின், நீங்கள் எவ்வாறு ஆஸ்தியைக் கோருவீர்கள்? நீங்களே அதிமேலானவர்கள். எவ்வாறாயினும், அந்தப் பிரபல்யமான மக்களுக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அனைவரும், ‘ஓ தந்தையாகிய கடவுளே!’ என்று கூவி அழைக்கின்றார்கள். அவர்கள் ‘ஓ தந்தையாகிய கடவுளே, வாருங்கள்!’ என்று கடவுளைப் பிரார்த்திக்கின்றார்கள். எவ்வாறாயினும், அவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் சிவபாபாவின் புகழையும், ஸ்ரீ கிருஷ்ணரின் புகழையும், பாரதத்தின் புகழையும் பாடவேண்டும். பாரதம் சிவாலயமாக, அதாவது, சுவர்க்கமாக இருந்தது. 5000 வருடங்களுக்கு முன்பு, அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. அதனை ஸ்தாபித்தவர் யார்? நிச்சயமாக, அது அதிமேலான கடவுளே ஆவார். பரமாத்மாவான பரமதந்தை என்று அழைக்கப்படுகின்ற, அதிமேலான அசரீரியான, சிவனுக்கு வந்தனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. பாரத மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடினாலும், எப்பொழுது சிவன் வந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. நிச்சயமாக, அவர் சுவர்க்கம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, சங்கமயுகத்திலேயே வந்திருக்க வேண்டும். அவர் கூறுகிறார்: நான் ஒவ்வொரு யுகத்திலுமன்றி, ஒவ்வொரு கல்பத்தினதும் சங்கமயுகத்திலேயே வருகின்றேன். அவர் ஒவ்வொரு யுகங்களிலும் வந்திருந்தால், நான்கு அவதாரங்கள் இருந்திருக்க வேண்டும். அவர்கள் பல அவதாரங்களைக் காட்டியுள்ளார்கள். சுவர்க்கத்தை உருவாக்கும் ஒரேயொரு தந்தையே அதிமேலானவர்;. பாரதம் சுவர்க்கமாகவும், விகாரமற்றும் இருந்தது. எனவே அங்கு எவ்வாறு குழந்தைகள் பிறப்பார்கள் என்று நீங்கள் கேட்க முடியாது. அங்கிருந்த வழக்கங்களும் சம்பிரதாயங்களும் தொடர்ந்து இருக்கும். நீங்கள் ஏன் அதைப் பற்றிக் கவலைப்படுகின்றீர்கள்? நீங்கள் முதலில் தந்தையை இனங்கண்டு கொள்ள வேண்டும். அங்கு நீங்கள் ஆத்மாவின் ஞானத்தைக் கொண்டிருப்பீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் ஒரு சரீரத்தை விடுத்து இன்னொன்றை எடுக்கின்றோம். அங்கு அழுவது என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கு அகால மரணங்கள் இருப்பதில்லை. நீங்கள் உங்கள் சரீரத்தைச் சந்தோஷத்துடன் நீக்கி விடுவீர்கள். எனவே தந்தை எவ்வாறு வந்து, தனது ரூபத்தை மாற்றுகின்றார் என்பதை அவரே விளங்கப்படுத்தியுள்ளார். கிருஷ்ணருக்கு இவ்வாறு கூற முடியாது. அவர் கர்ப்பத்தின் மூலம் பிறப்பெடுக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் சூட்சும வதனத்தில் வசிக்கின்றார்கள். மனித குலத்தின் தந்தை இங்கே நிச்சயம் தேவைப்படுகின்றார். நாங்கள் அவரின் குழந்தைகள். அந்த அசர்Pரியான தந்தை அழிவற்றவர். ஆத்மாக்களாகிய நாங்களும் அழிவற்றவர்கள். எவ்வாறாயினும், நாங்கள் நிச்சயமாகப் பிறப்பு, மறுபிறப்பு எடுக்க வேண்டும். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. ‘வந்து மீண்டும் கீதையின் ஞானத்தைப் பேசுங்கள்’ என்று நீங்கள் கூறுகின்றீர்கள். வந்து, சென்றவர்கள் அனைவரும் நிச்சயமாகச் சக்கரத்தில் வருவார்கள். தந்தையும் வந்து சென்றவர். இப்போது மீண்டும் வந்துள்ளார். அவர் கூறுகிறார்: நான் வந்து கீதையை மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றேன். 'ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்" என்று மக்கள் கூவி அழைக்கின்றார்கள். எனவே, இந்த உலகம் நிச்சயமாகத் தூய்மையற்றுள்ளது. அனைவரும் தூய்மையற்றிருப்பதாலேயே அவர்கள் தங்கள் பாவங்களைக் கரைப்பதற்குக் கங்கைக்குச் சென்று நீராடுகின்றார்கள். சுவர்க்கம் இந்த பாரதத்திலேயே இருந்தது. பாரதமே அதிமேலான அநாதியான பூமியாகும். அது அனைவரினதும் யாத்திரைத் தலமாகும். மனிதர்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள். தந்தையே அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவர். இத்தகைய மகத்துவமான சேவை செய்யும் ஒரேயொருவருக்கான புகழ் நிச்சயமாகப் பாடப்பட வேண்டும். பாரதமே அழிவற்ற தந்தையின் பிறப்பிடமாகும். அந்த ஒரேயொருவரே அனைவரையும் தூய்மை ஆக்குகிறார். தந்தையால் தனது பிறப்பிடத்தை விட்டு வேறெங்கும் செல்ல முடியாது. எனவே, தந்தை இங்கமர்ந்திருந்து, எவ்வாறு தான் தனது சொந்த வடிவத்தை உருவாக்குகின்றார் என்பதை விளங்கப்படுத்துகின்றார். அனைத்தும் உங்கள் தாரணையிலேயே தங்கியுள்ளது. நீங்கள் எவ்வளவு கிரகிக்கின்றீர்கள் என்பதிலேயே உங்களின் அந்தஸ்து தங்கியுள்ளது. ஒவ்வொருவரும் ஒரேமாதிரியாக முரளியை வாசிக்க முடியாது. அனைவராலும் ஒரு மரத்தினாலான புல்லாங்குழலை வாசிக்க முடிந்தாலும், அவர்களால் அதனை ஒரேமாதிரி வாசிக்க முடியாது. அனைவரும் தமது பாகத்தை வித்தியாசமாக நடிக்கின்றார்கள். இத்தகையதொரு பெரிய பாகம் சின்னஞ்சிறிய ஆத்மாவில் பதிந்துள்ளது. பரமாத்மா கூறுகின்றார்: நானும் ஒரு பாகத்தை நடிக்கவேண்டியுள்ளது. நான் அதர்மம் நிலவும்பொழுதே வருகின்றேன். பக்தி மார்க்கத்திலும் நான் ஒரு பிரதிபலனைக் கொடுக்கின்றேன். மக்கள் கடவுளின் பெயரால் தான, தர்மங்கள் செய்கின்றார்கள். எனவே கடவுளே அதற்கான பலனைக் கொடுக்கின்றார். ஒவ்வொருவரும் தங்களைக் காப்புறுதி செய்து கொள்கின்றார்கள். தாங்கள் கொடுத்தவற்றின் பலனைத் தமது அடுத்த பிறவியில் பெறுவார்கள் என்று அவர்கள் நம்புகின்றார்கள். ஆனால் நீங்களோ உங்களை 21 பிறவிகளுக்குக் காப்புறுதி செய்கிறீர்கள். அது எல்லைக்குட்பட்ட, மறைமுகமான காப்புறுதியாகும். ஆனால் இதுவோ எல்லையற்ற நேரடியான காப்புறுதியாகும். நீங்கள் உங்களுடைய மனம், சரீரம், செல்வம் ஆகியவற்றைக் காப்புறுதி செய்யும்போது, எல்லையற்ற செல்வத்தை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் என்றும் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள். நீங்கள் உங்களை நேரடியாகக் காப்புறுதி செய்கின்றீர்கள். மனிதர்கள் கடவுளின் பெயரால் தானம் செய்கின்றார்கள். ஏனெனில் கடவுள் தமக்கு அதன் பலனைக் கொடுப்பார் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அவர் எவ்வாறு அதற்கான பலனைக் கொடுக்கின்றார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. தாங்கள் எதனைப் பெற்றாலும் அது கடவுளால் கொடுக்கப்பட்டது என்றே மக்கள் நினைக்கின்றார்கள். கடவுள் தமக்குக் குழந்தை ஒன்றைக் கொடுத்தார். நல்லது, கடவுள் அவர்களுக்குக் குழந்தையைக் கொடுத்திருந்தால், அவரால் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் அனைவரும் நிச்சயமாக மரணிக்க வேண்டும். எதுவும் உங்களுடன் வருவதில்லை. உங்கள் சரீரங்களும் முடிவடைந்து விடும். எனவே, உங்களுக்கு எது வேண்டுமோ அதனை