19.12.18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எப்போதும் தகுதிவாய்ந்தவர்களுக்கே தானம் செய்யுங்கள். அநாவசியமாக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது, அவர்களின் மனோநிலை எங்கே ஈர்க்கப்படுகின்றது என்று அவர்களின் நாடித் துடிப்பை அறிந்து கொள்ளுங்கள்.கேள்வி:
தூய உலகிற்குச் செல்வதற்குக் குழந்தைகளாகிய நீpங்கள் அதிகளவு முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டும். நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை என்ன?
பதில்:
இல்லறத்தில் வாழ்ந்தவாறு தாமரை மலர் போன்று இருப்பதே மிகச் சிரமமான முன்னெச்சரிக்கை ஆகும். பழைய உலகம் முழுவதையும் துறப்பதே உங்கள் துறவறமாகும். ஒரு கண்ணில் எங்கள் இனிய வீடு உள்ளது. உங்கள் மறு கண்ணில் இனிய இராச்சியம் உள்ளது. இந்தப் பழைய உலகை நீங்கள் பார்க்கும்போது, நீங்கள் பார்க்கவும் கூடாது. இதுவே மிகப்பெரிய முன்னெச்சரிக்கை. இம் முன்னெச்சரிக்கையைக் கடைப்பிடிப்பதனால் நீங்கள் தூய உலகிற்குச் செல்வீர்கள்.
பாடல்:
ஓ மனமே! பொறுமையாக இருங்கள்! உங்கள் சந்தோஷமான நாட்கள் வரவுள்ளன.
ஓம்சாந்தி.
பாடலைக் கேட்டவுடன் குழந்தைகளாகிய உங்களின் சந்தோஷப் பாதரசம் உயரவேண்டும். ஏனெனில், உண்மையில் உலகில் துன்பமே உள்ளது. மனிதர்கள் அனைவரும் உண்மையில் நாஸ்திகர்களே, அதாவது, அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. நீங்கள் இப்போது நாஸ்திகர்களிலிருந்து ஆஸ்திகர்கள் ஆகுகின்றீர்கள். உங்களுடைய சந்தோஷமான நாட்கள் இப்போது வருகின்றன என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்கு சென்றாலும், முதலில் உங்கள் அறிமுகத்தைக் கொடுத்து, ஏன் நீங்கள் உங்களைப் பிரம்மகுமாரர்கள், பிரம்மகுமாரிகள் என்று அழைக்கின்றீர்கள் என்று கூறுங்கள். சிவனின் குழந்தையான பிரம்மாவே பிரஜாபிதா ஆவார். அந்த அசரீரியானவரே, அதிமேலானவர் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சங்கர் ஆகியோர் அவரின் குழந்தைகளாவர். விஷ்ணுவையும், சங்கரரையும் பிரஜாபிதா என்று ஒருபோதும் அழைக்க முடியாது. பிரஜாபிதா பிரம்மா இங்கேயே உள்ளார். பாருங்கள், இந்தக் கருத்தை நீங்கள் மிக நன்றாகக் கிரகித்துக் கொள்ள வேண்டும். இலக்ஷ்மி நாராயணனையும், இராதை கிருஷ்ணரையும், பிரஜாபிதா என்று அழைக்க முடியாது. ‘பிரஜாபிதா பிரம்மா’ என்ற பெயர் மிகவும் பிரபல்யமானது. இந்தப் பிரஜாபிதா சரீரதாரியாவார். சுவர்க்கத்தை உருவாக்குபவர் ஆவார். பரமாத்மா பரமதந்தை சிவனே சுவர்க்கத்தை உருவாக்குபவர், பிரம்மா அல்ல. அசரீரியான பரமாத்மாவே வந்து, பிரஜாபிதா பிரம்மா மூலம் சுவர்க்கத்தை உருவாக்குகிறார். அவருடைய குழந்தைகளாகிய நாங்கள் பலர் உள்ளோம். ஆத்மாக்கள் பரமதந்தை சிவனின் குழந்தைகள் ஆவர். விளங்கப்படுத்துவதற்கு மிகச்சிறந்த வழிமுறை தேவை. அவர்களுக்குக் கூறுங்கள்: அவர் எங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்கிறார். அவர் எங்களுக்கு பிரம்மா மூலம் உலகின் ஆரம்பம். மத்தி, இறுதி ஆகியவற்றின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். ஆகவே இந்த பிரம்மா அதனை முதலில் கேட்கிறார். ஜெகதாம்பாவும் பின்னர் அதனைக் கேட்கிறார். நாங்கள் பிரம்மகுமார், குமாரிகள் ஆவாம். 