02.11.2018        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, மனிதர்களைத் தேவர்களாக மாற்றும் சேவையில் நிச்சயமாகத் தடைகள் இருக்கவே செய்யும். நீங்கள் அனைத்துச் சிரமங்களையும் சகித்துக்கொண்டு சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். நீங்கள் கருணை நிறைந்தவர்கள் ஆகவேண்டும்.

கேள்வி:
தமது இறுதிப் பிறவியின் விழிப்புணர்வில் இருப்பவர்களின் அடையாளங்கள் யாவை?

பதில்:
இவ்வுலகில் தாம் இன்னொரு பிறவி எடுக்கப்போவதும் இல்லை, எவருக்கும் பிறப்பு கொடுக்கப்போவதும் இல்லை என்ற விழிப்புணர்வு அவர்களின் புத்தியில் இருக்கும். இது பாவாத்மாக்களின் உலகமாகும். நாங்கள் அதனை மேலும் அதிகரிக்க விரும்பவில்லை. இது அழிக்கப்பட வேண்டும். நாங்கள் இப்பழைய ஆடையைக் களைந்து எங்கள் வீட்டிற்குத் திரும்பவும் செல்வோம். நாடகம் இப்பொழுது முடிவடைகின்றது.

பாடல்:
புதிய யுகத்தின் மொட்டுக்கள்.

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரது ஒளியையும் ஏற்றவேண்டும். இது உங்கள் புத்தியில் உள்ளது. மனிதர்கள் அனைவருக்கும் முக்திக்கான பாதையைக் காட்ட வேண்டும் என்ற எல்லையற்ற எண்ணத்தைத் தந்தையும் கொண்டுள்ளார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்து, உங்களைத் துன்பத்திலிருந்து விடுதலை செய்யவே வந்துள்ளார். இது துன்ப உலகம் என்பதையும், சந்தோஷத்திற்கான ஓர் இடம் இருக்க வேண்டும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு இது தெரியாது. சமயநூல்களில், அவர்கள் சந்தோஷத்திற்கான இடத்தைத் துன்பத்திற்கான இடமாக ஆக்கியுள்ளார்கள். தந்தை கருணை நிறைந்தவர். மக்கள் தாங்கள் சந்தோஷத்தை இழந்துள்ளோம் என்பதைக்கூட அறியாதுள்ளார்கள். ஏனெனில், அவர்களுக்குச் சந்தோஷத்தைப் பற்றியோ அந்தச் சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒருவரைப் பற்றியோ தெரியாது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குச் சந்தோஷம் என்றால் என்ன, துன்பம் என்றால் என்ன என்பது பற்றித் தெரியாது. கடவுளைப் பற்றி கூறும்போது, அந்த ஒரேயொருவரே சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுப்பவர் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதாவது அவரை அவதூறு செய்கிறார்கள். அவர்களுக்குத் தாம் தந்தை என்று அழைக்கின்ற ஒரேயொருவரான கடவுளைத் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷத்தை மாத்திரமே கொடுக்கின்றேன். பாபா, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கவே இப்பொழுது வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் கூறுகிறார்: நான் அனைவரையும் இனிய வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். அந்த இனிய வீடும் தூய்மையானதே. எந்தத் தூய்மையற்ற ஆத்மாக்களும் அங்கிருப்பதில்லை. எவருக்கும் அந்த இடத்தைத் தெரியாது. அவர்கள் கூறுகிறார்கள்: இன்ன இன்னார் நிர்வாணா உலகிற்கு அப்பால் சென்றுவிட்டார், ஆனால் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. புத்தர் நிர்வாண உலகிற்குச் சென்றிருந்தால், அவர் நிச்சயமாக அவ்வுலக வாசியாகவே இருக்க வேண்டும். ஆகையாலேயே