இப்பொழுதே காப்புறுதி செய்து கொள்ளுங்கள். அப்போது, அது 21 பிறவிகளுக்குக் காப்புறுதி செய்யப்படும். நீங்கள் அனைத்தையும் காப்புறுதி செய்து விட்டு, சேவை செய்யாது, இங்கு தொடர்ந்து உண்ணலாம் என்பதல்ல. நீங்கள் சேவை செய்ய வேண்டும். உங்களின் சொந்தச் செலவுகளும் தொடர்கின்றன. நீங்கள் அனைத்தையும் காப்புறுதி செய்துவிட்டு, தொடர்ந்து இங்கு உண்டு வந்தால், நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள். நீங்கள் சேவை செய்யும்பொழுதே எதையாவது பெறுவீர்கள். அப்பொழுதே உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியும். எவ்வளவு அதிகமாகச் சேவை செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகப் பெறுவீர்கள். குறைந்தளவு சேவை செய்தால், குறைவாகவே பெறுவீர்கள். அரசாங்க சமூக சேவையாளர்களும் வரிசைக்கிரமமானவர்களே. அவர்களுக்குப் பல முக்கிய தலைவர்கள் இருப்பார்கள். பல வகையான சமூக சேவையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடையது பௌதீகமான சேவை, உங்களுடையதோ ஆன்மீக சேவையாகும். நீங்கள் அனைவரையும் யாத்திரீகர்கள் ஆக்குகின்றீர்கள். இதுவே உங்களைத் தந்தையிடம் அழைத்துச் செல்வதற்கான ஓர் ஆன்மீக யாத்திரை. தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்கள் சரீரம், சரீர உறவுகள், குருமார்கள் போன்றவர்களின் உணர்வைத் துறந்து, என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை, அசரீரியானவர். அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகப் பௌதீக வடிவத்தை எடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் இச்சரீரத்தைக் கடனாக எடுக்கின்றேன். நான் சடப்பொருளின் ஆதாரத்தை எடுக்கின்றேன். நிர்வாணமாக வந்த நீங்கள் அனைவரும்;, இப்பொழுது வீடு திரும்பிச் செல்ல வேண்டும். மரணம் சற்று முன்னாலேயே இருக்கின்றதெனச் சகல மதங்களைச் சேர்ந்த ஆத்மாக்களுக்கும் அவர் கூறுகின்றார். யாதவர்களும் கௌரவர்களும் அழிக்கப்பட்டு, பாண்டவர்கள் தமது இராச்சியத்தை மீண்டும் ஆட்சிபுரிவதற்கு வருவார்கள். கீதையின் அத்தியாயம் மீண்டும் ஒருமுறை இடம்பெறுகின்றது. பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. 84 பிறவிகளை எடுக்கும்பொழுதே, இந்த உலகம் பழையதாகி விடும். இப்பொழுது நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளையும் பூர்த்தி செய்து விட்டீர்கள். நாடகம் முடிவடையவுள்ளது. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் எங்கள் சரீரங்களை நீக்கிவிட்டு, வீடு திரும்புவோம். நாங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதை ஒருவருக்கொருவர் நினைவூட்டுங்கள். நாங்கள் 84 பிறவிகளுக்குரிய இப் பாகங்களை எண்ணற்ற முறைகள் நடித்திருக்கின்றோம். இந்நாடகம் அநாதியாக உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது சொந்த மதப் பிரிவிற்குத் திரும்ப வேண்டும். மறைந்துவிட்ட தேவ தர்மத்தின் மரக்கன்;று இப்பொழுது நாட்டப்படுகின்றது. மலர்களாக இருந்தவர்கள் மீண்டும் வருவார்கள். பல நல்ல மலர்கள் வருகின்றார்கள். ஆனால், மாயையின் புயல்களால் அவர்கள் விழுந்துவிடுகின்றார்கள். அதன்பின்னர், ஞானமெனும் உயிர்கொடுக்கும் மூலிகையைப் பெறுவதன் மூலம், அவர்கள் மீண்டும் எழுந்து நிற்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றீர்கள். இவருக்கும் குரு