21 குலங்களை ஈடேற்றுவதுடன், 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தை வழங்குபவரே ஒரு குமாரி என்பது நினைவுகூரப்படுகிறது. சத்திய, திரேதா யுகங்களில் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெறுவதற்கான ஆஸ்தியை நாங்கள் பரமாத்மா பரமதந்தையிடமிருந்து பெறுகிறோம். உண்மையில் பாரதம் சத்திய, திரேதா யுகங்களில் தொடர்ந்தும் சந்தோஷமாக இருந்தது; அக் காலத்தில் தூய்மையும் இருந்தது. ஆகவே அவர் எங்களது பாபாவும் ஆவார். இவர் தாதா ஆவார். பல குழந்தைகளைக் கொண்ட ஒருவரு;க்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவருக்குப் பல குழந்தைகள் உள்ளனர். சிவ பாபா, பிரம்மா மூலமாக எங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்கிறார். நாங்கள். அந்த எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறோம். முழு உலகமும் தூய்மையற்று உள்ளது. ஒரேயொரு தந்தையே அதனைத் தூய்மையாக்குகிறார். சுவர்க்கத்தை உருவாக்குபவரான அந்தச் சற்குரு ஒருவரே பழைய உலகை மாற்றுகிறார். அவரே அனைவருக்கும் சற்கதியை அளிப்பவர். புதிய உலகில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் மாத்திரமே இருக்கின்றது. பாரதத்திலுள்ள தேவ இராச்சிய தேவர்கள் மாத்திரமே 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். பின்னர், நீங்களும் பல்வேறு குலங்கள் பற்றி விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் முன்கூட்டியே அவர்களுடன் நேரத்தை ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: இவ் விடயங்களை முழுக் கவனத்துடன் நீங்கள் செவிமடுக்க வேண்டும். உங்கள் புத்தியை அலைய விடாதீர்கள். சகோதர, சகோதரிகளே, உண்மையில் நீங்கள் அனைவரும்; சிவனின் குழந்தைகள். பிரஜாபிதா பிரம்மாவே முழு வம்ச விருட்சத்தினதும் தலைவராவார். பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களாகிய பிராமணர்களான, நாங்கள் ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகிறோம். நாங்கள் உலக இராச்சியத்தை யோக சக்தியின் மூலமே பெறுகிறோம். பௌதீக சக்தி மூலம் அல்ல. நாங்கள் எங்கள் வீட்டையோ, குடும்பத்தையோ துறப்பதில்லை. நாங்கள், எங்கள் சொந்த வீடுகளில் வசிக்கிறோம். இது மனிதர்களைத் தேவர்களாக மாற்றும் ஒரு பாடசாலை. மனிதர்களால் எவரையும் தேவர்களாக மாற்ற முடியாது. இந்த உலகமே தூய்மையற்று உள்ளது. கங்கை நதியும் தூய்மையாக்குபவரல்ல. மக்கள் மீண்டும் மீண்டும் அங்கு நீராடச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் தூய்மையாக மாட்டார்கள். அவ்வாறே