20/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இறுதியில் நீங்கள் ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரையுமே நினைவு செய்யாத வகையில் அத்தகைய பயிற்சியைக் கொண்டிருங்கள்.
கேள்வி:
எந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் பாக்கியசாலிகளாக ஆகமுடியும்?
பதில்:
தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, உறக்கத்தை வென்றவராகுங்கள். அதிகாலை நேரமே மிகவும் சிறந்ததாகும். அந்நேரத்தில் எழுந்திருந்து, உங்களது தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் மிகவும் பாக்கியசாலி ஆகுவீர்கள். நீங்கள் அதிகாலையில் எழுந்திராமலும், பின்னர் உறக்கத்தில் இருப்பதாலும் உங்களுக்கு இழப்பே ஏற்படுகின்றது. வெறுமனே உறங்குவதும், உண்பதும் என்றால், இழத்தல் என்பதாகும். எனவே, அதிகாலையில் எழுந்திருக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பாடல்:
நீங்கள் இரவை உறக்கத்திலும் பகலை உண்பதிலும் கழித்தீர்கள்....
ஓம் சாந்தி.
இக்கதை குழந்தைகளாகிய உங்களுக்கே ஆகும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உண்பதும், உறங்குவதும் உண்மையான வாழ்க்கையாகாது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தானமாகப் பெறுவதால், உங்களது புத்தி நிறைந்துவிடுகின்றது. எனவே. உறங்குவதும், உண்பதும் என்றால் இழத்தல் என்று அர்த்தமாகும். பக்தி மார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் அதிகாலையில் எழுவது அதிகளவு போற்றப்படுகிறது. ஏனெனில், அதிகாலை நேரத்தில் பெருமளவு அமைதி நிலவுகிறது. அனைத்து ஆத்மாக்களும் தங்களது ஆதி தர்மத்தில் இருப்பர். அவர்கள் சரீரமற்றவர்களாகி, ஓய்வில் இருப்பார்கள். அந்நேரத்தில் நீங்கள் அதிக நினைவைக் கொண்டிருக்கலாம். பகல் நேரத்தில், மாயையின்; குழப்பங்கள் அதிகமாக இருக்கும். எனவே, அந்நேரம்(காலை) மாத்திரமே சிறந்ததாகும். நாங்கள் இப்பொழுது சிப்பிகளிலிருந்து வைரங்களைப் போன்று ஆகுகின்றோம். தந்தை குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: நீங்கள் எனது குழந்தைகள், நான் உங்களது குழந்தை. எவ்வாறு தந்தை குழந்தையாக ஆகுகின்றார் என்பது புரிந்து கொள்ளப்படவேண்டிய விடயமாகும். தந்தை தனது குழந்தைகளுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். உண்மையில், நான் வியாபாரியே. சிப்பிப் பெறுமதியான உங்கள் சரீரமும், மனமும் ஒரு சதத்திற்கும் பெறுமதியற்றவை. நான் உங்களுடைய பழையவை அனைத்தையும் எடுத்து, மீண்டும் அவற்றை ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக நீங்கள் பராமரிப்பதற்காக அவை அனைத்தையும் மீண்டும் உங்களிடமே கொடுக்கின்றேன். நீங்கள் பிறவி பிறவியாகப் பாடினீர்கள்: நான் என்னை உங்களிடம் அர்ப்பணிப்பேன். நான் என்னைத் தியாகம் செய்வேன். என்னுடையவர் ஒருவரேயன்றி, வேறு எவரும் அல்ல. அனைவரும் மணவாட்டிகள் என்பதால், அவர்கள் ஒரேயொரு மணவாளனை நினைவு செய்கின்றார்கள். உங்கள் சரீத்தையும், சரீர உறவுகள் அனைத்தையும் மறந்துவிடுவதுடன், இறுதியில், உங்களது சரீரத்தையோ அல்லது வேறு எவரையோ நினைவு செய்யாதவகையில் ஒரேயொருவரது நினைவு மாத்திரம் இருக்கட்டும். நீங்கள் அத்தகைய பயிற்சியைக் கொண்டிருக்கவேண்டும். அதிகாலை நேரம் மிகவும் சிறந்தது. இது