அவர் அவ்வுலகிற்குச் சென்றுள்ளார். நல்லது, அவர் சென்றுவிட்டார், ஆனால் பிறர் எவ்வாறு அங்கு செல்வது? அவர் எவரையும் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. உண்மையில், அவர் அங்கு செல்லவில்லை என்பதாலேயே அனைவரும் தூய்மையாக்குபவரான தந்தையை நினைவுசெய்கின்றார்கள். தூய உலகங்கள் இரண்டு உள்ளன: ஒன்று முக்திக்கான உலகம், மற்றையது ஜீவன்முக்திக்கான உலகமாகும். சிவனின் உலகமும் விஷ்ணுவின் உலகமும் உள்ளது, இதுவோ இராவணனின் உலகமாகும். பரமாத்மா பரமதந்தை இராமர் என்றும் அழைக்கப்படுகின்றார். ‘இராம இராச்சியம்’ என்று அழைக்கப்படும்போது, உங்கள் புத்தி கடவுளை நோக்கிச் செல்கின்றது. ஒரு மனிதரைக் கடவுள் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றில்லை. எனவே அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும். நீங்கள் சிரமங்களைச் சகித்துக்கொள்ள வேண்டும். பாபா கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற இந்த ஞான யாகத்திற்குப் பல தடைகள் ஏற்படும். கீதையின் கடவுளுமே அவமானங்களைச் சந்திக்க வேண்டி இருக்கின்றது. இவரும் நீங்களும் அவமதிக்கப்படுகின்றீர்கள். ‘இவர் நாலாம் பிறையில், சந்திரனைக் கண்டார்’ என்றெல்லாம் அவர்கள் கூறுகின்றார்கள். அவை யாவும் கட்டுக் கதைகள். உலகில் அதிகளவு அழுக்கு நிறைந்துள்ளது. மக்கள் உண்ணுகின்ற உணவைப் பாருங்கள். அவர்கள் மிருகங்களைக் கூடக் கொலை செய்கின்றார்கள். அவர்கள் செய்கின்ற செயல்களைப் பாருங்கள். தந்தை வந்து உங்களை அவை அனைத்திலிருந்தும் விடுதலை செய்கின்றார். உலகில் அதிகளவு வன்முறை இடம்பெறுகின்றது. தந்தை அனைத்தையும் உங்களுக்கு இலகுவாக்கியுள்ளார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஒரேயொரு விடயத்தை மாத்திரம் நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்தினால் போதும். தந்தை கூறுகின்றார்: உங்கள் அமைதி தாமத்தையும், உங்கள் சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். அதுவே உங்கள் ஆதி வசிப்பிடம். சந்நியாசிகளும் அவ்விடத்திற்கான பாதையையே காட்டுகின்றார்கள். ஒருவர் நிர்வாண உலகிற்குச் செல்வாராயின், அவரால் எவ்வாறு பிறரையும் அங்கே அழைத்துச் செல்ல முடியும்? அவர்களை அங்கே அழைத்துச் செல்வது யார்? உதாரணத்திற்கு, புத்தர் நிர்வாண உலகிற்குச் சென்றிருப்பாராயின், அவரைப் பின்பற்றுபவர்களான பௌத்தர்கள், இங்கேயே அமர்ந்துள்ளார்கள். அவர்களையும் அவர் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். தூதுவர்களான ஆத்மாக்கள் இங்கேயே உள்ளனர் என்றே நினைவுகூரப்படுகின்றது. அதாவது, அவர்கள் ஏதோ ஒரு சரீரத்தில் அல்லது இன்னொன்றில் உள்ளார்களாயினும் மக்கள் தொடர்ந்தும் அவர்களின் புகழைப் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். நல்லது, அவர்கள் ஒரு மதத்தை ஸ்தாபித்த பின்னர் சென்றுவிட்டனர். அவ்வாறாயின், அதன்பின்னர் என்ன நடந்தது? மக்கள் முக்தி அடைவதற்காக அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். பாபா உங்களுக்கு மந்திரம் ஓதுதல், தபஸ்யா செய்தல், யாத்திரை செல்லுதல் போன்றவற்றைக் கற்பிக்கவில்லை. தந்தை கூறுகின்றார்: நான் அனைவருக்கும் முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருளவே வருகின்றேன். நான் அனைவரையும் என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். சத்தியயுகத்தில் ஜீவன்முக்தி உள்ளது. அங்கே ஒரேயொரு தர்மம் மாத்திரமே உள்ளது. அவர் ஆத்மாக்கள் அனைவரையும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். பாபாவே பூந்தோட்டத்தின் அதிபதி, நாங்கள் அனைவரும் பூந்தோட்டக்காரர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பூந்தோட்டக்காரர்களாக, மம்மாவும் பாபாவும், குழந்தைகள் அனைவரும் தொடர்ந்தும் விதைகளை விதைக்கின்றார்கள். நீங்கள் விதைகளை விதைக்கின்றீர்கள். மரக்கன்;று தோன்றுகின்றது, பின்னர் மாயை என்ற புயல் அவற்றைத் தாக்குகின்றது. பல வகையான புயல்கள் அவற்றைத் தாக்குகின்றன. அவை மாயையின் தடைகள் ஆகும். புயல் வீசும்போது, நீங்கள் வினவவேண்டும்: பாபா, நான் இதற்கு என்ன செய்யலாம்? தந்தை உங்களுக்குச் ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். புயல் வீசும்;. சரீர உணர்வே முதல் இலக்கத்தைக் கொண்டதாகும். ‘ஆத்மாவாகிய நான் அழிவற்றவர், சரீரமோ அழியக்கூடியது’ என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நாங்கள் இப்பொழுது எங்களது 84 பிறவிகளை நிறைவுசெய்துள்ளோம். ஆத்மாவே மீண்டும் பிறப்பெடுக்கின்றார். ஒரு சரீரத்தை விட்டு, மீண்டும் மீண்டும் வேறொன்றை, எடுப்பது ஆத்மாவின் வேலையாகும். தந்தை கூறுகின்றார்: இது உங்களின் இறுதிப் பிறவியாகும். நீங்கள் இவ்வுலகில் இன்னொரு பிறப்பு எடுக்கப் போவதும் இல்லை, எவருக்கும் பிறப்பு கொடுக்கப்போவதும் இல்லை. சிலர் வினவுகின்றார்கள்: அவ்வாறாயின், இவ்வுலகம் எவ்வாறு தொடரும்? ஓ, இந்நேரத்தில் இவ்வுலகம் இனிமேலும் தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை. அது சீரழிவின் அதிகரிப்பாகும். இராவணன் வந்த நாள் முதல் நடைமுறை தொடர்ந்துள்ளது. இராவணனே உலகைச் சீரழித்துள்ளான். இராமர் அதனை மேன்மையடையச் செய்கின்றார். அதற்கும் நீங்கள் அதிகளவு முயற்சி செய்யவேண்டும். நீங்கள் தொடர்ந்தும் சரீர உணர்வுடையவர் ஆகுகின்றீர்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகாதிருந்தால், உங்களை நீங்கள் ஆத்மாவென கருதுவீர்கள். சத்தியயுகத்தில், அவர்கள் தங்களை ஆத்மாக்களென்றே கருதுகின்றார்கள். தமது சரீரங்கள் இப்பொழுது பழையதாகி விட்டன அவற்றை நீக்கித் தாம் இன்னொன்றை எடுப்போம் என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள். இங்கே, அவர்களுக்கு ஆத்மா என்ற ஞானமே இல்லை. அவர்கள் சரீரங்கள் என்றே தம்மைக் கருதுகின்றார்கள். சந்தோஷம் அற்றிருப்பவர்கள் இவ்வுலகை விட்டுச் செல்ல விரும்புகின்றார்கள். அங்கே, சந்தோஷம் மாத்திரமே உள்ளது. ஆனால் அங்கே அவர்களுக்கு ஆத்மாவைப் பற்றிய ஞானம் உள்ளது. அவர்கள் ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுப்பதால், அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை. அதுவே சந்தோஷம் என்ற வெகுமதியாகும். இங்கும், அவர்கள் ஆத்மாவெனப் பேசிய போதிலும் சிலரோ ஆத்மாவே பரமாத்மா என்றும் கூறுகின்றார்கள். அவர்களுக்கு ஆத்மா என்று ஒன்றுள்ளது என்ற ஞானம் உள்ளது. ஆனால் தமது பாகத்தை