இராவணனின் உதாரணமும் உள்ளது. அவர்கள் மீண்டும் மீண்டும் அவனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். ஆனால் அவன் மரணிப்பதில்லை. நீங்கள் இராவணனின் சுவரொட்டிகளையும் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் ஒரு பெரிய இடத்திற்குச் செல்லும்போது உங்களுடன் ஒரு புகைப்பட அல்பத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: பாருங்கள். இவர்கள் அனைவரும் குழந்தைகள். இவர்கள் அனைவரும் தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்துள்ளார்கள். உண்மையில், அனைவரும் பிரம்மாவின் குழந்தைகள். பிரஜாபிதா பிரம்மாவே வம்ச விருட்சத்தின் தலைவராவார். இப்போது நடைமுறையில் நாங்கள் பிரம்ம குமாரர்களும், குமாரிகளும் ஆவோம். நீங்களும் அவ்வாறே, ஆனால் உங்களுக்கு அது தெரியாது. இப்போது உலகில் உண்மையான பிராமணர்கள் இல்லை. நாங்களே உண்மையான பிராமணர்கள். நாங்களே ஓர் இராச்சியத்தைப் பெறுபவர்கள். பின்னர், இதுவே பிராமணர்களின் வம்சாவளி விருட்சமாகும். பிராமணர்களே உச்சிக்குடுமிகள் ஆவர். கிருஷ்ணர் கடவுளல்ல என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது; அவர் முழு 84 பிறவிகளையும் எடுக்கிறார். நீங்கள் உங்கள் 84 பிறவிகளையும் முடித்தவுடன், மீண்டும் தேவர்கள் ஆகவேண்டும். எவரால் உங்களை அவ்வாறு ஆக்க முடியும்? தந்தை, உங்களை அவ்வாறு ஆக்குகிறார். நாங்கள் அவருடன் இராஜயோகத்தைக் கற்கிறோம். அசரீரியான ஒருவர் என்பதே அவரின் புகழாகும். அவர் அசரீரியானவரும், ஆணவம் அற்றவருமாவார். அவர் வந்து சேவை செய்ய வேண்டும். அவர் தூய்மையற்ற உலகில் தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கிறார். கீதையின் அந்த அதே அத்தியாயம் இப்போது மீண்டும் இடம்பெறுகிறது. மகா யுத்தம் இடம்பெற்று, அனைவரும் நுளம்புக் கூட்டம் போன்று திரும்பிச் சென்றார்கள். பரமாத்மா பரமதந்தை, கடவுள் சிவன் பேசுகின்ற, அதே நேரம் இதுவாகும். அவரே படைப்பவர். சுவர்க்கத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. உலகைச் சதோபிரதான் ஆக்குவது தந்தையின் கடமை மாத்திரமேயாகும். நாங்கள் அவரை “பாபா, பாபா!” என்று கூறுகிறோம். அவர் நிச்சயம் வருகிறார். சிவனின் இரவாகிய, சிவராத்திரி உள்ளது. நீங்களும் அதன் கருத்தை அவர்களுக்குக் கூறவேண்டும். நீங்கள் இந்தக் கருத்துக்களைக் குறித்து வைத்துக் கிரகித்துக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்துக்கள் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். குமாரிகளின் புத்தி நல்லதாகும். மக்கள் குமாரிகளின் கால்களைக் கழுவுகிறார்கள். உண்மையில் குமார்கள், குமாரிகள் இருவரும் தூய்மையானவர்கள். ஆகவே ஏன் குமாரிகளின் பெயர்கள் நினைவுகூரப்படுகிறது? இக் காலத்திலிருந்து ஒரு குமாரி 21 சந்ததியினரை ஈடேற்றுபவர் என உங்கள் பெயர்கள் நினைவுகூரப்படுவதால், உங்களுக்கான மரியாதை தொடர்கிறது. நாங்கள் பாரதத்திற்கான ஆன்மீகச் சேவையைச் செய்கிறோம். பரமாத்மா பரமதந்தை, சிவனே எங்கள் உதவியாளரான, எங்கள் அதிபதி ஆவார். நாங்கள் யோக