உங்களது உண்மையான யாத்திரையாகும். மக்கள் பிறவி பிறவியாக யாத்திரைகள் செல்கின்றார்களாயினும், அவர்கள் முக்தியைப் பெறவில்லை. எனவே அது பொய்யான யாத்திரையேயாகும். இதுவே முக்திக்கும், ஜீவன் முக்திக்குமான உண்மையான ஆன்மீக யாத்திரையாகும். மக்கள் யாத்திரைகளில் செல்லும்போது, அவர்கள் அமர்நாதரையும், பத்திரிநாதரையும் நினைவு செய்கின்றார்கள். அவர்கள் விசேடமாக நான்கு யாத்திரை ஸ்தலங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள். நீங்கள் எத்தனை யாத்திரை ஸ்தலங்களுக்குச் சென்றிருக்கின்றீர்கள்? எவ்வளவு பக்தியைச் செய்திருக்கின்றீர்கள்? நீங்கள் அரைக் கல்பமாக அதனைச் செய்துகொண்டிருந்தீர்கள். இவ்விடயங்களை எவருமே அறியமாட்டார்கள். தந்தை மாத்திரமே வந்து, உங்களை விடுவித்து, உங்களது வழிகாட்டியாகி, உங்களைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார். அவர் அத்தகையதோர் அற்புதமான வழிகாட்டியாவார். அவர் குழந்தைகளாகிய உங்களை முக்தி தாமத்திற்கும், ஜீவன் முக்தி தாமத்திற்கும் அழைத்துச் செல்கின்றார். வேறு எவராலுமே அத்தகைய வழிகாட்டியாக ஆகமுடியாது. சந்நியாசிகள் முக்தி தாமத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்களால் “ஜீவன் முக்தி”என்ற சொற்றொடரைப் பயன்படுத்த முடியாது. அவர்கள் அதனைக் காகத்தின் எச்சத்தைப் போன்று தற்காலிக சந்தோஷமே எனக் கருதுகின்றார்கள். தந்தையே துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஓ தாயும் தந்தையுமானவரே, நாங்கள் உங்களது குழந்தைகளாகும்போது, எங்கள் துன்பம் அனைத்தும் அகன்றுவிடுகின்றது. நாங்கள் அரைக் கல்பத்திற்கு சந்தோஷமுடையவர்களாக ஆகுகின்றோம். இது உங்களது புத்தியில் இருக்கின்றது, இல்லையா? எவ்வாறாயினும், நீங்கள் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடும்போது, இதனை மறந்துவிடுகின்றீர்கள். நீங்கள் அதிகாலையில் எழுவதில்லை. உறக்கத்தில் இருப்பவர்கள் இழந்துவிடுகின்றார்கள். நீங்கள் உண்மையில் வைரத்தைப் போன்றதொரு பிறவியை எடுத்திருப்பதை அறிவீர்கள். நீங்கள் இப்பொழுதும் எழுந்திருக்காவிடில், நீங்கள் அபாக்கியசாலிகள் என்பது புரிந்துகொள்ளப்படும். ஏனெனில், நீங்கள் அதிகாலையில் எழுந்;து, அதியன்பிற்கினிய தந்தையையும், மணவாளனையும் நினைவு செய்வதில்லை. அரைக்கல்பமாக மணவாளன் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தார். நீங்கள் தந்தையை கல்பம் முழுவதிலும் மறந்திருந்தீர்கள். பின்னர், பக்தி மார்க்கத்தில் நீங்கள் அவரை அன்பிற்கினியவராகவோ, அல்லது தந்தையாகவோ நினைவு செய்தீர்கள். மணவாட்டி மணவாளனை நினைவு செய்கின்றார். அவர் தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார். தந்தை இப்பொழுது உங்கள் முன் நேரடியாக உள்ளார், எனவே நீங்கள் அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாவிட்டால், வீழ்ந்துவிடுவீர்கள். ஸ்ரீமத் என்றால், சிவபாபாவின் வழிகாட்டல்கள் ஆகும். நீங்கள் கூறமுடியாது நாங்கள் யாருடைய வழிகாட்டல்களைப் பெறுகின்றோம் என்பது எங்களுக்குத் தெரியாது. லௌகீக முறையில் தந்தையே தனது குழந்தைகளுக்குப் பொறுப்பாக இருப்பதைப் போன்றே இவரது (பிரம்மா) வழிகாட்டல்களுக்கும் அவரே பொறுப்பானவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். “மகன் தந்தையை