போன்றவர்கள் இருந்தார்கள். ஒரேயொருவரே குருமார்கள் உட்பட அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். ஒரு விநாடியில் முக்தியும், ஜீவன்முக்தியும் உள்ளது. அரசர், அரசி இருப்பதனால், அது இல்லறப்பாதை ஆகுகின்றது. இது விகாரமற்ற இல்லறப் பாதையாக இருந்தது. ஆனால் அது இப்பொழுது முற்றிலும் விகாரமுடையதாகி விட்டது. இராவண இராச்சியம் அங்கு இருப்பதில்லை. அரைக் கல்பத்தின் பின்பே இராவண இராச்சியம் ஆரம்பமாகுகின்றது. பாரதமக்களே இராவணனால் தோற்கடிக்கப்படுகின்றார்கள். ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாகத் தமக்குரிய வேளையில் செல்கின்றார்கள். முதலில், அவர்கள் சந்தோஷத்தைக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் சந்தோஷமற்றவர்கள் ஆகுகின்றார்கள். முக்தியின் பின்னர், ஜீவன்முக்தி உள்ளது. இந்த வேளையில், அனைவரும் முற்றிலும் தூய்மையற்றவர்களாகவும், சீரழிந்தும் உள்ளனர். ஒவ்வொரு ஆத்மாவும் தனது சரீரத்தை விடுத்து இன்னொரு புதிய சரீரத்தை எடுக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் பிறப்பு, மறுபிறப்பு என்ற சக்கரத்திற்குள் வருவதில்லை. எவரும் எனது தந்தை ஆகமுடியாது. ஓவ்வொருவருக்கும் தந்தை ஒருவர் இருக்கின்றார். கிருஷ்ணரின் பிறப்பும் தாயின் கர்ப்பத்தினூடாகவே இடம்பெறுகின்றது. இந்த பிரம்மா ஓர் இராச்சியத்தைப் பெறும்போது கர்ப்பத்தினூடாகப் பிறப்பார். அவரே பழையதிலிருந்து புதியதாக வேண்டும். அவர் 84 வயதானவர். இது பெரும் கஷ்டத்தின் மத்தியிலேயே எவருடைய புத்தியிலும் மிகச்சரியாகத் தங்குவதுடன், அவர்கள் பெரும் போதையையும் கொண்டிருப்பார்கள். இந்த ஞானம் கஸ்தூரி போன்றது. அது மிகுந்த நறுமணமுடையது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் ஆன்மீக சமூக சேவையாளராகி, அனைவருக்கும் இந்த ஆன்மீக யாத்திரையைக் கற்பியுங்கள். உங்களுடைய தேவ தர்மத்தின் மரக்கன்றை நாட்டுங்கள்.
2. தந்தையை வெளிப்படுத்துவதற்கு உங்கள் சீரான புத்தியை உபயோகியுங்கள். முதலில் நீங்கள் அனைத்தையும் கிரகித்து, பின்னர் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அமரத்துவ ஞானத்தைக் கொடுப்பதன் மூலம் அகால மரணத்தின் பயத்திலிருந்து அவர்களை விடுதலை செய்யும் சக்திவாய்ந்த சேவகர் ஆகுவீர்களாக.
உலகெங்கும் உள்ள மக்கள் அகால மரணத்தையிட்டுப் பயப்படுகின்றார்கள். அவர்கள் பயத்துடனேயே உண்கின்றார்கள், பயத்துடனேயே நடமாடுகின்றார்கள். அவர்கள் பயத்துடனேயே உறங்குகின்றார்கள். அத்தகைய ஆத்மாக்களுக்குச் சந்தோஷமான எதையயாவது கூறி, அவர்களைப் பயத்திலிருந்து விடுதலை செய்யுங்கள். அவர்களை 21 பிறவிகளுககு அகால மரணத்திலிருந்து உங்களால் பாதுகாக்க முடியும் எனும் நல்ல செய்தியை அவர்களுக்குக் கொடுங்கள். அமரத்துவ ஞானத்தைக் கொடுத்து, ஒவ்வோர் ஆத்மாவையும் அமரத்துவமானவர் ஆக்குங்கள். அந்த ஞானத்தினால் அவர்கள் பிறவிபிறவியாக அகால மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். உங்கள் அமைதி, சந்தோஷத்தின் அதிர்வலைகளினால் அனைவருக்கும் சந்தோஷத்தினதும் சௌகரியத்தினதும் அனுபவத்தைக் கொடுக்கின்ற, சக்திவாய்ந்த சேவகர்கள் ஆகுங்கள்.
சுலோகம்:
நினைவினதும் சேவையினதும் சமநிலையைப் பேணும்பொழுதே நீங்கள் அனைவரினதும் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.