சக்தியின் மூலம் அவரிடமிருந்து சக்தியைப் பெறுகிறோம். அதன் மூலம் நாங்கள் 21 பிறவிகளுக்குச் சதா ஆரோக்கியமானவர்கள் ஆகுகிறோம். இது ஓர் உத்தரவாதம். கலியுகத்தில் அனைவரும் நோய்வாய்ப்பட்டவர்கள். அத்துடன் அவர்களின் வாழ்நாளும் குறுகியது. சத்திய யுகத்தில் எவ்வாறு மக்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்;கள்? இந்த இராஜ யோகத்தின் மூலம் நீங்கள் நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டவர்கள் ஆகுகிறீர்கள். அங்கு அகால மரணம் இருக்க மாட்டாது. நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கிறீர்கள். இது ஒரு பழைய தோலாகும். சிவபாபாவின் நினைவில் இருந்து, உங்கள் சரீரம் உட்பட, உங்கள் அனைத்து உறவுமுறைகளையும் மறந்து விடுங்கள். எங்கள் புத்தி எல்லையற்ற துறவறத்தைக் கொண்டுள்ளது. இது எங்கள் புத்தியின் யோகத்தின் ஆன்மீக யாத்திரையாகும். மனிதர்களே அந்தப் பௌதீக யாத்திரையைக் கற்பிக்கிறார்கள். தந்தையைத் தவிர வேறெவராலும் எங்களுக்குப் புத்தியின் யாத்திரையைக் கற்பிக்க முடியாது. இந்த இராஜயோகத்தைக் கற்பவர்கள் மாத்திரமே சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். மரக்கன்று இப்பொழுது மீண்டும் ஒருமுறை நாட்டப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் அந்தத் தந்தையின் குழந்தைகளாவோம். குழந்தைகளாகிய நாங்கள் சிவபாபாவிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறோம். இந்தத் தாதாவும் சிவபாபாவிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார். நீங்களும் உங்கள் ஆஸ்தியை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறவேண்டும். இது ஒரு பெரிய வைத்தியசாலை. நாங்கள் 21 பிறவிகளுக்கு நோய்வாய்ப்பட மாட்டோம். நாங்கள் பாரதத்திற்கான உண்மையான சேவையைச் செய்கின்றோம். இதனாலேயே சிவசக்தி சேனை நினைவுகூரப்படுகிறது. தந்தை இப்போது கூறுகிறார்: நினைவுசெய்வதன் மூலம் உங்கள் பாவங்களை அழித்துக் கொள்ளுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகி, ஞானத்தைக் கிரகிப்பதன் மூலம் பூகோளத்தை ஆளும் அரசர்கள் ஆகுவீர்கள். நாங்கள் தூய்மையானவர்கள் ஆகும்போது எங்களால் இலக்ஷ்மி அல்லது நாராயணனைத் திருமணம் செய்ய முடியும். இங்கு நீங்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆகி, சம்பூரணமாக விகாரங்கள் அற்றவர்கள் ஆகாதுவிட்டால், எவ்வாறு நீங்கள் இலக்ஷ்மி நாராயணனைத் திருமணம் செய்வீர்கள்? இதனாலேயே கூறப்படுகிறது: உங்களைக் கண்ணாடியில் பாருங்கள். நான் இலக்ஷ்மி அல்லது நாராயணனைத் திருமணம் செய்யத் தகுதி வாய்ந்தவர் ஆகியுள்ளேனா?’ நீங்கள் முற்றாகப் பற்றை அழித்தவர் ஆகாவிட்டால், உங்களால் இலக்ஷ்மி அல்லது நாராயணனைத் திருமணம் செய்ய முடியாது. பின்னர் நீங்கள் பிரஜைகளின் ஒருவர் ஆகுவீர்கள். சிவபாபாவும், பரந்தாமத்திலிருந்து இங்கு வரவேண்டும். அவர் நிச்சயம் இந்தத் தூய்மையற்ற உலகிற்கு வந்து, உங்களைத் தூய்மையாக்கி, மீண்டும் உங்களை அழைத்துச் செல்வார். இங்கு நாங்கள் பல முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு கண்ணில் எங்கள் இனிய வீடு உள்ளது. எங்கள் மற்றைய கண்ணில் இனிய இராச்சியம் உள்ளது. முழு உலகத்தையும் துறப்பதே, எங்கள் துறவாகும். வீட்டில் வாழும்போது, ஒரு தாமரை மலர்போன்ற தூய்மையான வாழ்க்கையை வாழ்கிறோம். முதியோர் தாங்கள் ஓய்வுபெறும் ஸ்திதியில் இருப்பதால் தாங்கள்; முக்தி தாமத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்யவேண்டுமென நம்புகிறார்கள். இப்போது அனைவரும் ஓய்வு பெறும் ஸ்திதியாகும். தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கான உரிமை உங்கள் அனைவருக்கும் உள்ளது. நீங்கள் துன்ப பூமியை மறக்கவேண்டும். இது புத்தி மூலமான துறவறமாகும். நாங்கள் எங்கள் புத்தியிலிருந்து பழைய உலகை அகற்றி, புதிய உலகை நினைவு செய்கிறோம். பின்னர் முடிவில் எங்கள் இறுதி எண்ணங்கள் எங்களை எங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்கிறது. இது இறை தந்தையின் மிகப்பெரிய பல்கலைக்கழகம். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பித்து, உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகிறேன். நீங்கள் இவ்வாறு விளங்கப்படுத்த வேண்டும். ‘அமர்ந்திருந்து நாங்கள் உங்களுக்குக் கூறுவனவற்றைக் கேளுங்கள்’ என்று அவர்களுக்குக் கூறுங்கள். இடையில் அவர்கள் கேள்வி கேட்கும்போது அவர்கள் பேச்சைத் திசைதிருப்பி விடுவார்கள். நான் உங்களுக்கு முழுக் கல்பத்தினதும் இரகசியங்களைக் கூறப் போகிறேன். நாடகத்தில் சிவபாபாவின் பாகம் என்ன? இலக்ஷ்மியும் நாராயணனும் யார்? அனைவரினதும் சுயசரிதையை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். நீங்கள் அனைவரினதும் நாடியைப் பார்க்கவேண்டும். அந் நேரத்தில் நீங்கள் அவர்களின் மனோநிலையை, அவர்கள் கவனமாகக் கேட்கின்றார்களா அல்லது பித்துப் பிடித்தவரைப் போன்று அமர்ந்திருக்கின்றார்களா என்பதை அவதானிக்க வேண்டும். அவர்கள் இங்கும் அங்கும் சுற்றிப் பார்க்கவில்லை என்பதைச் சோதியுங்கள். இங்கு பாபாவும் யார் தனது முன்னிலையில் அமர்ந்திருந்து, சந்தோஷத்தில் ஊஞ்சலாடுகிறார்கள் என்பதை அவதானிக்கிறார். இது ஞான நடனமாகும். அந்தப் பாடசாலைகள் சிறியவை. ஆசிரியர்கள் மாணவர்களை நன்றாகப் பார்க்க முடியும். அத்துடன் அவர்களும் வரிசைக்கிரமமாகவே அமர்ந்திருக்கின்றார்;கள். இங்கு உங்களிற் பலர் உள்ளீர்கள்; உங்களை வரிசைக்கிரமமாக அமர்த்த முடியாது. ஆகவே எவருடைய புத்தியும் எங்காவது அலைந்து திரிகின்றதா என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் புன்னகை செய்கிறார்களா? அவர்களின் சந்தோஷப் பாதரசம் உயர்கின்றதா? அவர்கள் கவனமாகக் கேட்கின்றார்களா? எப்போதும் தகுதியுடையவர்களுக்கே தானம் செய்யுங்கள். அநாவசியமாக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அவர்களின் நாடித்துடிப்பை உணர்வதற்கு உங்களுக்குப் பொது அறிவு