வெளிப்படுத்துகின்றார்”; பிரம்மாவின் இச்சரீரம் தந்தையை வெளிப்படுத்துகின்றது. அவர் மிகவும் அன்பான அன்பிற்கினிய குழந்தை. தாங்கள் யாருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றோம், அல்லது தங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுப்பவர் யார் என்பதை அறியாத மிகச் சிறந்த குழந்தைகள் பலர் இருக்கின்றனர். அவர்கள் பாபாவையும் நினைவு செய்வதில்லை. அவர்கள் அதிகாலையில் எழுந்து பாபாவை நினைவு செய்யாததால், அவர்களது பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. பாபா உங்களுக்குக் கூறுகின்றார்: நான் அதிக முயற்சி செய்கின்றேன், இருந்தும் கர்ம வேதனை இன்னமும் தொடர்கின்றது. ஏனெனில், இது இந்த ஒரு பிறவிக்கு மாத்திரமான கேள்வியல்ல. பல பிறவிகளின் கர்மக் கணக்குகள் உள்ளன. நீங்கள் வழிகாட்டலைப் பெற்றிருக்கின்றீர்கள்: இந்த ஒரு பிறவியில் நீங்கள் செய்த பாவங்களைப் பற்றி பாபாவிடம் கூறுவதால், அரைவாசி நீக்கப்படும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் பல பாவங்களைச் செய்திருக்கின்றீர்கள் என்பதை நானும், தர்மராஜூம் அறிவோம். தர்மராஜ் கருப்பை என்ற சிறையில் தண்டனை கொடுக்கின்றார். இப்பொழுது நீங்கள் முயற்சி செய்து உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டதும், மாளிகை போன்றதொரு கருப்பையைப் பெறுவீர்கள். மக்களைப் பாவங்களைச் செய்யவைத்து, அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்கச் செய்யும் மாயை அங்கே இருக்கமாட்டாள். அரைக் கல்பத்திற்கு இறை இராச்சியமும், அரைக் கல்பத்திற்கு இராவணனின் இராச்சியமும் உள்ளது. பாம்பின் உதாரணமும் இங்கிருந்தே வந்தது. சந்நியாசிகள் உங்களைப் பிரதி செய்துவிட்டார்கள் அதுபோன்றே பாபா ரீங்காரமிடுகின்ற வண்டின் உதாரணத்தையும் கொடுத்திருக்கின்றார். ரீங்காரமிடுகின்ற வண்டு எறும்புகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் செல்வதைப் போன்றே, நீங்களும் தூய்மையற்றவர்களை இங்கே அழைத்து வாருங்கள். பின்னர் நீங்கள் அவர்களைச் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாற்றவேண்டும். உங்களது பெயர் பிராமணி (பிராமண ஆசிரியர்) என்பதாகும். பிரம்மரியின் (ரீங்காரமிடும் வண்டு) இந்த உதாரணம் மிகவும் சிறந்தது. நடைமுறையில் பலர் இங்கே வருகின்றனர். சிலர் பலவீனமானவர்களாகவும், சிலர் சீர்கெட்டும் உள்ளனர். சிலர் இல்லாமலே போய்விட்டனர். மாயை பெரும் புயல்களைக் கொண்டுவருகின்றாள். உண்மையில், நீங்கள் ஒவ்வொருவருமே அனுமான்கள். மாயை எத்தனை புயல்களைக் கொண்டு வந்தாலும், நாங்கள் ஒருபோதும் பாபாவையோ, சுவர்க்கத்தையோ மறக்கவே மாட்டோம். பாபா எச்சரிக்கையாக இருக்குமாறு மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றார். மக்கள் யாத்திரைகளில் தடுமாறித் திரிந்தனர். இங்கே, நீங்கள் வேறு எங்கும் செல்வதில்லை. நீங்கள் தொடர்ந்து ஒரேயொரு தந்தையையும், சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யவேண்டும். உண்மையில் நீங்கள் வெற்றியாளராக ஆகுபவர்கள். இது புத்தி யோகத்தின் சக்தி எனவும், ஞானத்தின் சக்தி எனவும் அழைக்கப்படுகின்றது. தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் சக்தியைப் பெறுவதுடன், புத்தியின் பூட்டும் திறந்து