விட்டு, தாம் திரும்பிச் செல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் நிச்சயமாக ஒரு சரீரத்தை விட்டு இன்னொன்றை எடுக்க வேண்டும். அனைவரும் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அனைவரும் தத்தமது செயல்களுக்காக வருந்துகின்றார்கள். மாயையின் இராச்சியத்தில், செயல்கள் எப்பொழுதும் பாவகரமானவையாகவே உள்ளன. எனவே அவர்கள் தொடர்ந்தும் தமது செயல்களுக்காக வருந்துகிறார்கள். அங்கே பின்னர் வருந்தும்படியான எச்செயலையும் நீங்கள் செய்யமாட்டீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதையும், விநாசம் இடம்பெற வேண்டும் என்பதையும் புரிந்துகொள்;கின்றீர்கள். அவர்கள் இன்னமும் குண்டுகளைப் பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கோபத்தில் அவர்கள் குண்டுகளினால் தாக்குவார்கள். அவை மிகவும் சக்திவாய்ந்த குண்டுகளாகும். ஜரோப்பாவைச் சேர்ந்த யாதவர்கள் நினைவுகூரப்பட்டுள்ளார்கள். நாங்கள் சமயங்கள் அனைத்தையும் சேர்ந்தவர்களை ஜரோப்பியர் என்றே அழைக்கின்றோம். ஒருபுறம் பாரதம் உள்ளது, ஏனைய அனைவரையும் அவர்கள் கலந்துள்ளார்கள். அவர்கள் தத்தமது சொந்த நாட்டை அதிகளவு நேசிக்கின்றார்கள். எவ்வாறாயினும், நியதி அவ்வாறாயின், யாரால் என்ன செய்ய முடியும்? பாபா உங்களுக்கு அனைத்து சக்தியையும் கொடுத்துள்ளார். நீங்கள் யோகசக்தியினால் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். பாபா எச்சிரமத்தையும் கொடுப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்து சரீர உணர்வைத் துறந்திடுங்கள். சிலர் கூறுகின்றார்கள்: நான் இராமரை அல்லது ஸ்ரீகிருஷ்ணரை நினைவுசெய்கின்றேன். அந்நேரத்தில் அவர்கள் தம்மை ஆத்மாக்கள் என்று கருதுவதில்லை. அவர்கள் தம்மை ஆத்மாக்கள் என்று கருதுவார்களாயின், அவர்கள் ஏன் ஆத்மாக்களின் தந்தையை நினைவுசெய்வதில்லை? தந்தை கூறுகின்றார்: பரமாத்மா பரமதந்தையான என்னை நினைவுசெய்யுங்கள். மனிதர்களை ஏன் நினைவுசெய்கின்றீர்கள்? நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். நான் ஓர் ஆத்மா, நான் தந்தையை நினைவுசெய்கின்றேன். தந்தை உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளார் - என்னை நினைவுசெய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுடன், ஆஸ்தியும் உங்கள் புத்திக்குள் பிரவேசிக்கும்: தந்தையும் சொத்தும், அதாவது, முக்தியும் ஜீவன்முக்தியுமாகும். மக்கள் இதற்காகவே அதிகளவு அலைந்து திரிகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் யாகம் செய்தல், தபஸ்யா செய்தல், மந்திரம் ஓதுதல் போன்றவற்றைச் செய்கின்றார்கள். அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு போப்பாண்டவரை நாடிச் செல்கின்றார்கள். இங்கே, தந்தை உங்களைச் சரீர உணர்வைத் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவென்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள் என்றே கூறுகின்றார். இந்நாடகம் முடிவடைகிறது. எங்கள் 84 பிறவிகளும் முடிவடைகின்றன. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். உங்களுக்கு பாபா அதனை மிகவும் இலகுவாக விளங்கப்படுத்தியுள்ளார். குடும்பத்துடன் வீட்டில் வாழும்போதும், இதனை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். ஒரு நாடகம் முடிவடையும்போது, இன்னமும் 15 நிமிடங்களே உள்ளன என்றும், இக்காட்சி முடிவடையப் போகின்றது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். நடிகர்கள் தாம் தமது ஆடைகளைக் களைந்து வீட்டிற்குத் திரும்புவோம் என்பதைப் புரிந்துகொள்;கின்றார்கள். அனைவருமே இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இவ் விடயங்களைப் பற்றி நீங்கள் உங்களுடனேயே பேச வேண்டும். நீங்கள் சந்தோஷமும் துன்பமும் நிறைந்த உங்கள் பாகத்தை எவ்வளவு காலத்திற்கு நடித்திருக்கின்றீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். உலகில் நடக்கின்ற ஏனைய அனைத்தையும் மறந்துவிடுங்கள். அவை அனைத்தும் அழிக்கப்பட உள்ளன. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். கலியுகம் இன்னமும் நாற்பதாயிரம் வருடங்களுக்குத் தொடர்ந்திருக்கும் என்று மக்கள் நம்புகின்றார்கள். அது காரிருள் என்று அழைக்கப்படுகின்றது. அவர்களுக்குத் தந்தையின் அறிமுகம் இல்லை. தந்தையின் அறிமுகத்தைக் கொண்டிருப்பது ஞானமாகும், அறிமுகம் இல்லாவிடில் அறியாமையாகும். எனவே, அவர்கள் காரிருளில் உள்ளார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். இப்பொழுது நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ப, நீங்கள் பேரொளியில், வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்கள். இரவு முடிவடைய உள்ளது, நாங்கள் வீடு திரும்ப உள்ளோம். இப்பொழுது இது பிரம்மாவின் இரவும், நாளை பிரம்மாவின் பகலும் காணப்படும். அம் மாற்றத்திற்குக் காலம் எடுக்கும். நாங்கள் இப்பொழுது மரண உலகில் உள்ளோம் என்பதையும், நாளை அமரத்துவ உலகில் இருப்போம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எல்லாவற்றிற்கும் முதலில் நாம் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். இவ்வாறாக 84 பிறவிச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. அது சுழல்வதை நிறுத்துவதே இல்லை. பாபா கூறுகின்றார்: நீங்கள் எத்தனை தடவைகள் என்னைச் சந்தித்துள்ளீர்கள்? குழந்தைகள் தாம் பல தடவைகள் சந்தித்துள்ளோம் என்று கூறுவார்கள். உங்கள் 84 பிறவிச் சக்கரம் நிறைவு பெறுவதோடு, ஏனைய அனைவருக்கும் சக்கரம் நிறைவு பெறும். இது ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. தூய்மையாக்குபவரும், ஞானக்கடலுமான பரமாத்மா பரமதந்தையே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் வினவலாம்: தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுபவர் யார்? அசரீரியான ஒரேயொருவரே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். அவ்வாறாயின் நீங்கள் ஏன் ‘இரகுவின் பிரபு அரசன் இராமரே’ என்று கூறுகின்றீர்கள்? அசரீரியானவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவார். இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதற்கு அதிகளவு சாதுரி;யம் தேவை. நீங்கள் ஆழமான ஞானத்தைத் தொடர்ந்தும் பெறுவதால், நாளுக்கு நாள் தொடர்ந்தும் முன்னேறுவீர்கள். அல்பா என்ற விடயத்தையே விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அல்பாவை