தேவை. மக்கள் பயப்படுகிறார்கள். பிரம்மகுமாரிகள் மாய வித்தையைக் காட்டலாம் என்று குறிப்பாகச் சிந்து இனத்தவர்கள் நினைக்கின்றார்கள். ஆகவே அவர்கள் உங்களைப் பார்க்கவும் மாட்டார்கள். சிவபாபா விளங்கப்படுத்துகிறார்: பிராமணர்களாகிய நீங்களே திரிகாலதரிசிகள் ஆகுகின்றீர்கள். பின்னர், நீங்கள்; குலங்களின் இரகசியங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். ‘ஹம்சோ’ என்பதன் கருத்தையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஆத்மாவாகிய நானே, பரமாத்மா என்று கூறுவது தவறாகும். பிரம்ம தத்தவத்தில் நம்பிக்கையுள்ளோரும் உள்ளார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: நானே பிரம்மம். மாயையே ஐந்து விகாரங்கள். நாங்கள் பிரம்ம தத்துவத்தை நம்புகிறோம். எவ்வாறாயினும் பிரம்மமே ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் வசிக்கும் பெரிய தத்துவமாகும். இந்துஸ்தானில் வாழ்பவர்கள் தங்கள் சமயம் இந்து சமயம் என்று கூறுவதுபோல், பிரம்ம தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், (சந்நியாசிகள்) தங்களை பிரம்மம் என்று அழைக்கிறார்கள். தந்தையின் புகழ் வேறானது. “சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள். பதினாறு சுவர்க்கக் கலைகள் நிரம்பியவர்கள்” என்பது தேவர்களின் புகழாகும். ஓர் ஆத்மா, ஒரு சரீரத்தில் இருக்கும்போதே புகழப்படுகிறார். ஓர் ஆத்மாவே, தூய்மையற்றவராக அல்லது தூய்மையானவராக ஆகுகிறார். ஓர் ஆத்மா செயல்களின் தாக்கத்திற்கு உட்படுவதில்லை என்று கூற முடியாது. அவ்வாறான ஒரு சிறிய ஆத்மாவில் 84 பிறவிகளுக்கான பாகம் உள்ளது. அவர் எவ்வாறு செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியும்? பாபா இப்பொழுது அமைதியை ஸ்தாபிக்கிறார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் பாபாவிற்கு என்ன பரிசைக் கொடுக்கப் போகின்றீர்கள்? அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சுவர்க்க இராச்சியம் எனும் பரிசைக் கொடுக்கிறார். நீங்கள் பாபாவிற்கு எதனைக் கொடுக்கிறீர்கள்? எவராவது ஒருவர் பாபாவிற்கு ஏதாவது பரிசு கொடுத்தால், அவரும் பாபாவிடமிருந்து ஒரு மிகப் பரிசைப் பெறுகிறார். இவரே முதலில் ஒரு பரிசைக் கொடுத்தார். சிவபாபாவே அருள்பவர். அரசர்கள் ஒருபோதும் மற்றவர்களிடமிருந்து எதனையும் தங்கள் கரங்களினால் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களே உணவு, போன்றவற்றை அருள்பவர்கள் எனப்படுகிறார்கள். மனிதர்களை அருள்பவர்கள் என்று அழைக்க முடியாது. சந்நியாசிகள் போன்றவர்களுக்கு நீங்கள் கொடுத்தாலும், அருள்பவரான சிவபாபாவே, அதற்கான பலனை உங்களுக்குத் தர வேண்டும். மக்கள் கூறுகிறார்கள்: கடவுள் அனைத்தையும் தருகிறார். கடவுளே அனைத்தையும் எடுக்கிறார். அப்படியானால் எவராவது மரணித்தால் ஏன் நீங்கள் அழுகிறீர்கள்? எவ்வாறாயினும் அவர் எடுப்பதுமில்லை, கொடுப்பதுமில்லை. பௌதீகப் பெற்றோரே