கொள்கின்றது. ஒருவரது செயற்பாடு சட்டத்திற்கு முரணானதாயின், அவரது புத்தி பூட்டப்பட்டுவிடுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் அவ்வாறு ஏதாவது செய்தால், நாடகத்திற்கேற்ப, உங்களது புத்தி பூட்டப்பட்டுவிடும். விகாரத்தில் ஈடுபடாதிருங்கள் என எவருக்குமே உங்களால் கூறமுடியாது. உங்களது மனச்சாட்சி தொடர்ந்தும் உள்ளுக்குள் உறுத்திக்கொண்டேயிருக்கும்: நான் பல பாவங்களைச் செய்துவிட்டேன். அறியாமை மார்க்கத்திலும் உங்களது மனச்சாட்சி உறுத்துகின்றது. ஒருவர் மரணிக்கும்போது, அவர் விரக்திக் கூக்குரலிடுகின்றார். பின்னர், இறுதியில் அவரது பாவங்களனைத்தும் அவர் முன் தோன்றும். ஆத்மா கருப்பை என்ற சிறையில் பிரவேசித்தவுடனேயே தண்டனை ஆரம்பித்துவிடுகின்றது. அனைத்தும் இறுதியில் நிச்சயமாக நினைவு செய்யப்படும். எனவே, தந்தை இப்பொழுது கூறுகின்றார்: நீங்கள் விரக்திக் கூக்குரலிட வேண்டியதில்லை. நீங்கள் பாவம் செய்யக்கூடாது. சிறைப்பறவைகள் இருக்கின்றனர். நீங்களும் சிறைப் பறவைகளாகவே இருந்தீர்கள். பாபா இப்பொழுது உங்களைக் கருப்பை என்ற சிறையின் தண்டனையிலிருந்து விடுதலை செய்கின்றார். அவர் கூறுகின்றார்: உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்தால், நீங்கள் பாவங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டு தூய்மையாகுவீர்கள். பின்னர் நீங்கள் வீழ்ந்தால், நீங்கள் மோசமாகக் காயப்படுவீர்கள். முதலில், தூய்மையற்ற அகங்காரம் இருக்கின்றது. பின்னர் காமமும், கோபமும் இருக்கின்றன. காமமே மிகக் கொடிய எதிரியாகும். அது ஆரம்பத்திலிருந்து, மத்தியூடாக இறுதிவரைக்கும் உங்களுக்குத் துன்பத்தையே கொடுத்;தது. நீங்கள் ஆரம்பத்திலிருந்து, மத்தியூடாக இறுதிவரைக்கும் சந்தோஷத்தைப் பெறுவதற்காக முயற்சி செய்கின்றீர்கள். எனவே, நீங்கள் முழு முயற்சி எடுக்கவேண்டும். சிலர் தங்களால் அதிகாலையில் எழுந்திருக்க முடியாது எனக் கூறுகின்றனர். அந்நிலையில், அவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறமுடியாது. அவர்கள் பணிப்பெண்களாகவும், வேலைக்காரர்களாகவும் ஆகவேண்டும். அங்கே நீங்கள் பசுவின் சாணத்தை எடுக்க வேண்டியதில்லை. அங்கே தெருவைக் கூட்டுபவர்கள் போன்ற எவருமே இருக்கமாட்டார்கள். இப்பொழுதும், வெளிநாட்டவர்கள் வேலைக்காரர்களை வைத்திருப்பதில்லை. அனைத்தும் இயல்பாகவே சுத்தமாகுகின்றது. அங்கே, எந்த அழுக்குமே இல்லை, எனினும், சுடலையாண்டிகளும், பணிப்பெண்களும், வேலைக்காரர்களும் அங்கே இருப்பார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து இரகசியங்களையும் கூறுகின்றார். முழு இராச்சியமும் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இப்பொழுது நாடகத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். முதலில் இச்சக்கரத்தை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். திறப்புவிழாவிற்கு ஆளுநர் போன்றோரை அழையுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது: திறப்புவிழாவிற்கு முன்னர் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: பாரதம் மேன்மையானதாக இருந்தது, அது இப்பொழுது சீரழிந்ததாக ஆகிவிட்டது. பாரதத்தைச் சேர்ந்த, பூஜிக்கத் தகுதி வாய்ந்த தேவர்கள் பூஜிக்கின்ற