மறந்தால், அநாதைகள் ஆகுவதுடன், தொடர்ந்தும் துன்பப்படுவீர்கள். ஒரேயொருவரிடமிருந்து, ஒரேயொருவரைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம், நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷமடைகின்றீர்கள். இது ஞானமாகும், கடவுள் சர்வவியாபகர் என்று கூறுவது அறியாமையாகும். ஓ, ஆனால் அவரே தந்தையாவார். தந்தை கூறுகின்றார்: உங்களுக்குள் இருக்கும் தீய சக்திகளே சர்வவியாபியாகும். ஐந்து விகாரங்கள் என்ற வடிவிலுள்ள இராவணனே எங்கும் வியாபித்துள்ளான். இவ்விடயங்களை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் கடவுளின் மடியில் இருப்பதையிட்டு அதிகளவு போதை கொண்டிருக்க வேண்டும். அதன் பின்னர், எதிர்காலத்தில், நீங்கள் தேவர்களின் மடிக்குச் செல்வீர்கள். அங்கே சதா சந்தோஷம் நிலவும். சிவபாபா எங்களைத் தத்தெடுத்துள்ளார். நாங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் உங்களுக்கும் பிறருக்கும் நன்மையை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது நீங்கள் இராச்சியத்தைப் பெறுவீர்கள். இவை புரிந்துகொள்வதற்கு மிகவும் நல்ல விடயங்களாகும். சிவபாபா அசரீரியானவர், ஆத்மாக்களாகிய நாங்களும் அசரீரியானவர்கள். நாங்கள் அங்கே சரீரமற்றவர்களாக இருந்தோம். பாபா எப்பொழுதும் சரீரமற்றவராகவே உள்ளார். பாபா சரீரம் என்ற ஆடையை என்றுமே அணிவதில்லை, மறு பிறப்பெடுப்பதும் இல்லை. பாபா ஒருமுறை மாத்திரமே அவதாரம் எடுக்கின்றார். அவர் முதலில் பிரம்மாவைப் படைக்கின்றார். ஆகையால் அவர் இவரைத் தனக்குச் சொந்தமாக்கி, அவருக்கு வேறொரு பெயரையும் கொடுக்கின்றார். பிரம்மா இல்லாதிருந்தால், பிராமணர்கள் எங்கிருந்து வருவார்கள்? எனவே, இவரே முழு 84 பிறவிகளையும் எடுத்தவராவார். அவரே அழகாக இருந்து பின்னர் அவலட்சணமானவர் ஆகுகிறார். அவர் சுந்தரிலிருந்து சியாமாகவும், பின்னர் சியாமிலிருந்து சுந்தராகவும் ஆகுகின்றார். பாரதத்தையும் நாங்கள் ‘சியாம் - சுந்தர்’ என்று அழைக்கலாம். பாரதம் சியாம் என்றும், பாரதம் சத்தியயுகத்தைச் சேர்ந்த சுந்தர் (அழகானது) என்றும் அழைக்கப்படுகின்றது. பாரதமே காமச் சிதையில் அமர்ந்து அவலட்சணம் ஆகுகின்றது. பாரதம் ஞானச் சிதையில் அமர்ந்து, அழகானது ஆகுகின்றது. பாபா பாரதத்தையிட்டு அதிகளவு பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. பாரதமக்கள் ஏனைய மதங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். ஜரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் புலப்படக்கூடிய வித்தியாசம் இல்லை. அவர்கள் (இந்தியர்கள்) வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே திருமணம் செய்யும்போது அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு அந்த முகச்சாயலே உள்ளது. சிலர் ஆபிரிக்காவிற்குச் சென்றும் திருமணம் செய்கின்றார்கள். பாபா சக்கரத்தைப் புரிந்துகொள்வதற்காக உங்களுக்கு இப்பொழுது பரந்த எல்லையற்ற புத்தியைக் கொடுக்கின்றார். விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. யாதவர்களுக்கும் கௌரவர்களுக்கும் அன்பு இல்லை. அன்புள்ள புத்தியைக் கொண்டிருந்தவர்கள் வெற்றியாளர்கள் ஆவார்கள். அன்பற்ற