பிறப்பைக் கொடுக்கிறார்கள். பின்னர் ஒருவர் மரணிக்கும்போது அவர்கள் துன்பமடைகிறார்கள். கடவுளே தந்து பின்னர் எடுத்தால், ஏன் அவர்கள் துன்பப்பட வேண்டும்? பாபா கூறுகிறார்: நான் சந்தோஷத்திற்கும், துன்பத்திற்கும் அப்பாற்பட்டவர். இந்த தாதா தன்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்தார். இதனாலேயே அவரும் முழுப் பரிசைப் பெறுகிறார். குமாரிகளிடமும் எதுவும் இல்லை. அவர்கள் பெற்றோரிடமிருந்து எதனையும் பெற்றால், அவற்றை அவர்கள் சிவபாபாவிற்குக் கொடுக்கலாம். உதாரணத்திற்கு, மம்மா மிகவும் ஏழையாக இருந்தார். ஆனால் அவர் எவ்வளவு முன்னேறியுள்ளார் என்று பாருங்கள். அவர் தனது சரீரம், மனம், செல்வம் மூலம் சேவை செய்கிறார். நீங்கள் அமைதி தாமத்தினூடாக, சந்தோஷ தாமத்திற்குச் செல்லப் போகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தையிடம் செல்லாது, எவ்வாறு நாங்கள் எங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்லலாம்? நாங்கள் எங்கள் பெற்றோரின் வீட்டில் அமர்ந்திருக்கிறோம். நாங்கள் முதலில் எங்கள் தந்தையிடம் சென்று, பின்னர் எங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்வோம். இது துன்பக் குடிலாகும். சத்திய யுகம் துன்பமற்ற குடிலாகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஓய்வுபெறும் ஸ்திதியில் உங்கள் இனிய வீட்டையும், உங்கள் இனிய இராச்சியத்தையும் தவிர, அனைத்தையும் உங்கள் புத்தியிலிருந்து துறவுங்கள். முற்றாகப் பற்றை அழித்தவர்கள் ஆகுங்கள்.
2. எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருப்பதுடன், உங்கள் புத்தியின் யோகத்தின் மூலம் ஆன்மீக யாத்திரை செல்லுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், தூய்மையாகிப் பாரதத்திற்கான உண்மையான சேவை செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய மனதில் சந்தோஷத்தைக் கொண்டிருந்து, எந்த நோயையும் துரத்தி விட்டு, என்றும் ஆரோக்கியமானவர்களாக ஆகுவீர்களாக.கூறப்படுகின்றது: உங்கள் மனம் சந்தோஷமாக இருக்கும்பொழுது, உலகமும் சந்தோஷமாக உள்ளது, ஆனால் மனதின் நோய்கள் மூலம் உங்கள் முழுச் சரீரமும் வெளிறிப் போகின்றது. உங்கள் மனமானது நலமாக இருக்கும்பொழுது, சரீரத்தின் எந்த நோயையும் நீங்கள் உணர மாட்டீர்கள். ஏனெனில் உங்களிடம் சந்தோஷம் எனும் மிகச்சிறந்த போஷாக்கு உள்ளதால், உங்கள் சரீரம் நலமாக இல்லாது விட்டாலும், உங்கள் மனம் நலமாக இருக்கின்றது. இந்தப் போஷாக்கு நோயைத் துரத்தியடித்து, உங்களை அதனை மறக்குமாறு செய்கின்றது, எனவே, உங்கள் மனம் சந்தோஷமாக இருக்கும்பொழுது, உலகமும் சந்தோஷமாக இருக்கின்றது, உங்கள் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கின்றது, இதனாலேயே நீங்கள் என்றும் ஆரோக்கியமானவர்களாக இருக்கின்றீர்கள்.
சுலோகம்:
நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் சகல பொக்கிஷங்களும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள்.