மனிதர்களாகிவிட்டனர். நீங்கள் நிச்சயமாக அவர்களுக்கு இதனை விளங்கப்படுத்த வேண்டும். எனவே, நீங்கள் முழுச்சக்கரத்தினதும் இரகசியங்களைத் தங்களுக்கு விளங்கப்படுத்துவதாக அவர்களே கூறுவார்கள். இவ்விடயங்களை அறிந்தவர்கள் திரிகாலதரிசிகள் எனப்படுகின்றார்கள். ஒரு மனிதன் நாடகத்தைப் பற்றி அறிந்திராவிடில், அவரால் என்ன பயன்? பிரம்ம குமாரர்கள், பிரம்ம குமாரிகளின் தூய்மை மிகவும் சிறந்ததென மக்கள் கூறுகின்றனர். அனைவரும் தூய்மையை விரும்புகின்றனர். சந்நியாசிகள் தூய்மையானவர்கள், தேவர்களும் தூய்மையானவர்கள். இதனாலேயே மக்கள் அவர்கள் முன்னிலையில் தலை வணங்குகின்றனர். எவ்வாறாயினும், இது வேறு விடயமாகும். பரமாத்மா மாத்திரமே தூய்மையாக்குபவராக முடியும். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவர் மனிதக் குருவாக இருக்க முடியாது. நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: தயவு செய்து உங்கள் மீது கருணை கொண்டிருங்கள், இந்த விடயத்தையும் புரிந்து கொள்வதனால் உங்கள் அந்தஸ்து மிகவும் உயர்ந்ததாகும். பாரத மக்கள் எவ்வாறு பூஜிக்கப்படத் தகுதிவாய்ந்தவர்களில் இருந்து பூஜிப்பவர்களாக ஆகினார்கள் என்பதையும், பாரத மக்களாகிய தேவர்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பதையும் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். நீங்கள் நிச்சயமாக இவ்விடயங்களை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். கிறிஸ்துவிற்கு 3000 வருடங்களுக்கு முன்னர் பாரத மக்கள் தேவர்களாக இருந்தனர். அது சந்தோஷ பூமியாகிய சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. சுவர்க்கம் இப்பொழுது நரகமாகிவிட்டது. நீங்கள் அமர்ந்திருந்து இதனை அவர்களுக்கு விளங்கப்படுத்தினால், பெருமளவில் புகழப்படுவீர்கள். நீங்கள் பத்திரிகையாளர்களின் ஒன்றுகூடலையும் நிகழ்த்த வேண்டும். பின்னர், நீங்கள் செய்திருக்கின்ற அனைத்தின் மீதும் தீ மூட்டுவதா அல்லது நீரூற்றுவதா என்பது அனைத்தும் அவர்களிலேயே தங்கியுள்ளது. யுத்தம் இடம்பெறவேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாரதத்தில் இரத்த ஆறு பாயும். பிரிவினை இடம்பெற்றபோது, பல மக்கள் வீடற்றவர்களாகினர். அரசாங்கம் முற்றாகப் பிரிந்தது. அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தங்கள் மத்தியில்; சண்டையிட்டு, எதிர்ப்புகளை ஏற்படுத்தினர். ஆரம்பத்தில், இந்துஸ்தானும், பாகிஸ்தானும் பிரிந்திருக்கவில்லை. பாரதத்தில் இரத்த ஆறு பாயும். அப்பொழுதே அங்கே நெய்யாறு பாய முடியும். எனவே, விளைவு என்னவாக இருக்கும்? வெகு சிலரே பாதுகாக்கப்படுவார்கள். பாண்டவர்களாகிய நீங்கள் மறைமுகமானவர்கள். எனவே, முதலில் ஆளுநருக்கு அறிமுகத்தைக் கொடுங்கள். நீங்கள் யாரிடம் செல்கின்றீர்களோ, முதலில் அவர்களைப் புகழ வேண்டும். எவ்வாறாயினும், அவர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற இரகசியத்தை நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கின்றீர்கள். இந்த இராச்சியம் கானல் நீரைப் போன்றதென்பதை அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். நாடகத்திற்கேற்ப அவர்களது சொந்தத் திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. மகாபாரதத்தில், அவர்கள் பிரளயம் இடம்பெற்றதாகக் காட்டியிருக்கின்றார்கள். எந்தப் பிரளயமும் இடம்பெறமாட்டாது. உலகச் சக்கரம் பற்றிய