புத்தியை உடையவர்கள் எதிரிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இந்நேரத்தில், அனைவருமே ஒருவருக்கொருவர் எதிரிகள். அவர்கள் தந்தையைச் சர்வவியாபகரெனக் கூறி, இவ்வாறாக அவரை அவதூறு செய்கின்றார்கள். அல்லது அவர் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவர் என்றும், அவருக்குப் பெயரோ வடிவமோ இல்லை என்றும் கூறுகின்றார்கள். இருப்பினும் அவர்கள் ‘ஓ தந்தையான கடவுளே!’ என்று கூறுகின்றார்கள். அவர்கள் ஆத்மாவினதும், பரமாத்மாவினதும் காட்சிகளையும் காண்கின்றார்கள். ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை, எனினும் சக்தியில் குறைவாகவும் கூடுதலாகவும் வரிசைக்கிரமமாக உள்ளது. மனிதர்கள் மனிதர்களே. அவர்களுக்கான அந்தஸ்;தும் உள்ளது. அவர்களின் புத்தியில் வேறுபாடு உள்ளது. ஞானக்கடல் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். ஆகையாலேயே நீங்கள் அவரை நினைவுசெய்கின்றீர்கள். உங்களது அந்த ஸ்திதி இறுதியில் உருவாக்கப்படும். அமிர்தவேளையின் போது, தந்தையை நினைவுசெய்து, சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள். நீங்கள் படுத்திருக்கலாம், ஆனால் நீங்கள் தூங்கிவிடக்கூடாது. நீங்கள் சுயதிடசங்கல்பத்துடன் அமர வேண்டும். இதற்கு முயற்சி தேவை. அமிர்தவேளையில் மூலிகை வைத்தியர் மருந்து கொடுக்கின்றார். இதுவும் ஒரு மருந்தாகும். படைப்பவரான தந்தை, பிரம்மாவின் மூலமாக, பிராமணர்களை உருவாக்கி அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பிக்கின்றார். அனைவருக்கும் இதனை விளங்கப்படுத்துங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. நீங்கள் கடவுளின் மடிக்கு வந்துள்ளீர்கள், பின்னர் தேவர்களின் மடிக்குச் செல்வீர்கள் என்ற ஆன்மீகப் போதையைப் பேணுங்கள். உங்களுக்கும் பிறருக்கும் நன்மையை ஏற்படுத்துங்கள்.

2. அமிர்தவேளையில் எழுந்து ஞானக்கடலைக் கடையுங்கள். ஒரேயொருவரின் கலப்படமற்ற நினைவில் நிலைத்திருங்கள். சரீர உணர்வைத் துறந்து, நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆத்மாக்கள் அனைவருடனும் தொடர்புகள், உறவுமுறைகளைக் கொண்டிருக்கும்போது, கேள்விகள் அனைத்திற்கும் அப்பால் இருந்து எப்பொழுதும் இதயத்தைச் சந்தோஷமாக வைத்திருப்பீர்களாக.

ஆத்மாக்கள் அனைவருடனும் தொடர்புகள், உறவுமுறைகளைக் கொண்டிருக்கும்போது, கேள்விகள் எதுவும் இல்லாதிருக்கட்டும். இவர் ஏன் இவ்வாறு செய்கின்றார் அல்லது இவர் ஏன் இவ்வாறு பேசுகின்றார் அல்லது இது இவ்வாறு இருக்கக்கூடாது, ஆனால் அவ்வாறு இருக்க வேண்டும். இவ்வாறான கேள்விகளை அகற்றுபவர்கள் எப்பொழுதும் சந்தோஷமான இதயத்துடன் இருப்பார்கள். எவ்வாறாயினும் கேள்விகளின் ஒரு வரிசையை உருவாக்குபவர்கள் ஒரு படைப்பையும் உருவாக்குகின்றார்கள்;. பின்னர் அவற்றைப் பராமரிக்கவும் வேண்டும். அதற்கு அவர்கள் தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழிக்க வேண்டும். ஆகவே இப்பொழுது இந்த வீணான படைப்பின் பிறப்பைக் கட்டுப்படுத்துங்கள்.

சுலோகம்:
புள்ளியாகிய தந்தையை உங்கள் கண்களில் அமிழ்த்துங்கள். அப்பொழுது வேறெவராலும் அதற்குள் அமிழ்ந்திருக்க முடியாது.