ஞானம் குழந்தைகளாகிய உங்களினுள்ளே ஒவ்வொரு கணமும் எதிரொலிக்க வேண்டும். அனைத்திற்கும் முதலில், உங்களுக்கு இக்கற்பித்தல்களைக் கொடுப்பவர் யார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதே தாங்களும் உண்மையில் சிவனின் குழந்தைகள் என்பதுடன், பிரஜாபிதா பிரம்மாவினதும் குழந்தைகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இது வம்சாவளி விருட்சமாகும். பிரஜாபிதா பிரம்மா கொள்ளுப் பாட்டனார் ஆவார். மனித உலக விருட்சத்தில் பிரம்மாவே அதி மூத்தவராவார். சிவன் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை. அவர் தந்தை என்றே அழைக்கப்படுகின்றார். “கொள்ளுப் பாட்டனார்” என்ற தலைப்பு பிரஜாபிதா பிரம்மாவிற்கே உரியது. நிச்சயமாக பாட்டியும், பேரக்குழந்தைகளும் இருக்கவே வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இவையனைத்தையும் விளங்கப்படுத்தவேண்டும். சிவனே அனைத்து ஆத்மாக்களினதும் தந்தையாவார். அவர் பிரம்மா மூலமாக உலகைப் படைக்கின்றார். அங்கே எத்தனை சந்ததியினர் இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஆளுநருக்கு விளங்கப்படுத்த வேண்டும்: இத்தகைய கண்காட்சிகள் ஒவ்வொரு மூலையிலும் இடம்பெற வேண்டும். தயவு செய்து எங்களுக்காக அதனை ஒழுங்கு செய்யுங்கள். எங்களுக்கு மூன்றடி நிலம்கூடச் சொந்தமில்லை. இருந்தும் நாங்கள் உலகின் அதிபதிகளாக ஆகுகின்றோம். நீங்கள் எங்களுக்காக இந்த ஒழுங்குகளைச் செய்வீர்களாயின் நாங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக்குகின்ற சேவையைச் செய்வோம். அவர்கள் சிறிதளவு உதவியை வழங்கினாலும், ஆளுநரும் பிரம்மகுமாரர் ஆகிவிட்டார் என்றே அனைத்து மக்களும் கூற ஆரம்பித்துவிடுவார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சிப்பிப் பெறுமதியான உங்களது சரீரம், மனம், செல்வம் ஆகியவற்றைத் தந்தையிடம் அர்ப்பணித்து, அவற்றை ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகப் பராமரியுங்கள். அவற்றின் மீது உங்களுக்குள்ள பற்றை அகற்றிவிடுங்கள்.
2. அதிகாலையில் எழுந்திருந்து, அதிக அன்புடன் தந்தையை நினைவு செய்யுங்கள். ஞானத்தின் சக்தியாலும், உங்களது புத்தி யோகத்தின் சக்தியாலும் மாயையை வெற்றிகொள்ளுங்கள்.
ஆசீர்வாதம்:
ஆர்வம் உற்சாகம் என்னும் இறக்கைகளுடன் சதா பறக்கும் ஸ்திதியில் பறக்கின்ற மேன்மையான ஆத்மா ஆகுவீர்களாக.
ஞானம் யோகத்துடன்; உங்களுடைய ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு செயலிலும் புதிய ஆர்வம் உற்சாகம் இருக்கட்டும். இதுவே பறக்கும் ஸ்திதியின் அடிப்படை ஆகும். எப்பணியாயினும் பரவாயில்லை சுத்தம் செய்வதானாலும், பாத்திரங்கள் கழுவுவதானாலும் அல்லது வேறு ஏதேனும் சாதாரண பணியானாலும், அதிலும் சதா இயல்பாகவே ஆர்வம் உற்சாகம் இருக்கட்டும். மேன்மையான ஆத்மா சதா ஆர்வம் உற்சாகம் என்னும் இறக்கைகளால் தொடர்ந்தும் பறக்கும் ஸ்திதியில் பறந்துகொண்டிருப்பார். அத்தகைய ஆத்மா ஒரு போதும் சிறிய விடயங்களினால் குழப்பமடைந்தோ களைப்படைந்தோ நிறுத்தத்திற்கு வந்துவிடமாட்டார்.
சுலோகம்:
பணிவான இதயத்துடன் களைப்படையாத சதா ஒளி ஏற்றப்பட்ட விளக்குகளே உலக நன்மைபயப்பாளர் ஆவர்.